{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:11:33Z", "digest": "sha1:GMZQDXAXKVWMKM7JHVBTNAWSV5TXH5D5", "length": 15414, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "யானை வரவைக் கட்டுப்படுத்தும் தேனீ வேலி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nயானை வரவைக் கட்டுப்படுத்தும் தேனீ வேலி\nகாட்டு பகுதிகளில் மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பதாலும் ஊர், கிராமங்கள் யானைகள் நடக்கும் இடங்களில் முளைப்பதாலும் யானைகள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.\nஅப்படி செல்லும் போது தோட்டங்களை பாழ் பண்ணுவதும், ரயில் தண்டவாளங்களில் இறப்பதும் அதிகரித்து உள்ளது\nஇந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 10 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை இதைச் சுட்டிக்காட்டுகிறது.\n2013 கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 3,000 யானைகள் குறைந்துள்ளன. இதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று ‘மனிதர் – யானை எதிர்கொள்ளல்’.\nமனிதர் – யானை எதிர்கொள்ளலால் கடந்த 8 வருடங்களில் 655 யானைகள் உயிரிழந்துள்ளன. இதன்படி ஆண்டுக்கு சராசரியாக 80 யானைகள் கொல்லப்பட்டுவருகின்றன என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nசாலை/ரயில் விபத்து, வேட்டையாடப்படுதல் போன்ற காரணங்களுக்கு அப்பாற்பட்டு உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும்போது யானை-மனிதர் எதிர்கொள்ளல் அதிகமாக நடக்கிறது. இந்த எதிர்கொள்ளலைக் கட்டுப்படுத்தினாலே யானைகளின் இறப்பைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nமனிதர்-யானை எதிர்கொள்ளலைத் தடுக்கும் விதமாகப் பல ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், அவை முழுமையானதாக இருக்கவில்லை. இந்நிலையில் கென்யாவில் இயங்கும் ‘சேவ் தி எலிஃபன்ட்ஸ்’ என்ற இங்கிலாந்துத் தொண்டு நிறுவனத்தின் ஊழியர் லூசி இ. கிங் ‘தேனீ வேலி’ என்ற புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்.\nஇது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தபோது யானைகள் ஒருவகையான மரத்தை மட்டும் புறக்கணிப்பதை கிங் கவனித்துள்ளார். அந்த மரத்தைக் கவனித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, அம்மரங்களில் தேனீக்கள் கூடுகட்டியிருந்தது. அது கருவேல மரத்தைப் போன்ற ‘அக்கேசியா’ வகை மரம். யானைகளை விரட்ட இதையே வழிமுறையாகப் பயன்படுத்த முடுவெடுத்தார். முதற்கட்டமாக கென்யாவில் இது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.\nவிளைநிலங்களைச் சுற்றிலும் சீரான இடைவெளியில் தேனீக் கூடுகளை நிறுவியுள்ளனர். வேலியைத் தகர்த்து விளைநிலங்களுக்குள் நுழையும் யானைகள் இந்தத் தேனீக்களைக் கண்டு விலகி ஓடின. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் சோதித்துப் பார்க்கப்பட்டது.\nதான்சானியா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஒன்பது ஆப்பிரிக்க நாடுகளில் இந்த முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. கிங்கின் இந்த முறையை அடிப்படையாக வைத்துச் சில நாடுகளில் தேனீக்களின் சத்தத்தைப் பதிவுசெய்து அதை ஒலிப்பரப்புவதன் மூலம் யானைகள் விளைநிலங்களுக்கு வருவதைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.\nதேனீ வளர்ப்பின் மூலம் யானைகளால் விளைநிலங்கள் காக்கப்படுவது மட்டுமல்லாமல், அதிலிருந்து கிடைக்கும் தேன் மூலம் வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதை அமைப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. ஆசிய யானைகளில் 60 சதவீதம் உள்ள இந்தியாவில் இந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படவில்லை.\nமுதலில் இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியாவில் கர்நாடகத்தின் கனரா மாவட்டத்திலும் கேரளத்தில் வயநாடு மாவட்டத்திலும் தேனீ வேலிகள் அமைக்கப்பட்டன.\n2017 யானைகள் கணக்கெடுப்பில் இந்தியாவில் கர்நாடகத்தில் அதிகமாக 6,049 யானைகள் பதிவாகியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் 2013-ல் 4,000-ஆக இருந்த எண்ணிக்கை 2017-ல் 2,761-ஆகச் சரிந்துள்ளது. இந்த எண்ணிக்கையை மேம்படுத்த ‘தேனீ வேலி’ போன்ற புதிய யுக்திகள் அவசியம்.\nஇரு வாரங்களுக்கு முன்பு அசாம் மாநிலம் நகான் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 யானைகள் உயிரிழந்தன. வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே பிரிவில் நடந்த விபத்தில் 2016-ல் 16 யானைகளும், 2017-ல் 6 யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. இந்தாண்டு தொடக்கத்திலேயே 4 யானைகள் உயிரிழந்திருக்கின்றன.\nஇதைத் தடுக்கும் விதமாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, தேனீ சப்தத்தைத் தரும் ஸ்பீக்கர்களைச் சோதனை முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். நாட்டில் முதல் முறையாகத் தேனீக்கள் இரையும் சப்தம் தரும் ஸ்பீக்கர்களை குவாஹட்டிக்கு அருகில் கமகியா, ஆஸாரா ஆகிய ரயில் நிலையங்களில் நிறுவியுள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n20 வருடங்களில் 200 யானைகளைக் காப்பாற்றிய தேவதை..\nஉலக முதலைகளைக் காக்கும் சென்னை முதலை பண்ணை\nபூச்சிக்கொல்லி மருந்தால் 50 சதவீதம் அழிந்த தேவாங்க...\nதரிசு நிலத்தில் உளுந்து சாகுபடி →\n← வன வளத்தை இழக்கும் தமிழகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=929187327f707e888a432969d228e723", "date_download": "2018-08-21T14:23:14Z", "digest": "sha1:2QAAJQ667XT4VHVBL2OSKAWAG5F72GQX", "length": 29992, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/karunanithi-special-118081000038_1.html", "date_download": "2018-08-21T14:00:55Z", "digest": "sha1:WBLHQG254MK2DRQDPDXKUWNZTPHIRFDU", "length": 12903, "nlines": 203, "source_domain": "tamil.webdunia.com", "title": "கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்… | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கவிஞர் கோபால்தாசன் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு...\nஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்…\nநானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்…\nஉடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான்\nஇப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்…\nபணிவிடைகள் செய்தே அசந்து போயின…\nஅவர் என் மீது வைத்த கரிசனம்\nநான் அவர் மீது கொண்ட விசுவாசம்..\nஎனக்கு எந்த ஒரு விருதும் சிலையும் வைக்க வேண்டாம்..\nபகுத்தறிவு வாதமும் சித்தாந்தமும் யாருக்கு வேண்டும்\nஎன்னுடைய மூச்சும் பேச்சும் மனித நேயம் மட்டுமே\nஅவர் விடும் மூச்சுக் காற்றில் இருந்து தும்மும்\nகட்சிக் காரர்கள் உறவினர்கள் என யார் வந்தாலும்\nஎன் தோள்கள் வளைந்து கொடுத்து\nஅந்த முதலமைச்சர் நாற்காலி கை கூடாமல் போனதுதான்\nஎன்னோடு அவர் வாழ்ந்த தினங்கள் குறைவு என்றாலும்…\nபழகிய பேசிய நாள்கள் அதிகம்..\nநான் செல்லாத விழாக்கள் இல்லை\nஅவர் ரசிக்காத கருத்துகள் இல்லை..\nஅவர் தமிழ்ப் பற்றும் நாட்டுப் பற்றும்\nபிரிக்க முடியா உடலாகி விட்டேன்…\nதற்போது வெறும் உடலாகத்தான் கிடக்கிறேன்…\nஉயிர் அவரோடு இணைந்து விட்டதாய் உணர்கிறேன்..\nஅவரோடு வாழ்ந்த எனக்கொரு இடம் கொடுங்கள்…\nபழிச்சொல் கண்டு கலங்கவில்லை : அமைச்சர் ஜெயக்குமார்\nசிம்புவின் கன்னத்தில் அறைந்த கருணாநிதி - ஏன் தெரியுமா\n : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்\nஜெயலலிதா, கருணாநிதி இல்லாத திராவிட கட்சிகள்: பாஜகவின் பக்கா பிளான்\nஇறுதிச்சடங்கில் கூட்ட நெரிசல்; காயமானோரை நேரில் சந்தித்த ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://solpudhithu.wordpress.com/2012/06/", "date_download": "2018-08-21T14:14:28Z", "digest": "sha1:MM5FMIEFIJ7FM2IJFTMWYVE3NBF6HCVQ", "length": 57903, "nlines": 150, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "ஜூன் | 2012 | சொல் புதிது!", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டம் – ஓட்டப்பிடாரம் அருகில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயர்களை அடக்கம் செய்யப்பட்ட இரு கல்லறைகள் உள்ளன. அதைப் பார்க்க வேண்டுமென ரொம்ப நாளாக ஆசை. கடந்த 23.03.2012 அன்று மாலை 3 மணிக்கு நானும் ரஞ்சித்தும் டூவீலரில் கிளம்பினோம். கோவில்பட்டி, பசுவந்தனை, வழியாக ஓட்டப்பிடாரம் சென்றோம்.அதிக போக்குவரத்து இல்லாத சாலை. பல இடங்கள் விவசாயமற்ற தரிசு நிலங்களாகவே காட்சியளித்தன.\nஓட்டப்பிடாரத்திலிருந்து பாஞ்சாலங்குறிச்சி சாலை திரும்பியவுடன் வலப்புறம் ஒரு சுடுகாடு இருந்தது. அருகில் வண்டியை நிறுத்திவிட்டு ,அவ்வழியே வந்த ஒருவரிடம் ஆங்கிலேயர்களைப் புதைத்த கல்லறை எங்கே இருக்கிறது என்று கேட்டோம். சுடுகாட்டுக்கு அந்தப்புறம் என்றார். செல்வதற்கு சரியான பாதை இல்லை. அதெற்கென இருந்த பாதையை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டதாக ஒருவர் வேதனைப் பட்டார். அருகில் அறுவடை செய்த நிலையில் இருந்த வயல்வெளி வழியாக உள்ளே சென்றோம். அங்கு ஆங்கில லெப்டினன்டுகள் ஐவரின் கல்லறைகள் ஒரு பழைய காம்பௌண்டுக்குள் இருந்தன. இது கி. பி. 1799 -ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியக் கட்டபொம்மன் படையினருக்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியப் படையினருக்கும் இடையே நடந்த போரில் பலியான லெப்டினன்டுகள் டக்லஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக் மற்றும் பின்னி ஆகியோரைப் புதைக்கப்பட்ட கல்லறை.தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. தொல்லியலார் வைத்துள்ள கல்வெட்டும் உடைந்த நிலையிலேயே கிடக்கிறது. சாலையில் இருந்து எந்த வகையிலும் இவ்விடத்திற்கு வந்து சேர முறையான பாதை இல்லை. இதைப் பார்த்து விட்டு நாற்பது பேர் கல்லறை உள்ள இடத்திற்குச் செல்ல நினைத்தோம். பக்கத்து தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டோம். அவரோ அருகில் உள்ள சுடுகாட்டுக் கல்லறைகளைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றார். வியப்பாய் இருந்தது என்று கேட்டோம். சுடுகாட்டுக்கு அந்தப்புறம் என்றார். செல்வதற்கு சரியான பாதை இல்லை. அதெற்கென இருந்த பாதையை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டதாக ஒருவர் வேதனைப் பட்டார். அருகில் அறுவடை செய்த நிலையில் இருந்த வயல்வெளி வழியாக உள்ளே சென்றோம். அங்கு ஆங்கில லெப்டினன்டுகள் ஐவரின் கல்லறைகள் ஒரு பழைய காம்பௌண்டுக்குள் இருந்தன. இது கி. பி. 1799 -ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியக் கட்டபொம்மன் படையினருக்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியப் படையினருக்கும் இடையே நடந்த போரில் பலியான லெப்டினன்டுகள் டக்லஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக் மற்றும் பின்னி ஆகியோரைப் புதைக்கப்பட்ட கல்லறை.தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாப்பின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. தொல்லியலார் வைத்துள்ள கல்வெட்டும் உடைந்த நிலையிலேயே கிடக்கிறது. சாலையில் இருந்து எந்த வகையிலும் இவ்விடத்திற்கு வந்து சேர முறையான பாதை இல்லை. இதைப் பார்த்து விட்டு நாற்பது பேர் கல்லறை உள்ள இடத்திற்குச் செல்ல நினைத்தோம். பக்கத்து தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் கேட்டோம். அவரோ அருகில் உள்ள சுடுகாட்டுக் கல்லறைகளைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றார். வியப்பாய் இருந்தது ஒரு யோசனை தோன்ற, நேராக பாஞ்சையில் உள்ள கட்டபொம்மன் வாரிசுகள் உள்ள காலனிக்குச் சென்றோம். அங்கு இருந்த ஒருவரிடம் கேட்க, சரியாக வழி காட்டினார். கிளம்பினோம்.\nஓட்டப்பிடார சாலையில் வலப்புறம் திரும்பி சென்றோம். அதில் இடப்புறம் செம்மண் சாலை, சவுக்குத் தோப்பு,வண்டிப்பாதை, மாந்தோப்பு – கடந்து சென்றவுடன் மிகப்பெரிய கல்லறைக் காம்பவுன்டு தென்பட்டது. உண்மையிலேயே இது ஒரு அட்வஞ்சர் ட்ரிப் போலவே இருந்தது. சூரிய அஸ்தமனத்திற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கிறன. உள்ளே சென்றோம். இரு வரிசைகளில் 44 கல்லறைகள். தமிழகத் தொல்லியலார் சார்பில் அண்மையில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டும் இருந்தது. கி.பி. 1807 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் ஊமைதுரைக்கும் ஆங்கிலேயருக்கும் நடைபெற்ற போரில் மாண்டுபோன 44 ஆங்கில வீரர்களின் கல்லறைகள் இவை. இக்கல்லறைகளைப்போய்ப் பார்க்க என்ன இருக்கிறது தாஜ்மகால் போல அழகுணர்ச்சி இல்லையே என்று நினைக்கலாம். உண்மைதான். ஆனால் ஆதிக்க சக்தியை எதிர்த்து வென்ற அடிமை வர்க்கத்தின் உண்மை வீரம் இருக்கிறது.\nபாஞ்சையில் தமிழக அரசு எழுப்பியுள்ள கட்டபொம்மன் கோட்டையை (உண்மையில் கவெர்மென்ட் கோட்டை) தினமும் எண்ணற்றவர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், நம்மவர்களின் வீரத்திற்குச் சான்றுகளாய் இருக்கும் இக்கல்லறைகளை யாரும் பார்ப்பதில்லை. எறத்தாழ 200 ஆண்டுகள் பழமையான இக்கல்லறைகளைத் தமிழகத் தொல்லியல் துறை கூட அண்மையில்தான் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளது. அரசியல்வாதிகள் தன் ஓட்டு வங்கி அடிப்படையிலேயே வரலாற்றையும், தொல்பொருட்களையும், நினைவுச் சின்னங்களையும் பார்க்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு அப்பாற்பட்டவைகளை தேவையற்றவை என்றே ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த உண்மையை நாமும் புரிந்து கொள்வது இல்லை. இதனாலேயே நம் இனத்தின், மொழியின், மண்ணின் எண்ணற்ற நினைவுச் சின்னங்களை, சரியான வரலாற்றை இழந்து விடுகிறோம், இழந்து வருகிறோம்.ஆட்சியாளர்கள் எப்போதும் தம் சுயத்தின் அடிப்படையிலேயே வரலாற்றைப் பதிவு செய்கிறார்கள். இது முடிமக்கள் ஆட்சி முதல் இன்று வரை இப்படித்தான் இருந்து வருகிறது. ஆங்கில ஆட்சியாளர்கள் பாஞ்சைப் போரில் இறந்த ஆங்கில வீரர்களுக்குத் தந்த முக்கியத்துவம், நம் படையில் இறந்த வீரர்களுக்குத் துளியும் தரவில்லை. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வீரர்கள் தேசப்பற்றாளர்களாகவும், நம் வீரர்களை விரோதிகளாகவும் பார்த்தனர். இதே பார்வையை நம்மவர்கள் பக்கம் பொருத்தினால், இந்த மதிப்பீடு அப்படியே திரும்பும்.\nஇவ்விரு வேறுபட்ட படைவீரர்களின் மனநிலை, குடும்பச் சுழல், வெற்றி, தோல்வி – இவற்றை சமூக, அரசியல், பொருளாதார அடிப்படையில் நோக்கினால், ஒவ்வொரு கல்லறைக்குள்ளும் எண்ணற்ற கதைகளும், இரத்த சோகங்களும் உறங்கிக்கொண்டு இருப்பது தெரியும். அதே நேரத்தில், கல்லறை கட்டப்படாத, இறந்த நம் வீரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் தேச, சமூக, குடும்பம் சார்ந்த உணர்வுகளும் மண்ணுக்குள் மறைந்ததும் யாருக்கும் தெரியாது பாஞ்சை பூமியில் புதைந்து கிடக்கும் அத்தனை வீரர்களும் ஒட்டு மொத்தமாய் நம் மனதைத் தட்டிக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் காண முடியாமல் இருள் சூழ்ந்த வேளையில் புறப்பட்டோம். மீண்டும் ட்ரிப் மீட்டரை சரிசெய்து கொண்டு வண்டியைக் கிளப்பினோம்.\nகழுகுமலையை நாங்கள் வந்து சேரும் போது சரியாக நாற்பது கிலோ மீட்டரைக் கடந்திருந்தாலும், ஏதோ,கட்டபொம்மன் காலத்திலிருந்து கடந்து வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது\n– அசின் சார், கழுகுமலை.\nகாலை உணவு முடித்து விட்டு அல்போன்சம்மா கல்லறை உள்ள ஆலயத்திற்குச் சென்றோம். அவர் கேரள மாநிலம் கோட்டயம் அருகே குடமாளூர் என்ற சிறிய கிராமத்தில் 1910-ல் பிறந்தவர். அன்னக்குட்டி என்பது அவரது இயற்பெயர். பிறந்த மூன்று மாதத்திலேயே தன் தாயை இழந்ததால், பாட்டி மற்றும் பெரியம்மா கண்காணிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே துறவு அவரைக் கவர்ந்ததால், திருமணத்தின் மீது நாட்டமில்லை. அதற்கான நிர்பந்தம் வந்தது. அதைத் தவிர்க்க, வீட்டின் பின்புறம் அறுவடைக்குப் பின் எரித்துப் போடும் பதர் குழியில் தன் காலை வைத்து சுட்டுக்கொண்டார். 1927-இல் அருட்சகோதரிகள் சபையில் அல்போன்சாவாகச் சேர்ந்தார். 1936-இல் நித்திய வார்த்தைப் பாட்டைப் பெற்றுக்கொண்டார். 1946-இல் இறைவனடி சேர்ந்தார். 2008 அக்டோபர் 12-இல் போப் 16ஆம் பெனடிக்ட் அவர்களால் அல்போன்சா அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அருட்சகோ.அல்போன்சா அவர்கள், தான் எழுதிய குறிப்பொன்றில், இறைவன் தன் சிலுவையின் ஒரு பகுதியைத் தன்னிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். அந்த அளவிற்கு தன் வாழ்நாள் முழுவதும் துன்பங்களிலேயே பயணித்தவர் அவர். அதனால்தான், ஏழைகளும், துயருறுவோரும் தங்களின் வேதனைகளையும், வலிகளையும் இப்புனிதையாலேயே புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்; நாடுகிறார்கள். “என் அம்மா இன்னதென்று தெரியாத கடுமையான காய்ச்சலில் மரணத்தின் விளிம்பில் கிடந்த காலத்தில் அல்போன்ஸம்மா முன் மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உடைந்து அழுதிருக்கிறேன்” என்பார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். இப்படித்தான் தினமும் எண்ணற்றவர்கள் இப்புனிதையின் கல்லறையில் கண்ணீர்விட்டுச் செல்கின்றனர். அந்தக் கல்லறையின் முன் நானும் ஒருசில நிமிடங்கள் மண்டியிட்டு எழுந்தேன். புதுவையில் அரவிந்தர் கல்லறை முன் அமர்ந்து எழுந்த நினைவு வந்தது. அவ்வாலய வளாகத்திற்கு வெளியே சாலையைக் கடந்தவுடன், புனித அல்போன்சம்மாவின் வாழ்வைக் காட்டும் அருங்காட்சியகம் உள்ளது. அதில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், பெற்ற சான்றிதழ்கள், பரிசுப் பொருட்கள், படித்த புத்தகங்கள், … என்று நிறையவே உள்ளன. அவற்றை காட்சிக்கு வைத்து நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். அங்கு சென்றால் இதையும் தவறாமல் பாருங்கள். பிற்பகலில் எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலயம் சென்றோம். தென் தமிழகத்தில் புனித அந்தோணியார், புனித மிக்கேலாண்டவர் ஆகியோருக்கு உள்ள செல்வாக்கு போல இங்கு புனித ஜார்ஜியாருக்கு இருக்கிறது. நாங்கள் போன போது அங்கு திருவிழா நடந்து கொண்டிருந்தது. சாலையின் இருபக்கமும் திருவிழாக் கடைகள். குடும்பம் குடும்பமாய் மக்கள் கூட்டம். இங்கும் புதுவித நேர்ச்சையைக் காண முடிந்தது. அதாவது,செங்கல்களைத் தலையில் சுமந்தபடி ஆலயத்தை வலம் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் சுற்றுலா வந்தவர்களும் கற்களைச் சுமந்து சுற்றி மகிழ்ந்தார்கள். கோவில் முன்புள்ள அழகிய நீரோடையில் தண்ணீர் பரந்து ஓடிக்கொண்டு இருந்தது. இரு கரைகளிலும் பசுமை பொங்கி வழிய, குறுக்கே இருக்கும் பாலத்தின் மீது நின்று அந்த ஓடையின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது, பயணிகளோடு வந்த படகு ஒன்று மெதுவாக அப்பாலத்தின் கீழே கடந்து சென்றது. அது கிழித்துச் செல்லும் நீரில் தோன்றும் அலைகள், கரைகளை நோக்கி விரிந்தன. அவை நடுவே மிதந்து வந்த தூசிகளை கரைகளுக்கு ஒதுக்கின. நீரோடை சுத்தமாகிக் கொண்டே போனது. அது, நம் மனதில் உள்ள அசுத்தங்களை ஒதுக்கிவிட்டால் மனசும் சுத்தமாகிவிடும் என்று நமக்குச் சொன்னது போல இருந்தது. மனதோ, ஓடைக்கு நேரே தெரியும் கோபுரத்தைப் பார்த்து “இறைவா, என் மனதில் நீ படகு செலுத்த வரமாட்டாயா\nமட்கான் ரயில் நிலையத்திலிருந்து இரவு பதினொரு மணிக்குக் கிளம்பிய நாங்கள், அடுத்த நாள் காலை எர்ணாக்குளம் வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்திலிருந்து வல்லார்படம் “அவர் லேடி ஆப் மேன்சம் சர்ச்” சென்றோம். கடல் நீரில் தொலைந்த குழந்தை, மூன்று நாட்களுக்குப் பின் இங்குள்ள அன்னையின் அருளால் கிடைத்ததாகக் கூறினார்கள்.\nஇந்த நம்பிக்கைதான் சமயவேறுபாடின்றி அங்கு அதிகமானோர் வரக் காரணமாய் இருக்கிறது. இதைக் காட்டும் விதமாக சுரூபம் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும், ஆலய முன்புற முற்றத்தில் ஒருபுறம் ஸ்டேண்டில் நிறைய விலக்குமார் வைத்திருந்தார்கள். அங்கு வரும் பக்தர்கள் அதிலொன்றை எடுத்து அவ்வளாகத்தை சுத்தம் செய்கிறார்கள். அவ்வாறு செய்வதால் தங்கள் வேண்டுதல் நிறைவேறுமென்ற நம்பிக்கை. இது நமக்குப் புதிதாய் இருந்தது. ஆலயத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பசுமையும், கடல் நீரும் சூழ்ந்து நின்று, நமக்குக் காட்சி விருந்து அளிக்கின்றன. அழகாய் சிரிக்கும் அழகை ஆலயத்தின் கோபுர உச்சியிலிருந்து பார்க்க வியூபாயிண்ட் அமைத்திருக்கிறார்கள். அதற்கு ரூ.10/- கட்டணம் செலுத்தி லிப்ட்டில் சென்றும் போய்ப் பார்க்கலாம். ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகளை சித்தரித்து வைத்திருக்கும் மரம் போன்ற அமைப்பு, அங்கு வரும் யாவரையும் கவர்கிறது. மதிய உணவிற்குப் பின், எர்ணாக்குளத்திலுள்ள படகுத் துறைக்குச் சென்றோம். படகில் ஏறி கடலுக்குள் சென்றபின், அங்கிருந்து ஊரைப் பார்ப்பது, உள்ளே உள்ள குட்டி குட்டித் தீவுகளைப் பார்ப்பது, மிதந்து கொண்டிருக்கும் கப்பல்களைப் பார்ப்பது…… என்று எழுதும் எல்லாவற்றையும் – ஒரு முறை நீங்கள் நேரில் அனுபவித்தால்தான் தெரியும் அந்த மகிழ்ச்சியின் ஆழம் எவ்வளவென்று அந்த மகிழ்ச்சியின் ஆழம் எவ்வளவென்று திடீரென்று நல்ல மழை பிடித்துக் கொண்டது. வெளியே வேடிக்கை பார்க்க முடியவில்லை. மழை நம்மை நனைக்கத் தொடங்கியதால், அனைவரும் அப்படகின் அடித்தளத்திற்கு வந்தோம். ஸ்பீக்கரில் ஆடத் தூண்டும் பாடல்கள் ஒலிக்க, அமர்ந்திருந்தவர்கள் ஆடத்தொடங்கினர். பாடலோசையை விஞ்சி அனைவரின் கரவோசை எழும்பியது.உடன் வந்த அருட்தந்தையை அவர்கள் அழைக்க, அவரும் உற்சாகத்துடன் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் நனையவைத்தார். அன்று இரவு பரணஞானத்தில் தங்க வேண்டும். கிளம்பினோம். போகும் வழியில் இரவு உணவுக்காக திரிபுனித்ரா தூய மரியன்னை ஆலய வளாகத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அவ்விடம் ஊர் நடுவே என்பதால் தரமான சைவ அசைவ ஹோட்டல்கள் இருந்தன. சாப்பிட்டுவிட்டு ஆலயத்திற்கு வந்தோம். அங்குள்ள மாதாவின் முகத்தில் தேன் வடிவதாக அங்கிருந்தவர்கள் கூறியதால், வந்திருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் வணங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅப்போது அங்கு வந்த ஒருவர் மாதா தனக்குக் காட்சியளித்து ஜெபமாலை தந்ததாகக் கூறி, ஒரு ஜெபமாலையைக் காட்ட, விழி பிதுங்க அனைவரும் அதைத் தங்கள் கைகளில் வாங்கிப் பார்த்தனர். ஆசையாக அவரவர் கழுத்தில் அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இரவு 10 மணிக்கு பரணஞானம் சென்றடைந்தோம்.\nகரை படிந்த ஐஸ் குச்சி\nபயன்படுத்திய ரீ சார்ஜ் கார்டு\nநசுங்கிய வெற்றுத் தண்ணீர் பாட்டில்\nநாள் காட்டியின் நேற்றைய தாள்\nமை தீர்ந்து போன பால்பாயின்ட் பேனா\nஸ்ட்ராவோடு அமுங்கிக் கிடக்கும் புரூட்டி பாக்கெட்\nகாய்ந்து போன வாழைப்பழத் தோல்\nஇப்படி இன்னும் எத்தனையோ …\nநான் ஏன் இன்னும் …\n– அசின் சார், கழுகுமலை.\nபுனித சவேரியார் ஆலயத்திற்கு நேர்எதிரே சற்று தொலைவில் 16 ஆம் நூற்றாண்டின் புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் உள்ளது. 1572 இல் கட்டப்பட்டு, தாழ்வாரங்கள், தூண்கள், காட்சியகங்கள், பல அறைகள், அலுவலகம், துறவி மடம், உணவு கூடம், விருந்தினர் விடுதி, மற்றும் மருத்துவமனை கொண்ட மண்டபங்கள் என்று விரிவடைந்திருக்கின்றன. இதை 1835 இல் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1846 இல் இந்த தேவாலயத்தின் முக்கியப் பகுதி சரிந்தது. பலவாறும் சிதைந்து போய், இன்று வெறும் கட்டமண் சுவர்களாக நிற்பதைத்தான், தற்போது இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் பராமரித்து வருகிறது. பழமையை, வரலாற்றை அறிய ஆசைப்படும் மனங்களுக்கு எத்தனையோ செய்திகளைச் சொல்லக் காத்திருக்கிறது இவ்வளாகம்.\nஅங்கிருந்து அகுடாகோட்டைக்குச் சென்றோம். அகுடாகோட்டை டச்சு மற்றும் மராட்டியர்களின் படையெடுப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு கருதி 1612இல் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையின் சுவர்கள் 5 மீட்டர் உயரமும் 1.3 மீட்டர் அகலமும் கொண்டது.\n“அகுடா” என்றால் பெறப்பட்ட, தண்ணீர் என்று பொருள். கோட்டைக்குள் இருக்கும் நன்னீர் வசந்த காலத்தில் நிறுத்தப்படும் கப்பல்களுக்கு விநியோகிக்கப்படும். கோட்டையின் இன்னொரு சிறப்பம்சம் உள்ளே 13 மீட்டர் உயர கலங்கரை விளக்கம் உள்ளது. 1864 இல் கட்டப்பட்ட இந்தக் கலங்கரை விளக்கத்தில் ஆரம்பத்தில் ஓர் எண்ணெய் விளக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டதாம். அதன் பின்னர் 1976 இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய கோவாவில் உள்ள புனித அகஸ்டஸ் காம்ப்ளெக்ஸ் இடிபாடுகளிருந்து பெறப்பட்ட மிகப் பெரிய மணி இங்குதான் இருந்திருக்கிறது. அது 1871 இல் பனாஜி தி இம்மாகுலேட் கன்செப்ஷன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.\nஹாலங்குட் கடற்கரைக்குச் சென்றோம். பிற்பகல் வெயிலில், அகன்ற மணல்பரப்பைத் தாண்டி இருந்த கடற்கரையில் அதிகமான மக்கள் அலை. பாரா சூட்டில் பறப்பது,கடலில் மோட்டார் பைக்கில் செல்வது போன்ற விளையாட்டுக்கள் சுவரஸ்யமானவை. இவை வெளிநாட்டவரை மிக எளிமையாகக் கவர்கிறன. பாராசூட்டிற்காக ஆள்பிடிக்கும் புரோக்கர்களும் அக்கடற்கரையில் அலைகின்றனர். ஒரு ட்ரிப்புக்கு ரூ.500/- வாங்குகிறார்கள். பாராசூட்டில் பறப்பவர்களை கடல் நீரில் தோய்த்து மீண்டும் பறக்க வைப்பது நம்மைப் போன்ற பார்வையாளருக்கே மயிர்கூச்செரிவதாக உள்ளது. அருகில் சென்று பார்த்தால், பாராசூட் சாதாரண நைலான் கயிறுகளாலேயே கட்டப்பட்டிருக்கிறது. மோட்டார் படகை இணைப்பதும் இதே கயிறுதான். இது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்குமென்று நமக்குத் தோணவில்லை.\nதமிழகக் கடற்கரைகளில் குறிப்பாக, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி போன்ற ஊர்களில் உள்ள கடற்கரைகளில் சொரசொரப்பான பாறைகள், ஆழமான பகுதிகள், பெரிய அலைகள் இருக்கின்றன. இங்கு அந்தப் பயம்வேண்டாம். ஏனெனில், சிறு சிறு தீவுகளும் சுற்றிக் கடலுமாக இருப்பதால் – ஆழமற்றதும், பெரும் அலைகளற்றதுமாகவே உள்ளன. அங்கு வெளிநாட்டவர் சூரியக்குளியல் எடுப்பதற்காக சாய்வான மரப்படுக்கைகள் உள்ளன. நமக்கு வெயிலில் வியர்வை சொட்டுகிறது. ஆனால் அவர்களோ சுகமாகப் படுத்திருக்கிறார்கள். அதன் அருகிலேயே மதுபான வசதியுடன் கூடிய ஹோட்டல் இருக்கிறது.(இது எல்லா பீச்சிலும்,சாலையிலும்தான்). அங்கு அமர்ந்திருந்த ஆங்கிலேய ஜோடியில், அவன் மதுப்பாட்டிலை ஓப்பன் செய்து கிண்ணத்தில் ஊற்றித்தர, அவளோ ஒரு கையில் மதுக்கிண்ணமும், மறுகையின் விரலிடுக்கில் சிகரெட்டைத் தாங்கியவளாய், ஸ்டைலாக புகையை மேல் நோக்கி ஊதிக் கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்; அவனோ மதுவைக் குடித்துக்கொண்டே மாதுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.\nஅங்கிருந்து வெளியே வந்த போது, நடைபாதை வண்டியில், செங்குத்து ஸ்டீல் வலைக்குள் அதி வேகமாக நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் அடுப்பில், நேரே நின்று சுழலும் கம்பியில் சொருகி வைக்கப்பட்ட சிக்கன் சதைகள் வெந்து கொண்டிருந்தன. அவற்றைக் கீறி, சிறு சிறு துண்டுகளாக்கி தக்காளி மற்றும் கேரட் போன்ற துண்டுகளைக் கலந்து, பிரெட் அல்லது சப்பாத்தியுடன் தருகிறார்கள். அங்கு கூட்டம் மொய்க்கிறது. அது உடலுக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.\nஐஸ் வண்டி, தொப்பிக் கடை, டிசர்ட் கடை,… பார்த்துக்கொண்டே போகையில், வரிசையாக நிறுத்தியிருந்த விதவிதமான டூவீலர்கள் ஏராளம். சுற்றுலா வருபவர்கள் வாடகைக்கு எடுத்துச் செல்கிறார்கள். நாள் வாடகை ரூ.200/- முதல் ரூ.400/- வரை. ஆக்டிவாவுக்கு ரூ.200/- பஜாஜ் அவென்ஜருக்கு ரூ.400/-, அதாவது வாடகை – வண்டியைப் பொருத்து. நம் அடையாள அட்டையைக் காண்பித்து, விரும்பிய வண்டியைத் தேர்வு செய்து கொள்ளலாம்.\nகோவா இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். இது வடக்கில் தெரகோல் ஆறு(கோவாவை மகராஷ்டிரத்திலிருந்து பிரிப்பது), தெற்கில் கர்நாடகம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலை, மேற்கில் அரபி கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கோவாவின் மொத்தப் பரப்பளவு 3,702 ச.கி.மீ. இங்கு பேசப்படும் மொழிகள் கொங்கணி, மராத்தி. கோவாவின் மொத்த மக்கள்தொகை 14,57,723. இதில் 65%இந்துக்களும், 26%கிறிஸ்தவர்களும், 6%இஸ்லாமியர்களும், மற்றவர்கள் 3% ம் உள்ளனர். போர்த்துக்கீசியத்தைச் சேர்ந்த வாஸ்கோடகாமா என்பவர் 1498ல் இந்தியாவுக்கு கடல் வழிப் பாதையைக் கண்டறிந்து கேரளா(கோழிக்கோடு அருகிலுள்ள காப்பக்கடவு)வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து போர்த்துக்கீசியர்களும் வந்தனர். 1510இல் அல்போன்சா டி அல்புக்கிர்க் என்னும் போர்த்துக்கீசியர் விஜய நகர அரசு உதவியுடன் கோவாவைக் கைப்பற்றினார். கோவாவில் இருந்து கடல்வழி வர்த்தகம் தொடங்கியது.\nஅதே போல் போர்த்துக்கீசியத்தில் இருந்து 1542ல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சேசு சபைத் துறவி பிரான்சிஸ் சவேரியாரின் வருகைக்கு பின் கிறிஸ்தவம் பரவியுள்ளது.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், கோவா போர்த்துக்கீசியர் வசமே இருந்துள்ளது. 1961இல் ஆபரேசன் விஜய் என்னும் ராணுவ நடவடிக்கை மூலம் போர்த்துக்கீசியரிடமிருந்து கோவா மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோவாவில் வாஸ்கோடகாமா பெயரில் ஓர் ஊர் ஒன்றும் இன்று உள்ளது. இனி கோவாவில் பார்த்த சர்ச்சுகள் மற்றும் இடங்கள் பற்றிக் கூறுகிறேன். பழைய கோவா ‘கிழக்கின் ரோமாபுரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் தவிர மற்றவர்கள் கண்ணில் அதிகம் படாத கடற்கரையில் இருக்கிறது காஜேட்டான் தேவாலயம் (Church of St. Cajatan). தியேட்ரின் குருமரபைச் சேர்ந்த முதல் குருவான புனித காஜேட்டான் அவர்களின் நினைவாக, 1661ல் இத்தாலியச் சிற்பிகளால் ரோமிலுள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வடிவில் கட்டப்பட்டுள்ள புனித உபகாரஅன்னையின் தேவாலயம் இது. ரோம் புனித பீட்டர்ஸ் தேவாலயம் இதைவிட ஆறுமடங்கு பெரியது என்கிறார்கள். ஆனால், காஜேட்டான் ஆலயமே உள்ளே நுழையும் போது நம்மைப் பிரமிக்க வைக்கிறது. கத்தீட்ரல் தேவாலயம் (St. Catherine’s’ Cathedral)மிகப் பெரிய ஒன்று. 35.56 மீட்டர் உயரமும், 76.2 மீட்டர் நீளமும், 55.16மீட்டர் அகலமும் உடையது. போர்த்துக்கீசியர்களின் அடையாளமாக விளங்க வேண்டும் என்பதற்காக போர்த்துக்கீசிய அரசர் டாம் செபஸ்டியோ 1562 ஆம் ஆண்டில்மிகப்பெரிய தேவாலயம் கட்ட ஆணை பிறப்பித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்து கோவாவை ஆட்சி செய்த வைசிராய்களால் ஆலயம் கொஞ்சம்கொஞ்சமாக எழுப்பப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறங்களில் கலை வேலைப்பாடுகள் நம் கண்களை வியக்க வைக்கின்றன.இதன் பின்புறம் உள்ள தொல்பொருளார் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்தின் பல்வேறு கலை நுட்பமும் நாம் அவசியம் காண வேண்டியதே கத்தீட்ரல் தேவாலயத்தின் இடப்புறத்தில் சுமார் நூறு மீட்டர் தூரத்தில் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது. புனித பிரான்சிஸ் சவேரியார் 1552ஆம் ஆண்டு இறையடி சேர்ந்த பின்பு, அவரது பதப்படுத்தப்பட்ட உடல் இவ்வாலயத்தில்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, இவ்வாலயம் இன்று புனித சவேரியார் தேவாலயம் என்றே அறியப்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகமான ஆலயங்களில் ஆல்டரின் இரு பக்கங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள பழைய ஓவியங்கள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. பல சர்ச்சுகளின் அருகிலேயே தொல்பொருளாரின் ஆர்ட் காலரி, அருங்காட்சியகம் இருக்கின்றன, தவறாமல் பார்க்க வேண்டும்.\nஇந்த ஆலயங்கள் மட்டுமல்லாது கோவா மாநிலம் முழுதும் பழமையான பல தேவலாயங்கள் உள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஆர். சி. சர்ச் பங்குத்தந்தை லாரன்ஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கோவா சுற்றுலாவிற்குக் கடந்த மே மாதம் சென்றிருந்தேன். அந்தப் பயண அனுபவங்கள் உங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைத்து எழுதுகிறேன்.\nகோவா பயணம் நெல்லையிலிருந்து கிளம்பும் ஹாப்பா எக்ஸ்பிரஸில் காலை 5.55 மணிக்குத் தொடங்கியது. கொங்கன் ரயில்வேயில் பகலில் செல்லும் பயணம் மிக அருமையாக இருந்தது. மலைகளும்,குகைகளும்,மரங்களும்,நீரோட்டங்களும் அப்பப்பா…. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டின் இயற்கை வளமும்,செழிப்பும் குறித்து பெருமிதம் கொள்ள முடியும்.கேரளாவிற்குச் செங்கோட்டை, போடி மெட்டு, கம்பம் மெட்டு, வால்ப்பாறை போன்ற வழிகளில் செல்லும் போது தேயிலைத் தோட்டமும், தொழிலாளர்கள் வீடுமாகத்தான் தெரியும்.அதிக ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பு கொண்ட மாநிலம் போலத் தோன்றும்.\nஆனால், திருவனந்தபுரம் வழியாக இத்தடத்தில் பயணம் செய்யும் போது, கொல்லம் முதல் கோழிக்கோடு தாண்டியும் – கேரளா இயற்கைச் செழிப்பும், மக்கள் வாழ்க்கை செழிப்பும் கொண்டதாகவே இருக்கிறது.\nஒவ்வொரு ஊர்களிலும் அலங்கரிக்கப்பட்ட அங்காடிகள் அதிகமாக இருப்பது, அவர்களின் மிகுதியான நுகர்வுக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது. ஆலப்புழா, கொச்சின், எர்ணாக்குளம் போன்ற ஊர்களைத் தனி ட்ரிப்பாக வந்து பார்க்கவேண்டும் என்ற அவா பிறக்கிறது. போகும் வழியெல்லாம் எண்ணற்ற ஆறுகள் குறுக்கே செல்கின்றன.\nஅனைத்துஆறுகளும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி அரபி கடலில் கலப்பதற்கு மேற்கு நோக்கியே பாய்கின்றன. தமிழகத் தளப்பகுதி போல வறண்ட பகுதி கொஞ்சமேனும் எங்கும் காண முடியவில்லை. கண்ணில் படுவதெல்லாம் தென்னை,தென்னை,தென்னை மீதம் பலா,வாழை,கமுகு ஒவ்வொரு வீடும் இன்ப வனமாகக் காட்சியளிக்கிறது.\nகண்ணனூர், காசாரக்காடு தாண்டியவுடன் இருட்டத்தொடங்கியது. தொலைதூர வண்டிகளில் உள்ளது போன்ற பான்ரிக்கார் இந்த ஹாப்பா எக்ஸ்பிரஸில் இல்லை(எதிர்காலத்தில் இணைக்கப்படலாம்). எனவே நினைத்தபோது குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ ஏதும் வாங்க முடிவதில்லை. வாடிக்கையாக வருபவர்கள் உணவு,ஸ்நாக்ஸ் எல்லாம் தயாராக கையில் எடுத்து வந்து விடுகிறார்கள். ஆனால்,நம்மைப் போன்றவர்களுக்கு சில நேரங்களில் தண்ணீர்,டிபன் வாங்குவதுகூட சிரமமாகிவிடுகிறது. அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது வண்டி. இரண்டு மணிநேரம் தாமதம் என்றார்கள்.\nஅங்கிருந்து பழைய கோவாவிலுள்ள சவேரியார் ஆலயத்தோடு இணைந்துள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினோம். காலையில் சவேரியார் ஆலயத்தில் தமிழ்த் திருப்பலியை நம் தந்தை ஆற்றியபின், கோவாவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். போகும்முன் கோவாவைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளது நன்று. அதற்காக நான் எடுத்து வைத்திருந்த சில குறிப்புகளை அடுத்த அஞ்சலில் தருகிறேன்.\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/sme/grofers-shuts-down-vegetables-fruits-delivery-delhi-bengaluru-012029.html", "date_download": "2018-08-21T14:12:41Z", "digest": "sha1:WMULOGWAXJT4XLTBA7ST7DSRKD7W37DO", "length": 19809, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..! | Grofers shuts down vegetables, fruits delivery in Delhi, Bengaluru - Tamil Goodreturns", "raw_content": "\n» டெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..\nடெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nரூ. 1 லட்சம் கோடி செலவில் டெல்லி-மும்பை இடையில் புதிய எக்ஸ்பிரஸ் வழிப்பாதை: நித்தின் கட்காரி\nவிரைவில் இந்திய வருகிறது வியட்நாமின் கவர்ச்சி புயல்..\nஓரியன்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸிலும் ஓரு வைர வியாபாரி மோசடி.. எத்தனை கோடி தெரியுமா\n 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை..\nஊழல்.. இந்த விஷயத்தில் மகாராஷ்டிராவை அடிச்சிக்க முடியாது..\nவிரைவில் வருகிறது டாடா நேனோவின் எலக்ட்ரிக் கார்..\nகுர்காமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை நிறுவனமான க்ரோபர்ஸ் டெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி மற்றும் பழம் வகைகளை டெலிவரி செய்வதை நிறுத்தியுள்ளது.\nகடந்த சில வாரங்களாக இந்தக் காய்கறி மற்றும் பழம் டெலிவரி சேவையினை இடைக்காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதனைத் தற்போது முழுமையாக நிறுத்துவதாக க்ரோபர்ஸ் தெரிவித்துள்ளது.\n2016-ம் ஆண்டு முதல் காய்கறி மற்றும் பழம் வகைகளை க்ரோபர்ஸ் டெலிவரி செய்யத் துவங்கி இருந்தாலும் அது பெரியதாகப் பயன் அளிக்கவில்லை. 90 நிமிட டெலிவரி சேவை இருப்பினும் அது பிரெஷான உணவு பொருட்கள், மீன் போன்றவற்றை டெலிவரி செய்யத் தேவையான ஒன்றாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் காய்கறி வாங்க பெரியதாக வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லை என்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.\nக்ரோபர்ஸின் நெக்ஸ்ட் டே லிவரிக்கு இருக்கும் ஆதரவு பிரெஷான பொருட்களை டெலிவரி செய்யக் கிடைக்கவில்லை. எனவே காய்கறி மற்றும் பழ வகைகளை எக்ஸ்பிரஸ் சேவையில் டெலிவை செய்யவதை க்ரோப்பர்ஸ் நிறுத்தியதாகத் தலைமை செயல் அதிகாரியான அல்பிந்தர் திண்ட்ஸா தெரிவித்துள்ளார்.\nக்ரோபர்ஸ் நிறுவனம் தங்களது லேபிள் மட்டும் இல்லாமல் பிற எப்எம்சிஜி லேபிள் பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. க்ரோபர்ஸின் வருவாயில் 35 சதவீதம் குளிர்பானங்கள், சோப்பு வகைகள், நூடல்ஸ், பாஸ்தா போன்ற தனியார் லேபிள் பொருட்களில் இருந்து தான் கிடைக்கிறது.\nதற்போது க்ரோபர்ஸ் தினமும் 35,000 ஆர்டர்களைத் தினமும் டெலிவரி செய்து வரும் நிலையில் ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டி வருகிறது.\nக்ரோபர்ஸ் நிறுவனம் பிரெஷான பொருட்களை டெலிவரி செய்வதில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் பிக்பாஸ்கட், சாட்வாகார்ட், மில்க்பேஸ்கட், டெய்லி நிஞ்சா போன்ற மிக்ரோ டெலிவரி நிறுவனங்கள் இந்தச் சேவையினைப் பிடிக்க வாய்ப்புகள் உள்ளது.\nபிக்பாஸ்கட் நிறுவனத்தில் மீண்டும் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அன்மையில் பிக்பேகட் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மார்னிங் கார்ட் மற்றும் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெயின்கேன் நிறுவனங்களை வங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t145096-topic", "date_download": "2018-08-21T13:26:24Z", "digest": "sha1:BAVM76Z4IPVPCDUHEODLV3YZQ5UEYCKM", "length": 11958, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!", "raw_content": "\nஎனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி\nபறக்கும் பட்டாம்பூச்சி – பொ.அ.தகவல்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....\nகருத்து சொல்ல முடியாத - சர்ச்சையை கிளப்பிய கவிதை.\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅது அந்தக் காலம் – சுவையான செய்திகள்\nஅவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\nகடைமடைக்கு நீர் வர 45 நாட்களுக்கு மேல் எடுக்கும் - நீர்வளத் துறை பொறியாளர்.-மீம்ஸ் சொல்லும் செய்தி.\nகார்ட்டூன்கள் எந்த நாட்டு பத்திரிகையில் அறிமுகம் ஆனது\n1.08.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஅறிமுகச் செய்திகள் – பொ.அ.தகவல்\nகூந்தல் காட்டில் ஒற்றை ரோஜா…\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகண்ணுக்கு மை அழகு – பொ.அ.தகவல்\nபனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்\n100% காதல் – திரைப்பட ஷூட்டிங் முடிவடைந்தது\nசரியாக 347 வருடங்களுக்கு முன்பு...\nநிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\nகேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’\nவாட்ஸ் அப் – நகைச்சுவை\nபேரு வைக்கும்போதே நல்ல பேரா வைக்க வேண்டியதுதானே…\nஅவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி…\nகடவுளின் விருப்பம் – கவிதை\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nகரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…\nபிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\n.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்\nரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு\n6,7,8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு வரி வினாக்கள்\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nRRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரலாறு - மொகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய வினா விடை குறிப்புகள்\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nRe: கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nRe: கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nRe: கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=e2d8f275267d4d53812ab20fd3c06777", "date_download": "2018-08-21T14:25:59Z", "digest": "sha1:CL4CSR3UYSNPE2JLBLQ254WM5U5RBKOX", "length": 33994, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1467/", "date_download": "2018-08-21T14:34:03Z", "digest": "sha1:XY7LKPDQTSDKPJNFG35QSLIFDAJSZJD6", "length": 7053, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும்; பாரதிய ஜனதா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nநாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும்; பாரதிய ஜனதா\nபாபா ராம்தேவ்வை தில்லி போலீசார் வலுகட்டாயமாக வெளியேற்றியது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட-வேண்டும் என குடியரசுத்தலைவரை பாரதிய ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.\nபாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தலைமையில் கட்சித்தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண்குமார், எஸ் எஸ் அலுவாலியா போன்ற தலைவர்கள் திங்கள்கிழமை மதியம் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nபாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் பல்ராஜ் மதோக்…\nஹர்திக் படேல் கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்தது பாரதிய ஜனதா\nஅத்வானி நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமனம்\nஜல்லிக்கட்டு டெல்லி விரையும் பாஜக தலைவர்கள்\nஅருண் ஜெட்லி விரைவில் மீண்டுவருவார்\nபாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்\nபாபா ராம்தேவ், பாபா ராம்தேவ்வை, பாரதிய ஜனதா\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/1764/", "date_download": "2018-08-21T14:38:30Z", "digest": "sha1:R25WWNH5IC2IX7QXZTVI2UISIPBPVVEP", "length": 17545, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "மரபணு வரைபடத்தின் பயன் ? | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nமனிதன் மற்றும் விலங்குகள் (அல்லது பிற உயிரினங்கள்) உடலில் உள்ள முக்கிய உயிர் வேதிப் பொருட்களில் ஒன்று மரபணு(ஜீன்). இந்த மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு, அழகு, தலைமுடி, கண், தோலின் நிறம், புத்திசாலித்தனம், உடலில் தாக்கும் நோய்கள் போன்றவை அமைகின்றன.\nஒரு மனிதன் (அல்லது உயிரினம்) பிறக்கும் போது ஏற்படும் கோளாறுகள் அல்லது பின்னாளில் அவனுக்கு வரும் நோய்கள் எவை என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள \"மரபணு வரைபடங்கள்\" உதவுகின்றன. மேலும் இந்த வரைபடம் மூலம் குறைபாடுகள், நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம். எந்த மரபணு குறை உள்ளதோ அதற்கு மட்டும் சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நோய் தாக்குதல்களில் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.\nஇது தவிர மரபணுவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின் செயல்பாடு, திறனை மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக ஒருவர் நோஞ்சான் உடம்புடன் இருக்கிறார். அவரால் எந்த காரியத்தையும் திறமையாக செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம்.\nஅந்த நபரின் மரபணு வரை படத்தை எடுத்து, அதை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்ட மரபணுவின் செயல்வேகத்தை அதிகப்படுத்தினால் போதும். அந்த நோஞ்சான் பயில்வான் ஆகிவிடுவார். உருண்டு திரண்ட சதைப்பற்றுடன் அவரது உடல் அமைப்பு மாறிவிடும். ஒரு பலசாலி போல அவரால் செயல்பட முடியும்.\nஇதுபோன்ற மருத்துவ அதிசயங்களை வருங்காலத்தில் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். இதை ஒரு 'எலி சோதனை\" மூலம் அவர்கள் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். இந்த சோதனை ஆராய்ச்சியின் மூலம் உருவானதுதான் ''மராத்தான் எலி\".\nமருத்துவ உலகின் அதிசயமாக கருதப்படும் 'மராத்தான் எலி\" பற்றிய தகவல்கள் வருமாறு:-\nஅமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு வரைபடம் மூலம் புதிய சிகிச்சை முறைகள், நவீன மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nநவீன வளர்ச்சிக்கு ஏற்ப 21-ம் நூற்றாண்டில் புதிய நோய்களும், தொற்று நோய்களும் மனித இனத்தை தாக்குகின்றன. சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுதல், தண்ணீர், உணவில் ஏற்பட்டுள்ள சத்துக் குறைவு, நாகரீக மான வாழ்க்கை முறை போன்றவற்றால் மனித இனம் பாதிக்கப் பட்டுள்ளது.\nஇன்றைய குழந்தைகளில் பலர் பிறக்கும் போதே 'குண்டு குழந்தை\"யாக உள்ளனர். வளர வளர உடல் எடை அதிகரித்து 'சதைக்குன்று\" போல மாறி விடுகின்றனர். மன இறுக்கம், வாழ்க்கை சவால்கள்,அதிக ஆசை, தேவைக்கு அதிகமான உணவு… போன்றவை காரணமாக சிறிய வயதிலேயே மனிதன் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எய்ட்ஸ், புற்று நோய், மாரடைப்பு, நரம்பு, மூளை பாதிப்பு நோய் போன்றவை காரணமாக மனித இனம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nஇத்தகைய நோய் தொந்தரவு பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ என்ன சிகிச்சை முறை, அல்லது மருந்து தேவை என்பது குறித்து அமெரிக்காவின் சான்டிகோ நகரில் உள்ள சால்க் இன்ஸ்டிடிய+ட் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான ரோனால்டு இவான்ஸ் தலைமை யிலான குழு இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டது.\nமரபணு சிகிச்சை மூலம் உடல் பருமன் ஆவதை தடுக்க முடியும். மேலும் உடலின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக சாதாரண எலி ஒன்றை தேர்ந்தெடுத்தனர். அது கருவில் இருக்கும் போதே 'மரபணு சிகிச்சை\" அளிக்கப்பட்டது. உடலின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் மரபணுவின் பி.பி.ஏ.ஆர். டெல்டா (PPயுசு-னுநடவய) என்பதை மாற்றி அமைத்தனர்.\nஅதன் பிறகு வளர வளர அந்த எலியின் தன்மை, உடல் எடை, ஓடும் வேகம் ஆகியவற்றை கண்காணித்தனர். சாதாரண எலி தொடர்ந்து 900 மீட்டர் (2950 அடி) ஓடினால் மரபணு சிகிச்சை பெற்ற எலி 1800 மீட்டர் (5,900 அடி) தூரம் தொடர்ந்து நிற்காமல் ஓடியது. இந்த ஓட்ட சோதனைக்காக விசேஷ ஓடுதளம் (வுசநயன அடைட) வடிவமைக்கப்பட்டது.\nசாதாரண எலியை விட இரண்டு மடங்கு சக்தியுடன் இரண்டு மடங்கு தூரம் ஓடியதால் இந்த எலிக்கு 'மராத்தான் எலி\" என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினார்கள்.\nமேலும் சோதனையின் போது சில நாட்கள் இந்த எலிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் 'சும்மா\" உட்கார வைத்து 'தீனி\" போட்டனர். கொழுப்பு சத்து நிறைந்த உணவு தாராளமாக கொடுக்கப்பட்டது. வயிறு புடைக்க தின்ற போதிலும் எலி 'குண்டு\" ஆகவில்லை. அழகிய உடல் தோற்றத்துடன்தான் இருந்தது.\nமேலும் சாதாரண எலியை விட புத்திசாலித்தனம் கூடுதலாகவும் கற்றுக் கொடுப்பதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படும் திறன் கொண்டதாகவும் மராத்தான் எலி இருந்தது.\n'மராத்தான் எலி\"யை உருவாக்க இரண்டு மருந்துகளை ரோனால்டு குழுவினர் தயாரித்துள்ளனர். அடுத்த கட்டமாக மராத்தான் மனிதர்களை உருவாக்கும் வகையில் மரபணு சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மாரடைப்பு ஏற்படாமல் மனித இனத்தை காப்பாற்ற முடியும். மேலும் உடல் பருமன் ஆகாமலும் தடுக்கலாம்.\nநோஞ்சான் உடம்பு மனிதர்களே இல்லை என்ற நிலை மாறி அனை வரும் பலசாலிகள் தான் என்ற சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பது விஞ்ஞான நம்பிக்கையாகும்.\ntags; மரபணு, மரபணுக்கள், மரபணுக்களை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மரபணுக்களில், மரபணுக்களின் , மரபணு வரைபடத்தின் பயன் \nயோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள் குணமாகும்\nபொருளாதார வளர்ச்சி என்பது வரும் நிதி ஆண்டில் சவாலான விஷயம்\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்…\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத்…\nதேவையும், அரவமும் இருந்தால் மட்டுமே வெற்றி கைக்கூடும்\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nமரபணு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மரபணுக்களின், மரபணுக்களில், மரபணுக்களை, மரபணுக்கள்\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/03/prophet-mohammed_16.html", "date_download": "2018-08-21T14:22:09Z", "digest": "sha1:SOKNJPWMEHXSVS6OFWOW3VP6LZCEO45Y", "length": 12927, "nlines": 128, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு! பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » நபிகள் நாயகம் » நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nநபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nTitle: நபிகள் நாயகம் பற்றி ஐநா சபையில் அணல் பறந்த பேச்சு பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nமாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம். பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் ச...\nமாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம்.\nபாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.\nஎளிமையான ஆங்கில உரையின் தமிழாக்கம் இதோ :\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - யார் தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கு விரும்பவில்லையோ அவண் உண்மையான முஸ்லிம் அல்ல.\nஅல்லாஹ்வுக்கு அழகான பல பெயர்கள் உண்டு அதில் ஒன்று தான் அர்ரஹீம் – மிக்க கருனையாளன்.\nநபிகள் நாயகம் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அஸ்ஸலாமு அலைக்கும் எனக் கூறுவார்கள். இதன் பொருள் , உங்கள் மீது அந்த இறைவனின் கருனை உண்டாகட்டும்.\nஇவ்வாறு தான் ஒரு முஸ்லிம் இறைவனது அன்பை மற்றவருக்கு வேண்டுவார்.\n(உலக நாடுகளின் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்)......\nமேலும் முஹம்மத் நபி போர்க்களத்திலும் கூட எவ்வாறு மனிதநேயத்துடன் நடக்க வேண்டுமென தன் தோழர்களிடம் கூறுகையில்,\nகுழந்தைகளை , பெண்களை , வயதான முதியவர்களைக் கொலை செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார்கள். மேலும் எதிரிகளின் வசம் உள்ள மதபோதகர்கள், மரங்கள் ,ஆலயங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தக்கூடாது எனக் கூறினார்கள்.\nஇவைதான் முஸ்லிம்களுக்கு மதரஸாக்களில் (அரபு பாடசாலை) போதிக்கப்படுகிறது.\n(உலக நாடுகளின் தலைவர்கள் மீண்டும் கைதட்டுகிறார்கள்)......\nLabels: உலக செய்தி, நபிகள் நாயகம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-raghuram-slam-kamal-over-hindu-terror-issue-300761.html", "date_download": "2018-08-21T14:13:09Z", "digest": "sha1:ZJBPPCN7FJTCRUK33JBHL2ZNL5N4QBTG", "length": 11588, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன இந்தம்மா கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி? | Gayathri Raghuram slam Kamal over Hindu terror issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்ன இந்தம்மா கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி\nஎன்ன இந்தம்மா கமலை பார்த்து பொசுக்குன்னு இப்படி சொல்லிடுச்சி\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nஎன்ன ஸ்டைல் காட்டுறியா.. எனக்கு நீச்சல் கற்றுத் தந்ததே எம்ஜிஆர்தான்.. யாருக்கு சொல்கிறார் கமல்\nகமல்ஹாசனுக்கே தெரியாத வாழ்க்கை ரகசியம்.. முதல் முறையாக வெளியே சொன்ன சகோதரி நளினி\nநிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்.. மிரட்டும் கமல்\nஎம்ஜிஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே- கமல் கண்டனம்\nகாவேரி மருத்துவமனையில் கமல்.. கருணாநிதி நலம் குறித்து விசாரித்தார்\nதேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி கமல்ஹாசன் அளித்த 'செம' பதில்\nசென்னை: நடிகையும், தமிழக பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், விஜய் டிவியில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகம் புகழடைந்தவர்.\nகமல் இவரின் குடும்ப நண்பர் என்ற பேச்சு உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பல அடாவடிகளை செய்ததாக நிகழ்ச்சி ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.\nமேலும், காயத்ரிக்கு, கமல் ஆதரவு அளித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரச் செய்வதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர்.\nகாயத்ரி செய்த பல தவறுகளை கமல் லேசாக கடந்து சென்றதாக சமூக வலைத்தளங்களில் பலர் குமுறினர். ஆனால், கமல் கருத்து ஒன்று தன்னை நோகடித்துவிட்டதாக காயத்ரி ரகுராம் டிவிட் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர்.\nதனது டிவிட்டில் \"நான் காயமடைந்துள்ளேன். நான் இந்துதான், ஆனால் தீவிரவாவதி இல்லை\" என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம். இந்துக்களிலும் தீவிரவாதிகள் உருவாகிவிட்டதாக கமல் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதியிருந்தார். இதற்கு அகில இந்திய அளவிலும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், காயத்ரி இவ்வாறு கூறியுள்ளார்.\nஏற்கனவே இதே கருத்துக்காக கமலுடன் எஸ்.வி.சேகரும் மன வருத்தத்தில் உள்ளார். அவரது டிவிட்டுகள் அதை எடுத்துக்காட்டுகின்றன. எஸ்.வி.சேகரும், கமலும் பல படங்களில் இணைந்து நடித்தவர்கள்.\nஇந்தம்மாவுக்காக ஆண்டவரு நாறக்கிழியெல்லாம் வாங்கிட்டு கெடந்தாரு..ஹர்ட்டாமாம்\nஅதேநேரம் காயத்ரி, கமல் பெயரை குறிப்பிடாமல் இதை டிவிட் செய்துள்ளார். இது இந்த நேரத்தில் கமலுக்கான பதிலடிதான் என்று நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். எனவே இந்த டிவிட்டும் வைரலாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkamal haasan கமல் கமல்ஹாசன் காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-21T14:00:43Z", "digest": "sha1:WTFCTJISWIBLWQVBX243VDX7P5RENNSJ", "length": 13150, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மனிதர்களின் ஆயுள் காலம் எவ்வளவு? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nமனிதர்களின் ஆயுள் காலம் எவ்வளவு\nமனிதர்களின் ஆயுள் காலம் எவ்வளவு\nவாழ்வின் துன்பத்திற்கான காரணத்தை அறிந்து ஞானம் பெற்ற கௌதம புத்தர் தனது போதனைகளைக் கூற அமர்ந்திருக்கின்றார். அவரின் வாய்மொழிக்காக சீடர்கள் பக்தியுடன் அவர் முன்னே அமர்ந்திருக்கின்றனர்.\nஒவ்வோர் சீடனின் முகத்திலும் இன்று என்ன கற்கப்போகின்றோம் என்ற கேள்வி கலந்த எதிர்பார்ப்பு தெளிவாகத் தெரிகின்றது. ஞானம் பெற்ற புத்தனுக்கு சீடர்களின் முகம் பார்த்து மனம் அறிவது கடினமா என்ன\nபுன்முறுவலை முகத்தில் தவள விட்ட புத்தர் “ஒரு மனிதனின் ஆயுற்காலம் எவ்வளவு” என்ற கேள்வியை முன்வைக்கின்றார்.\nசட்டென்று சீடர் கூட்டத்தில் இருந்த ஒரு சீடன் “நூறு வருடங்கள் மனிதனின் ஆயுள்காலம்” என, பதில் சரியாகத்தான் இருக்கும் என்ற ஆர்வத்தோடு கூடிய பணிவுடன் கூறுகின்றான்.\nகெளதம புத்தர் புன்னகைகோடு தவறான பதில் எனக்கூற சீடர்கள் மத்தியில் அமைதியோடு கூடிய சலனம். மீண்டும் ஒரு சீடன் எழுந்து “எழுபது வருடங்கள்” என்றதோர் பதிலை சந்தேகத்தோடு முன்வைக்கின்றான்.\nபுத்தரின் முகத்திலோ அதே பழைய புன்னகை அத்தோடு அதே பழைய பதில் “தவறு” என மென்மையோடு உதிர்க்கின்றது அவர் திருவாய். இதுவும் தவறாகிப்போய் விட்டதே என விளித்த சீடர்கள் எப்படியாவது பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்.\nஅடுத்து வந்த “அறுபது” என்ற பதிலும் தவறாகிப்போக, ஐம்பது என்கிறார் மற்றுமோர் சீடன். இந்த பதிலுக்கும் புத்தரின் பதில் தவறு என்றே மறுமொழியளிக்கின்றது.\nஇப்படியாக அனைத்து பதிலும் தவறாகிப்போன சீடர்களுக்கு அடுத்த பதில் கூறுவதில் தயக்கம் ஏற்படுகின்றது. 100 வருடத்திற்கு மேல் வாழ்வது சாத்தியத்தன்மையற்றது அதேபோல ஐம்பது வருடங்கள் வாழவும் கூட மனிதனால் முடியாதா என்ற பதில் கேள்வி சீடர்களுக்கு ஏற்பட அமைதியாக இருக்கின்றனர்.\nசீடர்களின் அமைதி கண்ட புத்தர் அவர்களிடம் பதில் இல்லை என்பதை தெளிவாகவே அறிந்து கொள்கின்றார். அவர் முன்வைத்த கேள்விக்கு அவரே பதில் கூறுகின்றார் “மனிதனின் ஆயுள் ஒரு மூச்சு விடும் நேரம்” என்று.\nபதிலுக்கான அர்த்தம் புரியாமல், வியப்போடு “மூச்சுவிடும் நேரம் கணப்பொழுது மாத்திரம் தானே அவ்வளவு தான் ஆயுளா என சந்தேகத்தோடு சீடர்கள் வினவுகின்றனர்.\n“உண்மைதான் மனிதனின் ஆயுள் என்பது மூச்சுவிடும் நேரம் மாத்திரமே. வாழ்வு இருப்பது மூச்சு விடும் பொழுது மாத்திரமே. அதனால் ஒவ்வோர் கணமாக நாம் வாழவேண்டும்”\n“மனித வாழ்வில் பலரும் மகிழ்ச்சிக்காகவும், எதிர்காலத்தை பற்றிய குழப்பத்தோடும் வாழ்கின்றார்கள். இது அறியாமல் செய்யும் தவறு. நேற்று என்பது முடிந்து விட்டது, அதுபோலவே நாளை என்பதும் தெரியாத ஒன்று”\n“எனவே அவற்றில் தன் காலத்தை செலவிடுவது மடமைத்தனமானது. கடந்து போனதைம், இனி வரப்போவதையும் எண்ணாமல் வாழ்வதே அறிவு. அதனால் ஆயுள் என்பது மூச்சு விடும் கணம் மாத்திரமே” என விளக்கிய கௌதமரின் பதிலால் தெளிவடைகின்றனர் சீடர்கள்.\nஇந்த விடயம் அனைவரும் அறிந்தது தான் எனினும் மனிதர்கள் இப்படி வாழ்கின்றனரா நேற்றைப்பற்றிய நினைவுக் கவலை, நாளை பற்றிய பயத்தின் ஆவல் இவற்றோடு தானே நகர்கின்றது மனிதரின் ஆயுள். தெளிவோடு வாழ்ந்தால் வாழ்வின் துயர் நீங்கும் அமைதி கிடைக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் இல்லை: ரிஷாட் பதியுதீனின்\nவிடுதலை புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம் அமைச்சர்களிடம் இருப்பதாக புனர்வாழ்\nகேரள வெள்ளப்பெருக்கு: ஐ.நா செயலாளர் நாயகம் கவலை\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைய\nஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது: இன்பராசா\nஅரசாங்கமே விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அவர்களை வளர்த்து விட்டதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ\nதோட்டதொழிலாளர்களின் வாழ்க்கை செலவிற்கேற்ப, வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும்: கிட்னன் செல்வராஜ்\nதோட்டதொழிலாளர்களின் வாழ்க்கை செலவிற்கேற்ப, வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தோட்ட தொழிலா\nநாளாந்தம் சவாலாகும் மன்னார் மீனவர் வாழ்வு\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=17339?to_id=17339&from_id=17472", "date_download": "2018-08-21T13:59:24Z", "digest": "sha1:7MADXQCRQWUKS3KHVZM7273ZK3S46ABA", "length": 7679, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்.பல்கலையில் அன்னை பூபதி! – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 19, 2018ஏப்ரல் 21, 2018 இலக்கியன்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது.\nஅன்னை பூபதியின் உருவப் படத்துக்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்,பீடாதிபதிகள் ,மாணவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய\nத.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு\nஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thirumozi.blogspot.com/2007/01/097-3.html", "date_download": "2018-08-21T13:37:37Z", "digest": "sha1:OUPMTGQ7OVCDOJ6I7Y6SZEKPIOQYEHW4", "length": 32564, "nlines": 490, "source_domain": "thirumozi.blogspot.com", "title": "ஆழ்வார்க்கடியான்: மடல் 097: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)", "raw_content": "\nஆழ்வார்க்கடியான் கண்ணனமுது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது\nமடல் 097: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)\nஅவதாரக் கோட்பாடு என்பது மிகத் தொன்மையான ஒரு இந்திய வழக்கு. தமிழின் முதற் சான்றுகளாக சங்கப் பாடல்களைச் சொல்லலாம். நற்றிணைக் கடவுள் வாழ்த்தில் திருமால் வேதத்தில் போற்றப் படும் பரம்பொருள் என்றும், அவர் உலகிற்குக் காரணப்பொருள் என்றும் அறிகிறோம். அகநானூற்றில் கிருஷ்ணாவதாரச் செய்தி ஒன்றும்,இராமாவதாரச் செய்தியொன்றும், பரசுராமாவதாரச் செய்தியொன்றும் வருகிறது. முதல் மூன்று ஆழ்வார்களின் பாடல்களில் கூர்மம், வராகம், நரசிம்மன், வாமனன்,இராமன், கண்ணன் அவதாரங்கள் இடம் பெறுகின்றன. பெரியாழ்வார் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டிற்குள் இந்த அவதார வரிசை ஒரு ஒழுங்கிற்குள் வந்து விடுகிறது.\nஎனவே எப்படிப் பார்த்தாலும் இந்தியக் கூர்தலியச் சிந்தனை, ஆங்கிலச் சிந்தனையைவிட பல நூற்றாண்டுகள் முந்தியவை. எனவேதான், முதன் முதலாக ஐரோப்பாவை உலுக்கிய கூர்தலியச் செய்தி இந்தியா வந்த போது \"கிணற்றுக்குள் போட்ட கல்\" போல் சத்தமில்லாமல் இருந்தது :-)\nசிலப்பதிகாரம் பேசும் ஒரு பாடலிலும் ஒரு செய்தி ஒளிந்து கொண்டுள்ளது. அதாவது,\nஎன்பது அது. இந்தக் கடல் வயிறு கலக்குதல் என்பது ஒரு ஆழமான தொன்மம். பல பொருள் கொண்டது. பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி தனது முனைவர் ஆய்வேட்டில் அது \"உப்புக் காய்ச்சுவதை\"க் குறிக்கலாம் என்கிறார். அல்லது கடல் என்பது உணவுக் களஞ்சியம் என்பதைச் சுட்டலாமென்றும் சொல்கிறார்.\nகூர்தலியப் பார்வையில் உயிர்கள் தோன்றிய விதத்தைக் குறிப்பதோ இது என்றொரு சந்தேகம் இப்போது எழுகிறது. அதாவது முதல் உயிர்கள் தோன்றியகாலக் கட்டத்தில் கடல் என்பது வின் கற்களாலும், மின்னல், இடிகளாலும் தாக்கப் பட்டு கலங்கிய ஒரு நிலையில் இருந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.Stanley L.Miller (1952) என்ற அமெரிக்க விஞ்ஞானி இத்தகைய ஒரு சூழலை ஆய்வகத்தில் உருவாக்கி சோதனை செய்ததில் உயிர் தோன்றுவதற்குத் தேவையான அமினோ அமிலங்கள் உருவாவதைக் கண்டார் இப்படிக் கலங்கிய கடலின் அடிவயிற்றை விஞ்ஞானிகள் \"hot soup\" என்றுதான் சொல்கின்றனர்\nஎன்ற பெரியாழ்வார் திருமொழி திருமாலைக் கங்கையாய், ஆழ்கடலாக வருணிப்பது இங்கு உற்று நோக்கத் தக்கது. இப்படியான ஒரு சூடான இரசித்திலிருந்து உயிர்கள் வேதிமச் சேர்க்கையால் உருவாகின்றன. இந்த வேதிமச் சேர்க்கைக்கு உயர் சக்தி தேவைப் படுகிறது. அதை இன்றைய பூமியால் தந்திருக்க முடியாது. ஏனெனில் இன்றைய பூமி மிகவும்குளிர்ந்து விட்டது. அன்று அவ்வாறில்லை. எரிமலைகளும், வின் கற்களும், இடியும், மின்னலும் சதா தாக்கிக் கொண்டிருந்தன. அமினோ அமிலங்கள் எரிமலை கக்கிய அமோனியா, கரியமில வாயு மற்றும் நைட்டிரஜன் இவைகளின் வேதிமச் சேர்க்கையால் உருவாகின்றன.\nஇந்த \"சேர்க்கை செய்து\" என்ற பதம் உண்மையில் ஒரு வேதியியற் பதம். வேதிமற் சேர்க்கைகள்தான் உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சேர்க்கைகளுக்குத் தேவையான சக்தியை அவை பஞ்சபூத பெளதீகத்தாற் பெருகின்றன. இப்படித்தான் உலகு உயிர் அவன் படைத்திருக்க வேண்டும் (அறிவியல் \"படைப்பவன்\" ஒருவன் வேண்டும் என்று எண்ணுவதில்லை. எல்லாம் தன்னிச்சையாக நடைபெறுகின்றன எனச் சொல்கிறது. அதுவேறு விஷயம்).\nதேவவுலகு, தெய்வவுலகு என்பவை என்ன என்று பின்னால் சிந்திக்கலாம். முதலில் உயிர் கொண்ட பூவுலகு தோன்றியதைப்பார்ப்போம்.\nகடல் வயிறு கலக்கிய புராணத்தில் வேறொரு செய்தியும் உண்டென்று படுகிறது. அதுதான் இந்த \"ஆலகால விஷம்\". அது என்ன ஆலகால விஷம் அது புறப்பட்டு உயிர்களை அழித்துக் கொண்டு தேவர்களை விரட்ட அவர்கள் சிவனிடம் தஞ்சம் புக அவர் அதை உண்டு \"நீல கண்டனாக\"....\nஇந்த ஆலகால விஷம் என்பது இன்று உயிர் வளி என்று நம்பப்படும் \"ஆக்ஸிஜன்\" தான்\n முதல் உயிர்கள் தோன்றி பாக்டீரியாக்களும் பிறவும் கலக்கிய கடலைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் சூரிய ஒளியை வேதிமச் சேர்க்கையால் சக்கரையாக்கும் வித்தையை (ஒளிச்சேர்க்கை) சில உயிரனங்கள் (phyto-planktons) கற்றுக் கொள்கின்றன. இப்படியான ஒளிச்சேர்க்கையின் பக்க விளைவுதான் இந்த உயிர்வளி. இந்த உயிர்வளி ஒரு காலக் கட்டத்தில் இந்த உலகை பயமுறுத்தியது. ஏனெனில் முதலில் தோன்றிய உயிர்களுக்கு உயிர்வளியைப் பயன்படுத்தும் தேவை இல்லாததால் அதுவே நஞ்சாகப்போனது. உலகு முழுவதும் பரந்திருந்த உயிர்வளியைப் பயன்படுத்தி வாழும் தன்மையை பின்னர் உயிர்கள் பெறுகின்றன. அதற்கேற்ற ஒரு உயிர்வேதியியல் (biochemistry) உருவாகிறது. அப்போது உயிர்கள் \"வாழ\" இந்த வளி முக்கியமானதாகப் போய்விடுகிறது. இதுதான் சிவபெருமான் உலகைக் காத்த கதைக்கான அறிவியல் வாசிப்பு.\nஎன்ன இப்படிச் சிந்தனை போகிறது என்ன எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் தொன்மங்களுள் புதைந்துள்ள உண்மைகள் மெதுவாகத்தான் தெரிய வருகின்றன. 1998ம் ஆண்டு பிப்ரவரி 20 தேதியிட்ட Science நோவாவின் கப்பல் (Noah's arc) புனைவு அல்ல என்று சொல்கிறது மத்தியதரைக் கடல், போஸ்போரஸ் வழியாக உடைத்துக் கொண்டு கருங்கடலுள் உட்புகுந்த போது 200 நயாக்கரா நீர்வீழ்ச்சிகளின் அளவான தண்ணீர் 500 கிலோ மீட்டர் வட்டத்திற்குள் கேட்கும் வண்ணம் பெரும் சத்தத்துடன் உட்புகுந்து இருக்கிறது.\nஇது கிளப்பிய அழிவில் வெளியேறிய பண்டைய மக்கள் மெசபடோமிய,சுமேரிய நாடுகளுக்கு 7500 ஆண்டுகளுக்குமுன் வந்து குடியேறிய போது இக்கதைகளைக் கொண்டு வந்து அதுவே பின் நோவாவின் கப்பல் தொன்மமாக உருவெடுத்திருக்க வேண்டும்என்று Wiiliam Ryan, மற்றும் Walter Pitman என்ற ஆய்வாளர்களின் கருங்கடல் ஆய்வுசுட்டுகிறது. இதே நிகழ்வுதான் மச்சாவதாரத்திற்கும் ஆதாரமாக இருக்கவேண்டும். அதைப்பின்னால் பார்ப்போம்.\nஎனவே தொன்மங்கள் என்பவை பண்டைய நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆழ்மனப்பதிவுகளாக எடுத்தியம்பும் கனவுடை உத்தி என்று புரிகிறது. இதற்கு அடுத்த ஒரு நிலையில்இந்திய மெஞ்ஞானிகள் காலம் தோன்றிய காலம் அளவிற்குச் சென்று சில உண்மைகளைப் பகர்ந்துள்ளனர் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது. விஞ்ஞானி, தான் காணும் உலகிலிருந்து தனது அனுமானங்களை எடுத்துக் கோட்பாடுகளை உருவாக்கி, பின் அதைச் சோதனைகள் செய்து மெய்ப்பிக்கிறான். இது போன்ற கோட்பாடுகள்தான் இந்திய மெஞ்ஞானிகளின் தொன்மங்களும் என்று நம்ப வாய்ப்புள்ளது. இல்லையெனில் பல விஷயங்கள் அவ்வளவுகன கச்சிதமாக இன்றைய ஆய்வு முடிவுகளுடன் பொருந்துவானேன்\nஇது ஒரு திறந்த கேள்வி. ஒரு முற்று முடிவன்று. சிந்தனைக்கு ஒரு விருந்து அவ்வளவே. இத்தகைய நூல்கள் பல ஆங்கிலத்தில் வந்துள்ளன. நம் தொன்மங்களை மீள்பார்வை செய்ய இப்போது நல்ல தருணம்.\nபடிக்க படிக்க ஆச்சரியமாக இருக்கு.\nதிருமாலிய ஒருங்கிணைப்பு, அகில இந்திய அரவணைப்பு, ஞான நிதி வைப்பு\nமடல் 093: உலகின் தோற்றமும், மழையுயிர் காத்தலும்\nமடல் 094 - மேவி கற்பாருக்கான மாமருந்து\nமடல்-095: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (1)\nமடல்-096: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (2)\nமடல் 097: அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)\nமடல் 098: மச்சாவதாரமும், கருங்கடல் பெருக்கும்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபாசுர மடல்கள் (பாகம் 1)\n008. அதீத காதலும் பக்தி இலக்கியமும்\n009. சாதிகள் இல்லையடி பாப்பா\n010. என் அமுதினைக் கண்ட கண்கள்\n011. வேதம் தமிழ் செய்த மாறன்\n013. பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்\n014. பற்றுடை அடியவர்க்கு எளியவன்\n015. திருமழிசை என்ற அதிசயம்\n016. பை நாகப் பாயை..\n018. ஆழி மழைக் கண்ணா\n020. கண்ணனுக்கே ஆமது காமம்\n022. செய்ய தாமரைக் கண்ணினாய்\n023. வெப்பம் கொடுக்கும் விமலா\n024. வாழ்வு நிலையே கண்ணம்மா\n025. வேங்கடவற்கு என்னை விதி\n031. என் சரண் என் கண்ணன்\n033. புணை போல் ஆருயிர்\n034. இன்னுமோர் நூற்றாண்டு இரும்\n036. கற்றினம் மேய்ந்த எந்தை\n037. நீராய் அலைந்து கரையன\n038. அன்பு நிறைய உடையவர்\n040. காற்று வெளியிடைக் கண்ணம்மா\n047. சங்கத்தார்க்கு ஓர் அகவல்\n048. உறவில் உறையும் இறைவன்\n049. குறை ஒன்றும் இல்லாத..\n050. உண்ணு நீர் வேட்டேன்..\n051. தமிழ் நயமும் மெய்ப்பொருளும்\n052. உறங்குவது போலும் சாக்காடு\n053. ஆலிலை மேல் ஒரு பாலகன்\n054. சிங்கப் பெருமாள் கதை\n057. மணவாள மாமுனியின் கனவு\n060. அவள் தந்த பார்வை\n061. உளகளவும் யானும் உளன்\n066. ஆண்டாளும் அக்கம்மா தேவியும்\n067. தமிழன் என்றொரு இனம்..\n069. பகவத் கீதையும் ஆழ்வார்களும்\n070. முல்லை திரிந்து பாலை..\n071. அடியார் தம்மடி யார்..\n076. நிழல் வெளியும் நிஜவெளியும்\n079. மயக்கும் மாலைப் பொழுதே..\n080. புலி புலி எனும் பூசல் தோன்ற\n082. பெண்மை அம்பூ இது\n083. யார் துணை கொண்டு வாழ்கிறது.\n090. அண்டம் மோழை எழ\n103. தாய் நாடும் கன்றே போல்\n104. அலங்கல் மார்வன் யார் \n106. கோதை எனும் குலவிளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhavan-09-04-1841562.htm", "date_download": "2018-08-21T14:19:15Z", "digest": "sha1:SAEU5YJAESXQOTUGXD74DFZ2NYGMPOXG", "length": 7008, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.! - Madhavan - காமன்வெல்த் | Tamilstar.com |", "raw_content": "\nசர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.\nதற்போது நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியர்கள் பாதங்களை வாரி குவித்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இதே காமென்வெல்த் போட்டியில் சர்வதேச அளவில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் வாங்கியுள்ளார் பிரபல முன்னணி நடிகரான மாதவனின் மகன் வேதாந்த்.\nஇந்த தகவலை புகைப்படத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உற்சாகமடைந்துள்ளார் மாதவன். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வேதாந்த்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\n▪ யுவன் பாடலை வெளியிடும் மாதவன்\n▪ மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை\n▪ காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்\n▪ பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.\n▪ கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.\n▪ மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.\n▪ கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.\n▪ விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.\n▪ மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://aruthra.com/2012/06/24/520/", "date_download": "2018-08-21T14:23:48Z", "digest": "sha1:TM2DEFSRRWJGVC7LQ6BJLATFBV3YRAM5", "length": 40933, "nlines": 172, "source_domain": "aruthra.com", "title": "கண்ணா! உனைத் தேடுகின்றேன் வா!! | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | ஜூன் 24, 2012\nஅது ஒரு ஆபத்தான அவசரமான பயணம் எனக்கு. நிழல் போல உணர்வால் எனைத் தொடர்ந்தவளை நிஜமாக காண விழைந்ததன் செயல்வடிவமாக பயணத்தை தொடர்கின்றேன். பயணம் பாதைகளை நீட்சி அடையச் செய்துள்ளது. நினைவுகள் மனதின் கண்ணெங்கும் நீந்தி விளையாடுகின்றன. காதல் என்னை கட்டியிழுத்து விரைகின்றது. இக்கரையில் இருந்து பார்த்தால் நீர்ப்பரப்பின் அக்கரையில் மினுமினுக்கும் ஒளிப்பெருவெள்ளம் ஆனையிறவு-கிளாலி இராணுவ முகாமினுடையது. எந்நேரமும் சடசடக்க காத்திருக்கும் இயந்திர வல்லூறுகளின் உயிர்குடிக்கும் தோட்டாக்கள் இக்கரையில் நிற்பவர்களை துளைத்தெடுத்து விடலாம். நீர்ப்பரப்பின் மேலே தென்னைகளூடே இன்றும் அழகான நிலவு எறித்துக்கொண்டிருந்தது. நிலவுகள் ஆபத்தில்லாதவை. உயிர் குடிக்கப்போவதில்லை. உன்னாலும் என்னாலும் தரிசிக்கப்பட்ட நிலவுகள் ஒன்றானவை. தண்மதி\nஇது ஒரு தொடர்கதை; தினம்தினம் வளர்பிறை.\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில்தான் இந்த ஊரைவிட்டு நீங்கியிருந்தேன். அதுவரை பாடசாலை உயர்தர வகுப்பை எட்டியிருந்த நான் வடபுலத்தின் இராணுவமுற்றுகைகள், சீரற்ற வாழ்க்கைச்சேதாரங்கள் என கணிப்பிடமுடியாத காலக்கணக்கில் தோற்க விரும்பாமல் லண்டனிற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதுவரை என் ஊர்உலகம் எல்லாம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை மிக அண்மித்த தாமோதரம்பிள்ளை வீதி அரசடியை சார்ந்ததாகவே இருந்தது.\nஅது வேறு உலகம். அதில் பரீட்சார்த்தங்கள், பயன்கள் பற்றிய எதுவித புரிதலுமின்றி சூழலோடு இணைந்த சுகித்த வாழ்வு எனது. நட்பூக்கள் நிறைந்த நண்பர்கள் வட்டம் அன்பூக்கள் நிறைந்த குடும்ப இணைப்பு. பொழுது போகாக் காலங்களை சைக்கிள்கள் சமாளிக்கும். காலையில் இருந்து மாலை வரை திறந்திருக்கும் சனசமூகநிலையத்தின் வாசகசாலை. வாசகசாலையின் அரைச்சுவர்களுக்கு மேல் கம்பிவலை பொருத்தப்பட்ட சுவர். வெளிப்பரப்பின் காற்றை உள்ளே இழுத்து வரவும், உள்பரப்பின் நினைவுகளை வெளியே கடத்துவதற்கும், பார்வைகளால் துளைத்தெடுப்பதற்கும் அரைச்சுவர் கம்பிக்கிராதிகள் உதவின. கண்டி ஏ-9 வீதியை கடப்பவர்கள் எங்கள் கண்களை கடந்து தான் பயணிக்க வேண்டும்.\nவிதி வரைந்த கோலங்கள் புள்ளி வைக்காக் கோலங்கள். உயிர்க்கண்ணி வைத்த கோலங்கள். அதுவரை எங்கோ தூரத்தொலைவில் இருந்து விட்டு ஏன் எங்கள் பாதிச்சுவரைத் தாண்டிய மீதி வீட்டிற்குள் நீங்கள் குடிவர வேண்டும். முல்லைத்தீவின் பிறப்பகம் சாவகச்சேரியின் வசிப்பகம் ஆயிற்று. கண்பார்ப்பதற்கும் காது புசிப்பதற்கும் கவி ஒன்று சொல்லேன் நீ உன் கண்களால், அவை அசைவதன் ஜாலத்தால்.\n.எங்கள் இருவரது வீடுகளும் ஒற்றைச்சுவரால் பிரிக்கப்பட்ட முற்றும் இணைந்த வீடுகள். பிரிந்திருந்தன என்பதைச் சொல்லி பிரிவுக்கு வழிகோலவில்லை. இணைந்திருந்தன என்பதைச் சொல்லி இணைவுக்கு வழிதேடினேன்\nஎன்னைவிட 7வயது இளையவள் நீ. கல்வி சார்ந்த புத்தகப்பரிமாற்றங்கள், காதல் சார்ந்த கண்பரிமாற்றங்கள், கேலியான சொற்பரிவர்த்தனைகள் (மண்வெட்டிப்பல்) விதைத்திருந்தது. விடுவிடென விரைந்தேகியது காதல். தன்பாதையில் பல சாகசங்களைச் செய்தது. இணைத்திருந்தால் இன்பங்களை சேர்த்து சோகங்களைச் சொத்தாக ஆக்கியிராது.\nகிளாலியூடாக அந்த கடல் நீரேரியைத் தாண்டித்தான் சாவகச்சேரி வரவேண்டுமென்பதில்லை. நிலரீதியான தொடர்பு இருந்தது. தொண்டைக்குழிக்குள் பிரதான இராணுவமுகாம். அதற்கான இராணுவ தொடர்வேலி. சாத்தியப்படாத பயணங்களை சாகசம் பண்ணி நீரேரி இணைக்கின்றது.\nதண்மதி நிலவு எறித்துக் கொண்டிருக்கிறது. நாளை காலைக்கருக்கலில் உனது பிறந்தநாள். முந்தைய இரவு எனது நீண்ட பிரயாணம். முடிவில் உனைக் காண்பதுடன் ஊரையும் தரிசிப்பேன்.\nநானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்.\nயாரை சொல்லி நோவது காலம் செய்த கோலம்.\nஉன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்.\nகண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே\nஎன்ன செய்வது சொல்லடி முல்லையே\nகிளாலிக்கூடான பயணம் என்பது மறுபிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கையை பெருமளவு உண்மையாக்குகின்றது. “கண்டவர் விண்டிலர்” “விண்டவர் கண்டிலர்”. அனுவபவத்திற் கூடாகவே கிளாலிப் பயணத்தின் பாதுகாப்பின்மை குறித்த பக்குவங்களை பெற்றுக்கொள்ள முடியும். குறுக்காகவும் மறுக்காகவும் 5 கிலோமீற்றர் நீளவாக்கில் அமைந்த கடல்நீரேரிப் பயணத்தின் போதே கடற்படையினரின் சிறு உந்துவிசைப்படகுகளையும், பாதுகாப்பிற்காக ஆயுதம் தரித்த இளைஞர்கள் படகுகளையும் காணமுடியும். பயணத்தின் நடுவழியில் இருதரப்பு யுத்தம் ஆரம்பமாகிவிட்டால் பயணிக்கும் சாதாரண பயணிகளின் பாடு திண்டாட்டமாகிவிடும். தரையில் ஒளிந்து கொள்ள இடம் தேடலாம், வெட்டவெளி நடுக்கடலில் ஊர்ப்பட்ட தெய்வங்களை மனதிற்குள் நினைத்தபடி விதிகுறித்த வரைபுகளை மீளாய்வு செய்யவேண்டி வரும். எனது பயணம் அதற்கூடாக தொடர்கின்றது. வடபுலத்தின் மக்கட்சமூகம் கல்வி மேம்பாட்டிற்கு தலைஅசைத்து வரவேற்கும் சமூகப் பண்பாடுடையதாக மாறி இருந்தது. புலம்பெயர்ந்த தருணத்து போர்ச்சூழல் முழுதான கல்வியை காணக்கிடைக்காது தடுத்தது. எனது உயர்தர வகுப்பு பெறுபேறுகள், காதல் பெறுபேறுகளை தட்டிக்கழிக்கும் என்பதால் லண்டன் பல்கலைக்கழக சிவில் என்ஜினியரிங் பட்டப்படிப்பை முழுதாக முடித்து “மருமகனே” என்றழைத்த உன்தாயாரிடம் மனதின் உட்கிடக்கையை வெளிப்பரப்பில் சொல்வதற்காக விரைந்து கொண்டிருக்கின்றேன்.\nகடினமான அந்தப் பயணம் மிக சுவாரசியமானது. நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் ஊரைவிட்டு நீங்கியிருந்து லண்டனில் இருந்து உனைக் காண்பதற்காக நீரேரியின் கரைகளில் நிற்கின்றேன் நினைவுகள் சுமந்து. நினைவழியாநாட்கள். இந்த நான்கரை ஆண்டுகளில் ஊர் தனக்கான பிரதான பாதையை இழந்திருந்தது. லண்டனில் இருந்து இலங்கை திரும்புவதற்கு சட்டம் அனுமதியாச் சூழலில் பிறிதொரு நாட்டிற்குள் புகுந்து அங்கிருந்து இங்கென இழுத்து வந்தது உன்மீதான காதல் அக்கறைகள். அக்கறை இப்போது இக்கரையில் நிற்கின்றது.\nஇக்கரையில் இருந்து அக்கரைக்கு மூன்றரை மணிநேரப் பிரயாணம். நிலவு மாத்திரமே வானத்து வெளிச்சம். இருள் பாதுகாப்பானது. பெருமீன்கள் படகுப்பிரயாணத்தில் துள்ளி படகுக்குள் விழத்தொடங்கின. பதட்டப்படாமல் பிரயாணம் மேற்கொள்வதே பாதுகாப்பானது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருந்தது.\nநாளை அவளது பிறந்தநாள் என்பதே ஆனந்தபிரவாகம். அவளுக்கு பரிசளிப்பதற்காக திருச்சி சாரதாஸில் தேடித்தேடி வாங்கிய காஞ்சிபுரம் பட்டுப்புடவையும் லண்டனிலிருந்து கொண்டுவந்த பரிசுப்பொருட்களும் எனது துணிவுத்தொகுதியை விட திணிவுத் தொகுதியை அதிகமாக்கி இருந்தன. வாராயோ வான்மதி.\nமெல்ல மெல்ல படகு விரைந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நடுப்பரப்பு மீது பயணித்துக் கொண்டிருந்த படகு அதேயளவான எதிர்க்கரை நோக்கிய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அதே அரைமணி நேரத்தில் கரையைத்த தொட்டு விடலாம். கடலின் கரையும் காதலின் கரையும் பாதுகாப்பானவை. பயணத்திற்கு இலக்குகள் தாம் முக்கியம். வந்த வழியல்ல என எனது மனம் இடித்துச் சொல்கின்றது. கரையைத் தொட்டோம். கரையின் மணற்பெருவெளி பதட்டமுடையதாக இருந்தது. படகுப் பயணத்தை முடித்து தயாராக இருந்த வாகனத்தினூடாக சாவகச்சேரியை அடைய வேண்டும்.\nமெல்ல அதிகாலைப் பொழுதை அண்டிவிட்டிருந்த காலைகளின் புள்ளின் ரீங்காரம் தூரத்து இராணுவமுகாம் வெளிச்சங்கள். இக்கரையில் பயப்பதட்டத்துடன் கூடிய முகங்கள். எல்லாவற்றையும் தாண்டி விரைந்தது அதிக பயணிகளுடனான கி.மு வை சேர்ந்த வாகனம். மண்ணெண்ணெய் + பெற்றோலில் ஓடும் அந்த வாகனம் வானத்து புகையை எல்லாம் தன்னிலிருந்து வெளியேற்றியது.\nதற்போது நான் நிற்பது தாமோதரம்பிள்ளை வீதியிலமைந்த எங்கள் வீட்டின் முன்னால்.\nஎங்கள் வீட்டின் கேற்றினடியில் இருந்து வீட்டைப்பார்க்கின்றேன். வீடு பெரு மௌனத்துடன் குப்புறப்படுத்த கட்டடமாக தெரிந்தது. உன்னைப்பார்க்க உறக்கத்தை விட்டேன். நான் வந்தது தெரிந்து என்னைப் பார்க்க நண்பர்கள் வருவதற்கிடையில் உன்னைக்காண விழைந்தேன்.\nநீயும் நானும் நீர் மொண்டு அள்ளிய கிணற்றின் கப்பி காலை வேளையில் கிரீச்சிடுகின்றது. சற்றேறக்குறைய இன்னும் விடிந்து விட்டால் கிணற்றடியில் உன்னை தரிசிக்கலாம். பார்வைகளால் பதியன் இடலாம். முன்னைய எங்கள் கிணற்றடிக் கனவுகள் கண்களை நிறைத்தது. பாடசாலை புறப்படுதலுக்கான அவசரப்பொழுதுகளில் அசராப் பொழுதுகளாக காலை கிணற்றடி தரிசனங்கள் வாய்த்தன. நித்திரை முறித்த சோம்பலுடன் பூசாப்பூச்சுகளுடன் அலங்காரமின்றிய அவள் நீயாக என்னுள் நிறைந்தாய். அலங்காரமின்றிய அற்புத அழகு. என்னவள் கண்களில் நிறைந்து கனிநடம் புரிந்தாள்.\nஒரே நேரத்தில் இப்பாலும் அப்பாலுமாய் நான், நீ என இரண்டும் இரண்டும் நான்கானது. பார்வை ஒன்றே போதுமே. அந்தப் பங்குக் கிணற்றை மறைத்தது தகரவேலி. உன்பங்கிலிருந்து நீயும் என்பங்கிலிருந்து நானுமாக பெருமளவில் காதலை வளர்த்துக் கொண்டது. கிணற்றுக்குள் திடுதிப்பென போடும் வாளிகள் ஒன்றை ஒன்று முட்டி இருவருக்குமான பரிவர்த்தனை தளமாக கிணற்றடியை மாற்றியமைத்தது.\nஎனது வருகையை தெரிந்து கொண்ட உனது தாயார் எனக்கும் உனக்கும் உறவினரான நல்லக்காவிடம் “எனது மருமகன்” வந்திருக்கிறார் எனச் சொன்னதாக சொல்லிச் சென்றார். எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.\nகண்ணா உன்னை தேடுகின்றேன் வா\nகண்ணீர்க் குயில் பாடுகின்றேன் வா\nஉனது 19வயது பிறந்தநாளில் உனைக் காண்பதற்காக ஒரு முழுப்பகலை நான் தொலைத்திருந்தேன். வீடுகள் நெருக்கமாகவே இருந்தன. நீயும் நானும் அதிக தொலைவிலில்லை. பின்மதிய நேரத்தில் தாயாருடன் நீ வந்திருந்தாய். கொண்டு வந்திருந்த நீலநிற பட்டுப்புடவையை உன்னிடத்தில் தந்து விட எண்ணியபோது சாத்திர-சம்பிரதாயத்தில் ஊறிய எங்கள் சிந்தனை பஞ்சாங்கம் பார்க்க விளைந்தது. திருச்சியில் வாங்கிய அந்தப் பட்டுப்புடவை அட்டமி-நவமி நாளில் வாங்கியதாக தெரிந்தது. “அட்டமியில் தொட்டது துலங்காது” என பழமைச்சம்பிரதாயத்தில் ஊறிய உட்கிடக்கை என்னை பயம் கொள்ள வைத்தது. நெருக்கமான உறவு நீடித்திருக்க வேண்டும் என நினைத்த நான் அந்த நீலநிறப்பட்டை உன் பிறந்தநாளுக்கு பரிசளிக்காது தவிர்த்து விட்டேன். இன்றளவும் எனைக்கொல்லும் உட்கிடக்கை அதுவாகப் பதிவாகின்றது.\nஎங்கள் இருவருக்குமான உரையாடல்கள் காதல் பற்றியதாகவோ, கனவு பற்றியதாகவோ இருக்கவில்லை. உன்னருகில் உனது தாயும், என்னருகில் எங்கள் வீட்டாருமென இருந்து பாரம்பரிய சூழலை பக்குவப்படுத்திக் கொண்டதில் எங்கள் விருப்பங்களை விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்க முடியவில்லை. முடியாமல் போனதெல்லாம் முடிவாய்ப்போயின. தொடரமுடியா உறவுகளை தொலைதூரமாக்கி விட்டன.\nஅதற்கடுத்த நாள் உன்வசம் நீயிருக்கவில்லை. உயர்தரப் பரீட்சை முடிவுகள் அன்றந்த நாளில் வெளியாகியிருந்தது. நீ எதிர்பார்த்திருந்த மருத்துவப்படிப்பிற்கான நுழைவு மதிப்பெண்கள் கிடைக்காத காரணத்தால் அழுதுகொண்டிருந்தாய். தினசரி மகிழ்வாய் பூத்திருந்த மலர்களை ஒத்த உன் முகத்தை அழுது வடித்து படிந்த துயரத்துடன் காணச்சகிக்காமல் என் வீட்டிற்குள் நான் முடங்கிக்கொண்டேன். சந்தர்ப்பங்களை தவறவிடுவதில் தான் காதல் தோற்றுப் போகின்றது. The ball is on your court என்பர். நான் அடித்து ஆடாததன் வலியை இன்றளவும் உணர்கிறேன். ஒரு முடிவெடுக்க புறப்பட்ட பிரயாணம், ஒரு முடிவுமின்றி தொடர்ந்தது.\nஎனது போதாத காலத்தின் பெரும் துயரமாக பிரிவு வந்து அழுத்தியது. மிக இறுக்கத்துடன் முடிவுகள் எட்டப்படாவிட்டால் காலப்பெருவெளியில் முடிவுகள் நீர்த்து நிலையற்றுப்போய்விடும். வெற்றி பெற்ற மனிதனுக்கும், தோல்விகளை தினசரி சந்திக்கின்ற மனிதனுக்கும் இடையிலான வேறுபாடு சரியான தருணங்களில் எடுத்த முடிவுகளும் முடிவுகளுக்கூடாக கிடைத்த இறுதி இலக்குகளுமேயாகும்.\nஇடைப்பட்ட காலத்தில் உனது தாயார் எனது தந்தையை சந்தித்து எங்கள் இருவருக்குமான பொருத்தம் பார்ப்பதற்காக எனது ஜாதகத்தை கேட்ட பொழுதில் எனது தகப்பனார் கூறியது “என்னளவில் நான் இதற்கு சம்மதிக்கவில்லை. எனது மகனுக்கு விருப்பமெண்டால் ஒத்துக்கொள்கிறேன்” என்று. பெரியவர்கள் தங்கள் தீர்மானங்களில் பிடிவாதங்களில் விடாப்பிடியாக நின்றார்கள்.\nஎனது தாயாரின் சகோதரி திருமணம் முடித்த வகையில் உனது நெருங்கிய உறவாக மாறியிருந்தும், உனது வீட்டாரிடம் எனது ஆவல்களை வெளிப்படுத்துவதற்கு அவருக்கிருந்த அதீத செல்வாக்கும் என்னளவில் பயன்படாது போயிற்று. பெரியவர்கள் பெரிதாக எதிர்பார்ப்பார்கள். சின்னவர்கள் சின்னத்தனங்களுடன் கனவு காண்பதாக பெரியவர்களின் அகராதியில் எழுதி வைத்துள்ளது பெரும் பிழை வடிவமாகும்.\nஅவன் என்னிடம் ஒரு சொல் சொல்லியிருந்தால் அவர்களது திருமணத்தை நான் நடத்தி வைத்திருப்பேன் என சித்தியும் பொருமிக்கொண்டார். அவரைப் பெருமைப்படுத்தி முன்னிலைப்படுத்தாத காரணத்தால் என் காதலின் பிரிவுக்கு சித்தியும் பெருமளவு காரணமாக இருந்தார்.\nபெரியவர்கள் என்ற பெருமையை மூத்த உறுப்பினர்கள் என்ற மகிமையை இளையவர்களான சிறுவர்களான நாம் குலைத்து நாசமாக்கி விட்டதாக நம்பும் இந்த சமுதாய அமைப்பு முறையின் முடைநாற்றம், என்னை பெருமளவு நாசப்படுத்தி விட்டது. சாத்தியமுள்ள இணைவுகளை சாத்திரங்கள் பிரிக்கின்றன. நாளும் கோளும் நல்லதே செய்யும். ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. கேட்டதில்லையா நீ கேளாச்செவிகளா உன் பெற்றோருக்கு. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது நான் வளர்த்த காதல் கோட்டை.\nகாதல் கோட்டை பெயரளவில் பாதுகாப்பானது. இருவரது உணர்வுகளை பாதுகாத்துக் கொள்ள. எங்கள் இருவரது உணர்வுபூர்வ செயல்களால் காப்பாற்றியிருக்க வேண்டும் கோட்டையை. ஒருபக்கம் காத்துக்கொள்ள மறுபக்கம் இடித்து துவம்சம் செய்தார்கள் பொருந்தாக் கோட்பாடுகளால்.\nநாங்களே வரைந்து கொண்ட பாதைகள். நாங்களே வளர்த்துக் கொண்ட எல்லைகள். நாங்களே வகுத்துக் கொண்ட பயணங்களுக்கு பாதைகளும், எல்லைகளும் சம்மதிக்காத போது அழித்து திருத்தப்படும். நாளும், கோளும், மூலமும், திருவாதிரையும் ,8ம் இடத்து குருபகவானும், 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் வியாழனும் தீர்மானிக்க அனுமதித்திருந்தால் உங்களுக்கு காதல் என்ன வேண்டியிருக்கின்றது என என் மனச்சுவடுகள் உன்னிடம் கேள்வி கேட்கின்றன.\nஜாதகத்தை வாங்கிச்சென்ற உனது தாயார் பொருத்தம் பார்த்த இடத்தில் 7ல் செவ்வாய் தோசத்துடன் கூடிய என்னை மருமகன் ஸ்தானத்திலிருந்து நழுவவிட்டார்.\nஓன்றுமே நடக்காமல் ஒன்றுமே இயங்காமல் விட்ட சூழலை மீண்டும் இயங்க வைப்பதற்காய் 94ம் ஆண்டிலும், 96ம் ஆண்டிலுமென இரண்டு பிரயாணங்கள். இறுதிச் சந்திப்பில் கொழும்பில் வைத்து நீ வீட்டிலிருக்கும் பொழுதில் நீ வீட்டிலில்லை எனவும் எனது மகளுக்கு சம்மதமில்லை எனவும் கூறி மருமகனை மறுமகனாக ஆக்கி வைத்தார் உன் தாயார்.\nலண்டன் வைத்தியசாலையில் தனது இயலாமைக்காலத்தில் வைத்திய பராமரிப்பிற்கு உள்ளான எனதினிய சித்தி “கால் குளிருதடா காலுறையை மாட்டிவிடு” என்ற பொழுதில் சித்தியின் கால் பற்றி காலுறை அணிவித்த கணத்தில் மனதார வாழ்த்தினேன்.\nகனன்ற காயம், துயரப்படிமம், பாதகமான சித்தி, பழம்பெருமை பேசும் சமூகமுறை, மெலிதான உணர்வுகளை புதைத்த வன்கொடுமை, செவ்வாய் தோசம் பற்றிய பரிதலின்றிய மூடத்தின் முழுப்பகை, கிரக சஞ்சாரம், காதல் கணிதத்தில் விட்ட பெரும் பிழைகள், தோச ஜாதகப் பிழைகளான அவளின் தந்தையின் திடீர்மறைவு, இராணுவ முகாமில் இருந்து ஏவிய ஷெல் வீச்சால் நிகழ்ந்தது. திடீர்மறைவு அவளின் தாயாரில் ஏற்படுத்திய தாக்கம் எல்லாம் சேர்ந்து காதலை கனபரிமாணத்துடன் குழப்பி விட்டது.\nஎல்லாம் புறம்தள்ளி நிமிர்ந்து கொண்டேன்.\nகுயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகின்றாய்.\nமனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா.\nகுயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகின்றாய்.\nஉறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா.\nஎல்லோரிடமும் கதைகள் ஒளிந்திருக்கின்றன. மனிதமுகங்கள் கதையின் வரிவடிவங்கள். எங்கோ தொலைவில் யாரிடமோ ஒளிந்திருந்த கதை, முகத்தின் வரிவடிவங்களில் படிந்த கதை, ஒரு கதைசொல்லியாக என்மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.\n« கந்தர் மடம் -நாக.தயாகரன்.\nநண்பா என் நெஞ்சை தொட்டு விட்டது உன் கதை. உன்னது மட்டுமல்ல எத்தனையோ காதல் ஜோடிகளை இந்த சனி , செவ்வாய் , வியாழன் என்று குழப்பி இருக்கிறது இனி வரும் சந்ததிகள் இதை உணர்ந்து நடப்பார்களா\nகதை மிகவும் அருமை. காதலுக்காக நாடு கடந்து வந்து சந்திப்பது, முதலில் ஏற்கும் பெற்றோர் பிறகு காதலைப் எதிர்ப்பது என்று கதை விறுவிறுப்பாக செல்கிறது. பகிர்விற்கு நன்றி.\nBy: சித்திரவீதிக்காரன் on ஜூலை 2, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-08-21T14:16:03Z", "digest": "sha1:IDME32RAKPRV3ZJJH3E6T53TLDJH3PUT", "length": 9704, "nlines": 154, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?", "raw_content": "\nகோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்\nகோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்\nகோயில்கள் அமைக்கப்பட்ட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. திருக்கோயிலின் அமைப்பு லட்சணங்களாக கர்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது. சில்ப சங்கிரஹம் என்னும் நூல் துவாரபாலகர்களின் தோற்றத்தையும் அங்க லட்சணங்களையும் அழகாக எடுத்துச் சொல்கிறது. நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை என்று அந்த நூலில் வர்ணிக்கப்பட்டபோதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம். ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும்.\nபெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.\nசிவன் கோயில் துவார பாலகர்கள்: சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்.\nஅம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் துவாரபாலகி(பெண்)களை ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமன்றி தேர்களிலும், தெப்பங்களிலும், ராஜகோபுரங்களிலும்கூட இந்தத் துவார பாலகர்களைக் காணலாம். தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுர துவாரபாலகர்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனர். கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி.\nபித்ரு என்றால் யார் PITRU POOJA IN TAMIL\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/kalainger-karunanidhi-advice-to-public/", "date_download": "2018-08-21T13:30:01Z", "digest": "sha1:BIXBCUQARZE6I5TVSEH7XHDOEHOJ3N7K", "length": 8480, "nlines": 125, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome அரசியல் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..\nஅஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..\nதமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுல்லது. அவரது மறைவையொட்டி இன்று ஒரு நாள் அரசு விடுமுறையும், 7 நாள் துக்க அனுசரிக்கபடும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.\nதற்போது ராஜாஜி மண்டபத்தில் கலைஞர் அவர்களின் உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். மேலும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கலைஞர் அவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று உயர் நீதி மாற்றம் அறிவித்திருந்தது.\nஇதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் கலைஞர் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும், சமீபத்தில் இதுகுறித்து பேசிய கலைஞர் அவர்களின் மகன் ஸ்டாலின் தெரிவிக்கையில், ராஜாஜி மண்டபத்தில் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு அமைதியாக செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nPrevious articleவிஜய்க்கு பதிலாக தனியாக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய மனைவி சங்கீதா.\nNext article“கலைஞர்” என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வைத்தது என் அப்பா தான்.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய்க்கு பதிலாக தனியாக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய மனைவி சங்கீதா.\n“கலைஞர்” என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வைத்தது என் அப்பா தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000007577.html", "date_download": "2018-08-21T14:06:29Z", "digest": "sha1:RCAGUQ5522JJTUNLR4GEM2YYKOG5NYMO", "length": 5349, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "சுயசரிதை", "raw_content": "Home :: தன்வரலாறு :: சுயசரிதை\nநூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்\nபதிப்பகம் வ உ சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுறவஞ்சி இலக்கியங்களில் பெண்கள் பாதையில் பூக்கள் அருமையான சைவ சமையல்\nதிருக்குறள் தேசிய நூல் இளைஞனே நீ விழித்து எழு\nகாஸ்டர் பிரிட்ஜ் நகர மேயர் மரப்பசு கஜராஜன் குருவாயூர் கேசவன்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiruththam.blogspot.com/2017/12/blog-post_23.html", "date_download": "2018-08-21T13:39:49Z", "digest": "sha1:GBO4I5DTKTWBUZMVWIBVLLCIZ3HLNKG4", "length": 27551, "nlines": 220, "source_domain": "thiruththam.blogspot.com", "title": "திருத்தம் பொன்.சரவணன்: கற்க கசடற - குறளும் பொருளும்", "raw_content": "\nசனி, 23 டிசம்பர், 2017\nகற்க கசடற - குறளும் பொருளும்\nகற்க கசடற கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக. - 391.\nகலைஞர் உரை: பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.\nமு.வரதராசனார் உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.\nசாலமன் பாப்பையா உரை: கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.\nபரிமேலழகர் உரை: கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250) துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற் கூறப்பட்டன.)\nமணக்குடவர் உரை: கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக ஒழுக. இது கற்கவும் வேண்டும்: அதனைக் கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.\nமேற்காணும் உரைகள் அனைத்தும் ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றன. அதாவது: கற்க வேண்டியவற்றைப் பிழையில்லாமல் கற்கவேண்டும்; கற்றபின்னர் கற்றுணர்ந்தவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதாக இந்த விளக்க உரைகள் அமைந்துள்ளன. இந்த விளக்க உரைகளில் சில நெருடல்கள் உள்ளன. அவற்றைக் கண்டபின்னர் இந்த உரைகள் சரியானவையா தவறானவையா என்பதை முடிவு செய்யலாம்.\n1. இக்குறளில் வரும் 'நிற்க' என்ற சொல்லுக்கு 'நடந்துகொள் அல்லது வாழ்' என்று பொருள் கூறி இருப்பது முரணாகத் தோன்றுகின்றது. காரணம், இந்த இரண்டு வினைகளும் அதாவது நடந்துகொள்ளுதல், வாழ்தல் ஆகியவை நிற்றல் வினையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பது நாமறிந்த உண்மை.\n2. நிற்றல் என்ற சொல்லுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநில்-தல் [நிற்றல்] nil- , v. intr. [K. nil.] 1. To stand; கால்கள் ஊன்ற உடல் நிமிர்ந்திருத்தல். நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேள லறச் சென்றான் (நாலடி, 29). 2. To stop, halt, tarry; மேற்செல்லாதிருத்தல். நில்லடா சிறிது நில் லடா (கம்பரா. நாகபாச. 73). 3. To be steadfast; to persevere, persist in a course of conduct; உறுதியாயிருத்தல். வீடு பெறநில் (ஆத்திசூ.). 4. To stay, abide, continue; தங்குதல். குற்றியலிகர நிற் றல் வேண்டும் (தொல். எழுத். 34). 5. To cease; to be discontinued, stopped or suspended; ஒழிதல். வேலை நின்றுவிட்டது. 6. To be subdued; அடங்குதல். சாயவென் கிளவிபோற் செவ்வழியா ழிசைநிற்ப (கலித். 143, 38). 7. To remain; to be left, as matter in a boil, as disease in the system; to be due, as a debt; எஞ்சுதல். நின்றதிற் பதினையாண்டு (திவ். திருமாலை. 3). 8. To wait, delay; தாமதித்தல். தெய்வம் நின்று கேட்கும்.\nமேற்காணும் பல்வேறு பொருட்களில் நிற்றல் என்ற சொல்லுக்கு நடந்துகொள்ளுதல், வாழ்தல் போன்ற பொருட்களே இல்லாதிருப்பதைக் காணலாம்.\n3. கற்றவாறு வாழவேண்டும் என்று கூறுவதே வள்ளுவரின் நோக்கம் என்றால் 'நிற்க' என்ற சொல்லுக்குப் பதிலாக 'ஒழுக' அல்லது 'அமைக' அல்லது 'செய்க' என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தி இருப்பார். இவற்றில் எதையும் பயன்படுத்தாததில் இருந்து வள்ளுவர் கூற வரும் கருத்து இது அல்ல என்பது தெளிவாகிறது. அன்றியும் இந்த அதிகாரத்தில் கல்வியின் சிறப்பைத் தான் வள்ளுவர் கூற வருகிறாரே அன்றி 'இப்படி நட, அப்படி இரு' என்று அறிவுரை கூற விரும்பவில்லை. இந்த அதிகாரத்தில் உள்ள ஏனைய பாடல்களில் இருந்தும் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.\n4. இங்கே இன்னொரு கருத்தையும் நாம் ஆராய வேண்டும். ஒரு நூலைக் கற்பவர் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின்படிதான் ஒழுகவேண்டும் என்ற விதி அனைத்துவகை நூல்களுக்கும் பொருந்தக்கூடியதா என்றால் இல்லை என்றே கூறலாம். காரணம், ஒருவர் தான் கற்கும் அறநெறி சார்ந்த நூல்களை மட்டுமே அவர் விரும்பினால் பின்பற்றி வாழமுடியும். ஏனைய நூல்களைக் (அறிவியல், கணித முதலான நூல்கள்) கற்போர் அதில் கூறியுள்ளவற்றை அப்படியே வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகமுடியுமா என்றால் இல்லை என்றே கூறலாம். காரணம், ஒருவர் தான் கற்கும் அறநெறி சார்ந்த நூல்களை மட்டுமே அவர் விரும்பினால் பின்பற்றி வாழமுடியும். ஏனைய நூல்களைக் (அறிவியல், கணித முதலான நூல்கள்) கற்போர் அதில் கூறியுள்ளவற்றை அப்படியே வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகமுடியுமா. முடியவே முடியாது அல்லவா. முடியவே முடியாது அல்லவா. மேலும் இந்த அதிகாரம் கல்வி என்னும் தலைப்பில் அனைத்துவகைக் கல்வியைப் பற்றியும் பொதுவாகவே பேசுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.\nமேற்காணும் நெருடல்களைக் காணுமிடத்து, கல்வியைக் கசடறக் கற்று, கற்றவாறே ஒருவர் வாழவேண்டும் அல்லது நடந்துகொள்ளவேண்டும் என்று விளக்கம் கூறி இருப்பது முற்றிலும் பொருத்தமற்றது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.\nஆராய்ந்து பார்த்ததில் 'நிற்க அதற்குத் தக' என்ற இரண்டாம் அடிக்குப் பொருள்கொள்ளும்போதுதான் தவறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இரண்டாம் அடிக்குப் பொருள்கொள்ளும் முன்னர் அதனைக் கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளவேண்டும்.\n'நிற்க அதற்குத் தக = நிற்க அதன் குத்து அக\nஇனி இந்த அடிக்கான பொருளைக் கீழ்க்காணுமாறு கொள்ளலாம்.\nகுத்து = நினைவு / ஞாபகம்\nஅக = அகத்து / மனதில்\n'அதனுடைய நினைவு மனதில் இருக்க' என்பதே இந்த அடியின் பொருள் ஆகும். நிற்றல் என்பது ஓரிடத்து இருத்தல் என்னும் பொருள்படுவதால் இருக்க என்னும் பொருளை உணர்த்த நிற்க என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார் வள்ளுவர். இது சரியே ஆகும். இனி வள்ளுவர் கூறவரும் சரியான கருத்து என்ன என்று பார்ப்போம்.\n' கற்க வேண்டியவற்றைப் பிழையின்றிக் கற்கவேண்டும்; அவ்வாறு கற்ற பின்னர் அதனுடைய நினைவு மனதில் இருக்கவேண்டும் (மறந்துவிடக் கூடாது).'\nகல்வியை எவ்வாறு கற்கவேண்டும் என்ற அருமையான பாடத்தினை இந்த முதல் குறளின் மூலமே நமக்குக் கற்பித்து விடுகிறார் வள்ளுவப் பேராசிரியர். அதுதான் சரியான முறையும் கூட. ஏனென்றால், கல்வியைப் பற்றி அனைத்தும் கூறிவிட்டு கல்வியை எவ்வாறு கற்கவேண்டும் என்று கூறாவிட்டால் அது முழுமையாகாது அன்றோ. இனி, இப்புதிய விளக்கம் எப்படிப் பொருத்தமாகும் என்று கீழே விரிவாகப் பார்க்கலாம்.\nவள்ளுவர் 'குத்து' என்ற சொல்லை இங்கே ' நினைவு / ஞாபகம் ' என்ற பொருளில் பயன்படுத்தி உள்ளார். இக் குறளில் மட்டுமல்ல, கீழ்க்காணும் குறளிலும் இதே பொருளில் இச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகுத்தொக்க சீர்த்த இடத்து.' - 490.\nஇக்குறளில் வரும் குத்து என்ற சொல் கொக்கானது மீனைத் தன் வாயினால் ' பிடித்தல் / கொள்ளுதல்' என்ற பொருளில் தான் வந்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இதே பொருளில் தான் குத்து என்ற சொல்லைக் கல்வி அதிகாரத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்.\n'கற்றவற்றைக் கொள்ளுதல்' என்றால் 'நினைவில் இருத்துதல்' என்று தானே பொருள். இதைத்தானே நாம் நினைவு, ஞாபகம், மனனம் என்று கூறுகிறோம். அன்றியும் கல்வியில் மிக இன்றியமையாத செயலே 'நினைவில் இருத்துதல்' தான். வெறுமனே படித்துவிட்டு நினைவில் வைத்துக் கொள்ளாவிட்டால் என்ன பயன் விளையும். இதைத்தானே நாம் நினைவு, ஞாபகம், மனனம் என்று கூறுகிறோம். அன்றியும் கல்வியில் மிக இன்றியமையாத செயலே 'நினைவில் இருத்துதல்' தான். வெறுமனே படித்துவிட்டு நினைவில் வைத்துக் கொள்ளாவிட்டால் என்ன பயன் விளையும். எது நினைவில் உள்ளதோ அதுவே பயன் தரும். நினைவில் இல்லாதது பயன் அளிக்காது. ஒருமுறை கற்றதை பலமுறை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் அது நினைவில் இருந்து அகன்று விடும். எனவே தான் வள்ளுவர் 'கல்வியைக் கசடறக் கற்கவேண்டும்; கற்றபின் அதன் நினைவு மனதில் இருக்க வேண்டும்.' என்று கூறுகிறார். இதுவே இக்குறளின் மூலம் வள்ளுவர் கூற வரும் கருத்து ஆகும்.\nகுத்துதல் என்பதை ஒன்றின் நகலை இன்னொன்றின் மேல் ஏற்றுதல் என்னும் பொருளில் இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். முத்திரை குத்துதல் என்னும் சொற்றொடரில் குத்துதல் உணர்த்தும் பொருள் 'அச்சினை ஏற்றுதல்' என்பது தானே. இது பொருள் விரிவு முறையில் உண்டானது ஆகும்.\nகல்வி என்னும் அதிகாரத்தில் கல்வி கற்கும் முறைகளைப் பற்றி இந்தக் குறளில் மட்டுமல்ல கீழ்க்காணும் குறளிலும் கூறி இருக்கிறார் வள்ளுவர்.\nஉவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nஅனைத்தே புலவர் தொழில். - 394.\nகல்வியைக் கற்றபின்னர் கற்றவற்றை நினைவில் கொள்வதைப் பற்றி இக்குறளிலும் கூறுகிறார். இக்குறளைப் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள 'திருக்குறள் கூறும் புலவர் தொழில் எது.' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.\nநேரம் டிசம்பர் 23, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்-பொருள் விளக்கம், திருக்குறள்\nஉங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:\nவலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் *******\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 6 - எழுஞாயிறு அன்னதோர் தமிழ்\nமுன்னுரை: இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் ஐந்து பகுதிகளில் மனித உடல் உறுப்புக்கள் மற்றும் விலங்க...\nதவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் ...\n ( கம்பனும் கொங்கையும் )\nமுன்னுரை: முலை என்ற தமிழ்ச் சொல்லானது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் மார்பகம் என்ற பொருளில் பயின்று வராது என்றும் கண் அல்லது கண்ணிமை...\nதிருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )\nகுறள்: கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 840: தற்போதைய விளக்க உரைகள்: கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள...\nமுன்னுரை: 'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்...\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 2 - பன்றி\nதிருக்குறள் கூறும் புலவர் தொழில் எது\nகற்க கசடற - குறளும் பொருளும்\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 3 - கழுதை\nகுறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-08-21T14:33:37Z", "digest": "sha1:REYBR2TZVAKVZC2RQQJDOTG3UK4TR6ID", "length": 9900, "nlines": 159, "source_domain": "www.astrosuper.com", "title": "/> விருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக்கை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nவிருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக்கை\nவிருச்சிகம் ராசிக்கு இப்போது ஏழரை சனி நடக்கிறது..இரண்டாம் சுற்று நடப்பவருக்கு இது பொங்கு சனி எனப்படும் கடுமையாக உழைத்து முன்னேறும் காலம்..ஏழரை சனி நடக்குதுங்க..அதனால எதுவும் செய்யல..எதுவும் விளங்காதுன்னு ஜோசியர் சொன்னதால எதுவும் முயற்சி செய்யல..என்பவர்களை நான் வெறுக்கிறேன் அவர்கள் முன்னேறவே முடியாது ஏழரை சனியில் தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவர்கள் அதிகம்.எப்படி.. அதுதான் சனி..கடும் உழைப்பாளிகளை சனி கைவிட்டதில்லை..இது கன்னி,துலாம் ராசியினருக்கும் பொருந்தும்...திசாபுத்தி மோசமாக இருந்தால் மட்டும் சரிவு உண்டாக்கும்..4ஆம் அதிபதி கெட்டிருந்தால் உடல்நலன் பாதிக்கும்..இப்போ அஷ்டம குரு நடக்குது..வரும் ஜூன் மாதம் குரு பலம் வருகிறது அதுமுதல் நல்லதே நடக்கும்.. அதுதான் சனி..கடும் உழைப்பாளிகளை சனி கைவிட்டதில்லை..இது கன்னி,துலாம் ராசியினருக்கும் பொருந்தும்...திசாபுத்தி மோசமாக இருந்தால் மட்டும் சரிவு உண்டாக்கும்..4ஆம் அதிபதி கெட்டிருந்தால் உடல்நலன் பாதிக்கும்..இப்போ அஷ்டம குரு நடக்குது..வரும் ஜூன் மாதம் குரு பலம் வருகிறது அதுமுதல் நல்லதே நடக்கும்.. நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி உங்களுக்கே..\nமகா சிவராத்திரி அன்னதானம் குறித்து படிக்க; http://www.astrosuper.com/2014/02/2722014.html\nLabels: astrology, ராசிபலன், ஜோதிடம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nசிவராத்திரியின் உண்மையான அர்த்தம் என்ன..\nதனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..\nவிருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக...\nசுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்\nகுரு திசை யாருக்கு நல்லது செய்யும்..\nசனி வக்ரம் ஆரம்பம் எந்த ராசியினருக்கு லாபம்.\nமகாசிவராத்திரி பூஜை 27.2.2014 மகா அன்னதானம்\nஉங்கள் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து இன்பங்கள் உண்...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/341649/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9C/", "date_download": "2018-08-21T13:27:17Z", "digest": "sha1:TYCFIUB6TTXH2INAO4GT5EMQB3VKDAGG", "length": 4470, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "நிலச்சரிவில் இருந்து, எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய் – மின்முரசு", "raw_content": "\nநிலச்சரிவில் இருந்து, எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய்\nகேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. #DogSaved #KeralaFamily #Landslide\nகேரளாவில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. இடுக்கி மாவட்டம் கீர்த்திகோடு என்னும் மலைக்கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் மோகனன். இவர், ‘ராக்கி’ என்னும் நாயை தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராக்கி திடீரென்று பலமாக குரைத்தது.\nவெகு நேரமாகியும் அது குரைப்பதை நிறுத்தவில்லை. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகனனும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவர்களின் வீடு நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகனனும், அவருடைய மனைவியும் தங்களுடைய உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய ராக்கியை நன்றிப் பெருக்குடன் உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.\nமோகனன், தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார். #DogSaved #KeralaFamily #Landslide\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-wild-card-entry-kasthoori/", "date_download": "2018-08-21T13:30:57Z", "digest": "sha1:27QQEG7NGGZBIR7UUW5IY5J77XZWRWC4", "length": 10624, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த வருட பிக் பாஸ் வீட்டின் முதல் \"Wild Card Entry\" இவர் தானா..? அப்படினா சண்ட இருக்கு..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இந்த வருட பிக் பாஸ் வீட்டின் முதல் “Wild Card Entry” இவர் தானா..\nஇந்த வருட பிக் பாஸ் வீட்டின் முதல் “Wild Card Entry” இவர் தானா..\nபிக் பாஸ் நிகழ்ச்சி பாதி எபிசோடுகளை கடந்து விட்டது. இன்னும் 11 போட்டியாளர்களே மீதமுள்ள நிலையில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற போகிறார் என்ற தகவல் ஏற்கனவே நமது வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியில் செல்லப்போவது யாராக என்ற தகவல் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.\nசமீபத்தில் பிக் பாஸ் செட்டிற்குள் பிரபல நடிகை கஸ்தூரி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வாரம் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியில் அவரை பிக் பாஸ் வீட்டினுள் எதிர்பார்க்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.ஆனால், அவர் வைல்ட் கார்டு என்ட்ரிக்காகதான் பிக் பாஸ் செட்டிற்குள் சென்றுள்ளாரா, இல்லை சிறப்பு விருந்தினராக சென்றுள்ளாரா என்று இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.\nஅதே போல இந்த நிகழ்ச்சி தொடங்கபட்டதற்கு முன்பாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களில் பட்டியல் என்று பல்வேறு வலைத்தளத்தில் பல பெயர் பட்டியல் பரவி வந்தது.அதில் கஸ்தூரி பெயரும் அடிக்கடி அடிபட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சி துவங்கபட்டதற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தனக்கு சின்ன பிக் பாஸ்தான் (கஸ்தூரியின் மகன்) முக்கியம், எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் எண்ணமில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதனால் நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரி மூலம் போட்டியாளராக செல்வாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதே போல கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களால் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை என்ற ஒரு கூற்றும் நிலவி வருகிறது. ஒரு வேலை நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றால் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது மட்டும் உறுதி.\nPrevious articleஇன்று கமலை சந்திக்க யாஷிகா அணிந்த கவர்ச்சி உடை. அசிங்கப்படுத்திய மும்தாஜ்..\nNext articleதிடீரென தமிழக முதல்வரை சந்திதது பேசிய விவேக்.. வாழ்த்து தெரிவித்த முதல்வர்..\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த தளபதி விஜய் \nமீண்டும் விஜய்யுடன் இணையப்போகிறார் அட்லீ ..படத்தின் பெயரும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/reviews/chandi-veeran-review-036108.html", "date_download": "2018-08-21T14:26:48Z", "digest": "sha1:QQLOAX3GTRCYNHMSLFI73MPCEYMMQV6W", "length": 15652, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சண்டி வீரன் விமர்சனம் | Chandi Veeran Review - Tamil Filmibeat", "raw_content": "\n» சண்டி வீரன் விமர்சனம்\nStar Cast: அதர்வா, ஆனந்தி, லால்\nநடிகர்கள்: அதர்வா, ஆனந்தி, லால், போஸ் வெங்கட்\nஇசை: அருணகிரி, சபேஷ் - முரளி\nதண்ணீர் பிரச்சினை என்று வந்தாலே பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வதை விறுவிறுப்பான கதையாக சொல்லும் படம் சண்டி வீரன்.\nகாவிரி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சையின் மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள நெடுங்காடு மற்றும் வயல்பாடி கிராமங்களுக்கிடையே தண்ணீர்ப் பிரச்சினை. நெடுங்காட்டில் நல்ல தண்ணீர் குளமிருக்கிறது. உப்புத் தண்ணீர் குடித்து குடித்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு செத்து விழும் வயல்பாடி மக்களுக்கு, அந்தக் குளத்திலிருந்து ஒரு சொட்டு நீர் தர மறுக்கிறார்கள் நெடுங்காடு மக்கள். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரனும் கவுன்சிலர் லாலும்.\nஇந்தப் பிரச்சினைக்காக இரு கிராமத்தினருக்குமிடையே நடந்த சண்டையில் நெடுங்காட்டைச் சேர்ந்த கொல்லப்படுகிறார் போஸ் வெங்கட். அவரது மகன் அதர்வா சிங்கப்பூருக்குப் போய், விசா முடிந்தும் தங்கியிருந்த குற்றத்துக்காக தண்டனை பெற்று ஊர் திரும்புகிறார். வயல்பாடி மக்களின் கஷ்டம் அறிந்து அவர்களுக்கு உதவ முயல்கிறார்.\nஇதனிடையே லாலின் மகள் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் காதல் ஏற்பட, இதைத் தெரிந்து அதர்வாவை எச்சரிக்கிறார் லால். கேட்க மறுக்கும் அதர்வாவை போட்டுத் தள்ள ஏற்பாடு செய்கிறார்.\nஇந்த நேரத்தில்தான், நெடுங்காடு கிராம தலைவர் ரவிச்சந்திரன் ஒரு விபத்தில் சிக்குகிறார். இதற்கு காரணம் வயல்பாடியைச் சேர்ந்தவர்தான் என்று கூறி, அந்த ஊரையே பழிவாங்க நெடுங்காடு மக்களை ஆயுதங்களுடன் திரட்டுகிறார் லால். அந்தக் கலவரத்தில் அதர்வாவையும் போட்டுத் தள்ள திட்டமிடுகிறார்.\nஇதைத் தெரிந்து கொண்ட அதர்வா, அந்த பெரும் கலவரத்தைத் தடுக்க முயற்சிக்கிறார். அதில் எப்படி வெற்றி காண்கிறார் ஆனந்தியைக் கைப்பிடித்தாரா வயல்பாடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்ததா\nஇரண்டு மணி நேரத்துக்குள் முடிகிற மாதிரி பரபரவென ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் சற்குணம். முதல் பாதியில் கலகலப்பும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்புமாகப் போகிறது கதை. ஆனால் களவாணி மாதிரியோ, வாகை சூடவோ போலோ இல்லாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறார்.\nநாயகன் அதர்வா, கிராமத்து இளைஞனாக கவர்ந்தாலும், அவரது உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nதோற்றம், நடிப்பில் நெடுங்காட்டுப் பெண்ணாகவே தெரிகிறார் ஆனந்தி. மிகை ஏதும் இல்லாத நடிப்பு.\nமில்லுக்காரராக வரும் லால் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார். பஞ்சாயத்துத் தலைவராக வரும் ரவிச்சந்திரன், அதர்வாவின் நண்பர்கள், நெடுங்காடு கிராமவாசிகள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nசபேஷ் முரளியின் பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக உள்ளது. அருணகிரி இசையில் பாடல்களும் கேட்கும்படி உள்ளன.\nபூமியில குடிநீர விலைபோட்டு விக்கிறோம்\nஎன்ற வரிகள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. ஆனால் சில காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஏற்கெனவே பகை கொண்ட இரண்டு ஊர் பற்றிக் கொண்டு எரியப் போகும் தகவலைச் சொன்னால் போலீஸார் இப்படியா நடந்து கொள்வார்கள். இது சினிமாத்தனமாக உள்ளது.\nஇன்றைய கிராமங்கள், அதன் மனிதர்கள், பிரச்சினைகளைப் பதிவு செய்த விதத்துக்காக சண்டி வீரனைப் பார்க்கலாம்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nதண்ணீரும் தண்ணீர் சார்ந்த பிரச்சினையும்... சண்டிவீரன் கதை\nஅதர்வாவின் சண்டிவீரனுக்கு யூ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு\nஆகஸ்ட் 7ம் தேதி ஓடி வருகிறான் ‘சண்டி வீரன்’\nசண்டிவீரன் தலைப்புக்கு எதிர்ப்பு வந்தால் சமாளிக்கத் தயார்\nபாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்\nசெயின் பறிப்பின் கோரம்... 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'... விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eeladhesam.com/?p=10033", "date_download": "2018-08-21T13:55:01Z", "digest": "sha1:GIEUPPASR75T3YAMODJIJMXOL3SWGWHV", "length": 8398, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி – Eeladhesam.com", "raw_content": "\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nயாழில் காலூன்றும் சீனா – இந்தியாவுக்கு அச்சுறுத்தல்\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு\nவன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 28, 2017நவம்பர் 29, 2017 காண்டீபன்\nமுல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.\nதமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நிகழ்வுக்காக வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.\nவழமையான நேரத்தில் இங்கு இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nமாவீரர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.\nபுதுக்குடியிருப்பில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய\nத.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு\nஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்\nஉடுத்துறை துயிலும் இல்லத்திலும் அஞ்சலி\nயாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு : இருவர் கைது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nதமிழர் பிரச்சனையைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/2017/09/", "date_download": "2018-08-21T14:29:26Z", "digest": "sha1:ULX7UWGV2NONAGH5ECXPI6ZWUO2FEJTJ", "length": 12434, "nlines": 203, "source_domain": "helloosalem.com", "title": "September, 2017 | hellosalem", "raw_content": "\nகுழந்தைகளுக்கு குடற்புழுக்கள் உருவாக முக்கிய காரணங்கள்\nகுழந்தைகள் மண்ணில் விளையாடுவது, சுத்தமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதுபோன்ற பிரச்னைகளால் குடற்புழுப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆரோக்கியக் கேடுகளில் முக்கியமானது குடற்புழுப் பிரச்னை. குழந்தைக்குப் பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும்போது குடற்புழுப் பிரச்னை\nகொலு அமைக்கும் முறையும் நன்மையும்\nதிருமணமாகாத பெண்கள் இந்த கொலு பூஜையை நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும். நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி,\nதொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி\nதொப்பை’ உள்ளவர்கள் இந்த மூச்சுப்பயிற்சியைசி தீவிரமாக செய்வதன் மூலம் ‘தொப்பை’ நன்றாக குறைத்து ‘சிலிம்’ மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல்\nசூப்பரான தேங்காய் பால் வெஜ் புலாவ்\nபள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதியம் சாப்பிட இந்த தேங்காய் பால் வெஜ் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தேங்காய்ப்பால் – 3 1/2 கப், பச்சரிசி – 1கப்,\nமாரடைப்பு ஏற்படாதவாறு காத்துக்கொள்வது எப்படி\nமாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது. உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது.\nநவராத்திரிக்கு சொல்ல வேண்டிய லட்சுமி பாடல்\nஇன்று தொடங்கும் நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இன்று தொடங்கும் நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை\nமகாளய அமாவாசை: தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய 60 தகவல்கள்\nமறைந்த முன்னோர்களுக்கு நாளை மகாளய அமாவாசையன்று செய்வதும் பித்ரு தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய 60 தகவல்களை விரிவாக பார்க்கலாம். 1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை\nநீலத்திமிங்கல விளையாட்டு: வெளியேற வழி உண்டு\nநீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு, வெளியே வர முடியாமல் தவித்தால் இங்கே தரப்படும் யுத்திகளைக் கையாளுங்கள்… ஆபத்தான நீலத்திமிங்கல விளையாட்டிற்கு அதிக விளக்கம் தரத் தேவையில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு\nவாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம்\nவாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று பூண்டை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பூண்டு – 15 பல், மிளகு, சீரகம் – தலா அரை\nஆரோக்கியமாக பிரசவத்திற்கு பின்பற்ற வேண்டியவை\nஒரு பெண் தான் கருத்தரிப்பது பற்றி அறிந்ததும், ஒரு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும். ஒவ்வொரு பிரசவ காலமும் புத்தம் புதிய பொறுப்புக்களை ஒரு பெண்ணுக்கு கொடுக்கும். ஒரு தாய் தமது உடல்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pkvideo.net/play-iruddhi-suttru-vadivel-version-troll-tamil-funny-video_xUQJbh9K9WAo.html", "date_download": "2018-08-21T13:34:01Z", "digest": "sha1:TKJFSPPL2CSAV7TTVQZ4YG5VFL4BFZNL", "length": 5908, "nlines": 93, "source_domain": "pkvideo.net", "title": "இறுதிச்சுற்று– ‘வடிவேல்‘’ வெர்ஷன் | Iruddhi Suttru- Vadivel Version Troll | Tamil Funny Video | - Funny Videos, Movies india, TV show, video india, hottest - Pkvideo.Net", "raw_content": "\nஇறுதிச்சுற்று படத்தில் வரும் உசுரு நரம்புல பாடலில் வடிவேலு நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ.\n19:48வடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி || Vadivel comedy 24:22Tamil Comedy scenes # வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள் # Vadivelu Comedy Scenes 3:36தமிழ் சினிமாவை கலக்கும் \"தேவர்\"கள் Thevar Caste Actors 24:19என்னய்யா சிங் தமிழ் இவளோ நல்ல பேசுற எங்க கத்துகிட்ட || வடிவேலு காமெடி 2:06:23Latest Tamil Action Movie 2018 | Tamil Full Movie | New Tamil movie 2018 | 2018 Upload 20:18சித்தப்பூ என்ன விட்டுட்டு இவளோ சீக்கிரமா போய்ட்டியே சித்தப்பு || வடிவேலு காமெடி 2:40நடிகர் பாண்டியன் எப்படி இறந்தார் தெரியுமா அதிர்ச்சி Video | Tamil Cinema News | Tamil Rockers 8:34சிவகார்த்திகேயன் பல குரலில் அசத்திய கலக்கலான வீடியோ 29:30வயிறு குலுங்க சிரிக்க இந்த வீடியோவை பாருங்கள் | Funny Comedy | Yogi Babu Latest Comedy 2017# 2:09\"மோடி(எ)கேடி \"உடல் பயிற்சி மரண கலாய் || Modi fitness Troll || tamil troll videos | 41:40ஆபாச வீடியோவில் சிக்கிய ஜெயச்சந்திரன் - ஓப்பன் டாக் 3:46துருவநட்சத்திரம் | Dhruva Natchathiram | Teaser Breakdown | Chiyaan Vikram | Gautham Vasudev Menon | 17:29தமிழ் பாடல் வரிகள் | மரண கலாய் | 1 TO 12 FULL 28:13ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா கடைய எப்ப சார் தொரப்பிங்க |வடிவேலு காமெடி 4:26Sakka Podu Podu Raja - Review with Public | Santhanam, Vaibhavi | STR Musical 13:18இந்த போனை எப்படி ஓபன் பண்றது என்கிட்ட தா நான் பண்ணி தரேன் || வடிவேலு காமெடி 6:43சிலுக்கு ஸ்மிதா: 'தூக்கில்' தொங்கியதன் பின்னணி.. கடைய எப்ப சார் தொரப்பிங்க |வடிவேலு காமெடி 4:26Sakka Podu Podu Raja - Review with Public | Santhanam, Vaibhavi | STR Musical 13:18இந்த போனை எப்படி ஓபன் பண்றது என்கிட்ட தா நான் பண்ணி தரேன் || வடிவேலு காமெடி 6:43சிலுக்கு ஸ்மிதா: 'தூக்கில்' தொங்கியதன் பின்னணி..|Life of Silk Smitha Part 2|Mr.K Crime Series #16 5:08BIGG BOSS 2 TROLL VIDEO 2018 - Kamal Vs Vadivelu 1:50:52Latest Tamil Full Movie 2018 | Exclusive Release Tamil Movie | New Tamil Online Movie 2018 | HD 1080 40:55BLACKSHEEP TO COCO..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2583/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-6000-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-08-21T13:28:31Z", "digest": "sha1:CU4JCETHKPJQ7BQCBGM5TM4LB7AHJ6KA", "length": 2571, "nlines": 27, "source_domain": "www.minmurasu.com", "title": "கர்ப்பிணிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை.. நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மோடி #ModiSpeech – மின்முரசு", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை.. நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மோடி #ModiSpeech\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:\nகர்ப்பிணி பெண்கள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், பேறு கால செலவுக்காகவும் உதவும் வகையில், அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை வழங்கப்படும்.\nஇந்த உதவித் தொகை அப் பெண்களின் வங்கி கணக்குக்கே நேரடியாக செலுத்தப்படும். எனவே இடைத்தரகர்களுக்கு வேலை இருக்காது. கமிஷன் கொடுக்க தேவையிருக்காது.\nஇந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டு வரப்படும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thinakkural.lk/article/16393", "date_download": "2018-08-21T13:39:08Z", "digest": "sha1:RTVACWFAIMB7BO2IRUHJLFJGHMN6OJMR", "length": 6877, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "தாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை - Thinakkural", "raw_content": "\nதாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை\nதாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.\nஅவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.\nஅதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.\nஇதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.\nமேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.\nஇவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘9 மாகாணங்களுக்கும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை பகுதியில் ரொக்கட் தாக்குதல்\nஎளிமையின் மறுஉருவமாக விளங்கும் இம்ரான் கான்\nஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\n« குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், அதன்பின் தான் திருமணம்\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-760d-kit-ef-s-18-135-mm-is-stm-dslr-camera-black-price-pgXqXx.html", "date_download": "2018-08-21T13:51:07Z", "digest": "sha1:RCQBIGS4F6QUVIK534ANDODMPHZPPTCT", "length": 24144, "nlines": 519, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 11, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 76,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 28 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 - 135 mm\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nசென்சார் சைஸ் 22.3 x 14.9 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் Jan-00 sec\nஆப்டிகல் ஜூம் 10 X\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 5 Shots/sec\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1,040,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 3:2, 4:3, 16:9, 1:1\nஆடியோ போர்மட்ஸ் MP4 (AAC)\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் ஈரோஸ் ௭௬௦ட் கிட எப் S 18 135 ம்ம் ஐஸ் ஸ்டம் டிஸ்க்லர் கேமரா பழசக்\n4/5 (28 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/07/16_28.html", "date_download": "2018-08-21T14:14:53Z", "digest": "sha1:D5DI4PFEJAQC2TYXF36LX63HVIPQE2RA", "length": 5450, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய கட்சியை 'நாடும்' குரூப் 16! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிய கட்சியை 'நாடும்' குரூப் 16\nபுதிய கட்சியை 'நாடும்' குரூப் 16\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் அரசை விட்டு விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்கள் தனிக் கட்சியாக இயங்குவதற்கு ஆலோசிப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஇதன் பின்னணியில், ஏ.எஸ்.பி. லியனகேவின் தொழிலாளர் கட்சியை விலைக்கு வாங்கும் முயற்சி இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமஹிந்த அணியோடு இணைந்து கொள்ளவுள்ளதாக அவ்வப்போது தெரிவித்து வந்த போதிலும், தனித்தியங்கும் அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கப்போவதாக கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றமையும் இவர்களை வரவேற்கக் காத்திருப்பதாக முன்னர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-21T13:59:56Z", "digest": "sha1:2HF6R34AXKVPWUTCKHZVJ7X4TILPV4IK", "length": 10802, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது – விக்னேஸ்வரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nவடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது – விக்னேஸ்வரன்\nவடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு சாத்தியமாகாது – விக்னேஸ்வரன்\nவடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்குசமச்சீரில்லாததனி அலகு உருவாக்கப்படுவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகும் என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவாராவாராம் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவரிடம், வடக்கு,கிழக்கை இணைக்க முனைப்புடன் செயற்படுவதன் காரணம் என்ன என வினவப்பட்டது.\nஇதற்கு பதிலளித்து முதலமைச்சர், வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ்ப் பேசும் மக்களை பாதிக்கும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nவடகிழக்கு இணைப்பு,சுயாட்சி,சமஷ்டி போன்ற கருத்துக்கள் வெறும் கருத்துக்கள் அன்று மாறாக அவை எமது பாதுகாப்புக்கான கேடயங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஎனவே அவற்றை கைவிட்டால் எம்மை அடிபணியவைப்பதும் அடியற்றுப் போகவைப்பதும் இலகுவாகி விடும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆயுதங்கள் மௌனித்ததும் தனிநாட்டுக்கான கோரிக்கையும் அதனுடன் மௌனித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் முஸ்லிம் தனி அலகொன்றை உறுதிசெய்த பின் வடகிழக்கு இணைப்பு பற்றிய கருத்தறியும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆகவே சிலருக்கு எரிச்சலை மூட்டுகின்றதோ இல்லையோ எமது பாதுகாப்புக்கும் நாம் தொடர்ந்து இங்கு வாழ்வதற்கும் ஏற்புடைத்தான ஒரு மார்க்கத்தை நாம் வலியுறுத்துவது எந்தவிதத்திலும் பிழையாகாது என தெரிவித்துள்ள அவர், வடகிழக்கு இணைப்பில்லா இனப்பிரச்சினைத் தீர்வொன்றை நாம் நாடினால் எமது இனம் அழிய அது அடிகோலும் என்பதே உண்மை எனவும் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு- கிழக்கில் தற்கொலைகள் அதிகரிக்க காரணமென்ன\nயுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் பல்வேறு உள ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவே, வடக\nயுத்த வெற்றியின் சின்னம் குறித்து பேசாமல் நல்லிணக்கம் குறித்து யோசிப்போம் – சி.விக்கு மங்கள பதில்\nவடக்கு முதல்வர் நினைவுச் சின்னம் குறித்து பேசுவதை விடுத்து, நல்லிணக்கம் குறித்து சிந்திக்க வேண்டும்\nஇராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது: விக்கி\nவடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருவதன் காரணமாகவே அவற்றை அ\nவடக்கின் மீதான தெற்கு அரசியல்வாதிகளின் ஆதிக்கம் நல்லிணக்கத்தை பாதிக்கும்: சி.வி.\nவடக்கையும்- கிழக்கையும் தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்த தெற்கு அரசியல்வாதிகள் முயற்சித்தால் நல்லிணக்கம\nவிஜயகலா விவகாரம்: சட்ட நடவடிக்கை குறித்து ஆராயுமாறு அறிவுறுத்தல்\nமுன்னாள் இராங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்சைக்குரிய கருத்து தொடர்பிலான விசாரணை அறிக்கை\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=2312", "date_download": "2018-08-21T14:27:38Z", "digest": "sha1:VRACKAUT4ACSEWC4UCQ3N7QCGHKTQQLX", "length": 5774, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "குற்றம் புரிந்தவர்", "raw_content": "\nHome » பொது » குற்றம் புரிந்தவர்\nஇந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். தமிழகத்தில்... இந்திய அளவில்... உலக அளவில் என விரியும் இந்த உண்மைக் கதைகளில் மர்லின் மன்றோ, கென்னடி போன்ற உலகப் புகழ்பெற்ற பிரமுகர்கள் தொடங்கி, சைக்கோ கில்லர்கள் வரை அலசப்பட்டிருக்கிறார்கள். தலைப்பு சொல்கிறபடி, இதில் அலசப்பட்டக் குற்றங்கள் மிகுந்த திட்டமிடப்பட்டவை. இதில் வரும் குற்றவாளிகள் எல்லோரும் குற்றம் ‘புரிந்தவர்கள்’. அதாவது, புரிந்து செய்யப்பட்ட குற்றங்கள், கொலைகள். கண்டுபிடிக்க முனைந்தவர்களுக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியவை. சில கண்டுபிடிக்க முடியாமலேயே போனவை. சட்டத்தின் முன் பெரிய கேள்விக் குறியை போட்டுவிட்டு, தப்பித்துச் சென்ற குற்றவாளிகளும் உண்டு. காரணம் இல்லாமல் தண்டனை அனுபவித்த நிரபராதிகளும் உண்டு. கண்டுபிடிப்பதில் உள்ள திருப்பங்களைப் போலவே குற்றம் செய்வதிலும் இத்தனை தினுசுகளா என ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. குற்றங்கள் சில சமயம் ஒரு புதிர் போட்டி போல அவிழ்க்கப்படுகின்றன. சுபாவின் சுவாரஸ்யமான நடை அந்த விறுவிறுப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. முத்தாய்ப்பாக மகாத்மா காந்தியின் படுகொலை ஆராயப்பட்டிருக்கிறது. ரத்தம் உறைய வைக்கும் அந்தப் படுகொலையின் பின்னணி நமக்குச் சொல்வது என்ன அந்தப் பின்னணிக்கு மட்டும் அல்லாமல் உலகின் அத்தனை குற்றங்களுக்குமான காரணத்தை அந்தக் கடைசி அத்தியாயத்தில் அலசியிருக்கிறார். ‘அன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்’ என அழுத்தமாகச் சொல்லி முடித்திருக்கிறார் சுபா. குற்றம் புரியா சமூகம் அமையட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilscreen.com/riyamika-news/", "date_download": "2018-08-21T14:13:30Z", "digest": "sha1:PCXBI6Y3D75WDDQOL6U4OYBLLOLUZUXM", "length": 10654, "nlines": 64, "source_domain": "tamilscreen.com", "title": "ஷூட்டிங்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த நடிகை.. - Tamilscreen", "raw_content": "\nHomePress Releaseஷூட்டிங்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த நடிகை..\nஷூட்டிங்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த நடிகை..\nசமீபத்தில் வெளியான X வீடியோஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரியாமிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்..\nபெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தவர்..\nசொல்லப்போனால் அம்மாக்களுக்கு கைவிட்டுப்போன நடிக்கும் ஆசையை நிறைவேற்ற மகள்கள் களத்தில் குதிப்பார்களே..\nஅப்படி வந்தவர் தான் ரியாமிகாவும். கேமராமேன் பாலசுப்ரமணியன் இவர்களது குடும்ப நண்பர் என்பதும் இவர் சினிமாவுக்கு(ள் ) வர ஒரு காரணம்..\nபடிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படம் தான் அறிமுகம் கொடுத்தாதது.. ஆனால் தற்போது வெளியான X வீடியோஸ் படம் ஓரளவு அடையாளத்தையும் கொடுத்துள்ளது.\nX வீடியோஸ் படத்தின் இயக்குனர் இவரை ஒப்பந்தம் செய்தபோது முழுக்கதையையும் சொல்லாமல் இவர் நடிக்கும் காட்சிகளை மட்டும் சொல்லி சம்மதிக்க வைத்தாராம்.\nஅதுமட்டுமல்ல படத்தில் ஒப்பந்தமான பின்னரே படத்தின் டைட்டிலே என்னவென்று ரியாமிகாவுக்கு தெரியவந்ததாம் . ஆரம்பத்தில் லைட்டாக ஜெர்க் ஆனாலும், அந்தப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் தனது நடிப்பை வழங்கியதாக கூறுகிறார் ரியாமிகா..\n“முழுப்படத்தை பார்த்ததும் தான் என்னுடைய காட்சிகளை கதையுடன் எப்படி இணைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. திரையுலகில் ஒருபக்கம் பாராட்டுக்கள் வந்தாலும், நெருங்கிய நட்பு வட்டத்தில் இந்தப்படத்தில் நீ நடித்திருக்கத்தான் வேண்டுமா என சில நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தன.\nஇருந்தாலும் ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்தோம் என திருப்திப்பட்டு கொண்டேன்.. இனிவரும் நாட்களில் முழு கதையையும் கேட்டுட்டே நடிக்க திட்டமிட்டுள்ளேன் ” என்கிற ரியாமிகா, இனி அடுத்தடுத்து ஒப்புக்கொள்ள போகும் படங்களில் தனது கேரக்டர்களிலும் கவனம் செலுத்தப்போவதாக சொல்கிறார்.\nX வீடியோஸ் படத்த்தை தொடர்ந்து ‘அகோரி’ என்கிற படத்த்திலும் நடித்து முடித்துவிட்டார் ரியாமிகா. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான் என்பதும் அதில் ரியாமிகா ஒருவர்தான் பெண் என்பதும் ஆச்சர்யமான செய்தி.\n“இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சுமார் ஒரு மாதம் நடந்தது.. ஒவ்வொருவருக்கான காட்சியாக மாற்றி மாற்றி எடுத்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அங்கே வேடிக்கை பார்க்க வந்த பசங்களுக்கு கிளாசிக் டான்ஸ் கற்றுக்கொடுத்தேன்.. மீதி நேரங்களில் நான் உட்பட மற்ற நடிகர்களும் ஒரு டெக்னீஷியனாகவும் இறங்கி வேலை பார்த்தோம்.”என்கிறார் ரியாமிகா\n‘மாயவன் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ரியாமிகா. ஆனால் இவரை சி.வி.குமார் முதலில் அழைத்தது தான் தயாரிக்கபோகும் படத்திற்காகத்தான். அப்படியே ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக, தான் இயக்கும் படத்திலும் இவருக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டாராம்.\n“என் படங்களை பார்த்தவர்கள், இயல்பாக நடிக்கிறீர்களே, நீங்கள் கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட்டா என அடிக்கடி கேட்பதுண்டு.. அதனாலேயே அங்கே என்னதான் சொல்லித்தருகிறார்கள் என பார்க்கும் ஆர்வம் அதிகமாகி, நமக்கு தெரியாத ஒன்றை கற்றுக்கொள்ளும் ஆசையில் இப்போது கூத்துப்பட்டறையில் பயிற்சிக்காக சேர்ந்துவிட்டேன்” என்கிற ரியாமிகா ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஜிம், சிலம்பம், டான்ஸ் கிளாஸ், நடிப்பு பயிற்சி என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழல்கிறார்.\nரியாமிகாவுக்கு பிடித்த நடிகை என்றால் பாலிவுட்டில் கங்கனா, கோலிவுட்டில் நயன்தாரா, அனுஷ்கா தானாம் ரியாமிகா என்றால் என்ன என்று பெயர்க்காரணம் கேட்டால் ‘ஒரிஜினல்’ என்று அர்த்தம் சொல்லி சிரிக்கிறார்.\nஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன் – எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் – ஒரிஜினல் கலெக்ஷன் ரிப்போர்ட்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nகேரளா வெள்ள நிவாரணநிதி – ரஜினி, விஜய், அஜித் மெளனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது… வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thirumozi.blogspot.com/2008/01/024.html", "date_download": "2018-08-21T13:37:50Z", "digest": "sha1:IMSBIWVF6RX7CGZVBR5Z3WI43SCWQZBG", "length": 43748, "nlines": 511, "source_domain": "thirumozi.blogspot.com", "title": "ஆழ்வார்க்கடியான்: மடல் 024 - வாழ்வு நிலையே கண்ணம்மா!", "raw_content": "\nஆழ்வார்க்கடியான் கண்ணனமுது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது\nமடல் 024 - வாழ்வு நிலையே கண்ணம்மா\n என்றொரு கேள்வியை எழுப்பி பேராசிரியர் கார்த்திகேசு, பின் வைணவமும் பாசுரமும் அறிந்த பெரியோர் கருத்துரைக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்று முடித்திருக்கிறார். வைணவமும் பாசுரமும் அறிந்த பெரியோன் நானில்லை எனினும் ஒரு இலக்கிய கலந்துரையாடலாக பின் வரும் கருத்தை முன் வைக்கிறேன். இதை இரண்டு பகுதிகளாகத் தருகிறேன்.\nமுதல் மடலில் ரெ.கா கேட்டும் கேள்விகளுக்கு தருக்க ரீதியில் பதில் சொல்கிறேன். இதை பொதுவான பதிலாகக் கொள்க. ரெ.கா. பெரிய சுவைஞர். அவர் இலக்கிய சுவையை மனதில் வைத்து, பதில் தெரிந்தே கேள்வி கேட்கும் ஆசாமி. எனவே நான் சொல்லித்தான் அவருக்குத் தெரியும் என்று இல்லை.\nஇரண்டாவது மடலில் கொஞ்சம் ஐதீகம் (சரித்திரம்) சொல்லி பதிலுரைக்கிறேன். இது வாசிப்பின் வசதிக்குத்தான். வழக்கம் போல் சொல்லிக் கொள்வது, இது ஒரு இலக்கியம்/சமூகம் சார்ந்த கருத்துப்பரிமாறல். இதில் சொல்லும் கருத்து யாருடைய தனிப்பட்ட ஆன்மீக உணர்வையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்படுவது அல்ல. ஆண்டாள் நான் மிகவும் போற்றும் கவி. நிற்க.\nரெ.கா: ......ஆகவே பெரியாழ்வார்தான் இளம்பெண் ஆண்டாளாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு ஒப்பீட்டுக்கு மாணிக்கவாசகர் திருவெம்பாவை முழுவதிலும் ஒரு இளம் பெண்ணாகத் தம்மைக் கற்பித்துக் கொண்டு பாடுவதைக் காணலாம்.\nபதில்: திரு.ரெ.கா. மிக அழகாக இப்படியொரு வாதத்தை முன் வைக்கிறார். இவ்வாதம் நான் முன்பு அறிந்ததுதான். மிகவும் நியாயமாகத்தான் படுகிறது. ஏன் பட்டர்பிரான் நாயக-நாயகி பாவத்தை சிறப்பித்து காட்டும் வண்ணம் தனித்தனி \"தலைப்பில்\" பாடாமல் தனித்தனி \"நபராக\" மாறி பாடி இருக்கக் கூடாது என்பதுதான் வாதம் இப்படி வைப்பதில் ஆழ்வார்களின் முற்போக்கு இரண்டு மடங்காகக் கூடுகிறது இப்படி வைப்பதில் ஆழ்வார்களின் முற்போக்கு இரண்டு மடங்காகக் கூடுகிறது அதாவது அதுவரை தமிழில் இருந்து வந்த இலக்கிய பாணியை மெருகு ஊட்டும் வண்ணம் பெரியாழ்வார் புதுமை செய்கிறார் என்றாகிறது. பெரியாழ்வார் நிறைய புதுமைகளைப் புகுத்தியவர்தான். பிள்ளைத் தமிழ் என்றொரு இலக்கிய பிரிவிற்கு வழி வகுக்கிறார். இக்கால புதுக்கவிதைகள் போல் மிக, மிக எளிதான வார்த்தைகளைப் போட்டு, பழமலய் (இவர் ஒரு தலித் கவிஞர்) போல் கிராமத்து வசனங்களையும் சேர்த்து பாசுரங்கள் பாடிய கவிஞர் பட்டர்பிரான். ஏன் இவர் மேலும் ஒரு படி போய், தன்னை பெண்ணாக பாவித்து கவிதை செய்யாமல் தனக்கு பெண் பெயர் கொடுத்து கவிதை செய்திருக்கக்கூடாது அதாவது அதுவரை தமிழில் இருந்து வந்த இலக்கிய பாணியை மெருகு ஊட்டும் வண்ணம் பெரியாழ்வார் புதுமை செய்கிறார் என்றாகிறது. பெரியாழ்வார் நிறைய புதுமைகளைப் புகுத்தியவர்தான். பிள்ளைத் தமிழ் என்றொரு இலக்கிய பிரிவிற்கு வழி வகுக்கிறார். இக்கால புதுக்கவிதைகள் போல் மிக, மிக எளிதான வார்த்தைகளைப் போட்டு, பழமலய் (இவர் ஒரு தலித் கவிஞர்) போல் கிராமத்து வசனங்களையும் சேர்த்து பாசுரங்கள் பாடிய கவிஞர் பட்டர்பிரான். ஏன் இவர் மேலும் ஒரு படி போய், தன்னை பெண்ணாக பாவித்து கவிதை செய்யாமல் தனக்கு பெண் பெயர் கொடுத்து கவிதை செய்திருக்கக்கூடாது என்பது கேள்வி பெண் பெயரில் எழுதும் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் நிறைய அறிவோம் நாம். அது இருபதாம் நூற்றாண்டு பழக்கம் என்று சொல்லாலமெனில் பெரியாழ்வார் எட்டாம் நூற்றாண்டிலேயே இப்பழக்கத்தை தொடங்கிவிட்டார் என்றாகிறது. ஆக இப்படிப் பார்த்தால் புதுமை செய்வதில் ஆழ்வார்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை போல் தோன்றுகிறது ஆனாலும் அப்படிக் கொள்ளாமல் ஆண்டாள் பெண் கவி என்றும் என்னால் பதில் சொல்ல முடியும்.\nரே.கா: முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய ஆசிரியர்களில் ஆண்டாள் ஒருவர் மட்டுமே பெண்ணாக இருப்பது. ஆண்டாளைப் பின்பற்றி, எடுத்துக்காட்டாகக்கொண்டு பிற பெண் பாசுர கர்த்தாக்கள் எழுந்ததாகத் தெரியவில்லை. இந்த வகையில்ஆண்டாளை unique என்று கொள்வதா அல்லது பாசுரகர்த்தாக்கள் வரிசையில் அவர் out of place என்று கொள்வதா தெரியவில்லை.\nபதில்: இந்தியா போன்ற ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணின் குரல் அதிகம் கேட்காததை ஆச்சர்யமாகபார்க்க வேண்டியதில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் இலக்கிய\nகர்த்தாக்களைத்தான் தமிழ் கொண்டுள்ளது. அதில் ஆண்டாள் முதன்மை என்று தோன்றுகிறது.\nரெ.கா: கவித் திறன், சொல்லாடும் திறன் இவற்றைப் பார்க்கும்போது ஆண்டாள் பெரியாழ்வாரின் clone என்றே சொல்லிவிடலாம் போலிருக்கிறது. ஆண்டாள் பாடும்போது அவர் பாடல்களில் பெரியாழ்வார் போலவே ஒருg ay abundance இருக்கிறது.\nபதில்: இதிலும் அதிக அதிசயம் இல்லை. சங்கீத கச்சேரிகளில் சிஷ்யர்களை கூட வைத்துக் கொண்டு பாடுவது, அவர்கள் பாணி அப்படியே தொடர வேண்டும் என்ற ஆசையால்தான். பெரியாழ்வாரின் பெண் பின் எப்படி இருப்பாள் தாயைப் போல (பெரியாழ்வார் தாய்தான் தாயைப் போல (பெரியாழ்வார் தாய்தான்) பிள்ளை நூலைப் போல சேலை.\nரெ.கா: மேலும் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவத்தைப் படிப்படியாகப்பாடி (தாலாட்டு, செங்கீரை இப்படி) இந்த வாலிபப் பருவத்தை வசதியாக ஒதுக்கிவிட்டு, அப்புறம் கண்ணனின் அற்புதங்கள் (மலையைக் குடையாக்கியது) கிருஷ்ணாவதார ராமாவதாரச் சிறப்புக்கள் என்று தாவிவிடுகிறார், இடையில்உள்ள சிருங்காரங்கப் பகுதியை ஆண்டாளுக்காக முற்றாக விட்டுக் கொடுத்ததுபோல. இந்த dilineanation செயற்கையாக இருக்கிறது.\nபதில்: இதிலும் பெரிய அதிசயம் இல்லை. ஆழ்வார்களை மிகவும் கவர்ந்த உருவகம் கண்ணனை குழந்தையாகப் பார்ப்பதுதான். எத்தனையோ அவதாரங்கள் இருக்க மீண்டும், மீண்டும், ஆழ்வார் மாற்றி, ஆழ்வார்கள் கண்ணனை குழந்தையாக பார்த்து இரசித்து இருக்கிறார்கள். நம்மாழ்வார் தாமோதரன் என்ற கண்ணனின் சிறப்பை சொல்ல வரும் போது \"தன்னை கட்டுன்னுப் பண்ணிய பெருமாயன்\" (அதாவது இறைவன் நம்முள் வந்து தங்க காத்துக் கொண்டு இருக்கிறான், ஆனால் நாம்தான் அவனை கண்டு கொள்வதில்லை என்ற பொருளில்) என்று சொல்லி அவனது எளிமையை எண்ணி உருகுகிறார். இதில் பெரியாழ்வார் செய்வித்த திருவாய்மொழி \"கண்ணனின் சிறப்பை காட்டும் தமிழ் பாகவதம்\" என்றுதான் பார்க்கப் படுகிறது. கண்ணன் கதையில் பிருந்தாவன பருவம்தான் மிகவும் சிறப்பானது. கண்ணனே வடமதுரைக்கு அரசனாக செல்லும் போது கோபிகைகளைப் பிரிந்து செல்வதை நினைத்து கண்ணீர் சிந்துவதாகத்தான் பாகவதம் சொல்கிறது. யாருக்கு சார் ஊழல் பிடிச்ச அரசாட்சி பிடிக்கும் பிருந்தாவன குதூகலம் வருமா மேலும், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழுவதும் தேடினாலும் கண்ணனின் கீதை கதை சொல்லப் படவே இல்லை.\nஇதற்கு, 1. கீதை ஆழ்வார்கள் காலத்திற்கு பின் தோன்றி இருக்க வேண்டும், அல்லது, 2. ஆழ்வார்களின் உள்ளம் போர்களை வருணிக்காது. அது அவர்களால் முடியாத செயல் என்று கொள்ள வேண்டும்.\nரே.கா: இன்னொரு கோணத்தில் ஆண்டாள் இந்த சிருங்காரத்தைத் தவிர வேறு எதையும் பாடவில்லை. ஆண்டாள் தன் இளம் காதல் பருவத்திலிருந்து முதிர்ந்ததாகத் தெரியவில்லை. ஆண்டாள் மார்க்கண்டேயன் போல என்றும் இளமையாக இருந்து காதல் ஒன்றையே அனுபவித்துத் திடீரென்று மறைந்துவிட்டது போல் இருக்கிறது.\nபதில்: ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒவ்வொரு பாவம் அதிகமாக பிடிக்கிறது. பெரியாழ்வாருக்கு தன்னை யசோதையாக பார்த்து கண்ணனை தன் குழந்தையாக அனுபவிப்பதில்தான் சுகம் தெரிகிறது. சேர மன்னனான திருமங்கை ஆழ்வாருக்கு இராமனின்மீது பக்தி அதிகம். இராமனுக்கு தாலாட்டுப் பாடிய ஒரே ஆழ்வார் இவர்தான் சிவவாக்கியர் என்ற (:-) திருமழிசையோ இந்த தனிமனித அனுபங்கள் எதுவுமில்லாமல் இறைமையை ஒரு விஞ்ஞானி போல் அணுகி பாடி இருக்கிறார். எனவே யசோதையான பெரியாழ்வாரால், கண்ணனைக் காதலனாகப் பார்க்க முடியவில்லை (அதுக்கெல்லாம் ஒரு பாரதி வேண்டும் சிவவாக்கியர் என்ற (:-) திருமழிசையோ இந்த தனிமனித அனுபங்கள் எதுவுமில்லாமல் இறைமையை ஒரு விஞ்ஞானி போல் அணுகி பாடி இருக்கிறார். எனவே யசோதையான பெரியாழ்வாரால், கண்ணனைக் காதலனாகப் பார்க்க முடியவில்லை (அதுக்கெல்லாம் ஒரு பாரதி வேண்டும்). ஆனால் ஆண்டாளுக்கோ, கண்ணன் என்ற காதலனைத் தவிரவேறு எதுவும் தெரியவில்லை.\nஇந்த பாவங்கள் இந்திய சமய சிந்தனையில் மிக முக்கியமானவை. பிரம்மச்சாரிகளுக்கு ஆஞ்சநேயர் பிடிக்கும், வாழ்வின் நிலையாமையை பார்ப்பவர்க்கு சுடலை மாடனை பிடிக்கும், தத்துவ ஞானிகளுக்கு கீதையின் கண்ணனை பிடிக்கும், சிருங்காரம் பிடிப்பவர்களுக்கு கண்ணனின் இளமைப் பருவம் பிடிக்கும். இதை \"இஷ்ட தெய்வ உபாசனை\" என்று சொல்வர். இந்திய சமயச் சிந்தனையில் தனி மனித தேவைகளுக்கேற்றவாறு இறைமை வளைந்து கொடுக்கும் தன்மை மிகச் சிறப்பானது.\nரெ.கா: நாணம் என்பது சிறிதும் தொனிக்காத காமம் உடைய பாடல்கள்.\n\"காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட் டிடைக்கங்குல்\nஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய் நானிருப்பேனே\"\n\"என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்\nபொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே\"\n\"கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள்\nஇப்படி ஒரு பெண் வெளிப்படையாக ஏட்டில் பாடி புலவர்கள், பக்திமான்கள் நடுவில் வைக்க முடியுமா இவை தனிப்பட்ட காதல் கடிதங்கள் அல்ல, பக்தியை வெளிப்படுத்தப் பலரும் வாய்விட்டுப் பாடும் பாடல்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்க.\nஇதை இப்படி, இப்போது எழுதுவது யார்\nநாணம், கற்பு இவைகளை பெண்ணின் குணங்களாக வைத்தவர் யார், ஒரு ஆண்\nகாமம் என்பது ஆண்கள் மட்டுமே சொல்லி, பேசி, எழுதி அனுபவிக்கக் கூடியது என்று சொல்பவர் யார்\nகாமத்திற்கு பெண் வேண்டும்,ஆனால் அவள் காமத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்வது யார்\nஇப்படிப் பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் வெடித்த புதுமைப் பெண்தான் ஆண்டாள் இங்குதான் ஆண்டாள் ஔவையாரிடமிருந்து வேறு படுகிறாள். பெண்ணைப் பற்றி ஔவை எப்படிப் பாடுகிறாள்:\n\"ஏசி இடலின் இடாமையே நன்று எதிரில்\nபேசும் மனையாளில் பேய் நன்று\n\"உண்ணீர், உண்ணீர் என்று உபசரியாதம் மனைவி உண்ணாமை கோடி...\"\nஇதில் முழுமையாய் ஔவையார் ஆண்கள் எப்படி பெண் இருக்க வேண்டும் என்று சொல்லு கிறார்களோ அப்படியேதான் அவரும் சொல்கிறார். இதை ஒரு பெண் பாடினார் என்று சொல்வது அதிசயம்தான். ஔவையார் என்பது ஆணா பெண்ணுக்கு ஆசை இருக்கக்கூடாதா பெண் தன் ஆசையை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்று பின் ஆண் வர்க்கம் எப்படித்தான் அறிந்து கொள்ளும் நாச்சியார் திருமொழி இதற்கு பதில் சொல்கிறது. ஆயினும் நாச்சியார் திருமொழி D.H.Lawrence- Lady Chatterly's Lover இல்லை. ஆண்டாளும் மிகவும் கட்டுப் பட்டுதான், இலக்கிய வரம்புகளுக்கு உட்பட்டுதான் எழுதியிருக்கிறாள். இந்த சமூக கட்டுகள் இல்லாத பெண்ணின் தமிழ் எழுத்து இன்னும் எழுதப் படவே இல்லை என்பதுதான் தமிழின் மிகப் பெரிய குறை\nஇந்தியப் பாரம்பரியத்தின் மீது எனக்கு அளவில்லா மரியாதை வருவதற்குக் காரணம் அவர்கள் வாழ்வை நோக்கிய விதம்தான். கடவுள், புனிதம் அது, இதுவென்று சொல்லி இந்த பண்டிதர்களும், பூசாரிகளும் (I mean the middle men between God and men) இறைமையை நாம் தினம், தினம் அனுபவிக்கும் வாழ்விலிருந்து பிரித்து விட்டார்கள். கடவுளை இவர்கள் கோவிலில் சிறை செய்து விட்டனர். கண்ணன் என்னும் தெய்வம் ஒண்ணு மண்ணாக நம்முடன் விளையாடுவதில்தான் ஆசை கொள்கிறது. இதை நன்கு உணர்ந்துதான் ஆழ்வார்கள் கண்ணனை வாழ்வின் உருவகமாகப் பார்த்தனர். இவ்வழியில் வந்த எம் ஆசான் பாரதியும் கண்ணனைச் சொல்லும் போது \" வாழ்வு நிலையே கண்ணம்மா\" என்றுதான் பாடுகிறான். இதை மிகச்சரியாக புரிந்து கொண்டதால்தான் வைணவ ஆசார்யர்களில் மேரு மலையாக விளங்கும் இராமானுச முனி \"கண்ணனுக்கே ஆமது காமம்\" என்று காமத்தை முதன்மைப் படுத்துகிறார்.\nமன்மதனை எதிர்த்த சிவனுக்கும் ஒரு பெயர் \"காமேஸ்வரன்\". அத்வைத ஆசார்யர்களில் சிறப்புப் பெற்ற காஞ்சிப் பெரியவர் இருக்கும் பீடத்தின் பெயர் \"காமகோடி\" பீடம். அத்வைத பிதாமகர் ஆதி சங்கரரும் செளந்தர்ய லகரியில் அப்படி வர்ணிக்கிறார் அம்பாளை. நம் ஆச்சார்யர்களில் யாரும் காமத்தை தவறான கண்ணணோட்டத்தில் கண்டதில்லை. காமம் அழுக்கு அல்ல காமம் அழுக்கு எனில் நீங்களும் நானும் அழுக்குதான். காமம் என்ற வாழ்வின் அடிப்படையான ஒன்று அசிங்கமாகப் பார்க்கப் படும் பழக்கம் பின்னால் தோன்றியது.\nசுவையான விஷயங்களுக்கே போதையளிக்கும் (addiction) குணம் உண்டு. காமத்தில் போதையுற்று மானுடம் போய்விடக் கூடாது என்பதற்காக காமத்தை குறைத்து சொல்லப் போய் கடைசியில் அது தீண்டப் படாத பொருள் போல் ஆகிவிட்டது. இது தமிழனின் மனநிலையில் செய்துள்ள தீங்கு அளவிட முடியாதது. பார்க்கும் இடமெல்லாம் காமம் நிறைந்து இருக்கிறது (சினிமாவை மட்டும் சொல்ல வில்லை நான்) ஆனால் தற்கால சமய சிந்தனை அதை நிந்தனை செய்கிறது. இந்த இரு தலைக்கொள்ளி எறும்பு வாழ்க்கையும் நமக்கு பழகித்தான் போய்விட்டது\n>>சேர மன்னனான திருமங்கை ஆழ்வாருக்கு இராமனின்மீது பக்தி அதிகம்.<<\n 'மன்னு புகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே, தாலேலோ' என்று இராமனுக்குத் தாலாட்டுப் பாடிய பெருந்தகை குலசேகரன் அல்லவோ' என்று இராமனுக்குத் தாலாட்டுப் பாடிய பெருந்தகை குலசேகரன் அல்லவோ\nதிருமாலிய ஒருங்கிணைப்பு, அகில இந்திய அரவணைப்பு, ஞான நிதி வைப்பு\nமடல் 019: ஊமையின் கனவு\nமடல் 020: கண்ணனுக்கே ஆமது காமம்\nமடல் 021 -சின்னஞ்சிறு கிளியே\nமடல் 022: செய்ய தாமரைக் கண்ணினாய்\nமடல் 023: செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா\nமடல் 024 - வாழ்வு நிலையே கண்ணம்மா\nமடல் 025 - வேங்கடவற்கு என்னை விதி\nமடல் 026: படைப்பிலக்கியமும், சுதந்திரமும்\nமடல் 027 - சில்லென்று அழையேல்\nமடல் 028 - விண்ணீல மேலாப்பு\nமடல் 030- எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே\nமடல் 031- என் சரண் என் கண்ணன்\nமடல் 032- கலியும் கெடும், கண்டு கொண்மின்\nமடல் 033- ஆற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர...\nமடல் 034- இன்னுமோர் நூற்றாண்டு இரும்\nமடல் 035- கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே\nமடல் 036 - கற்றினம் மேய்த்த எந்தைக் கழனினை பணிமின்...\nமடல் 037 - நீராய் அலைந்து கரைய\nமடல் 038:அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்\nமடல் 039: செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்\nமடல் 040 - காற்றுவெளியிடைக் கண்ணம்மா\nமடல் 041: காதல் (பக்தி), களவு, கற்பு\nமடல் 042 - கல்யாணக் கனவுகள்\nமடல் 043 - அறிவின் பயனே\nமடல் 044 - கனவிடை தோய்தல்\nமடல் 045: பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபாசுர மடல்கள் (பாகம் 1)\n008. அதீத காதலும் பக்தி இலக்கியமும்\n009. சாதிகள் இல்லையடி பாப்பா\n010. என் அமுதினைக் கண்ட கண்கள்\n011. வேதம் தமிழ் செய்த மாறன்\n013. பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்\n014. பற்றுடை அடியவர்க்கு எளியவன்\n015. திருமழிசை என்ற அதிசயம்\n016. பை நாகப் பாயை..\n018. ஆழி மழைக் கண்ணா\n020. கண்ணனுக்கே ஆமது காமம்\n022. செய்ய தாமரைக் கண்ணினாய்\n023. வெப்பம் கொடுக்கும் விமலா\n024. வாழ்வு நிலையே கண்ணம்மா\n025. வேங்கடவற்கு என்னை விதி\n031. என் சரண் என் கண்ணன்\n033. புணை போல் ஆருயிர்\n034. இன்னுமோர் நூற்றாண்டு இரும்\n036. கற்றினம் மேய்ந்த எந்தை\n037. நீராய் அலைந்து கரையன\n038. அன்பு நிறைய உடையவர்\n040. காற்று வெளியிடைக் கண்ணம்மா\n047. சங்கத்தார்க்கு ஓர் அகவல்\n048. உறவில் உறையும் இறைவன்\n049. குறை ஒன்றும் இல்லாத..\n050. உண்ணு நீர் வேட்டேன்..\n051. தமிழ் நயமும் மெய்ப்பொருளும்\n052. உறங்குவது போலும் சாக்காடு\n053. ஆலிலை மேல் ஒரு பாலகன்\n054. சிங்கப் பெருமாள் கதை\n057. மணவாள மாமுனியின் கனவு\n060. அவள் தந்த பார்வை\n061. உளகளவும் யானும் உளன்\n066. ஆண்டாளும் அக்கம்மா தேவியும்\n067. தமிழன் என்றொரு இனம்..\n069. பகவத் கீதையும் ஆழ்வார்களும்\n070. முல்லை திரிந்து பாலை..\n071. அடியார் தம்மடி யார்..\n076. நிழல் வெளியும் நிஜவெளியும்\n079. மயக்கும் மாலைப் பொழுதே..\n080. புலி புலி எனும் பூசல் தோன்ற\n082. பெண்மை அம்பூ இது\n083. யார் துணை கொண்டு வாழ்கிறது.\n090. அண்டம் மோழை எழ\n103. தாய் நாடும் கன்றே போல்\n104. அலங்கல் மார்வன் யார் \n106. கோதை எனும் குலவிளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?p=8647", "date_download": "2018-08-21T14:01:24Z", "digest": "sha1:ZEPBP2C6VKQYK4E5VT5WB4FQYB7KIPWV", "length": 14279, "nlines": 101, "source_domain": "vilaiyattu.com", "title": "#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து. (படங்கள் இணைப்பு) – Vilaiyattu.com", "raw_content": "\n#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து. (படங்கள் இணைப்பு)\n#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து.\nஇங்கிலாந்தில் இடம்பெற்ற மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து,இந்திய அணிகளுக்கிடையில் இறுதி போட்டியில் அசத்தல் வெற்றிபெற்ற இங்கிலாந்து வரலாறு படைத்துள்ளது.\nபோட்டியை நடத்திய நாடும் முன்னாள் உலக சாம்பியன்களுமான இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை வெற்றிகொண்டு மீண்டுமொரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.\nஇங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றும் 4வது உலக கிண்ணம் இதுவாகும்.\nலோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான முக்கிய இறுதி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது.\nபோட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்கள் பெற்றது.\nமுதலாவது மகளிர் உலக கிண்ணத்தை குறிவைத்து களமாடிய இந்தியாவுக்கு 229 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nவெற்றிபெறுவதற்கு அருமையான வாய்ப்புக்கள் இருந்தாலும் இறுதிநேரத்தில் இந்தியா விக்கெட்டுக்களை வேகமாக பறிகொடுத்த நிலையில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.\nஇறுதி 6 விக்கெட்டுக்களை இந்திய மகளிர் அணி வெறுமனே 28 ஓட்டங்களில் இழந்தது.191 வது ஓட்டம் பெறப்பட்ட நிலையில்தான் 4 வது விக்கெட் வீழ்த்தப்பட்டது.\nஇந்திய மகளிர் அணியின் பொறுப்பற்ற ஆட்டம் அவர்களுக்கான உலக கிண்ண கனவை தகர்த்துள்ளது.இங்கிலாந்து அணியின் இறுதிவரைக்குமான போராட்ட குணம் அவர்களுக்கு உலக கிண்ணத்தை பரிசளித்துள்ளது.இரு அணிகளும் பங்கெடுத்த குழுநிலை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nடோனி தலைமையில் 2014 ம் ஆண்டு T20 உலக கிண்ணம் ,இஷான் கிஷான் தலைமையில் 2016 இளையோர் உலக கிண்ணம்,விராட் கோஹ்லி தலைமையில் இந்தாண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி , அதன் தொடர்ச்சியாக மித்தாலி ராஜ் தலைமையிலும் மகளிர் உலக கிண்ண இறுதி போட்டிவரை முன்னேறினாலும் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியாது போயுள்ளது.\nகடந்த 3ஆண்டுகளில் 4 ICC உலக கிண்ணங்களை இந்திய கிரிக்கெட் கோட்டைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதியவகை தொடர்களுக்கான அறிவித்தல் வெளியாகியது\nஇலங்கை முன்னாள் வீரர்களின் முடிவினை வரவேற்றார் அர்ஜூனா\nஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணிக்கு மரண அடி\nசப்ராஸ் அஹ்மத், இந்திய அணிக்கு எச்சரிக்கை\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்...\nடெஸ்டில் புதிய சாதனை படைத்த விராத் கோஹ்லி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 352 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடை நிறுத்திய ...\nSLC T20 நாளை ஆரம்பமாகவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படவுள்ள SLC T20 நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 2ம்...\nமூன்றாவது இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட், அறிமுக போட்டியில் அதிக...\nமீண்டும் பாகிஸ்தான் வீரர் சூதாட்ட சிக்கலில்.. 1௦ ஆண்டுகள் தடை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசிர் ஜாம்ஷெட், இவர் 48 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்....\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்\n‘ஃபிஃபாவின் உலகக் கோப்பை லெவன்’ என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. பாலினியோ, லோவ்ரன், ஆஷ்லி யங், நெய்மர் என ஏகப்பட்ட சர்ச்சையான தேர்வுகள். இது ஒருபுறமிருக்க, ‘கோல்டன் பூட்...\nஉடைப்பவன் யாராகவும் இருக்கலாம்; ஆனால் படைப்பது இலங்கை தான்…\nவேகப் பந்துவீச்சிற்கு மிகவும் சாதகத்தை வழங்கும் பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் அபார வெற்றி பெற்ற இலங கை அணி முதன்முறையாக இம்மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணியாக...\nஇந்தியாவிற்கு எதிரான அணியில் தமிழ் வீரர்கள் இருவர்; தமிழ் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நனவு..\nஇலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி எதிர்வரும் யூலை மாதம் இலங்கை வரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் மோதவுள்ளது. இத்தொடருக்கான தெரிவுகள் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம் பெற்றது. இத்தொடருக்கான...\n2018 கால்பந்து உலகக்கிண்ண ஸ்பெஷல்- ஸ்பெயின் அணி பற்றிய சிறப்புப் பார்வை…\nஐரோப்பிய கழக மட்ட கால்பந்தாட்டத்திற்கு பெயர் போன ஸ்பெய்ன் 2010 இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணி கைப்பற்றி அசத்தியது. தற்போதைய பிஃபா உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும்...\nஐபில் 2018 ஒரு முழுமையான பார்வை\nIPL 2018-பதிவுகள் பதினொராவது ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது. 60 போட்டிகளின் முடிவில் இறுதியாக 11வது ஐ.பி.எல் கிண்ணம் சென்னை அணியின்...\nஐபில் தொடர் ஆட்ட நாயகன்கள்\nகோலி, தோனி மற்றும் ஏ.பி.டியின் விக்கெட்டுக்களே உன்னதமானவை; மனம் திறந்தார் ரஷீத் கான்..\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2011/12/blog-post_02.html", "date_download": "2018-08-21T14:32:40Z", "digest": "sha1:DVOVSKPXZVUS7L3GZIL2Q2ZKVEHA6Y2W", "length": 16312, "nlines": 180, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா\nஆபரேசன் மூலம் குழந்தை பிறந்தால் அது முறையான பிறப்பு தானா..ஜாதகம் கணித்து பார்த்தால் அது சரியான பலன் தருமா என பலர் சந்தேகம் கேட்கின்றனர்.\nமழைப் பேறும் பிள்ளைப் பேறும் அந்த மகேசனுக்கு கூடத் தெரியாது’’என்பது பழமொழி.மழை எப்போது பெய்யும்.. குழந்தை எப்போது பிறக்கும்.. என்பதை முன்கூட்டி அந்த மகேசனால் கூட சொல்ல முடியாதாம்.\nஇப்போதோ ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே அது பிறக்க வேண்டிய நேரத்தை ஜோதிடர்கள் மூலம் முன்கூட்டியே கணித்து ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து விடுகின்றனர்.இப்படி பிறக்கின்ற குழந்தைகளுக்கான ஜாதக பலன்கள் சரியாக வராது என்றும் தாயின் யோனி வழியாக முறைப்படி பிறக்கும் குழந்தைக்குத் தான் ஜாதக பலன்கள் சரியாக இருக்கும் என்பது சிலர் கருத்து.\nபழைய புராணங்களையும் அரச கதைகளையும் படிக்கின்ற போது வெவ்வேறு வகைகளில் குழந்தைகள் பிறந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை பிறக்க வைப்பதற்காக அக்காலத்தில் கூட வெவ்வேறு வழிவகைகள் பின்பற்றி இருக்கிறார்கள்.\nசோழ மன்னனாகிய சும தேவனின் மனைவி கமலவதிக்கு பிரசவ வேதனை எடுத்த போது ஜோதிடர்கள்,இப்பிள்ளை இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து பிறக்குமானால் மூவுலகங்களையும் அரசு புரியும். என்றனர்.அதைக் கேட்டவுடன் கமலவதி,அதுவரை என் கால்களை கட்டி தலைகீழாகத் தூக்கி நிறுவுங்கள்’’ என்றாள்.மன்னன் ஆணைக்கினங்க காவலர்களும் அவ்வாறே மேலே தூக்கினர்.ஜோதிடர்கள் குறித்த கால எல்லை நெருங்கியதும்,உடனே கட்டவிழ்த்து விட்டனர்.உடனே அழகிய ஆண் குழந்தை சதய நட்சத்திரத்தில் பிறந்தது.அக்குழந்தை காலம் தாழ்த்தி பிறந்தமையால் கண்களில் ரத்தம் கட்டி அதன் கண்கள் சிவப்பாக இருந்தன.\nஅதைக் கண்ட கமலவதி,என் ’கோ’ செங்கண்ணனா.. என்று கூவியவாறு உடனே இறந்துவிட்டாள்.இந்த செங்கண் சோழனே பிறகாலத்தில் சோழ நாட்டில் கோவில்கள் பலவற்றைக் கட்டினான்.திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள புகழ் பெர்ற திருவானைக்காவில் சிவபெருமானுக்கு மெய்ஞானத்தின் சார்புள்ள வெண்ணாவல் மரத்தினுடனே அரிய திருக்கோவிலை அமைத்தான்.எத்திசைகளிலும் தமது புகழ் விளங்கச் செங்கோல் ஆணை செலுத்திய செங்கன் சோழன் திருத் தில்லை கூத்தரது திருவடி நிழலை அடைந்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.’’கோச் செங்கட் சோழ் நாயனார்’’என்றழைக்கப்படும் இவரது திரு நட்சத்திரமானது மாசி மாதம் சத்ய நட்சத்திரத்தில் வரக் காணலாம்.\nஇவரைப் போலவே கரிகால் சோழனும் பிறந்தான்.கரிகால் சோழன் பிறக்க வேண்டிய நேரமானது ஜோதிடர்களால் முன்னரே குறிக்கப்பட்டு,அவன் தாயனவள் அதுவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டாள்.ஜோதிடர்கள் குறித்த நேரப்படி பிறந்த கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.கல்லணையை கட்டி அழியாப் புகழ் பெற்றான்.குழந்தையை சுப நேரத்தில் பிறக்க வைப்பதற்காக முற்காலத்தில் மூர்க்கத்தனமான முறை பின்பற்றப்பட்டது.இப்போது மருத்துவத் துறை வளர்ச்சி பெற்று விட்ட காரணத்தால் ஆபரேசன் மூலம் குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் வெளியே எடுத்து தாயையும்,குழந்தையையும் காப்பாற்றிவிடுகின்றனர்.\nஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பது உறுதி என்றால் ஜோதிடரையும் ஆலோசனை செய்து,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல லக்னம் வரும் நாளில் ,(மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குள்)குழந்தை பிறப்பை அமைத்துக் கொள்வது தவறில்லை.\n ரஜனி சார் நடிக்கப் போற \"கோச்சடையான்\"என்கிற படம் கூட இந்தக் கதை தானோ\nஅருமையான தகவலுக்கு நன்றி நண்பரே\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம்...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-17-15-28-23", "date_download": "2018-08-21T13:40:03Z", "digest": "sha1:TNGRA4RJ7OLC6FTLV4IEVQO7RJDYVUGA", "length": 102418, "nlines": 595, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஞான பண்டிதன் சபா! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nசந்திரனைப்போல் உங்கள் அருகிலிருக்கும் உயிர்களை அன்பு மழையில் நீராட்டுங்கள்.\nசெவ்வாய்க்கிழமை, 17 July 2018 20:40\nநாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்\nதோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,\nகாரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,\nஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே\nபிரம்மாவின் மானசீக புத்திரரான சனத்குமாரர் ஒரு வித்தியாசமான கனவு கண்டார். அதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடப்பதாகவும் அதில் தேவர்கள் சேனாபதியாகத் தான் நின்று அசுரர்களை அழிதத்தாகவும் கண்டார். இது பற்றி தந்தையிடம் வினவ, பிரம்மா, நீ பூர்வ ஜென்மத்தில் தேவாசுரப் போரில் சேனாதிபதியாக இருந்து தேவர்களைக் கொடுமைப் படுத்தும் அரக்கர்களை அழிக்க வேண்டும் என நினைத்தாய். அந்தப் பிறவியின் எண்ணங்கள் பிரதிபலித்ததே இந்தக் கனவு. இந்த ஜென்மத்தில் நீ பிரம்ம ஞானியாய் இருப்பதால் இன்னொரு ஜென்மத்தில் அந்த எண்ணங்களும் அதனால் உண்டான இந்தக் கனவும் நிறைவேறும் என்றார். சனத்குமாரர் தொடர்ந்து தியானத்திலேயே இருந்ததால் கனவைப் பற்றி நினைக்க வில்லை. ஆனால் காரண கர்த்தாவான சிவன் நினைத்தார்.\nஈசன் கேட்ட புத்திர பாக்கியம்\nசனத்குமாரர் தன்னை குறித்து தவம் செய்யாதபோதும் அவருக்கு அம்பிகையுடன் காட்சி கொடுத்தும், தியானத்தினால் சகலமும் பிரம்மமாகக் காட்சி அளிக்கும் நிலையில் ஈஸ்வர தரிசனத்தை உணராத நிலையில் சனத்குமாரர் காட்சி கொடுத்தவர்களை பூஜிக்கவில்லை. தியானம் என்றால் அப்படியொரு தியானம். சிவன் தன்னை பூஜிக்காததால் சபித்துவிடப்போவதாக கோபம் கொண்டவர் போல கூற, சனத்குமாரர் “உம் சாபம் என்னையோ என் ஆன்மாவையோ பாதிக்காது” என்றார். அவரது ஞானத்தை அறிந்த சிவன் இந்தப் பிறவியில் பிரம்ம புத்திரராக பிறந்த அவரை இன்னொரு ஜன்மத்தில் தன் புத்திரானாக பிறக்க கேட்டுக் கொள்ள சனத்குமாரர் சம்மதம் தெரிவித்தார். எத்தனையோ பேருக்கு புத்திர பாக்கியம் அருளும் ஈசன் தனக்கு கேட்ட புத்திர பாக்கியம் இது.\nஈசனோடு எழுந்தருளியிருக்கும் தன்னைப் பார்த்து சனத்குமாரர் ஏதும் கூறாததால் உமை வருத்தமுற்றதை உணர்ந்த சனத்குமாரர், “கேட்காதவர்களுக்கு எதையும் தரக்கூடாது” என்கிறது சாஸ்திரம். எனக்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும் என்று ஈசன் மட்டும் கேட்டார், தேவி கேட்கவில்லை, அதனால் ஈசன் மட்டும் என்னை உற்பவிக்கச் செய்து கொள்ளட்டும் என்றார் சனத்குமார். என்ன வித்தியாசமான வேண்டுகோள். தாயில்லாமற் பிள்ளையா உடனே உமை “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால் நான் கேட்காவிட்டாலும் நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்றாள். சனத்குமரர், ”எனக்கு ஸ்திரீபுருஷ சம்பந்தத்தில் பிறப்பதில் விருப்பமில்லை. உங்கள் பதி மட்டுமே என்னை ஜனிக்கச் செய்யட்டும்” என்றார். இதைக் கேட்ட சிவன் புன்னகைக் கொண்டார். அவருக்குத் தெரியும். இது முன்கூட்டியே நிர்ணயக்கப் பட்டது என்று.\nதேவர்கள் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபம்\nபிரம்மாவிடம் பெற்ற வரத்தின்படி பார்வதி தன் கருமை நிறம்மாறி பொன்னிற மேனியாளாக வர சிவனும் பார்வதியும் ஆனந்தமாக இருக்க உலகம் இருண்டது. பார்வதி பரமேஸ்வரருக்கு குழந்தை பிறந்தால் அது சொர்க்க ராஜ்யத்தைக் கைப்பற்றும் என்பதால் பயமுற்ற இந்திரன் தேவர்களுடன்கூடி ஆலோசனை செய்தான். உமா சங்கரின் ஏகாந்தத்தைக் கெடுக்க அக்னியை அன்னப் பறவை வடிவில் அனுப்பி தேவர்கள் வெளியில் காத்திருக்கும் தகவலைச் சொல்லச் சொன்னான். சிவன் வெளியில் வந்தார். உலகம் இருண்டு வருகிறது. தங்கள் மோகத்தை விடாவிட்டால் எல்லாம் தலைகீழாகும் என்றனர். புரிந்த காமேஸ்வரரான சிவன் என் வீர்யத்தை யார் சுமப்பர் எனக் கேட்க அக்னி அதற்கும் முன்வந்தான். இதனால் கோபமடைந்த பார்வதி தங்களின் தனிமையைக் கெடுத்த தேவர்கள் யாருக்கும் அவரவர் மனைவியிடம் கரு ஏற்படக்கூடாது என சபித்தாள்.\nகயிலையில் ஒர்நாள் பார்வதி சிவனை நோக்கி தங்களை நிந்தனை செய்த தட்சனின் மகளாகப் பிறந்து தாட்சாயணி என்ற பெயரை நான் சுமக்க விரும்ப வில்லை. இந்த தேகத்தைக் கரைக்க விரும்புகின்றேன் என்றாள். உன்னை மகளாக அடைய இமவான் தவமிருக்கின்றான். நீ அவனுக்கு மகளாய் பிறப்பாய். தக்க தருணத்தில் நான் உன்னை மணப்பேன் என்றார். இமவான் மகளாகப் பிறந்து பார்வதி என்று அழைத்து இமவான் ஆனந்தித்தனர். பார்வதி வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவமிருந்தார்.\nசிவன் பஸ்மாசூரனுக்கு வரம் கொடுத்து அவன் அதைச் சோதிக்க வந்தபோது அந்தர் தியானமானார். சிவனைக் கானாத உமை அவர் பிரிவால் வருந்தி உருகி ஓர் நீர் நிலையானாள். அந்த நீர் நிலையே சரவணப் பொய்கையாகும். தேவியின் சரீரமே சரவணப் பொய்கை. பாஸ்மாசுரனை மோகினி உருக்கொண்டு திருமால் அழித்ததும் ஈசன் வெளிப்பட்டார். தியானத்தில் இமயமலைச் சாரலில் ஓர் குடிலில் தவம் செய்ய அமர்ந்திருந்தார்.\nசிவனார் இமயமலைச் சாரலில் தவம் புரிவதை அறிந்த பார்வதி அக்குடிலுக்குச் சென்று அவருக்கு இடையூறு செய்யாமல் பணிவிடை செய்ய விரும்பி தன் தந்தை இமவான் அனுமதியுடன் குடிலுக்குச் சென்று அவர் பாதங்களில் மலர்களைச் சமர்பித்து அருகிலேயே அமர்ந்திருந்தாள்..\nபிரஜாபதிகள் பிரம்மனின் மானஸ புத்திரர்கள். இவர்களில் ஒருவரான காசியப முனிவர்-திதி என்ற பெண்ணின் வழியாகப் பிறந்தவர்கள் அசுர குலத்தவர்கள். அசுர குரு சுக்கிராச்சாரியாரால் ஏவப்பட்ட மாயை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், யானைத் தலையுடைய தாரகன், ஆட்டின் தலைகொண்ட அஜமுகி(பெண்) முன் ஜென்மத்தில் சிவபெருமானால் கொல்லப்பட்ட தட்சனே மறு ஜென்மத்தில் சூரபத்மன்\nசூரபதுமன், சிங்கமுகாசூரன், தாரகாசுரன் என்ற மூவரும் தேவர்களை எதிரியாகக் கொண்டு அவர்களை அழிக்க ஈசனை நோக்கித் தவமிருந்து சாகாவரம் வேண்டினர். சிவன் பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் இறந்துதான் ஆகவேண்டும். அதனால் வேறு வரம் கேட்குமாறு கூறினார், உங்களுக்குச் சமமான ஒருவன், பெண் சம்பந்தமில்லாமல் தோன்றியவனால் மட்டுமே எங்கள் அழிவு ஏற்படவேண்டும் என்றனர். அவ்வாறே சிவ வரம் பெற்ற அசுரர்கள் அஷ்ட திக்பாலகர்கள், சூரியன், சந்திரன், தேவர்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்திரனும் இந்திராணியும் பூ வடிவெடுத்து மறைந்தனர். இந்திரன் மகன் ஜெயந்திரன் சிறைப்பட்டான். தேவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர்.\nஅப்போது ஈசன் தியானத்தில் இருப்பதை உணர்ந்த பெருமாள், ஈசனும் அன்னையும் தனித்தனியே தவமிருந்தால் வரம் பெற்ற சூரபதும சகோதர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்றுவது எப்படி என ஆலோசித்து நாரதரின் யோசனைப்படி மன்மதனை அழைத்து சிவன்மீது மலர் பாணத்தை எய்யச் சொன்னார். முதலில் மறுத்த மன்மதன் உலக நன்மைக்காக தன்னிடமிருந்த தனது சேனைகளான வசந்தகாலம், இனிய நறுமனம், பூக்களின் மகரந்தப் பொடி, மிகிழ்ச்சிகரமான சூழல் ஆகியவை கொண்டு கயிலை வந்தான். அவன் வந்ததும் மலர்கள் பூத்து இனிமையான சூழல் உருவானது. கரும்பு வில்லை வளைத்து மலர் அம்பை சிவன்மேல் செலுத்தினான்.\nயோக நிஷ்டை கலைந்த சிவன் கண்விழிக்க மன்மத பாணமகிமை மகேசனை மதிமயங்கச் செய்தது. கண் திரையில் பார்வதியின் அழகிய ரூபம் சிற்பமென தோன்றியது. பார்வதி இத்தனை அழகா என நினைத்தார் சிவன். மன்மதக்கணை காமத்தை ஊட்டியது. உடலைச் சிலிர்த்து திரும்பினார்.\nதவம் கலைந்த சிவன் தன்னை திசை திருப்பிய மன்மதனை கோபத்தால் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தார். அருகிலிருந்த பார்வதி மயக்கமானாள். கணவனின் நிலைக் கண்ட ரதி அழுது புலம்பி வேண்ட ரதியே யாம் பார்வதியை மணக்கும்போது உன் கணவன் மன்மதன் உயிர்பெற்று எழுவான். அனங்கனாக- அங்கமில்லாதவனாக இருப்பான், உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். மேலும் துவாபரயுகத்தில் மன்மதன் ஸ்ரீகிருஷ்ணன்-ருக்குமணிக்கு பிரத்தியும்னன் என்ற பெயரில் மகனாக தோன்றும் போது அவனுக்கு உருவம் உண்டாகும். பிரத்தியும்னனை சம்பரன் என்ற அசுரன் கவர்ந்து செல்ல பிரதியும்னன் யுத்தத்தில் சம்பாசுரனை அழிக்க சம்பாசுரனின் மகளான மாயாவதியாகிய உனக்கும், பிரத்தியும்னனுக்கும் திருமணம் நடைபெறும் என அருளினார். மன்மதன் சாம்பலானதை அறிந்த தேவர்கள் வருந்தினர். சிவன் அந்தர் தியானமானார். விபரம் அறிந்த இமவான் தன் மகள் பார்வதியை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனான்.\nசிவனின் தவச்சாலையிலிருந்து வந்த பார்வதி தன் தவத்தை மீண்டும் தொடங்கினாள். ஒர் நன்னாளில் முதிய அந்தணர் வேடம்கொண்டு பார்வதியின் தவச்சாலைக்கு வந்த ஈசன் பார்வதியின் மனதைச் சோதிக்க எண்ணி ‘’சிவனார்க்கு தோலாடை, எருது வாகனம், பாம்பு ஆபரணம், தலை மாலையோ எழும்பு, பன்றிக்கொம்பு இவைகள் மட்டுமல்லாமல் உண்ணும் பாத்திரம் தலைஓடு, உணவோ பிட்சையும் விஷமும், ஆடுகின்ற இடமோ சுடுகாடு, போட்டுக்கொள்வதோ வெள்ளெருக்கு, அறுகு, கொன்றை, நொச்சி, ஊமத்தம்பூ மாலை, தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, கையில் மான், மழு, சூலம், உடுக்கு, அக்னி என்று இருப்பவன். பூதங்கள் சூழ இருப்பவன். இன்னும் சொல்லப்போனால் தாயுமில்லை, தந்தையுமில்லை, உற்றார் உறவுமில்லை, குலம், குணம் எதையும் சொல்ல முடியாது. அநாதியானவன். மன்னன் மகளான நீ இவனை மறந்து என்னை மணந்துகொள் என்று தன்னைப்பற்றி தாமே சுயவிமர்சனம் செய்தார். சிவசிவ என காதுகளைப் பொத்திக்கொண்ட அழுத பார்வதிக்கு காட்சிதந்து விரைவில் உன்னை மணமுடிக்க வருவோம் என்று அருளினார்.\nசிவன் சப்த ரிஷிகளை நினைக்கத் தோன்றிய அவர்களிடம் இமவானின் வீட்டிற்குப்போய் பெண்கேட்க அனுப்பிவைத்தார். இப்படி மணமகள் வீட்டிற்குப் போய் பெண் கேட்பதை மகட்கொடை என்று இலக்கியங்கள் பகர்கின்றன.\nசப்த ரிஷிகளை வரவேற்ற இமவான் தன் சம்மதத்தை சந்தோஷத்துடன் தர மலையரையனிடம் சொன்னார்கள். மலையரையன்-சிவன் தேவர்கள், முனிவர்கள், தபஸ்விகள் எல்லோருக்கும் திருமணத் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்தார். பங்குனி உத்திர நன்னாளில் மணம் முடிக்க இமயமலைக்கு எழுந்தருளினார்.\nஇந்த திருமணத்தைக் காண அனைத்து புவனங்களிலிருந்தும் அனைவரும் அங்கு குழுமி விட்டதால் வடபாகம் தாழ தென்பாகம் உயர்ந்தது. சிவன் நந்தியிடம் அகத்திய மாமுனியை அழைத்துவரச் சொன்னார். அகத்தியரிடம் தென்நாடு சென்று இந்த தாழ்நிலையைச் சமன்செய்ய பொதிகைமலை மீது இருக்கக் கடவது என ஆணையிட்டார்.\nஅகத்தியர் அடியேன் இழைத்த குற்றம் என்ன தங்களின் திருமணக் காட்சியைக் காணாமல் நான் எவ்வாறு இவ்விடம் விட்டு செல்வது என்றார். நீ சற்றும் சிந்தியாமல் பொதியமலைக்குச் எல் யாம் அங்கு எமது திருமணக் காட்சியை உமக்கு காட்சி அருளுவோம் என்றார். சிவனை வணங்கி அகத்தியர் பொதியமலை செல்ல தென்பால் நிலம் வடதிசை இரண்டும் சமன் பட்டு நின்றது. ரதிதேவி மன்மதனை அனங்கனாக உருவத்துடன் பார்த்தாள். மற்றவர்களுக்கு அருவமாக இருந்து தன் தொழிலை தொடர்ந்து செய்தான். அனங்கனாக உயிர்பெற்ற மன்மதன் வணங்கிய தலம் குத்தாலம்- மன்மதீஸ்வரர். சிவ-பார்வதி கயிலையை அடைந்தனர்.\nகயிலையில் நந்தியம்பெருமான் அனுமதியுடன் பிரம்மா மற்றும் முனிவர்கள் தேவர்களது நிலையையும் அசுரர்களது அட்டகாசத்தையும் சிவபெருமானிடம் எடுத்துக் கூறினார்கள். முன்பு கூறிய வீரமகனை உருவாக்கும் நேரம் வந்ததை உணர்ந்தார் சிவன்.\nஉரிய காலத்தில் பரமேஸ்வர தேஜஸாக சனத்குமாரர் ஜனிப்பது என்றானதும் பார்வதிதேவிக்கு புத்திரனாகப் பிறக்காவிட்டாலும் ஈஸ்வர தேஜஸை நீர்நிலையாக மாறிய பார்வதியின் சரீரத்தில் தாங்கி சுப்பிரமண்ய செரூபமாகத் தருவது என முடிவானது.\nசிவன் அம்ச ஆறுமுக முருகன்\nசிவனின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் ஞானிகள் பார்க்கும் ஞானமுகம் அதோமுகம் ஆகியவற்றிலிருந்து யாரும் அனுக முடியாத வெம்மையுடன் நெருப்பு பொறி தோன்றி ஞானம், வீரம், செல்வம், சித்தி, கருணை, இரக்கம் ஆகிய ஆறு பொறிகளாக சனத் குமாரர் தேஜஸாக ஜனித்து வெளிப்பட அக்னி பகவான் வாயுபகவான் இருவரும் அந்த தேஜஸை தாங்கும் சக்தியை இறைவனிடம் பெற்று தேஜஸை முதலில் கங்கையிலும் பின்னர் அன்னை நீர்நிலையாக இருந்த சரவணப் பொய்கையிலும் சேர்த்தனர். சிவன் அன்னை பார்வதியின் அம்சமான கார்த்திகைப் பெண்களை அழைத்து ஆறுவரையும் வளர்க்கச் சொன்னார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன்.\nஅம்மையும் அப்பனும் ஆறு உருவங்களாக சரவணப் பொய்கையில் விளையாடிக் கொண்டிருந்த குழைந்தைகளைக் கண்டு மனம் மகிழ்ந்து அவர்கள் அறுவரையும் அணைக்க ஆறுமுகமும் ஓர் உடலுமாக ஆறுமுகப்பெருமானக மாறினார். இது சிவசக்தி ஐக்கிய நாளாகும். ஆறுமுகனின் பிறந்தநாள்- தைப்பூச நன்னாள். ஆறுமுகனின் அவதார நிகழ்வு இது. உமையும் நீர் நிலையிலிருந்து உருமாறி தன் திவ்விய சரீரம் கொண்டாள்-பழநி.\n சிவபெருமானின் முகங்களிலிருந்து யாரும் அனுக முடியாத வெப்பத்துடன் தேஜஸ் வெளிப்பட்டபோது அதை தாங்காமல் அருகிலிருந்த பார்வதிதேவியும் பதட்டம் கொண்டபோது பார்வதி காலிலிருந்த சிலம்புகளின் நவரத்தினங்கள் சிதறின. அதை அரனார் நோக்க அம்பிகையின் திருவுருவம் ஒன்பது வடிவங்களாய் ஒன்பது சக்திகளாய் தோன்றின. பரமனாரின் தீட்சப்பார்வையால் ஒன்பதுபேரும் கர்ப்ப முற்றனர், கோபம் கொண்ட சக்தி அவர்களை இக்கர்ப்பத்துடன் பலகாலம் இருக்க சாபமிட்டார்.\nநவசக்திகள் இந்த சாபத்தைக் கேட்டு அஞ்சி நடுங்க அவர்கள் வியர்வைத் துளிகளிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர். மைந்தர்களே நீங்கள் அனைவரும் அவுணர்களை அழிக்க முருகனுக்கு உதவியாய் இருங்கள் என்று சிவன் அருள் புரிந்தார். நவசக்திகளும் பலகாலம் கர்ப அவதியுடன் தவம் செய்து வந்தனர். கர்ப்பம் உள்ளேயிருந்த வண்ணம் சிவயோகம் செய்து வளர்ந்தன. கர்ப்பம் வளர வளர தாங்கமுடியாத நவசக்திகள் பார்வதி பரமேஸ்வரனைப் பர்த்து தங்கள் குறைநீக்க வேண்ட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வர்களைப் பெற அருள்.\nஇந்திர நீலவல்லிக்கு வீரதீரர் என மகவாக அவதாரம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே வாள் கொடுத்து லட்சம் வீரர்களுடன் நீங்களும் கூடி ஆறுமுகனுக்கு உதவி புரிவீர் என ஈசன் அருள்.\nமுருகன் படையுடன் வருவதை தூதர்கள் மூலம் அறிந்த தாருகன் தன் படையுடன் எதிர்க்க வீரபாகுத்தேவர் முதலில் போரிட, அவரிடம் தோற்றதுபோல் ஓடிய தாருகனைத் தொடர்ந்து சென்ற வீரபாகுத்தேவரும் அவரைத் தொடர்ந்த வீரர்களும் கிரௌஞ்ச மலையின் மாயையில் சிக்கினார். இதை அறிந்த சிவக்குமரன் தானே நேரில் போரிடச் சென்றார். சிறிது போரிட்ட பின் மனதில் அச்சம் கொண்டு கிரௌஞ்ச மலையில் ஒளிந்தான் தாருகன். முருகன் தன் வேலாயுதத்தைப் பிரயோகித்து கிரௌஞ்சமலையின் மாயைகளை அழித்து வீரபாகுத் தேவர் மற்றும் உள்ள வீரர்களை மீட்டுத் தாருகனை அழித்தார். போரில் தாருகன் செலுத்திய சிவப்படை.-பசுபதி அஸ்திரத்தை கையில் வாங்கிய குமரன் அதை வீரபாகுத்தேவரிடம் அளித்தார். தேவர்கள் விருப்பப்படி கிரௌஞ்ச மலைமீது தானும் தனது தம்பியரும் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார். கிரௌஞ்சமலை-கர்நாடகா-சந்தூர்- 10கி.மீ.(பெல்லாரி மாவட்டம்)\nகிரௌஞ்சமலை தேவாசுரப் போரில் தாருகன் இறந்து பட்டதை அவன் மகன் அசுரேந்திரன் வீரமகேந்திரபுரியைத் தலை நகராக கொண்டு ஆண்டு வந்த தன் பெரியப்பா சூரபதுமனிடம் கண்ணீர் மல்க கூறினான். பின்னர் நடந்த போரில் சூரபதுமன் மகன் பானுகோபன் இறக்க, சூரபதுமனின் கடைசி தம்பி சிங்கமுகனும் கொல்லப்பட சூரபதுமன் தானே நேரில் வந்து போர் புரிய குமரனின் வேல்படை. தவம் செய்து 1008 அண்டங்களையும் 108 சதுர்யுகங்களுக்கு அரசாள வரம் பெற்ற சூரபதுமனுடன் போரிட்டு தேவர்களையும் ரிஷிகளையும் மீட்டார். போரில் காயமடைந்தவர்களுக்கு சிவபெருமான் வைத்தியராக பார்வதி தேவியுடன் வந்து தேவையான மருந்துகளை மலைபோல் குவித்து அதன்மீதமர்ந்து உதவி செய்தனர்.-பரளி (ஒளரங்காபாத்) –வைத்தியநாதர்-ஜோ.தலம்-5/12\n108 யுகங்கள் அரசாண்ட சூரபதுமனை இறுகூறாக்கி பிளக்க சிவனிடம் பெற்ற வரத்தால் உயிர்பெற்று தான் உருவாக்கிய வீரமகேந்திரபுரம் அழிந்து தன் ஆணவம் அழிந்துபட குமரனை வழிபட்டு நிற்க இருகூறான அவனின் ஒரு கூறை சேவல் கொடியாகவும் மற்றதை மயிலாகவும் குமரன் ஏற்றார். சூரபதுமனின் மகன் இரண்யன் தந்தை இறந்ததைக்கண்டு புத்திரர்கள் செய்யும் கடமைதனை செய்யமுடியாமல் சேவலும் மயிலுமாய் ஆனாய் என புலம்பி நின்றான். முருகப்பெருமான் தனது தம்பியருடன் தங்க ஓர் நகரை உருவாக்க தேவதச்சனிடம் சொல்லி அங்கு எழுந்தருளினார்-திருச்செந்தூர். சனத்குமாரர் கண்ட கனவின்படி முருகன் தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி தேவாசுரப் போரில் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.\nஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. மாயாமலமான தாரகாசூரன் உலகமே உண்மை என நம்பி வாழ்ந்து பின்னர் அது பொய் என்றுணர்ந்து அழிகின்றான். சிங்காமுகாசூரன் கன்ம மலம். ஆணவத்தின் அடையாளமான சூரபத்மன் இறக்கும் தருவாயில் அதை உணர்கின்றான். அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது.\nஎல்லா அறிவும் சக்தியும் பெற்ற மூன்று அசுரர்களும் இறைவனின் வலிமையை உணராமல் தான் என்ற அகந்தையால் அழிந்தார்கள். சரணடைந்த சூரபத்மனை தன்னோடு வைத்துக்கொள்கின்றார் முருகப் பெருமான். இறைவனிடமிருந்து வந்த நாம் மலங்களை ஒழித்து மீண்டும் இறைவனிடம் சேரவேண்டும் என்பதே சூரசம்ஹாரத்தின் தத்துவம்.\nதேவர்களைக் காக்க சூரபதுமனுடன் நடந்த போரில் அவருக்குத் துனையாக இந்திரனின் மகளான சஷ்டி தேவியும் போரிட்டு போர் வெற்றிகரமாக முடிந்ததும் முருகனுக்கு சஷ்டிதேவி-தேவயானையை மணம் முடிக்க இந்திரன் விரும்பி ஏற்பாடுகள் ஆரம்பித்து நிச்சயிக்கப்பட்டது.\nஆசை, அகந்தை, பொறாமை, சினம் இல்லமலிருக்க முசுமுகம்\nதிருக்கயிலையில் சிவனும் பார்வதியும் ஏகாந்தமாய் இருக்கையில் அம்மரத்தில் பல முசுக்கள்-குரங்குகள் அமர்ந்திருந்தன. ஓர் ஆண்முசு மரத்திலிருந்த வில்வ இலைகளைப் பறித்து கீழே போட அந்த இலைகள் மரத்தின் கீழே இருந்த சிவ பார்வதிமேல் விழுந்து கொண்டே இருக்க கோபம் கொண்ட பார்வதியிடம் வில்வ இலைகளால் முசு நம்மை அர்ச்சிக்கின்றது, எனவே கோபம் வேண்டாம் என்றார். அப்போது அம்முசுவிற்கு ஞானம் உண்டாகி தன் தவறுக்காக வருந்தி சிவ பார்வதியை வணங்கி நிற்க, சிவன் முசுவிடம் நீ உன்னை அறியாமல் என்னை வில்வத்தால் பூசித்தாய் அதன் பயனாக அடுத்த பிறப்பில் நீ உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் பேறு கிட்டும் என்றார்.\nஇதைக் கேட்டு மகிழ்ச்சியடையாத முசு, எனக்கு அரச பதவி வேண்டாம் நான் எப்போதும் தங்களையே தொழுது கொண்டிருக்க அருள் புரிய வேண்டியது.. முசுவே நீ மண்ணுலகை ஆண்டபின் இங்கு என்னிடம் வந்துவிடுவாய் என்றார். இதில் விருப்பமில்லாத முசு, பெருமானே மண்ணுலக வாழ்வில் எனக்கு நாட்டமில்லை. இருப்பினும் தங்களின் ஆணைக்கு அடிபணிகின்றேன். உலகில் அரசாட்சி செய்யும் போது எனக்கு மானிட உரு கிடைத்தாலும் என் முகம் முசுவின் முகமாகவே இருக்க வேண்டியது. ஏனெனில் அப்போதுதான் ஆசை, அகந்தை, பொறாமை, சினம், போன்ற குணங்கள் என்னை தீண்டாமல் இருக்கும் என வேண்ட, அதன்படி அரிச்சந்திரன் வம்சத்தில் முசுவின் முகத்துடன் முசுகுந்தன் என்ற பெயருடன் கருவூரை அரசாண்டு வந்தான்.\nமன்னுலக மன்னனுக்கு தேவர்கள் வீட்டு திருமண அழைப்பு\nசூரன் மாண்டான் என்பதால் மகிழ்வுற்ற முசுகுந்தன் முருகப் பெருமானின் திருமணத்தைக் காண தன் புடைசூழ வந்திருந்து இந்திரன் முதாலானோர்களைச் சந்தித்து மகிழ்ந்தான்.\nதிருமணம் பங்குனி உத்திர நாளில் திருப்பரங்குன்றத்தில் இனிது நடந்தது, சஷ்டிதேவி தெய்வானையாக மாறினாள்.\nசில காலம் கழித்து முருகன் திருத்தணிகை மலைக்கு வந்தார். அங்கு அவரைச் சந்தித்த நாரதர் முன்னைப் பிறவியில் திருமாலின் மகளான சுந்தரவல்லி இங்கு வள்ளியாக இருப்பதும் அவரை தாங்கள் உரிய காலத்தில் மணம் புரிய வேண்டும் என்றார். முருகப்பெருமான் வள்ளிக்கும் நம்பிக்கும் தன் உருவைக்காட்டிட அனைவரும் மகிழ்ந்தனர். விரைவில் திருமணம் இனிது நடந்தது தேவ தச்சனை அழைத்து கோவில் அமைக்கச் சொன்னார்..-திருத்தணி. பின்னர் அங்கு தெய்வானை வர வள்ளியும் அவரும் முற்பிறவியில் திருமாலின் மகள்கள் சகோதரிகள் என்பதை உணர்தினார்.\nநெற்றிக்கண்களிலிருந்து தீப்பொறிகளை கங்கை சுமந்து சென்றதால் காங்கேயன்.\nசரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்\nகார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்\nஅறுவரையும் ஒன்றாக செய்ததால் கந்தன்\nமுருகனுக்கு ஆறு முகமாதலால் ஆறுமுகன், சண்முகன் (ஷண்-ஆறு)\nகுரு திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ தவம் செய்து பூஜை குருபரன்\nபிரணவ ஸ்வரூபியான சிவனே முருகனாக விளங்குகின்றார். முருகனும் சிவனும் ஒன்றேயாதலால் அ கார, உ கார, ம கார மாகிய ஓம் காரத்தின் ஸ்வரூபம் சுப்ரமண்யர். ஒவ்வொரு மந்திரத்திற்கும் உயிராகத் திகழ்வது ஓம். அந்த ஓம் காரத்தினன் ஜீவராசிகளின் இதயக் குகையில் அமர்வதாலே குகன் எனப்பெயர். அனைத்திலும் பரவியிருப்பதாலும், எந்தப் பூஜைக்கும் முதல் அங்கமான ஆத்ம பூஜை செய்தபிறகே என்பதனாலும் அப்போது இதயகுகையில் அமர்ந்திருப்பதாலும் குகபரமன் என்றாகிறது. ஞானத்தின் வடிவாக திகழ்பவன். எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன் என்று அறிவு கூறினாலும் வடிவத்தை நினைந்து நினைந்து பழகிய நெஞ்சில் அந்த உருவம் மங்குவதில்லை.\nஅகத்தியர் தன் சீடன் இடும்பனிடம் தான் வணங்குவதற்காக இமயமலைச் சாரலிலிருக்கும் சிவகிரி, சக்திகிரி என்ற இருமலைகளையும் கொண்டுவரச் சொன்னார். அம்மலைகளை ஒரு நீண்ட கழியில் இருபுறமும் கட்டி காவடியாக தோளில் தூக்கி வரும்போது ஒர் இடத்தில் களைப்பு மேலிட காவடியை கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்தான். பின் காவடியைத் தூக்க முயற்சிக்கும்போது அம்மலைமேல் இருந்த சிறுவன் அம்மலை தனக்குச் சொந்தம் எனக்கூற இருவரும் போரிட்டனர். முடிவில் சிறுவனாக வந்திருப்பது சிவக்குமரன் என்றறிந்து இடும்பன் வணங்க அருளினார் முருகப்பெருமான். இந்நிகழ்வு நடந்த தினம் ஒர் தைப்பூச நன்னாள். இடும்பனுக்கு படைத்தளபதிகளில் ஒருவன் என்று பதவி வழங்கி அருள். அன்றிலிருந்து முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காவடிகள்- பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி, மயில்காவடி, அக்னிகாவடி, பறவைக்காவடி, மச்சக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமுண்டு.\nஒருவனுக்கு வரும் பிரச்சனைகள், சங்கடங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து சுமந்தால் மனதில் அழுத்தம் அதிகமாகும். மூளையின் செயல் குன்றும். எனவே பிரச்சனைகள் தோன்றியவுடன் அதை ஓரமாக ஒதுக்கி வைக்கப் பழகவேண்டும். இதைத்தான் முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுக்கும் பக்தர்கள், முருகா இத்தனை நாட்கள் விரதம் இருந்து காவடி சுமந்து வந்தேன் உன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்தது. காவடி இறக்கி வைத்தது போன்றே என்மனதில் உள்ள சுமைகளை இறக்கி வைத்து அருள்வாய் எனச் சொல்லாமல் சொல்லும் செயலாகும்.\nமுருகனுக்கு உகந்த நாட்கள்- ஐப்பசிமாத சஷ்டி- அவதார நோக்கமாகிய சூர சம்ஹாரம் நிறைவேறிய நாள். கார்த்திகைமாத திருக்கார்த்திகை- ஆறுமுகனை வளர்த்த அன்னையரைச் சிறப்பிக்கும் நாள். தைமாத தைபூசம்- குருபகவான் தன் ஜென்ம நட்சத்திரமான பூசம் சந்திரனோடு சேரும் நாள்-பௌர்ணமி அன்று தவம் செய்து பூஜித்து திருமுருகனின் அருட்பார்வை தன்மீது விழ வழிபாடு செய்தார். அன்று அருள் அலைகள் அதிகம் இருக்கும் நாள். சரணடைந்த பக்தர்கள் விரதம் இருந்து வழிபட சிறந்தது. அசுரனை அழிக்க அன்னையிடம் வேல்வாங்கிய நாள். இடும்பனுக்கு அருள் புரிந்த நாள்.\nசிவனைத் தரிசிக்க தேவர்களுடன் வந்த பிரம்மன் அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்க தான் மட்டும் இவர் இளைஞன்தானே என்று செருக்கடைந்து வணங்காமல் சிவனை தரிசிக்கச் சென்றார். சிவனைத் தரிசித்து செல்லும் பிரம்மனுக்கும் மணியும் ஒளியும்போல், மலரும் மணமும் போல் தாமும் சிவமும் பிரிக்க முடியாத நிலையாமை என்பதை உலகிற்கும் உணர்த்தவும் பிரம்மனின் செருக்கை அடக்கவும் விரும்பிய முருகன் பிரம்மனை அழைத்து நீவிர் செய்யும் தொழில் யாது என்றார்.. படைக்கும் தொழில் என்பவரிடம் வேதங்கள் தெரியுமா உங்களுக்கு என்று கேட்க, ரிக் வேதம் பற்றி பிரம்மன் ஓம் என்று கூற ஆரம்பித்தார். ஓம் என்பதன் பொருள் என்ன வென்று கேட்க தடுமாறிய பிரமனை இது அறியாமல் படைப்புத் தொழிலை செய்வது சரியாகாது எனக்கூறி பிரமனைச் சிறையெடுத்தார். அவர் செய்துவந்த படைப்புத் தொழிலை தாமே மேற்கொண்டார்.\nதிருமால் பிரமனை விடுவிக்க எண்ணம் கொண்டு தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட, புன்னகைப் பூத்த சிவபெருமான் பிரம்மனின் செருக்கை அடக்கவே அவனை சிறையிலடைத்துள்ளான் என்றவர் நந்தியெம்பெருமானை அழைத்து முருகனிடம் சென்று பிரமனை விடுவிக்க சொன்னார். நந்தியின் பேச்சை கேளாதாதால் எம்பெருமான் அனைவருடனும் முருகனைக் காணப் புறப்பட்டார்.\nஓம் எனும் ஓங்கார முதல் எழுத்தின் பொருள் தெரியாமல் படைக்கும் செயலை செய்தல் சரியன்று. இருப்பினும் உங்களது திருவுள்ளப்படி அவனை விடுவிக்கின்றேன் என பிரமனை விடுவித்தார். பெருமான் பிரமனை மீண்டும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய அனுமதித்தார்.\nபெருமான் குமரனை நோக்கி ‘பிரணவத்தின் பொருள் உனக்கு வருமாயின் சொல்லுக‘ என்றார். அப்போது அன்னைக்கு பிறர் அறியாவண்ணம் நீவிர் உபதேசித்த பிரணவத்தின் பொருளை யான் யாவரும் கேட்கும்படி சொல்வது முறையில்லை. இருப்பினும் காலம், இடம், அறிந்து முறைப்படி(குரு-சிஷ்ய பாவனையில்) கேட்கின் யான் கூறுவோம் என்றார்.\nதன் குமரனிடம் திருவிளையாடல் புரிய நடந்த இந்த நிகழ்விற்காக, ஞானத்தின் பிறப்பிடம் ஓங்காரத்தின் சொரூபமான பெருமான் மைந்தா, நன்கு உரைத்தாய் என்று இருக்கையில் இருந்து எழுந்து, சிரந்தாழ்த்தி, வாய் பொத்தி, செவி சாய்த்து நின்றார்.. கல்லால மரத்தின் அடியில் எழுந்தருளி நால்வருக்கும் ஞான உபதேசம் செய்த ஞானகுரு, சீடனாகி குருவிடம் பாடம் கேட்கும் நிலையில் இருந்தார். குமரன் தன் மழலை மொழியில் பிரணவ மந்திரத்தின் பொருளை மிகத் தெளிவாகக் கூறினார்-.சுவாமிமலை சுவாமிநாதன்.\nஇந்த நிகழ்வு ஏன் என்றால் எத்தகைய வாழ்வும் ஞானமும் பெற்றவர்கள் ஆனாலும் ஒன்றை கற்கும்போது குருநாதர் வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்த திருவருள் புரிந்தார்\nமாலின் கண்ணீரில் இரு பெண்கள்\nஇந்த நிகழ்வைக் கண்ணுற்ற உமையின் தமையன் திருமாலின் கண்களிலிருந்து ஆனந்த நீர் துளிர்கள் துளிர்க்க அந்த இரு சொட்டு கண்ணீர் துளிகளும் இரு பெண்களாக அமிர்தவல்லி என்றும் சுந்தரவல்லி என்றும் மாறினர். இருவரும் என்றும் இளைமையுடன் இருக்கும் அழகு குமரனை மணந்து கொள்ள விரும்பி சரவணப் பொய்கையில் சடக்கர மந்திரத்தை ஜபித்து தவமிருந்தனர். அவர்கள் முன் தோன்றிய குமரன் மூத்தவள் அமிர்த வல்லியை நோக்கி நீ தேவலோகத்தில் இந்திரனின் மகளாகவும், சுந்தரவல்லியை பூலோகத்தில் சிவமுனியின் மகளாகப் பிறந்து வேடராஜனுக்கு மகளாகவும் வளர்ந்து வாருங்கள் உரிய காலத்தில் யாம் உங்களை திருமணம் புரிவோம் என்றருளினார்.\nஅமிர்தவல்லி சிறுமி வடிவம் எடுத்து மேருமலையில் இந்திரன்முன் சென்று நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுடைய மகள் என்னை உன்னுடைய வளர்ப்பு மகளாக வளர்ப்பாயா என்றாள். இந்திரன் மகிழ்ந்து சஷ்டிதேவி-தேவசேனா எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான். அங்கு ஐராவதம் அவளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் தெய்வயானை எனவும் பெயர் பெற்றாள்\nதிருமால் சிவமுனிவராக தவம் செய்து கொண்டிருக்கும்போது மகாலட்சுமி மான் உருவில் வர திருமாலான சிவமுனி இச்சை கொண்ட பார்வையை வெளிப்படுத்த அம்மான் கருவுற்று உரிய காலத்தில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்து எடுக்கும் குழியில் குழந்தையை ஈன்று பின் மறைந்தது. அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரனாகிய நம்பி பெண் குழந்தை இல்லாததால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வள்ளி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தான்.\nபுகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து\nஒங்காரத்தின் பொருள் கேட்டு சொல்லாததால் பிரமனை சிறை செய்த முருகனை அதன் பொருள் சொல்லக் கேட்க பொருள் சொல்லிவிட்டு கடைசியில் சுப்ரமணி ஓம் என்றார். சதாசிவ ஓம் என்பதற்குப் பதில் சுப்ரமணி ஓம் என்று முருகன் சொன்னதைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் அதிர்ந்தனர். புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து. இது தவறு என தன் குமரினிடம் கூறிய சிவன் சர்ப்பமாக மாறச் சபித்தார். ஸ்ரீபிரம்மாவை சிறையிலிருந்து மீட்டார். சர்ப்பமான முருகன் பல தலங்கள் சென்று வழிபட்டு திட்டை வந்தார். பல வருடங்கள் பூஜை செய்து வழிபட்டு அருள் பெற்று தன் பழைய உருவை அடைந்தார்.. ஸ்ரீசுப்ரமணியராகவும், அருவமாக சர்ப்ப வடிவிலும் முருகன் அருள். தென்குடித்திட்டை.தி.த-132.வசிஷ்டேஸ்வரர்(சு)\nதந்தைக்கு உபதேசம் செய்தது சரியா\nசின் முத்திரையுடன் தியான நிலையில் தண்டபாணி. தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி முருகன் வருந்த சிவலிங்கத் திருமேனியை வழிபடச் சொல்லி மாமன் பெருமாள் அறிவுறை. வாய்மூடி மௌனியாய் தன் பேச்சுத்தன்மையைக் குறைத்து பலதலங்கள் சென்று வழிபட்டார் சுப்ரமண்யர். சிவானந்தேஸ்வரை வழிபட்டு தன் பேச்சாற்றலைப் பெற்றார். திக்குவாய்க்காரர்கள் தண்டாயுதபாணிக்கு நாற்பத்தைந்து நாள் தேன் அபிஷேகம் செய்து வழிபாடு.\nசிவகாமசுந்தரியின் மகன் குமரகுருபரன். குமரகுருபரன் ஐந்து வயது வரை ஊமை. பேச்சாற்றலில்லை. கவிராயர் குழந்தையுடன் இங்கு வந்து உப்பில்லா விரதம் இருந்து தவறு செய்திருந்தால் தண்டணையைத் தங்களுக்குத் தந்திடவும் குழந்தையை பேசவைக்கவும் வேண்டுதல். சரவணப எனத் தொடங்கும் கந்தர் கலிவெண்பாவை குழந்தை வாய்திறந்து பாடியது. பிச்சாடனர் சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக சந்திரசேகரர் லிங்கோத்பவர் இடத்தில். முருகனுக்கு அருளி சிவானந்தேஸ்வரர் என்ற நாமத்தில்.-திருப்பேணுபெருந்துறை-நாச்சியார்கோவில் அருகில்\nவேத உட்பொருளை கவனியாதலால் சிவன் உமையை சபிக்க கோபம் கொண்ட முருகன் வேதாகமங்களை கடலில் வீச பாவம் சூழ்ந்து உருத்திரசன்மராக -ஊமையாய் பிறந்து சாபம் நீங்கிய தலம்- எருக்கத்தம்புலியூர்.\nசிவபெருமான் ஓங்கி உயர்ந்து வளர்ந்த தாணு மரமாக நிற்க, அம்பிகை பார்வதி அந்த மரத்தில் பற்றிப் படர்ந்த கொடியாக- அபர்ணாவாக பிணைந்திருக்க அந்த மரத்தின் கீழ் சிறிய கன்றுச் செடியாக முருகன் தோன்ற அதுவே முதல் முதலாக அமைந்த சோமாஸ்கந்த வடிவம் என்கிறது ‘சோமாஸ்கந்த தத்துவ நூல். வைகாசி விசாக நாளில்தான் தாணு அபர்ணா விசாக அவதாரம் நிகழ்ந்துள்ளது.\nஒவ்வொரு உயிருக்கும் மும்மலங்கள் இருக்கின்றன. அந்த ஆத்மாவை அழிக்க அவையே போதுமானவை. எனவே அவைகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே முருகனின் ஞானவேலால் ஆணவமலம்- சூரபத்மன், கன்மமலம்-சிங்கமுகன், மாயாமலம்-தாரகன் ஆகியோரை வதம் செய்வதன் மூலம் அம்மூன்று மலங்களையும் ஞானவேல் அறுத்து பந்தத்திலிருந்து விடுவிக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.\nஅம்மன் அம்ச நான்முக முருகன்\nவிஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் வேண்டி தவம் இருக்க ஈசன் தோன்றி பாலதிரிபுரசுந்தரியை நோக்கித் தவம் செய்யச் சொன்னார். குழந்தையாய் வந்த சுந்தரிக்கு திலகமிட அவர் குளத்தில் குணிந்து திலகத்தைப் பார்க்க அதிலிருந்த குங்குமம் குளத்தில் விழ ஒன்றின்பின் ஒன்றாக நான்கு முகங்கள் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க நான்முக முருகா வருக எனக்கூறி அணைத்துக் கொண்டாள். விஸ்வாமித்திரா ஈசன் அன்று என் அம்சம் இன்றி ஆறுமுக வேலனை படைத்தார். இன்று அவரது அம்சமின்றி நான்முக வேலனை உனக்காக படைத்தேன். இவனே உனக்கு வேண்டியது தருவான் என்றாள். தூரத்தில் கல் மழை பெய்த இடத்திற்கு வரச்சொல்ல அங்கு ஒர் கோவிலில் பாலதிரிபுரசுந்தரியுடன் நான்முக முருகன் சேர்ந்து காட்சி. இறையருள் பெற தவம் செய்யாமல் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்தேனே என வருந்தினார் விஸ்வாமித்திரர். சதுர்முகமுருகன் சிறப்பு.சின்னாளப்பட்டி\nசாமுத்திரிகா லட்சணம் யார் உருவாக்கியது\nகார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.\nசமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.\nகார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.\nகார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார். என்வே சாமுத்ரிகா லட்சணம் என்ற சாமுத்ரிகா சாஸ்திரம் முருகனால் எழுதப்பட்டது.\nசனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய ரிஷிகள் நால்வரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அஷ்டமா சித்திகளை அடையும் வழிகளைப் போதித்தார். அருகிலிருந்த ரிஷிபத்தினிகளான நிதர்த்தினி, அப்ரகேந்தி, மேகந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் தங்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டினர். மனதில் பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்பதால் சிவன் தயங்க பார்வதி அவர்களுக்காக வாதாட சிவன் அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை உபதேசித்தார்.\nஉபதேசம் பெற்றவர்கள் தாங்கள் உமைக்கு இணையாக இருப்பதால் ஏன் உமைக்கு பணி புரிய வேண்டும் என நினைத்ததால் சிவன் அவர்களை கல்லாக மாற சாபம். உண்மை நிலை உணர்ந்த பெண்கள் வருந்தி அன்னையை மனதால் பூஜிக்க உமை மன்னிக்க சிவனும் மன்னித்தார். மீண்டும் பணிப் பெண்ணான அவர்கள் ஐயனே காரணமின்றி ஏதும் செய்யமாட்டீர்கள் என்ற ஞானம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாகமாற்றி மீண்டும் பெண்ணாக மாற்றியதின் அர்த்தம் என்ன என்றனர்.\nதீயவற்றை அழிக்கவும் தேவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க சிவ அம்சத்தில் பிறக்கப் போகிறவனை வளர்க்கப் போகின்றீர்கள். மற்றவர்கள் செல்வம் வீடு எனக் கேட்க நீங்கள் ஞானத்தை கேட்டுள்ளீர்கள். ஆனால் அந்த ஞானத்தை முறையாக பயன்படுத்தும் பக்குவம் உங்களிடம் (கார்த்திகைப் பெண்கள்) இல்லை. அதை முறைப் படுத்தவே இந்த நிகழ்வு என்றார்.\nகுழந்தையாய் இருந்த முருகனை எடுத்து பாலூட்டி பாசம் காண்பித்த கார்த்திகைப் பெண்கள், முருகா உன்னை வளர்த்த எங்களை உலகம் மறந்துவிட்டதே உன்னை வளர்த்த எங்களை உலகம் மறந்துவிட்டதே என வருத்தப்பட, அன்னைக்குச் சமமாக என்னை சீராட்டி பாலுட்டிய நீங்கள் அனைவரும் ஒன்றாகி கிருத்திகை நட்சத்திரமாக வானில் சுடர் விடுவீர்கள். இந்த நாளான ஆடிக்கிருத்திகை இனி எனக்கு மிகவும் உகந்த நாள். இந்தநாளில் விரதமிருந்து வணங்கும் பக்தர்கள் துயர் தீர்ப்பேன். உங்கள் பெயரால் நான் கார்த்திகேயன் என்ற பெயரிட்டு அழைக்கப்படுவேன் என அருள் புரிந்தார். மேலும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தின்போது மக்கள் தீபமேற்றி வழிபடுவர் என அருள்.\nமுருகனுடைய ஆறு படைவீடுகளும் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும். பிரமச்சரிய, கிருகஸ்த, சந்நியாச கோலங்களில் முருகன் வணங்கப்படுகிறார்\n1.மூலாதாரம்- திருப்பரங்குன்றம். தெய்வானையுடன் மணக்கோலத்தில் உள்ள தலம்.\n2.சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர். செந்தில்வேலவனாக பக்தர்களது துயர் நீக்கும் தலம்.\n3.மணிபூரகம்-பழநி. ஞான தண்டமேந்தி யோக நிலையில் உள்ள தலம்.\n4.அநாகதம்- திருவேரகம்-சுவாமிமலை. தந்தைக்கு உபதேசம் செய்த அறிவுத் தலம்.\n5.விசுக்தி-திருத்தணிகை. தேவசேனாவுடன் களிப்புடன் இருக்கும் தலம்.\n6.ஆக்ஞை-பழமுதிர்ச் சோலை. ஞானப் பழமாக இருக்கும் தலம்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2015/12/blog-post.html", "date_download": "2018-08-21T13:43:41Z", "digest": "sha1:S63RRYAJWFT2EBG4GBPOWBFEHKGUKUEC", "length": 22681, "nlines": 201, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: நோபல் பரிசு பெறுவாரா இந்த தமிழ்ப்பெண்?", "raw_content": "\nநோபல் பரிசு பெறுவாரா இந்த தமிழ்ப்பெண்\nகற்பனையில் கூட எல்லைகளை நிர்ணயிக்க முடியாத அளவில் பறந்து விரிந்து கிடக்கும் பிரமாண்டமான பிரபஞ்சவெளி எண்ணற்ற ஆச்சரியங்களும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களும் நிறைந்தது. இந்த மர்ம தேசத்தில் இன்னும் முழுவதுமாக அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் ஒன்று ”கருப்பு துளைகள்” என அறியப்பட்டிருக்கும் black holes. பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். சூரியன் பிறந்தே சுமார் 460 கோடி ஆண்டுகள்தாம் ஆகின்றன என்பதிலிருந்து தூரத்தை யூகித்துக்கொள்ளுங்கள்.\nஇந்த கருப்பு துளைகள் பற்றிய விண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டுவருகின்றன. இதில் ஒரு புதிய விஷயத்தைத் தனது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்து உலகநாடுகளிலுள்ள விண்ணியல் விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறார் இந்த இந்திய பெண் விஞ்ஞானி. அமெரிக்காவிலிருக்கும் அவருடன் பேசியபோது அறிந்தவை இவை\nபிரியம்வதா என்னும் பிரியா டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். மேற்படிப்புக்கு அமெரிக்கா போனவர். உலகப்புகழ் பெற்ற அமெரிக்க MIT பல்கலை கழகத்தில் விண்ணியலில் முதுகலை, தொடர்ந்து முனைவர் பட்டங்கள் பெற்று தற்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் விண்ணியல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர். தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். டென்மார்க் நாட்டின் கியூபன் ஹோவன் விண்ணியல் பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசியராக அழைக்கப்பட்டிருப்பவர். டெல்லி பல்கலை கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகவும் கௌரவிக்க பட்டிருப்பவர்,\nஉலக விண்ணியல் விஞ்ஞானிகள் பிரமித்து போகுமளவிற்கு இவர் சமீபத்தில் கண்டு பிடித்திருப்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள கருப்பு துளைகளை பற்றி நாம் சற்று புரிந்து கொள்ள வேண்டும்\nவிந்தைகள் நிறைந்த விண்பேரண்டவெளியில் ஒரு பகுதி இந்த கருங்குழிகள் (Black Hole) அல்லது கருந்துளைகள் என்பன, இவை வலுவான ஈர்ப்புச் சதியைக் கொண்டுள்ளவை தானும் ஒளிராது, தன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது இந்தக் கருந்துளைகள்.. எனவே, கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது. நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர்.அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்துவிடும். அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும்போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவதுபோலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.\nஇதன் சுற்றுப்பாதையில் இப்படிச் சுழன்றுகொண்டிருக்கும் கோள்களின் வேகம், அவைகள் இருக்கும் நிலைகளின் மூலம் இந்தக் கருந்துளைகளின் அமைப்பை கணக்கீடுகள் மூலம் எப்படியிருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள். வளரும் தொழில் நுட்பம் கைகொடுக்க பெருமளவில் கணினிகள் மூலமும் ராட்சத டெலிஸ்கோப்புகள் மூலமும் இந்தக் கணக்கீடுகளை உறுதிசெய்திருக்கிறார்கள். இந்தக் கருந்துளைகள் இருக்கும் அடர் கருப்பு பகுதி வாழ்நாள் முடிந்த பின் எரிந்துபோன நட்சத்திரங்களின் கூட்டம் என்றும். அவற்றுடன் புதியஎரிந்தநட்சத்திரங்கள் சேர்வதால் அவை வரமின்றி வளர்கின்றன என்றும் சொல்லப்பட்டது.\nஇந்தப் பின்னணியில் பிரியம்வதா கடந்த சில ஆண்டுகளில் தனது தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலம் கருந்துளைகளை உருவாக்கும் அடிப்படையான அடர் கருப்பு பொருள்களின் (dark matter) இயல்புகளையும், கருந்துளைகள் உருவாகி வளர்வது குறித்தும் ஆராய்ந்து அறிக்கைகள் கட்டுரைகள் தந்திருக்கிறார். பலகாலமாக நம்பப் பட்டுவந்ததுபோல இந்த கருங்குழிகள் இறந்த நட்சத்திரங்களின் தொகுப்பு இல்லை. அவைகள் ஒரு வாயுவாக தானாகவேஉருவாகி மிக வேகமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியைத் தானே நிறுத்திக் கொண்டுவிடுகிறது. கருந்துளைகளுக்கும் வரம்பு,விளிம்பு உண்டு என்பது தான் இவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கும் விஷயம். இந்த முடிவு இப்போது விண்ணியல் விஞ்ஞானிகளுக்கு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது கரும் துளைகளை பற்றிய ஆராய்ச்சிகளை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்லப்போகிறது.\nஅவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்திருக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது “ராமன் விளைவு” “சந்திரசேகர் வரையறை” என்பதைப் போல பிரியா வரம்பு என்பதும் பேசப்பட்டு வருகிறது.\nபிரியம்வதாவின் இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவருக்கு பல நாடுகளின் நிறுவனங்களின் விருதுகளும் ஃபெலோஷிப்புகளும் வழங்கப்பட்டிருக்கிறது ஸ்வீடன் நாட்டில் வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதை மிகவிரைவில் இவர் பெறுவார் என விஞ்ஞான உலகம் கணித்திருக்கிறது.\nஆண்டு தோறும் தவறாமல் பாரதிக்கு விழா எடுத்து அதில் அரிய சாதனைகள் செய்தவரைத் தேர்ந்தெடுத்து ”பாரதி விருது” வழங்கும் வானவில் பண்பாட்டு கழகம் இந்த ஆண்டின் பாரதி விருதுக்குப் பெருமைக்குரிய இந்த தமிழ்ப்பெண்மணியை. தேர்ந்தெடுத்திருக்கிறது.\n”வானை, கடல்மீன்களை அளப்போதோடு நின்றுவிடாமல் விண்ணியல் சாத்திரத்தில் தமிழ் மக்கள் தேர்ச்சி பெற்று அவர்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்” என கனவுகண்டவன் பாரதி. அந்தக் கனவை மெய்ப்பித்திருக்கும் இந்தப் பெண்ணை அந்த விருதுக்குத் தேர்வு செய்திருப்பது, மிகப்பொருத்தமானது.\nவிண்ணியல் விஞ்ஞானி பிரியம்வதா நடராஜன் அவரது சாதனைக்காகவும், இந்திய ஊடகங்களின் வெளிச்சம் இன்னும் விழாத இந்தப் பெருமைக்குரிய தமிழரைத் தேடிக்கண்டுபித்தற்காக வானவில் பண்பாட்டு கழக நிறுவனர் ரவி அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல் , கல்கி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l24-point-shoot-red-price-p2HTTL.html", "date_download": "2018-08-21T13:37:33Z", "digest": "sha1:E2JWKUSWB3GOSPRZILI4K46YHRWMDSE4", "length": 23025, "nlines": 484, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் சமீபத்திய விலை Jul 26, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 26 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஅபேர்டுரே ரங்கே f/3.1 - f/6.7\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 26 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 5 cm (W)\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 640 x 480 pixels (VGA)\nஇமேஜ் போர்மட் JPEG (EXIF)\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 17 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே AA Battery\nநிகான் குல்பிஸ் லெ௨௪ பாயிண்ட் சுட ரெட்\n4.3/5 (26 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-nov-15/inspiring-stories/125157-mrs-india-earth-jaya-mahesh.html", "date_download": "2018-08-21T14:17:51Z", "digest": "sha1:CLA35HTXV3JUZ3DOJPNG3JWTRXYIKCXG", "length": 22368, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "\"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு!” | Mrs India Earth Jaya Mahesh - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nவிண்ணிலும் வேகம்... மண்ணிலும் வேகம்\nமூங்கில் பந்தும் முமுநீளக் கனவுகளும்\nபிளாட்பாரம் டு உலகக் கோப்பை... - பிரமிக்க வைக்கும் சங்கீதா\n50 வயதிலும் ஓடலாம்... வாழ்வைக் கொண்டாடலாம்\n“என் வலி, இன்னொரு தாய்க்கு வேண்டாம்\nஅம்மா திரும்பி வந்த கதை\n”சட்டம் எப்போதும் பலமான ஆயுதம் அல்ல\n\"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு\nஇது செலவு அல்ல... ஆரோக்கியத்துக்கான முதலீடு\nகோபம் குறைக்க... நினைவாற்றல் பெருக\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nபெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\n - ஒரு டஜன் யோசனைகள்\nஎன் டைரி - 393\nஒரிஜினல் வைரத்தைக் கண்டறிவது எப்படி\nபட்டாணியில் பாடம் கற்ற மாணவிகள்\nகாப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு... நிதித் துறைகளில் வேலைவாய்ப்பு\nஉங்கள் குழந்தையின் ஸ்க்ரீன் டைம் எவ்வளவு\nஎப்போதும் என் மனதில் ஒரு மெல்லிய சோகம்\nதிருமணத்துக்குப் பிறகு பெண்கள் இனிஷியல் மாற்ற வேண்டுமா\nநான்கு சுவர்களுக்குள் இந்தியாவின் எதிர்காலம்\n - இது புது ருசி\n30 வகை ரெடி டு ஈட்\nசமச்சீர் டயட்டில் எடை குறைக்க முடியுமா\n\"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு\nமிஸஸ் இந்தியா எர்த் இரா.கலைச்செல்வன், படம்: த.ஸ்ரீனிவாசன்\n‘இந்த சமூகத்துக்கு நீங்கள் கொடுப்பவரா... இல்லை எடுப்பவரா’ - இது கேள்வி. பெரும்பாலானோர் தாங்கள் கொடுத்ததை முன்னிறுத்தியே பேசினர். சற்றே உயரமான உருவம், முகத்தில் சிறு மச்சம், கருநிற கூந்தல், நீல நிற உடையில் நின்றிருந்த ஜெயாவிடம் (ஜெயஸ்ரீ) மைக் கொடுக்கப்பட்டது.\n‘‘உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். நான் இரண்டுமேதான். கொடுப்பதற்காக எடுக்கிறேன். எடுப்பதற்காக கொடுக்கிறேன்...’’\nஆம்... 2016-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இந்தியா எர்த்’ ஆக முடிசூட்டப்பட்டிருக்கிறார் ஜெயா மகேஷ். இது அழகுக்்கான போட்டி மட்டுமே அல்ல. ஆரோக்கியம், சமூக விழிப்பு உணர்வு, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றோடு கொஞ்சம் புற அழகு... இவற்றை அடிப்படையாகக் கொண்டே பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த இருபதாண்டுகளாக, பெண்கள் நலம் சார்ந்த பணிகள், மரம் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டதற்காகவும், வியக்கத்தக்க வகையில் தன் உடலை அழகாக பராமரித்ததற்காகவும் ஜெயா மகேஷ் இப்பட்டத்தை வென்றுள்ளார்.\nகோவையைச் சேர்ந்த ஜெயா மகேஷ், ‘பாடி ஸ்கல்ப்டிங்’ என்ற பெயரில் பெண்களுக்கான உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்்கான வகுப்புகளை எடுத்து வருகிறார். இந்தியா முழுவதிலுமிருந்து 41 பேர் கலந்துகொண்ட திருமதிகளுக்கான இப்போட்டியில் வென்ற ஜெயா மகேஷ்தான், பங்கேற்பாளர்களிலேயே அதிக வயதானவர். அவரின் வயது... 48\n”சட்டம் எப்போதும் பலமான ஆயுதம் அல்ல\nஇது செலவு அல்ல... ஆரோக்கியத்துக்கான முதலீடு\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/england-won-the-toss-and-elected-to-field-118081100003_1.html", "date_download": "2018-08-21T14:01:00Z", "digest": "sha1:EKN5BTOXZIC7HC7ISDDCVHHYLFSDKWJX", "length": 11259, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 107 ரன்களில் சுருண்டது இந்தியா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 107 ரன்களில் சுருண்டது இந்தியா\nஇங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கேப்டன் விராத் கோஹ்லி 23 ரன்களும், அஸ்வின் 29 ரன்களும் எடுத்தனர்.\nஇங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் மிக அபாரமாக பந்துவீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்களையும், பிராட் மற்றும் கர்ரண் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது.\nஇந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டதால் இங்கிலாந்து இன்னிங்ஸ் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n15/3: இந்திய அணி சறுக்கலுக்கு ப்ரேக் விட்ட மழை\nஇங்கிலாந்து மக்களுக்கு வேண்டும்; இந்திய ரசிகர்களுக்கு வேண்டாம்: என்ன ஒரு விசித்திரமான சூழல்\nகுழந்தை அழுததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி: மழையால் டாஸ் தாமதம்\nரஷ்யாவுக்கு புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்கா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-113123100021_1.htm", "date_download": "2018-08-21T14:04:03Z", "digest": "sha1:HFDPC7GJ5EVWCTUAWI2US7ALKXOFQMEV", "length": 9766, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "நன்கொடையில் புத்ரன் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு சமூக கருத்துகளை மையமாக வைத்து படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் ஜெயபாரதி. இவர் ஏற்கனவே ஊமை ஜனங்கள், குடிசை, கனவுகள் கற்பனைகள், உச்சி வெயில் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.\nஇவர் தற்போது குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்பங்களை புத்ரன் என்ற படம் மூலம் சித்தரித்து காட்டியுள்ளார். சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தயாராகி இரண்டு வருடங்கள் கடந்த பின்னும் விற்பனை ஆகாமல் முடங்கிக் கிடப்பதால், கல்லூரி மாணவர்கள் மூலம் நிதி திரட்டி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் ஜெயபாரதி.\nஇதன் முதல் கட்டமாக சென்னையில் உள்ள சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை சந்திக்க இருக்கிறார்.\n11 வயது சிறுவனால் கர்ப்பமுற்ற 36 வயது பெண்\nஅது வேற இது வேற பாடல் வெளியீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/4883/", "date_download": "2018-08-21T14:37:08Z", "digest": "sha1:QMGO7MJDLUQTGYGL5V5TVPFOWHMYVHXL", "length": 6367, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nசொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம்\nபக்தனாக திகழ விரும்புபவனின் முதல் வேலை சொர்க்கத்தை அடையும்ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் அறவே விட்டுவிட வேண்டும்.சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம். இங்கேஇருப்பதைக் காட்டிலும் அங்கே நமக்கு அதிக ஞான ஒளி கிடைக்காது\nஇந்த முறை பணம் விவசாயிக்கு போகப்போகிறது\n14 மாதகால ஆட்சி நன்றாக போய் கொண்டிருக்கிறது\nதி.மு.க. வெளியிட்டது ஒரு மாயாஜால அறிக்கை\nஅனைவர் இல்லமும் உள்ளமும்; நன்றாக நிறைந்து…\nஎவ்வகையிலும் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/04/blog-post_20.html", "date_download": "2018-08-21T14:05:20Z", "digest": "sha1:XH52KQ2TIGHTX6DOD3Q3LPAETGH5FM5H", "length": 9617, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "கள்ள சாமி நித்தியானந்தா கண் அசைத்தால் ஏலியன் டான்ஸ் ஆடும் பெண்கள்- வீடியோ இணைப்பு... - ATHIRVU.COM", "raw_content": "\nHome EXCLUSIVE கள்ள சாமி நித்தியானந்தா கண் அசைத்தால் ஏலியன் டான்ஸ் ஆடும் பெண்கள்- வீடியோ இணைப்பு...\nகள்ள சாமி நித்தியானந்தா கண் அசைத்தால் ஏலியன் டான்ஸ் ஆடும் பெண்கள்- வீடியோ இணைப்பு...\nகள்ள சாமி நித்தியானந்தா என்ன தான் செக்ஸ் லீலையில் வசமாக சிக்கினாலும். இன்றுவரை பெரும் திரளான மக்கள் அதிலும் பெண்கள் அவரை தொடர்ந்தும் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இவர்களை போன்ற ஒரு முட்டாள்களை பார்க்கவே முடியாது. சமீபத்தில் அவர் பூஜை நடத்திய வேளை பல பெண்களுக்கு \"உரு வந்தது\" ஆடியுள்ளார்கள். இதனை மியூசிக்கோடு பார்த்தால் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் கொஞ்சம்.\nகள்ள சாமி நித்தியானந்தா கண் அசைத்தால் ஏலியன் டான்ஸ் ஆடும் பெண்கள்- வீடியோ இணைப்பு... Reviewed by athirvu.com on Tuesday, April 03, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/featured/45844-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-08-21T14:24:23Z", "digest": "sha1:J56WFOKTEKMK3YXFPVS2PHEBHSJJQZOZ", "length": 31924, "nlines": 345, "source_domain": "dhinasari.com", "title": "மக்கள் சேவகன் நான்; எனைக் காண மக்கள் ஓடி வருகின்றனர்; எதிர்க் கட்சிகளோ சுயலாபம் கருதி ஒன்றிணைகின்றனர்: மோடி! - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு அரசியல் மக்கள் சேவகன் நான்; எனைக் காண மக்கள் ஓடி வருகின்றனர்; எதிர்க் கட்சிகளோ சுயலாபம் கருதி...\nமக்கள் சேவகன் நான்; எனைக் காண மக்கள் ஓடி வருகின்றனர்; எதிர்க் கட்சிகளோ சுயலாபம் கருதி ஒன்றிணைகின்றனர்: மோடி\nஆன்லைன் இணையதள இதழான ஸ்வராஜ்யா மேக் #Swarajyamag கடந்த ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் மோடியை பேட்டி கண்டது. அதில் பல கருத்துகளை மோடி மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார்.\nமக்களின் அன்பில் இருந்து ஒதுங்கி இருக்க நான் ஒன்றும் மஹாராஜாவோ அல்லது சர்வாதிகாரியோ இல்லை\nமக்கள் மத்தியில் இருப்பதும், அவர்களுடன் கலந்துரையாடுவதுமே எனக்கு பலத்தை தருகிறது.\nநான் பயணிக்கும் போதெல்லாம், அனைத்து வயதினர் மற்றும் பல்வேறு சமுதாய மக்கள், தெருக்களில் எனக்காகக் காத்திருந்து வரவேற்பதை நான் பார்க்கிறேன்.\nஅவர்கள் காட்டும் அன்பை ஏற்காமல், காரில் அமர்ந்து பயணிக்க என்னால் இயலாது\nஅதனால் தான் காரில் இருந்து இறங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறேன்\nஆன்லைன் இணையதள இதழான ஸ்வராஜ்யா மேக் #Swarajyamag கடந்த ஜூன் 30 ஆம் தேதி பிரதமர் மோடியை பேட்டி கண்டது. அதில் பல கருத்துகளை மோடி மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார்.\nமோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மோடி எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை முன்வைத்து மகாகட்பந்தன் என்ற பெயரில் ஒன்றிணைவது, தேர்தல் 2019, அதன் பின்னணி, தேஜகூ.ட்டணிக்கும் கட்சிகளுக்குமான பிரச்னைகள், காஷ்மீர் பிரச்னை, பாஜக.,வில் அறிவுஜீவிகள் பற்றாக்குறை, பிரதமர் அலுவலக அதிகார விவகாரங்கள், அரசியல் ரீதியான சவால்கள் என பலவற்றுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.\nகுறிப்பாக, பிரதமர் மோடியின் பாதுகாப்பு கருதி, அவரது பாதுகாப்பை பலப்படுத்தும்படி உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது. இதனால், சாலை வழியான பயணத்தை தவிர்க்கும்படி பிரதமரை உளவுத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்தப் பின்னணியில், தன்னால் அவ்வாறு ஒதுங்கியிருக்க இயலாது என்றும், தான் மக்கள் சேவகன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தப் பேட்டியில் மோடி குறிப்பிட்டவற்றில் சில…\nபாஜக., அரசு மக்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வருகிறது. நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.\nநான் ஒரு மஹாராஜா இல்லை.. வெறும் சாதாரண ஒரு குடிமகன். மக்களின் சேவகனான என்னைக் காண்பதற்காக, மக்கள் ஆர்வத்துடன் ஓடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ சுயநலன் கருதி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கொள்கையற்று பாஜக,வுக்கு எதிராக வேலை செய்யவே ஒருங்கிணைகின்றனர்.\n‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை நீக்குவோம்’ என்று மட்டுமே குரல் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல், தானே பிரதமர் ஆக பதவியேற்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் பதவி மீது கண் உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கோ தங்கள் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் பிரதமராகத் தகுதி இல்லை என்ற நினைப்பு.\nசுய லாபத்திற்காகவும், தங்களை நிலை நிறுத்திக்கொள்ளவும், ஆட்சி அதிகாரத்துக்காகவும் மட்டுமே, மத்தியில், ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் எதிர்க் கட்சிகளால், மக்களுக்கு என்ன நன்மை விளையப் போகிறது..\nகருத்து ஒறுமை சிறிதும் இல்லாத இவர்கள், மோடியை எதிர்ப்பது என்ற கருத்தில் மட்டுமே ஒன்று கூடுகின்றனர். இவர்களால் வெகு காலத்திற்கு இணைந்து செயல்பட முடியாது.\nகர்நாடக மக்கள் பாஜக., மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அதிக இடங்களில் வெற்றியை பெற்றுத் தந்தனர். ஆனால் மூன்றாவது இடத்திற்கு வந்த ஒருவர், முதல்வர் ஆகியுள்ளார். பாஜக.,வைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காங்கிரஸ் கட்சி குமாரசாமியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.\nஇதுபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணியாகத்தான் உள்ளது. நாங்கள், வளர்ச்சியை முன்வைத்தும் மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்துமே வாக்காளர்களை சந்திக்க உள்ளோம். ஆனால், எதிர்க் கட்சிகளிடம் எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லை, மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதம் மட்டுமே கைவசம் உள்ளது.\nபாஜக., தலைமையிலான, தேஜ கூட்டணியில் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள், ஓர் அழகான அன்பான குடும்பமாக இடம் பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு தேவையான முக்கியத்துவமும் அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது. எங்கள் கூட்டணி உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இதில் சந்தர்ப்பவாதம் கிடையாது. யாரையும் கட்டாயப்படுத்தி கூட்டணியில் இடம் பெறச் செய்வதுமில்லை.\nகாஷ்மீரில் நல்லாட்சி, வளர்ச்சி என்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது. மத்தியில், இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் தீவிரம் காட்டவில்லை. எனவே, பயங்கரவாதத் தாக்குதல், எல்லை அத்துமீறல்கள் அதிகம் நடந்தன. தற்போது, அதுபோன்ற சம்பவங்கள் கடந்த கால வரலாறு ஆகிவிட்டன.\nபல மாநிலங்களில் நக்சலைட் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. அப்பகுதிகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், பாஜக., அரசு எவ்வித சமரசமும் செய்வதில்லை.\nசாலை மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில், மத்திய அரசு அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்வைத்து ஆட்சி செய்து வரும் பாஜக., மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது…\nஆங்கில பேட்டியின் முழு வடிவம்:\nமுந்தைய செய்திஇடிந்து சரிந்த பாலம்; அறுந்து விழுந்த கம்பி; சமயோஜித ரயில் டிரைவரால் காப்பாற்றப்பட்ட பயணிகள்\nஅடுத்த செய்திஎம்.எஸ். தோனி : த அண்டோல்டு ஸ்டோரியின் இரண்டாம் பாகத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடிப்பார் என தகவல்\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nஇந்திய ஒற்றுமை தனிப்பட்ட தலைவர்களை நம்பி இல்லை: வாஜ்பாயி சொன்ன பளிச் பதில்\nமோடியின் சுதந்திர தின உரை: கூகுள் யுடியூப்பில் நேரடி வெப்காஸ்ட்\nநெல்லை எஸ்பி., இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்: ஹெச்.ராஜா ஆவேசம்\nசீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்\n…. மக்களிடம் யோசனை கேட்கும் பிரதமர் மோடி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nஉள்ளூர் செய்திகள் 21/08/2018 4:29 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-affected-the-prime-minister-modi-s-promises-are-crouching-301480.html", "date_download": "2018-08-21T14:17:21Z", "digest": "sha1:Z47AJHXZVL64OXNLFCTOOUARD5AL4B3W", "length": 8940, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல் | People affected by the Prime Minister Modi's promises are crouching tigers: Tirunavukkarasar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்\nமோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\n18 எம்எல்ஏக்கள் தீர்ப்பால் தமிழகத்தில் சில மாற்றங்கள் வரும்: திருநாவுக்கரசர் ஆரூடம்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பது தொடர்பாக ஒன்றுமே செய்ய முடியாது: திருநாவுக்கரசர் திட்டவட்டம்\nஎந்த விதியையும் பின்பற்றாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. திருநாவுக்கரசர் காட்டம்\nசென்னை: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக உள்ளனர் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியளார்களிடம் பேசினார். அப்போது மோடியின் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர் என்று அவர் கூறினார்.\nஒரு அணியை 10 அணியாக பிரித்துவிட்டு ஒரு அணியில் மட்டும் சோதனை நடக்கிறது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அதிமுக வாக்கு வங்கியை பாஜக கையகப்படுத்துகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nthirunavukarasar pm modi promises tamilnadu congress tigers திருநாவுக்கரசர் பிரதமர் மோடி வாக்குறுதிகள் தமிழக காங்கிரஸ் புலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69295/cinema/Kollywood/IrumbuThirai-deleted-scene-released-:-What-vishal-says-about-Aadhaar-card.htm", "date_download": "2018-08-21T14:30:11Z", "digest": "sha1:EOCRRSM6TB64PG7N5JFCUPOFTCIOLVP6", "length": 12542, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரும்புத்திரையில் நீக்கப்பட்ட ஆதார் கார்ட் காட்சி வெளியீடு - IrumbuThirai deleted scene released : What vishal says about Aadhaar card", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ் | சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன் | தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நடிகை | கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன் | கனா இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை | கரன்ஜித்கவுர் 2 : தயாராகும் சன்னிலியோன் | காமிக்ஸ் புத்தகத்தில் சிவகார்த்திகேயன் | மற்றுமொரு மேற்கு தொடர்ச்சி மலை கதை | மழை, வெள்ளம் : மலையாள சினிமா அடியோடு பாதிப்பு | சம்பளத்தை உயர்த்திய கோகிலா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇரும்புத்திரையில் நீக்கப்பட்ட ஆதார் கார்ட் காட்சி வெளியீடு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஷால், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் இரும்புத்திரை. இந்தப் படம் டிஜிட்டல் இந்தியாவை விமர்சிக்கிறது. ஆதார்ட் கார்ட், ஏடிஎம் கார்ட், ஆன்லைன் பணபரிவர்த்தனை ஆகியவற்றில் உள்ள ஆபத்துக்களை விளக்குகிறது.\nஆதார்கார்ட் திட்டம் மோசமாக விமர்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் படத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. சில தியேட்டர்களில் முதல் நாள் காட்சி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ஆதார்கார்ட் குறித்த காட்சி நீக்கப்பட்ட வசனங்களுடன் லீக் ஆகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த காட்சியில் விஷால், சமந்தா, ரேபோ சங்கர் நடித்திருக்கிறார். அந்த காட்சியின் வசனங்கள் வருமாறு:\nவிஷால்: இப்பதான் தெளிவா பேசினாரு விஜய் ராஜூ\nரோபோ சங்கர்: சூரியனை தெர்மாகூல் வச்சி மறைக்கிறேன்னு சொன்னாரே அந்த மினிஸ்டரா...\nவிஷால்: டெலிகாம் மினிஸ்டருக்கும் ஒயிட் டெவில் (அர்ஜுன்)க்கும் இடையில் ஏதோ நடந்திருக்கு. அவர் மூஞ்சில இருக்கிற பயத்தை பார்த்தியா..\nசமந்தா: டெலிகாம் மினிஸ்டர் மூலம் அவன் என்ன எதிர்பார்க்கிறான்.\nரோபோ சங்கர்: அத வச்சி அவன் என்ன மாப்பிளை செய்யப்போறான்.\nவிஷால்: ஆதார் கார்ட் நாம நினைக்கிற மாதிரி பேசிக் ஐடி கார்ட் கிடையாது. அது ஒவ்வொரு மனிதனோட கைரேகையிலிருந்து, கண் ரேவை வரைக்கு இருக்கிற மாஸ்டர் கார்ட்.\nரோபோ சங்கர்: நீ... சொல்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு மாப்ள...\nவிஷால்: பயமுறுத்தல மாமா...நடக்கப்போறத சொல்றேன். இன்னிக்கு டிஜிட்டல் இந்தியாங்ற பேர்ல ஏடிஎம் மிஷின்லேருந்து ஓட்டிங் மிஷின் வரைக்கும் எல்லாமே டிஜிட்டலைசாகிடுச்சு. அவன் நினைச்சா நாசிக்ல நோட்டும் அடிக்க முடியும், ஓட்டிங் மிஷின்ல ஓட்டும் போட முடியும்.\nரோபோ சங்கர்: அப்போ அவன் யாரை நினைக்கிறானோ அவனைத்தான சிஎம் ஆக்க முடியும். இது தெரியாம ஓட்டுக்கு பைசா கொடுத்துக்கிட்டு திரியுறாங்க\nவிஷால்: இதுவரைக்கும் நம்ம போனை மட்டும் தான் ஹேக் பண்ணிக்கிட்டிருந்தான். இனிமே நம்ம லைபையே ஹேக் பண்ணப்போறான்.\nகண்ணுக்குத் தெரியாத 'காலா' எமோஜி மெட்ரோ-வை டிவியில் ஒளிபரப்ப அனுமதி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nகரன்ஜித்கவுர் 2 : தயாராகும் சன்னிலியோன்\nஇங்கிலீஷ் விங்கிலீஷ் நடிகை சுஜாதா காலமானார்\nதந்தைக்கு சட்டை தைத்து பரிசளித்த வருண் தவான்\nகமிஷன் கொடுக்காத கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\nகனா இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை\nமற்றுமொரு மேற்கு தொடர்ச்சி மலை கதை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிறந்தநாளில் இரும்புத்திரை 100-வது நாளை கொண்டாடும் விஷால்\nகேரள வெள்ளம் : பிரதமருக்கு விஷால் வேண்டுகோள்\nகேரளாவுக்கு விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி\nமெரினா என்று வந்தாலே நீதி வெல்லும் - விஷால்\nமெரினாவில் அரசியல் வேண்டாம் : விஷால்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vilaiyattu.com/?tag=srilanga-cricket", "date_download": "2018-08-21T14:03:20Z", "digest": "sha1:3CQH2GP3QSSCEYJCXTM5DENG2BUVC7R3", "length": 5176, "nlines": 46, "source_domain": "vilaiyattu.com", "title": "srilanga cricket – Vilaiyattu.com", "raw_content": "\nபங்களாதேஷை சந்திக்கவுள்ள இலங்கை T20 அணி அறிவிப்பு.\nபங்களாதேஷை சந்திக்கவுள்ள இலங்கை T20 அணி அறிவிப்பு. பங்களாதேஷ் அணிக்கெதிராக இலங்கை அணி பங்கேற்கவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் தலைமைத்துவம் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான...\nஇலங்கை தேர்வுக்குழுவினரின் முழுமையான விபரம் வெளியானது…\nஇலங்கை தேர்வுக்குழுவினரின் முழுமையான விபரம் வெளியானது… இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆசிய பிராந்தியத்துக்கான போட்டி மத்தியஸ்தராக செயல்பட்ட இலங்கையின் முன்னாள் வேகப்பந்து...\nபாடசாலைக் கிரிக்கெட்டை வளர்க்க மஹேல பங்களிப்பு-கல்வி அமைச்சில் ஆலோசனை.\nபாடசாலைக் கிரிக்கெட்டை வளர்க்க மஹேல பங்களிப்பு-கல்வி அமைச்சில் ஆலோசனை. இலங்கை கிரிக்கெட்டின் இப்போதைய பின்னடைவான நிலைமைக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டை சரியாக கையாளமையே இதற்கான முக்கிய காரணியாக விளங்குகின்றது. இதன்...\nஇலங்கை கிரிக்கெட்டை மீட்க வருகிறார் முன்னாள் தலைவர் …\nஇலங்கை கிரிக்கெட்டை மீட்க வருகிறார் அரவிந்த… இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்த அரவிந்த டி சில்வா மீண்டும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆலோசனை குழுவுக்கு...\nதண்டத்துடன் தப்பியது மலிங்காவின் கண்டம்…\nதண்டத்துடன் தப்பியது மலிங்காவின் கண்டம்… இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவுக்கு எதிராக மோசமான கருத்து வெளியிட்ட இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. கிரிக்கெட்...\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kimupakkangal.com/2012/04/blog-post_04.html", "date_download": "2018-08-21T13:59:18Z", "digest": "sha1:NOL63PEKWAUMIZRIUV6PSPIOVCMTKMHY", "length": 6223, "nlines": 135, "source_domain": "www.kimupakkangal.com", "title": "இந்தியப் பெண்கள் ! | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் இந்தியப் பெண்கள் \nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nநேனோவின் பதிவினை நான் எழுதும் ஐ அம் கிருஷ்ணா சா என்னும் தொடரில் எழுதினேன். அதில் சில கிரேக்க கதைகளின் குறிப்புகள் வருகிறது என்றும் அதை தேடி...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஉலகமே அறத்தில் தான் இயங்குகின்றது என்பதை அக்காலத்தில் அதிகம் நம்பி வாழ்ந்து வந்தனர். ஆனாலும் மக்களின் எண்ணங்களும் செயல்களும் அறத்திலிருந்த...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவாழத் தகுதியற்றவன் நான் ( 2 )\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2018/01/blog-post_24.html", "date_download": "2018-08-21T13:44:12Z", "digest": "sha1:NG2BUFLTYU564H5CD7FZQCUEHTOF3E2Z", "length": 19119, "nlines": 197, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: யானைக்குட்டியை தூக்கிய பாகுபலி", "raw_content": "\nதான் விரும்பும் பணியைச் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வேலையை பொருளாதரா அழுத்தங்களினால் தொடர்பவர்கள் பலர். ஆனால் கோவையைச் சேர்ந்த சரத்குமார் இவர்களிலிருந்து மாறுபட்ட இளைஞர். பட்டபடிப்பு முடித்த இவருக்கு கிடைத்த வேலை ஒருதொழில் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி. காடுகளையும் யானைகளையும் நேசிக்கும் சரத்குமாருக்கு அந்த வேலையில அவ்வளவு பிடிப்பில்லை. தனது மாவட்ட எல்லையில் ஒரு நாள் யானை ஒன்று புகுந்து அட்டகாசகம் செய்து கொண்டிருந்தது. அதை விரட்ட வனத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த சரத் குமாருக்கு தெரிந்த ஒரு விஷயம் வனத்துறையில் யானைகளை தந்தங்களுக்க கொல்வதை தடுப்பதற்கும், மனிதர்கள் வாழும் பகுதியில் வரும்யானைகளை விரட்டித் திரும்ப காட்டுக்குள் அனுப்ப தனியாக ஒரு ஸ்குவாட் இருப்பது. உடனேயே பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வனத்துறையில் அந்தப் பணியில் சேர்ந்தார். சம்பளம் குறைவுதான். ஆனால் அவர் நேசிக்கும் யானைகளை தினசரி பார்க்கலாம் என்ற நிறைவு.\nகடந்த மாதம் இவர் செய்த ஒரு துணிவான செயலால் இன்று இவர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் வனவிலங்குகளின் நல ஆர்வலார்களால் பாராட்டப்படுகிறார்.\nபாவனி ஆற்றில் நீர் அருந்த வந்த பெரிய யானை ஒன்று நதிக்கரையிலிருக்கும் கிராமமான சமயபுரத்தின் உள்ளே புகுந்து இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் கடைகளையும் உடைத்து நொறுக்கி துவம்சம் செய்து கொண்டிருக்கிறதாக செய்தி வந்தவுடன் சரத்குமார் தன் குழுவுடன் அங்கு விரைந்தார்.\nபணியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கும் சரத்குமாருக்கு பலயானைகளையும் அதன் குணங்களையும் பற்றி நன்கு தெரியம். வந்திருப்பது வயதான ஒரு பெண்யானை. 3 மணி நேரம் போராடி அதைக்காட்டுக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர் குழுவினர். ஆனால் அரைமனிக்குள் திரும்பவும் வந்து கண்ணில் பட்டதையெல்லாம் மிதித்து நொறுக்க ஆரம்பித்தவிட்டது அந்த யானை. அப்போது சரத்குமார் கவனித்த விஷயம் அந்த யானை ஏதோ ஒரு கோபத்திலிருக்கிறது என்பதைத்தான். மறுபடியும் அதை விரட்டிவிட்டு அதன் கோபத்துக்கு காரணம் என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே நடந்த போது அவர் பார்த்தது.\nகாட்டில் உபரிநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட கால்வாயில் சிலாப் திறாந்து கிடந்த்தையும் அதன் உள்ளே பள்ளத்தில் விழுந்திருந்த சின்ன சிறு யானைக்குட்டியையும். . பிங்க் வண்ண துதிக்கையுடன் சின்னஞ்சிறு பிறந்து 10 அல்லது 15 நாளே இருக்கும் அந்த யானைக்குட்டி. சரியாக நிற்க, நடக்க்க் கூட தெரியாத அந்த குட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டிருக்கிறது. வெளியில் வரத்தெரியவில்லை. தாய் யானை பள்ளத்தின் ஒருபுறம் அது வெளிவர மண்னைத்தள்ளி மேடாக்கி முயற்சித்திருக்கிறது. ஆனாலும் அதற்கு வெளியே வரத்தெரிய வில்லை. தன் அருமைக்குழந்தையை மீட்க முடியாமல் தவித்த தாயின் கோபம் தான் தாக்குதலுக்கு காரணம்.\nபள்ளத்தில் தவிக்கும் குட்டியைப் பார்த்தவுடன் விஷயத்தைப் புரிந்த கொண்ட சரத் குமார் குழுவினர் பள்ளத்தினுள்ளே இறங்கி பயந்து மிரண்டு போயிருந்த அந்தக்குட்டியை வெளியே கொண்டுவந்தனர். தாயின் பாலைத்தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாத அந்த பச்சைக்குழந்தையை காட்டுக்குள் விரட்டமுடியாது. அதன் தாய்வரும் வரை காத்திருக்கவும் முடியாது. மேலும் மனிதர்களுடன் குட்டியைப் பார்த்தால் அவர்கள் செய்யும் உதவியைப்புரிந்து கொள்ளாமல் பயங்கரமாகத்தாக்கும் அபாயாமும் உண்டு\nஅப்போது அவர் செய்ததுதான் வீடியோவில் வைரலாகப் பரவி உலகை ஆச்சரியபடுத்திக்கொண்டிருகிறது\nஅந்த குட்டி யானையை தன் தோள்களில்., பாகுபலி கனமான லிங்கத்தை தூக்கியதைப் போல 50 மீட்டர் தூரத்திலிருக்கும் ஜீப்புக்கு ஒட்டமும் நடையுமாக வேகமாக கொண்டுசென்றார். உள்ளூர் போட்டோகிராபர் எடுத்த அந்த வீடியோவை பிபிசி செய்தியில் காட்டியது\n100 கிலோ கனமிருக்கும் அதை எப்படி ஒருவராகத்தூக்கினீர்கள் என்ற கேள்விக்கு சரத் சொன்னபதில். “எனக்கே தெரிய வில்லை. அந்த வினாடியில் அதை உடனடியாக ஜீப்புக்குகொண்டு போய்விடவேண்டும் என்ற எண்ணம் தான் மனதிலிருந்தது”. மேலும், இரண்டு மூன்றுபேர் ஒரு குட்டியைத்தூக்குவது என்பதும் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று எனக்குத்தெரியும்\nகாட்டுக்குள் 12 யானைகள் கூட்டமாக இருக்கும் ஒரு குழுவில் அதன் தாய் யானையை அடையாளம் கண்டு அதனருகில் குட்டியைவிட்டு பாதுகாப்பான தூரத்தில் காத்திருந்தோம். அப்போது காலை 3 மணி என்பதால் தாய்யானை அதை அழைத்துசென்றதைப்பார்க்க முடியவில்லை. ஆனால் அப்போது காடே அதிரும்படியான அதன் சந்தோஷப் பிளிரலில் எனக்கு செய்தி கிடைத்துவிட்டது என்கிறார் சரத்குமார்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/08/07145055/Do-not-have-ghost-Movie.vpf", "date_download": "2018-08-21T13:38:21Z", "digest": "sha1:E7MYOKH2MLGODRHHPVVO7LT74DF7T2AI", "length": 6351, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not have ghost Movie || “பேய் படங்கள் வேண்டாம்!”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நம்பர்-1’ நடிகைக்கு பேய் படங்கள் ராசியாக அமைந்தன. அவர் நடித்த பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. அவருடன் போட்டி போடும் வகையில், மூன்றெழுத்து நடிகையும் பேய் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்து வரிசையாக மூன்று பேய் படங்கள் திரைக்கு வந்தன. அந்த மூன்று படங் களுமே தோல்வி அடைந்து விட்டன.\nஇனிமேல் பேய் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், அந்த மூன்றெழுத்து நடிகை\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2012/02/", "date_download": "2018-08-21T14:05:31Z", "digest": "sha1:VA4OQKQR3QIV3ILHRMW6DLRZGDSOASOS", "length": 69644, "nlines": 586, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: February 2012", "raw_content": "\nஒருநாள் சாய் காஃபி செலவு ரூபாய் 48,000...\nஅந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, மண் வளமில்லை,\nவறண்ட பூமி.. அதுமட்டுமல்ல... இந்தக் காரணங்களாலேயே அந்த மாநில\nஅரசு டைரியோ குறிப்பேடோ ( diary or directory)வெளியிடுவதில்லை. அவ்வளவு\nஅந்த மாநில முதல்வர் அவரைப் பார்க்க வருகிறவர்களுக்கு கூட\nகாந்தி டைரி தான் கொடுப்பார். அந்த காந்தி டைரியிலும் மாநில\nஅரசு குறித்தோ அதிகாரிகள் பற்றிய குறிப்ப்களோ அரசு துறைகளின்\nதொலைபேசி எண்களோ இத்தியாதி எந்தவிதமான குறிப்புகளும்\nஅப்படிப்பட்ட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் தான் முதல்வர்\nஅசோக் ஹெக்லட் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களுக்கு\nஏப்ரல் 1, 2009 முதல் ஜனவரி 16, 2012 வரை , சற்றொப்ப\nமூன்று வருடங்களில் 4.86 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம்.\nஅவருக்கு முன் ராஜஸ்தானின் முதல்வராக இருந்த சிந்தியா\nஅரண்மனை அரசி வசுந்தாராவை விட இது அதிகம். அரசி\n2004 முதல் 2007 வரை செலவு செய்தது வெறும் 2.2 கோடிதான்.\nகணக்குப் பார்த்தால் இன்றைய முதல்வர் ஒரு நாள் சாய் காஃபிக்கு\nசெலவு செய்யும் தொகை ரூ.48,000. சொச்சம்...\nநம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று\nராஜஸ்தானுக்குப் போகலாமா இல்லை நம்ம ஊருனு தமிழ்நாட்டுக்கே\nவந்துட்டுப் போகலாமானு தெரியலே...கொஞ்சல் விசாரிச்சு சொல்லுங்க.\n(செய்தி ஆதாரம்: இந்தியா டுடே பிப், 20, 2012)\nபசித்தவனின் பயணம் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\nநாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க\nமுடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார்\nஎன்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை மனிதர்களும் அவர்\nகதைகளின் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதுவே\nஅவர் எழுத்துகளின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது.\nநாஞ்சில் நாடன் என்ற மானுடன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும்\nமரியாதையும் இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளி இதே இந்த\nமும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில்\nவெளியான அவர் சிறுகதையை வாசித்துவிட்டு கழிவறைக் காகிதம்\nஅதாவது டிஷ்யு பேப்பர் என்று விமர்சித்த காலக்கட்டம் இருந்தது\nஎன்பதை அவர் மறந்திருக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியவில்லை.\nஅடுத்ததாக விருதுகள் பரிசுகள் குறித்து மிகத் தீவிரமாக தன் கருத்துகளை\nமுன்வைத்த ஒரு நேர்மையான எழுத்தாளராக படைப்புலகம் அவரைக்\nகண்டது. அவருடைய அந்த அறச்சீற்றம் அவர் படைப்புகளையும் தாண்டிய\nஒரு வாசகர் வட்டத்தை அவருக்கு உருவாக்கியது என்பது மற்ற எவருக்கும்\nவாய்க்காத ஒரு பெரும்பேறு என்றுதான் நினைக்கிறேன்.\nஇன்று, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்புக்கு\nசென்ற ஆண்டில் 2010ல் சாகித்திய அகதெமி விருது கிடைத்தப் பின்\nவிருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் அந்த\nவிருதுகளும் தங்களுக்கான தகுதிகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவே\nநினைக்கிறேன். இந்த விருதுக்குப்பின் இதுவரை சாகித்திய அகதெமி\nவிருது பெற்ற எந்த ஒரு படைப்பாளருக்கும் கிடைத்திராத ஊடக\nகவனிப்பும் கணினி இணைய வாசல்கள் எங்கும் நாஞ்சில் நாடனின்\nதோரணங்கள் அலங்கரித்திருக்கும் காட்சியும் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தாலும்\nஅந்த ஆரவாரமான கொண்டாட்டங்களுக்கு நடுவில் சின்னதாக ஓர் இனம்புரியாத\nஅச்சம் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தருணம் இது.\nஇந்தச் சூழலில் தான் நாஞ்சில் நாடனின் சிறுகதைகளை மறுவாசிப்பு\nசெய்தேன். விருது பெற்ற சூடிய பூ சூடற்க கதைகளையும் வாசிக்கும்\nஅனுபவம் கிடைத்தது. ஒருவகையில் என் முதல் கவிதை தொகுப்பு\n'சூரிய பயணம் ' தொகுதிக்கு ஓர் அறிமுகமாக ஓர் அணிந்துரை தந்தக்\nகாரணத்தாலேயே ஆசான் என்று சொல்ல வரவில்லை\nகும்பமுனி தான் எம் பாட்டன், எம் சொத்து, எம் சித்தன், எனக்குத் தெரியாத\nஎன் வயக்காட்டையும் சூடடிப்பையும் என் மாட்டையும் என் மனுசர்களையும் அட\nஎனக்கு கெட்ட வார்த்தைகளையும் கூட போகிற போக்கில் வசவாகவும்\nவர்ணனையாகவும் குசும்பாகவும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்\nஆசான். ஆமாம் ஆசாந்தான். கும்பமுனி என் கட்டைவிரலை காணிக்கையாகக்\nகேட்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் மும்பை வாழ் தமிழர்களே\nஉங்கள் முன்னிலையில் உங்கள் சாட்சியாக கும்பமுனி எனக்கு மட்டுமல்ல,\nமும்பை தளத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு மிதவையில் ஒரு\nபரிசில் ஓட்டி சதுரங்க குதிரையில் காய்நகர்த்தி ஆட்டம் சொல்லிக்கொடுத்து\nதலைகீழ் விகிதங்கள் வாழ்க்கையில் விதிவிலக்கல்ல என்பதைப் புரிய வைத்த\nஅடுத்து அவர் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நான் அவருடைய\nநல்ல வாசகர். இதில் 'நல்ல 'என்பது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும்\nஅடைமொழி. அவர் பார்த்த அனுபவித்த அதே மண்ணும் அதே மும்பை\nமனிதர்களும் எனக்கும் பார்க்கவும் அனுபவிக்கவும் கிடைத்திருப்பது\nஎனக்கும் என் எழுத்துகளுக்கும் கிடைத்திருக்கும் பாக்கியமோ துரதிருஷ்டமோ\nயானறியேன் பராபரமே. இன்றைக்கு கட்டுரைகள் பக்கம் அவர் உதிர்க்கும்\nஅனைத்து statements களுடன் ஒத்துப்போவது என்பது என் போன்றவர்களுக்கு\nசாத்தியமில்லை என்பதும் முரண்தொடையாக இருப்பதை மறைப்பதற்கில்லை.\nஇவ்வளவு பீடிகையும் இப்போது எனக்குத் தேவைப்படுகிறது. ஆய்வுரை என்று\nசொன்னதாலேயே புரிந்த புரியாத சரியாக உச்சரிக்க கூட தெரியாத எந்த\nஇசங்களையும் மேற்கோள் காட்டி அந்தச் சட்டத்துக்குள் நாஞ்சில் நாடனின்\nசிறுகதைகளை அளந்துப் பார்க்கும் அதிமேதாவி அறிவுஜீவித்தனம் எனக்கு\nஉடன்பாடல்ல. கொடுக்க கொடுக்க குறையாத அமுதசுரபியும் அந்த ஆபுத்திரன்\nகதையும் பிற எந்த மொழியிலும் காணக்கிடைக்காத தமிழனின் அசல்\nகதை. தமிழனின் மூலக்கதை. தமிழ் மரபின் கனவு, கற்பனை. தமிழ் பண்பாட்டின்\nஉச்சம், தமிழன் இந்த உலக மானுட குலத்திற்கே கொடுத்த ஓர் உன்னதமான\nபண்பாடு. தமிழ் தொன்மங்களை நன்கு படித்தவர் , தெரிந்தவர், புலமை மிக்கவர் என்பதுடன்\nஅந்தச் சாலச்சிறந்த தொன்மத்திலிருந்து எடுத்துச் சொல்ல எத்தனையோ இருப்பதினால்\nஇன்றைய நவீன படைப்புலக விலாசத்தில் மேனாட்டு வாந்தி எடுப்புகளுக்கெல்லாம்\nதனிக் கவனிப்பு இருப்பதைக் கண்டும் கேலியும் கிண்டலுமாக அதைக் கடந்து\nதொடர்ந்து எழுத்துலகில் தன் பயணத்தைத் தொடர்வதை அவர்\nசிறுகதைகளின் போக்கு நமக்கு உணர்த்துகிறது.\n'கவிதை எழுதுவதில் உள்ள கவுரவம் நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைப்\nபுரிந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது ' என்று அடிக்கடி\nமுழுங்குகின்ற மார்க்சிய மேடைகள் , பேரணிகள், இன்குலாப் ஜிந்தாபாத்\nகோஷங்கள் கற்பிக்காத அல்லது காட்டாத எம் நிலத்தையும் வாழ்க்கையையும்\nஇவர் சிறுகதைகள் காட்டி இருக்கின்றன என்பது உண்மை.\n'வயல் அறுவடையின் போது ஏராளமான நெல்மணிகள் வயலில் உதிர்ந்து போய்\nவீணாகின்றன. இப்படி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய\nவிஞ்ஞானிகள் வழி கண்டு பிடிக்க கூடாதா என்று ஒரு சிறுவன் தன்\nஅப்பாவிடம் கேட்கிறான். 'இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட\nமழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்\nநாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மைச் சுத்தி காக்கா,\nகுருவி, எலி, பாம்பு , தவளை, விட்டில், புழு, பூச்சி எல்லான் சீவிக்கணும்.\nஅதை மறந்திரப்பிடாது' என்கிறார் அவன் அப்பா. அந்தச் சிறுவன் தான்\nஎழுத வரும்போது அவன் கண்ட அந்த விவசாய உலகம் அவன் படைப்புலகமாக\nவிரிகிறது. விவசாயத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் அறிந்தவர் என்பதால்\nஅந்தப் பின்புலம் அவர் சிறுகதைகளின் ஆளுமையாக தனித்துவமாக இருக்கிறது.\nவாய் கசந்தது என்ற சிறுகதையில் சூடடிக்கும் காட்சி விலாவரியாக அவர்\nஎழுதிச் சென்றிருக்கிறார். அரிசி மரத்தை ஊருக்குப் போனபோது தோட்டத்தில்\nதேடிய மும்பை குழந்தைகள் பலருண்டு. இதைச் சொல்லும் போது வேதனை தான்\nமிஞ்சுகிறது. இந்தக் கதையின் இந்த விவரங்கள் கூட நாளைய நம் தலைமுறைக்கு\nஓர் ஆவணமாகிவிடுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இக்கதையை\nநான் சொல்ல வருவதற்கு காரணம் இக்கதையின் உத்தியோ கருப்பொருளோ\nஏன் ஆவணமாக்கியிருக்கும் விவசாயக்காட்சியோ அல்ல. இக்கதையின் ஊடாக\nஅவர் வைக்கும் ஒரு நுண்ணிய அரசியல். இந்த அரசியலில் எவ்விதமான\nவயலில் விளைந்த நெல்லை கூலியாக அளந்து கொடுக்கும்போது அளக்கின்ற\nமரக்கால் வேறாகிவிடுகின்ற காட்சி, இரவு ஒன்றரை மணிக்கு எழுந்து சூட்டடிக்கப்\nபோன ஐயப்பனுக்கு கிடைக்கின்ற கூலியின் மதிப்பு 2 ரூபாயும் இருபது பைசாவும்.\nக்தைக்கு த்லைப்பு வாய் கசந்தது. இந்த மரக்கால் மாறுவதும் கூலியும்\nகாலம் காலமாக விவசாய பெரும்புள்ளிகள் நடத்தும் சுரண்டல் தான்.\nஆனால் ஐயப்பனின் தாத்தாவோ அப்பனோ புரிந்து கொள்ளாததை அல்லது\nஏற்றுக்கொண்டதை இவனால் மட்டும் அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள\n அவன் படிக்கிற பையனாக இருப்பதாலா\nவிகிதாச்சார கணக்கு வாய் கசக்க வைக்கிறது. ஐயப்பனுக்கு.\nகொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்துவிட முடிகிறது நாஞ்சில் நாடனால்.\nநாஞ்சில்நாடன் படைப்புகள் குறித்து கடுமையான இன்னொரு விமர்சனம் வைக்கப்படுவதை\nநானறிவேன். அதுதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சாதி சான்றிதழ். அதாவது\nவெள்ளாளர் எழுத்து என்று. மொக்கையான விமர்சனம்.\nஇவை குறித்து நாஞ்சில்நாடன் அவர்களே அதிகமாக பேசி இருக்கிறார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் அவருடைய 'சில வைராக்கியங்கள்'\nசிறுகதை என் நினைவுக்கு வரும். குமரி மாவட்ட வேளாளர் மாநாடு நடக்கிறது.\nமேடையில் வேளாளர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்\nஎன்று பேசுகிறார் தலைவர்.பூதலிங்கம் பிள்ளை. மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற\n.கதை மாந்தர்களான பரமசிவம் பிள்ளைக்கு அவர் பேச்சு ரசிக்கிறது. சங்கரலிங்கம் பிள்ளை\nஅவன் ஏன் பேச மாட்டான் அவனுக்கென்ன நிமுந்தா வானம், கவுந்தா பூமி\n\"ஏன் பேசுவதிலே என்ன தப்பு உள்ளதத் தானே சொன்னாரு இந்தக் காலத்தில் சாதீகீதி எல்லாம்\n எல்லார் ஒடம்பிலேயும் ரெத்தம் சிவப்புதாலா\nபுல்லறுக்கிறவளைத் தூக்கி வரப்பிலே கெடத்தும் போது சாதி எங்கே ஓய் போச்சு\n..................................காலத்துக்கு ஏத்தாப்பிலே மாறாண்டாமா நாமளும்\nஎன்று ப்ரமசிவம் பிள்ளை பொரிந்தார் என்று ஒரு காட்சி. அடுத்த காட்சி அவர்\nவீட்டில் மகளுக்கு வரன் துப்பு கொண்டு வந்து காத்திருக்கிறார் அவர்\nமைத்துனர். விசாரிக்கும் போது தெரியவருகிறது பையன் யாரென்பது.\nஎன்ற பரமசிவத்திடம் 'அதெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா முடியுமா\nபரமசிவம் பிள்ளை இடைவெட்டினார். 'சரிதான், சோலியைப் பாத்துக்கிட்டு போடே\nஎன்று முடியும் கதையில் தான் சாதியம் இன்றுவரை நிலைத்திருப்பதற்கான\nஅடிப்படைக் காரணமான அகமண முறை அம்மனமாக்கப்பட்டிருக்கும\nஇந்தியாவில் சுயசாதி அடையாளத்தை துறந்தவர் எவருமில்லை.\nஎழுத்தாளன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அந்த சாதிக்குள்ளெ\nபிறந்து வளர்ந்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி\nதன் படைப்புகளில் சாதிய முள் வேலிகளை உடைத்துக்கொண்டு\nதிமிறிக்கொண்டு காயங்களுடனும் ரத்தம் சொட்டவும் வெளிவர\nதொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறான்.\nநாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி.\n'சின்னஞ்சிறு வயதில் ஆறோ ஏழோ படிக்கின்ற போது ஊரில் நடந்த திருமண வீட்டில்\nமத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடன் அனுமதி பெற்று ஒன்றரை மைல் ஓடிவந்து\nபந்தியில் உட்கார்ந்திருக்கும்போது , உடை கண்டு, பொருளாதர நிலை கண்டு,\nபந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும்\nமறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின் பலகணிகள் மூலமாகச்\nசுற்றியிருந்த உலகைப் பார்த்தேன் \" என்று அவரே பதிவு செய்துமிருக்கிறார்.\nஅந்தப் பசியின் முகத்தை ஆரம்பகால கதைகள் முதல் அண்மையில் வெளிவந்திருக்கும்\nகதைகள் வரை அப்படியே கோட்டோவியாமாக வாசகனுக்கு கொடுத்துக்கொண்டே\nஇருக்கிறார். 1975களில் எழுதிய விரதம் கதையில் சின்னத்தம்பியா பிள்ளைக்கு\nதிருமணமான தன் இரு மகள்களிடமும் விரதச்சாப்பாடு சாப்பிட வ்ந்திருப்பதை\nபசித்திருக்கும் நிலையிலும் சொல்ல முடியாமல் சுய கவுரவம் தடுக்கிறது.\nபசியோடு வெந்நீரை வாங்கி குடித்துவிட்டு சாப்பிட்டாகிவிட்டது என்பதை\nகாட்டிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இருள்கள் நிழல்களல்ல கதையில்\nதிருமண வீட்டில் பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து காத்திருக்கும் பண்டாரம்,\nபிசைந்த சோற்றைப் பிச்சை வாங்கித் தின்பதா\nவிலக்கும் விதியும் கதையில் எண்ணெய்த் தேய்த்து குளித்துவிட்டு வரும்\nபரமக்க்ண்ணு கருவாட்டுக்குழம்பை நாய் நக்கியதைப் பார்த்து விடுகிறான்.\nநாய் தின்ற மிச்சத்தைத் தின்பதா எங்கெல்லாம் வாய் வைத்துவிட்டு வந்ததோ\nஎன்று நினைத்தாலும் பசியின்சுரண்டல் ஜெயிக்கிறது. இப்படியாக அவர் கதை நெடுக\nஅவரை பல்வேறு விதமாக துரத்தும் பசி தனிமனித உணர்வாக இருக்கும் வயிற்றுப் பசி\nஒரு சமுதாயப் பண்பாட்டின் எச்சமாக படைப்பின் உச்சத்தை எட்டிப்பிடித்திருப்பது\nஅவருடைய 'யாம் உண்பேம்' சிறுகதையில் தான். நாஞ்சில் நாடனின் பசி குறித்த\nமேற்சொன்ன கதைகளில் எல்லாம் ஏற்படாத ஓர் உணர்வின் உச்சம் அவருடைய\n'யாம் உண்பேம்' சிறுகதை மூலமாக நான் உணர்ந்தேன். சூடிய பூ சூடற்க\nகதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அச்சிறுகதையை வாசித்தவுடன்\nஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது எனக்கு.\nஇந்தக் கதையை வாசிக்கும் முன் இந்தக் கதைக்கான பின்புலத்தை மிகவும்\nதெளிவாக அருந்ததிராயின் புரோக்கன் ரிபப்ளிக் கட்டுரைகளும் அதற்கு முன்பே\nஎழுத்தாளர் இந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் நாம்'\nஎன்ற ஆதிவாசிகளின் கவிதைகளும் எனக்கு கொடுத்திருந்ததும் ஒரு காரணமாக\nநம் ஆரண்யகாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, காட்டையும்\nகழநியையும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு பிச்சை கேட்கவே\nதெரியாது. அதை அவன் அறிந்திருக்கவே இல்லை. பெற்ற மகன் குடும்பத்துடன் செய்து\nகொண்ட தற்கொலை அவனை அவன் இடத்திலிருந்து விரட்டுகிறது. பசியின் விரட்டல்\n\"எதிரே இருப்பவன் ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் வாய்க்கு கொண்டு போகும்\nநேரம், பாபுராவின் உயர்த்திய கையை , முதிய தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப்\nபிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து\n'அமி காணார்.... அமி காணார்..'\nஎனக்குத் தா என்றல்ல , நான் தின்பேன் என்றல்ல, நாம் உண்போம் என.\nதூய சங்கத் தமிழில் பெயர்த்தால் யாம் உண்பேம் என.\nகண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் பதற்றம் பரவ,\nஅமி காணார்... அமி காணார்...\nநண்பர்களே... இந்த இடத்தில் தான் நான் உடைந்து சுக்குநூறாகி ஓவென\nஉண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்\nஅமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்\nஎன்று சொன்னானே 2500 ஆண்டுகளுக்கு முன் ஒருவன்\nஇம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம் எனும்\nஅறவிலை வணிகன் ஆஅய் அல்லன்\nபிறரும் சான்றோர் சென்ற நெறி என\nஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே\nஎன்று சொர்க்கம் நரகத்திற்கு அஞ்சாமல் வாழ்ந்தானே ஒரு இனக்குழு தலைவன்.\nஎன்று ஆவேசப்பட்டானே நம் பாரதி...\nஇதை எல்லாம் தன் பண்பாடாக கொண்டு வாழ்ந்தவனால்தான்\nஅந்த 'அமி காணார் அமி காணார் ' என்ற குரலில் ஒலித்த\nஅவலத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் குரலில் ஒலித்த\nபசி தனி மனிதன் ஒருவனின் பசி மட்டுமல்ல, இது இந்த நாட்டின்\nபண்பாட்டைச் சுரண்டுகின்ற பசி, இது ஒரு தனிமனித அவலம் அல்ல,\nஒரு சமூக அவலம். அவமானம், ஏன் ஆபத்தும் கூட\nஇக்கதை நாஞ்சிலாரின் சொந்த அனுபவம் தான்\nஎன்பதை அவருடைய நக்கீரன் நேர்காணல் வழி அறிந்து கொண்டேன்.\nஅமி காணார் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவரும் அழுதிருக்கிறார்.\nவாசித்தவனையும் அழ வைத்திருக்கிறது அக்கதை. இந்தக் கதையின் நிஜம்\nநம்மைச் சுடுகிறது. தன் அனுபவத்தை வாசகனின் அனுபவமாக்குவதில்\nவெற்றி காண்பது தான் ஒரு சிறந்த படைப்பு . விமர்சன பிதாமகன்கள்\nஇதற்கு என்னவெல்லாமோ பெயர் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக\nஎழுதிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கட்டும்.\nஎன்னளவில் இதுவே ஒரு படைப்பாளனின் வெற்றி என்று கருதுகிறேன்.\nநாஞ்சில் நாட்டு வாழ்க்கை பின்னணியில் எழுதப்பட்டவை, மும்பை நகர வாழ்க்கை\nதந்த அனுபவங்களின் ஊடாக அறிந்ததும் அனுபவித்ததும் இந்த இரண்டு வாழ்க்கையையும்\nஇணைக்கும் அவருடைய பயணங்கள், பயணங்கள், அந்தப் பயணங்கள் கற்றுக்கொடுத்த\nபரந்து பட்ட இன்னொரு உலகம், பசியின் துரத்தல் ஆகிய வட்டங்களைச் சுற்றி சுற்றியே\nஎழுதப்பட்டிருக்கிறது நாஞ்சிலாரின் சிறுகதைகள். சிறுகதையில் உத்தி, மொழி நடை,\nவர்ணனை இவற்றில் கூட பெரிதாக எந்த மாற்றத்தையும் சொல்வதற்கில்லை.\nஆனால் 2000க்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் கதைகளின் மொழி உத்தி\nஆகியவற்றில் கும்பமுனி கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.\nகட்டுரைகள் அதிகம் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தினாலோ என்னவோ\nஇக்கதைகள் கட்டுரைப் பாங்கான ஒரு மொழிநடையைக் கொண்டிருப்பதும்\nகும்பமுனியின் கேலியும் கிண்டலும் குசும்பும் தான் கட்டுரைகளை கதைகளாக்கி\nஇருப்பதில் பெரும்பங்காற்றி இருக்கின்றன என்றும் சொல்லலாம்.\nநாஞ்சிலார் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் என்று அவர் நாவல்களை\nமுன்வைத்து நான் ஏற்கனவே பதிவு செய்திருப்பதிலிருந்து சிறுகதைகள்\nஎவ்விதத்திலும் மாறவில்லை. சொல்லப்போனால் சிறுகதைகள் பெரும்பாலும்\nஆண் கதை மாந்தர்களைச் சுற்றி சுற்றியே வருகின்றன. ஒன்றிரண்டு\nசிறுகதை விதிவிலக்காக 'உபாதை ' சிறுகதையைச் சொல்லலாம்.\nசில கதைகளில் 'சும்மா' வந்து தலையைக் காட்டிவிட்டு போகும்\nபெண்கள்.. பல கதைகளின் அதுதானும் கிடையாது \nநாஞ்சிலாரின் படுவப்பத்து கதையை வாசிக்கும் போது புதுமைபித்தனின் புதிய கந்தபுராணம்\nசிறுகதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nதமிழ் இலக்கிய விமர்சனங்களில் ஒப்பீட்டாய்வு என்ன காரணத்தினாலோ பெரும்பாலும்\nஒதுக்கப்பட்டே வந்திருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகளுடன் நாஞ்சிலாரின் சிறுகதைகளை\nஒப்பீட்டாய்வு முறையில் அணுகுவது விமர்சன உலகில் ஆரொக்கியமான ஒரு சூழலை\nதொன்மங்களை புராணங்களை அறிந்த படைப்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்\nநாஞ்சிலார். தான் தமிழுக்கு எழுத வந்ததன் காரணகர்த்தாக்களில் ஒருவராக\nஅன்றைய பம்பாய் தமிழ்ச் சங்கம் நடத்திய இராமயண வகுப்பும் வகுப்பெடுத்த\nரா.பத்மநாபன் என்று ......... குறிப்பிடும் நாஞ்சிலார் இன்றுவரை புராணங்களின் தொன்மத்திலிருந்து\n (அப்படி எதுவும் எழுதப்பட்டிருந்தால் அதை\nநான் வாசிக்கும் அனுபவம் கிட்டவில்லை என்று ஈண்டு பொருள் கொள்க\nராமாயணம் படிச்சா ப்டிச்சிருக்குனு சொன்னா உடனே சீதையைப் பத்தி எழுதித்தான் ஆகணுமா,\n எழுதுனதை விமர்சிக்கலாம், இதை ஏன் எழுதலை, நீ அதை ஏன் எழுதலைனு\nவிமர்சனங்கிற பேர்லே சொல்லிக்கிட்டே போகுது பாருங்க... இதுகளுக்கெல்லாம் நான் என்னத்தைச்\nசொல்லட்டும் இன்னும் என் பாட்டன் கோவணத்தையே எழுதி முடிக்கலை, அதுக்கப்புறமில்ல\nபடிச்சதும் பிடிச்சதும்னு ..... கும்பமுனியின் அடுத்தக் கதையில் வரலாம்\nசரி இருக்கட்டும்... இப்போதெல்லாம் நாஞ்சிலாரின் கட்டுப்பாட்டுக்குள்\nகும்பமுனி இல்லை என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள், உண்மையா நாஞ்சில் சார்\n(12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு\nஅமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில்\nநாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை .\nமாதா+ பிதா +குரு < கொலைவெறி\nஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்\nஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்\nதிடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு\nஇந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு.\nஇந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும்.\nஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க\nமுடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க\nஅவன் மட்டும் தான் காரணமா\n. எப்போதும் 100% மாணவர்கள் தேர்ச்சி இருந்தே ஆகவேண்டும்\nஎன்று ஆணையிடும் பள்ளி நிர்வாகம். அதற்காக நிர்பந்திக்கப்படும் ஆசிரியர்களும்\nவகுப்பறைகளும். பாடப்புத்தகம் படிப்பது தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தினால்\nமதிப்பெண்கள் குறைந்துவிடும் என்ற தவறான கருத்து பரப்புரை.\nஎனக்குத் தெரிந்த ஒரு பள்ளி கூடத்தில் மாணவ மாணவியர் இரவில்\nபள்ளி கூடத்தில் தங்கியாக வேண்டும். காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு\nவந்து குளித்து உடைமாற்றி சாப்பாடு எடுத்துக்கொண்டு மீண்டும்\nவகுப்புகளுக்குப் போக வேண்டும். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீது\nஅவ்வளவு அக்கறை அந்த பள்ளி கூடத்துக்கு\nசில ஆசிரியர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின்\nவடிகாலாக \"நான் ரொம்பவும் கண்டிப்பான டீச்சராக்கும்\nஅம்மா அப்பாவுக்கு எப்படியும் தன் பிள்ளை எஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்பதுதான்\nஆசை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெருகிவரும் பொறியியல் கல்லூரிகள், அங்கே நடக்கும்\nபி.இ. டிகிரி விற்பனை சந்தை ரொம்பவும் லாபகரமான தொழிலாக கொடி கட்டிப் பறப்பது\nஇதனால் தான். நடுத்தர குடும்பத்தில் இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு\nமேலிருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் தங்கள் குழந்தைகளின்\nமீது சுமைகளாக ஏற்றி வைக்கும் செயல். ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின்\nவாரிசுகள் தான் என்றாலும் பெற்றோர்களின் நகல்கள் அல்ல. இந்தப் புரிதலை\nஅதிகம் படித்த பெற்றோர்களும் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தங்கள்\nவாரிசுகளை நினைத்து அச்சம், அவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சம்,\nநண்பர்களின் குழந்தைகள் எல்லாம் எஞ்சினியராகிவிட்டால், தங்கள் குழந்தையும்\nஎப்படியும் எஞ்சினியர் ஆகியே தீரவேண்டும். இல்லையென்றால்,\nஅந்த ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளவே\nமுடியாது, அந்த அச்சமும் எதிர்பார்ப்பும் பல நேரங்களில் அளவுகடந்துப் போய்விடுவதாலும்\nநிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைத் துரத்திக் கொண்டே இருப்பதாலும்\nஅவர்களும் தங்கள் குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். விளைவு..\nஒரு குழந்தைக்கு தன் ஆசைகளை, தன் இயலாமைகளை தன் தோல்விகளை,\nபகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த அம்மா அப்பாவுடன் சேர்ந்து ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும்\nஎரிகிற வீட்டில் பெட்ரோலை ஊற்றிவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள்.\n90 விழுக்காடுக்கு குறைவாக தங்கள் பிள்ளை மதிப்பெண் எடுத்திருந்தால்\nவிரக்தியின் உச்சத்திற்கே போய்விடும் பெற்றோர்களை மட்டுமே\nஅம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போய்வரும் சூழலில் 10 ஆம் வகுப்பு\nவந்தவுடன் இருவரும் மாறி மாறி விடுப்பு எடுத்து வீட்டிலிருந்து\nஅந்தக் குழந்தையைக் கவனிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு\nநடத்தும் நாடகம் இருக்கிற்தே அது நம் கற்பனைக்கு எட்டாதது.\nஒரு காலத்தில் கோச்சிங் க்ளாஸ் போவது என்பது அந்த மாணவனுக்கு மட்டுமல்ல\nஅவன் படிக்கும் பள்ளி கூடத்துக்கும் தரக்குறைவான ஒரு செயலாக பார்க்கப்பட்டது.\n பள்ளி நிர்வாகம், வீடு குடும்பம் இதெல்லாம் போதாது என்று கோச்சிங்\nக்ளாஸ்கள்.... ஒரு வீதிக்கு ஒன்றிரண்டு.. நம் பிள்ளைகள் பாஸாகிவிடுவார்கள்\nஅதுவும் 80 முதல் 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து என்ற உத்திரவாதத்துடன்\nஇந்தக் கோச்சிங் க்ளாஸ்களின் கால அட்டவணையைப் பார்த்தால் த்லைச் சுற்றும்.\nஒரு கோச்சிங் க்ளாஸ் டாய்லெட் கதவுகளில் கணக்கு சூத்திரங்களை ஒட்டி\nவைத்திருக்கும் ஸ்டிக்கர்களை மாணவர்களுக்கு கொடுத்திருந்தார்கள் என்றால்\nபார்த்துக்கொள்ளுங்களேன். அதாவது மாணவர்கள் கக்கூசிலிருக்கும் போது கூட\nநேரத்தை வீணாக்காமல் கணக்குப் பாடம் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்க்ளாம்\nகாலையில் எழுந்து பல் துலக்குவதிலிருந்து இரவு எத்தனை மணிக்குத் தூங்க\nவேண்டும் என்பதை அட்டவணைப் போட்டு மாணவர்களுக்கும் அதைக்\nகண்காணிக்க பெற்றோர்களுக்கும் கொடுத்திருக்கும் புகழ்பெற்ற பள்ளி கூடங்களையும்\nமாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை\nவிடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும்\nசமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nகொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான்.\nநம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற\nஅபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.\nயோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில்\nகொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை\nமட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.\n(சென்னையில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளியில்\n9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களை, திட்டமிட்டு\nதான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 14 இடத்தில் குத்தி கொடூரமாக கொலை\nசெய்திருக்கிறான். அந்தச் செய்தியின் தாக்கம் தான் இக்கட்டுரை. செய்தியில் இடம் பெற்ற ஆசிரியை, மாணவர்,\nபள்ளிகூடம் , அவர் குடும்பம் இத்தியாதி தனிப்பட்ட எவர் மீதும் குற்றம் சுமத்துவது என்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... கேலிச்சித்திரங்கள் வரைந்து...\n“ நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன் .” …. வாஜ...\nசமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர் தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் நிமித்தம் ...\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\n15 ஆகஸ்டு 1947.. அந்த நள்ளிரவு சுதந்திரத்தில் இந்திய சுதந்திர வரலாற்றின் பிதாமகன் மகாத்மா காந்தி...\nIRADA … ECO THRILLER மட்டுமல்ல. இது கேன்சர் டிரெயின் கதை, நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத நிஜம். இவர்கள் நம் தேசத்தில் த...\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nஇனக்குழு சமூகத்தின் அடையாளங்கள் மாறிவிடாத முடியாட்சி காலம் . சித்தார்த்தனின் சாக்கியர் இனக்குழுவும் கோலியாஸ்...\nகேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம் , காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை .. என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட...\nநம்மைத் திருடுகிறார்கள் . நம் எழுத்துகளை அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் . திருடுவது எளிது . அதைவிட எளிது ...\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nஒருநாள் சாய் காஃபி செலவு ரூபாய் 48,000...\nபசித்தவனின் பயணம் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\nமாதா+ பிதா +குரு < கொலைவெறி\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/aishwarya-and-yashika-talk-about-ponnambalam/", "date_download": "2018-08-21T13:32:16Z", "digest": "sha1:AJXZWLWYVB6BBGIVI6LFZEIE6IQBLQQT", "length": 10415, "nlines": 135, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொன்னம்பலம், ரித்விகா,ஜனனி...! பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பொன்னம்பலம், ரித்விகா,ஜனனி… பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..\n பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..\nபிக் பாஸ் வீட்டில் இருந்து ஷாரிக் அவர்கள் கமல் முன்னிலையில் வெளியேற்றப்பட்டார். அவரது வெளியற்றதின் போது பலரும் கண் கலங்கிய நிலையில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா சற்று அதிகமாகவே அழுதார்கள் என்பது தான் உண்மை. குறிப்பாக ஐஸ்வர்யா நான்கு முறைக்கும் மேல் அவரை கட்டி பிடித்து அழுதார். கடந்த வாரம் ஷாரிக் அவர்களை ஐஸ்வர்யா சற்று கடுமையாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் அவர் வெளியேற்றத்திற்கு பிறகு யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மஹத் நாமினேஷன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். யாரை இந்த வாரம் நாமினேட் செய்ய வேண்டும் என்பது பற்றிய உரையாடலாகவே அது இருந்தது.\nஅப்போது மஹத் அவர்கள் சென்றாயனை கண்டிப்பாக நோமின்டே செய்யப்போவதாக கூறினார். அதற்கு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ரசத்தை நோமின்டே செய்ய கூறினார். மஹத் அவர்களுக்கு முதலில் ரசம் யார் என்று புரியவில்லை பிறகு ரித்விக்காவை தான் ரசம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று அவர் புரிந்து கொண்டார்.\nஅதோடு எந்த வாரம் நாமினேஷனில் அதிக வாக்குகள் பெறப்போவது பொரியல் என்று யாஷிகா கூறுகிறாள். அவர் பொரியல் என்று கூறுவது நடிகர் பொன்னம்பலம் அவர்களை தான்.\nஅது மட்டுமல்லால் அவர்கள் நடிகை ஜனனி அவர்களுக்கு வைத்துள்ள பட்ட பெயர் ஜலப்பினோ. வயதிலும் அனுபவத்திலும் அவர்களை விட பெரியவர்களை இவ்வாறு பட்ட பெயர் வைத்து அழைப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. இவர்கள் இருவரும் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இருவரும் இவ்வாறு பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்வதை கமல் அவர்கள் தட்டி கேட்கவேண்டும், குறும்படம் காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே இணையதளவாசிகளின் கருத்து.\nPrevious articleஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..\nNext articleகமல் ரஜினியை நம்ப முடியாது. மோசமாக விமர்சித்து பேசிய பிரியா பவானி ஷங்கர். மோசமாக விமர்சித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய் அவார்ட்ஸ் 2018 தொகுத்து வழங்கப்போவது இவர்களா\nடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா.. பாத்தா நம்பமாட்டீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/shankar-has-appear-court-tomorrow-054861.html", "date_download": "2018-08-21T14:25:11Z", "digest": "sha1:SZGMJADZHEWE7QJYL7RN5DRMPXJXLH5F", "length": 11066, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு! | Shankar has to appear in court tomorrow! - Tamil Filmibeat", "raw_content": "\n» எந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nஎந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: எந்திரன் திரைப்பட கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் நாளை ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.\n2010 ஆம் ஆண்டு எந்திரன் ரிலீஸ் ஆனபோது, அந்த படத்தின் கதை தன்னுடையது எனவும், நஷ்ட ஈடாக ரூ.1 கோடி தர வேண்டுமெனவும் வழக்கு தொடர்ந்தார் எழுத்தாளர் ஆரூர்\n7 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தன் தரப்பு ஆதாரங்களை ஷங்கர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டார்.\nஇந்த வழக்கின் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஷங்கரின் உதவியாளர் யோகேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nஷங்கரின் உதவியாளர் யோகேஷ் சாட்சியளிக்க வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கதை திருட்டு தொடர்பாக ஷங்கர் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் எழுத்தாளர் ஆரூர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நாளை இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது\nரஜினிகாந்த், அக்ஷய் குமர், ஏமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள எந்திரன் 2.0, இந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nரஜினி - சன் பிக்சர்ஸ் மீண்டும் மெகா கூட்டணி... 'எந்திரன்' போல வசூல் குவிக்குமா\nஎந்திரன் வசூலை முறியடித்துவிட்டதா மெர்சல்\n2.ஓ மேடையில் ரஜினியின் காஸ்ட்யூமில் அசத்தவிருக்கும் தமன்னா\n - இயக்குநர் ஷங்கர் விளக்கம்\nஎந்திரன் பட வழக்கு: சன் பிச்சர்ஸுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம்\nஎந்திரன் 2 வில் எமி ஜாக்சனும் ரோபோவாம்- ஆனா ஹீரோயின் இல்லையாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/market-sets-time-high-sensex-above-38-000-nifty-11-495-012297.html", "date_download": "2018-08-21T14:12:38Z", "digest": "sha1:E4O66NLOBRUDDE5EIQ3QWUVECSHTDVY2", "length": 15105, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..! | Market Sets All Time High: Sensex Above 38,000, Nifty 11,495 - Tamil Goodreturns", "raw_content": "\n» 38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..\n38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nபிளாட்டாக முடிந்த பங்கு சந்தை..\nஇந்த வாரம் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nஇந்திய பங்கு சந்தை குறியீடுகளில் முதன்மையான சென்செக்ஸ் வியாழக்கிழமை காலை சந்தை துவங்கிய உடன் 38,000 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்தது.\nசந்தை துவங்கிய உடன் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 108 புள்ளிகள் என 0.28 சதவீதம் உயர்ந்து 38,002 புள்ளிகளைத் தொட்டுச் சாதனை படைத்தது.\nதேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 21.90 புள்ளிகள் என 0.20 சதவீதம் உயர்ந்து 11471.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.\nஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கிகல் லாபம் அளித்து வருகின்றன. அதே நேரம் மாருதி சுசூகி, வேதாந்தா, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, எண்டிபிசி, இந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் நட்டம் அளித்து வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்செக்ஸ் நிப்டி பங்கு சந்தை உயர்வு சாதனை market sensex nifty stock market\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nவறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF/", "date_download": "2018-08-21T14:00:11Z", "digest": "sha1:KPLP2DIHIQTJE6EBQTX5TNTTLTS4RSBE", "length": 6803, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "இந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா\nஇந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் சாக்கடை மேல் டீக்கடை என்ற தலைப்பில் மெயின் ரோடு ஹபீபா ஹைப்பர் மால் எதிரே திறந்தவெளி சாக்கடை கால்வாயை மூட வேண்டும் என கோரிக்கையை வெளியிட்டு இருந்தோம்.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை நகர சேர்மன் மறைக்கா இதீரீஸ் அகமது அவர்கள் தாசில்தார், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர் கோரிக்கையை மேற்கொண்டார்.\nஇதன் பலனாக அக்கால்வாயை மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் தற்போது அந்த கால்வாய் சிமிண்டால் ஆன ஸ்லாப்கள் கொண்டு மூடபட்டன.\nஇதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லை குறைவதுடன் துர்நாற்றம் இன்றி காணப்படுகிறது.\nஇதற்க்கு அயராது பாடுபட்ட IRCS சேர்மன், நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட, பேரூர் நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவருக்கும் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-08-21T13:22:48Z", "digest": "sha1:B7BD4FELQWW6NBCHRGTSDHQKIGIKAOOG", "length": 4750, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒட்டுக்குடுமி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆங்கில உச்சரிப்பு - oṭṭu-k-kuṭumi\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2015, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?m=201805&paged=15", "date_download": "2018-08-21T13:32:56Z", "digest": "sha1:TYSKNBV2QSZLEYKV3C2CWHPGJUYWUYVG", "length": 16138, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | 2018 May", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் முதலிடம் பெற்று சாதனை\n– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம், இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. அறபா வித்தியாலயத்தில் சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.3 வீதான மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று\nதினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு\n– எம்.எஸ்.எம். நூர்தீன் – காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை (28.4.2018) தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தமையினை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் காத்தான்குடியிலுள்ள\nநல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல்\nநல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை\nஹபாயா விடயத்தில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இழுக்கானது: த.வி.கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி\n– அஸ்லம் எஸ்.மௌலானா –தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று, முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர\nதிருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம்\n– அஹமட் – திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும் அந்தப் பாடசாலையின் அதிபர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாகத் தெரியவருகிறது. அவ்வாறு முடியாது விட்டால் வேறு பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், குறித்த ஆசிரியையிடம் அதிபர் கூறியுள்ளார்.\nரவிக்கு ஏமாற்றம், பொன்சேகாவுக்கு அதிருப்தி\nபுதிய அமைச்சரவை நியமனத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், அது – கிடைக்கவில்லை. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தொடர்புபட்டார் என்கிற குற்றச்சாட்டினை அடுத்து, தான் வகித்து வந்த அமைச்சர் பதவியை ரவி ராஜிநாமா செய்திருந்தார். அதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு\nஇலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த, தாய்லாந்தின் சிமெந்து நிறுவனம் முன்வருகை\n“இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு, இன்சீ’ (INSEE) சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோகக் குழு ஒன்றினைந்துள்ளோம்” என ‘இன்சீ’ சிமெந்து உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தின் நிறைவேற்றுத் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான ஜான் குனிக் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் முனைவோர் கூட்டு\nபுதிய அமைச்சரவை நியமனம்: விஜேதாசவுக்கு உயர்கல்வி அமைச்சு\nதேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று செவ்வாய்கிழமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டன. தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். அதிகமான அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் தற்போது மாற்றப்பட்டுள்ள போதிலும், சிலருக்கு முன்னைய அமைச்சுப் பதவிகளே தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள்\n– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கதை சொல்லவா “முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது.\nமாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு\nமாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன. மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையினை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமையால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.amarx.in/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-21T14:07:48Z", "digest": "sha1:76R2LF4TU255GINRSTXDYSAWLLG4GX35", "length": 39129, "nlines": 150, "source_domain": "www.amarx.in", "title": "ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்\nரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்\n“இது கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதைப்போல பெரிய நகைச்சுவை ஏதுமில்லை”\n(டாக்டர் பிரபாத் பட்நாயக் அவர்கள் வாழும் மூத்த பொருளியல் அறிஞர்களில் ஒருவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் “தகுதிமிகு உயர் பேராசிரியராக” (Professor Emeritus) ஆக ஏற்கப்பட்டுள்ளவர். மார்க்சீய நோக்கில் ‘பணமதிப்பு’ , “ஏகாதிபத்தியம்” முதலானவை குறித்து எழுதப்பட்ட சில மிக முக்கியமான நூல்களின் ஆசிரியர். “கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிப்பதற்காக” எனச் சொல்லி இன்று 1000 மற்றும் 500 ரூ நோட்டுகள் செல்லாது என அறிவித்து நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை எத்தனை போலித்தனமானது என்பதை விளக்கி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் thecitizen.com ல் எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று. அதன் முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்துள்ளேன். எனினும் இது அக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு அல்ல)\n1000 மற்றும் 500 ரூ நோட்டுக்களைச் செல்லாது என (demonetization) என மோடி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கருப்புப் பணச் சேமிப்பின் மீது ஒரு ஒரு ‘சர்ஜிகல் தாக்குதல்’ நடத்துவது, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கள்ள நோட்டுக்களை ஒழித்துக் கட்டுவது – என இரு நோக்கங்களுக்காக இது செய்யப் படுவதாக மோடி முழங்கியுள்ளார்.\nஇந்த நடவடிக்கை கருப்புப் பணப் பிரச்சினையை ஒழித்துவிடுமா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களை செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என நம்புவது கருப்புப் பணம் என்றால் என்ன என்பதையும், அதன் செயல்பாட்டையும் சாரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவு. கருப்புப் பணம் என்றால் ஏதோ கணக்கில் காட்டாமல் தலையணைக்குள் மறைத்து வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள பணம் என்கிற சிறு பிள்ளைத் தனமான புரிதலின் விளைவு இது. அப்படி மறைத்து வைத்திருப்பவர்கள் இப்படி அந்த நோட்டுகள் செல்லாது என அறிந்தவுடன் அவற்றை மூட்டை கட்டித் தூக்கிக் கொண்டு வங்கிகளுக்கு வரும்போது அவர்களை ‘லபக்’ எனப் பிடித்துவிடலாம் என்று அவர்கள் சொல்கின்றனர். கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்க முனைந்த கோமாளிகள் நிச்சயம் இவர்களை விடப் புத்திசாலிகள். 1946 ல் பிரிட்டிஷ் ஆட்சியில், அப்புறம் 1978 ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோதெல்லாம்ம் இப்படி உயர் மதிப்பு நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அபோதெல்லாம் இப்படி ஏராளமாக்கக் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் என யாரும் அகப்பட்டதும் இல்லை அதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதும் இல்லை.\n‘கருப்புப் பணம்’ என்பதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம் கடத்தல், போதைப் பொருள் வணிகம், பயங்கரவாத அமைப்புகளுக்காக ஆயுதம் வாங்குதல் முதலான முழுமையாகச் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், அல்லது இதுபோன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவில் மேற்கொள்ளபட்டடவை மற்றும் வரிகள் செலுத்தாமல் மறைக்கப்பட்ட அனைத்து வகை நடவடிக்கைகள் ஆகியவற்றைத்தான் நாம் கருப்புப் பணம் என்று பொருள் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 100 டன் கனிமத்தைத் தோண்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் அது வெறும் 80 டன்னைத்தான் தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்து விட்டு, ஆனால் அதற்கும் மேல் ஏராளமாகத் தோண்டி எடுத்து அவற்றிற்கு வரி கட்டாமல் ஏமாற்றினால், அதன் மூலம் சேர்ந்த கணக்கில் வராத பணத்தைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது 100 டாலர் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு, வெறும் 80 டாலர் மதிப்புள்ள பொருள்களை மற்றுமே ஏற்றுமதி செய்துள்ளதாகக் கணக்குக் காட்டி, மீதமுள்ள 20 டாலரை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்தால் அதைக் கருப்புப் பணம் என்கிறோம். அல்லது ‘ஹவாலா’ முறையில் பணப் பரிவர்த்தனை செய்து, அதன் மூலம் அள்ளும் கொள்ளை லாபத்தை வெளிநாடுகளில் சேமித்தால் அதையும் கருப்புப் பணம் என்கிறோம். இப்படிக் கணக்கில் வராமல் பொருள் சேர்க்கும் நடவடிக்கைகளைத்தான் கருப்புப் பணம் என்கிறோம்.\nஆக கருப்புப் பணம் என்றால் திருட்டுத்தனமாகத் தலையணைக்குள்ளேயும், டிரங்குப் பெட்டிகளில் திணித்து கட்டிலுக்கு அடியில் புதைத்தும் ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை என்கிற புரிதல் வெறும் பொதுப்புத்தி சார்ந்த ஒன்று. உண்மையில் அவை ‘பதுக்கி’ வைக்கப்பட்டவை அல்ல. அவை ‘இயங்கி’ க் கொண்டிருப்பவை (flowing). “கருப்பு நடவடிக்கைகள்” என்பன “வெள்ளை நடவடிக்கைகளை” போலவே அவற்றை மேற்கொள்பவர்களுக்கு லாபம் ஈட்டித் தருபவை. அதன் மூலம் அவை தன்னைத்தானே பெருக்கிக் கொள்பவை. ஆனால் பதுக்கி வைக்கும் பணம் இப்படி லாபம் ஈட்டித் தராது. தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளாது. சொல்லப் போனால் பண வீக்கம், ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் தன்னைத்தானே குறைத்துக் கொள்ளும் வாய்ப்புடையது. கருப்புப் பனம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் பொதுவான “வணிகச் செயல்பாடுகள்” (business activities) எனச் சொன்னவை “கருப்பு நடவடிக்கைகளுக்கும்” (black activities) பொருந்தும். அதாவது பணத்தைப் பதுக்கி வைப்பதால் லாபம் சேராது. அது சுழலும்போதே லாபத்தை அள்ளும். பதுக்கி வைப்பவர்களுக்குப் பெயர் ‘கஞ்சர்கள்’. லாபம் சம்பாதிப்பவர்களின் பெயர் ‘முதலாளிகள்’. அந்த வகையில் “கருப்பு நடவடிக்கைகளில்” ஈடுபடுவோர் முதலாளிகள்தானே ஒழிய கஞ்சர்கள் அல்ல.\nஎந்தத் தொழிலிலும் பணம் என்பது குறைந்த காலத்திற்கோ இல்லை சமயத்தில் நீண்ட காலத்திற்கோ முடங்கி இருப்பது இயற்கை. அது தவிர்க்க இயலாது என்பது உண்மைதான். (‘பண்டம் – பணம் – பண்டம்” என இந்தச் சுழற்சியை கார்ல் மார்க்ஸ் தனது புகழ்பெற்ற படைப்பான ‘மூலதனம்’ நூலில் குறிப்பிடுவார்). இந்தச் சுழற்சியில் பணம் சற்றுத் தேங்குவது எல்லா பொருளாதார நடவடிக்கைகளிலும் நடப்பதுதான். வெள்ளை நடவடிக்கைகளில் நிகழ்வது போலத்தான் கருப்பு நடவடிக்கைகளிலும் இது நடைபெறுகிறது. எனவே கருப்புப் பணம் “தேங்கி” இருப்பதும், ‘வெள்ளைப் பணம்’ சுழற்சியில் இருப்பதும் தான் இரண்டுக்கும் இடையிலான மையமான வித்தியாசம் என நினைப்பது அபத்தம். கருப்பு நடவடிக்கைகளானாலும், வெள்ளை நடவடிக்கைகள் ஆனாலும் இரண்டிலும் பணம் சுழன்று கொண்டுதான் உள்ளது. சந்தர்ப்பங்களில் அவை தேங்கியிருப்பது இவ்வகைப்பட்ட சுழற்சியின் இயல்புகளில் ஒன்று.\n6. எனவே கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வது அல்லது ஒழித்துக் கட்டுவது என்பது உண்மையில் இந்தக் கருப்பு நடவடிக்கைகளை வெளிக் கொணர்ந்து அழிப்பதுதானே ஒழிய கருப்புப் பணச் சேமிப்புகளின் மீது வீர தீரம் காட்டுவதாகப் பம்மாத்து செய்வதன் மூலமாக அதைச் செய்துவிட முடியாது. இப்படி கருப்பு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தி உண்மையிலேயே அழிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு நேர்மை வேண்டும். அப்புறம் இப்படியான திடீர்ச் சாகசங்களாக இல்லாமல் திட்டமிட்ட, முறையான, தொடர்ச்சியான நடவடிக்கைகளாக அது அமைய வேண்டும்.\n7. கணினிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே தீவிரமான புலனாய்வு மற்றும் விசாரனைகள் மூலமாக வரி ஏய்ய்ப்புகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும் ஒரு அமைப்பு என்கிற பெயரை British Internal Revenue Service பெற்றிருந்தது. பிரிட்டன் நம்முடைய நாட்டைக் காட்டிலும் மிகச் சிறியது, எனவே அங்கு இது சற்று எளிது என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய நாட்டிலும் இது சாத்தியமாகாத ஒன்றல்ல. அதற்குத் தகுந்த அளவில் வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு முகமைகளை விரிவாக அமைத்து. முறையான தொடர்ச்சியான வரி நிர்வாகத்தை மேற்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். குறைந்த பட்சம் உள்நாட்டு வரி ஏப்புகளையாவது கட்டுப் படுத்த முடியும். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி 500 / 1000 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து பட்டை கிளப்புவதன் மூலம் ஒரு முடியும் உதிரப் போவதில்லை.\nஎனினும் இந்தக் கருப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதி ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளின் உதவியோடு நடைபெறுகிறது என்பது உண்மைதான். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் இப்படி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் ‘கருப்புப் பணத்தை’ வெளிக்கொணர்வது பற்றி ஆவேச வாக்குறுதிகளை அள்ளி வீசியதை அறிவோம். கருப்புப் பணம் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் பற்றி சற்று முன் குறிப்பிட்ட மிகை எளிமைப்படுத்த புரிதலுடன் பேசப்பட்ட பேச்சு இது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அவர் சொன்னதை அப்படியே சரி என வைத்துக் கொண்டாலும் இப்படி 500 ரூ நோட்டையும் 1000 ரூ நோட்டையும் செல்லாது என அறிவிப்பதன் மூலம் அதை எப்படி ஒழிக்க முடியும் அல்லது வெளிக் கொண்ர முடியும்\n1946 மற்றும் 1978 ல் இப்படி 1,000, 5,000, 10,000 ரூ நோட்டுகள் செல்லாததென அறிவிக்கப்பட்ட போது, இன்று போல சாதாரண மக்கள் பாதிக்கப்படவில்லை. அந்தக் கால்லகட்டத்தில் சாதாரண மக்கள் இந்த நோட்டுகளைப் பார்த்தது கூடக் கிடையாது. அப்போது இந்த நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்காதது மட்டுமல்ல கருப்பு நடவடிக்கைகளையும் அது பாதிக்கவில்லை. அவை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. மோடியின் இன்றைய நடவடிக்கையைப் பொருத்த மட்டில் அது கருப்பு நடவ்டிக்கைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதைப் பாத்தோம். ஆனால் முந்தைய நடவடிக்கைகளைப் போல அல்லாது இப்போது சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nநிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு “பணப் பட்டுவடா இல்லாத பொருளாதாரத்தை” (cashless economy) உருவாக்கப் போவதாகச் சொன்னார். அதாவது இன்று பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் நேரடியாக பணம் கைமாறுவது என்கிற அடிப்படையில் உள்ளது. ஒரு 5 சத பண மாற்றமே நேரடியாகப் பணம் கைமாறாத வடிவில் நிகழ்கிறது. நேரடியாகப் பணம் கைமாறாத நிலையில் பொருளாதாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால் கணக்கில் காட்டப்படாத கருப்பு நடவடிக்கைகளை முடக்கலாம் என்பதுதான் ஜேட்லி முன்வைத்த கருத்தின் உட்பொருள்.. நோட்டுகளைச் செல்லாததாக்கும் இன்றைய இந்த நடவடிக்கை அந்தத் திசையில் ஒரு செயல்பாடு என இதற்கு ஆதரவாகப் பேசுவோர் கூறுகின்றனர். இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியவை. 1. வெளிநாட்டு வங்கிகளின் ஊடாக நடக்கும் கருப்பு நடவடிக்கைகளை இப்படி இந்திய ரூபாய் நோட்டுக்களைச் செல்லாமலாக்குவதன் மூலம் தடுக்க முடியாது. 2. மற்றபடி இந்தியாவை இப்படித் தடலடியாக பணப் பரிவர்த்தனை இல்லா பொருளாதாரமாக (cashless economy) ஆக்குவது என்பதெல்லாம் வெறும் மேற்தட்டுக் கனவு. வங்கிக் கணக்கு தொடங்குவது, கிரெடிட் கார்டு பெறுவது, கணினியை தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக்குவது, ‘ஏ.டி.எம்’ ஐப் பயன்படுத்துவது என்பதெல்லாம் இன்றளவும் இந்தியாவில் சாதாரண மனிதருக்கு எட்டாக் கனியாக உள்ள நிலையை நாம் மறந்துவிடக் கூடாது.\nகடைசியாக, இந்த பயங்கரவாதம், கள்ள நோட்டுக்கள், ரூபாய் நோட்டுக்களைச் செல்லாததாக்குதல் ஆகியவை இன்றைய சொல்லாடலில் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். எல்லை தாண்டி உற்பத்தி செய்யப்படும் இந்தக் கள்ள நோட்டுகள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுகிறதாம். உயர் தொழில் நுட்பத்துடன் இனி அச்சிடப்படும் புதிய நோட்டுகளை இப்படித் தயாரித்துவிட முடியாதாம். இதெல்லாம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.ஈதுதான் ஒரே வழி என்றால், தற்போது உள்ள நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டு இனி அச்சிடப்படும் நோட்டுகள் எல்லவற்றையும் புதிய முறையில் அச்சிடுவதுதானே,. படிப்படியாகச் சில ஆண்டுகளில் இன்றைய நோட்டுகள் வழக்கிழந்து விடும். சாதாரண மக்களும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்\nபேரா. பிரபாத் பட்நாயக்கின் கருத்துக்கள்தான் இவை. எனினும் இது அவரது கட்டுரையின் நேரடி மொழியாக்கம் இல்லை. கட்டுரையை முடிக்கும்போது மோடியின் இச்செயலுக்கு இணையாக நவீன இந்திய வரலாற்றில் ஏதும் நடந்ததில்லை என்கிறார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கூட சாதாரண மக்களிடம் இருந்த நோட்டுகளை இப்படி அதிரடியாகச் செல்லாதது என அறிவித்து அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கியதில்லை என்கிறார்.\nஉண்மைதான். பெட்ரோல் நிலையம், பேருந்து முன்பதிவு நிலையங்கள் ஆகியவற்றில் செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளதெல்லாம் பச்சை ஏமாற்று என்பதை நாம் அனுபவபூர்வமாக அறிககிறோம். அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாமல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில் எங்கு போனாலும், “நாங்கள் வாங்கிக் கொள்ளத் தயார். ஆனால் சில்லறை இல்லை. வேண்டுமானால் ஆயிரம் ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்..” என்கிறார்கள்.\nஇப்படியாக 1000 / 500 ரூ நோட்டுகளைச் செல்லாது என அறிவிக்கும் திட்டம் ஒன்று மோடி அரசு வசம் உள்ளதென்கிற செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை. சில வாரங்கள் முன் நாளிதழ்களிலேயே அப்படிப் பட்ட கருத்துகள் வெளியாயின. இது எப்படி நிகழ்ந்தது, இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் விளங்கவில்லை.\nஇன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டையை அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாகத் தொடர்ந்து ஆக்கிவருகின்றனர். சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்கிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின் மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.\nஇன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்பதெல்லாம் அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான். இந்தியாவின் மீது மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொருத்த மட்டில் உள் நாட்டுப் பயங்கரவாதம் என்பது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் அவை அந்நிய மண்ணில் வேர்கொண்டு இங்கே ஊடுருவுவதுதான். அதற்கு நம் அரசுகள் காட்டும் ஆதாரமே பயங்கரவாதத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் உள்ள அந்நிய உற்பத்தி அடையாளங்கள்தான். அப்படியான வெளிநாட்டு ஆயுதங்களை வாங்க இந்தியக் கள்ள நோட்டுகள் எப்படிப் பயன்படும் ஒரு வேளை கள்ள நோட்டுகளை உற்பத்தி செய்து இந்தியாவில் புழங்க வைப்பதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவதுதான் எதிரிகளின் நோக்கம் எனில் அப்படி ஏதும் இதுவரை நிருப்பிக்கத் தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா\nஇன்றைய ஆட்சியாளர்கள் ‘அந்நியர்’ எனும் சொல்லை வெறும் foreigner எனும் சொல்லின் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்துவதில்லை. மாறக ‘அந்நியர்’ எனும் சொல்லின் ஊடாகச் சில அடையாளங்களை அவர்கள் கற்பித்து வந்துள்ளனர். இன்றைய அரசின் ஒவ்வொறு சிறு நடவடிக்கையிலும் அதன் ‘வெறுப்பு அரசியல்’ நோக்கம் வெளிப்படுவதை மறந்துவிட முடியாது. 500 / 1000 ரூ நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையிலும் கூட அது இணைக்கப் படுவதைத்தான் இந்த “எல்லை தாண்டிய கள்ள நோட்டு ஊடுருவல்’ பற்றிய சொல்லாடல் காட்டுகிறது.\nPosted in கட்டுரைகள்Tagged 1000, 500 ரூபாய் நோட்டுகள், அ.மார்க்ஸ், நரேந்திர மோடி, பிரபாத் பட்நாயக், ரூபாய் நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதன் அரசியல்\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சிரியாவில் ருஷ்யத் தலையீட்டின் பின்னணி\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nநெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nநல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_24.html", "date_download": "2018-08-21T14:23:49Z", "digest": "sha1:LVH3GQRBYI4WOTLXVNECB443NFV56EJL", "length": 18331, "nlines": 140, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....!!!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » பெருநாள் » பெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....\nபெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....\nTitle: பெருநாள் தினத்தன்று நீங்கள் செய்யவேண்டியவை....\nஅல்ஹம்துலில்லாஹ்.... இதோ கண்ணியமிக்க ரமலானின் இறுதி நாளை அடைந்து விட்டோம்.... இன்னும் 1,2 தினங்களில் பெருநாளை அடைய இருக்கிறோம்...\nஇதோ கண்ணியமிக்க ரமலானின் இறுதி நாளை அடைந்து விட்டோம்....\nஇன்னும் 1,2 தினங்களில் பெருநாளை அடைய இருக்கிறோம்.....\nஎல்லாம் வல்ல இறைவன் அந்த நாளின் எல்லா நன்மைகளையும் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.\nஅருள் வளம் மிக்க அந்த திருநாளில் பின்வரும் காரியங்களை செய்ய இப்போதே மனது வைப்போம்.\n1) உங்கள் மாற்று மத நண்பர்களை உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் விருந்தோம்பல் மூலமாய் அவரை மகிழ்விப்பதொடு, இஸ்லாம் குறித்தும் சில விசயங்களை அவருக்கு விளக்க (தாவா செய்ய) உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்...\n2) முடிந்தவரை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பகிருங்கள்...\n3) உங்கள் இரத்த பந்த உறவினர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்ய முயலுங்கள்...\n4) பெருநாள் தொழுகைக்குப் பின் உணவு, பிறகு நல்ல தூக்கம், பின் பொழுது போக்கு அல்லது தொலைக்காட்சி என்பதுதான் உங்கள் அஜெண்டா என்றால், அப்படிப்பட்ட நிலையில் இருந்து மாறி பயனுள்ள வகையில் இந்த நல்ல நாளை செலவழிக்கு திட்டமிடுங்கள்...\n5) வெறும் புத்தாடை அணிதலும் மாமிச உணவு சாப்பிடுதலும் மட்டுமே பெருநாளின் அடிப்படை அடையாளம் அல்ல என்பதை உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் அழகான முறையில் எத்தி வைக்க முயலுங்கள்...\n6) உங்கள் பெற்றோரோடும் சில மணி நேரங்களை செலவழியுங்கள்..\nஇதன் மூலம் அவர்களின் மலரும் நினைவுகளை அவர்களிடம் இருந்து வெளிக் கொணருங்கள். அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் இதன் மூலம் நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் பெறக்கூடும்...\n7) நீங்கள் விருந்து சமைக்கிறீர்கள் என்றால், அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம் சுகாதாரம் காக்கப்படுவதோடு, உங்கள் அண்டை வீட்டாருக்கு மன சங்கடங்கள் எதுவும் நேராமலிருக்கும்...\n8) பெருநாள் தொழுகையிலும், பர்ளு தொழுகையிலும் உலக முஸ்லிம்களுக்காகவும், தேச மற்றும் சர்வதேச அமைதிக்காகவும் துவா செய்யுங்கள்.\nஉலகில் எல்லா நாடுகளிலும் அரசியல் நிலைத் தன்மை நிலவவும், நீதிமிக்க -ஜனநாய ரதியிலான ஆட்சி மலரவும் வேண்டி இரு கரம் ஏந்தி மனமுருகி பிரார்த்தனை புரியுங்கள்..\n9) தேவையற்ற விவாதங்களை தவிருங்கள். நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களில் எவரெல்லாம் இந்த ஆண்டு உம்ரா சென்றுள்ளார்களோ, அவர்கள் அனைவரின் உம்ராவும் ஏற்றுக் கொள்ளப்படவும், அவர்களின் நல்ல பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படவும் வேண்டி இறைவனிடம் மன்றாடுங்கள்...\nமேலும் இப்படிப்பட்ட பயணங்களின் மூலம் சர்வதேச அளவில் சகோதரத்துவமும் மறுமலர்ச்சியும் ஏற்படவும் இறைவனை வேண்டுங்கள்.\n10) இறுதியாக முகம் அறியா என்னையும் உங்கள் துவாவில் நினைவில் வையுங்கள்...\nநம் குடும்பத்தாரோடு நாம் மகிழ்ந்து இருக்கிற இந்த நல்ல நாளில், நம் உற்றார் உறவினரோடு அன்பையும், சகோதரத்துவத்தையும் பகிர்ந்து மகிழும் இந்த நல்ல நாளில், இந்த ரமலானின் செய்தியை, நம்மோடு வாழும் நம் மாற்று மத சகோதரர்களோடும் பகிர்ந்து கொள்ள சிறிது முயற்சி செய்தால் அது மிகப் பெரிய அழைப்புப் பணிகளில் ஒன்றாகவும், சிறந்த பலனை தரக்கூடிய ஒன்றாகவும் அமையக் கூடும்...\nஇது போன்ற பண்டிகை தினங்கள் மூலம் நம்மிடையே பரஸ்பர அன்பையும், சகோதரத்துவையும் பரிமாறிக் கொள்வோம்.பன்மைக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள நம் இந்திய தேசம் என்றென்றும் அமைதிப் பூங்காவாக திகழவும், நம் அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் மிளிரவும் வாழ்த்துகிறோம்...\nநான் சொல்ல வேண்டிய செய்தியை இப்போதே உங்களிடம் சொல்லி விட்டேன்.. நாம் நம்மை முன் தயாரிப்பு செய்து கொள்ள இந்த நினைவுறுத்தல் பயன் படக்கூடும்.\nஇந்த ரமலான் நமக்கு எல்லா வளங்களையும், இறை அருளையும் அள்ளித் தரட்டுமாக. - ஆமீன்.\nவாழ்த்துகளுடன் - மு.முஹம்மது பாரூக்.\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் இணையத்தளம் சார்பாக இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துகள்........\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/30/reasons-why-it-has-become-imperative-rbi-hike-rates-012173.html", "date_download": "2018-08-21T14:10:12Z", "digest": "sha1:43WC7LPIGXYRWBP6P7QM4LY5KMIPYMTD", "length": 20204, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணங்கள்..! | Reasons why it has become imperative for RBI to hike rates - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணங்கள்..\nமீண்டும் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணங்கள்..\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nவிரைவில் கிழிந்த, அழுக்கான 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி: ஆர்பிஐ\nஅரசுக்கு 50,000 கோடி ரூபாய் டிவிடண்ட் அளிக்கும் ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கியின் தலைவராக குருமூர்த்தி நியமனம்.. மத்திய அரசு முடிவு..\nஆர்பிஐ வங்கி ரெப்போ விகிதத்தினை உயர்த்தி பங்கு சந்தை சாதனைகளை நிறுத்தியது..\nஆர்பிஐ மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தியது.. கடன் மீதான வட்டி உயரும்\nகடந்த சில மாதங்களாக நாணய கொள்கை கூட்டத்திற்கு மிகப் பெரிய சிக்கல்கள் எழுந்து வருகிறது. சில ஆண்டுகளாகக் கச்சா எண்ணெய் விலை சரிவும் பொருட் சந்தையில் விலை சரிவு, குறைந்த அடிப்படை ஆதார விலை போன்ற காரணங்களால் பணவீக்கம் குறைந்து இருந்தது தற்போது தலைக்கிழாக மாறியுள்ளது.\nஎனவே ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கண்டிப்பாக வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்று கூறப்படும் 5 முக்கியக் காரணங்கள் என்ன என்று இங்குப் பார்க்கலாம்.\nகுறைந்த ஆதரவு, அதிகப் பண வீக்கம்\nவிவசாயிகளின் வருவாயினை உயர்த்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு விவசாயப் பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையினை உயர்த்தியுள்ளதால் அத்தியாவசிய தேவை பொருட்கள் விலை உயர்வது மட்டும் இல்லாமல் பண வீக்கமும் அதிகரிக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பானது பணவீக்கத்தினைப் பெறும் அளவில் பாதிக்க உள்ளது.\nஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தின் போது கச்சா எண்ணெய் நிலையானதாக இருந்தது. ஆனால் விலை உயர்ந்தால் மத்திய வங்கிக்கு அதனால் கண்டிப்பாகப் பிரச்சனை எழும். அதே நேரம் கச்சா எண்ணெய் எப்போது நிலையானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. சர்வதேச சந்தையின் நிலையினைப் பார்க்கும் போது கச்சா எண்ணெய் மீண்டும் விலை உயரும் என்பது உறுதி.\nதேவை அதிகம் இருக்கும் போது வணிகம் என்பது விலையினை உயர்த்தும் அதே நேரம் பொருளாதாரம் விலை உயர்வைச் சமாளிக்கும் அளவிற்கு நிலையானதாக உள்ளது.\n2019-ம் ஆண்டு மக்களவைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்த ஒரு அரசாக இருந்தாலும் பிரபலமான நடவடிக்கைகள் எடுப்பதை மறுக்கவே முடியாது. மத்திய அரசு இது போன்ற முடிவுகளைத் தாற்காலிகமாக எடுத்தாலும் மாநில அரசுகளை அதனைத் தவிர்த்துவிடுகின்றன, குறிப்பாகப் பருவமழை அதிகம் பெய்யும் போது. ஏற்கனவே 10 மாநிலங்கள் விவசாயக் கடனை இரத்து செய்துள்ள நிலையில் அதுவும் ஆர்பிஐக்குச் சிக்கலினை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.\nமத்திய வங்கி தேவை எங்கு அதிகம் இருக்கிறதோ அதற்க்கேற்றவாறு தனது கொள்கையினை மாற்றி அமைக்கும். மைய பணவீக்கமானது உணவு மற்றும் கச்சா எண்ணெய்யினைத் தவிர்த்தது ஆகும். அது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தினைத் தாண்டி 5 சதவீதமாக அச்சத்தினை ஏற்படுத்தி வருகிறது. உற்பத்தியாளர்கள் விலைகளை உயர்த்தி இருப்பதே இந்த மைய பணவீக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் வட்டி விகிதம் உயர்வு காரணம் reasons rbi hike rates\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nநிப்டி புதிய உச்சம்.. சென்செக்ஸ் 284 புள்ளிகள் உயர்வு\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://www.tisaiyan.com/grand-opening-of-fitness-center-at-tisai-nagar/", "date_download": "2018-08-21T13:43:41Z", "digest": "sha1:H3ZNGDA6WFHJJ2K4A6FS4UQTLDIB4ULR", "length": 4773, "nlines": 107, "source_domain": "www.tisaiyan.com", "title": "GRAND OPENING OF FITNESS CENTER AT TISAIYANVILAI – நமது திசையன்விளையில் முதல் முறையாக FITNESS CENTER – TISAIYAN.com", "raw_content": "\nநமது திசையன்விளையில் முதல் முறையாக ஏப்ரல் 15 -ம் தேதி புதன் கிழமை ஆரம்பம். உலக பிரசித்தி பெற்ற அக்குபிரஷர் மற்றும் மின் காந்த வெப்பம் அடிப்படையில் உடல் பயிற்சி நிலையம் ஆரம்பம்.\nஇடம் :- ராஜஸ்தான் ஹவுஸ் , ராஜீவ் நகர், திசையன்விளை ( பஸ் ஸ்டாண்ட் பக்கம் ) தொடர்பு எண் :- 04639272144; 09500608144\nடாக்டர் :- ஆர்வின் மென்றோ (Physio-therapy Specialist) மதுரை\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nராஜஸ்தான் ஹிந்தி கோச்சிங் சென்டர் , ராஜீவ் நகர் , திசையன்விளை »\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nதிசையன்விளையில் புதுப்புக்கப்படவிருக்கும் உலக இரட்சகர் கோயில் (RC Church)\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2013/10/blog-post_19.html", "date_download": "2018-08-21T14:31:00Z", "digest": "sha1:2FOODJQWODMWJ6E6WY3HKKN4A6T25WZR", "length": 4326, "nlines": 54, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் | Campus Front of India", "raw_content": "\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்டம் புதுக்கல்லூரி கிளையின் சார்பாக மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் வாயில் முனை கூட்டம் மற்றும் சர்வே10.10.2013 அன்று மாலை 1.15 மணியளவில் புதுக்கல்லூரி வாயில் முன்பு நடத்தப்பட்டது. இச் சர்வேயின் அடிப்படையில் அதிகமான மாணவர்கள் இலவசமாக கல்வி கொடுக்க வேண்டிய அரசு கல்வியில் வியாபாரமாக்குவத்தையும், அதிகமான கல்விக்கூடங்களில் அடிப்படை வசதியின்மையும், மாணவர்களின் உரிமை பறிக்கப்படுவதையும் அச்சர்வேயில் குறிப்பிட்டிருந்தார்கள்.மேலும் கேம்பஸ் ஃப்ரண்ட் முன்னெடுத்து நடத்தும் சமூக மாற்றத்திற்கான களங்களில்\nபங்கெடுக்க தயார் என்றும் அதிகமானோர் குறிப்பிட்டிருந்தனர்.\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-21T14:33:40Z", "digest": "sha1:DIVTZT3PU3EXDYPQUZUXR6I3KUR4DUNG", "length": 7453, "nlines": 187, "source_domain": "helloosalem.com", "title": "பொட்டுக்கடலை – கருணைக்கிழங்கு வடை | hellosalem", "raw_content": "\nபொட்டுக்கடலை – கருணைக்கிழங்கு வடை\nகருணைக்கிழங்கில் கூட்டு, வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபொட்டுக்கடலை – 150 கிராம்,\nகருணைக்கிழங்கு – 200 கிராம்,\nபெரிய வெங்காயம் – 2,\nபச்சை மிளகாய் – 2,\nசமையல் சோடா – ஒரு சிட்டிகை,\nஇஞ்சி – பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,\nபட்டை, சோம்பு – சிறிதளவு,\nஎண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,\nகருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.\nப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.\nஇவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.\nவாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.\nசத்தான காலை டிபன் வரகரிசி உப்புமா\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: முறுக்கு\nசூப்பரான காடை வறுவல் செய்வது எப்படி\nசூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kudanthainews.blogspot.com/2016/02/blog-post_34.html", "date_download": "2018-08-21T14:09:42Z", "digest": "sha1:RZWYVOKK4ETQ73TOZAPYKNZ755BS4AEP", "length": 3314, "nlines": 63, "source_domain": "kudanthainews.blogspot.com", "title": "குடந்தை செய்திகள்: மகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ", "raw_content": "\nவெள்ளி, 5 பிப்ரவரி, 2016\nமகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ\nமகாகமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டுச் செய்தியை விளக்குகிறார் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\n3000 இரயில்வே காவல்துறையினர் மகாமகத்தினையொட்டி பயண...\nமகாமகத் திருவிழாவிற்கு 2800 சிறப்பு பேருந்துகள் இய...\nமகாமகம் தீர்த்தங்கள் குறித்த கல்வெட்டு - வீடியோ\nமகாமகப் பணிகள் பற்றி மாவட்ட ஆட்சியர் - வீடியோ\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/imp_templelist.php?D=76", "date_download": "2018-08-21T14:27:00Z", "digest": "sha1:CHRX3MD3KW7NKUXJBRIE3U5H6FW5HRDB", "length": 22487, "nlines": 234, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்\n1. அருள்மிகு யோக நரசிம்மசுவாமி கோயில்,\nமூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )\nஇருப்பிடம் : வேலூர் - திருத்தணி வழியில் சோளிங்கர் இருக்கிறது. தவிர சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் சென்றடையலாம்.சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூர் நகர்களிலிருந்து பேருந்து வசதி நிறைய உண்டு\nஇத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். ஆண்பெண் சேராமை(தாம்பத்ய பிரச்சினை) , குழந்தையின்மை, ...\nசிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது ...\n2. அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில்,\nஇருப்பிடம் : வேலூரிலிருந்து தெற்கே ஒசூர் அணைக்கட்டு செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் ஸ்ரீபுரம் உள்ளது.\nபிரார்த்தனை : மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது ...\nசிறப்பு : இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று ...\n3. அருள்மிகு பாலமுருகன் கோயில்,\nஇருப்பிடம் : வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் 14 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.\nபிரார்த்தனை : திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், ...\nசிறப்பு : அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், \"ஒப்பில்லாத மாமணி, வித்தகர்' எனச் சொல்லி பாடியிருக்கிறார். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது ...\n4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்,\nஇருப்பிடம் : வேலூரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் வள்ளிமலை இருக்கிறது. பொன்னை என்ற ஊருக்குச் செல்லும் பஸ்கள் இத்தலம் வழியே செல்கிறது. சோளிங்கர் வழியாக திருத்தணி செல்லும் பஸ்களும் இவ்வூர் வழியே செல்கிறது.\nபிரார்த்தனை : திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு பிரார்த்தனை ...\nசிறப்பு : முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை ...\n5. அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில்,\nஇருப்பிடம் : வேலூர் நகரின் மத்தியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது.\nஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, தடைபட்ட திருமணங்கள் நடக்க, சகல திருஷ்டிகளும் விலக இங்கு ...\nசிறப்பு : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் ...\n6. அருள்மிகு செல்வ விநாயகர் கோயில்,\nமூலவர் : செல்வ விநாயகர்\nஇருப்பிடம் : வேலூர் நகரிலிருந்து (3 கி.மீ.) பெங்களூரு செல்லும் வழியில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வேலூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து 3ம் நம்பர் பஸ்சும், ஆட்டோ வசதியும் உள்ளது.\nபிரார்த்தனை : திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள ...\nசிறப்பு : இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக ...\n7. அருள்மிகு வில்வநாதேஸ்வரர் கோயில்,\nஇருப்பிடம் : வேலூரிலிருந்து, ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ., தொலைவில் திருவல்லம் அமைந்துள்ளது.\nசிவனின் பெயர் வில்வநாதேஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.\nஇதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் சம்பந்தப்பட்ட ...\nசிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 242 வது ...\n8. அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில்,\nஇருப்பிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (22 கி.மீ) பனப்பாக்கம் வழியாக ஆற்காடு செல்லும் பஸ்சில் கோயிலுக்கு செல்லலாம். சென்னையிலிருந்து வருபவர்கள் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் வரும் வழியில் திருமால்பூரில் இறங்க வேண்டும்.\nபெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது ...\nசிறப்பு : பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) ...\n9. அருள்மிகு ஜலநாதீஸ்வரர் கோயில்,\nஅம்மன்/தாயார் : கிரிராஜ கன்னிகாம்பாள்\nஇருப்பிடம் : வேலூரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் அவ்வப்போது உண்டு. அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இறங்கி 4 கி.மீ. தூரம் தனியார் பஸ் அல்லது ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம். பஸ் வசதி: சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து தடம் எண்456, காஞ்சிபுரத்திலிருந்து 49 பஸ் உள்ளது. வேலூரிலிருந்தும் தக்கோலத்திற்கு நேரடி பஸ் உள்ளது.\nபிரார்த்தனை : இத்தலத்தில் காமதேனு வழிபட்டுள்ளாள். எனவே நாமும் இங்கு வழிபாடு செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது.\nவிவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. ...\nசிறப்பு : இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என புராணம் கூறுகிறது. இத்தலத்தில் அம்மன் நின்ற நிலையில் வடக்கு ...\n10. அருள்மிகு தன்வந்திரி பகவான் கோயில்,\nஇருப்பிடம் : சென்னையில் இருந்து வேலூர், பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் இருக்கிறது வாலாஜாபேட்டை. அங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் தன்வந்திரி பகவான் ஆரோக்கிய பீடம் அமைந்துள்ளது.\nபிரார்த்தனை : பக்தர்கள் உடல் நலம் சம்பந்தப்பட்ட நோய்கள், திருமணத் தடை, குடும்பப் பிரச்சனை, வழக்குகள் போன்றவற்றுக்கு இங்கு பிரார்த்தனைகள் ...\nசிறப்பு : தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே ...\nமேலும் வேலூர் அருகே உள்ள கோயில்கள்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91422.html", "date_download": "2018-08-21T13:31:48Z", "digest": "sha1:42V7AZOZYI4RL2KTJQWDFIC6CMDK2VJG", "length": 4362, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அச்சுவேலியில் படையினரால் காணி விடுவிப்பு – Jaffna Journal", "raw_content": "\nஅச்சுவேலியில் படையினரால் காணி விடுவிப்பு\nஅச்சுவேலி பகுதியில் மிக நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களது காணியில் ஒரு பகுதி காணி நேற்று விடுவிக்கப்பட்டது.\nஅச்சுவேலி இராச வீதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணியில் 1.5 ஏக்கர் காணியே நேற்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக மீள கையளிக்கப்பட்டது.\nகடந்த காலங்களில் அச்சுவேலி இராச வீதியில் பொது மக்களது காணிகள் 3 ஏக்கரை கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவற்றில் 1.5 ஏக்கர் காணி இராணுவத்தால் மீள கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய 1.5 ஏக்கர் காணிகளும் இவ் ஆண்டின் இறுதிக்குள் கையளிக்கப்படும் என இராணுவ தரப்பானது தெரிவித்துள்ளது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://campusfronttamilnadu.blogspot.com/2012/03/blog-post_8620.html", "date_download": "2018-08-21T14:31:38Z", "digest": "sha1:UQRY3DCBBATR7PDA3PCXL2J73J7NH4PI", "length": 6339, "nlines": 56, "source_domain": "campusfronttamilnadu.blogspot.com", "title": "வினா தாள் வெளியானதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம் | Campus Front of India", "raw_content": "\nவினா தாள் வெளியானதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்\nவினா தாள் வெளியானதை கண்டித்து கர்நாடக மாநிலம் பாந்ட்வாளில் தாலுகா அலுவலகம் முன்பு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபாந்ட்வாளில் உள்ள PU தேர்வாணையத்தின் கவனக்குறைவால் தேர்வு வினாத் தாள் வெளியாகியுள்ளது.கடந்த செவ்வாய் கிழமை (மார்ச் 20 ) அன்று கணித தேர்வுக்கான வினா தாள் வெளியாகியது, இதனைத் தொடர்ந்து சில ஆசிரியர்களின் பொருப்பற்ற தன்மையிளால் வேதியல் பாடத்தின் தேர்வு வினாத்தாள்களும் வெளியான. இருந்த போதும் இதற்கு எதிராக கல்லூரி நிர்வாகமோ அல்லது PU தேர்வாணையமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு பொறுப்பற்ற தன்மையையே தொடர்ந்து காட்டிவருகின்றனர். இது போன்ற வினா தாள்களின் கசிவினால் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பலவீனமாகவே மாறும் நிலை உருவாகும். கல்லூரி நிர்வாகமோ மாணவர்களின் எதிர்காலத்தில் எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் தொடர்ந்து இதுபோன்ற செயல்களை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள்.\nஇதனை கண்டிக்கும் விதமாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாந்ட்வால் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தை பாந்ட்வால் தாலுக்கா நிர்வாகக் குழு தலைவர் திரு.நவாஸ் அஹமது அவர்கள் கண்டன ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.\nமேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாந்ட்வால் தாலுக்காவின் செயலாளர் திரு.தாரிஃப், கர்நாடகா மாநில செயலாளர் திரு.முஹம்மது து ஃ பல், மேலும் மண்டல குழு உறுப்பினர் திரு.முகம்மது ரியாஸ் ஆகியோர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் \"நாமும் சாதிக்கலாம்\" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.\nமாதம் ஒரு முறை வெளிவரும் மாணவர்களுக்கான ஒரே இதழ்\nஇயக்க செய்திகள் ( 9 )\nகட்டுரைகள் ( 4 )\nகல்வி ( 6 )\nகல்வி நிகழ்சிகள் ( 38 )\nகல்வி பணிகள் ( 6 )\nகானொளி ( 3 )\nகேம்பஸ் செய்திகள் ( 7 )\nசமூக சேவைகள் ( 17 )\nசெய்திகள் ( 9 )\nதேசிய நிகழ்வுகள் ( 7 )\nதொடர்புக்கு ( 1 )\nநிகழ்சிகள் ( 1 )\nநுழைவுவாயில் கூட்டம் ( 7 )\nபத்திரிக்கை செய்தி ( 9 )\nபயிற்சி முகாம்கள் ( 4 )\nபேரணி ( 3 )\nபோராட்டங்கள் ( 45 )\nமனித உரிமை மீறல்கள் ( 2 )\nவிழிப்புணர்வு பிரசாரங்கள் ( 16 )\nவேலை வாய்ப்பு ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66807/cinema/Kollywood/I-also-fall-in-love-says-Raiza-willson.htm", "date_download": "2018-08-21T14:28:33Z", "digest": "sha1:HT7S5ZJPD2L2JCZZIXMVL54RZOXRUYU5", "length": 15661, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நானும் காதலில் விழுந்தேன் : ரைசா வில்சன் - I also fall in love says Raiza willson", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியல் ஹீரோ பிஷர்மேன் : அமலாபால் பெருமிதம் | மூன்று நாட்களாக போலீஸ் குடியிருப்பில் தங்கிய ஜெயராம் குடும்பம் | விமர்சித்தவர்களுக்கு துல்கர் பதிலடி | ரூ.40-ல் தொடங்கி 40 கோடி சம்பாதித்த கீதா கோவிந்தம் தயாரிப்பாளர் | பிக்பாஸ் போட்டியாளர்களிடம் உண்மையை உடைத்த மோகன்லால் | சைரா டீசர் வெளியீடு : எதிர்பார்ப்பு அதிகரிப்பு | 'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ் | கடவுள் சக்தி உண்டு - ஸ்ருதிஹாசன் | தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நடிகை | கேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநானும் காதலில் விழுந்தேன் : ரைசா வில்சன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர். அவர்களில் ரைசா வில்சனும் முக்கியமானவர். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, பிக்பாஸ் புகழால் இப்போது பியார் பிரேமா காதல் என்ற படத்தில் பிக்பாஸில் கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாண் உடன் நடித்து வருகிறார். காதலர் தினத்தையொட்டி அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...\nபிக்பாஸ் அடையாளம் எப்படி இருக்கிறது\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேருக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\n6 ஆண்டுகளாக மாடலிங் துறையில் உள்ளேன். என் சொந்த ஊர் பெங்களூரு. ஆனால் சென்னை, ஐதராபாத், கேரளா என இப்படி பல ஊர்களில் மாடலிங் செய்து வருகிறேன்.\nபிக்பாஸ் அனுபவம் எப்படி இருந்தது\nஎதுவுமே தெரியாமல் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தமிழில் முதல் சீசன் என்பதால் அதில் பங்கேற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோது, ஏதோ வித்தியாசமான நிகழ்ச்சி என்ற மனநிலையில் தான் கலந்து கொண்டேன்.\nகுடும்பத்தினரை பிரிந்த அனுபவம் எப்படியிருந்தது\nநான் எப்போது வெளியே போனாலும் இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு மாதம் கலந்து கொண்டபோது குடும்பத்தாரை மிகவும் மிஸ் செய்தேன். இருந்தாலும் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.\nபிகாம் பிடித்துள்ளேன். மாடலிங் பண்றேன்.\nடிவி நட்பு இன்னும் இருக்கா\nஎன் கூட யாரும் சண்டை போடவில்லை. ஆகையால் எல்லோருடன் நட்பாக உள்ளேன். இப்போது கூட மலேசியாவில் நான், சினேகன், ஓவியா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளோம்.\nஎனக்கு அதில் அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்வேன். கல்லூரியில் படிக்கும்போது ஒரு காதல் வந்தது. சினிமாவுக்கு எல்லாம் சென்றோம். ஆனால் அந்த காதல் கடைசியில் வெற்றி பெறவில்லை, பிரிந்துவிட்டோம்.\nகண்டிப்பாக காதல் திருமணம் தான், ஆனால் இப்போது இல்லை, அதற்கு இன்னும் நாள் உள்ளது.\nஇப்போது நடிக்கும் படங்கள் பற்றி\nபடங்களில் நடிக்க அவசரம் காட்டவில்லை. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், ஹரீஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கிறேன். இந்தப்படம் வெளிவரட்டும், மக்கள் எப்படி ஏற்று கொள்கிறார்கள் என்று பார்த்துவிட்டு அடுத்தப்படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். நிறைய படங்களில் நடிப்பதை விட நல்ல படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.\nபிக்பாஸ் ஹரீஸ் உடன் எப்படி ஜோடியாக நடித்தீர்கள்\nநானும், ஹரீஸூம் ஆடிசன் போனோம். நிச்சயம் நான் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. மாடலிங் துறையில் இருந்ததால் ஓரளவுக்கு எப்படி நடிக்கணும் என்று தெரியும்.\nவிஐபி-2 வில் கஜோல் உடன் நடித்த அனுபவம்\nஅது மாடலிங் அசைமென்ட். படம் முழுக்க நான் நின்று கொண்டு தான் இருப்பேன், படத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. இருந்தாலும் அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.\nஒரு 500 விளம்பரங்களிலாவது நடித்திருப்பேன். 2011-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். அதன்பிறகு நிறைய விளம்பரங்களில் நடித்தேன்.\nதமிழில் உங்களுக்கு பிடித்த ஹீரோ\nதமிழில் அவ்வளவாக படங்கள் பார்த்தது இல்லை. சமீபத்தில் விக்ரம் வேதா படம் பார்த்தேன். மாதவன் செம நடிப்பு. அவரை மட்டுமே என் கண்கள் பார்த்தது. ஐ லவ் மாதவன்.\nபெண்கள் எப்போதுமே வலிமையானவர்கள். என் குடும்பத்தில் யாரும் இந்த துறையில் இல்லை. நான் ஆகவே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு வந்தேன். பல துறைகளில் பெண்கள் முன்னணியில் உள்ளனர். ஆண் - பெண் பாகுபாடு வேண்டாம், இருவருமே திறமைசாலிகள் தான்.\nஇவ்வாறு ரைசா வில்சன் கூறினார்.\nசண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு ... சினிமாவிற்கு கமல் குட்-பை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவுக்கு ரூ.5 கோடி கொடுத்தாரா சன்னி லியோன்\nகரன்ஜித்கவுர் 2 : தயாராகும் சன்னிலியோன்\nஇங்கிலீஷ் விங்கிலீஷ் நடிகை சுஜாதா காலமானார்\nதந்தைக்கு சட்டை தைத்து பரிசளித்த வருண் தவான்\nகமிஷன் கொடுக்காத கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nரியல் ஹீரோ பிஷர்மேன் : அமலாபால் பெருமிதம்\nமூன்று நாட்களாக போலீஸ் குடியிருப்பில் தங்கிய ஜெயராம் குடும்பம்\n'விஸ்வாசம்' படத்திலும் வியாழக்கிழமை : நாளை மறுநாள் சர்ப்ரைஸ்\nகடவுள் சக்தி உண்டு - ஸ்ருதிஹாசன்\nகனா இசையை வெளியிடும் கிரிக்கெட் வீராங்கனை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகை : ஆனந்தி ,ஆஸ்னா சவேரி\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ayappaditoday.com/2011/09/", "date_download": "2018-08-21T14:47:57Z", "digest": "sha1:LCE2XU3MPLIRRP4J7URVQHQPUORTBLE7", "length": 13339, "nlines": 155, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: 09/01/2011 - 10/01/2011", "raw_content": "\nதிருமண அழைப்பிதழ் - 10 (29-9-11)\nநமதூர் மெயின் ரோடு மர்ஹூம் N.முஹம்மது ஜக்கரியா அவர்களின் மகனும்\nஹாஜி S. தாஜுதீன் & சன்ஸ்\nஹாஜி O.M. முஹம்மது நஜீருதீன் & சன்ஸ்\nM. அப்துல் பாஸித் & சன்ஸ்\nஆயப்பாடி முப்பெரும் விழா அழைப்பிதழ் (30-9-11)\nநமதூரில் இன்ஷா அல்லாஹ் வரும் (30/9/11) துல்காயிதா மாதம் பிறை 1 வெள்ளிகிழமை மாலை 4:30 மணிக்கு ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில்.\nஅஞ்சுமன் சுப்பானுல் முஸ்லிம் சங்க புதிய கட்டிட திறப்பு விழா\nபைத்துல்மால் உதவி தொகை வழங்கும் விழா\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nதிருமண அழைப்பிதழ் - 9 (29/9/11)\nநமதூர் மெயின் ரோடு மர்ஹும் N.S. அப்துல் அஜீஸ், மர்ஹுமா மரியமுல் ஆசியா இவர்களின் பேத்தியும்\nA. முஹம்மது முஹ்சித் அவர்களின் சகோதரியுமாகிய\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nஅமைதியை குலைத்தவனே அமைதிக்காக உண்ணாவிரதமா\nதன் இனத்தை கருவறுக்க துடிக்கும் ரத்த வெறியர்களின் உண்மை முகத்தை கூட புரிந்துகொள்ள முடியா சமூகமடா நாம்...\nநீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி ...\nஉன்னை போல் எங்களை வாழவிடு என்பதற்காகவா அல்லதுநல்ல வேலை நீ எங்களை விட்டுவைத்தாய் என்று\nநீ வெகுளியாக நிற்கிறாய் - அவன் வெறியோடு நிற்கிறான்...\nWindows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய - சோதனை பதிவு\nஇணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.\nAVG Anti-Virus 2012 முற்றிலும் இலவசமாக\nபல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது. இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.\nஅனைத்து மென்பொருளையும் சுலபமாக Shortcut Keys மூலம் உபயோயிக்க.\nகணினியில் கட்டண மென்பொருட்கள், இலவச மென்பொருட்கள் என பல்வேறு வகையான மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து உபயோகிக்கிறோம். இந்த மென்பொருட்களை நாம் தினமும் ஓபன் செய்ய டெஸ்க்டாப்பில் உள்ள அந்த மென்பொருளின் ஷார்ட் கட் ஐகான் மூலம் திறப்போம் அல்லது Start - Windows - Programs - சென்று திறப்போம் இப்படி கணினியில் மென்பொருளை திறக்க பல வழிகள் உண்டு. அதில் ஒன்று தான் நாம் இப்பொழுது பார்க்க போகும் Short Cut Key உருவாக்கி அதன் மூலம் திறப்பது. உலகில் பெரும்பாலான கணினிகளில் உபயோகிக்கப்படும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இதற்க்காக ஒரு வசதியை அளித்துள்ளனர்.\n‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’(அல்-குர்ஆன் 3 : 185).\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nஆயப்பாடி பெருநாள் தொழுகை - வீடியோ\nஆயப்பாடி பள்ளிவாசலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை வீடியோ.\nதலைப்பு : ஆயப்பாடி செய்திகள், கம்ப்யூட்டர்\nதிருமண அழைப்பிதழ் - 10 (29-9-11)\nஆயப்பாடி முப்பெரும் விழா அழைப்பிதழ் (30-9-11)\nதிருமண அழைப்பிதழ் - 9 (29/9/11)\nஅமைதியை குலைத்தவனே அமைதிக்காக உண்ணாவிரதமா\nWindows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய - சோதனை பதிவு\nAVG Anti-Virus 2012 முற்றிலும் இலவசமாக\nஅனைத்து மென்பொருளையும் சுலபமாக Shortcut Keys மூலம்...\nஆயப்பாடி பெருநாள் தொழுகை - வீடியோ\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/holiday/", "date_download": "2018-08-21T13:48:19Z", "digest": "sha1:Z2PAW2RBKQ243CDOXEROAWT23FCZ72H5", "length": 2826, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Holiday | பசுமைகுடில்", "raw_content": "\nதசராவுக்கு பதில் பொங்கல் விடுமுறை சேர்ப்பு\nபொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு திடீரென நீக்கி விட்டதாக நேற்று பரபரப்பாக தகவல் வெளியானது. தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/08053926/Kamal-Hassan-In-the-Indian-film-2--Ajaytevkan.vpf", "date_download": "2018-08-21T13:40:09Z", "digest": "sha1:OMGPMFDPUHIL2XZHLWKCI2XWJ33WEMUR", "length": 9855, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Hassan In the Indian film 2 Ajaytevkan || கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்\n‘விஸ்வரூபம்-2’ படம் திரைக்கு வருவதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.\nஇந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தி நடிகர் அஜய்தேவ்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை கமல்ஹாசன் தெரிவித்தார். ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். அவரை தொடர்ந்து அஜய்தேவ்கானும் இந்தியன்-2 படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.\nகமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பில் முழு வீச்சில் கலந்து கொள்கிறார். மற்ற நடிகர்களை வைத்து ஷங்கர் படப்பிடிப்பை முன்கூட்டியே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் முதல் பாகம் லஞ்சத்துக்கு எதிரான கதையம்சத்தில் இருந்தது. இரண்டாம் பாகம் முழுமையான அரசியல் படமாக தயாராகிறது.\nகமல்ஹாசன் அரசியலில் குதித்து இருப்பதால் இந்தியன்-2 படம் மூலம் மக்களை தன் கட்சி பக்கம் இழுக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை தயவு செய்து உதவுங்கள் என்று உதவி கேட்டு வீடியோ\n2. தனது மகனாக நடித்த நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடிகை மீது புகார்\n3. விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது\n4. நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்\n5. “எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleupy.blogspot.com/2017/06/23-06062017-23.html", "date_download": "2018-08-21T14:16:37Z", "digest": "sha1:WHK2FBMG35VVAC4NMGS4RC7SSIDJIN6O", "length": 1840, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: 23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் 06.06.2017 அன்று சென்னையில் நடைபெற்ற 23வது தமிழ் மாநில கவுன்சிலின் முடிவுகள்", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nதிங்கள், 12 ஜூன், 2017\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் 06.06.2017 அன்று சென்னையில் நடைபெற்ற 23வது தமிழ் மாநில கவுன்சிலின் முடிவுகள்\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 9:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kausalyas.blogspot.com/2007_12_18_archive.html", "date_download": "2018-08-21T14:10:56Z", "digest": "sha1:PVO5RZULEWI4U776IED5QMFNS33CF72S", "length": 4387, "nlines": 105, "source_domain": "kausalyas.blogspot.com", "title": "கௌசல்யா கவிதைகள்: Dec 18, 2007", "raw_content": "\nஇதயம் ... என் விழிகள்\nநினைவில் நின்ற மழைக் காலம்\nமதில் சுவர் நீர் ஒழுகி\nஇராமர் பச்சை கோடு போட்ட டாப்ப்\nஒழுகும் போது வைத்து கொள்ள...\nஇருக்கும் வாழ்வை அனுபவி என்று...\nஒண்ட கூட இடம் இல்லாமல்\nஉண்ண இருந்த தட்டுகள் எல்லாம்\nபள்ளி விட்டு திரும்பும் பொழுது\nஓடும் நீரில் கால்கள் துள்ளல் போடும்..\nகுட்டி குட்டி தவளைகள் கும்மாளம் அடிக்கும்....\nமின் விசிறி ஐந்தில் சூழலும்...\nசூட சூட பஜ்ஜி சுண்டி இழுக்கும்....\nமழைக்காலத்துக்கு மவுசு அதிகம் தான்\nநினைவில் நின்ற மழைக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=e2d8f275267d4d53812ab20fd3c06777", "date_download": "2018-08-21T14:07:38Z", "digest": "sha1:X3G5C2XNLTXHBIQ5OVLD3IQ5IEN4DK3N", "length": 31113, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2012/02/blog-post_3052.html", "date_download": "2018-08-21T14:35:21Z", "digest": "sha1:AQ4QC4QDGJMIXD6HTCYEVTLV7UBLD5OL", "length": 12138, "nlines": 171, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி வக்ரம் என்ன செய்யும்..? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி வக்ரம் என்ன செய்யும்..\nசனி வக்ரம் என்ன செய்யும்..\nசனிப்பெயர்ச்சிக்கு பின் அதாவது சனி கன்னி வீட்டில் இருந்து துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிவிட்டது.இப்போது வரும் 8.2.2012 முதல் 25.6.2012 வரை சனி துலாம் ராசியில் வக்ரம் ஆகிறார்.அதாவது பலம் இழந்துவிடுகிறார்.இதனால் சனியால் ஆதாயம் அடைந்தவர்களுக்கு இது சற்று கலக்கம் தரும் செய்திதான்...\nசனி பற்றி ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்பு என்னவெனில் சனிதான் ஆயுள் காரகன்.சனிதான் தொழில் காரகன்.சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி.ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும்.\nசனி வக்ரம் என்பது பின்னோக்கி நகர்தல் என பார்த்து பலன் அறியலாம்.அதாவது சனி மீண்டும் கன்னிக்கே வருகிறார் என குறித்து பலன் எடுக்கவும்.அதாவது மேசம் ராசிக்கு 7 ஆமிட பலனை சனிப்பெயர்ச்சி முதல் கொடுத்து வருகிறார் ..இப்போது சனி வக்ரம் ஆனதால் 6 மிட பலன்களை வரும் 138 நாட்களும் தருவார்.அதாவது 8.2.2012 முதல்.சரியா..\nஅதன்படி பார்த்தால் மேசம் ராசியினருக்கு 6 மிடத்து சனி நன்மை தரும்.சனிப்பெயர்ச்சி ஆனது முதல் ஒண்ணும் சரியில்லை.பிரச்சினையாவே இருக்கு.கணவன் மனைவிக்குள் பிரச்சினை மேல் பிரச்சினை வருது.என சலித்துக்கொள்கிறீர்களா..இந்த நாட்களில் அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் கடன் பிரச்சினை அடையும்.தொழில் பிரச்சினை,மந்தம் விலகும்.\nரிசபம் ராசிக்காரர்களுக்கான சனி வக்ர பலன்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம்\nஜோதிடம்;ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் என்ன வேலை செய...\nவாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நா...\nஉங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் வ...\nசனி வக்ரம் ;ராசிபலன்-எண் ஜோதிடம்\nராகுல்காந்தி பிரதமர் ஆவாரா..ஜாதகம் ஆய்வு\nசனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..\nசனி வக்ரம் என்ன செய்யும்..\nவிஜயகாந்த் நல்ல நேரம் எப்போது..\nதிருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை\nதிருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/07/blog-post_384.html", "date_download": "2018-08-21T13:57:44Z", "digest": "sha1:V2SQZXZWXWHWJZSQKFXY5B3Y6OWBBUEA", "length": 9118, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்! என்னவென்று தெரியுமா?", "raw_content": "\nஇந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி யைமங்களை உருவாக்கும் செங்கோட்டையனின் திட்டம் ஒட்டு மொத்த\nஇந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்க உள்ளது.\nதற்போது ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்மாநிலம் முழுவதிலும் இருந்து சென்னை வந்தே தங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களும் புற்றீசல் போல் உருவாகி, மாணவர்களிடம் இருந்து ஏராளமாக பணம் கறந்து வருகின்றன.இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திறமையான மாணவர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைசெங்கோட்டையன் அறிமுகம் செய்ய உள்ளார்.இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாகும் நிலை இருக்கிறது.\nஇது குறித்த சென்னையில் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.இந்த மையங்களில் திறன் வாய்ந்த 100 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிக அளவில் மாவட்ட நூலகங்களுக்கு வாங்கப்படும்.\nஇந்த பயிற்சி மையங்கள் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும். இந்த மையங்களில் கிராமப்புறமாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.\nபிஞ்சு மழலையின் Cute English - .\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/cannibal", "date_download": "2018-08-21T14:11:38Z", "digest": "sha1:5JGRAXYNGAACKGWCNX7FZ74K3ZO4VLKS", "length": 4175, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"cannibal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncannibal பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநரமாமிசபட்சணி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-08-21T14:30:22Z", "digest": "sha1:4VX3534QNWSETZYV2AI7QLQ765LG72CT", "length": 39762, "nlines": 375, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: காதலர் தினக் கோமாளிகள் - கிளிமூக்கு அரக்கன்", "raw_content": "\nகாதலர் தினக் கோமாளிகள் - கிளிமூக்கு அரக்கன்\nமசூதியை இடிப்பவர்களும், மசூதியை இடித்ததற்காகப் போராடியவர்களும் கைகோர்க்கும் இடம் ஒன்று உண்டு. இருவருக்குமே கலாச்சாரக் காவல் என்றால் மிகவும் பிடிக்கும். ஓரினச்சேர்க்கையினருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பானாலும் சரி, பெண்கள் உடை விஷயம் என்றாலும் சரி, காதலர் தினக் கொண்டாட்டமானாலும் சரி, குல்லாயும்-காவியும் கட்டித் தழுவிக் கொள்ளும்.\nகாதலர் தினம் என்றால் காதல் என்னும் இயற்கையான மனித உணர்வைக் கொண்டாடும் தினம். அன்னையர் தினத்தைப் போல, தந்தையர் தினத்தைப் போல ஒரு நினைவுகூர் தினம். எப்படி ஆண்டு முழுதும் அம்மா பாசமாக இருக்கிறாரோ, அப்பா பாசமாக இருக்கிறாரோ அதேபோல... ஆண்டுமுழுதும் உலகின் எல்லா மூலைகளிலும் காதலர்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஒத்துவராமல் பிரிந்துகொண்டு தான் இருக்கிறார்கள், ஆண்டு முழுவதும் உடலுறவிலோ, காமக்கலைகளிலோ ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆண்டுமுழுதும் அன்பைப் பறிமாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆண்டுமுழுவதும் தங்கள் காதலை பழமைவாதத்திடமிருந்து காக்க போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள், காதலில் விழுந்துகொண்டே தான் இருக்கிறார்கள், திருமணம் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்டில் ஒரே ஒரு நாளை இதையெல்லாம் நினைவுகூர்வதற்காக ’காதலர்தினம்’ என்ற தினத்தை சிறப்புதினமாக, ஒரு குறியீடாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த காதலர் தினத்தை, அதாவது ஒரே ஒரு தினத்தை ஒழித்துவிட்டால் காதலை ஒழித்துவிடலாம், காதலில் பிரிதலை ஒழித்துவிடலாம், பழைய காதலை மறந்து புதிய காதலில் புகும் மனிதனின் இயற்கை குணத்தை ஒழித்துவிடலாம் என கலாச்சாரம், மதம் ஆகிய கூறுகளால் மனநலம் பாதிக்கப்பட்ட சில கூட்டங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அன்னையர் தினத்தை நிறுத்திவிட்டால் தாய்ப்பாசம் உலகில் நின்றுபோகுமா\nகடவுள், மதம், மொழி என எதுவும் தோன்றுவதற்கு முன்பே காதல் உருவாகிவிட்டது. ஆதாமும் ஏவாளும் உடலுறவு கொண்டபின் தள்ளிப் போய்விடவில்லை, காதலுடன் கட்டிக்கொண்டே தான் அலைந்தார்கள். காதல் என்பதற்கான அர்த்தம் ஒவ்வொருவனுக்கும் ஒருமாதிரியாக இருப்பது. சிலருக்கு காமம் தான் காதல். சிலருக்கு காமமே இல்லாத அன்புதான் காதல். சிலருக்கு காமமும், அன்பும் இணையும் புள்ளிதான் காதல். அவ்வளவு ஏன் நம்முர் கலாச்சாரத்தில் நிச்சயிக்கட்ட திருமணம் செய்துகொள்வோர்க்கு உடல் இணையும் முதலிரவு தான் காதல் நம்முர் கலாச்சாரத்தில் நிச்சயிக்கட்ட திருமணம் செய்துகொள்வோர்க்கு உடல் இணையும் முதலிரவு தான் காதல் இப்படி காதலை ஒரு வரையறைக்குள் அடக்கவே முடியாதபோது, ‘தாலி கட்டினால்தான் காதல்’ எனத் தாலியுடன் தரகர் போல அலையும் தறுக்கர்களையும், கற்பை காதல் கெடுக்கிறது எனப் போஸ்டர் ஒட்டி அலையும் கோமாளிகளையும் என்ன செய்வது இப்படி காதலை ஒரு வரையறைக்குள் அடக்கவே முடியாதபோது, ‘தாலி கட்டினால்தான் காதல்’ எனத் தாலியுடன் தரகர் போல அலையும் தறுக்கர்களையும், கற்பை காதல் கெடுக்கிறது எனப் போஸ்டர் ஒட்டி அலையும் கோமாளிகளையும் என்ன செய்வது மனித இனத்திற்கு அப்பாற்பட்ட இந்த ஜந்துக்களுக்கு காதல் என்னும் மனித இயல்பை பொத்தாம் பொதுவாகப் புரியவைக்க வேண்டுமானால், நாம் இந்தியக் கலாச்சாரமாக அறியப்படும் ’நிச்சயிக்கப்பட்ட திருமணம்’ என்ற கருத்தியலை பகுப்பாய்வு செய்துபார்த்தல் அவசியம்.\nபெட்டை நாய்களை பருவகாலத்தில் ஆண் நாய்களுடன் கூடுவதற்காக அதன் உரிமையாளர்கள் கூட்டிச் செல்வார்கள். ஆண் நாயின் சாதி, உயரம், எடுப்பு, அதன் பரம்பரை பெருமை ஆகியற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் இரண்டு நாய்களையும் கூட வைப்பார்கள். அவைகளும் பருவ நேர இயற்கை உந்துததாலும், குட்டி ஈனுவதற்காகவும் கூடிக்கொள்ளும். கூடி முடிந்தபின் அதனதன் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள். பிறகு அடுத்த பருவத்தில் தான் கூடல்.\nமனிதனின் திருமணக் கதையும் இதே போன்றதுதான் என்றாலும் மனிதன் இதிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டவன். அவனுக்கு வருஷமெல்லாம் வசந்தம் தான் வருஷமெல்லாம் குட்டி ஈனுவதற்கும், உடலுறுவு கொள்வதற்கும் எந்நேரமும் தயாராக இருப்பவன் மனிதன். அதனால் அவனுக்குப் பருவ வயது வந்தவுடன் ஜோடி சேர்ப்பதற்காக பருவமெய்திய மற்றொரு மனிதனைத் தேடுவார்கள். சாதி, அழகு, உயரம், பரம்பரை பெருமை, குடும்பப் பெருமை ஆகியற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் கட்டிலறைக்குள் தள்ளுவார்கள். பருவம் தரும் இயற்கை உந்துததாலும், திருமணம் ஆகிவிட்ட காரணத்தாலும் இருவரும் கூடுவார்கள். ஆனால் நாய்கள் போல ’வேலை முடிந்தபின்’ அவரவர் வீட்டிற்குச் செல்லாமல், வருஷமெல்லாம் வசந்தம் என்பதால் தனியாகத் தங்கி தனிக் குடும்பத்தை உற்பத்திசெய்து வளர்ப்பார்கள். உடலுறவு தரும் சுகம், காதலோ என ஐயம் கொள்ளும் அளவிற்கு கொஞ்சநாளைக்கு அவர்களுக்குள் ஒரு ஈர்ப்பைத் தரும். சில அதிர்ஷ்டசாலி ஜோடிகளுக்கு, புரிதல் ஏற்பட்டபின் இந்த உடலுறவு ஈர்ப்பு காதலாக மாறும். அப்படி மாறாத ஜோடிகள் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்த பாவத்திற்காகவும், குழந்தை பெற்றுக்கொண்ட பாவத்திற்காகவும், பிரிந்துபோதலைப் பாவமெனச் சொல்லும் தரங்கெட்ட சமூகத்திற்கு பயந்தும், ஒன்றாக வாழ்ந்தே காலத்தைத் தள்ளுவார்கள். காமமும் அன்பும் கலக்கும் புள்ளிதான் காதல் என்பதே தெரியாமல் வாழ்ந்து ஒருநாள் செத்தும் போய்விடுவார்கள். சமூகம் கட்டமைத்திருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண-பந்தத்தின் சிக்கல் இதுதான்.\nமனிதனின் இயற்கையே நிச்சயித்த திருமணங்களுக்கு எதிரானது. காதல் இயற்கையாக ஏற்படுவது.\n1) மன ஈர்ப்போ, உடல் ஈர்ப்போ ஏற்படுகிறது.\n3)காமமும், அன்பும் ஒரு புள்ளியில் இணைந்து காதலாக மாறுகிறது.\n6)அவையாவும் ஒத்துவந்தால் சட்டவசதிக்காக, சமூக வசதிக்காக திருமணமாகிறது. 7)இல்லையெனில் உறவு முறிகிறது.\n8)மீண்டும் எண் ஒன்றைப் படிக்கவும்.\nஇவ்வளவுதான் காதல். இதுதான் இயற்கை. இதற்கு மாறாக, பருவமெய்துவிட்ட காரணத்தாலும், சம்பாதிக்கத் துவங்கிவிட்ட காரணத்தாலும் திடீரென யாரோ ஒரு மூன்றாவது மனிதரை செய்துகொள்ளும் திருமணம் இயற்கையானதல்ல. கலாச்சாரம், கலாச்சாரம் என்று வகுப்பெடுக்கிறார்களே, நேரடியாக முதலிரவில், உடலுறவில் வாழ்க்கையை முளைக்க வைப்பதைவிடவா ஒரு கலாச்சாரச் சீரழிவு இருக்க முடியும்\nஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக பயங்கரவாத அமைப்புகள் இருதார மணங்களை எதிர்ப்பதில்லை, வன்புணர்வுகளுக்கு எதிரான பொங்கியிருக்கிறார்களா என்றால் இல்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தவறு எனக் கண்டித்திருக்கிறார்களா என்றால் இல்லை, ஊழலுக்கு எதிராக, மலத்தை வாயில் திணிக்கும் சாதியத்திற்கு எதிராகப் பொங்கியிருக்கிறார்களா என்றால் இல்லை. மதத்தையும்-சாதிய கட்டமைப்பையும், சாதி உணர்வையும் நிச்சயித்த திருமணங்களால் மட்டுமே தலைமுறை தலைமுறையாகக் கடத்த முடியும் என்பதில் தெளிவாக இருப்பதனால்தான் காதலை எதிர்க்கிறார்கள். தாலி கொடுத்து கட்டச் சொல்வது காதலர்களை கணவன்-மனைவிகளாக ஆக்கும் நல்லெண்ணத்தில் அல்ல. (அப்படி நல்லெண்ணம் இருந்தால் ஒரு அமைப்பை நிறுவி “எந்த மதம், சாதியைச் சேர்ந்த காதலர்களானாலும் வாருங்கள். நாங்கள் திருமணம் செய்துவைப்போம்” என அறிவிக்கட்டுமே பார்ப்போம்) அவர்கள் நோக்கம் காதலர்களை பயப்பட வைப்பது, மனரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமே. அடுத்த வருடம் திருமணம் செய்யலாம் என சிலர் இருப்பார்கள், வேலை கிடைத்தபின் வீட்டில் சொல்லலாம் என சிலர் காத்திருப்பார்கள், சிலர் இந்தக் காதல் எவ்வளவு தொலைவு போகிறதோ போகட்டும் என இருப்பார்கள், சிலர் இதே காதல் இரண்டு வருடங்கள் தொடர்ந்தால் திருமணம் செய்யலாம் என்றிருப்பார்கள். அட, அவர்கள் காமத்திற்காக காதலிப்பவர்களாகவே இருக்கட்டுமே) அவர்கள் நோக்கம் காதலர்களை பயப்பட வைப்பது, மனரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமே. அடுத்த வருடம் திருமணம் செய்யலாம் என சிலர் இருப்பார்கள், வேலை கிடைத்தபின் வீட்டில் சொல்லலாம் என சிலர் காத்திருப்பார்கள், சிலர் இந்தக் காதல் எவ்வளவு தொலைவு போகிறதோ போகட்டும் என இருப்பார்கள், சிலர் இதே காதல் இரண்டு வருடங்கள் தொடர்ந்தால் திருமணம் செய்யலாம் என்றிருப்பார்கள். அட, அவர்கள் காமத்திற்காக காதலிப்பவர்களாகவே இருக்கட்டுமே இரு வயதுவந்தவர்கள் மனமுவந்து என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகிறார்கள், உனக்கென்ன வந்தது இரு வயதுவந்தவர்கள் மனமுவந்து என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகிறார்கள், உனக்கென்ன வந்தது உன்னையா புணர்ச்சிக்கு அழைத்தார்கள் உங்கள் புராணங்களைவிட, பாஞ்சாலியின் ஐவர் படையை விட, கிருஷ்ணனின் லீலைகளைவிட, மனிதர்களின் காதல் எந்த விதத்தில் குறைந்துபோய்விட்டது\nஅதே நேரம் இந்தப் பக்கம் பார்த்தால், ’காதல் கற்பை நாசம் செய்கிறது,’ ‘காதலர் தினம் என்பது காமுகர்களின் வேலை’ என்றெல்லாம் போஸ்டர் ஒட்டிக்கொண்டு அலைகின்றன தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள். அப்படிப்பட்ட அறிவுஜீவி, தீவிர மதவாத அமைப்புகளிடம் நான் கேட்க விரும்பும் அதிமுக்கியமான கேள்வி, ’கற்பு என்றால் என்ன\n1) கற்பு என்பது ஆண்பாலா, பெண்பாலா\n2)கற்பு என்பது ஆண்பால் என்றால் பலதார மணங்களை எப்படி இஸ்லாத் அனுமதிக்கிறது\n3) கற்பு என்பது பெண்பால் என்றால் விவகாரத்துக்களையும், பெண் மறுமணத்தையும் இஸ்லாத் எப்படி ஆதரிக்கிறது\n4) கற்பு என்பது திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதா\n5) பல திருமணங்களை அனுமதிக்கும் இஸ்லாத்தில், விவாகரத்தை எளிதாக அருளும் இஸ்லாத்தில், முதல் திருமணத்திற்கு முன்பு எப்படியோ கஷ்டப்பட்டு கற்பை காத்துக் கொள்கிறார்கள் சரி, இரண்டாம் திருமணத்தின்போது முதல் திருமணத்தால் கற்பு பறிபோய், கற்பின்றிதானே இருப்பார்கள். அது தவறில்லையா இல்லை மீண்டும் கற்பை புதுப்பித்துக்கொள்ள இஸ்லாம் எதும் வழிவகை செய்திருக்கிறதா\n6) காதல் காமுகர்களின் வேலை என்றால், காதலற்ற, நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்குப் பின்பான காமம் யாரின் வேலை காதலுடன் காமமுறுகிறவர்களே காமுகர்கள் என்றால், காதலின்றி காமமுறுகிறவர்கள் யார்\nஇஸ்லாத்தில் நான் பெரிதும் மதிக்கும் ஒரு விஷயம் ஆண்-பெண் பேதமின்றி அது தரும் ‘திருமண பந்தத்தை முறித்து பிரிந்து போதலுக்கான உரிமை’. திருமணவாழ்க்கைகள் பெரும்பாலும் பிரச்சினைக்குள்ளாவது இந்த பிரிந்துபோவதற்கான உரிமை இல்லாமை தான். இந்து மதத்தில் அவ்வளவு சுலபமாக ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்துவிடமுடியாது. அப்படியே போராடி விவாகரத்து பெற்றுவிட்டாலும் அவளை ஏதோ மோசமான பெண்ணாக, உடலுறவுக்கு ஏங்கும் பெண்ணாக மட்டுமே பார்க்கும் ‘கலாச்சாரம்’ உண்டு. ஆனால் இஸ்லாம் அந்தக் ’கலாச்சாரம்’ இல்லாத ஒன்று. விவாகரத்து பெற்று மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழும் பல இஸ்லாமியப் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். பல விஷயங்களில் முரட்டுத்தனமான பழமைவாதத்துடன் இருந்தாலும், இஸ்லாத்தில் இருக்கும் வெகுசில முற்போக்கான விஷயங்களில் இதுவும் ஒன்று.\nஆக, இருக்கும் சில முற்போக்கான விஷயங்களையும் கூட அழித்து, இஸ்லாத்தை வெகுஜன மக்களிடம் வெகுதூரம் அழைத்துச் செல்லும் வேலையைத்தான் வலதுசாரி அமைப்புகளான தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் செய்கின்றன. ஏற்கனவே இந்து மத அமைப்புகளால் இஸ்லாமிய அமைப்புகள் தவறாகச் சித்தரிக்கப்படும் சூழலில் தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் உண்மையிலேயே தவறுகளைச் செய்து எரியும் தீயில் எண்ணை ஊற்றும் வேலையைச் செய்கின்றன. அவற்றை இஸ்லாமியர்களே புறக்கணித்தல் நல்லது.\nஇந்த இரு கலாச்சாரக்காவலர்களையும் தாண்டி ‘சீ சீ இந்தப்பழம் புளிக்கும்’ என்ற கோஷ்டி ஒன்றும் உள்ளது. அது குறித்து என் குருநாதர் வினையூக்கியின் நண்பர் டான் அசோக் நேற்று,\n”காதலர் தினம் அன்னைக்கு எவன்லாம் கலாச்சார வகுப்பு எடுக்குறான்றதை நோட் பண்ணிட்டு அவன் பின்புலத்தை ஆராய்ஞ்சீங்கன்னா, வயசுப் பருவத்துல காதலுக்காக லோ லோ லோனு அலைஞ்சு, ஃபிகர் கிடைக்காதானு தெருத்தெருவா திரிஞ்சி, கடைசில ஒரே ஒரு லவ் கூட பண்ண முடியாம நொந்து நூடுல்ஸ் ஆகி, ஒரு பொண்ணோட கூட நட்பு வைக்கவே முடியாத லூசுப்பயலா இருந்து, கடைசியா வேற வழியே இல்லாம இந்த ’கலாச்சாரக் காவலன்’ வேஷம் போட்டவனாதான் இருப்பான் எந்த வயது வந்த ஆணுக்கும்-பெண்ணுக்கும் காதலிக்கும் உரிமை இருக்கிறது என்பதையும், அதேபோல் பிரிந்து போகும் உரிமையும் இருக்கிறது என்பதையும், அது முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதும் புரியலைன்னா, நீங்கள்லாம் எல்.கே.ஜில சேர்றதுக்குக்கூட லாயக்கில்லாதவய்ங்கனு அர்த்தம். மூளையே தேவைப்படாத ஆர்.எஸ்.எஸ்லயும், தவ்ஹீத் ஜமாத்லயும் மட்டும் தான் சீட்டு கிடைக்கும். காதலர்கள் அனைவருக்கும், காதலிக்க நினைக்கும் அனைவருக்கும், ’கணவன் -மனைவி’கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். ”\nஎன்று ஒரு நிலைத்தகவல் போட்டிருந்தார். அதுவே பல கட்டுரைகளுக்கான விஷயத்தைச் சொல்லிவிட்டதால் இந்த ‘சீ சீ புளிக்கும்’ குழுவைப் பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்தக் சீ சீ குழுவைச் சேர்ந்த பலர் காலப்போக்கில் காதலை சந்திக்கும்போது தானாகவே திருந்திவிடுவார்கள். கடைசிவரை பெண்களைப் புரிந்துகொள்ளாத, அல்லது காதலே கிடைக்காமல், காய்ந்து போனவர்கள் ஏதாவது வலதுசாரி அமைப்போடு ஒன்றிவிடுவார்கள். அவர்களைத் தான் மேலே தாக்கிவிட்டோமே, அதனால் தனிப்பகுதி தேவையில்லை.\nகாதலைக் கொண்டாடுங்கள். காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என அலையும், முழுமனிதர்களாக பரிணாமவளர்ச்சி அடையாத கோமாளிகளைப் பார்த்து “ஏய் அங்க பாரு கோமாளி” எனச் சிரியுங்கள். காதலை எந்த நூற்றாண்டிலுமே எவராலுமே எதுவும் செய்யமுடியவில்லை. அட... ஈடன் கார்டனில் கடவுளாலேயே காதலை எதுவும் செய்ய முடியாதபோது, இந்தக் கோமாளிகள் எம்மாத்திரம் கிளிமூக்கு அரக்கனின் அனைத்து ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்.\n(தோழர் கிளிமூக்கு அரக்கன் பிரபலமான முகநூல் எழுத்தாளர். அவரின் எழுத்துக்களைப் பின்தொடர இந்தச் சுட்டியை அழுத்தவும் https://www.facebook.com/kilimookku )\nLabels: RSS, கட்டுரை, காதலர் தினம், காதல், கிளிமூக்கு அரக்கன், டான் அசோக், மதம்\nமிக நல்ல பதிவு... நானும் கூட எனது பதிவில் காதலுக்கு எதிராக உள்ள சிலவர்கலை பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் என்னால் இவ்வளவு தெளிவாக நன்றாக அலசி எழுதமுடியவில்லை நீங்கள் மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.\n நேற்று இன்று நாளை- கிளிமூக்கு ...\nகலைஞர் ஏன் 2000ல் நளினியை மட்டும் காப்பாற்றினார்\nசீமான் புராணங்கள்: 1 முதல் 5 வரை -டான் அசோக்\nகாதலர் தினக் கோமாளிகள் - கிளிமூக்கு அரக்கன்\nகறுப்பும் காவியும் - 16\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/knowledge/essays/8770-cern-2", "date_download": "2018-08-21T13:56:00Z", "digest": "sha1:LJDKY4Q7GGJF4TE2BLKDF2H7ZPSJJAAU", "length": 28127, "nlines": 174, "source_domain": "4tamilmedia.com", "title": "நினைவில் நீங்கா CERN தருணங்கள்! : ஓர் சுவாரஷ்யமான பயணம்", "raw_content": "\nநினைவில் நீங்கா CERN தருணங்கள் : ஓர் சுவாரஷ்யமான பயணம்\nPrevious Article ஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்\nNext Article பூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்\nஇம்முறை கோடை விடுமுறை என் வாழ்வில் மறக்க முடியாத அனுபத்தைத் தந்தது. ஏனெனில் நிகழ்காலத்தில் மனிதனின் அறிவியல் தேடுதலின் உச்சத்தில் பிரபஞ்சத்தின் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் துணிக்கைகள் பற்றிய உன்னதமான ஆராய்ச்சிகளை தினசரி நிகழ்த்தி வரும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் பிரெஞ்சு சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள சேர்ன் (CERN - European Organization for Nuclear Research) துகள் முடுக்கி ஆய்வகத்துக்கு முன்கூட்டியே பதிவு செய்து எனது நண்பர் ஒருவருடன் இணைந்து ஒரு வழிகாட்டியின் விளக்கத்தைப் பெறும் விதத்திலான தனிப்பட்ட விஜயத்தை (Individual tour) என்னால் மேற்கொள்ள முடிந்தது. ஆச்சரியங்களின் இருப்பிடம் அது.\nஐ.நா இன் உத்தியோகபூர்வ அனுசரனையுடன் இயங்கும் சேர்ன் 1954 ஆம் ஆண்டு தாபிக்கப் பட்டது. இந்த சேர்ன் ஆய்வகத்தில் தற்போது இஸ்ரேலுடன் இணைந்து 22 உறுப்பு நாடுகள் ஆய்வுப் பணியில் ஈடுபடுகின்றன. 2013 ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வகத்தில் 2513 முக்கிய உறுப்பினர்களுடன் 12 313 பின்பற்றுபவர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் உலகம் முழுதும் 608 பல்கலைக் கழகங்கள் அல்லது மீளாய்வு மையங்கள் என்பன இணைந்து செயலாற்றுகின்றனர்.\n2 ஆம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து அறிவார்ந்த விஞ்ஞானிகள் பலர் தமது பாதுகாப்புக்காக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவும், உலகளாவிய ரீதியில் அனைத்து விஞ்ஞானிகளும் இணைந்து செயலாற்றும் விதத்திலும் ஒரு வலையமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் தான் 1950 களில் சேர்ன் ஆய்வு கூடம் ஐரோப்பாவின் நடுநிலை நாடான சுவிட்சர்லாந்தில் நிறுவப் பட்டது.\nபௌதிகவியலில் தோன்றிய துணிக்கைகள் குறித்த பல கேள்விகளுக்கான பதிலைப் பெறுவதும் இந்த ஆய்வு கூடத்தின் நோக்கமாக இருந்தது.\nஇன்று நாம் பயன்படுத்தும் WWW (World wide web) என்ற இணையம் முதன் முதலாக சேர்ன் விஞ்ஞானிகள் தமக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்காக உருவாக்கப் பட்டு பின் உலக மயமாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.\nசேர்ன் ஆய்வு கூடம் ஆரம்பத்தில் அணுக்கரு (atomic nuclei) தொடர்பான கல்விக்கு அர்ப்பணிக்கப் பட்ட போதும் விரைவில் அது மிகை சக்தி பௌதிகவியல் (high-energy physics) இற்கும் பயன்பட்டது.\nமேலும் துணை அணுத் துணிக்கைகளுக்கு (subatomic particles)இடையேயான ஈர்ப்பு தொடர்பான கல்விக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.\nஆனால் இன்று சேர்ன் இல் 10 இற்கும் மேற்பட்ட துகள் முடுக்கிகளில் தினசரி துணை அணுத் துணிக்கைகளை மோதவிட்டு மேற்கொள்ளப் படும் ஆய்வின் மூலம் மருத்துவத்துறை, கணணித்துறை, கற்பனைத் திறன், அதிதிறன் கடத்திகள் (super conductivity) தொடர்பான புதிய பயன்பாடுகள், வானியல், வேதியியல் மற்றும் பௌதிகவியல் போன்ற துறைகளில் இணையில்லா கண்டு பிடிப்புக்களும் பங்களிப்பும் வழங்கப் பட்டுள்ளதுடன் இதற்கு முன் சாத்தியமில்லை என்று கருதப் பட்ட அதி நவீன கருவிகளும் கூட உருவாக்கப் பட்டுள்ளன.\nவரலாற்றில் 1934 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை துணை அணுத் துணிக்கைகள் தொடர்பான ஆய்வுக்காக இதுவரை 10 இற்கும் மேற்பட்ட முக்கிய துகள் முடுக்கிகள் (particle accelarators) உருவாக்கப் பட்டுள்ளன.\nஇவற்றில் முக்கியமான பல துகள் முடுக்கிகள் சேர்னில் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றில் 1934 ஆம் ஆண்டு ஏர்னெஸ்ட் லாரென்ஸின் சைக்ளோட்ரோன் (Cyclotron) முதலாவது ஆகும். சேர்னில் அமைக்கப் பட்ட முதலாவது ஆய்வு கூடம் 1957 மே 11 ஆம் திகதி அமைக்கப் பட்ட Synchrocyclotron ஆகும்.\nசுமார் 33 வருடங்கள் பாவனையில் இருந்த இந்த துகள்முடுக்கி தற்போது projector கருவிகளின் துணையுடன் அது எவ்வாறு இயங்கியது என கண்காட்சிக்காக வைக்கப் பட்டுள்ள விதமும் தொழிநுட்பமும் மிகவும் பிரம்மிக்கத் தக்கதாக இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\n2 ஆவது துகள் முடுக்கியான 1959 நவம்பரில் அமைக்கப் பட்ட The Prton Synchrotron (PS) சேர்னின் முதலாவது புரோட்டோன் துகள் முடுக்கி ஆகும். அடுத்தது 1971 இல் அமைக்கப் பட்ட SPS எனப்படும் Super Proton Synchrotron என்ற துகள் முடுக்கி ஆகும். இதுவே சுவிஸ் பிரெஞ்சு எல்லைக்கு குறுக்கே அமைந்த முதலாவது ஆய்வு கூடம் ஆகும். 1974 ஆம் ஆண்டு இது விரிவு படுத்தப் பட்டு 7 Km நீளமான சுரங்கத்தில் நிறுவப் பட்டது.\n1976 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய SPS முடுக்கியில் Proton களும் antiproton களும் மோத விடப்பட்டு W மற்றும் Z என்ற துணிக்கைகள் கண்டுபிடிக்கப் பட்டன. இது நோபல் பரிசைத் தட்டிச் சென்ற கண்டுபிடிப்பாகும்.\nஅடுத்ததாக 1989 ஜூலை மாதம் 27 Km சுற்றளவு கொண்ட LEP எனப்படும் Large Electron-Positron என்ற துகள் மோதுகைக் கருவி நிறுவப்பட்டது. இதில் 5176 காந்தங்களும் 128 முடுக்கிகளும் நிறுவப் பட்டுள்ளன. மேலும் மோதுகைகளின் விளைவை அவதானிக்க 4 கண்காணிப்பு கருவிகளும் (detectors) அமைக்கப் பட்டுள்ளன. 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இன்று சேர்ன் இல் மிகப் பெரிய துகள் முடுக்கியான LHC இனை அதே சுரங்கத்தில் அமைப்பதற்காகவென LEP ஆய்வு கூடம் மூடப்பட்டது.\n1994 ஆம் ஆண்டு LHC என்ற இன்றைய உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கி அமைக்க உலக நாடுகளுக்கிடையேயும் சேர்ன் கவுன்சிலுக்கு இடையேயும் ஒப்பந்தம் எட்டப் பட்டது. 1996 ஆம் ஆண்டு சேர்னில் AC எனப்படும் antiproton எந்திரமும் LEAR எனப்படும் ஆய்வு கூடமும் LHC செயற்திட்டத்துக்காக மூடப்பட்டன.\n2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி LEP என்ற துகள் முடுக்கி முற்றிலும் நிறுத்தப் பட்டது. 2008 ஆம் ஆண்டு LHC உத்தியோகபூர்வமாக இயங்கத் தொடங்கியது. இன்றைய பிரபஞ்சத்தின் 96% வீதமான இடத்தை நிரப்பும் கரும் சக்தி (Dark energy) மற்றும் கரும்பொருள் (Dark matter) போன்ற கண்ணுக்குத் தெரியாத கூறுகளைக் குறித்து ஆராயவும் பிரபஞ்சம் தோன்றி 1 நிமிடத்துக்குள் எவ்வாறு துணிக்கைகள் காணப் பட்டனவோ அதே நிலமையை LHC ஆய்வு கூடத்துக்குள் துணிக்கைகளை ஒளியின் வேகத்துக்கு நிகராக மோத விட்டு உருவாக்குவதன் மூலம் இன்றைய சடப்பொருளின் கட்டமைப்பு எவ்வாறு பரிணாமம் அடைந்து வந்தது மற்றும் சடப்பொருளுக்கு நிறையைத் தரும் அடிப்படைக் கூறான ஹிக்ஸ் போசொன் இன் இருப்பையும் இயல்புகளையும் கண்டறிவது போன்ற ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.\nஇதில் 40 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனின் தத்துவார்த்த பௌதிகவியலாளரான பீட்டர் ஹிக்ஸ் மும்மொழிந்த சடப்பொருளுக்கு திணிவை ஏற்படுத்தக் காரணமான ஹிக்ஸ் போசொன் என்ற துணை அணுத் துணிக்கைக்கு சமானமான துணிக்கை 2012 ஜூலை 4 ஆம் திகதி சேர்னின் LHC ஆய்வு கூடத்தில் உத்தியோகபூர்வமாகக் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் மூலம் பௌதிகவியலிலும் வானியலிலும் பெரும் சாதனை நிகழ்த்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.\nLHC ஆய்வு கூடம் தான் உலகின் சக்தி வாய்ந்த துணிக்கை மோதுகைக் கருவி (particle collider) மற்றும் வரலாற்றில் கட்டப் பட்ட மிகச் சிக்கலான ஆய்வு கூடம் மற்றும் உலகின் மிகப் பெரிய தனித்த எந்திரமும் ஆகும்.\n100 நாடுகளின் நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வுகூடங்களைச் சேர்ந்த சுமார் 10 000 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் துணையுடன் நிலத்துக்குக் கீழே 175 மீட்டர் ஆழத்தில் 27 Km சுற்றளவு கொண்ட வட்ட வடிவத்தில் ஜெனீவாவின் பிரெஞ்சு சுவிஸ் எல்லையில் இது அமைக்கப் பட்டுள்ளது. இந்த LHC எந்திரத்தின் சுற்றளவில் 4 குறுக்கு நிலைகளுடன் துணிக்கைகளின் மோதுகைகளின் விளைவுகளைப் பதிவு செய்யும் 7 கண்காணிப்புக் கருவிகள் (detectors)அமைக்கப் பட்டுள்ளன. இந்த 7 கருவிகளும் தனித்துவமான ஆய்வும் பதிவும் மேற்கொள்ளவென அமைக்கப் பட்டுள்ளன. இவற்றின் சுருக்கமான பெயர்கள் ATLAS, CMS, LHCb, ALICE, TOTEM, LHCf மற்றும் MoEDEL என்பவை ஆகும். குறித்த துணிக்கைகளின் மோதுகைகளின் பதிவுகளை ஆய்வு செய்ய 36 நாடுகளைச் சேர்ந்த 170 கணணி மையங்கள் உலகளாவிய இணையம் மூலம் 24 மணித்தியாலமும் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதுரதிர்ஷ்டவசமாக இந்த நிலக்கீழ் LHC ஆய்வு கூடத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட ஊழியர்கள், விஞ்ஞானிகள் தவிர்த்து எந்தவொரு ஆர்வலரும் அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் இதனை நேரில் சென்று பார்வையிடுவதற்கான அனுபவத்தைத் தந்தன இரு இடங்கள். அவற்றில் ஒன்று 27 மீட்டர் உயரமும் 40 மீட்டர் விட்டமும் கொண்ட ஒரு கோள வடிவிலான கட்டடம். அதனை ஆங்கிலத்தில் the Globe of Science and Innovation அதாவது விஞ்ஞானத்துக்கும் கண்டுபிடிப்புக்குமான கோளம் என்று அழைப்பார்கள்.\nஅதனுள்ளே சிறிது சிறிதாக பல கோளங்கள். ஒவ்வொன்றும் முப்பரிமாண தொடுகை உணர்வு (touch screen) கொண்ட அறிவியல் சாதனங்கள். அதாவது ஒவ்வொரு கோளமும் சேர்னின் ஆய்வுகள், வரலாறு, கட்டமைப்பு மட்டுமன்றி துணிக்கைகள், பௌதிகவியல் வானியல் போன்ற பிரிவுகளில் மீடியா விளக்கங்களை அளிக்கும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளன.\nமேலும் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில் பிரபஞ்சத்தின் தோற்றம் அதாவது பிக்பேங் என்ற பெருவெடிப்பு கொள்கை தொடர்பான ஆவணப் படம் எம்மைச் சுற்றியுள்ள அனைத்துத் திரைகளிலும் ஒளிரும். மரத்தால் ஆன இந்தக் கட்டடம் எமது பூமியைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுள்ளே அருங்காட்சியக ஸ்டைலில் காட்டப் படும் அனைத்து விளக்கங்களும் ஒருமித்து Universe of Particles அதாவது துணிக்கைகளின் பிரபஞ்சம் எனப்படுகின்றது.\n2 ஆவது இடம் சேர்ன் வரவேற்புப் பகுதிக்கு உள்ளே விரிவடைந்து செல்லும் Microcosm (மைக்ரோ பிரபஞ்சம்) என்ற அருங்காட்சியகப் பகுதியாகும்.\nஇங்கு பல சிமுலேட்டர்கள் (Simulators) மற்றும் தொடுகை உணர்வு திரை (touch screen) இனால் ஆன மீடியா ஒளிப்பதிவுகள் என்பன அமைந்துள்ளதுடன் இவை அனைத்தும் சேர்னில் நடைபெறும் செயற்பாடு, LHC இன் தொழிற்பாடு, அவற்றின் கட்டமைப்பு, வரலாறு, தொழிநுட்பம், வேலையாற்றுவதில் உள்ள சிரமம், ஆராய்ச்சி செய்யப் படும் துறைகள், வருங்கால செயற்திட்டங்கள், பிரபஞ்சம் குறித்து இன்னமும் விடை காண முடியாத கேள்விகள் என்பன குறித்து அமைந்துள்ளன.\nMicrocosm மற்றும் the Globe of science and innovation ஆகிய இரு இடங்களுமே Meyrin என்ற நகருக்கு அண்மையில் அமைந்துள்ளதுடன் இவற்றைப் பார்வையிடுவதற்கான உள்நுழைவு இலவசம் மற்றும் முன்கூட்டியே பதிதல் அவசியமற்றது ஆகும். மேலும் கிழமை நாட்களில் ஞாயிறு தவிர்த்து 6 நாட்களும் பகற்பொழுதில் திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விளக்கங்களும் வழிகாட்டிகளும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் கிடைக்கப் பெறுகின்றன.\nகடைசியாக என் அனுபவத்தின் தொகுதியில் சொல்லக் கூடிய வார்த்தைகளாக, நிச்சயம் விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக சென்று பார்வையிட நீங்கள் ஆலோசிக்கின்றீர்கள் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கு மிகவும் உபயோகமான அறிவியல் ஆற்றலை வளர்க்கக் கூடிய இடமாக விளங்கும் சேர்ன் (CERN) ஐ தேர்வு செய்யுங்கள். நிச்சயம் அப்பயணம் உங்கள் வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கப் பெற்றதைப் போன்ற மறக்க முடியாத ஒரு அனுபவத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்புடன்...\nPrevious Article ஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்\nNext Article பூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/actress-aishwarya-menon-stills-gallery/", "date_download": "2018-08-21T15:03:42Z", "digest": "sha1:3LIOL3EZVPQJ6DIQCCBPMFFU3UH6JYLJ", "length": 2986, "nlines": 60, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நடிகை ஐஸ்வர்யா மேனன் - Stills Gallery - Thiraiulagam", "raw_content": "\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nPrevious Postஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர் Next Postபிரபு - இசக்கி பரத் நடிக்கும் படம்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/hot-news/%E2%80%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2018-08-21T13:50:12Z", "digest": "sha1:B5TF36PJ7Q7N36JKXM6ZCUQVY5P4AEIA", "length": 8048, "nlines": 120, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கலாச்சாரமும் நாகரீக பெண்களும் | பசுமைகுடில்", "raw_content": "\nபிரபல மாநகரத்தில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரி விழாவில் ஒரு சில பேச்சாளர் பெண்மணி கேட்ட ஒரு சில கேள்விகள்\nயார் யாருக்கு சுயமாக சேலை கட்ட தெரியும்\nயார் யார் தன் இடது இடுப்பில் தண்ணீர் குடம் சுமந்து இருக்கிறீர்கள்\nவாசல் தெளித்து யார் யார் யாருக்கு கோலம் போட தெரியும்\nயார் யாருக்கு நன்றாக மீன் கறி வைக்க தெரியும்\nயார் யார் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு துணையாக இருக்கிறீர்கள்\nஉங்கள் கைகள் பூ போனறு மிருதுவாக உள்ளதா அல்லது உன் அம்மாவின் கையை போன்று கடினமாக உள்ளதா\nஉன் செல்போனை ஒரு நாள் எவ்வளவு நேரம் உபயோகிக்கறாய்\nசன் மியூசிக் சேனலை எவ்வளவு நேரம் பார்க்க செலவு செய்கிறாய்\nஉன் மனசாட்சியை தொட்டு சொல் இந்த ஜீன்ஸ் பேன்ட் டை நீயாக அணிகிறாயா அல்லது எல்லோரும் அணிகிறார்கள் நானும் அணிகிறேன் என்று அணிகிறாயா\nஉண்மையில் இந்த இறுகிய ஆடைகள் உன் உடலுக்கு சவுகரியமாக உள்ளதா\nசமைக்க தெரியாமல் அல்லது சமைக்க நேரம் இல்லாமல் உணவக வாசலில் டோக்கனுக்காக காத்து நிர்க்கிறாயே இது சரியா\nகடவுள் தந்த அழகான உன் உடலை கண்ட கண்ட கரியை பூசி அசிங்க படுத்தி கொண்டு பார்ப்போரை கவர நினைக்கும் புத்தி சரியா என்ன\nநீ ஒரு பெண் இப்டி தா இருக்கணும் என்று உன் அம்மா சொல்லும் போது நாடு எங்கேயோ போகுது உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று உன் அம்மா விடம் சொல்லி விட்டு எவனோ ஒருவனுடன் ஓடி போவது முறையா என்ன\nபக்கத்து வீட்டு பையனிடம் சிரித்து விட்டு எதுத்த வீட்டு பையனை முறைத்து விட்டு பஸ்டாண்ட் ல் நிக்கும் பையனிடம் கை காட்டி விட்டு தன் வகுப்பு பையனை காதலத்துவிட்டு அடுத்தவகுப்பில் இருப்பவனுடன் படுத்து விட்டு அப்பா சொல் பவனை திருமணம் செய்வதற்க்கு பெயர் நாகரீகமா என்ன\nஎல்லாரிடமும் ஒன்று போல் பழக வேண்டும் என்று அம்மா சொன்னது மறந்து விட்டதா என்ன\nஒரு தமிழச்சி எப்படி அமர வேண்டும்\nஒரு தமிழச்சி எப்படி பார்க்க வேண்டும்\nஒரு தமிழச்சி எவ்வாறு உடுத்த வேண்டும்\nஒரு தமிழச்சி எவ்வாறு பேச வேண்டும்\nஒரு தமிழச்சி எவ்வாறு நடக்க வேண்டும்\nஇது ஏதேனும் தெரியுமா என்று கேட்ட கேள்விகளுக்கு தலை குனிந்தவர்களாய் நிற்கிறார்கள் என் நாகரீக தமிழச்சிகள்\nபேச்சாளர் பெண்மணி சொல்கிறாள் உன் அம்மா விடம் கேட்டு தெரிந்து கொள் என்று\nதயவு செய்து அழகிய கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள்\nPrevious Post:குடும்ப உறவுகளிடம் ரகசியமும், பொய்யும் வேண்டாமே\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-08-21T14:01:45Z", "digest": "sha1:SZJGY2LH3ZHKX5OHWTUSWMKYBL43CEP7", "length": 17364, "nlines": 184, "source_domain": "athavannews.com", "title": "மர நடுகை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது: விக்கி\nயுத்த வெற்றியின் சின்னம் குறித்து பேசாமல் நல்லிணக்கம் குறித்து யோசிப்போம் – சி.விக்கு மங்கள பதில்\nஅதிகாரிகள் அசமந்தம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவதி\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதற்கு மஹிந்த அணி எதிர்ப்பு\nஇயற்கையால் சீர்குலைக்கப்பட்ட கேரளா: ஜாதி - மதம் மறந்து உதவும் இந்தியர்கள்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளாவிற்கு சம்பளத்தை நிவாரணமாக வழங்க அ.தி.மு.க. முடிவு\nஸ்பெயினில் பொலிஸாரை தாக்க முயற்சித்த ஆயுததாரி சுட்டுக் கொலை\nஇத்தாலி அனர்த்தம் - உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nவர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து மலேசியா - சீனா பேச்சு\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: முதன்முறையாக மகுடம் சூடினார் ஜோகோவிச்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nநல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவத்தின் 5ஆம் திருவிழா\nஇறுதிக்கட்டத்தை எட்டியது அமர்நாத் யாத்திரை\nவிசேட துஆப் பிரார்த்தனைகள் இன்று\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தின் 4 ஆம் திருவிழா\nஹஜ் யாத்திரை ஆரம்பம்: மக்காவில் கூடிய முஸ்லிம்கள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவத்தின் 3ஆம் நாள் திருவிழா\nநொக்கியா 9 புதிய கைப்பேசி வெளியாகின்றது\nஇதய நோய்யை முன்கூடியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை வெளியிடும் மைக்ரோ சொப்ட்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nகிளிநொச்சியில் இராணுவத்தினரின் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்\nகிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா தொடக்கம் பரந்தன் வரையான பிரதேசத்தில் 1000 மருது மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வருடத்தில் மர நடுகைத் திட்டம் ஒன... More\nவவுனியா மாவட்டத்தில் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம்\nமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில், விவசாய வனவியல் திட்டத்தின் கீழ் 0.8 மில்லியன் ரூபாய் செலவில் மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார். இதற்கான பயனாளிகள் தெர... More\nவடக்கு மாகாண மர நடுகை மாதம் ஆரம்பம்\nவடக்கு மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மரநடுகை மாதம், இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசனால் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண மர நடுகை கார்த்திகை மாதம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அம... More\nதவறான முன்னுதாரணமாக அ.தி.மு.க. செயற்படுகிறது: தி.மு.க. சாடல்\nகுற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் பெயரில் மர நடுகை திட்டத்தை தொடங்கி வைத்து சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை அ.தி.மு.க அரசு ஏற்படுத்தியுள்ளது என தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த தினத்த... More\nவட மாகாண மர நடுகை மாதத்தை ஆரம்பித்து வைத்தார் சி.வி.\nவட மாகாண சுற்றுச் சூழல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மரநடுகை மாதம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் இடம்பெற்ற குறித்த நிகழ்... More\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\nரகசிய உளவாளிகளாக பூச்சிகள் – தடயங்களை கண்டறிவதில் துல்லியம்\nநூதன முறையில் திருமண மோசடி – அதிர்ச்சி சம்பவம்\n6000 ஆண்டுகளின் மம்மிகள் ரகசியம் வெளியானது\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nமாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்தி\nநன்னீர் மீன்பிடி அபிவிருத்திக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nபங்கு சட்டம் காரணமாக முதலீட்டில் பின்னடைவு – பங்குசந்தையினர் கவலை\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய செயற்திட்டம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 20-08-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-08-21T14:33:43Z", "digest": "sha1:VP72DHXE3D3FILU7OZFNUJLG2MJTEQFV", "length": 7389, "nlines": 191, "source_domain": "helloosalem.com", "title": "வாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம் | hellosalem", "raw_content": "\nவாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம்\nவாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று பூண்டை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபூண்டு – 15 பல்,\nமிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 2,\nபெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை,\nகறிவேப்பிலை – 10 இலைகள்,\nகடுகு, நெய் – தலா கால் டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nபூண்டை தோல் நீக்கி வைக்கவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபூண்டுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.\nபுளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.\nபுளி கரைத்த தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.\nபிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nவாணலியில் நெய் விட்டு உருகியதும் கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.\nமேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\nசத்தான டிபன் குதிரைவாலி தக்காளி தோசை\nகுழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி\nஓணம் ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பாயாசம்\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் கலை – பெற்றோர் கவனத்திற்கு\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nசருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி\nகுழந்தைக்கு இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் பழமையான கோட்டையினுள் காயநிர்மலேஸ்வரர்கோவில்\nதாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்வோம்\nபெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்\nசமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ilayaraja.forumms.net/t186-topic", "date_download": "2018-08-21T13:36:07Z", "digest": "sha1:J5KEBLZGR54EFGQUJVLN2PY7MTZTFZC4", "length": 32111, "nlines": 272, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)", "raw_content": "\nஅழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஅழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nமதுரை இசை நிகழ்ச்சியில் ராசாவின் 1000-வது படம் என்று இயக்குனர் பாலா சொன்ன \"தாரை-தப்பட்டை\" பற்றிய தகவல்கள் இந்த இழையில் தொடரலாம்...\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\n’பரதேசி’ படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா கரகாட்டத்தை மையப்படுத்தி இயக்கும் படம் தாரை தப்பட்டை. இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதுகிறார்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nமிருதங்கத்தை விட தவில்தான் பெரிய இசை என்றும், பரதநாட்டியத்தைவிட கரகாட்டம்தான் நல்ல கலை என்றும் சசிகுமார் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் கதையாம்\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nதற்போது தாடி வளர்த்து இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் சசிகுமார்\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபாலா இயக்கத்தில் தயாராகும் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகிறார் பாடகி பிரகதி குருபிரசாத்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nமுழுக்க கிராமிய மணத்துடன் தயாராகியிருக்கும் இந்தப் பாடல்களின் இறுதி மிக்சிங்கையும் இளையராஜா முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆயிரமாவது படம் என்பதால் பாடல்களை மிகப்பிரமாண்டமாக வெளியிட பாலா முடிவு செய்திருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபடத்துக்கான இசையை இளையராஜா பல மாதங்களுக்கு முன்பே போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் திரைக்கதையை மீண்டும் மீண்டும் சரிபண்ணிக் கொண்டிருந்த பாலா, இரு மாதங்களுக்கு முன்புதான் கும்பகோணத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார். அதே வேகத்தில் பெருமளவு காட்சிகளை படமாக்கியும் விட்டார்.\nபடத்தின் நாயகன் சசிகுமாருக்கு இதில் ஏழு விதமான தோற்றங்களாம். எந்தத் தோற்றமும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் சமீப காலமாக சசியை எங்குமே பார்க்க முடிவதில்லை.\nசசிகுமார் ஜோடியாக இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். விரைவில் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தவிருக்கிறார்கள்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழு படத்தையும் எடுத்து இசை அமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து கதையின், காட்சியின் ஃபீலிங்கை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். பாடல்களை மட்டும் முன்னமே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து பாடல் காட்சிகள் எடுத்து வருவார்கள்\nஇப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழு கதையும், காட்சிகள் பற்றியும், அந்த காட்சிகளை பாலா எப்படி படமாக்குவார் என்பதை பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா சில முக்கிய காட்சிகளை கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்\nபாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளை படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளின் பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்த காட்சியை படமாக்கும் புதிய முறை இது. தஞ்சையில் நடந்து வரும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி. அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜாவின் முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.\nஎந்த படப்பிடிப்பு தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\n“பாலா ரொம்ப சிரத்தையோட படம் எடுப்பவர். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம். நான் சந்தோஷப்பட எதுவும் இல்லை. நீங்கள்லாம் என்னோட ஆயிரமாவது படம்னு சந்தோஷப்படு றீங்க. உங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்\nஆயிரம் படங்கள் வரும், போகும். தினமும் சூரியன் வரும், மறையும். இன்று எத்தனையாவது சூரிய உதயம்னு யாருக்காவது கணக்குத் தெரியுமா\nஇந்தியில் ‘ஷமிதாப்’ படத்துக்கு இசை அமைப்பதும், தமிழில் ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசை அமைப்ப தும் எனக்கு ஒண்ணுதான். ஒரு நாடக நடிகன் அரசனா நடிக்கிறப்பவும், பிச்சைக்காரனா நடிக்கிறப்பவும்… அவன் அவனாகத்தான் இருக்கான். அரசனா வேடம் போட்டவுடன அரசனாயிட முடியுமா’’ இவ்வாறு இளையராஜா பேசினார்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழு படத்தையும் எடுத்து இசை அமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து கதையின், காட்சியின் ஃபீலிங்கை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள். பாடல்களை மட்டும் முன்னமே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து பாடல் காட்சிகள் எடுத்து வருவார்கள்\nஇப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். முழு கதையும், காட்சிகள் பற்றியும், அந்த காட்சிகளை பாலா எப்படி படமாக்குவார் என்பதை பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா சில முக்கிய காட்சிகளை கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்\nபாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளை படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளின் பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்த காட்சியை படமாக்கும் புதிய முறை இது. தஞ்சையில் நடந்து வரும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி. அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜாவின் முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது. வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம்.\nஎந்த படப்பிடிப்பு தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nபடத்துல சசிகுமார் சாருக்கு அடுத்து முக்கியமான கேரக்டர் நான்தான். கடைசி வரைக்கும் தியேட்டர்ல ஆடிக்கிட்டே படம் பார்க்கலாம். அந்த அளவுக்கு குத்துப்பாட்டு ஹெவியா இருக்கு.\nஇன்சல்ட்டிங்கா இருக்கு...விகடன் காரன் வேணும்னே எழுதுனதாகவும் இருக்கலாம்\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\n'பரதேசி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா, சசிகுமாரை நாயகனாக்கி ஆரம்பித்த படம் 'தாரை தப்பட்டை'. வரலெட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்து வரும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். சசிகுமாருக்கு தங்கச்சியாக பிரகதி நடித்து வருகிறார்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nசசிகுமாரின் கை எலும்பு முறிந்ததால் சில வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை. பிறகு வரலட்சுமிக்கு ஏற்பட்ட விபத்தால் சில வாரங்கள் தடை. பாலா உதவி இயக்குனர் ஒருவரை அடித்துவிட்டார் என பஞ்சாயத்து.\nசமீபமாக தாரை தப்பட்டை குறித்து எந்த தகவலும் இல்லை. படப்பிடிப்பும் நடைபெறவில்லை. ஏன் என்ன என்று கேள்வி எழுந்த நேரம், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் பாலா.\nதற்போது புதுச்சேரியில் ஒரு பாடல் காட்சியை அவர் படமாக்கி வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என படயூனிட் தெரிவித்துள்ளார்.\nதாரை தப்பட்டைக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவரது 1000 -வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஅந்தமானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி போக வர கப்பலிலும் படப்பிடிப்பு நடத்தினார்களாம். கப்பலில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.\nஅந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்குகிறதாம். பதினைந்துநாட்கள் இந்தப்படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள். இதோடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் சொல்லப்படுகிறது.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஇளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே சசிகுமாருக்கு கையில் அடிபட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர், அவருடைய கை சரியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது.\nதஞ்சாவூரில் நடைபெற்ற இறுதிகட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி முடிவுற்றது. 130 நாட்கள் படப்பிடிப்பில் 'தாரை தப்பட்டை' படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா. அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாளில் மற்ற பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஇதற்கிடையில் இந்நிறுவனம் படங்களை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்தை விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ படத்தையும் லைக்கா நிறுவனம் வாங்கியது.\nதற்போது இந்நிறுவனம் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தையும் கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சசிகுமார் நாயகனாகவும், வரலட்சுமி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைப்பது ஆயிரமாவது படமாகும்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஇப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் இளையராஜாவின் 1000வது படமாகும். சசிகுமார் தயாரித்துவரும் இப்படத்தின் உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nவிரைவில் இசைவெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்கள்.\nஅதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிக்கும் 24 படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று முன்னரே அறிவித்திருந்தனர். இப்படமும் உறுதியானால் தாரை தப்பட்டை படமும், சூர்யா படமும் பொங்கலுக்கு வெளியாகும்.\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஅடுத்த ராமராஜன் கனகா ரெடி\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\nஆடியோ உண்டு, விழா இல்லை (டிசம்பர் 25)\nபேஸ் புக்கில் ஒருத்தர் சொல்லி இருப்பது போல் ராசா விரும்பிகள் எல்லோரும் குறிப்பாக இந்த ஆல்பத்தின் சிடி வாங்கி மதிப்புக்காட்டலாம்\nRe: அழகு \"ஆயிரம்\" என்ற தாரை தப்பட்டை (பாலா-சசிகுமார்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://aruthra.com/2012/01/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-21T14:23:02Z", "digest": "sha1:EISYIZEEXUPQIZR73Z76DWK6KKCAEWA3", "length": 22123, "nlines": 126, "source_domain": "aruthra.com", "title": "நகுலபாஸ்கரன். | ஆருத்ரா தரிசனம்", "raw_content": "\n. . . . . நினைவுகளின் நெகிழ்வு\nஆருத்ரா எழுதியவை | ஜனவரி 23, 2012\nசிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும். சிலவேளை அதைவந்து அலைகொண்டு போகும்.\nசிறகிலிருந்து பிரிந்து விழும் பறவையின் இறகொன்று காற்றின் தீராப்பக்கங்களில்\nஎன்ற பிரமிளின் படிம வரிகளும் நிலையாமை என்ற நிரந்தரமின்மை குறித்தும், முடிவற்ற துயர் குறித்தும் வினவிச்செல்கின்றது. காற்றின் தீராப்பக்கங்கள் முழுவதும் மானுடத்தின், மரணத்தின், பிறப்பின், வாழ்வின் அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன போன்றே தோன்றுகின்றது.\nசாவகச்சேரி என்ற ஊர்ப்பெயர், புலம்பெயர்ந்த மண்ணிடைவாழும் மாந்தர்க்கு விடுமுறைக்கு மாத்திரம் வாயில் புழங்கி, எஞ்சிய காலங்கள் கனவுகளில் கைகோர்த்த ஒரு பெயராகவே எண்ணத்தோன்றுகின்றது. அவ்வாறு விடுமுறை செல்லும் காலங்களில் ஏதாவதொரு துயரின் படிமம் நெஞ்சில் வந்து அறைந்துவிட்டுச் செல்கின்றது.\nசாவகச்சேரி குறித்த வனப்புகள் மறைந்து போய், வீதிகளில் தரிசிக்கும் முககங்களில் ஏதாவதொன்றில் எம்முடன் படித்தவர்கள், பரிச்சயமானவர்கள், தெரிகின்றார்களா என்று முகவிலாசம் பார்த்து அலைகின்ற வேளைகளில் …\nஅல்லாரை, மீசாலை வீதிகளின் நெருக்கத்தில் நண்பன் நகுலபாஸ்கரனின் நினைவுகள் வந்து நின்றாடி போகின்றன. இறப்பின் படிமப் பிடிப்பாகி இளவயதில் மறைந்த நகுலபாஸ்கரன் 80களின் மத்தியில் எம்முடன் கல்விபயின்றவன். கனவுகள் கண்வழி கொப்பளித்த வேளைகளில் சாவகச்சேரி கொட்டில்கள் ஒன்றில் A/L உயர்தர வகுப்பில் எம்முடன் இணைந்தவன். சாவகச்சேரி கல்லூரிகளில் கல்வி கற்றவர்களுக்கும், யாழ்நகர கல்லூரிகளில் கல்விகற்றவர்களுக்கும் இணைப்புபாலமாகவே கொட்டில்கள் நிகழ்ந்தன.\nநகுலபாஸ்கரனை அவ்வாறான ஒரு காலப்பகுதியில் எம்முடன் பயிலும் நண்பனாக உள்வாங்கிக்கொண்ட தருணத்தில் அவனின் அவ்வயதிற்கேயுரிய குளப்படிகளும், பகிடிகளும் எமக்குள் ஒரு இணைபிரியா நெருக்கத்தை தோற்றுவித்ததை இவ்விடத்தில் சொல்லியாகவேண்டும். முடிவற்ற நீண்ட பெருவெளிகளில் பேச்சொலிகளும், கூச்சல்களுமாக எம் இளமை கரைந்த இன்பப்பொழுதுகள் அவை.\nபெரும்பாலான வகுப்புகளில் நிறையப்பேர் படித்தாலும், அவர்களுக்குள்ளும் ஒவ்வொரு குழுவாகவும், ஒவ்வொரு கோஷ்டிகளாகவும் தமக்குள் மீண்டும் ஒன்றிணைதல்கள் நடக்கின்ற தருணத்தில், இந்த A/L புதுமுக வகுப்பு நாம் அனைவரும் ஒன்றாகவே கலந்து பழகிட வழி வகுத்தது. அந்த ரியூசன் சென்டரின் மாமரத்தின் கீழும், வேலிஓரங்களிலும் எங்கள் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அல்லது படுக்க வைக்கப்பட்டிருக்கும். படுக்க வைக்கப்பட்டவை திருப்பியும் விழாது என்பதில் நீண்ட நம்பிக்கை வைத்திருந்த நண்பர் குழாம் அது.\nநகுலபாஸ்கரன், டொக்கு இருவரும் மீசாலையில் இருந்து வருபவர்கள். நானும் இன்னும் இருவரும் தபாற்கந்தோர் வீதியை வீடுசெல்லும் மார்க்கமாக பாவிப்பவர்கள். வீட்டில் இருப்பது வீடுபேறு தராது என்ற காரணத்தால், நாளும் பொழுதும் ரியூசன் சென்டரிலேயே தவமாய் தவமிருப்பவர்கள் தான் என்றாலும்…. எஞ்சிய வேளைகளில் படிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவதுண்டு என்ற பேருண்மையை சொல்லியாக வேண்டும்.\nயாழ் இந்துக்கல்லூரி மாணவனான நகுலபாஸ்கரன் படிப்பில் மிகவும் கெட்டி. அதே கல்லூரியில் அவருடன் பயின்ற குருபரன் என்ற மாணவருக்கும் அவருக்குமான போட்டியில் உயர்தர வகுப்பின் நான்கு பாடங்களிலும் 100க்கு அண்டிய 96, 97 இல் ஒற்றைப்புள்ளியில் இருவருக்கும் போட்டி நடக்கும். ஆரோக்கியமான போட்டி போடுதல் குறித்து ஒரு முறை ரியூசன் வகுப்பில் விலங்கியல் ஆசிரியர் தம்பிராஜா ஆர்வத்துடன் வினவியதால் மாத்திரமே இதை நாமறிந்து கொள்ள முடிந்து. Thats all என்ன என்று ஒவ்வொரு பாடமுடிவிலும் கேட்கும் திரு.தம்பிராஜா ஆசிரியர் சிகரெட்டை ஒரு பப் இழுத்து, கண்களை மூடி வன்கூட்டுத் தொகுதி என்பார். அவ்வளவு அழகு அந்த மாலைகளும், மாணவர்களாக நாமிருந்த வேளைகளும்.\nஇருப்பின் மீதான துயரம் இழப்பின் மீதாக வருகின்றது. மரணத்தின் அந்தியந்த பரியந்தம் எம்மீது திணிக்கப்பட்டதான நாள் அடுத்து வரும் நாளொன்றில் வருகின்றது.\nமுதல்நாள் அரசடி லேனில் பௌதிகவகுப்பில் எம்முடன் பயின்றுவிட்டு கலைந்து சென்ற நகுலபாஸ்கரனை, அடுத்த நாள் அவர்வீட்டின் மாமரத்தடியில் வாங்கொன்றில் உயிரற்ற உடலமாக கண்டேன்.\nஅந்த ஞாயிறொன்றின் மாலைவேளை பௌதிகவகுப்பு, துயரொன்றின் முடிவுடன் ஆரம்பித்ததாக நாம் நினைத்தே பார்க்கவில்லை. இருளில் ஒவ்வொருவராக கலைந்து சென்றோம். கனவின் மீதூர்ந்து அலைந்து சென்றோம்.\nஅப்போது யாழிற்கான பிரதான பாதையாக கோப்பாய் பாலம் திகழ்ந்து கொண்டிருந்தது. வழமையான கைதடி வீதியில் இராணுவமுகாம் அமைத்திருந்த பாதை இறுக்கமாக மூடப்பட்டிருந்த காரணத்தால், கோப்பாய் பாலத்திற்கூடாக பெருவெளியை கடந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தென்மராட்சி மக்கள் உட்பட்டிருந்தனம்.\nஅப்பாதையூடான பிரயாணம் மிகப்பாதுகாப்பாக அமைந்திருக்கவில்லை. கைதடி இராணுமுகாமிற்கு உணவு ஆயுத விநியோகம் ஆகாய மார்க்கமாகவே நிகழ்ந்து வந்ததால், பொதுமக்கள் உலங்குவானூர்தி, விமான தாக்குதல்களிற்கு ஆளாகி வந்த துயரம் சர்வசாதாரண நிகழ்வாக தொடர்ந்து வந்தது.\nபரீட்சை சமயமாதலால், பரீட்சை முடிந்து சக மாணவர்களோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நகுலபாஸ்கரன் வெளியே இருந்த அசாதரண நிலையை கவனத்தில் கொள்ள தவறிவிட்டதானது, அவர் உலகின்றும் தள்ளிவிடக் காரணமாக அமைந்தது. கோப்பாய் பாலத்திற்கூடாக பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் வானத்தை நோக்கி, வானில் பறப்பை மேற்கொண்டிருந்த உலங்குவானூர்தி வேட்டுக்ளை தீர்த்துக்கொண்டிருந்தது. ஒருமுறை வேட்டுக்ளைத் தீர்த்து விட்டு அப்பால் சென்று, திரும்பி வந்து திருப்பியும் வேட்டுக்களை தீர்த்துக்கொண்டிருந்த பொழுதில், பேருந்தில் இருந்து வெளியேறி நிலைமையை உணரமுற்பட்ட நகுலபாஸ்கரன் மீது தோள்பட்டையிலும், நெஞ்சிலும் துளைத்தன இரும்புத்துணுக்குகள். பிணமாக விழுந்த நகுலபாஸ்கரனை அள்ளிவந்த தோழர்களினால், இறுதிச்சடங்குகள் பாரிய அளவில் திரளான மக்கள் கூட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன.\nமரணத்தின் துயர் வலியது. 86ன் நிகழ்வுகள் அனிச்சையாக கண்களை குளமாக்குகின்றது. மாணவப் பருவத்தில் நிகழ்ந்த முதல் இழப்பின் பிரிவு.\nஇறுதிச் சடங்கு நிகழ்வுக்கு அனைத்து மாணவர்களும் அணிதிரண்டிருந்த பொழுதில், யாழ் இந்துக்கல்லூரியின் அவரது தோழர்களும் மற்றவர்களும் ஆசிரியர்களும் பிரசன்னமாகி துயரில் துணை சேர்ந்தனர்.\nஅவரது வீடு அப்போது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டிருக்கவில்லை. நிலைகளும் ஜன்னல்களும் வெறுமனே திறந்த படி இருந்தன. நகுலபாஸ்கரனின் கடைசித் தங்கை ஜன்னல் நிலைகளுக்குள் குந்தியிருந்து கண்ணீர் சிந்தி அழுதது, இன்றளவும் மாபெரும் துயரின் படிமமாக என்னுள் நிலைத்திருக்கின்றது.\nஅரையில் வேட்டியும், மேலில் துண்டுமாக காட்சி தந்த நகுலபாஸ்கரனின் தந்தை, அங்கு திரண்டிருந்த நகுலபாஸ்கரனின் கல்லூரித் தோழர்கள் கைகொடுத்து விடைபெறமுயலும் தருணத்தில் எல்லாம், துண்டால் முகம்பொத்தி விம்மிக்கொண்டிருந்தது, கரைந்து விட்ட காலத்தின் சோகம். வந்திருந்த அனைத்து மாணவர் முகத்திலும், தன் இளவயது மைந்தனின் முகத்தை கண்டு துக்கித்த தந்தையொன்றின் பெருந்துயரம்.\nகோப்பாய் பாலத்திற்கு ஊடாக அவருடன் பயணித்த மாணவக்கூட்டம், தற்போதும் அப்பாதை வழியாக பயணப்படும் போது, புலம் பெயர்ந்த சோகத்தை விட துயரமானது நினைவின் நெகிழ்வுகள் என்பதை அனுபவித்திருக்ககூடும்.\nகாலமான காலத்தின் பின் எமது, மாலைநேர தனியார் வகுப்புகன் களையிழந்து போயின. கண்டிவீதி மார்க்கமாக, அவருடன் பயணிக்கும் டொக்கு தனியே சென்று வந்தான். நகுலபாஸ்கரனின் புகைப்படமொன்றை பெரிதாக்கி தன் வீட்டு சாமியறையில் வைத்திருப்பதாக நினைவு கூர்ந்தான்.\nபின்னாட்களில் நாட்டினின்றும் வெளியேறிய நான் டொக்குவையும் காணவில்லை. அதன் பின்னராக வேறெந்த பெருந்துயரையும் காணவில்லை.\nமனிதம் மரிக்கின்ற தருணங்கள், வாழ்வின் தீராப்பக்கங்களில் பெருந்துயர சரிதத்தை எழுதிச் செல்கின்றது.\nஇப்போது நகுலபாஸ்கரன் இருந்திருந்தால், Facebook வழி ஏதாவது நாடொன்றில் இருந்து கொண்டு குசலம் விசாரித்து பின்னைய நாட்களை கழித்திருப்போமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.\nமனிதம் மரிக்கின்ற தருணங்கள், வாழ்வின் தீராப்பக்கங்களில் பெருந்துயர சரிதத்தை எழுதிச் செல்கின்றது.\\\\ தங்கள் நண்பர் நகுலபாஸ்கரனின் மரணம் நெஞ்சைக் கணக்கச்செய்கிறது.\nBy: சித்திரவீதிக்காரன் on மார்ச் 25, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/page/3/", "date_download": "2018-08-21T14:38:54Z", "digest": "sha1:S242PCTO2Z7U7O3H3D5KGCQJTRJMO2LA", "length": 12665, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "நிதின் கட்காரி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை - Part 3", "raw_content": "\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\nமனுஷ்யபுத்திரன் திமுக.,வில் இருந்து துரத்தப்படுவரா\nசுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைக்க டில்லி அரசுடன் இணைந்து செயல்படுவோம்\nசுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் போக்கு வரத்து பிரச்னைகளை சரிசெய்ய டில்லி அரசுடன் இணைந்து செயல்படுவோம். எக்பிரஸ்வே திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு டில்லி - மீரட் இடையேயான பயணநேரமான 2.30- 3 மணி ......[Read More…]\nவெள்ளமீட்பு பணியில் ராணுவத்தின் பணி பாராட்டத்தக்கது’\nகோவா மாநிலம் பனாஜியில் மத்திய ராணுவமந்திரி மனோகர் பாரிக்கர் தனது 60வது பிறந்த நாள்விழாவை நேற்று கொண்டாடினார். விழாவில் மத்தியமந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய மந்திரி மனோகர்பாரிக்கர் ......[Read More…]\nDecember,14,15, — — நிதின் கட்காரி, மனோகர் பாரிக்கர், ராஜ்நாத் சிங்\nதேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்பட கூடாது\nதேசபாதுகாப்பு விவகாரம் அரசியல் ஆக்கப்படகூடாது, ஓட்டு வங்கி அரசியலுக்காக தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் திருப்தி படுத்தப் படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக அண்மையில் காஷ்மீர் மாநிலம் ......[Read More…]\nமோட்டார் வாகனங்கள் ஜனவரி 26-ந் தேதி முதல் எத்தனாலில் ஓடும்\nஉத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், மத்திய போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது:- பிரேசில் நாட்டைப் போல கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார்வாகனங்கள் ......[Read More…]\nNovember,30,15, — — எத்தனால், நிதின் கட்காரி\nசுற்றுலாவை மேம்படுத்த 78 கலங்கரை விளக்கங்கள்\nசுற்றுலாத்துறையின் அடையாளமாக 78 கலங்கரை விளக்கங்கள் கட்டப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து முதலீட்டாளர்கள் சந்திப்பில் கூறுகையில், உலகம் முழுவதும் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா ......[Read More…]\nOctober,30,15, — — கலங்கரை விளக்கம், சுற்றுலா, நிதின் கட்காரி\nசுங்கச் சாவடி பிரச்னைக்கு தீர்வு காண நிதின்கட்காரி புதுச்சேரி வருகை\nமத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர், நிதின்கட்காரி, நவம்பர், 20ல் புதுச்சேரி வருகிறார். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்தியமோட்டார் காங்கிரஸ் சார்பில், லாரிகள் வேலைநிறுத்தம் ......[Read More…]\nOctober,29,15, — — இந்திய மோட்டார் காங்கிரஸ், சுங்கச் சாவடி, நிதின் கட்காரி\nமத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர். ...[Read More…]\nOctober,5,15, — — நிதின் கட்காரி\nசுங்க சாவடிகளை அகற்றினால் 3 லட்சம் கோடி வரை இழப்பிடு வழங்க வேண்டும்\nநாடுமுழுவதும் சுங்க கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும், டி.டி.எஸ். பிடித்தம்செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ......[Read More…]\nOctober,5,15, — — நிதின் கட்காரி\nடிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., சாலை\nவரும் டிசம்பர் மாதத்திற்குள் 50,000 கிமீ., தொலைவுக்கு புதிதாக சாலையமைத்து, நெடுஞ்சாலைகளின் மொத்ததொலைவை 1.5 லட்சம் கி.மீ., அதிகரிக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாக, நிதின்கட்காரி தெரிவித்தார். ...[Read More…]\nநெடுஞ்சாலைகளில் மரம் ஐந்து லட்சம் பேருக்கு வேலை\nநெடுஞ்சாலைகளில் மரம் நடுகின்ற புதிய திட்டத்தினால் ஐந்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். ...[Read More…]\nJuly,27,15, — — நிதின் கட்காரி\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nடில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம் \"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி ...\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/08/blog-post_70.html", "date_download": "2018-08-21T14:34:19Z", "digest": "sha1:33AR6KDAQ7ZWKSJA3XWLJ3RDFQUJ43E2", "length": 17462, "nlines": 195, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?திருமண பொருத்தம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\nஆண், பெண் இருவருடைய நட்சத்திரப்படி இருவருக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என பார்ப்பது எப்படி.. 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் வருகிறது என பார்க்கும் சூத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.இது தவிர ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும் அது சம்பந்தமாக 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன் .அதையும் ஒருமுறை படிக்கவும்...\n1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.\n2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.\n3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.\n4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.\n5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.\nகுதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.\n6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.\n7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.\nவசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.\n9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.\n10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.\nஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.\nஇ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.\nபெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.\nஎனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.\nஅ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.\nஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.\nஇ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.\nஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.\nஇவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.\nLabels: astrology, marriage matching, thirumana porutham, திருமண பொருத்தம், நட்சத்திர பொருத்தம், ராசி, ஜோதிடம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nகுபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா.. யோகமா\nஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உ...\n12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்\n2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வ...\nநட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி\n108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்\nசித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி ய...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல...\nபசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா\nதேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி\nஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்...\nஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதி...\nவிவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி\nஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்...\nயோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி\nஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்\nதிருமண காலம் எப்போது வரும்..\nசெவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்\nஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகா...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/12/blog-post_24.html", "date_download": "2018-08-21T14:34:14Z", "digest": "sha1:7GVVTUPUHKYJYGZ2S464ASV3EHIBPCTH", "length": 15311, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "/> மனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nமனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள்,\nஉங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.\nமன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…\nவெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.\nஇந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.\nஇதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.\nஇது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.\nமல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.\nஎங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.\nமன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.\nமல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.\nமல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.\nமல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.\nLabels: நோய், பூ, மருந்து, மலர், மல்லிகை, மன அழுத்தம், வாசனை\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nபுற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மரு...\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டி...\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\nஅதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகள...\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவிய...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/category/gardening/", "date_download": "2018-08-21T13:53:03Z", "digest": "sha1:N7X3QKEXR5YUEBGXG2ZOYXXKMQK26TQ5", "length": 5431, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "GARDENING | பசுமைகுடில்", "raw_content": "\n 255 ஆண்டுகளாக வளரும் இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட “நடக்கும் ஆலமரம்” இந்தியாவில் மிக அதிக வயதான அந்த உயிர் சிப்பூர் நகரத்தில்[…]\nஎதிர் வீட்டுக்கு, பக்கத்து வீட்டுக்கு, மேல் வீட்டுக்கு வந்த, ‘டேபிள் மேட்’ மாதிரி, எதிர் வீடு, பக்கத்து வீடு, மேல் வீடு, நம்ம வீடுன்னு எல்லா இடத்துக்கும்[…]\nகாய்கறி தோட்டம் அமைப்பது எப்படி\nஉங்களுக்குத் தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா கவலை வேண்டாம். உங்கள் வீட்டி லும் காய்கறித்[…]\nகிடைக்கும் பொருளை கொண்டு மண்ணை 20 cm வரை மூடிவைப்பதற்கு பெயர் #மூடாக்கு. 1. தழை மூடாக்கு: இலை தழைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பது. 2.சருகு[…]\nநீரின்றி அமையாது உலகு’ என்பது போல, பூவின்றி ஒரு நாளும் அமையாது நித்திய கல்யாணி. நள்ளிரவில் ஒரு பூ உதிர்ந்தால்கூட, உடனே இன்னொன்று அதற்கு ஈடாக மலர்ந்துவிடும்[…]\nஉசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ptinews.in/watch.php?vid=64963ad53", "date_download": "2018-08-21T13:30:46Z", "digest": "sha1:D664FH6MM33TKZS7UHL7XVOYC7MFVFFT", "length": 7107, "nlines": 181, "source_domain": "www.ptinews.in", "title": "கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமல்ல", "raw_content": "\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமல்ல\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமல்ல\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு காழ்ப்புணர்ச்சி காரணமல்ல - ஜெயக்குமார் #Karunanidhi\nசவுதி அறிவிப்பால் இந்தியர்களுக்குச் சிக்கல்\nமலேசியா மணலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் ..\n கண்ணீர் கடலில் குடும்பத்தினர் | #Karunanidhi\nபிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்காவாலும் ரஷ்யாவுக்கு சிக்கல்\n“மெரினாவில் இடம் கிடைக்காது இருந்தால்”... திமுக செயற்குழு கூட்டம்... ஸ்டாலின் உருக்கமான பேச்சு...\nரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மர் திரும்புவதில் சிக்கல்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம்-முதல்வரிடம் திமுக சார்பில் கோரிக்கை: துரைமுருகன் #RIPKarunanidhi\nNerpada Pesu: கருணாநிதிக்கு மெரினாவில் இடம்… | 10/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t145493-topic", "date_download": "2018-08-21T13:27:05Z", "digest": "sha1:AQQQS3EXMDRTTY44ZXB7WXZQQYGUPTRN", "length": 14864, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஎனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி\nபறக்கும் பட்டாம்பூச்சி – பொ.அ.தகவல்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....\nகருத்து சொல்ல முடியாத - சர்ச்சையை கிளப்பிய கவிதை.\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅது அந்தக் காலம் – சுவையான செய்திகள்\nஅவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\nகடைமடைக்கு நீர் வர 45 நாட்களுக்கு மேல் எடுக்கும் - நீர்வளத் துறை பொறியாளர்.-மீம்ஸ் சொல்லும் செய்தி.\nகார்ட்டூன்கள் எந்த நாட்டு பத்திரிகையில் அறிமுகம் ஆனது\n1.08.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஅறிமுகச் செய்திகள் – பொ.அ.தகவல்\nகூந்தல் காட்டில் ஒற்றை ரோஜா…\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகண்ணுக்கு மை அழகு – பொ.அ.தகவல்\nபனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்\n100% காதல் – திரைப்பட ஷூட்டிங் முடிவடைந்தது\nசரியாக 347 வருடங்களுக்கு முன்பு...\nநிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\nகேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’\nவாட்ஸ் அப் – நகைச்சுவை\nபேரு வைக்கும்போதே நல்ல பேரா வைக்க வேண்டியதுதானே…\nஅவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி…\nகடவுளின் விருப்பம் – கவிதை\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nகரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…\nபிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\n.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்\nரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு\n6,7,8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு வரி வினாக்கள்\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nRRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரலாறு - மொகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய வினா விடை குறிப்புகள்\nபிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்\nவகையில் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தபோதிலும்\nபயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. பிரதமர் வந்து திறந்து வைக்க\nநேரம் இல்லாததால், திறப்பு விழா நடைபெறாமல் உள்ளது.\nஎனவே, இந்த சாலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி\nஉச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த\nவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய\nபிரதமர் வந்து திறப்பதற்காக காத்திருப்பதாக மத்திய அரசு பதில்\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு\nவழங்கினர். அப்போது, மக்கள் நலத் திட்டங்கள் யாருக்காகவும்\nகாத்திருக்கக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், பிரதமருக்காக\nஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.\nஅத்துடன், சாலையை திறந்து வைக்க பிரதமர் வர முடியா\nவிட்டாலும் ஜூன் 1-ம் தேதி முதல் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை\nதிறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.\n135 கி.மீ. நீளமுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது காசியாபாத்,\nபரிதாபாத், கவுதம் புத்தா நகர்(கிரேட்டர் நொய்டா) மற்றும்\nபல்வால் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த சாலை\nதிறக்கப்பட்டால் டெல்லி நகருக்குள் பயணம் செய்யும் சுமார்\n2 லட்சம் வாகனங்கள் நகருக்குள் வரவேண்டிய தேவை இருக்காது.\nஇதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2011/11/master-plan.html", "date_download": "2018-08-21T14:17:44Z", "digest": "sha1:FWHJXFTGPLUAV6Z6HUIEGLQN6RBS53TE", "length": 19447, "nlines": 289, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: மாஸ்டர் ப்ளான்..!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஎன் டேபிள் மேல ஒரு Bag\nஇருந்தது.. அதை பார்த்த என் Wife...\n\" என்னங்க இது Bag..\n\" அதெல்லாம் மாஸ்டர் பிளான்..\n\" நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு\n\" ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்\nநீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு\n\" என் Friend ரவியோட பொண்ணு\n' ஹோலி கிராஸ்ல ' 2nd Std\n\" அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்\n\" சரி.. அதுல என்ன பிரச்னை..\n\" நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்\nசரளமா பேச வராதே.. \"\n\" அட.. என்னமோ நீங்க தினமும்\nஇங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற\nமாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே\n\" ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா\nஇன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி\nஎல்லாம் நீ எங்களை கிண்டல்\n\" ஏன் ரெண்டு பேரும் எதாவது\n\" சே., சே., அதெல்லாம் கஷ்டம்..\nநாங்க வேற ஒரு ஈஸியான\nமாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. \"\n\" அட அது என்னான்னு தான்\n\" அந்த Bag-ஐ திறந்து பாரு..\n\" என்ன இது... எல்லாம் இங்கிலீஷ் பட\n\" ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்\nபாக்கறது., ஒரு மாசத்துல சரளமா\nஇங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..\n\" அது சரி.., அதுக்கு எதுக்கு தமிழ்ல டப்\nபண்ணின இங்கிலீஷ் பட DVD-ஐ வாங்கிட்டு\n( யானைக்கும் அடி சறுக்கும்னு\nஏன்யா இந்த இங்க்லீஸ் கறி ச்சே வெறி...அங்கயும் சேம் ப்ளட்டா ஹிஹி.. ஐயோ சாமி நான் இல்ல\nஅப்போ இங்கிலீஷ் படம் பார்த்தா இங்கிலீஷ் கத்துக்கலாம், சும்மா விடாதிங்க பாஸ். நான் எத்தன மலையாள படம் பார்த்திருப்பேன், எனக்கு மலையாளம் தெரியுமா என்ன\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்\nசப்-டைட்டல் இங்கிலீசுல வருமே.. அதப் பாத்து கத்துக்கலாம், படிக்கத் தெரிஞ்சா.. (சமாளிங்க வெங்கட்.. சமாளிங்க..)\nஇங்கிலிஷ் படம் பாத்தா இங்கிலீஷ் கத்துக்கலாம் என்கின்ற ஒரு மகத்தான உண்மையை உலகுக்கு எடுத்துரைத்த அண்ணன் வெங்கிஷ் சாரி வெங்கட் வாழ்க...\n\\\\\" நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு\nஇந்த டயலாக்க எங்க சுட்டிங்க..இது உங்க கீபோர்டுல கண்ட்ரோல் C ல லாக் ஆயிடிச்சி போல.. சீக்கிரம் கீபோர்ட சர்வீஸ் விடுங்க....\nஇல்லைன்னா அடிக்கடி எல்லா பதிவிலேயும் தானா காபி பேஸ்ட் ஆயிடும்...அப்புறம் உலகம் உங்கள தப்பா ஜினியஸ்னு நினைச்சிடும்...\nநமக்கு எதுக்கு தல இந்த வம்பெல்லாம்...\n\\\\( யானைக்கும் அடி சறுக்கும்னு\nஆமா...யானைக்கு அடி எப்படிண்ணே சறுக்கும்...\n///\" அட.. என்னமோ நீங்க தினமும்\nஇங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற\nமாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே\nEnglish பாட்டுக்கு கீழ ரிப்பீட்டு’னு எழுதுவாரு. அவ்ளோ பெரிய படிப்பு படிச்சவரு நம்ம வெங்கட்..\n//கழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்\nஅதனால தான் மச்சி உங்க அப்பா உன்னை இங்கிலீஷ் படிக்க வைக்கவில்லை அப்படினு சொன்னா ரொம்ப பழசா இருக்குமே.. ஹும்ம்\nஅதுவா இப்போ கழுதைங்க எல்லாம் இங்கிலீஷ்ல பேசுதாம், சாப்ட்வேர் கம்பனியில் மேனேஜரா இருக்காம். அதனால தான்... :P\n//ஏன்னா.. இதெல்லாம் தமிழ்ல டப்பிங்\n நாங்க இங்கிலீஷ்ஐ தமிழ்ல டப் பண்ணி பேசிட்டு போரோம்... :)\nஇப்பவே நல்லாதான பாஸ் இங்கிலீஷ் பேசறிங்க. இதுவே VKS க்கு புரியாதே.. :)\nமாஸ்டர் பிளான் தான் ஒய் -\nநீங்க போட்டா அது Master plan இல்ல Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)\n//Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)//\nஅப்போ உங்களுக்கு Use ஆகும் வச்சிகோங்க.. :)\n//Waster Plan ன்னு Prove பண்ணிட்டீங்க.. வாழ்த்துக்கள் :)//\nஅப்போ உங்களுக்கு Use ஆகும் வச்சிகோங்க.. :)//\nஇதன் மூலம் அறியப்படுவது யாதெனின், தன் பாஸ் போடுவதெல்லாம் Waster Plan என்று பாண்டிய மாமன்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.. :P\n//இதன் மூலம் அறியப்படுவது யாதெனின், தன் பாஸ் போடுவதெல்லாம் Waster Plan என்று பாண்டிய மாமன்னர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.. :P//\n1. அந்த ப்ளான் உங்களுக்கு உதவும் சொல்லி இருக்கேன். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கால அப்போ நீங்க வேஸ்ட் தானா\n2. பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தா வைத்தியருக்கும் பைத்தியம் அர்த்தமா\n//\" ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்\nநீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு\nஇதில என்ன சந்தேகம், அவர் ஜீனியசுக்கு வீட்டுக்காரர் தான்\n(என்ன இருந்தாலும் எங்க சங்கத்து ஆளை வாழ்த்தலைனா எப்படி\n//கழுதை மேய்க்கிறதுக்கு எதுக்கு பாஸ் இங்கிலீஷ்\nஅதனால தான் மச்சி உங்க அப்பா உன்னை இங்கிலீஷ் படிக்க வைக்கவில்லை //\nஆனா ஒட்டகம் மேய்க்கறதுக்கு இங்கிலீஷ் தேவையாச்சே, எப்படி பாண்டியன் மட்டும் சமாளிக்கிறாரு\n//பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தா வைத்தியருக்கும் பைத்தியம் அர்த்தமா\nஅது சரிதான், ஆனா தனக்கு வைத்தியம் தெரியுமா, தெரியாதான்னே தெரியாம வைத்தியம் பார்த்தா, பைத்தியம்னுதான் அர்த்தம்\n//இதில என்ன சந்தேகம், அவர் ஜீனியசுக்கு வீட்டுக்காரர் தான்\nமாடி வீட்டுகாரர் என்று சொன்னால் மாடி வீட்டில் வசிப்பவர் என்று அர்த்தம். ஆனா மாடி வீடு எப்படி வந்துச்சி அவர் பார்த்து பார்த்து உருவாக்கினது. அது மாத்ரி வெங்கட் தான் அவங்களை ஜீனியஸ் ஆக்கினார் சொல்றிங்களா அவர் பார்த்து பார்த்து உருவாக்கினது. அது மாத்ரி வெங்கட் தான் அவங்களை ஜீனியஸ் ஆக்கினார் சொல்றிங்களா\n இதுக்கு மூளையை கசக்காம ஒரே லைனல கவுன்டர் இருக்கு. கண்டுபிடிங்க பாக்கலாம்)\n//ஆனா ஒட்டகம் மேய்க்கறதுக்கு இங்கிலீஷ் தேவையாச்சே //\n eat this. அப்படினு சொன்னாதான் ஒட்டகம் சாப்பிடுமா.. :) என்னா பாஸ் நீங்க ஒட்டகம் மேய்க்ககூட சரிவர மாட்டிங்க போல... :)\n//ஆனா தனக்கு வைத்தியம் தெரியுமா, தெரியாதான்னே தெரியாம வைத்தியம் பார்த்தா, பைத்தியம்னுதான் அர்த்தம்\nதனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது அப்படினே தெரியாத பைத்தியத்துக்கு தனக்கு வைத்தியம் பாக்கர வைத்தியருக்கு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்க தெரியுமா இல்லை தெரியாதான்னு எப்படி தெரியும்\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\n7-ஆம் அறிவு vs வேலாயுதம்\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/?ref=home-jvpnews", "date_download": "2018-08-21T14:07:46Z", "digest": "sha1:BT7QUHEXND53NUD6AMJKKSLGYVSBIRCK", "length": 26967, "nlines": 183, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...Read More\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.. Reviewed by kaanthan. on Monday, May 07, 2018 Rating: 5\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...Read More\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...Read More\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...Read More\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...Read More\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...Read More\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...Read More\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nஒரே இரவில் முன்னோக்கிச் சென்ற வடகொரியா..\nவட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன்...Read More\nஅமெரிக்கா: இந்திய மென்பொறியாளரை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றிய ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா(32) கடந்த...Read More\nஅமெரிக்கா: இந்திய மென்பொறியாளரை சுட்டுக்கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.. Reviewed by kaanthan. on Sunday, May 06, 2018 Rating: 5\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...Read More\nஉம்ரா செல்வதற்கான விசா கட்டணத்தை சவுதி அரசு குறைக்க வேண்டும்..\nஉம்ரா என்பது இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று கடமைகளைச் செய்து இறைவனை வணங்கு...Read More\nஉம்ரா செல்வதற்கான விசா கட்டணத்தை சவுதி அரசு குறைக்க வேண்டும்.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nமாஸ்கோவில் புதினை எதிர்த்துப் போராட்டம்: ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கைது..\nரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் நியாயமாக நடைபெறா...Read More\nமாஸ்கோவில் புதினை எதிர்த்துப் போராட்டம்: ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கைது.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nஅரசியல், பொருளாதாரம், காதல், கம்யூனிசம் - வரலாற்று நாயகன் கார்ல் மார்க்ஸ்..\nகார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹ...Read More\nஅரசியல், பொருளாதாரம், காதல், கம்யூனிசம் - வரலாற்று நாயகன் கார்ல் மார்க்ஸ்.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது..\nஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின...Read More\nசிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nஓட்டு போடாதவர்களின் கை கால்களை கட்டி, தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் - எடியூரப்பா அதிரடி..\nகர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மிகத் தீவிரமாக தங்கள் பி...Read More\nஓட்டு போடாதவர்களின் கை கால்களை கட்டி, தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் - எடியூரப்பா அதிரடி.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...Read More\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nதனது கைகளாலேயே கழிவறை கட்டிய 87 வயது பாட்டி..\nகாஷ்மீர் மாநிலத்தில் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள பாலாலி கிராமத்தை சேர்ந்த ராக்கி என்ற 87 வயதான மூதாட்டி நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்...Read More\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...Read More\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...Read More\nவெளிநாட்டு பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்து கொலை..\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோட்டில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர் லிகா. இவர் லாத...Read More\nவெளிநாட்டு பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்து கொலை.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\n22 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நிகழ்ச்சி நடந்த கிராமம்..\nராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்டத்தில் ராஜ்காட் என்ற குக்கிராமம் உள்ளது. சம்பல் ஆற்றங்கரையில் உள்ள இக்கிராமத்தில் 350 பேர் மட்டுமே வக...Read More\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...Read More\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...Read More\nவடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை குறைக்க டிரம்ப் உத்தரவு..\nவடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து முக்கிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், படை குறைப்பு குறித்து...Read More\nவடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை குறைக்க டிரம்ப் உத்தரவு.. Reviewed by kaanthan. on Saturday, May 05, 2018 Rating: 5\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/87851.html", "date_download": "2018-08-21T13:35:13Z", "digest": "sha1:VTUWZGTPILIOLQDX342R4AKU4GNUGVLR", "length": 4085, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஓக்கி சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில் – Jaffna Journal", "raw_content": "\nஓக்கி சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில்\nஓக்கி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது.\nஇந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கை;கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது.\nவடக்கு, கிழக்கு, ஊவா, தெற்கு, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம்.\nமேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் வலுவான காற்று வீசும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-azhagendra-sollukku-amudha-28-03-1841507.htm", "date_download": "2018-08-21T14:18:21Z", "digest": "sha1:BWJPR6EZ3GJU25KY5F4SCV7FRWAKT7NM", "length": 15696, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..! - Azhagendra Sollukku Amudha - அழகென்ற சொல்லுக்கு அமுதா | Tamilstar.com |", "raw_content": "\nமார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..\n“தடையிருக்கும் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்” ; ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ நாயகன் ரிஜன் சுரேஷ் விளக்கம்..\nகடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான். அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது..\nஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் அல்லவா.. இந்த சமயத்தில் அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையுடன், சினிமா உலகமும் வாரந்தோறும் படங்களை வழக்கம்போல ரிலீஸ் செய்து வந்தது..\nஅந்த நம்பிக்கையில் தான், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி டிச-2ஆம் தேதி தனது தயாரிப்பில் உருவான ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தையும் கிறிஸ்டல் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் ரபேல் சல்தானா. படம் பார்த்த ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் நல்ல படம், பொழுதுபோக்கான நகைச்சுவை படம் என்கிற விமர்சனத்தை பெற்ற இந்தப்படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது.\nஆனால் டிச-4ஆம் தேதியே அம்மா மறைந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர். தொடர்ந்து டிச-5ஆஅம் தேதி அம்மா காலமானதையடுத்து அந்தவாரம் முழுதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை..\nஅதற்கடுத்த வாரத்தில் வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்லபடம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது..\nஇந்த நிலையில் வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. திரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப்படத்தின் நாயகன் ரிஜனை சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்.\n“மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த துயர நிகழ்வுடன் எங்களுக்கு இன்னொரு பேரிடியாக அமைந்துவிட்டது இந்தப்படத்தின் ரிலீஸ். அழகான, அருமையான, நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தார்.\nஎங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்புமுனையாக இருக்கும் என நான், இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையாக இருந்தோம்.. தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து படம் நன்றாக இருக்கிறது.. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது என பாசிடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.\nஆனால் மூன்றாம் நாளே முதல்வர் மறைவின் காரணமாக, இந்தப்படம் ஒரு வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேறவேண்டிய நிலை உருவானது.. படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை.ஆனாலும் இந்தப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை பார்த்துவந்தோம்.\nஇந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.\nஅந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது.\nவரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும் தான் ரிலீஸ் செய்கிறோம்” என விளக்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.\nரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக்குழுவினர்.\n▪ தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்\n▪ அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\n▪ தனுஷுக்காக பாடல் எழுதிய இயக்குனர்\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tisaiyan.com/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-08-21T13:43:39Z", "digest": "sha1:YZUEBOXZG3R4R5K5EUMHBLEH4V6VEID5", "length": 11260, "nlines": 114, "source_domain": "www.tisaiyan.com", "title": "உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai) – TISAIYAN.com", "raw_content": "\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\nசந்தனம் மருந்தாகும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்\nகடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கொட்டுப்பார்வையில் அமைந்துள்ள புண்ணியத்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.\nமுன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக்கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால், கடம்பவளம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர், பால் வியாபாரத்திற்க்காக சென்ற பொது கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பல நாள்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதையறிந்த அப் பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது கடம்பக்கொடியிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர்.அப்போது ஊர் பெரியவர் சுவாமியின் அருளால் அருள் வாக்கு அருளினார்.\n“ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்து பூசினால், ரத்தம் வடிவது நின்றுவிடும்” என்றார். மேலும் அந்த வனப்பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தையும் அடையாளம் காட்டினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற மக்கள் அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். இதையடுத்து ரத்தம் வழிவது நின்றது.\nஉலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன், இந்த ஆலயத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும் நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கிறார்கள். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.\nஇந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடை பெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படும். தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை விசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு விஜய தசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும்.சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.\nஉவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 7 மணிக்கு சாயரட்ச்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மார்கழி மாதம் நடை திறக்கும் நேரம் அதிகாலை 3.30 மணி.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018\nபுனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018 »\nஉவரி புனித அந்தோனியார் ஆலயம்.\nதிசையன்விளையில் உலக இரட்சகர் கோயில் (RC Church) திறப்பு விழா 25-11-2017\nதிசையன்விளையில் புதுப்புக்கப்படவிருக்கும் உலக இரட்சகர் கோயில் (RC Church)\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் (Near Tisaiyanvilai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaaltamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=3&hit=1", "date_download": "2018-08-21T14:29:10Z", "digest": "sha1:RR6VKMIOHZBQSC4O3OYCM7M3DXPM3OGM", "length": 4279, "nlines": 51, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa10.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத் தூறும் அறிவு. அதி:40 குறள்:396\nமணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும்:\nஇதுவரை: 15247878 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5048-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-21T13:59:20Z", "digest": "sha1:OYOH5Q6ZMOFJJLY37FZNBINDFHRESOAN", "length": 8082, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "அயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்", "raw_content": "\nஅயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்\nThread: அயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்\nஅயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்\nஅயல் நாட்டில் பித்ரு கார்யங்கள்\nஅயல்நாட்டில் வசிக்கும் நான் பித்ரு கார்யங்களை இங்கேயே செய்யலாமா பலன் தருமா தயவு செய்து எங்களது தாபத்தை தீருங்கள்.\nச்ராத்தம் போன்ற பித்ரு கர்மாவை புண்ணிய பூமியான பாரதத்தில் செய்வதுதான் ஸ்லாக்யம். இதில் சந்தேகமில்லை. திதி முதலிய நாள் பார்ப்பதிலும் வெளிநாட்டில் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்யும். வேறுபடலாம். ச்ராத்த மடி மற்றும் நியமங்களை அங்கு அனுசரிக்க இயலாமல் போகலாம்.\nஆனால் நம்மவர்கள் பித்ரு கார்யங்களை விடாமல் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப அயல்நாட்டில் இருந்தாலும் செய்து வருவது தாபத்தை ஓரளவிற்கு நிச்சயம் தீர்க்கும். அயல்நாட்டில் செய்தால் அன்று முழுவதும் ஆசாரத்துடன் இருப்பது மிக அவசியம்.\nமுடிந்த போதெல்லாம் தாய் நாட்டிற்கு வந்து முறையாக செய்து வரலாம். அதற்கு தகுந்தபடி ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆனால் ஒன்று. அபர கார்யங்களை பாரதத்தில் செய்வதுதான் நல்லது.\nஅதேமாதிரி கீழ்கண்ட கர்மாக்களையும் அயல் நாட்டில் செய்வதைவிட, நம் நாட்டில் செய்வது அதிக பலனை தரும். ஏனெனில், இந்த கர்மாக்கள் மிக முக்கியமானது மாத்ரம் அல்ல, இவைகள், நாற்பது சம்ஸ்காரங்களில் அங்கமாகும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2013/08/blog-post_8.html", "date_download": "2018-08-21T13:44:14Z", "digest": "sha1:QVE62TF4SOFLM4VKZ3P72ROFXEBPPJJP", "length": 15471, "nlines": 197, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: “கீதையின் மீது ஆணையாக…..”", "raw_content": "\n60 களின் இறுதியில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்து மேற்படிப்புகாக டெக்ஸாஸ் பல்கலைகழகத்திற்கு வந்தவர் சொக்கலிஙம் கண்ணப்பன்.நாட்டரசன் கோட்டைகாரர். மேற்படிப்பு முடித்தபின் அதே மாநிலத்தில் வேலைகிடைத்து பல நிருவனங்களில் பணியாற்றி இன்று ஒரு பன்னாட்டு பொறியில் நிறுவனத்தில் டிசைன் வல்லூனராக பெரிய பதவியில் இருக்கும் இவர் ” “ஸாம்”“ எனறு மாநில முழுவதும் பாபுலராக அறிய பட்ட ஒரு பொறியாளார்.\nபல பெரிய நிறுவனங்களுக்கும், நாஸா போன்ற அரசு அமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்கிவருபவர். உயர் அழுத்ததிலும் பாதுகாப்பாக இயங்க கூடிய குழாய்களை அமைப்பதில் வல்லூரான, அத்துறையில் இவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் பல்கலை கழங்களில் பாடபுத்தகமாகியிருக்கிறது. செயல்பாட்டுக்காக ஒரு மென்பொருளையும் வடிவமைத்திருக்கிறார்.\nடெக்ஸாஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம். இங்கு பொறியாளார்களாக பணிபுரிய தகுதி தேர்வு எழுதி லைஸ்சன்ஸ் வாங்க வேண்டும்.இப்போது இதுபோல் அனுமதி பெற்ரிருப்பவர்கள் 57 ஆயிரம்பேர். இந்த தேர்வுகளையும், அனுமதி வழங்குவதையும் செய்வது மாநில அரசின் (டெக்ஸாஸ் பிரொபஷனல் என்ஞ்னியரிங் போர்ட் (TexasProfessional Engineers Board) அரசு அமைப்பான இதன் நிர்வாக குழுவின் உறுப்பினாராக சொக்கலிங்கம் கண்ணப்பன் கடந்த ஆண்டு நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க பொறியாளார்களிடையே மிக கெளரமான பதவி இது. மாநில கவர்னர் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பொதுவாக இத்தகைய நிகழச்சியில் பைபிளில்மீது கைவைத்தோ அல்லது நெஞ்சில் கை வைத்தோ தான் பிராமணம் எடுப்பது வழக்கம். மாறாக தன் மனைவி திருமதி மீனாட்சி பகவத் கீதையை நீட்ட அதில் கைவைத்த பின்னர் கவர்னர் எட் எமெட் சொன்னதை திருப்பிச்சொல்லி பிரமாணம் எடுத்தார் இவர். இந்திய துணை தூதர், ஜெர்மானிய துணை தூதர், நகர மேயர், நாஸா உயர் அதிகரிகள் பங்கு கொண்ட இந்த விழாவில் கீதைபற்றி அறியாதவருக்கும் அது பற்றி சொல்லபட்டது. விரைவில் இந்த அமைப்பின் தேசீய குழுவிற்கு செயலாளாராகவிருக்கிறார்.\nதன் துறையில் விற்பன்னராகயிருக்கும், ஸாம் பல இந்திய, தமிழ் அமைப்புகளின் பொறுப்பிலிருந்து அவை வளர உதவியிருக்கிறார். ஹூஸ்டனிலுள்ள மிகப்பெரிய மீனாட்சி கோவிலை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். அமெரிக்க நகரங்களில் இந்தியர்கள் கோவில்களையோ கலாசாரமையங்களையையோ நிறுவ விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இன்று அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மூன்றாம் தலைமுறையை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு வாழம் இந்துகளின் இறுதிசடங்குகள் செய்ய உதவும் குறிப்பேடும் தயாரித்திருக்கிறார்.\nதன் தொடர்புகளால் பெரிய அளவில் நிதி திரட்டுவதில் மன்னரான இவர் தமிழ் அமைப்புகளுக்கு மட்டுமில்லாமல் அமெரிக்காவை காத்தீரினா புயல் தாக்கியபோது நிவாராண திரட்டிகொடுத்து உதவி தாய்நாட்டைப்போல, வாழும் நாட்டையும் நேசிப்பவர்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nசொக்கலிங்கம் கண்ணப்பன் 8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/22_12.html", "date_download": "2018-08-21T14:15:42Z", "digest": "sha1:P4PAHIMGINKQGYHADMWW7IFYNPR7XK3T", "length": 6308, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் 22ம் திகதி பெருநாள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் 22ம் திகதி பெருநாள்\nஇலங்கையில் 22ம் திகதி பெருநாள்\nஇலங்கையில் எதிர்வரும் 22ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுமாறு அறிவித்துள்ளது பிறைக்குழு.\nபுனித துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்;று (12) கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அதன் ஏற்பாட்டில் பிறைக்குழுவின் பிரதித் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.ரிழா தலைமையில் இடம் பெற்றது.\nஇதன்போது நாட்டின் பல பாகங்களிலும் தலைப் பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைத்தமையை பிறைக்குழு உறுதிப்படுத்தியன் பிரகாரம் துல்-கஃதாவை இன்றுடன் 29ஆக பூர்த்தி செய்து இன்றிரவுவிலிருந்து துல்-ஹஜ் முதல் ஆரம்பமாவதாகவும் இந்த வகையில் எதிர் வரும் 22ஆம் புதன் கிழமை புனித ஹஜ்ஜூப் பெருநாளை இலங்கைவாழ் முஸ்லிம்களைக் கொண்டாடுமாறு பிறைக்குழு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.\nஇம் மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள், பிறைக்குழு அங்கத்தவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிருவாகிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்கப் பிரதிநிதிகள், உலமாக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appaaltamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=13&key=4&hit=1", "date_download": "2018-08-21T14:29:19Z", "digest": "sha1:VVQOYWS7PN7E2Z6B4DI7SGLXJKO2PFR5", "length": 3852, "nlines": 50, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> மூனா\t> muunaa11.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 18-03-05, 08:07\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத் தூறும் அறிவு. அதி:40 குறள்:396\nமணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும்:\nஇதுவரை: 15247883 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://karmayogi.net/?q=sriaravindambk3", "date_download": "2018-08-21T14:11:17Z", "digest": "sha1:AWB4EGPCURIGYMU3JPZZJIWRYOKFHHRB", "length": 4746, "nlines": 118, "source_domain": "karmayogi.net", "title": "அன்னை தியான மையம் - சென்னை மாம்பலம் | Karmayogi.net", "raw_content": "\nஉயர்ந்ததை நோக்கிப் போனால் உயர்வு வரும்.\nHome » ஸ்ரீ அரவிந்தம் » அன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nஅன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nசென்னையில் அன்னையை அன்றாடம் தரிசிக்க ஏற்பட்ட இடம். 4 ஆண்டுகளாக நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தியாலும், பவித்திரத்தாலும் அன்னை சூழல் நிரம்பப் பெற்ற இடம். இங்கு வருபவர்கள் கூறுபவை :\nஅன்னையின் இனிமையும், அமைதியும் உடலைத் தொடுவதை உணருகிறோம்.\nசெய்யும் பிரார்த்தனைகள் 7, 8 நாட்களில் பலிக்கின்றன.\nநாள் கடந்த பிறகு பிரார்த்தனைகள் 2, 3 நாட்களிலும் பலிக்கின்றன.\nஒரு சிலர் \"மையம் வந்து வீடு திரும்பினால் பிரார்த்தனைப் பூர்த்தியானதைக் காண்கிறோம்'' எனவும் கூறியுள்ளனர்.\nதொடர்ந்து மையம் வர ஆரம்பித்த பின் வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை எனத் தோன்றுகிறது. .\nதானே நம்மைத் தேடிவரும் தியானம், தியானங்களில் சிறந்தது. அது தினமும் குறிப்பிட்ட நேரத்திலும் வந்தால், அன்னை நம்மை முடிவாக ஏற்றுக் கொண்டார் எனப் பொருள்.\n‹ ஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு up அன்னை வரும் தருணம் ›\nஸ்ரீ அரவிந்தர், அன்னை வரலாறு\nஅன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை\nஅன்னை தரும் ஆன்மீகக் கல்வி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை திருஉருவப் படங்கள்\nஅன்னையைப் பற்றிய தமிழ் நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=8547b54cbff03a36c1f431444a6f62aa", "date_download": "2018-08-21T14:07:16Z", "digest": "sha1:EFEP5U2NEJXRDRAKZ72MQJKPKQ2YXXQZ", "length": 34965, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2014/10/2014-2017_14.html", "date_download": "2018-08-21T14:32:46Z", "digest": "sha1:HD5IGGUVZAEST34DZUJF4DC6HRLISGM3", "length": 21110, "nlines": 187, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்;\nஆர் கே சதீஷ்குமார் ஜோசியர் ;\nதிருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்\nபன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் வாழ்வில் அடிபட்டு,போராடி வெற்றிகளை சந்தித்ததால் பணம், புகழ், பதவி வந்தாலும் பெருமையாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல்ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்..\nஉத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் மற்றும் திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சேர்ந்த மகரம் ராசி நண்பர்களே...உங்கள் ராசி நாயகனாகிய சனி பகவான் தனம்,வாக்கு ,குடும்பம் போன்றவற்றை குறிப்பிடும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார்.தற்போது கோட்சாரப்படி லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டில் பிரவேசிக்கிறார் ஏற்கனவே கடக ராசியில் பிரவேசித்து சஞ்சரித்து கொண்டிருக்கும் குருவின் சுப பார்வை ராசிக்கும்,சனிக்கும் உண்டாகிறது.சனிக்கு பதினொன்றாம் வீடு சிறப்பானது...\nஆரோக்கிய பாதிப்புகள் ,மருத்துவ செலவுகள் முற்ரிலும் நீங்கும்.தனாதிபதி லாபத்தில் இயங்குவதால் வருமானத்துக்கு குறைவே இருக்காது..முன்பை விட பல மடங்கு அதிகரிக்கும்.இதனால் நீண்ட கால கடன்கள் அடைபடும்.\nபுதிதாக கடன் வாங்கி தொழில் செய்யலாமா ,வீடு கட்டலாமா என தயங்கி கொண்டிருப்பவர்கள் இனி தயக்கமின்றி அதை செய்யுங்கள்.எந்த பிரச்சினையும் இல்லாமல் கடனை அடைத்துவிடலாம்\nஉழைப்பிற்கும் ,திறமைக்கும் ஏற்ற லாபம் நிச்சயம் கிடைக்கும்.மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு உயர்வுக்கு வழிவகுக்கும்.இரண்டிற்குறிய சனி பதினொன்றில் உள்ளதால் புகழும்,செல்வாக்கும் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் பதவி உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் இட மாறுதலும் கிடைக்கும்..\nகலைத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளிச்சம் அடையும் காலம் இப்போதுதான் காரணம் சனி ஜென்ம ராசி,ஐந்தாம் இடம்,எட்டாம் இடத்தை பார்வை செய்வது இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவது போலாகும்...\nஉத்திராடம் நட்சத்திரம் சார்ந்தவர்கள் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் புதிதாக ஒன்றை சாதிப்பார்கள் உறவினர்கள் புகழும்படி நிலைத்த செல்வாக்கு அமையும்படி நல்ல காரியம் ஒன்று உங்களால் நடைபெற போகிறது\nதிருவோணம் நட்சத்திரத்தா கலைத்துறையில் இருப்பின் எதிர்பாராத வெற்றியும் பெரிய மனிதர்களின் ஆதரவால் திடீர் உயர்வை அடைவீர்கள்....பணியில் இருப்பவர்கள் இரட்டிப்பு லாபம் பிறர் பொராமைப்படும்படி அடைவீர்கள்\nஅவிட்டம் நட்சத்திரத்தார் வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல் போன்ற நீண்ட கால முதலீடுகளை செய்வீர்கள்..\nசனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..\nபரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...\nச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...\nசனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..\nவசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்;\nஇது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..\nநீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..\nஇதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..\nகடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..\nஅரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com\nLabels: sanipeyarchi 2014-2017, சனிப்பெயர்ச்சி 2014-2017, மகரம், ராசிபலன், ஜோதிடம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nசனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..\nசனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்\nசனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2017 -ரிசபம்\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.astrosuper.com/2015/03/scorpio.html", "date_download": "2018-08-21T14:34:04Z", "digest": "sha1:PJK3LQ4Z2VAWWEKQAIH2SAACZEOWYZA3", "length": 22072, "nlines": 194, "source_domain": "www.astrosuper.com", "title": "/> விருச்சிகம் ராசியினர் எப்படி..? scorpio | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஇப்போது ஏழரை சனி நடப்பதால் கண்ணில் படும் கடவுளை எல்லாம் விழுந்து கும்பிட்டுக்கொண்டிருக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே..உங்க நல மனசுக்கு பெரிய கெடுதல் எதுவும் நடக்காது..அப்படி நடந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும்..ஏழரை சனி இத்தோடு போகட்டும் என சமாதனப்படுத்திக்கொள்ளுங்கள்.\nவிருச்சிக ராசியினர் குழந்தைகளாக இருந்தால் அவர்களை பெணி காக்க வேண்டும்..அன்பாக வளர்க்க வேண்டும் காரணம் ராசியின் சந்திரன் நீசம் ஆவதால் தாழ்வு மனப்பான்மை,பயம்,குழப்பம்,விரக்தி எளிதில் தாக்கும்..செவ்வாய் ஆட்சு உச்சம் பெற்று பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் வாழ்வில் நிறைய சாதிப்பார்கள்..தன்மானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் தன்னை ஒருவர் மதிக்கவில்லை எனில் அவர்களை தூக்கியெறிய தயங்க மாட்டார்கள்..அன்பாக நடந்துகொள்பவர்களிடம்..அதைவிட பல மடங்கு அன்பு காட்டுவார்கள்\nஇந்த ராசி கால புருஷனுக்கு எட்டாவது ராசி, ஸ்திர ராசி, பெண் ராசி, ஜல ராசி, சீற்றமுள்ள ராசி, மெளனமாக ராசி, வீரமான ராசி, விவேகமான ராசி, இறுக்காமான ராசி, பாசமான ராசி, கடமையான ராசி, ஆதிக்கமான ராசி, வீணான விரையமான ராசி, சினம் கொண்ட ராசி, உமைப்புத்தன்மையுள்ள ராசி, நீண்ட ராசி, உறுதியான ராசி, எட்டுக்கால் ராசி, பலகால் ராசி, ஊர்வன ராசி, விஷமுள்ள ராசி, உயரமான ராசி,பால் உறுப்பைக் குறிக்கும் ராசியாக அமைகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள். மனைவியிடமும் பிரியமாக இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் எடுத்த காரியத்தைப் பிடிவாதமாக செய்து முடித்து வைப்பார்கள். இளமைத் தோற்றம் உடையவர்கள். கூரிய விழி படைத்தவர்கள். தயாளக் குணம் உடையவர்கள் ஆனால் மன உறுதி இல்லதவர்கள். சுக போகங்களை அனுபவிப்பதில் ஆசையுடையவர்கள். பேச்சு திறமையுடையவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் கூட ஆண்களின் மனோ பாவமும், குணங்களும் உடையவர்களாக இருப்பார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் பழைய பழக்க வழக்கங்களை உறுதியாக கடைப்பிடிப்பார்கள். ஆடல் பாடல்களில் விருப்பம் இருக்கும். தன் கொள்கைகளை அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள். ஆனால் அடுத்தவர்கள் கொள்கையை தாக்கியோ அல்லது பரிகாசம் செய்ய மாட்டார்கள். தன்னுடைய புத்திசாலிதனத்தின் மேல் நம்பிக்கை உடையவர். மனதில் தோன்றிய கருத்துக்களை தெள்ளத் தெளிவாக யாராகா இருந்தாலும் பயமின்றி எடுத்து சொல்வார். இவர்கள் குருவாக நினைத்து பலபேர் ஆலோசனை கேட்டு நடப்பார்கள். தீர்க்கதரிசி, வாக்கு பலிதம், கனவு பலிதம் இவர்கள் வாழ்க்கையில் இணைந்து இருக்கும். எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் கெட்டிக்காரர். இவரை எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது. வி.ஐ.பி. வரிசையில் இடம் பிடிப்பர்.\nஇந்த ராசிக்காரர்கள் பேச்சில் பிறரைத் தாக்குவது என்று ஆரம்பித்து விட்டால் தேள் கொட்டியது போல் மறக்க முடியாத அளவு வேதனை தரக்கூடிய அளவுக்கு பேசுவார்கள். சிடுசிடுப்புமிக்க நிலையில் சீறி விழுவார். நேர்மையானவர், வெளியே வர கூச்சப்படுவார். கூட்டத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகி இருக்க விரும்புவார். இரகசியம் காப்பவர். வெளிபடையாக பேச மாட்டார் அப்படி பேசினாலும் பிறர் மனதை புண்படுத்துவர்.\nசான்றோர்களிடம் அதிக மரியாதையும், சிறியவர்களை அடக்கி ஆளுதலும் உடையவர். சந்தேகம் உடலோடு குடிகொண்டிருக்கும். தனக்குத் தெரிந்த நல்ல தகவல்களை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து பரிமாறிக் கொள்வார். மாறுபட்ட கருத்து உடையவர்கள் இவர்களிடம் வந்தால் மறுநிமிடத்திலேயே மாறிவிடுவர்.\nகாலம் நேரம் பார்த்து கச்சிதமாக கரியங்களை முடிப்பதில் இவர்கள் வல்லவர்கள். வாக்கு சாதூரியம் மிக்கவர். பூர்வ புண்ணியத்தின் பயனாக குடும்பம் மிக வசதியான குடும்பமாக அமையும். பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் இருப்பார். குடும்பத்தினர் இவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அதில் இவர் முதன்மையானவராக இருப்பார். பூர்வீக சொத்துகள் இருக்கும் அதை விட்டு விலகமாட்டார், விற்கவும் மாட்டார். புதிய சொத்துக்கள் வாங்குவார்.\nஇவர்கள் கொடுத்த வாக்கை காப்பற்றுவதில் வல்லவர். முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும். முன்யோசனையோடு செயல்படுவர். அதனால் பணப்பற்றாக் குறை ஏற்படாது. யாருடைய பணமாவது இவர்களுடைய கையில் இருந்து கொண்டே இருக்கும். ஆரம்ப வயதில் அளவோடு செலவிட்டாலும், நடுவயது காலத்தில் ஆடம்பரத்தை விரும்புவர். வாழ்க்கை துணை அழகு அறிவும் நிறைந்தவராக இருப்பார். வாழ்க்கை துணையால் வருமானம் வந்து சேரும்.\nஇவர்கள் புத்தி கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொள்வார்.\nதொழில் கல்வியில் ஆர்வம் இருக்கும். ஆராய்ச்சித் துறையில் அதிக அக்கறை காட்டுவார். எழுத்து துறையில் சிறந்த விமர்சிகர்ளாகவும், அரசியல், இராணுவம் போலீஸ் போன்றவற்றில் துப்பறியும் நிபுணர்களாகவும், பொறியியல் துறை, அச்சகத்துறை, பத்திரிகைத் துறை, வங்கி துறை, மருத்துவத் துறை, தொழில் சாலை, மற்றும் தொழிலகம், அரசு துறை, நிர்வாகத்துறைகளில் சிறந்த வக்கீல், நீதிபதி, அல்லது ஸ்தாபனங்களில் நிர்வாகியாகவும் இருந்து புகழ் பெறுவர். ஆக்கவும் அழிக்கவும் திறமை பெற்றவர்.\nஇவர்கள் விநாயகர், முருகன், நந்தி, அனுமன், சரஸ்வதி, லட்சுமி, சிவன், சக்தி, விஷ்ணு, ஆகிய அனைத்து தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டால் நினைத்த காரியம் நடக்கும்.\nவிருச்சிக ராசியினர் எல்லா கடவுளையும் பார்த்த மத்திரத்தில் கும்பிடுவர்..ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் முருகன் வழிபாடு நல்லது..சந்திரன் நீசமாவதால் திருப்பதி சென்று வருதலும் நலம் தரும்...\nஎமது முன்னோரின் கணிப்புக்கள் எம்மை பிரமிக்க வைக்கிறது.\nஎமது முன்னோரின் கணிப்புக்கள் எம்மை பிரமிக்க வைக்கிறது.\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்\nஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனா...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\nஆடி அமாவாசை அன்னதானம் 11.8.2018\nஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 சனிக்கிழமை வருகிறது ..ஐந்தாம் ஆண்டாக இந்தாண்டும் ஆடி அமாவாசை அன்னதானம் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களில் நண்பர்கள் ஆதரவ...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/02/8_61.html", "date_download": "2018-08-21T14:06:05Z", "digest": "sha1:KRKRVBFPO5IQKKU5X6JQM4X2ER76EL3W", "length": 12095, "nlines": 99, "source_domain": "www.athirvu.com", "title": "கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி..\nகேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி..\nபொலிவியாவில் நடைபெறவுள்ள இசைவிழாக்கான முன்னேற்பாட்டின்போது, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nலத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள ஒருரோ சுரங்கத் தொழில் நிறைந்த நகராகும். இங்கு பல்வேறு வண்ண உடைகள், விதவிதமான முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வாத்திய இசை நிகழ்ச்சி பிரமாண்டமான அளவில் நடைபெறுவது பெரும் சிறப்பாகும்.\nகடந்த 2002-ம் ஆண்டு முதல் இந்த இசை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் கலைஞர்கள் திரளாக பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இசை கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான இசை திருவிழா அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் சாலையோர கடை ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் அப்பகுதியில் இருந்த மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். மேலும், 40-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.\nகேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நேர்ந்த பாரிய அனர்த்தம்.. 8 பேர் பலி.. Reviewed by kaanthan. on Tuesday, February 13, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/90846.html", "date_download": "2018-08-21T13:32:32Z", "digest": "sha1:MMPSTU3XXPBHW56UEOWQV5UBTYNGYA5L", "length": 7081, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப கூட்டமைப்பிற்கு றிசாட் அழைப்பு – Jaffna Journal", "raw_content": "\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப கூட்டமைப்பிற்கு றிசாட் அழைப்பு\nயுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.\nமன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்பும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு எண்ணியிருந்தோம்.\nஅதன்படி தமிழ்- முஸ்லிம் நல்லுறவுக்கான பாலமாக புதிய ஆட்சியை மலரச் செய்வதற்காக கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தோம்.\nஎமது யோசனைக்கு செவிசாய்த்து ஆரம்பத்தில் இதற்கு சம்மதித்த கூட்டமைப்பினர், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான காலம் நெருங்கி வந்து கொண்டிருந்த போது, நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் எங்களை வீழ்த்த வேண்டுமென்று செயலாற்றினார்கள்.\nஇந்நிலையில், இன, மத, பேதங்களுக்கு அப்பால் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றனர்.\nஅதன்படி அவரும், அவருடன் இணைந்தவர்களும் தமது பொறுப்பைச் சரியாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்க்கட்சியினர் உட்பட எல்லோரையும் இணைத்துக்கொண்டு பக்குவமாகப் பயணஞ்செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nமன்னார் பிரதேச சபையில் ஒரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். எதிர்காலத்தில் இந்த சூழ்நிலை மாற்றமடைய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91292.html", "date_download": "2018-08-21T13:34:25Z", "digest": "sha1:UX5OJDO64P2FYNBC6MQTG4GSYTGUGQD5", "length": 5435, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல் – Jaffna Journal", "raw_content": "\nஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்\nநீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள்வெட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை.\nகுறித்த வழக்கு விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதலுக்கு இலக்கான இரு சாட்சிகளும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை. தம் மீது தாக்குதல் நடத்தும் போது தாக்குதலாளிகள் முகத்தினை மறைத்து கறுப்பு துணி கட்டி இருந்தமையால் , தாக்குதலாளிகளை அடையாளம் காணமுடியவில்லை என சாட்சியங்கள் மன்றில் தெரிவித்தனர்.\nஅதை அடுத்து குறித்த வழக்கினை எதிர்வரும் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் சந்தேக நபர்கள் மூவரையும் அன்றைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடுத்தார்.\nமேலும், நீர்வேலி வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2428/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-08-21T13:27:52Z", "digest": "sha1:JTT7M2ICPXQ5AZOVAISZ2I2CCSJEZFPB", "length": 7290, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "வருமானவரி அதிகாரிகள் ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் 5½ மணி நேரம் விசாரணை – மின்முரசு", "raw_content": "\nவருமானவரி அதிகாரிகள் ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் 5½ மணி நேரம் விசாரணை\nசென்னை அண்ணாநகரில் உள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், திருவான்மியூரில் உள்ள அவருடைய மகன் விவேக் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத பணம், நகை மற்றும் பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.\nஅதன் அடிப்படையில் இது குறித்து மேலும் தகவல்களை பெறுவதற்காக ராமமோகன ராவ் மகன் விவேக்குக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர் ஆஜராகாததால் நீதிமன்றத்தை நாட வருமானவரித்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.\nஇதற்கிடையில் நேற்று மாலை 3.50 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விவேக் வந்தார். விவேக் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் என்று தகவல் அறிந்த உடன் பத்திரிகை மற்றும் ஊடகங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் குவிந்தனர்.\nவருமானவரித்துறை அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையில் உள்ள பதிவேட்டில் தன்னுடைய பெயர், சந்திக்கும் அதிகாரி பெயர், செல்போன் எண், வருகை தந்த நேரம் மற்றும் கையொப்பம் போன்றவற்றை பதிவு செய்துவிட்டு, வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழு முன்பு விவேக் ஆஜரானார். உடன் கைப்பையில் ஆதாரங்களையும் எடுத்து வந்தார்.\nவிசாரணை குழுவினரிடம் பணம் மற்றும் நகைகள் வாங்கியது மற்றும் சொத்து ஆவணங்களுக்கான ஆதாரங்களை காண்பித்தார். இதனை பார்வையிட்ட அதிகாரிகள் குழுவினர் அவற்றை போதிய நகல் எடுத்துக் கொண்டனர்.\nபின்னர் மூடி முத்திரை வைக்கப்பட்ட சுமார் 85 கேள்விகள் அடங்கிய கவரை திறந்து ஒவ்வொரு கேள்விகளாக விவேக்கிடம் கேட்டனர்.\nகுறிப்பாக தொழிலதிபர் சேகர் ரெட்டி உடன் உள்ள வர்த்தக தொடர்புகள், ராமமோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் செய்த வர்த்தக விவரங்கள், மற்றும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடனான தொடர்புகள் குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் விவேக்கிடம் விசாரித்ததாக தெரிகிறது.\nஅதற்கு விவேக் அளித்த பதில்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு விவேக் மழுப்பலாகவே பதில் அளித்ததாகவே கூறப்படுகிறது.\nஅதனை வருமானவரித்துறை ஏற்கவில்லை. மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை 5½ மணி நேரம் விவேக்கிடம் விசாரணை நடைபெற்றது.\nஇந்த விசாரணையில் போதிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற உடன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதனை தொடர்ந்து பெரிய அளவில் சோதனை தொடர வாய்ப்பு உள்ளது’ என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/03/sdpi.html", "date_download": "2018-08-21T14:22:33Z", "digest": "sha1:JJWYF2IC65XD5NRVMP2WVVYGUKMTWN5U", "length": 14615, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எஸ்டிபிஐ » தேர்தல் 2016 » சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது\nசட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது\nTitle: சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது\nதிமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எஸ்.டி.பி.ஐ கட...\nதிமுகவுடனான SDPI கூட்டணி உறுதியானது\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், அம்ஜத் பாஷா ஆகியோர் அடங்கிய குழு இன்று சந்தித்து கூட்டணியை உறுதி செய்தது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.\nஇதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி; திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சி இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இரண்டுமுறை சந்தித்து நாங்கள் பேசியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக இன்று திமுக தலைவர் டாக்டர் கலைஞர் மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக நடைபெற்றது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.\nஅப்போது இந்த கூட்டணியில் மமக போன்ற கட்சிகள் இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வராதா என செய்தியாளர்கள் கேட்டபோது; அவ்வாறான பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை என்றும், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யும் திமுக நிர்வாக குழுவும், கூட்டணி கட்சிகளும் அவ்வாறான பிரச்சனைகள் எழாமல் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.\nமேலும், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது என செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்த பேச்சுவார்த்தை இப்போது நடைபெறவில்லை என்றும், விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.\nஇந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nLabels: எஸ்டிபிஐ, தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/43844-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF.html", "date_download": "2018-08-21T14:23:36Z", "digest": "sha1:QE3R2T7PNCG5EJLMOG3JHCYSNPV45AGG", "length": 21077, "nlines": 322, "source_domain": "dhinasari.com", "title": "சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா - தினசரி", "raw_content": "\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது.\nநடராஜர் கோயிலில் ஆனித் திருஞ்சன விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.\nநாளை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது.\nநாளை மறுநாள் பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்ஸவம் முடிவடைகிறது.\nஇன்று ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா\nமுந்தைய செய்திஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது\nஅடுத்த செய்திமதுரை காமராஜ் பல்கலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஆசிய விளையாட்டில் இந்தியா இன்று….\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று…\nஇன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டு போட்டிகள்\nகிரிக்கெட்: இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஆய்வுப் பணிகளை தொடங்கினார் பிரதமர் மோடி\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம் 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை 21/08/2018 10:20 AM\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி 21/08/2018 10:19 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-15-04-20-06", "date_download": "2018-08-21T13:39:58Z", "digest": "sha1:WUBKNVFLUJ5DSWSK74MNQK5XHSYQSKXB", "length": 43055, "nlines": 540, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "நாரயணர் சபா! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nமனித நேயம் உங்களுள் மலரட்டும்.\nஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 09:39\nஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே\nகாணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா\nஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே\nவீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.\nநீக்கமற எங்கும் நிறைந்த விஷ்ணு- பரம் வியுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் நின்று இருந்து கிடந்து நடந்து அருள் பாலிக்கின்றார். விஷ்ணு வின் அருளைப்பெற ஏகாதசியன்று விரதமிருந்து துவாதசியன்று வெண்பட்டாடை அணிந்து விஷ்ணுவை வெண்மலர்களால் பூஜிக்கவேண்டும்.\nபரம்- திருமகள் (ஸ்ரீ) மண்மகள் (பூதேவி) ஆய்மகள் (நீளா) ஆகியோரோடு பரமபதத்தில் தன்னை விட்டு பிரியாத அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்தியர், பூவுலகை விட்டு நீங்கி தன்னை வந்தடைந்த புனிதரான முக்தர் ஆகியோருக்கு எப்போதும் இன்முகத்துடன் வாழ்வளிக்கும் ஆனந்த நிலை பரத்துவம் எனப்படும்.\nவியூகம்- உலகில் அனைத்தையும் படைக்க தன் நாபிக் கமலப் பூவில் நான்முகனைப் படைத்து மற்ற தேவர்களின் குறைகளைக் கேட்டுக் களைய உதவும் வகையில் அனந்தன்மேல் பள்ளி கொண்டிருக்கும் கோலமே வியூகம்.\nவிபவம்- அறம் தலைத்து நிற்க (தர்ம ஸம்ஸ்தாபனம்) நல்லவர்களை காக்க (ஸாது பரித்ராணம்) அல்லவர்களை அழிக்க (துஷ்க்குத்விநாசம்) பூவுலகில் இராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்களை மேற்கொள்வது விபவம் எனப்படும்.\nஅந்தர்யாமி- கறந்த பாலில் நெய்போல், எள்ளுக்குள் எண்ணெய்யாக இருப்பதுபோல் கட்டை விரல் அளவில் உள்ளத்தே எழுந்தருளி யிருப்பது அந்தர்யாமி எனப்படும்.\nஅர்சை- அடியவர்கள் விருப்பும் பொன், வெள்ளி முதலிய உலோகங்களிலும், மரம், மண், கல், வரைச்சித்திரம் அனைத்திலும் தோன்றும் வடிவமே அர்ச்சாவதாரமாகும்.\nவிஷ்ணு ஆலயத்தைத் திறக்குமுன் மங்கள வாத்தியங்கள் முழங்க கதவுகள் திறக்கப்படவேண்டும்.\nஎந்தெந்த மாதங்களில், எந்த நாட்களில் மகாவிஷ்ணுவை எந்தவடிவில் பூஜித்து விரதம் இருக்கவேண்டும்.\nசித்திரை- வளர்பிறை துவாதசி- வாமனனாகிய நாராயணனை பூஜைக்க வேண்டும்.\nவைகாசி- வளர்பிறை துவாதசி- பரசுராம துவாதசி- பரசுராமவதார நாராயணனை பூஜிக்க வேண்டும்.\nஆனி- வளர்பிறை துவாதசி- ஸ்ரீராம துவாதசி- ராமவதார விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.\nஆடி- வளர்பிறை துவாதசி- கிருஷ்ண துவாதசி- கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.\nஆவணி- வளர்பிறை துவாதசி- புத்த துவாதசி- ஆபத்திலிருந்து விடுபட நாராயணனை பூஜிக்க வேண்டும்.\nபுரட்டாசி- வளர்பிறை துவாதசி- கல்கி துவாதசி- கல்கி அவதார விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.\nபுரட்டாசியில் சூரியன் கன்னிராசியில் பிரவேசிப்பதாலும் புதன் மிகவும் உச்சம் பெருவதாலும் அதன் அதிதேவதை திருமாலாகவும் இருப்பதால் மகாவிஷ்ணுக்கு உரிய மாதம். புதனின் நட்புகிரகம் சனி ஆயுட்காரகர் என்பதால் புரட்டாசி சனிக்கிழமை விரதம் சிறந்த பலனைத் தரும்.\nபுரட்டாசி தேய்பிறை ஏகாதசி- வாமன ஏகாதசி எனப்படும். இந்நாளில் மாகாவிஷ்ணு சயனத் திருக்கோலத்தை மாற்றுவதால் பரிவர்த்தன ஏகாதசி எனப்படும். மகாபலியை வாமன அவதாரம் எடுத்து அழித்தது இந்த ஏகாதசி நாளில். எனவே ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறுவதுண்டு.\nபுரட்டாசி வளர்பிறை ஏகாதசி அஜா ஏகாதசி எனப்படும். பழைய வினைகள், முன் வினைப்பயன் காரணமாக ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.\nமண்பாண்டங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம்\nதிருப்பதியில் வாழ்ந்த குயவன் பீமன் மனம் எப்போதும் கோவிலில் இருக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. தினமும் காலை மாலை இருநேரங்களிலும் கோவிலுக்குச் சென்று எல்லாம் நீயே வேங்கடவா எனச்சொல்லி வணங்கி வந்திடுவான். இருப்பினும் சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதம் இருந்து வந்தான்.\nமன்னர் தொண்டைமான் திருப்பதி ஆலயத்தைப் பெரிது படுத்தி புனரமைப்புச் செய்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்ய ஏற்பாடு செய்தார். தங்கத்தால் ஆன அழகான பூமாலை செய்து அணிவித்து அழகு பார்த்து மகிழ்ந்தார்.\nஒரு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரதம் இருந்தும் கோவிலுக்குப் போக முடியாத சூழல் ஏற்பட பீமன் மிகவும் வருந்தினான். பெருமாளை இங்கு வரவழைத்து விட்டால் என்ன என்ற எண்ணம் தோன்ற மண்ணால் சிலை செய்து மண்ணால் பூமாலை செய்து அணிவித்து அழகு பார்த்து திருப்தி அடைந்தான்.\nஅடுத்தநாள் காலை தொண்டைமான் பெருமாளைப் பார்த்தபோது தங்க மாலையுடன் மண் மாலையும் இருக்க தான் என்ன அபசாரம் செய்தோமோ என வருந்தி உண்ணா நோன்பு மேற்கொண்டான். மூன்று நாடகள் கழிந்தபின் அவன் கனவில் பெருமாள் பீமனைப் பற்றிச் சொல்ல மன்னன் பீமனைக் கண்டு பொன்னும் பொருளும் கொடுக்க அதை மறுத்த பீமன் அதைக் கொண்டு மேலும் தர்மகாரியங்கள் செய்யுங்கள் என்றான். இதனால் தொண்டைமானின் கர்வம் அழிந்தது. குயவன் பீமனின் பெயர் நிலைக்கும் வண்ணம் இன்றும் மண்பாண்டங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது.\nபுரட்டாசியில் சூரியன் கன்னிராசியில் நுழைந்ததும் பித்ரு லோகத்தில் வசிக்கும் முன்னோர்கள் யமன் அனுமதியுடன் பூமிக்கு வந்து தங்கள் உறவினர்கள் தங்களை நினைக்கின்றார்களா என்பதை அறிய ஆவலுடன் வருகின்றனர். அந்தக் காலம் புரட்டாசி வளர்பிறை பிரதமையிலிருந்து வரும் 15 நாட்கள் மாளயபட்சம் எனப்படும். அப்போது அவர்களுக்கு நீர்க்கடன் செய்து அவர்கள் தாகத்தை தணிக்கவேண்டும்.\nமாளயபட்ச நாட்கள் அனைத்துமே நீத்தார் வழிபாட்டிற்குரியது என்றாலும் மாளயபட்ச அஷ்டமி- மத்யாஷ்டமி, பரணி நடசத்திரத்தன்று மகாபரணி, திரயோதசி திதி கஜச்சாயை என்ற மூன்று நாட்கள் மற்றும் மகாளாய அம்மாவசை பிதுர்க்கடன் செய்ய மிகவும் சிறப்பான நாட்கள்.\nஐப்பசி- வளர்பிறை துவாதசி- பத்மநாப துவாதசி- பத்மநாபசுவாமியைப் பூஜிக்க வேண்டும்.\nகார்த்திகை- வளர்பிறை துவாதசி- விஷ்ணு ப்ரீதிக்கான வழிபாடு. பதித பாவன தரணி துவாதசி. வராகம் பூமியை ரட்சித்த நாள். கிருஷ்ணன அல்லது பலராமரை பூஜித்திட வேண்டும்.\nமார்கழி- வளர்பிறை துவாதசி- மச்ச துவாதசி- நாராயணனை பூஜிக்க வேண்டும்.\nதை- வளர்பிறை துவாதசி- கூர்ம துவாதசி- விஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.\nமாசி- வளர்பிறை துவாதசி- சர்வ பாப விமோசனம். வராக மூர்த்தியை பூஜிக்க வேண்டும்.\nபங்குனி- வளர்பிறை துவாதசி- நரசிம்ம துவாதசி- நரசிம்மரை பூஜிக்க வேண்டும்.\nமாயானத்திலிருந்து வந்து பூஜை செய்பவர்கள்\nஅழுக்கான தூய்மையற்ற ஆடைகள் அணிந்து பூஜை செய்வது\nமற்றவர்கலின் ஆடைகளை அணிந்து பூஜை செய்வது\nகோபத்துடனும் வெறுப்புடனும் பூஜை செய்தல் கூடாது.\nமாமிசங்களை உண்டபின் பூஜை செய்யக் கூடாது\nநெய்வேத்தியம் செய்யாத பொருட்களை மற்றவர்களுக்கு தரக்கூடாது.\nமது உட்கொண்டு பூஜை செய்யக்கூடாது\nமாமிசம் விற்பதோ உண்னுவதோ கூடாது.\nஅவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிபதி,\nஅசுர தேவர் யுத்தத்தில் ஏராளமான அசுரர்கள் அழிந்துபோக தோற்ற அசுரர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியர் வீட்டில் தஞ்சமடைந்தனர். அசுரர்களைக் காக்க மந்திர தந்திரங்களை கற்க சிவபெருமானைக் கைலாயத்தில் சந்தித்தார். பெருமான் இதுவரை யாருமே செய்யாத ஒரு விரதத்தை தலைகீழாக நின்று ஓராயிரம் ஆண்டுகள் தவம்செய்தால் மந்திர உபதேசம் கிடைக்கும் என்றார். தவமிருக்க சுக்கிராச்சாரியர் கானகம் சென்றார். சுக்கிரன் வீட்டில் இல்லாததால் தவித்த அசுரர்களை சுக்கிராச்சாரியாரின் தாயும் பிருகு முனிவரின் மனைவியிடம் தஞ்சம்புக, அப்பெண்மணி என் கற்பின் மகிமையால் உங்களைக் காப்பாற்றுகின்றேன் என்று அபயம் அளித்து அடைக்கலம் தந்தாள். தேவர் குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி தேவேந்திரன் அசுரர்கள்மீது போர் தொடுக்க பிருகுவின் மனைவி தேவேந்திரனை செயலிழக்கச் செய்து விட்டாள். விஷ்ணு சக்ராயுதத்தை அனுப்ப அது தஞ்சம் கொடுத்த முனிவரின் மனைவி சுகிர்தி முதல் அனைவரையும் கொன்றது.\nதவம் முடிந்து வந்து விபரம் அறிந்த பிருகு முனிவர் கோபம் கொண்டு பஞ்சாட்சாரம் ஓதி அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் தன் மனைவியை எழுப்பிவிட்டு விஷ்ணுவிடம் போர்தொடுத்து, பெண் கொலை செய்த விஷ்ணுவே, நீ பூலோகத்தில் இழிவான யோனியில் ஓயாமல் பிறந்து, இறந்து, பிறந்து, இறந்து வாழ்வாய் எனச் சாபமிட்டார், ஒவ்வொரு ஜன்மத்திலும் மலமூத்திர சம்பந்தமுள்ள கர்ப்ப வாசத்திலே நீ பிறவி எடுக்க வேண்டும் என்றார். போரில் எதிரி என்று ஆனபின் கொல்வது குற்றமல்ல என்ற நிலையிருப்பினும் விஷ்ணு பிருகு முனிவரின் சாபத்தை சிவன் யோசனைப்படி மக்களின் நன்மைக்காக பயன்படுத்த திட்டமிட்டார்.\nவாசுதேவகிக்கு சுதர்சனம் என்ற மகனாகப் பிறந்தார். பிறந்தவுடன் குழந்தை சிவ மந்திரம் சொல்லியது அக்குழந்தை. அக்னீஸ்வரர் கோவில் சென்றது. வாசுதேவர் என்ன சொல்லியும் திருமால் புகழ் பாடாமல் சிவன் புகழைப் பாடியது. ஒருவர் தன் புகழைப் பாடுவது தற்பெருமையாகும். சாபத்தினால் பிறந்த திருமால் எப்படித் தன் புகழ் பாடுவார். சுதர்சனம் திருநீறு பூசவதைக் கண்ட வாசுதேவர் கோபங்கொண்டு அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார். வேறு எதுவும் தெரியாத நிலையில் சிவன்கோவில் சென்று தங்கினார். நள்ளிரவில் தட்சிணாமூர்த்தி வடிவில் அக்னீஸ்வரர் தோன்றி ஹரதத்தர் எனப் பட்டம் அளித்து ஞான உபதேசம் செய்தார். கஞ்சனூர்- (தன் புகழ் பாடுவது தற்பெருமை, போரில் கொன்றால் பாவமில்லை, எந்த செயலையும் பொது நலனுக்கு உபயோகமாக்குதல் என்ற இந்த மூன்று விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன)\nசிவன் ஆலோசனைப்படி உலக உயிர்களின் நலன் கருதி தான் அடைந்த சாபங்களின் மூலமாகப் பூலோகத்தில் அவதாரங்களை எடுந்து அதை மக்களின் நல்வழிக்காக செயல்படுத்த முடிவெடுத்தார் விஷ்ணு. இந்த அவதாரங்களில் மானிட உருவம் தரித்தது வாமனர், ராமர், மற்றும் கிருஷ்ணர். இதில் வாமனர், கிருஷ்ணர் அவதாரங்களில் கடவுளின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். ராமாவதாரத்தில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை அறியாதவராய் எளிய மானிட வாழ்வு வாழ்ந்ததால் இராமாவதாரம் சிறப்பு பெற்றது.\nசாக்ஷுஷு மன்வந்திரத்தின் முதலாவது சதுர்யுகக் கிருதத்தில் தருமர் என்பவருக்கு நரநாராயணர்களாக விஷ்ணு பிறந்துள்ளார்.\nபின்னர் வைவஸ்வத மன்வந்திரத்தில் முதல் சதுர்யுக கிருதயுகத்தில் அத்திரி முனிவரின் பத்தினி அனுசூயை மும்மூர்த்திகளும் புத்திரர்களாக வர விரும்பியதால் நாராயணர் தத்தாத்திரேயராகப் பிறந்தார்.\nMore in this category: « லலிதாபரமேஸ்வரி-பரமேஸ்வரன் சபை ராஜலட்சுமி சபை\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Wikibooks-logo.png", "date_download": "2018-08-21T14:11:05Z", "digest": "sha1:KHXHOBKN2Q3T5PDT7325XDFT4NAZJ7J7", "length": 12573, "nlines": 186, "source_domain": "ta.wiktionary.org", "title": "படிமம்:Wikibooks-logo.png - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 7 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-21T13:33:33Z", "digest": "sha1:2WI7TRWGOUUJFNZNZBBTYDAMRE3YLSR2", "length": 5500, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | அவுஸ்திரேலியா", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது\nஉலகின் மிக வயதானது என அறியப்பட்ட ‘நம்பர் 16’ என்ற சிலந்திப் பூச்சி தனது 43ஆவது வயதில் அவுஸ்ரேலியாவில் இறந்தது. ஆராய்ச்சியாளர்கள் சுமார் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப் பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டிலிருந்த 28 வயதான டிரான்டுலா எனும் சிலந்திப் பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது. நம்பர்\nநாடாளுமன்றில் பாலூட்டிய தாயும், பருகிய முதல் குழுந்தையும்\n– எஸ். ஹமீத் –அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இடது சாரி பசுமைக் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். இவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முக்கியமான ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் லாரிசா இருந்தார். அதே சமயம், தன் பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு உணவை\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/shaiva_siddhanta/thirukalitruppadiyar.html", "date_download": "2018-08-21T13:47:58Z", "digest": "sha1:OXQGAVUICAOTA5UTMREW4O3BTFXDIKZO", "length": 6972, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள் - திருக்களிற்றுப்படியார், நூல்கள், சாத்திரங்கள், நூல், சித்தாந்த, சொல்லக்கே, ளெங்கே, தம்மிற், சைவசித்தாந்த, இலக்கியங்கள், அம்மையப்ப", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்டு 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதிருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதிருக்களிற்றுப்படியார் சைவசித்தாந்த நூல்களுள் இரண்டாவது நூல். சைவசித்தாந்த நூல்களுக்குள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு இது முற்பட்டது. இந் நூலை இயற்றியவர் திருக்கடவூரைச் சேர்ந்த உய்யவந்த தேவநாயனார் ஆவார். இந் நூல் 100 வெண்பாக்களால் ஆனது.\nஅம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக\nஅம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர்\nஎல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும்\nஅல்லார்போ னிற்பா ரவர். 1\nதம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்\nதம்மிற் றலைப்படுத றாமுணரின் - தம்மில்\nநிலைப்படுவ ரோரிருவர் நீக்கிநிலை யாக்கித்\nதலைப்படுவர் தாமத் தலை. 2\nஎன்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி\nஎன்னறிவி லாரறிக வென்றொருவன் - சொன்னபடி\nசொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்\nசொல்லக்கே ணானுனக்கச் சொல். 3\nஅகளமய மாய்நின்ற வம்பலத்தெங் கூத்தன்\nசகளமயம் போலுலகிற் றங்கி - நிகளமாம்\nஆணவ மூல மலமகல வாண்டனன்காண்\nமாணவக வென்னுடனாய் வந்து. 4\nஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே\nயோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத்\nதருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்\nபெருவடிவை யாரறிவார் பேசு. 5\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதிருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருக்களிற்றுப்படியார், நூல்கள், சாத்திரங்கள், நூல், சித்தாந்த, சொல்லக்கே, ளெங்கே, தம்மிற், சைவசித்தாந்த, இலக்கியங்கள், அம்மையப்ப\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rumble.com/v66d9r--4-.html", "date_download": "2018-08-21T14:28:47Z", "digest": "sha1:CWUD3AYZWZK2OQEZ6AVOIBH7GAFYZTTW", "length": 3422, "nlines": 75, "source_domain": "rumble.com", "title": "தமிழக முதல்வரிடம் ஸ்டாலின் வைத்த 4 கோரிக்கைகள்!- வீடியோ", "raw_content": "\nதமிழக முதல்வரிடம் ஸ்டாலின் வைத்த 4 கோரிக்கைகள்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடத்திய மு.க ஸ்டாலின், அழகிரி, முதல்வரிடம் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்து இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.\nதமிழக முதல்வருடன் மு.க.ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு..வீடியோ\nமீண்டும் சேர்ந்த ஸ்டாலின், அழகிரி...சேர்த்து வைத்த கருணாநிதி.. வீடியோ\nதமிழக மீடியாவுக்கு சாபம் விடும் ஸ்ரீரெட்டி- வீடியோ\nஸ்டாலின் தெளிவு பெற வேண்டும் இல கனேசன்- வீடியோ\nகட்சியினர், குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை- வீடியோ\nதாமாக முன்வந்து சிபிஐ விசாரணை கோரும் தமிழக அரசு- வீடியோ\nசிலை கடத்தல் வழக்கை சிபிஐ.க்கு மாற்றியது தமிழக அரசு- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/haniska-pospand-movie-release-date/", "date_download": "2018-08-21T13:32:14Z", "digest": "sha1:USPS2N2YFIL4QL4WBL6ADKTMZIMZ55UD", "length": 9540, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கலைஞரின் மறைவால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome அரசியல் கலைஞரின் மறைவால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு.\nகலைஞரின் மறைவால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு.\nதமிழக முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த செய்வாய் கிழமை (ஆகஸ்ட் 7 ) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.\nகலைஞர் அவர்களின் மறைவுயொட்டி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ போன்ற பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகளும் நேற்று (ஆகஸ்ட் 8) நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகையான ஹன்சிகா, கலைஞர் அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது பிறந்தநாள் அன்று திட்டமிட்டிருந்த ஒரு கொண்டாடத்தை தள்ளி வைத்துள்ளார்.\nதென்னெந்திய நடிகையான ஹன்சிகா தற்போது ‘துப்பாக்கி முனை’ , ‘100 ‘ என்ற இரண்டு தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார். இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா இன்று (ஆகஸ்ட் 9) தனது 26 பிறந்தநாளை கொண்டி வருகிறார். இந்நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி தான் நடிக்கவிருக்கும் 50வது படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ்யை வைத்து அறிவிக்க திட்டமிட்டிருந்தார்\nஆனால், கலைஞர் அவர்களின் மறைவினால் தமிழகம் இன்னும் சோகத்தில் உள்ள நிலையில் தனது படத்தின் தலைப்பு வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார் நடிகை ஹன்சிகா. மறைந்த தலைவருக்காக தனது தனிப்பட்ட கொண்டாடத்தை தள்ளி வைத்துள்ள ஹன்சிகாவின் இந்த செயல் அவரது ரசிகர்களை பெரிதும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\n பொன்னம்பலத்தை கேவலமான வார்த்தையால் திட்டிய மஹத்.\n சிம்பு இல்லனா ஃபாரின் போயிருக்க மாட்டேன். இவரை பாத்துதான் காமெடி பண்ணேன்.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n ரஜினி முதல் மோடி வரை “ட்விட்டரில்” இரங்கல்.\nஅஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_37.html", "date_download": "2018-08-21T14:15:16Z", "digest": "sha1:S43KFAASCR5DHGPV5Y62KXU4JE6TIQQR", "length": 5994, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அமெரிக்கா முதுகில் குத்துகிறது: அர்துகான்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமெரிக்கா முதுகில் குத்துகிறது: அர்துகான்\nஅமெரிக்கா முதுகில் குத்துகிறது: அர்துகான்\nதளத்தில் நின்று துருக்கியோடு போட்டி போடுவதைத் தவிர்த்து நாணய பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்து, பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் மலினமான செயலில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் துருக்கி அதிபர் அர்துகான்.\nரஷ்யாவுடனான உறவை வளர்த்துக் கொண்டுள்ள துருக்கி ரஷ்யாவின் நவீன ஏவுகணைத் தடுப்பு இயந்திரமான எஸ்-400 ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வம் வெளியிட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது.\nதுருக்கியில் தீவிரவாத செயற்பாடுகளின் பின்னணியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பாதிரியாரை விடுவிக்கக் கோரியிருந்த ட்ரம்ப் நிர்வாகம், துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினிய தயாரிப்புகளுக்கு மேலதிக வரியை விதித்து பொருளாதார அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. எனினும் தமது நாட்டின் மீது பொருளாதார யுத்தத்தை ஆரம்பித்து அமெரிக்கா முதுகில் குத்தியுள்ளதாக அர்துகான் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?p=33661", "date_download": "2018-08-21T13:34:16Z", "digest": "sha1:TYAFTIKOQWE2WQH2RUUL5WHO4WHHLIWX", "length": 6918, "nlines": 64, "source_domain": "puthithu.com", "title": "இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை, மீளக் கையளித்தார் காதர் மஸ்தான்\n– முன்ஸிப் அஹமட் –\nபிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சிலிருந்து இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை தனது விருப்பத்தின் அடிப்படையில் மீளக் கையளித்துள்ளார்.\nஇந்தச் செய்தியை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்\nஜனாதிபதியை இன்று வியாழக்கிழமை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சில் இருந்து, இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு காதர் மஸ்தான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பொறுப்பிணை ஜனாதிபதி மீளப்பெற்றுக் கொண்டார்.\nமீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், காதர் மஸ்தானுக்கு இந்து சமய விவகார பிரதியமைச்சு வழங்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.\nஇதனையடுத்து, குறித்த பிரதியமைச்சுப் பொறுப்பினை காதர் மஸ்தானே, ஜனாதிபதியிடம் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.\nஇதற்கமைய அவரிடம் இருந்த இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பொறுப்பினை ஜனாதிபதி மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.\n01) காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி\n02) காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித\nTAGS: இந்து சமய விவகாரம்காதர் மஸ்தான்பிரதியமைச்சர்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்\nதுருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை\nஅதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44315-topic", "date_download": "2018-08-21T14:07:17Z", "digest": "sha1:V3JRWT6AIQFG53QHTVUY7ZWYONGWPHZI", "length": 19737, "nlines": 141, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..\n» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…\n» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை\n» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்\n» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி\n நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..\n» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்\n» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்\n» கவிதைகள் – தில்பாரதி\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\nநெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nநெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nநெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்.\n... நான் தான் அப்பா பேசுறேன்..\nஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம் பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்யமுடியல..\nவார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில் \"நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்ப்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்க முடியல,\nஎன்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா... அவசரப்படுத்தினான் மகன்.\nமுதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லை பா..\nஅப்பாஆஆஆஆஅ... மகனிடம் இருந்து அதிர்வலைகள்.\nஇல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா... சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல... அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..\nஅப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்.... என்று மகன்\nஅலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..\nஉடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது , தன் தங்கையை தொடர்பு கொண்டான்..\nஅண்னா எப்படி இருக்கே.. குட் நியூஸ்.. எனக்கு 28% இன்கிரிமென்ட் வந்திருக்கு..\nஅவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை.. அப்பா பேசினார் மா என்று ஆரம்பித்து, .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..\nஅடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..\nசரி சரி , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட\nபேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்...\nஉடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..\nஅப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா... நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி , நானும் அண்ணாவும் நாளைக்கு காலையில ராம்நாட் ல இருப்போம்.. ப்ளீஸ் பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்.. பட பட வென பொறிந்து தள்ளினான்..\nபோனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்... கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..\nமூனு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து.. சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..\nவேலையிலிருந்து 2 நாள் விடுப்பெடுத்து உங்கள் உறவுகளை தேடி செல்வதால், உங்கள் தலையில் வானம் இடிந்து விழுந்து விடாது..\nவேலை, பணம் தேவை.. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில்லை .. பணத்தையும் தான்டி உலகம் உள்ளது என்றூ உணருங்கள் நன்பர்களே..\nநன்றி ;அரட்டை அரங்கம் தளம்\nRe: நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nRe: நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nஎன்னை நிகிழ வைத்த கதை....\nRe: நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-08-21T14:39:23Z", "digest": "sha1:L5VPXZOXLQLZQWEQMVBWKTBBSCY5AVKY", "length": 55984, "nlines": 299, "source_domain": "tamilagamtimes.com", "title": "‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை!… | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஎல்லாவற்றுக்கும் கர்மவினையையும், தலையெழுத்தையும் காரணம் சொல் வது சோம்பலின் அடையாளம்; முயற்சிக்கத் தயங்குபவனே கர்மவினையைக் காரணம் சொல்வான் என்கிறான் நண்பன் ஒருவன். எனில், கர்ம வினை என்பதெல்லாம் வெறும் கற்பனையா\nவிருப்பப்படி செயலில் இறங்குவது ‘முயற்சி’. நிர்பந்தமாக செயலில் இறங்கவைப்பது ‘கர்மவினை’. முயற்சி நமக்குக் கட்டுப்பட்டது. கர்மவினை நம்மைக் கட்டுப்படுத்துவது. ஒன்றில் சுதந்திரம் உண்டு; மற்றொன்றில் இல்லை.\n ஒருவிஷயத்தைச் செயல்படுத்துவது நாம்தான் எனும்போது, சுதந்திரம் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்\nஊருக்குப் போக வேண்டும் என்று விருப்பம். ரயிலிலும் போகலாம்; பேருந்திலும் போகலாம்; காரிலும் போகலாம். அல்லது, போகாமலும் இருக்கலாம். இந்த முயற்சியில் முழுச் சுதந்திரம் இருக்கும். மேலதிகாரியின் தொந்தரவு எல்லையை மீறிவிட்டது. வேலையை ராஜினாமா செய்துவிடுகிறான். அதன் எதிர்விளைவு, அவனைத் துயரத்தில் ஆழ்த்தியது. இங்கு அவனது விருப்பத்துக்கு எதிராகவே செயல்பாடு நிகழ்ந்தது. வேலையைத் துறக்க அவனுக்கு விருப்பம் இல்லை. ஆக, விருப்பத்தோடு செயல்படுவது முயற்சி; விருப்பத்துக்கு மாறாகச் செயல்படவைப்பது கர்மவினை. செயல்பட்ட பிறகே அது கர்மவினை என்று தெரியும். நமது சுதந்திரமான முயற்சி பறிக்கப்பட்டு, கர்மவினை வென்றுவிடும். கர்மவினையானது முன்னெச்சரிக்கையாகச் செயல்பட இடம் தராது. ஆறாவது அறிவும், ஆராயும் திறனும், சுதந்திரமாகச் செயல்படும் திறமையும் இருந்தும், அவை அத்தனையையும் முடக்கிவைத்து, கர்மவினை தனது செயல்பாட்டில் வெற்றி கண்டுவிடும்.\n கர்மவினை என்று எதைச் சொல்கிறீர்கள் முதலில், இதற்கு விளக்கம் தாருங்கள்\nமுற்பிறவிகளில் நமது முயற்சியால் சேமித்த பாவபுண்ணியங்கள் அல்லது நல்லதுகெட்டதுகளே கர்மவினை. நல்ல கர்மவினைகள் நல்ல பலன்களையும், கெட்ட கர்மவினைகள் கெடுதலையும் திணித்துவிடும். வெளியிலிருந்து எந்தச் சக்தியும் நம்மைத் தாக்க வில்லை. முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் சேமித்த செயல்பாடுகளே கர்மவினையாக மாறி, துயரத்தையும் மகிழ்ச்சியையும் உணரவைக்கின்றன.\nகண்ணால் பார்க்கும் விஷயங்களும், செயல்புலன்களின் செயல்பாடுகளும் மனதில் பதிந்துவிடும். மனதின் கட்டளையில் செயல் புலன்கள் இயங்கும். அதன் செயல்பாடுகள் மனதில் பதிந்துவிடும். காட்சிகள் மட்டும்தான் மனதில் பதியும் என்றில்லை; செயல்களும் பதியும். கறைபட்ட கை, அரவணைத்த கை, ஆட்கொண்ட கை என்றெல்லாம் சொல்வது உண்டு. மனமானது செயல்பாட்டைப் பதியவைப்பதால்தான் இந்த மதிப்பீடுகள் தோன்றுகின்றன. துயரம் அல்லது மகிழ்ச்சியை உணரும் காலம் வரும்போது, கர்மவினை செயல்பட்டு வெற்றி கண்டுவிடுகிறது.\n அப்படியானால், வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் காரணம் இல்லையா\nநம்மில் பலரும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் கர்மவினை மகிழ்ச்சியைத் திணித்து உணர வைக்கும்போது, அது நமது பெருமையால் விளைந்ததாக எண்ணுவோம்; கர்மவினை ஞாபகத்துக்கு வராது. துயரம் தாக்கும்போதுதான் கர்மவினை ஞாபகத்துக்கு வரும். கர்மவினை சுயநலத்தை வலுப்படுத்தும். சுயநலம், ஆராய இடம் அளிக்காமல் செயல்பட்டு விடும். கர்மவினை சுயநலம் வாயிலாக வென்று விடும். நாமே சுயநலத்தை ஏற்று, கர்மவினையின் பலனில் சிக்கிக்கொள்வது உண்டு கர்மவினை மகிழ்ச்சியைத் திணித்து உணர வைக்கும்போது, அது நமது பெருமையால் விளைந்ததாக எண்ணுவோம்; கர்மவினை ஞாபகத்துக்கு வராது. துயரம் தாக்கும்போதுதான் கர்மவினை ஞாபகத்துக்கு வரும். கர்மவினை சுயநலத்தை வலுப்படுத்தும். சுயநலம், ஆராய இடம் அளிக்காமல் செயல்பட்டு விடும். கர்மவினை சுயநலம் வாயிலாக வென்று விடும். நாமே சுயநலத்தை ஏற்று, கர்மவினையின் பலனில் சிக்கிக்கொள்வது உண்டு கர்மவினையைப் பரிகாரத்தாலோ, எதிர்த்துப் போராடியோ வெல்ல இயலாது. மனதில் பற்றிக் கொண்டிருக்கும் கர்மவினையின் வாசனையைக் கரைத்துவிட வேண்டும். அது அழிந்தால், துயரம் தோன்ற வழி இல்லை. மனதில் தோய்ந்த மாசை மனதின் செயல்பாட்டால் அகற்ற வேண்டும். வேறு நம்பிக்கையான கருவிகள் எதுவும் இல்லை.\n சரி, கர்மவினையே எல்லாவற்றுக்கும் காரணம் என்று வைத்துக்கொள்வோம். அதை வெற்றிகொள்ள வழி இல்லையா\nமனதின் மாசை அகற்றித் தூய்மையாக்கப் பல வழிமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள் நம் முனிவர்கள். ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேஷிகம், வேதாந்தம், மீமாம்சை போன்ற ஆறு தரிசனங்கள் மாசை அகற்றும் நடைமுறையை விளக்குகின்றன. ஆனால், இன்றைய சூழலில் அவற்றை உள்வாங்கி நடைமுறைக்குக் கொண்டுவரும் தகுதி படைத்தவர்கள் அரிதாகிவிட்டார்கள். பிரபஞ்சத்தில் தென்படும் பொருள்களின் மீதான ஈர்ப்பும், முற்பிறவியில் நாம் சேமித்த கர்மவினையும் நம்மை வலுக்கட்டாயமாகத் துயரத்தில் சிக்கவைத்து அலைக்கழிக்கின்றன. துயரத்தில் இருந்து வெளிவர எல்லோருக்கும் தகுந்த எளிதான செயல்முறையை அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.\n‘நமசிவாய’ என்றோ, ‘நமோ நாராயணாய’ என்றோ மனம் அடிக்கடி அசைபோட வேண்டும். அப்போது, மற்ற அலுவல்களில் இருந்து விடுபட்டு, அசைபோடுவதில் மனம் ஒன்றிவிடும். திரும்பத் திரும்ப அசைபோடும் போது, மனதில் பற்றிய மாசும் அகன்றுவிடும்; துயரமும் தலைதூக்காது. அதிகாலையில் நீராடி, நெற்றித்திலகம் இட்டு, பத்மாசனத்தில் அமர்ந்து, இந்த இரு மந்திரங்களில் ஒன்றை அசைபோட வேண்டும். அலைபாயும் மனம் அசையாமல் இருக்க, தினமும் செயல்பட வேண்டும். மனம் இதில் ஒடுங்கிவிட்டால், கர்மவினையின் உத்தரவுக்கு இணங்காது. காலப்போக்கில் அசைபோட்டு அசைபோட்டு மனம் தூய்மை பெறும்போது, கர்மவினையின் வாசனை முழுமையாக மறைந்துவிடும். அப்போது, மகிழ்ச்சியை நெருடல் இல்லாமல் உணரலாம். மனம் மந்திரத்தில் ஒடுங்கும் வேளையில் பிரபஞ்ச பொருள்களிலும் ஈர்ப்பு ஏற்படாது. மந்திரத்தின் பிடியிலிருந்து மனம் வெளிவராமல் இருப்பதால், வெளி ஈர்ப்புகள் அதை பாதிக்காது.\nஇப்படி, இரு மந்திரங்களில் ஒன்றை தினமும் அசைபோட்டு பழக்கப்பட்டால், மனம் நம் விருப்பப்படி செயல்பட ஆரம்பித்துவிடும்; நேர்வழியில் செல்லும். அதனால் மகிழ்ச்சி கிட்டும். இதை ஒதுக்கிவிட்டு ஜோதிடம், பூஜைபுனஸ்காரங்கள், தான தர்மங்கள், மகான்களின் வழிபாடு, தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றைச் செய்வதால் மட்டுமே, மனதின் மாசை முழுவதுமாகத் துடைக்க முடியாது. நாம் செயல்பட்டுதான் அதை அகற்ற இயலும். நமக்கு பதிலாக வேறுயார் செயல்பட்டாலும், அது நம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்; உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். நம்மை நாம்தான் முன்னேற்றிக்கொள்ள வேண்டும்.\nமனதைச் சுதந்திரமாக விடுவதுதான் மகிழ்ச்சிக்கு ஆதாரம் அதைத் திசைதிருப்பி வேறொன்றில் இணையவைப்பது வீண். மனிதன் பிரபஞ்சத்தில் தென்படும் பொருள்களை நுகர்ந்து மகிழவே பிறந்திருக்கிறான். அதற்காகவே இயற்கை அவனுக்கு அறிவுப் புலன்களைத் தந்து அருளியிருக்கிறது; அவற்றை அடையச் செயல்புலன்களையும் சேர்த்து அருளியிருக்கிறது. நடப்பவன் தடுக்கி விழவே செய்வான். எதிலும் இடையூறு தென்படவே செய்யும். எனவே, வீண் கற்பனைகள் தேவையில்லை.\n எனில், நம்மை மீறி நிகழும் விஷயங்களுக்கு எல்லாம் காரணம் என்ன\nநம்மை மீறி எதுவும் நடப்பது இல்லை. இன்பம்துன்பம், இருட்டுவெளிச்சம் இவை மாறி மாறி வருபவை. பகல் இருந்தால் இரவும் உண்டு. இயற்கையின் நியதியை மாற்ற இயலாது. வெயிலில் நடப்பவனுக்கு நிழலின் அருமை தெரியும். துயரத்தை உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சியின் பெருமை புரியும். பசித்தவனுக்கு எந்த உணவும் ருசியாக இருக்கும். பசிக்காதவனுக்கு சுவையான உணவும் கசக்கும். பிரசவ வேதனை அனுபவித்தவளுக்குக் குழந்தையின் அருமை தெரியும். காதலித்தவளை பலவித இடையூறுகளைச் சந்தித்துதான் கைப்பிடிக்கிறான் காதலன். உழைத்தால்தான் ஊதியம் கிடைக்கும். வேலை செய்வது கஷ்டம்தான். ஆனாலும், கிடைக்கும் ஊதியத்தை நினைத்துக் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்வோம். ஈசனருள் இன்பத்தைத் தரும் என்று எண்ணி, கடினமான தவத்தை ஏற்போம். அதுபோல், இன்பத்தைச் சுவைக்கலாம் என்ற நம்பிக்கை, துயரத்தைத் தாங்கிக்கொள்ளும்.\n வெற்றிகளும் நன்மைகளும் உங்களால் விளைந்தது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், தடைகளும் துன்பங்களும் வரும்போது மட்டும் அதற்கான காரணத்தை வெளியில் தேடுகிறீர்களே, ஏன்\nஇன்பத்தைச் சுவைத்து மகிழ்ந்தவனுக்குச் சிறு துன்பமும் பொறுக்க முடியாத வேதனையை அளிக்கும். துன்பத்தில் தோய்ந்தவனுக்குச் சிறு இன்பமும் அளவிட முடியாத ஆனந்தத்தைத் தரும். அமுதமும் விஷமும் ஓரிடத்திலிருந்து வந்தவை. விஷம் வந்த பிறகுதான் அமுதத்தை அடைந்தார்கள். குத்துவிளக்கின் அடியில் இருட்டும் இருக்கும். பகை பயத்தை உண்டு பண்ணும்; நட்பு பயத்தை விலக்கும். இப்படி, படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களிலும் இரண்டையும் இணைத்துவைத்திருக்கிறது இயற்கை. மனிதனும் பயத்தில் இன்பத்தை இழக்கிறான்; நட்பில் இன்பத்தை உணர்கிறான். இரண்டும் அவன் மனதில் உருவாகிறது. வேண்டியதைப் பெறுவதில் கஷ்டம் இருக்கும். பெற்றதைச் சுவைக்கவிடாமல் பயம் தடுக்கும். இதை அறிந்துதான் அத்தனை இறை வடிவங்களும் அபய ஹஸ்தத்தையும், வரத ஹஸ்தத்தையும் காட்டிக்கொண்டு, பக்தனை அழைக்கின்றன. விருப்பத்தைப் பெறவும் கடவுளை வேண்டுகிறான்; பகைவனை அழிக்கவும் கடவுளை நாடுகிறான். படைப்பில் அத்தனைப் பொருளிலும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும்.\nகுணமும் தோஷமும் கலந்துதான் பொருள் உருவாகும். உண்மையும் பொய்யும் கலந்துதான் பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது. உண்மையும் பொய்யும் கலந்ததுதான் வணிகம் (ஸத்யநிருதேச வாணிஜ்யம்). மாம்பழத்தைச் சுவைக்கும் வேளையில் இனிப்பு உணரப்பட்டாலும், கொட்டையை எட்டும்போது சுவை மாறிவிடும். ஒரு வகையில், துயரத்தின் அனுபவம்தான் மகிழ்ச்சி யின் தரத்தை உயர்த்துகிறது. மகிழ்ச்சியின் முழுமையை எட்ட துயரம் ஒத்துழைக்கும். துயரத்தை அடியோடு அழிக்க இயலாது. அதற்காக பகீரத பிரயத்னம் ஏற்பது அறிவீனம்.\n கடவுள் நாமாவை தினமும் சொல்வது, உங்களுக்கு பகீரத பிரயத்னமா\nஇன்றைய நாளில், அன்றாட அலுவல்களை நிறைவு செய்யவே நேரம் போதவில்லை. தரமான கல்வி கற்க வேண்டும். நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும். பொருளாதாரத்தில் சரிவு ஏற்படாமல் இருக்க ஊதியம் உயர்ந்துகொண்டே போக வேண்டும். மனதுக்குப் பிடித்தமான வேலை அமையவேண்டும். மகிழ்ச்சியளிக்கும் மனைவி வேண்டும். குதூகலிக்கக் குழந்தைகள் வேண்டும். நேரத்துக்கு உதவ உறவினர்கள் வேண்டும். அவசர காலத்தைச் சமாளிக்க சேமிப்பு வேண்டும். நாம் மறைந்த பிறகு குடும்பம் கஷ்டப்படாமல் இருக்கச் சொத்து சுகம் சேர்த்து வைக்க வேண்டும். உடம்பைச் சுகாதாரத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனையையும் நிறைவு செய்ய நமது வாழ்நாள் போதுமானதாக இல்லை.\nஇந்த நிலையில், காலையில் எழுந்து நீராடி, கடவுளை ஆரா தனை செய்து, மனதைக் கட்டுப்படுத்தி, துன்பத்தை அழிக்க முயற்சிக்கச் சொல்லும் பரிந்துரை ஏற்கத்தக்கது அல்ல. முழு மூச்சோடு குடும்ப விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் மனதை எந்த வகையிலும் திருப்பிவிட இயலாது. பிடிவாதமாக இறங்கினால், குடும்ப வாழ்க்கையும் சின்னா பின்னமாகும். மனதும் அடங்காது. மரத்தின் இடையில் சொருகிய ஆப்பைப் பிடிங்கிய குரங்கின் கதையாக மாறிவிடும். வாழ்க்கைக்குத் தேவையான அலுவல்களின் விஸ்தாரத்துக்கு சிந்தனைதான் அளவுகோல். நமது சிந்தனைக்கு எட்டாத எந்த அலுவலையும் நாம் சந்திக்கப் போவதில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். நமது சிந்தனை சரியான பாதையைக் காட்டித் தரும். நமது பயணம் இடையூறின்றி நிறைவு பெறும்.\n ஆக, முன்னோர்களின் வழிகாட்டுதல்கள் எல்லாம் வீண் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள்; அப்படித்தானே\nமனதின் மாசை அகற்றுவதற்காக முன்னோர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லையே முனிவர்களும் கட்டுப்பாட்டை இழந்தவர்களாகத் தானே இருந்தார்கள் முனிவர்களும் கட்டுப்பாட்டை இழந்தவர்களாகத் தானே இருந்தார்கள் தவத்தில் அமர்ந்த விஸ்வாமித்திரர் மேனகையைக் கண்டதும் தவத்தை முறித்துக்கொண்டார் பராசரர் மத்ஸ்யகந்தியால் மனவலிமையை இழந்தார். ஆக, மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியல்ல. அப்படியே நாம் முயற்சித்தாலும், மனதைக் கட்டுப்படுத்த இயலாது. இது தற்காலத்துக்கு உதவாத பரிந்துரை மட்டும் அல்ல; துயர் தொடாத வாழ்க்கையை அது ஈட்டித்தரவும் முடியாது. இன்பமும் துன்பமும் வந்து போய்க்கொண்டு தான் இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, சூழலுக்கு ஏற்பச் செயல்பட்டு வாழ்க்கைப் பயணத்தை செம்மையாக்கிக் கொள்வதே சிறப்பு தவத்தில் அமர்ந்த விஸ்வாமித்திரர் மேனகையைக் கண்டதும் தவத்தை முறித்துக்கொண்டார் பராசரர் மத்ஸ்யகந்தியால் மனவலிமையை இழந்தார். ஆக, மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியல்ல. அப்படியே நாம் முயற்சித்தாலும், மனதைக் கட்டுப்படுத்த இயலாது. இது தற்காலத்துக்கு உதவாத பரிந்துரை மட்டும் அல்ல; துயர் தொடாத வாழ்க்கையை அது ஈட்டித்தரவும் முடியாது. இன்பமும் துன்பமும் வந்து போய்க்கொண்டு தான் இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, சூழலுக்கு ஏற்பச் செயல்பட்டு வாழ்க்கைப் பயணத்தை செம்மையாக்கிக் கொள்வதே சிறப்பு தேவையில்லாத பழைமை வாதம் காலத்துக்கு ஒத்துவராது.\nஇயற்கை அதிசயங்களை உதாரணம் காட்டி, மனக்கட்டுப்பாட்டை ஏளனம் செய்வது சரியல்ல. கட்டுப்பாடு இல்லாத மனம், கர்மவினையின் தாக்கத்தால் துவண்டு போய், வாழ்க்கையை நரகமாக்கிவிடும். ஆறாவது அறிவில் ஆராய்ந்த தகவல்கள் யாவும் கர்மவினையின் முன் பொய்யாகிவிடும். சுயநலத்துடன் இணைந்த நமது சிந்தனையில் உருவாகும் காலக் கணிப்புகள், கர்மவினையின் இடையூறால் பொய்த்துவிடும்.\n சுய சிந்தனையும் செயல்பாடுகளும் இல்லையெனில், மனித இனம் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா\nஅப்படியான சுயசிந்தனை களுக்கும் செயல்பாடுகளுக்கும் கார ணம் கர்மவினையே என்பதுதான் எங்களது நிலைப்பாடு. நமது விருப்பப்படி சிந்தனை எழும். கர்மவினை நம்மை அடக்கி, தனது செயலை நடைமுறைப்படுத்திவிடும். பலரது வருங்கால வரைபடங்கள் (ஜாதகம்) நடைமுறைக்கு வராமல் மறைந்து விடுவதையும் காண்கிறோம். நாம் விழித்திருந்தாலும், உள் மனதில் பற்றியிருக்கும் மாசுகளின் (கர்மவினை) தூண்டுதல், நம்மை வேறு வழியில் இழுத்துச் சென்றுவிடும். முயற்சியின்றி அதிர்ஷ்டத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் உண்டு. ஒருவனது விபரீதமான செயல்பாடுகள் தண்டனைக்கு உகந்ததாக இருந்தும், அவனது அதிர்ஷ்டம் (கர்மவினை) வெகுமதியளித்து விடுகிறது. அதேநேரம், நீதி, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கையாண்டு தூய வாழ்க் கையை ஏற்றவன் (துரதிர்ஷ்ட கர்ம வினையால்) பொல்லாப்பைச் சந்தித்துப் பெருமையை இழக்கிறான்.\nஆராய்ந்து தேர்ந்தெடுத்த அழகான மனைவி அகால மரணத் தில் மறைந்து ஆறாத் துயரத்தை ஏற்கிறாள். பொதுநலத் தொண் டில் பெருமிதம் காணும் பற்றற்ற துறவி, தனது துரதிர்ஷ்டத்தால் (கர்மவினை) வீண் பழியைச் சுமந்து வெம்பிப் போகிறார். போற்றலுக்குப் பெயர் போன துறவி தூற்றலுக்கு இலக்காகிறார். தனது அறிவாற்றலால் பாமர மக்கள் மனதை ஈர்த்துத் திசை திருப்பி, அமைதி நிலவிய சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அதைப் பார்த்து மகிழ்பவன் (தனது அதிர்ஷ்டத்தால் கர்மவினை) மக்கள் தலைவனாகப் பெருமைப்படுத்தப் படுகிறான். படித்துப் பட்டம் பெற்று, அறிவு முதிர்ச்சியில் சமுதாய நலனின் அக்கறை காட்டும் பண்பாளர் (தனது துரதிருஷ்டம் கர்மவினை) குடத்தில் வைத்த விளக்காக, சமுதாயத்தின் கண்ணில் படாமல் போகிறார். நுனிப்புல் மேய்ந்தவன் தகுதி இல்லாவிட்டாலும் (தனது அதிர்ஷ்டத்தால் கர்மவினையால்) உயர்ந்த விருதைப் பெற்று, மக்களின் அங்கீகாரம் பெற்று விளங்குகிறான். இன்னும் சிலர் உண்டு. ஆறாவது அறிவும், அலசி ஆராயும் திறனும், பண்பும், ஒழுக்கமும் இருந்தும் சராசரி மனிதர்களின் சொல்வளத்தில் ஈர்க்கப்பட்டு, கர்மவினையின் தூண்டுதலால் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியமைத்து, துயரத்தில் ஆழ்ந்து தவிப்பார்கள்.\n அப்படிச் சொல்லிவிட முடியாது. ‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nபீஷ்மரும் விதுரரும் இருந்தும், அவர்களின் நல்லுரைகளுக்குச் செவிசாய்க்காமல், கர்மவினையின் தூண்டுதலால் சகுனியின் வார்த்தையை ஏற்று, தனது வாழ்வை மாய்த்துக் கொண்டான் துரியோதனன். வீரனாக இருந்தும் அபிமன்யுவை கர்மவினை போரில் சாய்து விட்டது. கடவுளாக இருந்தும்கூட, கிருஷ்ணனும் ஜராஸந்தனை எதிர்க்கப் பயந்து பீமனை நாட வேண்டி வந்தது. திறமை இருந்தும் சீதையைக் கோட்டை விட்டார் ராமர். அரசுரிமையைப் பறிகொடுத்துக் கானகம் சென்றார் யுதிஷ்டிரர். ஊனம் இருந்தும் (பார்வையற்றவன்), அரசுரிமை இழக்கப்பட்டும் திருதராஷ்டர் அரச போகத்தைச் சுவைத்து மகிழ்ந்தார். பாண்டவர் சந்திப்பில் இழுக்கைச் சந்தித்த கர்ணனின் மனமானது, இழுக்கை அழிப்பதற்காக துஷ்டனின் (துரியோதனன்) நட்பை நாடி அல்பாயுஸ்ஸில் இணையவைத்தது; தேளுக்குப் பயந்து பாம்பிடம் மாட்டிக்கொண்டான். ஸத்யவதியின் வாக்கை நிறைவேற்ற முற்பட்டும் இயலாமல், இயற்கை எய்தினார் பீஷ்மர்.\nஇவர்கள் அத்தனைபேரும் சுய சிந்தனையில் முயற்சி எடுத்தவர்கள். அத்தனையையும் முடக்கி, கர்மவினையானது அவர்களைத் திசைதிருப்பி அடிபணியவைத்தது. உலக சுகங்களிலிருந்து விடுபட்ட துறவியே இன்னலைச் சந்தித்து விட்டில்பூச்சி போல் மடியும்போது, சராசரி மனிதர்கள் எப்படி விடுபட இயலும் ‘இன்பதுன்பங்களின் கலப்படம் வாழ்க்கை. இரண்டை யும் ஏற்றுத்தான் வாழ வேண்டும்’ என்ற தத்துவ விளக்கம் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், திட்டம் போட்டு மனம் செயல்படுவது உண்டு. உள் மனம் துன்பத்தைச் சந்திக்காமல் இன்பத்தை அடைய விரும்பும். வாழ்வில் முன்னேற முயற்சி செய்து தோல்வியுற்றவன், மேற்சொன்ன தத்துவத்தை போர்வையாகப் பயன்படுத்துவான். பிரபஞ்சம் இன்ப துன்பம் கலந்தது, குண தோஷங்களின் உறைவிடம் என்றெல்லாம் இருந்தாலும், தங்களது அறிவின் முதிர்ச்சியில் தோஷத்தை விலக்கி, குணத்தை ஏற்க வேண்டும். இல்லையெனில், ஆறாவது அறிவு வீணாகிவிடும்.\n ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. யதார்த்த நிகழ்காலத்தைச் சிந்திக் காமல், புராணத்தை உதாரணம் காட்டுவது ஏன்\nநம் முயற்சியை கர்மவினை அழிக்கலாம் என்று உணர்ந்து, எச்சரிக்கையோடு அந்த மாசை அகற்றும் முயற்சியில் இறங்க வேண்டும் என்பதற் கான உதாரணங்கள், மேற்சொன்ன புராணத் தகவல்கள்.\nவேத ஒலி (நமசிவாயா, நமோ நாராயணாய) மாசை அகற்றிவிடும். ‘அக்னிதேவன் தோன்றினான்; அவனோடு மாசும் ஒட்டிக் கொண்டிருந்தது. தேவர்களுக்கு உணவளிப்பவன் அவன். அவனது மாசு, உணவிலும் கலந்தால் சுகாதாரம் கெட்டுவிடும் என்று எண்ணி, தேவர்கள் அவனுடைய மாசுக்களை அகற்ற முற்பட்டார்கள். அவனிடம் நெய்யைச் சேர்த்தார் கள். அந்த மாசு நெய்யில் பற்றிக்கொண்டது. அதை, வேள்வியில் சேர்த்தார்கள். அதனால் வேள்வியில் ஒடுங்கிவிட்டது. அதிலிருந்து மாசு அகல தட்சணையில் சேர்த்தார்கள்; மாசு அதில் பற்றிக் கொண்டது. தட்சணை வேதம் ஓதுபவனிடம் அளிக்கப்பட்டது. இப்போது மாசு அவனைப் பற்றிக்கொண்டது. அவன், தான் படித்த வேதத்திடம் (ஒலி) ஒப்படைத்தான். வேத ஒலியைத் திரும்பத் திரும்பச் சொன்னபோது, ஒலியின் பெருமையில் மாசு முற்றிலும் மறைந்துவிட்டது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு (அக்னிம் வைஜாதம் பாம்மாஜக்ரஹ. ஸ்வாத்யாயேனா பஹதபாப்மா). வேத ஒலியின் சேர்க்கையில் சுற்றுச்சூழலின் மாசு அகன்று விடுகிறது என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். பண்டைய நாளில் வேத ஒலி தடைப்படாமல் ஒலிக்க, கோயில்களை நிறுவிய தகவல்கள் உண்டு.\nஉலக அதிசயங்களை வரையறுக்க மனித சிந்தனையால் இயலாது. மனதில் பதிந்த கர்மவினையின் மாசை அகற்றினால்தான் மகிழ்ச்சியைச் சுவைக்க இயலும். இல்லையெனில், அதன் விளையாட்டில் சிக்கி, அறிவு இருந்தும் பிறப்பின் பெருமையை இழந்து தவிப்போம். செயற்கையான படைப்பை ஏற்றாலும், ரோபோவை வைத்து மனிதனைக் கொச்சைப்படுத்தினாலும், எல்லாமும் விளை யாட்டாக முடிவடையுமே ஒழிய, கடவுளின் லீலா விநோதங்களாக உயர்வு பெறாது. நம்மை, நமது திறமையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வேதத்தின் அறிவுரையை ஏற்று மனக்கட்டுப்பாட்டில் இறங்கினால், துன்பம் தொடாத இன்பத்தைச் சுவைக்கலாம். மனதின் மாசு அகலாமல் மாமனிதன் ஆக இயலாது. காகம் நீராடினால் கொக்காக மாறாது. விழித்துக்கொள்ள வேண்டும்.\nதங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை…\nஒருவன், தகுதியில் நிறைவு பெற்ற பிறகு, வழிகாட்டியாக மாறலாம். தன்னையே உயர்த்திக்கொள்ள இயலாதவன் பிறரை உயர்த்த முற்படுவது சிறுபிள்ளைத்தனம். உடலும் உள்ளமும் வளர்ந்தாலும் சரியான போக்கை ஏற்காத வரையில் வெற்றி எட்டாது. மந்திரங்களை ஏற்று மனதின் மாசை அகற்றினால், கர்மவினையின் கட்டுப்பாடு அகன்றுவிடும். தடங்கல் இல்லாத இன்பத்தைச் சுவைத்து மகிழலாம். கர்மவினை இல்லை என்று சொல்வது சிந்தனையற்றவனின் கணிப்பு.\nPrevious: வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அது, காரணங்களை அடுக்குபவர்கள் அவசியம் படிக்க வேண்டியது…\nNext: மதிமுகவின் பொருளாளரும் கட்சியில் இருந்து விலகினார்\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\nபதினாறு பேறுகளும் அருளும் 16 கணபதிகள்\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nவினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு \nஇறையருள் இருக்க… இயற்கை சீற்றங்கள் ஏன்\nவாஸ்து பூஜை எப்போது செய்யலாம் \nமன்மத வருடம்… ராகு, கேது பலன்கள் \n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_455.html", "date_download": "2018-08-21T14:03:44Z", "digest": "sha1:ELQCVJLXSCBWQ7UP74DBZ2MT6GL7YZFA", "length": 42242, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எம்மை ஏமாற்றிவிட்டார்கள், இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎம்மை ஏமாற்றிவிட்டார்கள், இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா..\nஇந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று -06- இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஇதுவரை உலகத்திலேயே கண்டுபிடிக்கப்படாத ஒரு மருந்தை கொத்துரொட்டியில் கலந்திருப்பதாக கூறி, அந்த கடையை உடைத்து, பள்ளிவாசல்களை உடைத்து இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகததினரையும் வேதனைப்படுத்தினார்கள்.\nஇந்த சம்பவம் நடைபெற்று ஒரு மணிநேரத்திலேயே குறித்த பெரும்பான்மையினத்தவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅதையடுத்து பள்ளிவாசல்கள் எமது மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பொலிஸார் இதை கவனத்தில் எடுக்கவில்லை.\nசிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அவரை வெற்றிபெறச் செய்தோம்.\nஆகவே அந்த சிறுபான்மையினரை காப்பாற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை.\nகுற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இன்று நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nதெனியாய சம்பவத்தில் 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் காயப்படுததினார்கள்.\nமுஸ்லிம் இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்ததில் அப்பாவி இளைஞன் உயிரிழந்தார். அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிவாசலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.\nமகேசன் பலகாய என்ற நபரும், மட்டக்களப்பிலிருந்து வந்த விகாராதிபதியுமே இந்த போராட்டத்திற்கு காரணம்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா என மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் குறிப்பிட்டார்.\nநேற்று இரவு நேரில் சென்று பார்த்த போதுதான் எனக்கு உண்மையான நிலை தெரிந்தது.\nபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு எம்மை ஏமாற்றிவிட்டார்கள். மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடவிடுவதற்காகவா இந்த சம்பவம்\nஜனாதிபதி அமைச்சரவையில் வாக்குறுதி தந்துள்ளார். பிரதமர் இந்த சபையில் வாக்குறுதி தந்துள்ளார். ஆகவே இரு தலைவர்களும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.\nஅவ்வாறு இல்லை என்றால் அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமிழ் அரசியல் தலைவர்களை சுட்டுத்தள்ளியதைப் போன்று எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் என்று மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா என்று நாம்தான் அமைச்சர் றிசாத் பதியுதீன் , ஹக்கீம் போன்றோரை பார்த்து கேட்கவேண்டும்\nபாராளுமன்றத்தில் கீழே அமர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் எம்பிக்கள் எதிர்ப்பு வௌியிட்டதைக் கண்டேன். எப் போது ரிஷாத் அரசாங்கத்தில் இருக்க வெட்கம் என்கிறார். தரையில் அமர்ந்த எம்பிக்கள் ஏன் சற்றுத் தள்ளி எதிர் வரிசையில் உட்காரக்கூடாது அதற்கு அவர்களுக்கு துணிவு இல்லை. அரச பக்கம் இருந்து தான் என்ன வெட்டிக் கிழித்து விட்டீர்கள். நீங்கள் வெறும் பதர்கள் என்பது அரசாங்கத்துக்கு தெரியும்.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்களாக கத்தாரில் இலங்கையைச் சேர்ந்த உறவுகளின் தொடர்ச்சியான மரண செய்த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சாரதியொருவர் தனக்கு பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும் ...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..\nகேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர். வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ...\nநுஸ்ரான் பின்னூரிக்கு 2 வைத்தியர்களின் தக்க பதிலடி\nதடுப்பூசி ‘குழந்தை சுகதேகியாக பிறக்கும் போது ஏன் தடுப்பூசி ஏற்ற வேண்டும் ஒரு குழந்தைக்கு 3ஆவது மாத தடுப்பூசி ஏற்றப்பட்டால் அதன்பின்...\nமுக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்\nகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...\nபொது இடத்தில், அநாகரீகமாக திட்டிய மகிந்த (படம்)\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் முன்னிலையில் தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என திட்டியுள்ளார். இது குறித்த காணொளி ஒன்று தற்போ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்களாக கத்தாரில் இலங்கையைச் சேர்ந்த உறவுகளின் தொடர்ச்சியான மரண செய்த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-08-21T13:54:06Z", "digest": "sha1:JJWPRCKOQQ2QVQCTCUXU2AZCRVQPUWIM", "length": 8078, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க | பசுமைகுடில்", "raw_content": "\nசர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க\nசர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க\nஉலகளவில் இன்று அதிகம் தாக்கப்படும் நோய் சர்க்கரை வியாதிதான். அதுவும் இந்தியாவில்தான் அதிகமானோர் அதுவும் 40 வயதுகளிலிருந்து சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார மையங்கள் கூறுகின்றனர்.\nசர்க்கரைவியாதி குணப்படுத்த இயலாத வியாதி. அதோடு இதயம், ரத்த அழுத்தம் தொடர்பான பல வியாதிகள் உண்டாவதற்கு சர்க்கரை வியாதிதான் காரணம்.\nஇந்த சர்க்கரை வியாதியை வராமலும் அதே சமயம் வந்தவர்களுக்கு குளுகோஸை கட்டுப்படுத்தவும் ஒரு காய்பலனைத் தருகிறது. அது வெண்ண்டைக்காய். அதனைப் பற்றி சில…\nவெண்டைக்காய் குளுகோஸை ரத்தத்தில் உறியப்படாமல் தடுக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடாமல், குளுகோஸ் வளர்சிதை மாற்றத்திற்காக ஜீரண மண்டலத்திர்கு அனுப்ப்படுகிறது. எனவே சர்க்கரை வியாதி வந்தவர்கள் வெண்டைக்காய் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் :\nவெண்டைக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து நோய் எதிர்ப்பு மண்டல்த்திற்கு ஊட்டம் அளிக்கிறது.\nசிறு நீரக நோய்களை தடுக்கும் :\nதொடர்ந்து வெண்டைக்காயை சாப்பிடுபவர்களுக்கு சிறு நீரக பாதிப்புகள் வராது. சர்க்கரைவியாதி வந்தவர்களுக்கு சிறு நீரக பாதிப்பு வரும் அபாயம் உள்ளது. எனவே அவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் வராது என ஜிலின் ஹெல்த் ஜர்னல் என்னும் இதழ் கூறுகிறது.\nகர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டும் :\nகர்ப்பத்தின் போது தொடர்ந்து பெண்கள் வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால், கரு சம்பந்தமான குறைபாடுகள் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஆஸ்துமா இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, இருமல் ஆகியவை கட்டுப்படுத்தி, ஆஸ்துமா வராமல் காக்கிறது என பல மருத்துவ ஆய்வுகள் நிருபிக்கின்றன.\nஉடலில் கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை வெண்டைக்காய் செய்கிறது. இதயத்தில் அடைபடும் கொழுப்பை கரைத்து கல்லீரலும் அனுப்புகிறது. அதோடு உடல் பருமனானவர்கள் வாரம் 4 நாட்கள் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்காமல் வேக வைத்து சாப்பிட்டால் உடல் எடை குறை\nசர்க்கரை வியாதிக்கு மருந்தா இந்த காயை சாப்பிடுங்க\nPrevious Post:வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-21T13:54:09Z", "digest": "sha1:GOJ2S52YQZOL6W2V4RTRXP5QUG7PPAG4", "length": 3401, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கோபுரம் தாங்கி | பசுமைகுடில்", "raw_content": "\nபாம்பு விஷத்தை முறிக்கும் கோபுரம் தாங்கி..\nவிஷக்கடிக்கு மருந்தாக இருப்பதும், வயிற்று போக்கை சரிசெய்ய கூடியதும், முடி உதிர்வை தடுக்க வல்லதும், தலைவலியை போக்க கூடியது கோபுரம் தாங்கி செடி பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/07/7.html", "date_download": "2018-08-21T14:20:45Z", "digest": "sha1:6XRNISSEBEWI4YIY6VDBDQGZU3YFA3XT", "length": 13417, "nlines": 139, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "உணர்வாய் உன்னை! (நேரம்) - 7 | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தொடர்கள் » உணர்வாய் உன்னை\n''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்ட...\n''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள்.'' உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு.\nஇது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்....\n1. இவ்வருடம் எதில் அதிக நேரம் செலவழித்தீர்கள்\n2. அதில் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா\n3. இல்லையென்றால், எதில் உங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிட விரும்பியிருப்பீர்கள்\n4. அதை செயல்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்\n5. உங்களிடம் சரியான கால நிர்வாகத் திட்டத் திறமைகள் உள்ளனவா இல்லையென்றால், அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்\n6. அதைப் பற்றிய புத்தகம் படிக்க இயலுமா\n7. அல்லது காலநிர்வாகத் திட்டக் கல்வி பயில சிறிது பணம் செலவழிக்க முடியுமா\n8. உங்கள் காலத்தைத் திட்டமிடுகிறீர்களா\n9. உங்கள் வாழ்வில் சரியான முறையில் நேரத்தைச் செலவழித்ததற்கு உதராணமாக ஒரு நாளைக் குறிப்பிட முடியுமா\n10. இவ்வருடம், உங்களுக்கு சராசரியாக ஒரு வாரத்தில் எவ்வளவு ஓய்வு\n11. தற்போது உங்களுக்கு எத்தனை மணி நேரம் ஓய்வாகக் கிடைக்கிறது\n12. உங்கள் ஓய்வு நேரத்தை இன்னும் செம்மையாக எப்படி செலவழிக்கலாம்\n13. அல்லாஹ்வுடன் நெருக்கத்தை அதிகரிக்க உங்கள் ஓய்வு நேரம் எப்படி உதவும்\n14. தொலைக்காட்சி எத்தனை நேரம் பார்க்கிறீர்கள்\n15. அதிக நேரம் தொலைக்காட்சியின் முன்னால் செலவழிக்கிறீர்களா\nஅல்லது உங்கள் குடும்பத்தினருடன் பேசுவதில் செலவிடுகிறீர்களா\n16. தொலைக்காட்சியின் காணும் காட்சிகள் இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளதா..\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125146", "date_download": "2018-08-21T14:18:04Z", "digest": "sha1:IAIC3FJQM24BNE4VAJTBB6FVA3YD4KOU", "length": 38165, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "ரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை! #KKRvRR | Kuldeep Yadav Just too good for Rajasthan Royals", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை\n6 4 4 4 4 6 4 4 6 4 - இது பிரஷித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் இருந்து ஷிவம் மவி வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்து வரை திரிபாதி, பட்லர் இருவரும் இணைந்து அடித்த ரன்கள். இப்படி அடித்தும் ராஜஸ்தான் ஏன் தோற்றது ரஹானே ஏன் முதல் ஓவரை கௌதமுக்கு கொடுத்தார் ரஹானே ஏன் முதல் ஓவரை கௌதமுக்கு கொடுத்தார் ரஹானே ஏன் பட்லருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை ரஹானே ஏன் பட்லருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை ரஹானே ஏன் கூக்ளியில் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார் ரஹானே ஏன் கூக்ளியில் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார் ராஜஸ்தான் தோல்விக்கு அணியின் கேப்டன்தான் காரணமா ராஜஸ்தான் தோல்விக்கு அணியின் கேப்டன்தான் காரணமா கன்சிஸ்டன்ட் பட்லரை குல்தீப் சொல்லி வைத்து தூக்கியது எப்படி கன்சிஸ்டன்ட் பட்லரை குல்தீப் சொல்லி வைத்து தூக்கியது எப்படி\nசைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்ததால், எப்படியும் இந்தப் போட்டியில் வென்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தன. கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவுக்குப் பதிலாக ஷிவம் மவி வாய்ப்புப் பெற்றார். ராஜஸ்தான் அணியில் ராகுல் திரிபாதி, சோதி, அனுரீத் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற்றனர். ஈடன் கார்டனில் டாஸ் வென்ற கொல்கத்தா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nஷிவம் மவி வீசிய முதல் பந்திலேயே திரிபாதியை பெவிலியனுக்கு அனுப்பியிருக்கலாம். ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த நித்திஷ் ராணா, எளிதான கேட்ச்சை தவறவிட்டார். ஆனாலும், மவியின் பெளன்ஸருடன் கூடிய இன் ஸ்விங் பந்துகளை பேட்டில் வாங்கவே தடுமாறினர் திரிபாதி. This is wounderful pace to watch என்று சொல்லி முடிப்பதற்குள், அடுத்த ஓவரில் பிரஷித் கிருஷ்ணா தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு (19) ரன்களை விட்டுக்கொடுத்தார். தடுமாறிக்கொண்டிருந்த திரிபாதி நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்.\nஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு லைன் அண்ட் லென்த் எவ்வளவு முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தன் முதல் ஓவரை வீசிய மவி, ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி பந்துவீசக் கூடாது என்பதற்கு உதாரணமாக தன் இரண்டாவது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் பவுண்டரிகள் செல்வதைப் பார்த்ததுமே, காலில் சுடு தண்ணீரை ஊற்றியதுபோல விக்கெட் கீப்பிங்கில் இருந்து ஓடி வந்து மவியிடம் ஏதோ பேசினார் தினேஷ் கார்த்திக். `நீங்க என்ன வேணாலும் பிளான் பண்ணுங்க. என்னைத் தடுக்க முடியாது’ என தெளிவாக இருந்த ஜாஸ் பட்லர், ஸ்வீப், கட், ஸ்கூப், டிரைவ், லாஃப்ட் என சகலவிதங்களிலும் 4,6 என வெரைட்டியில் மிரட்டி, டீரீம் லெவன், ஃபேன்டஸி லீக் ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்தார். அந்த ஓவரில் 28 ரன்கள். Most expensive over of IPL 2018.\n`இது சரிப்பட்டு வராது’ என சுனில் நரைன் கையில் பந்தைக் கொடுத்தார். அவருடன் அடுத்த எண்டில் இருந்து பந்துவீச ரஸெலை டிக் செய்தார் டிகே. நரைன்- ரஸெல் ஜோடி பட்லர் – திரிபாதி ஜோடியின் வேகத்துக்கு ஸ்பீட்பிரேக் போட்டது. மீண்டும் ஒருமுறை ஷார்ட் பால் டெக்னிக் வொர்க் அவுட்டானது. ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்கிறேன் என அவசரப்பட, பந்து திரிபாதியின் கிளவுஸில் பட்டு தினேஷ் கார்த்திக்கின் கிளவுஸில் சிக்கியது. திரிபாதி 27 ரன்களில் அவுட். பவர்பிளே முடிவில் ஸ்கோர் 68/1.\nசைனாமேன் குல்தீப் ராக்ஸ்... கொல்கத்தா ராஜஸ்தானை தோற்கடித்த மொமன்ட்ஸ்\nடி-20-யை ஒன்டே போல ஆடும் ரஹானே மிடிலில் இருக்கும் வரைக்கும்தான் ரன்ரேட் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது ஏனோ, கொல்கத்தா பெளலர்களுக்குப் புரியவில்லை. ரிவர்ஸ் ஸ்வீப்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பது ரஹானேவுக்கும் புரியவில்லை. அதுவும் லெக் ஸ்டம்ப் லைனில் விழுந்த கூக்ளியை பாயின்ட் திசை நோக்கி ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய நினைத்ததெல்லாம் கொடூரம். இந்த பாதகச் செயலுக்கு விலையாக, ஸ்டம்ப்களைப் பறிகொடுத்தார் ரஹானே (11 ரன்கள்). குல்தீப் சுழலில் ரஹானே அவுட்டானதும், ராஜஸ்தான் ரசிகர்களே சந்தோஷப்பட்டனர். கேப்டன் செய்த அதே தவறைச் செய்தார் பட்லர். அவரும் ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சித்தார். பந்து அவர் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் பெளன்ஸாக, அது ஷார்ட் தேர்ட்மேன் ஏரியாவில் இருந்த சியர்லஸ் கைகளில் சிக்கியது. 39 ரன்களில் ஆட்டமிழந்து, தொடர்ந்து ஆறு அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார் பட்லர். பெரிதும் நம்பிய சஞ்சு சாம்சனை எல்பிடபுள்யு முறையில் வெளியேற்றினார் சுனில் நரைன். அதுவும் விடாப்பிடியாக ரிவ்யூ கேட்டு…\nடாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே குல்தீப்பின் வேரியேஷன்களில் திணறும்போது, ஆல் ரவுண்டர்() ஸ்டூவர்ட் பின்னிதான் என்ன செய்வார் பாவம். எப்படி அடிக்கலாம் என்பதற்குப் பதிலாக, எப்படி அவுட்டாகலாம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தோதான இடத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப். Wrong turn. இறங்கி அடிக்கிறேன் என பின்னி டவுன் தி லைன் வர, தோனி வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் டிகே. தன் கடைசி ஓவரில் around the wicket-ல் இருந்து வீசி பென் ஸ்டோக்ஸை caught and bold செய்தார் அந்த சைனாமேன். Kuldeep Strikes again. 4-0-20-4. இது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது கரியர் பெஸ்ட். மற்ற விக்கெட்டுகளைவிட பட்லருக்கு எதிராக அவர் தனியாக பிளான் வைத்திருந்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். ``பலனளிக்கிறதோ இல்லையோ டி-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். வேரியேஷன்களை மாற்ற வேண்டும். எப்படியும் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார் எனத் தெரியும். அதற்கேற்ப வேரியேஷன்களை மாற்றினேன். அவ்வளவுதான்) ஸ்டூவர்ட் பின்னிதான் என்ன செய்வார் பாவம். எப்படி அடிக்கலாம் என்பதற்குப் பதிலாக, எப்படி அவுட்டாகலாம் என யோசித்துக் கொண்டிருந்தவருக்கு தோதான இடத்தில் ஒரு பந்தை வீசினார் குல்தீப். Wrong turn. இறங்கி அடிக்கிறேன் என பின்னி டவுன் தி லைன் வர, தோனி வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் டிகே. தன் கடைசி ஓவரில் around the wicket-ல் இருந்து வீசி பென் ஸ்டோக்ஸை caught and bold செய்தார் அந்த சைனாமேன். Kuldeep Strikes again. 4-0-20-4. இது ஐ.பி.எல் போட்டிகளில் அவரது கரியர் பெஸ்ட். மற்ற விக்கெட்டுகளைவிட பட்லருக்கு எதிராக அவர் தனியாக பிளான் வைத்திருந்ததுதான் பாராட்டுக்குரிய விஷயம். ``பலனளிக்கிறதோ இல்லையோ டி-20 போட்டிகளில் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். வேரியேஷன்களை மாற்ற வேண்டும். எப்படியும் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பார் எனத் தெரியும். அதற்கேற்ப வேரியேஷன்களை மாற்றினேன். அவ்வளவுதான்’’ என்றார் ஆட்ட நாயகன் விருது வென்றபின் குல்தீப்.\nடெத் ஓவர்களில் ரன்ரேட் திகிடுமுகிடாக எகிறுவதே டி-20-யின் பியூட்டி. ஆனால், டெயிலெண்டர்கள் களத்தில் இருக்கும்போது, ரன்ரேட் எப்படி எகிறும் ஜெயதேவ் உனத்கட் மட்டும் ரூ.11.5 கோடிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் 18 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் ஒரு ரவுண்டை மட்டும் அசுர வேகத்தில் சுற்றிவிட்டு, அடுத்தடுத்த ரவுண்டில் அன்னநடை போட்டால் என்ன ரிசல்ட் கிடைக்குமோ, அதே ரிசல்ட்தான் ராஜஸ்தான் இன்னிங்ஸிலும் கிடைத்தது. விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்த அணி, அடுத்த 15 ஓவர்களில் 83 ரன்களை எடுப்பதற்குள் எல்லா விக்கெட்களையும் இழந்துவிட்டது. கொல்கத்தாவுக்கு ராஜஸ்தான் நிர்ணயித்த இலக்கு 143.\nகாட்டடி பேட்ஸ்மேன்கள் நிறைந்த அணிக்கு 120 பந்துகளில் 143 ரன்கள் இலக்கு என்பது ஒரு விஷயமே அல்ல. முடிந்தவரை நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதே கொல்கத்தாவின் அஜெண்டா. `அடிச்சவரை லாபம். எதைப் பத்தியும் கவலைப்படாம சுத்து’ என சுனில் நரைனிடம் சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல. கொல்கத்தா தரப்பில் குல்தீப் சுழல் ஜாலம் நிகழ்த்தியதால், முதல் ஓவரை வீச வந்தார் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கெளதம். பல போட்டிகளில் அவர் முதல் ஓவரை வீசியிருக்கிறார்தான். ஆனால், அவரிடம் பெரிதாக டெக்னிக் இல்லை. தவிர, ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசப்படும் ஆஃப் ஸ்பின்னை சுனில் நரைன் அலேக்காக தூக்கி அடிப்பார் என்பதை ஏனோ ரஹானே கணிக்கத் தவறிவிட்டார். கௌதமுக்குப் பதில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸை விட்டு ஆட்டம் காட்டியிருக்கலாம். இரண்டாவது ஓவரிலேயே சுனில் அவுட்டாகிவிட்டார்தான் என்றாலும், என்ன செய்ய வேண்டுமோ அதை முதல் ஓவரிலேயே செய்துமுடித்துவிட்டார்.\nமுதல் பந்திலேயே மிரட்டலாக மிட் விக்கெட்டில் சிக்ஸர். ராஜஸ்தான் ஃபீல்டர்கள் சுதாரிப்பதற்குள் அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரி. என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள், மூன்றாவது பந்தில் லாங் ஆன் பக்கம் சிக்ஸர். ரஹானே பதறுகிறார். டீப் மிட் விக்கெட், லாங் ஆன் திசைகளில் கேட்ச் பிடிக்க ஏதுவாக இரண்டு ஃபீல்டர்களை நிறுத்துகிறார். இதற்கு சம்மந்தமே இல்லாத கவர் திசையில் அடுத்த பந்தை சுனில் நரைன் பவுண்டரி அடித்தபோது, ஈடன் கார்டனில் இருந்தவர்கள் இருப்பு கொள்ளவில்லை. 4 பந்துகளில் 20 ரன். மவி ஓவரில் பட்லர் வெளுத்ததைப் போல, கெளதம் ஓவரில் வெச்சு செஞ்சார் சுனில் நரைன். அதனால்தான், பென் ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பாலில் சுனில் நரைன் கொடுத்த கேட்ச்சைப் பிடித்ததும் வெறித்தனமாகக் கொண்டாடித் தீர்த்தார் கெளதம். இந்த ஆட்டிட்யூட் நல்லதுக்கில்ல ப்ரோ\nநல்ல லென்த்தில் விழும் பந்துகளை விளாசும் பேட்ஸ்மேன்கள், ஷார்ட் பால்களில் விக்கெட்டை இழப்பதுதானே இந்த சீசனின் ஹைலைட். சுனில் நரைனைப் போலவே, உத்தப்பாவும் ஒரு ஷார்ட் பாலில் ஏமாந்தார். இரண்டு ஸ்லிப், பாயின்ட், கல்லி என ஆஃப் சைடில் அத்தனை ஃபீல்டர்களையும் நிறுத்தியபோதும் கட் ஷாட் மூலம் பவுண்டரி அடித்த நித்திஷ் ராணா, சோதி வீசிய பந்தை சரியாக கணிக்கத் தவறி, எல்பிடபுள்யு ஆனார். தினேஷ் கார்த்திக் – கிறிஸ் லின் ஜோடி ரொம்பவே நிதானமாக, பொறுப்புடன் ஆடியது. லூஸ் பால்களை பவுண்டரிக்கு விரட்டியது. வெற்றிக்கான ரன் ரேட்டும் குறைந்தது.\nஇனி அடித்து ஆடலாம் என நினைத்தபோது கிறிஸ் லின் (45 ரன்) அவுட். அவருக்குப் பின்னாடியே தினேஷ் கார்த்திக்கும் dug out சென்றிருப்பார். எல்பிடபிள்யு-க்கு ராஜஸ்தான் ரிவ்யூ கோரியது. ஆனாலும், `அம்பயர்ஸ் கால்’ புண்ணியத்தில் தப்பித்தார். ரஸ்ஸெல் இறங்கி பட்பட்டென பவுண்டரிகளை தட்டிவிட்டார். ஜாப்ரா ஆர்ச்சர் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார் டிகே. இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மற்றுமொரு ஒன்சைட் மேட்ச். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தா 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றாலும், பிளே ஆஃப் செல்ல ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.\nயாரும் கணிக்கக்கூடாது... ஆனா, ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகாவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நட\n`மோடி செய்தது மட்டும் சரியா’ - விமர்சனங்களுக்கு சித்துவின் பதில்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nரஹானேவின் தவறுகள்... குல்தீப் மேஜிக்... கொல்கத்தா வென்ற கதை\nபுதிய பெயரில் களமிறங்கும் ஓப்போ... பட்ஜெட் மொபைல்களின் கிங்காக மாறுமா ரியல்மீ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\n`கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம்’ - கரூரில் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122569-take-care-of-these-things-when-you-buy-gold-with-rubi-emerald-gems.html", "date_download": "2018-08-21T14:18:02Z", "digest": "sha1:JOZJJ5XBOBXH66DUXLO7QXGG3USKLV2O", "length": 28970, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "ரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்! #AkshayaTritiya | Take care of these things when you buy gold with Rubi, emerald gems!", "raw_content": "\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகேரள நிவாரணத்துக்கு தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளம்\nகிறிஸ்டியைத் தொடர்ந்து காஸா கிராண்ட் - அ.தி.மு.க மாண்புமிகுக்களைக் குறிவைக்கிறதா அடுத்த ரெய்டு\n`வழக்கு இருக்கும்போது இப்படிச் செய்யலாமா’ - அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த பாதிக்கப்பட்ட மக்கள்\n`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி\n`மனுஷன்னா வைராக்கியம் இருக்க வேணாமா' - வெளியானது `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக்\nரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்\nநீங்கள் வாங்கும் கல் நகை ,ஆபரணம் மற்றும் கல்லுக்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யப்படும்.கற்களுக்கு தர நிர்ணயம் இல்லாததால் மோசடிகள் அதிகரித்துவிட்டன.\nதிருமணங்கள், உறவினர் வீட்டு விஷேசம் போன்ற இன்ன பிற விழாக்களின்போது நகை அணிதல் என்பது தொன்றுதொட்டு தொடரும் பாரம்பர்ய வழக்கமாகிவிட்டது. அதுவும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என்று விஷேசங்களுக்கு ஏற்ப ஆபரணங்கள் பல ரகங்களில் அணிவகுக்க ஆரம்பித்துவிட்டது.\nஆசைக்காக நகை வாங்குதல் என்பதைவிட, பின்னாளில் உதவும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் தங்கத்தில் முதலீடு செய்யும் மிடில் கிளாஸ் மக்கள் மிக அதிகம். அப்படி வாங்கப்படும் நகைகளில் நாம் எப்படிப்பட்டவற்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தண்டபாணி.\n'' பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கான நகைகளை மாதம்/வருடம் ஒன்று என்கிற கணக்கில் வாங்கிச் சேமிப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி தொலைநோக்கு பார்வையுடன் முன்னெச்சரிக்கையாக நீங்கள் வாங்கும் நகைகள் உங்கள் மகள் உரிய வயதுக்கு வரும்போது அவுட் ஆஃப் பேஷன் ஆகியிருக்கும். அதே போல், நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்று எக்கச்சக்க தொகையுடன் கொடுத்து வாங்கப்படும் நகைகள் விற்கப்படுபோது, அதையெல்லாம் கழித்துவிட்டே கணக்கெடுப்பார்கள். நீங்கள் வாங்கியதைவிட மிகக் குறைவான விலைக்கே அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான் மார்கெட் நிதர்சனம்.\n`ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வு; கணினி உதவியுடன் நடத்தும் முடிவும் வாபஸ்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசிரஞ்சீவியின் `சயீரா நரசிம்மரெட்டி’ டீசர் ரிலீஸ் - ட்ரெண்டாக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்\nஎனவே தொலைநோக்கு பார்வையுடன் நகை சேமிப்பதை விடுத்து, தங்கக் காசுகள், கட்டிகளாக வாங்கி வையுங்கள். அதே போல, ஆடம்பரத்துக்காகவோ ஆசைக்காகவோ கல் ஆபரணங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், பிற்காலத்தில் அதன் மூலம் வருமானத்தை எதிர்பார்ப்பது சிறந்த யுக்தி அல்ல.ஏன் என்பதை தெரிந்து கொள்ள முதலில் என்ன மாதிரியான கல் நகைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nவைடூரியம் ( Cat's eye)\nஇதில் வைரம் மட்டும் பெண்களால் விரும்பி வாங்கப்படுகிறது. மற்ற கல் நகை வாங்கும் பெரும்பாலானோர் ஜோதிடக்காரர்கள் சொல்வதைக்கேட்டுத் தான் கல் நகை வாங்க வருகிறார்களே தவிர விரும்பி யாரும் வாங்க வருவதில்லை.\nகல் நகை வியாபாரம் :\nகல் நகை வியாபாரத்தைப் பொறுத்த வரை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\nலோக்கல் பட்டறைகளில் செய்யப்படுகிற கெட்டிக் கல் வளையல், கெட்டிக்கல் நெக்லஸ் போன்றவை.\nஅடுத்தது ஃபேஷனுக்காக அங்கங்கே பேஷன் கற்கள் வைத்துச் செய்யப்படுகிற லைட் வெயிட் ஆபரணங்கள்.\nமூன்றாவது நெல்லூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி மாதிரியான இடங்களில் உற்பத்தியாகிற நகைகள்\nஇதில் நீங்கள் எந்த வகை வாங்கினாலும் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும்.லோக்கல் பட்டறைகளில் செய்யப்படும் நகைகளில் எடையை அதிகரித்துக்காட்ட சில சமயங்களில் அதில் அரக்கு வைக்கிறார்கள். பேஷன் கல் ஆபரணங்களை பொறுத்தவரை லைட் வெயிட்டாக இருந்தாலும் அதன் வகைக்கு ஏற்ப அதற்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நெல்லூர், வாணியம்பாடி போன்ற இடங்களில் இருந்து வாங்கி விற்கப்படும் கல் நகைகளில், கல்லின் எடையே 40 சதவீதம் இருக்கும். இதனால் உங்களின் ஆபரணத்தை விடக் கல்லுக்கு அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.\nநீங்கள் வாங்கும் கல் ஆபரணங்களில்,ஆபரணம் மற்றும் கல்லுக்கும் சேர்த்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆபரணங்கள் வாங்கிய மறுநாளோ அல்லது ஆறுமாதமோ பல வருடம் கழித்தோ அந்த நகைகளை விற்க நினைத்தால், கற்களின் எடை கழிக்கப்பட்டு, ஆபரணத்தின் எடையே எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு மாணிக்க மோதிரம் வாங்குகிறீர்கள் எனில், மாணிக்கக் கல்லின் மதிப்பு ரூபாய் 6000 இல் இருந்து பொருளின் தரத்துக்கேற்ப விலை மாறுபடும். அதே மோதிரத்தையோ அல்லது நகையையோ திரும்ப கொடுக்கும்போது 10 ரூபாய்க்குக்கூட அந்த மாணிக்கக் கல்லை வாங்கமாட்டார்கள். மேலும் அந்த மாணிக்க கல்லை வாங்கும் போது அதன் எடைக்கும் விலை கொடுத்திருப்பீர்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் கல் நகை வாங்கி விற்க நினைத்தால் நஷ்டம் உங்களுக்கே என்பது புரியும். மேலும், தங்க ஆபரணங்களுக்கு அதன் தரத்துக்கேற்ப முத்திரைகள் வந்துவிட்டன. அந்த முத்திரையுடன் கூடிய நகைகளை எந்தக் கடையில் கொடுத்தாலும் அன்றைய விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் கற்களுக்கு தர நிர்ணயம் இல்லாததால் மோசடிகள் அதிகரித்துவிட்டன.\nசில கடைகளில் பவளக்கல் இலவசம், முத்து இலவசம், வாங்கும் தங்கத்திற்கு மட்டும் விலை கொடுத்தால் போதும் என்பார்கள். இதன் பின்னணியிலும் வணிகர்களுக்கான லாபம்தான் இருக்கிறது.அவர்கள் கல்லுக்கு விலை வைக்கவில்லை என்றாலும் அவை தங்கத்தில் பொருத்தப்பட்டு ஒட்டுமொத்த எடை குறிக்கப்படும். அதைவைத்தே விலையும் நிர்ணயிக்கப்படும்.\nஎனவே ஆசைக்காகக் கல் ஆபரணங்கள் வாங்குங்கள். ஆனால், அவற்றைப் பொருளாதார ரீதியாக உபயோகப்படுத்தப்போகிறீர்கள் என்றால் நிச்சயம் வேண்டாம் என்றே சொல்வேன். அப்படிக் கல் நகைகள்தான் அணிய வேண்டும் என்றால் இமிட்டேஷன் நகைகளை வாங்கி அணிந்து உங்கள் பணத்தை சேமியுங்கள்'' என்றார் தண்டபாணி.\n`10 ஆண்டுகளாகவே நிர்மலா தேவி இப்படித்தான்' - ஆளுநர் மீது பாயும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்\nசு.சூர்யா கோமதி Follow Following\n’ அறிமுகப்படுத்தும் எடப்பாடி மக்கள்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்... தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டா\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #V\nகேரளாவுக்கு ரசிகர்கள் மூலம் நிவாரண நிதி அனுப்பிய நடிகர் விஜய்\nகாவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நட\n`மோடி செய்தது மட்டும் சரியா’ - விமர்சனங்களுக்கு சித்துவின் பதில்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்\n`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nரூபி, மரகதம் பதித்த நகை வாங்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்\nநிர்மலா தேவி வழக்கை விசாரிக்கப் போகும் ஆர்.சந்தானம் யார்\nதேநீர் முதல் கன்னம் தட்டல் வரை... கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன\nரயில் நிலைய பெயர்ப்பலகைகளில் அழிக்கப்பட்ட இந்தி எழுத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-21T14:02:45Z", "digest": "sha1:7LPB6O7WK46YIC5LNRN7Y65L3GKYC73E", "length": 10537, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு\nதமிழக முதலமைச்சருடன் தலைவர்கள் சந்திப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, இன்று காலை 12 மணியளவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உட்பட பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது நீண்ட காலமாக பத்து ஆண்டுகாலம் சிறைதண்டனை கழித்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, நேற்றைய தினம் திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டு சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், இந்த விடுதலை அறிவிப்பில் எந்த பாரபட்சமும் காட்டப்படக் கூடாது. அனைத்து சமூகங்களை சார்ந்த கைதிகளும் அந்த விதிகளுக்கு உட்பட்ட வகையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.\nஇதனைக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் அவர்கள், உச்சநீதிமன்றம் ஏற்கனவே சில வழிகாட்டுதல்களை தந்திருக்கிறது. அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், மாநில அரசுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை அமையும் என்று அவர் தெரிவித்தார்.\nஅதன் பிறகு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முத்தாலாக் சட்ட மசோதாவுக்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததற்கு தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். அதே நேரத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை. ஆகவே, வரக்கூடிய நாட்களில் மாநிலங்களவையில் அந்த மசோதா ஒப்புதலுக்கு வருகிறபோது அதனை தோற்கடிக்கும் விதத்தில் எதிர்த்து அதிமுக எம்.பிக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதனை கவனத்தோடு குறித்துக்கொண்ட தமிழக முதல்வர், இவ்விவகாரத்தில் தங்கள் கோரிக்கை குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.\nஇந்த சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் சேக் முகமது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அ.ச.உமர் ஃபரூக், ஏ.கே.கரீம், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர், ஜமாத்தே இஸ்லாமி பொது செயலாளர் ஹனீஃபா மன்பயீ மற்றும் ஜலாலுதீன், இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தினுடைய மாநில பொதுச் செயலாளர் ஷாஜஹான், அப்பல்லோ ஹனீபா, இந்திய தேசிய லீக்கின் மாநில நிர்வாகி நாகை ஹூஸைன், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைவர் மன்சூர் ஹாஜியார் ஆகியோர் உடனிருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?p=27", "date_download": "2018-08-21T14:12:26Z", "digest": "sha1:CJRW7WWWOZTR4XTW6D7663K2PHGT767J", "length": 6953, "nlines": 103, "source_domain": "cyrilalex.com", "title": "படம் பார்த்து கதை சொல் – கார்ட்டூன் விவகாரம்", "raw_content": "\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nபடம் பார்த்து கதை சொல் – கார்ட்டூன் விவகாரம்\nFebruary 8th, 2006 | வகைகள்: கேலிசித்திரம், உலகம் | 3 மறுமொழிகள் »\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n3 மறுமொழிகள் to “படம் பார்த்து கதை சொல் – கார்ட்டூன் விவகாரம்”\nஹிட்லர் காலத்தில் சார்லி சாப்ளின் தில் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://educationalservice.net/2016/july/20160705_periyava.php", "date_download": "2018-08-21T13:31:01Z", "digest": "sha1:VVPJVGA5CHGXKQSN4SK5ULMWLVVXCDK7", "length": 12374, "nlines": 81, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\n1977-ல் தேனம்பாக்கத்தில் இருந்த பெரியவா, தினமும் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ஸன்னதியின் மாடவீதிகளில் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு வருவார்.\nவடக்கு மாடவீதியில் இருந்த ஒரு வைஷ்ணவ குடும்பம், பெரியவாளிடம் அபார பக்தி கொண்டது. பெரியவா குள்ள உருவமாக இருந்தாலும், அவருடைய நடைக்கு ஈடு குடுக்க யாராலும் முடியாது\nஒருநாள் அம்மாதிரி பெரியவா வேகமாக நடந்து கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு வடக்கு மாடவீதிக்குள் நுழைந்ததும், சற்றும் எதிர்பாராமல் அந்த வைஷ்ணவ பக்தரின் க்ருஹத்தின் வாஸலில் வந்து நின்று கொண்டார்.\nகண்களை மூடிக் கொண்டு அப்படியே சிலை போல் நின்று கொண்டிருந்தார். பிறகு வீட்டுக்குள் நன்றாக உற்று நோக்கினார்.\nஅதற்குள், பெரியவா வாஸலில் வந்து நின்று கொண்டிருப்பதை கண்டதும், உள்ளே இருந்து மொத்த குடும்பமும் வெளியே ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள். எல்லாருக்கும் உள்ளே ஒரே ஒரு கேள்விதான்\n“தெனோமும் நம்மாத்து வழியாப் போற பெரியவா, இன்னிக்கி மட்டும் வாஸல்ல நின்னு, கண்ணை மூடிண்டு த்யானம் பண்ணிட்டு, ஆத்து உள்ளுக்குள்ள வேற தீர்க்கமா ஏன் பாத்துட்டுப் போனார்\nஅதற்கான விடை அன்று இரவே தெரிந்தது\nஅந்த குடும்பத்தின் வயஸான தகப்பனார் அன்றிரவு அனாயாஸமாக விஷ்ணுபதம் அடைந்தார்\nஸதா விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் மட்டுமே பண்ணிக் கொண்டிருப்பார். யானைக்கட்டித் தெருவில் உள்ள சங்கர மடத்தில் ஸாயங்காலம் நடக்கும் கோபூஜைக்கும், கஜபூஜைக்கும் நாள் தவறாமல் போவார்.\nவேறு எந்த பெரிய ஸாதனையும் பண்ணவில்லை\nஸதா நாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்த தன் பக்தனை, பகவானே அவருடைய வீடு தேடி வந்து, வாஸலில் நின்று, தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விட்டான்\n“பெரியவாளின் குழந்தைத் தன்மையும் பூகோள ஞானமும்”\nஸ்வாரஸ்ய சம்பாஷணை (ஒரு பகுதி)\n( இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா\nஎங்கள் வீட்டில் பெரியவாளைத் தங்கும்படி நான் வேண்டியவுடன் பெரியவர்கள் சொன்னார்கள்;\n“இந்த ஊரில் புதிதாக வீடு கட்டி குடித்தனம் வராமல் இருக்கும் வீடு ஏதாவது இருந்தால் சொல்லு. அங்கு நான் தங்கிக் கொள்கிறேன்.”\nஉடனே என் நண்பர் முதலியாரின் வீடு ஞாபகத்துக்கு வந்தது.(வீட்டிற்குப் பின்னால்) “இருக்கிறது”\nமுதலியார் அவர்கள் மகாபெரியவாள் மீது வைத்திருந்த அத்தியந்த பக்தி அந்த மகானை அவருடைடைய வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டது.\nமுதலியார் புளகாங்கிதமடைந்தார். சுவாமிகள் புது வீட்டுக்கு வந்து அறையில் வைக்கோல் பரப்பச் செய்து அதில் சிரமபரிகாரம் செய்யத் தொடங்கினார்.\nஊர்மக்கள் வெகு ஆவலுடன் பெரியவாளைப் பார்க்க திரண்டனர். பெரியவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆரவாரமின்றி வரிசையாக மக்களை நிற்க வைத்து சுவாமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார், அப்பகுதி எம்.எல்.ஏ.ஸ்ரீ தியாகராஜன் அவர்கள்.\nஅடுத்தநாள் விடியற்காலை நாலு மணி இருக்கும். கிணற்றடியில் சத்தம் கேட்டது.எங்கள் வீட்டுப் பின்புறம் உள்ள கிணற்றில் மகாபெரியவாள் தன்னுடைய மரத்திலான பாத்திரத்தைக் கொண்டு தண்ணீர் நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஉடனே நான் அருகில் சென்றேன்.\n“இதோ பார்த்தாயா…இந்த மரச்செம்பு உடைந்திருக்கிறது கையைக் கிழிக்கிறது..” குழந்தை மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.\nபின் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். “கிழக்கு வங்காள ரேடியோவில் தினமும் பகவத்கீதை வைக்கிறாளாமே…உனக்குத் தெரியுமோ\nநான் சொன்னேன்,”இந்துக்களுக்குப் பாதுகாப்புக் குறைவாக இருக்கிறது. மற்ற மதங்கள்,முக்கியமாக இஸ்லாமும்,கிறிஸ்துவமும் உலகம் பூரா பரவியிருக்கிறது.அவர்களுக்கு ஒரு நாட்டில் கஷ்டம் என்றால் மற்ற நாட்டிலுள்ளவர்கள் உதவ முன் வருகிறார்கள்.இந்துக்கள் மாத்திரம் பயந்துகொண்டே தான் வாழ வேண்டியிருக்கிறது”\n இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கிறதே யூத நாடு.அதைச் சுற்றி எத்தனை முஸ்லீம் தேசங்கள் இருக்கின்றன இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா இருபத்தாறு தேசங்கள். சிறிய நாடான இஸ்ரேல் பயப்படுகிறதா\nநான் பிரமிப்பின் எல்லைக்கே போய்விட்டேன். ஆசிரியரான எனக்கு,இவ்வளவு துல்லியமான பூகோள ஞானம் கிடையாது என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nமகா பெரியவாளின் பரந்த அறிவையும் மனோ தைரியத்தையும் வியந்து என் அறியாமையை நினைத்து வெட்கப்பட்டேன்.\nகாலையில் ஓர் உதவி ஆசிரியரை திருப்பதிக்கு அனுப்பி புதிதாகக் கமண்டலு முதலிய மரப்பாத்திரங்களை வாங்கிவரச் செய்தேன்.\nஅன்று மாலை புதுப்பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு ரொம்ப சந்தோஷப்பட்டு, ” என்ன வழவழப்பாக இருக்கிறது…” என்று ஒரு குழந்தை எவ்வாறு புது விளையாட்டு பொம்மையை வாங்கி ஆனந்தமடையுமோ அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்திக் காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karthikonline.in/2017/08/page/2/", "date_download": "2018-08-21T14:32:43Z", "digest": "sha1:TRK6GLGBDXWKURLY5LQNWZKESVSDCBNB", "length": 19750, "nlines": 106, "source_domain": "karthikonline.in", "title": "August 2017 – Page 2 – karthikonline.in", "raw_content": "\nஸ்டார்ட்அப் ZOHO 500 மில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது எப்படி\n’நோ’ சொன்ன ஜெராக்ஸ்… நன்றி சொன்ன ஊழியர்… அடோப் நிறுவனத்தின் செம ஃப்ளாஷ்பேக்\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nவிக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள்… விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா\nஇது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை\nஅமெரிக்காவில் ஒரு மிஸ்டர் பாரத் கதை..\n1980 களில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படத்தைப் போல நம்பமுடியாத கதை அவருடையது. ஒரு யூத இளம்பெண் அமெரிக்க போர்விமானியின் காதலில் விழுகிறார். காதல் அவள் வயிற்றில் ஒரு குழந்தையைக் கொடுக்கிறது. காதலன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடுகிறான். அவள் மிக இளம்வயதில் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவளால் அந்தக் குழந்தையைப் பேணிகாக்க முடியவில்லை. குழந்தைக்கு நிமோனியா தாக்குகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் ஒன்பது மாதக்குழந்தையைக் குழந்தைபேறு இல்லாத உறவுக்கார தம்பதிகளிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். அதன்பிறகு அந்தத் தம்பதிகள் நியூயார்க்கில் […]\nகூகுள் முதல் ட்விட்டர் வரை… அமேசான் நிறுவனரின் ஸ்டார்ட்அப் காதல்\nஜெப் பெசாஸ் துறுதுறுவென்று இருக்கும் குழந்தை. 4 வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். பின்னர் ஜெப்பின் தாயார் ஜாக்லின் கியூபாவில் இருந்து பிழைக்க வந்த மிக்கேல் பெசாஸ் என்ற எஞ்சினியரை மணக்கிறார். வளர்ப்புத் தந்தையின் பெயரே இவரது துணைப்பெயராக சேர்கிறது. சிறுவயதில் நிறைய புத்தகங்களை படிக்கிறார் ஜெப். வளர்ந்து இளைஞரான பிறகு கல்லூரியில் படித்து முடித்தபின் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறார். ஆனால் எந்த வேலை செய்தாலும் அதில் அவரது தடம் […]\nஅகதி ஆக்கியது டிரம்ப்… அடைக்கலம் தந்தது யார்\nஒரு நண்பர் கேட்டார். “ஸ்டார்ட்அப் பற்றி எழுதுறீங்க சரி. ஆனால் நாட்டு நடப்பு எதுவும் சரியில்ல… டிமானிடைசேசன் ஜிஎஸ்டி என்று அரசு நம்மை வாட்டி வதைக்குது. இப்போ எப்படிப்பா தொழில் தொடங்குவது”. அவருக்கு Airbnbயின் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். இறுதிவரை கேட்டுவிட்டு இப்படி சொன்னார் ”உண்மை தான்… வெற்றி என்பது நேரம் காலத்தில் எல்லாம் இல்லை… வெல்வோம் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறது.” 2008 உலகப் பொருளாதாரம் மேற்குலக நாடுகளை உருட்டி எடுத்த நேரம். உலக பணக்காரர்கள், […]\nகேண்டி கிரஷ் விளையாடாமல் உங்களால் இருக்க முடியாது. ஏன் தெரியுமா\nவிளையாட்டு என்பது இந்த நூற்றாண்டில் வெறும் வேடிக்கை அல்ல. அது ஒரு சீரியஸ் பிஸினஸ். அது, களத்தில் ஆடும் ஆட்டம் என்றாலும், கைக்குள் அடங்கும் மொபைலில் ஆடும் ஆட்டம் என்றாலும் பில்லியன் டாலர்கள் புழங்கும் பெரிய பிஸினஸ். இப்போதெல்லாம், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்குத் தயங்குவதே இல்லை. அவர்கள், ஒரு மொபைலில் அந்த கேம் இருந்துவிட்டால் போதும், பசி தெரியாது, தூக்கம் தெரியாது, நீண்ட காத்திருப்பு தெரியாது, கவலை தெரியாது. எமனே பாசக்கயிற்றுடன் வந்தாலும் ”இருப்பா, கொஞ்சம் […]\nஇது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை\nஒரு நூற்றாண்டுக்கு மேல் புகைப்படத் துறையில் ஆண்டு வந்த பல பெரிய நிறுவனங்கள் இன்று காணாமல் சென்றுவிட்டன. அந்த புகைப்படத்துறை மக்கள் கையில் ஒரு மொபைல் போனாக சுருங்கி புது அவதாரம் எடுக்கும்போது சில பல ஜிம்மிக்ஸ் வேலைகளைப் பார்த்து அதை இணையத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிரச் செய்து அதன்மூலம் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஸ்டார்ட்அப் தான் இன்ஸ்டாகிராம். இன்று இன்ஸ்டாகிராம் எந்தளவுக்கு எல்லோரையும் வியாபித்து இருக்கிறது என்றால் டிவிட்டர், ஸ்னாப்சாட் போன்ற சீனியர்களையும் ஓரங்கட்டி […]\nவிக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள்… விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா\nஎல்லா ஸ்டார்ட்அப்புகளும், தொழில்முனைவோர்களும் பணம் சம்பாதிக்க மட்டும் உருவாவதில்லை. சிலருக்குப் பணத்தை விட சாதனை பெரிது. கணினி யுகத்தில் பல தொழில்நுட்பங்கள் இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடப்பட்டவை. அவை அவ்வாறு உருவாகவில்லை என்றால் இன்று பல தொழில்கள் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. லினக்ஸ், பிஹெச்பி, அப்பாச்சி சர்வர் போன்ற தொழில்நுட்பங்கள் இலவசமாகத் திறந்துவிடப்படவில்லை என்றால் இன்று ஃபேஸ்புக் இல்லை, யாகூ இல்லை, பல இணையதளங்கள் உருவாகியிருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். என்சைக்ளோபீடியா என்ற தகவல் களஞ்சியம் ஒரு காலத்தில் பணக்காரர்களின் […]\n” – ஒரு வெஸ்டர்ன் காலா சொன்ன வெற்றிக்கதை\nஇந்தக் கதையை ஆரம்பிக்கும் முன் நாம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தக் கதை உருவானதின் அவசியம் புரியும். அமெரிக்கா பெரிய நிலப்பரப்பு கொண்ட தேசம். ஆனால் இருப்பதோ, குறைவான பேருந்து வசதிகள். மெட்ரோ ரயில் ஓடும் நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் நகரின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு விரைவாக செல்ல சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும் அல்லது வாடகை காரில் சென்று வர வேண்டும். இதுதான் அவர்களுக்கு இருக்கும் […]\n’நோ’ சொன்ன ஜெராக்ஸ்… நன்றி சொன்ன ஊழியர்… அடோப் நிறுவனத்தின் செம ஃப்ளாஷ்பேக்\nபிரிண்டிங் தொழில்நுட்பத்தில் கணினி செய்த புரட்சி அளப்பரியது. செய்திகளை எழுத்து அச்சுக்களாக கோத்துக்கொண்டு படங்களை அச்சுப்பிரதி எடுப்பதெல்லாம் மிகக் கடினமான, நிறைய மனித உழைப்புகளை கோரும் வேலை. ஒரு சிறு பிழை என்றாலும் திருத்துவது மிக கடினம். இந்த ஸ்டார்ட்அப் உருவாகும் வரை இப்படிதான் சென்று கொண்டிருந்தது அச்சு ஊடகம். அதன் பின் நடந்ததெல்லாம் அசுரத்தனமான மேஜிக். அடோப் சிஸ்டம்ஸ் என்றால் உங்களுக்கு ஞாபகம் வருவது கடினம். போட்டோஷாப் என்றால் உடனே ஞாபகம் வந்துவிடும். அச்சு ஊடகத்தின் […]\nடேட்டிங் சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்… லிங்க்ட்இன் சாதித்த கதை\nசமூக வலைதளங்கள் என்றாலே பொழுதுபோக்கு, கலாட்டா, செல்பி எடுத்து புகைப்படங்களை பகிர்தல், மீம்ஸ் செய்து வெளியிடுவது எனப் பொதுவானது என்றுதானே நினைப்பீர்கள். ஆனால், இந்த சமூகவலைதளத்தில் அப்படி கும்மி அடித்துவிட முடியாது. காரணம் இங்கே நிறைய பிக்பாஸ்கள் இருப்பார்கள். இங்கே பிக்பாஸ் என்பது உவமை அல்ல; உண்மை. அவர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். இங்கே ஜாலி கேலி என்பதையெல்லாம் தாண்டி, உங்களுடைய பொறுப்புஉணர்ச்சிதான் இங்கே முக்கியம். ஆகவே யாராக இருந்தாலும் பொறுப்புடன் பதிவிட வேண்டும். பதினைந்து […]\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karthikonline.in/2017/09/26/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-08-21T14:30:24Z", "digest": "sha1:JT6EEE3OBTOMZWNGAD3MFUS4QLQEXDAM", "length": 30420, "nlines": 100, "source_domain": "karthikonline.in", "title": "இவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும்! பேஸ்புக் கதை அத்தியாயம் 25 – karthikonline.in", "raw_content": "\nஸ்டார்ட்அப் ZOHO 500 மில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது எப்படி\n’நோ’ சொன்ன ஜெராக்ஸ்… நன்றி சொன்ன ஊழியர்… அடோப் நிறுவனத்தின் செம ஃப்ளாஷ்பேக்\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nவிக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள்… விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா\nஇது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nஅமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஓர் அழகான குடும்பம். பெற்றோர்கள் ஐந்து பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தபோது அந்த கோர தீ விபத்து நடந்தது. அந்த விபத்தில் பெற்றோர்கள் இருவரும், அவர்கள் வசித்த வீடும் எரிந்து சாம்பலாயின. ஐந்து பிள்ளைகளும் வெவ்வேறு உறவினர்களால் தத்து எடுக்கப்பட்டு பிரிந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியர்வர்கள் ஆனதும் ஒருவரை ஒருவர் தேடி அடையாளம் கண்டு இணைந்தனர். கடைக்குட்டி லின்னை தவிர. லின்னின் கடைசி அக்கா டெஸ்ஸாவிற்கு மட்டும் எப்படியாவது லின்னை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஆசை. லின் தொலைந்தபோது அவளுக்கு வயது ஐந்து. நடுவில் நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி கண்டுபிடிப்பது பத்திரிகை விளம்பரம் உதவவில்லை. தங்களது உணர்சிகளைக் கொட்ட அந்த விளம்பரங்கள் போதாது. அப்போது தான் இணையமும், ஃபேஸ்புக்கும் கைகொடுத்தன. ஃபேஸ்புக்கில் “என் தங்கையை கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று பதிவை எழுதுகிறார். அந்த உணர்ச்சிப்பெருக்குள்ள பதிவு பலரால் பகிரப்பட்டு வளர்ந்துகொண்டே சென்றது. பலப்பல தொடர்புகள் ஏற்பட்டு இறுதியில் லின்னை கொண்டுவந்து அவர்களிடம் சேர்க்கிறது. இது போல பல கதைகள்.\nபத்துவருடங்களுக்கு முன்பு வரை கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் அணுக முடியாதவர்களாக இருந்தார்கள். புதிய சிந்தனைக் கொண்ட இளம் கலைஞர்களை, எழுத்தாளர்களை இனம் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. படித்து முடித்தபின் பல இடங்களில் பிரிந்து வாழும் உடன்படித்த நண்பர்களை இணைப்பது சாத்தியமில்லாததாக இருந்தது. ஒத்த கருத்துடைய புதிய நண்பர்களை கண்டறிவது மிக மிக கடினமாக இருந்தது. மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க பத்திரிக்கைகளுக்கு எழுதி அதில் சிறந்தவற்றை அல்லது தங்களுக்கு பிடித்தவற்றை அந்த பத்திரிகை ஒரு சிறு பத்தியாக வெளியிடடுவது என்று மக்களின் நேரடி பங்கு குறைவாக இருந்தது. ஆனால் இன்று இந்தக் கதைகள் மாறி இருக்கின்றன. பத்திரிகைகள் மக்களின் ட்ரெண்டிங் பதிவுகளை வைத்துத் தலைப்பு செய்திகளை தீர்மானிக்கும் காலம் வந்திருக்கிறது. இன்னும் சில நாடுகளில் மக்களின் எழுச்சி அரசியலை புரட்டி போட்டிருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்களை இணைக்க இன்று கிடைத்த வாய்ப்புகளை போல இதுவரை என்றும் கிடைத்ததில்லை. இவற்றை சாத்தியப்படுத்திய சமூக வலைதளங்களில் முதன்மையான தளம். ஃபேஸ்புக்.\nஅமெரிக்காவில் நியுயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான ஒயிட் பிளைன்ஸ்ஸில் மனோதத்துவ நிபுணர் அம்மாவிற்கும், பல் மருத்துவர் அப்பாவிற்கும் கடைக்குட்டியாக பிறந்தவர் தான் மார்க் சக்கர்பெர்க். இவருக்கு மூன்று மூத்த சகோதரிகள் உண்டு. பள்ளியில் மிகவும் குறும்புகார மாணவர். படிப்பிலும் சுட்டி. கத்திச்சண்டை விளையாட்டில் கேப்டன். பன்னிரண்டு வயதிலேயே கணினிமொழிகளில் ஆர்வம் ஏற்பட்டு கற்க ஆரம்பித்தார். கம்ப்யூட்டர் கேம் விளையாட வேண்டிய வயதில் அதை வடிவமைத்தார். லத்தின், கிரேக்கம், ஹீப்ரு போன்ற மேற்குலகின் செம்மொழிகளை கற்பதில் ஆர்வமாக இருந்தார். இசை ஆர்வலர்களின் தேடலுக்கு ஏற்ப ப்ளே லிஸ்டை கொடுக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்தார். பெற்றோர்கள் அல்லது மற்றவர்களின் தூண்டுதல்கள் எல்லாம் இல்லை. அவருக்கு பிடித்தவற்றை செய்ய முயற்சித்தார். வீடு அதற்கேற்ற சுதந்திரத்தை கொடுத்தது. கல்லூரி படிப்பிற்கு ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கு சென்றார். முதல் வருடம் படிக்கும் போதே மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்திற்கு ஏற்ப ஒன்று சேர ஓர் இணையதளம் வடிவமைத்தார். அதன்பெயர் கோர்ஸ்மேட்ச் (Course Match).\nபருவ வயதும் பளிச் அறிவும் சேர்ந்து எதிர்பாலினரை கவர்ந்திழுக்கும் வகையில் ஒரு தளத்தை வடிவமைக்க வைத்தது. அதன் பெயர் ஃபேஸ்மேஷ் (Facemash). அந்த கல்லூரியில் யார் கவர்ச்சியானவர்கள் என்பதை மாணவர்கள் ரேட்டிங் கொடுக்கும் வகையிலான தளம் அது. பல பெண்களின் புகைப்படங்கள் அவர்கள் அறியாமலேயே அதில் வெளிவந்து கடும்கண்டனத்திற்கு உள்ளானது. இணையதளம் ஹிட்டு தான். ஆனால் நோக்கம் சரியானதல்ல என்பதால் ஒரேநாளில் இழுத்து மூடப்பட்டது. இந்த சமயத்தில் தான் இவரின் திறமைக் கண்டு மூன்று சீனியர் மாணவர்கள் தங்கள் ஸ்டார்ட்அப்பில் வேலை செய்ய அழைத்தார்கள். அது அந்த பல்கலைகழகத்திற்கான மாணவர்களை இணைக்கும் ஹார்வர்ட்கனக்சன் என்ற தளம். அது சரியாக வராத காரணத்தால் பாதியில் கைவிட்டார்கள். ஆனால் மார்க்கிற்கு சரியாக வரும் என்று தோன்றவே இவரே சொந்தமாக ஒரு தளத்தை வடிவமைத்தார். அது தான் திஃபேஸ்புக்.காம் (www.thefacebook.com) .\nஒரே வாரத்தில் அதை வடிவமைத்து வெளியிட்டார். வெளியிட்ட சில நாட்களிலேயே கல்லூரி முழுவதும் சென்று சேர்ந்தது. அதையும் தாண்டி அக்கம் பக்கத்தில் உள்ள கல்லூரிகளிலும் அது காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்தது. தளத்தை வடிவமைக்கத் தேவையான முதலீடை நண்பன் எடார்டோ கொடுத்தான். பத்தாயிரம் டாலர்க்கு முப்பது சதவீத ஃபேஸ்புக் பங்கு என்ற ஒப்பந்தப்படி அந்த முதல் முதலீடு கிடைத்தது. டஸ்டின், க்ரிஷ் என்ற தன்னுடைய ரூம்மேட்டுகளை அவரவர் திறமைக்கேற்ப வேலைகொடுத்து எடுத்துக்கொண்டார். பத்தாயிரம் மாணவர்களை மிக குறுகிய காலத்தில் அது இணைத்தது.\nசான் பார்க்கர் என்ற இன்னொரு ஸ்டார்ட்அப் நிறுவனரின் கண்ணில் திஃபேஸ்புக் பட்டது. ”அட இது நல்லா இருக்கே” என்று தோன்ற மார்க்கை கூப்பிட்டு பேசுகிறார். ”தம்பிகளா இதோட மதிப்பு என்னனு தெரியாம இருக்கீங்க. என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு தேவையான முதலீட்டை கொண்டுவருகிறேன்” என்று சொல்ல அவரையே தங்கள் நிறுவனத்தின் தலைவர் ஆக்குகிறார்கள். பார்க்கர் தன் பங்குக்கு அந்தத் தளத்தை இன்னும் மெருகேற்றுகிறார். பின்னாளில் இதை மார்க் இவ்வாறு குறிப்பிடுகிறார் “அதுவரை காலேஜ் ப்ராஜெக்ட்டாக மட்டும் இருந்த எங்களது ஸ்டார்ட்அப்பை ஒரு நிறுவனமாக மாற்றியது சான் தான்”\nபார்கர் தனது அனுபவத்தால் பீட்டர் தியல் என்ற முதலீட்டாளரை கூட்டி வருகிறார். அவர்தான் வெளியில் இருந்து வந்த முதல் முதலீட்டாளர். அவர் 10.5 சதவீத ஃபேஸ்புக் பங்குகளை வாங்கிகொண்டு ஐந்து லட்சம் டாலர்களை முதலீடு செய்கிறார். கொஞ்சநாளில் ஒரு பிரச்சனை வருகிறது. பார்க்கர் தன் நண்பர் நண்பிகளுக்கு ஒரு பார்ட்டி கொடுக்கிறார். அந்த பார்ட்டியில் போதைமருந்து பயன்படுத்தப்பட்டது என்று அவர் மேல் வழக்கு பதியப் படுகிறது. இதனால் ஃபேஸ்புக்கின் தலைவர் பதவியில் இருந்து விலக நேர்கிறது. ஆனாலும் அவரது பங்களிப்பு தொடர்கிறது.\n2005இல் அமெரிக்காவின் முக்கிய பல்கலைகழகங்கள் அனைத்திடமும் ஃபேஸ்புக் சென்று சேர்க்கிறது. ஃபேஸ்புக்கை விலைக்கு வாங்க சிலர் முயற்சிக்கிறார்கள். முதலில் 60 கோடி ரூபாய்களுக்கு விலைக்கு கேட்கிறார்கள். மார்க் மறுத்துவிட்டார். பின்னர் MTV 350 கோடிக்கு மொத்தமாக விலைக்கு கேட்கிறது. அப்போதும் மறுத்துவிட்டார். இதற்கு நடுவில் ஆக்சில் என்ற வெஞ்சர் கேபிட்டல் நிறுவனம் 70 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.\nபிறகு வேறு சில நிறுவனங்களும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். முதலீடு பெருக பெருக ஃபேஸ்புக்கை பற்றிய பேச்சு பரவலாக மாணவர்களை தாண்டி பொதுமக்களிடமும் சென்று சேர்ந்தது. திஃபேஸ்புக் என்ற பெயரில் இருந்து “The” எடுக்கப்பட்டு “Facebook.com” பிறந்தது. பொதுமக்களுக்கு எப்போது திறந்துவிடுவீர்கள் என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தன. அந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. 2006-ல் சில பல புதிய வசதிகளுடன் ஃபேஸ்புக் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக் மக்களை எழுத தூண்டுவதற்கு பதில் விளையாட தூண்டியது. FarmVille என்ற ஸ்டார்ட்அப்பை இணைத்துக்கொண்டு அதை ஊக்குவித்தார்கள். காரணம் அதில் தான் அவர்களுக்கு வருமானம் வரும் என்று நம்பினார்கள். பிறகு மக்களை எழுதத் தூண்டியது, அதில் பல புதிய வசதிகளை கொண்டுவந்தது. ஆரம்பத்தில் ஒரு பதிவை நீங்கள் லைக் செய்தால் அது வெறும் விருப்பத்தை தெரிவிக்கும் வழிமுறையே. பிறகு தான் லைக் செய்யப்பட்ட பதிவுகள் நண்பர்களுக்கு சென்று சேரும் வசதி வந்தது. அதன் தொடர்ச்சியாக ஷேர் பண்ணும் வசதி, கமென்ட் பண்ணும் வசதி என்று வளர ஆரம்பித்தது.\nஇந்த சமயத்தில் பல பெரிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கை விலைக்கு வாங்க துடித்தன. அதில் கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் எல்லாம் அடங்கும். பங்குதாரர்களாக இருந்த வெஞ்சர் முதலீட்டுநிறுவனங்கள் ஆர்வமாக இருந்தாலும் பீட்டர் தீயல் மற்றும் மார்க் இருவரும் கடுமையாக எதிர்த்தார்கள். ஆகவே விலைபோகவில்லை.\nபின்னர் மைக்ரோசாப்ட் ஒரு டீலுக்கு வந்தது ஃபேஸ்புக்கின் 1.6 சதவீத பங்குகளை 240 மில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒத்துக்கொண்டு வாங்கியது. பத்திரிகைகளில் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ”மூன்று வருடமே ஆன ஒரு ஸ்டார்ட்அப்பின் பங்கை இந்த விலைக்கு வாங்குவது முட்டாள்தனமானது” என்றார்கள். எல்லாம் ஃபேஸ்புக் பங்குசந்தையில் நுழையும் வரைதான். அமெரிக்க பங்குசந்தையில் நுழைந்த அந்த கணத்தில் இருந்து ஃபேஸ்புக்கின் வளர்ச்சி பல மடங்கு எட்டியது. ஒரு பங்கின் மதிப்பு 38$ டாலர்களுக்கு கணக்கிடப்பட்டது. ஒரு புதிய நிறுவனத்திற்கு 104 பில்லியன்கள் அளவிற்கு பெரிய மதிப்பிடப்பட்டது வரலாற்றில் அதுவே முதல்முறை. ஆனால் வெளியிட்ட சில நாட்களில் அதுவும் பொய்த்து போய் மேலே ஏறிக்கொண்டே சென்றது. இன்று ஒரு ஷேரின் விலை 172 டாலர்கள். 2012ல் பங்கு வெளியிட்ட நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் நூறு சதவீத வளர்ச்சி எந்த நிறுவனமும் கொடுத்ததில்லை.\nமார்க்கின் சொத்து மதிப்பு 71.9 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் நான்கு லட்சத்தி அறுபதாயிரம் கோடிகள். இன்று இந்த இளைஞர் உலகின் நான்காவது பெரிய பணக்காரர்.\nமார்க் சக்கர்பெர்க் இளைய சமுதாயத்தின் உயரம். வாரன் பப்பெட்டை பார்த்தபோது ”இனி இவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும்” என்று எழுதினார்கள். அவர்கள் எழுதி முடிக்கும் முன்பே பில்கேட்ஸ் வளர்ந்து அவரைத் தாண்டினார். பில்கேட்ஸை தொட முடியுமா எனும்போதே அமேசானின் ஜெப் பெசாஸ் தொட்டார். ஜெப்பை தொட வாய்ப்பில்லை எனும் போதே மார்க் வந்துவிட்டார். ஊக்கம் கொண்ட இளைஞர்கள் ஒவ்வொரு காலத்திலும் புதிய இலக்கை எட்டுகிறார்கள். அதை இன்னொரு புதிய இளைஞர் உடைத்துக்கொண்டே தான் இருக்கிறார். தொடமுடியாத இலக்கு என்று எதுவுமில்லை.\nஒரு டிவி விவாதத்தில் நெறியாளர் ஸ்டார்ட்அப் இளைஞர்களை பார்த்து ”சும்மா சும்மா ஃபேஸ்புக்கை உதாரணம் காட்டாதீர்கள். உங்களால் இன்னொரு ஃபேஸ்புக்கை உருவாக்கமுடியுமா. லோக்கலில் ஒரு உதாரணம் காட்டுங்கள்” என்றார். எனக்கு கடும் கோபம் வந்தது. ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஃபேஸ்புக்கையும் உடைக்க ஒரு சமூகவலைத்தளம் நிச்சயம் வர முடியும். போன வருடம் நீங்கள் ஏதோ ஒரு நாளில் எழுதிய ஒரு பதிவை எடுக்க வேண்டும் என்றால் ஃபேஸ்புக்கில் தேடி எடுப்பது இன்றும் சிரமம். இப்படி ஃபேஸ்புக்கில் எண்ணற்ற குறைகள் இன்றும் உண்டு. அவற்றை களைந்து இன்னும் சிறப்பான ஒரு தளம் வந்தால் நிச்சயம் ஃபேஸ்புக்கை தாண்ட முடியும். கூகுள் ஆர்குட்டை கொண்டு வந்த போது அடித்துக்கொள்ள யாருமில்லை என்று சொன்னார்கள். இன்று ஆர்குட்டே இல்லை. ஒரு ஃபேஸ்புக் அதை காலி செய்தது. இங்கு முடியாதது எதுவும் இல்லை என்பதே உண்மை.\nPosted in Startup, கட்டுரைகள், தமிழ், பத்திரிகை, விகடன் Tagged கதைகள்,பேஸ்புக்,மார்க் சக்கர்பெர்க்,ஸ்டார்ட்அப்\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nநூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3\nநவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/kanimozhi-tweets-about-marina-and-sterlite-118081000054_1.html", "date_download": "2018-08-21T14:00:29Z", "digest": "sha1:AWDZH7FU2PFP4AQOYLELAXMUEA3VL2KF", "length": 12461, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மெரீனாவில் காட்டிய அக்கறையை இதில் ஏன் காட்டவில்லை: கனிமொழி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஆகஸ்ட் 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமெரீனாவில் காட்டிய அக்கறையை இதில் ஏன் காட்டவில்லை: கனிமொழி\nமெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்க இடமில்லை என்று காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஏன் காட்டவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nவேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 22 மே அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.\nவேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிஎஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால், சிஎஸ்.வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.\nகலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிச்சாமி, வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்\nஇவ்வாறு கனிமொழி எம்பி கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி\nதிமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி\nகருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய தயாரான சந்தன பேழை\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஜெ. இருந்திருந்தால் மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் : கிருஷ்ணபிரியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/kabilavasthu-audio-launch-stills-gallery/", "date_download": "2018-08-21T14:01:11Z", "digest": "sha1:C4UNP5CWLRQXX5ERQHUSDOXUFBO4AOSK", "length": 2848, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கபிலவஸ்து இசை வெளியீட்டிலிருந்து... - Thiraiulagam", "raw_content": "\nJul 12, 2018adminComments Off on கபிலவஸ்து இசை வெளியீட்டிலிருந்து…\nPrevious Postவெப்சீரிஸ் இயக்கும் காதலும் கடந்து போகும் பட இயக்குநர் Next Postதமிழ் படம் - 2 படத்திலிருந்து...\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\nபாரதிராஜா இயக்கவிருக்கும் ஜெயலலிதா வரலாறு\nநயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் – இம்மாதம் 30-ஆம் தேதி வெளியீடு\nகோ கோ புரமோட் பண்ணும் பிரபலங்கள்\nரஜினிக்கு த்ரிஷா கொடுத்த நெருக்கடி\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/detailed?id=5%205996&name=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:41:35Z", "digest": "sha1:SELOKBT5SA4OHKSA7SCZG3B7QZSTPJEW", "length": 5204, "nlines": 117, "source_domain": "www1.marinabooks.com", "title": "ஒரு தேக்கரண்டி தாய்ப்பால்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் பகுத்தறிவு English ஓவியங்கள் கம்யூனிசம் சிறுகதைகள் அரசியல் உரைநடை நாடகம் பெண்ணியம் இல்லற இன்பம் பொது நூல்கள் சினிமா, இசை மகளிர் சிறப்பு சுயமுன்னேற்றம் தமிழ்த் தேசியம் இஸ்லாம் மேலும்...\nதாலம் வெளியீடுசிவா பதிப்பகம்பார்வை பதிப்பகம்இனிய நந்தவனம் பதிப்பகம்தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்விவேகா பதிப்பகம்கலப்பைகுருவருள் வெளியீடுபாரதி புத்தகாலயம்கல்கி பதிப்பகம்பிரகாஷ் புக்ஸ் சிலம்பு பதிப்பகம்உலகத் திருக்குறள் மையம் சாலமோன் மனுவேல் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவிதைத்த காடும் பசித்த பறவைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilagamtimes.com/journalists-family-benefit-fund/", "date_download": "2018-08-21T14:38:35Z", "digest": "sha1:XETT6KWKYS2WQHSPPJW4N5CTPDMO55AG", "length": 11300, "nlines": 261, "source_domain": "tamilagamtimes.com", "title": "Journalists Family Benefit Fund | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nNext: தமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/cr-business-solutions/", "date_download": "2018-08-21T13:48:14Z", "digest": "sha1:VULGE5MB4ZIBO3PSC3N4PV6CR77NM2PD", "length": 3021, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "CR Business Solutions | பசுமைகுடில்", "raw_content": "\nஇரு சக்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர், உபகரணங்களுக்கு ஒப்புதல்\nசுற்றுச் சூழலைக் காக்கும் நோக்கில் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் ஸ்கூட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி நிரப்புவதற்கான பாது காப்பான சிலிண்டர்களை தயா ரித்த லவாடோ[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2018/02/tnpsc-current-affairs-quiz-227-february-2018.html", "date_download": "2018-08-21T14:05:03Z", "digest": "sha1:4BN37EJUNJUDVAUWKV7AP4V5ITWY45ZX", "length": 4778, "nlines": 88, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 227, February 2018 (Tamil)", "raw_content": "\n2018 தேசிய உடல் சுகாதார குறியீட்டு பட்டியலில் கடைசி மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்கள்\n2018 தேசிய உடல் சுகாதார குறியீட்டு பட்டியலில் தமிழ்நாடு பெற்றுள்ள இடம்\nசமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு \"கிராண்ட் காலர்\" விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வழங்கிய நாடு\nஅபுதாபியில் கட்டப்படவுள்ள இந்து கோவில்\nஅருணாசலப் பிரதேச எக்ஸ்பிரஸ்\" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இரயில்\nஇந்தியா-சீனா இடையே 1914 இல் வரையப்பட்ட எல்லைக்கோடு\n49வது பாரல்லேல் எல்லைக் கோடு\nசமீபத்தில் தனக்கென்று தனிக்கொடியை பெற பரிந்துரை செய்துள்ள மாநிலம் எது\nஇந்தியாவில் தனிக்கொடி பெற்றுள்ள முதல் மாநில அரசு\nவீட்டிலிருந்தபடி வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய உதவும் செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/opaline", "date_download": "2018-08-21T14:11:17Z", "digest": "sha1:SX5WT7GM36O63SJ2O55XHSPPE7N4CZEY", "length": 4532, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "opaline - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரைகுறையாகத் தளிவில்லாமல் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி\nபல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற\nவானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thinakkural.lk/article/16420", "date_download": "2018-08-21T13:39:51Z", "digest": "sha1:X6Q4WMAG4WD435FVW3AX44RW7L5BXJIQ", "length": 5288, "nlines": 70, "source_domain": "thinakkural.lk", "title": "மலிங்காவுக்கு மீண்டும் ஏமாற்றம் - Thinakkural", "raw_content": "\nஇலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இவருக்கு சமீப காலமாக டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிரான டி20 போடடியில் விளையாடினார்.\nகனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் இலங்கை தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இலங்கை அணி அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.\nமலிங்காவிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான பினுரா பெர்னாண்டோவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2015-ல் இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் தற்போதுதான் அணியில் இடம்பிடித்துள்ளார்.\n‘9 மாகாணங்களுக்கும் டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நஜம் சேதி\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபெண்களுடன் உல்லாசம்;ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து 4 ஜப்பான் வீரர்கள் வெளியேற்றம்\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற நியூசிலாந்து பெண் மந்திரி\n« வடக்கிலோ அல்லது கிழக்கிலோ எந்தவோர் இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது;\nராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது;மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பு »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://1seythi.adadaa.com/2010/05/17/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4-%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-21T13:30:19Z", "digest": "sha1:2LXVS4R54COWBTAIKGOF6KFK4YFINRD2", "length": 7585, "nlines": 145, "source_domain": "1seythi.adadaa.com", "title": "இங்கிலாந்து த ொழிற்கட்சி அறிவிப்பு | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇங்கிலாந்து த ொழிற்கட்சி அறிவிப்பு\nஇலங்கை இனப்பிரச்னை தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசுடன் பேச்சுவார்த்தை :\nலண்டன் : இலங்கை இனப்பிரச்னைக்கு தீர்வுகாண நாடுகடந்த தமிழீழ அரசுடன்\nஇணைந்து செயல்படப் போவதாக இங்கிலாந்து தொழிற்கட்சி அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பெருமளவில்\nவசித்துவரும் இலங்கை தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அந்நாட்டு\nஅரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆளும் தொழிற்கட்சி\nவெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இலங்கை இனப்பிரச்னைக்கு தீர்வு காண\nநாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயல்படப் போவதாகத்\nதெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போரின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களை\nமறுகுடியேற்றம் செய்வது, போரினால் சிதைக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பது,\nஇனப்பிரச்னைக்கு ஜனநாயக வழியில் அரசியல் தீர்வு காண்பது என்பன உள்ளிட்ட\nஅனைத்து பிரச்னைகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் கலந்தாலோசித்து\nநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅடடா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleupy.blogspot.com/2015/04/blog-post_12.html", "date_download": "2018-08-21T14:17:19Z", "digest": "sha1:MZEOANI6AVUGS5M6SP7Q72AYRCSCEYKP", "length": 2118, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: நன்றி! நன்றி!! நன்றி!!! தலைமையின் அறிவிப்பை தலைமேல் கொண்டு அற்புதமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nபுதன், 22 ஏப்ரல், 2015\n தலைமையின் அறிவிப்பை தலைமேல் கொண்டு அற்புதமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 8:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleupy.blogspot.com/2017/02/8-8_16.html", "date_download": "2018-08-21T14:15:28Z", "digest": "sha1:BTK2TQG7YV7RBQBDVWKRY2ESSLOFVFZM", "length": 2434, "nlines": 26, "source_domain": "bsnleupy.blogspot.com", "title": "BSNLEU PY: சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டு செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா புகைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டினை வெற்றிகரமாக்கிய செந்தொண்டர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்……", "raw_content": "<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nவியாழன், 16 பிப்ரவரி, 2017\nசென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டு செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா புகைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற 8வது அனைத்திந்திய மாநாட்டினை வெற்றிகரமாக்கிய செந்தொண்டர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்……\nஇடுகையிட்டது bsnleu py நேரம் முற்பகல் 1:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2008/10/blog-post_23.html", "date_download": "2018-08-21T14:32:06Z", "digest": "sha1:HCD7KUZ2TITZZRI5NABHTZKN5HIPYRTA", "length": 26561, "nlines": 390, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: தீபாவளி ஒழியட்டும். ஏன்?", "raw_content": "\n தீபாவளின்னா தமிழனோட கருமாதி, தமிழனோட திதி.\n புராணங்களில் உள்ள ஆரிய, திராவிட போர்கதைகளில், திராவிடர்களின் பிரதிநிதி அவன். அவனை மோசமானவனாகவும், கொடூரனாகவும் சித்தரித்தது, அந்த புராணங்களையெல்லாம் படைத்த ஆரிய மிருகங்கள். இதை நான் சொல்லவில்லை. \"புராணங்கள் எல்லாமே ஆரிய-திராவிட போரின் புனைவுக் கதைகளே\" என நம் நாட்டின் முதல் பிரதமர் ஆரியர், சவகர்லால் நேரு சொல்லியிருக்கிறார். நரகாசுரன் யார் பூணூல் தரிக்கா திராவிட மன்னன். அவனின் மரணத்தை, திராவிட இன மன்னனின் சாவை, நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சிக்கு நாம் இன்னும் இரையாகத்தான் வேண்டுமா பூணூல் தரிக்கா திராவிட மன்னன். அவனின் மரணத்தை, திராவிட இன மன்னனின் சாவை, நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சிக்கு நாம் இன்னும் இரையாகத்தான் வேண்டுமா சுயபுத்தியுடன் சிந்தியுங்கள். உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உங்களிடம் ஏதெதோ சொல்லி உங்களை சிறு வயதில் இருந்து தீபாவளி கொண்டாட வைத்திருக்கலாம். ஆனால் சிந்திக்கவேண்டும் தோழர்களே. சற்று சிந்திக்கவேண்டும். தன் இனத்தின் தோல்வியை புராணத்தில் கண்டு, அதற்காக பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்திக் கொண்டாடும் ஒரே இனம் தமிழினம். இதை விட அசிங்கம் ஏதும் உள்ளதா சுயபுத்தியுடன் சிந்தியுங்கள். உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உங்களிடம் ஏதெதோ சொல்லி உங்களை சிறு வயதில் இருந்து தீபாவளி கொண்டாட வைத்திருக்கலாம். ஆனால் சிந்திக்கவேண்டும் தோழர்களே. சற்று சிந்திக்கவேண்டும். தன் இனத்தின் தோல்வியை புராணத்தில் கண்டு, அதற்காக பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்திக் கொண்டாடும் ஒரே இனம் தமிழினம். இதை விட அசிங்கம் ஏதும் உள்ளதா நாம் இதைத் தாங்கித்தான் ஆக வேண்டுமா நாம் இதைத் தாங்கித்தான் ஆக வேண்டுமா சுரணை என்ற ஓர் உணர்வேண்டும் தமிழர்களே. அதற்கு சுயமாய்ச் சிந்தித்தல் வேண்டும். சுயமாய்ச் சிந்திக்காத எதற்கும் சுரணை வந்ததாய் சரித்திரமில்லை தோழர்களே.\nநீங்கள் இதைப் படிக்கலாம், உங்களுக்கு உறைக்கவும் செய்யலாம், ஆனால் தீபாவளியை நீங்கள் புறக்கணிக்க எத்தனிக்கும் போது உங்கள் தாயோ, தந்தையோ இப்படிச் சொல்வார்கள், \"அதெல்லாம் வெட்டிப் பேச்சு. நமக்கு ஒத்துவராது. அதையெல்லாம் கேட்காதே\" என்று. நீங்களும் சட்டென மாறிவிடுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், சுயமாய்ச் சிந்தியுங்கள் தோழர்களே. சிந்தியுங்கள். சிந்திப்பதால் தான் நீங்களும் நானும் மனிதர்கள். அது இல்லையேல்நாய் போல், தெருப் பன்றி போல் நாம் அடிமைகள். வெறும் அடிமைகள்.\nதீபாவளியைப் புறக்கணிப்போம். எவனுக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லாதீர்கள். கருமாதிக்கு வாழ்த்துச் சொல்லுவீர்களா அதுபோல் தான் இதுவும். தீபாவளி அன்று தமிழகம் எழவு வீடு நண்பர்களே. தீபாவளி என்றால் தமிழன் வீட்டில் ஒரு துக்கநாள். தயவு செய்து கொண்டாடாதீர்கள். உங்கள் இனம் அழிக்கப்பட்டதாய்ச் சொன்ன ஆரியர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்.\nதீபாவளி ஒழிக. தமிழினத்தின் சுயமரியாதையும், சுரணையும் வாழ்க.\nLabels: கட்டுரை, சமுதாயம், மதம்\nஎனக்கு இதில் உடன்பாடு இல்லை அசோக்..\nஏன் பண்டிகையை புராணத்தின் அடிப்படையிலேயே பார்கிறிர்கள்.\nநம்மில் எத்தனை பேர் நரகாசுரனை ஞாபகம் வைத்து பட்டாசு கொளுத்துகிறார்கள்\nநண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியுடன் மக்கள் இருந்து விட்டு போகட்டுமே. அந்த சந்தோஷத்தை எப்போதோ சித்தரித்த புனைவுக் கதைகள் காரணம் காட்டி புறக்கணிக்க வேண்டாமே.\nஇதனால் நம் திராவிட இனம் இழிவுபடுத்தபடுகிறது என்று சொல்வது சரி அல்ல..\nஅது சரி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி மக்களை பிரித்து பார்த்து பேசுவிர்கள் என்று தெரியவில்லை.\nதிராவிடர்கள் எல்லாரும் தூய்மையனவர்களும் இல்லை ஆர்யர்கள் எல்லாரும் மிருகங்களும் இல்லை.\nபிரதீப் - கற்றது நிதியியல்\nஇளா, இன்னும் 500 வருஷத்தில 2009-ஆம் ஆண்டு ஈழத்தில் ஒரு அசுரனும் அவனது வானரப் படைகளும் அழிந்ததிற்கு தமிழன் இன்னொரு பண்டிகை கொண்டாடப் போறான். இன்னும் பழங்கதை பேசிக்கிட்டு...\nஎனக்கு இதில் உடன்பாடு இல்லை அசோக்..\nஏன் பண்டிகையை புராணத்தின் அடிப்படையிலேயே பார்கிறிர்கள்.\nநம்மில் எத்தனை பேர் நரகாசுரனை ஞாபகம் வைத்து பட்டாசு கொளுத்துகிறார்கள்\nநண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியுடன் மக்கள் இருந்து விட்டு போகட்டுமே. அந்த சந்தோஷத்தை எப்போதோ சித்தரித்த புனைவுக் கதைகள் காரணம் காட்டி புறக்கணிக்க வேண்டாமே.\nஇதனால் நம் திராவிட இனம் இழிவுபடுத்தபடுகிறது என்று சொல்வது சரி அல்ல..\nஅது சரி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி மக்களை பிரித்து பார்த்து பேசுவிர்கள் என்று தெரியவில்லை.\nதிராவிடர்கள் எல்லாரும் தூய்மையனவர்களும் இல்லை ஆர்யர்கள் எல்லாரும் மிருகங்களும் இல்லை.\nபுராணத்தின் படி பார்க்காமல் எப்படி பார்ப்பது,திராவிட இனம் இழிவுபடுத்த படவில்லை என்கிறீர்களா ,திராவிட இனம் இழிவுபடுத்த படவில்லை என்கிறீர்களா அப்படியே கண்ண மூடிட்டு எத சமுகம் செஞ்சாலும் அப்படியே செய் அப்படின்னு சொல்லவரிங்களா அப்படியே கண்ண மூடிட்டு எத சமுகம் செஞ்சாலும் அப்படியே செய் அப்படின்னு சொல்லவரிங்களா சிந்திக்கவே வேணாம் அப்படின்னு சுருக்கமா சொல்லுங்க......\nநீங்கள் சொல்வதோடு நான் மிகவும் கொஞ்சமாக ஒத்துப் போகிறேன். மக்கள் சந்தோசமாக இருப்பதை கெடுக்க எனக்கும் மனமில்லைதான். எனக்கும் மனம் வருவதற்கு நீங்கள் செய்யவேண்டியது நரகாசுரன் திராவிட மன்னன் என்பதையும், அவன் திராவிடனாய் புராணத்தில் உருவாக்கியதே அவனை கெட்டவனாய் சித்தரிக்கத்தான் என்பதையும் மக்களிடம் கொண்டு சேருங்கள். ஏன் சேர்க்க வேண்டுமென்றால் இன்னும் தீபாவளி வாழ்த்து சொல்லும்போது நம்மிடையே வாழும் ஆரியர்களில் பலர் நரகாசுரனை நியாபகப்படுத்தி வாழ்த்து சொல்கின்றனரே, அதை ஒழிக்க இனத்துக்கான வரலாற்றில் நம் திராவிட இனத்தை இழிவுபடுத்தி, அதை நம்மையே கொண்டாட வைத்த ஆரியர்களின் சூழ்ச்சியை நமக்குப் பிறகு வரும் தலைமுறையாவது புரிந்துகொண்டு மானம் மரியாதையுடன் வாழட்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கட்டுரை.\nநீங்கள் சொல்வது எப்படியுள்ளது என்றால் \"கருமாதி அன்னிக்கு பிரியாணி சாப்பிட்டு மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் அதனால் சாவு நடந்தது நல்லதுக்குதான்\" எனச் சொல்வதைப் போல் உள்ளது\nமக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் பெரிய மாற்றம் வரும்ன்னு நினைக்கறிங்களா..எல்லாரும் 'victory of gud over evil' nu தானே நினைச்சு கொண்டாடுறாங்க. நீங்க ஏன் நம்மளை தான் இழிவுபடுத்துறாங்க என்ற நோக்கத்துலேயே பாக்கறிங்கன்னு தான் கேட்கிறேன். சிந்திக்க வேணாம் ன்னு சொல்ல வரல, ஆனா இந்த பழைய கதை தேவை இல்லாததுன்னு சொல்றேன்.\n//இன்றும் ஆரியர்களில் பலர் நரகாசுரனை நியாபகப்படுத்தி வாழ்த்து சொல்கின்றனர்//\nஅவங்க வெறும் 'நரகாசுரனை' மட்டும் தான் குறிப்பிட்டு இருப்பாங்க, நீங்க ஏன் அப்படி தப்பா நினைச்சுகறிங்க.\nஅந்த காலத்துல பெரும்பான்மையான ஆரியர்கள் அப்படி கேவலமா நடந்துகிட்டாங்க..இப்பவும் அதையே நினைச்சுக்கிட்டு அடுத்த தலைமுறை ஆரிய மக்களையும், நண்பர்களையும் புண்படுத்த வேண்டாமே. அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். ஒன்றாக பார்போமே.\nநீங்க இதுல உள்ள விஷயத்தைப் புரிஞ்சுக்கவே இல்ல. தீபாவளியை கொண்டாட திராவிட மன்னனின் சாவை காரணமாய் சொல்வதுதான் தவறுனு சொல்றேன் நீங்க தீப ஒளி திருநாள்னு கொண்டாடிட்டுப் போங்களேன். நாங்க என்ன சொல்லப் போறோம் நீங்க தீப ஒளி திருநாள்னு கொண்டாடிட்டுப் போங்களேன். நாங்க என்ன சொல்லப் போறோம் உங்களுக்கு கொண்டாடனும் அவ்வளவுதானே காரணம் என்னவா இருந்தா என்ன ஆனால், நேரு சொன்னது போல், ஒரு இனத்தையே இழிவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட அயோக்கியத்தனத்தை ஒருகாலும் தூக்கிப்பிடிக்க முடியாது, கூடாது. அதுவும் போக \"ஆரியர் முன்னேற்ற கழகம்\" ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற எஸ்.வி.சேகர் மாதிரி ஆரியர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள் ஆனால், நேரு சொன்னது போல், ஒரு இனத்தையே இழிவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட அயோக்கியத்தனத்தை ஒருகாலும் தூக்கிப்பிடிக்க முடியாது, கூடாது. அதுவும் போக \"ஆரியர் முன்னேற்ற கழகம்\" ஆரம்பிக்கப் போறேன்னு சொல்ற எஸ்.வி.சேகர் மாதிரி ஆரியர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள் அவர்களை எதிர்க்க விரும்பவில்லை. எம்மைக் காத்துக் கொள்ளவே விரும்புகிறோம். நாளை நரகாசுரனுக்கு ஏற்பட்ட நிலை பெரியாருக்கு ஏற்படாமல் இருக்கவே இந்தக் கட்டுரைகளும், பிரச்சாரங்களும், விழிப்புணர்வு வார்த்தைகளும்\nபெரியார் பற்றியெல்லாம் எவனும் பேச முடியாது. அந்த அளவுக்கெல்லாம் போக விட மாட்டோம்.\nஉங்கள் கட்டுரைகளின் நோக்கத்திற்கு வாழ்த்துக்கள்...\nகறுப்பும் காவியும் - 16\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/87815.html", "date_download": "2018-08-21T13:35:25Z", "digest": "sha1:EY5YBDGM6UXNZ2J5LAR3KB46AHWWVJYK", "length": 5158, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடக்கில் நாளை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு – Jaffna Journal", "raw_content": "\nவடக்கில் நாளை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் அனைவரும் நாளைக் காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார்.\nசம்பள முரண்பாடு, பதவியுயர்வு , மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஎனினும் நோயாளர்களினதும், பொதுமக்களினதும் நன்மை கருதி அவசரசிகிச்கைக்கு பிரிவில் மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaiarasan.wordpress.com/", "date_download": "2018-08-21T13:30:18Z", "digest": "sha1:HGZDYJG63LOJFKPYO5MHA4KRZTZAYS5C", "length": 25314, "nlines": 384, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "தூறல் | கவிதை வானில் நானுமொரு சிறு தூறல்…", "raw_content": "\nஓகஸ்ட் 15, 2015 இல் 9:46 பிப\t(கவிதைகள்)\nஓகஸ்ட் 14, 2015 இல் 4:43 பிப\t(கவிதைகள்)\nமுதுகின் அழுக்கை சுட்டிக்காட்ட எத்தணித்தேன்.\nஉன் கையின் கரைகளை துடைத்துவிட்டாயா\nஜனவரி 9, 2015 இல் 7:17 பிப\t(கவிதைகள்)\nஅமாவாசை இரவின் வானம் போலவே\nஒளியற்று நகர்கிறது என் நாட்கள்\nமுழுமதி நீ என்னருகில் இல்லாததால்.\nஅதிகாலை கைபேசி உரையாடலின் ஊடேவெளிப்படும்\nதொலைவில் இருக்கின்றேனோ என எண்ணும் போதெல்லாம் உணர்கிறேன்….\nஅச்சாக நின்று ஆரத்தின் அளவை\nஜூன் 26, 2012 இல் 1:13 பிப\t(அ,ஆ...கவிதைகள், கவிதைகள்)\nTags: அ ஆ... கவிதைகள், அகவை, அழகு, உயிர் வர்க்கம், கவிதை, வயது, Kalai\nஅகவை என்ன அழகின் அளவு கோலா\nஆண்டுகள் கடந்து அகவை அதிகமானால்\nஐயமுற்று மனது அல்லலுறும் – எதனோடும்\nஓங்கிய குணத்தார்க்கும் மனத்தாற்கும் பொறுந்தாது;\nஔரவமாவள் உன் அழகிலும் மனதிலும்\nசெப்ரெம்பர் 30, 2010 இல் 1:24 முப\t(ஹைகூ)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nTags: Appa-Death-Anniversary/, நினைவு நாள், மார்த்தாண்டம்\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஉங்கள் நினைவுகள் நெருங்கியே வருகின்றது;\nஉங்கள் நினைவு நாட்கள் மட்டுமே நீனைவுட்டுகின்றது\nநாட்கள் தினம் நகர்ந்து போகும்\nகாணியாற்றில் நீங்கள் நட்ட மரம்கூட\nஎங்கள் இளமையும் முதுமையாய் வளர்ந்து போகும்\nஉங்கள் நினைவுகள் மட்டும் எப்போதும் எங்களில்\nஎன் நினைவில் நிற்கும் முதல் பதிவே\nகாணியாற்று விளையை உற்றுநோக்கியது தான்;\nஇப்போதும் அதே தோழ்களில் அமர்ந்தே\nஉலகை வலம் வருவதாய் உணர்கின்றேன்.\nபிப்ரவரி 26, 2010 இல் 11:23 முப\t(கவிதைகள்)\nதொட்டியில் விழும் எச்சில்இலைக்காக ஏங்கிநிற்கும்\nஐந்தறிவு ஜீவன் போல தெரிகின்றது;\nஇலவசங்களுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம்.\nஒக்ரோபர் 24, 2008 இல் 9:01 பிப\t(கவிதைகள்)\nநகர்ந்து கொண்டிருக்கும் நாட்களில் மீண்டும் ஒரு தீபாவளி\nஅகந்தை அழிந்ததின் அடையாளமாய் நாமெல்லாம் கொண்டாடிடும் தீபாவளி\nமகிழ்ந்தே இந்தியரெல்லாம் நாடெங்கும் ஒன்றாய் கொண்டாடிடும் தீபாவளி\nதகர்ந்தே போகட்டும் நமைவாட்டும் துன்ப மெல்லாம் இத்தீபாவளி\nநரகதுயரில் மக்களை தள்ளிய நரகாசுரன் அழிந்ததால் இத்தீபாவளி\nவரம்பல இறைவன்தர தீபமேற்றி பூஜிக்கும் நன்னாள் இத்தீபாவளி\nசுரமாய் சந்தோசம் ஒருமித்து எல்லோர்க்கும் தரும் தீபாவளி\nசிரம்முதல் அடிவரை எண்ணெய் தேய்த்து குளிப்போம் இத்தீபாவளி\nஅரக்கன் அழித்து பயத்தை கழைந்ததால் வந்தது இத்தீபாவளி\nஇரக்கம் மனதில்கொண்டே வாழ்வில் சிறக்க சபதமேற்போம் இத்தீபாவளி\nபரணில் ஏற்றி வைப்போம் வீண் பயத்தை இத்தீபாவளி\nதரணியெங்கும் புத்தாடை தரித்து பவனி வருவோம் இத்தீபாவளி\nதீபஒளியேற்றி தீர்ந்தது அரக்கன் தொல்லையென்று கொண்டாடிடும் தீபாவளி\nசாபமாய் வளர்ந்துநிற்கும் சாதி கொடுமைக்கு தீவைப்போம் இத்தீபாவளி\nஅபத்தமான மூடப் பழக்கங்களை தீயிலிட்டு தீபமேற்றுவோம் இத்தீபாவளி\nஉபயம்செய்தே இன்னல் தீர்த்து ஏழைவாழ்வில் தீபமேற்றுவோம் இத்தீபாவளி\nஅரக்கன்தந்த துன்பம் தீர்ந்ததென்று வெடியிட்டு கொண்டாடிடும் தீபாவளி\nஇரக்கமற்ற கொடியவர் வெடிவைத்து மக்கள் உயிர்குடிக்கும் நிலையறுத்து\nகரங்கள் கோர்த்து கொடியோரின் வேரருக்க வெடிவைப்போம் இத்தீபாவளி\nதரணியெங்கும் துஷ்டர்கள் ஒளிக்க சபதமேற்று கொண்டாடுவோம் இத்தீபாவளி.\n(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)\nஒக்ரோபர் 24, 2008 இல் 8:53 பிப\t(கவிதைகள், பொதுவானவை)\nஎன்றோ இறந்த நரகாசுரனை நினைந்து\nவாய் ருசிக்க பலகாரவகை உண்டு\n(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)\nஒக்ரோபர் 21, 2008 இல் 6:56 முப\t(சமுதாயம், பெண்ணியம்)\nTags: பரத்தை, பெண்ணியம், prostitute\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nவைகறைக் காற்றே வைகறைக் காற்றே- பாடல்\nமெல்லிய தூரலாய் என்னைத் தொட்டாய்...\ndorseyfloyd2147 on உன்னத சுதந்திரம்.\nப்ரவீன் on பேய் நடமாட்டம்.\na.fazith on எந்நாளும் காதல் தினம்.\nAsir Anbazhagan on அழகின் அளவுகோல்\nThandapani.S on அழகின் அளவுகோல்\nsubha on நடுத்தரவர்க்கத்தின் தவிப்பு.\nsubha on அழகின் அளவுகோல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/abdhul-kalam/", "date_download": "2018-08-21T13:29:22Z", "digest": "sha1:UPAWS646LJHCBACGUVL6LPG4ONO5WEHU", "length": 4739, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Abdhul kalam Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n கலைஞர் இறுதிச்சடங்கில் பரபரப்பாய் இருந்த முகம்..\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லடக்க நிகழ்ச்சியில் எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாகப் பணியாற்றினார், அமுதா ஐ.ஏ.எஸ். தேசமே கவனித்த ஒரு நிகழ்ச்சியில், குடும்பத்தினரின் சென்ட்டிமென்ட் காயப்படாமலும் சிக்கல் இல்லாமலும் கையாண்டார். பரபர...\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/07/how-who-is-eligible-get-e-pan-012080.html", "date_download": "2018-08-21T14:10:19Z", "digest": "sha1:DOB5XBBVPRNWMTDJSN5RYCDJFXGT2J5I", "length": 19696, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்? எப்படிப் பெறுவது? | How And Who Is Eligible To Get e PAN? - Tamil Goodreturns", "raw_content": "\n» இ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nயாரெல்லாம் ஆதாருக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று தெரியுமா\nஇனி சாப்ட்வேர் புரோகிராமர்களுக்கு எச்-1பி விசா கிடையாது: 'டிரம்ப்' அதிரடி முடிவு\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்\nஅயல்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்\nவீட்டு வாடகை படிக்கு உரிமையாளரின் பான் எண் இல்லாமல் வரி விலக்கு கோர முடியுமா\nபான் கார்டு விண்ணப்பம் ஏன் தாமதமாக செயல்படுத்தப்படுகிறது தெரியுமா\nஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள், ஆதார் எண்ணோடு மொபைல் எண்ணையும் இணைத்துள்ளவர்கள் வருமானவரித் துறையின் இணையதளம் மூலமாக எலக்ட்ரானிக் பான் அட்டை (e-PAN) பெறலாம்.\nதற்போதைய நிலையில், இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ( HUFs), அறக்கட்டளைகள், நிறுவனங்கள், உரிய வயதடையாத மைனர்கள், இந்தியாவில் வசிக்காதவர்கள் (NRI) போன்றோர் இணையம் வழியாக எலக்ட்ரானிக் பான் அட்டை (e-PAN) பெறமுடியாது.\nஒருவருடைய வருமானம், வருமானத்துக்கான ஆதாரம், செலுத்திய வரி போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் பான் அட்டை உதவுகிறது.\nகீழ்க்கண்ட நடைமுறைகளின் போது பான் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n1. 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட அசையாச் சொத்துக்களை வாங்கினாலும் விற்றாலும்,\n2. 50,000 ரூபாய்க்கு அதிகமான வங்கிப் பரிவர்த்தனைகளின் பொழுது,\n3. வங்கிக் கணக்கு அல்லது டீ மேட் கணக்குத் தொடங்கும் பொழுது,\n4. மோட்டார் வாகனங்களை வாங்கும் பொழுதும் அல்லது விற்கும் பொழுதும்,\n5. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் பொழுது,\nஆகிய நடவடிக்கைகளின் பொழுது பான் எண் அவசியம்.\nடிஜிட்டல் கையெழுத்துடன், மின்னணு வடிவத்தில் பெறக்கூடிய பான் அட்டையைத்தான் எலக்ட்ரானிக் அல்லது மின்- பான் அட்டை என அழைக்கிறோம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் ஜீன் 29 ஆம் தேதி முதல் மின்- பான் எண் வழங்கப்படுகிறது. ஏற்கனவே மெய்வடிவில் பான் அட்டை (physical PAN) பெற்றறவர்ளும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின்-பான் அட்டையப் பெறலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.\nஇ-பான் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது\nஏற்கனவே பான் அட்டை இல்லாதவர்கள் மின் - பான் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் பெற்றவர்கள், அந்த ஆதார் எண்ணோடு தங்களுடைய மொபைல் எண்ணை இணைத்தவர்கள் இந்திய வருமானவரித் துறையின் இணையத் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.\nவாடிக்கையாளரைப் பற்றிய தகவல்கள் (KYC) உங்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை பயன்படுத்துதற்கு ஏற்ற கடவுச் சொல் மூலம் உறுதி செய்யப்படும்.\nஆதார் எண்ணில் உள்ள தகவல் தொகுப்பின் அடிப்படையில் மின்- பான் அட்டை வழங்கப்படும். உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை உரிய வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nமின் - பான் அட்டை பெற்றவர்களுக்கு மெய்வடிவ பான் அட்டை வழங்கப்படாது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://suvatukal.blogspot.com/2005/06/blog-post_111771358447396222.html", "date_download": "2018-08-21T13:35:16Z", "digest": "sha1:JE5WCPFAUEPLPQTJNHS7TI66KM4NZEGS", "length": 20846, "nlines": 124, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: முஸ்லீம்களின் சமுதாயப் பார்வை", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nஇந்தியாவில் முஸ்லீம்களின் சமூக நிலை அவர்களது சமூகப் பார்வையை பொருத்தே அமைகிறது. இந்திய சமூகக் கூட்டமைப்பு என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியதே. ஆனால், முஸ்லீம்கள் இந்த கூட்டமைப்பினுள் இருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.\nஇந்திய முஸ்லீம்கள் தனக்குத்தானெ ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொண்டு அதைவிட்டு வெளிவராமல் தனது இயலாமைக்குக் காரணம் மற்றவர்கள்தான் என்று குற்றம் சுமத்தி வருவதும் ஏற்புடையதல்ல. மாற்றார்களின் அரசியல் அரங்கில் எத்தனை நாளைக்குத்தான் முஸ்லீம்கள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் குருட்டுத் தனமாக வாழமுடியும். எந்த அரசும் அல்லது எந்த மாற்றார்களின் சமூகமும் முஸ்லீம்களை கைதூக்கிவிட வராது என்பதை எப்போதுதான் இந்த சமூகம் புரிந்துக் கொள்ளப்போகிறதோ தெரியவில்லை. முஸ்லீம்களின் சமூகப்பார்வை மாறாத வரை எந்த மற்றமும் வாராது. இறைவன் குரானில் சொல்வது போல் 'முஸ்லீம்கள் தானாக மாறாதவரை இறைவனும் உதவி செய்ய மாட்டான்' என்பதை முழுவதும் மறந்தவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.\nமுஸ்லீம்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு தலைவனிடம் தங்களது தலைவிதியை ஒப்படைத்துவிட்டு 'எல்லாம் அந்த தலைவர் பார்த்துக் கொள்வார்' என்ற சோம்பேறித்தனமான சிந்தனையில் உழன்று கொண்டிருக்கிறோம். தலைமைக்கு கட்டுப்படுவதென்பது வேண்டியதே, அதற்காக தகுதியற்றவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்து அவர்களிடம் முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்துவிட்டோம். அப்படிப்பட்ட தலைவர்களும் ஆளுங்கட்சிகளிடம் புகலிடம் தேடி தங்களை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர்த்து இந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு ஒரு சரியான சமூக அரசியல் கொள்கையை உருவாக்கியதாகவோ அல்லது கல்வி மேம்பாட்டிற்கு உழைத்ததாக தெரியவில்லை. இடைப்பட்ட காலத்தில் தோன்றிய தலமைகள் எல்லாம் குழப்பத்தில் வாழ்ந்தும் வழி காட்டிக் கொண்டும் இருக்கின்றார்களே தவிர்த்து திடமான ஒரு வாழ்வியல் திட்டத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது உருவாக்கவோ இயலாமல் இருக்கிறார்கள்.\nபொதுவாகவே இந்தியாவில் முன்னேற்றம் என்பது இயற்கையாகவே ஏற்படக்கூடிய ஒரு வளர்ச்சிதானே தவிர்த்து அரசியல் தலைவர்களால் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களால் நடத்திச் செல்லப்படுவதல்ல. முன்னேற்றம் என்பது ஒரு பரிமான வளர்ச்சியே தவிர்த்து ஒரு நெறியாள்கைக்கு உட்பட்டு நடக்கக் கூடிய ஒன்றாக இதுவரை இல்லை.\nஏதோ மழை பெய்கிறது, அதில் ஏதோ முளைத்து செடியாகி, மரமாகி எதையோ கொடுக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அதை அனுபவித்துக் கொள்கின்றார்கள். இப்படித்தான் இந்த GDP வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறதே தவிர்த்து ஒன்றும் பிரமாதமான திட்டத்துடன் செயல்பட்டதாக தெரியவில்லை. அவ்வப்போது ஒரு சில அரசியல் நல்லவர்கள் அங்கங்கே கொஞ்சம் நீரூற்றி, வேலி கட்டி ஏதாவது ஒரு பாதுகாப்பை செய்துவிட்டு செல்வார்கள், அதை காலமெல்லாம் சொல்லிக் கொண்டு பின்னால் வருபவர்கள் பெருமை தேடிக் கொள்வார்கள்.\nஇந்த பொதுவான விதியில் கூட முஸ்லீம்கள் பின் தங்கியிருப்பது வருத்தமான நிலை. வெறும் புல் பூண்டுகளாக முளைத்து தனக்கும் பிரயோசனமில்லாமல், தன்னால் பிறருக்கும் பயனில்லாமல் வாழ்ந்துவருவது ஒரு இஸ்லாமிய வாழ்க்கையே இல்லை.\nமுஸ்லீம்களிடம் புரையோடிக்கிடக்கின்ற பிரச்சனைகளை பட்டியலிட்டால் இந்த சமூகம் எப்படியெல்லாம் உள்ளும் புறத்திலும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வரும். ஒரு புறத்தில் ஆளும் வர்க்கத்தின் மாற்றந்தாய் அணுகுமுறைகளும், இன்னொரு புறத்தில் தகுதியற்ற தலைவர்களிடம் அகப்பட்ட பகடைக்காய்கள் போலவும் வெறும் சுமை தாங்கிகளாக அடிமட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.\nஇதை நன்குணர்ந்த நல்ல மனிதர்கள் முஸ்லீம்களிடத்திலே பலர் உள்ளனர். அவர்களை வளரவிடாமல், வாய்ப்பு கொடுக்காமல் முளையிலேயே கிள்ளும் வேலைகளில் முஸ்லீம் ஆளும் வர்க்கமும், மாற்றார்களின் அரசியல் விற்பன்னர்களும் கைக்கோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.\nதனக்குத்தானெ உதவி செய்துகொள்ள முடியாத ஒரு சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தின் சமூகப் பார்வை எப்படி ஒரு கூட்டமைப்பில் வாழும் சமூகப் பார்வையாக இருக்க முடியும் இது முஸ்லீம் சமுதாயத்தின் முன்னல் இருக்கக்கூடிய முதன்மையான சவால். ஆனால் இந்த சவால்கள் வெல்லக் கூடியதே.\nமுஸ்லீம் தலைவர்களுக்கு சமூக அங்கீகாரம் என்பது இரண்டு விதங்களில் கிடைக்க வேண்டியிருக்கிறது. ஒன்று முஸ்லீம் சமுதாயத்தில், இன்னொன்று இந்திய கூட்டமைப்பு சமுதாயத்தில். ஒன்றில் அங்கீகாரம் இருந்தால் இன்னொன்றில் இருக்காது. இது போன்ற அவல நிலை வேறு சமுதாயத்திலலும் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இந்த இரண்டிலும் அங்கீகாரம் பெறும் தலைவர்களால்தான் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்ல வழிகாட்டுதல்கள் கொடுக்க முடியும். இந்த அவலச் சூழலுக்கு அடிப்படைக் காரணம் கல்வியை, மார்க்க கல்வி என்றும் உலகக் கல்வி என்றும் தேவையில்லாமல் பிரித்து ஒரு பெரிய பிளவையே இந்த சமுதாயத்தில் ஏற்படுத்திவிட்டார்கள். மார்க்க கல்வி கற்றவர்கள் உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எதார்த்தமே இல்லாமல் சமூகத்தை நடத்தி செல்கிறார்கள். மறு பிரிவினர் வெறும் தொழுகை, நோன்பு என்று தனது ஆன்மீகத்தேவைகளை ஒரு கட்டுக்குள் நிறுத்திவிட்டு உலக ஆதாயங்களில் ஆழ்ந்து போய்விடுகிறார்கள். இந்த பிளவு தொடர்ந்து இருக்க வேண்டியது மாற்றார்களுக்கு அவசியமாகிவிடுகிறது. இதனாலேயே, இந்தியாவின் ஆளும் கூட்டனிகள் தேவைக்கேற்ப இந்த இரு பிரிவின் தலைவர்களையும் வைத்து பொம்மலாட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த பிரிவுகளை சமாளித்து, இரண்டிலும் அங்கீகாரம் பெற்று பிறகு இந்திய கூட்டமைப்பில் மரியாதைக்குரிய இடத்தை பெற வேண்டிய கட்டாயச் சூழலில் முஸ்லீம் இளைஞர் சமுதாயம் போராடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவ்வப்போது சமுதாயத்திற்கு தீவிரவாதம் பட்டம் கட்டி கிடைக்கும் ஒன்றிரண்டு முன்னேற்றத்தையும் அல்லது வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி நிற்கிறது இளைஞர் சமுதாயம். இப்படி சொந்த வீட்டையே சரி செய்ய இயலாமல் நிற்கும் இந்தக் கூட்டம் எப்படி இந்திய கூட்டமைப்பில் நின்று சிந்திக்கக் கூடிய மனிதர்களாக மாறுவார்கள்\nஇப்படிப்பட்ட குழப்பமான சமுதாயப் பார்வைகள்தான் தற்போது முஸ்லீம்களிடத்தில் இருக்கிறது. இதை மாற்றி, ஓரளவாவது ஒரு தெளிவான பாதையில் கால் வைக்கும்போதுதான் முஸ்லீம்களின் நாடு தழுவிய சமுதாயப் பார்வையில் மாற்றம் வரும். அப்படி வந்தால்தான் முஸ்லீம்களின் வாழ்விலும் ஒரு மறுமலர்ச்சி வரும்.\nஇதைச் செய்ய வேண்டிய பொறுப்பு முஸ்லீம் இளைஞர் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது. அதற்கவர்கள் முதலில் அரசியலில் முஸ்லீம்களுக்கு என்ன அங்கீகாரம் இருக்கிறது, எத்தனை ஒதுக்கீடுகள் கிடைக்கும் என்று தனது முழு சக்தியையும் அரசியல் உயற்விற்காக வீணடிக்காமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.\nமுஸ்லீமகளின் சமயம் சாராத சமுதாயப் பார்வைகள் அவர்களது கல்வியில் ஏற்படும் (மார்க்கம் மற்றும் உலகம்) முன்னேற்றத்தை பொருத்தே இருக்கிறது.\n//முஸ்லீம்களிடம் புரையோடிக்கிடக்கின்ற பிரச்சனைகளை பட்டியலிட்டால் இந்த சமூகம் எப்படியெல்லாம் உள்ளும் புறத்திலும் சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வரும்.//\nமுற்றிலும் உண்மை. தெரியப்படுத்தப் படவேண்டியதும் அவசியமானதாகும்.\nகல்வியின் அவசியத்தை/தேவையை முஸ்லீம் சமூகத்திடம் முன்னெடுத்து செல்லவேண்டியது ஒவ்வொரு படித்த முஸ்லீம்களின் கடமையும் கூட.\nஇளைஞர்கள் தங்களுக்குள் மாற்றத்தை வேண்டி பயணிக்கையில் எதிரிகள் அவர்களுக்கு தீவிரவாதிகள் என முத்திரைகுத்தி பொதுவிலிருந்து புறந்தள்ள எத்தனிக்கிறார்கள். இவ்வாறான முத்திரை குத்துவதன் மூலம் நடுநிலையாளர்களை முஸ்லிம்களுக்கு எதிராக மாற்ற முயல்கிறார்கள்.\nஆக இத்தகைய சூழ்ச்சிகளை இனங்கண்டு அழித்து, இச்சமுதாயத்தை முன்னேற்ற கல்வியும், திட்டமிடலும் அதிகமான உழைப்பும் அவசியம். இம்முன்னேற்றத்திற்காக நம்மால் ஆன உதவிகளை செய்ய நம்மிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதற்கு படித்தவர்கள் முன்வரவேண்டும்.\nபுலம்பிக்கொண்டு நிற்பதைவிடு, நமது முன்னேற்றத்திற்கான வழியை கண்டு அதனை நடைமுறைப்படுத்துவது மேல்.\nவரலாற்றில் சில ஏடுகள் - 3\nவரலாற்றில் சில ஏடுகள் - 2\nவரலாற்றில் சில ஏடுகள் - 1\nஉரிமையே உன் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16300", "date_download": "2018-08-21T13:41:10Z", "digest": "sha1:ZYHWJ4H3673MBJDI577QWSCBXELL4LEO", "length": 5902, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "இந்தோனேசியா - நிலநடுக்கத்தில் 131 பேர் பலி - Thinakkural", "raw_content": "\nஇந்தோனேசியா – நிலநடுக்கத்தில் 131 பேர் பலி\n17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.\nஇதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சமீபத்தில் 7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது.\nகடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.\nகடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.\nஇந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது எனவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை பகுதியில் ரொக்கட் தாக்குதல்\nஎளிமையின் மறுஉருவமாக விளங்கும் இம்ரான் கான்\nஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற நியூசிலாந்து பெண் மந்திரி\n« இம்ரான்கான் பதவி ஏற்பதில் சிக்கல்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/05/3_8.html", "date_download": "2018-08-21T14:08:25Z", "digest": "sha1:EM5XVBD2CUDZEWGYZCJEEPNF7O6BMTCJ", "length": 10726, "nlines": 101, "source_domain": "www.athirvu.com", "title": "யாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW யாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார்\nயாழ் காங்கேசன் துறையில் பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி ஒருவர், நோய்வாய்பட்ட நிலையில் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பால்வினை தொற்று நோய் எனக் கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியுடன் யாரோ உறவை வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டார்கள். வைத்தியர்கள் நடத்திய விசாரணையில் அச்சிறுமி, தன்னோடு ஒருவர் உறவுவைத்தாக ஒப்புக்கொண்டார்.\nஏற்கனவே தாயை இழந்து தவிக்கும் இச்சிறுமியின், தந்தையார் கடும் நோய்வாய்பட்டு உள்ளார். இன் நிலையில் அவர் தனது பாட்டியோடு வசித்து வந்துள்ளார். அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள, வீடு ஒன்றில் வசிக்கும். 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே தன்னோடு உடல் உறவில் ஈடுபட்டதாக சிறுமி அடையாளம் காட்டியுள்ளார்.\nஇதனை அடுத்து பொலிசார் அவரைக் கைதுசெய்ய முற்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.\nயாழில் பாலியல் நோயில் சிக்கிய சிறுமி: 3 பிள்ளைகளின் தந்தையான (ஆசாமி) பிடிபட்டார் Reviewed by athirvu.com on Friday, May 04, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/84745.html", "date_download": "2018-08-21T13:33:23Z", "digest": "sha1:UBI6GNCDHVUMMNA7KG64YBSXGB4TMWBD", "length": 8752, "nlines": 81, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா : வீதி தடை பற்றிய அறிவித்தல்!! – Jaffna Journal", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா : வீதி தடை பற்றிய அறிவித்தல்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nதொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்குச் சூர்யோற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்குகார்த்திகை உற்சவமும் நடைபெறவுள்ளது.\nமேலும்,16 ஆம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும்\nஅத்துடன் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07 மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 23 ஆம் திருவிழாவான 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 21 ஆம் திகதி காலை 07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.\nஇந்நிலையில் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி இன்று வியாழக்கிழமை முதல் நல்லூர் ஆலயத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளையும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துச் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nயாழ். நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும் வாகனங்கள் ஆனைப்பந்திச் சந்தி, நாவலர் வீதி, நல்லூர் குறுக்கு வீதி, பருத்தித்துறை வீதியூடாகப் பயணிக்குமாறும்,\nபருத்தித் துறை வீதியூடாக யாழ். நகர் நோக்கி வரும் வாகனங்கள் முத்திரைச் சந்தி, செம்மணி வீதி, கச்சேரி – நல்லூர் வீதி, கண்டி வீதி சென்றடைந்து அங்கிருந்து யாழ். பேருந்து நிலையத்தைச் சென்றடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வீதி மாற்று நடைமுறை இன்று வியாழக்கிழமை(27) நண்பகல்- 12 மணி முதல் அடுத்த மாதம்- 23ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமெனவும், எனவே, வாகனச் சாரதிகள் இந்த மாற்று வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் வாகனச் சாரதிகளிடம் கேட்டுள்ளார்.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/07154736/the-end-of-this-month-naragasooran.vpf", "date_download": "2018-08-21T13:40:57Z", "digest": "sha1:MRMZRMWTULYIZBZ2YGD5DHE2PIQQRN5Z", "length": 9271, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "the end of this month naragasooran || இம்மாதம் இறுதியில் ‘நரகாசுரன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\n‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் டைரக்ஷனில் அடுத்து, ‘நரகாசுரன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.\nஅரவிந்தசாமி-ஸ்ரேயா கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். ஆத்மிகாவும், கிட்டியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி டைரக்டர் கார்த்திக் நரேன் கூறுகிறார்:-\n“கதைப்படி, அரவிந்தசாமி புதிதாக திருமணம் ஆனவர். அவருடைய மனைவி ஸ்ரேயா. இவர்கள் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று 41 நாட்களில் முடிவடைந்தது.\nபடம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. எந்த காட்சிகளும் நீக்கப்படாமல், படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.\n“நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததால்தான், 41 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க முடிந்தது” என்கிறார், டைரக்டர் கார்த்திக் நரேன்.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை தயவு செய்து உதவுங்கள் என்று உதவி கேட்டு வீடியோ\n2. தனது மகனாக நடித்த நடிகரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடிகை மீது புகார்\n3. விஜய் பட டிரெய்லர், அஜித் படத்தின் முதல் தோற்றம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகிறது\n4. நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் காலமானார்\n5. “எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/06161339/BJP-President-Amit-Shah-to-meet-Maharashtra-CM-Devendra.vpf", "date_download": "2018-08-21T13:40:59Z", "digest": "sha1:APT3ZUPKUY3K7YBYE7JZDHG3TZ4LXIV7", "length": 11745, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP President Amit Shah to meet Maharashtra CM Devendra Fadnavis & Maharashtra MPs || மராத்தா சமுதாயத்தினர் போராட்ட விவகாரம்: முதல்-மந்திரி, எம்.பிக்களை சந்திக்கிறார் அமித் ஷா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nமராத்தா சமுதாயத்தினர் போராட்ட விவகாரம்: முதல்-மந்திரி, எம்.பிக்களை சந்திக்கிறார் அமித் ஷா + \"||\" + BJP President Amit Shah to meet Maharashtra CM Devendra Fadnavis & Maharashtra MPs\nமராத்தா சமுதாயத்தினர் போராட்ட விவகாரம்: முதல்-மந்திரி, எம்.பிக்களை சந்திக்கிறார் அமித் ஷா\nமராத்தா சமுதாயத்தினர் போராட்டம் விவகாரம் குறித்து முதல்-மந்திரி, எம்.பிக்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #AmitShah #MarathaReservation\nமராட்டியத்தின் மக்கள் தொகை சுமார் 12 கோடி. இதில் 30 சதவீதம் பேர் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்.\nகடந்த 25-ந்தேதி இடஒதுக்கீடு கோரி மும்பை, தாேன, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். முழு அடைப்பு நடந்த மாவட்டங்கள் மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.\nபஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. குறிப்பாக நவிமும்பையில் நடந்த வன்முறைக்கு வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 6 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாய தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறப்பு சட்டசபை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். இதனால் கலவரம் சற்று ஓய்ந்தது.\nஇந்தநிலையில் வரும் 9-ந்தேதி மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட போவதாக மராத்தா சமுதாயத்தினர் அறிவித்து உள்ளனர். இது மாநிலத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்பு படையை அனுப்பவேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்தநிலையில் மராத்தா சமுதாயத்தினர் போராட்டம் விவகாரம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் மராட்டிய எம்.பிக்களை இன்று இரவு 7 மணி அளவில் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது மராத்தா சமுதாயத்தினர் நடத்தி வரும் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்\n2. தமிழர்களின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் நம் கேரள சகோதரர் மற்றும் காவல் துறையினர்..\n3. செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\n4. 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி\n5. ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்\n1. வெள்ளத்தில் பசியால் வாடிய மக்கள்; பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த அமைச்சர்\n2. உதவிக்கு சென்ற 11 பேர், இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை\n3. கேரள வெள்ளத்தில் தவித்த 126 பேரை 9 மணி நேரத்தில் மீட்ட கன்னியாகுமரி மீனவர்கள்\n4. அரசு விளம்பரத்தில் பெண்ணுடன் அவர் கணவருக்கு பதில் வேறு ஆண்\n5. முறையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்காததே கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு காரணம்: சுப்ரமணியசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=612384-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?", "date_download": "2018-08-21T14:01:37Z", "digest": "sha1:J5777AKS7VTDYBXHVZ7DFWOSGCRP4OTJ", "length": 11816, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "செவ்வாயில் பனிக்கட்டிகள்! – மனிதர்கள் வசிக்க முடியுமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் 70 லட்சம் ரூபா நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nயாழில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிப்பு\n – மனிதர்கள் வசிக்க முடியுமா\n – மனிதர்கள் வசிக்க முடியுமா\nபூமியைத்தாண்டி மனிதர்களால் வசிக்க முடியுமா என்ற தேடல் மட்டுமே இப்போது உலகில் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது என்பது தற்போதைய ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாகின்றது.\nகுறிப்பாக இதுவரையிலும் எத்தனையோ கிரகங்கள் பூமியை ஒத்தனவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் எமக்கு அருகில் உள்ள செவ்வாயில் மனிதர்கள் வாழுவதற்கான சாத்தியப்பாடுகள் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் நம்பிவருகின்றனர்.\nஇதனாலே செவ்வாய் மீதான ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அண்மைய ஆய்வுகளின்படி செவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசெவ்வாய்க்கிரகத்தின் நிலப்பகுதிக்கு கீழ் பனிக்கட்டிகள் இருக்கின்றது எனவும், இந்த பனிக்கட்டிகள் மணல் கல் போன்றன கலக்காமல் சுத்தமான நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nநிலத்திற்கு கீழ் சுமார் 90 மீற்றர் ஆழத்தில் பனிக்கட்டிகள் இருப்பதாக நம்பும் விஞ்ஞானிகள் இதன் ஆய்வுகளை முடுக்கியுள்ளனர். இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டால் செவ்வாய் குறித்து பல புதிய தகவல்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏற்கனவே செவ்வாய்கிரகம் பூமியைப்போன்றே ஒருகாலத்தில் இருந்திருக்கும், அதில் உயிரினங்களும் வாழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் விஞ்ஞானிகள் மத்தியில் பரவலாகவே உள்ளது.\nஅதேபோன்று செவ்வாயில் வாழ்ந்தவர்கள் அறவிற் சிறந்தவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் அதன்பின்னர் செவ்வாயில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் அங்கு வாழ்ந்தவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து விட்டதாகவும் ஒரு சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.\nமற்றோர் பக்கத்தில் செவ்வாயில் இப்போதும் நிலத்திற்கு கீழே வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்து வருகின்றனர் அதற்கான ஆதாரங்கள் ஒளிப்படங்கள் மூலமாக கிடைத்து வருகின்றது எனினும் இந்த விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது எனவும் சில ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.\nஎவ்வாறாயினும் எப்போதோ நிலவையும் ஏனைய கிரகங்களையும் கடவுளாக பார்த்த மனித இனத்திற்கு தற்போது அவை கிரகங்கள் என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இது போன்று எதிர்காலத்திலும் உண்மைகள் அம்பலமாகும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசெவ்வாய் கிரகத்தில் நீர் ஏரி- இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் திரவ நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி விண்வெளி முகவர் அமைப்பு அறிவித்துள்ள\n – வியப்பு தரும் பயணம் இனி சாத்தியம்\nசாத்தியமற்ற விடயத்தினையும் சாத்தியமாக்கிக் காட்டுவதே அறிவியல் – தொழில் நுட்பம். இதுவும் இப்படி\n – புதிய தேடலில் விஞ்ஞானிகள்\nபூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்\nபூமிக்கு தங்கம் வந்தது எப்படி – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்\nதற்போது பூமியில் காணப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் அண்டவெளியில் உள்ள இறந்த நியூட\n – தொடர்பு கொள்வது எவ்வாறு\nபூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற செய்திகள் அதிகரித்துவரும் நிலையில் பூமியைத் தாண்டியுள்ள கிரகங்களில\nகேரள வெள்ள நிவாரணமாக விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்: மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nரஷ்யா மீது தடைகளை விரிவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைப் பின்தொடர வேண்டும் – ஹன்ட்\nலேடி சுப்பர்ஸ்டாரின் ரசிகரா நீங்கள்\nஅமெரிக்க அரசியல் குழுக்களின் மீதான இணைய வழித் தாக்குதல் முறியடிப்பு – மைக்ரோசொப்ட் பெருமிதம்\nபர்மிங்ஹாம் சிறைச்சாலையை அரசமயமாக்க நடவடிக்கை\n18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்\nசாத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயம் இறுதிக் கட்டத்தை எட்டியது\nபோக்குவரத்து விபரங்களை வெண்பலகையில் காட்சிப்படுத்திய பிரித்தானிய விமான நிலையம்\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?p=397", "date_download": "2018-08-21T14:12:08Z", "digest": "sha1:TFORHOAB3FPD2I2P2E57GGZ5EBSQQGX2", "length": 13661, "nlines": 167, "source_domain": "cyrilalex.com", "title": "டுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ", "raw_content": "\n'த'வுல 'இ' காண முடியுமாங்க\nஆதாம், ஏவள் மற்றும் சில குரங்குகள்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nடுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ\nMarch 14th, 2008 | வகைகள்: நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல், குறும்படம் | 16 மறுமொழிகள் »\nடுபுக்கு The Door என ஒரு குறும்படம் போட்டிருக்காரு. அதுக்கு பதில் வீடியோ. கீழ பாருங்க. எஞ்சாய் மாடி.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n16 மறுமொழிகள் to “டுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ”\nஆனா இது குறும்படம் இல்ல வெறும்படம்\nஎல்லாரும் ஜெயமோகன்/விகடனை கண்டிக்கிறதுலேயே இருக்கிறாங்களாம்.\nஹா ஹா மிகவும் ரசித்தேன். :))\nபடம் சூப்பர் எதிர்வினையை மிகவும் ரசித்தேன். but very very nicely conceived and executed. Great.\nதி என்ட் போடுவதற்க்கு முன்னால் சி.வியை இணைத்திருக்கலாம். லைட்டிங் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். கடிகாரத்தைக் காட்டியிருந்தால் உங்களை எத்தனை மணிக்கு வெளியே அனுப்பியிருந்தார்கள் என்பதை பார்ப்பவர்கள் உணர முடிந்திருக்கும். கடை காட்சியாக உங்களை கழுத்தை பிடித்து கதவுக்கு பின்னாலிருந்து அனுப்புவது போல் இருந்திருந்தால் இன்னும் கதைக்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.\n//தி என்ட் போடுவதற்க்கு முன்னால் சி.வியை இணைத்திருக்கலாம். //\nCV எல்லாம் epilogueல தான் போடணும். அது எப்பவுமே attachmentதான்\n//கடிகாரத்தைக் காட்டியிருந்தால் உங்களை எத்தனை மணிக்கு வெளியே அனுப்பியிருந்தார்கள் என்பதை பார்ப்பவர்கள் உணர முடிந்திருக்கும்.//\nஅது ஒரு கெட்ட நேரம். இத மக்கள் உனர்ந்தா போதுமே.\n// கடை காட்சியாக உங்களை கழுத்தை பிடித்து கதவுக்கு பின்னாலிருந்து அனுப்புவது போல் இருந்திருந்தால் இன்னும் கதைக்கு அழுத்தம் கிடைத்திருக்கும்.//\nகதைக்கு அழுத்தமில்ல கழுத்துக்கு அழுத்தம்.\nஇப்பதிவில் தனிக்கதவு தாக்குதல் மிக அதிகமாக இருக்கிறது.\nவரிவிலக்கு கிடையாது – தமிழில் டயலாக் எல்லாம் மாத்தி போடுங்க\nபோற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே\n//போற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே\nஆங்கில வரிய விலக்கிட்டா வரி விலக்கு ஆகிடுமா.\nநீங்க மேனேஜரா ஆனதைச் சொல்லவேயில்லையே…\n//போற போக்கை பாத்தா இதுக்கு இன்னொரு எதிர்வினையா ஒரு ப்ளாஷ் வரும் போல இருக்கே\nசாஃப்ட்வேர் இஞ்சினியர்களால் மோசமான தெப்பக்குளம் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=b074030faff99466dfdc1b5765b9d083", "date_download": "2018-08-21T14:17:02Z", "digest": "sha1:N5372WGBX5WGTHRSVTZVOH4CR5A7C7FJ", "length": 29791, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/page/3/", "date_download": "2018-08-21T14:34:31Z", "digest": "sha1:IITRMRFOQ2N5EDT4C3YVHRE4BGWOSRLL", "length": 4471, "nlines": 86, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "கீர்த்தி சுரேஷ்", "raw_content": "\nProducts tagged “கீர்த்தி சுரேஷ்”\nதலைவருடன் இணைந்து வரும் சிஷ்யன் சிவகார்த்திகேயன்..\nரஜினிகாந்த் பட இயக்குனரை பாராட்டிய சிவகார்த்திகேயன்..\nதனுஷ் – கீர்த்தி சுரேஷ் இணைந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது…\nஇன்று இரவு ஏழு மணிக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்..\nகீர்த்தியை கலாய்த்த விக்ரம் ரசிகர்கள்… காப்பாற்றிய இயக்குனர்..\nரஜினிமுருகனுக்கும் ரஜினி மகளுக்கும் நன்றி தெரிவித்த அட்லி..\nமார்ச் மாத இறுதியில் தனுஷின் அதிரடி விருந்து..\nவிஜய்க்கு ரஜினி வில்லன்… விக்ரமுக்கு அஜித் வில்லன்.. தனுஷுக்கு பாகுபலி வில்லனா\nஅடுத்த ஆக்ஷன் ரெடி… இணையத்தை கலக்கும் ‘விஜய் 60’..\nரஜினியின் வில்லன் இப்போ விஜய்க்கும் வில்லன்..\n‘விஜய் 60’ படத்தில் இணைந்த ‘அஞ்சான்’ கலைஞர்..\nசிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்.. இனி ‘ராஜ் விஷ்ணு’..\nசிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பெயர் காரணம்… புதிய தகவல்கள்…\nவிஜய்யின் புதிய படம் எம்ஜிஆர் படத்தின் ரீமேக்..\n… குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsclink.in/2018/03/tnpsc-current-affairs-quiz-236-february-2018.html", "date_download": "2018-08-21T14:01:32Z", "digest": "sha1:VLPSICGO7MRCGO2VZIIMUYGY2SYJ2VXR", "length": 5688, "nlines": 88, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 236, February 2018 (Tamil)", "raw_content": "\nTAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டம், பிப்ரவரி 23 அன்று செர்கேதாபாத் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது, செர்கேதாபாத் உள்ள நாடு\nTAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள்\nஇந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான்\nஇந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான்\nஇந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், துர்க்மெனிஸ்தான்\nஇந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான்\nTAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மூலம் இந்தியா பெறவுள்ள எரிவாயுவின் அளவு\nசமீபத்தில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நாடு\n2018 மார்ச் 11 இல் புதுடெல்லியில் நடைபெறும், முதலாவது சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பு உச்சி மாநாட்டை (International Solar Alliance Summit), இந்தியாவுடன் இணைந்து நடத்தும் நாடு\n2018 பிப்ரவரி 21 அன்று இந்திய சர்வதேச ஜவுளி கண்காட்சி தொடங்கிய இடம்\nபிப்ரவரி 24, 2018 இல், பிரதமர் மோடி \"அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் ( Amma Two Wheeler Scheme)\" தொடங்கிவைத்த மாநிலம்\nஅம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் மானியமாக வழங்கப்படும் தொகை\nஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையை குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில் ஏழை குடும்பத்தினர் பெற வகைசெய்யும் திட்டம்\nசமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட தரையிலிருந்து-தரைவழியாகவும், கடலுக்குள் உள்ள இலக்கு, கடலோர இலக்குகளை தாக்கி அழிக்கும் (Short Range Ballistic Missile) ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_99.html", "date_download": "2018-08-21T14:22:48Z", "digest": "sha1:PO2NEFEVL24F4A2YECPRX4BSE5BGRGJG", "length": 13197, "nlines": 137, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அறிவிப்பு பகுதி » புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nTitle: புஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nஅஸ்ஸலாமு அலைக்கும்.. புஷ்ரா நல அறக்கட்டளை பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்கினை, தரமாகவும் சிறப்பாக வ...\nபுஷ்ரா நல அறக்கட்டளை பல வருடங்களாக வி.களத்தூர், மில்லத் நகர் மக்களுக்கு ஈத்பெருநாள் கேக்கினை, தரமாகவும் சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த வருடமும் தனது சேவையை மேம்படுத்தும் விதமாக ஈத் கேக்கை நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு குறித்த நேரத்தி்ல் டெலிவரி செய்யப்பபடும்.\nஉங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஒரு கேக்கின் விலை 15 திர்ஹம் மட்டுமே\nஒரு மிக்ஸ் ஸ்வீட்டின் விலை 15 திர்ஹம் மட்டுமே\nஆர்டர் பெறும் கடைசி தேதி :20-06-2017.\nகேக் மற்றும் சுவீட் ஆர்டர்களுக்கு கீழ்காணும் சகோதரர்களை தொடர்பு கொள்ளவும்.\nM. அப்துல்லா பாஷா - 050 3878421.\nM. முஹம்மது ரபீக் - 055 2428620.\nகுறிப்பு:- தங்கள் கேக் ஆர்டா் கொடுக்கும் போது சிறு குழந்தைகளின் பெயர் கொடுப்பதினால், வினியோம் செய்ய குழப்பங்கள் அதிகமாகிவிடுகின்றன. எனவே குழந்தைகளின் பெயா் கொடுக்கமால் பெரியவர்களின் பெயர் மற்றும் தெளிவான வீட்டு விலாசம் மற்றும் அலைபேசி எண், தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇப்படிக்கு - S. பைஜுர் ரஹ்மான் தலைவர்.,\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/tag/kalainger-karunanidhi/", "date_download": "2018-08-21T13:29:17Z", "digest": "sha1:B6GNKN2Y7DXVJFETIDUQR3VWEZG2JBL4", "length": 6410, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kalainger karunanidhi Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n கலைஞர் இறுதிச்சடங்கில் பரபரப்பாய் இருந்த முகம்..\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லடக்க நிகழ்ச்சியில் எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாகப் பணியாற்றினார், அமுதா ஐ.ஏ.எஸ். தேசமே கவனித்த ஒரு நிகழ்ச்சியில், குடும்பத்தினரின் சென்ட்டிமென்ட் காயப்படாமலும் சிக்கல் இல்லாமலும் கையாண்டார். பரபர...\nகலைஞரின் மறைவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.\nதிமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் நேற்று காலமானதை அடுத்து இன்று மாலை அவரது உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் , திரையுலக பிரபலங்களும்...\nவிஜய்க்கு பதிலாக தனியாக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய மனைவி சங்கீதா.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவி தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. தற்போது சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் அவர்களின் உடலுக்கு பல்வேறு...\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.chuvadugal.com/2014/01/85000.html", "date_download": "2018-08-21T13:45:42Z", "digest": "sha1:ME4SLDGJYJEVUTJ7HKW2WGFHODP3EXRD", "length": 15510, "nlines": 194, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: ஒரே இரவில் 85000 ரூபாய் !", "raw_content": "\nஒரே இரவில் 85000 ரூபாய் \nஇ.ரா மணிகண்டன் என்பவரின் வலைப்பூ(BLOG) ”நிசப்தம்” பார்த்தது, படித்தது,.கேட்டது,ஆபிஸ், அடுத்தவீட்டுகாரன், சினிமா, புத்தகம், வம்பு அரசியல், பயணங்கள் என்று எதைப்பற்றியாவது படிக்க ஆர்வம் மூட்டும் வகையில் தினமும் எழுதி தள்ளிக்கொண்டிருப்பவர். கொங்குநாட்டு வாழக்கைமுறை, சாப்ட்வேர்துறை ஆகியவைகளின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சிறந்த வலைப்புக்கான சுஜாதா விருதை 2013ம் ஆண்டில் பெற்ற இவர் தளத்தில் தன் படத்தை கூட போட்டுகொள்ளாத எளிய மனிதர். பங்களூரில் வசிக்கிறார்.\nபாலாஜி சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் முழுஸ்காலர்ஷிப்பில் ரோப்டிக்ஸில் ஏம் டெக் படிக்கும் ஒரு மாணவர். மிக எளிய குடும்ப பின்னணியுள்ள இவருக்கு ரோபோவின் மீது வெறும் ஆர்வம் மட்டுமில்லை. வெறி, காதல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். வெறும் ஆர்வத்தோடு நின்றுவிடாமல் தனது ஆர்வத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஏகப்பட்ட ரோபோக்களை சுயமாக வடிவமைத்திருக்கிறார். இவரது லிஸ்ட்டில் பறக்கும் ரோபோட், விவசாய ரோபோட் என்று பலவகைகள் அடங்கும்.\nஇவருக்கு ஜப்பானில் நடைபெறும் ஒரு சர்வதேச ரோபோட்டிக்ஸ் கருத்தரங்கிறகுற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் போவதற்கு முயற்சி எடுக்க கூட முடியவில்லை காரணம் டிக்கெட்டுகான பணம். தன்னுடைய பிளாக்கில் மணிகண்டன் இதை எழுதி உதவி செய்யமுடியுமா என கேட்டிருந்தார். முதல் நாள் இரவில் எழுதிய பதிவிற்கு மறுநாள் மாலைக்குள் வந்த பணம் 85000 ரூபாய்கள். என கேட்டிருந்தார். முதல் நாள் இரவில் எழுதிய பதிவிற்கு மறுநாள் மாலைக்குள் வந்த பணம் 85000 ரூபாய்கள். அமெரிக்காவிலிருந்து 50000, கத்தாரிலிருந்து 30000 என்று சிலமணிநேரங்களில் பணம் வங்கி கணக்கில் சேர்ந்தது.. இவர்களில் யாரையுமே இதுவரை மணிகண்டன் நேரில் பார்த்ததில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம்.\nஇதற்காக தன் நன்றியை சொல்லும் மணிகண்டன் “இத்தனை பெரிய தொகையை ஒரே இரவில் புரட்டிவிட முடியும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நேற்று இந்தப் பதிவை எழுதும் போது கூட பத்தாயிரம் ரூபாய் புரட்டினாலே பெரிய விஷயம் என்றுதான் தோன்றியது. ஆனால் நல்ல காரியத்திற்காகச் செய்யும் போது எல்லாமே சரியாக நடக்கின்றன. கடவுள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த மாதிரியான கணங்களில் நம்பிக்கையை இன்னும் சற்று உறுதிப்படுத்திக் கொள்கிறேன் “ என்று தன் பதிவில் எழுதுகிறார். உதவிக்கு நன்றி சொல்லும் பாலாஜி ‘இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிடுங்க சார்’ .‘இப்போதைக்கு இந்தப் பணம் போதும் சார். என்னை மாதிரி வேற யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவைப்படும்ல. அப்போ தந்துடச் சொல்லுங்க’ என்று மணிகண்டனுக்கு சொல்லியிருக்கிறார்.\nசமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தபடும் அவலம், ஆபத்துகள் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகின்ற நேரத்தில் இம்மாதிரி மாறுதலான செய்திகள் ஆறுதலாக இருக்கிறது. சமூக பொறுப்புடன், மனித நேயத்தோடு எழுதும் பதிவர்களும், அதை மதிக்கும் வலைப்பூ வாசகர்களும் உலகில் எங்கோ ஒரு மூலையிலும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷத்தை தருகிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சந்திப்புகள் , டைரி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2007/", "date_download": "2018-08-21T14:04:35Z", "digest": "sha1:UHQVCXGUFASD36OODSQ5ET26LZ7F2F7W", "length": 363406, "nlines": 1366, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: 2007", "raw_content": "\n( பாரீஸில் 2007, அக்டோபர் 13,14 களில் நடந்த 26வது பெண்கள் சந்திப்பில்\nகலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை)\nநான் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வது என்று உறுதியானப் பின் இச்செய்தி அறிந்த என் நண்பர்கள் பலர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி:\nசங்கர் (என் துணைவரின் பெயர்) உன்னுடன் வரவில்லையா\nஇப்படிக் கேட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள், பெண் விடுதலையைப் பற்றிக் கதைப்பவர்கள். பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள். அவர்களுக்குத் தெரியும் இக்கருத்தரங்கு பெண்கள் கருத்தரங்கு, பெண்கள் கலந்து கொள்ளும்\nபெண்களால் நடத்தப்படும் கருத்தரங்கு என்பது.\nஇதைவிட என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி: நுழைவிசைவுக்காக (விசா) ஜெர்மானிய தூதரகத்தில் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியும் இதுதான்:\nஉங்கள் கணவர் உடன் வரவில்லையா\nஇப்போது யோசித்துப் பாருங்கள். இதே மாதிரி கேள்வியை ஓர் ஆணிடம் அவன் தனியாக பயணம் செய்தால் யாராவது கேட்பார்களா இப்படிக் கேள்வி கேட்டவர்களை நான் குறை சொல்வதாக நினைக்காதீர்கள். எது , யார் இந்த மாதிரி கேள்விகளை அவர்களிடம் திணித்தது\nசமுதாயத்தின் மொழி, நம்பிக்கை, மரபுகள் நம்மீதும் நம் நனவிலி மனதிலும் (sub-conscious mind) ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய தாக்கம் இது. இந்த மாதிரியான தாக்கங்கள் மிகவும் இயல்பாக கிட்டத்தட்ட அனிச்சை செயல்போல நம் சிந்தனை அலைகளில் மிதந்து கொண்டிருக்கின்றன.\nஆணுக்கு உறவுகள் உண்டு. பெண்ணுக்கும் உறவுகள் உண்டு.\nஆணுக்கு உறவுகள் பிரச்சனைகள் ஆவதில்லை. பாரமாவதில்லை. அவனைச் சிறுமைப் படுத்துவதில்லை. அவன் மதிப்பு, மரியாதைகளை நிலைநிறுத்துகின்றன.\nஆனால் பெண்ணுக்கு உறவுகள் பிரச்சனைகளாக பயமுறுத்துகின்றன. அவளால் சுமக்க முடியாத பாரமாக அவளைக் காலம் காலமாய் அழுத்தி வைத்திருக்கின்றன. எந்த உறவுகளும் அவளைப் பெருமைப் படுத்துவதில்லை.\nஅவளைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளாய் உறவுகள். அவள் வேகமாக நடந்தால் அவளைக் காயப்படுத்தும். அவள் உறவுகளுக்காகவே வாழவேண்டும் என்பது மாற்றமுடியாத விதி. இனம், மொழி, நாடு கடந்த உலகளாவிய சட்டம் இது. உறவுகள் அவளுக்காக வாழ்வதும் வாழாமல் இருப்பதும் உறவுகளின் விருப்பம் கட்டாயமில்லை.\nஅவளுக்கு என்று விருப்பங்கள் இல்லை. இருக்கவும் கூடாது. அவளுடைய விருப்பங்கள், கனவுகள், திட்டங்கள் எல்லாமே அவளைச் சுற்றியிருக்கும் உறவுகளின் நலம் சார்ந்தாக மட்டுமே இருக்கும், இருக்க வேண்டும்.\nகேட்டுப் பெறவில்லை என்பதும் -\nபெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்துவிட்டாலே ஆண்களுக்கு\nஅடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை\" என்று சொன்னார் பெண்ணிய விடுதலைப் போராளி தந்தை பெரியார்.\nஇன்றைக்கு அவர் நினைத்தப் படி தன் காலில் தானே நிற்குமளவுக்கு பொருளாதர வலிமையை அடைந்துவிட்ட பெண்களாலும்\nபெண் அடிமை சமுதாயத்திலிருந்து விடுதலைப் பெற்ற பெண்ணாக வாழ்ந்து காட்ட முடிகிறாதா என்ற கேள்வி\nநம் முன்னால் விசவரூபமெடுத்து நிற்கிறது. இப்போது தான் நாம் வேகமாக ஓடி ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் நிற்பதை\nஉணர்கிறோம். நமக்கான வெளி, நமக்கான பாதை, நமக்கான பயணம் எதுவாக இருக்க வெண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தக் கேள்வியை நேருக்கு நேராக சந்திக்காமல் கண்ணாடிச் சன்னல்கள், திரைச்சீலைகளுக்குப் பின்னால் நாம் மறைந்து கொள்ளும் வரை நம் முகங்களை நம் முகங்களாக நம்மால் நம் வரலாற்றில் பதிவு செய்ய முடியாமல் போய்விடும்.\nபெண்ணின் உறவுச் சிக்கல்களை இரண்டு வகையாகப் பிரித்து பார்க்கிறேன்.\nமுதலில் அவள் இந்த மனித சமுதாயத்தின் ஓர் அங்கம். இதில் அவளுக்கும் இந்த சமுதாயத்திற்குமான உறவுச் சிக்கல்கள்.\nஇரண்டாவது மனித சமுதாயத்தில் ஆண்-பெண் என்ற இரண்டு பாலியல் அடிப்படையானப் பிரிவுகளில் பெண்ணுக்கு ஆணுக்குமான உறவு சார்ந்த சிக்கல்கள்.\nமனித வரலாற்றில் தாய்வழிச் சமூகமாக இருந்த இனக்குழு எப்படி எப்போது தந்தைவழிச் சமூகமாக, ஆண்வழிச் சமூகமாக\nமாறியது என்பதான காரண காரியங்களை பற்பல இசங்கள், பெண்ணிய வாதிகள் நிறையவே பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். நாம் அறிவோம்,. எனவே கூறியது கூறல் வேண்டாம் என்று நினைக்கிறேன்.\nசூல்பை, கருப்பை என்ற பதில் வருகிறது.\nஅப்படியானால் இந்த சூல்பை, கருப்பையை எடுத்துவிட்டால் அவள் பெண்ணில்லையா\nஇந்தக் கேள்வியை முன்வைக்கும் போதுதான் பெண்ணியக் கவிஞராக பெரிதும் அறியப்பட்டிருக்கும் கவிஞர் குட்டிரேவதி அவர்கள் தான் நடத்தும் பெண்ணிய இதழுக்கு கருப்பை, பிரசவத்துடன் தொடர்புடைய \"பனிக்குடம்\" என்ற பெயரை\nவைத்திருப்பதில் என் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. இதுவும் கூட நம்மில் ஊறிக்கிடக்கும் மரபியல் ரீதியான சிந்தனைகளின் தாக்கம்\n‘ஒரு பெண் பெண்ணாக இருப்பதென்பது தரத்தில் குறைபாடுடையவளாக அவள் இருப்பதைச் சார்ந்தது’, சொன்னது அரிஸ்டாடில். ‘குறைகளுடன் உழலவே ஒரு பெண் இயற்கையில் படைக்கப் பட்டிருப்பதாகக் கருத வேண்டுமென்றும் என்கிறார் அந்தச் சிந்தனையாளர்\nதன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாக பிறக்கவைத்ததற்காக முதலாவதாகவும், தன்னை பெண்ணாக அல்லாமல் ஓர் ஆணாக பிறக்கவைத்தமைக்காக இரண்டாவதாகவும்’, பிளாட்டோ, இறைவனிடம் தனது நன்றியைத் தெரிவித்தான்.\n\"திறமையற்ற பெண்தான் நற்குணம் உடையவள்' என்பது சீனப்பழமொழி.\nபெண் எதையும் தானாகச் செய்து கொள்ள உரிமையற்றவள் ( மனுநீதி 5:147)\nஒரு மகனைப் பெறுவதற்க்காக எந்த ஆணும் இன்னொருத்தன் மனைவியைப் பயன்படுத்தலாம். ( மனு 9:52)\nவாரிசுகள் இன்றி சொத்துக்களை விட்டுக் கணவன் இறந்துவிட்டால் கணவன் வழி சொந்தக்காரனுடன் கூடிக் குழந்தை பெற்றுக் கணவனின் சொத்துக்களை அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். என்கிறது மனுநீதி.\nஇன்றைய சமுதாயத்தில் இக்கருத்துகள் மறைந்துவிட்டன என்று பலர் சொல்கிறார்கள், மறைந்துவிடவில்லை. மங்கலாக தெரிகிறது. அவ்வளவுதான். இக்கருத்துகளின் ஊடாக விதைக்கப்பட்ட கருத்து: பெண் ஓர் ஆணின் வாரிசை உருவாக்கும்\nவிளைநிலம் என்ற கருத்துதான். இன்றுவரை இந்தக் கருத்திலிருந்து முழுமையாக பெண்களால் வெளிவந்திருக்க முடிந்திருக்கிறதா\nசீனாவில் கன்ஃப்யூஷியஸ் பெண்களைப் பற்றி பேசியது மிகக் குறைவு. எங்கும் உயர்வாக பேசவில்லை. ஆண்வழிச் சமூகத்தின் கடைசிப் படிகளில் பெண்ணை வைத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும் ஆண்வாரிசைப் பெற்றெடுப்பது தான் அவள் பெண்ணாகப்\nபிறந்ததன் பலன் என்ற நம்பிக்கை இன்றுவரை உள்ளது. அதனால் கம்யுனீசக் கொள்கைகள், சட்டங்கள் பெண்சிசுக்கொலையை மாற்றமுடியவில்லை. 1990 களில் வெளிவந்த பி.பி.சி எடுத்த ஆவணப்படம் \"மரண அறை\" வெளிவந்தப் பிந்தான் பெண்குழந்தைகள் எவ்வாறு அனாதைகளாக்கப்படுகிறார்கள், சாகடிக்கப்படுகிறார்கள் என்பதை உலகம் அறியவந்தது.\nஆணின் ஆசைநாயகியாக இருக்கவும் அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் சீனப்பெண்கள் தயாராக இருந்தார்கள்.\nஇந்தியாவில் சீனாவில் பெண்ணுரிமைப் பேசியவர்கள் இல்லையா பெண் கவிஞர்கள் இல்லையா என்றால் இருந்தார்கள் இருக்கிறார்கள். உலக வரலாற்றில் பெண்ணுரிமைக்கான முதல் குரலாக ஒலிக்கும் புத்தரின் கருத்துகள் பிறந்த இடம் இந்திய மண் என்றால் பரவி காலூன்றிய இடம் சீனமண்.\nதுறவு மேற்கொள்ளும் முன் தன் மனைவி யசோதரையிடம் \" நான் மக்களுக்காக சமூக வெளிக்குள் செல்கிறேன். நீ விரும்பினால் மறுமணம் செய்துகொள்\" என்று கேட்டுக்கொண்டவர். தனது மனைவியை மறுமணம் செய்து கொள்ளக் கேட்டுக்கொண்ட முற்போக்கான மாமனிதராக சித்தார்த்தர் இருந்தே பின் புத்தரானார்.\n“பெண் வாழ்வது ஆணுக்காகவும்; அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை தனது வீட்டுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்கிற சிந்தனை வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்து விட்டால், பெண் என்பவள் தாயாகவும், தாரமாகவும், சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக உயர்ந்து நிற்பாள்’ என்கிற பிளிறலோடு, பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்க விட்டவர் புத்தர்.\nபுத்தர், பெண்களுக்கான சிந்தனையில் செயல்பாட்டில் இச்சையாகவோ, அனிச்சையாகவோ ஆணாதிக்க உணர்வுகள் தனக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். பெண்களுக்கு ஆண்கள் தலைமை தாங்க முடியாது; இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது; பெண்களுக்குப் பெண்கள்தான் தலைமை தாங்க முடியும்; இயக்கத்தைக் கட்டமைக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறினார். பெண்களின் விடுதலையை பெண்கள்தான் ஏற்படுத்த முடியும் என்றார்\nபுத்தர், ஓர் ஆணின் பார்வையில் நிகழ்த்தப்படும் எந்தவோர் ஒழுக்கத் தத்துவம், பொதுத் தத்துவத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும் என்றார்.\nசமயச் சடங்குகள், ஈமச்சடங்குகள் இதை எல்லாம் செய்யும் அதிகாரமும் உரிமையும் ஆண் குழந்தைக்குத் தான் என்றும் ஆணாகப் பிறந்தவன் தான் பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவனடி சேர முடியும், நிர்வாண நிலையை எட்ட முடியும்\nஎன்று இருந்த இந்து மத நம்பிக்கைகளை உடைத்தார். சீனாவிலும் பவுத்தம் கோலோச்சிய பேரரசி வூ ஜீத்தியேனின் ஆட்சியிலும் டாங்க் முடியாட்சிலும் பெண்கள் உயரிய அந்தஸ்தில் இருந்தார்கள் , சுதந்திரம் அனுபவித்தார்கள் என்பதை\nவரலாற்றில் பார்க்கிறோம். நான் சொல்ல வந்தக் கருத்திலிருந்து சற்று விலகிச் செல்வது போல இருக்கும்.\nஇப்போது தான் உங்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.\nபுத்தராக மாறிய சித்தார்த்தன் தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ள கேட்டதெல்லாம் ரொம்பவும் புரட்சிகரமான கருத்துகள் தான் என்பதில் ஐயமில்லை, ஆனால் சித்தார்த்தனின் மனைவி யசோதரை அதற்கு என்ன பதில் சொன்னார்.\n, உலக மக்களின் நன்மைக்காக நீங்கள் துறவறம் மேற்கொள்கிறீர்கள். நானும் ஒரு துறவியாக விரும்புகிறேன். ஆனால், மகன் ராகுலனையும் வயது முதிர்ந்த தங்களின் தாய் தந்தையரையும் அன்புடன் கவனித்துக் கொள்ள, நான் சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சிறிதும் வருத்தப்படாமல் நிம்மதியாகச் செல்லுங்கள்’ என்பதுதான்.\nயசோதரைக்கும் துறவியாக விருப்பம்தான். ஏன் சித்தார்த்தனுடன் சேர்ந்து அவளுக்கும் சமூக வெளிக்கு வர ஆசைத்தான்.\nஆனால் வரமுடியாது. ஏன் வரமுடியாது. அவளே தான் சொல்கிறாளே. குழந்தை ராகுலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவனை வளர்த்து ஆளாக்க வேண்டும். வயதான மாமன், மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆண் சமூக வெளிக்கு எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தை விட்டுவிட்டு வந்துவிட முடியும் எப்போதும் எவ்விடத்தும் எக்காலத்தும் ஒரு பெண்ணால் அது முடியாது. ஏன் எனில் இந்த உறவுகளை அவள் தான் சுமக்கிறாள், குடும்பம் என்ற செடியின் ஆணிவேராக பெண் மட்டுமே இருக்கிறாள். சமுதாயக் கட்டமைப்பு இதுதான்.'\nஇப்போது தான் பிரச்சனை வருகிறது. படித்தவள், கை நிறைய சம்பாதிக்கிறவள், எல்லா தளங்களிலும் ஆணுக்கு இணையாக பல இடங்களில் அவனை விட ஒரு படி உயர முடியும் என்று காட்டும் தகுதிப் ப்டைத்தவள் இன்றைய யசோதரை. இவள்\nசித்தார்த்தனுக்கு முன்பாகவே சமூக வெளிக்கு வரத்துடிக்கிறாள். ஆனால் சித்தார்த்தன் ராகுலைக் கவனித்துக் கொள்ளத் தயாரா வீட்டில் இருக்கும் வயதானவர்களைக் கவனிக்க முன் வருவானா வீட்டில் இருக்கும் வயதானவர்களைக் கவனிக்க முன் வருவானா வரமாட்டான். அப்படி வரவேண்டும் என்ற நிலை\nஏற்படும் போது தான் காலம் காலமாய் இந்த சமுதாயம் பெண்ணுக்கு என்று உருவாக்கி வைத்திருக்கும் கடமைகளை\nஅவன் பட்டியலிடுகின்றான். பிரச்சனைகள் உருவாகிறது.\nகற்பு, தாய்மை இந்த இரண்டும் தான் காலம் காலமாய் பெண் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்கள். சமூக மதிப்பீடுகளும் நுகர்ப்பொருள் கலாச்சாரமும் இந்த மதிப்பீடுகளை மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.\nகற்பு பற்றி ஒரு காலத்தில் சொன்னார்கள்: ஆடவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்பட்டாலே அந்தப் பெண்ணின் கற்பு களங்கப்பட்டு விடுகிறது என்று. ஆண் பெண்ணைப் பார்த்து ஆசைப்படுவதில் பெண்ணுக்கு எந்த தொடர்புமில்லை.\nஇந்த தெளிவு வந்தவுடன் ஒரு பெண் ஆடவனைப் பார்த்து ஆசைப்பட்டால் தான் தவறு, அந்த ஆம்பளை மட்டும் ஆசைப்பட்டால் அதற்கு இவள் என்ன செய்யமுடியும் என்று மாற்றிக்கொண்டான்.அதன் பின் பெண் படிக்க வெளியே வருகிறாள், வேலைக்குப் போகிறாள், பல்வேறு ஆண்களைச் சந்திக்கிறாள், தொடர்பு ஏற்படுகிறது. ஒப்பீடு சாத்தியமாகிறது. இன்று ஒரு பெண்ணுக்கு வேறு ஓர் ஆணுடன் காதலுறவு இருக்கிறது எனத் தெரிந்த பிறகும்கூட இவர்களுக்குத் தேவையான பணம், சாதி, தகுதி, படிப்பு, எல்லாம் கூடி வருகிற போது திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. திருமணத்திற்குப் பின்\nசரியாக இருந்தால் போதும், இன்றைக்குத் திருமணம் பேசப்படும் போதே இந்த நிலைமை வந்துவிட்டது என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.\nஅப்படியானால் சமுதாயத்தில் கற்பு என்ற சொல்லின் பொருள் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டுதானே வருகிறது.\nசீன நகரங்களில் திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணமாக ஒன்று உண்டு. திருமணத்திற்கு முன்பு பாலுறவு என்பதை சீன நகரவாசிகள் மிகவும் பரந்த மனதுடன் ஏற்க ஆரம்பித்துள்ளதுதானாம். சுமார் 18 வருடங்களில் பிரம்மாண்ட மாற்றங்கள் இவ்விசயத்தில் நிகழ்ந்துள்ளன. முக்கியமாக நகரங்களில் திருமணத்தையும் பாலுறவையும் குழப்பிக்கொள்ளும்\nமனப்பான்மை முற்றிலும் மறைந்துவிட்டிருக்கிறது .\nபெண்ணின் மேல் பாரமாய்க் கவிந்திருக்கும் அடையாளம் தாய் என்ற புனைவுதான். பெண்ணை அடிமைபடுத்த ஆண் கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே அதி அற்புதமானது இந்தத் தாய்மை என்ற ஆயுதம். பெண் தாய்மையில்தான் முழுமையடைகிறாள், பிறந்தப் பயனை அடைகிறாள் என்று புனைந்து அவளைப் பிள்ளைப் பெறும் எந்திரமாய் அவன் வாரிசை\nவளர்க்கும் செவிலியாய் மட்டும் ஆக்கியிருந்தது ஆண் மேலாண்மைச் சமூகம்.\nஎஜமானின் ஆயுதம் ' என்று சல்மா சொல்வது இதைத்தான்.\nஇப்போதும் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு குற்ற உணர்வு\nநகர்ப்புறத்து பெண்கள் திருமணத்தைப் பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போடுகின்றனர். பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆண்-பெண் பாலியல் தீர்மானிக்கப்படுவது ஆணின் விந்திலிருந்து வெளியாகும் xy குரோமோசொம்களைப் பொறுத்தே என்ற அறிவியல் பரப்புரை ஆண் வாரிசுகள்., சொத்துரிமை குறித்த சமூக மதிப்பீடுகளைத் தகர்த்துள்ளது.ச்\nகல்வியும் கல்வி வழங்கிய பணி, பணி நிமித்தம் பிரிந்திருத்தல், அதனாலேயே தனித்து வாழ முடியும் என்று\nகாலம் பெண்ணுக்கு கற்பித்துவிட்டப் பாடம் இவை அனைத்தும் ஆண்-பெண் உறவில் சமுதாயம் போட்டிருந்த\nஇரும்புத்திரையை விலக்கி புதிய வெளிக்கு இட்டு வந்துள்ளது.\n(இளம்பிறை, நிசப்தம் பக் 14)\nசோவியத் ரஷ்யா உருவாக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு அரசியல் வாழ்வில் பெண்களின் விடுதலைக்கான வழிமுறைகளைச் சட்டபூர்வமாக்கிய பெருமைக்குரியவர் அலெக்சாண்டிரா.சர்வதேச அரசியலில் பெரும் பங்காற்றியதோடு லெனின் தலைமையின் கீழ் அமைச்சராகவும் வெளிநாட்டுத் தூதராகவும் செயலாற்றிய செயல்திறன்மிக்க போராளி; தன் வாழ்நாள் முழுவதும் அயராது துணிச்சலோடு தன் இலட்சியத்திற்காகப் போராடியவர். முதலாளித்துவ சமூகம் பெண்களை எப்படிச் சுரண்டுகிறது என்பதை உணர்ந்த அலொக்சாண்டிரா ரஷ்யப் புரட்சிக்கு முன்னும் பின்னும் பல்வேறு முறைகளில் அவர்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய வீராங்கணை எனலாம்.\nவர்க்க விடுதலை மட்டும் பெண் விடுதலைக்குப் போதாது என்பதில் உறுதியாக நின்று செயல் பட்டதாலேயே பலமுறை கைது செய்யப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புரட்சியின் போதும் அதன் பின்னரும் அவர் சந்தித்த நெருக்கடிகளும் சிக்கல்களும் ஏராளம். ஆயினும் மனந்தளராமல் இறுதிவரை பெண் விடுதலைக்கும் போர் எதிர்ப்புக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் கரைத்துக்கொண்ட அசாதாரண பெண் அலெக்சாண்டிரா.\nகுழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய் தந்தை இருவருக்குமானது; என்றாலும் அந்தச் சுமையைத் தாங்கும் நிலையும் பெண்ணுக்கே உரியதாகிறது. குழந்தையின் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும் விடுப்பு எடுப்பது என்பது இயலாமற்போகிறது. தவறி எடுத்துவிட்டால் வேலை போய்விடும் என்ற நிலை. வேலை பறிபோனால் ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய அவலமும் அதனால் அவனின் மேலாண்மைக்கு அடிமையாகும் நிர்பந்தமும் நேர்ந்து விடுகிறது. அப்போது அவள் சுயத்தை இழந்துவிடும் துரதிருஷ்டமும் ஏற்பட்டுவிடுகிறது.\nவேலையை இழந்து, வறுமையில் வாடி தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழலில் பெண் தன் அன்றாடத் தேவைகளுக்காகவும் ஆணை நாடிச் சென்று பணத்தைப் பெறும் சூழலும் நெருக்கடியும் உருவாகி விடுகின்றன. பெண்களின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை பாட்டாளித் தோழர்கள் உட்பட. புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யாவில் விபசாரம் பெருமளவிற்குக் குறைந்தது என்றாலும் அதன்பின் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலைமை சோவியத் சமூகத்தில் விபசாரத்தை மீண்டும் துளிர்க்கச் செய்தது. அவர் எழுதிய சகோதரிகள் என்ற கதையில் அதை எதிர்த்துப் போராடும் தேவையை அலெக்ஸாண்டிரா நுட்பமாக விளக்குகிறார் .\nபல போராட்டங்களுக்குப் பிறகும் பெண் மீதான வன்முறை கருத்தியல் தளம் உள்பட எல்லா தளங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் குறிப்பாக நாம் வளர்ந்ததாகக் கருதும் மேலை நாடுகளிலும்கூட பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தே வந்திருக்கிறது.\nஅமெரிக்காவைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. சமீபத்தில் The centre for reproductive rights என்கிற அமைப்பு ஐ.நா. சபையின் மனித உரிமை குழுவிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஜார்ஜ் புஷின் அரசு பெண்களின் உடல்நிலை மீதும் வாழ்க்கை மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகான உடல்நலம், குடும்பக் கட்டுப்பாடு, பாதுகாப்பான முறையான கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளில் புஷ் அரசு கடுமையான விதிமுறைகளை விதிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது இந்த அமைப்பு. இது தவிர, முறையற்ற செக்ஸ் கல்வியை ஊக்குவிப்பதாகவும் இந்த அமைப்பு சொல்கிறது. ஏற்கனவே கருக்கலைப்புப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் சூழலில் இந்த அறிக்கை உலக அளவில் பெண்ணியவாதிகளிடையில் கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக அளவில் பெண்களின் நிலை கவலையளிப்பதாகவே இருப்பதற்கு இன்னொரு சாட்சி London school of economicsன் centre for economis performance தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கைதான். ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் அவர்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதற்கு இன்னும் 150 வருடங்கள் ஆகும் என்கிறது அந்த அறிக்கை. நிர்வாகக் குளறுபடிகள்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்கிறது இந்த அறிக்கை. பெரும்பாலும் குழந்தை பிறப்புக்காக எடுக்கப்படும் விடுப்பும் அதன் பிறகு பெண்கள் பகுதி நேர வேலை பார்ப்பதும்கூட இந்த சம்பள பாகுபாட்டிற்குக் காரணங்கள். ‘கடந்த 30 வருடங்களில் ஆண்,பெண்களுக்கு இடையிலான இந்த சம்பள இடைவெளி குறைந்திருந்தாலும் அது முற்றிலுமாக மறைய இன்னும் 150 ஆண்டுகள் தேவைப்படும்' என்கிறது அறிக்கை. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக வேலையை தியாகம் செய்யும் சூழலில் இருக்கும் பெண்களை நமது சமூகம் கடுமையாக தண்டிக்கிறது' என்கிறார் அறிக்கையை தயார் செய்திருக்கும் அலான் மான்னிங்.\nபெண்ணுக்கு ஆன்மிகத்தளத்தில் இடமில்லை. மதம் அவளைத் தீண்டத்தாகதவள் என்று புறக்கணிக்கிறது.\nஅதிலும் குறிப்பாக இந்து மதம். இந்து மதத்தில் தான் ஏகப்பட்ட பெண்வழிபாடு. மூன்று தேவியர் உண்டு. அவர்களுக்கு பிள்ளைப் பேறு, பிரசவம் எல்லாம் உண்டு. குடும்பம் உண்டு. பாற்கடலில் படுக்கை அறை உண்டு. அந்தப் பொம்பளை சாமிக்கெல்லாம்\nசபரிமலை சர்ச்சை வந்த போதும் வழிபாட்டு இடங்களுக்கு பெண்கள் அனுமதிக்கப்ப்டாத போதும் அறநிலை அதிகாரிகளாக\nபெண்கள் அமர்த்தப்படுவதில்லை என்று எழுதிவைத்திருப்பதை எதிர்த்தும் போராட வந்தப் போதும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் மத நம்பிக்கைகளை எதிர்த்த பெண்ணிய அமைப்புகள் எத்தனை\nபெண்ணுக்குக் கல்வி வேண்டும். தொழில் செய்ய உரிமை வேண்டும். அரசு பதவியில் அமர முடியும் நிர்வாகம் செய்ய முடியும். அதிகாரமும் செய்யலாம். பெண்ணுக்கு சொத்துரிமை உண்டு சொத்து சேர்த்துக் கொள்ளலாம். இவை எல்லாம் பெண் உரிமைகள் என்ற பட்டியலில் இடம் பெறுகின்றன. இங்கு தரப்படும் கல்வி யார் தேவையை நிறைவேற்றுகிறது. இங்கு நடைபெறும் தொழில் நிறுவனங்கள் யார் தேவையை எவ்வகையில் எத்தகைய முறையில் நிறைவேற்றுகிற நிறுவனங்கள் நிர்வாகம் செய்வது என்றால் என்ன நிர்வாகம் செய்வது என்றால் என்ன சொத்துரிமை என்பது என்ன இவையெல்லாம் முதலாளியத்தை, அரசு அதிகாரத்தை வலுப்படுத்தக் கூடியவை. நெடுங்காலமாக நம் சமூகச் சூழலில் பெண்கள் எத்தனையோ வகைகளில் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் பிறப்பு முதல் இறப்புவரை எத்தனையோ கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் உள்ளாகி வந்திருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு நம் காலத்தில் கிடைத்துள்ள கல்வி முதலியவை எத்தனை அளவுக்கு ஆக்க ரீதியானவை என்பதை நாம் மறுக்கமுடியாது.\nகூடவே இன்னொன்றையும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது. முதலாளியச் சூழலில் நமக்குக் கிடைக்கிற கல்வி முதலிய உரிமைகள் நாம் நமக்கான ஆளுமையைப் பெறுவதற்கு எந்த அளவுக்குப் பயன்படுகின்றன என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.\nகல்வி, நுகர்ப்பொருள் கலாச்சாரம், உலகமயமாதல் இதனால் பெண்ணிடம் ஏற்பட்டிருக்கும் புதிய அடையாளங்கள் சமூக மதிப்பீடுகளை பாதித்துள்ளன. மரபுகளை மாற்றியுள்ளன.அடையாளங்களை அழித்து புதிய வெளியை உருவாக்கியுள்ளன.\nதன்னை மறந்து தன் நாமம் கெட்டு அவள் அவனில் ஒன்றி அவளை இழத்தல் இனி சாத்தியமா\nஅண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் மணமுறிவுகள் இந்தக் கேள்வியை ஒவ்வொரு சமூக அக்கறையுள்ளவர்களிடமும் கேட்கிறது. என்ன பதில் யாரிடம் குறைபாடு குடும்ப வட்டம் இன்று ஒரு சின்ன ஒற்றைப் புள்ளியாய்\nமாற்றம் கண்ட பிறகும் எதனால் காதல் கசப்பாகி வழக்கு மன்றங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது படித்தப் பெண்கள் அதிகமிருக்கும் கேரள மாநிலத்தில் பெண்களின் தற்கொலைச் சாவுகளும் அதிகமாக இருப்பதன் காரணம் என்ன\nஒரு பக்கம் பெண்விடுதலையை நோக்கிய புறவுலகின் பயணம். மறுபக்கம்\nபெண் குடும்பம் சார்ந்தும் கணவன் துணையுடனும் வாழ்வது மட்டுமே அவளுக்கான\nசமூக அந்தஸ்த்து என்ற சமூக வாழ்வின் அகநிலை. இந்த இரண்டுக்கும் இடையிலான முரண், இடைவெளியில் இன்றைய பெண்களின் வாழ்க்கை. இந்த இடைவெளி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. என்னவோ இப்போதோ நேற்று முந்தினமோ தோன்றிய இடைவெளி அல்ல. ஆனால் இந்த இடைவெளி எவராலும் இட்டு நிரப்பமுடியாத பள்ளத்தாக்காய் அண்மைக்காலங்களில்\nமாறிப்போனதால் தான் சமரசமும் பெண் தன்னை மறந்து காதலாகிக் கசிந்து கரைந்து\nகல்வியும் கல்வி சார்ந்த வேலை வாய்ப்புகளும் இன்றைய பெண்ணுக்கு அபரிதமான\nபொருளாதர உரிமையை வழங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் ஆண்களை விட\nபெண்களே முன்னுரிமைப் பெற்றவர்களாக திகழ்கிறார்கள். பள்ளி இறுதிப் படிப்பு,\nகணினி மென்பொருள் துறை. வளர்ந்து வரும் BPO, Call centres, வணிக வளாகங்கள்\nஅனைத்து இடங்களிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறது இன்றைய உலகமயமாதலும் தனியார்மயமாதலும். பெண்களை பணிகளில் அமர்த்துவதன் மூலம் தொழிற்சங்கம், ஊதிய உயர்வு போன்ற போராட்டங்களைத் தவிர்ப்பதும், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற நியாயமானக் கோரிக்கைகளை புறக்கணிப்பதும் பெண்களின் விசயத்தில் எளிது என்பதால்\nபெண்களுக்கு பணியடங்களில் முன்னுரிமை வழங்கப் படுகிறது என்பது தான் உண்மை. உலக மயமாதலான சந்தையில் அரசும் அரசு சார்ந்த கொள்கைகளும் வலுவிழந்து விட்டதால் படித்தப் பெண்களும் மேற்கத்திய உடையில் வலம்வரும்\nகொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அடிமைத்தனத்திலிருந்து\nவெளியில் வர முடியாது என்பது பெண்ணிய வளர்ச்சி விடுதலையில் ஏற்பட்டிருக்கும்\nதீர்க்க முடியாத நோயாகிவிட்டது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக\nவீடு, குடும்பம், குடும்பம் சார்ந்த கடமை, பாலியல் உறவு, பொறுப்பு இவைகளை முழுமையாகச்\nசெயல் படுத்த முடியாத நிலைமை பெண்களுக்கு. விளைவு.. மணமுறிவுகள்.\nமும்பை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வந்திருக்கும் 10 ஆண்டு\nவழக்குகளில் 1991ல் 1839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2001ல் அதுவே 2877 ஆக\nஇந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் மும்பை, சென்னை நகரங்களில் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ,மேலும் விவாகரத்துக்கான காரணங்களில் தற்காலிகமான வேறுபாடுகள் காரணமாக விவாகரத்துக்கு வந்து\nவழக்குகள் 18.7. ஆணின் வன்கொடுமைக் காரணமாக வந்தவை 33.7.\nபொய், பித்தலாட்டம், பாலியல் உறவில் நிறைவின்மை காரணங்கள் எல்லாம் முறையே 1.3, 5.7 என்ற எண்ணிக்கையில் உள்ளன.\nஇந்தப் பத்து வருட உண்மையான பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் ஆண்- பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் உளவியல் சார்ந்த புள்ளியைச் சுற்றி எழுந்திருக்கும் அலைகள்.\nசீனாவில் நிறைய சம்பாதிக்கும் பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். அதுமில்லாமல் அதிகம் படித்தப் பெண்களைச் சீன ஆண்கள் பல்வேறு சொந்தக் காரணங்களுக்காக மனைவியாக ஏற்கத் தயாராயில்லை\nசீனத்தில் குடும்ப வன்முறை ரொம்பவும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. மனைவியை அடிப்பதைப் பெருமையாக நினைக்கும் கணவன்மார்கள். அதிலும் பெண்குழந்தையைப் பெற்ற பெண்தான் குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகிறாள்.\n2003 ஆம் ஆண்டை ஒப்புநோக்க 2004 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறை இரட்டிப்பாகி இருக்கிறது .\nகல்வி, வேலை காரணமாக பெண்களின் திருமண வயது 25ஐத் தாண்டிவிட்டது.\n25 வயதுக்குள் ஒரு பெண்ணோ ஆணோ தன் ஆளுமையை வளர்த்துக் கொள்கிறார்கள். அப்படி தன் ஆளுமையை வளர்த்துக் கொண்டபின் ஒருவருக்காக ஒருவர் தன்னை மறப்பதும் தன்னை இழப்பதும் எப்போதும் எல்லா இடங்களிலும்\nஇப்படி எல்லாம் அவருக்குப் ப்டித்ததாகவே இயங்கிய நம் அம்மாக்களின் பெண்களாக\nநாமில்லை. ஆனால் மரபணு சார்ந்து தனக்குப் ப்டித்தது மட்டுமே அவளுக்குப் ப்டித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே ஆணும் அவன் சார்ந்த சமூகமும் இருக்கிறது. குறைந்தப் பட்சம் தனக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிற இடங்களில் வேறுபாடுகள் குறைகிறது. அதாவது தன் விருப்பம் அவள் விருப்பமாக இருப்பதுடன் அவளுக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அந்த விருப்பங்கள்\nதானும் விரும்புவதாக இருக்கலாம் அல்லது விரும்பாததாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு ஆண்-பெண் உறவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்குள் ஒவ்வொரு ஆணும்\nசற்று திக்கு முக்காடி மூச்சுத் திணறித்தான் தவிக்கிறான். இந்த மூச்சுத் திணறலை\nவிட்டு வெளியில் வந்து பெண், மனைவி, அவளுக்கான ஆளுமைகளை ஏற்றுக்\nகொள்வதில் ஆண் காலம் காலமாய் போற்றி வளர்த்திருக்கும் ஆண்மை காயப்படத்தான் செய்கிறது. \" உலகத்தில் 'ஆண்மை' நிற்கும்வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் 'ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்\" என்று தந்தை பெரியார் சொல்வதும் இதனால் தான்.\n.பெண்ணும் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமானால் ஆணையும் அவன் அகப்பட்டுக் கொண்டுள்ள அடிமைத்தனத்திலிருந்து, ஆதிக்கத்திலிருந்து அவனை விடுவித்தாக வேண்டும். உடைமை, அரசு, மதம் முதலிய ஆதிக்கங்களைத் தனக்குக்கீழ் உள்ளவர்கள்மீது செயல்படுத்தும் கருவி என்ற முறையில் அந்த ஆதிக்கங்களுக்குள் அகப்பட்டு அவைதரும் சில வசதிகளை அனுபவித்துக் கொண்டு, அவற்றையே தனக்கான இன்பம் என்றும், அவற்றையே தனக்குப்பெருமை என்றும் ஆணவத்தோடும் தோரணையோடும் இருக்கிற ஆண் தானே விரும்பி தன்னைக் கட்டுப்படுத்துகிற அடிமைத்தனத்தை தகர்த்துக்கொள்ள முடியாது. இந்நிலையில் அவனையும் விடுவிக்கும் முறையில், அவனோடும் போராடி அவன் வழியாகச் செயல்படும் ஆதிக்கங்களின்மூலம் எது என அவனுக்கும் சுட்டிக்காட்டி அவனை எதிரியெனக் கருதிக் காயப்படுத்தாமல் அவனையும் தன்னோடு இணைத்துக்கொண்டு ஆதிக்கங்களுக்கெதிரான போராட்டத்தில், விட்டுக் கொடுக்காமல் செயல்பட வேண்டும்.\nபெண் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆணையும் அவன் அகப்பட்டுக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆதிக்கச் சக்தியிலிருந்து மதங்களின்மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து விடுவித்தாக வேண்டும்.\nநாடா கொன்றோ; காடா கொன்றோ;\nஅவலா கொன்றோ; மிசையா கொன்றோ;\nஅவ்வழி நல்லை; வாழிய நிலனே\n>அணங்கு - மார்ச்-ஆக்ஸ்டு 2007 இதழ்\n> பெருஞ்சுவருக்குப் பின்னே: ஜெயந்திசங்கர்\n> பல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை\n- கோவை ஞானி - பெண்ணியம் இதழ்\nதலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்\nஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து கொண்டன. 3000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்கள் விரக்தியில் சில கேள்விகளை முன்வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிந்தது.\nதமிழினம், தமிழ்த் தேசியம், தமிழன்.. இதெல்லாம் எங்களுக்காக என்ன செய்துவிட்டது நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன் நாங்களும் தமிழர்கள் தான் என்றால் எங்களை நாயை விட கீழாக நீங்கள் நடத்தியது/நடத்துவது ஏன் தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ்ப் படிக்க விட்டீர்களா தமிழ் தமிழ் என்று கதைக்கும் நீங்கள் எங்களைத் தமிழ்ப் படிக்க விட்டீர்களா உங்கள் தமிழ் தேசியத்தில் எங்களுக்கான இடம் எங்கே இருக்கிறது\nஇந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெறும் அரசியல் சட்டங்களினாலும் சட்டமனற மசோதாக்களாலும் நிறைவேற்றப்பட்டு ஏட்டில் இருக்க வேண்டியவை மட்டுமல்ல. சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் விடுதலையே விடுதலைக்கான பாதையாக இருக்க முடியும் என்பதை சற்று உரத்தக் குரலில் பதிவு செய்த மாநாடு இது.\nஇந்த மாநாட்டிற்கு போகும் முன்பே சூலை 2007, தலித் முரசு இதழில் சி. ஜெய்சங்கர் அவர்களின் நேர்க்காணல் வாசித்திருந்தேன். அதில் ஈழத்தில் நிலவும் சாதியம் பற்றிய நிலவரத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. (மூன்றாவது கண், தேர்ட் அய் என்று தமிழ், ஆங்கில இதழ்கள் நடத்துபவர். தோழமை ஓவியர் வாசுகியின் கணவர்)\nபோர்ச்சுழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராணுவம் குண்டு வீசப் போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்தான். உயிர் பிழைக்க ஒடிக் கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படிநிலை வெளிப்படும். பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும் ஊரில் முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடிக் கடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்\" என்று சொல்லியிருந்தார்.\nஇந்தளவு புரிதல்களுடன் தலித் மாநாட்டில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் அருந்ததி அவர்கள் 'புòதூரில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் புத்தகத்தைப் பறித்துக் கிழித்தார்கள் அதுவும் இதுவும் ஒன்றுதான்' என்று யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது டானியல் சொன்னதை மேற்கோளாக சொன்னார். இந்த மாதிரியான எதிர்மறுப்பு எதில் கொண்டு போய் முடியும் இரண்டுமே வரலாற்றின் கறைகள். கறைகளை கறைகளால் மட்டுமே கழுவ முடியும் என்பது எந்தக் கறைகளையும் நீக்குவதற்கான தீர்வாகிவிட முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.\nஇசுலாமியர்களிடம் சாதியம் இருப்பதை எழுத்தாளர் ஹெச்.ஜி.ரசூல் தன் எழுத்துகளில் பதிவு செய்திருப்பதையும் அதற்காக தக்கலை ஜமாத் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருப்பதையும் என்னுரையில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் ஜமாத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்திருப்பதைச் சொல்ல வரும் நோக்கத்தில் அப்போது நினைவில் வந்த \"ரசூலில் தலையை வெட்டிவிடலாம். ஆனால் அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளை என்ன செய்யப்போகிறீர்கள்\" என்ற கவிஞர் இன்குலாப்பின் கூற்றை எடுத்துரைத்தேன்.\nஇலண்டனிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் பசீர் அவர்கள் கலந்துரையாடலில் சொன்ன மறுமொழியில் 'இன்குலாப் புலி ஆதரவாளர்..' என்றார். பசீரின் இந்த மாதிரியான மறுமொழி என்னைக் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை. இன்குலாப் புலி ஆதரவாளாரா.. இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. அவர் சொன்ன கருத்து மட்டுமே. இன்குலாப் புலி ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே அவர் சொல்வதை நம்பகத்தன்மையுடன் ஏற்க மறுப்பது என்ன மாதிரியான புரிதல்\nராயகரன் குறுக்கிட்டு இசுலாமியர்களிடமும் சாதியம் இருப்பதைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் என்னுடைய கூற்றை பசீர் ஓர் இசுலாமியராக மட்டுமே தன் வட்டத்துக்குள் நின்று கொண்டு மட்டுமே பார்ப்பதையும் சுட்டிக் காட்டினார். தமிழ் முஸ்லீம் சமூகத்தில் சாதிப் பிரிவினைகள் நிலவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாவிதர், மரைக்காயர், வெள்ளாட்டிகள் என்ற பிரிவுகளில் நாவிதர்கள் மற்றவர்களால் இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். மரைக்காயர் போன்ற உயர் பிரிவினர் திருமண உறவுகளை நெருங்கிய சொந்தத்திற்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர்.\nதமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை முஸ்லீம்களுக்கும் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கும் இடையே திருமண உறவுகள் கிடையாது என்பதை நானறிவேன். அதுமட்டுமல்ல, புதிதாக இசுலாத்திற்கு மதமாறி வரும் தலித்துகளை இவர்கள் சரிசமமாக நடத்துகிறார்களா என்றால் சில ஊர்களில் புதிதாக மதம் மாறியவர்கள் எதையாவது முறையிடும்போது 'அட..மொறையப் பத்தி எல்லாம் பறையங்க கிட்டேப் பேசணுமோ\" என்று பெரியதனக்காரர்கள் சொல்லியும் இருக்கிறார்கள்.\nஇத்துடன் இன்னொரு செய்தியையும் சேர்த்தே சொல்லியாக வேண்டும். 'மனுசங்க' இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த இராசேந்திரன் என்ற இளந்துறவி இசுலாத்தைத் தழுவிய பின் கும்பகோணம் அருகிலுள்ள தன் கிராமத்தில் இசுலாமியத் தெருவிலேயே குடியிருக்கிறார். அங்குள்ள ஜமாத்திற்கு அவரைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சாதியை வென்ற மதமாக இசுலாம் மட்டுமே உள்ளது.\nகக்கூசு இல்லாத கலாச்சாரம் உள்ளவன் தமிழன் இவன் பெருமைப் பேசிக் கொள்ள என்ன இருக்கிறது இவன் பெருமைப் பேசிக் கொள்ள என்ன இருக்கிறது என்ற கேள்வியை முன்வைத்து கரவொலியை எழுப்பினார் ஒருவர். (பெயர் என்ற கேள்வியை முன்வைத்து கரவொலியை எழுப்பினார் ஒருவர். (பெயர்) அந்த நேரத்தில் அவர் கேள்விக்கு ஓங்கி கரவொலி எழுப்பியது நானும் தான். நேரம் போகப் போக இந்தக் கேள்வி பல்வேறு தளங்களுக்கு இட்டுச் சென்றது.\nகக்கூசு கட்டிய பிறகுதானே அதைச் சுத்தம் செய்ய ஒருவன் இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டான் மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமைக்கு இந்தக் கலாச்சாரம் தானே வித்திட்டது மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமைக்கு இந்தக் கலாச்சாரம் தானே வித்திட்டது தமிழன் இந்த அடிமைத்தனத்தை மனிதச் சாதியில் ஏற்படுத்தவில்லை, தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில் இந்த இழிநிலை இருந்ததில்லை என்பதற்காக உண்மையில் பெருமைப்பட வேண்டும்\nதமிழர்கள் வாழ்விடங்கள் (இன்றைய அகதிகளான புலம்பெயர்வு அல்ல) பெரும்பாலும் சூடான வெட்ட நிலை பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் வெளியில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது. பேச்சு வழக்கில் இதை \"வெளியில் போய்ட்டு வருவதாகவே இன்றும் சொல்வதைக் கேட்கலாம். வெட்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப்பெரிய சூழலியல் விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை.\nதமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகளை (வெறும் நான்குச் சுவர்கள் கொண்ட மறைவிடம்) சுத்தம் செய்வதற்கு சிலரைக் குடியேற்றம் செய்ததாக அறிகிறோம். ஐரோப்பா போன்ற குளிர்ப்பிரதேசங்களிலும், மத்திய ஆசியாவிலும் கழிவுகள் மிகப் பெரிய பிரச்சனையாகத் தான் அந்தச் சமூகங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.\nதலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி 'அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்' என்று கொஞ்சம் சூடாக கலந்துரையாடலில் சொன்னதும் 'நானும் தலித் தான்' என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது.\nஅசுரா சிந்துவெளி நாகரிகத்தைச் சுற்றி தன் கட்டுரையை நகர்த்திச் சென்றார். நான்கு வேதங்களும் பல நூறாண்டுகள் வாய்மொழியாக வந்து அதன் பிந்தான் எழுத்துரு பெற்றன சிந்து வெளி நாகரிகத்தை ஆய்ந்து அவர்கள் திராவிடர்கள் என்றும் அவர்களின் மொழி திராவிட மொழியான தமிழ் மொழியின் ஆதிவடிவம் என்பதையும் பல்வேறு அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளார்கள். குறிப்பாக டாக்டர் நா.மகாலிங்கம், முனைவர் மதிவாணன் போன்ற அகழ்வாய்வு அறிஞர்களின் கருத்துகளைச் சொல்லலாம்.\nசிந்துவெளி நாகரிகத்தை ஒத்த தடயங்களும் முத்திரைகளும் எழுத்துருவங்களும் இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அருகில் நடந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள் அல்லர், அவர்களில் பலர் காலம் காலமாய் இலங்கை மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை மிகவும் வலுவாக முன்வைக்கும் அகழ்வாய்வு கண்டுபிடிப்பு இது.\nசாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்பது குறித்து பல்வேறு வரலாற்று பார்வைகள் உண்டு. அசுராவின் கட்டுரை இவைகளுக்குள் புகவில்லை எனினும் ஓர் ஆய்வு மனப்பான்மையுடன் வித்தியாசமான பார்வையில் அமைந்திருந்தது.\nசாதிகள் இடையில் வந்தவை தான், சாதிகளில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றால் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சாதிக் காப்பாற்றிக்கொண்டு வரும் சமுதாயத்தை எப்படி மாற்றப் போகிறோம் என்ற கேள்விக்கு காலம் எழுதும் எல்லா பதில்களும் குறைபாடுகள் கொண்டதாகவே உள்ளன. அதுவும் இந்திய-இலங்கை மண்ணில் சாதியம், சாதி அடுக்குமானங்கள், சாதிகளுக்குள் நிலவும் உட்சாதிகள், எல்லா சாதிகளுக்கும் தன்தன் வக்கிரத்தைக் காட்ட அவனை விட கீழ்ப்படிநிலையில் ஒருவன் என்ற படிநிலை அமைப்பு- ஏன் தலித்துகளுக்குள்ளும் வாழும் தலித்துகள்.. நினைத்துப் பார்த்தால் இப்படியான ஒரு படிநிலை சமுதாய அமைப்பு முறை உலகில் வேறு எங்குமிருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nடொமினிக் ஜீவாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்த பல்கலைì கழகம் பின்னர் எம்.ஏ- முதுகலை பட்டம் கொடுக்க முடிவெடுத்த கேலிக்கூத்து, புதிதாக கட்டப்பட்ட நூல் நிலையத்தை செல்லன் கந்தையா திறந்து வைக்கக்கூடாது என்று சொன்ன ஆதிக்கச் சாதி மனோபாவம், ஆரம்பக்கல்வியைத் தமிழர்களுக்கு மறுத்த தமிழர்களை அடையாளம் காட்டிய தோழர் ஸ்டாலின் அவர்களின் கட்டுரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதைப்பற்றி எல்லாம் சகோதரர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் ஏன் எதுவும் சொல்வதில்லை\nசிவகுருநாதன் சில சட்ட ஆலோசனைகளை முன்வைத்தார். அவர் வைத்த சட்ட ஆலோசனைகள் 99.9% இந்திய சட்டத்தில் வெறும் எழுத்துகளில் மட்டுமே வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மாநாட்டில் சொன்னேன். தலித் அரசியல் அதிகாரத்திற்கு பாபாசாகிப் அம்பேத்கர் வைத்த \"இரட்டை வாக்குரிமை\" என்ற தீர்வை சிவகுருநாதன் பெயருக்கு கூட குறிப்பிடவில்லை. அதுகுறித்து யாரும் கதைக்கவும் இல்லை.\nஇந்தியாவில் அயோத்திதாசர் பண்டிதரும், தந்தை பெரியாரும், பாபாசாகிப் அம்பேத்கரும் இந்திய விடுதலைக்கான அன்றைய தேசிய நீரோடையில் கலந்தவர்களில்லை. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகத்தைப் பற்றி \"இந்தியாவில் தீண்டாமைப் பரப்பும் இவர்கள் ஜோன்ஸ்பர்க்கில் நியாயம் தீர்க்கப் போகிறார்களா\" என்றும் \"ஆறுகோடி மக்களையும் நாசம் செய்திவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மேலுக்கு நேஷனல் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக் கொண்டு பெரிய வேஷக் காங்கிரஸாகவே நடத்தி வருகிறார்கள்\" என்று எழுதியவர் அயோத்திதாசப் பண்டிதர்.\nஇந்திய விடுதலையை துக்க தினமாகவே அறிவித்தவர் தந்தை பெரியார்.\n1947ல் இந்திய பெற்ற சுதந்திரத்தை \"அதிகார மாற்றம்\" என்றும் \"பெறப்பட்ட ஒப்பீட்டளவு சுதந்திரம் ஆதிக்க சாதியினருக்கானதே\" என்றும் சொன்னவர் பாபாசாகிப் அம்பேத்கர்.\nஇவர்களை இந்திய தேசியவாதிகள் \"தேசத்துரோகிகள்\" என்றே வசை பாடினார்கள். எனினும் அயோத்திதாசப் பண்டிதர் தீண்டப்படாத மக்களை தென்னாட்டின் பூர்வீகத் தமிழ் குடிமக்கள் என்று நிறுவினார்- சாதி பேதமற்ற திராவிடர்கள் (non-caste dravidians) என்றழைத்தார். 'தமிழன்\" என்று தன் இதழுக்கு பெயர் வைத்து தன்னைத் தமிழன் என்ற அடையாளத்துடனேயே முன்னிறுத்தினார்.\nதிராவிடம் பேசிக்கொண்டிருந்த தந்தை பெரியார் தன் இறுதி நாட்களில் \"தமிழ் தேசியம்\" பேசினார். இந்திய விடுதலையை எல்லா தளங்களிலும் விமர்சித்த பாபாசாகிப் அம்பேத்கர்தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதினார்.\nதலித் மாநாட்டில் கலகக்குரலை முன்வைத்தவர்கள் இந்த வரலாறுகளையும் புரட்டிப் பார்க்க வேண்டும். தரவுகள், களப்பணி, குழு மனப்பான்மையை விட்டொழித்தல், தலித் அரசியலை வென்றெடுக்க தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளல்... என்று ஒரு நீண்ட பயணத்திற்கு இந்த மாநாடு குளிர்ப்பிரதேசத்தில் ஓர் அக்னிக்குஞ்சாய் அவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது.\nஅவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.\nவார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி\nசெவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்)\nகடந்த அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு என்பவற்றில் கலந்து கொண்டீர்கள். இச் சந்திப்புக்கள் உங்களுக்கு புது அனுபவங்களைத் தந்திருக்கிறதா\nநிச்சயமாக. இதுவரை நான் எட்டிப் பார்க்காத பல வாசல்கள் திறந்தன. அதனுள் பயணிக்கும்போது உண்மைகளை ஏற்றுக்கொள்வதும் அதை உணர்த்துவதும் எவ்வளவு கடினமானது என்பதை முதல் முறையாக அனுபவித்தேன். எங்கள் ஊடகங்களும் தலைவர்களும் எனக்குள் கம்பீரமாக கட்டி எழுப்பியிருந்த கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிதறிய போது உண்மையிலேயே நானும் உடைந்து போனேன் மௌனமாக\nபெண்கள் சந்திப்பின் ஆக்கபூர்வமான தன்மைகளாக எவற்றை அடையாளம் கண்டீர்கள்\nஎதிர்மறையான கருத்துள்ளவர்களையும் அழைத்து தங்கள் சந்திப்பில் பேசவைத்து அவர்கள் கருத்துகளுக்கும் செவிசாய்க்கும் பண்பு,- எந்த அரசியல் பின்புலமோ பணபலமோ இன்றி பெண்கள் தங்கள் கூட்டு முயற்சியால் தாங்களே முன்னின்று 17 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தியிருக்கும் 26 சந்திப்புகள்,- பெண்களின் படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் ஆக்கப்பூர்வமான செயல்,- எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் இருத்தலை நிச்சயப்படுத்திக் கொள்வதின் ஊடாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முயற்சி.\nஇச் சந்திப்பின் பின்னரான உங்கள் உணர்வுநிலை எவ்வாறு இருந்தது\nஅலைகளில்லாத ஆழ்கடல் போல அமைதியாக இருந்தேன். பேசப்பட்ட பல்வேறு செய்திகளை மனம் அசைப்போட்டது. தமிழ்நாட்டில் ஏன் இது போன்றதொரு சந்திப்புக்கான வாய்ப்புகளில்லை என்று யோசிக்கவைத்தது. இவர்களை எல்லாம் அழைத்துவந்து அவர்களின் ஆதித்தாய் மண்ணில் -( தமிழ்நாட்டில்) ஒரு சந்திப்பு நடத்தினால் என்ன என்று கனவு கண்டேன். அந்தக் கனவே ரொம்பவும் இனிமையானதாக இருந்தது.\nதலித் மாநாட்டு நிகழ்ச்சி உங்கள் எதிர்பார்ப்போடு பொருந்திப் போனதா அல்லது மாறுபாடாக இருந்ததா\nஇந்தக் கேள்விக்கு என் பதில் 'இரண்டும் தான்.' சிலவற்றில் பொருந்திப்போனதையும் சிலவற்றில் மாறுபாடாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.\nம்ம்ம்.. தேசியநீரோடையில் கலக்காமல் இந்திய மண்ணில் பாபாசாகிப் அம்பேத்கர், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், இவர்களுக்கு முன்னோடியாக பாதை அமைத்த அயோத்திதா சப்பண்டிதர், மகாத்மாபுலே இவர்கள் அனைவரும் சமூக விடுதலையை முன்னிறுத்திப் போராடினார்கள். அம்மாதிரியான ஒரு போராட்டக்குரலை -கலகக்குரலை- எழுப்பும் கட்டாயத்தில் காலம் இவர்களைத் தள்ளி இருக்கிறது என்று எண்ணினேன். அதை இந்த மாநாடு உறுதிப்படுத்தியது.\nஎதில் மாறுபாடாக இருந்தது என்றால் இந்த மாநாட்டில் தரவுகளை வைப்பதற்கான களப்பணியோ, ஆய்வுகளோ செய்யப்படவில்லை. கலகக்குரலாக மட்டுமே இருந்ததே தவிர எதிர்காலத் திட்டங்கள், தீர்மானங்கள் பற்றிய தெளிவில்லை. தலித் அரசியல் பற்றிய பார்வையை முன்வைக்கவில்லை. இந்த மாநாடு குறித்த என் கருத்துகளைத் தனிக்கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்.\nஇலங்கையின் சாதியமைப்பு முறை பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைத்ததா அல்லது ஏற்கனவே அறியப்பட்டவைகளாக அவை இருந்ததா\nநான் அறிந்தது சொற்பம். இந்த மாநாடு இன்னும் நான் அறிந்து கொள்ள வேண்டியவைகளைக் கோடிட்டுக்காட்டியது மட்டுமல்ல தமிழகத்தின் ஊடகங்கள் சொல்லாத பலச்செய்திகளை நோக்கி என்னைச் சிந்திக்க வைத்தது.\nதமிழ்த் தேசியம், தலித்தியம் இடையிலான முரண்களில் இந்த மாநாடு தெளிவான பார்வையொன்றைத் தந்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா\nதரவில்லை. அதற்கான கேள்வியை நான் மாநாட்டிலேயே வைத்தேன். இந்த மாநாடு தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான இருத்தலைப் பற்றியும் தமிழ்த்தேசியத்தில் தலித்துகளுக்கான சமவாய்ப்புகள் குறித்தும் குரல் எழுப்பி இருக்கிறதா அல்லது தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவே- குரல் எழுப்பி இருக்கிறதா.. இந்தக் கேள்வியுடனேயே நான் இந்தியா திரும்புவதாக அவர்களிடன் சொன்னேன். அதையே தான் உங்களிடமும் சொல்கிறேன்.\nஇம் மாநாட்டில் வைக்கப்பட்ட உங்கள் கருத்துக்கள் கவனிப்புப் பெற்றதாக அறிந்தோம். அதுபற்றி சொல்லமுடியுமா\nகவனிப்பு பெற்றிருந்தால் மகிழ்ச்சி. எனக்கு கொடுக்கப்பட்ட 30 நிமிடங்களில்.. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கும் தலித்துகளின் பக்கங்களைச் சொன்னேன், வரலாறு எப்போதும் வெற்றிபெற்ற வேடர்களின் பார்வையிலேயே எழுதப்படுவதைச் சுட்டிக்காட்டினேன். ஆதித்தமிழர்கள் நாம் தான், எவ்வாறு நாம் சேரிகளில் தள்ளப்பட்டோம் என்பதையும் குறிப்பிட்டேன். எல்லா மதங்களும் சாதிக்காப்பாற்றும் மதங்கள் தான். சட்டத்த்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது எங்களுக்கான சமத்துவ உரிமைகள். இந்திய அரசு சாதிக்காப்பாற்றும் அரசுதான். என்று தரவுகளுடன் சொல்லி, இறுதியாக தலித்துகளுக்கிடையில் இருக்கும் உட்சாதிப்பூசல்களை ஒழிக்க வேண்டும். தலித் விடுதலையில் முதல் படி இதுதான் என்பதை வலியுறுத்தினேன். நான் இறுதியாகச் சொன்ன தலித்துகளுக்கிடையில் நிலவும் உட்சாதிப்பூசல்கள் குறித்த கருத்தை எந்தளவுக்கும் இந்த மாநாட்டினர் உள்வாங்கிக் கொண்டார்கள் என்பது இன்றுவரை சந்தேகம்தான்.\n.இது உங்கள் முதலாவது வெளிநாட்டுப் பயணம், மற்றும் வெளிநாட்டில் பங்கேற்கும் சந்திப்புகள் என்ற வகையில் உங்களுக்கு திருப்திதந்த விடயங்கள், திருப்திதராத விடயங்கள் என்றுஎவற்றைச் சொல்கிறீர்கள்\nநிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்தால்தானே ஏமாற்றங்கள் இருக்கும் எனவே திருப்திதராதது என்று சொல்வதற்கு எதுவுமில்லை. நான் ரொம்பவும் சாதாரணமானவள். ஈழப்போராட்ட வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் புஷ்பராணி அக்காவைச் சந்தித்தது, மகிழ்ச்சி. அதைப் போலவே மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மட்டுமே அறிந்திருந்த உறவுகளை நேரில் சந்தித்ததும் அவர்களுடன் ஒருத்தியாக ரொம்பவும் இயல்பாக என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டதும் என் வாழ்வின் இனிய நினைவுகள்.\nஇன்றைய குடும்ப அமைப்பிலிருந்து இயல்பாக செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் சமூக கட்டுமானங்களால் மிகக் குறைவு எனக் கூறப்படுகின்றதே இது பற்றிய உங்கள் கருத்து என்ன\nபெண்கள் சந்திப்பில் முதல் நாள் நான் 'உறவுச்சிக்கல்கள்' என்ற தலைப்பில் வாசித்தக் கட்டுரையின் மையப்புள்ளி இதுதான். இல்லாள், மனைமாட்சி, தாய்மை என்ற கருத்துருவாக்கங்களின் மூலம் சமூகக்கட்டுமானங்கள் குடும்பத்தின் சுமையை பெண்ணின் தோள்களில் ஏற்றி சவாரி செய்கின்றன. சமூக வெளியில் ஓர் ஆணைப்போல இயல்பாக கரைந்து செயல்படுவது என்பது இன்றும் பெண்ணுக்கு எட்டாதக் கனிதான். இன்றைய பெண் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் சுமையில் ஆணுக்கும் பொறுப்புண்டு என்பதை உணர்ந்தவள். எனவே பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கிறாள். அந்த எதிர்பார்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படும்போது குடும்பம் என்ற அமைப்பையே ஒரு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நிலமைக்குத் தள்ளப்படுகிறாள்.\nபெண்ணியம், பெண்மொழி உருவாக்கம் பற்றி பேசுகின்ற போதிலும் பெண் தனது உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துக்களில் பிரயோகிப்பதை பலர் எதிர்த்து வரும் நிலையில் நீங்கள் ஒரு கவிஞர் என்ற ரீதியில் இவ்எதிர்ப்புக்களை, இப்பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்.\nமொழியும் மொழிவழி நம் சிந்தனைகளும் ஆணின் பார்வையிலேயே காலம் காலமாய் இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெண்ணின் உடல்மொழியை ஓர் ஆண் எழுதுவது என்பதற்கும் பெண் எழுதுவது என்பதற்கும் அடிப்படையில் இருக்கும் வித்தியாசங்களை பெண்கள் எழுதவந்தப் போது தான் புரிந்துகொள்ள முடிந்தது.\nஎன்று எழுதும்வரை பிரசவத்தைப் பற்றி என்ன எழுதிக்கொண்டிருந்தார்கள் பிரசவ வலியின் அழுகையின் ஊடாக பெண் அனுபவிக்கும் இந்த வலியை ஓர் ஆணால் உணரவும் முடியாது, எழுதவும் முடியாது பிரசவ வலியின் அழுகையின் ஊடாக பெண் அனுபவிக்கும் இந்த வலியை ஓர் ஆணால் உணரவும் முடியாது, எழுதவும் முடியாது தன்னை ஆணிலிருந்து வேறுபடுத்தும் தன் உடல் உறுப்புகள் தன்னை அவன் அடிமையாக்கும் அடையாளங்கள் அல்ல என்ற எண்ணம் வந்தப் போது பெண் தன் உடல் உறுப்புகளை நேசிக்கவும் பாராட்டவும் பெருமை கொள்ளவும் துணிந்தாள். அந்த வகையில் தான் பெண் தனது உடலுறுப்புகளைப் பற்றி எழுதிய போது ஓர் அதிர்வலை ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்று வெளிவர இடம் கிடைத்தால் மிகவும் வேகத்துடன் வருவது போலவே பெண்ணின் உடல்மொழி கவிதைகளின் வேகம் இருந்ததாக நினைக்கிறேன். இந்த அதிர்வலைகளை மட்டுமே நம்பி அதற்காகவே பெண் தன் உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துகளில் கையாளும் விளம்பரத்தனங்கள் வந்த போது தான் நெருடலாக இருந்தது. தன்னுடல்சார்ந்த உணர்வுகளைத் தாண்டி, பெண்ணின் உடல் சமூகத்தில் எல்லா தளங்களிலும் கீழ்த்தரமாக ஆண் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் கருவியாக்கியிருப்பதை பெண்களின் உடல்மொழி கவிதைகள் ஏன் கண்டுகொள்ளவதில்லை தன்னை ஆணிலிருந்து வேறுபடுத்தும் தன் உடல் உறுப்புகள் தன்னை அவன் அடிமையாக்கும் அடையாளங்கள் அல்ல என்ற எண்ணம் வந்தப் போது பெண் தன் உடல் உறுப்புகளை நேசிக்கவும் பாராட்டவும் பெருமை கொள்ளவும் துணிந்தாள். அந்த வகையில் தான் பெண் தனது உடலுறுப்புகளைப் பற்றி எழுதிய போது ஓர் அதிர்வலை ஏற்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் காற்று வெளிவர இடம் கிடைத்தால் மிகவும் வேகத்துடன் வருவது போலவே பெண்ணின் உடல்மொழி கவிதைகளின் வேகம் இருந்ததாக நினைக்கிறேன். இந்த அதிர்வலைகளை மட்டுமே நம்பி அதற்காகவே பெண் தன் உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துகளில் கையாளும் விளம்பரத்தனங்கள் வந்த போது தான் நெருடலாக இருந்தது. தன்னுடல்சார்ந்த உணர்வுகளைத் தாண்டி, பெண்ணின் உடல் சமூகத்தில் எல்லா தளங்களிலும் கீழ்த்தரமாக ஆண் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் கருவியாக்கியிருப்பதை பெண்களின் உடல்மொழி கவிதைகள் ஏன் கண்டுகொள்ளவதில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.\nஉங்கள் ஹேராம், நிழல்களைத் தேடி கவிதைத்தொகுதிகள் இலக்கியத்தளத்தில் எப்படியான கவனிப்பையும் விமர்சனங்களையும் பெற்றது\nஹேராம் கவிதைகள் என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தியது. என் இலக்கிய வட்டத்தை விசாலமாக்கியது. அரசியல் தளத்தில் சில கேள்விகளை எழுப்பி ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது உண்மை. அயோத்தி பாபர்மசூதி இடிப்பு, அதன் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகள், மதக்கலவரங்கள் ... இவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்ட ஒரு ஜீவனின் கேள்விகள். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாதிப்புகளில் ஏற்பட்ட வலியின் அலறல். அத்துடன்,\nஎன்று திராவிட இயக்கங்களை நோக்கி அந்தக் குடும்பப்பின்னணியில் வந்த அதன் இரண்டாம் தலைமுறை வைக்கும் கேள்வி.. இப்படியாக நிறைய உண்டு. நிறைய விமர்சனங்களும் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்தன. அமீரக நண்பர்கள் கவிஞர் அறிவுமதியை அழைத்து அமீரகத்தில் (துபாய்) ஹேராம் நூலை வெளியிட்டு அறிமுகம் செய்தார்கள\nநிழல்களைத் தேடி கவிதைநூலுக்கு 2006 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசு கிடைத்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நிழல்களைத் தேடி கவிதைகளை ஆய்வு செய்தார்கள். ஆனாலும் ஆய்வுகளும் சரி விமர்சனங்களும் சரி, நிழல்களைத் தேடி என்ற தலைப்பில் நான் எழுதியிருக்கும் 11 கவிதைகளுக்குள் புகவில்லை என்பது என்னை வருத்தப்பட வைத்த விசயம்தான்.\nபெண் அரசியல், பெண்மறுப்பு அரசியல் பற்றி பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இவை பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன\nஉடற்கூறும் அதனால் விளையும் உளவியல் சிக்கல்களும் அரசியல், சமூகத் தளத்தில் பெண்ணை இரண்டாம் நிலைக்கு (subordinate) இட்டுச் செல்வதாகவும் இயற்கையிலேயே அதிகாரத்தை (power) வென்றெடுக்கும் உடல்வலியும் மனவலியும் ஆணுக்கே இருப்பதாகவும் சொல்லப்படும் கருத்துகள் பெண் மறுப்பு அரசியலை முன்வைக்கின்றன, இன்னும் சிலர் ஆள்பலம், அடிதடி, குத்து, கொலை, ஏமாற்று என்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடப்பியல் சூழலில் ஆணின் துணையின்றி பெண் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றும் சொல்வதை முற்றும் புறக்கணிக்கும் நிலை வரவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திராகாந்தி அம்மையாரைப் பற்றிச் சொல்லும்போது 'அவர் ஒருவர்தான் காங்கிரசில் ஆண்' என்று சொன்னதை நினைவுப் படுத்த விரும்புகிறேன். ஏனெனில் அரசியல் அதிகாரம் பெண்ணிடம் வரும்போது அதையும் 'ஆணாக' பார்க்கும் பார்வையே நம்மிடம் இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் அரசியல் நுழைவும் கூட இங்கே அரசியல் தலைவரின் மகளாக, விதவை மனைவியாக, உடன்பிறந்தவளாக..ஆணின் பினாமி பெயரில் ரப்பர் ஸ்டாம்பாக ... இருக்கும்வரை பெண் அரசியலைப் பெண்கள் அடையாளம் காண வெகுதூரம் இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது.\nபெண்களைப்பற்றிய கருத்தாக்கங்கள் மாறும்போது குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்ற வாதம் பிழையானது என்று கருத்து வைக்கப்படுகிறது இது பற்றி உங்கள் கருத்துக்கள் எவை\nஉங்கள் கேள்வியில் இருக்கும் 'குடும்பம் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது' என்ற சொற்றொடரில் இருக்கும் 'பாதுகாப்பு 'என்ற சொல்லே மரபியல் சார்ந்த கருத்து தான். பாதுகாப்பு என்பதே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் ஒரு தந்திரமான பாதுகாப்பு வளையம்தான் பாதுகாப்பு என்ற சொல்லின் கருத்துருவாக்கத்தைப் பெண்கள் உடைத்து வெளிவர வேண்டும். யாருக்கும் யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. .துணை என்பதும் சேர்ந்து வாழ்வது என்பதும் குடும்ப உறவுகள் என்பதும் பாதுகாப்பு என்ற வட்டத்திற்குள் சிலுவையில் அறையப்படக் கூடாது. பெண் கல்வி, அதனால் கிடைக்கும் பொருளாதர பலம், பணிநிமித்தம் தனித்து வாழும் சூழல் இவை எல்லாம் 'குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது' என்ற கருத்துருவாக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.\nசாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படும் ஒரு கருவியாக பெண்ணின் பாலியல் தன்மை கருதப்பட்டு அடையாளப்படுத்தப்படுகிறது என்ற கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா\nநிச்சயமாக. எங்கெல்லாம் தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறதோ அதற்கான பின்னணியைப் பாருங்கள். உதாரணமாக ஒரு தலித் ஆண் ஆதிக்கச்சாதியை எதிர்த்தால் அவனை அடக்கவும் ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் செய்யும் செயல் அந்த தலித் ஆணின் தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவனுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்வது.இந்தமாதிரியான பாலியல் பலாத்காரம் ஆணின் காமயிச்சையையோ , தனிமனித விகாரத்தையோ காட்டும் செயலாகவோ இருப்பதில்லை. முழுக்க முழுக்க ஆதிக்கச்சாதி தன் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பெண்ணின் பாலியல் தன்மையைக் கருவியாகப் பயன்படுத்துகிறது .ஆணாதிக்க சமூகத்தில் போர் முடிந்து எதிரி நாட்டின் பெண்களைச் சிறைப்பிடித்து வந்ததாக சொல்லப்படும் வரலாற்றிலிருந்து இதை நாம் பார்க்கலாம். சாதி மேலாதிக்கத்தில் மிகவும் தீவிரமாக இக்கருத்தியல் செயல்படுகின்றது.\nஅண்மையில் வெளிவந்த ஈழத்து பெண்கவிஞர்களின் தொகுப்பான பெயல்மணக்கும் பொழுது என்ற கவிதைத்தொகுப்புப் பற்றி -நீங்கள் ஒரு கவிஞர் எழுத்தாளர், என்ற வகையிலும் பெண்கள் சந்திப்பில் அந்நூலை விமர்சனம் செய்தவர் என்ற வகையிலும்- நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா\nபெண்கள் சந்திப்பில் கவிதைகளுக்கான என் விமர்சனத்தை வைத்தேன். அதுதவிர இத்தொகுப்பு குறித்து சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. பெண்களின் கவிதைகளைத் தொகுக்கும் இந்த முயற்சியில் பெண்கள் பெயரில் எழுதும் சில ஆண்களின் கவிதைகளும் தவறுதலாக இடம் பெற்றுவிட்டன. யுத்த பூமியில் தனக்கான நாளைய விடியல் நிச்சயமில்லாத பொழுதில் ஆண்கள் பெண்கள் பெயரில் எழுதுவதும், ஒருவரே பல பெயர்களில் எழுதுவதும் தவிர்க்க முடியாதது என்றே நான் நினைக்கிறேன். இம்மாதிரியான தொகுப்பு நூல்களில் கவிஞர்களைப் பற்றிய பின்னூட்டங்கள் கட்டாயம் தேவை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் சஞ்சிகைகளில் வந்த கவிதைகளை இவர்கள் அப்படியே எடுத்து போட்டுக்கொண்டுவிட்டார்கள் என்பது மாதிரியான தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்த்திருக்க முடியும். அதேநேரத்தில் என்னவோ இத்தொகுப்பை வெளியிட்டு இதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ இதன் மூலம் தான் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஓர் அவசியம் நிச்சயமாக இந்நூலைத் தொகுத்த அ.மங்கை அவர்களுக்கு இல்லை என்பதையும் இம்மாதிரியான விமர்சனங்களை வைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, நான்கு சுவர்கள், கூரை, வீடு என்று வாழும் பெண் ஒரு நிமிடத்தில் அனைத்தும் இழப்பதும் அகதி முகாம்களில் வாழ்வதும் மிகவும் கொடுமை. அதிலும் ஒரு பெண் அதில் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். எனினும் இக்கருப்பொருளில் ஓரு கவிதை கூட இத்தொகுப்பில் இல்லை. பெண்கள் இதைப் பற்றிய கவிதைகள் எழுதவே இல்லையா என்ற கேள்வி இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் தன்னிச்சையாக எழுகிறது.\nபெண், ஆண்களால் எழுதப்படும் பெண்ணிய எழுத்துக்களை வைத்து பெண்களால் மட்டும் எழுதப்படும் பெண் எழுத்துக்களின் தேவையை நிராகரிப்பது பற்றிய உங்கள் பர்ர்வை என்ன\nபெண்ணிய எழுத்துகளை பெண் எழுதுவதற்கும் ஆண் எழுதுவதற்கும் நிச்சயமாக வேறுபாடுகள் உண்டு. கவிஞை அ.வெண்ணிலாவின் கவிதையை உதாரணம் காட்டி நான் ஏற்கனவே சொல்லியிருப்பது இதைதான். இதைச் சொல்லும் போது பெண்ணிய எழுத்துகளை ஆண் எழுதினால் அது நிராகரிக்கப்படவேண்டும் என்ற அர்த்தமும் அல்ல. பெண் எழுத்துகளின் தேவையை எந்த தளத்திலும் ஏற்கனவே எழுதப்பட்ட எந்த அளவுகோலை வைத்துக்கொண்டும் இனி எவராலும் நிராகரிக்க முடியாது. யாருடைய எழுத்தையும் யாரும் நிராகரிக்கவும் முடியாது தானே. எழுத்துகளின் இருத்தலை நிச்சயப்படுத்துவது காலம் மட்டுமதான.\nகவிதைகளுக்கான வார்ப்பு மின்னிதழ் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\n'எனக்குத் தொழில் கவிதை' என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. கவிதையும் கவிதை சார்ந்தும் மட்டுமே இயங்குதல் என்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலையும் கம்பீரத்தையும் பாராட்டுகிறேன். வளரும் கவிஞர்களைத் தாலாட்டியும் வளர்ந்த கவிஞர்களைச் சீராட்டியும் தனக்கென ஒரு தனிப்பாதையில் பயணிக்கும் வார்ப்பு பலர் கவிதைகளுக்கு முகவரியைத் தேடிக் கொடுத்ததன் மூலம் தன் முகவரியை கவிதை உலகில் நிச்சயிப்படுத்திவிட்டது. வார்ப்பு ஆசிரியர் குழுவுக்கு என் வாழ்த்துகளும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎன் அனுபவத்தை எழுதச் சொல்லுகிறீர்கள்\nநான் வந்தது ஒரு சுற்றுலாவுக்காக என்றால்\nஅப்படியே என் டிஜிட்டல் காமிராவுக்குள்\nநானோ வந்தது அதற்காக அல்லவே.\nபெண்கள் சந்திப்பின் தொடக்கமும் வளர்ச்சியும்\nயுத்தங்கள் இல்லாத தேசம் கேட்கும்\nஎழுந்து நின்ற புன்னகை ஜெயா\n(அட.. நம்ம ராஜி அக்கா தான்)\nஎழுத்து சார்ந்த என் கலகக்குரலும்\n26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்\n26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்\nபெண்கள் சந்திப்பு எப்படி இருந்தது\n> ஓர் இனிய அனுபவம்.\n> ஜோடனைகள் விலக்கிய கருத்துச் செறிவுள்ள\n> ராஜி அக்காவின் கூஃபி நடனம்தான்\nஅரைகுறையாக அவர்கள் வாசித்த என் படைப்புகள் குறித்த அறிமுக உரைகள்தான் (விமர்சனங்கள்..\nநேரமின்மையைக் கருத்தில் கொண்டு நீக்கியிருந்தால்\nநிச்சயமாக வருத்தப்பட்டிருக்க மாட்டேன் என்பதை\nஅவர்கள் உணரவில்லையே என்பதுதான் என் வருத்தம்.\n>விஜி & றஞ்சிக்கு என் வாழ்த்துகள். எனினும்\n> இன்னும் கொஞ்சம் கட்டுக்கோப்புடன் செயல்பட்டிருக்க\nசரியான திட்டமிடலும் நேரம் ஒதுக்குவதும்\nவேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதும் நிகழ்வை\nஇன்னும் சிறப்பாக்கும். குறிப்பாக இளந்தளிர் ஆரதி மிகவும் சிரத்தையுடன் தயாரித்து கொண்டுவந்திருந்த\nஅமெரிக்கா ஆவணப்படத்தை கூட்டம் களைந்த பிறகு\nதிரையிட்டது போன்ற தவறுகளைத் தவிர்த்திருக்கலாம்.\nஉங்கள் கட்டுரைகள், பேச்சு எப்படி இருந்தது\n> இந்தக் கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்..\nஎனக்கு கொடுக்கப்பட்ட காலவரையறை மீறாமல்\nஎதைச் சொல்லவேண்டுமோ அதை மட்டும்\n> நிச்சயமாக கைதட்டல்கள் அல்ல. ஊடறு வெளியிட்டிருக்கும் \" இசை பிழியப்பட்ட வீணை\" மலையக பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு நூலை\nஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ஆழியாள் வெளியிட\nநான் முதல் நூலைப் பெற்றதுதான்.\nநிகழ்வில் \"இதைத் தவிர்த்திருக்கலாம்\" என்று எதை\nதனிப்பட்ட முற்போக்கு கருத்து கொண்டவராக தன்னைக்\nகாட்டிக்கொண்டிருக்கும் பாரிஸில் வாழும் ஓர் எழுத்தாளர்\nதன் இளம் மனைவியை விலக்கி வைத்திருப்பதும்\nஅதற்கான காரணங்களும் அதிக நேரம் பேசு பொருளானதைத் தவிர்த்திருக்கலாம்.\nஅவர் செயலுக்குப் பெண்கள் சந்திப்பு கண்டனம் தெரிவிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அடுத்த நிகழ்விற்கு சென்றிருக்க வேண்டும்.\nஅவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\n26-வது சந்திப்பு இந்நிகழ்வு. நீங்கள் இருப்பதோ\nஐ.நா.வுக்கு மிகவும் அருகில். எந்த இயக்கமும் அரசியலும்\nசாராமல் உங்கள் கருத்துகளை முன்வைக்கும் பட்சத்தில்\nஉங்கள் தீர்மானங்களை அம்னெஸ்டிக் அமைப்பு,\nஐ.நா.சபையின் மனித வள மேம்பாட்டு அமைப்புகளுக்கு\nஅனுப்பவதற்கு ஆவண செய்யுங்கள். மொழிப்பிரச்சனையும் இல்லை என்பதால் உங்களால் இதை செய்ய முடியும்.\nவேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nஇந்த அமைப்பிலிருந்த தற்போது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத வேறு சில பெண்களும் என்னைச்\nஒருவர் முன் நின்று நிகழ்வை நடத்துவதால் எந்த அமைப்பும் அந்த தனிப்பட்ட நபரின்\nஅமைப்பாகிவிட முடியாது. தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகளை விலக்கி எல்லோரும் கலந்து\nகொள்ள வேண்டும் என்று வேண்டுதல் விடுக்கிறேன்.\nகருத்து வேற்பாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.\nபல இலட்சம் நம் உறவுகளை விதைத்த யுத்தபூமியின்\nரத்தக்கறைகளைக் கூட அமைதிப் பேச்சு வார்த்தைகளில்\nதீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் காலத்தில்\nதனிப்பட்ட நம் விருப்பு வெறுப்புகளைப் பேசித் தீர்த்துக்\nபெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நிகழ்வின்\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nமறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயத்திற்கு 18-08-07 மாலை 6 மணியளவில் மும்பை தாதர் (மேற்கு) வான்மாலி அரங்கில் தலித் உறவுகள் ஒன்றுகூடி வீரவணக்கம் செலுத்தினர்.\nஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையும் தமிழர் முழக்கமும் இணைந்து\nநடத்திய நிகழ்வில் தலித் அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.\nபுலவர் இரா.பெருமாள் அவர்கள் தோழர் வள்ளிநாயகத்தின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து நினைவு அஞ்சலி கவிதை வாசித்தார்.\nதோழர் வள்ளிநாயகத்தின் களப்பணி, எழுத்துப்பணி, இயக்கப்பணி குறித்து அறிமுகவுரை ஆற்றினார் தோழர் இராசேந்திரன்.\nதோழர் வள்ளிநாயகம் மும்பைக்கு வர இருந்த இரண்டு\nநிகழ்வுகள் மும்பையில் நடந்த சில கலவரங்கள் காரணமாக தடைப்பட்டதை நினைவு கூர்ந்தார். இந்த ஆகஸ்டு மாதம் தான் அவரை மும்பைக்கு\nஅழைக்கும் திட்டம் இருந்தது. இப்போது அவருக்கு நாம் நினைவஞ்சலி செலுத்த கூடி இருக்கிறோம் என்று உணர்ச்சி தளும்ப அவர் நினைவுகளை,\nபற்றி சிறப்புரை ஆற்றினார் எழுத்தாளர் புதியமாதவி. 'விடுதலை இயக்க\nவேர்களும் விழுதுகளும்' என்று தோழர் வள்ளிநாயகம் தலித்முரசில்\nதொடர்ந்து எழுதிய கட்டுரைகளையும் அதில் அவர் அறிமுகப்படுத்தி இருக்கும்\nதலித் இயக்க முன்னோடிகளையும் குறிப்பிட்டு தலித் இயக்க வரலாற்றில்\nதோழர் வள்ளிநாயகத்தின் எழுத்துப்பணி படைத்திருக்கும் சாதனைகளைப்\nபட்டியலிட்டார். தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆண்டதை விட அயலவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் அதிகம். அதிலும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக\nஇருந்தக் காலம் அதைவிடக் குறைவு. இருந்தும் சங்கத்தமிழ் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் தமிழ் தன் மூலத்தன்மையை இழந்துவிடாமல் சேரிகளில் தான் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது.\nஆதிதிராவிட சிந்தனையாளர்களின் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து புராணங்களின்\nபொய்மை கலக்காத அவர்களின் படைப்புகளை எல்லாம் தோழர் அறிமுகம் செய்திருக்கும் பாங்கினை எடுத்துக்காட்டினார் புதியமாதவி.\nபாபாசாகிப் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இணையும்\nபுள்ளியிலிருந்து தான் இந்திய மண்ணில் சமத்துவமும் சாதி ஒழிந்த\nசமுதாய மானுட விடுதலையும் சாத்தியப்படும் என்பதை தன் எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்க்கையின் மூலமும் நமக்கான செய்தியாக விட்டுச்\nசென்றிருக்கிறார் தோழர் வள்ளிநாயகம் என்றார்.\nமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழு செயலாளர் தோழர்\nசு.குமணராசன் நம்மை, நம் வரலாற்றை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம் வரலாற்றை எழுதியிருக்கும் தோழர் வள்ளிநாயகம் அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அதுவும் மும்பையில் அவருடைய\n25 நூல்களையும் நாமும் நம் இளைஞர்களும் வாசித்து பயன்பெற\nவேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.\nநடந்து முடிந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்கள்\nபெற்று தேர்வில் வெற்றி பெற்ற தலித் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை அறிவித்து தோழர் வள்ளிநாயகத்தின் வாழ்க்கை குறிப்பினை வாசித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஆதிதிராவிட சிந்தனையாளர் சபையின் ஆணை அதிகாரி திரு.சேகர்சுப்பையா.\nநிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த வி.ஜே பாலன்,\nதிருவள்ளுவர் பவுண்டேசன் அமைப்பைச் சார்ந்த எம்.ஜெயம், மற்றும்\nதேவராஜன் மற்றும் பல மும்பை தமிழர்கள் கலந்து கொண்டனர்.\nஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபையின் பொருளாளர் திரு.ஜசக் நியூட்டனும்,\nநிர்வாக அதிகாரி சேகரும் தோழர் ஏபி.வள்ளிநாயகத்தின் நூல்களைத் தமிழக அரசு அரசுடையாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை\nமணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இருக்கிறது - இது பூகோளப்பாடம்.\nமணிப்பூர் மக்களை எதிர்க்கிறது - இந்திய இராணுவம். இது சரித்திரப்பாடம்.\nயாருக்காக யாரை எதிர்த்து இந்திய இராணுவம் போர் புரிகிறது\nவரைகோடுகளால் வரையப்பட்ட பூகோளப்பாடத்தை நிலைநிறுத்த இந்திய அரசு இந்தியர்களாக\nசொல்லப்படும் இந்திய மணிப்பூர் மக்களை அவர்கள் மண்ணிலேயே அடித்து வீழ்த்தி தன் ஆளுமையை\nநிலைநிறுத்தப் போர் நடத்துகிறது. இந்தப் போரில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கு தீவிரவாதிகள் என்ற\nபட்டம். அந்த மண்ணின் உரிமையை, அவர்களின் பிறப்புரிமையை எதிர்ப்பதன் மூலம் இந்தியா\nஅரசின் இன்னொரு முகம் -மக்களாட்சி முகமூடி அணிந்து தன் மக்களைத் தின்று திரியும் பயங்கரவாதத்தின் பலம் - திரைவிலகி வெளியில் தெரிகிறது.\nஇம்பாலில் (Imphal) இருக்கும் பம்மன்கம்பு சிற்றூரில் அதிகாலையில் வீட்டுக் கதவைத் தட்டி அவளைக் கைது செய்கிறார்கள்.\nதீவிரவாதைகளின் இயக்கத்தைச் சார்ந்தவள் என்று தங்கஜம் மனோரமாதேவி\nமீது குற்றம் சாட்டுகிறார்கள். அப்போது அவளுக்கு வயது 32. குண்டுகள்\nதுளைத்த மனித வல்லூறுகள் தின்று நாசம் செய்த அவள் உடல்\n11-07-2004 அதிகாலையில் நகரியன் மபோமரிங் கிராமத்தில் கண்டெடுக்கப்படுகிறது. ஏழு குண்டுகள் பாய்ந்துள்ள அவள் உடலில் ஒரு குண்டு அவள் இடுப்புக்கு கீழே பின்புறம் வழியாகப் பாய்ந்து அவள் யோனியைக் கிழித்து சிதைத்துள்ளது. அவள் உடலெங்கும் கீறல்கள், காயங்கள், வலது\nஅவள் நிலைக்கண்டு மணிப்பூர் மக்கள் கொதித்து எழுந்தனர். மனோரமாவின் குடும்பத்தினர் அவள் உடலை வாங்க மறுத்தனர். 32 அமைப்புகள் ஒன்றுகூடி இரண்டு நாட்கள் முழுகதவடைப்பு போராட்டம் நடத்தினர்.\nமனோரமா படுகொலையைக் கண்டித்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை ( Armed forces special powers act- AFSPA. 1958ஐ) விலக்கக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சார்ந்த 12 பெண்கள் ஊர்வலம் சென்றனர். இந்தப் பெண்களின் ஊர்வலம் பலகோடி\nமக்கள் கலந்து கொண்ட ஊர்வலங்களை விட வலிமையானது.\nஇந்திய அரசை அசைத்துப் பார்த்த பெண்களின் ஊர்வலமிது.\nதங்கள் உடலையே ஆயுதமாக ஏந்தி நிர்வாணக் கோலத்தில் கங்க்லாகேட் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஎன்ற பதாகைகள் தாங்கி அவர்கள் நடத்திய ஊர்வலம்தான் ஊடகங்களை\nமணிப்பூரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. மணிப்பூரில் என்ன\nநடந்து கொண்டிருக்கிறது என்று பிற மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்களுக்கு தெரியவந்தது.\n16-07-2004ல் தடையுத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 700 பேர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.மணிப்பூர் பல்கலை கழக மாணவர் அமைப்பு அமைதியான முறையில் ஊர்வலம் வந்து மணிப்பூர் ஆளுநர் மாளிகையை\nகொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்த கிளர்ச்சியை\nகாவல்துறை தன் இரும்புக்கரங்களால் சுட்டு வீழ்த்தியது. பலர் காயமடைந்தனர்.. சிலர் உயிரிழந்தனர்.\n13 நாட்கள் பிணவறையிலிருந்த மனோரமாவின் உடலை அவள் உறவினர்களுக்குத் தகவல் சொல்லாமல் காவல்துறையே எரியூட்டி இறுதிச் சடங்கைச் செய்தது.\n12 ஆகஸ்ட் 2004ல் மணிப்பூர் முதல்வர் 7 தொகுதிகளில் இந்திய இராணுவத்தின் (AFSPA) கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்காமல் தளர்த்திக் கொள்வதாக அறிவித்தார். (partial withdrawal).\n15 ஆகஸ்ட் 2004ல் இந்திய சுதந்திர நாளில் மணிப்பூரின் பல்வேறு இடங்களில் இந்திய சுதந்திரக்கொடி, மூவண்ணக் கொடி எரியூட்டப்பட்டது.\n32 வயது பிபம் சித்தரஞ்சன் சிங் மணிப்பூரில் இந்திய இராணுவத்தின்\nமணிப்பூரில் நடக்கும் இந்த அனைத்து செய்திகளையும் ஒளிபரப்ப\nமணிப்பூர் கேபுள் நெட்வொர்க்கிற்கு அரசு தடையுத்தரவு விதித்தது..\n>ஒத்துழையாமை இயக்கம் - (non cooperation )\n>சுதேசி இயக்கம்.. ஆம், இந்தியப் பொருட்களை முழுவதுமாக மணிப்பூரில் விலக்குதல்..\nசுதந்திர இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தின் மறுவாசிப்பு இது.\nசந்தேகத்தின் பேரால் யாரையும் எப்போதும் எவ்விடத்திலும் விசாரணையின்றி கைது செய்யவும் சுட்டுத் தள்ளவும் இந்திய பாதுகாப்பு படையில் கடைநிலை காவலர்க்கு கூட அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததையும்\nஇதெல்லாம் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட இந்திய அரசு\nஎடுக்கும் முயற்சிகள் என்றும் அரசு மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல,\nதன்னையே ஏமாற்றிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇந்திய இராணுவத்தில் 31 ஆண்டுகள் பணிபுரிந்த பிரிகேடர் சாயில்லோ\n(Brigadier Sailo) அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில் அரசு தரப்பு செய்திகள் உண்மைக்கு புறம்பாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.\n\"மிஷோரோம் கிராமத்தில் ஒட்டு மொத்த மனிதர்களின் உரிமைகள்\nபறிக்கப்பட்டிருப்பதையும் அவர்களின் அவல நிலையையும் எழுதியுள்ளார்,\nஇன்று வடகிழக்கு மாநிலங்களின் நிலை இதுதான்.\nதென்கொரியா வழங்கும் க்வாஞ்ச்சு விருது (Gwangju Prize ) சியோல் நகரத்தில் மே மாதம் 18ஆம் நாள் 2007ல் மணிப்பூரின் இரும்பு மங்கை சர்மிளா தானுவுக்கு -வயது 35- வழங்கப்பட்டுள்ளது.\nப்ளஸ் டூவுக்கு மேல் (12th std) தன் கல்வியைத் தொடர முடியாத மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த சர்மிளா தானுவுக்கு ஆசியாவின் மிகச்சிறந்த\nவிருது வழங்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய ஆவணப்படத்தை மனித\nஉரிமைகள் அமைப்பு தயாரித்து திரையிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக\nஅவருடைய விருதைப் பெறுகிறார் அவருடைய மூத்த சகோதரர்.\nசர்மிளா தன் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவில்லை.\nயார் இந்த இரும்பு மங்கை\nஇம்பாலிலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் மலோம் (Malom) பேருந்து நிலையத்தின் அருகில் இந்திய பாதுகாப்பு படை 02 நவம்பர் 2000ல்\nநடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் எண்ணிக்கை 10.\nஇதுமாதிரி துப்பாக்கிச் சூடும் மனித உயிர்களைப் பறிப்பதும் இந்திய பாதுகாப்பு படைக்கு புதிதல்ல, மலோம் மக்களுக்கும் புதிதல்ல. ஆனால் இச்செய்தியைக் கேள்விப்பட்ட சர்மிளா உடனடியாக மலோம் விரைந்து\nதன் \"சாகும்வரை உண்ணாவிரதம்\" போராட்டத்தை அறிவித்தார்.\nசர்மிளாவின் காந்திகிரியைக் கண்டு பலர் இந்த இளம்பெண்ணின் உண்ணாவிரதம் எதுவரை தொடரும் என்று ஐயப்பாட்டுடன் நோக்கினர்.\nஇம்பாலா மருத்துவமனையில் அவருக்கு 21 நவம்பரில் மூக்குவழியாக\nதிரவ உணவு ஊட்டப்பட்டது. 'தற்கொலைக்கு முயன்ற குற்றத்திற்காக\nசர்மிளாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசமும்\nதாயின் சந்திப்பும் கண்ணீரும் சர்மிளாவின் மனவுறுதியை தளர்த்திவிடக்கூடாது என்பதால் இன்றுவரை உண்ணாவிரதமிருக்கும் மகளைச் சந்திக்கவில்லை என்கிறார் 75 வயதான சர்மிளாவின் தாய்.\nமகாத்மா காந்தியடிகள் இன்றிருந்தால் நான் செய்வதையே அவரும் மணிப்பூர் மக்களுக்காக செய்வார் என்று காந்தியின் நினைவிடத்தில் நின்று கொண்டு\nஇந்திய அரசிடம் சொல்கிறார் சர்மிளா.\nமனோரமாவின் படுகொலை, அதன் பின் நடந்த மக்கள் எதிர்ப்புணர்வு அனைத்தும் சர்மிளாவின் போராட்டத்தை கூர் தீட்டியுள்ளன.\n2007, சர்மிளா தன் சத்தியாகிரக அஹிம்சை வழி போராட்டமான உண்ணாவிரத்தத்தை ஆரம்பித்து\n7 வருடங்கள் ஆகிவிட்டது. எந்த இந்திய அரசு மகாத்மாவின் சத்தியகிரக அஹிம்சைவழிப் போராட்டத்தில்\nசுதந்திரம் அடைந்ததாக தன் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் எழுதி வைத்து 60 ஆண்டு\nமக்களாட்சியை மண்ணில் நடத்துவதாக பெருமை அடைந்துள்ளதோ அதே இந்திய அரசுதான்\nகாந்தியின் அதே வழியில் தன் மண்ணின் மனிதர்களின் தன்மானம், தன்னுரிமைக்காக போராடும்\nஇளம்பெண் சர்மிளாவை அரசு மருத்துவமனையில் சிறை வைத்துள்ளது\nமருத்துவமனை ஆகட்டும், சிறைச்சாலை ஆகட்டும் சர்மிளாவைப் பார்க்க குறைந்தது 20 நாட்கள்\nமுன்பே திட்டமிட்டு உள்துறை அமைச்சகம் முதல் மணிப்பூர் சஜிவ்வா சிறைச்சாலை அதிகாரி வரை\nஅனுமதி தர காத்திருக்க வேண்டும். ஒரு தீவிரவாதிக்கு கூட சிறைவிதிகள் இத்தனை கட்டுப்பாடுகளை\nஜவஹர்லால் நேரு மருத்துவமனை, இம்பாலாவில் இருக்கும் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து செப்டம்பர் 13, 2007 முதல் மணிப்பூரின்\nமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.\nநாடுதழுவிய போராட்டமாக தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை எடுத்துச் செல்லும் போராளிகளின்\nபடையில் ஒரு நாளாவது உண்ணாவிரதத்தில் நாமும் சேர்ந்து இரும்பு மங்கை சர்மிளாவின் போராட்டதை ஓரடி\nமொழி தெரியாத அவள் முகம் கூட\nகனடாவிலிருந்து 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்ற வேட்கையுடன் வெளிவரும் பதிவுகள் இணைய இதழில் என் வலைப்பதிவு பக்கங்களை அறிமுகம் செய்திருக்கும் பதிவுகள் ஆசிரியர் தோழர். வ.ந.கிரிதரன் அவர்களுக்கு நன்றி.\nதனது கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர்தான் புதியமாதவி அவர்கள். அவரும் 'புதியமாதவி' என்னுமொரு வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவரது வலைப்பதிவிலிருந்து அண்மையில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் பற்றி எழுதப்பட்டிருந்த 'தீர்ப்புகளும் கேள்விகளும்: தீர்ப்புகளும் கேள்விகளும்' ...உள்ளே\nஜனவரி - ஜூலை 2007\nதமிழ்க் கனவும் தமிழ்ப் புலமும் தமிழ் இனமும் தலைநிமிர வழிவிடட்டும் கலைஞரும் திராவிடப் பேரரசும்\nஇந்த இதழில் வெளிவந்துள்ள புதிய மாதவியின் கட்டுரை ஒரு இணைய தளத்தில் இடம் பெற்றிருந்தது.(பார்க்க: கட்டுரை மார்ச் 21,2007 திராவிட அரசியல்) எனினும் கவிதாசரணிலும் வரவேண்டும் என விழையப்பட்டதால் இங்கு வெளியிடப்பெற்றது.\nஎன் கை முறிவுக்கு அறுவை செய்துகொண்டபின், ஒரு நாளில் புதிய மாதவி எங்கள் இல்லம் வந்திருந்தார். மும்பைத் தோழர்களோடு சென்னை வந்தவர், அவர்கள் அதிகாரத் தமிழர்களைத் தரிசிக்கச் சென்ற இடைவெளியில் இவர் தன் அன்பை வெளிப்படுத்த எங்களைத் தேடி வந்தார். நீரும் நீரும் கலந்தாற்போல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன இரண்டு செய்திகள் அந்த உரையாடலின் முகவரிபோல் எனக்கு முகமன் கூறி, சறுகுகள் அடர்ந்த வனத்தினூடாக 'வீடு நோக்கித் திரும்தலில் சற்று இளைப்பாறக் கோரின.\nஒருமுறை மும்பை வந்திருந்த ஆசிரியர் வீரமணியிடம் (திராவிடர் கழகத்தவர் தங்கள் தலைவரை அவ்வாறுதான் குறிப்பிடுகின்றனர். ஒருவகையில் மிகையில்லாமல் அவருக்குப் பொருந்திவரும் இயல்பான அடைமொழி என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மாதவியின் முதல் விளிப்பும் அதுவாகத்தான் இருந்தது.) 'பெரியாரின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் அவரது சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் ஆட்சிக் காலத்திலேயே நாட்டுடைமையாக்க வலியுறுத்தலாமே’ என்று துண்டுச்சீட்டு அனுப்பிக் கேட்டதாகச் சொன்னார்.\nஆசிரியர் மலர்வார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக இறுகிப்போனதைப் பார்த்து இவருக்கு அதிர்ச்சி. எனக்கு அதைக் கேட்டு வியக்கத் தோன்றியது- மாதவிக்கு இப்படியொரு வெள்ளை மனசா என்று. பெரியார் எழுத்தின் அனுபவப் பாத்தியதையை விட்டுக்கொடுக்க மறுக்கும் வீரமணியாருக்கெதிராக அணுகுண்டைக் காட்டி மிரட்டியிருக்கிறார் மாதவி. இதை முன்கூட்டியே அவர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தாலும் அதைக் கேட்கும் துணிச்சல் உள்ளவர்தான். 'வீரமணி உங்களை வெகு காலத்திற்கு மறக்கமாட்டார்.என்றேன்.\nஅவர் சொன்ன இரண்டாவது செய்தி எனக்கொரு புதிய தகவலாய்க் கூடுதல் மன உளைச்சலைத் தந்தது.\n\"இந்தியாவில் என் பணி நிமித்தமான பயணங்களில் பல விமான நிலையங்களைப் பார்த்திருக்கிறேன், ஐயா. ஆனால் எங்கும் பார்த்திராத அதிசயமாய் சென்னை விமான நிலையத்தில் மட்டும்தான் பிள்ளையார் கோயிலைப் பார்க்கிறேன். இந்திய மதச்சார்பின்மைக்குப் பெரியார் வாழ்ந்த மண்ணின் காத்திரமான பங்களிப்பு”, என்றார்.\nபெரியாரைப் பேசிப் பின்பற்றிய குடும்பத்தில் பிறந்தவர். பெரியாரைக் கடந்தும் பல கேள்விகளோடு வளர்ந்து வருபவர். உரைகளுக்கிடையிலும் வரிகளுக்கிடையிலும் ஒளிந்துகிடக்கும் கரித்துகள்களைச் சலித்தெடுக்கும் நுண்ணரசியலைப் பயின்றுகொண்டிருப்பவர். எதார்த்த வெள்ளத்தில் உடன்போகப் பழகிய பிறர் இவரை நோய் முற்றியவராகப் பார்த்துச் சலித்துக்கொள்ளும் அளவுக்கு எதிர் அரசியலின் நியாயங்களை மனமதிரப் பேசுபவர். புதிய மாதவியின் இப்பரிமாணங்கள் நமக்கு வெகு காலமாகவே பரிச்சயமானவைதாம்.\n(அவர் கிளம்பும்போது மதிய உணவு வேளை கடந்து வெகு நேரமாகிவிட்டது. ஆயினும் அவர் உணவு கொள்ளாமலே கிளம்பிச் சென்றார். எங்கள் வீட்டிலிருந்து யாரும் அப்படிச் செல்ல நேர்ந்ததில்லை. வெளியிலிருந்து வருகிறவர்கள் ஒருவேளையேனும் தங்கிச் செல்வார்கள். நான் மாதவியை அதிகம் வலியுறுத்தவில்லையோ என்பது என் வீட்டம்மாளின் குறைபாடு. எனக்கு அப்போது அது தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் வேறு வகை உணர்வில் திளைத்திருந்தேன் என்பது கவனத்திற்கு வருகிறது.\nநாங்கள் அப்போதுதான் அவரை முதல் தடவையாகச் சந்திக்கிறோம். ஆனால் அது எனக்கு மறந்தே போய்விட்டது. அவர் ஏதோ இந்த வீட்டுப் பெண்போல, அடுத்த தெருவிலோ, அடுத்த பேட்டையிலோ வாழ்க்கைப்பட்டவர்போல, அவ்வப்போது எங்களை வந்து எட்டிப் பார்த்து 'எப்படி இருக்கிறீர்கள்’ என்று நலம் விசாரித்துச் செல்பவரைப் போல, அப்படியோர் இயல்பும் இழைவுமாய் அவரது வடிவும் வருகையும் ஒன்றியிருந்ததில் நான் கரைந்து போயிருந்தேன். நாங்கள் தெற்கத்திக்காரர்கள். எங்களுக்கு இந்தத் தோற்றப்பாடுகள் வாழ்வின் பிடிமானமுள்ள கற்பிதங்கள். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் துய்ப்புகள் இவ்வகை நினைவுச் சித்திரங்களன்றி வேறென்ன’ என்று நலம் விசாரித்துச் செல்பவரைப் போல, அப்படியோர் இயல்பும் இழைவுமாய் அவரது வடிவும் வருகையும் ஒன்றியிருந்ததில் நான் கரைந்து போயிருந்தேன். நாங்கள் தெற்கத்திக்காரர்கள். எங்களுக்கு இந்தத் தோற்றப்பாடுகள் வாழ்வின் பிடிமானமுள்ள கற்பிதங்கள். யோசித்துப் பார்த்தால் வாழ்வின் துய்ப்புகள் இவ்வகை நினைவுச் சித்திரங்களன்றி வேறென்ன\nபுதிய மாதவியின் கட்டுரை நான்கு பேர்களைப் பற்றிப் பேசுகிறது. நால்வரும் அவரவர் தளத்தில் ஆள்திறம் கொண்டவர்கள்; சமூகப் பெரும்பரப்பை ஊடறுத்து நிற்பவர்கள். மாதவி அவர்களைச் சரியாகவே மதிப்பிடுகிறார். கலைஞரைப் பற்றிய மதிப்பீட்டில், 'அவரும் மரத்துப் போய்விட்டார்; அவரை நம்பிய மக்களும் மரத்துப்போய் விட்டார்கள்’ என்பதாக மாதவியின் ஆற்றாமை கசந்து கொள்கிறது. இந்த ஆற்றாமை ஒன்றும் அவ்வளவு எளிதாக விலக்கிவிடும் விஷயமல்ல. உண்மையில் அது நம்மைக் கொல்லும் பண்பியல் நஞ்சாக அச்சுறுத்துகிறது; அலைக்கழிக்கிறது. கடவுள் மறுப்பிலிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் நிலைப்பாட்டுக்கு மாறியவர்களை என்னிலும் கடுமையாகத் தாக்குகிறார். 'திருடர்கள்’ என்று பெயரிட்டழைக்கிறார். அவர் கோபம் நியாயமானது. இழப்பின் ஆற்றாமையில் சொற்கள் பொங்கி வழிகின்றன. இதில் ஒளிந்திருக்கும் கண்ணி என்னவெனில் இன்னும் நாம் அவர்களின் உடன்பிறப்புகளாய்ச் ‘சீ’ப்படுகிறோம் என்பதுதான்.\nநான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல் 1960களில் ஜெயகாந்தனுக்காகக் கடைகளில் காத்து நின்றவர்களில் நானும் ஒருவன். மாதவி அதைத்தான் சொல்கிறாராக இருக்கும். மனிதர்களோடான உரையாடல் தளத்தில் ஜெயகாந்தன் எப்போதுமே விவகாரமான ஆள்தான் எனினும் எங்கள் காலத்தில் அவரை சிம்ம கர்ஜனை செய்பவராகவே நம்பியிருந்தோம். 'ஹரஹர சங்கர’ எழுதி ஞானபீட விருது பெற்ற பிறகுதான் மாதவி சொல்வதுபோல் அவர் கம்பீரமாகக் குரைப்பது ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. முரசொலி அறக்கட்டளை பரிசு தரவும் அதை அவர் பெறவும் இந்த வீழ்ச்சி நியாயப்பட்டிருப்பதுதான் ஆகப்பெரும் சோகம்.\nஇந்தக் கசப்புகளிலிருந்து மீளும் உபாயமாக மாதவிக்கு இளையராஜா கிடைத்திருக்கிறார். கொஞ்சம் மிகையோ என்னும்படி அவரை உயர்த்திப் பிடிக்கிறார். அவர் சித்தாந்த உறுதிப்பாடுமிக்கவர் என்பதாக வேறு நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பதற்கும் மூகாம்பிகைக்கு வைரக்கை சாத்தினால் அருள்பாலிப்பாள் என்பதற்கும் சித்தாந்தம் வேண்டியதில்லை; வெறும் மூடத்தனம் போதும். 'செத்தாலும் சிந்திக்க மாட்டேன்’ என்று கண்ணைக் கட்டிக்கொள்ளும் மூடத்தனம். மாறாக, இளையராஜாவின் தன்மானத்தைப் பற்றிப் பேசுகிறாரே, அது பெருமிதம் கொள்ளத்தக்க நியாயம். மாதவி அதற்காக கர்வமும் கொள்ளலாம். தன்மானம் பிறர் மானத்தைக் காயப்படுத்தாதவரை அந்தக் கர்வம்தான் அதன் நியாயமும்கூட.\nபெரியார் படத்துக்கு இளையராஜா இசையமைக்காமல் போனது அவரது தீவிர தெய்வ பக்தியால் மட்டுமே அல்ல என்றே தோன்றுகிறது. பெரியார் பட இயக்குநர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. பொதுவாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற நிர்வாக மேட்டிமைகள் பலரும் மிகையான தன்மூப்பில் திளைப்பவர்கள்; அடிப்படையில் அதிகாரச் சுரப்பிகளாய் வடிவமைக்கப்பட்டவர்கள். பிறரை சகமனிதர்களாகவன்றி, ஊழியர்களாகவே பார்க்கப் பழகியவர்கள். நட்புக்குச் சூழ்பவர்களை ஏவிப் பிழைக்கிறவர்கள். இவர்களால் ஒருபோதும் மக்களைத் திரட்டி ஈர்க்கும் அரசியல் தலைவர்களாக முடியாது என்பது என் எண்ணம்.\nமக்களுள் ஒருவனாக உட்கார்ந்து, மக்களை ஊடறுத்துச் மேலேறுகிறவன்தான் வெற்றிகரமான மக்கள் தலைவனாகலாம். தனக்கு மேலே உள்ளவனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்பதான மனத்தயாரிப்புள்ளவன் மானஸ்தர்களைப் பற்றி அக்கறைப்படாதவன். இளையராஜா விஷயத்திலும் இப்படியொரு ரசாயனமே வினை புரிந்திருக்கக்கூடும். ஞானராஜசேகரன் தன்னை எளிமைப் படுத்திக்கொண்டு தானே களமிறங்காமல் தன் அலுவலகச் சிப்பந்தியை ஏவி இளையராஜாவைப் பணியமர்த்த எத்தனித் திருக்கலாம். (இளையராஜா மறுத்துவிட்டார் என்பதை உடனடியாக ஆதாய விளம்பரமாக்கிக்கொண்டதில், குற்றம் சுமத்தப் பறக்கும் அதிகார மூளையை அடையாளம் காணலாம்.) காயப்பட்டு விட்டதாகக் கருதிய இளையராஜா 'என்னை மதியாதவன் நான் வணங்கும் ஈசனேயாயினும் எனக்கவன் துச்சமே’ என்று தன்னை விடுவித்துக் கொண்டிருக்கலாம்.\nஈசன் என்றதும் திருவாசகம் ஓதி உடுக்கடிக்கிறவர் இளையராஜா என்பதைத்தான் மாதவி சித்தாந்தவாதம் என்கிறார் - அதாவது சச்சிதானந்த சித்தாந்தம் என்னும் பொருளில். அதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அது சித்தாந்தமல்ல. எதார்த்தத்தில் அடிமைத் தனத்தின் அடியாழத்தில் தன்னைத் தற்கொலைப்படுத்திக் கொள்ளும் தற்குறித்தனம். எனக்கு ஒரு படைத்தவனைக் கண்டெடுத்து, அவனுக்காகத் தெருத்தெருவாய் உருண்டுவந்து, நன்றி சொல்லி, போற்றி பாடி, தேரிழுத்துக் கொண்டாடி நாறிப் புழுப்பதென்பது, 'எனக்குச் சுயம் வேண்டாம். அடிமையாயிருப்பதே என் சுகம்’ என்பதன் மீட்சியற்ற வெளிப்பாடு. சுயமற்றவன் கோரும் மரியாதை, உடையில் சிந்திய பருக்கைபோல வெறும் அழுக்குதானே தவிர அணி அல்ல.\nஎதிர்பாராமல் இந்த 'நன்றி’ பற்றிப் பேச்சு வந்துவிட்டதால் நான் அதை மீண்டும் பேசியாக வேண்டும். என் 'சங்கர நேர்த்தி’யில் ஏற்கனவே பேசியதுதான். இளையராஜா பிறக்குமுன்பே அவர் பிறந்த பண்ணைபுரத்தில் அவருக்காகப் பெரியார் பேசியிருக்கிறார், பெருந்தொண்டாற்றி யிருக்கிறார் என்பதாகப் பேராசிரியர் சுபவீ நினைவுகூர்கிறார். ஆகவே, இளையராஜா பெரியாருக்கு நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. எதற்காக நன்றியுள்ளவராயிருக்க வேண்டும், பெரியார் ஏதோ வள்ளல் போலவும் இளையராஜா அவர்முன் இரந்து நிற்பவர்போலவும் நன்றி என்பது பிச்சைக்கார மண்ணின் அடிமை முறிச்சீட்டு என்பதல்லாமல் வேறென்ன\nபெரியார் தனக்குப் பிடித்த வேலையைத் தன்மேல் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர்; சமூக விழிப்புக்கான கருத்தியல் கொதிகலனாய்த் தன்னை வாழ்வித்துக்கொண்டவர். நான் அவரைப் புரிந்து கொள்ளலாம்; பின்பற்றலாம்; வளர்த்தெடுக்கலாம்; கொண்டாடி முன்னெடுக்கலாம். நன்றிகாட்டுவதென்பது நான் அவரின் நாய்க்குட்டியாய் இருக்கவா திரும்பத்திரும்ப உடைமைச் சமுதாயத்தையும் அடிமைக் குடிமக்களையும் புதுப்புது உத்திகளில் அதிகாரச் சூத்திரங்களால் நியாயப்படுத்திக்கொண்டு, அதையே புரட்சி என்பதாகப் பிதற்றிக்கொண்டு அடிமைப் பட்டாளங்களைப் பிரசவித்து ஆசீர்வதிக்கிற இழி வேலையல்லவா அது\nமாதவியின் கட்டுரைக்கு சுபவீயின் நேர்காணலே அடிநாதம். வேறு வகையில் சொன்னால் சுபவீ வருத்தப்படுவதற்கு அல்லது கோபப்படுவதற்கு சுபவீயும் அவரது சேனைத் தலைவர்களுமே பொருத்தமானவர்கள் என்று கோடிட்டுக் காட்டும் கட்டுரை இது.\nசுபவீ, இன்றுபூசிய சந்தனம் போன்றவர். உடம்பு வியர்க்கும்; சந்தனம் குழம்பும் என்பதெல்லாம் அப்புறம். இனிய பழகு முறைகளும் அரிய தோழமை உணர்வும் நிறைந்தவர். நல்ல பேச்சாளர்; பாசாங்கில்லாத வெகுநல்ல மனிதர். சொல்லப்போனால் இந்தக் கடைசி இரு அம்சங்கள்தான் என்னில் ஒளிரும் அவரின் அடையாளங்கள். அவரவர்க்கும் பொருந்திப்போக ஓர் இடமிருக்கும். சுபவீக்கு அப்படி யொரு இடம் இன்னும் வந்தடையவில்லை என்றே தோன்றுகிறது. கோல்ப் மைதானத்தின் பச்சைப் புல் மெத்தையில் எங்கிருந்து நோக்கினும் பளிச்செனத் தெரியும் வெள்ளைப் பந்து போல அவர் ஒளி சிந்துகிறார். சொல்லற்ற பொருண்மையின் படிமத் தீற்றல்கள் சொல்லுக்கப்பாலும் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.\nதிராவிட இயக்கவாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாய் இருக்கிறார்கள்- தங்கள் அப்பன்களையும் ஆத்தாள்களையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூசும் வல்லமைமிக்க நோஞ்சான்களாய் இருப்பதில். உடைமைச் சமுதாயத்தின் அதிகார வரம்பு இது. வெள்ளையடித்த வீடே இவர்களுக்கு இடித்துக் கட்டிய புதிய மாளிகை. மேடை முழக்கங்களே புரட்சிகரமான சிந்தனைகள். அரிய சிந்தனையாளர்களும் புதிய கருத்தியல் வாதிகளும் கருப்பைக் குள்ளேயே ரசாயன மாற்றத்துக்குள்ளாகி பெருச்சாளிகளும் நட்டுவாக் காலிகளுமாக உற்பத்தியாவது இந்த உடைமைப் பண்ணையின் இனப்பெருக்க முறைமை. இவர்கள் நடுவே வெள்ளைப் பந்துகள் குழிக்குள் விழுந்துவிடாமல் பச்சைப் புல்வெளியில் சுதந்திரமாய் மிதந்தலைந்தால் அதுதான் எவ்வளவு பெரிய கொண்டாட்டமா யிருக்கும் அது நிகழும்போது வெற்றியும் தோல்வியும் வெறும் சொற்கள் மட்டும்தான்- அர்த்தமற்று உதிரும் வித்தைகளற்ற சொற்கள்.\nசுபவீ நந்தன் வழி பத்திரிகையின் ஆசிரியராய் இருந்தபோது நான் எழுதிய கட்டுரை அவரைக் கடுமையாக முகங்கோண வைத்தது. (எந்தக் கட்டுரை யாரைத்தான் முகங்கோண வைக்கவில்லை) அதன் அர்த்தப்பாடு அறுபடாத உள்ளிழையாக இன்னமும் அரூபத்தில் தங்கியிருந்தாலும் எங்களுக்கிடையேயான முகமன்களை மீட்டுக்கொள்வதில் அவரது பெருந்தன்மைக்கு முதலிடம் உண்டு. அவர் எழுதி வெளிவந்தவற்றுள் 'பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ கவனம் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் பெரியாரை அவருக்கு உகந்த மாதிரி மறுவாசிப்புச் செய்த முயற்சியாகவே ஒரு வரையறைக்குள் அது சுருக்கிப் பார்க்கப்பட்டது. அப்படியும் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாக அதுவே இருக்கும். அந்த நூலுக்கு விமர்சனம் எழுதும்படி இடதுசாரி சாய்மானமுள்ள ஒரு இளைஞரைக் கேட்டுக் கொண்டேன். அவரோ விமர்சனம் எழுதாமல், அதன் உந்துதலால் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். இது சுபவீக்குக் கிடைத்த வெற்றியென்றே சொல்ல வேண்டும். நான் அந்தக் கட்டுரையைக் கவிதாசரணில் வெளியிட்டேன்- ஆக்கபூர்வமான விமர்சனப் பார்வைகளை எதிர்பார்த்து. அது கைகூடவில்லை. மாறாக, அந்தக் கட்டுரையை வாசித்த புகழ்பெற்ற மருத்துவரும் பெரியாரியவாதியுமான கவிஞர் ஒருவர் ஒரு போட்டியில் முதற்பரிசுக்குரியதாகத் தேர்வு செய்திருந்தார். இது சுபவீக்குக் கிடைத்த இன்னொறு வெற்றி. எனக்கு மகிழ்ச்சிதான். கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது - ஆழம் இவ்வளவு இலோசா என்று. அர்த்த நீர்ப் பரப்பில் சொற்கள் அலையற்று மிதப்பது நிகழத்தான் செய்கின்றன.\nஅந்த நூலை அடியொற்றியே அண்மையில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ யைக் கொண்டாட்டமாகத் துவங்கியுள்ளார் சுபவீ. இதன் மூலம் திராவிட இயக்கம் தமிழுக்கு மட்டுமானதல்ல என்று காலங்கடந்த காலத்தில் மீண்டுமொருமுறை நினைவு கூரப்பட்டிருக்கிறது. ஒரு வேளை, திராவிட இயக்கவாதிகளுக்கு 'திராவிடம்’ என்னும் சொல் வெறும் இடுகுறிப் பெயராகவே தடித்துப் போயிருக்கலாம். அந்தச் சொல்லுக்கு எத்தனை ஆயிரம் விளக்கங்கள், விவரிப்புகள் செய்யப்பட்டபோதும் அடிப்படையில் அது தமிழுக்கான சமஸ்கிருதச் சொல்தான் என்பது அறுபடாத ஊடிழையாக நினைவு கூரப்பட்டிருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியையும் பார்ப்பனக் கலாச்சாரத்தையும் அடிப்படை அலகுகளாகக்கொண்டு சமூகத்தை உலைத்துக் கட்டமைத் ததுதான் பார்ப்பனர்கள் சாதித்த வெற்றி.\nஅந்தப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த தமிழர் இயக்கம் - நீதிக்கட்சியைப் போலன்றி தமிழைத் தாய்மொழியாகவும் சமூக மொழியாகவும் கொண்டவர்களின் தமிழர் இயக்கம் (இன்றைய நான்கு தென் மாநிலங்களிலுமே எங்கெல்லாம் சந்தைகளும் படைக்குடியிருப்புகளும் இருந்தனவோ அங்கெல்லாம் தமிழ் சரளமாகப் புழங்கப்பட்டதாக கால்டுவெல் சொல்கிறார்.) பார்ப்பன மொழியிலேயே 'திராவிட இயக்கம்’ என்று அழைக்கப்பட்டதுதான் ஒரு வினோதக் கோணல். 'தமிழ்’ என்பதைவிட 'திராவிடம்’ என்பது மதிப்புள்ள சொல்லாகப் பார்க்கப்பட்டிருக்கக் கூடும். தமிழைவிட ஆரியம் உயர்ந்தது என்பதன் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம். (தமிழைக் கூலிக்காரர்களும் கூலிக்காரர்களோடு தொடர்புடைய வர்களும் பயன்படுத்திய மொழியாக இழித்துப் பார்ப்பது நெடுங்காலமாக நடந்துவந்திருப்பதோடு திராவிட ஆட்சியின் ஆங்கிலப் பள்ளிகளில் இன்றும் அது உறுதி செய்யப்படுகிறது.\nதிராவிடம் என்ற சொல்லைத் திண்ணை வேதாந்தத்தர்க்கமாக்கவே கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் 'திராவிடம், அல்லது திராவிட நாடு’ என்று தொண்டை வறளக் கத்தியாகிவிட்டது. இதெல்லாம் சுபவீ அறியாததல்ல. ஆனாலும் அந்த வறட்டுக் கூச்சலைப் புத்துயிர்த்துப் பின்புலமாக்கும் விதமாகத்தான் அவர் முன்வகிப்பில் 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் சுபவீ தன் இடத்துக்கான அறிவார்ந்த அடைதலைத் தேட மறுத்துவிடுகிறார், அல்லது கூடித் தொலைத்து விடுகிறார் என்று நமக்குப் படுகிறது. நம்மிலிருந்து மாறுபடுவதற்கு அவரிடம் மரபான காரணங்கள் நிறையவே இருக்கலாம். மரபின் மீள்பரிமாணம் பார்ப்பான் ஒழிந்த பார்ப்பனச் சாரம் அன்றி வேறென்ன\nபொடா சிறையனுபவத்துக்காளானவர் சுபவீ. இன்று அவரையும் அவரது நான்கு பழைய நண்பர்களையும் கலைஞர் பொடாவிலிருந்து விடுவித்திருக்கிறார். அதற்கு முன்பே அவர் கலைஞரின் அண்மையை விதித்துக்கொண்டுவிட்டார். அது ஒன்றும் சாதாரண அண்மையல்ல. அவரைப் போன்ற பொடா கைதிகள் புதிய அண்மையில் கல்லைப்போல் கனத்து மரத்திருக்க வேண்டிய அண்மை. இருவர் சேரும்போது ஒருவரையொருவர் பாதிக்கலாம். ஆனால் ஆள்கிறவர் பாதிப்படைவதென்பது ஆளப்படுகிறவரின் சரிவுக்குக் கிடைக்கும் ஆறுதலாக மட்டுமே இருக்கும்.\n'பேரறிஞர் அண்ணா’ என்று தம்பிமார்களால் பெரிதும் போற்றப்பட்டவர் 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ என்று அறைகூவல் விடுத்தார். அடைந்தாலும் அடையாவிட்டாலும் சுடுகாடு நிச்சயம் என்றாலும், ஏதோ 'அருள்வாக்கு’ மாதிரி அப்போதே சுடுகாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு மாயத் தொடர்பாகத் திராவிடநாடு உருவாக்கப் பட்டுவிட்டது. அதாவது, திராவிட நாடு என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த ஒரு சுடுகாட்டுத் தத்துவம் என்பதாக. அண்ணாவின் உடலுக்குச் சுடுகாடு கிடைக்கவில்லை. அதை இருப்பில் வைத்துக்கொண்டு இடுகாடுதான் உருவாக்கப்பட்டது.\nஅண்ணாவின் இலட்சியம் திராவிடநாடு அடைவதுதான். அது எல்லோருக்குமான திராவிடநாடு. அதை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை; சந்தர்ப்பம் கருதிப் பரண்மேல் பத்திரப்படுத்தி வைத்தார். அண்ணாவின் கனவை நனவாக்கும் கடமை தம்பிமார்களுக்கு உண்டுதானே. அவருக்கு ஆயிரம் பல்லாயிரம் தம்பிகள் இருக்கலாம். ஆனால் 'வெட்டிவா என்றால் கட்டிவரும்’ காளையாக வெடித்துக் கிளம்பிய ஆருயிர்த் தம்பி கலைஞர் மட்டும்தான். ஆகவே அவர் அண்ணாவின் சூளுரையை ஏற்று அவரது ஆத்மா சாந்தியடையும் பொருட்டு அரிதின் முயன்று திராவிடப் பேரரசையே வென்றெடுத்த மூலநாயகனாகிவிட்டார். ஒரு வேறுபாடு- இது அவரின் சொந்தத்துக்கான பேரரசு. நாம் சொல்லும் திராவிடப் பேரரசு நான்கு திராவிட மாநிலங்களிலும் கொடிகட்டிக் கோலோச்சும் 'சன் குழுமம்’ அல்லாமல் வேறென்ன நுகர்வியமும் உலகமயமும் கூடிவந்த சந்தைப் பொருளாதார நுண்ணலை யுகத்தில் நவீனப் பேரரசுகள் சன் குழுமம்போல் அல்லாமல் வேறெப்படி இருக்கும் நுகர்வியமும் உலகமயமும் கூடிவந்த சந்தைப் பொருளாதார நுண்ணலை யுகத்தில் நவீனப் பேரரசுகள் சன் குழுமம்போல் அல்லாமல் வேறெப்படி இருக்கும் யார் சாதித்தார் என்பதை விட யார் வழியும் துணையுமாய் இருந்தார் என்பதை நினைவுகூர்வதாகத்தான் கலைஞர் கண்ட பேரரசாக இதை நாம் அடையாளப்படுத்துகிறோம்.\n‘சன்’னுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பார் கலைஞர். உண்மையாகவே இருக்கலாம். ஆனால் உலகம்-குறிப்பாக திராவிட உலகம் அதை நம்ப வேண்டுமே. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் என்கலாம். ஆனால் அது ஒரு பேச்சுக்குத்தான், அல்லது சட்ட முறைமைக்குத்தான். 'சன்’னைத் தமிழ்நாட்டில் யாரும் தகர்க்கத் துணிய மாட்டார்கள். ஜெயலலிதா எடுத்த சிறு முயற்சி அவர் தோல்வியோடு ஏறக்கட்டப்பட்டது. இன்று கலைஞர் ஆட்சி நடக்கிறது. 'சன்’னைத் தாக்கினால் அது அறிவாலயத்தைத் தாக்கியதாகத்தான் அர்த்தம். ஆட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். பதவி மேல் துண்டு மாதிரி- தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் கொள்கையை விடமுடியுமா அது உயிராயிற்றே. அறிவாலயம் தாக்கப்பட்டால் பெரியாரியமே தாக்கப்பட்டதாகாதா அது உயிராயிற்றே. அறிவாலயம் தாக்கப்பட்டால் பெரியாரியமே தாக்கப்பட்டதாகாதா அதைப் பார்த்துக்கொண்டு கலைஞரின் காவல்துறை ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிராது. ஆனால் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தங்கள் மொழிவாரி இனநலம் பேணும் ஆத்திரக்கார அறிவிலிகள் 'சன்’ தொலைக்காட்சியை அடித்து நொறுக்கத் துணிகிறார்கள் என்றால், கலைஞர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மஞ்சள் உடை தரித்த புத்தரைப்போல் மௌனம் காப்பாரா அதைப் பார்த்துக்கொண்டு கலைஞரின் காவல்துறை ஒன்றும் பூப்பறித்துக் கொண்டிராது. ஆனால் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தங்கள் மொழிவாரி இனநலம் பேணும் ஆத்திரக்கார அறிவிலிகள் 'சன்’ தொலைக்காட்சியை அடித்து நொறுக்கத் துணிகிறார்கள் என்றால், கலைஞர் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி மஞ்சள் உடை தரித்த புத்தரைப்போல் மௌனம் காப்பாரா பதறமாட்டாரா பதறித் துடிப்பார் என்றால் அதற்குப் பெயர்தான் சொந்தம். 'தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்’ என்பார்கள். ஆனால் இங்கு கலைஞர் தானும் ஆடுவார். தன் சதையையும் ஆட்டுவிப்பார் என்பதுதான் உண்மை.\nசன் குழுமத்துக்குக் கலைஞர்தான் தலைக் காவிரி. இன்று வழியெங்கும் வந்தடையும் பல்லாயிரம் நீர்க்கால்களுடன் அகண்ட காவிரியாய் விரிதல் பெற்றாயிற்று. ஒரு பேச்சுக்காக, தலைக்காவிரியே அடைபட்டுப் போனாலும் காவிரி இருக்கும். மணலும் மணலடி நீருமாகவேனும் பிழைத்துக் கிடக்கும். ஆனால் தலைக்காவிரி எங்க போகும் பெற்ற பிள்ளைகளிடம் இரந்து நிற்கும் அன்னைபோல அது காவிரிக்காகத்தான் சுரந்து கொண்டிருக்கும்.\nமாறனின் மக்கள் அம்பானியின் பிள்ளைகளைப்போல அல்லது அவர்களுக்கும் மேலான தொழில் மூளை கொண்டவர்கள். தங்கள் வர்த்தகப் பேரரசின் உறுதிக்கும் விரிவுக்கம் வழிசெய்துகொள்ளத் தெரிந்தவர்கள். 'நம்பர் ஒன், நம்பர் ஒன் - தினகரன் தமிழில் நம்பர் ஒன்’ என்பது போன்ற சீழ் மணக்கும் வர்த்தக மொழியை உற்பத்தி பண்ணக் கற்றவர்கள். வலிய சிறகுகளோடு பறக்கத் தெரிந்தவர்களுக்குத் தங்கள் தாத்தாவின் அளவற்ற அன்பு சில சமயங்களில் வேண்டாத சுமையாகக்கூட இருக்கலாம். ஆயினும் அந்த அன்பு அவர்களை இன்னமும் கிளிக்குஞ்சுகளைப்போல உள்ளங்கையில் வைத்து நீவிக்கொடுத்து முத்தமிடவே முந்துகிறது. இது கலைஞர் தன் கருணைமயமான பெயராகவே மாறிவிடும் உச்சபட்ச பிறவிப்பயன். எங்கே நாம் நாமாகவே இருக்க முடிகிறதோ அங்கே நாமாகவே நம்மை மடைமாற்றிக் கொண்டுவிட்டால் நமக்கும் நம்மைத் தாங்கிப்பிடித்தவர்களுக்கும் எவ்வளவு நிம்மதி\nபார்ப்பனர்களும் பனியாக்களும் எந்த அரசையும் தங்கள் சேவை நிறுவனமாக மாற்றியமைத்துக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள். வணிக மொழியில் சொல்வதெனில், முதலாளிமார்கள் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் தங்கள் நலன் பேணுவதற்காக சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது அமைச்சர்களைத் தங்கள் சம்பளப்பட்டியலில் சேவைத்தரகர்களாக அமர்த்திக் கொள்வார்கள். அரசியலின் முரண் பருவப் பனிச்சருக்கில் பாதுகாப்பாக ஊன்றி நிற்கப் பயன்படுகின்ற கைத்தடிகள் அவர்கள். சமயத்தில் முதலாளியே அப்படியோர் உறுப்பினராகவோ அமைச்சராகவோ ஆகிவிட்டால் தரகுப் பணம் மிச்சம்; தொழில் பெருக்கத்துக்கும் பாதுகாப்பு. ஆனால் அரசியல் வாழ்வு தான்தோன்றித்தனமான தட்பவெப்பங்களில் சிக்கிக்கொள்ளும் போது அதுவே தொழிலைக் கவிழ்க்கும் புயலாகவும் மாறிவிடும். அதனால் எதார்த்தத்தில் நாணயப்பற்றாக்குறையுள்ள அரசியல்வாதிகள் தாம் பெருமுதலாளி களாவார்களே தவிர, நல்ல முதலாளிமார்கள் தங்கள் அரசியல் கைத்தடிகளோடே தொழிற் பேரரசர்களாய் சிகரம் தொடுவார்கள்.\nஎந்த அரசியல்வாதியும் முதலாளியான பிறகு அரசியலை விட்டு விலகியதில்லை என்பது சமூகம் சந்திக்கும் பின்னடைவு. பலர் உழைப்பில் மண்ணள்ளிப் போடும் தொழில் நேர்மையற்ற வன்செயல். பணத்தைவிட அதிகாரப் போதையில் கரைந்து போகிறவர்களின் அழிச்சாட்டிய ஆட்டம் அது. சாராய வியாபாரிகள் பலர் அரசியலினூடாகப் பயணித்து கல்வித் தந்தைகளான பிறகு அரசியலும் சாராயமும் அளிக்க முடியாத வருமானத்தோடும் 'புகழ்’ மணத்தோடும் வாழ்ந்து காட்டுவதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அரசியல் முதலாளிகள் - குறிப்பாகப் பல்மாநில, பன்னாட்டுத் தரத்தை எட்டிய திமிங்கிலங்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்றலாம். சமூக நல்லறம் பேணும் சாக்கில் அதற்கொரு சட்டமே கொண்டுவரலாம். அரசியல் அதிகாரம் பெற்றவன் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பதில் சொல்கிறவனாகவும், பெருமுதலாளி தன் பேரரசை விரிவுபடுத்துவதற்குகந்த பன்னாட்டுக் குடிமகனாகவும் தகவமைத்துக் கொள்வதே அந்த நல்லறம். இதைக் கலைஞர் தன் கவிதைத் தமிழால் எப்படிச் சித்தரிப்பார் என்பது 'மில்லியன் டாலர்’ கேள்வி. எல்லாம் பணத்துக்குத்தான் என்பார்கள். அது வயிற்றுக்கான உண்மை. பணத்தை வென்ற பின் எல்லாம் அதிகாரத்துக்குத்தான் என்னும் மண்டை கனத்துக்கான உண்மையும் உண்டு.\nகலைஞர், அரசியல் கலாச்சாரத்தில் ஊறித் திளைப்பதற்கென்றே பிறவியெடுத்தவர். அதன் உடன்போக்குப் பரிமாணங்களோடு, புறம்போக்குப் பரிமாணங்களையும் விஸ்தாரமாக வளர்த்தெடுத்து அவற்றை ஜனநாயக அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாற்றிக்காட்டியவர். தமிழ்ச் சமுதாயத்தின்மேல் தன் அரசியல் சாகசங்களையெல்லாம் ஒரு மாய வித்தைக்காரனைப்போல் செய்நேர்த்தியோடு பரிசோதித்து வெற்றி கண்டவர். மூச்சுக்கு மூச்சு தமிழைச் சொல்லியே தமிழ் மக்களை போதையூட்டி வசப்படுத்தியவர். தன்னை சாமானியனாக சித்தரித்தே சாமானியர்களை வென்றெடுத்து இன்றைக்கு கொழுத்த முதலாளிய மனோபாவத்தில் திளைத்துக் கொண்டிருப்பவர். முத்தமிழ் வித்தகர் என்றும் தமிழினத் தலைவர் என்றும் பட்டங்கள் தரித்தே தமிழகத்தில் தமிழை ஒரு வழி செய்துவிட்டுத் தன் தொப்பிக்கு மேலும் ஒரு வெற்றி இறகாக அதைச் செம்மொழிப் பட்டியலில் தள்ளிவிட்டவர். கட்சி அரசியல் கலைஞர் மீது முடிவில்லாத விமர்சனங்களை வைக்கும் என்றாலும், அவை ஒரு வகையில் அவர் ஓய்வில்லாமல் இயங்குகிறார் என்பதற்கும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கித் தன் சாமர்த்தியங்களைப் பலன்களாக்கிக்கொள்கிறார் என்பதற்குமான சான்றுகள்தாம்.\nநண்பர்கள் விமர்சகர்கள் எனும் பாகுபாடில்லாமல் கலைஞரிடம் ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயங்கள் பல இருக்கும். அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்கின்றவன் குறைந்தபட்சம் தனக்கு உயிர் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டியவன். எனக்கு அவரிடம் பிடித்த தலையாய விஷயங்கள் இரண்டு. ஒன்று அவரது 'கலைஞர்’ பட்டம். அவருக்குப் போல அது வேறெவருக்கும் அத்தனை கச்சிதமாய்ப் பொருந்திவிடாது. மற்றொன்று அவரது வாசிப்பு. இந்த வயதிலும் அவர் ஒரு புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல், குறிப்பெடுக்காமல், அதற்கான விழாவில் பேசுவதில்லை. அப்போதெல்லாம் அவர் ஒரு அரசியல்வாதி என்பதே மறந்துபோய் நாம் அவரது ரசிகனாய்விட முடிகிறது.\nஇவ்வகை சிறப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கேள்விக் குள்ளாக்கும் விதமாக அண்மையில் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்க்குரலாக, யோசிக்கத் தெரிந்தவர்களிடமிருந்து ஒரு முணுமுணுப்பு ஓங்கி ஒலித்தது. அது 'சன் டிவியை காப்பாத்தறதுக்காக தமிழ்நாடே தார வார்ந்திடும் போலிருக்கு’ என்பதுதான். நதி நீர் சிக்கலை கலைஞர் எதிர்கொண்ட விதம் பற்றிய விமர்சனம் அது. எந்தவித புள்ளிவிவரத்தோடும் நிரூபித்துவிட முடியாத ஒருவகை பாமரத்தனமான குற்றச்சாட்டுதான் என்றாலும், உண்மைகள் சாட்சிகளால் கொல்லப்படுவதும், அரசியல் ஒருபோதும் சீசரின் மனைவியர்களைப் பிரசவிப்பதில்லை என்பதும் அக்குற்றச்சாட்டின் முகமதிப்புகள். கலைஞரைக் கட்டுப்படுத்தும் காரணியாக 'சன் குழுமத்தை’ அடையாளப்படுத்துவது ஒருவகையில் உண்மையாக இருக்கலாம் என்றாலும் அதுமட்டுமே முழு உண்மையாகிவிடாது. அவரின் மொத்த செயல் தந்திரத்தின் ஒன்றைக் காரணியாக அது ஒருநாளும் இருந்துவிட முடியாது. ஆகவே உண்மைக்கு அருகில் நகரும் முயற்சியாக நாம் மேலும் சில கேள்விகளை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.\nகலைஞர் எதன்பொருட்டும் ஓர் அறைகூவல் விடுத்து அதை உரிய காலத்தில் நிறைவேற்றிக் காட்டும் வல்லமையும் வைராக்கியமும் உள்ள மனிதர். எனில், தம் நாட்டு மக்கள் மீது அவருக்கு ஏதேனும் சொல்லற்ற சினம் இருக்கக்கூடுமா இல்லையெனில், ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால் 1956இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்தது எப்படி இல்லையெனில், ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால் 1956இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தைக்கூட நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்தது எப்படி இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்தது சங்க காலத்திற்குப் பின் வெகு அபூர்வமாகத்தான். ஏனெனில் அதை ஆக்கிரமித்தவர்கள் அந்நிய மொழியினராயிருந்தனர். தமிழின் வாழ்வு அது மக்கள் மொழியாய் அருகுபோல் வேரோடி நின்று தன்னைக் காப்பாற்றிக்கொண்டதுதான். இந்திய விடுதலைக்குப் பின்னரே ஆட்சிமொழியாக அதற்கொரு வாய்ப்பு வந்தது.\nதமிழைச் சொல்லியே ஆட்சியைப் பிடித்தவர்கள் - குறிப்பாகக் கலைஞர் அதைக் கிடப்பில் போட்டார் எனில் உள்ளூர அதற்கொரு அர்த்தம் அல்லது கோபம் இருக்க வேண்டும். கர்நாடகச் சிறையில் குணாவும், நெடுஞ்செழியனும் அநியாயமாக ஆண்டுக் கணக்கில் வாடியபோது தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் முறையிட்டு விடுவிக்கக் கோரினர். கலைஞர் ஒரு வார்த்தை சொன்னால் விடுவித்துவிடுவார் என்பது நிலை. கலைஞர் சொல்லவில்லையே. காரணம் குணா அவரை 'வடுகர், வந்தேறி’ என்று தன் நூல்களில் அடையாளப்படுத்தியதற்கான கோபமாக இருக்க வேண்டும். கலைஞர் அவரை மன்னிக்கத் தயாராயில்லை. ஆகப் பெருந்தன்மையோடு நடந்துகொள்வதற்கான பட்டறிவும் உயர் பொறுப்பும் பெற்றவர்தான் என்றாலும் அற்பக் கோபங்கள் அவரை ஆளவே செய்யும்போலும். ஆகவே நாம் இதையும் கேட்கலாம்: தமிழினத்துக்கு அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் அவர் இடத்தில் ஓர் அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதி இருந்து ஆற்றிவிடக்கூடிய பணிகளுக்கப்பால் அவர் என்ன செய்ய உத்தேசிக்கிறார் என்பதுதான் இக்கேள்வியின் அர்த்தம். இதன் தொடர்ச்சியாக, தமிழர்களுக்கு அவர் என்ன பாடம் புகட்ட நினைக்கிறார் என்பதும் புறக்கணிக்க முடியாத கேள்வியாகிறது.\nமுன் எப்போதையும்விட இந்த ஆட்சிக்காலத்தில்தான் கலைஞர் தமிழ் மக்களுக்குப் பல அநீதிகளை இழைத்து வருகிறார் என்று ஒரு நண்பர் மனம் வெதும்பிச் சொன்னார். அதைக் கேட்டதும் அதிர்ச்சியாயிருந்தது. உண்மையில் இந்த ஆட்சிக்காலத்தில்தான் அவர் மிகுந்த வள்ளல்தன்மையோடு கூடுதல் நலம் செய்கிறார் என்பதாகவே ஒரு கருத்து நிலவி வருகிறது. ஜெயலலிதாகூட அவருக்கு உடனடி அச்சுறுத்தலை விளைவிக்க முடியாமல் திணறுகிறார் என்பதாகப் பேச்சு. ஆனால் நண்பர் சொன்னதைக் கொஞ்சம் தொலைக் நோக்குப் பார்வையில் யோசிக்கும்போது இனவியல், பொருளியல், சமூகவியல் ரீதியாக சரியென்றே தோன்றுகிறது. 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்றொரு கருத்து உண்டு. அது இன்று அர்த்தமற்ற கூற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டது. சோழர்களைக் கொண்டாடும் கலைஞர் காலமும் அப்படியொரு பார்வையில் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் நண்பரின் எடுத்துரைப்பு அர்த்தம் பெறுகிறது. எடுத்துரைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை தேற்றங்களாகும்.\nதமிழ் மக்கள் நாம் அறிந்த அளவில் தொல்காப்பியர் காலத்திலிருந்து அந்நியக் கலாச்சாரங்களால் தின்னப்பட்டவர்களாகவும், பின்னர் அந்நியர் ஆளுகையால் அடக்கப்பட்டவர்களாகவும் இரண்டாயிரம் ஆண்டு அடிமை வாழ்வைச் சுவைத்துக் களைத்தவர்கள். ஆகவே, அடிமைத்தனம் அவர்களின் இரத்தச் சிவப்பணுக்களாகவே ஊறிவிட்டது என்று சொன்னால் அது தப்பில்லை. கேரளர்கள், கர்நாடகர்கள், ஆந்திரர்கள் யாவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழர்களை அடக்கி ஆண்டவர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். இன்றும்கூட அவர்கள் எதிர்த்தடிக்கிறவர்களாகவும் தமிழர்கள் தாழ்ந்துபோகிறவர்களாகவுமே நிலைமை நீடிக்கிறது. அதனால்தான் இன்றைக்கு மற்ற மாநிலங்களில் போல் 'மண்ணின் மைந்தர்கள்’ இயக்கம் தமிழ்நிலத்தில் கெட்டிப்படவில்லை என்று தோன்றுகிறது.\nஅடித்தட்டுத் தமிழ் மக்கள் இன்று வரை பேணிவரும் ஒரு நல்லம்சம், நாட்டில் அரசியல் ஊடறுப்புகளால் அந்நியத்தனங்கள் கோலோச்சினாலும், ஏதோ கண்மறைவில் நடத்தப்படும் ஒண்டிக் குடித்தனம்போலவும், காற்றக்கு அணைந்துவிடாமல் குடங்கையுள் நின்றொளிரும் கைவிளக்கு போலவும் அவர்கள் தங்கள் தொன்மங்களையும் கலாச்சாரத் திளைப்புகளையும் வழிவழி வரும் பண்பாக்கங்களாகக் காத்து வருகிறார்கள் என்பதுதான். மற்றபடி சாதியும் தீண்டாமையும் சமூக அசைவுகளைத் தீர்மானித்தபின், 'இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ எனும் கோட்பாடே கூடுகட்டிக்கொண்டுவிட்டது. நம்மவனா, பிறத்தியானா என்னும் பாகுபாடில்லாமல் ஆள்கிறவன் எவனாயிருந்தாலும் அந்நியனே என்னும் மனத்தயாரிப்பில் வாழப் பழகிக்கொண்டுவிட்டனர்.\nமுன் சொன்னதுபோல் 'சோழர்கள் காலம் பொற்காலம்’ என்பது உண்மையில் பார்ப்பனச் செழிப்பில் எழுந்த, குடிபடைகளை உள்ளடக்கிக்கொள்ளாத புறமதிப்பீடுதான். சோழர்கள் காலத்தில்தான் அரச நீதியும் அரண்மனை ஆதிக்கமும் பார்ப்பன மயமாயின. தேவதாசி முறையும் தீண்டாமையும் கோயில்களிலும் குடியிருப்புகளிலும் வலுப்பட்டன. இராசராசன் தன் அண்ணனைக் கொன்ற ரவிதாசன் என்னும் பார்ப்பானைச் சிரச் சேதம் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் மனுநீதி அனுமதித்தபடி அவன் தலையைக்கூட மொட்டை அடிக்க முடியவில்லை. அவனால் செய்ய முடிந்ததெல்லாம் அந்தக் கொலைகாரனையும் அவனது சுற்றத்தையும் போதிய உதவிகள் வழங்கி வேற்றிடம் செல்லும்படி வேண்டிக் கொண்டதுதான்.\nமன்னன் ஆள்கிறான் என்பது சண்டைக்காலத்தில் மட்டுமே அறியப்படுவதாயிருந்தது. மற்ற காலங்களில் மன்னனுக்குப் படை திரட்டித் தருகிற கட்டைப் பஞ்சாயத்துக் கங்காணிகளின் வரைமுறையற்ற அத்துமீறல்களால் ஆசீர்வதிக்கப்பட்டதுதான் பொதுச் சமூக வாழ்வு.\nவழிவழியாக இப்படி நசுங்கிக்கிடந்த தமிழ்மக்கள் அநியாயங் களுக்கெதிராகத் தாங்களாகவே திரண்டெழுவார்கள் என்பது வீண் கனவு. அவர்களைத் தட்டியெழுப்பவும், வழி நடத்தவும் மூர்க்கம் மிகுந்த தலைமை வேண்டும். அப்படிப்பட்ட தலைவர்களைப் போல் பொய்த்தோற்றம் காட்டி வந்து ஆட்சிக்கட்டிலைப் பிடித்தவர்கள்தாம் திராவிடக் கட்சிக்காரர்கள். இன்றைய திராவிட இயக்கம் வீரமணி நடத்தும் மடம்தான் எனினும், திராவிட இயக்கம் வேறு, திராவிடக் கட்சிகள் வேறு என்னும் அடிப்படைப் புரிதலை நாம் தவறவிட்டுவிடக்கூடாது.\nதிராவிடக் கட்சிக்காரர்களில் முதன்மைப் பாத்திரம் பகிப்பவர்தாம் கலைஞர் கருணாநிதி. கல்லக்குடி வீரராகக்கள அரசியலில் இறங்கியவர். பராசக்தி வசனமாக மக்களை எழுச்சி பெற வைத்தவர். ஆனால் அது ஒரு காலம். சொந்தங்கள் தன்னைத் தின்னக்கொடுக்காத காலம். இன்றோ, தன் எழுபதாண்டு அரசியல் முன்னெடுப்பில் என்னவாக வளர்ந்து, தமிழ் மக்களுக்கு எதை விட்டுவைத்திருக்கிறார் என்னும் கேள்விக்குரியவர். உலகெங்கும் உள்ள அரசியல் தலைமைகளை விடவும் அதிக விவரத்தோடு தமிழ் மக்களின் பாமரத் தன்மையைத் தன் அசுர செல்வாக்குக்குப் பயன்படுத்திக்கொண்டதைத் தவிர, தமிழகத்தின் சாமான்ய மனிதனுக்கு அவர் எந்த ஏறு முகத்தை முன்மொழிந்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் நுட்பமாக யோசித்தே ஆக வேண்டும்.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானதும் கலைஞரும் சன் தொலைக்காட்சியும் அடித்த லூட்டிகளைப் பார்த்த பிறகு தூங்கும் தமிழகத்துக்கே ஒரு சுய விழிப்பு வந்திருக்கிறது. அப்படி வந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்களின் கவனத்தைக் காவிரியிலிருந்து திசை திருப்புவதற்கென்றே கலைஞர் தன் மகள் கனிமொழியைக்கொண்டு 'ஊரே கேள் நாடே கேள்’ என்னும்படி சென்னை சங்கமம் நடத்திக்காட்டினார் என்று பேசாத ஆள் இல்லை. கலைஞர் அதை அறியாதிருக்க வாய்ப்பில்லை.\nஇடைக்காலத் தீர்ப்பு, இடைக்கால நிவாரணம் என்பதெல்லாம் இறுதியில் உறுதி செய்யப்படும் கூடுதல் பலன்களுக்கான அடையாள முன்மதிப்பீடுகள்தாம். காவிரியின் இடைக்காலத் தீர்ப்பு தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீர் வழங்கியது. இறுதித் தீர்ப்பு இதைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. குறைந்தபட்சம் 1 டிஎம்சியாவது அதிகம் கொடுத்துச் சமாளித்திருக்க வேண்டிய சிக்கல். ஆனால் வழங்கியதோ 185 டிஎம்சிக்கும் குறைவாக. இந்த உண்மையை ஒருமுறைக்கு இருமுறை உற்றுப்பார்க்கக்கூட பொறுமையும் பொறுப்புமில்லாமல் தமிழகத்துக்கு 430 டிஎம்சியும் கர்நாடகத்துக்கு வெறும் 270 டிஎம்சியும் வழங்கப்பட்டுள்ளதாக 'சன் தொலைக்காட்சி திரும்பத் திரும்ப உருவேற்றிக்கொண்டிருந்ததில் தமிழகமே அசைவற்று உறைந்துபோனது.\nஇந்த உறைதலுக்குக் காரணம் தமிழகத்துக்குக் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட நம்ப முடியாத கொடை மட்டுமல்ல, கர்நாடகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் வரலாறு காணாத வன்கொடுமை பற்றிய அச்சமும்தான். அதற்கேற்றாற்போல் கலைஞரும் உடனடியாக 'மன நிறைவளிக்கும் தீர்ப்பு’ என்று திருவாய் மலர்ந்தார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனோ 'திருப்தி, திருப்தி, திருப்தி’ என மும்முறை சத்தியம் செய்தார். தமிழகத்திற்கு எதிராக அவர்கள் அன்று மூட்டிய தீ கர்நாடகாவில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. 430 டிஎம்சி நீர் என்பது தஞ்சாவூர் வரை பெய்யும் மழையெல்லாம் சேர்த்துவருமாம். 430 டிஎம்சியைப் பார்த்ததும் நான் மலைத்துப்போய் மேலதிக விவரம் சொல்ல மாட்டார்களா, கர்நாடகத்தில் தமிழர் கொலைகள் தடுக்கபடாதா என்று தவித்தேன்.\nஅடுத்த 24 மணி நேரம் உண்மை நிலை அறிய மாட்டாத குழப்பத்திலேயே தமிழகம் திணறிக் கொண்டிருந்தது. மறுநாள் செய்தித்தாளைப் பார்த்த போதுதான் தமிழகம் அப்பட்டமாக வஞ்சிக்கப்பட்ட கொடுமை தெரிந்தது. பழ. நெடுமாறன்தான் முதலில் கண்டனம் தெரிவித்தார். அந்த நிலையிலும்கூட 'நமக்குக் குறைய வாய்ப்பில்லை. கர்நாடகத்திற்குத்தான் கொஞ்சம் கூடுதலாக குறைந்துவிட்டது’ என்று கலைஞர் உருகினார். தமிழகம் தன்பாட்டுக்கு அசைவற்றுத் துயில்கொண்டிருக்க, கர்நாடகத்தில் அலைஅலையாய் கண்டனப் பேரணிகள் எழுந்தன. அவற்றை 'சன் செய்தி; மிகுந்த கொண்டாட்டத்தோடும் அவர்களைப் பகைத்துக்கொள்ளாத பக்கச் சாய்வோடும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அது பயன்படுத்திய மொழி தமிழர்களைப் புண்படுத்திய கத்தி. மேலதிகம் பெற்ற கர்நாடகம் ஓலமிட்டுக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட தமிழகம் விடியவிடியக் கூத்தாடியவனின் கனத்த நித்திரைபோல் அயர்ந்து கிடக்கிறது.\nகலைஞர் தன் சாதுர்யத்தால் தமிழகத்தைத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டார். கர்நாடகத்தின் அராஜகத்திற்கெதிராக குரலுயர்த்தி நியாயம் பேசுபவர்களைப் பார்த்து 'அது நம் அண்டை மாநிலம்தான். பகை நாடல்ல’ என்று உபதேசம் செய்கிறார். தமிழக வண்டி வாகனங்களை அனுமதிக்காதது மட்டுமல்ல, அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்துகின்றனர் கர்நாடக சமூக விரோதிகள். எல்லைக் கடந்துவந்து 'ஓசூரையும் அபகரிப்போம் என்று ஆர்த்தெழுகிறார்கள். எறிதழலை சூறையிட்டாற்போல் எங்கெங்கும் கூக்குரல் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞரின் தமிழ்நாடு பிரேதங்களின் அமைதிப் பூங்காவாகவே திகழ்கிறது. அப்படித் திகழ வைப்பதற்கென கலைஞர் வெகு நுட்பமாகச் செயல்பட்டிருக்கிறார்.\nஇதை எந்த விதமாய்ப் புரிந்துகொள்வது\nதமிழக நலனை லாவணிக் கச்சேரி செய்தே தொலைத்துக் கட்டுவதில் மட்டும் திராவிடக் கட்சிகளுக்குள் அப்படியோர் ஒற்றுமை. மக்கள் பிரச்சனைகளைக் கிளறுவதன் மூலம் கலைஞரை ஓரங்கட்டும் தன் எதிர்கால அரசியல் திட்டத்தைத் தீவிரப்படுத்தும் மருத்துவர் ராமதாசும்கூட கலைஞர் போராட்டாம் வேண்டாம் என்றதும் சரி என்று ஒதுங்கிக்கொண்டார். மக்களைத் தட்டி எழுப்பி, உண்மையைச் சொல்லி, களமிறக்கி, இந்திய அரசின் செவிட்டுக் காதுக்கு கேட்கும்படியாக எதிர்ப்புப் பேரணி நடத்தவேண்டிய தமிழக முதல்வர், பொய்த் தகவல்கள் கூறித் தமிழர் கவனத்தைத் திசை மாற்றிவிட்டு கர்நாடகாவின் அராஜகத்தைத் தன் சன் டிவி மூலம் தட்டிக்கொடுத்து மகிழ்கிறார்.\nஇடதுசாரி கம்யூனிஸ்டுகள் தங்கள் அதிகார மப்பால் எத்தனை போக்கிரித்தனமான காரியத்திலும் இறங்கக்கூடியவர்கள் என்பதற்கு கேரளத்தில் அச்சுதானந்தனையும் மேற்குவங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சாரியாவையும் முதலமைச்சர்களாக்கிக் காப்பாற்றி வருவதே போதுமான சாட்சியமாகும். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் தமிழகத்தின் உரிமையை மறுத்து, பொய்யும் புனைசுருட்டுமாக பேட்டை ரவுடியைப்போல் ஆபாசமாகப் பேசியும் நடந்தும் காட்டுகிறார் அச்சுதானந்தன். அது பற்றிக் கலைஞர் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. பாலாற்றில் தடுப்பணை கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது ஆந்திர அரசு. தமிழகம் எதுகண்டும் பதைக்கவில்லை. தமிழகத்தின் நலன்களும் முன்னுரிமைகளும் தன்னெழுச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதைத் தமிழக வரலாற்றிலேயே இல்லாமலாக்கி விட்டவர் கலைஞர்.\nஅடிமாட்டிலிருந்து அழுகும் பொருள் வரை கேரளாவிற்குத் தமிழ்நாடுதான் அனுப்பி வைக்கிறது. அவற்றை நிறுத்தினால் கேரளம் வழிக்குவந்துவிடும் என்கிறார்கள் அரசியல் ஆத்திரக்காரர்கள். யார் நிறுத்துவது நிறுத்தினால் கேரளாவுக்கு ஏற்படும் இழப்புகளை விடத் தமிழக வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே கூடுதல் இழப்பு ஏற்படும். வெளியேற வேண்டிய பொருள்கள் தேங்கினால் கிடங்கில் கிடந்து அழுகி நாறும்தானே நிறுத்தினால் கேரளாவுக்கு ஏற்படும் இழப்புகளை விடத் தமிழக வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்குமே கூடுதல் இழப்பு ஏற்படும். வெளியேற வேண்டிய பொருள்கள் தேங்கினால் கிடங்கில் கிடந்து அழுகி நாறும்தானே ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு புதிய சந்தைகளை உறுவாக்குவதும் இறக்குமதிக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதும் அரசு செய்யவேண்டிய வேலை. ஆனால் கலைஞர்தான் 'சகோதர யுத்தத்திற்கு நான் தயாரில்லை. போவதுபோகட்டும். எஞ்சியது நிலைக்கும்’ என்பதாக புத்தர் வேடம் போடுகிறாரே. கலைஞருக்கு கோபமே வராதா, அவர் எந்த உரிமைகளையும் கோரிப் பெற மாட்டாரா என்பது சிறுபிள்ளைத்தனமான கேள்வி.\nதன் பொறுப்பிலுள்ள நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களையும் துருப்புச் சீட்டாய்ப் பயன்படுத்தி 'நாங்கள் கேட்ட இலாக்காக்கள் கிடைக்காவிட்டால் ....’ என்று சோனியாவையே பதற வைத்தாரே’ என்று சோனியாவையே பதற வைத்தாரே உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குச் சில யோசனைகள் சொன்னார் என்பதற்காக 'நீதிபதிகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். கண்டதிலும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று மிரட்டினாரே. அவர் மிரட்டினால் என்ன, அவரது சுகங்களைக் காக்கும் ஆற்காட்டார் மிரட்டினால் என்ன உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அரசுக்குச் சில யோசனைகள் சொன்னார் என்பதற்காக 'நீதிபதிகள் தங்கள் வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். கண்டதிலும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று மிரட்டினாரே. அவர் மிரட்டினால் என்ன, அவரது சுகங்களைக் காக்கும் ஆற்காட்டார் மிரட்டினால் என்ன தன் சொந்த நலன்கள் கேள்விக்குள்ளாகும்போது அவர் சிங்கமாயிருப்பாரே தவிர சிறுநரியாய் அல்ல.\nஇந்தியா முழுமைக்கும் பொருந்துவதான பிற்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தவுடன் தம்மை யாரும்- குறிப்பாக ராமதாஸ்- முந்திவிடக்கூடாது என்னும் வேகத்துடன் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்தாரே. உடனடியாக நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டி விரைந்து வழிகாண வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாரே அந்த வேகத்தையும் மிரட்டலையும் மூர்க்கத்தையும் தமிழகத்தைப் பாதிக்கும் நதிநீர் சிக்கல்களில் மட்டும் தன்னுள்ளேயே பதுக்கி வைத்துக்கொள்கிறார். கலைஞர் ஒன்றும் செய்யவில்லையே என்றால், உருப்படியாய்க் கவனம் கொள்ளும்படியாக, தீர்வை வென்றெடுக்கும்படியாக ஒன்றும் செய்ய முனையவில்லை என்பதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஏனெனில் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பட்டியலிட்டுக் காட்டுவதற்கான சடங்காச்சாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் சகோதர யுத்தத்திற்கு தயாரில்லை என்பதை 'சன் குழுமத்தை’க் காக்கும் உபாயம் என்று சொல்லிவிடுவது கலைஞர் கொண்டிருக்கும் அர்த்தப்பாடுகளில் ஒரு துகளாகத்தான் இருக்க வேண்டும். அவரின் ஒவ்வொரு சிறு அசைவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படியெல்லாம் அளந்து செயல்படாமல் போனால் இன்றைய பிரம்மாண்டத்தை அவர் எட்டியிருப்பாரா ஏதொன்றிலும் அவருக்கு நோக்கம் இருக்கும். திட்டம் இருக்கும். உள்ளூர அவரைப் பாதித்ததற்கான கோபங்கூட இருக்கும்.\nஇந்திய அமைதிக்காப்புப் படை இலங்கையிலிருந்து திரும்பி வந்தபோது அவர்களை வரவேற்கும் விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டவர் கலைஞர். சிங்களப் படைகளைவிட இந்தியப் படையே ஈழத்தமிழர்கள் மேல் புரிந்த அட்டூழியங்களும் படுகொலைகளும் காட்டுமிராண்டித் தனங்களும் அளவற்றவை என்பதுதான் அதற்கான காரணம். இன்றைய கலைஞரைப் பார்க்கும்போது, 'தமிழினத் தலைவர்’ என்னும் பெயருக்கு ஒரு பொருத்தம் இருக்கட்டுமே என்றும், பின்னொருநாள் இனங்காக்கும் பேச்சு வரும்போது ஒரு சாட்சியாக இருக்கட்டுமே என்பதற்காகவும்தான் அவர் கலந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லையென்றால் அன்றே இந்தியப் படை புரிந்த அட்டூழியங்களுக்காக அவர் மத்திய அரசை மன்னிப்பு கோர வைத்திருக்கலாம். ஒருவேளை இந்தியப் படையால் சிங்களர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அப்படித்தான் கோரப்பட்டிருக்கும். ஆகவே அவர் ஒவ்வொன்றையும் அளவெடுத்தாற்போல் திட்டமிட்டே செய்கிறார் என்பது புரிகிறது.\nஇலங்கை கடற்படை இந்திய மீனவர்களைத் தொடர்ந்து கொன்றுகொண்டே இருக்கிறது. உலகத்தில் வேறெங்கும் நடக்காத அட்டூழியம் இது. இலங்கைக் கடல் பகுதியில்தான் அதிகம் மீன் கிடைக்கிறது என இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியே சென்றிருந்தாலும் அவர்களைச் சுட்டுக்கொல்வ தென்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். தமிழகம் டெல்லிக்கு கடிதம் எழுதுகிறது. டெல்லி அதை வாங்கி வைத்துக்கொள்கிறது. டெல்லியின் அப்படியொரு மரத்தனத்தை வேறெந்த சந்தர்பத்திலும் நம்மால் காணவியலாது. மீனவர்கள் தமிழர்கள் என்பதால்தான் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால்தான் டெல்லியும் கண்டுகொள்ள மறுக்கிறது.\nபல நூற்றுக்கணக்கான இந்தியக் குடிமக்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக் கொல்லப் படுவதை இந்திய அரசு கண்டுகொள்ளாது என்றால் இந்தியாவில் தமிழகத்தின் இடம் என்ன இருப்பு என்ன இந்தியா பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்; வெறும் பார்வை ஒன்றே போதும், சிங்கள அரசை அதன் இருப் பிடத்தில் நல்ல பிள்ளையாய் அழுத்தி வைக்க. ஆனால் இந்திய அரசு அதற்குத் தயாராயில்லை. பெரிய நாட்டை அண்டைச் சிறுநாடுகள் பகைத்துக்கொள்வதில்லை என்பது உண்மை எனில், இதிலுள்ள மர்மம் என்னவாக இருக்கும் என்னதான் கூக்குரல் போட்டாலும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திரும்பத்திரும்பச் சுடுவதெனில் இந்திய அரசின் மறைமுக ஆணை அல்லது ஆதரவினால்தான் என்பதல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் என்னதான் கூக்குரல் போட்டாலும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் திரும்பத்திரும்பச் சுடுவதெனில் இந்திய அரசின் மறைமுக ஆணை அல்லது ஆதரவினால்தான் என்பதல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் இந்திய ஆணையானது அமைச்சகத்தின் கையிலே இல்லை. மாறாக, அதிகார வர்க்கத்தின் கையிலே இருக்கிறது.\nஅதிகார வர்க்கம் ஆங்கிலேயன் காலத்திலும்கூட பார்ப்பனத் தாக்கம் பெற்றதாகவே இருந்தது. இந்திய சுதந்திரம் என்பதே பார்ப்பன- பனியா சுதந்திரம்தானே\nதமிழ்நாட்டில் வரலாறு நெடுகிலும் பார்ப்பனர்கள் ஆட்சித்தலைமையை வகித்ததில்லை. (சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு ஒரு தனிமாநிலமாகச் சுருங்கியபோது ராஜாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆட்சித் தலைமை ஏற்கும் பேறு கிடைத்தது.) ஆனால் ஆட்சியாளர்களை வழிநடத்துகிறவர்களாய் அவர்கள் தங்களை வளர்த்துக்கொண்டதும், அதிகாரப் பகிர்வில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் இடையே இழுபறி போட்டி எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. அதிகாரச் சமன்பாடு குலையும்போதெல்லாம் அவர்களுக்குள் உரசல்கள் நிகழ்ந்து வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் கை ஓங்கிவிட்டது. அதை எதிர்த்து அதிகாரத்தில் பங்கு கேட்கவே நீதிக்கட்சி தோன்றியது.\nநீதிக்கட்சி பார்ப்பனர்களைத்தான் எதிர்த்ததே தவிர பார்ப்பனியத் தாக்கங்களையல்ல. நிலைபட்டுப்போன கலாச்சாரத்தாக்கங்களின் பின்புலத்தில் ஒருவகையில் எல்லாருமே பார்ப்பனர்கள்தாம். ஒருவர் பிறவிப் பார்ப்பனர் என்றால் மற்றவர் பிழைப்புப் பார்ப்பனர். இதில் ஓரங்கட்டப்பட்டவர்கள் அல்லது ஊறுகாய்போலப் பயன்படுத்தப் பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். ஆங்கில ஆட்சிக் காலத்திலேயே இந்தியா ஒற்றைத் தேசமாகி, அதனுள் தென்னிந்தியா ஒரு கூறாகிவிட்டது. கூடவே, பார்ப்பன எதிர்ப்பை பாரத தேசத்தின் அதிகாரத் தகர்ப்பாகத் திரித்துப் பார்க்கும் மனோபாவமும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் டெல்லிச் செயலகத்தைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த தமிழ்ப் பார்ப்பனர்கள். நீதிக்கட்சியானது இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே தேய்ந்து சிதறி, முடிவில் தமிழ்நாட்டை மட்டுமே சேர்ந்த பெரியார் இயக்கமாகத் திரண்டெழுந்தது.\nபெரியாரின் 'திராவிடர் கழகம்’ வெறும் பார்ப்பன எதிர்ப்பியக்கமாக மட்டுமின்றி, பார்ப்பனக் கடவுள்களை மறுக்கும் இயக்கமாகவும், மேலும் பிரிவினை கோரும் பரப்புரை இயக்கமாகவும் திகழ்ந்து பார்ப்பனர்களை மருட்டும் அளவுக்கு அதிர்வுகளை எழுப்பியது. பெரியாரிடமிருந்து பிரிந்து சென்றவர்களும் தேர்தல் அரசியலைத் தெரிவு செய்யும் வரை நாத்திக வேடமும் 'திராவிட நாடு திராவிடர்க்கே’ முழக்கமும் போட்டுக்கொண்டிருந்தனர். ஏக இந்தியாவில் இவை சகித்துக்கொள்ளக்கூடாத அம்சங்களாகவும், தமிழர்கள் அபாயகரமானவர்கள், அடக்கிவைக்கப்பட வேண்டியவர்கள், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாகவும் டெல்லி அதிகார மையத்தில் வல்லமை மிக்கதோர் உளவியல் எதிர்வு வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டது.\nமத்தியில் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை ஒழிந்து, கூட்டணி ஆட்சிகள் வந்தாலும், தமிழ்நாட்டு ஆளும் கட்சிகள் சுயநலக்காரர்களையும், விதிமீறல் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள டெல்லியின் தயவுக்கு ஏங்குபவர்களையும் கொண்டிருந்ததால், அவர்களது ஆதரவைப் பெறுவதிலும், அதே சமயத்தில் அவர்களை அடக்கி வைப்பதிலும் டெல்லிக்காரர்களுக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பதையெல்லாம் தூக்கிக் கடாசிய பிறகு, கலைஞருக்கு டெல்லி தாய்வீடு மாதிரி. தமிழ்நாட்டுச் சனாதனப் பார்ப்பனர்கள் தமிழை 'நீச பாஷை’ என்று சொல்லிக்கொண்டே (இந்தியாவில் வேறெந்த மொழியேனும் அப்படி அழைக்கப்படுவதாகத் தெரியவில்லை. இதுவே தமிழின் தவிர்க்க முடியாத இருப்பை உறுதி செய்கிறது.) தமிழால் வாழ்வதுபோல், டெல்லி அதிகார அரசியலும் தமிழ்நாட்டைத் 'தலித் மாநிலமாக’ அழுத்தி வைத்துக்கொண்டே அதன் ஒத்துழைப்பையும் கோரிப் பெற்றுக்கொள்கிறது.\nஇந்தியாவில் தமிழகத்தின் இடமும் இருப்பும் இத்தகைய நுட்பங்களோடுதான் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழன் என்பவன் ஐயத்திற்கும் அவமதிப்பிற்கும் உரியவன் என்பதாக அந்த உறுதிப்பாடு நிலைத்துவிட்டது.\nஇந்தியாவில் உள்ள அடிமைத் தமிழனுக்கே இந்த கதி என்றால், முறையான இராணுவமும் ஆள்வதற்கு ஒரு நிலப்பகுதியும் வைத்துக்கொண்டு தனிநாடு கோரும் ஈழத்தமிழன் எவ்வாறு சகித்துக்கொள்ளப்படுவான் ஒருவேளை, நாளை ஈழப் புலிகள் முழு இலங்கையையும் தங்கள் ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டு வந்துவிட்டால், அப்போது பங்களாதேஷ் விடுதலையை ஆதரித்தது போல் சிங்கள விடுதலைப் போரை இந்தியா ஆதரிக்கக் கூடும்.\nஇப்படியொரு சூழலில் கலைஞர் இந்திய இறையாண்மையைத் தாங்கி நிற்கும் கல்தூணாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். 'காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட நேர்தால் நான் என் பதவியைத் துறப்பேன்’ என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சொன்னதும், நீர் கிடைக்காமல் போவதைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல், இந்திய இறையாண்மைக்கு ஊறு நேர்துவிடுமே என்றுதான் முன்னாள் பிரிவினைவாதியாகிய கலைஞர் கவலைப்படுகிறார். இந்திய ஒற்றுமை சிதறி, கர்நாடகமும் தமிழ்நாடும் தனித்தனி நாடுகளாகிவிட்டால் தண்ணீர் பெற வழியேதும் இல்லையா என்ன நியாயம் கிடைக்கத் துணை புரியாத இந்திய ஒன்றியத்தைவிட பன்னாட்டு விமுறைகள் எளிதாகவே பெற்றுத் தரும். அல்லது நீருக்காகப் போரிட்டே பெறலாம் அல்லவா நியாயம் கிடைக்கத் துணை புரியாத இந்திய ஒன்றியத்தைவிட பன்னாட்டு விமுறைகள் எளிதாகவே பெற்றுத் தரும். அல்லது நீருக்காகப் போரிட்டே பெறலாம் அல்லவா எல்லாரும் மாநில நலன் பேணுகிறவர்களாய்க் கெட்டிப்பட்டு வரும்போது கலைஞர் மட்டும் இந்தியராய் இருக்க முற்படுவது ஒருவகையில் பாராட்டுக்குரியதுதான் எனினும், அது தமிழர் நலனையும் பாதுகாப்பையும் காவு கொடுக்கவோ அல்லது காட்டிக்கொடுக்கவோ அல்ல. ஒரு துணிச்சல் உள்ள இந்தியனாக மீனவர் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சில அதிரடி முடிவுகளை அவர் அறிவித்திருக்கலாம்.\nகலைஞர் ஏன் தன் வல்லமையைப் பயன்படுத்தக்கூடாது தொடர்ந்து நெருக்குதல்கள் வந்த நிலையில் 'இலங்கை இராணுவம் சுட்டால் தமிழக மீனவர்கள் இனி பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். இதையே டில்லிக்கும் எச்சரிக்கையாக வைத்திருக்கலாம். 'பங்களா தேஷுக்கு உதவ மறுத்தால் நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்’ என்று மேற்கு வங்கம் இந்திய அரசை எச்சரித்ததே, அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து நெருக்குதல்கள் வந்த நிலையில் 'இலங்கை இராணுவம் சுட்டால் தமிழக மீனவர்கள் இனி பூப்பறித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று சொன்னார். இதையே டில்லிக்கும் எச்சரிக்கையாக வைத்திருக்கலாம். 'பங்களா தேஷுக்கு உதவ மறுத்தால் நாங்கள் எங்கள் காவல்துறையை அனுப்புவோம்’ என்று மேற்கு வங்கம் இந்திய அரசை எச்சரித்ததே, அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி உடனே படையனுப்பினாரே 'இங்கு எங்கள் மீனவர்களை காக்கத் தவறினால் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் ஆயுதப் படையாக மாற்றப்படுவார்கள். அதற்குத் தமிழகம் ஏற்பாடு செய்யும்’ என்று எச்சரித்திருக்கலாம். இவ்வளவு மெத்தனமாகவும் மரத்தனமாகவும் உறங்குவதுபோல் பாசாங்கு செய்யும் இந்திய அரசு, விடுதலைப்புலிகள் சிங்களப் படையைத் தாக்கிவிட்டால் மட்டும் என்னமாய்ப் பதறுகிறது கடலோரக் காவல் படையை உடனடியாக முடுக்கிவிடுகிறது. மாநில அரசை பயங்கரவாதிகள் ஊடுருவி விடாமல் பார்த்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் சிங்கர்களால் கொல்லப்படும்போது மட்டும் காது கேளாததுபோல மௌனம் காக்கிறது. இதன் அர்த்தம் என்ன\nஇலங்கைச் சிக்கலைப் பொறுத்தவரை 'இந்திய அரசின் நிலைப்பாடே என்னுடைய நிலைப்பாடும்’ என்கிறார் கலைஞர். மத்திய அரசின் நிலைப்பாடு தமிழர்கள் கொல்லப்படும்போது மௌனம் காப்பதும், கொல்லும் சிங்களப்படைக்கு உதவுவதும்தான். இது கலைஞருக்கும் சம்மதம்தானா\nவிடுதலைப்புலிகள் சிறு விமானத்தைக் கொண்டு இலங்கை அரசின் கட்டுநாயகே இராணுவ விமான தளத்தைத் துல்லியமாகத் தாக்கிவிட்டுத் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டனராம். மறுநாள் காலை இந்தியா முழுவதும் அல்லோப்பட்ட காட்சி சமச்சீர் புரிதல் உணர்வுள்ள எவரையும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். விடுதலைப் புலிகளின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்பதாகவும், அந்த பயங்கரவாதிகள் எந்த நேரமும் இந்தியாவில் நுழைவதற்கு ஆயத்தமாய் இருக்கிறார்கள் என்பதுபோலவும், அவர்களைத் தடுத்து நிறுத்தவும் அழித்து முடிக்கவும் எல்லாக் காப்பரண்களையும் உடனடியாக முடுக்கிவிடவேண்டும் என்றும் ஒரே கூக்குரல்தான்.\nஇந்திய அரசும் உடனே ராடார் பொருத்தியதும், கடலோரக் காவல்படையின் 24 மணி நேர ரோந்துப் பணியை முடுக்கிவிட்டதும் நடந்தேறியது. ஆனால் அதே நாளில்தான் இலங்கைக் கடற்படை சுட்டு 5 மீனவர்கள் மாண்டனர். எனில் இதன் அர்த்தம் என்ன ரோந்துப் படகுகள் யாரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன ரோந்துப் படகுகள் யாரை நோட்டமிட்டுக்கொண்டிருந்தன யாருக்கு உதவி செய்துகொண்டிருந்தன மீனவர்களைச் சுட்ட சிங்களக் கடற்படையினரை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லையென்றால் அதற்கு என்ன பொருள் ஆக இந்திய ரோந்துப் பணி என்பது கொலைகார சிங்களர் படைக்குக் காவல் புரிவதும், புலிகளின் நடமாட்டத்தை அவர்களுக்கு முன்னறிவித்து எச்சரிப்பதும்தான் என்றாகிறது. வேறு வகையில் சொன்னால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் புலிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாகச் சுடுவதற்குப் பாதுகாப்பளிப்பதுதான் என்றாகிறது.\nஇவற்றையெல்லாம் கலைஞர் அறியாதவரல்ல. ஆனால் அடுத்த நாள் அந்த ஐவர் கொலை பற்றிக் கலைஞர் சொன்னார், 'மீனவர்களைக் கொன்றவர்கள் யார் அவர்களின் சர்வதேசத் தொடர்புகள் என்ன என்று கண்டறியவேண்டும்’ என்பதாக. இதன் மூலம் கலைஞர் இலங்கைக் கடற்படையினரைக் குற்றம் சாட்டவில்லை என்பதாகிறது. அவர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்திலும் அப்படி குற்றஞ்சாட்டவில்லை என்று இலங்கை அமைச்சரே மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இலங்கையின் இன்னொரு அமைச்சர் 'மீனவர்களை விடுதலைப்புலிகள்தான் சுட்டிருப்பார்கள், நாங்கள் சுடவில்லை; என்கிறார். புலிகள் தான் சுட்டார்கள் என்று கலைஞர் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் சிங்களர்கள் அதன் மறைபொருளை உடனடியாக உள்வாங்கிக் கொண்டவர்களாய், அதை உறுதி செய்து சந்தோஷங்கொள்கிறார்கள்.\nபார்ப்பன பத்திரிகைகளும், பார்ப்பன ஆலோசகர்களும், இந்திய உளவுப் பிரிவினரும் போன்ற எவரும் சொல்லாத, துணியாத ஒரு குற்றச்சாட்டை வெகு எதேச்சையாக கலைஞர் முன்வைக்கிறார் என்றால், 'தமிழினத்தலைவர்’ யாரைக் காக்கச் சபதம் மேற்கொள்கிறார் புலிகளை அழித்தொழிப்பதைப்பற்றி நாம் ஒன்றும் பேசத் தேவையில்லை. ஆனால் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களையெல்லாம் தான்தோன்றித்தனமாகச் சொல்லவோ செயல்படுத்தவோ முடியாது. நாம் ஒன்று கேட்கலாம். திராவிட இயக்கத்தை நடத்தியவர்கள் தமிழினத் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டார்களே, அது ஒன்றுதான் அழிப்பதற்கு எளிதான வழி என்றா\nவிடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய அதிகார வர்க்கத்தின் பார்ப்பன மூளைகளால் பிழையாக வழிநடத்தப்பட்ட ராஜீவ் காந்தியின் படுகொலையானது இந்தியத்தரப்பு இழைத்த கொடுமைகளையெல்லாம் மூடி மறைத்து விட்டது. ஆனால் அதற்கு நாம் இவ்வளவு பெரிய விலை கொடுக்க நேர்ந்தது ஆற்றிக்கொள்ள முடியாத சோகம். காந்தியார் கொலைக்குப் பின் ஆர்எஸ்எஸ்ஸின் ஊது குழல்கள் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு இந்த நாட்டில் சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்திராவின் கொலைக்குப் பின் சீக்கிய இனத்து மன்மோகன் சிங்கை அரியணை ஏற்றி இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வழியமைக்கப்பட்டுள்ளது. எனில் ராஜீவ் மரணத்திற்கான விலையாக ஈழத் தமிழினத்தின் அழிவைக் கோரக்கூடாது என்பது நியாயம் அறிந்தவர்களின் வேண்டுதலாய் இருக்கும்.\nஉலகெங்கிலும் விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அமைப்பாக்கப்பட்ட ஆகப்பெரும் பயங்கரவாதத் திரட்சிகளான அரச எந்திரங்கள் அப்படித்தான் அழைக்கும். விடுதலைப்புலிகளை இந்திய அரசு பயங்கரவாதிகள் என்றே அழைக்கட்டும். ஆனால் அவர்கள்தாம் ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கையும் கவசமுமாய் இருக்கிறார்கள். நோக்கமற்ற கொலைகளும் ஆள்கடத்தல்களும் கொள்ளைகளும் புரிந்துவந்த வேறுபல போராளிக் குழுக்களை இந்திய அரசும் உளவுப் பிரிவும் மிகுந்த பணச்செலவில் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தகவல்கள் சேகரிக்கவும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவுமாய் இருக்கலாம். அவரவர்க்கும் அவரவர் நோக்கம் பெரிது.\nபல நாடுகளில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அவர்களது அரசை ஏதோ ஒருவகையில் அங்கீகரித்துத்தான் அவர்களோடு உரையாடிக்கொண்டிருக்கிóறார்கள். 'அவர்களோடு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும். இல்லையேல் இலங்கைக்கு வழங்கும் உதவியை நிறுத்திவிடுவோம்’ என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகள் மிரட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும் சிங்கள அரசு புரியும் அட்டூழியங்களையும் மனித உரிமை மீறல்களையும் அவ்வப்போது கடுமையாகக் கண்டித்தும் வருகின்றன. ஆனால் இந்தியா தன் தேய்ந்து இற்றுப்போன பழைய பாதையிலேயே செல்கிறது என்றால் தமிழர்கள் அழிக்கப் படுவதற்காக அவர்கள் விரதம் காக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். கட்சி அரசியல் நிர்பந்தம் காரணமாகப் பொய் சொல்லிக்கொண்டே சிங்கள அரசுக்கு பொருளும் தளவாடங்களும் பயிற்சியும் உளவுத் தகவல்களும் வாரி வழங்குகிறது இந்திய அரசு.\nதமிழகக் கடைகளில் பிடித்த அலுமினியக் கட்டிகளையும் இரும்பு பால்ரஸ் குண்டுகளையும் கைப்பற்றிக் கடத்தல் வழக்குகள் போடப்படும் அதே நேரத்தில் இந்திய நெடுஞ்சாலைகளில் கண்டெய்னர் லாரிகளில் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் அனுப்பப்படு கின்றன. அவ்வாயுதங்களை சிங்க அரசு தமிழ் மக்களை கொல்லத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியாது\nதிபெத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் இந்தியாவிற்கு வந்தவர்கள் 'அகதிகள்’ என்னும் அந்தஸ்தில் அரச மரியாதையோடு வாழ்கிறார்கள். சிங்களப் படையின் தாக்குதல்களுக்குத் தப்பி இந்தியாவுக்கு ஓடிவரும் ஈழ மக்களோ 'புலம்பெயர்ந்தோர்’ என்னும் பெயரில் பஞ்சைப் பராரிகளாய், வக்கற்ற பிச்சைக்காரர்களாய், சந்தேகங்களுக்கு உள்ளாகும் சிறப்பு முகாம் கைதிகளாய், கொண்டுவரும் பொருள்களை யெல்லாம் காவலர்களிம் களவு கொடுக்கிறவர்களாய் நாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களின் குறைந்தபட்சத் தேவைகளை வழங்கவும் அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும்கூட கலைஞரின் இந்திய இறையாண்மை உணர்வு இடம் கொடுக்கவில்லை. ஒரு வரியில் சொன்னால் ஈழம் அழிவதில் கலைஞருக்கு எந்தத் துக்கமுமில்லை. இதையும் நம்மீது திணிக்கப்படும் அவரது நிலைப்பாடு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகலைஞர் தமிழ் மக்களுக்குப் பல தேர்தல் வாக்குறுதிகளைத் தந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அவ்வாக்குறுதிகளும் அவற்றின் நிறைவேற்றமுமே தமிழகம் இலவசங்களில் உயிர் வாழும் நிரந்தரப் பிச்சைக்காரத்தனங்களால் நிரப்பப்பட்டிருப்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அடித்தள மக்களின் அவலத்தை நிலப் பகிர்வுத் திட்டமும் கிலோ அரிசி 2 ரூபாய் திட்டமும் உண்மையிலேயே போக்கலாம்தான். ஆனால் நடைமுறையில் அவை எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பது அரசின் நோக்கத்திற்கும் அக்கறைக்கும் உரைகல்லாகும்.\nமேற்குவங்கத்தில் நிறைவேற்றப்பட்ட நிலப்பங்கீடு இங்கும் நடக்குமெனில் அது மக்ளுக்கான திட்டமாய் இருக்கும். அல்லாது, உபரி நிலங்களை கையகப்படுத்தாமல், பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுக்காமல், முறையான நுகர்வோரைப் பட்டியல் போடாமல் செய்யப்படும் எந்தத் திட்டமும் அதன் விழாச் செலவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட் தயாரிக்கவே பயன்படும். கிலோ 2 ரூபாய் அரிசித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து அரிசி வழங்கல் 35 சதவீதத்திற்கே நடப்பதும், அன்றாடம் லாரி லாரியாய் வெளி மாநிலங்களுக்கு அரசி கடத்தப்படுவதும் அரசியல்வாதிகளின் உள்ளடி வேலைகளைக் குறிப்புணர்த்தக் கூடும்.\nவறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி அதற்குள் சந்தையில் மறு விற்பனைக்கு வந்துவிட்டன. வேறு என்ன நடக்கும் ஒரு 10 நாட்களுக்கு அந்த பணத்தைக்கொண்டு வாழ்வு நகரும். ஆனால் கலைஞர் இந்த சலுகைகளையெல்லாம் அளித்து அவற்றுக்கு ஈடாக நன்றிக்கடன் எதிர்பார்க்கிறார் - அதாவது அடுத்த தேர்தலில் அவருக்கு அளிக்க வேண்டிய வாக்குகளாக. சுபவீ இளையராஜாவிடம் எதிர்பார்க்கும் நன்றிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ஒரு 10 நாட்களுக்கு அந்த பணத்தைக்கொண்டு வாழ்வு நகரும். ஆனால் கலைஞர் இந்த சலுகைகளையெல்லாம் அளித்து அவற்றுக்கு ஈடாக நன்றிக்கடன் எதிர்பார்க்கிறார் - அதாவது அடுத்த தேர்தலில் அவருக்கு அளிக்க வேண்டிய வாக்குகளாக. சுபவீ இளையராஜாவிடம் எதிர்பார்க்கும் நன்றிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் யாருக்கு யார் நன்றி சொல்வது\nதெருவில் நடப்பவர்கள் அவசரத்திற்கு ஒன்றுக்கு இருக்க ஒரு வழி செய்யப்படவில்லை. மூத்திரத்தை அடக்கிச் சிரமப்படும் ஆத்திரக்காரர்களையும், கண்டகண்ட இடங்களையும் மூத்திரக் காடாக்கும் பொறுப்பற்றவர்களையும் கேட்டால் கலைஞர் தமிழர்களைப் பழி வாங்குகிறார் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கலைஞரைக் கேட்டால் மாநில வாரியாக எத்தனை மூத்திரக்காடுகள் உள்ளன என்று சொல்லி, தமிழகத்தின் சீரழிவுக்குப் பரிந்து பேசுவார். அடித்தள மக்களுக்குக் குடிநீர் இல்லை. குடியிருக்க இடமில்லை. நடக்க வழியில்லை. நாற்றமில்லாத சூழல் இல்லை. முறையாக மின்வசதி இல்லை. கழிவுநீரால் கழுவப்படாத சாலைகள் இல்லை. ஈக்களும் கொசுக்களும் எங்கே பெருகுமோ, அங்கேதான் மக்களும் பற்றாமைகளோடு பிதுங்கித் திணறுகிறார்கள். வெகுமக்களின் நீண்டகால, அவசரகால எந்தப் பிரச்சினையும் தீர்வுக்கு உட்படுத்தப்படவில்லை.\nகாவிரிக்கரை கிராம மக்கள் கரையிலேயே காலைக் கடன்களை முடிப்பார்கள். ஊர்கூடி பொங்கல் வைக்கும் நாளில் அந்தக் கரையை நன்றாகச் சுத்தம் செய்து, மருந்தடித்து, புதுமணல் பரப்பி, அதன்மேல் பொங்கலிட்டு விழா எடுப்பார்கள். ஆனால் நம் அரசுகள் இடும் பொங்கலோ குடலைப் பிடுங்கும் மலக்காட்டு நாற்றத்திலேயே புது முழக்கங்களோடு நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. ராமதாஸின் மக்கள் தொலைக்காட்சி தன் எதிர்காலத் திட்டத்தின் நம்பகத்தன்மையுள்ள முயற்சியாக மக்களின் அவலங்களை எடுத்து வைத்து அரசின் ஜடத்தனத்தைப் பறைசாற்றுகிறது. இது தொடக்கம்தான். அதுவே நெஞ்சை அதிர வைக்கிறது. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால்கூடப் பரவாயில்லை. அதிர்ச்சியூட்டும் வகையில் அவை அதிகரிக்கவும் செய்யப் படுகிறது. உண்மையைச் சொல்வதெனில் கலைஞர் அரசு 90% மக்களின் கோவணங்களை உருவிக் கொண்டு அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பயன்கள் யாவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பச்சைக் கம்பளம் விரித்துத் தாரை வார்க்கிறது.\nமுன்னெப்போதையும்விட, தலித்துகள் இன்று நாறிச் சிறுத்துப் போகிறார்கள். முன்னெப்போதையும் விட’ என்னும் தொடர் உங்களுக்கு வியப்பையோ கழிவிரக்கத்தையோ ஏற்படுத்துமெனில் நீங்கள் எவ்வளவு மரத்துப்போய்விட்டீர்கள் என்று நான் அதிசயிக்க வேண்டியிருக்கும். நேற்றுவரை தலித் மக்கள் தங்கள் அவலங்களைத் தலைவிதியின்மேல் இறக்கி வைத்திருந்தார்கள். இன்று தங்கள் அறிவின்மேல் ஏற்றிப் பார்க்கிறார்கள். ஆகவே, தங்கள்மேல் வீசப்படும் ஒவ்வொரு அற்பக் குறிப்பையும் மனத்துள் வாங்கிக் குன்றிப் போகிறார்கள். அடுத்த பக்கத்தில் புரசை கோ.தமிழேந்தியின் நியாயம் கோரும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nஎவ்வளவு கேவலமான வசவுகள் அவர்கள்மேல் வீசப்பட்டுள்ளன பூட்ஸ் கால் மிதியைவிட அந்த வசவுகள் 100 மடங்கு கொடுமைகளைப் பேசக்கூடியவை. உயிரைக் கோரக்கூடியவை. அந்த நண்பர் எல்லாக் கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இது அச்சாகும் வரை ஒரு கதவும் திறக்கவில்லை. கலைஞர் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கோர் நற்சான்று இது. இந்த அரசில்தான் முதன்முதலாக ஒரு தலித் சட்டசபை உறுப்பினர் சாதியின் பெரால் உதை பட்டிருக்கிறார். கலைஞரின் நட்புக்காகத் தனக்கேற்பட்ட இழிவை விழுங்கிக்கொண்டு வருங்காலத்தில் தலித் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான புது வழியைக் காட்டியிருக்கிறார் அவர் பூட்ஸ் கால் மிதியைவிட அந்த வசவுகள் 100 மடங்கு கொடுமைகளைப் பேசக்கூடியவை. உயிரைக் கோரக்கூடியவை. அந்த நண்பர் எல்லாக் கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இது அச்சாகும் வரை ஒரு கதவும் திறக்கவில்லை. கலைஞர் அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கோர் நற்சான்று இது. இந்த அரசில்தான் முதன்முதலாக ஒரு தலித் சட்டசபை உறுப்பினர் சாதியின் பெரால் உதை பட்டிருக்கிறார். கலைஞரின் நட்புக்காகத் தனக்கேற்பட்ட இழிவை விழுங்கிக்கொண்டு வருங்காலத்தில் தலித் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான புது வழியைக் காட்டியிருக்கிறார் அவர் ஒரு சாமான்யரைக் கரையேற்று வதற்காகத் தமிழகம் எவ்வளவு பிச்சைக்காரர்களையும் தீராத பிரச்சினைகளையும் காப்பாற்றித் தீர வேண்டியுள்ளது\nநிலவுடைமைக் கலாச்சாரத்தில் ஊறிய ஒரு கழிசடை, பிறரைத் துல்லியமாக அவமானப்படுத்த நினைத்தால் அவரை 'அப்பன் பேர் தெரியாதவன்’ என்று நக்கலடிப்பான். நக்கலடித்தவனுக்கு சட்ட ரீதியாக ஒரு அப்பன் இருந்தாலும், உண்மை அதுவாயிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதாவது, அவ்வளவு உள்ளீடற்ற வசவு அது. ஆனால் உடைமைச் சமுதாயத்தில் அது எதிராளியை வேரற்றவனாக அடித்து வீழ்த்துகிறது. இந்த மண்ணில் சொந்தங்களற்று, நிற்க நிழலற்று, ஊன்றிக்கொள்ள விழுதுகளற்று, மானுடத்தின் அற்பப் பிறவியாக அவரைச் சித்தரித்து மகிழ்கிறது. நமது அரசியல்வாதிகள் இதுபோன்ற கற்பிதங்களை முதலில் தகர்க்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியாது. முன்வரவும் மாட்டார்கள். அவர்களால் முடிந்ததெல்லாம் அந்த வசவை மேலும்மேலும் வலுப்படுத்தி மனத்துள் மகழ்ந்துகொள்வதுதான்.\nஇந்தப் பின்புலத்தில், நாம் அவர்களை வேண்டுவதெல்லாம் தயவுசெய்து தமிழர்களை அப்பன் பேர் தெரியாதவர்களாக்கி விடாதீர்கள் என்பதுதான். இந்த வேண்டுகோள், கலைஞர், மருத்துவர், புரட்சித் தலைவி என எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டு ஓடிவந்து நாற்காலியைத் தட்டிப் பறித்துக்கொள்ளப் போகிற புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கும்தான். மக்களை மந்தைகளாகவே இருத்தி, இலவசத்துக்கு மிதிபட்டுச் சாகும் ஏமாளிகளாகவே வளர்த்து அழகு பார்க்க நினைப்பவர்களுக்கு இதுதான் சரியான அறைகூவலாக இருக்கும்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... கேலிச்சித்திரங்கள் வரைந்து...\n“ நான் மௌனமாகவும் இல்லை உரத்த குரலில் பாடலும் இல்லை மனதுக்குள் ராகம் ஒன்றை முணுமுணுக்கிறேன் .” …. வாஜ...\nசமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர் தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள் நிமித்தம் ...\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\n15 ஆகஸ்டு 1947.. அந்த நள்ளிரவு சுதந்திரத்தில் இந்திய சுதந்திர வரலாற்றின் பிதாமகன் மகாத்மா காந்தி...\nIRADA … ECO THRILLER மட்டுமல்ல. இது கேன்சர் டிரெயின் கதை, நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத நிஜம். இவர்கள் நம் தேசத்தில் த...\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nஇனக்குழு சமூகத்தின் அடையாளங்கள் மாறிவிடாத முடியாட்சி காலம் . சித்தார்த்தனின் சாக்கியர் இனக்குழுவும் கோலியாஸ்...\nகேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம் , காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை .. என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட...\nநம்மைத் திருடுகிறார்கள் . நம் எழுத்துகளை அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் . திருடுவது எளிது . அதைவிட எளிது ...\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\n26வது பெண்கள் சந்திப்பு :சில கேள்விகளும்\nமும்பையில் தோழர் ஏபி.வள்ளிநாயகத்து வீரவணக்கம்\nகனடாவிலிருந்து 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொ...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnajournal.com/archives/91541.html", "date_download": "2018-08-21T13:32:52Z", "digest": "sha1:D6TQFL64IKJ6GOSNLVDI75T2FZAANDUJ", "length": 7248, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தென்பகுதி மீனவர்களை வெளியேற்றமுடியாதெனில் நாங்கள் வெளியேற்றுவோம் – வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை! – Jaffna Journal", "raw_content": "\nதென்பகுதி மீனவர்களை வெளியேற்றமுடியாதெனில் நாங்கள் வெளியேற்றுவோம் – வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை\nவடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்று வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கூறியுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று (புதன்கிழமை) வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.\nஅதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலேயே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் மேற்படி குற்றச்சாட்டையும் எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளார்கள்.\nஅத்துடன் தாங்களும் ஒரு தீர்வைப் பெற்றுத்தராமல் எங்களையும் விடாமல் மக்களே போராடுங்கள் எனக் கூறினால் அரசியல்வாதிகள் எதற்காக இருக்கிறார்கள் அவர்களால் என்ன பயன்\nமேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசித் தீர்வு கூறப்படும் எனக் கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது\nஅத்துடன் கடற்றொழிலாளர்கள் அட்டை பிடித்தல், சுருக்குவலை பயன்படுத்துதல், றோலர் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழில் செய்தல் போன்றன சட்டத்திற்கு மாறான கடற்றொழில் முறைகளை மெற்கொள்கின்றனர். அந்தச் சட்டவிரோதத் தொழில்களை தடைசெய்யவிடாது தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nதென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையேல் அதனை அவர்கள் வெளிப்படையாக கூறவேண்டும் என்று மேலும் குறிப்பிட்டனர்.\nஇதன்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் குறித்த சபையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரெஜினா கொலை வழக்கில் சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு\nமுச்சக்கரவண்டி சாரதிகள் வயதெல்லை குறைப்பு: ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் போராளிகளுக்கான நியமனம் சமாதானத்திற்கான வழியாகும்: வடக்கு ஆளுநர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sindhusankar.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-08-21T13:22:45Z", "digest": "sha1:XRSTRKQE2DLDV7BFRF6Q2B6DRYFTP33F", "length": 4899, "nlines": 143, "source_domain": "sindhusankar.blogspot.com", "title": "முகம்", "raw_content": "\nஉறக்கத்தின் நிழல் சூழாத அந்த சில நொடிகளில்\nநில்லாது சுழன்றோடும் மின்விசிறியின் நடனம்\nசில ஆழ்மனத்து எண்ணப் பதிவுகளை\nகடந்த கால அலைகள் மேலெழும்பி நிற்கின்றன.\nமூன்று பரிமாணங்களில் ஒன்று நீங்கியது.\nதடுக்கிறது தார்மீகக் கோட்பாடு -\nசுயநலம் என்றோர் புதிய பெயர் சூட்டுகிறது\nசளைக்காமல் பெயர்மாற்றம் செய்கிறேன் நான் -\nசுயநலம் அல்ல - இது சுதந்திரம்.\nஇன்று பிறந்த புது வானம்\nமுதற்சங்கம் கண்ட முதல் கவிதை\nபொழியும் விளிம்பில் விரிகின்ற கார்முகில்\nயுத்தம் காணாத வெள்ளை பூமி\nஎன் முக பிம்பம் நோக்கும் நான்.\nஎன் நூறு ஜென்ம தேடலுக்கு\nமுற்றுப் புள்ளி வைத்து போகும்\nஎன் ஒற்றை வரம் - என் முகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2017/06/express-photos_23.html", "date_download": "2018-08-21T14:24:14Z", "digest": "sha1:TB3ACYCC2TVYDM7HKHFIKFMT54TPV4VN", "length": 12063, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...! - EXPRESS PHOTOS | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் ரமலான் » ஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...\nஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...\nTitle: ஜொலிக்கும் வி.களத்தூர், மில்லத் நகர் பள்ளிவாசல்கள்...\nவி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு நடைபெற்றது. லைலத்துல் கதர் ரமலான் மாதத்தின் ...\nவி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு நடைபெற்றது. லைலத்துல் கதர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவுகளில் 21,23,25,27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்.\nரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)., நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997\nநேற்று தமிழக முழுவதும் ஒற்றைப் படை இரவுகளில் 27ஆம் இரவு ஆகும். லைலத்துல் கத்ர் நேற்று இரவாக இருக்கலாம். என வி.களத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகைகளும், சிறப்பு பயான்களும் நேற்று இரவு நடைபெற்றது.\nஅதன் ஒரு பகுதியாக வி.களத்தூர் பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது.\nஅதன் புகைப்படம் தொகுப்பு வெளிநாட்டில் இருக்கும் நம் சகோதரகளுக்காக ...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/spiritual-section/42612-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2018-08-21T14:23:20Z", "digest": "sha1:TLFJRQ5JUN4JZSMVPO7ITWIULDKPU2C6", "length": 25559, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்? - தினசரி", "raw_content": "\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது –…\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி…\nதமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nகேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nதூத்துக்குடி காவல்துறை சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்\nபிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்\nபிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது\nதிருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.\nபொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.\nஇது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.\nகொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.\nகொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு – சக்தி, கொடித் துணி – ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு – பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.\nஇது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.\nதர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.\nஇதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.\nசிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.\nஇப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொகுப்பு: அருள் நந்தி சிவம்\nமுந்தைய செய்திமுருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில் காட்சி தரும் வடிவங்கள்\nஅடுத்த செய்திசேலம் பசுமை வழிச் சாலை தனியாருக்கு சாதகமான திட்டமா\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை 21/08/2018 4:29 PM\nமறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் 21/08/2018 3:35 PM\nஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங 21/08/2018 2:26 PM\nசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம் 21/08/2018 2:25 PM\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் 21/08/2018 11:24 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்:\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nஅறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை\nஉள்ளூர் செய்திகள் 21/08/2018 4:29 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/shariq-mom-uma-riyaz-wish/", "date_download": "2018-08-21T13:31:44Z", "digest": "sha1:NM3QQI3AVEY5WPRNPDWBL55HRMQGXYLN", "length": 10243, "nlines": 131, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..? மக்கள் கருத்து - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..\nஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழிச்சி நாளிற்கு நாள் பரபரப்பாகி கொண்டி செல்கிறது. நிகழ்ச்சி ஆரம்பமாகி 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நேற்று(05, ஆகஸ்ட்) ஷாரிக் அவர்கள் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றத்தின் போது வீட்டில் உள்ள போட்டியார்கள் பலரும் கண் கலங்கினார்கள்.\nஷாரிக் அவர்கள் வெளியேற இருப்பதால், அவரது அம்மா உமா ரியாஸ் அவர்களும் நேற்றய நிகழ்ச்சியை நேரில் காண வந்திருந்தார். ஷாரிக் அவர்களின் வெளியேற்றத்தின் போது உமா ரியாஸ் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர் கமல் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.\nஅது என்ன கோரிக்கை என்றால், Wild Card எண்ட்ரியாக தன்னை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டுமாறும், அவ்வாறு அனுமதித்தால் அவர் உள்ளெ சென்று “வச்சு செய்வேன்” என்றும் கூறினார். அவர் கூறும் போது நேரில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் கர கோஷமிட்டு அவருக்கு ஆதரவு தெரிவுத்துருந்தனர். அதோடு கமல் மற்றும் அவரது மகன் ஷாரிக் அவர்களும் சிரித்துவிட்டனர்.\nஇதன் அடிப்படையில் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது, எங்களது ட்விட்டர் தலத்தில் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அவர் வர வேண்டும் என்று 70 சதவீக்கத்திற்கும் மேல் வாக்குகள் அளித்துள்ளனர்.\nஉமா ரியாஸ் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருவதால் அவர் Wild Card எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இயல்பிலேயே சற்று கோவமும் துணிச்சலும் நிறைந்த உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிச்சயம் சுவாரசியம் கூடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.\nPrevious articleபாலாஜி மீது குப்பை கொட்டிய ஐஸ்வர்யா. இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள். இவர்கள் செய்த செய்யலை பார்த்து கடுப்பான மக்கள்.\n பட்ட பெயர் வைத்து கிண்டல் செய்த ஐஸ்வர்யா, யாஷிகா..\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nநடிகர்களில் விஜய் தான் அதிகம். கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில்...\nபிக்பாஸ் மஹத் காதலி வெளியிட்ட பிக்னி கவர்ச்சி புகைப்படம்.\n18 மணிநேரம் குடும்பத்துடன் நிலச்சரிவில் தவிப்பு.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\n 50 கோடியாக எகிறிய சம்பளம்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅனுஷ்கவை வைத்து சூர்யாவை கிண்டல் செய்த தொகுப்பாளினிக்கு அனுஷ்கா கொடுத்த பதிலடி\nஅவரை அண்ணா என்று தான் அழைப்பேன் என்னை செருப்பால் அடிக்கணும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://asiriyarplus.blogspot.com/2018/07/emis.html", "date_download": "2018-08-21T14:21:52Z", "digest": "sha1:U2NULV53M5E3QUM4AOFJP7VVTUBIDZDG", "length": 5731, "nlines": 251, "source_domain": "asiriyarplus.blogspot.com", "title": "ஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்! - asiriyarplus", "raw_content": "\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\nFLASH NEWS : இனி ஒவ்வொரு வாரமும் பள்ளிகளுக்கு TEAM VISIT செய்ய உத்தரவு - ஆய்வின் போது பார்வையிட வேண்டியவை மற்றும் மீளாய்வு முறைகள் - செயல்முறைகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\nBIG BREAKING NEWS - 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1) 8 நாள்கள் உயிர்துறக்கும் உண்ணாவிரத்த ...\nUncategories ஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்\nஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்\n0 Comment to \"ஆசிரியர்கள் நியமனம் EMIS விவர அடிப்படையிலேயே இனி நடைபெறும்\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n7 - வது ஊதிய குழு அமல் படுத்தினால் ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும் - தோராய கணக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://cyrilalex.com/?cat=24", "date_download": "2018-08-21T14:11:58Z", "digest": "sha1:S674BDR62ZZDXNHNCTURGU4RC3TGOGYT", "length": 21217, "nlines": 106, "source_domain": "cyrilalex.com", "title": " சமூகம் - தேன்/cyrilalex.com", "raw_content": "\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nTune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்\nஅலையிலிருந்து கடலை அறிதல் - துறைவன்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nFebruary 21st, 2017 வகைகள்: சமூகம், இலக்கியம், கட்டுரை, அலசல் | மருமொழிகள் இல்லை » |\n‘அரபிக்கடலில் பின்னோக்கி நீந்திக்கொண்டிருந்த இறால்மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொண்டது’ இப்படித் துவங்கும் தமிழ் நாவல் ஒன்றை வாசிப்பது ஒரு கனவைப்போலத்தான். ஒரு கடற்கரை கிராமத்தில் வளர்ந்த என்னைப்போன்ற பலருக்கும் பாடப் புத்தகத்தை தவிர்த்த எதையும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பது மிக அரிது. ஆனால் இன்று நெய்தல் நில படைப்புகள் நெய்தல் மக்களாலேயே எழுதப்பட்டு பல தீவிர இலக்கிய செயல்பாட்டாளர்களின் கவனத்தையும் பெறுவதென்பது கனவுகளின் ஈடேற்றமே. […]\nDecember 10th, 2011 வகைகள்: சமூகம், ஆளுமை, இணையம், அலசல் | 2 மறுமொழிகள் » |\n“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன விழியோரக் கண்ணீருடனா அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா நண்பருடன் தொலைபேசிக்கொண்டா எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது […]\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nNovember 11th, 2011 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, அறிவியல், அலசல் | 4 மறுமொழிகள் » |\nமீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. பலரும் ஏதோ திடீரென […]\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nSeptember 20th, 2011 வகைகள்: சமூகம், தொழில் நுட்பம், ஜப்பான், இந்தியா, இயற்கை, கட்டுரை, உலகம் | மருமொழிகள் இல்லை » |\nகூடங்குளம் அணுமின்நிலையப் போராட்டம் குறித்த என் கட்டுரையை கீழ்கண்ட சுட்டிகளில் படிக்கலாம். ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1 ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 2\n’போலி’ பதிவர்களுக்கு எச்சரிக்கை + வேண்டுகோள்\nAugust 29th, 2009 வகைகள்: சட்டம், சமூகம், தகவல், நிகழ்வு, பதிவர்வட்டம், வலைப்பதிவுகள் | 17 மறுமொழிகள் » |\nதமிழ்மணம் துவங்கி 5 வருடங்கள் ஆகப்போகின்றது. தமிழ்மணக் குழுவுக்கும், துவங்கி உரு கொடுத்த காசிக்கும் வாழ்த்துக்கள். தமிழ் பதிவுலக பிரம்மாண்ட வளர்ச்சிக்கு தமிழ்மணம் ஒரு இன்றியமையாத காரணம். திரட்டிகள் வந்தபோது பதிவர்களுக்கிடையேயான ஊடாடல் அதிகமாகியது. இது பல வாய்ப்புகளையும் வசதிகளையும் தந்தபோதும் சில பூசல்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கியது. அப்படி உருவானதொன்றுதான் ’போலி’ பதிவைத் துவங்கி அவதூறுகளை பரப்பும் செயல். அப்படி துவங்கப்பட்ட போலி பதிவு ஒன்று மிகவும் பிரபலமாகி தமிழக ஊடகங்கள்வரைக்கும் பேசப்பட்டது. மிகவும் பிரபலமான அந்தப் […]\nNovember 6th, 2008 வகைகள்: சமூகம், கட்டுரை, அமெரிக்கா, அலசல், உலகம் | 2 மறுமொழிகள் » |\n(பராக் ஒபாமா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எழுதிய கட்டுரை. எங்கேயும் வெளியிடாமல் இருந்தது. சேமிப்புக்காக இங்கே….) பராக் பராக் 1856ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் நீதிபதி ட்ரெட் ஸ்காட் கீழ்கண்டவாறு கூறுகிறார்,”கறுப்பினத்தவர் வெள்ளை இனத்தவர்கள் மதிக்கத்தக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். வெள்ளை மனிதனின் இலாபத்திற்காக/வசதிக்காக நீக்ரோ நீதியோடும் சட்டபூர்வமாகவும் அடிமையாக்கப்படலாம்.” ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1965ல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை பெற்று 43 ஆண்டுகளுக்குப் பின் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க […]\nJune 24th, 2008 வகைகள்: சமூகம், செய்தி விமர்சனம், திரை விமர்சனம், தேன், நிகழ்வு, அஞ்சலி, அமெரிக்கா, அலசல் | 15 மறுமொழிகள் » |\nபாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் – II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை விட நன்றாக இருந்தது. இப்போது கமலின் முகத்தை தவிர்த்து படத்தில் மற்ற அம்சங்களில் கவனம் செல்கிறது. […]\nஇடி அல்லது இடிப்போம்…: ஆதவன் தீட்சண்யா\nApril 21st, 2008 வகைகள்: சமூகம், இந்தியா | ஒரு மறுமொழி » |\nஇன்று கீற்று மின்னிதழிலிருந்து மின்னஞ்சலில் வந்த மடல் இடி அல்லது இடிப்போம்…: ஆதவன் தீட்சண்யா நாய் பன்னி ஆடு மாடு எருமை கழுதை கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால். நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் […]\nApril 10th, 2008 வகைகள்: சமூகம், ஆன்மீகம் | ஒரு மறுமொழி » |\nஒகேனக்கல் குறித்து பல காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருப்பதற்கிடையில் பதிவர் கார்த்திக் முருகன் காந்தீய வழி ஒன்றை முன்வைத்துள்ளார். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அரசியல் சதிகளை முறியடிக்க பொதுமக்கள் இது போன்ற வழிகளைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. கேரளாவில் திருட்டை கண்டுபிடிக்கத் தன்னையே அடித்துக்கொண்ட ஆசிரியை நினைவுக்கு வருகிறார். உலகில் அன்பை போதித்து அதற்காக உயிரைவிட்ட உன்னதத் தலைவர்கள் அனைவரின் ஒரே உருவமாக இவர் தெரியவில்லையா பழிக்குப் பழி, எதிர்ப்புக்கு எதிர்ப்பென்றில்லாமல் அகிம்சையின் வலிமையை உலகத்திற்குணத்திய மக்கள் […]\nApril 9th, 2008 வகைகள்: சமூகம், குறும்படம், அமெரிக்கா, உலகம் | மருமொழிகள் இல்லை » |\n“to tame the savageness of man and make gentle the life of this world” நாகரீகம் என்பதன் உண்மையான விளக்கம் இதுவாகத்தானிருக்கும். மனிதனின் மிருக இயல்பை அடக்கிவிட்டு இவ்வுலக வாழ்க்கையை இனிமையாக்குவது. மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிவித்து ஜான் F. கென்னடி பேசிய பேச்சில் கிரேக்கர்களின் அந்தக் கோட்பாட்டை மேற்கோளிடுகிறார். இதற்காக நம்மை அற்பணித்துக்கொள்வோம் என்பது அவரின் வேண்டுகோள். “to tame the savageness of man and make gentle […]\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://donashok.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-08-21T14:32:25Z", "digest": "sha1:AXZOUGLVBCUUEEKUC7PPMHOT2WT3BDEA", "length": 32185, "nlines": 398, "source_domain": "donashok.blogspot.com", "title": "டான் அசோக்.: ராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பணம்", "raw_content": "\nராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பணம்\nஅரசு உயரதிகாரிகளையும், சில நேரங்களில் கீழ்மட்ட அதிகாரிகளையும் மட்டுமே வழக்கமாக வதைத்தெடுக்கும் CAG எனப்படும் Comptroller And Autitor Generalயின் அறிக்கைகள், 2G அலை ஒதுக்கீடு பிரச்சினையில் முதலில் இருந்தே ஒரு முக்கியமான பங்காற்றி வந்திருக்கிறது. இந்தப் பங்கானது பல நேரங்களில் ஊடகங்களில் திரித்துக் கூறப்பட்டும், ஊடகங்களுக்கோ அல்லது ஏனைய பிற அரசியல்வாதிகளுக்கோ வேண்டிய வகையில் உருமாற்றம் செய்து கூறப்பட்டோ வந்திருக்கிறதேயொழிய, நேரடியாக, CAG அறிக்கை என்றால் என்னவென்றோ, அந்த அறிக்கை 2G அலைக்கற்றை விஷயத்தில் என்ன பங்காற்றியது என்றோ தெளிவாக கூறப்பட்டதாய் நினைவில்லை.\n அதாவது இந்த CAG எனப்படும் உயர் அதிகாரி இந்திய அரசின் கணக்குப் பிள்ளை. இந்திய அரசுக்காக வேலை செய்பவரேயொழிய, இந்திய அரசின் அதிகாரிகளுக்காக வேலை செய்யமாட்டார்(செய்யகூடாது). இந்திய அரசு வெற்றிகரமாகவும், வேகமாகவும், பொருளாதார பலத்தோடு முன்னேறவும் உதவக் கூடிய வகையில் இந்திய அரசின், மாநில அரசுகளின் அலுவலகங்கள், போக்குவரத்து துறைகள், அஞ்சல் துறை, என அரசு சம்பந்தப்பட்ட, அரசின் பணம் புழங்கும் அத்தனை அலுவலகங்களின் கணக்கையும் கண்காணிக்க வேண்டிய கடமை இந்த CAGயின் முக்கியமான கடமையாகும். இப்படிக் கண்காணிக்கும் போதுதான் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக CAG அறிக்கை வெளியிட்டுள்ளது. 'வெளியிட்டுள்ளது' என நாம் குறிப்பிடும் போதெல்லாம், அரசின் ராஜாங்க ரகசியங்களில் ஒன்றானதாக கருதப்படும் இந்த CAG அறிக்கை ஊடகங்களால் திருட்டுத்தனமாக கைப்பற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதே நேரம் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது என்றாலும் கூட, அந்த அறிக்கை பொய்யானது என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. உண்மையான ஆவணமான அது திருட்டுத்தனமாக கைப்பற்றப்பட்டு அல்லது பிற அரசியல்வாதிகளால் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது\nஇந்த CAG ஆனது நஷ்டக்கணக்குகளையும், லாபக்கணக்குகளையும் ஒரு இயந்திரம் போல தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சூத்திரத்தின் படி வகுத்து அறிக்கை வெளியிடுவதேயன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளாது. இதைப் பற்றி BSNL உயர் அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது CAGயின் கணக்கில் சிலமுறை ஏற்படும் சிக்கல்களைச் சொன்னார். அதாவது ஒரு BSNL அலுவலகம் குத்துமதிப்பாக ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 1000 தொலைபேசி இணைப்புகள் கொடுக்கவேண்டிய தேவையிருக்கும் என கணக்கிட்டு 1000 தொலைபேசிகளை 1000ரூபாய்க்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். ஆனால் எதிர்பார்த்தபடி 1000 இணைப்புகள் தேவைப்படாத பட்சத்தில், 500 மட்டுமே விற்கிறது எனில், அந்த மாதத்தின் CAG அறிக்கையில் அரசுக்கு தொலைபேசித்துறை அதிகாரிகளால் 500ரூபாய் நட்டம் என கணக்கு இருக்கும். அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்பர். அல்லது மீதமுள்ள 500 தொலைபேசி இணைப்பையும் கொடுத்த பிறகு இந்த சிக்கல் தீரும். இன்னொரு சந்தர்ப்பத்தைப் பார்ப்போம்.\nஇதே அதிகாரிகள் 500 தொலைபேசி இணைப்புகள் தான் விற்கும் என யூகித்து 500 தொலைபேசிகளை 500ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் 1000 பேர் தொலைபேசி வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்கள். 500பேருக்கு மட்டும் தொலைபேசியை கொடுத்துவிட்டு 500பேரை பொறுமை காக்க சொல்கிறது தொலைபேசி துறை. அந்த மாதத்தின் CAG கணக்கு அறிக்கையில் \"அதிகாரிகளால் அரசுக்கு 500ரூபாய் நட்டம் என இருக்கும். இதுதான் CAG செயல்படும் நடைமுறை. இதுதான் 2G அலை ஒதுக்கீட்டிலும் நடந்துள்ளது.\n1999ல் இன்கமிங் கால் ஒரு நிமிடத்திற்கு 3ரூபாய், அவுட்கோயிங் கால் ஒருநிமிடத்திற்கு 7ரூபாய். இப்போது இன்கமிங் கால் இலவசம், அவுட்கோயிங் ஒரு நிமிடத்திற்கு 1ரூபாய். ஆனால் CAG அறிக்கை 1999ல் எந்த மதிப்புக்கு அலைவரிசை ஒத்துக்கப்பட்டதோ அந்த மதிப்புடன் இப்போது வழங்கப்பட்ட மதிப்பை ஒப்பிட்டு 176000கோடி நட்டக் கணக்கு காட்டியுள்ளது. CAG குறிப்பிட்டபடி 176000கோடி ரூபாய் குறைத்து விற்கப்பட்டுள்ளது என்றே வைத்துக்கொள்வோம். சுப்பிரமணியசாமி மீண்டும் மீண்டும் சொல்வது போல், இந்த 176000கோடி ரூபாய் என்பது பேப்பரில் எழுதப்பட்ட மதிப்பேயொழிய நிஜத்தில் ரூபாய்கள் அல்ல. This money exists only in the papers but not in real. ஊடகங்களின் தவறான செய்திகளால், மக்கள் ராசாவிடம் 176000கோடி பணம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.\n\"ரிலையன்ஸை பற்றி எந்த செய்தியும் வெளியிடமுடியவில்லை, வெளியிட்டால் அம்பானி விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்\" என செய்தித்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நபர் தொலைபேசியில் சொன்னதைக் கேட்டோம் இதைவிட நம் ஊடகங்களின் so called நடுநிலையை வெளிச்சம் போட வேறு உதாரணம் இல்லை\nஉண்மை என்னவெனில் குறைந்த மதிப்பில் விற்க 60000கோடி ரூபாய் கையூட்டு பெறப்பட்டிருக்கிறது. அந்த மகா தொகையானது சோனியாகாந்தி (அவரது இரு சகோதரிகள்), ராசா மற்றும் தி.மு.க என மூன்று பங்குகளாக பங்கு பிரிக்கப்பட்டு முறையே 60%, 10%, 30% என பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. (அமெரிக்க CIA உளவாளி சு.சாமியின் இந்த கூற்று முற்றிலும் உண்மை என்றுதான் படுகிறது). ஆனால் நேற்றுவரை சோனியா ஏதோ நேர்மையின் இத்தாலிய பதிப்பு போல ஊடகங்கள் செய்தி பரப்பிய மர்மமும், ராசா மட்டுமே தனிமனிதனாக (one man show) ஆக இந்த மாபெரும் முறைகேட்டை செய்ததைப் போலவும் செய்தி வெளியிட்டு வந்ததற்கான காரணம் முழுக்க முழுக்க காங்கிரஸ் தன் தவறை மறைக்க செய்த சதி என்பது உறுதியாகிறது. காமன்வெல்த் ஊழல் முதற்கொண்டு காங்கிரசின் பல அசிங்கங்களை 2G மூடிவிடும், மறைத்துவிடும், மறக்கடித்துவிடும் என்ற காங்கிரசின் கணக்கு அட்சரம் பிசகாமல் ஊடகங்களால் நிறைவேற்றப்பட்டது. 'இளைஞன்' பட விழாவில் கருணாநிதி, \"ஒருவனே எப்படி 176000கோடி ஊழல் செய்ய முடியும்\" என சொன்னதன் உள்ளர்த்தம் காங்கிரசுக்கான மறைமுக மிரட்டல் தான்.\nஇந்தியர்களின் பணத்தை இந்தியர்கள் கொள்ளையடித்த காலம் போய் ராசா, கல்மாடி, கலைஞர் மற்றும் அடுத்து ஆதரிக்க தயாராக இருக்கும் ஜெயலலிதா போன்ற 'மிக நல்லவர்களின்' தயவால் இப்போது இத்தாலியர்கள் கொள்ளையடிக்கும் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்து ராகூல் எதோ ஸ்பானிய பெண்ணை காதலிக்கிறாராம். அருமை. ராஜீவால் இத்தாலி பேசிய இந்தியப் பணம் கூடிய விரைவில் ராகூல் காந்தியால் ஸ்பானிஷும் பேசப் போகிறது. நேரு குடும்பத்தால் உலகம் சுற்றும் இந்தியப் பணம்.\nLabels: அரசியல், ஊடகம், கட்டுரை, செய்திகள், சோனியா, படைப்புகள், ராசா, ஸ்பெக்ட்ரம்\nஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nஅரசியலா.. எஸ்கேப்... என்ன இருந்தாலும் இந்த காங்கிரஸ் ஆட்சியை ஒருக்கால் கவுக்கவேணும் என்றொரு ஆசை இருக்கிறது...\n///நேரு குடும்பத்தால் உலகம் சுற்றும் இந்தியப் பணம்./// கடைசி வரி இந்திய உழலுக்கு ரொம்ப பொருத்தம்...படிப்பவருக்கு விழிப்பான பதிவு...பதிவில் உள்ளவர்கள் படித்தால் கொள்ளியில போற பதிவு...\nஇங்க பாருங்க அசோக் யுனிடெக் ,ஸ்வான் ரெண்டு கம்பெனிகள் தான் வாங்கிய உரிமத்திற்கான மதிப்பு சுமார் 1600 கோடி ஆனால் அந்த உரிமை மிக குறைவாக ராசவிடமிருந்து மிக குறைவாக வாங்கப்பட்டுள்ளது ...i mean minimum 26000 கொடிக்காச்ஹும் விற்கப்ப...ட்டு இருக்க வேண்டும் ஆனால் எனக்கு தெரிந்த இந்த இரு நிறுவனங்களுமே தங்கள் உரிமையை ஷேர் மார்க்கெட்டில் சேவையை தொடங்கமலய்யே விட்ட்று விட்டன இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்ட்டம் மேலே குறிப்பிட்ட தொகை (26000 crore) ...இவர்கள் நோகாமல் நொங்கு தின்னது போல இன்னும் சில நிருவனகளும் இந்த களத்தில் குதித்து தனக்கான லாபத்தை மென்று விழுங்கியுள்ளது ,,,swaan நிறுவனம் டாட்டா கு சொந்தமானது unitech தெரியல தேடிக்கிட்டு இருக்கேன் ........தயவு செஞ்சு தமிழ் நாட்டுல வேற ஆட்சி மாற்றம் தேவ நீங்க உண்மைய வேலக்குறேன் சமையல் செஞ்ச குண்டான வேலக்குறேன்நு குட்டைய கொழப்பி விட்டுராதிங்க நம்மாளுங்க அரகொறைய புரிஞ்சுக்கிட்டலும் தி.மு.க மேல இப்போதான் கொஞ்சம் வெறியில இருக்கனுங்க ..\nமீண்டும் மீண்டும் மீண்டும் அதே தவறு... உங்களுக்கு எதிரி யார் ஊழலா மூன்றாவதாய் ஒரு சக்தியை உருவாக்கவோ ஆதரிக்கவோ விளையவேண்டுமேயொழிய மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுத்து ஊழல் செய்ய வைப்பது மடமையிலும் மடமை\nஎனக்கும் தி.மு.க க்கும் என்ன வாய்க்கா தகராறா அட ஏன் சார் நீங்க வேற புதுசா எவனாவது ஒருத்தன் வரமாட்டனா புதுசா எவனாவது ஒருத்தன் வரமாட்டனா பீகார் ,குஜராத் மாதிரி என் தமிழகமும் திருந்தி தொலையாதா பீகார் ,குஜராத் மாதிரி என் தமிழகமும் திருந்தி தொலையாதா , குடும்ப ஆட்சி ஒழியாதா , குடும்ப ஆட்சி ஒழியாதா, என் மக்களின் கல்வி தரம் உயராத எனும் ஆதங்கத்தில் சொல்லி கொண்டிருக்கிறேன் சார் ,,வந்த விஜயகாந்தையும் உருப்படியா விட மாற்றனுங்க இந்த மக்களுக்கு எப்போதான் புத்தி வரும்நு தெரியலையே ....\nஒரு உதாரணம் சொல்றேன். ராசா விவகாரம் பெரிதாக கிளம்பிய போது உடனே காங்கிரசுக்கு வலிய போய் ஆதரவு தெரிவித்த ஜெயாவின் ஜெயா டிவியில், இப்போது மன்மோகனை தா.பாண்டியனும், ரஃபி பெர்னாடும் தினமும் கேவலமாக அர்ச்சித்துக்கொண்டிருக்கிறார்கள். :-) நம் சாபக்கேடே \"கூட்டணி ஆட்சி\" மற்றும் பல கட்சிகள், மற்றும் சரியான மாற்று இல்லாமல் இருப்பது இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம் கெட்ட மக்கள்.\nமுதலில் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி முறை ஒழிய வேண்டும் . அதன் பின் ஊழல் தன்னாலேயே ஒழியும். சுயாட்சி மலர வேண்டும்.\nதமிழடிமைகளாய் இருந்து சீமானடிமையாய் மாறியவைகளுக்கு...\nவிமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தமிழ்க்கடவுள் சீமான்\nபதிவுலகம் என்ன குப்பைத் தொட்டியா (100வது பதிவு\n\"நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்\"- அலறிய ராகுல் ...\nசிறந்த பத்து தமிழ் நகைச்சுவைப் படங்கள்.\nஈசன் திரைப்படம் சறுக்கியது எங்கே\nட்ரான் (ஆங்கிலம் TRON) விமர்சனம்\nநடிகை லட்சுமிராயை விட்டுவைப்பாரா எழுத்தாளர் ஜெயமோக...\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nராகுல் காந்தியால் ஸ்பானிஷ் கற்க போகும் இந்தியப் பண...\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nதமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி\nகறுப்பும் காவியும் - 16\nவிஸ்வரூபம் 2 - ஆண்டவர் வித்தை\nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகிளிமூக்கு அரக்கன் | Facebook\nஆஸ்திரிய தபால் தலை (1)\nஈழம் தமிழகம் நான் (1)\nபாராளுமன்றத் தேர்தல் 2014 (3)\nபெண்களுக்குப் பிடித்தவனின் புலம்பல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t144637-topic", "date_download": "2018-08-21T13:24:11Z", "digest": "sha1:I7BOJRNQNTVU4TLDOQSPQDM55PJY5RYY", "length": 15059, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கர்நாடகா தேர்தல் : பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா ஜோலி", "raw_content": "\nஎனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது - சுருதி ஹாசன் பேட்டி\nபறக்கும் பட்டாம்பூச்சி – பொ.அ.தகவல்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nபாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வில்அம்பு .....\nகருத்து சொல்ல முடியாத - சர்ச்சையை கிளப்பிய கவிதை.\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை\nபசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅது அந்தக் காலம் – சுவையான செய்திகள்\nஅவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\nகடைமடைக்கு நீர் வர 45 நாட்களுக்கு மேல் எடுக்கும் - நீர்வளத் துறை பொறியாளர்.-மீம்ஸ் சொல்லும் செய்தி.\nகார்ட்டூன்கள் எந்த நாட்டு பத்திரிகையில் அறிமுகம் ஆனது\n1.08.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஅறிமுகச் செய்திகள் – பொ.அ.தகவல்\nகூந்தல் காட்டில் ஒற்றை ரோஜா…\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகண்ணுக்கு மை அழகு – பொ.அ.தகவல்\nபனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்\n100% காதல் – திரைப்பட ஷூட்டிங் முடிவடைந்தது\nசரியாக 347 வருடங்களுக்கு முன்பு...\nநிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\nகேரளாவை கலக்கும் தற்காலிக ‘பவர் பேங்க்’\nவாட்ஸ் அப் – நகைச்சுவை\nபேரு வைக்கும்போதே நல்ல பேரா வைக்க வேண்டியதுதானே…\nஅவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி…\nகடவுளின் விருப்பம் – கவிதை\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nகரப்பான் பூச்சி தொல்லை நீங்கிட…\nபிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி\nபாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\n.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ந்தேதி நடைபெறும்; பொது செயலாளர் அன்பழகன்\nரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு\n6,7,8 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஒரு வரி வினாக்கள்\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nRRB, குரூப் 2 மற்றும் SI தேர்விற்கு அறிவியல் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்பதால், *Arihant* புத்தகத்தில் உள்ள அறிவியல், வேதியியல், அரசியலமைப்பு மற்றும் பொது அறிவு பகுதி\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவரலாறு - மொகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய வினா விடை குறிப்புகள்\nகர்நாடகா தேர்தல் : பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா ஜோலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகர்நாடகா தேர்தல் : பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா ஜோலி\nகர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட\nசசிகலா ஜோலி, ரூபாலி நாயக் ஆகிய பெண் வேட்பாளர்கள்\nபெயர் முதல் கட்ட பட்டியிலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் வரும்\nமே மாதம் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து\nதற்போது மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்\nமீண்டும் ஆட்சியை கைப்பற்றவும், எற்கனவே ஆட்சியை\nஇழந்த பா.ஜ., மீண்டும் கைப்பற்றவும் தீவிரமாக பிரசாரத்தில்\nஇதற்காக இரு கட்சிகளின் தலைவர்களான, ராகுல் மற்றும்\nஅமித்ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n224 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு வரும் மே மாதம்\n12 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல்\nமுடிவு மே மாதம் 15-ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து\n72 தொகுதிக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.,\nஇதில் 2 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nநிபானி தொகுதிக்கு சசிகலா ஜோலியும் , உத்தர கன்னட\nமாவட்டத்தை சேர்ந்த கர்வார் தொகுதியில் ரூபாலி நாயக்\nஎன்பவரும் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nபுதுடில்லியல் நடைபெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீட்டு\nவிழாவில் பாஜ., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி , மத்திய\nஅமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் உட்பட பலர் கலந்து\nபா.ஜ., முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார்\nRe: கர்நாடகா தேர்தல் : பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார் சசிகலா ஜோலி\nதினமலர் படிக்காதவர்கள் இதை படிக்கலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govipoems.blogspot.com/2012/01/", "date_download": "2018-08-21T14:39:25Z", "digest": "sha1:H4M5HMNUEACIGKHT4RDQY3QYTGCWTSTS", "length": 5455, "nlines": 99, "source_domain": "govipoems.blogspot.com", "title": "!♥♥ கோவி♥♥!: January 2012", "raw_content": "\nதேன் சுரப்பி, உன் உதடுகள்.\nஉன் உமிழ் நீரிற்காய் சுற்றும் தேனீக்கள்..\nLabels: காதல் கவிதை., காதல் கவிதைகள்., தமிழ் கவிதை, தமிழ் கவிதைகள்.\nபார்.. உன் பார்வையை தக்க வைத்துக்கொள்ள\nஉன் அருகில் உள்ள பொருட்களெல்லாம்\nநீ இங்கு இருப்பதால்தான் நிலவு\nநீ சாப்பிடும்போது உணவோடு மிளகாய் வந்துவிட,\n\"ஆ.. காரம்\" என்று அலறினாய்...\nமிளகாயோ \"ஐ... இனிப்பு\" என்று துள்ளியது...\nநீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..\nநீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..\nவெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய் உனக்கு வலிக்காதா வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...\nஎப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்... ...\nபூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...\nஎன்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...\nஉன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..\nஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது \"டேய்... போகனுமா\nஎன் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suvatukal.blogspot.com/2005/03/2.html", "date_download": "2018-08-21T13:34:28Z", "digest": "sha1:FOQ6KGDRPDSJRO3CTZ6MZWJMOQPYOK44", "length": 26646, "nlines": 126, "source_domain": "suvatukal.blogspot.com", "title": "சுவடுகள்: அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2", "raw_content": "\nகதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2\nஉலக அரசியலை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அமேரிக்காவின் அரசியலை புரிந்துக் கொண்டால் போதும், அதே போன்று அமேரிக்கா டாலரை நாம் புரிந்துக் கொண்டால் உலக பொருளாதாரத்தை புரிந்துக் கொண்டது போல் ஆகும். அந்த அளவிற்கு டாலரின் தாக்கம் உலக பொருளாதார வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் அதிக பங்கு கொண்டதாக இருக்கிறது. இதற்கும் முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் அணுகுமுறைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அமேரிக்கா அரசியல் முஸ்லீம்களை பொருத்தவரை இரண்டு விதமான அரசியல் பரிமானங்களை கொண்டு செயல் படுத்தப்படுகிறது. ஒன்று உலக பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமான பெட்ரோல், இன்னொன்று உலகத்தின் பல பாகங்களில் பெரும்பான்மையான மக்களின் மனதை ஊடுருவிக் கொண்டிருக்கும் குரானின் கொள்கைகள். இரண்டிற்க்குமே அதாவது, 'மனம் மற்றும் பணம்' என்ற வாழ்வின் இரண்டு அதி முக்கிய தேவைகளுக்கு அடிப்படை காரணியாக இருப்பது இந்த மத்திய ஆசிய என்ற பாலைவன சமவெளிதான்.\nஇந்த இரண்டையும் வெல்ல வேண்டும் என்ற பன்னெடுங்கால போராட்டத்தின் பின்னனியில் (பல்வேறு அரசியல் கூட்டணிகள் செயல்பட்டாலும், தற்போது) அமேரிக்காவின் 'neocon' அரசியல் கூட்டணியினர் செயல்படுத்தும் அரசியல் திட்டங்களையும், அதன் சாதக பாதகங்களும்தான் இன்றைக்கு முக்கியத்துவம் நிறைந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசியல் போராட்டமாக இருக்கிறது. முதலில் பொருளாதார பொலிட்டிக்ஸை அதாவது பெட்ரோல் பொலிட்டிக்ஸைப் பார்த்துவிட்டு பிறகு புத்தகப் பொலிட்டிக்ஸிற்கு (politics of ideology and mythology) போகலாம்.\nஅமேரிக்காவின் மிகப் பெரும் பிரச்சனை குறைந்து வரும் டாலரின் மதிப்பும், அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்தான். வருடத்திற்க்கு 5 சதவிகிதமாக அதன் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்சிக்கு, குறிப்பாக யூரொவிற்கு எதிராக குறைந்துக் கொண்டிருப்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று. காரணம் மற்ற கரன்சிகளைப் போல் அமேரிக்கா டாலர், தங்கத்திற்க்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட கரன்சி அல்ல. 1971ம் வருடத்திலிருந்து அமேரிக்கா டாலர் ஒரு 'floating currency' ஆக மாற்றப்பட்டது 'backing out on Bretton Wood Commitment'. அப்போது சுமார் 70 பில்லியன் டாலர் கடனாளியாக இருந்த அமேரிக்கா கையில் வைத்திருந்தது வெறும் 11 பில்லியன் பெருமானமுள்ள தங்கமே.\nஇன்றைக்கு அமேரிக்காவின் சூப்பர் பவர் அந்தஸ்திற்க்கு மற்றுமொரு காரணம் உலகச் சந்தையில் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றங்கள், மற்றும் ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கிடையில நடைபெறும் வர்த்தக மாற்றங்கள் யாவும் டாலரை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதே. பெரும்பாலும் உலகளாவிய இந்த வர்த்தக அமைப்பு டாலருக்கு பெரும் மதிப்பு அளிப்பதோடு அதன் பலவீனத்தை மறைப்பதற்க்கும் உதவுகிறது.\nஎந்த நாட்டினுடைய பொருளாதாரமும் அந்தந்த நாட்டின் பலம் மற்றும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படும். அதே நேரம் அந்த நாட்டினுடைய கரன்சியின் மதிப்பு அந்நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பின் திறனை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இதுதான் பொதுவான கரன்சி மற்றும் பொருளாதார அடிப்படை விதிமுறைகள்.\nஅமேரிக்காவின் டாலரை கவனித்தால் அது அதனுடைய சரியான மதிப்பைவிட அதிகமான மதிப்பு கொண்டிருப்பது தெரியவரும். இந்த 'over valued' அமேரிக்கா டாலரின் மதிப்புதான் தற்போது அமேரிக்காவின் மிகப் பெரும் பலமும் மற்றும் பலவீனமும். இது மற்ற நாடுகளில் இருக்கக் கூடிய பொருளாதார சிரமங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிரச்சனை.\nஅமேரிக்கா தான் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவைவிட சுமார் 50% அதிகமாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வரை வருடத்திற்க்கு சுமார் 500 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் இருந்துக் கொண்டிருக்கக் கூடிய அமேரிக்க பட்ஜெட் மொத்தமாக கடந்து 25 வருட கால பட்ஜெட்டை கணக்கிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு டிரில்லியன் டாலர்கள் கடனாளியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 1.25 பில்லியன் டாலர் கணக்கில் இது அதிகமாகிக் கொண்டிருப்பது அமேரிக்காவின் மிகப் பெரும் கவலைகளில் ஒன்று.\nஇத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அமேரிக்கா டாலர்கள் இன்னும் ஒரு சக்திவாய்ந்த கரன்சியாக காட்சி அளிப்பதற்க்கு காரணம் மேலே சொன்னதுபோல் உலக வர்த்தக பரிமாற்றங்கள் அமேரிக்க டாலரின் மூலமாக நடைபெறுவதே.\nஉலகில் நடைபெறும் அந்நிய செலவானி மாற்றங்களில் சுமார் 80 சதவிகிதம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறுகிறது. உலகில் நடைபெறும் ஏற்றுமதிகளில் குறைந்த பட்சம் பாதி ஏற்றுமதி இறக்குமதிகள் டாலர் வழியாகத்தான் நடை பெறுகிறது. சர்வதேச வர்த்தகங்கள் செய்வதர்க்கு வசதியாக ஒவ்வொரு நாடும் அமேரிக்கா டாலரைத்தான் கையிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதன் காரணமாக உலக நாடுகளின் மொத்த டாலர் கையிருப்பு சுமார் 68 சதவிகிதமாக அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளில் குவிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா IMFன் கடன் வசதிகள், கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் டாலரின் மூலமாகத்தான் நடைபெறவேண்டும். IMFல் அமேரிக்காவின் பங்கு 51% சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n(இதை எழுதும்போது உலக வங்கியின் கொள்கைகளையும் அதன் வாயிலாக அழியும் ஏழை நாடுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதை வேறொரு தலைப்பில் பின்னொரு தருணத்தில் தருகிறேன்.)\nஇதைவிட இன்னுமொரு முக்கியமான வர்த்தக பரிமாற்றம், அதாவது ஒபெக் நாடுகளின் மற்றும் அதை சாரத எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அனைத்தும் டாலரில்தான் வியாபரம் செய்கின்றன.\nஇப்படி உலக நாடுகளின் வர்த்தகங்கள் அனைத்தும் டாலர் மூலமாக நடைபெறுவதால் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகள் தனது டாலர் கையிருப்பைப் பற்றி கவலைப்படுவது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக அவ்வப்போது பொது சந்தையிலிருந்து டாலரை வாங்குவதும் விற்பதும் இந்த மத்திய வங்கிகளின் வழக்கமான தொழிலாகும். ஏனென்றால் உலக நாடுகள் அனைத்தும் தனது கரன்சியின் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்பந்தமும் இன்னும் தனது கரன்சி over value கிவிடக் கூடது என்ற அவசியமும்தான். இப்படி உலக நாடுகள் எல்லாம் தனது கரன்சியைக் காப்பற்றிக் கொள்ள போராடும்போது அமேரிக்கா மட்டும் டலர்களை பிரிண்ட் செய்து உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சலவைக் காயாமல் உறங்க வைத்துவிட்டு கொண்டாட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்புத் தகுதி அமேரிக்காவிற்கு மட்டுமே இருப்பதால் அமேரிக்கா டாலர்கள் over valued கவும், இன்னும் அடிப்படை பலவீனங்கள் பலவும் இருந்தாலும் இன்னும் பலம் நிறைந்த கரன்சியாகவும், பொருளாதார சூப்பர் பவராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.\nஅமேரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப அச்சகங்களுக்கு ஆர்டர் கொடுத்து வேண்டிய டாலர்களை பிரிண்ட் செய்தால் போதும் என்று தினம் தினம் அதிகமாகும் கடன் பிரச்சனைகளை சர்வ சாதரணமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது. 'சருகிக் கொண்டிருக்கும் அமேரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற வேலையை எந்தவித செலவுகளும் இல்லாமல் அமேரிக்காவின் டாலர் அச்சகங்கள் கவனித்துக் கொள்ளும்' என்று சொன்ன பென் எஸ். பெர்னான்கியின் வாசகங்களை இங்கே நினைவு கூர விரும்புகின்றேன். (Ben S. Bernanke, a Federal Reserve Board Governor, in his speech on November 21, 2002)\nஇப்படி தொடர்ந்து டாலர்களை அச்சடித்துக் கொண்டிருந்தால் டாலரின் மதிப்பு மிக விரைவில் சிதைந்துவிடும் என்று பெரும்பாலான பொருளாதார மேதைகளின் அறிவுருத்தலால் அமேரிக்க அரசாங்கம் பிரிண்டிங் பிரசுகளுக்கு ஆர்டர் கொடுப்பதை கடந்த ஒரு சில வருடங்களாக நிறுத்தி வைத்துவிட்டு டாலர்களை முடக்கி வைக்காமல் புழக்கங்களை அதிகப் படுத்த வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு டாலர் புழக்கங்கள் அதிகமாகிறதோ அவ்வளவிற்கு அமேரிக்காவின் பொருளாதாரம் பாதுகாப்பு பெற்றதாக இருக்கும் என்பதை சமயோசிதமாக சிந்தித்து முடிவெடுத்து, குறைந்த பட்சம் உலகில் சராசரி மூன்று டிரில்லியன் டாலர்களாவது பொது சந்தைகளில் வர்த்தக பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று தற்போது டாலர் புழக்கங்களை அதிகப் படுத்தி வருகிறது.\nஉலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மற்றும் நடத்திச் செல்லவும் கூடிய ஒரு முக்கியமான தலைமையிடத்தை அமேரிக்கா தக்க வைத்துக் கொள்ள அது எடுத்துக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் கொள்கைகளும் மற்றும் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக நடந்த கடினமான முயற்சிகளின் வெளிப்பாடுதான் இன்றைய அதன் உயர்விற்க்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இராணுவ மற்றும் அரசியல் உலகிலும் தன்னை இப்படி உயர்வித்துக் கொண்டதன் காரணாமக தற்போது அறிந்தோ அறியாமலோ ஒரு முக்கியமான breaking point நிலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இதன் முதல் பதிவிலே அமேரிக்கா உலக நாடுகளை வழி நடத்திச் செல்லக் கூடிய தகுதி கொண்ட நாடக நான் எழுதியது.\nஅதுமட்டுமல்லாமல் அமேரிக்கா தற்போது மற்ற நாடுகளிடம் தன்னை நீங்கள் எல்லோரும் பெரியண்ணனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிர்பந்ததை வைக்க விரும்பாமலே தன்னிச்சையாக முடிவெடுத்து உலக நாடுகள் எல்லாவற்றிர்க்கும் எது சிறந்தது, எது சரியானது, நீ எப்படி நடக்க வேண்டும், இன்னும் பத்து வருடத்திற்க்கு பிறகு உனக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும், நீ நான் சொல்வதைக் கேள், இல்லையென்றால் உன்னை ஒழித்துவிடுவேன் என்றெல்லாம் 'தாதா' வேலையை செய்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தன்னிகரற்று விளங்கிக் கொண்டிருக்கும் இந்த அமேரிக்காவின் பொருளாதார தலைமைக்கும், அதைத் தொடர்ந்து கிடைக்கும் அரசியல் மேம்பாட்டிற்க்கும், கொச்சையாக சொல்வதென்றால் அரசியல் தாதாகிரிக்கும் போட்டியே கிடையாதா\nஅடுத்தப் பதிவில் சந்திக்கலாம். (தொடரும்).\nசதாம் ஹுசைன் தாக்கப்பட்டதன் பின்னணி காரணமாக அவர் தன் நாட்டு வர்த்தகத்தை யூரோவுக்கு மாற்றியதையும் சொல்கிறார்கள். இது சரி என்றால், டாலரின் முக்கியத்துவத்தை யூரோவுக்கு தருவதன் மூலமாக ஏதும் சாதிக்கமுடியுமா\nஇந்த கல்ஃப் நாடுகள் பொது கரன்சி வைத்துக்கொண்டாலென்ன\nஇந்தியா போன்ற வளரும் நாடுகள் வல்லாதிக்கத்தை வீழ்த்த எப்படி செயல்பட முடியும் என்று கருதுகிறீர்கள்\nஈரோவிற்கு எதிரான டாலரின் போராட்டம் வெறும் சாதாரண விஷயம் அல்ல. இதைப்பற்றிய விரிவாக எனது அடுத்த பதிவில் எழுதி வருகிறேன்.\nஅமேரிக்காவின் பொருளாதாரம் தற்போது சரிவின் விளிம்பில் வந்து நிற்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசரமான நிலையில்தான் தற்போது அமேரிக்கா இருக்கிறது. சீனாவும் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் அமேரிக்கா நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சீனா இன்னும் 20 வருடங்களில் ஒரு வல்லரசாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிற்க்கு வாய்ப்புகள் இருந்தாலும் அரசியல் கொள்கைகளில் மாற்றம் வரும்வரை ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை.\nஅமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/16304", "date_download": "2018-08-21T13:41:06Z", "digest": "sha1:7DJV6KILBE7D3R5JCIWR4CMXK2DREK63", "length": 6103, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி - Thinakkural", "raw_content": "\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி\nLeftin August 9, 2018 பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள்;ஏஞ்சலினா ஜோலி2018-08-09T11:07:31+00:00 உலகம் No Comment\nஉலகின் மிக அழகான பெண்களின் ஒருவராக வர்ணிக்கப்படும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும் (43) அவரது கணவர் பிராட் பிட்டுக்கும் (54) கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியதால் கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.\nஏஞ்சலினா-பிராட் பிட் தம்பதிக்கு பெற்ற குழந்தைகள் 3 பேரும் வளர்ப்பு குழந்தைகள் மூன்று பேரும் உள்ள நிலையில், விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குழந்தைகளை பராமரிக்க பிராட் பிட் அர்த்தமுள்ள எந்த உதவியும் செய்யவில்லை என ஜோலி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதனால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என ஜோலி நீதிபதியிடம் கெஞ்சி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஏஞ்சலினாவும் ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டும் கடந்த 2004ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் 2014ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.\nஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோரை விவாகரத்து செய்த பின் ஏஞ்சலினா, பிட்டை திருமணம் செய்தார். அதேபோல் பிட்டுக்கு இது இரண்டாவது திருமணம். அவர் முதல் மனைவி ஜெனிபரை விவாகரத்து செய்துவிட்டு ஏஞ்சலினாவை திருமணம் செய்தார்.\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை பகுதியில் ரொக்கட் தாக்குதல்\nஎளிமையின் மறுஉருவமாக விளங்கும் இம்ரான் கான்\nஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்\nபேச்சுவார்த்தைக்குத் தயார்: இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற நியூசிலாந்து பெண் மந்திரி\n« இந்தோனேசியா – நிலநடுக்கத்தில் 131 பேர் பலி\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைரமுத்து மரியாதை »\nகிழக்கின் முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/coconut/", "date_download": "2018-08-21T13:22:57Z", "digest": "sha1:ADZGWFYDM6EPAXQGNVJIUMJY36ZRFN2H", "length": 2817, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "coconut | பசுமைகுடில்", "raw_content": "\nமுதிராமல் உதிரும் தேங்காய்க்கு குறும்பை என்று பெயர். வயிற்றுப் புண்,வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல்,தீப்புண்ணுக்கு குறும்பை மிக நல்ல மருந்து. விஷம் குடித்ததால் குடல் மற்றும் வயிற்றுப்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.socialsciencecollective.org/tag/capital/", "date_download": "2018-08-21T13:46:52Z", "digest": "sha1:FEB6GFR4E25EDPMREMTMOFTCDDB65QI6", "length": 10006, "nlines": 265, "source_domain": "www.socialsciencecollective.org", "title": "Capital Archives - The Social Science Collective", "raw_content": "\nமார்க்சியத்திற்காக தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்த தோழர் வே மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதியுள்ள ‘மூலதனமும், புதிய அர்வமும்’ என்ற கட்டுரை தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. எப்பொழுதெல்லாம் மூலதனம் நெருக்கடியைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் மார்க்ஸின் மூலதனம் வெகுமக்கள் தளத்தில் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அந்த முக்கியத்துவத்தை மடைமாற்றுவதற்கு முதலாளித்துவவாதிகள் செய்யும் தந்திரங்களை ஜே.டி பெர்னால் அம்பலப்படுத்தினார் என்பதில் இருந்து, தற்போது மூலதனத்திற்கு எழுந்திருக்கும் ஆர்வத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தோழர் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். மார்க்ஸிற்கு எதிராக முதலில் பிராய்டை நிறுத்தி உளவியல் ஆய்வு முறைதான்… Read more →\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/07/blog-post_607.html", "date_download": "2018-08-21T13:57:35Z", "digest": "sha1:5DGJF6KADWAYEPUQHAQXAOGSLYCHZD7K", "length": 10433, "nlines": 230, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும்", "raw_content": "\nபி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும்\nவருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு 100 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என\nமாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வாருக்கு எழுதியுள்ள கடித விவரம்:\nநாடு முழுவதும் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுக்கு 100 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்துக்கு பலமுறை விண்ணப்பித்துள்ளனர்.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய குழுவில் பலமுறை விவாதிக்கப்பட்டும் பல ஆண்டுகளாக இச்சிக்கல் நீடித்து வருகிறது.\nஓய்வூதிய சட்டம் 12ஏ பிரிவின்படி ஓய்வூதியம் பெறும் இவர்கள், கம்யூட்டட் ஊதியம் கோரும்போது அவர்களது அசல் ஓய்வூதிய தொகையில் 100 மாதங்களுக்கு மூன்றில் ஒரு பகுதி குறைத்துக் கொண்டே வழங்கப்படுகிறது.\nஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பெறுவதன் மூலம் கம்யூட்டட் ஊதியத்தை இந்த 100 மாத காலத்தில் திரும்பச் செலுத்தி விடுகின்றனர்.\nதிரும்ப அளிப்பதுதான் நியாயம்: இயற்கையாகவே, வருங்கால வைப்பு நிதி நிர்வாகம் 100 மாதத்துக்குப் பிறகு மொத்தமாகத் தரும் தொகையை, ஓய்வூதியம் பெறுபவர் 100 மாத தவணையில் திருப்பித் தந்துவிடுவதால், அவருடைய நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை அவருக்கு திரும்பவும் அளிக்க வேண்டும். ஆனால், ஓய்வூதியம் பெறுவோரின் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசு தனக்கு அதிகாரம் இல்லாமலேயே திரும்ப எடுத்துக் கொள்வதாகவே அமைகிறது.\nசட்டம் கூறவில்லை: வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் மூன்றில் ஒரு பகுதி ஓய்வூதியத் தொகையை, 100 மாதங்களுக்குப் பிறகு எடுத்துக் கொள்ள அனுமதி இல்லை. இந்தச் சட்டம் எந்தவொரு ஷரத்திலும் கம்யூட்டட் ஊதியப் பகுதியை திரும்ப வழங்க இயலாது என்று கூறவில்லை. இந்தச் சட்டம் இதுகுறித்து எதுவும் கூறாதநிலையில், வருங்கால வைப்புநிதி நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்கள், ஓய்வூதியர்களின் மூன்றில் ஒருபகுதி ஓய்வூதியத் தொகையைத் தராமல் எடுத்துக் கொள்வது நியாயமற்றது.\nஎனவே, வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத்தில் மாற்றப்பட்ட ஊதியம் பெற்று 100 மாதங்கள் முழுமையடைந்தவர்கள் அனைவருக்கும், முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்\nபிஞ்சு மழலையின் Cute English - .\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/2017-03-11-10-07-41", "date_download": "2018-08-21T13:41:35Z", "digest": "sha1:TD57NV7VXBX7KLSAMXZBSPUZ7MLJRHAB", "length": 28917, "nlines": 525, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "கிரக தோஷ நிவர்த்தி... - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபாலில் தயிர் இருப்பது கண்ணுக்குத் தெரியாத உண்மை. அதே தயிரில் வெண்ணெய்யும், வெண்ணெய்யில் நெய்யும் இருப்பதும் கண்ணுக்குப் புலப்படதா உண்மைகள். பாவத்தினுள்ளே புலப்படாத பலன்களும் உண்டு.\nஅருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்\nபொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட\nவரமழை உதவி செவ்வந்து யானையின்\nதிருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.\n”வேயுறு தோளிபங்கள் விடமுண்ட கண்டன்\nமிக நல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎன்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி\nசனி பாம்பு இரண்டும் உடனே\nஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல\nஅடியார் அவர்க்கு மிகவே” என்கிறது கோளறு பதிகம்.\n1.அ/மிகு. சிவசூரிய நாராயண சுவாமி திருக்கோவில், சூரியனார்கோயில்\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதன் திருக்கோவில், பாபநாசம்.\n3.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், கொளப்பாக்கம்.\n4.அ/மிகு. வைகுந்தநாதன் திருக்கோவில், ஸ்ரீவைகுண்டம்.\n5.அ/மிகு. பருதியப்பர் திருக்கோவில், பரிதிநியமம்.\n1.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், திங்களூர்.\n2.அ/மிகு. ஸ்ரீஅம்மைநாதர் திருக்கோவில், சேரன்மகாதேவி\n3.அ/மிகு. சோமநாதேஸ்வரர் திருக்கோவில், சோமங்கலம்.\n4.அ/மிகு. விஜயாசனபெருமாள் திருக்கோவில், திருவரகுணமங்கை.\n1.அ/மிகு. வைத்தீஸ்வரன் திருக்கோவில், புள்ளிருக்குவேளூர்.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர்.\n3.அ/மிகு. வைத்தீஸ்வரர் திருக்கோவில், பூந்தமல்லி.\n4.அ/மிகு. பாலசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், சிறுவாபுரி, சின்னம்பேடு.\n5.அ/மிகு. வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில், திருக்கோளூர்.\n1.அ/மிகு. சுவேதாரண்யேசுவரசுவாமி திருக்கோவில், திருவெண்காடு.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், தென்திருப்பேரை.\n3.அ/மிகு. திருமேனீஸ்வரர் திருக்கோவில், கோவூர்.\n4.அ/மிகு. காய்சினவேந்தன் திருக்கோவில், திருப்புளியங்குடி.\n1.அ/மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், திருஇரும்பூளை. ஆலங்குடி.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், முறப்பநாடு.\n3.அ/மிகு. திருவல்லீஸ்வரர் திருக்கோவில், பாடி-திருவலிதாயம், சென்னை.\n4.அ/மிகு. வசீஸ்டேஸ்வரர் திருக்கோவில், தென்குடித்திட்டை.\n5.அ/மிகு. ஆதிநாதன் திருக்கோவில், ஆழ்வார்திருநகரி.\n1.அ/மிகு. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில், ஓமாம்புலியூர்.\n2.அ/மிகு. ராமநாதேஸ்வரர் திருக்கோவில், போரூர்.\n1.அ/மிகு. அக்னீஸ்வரசுவாமி திருக்கோவில், கஞ்சனூர்.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், சேர்ந்தபூமங்கலம்.\n3.அ/மிகு. வெள்ளீஸ்வரர் திருக்கோவில், மாங்காடு.\n4.அ/மிகு. மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில், தென்திருப்பேரை.\n1.அ/மிகு. தர்ப்பாரண்யேவரசுவாமி திருக்கோவில், திருநள்ளாறு\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், திருவைகுண்டம்.\n3.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், பொழிச்சலூர்.\n4.அ/மிகு. சனீஸ்வரர் திருக்கோவில், கல்பட்டு, விழுப்புரம்.\n5.அ/மிகு. வாலீஸ்வரர் திருக்கோவில், கோலியனூர். விழுப்புரம்.\n6.அ/மிகு. சுயம்பு சனீஸ்வரர் திருக்கோவில், குச்சனூர்.\n7.அ/மிகு. வேங்கடவானன் திருக்கோவில், பெருங்குளம்.\n8.அ/மிகு. அக்னீசுவரர் திருக்கோவில் திருக்கொள்ளிக்காடு,\n9.அ/மிகு. மங்கள சனீசுவரர் திருக்கோவில், திருநாரையூர்.\n10. அ/மிகு. அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்(ஆதிபிரஹத் சனீசுவரர்), விளங்குளம்.\n1.அ/மிகு. நாகநாதசுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்.\n2.அ/மிகு. ஸ்ரீகோதபரமேஸ்வரன் திருக்கோவில், குன்னத்தூர்.\n3.அ/மிகு. வடநாகேஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர்.\n4.அ/மிகு. ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர்.\n5.அ/மிகு. தேவர்பிரான் திருக்கோவில், திருத்தொலைவில்லிமங்கலம்.\n6.அ/மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி திருக்கோவில், ஸ்ரீகாளஹஸ்தி\n1.அ/மிகு. நாகநாதசுவாமி திருக்கோவில், கீழப்பெரும்பள்ளம்.\n2.அ/மிகு. ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில், இராஜபதி.\n3.அ/மிகு. நீலகண்டேஸ்வரர் திருக்கோவில், கெருகம்பாக்கம்.\n4.அ/மிகு. ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில், ஸ்ரீபெரும்புதூர்.\n5.அ/மிகு. அரவிந்தலோசனன் திருக்கோவில், திருத்தொலைவில்லிமங்கலம்.\n6.அ/மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி திருக்கோவில், ஸ்ரீகாளஹஸ்தி\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://natramizhan.wordpress.com/2010/10/", "date_download": "2018-08-21T13:42:17Z", "digest": "sha1:2C6WKVW4P2BMYMBR5I4U66NOGPYX7KN2", "length": 26654, "nlines": 107, "source_domain": "natramizhan.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2010 | நற்றமிழன்", "raw_content": "\nஎன்னுள் சமூகம் பதிந்தவற்றின் சில மீள்பதிவுகள் இங்கே\nஒக்ரோபர், 2010 க்கான தொகுப்பு\nகாந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி\nகாந்தி என்ற ஒரு தனி மனிதன் எப்படி இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டார் இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர் இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர் என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன. கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன. கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி என்ற கேள்விக்கான பதிலை இலவச இணைப்பாக கிடைத்து.\nஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி. இதன் காரணமாக காந்தி ஆங்கிலேயர்களால் ஒரு பெரும் சக்தி என்று வர்ணிக்கப்பட்டார். இந்தியாவின் அடையாளமாவதற்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது என்பதே பதிலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செய்து வந்த பார்ப்பனர்கள், ஆங்கிலேயருக்கு காட்டியும் , கூட்டியும் கொடுத்ததால் மன்னர்களானவர்கள் (அவ்வாறு இல்லாதவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி), தொழிலதிபர்கள் இவர்களின் ஆதரவும் காந்திக்கு தேவையாக இருந்தது. காந்தி இவர்கள் அனைவரின் கருத்தியலுக்கும் ஒத்து போனார். இதனால் அன்றைய இந்தியாவின் அடையாளமாக காந்தி மெல்ல, மெல்ல உருமாற்றப்பட்டார்.\n எதை வைத்து நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் என நீங்கள் என்னை கேட்கலாம். இதற்கான சான்றுகள் பல எம்மிடம் உள்ளன. இங்கே சில முக்கியமானவற்றை கூறுகின்றேன். எந்த ஒரு ஏகாதிபத்தியத்திற்கும் “புரட்சி” “புரட்சியாளர்கள்” போன்ற சொற்களே ஒவ்வாமை(alergy) நோயை வரவழைத்துவிடும். புரட்சியையும், புரட்சியாளர்களையும் அழித்தொழிப்பதே ஏகாதிபத்தியங்களின் வேலை. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அந்த வேலையை இல்லாமல் பார்த்து கொண்டார் காந்தி. ஆம் இந்தியாவில் தோன்றிய புரட்சிகளையும், புரட்சியாளர்களையும் கருவறுப்பதையும் தனது முதல் வேலையாக பார்த்துக் கொண்டார் காந்தி. இந்த கருத்தியல் தான் காந்தியை ஆங்கிலேயர்கள் உயர வளரவிடுவதற்கு முக்கிய காரணமாகும். காந்தி இந்தியாவில் தோன்றிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளர்களை வேரறுப்பதில் ஆங்கிலேயர்களை விட மிக தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகத்சிங்கை தூக்கிலட காந்தி ஒப்புதல் அளித்தது மிக தெளிவாக காந்தி இர்வின் ஒப்பந்த பதிவுகளிலும், அவரின் சீடரான சீதாரமையா எழுதிய இந்திய தேசிய காங்கிரசு என்ற நூலிலும் உள்ளது. பகத்சிங்கின் தியாகத்தீ இந்தியாவில் பற்றி எரியாமல் இருப்பதற்காக அவர் பார்த்த பணிகள் எல்லாம் கராச்சி காங்கிரசு மாநாட்டு பதிவுகளில் உள்ளது. இதை எல்லாம் ஒரு படி மேலே போய் அரசுக்கு ஆலோசனை கூறும் “அரச குரு” பதவியில் காந்தி ஈடுபட்டதும் உண்டு. அது வெளி வந்ததும் பகத்சிங்கின் மூலமாக தான். இதோ..\nஅந்த கடிதத்தில், எமர்சன், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி…’ என்று தொடங்கும் அக்கடிதத்தில் அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக, சுபாஷ் சந்திர போஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அகூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், அதனை எப்படி ஒடுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார் காந்தி.\nசற்று நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள, அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னாலியன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகிறேன். எவ்வகையான காவல்துறை அணிவகுப்பும், தலையீடும் வேண்டாம் என்று நான் யோசனை கூறுகிறேன். கொந்தளிப்பான நிலை அங்கு இருக்கக்கூடும். அத்தகைய நிலை, கூட்டங்கள் போட்டு பேசுவதன் வாயிலாக வெளியேற அனுமதிப்பது நல்லதாக அமையும்.\n(பகத்சிங்கும் இந்திய விடுதலை என்ற நூலில் இது வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்)\nஇதற்கு நேரடியாக தங்கள் அடிமையும், ஆலோசகருமான எம்.கே.காந்தி என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இது போன்ற மக்கள் புரட்சிகளுக்கும், புரட்சியாளர்களையும் கருவறுக்கும் வேலையை காந்தி பல முறை செய்துள்ளார். சௌரி சௌரா மக்கள் போராட்டத்திற்கு பின்னர் இது போன்ற போராட்டங்கள் தவறு எனக்கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் (ஆனால் ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது என்பதை நினைவில் கொள்க). இதிலிருந்து காந்தி என்ற மக்கள் துரோகி ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் கருத்தியலிற்கும், ஆங்கிலேய அரசிற்கும் செய்த அடிமைப் பணிகள் செவ்வனே தெளிவாகின்றது. ஆங்கிலேய அரசை அண்டி பிழைத்ததால் அவர்களின் கருத்தியல் தான் அப்பொழுதிருந்த மன்னர்களிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்ததால் காந்தி இவர்களுக்காக தனியாக ஏதும் செய்ய தேவை இல்லாமல் போனது. அடுத்து பார்ப்பனர்களின் கருத்தியலிற்கு காந்தி ஒத்து போனதை பார்ப்போம்.\nபார்ப்பனிய கருத்தியலான “இந்து கட்டமைப்பை” காந்தி தான் இறக்கும் காலத்திற்கு முன்பு வரை மிக செவ்வனே காப்பற்றி வந்தார் என்பதை அவரின் கருத்தியலான “இராம இராச்சியம் அமைப்பேன்” என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இதனால் தான் காந்தி “இந்து கட்டமைப்பினால்” அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கேவலப்படுத்தும் விதமாக “ஹரிஜன்” என்று பெயரிட்டழைத்தார். புற்றுநோயை குணப்படுத்த நல்ல சட்டை போட்டால் போதும் என்ற தனது பரிசோதனையை காந்தி இங்கே செய்து பார்த்தார். பல சமூக சீர்திருத்தம் ஏற்ப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட கிருத்தவ மதமே கல்லறையில் கூட பிரித்து வைத்து வன்மம் காட்டி வருகின்றது ( http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170 ) என்றால் அன்றைய காலகட்ட இந்தியாவை பார்ப்பனர்கள் தான் ஆண்டார்கள்(97% அரசு பணிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்களே) என்று நினைக்கும் போதும், அவர்களை இந்து மதத்தின் கொள்கைகள் என்று கூறி எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்திருக்கும் என்பதை நீங்கள் இப்பொழுது எண்ணிகூட பார்க்கமுடியாது. அப்படி பட்ட காலகட்டத்தில் தான் காந்தி கூறினார், நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் கூறிய இந்து மத கொள்கைகள் படியே வாழ வேண்டும் என. காந்தியின் துரோகம் இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. “இந்து மத கட்டமைப்பு” தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் ஆளாக வந்து முட்டு கொடுத்தவர் காந்தி. இதே போன்ற “இந்து மத கட்டமைப்பு” தகர்க்க கூடியதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கிய பூனா இரட்டை வாக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாக்டர்.அம்பேத்காரை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் காந்தியை பார்ப்பனர்கள் தங்கள் தலையின் மீது தூக்கிவைத்து கொள்ள உதவின. ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மதவெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. இதிலிருந்து காந்தி பார்ப்பனீய கருத்தியலுக்கு ஒத்து போனார் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.\nஇதுவரை நாம் காந்தி கருத்தியல் ரீதியாக எப்படி ஆளும் அரசிற்கும், அப்போதைய ஆதிக்க வகுப்பிற்கும் துணைபோனார் என்பதை பார்த்தோம். இனி காந்தியுடைய சிறப்பு என்று கூறப்படும் தனிப்பட்ட குணநலன்களை பார்ப்போம்.\nகாந்தி ஒரு அகிம்சாவாதி. அகிம்சாவாதி என்றால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாதவர் என பொருள். இதன் படி காந்தி அகிம்சாவதியா என பார்ப்போம். பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் படையில் சேர்ந்து மக்களை கொல்வதற்கு ஊர், ஊராக சென்று ஆள் திரட்டிய தரகருமான காந்தி எப்படி அகிம்சாவதியாவார் என்பதே என் கேள்வி. இதிலிருந்து அவர் ஒரு அகிம்சாவதியும் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆறாவது அறிவான பகுத்தறிவை கொண்ட, படித்த முற்போக்கானவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய இளைய சமூகம் எப்படி காந்தியை அகிம்சாவதி எனக் கூறுகின்றார்கள் என எனக்கு கேள்வி எழும்புகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும், பொது புத்தியிலிருந்து விலகி இது போன்ற கட்டுகதைகளை உடைக்கவியலாத அவர்களின் கையாலாகாத தன்மையுமே காரணம். மேலும் எங்கே நம்மை சமூகம் தேசதுரோகியாக பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள். அகிம்சாவாதம் என்ற கருத்தியலில் தான் அவரின் எல்லா போராட்டங்களும் உருவானதால், அவை எல்லாம் இங்கே உடைப்பட்டு போய் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன.\nஅடுத்து நான் இங்கே வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு காந்தி பேராசை கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதே. ஆம் எங்கே நாம் இவ்வளவு நாள் சிரமப்பட்டு மக்களுக்கு குழிபறித்து உருவாக்கிய அந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் காந்திக்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் அவரே காங்கிரசில் சேர்த்த சுபாஷ் சந்திர போஸ் பின்னாளில் வளர்ந்து அவர் நிறுத்திய வேட்பாளரான பட்டாபி சீத்தாரமைய்யாவை தோற்கடித்த போது காந்தி தனது ஆதரவாளர்களையும் , மற்றவர்களையும் போஸ்ஸீன் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து சுபாஷ் சந்திர போஸே வெறுத்து காங்கிரசை விட்டுமட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேற தேவையான எல்லா அரசியலையும் செய்தார் காந்தி. இதே போல பகத்சிங்கின் புகழ் வழக்காடு மன்ற பிரச்சாரம் மூலமாக வேகமாக வளர்ந்து வந்த போது அதை கண்டு பயந்து அவரை கொல்வதற்கு ஆங்கிலேய அரசிற்கு எல்லா உதவிகளையும் அளித்தார்.\nஇப்படிப்பட்ட பச்சோந்தி கொள்கைகளையுடைய, சர்வாதிகாரியும், மக்கள் துரோகியுமான காந்தி முதலில் ஒரு மனிதனா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.\nமன்மோகன் சிங் – ஒரு பொருளாதார அடியாள் \nசேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்\nபா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் …..\nஇந்திய அரசு அமைதி பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-21T14:37:44Z", "digest": "sha1:OGTLYZPJUL2SFRYWDKD5GVSYVSWF4Z4D", "length": 12416, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "குர்து மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசலாடின் • அகமது சானி •ஜலால் தலபானி •சிவான் பேர்வர்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nபாரசிகம், துருக்கியம், அரபு ஆகியன இரண்டாம் மொழியாக பேசப்படுகிறது.\nசுவீடியம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியன அயல்நாடுகளில் குடியேறியவர்களினால் பேசப்படுகிறது.\nஅத்துடன் சில ஷியா, யாசிடிசம், யர்சான், யூதம், கிறிஸ்தவம்\n(தாலிஷ் · பலுச் · கிலாக் · பக்தியாரி · பாரசிகர்)\nகுர்து மக்கள் மத்திய ஆசியாவில் வசிக்கும் குர்தி மொழியைப் பேசும் ஒரு தொன்ம மக்கள் குழு. இவர்கள் வாழும் நிலப்பரப்பு குர்திஸ்தான் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக ஆக்க வேண்டும் என்று குர்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் ஏறத்தாழ 27-38 மில்லியன் குர்து மக்கள் வாழ்கின்றனர்.\n↑ கொண்டா தேர்வுகளின் படி 11.4 மில்லியன் , s.v. [1]\n↑ சிஐஏ தரவுநூல் 15 மில்லியன் எனக்கூறுகிறது\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kurdish people என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2017, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2018-08-21T14:39:05Z", "digest": "sha1:AJ26XLUF733O7SFFD3AFIPPHK3W76PK6", "length": 30562, "nlines": 377, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிசெரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகி.பி முதல் நூற்றாண்டுச் சிசெரோவின் சிலை, கேப்பிட்டோலினே அருங்காட்சியகம், உரோம் நகர்\nமன்ற உறுப்பினர், உரோமக் குடியரசு\nServing with கையசு அண்டோனியசு கைபிரிடா\nஉலூசியசு ஜூலியசு சீசர், கையசு மார்சியசு ஃபிகுலசு\nடெசிமசு ஜூனியசு சிலானசு, உலூசியசு இலிசினசு முரேனா\n(இக்கால ஆர்ப்பினோ, இலாசியோ, இத்தாலி)\n7 திசம்பர் கி.மு43 (அகவை 63)\nஅரசியலாளர், வழக்கறிஞர், சொற்பொழிவாளர், மெய்யியலாளர், கவிஞர்\nஅரசியல், சட்டம், மெய்யியல், யாப்பியல்\nமார்க்கசு துல்லியசு சிசெரோ (/ˈsɪsɪɹoʊ/; பாரம்பரிய இலத்தீன்: [ˈmaːr.kʊs ˈtʊl.li.ʊs ˈkɪ.kɛ.roː]; பண்டைக் கிரேக்கம்: Κικέρων Kikerōn, ஆங்கில வடிவம் துல்லி[1] /ˈtʌli/; 3 ஜனவரி கி.மு106 – 7 திசம்பர் கி.மு43) ஒரு உரோமானியரும் மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், மன்ற உறுப்பினரும், அரசியலமைப்பாளரும் ஆவார்.. இவர் உரோமானியச் செல்வந்தர் குலத்தின் செல்வ வளமிக்க நகரியக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் பரவலாக உரோமின் மாபெரும் சொற்பொழிவாளராகவும் உரைநடையாளராகவும் கருதப்பட்டவர்.[2][3]\nஇலத்தின மொழியின்பால் இவரது செல்வாக்கு செறிவானது. இலத்தீனில் மட்டுமன்றி பிற ஐரோப்பிய மொழிகளின் உரைநடையும் கூட பீன்னாட்களில் 19ஆம் நூற்றாண்டுவரை, ஒன்று இவரைப் பின்பற்றியது அல்லது எதிர்த்துச் செயல்பட்டது..[4] Michael Grant அவர்களின் கூற்றுப்படி,சிசெரோவைப் போல \"வேறு எம்மொழியின் அறிஞருமே இவ்வளவு தாக்கத்தை ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்திலும் எண்ணவோட்டத்திலும் செலுத்தியதில்லை\".[5] சிசெரோ கிரேக்க மெய்யியலின் முத்ன்மையான சிதனைப்பள்ளிகலையுமுரோமானியருக்கு அறிமுகப்படுத்தினர். மேலும் புதிய பல மெய்யியல் கலைச்சொற்களை இலத்தின மொழியில் உருவாகினார். காட்டாக humanitas, qualitas, quantitas, and essentia போன்ற கலைச்சொற்களை பயன்படுத்தி செவ்வியல் இலத்தீன் மொழியை வளப்படுத்தினார்.[6] இதனால் இவர் மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், மெய்யியலாளர் எனவெல்லாம் பன்முகத் தளங்களில் பெயர்பெற்றார்.\nஇவரது நூல்கள் ஐரோப்பியப் பண்பாட்டில் பெருந்தாக்கம் செலுத்தி வருபவையகும். உரோம வரலாற்றை எழுத இவரது நூல்கள் இன்றும் முதன்மையான சான்ருகளை அளித்து வருகின்றன. குறிப்பாக உரோமக் குடியரசு வீழ்ச்சியின் கடைசி காலம் குறித்து எழுத இவையே பெரிதும் பயன்படுகின்றன.[7]\nதொடக்க காலச் சால்சிடோனியன் தேவாலயம் சிசெரோவை உண்மையான பேகன் என அறிவித்தது. எனவே இவரது நூல்கள் காப்பாற்றுவதற்குரியன வாயின. பின்வந்த உரோமனிய எழுத்தாளர்கள் இவரது நூல்களில் இருந்து பரவலாக எடுத்தாண்டுள்ளனர் De Re Publica (குடியரசு பற்றி) , De Legibus (சட்டங்கள் பற்றி),ஆகிய நூல்களும் பிற நூல்களும் நிலவும் இத்தகைய பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைய வழக்கங்கள், பண்டைய சட்டம் சார்ந்து சிசெரோ உரிமைகள் குறித்த தொடக்க நிலைக் கருதல்களை மெல்ல விளித்துள்ளார். சிசெரோ நூலகளில் ஆறு கவிதை நூல்களும் கிடைத்துள்ளன. மேலும் எட்டு மெய்யியல் நூல்களும் கிடைத்துள்ளன. அவரது சொற்பொழிவுகளில் 88 உரைகள் பதிவாகியுள்ளன. ஆனால் 55 மட்டுமே அவற்றில் இப்போது கிடைக்கின்றன.\n(81 BC) Pro Quinctio (குவிண்டியசுவை ஆதரித்து)\n(80 BC) Pro Roscio Amerino ( அமெரியாவின்செக்சுடசு உரோசியசுவை ஆதரித்து )\n(70 BC) In Verrem I, II.1-5 (கையசு வெரசுவை, அல்லது வெரசுவின் சொற்பொழிவுகளை எதிர்த்து)\n(69 BC) Pro Fonteio ( ஃபொண்டியசுவை ஆதரித்து)\n(69 BC) Pro Caecina ( அவுலசு கேயசினா செவெரசு வை ஆதரித்து)\n(66 BC) Pro Cluentio ( அவுலசு கிலுயண்டியசுவை ஆதரித்து)\n(63 BC) De Lege Agraria contra Rullum I-III (உரூல்லசு முன்மொழிந்த வேளாண் சட்டத்தைப் பற்றி)\n(63 BC) In Catilinam I-IV (கேட்டிலினே சொற்பொழிவுகள் அல்லது கேட்டிலினேவை எதிர்த்து]]) Archived மார்ச் 2, 2005 at the Wayback Machine.\n(63 BC) Pro Rabirio Perduellionis Reo ( பழிதூற்றிய நீதிமன்றத்தில்,கையசு இராபிரியசுவை ஆதரித்து கையசு இராபிரியசு)\n(62 BC) Pro Sulla (ப்ப்ளியசு கார்னீலியசு சுல்லா வை ஆதரித்து)\n(62 BC) Pro Archia Poeta (கவிஞர் அவுலசு இலிசினியசு ஆர்ச்சியாசு வை ஆதரித்து)\n(59 BC) Pro Flacco (ஃபிலாக்கசுவை ஆதரித்து)\n(57 BC) Post reditum in senatu (நாடு மீண்ட்தும் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை)\n(57 BC) Post reditum ad Quirites (நாடுமீண்டதும் மக்களுக்கு ஆற்றிய உரை)\n(56 BC) In Vatinium (வாட்டினியசுவின் குறுக்கு உசாவல்)\n(56 BC) Pro Caelio (மார்க்கசு சயேலியசு உரூஃபசுவை அதரித்து): ஆங்கில மொழிபெயர்ப்பு\n(56 BC) Pro Balbo (கார்னீலியசு பார்பசுவை ஆதரித்து)\n(55 BC) In Pisonem (பிசோவை எதிர்த்து)\n(54 BC) Pro Rabirio Postumo (இராபிரியசு போசுதுமசுவை ஆதரித்து)\n(52 BC) Pro Milone (டிட்டசுஅன்னியசு மிலோ வை ஆதரித்து)\n(46 BC) Pro Marcello (மார்செல்லசு அழைப்பை ஆதரித்து Marcellus)\n(46 BC) Pro Ligario (குவிண்டசு இலிகாரியசு வை ஆதரித்து)\n(45 BC) Pro Deiotaro ( அரசர் டியோட்டரசு வை ஆதரித்து)\n(44-43 BC) Philippicae (மார்க் அந்தோனியை எதிர்த்த 14 கண்டன உரைகள், கண்டன உரைகள் I–XIV[8]\n(55 BC) De Oratore ad Quintum fratrem libri tres (சொற்பொழிவாளர், தன் உடன்பிறப்பு குவிண்டசுக்கான மூன்று நூல்கள்)\n BC) De Legibus (சட்டங்கள் பற்றி)\n(46 BC) Orator (சொற்பொழிவாளர்)\n(45 BC) Hortensius – மெய்யியலில் ஓர் உசாவல், இப்போது கிடைக்கவில்லை.\n(45 BC) Consolatio – இதே ஆண்டு ஃபிப்ரவரியில் இவரது மகன் துலியா இறந்த வருத்தம் தணிக்க எழுதியது; இதுவும் கூட கிடைக்கவில்லை\n(45 BC) Academica (கல்விக்கழக ஐயுறவியல் குறித்து)\n(45 BC) Tusculanae Disputationes (டசுகுலான் எதிர் விவாதங்கள்) – இறப்பு, வலி, மன இறுக்கமும் சார்ந்த உணர்ச்சிகளும், மகிழ்ச்சி ஆகிய உளவியல் நிலைகளைப் பற்றி 5 நூல்கள்\n(45 BC) De Natura Deorum (கடவுள்களின் தன்மை பற்றி)\nகிட்டதட்ட இவர் எழுதிய 900 கடிதங்களும் பிறர் இவருக்கு எழுதிய 100கடிதங்களும் கிடைத்துள்ளன.\n(68–43 BC) Epistulae ad Atticum (அட்டிகசுக்கு எழுதிய கடிதங்கள்)\n(59–54 BC) Epistulae ad Quintum Fratrem (உடன்பிறப்பு குவிண்டசுக்கு எழுதிய கடிதங்கள்)\n(43 BC) Epistulae ad Brutum (புரூட்டசுக்கு எழுதிய கடிதங்கள்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Marcus Tullius Cicero என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சிசெரோ\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: சிசெரோ\nஇலத்தீன் விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Cicero உள்ளது.\nWorks by சிசெரோ at திற நூலகம்\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Marcus Tullius Cicero இன் படைப்புகள்\nஆக்கங்கள் சிசெரோ இணைய ஆவணகத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2017, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/viswaroopam-part-2-will-be-released-this-year-kamal-169559.html", "date_download": "2018-08-21T14:24:39Z", "digest": "sha1:FN6HTNMXMG6MAGAEU7RSKKCT5JNBTVCU", "length": 9917, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2! - கமல் | Viswaroopam part 2 will be released this year - Kamal | இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2! - கமல் - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2\nஇன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் 2\nஇன்னும் சில மாதங்களிலேயே விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கமல் தெரிவித்துள்ளார்.\nவிஸ்வரூபம் படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் கங்கராஜ் பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கமல்ஹாஸன் கூறுகையில், \"விஸ்வரூபம் முதல் பாகத்துக்கு காத்திருந்தது போல, அடுத்த பாகத்துக்கு காத்திருக்கத் தேவையில்லை. சீக்கிரமே அந்தப் படம் வந்திவிடும்.\nஇந்தப் படத்தின் தலைப்பு 'மூ'. இதைப் பதிவு செய்துவிட்டேன். முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்தில் தொடர்வார்கள். ஓரிரு பாத்திரங்கள் புதிதாக வரலாம்,\" என்றார்.\nகமல் ஹாஸன் விஸ்வரூபம் படத்தை கடந்த மே மாதமே முடித்துவிட்டார். அதன் இரண்டாம் பாகத்தின் பெரும்பகுதியை முடித்து, கூடவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்து வைத்துள்ளார். இந்தப் படத்தை வெளியிட்ட கையோடு அவர் அமெரிக்காவுக்குப் போவதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஎனவே அவர் சொல்வது போல, இந்த இரண்டாம் பாகம் சீக்கிரமே வெளியாகக் கூடும். அதனால்தான் விளம்பரத்தை இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nஇந்த பிக் பாஸு, ஐஸ்வர்யாவை ஏன் காப்பாற்றுகிறார் தெரியுமா\nபேய் மாதிரி கத்திய மகத், ஐஸ்வர்யா: கொஞ்சமும் கண்டிக்காத கமல்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nஇனிமேல் பொன்னம்பலம் வெளியே இருந்தா என்ன, பிக் பாஸ் வீட்டில் இருந்தா என்ன\nஎப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2.. ஒரு விறு விறு விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/oneindia-tamil-readers-experience-with-rain-300086.html", "date_download": "2018-08-21T14:14:35Z", "digest": "sha1:WKXVIYX3U2NSSDEPAN64M36XBD43TXXI", "length": 12128, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழையால் எனக்கு மகிழ்ச்சியே.. வெளுத்து வாங்கிய மழை விதைத்த வாசகர்களின் சிந்தனைகள்! | Oneindia Tamil Readers experience with Rain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மழையால் எனக்கு மகிழ்ச்சியே.. வெளுத்து வாங்கிய மழை விதைத்த வாசகர்களின் சிந்தனைகள்\nமழையால் எனக்கு மகிழ்ச்சியே.. வெளுத்து வாங்கிய மழை விதைத்த வாசகர்களின் சிந்தனைகள்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nபக்ரீத்.. தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் வாழ்த்து\nஅடிதடி, கட்டப்பஞ்சாயத்து.. அடங்காத தேனாம்பேட்டை இளவரசி.. 340 சிறையில் அடைக்க உத்தரவு\nபத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, இனி நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுத முடியாது\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக நில உரிமையாளர்களை வெளியேற்ற ஹைகோர்ட் தடை.. காரணம் இதுதான்\n10,000 கோடி திட்டம்.. 5 மாவட்ட விளைநிலங்களை அழித்து.. சென்னை -சேலம் 8 வழிச்சாலை\nவடகிழக்கு பருவமழை நின்று வெளுக்குமா..இல்லை \"டல்\" அடிக்குமா\nசென்னை: வெளுத்து வாங்க தொடங்கியிருக்கும் வடகிழக்கு பருவமழை தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nவடகிழக்கு பருவமழையின் தாக்கம் தொடர்பாக நமது ஒன் இந்தியா வாசகர்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தோம். அவ்வளவுதான் அடித்து ஆடி வருகிறார்கள்.\nமழை இப்படியெல்லாம் கூட தாக்கத்தையும் சிந்தனைகளையும் விதைக்கிறதா என வியக்க வைக்கிறது. நமது வாசகர்களின் கருத்துகள்:\n\"மழை\"இது ஆசீர்வாதத்திற்கு அறிகுறி; இப்பொழுது பேய ஆரம்பித்திற்கும் இந்த மழையால் சந்தோஷமே.; நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இந்த மழை நம்மை உடனடியாக ஒரு மகிழ்ச்சியான மன நிலைக்கு மாற்றிவிடும். மழை சந்தோஷமே\nமகிழ்ச்சி, அனால், போக்குவரத்துக்கு நெரிசல் மற்றும் தேங்கிய நீர்......சொல்லமுடியாது.......\nமழை என்றாலே ஒரு மகிழ்சி , ஒரு குளிர்ச்சி , சிலிர்ப்பு , எல்லாம். ஒரு வாரம் பொறுத்துக்கொண்டால் அடுத்த ஒரு வருடம் நமக்கு தண்ணீர் தேவை ஈடு செய்யலாம் . மழை என்றாலே மகிழ்சி மட்டுமே .\nஇன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் நம் அடிப்படை தேவைக்கு நீர் மிகவும் அவசியம் என்பதை நாம் கற்று அறிந்த ஒன்றே... இந்த ஆண்டு பொழியும் மழை நீர் மூலம் நமது நிலத்தடி நீர் உயரும் என்றும் குடி நீர் பற்றாக்குறை தீரும் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.... இந்த ஆண்டு பொழியும் மழை நீர் மூலம் நமது நிலத்தடி நீர் உயரும் என்றும் குடி நீர் பற்றாக்குறை தீரும் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்....\nமகிழ்ச்சிதான்.., ஆனால் நேற்று பெய்த மழைக்கே ஆங்கங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகள் முழுவதும் தண்ணிர் நிரம்பியுள்ளது நிலத்தடிக்கு செல்லும் மழைநீர் அனைத்தும் வீணாக கால்வாய்க்கு சென்று கடலில் கலக்கிறது. எத்தனைமுறை பட்டாலும் அரசு திருந்துவதாக இல்ல மழைநீரை சேமிக்கப்போவதும் இல்லை. மீண்டும் தண்ணீருக்காக கர்நாடக, கேரளவிடமும் கையேந்திதான் நிற்கப்போகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nchennai rain tamilnadu northeast monsoon சென்னை மழை தமிழகம் வடகிழக்கு பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-will-contest-the-rk-nagar-poll-299888.html", "date_download": "2018-08-21T14:14:27Z", "digest": "sha1:5GW2243CHKYLIUQWLSSH5PGWMP6IPZT4", "length": 9266, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்! | TTV Dinakaran will contest in the RK Nagar by poll - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nநீங்க வேணா பாருங்க, அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் நான் நல்லா தமிழ் பேசுவேன்.. தோனி\nநெல்லை அருகே.. சாமி அருவியில் தோனி செம குளியல்.. திரண்டு வந்து வேடிக்கை பார்த்த ரசிகர்கள்\nகுற்றாலத்தில் துவங்கியது ஜில்லென்ற சாரல் திருவிழா.. குவியும் சுற்றுலா பயணிகள்\nநெல்லை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மறைவால் காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கு இதுவரை தேர்தல் அறிவிக்கப்படவில்லை.\nடிசம்பருக்குள் ஆர் கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளார்.\nநெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சிக்கிய ஆவணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nnellai ttv dinakaran rk nagar by poll contest நெல்லை டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தல் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221218189.86/wet/CC-MAIN-20180821132121-20180821152121-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=929&language=Tamil", "date_download": "2018-08-21T14:06:31Z", "digest": "sha1:TFP2R2MOY67FV57C25FVTS77NSCB4ZWK", "length": 28195, "nlines": 72, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nகணுக்கால் சுளுக்குகள் க கணுக்கால் சுளுக்குகள் Ankle Sprains Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-11-16T05:00:00Z Srijana Gautam, BSc, MBBS, MRCPCH, DTM&HJanine A. Flanagan HBArtsSc, MD, FRCPC 0 0 628.000000000000 Flat Content Health A-Z
கணுக்கால் பகுதியில் உள்ள எலும்புகளில் ஒட்டியிருக்கும் தசைநார்கள் இழுபடுதல் அல்லது கிழிந்து விடுதல் என்பதே கணுக்கால் சுளுக்காகும். கணுக்கால் சுளுக்கு அறிகுறிகள், சிகிச்சை மற்றும் கணுக்கால் சுளுக்கு தடுத்தல் பற்றி படித்தறியுங்கள்.
\nகணுக்கால் சுளுக்குகள் 929.000000000000 கணுக்கால் சுளுக்குகள் Ankle Sprains க Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-11-16T05:00:00Z Srijana Gautam, BSc, MBBS, MRCPCH, DTM&HJanine A. Flanagan HBArtsSc, MD, FRCPC 0 0 628.000000000000 Flat Content Health A-Zகணுக்கால் பகுதியில் உள்ள எலும்புகளில் ஒட்டியிருக்கும் தசைநார்கள் இழுபடுதல் அல்லது கிழிந்து விடுதல் என்பதே கணுக்கால் சுளுக்காகும். கணுக்கால் சுளுக்கு அறிகுறிகள், சிகிச்சை மற்றும் கணுக்கால் சுளுக்கு தடுத்தல் பற்றி படித்தறியுங்கள்.
கணுக்கால்ப் பகுதியில் உள்ள எலும்புகளில் ஒட்டியிருக்கும் தசைநார்கள் இழுபடுவதே கணுக்கால் சுளுக்காகும். தசைநார்கள் உங்கள் எலும்புகளுடன் ஒட்டி மூட்டுகளை அதன் இடத்தில் பிடித்திருக்கும், நீளும் தன்மையுள்ள பட்டிகளாகும். கணுக்கால் சுளுக்கு பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான காயமாகும்.
உங்கள் பிள்ளை போட்டி விளையாட்டின்போது தன் காலை முறுக்கி வைத்திருக்கக்கூடும் அல்லது இந்தக் காயம் ஏற்படும்வண்ணம் தன் காலை ஒரு வித்தியாசமான முறையில் கீழே வைத்திருக்ககூடும். பிள்ளைகளில் கணுக்கால் சுழுக்கு சாதாரணமானது.
கணுக்காற் சுளுக்கு பெரும்பாலும் கணுக்காலின் வெளிப்பகுதியிலேயே சம்விக்கும். அதாவது கணுக்கால் உட்பக்கமாக முறுக்கப்பட்டிருக்கும். கணுக்கால் வெளிப்பக்கமாகவும் முறுக்குப் படலாம்.
வீரியம் குறைந்த காயம் என்பது, சிறிதளவு வீக்கத்துடன் தசை நார்கள் சுளுக்கப்பட்டுக் காணப்படுவது. கடுமையான காயம் என்பது அதிகளவு வீக்கத்துடன் தசைநார்கள் கிழிந்து காணப்படுவதாகும்.
கீழ்க்காண்பனபற்றி உங்கள் பிள்ளை குறை சொல்லக்கூடும்:
வேறு அடையாளங்கள் கீழ்க்காண்பனவற்றை உட்படுத்தக்கூடும்:
கணுக்கால் உறுதியாகவும் எலும்பில் வலியுணர்வோ அல்லது புண் உணர்வோ இல்லாவிடில் சோதனைகள் தேவைப்படாது. மூட்டு உறுதியாக இல்லாவிடில் அல்லது எலும்பில் குறிப்பிடத்தக்க வலியுணர்வோ புண் உணர்வோ இருந்தால் X-ரே அல்லது அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்யப்படலாம்.
முதல் 24 மணி நேரங்களுக்கு கணுக்காலுக்கு ஓய்வு கொடுக்கவும்.
உங்கள் பிள்ளை விழித்திருக்கும்போது 3 நாட்களுக்கு ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒரு தடவை 30 நிமிடங்களுக்கு வீங்கிய அல்லது வலியுள்ள பகுதியில் ஐஸ் பக்கற் வைக்கவும்.
வீக்கத்தைக் குறைக்க உதவும் பொருட்டு மெத்தை ஒன்றைப் பயன்படுத்தி கணுக்காலை இருதயம் இருக்கும் மட்டத்தைவிட உயர்வாக்கவும்.
வலியை சமாளிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உங்கள் பிள்ளைக்கு ஐபியூபுரோஃபென் ( அட்வில், மோட்ரின், அல்லது வேறு பிரான்டுகள்) கொடுக்கும்படி உங்கள் வைத்தியர் அலோசனை வழங்கக்கூடும்.
தாங்கிப்பிடிக்கும் பன்டேஜுகள் அல்லது ஒரு எயார்காஸ்ட் (aircast) உபயோகிப்பது வீக்கத்தை அழுத்துவதோடு கணுக்கால் மேலும் காயமடைவதைத் தடுக்கும்.
நடப்பத்தில் சிரமம் இருந்தால் உங்கள் பிள்ளை ஊன்றுகோல்களை உபயோகிக்கலாம்.
உங்கள் பிள்ளையின் சுளுக்கைப் பொறுத்து, காயமேற்பட்ட 48 மணி நேரங்களுக்குள்ளாகவே அவள் கணுக்கால்ப் பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். இந்த பயிற்சிகள் கணுக்காலை பின் பக்கமாக, முன்பக்கமாக, உட்பக்கமாக, வெளிப்பக்கமாக அதன் முழு இயல்பான வீச்சினூடாக அசைப்பதை உட்படுத்தும். சமநிலையை மேம்படுத்த காயம்பட்ட காலில் நிற்பது அவசியம். அரம்பத்திலேயே இலகுவான பாரம்-தாங்குவதும் நடப்பதும் குணமடைவதற்கு உதவி செய்யும்.
காயம் ஆற 2 வாரங்களுக்கு மேலாகலாம், பூரண குணமடைதல் 10 தொடங்கி 12 வரையிலான வாரங்கள் எடுக்கலாம்.
48 மணி நேரங்களுக்குப் பிறகு நடப்பதில் மிகுந்த சிரமமும் தொடருகின்ற வலியும் இருந்தால் உங்கள் வைத்தியர் கணுக்காலை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். மேலதிகமான பயிற்சியும் உடலியக்க மருத்துவமும் (பிசியோ தெரப்பி) தேவைப்படலாம்.
கணுக்காலில் முழுமையான அசைவும் முழுமையான வலிமையும் வந்த பின்பு உங்கள் பிள்ளை மீண்டும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். உங்கள் பிள்ளையை காயம்பட்ட காலில் 5 தடவை துள்ள வைப்பதன் மூலம் கணுக்கால் வலிமையை நீங்கள் சோதிக்கலாம். உங்கள் பிள்ளை வலி அல்லது உறுதியின்மைக்கான அடையாளங்களைக் காட்டுகின்றதா என்பதைக் கவனியுங்கள். வளைந்து நெளிந்து செல்லும் விதத்தில் உங்கள் பிள்ளையால் சுலபமாக ஓட முடிகின்றதா எனப் பார்ப்பது இன்னொரு சோதனையாகும்.
அதி விரைவாக மீண்டும் விளையாட்டுகளில் ஈடுபடுவது கணுக்கால் மேலும் காயமடைவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். முற்று முழுமையான குணமடைதல் இல்லாமல், உங்கள் பிள்ளை வளர்ந்த பின்பு நீண்டகால பிரச்சனைகளை எதிர்நோக்கலாம். உடலை சூடேற்றும் பயிற்சிகள் மற்றும் வார் உள்ள தாங்கிப்பிடிக்கும் பொருட்களின்(lace-up support) உதவி என்பன கணுக்கால் மேலும் காயமடைவதைத் தடுக்கும். உயர்ந்த அளவு போட்டியுள்ள விளையாட்டுகளில் மீண்டும் ஈடுபடும் நோக்கமானது, விளையாட்டுடன் தொடர்புள்ள காயங்கள்பற்றிய அறிவுள்ள சுகநலப் பராமரிப்பாளர் ஒருவரினால் வழிநடத்தப்படலாம்.