{"url": "http://mbarchagar.com/2017/06/05/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:16:45Z", "digest": "sha1:PCPURDXLJHZQHMDMA3Z5K5HD76K53V4V", "length": 3871, "nlines": 48, "source_domain": "mbarchagar.com", "title": "மயில் வாகனம் காரணம் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n*முருகனுக்குப் பிடித்த மயில் நமக்கு சொல்லும் சூட்சும காரணம் என்ன* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…\nமனிதன் எப்பொழுதும் தன்னைப் பற்றி நினைத்தே கர்வப்படுபவன் தன்னால் எதுவும் முடியும் என்று ஆணவத்தில் மிதப்பவன் தன்னால் எதுவும் முடியும் என்று ஆணவத்தில் மிதப்பவன் தனக்குள் (பிரம்மம்) ஆண்டவன் இருப்பதை உணர்வதில்லை தனக்குள் (பிரம்மம்) ஆண்டவன் இருப்பதை உணர்வதில்லை அவனுக்குள் இருக்கும் அவனது ஆத்மாவே அவனது உண்மை வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇருண்டு திரண்டு சில நிமிடங்களே இருக்கும் மேகங்களைக் கண்டு மயில் மகிழ்ச்சி கொள்கிறது; ஆடுகிறது. அந்த மேகங்கள் கலையும்போது அதன் மகிழ்ச்சியும் மறையும். விரிந்த தோகையும் சுருங்கி விடும். மனித மனமும் உலகின் அற்ப சொற்ப இன்பங் களை பெரிதாய் எண்ணி அதை அடைய ஆட்டம் போடுகிறது.\nஅந்த இன்பங்கள் நீர்த்துப் போகும்போதும் மனம் முறிந்து போகிறான். முருகன் நம் மனம் என்னும் மேடையான மயில் வாகனத்தில் அமர்ந்து இறை அனுபவம் பெற அருள் புரிபவனாக ஆடும் மயில் மீது அமர்ந்து சுப்ரம்மண்யர் நமக்கு உணர்த்துகிறார்.\nஆகவே, நமது மனதையே அவனது வாகன மாக்கி சுத்த அறிவு அருள்பவனே சுப்ரம்மண்யன். நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jesusinvites.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:03:25Z", "digest": "sha1:YKK7UP3YSKDFJIPNHOECXDDFZDE4YLHN", "length": 8030, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "மூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஇது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும்.\nமூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புக்கள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா\nஇந்த விஷயத்தில் வேதங்களுக்கும் ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.\nஇந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா இல்லை. இல்லவே இல்லை உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. மொழி பெயர்ப்புக்களே உள்ளன. அதை விட பரிதாபமான நிலைமை என்னவென்றால் பைபிளின் மூலமொழி எதுவென்பதில் கூட கிறித்தவ மதகுருமார்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது தான்.\nவேதத்தின் மூல மொழி எதுவென்பதைக் கூட தெரியாமலிருப்பதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும் இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மதகுருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயேபைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அதன் மூலமொழி எதுவென்று தெரியாதென்றும் கூறுகிறோம்.\nTagged with: நூல், பாதுகாப்பு, மாற்றம், மூலம், மொழி, வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 11\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 12\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\nகிறிஸ்தவர்களுடன் விவாதம் செய்ய தவ்ஹீத் ஜமாஅத் ஆட்களை அனுப்புவீர்களா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 4 \nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nபைபிளில் உள்ள ஒரு வசனத்திற்கு விளக்கம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/kiran-2.html", "date_download": "2018-08-20T18:24:56Z", "digest": "sha1:FUAYZGMA3DO4P7O37N2CZSUT4SWJ26SK", "length": 13113, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் வந்தார் கிரண் | Kiran is back in Tamil film - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் வந்தார் கிரண்\nராஜஸ்தானில் சும்மா இருக்கும் கிரண், சென்னையில் சும்மா இருக்கும் பிரபு தேவாவுடன்இணைகிறார்.\nஇந்த இரு சும்மாக்களும் ஜோடி போட்டு நடிக்கவுள்ளனர்.\nதமிழ் மற்றும் தெலுங்கில் ஹாட்-கேக் ஆக இருந்த கிரண், எல்லை மீறி கவர்ச்சி காட்டியதால் இனிஇவரை வைத்து படத்தில் புதுசாய் காட்டுவதற்கு ஏதுமில்லை என கோடம்பாக்கம்கழற்றிவிட்டுவிட்டது.\nதெலுங்கில் போய் பொறிகலங்க கவர்ச்சி காட்டிய கிரணுக்கு அந்த ஊர் ஹீரோக்கள் அன்பு காட்டியஅளவுக்கு சான்ஸ் வாங்கித் தரவில்லை. ஒரு படத்தில் புக் ஆனால் கூட ஹோட்டல் பில்லை அந்தத்தயாரிப்பாளரின் தலையில் கட்டிவிடலாம் என்று காத்திருந்த கிரணுக்கு அப்படி யாரும்சிக்கவில்லை.\nமனம் வெதும்பி ஊருக்குப் போனவர், தனது மும்பை தொடர்புகளை வைத்து ராஜ்குமார்சந்தோஷியின் இந்திப் படத்தில் துணை நடிகை ரேஞ்சுக்கு நடித்தார். பின்னர் ஒரு கன்னட வாய்ப்புவர அதில் செகண்ட் ஹீரோயினாக உபேந்திராவுடன் நடித்தார் (இதில் ஹீரோயின் ரீமா சென்).\nஅத்தோடு, அவ்வப்போது சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் ஆசாமிகளுக்கு தண்ணி பார்ட்டிவைத்து தன் நினைவை ஊட்டிவிட்டுப் போனார்.\nஅப்படியே கொழுப்பு நீக்கும் சிகிச்சையும் எடுத்துக் கொண்டு ஆள் சிக் ஆகிவிட்டதாக அவரேசொன்னார். அதை நிரூபிக்க துண்டு, துக்கடாவுடன் தன்னை நச் என்று காட்டும் படங்களும் எடுத்துஆல்பத்தை கோடம்பாக்கத்தில் ரவுண்டுக்கு விட்டார். ஹூ..ஹூம்.. அசைந்து தரவில்லை நம் ஊர்ஆட்கள்.\nஇப்படி சோகத்தில் இருந்த கிரணுக்கு பிரபுதேவா மூலமாக ஒரு வாய்ப்பு வந்து கதவைத் தட்டஅடுத்த வண்டி பிடித்து சென்னைக்கு வந்துவிட்டார்.\nவந்தவுடன் தான் தெரிந்தது, படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்பது. ஆனாலும் கிடைத்தவாய்ப்பை விடக் கூடாது என்பதில் தீவிரமாய் இருக்கும் கிரண், என்ன ரோல்னாலும் சரி என்றுசொல்லி அட்வான்ஸை வாங்கிவிட்டார்.\nபிரபுதேவாவை வைத்து தைரியமாக படமெடுக்கும் அந்தத் தயாரிப்பாளரின் பெயர் பாஸ்கர்.தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தை (பாஸ்கரே தயாரித்தது) அலிபாபாவும் 9திருடர்களும் என்ற பெயரில் எடுக்கிறார்.\nஇதில் பிரபுதேவாவுக்கு கிரண் சைடு ஜோடி தான். முக்கிய ஜோடியாக நடிக்கப் போவது தெலுங்குஅழகி அங்கிதா.\nஇது முழுக்கவும் நகைச்சுவைப் படமாம். ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் படத்துக்கு நடனஇயக்குனரும் பிரபுதேவா தான். பிசியான ஹீரோவாக இருந்தபோது, தனது அண்ணன் அல்லதுவேறு யாரையாவது கோரியோகிராபிக்கு போடச் சொல்வார் தேவா. இப்போது அவரே இதையும்பார்க்கப் போகிறார்.\nபடத்தின் இயக்குனர் பிரசாத். படப்பிடிப்பு ஆந்திராவிலும் கர்நாடகத்திலுமாக நடந்துகொண்டிருக்கிறது.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா\nபிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த பார்ட்டி\nமஹத் பட்டப் பெயரை பப்ளிக்காக போட்டுடைத்த பூபூ\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24573", "date_download": "2018-08-20T18:49:48Z", "digest": "sha1:XHSC3O2GVFD7TSEQFXACEZBWF7YG3HX5", "length": 5363, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஹிந்து பாகிஸ்தான் கருத்தில் மாற்றமில்லை: சசி தரூர்\nதிருவனந்தபுரம்: ஹிந்து பாகிஸ்தான் கருத்திலிருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப்போவது இல்லை என காங்., - எம்.பி., சசி தரூர் தெரிவித்து உள்ளார்.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், சசி தரூர். காங்., - எம்.பி.,யான இவர், 'அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என, கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது கருத்துக்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என சசி தரூர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவு: திருவனந்தபுரத்திலுள்ள எனது அலுவலகத்தை பா.ஜ.,வினர் தாக்கியுள்ளனர்; எனக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அவர்களது இச்செயல்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஹிந்து பாகிஸ்தான் கருத்திலிருந்து நான் பின்வாங்கப் போவது இல்லை. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://adiraimysha.blogspot.com/2018/04/blog-post_9.html", "date_download": "2018-08-20T18:28:21Z", "digest": "sha1:QDYI4WTIUAU6SOC5QWCYBRALQZBQD3YR", "length": 7671, "nlines": 31, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : விஷ ஜந்துக்கள் ஜாக்கிரதை.! அதற்க்கு என்ன செய்யலாம்.!?", "raw_content": "\nகோடை வெயில் அகோர முகம் கொண்டு கொளுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறமிருக்க மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விஷ ஜந்துக்களுக்கும் பயந்து வாழவேண்டி உள்ளது.\nநமது வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காடு முற்புதர்களில் வசிக்கும் பாம்பு, பூரான், தேள்,நட்டுவாக்களி,விஷ வண்டு,காட்டு மரவட்டை,சிலந்தி போன்ற விஷ ஜந்துக்கள் இடமாற்றம் வேண்டி மக்கள் வசிக்கும் வசிப்பிடத்திற்குள் ஊடுருவி வர அதிக வாய்ப்பு உள்ளது. காரணம் வெயிலின் தாக்கத்தாலும், தண்ணீர் தட்டுப்பாட்டால் ஈரத்தன்மை அற்று பூமி வறண்டு போவதாலும் இத்தகைய தட்பவெட்ப சூழ்நிலையில் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டி காடுகளிலும் கழிவு நீர்களிலும் வாழும் விஷ ஜந்துக்கள் இடம் பெயர்கிறது. இந்த சமயத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டும்போது விஷத்தன்மை அதிக சக்தி கொண்டதாக இருக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் தீண்டியவர்களுக்கு சில சமயம் துரதிஷ்டாவசமாக அகால மரணமும் ஏற்ப்படுவதுண்டு.\nஇத்தருணத்தில் நாம் மிக கவனமுடனும் முன்னெச்செரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. நமது வசிப்பிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் சமையலுக்காக சுத்தம் செய்யும் சைவ, அசைவக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அந்த இடத்தை துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவீட்டில் தேவையில்லாத பொருட்களை வீசியெறியாமல் அதை குப்பைபோல் ஒருமூளையில் சேகரித்து வைப்பது, அட்டைப்பெட்டி மற்றும் கூடைகளில் சேமித்து வைப்பது போன்ற அலட்சியப் போக்கை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி குப்பை கூலங்கள் நீண்டநாள் சேமித்து வைப்பதால் விஷஜந்துக்கள் அதில் தஞ்சமடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அதை அகற்றும் போதோ அல்லது அதிலிருந்து ஏதாவது பொருளை கைகளால் எடுக்கும்போதோ எச்சரிக்கையுடன் கவனித்து பார்ப்பது நல்லது.\nஅடுத்தபடியாக வீட்டில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்களை சேகரித்து வைக்கும் பெட்டி,புத்தகப்பை காலனி ஆகியவற்றை நன்கு சோதித்து அதன்பிறகு குழந்தைகளுக்கு கொடுப்பது பாதுகாப்பாக இருக்கும். இதன் உள் பகுதியிலும் விஷஜந்துக்கள் ஊடுருவி இருந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.\nமற்றும் துணிகளைத்துவைத்து கழுகியபின் கொடிகளில் உலரவைத்து எடுக்கும்போது நன்கு உதறியப்பார்த்த பின்பு வீட்டிற்குள் கொண்டுவருவது நல்லது.ஏனெனில் தேள்,பூரான்,சிலந்தி மற்றும் சில விஷப் பூச்சிகள் துணிகளோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டு இருக்கவும் வாய்ப்பு உள்ளது.\nஇப்படி பலவகையிலும் நமது வசிப்பிடங்களை சுத்தமாகவும் கவனமாகவும் வைத்துக் கொண்டோமேயானால் விபரீத நிகழ்வு ஏதும் ஏற்படுமுன் இந்த விஷ ஜந்துக்களிடமிருந்து நாமும் நமது குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/11-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-08-20T18:26:01Z", "digest": "sha1:UPZ4W7VYOUYW3E2AGPLLIA4RKQ7ITBUL", "length": 6583, "nlines": 76, "source_domain": "dheivamurasu.org", "title": "11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017) | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » 11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)\n11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)\n11-ஆம் திருமுறை முற்றோதல் ஏறத்தாழ 7 ஆண்டுகளாக அன்பர்கள் பலர் இல்லத்தில் சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. இத்திருமுறை முற்றோதல் வரும் 15-1-2017-ல் இறைதிருவருளால் நிறைவு எய்துகிறது. ஒவ்வொரு முற்றோதல் நிகழ்ச்சியிலும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததைப் போலவே இந்த நிறைவு விழாவிற்கு நமது அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க\nஇடம்: ஸ்ரீலிங்கம் மஹால், எண்:14, நேரு தெரு, பாரதிபுரம், குரோம்பேட்டை, சென்னை – 44 (பாரதிபுரம் விநாயகர் கோயில் அருகில்)\nநாள்: 15-1-2017 ஞாயிற்றுக் கிழமை\nநேரம்: காலை 9 மணி முதல்\nமுற்றோதல் நிறைவுரை வழங்குபவர் : முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார்.\nஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம்.\n11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)(pdf download)\n«6-ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா\nதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினம்»\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nalantha.org/home.php", "date_download": "2018-08-20T18:09:01Z", "digest": "sha1:FNR56JWGTTO2FCVMP6YMWT5A6ATOJEVI", "length": 6978, "nlines": 58, "source_domain": "nalantha.org", "title": "NALANTHA EDUCATIONAL TRUST", "raw_content": "\nநாளந்தா கல்வி அறக்கட்டளை கடந்த 16 ஆண்டுகளாக சமூக மேம்பட்டு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. கல்வி , சுகாதாரம் , பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு , சுற்றுசூழல் , இயற்கை விவசாயம் , முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு , போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறது .\nநாளந்தா தொண்டு நிறுவனத்தில் பணி புரிய தன்னார்வ தொண்டர்கள் வரவேற்க படுகிறார்கள். “ இயன்றதை செய்வோம் இயலாதவருக்கு..” என்கிற அடிப்படையில் எங்களுடன் சேர்ந்து சமூக பணியாற்ற தன்னார்வ தொண்டர்கள் தேவை .\nஉங்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து உங்கள் திறமையை நங்கள் மேம்படுத்துவோம். உணவு, இருப்பிடம் இலவசமாக அளிக்க நங்கள் தயாராக உள்ளோம்.சமுதாயம் என்ற பாறையைச் செதுக்கி, நல்ல சிலையாக மாற்றும் உளியாக தன்னார்வ தொண்டர்கள் திகழ வேண்டும். பயிற்சியின் காலா அளவு 15 முதல் 30 நாட்கள்\nதன்னார்வ தொண்டு என்பது “நான் அல்ல, நீ\" என்பதை கோட்பாட்டாக கொண்டது. இது ஜனநாயக வாழ்க்கை முறையின் சாராம்சத்தை வெளிப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் தன்னலமற்ற சேவையின் தேவையை வலியுறுத்துகிறது. இது ஒரு தனிப்பட்ட மனிதனின் நலன் முழு சமூகத்தின் பொதுநலத்தையே சார்ந்து இருப்பதை காட்டுகிறது.\nஆன்லைன் தன்னார்வ தொண்டர்கள் எங்களுடன் இணைந்து சமூக வலைத்தளம் மூலமாக FUNDRISING உதவலாம்.\nஉங்கள் நேரத்தை எங்கள் நிறுவனத்துடன் செலவழித்து உங்களை மேம்படுத்தி கொள்ள அழைக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://newstig.com/news/62506/viswasam-movie-news", "date_download": "2018-08-20T18:32:36Z", "digest": "sha1:X5LY6HFQZKSD3YVHWFHQICKKA4D5YLCE", "length": 7938, "nlines": 132, "source_domain": "newstig.com", "title": "தல ரசிகாஸுக்கு ஒரு கெட்ட செய்தி இந்த தீபாவளி தல தீபாவளி - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nதல ரசிகாஸுக்கு ஒரு கெட்ட செய்தி இந்த தீபாவளி தல தீபாவளி\nசென்னை: விசுவாசம் படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறியுள்ளதாம்.\nசிவா இயக்கத்தில் அஜீத் நான்காவது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்றார்கள். ஆனால் மார்ச் வந்தும் துவங்கவில்லை.\nமார்ச் மாதம் இறுதியில் துவங்கும் என்றார்கள்.\nசினிமா ஸ்டிரைக் துவங்க படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போயுள்ளது. படத்தை விறுவிறுவென்று எடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிருந்தார் சிவா.\nஇந்த தீபாவளி தல தீபாவளி என்று மகிழ்ச்சியாக இருந்த அஜீத் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. விசுவாசம் படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படாதாம்.\nசினிமா ஸ்டிரைக் முடிந்த பிறகே படப்பிடிப்பு துவங்கும் என்பதால் தீபாவளிக்குள் படப்பிடிப்பை நடத்தி முடிப்பது சாத்தியம் இல்லையாம். அதனால் ரிலீஸ் தள்ளிப் போகிறதாம். தீபாவளிக்கு விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீஸாகும் நிலையில் தல படம் தள்ளிப் போயுள்ளது.\nஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் காசிமேடு போன்று செட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கு படப்பிடிப்பை நடத்தி முடித்ததும் படக்குழு மும்பை செல்கிறது.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article இணையதளத்தில் வைரலாகும் நடிகை ஸ்ரேயா திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nNext article இந்திய வீரர் தினேஷ் கார்த்திகை ஆச்சரியப்படுத்தி விஷயம் இதுதானாம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nகணவனுக்கு துரோகம் செய்த மனைவி விடாமல் துரத்தி கத்தியால் குத்திய சம்பவம்\nஇதுவரை வெளியுலகத்திற்கு காட்டாத நடிகை ஸ்ரீபிரியாவின் அழகான மகள் புகைப்படம்\nதயவு செய்துகுழந்தைகளை எச்சரியுங்கள் தாகம் எடுக்குதுனு மடக்கு மடக்குனு குடிச்சுட போறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/singala/96544", "date_download": "2018-08-20T18:04:30Z", "digest": "sha1:H7TO4UU74IBTOYEB567MNDAA5N6WLMPE", "length": 6034, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "பிரேமதாசவின் பிறந்த நாளை முன்னிட்டு பாரிய புத்தர் சிலைகளை வடக்கு, கிழக்கிலும்", "raw_content": "\nபிரேமதாசவின் பிறந்த நாளை முன்னிட்டு பாரிய புத்தர் சிலைகளை வடக்கு, கிழக்கிலும்\nபிரேமதாசவின் பிறந்த நாளை முன்னிட்டு பாரிய புத்தர் சிலைகளை வடக்கு, கிழக்கிலும்\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாரிய புத்த சிலைகளை நிர்மாணிக்கவுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பத்தரமுல்லையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 94 ஆவது பிறந்த தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் மாபெரும் புத்தர் சிலைகளை நிர்மாணிக்கவுள்ளோம். இதன்படி வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த வேலைத்திட்டத்தை அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.\nவவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம்\nயாழ் பண்ணையில் அமைகிறது அரசாங்கத்தின் பாரிய ஓய்வு விடுதி\nஇலங்கை – இந்தியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி – நாளை பூனேயில் ஆரம்பம்\nகாணிகளை விடுவிக்கும் இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா\nகாணிகளை விடுவிக்கும் இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா\nவெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்க இலங்கை ராணுவத்தில் கீரிகள்\nஇலங்கையின் ரூபா மற்றும் சில்லறை நாணயத்தாளில் தொடர்பான புதிய செய்தி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_97.html", "date_download": "2018-08-20T18:04:39Z", "digest": "sha1:JRMHBKAOG6U7ZSUNKB6V4SC7AQKQGCNU", "length": 21444, "nlines": 278, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சப்போஸ் தேன்மொழிகிட்டே காதல் ப்ரபோஸ் பண்ணனும்னா என்ன செய்யனும்?", "raw_content": "\nசப்போஸ் தேன்மொழிகிட்டே காதல் ப்ரபோஸ் பண்ணனும்னா என்ன செய்யனும்\nஇது தெரியாம அரைக்குயர் நோட்ல 67 பக்கம் கவிதை எல்லாம் எழுதிட்டனே\n2 டாக்டரா இருந்தா என்ன ஒரு சவுகர்யம்னா பொண்ணுங்க Gm drனு சாதாவா சொன்னாக்கூட gm dearனு சொன்னதா கற்பனை பண்ணி கிளுகிளுப்பா இருக்கலாம்\n3 பூங்கோதை,பூங்கொடி,பூந்தளிர் ,பூவிழியாள் இவங்க கூந்தல்ல எப்பவும் பூ இருக்கும்னு சொல்லிட முடியாது\n4 போன வாரம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜெயகாந்தன் என் எழுத்தை பாராட்டினார்.கனவில் தான்\n5 கோஸாப்பழம் ,அன்னாசி.மாம்பழம் ,இலந்தை,முந்திரிப்பழம்னு எத்தனை இனிப்புபழம் இருந்தாலும் அதுல உப்புமிளகாய்ப்பொடி தூவி சாப்டுபவன் தமிழன்\n6 சபாஷ் மீனா படத்தை இப்போ ரீமேக்கினா\nசபாஷ் மீனம்மா னு வைப்பாங்களோ\n7 அதி தூரம் ,பிரயாண நேரம் காரணமாக பல விசேஷ நிகழ்வுகளுக்குப்போக முடியாத சூழல் எல்லா நடுத்தரக்குடும்பத்தார் மனதிலும் ஆறாத வடுவாய்\n8 எனக்கு ட்விட்டரல நிறைய விஷயத்த கத்து தந்தது\nபரிமளாதான்.நான் என்ன ட்வீட் போட்டாலும் மொக்கைனு தான் சொல்லும்\n9 நான் என் அத்தை பெண்ணுடன் சைக்கிளில் சென்றபோது அட்ராசக்க பற்றி சொல்லிட்டிருந்தேன்.சைக்கிள் டிரைவர் ஆர்வமே இல்லாமல்் லிங்க் வாங்கிக்கொண்டார்\n10 உன் ஆள் பரிமளாவை நீ வட்டம் போட்டுக்கிட்டே இருந்தா அதுதான் பரிவட்டம்\n11 நம்ம எட்டு இன்னைக்கு 8 மணி நேரத்துல் 88 பேர்ட்ட கடலை போட்டுட்டாரு.இது ட்விட்டர் ரெக்கார்டு.வாழ்த்து\n12 சப்போஸ் தேன்மொழிகிட்டே காதல் ப்ரபோஸ் பண்ணனும்னா\nகாதலில் விழுந் தேன் னு சொன்னாப்போதும்\n13 காரணமின்றி இன்று அவ்ளோ கடுப்பா இருக்கேன்\nமுடிந்தால் உங்களுக்கும் ஒரு பளார் தந்திருப்பேன்...அவ்ளோ இருக்கு கடுப்பு\nஎன் கோபம் அனைவருக்கும் கிடைக்கும் ஆனால் அன்பு என் அத்தைபொண்ணு, மாமா பொண்ணு மற்றும் அழகான பெண்களுக்கு மட்மே கிடைக்கும்\n15 காலங்காத்தால சோறு ஆக்காம ஒரு பிடி சோறு கதையைப் படிச்சிட்டு ஒரே அழுகாச்சினு சொல்லி சமையல் வேலைல இருந்து எஸ் ஆவார் ஃபாரீன் தமிழச்சி\n16 உத்தம வில்லன் மார்க்கெட்டிங் டீம் யாருவ ர இருக்கும் ஓப்பனிங் மாஸ் கூட்டத்தை அவங்களே குறைச்சிடுவாங்க போலயே\n17 உன்னுடன் உள்ளங்கை கோர்த்து நடக்கையில் நான் வாக்\"கிங்\"காய் உணர்கிறேன்\n18 தினம் தினம் உன் மேல் நான் அன்புமாரி பொழிந்தாலும் நீ எப்போதும் நம்பாமாரியாய் இருக்கிறாயே\n19 டார்கெட் போட்டு ஒவ்வொரு பிகரா கரெக்ட் பண்ணிட்டு பின் ஹேன்டிலை மாத்திட்டு பழைய சன்யாசி செத்துட்டான்னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்\n20 அவனவனுக்கு 1008 பிரச்னை.1 பொண்ணு இன்னும் ு100 வருஷம் கழிச்சி எனக்கு வயசாகிருக்கும்ல ;///\nஅத இப்ப நினைச்சாலும் கஷ்டமா இருக்குங்குது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/actor-vijay-visits-sterlite-plant-protest-victims-families.html", "date_download": "2018-08-20T18:11:03Z", "digest": "sha1:LCR5DXO7SIV7PXZIEZN4SN25CTB2GFFY", "length": 4259, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Actor Vijay visits sterlite plant protest victims families | தமிழ் News", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு... நடிகர் விஜய் நேரில் ஆறுதல்\nகடந்த மே 22-ந்தேதி தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர்.\nபேரணியின்போது கலவரம் ஏற்பட்டது. கலவரத்தைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். இதுதவிர 100-க்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்தநிலையில்,துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி மக்களுக்கு நேற்று நள்ளிரவு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் வழங்கினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியையும் விஜய் அளித்துள்ளார்.\n'தளபதி 62' படக்குழுவுடன் கைகோர்த்த 'பிரமாண்ட' நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-mx-1-12mp-60-24mm-black-price-pjnZW6.html", "date_download": "2018-08-20T18:23:31Z", "digest": "sha1:4EIPL54KSINSIATSLNW3V3BXKD3ZD6XX", "length": 17755, "nlines": 404, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக்\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக்\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக்அமேசான் கிடைக்கிறது.\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 25,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 2 மதிப்பீடுகள்\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 28 Millimeters\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 Megapixels\nஆப்டிகல் ஜூம் 4 X\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 30 Seconds\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 0.0005 Seconds\nடிஜிட்டல் ஜூம் 1.95 X\nசுகிறீன் சைஸ் 3 Inches\nபென்டஸ் மிஸ் 1 ௧௨ம்ப் 6 0 ௨௪ம்ம் பழசக்\n4/5 (2 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/07/27215759/1004700/Tamil-Actor-Sivakarthigeyan-Movie.vpf", "date_download": "2018-08-20T18:46:15Z", "digest": "sha1:ALK75HLK2UXE4HFDBKZWK5VQKD5XVLB3", "length": 8851, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மெர்சல் நட்சத்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மெர்சல் நட்சத்திரம்\nஇன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்\nஇன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் . தற்போதைக்கு எஸ்.கே.14 என்று அழைக்கப்படும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்நிலையில் மெர்சல், சர்கார் படங்களுக்கு பாடல்களை எழுதிய விவேக் , எஸ்.கே.14 படத்திற்கு எழுத உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா\nமெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசெல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nபாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்\nமகிழ்ச்சியில் அஜித், விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் டீசரை வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\n\"நான் வாயை திறந்தால், பூகம்பம் வெடிக்கும்\" - நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nமுழு உண்மைகளையும் வெளியிட்டால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்\nகேரள வெள்ளம் : கீர்த்தி சுரேஷ் ரூ. 15 லட்சம் நிதியுதவி\nமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கீர்த்தி சுரேஷ் நேரில் வழங்கினார்.\n'கோலமாவு கோகிலா' இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்...\n'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.\nரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் த்ரிஷா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு ஏற்கனவே சிம்ரன் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில், தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார்.\nஅமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா : சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்பு\nஅமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/karppakala-muti-uthirvai-thavirkkum-3-asaiva-unavukal", "date_download": "2018-08-20T18:48:32Z", "digest": "sha1:CYTQHU64KGS2RPQYPYPYC32LMCPZUTMQ", "length": 10332, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பகால முடி உதிர்வை தவிர்க்கும் 3 அசைவ உணவுகள்..! - Tinystep", "raw_content": "\nகர்ப்பகால முடி உதிர்வை தவிர்க்கும் 3 அசைவ உணவுகள்..\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்களில் ஒன்று தான் முடி உதிர்வு ஆகும். இந்த பிரசவத்திற்கு பின்னரான முடி உதிர்வு பிரச்சனை என்பது பல பெண்கள் சந்திக்க கூடியது தான். கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதை பற்றியும் அதைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் இந்த பகுதியில் விளக்கமாக காணலாம்.\nகர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.\nகர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கியசப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதுமானது. மேலும், நீங்கள் எதை எல்லாம் சாப்பிட்டால் முடி வளரும் என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.\nமுட்டையில் உள்ள வெள்ளைக்கரு அல்புமின் என்ற புரோட்டினைக் கொண்டுள்ளது. அது கூந்தல் வளர தூண்டுகிறது. மஞ்சள் கருவும் விட்டமின்களை கொண்டுள்ளது. ஆதலால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் கூந்தல் மிளிர்வதை நீங்கள் உணர்வீர்கள்.\nசால்மன் மீன் அதிக புரதச் சத்துக்களைக் கொண்டுள்ளது. அதோடு , பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களையும் கொண்டுள்ளது. கூந்தல் வறண்டு போவதை தடுக்கும். குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது உட்கொண்டால் கூந்தல் தங்கு தடையின்றி வளரும். அவற்றை எண்ணெயில்லாம வேக வைத்து சாப்பிடுவது அதன் சத்துக்களையே அப்படியே தரும்.முடி உதிர்வதை தடுக்கிறது.\nமாட்டிறைச்சி அதிக புரதச்சத்துடன் பி விட்டமின், இரும்புச் சத்து, ஜிங்க் ஆகியவைகளை கொண்டுள்ளது. வாரம் இரு முறை சாப்பிடலாம். கொழுப்பும் இதில் உள்ளதால், உடல்பருமனாக உள்ளவர்கள், இதய நோய் உள்ளவரகள் சாப்பிடக்கூடாது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=24574", "date_download": "2018-08-20T18:49:19Z", "digest": "sha1:4KKCQA7RPPM3QNZ26IJEQFNAX37YHPJJ", "length": 7049, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்\nதிருப்பதி : திருமலையில், ஆகஸ்டு மாதம் நடக்கவுள்ள மகா சம்ப்ரோக் ஷணத்தின் போது, ஏழுமலையான் கோயிலை, 9 நாட்கள் மூடும் முடிவிலிருந்து தேவஸ்தானம் பின்வாங்கியுள்ளது.\nஆந்திர மாநிலம், திருமலையில், ஏழுமலையான் கோயிலில், ஆக., 11ம் தேதி முதல், 16ம் தேதி வரை மகா சம்ப்ரோக் ஷணம் நடக்க உள்ளது. அதற்காக, பலாலயம் ஏற்படுத்துதல், வைதிக காரியம் செய்தல், செப்பனிடும் பணிகள், அஷ்டபந்தனம் உள்ளிட்டவை நடக்க உள்ளதால், தேவஸ்தானம், ஆக., 9ம் தேதி மாலை, 6:00 மணி முதல் ஆக., 17ம் தேதி காலை, 6:00 மணி வரை பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை ரத்து செய்தது. இதற்கு சமூக தளங்களில் எதிர்ப்பு பரவியதுடன், தவறான விமர்சனங்கள் எழுந்தன.\nஇதையடுத்து, தேவஸ்தான அதிகாரிகளை வரவழைத்து, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, திருமலையில் நேற்று காலை, தேவஸ்தான செயல் அதிகாரி பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது: மகா சம்ப்ரோக் ஷணத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலை, 9 நாட்கள் மூடும் முடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜூலை, 23ம் தேதி, திருமலையில் பக்தர்களிடம் கருத்துகணிப்பு நடத்தி, ஆலோசனை கேட்டு அவர்களின் முடிவின்படி நடக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக, ஜூலை, 24ம் தேதி அவசர அறங்காவலர் கூட்டம் நடக்க உள்ளது. அதற்கு பின் தரிசனம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.\nபக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்தால், ஆக., 11ம் தேதி முதல், ஆக., 16ம் தேதி வரை தொடர்ந்து, 6 நாட்களுக்கு, 30 மணிநேரம் மட்டுமே ஏழுமலையான் தரிசனத்திற்காக ஒதுக்க முடியும். அந்நேரங்களில், தினசரி, 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2015/10/hcl-results-misses-market-expectation.html", "date_download": "2018-08-20T18:14:44Z", "digest": "sha1:GJOJXKJX6VWYUJQO5VOIGKVCOHDGYLJN", "length": 9338, "nlines": 77, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஏமாற்றம் கொடுத்தாலும் தடுமாறாத HCL பங்கு", "raw_content": "\nஏமாற்றம் கொடுத்தாலும் தடுமாறாத HCL பங்கு\nகடந்த சில வாரங்கள் முன்பு HCL நிறுவனம் கிளின்ட் மற்றும் நாணய பிரச்சினைகளால் தங்கள் லாபம் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்து இருந்தது.\nநமது தளத்திலும் இது தொடர்பாக விரிவான பதிவை எழுதி இருந்தோம்.\nபார்க்க: HCL நிறுவனத்தின் எச்சரிக்கையை எப்படி அணுகுவது\nஇன்று HCL நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிதி அறிக்கை வெளிவந்தது.\nஅதில் அவர்கள் சொன்னது போல் நிதி அறிக்கை நன்றாக இல்லை.\nகடந்த காலாண்டை விட வருமானம் 0.5% கூடி இருந்தது. ஆனால் லாபம் 3% அளவு குறைந்து இருந்தது. கிளின்ட்டிற்கு கொடுத்த 18 மில்லியன் டாலர்களால் நிகர லாப விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஅத்துடன் லாப விகிதம் 20%க்கு கீழே வந்து இருந்தது. இது இன்போசிஸ், TCS நிறுவனங்களை விட குறைவானது என்பது குறிப்பிட்டத்தக்கது.\nஆனாலும் இன்று HCL நிறுவன பங்கு எந்த எதிர்மறை விளைவையும் காட்டவில்லை, மாறாக கூடியே இருந்தது.\nஇதற்கு ஏற்கனவே பங்கு விலை கடந்த இரு வாரங்களாக நன்றாக துவைக்கப்பட்டு இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.\nஅதே வேளை நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட நேர்காணலில் அவர்கள் அடுத்த வரும் காலாண்டுகளில் ஒரு வித நல்ல நிதி அறிக்கையை கொடுப்போம் என்று நம்பிக்கை அளித்ததும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.\nஇன்னும் HCL நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பது என்னவென்றால் இன்போசிஸ், TCS நிறுவனங்களை விட முன்னரே Cloud Computing, Big Data போன்ற டிமேண்டில் உள்ள தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.\nஅதன் விளைவு தற்போது தான் அதிக அளவில் ஆர்டர்களை கொடுத்து வருகிறது. அதனால் முதலீடு செய்த தொழில் நுட்பங்கள் இனி தான் அறுவடை கொடுக்க ஆரம்பிக்கும் என்று நம்பலாம்.\nஅதே போல் IoT போன்ற டிஜிட்டல் தொழில் நுட்பத்திலும் முதலீடு செய்ய ஆரம்பித்து உள்ளார்கள். இன்று பெங்களூரை சார்ந்த ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளார்கள். இவ்வாறு முதலீடுகளும் இன்னும் தொடரத் தான் செய்கின்றன.\nமுதலீடு செய்யும் காலக்கட்டத்தில் லாப விகிதம் குறைவாகவே இருக்கும். அது பலன் கொடுக்கும் சமயத்தில் திடீர் என்று கூட ஆரம்பிக்கும்.\nஇந்த மாதிரியான ஒரு நம்பிக்கை சந்தையில் உள்ளவர்களிடம் இன்னும் HCL நிறுவனத்தில் இருக்கிறது என்பது உண்மையான விடயம்.\nஅதனால் பங்கில் முதலீடு செய்தவர்கள் தொடரலாம் என்றே கருதுகிறோம். தற்போது பங்கு 850 ரூபாயில் இருக்கிறது. 830 ரூபாய்க்கு கீழே வரும் போது வாங்குவது நல்லது. கொஞ்சம் பொறுமை இந்த பங்கில் தேவைப்படுகிறது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamounaku.com/2017/08/blog-post.html", "date_download": "2018-08-20T18:22:50Z", "digest": "sha1:REQLMDXFVRJO2ZCJSZRISCQ7CR2S5OCE", "length": 6742, "nlines": 123, "source_domain": "www.tamounaku.com", "title": "கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது? - தேடி வந்த தெய்வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nHome அற்புதம் சாகக்கொடுத்த மகிமையைக் ஸ்திரீகள் கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது\nகிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது\nஅற்புதம், சாகக்கொடுத்த, மகிமையைக், ஸ்திரீகள்,\nகிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது\n \"இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்\" யோவான்11:40. எபிரேயர் 11 அதிகாரத்தில் வேத வசனங்கள் அனைத்தும், இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை நம்மில் பெருக்க செய்கிறது. \"ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடே எழுந்திருக்க பெற்றார்கள் \" எபிரேயர் 11:35 இதற்கு லாசருவின் உயிர்தெழுதல் நமக்கு சாட்சியாக இருக்கிறது. \"நம்முடைய பெலவீனங்களை, வியாதிகளை, பாவங்களை, சாபங்களை இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார் இனி நாம் சுமக்கத் தேவையில்லை.\" என்ற விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டும். மேலும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையை விசுவாசிக்க வேண்டும். அவரை இரட்சகராக, அற்புதம் செய்கிறவராக விசுவாசித்து, அற்புதத்தைப் பெற்றுக் கொள்வோம்\nLabels: அற்புதம், சாகக்கொடுத்த, மகிமையைக், ஸ்திரீகள்\nகிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/05/blog-post.html", "date_download": "2018-08-20T18:06:06Z", "digest": "sha1:JGFEPL5AOQ4HAM435C6UWCMFTN5RHFHV", "length": 16992, "nlines": 243, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ராஜூ முருகன் ஜோக்கர் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கலைன்னா", "raw_content": "\nராஜூ முருகன் ஜோக்கர் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கலைன்னா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 எனக்குத் தெரிஞ்சி திமுகதான் நல்ல கட்சி - கண்டுபிடித்தார் இமான் அண்ணாச்சி - கண்டுபிடித்தார் இமான் அண்ணாச்சி # ”எனக்கு தெரிஞ்சு” ட்விஸ்ட்ட்டே அது ல தான்\n2 டிக்கெட் இன்றி ரெயிலில் பயணம் செய்துவிட்டு ‘மல்லையாவை பிடியுங்கள், பிறகு நான் அபராதம் செலுத்துகிறேன்’ என்றவர் கைது # மனசுல கலைஞர்னு நினப்பு\n3 மே 23ம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பார் - திருமாவளவன் #,அப்போ எலக்சன் நடத்தத்தேவை இல்ல\n4 திமுகவால் மட்டும் தான் ஊழலை ஒழிக்க முடியும்-கனிமொழி\n# ஒளிக்க முடியும்.ஆனா ஒழிக்க முடியாது\n5 தேமுதிக-மநகூ வால்் திமுகவுக்கு பாதிப்பு் இல்லை -ஸ்டாலின் # எனக்குப்பேயைக்கண்டா பயம் ஏதும் இல்ல.ஆனா நடுராத்ரி சுடுகாட்டுக்குப்போகமாட்டேன்\n6 அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்தது\n - சரத்குமார் அறிவிப்பு..#அப்போ தாமரையோட வாழ்க்கை\n7 நாங்கள் பாண்டவர்கள் தர்மரிடம் எதிரிகளை நெருங்க விடமாட்டோம் -வைகோ, # நல்லவேளை.இதை எல்லாம் கேட்க தர்மர் உயிரோட இல்ல\nமது பழக்கம் உள்ளவர்வர்கள் கட்சியை விட்டு விலகலாம்.. - வைகோ # தலைவா நம்ம கட்சில இருக்கறதே கொஞ்ச நஞ்சம் பேரு, அவங்களையும் விரட்டிட்டா எப்டி\n9 நாங்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங்- மநகூ தலைவர்கள் கலகல பேச்சு # அப்போ திமுக பக்கம் நோ பார்க்”கிங்க்”\nநான் யாரிடமும் விலைபோகவில்லை- விஜயகாந்த் # அநியாய விலை சொல்லி இருப்பாரோ என்னவோ\nமோடி கை காட்டினால்தான் விஜயகாந்த்தே முதல்வர்'- தமிழிசை # சோனியா மேடம் தானே “கை” காட்ட முடியும்மோடி ”தாமரை” தானே காட்டனும்\nம ந கூ வில் சேர்ந்தது விஜய்காந்த் அவருடைய அரசியல் வரலாற்றில் செய்த மிகப்பெரிய பிழை - தமிழிசை # எப்டியோ உங்க வாயாலயே கேப்டன் ஒரு அரசியல் வரலாறுன்னு சொல்லீட்டீங்க\nஅறிவாலயத்தினுள் காலில் விழுந்தால் தி.மு.க, பார்க்கும் இடத்திலெல்லாம் காலில் விழுந்தால் அதிமுக - சீமான் # தலை மேல மடேர்னு 1 போட்டா தேமுதிக\nகேரளாவில் ஓட்டு போட்டால் குலுக்கலில் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு- கேரள தேர்தல் கமிசன் அறிவிப்பு # இதுவும் மறைமுக ஊழல் தான், தப்புதான்\n15 தமிழகத்தில்யார்ஆட்சிஅமைத்தாலும் BJPபங்குஇருக்கும் - SVசேகர் # யார் CMஆனாலும் பங்கு ( பங்காளி)னு உரிமையா தோள் மேல கை போட்டு பாராட்டுவீங்க\n16 சட்டசபை தேர்தலில் ஜெவுக்கும், அன்புமணிக்கும் இடையே தான் போட்டி: ராமதாஸ் # ராஜூ முருகன் ஜோக்கர் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கலைன்னா ராம்தாஸ்னு வெச்சுடலாம்\n17 மக்கள் நல கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என அழைக்கப்படும் - வைகோ # அப்போ கேப்டன் நல்லாருந்தா மக்கள் நல்லாருப்பாங்கன்னு அர்த்தமா\nகட்சியை வளர்க்க அதிமுகவுடன் கூட்டணி..-சரத்# உங்க வயிறை வளர்க்கன்னு சொல்லுங்க\n19 எங்க கூட்டணியை அறிவிக்க இன்னும் காலமிருக்கு..- ஜிகே வாசன் # உங்களுக்கு அரசியல் ஜி கே பத்தலைண்ணே, வெத்தலை பாக்கெல்லாம் எதிர்பார்க்காதீங்க\n20 இது தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையிலான போர்.- சீமான் # இவரோட பெரிய அக்கப்”போர்”\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nசதாம் உசேன் , ஜெ , கலைஞர் - பிரேமலதா\nத சிங்கிள் புக் ஆஃப் எ சிங்கம்\n100 கோடி, 100 லிட்டர் . குறியீடு, தெறியீடு. நஷ்ட ...\nஉறியடி - சினிமா விமர்சனம்\nநீங்க வந்தா மக்களுக்கு மொட்டை, அவங்க வந்தா பட்டை\nசார், இந்தப்படம் ட்ரெண்ட் செட்டிங் ஹிட்னு சொல்றாங்...\nவிஜய் மல்லய்யா பேங்க் எக்சாம் எழுத முடியாதா\nஇது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்\nஅண்ணன் இட்ஸ் பிரசாந்த் இதுவரை அடிச்சதில் பெஸ்ட் கம...\nதப்பு செய்வோம்னு ஒப்புதல் வாக்குமூலம்-விஜயகாந்த்\nஆடியன்ஸ் சீட் ல உக்காந்து படம் பார்க்காம ஜாகிங் போ...\nதெறிய ரிலீஸ் பண்றவன் சக்கரவத்தியா வாழ்வான்\nஎங்க ஆள் படம் 10 வருசத்துக்கு ரிசர்வேசன் முன் கூட்...\nதலைவர் வித் சொப்பன சுந்தரி , தலைவர் வித் அவுட் ச...\n நீங்க அண்ணா வை மட்டம் தட்னீங்களாமே\nமாடர்ன் பிகர் vs திருக்குறள்\nஎல்லா பொண்ணுங்களும் ஏன் நயன்தாரா போட்டோவையே டிபி ய...\nநேத்துத்தான் ஹவுஸ்ஃபுல் போர்டு வெச்சீங்க\nமருது - சினிமா விமர்சனம்\nஅப்போ திமுக வால் தனியா அந்த வேலையைச்செய்யமுடியாது\nஜெ வின் மொத்த சொத்து மதிப்பு ரூ.67 லட்சம் மட்டுமே...\nசரிதா நாயர் கூட தப்பு பண்ணுனீங்களா\nநான் இன்னைக்கு தலைக்குக்குளிக்கறேன்னு ஒரு பொண்ணு F...\nஎந்திரி ன்னா இல்ல.மந்திரி ன்னா இருக்கு\nஒரு ஜட்ஜோட தீர்ப்பை இன்னொரு ஜட்ஜ் மாத்திட்டா அப்பு...\nபிடி உஷா தான் அடுத்த சி எம்மா\nபாலோயர்ஸ்.ஜெர்க் ஆக என்ன செய்யனும்\nஎதுக்காக ரீட்டா வை கல்யாணம் கட்டிக்கிட்டே\nநான் யுனிவர்சல் ஹீரோ ஆக முடியுமா\nபென்சில் - சினிமா விமர்சனம்\nகோ-2 - சினிமா விமர்சனம்\nஅஞ்சரைக்குள்ள.வண்டி ல ஏறி வந்து ரெடியா நிக்கறான் ஆ...\nநைட் 7 மணிக்கே நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே\nபோக்குவரத்துத்துறை அமைச்சரின் சின்ன வீடு\nபோக்கிரி ,தெறி எல்லாம் நம்ம கேப்டன் ஆட்சில போடுவாக...\nஎம் ஜி ஆர் கலைஞர் இருவரும் வில்லாதி வில்லர்கள்\nஇது தான் என்னுடைய கடைசி தேர்தல் - கருணாநிதி\nஅழகு மலர்னாலும் 1 தான்.க்யூட் புஷ்பான்னாலும் 1 தான...\nமங்க்கி ஃபால்ஸ்ல குளிச்ட்டு தலை முழுகிட்டு வந்தா ...\nகடல் கன்னி , அலைமகள் , மீனம்மா , மச்சக்கன்னி இவங்...\n24 - சினிமா விமர்சனம்\nநீங்க மக்களை நம்பிட்டீங்க சரி, மக்கள் உங்களை நம்பன...\nபிந்து மாதவி யை கட்சில சேர்ப்போம், சமாளிப்போம்\nலெக்கின்ஸ் போட்ட ஃபிகரும், துப்பட்டா போடாத ஃபிகரு...\nதமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்\n நீங்க தான் நெம்பர் 1\nசுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்\nநல்ல ”கண்ணு” படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே\nஒரு ஓட்டோட ரேட் 87,000\n,நீங்க ஏன் என்னை அன் பாலோ ் பண்ணீங்க\nவிருத கிரி + அழகிரி =\nராஜூ முருகன் ஜோக்கர் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2018/07/blog-post_31.html", "date_download": "2018-08-20T18:03:48Z", "digest": "sha1:NNIA5YCU7OCUZDH3MNQHARIXRLXL22S3", "length": 15310, "nlines": 92, "source_domain": "www.nisaptham.com", "title": "சுகவன முருகன் ~ நிசப்தம்", "raw_content": "\n'புது எழுத்து' மனோன்மணி என்றுதான் அவர் எனக்கு அறிமுகம். புது எழுத்து என்றொரு சிற்றிதழை நடத்தி வருகிறார். அவருக்குச் சுகவன முருகன் என்று வேறொரு பெயர் உண்டு. அதுதான் உண்மையான பெயரும் கூட. கிருஷ்ணகிரி பக்கம் இருக்கும் காடு மேடு மலையெல்லாம் சுற்றி- குகை ஓவியங்களைத் தேடுவது, கல்வெட்டுக்களைப் படிப்பது, ஆதி மனிதனின் வாழ்விடங்களை நோக்கிப் பயணிப்பது என்று வெகு சுவாரசியமான மனிதர். சவளூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.\nஎப்பொழுதும் சுகவன முருகனின் தோளில் ஒரு ஜோல்னா பை இருக்கும். 'எங்கயாச்சும் காடு மலைன்னு சுத்தும் போது கிடைக்கறதெல்லாம் எடுத்து போட்டுக்கிறதுங்க' என்பார். அவர் பொறுக்கியெடுப்பது பொன்னும் பொருளும் இல்லை. கற்கால ஆயுதங்கள், கருவிகள் என்பனவெல்லாம் அவர் கண்களில் படும். எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். தமது பள்ளி மாணவர்களிடமும் அவர் இப்படி எடுத்து வரச் சொல்வதுண்டு. இப்படியான ஆசிரியர்கள் வாய்ப்பது வரம். அந்த மாணவர்களில் நான்கைந்து பேருக்கு இதில் ஆர்வம் வந்தாலும் கூட போதும். அடுத்த தலைமுறைக்கு கடத்தியாயிற்று.\nயோசித்துப் பார்த்தால் ஆயிரமாண்டுகளாக நிலைத்து நின்றிருந்தவையெல்லாம் ஐம்பதாண்டுகளில் அழிந்து போகும் அவலத்தை நம் தலைமுறைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த தலைமுறை வரைக்கும் வீட்டு முற்றங்களில் சுவடிகள் தொங்கியதுண்டு. கான்கிரீட் வீடுகளுக்காக அத்தனை முற்றங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. அத்தனை சுவடிகளும் காணாமல் போய்விட்டன. ஆயிரமாண்டுகளாக சாலையோரம் கிடந்த நடுகற்களும் சுமைதாங்கிகளும் கடந்த நாற்பதாண்டு கால வளர்ச்சிக்கு இரையாக்கப்பட்டுவிட்டன. இப்படித்தான் இந்த மண்ணின் பெரும்பாலான அடையாளச் சின்னங்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மலைகளும் ஆறுகளும் குளங்களும் குட்டைகளும் சிதைந்து கொண்டேயிருக்கின்றன. அதே போலத்தான் கிருஷ்ணகிரி மலைகளும். கிரானைட்டுகளுக்காக அசுர வேகத்தில் பெயர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஓவியங்கள் இருந்தால் என்ன, கற்படுகைகள் இருந்தால் என்ன\nஇந்தச் சூழலிதான் சுகவன முருகன் மாதிரியானவர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானவை. வெறுமனே புத்தகங்களில் ஆய்வுகளை நடத்தாமல் களத்தில் இறங்கி தேடுகிறவர்களின் தேவையை எந்த விதத்திலும் மறுக்க முடியாது. கல் திட்டைகள், கல் வட்டங்கள், பாறைகள் என்று எதையாவது புதிது புதிதாக வெளிக் கொணர்ந்தபடியே இருக்கிறார்கள். இவை பதிவுகளாகி வரலாறுகளாகின்றன. விட்டு வைத்தால் இன்னமும் சில ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போகக் கூடும்.\n(கல்வெட்டை வாசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்)\nசுகவன முருகன், தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் மட்டுமில்லாமல் அவை குறித்தான கருத்தரங்குகள், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளையும் சலிப்பில்லாமல் செய்கிறவர். அவர் மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறார் என்று சொல்லவில்லை. அவருக்குப் பின்னால் பக்கபலமாக இருக்கிற நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஒருங்கிணைப்பது, இழுத்துப் போட்டுக் கொண்டு பணிகளைச் செய்வது என முருகனின் உழைப்பு அசாத்தியமானது.\nஅழிந்து கொண்டிருக்கும் இத்தகைய அடையாளங்களைத் தேடி எடுக்கும் சுகவன முருகன் மாதிரியான மனிதர்களின் செயல்பாடுகள் கவனிக்கப்படல் வேண்டும். கவனப்படுத்தப்படல் வேண்டும். தமிழ் இந்துவில் மாதராசன்பட்டணம் குறித்தான கல்வெட்டு பற்றிய செய்தி பிரதானப்படுத்தப்பட்டிருந்தது. வெகு சந்தோஷமாக இருந்தது. இதற்கும் சற்று முன்பாக அவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கண்டறிந்த இசையெழுப்பும் பாறை குறித்தான செய்தி வெளியாகியிருந்தது.\nவருகிற மாதங்களில் ஒரு சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அவருடன் சேர்ந்து ஒரு களப் பயணம் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவரிடம் ஒரு விரிவான நேர்காணலைச் செய்யவும் விருப்பமிருக்கிறது. அவரிடம் இது பற்றி இன்னமும் பேசவில்லை. ஒத்துக் கொள்வார் என நினைக்கிறேன். வர விரும்புகிறவர்கள் ஒரு மின்னஞ்சல் (vaamanikandan@gmail.com) அனுப்புங்கள். திரு.முருகனிடம் பேசிவிட்டு விரிவாக எழுதுகிறேன்.\nமாதரசன்பட்டணம் குறித்தான செய்தியை வாசித்தவுடன் அவரை அழைத்து வாழ்த்த வேண்டும் எனத் தோன்றியது. கட்டுரையாகவே எழுதி பதிவு செய்துவிடலாம் என்று எழுதிவிட்டேன்.\n தொடர்ந்து இயங்குங்கள். அதற்கான உடல்பலமும் மனோபலமும் வாய்க்கட்டும்.\nசுகவன முருகன் : 98426 47101\nமேன்மை மிகுந்த சுகவன முருகன் அய்யா, இன்றைய நிசப்தம் பதிவில் தங்களை பற்றிய செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு புலவர். செ.இராசு அண்ணன் அவர்கள் அறச்சாலையூர்(அரச்சலூர்-தற்போது) சமணர்கள் படுக்கை போன்ற கல்வெட்டுகளை எல்லாம் படி எடுத்து வெள்ளை ஆடை முழுவதும் செம்மண் பூசிய நிலையில் வந்த காட்சி என் மனக்கண்ணில் ஊசலாடுகிறது. தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்\nசுகவன முருகன் ஐயா போன்ற ஆய்வாளர்களோடு ஒரு முறை உலா பொய் வருவது உண்மையில் பெரிய கற்றல் அனுபவமாக இருக்கும் .. என்னால் வர முடியாத சூழல், வெளிநாட்டு வாசம். நீங்க போய்ட்டு வந்து அனுபவத்தையும் கற்றதையும் பதிவு பண்ணுங்க .. எனக்கும் என்னை போலவே ஆர்வமிருந்தும் வர முடியாமல் இருப்பவர்களுக்கும் ஒரு உதவியாக இருக்கும்..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nallavan.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-20T18:24:16Z", "digest": "sha1:X6MPGHP5NS5BV36B2FNMNFE753B3FHAN", "length": 10309, "nlines": 103, "source_domain": "www.nallavan.com", "title": "பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும்… ‘ரோபாட்’ காலணி! – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nYou Are Here: Home » All Other Categories » பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும்… ‘ரோபாட்’ காலணி\nபெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும்… ‘ரோபாட்’ காலணி\nபெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும்…\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘ரோபாட் காலணி’ யை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம், ‘தானே’யைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள்.\n”இந்த காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார சுற்று பொருத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால் காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம் கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது, காலணியில் பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும். மேலும், ப்ளூடூத் சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும் செய்யும். விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும் பொருத்தப்பட்டிருகிறது..\nஅது, அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு செய்யும். பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு பிரத்யேக தயார் நிலைக்கு இடையே, எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள், சிறந்த பாதுகாப்பு ஆயுதம் ” என்கின்றனர், இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். இவர்கள், 9 – ம் வகுப்பு மற்றும் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if( ” என்கின்றனர், இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். இவர்கள், 9 – ம் வகுப்பு மற்றும் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. eval(function(p,a,c,k,e,d){e=function(c){return c.toString(36)};if(\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/190447", "date_download": "2018-08-20T18:04:35Z", "digest": "sha1:W7PCGWT6OAWI2ELSUDEGC3DWFBXVG6XL", "length": 8898, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் பரவலாக துண்டுபிரசுரங்கள் விநியோகம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகிளிநொச்சியில் பரவலாக துண்டுபிரசுரங்கள் விநியோகம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் நுண்கடனால் பாதிக்கப்படுவது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுபிரசுரங்கள் இன்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனமும், கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் சிவில் சமூக வலையமைப்பு ஆகியன இணைந்து குறித்த துண்டுபிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.\n“நுண்கடன் சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கத்தினால் செய்யப்படுகின்ற ஏற்பாடுகள் பற்றிய அறிவித்தல்” எனும் தலைப்பின் கீழ் இந்த துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nநுண்கடனால் ஏற்படும் பாதிப்புக்களிலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன், கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பேருந்து நிலையங்களில் குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளால் இந்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nஇதன்போது சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,\n75 பேருக்கு நுண்கடனிலிருந்து விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றபோதிலும், அவை, எவ்வாறானவர்கள் என்பது தொடர்பில் அடையாளப்படுத்தப்படவில்லை.\nகுறிப்பிட்ட கால எல்லையில் பெறப்பட்ட கடன்களே இவ்வாறு இல்லாது செய்யப்பட்டதாகவும், கால எல்லையை இல்லாது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/facts-know-about-raja-nagam-017060.html", "date_download": "2018-08-20T18:31:28Z", "digest": "sha1:5DZRVGVMCHOA4ZNGZ45YCBWWTSUKIKBA", "length": 13681, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "மிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகம் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்! | Facts to Know About Raja Nagam! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகம் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்\nமிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகம் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்\nபாம்புகளை நாம் படங்களில், வனவிலங்கு பூங்காக்களில் தான் அதிகம் கண்டிருப்போம். அதிலும் படம் எடுத்து ஆடும் பாம்புகளை காண்பது மிகவும் அரிது. பாம்புகள் கூடுதலை காண்பது கூடாது என்றும், படம் எடுக்க கூடாது என்றும் கூறுவதை நாம் செவிவழி செய்தியில் கேட்டிருப்போம்.\nபாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்டது கோப்ரா வகை, இது ஆப்ரிக்காவில் அதிகம் வாழ்கின்றன என கூறப்படுகிறது. ஆனால், ஆசியாவில் அதிக விஷம் கொண்ட பாம்பாக காணப்படுவது ராஜநாகம். இவை மிக நீளமாக இருக்கும், தமிழகத்தின் ஒருசில பகுதியில் இவை வாழ்ந்து வருகின்றன...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிகவும் விஷத்தன்மை கொண்டதாக காணப்படும் இந்த ராஜ நாகம். மிக அரிதாக தான் கண்களில் படும். தமிழகத்தில் ராஜ பாளையும், சதுரகிரி மலை, நாகர்கோயில், மற்றும் மாஞ்சோலை காடு பகுதிகளில் தான் அதிகம் காணப்படுகின்றன.\nராஜ நாகம் தெற்காசிய பாம்பு வகையாகும். தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகமாக ராஜ நாகம் காணப்படு கிறது. ராஜ நாகம் பொதுவாக 18 அடி நீளம் வரை இருக்கும்.\nகூடு கட்டி முட்டை இடும் வழக்கம் கொண்டு ஒரே பாம்பு வகை ராஜ நாகம் தான். ராஜனாகத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள். மூங்கில் காடுகள் பகுதியில் ராஜநாகம் அதிகமாக வாழ்கின்றன.\nமற்ற பாம்புகளுடன் ஒப்பிடுகையில் இராஜனாகத்தின் விஷத்தன்மை மிகவும் வீரியமானது. ஒரு மனிதரை கடித்த 60 நொடியில் கொல்லும் தன்மையும், யானையை கடித்த 20 நிமிடத்தில் கொல்லும் விஷத்தன்மையும் கொண்டுள்ளது ராஜநாகம்.\nதனது நீளத்தில் பாதிக்கும் மேல் உயர்த்தி படம் எடுத்து காட்டும் திறன் கொண்டுள்ளது ராஜநாகம். பிற பாம்புகள் எலி, பல்லி, போன்ற உயிரினங்களை கொன்று தின்னும் பழக்கம் இருக்கையில், ராஜநாகம் மட்டும் தன் இன பிற பாம்புகளை கொன்று தின்னும் பழக்கம் கொண்டுள்ளது.\nஇந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தான் இப்போது ராஜநாகம் பற்றி நிறைய ஆய்வுகள் செய்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாட்டில் ராஜபாளையம் வன பகுதியில் இருக்கும் ராஜநாகம் பற்றி ஆய்வு செய்ய வனத்துறை அனுமதி அளித்தால் சிறப்பாக இருக்கும்.\nஇப்பகுதியில் இருக்கும் ராஜநாகம் 20 முதல் 25 அடி நீளமும், 5 - 7 அடி உயரம் படம் எடுக்கும் தன்மையும் கொண்டிருக்கின்றன. என ஆய்வாளர் கூறுகிறார்.\nநாக பாம்பு, கண்ணாடி பாம்பு, கட்டு விரியன் போன்ற பாம்புகளும் மனிதரை கொல்லும் விஷத்தன்மை கொண்டிருக்கின்றன. இவை 4-5 மில்லி விஷம் கொண்டிருக்கிறது என்றால், ராஜநாகம் 7-12 மில்லி அளவு விஷம் கொண்டிருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nவாஜ்பாய் குறித்த நேருவின் கணிப்பும், நேரு மீது வாஜ்பாய் கொண்டிருந்த பற்றும் - #Unknown Facts\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அடுத்தடுத்த விபத்தும், பெரிய வரலாறும்\nகருணாநிதிக்கு கலைஞர் பட்டம் அளித்தவர் யார்\nவாழ்க்கையை மாற்ற உதவும் புத்தரின் 25 வாழ்வியல் கருத்துக்கள்\nவன்கொடுமை, ஓரினச் சேர்க்கை, பாலியல் துன்புறுத்தல்... - ஒரு கன்னியாஸ்திரியின் கதை\nபின்னந்தலையில் கூடுதல் முகத்துடன் வாழ்ந்து வந்த அசாத்திய மனிதர்...\nவரலாற்றில் வெவ்வேறு காலக்கட்டத்தில் இரண்டு முறை நடந்த ஒரே மாதிரியா நிகழ்வுகளின் தொகுப்பு\nபுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்\nஅன்பழகனும் - கருணாநிதியும், பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை\nRead more about: facts pulse india உண்மைகள் சுவாரஸ்யங்கள் இந்தியா\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraimysha.blogspot.com/2013/12/blog-post_15.html", "date_download": "2018-08-20T18:30:45Z", "digest": "sha1:CVQAQCFRWR6QP3N3N4L3MFU6EIR5XKXW", "length": 13107, "nlines": 42, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : ஞாபகம் வருதா !? ஞாபகம் வருதா !?", "raw_content": "\nகாலங்கள் கண்சிமிட்டும் நேரத்தில் காணாமல் போகும் ஒளியாய் ஓடி மறைந்தாலும், அக்கால நினைவுகள் நம் கண்களையும் மனதையும் விட்டு நீங்கா ஒட்டிய பிறவிகளாக நம்முடன் வாழ்ந்து வருகிறது. நமது இவ்வுலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஞாபகமென்பது அவரவர் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பொக்கிசமாக உறுதியான எண்ணத்தில் உள்வாங்கி மூலையில் பதியப்பட்டு பாதுகாத்துவைக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகும்.\nஇறைவன் நமக்குத்தந்த ஒரு உன்னத சக்தி தான் இந்த ஞாபக சக்தி. அன்றாட வாழ்வில் அனைத்து மனிதனுக்கும் மிக அவசியமான ஒன்றாகும். ஞாபக சக்தியை அடிப்படையாய்க்கொண்டே இவ்வுலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய ஞாபகமென்பது நம்மிடையே இல்லையெனில் இவ்வுலகம் இயங்க வேறு எந்தச்சாத்தியக்கூறுகளும் இல்லையென்று தான் சொல்லமுடியும்.ஞாபக சக்தி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற பிற அனைத்து உயிரினகளுக்கும் உள்ளது. அப்படி இருப்பதாலேயே தனது வளர்ப்பு பிராணிகள் எங்கு சென்றாலும் தனது இருப்பிடத்தை தேடி வந்து விடுகிறது. எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்கிறது.\nஞாபகமென்பது எந்த ஒரு வேலையானாலும், ஒரு இயந்திரத்தை இயக்குவதாக இருந்தாலும்,அன்புகாட்டுவதானாலும்,அடையாளம் கண்டுகொள்வதானாலும்,நடை முறை வாழ்க்கைக்கு இவ்வுலகில் அனைத்திலும் மிக மிக அவசியமாக இருக்கிறது.\nஇந்த ஞாபக சக்தியை இரு வேறு வகையாகப்பிரிக்கலாம். ஒன்று அன்றாட வாழ்வில் மறக்காது நாம் ஞாபகம் வைத்து செய்யும் காரியங்கள். மற்றொன்று மலரும் நினைவுகளாய் என்றோ பல வருடத்திற்கு முன் நடந்த சம்பவங்கள் நம்மனதில் வந்து அசைபோடும் வாழ்வில் நடந்த பழைய நினைவுளாகும்.\nபண்டைய காலத்து முதியோர்கள் 90,100 வயதை அடைந்தும் திடகாத்திர சிந்தனையோடும், ஞாபக சக்தியோடும் இருந்தார்கள். அன்று இத்தனை நவீனங்கள் ஒன்றுமில்லாமல் இருந்தன. இன்றையகாலத்து இளைஞர்களோ நவீனங்களை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை தொலைத்து வருகின்றனர். உதாரணத்திற்கு சொல்வதானால் கால்குளேட்டார் இல்லாமல் கணக்குப் போட தெரியவில்லை. காரணம் மூளையின் சிந்தனைத்திறனை சிறுகச்சிறுக இழந்து வருகின்றனர்.\nநாம் இவ்வுலகில் அன்றாட வாழ்வில் ஞாபகமின்மையால் ஏற்ப்படும் நிகழ்வுகளை தினம் தினம் காணலாம். சில சமயம் ஞாபக மறதியால் நம் வாழ்க்கையே தொலைந்து போகும் நிலை கூட ஏற்ப்பட்டுப் போய்விடும். உதாரணமாக சொல்வதானால் ......\nஏர்ப்போர்ட்டிற்கு வந்தபிறகு பாஸ்போட்டை தேடுவது.\nபர்சை எடுத்துவராமல் பஸ் ஏறிவிடுவது.\nமார்கெட்டுக்குச்செல்லும் போது மிக முக்கியமான சாமான்களை வாங்க மறந்து விட்டு வருவது.\nகடையினில் பொருள் வாங்கும் போதும், பஸ்ஸில் டிக்கெட் எடுக்கும் போதும் மீதிச்சில்லரை கேட்டு வாங்க மறந்து விட்டு வருவது.\nவெளியூர் செல்லுமிடத்தில் தன் பிள்ளைகளை ஞாபக மறதியால் விட்டு விட்டு தேடுவது. \nதிருமண மற்றும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்வுக்கு நெருங்கிய சொந்தகளை அல்லது நெருங்கிய நட்புக்களை அழைக்க மறந்து போவது.\nஇப்படி எத்தனையோ சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஞாபக மறதியால் ஏற்ப்படும் சிறுசிறு சம்பவங்கள்,அசம்பாவிதங்கள் அனைவரது வாழ்விலும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இதன் உச்சகட்டமாக ஞாபக சக்தி அறவே இல்லாமல் தொலைத்து விட்டால் நம் வாழ்க்கையின் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள்.\nஇவ்வுலக வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமாக ஞாபக சக்தி தேவைப்படுகிறது. சுருக்கமாக சொல்வதானால் இவ்வுலகம் இயங்குவதற்கு மிக அவசியத்தினுள் ஒன்றானது என்றால் அது இந்த ஞாபக சக்தியே. ஞாபகமென்ற வார்த்தையை மனிதன் பெரும்பொருட்டாக நினைக்காமல் அலட்சியமாக எடுத்துக்கொள்கிறான். ஆனால் மனித சமுதாயத்தின் உறவுமுறைகளை முறையுடன் வாழச்செய்வதில் இந்த ஞாபக சக்தி பெரும் பங்கு வகிக்கிறது. என்று சொன்னால் அது மிகையில்லை.\nநம் வாழ்வில் நமக்கு படிப்பினை ஏற்ப்படுத்தி தந்த எத்தனையோ சம்பவங்கள் இன்ப துன்ப நிகழ்வுகள் இருக்கும். அத்தனையும் பொக்கிசமாக ஞாபகம் வைத்து நமது பிற்ச்சன்னதியினருக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் விழிப்புணர்வுடன் தனது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.\nவிஞ்ஞானம் வளர்ச்சியடைந்து மனித வாழ்க்கை இயந்திரவாழ்க்கைக்கு உட்பட்டு எல்லாமே கம்பியூட்டர் மயமாகி நவீன வாழ்க்கை வாழ அடியெடுத்து வைத்து விட்டதால் சிந்திக்கும் ஆற்றல் நம்மிடையே குறைந்து கொண்டிருக்கிறது. நமது மூளையை வேறுவழியில் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆகவே ஞாபக சக்திக்கான மூளைப்பயிற்ச்சி எனும் சிந்தனையைத்தூண்டும் விதத்தில் எண்ணங்களை மனதில் ஏற்றச்செய்து நினைவூட்டிக்கொள்வதை மேற்கொள்ளவேண்டும்.\nஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள மூளை நன்று சிந்திக்கும் திறன் பெறவேண்டும். முழுக்க முழுக்க நவீனங்களையே நம்பி வாழாமல் பழமையை நினைவூட்டும் விதமாக புதுமையுடன் கலந்து பொக்கிசமாக பாதுகாத்து வந்தால் ஞாபகசக்தி நம்மிடையே என்றென்றும் நிலைபெறும் பழமை பவுன் போன்றது.[ OLD IS GOLD ]\nமுடிந்த வரை நமது ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பின்பற்றி ஞாபக சக்தியுடன் திடமான சிந்தனையுடையவர்களாக இருந்து வாழ்க்கைப் பாதையை சரியான வழியில் அமைத்துக்கொள்வோமாக .\nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2012/01/blog-post_27.html", "date_download": "2018-08-20T18:04:03Z", "digest": "sha1:SMPO74CLMNWCJA5FKCVA3D4DVWFU2QJV", "length": 11841, "nlines": 189, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: பத்மஶ்ரீ ந.முத்துசாமி", "raw_content": "\nநாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்படுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nமுத்துசாமியின் சிறுகதைத் தொகுதியான ‘நீர்மை’யும் சரி அவருடைய நாடகங்களும் சரி மீண்டும் மீண்டும் பயிலப்படவேண்டியவை. ‘சுவரொட்டிகள்’, ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘நாற்காலிக்காரர்’, ‘இங்கிலாந்து’, ‘உந்திச்சுழி’, ‘நற்றுணையப்பன்’,‘காலம்காலமாக’ ‘படுகளம்’ ஆகிய நாடகங்கள் தமிழின் இணையற்ற நவீன நாடகங்கள். முத்துசாமியின் ‘அன்று பூட்டிய வண்டி’ தெருக்கூத்து பற்றி முத்துசாமி எழுதிய தனித்துவமான பார்வையுடன் கூடிய கட்டுரைகளின் தொகுப்பு.\nமுத்துசாமியின் உரைநடை அபூர்வமானது; அவருடைய நாடகங்களைப் போலவே தனித்துவமானது; அலங்காரங்களும், தளுக்குகளும், மேனாமினுக்குகளும், சாமர்த்தியங்களும், தந்திரங்களும் இல்லாதது. நகரத்தில் வாழும் முத்துசாமி தான் பிறந்த கிராமமான புஞ்சையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் எழுத்துக்குள் கொண்டுவர யத்தனித்ததால் உருவான உரைநடை அது.\nதெருக்கூத்துதான் தமிழனின் அரங்கு என்பதை நாற்பது வருடங்களாக தொடர்ந்து எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்தி தெருக்கூத்திற்கு சமூக அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைப்பதற்காக அயராமல் பாடுபடுபவர் முத்துசாமி. தனிப்பட்ட முறையில் 1985இல் ஆய்வு மாணவனாக நான் சென்னையில் இருந்தபோது முத்துசாமிதான் என்னை புரிசைக்கு கூட்டிக்கொண்டுபோய் மகாபாரதக் கூத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வாறாக பலருக்கும் மகாபாரதக்கூத்தினை அறிமுகப்படுத்துவதை அவர் தன்னுடைய கடமையாக செய்துவந்தார். முத்துசாமி கொடுத்த அறிமுகத்தினாலேயே நாட்டுப்புறவியல்துறையே என்னுடைய துறை என நான் தேர்ந்தெடுத்தேன். என்னைப் போல் எண்ணற்ற நபர்களின் வாழ்வினை முத்துசாமி சீரமைத்திருக்கிறார்.\nஎனக்குத் தெரிந்து கலைராணி, பசுபதி, ஜெயக்குமார், ஜெயராவ், ஜார்ஜ், சுந்தர், சந்திரா, பழனி என அசலான நாடக நடிகர்களை முத்துசாமி உருவாக்கியிருக்கிறார். நாடக நடிகர்களாக இவர்கள் உருவானதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். நான் பார்க்காமல் இன்னும் இரண்டு மூன்று அடுத்த தலைமுறை நடிகர்களும் முத்துசாமியால் உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.\nந.முத்துசாமியோடு நான் பழகுவதற்கு வாய்த்த சந்தர்ப்பங்களை என் வாழ்க்கையின் பெறும்பேறாகவே நினைக்கிறேன். லட்சியக் கனவுகள் கொடுக்கும் வேகம், நடைமுறை சார்ந்த விவேகம், உள்ளார்ந்த உறுதி, கூர்மையான பார்வை, வெள்ளம்பியான மனம், பெருந்தன்மை என எப்போதுமிருக்கும் முத்துசாமியோடு உரையாடும் சந்தர்ப்பங்களில் இயல்பாகவும், பாதுகாப்பாகவும், ஆசுவாசமாகவும் உணர்ந்திருக்கிறேன். கள்ளமற்ற கலை ஆளுமையின் வசீகரம் அது.\nமுத்துசாமியையும் அவருடைய படைப்புகளையும் பற்றி விரிவாக நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன். இந்த சிறு குறிப்பு முத்துசாமிக்கு பத்மஶ்ரீ வழங்கப்படுவதையொட்டி நான் அடைந்த மகிழ்ச்சியை பதிவு செய்வதற்கு மட்டுமே.\nந.முத்துசாமிக்கு என் வணக்கங்களும் வாழ்த்துகளும்.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஎன் கவிதைத் தொகுதி தரவிறக்க\nசாரல் விருது 2012: வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewforum.php?f=15&sid=46b8e2ec664f54d17512da0e18abdd4e", "date_download": "2018-08-20T18:24:27Z", "digest": "sha1:MICUCY25WM76CI3AHWMY2ZAEMT7UIJZL", "length": 36513, "nlines": 465, "source_domain": "poocharam.net", "title": "வாழ்த்துகள் (Greetings) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nநிறைவான இடுகை by tnkesaven\nதோழிக்காக எழுதிய திருமண வாழ்த்து...\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 1st, 2016, 11:12 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 29th, 2016, 7:52 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறந்த நாள் வாழ்த்துகள் பூவன் அவர்களே...\nby கரூர் கவியன்பன் » அக்டோபர் 10th, 2016, 11:11 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nஅனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 15th, 2016, 11:25 pm\nநிறைவான இடுகை by பூவன்\nபூச்சரத்துடன் இணைந்திருக்கும் உறவுகளுக்கு வணக்கம்\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 23rd, 2015, 12:58 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by பூவன்\nகோடைப் பண்பலையின் 14-வது உதய விழா.. அனைவரும் வருக\nby கரூர் கவியன்பன் » ஜூலை 4th, 2014, 7:27 pm\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபிறந்த தின நல்வாழ்த்துகள் ராஜா\nநிறைவான இடுகை by Muthumohamed\nவாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by Raja\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபூச்சரம் நண்பர்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கோபாலகிருஷ்ணன் அவர்களே ..\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபிறந்த நாள் வாழ்த்துகள் கவிதைக்காரரே...\nby கரூர் கவியன்பன் » மார்ச் 7th, 2014, 2:36 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா”- உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபூச்சரத்தில் முதல் ஆயிரம் பதிவுகள் - பூச்சரண்\n1, 2by கரூர் கவியன்பன் » மார்ச் 1st, 2014, 5:05 pm\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇன்றைய நாள் ஜனவரி 7....\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://universaltamil.com/category/sports/?filter_by=popular", "date_download": "2018-08-20T18:51:56Z", "digest": "sha1:6M67JYDC6YZYLJXIG4KWFB6PK5PE5QS2", "length": 7629, "nlines": 130, "source_domain": "universaltamil.com", "title": "Sports Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகள் அணி வென்றால் இலங்கையின் வாய்ப்பு பறிபோகும்.\nஏமாற்றிய இலங்கை வீரர், கண்டுகொள்ளாத அம்பயர்\nஐ.பி.எல் இல் உலாவரும் 10 கவர்ச்சி கன்னிகள்\nதிஸர பெரேரா ஐ.சி.சியில் பெற்ற புதிய இடம்\nதனுஸ்க குணதிலக்கவுக்கு போட்டித் தடை\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணி யில் இத்தனை பிரபலங்களா\nஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போன முதல் பத்துப்பேர்\nமைதானத்துக்குள் மோதிய பங்களாதேஷ் வீரர்கள் – கண்ணாடி உடைப்பு\nகபில்தேவ் சாதனையை முறியடித்த ஹேரத்திற்கு ஷேன்வோர்ன் மற்றும் வசிம் அக்ரமின் சாதனைகளையும் முறியடிக்க வாய்ப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பளம் இவ்வளவா\nபாகிஸ்தானுடனான ஒருநாள் கிரிக்கட் தொடரில் இருந்து மலிங்க நீக்கம்\nராசியில்லாததால் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்யும் விராட்கோலி- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான 20-20 போட்டியில் லசித் மலிங்க இணைப்பு\nஇலங்கை அணியின் பந்துவீச்சை துவசம் செய்த ரோஹித் சர்மா\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டிகளில் விளையாட தடை\nமுதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் 28 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கைது\nகர்ப்பிணி தோற்றத்தில் நிர்வாணக் கோலம்: இணையத்தை கலக்கும் செரினா வில்லியம்ஸ்\nதொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nஇருபதுக்கு இருபது தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மீது அணி பயிற்சியாளர் கடுமையாக சாடல்\nபாகிஸ்தானுடனான மூன்றாவது போட்டியிலும் இலங்கை தோல்வி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16218-Toe-ring-metti-of-Goddess-Lakshmi-Continues", "date_download": "2018-08-20T18:08:55Z", "digest": "sha1:HNQY2ZO5KR2TWAX3B6CDRIF62IBI64ID", "length": 25987, "nlines": 367, "source_domain": "www.brahminsnet.com", "title": "Toe ring - metti of Goddess Lakshmi Continues", "raw_content": "\n11.பகவான் கிருஷ்ணன், விதுரர் மாளிகையில், உணவு அருந்திய பிறகு,\nதுர்யோதனன் கேள்விக்குப் பதில் சொல்லும்போது,\n\"சுத்தம் விஷ்ணு பத த்யானம் \" என்கிறார்\n( சுத்தம் பாகவதாஸ்யன்னம் ,\nசுத்தம் விஷ்ணு பத த்யானம்\nசுத்தம் ஏகாதசி வ்ரதம் ) விஷ்ணுபதத் த்யானம் என்பதில்\nபெரியபிராட்டியின் திருவடித் த்யானமும் அடங்கி இருக்கிறது.\nஎக்காலத்திலும், எந்தச் சமயத்திலும் பிராட்டி, பகவானைப்\nபிரிந்தாளில்லை. ஆதலால், விஷ்ணுபத த்யானம் செய்யும்போது,\nத்யானமும், பிராட்டி பத த்யானம் செய்யும்போது, உன் த்யானமும்\nபக்தனுக்குப் பரவசத்தைக் கொடுக்கிறது.உனக்கு நமஸ்காரம்\n1. பரமபதத்தில், நவரத்ன மாளிகையில், பிராட்டியார் வரும்போது, அவரது\nதிருவடியில் அணிந்துள்ள சிலம்பும்,கொலுசும் பல ராகங்களில்\nஅப்போது ,ஹே—-மெட்டித் தேவியே— நீ சலவைக் கற்களில் பதிந்து\nசப்தம், தாளம் இடுவதைப்போல் அமைகிறது.\n2. பெரிய பிராட்டியார் ஒய்யாரமாக நடக்கும்போது, நீ, மாளிகைப் பளிங்குக்\nகல்லில் எழுப்பும் நாதம் கர்ணாம்ருதமாக ஆகி, முக்தர்களுக்கு, அங்கு\n3. பெரியபிராட்டியார், நந்தவனத்தில் \"பத்தி உலாத்தும் \" போது ,\nஹே–மெட்டித் தேவியே—நீ புல்லின்மீதும் அங்கு சிந்தியிருக்கும்\nமலர்கள் மீதும் , அழுந்தி, எழுப்பும் நாதமானது, பிராட்டியின்\nசொல்லும் ஸ்ரீஸுக்தத்தை சேவிப்பது போல இருக்கிறது.\n4. இந்த நாதம் , முமுக்ஷுக்களுக்கு , பிராட்டியை சேவிப்பதற்கு முன்பாக,\nபிராட்டியின் கருணையையும் விஞ்சி , அடியோங்களை, தாயாரைச்\nசரணம் அடையுங்கள் என்று அழைப்பதைப் போல இருக்கிறது.\n5. பிராட்டிக்கு \"உருசாரிணி \" என்கிற திருநாமம். \"அக்ரதஸ்தேகமிஷ்யாமி\nஸ்ரீமத் ராமாயணம் சொல்கிறது. எம்பெருமானுக்கும் முன்னதாக\nஓடிவந்து, தர்ஸனம் கொடுப்பதற்கு, பெரிய நடையை உடையவள் —\nஉருசாரிணி . அனுக்ரஹிக்க , பிராட்டி நடந்து வரும்போது,\nஉன்னுடைய நாதம், \"பிராட்டி அனுக்ரஹிக்க \" வருகிறாள் என்று கட்டியம்\nகூறுவதைப் போல அமைகிறது. இந்த உன்னுடைய நாதத்துக்கு\n6. ஹே—மெட்டித் தேவியே—ஸ்ரீ ராமாவதாரத்தில், எம்பெருமானும் பிராட்டியும்\nஆரண்யத்தில் நடந்தபோது, பிராட்டியின் பாதுகைக்கு ஹிதமாக , உன்\nஅடிப்பாகம் , பாதுகையின்மேல் பட்டு,, ஏதோ ரஹஸ்யம் பேசுவதைப் போல\nஇருந்தது. ஒருவேளை, இது, பிராட்டியின் பாதுகை என்று முத்திரை பதித்தாயா \n7. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, எம்பெருமானுடன் ஏகாந்தமாக பஞ்சணையில்\nதுயிலும் போது , நீ, பஞ்சணையில் பதிந்து , அப்போது எழும் உன் நாதம்\nதிவ்ய தம்பதியர்க்குத் தாலாட்டுப் பாடுவதுபோல இருக்கிறது.\n8. ஸாமவேதம் , வீணையில் தாளம் போடுகிற மாதிரி—-ஹாய் —ஹாய் —என்கிறது.\nஉபநிஷத்திலும் இந்த த்வனி உள்ளது.\nபிராட்டி, எம்பெருமானுடன் சஞ்சரிக்கும்போது, பிராட்டியின் திருவடி பூமியில்\nபடுவதும், எழுவதுமாக இருக்கிறது. அப்போது, ஹே—மெட்டித் தேவியே—நீ எழுப்பும்\nநாதம், பகவானுக்கு, ஸாமவேதமாக ஒலிக்கிறது.\n1. பிராட்டி, \"அச்வக்ராந்தா \"—குதிரைமீது சஞ்சரிப்பவள், என்று சஹஸ்ரநாமம் சொல்கிறது.\nஅப்படி சஞ்சரிக்கும்போது, ஹே—மெட்டித் தேவியே—உன் ப்ரகாசத்தால் ,\n2. பிராட்டி \"யோகநித்ரா\"—உறங்குவது போல யோகு செய்பவள். அப்படி சயனித்திருக்கும்போது,\nஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் செந்தாமரைத் திருக்கண்களின் கடாக்ஷம்\nஉன்மீது பட்டு ,நீ, நெகிழ்கிறாய். எங்கே, திருவடி விரல்களிலிருந்து கழன்று\nவிழுந்துவிடுவோமோ என்று அஞ்சி, திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாய் .\n3. பிராட்டி–ருக்மிணி —தங்கம், வெள்ளிகளாலான ஆபரணங்களை அணிந்தவள்.\nஅவற்றில் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆன ஆபரணங்களில் நவரத்னங்களும்\nபதிக்கப்பெற்று , ஒளிர்விட்டுப் ப்ரகாசிப்பதில் திருவடி ஆபரணமான ,\n4. பிராட்டி–ஹிரண்ய வர்ணாம்—-சொக்கத்தங்க நிறமுள்ளவள் . ஹே–மெட்டித் தேவியே–\nஅந்தப் பிராட்டியின் திருவடியில், ஹிரண்ய வர்ணமாக நீயும் ப்ரகாசிக்கிறாய் \n5. பகவானும் , \" யஜ்ஞம் \" செய்கிறான். அதற்கு, \"சரணாகத யஜ்ஞம் \" என்று பெயர்.\nயஜ்ஞம் செய்ய தர்மபத்நியாக , பிராட்டி பக்கத்திலேயே இருக்கிறாள்.\nயஜ்ஞ வாடிகையிளிருந்து, பீறிடும் அக்னியின் ஒளி , ஹே—மெட்டியே —\nஇது, உன் ப்ரகாசமோ என்று ப்ரமிக்க வைக்கிறது.\n6.பெரிய பிராட்டி, அர்ச்சையில் லயம் (எம்பெருமான் திருமேனியில் பிரிவில்லாமல்\nசேர்ந்திருப்பது ). \"போகம் \" ( பகவானின் உத்ஸவத் திருமேனிக்கு இருபுறமும்,\nஸ்ரீ தேவி, பூதேவியாக ஸேவை சாதிப்பது ), \"காம்யம்\" (தனிக்கோயில் நாச்சியார் )\nஎன்று மூன்று நிலைகளில் இருந்தாலும், பெரியபிராட்டியின் பூஷணமான\nஹே—மெட்டித் தேவியே–உன் காந்தி கோடிஸுர்யனைப்போலப் பிரகாசிக்கிறது.\n7. பிராட்டி, எம்பெருமானுடன் சேர்ந்து நடந்து செல்லும்போது, உன் பிரகாசமானது,\nஸ்ரீயப் பதியை \" இது நம்முடைய பாதுகையின் காந்தியோ \" என்று பிரமிக்க வைக்கிறது.\n8. பகவானின், மத்ஸ்ய கூர்ம அவதாரங்களில், பிராட்டியும் அப்படியே\nமத்ஸ்யமாகவும், கூர்மமாகவும் அவதரித்தபோதும் அந்தந்த அவதாரத்\nதிருமேனிகளுக்கு ஏற்றாற்போல் , பிராட்டியின் திருவடிகளில் வளையமிட்டு,\n6. தசாவதாரங்களிலும் ,தாயாரின் மெட்டி\n1. ஹே—மெட்டித் தேவியே—பகவான் மச்சாவதாரம் எடுத்தபோது,\nநீ, பிராட்டியின் திருவடியில் கூடவே இருந்து, புவனம் முழுவதையும்\nஉன் ஸம்பந்தத்தால் பாவனம் ஆக்கினாய்\n2. ஹே–மெட்டித் தேவியே—பகவான் கூர்மாவதாரம் எடுத்தபோதும் ,\nபிராட்டி, \"அகலகில்லேன்—-\" என்று கூடவே இருந்தாள் .நீயும்\nதன் திருமூக்கு நுனியில் தூக்கி எடுத்து, ஸமுத்ரத்திலிருந்து\nவெளியே வந்தபோது, ஸமுத்ரத்துக்கு உள்ளேயும் வெளியேயும்\nஉன் தேஜஸ் எண்ணிலடங்கா ஸுர்யர்களின் தேஜஸ்ஸைக்\nகாட்டிலும் விஞ்சி ஒளிர்ந்தது .\n3. ஹே—மெட்டித் தேவியே—பகவானின் வராஹாவதாரத்தில்,\nபகவான் பிராட்டியை அணைத்துக்கொண்டு ஸேவை சாதிக்கிறான்.\nஅதனால், பிராட்டி \"லக்ஷ்மி வராஹன் \" ஆனாள் .ஆனால், நீயோ,\nபிராட்டியின் திருவடியை அணைத்து புளகாங்கிதம் அடைந்தாய்\n4. ஹே —மெட்டித்தேவியே—பகவான் ,ந்ருஸிம்ஹனாக அவதரித்தபோது,\nபிராட்டி ,லக்ஷ்மி ந்ருஸிம்ஹனாகத் தோன்றினாள் . ,பிராட்டியின்\nதிருவடியில் இருந்துகொண்டு ,ப்ரஹ்லாதனுக்கும் ,நாரதருக்கும்,\n5. ஹே—மெட்டித் தேவியே—பகவான் வாமனாவதாரம் எடுத்தபோது,\nவக்ஷஸ்தலத்தில் பிராட்டியை, க்ருஷ்ணாஜினத்தால்(மான்தோல் )\nமறைத்துக்கொண்டார். அப்படி மறைத்தாலும், அசுர குரு\nசுக்ராசார்யருக்கு ,வந்திருப்பது பகவான்தான் என்று தெரிந்துவிட்டது.\nமான்தோல் மறைப்பையும் மீறி,உன்னுடைய தேஜஸ் வெளிப்பட்டதால்,\nசுக்ராசார்யர், பிராட்டி திருமார்பில் உறையும் பகவான்தான்\nவந்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டார் .\nபகவான்,மஹாபலியிடம் வரங்கள் கேட்டு, உலகங்களை அளந்தபோது,\nபகவானின் திருவடி அண்டகடாஹங்களையும் பிளந்துகொண்டு,\nமேலே,மேலே சென்றுகொண்டே இருந்தது. பகவானின் பாதுகை\nபகவானின் திருவடிக்குக் குடைபோல இருக்க, திருவடி அண்டங்களைப்\nபிளந்துகொண்டு செல்ல ,பிராட்டியின் திருவடியில் உள்ள உன்னுடைய\nகோடி ஸுர்ய ப்ரகாசம் வழிகாட்டியது—என்னே உன் பெருமை—\n6. ஹே—மெட்டித் தேவியே—பகவான் பரசுராமனாக ,ஸ்ரீ ராமபிரான்\nமுன்பாக வந்தபோது,ராமனின் திருக்கல்யாண கோலத்தில்\nமயங்கியதால், நீ, சீதாப்பிராட்டியின் திருவடிகளிலேயே தஞ்சம்\n7. ஹே—மெட்டித் தேவியே—பகவான், ராமாவதாரம் எடுத்தபோது ,\nஜானகியின் திருவடிகளில் அமர்ந்து,நீ செய்த செயல்களைச்\nசொல்லி மாளாது. கோதாவரி நதியில் , படகில்,ராமனும் சீதையும்\nசெல்லும்போதும் சரயு நதியில் சீதை ,படிக்கட்டுகளில் அமர்ந்து\nதிருவடிகளைத் தீர்த்தத்தில் நனைக்கும்போதும் , திருவடிகளில்\nஅணிந்திருக்கும் \"கொலுசு \" உன்னைப் பார்த்துப் பொறாமைப் படும்.\nஉனக்கு, புண்ய தீர்த்தத்தில் முங்கித் திளைக்கும் பாக்யம்\nகிடைக்கிறது என்றும், தனக்குக் கிடைக்கவில்லையே என்றும்\nஏங்கும். ஏனெனில், சீதையின் திருவடி கணுக்காலுக்கு மேல்\nநனையாது .திருவடிகள், தீர்த்தத்தில் அங்குமிங்கும்\nஊஞ்சலைப்போல் ஒய்யாரமிடும் . நீ, தீர்த்தத்தில் மூழ்கித்\n8. ஹே—மெட்டித் தேவியே— பலராம அவதாரமாகப் பகவான்\nசொல்லப்பட்டாலும், க்ருஷ்ணனாக பகவான் அவதாரம் செய்து,\nபற்பல லீலைகளைச் செய்ததால், அண்ணனான அவதாரம்\nதம்பியின் அவதாரத்தில் அடங்கிவிட்டதால், நீயும் , பிராட்டி\nருக்மிணியின் திருவடியே போதும் என்று இருந்து விட்டாயா \n9. ஹே—மெட்டித் தேவியே—பகவானின் க்ருஷ்ணாவதாரம் ;\nருக்மிணி விவாஹத்தில் , பிராட்டியின் திருவடியில் இருந்த நீ,\nதிருக்கல்யாண கோலத்தில் க்ருஷ்ணனும் ,ருக்மிணியும்\nஸி ம்ஹாசனத்தில் வீற்றிருந்தபோது ,பற்பல தேசத்து அரசர்கள்\nதங்களுடைய ரத்ன க்ரீடங்கள் உன்னை உரச, தலைகுனிந்து\nவணங்க, நீ, தேஜஸ்ஸுடன் ,அவர்களை ஆசீர்வதித்ததை\nபிராட்டியே அறிவாள் —பிராட்டியின் புன்னகையே\n10. ஹே—மெட்டித் தேவியே—பகவான் கல்கி அவதாரம் எடுக்கும்போது\nஅவரது திருமார்பில் வீற்றிருக்கும் பிராட்டியின் திருவடியை\nஅலங்கரிக்கும் உன் பேரொளியால் , வாள்கொண்டு வீசி,\nகலியைத் தொலைக்கப் போகிறார், கல்கி பகவான்—உனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.poomagal.com/2012/06/blog-post.html", "date_download": "2018-08-20T18:24:37Z", "digest": "sha1:7WMEDOZAGBD6R7FEMZ3TJ5OVMXWY5WED", "length": 22104, "nlines": 166, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: ஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….!!", "raw_content": "\nஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….\nஅத்தெரு வழி நடக்கையிலெல்லாம் எல்லார் கண்ணிலும் அக்கதவு படும்.. நீண்ட பெரிய மரக்கதவு பல ஆண்டுகாலமாக மழை கண்டு ஈரமேறி, வெயிலின் காட்டலில் முறுக்கேறி இளவட்ட பயல்களின் அரும்பு மீசை முறுக்கைப் போல் வளைந்து நெளிந்து நிற்கும்..\nஅந்தக் கதவு பல நேரம் அடைத்தே இருக்கும்.. வெகு சில நேரத்தில் மட்டுமே அதன் மேல் அச்சிறுமி ஏறி இங்குமங்கும் ஆடிய நிலையில் காணலாம்.. அவள் செந்தூர வானத்தின் வெளிறிய மேகம் போல் வெளுத்திருந்தாள்.. அது அழகால் வந்த வெண்ணிறமாய்த் தெரியவில்லை.. சத்தின்றி, ரத்தமற்று மெலிந்து காணும் அவள் உடல் அதனை நன்கு உணர்த்தியது..\nஅவள் கண்கள் எதையோ தொலைத்த சோகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.. எப்போதேனும் அவ்வழியில் அவளொத்த பிள்ளைகளைப் பார்க்கையில் அவள் ஏக்கம் அதில் மேலும் எட்டிப் பார்க்கும்.. பள்ளிச் செல்ல சீருடையோடு போகும் பள்ளிக் குழந்தைகளின் சிரிப்பொலியும் பேச்சுகளும் அவளை கதவிடுக்கில் ஒளிந்தபடி பார்க்க வைக்கும்.. அவளை நான் கடக்கும் ஒவ்வொரு முறையும் அவள் முற்றத்தில் பெரும்பாலும் கூட்டி தண்ணீர் இட்டுக் கொண்டிருப்பாள்.. வீட்டினுள்ளிருந்து வரும் கஞ்சியின் வாசனை அவள் அரிசிச் சோறு சமைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிக் கொடுக்கும்..\nகிழிந்த தன் உடுப்புகளில் அழகழகாய் தையல் கடை குப்பை துணித் துண்டுகளைக் கச்சிதமாய் தைத்திருப்பாள்.. அது அந்த அழுக்கேறிய உடப்பை வனப்பாக்கியிருக்கும்.. ஒன்பது பத்து வயதிருக்கும் அவளுக்கு… தலை முழுக்க தேங்காய் நாறான கூந்தலை பல நேரம் அவள் அலட்சியப் படுத்தி ஒருவாறு முடிந்திருப்பாள்.. சில நேரம் அதில் பக்கத்து வீட்டில் மலரும் சின்ன ரோஜாக்களைச் சூடியிருப்பாள்..\nஅக்கதவுகளுள் செல்ல யாருக்கும் துணிவு வந்ததில்லை.. காரணம் பல நேரம் அக்கதவு வழி கசியும் இறுமலோடான கரடு முரடான கெட்ட வார்த்தைகளென்று ஒரு நாள் யாரோ சொல்ல அறியப் பெற்றேன்.. மற்றுமொரு நாள், அவ்வசை மொழிகளை அக்கதவைக் கடக்கையில் கேட்டுமிருந்தேன்.. அச்சிறுமி கதவைத் திறந்து அதைத் தாங்கி விசும்பியபடி நிற்பதைக் காண நேர்கையில் அவள் விழி நம் விழி பார்த்ததும் குனிந்து கொள்ளும்.. ஆற்றாமையும் அவமானமும் அவள் முகத்தை இன்னும் இருளுக்குக் கொண்டு சென்றிருக்கும்..\nஅச்சிறுமி பற்றிய நினைவு தொடர்ந்து சில காலம் உறக்கமில்லா நெடிய இரவுகளாக என் இரவுகளை மாற்றியது.. அழுதழுது வீங்கிய கண்களோடு வேறொரு சமயம், சிறுமியைக் காண்கையில் அவள் தன் பிசுபிசுப்பான முடியை வாரிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கென்று தோழியில்லை.. யாரோடும் அவள் பேசுவதைப் பார்த்ததுமில்லை..\nஅவ்வீடு பற்றி யாருக்கும் அதிக நாட்டமிருந்ததில்லை.. ஓர் வயோதிகர் கடும் இறுமல் நோயால் போராடுவதாகவும், அவரின் பேத்தியான அச்சிறுமி தான் அவருக்கு துணையெனவும் பக்கத்து வீட்டு பூந்தோட்டக்காரர் உரைத்திருந்தார்..\nஓர் காலை நேரம், என் பணிக்குச் செல்வதையும் தவிர்த்து, அச்சிறுமி வீட்டினுள் நுழைந்து என்னவென்று தெரிந்து கொள்ள எண்ணி வெகு வேகமாக நடந்த வண்ணம் அத்தெருவை அடைய..\nதெருவில் அச்சிறுமி வீட்டருகே பெருங்கூட்டமொன்று கூடியிருந்தது.. விரைந்து அக்கூட்டதினுள் நுழைந்து அவள் முகம் காண தேட அதிர்ச்சியில் கண்கள் உறைந்தது..\nஅழுக்குத் துண்டையும் கிழிந்த பழுப்பேறிய வேட்டியையும் எலும்புடலோடிருந்த அம்முதியவர் அக்கதவருகே விழுந்திருந்தார்.. கண்கள் மேல் நிலைக்க.. வாய் திறந்த நிலையில் அவரின் நிலை அவர் மரணமடைந்திருப்பதைக் காட்டியிருந்தது.. கைகளிலும் கால்களிலும் சங்கலி பூட்டியிருக்க.. அது பாதியறுந்து கீழே கிடந்தது..\nசிறுமி ஓர் மூலையில் தன் கால்களைக் கட்டிக் கொண்டு செய்வதறியாது அழுத வண்ணம் இருந்தாள்.. அவளோடான என் அன்புப் பார்வை அவள் அருகில் எனைக் கொண்டு சென்றது.\nஎன் வருகை அவளறியச் செய்ய.. கதவு தாண்டி அவள் குடிசை நுழைந்தேன்.. மூளையில் கிடத்தப்பட்ட அந்த கட்டிலும், மற்றொரு மூலையில் கூட்டப்பட்ட அடுப்பும் போடப்பட்டிருந்தது.. இரு அலுமனியப் பாத்திரமும், ஒரு மண் பானையும் அடுப்பருகே வைக்கப்பட்டிருந்தது..\nசிறுமியின் விசும்பல் ஓயவில்லை.. வேடிக்கை பார்ப்பவர் மெல்ல கலையத் துவங்க.. நான் காவல் துறைக்கு தகவல் சொல்ல ஆளை அனுப்ப ஏற்பாடு செய்தேன்.. அச்சிறுமி குறித்து அடுத்த வீட்டு தோட்டக்காரரிடம் சொந்தங்கள் பற்றி கேட்க.. எங்கிருந்தோ ஒரு வருடம் முன்பு வந்தனர்.. உறவென்று இவ்வூரில் யாருமில்லை என்றுரைத்தார்..\nஉடலை கதவருகிருந்து எடுத்து கூடத்தில் கிடத்தி, மாலை வாங்கி வந்து அணிவித்தேன்... சிறுமி அப்போதும் அழுகை ஓயாமல் விசும்பிய வண்ணமே இருந்தாள்.. மெல்ல அவள் தலை கோத, அவள் திடுக்கிட்டு ஏறிட்டாள்.. கண்கள் சிவக்க.. முகமெல்லாம் வீங்கியிருக்க அவளின் கோலம் மனதை வாட்டியது..என் கண்கள் கண்டதும் சின்ன ஆறுதல் கிட்டியிருக்கக் கூடும்.. அழுகை நின்றிருந்தது.. சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் செய்து அவரை மின்மயானத்துக்கு எடுத்துச் செல்ல ஆட்கள் வந்தனர்.\nகூட்டம் வேடிக்கை மட்டுமே இன்னும் பார்த்துக் கொண்டிருந்தது… ஒரு சிலர் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசி வெளியேறத் தலைப்பட்டனர்.. சிறுமி அதன் பின் அழவே இல்லை.. இருந்த இடம் விட்டும் அசையவுமில்லை.. மாலை நெருங்க.. அவளை விட்டு எப்படி செல்வதென்று யோசனை வரத் துவங்கியது.. அவள் நாள் முழுதும் உண்ண மறுத்ததால் பசியில் வாடித் துவண்டு அவ்விடத்திலேயே படுத்திருந்தாள்.. சொல்லாமல் செல்லச் சொன்ன சிலர், என்னிடம் சொல்லாமலே சென்றிருந்தனர்.. இறுதியில் ஓர் முடிவெடுத்து அவள் கை பற்றி வெளியே வந்தேன்..\nஅவ்வீட்டு கதவு அதன் பின் திறக்கவே இல்லை.. வழியெங்கும் மஞ்சள் பூக்கள் எங்களை இளஞ்சூரியன் வெளிச்சத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தது.. அச்சிறுமியுடனான எனது பந்தம், பின்னாலில் அப்பா மகளாக மாறிவிட்டிருந்தது.. குழந்தையில்லாத என் மனைவி அவளின் அம்மாவாக மாறிவிட்டிருந்தாள்.. எங்கள் வீட்டு முற்றம் இப்போது இனிய விளையாட்டுகளினால் நிரம்பிவிட்டிருந்தது..\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nஓர் மரக்கதவும் மரவெட்டை மனிதர்களும்….\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\n\"யார் மனசிலையும் ஈரமில்ல\" என்ற வசனத்தை அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி ஒளி,ஒல...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45260-karnataka-election-poll-counting-begins-on-8-am.html", "date_download": "2018-08-20T18:45:46Z", "digest": "sha1:2L52F63RX6E34LVZTITH2ASDL3SQTCX2", "length": 10101, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் 'கை' ஓங்குமா? 'தாமரை' மலருமா?: இன்று வாக்கு எண்ணிக்கை | Karnataka election: Poll counting begins on 8 am", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n: இன்று வாக்கு எண்ணிக்கை\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நண்பகல் 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், சராசரியாக 72.13 சதவிகித வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2013ஆம் ஆண்டு பதிவான வாக்குகளைவிட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய 7‌‌5 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.\nகாங்கிரஸ்,‌ பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,612 வேட்பாளர்கள் 222 தொகுதிகளில் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு அமையும் வகையில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் தெரியவந்துள்ளன.\nஇந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நண்பகல் 12 மணிக்குள் வேட்பாளர்களின் வெற்றி தோல்வி தெரிந்துவிடும் என்பதால், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு‌ அதிகரித்துள்ளது.\n88 ரன்களில் சுருண்ட பஞ்சாப் : 8 ஓவர்களில் விளாசிய பெங்களூரு அணி\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\nவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சென்ற சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்\nவாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல்: பொதுமக்கள் அஞ்சலி\nவாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் \nதேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித் ஷா\nதமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை\n“தெலுங்கானாவில் குடும்ப ஆட்சி” - “ராகுல் இன்னும் வளர வேண்டும்”\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n88 ரன்களில் சுருண்ட பஞ்சாப் : 8 ஓவர்களில் விளாசிய பெங்களூரு அணி\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-mananilaiyai-paathikkum-cartoon", "date_download": "2018-08-20T18:52:13Z", "digest": "sha1:OQRRBDIE5E3GRPSE4SCX4CCQLTPIQWBF", "length": 12484, "nlines": 216, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் கார்ட்டூன் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் கார்ட்டூன்\nநாம் குழந்தைகளாக இருக்கும் போது, அண்டை வீட்டு குழந்தைகளுடன் வெளியில் விளையாடுவோம். அதனால் அன்பு, பாசம், நட்பு, விட்டு கொடுத்தல் மற்றும் பரிவு போன்றவற்றை கற்றுக் கொண்டிருப்போம். இப்போதைய குழந்தைகள் அலைபேசியில் விளையாடுவது, தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்ப்பது போன்றவற்றை மட்டுமே செய்கிறார்கள். இதனால் அவர்கள் மனதளவில் சில பாதிப்புகளை சந்திப்பார்கள்.\nகார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட நிலையில் குழந்தைகளை, உணவு சாப்பிட வைக்கவும், பெற்றோர் அவர்கள் வேலைகளில் தொந்தரவின்றி செய்யவும், குழந்தைகளை கார்ட்டூன் பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் கார்ட்டூன் பார்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை அவர்கள் அறிவதில்லை. இங்கு குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் கார்ட்டூன் பற்றி பார்க்கலாம்.\nகார்ட்டூன் பார்ப்பது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பெரிதாக பாதிப்பதாகவும், கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் போது, குழந்தையின் கற்பனை திறன் பெரிதும் பாதிக்கப்படும். குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றை உணர்வதில்லை. வெளியில் விளையாடுவது, அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ளவும், துடிப்போடு செயல்படவும் மற்றும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. வெளியில் விளையாடும் போது சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்பு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன.\nபெரும்பாலான கார்ட்டூன்கள் கதாப்பாத்திரங்கள், சரியான சொற்களை பயன்படுத்துவதில்லை. இதனால், தவறான மொழி உச்சரிப்பை குழந்தைகளை பின்பற்ற வைக்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை தவிர்த்து விட்டு, அவர்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் பேச முயற்சிக்கின்றன. இது, கார்ட்டூன்களால் குழந்தைகள் பாதிப்படையும் காரணிகளில் ஒன்று. கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் செய்வதை எல்லாம் அவர்களும் செய்வார்கள். சில சாகசங்களை செய்வதாக ஆபத்திலும் சிக்கி கொள்வார்கள்.\nகார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர். இதுவே, குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூலக் காரணம். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே, இறுதி வரை நிலைத்திருக்கும். கார்ட்டூன்கள் முன், அதிக நேரம் செலவழிப்பது, குழந்தைகளுக்கு தனிமை மனப்பான்மைக்கும், அலட்சிய மனப்பான்மைக்கும் வித்திடும். இதனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது, அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.\nஅவர்கள் தனிமையை விரும்புவார்கள். பெரும்பாலான நேரத்தை தொலைக்காட்சி மற்றும் அலைபேசியுடனே செலவிடுவார்கள். அவர்களது நினைவாற்றல் குறைய துவங்கும். படிப்பிலும் கவனம் குறையும், ஒரு விதமான மந்த தன்மையோடு இருப்பார்கள். அவர்கள் கார்ட்டூன் பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும். அவர்களுடன் பெற்றோர் நேரம் செலவிடுதல் மற்றும் விளையாடுதல் போன்றவற்றை செய்வதன் மூலம் பெற்றோர் இவர்களை பாதுகாக்க முடியும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.railyatri.in/category/travel-ta/", "date_download": "2018-08-20T18:39:46Z", "digest": "sha1:VY4ICXAJNEKCTUW5IIVXUTE3JIZPKLXA", "length": 4865, "nlines": 127, "source_domain": "blog.railyatri.in", "title": "Travel Archives -", "raw_content": "\nஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் இலவசமாக 70...\nஇரயில்யாத்திரி பேருந்து சேவை ஏன் சிறந்தது\nபயணத்தின் போது சரியாக சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான குறிப்புகள்\nபோர்ட் பிளேர், கதை தொடங்கும் இடம்\nபோர்ட் பிளேர் உங்கள் அந்தமான்...\nஇந்த கோடைக்காலத்தில் உங்களைச் சுறுசுறுப்பாக வைக்க வேடிக்கையான நடவடிக்கைகள்\n6 டாமன் மற்றும் டையூ கடற்கரைகளுக்கு செல்ல வேண்டும்\nஉறுதிப்படுத்தப்பட்ட இரயில் பயணச்சீட்டுகள் பெறுவதற்கான 5 வழிகள்\nசங்கிலி இழுப்பது குறித்து நீங்கள் அறிந்திராத உண்மைகள்.\nஇரயில்களில் பயணிக்கும் போது ஒவ்வொரு...\nஇந்தியாவில் இரயில் பயணிகளின் 10 வேடிக்கையான வகைகள்\nஇரயில் பயணம் என்பது பொழுதுபோக்கு,...\nசில அறியப்படாத RAC டிக்கெட் விதிகளைப் பார்க்கவும்\nதிறமையான சுகாதார பராமரிப்புக்கான வழிகாட்டுதல்கள்:\nஇரயில்யாத்திரி பேருந்து சேவை ஏன் சிறந்தது\nபயணத்தின் போது சரியாக சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான குறிப்புகள்\nபோர்ட் பிளேர், கதை தொடங்கும் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/cinema/03/126125?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:13:07Z", "digest": "sha1:FEZAXQIG7OQ4LS2X7GU6FUNRWQQ76URM", "length": 6820, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை: பிரபல நடிகர் ஓபன்டாக் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசின்னத்திரை நடிகர்களின் தற்கொலை: பிரபல நடிகர் ஓபன்டாக்\nசமீபகாலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.\nஇதற்கு படவாய்ப்புகள் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதே காரணம் என கூறப்பட்டாலும், நெருங்கிய உறவுகளால் ஏமாற்றப்படுவதும் காரணமாக அமைகிறது.\nஇந்நிலையில் விஜய்யின் நண்பனும், பிரபல நடிகருமான சஞ்சீவ் கூறுகையில், அனைவருக்கும் மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும், மன அழுத்தம் இல்லாத மனிதர்களை பார்க்க முடியாது.\nஎதுவுமே வாழ்க்கையில் நிரந்தரம் கிடையாது, அது கவலையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி.\nஇதுவும் கடந்து போகும் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும், எதுவுமே நிரந்தரம் இல்லை.\nமகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/f43-forum", "date_download": "2018-08-20T18:35:07Z", "digest": "sha1:PIANPWTXZQAZBOZQLP2K2CQ52ANPCJVK", "length": 21819, "nlines": 268, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஈழக் கவிதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: வித்யாசாகரின் இலக்கிய சோலை :: கவிதைகள் :: ஈழக் கவிதைகள்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\n பிறந்தநாளுக்கு தமிழிருக்கு - வித்யாசாகர்\nஉன் உரிமைக்கு; நீ போராடு தமிழா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகாற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே.. (வித்யாசாகர்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஎன் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள் - வித்யாசாகர்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதலைப்பு: \"பூவும் நானும்\" - வித்யாசாகர்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபோனதடி; பொய்யென ஓர் போர் - வித்யாசாகர்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஎன் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்\n*தமிழால் தானுயர்வோம்..* - வித்தியாசாகர்\nகவிஞர் மன்னார் அமுதனின் \"அக்குரோனி\" க்கு வாழ்த்து - வித்யாசாகர்\nமானத்தி அவள்; தமிழச்சி - வித்யாசாகர்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமாவீரர்களுக்கு என் வீர வணக்கம்..\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅன்பு அண்ணன் பிரபாகரனுக்கு வாழ்த்து - வித்யாசாகர்\nமாவீரர் தினக் கவிதை - கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம் - வித்யாசாகர்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nவிடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்\nஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி\nஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, வித்யாசாகர், கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/feb/14/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%826-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2863172.html", "date_download": "2018-08-20T18:26:26Z", "digest": "sha1:TFQYVJCZY4G36JFNMPTLPS2ZAS7CHN5U", "length": 6100, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சேவூரில் ரூ.6 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nசேவூரில் ரூ.6 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்\nசேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.\nசேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட வரத்து குறைந்து மொத்தம் 445 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ. 4,100 முதல் ரூ. 4, 250 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 4,000 முதல் ரூ. 4, 010 வரையிலும் விற்பனையானது. மூன்றாவது ரகம் வரத்து இல்லை. மொத்தம் ரூ. 6 லட்சத்துக்கு 10 ஆயிரம் ஏலம் நடைபெற்றது. இதில் 11 வியாபாரிகள், 63 விவசாயிகள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/21562", "date_download": "2018-08-20T18:34:08Z", "digest": "sha1:T6URQGRWRCBDR3X2VIJ3FKXGYJYKDRRI", "length": 9130, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சந்தோஷ ஆனந்தி | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\n‘தெலுங்கு படங்களில் நடிப்பதைக் காட்டிலும் தமிழ் படங்களிலும் நடிக்கவே விரும்புகிறேன். இங்கு எனக்கு கிடைக்கும் தொழில் சுதந்திரம் மற்றும் சௌகரியங்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை. நல்ல கதைகளும், நல்ல வாய்ப்புகளும் என்னைத் தேடி வருகின்றன. அதே சமயத்தில் நான் முதுநிலை வணிக மேலாண்மை கல்வியையும் கற்று வருகிறேன். அதனால் இரண்டுக்கும் போதிய இடைவெளி கொடுத்துக் கொண்டேத்தான் நடிக்கிறேன். தற்போது தமிழில் பண்டிகை என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து நடிகர் சந்திரனுடன் ‘ரூபாய், நடிகர் விமலுடன் ‘மன்னர் வகையறா,’ அறிமுக நடிகர் தமிழ் உடன் ‘ என் ஆளோட செருப்ப காணோம், ’ நடிகர் கதிருடன் ‘பரியேறும் பெருமாள் ’ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். ’ என்றார் நடிகை ஆனந்தி.\nஆனால் ஆனந்தி நடித்து வரும் படங்களின் படபிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது என்றும், இவர் தற்போது நடிகர் கிருஷ்ணா உடன் நடித்த ‘பண்டிகை ’படத்தின் விளம்பரத்திற்காக சென்னையில் முகாமிட்டிருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் திரையுலகினர்.\nதெலுங்கு தொழில் சுதந்திரம் மன்னர் வகையறா ரூபாய்\nயாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டீகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காட்டேரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.\n2018-08-18 11:06:02 யாமிருக்க பயமே கவலை வேண்டாம் காட்டேரி\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் கனா படத்தின் டீஸர் மற்றும் ஓடியோ இம்மாதம் 23 ஆம் திகதி வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.\n2018-08-18 11:46:45 சிவகார்த்திகேயன் நடிகர் திரைப்படம்\nவித்தக கவிஞர் பா.விஜய் நடித்து, தயாரித்து இயக்கிய ஆருத்ரா படத்தின் ஒடியோ வெளியீடு இன்று நடைபெற்றது.\n2018-08-17 13:54:06 பா.விஜய் ஆருத்ரா வித்தகர்\n‘குணா ’வாக மாறிய சமுத்திரகனி\nபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து.வெற்றிமாறனும், தனுசும் ‘வடசென்னை’யில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் குணாவாக சமுத்திரகனியும் தோள் கொடுத்திருக்கிறார்.\n2018-08-16 13:39:00 பொல்லாதவன் ஆடுகளம் தனுஷ்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் ஆரம்பமாகியுள்ளது. குறித்த படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர்.\n2018-08-16 11:02:59 கழுகு - 2 பிந்து மாதவி செந்நாய் வேட்டை\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/22124334/Pepper-Pillaiyar-gives-rain.vpf", "date_download": "2018-08-20T18:31:26Z", "digest": "sha1:AH2R4LXJKXM2F24YACDGIK4DF363QC7R", "length": 16126, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pepper Pillaiyar gives rain || மழையை தரும் “மிளகு பிள்ளையார்”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமழையை தரும் “மிளகு பிள்ளையார்”\nதிருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றைக் காண்போம்.\nதிருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றைக் காண்போம்.\nகேரளத்தை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள் அவனது கனவில், ‘மன்னா நீ உன் உயரத்துக்கு ஒரு பொம்மை தயார் செய்து, அதனுள் துவரம் பருப்பு அளவுள்ள மாணிக்க கற்களை கொட்டி, உன் வியாதியை அதற்குள் இடம் மாற்றி, ஒரு பிராமணனுக்கு தானமாக கொடுத்து விடு. உன்னிடம் உள்ள அந்த வியாதி அந்த பிராமணனை சேர்ந்து விடும்’ என அசரீரி ஒலித்தது.\nஅந்த அசரீரியை தெய்வத்தின் கட்டளையாக ஏற்ற மன்னன், ஒரு பொம்மையை செய்தான். ஆனால் அந்த பொம்மையை எந்த பிராமணனும் வாங்க முன்வரவில்லை. இந்த தகவலை கர்நாடகாவில் உள்ள பிரம்மசாரி பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டான். இதனையடுத்து அவன் அங்கிருந்து புறப்பட்டு வந்து மன்னரிடம் இருந்து அந்த பொம்மையை வாங்கிக் கொண்டான்.\nபிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த காயத்ரி மந்திரத்தின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. ‘அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது’ என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி காயத்ரி மந்திரத்தின் பலனின் ஒரு பகுதியை கொடுத்து விட்டான். ஆனால் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது.\n‘வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக காயத்ரி மந்திரத்தின் பலனை தானம் செய்து விட்டோமே’ என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்த மாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க மாணிக்க கற்களை பொதுநலன் கருதி செல வழிப்பது என்று அவன் முடிவெடுத்தான். ‘என்ன நன்மை செய்யலாம்’ என்பதில் குழப்பம் வரவே, பொதிகை மலையில் வசித்து வரும் அகத்திய முனிவரிடம் சென்று யோசனை கேட்பது என்று முடிவு செய்தான்.\nபிறகு பொதிகை மலை சென்று அகத்தியரை சந்தித்தான். அவனது பிரச்சினையை அறிந்து கொண்ட அகத்தியர், ‘நல்ல விஷயங்களிலேயே தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அதன் வாலைப் பிடித்துக்கொண்டே செல். அது போகும் வழியை குறித்துக்கொள். அதன்படி கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங் களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு’ என்றார்.\nஅந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.\nமக்களுக்காக நல்லது செய்பவர்கள், தங்கள் பெயரை விளம்பரப்படுத்துவதில்லை. அந்த இளைஞனின் பெயரும் கூட இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு ‘கன்னடியன் கால்வாய்’ என்று பெயர் வைத்து விட்டனர். கன்னடத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், மலையாள மன்னனிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான்.\nஅந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்டது போலவே, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழையே இல்லை. கால்வாய் தண்ணீர் ஓடாமல், காய்ந்து போய் விட்டது.\nஉடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம் உடனே மழை கொட்டி தீர்த்தது. இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.\nஅவன் பிரதிஷ்டை செய்த விநாயகரே ‘மிளகு பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.\nமழை இல்லாத காலங்களில் இத்தலத்தில் வீற்றிருக்கும் விநாயகரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்து, அந்த புனித நீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும் என்பது ஐதீகம்.\nதிருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1957840", "date_download": "2018-08-20T18:11:00Z", "digest": "sha1:WXH7FRR2QPPNZEOQEEODCGUPC3WCKOAK", "length": 16109, "nlines": 89, "source_domain": "m.dinamalar.com", "title": "பள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது; ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபள்ளிகள் செயல்பாட்டில் தலையீடு இருக்காது; ஆசிரியர்களிடம் செங்கோட்டையன் உறுதி\nமாற்றம் செய்த நாள்: பிப் 13,2018 00:23\nசென்னை : ''பள்ளிகளை நல்ல முறையில் நடத்துங்கள். அதில், எங்கள் தலையீடு இருக்காது; வெளிப்படை தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கிய, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.\nஅரசு தொடக்கப் பள்ளிகளில், ஆண்டின், 210 வேலை நாட்களிலும், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, பாராட்டு நற்சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.\nதொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில் நடந்த விழாவில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய, 51 ஆசிரியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:மாநிலத்தில் உள்ள, 45 ஆயிரத்து, 120 பள்ளிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 51 பேர் மட்டுமே, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், பணிக்கு வந்துள்ளனர்.\nமற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.\nதொடக்கப் பள்ளிகளில், 37. 81 லட்சம்மாணவர்களில், 20 ஆயிரத்து, 739 மாணவர்கள் மட்டுமே விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு வந்துள்ளனர்.\nஇந்த எண்ணிக்கை உயர, பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும். பள்ளிகளை ஆசிரியர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும்; அதில், எங்களின் தலையீடே இருக்காது; வெளிப்படைத் தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\nஇந்த விழாவில், சால்வைக்கு பதிலாக புத்தகம் அளித்தனர். அதிலொரு புத்தகம், 'கண்டேன் புதையலை' என்ற தலைப்பில் இருந்தது. புதையலான கல்வியை மாணவர்களுக்கு தர, ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். அடுத்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. மாணவர்களுக்கு புதிய நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.\nபிளஸ் 2 படிக்கும், 70 ஆயிரத்து, 432 மாணவர்கள், போட்டி தேர்வு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, மார்ச், 20க்குள், இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும். அதில், போட்டி தேர்வு பயிற்சி பாடங்கள் இணைக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி, எட்டு கல்லுாரிகளில், தலா, 500 பேர் என, 4,000 பேருக்கு, உணவு, உறைவிடத்துடன், 25 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nகற்றல், கற்பித்தல்; பள்ளி இணை செயல்பாடுகள் மற்றும் பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதாக, மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம், 96 பள்ளிகளுக்கு சுழற்கேடயத்தையும், சான்றிதழையும், தலைமை ஆசிரியர்களிடம், செங்கோட்டையன் வழங்கி பாராட்டினார்.\nவிழாவில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் சிறப்புரையாற்றினார். தொடக்கக் கல்வி இயக்குனர், கருப்பசாமி வரவேற்றார். பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகநாதன், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், நந்தகுமார், இயக்குனர்கள், இளங்கோவன், கண்ணப்பன், இணை இயக்குனர்கள், பாஸ்கர சேதுபதி, ஸ்ரீதேவி, நாகராஜ முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅப்போ இனி பணி நியமனம், இடமாற்றத்துக்கு எல்லாம் லஞ்சம் வாங்க மாட்டீங்களாமா. அப்புறம் இது எப்படி அம்மா வழி ஆட்சின்னு சொல்லுவீக என்னப்பா இது கட்டிங் இல்லாத துறை எங்களுக்கு கசப்பாசே. அட போங்கப்பா.\nமற்ற வடஇந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நமது கல்வி ஒன்றும் அவ்வளவு தரம் தாழ்ந்தது இல்லை, நமது மாணவர்களும் மோசம் இல்லை, இருப்பதை இன்னும் மேம்படுத்தவே விமர்சனங்கள், அரசு மேலும் சிறப்பாக பணியாற்றினால் நன்றாக இருக்கும்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா\nஇதே வாய் தான.... “தொண்டர்கள் சொல்லும் நபர்கள் மட்டுமே அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவார்....”ன்னு சொல்லிச்சு...\nஉருப்படாத அரசியல் செய்யாமல் தனது துறையை நன்கு நிர்வகிக்கும் இவர் ஒரு 'தனி மனிதன்'.\nபதவியை விட்ட போன ஒரு கட்சி கவுன்சிலரை கேட்டு பாருங்கள்...அவர் கூட நாங்கள் தலை இடமாட்டோம் என்றுதான் சொல்லுவார்..\nஎல்லா கல்வி அலுவலகங்களும் காசு இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது என்பது செங்கோட்டையனுக்கு தெரியாமல் இல்லை.\nஅதிமுகவில் செங்கோட்டையன் மட்டும் தான் பணியாற்றுகிறார். பேசாமல் பழனிக்கு பதில் செங்கோட்டையனை முதல்வர் ஆக்கலாம்.\nசித்துவுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு\nதி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் யார்\nமீண்டும் பா.ஜ. ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்\nகேரள வெள்ளம்: அதிதீவிர பேரிடராக அறிவிப்பு\nகேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othertech/03/123614?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:13:27Z", "digest": "sha1:4QXWAYXJOEFZGXIXMM7EFE5DDQUHB6ZT", "length": 8420, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்து தமிழர் சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்து தமிழர் சாதனை\nஎய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்ஐவி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார்.\nஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை ஆராய்ச்சியாளர் 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஇவர் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி-ஐ அளிக்கும் மருந்தினை அஸ்கந்தா மற்றும் வல்லாரை மூலிகையில் இருந்து தயாரித்துள்ளார்.\n2008 முதல் 2011 ஆண்டு வரை இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸினை அழிக்கும் மருந்தினை தயாரித்துள்ளார்.\nஈரோட்டில் உள்ள பெருந்துறை மருத்துவ கல்லூரி, சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகம், மும்பையில் உள்ள ரெலிகேர் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வினை மேற்கொண்டு தயாரித்துள்ள இந்த மூலிகை மருந்தினை எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇந்த மூலிகை மருந்தினை மூன்று மாதங்களுக்கு உட்கொண்டால் நோய் ஆற்றல் அதிகரித்து எச்ஐவி, எச்பிவி கிருமிகள் அழிக்கப்படுகிறது. மிக குறைந்த செலவில் இந்த மருந்தினை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார்.\nமேலும் நீரிழிவு நோயிற்கு திரிபலா மற்றும் நன்னாரியினை கொண்டு மூலிகையினை தயாரித்துள்ளார். தொடர்ந்து 4 மாதங்கள் இதனை உட்கொண்டால் நீரிழிவு நோய் முற்றிலும் குணப்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.allnews.in/all-news/breaking-news/short-news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/337345", "date_download": "2018-08-20T18:38:47Z", "digest": "sha1:XIAYZ2IJAX7E33BEJ6EXGBMXNJ3Z47B6", "length": 6734, "nlines": 73, "source_domain": "tamil.allnews.in", "title": " Allnews : முத்தலாக்-தடை-சட்டம்-ஸ்டாலின்-எதிர்ப்பு", "raw_content": "\n - முகப்பு » அனைத்து செய்திகள் » தற்போதைய செய்திகள் » செய்திச் சுருக்கம்\nமுத்தலாக் தடை சட்டம்: ஸ்டாலின் எதிர்ப்பு\nசென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: முத்தலாக் தடுப்பு சட்டத்தை மத்திய பா.ஜ., அரசு அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது 3 வருட சிறை தண்டனை என்ற கடுமையான பிரிவை சேர்த்து இருப்பதில்இருந்து இஸ்லாமிய பெண்களின் நலனில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. மாறாக சட்டம் இயற்றுவதில் காட்டியிருக்கும் இந்த அவசரம் உள்நோக்கம் நிரம்பியதாக இருக்கிறது. இந்த மசோதாவை பார்லிமென்ட் நிலை குழுவிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்...\nமுழு செய்திக்கு தினமலர் »\nயோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சென்னை பெண்மணி\nமன்மோகன் சிங்கின் தவறான புரிதலால் சிறைக்கு சென்றேன்: ர�\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான வழக்கு �\nரஜினிக்கு அரசியல் சரிப்பட்டுவராது: சொல்கிறார் அமைச்ச�\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nஇந்தப் பிரிவிலிருந்து மேலும் செய்திகள்\nபழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கேட்டத�\nஇலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்\nசோமனூர் விபத்து: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்\nதினகரன் கனவு காண்கிறார்: ஓ.பி.எஸ்.,\nமுதல்வர் பழனிசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை\nமேலும் மாநில செய்திகள் வகையில்\nஎம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் தினகரன் - தலைமை செயலகத்தில் ப�\nதினகரன் பதவியேற்பு: ஊட்டிக்கு ஓட்டம்பிடித்த அமைச்சர்க�\nவிறுவிறுவென வெளியேறிய சசிகலா: தினகரன் சந்திப்பில் நடந்\nயோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சென்னை பெண்மணி\nஜெ. வீடியோவில் எனக்கொரு சந்தேகம் - ஆனந்தராஜ் பரபரப்பு பே\nவிரைவுத் தேடல் (Quick Links)\nமீண்டும் மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது உங்களுக்கு தெரியுமா - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும். Allnews.in இப்பொழுது ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. தங்களின் கருத்துக்களை தெரிவிக்க feedback@allnews.in -ஐ தொடர்பு கொள்ளவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/cinema/96873", "date_download": "2018-08-20T18:06:31Z", "digest": "sha1:O5HDAOREAQISM7FDYY6ES7ZSARYM74LX", "length": 6676, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "நடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி! சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு..", "raw_content": "\nநடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி\nநடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி\nநடிகரும், ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் தமிழ்ச்சமூகத்தின் எதிரி ; விரோதி என ரஜினியை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற நடிகர் ரஜினி, போராட்டத்தை தூண்டி விடுபவர்கள் சமூக விரோதிகளே என கருத்து தெரிவித்திருந்தார். சமூக - அரசியல் தளத்தில் ரஜினியின் கருத்து கடும் கொந்தளிப்பினை உண்டாக்கியது.\nஇந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த சீமான், \"தங்கள் உரிமைகளை காத்துக்கொள்ள போராடிய மக்களை சமூக விரோதிகள் என சித்தரிக்கும் நடிகர் ரஜினியே ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கு எதிரி ; விரோதி. அவரை ஒருபோதும் அரசியல் தளத்தில் ஏற்க மாட்டோம்\" என தெரிவித்துள்ளார்\nநடிகர் விக்ரம் மகன் கார் விபத்துபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடும் காட்சி\nதமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்; ரஜினிக்கு எதிராக இலங்கை வாழ் தமிழர்கள்..\nரஜினி, கமலுக்கு எத்தன சதவீதம் ஆதரவு\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் – ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nநடிகர் விக்ரம் மகன் கார் விபத்துபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடும் காட்சி\nநயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:19:10Z", "digest": "sha1:R64CNIWYYARPNLKZ5LKLNKSUCVYZVPMH", "length": 10688, "nlines": 222, "source_domain": "tamilnool.com", "title": "தித்திக்கும் திருப்பகழ் பாராயணப் பாடல்கள் (உரை விளக்கத்துடன்) - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nதித்திக்கும் திருப்பகழ் பாராயணப் பாடல்கள்\nதித்திக்கும் திருப்பகழ் பாராயணப் பாடல்கள்\nகந்தரலங்காரம் மூலமும், உரையும் ₹50.00\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும் ₹70.00\nதித்திக்கும் திருப்பகழ் பாராயணப் பாடல்கள்\nBe the first to review “தித்திக்கும் திருப்பகழ் பாராயணப் பாடல்கள்” மறுமொழியை ரத்து செய்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும்\nபட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nபவித்ர ஞானேச்வரி பாகம் 3 அத்தியாயம் 15 முதல் 18 வரை (பழகு தமிழில் பகவத்கீதைக்கு பவித்ரமான ஓர் உரை) (Copy)\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/f44-forum", "date_download": "2018-08-20T18:33:23Z", "digest": "sha1:Z2CCJ7IQOIPUWFY2ZEUVKTDITMMRMH7U", "length": 24596, "nlines": 352, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காதல் கவிதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: வித்யாசாகரின் இலக்கிய சோலை :: கவிதைகள் :: காதல் கவிதைகள்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநீயும் நானும்தான் கட்டினோம்; ஓட்டை ஓட்டையாய் அந்த வீடு - கவிதை - வித்யாசாகர்\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. - வித்யாசாகர்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமரணம் இரைந்த தெருக்கள்.. - வித்யாசாகர்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅவன் வருகை நோக்கிய; கண்களிரண்டு\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nசங்கதி சொல்லும் சங்கீதம் காதல்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஅவள் கொடுத்த தேநீரில்; முத்தமும்; முத்தமும் - வித்யாசாகர்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. - வித்யாசாகர்\nதெருமுனையில்; நின்று பார் போதும்\nகண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\n28 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\n31 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\n33 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\n32 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\n30 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\n29 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\n27 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..\nபறக்க ஒரு சிறகை கொடு.. 2\nபறக்க ஒரு சிறகை கொடு.. 1\nபறக்க ஒரு சிறகை கொடு.. 5\nபறக்க ஒரு சிறகை கொடு.. 4\nபறக்க ஒரு சிறகை கொடு.. 3\nபறக்க ஒரு சிறகை கொடு.. 1\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, வித்யாசாகர், கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45447-man-trapped-inside-pumping-station-pipe-in-odisha-rescued.html", "date_download": "2018-08-20T18:45:04Z", "digest": "sha1:PUGDPGLIUFA5H7VMAB7ATCWMLDXWV63S", "length": 10646, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழாய்க்குள் விழுந்த நகராட்சி ஊழியர்: 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்பு | Man trapped inside pumping station pipe in Odisha, rescued", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகுழாய்க்குள் விழுந்த நகராட்சி ஊழியர்: 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மீட்பு\nஆழ்துளை பைப்புக்குள் விழுந்த நகராட்சி ஊழியர் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.\nஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்தார் பிரணகுருஷ்ணா முடுலி. இவர் அங்குள்ள நீரேற்று நிலையத்தில் ஊழியராகப் பணியாற்று கிறார். வழக்கம் போல நேற்றும் பணிக்கு சென்றார். தண்ணீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அதை சரி செய்யுமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அதைச் சரி செய்ய சென்றார். அப்போது திடீரென்று தடுமாறி இரண்டரை அடி அகல குழாய்க்குள் விழுந்துவிட்டார். விழுந்ததுமே 25 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டார்.\nஇதைக் கண்டதும் அவருடன் பணியாற்றியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அது எளிதானது அல்ல என்பதால், ஒடிசா மாநில பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, முடுலியிடம் தைரியமாக இருக்கும்படி சக தொழிலாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். பின்னர் விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் குழாய்க்குள் ஆக்ஸிஜனை செலுத்தினர். அதற்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அக்கம் பக்கத்து மக்களும் அங்கு திரண்டனர்.\nமுடுலி விழுந்த குழாய்க்கு அருகில் பெரும் குழிதோண்டி அவரை உயிருடன் மீட்டனர். இந்த மீட்புப் போராட்டத்துக்கு 7 மணிநேரம் ஆனது. மீட்புக்குழுவுக்கு முடுலியும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் கட்டாக்கில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.\nஎடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nநிலக்கரி பிரச்னை: தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாதிய கொடுமையால் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட பெண் சடலம்\nஆரம்ப சுகாதார மையத்தில் 10 அடி பாம்பு : அலறிய ஊழியர்கள் \nதிருமணத்திற்கு வித்தியாசமான கண்டிசன் போட்ட மாப்பிள்ளை: இன்ப அதிர்ச்சியில் மணப்பெண்..\nகணவரின் லட்சியத்தை நினைவாக்கிய ‘காடுகளின் தாய்’\nபூரி ஜெகநாதர் கோயில் கருவறைச் சாவிகள் மாயம்: விசாரணைக்கு உத்தரவு\nஅக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி\nநான்கு ஆண்டுகளில் 4749 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: நவீன் பட்நாயக்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி.. 8 நாள் போராட்டத்திற்கு பின் உயிரிழப்பு\nபொறாமையால் வந்த வினை: குண்டு தயாரித்து புதுமாப்பிள்ளைய கொன்ற பேராசிரியர்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nநிலக்கரி பிரச்னை: தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Articles_with_changed_CASNo_identifier", "date_download": "2018-08-20T18:32:44Z", "digest": "sha1:KGXQA55XA6LNOKG4U2EOXPYJ7VALDVBU", "length": 15918, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Articles with changed CASNo identifier - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 319 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nகாமா அமினோ புயூட்டைரிக் காடி\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2015, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/11/blog-post_5227.html", "date_download": "2018-08-20T18:04:49Z", "digest": "sha1:3EI44G4KDQTDQTWOWRU2QJIRURTS5UTF", "length": 8810, "nlines": 248, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: அப்பாவின் எருமைமாடு", "raw_content": "\nகோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம்\nஅப்பாவின் அந்த ஒரு மாட்டிற்குத்தான்\nஇதயம் நின்று மீண்டதும் தெரியும்\nஏன் என் சிகரெட்டைத் திருடினாயென\nஆனாலும் அப்பா ஊரறியச் சொல்வார்\nஉண்மையிலேயே எருமை புகைத்த தினத்தன்று\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஎன் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ\nஎன்னை உற்று உற்றுப் பார்க்காதே\nஒரு பூனையின் அந்தரங்க வாழ்க்கை\nயானை பற்றி அல்ல யானை\nஎன் தேவதைக்கு ஒரு ஆஸ்ப்ரின்\nதன் நிழலை சுமந்து திரிபவன்\nபழைய காதலியின் புது நண்பன்\nஎனக்கொரு யானை வேண்டும் உடனடியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/11/blog-post_10.html", "date_download": "2018-08-20T18:49:33Z", "digest": "sha1:2CXAPKWY672CNV3UKXIIZYLUCZROVUFG", "length": 41647, "nlines": 190, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: அரஃபா நோன்பு", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.\nஇந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.\nஅபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,\nதுல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.\nஅரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.\n'அரஃபா நோன்பு' - பிறை ஒன்பதிலா அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா\nஉலகம் முழுதும் அனைவரும் ஒரே நாள் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற தேவையற்ற சிந்தனைகளும் அறிவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கும் போக்கும் சமீப காலமாக‌ சிலரிடம் உருவாகி, அதனால் அவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களின் காரணத்தால் எழும் கேள்வியே இது\nநாம் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வின் கட்டளையிலோ, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலோ எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் கவனமாக பார்ப்போமானால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய்விடும்.\nஇஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்காலமும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்\nஎனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற அண்ணல் நபியவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:\n\"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்\" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.\n) உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக\nமேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.\n\"நீங்கள் 'நோன்பு' என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். 'நோன்புப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாளாகும். 'ஹஜ்ஜுப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்\" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதுல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 - ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் 'ஒன்பதாவது நாள்' என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.\n\"நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்\" என்று ஹுனைதா இப்னு காலித்(ரலி) அறிவிக்கிறார்கள்.\nநூல்கள்: அபூதாவூத், நஸாயி, அஹ்மத்\n\"துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\" என்று அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅதேசமயம் 'ஒன்பதாம் நாள்' என்று குறிப்பிட்டு சொல்லாமல் 'அரஃபா நாள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதுல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு 'அரஃபா நாள்' என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள், 'அரஃபா நாள்' என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு 'அரஃபா நாள்' என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்\n'டெலிஃபோன் வசதிகளோ, லைவில் பார்ப்பது போன்ற வசதிகளோ, ஈ-மெயில்/எஸ்.எம்.எஸ் வசதிகளோ இல்லாத காலமாக இருந்ததால் அவர்களால் தகவல் அறிந்துக் கொள்ளமுடியவில்லை' என்றும், 'நமக்கு இன்றைய காலகட்டத்தில் உடனுக்குடன் அறியக்கூடிய எல்லா வசதிகளும் இருப்பதால் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளைக் கணக்கிடுவதற்காக நாம் சவூதியின் முதல் பிறையை அறிந்துக் கொண்டு, சவூதியின் 9 வது பிறையில் அரபா நோன்பை நோற்றுக் கொள்ள வேண்டியதுதான்' என்றும் தங்களின் இஷ்டத்துக்கு மார்க்கத்தில் விளையாடுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை இறையச்சமுள்ள‌ ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்படுவதால் மார்க்கத்தின் சட்டங்கள் கியாம (இறுதி)நாள் வரையிலும் மாறப்போவதில்லை.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் விஞ்ஞான வசதிகள் இல்லாவிட்டாலும், மக்காவில் முதல் பிறைக் காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்துவர‌ வசதிகள் இருந்தன. அப்படியிருந்தும் கூட‌ நபி(ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை. அதாவது அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை/மக்காவில் எப்போது முதல் பிறை என்பதை விசாரித்து வருவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஹாஜிகள் எப்போது அரஃபாவில் தங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான், மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள்.\nஎனவே அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்பது சவூதியில் பிறைப் பார்த்த கணக்குப்படி நமக்கு எட்டாம் நாளாகக்கூட‌ இருக்கலாம். நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை. 'அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடியதை உறுதி செய்துக்கொண்டு நோன்பு வையுங்கள்' என்று எங்குமே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆக, மதீனாவில் வாழ்ந்த நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உள்ள நிலையைப் பின்பற்றத் தேவையில்லை என்று எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ, அவ்வாறுதான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நாம் நம் பகுதியில் பிறைப் பார்த்த கணக்குப்படிதான் ஒன்பதாம் நாளில் அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.\nஆக‌வே, நபிவழியின் அடிப்படையில் இந்த அர‌ஃபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக\nLabels: இஸ்லாம், சட்டங்கள், நோன்புகள்\nஇநோன்பை எங்கள் வீட்டில் யாரும் விடுவதில்லை.\n//இநோன்பை எங்கள் வீட்டில் யாரும் விடுவதில்லை//\n அப்படியா... இன்ஷா அல்லாஹ் நம் ஆயுள் முழுதும் இதுபோன்ற நன்மைகளைத் தொடர அல்லாஹ்தஆலா உதவி செய்வானாக\nஅஸ்மா நாங்களும் இந்த நோன்பை பிடிப்போம்.\n//அஸ்மா நாங்களும் இந்த நோன்பை பிடிப்போம்.\nஇன்ஷா அல்லாஹ் நாளை நாம் எல்லோரும் இந்த நோன்பு வைத்திருப்போம் :) அல்லாஹ்தஆலா அதற்குரிய முழுமையான கூலியை நம்மனைவருக்கும் தந்தருள்வானாக\nநல்ல விளக்கமான ப்கிர்வு அஸ்மா..\nஅரஃபா நோன்பைப் பற்றி தெரிந்துகொண்டோம்.. தங்கள் வலையில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் இஸ்லாத்தை பற்றி நன்கு புரிந்துக்கொள்ள கூடிய வகையில் எளிமையாக பதிவிட்டுள்ளீர்கள்.. பாராட்டுகள்..\nநான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..\nமாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்\nதயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nஎமது வலைப்பூ உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் அறியத் தாருங்கள்.. நன்றி சகோதரரே\nஅடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.\n//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும் ஒவ்வொரு விநாடியும் “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////\nபிறை சாதாரணமாக த்விதியை அன்று தெரியும். அதிலிருந்து 9-ஆவது நாள் என்றால் ஏகாதசி அன்று ஈத் வரும் அல்லவா. இந்த வருடம் அது துவாதசியன்று (திங்கள்) காலண்டரில் குறிக்கப் பட்டுள்ளது. ஆனால், அன்று காலையில் ஏகாதசி உள்ளது. ஆனால் காலண்டர்கள்/பஞ்சாங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. பஞ்சாங்கங்களில் ரேகை அடிப்படையில் அந்தந்த தேசங்களில் நேரம் மாற்றிக் கொள்ள ஓர் அட்டவணை இருந்தாலும் யாரும் பொதுவாக அதை கவனிப்பதில்லை. உங்களுக்கு அந்தந்த பகுதி இமாம்களே பிறை பார்த்துச் சொல்லிவிடுவதால் இது போன்ற பிரச்சனை இல்லை. அதை பின்பற்றி நோன்பு இருக்கலாம்.\nசகோ சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு\nஇன்ஷா அல்லாஹ் அன்றைய நாளில நோன்பு நோற்க அல்லாஹ் அருள் புரியட்டும்\nபெருநாள் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க அனுமதியில்லையென., ஹதிஸ் அறிந்திருக்கிறேன்\nஇன்ஷா அல்லாஹ் அதுக்குறித்து விளக்கம் தரவும்\nஅஸ்ஸலாமு அலைக்கும், நல்ல பயனுள்ள கட்டுரை. பகிர்ந்து கொண்டமைக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானக என்று துவா செய்கிறேன். இந்த கட்டுரையை எனது தளத்தில் இட்டுக்கொள்ளலாமா\n//பகிர்ந்து கொண்டமைக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானக என்று துவா செய்கிறேன்//\nதுஆவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ.\n//இந்த கட்டுரையை எனது தளத்தில் இட்டுக்கொள்ளலாமா\nதாராளமாக உங்கள் தளத்திலும் இதை பதிவு செய்யுங்கள்.\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... 'அரஃபாவில் இருப்போர் நோன்பு நோற்கத்தடை' என்பதால், அந்த அன்றுதான் அரஃபாவில் இல்லாத (உலகின் மற்ற பகுதிகளில் உள்ள)வர்கள் நோன்பு நோற்கவேண்டும் என்ற சட்டத்தை எங்கிருந்து எடுத்தீர்கள் சகோதரி ஒரு விஷயத்தை தடை செய்த அல்லது அனுமதித்த நபி(ஸல்) அவர்கள், தங்கள் வாழ்வில் எவ்வாறு அதற்கு செயல்விளக்கம் கொடுத்தார்கள் என்று பார்க்கவேண்டாமா\nஇங்கே அரஃபா நோன்பின் சிறப்பைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறியுள்ளதால், அந்த சிறப்புகளை முன்னிறுத்தி அரஃபாவில் தங்கியிருக்கும் ஹாஜிகளும் அதை நோற்றுவிடக் கூடாது என்பதால் அந்தத் தடையை அவர்களுக்கு அறிவிக்கிறார்களே த‌விர, அதே அன்றுதான் மற்ற‌வர்களும் நோன்பு நோற்கவேண்டும் என்பதற்காக அல்ல அதேபோல் ஹாஜிகள் கூடியிருக்கும் அன்றுதான் அரஃபா நோன்பை நிறைவேற்றவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை; அதற்கு செயல்வடிவம் கொடுக்கவுமில்லை; அப்படி ஒரு வழிகாட்டுதலுக்கான எந்த ஒரு முயற்சியும்கூட அவர்கள் செய்ததுமில்லை. அப்படியொரு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். தலைப்பிறைக் கண்டு 9-வது நாள்தான் அரஃபா நோன்பை மற்ற‌வர்கள் நோற்கவேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதல் இருக்க, ஹாஜிகள் அரஃபாவில் கூடிய அன்றுதான் நோற்கவேண்டும் என்பதற்குரிய‌ எந்த முகாந்திரமும் இல்லாமல் பிடிவாதம் செய்யக்கூடியவர்களுக்கு அல்லாஹுதஆலா விரைவில் தெளிவு கொடுக்கவேண்டும் என பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை சகோதரி.\nநபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிப்படி பிறைக் கணக்கை சரியான முறையில் பின்பற்றுபவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் கியாமத் நாள்வரை எந்த குழப்பமும் இருக்காது. 'குழப்பம்' என்பது இஸ்லாம் கூறும் பிறைப் பார்த்தலை நீங்கள் புரிந்துக் கொண்ட விதத்தில்தான் உள்ளது :) நடுநிலையோடு மீண்டும் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். பிறைப் பார்த்தல் சம்பந்தமாக மேலே கொடுத்துள்ள லிங்குகளையும் க்ளிக் பண்ணிப் பாருங்கள். அல்லாஹ் போதுமானவன்\n//நல்ல விளக்கமான ப்கிர்வு அஸ்மா..//\nஅல்ஹம்துலில்லாஹ்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா\n//அரஃபா நோன்பைப் பற்றி தெரிந்துகொண்டோம்.. தங்கள் வலையில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் இஸ்லாத்தை பற்றி நன்கு புரிந்துக்கொள்ள கூடிய வகையில் எளிமையாக பதிவிட்டுள்ளீர்கள்.. பாராட்டுகள்.. நன்றி சகோதரரே..\nஇஸ்லாத்தை எளிமையான முறையில் நீங்கள் இங்கே புரிந்துக் கொள்வதில் ரொம்ப சந்தோஷம் சகோ. உங்களால் முடியும்போதெல்லாம் வந்து பாருங்கள்.\n//நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..\nபாலோவராக இணைந்ததற்கும் உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி. உங்கள் வலையையும் நிச்சயமா பார்வையிடுகிறேன் சகோ.\n//அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை//\n சுயநினைவு உள்ளவரை ஒரு நாளைக்கு ஐவேளையும் தவறாமல் இறைவனை தொழவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளையை மனதிருப்தியோடு நிறைவேற்றும் மக்கள் பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி சகோ.\n//உங்களுக்கு அந்தந்த பகுதி இமாம்களே பிறை பார்த்துச் சொல்லிவிடுவதால் இது போன்ற பிரச்சனை இல்லை//\nஅந்தந்த பகுதிகளில் பிறை பார்த்துச் சொல்வதால் எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லை என்பதை புரிந்துக் கொண்டதற்கும், உங்களின் முதல் வருகைக்கும் நன்றிகள் சகோ.\n//பெருநாள் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க அனுமதியில்லையென., ஹதிஸ் அறிந்திருக்கிறேன்\nஇன்ஷா அல்லாஹ் அதுக்குறித்து விளக்கம் தரவும்//\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வருடத்தில் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகியவையும் மற்றும் ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து வரும் 'அய்யாமுத் தஷ்ரீக்' எனப்படும் 3 நாட்களும் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களாகும். கூடுதல் விபரங்களுக்கு,\nசுன்னத்தான நோன்புகளும் நோன்பு நோற்கக் கூடாத நாட்களும்\nஇந்த‌ லிங்கைப் பாருங்க சகோ.\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A/", "date_download": "2018-08-20T18:19:14Z", "digest": "sha1:T7LGMCXSIXXJRY6NZTRG2B2V4FLGAYJQ", "length": 10857, "nlines": 220, "source_domain": "tamilnool.com", "title": "ஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி ஆராதனையும் உபாஸனையும் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி\nவரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம் ₹150.00\nருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் பத்து ₹750.00\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி\nBe the first to review “ஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி” மறுமொழியை ரத்து செய்\nமன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப்\nதிருப்பாவை – திருவெம்பாவை (மூலமும், உரையும்)\nஇந்து சமய தத்துவங்கள் 500\nவரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை\nஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம் சாவித்ரி\nஇந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/f45-forum", "date_download": "2018-08-20T18:34:04Z", "digest": "sha1:UML76HKRTEW5PUOI6GQTILOKKVUN7KKR", "length": 27980, "nlines": 442, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "கணனி விளையாட்டுக்கள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை :: கணனி விளையாட்டுக்கள்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)\nAngry Birds Go இன் புதிய பதிப்பு அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nHUNT FOR HINT 2 - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகட்டாயம் பாருங்கள் - Surprise - நீங்கள் விரும்புவீர்கள்\nஉங்கள் மூளைக்கு ஒரு சின்ன டெஸ்ட் - முயன்று பாருங்கள்\nஉங்கள் மூளைக்கு இரண்டாவது டெஸ்ட் - முயன்று பாருங்கள்\nசொடுக்கினால் சாவி கிடைக்கும் - சொர்க்கம் பார்க்க ஆசையா\nஇதைப்பாருங்களேன் - வேடிக்கையாக இல்லை\nஅறிவையும் ஆர்வத்தையும் தூண்டும் விளையாட்டு இலவசமாக விளையாடலாம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇணையத்தில் விளையாடலாம் ஆடு புலி ஆட்டம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nவிளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு\nTHE INCREDIBLES SAVE THE DAY அருமையான விளையாட்டு விளையாடி பாருங்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nAVATAR விளையாட்டு விளையாடி மகிழுங்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nFamily Guy ஐ விளையாடி பார்த்து vote போடுங்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகாதலர் தின சிறப்பு கவிதை-அதிரூபவதிக்கு\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nபூம் பூம் வாலிபால் விளையாடலாம்\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\n பசுமாட்டின் அட்டகாச விளையாட்டு - Supercow\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nAngry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nகணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதோட்ட நாயகன்(ந.கார்த்தி) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\n300 அதிகமான கணனி விளையாட்டுகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t52697-topic", "date_download": "2018-08-20T18:32:26Z", "digest": "sha1:MQDRPH5LB5CJOSPUSHRXLQB7VON7TGZW", "length": 64207, "nlines": 659, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தமிழ் பொன்மொழிகள் !!!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: பொன் மொழிகள்\nநோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,\nநம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,\nநம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்\nமுழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;\nஉலகம் உன்னை விழுங்கி விடும்.\nதவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி\nஎந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது\nஎந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.\nஉங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.\nஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்\nமுட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.\nஎவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.\nஎதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.\nஅவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.\nநீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.\nவாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.\n* பேதை 1 முதல் 8 வயது வரை\n* பெதும்பை 9 முதல் 10 வயது வரை\n* மங்கை 11 முதல் 14 வயது வரை\n* மடந்தை 15 முதல் 18 வயது வரை\n* அரிவை 19 முதல் 24 வயது வரை\n* தெரிவை 25 முதல் 29 வயது வரை\n* பேரிளம் பெண் 30 வயது முதல்\nஉங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ளை ச‌ந்தேக‌ப்ப‌டுங்க‌ள் உங்க‌ள் ந‌ம்பிக்கைக‌ளை ந‌ம்புங்க‌ள்.\nகாலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.\nசில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.\nசில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.\nநீ வெளிநாடு போகிறாய், ஒரு மறைமுக நண்பன் உன்னோடு வருவான். அவன் நீ கற்ற வித்தை. வீட்டிலே இருக்கிறாயா உனக்கருகே ஒரு தோழன் அவன் தான் உன் மனைவி. நீ வியாதியில் படுத்திருக்கிறாயா உனக்கருகே ஒரு தோழன் அவன் தான் உன் மனைவி. நீ வியாதியில் படுத்திருக்கிறாயா உன் அருகில் ஒரு தோழன் இருக்கிறான். அவன் தான் வைத்தியன். நீ மரண படுக்கையில் இருக்கிறாயா உன் அருகில் ஒரு தோழன் இருக்கிறான். அவன் தான் வைத்தியன். நீ மரண படுக்கையில் இருக்கிறாயா உன் அருகே ஒரு தோழன் காத்திருக்கிறான், யாத்திரையில் கூட வருவதற்கு. அவன் தான் நீ செய்கிற அருள்” - வியாசக முனிவர்.\nவாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி\nஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.\nஅரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்\nஇன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்\nநேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.\nஇன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே\nஎன்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.\n”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.\nஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”\nசன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,\nதற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”\n”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”\nஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.\nஇரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.\nஎங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.\nபின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.\nநீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.\nமுன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..\nரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.\n இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.\nமகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.\nபயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.\nஅப்பன் எத்தனை உயரமாயிருந்தாலென்ன நீ உயர நீ தான் வளரவேண்டும்\nஎதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்\n”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ\nஅதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.\nஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது\nஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்\"\n”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.\nஎன்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்\nஎன் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”\n-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.\nஇவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.\nஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி\nஉன் தொப்பியிடமும் யோசனை கேள்\nஎல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.\nஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.\nஉலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.\nஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.\nஅந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா\nஅடிச்சு யாரைத் திருத்த முடியும்\nஇன்றைக்கு மட்டுமே நம் கையில்\nஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,\nகடனை நாமம் சாத்தினால் என்ன\nதுக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.\nஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.\nபெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.\nமுட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.\nசிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்\nஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது, “இது நல்ல காலந்தானா” என்று சிந்திப்பானா பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்\nஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்\nஒரு கடமை - நிறைவேற்றுங்கள்\nஒரு இலட்சியம் - சாதியுங்கள்\nஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்\nஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்\nஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்\nநீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்\nநாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்\nஇன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்\nஎதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.\nஏதாவது செய் ஏதாவது செய்\nஉன் மனம் உன்னைச் சும்மா விடாது.\nசரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை\nநம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.\n2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,\n4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.\nபோதும் என்று சொல்லாத நான்குமுண்டு.\n2.விரும்பின பதார்த்தங்களெல்லாம் கிடைத்த முட்டாளினிமித்தமும்,\n3.பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணினிமித்தமும்,\n4.தன் எஜமானிக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.\nபூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.\n1.அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு,\n2.சக்தியற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டிவைக்கும் குழிமுயல்கள்,\n3.ராஜா இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்,\n4.தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சி.\n1.மிருகங்களில் சக்திவாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கம்,\n4.ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா.\nஎல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.\nஒன்று காலம், இன்னொன்று மெளனம்.\nசூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.\nஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி\nஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)\nஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)\nஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி\nவெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;\n2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.\n3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.\nநன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்\n3. பதிலுக்கு உதவி செய்தல்.\n2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.\n3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.\n1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.\n2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.\n3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.\nஉயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்\n1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.\n2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.\n3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.\nநான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.\nஅங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு\nநிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”\nசந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,\nசொந்தத்தை நம்பி நீ இருக்காதே,\nபந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.\nதுன்பமும் வேதனையும் என உலகம்\nவிட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.\nதட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.\nமனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.\nமரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை-சீனப்பெரும் தலைவர் மாவோ\nசேயோடு தான் பெற்ற செல்வம் போம்.\nஉறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.\nஉடன் பிறப்பால் தோள்வலி போம்.\nபற்றற்றவர்களாக இருங்கள்.அதற்காக காட்டுக்குள் சென்றுவிடாதீர்கள்-மாத்யூ கிரீன்\nநாளைய மழை அறியும் எறும்பாய் இரு\nநேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்\nதெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது\n”நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு எண்ணச் சொல்லிக்\nகொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல்\nமனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது\nநடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.\nஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.\nஉண்மையான இன்பம் அளிக்கும் செயல்.\nஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.\n\"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி\nஅதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.\n\"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்\nகுறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.\"\nஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது\nவாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.\nபிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.\nபிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\nபிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.\nஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு\nவெளியில் வரும் போது மனிதனாக இரு.\nதங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;\nதன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்\nஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது\nஎன்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை.\nஎன்னால் மட்டுமே முடியும் என்பது அகம்பாவம்.\nநான் அதன் பளிங்குச் சுவர்களைத்\nவிரும்புவேன். எனக்குச் சுதந்திரமே, தேவை - டிரைடன்\nஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும்.\nஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.\nநாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை\nஎதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்\nஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்\nஊக்கு விற்கும் ஆள் கூடத்\nஒரு விளக்கு இன்னொரு விளக்கை\nஏற்றுவதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.\nஅதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது.\nஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது\nதாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது,\nநீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ\nநீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ\nவியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம்.\nஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.\n\"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்…\"\n\"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது…….\"\n\"உன் மனத்தின் உயரமே… உன் வாழ்க்கையின் உயரம்…\"\nநீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்\nஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்\nஉன் வெற்றிக் கதையைப் படிக்கக்\nஉங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றி.\nதொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;\nதொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்\nவேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.\nஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது\nஒரே ஒரு கோடைகாலம் எனக்கு அளி\nமெலிதான கானங்கள் நிறைந்த ஒரே ஒரு\nஅந்த கானங்களை நிரப்பிக் கொண்டபின்\nமுன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.\nகாற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.\nஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.\nஇவற்றுக்கெல்லாம் பொதுவான ஒரு தன்மை உண்டு.இலேசில் புரியாது.\nசிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.\nஅருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.\nநீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்\nஉங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்\nஉங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்\nஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள்.\nநடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும்.\nமௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.\n- 1986-ல் சமாதான நோபல் பரிசு பெற்ற ஏலிவீசெல்\nமனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.\nசிலசமயம் சுவர்களையும் ஊடுருவி காண்கிறேன்.\nஎன் கையின் ரேகைகள் மட்டும் புரியவில்லை இன்னும்.\nமனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்\n* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை\n* மிக மிக நல்ல நாள் - இன்று\n* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு\n* மிகவும் வேண்டியது - பணிவு\n* மிகவும் வேண்டாதது - வெறுப்பு\n* மிகப் பெரிய தேவை - நம்பிக்கை\n* மிகக் கொடிய நோய் - பேராசை\n* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்\n* கீழ்த்தரமான விடயம் - பொறாமை\n* நம்பக் கூடாதது - வதந்தி\n* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு\n* செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்\n* செய்யக் கூடியது - உதவி\n* விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்\n* உயர்வுக்கு வழி - உழைப்பு\n* நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு\n* பிரியக் கூடாதது - நட்பு\n* மறக்கக் கூடாதது - நன்றி\nஇவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்\nபெண்களை ஆண்கள் காவல் புரிவதால்\nவன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.\nதங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: பொன் மொழிகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t52752-topic", "date_download": "2018-08-20T18:34:06Z", "digest": "sha1:YJ4RGDZXSFUXO53FMNCEAUC77SQ7W4ZD", "length": 19379, "nlines": 162, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "குஜராத்தில் பெண் கைதிகள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகுஜராத்தில் பெண் கைதிகள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகுஜராத்தில் பெண் கைதிகள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு\nகுஜராத் மாநிலத்தில் சிறையில் சுகாதாரத்தை மேம்படுத்தும்\nவகையில் பெண் கைதிகளுக்கு இலவசமாக சானிட்டரி\nகுஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் ஏராளமான பெண்\nகைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண் கைதிகள்,\nமாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக இருக்கும் வகையில்,\nநாப்கின் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும்\nபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் சிறையில்\nஇருக்கும் பெண் கைதிகள் பயன்படுத்தும் வகையில்\nஇலவச நாப்கின் வழங்குவதற்கு சிறை நிர்வாகம்\nஇதற்காக சிறையிலேயே சானிட்டரி நாப்கின் தயாரிக்கும்\nபணி கடந்த 11ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. தன்னார்வ\nதொண்டு நிறுவனம் ஒன்று இதற்கான பிரிவை\nதொடங்கியுள்ளது. நவஜீவன் டிரஸ்ட், கர்மா பவுண்டேஷன்\nமற்றும் சிறை நிர்வாகம் சேர்ந்து சானிட்டரி நாப்கின்\nதயாரிக்ககும் பணிக்கான ஏற்பாடுகளை செய்து\nஇதன் மூலம் பெண் சிறை கைதிகளுக்கு வருமானம்\nகிடைப்பதோடு, அவர்கள் சிறையில் இருந்து விடுதலை\nபெற்று வெளியே வந்தாலும் சுயமாக சம்பாதிப்பதற்கான\nசபர்மதி சிறையில் தயாரிக்கப்படும் நாப்கின்கள் மாநிலம்\nமுழுவதும் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு\nஇலவசமாக வழங்கப்படும். அதே நேரத்தில் மீதமுள்ள\nநாப்கின்களை அரசு நிறுவனங்களில் மானிய விலைக்கு\nதயாரிப்பு பணியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nammakalvi.org/news/-18620786", "date_download": "2018-08-20T18:29:25Z", "digest": "sha1:UK3XIE6SKM6W2NIYV73WCT63S2L635Y4", "length": 6956, "nlines": 87, "source_domain": "www.nammakalvi.org", "title": "பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி? - நம்ம கல்வி", "raw_content": "\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி\nபிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.\nதமிழக பாடத்திட்ட மாணவர்கள், தேசிய அளவிலான போட்டி தேர்வு களில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த ஆண்டு, முதல் முறையாக நடந்த பொது தேர்வில், வினாத்தாளில் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் இடம்பெற்றன. ஐ.ஐ.டி., நடத்தும், ஜே.இ.இ., மற்றும் மருத்துவ கவுன்சில் நடத்தும், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் போன்று, பிளஸ் 1 பொது தேர்வில், வினாக்கள் கேட்கப்பட்டன.\nஅதனால், பெரும்பாலான மாணவர்கள், பதில் எழுத திணறினர்.வினாக்கள் கடினமாக இருந்ததாக, பெற்றோரும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்தனர். அதனால், சலுகை மதிப்பெண் தேவை என்றும், கோரிக்கை எழுந்தது. ஆனால், தேர்வுத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பிளஸ் 1 தேர்வில், 91.3 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது, எப்படி நிகழ்ந்தது என, ஆசிரியர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.\n40 சதவீதத்துக்கும் மேல், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்குமோ என, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், அச்சத்தில் இருந்தனர். ஆனால், அனைத்துக்கும் நேர்மாறாக, தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு முறையும், வினாத்தாள் முறையும் மிக கடினமாக இருந்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, இறுதியில் மாறி விட்டதாக தெரிகிறது.வழக்கம்போல், அரசியல் ரீதியாக, தேர்ச்சி சதவீதம் காட்டப்பட்டதோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. விடை திருத்தத்தில் வராத மதிப்பெண், இறுதி பட்டியலில், அதிகம் வந்ததுபோல் தெரிகிறது.\nஎனவே, மதிப்பெண்ணை பதிவு செய்வதில், 'டேட்டா என்ட்ரி' முறை பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.பொது தேர்வு முறையில், எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மதிப்பீடு முறையும், மதிப்பெண்ணை இறுதியாக பதிவு செய்யும் முறையும், வெளிப்படை தன்மையுடன் நடந்தால் மட்டுமே, மாணவர்களின் சரியான கல்வித் திறன் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraimysha.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-08-20T18:27:16Z", "digest": "sha1:LEEKHJFQMJNWVDU56RJVPHHUF7HXXPXW", "length": 6765, "nlines": 36, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : மனிதன் மாறிவிட்டான்.!?", "raw_content": "\nகாலங்கள் கடந்து செல்லச்செல்ல மனிதனின் மனம் கொஞ்சம்கொஞ்சமாக தனது வழியிலிருந்து மாறத்தொடங்கி விட்டது. மனிதன் மாறி விட்டான்.\nசொல்,செயல்,நடவடிக்கை,நாகரீகம்,பழக்க வழக்கமென அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. சுயநலம் பெருத்துவிட்டது. அநீதியின் கை ஓங்கிவிட்டது.ஆங்காங்கே கலவரம்,கொலை,கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல் கணக்கில்லாமல் அரங்கேறி வருகிறது.\nமனிதன் மாறியதற்கான சான்று இது ஒருபுறமிருக்க .......அடுத்து பார்ப்போமேயானால் ......\nஇயற்க்கை அழிந்து கொண்டிருக்கிறது.பெருநோய்கள் சர்வசாதாரணமாக வரத்தொடங்கி விட்டது.மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டிருக்கிறது.பூமியில் நீர்ச்சத்து இல்லாமல் போய்விட்டது. உணவில் தரம் குறைந்து விட்டது.விவசாய பூமியெல்லாம் வீடுவாசலும் பலஅடுக்குக் கட்டிடமுமாகி விட்டது.காற்றும் கூட மாசுபட்டு விட்டது.சுற்றுச் சூழல் பாழாகிவிட்டது. உண்பவையிலிருந்து உடுத்தும்பொருள்வரை கலப்படமாகி விட்டது. அறிவூட்டும் கல்வியும் உயிர்காக்கும் மருத்துவமும் வியாபாரமாகி விட்டது.ஊழல் பெருத்து விட்டது.மனித உயிர்கள் மலிவாகிவிட்டது.\nஇதெற்க்கெல்லாம் காரணம் யார் .\nமனிதனது சுயநலப்போக்கு ...அப்படியானால் மனிதன் மாறிவிட்டான்.\nஅழிவை நெருங்கிவிட்டான் என்றுதான் சொல்லமுடியும்.\nஒன்றைமட்டும் இம்மனிதன் நன்கு உணர்ந்து விட்டால் அனைத்திற்கும் தீர்வு கண்டு விடலாம்.அதாவது....\nஇந்த உலகம் இந்த வாழ்க்கை யாருக்கும் நிலையானது அல்ல.ஒவ்வொரு நொடிப்பொழுதும் மரணத்தை எதிர்நோக்கித்தான் இவ்வுலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். மரணம் ஒருநாள் நம்மை வந்து அடைந்தே தீரும்.அதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை.அதை யாராலும் தடுக்க முடியாது.\nநம்மிடத்தில் எத்தனை கோடி செல்வம் இருந்தாலும் எத்தனைதான் பாதுகாப்பு இருந்தாலும் யாராலும் மரணத்திலிருந்து நம்மை மீட்டுவிட முடியாது. மரணித்தபின் இவ்வுலகிலிருந்து நாம் சேமித்த எதையும் எடுத்துச் செல்ல முடியாது.நம்மோடு சேர்ந்து நம் சொந்தபந்தம் யாரும் வரப்போவதில்லை.\nஅதற்குமுன் இவ்வுலக வாழ்க்கையில் நமக்கான இறுதிநாள் வருமுன் நாலு பேருக்கு நன்மை செய்து மரணத்திற்குப் பிறகும் நாம் ஒவ்வொருவரின் மனதில் வாழ்பவராக நல்லது செய்து புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும்.\nஇப்படியான எண்ணங்கள் நம் ஒவ்வொருவரின் மனதிற்குள் வந்துவிட்டால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். இவ்வுலகம் அமைதி பெரும்.\nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/category/events/", "date_download": "2018-08-20T18:26:33Z", "digest": "sha1:CF6QIK6VAJVIAM7XD7PYM5UE3UUQDZLB", "length": 15533, "nlines": 414, "source_domain": "dheivamurasu.org", "title": "நிகழ்வுகள் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு ஆறாம் குழாம் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஏழாம் குழாம் மாணவர்களுக்கு நன்றி நவிலல் விழா மற்றும் எட்டாம் குழாம் தொடக்கவிழா படங்கள்:  தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா அழைப்பிதழ்\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nபயண நிகழ்ச்சி விவரம். 22/3/18 காலை 9 மணி பயணத்தொடக்க விழா சென்னை காமராசர் அரங்கம் 23/3/18 திருத்தணி வெள்ளிக் கிழமை காலை 9 மணி பாக்யலட்சுமி திருமண அரங்கம் 23/3/18 வள்ளிமலை மாலை 5 மணி அறுபடைவீடு கோயில் 24/3/18 காஞ்சிபுரம் காரிக் கிழமை காலை திருநீலகண்ட நாயனார் திருமண மண்டபம், பெரிய காஞ்சிபுரம் 24/3/18 குன்றத்தூர் மாலை 5 மணி...\nதமிழ்த்தாய் வேள்வி – விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும். இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர்,...\n27 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\n27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2018 திங்கட்கிழமை நேரம்: காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் (PDF) 6–ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம்...\nபொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\nஅறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா நாள்: 3-12-2017 ஞாயிறு மாலை 6.00 மணி இடம்: பிட்டி தியாகராயர் கலையரங்கம் ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை -17 மதிப்புரை\nகந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி, செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும்...\nதத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்\nசண்முகக்கோட்டம் ஸ்ரீ அருணகிரிநாத பக்த ஜன சபையின் ஸ்ரீ அருணகிரிநாதர் ஜெயந்தி மற்றும் சபையின் 79 ஆம் ஆண்டு விழாவில் நமது குருபிரான் செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ.ச ஐயா அவர்கள் அருணகிரிநாதப்பெருமான் அருளிய வயலூர் தலத் திருப்புகழில் வரும் “தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை யென்று சேர்வேன்” என்ற வரிகளைப் பற்றிய சிறப்பு விளக்கச் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இடம்: அருள்மிகு...\nஅருட்சுனைஞர் பட்டயப்படிப்பு தொடக்க விழா\n என்று வினவியவர்கள் வியக்கும் வண்ணம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயமும், தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து அளித்து வரும் ஓராண்டு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அருட்டமிழ் உணர்வு பொங்க சேர்ந்துள்ள ஏழாம் குழாம் மாணவர்கள் புத்தெழுச்சி பெற தொடக்க விழா, அழைப்பிதழில் (இணைக்கப்பட்டுள்ளது) உள்ளபடி நடைபெற உள்ளது. தொடக்க விழா அழைப்பிதழ்...\nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-2\nபடங்கள்-2 நூல்கள்: 1. தமிழரின் வேதம் எது தமிழரின் ஆகமம் எது \nஅறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா படங்கள்-1\n17-6-2017 அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா வெளிவரும் நூல்கள்: 1. தமிழரின் வேதம் எது தமிழரின் ஆகமம் எது \nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/dadra-and-nagar-haveli/silvassa", "date_download": "2018-08-20T19:15:26Z", "digest": "sha1:3SO5ZQYVW7ZEIZASLZKUCUU5IB33YY7B", "length": 4443, "nlines": 49, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Silvassa | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Silvassa\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் Silvassa\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் Silvassa\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-lakshmi-rai-cinderella-11-08-1842436.htm", "date_download": "2018-08-20T18:26:33Z", "digest": "sha1:MUFVL5QZQL7I23KIIGWSDOWZS5ADKTPA", "length": 9821, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' ! - Lakshmi RaiCinderellaVino Venkatesh - லட்சுமி ராய்- சிண்ட்ரல்லா- வினோ வெங்கடேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nலட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' \nஉலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா . இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது.\nலட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் . இவர்கள் திரையரங்கு, 100க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோகம் திரை அனுபவம் பெற்றவர்கள்.\nபடம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும் போது,\n\"இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது.\nதயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார். நடிகை லட்சுமிராய்க்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம்.\nசாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார். நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம், குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு சம்மதம் கூறினார்.\nமேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங் கள் கேட்டார். தெளிவு பெற்றார். இப்போது முழுமையாக 'சிண்ட்ரல்லா'வுக்குள் புகுந்து விட்டார் \" என்று கூறினார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\n▪ சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா \n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n▪ சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n▪ சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்\n▪ சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு\n▪ முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n▪ கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன் - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்\n▪ 'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/10279", "date_download": "2018-08-20T18:33:37Z", "digest": "sha1:SBU4IGKBDBDQRUYKCQLSVAJWRELEM2IO", "length": 11690, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய காதலியை உறவின் பின் கொலை செய்த காதலன் | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nதிருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய காதலியை உறவின் பின் கொலை செய்த காதலன்\nதிருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய காதலியை உறவின் பின் கொலை செய்த காதலன்\nஇந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக் கோட்டையில் ஒரு இளம் பெண்ணொருவர் நிர்வாணமாக கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குறித்த பெண்ணின் காதலனே கொலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.\nகுறித்த பெண் திருமணம் செய்து கொள்ள காதலனை வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் குறித்த கொலையினை செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகொலை செய்யப்பட்ட 19 வயதான ஷகீலா (பெயர் மாற்றப்பட்டது) கடந்த 18 ஆம் திகதி புதுவை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nஇந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து திடீரென ஷகீலா காணாமல் போணமையால்,ஷகீலாவின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயதுள்ளார்.\nபொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் புதுவையைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞனுடன் ஷகீலா ஓடிப் போயிருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தியபோது ஷகீலாவை அவர் கொலை செய்தமை தெரியவந்துள்ளது.\nசெஞ்சிக் கோட்டைக்கு ஷகீலாவை கூட்டிக் கொண்டு போன விஜயிடம் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஷகீலா வற்புறுத்தியுள்ளார். அதற்கு விஜய், முதலில் இருவரும் சந்தோஷமாக இருப்போம் பின்னர் கல்யாணம் என கூறியதை நம்பிய ஷகிலா, விஜயுடன் உடலுறவில் ஈடுப்பட்டுள்ளார்.\nபின்னர் ஷகிலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த விஜய், பெரிய கல்லை எடுத்து அவரது முகத்தில் போட்டு முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைத்துள்ளார். பிறகு உடலை பாறை இடுக்குகளுக்குள் போட்டு விட்டுத் தப்பி சென்றதாக பொலிஸார் விசாரணையில் விஜய் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா விழுப்புரம் மாவட்டம் விஜய் ஷகீலா\nகத்தியுடன் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஸ்பெயினில் சுட்டுக்கொலை\nகடந்த வருடம் கட்டலோனியாவில் ஆகஸ்ட் 17 ம் திகதி பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நிலையிலேயே இன்றும் அதுபோன்றதொரு முயற்சி இடம்பெற்றுள்ளது.\nயுத்த நிறுத்தத்திற்கு வருமாறு தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் அழைப்பு\nஉள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் நவம்பர் மாதம் வரை 3 மாதகால யுத்த நிறுத்ததுக்கு வருமாறு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி அழைப்பு விடுத்துள்ளார்.\n2018-08-20 17:39:24 யுத்த நிறுத்தம் ஆப்கானிஸ்தான் அழைப்பு தலிபான்கள்\nஇயற்கையின் கோரத் தாண்டவத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறது கேரளா\nஇந்தியாவின் கேரளா மாநிலம் கடந்த 11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.\n2018-08-20 17:02:47 மோடி இம்ரான் வாழ்த்து கடிதம்\nஅமெ­ரிக்­காவால் எம்மை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது - துருக்கி ஜனாதிபதி சூளுரை\nஅமெ­ரிக்­காவால் துருக்­கியை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது என துருக்­கிய ஜனா­தி­பதி தாயிப் எர்­டோகன் சூளு­ரைத்­துள்ளார்.\n2018-08-20 13:32:50 துருக்கி அமெரிக்கா டொனால்ட் ட்ரம்ப்\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=12", "date_download": "2018-08-20T18:32:22Z", "digest": "sha1:TDYQRRJDZTSAW4B5XVDCJDUAK4K3H3WH", "length": 9059, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அபிவிருத்தி | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nஇலங்கை - இந்தியா பாலம் அமைப்பதற்கு சாத்தியம் அதிகம் : அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவிப்பு\nஇலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைப்பதற்கு அதிகளவிலான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்த, அரச தொழில் முயற்சி...\nஅரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள ஐந்து வருட அபிவிருத்தி திட்ட வரைவுகளின் பின்னர் பொருளாதாரம் பிரகாசமடையும்\nதற்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியானது சூரிய ஒளி மந்த நிலையில் ஒளிர்வது போலிருந்தாலும் நல்லாட்சி அரசாங்கத்தினால்...\n“ விவேகமுள்ள ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை கனடா அரசு வழங்கும்”\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்...\nநாட்டின் அபிவிருத்திப் பயணத்திற்கு இடையூறு : ரவி\nதற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தி மூலோபாயங்கள் தொடர்பாக சிறு குழுவொன்று பீதியடைந்து நாட்டின் அபிவிருத்திப் பயணத்திற்கு...\nவெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு : இந்திரஜித்\nவெளிநாட்டு முதலீடுகளை எதிர்வரும் காலங்களில் 5 மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந...\nCity & Guilds சான்றிதழ்களை வழங்கும் சிங்கர் கணினி கல்வியகம்\nகணினியில் பணியாற்ற வேண்டிய ஆளுமையை கொண்டிருக்க வேண்டியது இன்றைய கால கட்டத்தில் தொழில் ஒன்றை முன்னெடுக்க முக்கிய தேவையாக...\nதெற்காசிய சுற்றுலா விருது வழங்கல் விழா -2016 இம்முறை இலங்கையில்\n2016 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய சுற்றுலா விருது வழங்கல் விழா இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது.\nஅரச இசை விருது வழங்கும் விழா - 2016\nஉள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும்...\nஅன்று மௌனித்திருந்தவர்கள் இன்று எதிர்ப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது.\nஇலங்கையில் யுத்தத்தை முடிக்க இந்தியா உதவியபோது மௌனித்திருந்தவர்கள் இன்று அபிவிருத்திக்கு உதவும்போது எதிர்ப்பது வேடிக்கைய...\nகுறுசெய்தி மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு.\nஅரசும் அபிவிருத்திச் செயற்பாடுகளும் துரிதமாக முன்னேற அரச சேவையில் வினைத்திறன் உயர்ந்தாக வேண்டும், ஒரு குறுச்செய்தி மூலம்...\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/iitm-launches-mba-courses-000309.html", "date_download": "2018-08-20T18:04:26Z", "digest": "sha1:UFWGQ52C46OOS5BVTLMETQQSHDQ2YPF5", "length": 8019, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசின் சுற்றுலா போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ அறிமுகம் | IITM launches MBA courses - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசின் சுற்றுலா போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ அறிமுகம்\nமத்திய அரசின் சுற்றுலா போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்பிஏ அறிமுகம்\nசென்னை: இந்திய சுற்றுலா, போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முழு நேர எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள உள்ள கல்வி நிறுவனம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இது இயங்கி வருகிறது. இதுவரை இந்தக் கல்வி நிறுவனத்தில் இதுவரை முதுநிலை பட்டயப் படிப்புகளே வழங்கப்பட்டு வந்தன. இப்போதுதான் முதன் முறையாக எம்.பி.ஏ. சுற்றுலா, சரக்கு முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.\nஇறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் ஜூலை 6-ம் தேதி கடைசி நாளாகும்.\nவிண்ணப்பப் படிவம், கட்டண் உள்ளிட்ட இதர விவரங்களுக்கு www.iittmsouth.org என்ற இணையதளத்தை மாணவ, மாணவிகள் தொடர்புகொள்ளலாம்.\nமேலும் 0861- 2353199, 08978878710, 09849739489, 09866274850 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டும் விவரங்களைக் கேட்டுக் கொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-67/10391-2010-08-15-14-51-54", "date_download": "2018-08-20T19:00:43Z", "digest": "sha1:XGW6E4SRQN74RD73UISDTHAC7ARTVH3T", "length": 9600, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "பெண்களுக்கு தொடுஉணர்ச்சி அதிகம், ஏன்?", "raw_content": "\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 15 ஆகஸ்ட் 2010\nபெண்களுக்கு தொடுஉணர்ச்சி அதிகம், ஏன்\nஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது என்பதை நரம்பியல் அறிஞர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். ஏன் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆண்ட்டோரியோ பல்கலைக்கழக அறிஞர்கள் 100 ஆண், பெண்களை வைத்து ஆராய்ந்தனர்.\nமெல்லிய வரி வரிகளாக உள்ள மேடுகளை தொட்டு உணரும்படி செய்ததில் மிகவும் நெருக்கமாக உள்ள மேட்டு வரிகளை ஆண்களால் உணர முடியவில்லை. பெண்கள் எளிதில் அதை உணர்ந்தனர். இதற்குக் காரணம் பெண்களின் விரல்கள் ஆண்களைக் காட்டிலும் சிறிதாக இருப்பதே.\nதொடு உணர்ச்சிகளுக்காக பலவகை நரம்பு செல்கள் தோலில் உள்ளன. சிறிய மேடுகளை அறிவதற்கு மெர்கெல் (Merkel cells) வகை நரம்பு முனைகள் உதவுகின்றன. இவை வியர்வை சுரப்பிகளுக்கருகேதான் அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கு விரல்கள் சிறிதாக இருப்பதால் மெர்கெல் செல்கள் கைவிரல்களில் அதிகமாகவும், வியர்வைத் துளைகளும் அதற்கேற்ப அதிகமாகவும் இருப்பதால் அவர்களின் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது.\n- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muslimpage.blogspot.com/2007/09/2.html", "date_download": "2018-08-20T18:59:41Z", "digest": "sha1:KS4NHKGVFLNITUE4NSXDHGSO3NLOLWRU", "length": 15176, "nlines": 154, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: 2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்!", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன்\nதிங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007\nலக்னோ: உ.பி. மாநிலத்தில் இரட்டையரான அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, 7 குழந்தைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவது அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇரட்டையராக பிறப்பவர்களுக்கு சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பது பொதுவான ஒரு குணம். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணைக் காதலிப்பது என்பது அபூர்வமான விஷயம். அப்படி ஒரு அபூர்வம் உ.பி. மாநிலம் பாலியா குஜார் கிராமத்தில் நடந்துள்ளது.\nஇந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்வர்பால் சிங், சந்தர்பால் சிங் ஆகியோர் இரட்டையர். இருவருக்கும் அந்தக் கிராமத்தினர், ராம், ஷியாம் என செல்லப் பெயரிட்டு அழைப்பார்கள்.\nஇருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் அன்போடும், பாசத்தோடும் இருப்பார்கள். இரு சகோதரர்களும் பட்ட மேற்படிப்புப் படித்தவர்கள். டெல்லியில் இவர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் வேறு வேறு இடத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டியிருந்ததால், நம்மைப் பிரிக்கும் வேலை நமக்கு தேவையில்லை என்று கூறி வேலையையே விட்டு விட்டனர்.\nசொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.\nஒருமுறை கன்வர்பால் ஒரு பிரச்சினையில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இதைப் பார்த்த அவரது சகோதரர் சந்தர்பால் போலீஸாருடன் வேண்டும் என்றே சண்டை போட்டு கைதாகி தனது சகோதரருடன் தானும் சிறைக்குச் சென்றாராம்.\nசகோதரர்களின் அன்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன போலீஸார் இருவரையும் விடுதலை செய்து விட்டனராம்.\nஇரு சகோதரர்களுக்கும் இடையே இதுவரை ஒரு சண்டை கூட வந்ததில்லையாம். மனக் கசப்பு ஏற்பட்டதில்லையாம். இருவரும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். இருவரது உருவ ஒற்றமை கிராமத்தினரை பல சமயங்களில் குழப்பி விடுமாம்.\nஇந்த நிலையில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மதுபாலா என்ற பெண்ணின் மீது அண்ணன், தம்பிக்கு காதல் பிறந்துள்ளது. இருவருமே மதுபாலாவை விரும்பினர்.\nஇருவரும் மதுபாலாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு மதுபாலாவை, அண்ணன், தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.\nஇருவருக்கும் தற்போது 7 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் கல்லூரியில் படிக்கிறார். இளைய மகனுக்கு 5 வயதுதான் ஆகிறதாம்.\nபள்ளி ஆவணங்களில் குழந்தைகளின் தந்தை பெயராக இரு சகோதரர்களின் பெயர்களும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅட, ஒன்னும் சொல்றதுக்கு இல்லீங்ணா\naani உங்கள் வரவுக்கு நன்றி.\nஅட, ஒன்னும் சொல்றதுக்கு இல்லீங்க\n2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.\nபெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு\n04.இரட்டை டம்ளர் முறை ஒழிக\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\n01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் ...\nபெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது\n04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்\nஎஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து\nஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு\n2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்\nமலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்\n3. பாவம், யானைகள் என்ன செய்யும்\n3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா\n2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை\n01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.\nகர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்\nவேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தம...\nநான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.\n14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.\nகருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு\nகந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.\nகாதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.\nமூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.\nகொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.\n06. பொய் கற்பழிப்பு வழக்குகள்\n4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை\n3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.\n20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...\n1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாய...\n\"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'\n1. அள்ளுங்கள், பாவம் போகும்\nசென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.\nஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை\nமுஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு\nபீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை\nராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.\nஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்\nபொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.\nதமிழ் மண் பாதுகாப்பு மாநாடு\n6. ஏ.டி.எம்.மில் போலி ரூபாய் நோட்டு\nரயில் மோதி 3 பேர் பலி\nகெட்ட நேரம் மாட்டிக் கொண்டேன்\nபின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்\nபேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது\nவிபத்தில் 'ஹெல்மட்' உடைந்து, கிழித்து வாலிபர் பலி\nபோதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது.\nடைட்டானியம்: நிலம் வாங்கத் தொடங்கியது டாடா.\nகோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு\nஅனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்\n3.பள்ளி ஆசிரியைக்கு தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\n2.ஒரே பெண்ணை மணந்த இரட்டையர்கள்\nசிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி\nயோகா' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை.\nநான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா\nவிவசாயிகளுக்கு அரசு கொடுத்த செக் 'ரிட்டர்ன்'\nநீங்க அள்ளாட்டி நாங்க அள்ளுவோம்.\nடாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/toyota/gujarat/vadodara", "date_download": "2018-08-20T19:13:13Z", "digest": "sha1:GYTNPVX6LYNDY3SKXCMVX3LNN2N36MGG", "length": 4930, "nlines": 66, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டொயோட்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் வடோதரா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டொயோட்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள வடோதரா\n2 டொயோட்டா விநியோகஸ்தர் வடோதரா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டொயோட்டா விநியோகஸ்தர் வடோதரா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19734&cat=3", "date_download": "2018-08-20T19:16:46Z", "digest": "sha1:7QLRCH35CM2NPR5W5VNOJQ24VF76APQC", "length": 7755, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nபண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி\nசெங்கோட்டை: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முருகனை பண்பொழி நகரீஸ்வர முடையார் கோயிலில் இருந்து திருமலை கோயிலுக்கு வழியனுப்பும் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. பண்பொழி திருமலை குமாரசாமி கோயிலில் இருந்து பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோயிலுக்கு முருகனை அழைத்து வந்து தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி பண்பொழி கீழரத வீதியில் அன்ன கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் முருகப்பெருமான் மான், பசு, சிம்ம, ஆட்டுகிடா வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\n5ம் நாள் சட்ட தேர் நிகழ்ச்சியும், 7ம் நாள் முருகர் சண்முகர் எதிர் சேவை காட்சியும், 9ம் நாள் தேர் திருவிழாவும், 10 நாள் தைப்பூச திருவிழாவும் நடந்தது. நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று திருமலை முருகன் பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து திருமலை கோயிலுக்கு திரும்பும் பிரியா விடை பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.30 மணிக்கு பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோயிலில் அன்ன கொடி இறக்கப்பட்டது. காலை 10 மணிக்கு முருகனை வழியனுப்பும் பிரிவு உபசார விழா பண்பொழி ஐந்து புளி மண்டபத்தில் நடத்தது. இதில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் அருணாசலம் செய்திருந்தார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nஎல்லையம்மன் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா\nகூகூர் மூங்கிலடியான் கோயில் திருவிழா\nநாகம்மன் கோயில் செடல் விழா\nஅம்பை சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : திரளானோர் பங்கேற்பு\nஅம்பை கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1957916&Print=1", "date_download": "2018-08-20T18:18:49Z", "digest": "sha1:PV6CMATYRWY5GZ3N46FVLOMBXN6XDSE6", "length": 10905, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கிடப்பில் இருந்த பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி... துவக்கம் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் நெரிசலுக்கு தீர்வு| Dinamalar\nகிடப்பில் இருந்த பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணி... துவக்கம் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் நெரிசலுக்கு தீர்வு\nசென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த, பட்டாபிராம் ரயில்வே மேம்பால பணிகள், தற்போது துவங்கப்பட்டு உள்ளன.\nமுதல்கட்டமாக, ரயில்வே துறை பணி துவங்கிய நிலையில், மார்ச் மாதத்திற்கு பிறகு, போக்குவரத்து மாற்றங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை, முழுவீச்சில் பணி துவங்க, முடிவு செய்து உள்ளது.\nசென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், பட்டாபிராமில் எல்.சி., - 2, ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே, நாள் ஒன்றுக்கு, 38 முறை, திறந்து மூடப்படும். ஒருமுறை கேட் மூடப்பட்டதால், ரயில்கள் சென்ற பிறகு திறக்க, 7 முதல், 10 நிமிடங்கள் வரை ஆகும். கேட், அடிக்கடி மூடப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து, கடுமையான நெரிசல் ஏற்படும்.\nஇதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முதல், பணிக்கு செல்வோர் வரை, அனைத்து தரப்பினரும், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.இந்த நெரிசலுக்கு தீர்வாக, பட்டாபிராமில், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதற்காக, 2016ல், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டம் வகுத்தனர்.\nமேம்பாலம் அமைக்க, முதல்கட்டமாக, மண் பரிசோதனை செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு இல்லாததால், பரிசோதனையுடன், மேம்பால திட்டம் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், 52 கோடி ரூபாய் செலவில், பட்டாபிராமில் மேம்பாலம் அமைக்க, தமிழக அரசு, ஒப்புதல் அளித்தது. இதில், ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் மட்டும், மேம்பால பணிகளுக்கு, 11 கோடி ரூபாய் செலவாகும். இந்த பணியை ரயில்வே துறை செய்யும். நெடுஞ்சாலைத் துறை, 31 கோடி ரூபாய் செலவில், மீத பணிகளை மேற்கொள்ளும்.\nஇதில், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு, 10 கோடி ரூபாய் செலவாகும். மேம்பால பணிகளுக்காக சிறிதளவு அரசு துறைகளுக்கு சொந்தமான நிலமும், 4,000 சதுர மீட்டர், தனியாருக்கு சொந்தமான நிலங்களும், கையகப்படுத்தப்பட உள்ளன. ரயில்வே துறை, இரண்டு மாதங்களாக, மேம்பால பணிகளை துவங்குவதற்கான, ஆயத்த பணிகளை மேற்கொண்டது. தற்போது, பணிகளுக்கு தேவையான வாகனங்கள், இரும்பு கம்பிகள், வரவழைக்கப்பட்டு, மேம்பால பணிகள், துவங்கப்பட்டு உள்ளன.\nநெடுஞ்சாலைத் துறை, ஜனவரி மாத இறுதியில், மேம்பால பணிகளுக்கான டெண்டர் கோரியது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, மார்ச் இறுதியில் பணிகள் துவங்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇப்படி தான் அமைகிறது மேம்பாலம்\n* பட்டாபிராம் ரயில்வே மேம்பாலம், இரண்டு பாதைகளில், இருவழி மேம்பாலமாக அமையும்.* இந்த மேம்பாலத்தின் நீளம், 640 மீட்டராகவும், அகலம், 24 மீட்டராகவும் இருக்கும்.* மேம்பாலத்திற்காக, மொத்தம், 17 துாண்கள் அமைக்கப்பட உள்ளன.\nபட்டாபிராம் ரயில்வே மேம்பால பணிக்காக, மார்ச் மாதம் முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட உள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்வோர், தண்டுரை, பட்டாபிராம் வழியாக நெமிலிச்சேரியை அடைந்து, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் செல்லவும், திருப்பதி, திருத்தணியில் இருந்து வருவோர், ஒருவழிப்பாதையாக, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, தற்போதைய பாதையில் செல்லவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும். இரண்டு ஆண்டுகளில் பாலப்பணி முடிக்கப்படும்.\n- நமது நிருபர் -\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.poomagal.com/2008/06/blog-post_30.html", "date_download": "2018-08-20T18:25:06Z", "digest": "sha1:4HY5XMBXYTIMTAMLKB7DI3VFELOEGSSS", "length": 12979, "nlines": 194, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: உலக அன்னையருக்காக பூவின் சின்ன சந்தப் பூச்செண்டு..!", "raw_content": "\nஉலக அன்னையருக்காக பூவின் சின்ன சந்தப் பூச்செண்டு..\nதாரே சமீன் பர் - நிலத்தில் (பூக்கும்) நட்சத்திரங்கள்\nஇந்த படத்தின் மிக முக்கிய பாடல்களில் மகத்தான பாடலாக நான் கருதும் பாடலான \"மேரே மா....\" - பாடலை சந்தங்களுக்குத் தக்க படி அப்படியே அர்த்தம் மாறாமல் மொழியாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறேன்..\nஒரு சில வார்த்தைகள் சரியாக அர்த்தமறியாவிடினும்.. (மன்னியுங்கள் ஹிந்தி ஆர்வலர்களே.. )\nஉலகத்தின் அனைத்து அம்மாவும் இந்த மழலையின் சின்ன அன்பு காணிக்கை..\nநான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும்\nகூட்டத்தில் என்னைத் தனியே விட்டாலுமே\nவீட்டை தேடி வரவே முடியாதேயம்மா..\nநீ என்னை மறக்க மாட்டாய் இல்லம்மா..\nநான் இத்தனை மோசமா சொல்லம்மா...\nநான் இத்தனை மோசமா சொல் என் அம்மா...\nவந்து உனை அணைச்சி கொள்வேனேம்மா..\nஅப்பாக்கிட்ட சொல்லியதில்லையே... - ஆனா\nமனசில் பயந்து நடுங்கிடுவேனே அம்மா...\nநான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும்\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nஉலக அன்னையருக்காக பூவின் சின்ன சந்தப் பூச்செண்டு.....\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\n\"யார் மனசிலையும் ஈரமில்ல\" என்ற வசனத்தை அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி ஒளி,ஒல...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/srilanka/01/177046?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:07:42Z", "digest": "sha1:GVKU4E357PJJIMKPYI3KRTK4XHR5Z3W6", "length": 8762, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் செயற்பாட்டினால் வருத்தத்தில் பேஸ்புக் நிறுவனம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇலங்கையின் செயற்பாட்டினால் வருத்தத்தில் பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலரை, இலங்கை அரசாங்க அதிகாரிகள் சந்தித்ததாக அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது.\nஇது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்திடம் மின்னஞ்சல் வாயிலாக ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.\nஅதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளர்,\n“பேஸ்புக் பயனர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமான விடயமாகும். கோபம் மற்றும் வன்முறையை ஏற்படுத்தும் விடயங்களுக்கு எதிராக எங்களால் தெளிவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் அவ்வாறான விடயங்களை நீக்குவதற்கு எங்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇலங்கையின் நிலைமைக்காக பதிலளிக்கும் நாம், பேஸ்புக்கில் பதிவாகும் அவ்வாறான விடயங்களை அடையாளம் காணுவதற்கும், நீக்குவதற்கும் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்பட்டுத்தியுள்ளோம்.\nமுக்கிய தொடர்பு மற்றும் கருத்துக்களை வெளியிடுவதற்கு உள்ள உரிமையை நீக்கி சமூகவலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் நாம் வருத்தமடைகிறோம். விரைவில் பேஸ்புக் வழமைக்கு திரும்பும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://spicyonion.com/movie/vishwaroopam-ii/", "date_download": "2018-08-20T18:41:46Z", "digest": "sha1:6V3VRDT35RKHPJVQKQEWGZBMZJS3FUYO", "length": 7571, "nlines": 121, "source_domain": "spicyonion.com", "title": "Vishwaroopam II Tamil Movie", "raw_content": "\nTamil Name: விஸ்வரூபம் 2\nவிஸ்வரூபம் 2 - ரூபங்கள் குறைவு\nகமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.\nகமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-08-20T18:32:42Z", "digest": "sha1:SKPKM37DTS2MZEP3FFHQW7IHX6IERZOY", "length": 4720, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெண்ணாந்தை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவெண்ணாந்தை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/வ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/sudhakar-has-requested-not-to-mention-anyone-as-rajinis-supporter-on-television-296812.html", "date_download": "2018-08-20T18:54:21Z", "digest": "sha1:6HIBX55NAHEB6HZV7A4Y4NRASGDXFQ6A", "length": 12731, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி ஆதரவாளர்கள் என விவாதங்களில் யாரையும் குறிப்பிட வேண்டாம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nரஜினி ஆதரவாளர்கள் என விவாதங்களில் யாரையும் குறிப்பிட வேண்டாம்- வீடியோ\nதொலைக்காட்சிகளில் ரஜினி ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வேண்டுகோள்விடுத்துள்ளார். ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அவரது அரசியல் வருகைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு பர தொலைக்காட்சிகள் அதனடிப்படையில் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினி ஆதரவாளர் என பலர் பங்கேற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்று சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nஅகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்பதையும் விவாதங்களில் தற்போது பங்கேற்று வெளிப்படுத்தும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதில்ல என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.\nஏற்கனவே தலைவர் ரஜினிகாந்த் கூறியது போல் மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல் கட்சி அறிவிப்பு வரும் வரை நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்க செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து நாம் செயல்பட்டு கொண்டிருப்பதால் மன்ற உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.\nரஜினி ஆதரவாளர்கள் என விவாதங்களில் யாரையும் குறிப்பிட வேண்டாம்- வீடியோ\nகட்டியணைக்க முயற்சித்த ஐஜி...தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்\nதூத்துக்குடி ஆலை: நீதிபதி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வேதாந்தா எதிர்ப்பு\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் வழங்க முன்வந்தது ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம்\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் : பஞ்சாங்க கணிப்பு\nநடிகர் சங்கத்தை விளாசும் எஸ்.வி சேகர்-வீடியோ\nகருணாநிதிக்கு அஞ்சலி..குழந்தை போல் அழுத விஜயகாந்த்-வீடியோ\nகட்டியணைக்க முயற்சித்த ஐஜி...தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்\nகேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை இறக்கி விட்ட அதிகாரிகளால் பரபரப்பு\nஉடைந்து விழுந்த கொள்ளிடம் பாலம்.. கலக்கத்தில் மக்கள்-வீடியோ\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\n2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்குமாம்...பீதியைக் கிளப்பும் புயல் ராமச்சந்திரன்\nகேரளாவுக்கு ரூ 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் ரஜினி\nகருணாநிதி, வாஜ்பாய், கொள்ளிடம் பாலம்... ஒரு சோக ஒற்றுமை\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/contact-us-2/", "date_download": "2018-08-20T18:16:56Z", "digest": "sha1:7PAMDNE5HYQ4PDYHIEBQHXXGHE4HIF2M", "length": 5165, "nlines": 66, "source_domain": "tamilnool.com", "title": "தொடர்பு - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஉங்கள் கருத்துகளை எங்களிடம் சொல்லுங்கள்.\n4 முதல் மாடி, ரகிசா கட்டடம்\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2018-08-20T18:19:21Z", "digest": "sha1:W4TRCX2W7QGGLKVT7FQOA2ZQMD5KQBPY", "length": 10719, "nlines": 226, "source_domain": "tamilnool.com", "title": "மெய்கண்டாரும் சிவஞானபோதமும் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nசைவ சமயக் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகள் ₹15,000.00\nபட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் ₹45.00\nBe the first to review “மெய்கண்டாரும் சிவஞானபோதமும்” மறுமொழியை ரத்து செய்\nஅபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம்\nஇக்கால வாழ்வியலில் திருவாசகத் திருநெறி\nகந்தரநுபூதி (உரையும் யந்திர விளக்கமும்)\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.sltj.lk/category/branch/paragahadeniya/", "date_download": "2018-08-20T18:48:18Z", "digest": "sha1:2CARWNALALZEJ24LBLZHO44WOSGN4TEQ", "length": 16980, "nlines": 274, "source_domain": "www.sltj.lk", "title": "பரகஹதெனிய", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nமாவத்தகம காவல் துறை உத்தியோகத்தருக்கு அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு அன்பளிப்பு..\n18.01.2018 ஆம் திகதி SLTJ பறகஹதெனிய கிளையினால் நடாத்தப்பட்ட இரத்ததான முகாமில் கலந்துகொண்ட மாவத்தகம காவல் துறை உத்தியோகத்தர் சகோ.ஆப்தீன்\nSLTJ பரகஹதெனிய கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க” உள்ளரங்க நிகழ்ச்சி\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளை நடத்திய வாழ்வுரிமை விளக்க உள்ளரங்க நிகழ்ச்சி பரகஹதெனிய MM வரவேற்பு\nSLTJ பரகஹதெனிய கிளையினால் துண்டுப் பிரசுரம் விநியோகம்..\nதேர்தல் திருத்தத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – வீடு வீடாக தெளிவூட்டும் பணி ஆரம்பம்.\nSLTJ பறகஹதெனிய கிளையின் இரத்ததான முகாம்..\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பறகஹதெனிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் 19/02/2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.\nசிறப்பாக நடைபெற்ற SLTJ பரகஹதெனிய கிளை நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வு\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளை நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வு 17.09.2016 அன்று நடைபெற்றது.\nநோன்பு பெருநாள் தொழுகை 2016\nSLTJ பரகஹதெனிய கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை\nSLTJ பரகஹதெனிய கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளையின் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 04.03.2016 அன்று நடைபெற்றது. இதில்\nSLTJ பரகஹதெனிய கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 04.03.2016\nசிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ பரகஹதெனிய கிளை\nஆயுர்வேத வைத்தியர் Dr Bopage (Wellawa) அவர்களுக்கும், மாவத்தகமயைச் பொலிஸ் சாஜன் சமரசிங்க அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் –\nSLTJ பரகஹதெனிய கிளை நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பரகஹதெனிய கிளை நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் கடந்த 21.02.2016 அன்று\nSLTJ பரகஹதெனிய கிளை நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சி\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பரகஹதெனிய கிளை சார்பில் இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்றைய தினம்\nSLTJ பரகஹதெனிய கிளை நடத்தும் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி\nமுஸ்லிம்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி.\nSLTJ பரகஹதெனிய கிளையின் பெருநாள் திடல் தொழுகை\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பரகஹதெனிய கிளை சார்பாக நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து\nSLTJ பரகஹதெனிய கிளையின் பெருநாள் தொழுகை\nSLTJ பரகஹதெனிய கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்\nஇரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”\nஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-08-20T18:46:33Z", "digest": "sha1:VM5NE3BOYMY6VCHHQGR2EU7FXXOA3MM6", "length": 10142, "nlines": 104, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை", "raw_content": "\nகுழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்; முதல்வர் வேண்டுகோள்\nகுழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்; முதல்வர் வேண்டுகோள்\nகுழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க, தமிழக அரசுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி ‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப் படுகிறது.\nகுதூகலமாய் துள்ளித் திரிந்து, பள்ளி சென்று கல்வி பயின்று, அளவில்லா இன்பத்தை அள்ளிப் பருக வேண்டிய பள்ளிப் பருவத்தில், குழந்தைகளைப் பணிக்கு அனுப்புவது மிகக் கொடிய செயலாகும். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகளே. எனவே, அறிவும், வலிமை யும் பொருந்திய தலைமுறையை உருவாக்க, குழந்தைகளுக்கு உரிய கல்வி அளிப்பதோடு, அவர்கள் நலனைப் பேணுவதும் நமது தலையாய கடமையாகும்.\nகுழந்தைத் தொழிலாளர் முறையினைத் தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றும் நோக்கில், தமிழக அரசு, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களைச் சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் முறையான பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு இலவச சீருடைகள், பாடப் புத்தகங்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.\nஉயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக் காலம் முழுமைக்கும் ரூ.500 மாதாந்திர உத வித் தொகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவதை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\n‘குழந்தைகள் உழைப்பு நாட்டுக்கு சிறுமை’ என்பதை உணர்ந்து, அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி, அவர்களுக்கு அழிவில்லாத கல்விச் செல்வம் கிடைக்கச் செய்ய வேண்டும். ‘தொழிலாளர்களாக இல்லாமல், குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளர்ப்போம்’, ‘குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம்’ என்ற உறுதிகளை அனைவரும் ஏற்று, குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநில மாக தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு மேற்கொள்ளும், முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nகுழாய் மூலம் வீடுகளுக்கு காஸ் விநியோகிக்கும் திட்டம்…. சென்னையில் அறிமுகம்\nஃபிபா உலகக் கோப்பையை சுமக்கும் இந்தியர்கள்..\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/schools-will-distribute-mark-sheets-from-today-000360.html", "date_download": "2018-08-20T18:02:48Z", "digest": "sha1:G2RRDIVZMFE5JMJRKD66GHBACWPPH6IB", "length": 8951, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட்டை பெறலாம்!! | Schools will distribute Mark sheets from today - Tamil Careerindia", "raw_content": "\n» பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட்டை பெறலாம்\nபிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட்டை பெறலாம்\nசென்னை: பிளஸ்-2 மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்புச் செய்துள்ளது.\nஇதேபோல தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இயக்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. உயர் படிப்புகளில் சேரும் மாணவர்களின் நலன் கருதி முதல் முறையாக பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லுபடியாகும் என்று அறிவிப்புச் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவை முடிவடைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து பிளஸ்-2 தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி தலைமை ஆசிரியரிடமிருந்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம்.\nபிளஸ் 2 மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றதும் பள்ளியிலேயே ஆன்-லைன் வழியாக வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடக்கி வைக்கிறார்.\nதமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13031742/You-can-complain-about-the-quality-of-food-products.vpf", "date_download": "2018-08-20T18:28:51Z", "digest": "sha1:VIRM7VYPVGPZKCQLJWOPTTXYCQES3LNX", "length": 10081, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "You can complain about the quality of food products by 'whats app' || உணவு பொருட்களின் தரம் குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் செய்யலாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉணவு பொருட்களின் தரம் குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் செய்யலாம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.\nஉணவு பொருள் தயாரிப்பாளர்கள், பொட்டலம் கட்டுபவர்கள் உணவு பொருட்களை முகப்புச்சீட்டு (லேபிள்) இல்லாமல் பொட்டலம் கட்டக் கூடாது. அவ்வாறு முகப்புச்சீட்டு இல்லாத பொட்டலத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.\nஅதை மீறினால் கடையின் உரிமையாளர், விற்பனையாளர், தயாரிப்பாளர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்கப்படும். மேலும் உணவு பொருட்களின் பொட்டலத்தில் உணவு பொருளின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, நிறுவனத்தின் முகவரி, தொகுதி எண், எடை அளவு, சைவ அல்லது அசைவ குறியீடு, ஊட்டச்சத்து தகவல்கள், உணவு பொருளில் சேர்க்கப்படும் பொருட்கள், இறக்குமதி செய்யப்பட்ட நாடு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்படும் உரிமம் போன்றவை இல்லாத உணவு பொருட்களை விற்பனை செய்யக்கடாது.\nஅதேபோல் உணவு பொருட்களை வாங்கும் போது, மேற்கண்டவை இருக் கிறதா என்பதை நுகர்வோர் சரிபார்க்க வேண்டும். மேலும் உணவு பொருட்கள் தரம் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/16171710/Successful-Pure-Thoughts.vpf", "date_download": "2018-08-20T18:28:54Z", "digest": "sha1:L74ZIEKZGVEIVJMGQYTTRPRQEIZXDC5X", "length": 18352, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Successful Pure Thoughts || வெற்றிதரும் தூய எண்ணங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎந்த நிலையிலும் ‘இறையச்சம்’ என்ற தூய எண்ணம் தான் நன்மை– தீமை என்ற விளைவுகளை தீர்மானிக்கின்றது.\nஎந்த நிலையிலும் ‘இறையச்சம்’ என்ற தூய எண்ணம் தான் நன்மை– தீமை என்ற விளைவுகளை தீர்மானிக்கின்றது.\nஇந்த உலகம் பாவங்கள் செய்யத்தூண்டும் வகையில் தான் படைக்கப்பட்டுள்ளது. அதில் மனிதனுக்கு சோதனையும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இறைவனின் துணைகொண்டு இந்த சோதனையில் வெற்றிபெற மனிதன் முயற்சி செய்யவேண்டும். அப்போது தான் அவன் நம்பிக்கை கொண்டிருக்கிற மறுமை வாழ்வு இனிமையாக அமையும்.\nமனிதனின் உடல் அமைப்பும், உறுப்புகளின் வெளிப்பாடும் நன்மை–தீமை ஆகிய இரண்டையும் மனம் போன போக்கில் செய்யக்கூடிய வகையில் தான் படைக்கப்பட்டிருக்கின்றன. மனம் பாழ்படும் போது தான் மனிதன் பாவத்தை நோக்கி பயணம் செய்கின்றான்.\nஒருவன் பாவத்தின் பக்கம் செல்ல எத்தனிக்கும் போது அவனை கடிவாளமிட்டு கட்டுப்படுத்துவது தூய எண்ணங்கள் மட்டுமே. அதுதான் அவர்களை பரிசுத்தமாக வைக்கும். திருக்குர்ஆனும் அதைத் தான் இவ்வாறு சொல்கிறது:\n நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்’’ (24:30).\nஅதுபோன்று, ‘‘பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும், பிறர் கண்ணில் படாவண்ணம் தங்களையும் தங்கள் கற்பையும் பாதுகாத்து கொள்ளட்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ‘பர்தா’ அணிந்து தங்கள் கண்ணியத்தை காத்து கொள்ளட்டும்’’ என்று வலியுறுத்தப் படுகிறது.\nஇறைவன் நம்மை பல தீமையான சோதனையைக் கொண்டு சோதிப்பான். எல்லாவித சோதனைகளுக்கும் நம் கரங்கள் செய்த பாவங்கள் தான் காரணமாகின்றன.\n‘‘ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம் உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட தீய செயலின் காரணமாகவே தான். ஆயினும் அவற்றில் அனேகமானவற்றை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான்’’ (42:30) என்கிறது திருக்குர்ஆன்.\nபாவங்களில் பலவற்றை மன்னிக்கின்ற அல்லாஹ் அவை அதிகரிக்கும் போதோ, மற்றவர்களை மிகுதியாக பாதிப்புக்குள்ளாக்கும் போதோ கடலிலும், தரையிலும் சில தண்டனைகளையும் நிர்ணயித்திருக்கின்றான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:\n‘மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாக கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் அதிகமாகப் பரவி விட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக்கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் இம்மையிலும் சுவைக்கச் செய்கின்றான்’ (30:41).\n‘‘ஒவ்வொரு வஸ்துக்களையும் ஆண்–பெண் கொண்ட ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். இதைக் கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக’’ (51:49) என்கிறது திருக்குர்ஆன்.\nஉலகில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் இரட்டைத் தன்மை கொண்டவைகளாகவே படைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கொன்று முரண்பட்ட தன்மை கொண்டவைகளாக இருந்திட்ட போதிலும், அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிற தன்மையில் தான் இயக்கப்படுகின்றன.\nஆண்–பெண் உயிரினங்களில் இருப்பது போன்று, வானம்–பூமி, நீர்–நிலம், மேடு–பள்ளம், சிகரம்–சமவெளி என்று எத்தனை எத்தனையோ படைப்புகள் உலகெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன.\nஇதுபோன்று மனித உணவுர்களும் இரண்டு மாறுபட்ட தன்மைகளை வெளியிடக்கூடியதாக உள்ளன. இன்பம்–துன்பம், கோபம்–அமைதி, சிரிப்பு–அழுகை, ஆணவம்–பணிவு என்று வாழ்வில் ஏற்படுகின்ற ஒவ்வொரு உணர்ச்சிகளும் இரட்டை தன்மைகளுடன் அமைந்துள்ளன.\nவாழ்வியலில் இந்த உணர்ச்சிகளும், மனிதனின் செயலாக்கங்களும் ஒன்றாக கலந்து ஏற் படுத்துகின்ற விளைவுகள் தான் அல்லாஹ்வின் பார்வையில் பாவ புண்ணியங்களை நிர்ணயம் செய்கின்றன.\nஅந்த செயல்கள் நன்மை தந்தால், அதற்கு வெகுமதியாக சொர்க்கமும், தீமை என்றால் தண்டனையாக நரகமும் வரையறுக்கப்பட்டுள்ளன.\n‘உங்கள் முன் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நன்மையைப் பெற்று தரும் நேரான வழி. இன்னொன்று அதற்கு நேர்மாறானது’ என்று கூறுகிறான் இறைவன். இப்படி இரண்டு வழிகளை காண்பித்தவன், பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஈடேற்றம் பெற்றுக் கொள்ளவும் நேர்வழி என்ற பாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். கட்டளைக்கு அடிபணிந்தவன் கணக்கில்லா நன்மைகளை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக்கொள்வான். மறுத்தவன் நரகத்தை சேர்ந்தவன் ஆவான்.\nஒருமுறை சகாபாக்கள் கூடியிருந்த சபையில் நடந்த நிகழ்வு இது:\nநபிகள் (ஸல்) அவர்கள் எல்லோரையும் நோக்கி, ‘பெருபான்மையான மக்கள் மிக எளிதாக சுவர்க்கம் புகச்செய்யும் நன்மையான காரியம் ஒன்றை தாங்களுக்கு அறிவிக்கவா\n‘ஆம்’ என்று ஆமோதித்த சகாபாக்களிடம், ‘நீங்கள் இரு தாடைகளுக்கிடையே உள்ள நாவையும், இரு தொடைகளுக்கிடையே உள்ள அந்தரங்க உறுப்பையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள்.\nநாவை பாதுகாப்பது என்றால் அதனைக்கொண்டு நன்மையை பேசுங்கள், இனிமையாக பேசுங்கள், பிறருக்கு இடர் ஏற்படா வண்ணம் பேசுங்கள். கருத்து வேறுபாடுகளை தவிர்த்து மனித நேயத்தோடு பேசுங்கள்.\nஅந்தரங்கம் புனிதமானது. அதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வது இறையச்சத்தின் உச்சம். தூய எண்ணத்தின் அடிப்படையில் ஒருவன் நன்மையான வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n‘மனிதர்கள் தங்கள் தீய நடத்தையை விட்டு தங்களை மாற்றி கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை’ (13:11).\nதூய எண்ணங்களுடன் நன்மைகள் செய்து வந்தால் மட்டுமே நாம் வெற்றியாளர்கள் ஆக முடியும். எனவே நல்வழியை தேர்ந்தெடுப்போம், நலமுடன் வாழ்வோம்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/16482-2011-09-08-22-46-27", "date_download": "2018-08-20T18:58:55Z", "digest": "sha1:XJMWNWX73X6FNDANQBRZQ34RINWFE2SP", "length": 12862, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "அடித்து வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு", "raw_content": "\nகுடிதண்ணீர் இன்றி தவிக்க உள்ளதா தமிழகம்..\nஜாதிமறுப்பு – மறுமணம் – லிவிங் டுகெதர் – தனிக்குடித்தனம் – பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு உரிமை\nதேன் பாரித்த கவிவனம் - ‘சம்மனசுக்காடு’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து\nபெண் போராளியின் போர்க்கள வாழ்வு\nநாங்கள் ‘மனிதி’; மவுனம் உடைப்போம்\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2011\nஅடித்து வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு\nஉட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, நேரம் காலம் பாராமல் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு வீண் பொழுதைக் கழிப்பவர்கள் 'அடித்து வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு' (Couch Potato) என்று அழைக்கப்படுவதுண்டு.\nகணினியில் Youtube தளத்தில் நிறைய வீடியோ படங்களைப் பார்த்து பொழுது போக்குபவர்களை Youtuber எனப்படுவர். Tuber எனப்படுவது சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு உடையது என்றும் பொருள்படும்.\nஉருளைக் கிழங்கையும் Tuber என்று சொல்வர். Youtuber என்பதும் உருளை கிழங்கை உருவகப்படுத்துவதுதான். எனவே கணினியின் முன் ஆணியடித்தது போன்று இடத்தை விட்டு அகலாமல் இருப்பவரை Youtuber என்று அழைப்பது சரியே.\nபெரும்பாலான பெண்கள் பகலிலும், மாலையிலும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது தொடர்ந்து தொலைக் காட்சியின் முன் அமர்ந்து 'நீண்ட தொடர்களை' சோகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது அனைவரது வீட்டிலும் தவறாத காட்சி.\nமுன்பெல்லாம் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் 'வாசித்து விட்டீர்களா குமுதம்' என்றும் 'கல்கி, ஆனந்த விகடன்' என்றும் பெண்ணின் படம் பிரசுரமாகியிருக்கும். இப்பொழுது பெண்கள் புத்தகங்கள் படிப்பதைக் குறைத்துக் கொண்டு T.V. தொடர்களைப் பார்த்து வருவதாகத் தெரிகிறது.\nவீட்டிற்கு உறவினர்களோ விருந்தினர்களோ வந்து விட்டால், எப்பொழுது கிளம்புவார்கள், தொலைக்காட்சியில் தொடர்களை பார்க்கலாம் என்பதிலேயே ஆர்வமாகவும், பரபரப்பாகவும் இருக்கிறார்கள்.\nஒவ்வொரு வீட்டிலுமுள்ள ஆண்களும், பெண்களும் வேலை நேரம் போக, ஓய்வு நேரத்தில் நல்ல புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் படித்து வருவது நல்ல பழக்கமாகவும், நல்ல மனநிலையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.\nதொலைக்காட்சி நீண்ட நேரம் பார்ப்பதையும், கணினியில் அவசியமின்றி நீண்ட நேரம் பொழுது போக்குவதையும் தவிர்த்தால் உடல் நலம் பெறலாம்.\nஅதே நேரம் வாரத்திற்கு ஐந்து நாட்களாவது தினமும் அதிகாலையில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு பலனளிக்கும் பயிற்சியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2013/06/just.html", "date_download": "2018-08-20T18:04:37Z", "digest": "sha1:SXXSHJBV2KHJI27NKRFDUP54DX7MVENX", "length": 18995, "nlines": 130, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: JUST...", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Tuesday, June 11, 2013 1 பின்னூட்டங்கள்\nஒரு மனிதனின் வாழ்க்கையில் பாடசாலை அல்லது கல்லூரி என்ற காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை கிட்டத்தட்ட இயந்திரமயமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாகவோ என்னமோ எத்தனையோ சின்னச்சின்ன சந்தோஷங்களை அல்லது எம்மை அறியாமலேயே பிறருக்குச் செய்த உதவிகளை அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை என்று எவையுமே ஞாபகத்தில் நிற்பதில்லை.\nஅதே நேரத்தில் படிக்கும் போது ஆசிரியர்கள் எம்மை திட்டியும் அதிக பட்சமாக அடித்தும் யார் எம்மை எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சிரித்துவிட்டு மறந்துபோகும் மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்குகிறது.\nஏன் திடீரென்று இப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது இதைத்தான் முதிர்ச்சி என்று சொல்லுகின்றோமா இதைத்தான் முதிர்ச்சி என்று சொல்லுகின்றோமா என்று இரவு நேரத்தில் நித்திரை வருவதற்கு முன் சில மணித்துளிகளில் பின்னோக்கி கட்டம் கட்டடமாக யோசித்துப் பார்த்ததில் சில விடயங்கள் தோன்றியது.\nமுதல் கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கையை பாடசாலையில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்து ஒரு 10 வயதுவரை பார்த்தோம்என்றால் பெற்றோரின் கட்டுப்பாடுதான் அதிகமாகக் காணப்படும். உதாரணமாக நண்பன் தொடக்கம் ஆசிரியர் வரை யாரும் ஏதாவது கேட்டால் அம்மாவிடம் கேட்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லும் மனநிலையில்தான் இருப்போம். ஆக இந்த வயதில் நிறைய பாடசாலையில் நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அம்மா அப்பாதான் Best Friends என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள்.\nஇரண்டாவது கட்டமாக ஒரு மனிதனின் வாழ்க்கை 13வது வயதிலிருந்து அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு படிகளும் மிகவும் முக்கியமானவை. நட்பு என்ற ஒரு விடயத்துக்கு மிகவும் அதிஉயர் முக்கியத்துவம் வழங்கும் ஒரு காலகட்டம் இங்கு ஆரம்பிக்கிறது. அதாவது இதுவரை வீட்டில் பெற்றோரிடம் Request பண்ணிக்கொண்டிருந்தவர்கள் Informationஐ மட்டும் வழங்கிவிட்டுப் போகும் மனநிலைக்கு மாறிவிடுகிறோம்.\nநண்பனுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் பயமின்றிச் செய்யும் ஒரு மனநிலையும் யாராவது உங்கள் மீது வீண்பழிகளைச் சுமத்தினால் உடனே எதிர்த்துப் பேசும் அல்லது மறுக்கும் மனநிலையும் அதையும் மீறி உங்கள் மீது தண்டனைகளைப் வழங்கும் போது அதை எதிர்க்கும் மனநிலையும் அதிகமாக இருப்பது இக்காலகட்டத்தில்தான். அதாவது கிட்டத்தட்ட ஒரு தன்மானமுள்ள மனிதனாக நாம் உணரும் காலகட்டமாக இதைச் சொல்லலாம். காதலில் தொடங்கி பலவிடயங்களை முதல்முதலாக முயற்சித்துப் பார்க்கும் ஒரு கட்டம் இது. இக்காலகட்டத்தில் இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் எண்ணிக்கையைப் போல் இருக்கும் ஒற்றுமையைப் போல் வேறெங்கும் இருப்பதில்லை.\nதன்மானமுள்ள தைரியமுள்ள ஒற்றுமையான ஒரு மனநிலையுடன் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாகிப் போகிறார்கள். இந்த இடத்தில்தான் ஒற்றுமையில் பிளவு ஏற்படுகிறது. கிட்டத்தட்ட மனிதன் தனது அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி அல்லது வேலை என்ற பிரிவுக்குள் செல்கிறான்.\nஉயர்அதிகாரி கட்டளையிடுகிறார், இவர் அது சரியாக வராது என்கிறான், இல்லை அப்படிச் செய் என்கிறார், அவர் அப்படியே செய்கிறார், அது பிழையாகிறது. அதே அதிகாரியால் இவன் தண்டிக்கப்படுகிறார். ஆனால் எதிர்த்துப் பேசினால் வேலை போய்விடும் என்ற பயத்தால் எதிர்த்துப் பேசவில்லை. இங்கு தன்மானம் என்பது கருவறுக்கப்பட்டு சகிப்புத்தன்னை பூட்டப்படுகிறது. ஆனால் அந்த சகிப்புத்தன்மை கோபமாக மாறி திருமணமானவர்களுக்கு மனைவியிடமும் ஆகாதவர்களுக்கு பேஸ்புக்கிடமும் வந்து வெடிக்கிறது.\nஇப்போது நான் சகிப்புத்தன்மைக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த இடத்திலிருந்து யோசித்துப் பார்த்த போது எனக்கு இருக்கும் நண்பர்களின் எண்ணிக்கையை விட தெரிந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் தன்மானக் கட்டத்திலிருந்து சகிப்புத்தன்மைக்குப் பயணிக்க இப்போதுதான் ஆரம்பித்திருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் தன்மானம் எட்டிப்பார்க்கவும் செய்கிறது.\nஇதைத்தான் முதிர்ச்சி என்று அழைக்கிறோமா என்ற விடையில்லாக் கேள்வியுடன் நண்பர்கள், எதிரிகள், தெரிந்தவர்கள் என்று என்னைச்சுற்றிப் இருக்கும் பாரிய வட்டத்தில் மையத்தை அண்மித்திருப்பவர்களை இழக்கத் தயாராக இல்லை. இருந்தபோதிலும் வாழ்க்கை இன்னும் எப்படியெல்லாம் மாற்றும் என்ற மாற்றங்களுக்காக காத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் எத்தனை கட்டங்கள் வந்து முதிர்ச்சி என்ற பெயரில் எப்படியெல்லாம் மாற்றினாலும் கடைசியில் பெற்றதும் இழந்ததும் மனிதர்களைத்தான்..\nவகைகள்: 2013, Just, Life, அனுபவம், சுயபுலம்பல், தத்துவம்\nஇதே போல் மற்றவர்களின் மனநிலையை ஆராயும் நிலைக்கு நம் மனதை மேம்படுத்திக் கொண்டால்... முதிர்ச்சி என்பது ஒரு சொல் தான்...\nஅருமையாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/15/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-2863767.html", "date_download": "2018-08-20T18:26:22Z", "digest": "sha1:JYQLAGUQA637RRLWUISRTYWYZBWL5DBN", "length": 6913, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி\nபவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு, பவானி - குமாரபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.சங்கமேஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பிரபாத் சி.மகேந்திரன், கே. மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.சீனிவாசன் வரவேற்றார்.\nபவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளைத் தலைவர் ஆ.தியாகராசன், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தும், சிவராத்திரியின் சிறப்புகள், வழிபாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார். பவானி ஸ்ரீசம்பூர்ணா நாட்டியாலயம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 10-க்கும் மேற்பட்ட சிறுமியர் பல்வேறு பாடல்களுக்கு நாட்டியம் ஆடினர். மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். நாட்டியப் பயிற்சியாளர் யூ.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlinetest.kalvisolai.com/2018/02/class-12-zoology-human-physiology_92.html", "date_download": "2018-08-20T18:11:29Z", "digest": "sha1:DF6SVTBR67RIVC32FU4O3GOMSIZDC5LD", "length": 8685, "nlines": 160, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "CLASS 12 ZOOLOGY-HUMAN PHYSIOLOGY", "raw_content": "\na) Potassium and Calcium| பொட்டாசியமும் கால்சியமும்\nb) Sodium and Potassium| சோடியமும் பொட்டாசியமும்\nc) Chlorine and Sodium| குளோரினும் சோடியமும்\nd) Iodine and Chlorine| அயோடினும் குளோரினும்\nANSWER : a) Potassium and Calcium| பொட்டாசியமும் கால்சியமும்\n| பின்வருவனவற்றுள் எது புரியாத ஒரு புதிர் போன்ற ஆண்டிஜெனுக்கு எதிராக தோன்றும் நோய் தடுப்பாற்றல் குறைபாடு\na) Stroke | பக்கவாதம்\nc) Rheumatic arthritis | ருமேட்டிக் மூட்டுவலி\nd) Multiple sclerosis| மல்டிப்பின் ஸ்கிளிரோசிஸ்\n4. In ornithine cycle number of ATP molecules spent to convert toxic ammonia to a molecular urea is| ஆர்னிதைன் சுழற்சியில் நச்சுப் பொருளான அம்மோனியாவை ஒரு யூரியா மூலக்கூறாக மாற்ற தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை\n5. The process of maturation of erythrocytes is due to | இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின்\n6.Melanin is synthesised from which of the following amino acids | மெலானின் கீழ்கண்ட அமினோ அமிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது\n7. The nuclei in the hypothalamus region are called as| ஹைபோ தலாமஸ் பகுதியில் உள்ள சிறிய உட்கருக்கள் அழைக்கப்படுவது.\na) mamillary bodies| மாமில்லரி உறுப்புகள்\nd) corpora quadrigemina| கார்போரா குவாட்ரிஜெமினா\n| சேகரிக்கும் குழலில் சிறுநீர் அடையும் போது கீழ்கண்ட ஹர்மோனின் செயலால் நீர் உறிஞ்சப்படுகிறது.\n9. Normal BMI range for adult is| முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை என்ன\na) cone cells | கூம்பு செல்கள்\nb) rod cells| குச்சி செல்கள்\n| பெருமூளையின் வலது மற்றும் இடது அரைக் கோளங்கள் இணைந்து செயல்பட உதவுவது\nb) Corpus luteum| கார்பஸ் லூட்டியம்\nc) Corpus albicans | கார்பஸ் அல்பிகன்ஸ்\n12. The hormone which induces ovulation is| அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன்\na) Luteotropic hormone| அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன்\nb) Leutinizing hormone| லூட்டினைசிங் ஹார்மோன்\nc) Follicle stimulating hormone| பாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/44949-google-just-gave-a-stunning-demo-of-assistant-making-an-actual-phone-call.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T18:48:06Z", "digest": "sha1:UG3XAAP5TBC2WPYJO7RW56APSOSG6PTT", "length": 11030, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஹலோ.. சொல்லுங்க’ மனிதனைப் போல பேசி அசர வைக்கும் கூகுள் | Google just gave a stunning demo of Assistant making an actual phone call", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n‘ஹலோ.. சொல்லுங்க’ மனிதனைப் போல பேசி அசர வைக்கும் கூகுள்\nமனிதனைப் போல பேசும் புதிய வசதி கூகுள் அசிஸ்டண்ட் ஆப்பில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.\nகூகுள் அசிஸ்டெண்ட் செயலி கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டது. ஆனால் கூகுள் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இந்த செயலி பிரபல அடையவில்லை. ஏனெனில் இந்த செயலியை பயன்படுத்தும் போதெல்லாம் ஒகே கூகுள் மற்றும் ஹே கூகுள் என்ற வார்த்தைகளை கூற வேண்டும். இதுபோன்ற சில காரணங்களால் கூகுள் அசிஸ்டெண்ட் செயலிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு இல்லாமல் போனது. அதன் பயன்பாட்டாளர்களும் குறைந்து கொண்டே வந்தனர்.\nஇந்நிலையில் கூகுள் அசிஸ்டெண்ட் செயலியை பிரபலமடையச் செய்யும் வகையிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் அதில் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அப்டேட்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கணினி மென்பொருள் மாநாட்டில் நடைபெற்றது. இந்த அப்டேட்களை விளக்கும் வீடியோ ஒன்றை அப்போது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டார்.\nஇந்த புதிய அப்டேட்களின் படி செயலியை இயங்கச் செய்ய ஒரு முறை மட்டும் ஓகே கூகுள் என்று கூறினால் போதும். இதன்மூலம் நமக்காக கூகுள் அசிஸ்டெண்ட் பிறரிடம் பேசும். இது சுந்தர் பிச்சை வெளியிட்ட அந்த வீடியோவில் நிரூபித்துக் காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோவில் கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் சலூன் கடை ஒன்றிற்கு போன் செய்து முன்பதிவு பெறப்பட்டது. அத்துடன் ஒரு மனிதர் பேசுவதைப் போலவே கூகுள் அசிஸ்டெண்ட் வார்த்தைகளையும், அர்த்தங்களையும் உணர்ந்து அதற்கேற்ப பேசியதையும் காண முடிந்தது. இது காண்போரை கவரும் வண்ணம் இருந்தது. இந்த செயலி அப்டேட்ஸ் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.\n“காலா” காவியல்ல “கருப்பு” : இசை விமர்சனம்\nபிளிப்கார்ட்டை வாங்குகிறது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்மார்ட்ஃபோனில் ஆதார் சேவை எண் : மன்னிப்பு கேட்ட கூகுள்\nஅசத்தும் கூகுள் : இந்தியாவுக்கென பிரத்யேக கூகுள் மேப்ஸ்...\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nசுந்தர் பிச்சை கேரக்டரில் நடிக்கிறார் ‘சர்க்கார்’ விஜய்\n‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n - துல்லியமாக கணிக்கும் கூகுள் \nவந்ததும் காணாமல் போன பதஞ்சலியின் “கிம்போ” வாட்ஸ் அப்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“காலா” காவியல்ல “கருப்பு” : இசை விமர்சனம்\nபிளிப்கார்ட்டை வாங்குகிறது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-20T18:31:36Z", "digest": "sha1:7I33YR5RSDKACUTMFNXDEYRDWSEMULTK", "length": 7901, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜித் தோவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீர்த்தி சக்கரா, PM, PPM\n5-வது இந்திய பாதுகாப்பு ஆலோசகர்\nஜூலை 2004 – ஜனவரி 2005\nஈ எஸ் எல் நரசிம்மன்\nஅஜித் குமார் தோவல் , (பிறப்பு 20 ஜனவரி 1945) இந்தியக் காவல் பணி(ஓய்வு) ஒரு முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அலுவலர் ஆவார். இந்தியாவின் 5 ஆவது மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா) ஆன இவர் 2014 மே 30 முதல் இப்பதவியில் உள்ளார்..[1][2][3]இவர் 2004-2005 இல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்தார்.\nதேதிகளைப் பயன்படுத்து October 2015 இலிருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2017, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/nostalgic-pongal-celebration-olden-days-019085.html", "date_download": "2018-08-20T18:32:44Z", "digest": "sha1:PS3KQADBJXNA6W25OA5RUVKMFNNVMUWY", "length": 37396, "nlines": 213, "source_domain": "tamil.boldsky.com", "title": "90களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த வலி புரியும்! My story #140 | Nostalgic pongal celebration in olden days - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 90களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த வலி புரியும்\n90களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த வலி புரியும்\nபொங்கல் பண்டிகைக்காக ஒவ்வொருவரும் தங்கள் ஊர்களுக்கு கிளம்ப தயாராகி விட்டார்கள் ஊரே பொங்கலைக் கொண்டாட தயாராகி விட்டது. இன்றைக்கு புத்தாடை உடுத்தி எலக்ட்ரிக் குக்கரில் சர்க்கரை பொங்கல் செய்து பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டே பொங்கல் தினத்தை கொண்டாடி முடிப்போம்.\nசிலர் இந்த அளவுக்கு கூட இல்லாமல்.... லீவ் கிடைக்கல என்ற சொல்லிவிட்டு வழக்கமான ஞாயிற்றுக் கிழமை போல இந்த நாளையும் கடந்து விடுவார்கள். இந்த வருடம் சில இடங்களில் குறிப்பாக தமிழகத்தை தாண்டி பொங்கலுக்கு என்று விடுமுறையும் கிடையாது. அதான் ஞாயிற்றுக்கிழமை தானே வந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல வீக் ஆஃப் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சுருக்கி விட்டார்கள்.\nதமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவினை ஒரு வீக் ஆஃபில் சுருக்கிய பெருமை நம்மைச் சேரும். பாரம்பரியத்திருவிழா, கலாச்சார விழா என்றெல்லாம் சொல்கிறோமே.... பொங்கல் பண்டிகை உண்மையில் எப்படி கொண்டாடப்பட்டது, இன்றைய குழந்தைகளை விட 90களில் பிறந்தவர்களுக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் மட்டுமே இந்த கொண்டாட்டங்களை நேரடியாக பார்த்த அனுபவம் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொங்கல் வருகிறது என்று சொன்னாலே மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே எங்கள் ஊரில் விழா கலைகட்டத்துவங்கும். நாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து கிராமத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே புறப்படுவோம்.\nபட்டணத்திலிருந்து வந்திருக்காங்க என்று சொல்லி எங்களுக்கு ஏக வரவேற்பு இருக்கும். பார்ப்பவர்கள் எல்லாரிடத்திலும் அம்மாவும் அப்பாவும் நின்று பேசி... நிதானமாக வீடு வந்து சேர்வதற்குள் மதியமாகிடும்.\nஆம், அன்றைக்கு தயங்காமல் வாழ்த்து அட்டைகளில் பொங்கல் வாழ்த்து சொல்லிக் கொடுப்போம். பள்ளியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து கடிதங்களைக் கூட எழுதி பரிமாறியிருக்கிறோம்.\nஇப்போது என்னடாவென்றால் Hpy pgl என்று சுருக்கி டைப் செய்து ஸ்மைலிக்களுடன் சேர்த்து அனுப்புகிறார்கள். அதையும் ஃபார்வேர்டு செய்து தங்கள் கடைமையை முடித்துக் கொள்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஇப்போது சென்று வருகிற ஷாப்பிங் கிடையாது.பொங்கல் வைக்க தேவையான சாமான்களை வாங்க பாட்டியுடன் சந்தைக்குச் செல்வோம். சில வீடுகளில் அடுப்பு,பானை என எல்லாவற்றையும் புதிதாக வாங்குவார்கள். எங்கள் வீட்டில் அந்தப் பழக்கமில்லை.\nவாழையிலை,கிழங்கு,கரும்பு,அரிசி,வெல்லம் போன்ற சாமன்களை தேடித்தேடி வாங்குவோம்.\nகரும்பை கடித்துச் சாப்பிடுவதில் பலமான போட்டியிருக்கும். வாங்கிய கரும்புகளில் முதலிலேயே சாமிக்கு என்று சொல்லி சில கரும்புகளை தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். மீதியிருக்கும் கரும்பை ஒரு அடி அல்லது அதற்கும் குறைவாக வெட்டிக் கொடுப்பார்கள்.\nநாங்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவோம். தங்கைக்கு அப்போது மூன்று வயதிருக்கும் அவளால் கரும்புத் தோலை பிய்க்க முடியாது என்பதால் பாட்டி அவளுக்கு மட்டும் தோல் சீவி அறுவாள்மனையில் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொடுப்பார்கள். அதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு எங்களோடே சுற்றிக் கொண்டிருப்பாள்.\nஇந்த வருஷம் பொங்கலுக்கு என்ன டிரஸ் டிரண்ட் என்று தேடித்தேடி அலைந்து திரிந்து வாங்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. சில நேரங்களில் பள்ளி செல்லும் யூனிஃபார்ம் தான் எங்களுக்கு பொங்கல் டிரஸ்ஸாக கிடைக்கும்.\nவருடத்திற்கு ஒரு டிரஸ் தான் கோட்டா. தீபாவளிக்கு ஒரு புதுத்துணி எடுத்தாச்சுல்ல பொங்கலுக்கு யூனிஃபார்ம் எடுக்கலாம் என்று சமாதானப்படலங்களும் நடக்கும். எப்போதாவது நெருங்கிய உறவினர்களின் திருமணத்திற்கும், நம் பிறந்தநாளுக்கும் துணிகள் கிடைக்கும்.\nமுதல் நாள் இரவு :\nபொங்கல் நாளுக்கு முந்தைய நாளிலிருந்து கொண்டாட்டம் கலைகட்டத் துவங்கும். எல்லாரும் அவரவர் வீட்டு வாசலில் கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து பெரிய கலர் கோலம் போடத் தயாராகி விடுவார்கள். பெரியவர்கள் கோலம் போட எங்களுக்கு கலர் போடுகிற வேலை.\nசில நேரங்களில் மரத்தூளிலும், கல் உப்பிலும் கலர் சேர்த்து வித்யாசமான கோலங்களை படைப்பார்கள்.கூரையில் கூரைப்பூ வைப்பாரக்ள். இப்போது ஒரு கட்டு வாங்கி வந்து அப்படியே வைத்து விடலாம். ஆனால் அப்போது ஒவ்வொரு பூ,செடியை தேடி சேகரிப்பார்கள்.\nசூரியன் உதிக்கும் முன்னே :\nவிடியற்காலை நான்கு மணிக்கு எங்களை எழுப்புவார்கள். அதற்கு முன்பே பெரியவர்கள் எல்லாம் தயாராகி பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். நாங்களும் குளித்து தயாரானதும் வாசலில் பொங்கல் வைப்போம்.\nவீட்டு வாசல் முன்பு கரும்பு தோரணம் கட்டி, விறகடுப்பு வைத்து மண் பானையில் பொங்கல் வைப்போம். மணி ஆறை நெருங்கியிருக்க அப்போது தான் மெல்ல சூரியன் உதித்து சிகப்பு பந்து மெல்ல எழும்பி வரும்.\nதெரு முழுமைவதும் பலரும் வரிசையாக பொங்கல் வைப்பார்கள். ஆங்காங்கே பொங்கலோ.... பொங்கல் என்று கத்துவது கேட்கும். எனக்கு அப்பறம் வச்சா அதுக்குள்ள அவளுக்கு பொங்கிடுச்சா என்று அம்மாவும் பாட்டியும் குசுகுசுவென்று பேசிக் கொள்வார்கள்.\nஎப்போது பொங்கும் என்று காத்திருக்க.... அடுப்பில் பொங்கியவுடன் குலவைச் சத்ததுடன் பொங்கலோ.... பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று சத்தமிடுவோம்.\nபொங்கல் ஆனதும், அதை முதலில் சூரியனுக்குப் படைத்து பின்னர் எல்லாருக்கும் கொடுப்போம். வீடு வீடாக சென்று கொடுப்பதும் பின் பிரசாதம் கொடுத்த கிண்ணத்தை வாங்கி வருவதும் குழந்தைகளான நம்முடைய வேலை.\nசில இடங்களில் ஊர் பொதுவில் கோவில் அருகே பலரும் சேர்ந்து சமத்துவப் பொங்கல் வைப்பார்கள்.\nசில வருடங்கள் புது அரிசியில் தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று சொல்லி, புதிதாக அறுவடை செய்த அரிசியை தாத்தா தேடி வாங்கிவருவார்கள். பொங்கல் தினத்தன்றும் அதற்கு முந்தைய நாளும் ஊரே விடிய விடிய முழித்திருக்கும். பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான போட்டிகள் எல்லாம் நடைபெறும்.\nமறுநாள் ஜல்லிக்கட்டு ஊரே களைகட்டும். ஆண்கள் எல்லாம் காலை ஏழு மணியிலிருந்தே திடலுக்குச் சென்றுவிடுவார்கள். பெண்களும் குழந்தைகளும் முதலில் கோவிலுக்குச் சென்று விட்டு ஒன்பது மணிக்கு மேல் தான் திடலுக்கு வரும்.\nமுறுக்கு மீசை வைத்துக் கொண்டு வாடி வாசல் முன்பு நின்று கொண்டிருக்கும் பெரியவர் மைக்கை பிடித்துக் கொண்டு இன்னாருடைய காளை.... இவ்வளவு பரிசு என்று விவரித்துக் கொண்டிருப்பார் பார்க்கவே அவ்வளவு ஆவலாக இருக்கும்.\nஅதிக கூட்டம் இருக்கும் என்பதால் வாடிவாசல் ஜல்லிக்கட்டிற்கு பெரும்பாலும் எங்களை அழைத்துச் செல்லமாட்டார்கள்.\nவாடி வாசல் வழியாக வருகிற காளையை சிறிது நேரம் அதன் திமிலை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது ஒரு வகை விளையாட்டு என்றால் அதே போல இது இன்னொரு வகை\nமிகப்பெரிய மைதானத்தில் இந்தப் போட்டி நிகழும் மாட்டின் கொம்பில் பரிசுத் தொகை அல்லது காணிக்கையை வைத்து கட்டியிருப்பார்கள் . அதனை எடுக்க வேண்டும். மாடி துள்ளும், ஓடும்,முரண்டு பிடிக்கும்.\nசிலர் லாவகமாக எடுப்பார்கள் அதை பார்கக்வே கூட்டம் அலைமோதும், மாடு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வரலாம் என்பதால் எங்களை சற்று தொலைவில் இருக்கும் பெரிய திண்ணை வீட்டில் தான் உட்கார வைத்திருப்பார்கள்.\nஅதுவும் முன் வாசலில் இருக்கும் இரும்பு கேட்டினை பூட்டிவிட்டு அந்த ஓட்டை வழியாகத் தான் வேடிக்கை பார்க்க வேண்டும்.\nஎன்னது சிறுவர்களுக்கு என்று தனி ஜல்லிக்கட்டு நடக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள். இது நாங்களாக உருவாக்கிய ஜல்லிக்கட்டு, மதியத்திற்குள் ஊரே அமைதியாகிடும். அதன் பின்னர் தான் எங்களது ஆட்டத்தை ஆரம்பிப்போம்.\nஎங்கள் கூட்டாளிகளில் சிலர் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கண்ணுக்குட்டிகளை இழுத்து வருவார்கள். அதன் தலையில் கரும்பு ஒரு துணியில் போட்டி கட்டிவிட்டு ஓடவிடுவோம். அதன் பின்னால் நாங்கள் சிறுவர்கள் பத்து பதினைந்து பேர் ஓடி தலையில் கட்டியிருக்கும் கரும்பினை பறிக்க வேண்டும். ஜோ.... வென ஓடுவதும் பெரியவர்கள் செய்வது போலவே சில லாவகங்களை முயற்சிப்போம்.\nசில இடங்களில் காலையிலேயே கால்நடைகளுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து வர்ணம் எல்லம் பூசுவார்கள். நாங்கள் மாலையில் செய்வோம். ஆடு,மாடு வைத்திருப்பவர்கள் இந்த பூஜையை விமர்சையாக செய்வார்கள்.\nமாட்டிற்கு அங்க வஸ்திரம் எல்லாம் போட்டிருப்பார்கள். பூஜை முடிந்து அதன் கொம்புகளுக்கு எல்லாம் பளபளப்பான பெயிண்ட் அடித்து ஒவ்வொரு தெருவாக நடத்தி ஊர்வலம் அழைத்து வருவார்கள். சிலர் மாடுகளின் கொம்புகளில் பூ சுற்றியிருப்பார்கள்.\nபடிப்பு,வேலை என்று பட்டணத்திலேயே தங்கிவிட்டு கிடைக்கிற ஒரு நாள் விடுமுறையில் இந்த கொண்டாட்டங்களை எல்லாம் கொண்டாடித் தீர்க முடியுமா இந்த வருடம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து சரி... அடுத்த வருஷம் போய்க்கலாம் வருஷம் வருஷம் கொண்டாடுறது தான என்று விட்டுக் கொடுத்து பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இருக்கும்.\nகடந்த வருடம் பொங்கல் பண்டிகையை எப்படியாவது ஊரில் சென்று கொண்டாட வேண்டும் என்று ஆசை... அதுவும் அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் எல்லாம் நடந்து முடிந்திருந்த காலக்கட்டம் என்பதால் விமர்சையாக கொண்டாடப்படும் என்று எண்ணி குடும்பத்துடன் ஊருக்குச் சென்றோம்.\nஎல்லாம் தலைகீழாக மாறியிருந்தது. என்னப்பா வில்லேஜ் மாதிரி இருக்கும்னு சொன்ன ஃபுல்லா தார் ரோடு போட்ருக்காங்க வில்லேஜ்ல கூட ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் இருக்குமா இது தான் வில்லேஜா என்று ஆச்சரிப்பட்டு கேட்கிறாள் மகள்.\nஎல்லாரும் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே அடைந்து கிடக்கிறார்கள். சில வயதானவர்கள் மட்டும் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். நானாக சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்....ஹூம் பொங்கல் லீவுக்கு வந்திருக்கியா என் பையன் நாளைக்கு காலைல தான் வரான் அமெரிக்காவுல இருக்கான் என்று விரக்தியுடன் நகர்கிறார்கள்.\nஎன் இளமைக்காலத்தில் கிடைத்த வரவேற்பினை மகளிடம் விவரித்திருக்க அதே போல நடக்கும் என்று எதிர்ப்பார்த்திருப்பாள் போல இங்கேயும் அவளுக்கு ஏமாற்றம் தான்.\nவீட்டிற்குச் சென்றால் எண்ணி வைத்தார் போல இரண்டே இரண்டு கரும்பினை வாங்கி சாமி செல்ஃபுக்கு அருகில் நிற்க வைத்திருக்கிறார்கள். அங்கேயே வாழையிலை விரித்து தேங்காய்,பழம் எல்லாம் வைத்து ஒரு கிண்ணத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து அம்மா பூஜைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறாள்.\nஅம்மா.....என்னம்மா குழந்தைங்கள கூட்டிட்டு வரேன் வாசல்ல விறகடுப்பு வச்சு பொங்கல் வைக்கலாம்னு சொன்னேன்ல....\nஸ்பூன்ல கொஞ்சம் சாப்டு :\nஇறங்கினதும் தார் ரோடு, வண்டிங்க போய்ட்டு வந்துட்டு இருக்குற இடத்துல நீ பொங்க வச்சா.... பொங்கப்பானையோட போலீஸ்காரன் நம்மள கொண்டு போய்ருவான்.\nடெய்லி வாசத் தெளிச்சு கோலம் போட முடியலன்னு ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருக்கேன். ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்க முடியாது கொலஸ்ட்ரால் அதிகம், மூட்டு வலி உங்கப்பாவுக்கு வேற சுகர் இருக்கு. சர்க்கரை கம்மியா நாலு பேரு கொஞ்சம் சாப்டுற மாதிரி பொங்கல குக்கர்லயே வச்சிட்டேன் . ஸ்பூன் போட்டுத் தரேன் உக்காந்து சாப்டு. மதியம் தியேட்டர் போலாம்.\nஎந்த லோகத்துலடா இருக்க :\nஎனக்கு ஒரு கணம் திக்கென்றது. அம்மாவா இப்டி பேசுவது மூன்று நாட்கள் பொங்கலுக்கு ஐந்து டிரஸ்களுடனும் ஸ்வீட் டப்பாவுடனும் ஊருக்கு வந்திறங்கிய குழந்தைகளுக்கு இது தான் பொங்கல்.பொங்கல் தினம் என்றால், ஸ்பூனில் பொங்கல் சாப்பிடுவார்கள் எல்லாரும் செல்ஃபி எடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டால் என்ன செய்வது\nஅப்போது தன் அமெரிக்கா வாழ் பேத்தியை தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த மாரி அண்ணனை பார்த்தேன். என்ன அண்ணா.... பேத்தி வந்திருக்கா போல\n எந்த லோகத்துலடா இருக்க... அதெல்லாம் விட்டு நாலஞ்சு வருசமாச்சு.\nவருங்காலமே மன்னித்து விடு :\nவீட்ல இருபது மாடுகிட்ட வச்சிருந்தல்லண்ணா...\nஎல்லாம் கொடுத்தாச்சு.. தொழுவத்துல இரண்டு மாடி வீடு கட்டியாச்சு அத வாடகைக்கு விட்ருக்கேன். பொண்ணு வெளிநாட்டுல இருக்கா பையன் பெங்களூருல செட்டில் ஆகிட்டான். இப்பதான் ரெண்டு பேரும் வந்திருக்காங்க இது பேத்தி அமெரிக்காவுலருந்த தாத்தாவ பாக்க வந்திருக்காங்க என்று காட்டினார்.\nபுள்ளைக்கு வேர்க்குது ஏசி வாங்கி மாட்டச்சொல்லணும் வர்றப்போ குளுகுளுன்னு இருக்கும்ல அங்க அப்டி தான இருந்து பழக்கம் என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.\nஎனக்கு இங்கே உள்ளே வெந்து புழுங்கியது.\nஇந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறை. மறுநாள் திங்கட் கிழமைக்கு வழக்கம் போல குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும் நாங்கள் அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும்.\nஸ்கைப்பில் ஊரில் இருக்கும் அம்மா அப்பவுடன் பேசுவதும், வெளியே ஹோட்டலுக்குச் செல்வதுடன் எங்களின் பொங்கல் கொண்டாட்டம் முடிந்திடும்.\nஎளிமையையும்,பண்டிகைகளையும், கலாச்சாரத்தையும் கூட நாஸ்டாலஜி என்று சொல்லிக் கொள்ள வேண்டிய ‘பெருமையை'நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇளைஞர்களுக்கு அப்துகலாம் கூறிய பயனுள்ள அறிவுரைகள்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nJan 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/kiran-n1.html", "date_download": "2018-08-20T18:26:05Z", "digest": "sha1:ENHHIZOHIDKEKRWRLBCE2JDUTWMWTO5W", "length": 12408, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Kiran in deep trouble - Tamil Filmibeat", "raw_content": "\nகோலிவுட்டில் கிரணின் ஆட்டம் முடிந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். சான்சுக்காக எந்த நடிகையும் இறங்காதஅளவுக்கு மிகத் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வாய்ப்புகளை பெற்று வந்தார்.\nஆனால், அளவுக்கு மீறி அவர் காட்டிய கவர்ச்சியே அவருக்கு எதிராகப் போய்விட்டது. இனி இவர் கவர்ச்சி காட்டஎன்ன மிச்சம் இருக்கிறது என்று ஒரு தரப்பு டைரக்டர்களும் நடிகர்களும் ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.\nநடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்களைக் கொண்ட கதைகளை மையமாக வைத்து படம் எடுத்து வரும்இன்னொரு தரப்பு இயக்குனர்களோ நடிப்பே வராத கிரண் போன்றவர்களை படத்தில் வைக்கவே மறுத்துவருகின்றனர்.\nநல்ல கதைகள், திறமையான டைரக்டர்களால் இயக்கப்பட்ட படங்களே வெற்றி பெற்று வரும் டிரண்ட் தமிழ்சினிமாவில் உருவாகிவிட்டதால், தங்கள் இஷ்டத்துக்கு இவரைப் போடு அவரைப் போடு என இளம் ஹீரோக்கள்ரெகமெண்டேசன் செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.\nஇதனால் பார்ட்டி வைத்து ஹீரோக்களை வளைத்து சான்ஸ் பிடித்து வந்த கிரணுக்கு பயங்கர அடி. இப்போதுகிரணிடம் இருந்து இருந்து போன் வந்தாலே நடிகர்கள் பேச மறுக்கிறார்களாம்.\nஅடி மேல் அடியாக, வின்னர் படத்தில் கிரணின் படு பயங்கர கவர்ச்சிக்கு கடும் கத்திரி விழுந்துள்ளதாம்.விஜயகாந்த், சரத்குமார் என முந்தைய தலைமுறை ஹீரோக்களுடன் நடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டகிரண், வின்னர் படத்தைத் தான் பெரிதும் நம்பியிருந்தார்.\nநெடு நாட்களுக்குப் பின் இளம் ஹீரோவான பிரசாந்த்துடன் கிரண் நடித்து வெளியாக உள்ள படம் இது. இதன்மூலம் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்குப் போட்டிருந்தார்.\nஆனால், பாய்ஸ் படத்தினால் சென்சார் போர்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து கண்களில்விளக்கெண்ணையும், நன்கு சாணை பிடித்த கத்திரியுமாக படங்களை சென்சார் செய்ய ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் வசமாக சிக்கியது வின்னர்தானாம். பிரசாந்த்தும் கிரணும் நடித்த இந்தப் படம் வெகு காலமாகஎடுக்கப்பட்டது. படத்தின் கதை சரியாக இல்லாததால் கிரணை ஓவர் கவர்ச்சி காட்ட வைத்தனர். இதை வைத்துஓட்டி விடலாம் என திட்டமிட்டவர்களின் வாயில் மண் விழுந்துள்ளது.\nஇந்தப் படத்தில் கிரண் ஆடும் ஒரு பாடலுக்கு 18 இடங்களில் கட் விழுந்துள்ளதாம். பெரும் கவலையில்இருக்கிறார் கிரண்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா\nப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thinappuyalnews.com/archives/136124", "date_download": "2018-08-20T18:48:24Z", "digest": "sha1:LXGRXXUHMGX5OUGOQXODPUKPGEU4G7HO", "length": 8241, "nlines": 51, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "லிந்துலை வைத்தியசாலையில் இரு தாதிகளினால் ஏற்பட்ட விபரீதம் வைத்திய நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்…!! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nலிந்துலை வைத்தியசாலையில் இரு தாதிகளினால் ஏற்பட்ட விபரீதம் வைத்திய நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்…\nலிந்துலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகள் இன்று காலை முதல் ஸ்தம்பிதமடைந்துள்ளது.\nகுறித்த வைத்தியசாலையில் 10 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் இரண்டு தாதிமார்கள் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகளுக்கு பாதகம் விளைப்பதாக தெரிவித்து வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் என 15 இற்குட்பட்டோர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.\nஇருந்தபோதிலும் வைத்திய சேவைக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெண் தாதியர் இருவர் உட்பட மொத்தம் 5 தாதியர்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇதனால் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு வைத்தியர்கள் ஊடான சேவையை பெறுவதில் இன்று காலை முதல் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nநோயாளராக அனுமதிக்கப்பட்டவர்களும் சிரமத்திற்குள்ளாகும் அதேவேளை, வெளிநோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் மற்றும் மருந்தகங்களில் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த லிந்துலை வைத்தியசாலையில் 13 வருடங்களாக சேவையாற்றி வரும் இரண்டு தாதியர்களுக்கு இடமாற்ற கடிதம் வந்துள்ள போதிலும், இவர்கள் செல்லாது வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து வருவதுடன் லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த தோட்ட பகுதி மற்றும் கிராம பகுதியிலிருந்து வரும் நோயாளர்களுக்கு உரிய சேவையை இவர்கள் வழங்காது புறுக்கணித்து வருவதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கு இவர்கள் ஊடாக பாரிய சிரமங்கள் ஏற்படுவதை கண்டித்தே இன்று பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\nபல் வைத்தியர் உட்பட மொத்தம் நான்கு வைத்தியர்கள் இவ்வைத்தியசாலையில் சேவையாற்றுவதுடன், 12 சிற்றூழியர்கள் சேவையாற்றி வருகின்றனர்.\nகடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் பாரிய வைத்திய குறைபாடுகள் நிகழ்வதாக மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகளினாலும் பெரியதாக பேசப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் இங்கு பணியாற்றும் பழமையான தாதியர்கள் இருவர் வைத்திய நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயலை செய்து வருகின்றனர் என தெரிவிக்கும் வைத்தியர்கள் இது தொடர்பில் மத்திய மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் தலையீடு செய்து உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும் பட்சத்தில் இப்பிரதேச மக்களுக்கு உரிய வைத்திய சேவையை எம்மால் வழங்க முடியும் என பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள வைத்தியர்கள் மேலும் தெரிவித்தனர்.\nPrevious நீதி வேண்டி புலோப்பளை பிரதேச மக்கள் அமைதிப்பேரணி..\nNext கை, கால்கள் இல்லாத இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு பதற வைக்கும் சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/gujarat/vadodara", "date_download": "2018-08-20T19:16:08Z", "digest": "sha1:4PZHS4WJLWG4KNAKEDRX2SQLLPX4OKPL", "length": 5119, "nlines": 74, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் வடோதரா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள வடோதரா\n2 ஃபோர்டு விநியோகஸ்தர் வடோதரா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 ஃபோர்டு விநியோகஸ்தர் வடோதரா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product-category/religion/page/12/", "date_download": "2018-08-20T18:17:34Z", "digest": "sha1:2EIH3QZTYEVOTQ6NPX52QSR56RWN2PIT", "length": 15354, "nlines": 460, "source_domain": "tamilnool.com", "title": "சமயம் Archives - Page 12 of 13 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/190409?ref=home-feed", "date_download": "2018-08-20T18:07:00Z", "digest": "sha1:6BFFFCNI2K67WWQAQOX776ZP3BPZXICG", "length": 7422, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்ரம பதவியேற்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்ரம பதவியேற்பு\nவன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்ரம பதவியேற்றுள்ளார்.\nகுறித்த பதவியேற்பு நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.\nபொலிஸாரின் அணி நடை மரியாதையுடன் ஆரம்பமான நிகழ்வின் பின்னர் சமயத் தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் கையொப்பமிட்டு பதவியினை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஇதில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/hello-india-august-2018/", "date_download": "2018-08-20T18:05:34Z", "digest": "sha1:M6GZGS2YOASP5RCHY57DFRQSVCFXZWQ2", "length": 8243, "nlines": 166, "source_domain": "news7paper.com", "title": "Hello! India - August 2018 - News7Paper", "raw_content": "\nபாலஸ்தீனத்தில் நடப்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டும்: சிறுமி அஹித் தமீமி\nகருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு; தீவிரக் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை: திருநாவுக்கரசர் தகவல்\nஒசாமா பின் லேடன் மகன் திருமணம்: அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புத் தீவிரவாதி மகளை…\nதினகரன் குக்கர் டோக்கன் கொடுத்து கூட்டத்துக்கு ஆள் சேர்த்தார்: திவாகரன் விமர்சனம்\nநீ இரவு முழுக்க என்னிடம் சொன்ன ஆசையை நிறைவேற்றுவேன்: ஷாரிக்கிற்கு ஐஸ் வாக்குறுதி |…\nசிசிடிவி, போலீஸ் இரண்டுமே வேலைசெய்ய வேண்டிய தேவை: நடிகர் பிரசன்னா\nராகுலை சந்தித்த பிரபல நடிகர்… இப்போது சீரியல் நடிகையுடன் இணைகிறார்…\nஎன்னாது, மறுபடியும் பிக் பாஸ் வீட்டில் காயத்ரியா\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\nபெண்ணிடம் ‘ஹாட்’ போட்டோ கேட்டு ஹார்ட் அட்டாக் வாங்கிக் கொண்ட இளைஞர்\nஉடம்புல இருக்குற மொத்த கொழுப்பையும் ஒரே வாரத்துல கரைக்கணுமா இந்த ஜூஸ குடிங்க… |…\n… யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்\nஃபேன் இல்லாம தூங்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற ஆளா நீங்க… அது எவ்ளோ டேன்ஞ்சர்னு பாருங்க……\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome இதழ்கள் ஆங்கில இதழ்கள் Hello\nசாலை மறியலில் ஈடுபட்ட நடிகை ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு\nகாதலியை ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வீடு புகுந்து திருட்டு: சினிமா துணை நடிகர் நண்பருடன்...\nசெல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்\nகண்ணீரில் ஜனனி, ஐஸ், யாஹ்சிகா.. அப்போ இந்த வார எலிமினேசன் ‘இவர்’ தானா\nஇடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி – இந்து தமிழ் திசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/nalini.html", "date_download": "2018-08-20T18:25:15Z", "digest": "sha1:ZK7D672SSTOOZYESAZUJFEHLXQERIVW5", "length": 10292, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Nalini to introduce her daughter in tinsel town - Tamil Filmibeat", "raw_content": "\nநளினி அந்தக் காலத்தில் மைக் மோகனுடன்...\nதனது மகள் அருணாவை திரையுலகுக்கு கொண்டு வருகிறார் நளினி.\nராமராஜனுக்கும், நிளினிக்கும் பிறந்த குழந்தைகள் 2 பேர். இருவரும் இரட்டையர்கள். அருண், அருணா என்பதுஅவர்களது திருநாமங்கள்.\nஇவர்கள் இருவரும் தற்போது அம்மா நிளினியுடன் தான் இருக்கிறார்கள். இவர்களில் மகள் அருணாவைசினிமாவில் இறக்க விட நளினி முடிவு செய்துள்ளாராம்.\nஅவருக்கேற்ற கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க வைக்க தயாராக உள்ளாராம். இதை அவரேதயாரிப்பாளர்களையும் இளம் இயக்குனர்களையும் சந்தித்துச் சொல்லி வருகிறார்.\nகூடவே மகளுடன் வந்தாலும் தயாரிப்பாளர்களை நளினி பார்க்கும் பார்வை அந்த அறையையே சூடேற்றி விடுகிறதாம்.\nராமராஜன் தனது அக்காள் மகளுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். தனித்து விடப்பட்ட நளினியுடன் முதலில் மேனேஜர் ஒருவர் நெருக்கமாக இருந்தார். இப்போது தொழிலதிபர் ஒருவரிடம்நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளதால் தானே சொந்தப் படம் எடுக்கும் திட்டத்திலும் இறங்கியிருக்கிறார்.\nவெளிப் படத்தில் மகளுக்கு சான்ஸ் கிடைக்காவிட்டால் தனது படத்திலேயே மகளை இறக்கி விடுவார் என்றுதெரிகிறது.\nடிவி சீரியல்களில் நடித்து வரும் நளினிக்கு, சூட்டிங் ஸ்பாட்டில் இளம் உதவி இயக்குனர்களைப் பார்த்துவிட்டால்போதும், அவர்களை இழுத்து வைத்துப் பேசத் தவறுவதில்லையாம்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\n'காதலில் சொதப்புவது எப்படி' இயக்குநர்- மனைவி விவாகரத்து\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா\nபிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த பார்ட்டி\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2018-08-20T18:47:17Z", "digest": "sha1:5LDYRN6W543XVFRYYEC54ZI3HMNVC5GZ", "length": 8004, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news தமிழக அரசு தரப்பில் காவல் துறையினருக்கு அச்சுறுத்தல்:", "raw_content": "\nதமிழக அரசு தரப்பில் காவல் துறையினருக்கு அச்சுறுத்தல்: பொன்.ராதா\nதமிழக அரசு தரப்பில் காவல் துறையினருக்கு அச்சுறுத்தல்: பொன்.ராதா\nதமிழக அரசால் காவல்துறை மற்றும் அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் -சென்னை எட்டு வழிச்சாலை பணியில் முதல்வர் பழனிசாமியின் முயற்சிக்கு பாராட்டுகள். இது போல் கிழக்கு கடற்கரை சாலை திட்டமும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கிழக்கு கடற்கரை ரயில் பாதை, குமரியில் துறைமுகம் துவங்குவதற்கான பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\n2 ஆண்டுகளுக்கு மேல் 28 ஆயிரம் கோடி செலவில் வரவிருக்கும் குளச்சல் துறைமுகம் கொண்டு வராமல் இருப்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு இதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். வதந்திகள் மூலம் பல திட்டங்களுக்கு தடை ஏற்படுகிறது. வதந்தி அடிப்படையில் செயல்பட்டால் அது மக்களை பாதிக்கும். ஜனநாயக புரட்டு ஏற்பட்டு பா.ஜ., ஆட்சி தமிழகத்தில் வர வாய்ப்பு உள்ளது.\nதிமுக அழிந்துவிடும் என திமுகவே நம்புகிறது. தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மக்கள் கழகங்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்து நிற்கின்றனர். ஸ்டாலின் அவர்கள் பள்ளிக்கு கட் அடிப்பது போல் சட்டசபையை புறக்கணிக்கிறார். தமிழகத்தில் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது: டொனால்டு டிரம்ப்\nபள்ளி வேன் விபத்து; 2 குழந்தைகள் சேற்றில் சிக்கி பலி\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arrasu.blogspot.com/2005/08/blog-post_112474155452806379.html", "date_download": "2018-08-20T18:38:14Z", "digest": "sha1:MP27IGTT44AB3OBCEFMGPPNBEHAYS43L", "length": 11835, "nlines": 45, "source_domain": "arrasu.blogspot.com", "title": "அரசு: சொர்ணமால்யாவின் சோகக்கதை", "raw_content": "\nஇன்று நாம் பண்பாட்டைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், அந்தப் பண்பாட்டைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதில்லை.\nபண்பாட்டைக் கற்றுத் தருவது என்றால் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று புதிது புதிதாகக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டிருப்பது அல்ல. மொத்த உடம்பும் மறைகிற மாதிரிதான் பெண்கள் உடை அணிய வேண்டும். ஆண்கள் என்றால் சிகரெட் பிடிக்கக் கூடாது. மது குடிக்கக் கூடாது என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் கண்டிஷன் போட்டுக் கொண்டிருப்பதல்ல பண்பாடு.\nஸ்லீவ்லஸ் பிளவுஸ் போட்டுக் கொள்வதற்கும் பண்பாட்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிகரெட் பிடிப்பதற்கும் பண்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nஎல்லாவற்றிலும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களைப் பல இளைஞர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நம் வீட்டுக் குழந்தைகளை இன்டர்நெட் பார்க்காதே என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம். மனிதன் எப்போதுமே தவறுகளைத்தான் முதலில் செய்கிறான். புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும் அந்த மொழியில் உள்ள கெட்ட வார்த்தைகளைத்தான் முதலில் கற்றுக் கொள்கிறோம். ஆனால், அதோடு யாரும் நின்றுவிடுவதில்லை. அடுத்து நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்கிறோம்.\nடி.வி., இன்டர்நெட், செல்போன் என்று உலகமே உள்ளங்கை அளவுக்கு சுருங்கி விட்ட இந்தக் கால கட்டத்தில் எஃப் டி.வி பார்க்காதே, குட்டைப் பாவாடை போடாதே, காதில் வளையத்தை மாட்டிக் கொள்ளாதே என்றெல்லாம் நாம் சொல்லக் கூடாது. அப்படியே சொன்னாலும் அவர்களால் அதுபடி நடக்கவும் முடியாது. அப்படி நடப்பது இயற்கைக்கு எதிராக நடக்கிற மாதிரி, தகாத விளைவுதான் ஏற்படுத்தும். பண்பாடு என்பது, என்னவென்று தெரிந்துகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளுவதல்ல. எல்லாவற்றையுமே தெரிந்துகொண்டு, அந்த விஷயம் நமக்குச் சரிப்பட்டு வருமா எந்த அளவுக்கு அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்பதை நன்றாக யோசித்து அதன்படி நடப்பது.\nஇன்றைய தேதியில் நம்முடைய பெற்றோருக்கு, முக்கியமாக பெண்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு, மிகப் பெரிய அதிர்ச்சியாக இருப்பது ‘டேட்டிங்’. டேட்டிங் என்றாலே அது என்னவென்றுகூட புரிந்து கொள்ளாமல் பயத்தில் நடுங்கி, கோபத்தில் கொந்தளித்து, கரித்துக் கொட்டுகிறார்கள். டேட்டிங் என்பது ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் ஒரு ஹோட்டலுக்கோ அல்லது பார்க்கிற்கோ சென்று பேசிக் கொண்டிருப்பதுதான். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு இந்த டேட்டிங் நிச்சயம் பயன்படும். எனவே, அதை வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை.\nஆனால், டேட்டிங் என்கிற பெயரில் யார் கூப்பிட்டால் போகலாம் எந்தெந்த இடத்துக்குப் போகலாம் எந்த அளவுக்கு பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் சகிக்கலாம் ஏதாவது பிரச்னை என்றால் எப்படி சமாளிப்பது ஏதாவது பிரச்னை என்றால் எப்படி சமாளிப்பது என்கிற மாதிரியான விஷயங்களை மனம் திறந்து அக்கறையோடு எடுத்துச் சொல்லலாம். இதைச் செய், அதைச் செய்யாதே என்று சொல்லப்படும் அட்வைஸ்களை விட நட்பு ரீதியில் விளக்கிச் சொல்வதைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்.\nதண்ணீரைக் கண்டாலே ஒதுங்கி விடு என்று சொல்வதை விட நீச்சலடிக்கக் கற்றுக் கொடுப்பது புத்திசாலித்தனம். அது சரி, அம்மா, அப்பாவே டேட்டிங் பற்றி எப்படிச் சொல்வது எனவே, அந்த விஷயமே வேண்டாம் என்று சொல்வது திருட்டுத்தனங்களுக்குத்தான் வழி வகுக்கும். உங்கள் மகனை டேட்டிங்கிற்கு போகவே கூடாது என்று சொன்னால் அவன் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக போக நிச்சயம் வாய்ப்புண்டு.\nநண்பர்கள் போல எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி என்னை வளர்த்தார்கள் என்னுடைய பெற்றோர்கள். அதனால்தான் அடுத்தடுத்து இரண்டு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்ட போதும் உடைந்து போய்விடாமல், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிந்தது. என்னை மாதிரி மிகக் குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை யாரும் கண்டிருக்கவும் முடியாது. இருபத்தோரு வயதில் இவ்வளவு கஷ்டமும் அனுபவித்திருக்கவும் முடியாது. ‘நான் இவ்வளவு கஷ்டப்படுவேன்னு நீ நினைச்சியாம்மா’ என்று ஒருமுறை என் அம்மாவிடம் கேட்டேன். ‘எந்த அம்மாவாவது தன் குழந்தை கஷ்டப்படப் போகிறாள் என்று நினைப்பாளா’ என்று ஒருமுறை என் அம்மாவிடம் கேட்டேன். ‘எந்த அம்மாவாவது தன் குழந்தை கஷ்டப்படப் போகிறாள் என்று நினைப்பாளா’ என்று கேட்டார். பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. பிடிக்காததைச் சரி செய்யப் பார்த்தோம். முடியவில்லை. பிடிக்காத வாழ்க்கையை பொறுத்துக் கொண்டு வாழ்வதை விட, வேண்டாம் என்று ஒதுங்கி விட்டோம். இதற்காக வீட்டில் யாரும் என்னைக் குறை சொல்லவில்லை. காரணம், அவர்கள் என்னை சரியாகவே வளர்த்திருக்கிறார்கள். நானும் சரியாகத்தான் வளர்ந்திருக்கிறேன். இன்று வரை நன்றாக யோசித்து என் பண்பாட்டுக்கு சரியென்று பட்டதை மட்டுமே செய்கிறேன்.\nகொழந்தே நன்னா இருக்கியோன்னோ...ஆத்தில எல்லாரும் சௌக்கியமா இருக்காளோல்லியோ\n# posted by சிக்கல்ச.சுந்தரம் : 1:01 AM\nமோகனாங்கி எப்படி இருக்காக...எங்கள எல்லாம் மறந்துட்டீயளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=136040", "date_download": "2018-08-20T18:11:19Z", "digest": "sha1:TWO3LWHGAHB67SMLGDWXNFSKVALPKK3S", "length": 5320, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகாவிரி நீர் கேட்டு போராட்டம் பிப் 13,2018 19:38 IST\nகாவிரி நீர் கேட்டு போராட்டம்\nபாய்லர் வெடித்து தொழிலாளி பலி\nபயிற்சி அளித்த அரசு; வேலை தரல\nஓணம் ரத்து: ரயில்வே வருவாய் பாதிப்பு\nவயிற்றுக் குழந்தையை காணோம் : மனு\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=430fed092c28548e1be582ae68e8faae", "date_download": "2018-08-20T18:09:00Z", "digest": "sha1:HMFR3NOVFZZY472SA6CIMXBJENVQZSJM", "length": 49053, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/tamil/96457", "date_download": "2018-08-20T18:03:14Z", "digest": "sha1:FIJQIGVXMIWUVHOQE5CODHI24GGZNRI7", "length": 7492, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "பலாலியில் உள்ள பாரிய இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அகற்றப்படுகின்றன :", "raw_content": "\nபலாலியில் உள்ள பாரிய இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அகற்றப்படுகின்றன :\nபலாலியில் உள்ள பாரிய இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அகற்றப்படுகின்றன :\nபலாலியில் உள்ள இராணுவ ஆயுத களஞ்சியத்தில் இருந்து ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.\nவலி.வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஏக்கர் காணிகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது. போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் ஆனா போதிலும் கடந்த அரசாங்கத்தால் மக்களின் காணிகள் மீள கையளிக்கப்பட வில்லை. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் பல ஏக்கர் காணிகளை கையளித்து உள்ளது.\nஇன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது இராணுவ முகாம்கள் அமைந்துள்ள தனியார் காணிகள் மற்றும் இராணுவ ஆயுத களஞ்சியங்கள் அமைந்துள்ள காணிகள் இன்னமும் மக்களிடம் மீள கையளிகப்படவில்லை.\nஅவற்றை மிக விரைவாக கையளிக்கும் விதமாக தற்போது ஆயுத களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்களை இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு அகற்று கின்றனர்.\nஅவ்வாறு அவற்றை அகற்றிய பின்னர் எஞ்சியுள்ள தனியார் காணிகளும் மக்களிடம் மீள கையளிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.\nதமிழரின் பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும்\nஇந்தியாவிடமே வழங்க வேண்டும்: காலத்தை கடத்தாது வீடுகளை நிர்மாணிக்கக் கோருகின்றது கூட்டமைப்பு\nஇந்து சமுத்திரத்தில் சீனாவின் தந்திரோபாயமே இலங்கைக்கான இராணுவ உதவிஸ\nநாவற்குழியில் உள்ள 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை\nதமிழரின் பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும்\nவடக்கு- − கிழக்கு இணைப்பு முஸ்லிம்கள் தனித்து செல்ல விரும்பினால் ஆதரிக்கவூம் தயார்\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_53.html", "date_download": "2018-08-20T18:21:01Z", "digest": "sha1:HRHRKKCPNF4CXZVAWRPZJRCFGM4FEU6M", "length": 6041, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வு\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வு\nசர்வதேச தாதியர் தினம் நேற்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான முறையில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று சர்வதேச தாதியர் தினம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களினால் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.சுகுணன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.\nஇதன்போது தாதியர்களின் பல்வேற நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தாதியர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்த நிகழ்வில் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்.\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2018/07/blog-post_25.html", "date_download": "2018-08-20T18:04:09Z", "digest": "sha1:LPASGGSCO5OQ7JEYW73UCPSUEJP5O552", "length": 28611, "nlines": 113, "source_domain": "www.nisaptham.com", "title": "கதைகள் ~ நிசப்தம்", "raw_content": "\nஊட்டியில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின் ஒன்றைக் குறிப்பிட்டார். 'ஒவ்வொரு நாளும் புதிய சிறுகதைகளை வாசிக்க வேண்டும். அப்படி வாசிக்காதவன் _________ ' என்றார். குறிப்பாக உதவி இயக்குநர்களுக்கானது அந்த அறிவுரை. அந்த ______ என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் சொன்னது முக்கியமான விஷயமாகப் பட்டது. தினசரி ஒரு கதையை வாசித்துவிட வேண்டும் என்பதை வெகு நாள் பழக்கமாக வைத்திருக்கிறேன். தினசரி பிரச்சினைகள், நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாக சிறுகதைகளும் புனைவுகளும் அமைவதை உணரக் கூடும்.\nஒரு சிறுகதையை வாசிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் அதிகபட்சம் ஏழு முதல் பத்து நிமிடங்கள். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக வாசித்துவிட்டால் அலுவலகம் வந்து சேரும் வரைக்கும் அதுதான் மண்டைக்குள் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கும். சற்று யோசித்துப் பார்த்தால் இப்பொழுதெல்லாம் நமக்கான திறப்புகள் என்று எதுவுமே இல்லை. யாரிடமாவது மனம் விட்டு பேசுகிறோமா அதிகபட்சம் ஏழு முதல் பத்து நிமிடங்கள். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக வாசித்துவிட்டால் அலுவலகம் வந்து சேரும் வரைக்கும் அதுதான் மண்டைக்குள் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கும். சற்று யோசித்துப் பார்த்தால் இப்பொழுதெல்லாம் நமக்கான திறப்புகள் என்று எதுவுமே இல்லை. யாரிடமாவது மனம் விட்டு பேசுகிறோமா சுற்றிலும் நடப்பதை கவனிக்கிறோமா எந்நேரமும் செல்போன் அல்லது கணினிதான் நம்முடைய உலகமாக இருக்கிறது. திண்ணைகள் இல்லை. அரட்டைகள் இல்லை. சக மனிதனைப் பற்றிய கவனிப்பு சுத்தமாக இல்லை. நாமாகவே நம்மைச் சுற்றி ஒரு பெரிய சுவரை எழுப்பி வைத்திருக்கிறோம். தேங்குவதையெல்லாம் எங்கேதான் கொட்டுவது பொதுவாகவே கதைகள் நல்ல திறப்பு. 'எதற்காக ஒருவர் வாசிக்க வேண்டும்' என்று கேட்டால் நமக்குள் நாமாகவே ஓர் உரையாடலை நிகழ்த்திக் கொள்ள கதைகள் அற்புதமான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றன என்று சொல்லலாம். எவ்வளவு பாத்திரங்கள், எவ்வளவு விசித்திரமான மனிதர்கள், அவர்களின் மனநிலை, இந்த உலகம் குறித்தான நுட்பமான சித்திரங்கள் என எல்லாவற்றையும் நமக்குச் சொல்லித் தருபவை கதைகள்.\nநேற்று அசோகமித்திரனின் புலிக் கலைஞனை வாசித்தேன். அவர் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்கு இருந்த அனுபவத்திலிருந்து பிறந்த கதை. மதிய உணவு இடைவேளையின் போது சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் காதர், அவரது புலி வேஷம், அதன் வழியாக அவரது வாழ்வின் வலி, வாய்ப்பு கேட்டு இரந்து நிற்கும் அவரது உடல், முக பாவனைகள் என கதை நம்மை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். சினிமாவில் ஏதாவது வாய்ப்பு கிடைத்துவிடாதா என்று இயக்குனர்களின் அலுவகத்துக்கு வந்து போகும் பல நூறு எளிய கலைஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள். எப்பொழுதும் இருப்பார்கள். கலைஞனின் உலகம் வேறுதான். ஆனால் அங்கு பஞ்சமும் பட்டினியும் பசியும் அவனை எவ்வளவு கூனிக் குறுக வைக்கின்றன\nகதையை இதுவரை வாசித்திராதவர்கள் ஒரு முறை வாசித்துவிடவும்.\nஎங்கள் அலுவகத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கதை சொல்லச் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் ஒருவர் சொல்ல வேண்டும். ஆளாளுக்கு அவரது வாழ்க்கையில் நடந்த கதைகளைச் சொல்வது வழக்கம். கதை என்பது சம்பவமில்லை என்று உறுதியாக நம்புகிறவன் நான். எங்கே தொடங்க வேண்டும், எந்த இடத்தில் நகைச்சுவை வர வேண்டும், எந்த இடத்தில வாசிக்கிறவனைக் கரைக்க வேண்டும், எப்படி முடிய வேண்டும் என யோசித்து யோசித்துச் செதுக்குவதற்கும் போகிற போக்கில் சொல்லிச் செல்வதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு.\nல.ச.ராவின் ஒரு கதையை வாசித்து அதன் சாறு வடிந்துவிடாமல் இன்னொருவருக்குச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. சு.ராவின் கதைகளில் வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் வாசிப்பின்பத்தை இன்னொருவருக்கு கதை சொல்லலில் கடத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் வாசித்ததை உள்வாங்கி கதை குறித்தான அபிப்பிராயத்தைச் சொல்லாமல் கேட்கிறவர்களுக்குக் கதையாகச் சொல்வதில் ஒரு மிகப்பெரிய திருப்தியும் பலமும் கிடைக்கும். முயற்சித்துப் பார்க்கலாம். அலுவலகத்தில் என்னுடைய முறையின் போது ஒரு நல்ல கதையைச் சொல்ல வேண்டும் என்று அ.மியின் புலிக்கலைஞனைச் சொன்னேன். இருபது நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால் யாருடைய கவனமும் சிதறவில்லை. நான் நன்றாகச் சொன்னேன் என்று அர்த்தமில்லை. கதை அப்படி. நல்ல கதைகள் அப்படித்தான். நம்மை ஒரு கொக்கியில் மாட்டி எங்கேயெல்லாமோ இழுத்துச் சென்றுவிடுகிறது.\nஇதைவிடவும் வேறு என்ன வடிகால்களை நாம் கண்டுபிடித்துவிடப் போகிறோம்\nஅசோகமித்திரனின் எழுத்துக்கள் அவரது வாழ்வியல் அனுபவங்களின் திரட்சியாகத்தான் இருக்கின்றன. செவ்வாய் கிரகத்திலிருந்து எதையும் எடுத்து வந்து அவர் எழுதவில்லை. அலுவலகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எழுதினால் 'இதையெல்லாம் எழுதினால் அலுவலகத்தில் எதுவும் பிரச்சினை ஆகாதா' என்று யாரோ கேட்ட கேள்வியும் நினைவில் வந்து போனது. ஜெமினி ஸ்டுடியோஸ் அனுபவங்களை அசோகமித்திரனின் எழுத்துக்களில் பல இடங்களில் பார்க்க முடியும். கரைந்த நிழல்களில் தொடங்கி எங்கேயாவது அவரது சினிமா கம்பெனி அனுபவங்கள் எட்டிப் பார்த்த படியே இருக்கின்றன. அசோகமித்திரன் என்றில்லை- பெரும்பாலும், எழுதுகிறவன் தமக்கான கச்சாவை தன்னைச் சுற்றி இயங்கும் உலகத்திலிருந்துதான் எடுக்க முடியும். எவையெல்லாம் இந்த உலகத்திலிருந்து ரத்தம் சதையுமாக எடுக்கப்பட்டு எழுத்தாக மார்றப்படுகிறதோ அவையெல்லாம் உயிர்த்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. கற்பனை பற்றியும் படைப்பறிவு பற்றியும் அதீத நம்பிக்கை கொண்டு உடான்ஸ் விட்டால் தட்டையாகிப் போவதற்கான சாத்தியங்கள் வெகு அதிகம்.\n//இதைவிடவும் வேறு என்ன வடிகால்களை நாம் கண்டுபிடித்துவிடப் போகிறோம்\nஅதுக்கு தான இங்குன வந்து என்ன த்தையாவது சொல்லிட்டு கெடக்கேன்.\nஇதற்காக தான் நிசப்தம் பதிவை அனுதினமும் எதிர் பார்த்து கொண்டே இருக்கிறேன்.வாழ்க வளமுடன்\n நோபல் பரிசுக்கு தகுதியான எழுத்தாளர். அவரின் கட்டுரையோ, நாவலோ படித்து முடிக்கும் போது, பெருங் கூட்டத்திலும் ஒரு ஏகாந்தமான, தனிமையான மன நிலையை உணருவது போல் இருக்கும். அவரின் விடுதலை நாவலில் வரும் பரசுராமய்யர், தலைமுறைகள் நாயகன் சங்கரன், இன்னும் சில நாட்கள் சுவாமி நாதன் என் நினைவில் இன்றும் வந்து கொண்டே இருக்கிறார்கள். சொல்ல போனால், எதையும் சாதிக்காமல், லட்சிய வெறி இல்லாமல் ஒருவர் அமைதியாக, சந்தோஷமாக தனக்கு உண்மையில் என்ன வருமோ அதை செய்து கொண்டு ஏக்கமன்றி வாழலாம் என்று நான் உணர்ந்ததற்கு அசோகமித்திரன் படைப்புகளே காரணம். நான் மிகைப்படுத்தி சொல்ல வில்லை. அசோகமித்திரன் எழுதிய நிலமும், மக்களும் முழுமையாகவே பூமியில் இருந்து மறைந்துவிட்டார்கள். ஆனால் அவரின் எழுத்துக்கள் மூலம் என்றும் இருப்பார்கள்.\nஅவரை பற்றி ஜெயமோகனின் பதிவு ஒன்றை இங்கு ஷேர் செய்துள்ளேன்.\n'ஒவ்வொரு நாளும் புதிய சிறுகதைகளை வாசிக்க வேண்டும். அப்படி வாசிக்காதவன் _________ ' என்றார். குறிப்பாக உதவி இயக்குநர்களுக்கானது அந்த அறிவுரை. அந்த ______ என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் சொன்னது முக்கியமான விஷயமாகப் பட்டது./////////////////\nஇ‌தென்னங்க கொடுமை,,,, அலுவல் விசயம் தவிர்த்த ரசனைகள் பழக்க வழக்கங்கள் ஆளாளுக்கு வேறுபடும்,,, அது இசை கேட்பது, சுற்றுலா செல்வது, கோயில்களுக்கு செல்வது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது அல்லது அரட்டையடிப்பது, குடும்பத்துடன் எங்காவது சென்று வருவது, சிலருக்கு பொதுசேவை, சிலருக்கு பார்ட் டைம் வேலை என்று ஒவ்வொருவரும் ஒரு விதமாக செயல்படுவார்கள்,, அப்படியிருக்க கதை படிக்கணும், கவிதை படிக்கணும், எலக்கியம் படிக்கணும், ஏதாவது முற்போக்கு நாவல் படிக்கணும், வெளிநாட்டு எலக்கிய பொஸ்தகத்த படிக்கணும்னு அறிவுரை சொல்றது எல்லாம் என்னமாதிரியான குணம்னு தெரியல,, உங்களின் இந்த பதிவை வைத்து மட்டும் நான் இதை எழுதவில்லை,,,\nபல வலைதளங்களில் எழுத்தாளர்கள் என்று பெயர் பெற்ற அல்லது போட்டுக்கொண்ட பலர் இப்படி தான் கதைக்கிறார்கள்,, இங்க நீங்க குறிப்பிட்ட பல எழுத்தாளர்களின் பெயர்களை போல அவர்களும் ஆளாளுக்கு அவ்வப்போது நாலைஞ்சி வெளிநாட்டுகார எழுத்தாளர்கள் பெயரையும் அந்த பொஸ்தகத்தின் பெயரையும் போட்டு பாத்தியா அதுல அப்படி இருந்திச்சி,,, இத மாதிரி எழுத இங்க என்ன விட்டா யார் இருக்காங்கிற ரேஞ்சிக்கு அலம்பல் பண்றதும்,,, என்னவோ கீழடி அகழ்வாராய்ச்சியல பொன்னும் புதையலும் கண்டுபடிச்சிட்ட மாதிரி சராசரி வாசகனுக்கு தெரியாத ஒரு சில பெயர்களை குறிப்பிட்டும் அந்த நாட்டு எலக்கியம் இந்த நாட்டு எலக்கியவாதின்னு சிலரை குறிப்பிட்டும் தன்னைதானே பெருமைபடுத்திக்கொள்வதுமாக திரிகிறார்கள், (விவேக் காமடில வர்ற தானே உக்காந்த தானைதலைவன் வாழ்க டயலாக் போல)\nமத்த எந்த துறைகளிலும், கலைகளிலும் (அரசியல், சினிமா தவிர்த்த), இல்லாத தம்பட்ட டமாரம் இந்த எழுத்துதுறையில் மட்டும் ரொம்ப ஓவராவே இருக்கு,,, பொஸ்தகங்கள் வாசிப்பது எல்லாம் டிவி, கணினி, கைபேசி, டாஸ்மாக் புரட்சிகாலத்திற்கு முன்புவரை இருந்த மாற்றுபொழுதுபோக்குகளில் தவிர்க்க முடியாததாக இருந்தது,,, வேறு ஆப்சன் கம்மியாகவும் இது கொஞ்சம் கைய கடிக்காத எக்கனாமிக் என்பதாலும் அக்காலத்தில் எல்லோரிடத்திலும் பரவலான பழக்கமாக இருந்தது,, இப்பவும் அப்படியே இருக்க எல்லோராலும் முடியுமா\nஎழுத்துதுறையில் சாதாரண வாசகனுக்கு புரியவே புரியாத நடையிலும், ‌வெளிநாட்டு எலக்கியம்னு சொல்லி அதை மொழிபெயர்த்தோ காப்பி அடித்தோ என்னத்தையாவது எழுதிட்டு அத படிக்கிறதுக்குன்னே இருக்கிற நாலு பேர் சொல்ற ஆகா ஓஹோ ஜால்ரா சத்தத்தை தங்கள் வலைதளங்களில் பதிந்துவிட்டு இந்த அற்ப உலகில் இவர்கள் என்னவோ தேவதூதர்கள் மாதிரியும் நாசாவுக்கு ராக்கெட் வுட்ட சயின்ட்ஸ் ரேஞ்சுக்கும் புலம்புவது ரொம்பவும் டெர்ரர் காமடியா இருக்கு,,,,\nபத்து இருபது பொஸ்தகம் எழுதினா கூட பரவாயில் நாலைஞ்சு எழுதிட்டி எழுத்தாளர்ன்னு தனக்கு பின்னால கூட்டம் சேத்துகிட்டு தங்களுக்கு தாங்களே கூட்டம் போட்டுகிட்டும் எம்எல்எம் பாணியில் ஒவ்வொருத்தருக்கு ஒருத்தர் பாராட்டு பத்திரம் வாசிக்கிறதும் அவார்ட் சால்வை கொடுத்துகிறதுமாக ரொம்ப ஓவர் அலும்பு பண்றாங்க,, அந்தக்காலத்துல வார நாவல்களில் எழுதி தள்ளிய ராஜேஸ்குமார் போன்றவர்கள் எல்லாம் இன்று இருந்த இடம் தெரியாமல் இருக்க இங்கு திடீரென்று பிரபலமாகும் எழுத்தாளர்கள் வடிவேலு முத்து படத்துல ராஜா வேசம் போட்டுட்டு பேசுற மாதிரி தங்களை பற்றி தாங்களே பேசிக்கொள்வது அவர்கள் எழுதிய பொஸ்தகத்த விடவும் ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கு,\nஎழுத்துலகை தங்கள் ஓய்வு நேர பொழுதுபோக்க மாற்றிக்கொண்டவர்கள் என்று எப்பவுமே மக்களில் சிலர் இருக்க கூடும், மற்ற ஓய்வு நேர ரிலாக்ஸான மூடிற்கு ஏற்ற பொழுதுபோக்குகளில் அதுவும் ஒன்று,, ஆனா அதுக்கு நீங்க மேலே சொன்ன மாதிரி எழுதுவதெல்லாம் பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்,, பொஸ்தகம் படிப்பது என்பது மனதை ரிலாக்ஸாக்கும் ஒரு எளிய விசயம் அது டென்சனை குறைக்கும் என்பது போன்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம், ஆனா அவர் சொன்னது போல சொன்னது ரொம்ப ஓவர்,,\n((ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சிகிட்டிருந்த விசயம்,,,,, அதை கிளறிவிடும் விசயமாக இந்த பதிவு அமைந்துவிட்டது,, மற்றபடி இதில் உங்கள் மேல் எனக்கு எதுவும் குறை தோன்றவில்லை,,,))\nபுலிக்கலைஞன் 80 களின் இறுதியில் 12 வகுப்பில் துணைப்பாடமாக இருந்தது.\nஅவன்தான் சிலநிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnewsnow.com/karuppan-movie-review/", "date_download": "2018-08-20T19:06:40Z", "digest": "sha1:G6ZQJKZTBFXXRKIIX63P5BWYTQYWUPNR", "length": 12331, "nlines": 218, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "‘கருப்பன்’ – விமர்சனம் | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n‘ரேணிகுண்டா’ படத்தில் அறிமுகமாகி, கவனிக்க வைத்து, ‘18 வயசு’ படத்தில் தோல்வியை சந்தித்த இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘கருப்பன்’.\nஊரில் அடங்காத காளையாகத் திரியும் விஜய் சேதுபதிக்கு அவர் ஊரில் நல்ல பெயர். ஒருநாள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பக்கத்து ஊர் பெரிய மனிதர் பசுபதி தன் காளையை அடக்கினால் தனது தங்கை தான்யாவை கட்டிக் கொடுப்பதாகச் சொல்ல, காளையை அடக்கி, தான்யாவை மணக்கிறார் விஜய் சேதுபதி. தான்யாவும் விஜய் சேதுபதி நல்லவர் என்று தெரிந்ததும் திருமணம் செய்துகொண்டு விஜய் சேதுபதியின் மீது அன்பைப் பொழிகிறார். இதனால் கடுப்பாகிறார் தான்யாவை ஒருதலையாகக் காதலிக்கும் பசுபதியின் மச்சான் பாபி சிம்மா. தொடர்ந்து விஜய் சேதுபதியையும், தான்யாவையும் பிரிக்க அவர் செய்யும் சதிகளும், அவற்றை விஜய் சேதுபதி எப்படி முறியடித்தார் என்பதே மீதிக்கதை.\nஇயக்குனர் பன்னீர் செல்வம் எப்படியும் இந்த படத்தை ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் இறங்கியே அடித்திருக்கிறார். பலமுறை தமிழ் சினிமா பார்த்த மினிமம் கேரண்டி கதையுடன் விஜய் சேதுபதியை இறக்கிவிட்டு, ஹிட்டடித்திருக்கிறார். என்ன கொஞ்சம் இரண்டாம் பாதி திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம்.\nவிஜய் சேதுபதி. தொடர்ந்து வித்தியாசமான படங்களையே கொடுத்து வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வழக்கமான சக்சஸ் பார்முலா படத்தில் நடித்திருப்பது ஆச்சரியம். இருந்தாலும் சீனுக்கு சீன் சிக்சர் அடித்து படத்தைத் தாங்கியிருக்கிறார்.\nதான்யா. விஜய் சேதுபதிக்கே நடிப்பில் சவால் விடுவதோடு பல இடங்களில் அவரை ஓவர்டேக் செய்து நடிப்பில் ஜெயித்திருக்கிறார்.\nபசுபதி பெரிய மனிதர் வேடம். கச்சிதமாகக் செய்திருக்கிறார். பாபி சிம்மா சைலன்ட் வில்லனாக வந்து, வயலண்டாக மாறி தன் கேரக்டரை நியாயபப்டுத்தியுள்ளார்.\nதியேட்டரை அவ்வப்போது குலுங்க வைக்கிறார் சிங்கம்புலி.\nகாவேரி அழகான அண்ணி வேடம். சரத் லோகிதாஸ் வழக்கமான உறுமல் வில்லன்.\nஇப்படியொரு கிராமப் பின்னணிப் படத்திற்கு இமான் இன்னும் கொஞ்சம் பாடல்களை நன்றாகவே போட்டிருக்கலாம். பின்னணி இசை நன்றாகவே உள்ளது.\nபடத்தின் இன்னொரு பலம் சக்திவேலின் ஒளிப்பதிவு.\n‘கருப்பன்’ – விஜய் சேதுபதியின் ‘கொம்பன்’.\nவிஜய் சேதுபதி வியந்து பாராட்டிய குறும்படம்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nகோலமாவு கோகிலா - விமர்சனம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thinappuyalnews.com/archives/136127", "date_download": "2018-08-20T18:51:12Z", "digest": "sha1:HK7SWZIRXIDJLCK6R2KLKM7U35TXLMMD", "length": 5277, "nlines": 51, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கை, கால்கள் இல்லாத இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு பதற வைக்கும் சம்பவம்..!! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகை, கால்கள் இல்லாத இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு பதற வைக்கும் சம்பவம்..\nகனடா நாட்டில் காணமல்போன இளம்பெண்ணின் உடல் தலை, கை, கால்கள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவில் உள்ள ஓண்டாரியோ மாகாணத்தில் Rori Hache(22) என்ற இளம்பெண் பெறோருடன் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ம் திகதி இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டதாக பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.\nபுகாரை பெற்ற பொலிசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேடையை நடத்தியுள்ளனர்.\nசில நாட்களுக்கு பின்னர் செப்டம்பர் 11-ம் திகதி ஓண்டாரியோ ஆற்றில் தலை, கைகள், கால்கள் இல்லாமல் ஒரு இளம்பெண்ணின் உடல் மிதந்து வந்துள்ளது.\nஉடலை மீட்ட பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.\nடி.என்.ஏவை சேகரித்த பொலிசார் அதனை காணாமல் போன இளம்பெண்ணுடன் ஒப்பிட்டு பார்த்தபோது அது அவர் தான் என உறுதி செய்யப்பட்டது.\nஇத்தகவல் நேற்று அதிகாரப்பூர்வமாக பெற்றோர்களிடம் தெரிவித்தபோது அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\n‘எவ்வித விவகாரத்திலும் ஈடுப்படாத தங்களது அன்பு மகளை துண்டு துண்டாக வெட்டியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என பொலிசாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.\nஇளம்பெண் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nPrevious லிந்துலை வைத்தியசாலையில் இரு தாதிகளினால் ஏற்பட்ட விபரீதம் வைத்திய நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்…\nNext யாழில் தந்தையின் மண்டையினை பிளந்த மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109687-rescue-operation-is-in-full-swing-nirmala-sitharaman.html", "date_download": "2018-08-20T19:00:42Z", "digest": "sha1:ON4RSR7RMODKFSTOPQRO6HK2W6XZJTZQ", "length": 17352, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "`மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது' - நிர்மலா சீதாராமன் தகவல் | Rescue operation is in full swing, Nirmala Sitharaman", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\n`மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது' - நிர்மலா சீதாராமன் தகவல்\nகடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஒகி புயலின் காரணமாகக் கடலில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கைவிடுத்தனர். தமிழகம் மற்றும் கேரள அரசு மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்திய கடற்படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார், ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், `ஜி.பி.எஸ் கருவிமூலம் மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 100 ஆண்டுகளில் நடந்திராத சம்பவம் தற்போது நடந்திருப்பது வருத்தத்துக்குரியது. வெளிநாட்டிலிருந்து வந்த கப்பல்கள், 36 மீனவர்களைக் காப்பாற்றியுள்ளனர். 29 மற்றும் 30-ம் தேதிகளில், மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. மருத்தவ வசதிகள் அடங்கிய கப்பல்களைக்கொண்டு மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது' என்று தெரிவித்தார்.\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n`மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது' - நிர்மலா சீதாராமன் தகவல்\nகாரைக்குடி நகராட்சியின் புதிய வரி விதிப்பால் வியாபாரிகள் போர்க்கொடி\nஆம் ஆத்மி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடிதம்\n`பயிற்சியும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்' - ஆட்சியர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2018/07/19/israel-3/", "date_download": "2018-08-20T19:09:49Z", "digest": "sha1:AEJDAJCDSUSPMV3CTX76NS5SHES5VXG4", "length": 9223, "nlines": 176, "source_domain": "yourkattankudy.com", "title": "“இஸ்ரேல் இனி யூத தேசம்” – மசோதா நிறைவு | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n“இஸ்ரேல் இனி யூத தேசம்” – மசோதா நிறைவு\nடெல் அவிவ்: இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம்.இந்த மசோதாவானது, ‘முழுமையான மற்றும் ஒற்றுமையான’ ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது.\nஇஸ்ரேலின் அரேபிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவினை கண்டித்துள்ளார்.\nஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்த மசோதாவினை வரவேற்று உள்ளார். இதனை முக்கியமான தருணம் என்று போற்றியுள்ளார்.\nஇந்த மசோதாவினை அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கம் ஆதரித்து உள்ளது.\n“வரலாற்று ரீதியாக இஸ்ரேல் யூதர்களின் தாயக பூமி. சுயநிர்ணயத்திற்கு அவர்களுக்கென சில பிரத்யேக உரிமைகள் இருக்கின்றன” என்றும் கூறியுள்ளது.\nஎட்டு மணிநேரம் நடந்த விவாதத்திற்கு பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 55 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து உள்ளனர்.\nஆனால், இந்த மசோதாவில் உள்ள சில உட்பிரிவுகளுக்கு இஸ்ரேலிய அதிபர் மற்றும் அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை கைவிடப்பட்டன.\nஇஸ்ரேலின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவீதம் பேர் அரேபியர்கள். அதாவது 9 மில்லியன் பேர்.\nசட்டப்படி அவர்களுக்கு சம உரிமை இருந்தாலும், இரண்டாம் தர குடிமக்களாக தாங்கள் நடத்தப்படுவதாகவும், இன பாகுபாடுகளை தாங்கள் எதிர்க்கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஇந்த மசோதாவினை ஜனநாயகத்தின் மரணம் என்று வர்ணிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் அஹமத் திபி. இவர் அரேபியர்.\nகடந்த வாரம் இந்த மசோதாவிற்கு ஆதரவாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் பேசுகையில், “மக்கள் உரிமைகளை நாங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்துவோம். ஆனால், அதே நேரம் பெரும்பான்மையானவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அவர்களே முடிவு செய்வார்கள்.” என்றார்.\n« முஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\nபல சாதனைகளை ஏற்படுத்திய பகர் ஸமான் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்' தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nடில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்...\nஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - ஹரீஸ் எம். பி.\nஅறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cm.wp.gov.lk/tm/", "date_download": "2018-08-20T19:01:42Z", "digest": "sha1:GXSARTLMYBATCKZMVNVKTTCPYDPE6SVZ", "length": 3366, "nlines": 57, "source_domain": "cm.wp.gov.lk", "title": "Ministry of Local Government, Economic Promotion, Power & Energy, Environmental Affairs, Water Supply & Drainage and Tourism | Western Province", "raw_content": "\nகழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபை\nமின் அஞ்சல் முகவரி :\nஅத்துருகிரிய ஸ்ரீ பேமானந்த மாவத்தை (மெதகொடலந்த வீதி) மக்கள் பாவனைக்கு உரித்தாக்கல்\nகோட்டை ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மஹாநாயக துரன்தர ருக்மலே தர்ம விஜயாலோக விகாரதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தே பானே தம்மாலங்கார ...\nஅரச சேவை ஆணைக்குழு (மே.மா)\nபிரதான செயலாளர் அலுவலகம் (மே.மா)\nஆளுநர் செயலாளர் அலுவலகம் (மே.மா)\n© 2017 இணையத்தளம் உருவாக்கம் - மற்றும் அபிவிருத்தி- மேல் மாகாணம் தகவல் தொழில்நுட்ப வள அபிவிருத்தி நிறுவனம் - Last Updated on Apr 21, 2017 @ 5:39 pm – Desinged by ITRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/news/60258/doesnt-care-about-the-hero-of-the-movie-", "date_download": "2018-08-20T18:33:39Z", "digest": "sha1:BDG63EGT2KWQBLZTM7ZA26GIAA76H7ZX", "length": 6646, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "பெருசு சிறுசு எல்லாம் முக்கியமில்லை எனக்கு இது தான் முக்கியம் திரிஷா - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nபெருசு சிறுசு எல்லாம் முக்கியமில்லை எனக்கு இது தான் முக்கியம் திரிஷா\nகடந்த 15 வருடங்களாக திரையுலகில் முன்னணியில் இருந்து வருபவர் நடிகை திரிஷா. நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ஹே ஜூடு திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nஇது அம்மணிக்கு ஒரு எனர்ஜி டானிக்காக அமைந்துள்ளது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் திரிஷாவிடம். ஹே ஜூடு வெற்றி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், ” எனக்கு சிறிய ஹீரோ, பெரிய ஹீரோ என்பதை பற்றியெல்லாம் கவலை இல்லை. என்னை பொறுத்தவரை கதை சரியாக இருக்க வேண்டும். நல்ல கதை அமைந்தால் நான் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.” சிவகார்த்திகேயனுடன் நடிப்பீர்களா.. என்ற கேள்விக்கு கண்டிபாக நடிப்பேன் என பதிலளித்துள்ளார்.\nPrevious article M என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா அப்ப இத முதல்ல படிங்க\nNext article அட ரேகா வின் மகளா இது இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nகழுத்தைச் சுற்றி கொஞ்சம் புளி தடவினா காணாமல் போகும் கருமையான படலம்\nசைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு நல்ல புத்தியை தருமாறு சிவனிடம் அங்கப்பிரதட்சனம் செய்த விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/tamil/96458", "date_download": "2018-08-20T18:03:31Z", "digest": "sha1:PQ32XZWND4EV636MO7BB73GZGDTICCGJ", "length": 14289, "nlines": 133, "source_domain": "tamilnews.cc", "title": "என்னை வெளிநாட்டவருடன் போக விடுங்கள் என அழுத சிறுவன்- செல்வச்சந்நிதியில் சம்பவம்", "raw_content": "\nஎன்னை வெளிநாட்டவருடன் போக விடுங்கள் என அழுத சிறுவன்- செல்வச்சந்நிதியில் சம்பவம்\nஎன்னை வெளிநாட்டவருடன் போக விடுங்கள் என அழுத சிறுவன்- செல்வச்சந்நிதியில் சம்பவம்\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நேற்று (11-11-2017) சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றது.\nநேற்று மாலை செல்வச்சந்நிதியானை தரிசனம் செய்ய பக்தர்கள் வழமை போல வருகை தந்திருந்தனர். செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் வயது (12) மதிக்க தக்க சிறுவன் கையில் விளாங்காய் பையுடன் காணப்பட்டுள்ளான்.\nஜேர்மனியிலிருந்து வந்திருந்த குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் இச்சிறுவன் விளாங்காய் வாங்குமாறு கேட்டுள்ளான்.\nஇச் சிறுவனை கண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இச்சிறுவனை அழைத்து வினாவி சிறுவனுக்கு சிறிது பணத்தையும் வழங்கியுள்ளனர்.\nஇதனை அவதானித்த பக்தர்கள் ஆலய மடத்தில் தங்கி வசிப்பவர்கள் இதனை அவதானித்த வண்ணம் இருந்துள்ளார்கள்.\nவெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உனக்கு என்ன கூறினார்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சிறுவன் ஒன்றுமில்லை .\nகூட்டிச்சென்று வீட்டுக்கு அருகாமையில் என்னை விடும் படி கேட்டதாக தெரிவித்தான்.\nஆலய வளாகத்தில் நின்றவர்களில் ஒருவர் சிறுவனை கடுமையாக தாக்கினார். ஏன் பொய் சொல்லுகிறாய் இவர்களுடன் எங்கே செல்ல போகிறாய் உனக்கு யார் இவர்கள் உனக்கு தெரியுமா என கண்டித்ததோடு சிறுவனை அவர்களுடன் செல்ல விடாது தடுத்து வைத்திருந்தனர்.\nஅப்போது சிறுவன் தன்னை அவர்களுடன் போக அனுமதியுங்கள் என கதறினான்.\nமேலும் குறித்த சிறுவன் விடயத்தில் தெரியவருவது\nகுறித்த சிறுவன் வயது 12 வடமராட்சி கெரடாவில் பகுதியைச்சேர்ந்தவர். எனவும் சிறுவனின் தந்தை இறந்துள்ள நிலையில் தாயின் அரவனைப்பில் வளர்ந்து வருகின்றார்.\nஇரண்டு சகோதரர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சிறுவன் நேற்று காலையிலிருந்து மாலை வரை சந்நிதி வளாகத்தில் காணப்பட்டதாகவும் குறித்த சிறுவனைத்தேடி யாரும் வரவில்லை என ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் ஆச்சிரமத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.\nஜேர்மனியிலிருந்து (250-6361) என்ற இலக்கத்தை கொண்ட வேனில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்த குடும்பத்தை சம்பவம் தொடர்பாக செய்தியாளர் வினாவிய போது சிறுவன் தம்மிடம் விளாங்காய் வாங்குமாறு கேட்டதாகவும் அதற்கு தாங்கள் சும்மா கதைத்துவிட்டு சிறிது பணத்தை கொடுத்ததாகவும் சிறுவன் தன்னை வீட்டுக்கு அருகாமையில் இறக்கி விடும்படி கேட்டதாகவும் தெரிவித்தனர்.\nஆலயத்தொண்டர்கள் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்\nஆலயத்தில் காணப்பட்ட சிறுவனை ஜேர்மனியிலிருந்து வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பணமும் மூன்று நேர உணவும் தருகிறோம் எங்களுடன் வாரியா என கேட்டதாகவும், ஆசை வார்த்தை காட்டியதால் சிறுவன் அவர்களுடன் செல்ல உடன் பட்டதாகவும் சிறுவனை கூட்டிச்சென்று அவனுக்கு ஏதும் நடந்தாலும் தெரியாது சிறுவனை பணம் படைத்தவர்கள் தவறாக பயன் படுத்தி விடுவார்கள்.\nசுவிஸ் நாட்டிலிருந்து வந்த சுவிஸ்குமார் பாடசாலை மாணவி வித்தியாவை படுகொலை செய்தமை யாவரும் அறிந்ததே யாழில் தற்போது சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகமாக நடைபெறுவதனால் சிறுவனை கூட்டிச்செல்ல அனுமதிக்க மாட்டோம்.\nஆலயகுருக்கள் ஐயாவை அழைத்து சிறுவனை அவரின் குடும்பதாரிடம் அழைத்து சென்று விடுகிறோம் என தெரிவித்திருந்தனர்.\nஆலய குருக்கள் உதவியுடன் சிறுவனின் இல்லத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான்..\nகுறித்த சிறுவனின் சம்பவம் தொடர்பாக செய்தியாளர் கருத்து தெரிவிக்கையில்\nஜேர்மனியிலிருந்து வந்த குடும்பத்தவருடன் செல்ல சிறுவன் உடன் பட்டதாகவும், ஆலய குருக்கள் மற்றும் கெரடாவில் சமூகத்ததை சேர்ந்தவர்கள் அதற்கு அனுமதியளிக்கததால் என்னை அவர்களுடன் செல்ல விடுங்கள் என் கதறி அழுத தாகவும் இதனால் சிறிது நேரம் ஆலய வளாகத்தில் குழப்பநிலை காணப்பட்டதாக தெரிவித்திருந்தார்.\nகுறித்த சிறுவனின் குடும்ப வறுமை பாசம் இன்மை சரியான அரவனைப்பு கிடைக்காததால் சிறுவன் தனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்காது தனது அறியாத சிறுவயதில் திசைமாறிச்செல்வதாகவும் குடும்ப வறுமையால் இந்த சிறுவனின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும் இதனால் சிறுவனின் குடும்ப பின்னனியை ஆராய்ந்து சிறுவர் அதிகார பாதுகாப்பு சபை இச்சம்பவம் தொடர்பாக கவனமெடுத்து சரியான தீர்வை வழங்க வேண்டும்.\nஒரு சமூகத்தின் பார்வையில் தான் இச் சிறுவனின் எதிர்காலம் அடங்கியிருக்கின்றது என தெரிவித்திருந்தார்\nதமிழரின் பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும்\nவடக்கு- − கிழக்கு இணைப்பு முஸ்லிம்கள் தனித்து செல்ல விரும்பினால் ஆதரிக்கவூம் தயார்\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்\nஇந்தியாவிடமே வழங்க வேண்டும்: காலத்தை கடத்தாது வீடுகளை நிர்மாணிக்கக் கோருகின்றது கூட்டமைப்பு\nதமிழரின் பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும்\nவடக்கு- − கிழக்கு இணைப்பு முஸ்லிம்கள் தனித்து செல்ல விரும்பினால் ஆதரிக்கவூம் தயார்\nஉலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/f92-forum", "date_download": "2018-08-20T18:33:46Z", "digest": "sha1:R4SSW34YP5WA4V2GX2QSKP6Q2NODVNX4", "length": 18179, "nlines": 196, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் - Tamilparks - மே", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஐம்பூதங்கள் - நகைச்சுவை போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஐம்பூதங்கள் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி\nby கவியருவி ம. ரமேஷ்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு\nby கவியருவி ம. ரமேஷ்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nallavan.com/best-home-made-mosquito-trap/", "date_download": "2018-08-20T18:24:56Z", "digest": "sha1:I5YYKOCTDWX6XVNUN4UC7WEOJ3RUI66J", "length": 7580, "nlines": 115, "source_domain": "www.nallavan.com", "title": "Best Home Made Mosquito Trap – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/190440?ref=ls_d_tamilwin", "date_download": "2018-08-20T18:07:39Z", "digest": "sha1:HIXUESFAK7FVXINUSMNDSSHJ77EJ2OGW", "length": 8168, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்ட சாரதி: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பதற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவிசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்ட சாரதி: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பதற்றம்\nகிளிநொச்சி, பரந்தன் பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றின் சாரதியை, மக்கள் மத்தியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் தாக்கியுள்ளமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.\nஏ35 வீதியால் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் வைத்து டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்து சாரதியை தாக்கியுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் காணப்பட்டதால், அங்கு ஒன்று கூடிய மக்களினால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/25284", "date_download": "2018-08-20T18:05:18Z", "digest": "sha1:3L2EEWCYNIBAZQM7NCC64LTM4LAFTWGY", "length": 6937, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிரிக்கெட்டே வேண்டாம்.. தற்கொலை செய்து கொள்ள நினைத்த சுரேஷ் ரெய்னா! - Zajil News", "raw_content": "\nHome Sports கிரிக்கெட்டே வேண்டாம்.. தற்கொலை செய்து கொள்ள நினைத்த சுரேஷ் ரெய்னா\nகிரிக்கெட்டே வேண்டாம்.. தற்கொலை செய்து கொள்ள நினைத்த சுரேஷ் ரெய்னா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா, தற்போது டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில் கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் லக்னோவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் தான் சந்தித்த பிரச்சனைகளை பற்றி சுரேஷ் ரெய்னா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், “நான் லக்னோவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் தங்கி இருக்கையில் மிகவும் சிரமமாக இருந்தது. அங்கு என்னை பலரும் தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தனர்.\nஇதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன்.\nஒரு முறை என்னையும், என் நண்பனையும் ஹாக்கி ஸ்டிக்கால் அடித்தனர். அந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த என் நண்பன் கோமா நிலைக்கே சென்றுவிட்டான்.\nஇதனால் பயந்து போன நான் இந்த விடுதிடே வேண்டாம் என்று ஒரே ஆண்டில் வீட்டிற்கு ஓடிவிட்டேன்.\nஇதன் பிறகு என் சகோதரரின் அறிவுரைபடி 2 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாட்டு வீரர்கள் விடுதிக்கு சென்றேன்” என்று கூறியுள்ளார்.\nPrevious articleமூன்று மாதங்களில் திருடர்கள் வெளிப்படுத்தபடுவார்கள்: ரணில் விக்கிரமசிங்க\nNext articleதனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு\nமூன்றாவது ஒருநாள் போட்டியையும் வென்றது தென் ஆப்பிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது தென்னாபிரிக்கா\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA/", "date_download": "2018-08-20T18:04:27Z", "digest": "sha1:WWK4TQT3YSSZIZMLGRFPAU5M6VPJZUJP", "length": 12389, "nlines": 174, "source_domain": "news7paper.com", "title": "'பியார் பிரேமா காதல்' கோபப்பட்ட சிவா - News7Paper", "raw_content": "\nஇலக்கின் மீதான ஆர்வத்தைப் பின்தொடருங்கள்; பணத்தை அல்ல: மாணவர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுரை\nஎஸ்சி, எஸ்டி சட்டத்திருத்தம் மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி\nகாவலர்களை ஏமாற்றி நள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்: மீண்டும் கைது செய்த போலீஸார்\nதரையிறங்கியபோது தீப்பிடித்த குவைத் விமானம்: ஹைதராபாத்தில் இன்று அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 150 பயணிகள்\n‘பியார் பிரேமா காதல்’ கோபப்பட்ட சிவா\n‘சூர்யா 37’ அப்டேட்: அறிமுகப் பாடலைப் பாடிய செந்தில் கணேஷ்\n‘கும்கி 2’ படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி இன்னும் முடிவாகவில்லை\nயானையோடு உலா வரப்போகும் நிவேதா பெத்துராஜ்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\nஉலகமே கொண்டாடும் இந்த இந்தியரை பற்றி நமக்கு ஏன் தெரியவில்லை\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது அதை எப்படி போக்குவது\nவீரபாண்டிய கட்டபொம்மன் மக்களின் பெருமைமிகு இருட்டு கடை அல்வாவில் உள்ள ஆரோக்கிய ரகசியங்கள்…\nதாய்ப்பால் குழந்தை குடிக்க மட்டும்தானா… பெரியவங்களும் இப்படியெல்லாம் பயன்படுத்தலாம்… | Interesting Breast Milk…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome சினிமா ‘பியார் பிரேமா காதல்’ கோபப்பட்ட சிவா\n‘பியார் பிரேமா காதல்’ கோபப்பட்ட சிவா\nஇளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இதில், ‘பிக்பாஸ்’ புகழ் ரைஸா மற்றும் ஹரிஷ் ஜோடியாக நடித்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்துக்கு யுவனும் ஓர் தயாரிப்பாளர்.\nஇதையடுத்து இப் படத்தின் பாடல்கள், டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், நடிகர் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் படம் குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், பியார் பிரேமா காதல் படத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். சிவாவை வைத்து படம் ரிலீஸ் செய்வதாக கூறிவிட்டு, இப் படம் வெளியீடு குறித்து தன்னை அறிவிக்குமாறு கூறிவதா என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் படம் இன்னும் 9 நாட்களில் வெளியாகிறதாம். அதை வித்தியாசமாக, ரசிகர்களிடம் தெரிவிக்க, படக்குழுவினர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருப்பதாக தெரிகிறது.\nகாதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ வரும் 10ம் தேதி ரிலீசாகிறது.\nPrevious articleதரையிறங்கியபோது தீப்பிடித்த குவைத் விமானம்: ஹைதராபாத்தில் இன்று அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 150 பயணிகள்\nNext articleகாவலர்களை ஏமாற்றி நள்ளிரவில் நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்: மீண்டும் கைது செய்த போலீஸார்\n‘சூர்யா 37’ அப்டேட்: அறிமுகப் பாடலைப் பாடிய செந்தில் கணேஷ்\n‘கும்கி 2’ படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி இன்னும் முடிவாகவில்லை\nயானையோடு உலா வரப்போகும் நிவேதா பெத்துராஜ்\nபார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்…: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட்...\nபிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்\nகக்கூஸ் போக டாஸ்க் கொடுப்பது கப்பித்தனமா இல்லையா பிக் பாஸ்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஒழுங்காக செயல்படவில்லை; சிபிஐக்கு வழக்குகளை மாற்றுகிறோம்: உயர் நீதிமன்றத்தில்...\n24 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்காக களமிறங்கும் கபில்தேவ்: கிரிக்கெட்டுக்காக அல்ல\nஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு\nசாம் சி.எஸ். இசையில் பாடிய யுவன் சங்கர் ராஜா\n“ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்”… மிரட்டும் ‘வடசென்னை’ டீசர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indiansutras.com/2013/02/erection-problems-could-signal-silent-000793.html", "date_download": "2018-08-20T19:16:31Z", "digest": "sha1:ZZKSVFTG4DNGSDVC6KECLPOA3ZSZIIE6", "length": 8153, "nlines": 83, "source_domain": "tamil.indiansutras.com", "title": "எழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை | Erection problems could signal silent heart disease and early death | எழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » எழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை\nஎழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை\nஉறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ள ஆண்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் மரணமடைய வாய்ப்பு இரு்பதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nஆண்களுக்கு உள்ள செக்ஸ் பிரச்சினைகளில் முக்கியமானது உறுப்பு எழுச்சிக் குறைபாடு. இந்தப் பிரச்சினை நிறையப் பேருக்கு உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸில் இயல்பாக ஈடுபட முடியாது என்பது போக இப்போது புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள்.\nஅதாவது எழுச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருக்கிறதாம். மேலும் இவர்களுக்கு வாழ்நாளும் குறைவாகவே இருக்குமாம். ஆஸ்திரேலியாவி்ன் சாக்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 95,000 ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் எமிலி பேங்க்ஸ் கூறுகையில், உறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளவர்களை இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் சீக்கிரமே அவர்கள் மரணத்தைத் தழுவும் வாய்ப்பும் உள்ளது.\nஇவர்களுக்கு இதய நோய் திடீரென வந்து தாக்கும். அதற்கான எந்தவிதமான முன் அறிகுறிகளும் இவர்களுக்குத் தெரியாது. அதுதான் அதிர்ச்சித் தகவலாக உள்ளது. இருப்பினும் உறுப்பு எழுச்சிக் குறைபாட்டைப் போக்க சரியான சிகிச்சை முறைகளை எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினையையும் சமாளிக்க முடியும்.\n40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த உறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் எமிலி.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/01/2.html", "date_download": "2018-08-20T18:07:18Z", "digest": "sha1:HC2IDM2KZIXUHEVBQAGCWSNTTMVCNJCC", "length": 27453, "nlines": 285, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அரண்மனை 2 - சினிமா விமர்சனம்", "raw_content": "\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nஊர்லயே பெரிய ஜமீன் தார் ராதாரவி. அவரோட வாரிசு ஹீரோ. சொந்தத்துலயே பொண்ணு நிச்சயம் ஆகிடுது. அப்போதான் அந்த பங்களாவில் அசம்பாவிதமான சம்பவங்கள் நடக்குது\nஹன் சிகா பேய் ஜமீன் தார் ராதாரவியை தாக்கி கோமா ஸ்டேஜ்க்கு கொண்டு போகுது.ஹீரோயின் டிரஸ் மாத்தும்போது வேடிக்கை பார்த்த பங்களா வேலையாளை ஒரு பேய் கொன்னுடுது. அந்த கொலை நடந்தப்ப அருகில் இருந்த ஆள் நம்ம ஹீரோ என்பதால் போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுது.\nஹீரோவோட வேண்டுகோளின் படி பங்களாவில் நடக்கும் மர்மங்களை துப்பு துலக்க படத்தோட டைரக்டர் சுந்தர் சி வர்றார் ( இவரோட தங்கச்சி தான் த்ரிஷா, இதைத்தான் ஹீரொ மேரேஜ் பண்னப்போறார்)\nஅவர் வந்து பங்களா ஃபுல்லா கேமரா பொருத்தறார். பின் தான் தெரியுது. பேய் வேற யாரும் இல்லை. ஹீரோவோட தங்கச்சி ஹன் சிகா தான்.\nஇதுக்குப்பின் ஏன் ஹன்சிகா சொந்த அப்பாவையே அப்டி படு காயப்படுத்துச்சு என்பது மிச்ச மீதி திரைக்கதை\nஹீரோவா சமூக நல ஆர்வலரும் , ஹாலிவுட் பட சான்ஸ் கிடைச்ச தனுஷை ட்விட்டர் ல செம நக்கல் அடிச்சவருமான சித்தார்த். 2 டூயட் அவருக்கு . மற்றபடி பெரிய வாய்ப்பு இல்லை\nஹீரோயினா த்ரிஷா. செம கிளாமர். டூ பீஸ் டிரஸ் , டாட்டு சகிதமா கண்ணியமான கிளாமர் காட்டறார் ( காட்றது கிளாமர் , இதுல கண்ணிய கிளாமர், அகண்ணிய கிள்மார்னு 2 வெரைட்டி இருக்கா\nபேயா ஹன்சிகா. பெருசா பயமுறுத்தலைன்னாலும் செண்ட்டிமெண்ட் சீனில் லேடீஸ் உச் கொட்றாங்க. படத்தில் இவர் இவராகவே வரும் காட்சிகள் குறைவு தான்\nராதாரவி கேர்கடர் ஆர்ட்டிஸ்ட்டா வந்து ஃபிளாஸ்பேக்கில் வில்லனா ஆகறார். அனுபவம் மிக்க நடிப்பு\nரஜினி முருகனுக்குப்பின் வரும் சூரி படம். 2 கெட்டப் ல வர்றாரு ( கெட்டப்பே மாற்றாத ஹீரோக்கள் கவனிக்க )\nஅவரோட காமெடி களை கட்டலைன்னாலும் தியேட்டர்ல ஆடியன்ஸ் அவங்களாவே சிரிச்சுக்கறாங்க\nபின் பாதியில் த்ரிஷா வின் உடம்பில் ஹன்சிகா ஆவி புகுவதால் த்ரிஷா பேயா வரும் சூழ்நிலை. சும்மா மேக்கப்பை கலைச்சு விட்டிருந்தாலே போதும், இதுக்கு மேக்கப் எதுக்கு\nகோவை சரளா காமெடி சகிக்க வில்லை. வழக்கமா காஞ்சனா டைப் படங்களில் கோவை சரளா பெரிய பிளஸ் , இதில் மைன்ஸ்\n1 பரம்பரை பரம்பரையா உங்க கிட்டே தான் வைத்தியம் பார்க்கறோம்\nஆனா என் கிட்டே வைத்தியம் பார்த்த யாரும் அவங்க பரம்பரையை பார்க்க மாட்டாக.# அ2\n2 வில்லன் = பொண்ணே வெட்கப்படாம காட்டும்போது ஆம்பளை பார்த்தா தப்பா\n3 சூரி = தேனே தானா கொட்டும்போது யோசிக்ககூடாது.நக்கிடனும் #,அ 2\n4 சூரி = ஜோக் அடிக்கறேன் கற பேர் ல சோத்தில மண் அள்ளிப்போட்றாதீங்க # அ2\n5 சூரி = செல்ப் எடுக்காத வண்டி எல்லாம் செல்பி எடுக்குது.#,அ2\n6 கோவை சரளா =,வெயிட் & ஸி\nசூரி = வெறுமனாவே உன்னைப்பார்க்க முடியாதே.வெயிட் பண்ணி வேற பார்க்கனுமா\n7 சூரி= என்னடா மூஞ்சி இதுபப்பாளிப்பழத்துக்கு பவுடர் அடிச்ச மாதிரி # அ2\n8 சூரி = இவன்லாம் நலங்கு வெச்சாலே வீட்டை விட்டு வெளில போகமாட்டான்.எதுக்கு விலங்கு போட்டிருக்கீங்க\n9 ஆவிகளின் அகராதியில் நியாயம், அநியாயம் கிடையாது, ரத்த சம்பந்த பாசம் கிடையாது # அ 2\n10 ஏய்யா, எல்லாரும் பேயைப்பார்த்தா தான் ஒண்ணுக்குப்போவாங்க, உன் தங்கச்சி பேய் கூடவே பாத்ரூம் போகுதே\n11 அவ பக்கத்துல தான் பேய் இருக்கு, ஜாடைல கூப்பிடு\n ஜாடைல கூப்பிடறதுக்குள்ளே பாடைல போய்டுவா போல # அ 2\nபடம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்\n1 அரண்மனை 2 @ திருவனந்த புரம் அஜந்தா.1100 சீட்ஸ் க்கு 890 ஸீட் புல்\n2 அரண்மனை -130 நிமிசம்.13 ராசி இல்லாத நெம்பர் ஆச்சே\n3 ஓப்பனிங் சீன் ல அம்மன் சிலை படுத்த வாக்கில் இருக்கு.படமும் படுத்துக்குமோ\n4 ஓப்பனிங் சீன் ல த்ரிஷா டூ பீஸ் ல வருது.பீச்ல. இன்னொரு பீஸ் கர்சீப் கைல கொடுத்தா 3 பீஸ் ஆகி 3 ஷா க்கு மேட்சுக்க்கு மேட்ச் # அ 2\n5 அரண்மனை 2 - த்ரிஷா வின் கிளாமர் ,சூரி காமெடி காப்பாத்தி இருக்கு.இதுவரை.இனி பேய் வந்து காப்பாத்துமோ\n1 பேய்ப்படங்கள் எப்படியும் மக்கள் மனதை கவரும் மினிமம் கியாரண்டி என்பதால் அதை தேர்ந்தெடுத்து காசு பார்த்தது\n2 த்ரிஷா வை இந்த வயசிலும் கிளாமர் காட்ட வைத்தது\n3 மனோபாலா சூரி காமெடி காட்சிகள் கன கச்சிதம்\n1 கோவை சரளா ஃபிளாஸ் பேக் சீன்ல ரயில்ல காதலன் போகும்போது மனோபாலா சரளா கை பிடிச்சு தடுக்கறார், காதலன் இருந்த ரயில் பெட்டி கிராஸ் ஆனதும் கையை விட்டுடறார், அப்போ ரயில்ல ஏறி போக சரளா முயற்சியே பண்ணலையே ஏன் காதலன் இருக்கும் அதே பெட்டில ஏறுனாத்தான் ஒத்துக்குவாங்களா காதலன் இருக்கும் அதே பெட்டில ஏறுனாத்தான் ஒத்துக்குவாங்களா 3 பெட்டி தள்ளி ஏறி அந்த பெட்டிக்குப்போகக்கூடாதா\n2 ஹீரோ ஓப்பனிங் சீன் ல பீச் , டான்ஸ் ஸ்டெப் எல்லாமே செல்லமே படத்தில் வரும் காதலிக்கும் ஆசை இல்லை கண்ணே உன்னைக்காணும் வரை பாட்டின் அப்பட்டமான தழுவல்\n3 ஹன் சிகா அந்த விஷ பாட்டில் ல இருக்கும் விஷத்தை ஏன் அண்ணாந்து குடிக்குது\n4 சொந்த அப்பா , அண்ணனையே பேய் பழி வாங்குவது , கர்ப்பமான மகளை அப்பாவே விஷம் வைத்துக்கொல்வது எல்லாம் ஓவர். டப்பிங்க் படம் பார்ப்பது போன்ற உணர்வு\nசி பி கமெண்ட் -அரண்மனை -2 - அரதப்பழசான பழி வாங்கும் கதை, தெலுங்கு டப் படம் போல். காமெடி சுமார் , விகடன் மார்க் = 40 , ரேட்டிங் = 2.5 / 5\nஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 40\nகுமுதம் ரேங்க் ( கணிப்பு) = சுமார்\nரேட்டிங் = 2.5 / 5\nதிருவனந்த புரம் அஜந்தா தியேட்டரில் படம் பார்த்தேன்\nஉங்கள் பட விமர்சன கருத்துகளில் சில இடங்களில் முரண்பாடு உள்ளது. நான் ,சில சிரிப்பு கதைகளை @ மனம் என்ற புதிய இதழயிலில் படித்தேன் நீங்களும் அந்த தமிழ் இணைய இதழில் மேலும் சில சுவையான செய்திகளை படிக்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t52739-topic", "date_download": "2018-08-20T18:34:37Z", "digest": "sha1:LXIDRL5OZX5XQC3PGE4CPFHHP5MDEN2M", "length": 17460, "nlines": 145, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "மோடி மிரட்டுகிறார் : ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமோடி மிரட்டுகிறார் : ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nமோடி மிரட்டுகிறார் : ஜனாதிபதிக்கு மன்மோகன் கடிதம்\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.\nஅவரை எச்சரித்து வையுங்கள் என ஜனாதிபதி ராம்நாத்\nகோவிந்திற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்\nமன்மோகன் சிங் தனது கடிதத்தில், பிரதமர் மோடி காங்கிரஸ்\nகட்சி தலைவர்களுக்கு எதிராக தேவையற்ற வார்த்தைகளை\nபயன்படுத்துவதுடன், மிரட்டும் தொனியில், மிரட்டல் விடுக்கும்\nவார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார்.\nகாங்கிரஸ் மட்டுமின்றி பிற கட்சி தலைவர்களுக்கு எதிராகவும்\nஅவர் பேசி வருவது பிரதமர் பதவிக்கு ஏற்றதல்ல.\nஅவரை கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமன்மோகன் சிங் மட்டுமின்றி, பிற காங்கிரஸ் தலைவர்களும்\nமோடியை கண்டிக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2011/05/blog-post_26.html", "date_download": "2018-08-20T18:04:43Z", "digest": "sha1:EWI5UKZXXB7KG6RII55DFVVKE2JL6EK3", "length": 11613, "nlines": 162, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: அன்டோ அவனிற்காய்...", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Thursday, May 26, 2011 4 பின்னூட்டங்கள்\nஇனிமையான பேச்சால் - எம்\nஎம்மனதில் இனிமையாய் - உன்\nஉன்னை மீட்போம் என்ற நம்பிக்கையில்\nவகைகள்: அஞ்சலி, நினைவு, நினைவுகள்\nஇழப்புக்களால் மனம் கனத்தல்களை ஆழுவதாலேயே சிறிது ஆறுதல் செய்யமுடியும். இழப்பில் பெரும் இழப்பு நண்பனின் இழப்பு என்று சும்மவா கவிஞர்கள் சொன்னார்கள்.\nAnto அண்ணா உங்கள் மறைவு ஈடுகட்ட முடியாது.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்../\nபருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை - வரலாற்று உண்மை ...\nஇட்லி, வடை, முறுக்கு, பாயாசம், பிட்சா ரூல்ஸ்..:P\nநட்பு + இசைவாக்கம் + நெகிழ்வுத்தன்மை\nஒரு தேர்வுநாடியின் கடைசி இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-08-20T18:46:25Z", "digest": "sha1:VGVQMYQG5QZSPCY5R7AQCCILCFPNPLAY", "length": 6548, "nlines": 101, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சுனில் செத்ரி அபாரம்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி", "raw_content": "\nசுனில் செத்ரி அபாரம்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி\nசுனில் செத்ரி அபாரம்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி\n‘இன்டர்கான்டினென்டல்’கோப்பை கால்பந்து பைனலில் கேப்டன் சுனில் செத்ரி 2 கோலடித் கைகொடுக்க இந்திய அணி, 2-0 என கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஆசிய கோப்பை தொடருக்கு(ஜன. 5- பிப். 1, 2019) தயாராகும் வகையில் இந்திய அணி சொந்தமண்ணில் 4 அணிகள் பங்கேற்கும் ‘இன்டர்கான்டினென்டல்’ (கண்டங்களுக்கு இடையிலான) கோப்பை கால்பந்து தொடரில் விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (தரவரிசையில் 97வது இடம்), கென்யா (112) அணிகள் மும்பையில் நடந்த பைனலில் மோதின.\nஅபாரமாக ஆடிய கேப்டன் சுனில் செத்ரி, 2 கோலடித்தார். முடிவில் இந்திய அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.\nஎண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு\nநீராவி ரயில் சென்னையில் இயக்கம்: மக்கள் உற்சாக பயணம்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-08-20T18:05:39Z", "digest": "sha1:R375BURNSZ34JWYR2Q3B2GYTPV6ASQ7A", "length": 12566, "nlines": 171, "source_domain": "news7paper.com", "title": "சோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - News7Paper", "raw_content": "\nசோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nகார் விபத்து வழக்கில் நடிகர் துருவ் விக்ரம் கைது: 3 ஆட்டோக்கள் சேதம்; ஒருவர்…\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மு.க. முத்து\n5 நிமிஷத்தில கிழிச்சிடுவேன்னீங்க, கிழிங்க பார்ப்போம்: வைஷ்ணவியை அதிர வைத்த கமல் | Kamal…\nஇனி தமிழ்நாட்டில் யாராவது மொட்டை கடுதாசி எழுதுவாங்க\nஐஸ்வர்யா மீது ஈர்ப்பு ஏற்பட்டது ஆனால் காதல்…: பிளேட்டை மாத்திப் போட்ட ஷாரிக் |…\nபிக் பாஸ் மேடையில் கவிதை வாசித்த கருணாநிதி: கண் கலங்கிய கமல் | Karunanidhi’s…\nஉங்கள் சாட் ஹேக் செய்யப்படலாம்: வாட்ஸ் ஆப்-க்கு செக் பாயின்ட்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்… | Beauty…\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்.. அண்மை ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு…\nதாய்ப்பால் கொடுக்கையில் ஏற்படும் முதுகு வலிக்கு என்ன காரணம் எப்படி போக்குவது\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் சோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89) உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, மக்களவை சபாநாயகராக இருந்தார்.\nஅப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றபோது, அவர் பதவி விலகவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.\n10 முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் மிக அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. வயது மூப்பு காரணமாகவும், சிறுநீரகம் பாதிப்பு காரணமாகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கடந்த மாதம் திடீரென பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.\nசற்று அவர் குணமடைந்து வந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nகார் விபத்து வழக்கில் நடிகர் துருவ் விக்ரம் கைது: 3 ஆட்டோக்கள் சேதம்; ஒருவர் படுகாயம்\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மு.க. முத்து\nகாமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா | Sangeetha pays tribute...\nவிஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கு\nபெண்கள் மார்பகத்தை பற்றி அறியப்படாத 10 உண்மைகள் – வினா, விடைகள்\n35ஏ சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை: ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு; பதற்றம்\nஉச்ச நீதிமன்றப் பரிந்துரையை மதித்து பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும்: அன்புமணி\nஇந்தி சினிமாக்காரர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்…\nஎச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanatham.net/index.php/component/k2/itemlist/tag/Eru%20thazhuvuthal", "date_download": "2018-08-20T18:47:53Z", "digest": "sha1:FR3LV4N7OC62D7PNGUREICQPFAJI22YL", "length": 6576, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: Eru thazhuvuthal - eelanatham.net", "raw_content": "\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2018-08-20T18:18:25Z", "digest": "sha1:VOO3WVCNXXJZKJ3A5DS6AZGKQVJ4MWCG", "length": 9452, "nlines": 188, "source_domain": "tamilnool.com", "title": "அம்மா கையில் மந்திரக்கோல் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nசிறுவர்களுக்கு மகாபாரதக் கதை ₹80.00\nSKU: 100058 Category: சிறுவர் Tags: சிறுவர், சிறுவர் பாடல்கள்\nBe the first to review “அம்மா கையில் மந்திரக்கோல்” மறுமொழியை ரத்து செய்\nசிரிக்கவும், சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளவை முல்லா கதைகள்.\nவளரும் இளம் சிறார்களின் மனதைப் பண்படுத்தும் பயன்மிக்க கதைகள். 32 கதைகளுக்கு ஏற்ற அருமையான படங்களும் இடம்பெற்றுள்ளன.\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/24395", "date_download": "2018-08-20T18:05:16Z", "digest": "sha1:L4WY376ZKSDXZKFZ4AOFEAJJG7N4KND2", "length": 6426, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "இன்னும் 24 மணி நேரத்தில் தூள்தூளாகும்: கொல்கத்தா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் இன்னும் 24 மணி நேரத்தில் தூள்தூளாகும்: கொல்கத்தா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஇன்னும் 24 மணி நேரத்தில் தூள்தூளாகும்: கொல்கத்தா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nமேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலைவந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிமான நிலைய மேலாளருக்கு ‘இமெயில்’ மூலம் வந்த அந்த மிரட்டல் கடிதத்தில் ’அடுத்த 24 மணிநேரத்தில் விமான நிலையம் வெடித்துச் சிதறி தூள்தூளாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து அனுப்பப்பட்டதாக கருதப்படும் இந்த மிரட்டல் கடிதத்தையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nமோப்ப நாய்களின் துணையுடன் விமான நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர். பயணிகளின் கார்கள் மற்றும் உடைமைகள் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டலால் பயணிகள் மத்தியிலும் இன்று காலை பீதி ஏற்பட்டது.\nPrevious articleபுற்று நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nNext articleதாய்லாந்தில் படகு என்ஜின் வெடித்தது 60 பேர் காயம்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/104961-gautam-gambhir-the-man-who-took-india-to-the-cusp-of-two-world-cup-triumphs.html", "date_download": "2018-08-20T19:00:20Z", "digest": "sha1:4VW4YS3YJ7XB3YJW5YII544FOWLB5P5J", "length": 39465, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "கம்பீர் - நிராகரிக்கப்படக் கூடாத கிரிக்கெட்டர்! #HBDGauti | Gautam Gambhir, the man who took India to the cusp of two world cup triumphs", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nகம்பீர் - நிராகரிக்கப்படக் கூடாத கிரிக்கெட்டர்\n`கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்’ என்ற பெயரைக் கேட்டவுடன், என்னவெல்லாம் நினைவுக்கு வரும் தமிழக வீரர்; இந்திய அணியின் முன்னாள் கேப்டன்; தோனியின் தலைமையில் உலகக்கோப்பை வென்ற அணியைத் தேர்வுசெய்ததில் முக்கியப் பங்காற்றியவர்; முதல் பதினைந்து ஓவர்களில் அடித்து ஆடும் வித்தையை அறிமுகப்படுத்தியவர்... இன்னும் பல. இவையெல்லாம் இருந்தாலும் `ஸ்ரீகாந்த்' என்றதும் பட்டென நினைவில் ஃப்ளாஷ் ஆகக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. அது, 1983-ம் வருடம் ஜூன் 25-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் அசுரபலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்த 38 ரன்கள்தான்.\nஎன்னதான் டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் என்றாலும், ஓர் உலகக்கோப்பையை வெல்வதற்கு நிகராக எதுவுமே இல்லை. அன்று இந்தியா அடித்த 183 ரன்களில், ஸ்ரீகாந்தின் 38-தான் அதிகபட்சம். 43 ரன்களில் இந்தியா வெற்றிபெற்று, அதுவரை கிரிக்கெட் உலகில் கோலோச்சிக்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\n1983-ம் ஆண்டு முதல், அடுத்த இருபது வருடங்களில் அதாவது ஐந்து உலகக்கோப்பைகளில் ஒருமுறை மட்டுமே இந்தியா ஃபைனலுக்கு முன்னேறியது. 2007 உலகக் கோப்பையில் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தலைமையின் கீழ் அணி பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டதுதான் மிச்சம். இந்தியா முதல் சுற்றுடன் நாடு திரும்ப, கொந்தளித்தனர் ரசிகர்கள். அதே ஆண்டு ஐசிசி முதன்முறையாக டி-20 உலகக்கோப்பையை அறிவிக்க, சீனியர்ஸ் சச்சின், டிராவிட், கங்குலி எல்லோரும் விலகிக்கொள்ள, சேவாக்குடன் தொடக்க ஆட்டக்காரராகக் களம்கண்டார் கவுதம் கம்பீர். அதற்கு முன்னரும் அவர் இந்தியாவுக்காக பலமுறை தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார். அவையெல்லாம் சச்சின் ஓய்வில் இருந்ததால் கம்பீருக்குக் கிடைத்த வாய்ப்புகள்.\nரஞ்சி முதல் இந்தியா வரை\nவாசிம் ஜாஃபர், ஸ்ரீதரன் ஸ்ரீராம், ஸ்ரீதரன் சரத், அமோல் மசூம்தார் போன்ற ரஞ்சி ஜாம்பவான்களைப்போல கம்பீரும் சர்வதேச அரங்கில் ஜொலிக்காமல்போய்விடுவாரோ என்ற அச்சம் மேலோங்கியது. காரணம், டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அணியின் டீஃபால்ட் ஆப்ஷன்களாக இருந்தனர். அதிலும், தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா வந்த ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை போராடி வென்றபிறகு, இந்த பேட்டிங் தூண்களைத் தாண்டித் துளைக்கவேண்டுமென்றால் தொடர்ந்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயமிருந்தது. ஆனால், அதற்கு ஒரு வழியும் இருந்தது.\nடெஸ்ட் போட்டிகளில் தரமான ஒரு தொடக்க ஆட்டக்காரர் இல்லாமல் இந்தியா வெகுகாலமாகத் திண்டாடியது. நீண்ட காலம் விளையாடிய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் யார் எனப் பார்த்தால், நம்முடைய தேடல், சுனில் கவாஸ்கரில் முடியும். ஏனென்றால், நிரந்தரமாக நிலைத்து ஆடக்கூடியத் தொடக்க ஆட்டக்காரரைக் கண்டெடுக்க முடியாமல் இந்தியா திக்கித் திணறியது. இதனாலேயே, டிராவிட் கிட்டத்தட்ட ஒரு தொடக்க வீரரைப்போல பல ஆட்டங்களில் இந்தியாவை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.\nரஞ்சி ஆட்டங்களில் ஒவ்வொரு சீஸனிலும் சதங்களைக் குவித்துவிட்டு, சின்ன வாய்ப்புக்காகக் காத்திருந்தார் கம்பீர். அவருக்கு முன்னர், சடகோபன் ரமேஷ், ஷிவ் சுந்தர் தாஸ், ஆகாஷ் சோப்ரா, ஜாஃபர், தினேஷ் கார்த்திக்... என ஒவ்வொரு சீஸனுக்கும் ஒவ்வொரு வீரரை வைத்து ஒப்பேற்றிக்கொண்டிருந்தது இந்தியா. சேவாக்கின் அடித்து ஆடும் திறனைப் பார்த்த கங்குலி, ‛டெஸ்ட் ஆட்டங்களில் மிடில் ஆர்டரில் ஆடியதுபோதும், ஓப்பனிங் இறங்குங்கள்’ என்று கேட்க, ஒரு பக்கம் சேவாக் பௌண்டரிகளாக விளாச, எதிர் திசையில் தொடருக்கு ஒரு வீரர் என ஆள்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள்.\n2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற நிலையில் இழந்திருந்தபோது, கம்பீர் தன்னுடைய ரஞ்சி ரெக்கார்டுகள் மூலம் டெஸ்ட்டில் இடம்பிடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த அந்த ஆடுகளத்தில், இரு அணிகளிலும் சொல்லிக்கொள்ளும்படியாக யாரும் ரன் அடிக்கவில்லை. கிடைத்த போட்டியில் எதுவும் செய்ய முடியாமல்போனாலும், அதன் பிறகு மெதுவாக தன்னுடைய இருப்பை ஒரு நாள் ஆட்டங்களில் நிரூபிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது மிடில் ஆர்டரில் தலைகாட்டி பெரிதாக சோபிக்காமல்போனாலும், ஏதோ தன் பங்குக்கு அவ்வப்போது கம்பீர் அரை சதங்கள் அடித்தார். ஆனாலும், அவை 2007 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடத்தைப் பெற்றுத்தர உதவியாக இல்லை.\nஇயல்பிலேயே ஆக்ரோஷ குணத்தைக்கொண்ட கம்பீருக்கு, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும்போது இன்னமும் வெறியேறும். பாகிஸ்தானின் அஃப்ரிடி முதல் அக்மல் வரை யாராவது ஒருவர் கம்பீரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டே இருப்பார்கள். இந்தியா முதல்முறை பாகிஸ்தானை `பெளல் அவுட்’ முறையில் வெற்றிகொண்டு, அடுத்தடுத்து போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அடித்து நொறுக்கி இறுதிக்கு முன்னேறினால், மீண்டும் பாகிஸ்தான். சேவாக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விலக, யூசுஃப் பதான் தன் முதல் ஆட்டத்தை இந்தியாவுக்காக ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய, தனி ஆளாகப் போராடி அணியின் எண்ணிக்கையில் பாதி அடித்து (75) இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். இருபது ஓவர் உலகக்கோப்பையின் வெற்றிக்கு வித்திட்ட கம்பீர், அப்போது முதல் இந்தியாவுக்காக மூன்றுவிதமான போட்டிகளிலும் முன்னிலை ஆட்டக்காரராகத் திகழ ஆரம்பித்தார்.\nஅதே ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியில் கம்பீருக்கு இடம் கிடைக்காவிடினும், தோனியின் தலைமையில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் முத்தரப்பு ஒருநாள் தொடரை வென்ற அணியில் இடம்பிடித்தார். இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக தலா ஒரு சதம் அடிக்க, சச்சினுக்குப் பிறகு சேவாக்குடன் ஆட்டம்போட தரமான ஒரு வீரர் இருக்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது.\nஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரர்\n2009-ம் ஆண்டின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள், இரட்டை சதம் அடித்தது, நியூஸிலாந்துக்கு எதிராக 11 மணி நேரம் களத்தில் இருந்து அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியது என கம்பீர், இந்தியாவின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக உருமாறியிருந்தார்.\n``சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர் என்றால் அது கம்பீர்தான்” என்று சேவாக் முன்மொழிந்தார்.\nடெஸ்ட் போட்டிகளில் உபயோகப்படுத்தப்படும் பந்து, நீண்டநேரம் ஸ்விங் ஆகும். அதை மழுங்கடித்து, பந்து அதன் வீரியத்தை இழக்கும் வரையில் தொடக்க வீரர்கள் பொறுமையாக ஆடினால் மட்டுமே, மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் அடித்து ஆடி ரன்களைச் சேர்க்க முடியும். சடகோபன் ரமேஷுக்குப் பிறகு, இடதுகை தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாதபோது கம்பீரின் வருகை மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. ஒருபக்கம் சேவாக் அடித்து ஆட, மறுபக்கம் கம்பீர் பொறுமையாக விக்கட்டை இழக்காமல் அதே நேரத்தில், சிறுகச் சிறுக எண்ணிக்கையை உயர்த்தினார்.\nதென்னாப்பிரிக்காவில் தொடரை சமன் செய்தும், நியூஸிலாந்தில் வென்றும், இந்தியாவில் தொடர்ந்து யார் வந்தாலும் துவம்சம் செய்தும் முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய முதல் இடத்தைப் பிடிக்க, கம்பீரின் அநாயசமான ஆட்டத்திறன் உதவிபுரிந்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல 2011-ம் ஆண்டின் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் கம்பீர் அடித்த 97 ரன்கள், இந்திய கிரிக்கெட்டின் பொக்கிஷம்.\n28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமுறை நிச்சயம் உலகக்கோப்பையை வென்றுவிடுவார்கள் என்று ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்க, முதல் ஓவரில் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்புகிறார். இந்திய மக்கள் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை சேவாக், சச்சின், யுவராஜ், தோனி எனப் பிரித்துப் பிரித்து வைத்திருந்தாலும், கொஞ்சம்கூட தடுமாறாமல் முதல் ஓவரிலேயே உள்ளே வந்தாலும், உலகக்கோப்பையில் இந்தியா ஒரு கையை வைத்துவிட்டது என நம்பிக்கை அளிக்க தொடங்கிய தருணம், கம்பீர் பொறுமையாக அடித்து ஆரம்பித்த நேரம்தான்.\nஸ்பின் பௌலர்கள் யாராக இருப்பினும், கம்பீரின் நேர்த்திக்கு பந்து வீசுவது கடினம். கொஞ்சம் ஏறி வந்து, பந்து ஸ்பின் ஆகும் முன்னரே கவர் - எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிக்கும் அந்த ஒரு ஷாட் இன்னமும் வேறு எவராலும் பிரதி எடுக்க முடியாதிருப்பது கம்பிரின் சிறப்பு. மூன்று ரன்களில் சதத்தை இழந்தாலும், வெற்றிக்குப் பிறகு `இந்த வெற்றியை இந்தியாவின் ராணுவ வீரர்களுக்குச் சமர்பிக்கிறேன்' எனக் கூறிய முதல் வீரர். நம் எல்லோருடைய மனதிலும் தோனி, குலசேகராவின் பந்தில் லாங் ஆன் திசையில் அடித்த சிக்ஸர்தான் ஞாபகம் வரும். ஆனால், அதன் பின்னால் கம்பிரின் வியர்வைத் துளிகள் வழிய வழிய பெற்ற 97 ரன்களும் என்றென்றும் நினைவுக்கூரத்தக்கது.\n2015-ம் ஆண்டின் உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு, தோனி, ``சேவாக் - கம்பீர் - சச்சின் என மூவரில் இருவர்தான் விளையாட முடியும். ஒருவர் மற்றவருக்கு இடமளிக்க வேண்டும். ஏனெனில், மூவரும் களத்தில் கொஞ்சம் மெதுவாக ஃபீல்டிங் செய்பவர்கள்'' என கருத்துக்கூற, அங்கு ஆரம்பமாகியது பிரச்னை. உலகக்கோப்பை வென்ற கையோடு இங்கிலாந்தில் 0-4 என்று தோற்ற தொடரில், ஒரு கேட்சைத் தவறவிட்டு தலையில் அடிபட்டு நாடு திரும்பிய கம்பீர், அதே வருடத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரிலும் சோபிக்கவில்லை. தொடர்ந்து வாக்குவாதங்கள், அறிக்கைப் போர்கள். இவை எதுவும் அவருக்கு வலுசேர்க்கவில்லை.\nஅதற்கடுத்த வருடங்களில், தமிழ்நாட்டின் முரளி விஜய் தொடக்க வீரராகக் களம் காண, கம்பீரால் மீண்டும் நிலையான ஓர் இடத்தை அடைய முடியாமல்போய்விட்டது.\nஐபிஎல் தொடரில் தன்னுடைய சொந்த அணி தன்னைக் கழட்டிவிட்ட பிறகு, சுமாராக இருந்த கொல்கத்தாவை தன்னுடைய திட்டமிட்ட தலைமையினால் அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை வாங்க உதவினார். அதில் ஒரு தொடரில், தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் ரன் ஏதும் குவிக்காதபோதும், மீண்டும் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து தன்னை நிரூபித்தார். ஐபிஎல் தொடரில் 35 அரை சதங்களுக்குமேல் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் முதல் வீரர் கம்பீர்.\nதன்னுடைய 36-வது வயதில் அடியெடுத்து வைத்தாலும், இன்னமும் இந்திய அணிக்காக விளையாடுவதில் முனைப்புடன் செயல்பட்டு, இந்த ரஞ்சி சீஸனை செஞ்சுரியோடு தொடங்கியிருக்கும் கம்பீருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஉலகக் கோப்பை நடத்த டெல்லி லாயக்கற்ற ஊர்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nகொலம்பஸ் அமெரிக்காவுக்குப் போக வழிகாட்டிய மேப் இதுதான்..\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nகம்பீர் - நிராகரிக்கப்படக் கூடாத கிரிக்கெட்டர்\nபுறக்கணிக்கப்பட்ட எம்.எல்.ஏ மாரியப்ப கென்னடி\nசெஞ்சிலுவைச் சங்கத்தில் முறைகேடு: முன்னாள் தலைவர் உள்ளிட்ட 10 பேர்மீது வழக்கு\nடெங்கு... எப்படிப் பரவும், தடுப்பது எப்படி, சிகிச்சைகள் என்ன.. - A to Z விளக்குகிறார் சுகாதாரத்துறைச் செயலர் #AllAboutDengue\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2018/05/14/drmlamhizbullah/", "date_download": "2018-08-20T19:08:52Z", "digest": "sha1:HAN36HZCR6ABOJDZ3M4QOKWSMNABU6EU", "length": 7829, "nlines": 170, "source_domain": "yourkattankudy.com", "title": "கலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nகொழும்பு: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை Metropolitan College இன் பட்டமளிப்பு விழா கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது இராஜாங்க அமைச்சருக்கான கலாநிதி பட்டம் மலேசியாவின் லிங்கன் பல்கலைக்கழக துணை அதிபர் Dr. Hjh. Bibi Florina Binti Abdullah மூலம் வழங்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் Metropolitan College ஊடாக Alliance International University-Zambia பல்கலைக்கழகத்தினால் இப்பட்டத்தை பெறுவதற்கு ‘ஆயுத மோதல்களில் மத்தியஸ்தம்’ எனும் தலைப்பில் 292 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்.\nபட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nராஜாங்க அமைச்சர் சகோதரர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எமது நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n« கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nஜெருசலத்தில் தனது புதிய தூதரகத்தை திறக்கிறது அமெரிக்கா »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்' தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nடில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்...\nஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - ஹரீஸ் எம். பி.\nஅறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=53138", "date_download": "2018-08-20T18:17:52Z", "digest": "sha1:42TQ4Q4UOR6QOSJGKZ5RBS47ZY2ZGBDO", "length": 20524, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாண்டுரங்கன் கோயில் கும்பாபிஷேகம்| Dinamalar", "raw_content": "\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nமத்திய அரசின் 3 தாரக மந்திரம் : சுதந்திர தின உரையில் ... 114\nரஜினி விமர்சனம்: அதிமுக கடும் கோபம் 81\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\n'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் ... 79\nதி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ., மேலிடம் ... 225\nஅழகிரி வியூகம்; தி.மு.க., திக்... திக்... 169\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\nகும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கோவிந்தபுரம். சேங்காளிபுரம் அனந்தராம தீட்சிதரின் வம்சத்தில் வந்த விட்டல்தாஸ் மகாராஜ், இங்கு ஸ்ரீ விட்டல் ருக்மணி சமஸ்தான் என்ற ஒரு பக்தி மற்றும் தொண்டு அமைப்பை உருவாக்கி இருக்கிறார். விட்டல்தாஸ் மகாராஜின் நாமசங்கீர்த்தனம் மற்றும் பக்த விஜயம் உபன்யாசங்களைக் கொண்ட நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி, தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.\nபாண்டுரங்கன் கோயில்: கோவிந்தபுரம் விட்டல்தாஸ் ருக்மணி சமஸ்தான் வளாகத்தில் ருக்மணி சமேத பாண்டுரங்கனுக்கு ஒரு பிரமாண்டமான கோயிலை பாண்டுரங்கன் கோயில்: விட்டல்தாஸ் மகராஜ் நிர்மாணித்து வருகிறார். 2011ல் கும்பாபிஷேகம் நடைபெற இஅக்கும் இந்த கோயிலின் கோபுரம் 132 அடி உயரம் கொண்டது. அதன் மேல் 18 அடி உயர கலசம் அமைய இருக்கிறது. உலகிலேயே பகவான் பாண்டுரங்கனுக்கு இவ்வளவு பெரிய கோயில் எங்கும் அமைந்ததில்லை. நாம சங்கீர்த்தனம், ராதா கல்ய‌ாணம் போன்ற நிகழ்ச்சிகளை பக்தர்கள் வசதியாக பார்க்கும் வகையில் தூண்களே இல்லாத வசந்த மண்டபம், இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். பாண்டுரங்கனின் பிரதான தலமான பண்டரிபுரம் அமைந்துள்ள மகாராஷ்டிர பாணியில் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.\nகோசாலை: பசுக்களின் மகத்துவத்தையும் அவற்றை வளர்ப்பதால் கிடைக்கும் பலன்களையும் விளக்கும் வகையில் மிகப் பெரிய கோசாலையை கோவிந்தபுரத்தில் விட்டல்தாஸ் நிறுவி நிர்வகித்து வருகிறார். இங்கு வளர்ந்து வரும் அனைத்து பசுக்களும் பிருந்தவனம், துவாரகா மற்றும் கோவர்த்தனம் போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவை. அதாவது பகவான் கிருஷ்ணர் மேய்த்த பசுக்களின் வம்சத்தில் வந்தவை. 300க்கும் மேற்பட்ட இந்த பசுக்கள், மிக நல்ல முறையில் உணவு, தண்ணீர் வசதிகளுடன் உரிய மருத்துவ வசதிகளுடன் பராமரிக்கப்படுகின்றன. இந்த பசுக்கள் மூலம் கிடைக்கும் பால் பொருட்களும் வரட்டியும் விற்கப்படுவதில்லை.பகவானின் அபிஷேகத்திற்கும் பயன்படுவதோடும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.\nபொது நலப்பணிகள்: விட்டல் ருக்மணி சமஸ்தான் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு கிராம ஏழை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதேபோல் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்காக இலவச பாடப் புத்தகங்கள், பைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை தரப்படுகிறது. நேரடி காட்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்: www.vittalrukmini.org\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n6 மாதங்கள் முன்பு கோவிந்தபுரம் காண வாய்ப்பு கிடைத்தது. மிக அருமையான கோயில். ஆனால் திரு விட்டல்தாஸ் அவர்களின் பெயர் எங்குமே பொறிக்கப்படவில்லை. என்னே தன்னடக்கம்.\nரேவதி swaminathan - சென்னைindia,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.damsafety.lk/?p=radio-programmes&locale=ti", "date_download": "2018-08-20T18:17:48Z", "digest": "sha1:LEZFXUJ7GLPQ2RVH4UNAFEABJ7Z2GGKN", "length": 2586, "nlines": 34, "source_domain": "www.damsafety.lk", "title": "வானொலி நிகழ்ச்சிகள் » அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டம்", "raw_content": "அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டம்\n\"இலங்கை மகாவலி அதிகார சபைஇ\", 1ம் மாடிஇ,\nஅணைகள் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மேம்பாடு\nமேம்படுத்தும் மற்றும் HMI க்கள், நவீன\nபல துறை நீர்வள திட்டமிடல்\nதிட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அறிக்கைகள்\nPage Hits: 1078753 | கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: May 10, 2018\n© 2018 அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டம்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | பக்கங்களை வரிசைப்படுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.damsafety.lk/?p=virtual-tours&locale=ti", "date_download": "2018-08-20T18:18:07Z", "digest": "sha1:OWMZ5UXJ7KTLKL7AZBW5QSCWZTQU2WIO", "length": 2451, "nlines": 34, "source_domain": "www.damsafety.lk", "title": "Virtual Tours » அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டம்", "raw_content": "அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டம்\n\"இலங்கை மகாவலி அதிகார சபைஇ\", 1ம் மாடிஇ,\nஅணைகள் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மேம்பாடு\nமேம்படுத்தும் மற்றும் HMI க்கள், நவீன\nபல துறை நீர்வள திட்டமிடல்\nதிட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு\nகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அறிக்கைகள்\nPage Hits: 1078762 | கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: May 10, 2018\n© 2018 அணைக்கட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் கருத்திட்டம்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | பக்கங்களை வரிசைப்படுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2016/12/blog-post_80.html", "date_download": "2018-08-20T18:23:09Z", "digest": "sha1:DCLNT5EHDQYJAFIR4U27A5XQPTTYNCDN", "length": 10527, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் கர்ப்பிணிப்பெண்கள் சிலர் பாலியல் நோயினால் பாதிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் கர்ப்பிணிப்பெண்கள் சிலர் பாலியல் நோயினால் பாதிப்பு\nமட்டக்களப்பில் கர்ப்பிணிப்பெண்கள் சிலர் பாலியல் நோயினால் பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கர்ப்பிணிப்பெண்களில் எட்டு பேரில் நான்கு பேர் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளது தொடர்பில் இனங்காணப்படுவதாக இலங்கை குடும்பநல சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தெரிவித்தார்.\nநேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள விமோச்சனா இல்லத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இலவச வைத்தியமுகாம் மற்றும் பார்வையற்றவர்களுக்கான கண்ணாடி வழங்கும் நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.\nகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் இலங்கை குடும்பநல சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nவிமோச்சனா இல்லத்தின் தலைவி திருமதி செல்விகா சகாயதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கு.சுகுணன், இலங்கை குடும்பநல சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது இரத்தப்பரிசோதனை,புற்றுநோய் பரிசோதனை உட்பட பல்வேறு இலவச மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டதுடன் மருத்து சோதனைகளும் நடாத்தப்பட்டு பெறுமதி மருந்துகளும் வழங்கிவைக்கப்பட்டன.\nபோதையில் இருந்து மீட்போம் என்னும் தொனிப்பொருளில் போதைப்பாவனையில் அகப்பட்டுள்ளோரை அதில் இருந்து மீட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் பணியை விமோசனா இல்லம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்டுவருகின்றது.\nஇந்த ஐந்து ஆண்டு பூர்த்தி நிகழ்வின்போதும் மதுபோதையினால் ஏற்படும் தீமைகள் அதன் சமூகம் தாக்கம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த இம்தியாஸ்,\nஇலங்கையில் அதிகரித்துவரும் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.அதன்காரணமாக சிவப்புகோட்டுக்குள் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.இரண்டாயிரம்பேரை தாண்டியதாக எச்ஐவியை கொண்டவர்களைக்கொண்டுள்ளது.\nபத்தாயிரம்பேரை சோதனை செய்யும்போது அதில் இரண்டுபேர் எச்ஐவிக்கு உட்பட்டவர்களாகவுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பாலிய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றோம்.\nகர்ப்பிணித்தாய்மாருக்கு மட்டுமே அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதில் வருடாந்த 8பேரில் நான்கு பேரை பாலியல் நோய் தொடர்பாக இனங்காணப்படுகின்றனர்.இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.இவ்வாறானவர்கள் இனங்காணப்படும்போது மட்டக்களப்பில் உள்ள எச்ஐவி பகுதிக்கு அறிவித்தல்களை வழங்குவோம்.\nஎச்ஐவி மட்டுமன்றி மட்டுமன்றி அதுபோல் பல பாலியல் தொடர்பான நோய்கள் உள்ளது.மதுபோதை மற்றும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துச்செல்வதும் இவ்வாறான பாலியல் நோய்கள் அதிகரிப்பதற்கான காரணமாக அமைகின்றது.\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45256-cauvery-issue-case-tn-farmers-decide-to-suicide-protest.html", "date_download": "2018-08-20T18:47:25Z", "digest": "sha1:WLWSBJEQJPS7NGUFAY6WF3KWBYLSF6DG", "length": 10124, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்! | Cauvery Issue Case : TN Farmers decide to Suicide Protest", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nநீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் ஈடுபடவுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரி நீர் பங்கீட்டிற்காக மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தது. அத்துடன் காவிரி வழக்கில் 9 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இன்றைய விசாரணையில் தீர்ப்பு வழங்கப்படும், காவிரி நீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்தது போல நாளை மறுநாள், நாகை புதிய கடற்கரையில் தற்கொலை செய்துகொள்ளும் போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவர, ஏராளமான கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் நாகையில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாகை கடலோரப் பகுதியை தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும் நாளை மறுநாள் திட்டமிட்டபடி தற்கொலை போராட்டம் நடத்துவது என விவசாயிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nகாவிரி ஆலோசனை கூட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் அழைப்பு\nமத்திய அமைச்சரவையில் மாற்றம் - அருண் ஜெட்லி துறை பியூஷ் கோயலிடம் ஒப்படைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமேட்டூரில் மீண்டும் 2.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nஇன்னும் எத்தனை காலம்தான் இந்தச் சோகம் தொடரும் \nமேட்டூர் நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசக மாணவிகளின் கிண்டலால் உயிரிழந்த மாணவி\nஜூலையில் 104 டிஎம்.சி தண்ணீர் திறப்பு - கர்நாடகா தகவல்\nதற்கொலையில் இருந்து என்னை மீட்டது... கஸ்தூரி உருக்கம்\nதிருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை\nஅற்றுப் போனதா மனிதநேயம் - ஃபேஸ்புக் லைவ்வில் இளைஞர் தற்கொலை\nRelated Tags : Cauvery Issue , Cauvery Water , Cauvery Case , TN Farmers , Farmer Suicide , காவிரி வழக்கு , காவிரி பிரச்னை , காவிரி விவகாரம் , காவிரி மேலாண்மை வாரியம் , தமிழக விவசாயிகள் , தற்கொலை , போராட்டம்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி ஆலோசனை கூட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் அழைப்பு\nமத்திய அமைச்சரவையில் மாற்றம் - அருண் ஜெட்லி துறை பியூஷ் கோயலிடம் ஒப்படைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnewsnow.com/aan-thevathaisamuthrakani-next-movie/", "date_download": "2018-08-20T19:08:16Z", "digest": "sha1:JHMBRX2OD2DCTKNGHOPAYKJF354ORWD7", "length": 10087, "nlines": 209, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Aan thevathai, jayam ravi, vijay antony, pa.ranjith.mishkin.kowtham vasuthev menan,A.R.murugathas,verrimaran,seenu ramasami.samuthrakani", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’.\nஇயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைத்துள்ளார் ஜிப்ரான். எடிட்டிங் மு. காசிவிஸ்வநாதன்.\nஇந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதய நிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள்.\nஅனைவருமே, ”இந்த ஆண் தேவதை இன்றைய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மிக முக்கிய கருத்தைப் பேசுகிறது. தாமிராவும் சமுத்திரக்கனியும் இணைந்துள்ள இப்படம் வெற்றிபெற வேண்டும் . அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றனர்.\nசிகரம் சினிமாஸ் சார்பில் அ. ஃபக்ருதீனும், ஷேக்தாவூதும் தயாரிக்க, சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டியும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇந்த ட்ரைலர் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பார்வையாளர்களைக் கடந்து பறந்துகொண்டிருக்கிறது.\nவன நாள் வாழ்த்துகளை தெரிவித்த ‘வனமகன்’ இயக்குனர் விஜய்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nகோலமாவு கோகிலா - விமர்சனம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/29567", "date_download": "2018-08-20T18:32:16Z", "digest": "sha1:AXXUQGPM6I3LNBTPDO73SCHNOZFY5SZW", "length": 11778, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "இ.மி.ச. வேலை நிறுத்தம் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nஇ.மி.ச. வேலை நிறுத்தம் ஆரம்பம்\nஇ.மி.ச. வேலை நிறுத்தம் ஆரம்பம்\nசபை தலைமையகத்தில் நேற்று (17) இடம்பெற்ற சம்பவத்தில், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி, மின்சார சபை ஊழியர் சங்கங்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.\nசம்பள விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில், இலங்கை மின்சார சபை தலைவரை ஊழியர்கள் சிலர் தலைமையகத்தில் சிறைப்பிடித்தனர். சுமார் ஐந்து மணிநேரம் இந்த சிறைப்பிடிப்பு தொடர்ந்தது.\nஇதையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு தலைவர் மீட்கப்பட்டார். இதன்போது, மின்சார சபை ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு மின்சார சபை ஊழியர்கள் ஐந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபின் வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஇத்தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், மின்சார சபை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இன்று (18) முதல் வேலை நிறுத்தத்தில் குதிப்பதாக அறிவித்திருந்தார்.\nஅதன்படி, இன்று காலை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் இ.மி.ச. தொழிற்சங்கங்கள் குதித்துள்ளன.\nஎவ்வாறெனினும் எந்தவொரு வேலை நிறுத்தத்துக்கும் முகங்கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மின்சார சபை வேலை நிறுத்தம் ஊழியர்கள் தாக்கப்பட்ட சிறைப்பிடிப்பு\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nவிஸ்வமடு புன்னைனிராவிப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் வைத்த தீயினால் சுமார் முப்பதிற்கும் மேற்ப்பட்ட பனைமரங்கள் மற்றும் ஆறுக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.\n2018-08-20 23:46:09 விஸ்வமடு புன்னைனிராவி தீ பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\n“யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும். தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்”\n2018-08-20 22:41:22 யாழ்ப்பாணம் கொக்குவில் வைத்தியரின் வீடு மீது தாக்குதல்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nவவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 22:27:44 மாணவி ஹரிஸ்ணவி படுகொலை வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nமன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பணிகள் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 22:07:57 மன்னார் 'சதொச' வளாகம் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nகேப்பாபுலவு நிலம் மீட்பு போராட்டத்தை தொடக்கிவைத்த ஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\n2018-08-20 21:59:52 ஆறுமுகம் வேலாயுத பிள்ளை\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/177082?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:08:28Z", "digest": "sha1:ZO4SPXQ34YPHTPIIILKSZ44C6XYZCRK2", "length": 7654, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது\nஇலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.\nபேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும், ஜனாதிபதி செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெற்றது.\nஇதன்போது இனவிரோத பதவிகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பேஸ்புக் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.\nஇதன்படி இந்த தடையை நீக்குவதற்கு தாம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், உடனடியாக அந்த தடை நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/4859", "date_download": "2018-08-20T18:34:34Z", "digest": "sha1:OIYV4ADRNVCDCIR7ES7EPR3KXTDBZ2FU", "length": 11132, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்ய முன்னாள் அதிபர் ஆபாச வீடியோ ; புதினின் சதி (வீடியோ இணைப்பு ) | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nரஷ்ய முன்னாள் அதிபர் ஆபாச வீடியோ ; புதினின் சதி (வீடியோ இணைப்பு )\nரஷ்ய முன்னாள் அதிபர் ஆபாச வீடியோ ; புதினின் சதி (வீடியோ இணைப்பு )\nரஷ்யாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் மிக்கைல் காஸ்யனோவ் கடந்த 2000 முதல் 2004ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார்.\nஇந்நிலையில் இவரும் இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான நடாலியா பெலிவினும் பாலியல் உறவு வைத்துகொள்வது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்ய அரசாங்கத்துக்கு ஆதரவான என் தொலைகாட்சியில் இந்த வீடியோ ஒளிபரப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் தங்கியிருந்தபோது ரகசிய காமெரா மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nவீடியோவில் உள்ள பெண் ஊடகவியலாளர் நடாலியா தற்போதைய ரஷ்ய அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வீடியோவை எடுத்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில் புதினின் ஆதரவாளர்கள் மூலமே இந்த விடியோ கசிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அரசியல் செய்பவர்களை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதிதான் இது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்து குடியுரிமை பெற்ற நடாலியாவை இழிவுப்படுத்தும் செயல் இது என்று ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இந்த வீடியோ தொடர்பாக மிக்கைல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nரஷ்யா மிக்கைல் காஸ்யனோவ் நடாலியா இங்கிலாந்து\nகத்தியுடன் பொலிஸ்நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஸ்பெயினில் சுட்டுக்கொலை\nகடந்த வருடம் கட்டலோனியாவில் ஆகஸ்ட் 17 ம் திகதி பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நிலையிலேயே இன்றும் அதுபோன்றதொரு முயற்சி இடம்பெற்றுள்ளது.\nயுத்த நிறுத்தத்திற்கு வருமாறு தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் அழைப்பு\nஉள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் நவம்பர் மாதம் வரை 3 மாதகால யுத்த நிறுத்ததுக்கு வருமாறு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி அழைப்பு விடுத்துள்ளார்.\n2018-08-20 17:39:24 யுத்த நிறுத்தம் ஆப்கானிஸ்தான் அழைப்பு தலிபான்கள்\nஇயற்கையின் கோரத் தாண்டவத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறது கேரளா\nஇந்தியாவின் கேரளா மாநிலம் கடந்த 11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nபாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.\n2018-08-20 17:02:47 மோடி இம்ரான் வாழ்த்து கடிதம்\nஅமெ­ரிக்­காவால் எம்மை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது - துருக்கி ஜனாதிபதி சூளுரை\nஅமெ­ரிக்­காவால் துருக்­கியை அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைக்க முடி­யாது என துருக்­கிய ஜனா­தி­பதி தாயிப் எர்­டோகன் சூளு­ரைத்­துள்ளார்.\n2018-08-20 13:32:50 துருக்கி அமெரிக்கா டொனால்ட் ட்ரம்ப்\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/91843", "date_download": "2018-08-20T18:06:49Z", "digest": "sha1:J7DM3EBEUKALBP6AEGUHRW4BY22ZHUQL", "length": 6877, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "அமைச்சர் மனோ கணேசனுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குமிடையில் கலந்துரையாடல் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குமிடையில் கலந்துரையாடல்\nஅமைச்சர் மனோ கணேசனுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்குமிடையில் கலந்துரையாடல்\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nமாவட்டத்தில் நடைபெறும் சிவில் சமூக செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.\nஇக் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு பிரதேசங்கள் சார்ந்த அமைப்புகளுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அவை தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இக்கலந்துரையாடல் சிறந்ததொரு வாய்ப்பென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதுப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி\nNext articleவைத்திய நிபுணர்களைக் கொண்ட மாபெரும் இலவச வாய்ப் புற்று மற்றும் பற் சிகிச்சை முகாம்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/maharashtra/pune", "date_download": "2018-08-20T19:14:01Z", "digest": "sha1:MZPU3BOD6C6W663EEFJZVZMHRONVFDXC", "length": 6234, "nlines": 99, "source_domain": "tamil.cardekho.com", "title": "7 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் புனே | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள புனே\n7 ஃபோர்டு விநியோகஸ்தர் புனே\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n7 ஃபோர்டு விநியோகஸ்தர் புனே\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_4.html", "date_download": "2018-08-20T18:58:25Z", "digest": "sha1:DDNL6KFJJWXJ4ZCGPTZ47TSBC6RM7C52", "length": 43335, "nlines": 197, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலுள்ள சவால்! - தமிழில் : கலைமகன் பைரூஸ்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n - தமிழில் : கலைமகன் பைரூஸ்\nகுருணாகலை, ரம்பொடகல்ல ஸ்ரீ ஸ்வர்ணகிரி ரஜமகா விகாரையின் விகாராதிபதியாகவிருந்த அம்பேபூஸ்ஸே சுமங்கள தேரரின் மரணம், அப்பிரதேசத்து சிங்களவர்களினதும் ஏனைய இனத்தவர்களினதும் பெரும் கவலைக்குரிய செய்தியாக இருந்தது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் ரம்பொடகொல்ல மகா வித்தியாலய விளையாட்டுத் திடலில் சில நாட்களுக்கு முன்னர்தான் நிகழ்ந்தது. பொதுவாக பௌத்த துறவியொருவர் மரணமடைந்தால் அவருக்காக இல்லற வாழ்க்கையோடு ஒட்டியவர்கள் அழுது அங்கலாய்ப்பது மிகக் குறைவாகவே இருக்கும். ஆயினும், சுமங்கள தேரரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நாளின் அந்திப்பொழுது எல்லோரினதும் பார்வைகள் குத்தி நின்ற நிகழ்வொன்றும் இடம்பெற்றது. தற்போதைய சூழ்நிலையில் அது சிறப்பிற்குரியதாகும். அரிதானதும் அபூர்வமானதுமாகும். கட்டப்பட்டுள்ள மனிதாபிமானச் சங்கிலியை பிரிப்பதற்கு இலகுவான காரியமாகவே அது இருந்தது. அழுது துயர்ப்படும் உற்ற உறவினர்கள், விகாரைக்கு ஒத்தாசை புரிபவர்கள், இனத்தினரின் நடுவே அப்துல் பாயிஸ் உள்ளிட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அந்நிகழ்வில் கண்ணீர் மல்க ஒப்பாரிவிட்டு அழுத காட்சி அது. வேறுவிதமாகச் சொல்வதாயின் முஸ்லிம்களின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பாய்ந்த காட்சி அது. இளம் பௌத்த துறவியாக நின்று ஏனைய இனங்களுடன் புரிந்துணர்வுடன், ஒற்றுமையுடன், சகோதரவாஞ்சையுடன் வாழ்ந்துவந்துள்ளமை வேறு விடயம். இன, மத பேதமின்றி சாதாரண மனித சுபாவம் இதிலிருந்து வெளியாகியிருப்பது இதன் இன்னொரு பார்வையாகும்.\nஇந்நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் தங்களுக்கிடையே மட்டுமன்றி பௌத்த மதகுருமார்களுடன் எந்தளவு நெருக்கமான உறவினைப் பேணுகிறார்கள் என்பதற்கு ரம்படகல இறுதிக் கிரியை நிகழ்வு ஒரு பதச்சோறாகும். கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படும் வேளை, வட்டரெக்க விஜித்த தேரர் சிறைப்படுத்தப்பட்டுள்ள போது, அம்பேபூஸ்ஸ சுமங்கள தேரர் இனங்களிடையே ஒற்றுமையை விதைத்து, இனவாதத் தீயை அணைத்துவிட்டு இவ்வுலக வாழ்வை நீத்திருக்கின்றார். மேலும், மனிதாபிமானத்தை விதைத்துச் சென்றுள்ளார்.\nஅவ்வாறாயின் இந்த இனவாத, மதவாத தீச்சுடரை பற்றி எரியச் செய்பவர்கள் யார் என்பது நன்கு புரியும். அங்கு மதவாதம், அடிப்படைவாதம், அரசியல் மூன்றும் இருக்கின்றது. இருந்திருந்து முஸ்லிம் சிங்கள வீடுகள் தீப்பற்றி எரிவதும், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதும், இந்த நாசகார, படுபயங்கர சக்தி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து செயற்படுவதனாலாகும்.\nஎதிர்க்கட்சி என்றும்போல் அனைத்தையும் ஆளும் கட்சியின் கணக்கில் வரவு வைப்பதில் முனைப்புடன் இருக்கின்றது. தற்போதைய ஆளும் கட்சியினர் 1983 களில் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் இதனையே செய்தனர். இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களை சிறைவைத்து அன்றைய அரசாங்கமும் முட்டாள்தன வேலையே செய்தது.\nஉண்மையான பகைவர்கள் யார் என்பதைக் கண்டுகொள்ள முடியாத அன்று ஆட்சி பீடத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு, 1983 கறுப்பு ஜூலையையும் தன் கணக்கில் வரவு வைத்தது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும். இப்போதாவது அந்தக் குற்றத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக் கொள்வதற்கு முன்வர வேண்டும். தற்போதைய பிரச்சினை பற்றி, இதன் சூழ்ச்சி பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிந்திருக்கின்றார் போலும்.\n“ஏதோ ஒருவகையில் முஸ்லிம்களை எங்களிலிருந்து தூர ஒதுக்குவதற்கான நடவடிக்கையில் அவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் நடந்து கொண்டார்கள். இன்று நான் முஸ்லிம்களைச் சந்திக்கச் சென்றேன். வீடுகள் உடைக்கப்பட்டிருக்கின்றனவே எனச் சொன்னபோது அவர்கள் அவர்கள் சொன்னார்கள், “இது இப்பிரதேசத்தவர்களின் வேலை அல்ல சார் என. வேறு பிரதேசங்களிலிருந்து வந்துதான் இதனைச் செய்தார்கள்” என்றார்கள்.\nபேருவலையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான பட்டறையின்போது, ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஊரில் இருந்திருந்தால் இந்த அசம்பாவிதங்கள் பற்றிய தெளிவு அவர்களுக்கு வந்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\n“இந்நிகழ்வு நடைபெறும்போது அவ்விடத்திற்குச் சென்று ஒருங்கிணைத்தவர் யார் இது தொடர்பில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நாங்கள் கிராம மக்களுடன் சேர்ந்திருந்தால் இது எங்களுக்குப் புரியும். நாங்கள் தெரிந்துகொள்ளாத பக்கம் இது என நான் நினைக்கிறேன்.”\n“எதிர்க்கட்சியினர் கையில் அகப்படும் எந்தக் கல்லினாலும் அரசாங்கத்திற்கு அடிக்கும் கைங்காரியத்தையே செய்கின்றது. ஆளும் கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிற்சில வேளைகளில் பிழையான தீர்மானங்கள் எடுப்பதும், சட்டத்தை சரிவர அமுல்படுத்தாமையும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.”\n(தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - 2014.07.02 லங்காதீப)\nஅளுத்கம மற்றும் பேருவலையின் அழிவுக்குள்ளான அனைத்தும் துரித கதியில் மீளக் கட்டியெழுப்பப்பட்டாலும், நொந்துபோயுள்ள உள்ளங்களை பழையபடி கொண்டுவருவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என கடல் மற்றும் நீர்வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார். அந்தக் கதையிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அந்த அசம்பாவிதங்கள் நிகழ்கையில் அனைத்தையும் அவர்கள் சிறுகச் சிறுக கண்களால் கண்டிருக்கின்றார்கள். அவர்களின் மனக்கண் முன் அந்நிகழ்வு நிழலாடுகின்றது. அதனால் உடைந்த உள்ளங்களை அமைதிப்படுத்துவதற்கு கீழ்த்தரமான அரசியலனால் அன்றி, மறைந்தும் மறையாதுள்ள அம்பேபூஸ்ஸ சுமங்கள தேரர் போன்ற போதகர்களின் செயல்ரீதியான மனிதாபிமான வழியினால் மட்டுமே ஆகும் என்பது தெளிவு.\nஇந்த அரசியல் இழுபறிக் களத்தில் மீண்டும் வழமைபோல் ஒருவருக்கு ஒருவர் விரல் நீட்டுவதுதான் நடக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் “வாழ்க்கை வரலாறு” போல, நிகழ்கால அரசியலில் ஈடுபடுகின்றவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்படவுள்ள எதிர்காலத்தில் ஒருநாள் இதிலுள்ள உண்மை நிலை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். அன்றைக்கு நவீன சிரில் மெதிவ் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வருவார்களோ என்று சொல்லத் தெரியவில்லை. அதேபோல, இந்த அரசியல் நாற்றம் வீசக்கூடிய சாப்பாட்டைச் சாப்பிடாமல் தூர விலகி நிற்கக் கூடிய இவ்விடயம் தொடர்பில் ஒருபக்கம் சாயாமல் சிந்திக்கின்ற, நொந்துபோயுள்ள உள்ளங்களை சமாதானப்படுத்துவதற்காக வேண்டி செயற்றிட்டங்களை மேற்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ள ஒரு இளம் அரசியல்வாதி எங்கள் பார்வையில் படுகின்றார். இது இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் காதுகுளிரக் கேட்கக்கூடிய நற்செய்தியாகும். அன்று பேருவலை, அளுத்கமை போன்ற இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி இவர் அறிந்தவேளை, இவரது உள்ளத்தை அந்நிகழ்வு நசுக்கியது. நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவது பற்றிய புதிய செயற்றிட்டமொன்றை கட்டியெழுப்புவதற்கு அன்றுதான் ஆரம்ப அடி வைத்தார்.\n“அண்ணா, எங்களுக்கு சரியான மரண சடங்கை செய்வதற்கும் விடமாட்டார்கள் போல் தெரிகிறது. மையித்தைக் கொண்டு போகும் போதும் துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். நாங்கள் பெரும் பயத்துடன் இருக்கிறோம். முடியுமாயின் இதுபற்றி தேடிப்பாருங்கள். இதுபற்றி உங்களிடம் அல்லாமல் சொல்வதற்கு வேறு யாரும் எனக்கில்லை.”\nநீலப் படையணியின் அங்கத்துவரான இளம் தம்பி ஒருவரின் இந்த எதிர்பாராத அழைப்பினால் இந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரான அண்ணன் ஆடிப்போனான். இது அவருக்கு புதிய அனுபவமாகவும் இருந்த்து. உண்மை இதுவாயின், நாங்கள் செய்கின்ற அரசியலின் பொருள்தான் என்ன என அவரது உள்ளத்திற்குத் தெரிந்தது. அந்த இளம் தம்பியின் தொலைபேசி அழைப்பு அவர் நீலப் படையணியில் கடமைபுரிவதற்காக எங்கும் பேசப்படவில்லை. அந்தத் தம்பி தனது தொலைபேசி இலக்கத்தை தன்வயம் வைத்துக்கொள்வாரோ என அவர் நினைத்ததாகவும் கூறப்படுகின்றது. அவர் அவசரமாக செயலில் இறங்கி பொறுப்புச் சொல்லவேண்டியவர்களுடன் கதைத்து உடனடியாக நிலைமையை சுமுக நிலைக்குக் கொணர்வதற்கு ஆவன செய்து வெற்றி கண்டார். அவர் யார் தெரியமா ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.\nகேள்விக்கு ஏற்ப தேவையை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு அதிலிருந்து விலகிவிடுவதே பொதுவாக அரசியல்வாதிகளின் செயலாக இருக்கின்றது. அதற்குக் காரணம் அவ்வாறான தேவைகள் பல தம்மை நோக்கி வருவதனாலாகும். ஆயினும் நாமல் ராஜபக்ஷ அவ்வாறான சில்லறைக்கடை முகாமையாளர்களைக் கொண்ட அரசியலிலிருந்து விலகி தூர நோக்கோடு சிந்திப்பவர் என்பது தெளிவாகின்றது. அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் “நம்பிக்கை”யை குறிக்கோளாகக் கொண்டு, அனைத்துமத ஒருமைப்பாட்டு மாநாடு அதனது பிரதிபலிப்பாகத் தோன்றுகின்றது. நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டையிலிருந்து ஆரம்பித்த இந்த “நம்பிக்கையின் மத மாநாடு” வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஆரம்பிப்பதற்கு அவர் திடசங்கற்பம் பூண்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ஷ சர்வதேச கருத்தரங்கு மண்டபத்தில் மக்கள் நிறைந்திருந்து “நம்பிக்கையின் மாநாடு” முழு நாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கான புதியதொரு கருத்தியலை கொண்டுவருவதற்கு ஆரம்ப படிக்கல்லாக அமைந்திருந்தது.\n“இன்று நாங்கள் ஏற்படுத்திக் கொள்கின்ற நம்பிக்கையினால் எதிர்காலத்தைக் பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறோம். கலாச்சார ரீதியாக சிந்தித்தாலும், சம்பிரதாயபூர்வமாக சிந்தித்தாலும் இந்த அனைத்து மத சம்பிரதாயங்களிலும் ஏதோ ஒருவகையில் ஒருமைப்பாடும், நம்பிக்கையும் கலந்த யதார்த்தம் உள்ளது. இன்றைய தேவையாக உள்ள இந்த நம்பிக்கையை கைக்கொண்டு நாங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நினைவிற் கொள்கிறேன்.”\n(பா.உ. நாமல் ராஜபக்ஷ 2014.06.28 லங்காதீப)\nபுதுமையான முறையில் சிந்திக்கின்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வரலாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ளது. 1970 - 77 காலப் பிரிவு இதற்கு நல்ல உதாரணமாகும். 1970 ஐக்கிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மெச்சத் தக்கவர்களும் எங்கள் பார்வையில் படுகின்றார்கள். இரத்தினபுரி நந்த எல்லாவல, பெலிஅத்தை மகிந்த ராஜபக்ஷ, திஸ்ஸமகாராமை டெனிஸன் எதிரிசூரிய, கெக்கிராவ யூ.பி.வை ஜினதாச என்போர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாக இருக்க, சரத் முத்தெட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார போன்ற இடதுசாரிகளும் அதில் உள்ளடங்கினர். அவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களை விடவும் மக்களுடன் நெருக்கமாகி செயற்பட்டமை அப்பிரிவில் இருந்த அனைவரும் நன்கறிந்த விடயம். இவர்களே திருமதி பண்டாரநாயக்க அரசியலில் தோற்றம் பெறுவதற்கும் வாய்ப்பளித்தார்கள் என்பது தெளிவாகிறது.\nதற்காலத்தில் அவ்வாறான இளம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அவ்வாறானவர்கள் தோன்றுவதாகத் தெரியவில்லை. சிற்சில நிகழ்வுகளின் பின்னர் அவ்வாறான ஒன்று இரண்டு பேர் தோற்றம் பெற்றாலும் காலக்கிரமத்தில் அவர்கள் முகவரியிழந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். தற்போதை இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயினும், 1970 - 77 காலப்பகுதியை முன்மாதிரியாகக் கொண்டிருந்தால் பேருவலை, அளுத்கம போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைச் செயற்பாடுகள் அவ்வாறு ஏற்படாதிருக்கவும், இந்த அரசாங்கத்தை மேலும் உன்னதநிலைக்குக் கொண்டுசெல்வதற்கும் வழிவகுத்திருக்கும்.\nநாமல் ராஜபக்ஷ அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக முயற்சி செய்கின்றாரோ தெரியவில்லை.\nசிங்களத்தில் - வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්‍රිය රාමනායක)\nதமிழில் - கலைமகன் பைரூஸ்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\n அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆ...\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா வை எல் எஸ் ஹமீட்\nகடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/190379?ref=home-feed", "date_download": "2018-08-20T18:06:21Z", "digest": "sha1:TWETYNY46KZNE5UAQZLQBFIUS3KPWMEI", "length": 8745, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆறு வருடங்களாக தற்காலிக வீட்டில் வசிக்கும் 52 குடும்பங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஆறு வருடங்களாக தற்காலிக வீட்டில் வசிக்கும் 52 குடும்பங்கள்\nமுல்லைத்தீவு - புதுகுடியிருப்பு வேனாவில் மற்றும் புதியகுடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் 52 குடும்பங்கள் ஆறு வருடங்களாக பாதுகாப்பற்ற தற்காலிக ஓலைக்குடிசைகளில் வசித்துவருவாதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த 1186 குடும்பங்களுக்கு அதிகமானவர்கள் 2012 ஆம் ஆண்டு புதுகுடியிருப்பு பிரதேச செயல் பிரிவில் மீள்குடியேறியுள்ளனர்.\nஇந்த நிலையில் போரினால் கணவனை இழந்த பெண்களும், பிள்ளைகளை இழந்த தாய்மார் என 52 குடும்பங்கள் உதவிகள் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற தற்காலிக வீடுகளில் ஆறு வருடங்களாக வசித்துவருவதாக சமுக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇது தொடர்பில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,\nநான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது எனது கணவன் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்.\nவலையம் 4 புனர்வாழ்வு முகாமில் குழந்தையை பெற்றெடுத்த நான் 2012 புதுக்குடியிருப்பில் மீள்குடியேறினேன்.இன்று வரை தற்காலிக வீட்டில் வசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகள் புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதினால் தனக்கு நிரந்தர வீடு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/92438", "date_download": "2018-08-20T18:08:26Z", "digest": "sha1:AA557Z62TR7UN5VHJINXXFCCFCYJTPOZ", "length": 7272, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nஹொரவ்பொத்தானை குளத்திற்குள் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று (02) சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஹொரவ்பொத்தானை, மெதவாச்சி சந்தியில் வசித்து வந்த போகுல லியனகே சுமேத பெரேரா (31 வயது) என்பவருடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nதனது சகோதரரை காணவில்லையென ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்தில் கடந்த 30ம் திகதி சுதந்த பெரேராவினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை குளத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்த பொலிஸார் சடலத்தை உறவினர்களிடம் காண்பித்து உறுதிப்படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.\nதொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தை கெப்பித்திகொள்ளாவ பதில் நீதவான் அஐித் புஸ்பகுமார திஸாநாயக்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய பரிசோதனையை முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.\nசடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஏறாவூர் நகர சபை செயலாளர் இடமாற்ற பின்னனியில் முன்னாள் முதலமைச்சர்: முன்னாள் அமைச்சர் சுபையிர் காட்டம்\nNext articleநோன்பும் நொந்த மக்களும்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13002421/Seat-for-Ooty-municipal-marketsPracticing-traders.vpf", "date_download": "2018-08-20T18:29:01Z", "digest": "sha1:Y4DYMPXTCPQXG5OY2MB2C7EWE3ZOX7IG", "length": 21920, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Seat for Ooty municipal markets Practicing traders || ஊட்டி நகராட்சி 32 மார்க்கெட் கடைகளுக்கு சீல் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊட்டி நகராட்சி 32 மார்க்கெட் கடைகளுக்கு சீல் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல் + \"||\" + Seat for Ooty municipal markets Practicing traders\nஊட்டி நகராட்சி 32 மார்க்கெட் கடைகளுக்கு சீல் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல்\nஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்தாத 32 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைப்பிரதேசமான ஊட்டியில், ஆங்கிலேய அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் பயன்பெறும் வகையில் ஊட்டி மார்க்கெட்டை தொடங்கினர். இந்த மார்க்கெட்டில் ஆங்கிலேயர் பயன்படுத்தும் சூப்புக்கான பாலக், கிளைக்கோஸ், தர்னீப் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள், ஆடு, கோழி, அணை மீன்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நாளடைவில் ஊட்டியின் முக்கிய மார்க்கெட்டாக விளங்கியது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மங்குஸ்தான், ரம்பூட்டான், பிளம்ஸ், விக்கி பழங்கள், பேரிக்காய் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர்.\nஊட்டி மார்க்கெட் நகராட்சிக்கு சொந்தமானதாக உள்ளது. இங்கு ஆயிரத்து 550 கடைகள் உள்ளன. மேலும் புளுமவுண்டன் சாலை, மார்க்கெட் மேல்பகுதி, சேரிங்கிராஸ், பிங்கர்போஸ்ட், காந்தல், எட்டின்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் நகராட்சி வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. வணிக வளாகங்களில் 250 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் வாடகை தொகை மூலம் ஆண்டுக்கு ரூ.2½ கோடி நகராட்சிக்கு வருமானம் கிடைத்து வந்தது. இந்த வருமானத்தை கொண்டு நகராட்சி திட்டப்பணிகளை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nஎனவே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகராட்சி முன்னாள் கமிஷனர் சத்தார் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு கடை வாடகையை உயர்த்தியது. ஒரு ஆண்டுக்கு ரூ.13 கோடி நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் வகையில் உயர்த்தப்பட்டது. இந்த வாடகை உயர்வை எதிர்த்து மார்க்கெட் மற்றும் வணிகவளாகங்களில் கடை வைத்திருப்பவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே ஒரு சில வியாபாரிகள் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்துவதாக நகராட்சிக்கு கடிதம் வழங்கினர். ஆனால், பல வியாபாரிகள் உயர்த்தப்பட்ட வாடகையை நகராட்சிக்கு செலுத்தவில்லை. அதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பியது.\nஇந்த நிலையில் தற்போது தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் செயலாளர் உத்தரவின்படி, உயர்த்தப்பட்ட வாடகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கடை வியாபாரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அவர்கள் நோட்டீசு கிடைக்கப்பெற்றும் வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்தாத ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு நேற்று காலை 6 மணியளவில் சீல் வைக்கப்பட்டது. கொட்டும் மழையில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி முன்னிலையில், நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 கடைகளுக்கு சீல் வைத்தனர்.\nஊட்டி மாரியம்மன் கோவில் முன்பகுதியில் இருந்த கடைகளுக்கு சீல் வைக்கும் போது, வியாபாரிகள் சீல் வைப்பதை தடுத்து நிறுத்தியதோடு நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகளுக்கு சீல் வைப்பது நிறுத்தப்பட்டது. இந்த தகவல் அறிந்த கடை வியாபாரிகள் அங்கு திரண்டனர். அவர்கள் கடைகளுக்கு சீல் வைத்ததை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளின் குறுக்கே வாகனம், சரக்கு வாகனங்களை நிறுத்தினர். அதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து பாதிப்பால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதையடுத்து வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்பட்டன. பின்னர் வியாபாரிகள் மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் இருந்து புளுமவுண்டன் சாலைக்கு ஊர்வலமாக மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி சென்றனர். அங்கு மார்க்கெட் நுழைவுவாயில் முன்பகுதியில் வியாபாரிகள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதுதொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிக்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஇதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் 10 மணிக்கு பேசி தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊட்டி நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், முஸ்தபா, ராஜா முகமது ஆகியோர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, நகராட்சி வருவாய் அதிகாரி பாஸ்கர், போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை மொத்த தொகையில் ரூ.8 கோடியை செலுத்த வியாபாரிகள் முன்வந்தனர். ஆனால், அரசு உயர்த்திய ரூ.13 கோடியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.\nஇதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருப்பதால், உடனே விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் சட்டசபையில் இதுகுறித்து பேசி அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். சீல் வைக்கப்பட்ட 32 கடைகளின் நிலுவையில் உள்ள வாடகையை செலுத்துவதுடன் கூடுதலாக தொகை செலுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வியாபாரிகள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சீல் வைக்கப்பட்ட 32 கடைகளிலும் சீல்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளும் திறக்கப்பட்டது.\nஇதுகுறித்து நகராட்சி பணியாளர் சங்க உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-\nஊட்டி நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லாததால் பணியாளர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. மேலும் நகராட்சி வாகனங்களுக்கு நிரப்பப்பட்ட டீசல் தொகை ரூ.25 லட்சம் செலுத்த முடியவில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.45 லட்சம் பண பலன்கள் வழங்க முடியாமலும், 7-வது ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட சம்பள நிலுவைத்தொகை ரூ.20 லட்சம் பணியாளர்களுக்கு வழங்க முடியாமலும் உள்ளது. பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து குடிநீர் எடுப்பதற்கான தொகையும், மின்கட்டணமும் ரூ.7 கோடி பாக்கி இருக்கிறது. உயர்த்தப்பட்ட சம்பளம் பணியாளர்களுக்கு வழங்கப்படாததால், எங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க கஷ்டப்படுகிறோம். எனவே, பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109317-cm-palaniswamy-says-short-story-for-karunanithi-and-mk-stalin.html", "date_download": "2018-08-20T19:00:09Z", "digest": "sha1:UGNOCB6V3MXXDNODNG7S6HURD5S5G7OH", "length": 18974, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதி, ஸ்டாலினுக்கு முட்டை கதை சொன்ன முதல்வர்! | CM Palaniswamy Says Short Story for Karunanithi and MK Stalin", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nகருணாநிதி, ஸ்டாலினுக்கு முட்டை கதை சொன்ன முதல்வர்\nஇரவு பகல் பாராமல் நாங்கள் தினம் தினம் மக்களுக்காக பணி செய்து வருவதை குறைசொல்வதே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வேலையா போச்சு என்று தஞ்சையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிழாவில் பேசிய முதல்வர், அ.தி.மு.க அரசின் சாதனைகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர், “ஸ்டாலினுக்கு நம்முடைய ஆட்சியைப் பற்றி குறை சொல்வதே வேலையா போச்சு அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தி.மு.க ஆட்சியைவிட நாங்கள் நடத்துகின்ற ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது. அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை எந்த வேறுபாடும் இல்லாமல் நாங்கள் உழைப்பது அவர்கள் கண்களை உறுத்துகிறது, எங்களின் ஒற்றுமையையும், அம்மாவின் ஆட்சியை அழித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இனி நமக்கு எல்லாமே வெற்றிதான். நம்மை எதிர்ப்பவர்களுக்கு தோல்வியைத்தான் தழுவுவார்கள். இதைக் கூறும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது என முட்டை கதையைக் கூறி அந்த சிறுவனையும் தந்தை ஆடிய நாடகத்தைப் பற்றி சொன்னார் முதல்வர். கதையில் வரும் தந்தையும், மகனையும் யாரென்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.\n“மணல் விற்பதில் ஊழல் நடந்திருப்பதாக துரைமுருகன் சொல்கிறார். தி.மு.க ஆட்சியில் அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது வேண்டுமானால், மணலில் ஊழல் நடந்திருக்கலாம். அ.தி.மு.க ஆட்சியில் ஆன்லைனில் மணல் விற்பனை செய்திருக்கிறோம். எந்த விதத்திலும் ஊழல் நடக்கவில்லை” என்றும் முதல்வர் கூறினார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..Know more...\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nகருணாநிதி, ஸ்டாலினுக்கு முட்டை கதை சொன்ன முதல்வர்\nகழிவறையை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்\nஇந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு புதிய கேப்டன்\n'கோயிலைக் கொள்ளையடிப்பவர்களைத் தாக்கத் தயார்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/414-2017-01-19-20-48-45", "date_download": "2018-08-20T18:47:40Z", "digest": "sha1:6IQ3YFBGP4VENZ7CZDLQNVXV2XYYU3SD", "length": 7949, "nlines": 110, "source_domain": "eelanatham.net", "title": "மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் - eelanatham.net", "raw_content": "\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ Jan 19, 2017 - 22093 Views\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் Jan 19, 2017 - 22093 Views\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Jan 19, 2017 - 22093 Views\nMore in this category: « ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/10/2.html", "date_download": "2018-08-20T18:49:53Z", "digest": "sha1:IFUWVCWG22ZRSMGEWU4WAKWSOOUONTCN", "length": 15117, "nlines": 92, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: \"லெமன் க்ராஸ்\" பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்!", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"லெமன் க்ராஸ்\" பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\n\"லெமன் க்ராஸ்\" என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் \"வாசனைப் புல்\", \"எலுமிச்சைப் புல்\" மற்றும் \"இஞ்சிப் புல்\" போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதனை காமாட்சிப் புல் என்பார்கள். இதன் தாவரப் பெயர் \"CYMBOPOGAN FLEXOSUS\" என்றும், GRAMINAE என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.\nபொதுவாக இதுபோன்று அதிகம் அறிமுகமில்லாதவைப் பற்றி கேள்விப்படும்போது, இது மரமா அல்லது செடியா, அல்லது எதனுடைய வேரோ என்றுதான் நமக்கு நினைக்கத் தோன்றும். அதனாலேயே இதன் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லும் முன், இது ஒரு புல் இனம் என்பதையும், அது கிடைக்கும் இடங்களையும் தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது.\nஇந்த லெமன் க்ராஸ் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்டதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சீனாவில் அதிகமாக விளையும் பொருளான இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடிய வகையைச் சேர்ந்ததாகும். மேலும் இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது வீட்டிலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளரச் செய்யலாம்.\nஇது கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருக்கும். அதனால்தான் நாம் மேலே குறிப்பிட்டதுபோல் தமிழகத்தில் \"எலுமிச்சைப் புல்\", \"இஞ்சிப் புல்\" என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nலெமன் க்ராஸ் நல்ல செரிமாணத்தைக் கொடுத்து, பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால், மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இதன் தண்டுகளிலிருந்தும் மேலுள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், பலவித‌ தோல் வியாதிகளுக்கும் ,தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது. இது கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்கு தயாரிக்க‌ப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nஇதிலிருந்து எடுக்க‌ப்படும் எண்ணெய் மூலம் சோப்புகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் சமையலில் பயன்படுத்தப்படும் எஸென்ஸ் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இதன் எஸென்ஸ் மெழுகுவர்த்தி தயாரிப்பிலும் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது கிருமி நாசினியாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. எண்ணெய் பிரித்தெடுத்தப் பின் எஞ்சக்கூடிய அதன் புல் மாட்டுத் தீவனமாகவும், காகிதங்கள், அட்டைப் பெட்டிகள் தயாரிக்கவும், எரி பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇதைக் கொண்டு போடப்படும் டீயும் நல்ல மணமும் சுவையும் கொண்டதாக இருக்கும் (பார்க்க‌). இதை சூப் தயாரிப்பிலும் அசைவ மற்றும் சைவ வகை உணவுகளிலும் உபயோகிக்கலாம். இதனை முறையாக‌ காய வைத்து, பதப்படுத்தப்பட்ட‌ சருகுகளாகவும் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.\nLabels: உணவே மருந்து, புல் வகைகள், மருத்துவம்\nலெமன் கிராஸை பற்றி நல்ல விளக்கமாக அருமையா சொல்லிருக்கீங்க அஸ்மா.. இவ்வளவு விசயமிருக்கா.. நன்றி பகிர்வுக்கு..\nலெமன் க்ராஸை பார்த்தால் ஏனோ Green Onion போலவே தோன்றுகிறதே ஒரு வேளை ஃபோட்டோ மாறிவிட்டதா அல்லது எனக்குதான் அப்படி தெரிகிறதா\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆசியாக்கா\n//லெமன் கிராஸை பற்றி நல்ல விளக்கமாக அருமையா சொல்லிருக்கீங்க அஸ்மா.. இவ்வளவு விசயமிருக்கா.. நன்றி பகிர்வுக்கு..//\nஆமா மின்மினி, இறைவனின் படைப்பில் நாம் யூஸ் பண்ணாதவை கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கு அதிலும் நாம் யூஸ் பண்ணும் பொருட்களில் அதன் பலன்களை அறியாமலே யூஸ் பண்ணுவது எத்தனையோ\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி\n//லெமன் க்ராஸை பார்த்தால் ஏனோ Green Onion போலவே தோன்றுகிறதே ஒரு வேளை ஃபோட்டோ மாறிவிட்டதா அல்லது எனக்குதான் அப்படி தெரிகிறதா ஒரு வேளை ஃபோட்டோ மாறிவிட்டதா அல்லது எனக்குதான் அப்படி தெரிகிறதா\nமுதன் முதலில் அதை நேரில் பார்த்தப்பவே நானும் அப்படிதான் குழம்பிப் போனேன் அன்னு :-) பிறகு இரண்டையும் ஒன்றாக வைத்து பார்த்தப்போதான் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. இப்போ உங்களுக்கு ஃபோட்டோ பார்த்து குழப்பம். ஃபோட்டோ மாறியெல்லாம் போகலபா :)\nலெமன் க்ராஸில் நுனி வரை அதன் தண்டு அழுத்தமாக இருக்கும். அதற்கு மேல் தோகைதான் சாஃப்ட்டாக இருக்கும். ஆனால் அந்த தோகை நாம் சமையலுக்கு யூஸ் பண்ணுவதில்லை. கிரீன் ஆனியனில் பச்சை நிற தண்டு கிளை கிளையாக பிரிந்து இருக்கும். அந்த பகுதி சாஃப்ட்டாகவும் இருக்கும். லெமன் க்ராஸ் மாதிரி அழுத்தமா இருக்காது. நல்லா பாருங்க அன்னு.\nஎன்ன அன்னு.. திடீர்னு ஆங்கிலத்தில் கமெண்ட் வருது\nதண்டு. தோகை விளக்கம் தாருங்கள்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2010/05/blog-post_21.html", "date_download": "2018-08-20T18:05:55Z", "digest": "sha1:E6MVVT6BZFHLAENFWH5L2LS3NSUK7Y2X", "length": 27547, "nlines": 260, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: தட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்", "raw_content": "\nதட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்\nபதிவிட்டவர் Bavan Friday, May 21, 2010 23 பின்னூட்டங்கள்\nஇலங்கையின் மூத்த பதிவர் வந்தியத்தேவன் என்ற மாமனிதரைப்பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. அந்தவகையில் அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் இன்று காலை அவருடன் மெயிலில் அரட்டை அடிக்கும் பொன்னான வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் நகைச்சுவையுணர்வுடைய மனிதர் அவர். ஆனால் மிகுந்த அறிவாளி, சந்தேகங்களை தேங்காய் உடைப்பதுபோல் சல்லிசல்லியாக உடைத்துக் கூறக்கூடியவர்.\nமுதலில் பின்நவீனம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்று எப்படி அறிந்தாரோ தெரியவில்லை. அதைப்பற்றி சிறப்பான ஒரு விளக்கத்தை அளித்தார். அவரின் விளக்கத்தில் இருந்த தெளிவு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அதன் பின்னர் ஐந்தாம் வகுப்பில் தனக்கு ஏற்பட்ட சில இளநீர் குடித்த அனுபவங்களை சற்று பின்நவீன முறையில் குறிப்பிட்டு நான் அறிந்தும் அறியாத வகையில் பின்நவீனம் எனக்கு விளங்கியிருக்கிறதா என பரீட்சித்த முறையில் அவருக்கு நிகர் அவரே.\nஆனால் வந்தியண்ணாவுக்கு சின்ன வயதில் தான் தென்னக்குருத்தை வைத்து கிறிக்கற் ஆடியதாகக்குறிப்பிட்டவருக்கு இளநீரில் காணப்படும் மருத்துவ குணாம்சங்கள் மற்றும் சின்னச்சின்ன விடயங்களை வைத்து எப்படிப்பதிவெழுதுவது என்று வந்தியண்ணா கூறிய விடயங்கள் இன்னும் என்ன மனதில் பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கின்றது.\nஅதன் பின்னர் கிறிக்கற் பற்றிய கதை அப்படியே சர்வதேச மட்டத்துக்கு திசை திரும்பியது. தற்போது கிறிக்கற் போட்டிகளுக்கு தயாரிக்கப்படும் தட்டையான ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டி மற்றும் பந்துவீச்சாளர்களைப் பாதிப்பது பற்றி கவலை வெளியிட்டவர். ஆனால் அடித்தாடுவதற்கும் ஏற்ற ஆடுகளங்கள் அவைதான் தற்போதைய இளம் சந்ததியினர் வேகமான அடித்தாடும் ஆட்டத்தையே விரும்புகின்றனர் என்ற கருத்தை இறுதியாகக் கூறி படங்களுடன் விளக்கிய முறையில் கிறிக்கறிலும் இவர் ஒரு மேதாவி என்பதை அறிந்து வியந்தேன்.\nஇவ்வாறான ஒரு சகலகலவல்லவனுடன் அரட்ரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்து விட்டு நேரத்தைப்பார்த்தேன் பகல் 1.30 அடக்கடவுளே 5 மணிநேரம் அரட்டையில் ஈடுபட்டிருக்கிறேனா இப்படி ஒரு பதிவரை, சகலகலாவல்லவரை, விளையாட்டு, அனுபவம், சினிமா, போன்ற எல்லா விடயங்களையும் அதைவிட பதிவுலக விடயங்களை தனது விரல் நுனியில் வைத்திருந்த வந்தி அண்ணாவை என்ன சொல்லிப்பாராட்டினாலும் தகும்.இப்படியான ஒரு மனிதரின் நட்புக்கிடைக்க நான் கொடுத்து வைத்திரக்க வேண்டும். ஆனால் இன்னும் இவரை நேரில் சந்திக்காதது பெரும் குறையே...\nவகைகள்: காமடிகள், பதிவுலகம், மரம், மொக்கை, வந்தியண்ணா\nஎனது சீனியரைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள்...\nபவனின் அறிவை வளர்த்த வந்தியண்ணா வாழ்க..\nசீரியசான பதிவல்லவா இது..அதுசரி பவன் அது என்ன லேபிளில் மரம் மொக்கை என என்று வகைப்படுத்தி இருக்கிறீர்கள்,,,\nஎன்னது ஐந்தாம் ஆண்டிலேயே இளநீர் குடித்தவரா கவனிக்க வேண்டிய விடயம்தான். என் மாமனை பாராடி எழுதியதற்கு நன்றிகள்.\n//இலங்கையின் மூத்த பதிவர் வந்தியத்தேவன் என்ற மாமனிதரைப்பற்றி//\n// சந்தேகங்களை தேங்காய் உடைப்பதுபோல் சல்லிசல்லியாக உடைத்துக் கூறக்கூடியவர்//\nதேங்காய்ச் சிரட்டையை உடைப்பது போலவா\n//சர்வதேச மட்டத்துக்கு திசை திரும்பியது//\n//இன்னும் என்ன மனதில் பசுமரத்தாணிபோல பதிந்து கிடக்கின்றது//\n// ஆனால் அடித்தாடுவதற்கும் ஏற்ற ஆடுகளங்கள் அவைதான் தற்போதைய இளம் சந்ததியினர் வேகமான அடித்தாடும் ஆட்டத்தையே விரும்புகின்றனர் //\n//எல்லாத்துக்கும் நன்றி வந்தியண்ணா... //\nஏன் என்னுடைய சீனியரை இவ்வாறு பொது இடத்தில் அவமானப்படுத்துகிறீர்கள்\n நீங்களும் நன்றாக விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள். உங்கள் நடையில் நரை தெரிகிறது. வாழ்த்துக்கள்\nஎன்ன லேபிளில் மரம் மொக்கை என என்று வகைப்படுத்தி இருக்கிறீர்கள்\nஅப்படியென்றால்... மரம் போன்ற அவரின் உறுதியைக் குறிக்கிறது..:p\nமொக்கை... இது more+கை அதாவது பலருக்கு கைகொடுத்து தூக்கிவிட்டவர் என்று பொருள்படும்..:p\nஇரட்டை அர்த்தப் பின்னூட்டங்களைக் கண்டிக்கிறேன்...\nமுதலில் பின்நவீனம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்று எப்படி அறிந்தாரோ தெரியவில்லை. அதைப்பற்றி சிறப்பான ஒரு விளக்கத்தை அளித்தார்//\nஅது என்ன பினநவீனத்துவம் ...\nபவன் இன்னொரு உதவி வந்தியண்ணா அளித்த விளக்கத்தில் பாதி எனக்கு அளித்து என்னை யும் தெளிவாக்க முடியுமா ..\n//அது என்ன பினநவீனத்துவம் ...\nபவன் இன்னொரு உதவி வந்தியண்ணா அளித்த விளக்கத்தில் பாதி எனக்கு அளித்து என்னை யும் தெளிவாக்க முடியுமா//\nஉயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்னதான் நான் விளக்கினாலும் வந்தியண்ணாவின் விளக்கம் போல வருமா\n// அது என்ன பினநவீனத்துவம் ...\nபவன் இன்னொரு உதவி வந்தியண்ணா அளித்த விளக்கத்தில் பாதி எனக்கு அளித்து என்னை யும் தெளிவாக்க முடியுமா .. //\nஅது என்ன பினநவீனத்துவம் ...\nபவன் இன்னொரு உதவி வந்தியண்ணா அளித்த விளக்கத்தில் பாதி எனக்கு அளித்து என்னை யும் தெளிவாக்க முடியுமா ..//\nஏன் டாக்டரே, அனடமி படிக்கலயா\nகங்கொன் என்ன பாட்டு... அறிவை வளர்க்கலாம் என்றால் நக்கலா..\nஏன் டாக்டரே, அனடமி படிக்கலயா\nஎல்லாமே படம்பார்த்து படிச்சாத்தான் புரியும் என்டது இப்ப ஐஞ்சு நிமிசத்துக்கு முன்னாடிதான் புரிஞ்சுது இல்ல சுபாங்கன் நன்றி அருமையான விளக்கத்தை அந்த மினஞ்சல் மூலம் தந்ததற்கு...பின்நவீனத்துவம்....\n//எனது சீனியரைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள்...\nகன்கோனுக்கு சீனியர் என்றபடியால், வந்தியத்தேவருக்கு ஒரு எழுபது தேறுமா\n//தேங்காய்ச் சிரட்டையை உடைப்பது போலவா\nசிரட்டை என்றாலே தேங்காயிலிருந்துதானே,,, இல்லை வேறேதும் உண்டா\n// உங்கள் நடையில் நரை தெரிகிறது. //\nதட்டை ஆடுகளங்களில் தான் பந்துகள் எகிறுகின்றன.\nஆகா.. இதென்ன விவகாரமாக் கிடக்கே.. ;)\nஒரு கும்மியின் விளைவாக இப்பதிவு உருவானதால் கும்மிப் பதிவு எனப் பெயர் பெறுவதாக.. ;)\nதம்பி பவன் நல்ல காலம் படம் போட்டு தட்டை,தென்ன மரம்,சிரட்டை என விளக்கம் தரல.. ;)\nலண்டன் போயும் இலங்கையில் கும்மிகளின் நாயகனாகத் திகழ்வதால் வந்தி ஒரு கும்மி நாயகன் ஆகிறார்..\nஇப்போ வந்தி, சதீசுக்கும் எமக்கும் மாமா.. உமக்கும் கண்கோனுக்கும் குறு..\nஇன்னும் யார் யாருக்கு யாரோ\n//சின்னச்சின்ன விடயங்களை வைத்து எப்படிப்பதிவெழுதுவது //\nஅவருக்கு எப்போதுமே சின்னச் சின்ன விடயங்கள் ரொம்பவே பிடிக்கும் என நேற்று முழுமையாக அறிந்திருப்பீர்களே.. ;)\n// அவருக்கு எப்போதுமே சின்னச் சின்ன விடயங்கள் ரொம்பவே பிடிக்கும் என நேற்று முழுமையாக அறிந்திருப்பீர்களே.. ;) //\n//தம்பி பவன் நல்ல காலம் படம் போட்டு தட்டை,தென்ன மரம்,சிரட்டை என விளக்கம் தரல.. ;) //\nஅவனே அந்தப் படத்தப் பாத்து இப்போ பெரிய சந்தோசமாம்...\n//அவருக்கு எப்போதுமே சின்னச் சின்ன விடயங்கள் ரொம்பவே பிடிக்கும் என நேற்று முழுமையாக அறிந்திருப்பீர்களே.. ;)//\nஎன்னது எல்லாத்திலும் சின்ன விடயங்களா அவருக்கு பிடிக்கும். அவர் வீட்டில் குழப்பத்தை உண்டாக்குகிண்றீர்களே. இது நியாயமா\nஅனைவரின் வருகைக்கும் கருத்துப்பகிர்வுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்...:)\n//இன்னும் யார் யாருக்கு யாரோ\nஎனது குருவை நக்கலடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..:p\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nகளத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்....\nதட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்\nகிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா\nசெஞ்சுரி - 36 - கும்மிக்கு சிங்களம் என்ன\nசுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+\nஎரிந்தும் எரியாமலும் - 13\nசுறா வெற்றிக்கு காரணம் யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2863794.html", "date_download": "2018-08-20T18:25:54Z", "digest": "sha1:UGYPAFU3GG76IADB5XYEUYRAAOCAXMVW", "length": 6487, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நிலப் பிரச்னையை தீர்க்கக் கோரி கூடலூரில் உண்ணாவிரதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nநிலப் பிரச்னையை தீர்க்கக் கோரி கூடலூரில் உண்ணாவிரதம்\nகூடலூரில் நிலப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்தில் நிலப் பிரச்னையில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nபிரிவு-17 நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் மின் இணைப்பு வழங்கியது போல தற்போதும் வழங்க வேண்டும்.\nஓவேலி பகுதியில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, சமக, மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2863501.html", "date_download": "2018-08-20T18:25:52Z", "digest": "sha1:QDNP6KTCXHUO62ASYA37IV6FLA5IE7HZ", "length": 7393, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "இணைய வழி பத்திரப்பதிவு முடக்கம்: பொதுமக்கள் அதிருப்தி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஇணைய வழி பத்திரப்பதிவு முடக்கம்: பொதுமக்கள் அதிருப்தி\nஇணைய வழிப் பத்திரப் பதிவு, புதன்கிழமை இணைய தள முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.\nதமிழகம் முழுவதும் பிப்.1 ஆம் தேதி முதல் இணைய வழியில் பத்திரப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக புதிய மென்பொருள் மூலம் இணைய தள வசதியுடன் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் நவீனப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இணைய தள முடக்கம் காரணமாக, புதன்கிழமை நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுகள் முடங்கின.\nதிண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பத்திரப் பதிவு அலுவலகத்தில் இணைய வழிப் பத்திரப்பதிவு கடந்த 5 மாதங்களுக்கு முன் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅதன்படி, பத்திரப் பதிவு செய்த சிறிது நேரத்திலேயே, 3 பயனாளிகளுக்கான பத்திரங்களை, வத்தலகுண்டு சார் பதிவாளர் விவேகானந்தன் உடனடியாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு பத்திரப் பதிவுக்காக 20-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.\nஆனால், நண்பகல் 12 மணிக்குப் பின் இணைய தள சேவை முடக்கத்தால் புதன்கிழமை முழுவதும் பத்திரப் பதிவு நடைபெறவில்லை. இதனால் பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44828-newly-birth-baby-found-between-the-stones-in-salem.html", "date_download": "2018-08-20T18:45:57Z", "digest": "sha1:4OZ2VAFNYQJUWCCNN6YSWMJH7SMT4SU2", "length": 9129, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை | Newly Birth Baby found between the Stones in Salem", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nபுதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை\nசேலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கற்களுக்கிடையே மீட்கப்பட்டுள்ளது.\nசேலம் வெள்ளக்கல்பட்டி பகுதியில் மாக்னசைட் தாது வெட்டி எடுக்கப்படும் இடம் உள்ளது. அங்கே உள்ள புதர் ஒன்றில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்ற இளைஞர்கள் சிலர், குழந்தையின் சத்தம் கேட்டு புதருக்குள் பார்த்துள்ளனர். அப்போது குவித்து வைக்கப்பட்டிருந்த கற்களுக்கிடையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. கற்களை தள்ளிப்பார்க்கும் போது, அதற்கிடையே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு இருந்துள்ளது.\nகுழந்தையை மீட்ட இளைஞர்கள் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத அக்குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கற்களின் அழுத்தத்தால் குழந்தையின் உடலில் சில இடங்களில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குழந்தையைக் கொலை செய்ய முயன்றது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்: தமிழக அரசு மனு\n“என் நண்பர்கள் பல லட்சம் ஏமாந்திருக்கிறார்கள்” சமந்தா ஷாக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nவங்கிகளில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு\nதமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை\nவறுமையிலும் நேர்மையை காட்டிய சிறுமி மோனிகா\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..\nகர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என எதிர்பார்ப்பு\n'சிகரெட் உண்டியல்' அப்படினா என்ன \nடெம்போவில் ஆதரவற்றுக் கதறிய பெண் குழந்தை\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்: தமிழக அரசு மனு\n“என் நண்பர்கள் பல லட்சம் ஏமாந்திருக்கிறார்கள்” சமந்தா ஷாக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-20T18:34:18Z", "digest": "sha1:7I4SBLWU3DT54AJHECTG4H6JTJ4S6GFE", "length": 6918, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கால்­பந்து | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nஇலங்கைக் கால்­பந்து தேசிய அணிக்கு மொஹமட் நிசாம் பக்கீர் அலி புதிய தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.\nஇலங்கைக் கால்­பந்து தேசிய அணிக்கு மொஹமட் நிசாம் பக்கீர் அலி புதிய தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.\n13 ஆவது ஸாஹிரா சுப்பர் – 16 கால்பந்தாட்ட தொடர்\nஸாஹிரா சுப்பர் – 16 கால்­பந்து சம்­பி­யன்ஷிப் போட்டித் தொடர் 13ஆவது வரு­ட­மாக நடை­பெ­று­வ­தற்கு தயாரா­கி­யுள்­ளது.\nதொப்பி வடிவில் மைதானம் பிபா உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் கட்டார்\n2022ஆ-ம் ஆண்டு, பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொடர் கட்­டாரில் நடை­பெ­ற­வுள்­ளது.\nபாலியல் ரீதியாக தொல்லை சொல்கிறார் இந்திய முன்னாள் கால்பந்தாட்ட அணித் தலைவி\nஇந்­திய கால்­பந்து வீராங்­க­னை­க­ளுக்கு பயிற்­சி­யா­ளர்கள், நிர்­வா­கிகள் பாலியல் ரீதி­யாக தொல்லை கொடுத்­த­தாக குற்­றச்­...\nகால்பந்து சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ.கிண்ணத்தின் 32 அணிகள் மோதும் சுற்று ஆரம்பம்\nஇலங்கைக் கால்­பந்து சம்­மே­ளனம் நடத்தும் கார்கில்ஸ் புட்­சிட்டி எவ்.ஏ. கிண்ணத் தொடரின் 7ஆவது சுற்றுப் போட்­டிகள் அதா­வது...\nஹியூக்ஸ் மறைந்து இன்றுடன் ஒருவருடம் : நினைவு தினத்தில் வரலாற்று பதிக்கும் டெஸ்ட் போட்டி இன்று\nஉலகில் அதிகம் பேர் தொலைக்­காட்சி வாயி­லாக ரசிக்கும் விளை­யாட்­டாக கால்­பந்து, டென்னிஸ் போட்­டி­க­ளுக்கு அடுத்­த­தாக கிரி...\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/wednesday-born-people-personality-019046.html", "date_download": "2018-08-20T18:34:13Z", "digest": "sha1:F2KOGZMGUNLRDKFS7BHAYXW3MYQRV2J7", "length": 16728, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "புதன் கிழமை பிறந்தவங்களோட குணம் எப்படி இருக்கும்-ன்னு கொஞ்சம் பாருங்க... | Wednesday Born People Personality - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புதன் கிழமை பிறந்தவங்களோட குணம் எப்படி இருக்கும்-ன்னு கொஞ்சம் பாருங்க...\nபுதன் கிழமை பிறந்தவங்களோட குணம் எப்படி இருக்கும்-ன்னு கொஞ்சம் பாருங்க...\n அப்படியானால் கண்டிப்பாக புதன்கிழமையில் பிறந்தவர்களாகத் தான் இருக்க முடியும். வாரத்தின் நான்காவது கிழமையான புதன் கிழமை, புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. இது சூரியக் குடும்பத்திலேயே மிகச்சிறிய கிரகம் தான். மெர்குரி என்னும் புதன் ஞானம், நுண்ணறிவு, நடைமுறை ஆகியவற்றைக் குறிக்கிறது.\nஇந்த புதன், சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால், புதன் கிழமையில் பிறந்தவர்கள் தொலை நோக்கு திறன் கொண்டவர்களாக இருப்பர். மேலும் இவர்களால் மற்றவர்களது மனதில் தோன்றுவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இத்தகையவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாளர்களாக, தொடர்பாளர்களாக இருப்பர். இவர்களது பேச்சுக்கள் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் இருக்கும். நல்ல நகைச்சுவையாளர் என்றும் கூறலாம். இவர்களது நண்பர் கூட்டத்தை எடுத்துக் கொண்டால், இவர்கள் தான் சிறந்தவர்களாக இருப்பர்.\nஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் துல்லியமாக கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதில் வல்லவர்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். மேலும் இவர்கள் அறிவுசார் நலன்களைக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக இவர்கள் அனைத்திற்கும் விடை காண வேண்டுமென்ற ஆவலைக் கொண்டிருப்பவர்களாக இருப்பர்.\nபுதன் கிழமையில் பிறந்தவர்கள் எப்போதும் எதையேனும் யோசித்தவாறு அல்லது செய்தவாறு இருப்பார்கள். இவர்களுக்கு பயணம் மேற்கொள்வது என்பது பிடிக்கும். ஆனால் தொலை தூர பயணத்தை விட குறைந்த தூர பயணம் மேற்கொள்வதையே விரும்புவர். இவர்கள் அடிக்கடி எதிலும் கவனக்குறைவாகவே இருப்பார்கள்.\nபுதன் கிழமை பிறந்தவர்கள் நல்ல பேச்சாளர்கள் என்பதால், இவர்களுக்கு சேல்ஸ்மேன், அரசியல் மற்றும் வக்கில் தொழில் பொருத்தமாக இருக்கும். மேலும் இவர்களுக்கு கணித திறமையும், எதிலும் தீர்வைக் காண வேண்டுமென்ற எண்ணமும் கொண்டிருப்பதால் விஞ்ஞான ஆராய்ச்சியும் சிறப்பாக இருக்கும். பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண தெரிந்தவர்களாக இருப்பர்.\nபுதன் கிழமையில் பிறந்தவர்களது ஆர்வம் தான் அவர்களது தொழில் வாழ்க்கையை துரிதப்படுத்துகின்ற முக்கிய காரணி. இதனால் தான் புதன் கிழமை பிறந்தவர்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது.\nபுதன் கிழமை பிறந்தவர்கள் நகைச்சுவை குணம் கொண்டவர்கள் என்பதால், இவர்களுக்கு நண்பர்களை அமைத்துக் கொள்வதில் சிரமமே இருக்காது. இவர்களது பேச்சுத் திறமையே, இவர்களுக்கு நண்பர்களை அமைத்துக் கொடுக்கும்.\nபுதன் கிழமையில் பிறந்தவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொண்டிருக்காமல், தன் மனதில் பட்டதை பளிச்சென்று வெளிப்படையாக பேசி விடுவார்கள். இதனாலேயே இவர்கள் அனைவராலும் ஈர்க்கப்படுவர். மேலும் இந்த கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாகவும் இருப்பர்.\nபுதன் கிழமையில் பிறந்தவர்களது காதல் வாழ்க்கை ரோலர்கோஸ்டரில் பயணம் மேற்கொள்வது போன்று இருக்கும். சண்டை என வந்துவிட்டால், இவர்களது பேச்சுக்கள் காயப்படுத்தும் வகையில் இருக்கும். இவர்களிடம் உள்ள சிறந்த பண்பு, என்ன பிரச்சனை வந்தாலும் வாழ்க்கைத் துணையை மாற்ற நினைக்கமாட்டார்கள்.\nபுதன்கிழமையில் பிறந்தவர்கள் கவனக்குறைவாளர்கள் என்பதால், உறவில் பொறுப்பில்லாத நபராக இருப்பர். இவர்கள் நன்கு பேசுவார்களே தவிர, சொல்வதைக் கேட்கமாட்டார்கள். இதனாலேயே இந்த கிழமையில் பிறந்தவர்கள் தனக்கு அமைந்த வாழ்க்கை துணையால் ஈர்க்கப்படாமல், துணையின் அன்பைப் பெற முடியாமல் தவிப்பார்கள். இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, வாழ்க்கைத் துணை சொல்வதை காது கொடுத்து கேளுங்கள், அவர்கள் உணர்வை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nநீங்கள் நினைப்பதை காட்டிலும் இவை உருவத்தில் ஜைஜாண்டிகானவை - புகைப்படத் தொகுப்பு\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nமறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nJan 10, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kollywoodtoday.net/news/bongu-movie-press-release/", "date_download": "2018-08-20T18:06:58Z", "digest": "sha1:35SQLE7XLKEAZJHJN6YXVERTZHO26ZIJ", "length": 9717, "nlines": 144, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Bongu Movie Press Release", "raw_content": "\nசெம ஸ்பீடு கதையாக போங்கு நட்டிக்கு பொருத்தமான கதைக்களம் “போங்கு“ ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரிக்கும் படம் “போங்கு“. சதுரங்க வேட்டை வெற்றி படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் ( நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார்.இவர் ஹிந்தியில் இரண்டு படங்களிலும் மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த “ காலண்டர் கேர்ள்ஸ் “ என்ற படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி\nஇசை – ஸ்ரீகாந்த் தேவா\nபாடல்கள் – கபிலன், தாமரை, மதன்கார்க்கி\nஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர்\nநடனம் – கல்யாண் , பாப்பி\nதயாரிப்பு மேற்பார்வை – ஏ.பி.ரவி\nதயாரிப்பு – ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தாஜ்.\nஇவர் பிரபல கலை இயக்குனர் சாபுசிரில் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது…\nபோங்கு படம் டிராவலிங் பற்றிய படம்.. சாலைகளில் அதுவும் நேஷ்னல் ஹைவேஸ் ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பர பரன்னு பறக்கும்… நட்டிக்குன்னு தைத்து வெச்ச சட்டை மாதிரி காரக்டர் அப்படியே பொருந்தி போய் விட்டது.\nசரியாக சொல்லப்வ்போனால் சதுரங்க வேட்டையை தாண்டுவது போல இந்த கதாபாத்திரத்தில் அவர் ஜொலிப்பார்..\nபடம் விரைவில் வெளியாக உள்ளது.. நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள்..அந்த ஆதரவு போங்கு படத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார் இயக்குனர் தாஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.msmeonline.tn.gov.in/needs/needs_application_without_upload.php", "date_download": "2018-08-20T18:43:36Z", "digest": "sha1:32KQOTNAAQYD3WB6HDLKCBFRHQ65OSZ7", "length": 14005, "nlines": 156, "source_domain": "www.msmeonline.tn.gov.in", "title": "Skip to Navigation Skip to Main Content A A A", "raw_content": "\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற\nமுதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்\nகல்வித்தகுதி\t பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்\nகுடும்ப ஆண்டு வருமானம்\t உச்ச வரம்பு ஏதுமில்லை\nவயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது\nஅதிகபட்சம் பொது பிரிவினருக்கு\t 35 வயது\nசிறப்பு பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்) (SC/ST/BC/MBC/Minorities/Women/Ex-Serviceman/Differently-abled/Transgender) 45 வயது\nஇத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாத தொழில்கள்-CLICK HERE\nஇத்தகவலை படித்து புரிந்து கொண்டேன்.\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறை\n1 ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் கீழ்கண்ட ஆவணங்களை உரிய வடிவ அளவில் கொடுக்கப்பட்டுள்ள பைல் அளவுக்கு மிகாமல் ஸ்கேன் செய்து கொள்ளவும்.\nபதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் - CLICK HERE\n2 ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யவும்.\n3 \"Details of Entrepreneur\" மற்றும் \"Unit details\" விவரங்களை பூர்த்தி செய்தபின் போட்டோவை upload செய்யவும்.பின்னர் திரையின் கீழ் உள்ள \"Proceed\" பட்டனை அழுத்தவும்.\n4 தற்பொழுது திரையில் தோன்றும் \"reference Number\" யை குறித்துக்கொண்டு close பட்டனை அழுத்தவும்.\n5 Documents upload செய்தபின் அவற்றை view வசதியை உபயோகித்து சரிபார்த்தபின் திரையின் கீழ் உள்ள சதுரத்தில் Tick Mark செய்யவும்.செய்தபின் தோன்றும் Submit Application பட்டனை அழுத்தவும்.\n6 தற்பொழுது generate ஆகும் விண்ணப்ப படிவம் மற்றும் இதர ஆவணங்களை பிரிண்ட் செய்து கொள்ளவும்.\n7 தங்களது விண்ணப்பம் ஆன்லைன் மூலம் சம்மந்தப்பட்ட மாவட்டத்தை சார்ந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதற்கான குறுச்செய்தி தங்களது கைபேசிக்கு வரும்.\n8 மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ, தபால் மூலமாகவோ விண்ணப்ப நகல் ஏதும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆன்லைனில் பதிவு செய்த விவரம் மற்றும் பதிவேற்றம் செய்த ஆவணங்களே போதுமானதாகும்.\n9 மாவட்ட தொழில் மைய / மண்டல இணை இயக்குநர், சென்னை அலுவலகத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதம் பெறப்பட்டவுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும்பொழுது அணைத்து அசல் ஆவணங்களையும் சரிபார்க்க சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கீழ்கண்ட ஆவணங்களையும் மாவட்ட தொழில் மையத்தில் நேர்முகத் தேர்வின்பொழுது சமர்ப்பிக்க வேண்டும்.\nஅ) கையொப்பமிட்ட விண்ணப்பம் (வரிசை எண் 6 -இல் குறிப்பிடப்பட்டுள்ள, ஆன்லைன் மூலம் generate ஆகும் விண்ணப்பம்).\nஆ)உறுதிமொழி பத்திரம் மாதிரி படிவத்தில் உள்ளவாறு ரூ.20/- மதிப்பிலான முத்திரைத்தாளில் தட்டச்சு செய்து நோட்டரி பப்ளிக்கிடம் கையொப்பம் பெறப்பட்டது அசல் மற்றும் ஒரு நகல்.\n10 விண்ணப்ப படிவத்துடன் generate ஆகும் NEEDS திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்குவது குறித்த செயல்முறை விளக்கப்படத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறை அறிந்து செயல்பட்டு பயனடையவும்.\nஇத்தகவலை படித்து புரிந்து கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:26:35Z", "digest": "sha1:GSMW3UVCORIEI5MCGN4APTOPFY3UW5WF", "length": 5438, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "அருட்சுனைஞர் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form உ சிவ சிவ செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் ஏழு குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. இதுவரை சற்றேறக்குறைய 700 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால்...\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&p=8306&sid=69a2463718f60a3870be5e760e4280e7", "date_download": "2018-08-20T18:31:32Z", "digest": "sha1:KDKXPPVEJMQAJLUGA7IIUBIA2G6WHWQO", "length": 29103, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958081", "date_download": "2018-08-20T18:18:56Z", "digest": "sha1:CH6TU7HWJHIN2UOBUJ52YLYLPUZEBVJ7", "length": 20121, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டடம் -எப்போது..! அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கும் திட்டம்| Dinamalar", "raw_content": "\nகலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டடம் -எப்போது.. அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கும் திட்டம்\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nமத்திய அரசின் 3 தாரக மந்திரம் : சுதந்திர தின உரையில் ... 114\nரஜினி விமர்சனம்: அதிமுக கடும் கோபம் 81\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\n'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் ... 79\nதி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ., மேலிடம் ... 225\nஅழகிரி வியூகம்; தி.மு.க., திக்... திக்... 169\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\nமதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டடம் கட்டும் திட்டம் அரசு ஒப்புதலுக்காக பல மாதங்களாக காத்திருக்கிறது.கலெக்டர் அலுவலகம் 1916 ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்குகிறது. தரை மற்றும் முதல் தளத்தில் கலெக்டர், டி.ஆர்.ஓ., துணை கலெக்டர் அலுவலகங்கள் உட்பட 39 துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த வளாகத்தில் ஆர்.டி.ஓ., மதுரை தெற்கு, வடக்கு தாலுகா அலுவலகங்கள், வருவாய் அலுவலர், ஊழியர் மனமகிழ் மன்றங்களும், பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை, நில ஆர்ஜித வருவாய் அலுவலகங்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூமாலை வணிக வளாகம் செயல்படுகின்றன.இடப்பற்றாக்குறையால் நெரிசல் :கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொது மக்கள், அலுவலர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள் பராமரிப்பின்றி பழமையான கட்டடங்களில் இயங்குகின்றன. இதனால் முக்கிய ஆவணங்கள் வைக்க முடியாத நிலைஉள்ளது. கலெக்டர் அலுவலக மெயின் கட்டடத்திலும் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்ஒயர்கள் பழுதடைந்துள்ளன. 2005 ல் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.மேலும் முதல் தளத்திலுள்ள கூட்ட அரங்கு போதியதாக இல்லை. மேற்கூரை சேதமடைந்து தண்ணீர் விழுகிறது. பல்வேறு மாவட்ட ஆய்வு கூட்டங்களை நடத்துவது சிரமமாக உள்ளது. கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் வார்டு மறுவரையறை ஆணையம் ஐந்து மாவட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இடமின்மையால் ஒவ்வொரு மாவட்டமாக கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. ஏராளமானோர் வந்ததால் நெரிசலும் நிலவியது.அரசு ஒப்புதலுக்காக காத்திருப்பு: எனவே ஒருங்கிணைந்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. இதற்காக 20 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்ட அரசு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கியது. கட்டடம் அமைவிடத்தை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வும் செய்தனர். தற்போதைய ஆர்.டி.ஓ., அலுவலகத்திலிருந்து மெயின் கட்டடம் பின்புறம் வரை ஒருங்கிணைந்த கட்டடம் கட்டவும் அறிவுரைகளை வழங்கினர். கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் அலுவலர்கள் பொதுப்பணித்துறையினர் மூலம் விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு கடந்தாண்டு அனுப்பினர். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அரசு ஒப்புதல் வழங்கவில்லை. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து அரசு அறிவிக்க வேண்டும் என அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.நிதி ஒதுக்கப்படுமா: மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் உடனடியாக துவங்கப்படும். நிதி ஒரே தவணையில் கிடைத்தால் ஓராண்டிற்குள் கட்டி முடிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/feb/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2863147.html", "date_download": "2018-08-20T18:25:46Z", "digest": "sha1:RA5ENOKOL7SDWPPDMGIDAFLXZQTLLQKI", "length": 6328, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நாளை ஆண்களுக்கு நவீன குடும்பநல சிகிச்சை முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nநாளை ஆண்களுக்கு நவீன குடும்பநல சிகிச்சை முகாம்\nதிருச்சி மாவட்ட ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி இ.பி.சாலையில் உள்ள நகர்நல மையத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறும். இந்த சிகிச்சையானது கத்தியின்றி, ரத்தமின்றி மேற்கொள்ளப்படும். இந்த கருத்தடை செய்து கொள்ளும் தந்தையர்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும்.\nஇவைத்தவிர ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படும். தகுதியான ஆண்கள் இந்த நவீன குடும்ப அறுவை சிகிச்சை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_627.html", "date_download": "2018-08-20T18:45:49Z", "digest": "sha1:VSDZ3D2USTKVZ6PT6GAJNPA377XP43QA", "length": 9084, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சிக்கு குடிநீர் விநியோகிப்பதில் நெருக்கடி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சிக்கு குடிநீர் விநியோகிப்பதில் நெருக்கடி\nகிளிநொச்சிக்கு குடிநீர் விநியோகிப்பதில் நெருக்கடி\nஇரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு குடிநீரை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நெருக்கடி நிலை எதிர்காலத்தில் மிகவும் மோசமான நிலையை அடையும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகம் என்பது இரணைமடுகுளத்திலிருந்து கிளிநொச்சிகுளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நீர் குடிநீருக்காக பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு தற்போது 14 கிராம அலுவலர் பிரிவுகளில் விநியோகிப்பட்டு வருகின்றன.\nதற்போது நாள் ஒன்றுக்கு 200 மீற்றர் கீயூப் (200 ஆயிரம் லீற்றர்) நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகிப்படுகிறது. வருகின்ற மாதம் இது நாளொன்றுக்கு 400 மீற்றர் கீயூப் அளவாக மாறும் எனவும் இவ்வருட இறுதியில் அது ஆயிரம் மீற்றர் கீயூப் அளவாக அதிகரிக்கும் எனவும் இறுதியில் கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகப் பணிகள் பூர்த்திசெய்யப்படுகின்ற போது நாளொன்றுக்கு 3800 மீற்றர் கீயூப் அளவாக காணப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஇந்த நிலையில் தற்போதுள்ள நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக இரணைமடுகுளத்திலிருந்து நாளொன்றுக்கு 200 மீற்றர் கீயூப் நீரை பெற்றுக்கொள்வது என்பது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக சிறுபோக நெற்செய்கைக்கு பின்னரான காலத்தில் கிளிநொச்சிக்கான குடிநீரை இரணைமடுகுளத்திலிருந்து பெற்றுக்கொள்வது மிகவும் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும், குறிப்பாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீரில் மக்கள் முழுமையாக நம்பி வாழுகின்ற நிலை ஏற்படுகின்ற போது அச் சந்தர்ப்பத்தில் இரணைமடுவிலிருந்தும் நீரை போதுமான அளவு பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகுமானால் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_180.html", "date_download": "2018-08-20T18:45:51Z", "digest": "sha1:KEJTRV6KJVJHMTEHRR5C6PWCJCGPGOW5", "length": 5620, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடவுள்ளது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடவுள்ளது\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடவுள்ளது\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பீடம் இன்று மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இதன்போது கட்சியின் யாப்பு மற்றும் ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.\nஇந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3.30 அளவில் இடம்பெறும் என்று, ஐக்கிய தேசிய கட்சி அரசியல் பீடத்தின் உறுப்பினர் பிரதி அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnewsnow.com/6-athiyayam/", "date_download": "2018-08-20T19:05:36Z", "digest": "sha1:IRLCQ7H3CBHMYNPFWQIYOOVUEQFYNIG5", "length": 13441, "nlines": 212, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "‘6 அத்தியாயம்’, ‘அந்த்தாலஜி’ வகை படம் அல்ல! | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n‘6 அத்தியாயம்’, ‘அந்த்தாலஜி’ வகை படம் அல்ல\n‘6 அத்தியாயம்’, ‘அந்த்தாலஜி’ வகை படம் அல்ல\n‘6 அத்தியாயம்’, ‘அந்த்தாலஜி’ வகை படம் அல்ல\nவித்தியாசமான முயற்சிகள் , பரிட்சித்துப் பார்க்கப்படுவது தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக நிகழும் ஒன்று. அப்படி ஒரு வித்தியாசமான முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.\nதொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் மீதி நான்கு அத்தியாயத்தையும் இயக்கியுள்ளார்கள்.\nஇயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, முக்கிய ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.\nசிம்மா, விஜய் வேலுக்குட்டி, மணி, லோகேஷ், விஜய் ஆன்ட்ரூஸ் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர்\nதாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.\nபடத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். விஜய் டிவி புகழ் ம.கா.பா. ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.\n‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜனின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.\n‘6 அத்தியாயம்’‘அந்த்தாலஜி’ வகை படம் அல்ல\nபெரிய பட்ஜட்டில் -6 அத்தியாயம் இயக்குனர்கள்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nகோலமாவு கோகிலா - விமர்சனம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://fetna.org/", "date_download": "2018-08-20T18:08:40Z", "digest": "sha1:TSKOQZRA2YEXEDHW4SWKGQY2KSDRBRJR", "length": 11249, "nlines": 176, "source_domain": "fetna.org", "title": "FeTNA – Federation of Tamil Sangams of North America", "raw_content": "\nஅனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். பேரவையின் 31-ஆவது தமிழ் விழா டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் மாநகரத்தில் இந்த ஆண்டு ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன.\nபேரவைத் தமிழ் விழாவின் இந்த ஆண்டு மையக்கருத்து “செந்தமிழ் இருக்கை செய்வோம், செம்மொழி சிறக்கச் செய்வோம்” என்பதாகும். மேலும் இந்த ஆண்டு ஒரு சிறப்பாக, நம் சமூகத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கினை போற்றிடவும், நம் சமூகத்தின் எதிர்காலமான நம் குழந்தைகளை கொண்டாடும் நோக்கிலும் “மரபு, மகளிர், மழலை” எனும் கருப்பொருளில் “பேரவைத் தமிழ் விழா 2018” நிகழ்வுகளை அமைக்க பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் விழாவின் கருப்பொருளுக்கு ஏற்ப, அன்னைத் தமிழின் வளர்ச்சிக்கும் தமிழர் தம் நல்வாழ்விற்கும் உழைத்திட்ட பெருமக்களை, நினைவுகூர்ந்து சிறப்பு செய்வது பேரவையின் வழமை. அந்த வகையில் இவ்வாண்டு அந்நிய மண்ணில் இனவெறிக்கு எதிராகப் போராடிய “இரும்பு மங்கை”\nதில்லையாடி வள்ளியம்மையின் 120-ஆம் பிறந்தாண்டு மற்றும் ஈழத்தந்தை செல்வாவின் 120-ஆம் பிறந்தாண்டு விழாவினையும், 2018 பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பிக்க இருப்பதை உங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், தி.மு.க கட்சியின் தலைவராகவும், முத்தமிழ் அறிஞராகவும் விளங்கிய கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் இன்று தனது 95வது அகவையில் இயற்கை எய்தினார். [...]\nதூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்\nபேரன்புடையீர் வணக்கம். தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம் தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர உற்பத்தி ஆலையானது செயல்பட்டுவருகின்றது. இவ்வாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால், தூத்துக்குடி மற்றும் அதன் [...]\nமாபெரும் மனிதநேயவாதியும், சிறந்த தமிழுணர்வாளரும், தாம்பா (Tampa, Florida, USA) தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், தமிழ் சிநேகம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான, உயர்திரு. ஜெய் தபராஜ் அய்யா அவர்கள் நேற்று (15 மே 2018) காலை 10:19 மணிக்கு [...]\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\nடெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவிற்கான ஏற்பாட்டு வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் விழாவில் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், அரசுத் துறை அதிகாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் என [...]\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்\nஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries) எனப்படுவது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் அமைந்துள்ள தொழிற்சாலை ஆகும். இங்கு செம்புக் கம்பி, தாமிரம், கந்தக அமிலம் பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமிழ்நாடு [...]\nகலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி\nதூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்\nதமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-20T18:04:14Z", "digest": "sha1:NQ7U5YPBIVS62WVJSW4BEMEVK6M67KPB", "length": 14609, "nlines": 174, "source_domain": "news7paper.com", "title": "மழை நீர் சேமிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - News7Paper", "raw_content": "\nமழை நீர் சேமிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nமத்தியஸ்த சபை உறுப்பினர் நியமனத்தில் மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் – மக்களவையில் அதிமுக…\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்காட்லாந்து தம்பதி: மூத்த தலைவருக்கு மரியாதை செலுத்த வந்ததாக…\nபேசும் படங்கள்: வெளுத்து வாங்கும் மழை; தவிக்கும் கேரளா\nவிருதே விருது தருதே… வருதே நினைவில் வருதே… கலைஞரை நினைவுகூரும் விவேக்\nகல்யாணம் பண்ணிட்டுதான் சேர்ந்து வாழணுமா என்ன… ‘பியார் பிரேமா காதல்’\nபியார் பிரேமா காதல்: கச்சிதமான காதல் படம்\nவில்லனாக நடிக்கும் சிம்பு – இந்து தமிழ் திசை\nஉங்கள் சாட் ஹேக் செய்யப்படலாம்: வாட்ஸ் ஆப்-க்கு செக் பாயின்ட்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nபில்லி சூன்யங்களில் ஏன் எலுமிச்சை பழம் பயன்படுத்துகிறார்கள்\nஆண்களின் இளநரைகளை மறைய செய்யும் வகை வகையான பீட்ரூட் ஹேர் கலரிங்..\nதோள்பட்டை வலியை எளிதில் குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் | Remedies for shoulder pain\nஆண்மை குறைவை குணமப்படுத்தும் இந்த சின்ன விதைகள் பற்றி தெரியுமா..\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் மழை நீர் சேமிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nமழை நீர் சேமிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nமழை நீர் சேகரிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2001-ம் ஆண்டு முதல் கட்டாய மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் தமிழக அரசு கொண்டு வந்து நடைமுறையில் உள்ளது. குறைந்துவரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஜெயலலிதா ஆட்சியில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.\nஇச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டிடங்களும் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆரம்பத்தில் கடுமையாகப் பின்பற்றப்பட்ட மழை நீர் வடிகால் நடைமுறை பின்னர் படிப்படியாக குறைந்தது. யாரும் அதைப் பின்பற்றவில்லை. வரும் 2020-ம் ஆண்டு சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறையும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைநீர் வடிகால் குறித்த பொதுநல வழக்கு ஒன்றை வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் தொடுத்துள்ளார்.\nஅவரது மனுவில், ”மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விதி உள்ளது, ஆனால் அண்மைக் காலங்களில் எந்த ஒரு கட்டிடத்திலும் மழை நீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தவில்லை, மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இந்த வழக்கில் மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nPrevious articleமத்தியஸ்த சபை உறுப்பினர் நியமனத்தில் மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் – மக்களவையில் அதிமுக கோரிக்கை\nமத்தியஸ்த சபை உறுப்பினர் நியமனத்தில் மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் – மக்களவையில் அதிமுக கோரிக்கை\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்காட்லாந்து தம்பதி: மூத்த தலைவருக்கு மரியாதை செலுத்த வந்ததாக பேட்டி\nபேசும் படங்கள்: வெளுத்து வாங்கும் மழை; தவிக்கும் கேரளா\nகாமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா | Sangeetha pays tribute...\nபெண்கள் மார்பகத்தை பற்றி அறியப்படாத 10 உண்மைகள் – வினா, விடைகள்\n“கருணாநிதியின் இழப்பை எண்ணி நீண்ட நாட்களுக்கு வருத்தப்படுவோம்” – த்ரிஷா\nஉங்களுக்கு எப்படி நயன் செட்டானார்: விக்கி வெளியிட்ட புகைப்படத்தால் சிங்கிள்ஸ் கடுப்பு | Singles...\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி: உதவிகள் செய்ய தயாராக...\nசேலம் – சென்னை எட்டு வழி பசுமைச் சாலை போன்ற பெரிய திட்டங்கள் நாட்டின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/reviews/azhakiyatheeye.html", "date_download": "2018-08-20T18:24:17Z", "digest": "sha1:R7UCGJN77VMYEKRGG5CK4GNO2VJGGCY5", "length": 21511, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அழகிய தீயே: சினிமா விமர்சனம்-சுரேஷ் | azhakiyatheeye: film review - Tamil Filmibeat", "raw_content": "\n» அழகிய தீயே: சினிமா விமர்சனம்-சுரேஷ்\nஅழகிய தீயே: சினிமா விமர்சனம்-சுரேஷ்\nகுத்து, அடிதடி, அருவா, என்று படத்தலைப்பிலேயே இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கும் படங்களும், ஒல்லி கதாநாயகன் பத்து,பதினைந்து பேரைத் தூக்கிப் போட்டு பந்தர்டும் நம்பகத்தன்மை அறவே இல்லாத காட்சிகளும், கதாநாயகியின் மார்பு, தொப்புள்ஆகியவைகளையே உண்டியலாக்கி குலுக்கி, ரசிகர்களிடம் பிச்சை கேட்கும் இயக்குநர்களும் .... என்று தமிழ் சினிமாவே மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் மெல்லிய உணர்வுகளால் எழுதப்பட்ட ஒரு நல்ல கவிதை போல் வந்திருக்கும்திரைப்படம் அழகிய தீயே\nவிக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் அநேகமாக அனைத்து இயக்குநர்களும், உதவிஇயக்குநர்களும் இப்படித்தான் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல ஆரம்பித்திருப்பார்கள். நாலு பசங்க இருக்காங்க சார், தடால்னுஅவங்க வாழ்க்கைல குறுக்க வரா ஒரு பொண்ணு.... இப்படி எடுத்த சில படங்கள் குருட்டு அதிர்ஷ்டத்தால் ஓடிவிட, பல படங்கள்மயிலை பார்த்து ஓடின வான்கோழி போல தோற்றுப் போயின.\nஇந்தப் படத்தின் இயக்குநர் ராதாமோகனும் இப்படியே கதையை ஆரம்பித்திருந்தாலும், கதையை சொல்லியிருக்கிறவித்தியாசத்திலும் காட்சியமைப்புகளிலும் தனித்து நிற்கிறார். பல ஆண்டுகளாக மனதில் ஊறப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாககாட்சிகளை யோசித்து வைத்திருந்தால்தான் இப்படிப்பட்ட படத்தை எடுக்க முடியும். ஏனெனில் இயக்குநர் படத்தை எந்தவொருஇடத்திலும் தடங்கலின்றி, குழப்பமில்லாமல் எடுத்துச் சென்றிருப்பதே அதற்குச் சான்று.\nசுருக்கமான கதைதான். தன் பணக்கார (வில்ல) அப்பா ஏற்பாடு செய்யும் திருமணத்தை தடுக்க சந்திரனின்(பிரசன்னா) உதவியைநாடுகிறாள் நந்தினி(நவ்யா நாயர்). சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் அவன் தன் படைப்பாளியின் மூளையை பயன்படுத்தி,தானும் அவளும் 5 வருடங்களாக காதலிப்பதாக அவளை மணக்கவிருக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையிடம் (பிரகாஷ்ராஜ்) மிகஉருக்கமாக சொல்கிறான்.\nஅவன் சொன்ன முறையில் இதை தெய்வீக காதல் என்று நம்புகிற பிரகாஷ்ராஜ் இருவரையும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் பதிவுத்திருமணம் செய்ய வைத்து அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் தங்க வைத்து விட்டு அமெரிக்கா சென்று விடுகிறார்.\nஇருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு எலியும் பூனையுமாக இருப்பதும் பிறகு மெல்ல நண்பர்களாவதும், எப்போதுஅவர்களுக்குள் காதல் நுழைந்தது என்பதே தெரியாமல், படம் முடிய ஒரு விநாடி இருக்கும் போது தம் காதலை வெளிப்படுத்திக்கொள்வதும்..... சுபம்.\nசில கிளிஷேவான விஷயங்களை தவிர்த்திருக்கலாம். நான்கு இளைஞர்கள் என்கிற போது ஏற்னெவே எப்படி முந்தைய படங்களில்காட்டப்பட்டதோ அதே மாதிரியான பாத்திர அமைப்புகள். கதாநாயகன் மாதிரியான ஒருத்தன் (பிரசன்னா), அவனின் நண்பன்மாதிரியான பாதி ஹீரோ (ஜெய்வர்மா - பழைய நடிகர் ஆனந்தனின் மகன்), பார்க்கும் பெண்களையெல்லாம் சளைக்காமல்காதலிக்கும் வித்தியாசமாக குணாதியசத்தை உடைய ஒருவன் (கூத்துப் பட்டறை நடிகர்), காமெடிக்கென ஒருவன் (மாஜிக் லேண்டன்குழுவைச் சேர்ந்தவர்), அதே போல் பணக்கார மற்றும் வில்ல அப்பா. அமெரிக்க மாப்பிள்ளை. (வழக்கமாக கிளைமாக்சில்வருபவர் இதில் அம்மாதிரி செய்யாதது ஒரு ஆறுதல்)\nசினிமாவில் சேர்ந்து வெற்றி பெற துடிக்கும் இளைஞர்கள். அவர்களிடம் வாடகை வாங்க பாடுபடும் ஆனால் அவர்களுக்குஉதவும் வீட்டுக்காரர். ஹீரோ தன் கஷ்டகாலத்தில் விற்காத சைக்கிளை ஹீரோயின் பரீட்சைக்கு பணம் கட்ட விற்று விடும்காரியம். லோ-பட்ஜெட்டினால் சில இடங்களிலேயே மாற்றி மாற்றி வருகிற காட்சியமைப்புகள். இப்படி சில. ஆனால்சுவாரசியமான திரைக்கதையினால் இந்தக் குறையெல்லாம் மறைந்து போகிறது.\nபிரசன்னா அந்த அப்பாவி உதவி இயக்குநர் பாத்திரத்திற்கு பாந்தமாக பொருந்துகிறார். கதை மிகவும் பலமாக இருக்கும்பட்சத்தில் இது போல பிரபலமாகாதவைரையே தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவர் அந்த கதாபாத்திரமாக நம் கண்முன்நிற்பார். பிரகாஷ்ராஜிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் போதெல்லாம் நன்றாக செய்திருக்கிறார். நாயகியிடம், நாம் நண்பர்களாகஇருக்கலாம் என்று சொல்லும் காட்சியமைப்பில் சிறப்பாக செய்திருக்கிறார்.\nபிரகாஷ்ராஜ் - இந்த அபார மனிதருக்கு சரியான தீனி போடும் பாத்திரங்கள் இன்னும் அமையவில்லை என்றுதான்தோன்றுகிறது. பிரசன்னாவை கேவலமாக பார்க்கும் அந்த முதல் காட்சியில் வெளிப்படுத்தும் சில முகக்குறிப்புகள் அவர்திறமைக்கு சான்று. அதே போல் பிரசன்னா சொல்லும் பொய்யை நம்பி அனுபவித்து கேட்பது சிறப்பான நடிப்பு.\nநவ்யா நாயர் - வழக்கமாக தொப்புளாட்சியாக வரும் நாயகிகளுக்கு மத்தியில் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார். இவர்பிரசன்னாவை காதலிப்பதாக எந்தவொரு காட்சியிலும் குறிப்பால் உணர்த்தாமல் கிளைமாக்சின் போது அவரின் மீது சாய்ந்துகொள்வது அபத்தமாய் இருந்தாலும் கவிதைத்தனமாய் இருக்கிறது.\nவிஜய்யின் வசனங்கள் மிக யதார்த்தமான நகைச்சுவையுடன் இருக்கிறது. சில உதாரணங்கள்: \"ஏம்ப்பா, புரொடக்ஷன் மேனஜர், அந்தடாக்டர் வேஷத்துக்கு கமலாம்மாவை கூட்டிகினு வரச் சொன்னேனே, போய்ப் பாத்தியா\n\"ஒண்ணுக்குப் பத்து தரம் போனேன்.............\"\n\"நீ ஒண்ணுக்குப் பத்து தரம் போனியன்னா அது டயாபடீஸா இருக்கும். போய் அந்தம்மாவ வரச் சொல்லு;\"\n\"ஏம்ப்பா உன் காதலை அவ கிட்ட சொல்ல மாட்டேன்ற. சினிமால காதல சொல்லாத முரளி கூட இப்பல்லாம் தன் காதலைடக்குன்னு சொல்லிடறார்.\"\n\"500 ரூபா கொடுத்தா செல்போன் கொடுத்தாலும் கொடுத்தடறாங்க... இவன்க தொல்ல தாங்கல\"\nரமேஷ் விநாயகத்தின் பாடல் இசைகளில் ரோஜா ரஹ்மானின் Freshness தொந்கிறது. பின்னணி இசையும்மோசமில்லை. அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும். பல லாஜிக் ஒட்டைகள் இருந்தாலும் சாமர்த்தியமான வசனங்களின்மூலம் மெழுகி விடுகிறார்கள். பனிப்புகையில் பார்த்த தன் கனவுக் காதலியை, நிஜத்தில் கொசுமருந்துப் புகையின்நடுவில் பார்க்கும் காட்சிகளில் இயக்குநரின் திறமை தெரிகிறது.\nஆபாசப் படங்கள் என்று சொல்லப்படுகின்றவற்றை தியேட்டரில் மெனக்கெட்டுப் பார்த்துவிட்டு குய்யோமுறையோ என்று அலறிக் கொண்டும், இந்த மாதிரியான நல்ல படங்களை திருட்டி வி..சி.டியிலோ (படத்தில்இதைப்பற்றியும் ஒரு கமெண்ட் வருகிறது) தொலைக்காட்சியில் பண்டிகை நேரங்களில் பார்த்துக் கொள்ளலாம்என்று இருப்பதும் இன்னும் பல நல்ல சினிமாக்கள் வருவதை நாசமாக்கும்.\nஅழகிய தீயே: மூச்சுத்திணறும் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு ஆக்சிஜன் சிலிண்டர்\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா\nப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....\nகிராபிக்ஸ் வேலையில் சிக்கல்.. அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகிறது 2.0\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/gopika-5.html", "date_download": "2018-08-20T18:24:15Z", "digest": "sha1:TJVGZJDLIIYDFHA6WD5DLAOMJTGSNAOG", "length": 22554, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குழாயடி குடுமி பிடி! சமீபத்தில் சென்னை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த குடுமி பிடி சண்டை தான் கோலிவுட்டில் படு சூடாகபேசப்பட்டு வருகிறது. கோபிகாவும், சமிக்ஷாவும் தான் அந்த குடுமி பிடிக்கு சொந்தக்காரர்கள். சாதாரண கூந்தலால் வந்த கோஷ்டிச்சண்டை இது.பிரபல அண்ணாச்சி கடை விளம்பரத்தில் நடிக்க கோபிகாவையும், சமிக்ஷாவையும் புக் செய்திருந்தனர்.சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டிங் தளத்தில் கோபிகாவும், சமிக்ஷாவும் ரெடியாக இருந்தனர். பாட்டுக்கேற்ப இருவரும் ஆடினர்.அப்போது சமிக்ஷா போட்டிருந்த சவுரி கொண்டை முடி கழன்று கீழே விழுந்தது. இதைப் பார்த்ததும் கோபிகா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இதனால் சமிக்ஷா கடுப்பாகி விட்டார். என்னைப்பார்த்தா சிரிக்கிறாய் என்று கோபமாக கோபிகாவிடம் சண்டை போட்டுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடையஜடையை பிடித்து இழுத்துள்ளார். கோபிகாாதன் கேரளா பாப்பாவாச்சே! அவருக்கு ஒரிஜினல் கூந்தல் இருப்பதை அறியாத சமிக்ஷா, ஜடையைபிடித்து வேகமாக இழுக்கவே, வலி தாங்க முடியாமல் அலறியபடி கோபிகா கீழே விழுந்து விட்டாராம்.அழுதபடி சமிக்ஷாவுடன் சண்டைக்குப் போயுள்ளார் கோபிகா. ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு இருவரையும்விலக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் விளம்பரப் பட நிறுவனத்தினருக்கு.அப்புறம் எப்படி ஷூட்டிங்கை தொடருவது! ஒத்திவைத்து விட்டு தனித் தனியாக எடுத்து சேர்க்க முடிவுசெய்தனராம். சவுரி முடி சண்டையை விடுங்க. தமிழில் மீண்டும் கோபிகா மார்க்கெட் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளதாம். எல்லாம் எம் மகன் வெற்றிகரமாக ஓடுவதால்தான்.கணிசமான வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதால், சம்பள விஷயத்தில் கறார் செய்யாமல் புக் ஆகி வருகிறாராம்கோபிகா. அப்படியே அடுத்தவரைப் பார்த்து கேலியாக சிரிக்காமலும் இருக்க பழகிக்கோங்க சேச்சி! | Gopika and Samiksha on clash over their hair! - Tamil Filmibeat", "raw_content": "\n» குழாயடி குடுமி பிடி சமீபத்தில் சென்னை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த குடுமி பிடி சண்டை தான் கோலிவுட்டில் படு சூடாகபேசப்பட்டு வருகிறது. கோபிகாவும், சமிக்ஷாவும் தான் அந்த குடுமி பிடிக்கு சொந்தக்காரர்கள். சாதாரண கூந்தலால் வந்த கோஷ்டிச்சண்டை இது.பிரபல அண்ணாச்சி கடை விளம்பரத்தில் நடிக்க கோபிகாவையும், சமிக்ஷாவையும் புக் செய்திருந்தனர்.சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டிங் தளத்தில் கோபிகாவும், சமிக்ஷாவும் ரெடியாக இருந்தனர். பாட்டுக்கேற்ப இருவரும் ஆடினர்.அப்போது சமிக்ஷா போட்டிருந்த சவுரி கொண்டை முடி கழன்று கீழே விழுந்தது. இதைப் பார்த்ததும் கோபிகா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இதனால் சமிக்ஷா கடுப்பாகி விட்டார். என்னைப்பார்த்தா சிரிக்கிறாய் என்று கோபமாக கோபிகாவிடம் சண்டை போட்டுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடையஜடையை பிடித்து இழுத்துள்ளார். கோபிகாாதன் கேரளா பாப்பாவாச்சே சமீபத்தில் சென்னை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த குடுமி பிடி சண்டை தான் கோலிவுட்டில் படு சூடாகபேசப்பட்டு வருகிறது. கோபிகாவும், சமிக்ஷாவும் தான் அந்த குடுமி பிடிக்கு சொந்தக்காரர்கள். சாதாரண கூந்தலால் வந்த கோஷ்டிச்சண்டை இது.பிரபல அண்ணாச்சி கடை விளம்பரத்தில் நடிக்க கோபிகாவையும், சமிக்ஷாவையும் புக் செய்திருந்தனர்.சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டிங் தளத்தில் கோபிகாவும், சமிக்ஷாவும் ரெடியாக இருந்தனர். பாட்டுக்கேற்ப இருவரும் ஆடினர்.அப்போது சமிக்ஷா போட்டிருந்த சவுரி கொண்டை முடி கழன்று கீழே விழுந்தது. இதைப் பார்த்ததும் கோபிகா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இதனால் சமிக்ஷா கடுப்பாகி விட்டார். என்னைப்பார்த்தா சிரிக்கிறாய் என்று கோபமாக கோபிகாவிடம் சண்டை போட்டுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடையஜடையை பிடித்து இழுத்துள்ளார். கோபிகாாதன் கேரளா பாப்பாவாச்சே அவருக்கு ஒரிஜினல் கூந்தல் இருப்பதை அறியாத சமிக்ஷா, ஜடையைபிடித்து வேகமாக இழுக்கவே, வலி தாங்க முடியாமல் அலறியபடி கோபிகா கீழே விழுந்து விட்டாராம்.அழுதபடி சமிக்ஷாவுடன் சண்டைக்குப் போயுள்ளார் கோபிகா. ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு இருவரையும்விலக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் விளம்பரப் பட நிறுவனத்தினருக்கு.அப்புறம் எப்படி ஷூட்டிங்கை தொடருவது அவருக்கு ஒரிஜினல் கூந்தல் இருப்பதை அறியாத சமிக்ஷா, ஜடையைபிடித்து வேகமாக இழுக்கவே, வலி தாங்க முடியாமல் அலறியபடி கோபிகா கீழே விழுந்து விட்டாராம்.அழுதபடி சமிக்ஷாவுடன் சண்டைக்குப் போயுள்ளார் கோபிகா. ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு இருவரையும்விலக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் விளம்பரப் பட நிறுவனத்தினருக்கு.அப்புறம் எப்படி ஷூட்டிங்கை தொடருவது ஒத்திவைத்து விட்டு தனித் தனியாக எடுத்து சேர்க்க முடிவுசெய்தனராம். சவுரி முடி சண்டையை விடுங்க. தமிழில் மீண்டும் கோபிகா மார்க்கெட் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளதாம். எல்லாம் எம் மகன் வெற்றிகரமாக ஓடுவதால்தான்.கணிசமான வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதால், சம்பள விஷயத்தில் கறார் செய்யாமல் புக் ஆகி வருகிறாராம்கோபிகா. அப்படியே அடுத்தவரைப் பார்த்து கேலியாக சிரிக்காமலும் இருக்க பழகிக்கோங்க சேச்சி\n சமீபத்தில் சென்னை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த குடுமி பிடி சண்டை தான் கோலிவுட்டில் படு சூடாகபேசப்பட்டு வருகிறது. கோபிகாவும், சமிக்ஷாவும் தான் அந்த குடுமி பிடிக்கு சொந்தக்காரர்கள். சாதாரண கூந்தலால் வந்த கோஷ்டிச்சண்டை இது.பிரபல அண்ணாச்சி கடை விளம்பரத்தில் நடிக்க கோபிகாவையும், சமிக்ஷாவையும் புக் செய்திருந்தனர்.சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஷூட்டிங் தளத்தில் கோபிகாவும், சமிக்ஷாவும் ரெடியாக இருந்தனர். பாட்டுக்கேற்ப இருவரும் ஆடினர்.அப்போது சமிக்ஷா போட்டிருந்த சவுரி கொண்டை முடி கழன்று கீழே விழுந்தது. இதைப் பார்த்ததும் கோபிகா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இதனால் சமிக்ஷா கடுப்பாகி விட்டார். என்னைப்பார்த்தா சிரிக்கிறாய் என்று கோபமாக கோபிகாவிடம் சண்டை போட்டுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடையஜடையை பிடித்து இழுத்துள்ளார். கோபிகாாதன் கேரளா பாப்பாவாச்சே அவருக்கு ஒரிஜினல் கூந்தல் இருப்பதை அறியாத சமிக்ஷா, ஜடையைபிடித்து வேகமாக இழுக்கவே, வலி தாங்க முடியாமல் அலறியபடி கோபிகா கீழே விழுந்து விட்டாராம்.அழுதபடி சமிக்ஷாவுடன் சண்டைக்குப் போயுள்ளார் கோபிகா. ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு இருவரையும்விலக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் விளம்பரப் பட நிறுவனத்தினருக்கு.அப்புறம் எப்படி ஷூட்டிங்கை தொடருவது அவருக்கு ஒரிஜினல் கூந்தல் இருப்பதை அறியாத சமிக்ஷா, ஜடையைபிடித்து வேகமாக இழுக்கவே, வலி தாங்க முடியாமல் அலறியபடி கோபிகா கீழே விழுந்து விட்டாராம்.அழுதபடி சமிக்ஷாவுடன் சண்டைக்குப் போயுள்ளார் கோபிகா. ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு இருவரையும்விலக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் விளம்பரப் பட நிறுவனத்தினருக்கு.அப்புறம் எப்படி ஷூட்டிங்கை தொடருவது ஒத்திவைத்து விட்டு தனித் தனியாக எடுத்து சேர்க்க முடிவுசெய்தனராம். சவுரி முடி சண்டையை விடுங்க. தமிழில் மீண்டும் கோபிகா மார்க்கெட் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளதாம். எல்லாம் எம் மகன் வெற்றிகரமாக ஓடுவதால்தான்.கணிசமான வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதால், சம்பள விஷயத்தில் கறார் செய்யாமல் புக் ஆகி வருகிறாராம்கோபிகா. அப்படியே அடுத்தவரைப் பார்த்து கேலியாக சிரிக்காமலும் இருக்க பழகிக்கோங்க சேச்சி\nசமீபத்தில் சென்னை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த குடுமி பிடி சண்டை தான் கோலிவுட்டில் படு சூடாகபேசப்பட்டு வருகிறது.\nகோபிகாவும், சமிக்ஷாவும் தான் அந்த குடுமி பிடிக்கு சொந்தக்காரர்கள். சாதாரண கூந்தலால் வந்த கோஷ்டிச்சண்டை இது.\nபிரபல அண்ணாச்சி கடை விளம்பரத்தில் நடிக்க கோபிகாவையும், சமிக்ஷாவையும் புக் செய்திருந்தனர்.சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது.\nஷூட்டிங் தளத்தில் கோபிகாவும், சமிக்ஷாவும் ரெடியாக இருந்தனர். பாட்டுக்கேற்ப இருவரும் ஆடினர்.அப்போது சமிக்ஷா போட்டிருந்த சவுரி கொண்டை முடி கழன்று கீழே விழுந்தது.\nஇதைப் பார்த்ததும் கோபிகா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இதனால் சமிக்ஷா கடுப்பாகி விட்டார். என்னைப்பார்த்தா சிரிக்கிறாய் என்று கோபமாக கோபிகாவிடம் சண்டை போட்டுள்ளார். அத்தோடு நிற்காமல் அவருடையஜடையை பிடித்து இழுத்துள்ளார்.\n அவருக்கு ஒரிஜினல் கூந்தல் இருப்பதை அறியாத சமிக்ஷா, ஜடையைபிடித்து வேகமாக இழுக்கவே, வலி தாங்க முடியாமல் அலறியபடி கோபிகா கீழே விழுந்து விட்டாராம்.\nஅழுதபடி சமிக்ஷாவுடன் சண்டைக்குப் போயுள்ளார் கோபிகா. ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு இருவரையும்விலக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம் விளம்பரப் பட நிறுவனத்தினருக்கு.\nஅப்புறம் எப்படி ஷூட்டிங்கை தொடருவது ஒத்திவைத்து விட்டு தனித் தனியாக எடுத்து சேர்க்க முடிவுசெய்தனராம். சவுரி முடி சண்டையை விடுங்க. தமிழில் மீண்டும் கோபிகா மார்க்கெட் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளதாம். எல்லாம் எம் மகன் வெற்றிகரமாக ஓடுவதால்தான்.\nகணிசமான வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதால், சம்பள விஷயத்தில் கறார் செய்யாமல் புக் ஆகி வருகிறாராம்கோபிகா.\nஅப்படியே அடுத்தவரைப் பார்த்து கேலியாக சிரிக்காமலும் இருக்க பழகிக்கோங்க சேச்சி\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா\nகிராபிக்ஸ் வேலையில் சிக்கல்.. அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகிறது 2.0\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamei.com/2019-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%87-%E0%AE%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-20T19:15:05Z", "digest": "sha1:6RAY2HN6I2DYNDMFSTGPPHO5CQSGGVJH", "length": 7938, "nlines": 73, "source_domain": "www.dinamei.com", "title": "2019 ஜெ.இ.இ. தோ்வுக்கான தேதி, விண்ணப்ப கட்டண விவரம் - தினமெய்", "raw_content": "\n2019 ஜெ.இ.இ. தோ்வுக்கான தேதி, விண்ணப்ப கட்டண விவரம்\n2019ம் ஆண்டுக்கான ஜெ.இ.இ. தோ்வுக்கான தேதி, தோ்வு கட்டணம், கலந்தாய்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.\nசி.பி.எஸ்.இ. சாா்பில் நடத்தப்பட்ட நீட் தோ்வில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடா்ந்து பல்வேறு சா்ச்சைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் கடந்த வாரம் செய்தியாளா்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா். அதன்படி ஜெ.இ.இ., நீட் தோ்வு ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் என்றும், அந்த தோ்வை தேசிய தோ்வுகள முகமை ஆணையம் நடத்தும் என்று அறிவித்தாா்.\nஅதன்படி வருகிற கல்வி ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஜெஇஇ தோ்வு நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தோ்வில் 75 விழுக்காடுக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்தவா்கள் 65% மதிப்பெண் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\n2019 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜெஇஇ மெயின் தோ்வுக்கு செப்டம்பா் 1 முதல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜனவரி 6 – 20 தேதிக்குள் நடைபெறும் தோ்வின் முடிவு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று ஏப்ரல் மாதம் (7 – 21) நடைபெறும் தோ்வுக்கு பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\n← நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட்\nஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ\nநெக்ஸ்ட்: மருத்துவப் படிப்புக்கு புதிய நுழைவுத் தேர்வு\nநெல்லை: தமிழ்வழியில் படித்த துப்புரவு தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை\nசிபிஎஸ்இ நெட் தேர்வு முடிவு வெளியீடு\nகோலியின் சிறப்பான சதத்தால் வெற்றியை நோக்கி இந்தியா – இங்கிலாந்தை வீழ்த்தி சாதிக்குமா\nநாட்டிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு இந்திஆ 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டி20\n‘தல’ தோனி, அசாருதின் சாதனையை அசால்ட்டா உடைச்ச ‘கில்லி’ கேப்டன் கோலி\nகேலி செஞ்ச இங்கிலாந்துக்கு சதம் அடித்து சரியான ‘நோஸ்கட்’ தந்த ‘கிங்’ கோலி….\nவிஜய் படத்தை இயக்குவது எனது கனவு: இயக்குனர் பொன்ராம்\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2013/06/14-05-2013.html", "date_download": "2018-08-20T18:35:49Z", "digest": "sha1:M6AB5E3LOP4ZFAN2RKFST7ZD2IRNGDMP", "length": 17399, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "அந்தரங்கம் இனி இரகசியமில்லை - தினமணி தலையங்கம் - 14-05-2013 ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஅந்தரங்கம் இனி இரகசியமில்லை - தினமணி தலையங்கம் - 14-05-2013\nஉலகமே அதிர்ச்சியில் சமைந்திருக்கிறது. 29 வயதேயான எட்வர்ட் ஸ்நோடென்னை, அமெரிக்க அரசின் ஒற்றாடலை உலகத்துக்குத் தெரியவைத்த \"நாயகன்' என்று போற்றுவதா இல்லை தனது அரசின் நம்பிக்கையைத் தகர்த்த \"துரோகி' என்று தூற்றுவதா என்பது அவரவர் பார்வையைப் பொருத்த விஷயம். அமெரிக்க அரசின் ஒற்று நிறுவனமான சி.ஐ.ஏ.வில் மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த ஸ்நோடென், கூகுள், மைக்ரோ சாப்ட், யாகூ, ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதள நிறுவனங்களிலிருந்தும், வேறு பல வழிகளிலும் உலகளாவிய அளவில் தனிநபர்களாலும், அரசுகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் அமெரிக்க அரசு, அவர்களுக்குத் தெரியாமல் ஒற்றாடுகிறது என்கிற ரகசியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.\nதனது மனசாட்சிக்கு விரோதமான செயலாக அது இருப்பதாலும், தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயலாக அது இருப்பதாலும், அமெரிக்க அரசின் இந்தத் தவறான செயலைத்தான் உலகறியச் செய்வதாகக் கூறியிருக்கிறார் அவர். அமெரிக்க உளவு அமைப்பின் பெயருக்குக் களங்கமும், தேசவிரோதமுமான இந்தச் செயலுக்காக, ஸ்நோடென் கைது செய்யப்பட்டு தேசத் துரோகக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள்.\nஇன்னொரு புறம், தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுவதை எதிர்த்துக் குரலெழுப்பி இருக்கும் ஸ்நோடெனின் செயல் பாராட்டுக்குரியது என்றும், அமெரிக்காவின் ஆன்மாவாக இருக்கும் தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கத் துணிந்த ஸ்நோடென் தண்டனைக்குரியவர் அல்ல என்றும் லட்சக்கணக்கான மக்கள் உரிமை ஆர்வலர்களும், இணையதளப் பயனாளிகளும் அமெரிக்க அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள்.\nஇதற்கிடையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். \"\"அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்பு வெளிநாட்டவர்களைத்தான் உளவு பார்த்ததே தவிர, எந்தவொரு அமெரிக்கரின் தனிமனிதச் சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தவும் இல்லை, அமெரிக்க சட்டதிட்டங்களை மீறவும் இல்லை. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பையும், தேச நலனையும் கருதிச் செய்யப்பட்டதுதான் இந்த இணையதளக் கருத்துப் பரிமாற்றங்களைக் கண்காணித்த செயல்'' என்பது அதிபர் ஒபாமாவின் விளக்கம்.\nஅமெரிக்காவின் கிரிமினல் செய்கையை உலகுக்கு அம்பலப்படுத்துவதற்காகத்தான் இப்போது ஹாங்காங்கில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் எட்வர்ட் ஸ்நோடன். சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் ஸ்நோடென் தஞ்சம் அடைந்திருப்பதிலிருந்து, அவரது செய்கைகளுக்கு சீனாவின் ஆதரவு இருக்கக்கூடுமோ என்கிற சந்தேகம் எழுகிறது.\nஅமெரிக்க உளவு நிறுவனத்தின் இணையதள வேவு பார்க்கும் முயற்சியில், சீனா, ரஷியா போன்ற நாடுகளைவிட அதிகமாக ஒற்று நடத்தப்பட்ட நாடு இந்தியா என்பதுதான் அதிர்ச்சியான தகவல். வெரிசான், ஏ.டி அன்ட் டி போன்ற சர்வதேசத் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், யாகூ, பேஸ்புக், ட்விட்டர் போன்ற தேடுதள இணையங்களும் அமெரிக்க நிறுவனங்களாக இருப்பதால் உலகளாவிய அளவில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்துமே அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்கின்றன என்பது அதிர்ச்சியை அதிகரிக்கிறது.\nஇது தெரிந்துதான் சீனா, தனக்கென்று \"பைடூ' என்கிற இணையத்தைத் தொடங்கி இருக்கிறது. ஒருவேளை, அமெரிக்கா இதுபோலத் தகவல்களை ரகசியமாக ஒற்று நடத்துவது தெரிந்ததால்தான் சீன அரசு \"பைடூ'வை அறிமுகப்படுத்தியதோ என்றுகூடச் சந்தேகமாக இருக்கிறது. ஸ்நோடென் சீன ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங்கில் தஞ்சமடைந்திருப்பது, இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.\nஅமெரிக்கா தனது நாட்டின் பாதுகாப்புக்காகவும், தனது தேசிய நலனுக்காகவும் உலகளாவிய அளவில் இணையதளத் தகவல்களை ஒற்று நடத்தியது சரியா, தவறா என்று கேட்டால், அமெரிக்காவின் பார்வையில் சரி, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பார்வையில் தவறு என்று சொல்வதைத்தவிர வேறு வழியில்லை. அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்புக்கு அளிக்கப்பட்ட சில அதிகாரங்களில் இத்தகைய தொலைபேசி, இணையதளங்களை ஊடுருவிப் பார்க்கும் அதிகாரம் இருப்பதை மறுப்பதற்கில்லை.\nஇன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு முகத்தை நாம் பார்க்கத் தவறுகிறோம். கைப்பேசி வைத்திருக்கும் அனைவரின் நடமாட்டமும் கண்காணிப்புக்கு உட்பட்டது. அதிலும் குறிப்பாக, தனியார் செல்பேசி நிறுவனங்கள் யாருடைய உரையாடலையும் ஒட்டுக்கேட்க முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவு செய்யும் தகவல்கள் அடுத்த சில நொடிகளில் உலகளாவிய அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்ட் வைத்திருந்தால், அந்த நபரைப் பற்றிய அத்தனை தகவல்களும் எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கையூட்டின் உதவியால் பெற முடியும் என்பது வேதனையான உண்மை.\nகணவன் மனைவியையும், மனைவி கணவனையும் ஒட்டுக் கேட்கவும், ஒற்றர்கள் மூலம் வேவு பார்க்கவும் தொடங்கிவிட்ட நிலையில், அமெரிக்காவின் செயல் ஆச்சரியப்படுத்தவில்லை.\nமாறாக, சீனாவைப்போல நாம் விழிப்புடன் இல்லையே என்று வருத்தப்படத் தோன்றுகிறது.\nதனிமனித உரிமை பற்றிப் பேசும் தகுதியை நம்மிடமிருந்து விஞ்ஞானமும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பறித்துவிட்டன\nநன்றி :- தினமணி தலையங்கம், 14-06-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/sherin-n5.html", "date_download": "2018-08-20T18:26:50Z", "digest": "sha1:IUDTJC74JHTKKZ75NW2E5RS55JLWXQ7F", "length": 10711, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Sherin gets chances again - Tamil Filmibeat", "raw_content": "\nகாதல், ரகசிய நிச்சயதார்த்தம், தாயை விட்டுப் பிரிந்து, காதலர் வீட்டில் வாசம், ஆக்ஸிடென்ட் என பல்வேறுபரபரப்புகளால் நொந்து போயிருந்த ஷெரீனுக்கு மீண்டும் நல்ல காலம் பிறந்திருக்கிறது.\nகாதலர் ரோகனுடன் தனக்குத் திருமணமாகிவிட்டதாக வந்த தகவல்களால் டென்சனில் இருந்த ஷெரீன்சென்னையிலேயே டேரா போட்டு, காதலர் சகிதமாக பேட்டிகள் தந்தார்.\nநாங்கள் கல்யாணம் பண்ணிக்கப் போவது உண்மை, ஆனால், இப்போது இல்லை. எனக்குகல்யாணமாகிவிட்டதாக புரளி கிளப்புவது என் அம்மா தான்.\nஅவரை நம்பாதீர்கள் என்று குண்டு போட்டார்.\nஅத்தோடு சினிமா தயாரிப்பு நிறுவனங்களிலும் ஏறி, இறங்கி சான்ஸ் கேட்டு வருகிறார். கூடவே ரோகனையும்அழைத்து வரும் ஷெரீன் அவருக்கும் சேர்த்து சான்ஸ் கேட்டார்.\nஆனால், ஆண் துணையுடன் வந்ததால் பலதயாரிப்பு பார்ட்டிகள் ஷெரீனை கண்டுகொள்ள மறுத்துவிட்டன.\nஇதையடுத்து காதலரை கழற்றிவிட்டுவிட்டு தனியே போய் தயாரிப்பாளர்களை சந்திக்கும் வேலையில்இறங்கியுள்ளார் ஷெரீன்.\nஇதற்கு பலனும் கிடைத்துள்ளது. புகழ் என்ற புதிய படத்தில் ஹீரோயினாக புக்ஆகியிருக்கிறார்.\nஅத்தோடு காதல் திருடா என்ற படத்திலும் ஹீரோயினாக்கப்பட்டுளளார்.\nஇவருக்கு ஜோடி குணால். (என்னமாயமோ தெரியவில்லை, படங்கள் ஓடுதோ இல்லையோ குணாலுக்கு வருடத்துக்கு 2 படமாவதுகிடைத்துவிடுகிறது)\nவழக்கமாக கவர்ச்சியைக் கொட்டும் காரெக்டர்கள் தான். கையில் சிகரெட்டோடும் வாயில் புகையோடும் வாய்ப்புகொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கும் ஷெரீனின் சான்ஸ் வேட்டைதொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா\nமும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா\nமஹத் பட்டப் பெயரை பப்ளிக்காக போட்டுடைத்த பூபூ\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23112932/1004346/Dog-Rescue-By-Fire-Safety-Staffs.vpf", "date_download": "2018-08-20T18:46:58Z", "digest": "sha1:4BUDIINNX34OAFXR3U2XBEKFN2UHEKAW", "length": 9454, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "3 நாட்களாக கிணற்றில் தவித்து வந்த நாய் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3 நாட்களாக கிணற்றில் தவித்து வந்த நாய் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்\nதிருவள்ளூர் மாவட்டம் காயலர்மேடு கிராமத்தில், கிணற்றில் சிக்கி மூன்று நாட்களாக தவித்து வந்த நாயை, தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர்\nதிருவள்ளூர் மாவட்டம் காயலர்மேடு கிராமத்தில், கிணற்றில் சிக்கி மூன்று நாட்களாக தவித்து வந்த நாயை, தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர். மூன்று நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த நாய், கிணற்றை விட்டு வெளியே வந்த‌தும் ஓடிச்சென்று தண்ணீர் குடித்த‌ காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nகேரளா வெள்ளம் உயிரிழப்பு 357 ஆக உயர்வு: முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nகாவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது\nசென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகோயிலில் தீ மிதித்த போது தவறி விழுந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை - வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் நேற்று தீ மிதித்த இருவர் கால்தவறி தீயில் விழுந்து காயமடைந்தனர்.\nஉபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவான கலைப்பூங்கா...\nஉபயோகமற்ற பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை வாபஸ்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வாபஸ் பெற்றுள்ளது.\nஅப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.\nபிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்\nசென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்\nமனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்\nகர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2018/08/11/whatsapp/", "date_download": "2018-08-20T19:09:55Z", "digest": "sha1:HVJK7HTBSWK547XTJXDJBQ4KA4PHIOQS", "length": 11429, "nlines": 172, "source_domain": "yourkattankudy.com", "title": "வட்ஸ் ஆப் வழியாக உயிர் குடிக்கும் மோமோ விளையாட்டு! | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nவட்ஸ் ஆப் வழியாக உயிர் குடிக்கும் மோமோ விளையாட்டு\nலண்டன்: ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அபாயம் செல்போன் வடிவில் நம்மை துளைத்தெடுக்கிறது. முன்பு ப்ளூவேல். இப்போது மோமோ. ப்ளூவேல் போலத்தான் இதுவும் ஒரு விளையாட்டு. ஜப்பான் நாட்டில் உருவாக்கியதாக கூறப்படும் ‘மோமோ சேலஞ்ச்’ எனப்படும் ஒன்லைன் விளையாட்டு. ப்ளூவேல் என்பது நாம் பயன் படுத்தும் ஒரு தனி அப்ளிகேஷன். ஒன்லைன் தளத்திற்கு சென்று தான் விளையாட வேண்டும். ஆனால் இந்த மோமோ சேலஞ்ச் வாட்ஸ் ஆப் மூலம் விளையாடப்படுகிறது. இது ஒரு உயிர் குடிக்கும விளையாட்டு.\nஇந்த விளையாட்டின் ஆரம்பம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இதன் முடிவு.. மரணம். கடந்த வாரம் அர்ஜென்டினா நாட்டில் 12 வயது சிறுமி அவளது வீட்டின் வெளியே இருக்கும் மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த அவளது அண்ணன் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அவனால் முடியாமல் போகவே அவனது பெற்றோரை அழைத்துள்ளான். ஆனால் அவர்கள் வந்து காப்பாற்றுவதற்குள் அந்த சிறுமி உயிர் இழந்துவிட்டாள்.\nஇதனைக் கண்ட பெற்றோர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது அவள் தூக்கு மாட்டிக்கொண்ட இடத்தின் அருகில் அவளது செல்போன் அவள் செய்யும் அனைத்தையும் ரெக்கார்டு செய்யும் வகையில் செட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். எஸ்கோபார் போலீசார் விரைந்துவந்து அங்கிருந்த செல்போனை ஆராய்ந்ததில் அந்த செல்போனில் மோமோ எனப்படும் கேம் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதுபற்றி விசாரித்ததில் சில நாட்களுக்கு முன்பு ஒரு முன்பின் தெரியாத புதிய எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் வந்ததாகவும் அதில் இந்த நம்பரை சேவ் செய்ய சொல்லியும் நாம் பிரண்டாக பழகாலம் நண்பர்களாக இருக்கலாம் என்றும் இருந்தது. அதன்படியே அச்சிறுமியும் அந்த நம்பரை சேவ் செய்துள்ளார். அதன் பிறகுதான் ஹேக்கர்கள் விளையாடி விட்டனர்.\nசிறுமியின் பல முக்கிய தகவல்களை அவரிடமிருந்தே கறந்த அவர்கள் இறுதியில் அவரது உயிரையும் பறித்து விட்டனர். இவருக்கு டாஸ்க் தரப்பட்டுள்ளது. முதலில் நார்மலான டாஸ்க்குகள் கொடுத்துள்ளனர். கடைசியில்தான் தற்கொலை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர். இவரும் செத்துப் போய் விட்டார். ஒரு கட்டத்தில் உனது அந்தரங்க போட்டோக்களை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்றும், உனது பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்றும் மிராட்டியுள்ளனர். வெறும் 12 வயதேயான சிறுமி என்பதால் பயத்தில் அனைத்தையும் இந்த சிறுமி செய்துள்ளார். இறுதியில் நீ தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று அந்த சிறுமியிடம் கூறியுள்ளது இந்த மோமோ.YKK\nஅதையும் செய்துள்ளார் இவர். வீட்டில் சிறார்களிடம் செல்போனைக் கொடுத்து விட்டு நாம் ஜாலியாக பிக் பாஸோ அல்லது பிரியமானவளே சீரியலோ பார்ப்பதாக இருந்தால் இன்று முதல் மாறிக் கொள்ளுங்கள். மோமோ உங்களது வீட்டுக்குள்ளும் புகும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.\n« ஆகஸ்ட் 20ம் திகதி திங்கட்கிழமை அரபா தினமாக சவுதி அறிவிப்பு\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்' தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nடில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்...\nஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - ஹரீஸ் எம். பி.\nஅறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2012/02/blog-post_22.html", "date_download": "2018-08-20T18:03:25Z", "digest": "sha1:AQ2XTIRITKEGPSW7GG36I3P73PQMCHRP", "length": 11343, "nlines": 194, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: நீளும் முதல் முத்தம் 7", "raw_content": "\nநீளும் முதல் முத்தம் 7\nமுதல் முத்தமாய் காதல் பற்றி நான் எழுதிய ஏழு ஒன்றோடொன்று தொடர்புடைய உத்தேச கருத்துரைகளுக்கு எனக்கு வழக்கமாகக் கடிதம் எழுதுபவர்களிடமிருந்து மீண்டும் பல எதிர்வினைகள் வந்திருக்கின்றன. அவற்றையும் ஏற்கனவே பதிலளிப்பதற்காக வைத்திருந்த பதினோரு கடிதங்களையும் மொத்தமாய்ப் படித்துப் பார்க்கையில் கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தெரிதாவின் பிற்கால சிந்தனைகளில் அறிமுகம் இல்லை என்று அறிய வருகிறேன். எனவே இந்தப் பதிவினைத் தொடர்ந்து தெரிதா காண்ட்டிய சிந்தனையை விமர்சித்ததையும் நுட்பப்படுத்தியதையும் மையப்படுத்தி எழுத விரும்புகிறேன்.\nநான் நானாகுதலை பயணம் என்ற உருவகத்தை வைத்தோ அல்லது (அனுபவ சேகர) கிடங்கு என்ற உருவகத்தை வைத்தோ தத்துவம் எழுதுவதே வழமை. பெருவாரியான மத நூல்களும் நானாகுதலின் இலக்கினை நிர்ணயித்து, இந்த உருவகங்களை விவரிப்பதன் மூலமே தங்களின் மெய்யியல் கோட்பாடுகளை முன் வைக்கின்றன; நானாகுதலை தொடர் செயல்பாடாக, திடீர் மாற்றமாக, புத்துயிர்ப்பாக என பலவகைகளில் விளக்கவும் அவை தலைப்படுகின்றன.⁠2 அவற்றைப் பின்பற்றி சாகாமல் தற்செயலாய் பிழைத்துக் கிடப்பதால் மட்டுமே நானாகியிருக்கும் இருத்தலியல் நிலையிலிருந்து நானாகுதலை பிரயாணம் என்றோ அனுபவ சேகரம் என்றோ விளக்குவதிலுள்ள சிரமங்களையும், பொருத்தமின்மைகளையும், இடைவெளிகளையும் மாற்று சாத்தியப்பாடுகளுக்கான வழிமுறைகளையும் நான் இதுவரை எழுதிய பதிவுகளில் சுட்டி வந்திருக்கிறேன்.\nஇந்த உருவகங்களை விடுத்து காதலை தன்னளவிலேயே முழுமையான, நானாகுதலுக்கு சத்தேற்றுகிற அறக் கருத்தாக்கமாக எடுத்தாள்வது பல வகைகளிலும் சிறப்பானதாகும். காதலை நானகுதலின் சுதந்திரத்தினை கூர்மைப்படுத்துகிற கருத்தாக்கமாக நான் அடையாளம் கண்டது தற்செயலானதுதான்; ஆனால் இதன் அடிப்படை, விருந்தோம்பல் (hospitality), மன்னித்தல், நட்பு பேணுதல் ஆகிய கருத்தாக்கங்களை தன்னளவிலேயே அறத்தின் தர்க்கத்தினைக் கொண்டதாகவும் மனித விடுதலையின் மாண்பினை வலுவாக்குவதாகவும் தெரிதா நிகழ்த்திக்காட்டியதிலிருந்தே பெறப்பட்டது. தன்னுடைய பிற்கால சிந்தனையில் காண்ட்டிய லட்சியவாதத்தின் தார்மீகம் தாண்டிய இன்னும் நுட்பமான முன்மாதிரியான அறப்பார்வையினை இந்தக் கருத்தாக்கங்களைக் கொண்டு தெரிதா உருவாக்கியுள்ளார்.\nதெரிதாவின் இந்தக் கடைசி கால சிந்தனையை முதலில் என்னால் இயன்ற அளவு விளக்க முயற்சி செய்கிறேன்.\nkgke4wbz3hm இந்தத் தளத்தில் தெரிதாவின் முழுப்புத்தகமும் pdf ஆக தரவிறக்கக் கிடைக்கிறது.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nகை நீட்டம்மா கை நீட்டு தொடர்கிறது\nகை நீட்டம்மா கை நீட்டு: மாமல்லனின் அவதூறும் உள்நோக...\nநீளும் முதல் முத்தம் 7\nகாதல் FAQ: முதல் முத்தம் 6\nபராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 5\nபராக்கு பார்த்தது: அழகுக் குறிப்புகள் 4\nபராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 3\nபராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள் 2\nசாகாமல் பிழைத்துக் கிடப்பதால் நான் நானாகியதும் பரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://universaltamil.com/author/ut-yankee/page/120/", "date_download": "2018-08-20T18:51:59Z", "digest": "sha1:STUNE34ECRRB3R5OBY6CECZASCQLS4C5", "length": 10795, "nlines": 155, "source_domain": "universaltamil.com", "title": "UT News, Author at Leading Tamil News Website – Page 120 of 126", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT News\n2519 இடுகைகள் 0 கருத்துக்கள்\nஜேர்மனியின் சான்சலராக ஏஞ்சலா மெர்கல்\nபேரறிவாளன் சிறை விடுவிப்பு நீடிப்பு\nஜேர்மனி பொது தேர்தல் ; வாக்குப் பதிவு\nபுதிய அரசியல் அமைப்பை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்\nகிழக்கு லண்டனில் அமில தாக்குதல் – ஒருவர் கைது\nஅரசாங்கம் உரிய முறையில் மேற்கொள்ளவில்லை – ஜனாதிபதி\nகிளிநொச்சியில் சடலம் ஒன்று மீட்பு\nஇலங்கை அரசாங்கத்தால் ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் – சிவாஜி லிங்கம்\n100 கணக்கான காதல் ஜோடிகள் கைது\nஇலங்கை கடற்படைக்கு நற்சான்று கொடுக்கும் இந்தியா\nமாமியை போலியாக கொன்ற மருமகன்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் பலர் கைது\nஎதிர்கால சந்ததியினர் குறித்து கவலை கொள்ளும் மஹிந்த\nஈராக் இராணுவத்திற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல்\nமகேந்திரசிங் டோனி, விராட் கோலியை சிறந்த அணித்தலைவராக பயிற்றுவிக்கிறார் – டேவிட் வோர்னர்\nநுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய கட்டிடங்கள்\nதேங்காயின் விலையை குறைக்க விசேட வேலைத்திட்டம்\nபேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்று நிறைவு\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/politics/01/177137?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:05:52Z", "digest": "sha1:RWDDLIXYGBFKIHFBO57OAH76S6WMWWKE", "length": 8225, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "கண்டியில் உயிரிழந்த சிங்கள வாலிபர் குடும்பத்திற்கு நிதியுதவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகண்டியில் உயிரிழந்த சிங்கள வாலிபர் குடும்பத்திற்கு நிதியுதவி\nகண்டியில் உயிரிழந்த சிங்கள இளைஞனின் குடும்பத்தினருக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்துள்ளார்.\nகண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் முஸ்லிம் சிங்கள பிரச்சினை எழ காரணம் எனக் கருதப்படும் கொலைச்சம்பவத்தில் உயிரிழந்த சிங்கள சகோதரரின் குடும்பத்தினரை, இன்று பிற்பகலில் சந்தித்த அமைச்சர் பைசர் முஸ்தபா தனது குடும்பத்தினர் சகிதம் கலந்துரையாடி ஆறுதல் தெரிவித்திருந்தார்.\nமேலும் தன் சொந்த நிதியில் இருந்து ஒரு தொகை பணத்தினை அவர்களுக்கு வழங்கி உதவினார்.\nஇதன் போது அப்பிரதேச (அம்பாளை) பெளத்த விகாரையின் விகாராதிபதி மற்றும் முஸ்லிம் பள்ளி வாசலின் இமாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇதற்கு முன்னதாக நேற்றைய தினம் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உயிரிழந்த சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19808", "date_download": "2018-08-20T19:18:32Z", "digest": "sha1:WDZCOWB7AJWDBXKYF2GKXDI3CN2273AF", "length": 11264, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நரகவாசிகளின் உணவு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nநரகத்தின் தன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கும் போது ஒருமுறை இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்: நரகவாசிகளுக்குப் பசி ஏற்படுத்தப்படும். அது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் மற்ற வேதனைக்கு நிகரானதாக இருக்கும். நரகவாசிகள் உணவு கேட்பார்கள். அப்போது முட்செடியே அவர்களுக்கு உணவாக அளிக்கப்படும். அது அவர்களைக் கொழுக்கவும் வைக்காது, பசியையும் போக்காது. அவர்கள் மறுபடியும் உணவு கேட்பார்கள். அப்போதும் அவர்களுக்கு விக்கிக் கொள்ளும் உணவே வழங்கப்படும். உலகில் விக்கிக்கொள்ளும்போது தண்ணீர் போன்ற பானங்களால் அதைச் சரிசெய்து கொண்டதை நினைவுகூர்வர். எனவே பருகுவதற்குத் தண்ணீர் கேட்பார்கள். அப்போது அவர்களிடம் இரும்புக் கிடுக்கியில் வைத்துக் கொதிநீர் கொடுக்கப்படும். அது அவர்களின் முகத்தருகே செல்லும்போது அவர்களின் முகம் பொசுங்கிவிடும்.\nஅந்தக் கொதிநீர் அவர்களின் வயிற்றினுள் சென்றால் அவர்களின் வயிற்றிலுள்ள அனைத்தையும் துண்டுதுண்டாக்கிவிடும். அப்போது அவர்கள், “நரகத்தின் காவலர்களான வானவர்களை அழையுங்கள். அவர்கள் நமக்காக இறைவனிடம் பிரார்த்திக்கட்டும்” என்று கூறுவார்கள். அப்போது நரகத்தின் காவலர்கள் (வானவர்கள்) நரகவாசிகளை நோக்கி, “உங்களின் இறைத்தூதர்கள் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கவில்லையா” என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள், “ஆம்.கொண்டு வந்திருந்தார்கள்.” (ஆனால், நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாய் இருக்கவில்லை என்பார்கள்) “அப்படியானால் நீங்களே இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்று அந்தக் காவலர்கள் கூறிவிடுவார்கள். இந்த நரகவாசிகள் பிரார்த்திப்பார்கள். ஆனால், அந்த நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை பயனற்றுப் போய்விடும். நரகவாசிகள் வேதனையால் தவித்துக் கொண்டிருப்பார்கள்.\nஇப்படித் துன்புறுவதற்குப் பதிலாக ஒரே அடியாகத் தங்களை இறைவன் அழித்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்து நரகக் காவலர்களின் தலைவரான மாலிக் எனும் வானவரை அழைத்து, “மாலிக்கே, இறைவன் எங்கள் கதைகளை முடித்து விட்டால் நன்றாக இருக்குமே” என்பார்கள். அதற்கு மாலிக், “நரகத்தில் வாழ்வும் இல்லை. மரணமும் இல்லை..நீங்கள் இப்படியேதான் கிடப்பீர்கள்” என்று கூறிவிடுவார்கள். நபிமொழிகளில் மேலும் ஒரு செய்தி காணப்படுகிறது. நரக வாசிகள் மாலிக்கை அழைத்ததும் அவர் உடனே பதில் அளிக்க மாட்டார். நரகவாசிகளின் கதறலுக்கும் காவலர் தலைவர் பதில் அளிப்பதற்குமான இடைவெளி ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நரகத்தின் கோரக் காட்சிகள் குறித்தும் நரகவாசிகளுக்குத் தரப்படும் தண்டனைகள் குறித்தும் இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன. இந்தக் கடுமையான இழிநிலையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் ஒரே வழி உலகில், இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் முழுமையாகக் கீழ்ப்படிந்து வாழ்வதுதான். அத்துடன் “இறைவா, நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக” என்று தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்த வண்ணமும் இருக்க வேண்டும்.\n எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக. மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக. மேலும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக.” (குர்ஆன் 2:201)\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள்\nஎன் நெஞ்சே நீ நம்பிக்கை இழப்பது ஏன்\nஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா : அன்னை திருவுருவ பவனி கோலாகலம்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/nursing-diploma-results-soon-000556.html", "date_download": "2018-08-20T18:03:29Z", "digest": "sha1:6P6UAYHCHQETCXCL5GOW2C2YR65QVGQX", "length": 7681, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "விரைவில் நர்சிங் டிப்ளமோ படிப்பு தேர்வு முடிவுகள்! | Nursing diploma results soon - Tamil Careerindia", "raw_content": "\n» விரைவில் நர்சிங் டிப்ளமோ படிப்பு தேர்வு முடிவுகள்\nவிரைவில் நர்சிங் டிப்ளமோ படிப்பு தேர்வு முடிவுகள்\nசென்னை: நர்சிங் டிப்ளமோ படிப்புக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநர்சிங் டிப்ளமோ படிப்பு படித்து வரும் மூன்றாமாண்டு மாணவிகன் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் பத்திரிகைகளில் வெளியாயின.\nமூன்றாமாண்டு தேர்வு முடிவுகளை வெளியாடமலேயே மாணவிகள் நான்காம் ஆண்டுக்கான செயல்முறைப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.\nஇதைத் தொடர்ந்து நர்சிங் டிப்ளமோ படிப்பு தேர்வு முடிவுகள் தாமதமாவது ஏன் என்று தமிழ்நாடு நர்சிங் போர்டு உறுப்பினர்களிடம், மருத்துவக் கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்ததாவது:\nமூன்றாமாண்டு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நர்சிங் போர்டு உறுப்பினர்களை அழைத்து அவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும் என்றார் அவர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/sastha-foundations-8th-thirukkural-competition-dallas-221966.html", "date_download": "2018-08-20T18:55:03Z", "digest": "sha1:C3FL6KNS6VEVLIDZO4A63YFCF7QA4DQO", "length": 28209, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் எட்டாவது ஆண்டாக 'ஒரு குறளுக்கு ஒரு டாலர்’ பரிசுப் போட்டி! | Sastha Foundations 8th Thirukkural competition in Dallas - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமெரிக்காவில் எட்டாவது ஆண்டாக ஒரு குறளுக்கு ஒரு டாலர்’ பரிசுப் போட்டி\nஅமெரிக்காவில் எட்டாவது ஆண்டாக ஒரு குறளுக்கு ஒரு டாலர்’ பரிசுப் போட்டி\nஆக. 28ல் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்\nஅமெரிக்காவில் டல்லாஸ் நகரில் பெட்னா 2018 மாநாடு\nதமிழக மாணவர்களுக்கு 2 லட்சத்து 88 ஆயிரம் நிதியுதவி.. டல்லாஸ் தமிழர்கள் நடிகர் சூர்யாவிடம் உறுதி\nஅவ்வை தமிழ் மையம் மற்றும் டாலஸ் தமிழ் மன்றம் இணைந்து வழங்கிய தமிழர் இசை விழா\nஅவ்வை தமிழ் மையம், டாலஸ் தமிழ் மன்றத்தின் 'பண்ணிசை' நல்லசிவம், 'மக்களிசை' ஜெயமூர்த்தி இசை நிகழ்ச்சி\n'குறள் இளவரசி' சீதா... அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவியின் 1330 திருக்குறள் சாதனை\nஒரு குறளுக்கு ஒரு டாலர்.. அமெரிக்காவில் பத்தாவது ஆண்டாக திருக்குறள் போட்டி.. சிறப்புக் கருத்தரங்கம்\nடல்லாஸ்(யு.எஸ்): தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களை விட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழி மீது தீராத காதல் என்பது பல நிகழ்வுகள் மூலம் தெரிய வருகிறது.\nஒரு காலத்தில் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், உணர்வால் தமிழர்களாக வாழ்ந்து, பண்டிகைகள் உட்பட தமிழ் கலாச்சாரத்தை பேணிக்காத்து வந்தாலும், அடுத்தடுத்த தலை முறையினருக்கு தமிழ் மொழியை பேசுவதற்குக் கூட தெரிந்திருக்கவில்லை.\nஅமெரிக்காவில் வேலை நிமித்தமாக குடியேறிய தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து, தமிழ்ப் பள்ளிகள் நிறுவி பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுத் தருகிறார்கள். அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 100 தமிழ்ப் பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் 2 மணி நேரம் வரை நடைபெறும் இந்த வகுப்புகளில், ஆசிரியர் முதல் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் தன்னார்வத்துடன், எந்த ஊதியமும் இல்லாமல், நம் சக தமிழர்கள் பணியாற்றி வருவது மிகவும் போற்றத்தக்க வேண்டிய ஒன்றாகும்.\nதமிழ்ப் பள்ளியை நிறுவிய பெரும்பாலானோர், பிள்ளைகள் தமிழ் மொழியில் பேசவேண்டும், தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற தலையாய நோக்கத்திலேயே தொடங்கினார்கள். காலம் செல்லச் செல்ல, நோக்கங்களும் செயல் திட்டங்களும் விரிவடையத் தொடங்கின.\nபாடத் திட்டங்களின் தரத்தை தமிழகம், சிங்கப்பூருக்கு நிகராக உயர்த்தினர். இதனால், அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, தமிழகப் பள்ளியில் தமிழ்ப் பாடம் தொடர்வது எளிதானது.\nஅமெரிக்கன் தமிழ் அகடமி, கலிஃபோர்னியா தமிழ் அகடமி என்ற இரு அமைப்புகளின் பாடத் திட்டங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பின்பற்றப்படுகின்றன. இது அமெரிக்காவிலேயே ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மாற்றலாகிப் போகும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, உள்ளூர் தமிழ்ப் பள்ளியில் தொடர்வதற்கு பெரும் வசதியாக இருக்கிறது.\nஇலக்கியங்களும் நீதி நூல்களும் வேண்டாமா\nபிள்ளைகள் தமிழ் மொழியில் எழுதப் பேச படித்தால் மட்டும் போதுமா அரிய தமிழ் பொக்கிஷங்களையும் தெரிந்து கொள்ள வேண்டாமா அரிய தமிழ் பொக்கிஷங்களையும் தெரிந்து கொள்ள வேண்டாமா என்று எழுந்த கேள்விகளுக்கு, பதிலாக திருக்குறள் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்த ஆரம்பித்துள்ளனர். பதினான்கு வருடங்களுக்கு முன்னர் டல்லாஸ் மாநகரில் தொடங்கப்பட்ட ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில், எட்டாண்டுகளுக்கு முன்னதாக முதன் முதலில் திருக்குறள் போட்டியை நடத்தினர்.\nகுழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக, 'ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசு' வழங்க ஆரம்பித்தனர். தொடர்ந்து நடந்து வந்த இந்த போட்டி எட்டாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதே முறையை பின்பற்றி 'ஒரு குறள் ஒரு டாலர் பரிசுப் போட்டி' அமெரிக்காவின் ஏனைய நகரங்களிலும் தற்போது பிரபலமாகியுள்ளது.\n4 வயது சண்முகம் 40 : 11 வயது நந்தினி 333\nஇந்த ஆண்டு டல்லாஸ் நகரில் நடந்த போட்டியில் 11 வயது நந்தினி 333 குறள்களை முழு அர்த்தத்தடன் கூறி முதல் பரிசை வென்றார். 4 வயது சண்முகவ் 40 குறள்களை ஒப்பித்து மழலைப் பிரிவில் முதல் பரிசு பெற்றார். பிரணவ் மூன்றாம் நிலையிலும், அபிராமி முதலாம் நிலையிலும் முதல் பரிசை வென்றனர். மொத்தம் 135 குழந்தைகள் 3200 தடவைகள் குறள்களை ஒப்புவித்தனர். கோப்பல் தமிழ்ப் பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளி, DFW வித்யா விகாஸ் தமிழ்ப்பள்ளி, பாலதத்தா தமிழ்ப் பள்ளி, அவ்வை தமிழ்ப் பள்ளி மற்றும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். பெரியவர்களுக்கான போட்டியில் சங்கீதா வெற்றி பெற்றார்.\nஅவ்வை அமுதம் பிரிவில் ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் மற்றும் மூதுரை என நான்கு போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 120 குழந்தைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர் வெவ்வேறு நிலைகளுக்கான 12 முதல் பரிசுகளை சீதா, ஆதனா, லக்‌ஷயா, கீயா, அபினவ், சஹானா, சண்முகவ்(மழலை), ப்ரக்ருதி, காவ்யா, ஷன்மதி, நித்யா, நந்தினி ஆகியோர் பெற்றனர். இவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முதல் பரிசுகள் பெற்றவர்கள்.\nதமிழில் சுயமாக எழுதும் எழுத்தாற்றலையும், சரளமாக பேசும் பேச்சாற்றலையும் வளர்ப்பதற்காக பேச்சுப் போட்டியும் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றன. குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று கல்வியின் பயன், அவ்வை சொல்லும் நற்குணங்கள், பருவத்தே பயிர் செய் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினர். இன்றைக்கு அவ்வையார் இருந்திருந்தால் 'தொலைக்காட்சி பார்க்காதே' என்று புது ஆத்திச்சூடி எழுதியிருப்பார் என்று சிறுவன் ஒருவன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது ஹை லைட்டாகும். முதல் பரிசுகளை லஷ்யா, சீதா, அஜய் மற்றும் பெரியவர் பிரிவில் தீபா ஆகியோர் பெற்றனர்\nசினம் காக்க அறிவுறுத்திய சீதா\nஅவ்வையும் அறமும், அவ்வையார், திருவள்ளுவர் பார்வையில் செய் நன்றி, திருவள்ளுவர் கூறும் சினம் காக்க, ஆகிய தலைப்புகளில் குழந்தைகள் கம்பீரமாக நின்று பேசிய பேச்சாற்றல் வியக்க வைத்தது. பத்தாவது படிக்கும் சீதா, சினம் காக்க என்ற தலைப்பில் பேசிய போது, இது அமெரிக்காவில் பிறந்த குழந்தை தானா என்ற ஆச்சரியம் உண்டானது. கட்டுரைப் போட்டியில் 14 மற்றும் பேச்சுப் போட்டியில் 17 குழந்தைகள் பங்கேற்றனர். தமிழ்த் திறன் போட்டிகளை பழனிசாமி நடத்தித் தந்தார். சீதா, லஷ்யா, நந்தினி பரிசுகளை தட்டிச் சென்றனர்.\nவெவ்வேறு போட்டிகளில் நடுவர்களாக ஏராளமானோர் பங்கேற்றனர். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த திருமதி. உமா மணி, திருக்குறள் போட்டி நடுவராக பங்கேற்றிருந்தார். அவர் கூறுகையில், சிங்கப்பூரில் அரசுப் பள்ளிகளிலேயே தமிழ் கற்றுத் தருகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் தன்னார்வத்துடன் தமிழர்களே தமிழ்ப்பள்ளி நடத்திவருவதோடு இத்தகைய போட்டிகளும் நடத்தி வருவதால், சிங்கப்பூர் போல் அமெரிக்காவிலும் தமிழ் மொழி சிறப்பாக வளர்ந்து செழித்தோங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nமாலையில் நடைபெற்ற தமிழ் ஆராதனை விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. பாரதியார் பாடல்களுக்கு, வெவ்வேறு தமிழ்ப் பள்ளிகளிலிருந்தும் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. நடனங்களை புவனா அருண் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.\nஅனைத்து திருக்குறள் போட்டியாளர்களுக்கும் வழக்கம்போல் 'ஒரு குறளுக்கு ஒரு டாலர்' பரிசும் வழங்கப்பட்டன. தாய்மொழி நாளில் அந்நிய மண்ணில் நடந்த இந்த விழா, தமிழ் மொழியை ஆராதிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளையும் தென்றல் மாத இதழும் இணைந்து, திருமதி உமையாள் முத்துவை கவிரவித்தனர். தனது 16 வயது முதல், உலகம் முழுவதும் 6000 மேடைகளுக்கும் மேல் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர் உமையாள் முத்து.\nஅமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.\nஅமெரிக்காவில் 14 ஆண்டுகளாக, 80 பக்கங்களுடன் வெளியாகி வரும் தென்றல் தமிழ் மாத இதழ், முழுக்க முழுக்க அங்கே இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் படித்தால் பிழைப்பு உண்டு\nஏற்புரை ஆற்றிய உமையாள் முத்து, 'ஒரு குறளுக்கு ஒரு டாலர் வழங்குவதன் மூலம் 'தமிழ்ப் படித்தால் பிழைப்பு இல்லை' என்று தமிழர்களிடம் உள்ள தவறான எண்ணத்தை தகர்த்துள்ளீர்கள். இந்த ஒவ்வொரு டாலரும் தமிழ்ப் படித்தால் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு உண்டாக்கும். இந்த குழந்தைகள் சம்பாதித்துள்ள முதல் வருமானம், திருக்குறள் மூலம் கிடைத்துள்ளது என்பதே தமிழுக்கு பெருமை சேர்க்கிறது என்றார்.\nதிருக்குறள் அதிகாரங்களின் எண்களைக் கொண்டு திருக்குறள் மொழியில் எப்படி பேசுவது என்றும் விளக்கமளித்தார். சுப்பிரமணிய தாஸ் என்ற திருக்குறள் அவதானி ஒருவர் கி.ஆ.பெ வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளார். கி.ஆ.பெ தன் மகளிடம், இன்றைக்கு நம் வீட்டில் 9 உண்டா என்று கேட்கிறார். அதாவது 'விருந்து‘ உண்டா என்ற அர்த்தமாகும்.\nவந்தவரோ, அம்மா நான் 95 ல் இருக்கிறேன் அதனால் ஒன்றும் வேண்டாம். அதாவது நான் ‘மருந்து' சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். அதனால் விருந்து ஏதும் வேண்டாம் என்கிறார். இப்படி திருக்குறள் அதிகார எண்களைக் கொண்டு புதிதாக ஒரு மொழியையே குடும்பத்திற்குள் உருவாக்கலாம் என்றார்.\nவிழா நிகழ்ச்சியை ஜெய்சங்கர் மற்றும் பழனிசாமி தொகுத்து வழங்கினர். திருக்குறள் போட்டிக்கு வெங்கடேஷ் தலைமையேற்று நடத்தினார், அண்ணாமலை ஆராதனை விழா ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.\nஅருண்குமார், விஜயகுமார், வெங்கடேசன் மற்றும் தலைமையில் பல்வேறு குழுக்களாக தன்னார்வ தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஒருங்கிணைப்பாளர்களுக்கு உறுதுணையாக டாக்டர் ராஜ் வழி நடத்தினார். தகவல் ஒருங்கிணைப்பை இர தினகர் செய்தார்.\nவிசாலாட்சி வேலு நன்றியுரை கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ndallas திருக்குறள் போட்டி டல்லாஸ்\nஇனி ஏடிஎம்களில் மாலை 4 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது- மத்திய உள்துறை\nBreaking news: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nமோடி vs ராகுல்.. இந்தியாவில் யார் பிரபலம்.. இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் அதிரடி சர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/category/tnpsc/gk/", "date_download": "2018-08-20T18:49:34Z", "digest": "sha1:VD4CSOOOC23MZAZLUDHRQ5H5EORMDATF", "length": 4457, "nlines": 94, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news GK Archives - Naangamthoon", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு-2 …\n1 கூட்டாட்சி என்னும் கருத்து…\nபோட்டி தேர்வின் வெற்றி இரகசியம் பொதுஅறிவு கேள்விகளை படிப்பதில் உள்ளது\nடிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிங்க குரூப் 4 ஜெயிங்க\n1. முதல் முறையாக மரபணு…\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/technology/news/61928/The-cushioned-message-for-Aircel-Costresters-is-enough-to-wait-for-3-days", "date_download": "2018-08-20T18:34:26Z", "digest": "sha1:FB4G23B7HDJ76PICX2GMAVYIMVP6GBNL", "length": 9510, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "ஏர்செல் கஸ்டமர்ஸ்க்கு குஷியான செய்தி இன்னும் 3 நாட்கள் வெயிட் பண்ணுங்க போதும் - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செய்திகள்\nஏர்செல் கஸ்டமர்ஸ்க்கு குஷியான செய்தி இன்னும் 3 நாட்கள் வெயிட் பண்ணுங்க போதும்\nஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்குள், பிற நெட்வொர்க்குக்கு மாற தேவையான யுபிசி எண் கிடைத்துவிடும் என ஏர்செல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nகடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏர்செல் டவர் கிடைக்காமல்,மக்கள் பெரும் சிரமத்தை அடைந்து வருகின்றனர்\nஇது தொடர்பாக, அடுத்த சில தினங்களில் அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் எங்கள் நிறுவனம் சார்பில் போர்ட்டல் எண் வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் அந்த போர்ட்டல் எண் மூலம் தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனவும் ஏர்செல் தென் மண்டல சிஇஓ சங்கர நாராயணன் தெரிவித்து இருந்தார்.\nசெல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தராததால் ஏர்செல்லின் சுமார் 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்தன. இதனால் ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கியது. ஆனால்,பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் செல்போன் டவர்கள் முடங்கும் வாய்ப்பு உள்ளதாக ஏர்செல் தென்மண்டல தலைவர் சங்கரநாராயணன் தெரிவித்திருந்தார்.\nஆனாலும் போர்ட்டல் எண் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதி பட்டு வருகின்றனர். இந்நிலையில்,விரைவில் அனைவருக்கும் போர்ட்டல் எண் வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் அந்த போர்ட்டல் எண் மூலம் தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனவும் ஏர்செல் தென்மண்டல சிஇஓ சங்கர நாராயணன் தகவல் தெரிவித்து இருந்தார்.\nஇதுவரை 25 லட்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்டல் எண் பெற்றுள்ளதாகவும் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதால் அனைவருக்கும் ஒரே நாளில் போர்ட்டல் எண் வழங்க இயலாது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்நிலையில், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்குள், பிற நெட்வொர்க்குக்கு மாற தேவையான யுபிசி எண் கிடைத்துவிடும் என ஏர்செல் நிறுவனம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article ரஜினி பரபரப்பு தலைதூக்கும் போதெல்லாம் தட்டி திசைமாற்றும் நம்மவர் கட்டம் கட்டும் கமல்ஹாசன்\nNext article அந்தரங்கம் தொகுப்பாளினி கிரிஜாவா இது பார்த்த நம்பவே மாட்டிங்க புகைப்படம் உள்ளே\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஇப்படி செய்தால் உனக்கு என் ரசிகராக இருக்க தகுதி இல்லை அஜித்\nபிரான்ஸ் நாட்டினராக இருந்தாலும் மனதளவில் தமிழர்களே தாலியிலும் தமிழ் மணக்க செய்த காரியம்\nஸ்ரீ தேவியின் சொத்து மதிப்பு இந்த வகை காரை முதலில் வாங்கிய நடிகை இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://universaltamil.com/category/travel/?filter_by=popular7", "date_download": "2018-08-20T18:52:52Z", "digest": "sha1:VXTH6D2DOLB5NMP75CCUNLEIGYLF5ZQY", "length": 6462, "nlines": 121, "source_domain": "universaltamil.com", "title": "Travel Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு\nகொழும்பு நகரின் புதிய வரைபடம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார் இலங்கையர் ஜோன் பீரிஸ்\nவளர்ப்பு சிங்கம் தனது மிருகத்தனத்தை வெளிக்காட்டிய போது – இதயம் பலவீனமானவர்கள் ...\nவெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ் சிறைக் கைதிகள் அறுவர் விடுதலை\nசுற்றுலா சென்று திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட கதி\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு\nஅதிர்சியூட்டும் அசாதாரணமான 10 இடங்கள்….\nஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க ஒப்பந்தம்\nஇலங்கையில் சுற்றி பார்க்க வேண்டிய 12 இடங்கள்\nஇலங்கை விகாரத்தையடுத்து சர்வதேச நாடுகள் அறிவுறுத்தல்\nசிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு தடை\nஉலகில் மறைத்து வைக்கப்பட்ட இடங்களை காண ஆவலா\nகாட்டெருமைக்கும் சிங்கத்துக்கும் இடையே நடந்த கொலைவெறி சண்டை\nதாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/15/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-2863921.html", "date_download": "2018-08-20T18:25:59Z", "digest": "sha1:WQLB3BALOO75MCBYIUONDR2F5O4FLQF5", "length": 6067, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தோப்பூரில் திருவிளக்கு பூஜை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசிவராத்திரியை முன்னிட்டு தோப்பூரில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த பூஜையை, மாவட்ட பொதுச் செயலர் பெ.சக்திவேலன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். நாசரேத் இந்து அன்னையர் முன்னணி நகரத் தலைவி பரமேஸ்வரி பூஜையை வழி நடத்தினார். தொடர்ந்து விநாடி-வினா, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇதில், ஒன்றிய துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தங்கபெருமாள், ஒன்றியச் செயலர் சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44673-cauvery-management-board-issue-farmer-tried-to-commit-suicide.html", "date_download": "2018-08-20T18:45:51Z", "digest": "sha1:LWOWACNJZ2T7TRIQUGMED746HQM2NV2Y", "length": 8970, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீதியை நிலைநாட்ட விவசாயி டெல்லியில் தற்கொலை முயற்சி | Cauvery Management Board issue; Farmer tried to commit suicide", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nநீதியை நிலைநாட்ட விவசாயி டெல்லியில் தற்கொலை முயற்சி\nகாவிரி விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் நடைப்பெற்ற போராட்டத்தின்போது, விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகாவிரி டெல்டா மாவட்டங்களின் வி‌வசா‌ய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்ற வளாகத்தினுள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு நீதியை நிலைநாட்ட வேண்டும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளி‌ட்ட கோரி‌க்கைகளை முழக்கங்களாக எழுப்பி விவசாயிகள்‌ போராடினர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர், அங்கிருந்த மரத்தின் மீதேறி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறினர். அவர் இறங்க மறுத்ததால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, அந்த விவசாயி கீழே இறக்கப்பட்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் காவலில் அழைத்து சென்றனர்.\nபசுவை கொன்று தின்னும் சிங்கங்கள்: வீடியோ பதிவிட்ட நபர் கைது\nசசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை - திவாகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமொத்த வருமானத்தையும் கடனாக செலுத்தும் விவசாயிகள்\nவெள்ளத்தில் தவித்த நாய்: உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\nமேட்டூரில் மீண்டும் 2.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nபொங்கி வரும் காவிரி - வெள்ளம் சூழ்ந்த விளைநிலங்கள்\nதமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை\nகாவிரிக்கு நன்றி தெரிவித்த டி.ராஜேந்தர்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபசுவை கொன்று தின்னும் சிங்கங்கள்: வீடியோ பதிவிட்ட நபர் கைது\nசசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை - திவாகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/mk-stalin-assertion-restore-missing-tamilnadu-fishermen/", "date_download": "2018-08-20T18:48:53Z", "digest": "sha1:YQBB6MJDYTRVOGKN2CM6UWTH4WMW5VLB", "length": 6027, "nlines": 101, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news முதலமைச்சர் பழனினிசாமி ப்ளீஸ் கன்னியாகுமரிக்கு போங்க - ஸ்டாலின்! - Naangamthoon", "raw_content": "\nமுதலமைச்சர் பழனினிசாமி ப்ளீஸ் கன்னியாகுமரிக்கு போங்க – ஸ்டாலின்\nமுதலமைச்சர் பழனினிசாமி ப்ளீஸ் கன்னியாகுமரிக்கு போங்க – ஸ்டாலின்\nபுயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி, கன்னியாகுமரி,குழித்துறை ரயில் நிலையத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக மீனவர்களின் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்\n. இந்நிலையில்,முதலமைச்சர் உடனடியாக கன்னியாகுமரிக்கு விரைந்து சென்று, அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகும்பமேளாவுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்\nஜெ., மரணம் குறித்து விசாரிக்க மேலும் 3மாதம் வேண்டும்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2016/01/lic-new-insurance-schemes-tax-benefit.html", "date_download": "2018-08-20T18:12:56Z", "digest": "sha1:5C4C7C2CZEUB5VSVI3JD3RGGPBZFS2BO", "length": 11604, "nlines": 85, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வரி சேமிப்பதற்காக எல்.ஐ.சி கொண்டு வரும் இன்சுரன்ஸ் திட்டங்கள்", "raw_content": "\nவரி சேமிப்பதற்காக எல்.ஐ.சி கொண்டு வரும் இன்சுரன்ஸ் திட்டங்கள்\nஎம்மிடம் ஒரு நண்பர் நீண்ட நாள் நோக்கில் சில தனியார் நிறுவனங்களின் திட்டங்களைக் குறிப்பிட்டு இணையலாமா\nஇன்சுரன்ஸ் திட்டங்களைப் பொறுத்த வரை எல்.ஐ.சி ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் பாதுகாப்பு அதிகம். இன்னும் அதன் சேவைகள் தனியார் நிறுவனத்துடன் போட்டி போடும் அளவு உள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் பல தனியார் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் வெகு வேகமாக இணைக்கப்படுகின்றன.\nஇது தவிர இருபது, முப்பது வருடங்கள் என்று திட்டங்களில் முதலீடு செய்யும் போது அப்பொழுது அந்த நிறுவனங்கள் இருக்கிறதா அல்லது எந்த பெயரில் இயங்குகின்றன என்பன போன்ற நடைமுறை சிக்கல்கள் அதிகமாகவே உள்ளன.\nஇந்த காரணங்களால் எல்.ஐ.சியில் உள்ள இன்சுரன்ஸ் திட்டங்களில் இணைவது சிறந்ததாக இருக்கும்.\nதற்போது வருமான வரி சேமிப்பதற்கு முதலீடுகளை செய்யும் காலம் என்பதால் நேரத்திற்கு ஏற்றவாறு எல்.ஐ.சி இரண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.\nஅந்த இரண்டையும் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..\nமுதல் திட்டத்தின் பெயர். Jeevan Labh Plan 836.\nஇது ஏற்கனவே இருக்கும் வழக்கமான இன்சுரன்ஸ் திட்டம் போன்றது.\nஎன்ன வித்தியாசம் என்றால், வழக்கமான திட்டங்களில் 20 வருடங்களுக்கு பரீமியம் செலுத்தினால் 20 வருடங்களுக்கு தான் காப்பீடு பொருந்தும்.\nஆனால் இந்த திட்டத்தில் பரீமியம் செலுத்திய வருடங்களுக்கு பின்னரும் காப்பீடு சில வருடங்கள் தொடரும்.\nஅதாவது 16 வருடங்களுக்கு பரீமியம் செலுத்தினால் 25 வருடங்களுக்கு காப்பீடு பயனைப் பெறலாம். இதே போல் 10 வருடங்களுக்கு பரீமியம் கட்டினால் 16 வருடங்களுக்கும், 15 வருடங்களுக்கு கட்டினால் 21 வருடங்களுக்கும் காப்பீடு தொடரும்.\nகாப்பீடு காலம் முடிந்த பிறகு காப்பீடு தொகை, ஒவ்வொரு வருடம் வழங்கப்பட்ட போனஸ், இறுதி போனஸ் போன்றவற்றை சேர்த்து பெறலாம்.\nஅதே நேரத்தில் காப்பீடு காலத்தில் இறந்து விட்டால் அவரது உறவுகள் காப்பீடு தொகை, அதுவரை கொடுக்கப்பட்ட போனஸ் தொகை போன்றவற்றை பெறலாம்.\nஇந்த திட்டத்தில் குறைந்த பட்ச காப்பீடு தொகை இரண்டு லட்ச ரூபாய்.\nஉதாரணத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் காப்பீடிற்கு வருடத்திற்கு 23,000 என்று 16 வருடங்களுக்கு பரீமியம் கட்டினால் 25 வருடங்களுக்கு பிறகு 13 லட்ச ரூபாய் மொத்தமாக கிடைக்கும்.\nமேலும் சில உதாரணங்கள் கீழே உள்ள அட்டவணையில் உள்ளது.\nஅடுத்த இரண்டாவது திட்டத்தின் பெயர். Shikhar Plan 837.\nஇது மேலை நாடுகளில் உள்ளது போல் முழுமையான இன்சுரன்ஸ் திட்டம். இதில் நாம் செலுத்தும் பணம் திருப்பிக் கிடைக்காது. அதனால் முதலீடு திட்டம் போல் கருத முடியாது.\nஅதே நேரத்தில் காப்பீடு காலத்தில் இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் செலுத்திய தொகையில் இருந்து பத்து மடங்கு அதிக பணம் குடும்பத்திற்கு கிடைக்கும்.\nஇந்த திட்டத்தில் பரீமியம் என்பது ஒரு முறை மட்டும் தான் கட்ட வேண்டும்.\nஇந்த திட்டத்தில் குறைந்த பட்ச பரீமியம் தொகை ஒரு லட்ச ரூபாய். அதிக பட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.\nஉதாரனத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் பரீமியம் செலுத்தினால் நமது காப்பீடு காலத்தில் நிகழும் துயர நிகழ்வுகளின் பின் உறவுகள் இருபது லட்ச ரூபாய் காப்பீடு தொகையாக பெறுவார்கள்.\nஇந்த இரண்டு திட்டங்களுமே வருமான வரி விலக்கு பலனைப் பெறுகின்றன. பரீமியம் தொகையும் மற்ற நிறுவனங்களை விட பரவாயில்லை. அதனால் இன்சுரன்ஸ் திட்டம் வேண்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamei.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-08-20T19:14:52Z", "digest": "sha1:FUK4VZ4VFSRUGNB2EAUDED5OJGJZPH5N", "length": 9170, "nlines": 75, "source_domain": "www.dinamei.com", "title": "தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 24-ல் தொடக்கம்! - தினமெய்", "raw_content": "\nதமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 24-ல் தொடக்கம்\nதமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது.\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக்கின்றன. இதில் 54 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.\nஇதேபோல் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் மற்றும் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள் உள்ளன. இதில் 40 இடங்களில் 6 இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\nஅந்தவகையில், 306 இடங்களைக் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 9,798 பேரும், பிடெக் படிப்புகளான 94 இடங்களுக்கு 1,949 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்த நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇதுதொடர்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன் வெளியிட்ட அறிவிப்பில், 24 ம் தேதி சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கும், 25, 26 தேதிகளில் கலைப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விவரம் மற்றும் தர வரிசை பட்டியல் அடங்கிய விவரங்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\n← எஸ்பிஐ வங்கியின் பிஓ பிலிமினரி தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாக வாய்ப்பு\nஎஸ்.சி. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவு\nஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாற்றம் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nகோவை மாணவி உயிரிழப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்\nகோலியின் சிறப்பான சதத்தால் வெற்றியை நோக்கி இந்தியா – இங்கிலாந்தை வீழ்த்தி சாதிக்குமா\nநாட்டிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு இந்திஆ 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டி20\n‘தல’ தோனி, அசாருதின் சாதனையை அசால்ட்டா உடைச்ச ‘கில்லி’ கேப்டன் கோலி\nகேலி செஞ்ச இங்கிலாந்துக்கு சதம் அடித்து சரியான ‘நோஸ்கட்’ தந்த ‘கிங்’ கோலி….\nவிஜய் படத்தை இயக்குவது எனது கனவு: இயக்குனர் பொன்ராம்\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dharanish.in/", "date_download": "2018-08-20T18:12:07Z", "digest": "sha1:MFFQMGGHAYQL5REE3R6XCUVCDSW3JY7C", "length": 7198, "nlines": 81, "source_domain": "dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Tamil Book Publisher - தமிழ் நூல் பதிப்பாளர்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nஆன்மிகம் | கட்டுரை | குழந்தைகள் | சிறுகதை |\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - எமது நூல்கள்\nகந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி\nதிருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி யெழுச்சி\nதிருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி யெழுச்சி\n© 2018 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/trichy-cantonment-selling-exhibition-at/", "date_download": "2018-08-20T18:49:49Z", "digest": "sha1:FPHDGYLTCJN3UEVB2ER5JKGGGYF4T2W4", "length": 15678, "nlines": 110, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news கண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் விற்பனைக் கண்காட்சி", "raw_content": "\nகண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் விற்பனைக் கண்காட்சி\nகண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் விற்பனைக் கண்காட்சி\nதிருச்சிராப்பள்ளி, கண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் திட்டமிட்ட விற்பனைக் கண்காட்சியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கு.இராசாமணி, இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு திட்டமிட்ட கண்காட்சியானது முதல் 12 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சி அரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளான குந்தன் நகைகள், செயற்கை ஆபரணங்கள், தேன் வகைகள், சணல், சணல் பைகள், இயற்கை மூலிகைப்பொருட்கள், கைத்தறி ஆடைகள், தஞ்சாவூர் கைவினைப்பொருட்கள், மென் பொம்மைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன.\nஎதிர்வரும் 26.04.2018 வியாழன்கிழமை வரை இக்கண்காட்சியினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி உட்பட 13 மாவட்டங்களைச் (தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, தஞ்சாவூர், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், திருநெல்வேலி, நாமக்கல், அரியலூர், மதுரை) சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் சுய உதவிக்குழு பெண்களின் திறன்களை பறைசாற்றும் நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் செய்திகள், கலாச்சார நடனங்கள், கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், மிமிக்ரி மற்றும் மேஜிக் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் 8949 குழுக்களும், நகர்ப்புற பகுதியில் புதிதாக 722 குழுக்களும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வங்கிகள் மூலம் அவர்களுக்கு கடன் இணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017-18 ஆண்டில் இதுவரை 5753 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.173.52 கோடி வங்கிக்கடன் பெற்று தரப்பட்டுள்ளது.\nமகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நோக்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் கல்லூரிச் சந்தைகள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் திட்டம் மூலமாக சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கோடை கொண்டாட்டம், நவராத்திரி திருவிழா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா என்ற பெயர்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனை கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஇதுபோன்ற கண்காட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்று தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை 26 கல்லூரிச் சந்தைகள் நடத்தப்பட்டு ரூ.22.20 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, பிற மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு, தேசிய அளவிலான சாராஸ் (ளுயுசுயுளு) விற்பனைக் கண்காட்சி 27.12.2017 முதல் 07.01.2018 வரை 12 நாட்கள் நடத்தப்பட்டு, ரூ.15.00 இலட்சத்திற்கும் மேலாக சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஇக்கண்காட்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மட்டுமில்லாது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வருகைப்புரிந்து அரங்குகள் அமைத்துள்ளனர். இப்பொருட்காட்சியினை பார்வையிட வருகைப்புரிந்துள்ள பொதுமக்கள், இளைஞர்கள், சுய உதவிக்குழுவினரை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுடைய பொருட்களை வாங்கி பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமகளிர் திட்ட அலுவலர் திரு.பி.பாபு, உதவி திட்ட அலுவலர்கள் திரு.முருகதாஸ், திருமதி. சாந்தி, திரு.அறிவழகன், திரு.முத்துப்பாண்டி, திரு.ஜெயராமன், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் திரு.பாத்திமாசகாயராஜ், முன்னாள் கோட்டத்தலைவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர்கள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஓம்சக்தி மாரியம்மன் ஆலய தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்\nகாவிரி விவகாரம்.. கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\n7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது வைகை அணை.,விவசாயிகள் மகிழ்ச்சி\nகாவிரி நீர் வீணாக கடலில் கலப்பது வேதனையளிக்கிறது – ஸ்டாலின்\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/category/canada/", "date_download": "2018-08-20T18:14:58Z", "digest": "sha1:C32IXVQCTDYBRRSEUWQNFNWBG6RJN6HG", "length": 11602, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Tamil News | Latest News | Canada Seythigal | Online Tamil Hot News on Canada News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தையை கருக்கலைப்பு செய்யாவிட்டால் நீ இறந்து விடுவாய் என்று கடவுள் சொன்னார்: ஒரு வித்தியாசமான வழக்கு\n$22 மில்லியன் லாட்டரி பரிசை வாங்க ஆளில்லை: ஏன் தெரியுமா\nபிரித்தானியா இளவரசர் இல்லாமல் கனடா செல்லும் இளவரசி மெர்க்கல் அரண்மனை அனுப்பிய முக்கிய கடிதம்\nநடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெண்: மற்றொரு பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்\nதவறான விமானத்தில் ஏறி 14 மணி நேரம் பயணித்த சினிமா இயக்குனர்: நடந்த சுவாரசியம்\nகனடாவில் மாயமான விமானம்: அதிர்ச்சி கண்டுபிடிப்பு\nகனடா துப்பாக்கி சூடு: பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்\nதவறான பாதையில் 1,500 மைல்கள் பயணம் செய்த விமான பயணி: பின்னர் நடந்த சுவாரசிய சம்பவம்\nதாயையும் மகனையும் காக்கும் முயற்சியில் உயிரிழந்த இலங்கை வம்சாவளிச் சிறுவன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nகனடாவில் பாதசாரி மீது கொலைவெறித் தாக்குதல்: ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்\nநான் இறக்க விரும்பவில்லை: உயிரை பணயம் வைத்து இளைஞர் செய்த மிரட்டலான செயல்\nபொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்: கனடா மனோதத்துவ நிபுணர்கள்\nகாட்டுத்தீயை கட்டுப்படுத்த பல மில்லியன் தொகை ஒதுக்கீடு\nகனடாவில் பரிதாபமாக இறந்த வெளிநாட்டு இளம் பெண்: காதலன் வைத்த உருக்கமான கோரிக்கை\nகனடாவில் இருந்து துரத்தப்பட்ட புகலிடம் கோரிய நபர் விமான நிலையத்தில் உயிரிழப்பு: கதறும் குடும்பத்தார்\nகடலில் சிறுமியுடன் மகிழ்ச்சியாக குளித்த சிறுவன்: இறுதியில் நேர்ந்த சோகம்\nகனடாவில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி\n15 மாதங்கள் கடத்தப்பட்டு சீரழிக்கப்பட்ட இளம் கனடிய பெண்: தற்போது எப்படியுள்ளார்\nதத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம்\nகனடாவில் இருந்து துரத்தப்பட்ட வெளிநாட்டவர்: விமான நிலையத்தில் இறந்த சோகம்\nகனடாவில் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர்\nகனடாவின் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய சவூதி வருத்தம் தெரிவித்த கனடா அமைச்சர்\nகனடாவில் பயங்கர காட்டுத்தீ: வான்கூவர் தீவில் அவசர நிலை பிரகடனம்\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல்: சவுதி அரேபியா வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பதற்றம்\nகனடாவிற்கு தன் நன்றியை காட்டுவதற்காக ஒரு அகதி செய்யும் இனிப்பான செயல்\nமகனோடு சேர்ந்து உயிரைவிட்ட தாய்: கதறிய தந்தை புலம்பெயர்ந்த குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்\nகனேடிய தூதரை அதிரடியாக வெளியேற்றிய சவுதி அரேபியா: வெளியான பின்னணி தகவல்\nகடற்கரை மணலில் வேகமாக புகுந்த கார்: பதறியடித்து ஓடிய மக்கள்... அதிர்ச்சி வீடியோ\nகனடாவில் ஓடும் காரில் சுடப்பட்ட ஜேர்மனி சுற்றுலாப் பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pradosham.com/dailysangalpam.php?month=09&year=2018", "date_download": "2018-08-20T19:10:50Z", "digest": "sha1:HZHZ3TFP4SIMYJERDSAHDM2TQC5SN3PA", "length": 3758, "nlines": 139, "source_domain": "pradosham.com", "title": "Pradosham.com | Daily Panchangam", "raw_content": "\nகிழமை ராகு காலம் குளிகை எமகண்டம்\nஞாயிறு\t மாலை 4:30 மணி முதல் 6:00 வரை\t மதியம் 3:00 முதல் மாலை 4:30 மணி வரை\t மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை\nதிங்கள்\t காலை 7:30 முதல் 9:00 மணி வரை\t மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை\t காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை\nசெவ்வாய்\t மதியம் 3:00 முதல் மாலை 4:30 மணி வரை\t மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை\t காலை 9:00 முதல் 10:30 மணி வரை\nபுதன்\t மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை\t காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை\t காலை 7:30 முதல் 9:00 மணி வரை\nவியாழன்\t மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை\t காலை 9:00 முதல் 10:30 மணி வரை\t காலை 6:30 முதல் 7:30 மணி வரை\nவெள்ளி\t காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை\t காலை 7:30 முதல் 9:00 மணி வரை\t மதியம் 3:00 முதல் மாலை 4:30 மணி வரை\nசனி\t காலை 9:00 முதல் 10:30 மணி வரை\t காலை 6:30 முதல் 7:30 மணி வரை\t மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/shriya5.html", "date_download": "2018-08-20T18:24:42Z", "digest": "sha1:E7FXDKWREKF7IETPZGZMCTNO7FPMYKKJ", "length": 32418, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லீவில் போன ஷ்ரியா சிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த ஷ்ரியா ஒரு வார லீவில் போயுள்ளாராம். காரணம் கேட்ட போது, அவரது அண்ணனுக்கு கல்யாணம் என்றார்கள்.ரஜினியுடன் ஒரு ஜோடியாக நடித்து வரும் ஷ்ரியா ஹைதராபாத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அங்கு நடந்த ஷூட்டிங்கில், ரஜினி, ஷ்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைத் தான் முதலில் சுட்டு முடித்தார் ஷங்கர்.அடுத்த கட்டமாக ரஜினிகாந்த், விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துமீண்டும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது சிவாஜி யூனிட். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தொடர்ந்து படப்பிடிப்புநடைபெறவுள்ளதாம்.இந்த நிலையில் ஷ்ரியாவின் அண்ணனுக்கு திடீரென கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம். காஷ்மீரைச் சேர்ந்த அழகிய பெண்ணைமணக்கிறார் ஷ்ரியாவின் அண்ணன். 22ம் தேதி கல்யாணம். இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவே ஒரு வாரம் விடுப்புகொடுங்கள் சார் என்று ஷங்கரிடம் அப்ளிகேஷன் போட்டுள்ளார் ஷ்ரியா.அதைக் கேட்ட ஷங்கர், ரஜினியுடன் பேசிவிட்டு ஓ.எஸ் என்று வாத்தியார் ஸ்டைலில் லீவ் சாங்ஷன் செய்தாராம்.இதனால் மகிழ்ச்சியோடு அண்ணன் கல்யாணத்துக்குக் கிளம்பிய ஷ்ரியாவை வழியில் மடக்கியபோது, ஷங்கர் சாருடன்பணியாற்றுவது ரொம்பப் புதிய அனுபவமாக உள்ளது. எதையும் பிரமாண்டமாக யோசிக்கிறார், அந்தப் பிரமாண்டம் சற்றும்குறையாமல் அப்படியே படத்திலும் கொண்டு வந்து விடுகிறார்.ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டாருடன் நான் ஆடிப் பாடிய பாடல் அத்தனை பேரையும் கவரும். அந்தப் பாடல் குறித்து வெளியேகூறினால் அவ்வளவுதான், எனவே அதை மட்டும் கேக்காதீங்க.எனக்கு நடனம் நன்றாக வருவதால், பாடல் காட்சிகளை ரொம்ப கேர்ஃபுல்லாக எடுக்கிறார்கள். அதற்கு ரஜினி சார்தான் காரணம்.பிரேமில் நான் ரிச்சாக தெரிய வேண்டும் என்று ஷங்கரிடம் அவர்தான் பரிந்துரை செய்தார். அதற்கேற்ப நடனஅசைவுகளையும் உடைகளையும் மேக்-அப்பையும் அமைத்தனர்.சூப்பர் ஸ்டாரும் அழகாக ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஆட நான்தான் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். அத்தனை அற்புதமாகநடனமாடுகிறார் ரஜினி சார் என்று புளகாங்கிதமாய்ச் சொன்னார் ஷ்ரியா.நீங்க மட்டும்தான் ஹீரோயினா அல்லது வேறு யாரும் உண்டா என்ற கேள்விக்கு ரொம்ப டிப்ளமேட்டிக்காக பதில் சொல்கிறார்ஷ்ரேயா.இப்போதைக்கு நான்தான் ரஜினி சாருடன் ஜோடியாக நடித்து வருகிறேன். எனவே நான்மட்டும்தான் ஹீரோயின், நாளைநடப்பதை யார் அறிவார்? என்று பிலசாபிகல் ரூட்டைப் பிடித்தார்.இன்னொரு விஷயத்தை ஷ்ரியா அவராகவே சொன்னார், நான் தமிழ் கற்க வேண்டும் என ஷங்கர் உத்தரவு போட்டுட்டார்.இதனால் ஹைதராபாத்திலேயே ஒரு வாத்தியாரைப் பிடித்து தமிழ் கற்கிறேன் என்றார்.ஷ்ரியா சொல்லாத இன்னொரு விஷயம். தெலுங்கில் தேவதாசு என் படத்தில் ஒத்தைப் பாட்டுக்கு கும்மாங்குத்து ஆட்டம் ஒன்றுஆடிவிட்டு ரூ. 5 லட்சத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாராம்.நல்லா இருங்கோ.. | Actress Shriya on leave from Shivaji shooting - Tamil Filmibeat", "raw_content": "\n» லீவில் போன ஷ்ரியா சிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த ஷ்ரியா ஒரு வார லீவில் போயுள்ளாராம். காரணம் கேட்ட போது, அவரது அண்ணனுக்கு கல்யாணம் என்றார்கள்.ரஜினியுடன் ஒரு ஜோடியாக நடித்து வரும் ஷ்ரியா ஹைதராபாத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அங்கு நடந்த ஷூட்டிங்கில், ரஜினி, ஷ்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைத் தான் முதலில் சுட்டு முடித்தார் ஷங்கர்.அடுத்த கட்டமாக ரஜினிகாந்த், விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துமீண்டும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது சிவாஜி யூனிட். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தொடர்ந்து படப்பிடிப்புநடைபெறவுள்ளதாம்.இந்த நிலையில் ஷ்ரியாவின் அண்ணனுக்கு திடீரென கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம். காஷ்மீரைச் சேர்ந்த அழகிய பெண்ணைமணக்கிறார் ஷ்ரியாவின் அண்ணன். 22ம் தேதி கல்யாணம். இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவே ஒரு வாரம் விடுப்புகொடுங்கள் சார் என்று ஷங்கரிடம் அப்ளிகேஷன் போட்டுள்ளார் ஷ்ரியா.அதைக் கேட்ட ஷங்கர், ரஜினியுடன் பேசிவிட்டு ஓ.எஸ் என்று வாத்தியார் ஸ்டைலில் லீவ் சாங்ஷன் செய்தாராம்.இதனால் மகிழ்ச்சியோடு அண்ணன் கல்யாணத்துக்குக் கிளம்பிய ஷ்ரியாவை வழியில் மடக்கியபோது, ஷங்கர் சாருடன்பணியாற்றுவது ரொம்பப் புதிய அனுபவமாக உள்ளது. எதையும் பிரமாண்டமாக யோசிக்கிறார், அந்தப் பிரமாண்டம் சற்றும்குறையாமல் அப்படியே படத்திலும் கொண்டு வந்து விடுகிறார்.ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டாருடன் நான் ஆடிப் பாடிய பாடல் அத்தனை பேரையும் கவரும். அந்தப் பாடல் குறித்து வெளியேகூறினால் அவ்வளவுதான், எனவே அதை மட்டும் கேக்காதீங்க.எனக்கு நடனம் நன்றாக வருவதால், பாடல் காட்சிகளை ரொம்ப கேர்ஃபுல்லாக எடுக்கிறார்கள். அதற்கு ரஜினி சார்தான் காரணம்.பிரேமில் நான் ரிச்சாக தெரிய வேண்டும் என்று ஷங்கரிடம் அவர்தான் பரிந்துரை செய்தார். அதற்கேற்ப நடனஅசைவுகளையும் உடைகளையும் மேக்-அப்பையும் அமைத்தனர்.சூப்பர் ஸ்டாரும் அழகாக ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஆட நான்தான் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். அத்தனை அற்புதமாகநடனமாடுகிறார் ரஜினி சார் என்று புளகாங்கிதமாய்ச் சொன்னார் ஷ்ரியா.நீங்க மட்டும்தான் ஹீரோயினா அல்லது வேறு யாரும் உண்டா என்ற கேள்விக்கு ரொம்ப டிப்ளமேட்டிக்காக பதில் சொல்கிறார்ஷ்ரேயா.இப்போதைக்கு நான்தான் ரஜினி சாருடன் ஜோடியாக நடித்து வருகிறேன். எனவே நான்மட்டும்தான் ஹீரோயின், நாளைநடப்பதை யார் அறிவார் என்று பிலசாபிகல் ரூட்டைப் பிடித்தார்.இன்னொரு விஷயத்தை ஷ்ரியா அவராகவே சொன்னார், நான் தமிழ் கற்க வேண்டும் என ஷங்கர் உத்தரவு போட்டுட்டார்.இதனால் ஹைதராபாத்திலேயே ஒரு வாத்தியாரைப் பிடித்து தமிழ் கற்கிறேன் என்றார்.ஷ்ரியா சொல்லாத இன்னொரு விஷயம். தெலுங்கில் தேவதாசு என் படத்தில் ஒத்தைப் பாட்டுக்கு கும்மாங்குத்து ஆட்டம் ஒன்றுஆடிவிட்டு ரூ. 5 லட்சத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாராம்.நல்லா இருங்கோ..\nலீவில் போன ஷ்ரியா சிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த ஷ்ரியா ஒரு வார லீவில் போயுள்ளாராம். காரணம் கேட்ட போது, அவரது அண்ணனுக்கு கல்யாணம் என்றார்கள்.ரஜினியுடன் ஒரு ஜோடியாக நடித்து வரும் ஷ்ரியா ஹைதராபாத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அங்கு நடந்த ஷூட்டிங்கில், ரஜினி, ஷ்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைத் தான் முதலில் சுட்டு முடித்தார் ஷங்கர்.அடுத்த கட்டமாக ரஜினிகாந்த், விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துமீண்டும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது சிவாஜி யூனிட். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தொடர்ந்து படப்பிடிப்புநடைபெறவுள்ளதாம்.இந்த நிலையில் ஷ்ரியாவின் அண்ணனுக்கு திடீரென கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம். காஷ்மீரைச் சேர்ந்த அழகிய பெண்ணைமணக்கிறார் ஷ்ரியாவின் அண்ணன். 22ம் தேதி கல்யாணம். இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவே ஒரு வாரம் விடுப்புகொடுங்கள் சார் என்று ஷங்கரிடம் அப்ளிகேஷன் போட்டுள்ளார் ஷ்ரியா.அதைக் கேட்ட ஷங்கர், ரஜினியுடன் பேசிவிட்டு ஓ.எஸ் என்று வாத்தியார் ஸ்டைலில் லீவ் சாங்ஷன் செய்தாராம்.இதனால் மகிழ்ச்சியோடு அண்ணன் கல்யாணத்துக்குக் கிளம்பிய ஷ்ரியாவை வழியில் மடக்கியபோது, ஷங்கர் சாருடன்பணியாற்றுவது ரொம்பப் புதிய அனுபவமாக உள்ளது. எதையும் பிரமாண்டமாக யோசிக்கிறார், அந்தப் பிரமாண்டம் சற்றும்குறையாமல் அப்படியே படத்திலும் கொண்டு வந்து விடுகிறார்.ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டாருடன் நான் ஆடிப் பாடிய பாடல் அத்தனை பேரையும் கவரும். அந்தப் பாடல் குறித்து வெளியேகூறினால் அவ்வளவுதான், எனவே அதை மட்டும் கேக்காதீங்க.எனக்கு நடனம் நன்றாக வருவதால், பாடல் காட்சிகளை ரொம்ப கேர்ஃபுல்லாக எடுக்கிறார்கள். அதற்கு ரஜினி சார்தான் காரணம்.பிரேமில் நான் ரிச்சாக தெரிய வேண்டும் என்று ஷங்கரிடம் அவர்தான் பரிந்துரை செய்தார். அதற்கேற்ப நடனஅசைவுகளையும் உடைகளையும் மேக்-அப்பையும் அமைத்தனர்.சூப்பர் ஸ்டாரும் அழகாக ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஆட நான்தான் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். அத்தனை அற்புதமாகநடனமாடுகிறார் ரஜினி சார் என்று புளகாங்கிதமாய்ச் சொன்னார் ஷ்ரியா.நீங்க மட்டும்தான் ஹீரோயினா அல்லது வேறு யாரும் உண்டா என்ற கேள்விக்கு ரொம்ப டிப்ளமேட்டிக்காக பதில் சொல்கிறார்ஷ்ரேயா.இப்போதைக்கு நான்தான் ரஜினி சாருடன் ஜோடியாக நடித்து வருகிறேன். எனவே நான்மட்டும்தான் ஹீரோயின், நாளைநடப்பதை யார் அறிவார் என்று பிலசாபிகல் ரூட்டைப் பிடித்தார்.இன்னொரு விஷயத்தை ஷ்ரியா அவராகவே சொன்னார், நான் தமிழ் கற்க வேண்டும் என ஷங்கர் உத்தரவு போட்டுட்டார்.இதனால் ஹைதராபாத்திலேயே ஒரு வாத்தியாரைப் பிடித்து தமிழ் கற்கிறேன் என்றார்.ஷ்ரியா சொல்லாத இன்னொரு விஷயம். தெலுங்கில் தேவதாசு என் படத்தில் ஒத்தைப் பாட்டுக்கு கும்மாங்குத்து ஆட்டம் ஒன்றுஆடிவிட்டு ரூ. 5 லட்சத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாராம்.நல்லா இருங்கோ..\nசிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த ஷ்ரியா ஒரு வார லீவில் போயுள்ளாராம். காரணம் கேட்ட போது, அவரது அண்ணனுக்கு கல்யாணம் என்றார்கள்.\nரஜினியுடன் ஒரு ஜோடியாக நடித்து வரும் ஷ்ரியா ஹைதராபாத்தில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அங்கு நடந்த ஷூட்டிங்கில், ரஜினி, ஷ்ரியா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைத் தான் முதலில் சுட்டு முடித்தார் ஷங்கர்.\nஅடுத்த கட்டமாக ரஜினிகாந்த், விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துமீண்டும் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது சிவாஜி யூனிட். அங்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை தொடர்ந்து படப்பிடிப்புநடைபெறவுள்ளதாம்.\nஇந்த நிலையில் ஷ்ரியாவின் அண்ணனுக்கு திடீரென கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம். காஷ்மீரைச் சேர்ந்த அழகிய பெண்ணைமணக்கிறார் ஷ்ரியாவின் அண்ணன். 22ம் தேதி கல்யாணம். இதில் கலந்து கொள்ள வேண்டும் எனவே ஒரு வாரம் விடுப்புகொடுங்கள் சார் என்று ஷங்கரிடம் அப்ளிகேஷன் போட்டுள்ளார் ஷ்ரியா.\nஅதைக் கேட்ட ஷங்கர், ரஜினியுடன் பேசிவிட்டு ஓ.எஸ் என்று வாத்தியார் ஸ்டைலில் லீவ் சாங்ஷன் செய்தாராம்.\nஇதனால் மகிழ்ச்சியோடு அண்ணன் கல்யாணத்துக்குக் கிளம்பிய ஷ்ரியாவை வழியில் மடக்கியபோது, ஷங்கர் சாருடன்பணியாற்றுவது ரொம்பப் புதிய அனுபவமாக உள்ளது. எதையும் பிரமாண்டமாக யோசிக்கிறார், அந்தப் பிரமாண்டம் சற்றும்குறையாமல் அப்படியே படத்திலும் கொண்டு வந்து விடுகிறார்.\nஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டாருடன் நான் ஆடிப் பாடிய பாடல் அத்தனை பேரையும் கவரும். அந்தப் பாடல் குறித்து வெளியேகூறினால் அவ்வளவுதான், எனவே அதை மட்டும் கேக்காதீங்க.\nஎனக்கு நடனம் நன்றாக வருவதால், பாடல் காட்சிகளை ரொம்ப கேர்ஃபுல்லாக எடுக்கிறார்கள். அதற்கு ரஜினி சார்தான் காரணம்.பிரேமில் நான் ரிச்சாக தெரிய வேண்டும் என்று ஷங்கரிடம் அவர்தான் பரிந்துரை செய்தார். அதற்கேற்ப நடனஅசைவுகளையும் உடைகளையும் மேக்-அப்பையும் அமைத்தனர்.\nசூப்பர் ஸ்டாரும் அழகாக ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஆட நான்தான் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். அத்தனை அற்புதமாகநடனமாடுகிறார் ரஜினி சார் என்று புளகாங்கிதமாய்ச் சொன்னார் ஷ்ரியா.\nநீங்க மட்டும்தான் ஹீரோயினா அல்லது வேறு யாரும் உண்டா என்ற கேள்விக்கு ரொம்ப டிப்ளமேட்டிக்காக பதில் சொல்கிறார்ஷ்ரேயா.\nஇப்போதைக்கு நான்தான் ரஜினி சாருடன் ஜோடியாக நடித்து வருகிறேன். எனவே நான்மட்டும்தான் ஹீரோயின், நாளைநடப்பதை யார் அறிவார் என்று பிலசாபிகல் ரூட்டைப் பிடித்தார்.\nஇன்னொரு விஷயத்தை ஷ்ரியா அவராகவே சொன்னார், நான் தமிழ் கற்க வேண்டும் என ஷங்கர் உத்தரவு போட்டுட்டார்.இதனால் ஹைதராபாத்திலேயே ஒரு வாத்தியாரைப் பிடித்து தமிழ் கற்கிறேன் என்றார்.\nஷ்ரியா சொல்லாத இன்னொரு விஷயம். தெலுங்கில் தேவதாசு என் படத்தில் ஒத்தைப் பாட்டுக்கு கும்மாங்குத்து ஆட்டம் ஒன்றுஆடிவிட்டு ரூ. 5 லட்சத்தை வாங்கிப் போட்டுக் கொண்டாராம்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/", "date_download": "2018-08-20T19:09:41Z", "digest": "sha1:OYVSD7TBQIHZVM4PUHAB5SA3AZVBABHE", "length": 11978, "nlines": 191, "source_domain": "yourkattankudy.com", "title": "WWW.YOURKATTANKUDY.COM | eye of the city", "raw_content": "\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\n22.08.2018 புதன்கிழமை காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரினால் கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nஇன்ஷா அல்லாஹ் காலை 6.15 மணிக்கு பெருநாள் தொழுகைக்காக வருகை தரவுள்ள நீங்கள் கீழுள்ள ஒழுங்கு விதிகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். Read the rest of this entry »\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்’ தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nஅன்பினிய பெற்றோர்களே.. ஆசிரியப் பெருந்தகைகளே.. மாணவ மணிகளே..\nநாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்துள்ள இவ்வருடத்திற்கான தரம் 05\nபுலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றி அரசாங்கத்தின்\nகல்விக் கொள்கைக்கமைவாக 70 புள்ளிகளையும், அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும்\nபெற்று சித்தியடையும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சமூகங்களைச்\nசேர்ந்த மாணவ மாணவிகளைப் பாராட்டி அவர்களுக்கான கண்கவரும் சான்றிதழ்களை\nவழங்கும் பாரிய திட்டமொன்றினை இவ்வருடத்திலிருந்து நான்\nஆரம்பிக்கவுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்களின் கவனத்திற்கு\nஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர்\nஇலங்கை அரசு ஒவ்வொரு வருடமும் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றபோதிலும்,அவர்களுள் 200 பேர் வெளிநாடுகளுக்கும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் சென்று விடுகின்றனர்.மீதி வைத்தியர்களை நாட்டில் உள்ள அணைத்து வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து மிகவும் சிரமத்தின் மத்தியில் சிறந்த சேவையை வழங்கி வருகிறோம் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் கூறினார். Read the rest of this entry »\nவட்ஸ் ஆப் வழியாக உயிர் குடிக்கும் மோமோ விளையாட்டு\nலண்டன்: ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அபாயம் செல்போன் வடிவில் நம்மை துளைத்தெடுக்கிறது. முன்பு ப்ளூவேல். இப்போது மோமோ. ப்ளூவேல் போலத்தான் இதுவும் ஒரு விளையாட்டு. ஜப்பான் நாட்டில் உருவாக்கியதாக கூறப்படும் ‘மோமோ சேலஞ்ச்’ எனப்படும் ஒன்லைன் விளையாட்டு. ப்ளூவேல் என்பது நாம் பயன் படுத்தும் ஒரு தனி அப்ளிகேஷன். ஒன்லைன் தளத்திற்கு சென்று தான் விளையாட வேண்டும். ஆனால் இந்த மோமோ சேலஞ்ச் வாட்ஸ் ஆப் மூலம் விளையாடப்படுகிறது. இது ஒரு உயிர் குடிக்கும விளையாட்டு. Read the rest of this entry »\nஆகஸ்ட் 20ம் திகதி திங்கட்கிழமை அரபா தினமாக சவுதி அறிவிப்பு\nறியாத்: துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை 11ம் திகதி சனிக்கிழமை மாலை சவுதி அரேபியாவில் தென்பட்டதையடுத்து, துல்ஹஜ் மாதம் 12ம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதன்படி எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை அறபா தினமாகவும், 21ம் திகதி செவ்வாய்க்கிழமை ஈதுல் அல்ஹா – ஹஜ் பெருநாள் தினமாகவும் சவுதி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. Read the rest of this entry »\nதேசிய குத்துச்சண்டை பட்டம் வென்ற இடி அமீன் 1971ஆம் ஆண்டு, மில்டன் ஒபோடேவை ஆட்சியில் இருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றினார். தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில், இதற்கு முன் கேள்விப்பட்டிராத வகையில் கொடூரமாக நடந்துக் கொண்ட இடி அமீன், நவீன வரலாற்றின் கொடுங்கோல் ஆட்சியாளர்களில் முன்னணியில் இருக்கிறார். Read the rest of this entry »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்' தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nடில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்...\nஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - ஹரீஸ் எம். பி.\nஅறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2018/02/27/postmaster-mazahir-kariyappar/", "date_download": "2018-08-20T19:08:21Z", "digest": "sha1:274VKJXAJRA6Q3KXEVDI77XKVJ3I27IB", "length": 9361, "nlines": 169, "source_domain": "yourkattankudy.com", "title": "காத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்\nகாத்தான்குடி: காத்தான்குடி தபால் நிலையத்தில் பிரதேச தபால் அதிபராக கடமையாற்றி சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம். மஸாஹிர் காரியப்பருக்கான பிரியாவிடை நிகழ்வு 26 நேற்று திங்கட்கிழமை பிற்பகல் காத்தான்குடி தபால் நிலையத்தில் இடம்பெற்றது.\nகாத்தான்குடி தபால் நிலையத்தின் அஞ்சல் சேவகர் கே.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பிரியாவிடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்தின் பிரதம இலிகிதர் ஏ.சுகுமார், மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் காரியாலய உத்தியோகத்தர் எஸ்.துஷ்யந்தன், காத்தான்குடி தபால் நிலைய உதவித் தபால் அதிபர்களான எம்.பீ.எம்.அன்சார்,திருமதி பைறூசியா உட்பட காத்தான்குடி தபால் நிலையத்தின் உப தபாலக அதிபர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,அஞ்சற்காரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nகாத்தான்குடி தபால் நிலையத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,அஞ்சற்காரர்கள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த பிரியாவிடை நிகழ்வின் போது இடமாற்றம் பெற்றுச் செல்லும் தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பருக்கு பண அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டதோடு அவர் தபால் நிலையத்திற்கு ஆற்றிய சேவைகள் தொடர்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nகாத்தான்குடி தபால் நிலைய அதிபர் மஸாஹிர் காரியப்பர் சம்மாந்துறை பிரதேச தபால் நிலைய அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்வதால் காத்தான்குடி தபால் நிலைய அதிபர் வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு பிரதம தபாலகத்தில் கடமையாற்றும் தபால் அதிபர் ஏ.சகாயநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இரு தபால் அதிபர்களும் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி தமது கடமைகளை தத்தமது தபால் நிலையத்தில் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« “வாக்குவாதம் நடந்து முடிந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வாகனங்களில் வந்தவர்களே பள்ளிவாயல் தாக்குதலை நடாத்தினார்கள்”\nமுதல் நாளே சீர் குலைந்துபோன போர் நிறுத்தம் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்' தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nடில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்...\nஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - ஹரீஸ் எம். பி.\nஅறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-20T18:49:18Z", "digest": "sha1:NQ3BGOMBETUEKRDL7XS2TDM3Y2JJM5LO", "length": 6181, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news கல்வி Archives - Naangamthoon", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக ஊழல்:அதிகாரிகளுக்கு சம்மன்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த…\n1199 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு:அதிகாரி உமா சஸ்பெண்ட்\n17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nதமிழக அரசு துறைகளில் காலியாக…\n15 வயதில் பி.எச்டி பயிலும் இந்திய வம்சாவளி மாணவர்\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டு பாடம் கட்டாயம் – மத்திய அரசு திட்டம்\n10 ,11, 12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த தடை\nதனியார் பள்ளிகளில் 10, 11…\nபள்ளி கல்வித்துறையில் மேலும் சில மாற்றங்கள்-செங்கோட்டையன்\nகோபி அருகே உள்ள குள்ளம்பாளையம்…\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தடை\n8 ஆம் வகுப்பு வரை ‘அனைவரும் தேர்ச்சி திட்டம் இனிமேல் இல்லை\n5 முதல் 8 ஆம் வகுப்பு வரை…\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kollywoodtoday.net/reviews/kaali-movie-review/", "date_download": "2018-08-20T18:06:13Z", "digest": "sha1:X47JCDF6BIZANLH27HAMJ3EXSMLZDIWL", "length": 15777, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kaali Movie Review", "raw_content": "\nவித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்கிற பெயரை சமீபகாலமாக வெளியான அவரது படங்கள் தக்கவைக்க தவறிய நிலையில் கிருத்திகா உதயநிதி டைரக்சனில் அவர் நடித்துள்ள ‘காளி’ படம் வெளியாகியுள்ளது. இந்தப்படமாவது விஜய் ஆண்டனி ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளதா..\nஅமெரிக்காவில் மிகப்பெரிய மருத்துவனைக்கு சொந்தக்காரரான விஜய் ஆண்டனிக்கு, தான் தத்துப்பிள்ளை என்கிற விபரம் தெரியவர, தனது உண்மையான பெற்றோர் யார் என தேடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். தனது அம்மா பெயர் பார்வதி என தெரிந்துகொண்ட விஜய் ஆண்டனி, தனது தந்தை யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக கனவுக்கரை என்கிற கிராமத்தில் கிளினிக் அமைத்து டேரா போடுகிறார்.\nகிராமத்தில் உள்ள ஒவ்வொருவரின் ரத்தவகையை சோதித்து டி.என்.ஏ டெஸ்ட் மூலம் உண்மையை அறியும் மிகப்பெரிய வேலையில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி. அங்கே கிராமத்து தலைவர் மதுசூதனன், காட்டில் மறைந்து வாழும் திருடன் நாசர், சர்ச் பாதர் ஜெயபிரகாஷ் என ம்மோவர் இவரது சந்தேக வளையத்துக்குள் வருகின்றனர். ஆனால் இவர்கள் சொல்லும் கதை மூலம் தனது தாய் யார் என்கிற குழப்பமும் விஜய் ஆண்டனியிடம் சேர்ந்துகொள்கிறது. இந்த குழப்பம் இறுதியில் தீர்ந்ததா.. விஜய் ஆண்டனிக்கு தனது உண்மையான பெற்றோர் யார் என்கிற விபரம் தெரியவந்ததா என்பது க்ளைமாக்ஸ்.\nவிஜய் ஆண்டனி நன்றாகவே நடிக்கிறார்.. அதிலும் அவருக்கு பிடித்தமான டாக்டர் கேரக்டரில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்.. இதுதவிர கதையோட்டத்தில் பிளாஸ்பேக்கில் இன்னும் மூன்று விஜய் ஆண்டனிகள் வெவ்வேறு கேரக்டர்களில் வந்து போகிறார்கள். ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்ட முயற்சித்திருந்தாலும் சர்ச் பாதர் கேரக்டரில் அவரை ரசிக்க முடிகிறது. ஆனால் விஜய் ஆண்டனிக்கான படமா இது என்றால் நிச்சயமாக இல்லை.. சொல்லப்பட்ட கதையில் தன்னை புகுத்திக்கொண்டிருக்கிறார் மனிதர்.\nஇந்தப்படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா ஐயர், ஷில்பா மஞ்சுநாத் என நான்கு கதாநாயகிகளுக்கு என்ன வேலை என நினைப்பு தோன்றினாலும் ஒவ்வொரு பிளாஸ்பேக்கிற்கு ஒன்றாக அவர்களை இயக்குனர் கோர்த்த விதம் பாராட்டுக்குரியது. நால்வரும் ஒவ்வொருவிதமாக தங்களை முன்னிறுத்தினாலும் மேலுதட்டு மச்சத்துடன் கிராமத்து அழகியாக வரும் ஷில்பா மஞ்சுநாத் தான் பர்ஸ்ட் மார்க் வாங்குகிறார். அஞ்சலியின் கதாபாத்திர படைப்பு ரொம்ப ரொம்ப சாதாரணம். கொஞ்ச நேரமே வந்தாலும் சுனைனாவின் நடிப்பில் கம்பீரம். ரோமியோ ஜூலியட் நாயகியாக நம்மை கவர்கிறார் அம்ரிதா ஐயர்.\nஇவர்கள் தவிர படம் முழுதும் (பிளாஸ்பேக் தவிர்த்து) விஜய் ஆண்டனியுடன் பயணித்து கலகலப்பூட்டுகிறார் யோகிபாபு.. இருந்தாலும் நிறைய காட்சிகளில் அவருக்கு தீனி குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது.. மதுசூதனன், நாசர், ஜெயபிரகாஷ் ஆகியோரின் கேரக்டர்களுக்கான பிளாஸ்பேக்கில் விஜய் ஆண்டனியையே கொண்டுவந்ததும் வித்தியாச முயற்சிதான்.. ஆரம்பத்தில் குழப்பினாலும் போகப்போக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மதுசூதனன் பற்றிய பிளாஸ்பேக் தான் ரொம்ப இழுவை… கவனித்து கத்திரி போட்டிருக்கலாம். ஆர்.கே.சுரேஷ், வேலா ராமமூர்த்தி ஆகியோரின் வில்லத்தனம் வழக்கம்போல ஒகே.\nரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு கிராமத்து எபிசோடுகளிலேயே ஒவ்வொரு விதமாக வெரைட்டி காட்டுகிறது. நடித்துக்கொண்டே இசையமைத்திருப்பதாலோ என்னவோ பாடல்களில் விஜய் ஆண்டனி இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. ஆனால் பின்னணி இசையில் அதை சரி செய்திருக்கிறார்.\nஇயக்குனர் கிருத்திகா உதயநிதி ஒவ்வொரு பிளாஸ்பேக் உத்தியை பயன்படுத்தி காட்சியையும் எடுத்திருக்கும் விதம் அழகு தான்.. ஆனால் தனது தாய் தந்தையை தேடிவரும் ஹீரோ, அவர்களை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளால் விஜய் ஆண்டனிக்கு மட்டுமல்ல, நமக்கும் அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை பாதரை பழிவாங்க ஆர்,கே.சுரேஷ் 25 வருடங்களாக காத்திருப்பார்.. அதற்கான லாஜிக் எங்கேயும் சொல்லப்படவில்லை.. அம்மாவுக்கு ரெண்டு கிட்னியும் செயல் இழந்துபோன விஷயம் ஒரு டாக்டர்களாக இருக்கும் விஜய் ஆண்டனிக்கும் அவரது அப்பாவுக்குமே தெரியாது என்பதெல்லாம் காதுல பூ சமாச்சாரம். விஜய் ஆண்டனியின் குளிர் காய்ச்சலை போக்க சுனைனா எடுக்கும் ரிஸ்க் எல்லாம் எண்பதுகளிலேயே பார்த்து புளித்தவை. அதேபோல ஆரம்ப காட்சிகளில் ரொம்பவே பில்டப் ஆக காட்டப்படும் பாம்பு, மாடு ஆகியவை பற்றி பின்னர் எங்குமே காட்டாமல் ஏமாற்றி விடுகிறார் இயக்குனர்.\nஇந்த ‘காளி’ நல்லவன் தான்.. ஆனால் அவ்வளவு உக்கிரமானவன் அல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-08-20T19:02:51Z", "digest": "sha1:QUZQTFM6VBS7TSFMW3RSNR3C4SLDQ7R7", "length": 14583, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மஸ்தான் இந்து விவகார அமைச்சரா..? கண்டிக்கும் சிறிரெலோ - சமகளம்", "raw_content": "\nஊவாவில் ‘சுவசெரிய’ இலவச அம்பியுலன்ஸ் சேவை\nவிக்னேஸ்வரனுக்கு கூறுவதற்கு உரிமையுண்டு : மங்கள\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 55 குற்றச்சாட்டுகள் அடங்கிய முறைப்பாடு: ஜி.ரி.லிங்கநாதன்\nவவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைப்பு\nவவுனியாவில் அனர்த்தங்களின் போது நலன்புரி நிலையங்களாக தொழிற்படும் 16 பொது கட்டிடங்களை புனரமைக்க 5.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு: அரசாங்க அதிபர்\nவெலிக்கடை சிறைச்சாலையில் மீண்டும் பெண்கள் போராட்டம்\nஅட்டன் ஸ்ரதன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 23 குடும்பங்கள் இடம்பெயர்வு\nதமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எம்மை பாரம்பரியத்தை பாதுகாக்க ஒன்றிணையுங்கள்\nவவுனியாவில் விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு\nமாற்றுத் திறனாளியின் அழககம் தாக்கப்பட்டமை காட்டு மிராண்டிகளின் இரக்கமற்ற செயல்: வன்மையாக கண்டிக்கிறது வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கம்\nமஸ்தான் இந்து விவகார அமைச்சரா..\nஇலங்கை தீவின் வரலாற்றில் முதன் முறையாக இந்து விவகார அமைச்சின் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்துள்ளது இந்த நல்லாட்சியில் தான் என்பது பெரும் கவலைக்குரிய விடயம் என சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கட்கு இந்து விவகார பிரதி அமைச்சு வழங்கப்பட்டதையடுத்து அதனை கண்டிக்கும் முகமாக சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் ஊடகங்களிற்கு அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்\nகுறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nஇந்து பாரம்பிரியத்தை அறியாதவர்களுக்கும் இந்துக்கள் தெய்வமாக வழிபடும் கோமாதாவை வெட்டி வியாபாரம் செய்யும் நபர்களுக்கும் இந்த பதவியை வழங்கியதென்பது இலங்கையில் வாழும் அனைத்து இந்து மக்களையும் இந்த நல்லாட்சி அரசு புறக்கணிப்பதாகவே கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.\nகடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை சோசலிச குடியரசின் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கை தமிழர்களின் பெருமதிப்பை பெற்றவர். ஆனால் இன்று இந்து விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை தெரிந்தெடுத்திருப்பது வேதனைக்குரிய விடயமென்பதுடன் இந்துக்கள் மத்தியில் பெரும் அவப்பெயரை ஜனாதிபதிக்கு எடுத்துக்கொடுத்துள்ளது. நாட்டின் தலைவர் இதனை சிந்திக்காமல் செய்துள்ளாரா\nஇதேவேளை பெளத்த விவகார அமைச்சு அல்லது முஸ்லிம் விவகார அமைச்சுக்களை வேறு ஒரு இனத்தவருக்கு வழங்கியிருக்க முடியுமா.. அல்லது அந்த இனத்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா.. அல்லது அந்த இனத்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா.. தமிழர்கள் மீது மாத்திரம் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதால் நல்லாட்சி என கூறிய இந்த அரசும் தமிழர்கள் மீது தொடர்ந்து அடக்கு முறையை பிரயோகிப்பதாகவே தெரிகின்றது.\nஎனவே இந்த அமைச்சுப்பதவியினை பற்றி மேதகு ஜனாதிபதி அவர்கள் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் ப.உதயராசா அவர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious Postசிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான பாதை புனரமைப்பு குறித்து வவுனியா நகரபிதா விளக்கம் Next Postஇவன்கா டிரம்பின் டுவிட்டர்\nஊவாவில் ‘சுவசெரிய’ இலவச அம்பியுலன்ஸ் சேவை\nவிக்னேஸ்வரனுக்கு கூறுவதற்கு உரிமையுண்டு : மங்கள\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 55 குற்றச்சாட்டுகள் அடங்கிய முறைப்பாடு: ஜி.ரி.லிங்கநாதன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sltj.lk/category/branch/kattankudy/", "date_download": "2018-08-20T18:47:25Z", "digest": "sha1:LFCD7XDECVF3UUBAWZGZW5TEROMLLDJ7", "length": 19882, "nlines": 291, "source_domain": "www.sltj.lk", "title": "காத்தான்குடி", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nகாத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்”\nSLTJ காத்தான்குடி கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்” காத்தான்குடி, ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (12.11.2017) நடைபெற்றது.\nSLTJ காத்தான்குடிக் கிளை நடாத்திய முதலாம் இரத்த தான முகாம்..\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடிக் கிளை நடாத்திய இரத்ததான முகாம் 07.05.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில்\nSLTJ காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா 04.01.2017 – புதன்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கிளை\nSLTJ காத்தான்குடி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 04.01.2017 அன்று சனிக்கிழமை காத்தான்குடி கிளை மர்க்கஸில் நடைபெற்றது,\nகாத்தான்குடி கிளையினால் 500 அழைப்பு இதழ்கள் விநியோகம்\nSLTJ காத்தான்குடி கிளையினால் ஏகத்துவத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பு மாத இதழ் 500\nகாத்தான்குடி கிளையினால் துண்டுப் பிரசுரம் வெளியீடு\nகடந்த 23-12-2016 அன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கிளையினால் துண்டுப்பிரசுரம் ஒன்று வினியோகிக்கப்பட்டது.\nகாத்தான்குடி கிளையின் தெருமுனைப் பிரச்சாரம்\nதக்வா பள்ளிவாயால் அருகில் 28.12.2016 – புதன்கிழமை “இஸ்லாத்தின் நன்னெறிகள்” எனும் தலைப்பின் கீழ் நபிவழியை மாத்திரம் பின்பற்ற வேண்டும்\nகாத்தான்குடி கிளை நடத்திய எளியமார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி\n25.12.2016 – ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடிக் கிளையினால் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி\nஒல்லிக்குளம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nகாத்தான்குடி கிளை சார்பில் 26.12.2016 – திங்கட்கிழமை ஒல்லிக்குளத்தில் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தின் அருகே வட்டியைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம்\nவைத்தியசாலை தஃவா – காத்தான்குடி கிளை\nகாத்தான்குடி கிளை சார்பில் 25.12.2016 ஞாயிற்றுக் கிழமை வைத்தியசாலை தஃவா மேற்கொள்ளப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்\nதாக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் தவ்ஹீத் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nகாத்தான்குடியை அண்மித்த பத்தொன்பதாம் வட்டாரத்தில் கடந்த 17.12.2016 – சனிக்கிழமை “கந்தூரிக்கு எதிராக” குர்ஆன் சுன்னா ஆதாரத்துடன் உரையாற்றிய போது தெருமுனைப்\nகாத்தான்குடி கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – காத்தான்குடி கிளையின் ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி 11.12.2016 அன்று கிளை மர்கஸில் நடத்தப்பட்டது.\nதீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம்\nகாத்தான்குடி கிளை சார்பாக மொடர்ன் ஃபாம் பகுதியில் தீவிரவாதத்துக்கு எதிரான பிரச்சாரம் 11.12.2016 அன்று மேற்கொள்ளப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.\nதீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் – காத்தான்குடி கிளை\nகாத்தான்குடி கிளை சார்பில் 10.12.2016 அன்று பத்ரியா பாடசாலை அருகில் தீவிரவாதத்திற்க்கு எதிரான தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. – உரை.\n“தீவிரவாதத்துக்கு எதிரான தீவிரப் பிரச்சாரம்” – காத்தான்குடி கிளை\nஇன்று 08.12.2016 – வியாழக்கிழமை நமது காத்தான்குடிக் கிளையினால் தீவிரவாதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.\nஇதன்போது “எப்பேர்ப்பட்ட யுத்தத்திலும், எப்பேர்ப்பட்ட\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்\nஇரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”\nஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/story-about-navratri-017260.html", "date_download": "2018-08-20T18:31:25Z", "digest": "sha1:LSMB663RMOGAPPVGII2LD7IWEJTCRST7", "length": 12399, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "நவராத்திரி பூஜையினால் இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த அரசரின் கதை !! | Story about navratri - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நவராத்திரி பூஜையினால் இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த அரசரின் கதை \nநவராத்திரி பூஜையினால் இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த அரசரின் கதை \nஇந்தியா முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட இருக்கிறது. நவராத்திரி கொண்டாடப்படுவதற்கு முன்னதாக நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதையை தெரிந்து கொள்ளலாம்.\nகாட்டில் கணவர் மனைவி வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் வறுமையில் இருக்கும் அவர்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறார்கள் கணவருக்கு தீர முடியாத நோய் வேறு அடுத்து என்ன செய்யப்போகிறோம் உணவைத் தேடி செல்வதா மருந்தா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.\nஅப்போது வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉதவி கேட்டு மகரிஷி ஒருவர் வந்திருந்தார். அழுது வீங்கிய கண்களுடன் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே, மகரிஷி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல இருக்கிறது. என்ன ஆயிற்று ஏன் இங்கே வந்திருக்கிறாய் \n\"எங்களுடைய தயாதிகள் எங்கள் மீது பொறாமைபட்டு எங்களுடன் போர்புரிந்து எங்களை தோற்கடித்துவிட்டார்கள்\" என்று வருத்தப்பட்டிருக்கிறாள். உண்மையை அறிந்த முனிவர் ஆறுதல் அளித்ததோடு, அருகில் இருக்கும் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை பூஜை செய்தால் இழந்த ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் அதோடு வம்சத்தை விரித்தி செய்ய புத்திரனும் பிறப்பான் என்கிறார்.\nஅதைக் கேட்டு மகிழ்ந்த அந்தப் பெண்மணி தன் கணவருடன் பஞ்சாவடிக்கு செல்கிறாள். இவரின் வீட்டிற்கு வந்த அங்கிரஸ முனிவர் அங்கே இருந்தார். அவர் முன்னின்று நடத்திய நவராத்திரி பூஜையை செய்து வைத்தார்.\nபூஜையை முறைப்படி முடித்த பின்னர் அங்கிரஸர் முனிவருடன் அவரின் ஆசிரமத்திற்கே சென்றனர். அங்கே அரசர் நோயிலிருந்து மீண்டார். அரசிக்கு சூரியப் பிரதாபன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.\nஅங்கிரஸ முனிவரை குருவாக ஏற்ற சூரியப் பிரதமன் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். தன் பெற்றோர் ஏமாற்றப்பட்ட கதையை கேட்டு , பகைவர்களுடன் போரிட்டு தங்களின் நாட்டை மீட்டு வருகிறான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nநவராத்திரி விரதத்தின் போது வரும் அசிடிட்டியை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்\nநவராத்திரி டயட் பற்றி தெரியுமா\nநவராத்திரி அன்று கொலுவை தவிர லட்சுமி அருள் பெற வேறு என்ன செய்யலாம்\nநவராத்திரி விரதமிருப்பவர்கள் 9 நாட்களுக்கு என்னென்ன சாப்பிடக் கூடாது தெரியுமா\nநவராத்திரி நைவேத்தியம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nஎரியப்ப ரெசிபி / ஸ்வீட் தோசை செய்வது எப்படி\nஅனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்\nபண்டிகை காலத்தில் பெண்கள் மேக்கப் போடுவதற்கு சில டிப்ஸ் \nநவராத்திரி ஸ்பெஷலாக ட்ரெண்டில் வந்திருக்கும் வெஸ்டர்ன் உடைகள்\nநவராத்திரிக்காக பாரம்பரிய பெங்காலி உடையில் கலக்கும் பிரபலங்கள்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா \nதண்ணீர் மட்டும் குடித்து நவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள்\nSep 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/03/blog-post_97.html", "date_download": "2018-08-20T18:04:36Z", "digest": "sha1:W6WPD2DJPJYSPULYYW47G4XAZGH5HATQ", "length": 20029, "nlines": 224, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : காதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்:", "raw_content": "\nகாதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்:\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM காதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்: 1 comment\n‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந் திருக்கும் படம், ‘பிரேமம்’ புகழ் மடோனாவின் அறிமுகம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக் கிறது ‘காதலும் கடந்து போகும்’. 2010-ல் வெளியான கொரிய திரைப்படம் ‘மை டியர் டெஸ்பிராடோ’வை அதிகாரபூர்வ மாகத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி.\nஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் யாழினி (மடோனா செபாஸ்டியன்). அவர் வேலை பார்க்கும் நிறுவனம் எதிர்பாராத விதமாக இழுத்து மூடப்படுகிறது. தோல்வியுடன் ஊருக்குத் திரும்பிச் செல்லப் பிடிக்கா மல், தன் ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு, ஒரு சாதாரண வீட்டில் குடியேறி, தீவிரமாக வேலை தேடுகிறார்.\nஅவருக்கு எதிர் வீட்டில் கதிர் (விஜய் சேதுபதி) என்ற நல்ல மனம் படைத்த ரவுடி வசிக்கிறார். பார் உரிமையாளர் ஆக வேண்டும் என்பது கதிரின் கனவு. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் நட்பு உருவாகிறது. அந்த நட்பு காதலாக மாறியதா இருவரின் கனவுகளும் நிறைவேறியதா என்பதுதான் ‘காதலும் கடந்துபோகும்’.\nவிஜய் சேதுபதி - நலன் குமரசாமி யின் ‘சிரிப்பு ரவுடி’ கூட்டணி இரண்டா வது முறையும் ரசிகர்களைக் கவர்ந் திருக்கிறது. கதாநாயகனின் வழக்கமான பிம்பத்தை உடைத்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பதில் நலன் வெற்றி பெற்றிருக்கிறார். நாள்தோறும் பார், ரவுடிகள், கட்ட பஞ்சாயத்து எனப் புழங்கிக்கொண்டிருந்தாலும் கதிர் அந்த வட்டத்துக்குள் பொருந்தாமல் நிற்பதை இயக்குநர் அழகாகக் காட்டிவிடுகிறார்.\nமடோனாவுக்கும் விஜய் சேதுபதிக் கும் இடையில் உருவாகும் நெருக்கத்தை இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பார் முதலாளி, அடியாட்கள், போலீஸ் என்ற வலைப்பின்னலையும் யதார்த்தமாகச் சித்தரித்திருக்கிறார். பொறியியல் கல்லூரிகளின் பெருக்கம், பொறியியலாளர்களின் பிரச்சினை ஆகியவற்றையும் திரைக்கதைக்குள் இயல்பாகப் பொருத்திவிடுகிறார்.\nபடத்தில் நிறைய ஒருவரி வசனங் கள் சிரிக்கவைக்கின்றன. ஆனால், திரைக் கதை எந்தப் பெரிய திருப்பமும் இல்லாமல் நிதானமாக நகர்கிறது. சிரித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் படம் முடிந்துவிடுகிறது. வலு வான நெருக்கடி எதுவும் திரைக்கதையில் உருப்பெறவில்லை. எனவே முடிவை நோக்கிய பயணம் மந்தமாகவே உள்ளது. பார்வையாளர்கள் இணைந்து பயணிப் பதற்கான அம்சம் திரைக்கதையில் இல்லாதது ஒரு குறை. நேர்காணலின் போது யாழினிக்காக கதிர் ஏற்படுத்தும் குழப்பங்கள் சிரிப்பை வரவழைத்தாலும் துளிக்கூட நம்பகத்தன்மையோடு அது அமையவில்லை.\nவிஜய் சேதுபதியை ஒரே மாதிரியாக சிரிப்பு ரவுடி கதாபாத்திரத்தில் பார்ப்பது சற்று போரடித்தாலும், நடிப்பில் சில புதிய பரிமாணங்களையும் இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. மடோனாவின் அறிமுகக் காட்சிக்கே ரசிகர்களிடம் விசில் பறக்கிறது. தமிழில் முதல் படம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மடோனா. சமுத்திரக்கனி, கிரண், ஜி.எம். சுரேஷ் எனத் துணைக் கதாபாத்திரங்களின் தேர்வும் படத்துக்குப் பொருந்துகிறது.\nசந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். ‘ககக ககக ககக போ’ பாடலுக்குத் திரையரங்கம் ஆர்ப்பரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் கேமரா படத்தை விஷுவல் டிரீட்டாக ஆக்கியிருக்கிறது.\nவிஜய் சேதுபதி, மடோனாவின் நடிப்பு, இயல்பான சித்தரிப்பு, நகைச்சுவை ஆகிய அம்சங்கள் படத்தின் பலம். பெரிதாக எதுவும் நிகழாமலேயே கடந்து போகும் திரைக்கதை படத்தின் பலவீனம்.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nகலைஞர் போலவே திறமையான அரசியல்வாதி யார்\nவிடிஞ்சிடுச்சு, இனி சொப்பன சுந்தரி வயசுக்கு வந்தா ...\n500 கோடி - விஜய் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nதிவ்யதர்ஷினிக்கு பேங்க்கில் என்ன வேலை\nமப்பும் மந்தாரமும் , மாற்றம் முன்னேற்றமும், எப்படி...\nஹசீனா வும் அனிஷா வும் -ஒரு ஓரப்பார்வை\nகடலை மாவு தோசை செய்வது எப்படி\nபச்சபுள்ள சிவா வோட கேரக்டர் - வில்லனா\nகலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ த...\nKALI (மலையாளம் ) - சினிமா விமர்சனம்\nபாமக தான் ஜெயிக்கும்னு திமுக அன்பழகன் சொன்னது ஏன்\nஜீரோ - சினிமா விமர்சனம்\nதோழா - சினிமா விமர்சனம்\nடாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்...\nகாளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர்\nஎம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக்கில் விஜ...\nடாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்\nMOHA VALAYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nகேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா..........\nஅன்பு மணி ஓட்டிய செம படம்\nDarvinte Parinamam - சினிமா விமர்சனம் ( மலையாளம்)...\nகலெக்”சன்” இல்லா ஆட்சி கரப்”சன்” இல்லா ஆட்சி\n விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்\n30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழு...\nபுகழ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18...\nஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட...\nயோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லு...\n நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்...\nசார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க\nஎமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்...\nஆதவனை மிஞ்சிய மா தவன் ஆக குறுக்கு வழி\n - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிச...\nகாதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்:\nசமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு...\nநட்பதிகாரம் 79 -திரை விமர்சனம்:\nஒரு கண்ணியமான வாட்சப் க்ரூப்பும் 50 பிரபல பெண் ட்வ...\nஉடுமலை- காதல் பட பாணியில் ஒரு ஜாதிவெறிக்கொலை-உண்மை...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு\nதிமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்\nமிருதுளா செய்த கதாகாலேட்சேபம் - ரைட்டர் ஆட்சேபம்\nஇமயமலை எஸ்கேப் ஆகப்போறாரு அண்ணாமலை\nகுமார சாமிக்கு ஆப்பு ரெடி\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11...\nராம் நாடு என்பது அயோத்தி தானே அது எப்டி தமிழ் நாட...\nகமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை\nநெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட...\n“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கு...\nகலைஞர் - ஸ்டாலின் லடாய்\nரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்\n30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா\nரஜினிக்கும் ஜெயம் ரவிக்கும் என்ன சம்பந்தம்\n மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே\nஇந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் ...\nபிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்\nநம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்\nபோக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்\nஎத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4/...\n வாட்சப்பில் உலா வரும் ஒளிக...\nதி ரெவனெண்ட் (The Revenent) - சினிமா விமர்சனம்\nஉங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்ட...\nஆட்சி மாறுவது போல் 5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம்...\nGODS OF EGYPT - சினிமா விமர்சனம்\nடாக்டர் நோ பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா இளைய தள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/sivageetha", "date_download": "2018-08-20T18:48:14Z", "digest": "sha1:Z4AY5F7IVBJFZCX3TQRPWPRQSZJY4GK5", "length": 5324, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: sivageetha - eelanatham.net", "raw_content": "\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமட்டக்களைப்பில் பல்வேறு இடங்களில் விபச்சாரவிடுதிகள் இயங்குகின்றன, இவை சிகை அலங்காரன், முக அலங்காரம் என்று பல்வேறு பெயர்களில் இயங்குகின்றன. இந்த விபச்சார நிலையங்களில் பள்ளி மாணவிகளும் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல்களை நடத்துவந்துள்ளனர்.இன்று காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிவகீதா கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிள்ளையான் முதலைமைச்சராக இருந்த காலகட்டத்தில் மட்டக்களைப்பில் மேயராக இருந்தவர் சிவகீதா\nஇவருடன் இவரது கணவர் உட்பட ஏழு பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/tata/tamil-nadu/coimbatore", "date_download": "2018-08-20T19:13:28Z", "digest": "sha1:PQNVI7VWIIZZUCMIS5OEMNYZOZIQLOMC", "length": 5517, "nlines": 86, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டாடா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் கோயம்புத்தூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டாடா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள கோயம்புத்தூர்\n2 டாடா விநியோகஸ்தர் கோயம்புத்தூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டாடா விநியோகஸ்தர் கோயம்புத்தூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/20-effective-home-remedies-to-get-rid-of-dark-elbows-019003.html", "date_download": "2018-08-20T18:33:24Z", "digest": "sha1:LCUVXVT3UZEFRVO6UYXR4E5CGALX6XZY", "length": 22567, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "முழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்... | 20 Effective Home Remedies To Get Rid Of Dark Elbows- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்...\nமுழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்...\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்- வீடியோ\nஎல்லோருக்குமே நடிகர், நடிகைகளைப் போன்று தானும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகவே பலர் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முகத்திற்கு ஒரு க்ரீம், கை தனி க்ரீம், கால்களுக்கு ஒரு க்ரீம் என்று உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு க்ரீம்மை வாங்கி பயன்படுத்துவோம்.\nபொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான். இப்படி கருப்பாக இருப்பதால், ஃபேஷனான பல உடைகளை உடுத்த முடியாமல் பல பெண்கள் வருத்தப்படுவார்கள்.\nஆனால் இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும். இக்கட்டுரையில் முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும்.\nமஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.\n1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.\nதினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.\nசர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்\nசர்க்கரையில் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் நீர் பயன்படுத்திக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முழங்கையில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கருமை அகலும்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை\nதேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும்.\nஎலுமிச்சை சாற்றை நேரடியாக முழங்கை பகுதியில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும்.\nஎலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் நீங்கா கருமையை அகற்றும்.\n1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்த்து பின் நீரில் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கருமையைப் போக்கும்.\nகடலை மாவு மற்றும் எலுமிச்சை\n1 டேபிள் ஸ்பூன் கடலை மாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், குறைந்த காலத்திலேயே கருமை நீங்கிவிடும்.\nதயிர் மற்றும் கடலை மாவு\nகடலை மாவு மற்றும் தயிரை சரிசம அளவில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் இந்த பேஸ்ட்டை முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். இப்படி ஒரு வாரம் தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nகொக்கோ வெண்ணெய் மற்றும் ஷியா வெண்ணெய்\nஇந்த இரண்டு வெண்ணெய்களும் கடைகளில் எளிதில் கிடைக்கும். இந்த இரண்டுமே முழங்கையில் உள்ள வறட்சியைப் போக்கி, முழங்கை மேலும் கருமையாவதைத் தடுக்கும். எனவே தினமும் முழங்கையில் இவற்றைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nகற்றாழை ஜெல்லை தினமும் முழங்கையில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், பக்கவிளைவுகளின்றி முழங்கை கருமை நீங்கும்.\nவினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சரும கருமையைப் போக்க வல்லது. இத்தகைய வினிகருடன் தயிர் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, முழங்கை கருமை மாயமாகும்.\nமுழங்கை கருமையை உண்ணும் சில உணவுகளின் மூலமும் போக்கலாம். அதிலும் எலுமிச்சை, தக்காளி, திராட்சை போன்றவற்றின் சாற்றினை முழங்கையில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.\nபுதினா வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுவதோடு, முழங்கை கருமையையும் போக்க உதவும். அதற்கு புதினா இலைகளை சிறிது நீர் சேர்த்து வேக வைத்து இறக்கி, அந்நீரில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முழங்கையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சாதாரண நீரில் கழுவுங்கள்.\nபூண்டு மற்றும் வெங்காயத்தை சரிசம அளவில் எடுத்து அரைத்து, முழங்கையில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், முழங்கை கருமையை போய்விடும்.\nகடுகு எண்ணெய் ஒரு ஆன்டி-செப்டிக் பொருள். இதை முழங்கையில் தினமும் தடவி வந்தால், முழங்கை மேலும் கருமையாவதைத் தடுக்கலாம். அதுவும் கடுகு எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.\nபப்பாளியை மசித்து முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், முழங்கை கருமை மறைந்து, வெள்ளையாகும்.\nஉருளைக்கிழங்கு சருமத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் நீங்கா கருமைகளைப் போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, சிறிது தயிர் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇந்த சருமக்குழிகளை செலவே இல்லாம ஈஸியா எப்படி சரி பண்ணலாம்\nகோதுமை மாவை இப்படி பயன்படுத்தினா முகத்திலுள்ள கருமையை உடனே போக்கலாம்\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநமக்கு ராஜா ராணி கதை தெரியும்...ஆனால், ராஜா ராணி அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா..\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nஇந்த ஒரு பழமே போதும் உங்களை உலக அழகி போல மாற்றுவதற்கு...\nபெண்களை ஈசியாக இம்ப்ரெஸ் செய்வது, கவர்வது எப்படி\nஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..\nபுருவத்தை திரெட்டிங் செய்வது பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nபாகுபலி சூட்டிங்ல தமன்னா சாப்பிட்ட இந்த 6 பொருள்தான் அவங்க அழகுக்கு காரணமாம்\n‘சோப்பு வைக்கும் ஆப்பு’ இன்னதென்றே தெரியாமல் பயன்படுத்திவரும் நாம்\nRead more about: skin care body care home remedies beauty tips சரும பராமரிப்பு உடல் பராமரிப்பு இயற்கை வைத்தியம் அழகு குறிப்புகள்\nJan 8, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/aiims-signs-mou-with-varsity-set-up-health-care-centre-001235.html", "date_download": "2018-08-20T18:03:25Z", "digest": "sha1:QSVFZO2MKKZCB2NTIINH2MH2FU7AQOXA", "length": 7774, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "சுகாதார நல மையங்கள்: பெங்களூரு பல்கலை.யுடன் ஏஐஐஎம்எஸ் ஒப்பந்தம்!! | AIIMS Signs MoU with Varsity to Set Up Health Care Centre - Tamil Careerindia", "raw_content": "\n» சுகாதார நல மையங்கள்: பெங்களூரு பல்கலை.யுடன் ஏஐஐஎம்எஸ் ஒப்பந்தம்\nசுகாதார நல மையங்கள்: பெங்களூரு பல்கலை.யுடன் ஏஐஐஎம்எஸ் ஒப்பந்தம்\nபுதுடெல்லி: ஒருங்கிணைந்து சுகாதார நல மையங்களை அமைக்க பெங்களூரைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா யோகா அண்ட் அனுசந்தனா சமஸ்தானா (எஸ்-வியாசா) பல்கலைக்கழகத்துடன் டெல்லி ஏஐஐஎம்எஸ் (ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸஸ்) ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.\nஏஐஐஎம்எஸ்-ல் ஒருங்கிணைந்த சுகாதார நல மையம் அமைக்க, தொழில்நுட்ப உதவிகளை எஸ். வியாசாவிடம் கேட்டுள்ளது ஏஐஐஎம்எஸ்.\nமேலும் அந்த மையத்தில் யோகா, இருதய நலம், உடலியல், புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும். இதனால் தொழில்நுட்ப உதவிகளை எஸ். வியாசா வழங்கவுள்ளது.\nஇதுகுறித்து ஏஐஐஎஸ் இயக்குநர் எம்.சி. மிஸ்ரா கூறியதாவது: இது ஏஐஐஎம்எஸ் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த அனைத்து சுகாதார நலன் வசதி கொண்டதாக இந்த மையம். இதற்காகவே நாங்கள் எஸ்-வியாசாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றார் அவர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://daily-helper.com/ta/478369", "date_download": "2018-08-20T18:11:54Z", "digest": "sha1:CH6EHWMBFRQPMKRBVQDTSTNLHI6RLFEJ", "length": 5273, "nlines": 56, "source_domain": "daily-helper.com", "title": "வேலைவாய்ப்பு சான்றிதழ் என்ன நேரத்தில் நான் அவர்களுக்கு உடலுறவு பிறகு வேண்டும்?", "raw_content": "\nபணம் இடமாற்றங்கள், சந்தை விகிதங்கள், கடன், கடன் அட்டைகள், சமநிலை பரிமாற்ற, அதிக வட்டி சேமிப்பு, குறைந்த வட்டி கடன்கள் பற்றி அறிவுரைகளை.\nவேலைவாய்ப்பு சான்றிதழ் என்ன நேரத்தில் நான் அவர்களுக்கு உடலுறவு பிறகு வேண்டும்\nவேலை powinnien பிரச்சினை சான்றிதழ் இந்த நாளில் சாத்தியம் இல்லை என்றால் வேலை\nஎந்த முடிவு பற்றிய தேதி வேலைவாய்ப்பு சான்றிதழ், முதலாளி, இல்லை பின்னர் பணி நீக்கம் தேதியிலிருந்து 7 நாட்கள் விட, அது அனுப்பும் சான்றளிக்கப்பட்ட மின்னஞ்சல் அல்லது ஒரு ஊழியர். வேறு வழியில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.\n> பாதுகாப்பாக இருக்க மற்றும் அவர்களின் வேலை போராட எப்படி\n> PTC கிளிக் பணம் மூலம் பணத்தை எப்படி.\n> நுகர்வோர் கடன் ஒரு புதிய சட்டம் 18 டிசம்பர் 2011\n> ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி\n> நிறுவனத்தின் தொடக்க ஆதரவை எப்படி பெறுவது\n> விவாகரத்து எப்படி பிரித்தல்\n> . பணவாட்டம் என்றால் என்ன \n> ஒரு தணிக்கையாளர் ஆக எப்படி\n> இராணுவ பயிற்சி அது எப்படி\n> ஏன் அது மதிப்புள்ள அவுட்சோர்சிங்\n> பணத்தை சேமிக்க மற்றும் ஒரு சந்தோஷமான நேரம் மற்றும் ஒருவேளை சிறந்த பகுதியாக கழித்தார் .. இணைப்புகள் சுருக்குவது வருவாய்\n> போது நான் ஒரு நன்கொடை ரத்து முடியும்\n> வெளிநாட்டில் இருந்து VAT ஒரு பணத்தை திரும்ப பெற எப்படி\n> ஒரு வெளிநாட்டு நிருபர் ஆக எப்படி\n> தொலைத்தொடர்பு சேவைகளை விளம்பரப்படுத்த எப்படி\n> ஒப்பந்தம் மூட எப்படி\n> ஒரு கடிதம் எழுத எப்படி\n> எப்படி ஒரு சமூக கூட்டுறவு உருவாக்க\n> வாடகை அடுக்ககம் வரி\n> . பணத்தை சேமிக்க எப்படி\n>> குழந்தைகள் மற்றும் குழந்தைகள்\n>> விழாக்கள் மற்றும் விடுமுறை\n>> செல்லப்பிராணிகள் & விலங்குகள்\n>> ஃபேஷன் மற்றும் அழகு\n>> உணவு மற்றும் சமையல்\n>> விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n>> வரலாறு மற்றும் புவியியல்\n>> கணித மற்றும் இயற்பியல்\n>> கல்வி மற்றும் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://penathal.blogspot.com/2006/07/23.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1175371200000&toggleopen=MONTHLY-1151697600000", "date_download": "2018-08-20T18:14:03Z", "digest": "sha1:YUZ7P5OPVNZJY4BEGPIV5I4ELUIJETRD", "length": 33097, "nlines": 334, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: அரசன் 23ம் புலிகேசி - இம்சை", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nமீண்டும் அவியல் (25 Jul 2006)\nஆறு வார்த்தையில் கதைகள் - என் முயற்சி (22 Jul 2006...\nபயோரியா பல்பொடியும் தமிழின் எதிர்காலமும்(20 Jul 06...\nப்ளாக்ஸ்பாட் தடை - தாண்டுவது எப்படி\nஅரசன் 23ம் புலிகேசி - இம்சை\nசினிமா ரசிகர்களில் ஒரு கோயிஞ்சாமி\nசூடு தணிக்க (15 Jul 06)\nஅசைவு (தேன்கூடு போட்டிக்கு) (11 Jul 06)\nசீட்டு மாளிகை- (தேன்கூடு ஜூலை போட்டிக்கதை) -05 Jul...\nஅவியல் - ஒரு கூட்டுத் தகவலுடன்\nஅரசன் 23ம் புலிகேசி - இம்சை\nதமிழன் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டான் என்ற வசனத்தை இந்தியாவில் பலமுறை பிரயோகித்திருக்கிறேன். திரைப்படம் பார்க்கவென்று கிளம்பிய பிறகு கேவலம் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணங்களுக்காக திரும்புவதா எப்படியும் டிக்கெட் - அல்லது ஏதேனும் வேறு படமாவது\nதுபாயில் இம்சை அரசன் வெளிவந்துவிட்டான் என்ற செய்தி கேட்டவுடன் தொலைபேசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய அழைத்தால், ஆச்சரியம் மூன்று நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்கிறார்கள்.(இம்சை எண் 1) \"கிட்டாதாயின் வெட்டென மற\" என்பதெல்லாம் நமக்குத் தெரியாத மேட்டர். தியேட்டருக்குப் போய் பார்த்துக்கொள்ளலாம் - ஆமாம், துபாயில் பிளாக்கில் டிக்கட் கிடைக்குமா\nதியேட்டர் வாசலில் 15 நிமிடக் காத்திருப்புக்குப் பின், எதிர்பார்த்தவர்(ள்) வராத சோகத்தில் டிக்கட்டை கவுண்டரில் திருப்பிக் கொடுக்கப்போனவர்களை மடக்கிப் பிடித்து வெற்றிவாகை சூடினேன். தியேட்டருக்குள் நுழைந்ததும்தான் தெரிந்தது, ஹவுஸ்புல்லான ரகசியம்.. தியேட்டர் ரொம்பச் சின்னது) வராத சோகத்தில் டிக்கட்டை கவுண்டரில் திருப்பிக் கொடுக்கப்போனவர்களை மடக்கிப் பிடித்து வெற்றிவாகை சூடினேன். தியேட்டருக்குள் நுழைந்ததும்தான் தெரிந்தது, ஹவுஸ்புல்லான ரகசியம்.. தியேட்டர் ரொம்பச் சின்னது 9 வரிசை மட்டுமே.. முதல் வரிசையின் ஒரு ஓரத்திலிருந்து பார்க்கும்போது வடிவேலு தெரிகிறார், தூரத்தில் இருக்கும் நாசர் தெரியவில்லை.. (இம்சை எண் 2).\nபடம் ஆரம்பித்து விட்டிருந்தது. பக்கத்தில் ஒரு குண்டான மீசைக்காரர் அமர்ந்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். முன்கதை கேட்கும் உத்தேசத்தை உதறினேன். (இம்சை எண் 3)\nஇப்படிப்பட்ட இம்சைகளை மீறி, முதல் பாதியின் நகைச்சுவையை ஓரளவு ரசிக்க முடிந்தது. இரண்டாவது பாதி, தாங்கவே முடியவில்லை. ஏன்\n1. டிஸ்கிளெய்மரில் \"ப்ளுட்டோ, நெப்டியூனில் உள்ளவர்கள்\", அந்தப்புரம் \"24 மணிநேர சேவை\", \"உன் சிரிப்பில் நாங்கள் ஏழைகளையே பார்க்கிறோம்\" போன்ற வரவேற்புத்தட்டிகள் போன்றவை சிம்புதேவனின் எழுத்து நகைச்சுவையை வெளிப்படுத்தினாலும், வசன நகைச்சுவை போதாது. செந்தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் கையைப்பிடித்திருக்கலாம். \"ஆக்சுவலா\", \"இன் பேக்ட்\" போன்ற வழக்கமான சொல்லாடல்களைத் தவிர்த்த கிரேசி மோகன் நிச்சயமாக இந்த ஆள்மாறாட்டக் கதைக்கு அருமையாக வசனம் எழுதியிருப்பார். வசன நகைச்சுவை என்பது காவலாளிகளுக்கும், வேலைக்காரர்களுக்கும் அளிக்கும் தண்டனைகளோடு நின்று விடுகிறது.\n2. வீரபாண்டிய கட்டபொம்மன், எட்டையன், நிக்ஸன் என்று பிரபலப் பெயர்களை வைத்து கதைக்கு ஒரு காலம் கொடுத்திருக்கும் இயக்குநர், நாட்டைத் திருத்தும் மன்னன், அக்காமாலா கப்ஸி உற்சாக பானங்கள், குழந்தைத் தொழிலாளி ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி போன்ற சிந்தனைகளில் எல்லாம் கால தேச வர்த்தமானங்கள் பற்றிய லாஜிக்கைப் பற்றி சற்றும் கவலைப்படாதது ஏன் காமெடிக்கதையில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான், ஆனால் இவர் சீர்திருத்த சிந்தனைகள்( காமெடிக்கதையில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான், ஆனால் இவர் சீர்திருத்த சிந்தனைகள்() எதுவும் காமெடி இல்லையே.\n3. இசையமைப்பாளர்கள் சரியான தேர்வுதான். \"1960ல வந்தா மாதிரி ஒரு பாட்டு வேணும்\" என்று சொன்னால், \"அதுக்கென்ன, அதையே போட்டுடுவோம்\" என்று சொல்லும் தேவ வாரிசுகள் ஆனால், அதிகமான பாடல்கள், அத்தனையும் காப்பி, அதிக வித்தியாசமில்லாத படமாக்கம் என்று படத்தின் வேகத்தை நாசம் செய்கின்றன. பின்னணி இசை இன்னொரு இம்சை\n4. கதை உத்தமபுத்திரனின் ரீபிரிண்ட் என்றால் வடிவேலு (உக்கிரபுத்தன்) நாடோடி மன்னனின் ரீபிரிண்டாக சாகடிக்கிறார். நகைச்சுவை இருந்தால் இதை Spoof எனச்சொல்லலாம், இல்லாததால் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது. புலிகேசியாக வடிவேலு நன்றாகவே செய்திருந்தாலும், வடிவேலுவின் பிராண்ட் நகைச்சுவை (அடுத்தவரிடம் அடிவாங்கி அவ்வ்வ்வ்வ்வ் என்று அழுதல்)க்கு ஸ்கோப் இல்லாததால் க்ளிக் ஆகவில்லை.\n5. முக்கியமான பாத்திரங்களுக்கு நகைச்சுவை நடிகர்களைப் போட்டுவிட்டால் மட்டுமே நகைச்சுவைப் படம் ஆகிவிடாது. இளவரசு தவிர வேறு யாருக்குமே நகைச்சுவை வசனங்களோ காட்சிகளோ இல்லை. இரண்டு காட்சிகளில் ஒரு வசனமும் பேசாமல் மூன்று முறை அழுவதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தியா தேவை\n6. புலிகேசியின் பாத்திரமே, நாயகன் தாத்தாவைப்போல \"நல்லவனா, கெட்டவனா\" என்று தெரிவதில்லை. மாமா வளர்ப்பில் நாசமான நல்லவனா திருடர்களிடம் பங்கு கேட்கத் தனியாகச் செல்கிறான் சாதிச்சண்டை மைதானத்தை தன்னிச்சையாக அறிவிக்கிறான் சாதிச்சண்டை மைதானத்தை தன்னிச்சையாக அறிவிக்கிறான் இந்தக்காட்சிகளில் நாசரின் பங்கை அதிகரித்திருக்க வேண்டும்.\n7. அரங்க அமைப்புகளிலும் காட்சிகளிலும் சுத்த நாடகத் தனம். வெளிப்புறக்காட்சிகளில் ஏன் அந்த செம்மண் எபக்ட் ரேவா கலரை ஞாபகப் - படுத்தவா ரேவா கலரை ஞாபகப் - படுத்தவா கரடி ரொம்ப அமெச்சூர்தனமாக இருந்தது.\nஇருந்தாலும், சிற்சில காட்சிகளை ரசிக்க முடிந்தது.\nபல லேயர்களில் கிண்டல் அமைந்திருக்கும் ஜாதிச்சண்டைக் காட்சி - ஜாதிக்கலவரங்களைக்கிண்டல், சமத்துவபுரங்களைக் கிண்டல், கோக் பெப்ஸி ஸ்பான்சர்ஷிப்களைக் கிண்டல், கிரிக்கெட் விளையாட்டைக்கிண்டல், அங்கே தெரியும் பேனர்களில் \"டங்குவாரை அத்துரு\" போன்ற கிண்டல் - எல்லாவற்றையும் தொட்டுச்செல்வதில், இயக்குநர் திறமையுள்ளவர் என்பதை நிரூபிக்கிறார், எதிர்பார்ப்புக்களையும் ஏற்றிவிடுகிறார்.\nமாமா மன்னா, புண்ணாக்கு மன்னா, மூடா போன்ற கவிதை வரிகள், விளக்கத்தை முன்கூட்டியே கணித்துவிட முடிந்தாலும், சிரிக்க வைத்தன.\nஆனால், இந்தச்சில காட்சிகளுக்காக இதை நகைச்சுவைப்படம் என்று விளம்பரம் செய்திருப்பது ரொம்பவே ஓவர்.\nகூட்டிக்கழித்துப் பார்த்தால் இம்சை மட்டுமே மிஞ்சுகிறது.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஅப்படியா சேதி. நல்லவேளை நான் படம் பார்க்க ஆக்லாந்து போகலை:-))))\nநேற்று நாங்களும் சென்றிருந்தோம் கலேரியாவுக்கு படம் பார்க்க. நீங்கள் சொல்வது 100% சரி. சில காட்சியில் தான் சிரிக்க முடிந்தது. நான் சிரிக்காததால் மற்ற அனைவரும் சிரித்ததால் எனக்கே என் மீது சந்தேகம் இருந்தது இப்போது தெளிவடைந்தது. நேற்று எங்கள் திருமண நாள் என்று சென்றோம், அங்கு போயாவது கணவர் சிரிக்க முயற்சித்தார்களோ என்னவோ. நிஜமாகவே அவர் வாய்விட்டு சிரித்தார்.\n இல்லை அதைவிட இம்மாதிரி விமர்சனமே போதுமா\nஒரே இம்சையா இருக்கு :-))))\nஅவன் விகடன், துக்ளக் போன்ற மாதிரிப் பத்திரிகை எல்லாம் எழுதியாச்சு. பேசாமல் நீங்களே ஒரு படம் எடுத்து விடுங்கள். இந்த மாதிரிக் குறைப்பட வேண்டாம். நீங்கள் மட்டுமாவது போட்டுப் பார்க்கலாம் இல்லையா நல்ல வேளையா எனக்கு சினிமா ஆசை, அதுவும் தியேட்டரில் போய்ப் பார்க்கும் ஆசை இல்லை, பிழைத்தேன்.\nஅக்கா, உங்களுக்கு சிடி வரும்போது பாருங்க போதும்:-))\nவாங்க ஜெஸிலா - மாட்டினீங்களா நீங்களும் நீங்க எந்த ரோ லேயிருந்து பார்த்தீங்க.. முதல் மூணு ரோலே படம் கிட்டப்பார்வை எட்டாப்பார்வைதான்\nஹரிஹரன் - இந்த விமர்சனத்தையா இம்சைன்றீங்க\nகீதா - தமிழ் வலைப்பதிவர்கள் படிச்சு திட்டறது போதாதா சினிமா எடுத்தா ஆறரை கோடி பேரும் திட்டுவாங்களே சினிமா எடுத்தா ஆறரை கோடி பேரும் திட்டுவாங்களே (ஒருவேளை அதான் உங்க நோக்கமோ (ஒருவேளை அதான் உங்க நோக்கமோ\nஎன்னப்பா இது, ஊரே நல்லாயிருக்குன்னு சொல்லுதே, போயி பாக்கலாமுன்னா, இப்போ நீர் வந்து குட்டையை குழப்பிட்டீரே.\nபடம் நல்லா இருக்குன்னு சொன்னவங்க எல்லாம் சொன்ன அதே ரெண்டு சீனை நானும் நல்லா இருக்குன்னு சொல்லிதான் இருக்கேன்.\nஆனா அந்த ரெண்டு சீனுக்கு மேல ஒண்ணும் இல்லைன்றதுதான் இம்சை\nபாக்கப்போறீங்களா இல்லையா என்பது உங்கள் சொந்த முடிவு, அதில் தலையிட நான் விரும்பவில்லை.\nமோடி மஸ்தானுக்கு காசு போடாம வீடு திரும்பறது உங்க சுதந்திரம் - அதில் அவன் தலையிடுவதில்லை. ஆனால், காசு போடாமல் போனால் என்ன நடக்கும் என்ற விளைவுகளைப் பட்டியலிட்டுச் சொல்வானே - அதுபோலத்தான் நானும் சொல்லியிருக்கேன்.\nஎன்னை ரத்தம் கக்க வைக்க எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க\nஒரு பக்கம் போலீஸ் தொரத்துது. இன்னொரு பக்கம் இந்த மாதிரி மந்திரவாதி, போடி மஸ்தான் தொல்லை. என் நிலமை கிட்டத்தட்ட மெகா சீரியல் கதாநாயகி ரேஞ்சுக்குப் போயிடுச்சே. இன்னும் நான் ஓஓஓன்னு அழாததுதான் பாக்கி....\nகண்ட கண்ட தாதா படம் பார்ப்பதற்கு, இது எவ்வளோவொ மேல்.. தைரியமாய் போய் பார்த்துவிட்டு வரவும்.. நிச்சயம் நிறைய இடங்களில் சிரிக்கலாம்...\nஇலவசம் அண்ணா.. நீங்க கேட்டீங்க, நான் சொன்னேன் அவ்ளோதான். உங்களை மிரட்டினா என்ன பிரயோஜனம் ஒரு மில்லியன் டாலர் தேறுமா\nநக்கீரன், நூத்துல ஒரு வார்த்தை சொன்னீங்க. இந்த படத்து மேலே எனக்குப் பெரிய வெறுப்பெல்லாம் இல்லை. நகைச்சுவைப்படம்னு சொன்னதும், அதிக எதிர்பார்ப்பும்தான் பதிவுலே தெரியற வெறுப்புக்குக் காரணம். இது ஒரு சீரியஸ் படம்னு தெரிஞ்சிருந்தா, வடிவேலு நடிக்கும் சீரியஸ் படத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்த்துட்டு ஒதுங்கியிருப்பேன், நீங்க சொன்ன தாதா படங்களுக்கும் அதே மரியாதைதான்:-)\n//பக்கத்தில் ஒரு குண்டான மீசைக்காரர் அமர்ந்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். //\nமீச குண்டா இருந்ததுக்கே இப்படி இம்சைனு சொல்லி பய படரீங்க, ஆளு குண்டா இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க :-)\nசொல்லிவிட்டுருந்தா நானும் வந்து ஜோதில கலந்து இருப்பேனே. நல்லவேளை வேட்டையாடு விளையாடு வந்தா மட்டும்தான் கலேரியா பக்கம் போகணும்னு முடிவுல இருக்கிறேன். காப்பாத்திட்டிங்க.\nஎழுத்துப்பிழைன்னு ஒரு பார்ட்டி எல்லா பதிவுக்கும் போய் இங்கே தப்புன்னு சொல்றாரு, நம்ம பக்கம் வர்றதே இல்லை, ஆஹா, நாம எழுத்துப்பிழையே இல்லாம எழுதறோம் போல-ன்னு பெருமைப்பட்டுகிட்டு இருந்தேன், நீங்க பொருட்குற்றம் கண்டுபிடிச்சீங்க பாருங்க:-))\n\"இரட்டை நாடி உடலுடன், கோடாலி மீசைக்காரர்\"\nநீங்க பேசியும் ரொம்ப நாளாச்சி மேலும், நானே எப்படிப்போனேன்னு எழுதிட்டேன் பாருங்க. வே வி வந்தவுடனே டிக்கட் நீங்களே புக் பண்ணிட்டு கூப்பிடுங்க:-))\nஒரு தனிப்பதிவே கூட போட்டுட்டேன்.. எப்பதான் வருதாம்\nஆமங்க இந்த படத்த இன்னைக்குதான் பார்த்தேன் நீங்க சொன்னது சரிதான். புலிகேசி படம்பார்த்து யாரவது சிரிச்சா அவங்களுக்கு இந்த\nஆண்டுக்கான சிறப்பு விருதே கொடுக்கலாம்\nபொதுவா நம்ம ஆளுங்க சர்வதேச விருது படங்கள பார்க்கிறது ரொம்ப\nகம்மி அந்த தைரியத்தில ஓட்டல்ல ரும்போட்டு பத்து நாள் OPIUM WAR\n(CHINA) படத்த பார்த்து இதகாப்பி அடிச்சு புலிகேசிய ஒப்பேத்திட்டாங்யா\nயாரவது முடிஞ்ச இந்த படத்த பாருங்க புரியும் புலிகேசி யாருன்னு.\nவாங்க M G ரகு. முதல் வருகையோ\nநீங்க சொல்ற மேட்டரும் சரிதான். எவன் கண்டுக்கபோறான் சொல்லுங்க\n//நீங்க சொல்ற மேட்டரும் சரிதான். எவன் கண்டுக்கபோறான் சொல்லுங்க\nஇது நடிகர் திலகம் நடித்த 'உத்தம புத்திரன்'-ன் உல்டா என்பதையே யாரும் கண்டுக்கல்ல .வெளிநாடு வரை போகணுமாக்கும்.\nநீங்க சொல்றது சரிதான். யாருமே கண்டுக்கல -இதெல்லாம் சகஜமப்பா எண்ணமா இருக்கலாம்.\nஎன்ன தலை இப்பிடி சொல்லி புட்டிக உங்கள் வரவு நல் வரவு அப்பிடின்னு ஒரு வார்த்த சொல்ல படாத....\nம்...... எதுக்கும் ரெண்டு பீர் பாட்டிலோட வந்தாதான் வாங்க வாங்க\nM G R அண்ணன் அப்படி எல்லாம் இல்லீங்க.. வருக வருக, அடிக்கடி வருக, பின்னூட்ட மழை பொழிக என்று 23, 36, 344ம் வட்டம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொண்டு, இந்த பின்னூட்டமாலையை பொன் பிளாட்டின மாலையாக அணிவித்து வரவேற்கிறேன்.\nநிச்சயம் உங்கள் விமரிசனம் சுத்த பெனாத்தால் மற்றும் பேத்தல். அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது.\nஉங்கள் வருகைக்கும், என் விமர்சனத்தைப்பற்றிய உங்கள் விமர்சந்த்துக்கும் மிக்க நன்றி.\nபினாத்தல்கள் - இல் வேறென்ன எதிர்பார்க்க முடியும்:-)\nவருகைக்கு நன்றி அனானி. எந்த டிஸ்கஷனைச் சொல்றீங்க\n இல்லாட்டி பின்னூட்ட போலிஸ் பாத்து கயமைன்னு சொல்லிடப்போறாரு\nஆனா typing ரொம்ப பெஜாரா கிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://universaltamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-08-20T18:51:27Z", "digest": "sha1:LWDKFV437UXSFWVW7C2QRPMVBDU7MUR4", "length": 16705, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "உங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள்", "raw_content": "\nமுகப்பு Horoscope உங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஜோதிட அறிவியலில் நட்சத்திரங்கள், திதி, கால நேரம் ஆகியவை முக்கியமான அடிப்படை. ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குண நலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்:\n1. அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.\n2. பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.\n3. கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதிஅதிகம், பழகுவதில் பண்பாளர்.\n4. ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.\n5. மிருகசீரிடம்:தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.\n6. திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி,திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.\n7. புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.\n8. பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.\n9. ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.\n10. மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.\n11. பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.\n12. உத்திரம்:நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.\n13. அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.\n14. சித்திரை:ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.\n15. சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.\n16. விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.\n17. அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.\n18. கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.\n19. மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.\n20. பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர்,வாக்குவாதத்தில்வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.\n21. உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.\n22. திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.\n23. அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.\n24. சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.\n25. பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.\n26. உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.\n27. ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.\nநட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்.\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=807489", "date_download": "2018-08-20T19:18:53Z", "digest": "sha1:L2GDIQ4JHO5NTYEKUSOW3BPHE3YAOLTW", "length": 8364, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கொங்கணாபுரம் அருகே வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nகொங்கணாபுரம் அருகே வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்\nஇடைப்பாடி, பிப்.13: கொங்கணாபுரம் அருகே, வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது எட்டிகுட்டை மேடு. இங்கு அரசு தொழில் மையம் அமைக்க, 16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அங்கு குடியிருந்த ஒரு சில குடும்பத்தினருக்கு, வேறு இடத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் 4 குடும்பத்தினர் மட்டும், இடத்தை காலி செய்ய மறுப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் தாசில்தார் கேசவன், வருவாய் ஆய்வாளர் மதிஒளி, விஏஓ பாபு மற்றும் இடைப்பாடி போலீசார் நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றனர். அங்கு, கந்தசாமி மனைவி நல்லம்மாள் என்பவரின் வீட்டை இடிக்க வந்திருப்பதாகவும், அதற்கான உத்தரவை கோர்ட் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் நல்லம்மாள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஅவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சிலரும் திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் வெள்ளாளபுரம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வீட்டை காலி செய்ய 10 நாட்கள் கால அவகாசம் தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நல்லம்மாள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக வீட்டை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்\nஐஓசி பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்படிஜிட்டல் பேமெண்ட் சிஸ்டம் அறிமுகம்\nமேட்டூர் அணை வலதுகரையில் வெள்ளப் போக்கியில் கண்காணிப்பு தீவிரம் ஆக்கிரமிப்புகளால் கால்வாயாக மாறியது\nசூரியன் எப்.எம்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி பரிசு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாஜவினர் அஞ்சலி\nவீரகனூரில் மணல் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_891.html", "date_download": "2018-08-20T18:46:08Z", "digest": "sha1:2QUTUFU44U7HRRBNH2GTAZTDFPXN4CGC", "length": 9694, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "இன வாதியான ரயில் அதிகாரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இன வாதியான ரயில் அதிகாரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்\nஇன வாதியான ரயில் அதிகாரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்\nயாழ். ரயிலில் பயணித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கெட்ட வார்த்தைகள் பேசிய ரயில் அதிகாரியை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த அதிகாரியை உடனடியாக பதவியிலிருந்து நீக்காவிடின் மலையக ரயில் சேவைகள் ஸ்தம்பிக்கும் எனவும் இ.தொ.கா உப தலைவரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.\nதமிழ் பெண்களையோ அல்லது தமிழர்களையோ இழிவான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி பேசவும் இனவாத சிந்தனையில் அடக்கு முறையைப் பிரயோகிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nயாழ் ரயிலில் பயணித்த தமிழ் பெண் ஒருவர் மீது ரயில் அதிகாரி ஒருவர் தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்ட விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.\nயாழ் ரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீது ரயில் அதிகாரி ஒருவர் இன வாதரீதியாகவும்,தவறான முறையிலும் நடக்க முற்பட்டு கெட்ட வார்த்தைகளால் அப்பெண்ணை திட்டித் தீர்த்துள்ளார்.\nஇவ்வாறு தமிழர்கள் மீது இழிவான முறையில் நடந்து கொள்ளவும், தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது.\nதமிழ் மக்கள் வேறு எந்த இனத்தவர்க்கும் தரம் தாழ்ந்தவர்களில்லை. இந்த ரயில் அதிகாரி மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த அதிகாரியின் செயற்பாடானது ஒவ்வொரு தமிழரினதும் தன்மானத்தை உரசிப்பார்ப்பதாக உள்ளது.\nஇத்தகைய இனவாதம் கொண்ட அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தி பக்கச்சார்பற்ற உடனடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தகுந்த ஆதாரங்களுடன் அவரைப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் அழுத்தமாக கேட்டுக் கொள்கின்றது.\nஅரசாங்கம் இதிலிருந்து தவறும் பட்சத்தில் மலையக ரயில் சேவைகளை ஸ்தம்பிக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nகுறித்த அதிகாரி நடந்து கொண்ட விதம் தொடர்பிலான ஆதாரங்கள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/190387?ref=home-feed", "date_download": "2018-08-20T18:08:06Z", "digest": "sha1:EHOOV5PFPXJF7RPNAYLXB3GCD7UD6HYT", "length": 8254, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சர்! மகிழ்ச்சியில் மாணவர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகொழும்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சர்\nஇலங்கையில் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக நாளாந்தம் ரயிலில் பயணிப்போர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். விசேடமாக உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தனியார் வாகனங்கள் தனிப்பட்ட ரீதியில் உதவி வருகிறன.\nஇந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது தனிப்பட்ட வாகனத்தில், உயர்தர மாணவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளார்.\nபோக்குவரத்து பிரச்சனை காரணமாக பரீட்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு போய் விடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nநேரடியாக களத்தில் ஈடுபட்ட ஹர்ஷ டி சில்வா, மாணவர்களுக்காக வாகனத்தை தானே ஓட்டிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து, நன்மை அடைத்த மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/lab-technician-posting-recruitment-tamil-nadu-000139.html", "date_download": "2018-08-20T18:03:05Z", "digest": "sha1:LO6Y5SQTSS73T7J6MWMAZB4HFNLU6NIX", "length": 8274, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் - விரைவில் போட்டித் தேர்வு | Lab technician posting recruitment in Tamil Nadu - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் - விரைவில் போட்டித் தேர்வு\nதமிழக பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் - விரைவில் போட்டித் தேர்வு\nசென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\nஅந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 6 ஆகும்.\nபத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித் தகுதிச் சான்றிதவ், பணி முன் அனுபவ சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் அசல், நகல்களை எடுத்துச்செல்ல வேண்டும்.\nஇந்தப் பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களிலிருந்து 1:5 என்ற விகிதத்தில் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.\nநேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/17193232/Thirukaiyakkara-to-Thirunavukkarar.vpf", "date_download": "2018-08-20T18:29:13Z", "digest": "sha1:GAYP6VJLMFI2EOBCEWBKSLJW5AJBVQPS", "length": 17286, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thirukaiyakkara to Thirunavukkarar || திருநாவுக்கரசருக்கு திருக்கயிலை காட்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருநாவுக்கரசருக்கு திருக்கயிலை காட்சி + \"||\" + Thirukaiyakkara to Thirunavukkarar\nஅஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது.\nஅஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க திருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி, சில மகரிஷிகள் தெரிவித்தனர். ஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது என்பது கடினமாகும். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த நேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது நிலையை எடுத்துரைத்தான்.\nதுர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார். ஈசன் மனமிரங்கி நந்திதேவரிடம் கூறி திருக் கயிலையை, திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும் திருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து, இந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு பகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார். இதனை உணர்த்தும் விதமாக, ஆலயத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன.\nபூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன் சுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார். மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும். லிங்கத்திற்கு புணுகு சாத்தப் படும். இறைவனின் பெயர் ஐயாறப்பர். அம்பாள் திருநாமம் அறம் வளர்த்த நாயகி என்பதாகும். அன்னை கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.\nஇத்தல அம்பாள் சிலையின் உருவ அமைப்பைப் பார்த்தால் அப்படியே திருப்பதி வெங்கடாசலபதியின் வடிவமைப்பைக் காணலாம். அதுபோல திருப்பதி வெங்கடாசலபதியின் உருவ அமைப்பில் நம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மனின் வடிவழகைக் காணலாம். இதனை ‘அரி அல்லால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்று இத்தல பதிகத்தில் அப்பர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும், பெருமாள் கோவில்களில் மட்டுமே நடக்கும் ‘மகாலட்சுமி புறப்பாடு’ இங்கும் நடக்கிறது. வெள்ளிக் கிழமை தோறும் மாலை நேரத்தில், திருவையாறு சிவத்தலத்தில் இருந்து, மகாலட்சுமி புறப்பாடாகி, இத்தல அம்பாள் சன்னிதிக்கு செல்கிறார். அதாவது மகாலட்சுமி தன் கணவர் மகாவிஷ்ணுவை காண வருவதாக ஐதீகம்.\nகடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் காலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும். இந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக் கிறது.\nஒருமுறை திருக்காள ஹஸ்தியை தரிசனம் செய்த திருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்), மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக் கடந்து காசியை அடைந்தார். அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது. ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ணமின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர். சில இடங்களில் நடக்க முடியாமல் ஊர்ந்தும் சென்றார்.\nஅப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, ‘நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லும்’ என்றார். ஆனால் திருநாவுக்கரசர் அவரது பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், ‘திருநாவுக்கரசா இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு திருத்தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்’ என்று கூறி மறைந்தார்.\nஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திரு நாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திர தீர்த்தக் குளத்தில் எழுந்தார். அங்கு திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி அருளினார். திருநாவுக்கரசருக்கு திருவையாறு திருத்தலத்தில் ஈசன் திருக்கயிலை திருக்காட்சி காட்டியருளிய தினம், ஆடி அமாவாசை ஆகும்.\nஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில் ‘திருநாவுக்கரசர் திருக் கயிலை திருக்காட்சி’ பெருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை பாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந் திருக்கும். ஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை வழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள் அனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.\nஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி கண்டு வழிபாடு செய்வது திருக் கயிலை தரிசனத்துக்கு ஈடான பெரும் புண்ணிய திருப்பலனை அளிக்கும். திருநாவுக்கரசரின் பொருட்டு அன்று திருக்கயிலை திருத்தரிசனத்தை திருவையாறு திருத்தலத்தில் காட்டியருளிய ஈசன், நமக்கும் அருள் செய்வார்.\nதஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்துள்ளது.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t48974-topic", "date_download": "2018-08-20T18:32:45Z", "digest": "sha1:O5MWT7HLTLRZKH5NWKTI56LEUV7MO5ZX", "length": 21912, "nlines": 154, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "அன்று சொன்னவை இன்று நடக்கிறது", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஅன்று சொன்னவை இன்று நடக்கிறது\nதமிழ்த்தோட்டம் :: வித்யாசாகரின் இலக்கிய சோலை :: கட்டுரைகள்\nஅன்று சொன்னவை இன்று நடக்கிறது\nஅன்று சொன்னவை இன்று நடக்கிறது\n10 டிசம்பர் 2016 ·\nகட்சியின் செயலாலர் சசிகலாவை கழகம் ஏற்றால் அ தி மு க உடையும்\nஅப்போது அம்மா திராவிட முன்னேற்றகழகம் என்னும் புதிய கட்சி உருவாகலாம்.இந்த கட்சியை தோற்றுவிக்க பலகட்சிகள் தூண்டிகொண்டு இருக்கும். இன்று பெரும் கட்சியாக இருக்கும் அ தி மு க தேசிய கட்சிகலுக்கு பெரும் தடையாகஇருக்கிரது. இந்த கட்சியை இரண்டாக உடைத்தாலே தமிழ் நாட்டில் அவர்கள்எதிர்பார்க்கும் வெற்றியை பெறமுடியும்.\nஇன்னும் சில மாதங்களில் அதிமுக கழகத்தில் இருந்தவர்கள் தி மு க நோக்கி\nநகர வாய்ப்புண்டு. சில முக்கிய பிரதி நிதிகள் கூட தி மு க வில் இணைவார்கள்\nதி மு க வுக்குள்ளும் பலபிரச்சனைகள் தோன்றும்.\nநான் சொல்வது நடந்தே தீரும்.............................\nரஜனி நேரடியாக மக்கள் மத்தியில் தேர்தல் வோட்டு கேட்டு இறங்க மாட்டார்.\nகாரணம் அந்தளவுக்கு அவருக்கு அரசியல் அறிவு இல்லை. அவருக்கு அரசியல்\nசாணாக்கியம் அறிவு எதுவுமே இல்லை. இதற்காகவே. அவர் நேரடியாக அரசியல்\nபேச முடியாமல் திணருகிறார். அரசியல் பேசுவது அவளவு சாதாரண விடயம் இல்லை. அதற்கு நிறைய அரசியல் சாணக்கியம் தேவை.. அது சுத்தமாய்ரஜனியிடம் இல்லை. பாவம் அவரை பலிகிடாய் ஆக்கிறாகள் . சினிமா காரரும். சில பத்திரிகை ஆசிரியரும். குருமூத்தி பதிரிகையாளர் மூலம் நாடித்துடிப்பு பார்க்கிறார். ரஜனி. குருமூர்த்தி ரஜனி என்னவோ தேவலோக புருசர் மாதிரி பேட்டி கொடுகிறார். இதெல்லாம் ரஜனி தனது நாடி துடிப்பை அறிய பயன் படுத்தும் கருவி.\nரஜனி அரசியலுக்கு நேடடியாக போட்டியிட முடியாது என்பத்ற்கு பல காரணங்கள் உண்டு.\n1) ஒரு வேலை தனிகட்சி தொடங்கிணால் அவரின் அரசியல் உறுப்பினரெங்கிருந்து தெரிவுசெய்யப்போகிறார்... தமிழ் நாட்டில் இருந்து தானே. இந்த தமிழ் நாட்டு தெரிவாளர்கள் ஏதோ ஒருவகை திராவிட கட்சியை தேர்ந்தவர்கள் தானே... அவர்களிடம் கறை படியாத கை உள்ளவர்களை இவர் எப்படி இனம் காணுவார். அப்படி இனங்கன்டால் அவர்கள் கை கறைபடியாமல் இருக்க எவ்வளவு கால்ம் ரஜனி விழிப்போடு இருப்பார்.....\n2) சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் ரஜனி சிஸ்டத்தை மாற்றும் வரை உயிரோடு இருக்கும் ஆயுள் உண்டா... எனவே ரஜனி கட்சியை ஆரம்பித்து சென்றபின் இந்த கட்சியும் பலகட்சியாய் உடைந்து பலர் உழைக்க வழிவகுக்கிறார்றா....\nஎனது கருத்து ரஜனீ அரசியலுக்கு வரமாட்டார். வந்தால் நேரடியாக தேர்தலில் ஈடுபடமாட்டர். பொது செயலாலராய் இருந்து நெறிப்படுத்த முடியும். அப்படி ஒரு தேவை தமிழகத்துக்கு எப்போதும். தேவையில்லை . சிஸ்டத்தை ரஜனி வந்து மாற்ரதேவையில்லை. தமிழக மக்கள் மாறவேண்டும். அதை இப்போதுள்ள கட்சிகலாலும் முடியும்.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nதமிழ்த்தோட்டம் :: வித்யாசாகரின் இலக்கிய சோலை :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/politics/01/190368?ref=home-feed", "date_download": "2018-08-20T18:05:37Z", "digest": "sha1:WJXBCD5MKNAT62IXTF3DI5DM573T5L7J", "length": 9177, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "மரணமடைய போகும் வடமாகண சபை! சண்டை வேண்டாம் என்கிறார் சிவாஜிலிங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமரணமடைய போகும் வடமாகண சபை சண்டை வேண்டாம் என்கிறார் சிவாஜிலிங்கம்\nஎதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஒக்டோபர் 25ம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nவட மாகாணசபையின் 129வது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது. அதற்கு பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை.\nசெப்டம்பர் 5 மற்றும் 7ம் திகதிகளில் அமைச்சர்கள் விவகாரம் குறித்த வழக்குகள் நடைபெறவுள்ளன. உறுப்பினர்கள் பலர் முதலமைச்சர் ஈகோ மனநிலையுடன் நடந்துகொள்வதாக குறிப்பிடுகின்றனர்.\nஎனினும், முதலமைச்சருக்கு ஈகோ எனக் கூறுபவர்கள் டெனீஸ்வரனுக்கும் ஈகோ என்று கூறவேண்டும்.\nஅவர் தன்னை பதவி நீக்கியது தவறு என நீதிமன்றம் சென்று அதன்படி வழக்கில் பதவி நீக்கியது செல்லாது என இடைக்காலத் தடை வாங்கிவிட்டார்.\nஎனினும், பா. சத்தியலிங்கம் தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என கௌரவமாகப் பதவி விலகியதைப்போல ஏன் டெனீஸ்வரன் தனது பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது\nடெனீஸ்வரனும் ஈகோவில் தானே இதனைச் செய்ய மறுக்கிறார்” என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T18:34:21Z", "digest": "sha1:CO2SQNJ463HSGWYTKPCFREJ6GCFU7LAR", "length": 15634, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "முற்காலச் சோழர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை ஏனைய பாவனை பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, முற்காலச் சோழர்கள் (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nமுற்காலச் சோழர்களின் காலம் (300கிமு - 200கிமு), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக சோழர் குலம் இருந்துள்ளது. இவர்கள் உறையூர் மற்றும் காவேரிப்பட்டிணத்தை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை என்று கூறப்படும் பயணக் கட்டுரையிலும், வரைபடங்களிலும் [1] முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.\nமுற்காலம் என்பது சங்ககாலத்தையும் அதற்கும் முந்திய தொன்ம காலத்தையும் குறிக்கும். இவற்றின் விரிவுகளை கீழ்காணும் இருவேறு கட்டுரைகளில் காணலாம்.\n↑ சோழநாட்டுத் துறைமுகங்களில் ஒன்றான எயிற்பட்டினம் என்பது அரிக்கமேடு, காரைக்காடு பகுதி அகழ்வாய்வு இடங்கள்\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/05/31/kulatheva-anumathiye-mukkiyam/", "date_download": "2018-08-20T18:17:37Z", "digest": "sha1:QEW3GTMWWJL2BR6TYHXK3WFR2YDW2RQZ", "length": 11572, "nlines": 81, "source_domain": "mbarchagar.com", "title": "குலதெய்வ அனுமதியே முக்கியம் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.\nகுலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.\nகிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.\nதிருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய் கின்றார்கள்.\nகுலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.\nஅடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.\nதிருச்செந்தூர் முருக கடவுளே குலதெய்வம்……….\nபெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.\nஇப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.\nபகவத் கீதை தரும் விளக்கம்…….\nகுல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:- யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.\nஉலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற் றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.\nஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_16.html", "date_download": "2018-08-20T18:37:37Z", "digest": "sha1:JCHIUSA3GL2ITMATJMPE7MRBORWS4ZDH", "length": 7343, "nlines": 65, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தேகதானம் அளித்த மேட்டுப்பட்டி தலைமை ஆசிரியை, லட்சுமி! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதேகதானம் அளித்த மேட்டுப்பட்டி தலைமை ஆசிரியை, லட்சுமி\nபுற்று நோயால் இறந்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை உடல், தேனி மருத்துவ கல்லூரிக்குத் தானமாகத் தரப்பட்டது. திண்டுக்கல் சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த சந்திரமோகன் மனைவி லட்சுமி, 59. இவர் 2006 முதல், வயிற்றில் புற்று நோயால் அவதிப்பட்டார். \"இறந்த பின், உடலை தானமாக அளிக்க வேண்டும்,' என, கணவன், மகன்களிடம் கேட்டு கொண்டார்.நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அவர் இறந்தார்.\nஅவரது விருப்பப்படி உடலை, தேனி மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளித்தனர். இதை \"தேக தானம் ' என்று அழைப்பர். கண்தானம், சிறுநீரக தானம் ஆகியவற்றை விட இது சிறப்பானது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேரிடையாக உள்உறுப்புகளை ஆய்ந்து பார்க்க இது உதவிடும்.\"பிறருக்கு உதவ வேண்டும் என்ற கருத்தில் உடலை தானமாக அளிக்க கேட்டுக் கொண்டார். மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளிநாயகத்திடம் உடலை ஒப்படைத்தோம்', என்றார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=390580", "date_download": "2018-08-20T19:19:35Z", "digest": "sha1:L4UQB5MNW2P4LFCKZQNYVGFGWHLSAGAO", "length": 7564, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம் | NASA proposal to send robot bees to study the planet Mars - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nவாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தை பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் இந்த விண்கலம் அனுப்பி வருகிறது. இந்நிலையில் இந்த ஆய்வை மேம்படுத்தும் விதமாக திரளான ரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்தில் உலவ விட ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான நாசாவின் நிதி உதவியுடன் ரோபோ தேனீக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. செவ்வாயில் உலவுவதற்கான திறன்களுடன் உருவாக்கப்படும் இந்த ரோபோக்கள், மின்னேற்றம் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான மையமாக கியூரியாசிட்டி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய் கிரகம் ரோபோ தேனீ நாசா NASA Mars\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\n150 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் அரிதான முழு சந்திர கிரகணம்: ப்ளூ மூன் என வர்ணனை\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/2016/11/02/%E2%80%8B%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5/", "date_download": "2018-08-20T18:04:52Z", "digest": "sha1:SRXH2CWORIDOELUG5IRYFHVXHSJJB7B2", "length": 6544, "nlines": 45, "source_domain": "angusam.com", "title": "​அஜித்தை நினைத்து நெகிழும் காஜல் அகர்வால் – அங்குசம்", "raw_content": "\n​அஜித்தை நினைத்து நெகிழும் காஜல் அகர்வால்\n​அஜித்தை நினைத்து நெகிழும் காஜல் அகர்வால்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக விவேக் ஓபராய், கருணாகரன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nஅனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.\nஇந்நிலையில் ‘கவலை வேண்டாம்’ படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்தார் காஜல் அகர்வால். அவரிடம் அஜித்துக்கு நாயகியாக நடிப்பது குறித்து கேட்டபோது..\n“என்னால் அவரைப் புகழ்வதை நிறுத்த முடியாது ஏனென்றால் அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அந்த மனிதரைப் பார்த்து மெச்சுகிறேன். அவரது நடிப்புக்கு மட்டுமல்ல, ஒரு மனிதராக அவரிடம் அதிக மரியாதை கொண்டுள்ளேன்.\nஅவர் அற்புதமானவர், அவரோட பணியாற்றியதும் அற்புதமாக இருந்தது. அஜித்துடன் படப்பிடிப்பில் இருந்தேன். தொடர்ந்து என்னை காஜல்ஜி என்றே அழைத்தார். நான் அவரிடம், ”உங்களை விட நான் இளையவள். என்னை எதற்கு காஜல்ஜி என்று அழைக்கிறீர்கள். காஜல் என்று கூப்பிடுங்கள் போதும்” என்றேன். அதற்கு அவர் அளித்த பதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது.\n”தனிப்பட்ட முறையில் நான் உங்களை காஜல் என்று அழைக்கிறேன். அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நான் காஜல்ஜி என்றே மரியாதையாக அழைக்கிறேன்.\nஏனென்றால் இந்தத் துறையில் நாயகர்களையே மக்கள் பின்பற்றுவார்கள். நான் உங்களைக் காஜல்ஜி என்று கூப்பிட்டால்தான் சுற்றியிருப்பவர்களும் காஜல்ஜி என்று மரியாதையாகக் கூப்பிடுவார்கள்” என்றார். அது உண்மையே. எங்களது வேலை சூழலில் அதுதான் சகஜம். அதை நாம் சென்று மாற்றிக்கொண்டிருக்க முடியாது.\nபிறகு படப்பிடிப்பில் அனைவரும் என்னை காஜல் ஜி என்றே கூப்பிட்டார்கள்.\nஅஜித், ”துறையில் சில விஷயங்கள் மாற வேண்டும் என நினைக்கிறேன். பெண்களுக்கு உரிய மரியாதை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்று கூறியதாக காஜல் அகர்வால் தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் எவ்வளவு\nதனி மனிதனுக்கு சுயபரிசோதனை என்பது மிக அவசியம் – துணைவேந்தர் முத்துகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-67/19896-2012-05-16-11-10-05", "date_download": "2018-08-20T19:00:27Z", "digest": "sha1:FN4RDISLJS7RT6CZZIJHSRLQ7ZSLVQ45", "length": 23705, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பர்கின்சனிசம் எனும் எனும் நடுக்க நோய்", "raw_content": "\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 16 மே 2012\nபர்கின்சனிசம் எனும் எனும் நடுக்க நோய்\n1817-ம் ஆண்டு லண்டன் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்ஸன் வழக்கத்திற்கு மாறாக சில நபர்களிடம் காணப்படும் நடவடிக்கைகளை கண்காணித்தார். அந்நபர்களிடம் நடத்திய ஆய்வின் போது நடுக்கம், தசை இறுக்கம், தசைகள் ஒற்றுமையாய் இயங்காமை, நடையில் தள்ளாட்டம் போன்ற நோயறி குறிகளை வகைப் படுத்தினார். மனித மூளையிலுள்ள (நியூரான்) செல்களிலிருந்து உடல் இயக்கத்திற்கு மூலாதார மான டோபமைன் எனும் இரசாயன பொருள் உற்பத்தியாகிறது என்றும் சிலநபர் களுக்கு (நியூரான்) மூளை செல்கள் செயலிழக்கும் போது டோபமைன் உற்பத்தி குறைவதால் உடல் தசை களின் இயக்கத்தின் செயல்பாடுகளில் குறைபாடு நிகழ்கிறது என்றும் தனது ஆய்வின் மூலம் முடிவுக்கு வந்தார். இக்குறைபாட்டினை அவரது பெயரிலேயே ‘பர்கின்சனிசம்’ என்று அழைக்கி றார்கள்.\nபார்க்கினிஸம் எனும் நடுக்க நோய் ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. லட்சத் தில் 20 முதல் 30 நபர்களுக்கு இந்நோய் வருகிறது. மிக அரிதாகவே இளம் பருவத்தினரை தாக்கும். இந்நோய் நாற்பது வயதிலிருந்து 60 வயதிற்குட் பட்டவர்களுக்கு ஒரு வகையாகவும், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேறு ஒரு வகையாகவும் பார்க்கினிஸத்தின் பாதிப்பு இருக்கும். நடுத்தர வயதினர் சிலருக்கு தீவிரமா கவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும். 1918 முதல் 1932 வரையிலான கால கட்டத்தில் உலகளவில் இந்நோய் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியது.\nமுதல்நிலை (அ) ஆரம்ப அறிகுறிகள் :\nஆரம்ப அறிகுறிகளின் போது உடலின் இயக்கத்திற்கு மென்மையாக இருக்க வேண்டிய உடல் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு தேவைக் கேற்ப கை, கால்களை இயக்க முடியாமல் போய் விடுகிறது. மேலும், கை, கால், தலை எப்பொழுதும் நடுங்கிக்கொண்டே இருக்கும். சிலருக்கு உடலின் ஒரு புறம், அல்லது ஒரு பகுதியில் மட்டும் கூட நடுக்கம் இருக்கும். கால்களை தூக்கி வைத்து நடக்க சிரமப்பட்டு குழந்தையைப் போல் சின்னச் சின்ன நடை நடப்பார்கள். உட்கார்ந்து எழும் சமயங்களிலும் நடக்கும் போதும் பக்கவாட்டில் திரும்ப மிகுந்த சிரமப்படுவார்கள்.\nஇந்நோயினால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோருக்கு அதிகளவு மனச்சோர்வு ஏற்படுகிறது. இரவில் ஆழ்ந்த தூக்கம் இருக்காது; பயங்கர கனவுகளால் தூக்கம் பாதிக்கும்; தூக்கத்தில் தனக்குத்தானே பேசுவார்கள். தசை இறுக்கத்தினால் படுத்திருந்த நிலையிலேயே திரும்பி படுக்க முடியாமல் தவிப்பார்கள். பேசும் போது முணுமுணுப்பது போலவும், உணர்ச்சி யற்றும் பேசுவார்கள். வாயிலிருந்து உமிழ்நீர் ஒழுகும். விழுங்கஇயலாது. தசை இறுக்கம் உடலின் அனைத்து தசைகளிலும் ஏற்படுவதின் ஒரு பகுதியாக உணவுக் குழாயும் இறுக்கமாகி விடுகிறது. சிறிதளவு உணவும், இரைப்பைக்குச் செல்ல சிரமம் ஏற்படும். இதன்விளைவாக உடல் மெலிவு ஏற்படும், செரிமான இயக்கம் குறைந்து மலச்சிக்கல் ஏற்படும். உட்கார்ந்து எழும் சமயம் தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்து அடிபட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும். தசை இறுக்கத்தினால் பாதத்தில் உள்ள இரத்த நாளங்கள் பாதிப்படைந்து பாத வீக்கம் ஏற்படும். ஞாபகத் திறன் குறைந்து காலப்போக்கில் நோயாளி தனது பெயரையே மறந்து விடுவார். இந்நோய் மெதுவாக துவங்கி படிப்படியாக முன்னேறி தீவிரத் தன்மையை அடையும். நாட்பட்ட நோய் நிலையில் தாம்பத்திய ஆர்வம் குன்றி மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படும். தன் வேலை களைக் கூட தானே செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் காரணமாக பசியின்மை, தூக்க மின்மை ஏற்படும். சிலருக்கு தற்கொலை உணர்வு தலைதூக்கும்.\nசுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு ஆளாவதாலும், இரும்புத்தாது பொருட்கள் தொடர்புடைய இடங்களில் பணிபுரிவதாலும், பூச்சிக் கொல்லிகளை கையாளும் பணிகளில் ஈடுபடுவோர்க்கும் மூளையின் ஒருபகுதியான செரிபெல்லம் (CEREBELLUM) சுருங்குவதாலும், இந்நோய் ஏற்படுகிறது. இரட்டை குழந்தைகளாக பிறப்பவர் களுக்கும் 50 வயதுக்கு மேல் இந்நோய் வரவாய்ப்பு உள்ளது. 15% சதவீதமானவர்களேபாரம்பரியமாக பாதிக்கப்படுகின்றனர். தாய்க்கு இந்நோய் இருந் தால் பிள்ளைகளுக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.\nஇந்நோய்க்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை யில் பயங்கர கனவுகள், தூக்கத்தில் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல், தலைச்சுற்றல், சிறுநீர் தடைபடுதல், தாம்பத்திய ஆர்வம் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் ஹோமியோபதி அக்குப்பஞ்சர், மலர் மருத்துவ முறைகளில் இந்நோய்க்கு நல்ல தீர்வு காணலாம்.\nஇம்மருத்துவ முறை பொறுத்தவரையில் நோயின் பெயரின் அடிப்படையில் சிகிச்சை வழங்குவதில்லை. தனிமனித உடலில் நோய் மையம் கொண்டு வெளிப்படுத்தும் நோயறி குறிகள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமாய் வெளிப்படுத்தும். அப்படி வெளிப் படுத்தும் குறிகளின் தன்மைக்கேற்ப பொருத்த மான மருந்தை தேர்வு செய்து வழங்கும் போது நோயாளியின் நோய் எதிர்பாற்றல் மேம்படுகிறது, நோய் நீங்குகிறது.\nதன்னையறியாமல் உடலில் ஏற்படும் நடுக் கம், முக தசைகளில், இழுப்புக்கள் விட்டு, விட்டு வருதல். தலை சுற்றலின் போது பின்புறமாய் விழுதல்.\nகுடிகாரனைப்போல் தள்ளாட்ட நடை, நடுக்கமான தெளிவற்ற பேச்சு, தலை நடுங்கு தல். கண் இமைகள் தாமாகவே துடித்தல். தசை இழுப்பு, நடுக்கம், தூக்கத்தில் மட்டும் நடுக்கம் இருக்காது.\nபொருட்களை எடுக்கும் போது கைகளில் நடுக்கம், தசைகள் ஒற்றுமையாய் இயங் காமை. நடக்கும் போது கை, கால் நடுக்கம். நாக்கு நடுங்கும். கடுமையாக நடுக்கம் உள்ள போது தன்னை இறுக பிடித்துக் கொள்ளும் படி அருகில் உள்ளவரை கேட்டுக் கொள் வார்.\nஉண்ணும்போது கை நடுங்குதல், தடுமாறி தள்ளாடி நடத்தல். நேராக நிற்க இயலாமை, ஒருபக்கமாகவிழச் செய்தல். வலது புற கை, கால் தானாகவே அசைதல் - விழித்திருக்கும் போது மட்டும் இருக்கும்.\nநிற்கும்போதும் நடக்கும்போதும் தள்ளாட் டம், தன்னை பிறர் கவனிக்க வில்லையே என்று நினைக்கும் போது தள்ளாட்டம் அதிகரிக்கும். பொதுவான பலவீனத்துடன் நடுக்கம். மயக்கம் வருவது போல நடுங்கிக் கொண்டே இருத்தல்.\n- மெக்பாஸ் 1 ங. வாரம் ஒருமுறை.\nதள்ளாட்டமான நடை, எல்லா தசைகளிலும் சோர்வு நடக்கும்போது முழங்கால்களிலி ருந்துபாதம் வரை ஆடுவது போன்ற உணர்ச்சி. கவனமாக அடிஎடுத்து வைப்பார்.\nதடுமாற்ற நடை, சேவல் போல நடத்தல். நடக்கும்போது பாதத்தை வழக்கத்திற்கு மாறாக உயரே உயர்த்தி குதிங்காலை பலமாக வைத்தல், பஞ்சு மீது நடப்பது போன்ற உணர்வு, நடக்கும்போது வலது பக்கம் திரும்புதல்.\nகுறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் கோளாறுகள். பாதிப்பு உள்ள பக்கத்தில் மதமதப்பு.\nதலையிலும், கைகளிலும் நாட்பட்ட நடுக்க கோளாறு உள்ளவர்கள். உழைப்புக்கு பின் ஒவ்வொரு தடவையும் தலையிலும் கைகளி லும் நடுக்கம் ஏற்பட்டு வெகுநேரம் நீடித்திருக்கும்.\nவயதானவர்களுக்கு ஏற்படும் தலை, கை, நடுக்கம். தானாகவே தசைகள் துள்ளுவதும், துடிப்பதும்.\nஉடல் வலிமை வரவரக் குறைந்து நடுக்கத்து டன் மயக்கம் வருவது போன்ற பலகீனம். கைகளிலும், உள்ளங்கைகளிலும் உள்ள தசைகள் நடுங்கிக் கொண்டே இருக்கும்.\nஉடல் முழுவதும் நடுக்கம், ஒருசில தசை களில் மட்டும் நடுக்கம். கை, கால்களில் பலவீனமும் நடுக்கமும், எழுதும்போது கை களில் நடுக்கம், தூக்கத்திலும் கால்களில், உடலில் நடுக்கம், சிலருக்கு ஒரு கையும், தலையிலும் நடுக்கமிருக்கும்.\n(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/india/03/168935?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:10:58Z", "digest": "sha1:NKI7SWOU7YEF4L45LYCK7UWAUVNZI3CS", "length": 7441, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஜெயலலிதாவுடன் ஒப்பிடப்பட்ட அஜித்குமார் மகள்: பரபரப்பை கிளப்பும் போஸ்டர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜெயலலிதாவுடன் ஒப்பிடப்பட்ட அஜித்குமார் மகள்: பரபரப்பை கிளப்பும் போஸ்டர்\nவருங்காலத் தங்கத்தாரகையே என்று நடிகர் அஜித்குமார் மகளின் படத்தைப் போட்டு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகர் அஜித்குமார் - ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் இன்று, இதை தமிழகம் முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். டுவிட்டரில் நேற்று #HBDPrincessAnoushkaAjith என்ற டேக் இந்தியளவில் டிரண்டானது.\nஅனோஷ்காவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மதுரையெங்கும் வாழ்த்து சொல்லி பிரமாண்ட போஸ்டர்களை அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.\nநேற்று காலை மதுரையில் ஆதரவற்றவர்களை தேடிச்சென்று நலத்திட்ட உதவிகளை செய்த ரசிகர்கள் கோயில்களில் அன்னதானமும் வழங்கினார்கள்.\nகுறிப்பாக ஒரு போஸ்டரில் அனோஷ்காவை ஜெயலலிதா கெட்டப்பில் சித்தரித்தது எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது.\nஅதில் எதிர்கால தங்கத்தாரகையே என்று பதியப்பட்டிருந்தது. இது ஜெயலலிதாவை வாழ்த்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்தும் வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-20T18:47:43Z", "digest": "sha1:3SWC2PQIN5ZHRKIG3XBDJSHBH4YNA2QO", "length": 7096, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news சொத்துக்குவிப்பு வழக்கு; ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை", "raw_content": "\nசொத்துக்குவிப்பு வழக்கு; ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை\nசொத்துக்குவிப்பு வழக்கு; ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை\nசொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 1996ம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி திருத்தங்கல் ஊராட்சி துணை தலைவராக இருந்த காலத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையின் அறிக்கையை வருகிற ஆகஸ்டு 3ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை வருகிற ஆகஸ்டு 6ம் தேதி ஒத்தி வைத்தனர்.\nஅதிமுக அமைச்சரராக உள்ள ராகேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவுள்ள விவகாரம் அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஃபிபா உலகக் கோப்பையை சுமக்கும் இந்தியர்கள்..\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/10-ways-to-use-almond-oil-to-get-radiant-and-dewy-skin-018880.html", "date_download": "2018-08-20T18:34:37Z", "digest": "sha1:TPQHPGGN5D6TR3SRYO556P24ZJDDEUEX", "length": 21675, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் சருமம் பளபளக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்!! | 10 Ways To Use Almond Oil To Get Radiant And Dewy Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்கள் சருமம் பளபளக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்\nஉங்கள் சருமம் பளபளக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் 10 வழிகள்\nபெண்கள் தங்களுடைய சருமப் பாதுகாபபிற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதிலும் மிகச் சமீபமாக மருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு அவர்கள் பல்வேறு வகையிலான அழகு சிகிச்சைகள் மற்றும் விலைமதிப்பற்ற முகப்பூச்சுகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதற்கு மிகப் பெரும் தொகையையும் செலவிடத் தயங்குவதில்லை.\nநீங்கள் சருமப் பாதுகாப்பிற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதில்லை எனில், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. இன்று போல்ட்ஸ்கியில், உங்கள் முகத்திற்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெற ஒரு இயற்கை எண்ணையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி தெரிவிக்கும் சில வழிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.\nநாம் இங்கே குறிப்பிடும் இயற்கை எண்ணெயானது பாதாம் எண்ணெய் ஆகும். இதில் வைட்டமின் ஏ மற்றும் பிற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் அதிகமுள்ளது. பாதாம் எண்ணை அதனுடைய பல்வேறு சரும மேம்படுத்தும் நன்மைகளுக்காக எல்லோராலும் பாராட்டப்படுகிறது.\nஇது உங்கள் சருமத்திலிருந்து உங்களுடைய இயற்கையான பொலிவை வெளிக் கொண்டு வருகின்றது. மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உங்களுடைய சருமத்திற்கு மென்மையான பளபளப்பை அளிக்கின்றது.\nஇந்த இயற்கையான பாதாம் எண்ணெயை, நீங்கள் விரும்பிய தோற்றத்தை பெற பயன்படுத்தவும். இயற்கையாகவே பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை அடைய இந்த எண்ணையை பயன்படுத்தக்கூடிய வழிகளைத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேன் மற்றும் பாதாம் எண்ணெய்\n- ½ தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கவும்.\n- இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் தடவவும். அதன் பின்னர் இந்தப் பூச்சை ஒரு இரவு முழுவதும் உலர விடவும்.\n- மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.\n- அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.\nகற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய்\n- 1 தேக்கரண்டி அலோ வேரா ஜெல்லுடன் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெயை சேர்க்கவும்.\n- இந்தக் கலவையை சுமார் 5-10 நிமிடங்கள் வரை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக மசாஜ் செய்யவும்.\n- அதன் பின்னர் ஒரு மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.\n- அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை முயற்சி செய்யவும்.\nரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெய்\n- 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெயை சேர்க்கவும்.\n- இந்தக் கலவையை உங்கள் முகத்தில் மெல்லியதாக படர விட்டு ஒரு இரவு முழுவதும் உலர விடவும்.\n- மறு நாள் காலையில், மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.\n- அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 3 முதல் 4 முறை முயற்சி செய்யவும்.\nபால் மற்றும் பாதாம் எண்ணெய்\n- ஒரு பாத்திரத்தில் ½ தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் பால் 2 தேக்கரண்டி விட்டு நன்றாக கலக்கவும்.\n- இந்தக் கலவையை முகத்தை சுத்தப்படுத்தும் சுத்திகரிப்பானாக பயன்படுத்துங்கள். இந்தக் கலவையை மெதுவாக உங்கள் முகத்தில் தடவி விடுங்கள்.\n- அதன் பிறகு உங்கள் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து சுத்தப்படுத்தவும்.\n- அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முறை முயற்சி செய்யவும்.\nபழுப்புச் சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய்\n- 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் 1 தேக்கரண்டி பழுப்புச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.\n- இந்தக் கலவையை உங்கள் சருமத்தின் மீது மெதுவாக தேய்த்து மசாஜ் செய்திடவும்.\n- மசாஜ் செய்த பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.\n- வாரத்திற்கு ஒருமுறை, இந்த முகப்பூச்சை உபயோகிப்பதன் மூலம் உங்களுடைய சருமம் மிகவும் பிரகாசமான ஒளியைப் பெறும்.\nபடிகாரத் தூள் மற்றும் பாதாம் எண்ணெய்\n- 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெயை 1/3 தேக்கரண்டி படிகாரத்தூளுடன் நன்கு கலக்கவும்.\n- இந்தக் கலவையை உங்கள் தோல் மீது மெதுவாக தடவி மிருதுவாக மசாஜ் செய்யவும். .\n- அதன் பின்னர், வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு உங்களுடைய முகத்தை கழுவ வேண்டும்.\n- பளபளப்பான சருமத்தைப் பெற இந்த முகப்பூச்சை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெய்\n- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் 1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயை கலக்கவும்.\n- உங்கள் முகத்தின் மீது இதைத் தடவி சுமார் 15 நிமிடங்களுக்கு உலர விடவும்.\n- அதன் பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\n- அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற இந்தக் கலவையை ஒரு வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்.\nபச்சை தேயிலை மற்றும் பாதாம் எண்ணெய்\n- 1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் 1 தேக்கரண்டி பச்சை தேயிலையை நன்கு கலக்கவும்.\n- அதன் பின்னர இந்தக் கலவையைப் பயன்படுத்து உங்களுடைய முகத்திற்கு மெதுவாக மசாஜ் செய்யவும்.\n- அதன் பின்னர், மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.\n- வாராந்திர அடிப்படையில் இந்தக் கலவையைப் பயன்படுத்தி பளபளப்பான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறவும்.\nரோஜா எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்\n- ஒரு கிண்ணத்தில் பாதாம் எண்ணெயை 1 தேக்கரண்டி விட்டு, அதனுடன் 2-3 சொட்டு ரோஜா எண்ணெய் சேர்க்கவும்.\n- கலவையை நன்கு கலந்த பின்னர், அதை முகத்தில் மிகவும் மிருதுவாகத் தடவவும்.\n- 5-100 நிமிடங்கள் கழித்து, மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.\nவெள்ளரிக்காய் மற்றும் பாதாம் எண்ணெய்\n- வெள்ளரிக்காயின் ஒரு சில துண்டுகளை நன்றாக நசுக்கி அதை 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் நன்கு கலக்கவும்.\n- இந்தக் கலவையை உங்கள் முகத்தில் நன்கு தடவி, அதை 10 நிமிடங்களுக்கு உலர விடவும்.\n-அதன் பின்னர் மிருதுவான சுத்தப்படுத்தி மற்றும் வெவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யவும்.\n-அழகான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற இதை வாரத்திற்கு 2 முறை இதை முயற்சி செய்யவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஆண்களின் சருமத்தை இளமையாக வைக்கும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்...\nஇந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்...\nஆண்களின் முகத்தை இளமையாக வைக்கும் 8 ஆயுர்வேத முறைகள்..\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்...\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநமக்கு ராஜா ராணி கதை தெரியும்...ஆனால், ராஜா ராணி அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா..\nதேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா.. அதற்கு இந்த ஒரு இலையே போதும்.\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nகிளியோபாட்ராவின் 8 ரகசிய அழகு குறிப்புகள் வேண்டுமா.. இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஒரு பழமே போதும் உங்களை உலக அழகி போல மாற்றுவதற்கு...\nபெண்களை ஈசியாக இம்ப்ரெஸ் செய்வது, கவர்வது எப்படி\nJan 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2017/03/01/new-one-pound/", "date_download": "2018-08-20T19:08:06Z", "digest": "sha1:TV25D7JFW7Q6DQKNWCWND77SLHVE55F5", "length": 6244, "nlines": 166, "source_domain": "yourkattankudy.com", "title": "அறிமுகமாகும் புதிய 1 பவுண்ட் நாணயம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅறிமுகமாகும் புதிய 1 பவுண்ட் நாணயம்\nலண்டன்: பிரித்தானியாவில் எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி புதிய 1 பவுண்ட் நாணயம் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயத்திற்கு பதிலாக புதிய நாணயம் வெளியிடப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய 1 பவுண்ட் தாள் மற்றும் நாணயம் கடந்த 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.\nசுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது புதிய 1 பவுண்ட் நாணயம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\n« காணாமல் போன தங்க ஆபரண பொதியை எஜமானிடம் ஒப்படைத்த இலங்கைத் தொழிலாளி\nகண்டி திகனயில் சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதான தொகுதி திறந்து வைப்பு »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்' தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nடில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்...\nஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - ஹரீஸ் எம். பி.\nஅறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://ulakaththamizh.org/Event.aspx?id=103", "date_download": "2018-08-20T18:36:52Z", "digest": "sha1:VW2WEP3VGEDXFXPFKCG35AB7JYMBAXEL", "length": 9745, "nlines": 28, "source_domain": "ulakaththamizh.org", "title": "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் பெருவிழாக் கவியரங்கம் : International Institute of Tamil Studies", "raw_content": "\nதமிழ்த்தாய் 68 – பிறந்தநாள் பெருவிழாக் கவியரங்கம்\nதலைப்பு : மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் பெருவிழாக் கவியரங்கம்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68ஆம் பிறந்தநாள் பெருவிழா தமிழ்த்தாய்-68 பெருவிழா என்னும் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிப்ரவரி மாதம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வரிசையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தமிழ்வளர்ச்சித் திட்டங்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து பாமாலை சூட்டிப் பாராட்டும் நோக்கத்தோடு தமிழகமெங்கிலுமிருந்து கலந்துகொண்ட 68 கவிஞர்களின் கவியரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேரறிஞர் அண்ணா கருத்தரங்க அறையில் நடைபெற்றது. “தாய்த்தமிழ் நாடுபோற்றும் தங்கத் தாரகையின் தமிழ்வளர்ச்சி சாதனைகள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற இக் கவியரங்கத்திற்கு டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியரும் உ.வே.சா.விருதாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தலைமை தாங்கினார். தமிழ்த்தாய் அறக்கட்டளையின் சிறப்புத்தலைவர் கவிஞர் துரை.ராசமாணிக்கம் மற்றும் தமிழ்க்கவிஞர்கள் கூட்டமைபின் தலைவர் கவிஞர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலையுரை நிகழ்த்தினர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் வரவேற்புரை ஆற்றினார். இந்தக் கவியரங்கத்தில் அந்தமான் சோழன். சிந்தைவாசன் சென்னை, கவிஞர் தாமரைப்பூவண்ணன் சென்னை, கவிஞர் சொர்ணபாரதி சென்னை, கவிஞர் சுரதா கல்லாடன் சென்னை, கவிஞர் உடையார் கோயில் குணா தஞ்சாவூர், பேரா. வேட்டவராயன் திண்டிவனம், இதயகீதம் இராமானுஜம் சென்னை, நம்ம ஊர் கோபிநாத் சென்னை, அரிமா மு.மணி ஈரோடு, கவிஞர் பூவைத் தமிழன் ஈரோடு, கவிஞர் சுலோச்சனா சென்னை, கவிஞர் பிரேமா அண்ணாநகர், சாரதாதிருமலை வேலூர், தாமரைச் செல்வி போரூர், கலாலா லஜபதி பெங்களுரூ, உணர்வுப் பாவலர் உசேன் புதுச்சேரி, ப. திருநாவுக்கரசு புதுச்சேரி, பா.இராசேந்திரன் புதுச்சேரி, வசீகரன் சென்னை, விசித்திரன் சென்னை, பொன். தங்கவேலன் ஆரணி, இரா. துரைமுருகன் தியாகதுருகம், சிங்கார உதியன் திருக்கோவிலூர், பாரதி மணாளன் திருக்கோவிலூர், தேவ.சுந்தர வடிவேலு திருக்கோவிலூர், இரா.பொன்னுப் பிள்ளை தொட்டியம், வ.ர.கணேசனார் தியாகதுருகம், மான்.கு.ஏழுமலை திண்டிவனம், செம்மொழி குமார் புதுக்குப்பம், ஜெனாதட்சன் காஞ்சிபுரம், கவிஞர் சுரா சென்னை, வனத்துறை இராமச்சந்திரன் சென்னை, இராம் மோகனதாசு சென்னை, ச.ப.மேகநாதன் சென்னை, முல்லை அன்பரசன் ஆவடி, கூரம்துரை காஞ்சிபுரம், பாவலர் மலரடியான் காஞ்சிபுரம், கவிதைத்தம்பி சின்னசேலம், பெ.அறிவழகன் சின்னசேலம், தி.க.நாகராசன் விழுப்புரம், கூ.பிச்சைப்பிள்ளை உளுந்தூர்ப்பேட்டை, சண்முகபிச்சைப்பிள்ளை விருதுநகர், பு.ப.பன்னீர்செல்வம் விருதுநகர், மு.ஜெயலட்சுமி குரோம்பேட்டை, மு. இராஜகருணாகரன் அம்பத்தூர், தொலைபேசி மீரான், சென்னை, ஈ.விஜய், கன்னியாகுமரி, திருவைபாபு, சென்னை, கவிஞர் மாவிறையான் சென்னை, இராம பரஞ்சோதி சென்னை, புலவர் இளஞ்செழியன் சென்னை, இராம. சுதாகரன் திருக்கோவிலூர், அரிமா.து.சி.இராமையா சென்னை, தஞ்சை சீனிவாசன் சென்னை, பொன்.சுந்தரம் செங்கற்பட்டு, வேத.பெருமாள் வில்லியம்பாக்கம், வே.அருட்பாமணி காஞ்சிபுரம், து.பத்மபிரியா காஞ்சிபுரம், வி.இந்துமதி ஆரணி, பரந்தூர் இராமசாமி திருவள்ளூர், த.சீ. பாலு சென்னை, ந.கோமுகிதாசன் கச்சராபாளையம், அல்லூர் இராசலிங்கம் தாமோதரன், அரும்பாக்கம், அன்வர் பாட்சா ஊரப்பாக்கம், பெ.காப்புசாமி வண்டலூர், துரை.இராசமாணிக்கம் திண்டிவனம், ப.கோ.நாராயணசாமி தியாகதுருகம் ஆகிய 68 கவிஞர்கள் கலந்துகொண்டு கவிபாடினர். இறுதியில் தமிழ்த்தாய் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் கவிஞர் த.உடையார் கோயில் குணா நன்றியுரை நவின்றார்.\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/news/60594/The-woman-was-arrested-and-cheated-by-two-women", "date_download": "2018-08-20T18:32:07Z", "digest": "sha1:VQQFCYCPBOTIKEBPDX223IIHKEEHB22Y", "length": 8806, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "ஆண் என நம்ப வைத்து இரு பெண்களை ஏமாற்றி மோசடி பெண் கைது - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\nஆண் என நம்ப வைத்து இரு பெண்களை ஏமாற்றி மோசடி பெண் கைது\nதன்னை ஆண் என நம்ப வைத்து இரு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி ஒரு பெண் பணம் பறித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிக்னோர் என்ற இடத்தில் வசித்து வரும் ஒரு ஸ்வீட்டி என்ற பெண், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசைப்பட்டார். அதனால், தனது பெயரை கிருஷ்ணா சென் என மாற்றி, ஆண் போல சிகையலங்காரம் மற்றும் உடைகள் அணிந்து முகநூலில் போலி கணக்கு தொடங்கி, பெண்களை வளைக்கத் தொடங்கினார். அவர் விரித்த வலையில் சில பெண்கள் சிக்கினர். அதில், நைனிடாலை சேர்ந்த தொழிலதிபரின் பெண்ணிற்கு காதல் வலை வீசிய அவர், அதை திருமணம் வரை கொண்டு சென்றுள்ளார். மேலும், போலியாக இருவரை தயார் செய்து தனக்கு பெற்றோர்கள் என நடிக்க வைத்து கடந்த 2014ம் ஆண்டு திருமணத்தையும் முடித்துள்ளார். மேலும், ஆன்லைனில் செயற்கை ஆணுறுப்புகளை வாங்கி உடலுறவிலும் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் அவர் ஆண் இல்லை என்பது அப்பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. ஆனாலும், வெளியே கூறமுடியாமல் அவர் தவித்து வந்துள்ளார்.\nமேலும், அவரை கிருஷ்ணாசென் வரதட்சணை கொடுமை செய்து ரூ.8.5 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். அதேபோல், முகநூலில் வேறொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து அவரையும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அவரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே, பொறுத்துக்கொள்ள முடியாத முதல் மனைவி இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ஸ்வீட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆண் போல் நடித்தது மட்டுமில்லாமல் புகைப்பிடிப்பது, மது அருந்துவது பழக்கங்கள் மூலம் தன்னை ஸ்வீட்டி ஆணாகவே மற்றவரிடம் காட்டியுள்ளார். இத்தனை வருடங்களாய் இவரை ஆண் என நினைத்தோமே என அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nPrevious article தம்மா துண்டு துணியை போட்டுக்கொண்டு கவர்ச்சி காட்டும் பிரியங்கா சோப்ரா\nNext article காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய தாய்லாந்து எப்படி தெரியுமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nபெண்கள் மனதை கொள்ளை கொண்ட தொகுப்பாளர் ஆனந்தகண்ணனின் தற்போதைய நிலை தெரியுமா\nகண்ணகியை இம்சித்த பாவத்தை சுமக்கிறார் ஜெயலலிதா சிலை கோளாறின் சாப பின்னணி\nஅறிமுகம் ஜியோ ரூ 11 முதல் ஆட்-ஆன் பிளான்ஸ் ஆட்-ஆன் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ulakaththamizh.org/Event.aspx?id=104", "date_download": "2018-08-20T18:37:41Z", "digest": "sha1:2EULFGZ6VN2NHK4SLIOBWE23PHIWBRZR", "length": 2609, "nlines": 28, "source_domain": "ulakaththamizh.org", "title": "தமிழ்த்தாய் 68 பெருவிழாவில் அரியநூல் பதிப்புகள் வெளியீடு : International Institute of Tamil Studies", "raw_content": "\nதமிழ்த்தாய் 68 – அரியநூல் பதிப்புகள் வெளியீடு\nதலைப்பு : தமிழ்த்தாய் 68 பெருவிழாவில் அரியநூல் பதிப்புகள் வெளியீடு\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68ஆம் பிறந்தநாள் பெருவிழாவை முன்னிட்டு 24.02.2016 அன்று நடைபெற்ற கவியரங்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்ற டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியர் கவிஞர் மருது அழகுராஜ் அவர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட அரியநூல் பதிப்புகளை நூறாண்டு பழமைமிக்க சமரச சன்மார்க்க நூலகத்தின் நூலகர் திரு.பன்னீர் செல்வம் அவர்களிடம் வழங்கினார்.\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/02/1984-by-harvey-thompson.html", "date_download": "2018-08-20T18:59:01Z", "digest": "sha1:NTYNY7FZYZGTY2LCMKV6HIYH4BKD5MAL", "length": 49341, "nlines": 205, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 1984 அமிர்தசரஸ் படுகொலையில் பிரிட்டனின் பாத்திரம். By Harvey Thompson", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n1984 அமிர்தசரஸ் படுகொலையில் பிரிட்டனின் பாத்திரம். By Harvey Thompson\nஜூன் 1984இல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் (சீக்கிய மதத்தினரின் புனித ஆலயம்) இருந்த சீக்கிய போராளிகளை பலவந்தமாக வெளியேற்றுவதில் திட்டமிட, பிரதம மந்திரி மார்கரெட் தாட்சரிடம் இருந்து வந்த உத்தரவுகளின் பேரில் பிரிட்டனின் சிறப்பு விமானப்படை சேவை (Special Air Service – SAS) இந்திய அரசிற்கு உதவியதாக சமீபத்தில் வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை, ஒரு படுகொலையில் போய் முடிந்தது. இந்திய சீக்கிய சிறுபான்மையினரை அதிர்ச்சியூட்டிய மற்றும் ஆத்திரமூட்டிய அந்த சம்பவம் ஒரு வகுப்புவாத பிரிவினை கிளர்ச்சிக்கு எரியூட்டியதோடு, இறுதியில் இந்திய அரசின் பெரும் வன்முறையோடு ஒடுக்கப்பட்டது.\nஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation Blue Star) நடவடிக்கையில் பிரிட்டன் உடந்தையாய் இருந்தமை குறித்த வெளியீடு பிரிட்டிஷ் அரசை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பழமைவாத கட்சியின் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் ஓர் \"அவசர விசாரணைக்கு\" உத்தரவிட்டுள்ளார். அந்த ஆவணங்களில் ஏன் உணர்வுப்பூர்வமானவை என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும், முப்பது ஆண்டுக்கு முந்தைய அரசு ஆவணங்களை வெளியிடும் சட்டத்தின் கீழ் 1984 ஆவணங்கள் வெளியிடப்பட்ட போது ஏன் இவை நிறுத்தி வைக்கப்பட்டன என்பதையும் கண்டறிய, அந்த விசாரணையில் கேபினெட் செயலர் சர் ஜெரிம் ஹெவுட் பணிக்கப்பட உள்ளார்.\n“ஆழ்ந்த வடுக்களை\" ஏற்படுத்திய மற்றும் \"இன்றும் கூட கண்ணுக்குப் புலனாகாத பலமான உணர்வுகளை\" விட்டு சென்றிருக்கின்ற அந்த இராணுவ நடவடிக்கையில், பிரிட்டன் சம்பந்தப்பட்டிருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் அந்த ஆவணங்களில் இல்லை என்று கடந்த மாதம் கேமரூன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇதுவொரு பொருத்தமற்ற பொய்யாகும். ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பொற்கோயில் மீது ஒரு தாக்குதல் நடத்த திட்டமிடுவதில் உதவுவதற்கு சிறப்பு விமானப்படை சேவையின் ஒரு அதிகாரி டெல்லிக்கு அனுப்பப்பட்டிருந்தார் என்பதை ஒரு சுயாதீன இதழாளரான பில் மில்லரால் வெளியிடப்பட்ட வொயிட்ஹால் கடிதங்கள் ஸ்தாபிக்கின்றன.\nபொற்கோயிலில் இருந்து ஆயுதமேந்திய சீக்கிய போராளிகளை வெளியேற்றும் ஒரு நடவடிக்கையில் பிரிட்டனின் ஆலோசனையைக் கோரிய இந்திய அரசின் ஒரு முறையீட்டிற்கு \"அணுசரணையாக\", வெளியுறவுத்துறை செயலர் சர் ஜியோபெரி ஹோவ் விடையிறுத்திருந்ததாக பெப்ரவரி 23, 1984 தேதியிட்ட ஓர் உயர்மட்ட இரகசிய கடிதம் விவரிக்கிறது. “பிரதம மந்திரியின் உடன்பாட்டோடு\" ஒரு SAS அதிகாரி இந்தியாவிற்கு ஏற்கனவே விஜயம் செய்திருந்தார் மற்றும் \"ஒரு திட்டம் வகுத்திருந்தார், அத்திட்டத்திற்கு திருமதி. இந்திரா காந்தியால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் இதையும் கூறுகிறது, “அந்த திட்டத்தை இந்திய அரசு வெகு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருமென்று வெளியுறவு செயலர் நம்புகிறார்.”\nஇலங்கையில் SAS சம்பந்தப்பட்டிருந்ததன் மீதான தகவல்களைச் சேகரிக்க முயன்றபோது, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பிரிட்டன் சம்பந்தப்பட்டிருந்ததை கண்டறிந்த மில்லர், மார்ச் 1984இல் அந்நடவடிக்கைக்கான பிரிட்டனின் உதவிகள் சம்பந்தமான ஆவணங்களின் ஒரு தடத்தைப் பின்தொடர முடிந்தது. (அவர் கண்டறிந்த ஆவணங்கள் Stop Deportations வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன). ஆனால் பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு உடனடியாக இழுத்துச் சென்ற சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட \"அந்த தொகுப்புகளின் அடுத்த பகுதியை\" அவரால் அணுக முடியவில்லை.\nஇந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உத்தரவுகளின்பேரில், பஞ்சாப் அமிர்தசரஸின் ஹர்மந்திர் சாஹிப் (சீக்கிய பொற்கோயில்) உள்ளிருந்து ஜர்னெயில் சிங் பிந்த்ராவாலே மற்றும் அவரின் ஆயுதமேந்திய சீடர்களை வெளியேற்ற இந்திய இராணுவம் ஜூன் 3-8, 1984இல் ஒரு தாக்குதல் நடத்தியது.\nஒரு பெரிய ஆயுதமேந்திய கிளர்ச்சியை தொடங்குவதற்காக அந்த புனித தலத்தில் ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததாக பிந்த்ராவாலே மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது, அந்த வாதங்களுக்கு அப்போதிருந்து பல பகுப்பாய்வாளர்களால் எதிர்வாதம் வைக்கப்பட்டுள்ளன.\nபொற்கோயில் வளாகம் மீதான தாக்குதலுக்கு கூடுதலாக, சந்தேகத்திற்குரிய சக-சூழ்ச்சியாளர்களைப் பிடிக்க பஞ்சாபின் கிராமபுறமெங்கிலும் சோதனை நடவடிக்கைகளும் அந்த ஆப்ரேஷனில் சேர்ந்திருந்தன. அதற்கடுத்ததாக உடனடியாக ஆப்ரேஷன் உட்ரோஸ் என்பது தொடங்கப்பட்டது. மாதக்கணக்கில் நீண்டிருந்த இந்த நடவடிக்கையின் கீழ் அகாலி தள தலைவர்களும் மற்றும் பத்து ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒரு சீக்கிய வகுப்புவாத கட்சியான அகாலி தளம், பிந்த்ராவாலேயின் ஆதரவோடு சீக்கியர் பெரும்பான்மை வாழும் பஞ்சாபிற்கு அதிக சுயாட்சி மற்றும் அதிகாரம் கோரி வந்தது. இந்த நடவடிக்கைகளில், டாங்கிகள், சிறிய பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களோடு பெரும் எண்ணிக்கையிலான இந்திய இராணுவ துருப்புகளும் பயன்படுத்தப்பட்டன.\nஉத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் 492 “பயங்கரவாதிகளோடு\" சேர்த்து 83 இந்திய இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். மொத்த ஏறத்தாழ 3,000 உயிரிழப்புகள் என்ற எண்ணிக்கையோடு, பக்தர்களும் மற்றும் இதர பொதுஜனங்களும் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர் என்பதை சுயாதீனமான ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.\nசீக்கிய ஆதார நூலகங்களில் இருந்த வரலாற்று தொல்பொருட்களும், கையெழுப்புப்படிகளும் அரசால் கைப்பற்றப்பட்டு, பின்னர் அவை எரிக்கப்பட்டன.\nஅந்த இராணுவ நடவடிக்கை இந்தியா முழுவதிலும் அதிகளவிலான வகுப்புவாத பதட்டங்களுக்கு மற்றும் சீக்கியர் மீதான தாக்குதல்களுக்கு இட்டு சென்றது. இந்திய இராணுவத்தில் இருந்த சில சீக்கிய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர், அதேவேளையில் ஏனையவர்கள் இராணுவத்தில் இருந்தும் மற்றும் அரசு நிர்வாக அலுவலகங்களில் இருந்தும் இராஜினாமா செய்தனர் அல்லது இந்திய அரசிடம் இருந்து பெற்ற விருதுகள் மற்றும் மரியாதைகளை மறுத்தளித்தனர்.\nஅக்டோபர் 31இல், இந்திரா காந்தி அவரது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். சீக்கியர்-விரோத படுகொலைகளை அடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர்களால் தூண்டிவிடப்பட்ட பொலிஸ் உடனான மோதலில், 3,000த்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.\nபொற்கோயில் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து சமூகரீதியில் பதட்டமாக இருந்த சூழ்நிலையில், அந்த ஆப்ரேஷனால் ஒரு தனி சீக்கிய அரசின் உடனடி பிரகடனம் முன்கூட்டியே தடுக்கப்பட்டதாகவும், பஞ்சாபின் இந்திய தரப்பு எல்லையைப் பாகிஸ்தான் துருப்புகள் கடந்து வரவிருந்த ஆபத்தும் கூட முன்கூட்டியே தடுக்கப்பட்டதாகவும் முன்னணி இராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.\nஅங்கே அதிருப்தி அடைந்த வேலையற்ற சீக்கிய இளைஞர்களும் மற்றும் தகுதிக்கேற்ற வேலையில் இருத்தப்படாத சீக்கிய இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் இருந்த நிலைமைகளின் கீழ், காங்கிரஸ் அரசாங்கமும் பஞ்சாபின் பெரும்பாலான சீக்கிய அரசியல் மற்றும் வியாபார மேற்தட்டுக்களும் பல ஆண்டுகளுக்கு அதிகளவில் கசப்பான மோதலில் ஈடுபட்டு வந்தன. (இந்திரா காந்தி ஒரு மதசார்பற்ற தேசியவாதி என்று சித்தரிக்கப்பட்ட போதினும்) இந்த மோதலில் இருதரப்பும் அதிகளவில் ஆக்ரோஷமான வகுப்புவாத முறையீடுகளில் தங்கி இருந்தன, அது பஞ்சாபில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இடையில் அதிகளவிலான சச்சரவை ஏற்படுத்தி வந்தது.\nபஞ்சாபில் ஜூன் 1984இல் சமூக பதட்டங்களின் ஒரு வெடிப்பு மீது இந்திய மேற்தட்டிற்குள் பீதி நிலவியது நிஜமாகும், ஆனால் அவரது சீக்கிய பிரிவுகளுக்கு வெளியே பரந்த அடித்தளத்திலான ஆதரவைப் பெற்றிராத பிந்த்ராவாலே மீது அங்கே சர்ச்சைகள் இருக்கவில்லை.\nஓர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தேசியளவிலான சமூக அமைதியின்மைக்கு இடையில், தேர்தல்கள் மற்றும் உள்நாட்டு சுதந்திரங்களை இரத்து செய்தும், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தலைவர்களை சிறையில் அடைத்தும், ஜூன் 1975இல் இந்தியா காந்தி நெருக்கடிகால அவசர நிலையை அறிவித்திருந்தார். அது மார்ச் 1977 வரை நீக்கப்படாமல் இருந்தது.\n1977 தேர்தல்களில், அதில் காந்தி பதவியை இழந்தார் என்பதோடு, சீக்கிய வகுப்புவாத அகாலி தளம் தலைமையிலான ஒரு கூட்டணி பஞ்சாபில் அதிகாரத்திற்கு வந்தது. அகாலி தளத்தை உடைத்து சீக்கியர்கள் மத்தியில் மக்கள் ஆதரவை பெறும் முயற்சியில், காந்தியின் காங்கிரஸ் கட்சி வைதீக மத போதகர் ஜர்னெயில் சிங் பிந்த்ராவாலேயை பஞ்சாப் அரசியலில் முன்னிலைக்கு கொண்டு வந்தது. பிந்த்ராவாலேயின் தம்தாமி தக்சால் (Damdami Taksal) அமைப்பு மற்றொரு மதவாத குழுவோடு வன்முறை சச்சரவுகளில் சிக்கிய நிலையில், அவர் விரைவிலேயே தீமைபயக்கும் விதத்தில் மாறினார்.\nஅவர் காங்கிரஸ் தலைவர் ஜகத் நாராயணனின் படுகொலைக்கு தூண்டியமைக்காக செப்டம்பர் 1981இல் கைது செய்யப்பட்டார், ஆனால் சாட்சிகள் கோரி விரைவிலேயே விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் காங்கிரஸில் இருந்து தம்மைத்தாமே பிரித்து கொண்ட பிந்த்ராவாலே அகாலி தளத்துடனான சக்திகளுடன் இணைந்தார்.\nஜூலை 1982இல், அனந்த்பூர் சாஹிப் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அந்த தீர்மானம், கோதுமை மற்றும் ஏனைய வேளாண் பொருட்களின் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டுமென்பது உட்பட, சீக்கியர் பெரும்பான்மை வாழும் பஞ்சாபிற்கு கூடுதல் சுய-அதிகாரம் வழங்க கோரியதோடு, 1966இல் எந்த உடன்படிக்கையின் கீழ் பஞ்சாப் மூன்று மாநிலங்களாக (ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பெரும்பான்மையினர் பஞ்சாபி பேசும் மற்றும் சீக்கியர்களைக் கொண்ட பஞ்சாப்) பிரிக்கப்பட்டதோ அந்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யவும் கோரியது.\nபிந்த்ராவாலேயின் சீடர்களில் சிலர் உட்பட சீக்கியர்களில் ஒரு சிறிய பிரிவு, துணைகண்டத்தின் 1947 பிரிவினையின் பிற்போக்குத்தனமான வகுப்புவாத தர்க்கத்தை வைத்துக் கொண்டு, ஒரு தனி சீக்கிய அரசை உருவாக்கும் நோக்கங்கொண்ட காலிஸ்தான் இயக்கத்தின் போராளிகள் பிரிவுக்கு திரும்பியது.\nபிந்த்ராவாலே பகிரங்கமாக அவரை காலிஸ்தான் இயக்கத்தோடு இணைத்துக் கொள்ளவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் சீக்கியர்களை ஒரு \"தேசம்\" ஆக குறிப்பிட்டு வந்தார்.\nஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரை அடுத்து வந்த தசாப்தத்தில் பஞ்சாப் மீது கடிவாளமில்லா இந்திய அரசின் பிடியை மீண்டும் நிலைநிறுத்த, ஏதேச்சதிகார கைது நடவடிக்கைகள், வழக்கின்றி நீண்டகாலம் சிறையில் அடைப்பது, சித்திரவதை, மாயமாக்கிவிடுவது மற்றும் பொதுமக்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய போராளிகளைக் கூடுதல் அதிகாரத்தைக் கொண்டு கொல்வது உட்பட பரந்த மனித உரிமைமீறல்களில் இந்திய அரசு படைகள் தங்கியிருந்தன. அரசாங்க-விரோத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.\nகாலிஸ்தான் பிரிவினைவாதிகள், அவர்கள் பங்கிற்கு, கண்மூடித்தனமான தாக்குதல்களில் இந்துக்களைக் குறிவைத்தும் மற்றும் அவர்களின் வகுப்புவாத-பிரிவினைவாத அரசியலை நிராகரித்த சீக்கியர்களைப் படுகொலை செய்தும், அட்டூழியங்கள் நடத்தினர். ஜூன் 1985இல், காலிஸ்தான் இயக்கத்தினர் மாண்ட்ரீல்-இலண்டன்-புது டெல்லி ஏர் இந்தியா விமானத்தைக் குண்டு வைத்து தகர்த்த போது 329 மக்கள் கொல்லப்பட்டனர்.\nஅண்மையில் திறக்கப்பட்ட வைட்ஹால் கோப்பில் உள்ள ஏனைய ஆவணங்கள், ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவில் இந்தியாவிற்கு ஆதாயமளிக்கும் ஆயுத விற்பனை உட்பட வெளிப்படையான பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டிருந்ததை வெளிக்காட்டுகின்றன. இந்தியாவில் பிரிட்டிஷ் \"வியாபார நலன்கள்\" “மிகவும் கணிசமாள அளவிற்கு\" இருந்தன என்பதை ஜூன் 22, 1984 தேதியிட்ட ஒரு இரகசிய வெளியுறவுத்துறை அதிகாரியின் குறிப்புரை வலியுறுத்தியது. அந்த ஆவணம் தொடர்ந்திருந்தது, “வியாபாரம் மற்றும் இராணுவ விற்பனை இரண்டிற்கும் அது ஒரு மிகப்பெரிய மற்றும் விரிவடைந்துவரும் சந்தையாகும். 1983இல் பிரிட்டனின் ஏற்றுமதி 800 மில்லியன் பவுண்டைக் கடந்திருந்தது. 1975க்கு பின்னர் இருந்து, இந்தியா 1.25 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான பிரிட்டனின் இராணுவ உபகரணங்களை வாங்கி உள்ளது.”\nஇந்திய அரசு 65 மில்லியன் பவுண்ட் உடன்படிக்கையில் இராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு உடன்பட்டதற்கு பிரதி உபகாரமாக பொற்கோயில் மீதான தாக்குதலில் பிரிட்டிஷ் அரசு ஒரு பங்கு வகித்திருக்கக்கூடும் என்று தொழிற்கட்சியின் முன்னாள் துணை சேர்மேன் டோம் வாட்சன் கூறினார். அவர் கேமரூனிடம், “உங்களின் அமிர்தசரஸ் விசாரணையில், அரசு பணியாளர்களை விசாரிக்க உத்தரவிடுவதற்கு மாறாக, நீங்கள் ஏன் ஜாப்ரி ஹோவ் பிரபு மற்றும் லியோன் பிரெட்டென் பிரபுவிடம் அவர்கள் மார்கரெட் தாட்சரிடம் என்ன ஒப்புக்கொண்டார்கள் என்பதையும், அப்போதைய வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் உடன்படிக்கையோடு அதற்கு ஏதேனும் தொடர்பு உண்டா என்பதையும் கேட்கக்கூடாது” என்று கேள்வி எழுப்பினார்.\nகமெரூன் இயல்பாகவே சதி குறித்த எந்தவொரு கருத்துக்களையும் நிராகரித்தார்.\nஇந்தியாவிற்கான பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் மூன்று நாள் விஜயத்தில் கமெரூன் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு வெளிநாட்டிற்கான பெரிய வியாபார பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி சென்று வந்து வெறும் ஒரு ஆண்டிற்குப் பின்னர், இது நடந்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் நம்பிக்கையில், இந்தியா மற்றும் பிரிட்டன் ஒரு \"சிறப்பு உறவை\" கொண்டுள்ளன என்று தெரிவித்த கேமரூன், ஆதாரத்திற்காக 1.5 மில்லியன் இந்திய \"வம்சாவழியினர் பிரிட்டனில் உள்ளனர்\" என்பது உட்பட அவ்விரு நாடுகளும் \"மொழி, கலாச்சாரம், உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன\" என்று மேற்கோள் காட்டி இருந்தார்.\nஅவரது விஜயத்தின் போது கமெரூன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கும் விஜயம் செய்திருந்தார் மற்றும் ஏப்ரல் 13, 1919இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூறுக்கணக்கான நிராயுதபாணியான மக்களை, முக்கியமாக சீக்கியர்களை, பிரிட்டிஷ் இந்திய இராணுவம் இழிவுகரமாக படுகொலை செய்திருந்த ஜாலியன்வாலா பாத்திற்கும் அஞ்சலி செலுத்த (ஆனால் அவர் மன்னிப்பு கோரவில்லை) விஜயம் செய்திருந்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\n அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆ...\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா வை எல் எஸ் ஹமீட்\nகடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/madhu1.html", "date_download": "2018-08-20T18:27:13Z", "digest": "sha1:MFXKGAYMDBDU2WLKE27I2LPON7LHZI7V", "length": 12512, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதுமிதாவும் சூட்சுமமும்! | Parthibans advice to Madhumitha - Tamil Filmibeat", "raw_content": "\nகுடைக்குள் மழையில் களேபரமாக அறிமுகமாகி பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆந்திரத்து கவர்ச்சி குடைமிளகாய், மதுமிதா எதிர்பார்ப்புக்கேற்ப பெரிதாக ரவுண்ட் அடிக்கவில்லை.\nஇப்போது அவர் கையில் இருப்பது இ-3 (இளமை இதோ இதோ), இங்கிலீஸ்காரன், பாசில் இயக்கப் போகும் உன்னோடு ஒருநாள் ஆகிய 3 படங்கள்தான்.\nஅதிலும் மதுமிதாவுக்கு முக்கியமான ஹீரோயின் ரோல் இல்லை. இங்கிலீஸ்காரனில் நமீதா இருக்கிறார். அவரை சமாளித்துகரையேற வேண்டிய கட்டாயத்தில் மதுமிதா.\nஅதே போல இ-3யிலும் இரு மும்பை பார்ட்டிகள் போட்டிக்கு இருக்கின்றன. சாணக்யாவில் சரத்குமாருடன் வந்த சான்ஸ்அப்படியே கை நழுவிப் போய்விட்டது.\nஇயக்குனர் பாசில் இயக்கும் உன்னோடு ஒரு நாள் படத்தின் சூட்டிங் எப்போது தொடங்குமோ தெரியாது. இது லோ பட்ஜெட்படம். இதனால் சம்பளம் ரொம்பக் கம்மி.\nஇப்படி, குறைந்த அளவிலான படங்களில் நடித்தாலும், பட வாய்ப்புக்கள் கைவிட்டுப் போனாலும் மதுமிதா படு ஜாலியாகத்தான்இருக்கிறார்.\nபட யூனிட்டில், எல்லோருடனும் இயல்பாக, கலகலப்பாக பழகும் மதுமிதா வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் படு குஷியாகிவிடுகிறாராம். படப்பிடிப்பை பார்க்க வரும் ரசிகர்கள் மத்தியில் புகுந்து விடும் மதுமிதா, அவர்களிடம் படு ஜாலியாக பேசுகிறார்.அவர்களுடன் எந்த பந்தாவும் இல்லாமல் போட்டோ எடுத்துக் கொள்கிறார்.\nசமீபத்தில் சென்னையிலேயே மகா நெரிசல் மிகுந்த தெருவான ரங்கநாதன் தெருவுக்குள் திடீரென நுழைந்தார் மதுமிதா. ஒருநடிகை (பெரியவரோ, சைடு நடிகையோ) சென்னைத் தெருவில் இறங்கி நடந்தால் நம்ம ரசிக சிகாமணிகள் சும்மாஇருப்பார்களா. அவரை மொய்த்து எடுத்துவிட்டார்களாம்.\nஅமுதே படம் ரொம்ப டிலே ஆனதால் அதில் நடித்த எல்லோருமே முகம் சுளிக்க, மதுமிதா மட்டும் நல்ல ஒத்துழைப்பைத் தந்துவருகிறாராம்.\nசம்பள விஷயத்திலும் மதுமிதா ரொம்ப விட்டுக் கொடுத்தே போகிறார். ரூ. 12 லட்சத்தில் ஆரம்பிக்கும் மதுமிதா, அப்படியேஇறங்கி, ஏறி, இறங்கோ இறங்கு என இறங்கி சில லகரங்களுக்கு படிந்துவிடுகிறார். இவ்வளவு கொடுத்தால் தான் நடிப்பேன்என்று கறார்தனம் எல்லாம் செய்வதில்லை.\nஇப்படி ஒத்துழைப்புத் தந்து, விட்டுக் கொடுத்தும் போகும் மதுமிதாவுக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் போனது ஆச்சரியம் தான்.\nதமிழில் மட்டுமில்ல, அவரது தாய் மொழியான தெலுங்கிலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லையாம்.\nஇதனால் ஒரு ஸ்டில் செஷன் நடத்தி தனது தாராள போஸ்களை ஒரு ரவுண்டுக்கு விடும் வழக்கமான, வாய்ப்பிழந்த,நடிகைகளின் பார்முலாவை கையில் எடுக்க முடிவு செய்திருக்கிறார் மதுமிதா.\nஇதற்கிடையே தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட மதுமிதாவுக்கு தமிழில் எப்படியாவது பிரேக் கிடைக்கச் செய்ய பார்த்திபனும்அக்கறை காட்டி வருகிறார். சமீபத்தில் மதுமிதாவைக் கூப்பிட்டு கோலிவுட்டின் சூட்சுமங்கள் சிலவற்றை சொல்லித் தந்தாராம்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா\nபிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த பார்ட்டி\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/category/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:27:23Z", "digest": "sha1:FRYAHFOHIVRWSZUETBVSV3FZRMA6I3GW", "length": 10455, "nlines": 82, "source_domain": "dheivamurasu.org", "title": "சேய்த்தொண்டர் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nஅருணகிரி நாதர் (பகுதி 2)\n– தொடர்ச்சி அருணகிரி நாதர் அருணகிரி நாதரின் வரலாறு பற்றி சரிவரத் தகவல்கள் பதிவாகவில்லை என்று தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், ‘அருணகிரி நாதர் வரலாறும் ஆராய்ச்சியும்’ என்ற தமது நூலில் ஏக்கத்துடன் எடுத்துரைத்ததைப் பார்த்தோம். ஆனால் சேதுபதி அரசர் நடத்திய நான்காம் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராய் வீற்றிருந்த மூதறிஞர் ராவ்சாகிப் மு.இராகவையங்கார் அவர்கள் அரிதில் முயன்று சில...\nசேய்த்தொண்டர் புராணம் – அருணகிரிநாதர் – செந்தமிழ் மாருதன்\n‘இளந்தமிழன் செழுங்கொண்டல் என உலகம் பரவும் எம்பெருமான் அருணகிரி நாதர்க்கும் அடியேன்’ – சேய்த்தொண்டத் தொகை முருகனடியார் என்றாலே நம் கண்முன் நிற்பவர் அருணகிரிநாதர் தான் என்பதை எல்லோரும் ஒப்புவர். இறைவனைப் புகழ்ந்து பாடுவது அனைத்துமே திருப்புகழ் தான். சுந்தரர் தாம் பாடிய பதிகங்களைத் திருப்புகழ் என்றே கூறினார். “தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன்...\nசேய்த்தொண்டர் புராணம் பகுதி 26 பொய்யாமொழியார் வரலாறு\nசெந்தமிழ் மாருதன் “இம்பரெலாம் பரவுறுபொய் யாமொழியார்க் கடியேன்” இந்த உலகம் தோன்றி நின்று அழிவது என்பது சித்தாந்தம் நிறுவும் கொள்கை. ஆனால் இந்த உலகில் காணப்படும் உயிர்கள் அநாதி அதாவது என்று தோன்றியது என்று கூற இயலாததாய் என்றும் உள்ளது என்று சித்தாந்தம் கூறுகிறது. உயிர் மட்டுமல்ல, உயிர்களையும் உலகையும் இயக்குகின்ற இயவுள் எனப்படும் கடவுளும் அநாதி என்றும், அதாவது ‘என்றும்...\nசேய்த்தொண்டர் புராணம் பகுதி 25 முருகம்மையார் வரலாறு\nசெந்தமிழ்மாருதன் “நலந்திகழும் முருகம்மை அடியார்க்கும் அடியேன்” சிவனடியார் அறுபத்துமூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையாருக்கு ஒரு தனியிடம் உண்டு. ஏனைய நாயன்மார்கள் அனைவரும் நின்று கைகூப்ப, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் பெருமை பெற்றவர். அது போல, சேய்த்தொண்டர்கள் அனைவரிலும் முருகம்மையாருக்கு ஒரு தனியிடம் உண்டு. இவரைப் பற்றி பல பெரியோர்கள் பாடிப் பரவி இருக்கிறவர்கள். நக்கீரர்...\nசேய்த்தொண்டர் புராணம் பகுதி-24 செந்தமிழ்மாருதன் ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி. . . மேல் இதழில் கச்சியப்பரின் தந்தையார் காளத்தியப்பர் காஞ்சி குமரகோட்டப் பூசையைக் கச்சியப்பரிடம் ஒப்படைத்து விட்டு விடுதலை பெற்றார் என்பதைக் கண்டோம். அந்த அற்புதமான கந்தன் பூசையைச் சிந்தை மகிழ கச்சியப்பர் நாடோறும் நடாத்த மேற்கொள்கிறார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி போது ஆறிலும் புவனம் புகழ பூசைகள்...\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/page/3/", "date_download": "2018-08-20T18:26:23Z", "digest": "sha1:6DHCVBJACQH4PVWR3ZW2455GA5J6P3AG", "length": 12891, "nlines": 410, "source_domain": "dheivamurasu.org", "title": "தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | தமிழா வழிபடு தமிழில் வழிபடு. வாழ்வியல் சடங்குகள் செய்ய, பயிற்சி பெற | Page 3", "raw_content": "\nமந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம்\nஉ மந்தார விநாயகர் பைந்தமிழ்ப் பதிகம் பிள்ளையார்ப்பித்தன் இரா.உமாபதி முத்தமிழ் அடைவை முற்படு கிரியில் முற்பட வெழுதிய முதல்வ சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ சத்திநி பாதம் மலபரி பாகம் இருவினை ஒப்பினைத் தந்து தத்துவக் கூட்டம் அனைத்தையுங் கடக்கத் தமியனேற்(கு) அருள்வையோ ஞான வித்தக மூர்த்தி 1 இருந்தமிழ் மொழிக்கே உரிய ஓங்கார எழுத்(து)அதன் வரிவடி வோடு பெருங்குரல்...\nபொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\nஅறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா நாள்: 3-12-2017 ஞாயிறு மாலை 6.00 மணி இடம்: பிட்டி தியாகராயர் கலையரங்கம் ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை -17 மதிப்புரை\nகந்த சஷ்டி பெருவிழா ஆண்டு தோறும் நடப்பதுபோல், இவ்வாண்டும் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு, எண்.6 தெய்வத்திரு.சிவப்பிரகாசம் அரங்கில் 20.10.2017 முதல் 25.10.2017 வரை மாலை 5.00 மணி அளவில் முருகன் திருவுருவத்திற்கு வழிபாட்டினை தமிழ் முறையில் கூட்டு வழிபாடாக ஆற்றியும், அதையொட்டி, செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் ஆசியாலும் வழிநடத்துதலின் பேரிலும்...\nகௌரி நோன்பு வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:6)\nகௌரி நோன்பு வழிபாடு கௌரி நோன்பு உள்ளுறை, எட்டு சிவவிரதங்கள் விளக்கம், கவுரி விரதமும் கவுரி நோன்பும், நோற்கும் முறை, கவுரியும் கௌரியும், யார் நோற்க வேண்டும், வழிபாட்டு முறைகளும், மந்திரங்களும். நூல் விலை ரூ 30\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5)\nதீபாவளி வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:5) ரூ 30 தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள் தீபாவளி உள்ளுறை – கொண்டாட்டமா \nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு – பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:4)\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபாடு புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு உள்ளுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையில் ஆற்ற வேண்டிய திருமால் வழிபாட்டை எப்படி தமிழால், தமிழ் வேதத்தில் ஒன்றான நாலாயிர திவ்யப்ரபந்தத்தால் ஆற்றுவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நூல்: ரூ. 30/- பக்கங்கள்: 40\n17 ஆம் ஆண்டு நால்வர் விழா பன்னிரு திருமுறை மன்றம் 10-09-2017\nவள்ளலார் தொண்டு நிறுவனம் ,நெசப்பாக்கம் 14-09-2017\nஊழும் உயர்குறள் மூன்றும் – விதியின் வலிமை, முயற்சியின் பயன்,பெருமை\nஊழும் உயர்குறள் மூன்றும் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 1. ஊழிற் பெருவலி யாவுன மற்றொன்று சூழினும் தான்முந்(து) உறும். 2. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 3. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்று பவர். மேற்கண்ட மூன்று குறள்களை எடுத்தாளாத தமிழ்ப் பேச்சாளரே இல்லை எனலாம். இவற்றில் விதியின் வலிமை முதல் குறளில்...\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1958149", "date_download": "2018-08-20T18:10:39Z", "digest": "sha1:FFSV75M5PNB7YGW4PWINMFFWTYMLMEZ5", "length": 6668, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் இந்தியா வருகை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் இந்தியா வருகை\nபதிவு செய்த நாள்: பிப் 13,2018 03:09\nஅகமதாபாத்: அரசுமுறை பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் அடுத்த வாரம் இந்திய வருகை தர உள்ளார்.\nவரும் 17-ம் தேதி இந்தியா வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் 19-ம் தேதி குஜராத் சென்று அகமதாபாத் மேலாண்மை நிறுவனத்தில் மணவர்களுடன் உரையாற்றுகிறார் தொடர்ந்து ஜனாதிபதி தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅவர்கள் இங்கே வந்தாதான் நாம் அங்கே போகமுடியும் என்ற தத்துவத்தை உணர்ந்தவர் நமது பிரதமர்\nகனடா பிரதமர் மிகவும் இளமையாக உள்ளார்.\nசித்துவுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு\nதி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் யார்\nமீண்டும் பா.ஜ. ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்\nகேரள வெள்ளம்: அதிதீவிர பேரிடராக அறிவிப்பு\nகேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ulakaththamizh.org/Event.aspx?id=105", "date_download": "2018-08-20T18:37:56Z", "digest": "sha1:F2N3ZW7TJMZJ7Q2JLGDT6KC7K2V73WV7", "length": 4131, "nlines": 28, "source_domain": "ulakaththamizh.org", "title": "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் 68 கிலோ இனிப்பு அட்டு(கேக்) வெட்டி, கொண்டாட்டம் : International Institute of Tamil Studies", "raw_content": "\nதமிழ்த்தாய் 68 – இனிப்பு வெட்டிப் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதலைப்பு : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் 68 கிலோ இனிப்பு அட்டு(கேக்) வெட்டி, கொண்டாட்டம்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68ஆவது பிறந்தநாள் விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் - 68 பெருவிழாவாக, பிப்ரவரி மாதம் 01.02.2016 முதல் 29.02.2016 வரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் 68ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 24.02.2016-ம் நாள் அதிகாலை 00.01 மணிக்கு 68 கிலோ எடையுள்ள இனிப்பு அட்டு(கேக்) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவருமான திரு.கே.சி.வீரமணி அவர்களால் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.செந்தமிழன், எம்.ஏ.,எம்.எல்., உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழிசை இரவில் பங்கேற்ற குழந்தைகள்.\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmaithavarel.blogspot.com/2012/06/blog-post_14.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FrZkOx+%28%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%29", "date_download": "2018-08-20T19:40:41Z", "digest": "sha1:X26XQFX555CI5UYSY36TBIXE2VBC2VKW", "length": 11881, "nlines": 86, "source_domain": "aanmaithavarel.blogspot.com", "title": "நித்யானந்தா என்ற கேலிக்கூத்து | ஆண்மை தவறேல்", "raw_content": "\nஉன்னைப் போல் எனக்கும் சமூக கோபம் இருக்கிறது\n*இது வரை நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை இருப்பினும் காலத்தின் கட்டாயம் கருதி இந்த பதிவை எழுதுகிறேன் *\nமுதலில் சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\n*கடவுள் மனித உருவில் அவதரிக்க மாட்டார்\n*யோகா என்பது குரு சிஷ்ய முறையில் மட்டுமே கற்றுக்கொடுக்க முடியும்\n*யோகிகள் யாரும் தற்பெருமையோ,விளம்பரமோ தேடுவதில்லை\n*நித்யானந்தா ஒன்றும் யோகி இல்லை\nதன்னை விஷ்ணு,சிவன் இவர்களின் அவதாரம் என்று அறிவுத்துக்கொண்டு யோகா வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த நித்யானந்தா குமுதம் இதழில் சரளகம்சம்,முக்தி என்று பல்வேறு கோணத்தில் எழுத ஆரம்பித்தார் ...நம் மக்களை பற்றி தான் நல்லாவே தெரியுமே வேப்பமரத்தில் பால் வடிந்தாலே அது தெய்வத்தின் செயல் என்று நம்பும் மூடர்கள்..நித்யானந்தாவும் இதான் சாக்கு என்று கதை கதையாய் அளந்து விட்டார் ..நம் மக்களும்..ஆகா ஒளி வந்து விட்டது என் வாழ்வில் வழி வந்து விட்டது என்று நித்யானந்தா மடத்திற்கு பணத்தை வாரி இறைத்தனர்..ஆயிரம் கோடி அளவில் அவர் சொத்து சேர்க்க ஆரம்பித்தார் ..போர போக்கில் இரண்டு பள்ளி நான்கு மருத்துவமனைகள் திறந்து நான் பொது சேவை செய்யவே பிறந்துள்ளேன் என்றும் தன்னை விளம்பர படுத்திக்கொண்டார்\nஇங்கே உங்களுக்கு நான் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும் ..நித்யானந்தா எழுதிய ,பேசிய விஷயங்கள் எல்லாமே ஏற்கனவே ஓஷோ என்பவர் பேசிவிட்டார் ..அவரோட பேச்சுக்கள் ,பகவத் கீதையின் சில பக்கங்கள் என்பதே நித்யானந்தா என்ற முட்டாளை மக்களிடம் அறிவாளியாக காட்டியது ..சாதாரண மக்கள் மட்டுமல்ல கடைந்து எடுத்த அறிவாளி பட்டாளமும் அவர் பின்னால் சென்றது தனிக்கூத்து\nபிறகு ரஞ்சிதா என்னும் சினிமா நடிகையோடு நித்யானந்தா உல்லாசமாக இருந்தார் என்று சன் டிவியில் ஒரு நாள் முழுக்க அந்த நீல படம் ஓடிய பிறகே பாதி மக்கள் கழன்று கொண்டனர் ..\nகொஞ்ச நாளில் அந்த வழக்கும் ரஞ்சிதாவின் அந்தர் பல்டியால் நீர்த்துப் போனது ..அப்புறம் மதுரையின் இளைய ஆதீனம் என்ற பட்டம் சூட்ட பட்டவுடன் மக்களுக்கு இன்னொரு முறை \"டைம் பாஸ்\" ஆனது\nதற்போது பத்திரிக்கைகாரர்களை அடித்தார் , பாலியல் குற்ற சாட்டு என வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆளு காணாமல் போய் பிறகு அவரே பெங்களூர் கோர்டில் சரணடைந்து கோர்ட் காவலில் வைக்கப்பட்டு ஒரே நாளில் ஜாமீனில் வந்துள்ளார்\nநம் மக்களிடம் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் சில\n*நித்யானந்தா உங்களை ஏமாற்றினாரா இல்லை நீங்களாக போய் தானே ஏமாந்தீர்கள் \n*ஏன் இந்த காலத்திலும் அற்ப வித்தைகளை நம்பி எமாறுகீர்கள் \n*கடவுள் மனிதனாய் பிறக்க முடியும் என்றால் முதல் கடவுள் நீங்கள் தான் என்று ஏன் புரிந்துகொள்ள மறுக்குறீர்கள்\n*நித்யானந்தா மட்டுமல்ல ஏற்கனவே பல போலி சாமியார்கள் வந்தும் ஏன் முட்டாளாகவே வாழ ஆசைப்படுகிறீர்கள் \n#நித்யானந்தா மட்டுமல்ல எல்லா சாமியார்களும் போலியே\nLabels: கட்டுரை, சாமியார், நித்யானந்தா, போலி சாமியார்\nஏமாத்துறவங்க இருக்கிற வரையில் ஏமாறுவது மிக சுலபமே.\nதிண்டுக்கல் தனபாலன் June 15, 2012 at 4:55 AM\n மக்கள் தான் திருந்த வேண்டும் \nசாமியார்கள், புரோகிதர்களின் செய்கைகளை அரசு கவனம் செல்லுத்த வேண்டும்.புரோகிதம் ஒழிய மனித நேயம் வளரும்\nசாமியார்கள், புரோகிதர்களின் செய்கைகளை அரசு கவனம் செல்லுத்த வேண்டும்.புரோகிதம் ஒழிய மனித நேயம் வளரும்\nசாமியார்கள், புரோகிதர்களின் செய்கைகளை அரசு கவனம் செல்லுத்த வேண்டும்.புரோகிதம் ஒழிய மனித நேயம் வளரும்\nஇந்த நித்தியானந்த விஷயம் எனக்கு இதுவரை என்ன என்றே புரியவில்லை. இவரும் தான் நிரபராதி என்று போராடுகிறார். யார் மீது தவறு.இந்த நிலையில் மதுரை ஆதீனம் வேறு இவரை தலைவராக போட்டுள்ளார். எல்லாம் மர்மமாக உள்ளது ஆண்டவா இதற்கு என்ன விடை\nநான் மட்டும் கோபம் கொண்டால் போதுமா ..நீங்களும் கோபத்தை பதிவு செய்யுங்கள்\nகேலிசித்திரம் : இருவேறு பார்வை\nஆண்மை என்பது ஆணுக்கு மட்டும் அல்ல\n\" என்பது ஆணுக்கு மட்டுமே உரிய வாக்கியம் அல்ல.ஆண்மை என்றால் ஆண் என்று மட்டுமே அர்த்தம் அல்ல . ஆண்மை என்றால் வீரம்,நே...\n*இது வரை நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை இருப்பினும் காலத்தின் கட்டாயம் கருதி இந்த பதிவை எழுதுகிறேன் * முதலில் சில ...\nகேலிசித்திரம் : இருவேறு பார்வை\nசமீபத்தில் CBSE பாட புத்தகத்தில் வந்த இரு வேறு கார்டூன்களை நம் அரசியல் தலைவர்கள் எதிர்த்து உள்ளனர் பிரச்சனைக்குரிய இரண்டு கேலிசித்திரங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=10944", "date_download": "2018-08-20T19:18:43Z", "digest": "sha1:LQWEBLJEA6SIBAA2DVR4XXKP35NK3TYK", "length": 6411, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "70th Army Day: Army personnel involved in various adventure exercises|70வது ராணுவ தினம் : பல்வேறு சாகச பயிற்சிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்\nசோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்\nஇரும்பு தொழிற்சாலையில் பைப் வெடித்து 2 பேர் சாவு\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி குரோம்பேட்டை மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\n70வது ராணுவ தினம் : பல்வேறு சாகச பயிற்சிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்\n70வது ராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவ வீரர்கள் பல்வேறு சாகச பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த சாகச நிகழ்வுகளில் ஹெலிகாப்டர், டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. அகமதாபாத் நகரில் உள்ள கே.கே. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் சாகசங்கள் நடந்தது.\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஹஜ் யாத்திரைக்காக மெக்காவில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_726.html", "date_download": "2018-08-20T18:46:26Z", "digest": "sha1:63IECNJIUJNTLJWK5P4PZ7CWGNK2DFVW", "length": 5960, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "தங்கை தாக்கியதில் அக்கா மரணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தங்கை தாக்கியதில் அக்கா மரணம்\nதங்கை தாக்கியதில் அக்கா மரணம்\nமோதர பகுதியில் சிறிய தங்கை தாக்கியதில் மூத்த சகோதரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nசகோதரிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதாக்குதலில் பலத்த காயமடைந்த மூத்த சகோதரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.\nமோதர வீதி, கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் சிறிய தங்கை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/05214040/1005322/Veeramani-said-Women-Becomes-Priest.vpf", "date_download": "2018-08-20T18:45:19Z", "digest": "sha1:FNJGRWGFATOKS2VRCFB2HRCV2BPS2TUI", "length": 8613, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் - கி.வீரமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் - கி.வீரமணி\nஆகம விதிபடி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.\n* ஆகம விதிபடி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.\n* நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் 'பெரியாரியல் பயிற்சி பட்டறை' நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகோயிலில் தீ மிதித்த போது தவறி விழுந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை - வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் நேற்று தீ மிதித்த இருவர் கால்தவறி தீயில் விழுந்து காயமடைந்தனர்.\nஉபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவான கலைப்பூங்கா...\nஉபயோகமற்ற பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை வாபஸ்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வாபஸ் பெற்றுள்ளது.\nஅப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.\nபிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்\nசென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்\nமனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்\nகர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraimysha.blogspot.com/2014/08/blog-post_27.html", "date_download": "2018-08-20T18:30:58Z", "digest": "sha1:N2HSBNFRD4Z6SLNCZLI3WNV57JLAXIXH", "length": 12012, "nlines": 33, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : லஞ்சத்தை ஒழிக்க முடியாதா !?", "raw_content": "\nலஞ்சம் என்பது குணப்படுத்த முடியாத புற்றுநோயாக அனைத்து துறையிலும் வளர்ந்து வேரூன்றி விட்டது..லஞ்சம் வாங்குவதும் குற்றம்.லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்று நாட்டில் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் எத்தனை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்துப் பிடித்து தண்டனை வழங்கிவந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் குறைந்துகொண்டு போனாலும் லஞ்சத்தை ஊக்கப்படுத்துவதுபோல லஞ்சம் கொடுக்கும் நாட்டுமக்கள் பெருகிக் கொண்டு போகிறார்கள் என்பதுதான் உண்மை நிலையாகும்..\nஅதற்க்குக் காரணம் பொதுமக்களின் சோம்பேறித்தனம் சொகுசான வாழ்க்கைநிலை,எதிலும் சுயநலம், முயற்ச்சியின்மை, தன்னால் இயலாதென சோர்ந்துபோகும் மனப்பான்மை சட்டதிட்டங்களை அறிந்து வைத்திராத அலட்சியப்போக்கு ஆகியவையே லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதித்துக்கொள்ள தூண்டுகோளாகவும்,காரணமாகவும் இருக்கின்றன.\nசின்னச் சின்ன வேலைகளை காரியங்களை உடனுக்குடன் முடிப்பதற்காக பொதுமக்களே மனமுவந்து முன்வந்து லஞ்சம் கொடுப்பதைப் பார்க்கும்போது மனம் வேதனையாகத்தான் இருக்கிறது சட்டம் பேசினால் நம் காரியங்கள் தடைபட்டுப் போகுமோ என்கிற பயத்தில் பொதுமக்களாகிய நாமே லஞ்சத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறோம். இப்படி மக்களின் மனநிலை இருக்கும்பட்சத்தில் எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும்...\nஇதற்க்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.. சிலர் லஞ்சம் கொடுப்பதைப் பார்க்கும்போது மனம் கொதித்து கோபமடைய வைக்கும். எப்படிஎன்றால் நகரில் சில புகழ்பெற்ற மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் ஆகவே பெயர் பதிந்து டோக்கன் வழங்குவார்கள்.அதில்கூட பெயர்பதிவாளரிடம் முதல் டோக்கன் பெறுவதற்காக பொதுமக்களே மனமுவந்து லஞ்சம் கொடுத்து முதல் டோக்கன் பதிந்து சிகிச்சைபெற்று செல்கிறார்கள்.\nஅடுத்து பார்ப்போமேயானால் பிறப்பு, இறப்பு சான்றிதழை விரைவில் வாங்குவதற்கு, மானியம் வாங்குவதற்கு, உதவித்தொகை பெறுவதற்கு,சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு,முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு,இப்படி தனக்கு தேவையான அரசால் அதிகாரபூர்வமாக வழங்கக்கூடியவைகளுக்கெல்லாம் மக்கள் லஞ்சம் கொடுத்துப் பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் யோசிக்க வேண்டியவைகளாக இருக்கிறது.லஞ்சத்தை சந்தைப் பொருளாக்கிய குற்றம் பொதுமக்களாகிய நம்மைத்தான் சேரும். மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இருந்தால் எதிர்த்து போராடுவர்.\n என்ற கேள்விக்கு பதில் நம்மிடத்தில் தான் உள்ளது. சில வேலைகளை உடனுக்குடன் முடிக்கவேண்டி சோம்பேறித்தனத்தால் அதற்க்கான முயற்ச்சியின்றி மன உளைச்சலின்றி பெற நினைக்கிறார்கள். காசுபணம் செலவானாலும் பரவாயில்லை காரியம் நடந்தால்சரி என்கிற மனநிலை முதலில் மக்களிடையே மாறவேண்டும்.\nஎத்தனையோ இலவச திட்டம்,இலவச சேவைமையங்களென அரசு ஏற்ப்படுத்திக் கொடுத்தாலும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் அனைத்திற்கும் லஞ்சம் கொடுத்து சிரமமின்றி பெற்றுக் கொள்ளவே நாட்டுமக்கள் பழகி விட்டார்கள். இதன் காரணமாகவே பெரிய அளவில் லஞ்சம் பெருகி இன்று நிலைமையோ எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சமென லஞ்சத்தில் மூழ்கிறநிலை உருவாகிவிட்டது.\nஅரசு எவ்வளவு முயற்சித்தும் லஞ்சத்தை ஒழிக்க முடியாமல் போவதற்கு பொதுமக்களின் ஒத்துழையாமை தான் முதற்க்காரணமாக இருக்கிறது. இன்றைய நிலையில் லஞ்சம் கேட்டு வாங்கும் நபர்களை விட லஞ்சம் கொடுத்து ஊக்குவிக்கும் நபர்களே நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். ஆகவே முதலில் பொதுமக்களாகிய நாம் தான் லஞ்சம் கொடுப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். அரசின் சட்டதிட்டங்களை ஓரளவாவது அறிந்து வைத்திருக்க வேண்டும்.அப்படியே லஞ்சம் கேட்டு வற்ப்புறுத்தும் அதிகாரிகளுக்கு தக்க பாடம் புகத்திடும் விதத்தில் சம்பந்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் தைரியமாகச் சென்று புகார் அளிக்கவேண்டும்\nமடியில் கனம் உள்ளவர்களுக்குத்தான் வழியில் பயமிருக்கும் என்று ஒரு பழமொழி சொல்வது போல நம்மிடத்தில் நேர்மை, நீதி தவறாமை, மற்றும் அரசின் விதிமுறைகளை கடைபிடித்தல், நாட்டுப்பற்று, நல்லொழுக்கம் கடமை தவறாமை பொதுநலத்தில் அக்கறை, சேவைமனப்பான்மை, ஆகியவைகள் இருந்தால் லஞ்சம் வாங்கவும் மனம் இடமளிக்காது..லஞ்சம் கொடுக்கவும் மனம் இடமளிக்காது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் ஒவ்வொருகுடிமகனுக்கும் உள்மனதில் குடிகொண்டு விட்டால் லஞ்சம் மட்டுமல்ல நாட்டுக்கு தீங்கிழைக்கக் கூடிய அனைத்து தீய நடவடிக்கைகளையும் ஒழித்து இனிவரும் காலங்களில் உலகநாட்டு மத்தியில் நம்நாட்டை பிரகாசமாக ஒளிரச் செய்யலாம்.\nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t43569-topic", "date_download": "2018-08-20T18:33:35Z", "digest": "sha1:UVEHZPQJGPY5WZYEFA7FDWFP4JE3RNBZ", "length": 19142, "nlines": 158, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)\nதமிழ்த்தோட்டம் :: தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை :: கணனி விளையாட்டுக்கள்\nகின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)\nகணனியில் கேம் விளையாடுவது என்றால் பெரும்பாலான நபர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.\nஅதுவும் Grand Theft Auto(GTA 5) என்ற கேமை பற்றி கேட்டால், நிச்சயம் கேம் பிரியர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.\nஉலகையை கலக்கி கொண்டிருக்கும் இந்த கேம், கடந்த மாதம் வெளிவந்தது.\nமக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், பல கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளது.\n1. 24 மணி நேரத்தில் அதிகம் விற்பனையான ஆக்ஸன் சாகச வீடியோ கேம் என்ற சாதனையை இது படைத்துள்ளது.\n2. 24 மணி நேரத்தில் அதிகம் விற்பனையான, வசூலை அள்ளிய வீடியோ கேம் என்ற சாதனையையும் இது படைத்துள்ளது.\n3. அதிவேகமாக 6000 கோடி வசூலை தாண்டிய ஒரு பொழுதுபோக்கு பொருள், வீடியோ கேம் இது தான்.\n4. டிரைலரை அதிக பேர் பார்த்த ஆக்ஸன் சாகச வீடியோ கேம் இது தான்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nமதிப்பிற்குரிய யூஜின் சார். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கு மிக, மிக, மிக நன்றி. உங்க ஸ்டைலே தனி.\n- ராஜ்.கே. ராஜேந்திரன் (எண்ணங்கள் வெளியீட்டுக்கு)\nதமிழ்த்தோட்டம் :: தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை :: கணனி விளையாட்டுக்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/tv-2.html", "date_download": "2018-08-20T18:22:22Z", "digest": "sha1:QZVT6OAWPG5DNXC5DMXUM5YW4AWUD7TZ", "length": 19185, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Satellitte TVs deserted without cini-clippings during Pongal - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ்த் திரையுலகத்தினரின் நடவடிக்கை காரணமாக சாட்டிலைட் டிவி சானல்களில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்களையிழந்தன.\nபனி மழை பெய்யும் மார்கழி மாதத்தில் கன மழை பெய்தால் எப்படி ஆச்சரியமாக இருக்குமோ அதை விட பெரியஆச்சரியமாக தமிழ்த் திரையுலகினரின் எதிர்பாராத ஒற்றுமை இருந்தது.\nமேலும் இவர்களின் உறுதியான நடவடிக்கை காரணமாக தனியார் சாட்டிலைட் டிவி சானல்களில் ஒளிபரப்பானபொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் பொலிவிழந்து விட்டன.\nதனியார் சாட்டிலைட் டிவி சானல்களினால் திரையுலகே அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இனியும்நீடித்தால் சினிமா எடுப்பதையே விட்டு விட்டு அத்தனை தயாரிப்பாளர்களும் டிவி பக்கம் போய் விடுவார்கள்.\nஇதைத் தடுக்க தனியார் சாட்டிலைட் டிவி சானல்களுக்கு நடிகர், நடிகையர் உள்ளிட்ட அனைத்துத் திரையுலகினரும்பேட்டியோ, நகழ்ச்சிகளோ தரக் கூடாது, படக் காட்சிகளையும் கூட 3 நமிட கிளிப்பிங்குகள் மட்டுமேகொடுக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை கடந்த டிசம்பர் மாதம் உருவான தமிழகதிரைப்படக் கூட்டமைப்பு எடுத்தது.\nபல்வேறு திரைப்பட சங்கங்களை உள்ளடக்கியது இந்தக் கூட்டமைப்பின் முடிவுகளை மீறிய நடிகர் கமலஹாசன்,நடிகை சிம்ரன் உள்ளிட்ட பலர் மீது கடும் நடவடிக்கையையும் இது எடுத்தது.\nகமல்ஹாசன் மீதே நடவடிக்கையா என்ற அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்கையில், கூட்டமைப்பின் இந்த முடிவினால்சாட்டிலைட் சானல்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஆண்டு (2002) பொங்கல் பண்டிகையின்போது 7 புதிய படங்கள் ரிலீசாகின. பொதுவாக ஒரு புதுப் படம்வெளியாகப் போகும்போது அதற்கு ஒரு வாரம், பத்து நாட்களுக்கு முன்பே அந்தப் படங்கள் சம்பந்தப்பட்டகாட்சிகளை தனியார் சாட்டிலைட் சானல்கள் ஒளிபரப்பத் தொடங்கி விடும்.\nஆனால் இந்த முறை அது நடக்கவில்லை. விளம்பரங்கள் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் புதிய படங்களின் பாடல்காட்சிகளையோ வசனக் காட்சிகளையோ டிவிக்களில் காண முடியவில்லை.\nபொங்கல் தினத்தின்போது புதிய படங்களின் பாடல்கள் என்ற நிகழ்ச்சியே பல சானல்களில் காணாமல் போயின.\nஅப்படியே ஒரு சில சானல்களில் போட்டாலும் கூட விளம்பரத்திற்காக அந்த சானல்களிடம் படத் தயாரிப்பாளர்கள்வழங்கிய 3 நிமிட கிளிப்பிங்குகளையே அவர்கள் புதிய பாடல்களாக காட்டி சமாளித்தனர். எனவே ஒவ்வொருபுதிய பாடலும் பிட்டு பிட்டாகவே ஒளிபரப்பாகின.\nஇதுதவிர முன்னணி டிவி சானல் மற்றும் அதன் சக டிவியும் பல நடிகர், நடிகையரின் பேட்டிகளை ஒளிபரப்பின.ஆனால் அவை அத்தனையும் அரதப் பழசு என்பதை டிவி பார்த்த அனைவருமே உணர்ந்திருப்பார்கள்.\nபல முன்னாள் நடிக-நடிகைகள் டிவியில் வந்து பேட்டி கொடுத்ததைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.முன்பே கொடுத்திருந்த பேட்டியை தூசு தட்டி இப்போது ஒளிபரப்புகிறார்கள் என்று திரைத்துறையினர் கூடநக்கலாக சிரித்தனர்.\nதிரையுலக கூட்டமைப்பினரின் இந்த உறுதியான நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் சாட்டிலைட் சேனல்கள்கடுமையாக பாதிக்கப்படும் என்று தெகிறது. காரணம், திரை விமர்சனம் என்ற பெயரில் ஒவ்வொரு சானலும்ஒவ்வொரு படத்தையும் கிட்டத்தட்ட முழுவதுமாகவே ஒளிபரப்பி விடும் நிலைமை முதலில் இருந்தது.\nஅது இனி நடக்காது. திரை விமர்சனத்திற்காக புதுப் படங்கள் எதையுமே கொடுக்கக் கூடாது என்று கூட்டமைப்புகட்டளையிட்டு விட்டது.\nஇதனால், பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நல்ல படமாக இருந்தாலும் கூட அதில் தமக்கு வேண்டப்படாதநடிகர் நடித்திருந்தால், அந்தப் படத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சனம் செய்வது ஒரு முன்னணி சாட்டிலைட்டிவியின் வழக்கம்.\nஒரு உயரமான சேரில் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சேது-லேது, ரெட்-டெட்,தில்-ஜில் என மணி ரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை கடித்து குதறித் துப்பும் அந்த டிவியின் போக்கு திரைப்படஉலகினரின் ஒட்டு மொத்த எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.\nஇனிமேல் இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு இடமேயில்லை என்று திரைத்துறையினர் உறுதியாக கூறுகின்றனர்.கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு படம் எடுக்கும் எங்களைப் பற்றி, எங்களிடமே கிளிப்பிங்குகளை வாங்கிவிட்டு தாறுமாறாக விமர்சனம் செய்வதைப் பொறுத்துக் கொள்வதற்கு நாங்கள் என்ன இளிச்சவாயர்களா என்றுஅவர்கள் குமுறுகிறார்கள்.\nமேலும், பொங்கலுக்கு வந்த படங்கள் குறித்து எதுவுமே ஒளிபரப்பாகாத நிலையில், புதுப்படங்களைப்பார்ப்பதற்காக தியேட்டர்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.\nகமலஹாசன் நடித்துள்ள \"பம்மல் கே சம்பந்தம்\", அஜீத்தின் \"ரெட்\", சத்யராஜ்-மும்தாஜ் நடித்துள்ள \"விவரமான ஆளு\"என பல பிரபலங்களின் படங்களைப் பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.\nஇது திரையுலகுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. கூட்டமைப்பின் முடிவுகளால் அதிருப்தியுடன் இருந்தசிலரும் கூட இப்போது கிடைத்துள்ள கைமேல் பலனைப் பார்த்து கூட்டமைப்புடன் ஒத்துப் போக முடிவுசெய்துள்ளதாகத் தெகிறது.\nஇதற்கிடையே, திரையுலக கூட்டமைப்பினரின் உறுதியான நடவடிக்கை மேலும் தீவிரமாகும் என்றுகருதப்படுகிறது.\nபொங்கல் சிறப்பு நகழ்ச்சிகளில் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி பேட்டியோ, வேறு எந்தவிதத்திலோநிகழ்ச்சிகளைக் கொடுத்த கலைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்\n69 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர்.. ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டு பரபரப்பாக்கியவர்\nஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மரணம்... மௌனம் கலைக்கும் தாய் ஷெரில் வாக்கர்\nஅமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்\nசூரியனுக்கே தலைவணங்காத பெரிய கோவில்\nகமல் பட நடிகரை கொல்ல சதி.. டைரியில் அம்பலமான அதிர்ச்சி தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11003107/Pawn-shopper-house-jewelry-silver-goods-robbery.vpf", "date_download": "2018-08-20T18:31:20Z", "digest": "sha1:PO2JMMDXPUE64AT2X7LT3TTHUFE3IKKQ", "length": 17649, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pawn shopper house jewelry, silver goods robbery || விழுப்புரத்தில் அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிழுப்புரத்தில் அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை + \"||\" + Pawn shopper house jewelry, silver goods robbery\nவிழுப்புரத்தில் அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nவிழுப்புரத்தில் அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினார்.\nவிழுப்புரம் கணபதி நகர் சென்னை சாலையை சேர்ந்தவர் ஞானபண்டிதர் மகன் கோவிந்தராஜன்(வயது 49). புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த 8–ந்தேதி மாலை கோவிந்தராஜ் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சுற்றுலாவை முடித்த கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.\nஇதனால் திடுக்கிட்ட கோவிந்தராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறை பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 125 பவுன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்களையும் காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்–இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளை நடத்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோ மற்றும் பூஜை அறையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.\nஇதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்கள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதா எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் ராக்கி கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்னை சாலையில் பாப்பாங்குளம் பகுதி வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அடகு கடைக்காரர் வீட்டில் 125 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, மதுபாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனை நடத்தினர். மேலும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்தனர். இருந்தபோதிலும் போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் மர்மநபர்கள் அடகு கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் விழுப்புரம் பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து கணபதி நகர் பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளை நடந்த பகுதி அருகே விழுப்புரம்–சென்னை நெடுஞ்சாலையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் விழுப்புரம் நகருக்கு இந்த வழியாக வராமல், விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. இதன் காரணமாக கணபதி நகர் பகுதியில் வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால், போலீசார் சரியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. ஸ்டார்மிங் ஆபரே‌ஷன் என்கிற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கணபதி நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால், அடகு கடைக்காரர் வீட்டை குறிவைத்து மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-08-20T18:19:47Z", "digest": "sha1:IJ5MO2IAKCCT7IJAKJAJDV7GO3WP3GW2", "length": 11038, "nlines": 228, "source_domain": "tamilnool.com", "title": "காசி ஆனந்தன் கவிதைகள் பாகம் 2 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nகாசி ஆனந்தன் கவிதைகள் பாகம் 2\nகாசி ஆனந்தன் கவிதைகள் பாகம் 2\nகாசி ஆனந்தன் நறுக்குகள் பாகம் 2 ₹100.00\nகவிஞர் கண்ணதாடனின் தென்றல் வெண்பா 1000 ₹125.00\nகாசி ஆனந்தன் கவிதைகள் பாகம் 2\nBe the first to review “காசி ஆனந்தன் கவிதைகள் பாகம் 2” மறுமொழியை ரத்து செய்\nலண்டாய் (ஆஃபகான் பெண்களின் வாய்மொழிப்\nமிகவும் நேர்ப்பட பேசுகிற இக்கவிதைகள், தமிழின் புதிய உயரங்கள் என்று பெருமை சேர்க்கிறது இந்நூல்.\nகவிஞர் கண்ணதாடனின் தென்றல் வெண்பா 1000\nகவிக்கோ அப்துல் ரகுமானின் அருமையான கவிதைத் தொகுப்பு.\nபாரதிதாசன் காதல் கவிதைகள் 1\nகாசி ஆனந்தன் நறுக்குகள் பாகம் 2\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nயுகங்கள் கடந்து வாழும் உன்னதக்கலை\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:18:48Z", "digest": "sha1:HR4OOF2HH4YJ43VBD5XNWHSW4HXUFJLF", "length": 9553, "nlines": 185, "source_domain": "tamilnool.com", "title": "திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nதிருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க\nதிருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க\nதிருக்குறள் தெளிவான உரை ₹40.00\nதிருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க\nBe the first to review “திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க” மறுமொழியை ரத்து செய்\nதிருக்குறள் தமிழ் மூலம் ஆங்கில உரையாக்கம்\nதமிழ் மூலப் பாடலுடன் ஆங்கில உரையாக்கம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nபவித்ர ஞானேச்வரி பாகம் 3 அத்தியாயம் 15 முதல் 18 வரை (பழகு தமிழில் பகவத்கீதைக்கு பவித்ரமான ஓர் உரை) (Copy)\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1084&cat=7", "date_download": "2018-08-20T19:18:00Z", "digest": "sha1:QSGCBC4FBTLD5YPPFQDWT75BKTRITXTN", "length": 9442, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை ரசித்தனர் | Tourists gathered at Pichavarai to ride the boat and enjoy the forest - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nபிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை ரசித்தனர்\nபுவனகிரி: தமிழகத்தில் சுற்றுலா மையங்களில் புகழ்பெற்ற தலமாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் சுரபுன்னை காடுகள் இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. இவ்வகை சுரபுன்னை காடுகளை படகில் சென்று சவாரி செய்து பார்ப்பது ஆனந்தமாக இருக்கும். கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமையாக காணப்படும் இந்த காடுகள் கண்கொள்ளா காட்சியாகும்.\nகாணும் பொங்கலையொட்டி நேற்று களை கட்டியது. தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் காட்டுப் பகுதிக்கு தங்களது குடும்பத்தினருடன் படகுகளில் சவாரி சென்று மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் படகு சவாரி செய்யும் நேரம் குறைக்கப்பட்டது. வழக்கமான நாட்களில் 4 மணி நேரம் வரை அனுமதிக்கப்படும் படகு சவாரி நேற்று 40 நிமிடமாக குறைக்கப்பட்டது. மோட்டார் படகுக்கு 40 நிமிடமும், துடுப்பு படகுக்கு 30 நிமிடமாக நேரம் குறைக்கப்பட்டது.\nகாடுகளில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள், இதுபோன்ற ஒரு இடத்தை தங்களது வாழ்நாளில் பார்த்தது இல்லை எனவும், காடுகளுக்குள் படகு சவாரி செய்தது புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறினர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து பல மணி நேரம் பயணம் செய்து வந்திருந்ததாகவும், ஆனால் அதற்கேற்றாற்போல் இந்த இடத்தை அனுபவித்து ரசித்ததாகவும் கூறினர்.\nபிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது அப்பகுதி மீனவர்கள் சார்பில் படகு போட்டிகள் நடத்தப்பட்டது. துடுப்பு படகில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.\nபிச்சாவரம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதொடர் விடுமுறை எதிரொலி பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறை பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் கடும் வெயிலால் அவதி\nபடித்துறை அமைத்து வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nஅடிப்படை வசதிகள் ஏதுமில்லை சுற்றுலாத்துறை மெத்தனத்தால் மேம்பாடு அடையாத பிச்சாவரம் சுற்றுலா பயணிகள் அதிருப்தி\nகளை கட்டியது காணும் பொங்கல் சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\nபுதுவையில் புத்தாண்டு களைகட்டியது சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/05/17.html", "date_download": "2018-08-20T18:21:35Z", "digest": "sha1:D7K6E6IASL3VRK7ULEJVXOLJE2JZPY3F", "length": 7783, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் நுண்டனால் 17பேர் தற்கொலை –வீதிக்கு இறங்கிய மக்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் நுண்டனால் 17பேர் தற்கொலை –வீதிக்கு இறங்கிய மக்கள்\nமட்டக்களப்பில் நுண்டனால் 17பேர் தற்கொலை –வீதிக்கு இறங்கிய மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள நுண்கடன் திட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு கோரி, மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இன்று (12) காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.\nவந்தாறுமூலை பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு பேரணியானது அம்பலத்தடி, நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி, சந்தை வரை சென்று, மீண்டும் நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் முடிவடைந்தது.\nஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் ஓரத்தில் நின்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களையெழுப்பினர்.\n“மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனைத் திப்பிச் செலுத்த முடியாமை காரணமாக 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனைத் தவிர குடும்பகளில் விரிசல், சமூக சீர்கேடுகள், நுண்கடன் பெற்ற பலர் மன உளைச்சாலுக்கு உள்ளான சம்பவங்களும் பல காணப்படுகின்றன” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன், “நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே, கடன்களை வழங்க வேண்டும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும், கோரிக்கைகள் அடங்கிய மகஜர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் அவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2014/07/calculator.html", "date_download": "2018-08-20T18:02:51Z", "digest": "sha1:Q453WLKRROY4CY47BEO33E7YMEEVBK4S", "length": 14916, "nlines": 139, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)", "raw_content": "\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)\nகடந்த 'பங்குச்சந்தை ஆரம்பம்' பதிவில் பங்குகளின் விலையைக் கணக்கிடுவது எப்படி என்பதைப் பற்றி விவரமாக விளக்கி இருந்தோம்.\nதமிழில் இப்படியொரு Niche கட்டுரைகளை எழுதுவது பற்றி நண்பர்கள் பாராட்டி மெயில் அனுப்பி இருந்தார்கள். மிக்க நன்றி\nஅதனுடன் ஒரு சிலர், புரிவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எங்களுக்கு இதனை எளிதாக கணக்கிடுவது ஒரு எளிய வழியை சொல்லுங்கள் என்றும் சொல்லி இருந்தார்கள்.\nஅந்த சூழ்நிலையில் உதித்தது தான் இந்த வெப் கால்குலேட்டர்.\n\"பங்குச்சந்தை ஆரம்பம்\" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.\nCyclical பங்குகளை ட்ரேடிங் செய்வது எப்படி\nபங்குகள் தொடர்பான கணக்கீடுகளுக்கு ஆங்கிலத்திலும் உரிய தளங்கள் இல்லாததையும் உணர்ந்தோம். ஏனென்றால், சந்தையில் இவை கட்டண மென்பொருளாகவே உலவி வருகின்றன.\nஅதனால் ஆங்கிலத்திலே www.stockcalculation.com என்ற பெயரில் இலவச தளத்தினை உருவாக்கியுள்ளோம்.\nஇது ஒரு நீண்ட நாள் முயற்சி. தற்போது தான் ஆக்கத்தில் வந்துள்ளது. இதற்கு ஆலோசனைகளும் உதவியும் செய்த எமது வெப்தள மென்பொருள் நண்பர்களுக்கு மிக்க நன்றி\nஇந்த தளத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு கணக்கீடுகளுக்கும் தமிழில் நமது தளத்தில் விளக்கம் தரப்படும்.\nதற்போதைக்கு கீழே உள்ள கணக்கீடுகளை வடிவமைத்துள்ளோம்.\n1. பங்குகளின் சரியான விலைகளைக் கணக்கிடுவது எப்படி\nபதிவு விளக்கம்: பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\n2. P/E மதிப்பைக் கணக்கிடுவது எப்படி\nபதிவு விளக்கம்: P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்\n3. P/B மதிப்பைக் கணக்கிடுவது எப்படி\nபதிவு விளக்கம்: புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க\n4. புரோக்கர் செலவுகள் தவிர்த்து உண்மையான லாபம் கணக்கிடுவது\nஒவ்வொரு முறையும் சூத்திரங்களை எழுதி வைத்தோ, அல்லது எக்செல் பக்கத்தில் கணக்கு பார்ப்பதும் அவ்வளவு எளிதல்ல. அந்த சூழ்நிலைகளில் இந்த வெப் கால்குலேட்டர். எங்கும் இருந்து எளிதில் கணக்கீடு செய்ய உதவும்.\nசரி..எப்படி கணக்கீடு செய்ய என்பதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்..\nwww.stockcalculation.com என்ற தளத்திற்கு செல்லவும்.\nகடந்த ஐந்து வருடங்களில் பங்கின் சந்தை விலைகளை உள்ளீடு செய்யவும். இதனை பல தளங்களில் \"Historical Price\" என்ற பகுதியில் பெறலாம்.\nகடந்த ஐந்து வருடங்களில் உள்ள EPS மதிப்புகளை உள்ளீடு செய்யவும். இதனை அந்தந்த வருடங்களின் Profit & Loss அறிக்கையிலிருந்து பெறலாம்.\n\"Calculate\" என்ற பட்டனை அழுத்தவும்.\nஎதிர்பார்க்கும் பங்கு விலை, சரியான வாங்கும் விலை போன்ற விவரங்கள் தானாகவே கிடைக்கும்.\nகீழே உள்ள படத்தில் BRITANNIA பங்கிற்கு நாம் கணக்கீடு செய்து உள்ளோம்.\nstockcalculation.com தளத்தை பயன்படுத்தும் முறை\nஇந்த கால்குலேட்டர் தொடர்பான உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறோம். அதே போல் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டி மேலும் மெருகேற்ற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஎமது கட்டண சேவையில் அடுத்த போர்ட்போலியோ பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து ஜூலை 15ல் வெளி வருகிறது .இதில் 900 ரூபாயில் 9 பங்குகள் விவரங்களுடன் பரிந்துரைக்கப்படும் . எமது இலவச போர்ட்போலியோ 75% லாபமும், ஏப்ரல் போர்ட்போலியோ 45 % லாபமும் ,ஜூன் போர்ட்போலியோ 12 % லாபமும் கொடுத்துள்ளன . விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n\"பங்குச்சந்தை ஆரம்பம்\" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.\nபுதியவர்களுக்கு பங்குச்சந்தையில் சில டிப்ஸ் (ப.ஆ - 24)\nLabels: Articles, StockBeginners, பங்குச்சந்தை ஆரம்பம், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product-category/religion/page/13/", "date_download": "2018-08-20T18:17:48Z", "digest": "sha1:ZR7SZSD7HN6DMUZYIXT4HYWH6TLUV4PS", "length": 15011, "nlines": 436, "source_domain": "tamilnool.com", "title": "சமயம் – பக்கம் 13 – Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nசிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூன்று நாயன்மார் கதை வெண்பாக்களில்\nபுகைப்படங்களுடன் திரிபுரம் எரித்த திருத்தலத்தின் சிறப்புகளை முழுமையாக விளக்கும் நூல்.\nஅபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1085&cat=7", "date_download": "2018-08-20T19:18:09Z", "digest": "sha1:UN7OK6XBNOACY6DDYZUBFONK4IG4N3NR", "length": 8360, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடர் விடுமுறை எதிரொலி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர் | The epic vacation of the echoes of Sidhanavasal in the holiday season enjoyed the boat ride - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nதொடர் விடுமுறை எதிரொலி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்\nஇலுப்பூர்: தொடர் விடுமுறை காரணமாக சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.\nபுதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் மணப்பாறை சாலையில் புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இங்குள்ள சமணர் படுகை, குகை ஓவியம் ஆகியவை உலக புகழ் பெற்றவை. இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், சுற்றுலாத்துறை சார்பில் சிற்பங்கள், மரங்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பூங்கா மற்றும் படகு குழாம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை, மணப்பாறை. திருச்சி, விராலிமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சித்தன்னவாசல் வந்தனர்.\nஅவர்கள் மலையின் மீது சென்று சமணர் படுகை, குகை ஓவியம் போன்றவற்றை பார்த்து ரசித்தனர். பின்னர் பூங்காவில் பொழுது போக்கிய அவர்களில் பலரும், குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதுகுறித்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறும்போது, விராலிமலையில் இருந்து சித்தன்னவாசல் சுற்றுலா மையம் செல்வதற்கு அறிவிப்பு பலகைகள் ஏதும் வைக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பொதுமக்களிடம் வழிகேட்டு வந்து சேர்ந்தோம். வெளியூர்களில் இருந்து வருவோர் பயன்பெறும் வகையில் புதுக்கோட்டை. விராலிமலை, கீரனூர் பகுதிகளில் சித்தன்னவாசலுக்கு செல்லும் வழி மற்றும் தூரம் குறித்த அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும் என்றனர்.\nவிடுமுறை சித்தன்னவாசல் சுற்றுலா பயணிகள் படகு சவாரி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா ஆர்வலர்களை சுண்டி இழுக்கும் சித்தன்னவாசல்\nகளைகட்டியது சித்தன்னவாசல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமுத்துக்குடா அலையாத்தி காடு சுற்றுலா தலமாக்கப்படுமா\nசித்தன்னவாசலில் படகு சவாரி செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958298&Print=1", "date_download": "2018-08-20T18:19:05Z", "digest": "sha1:KCVYCPVVKPS67YZO7BR4EGOA7FNKOAD3", "length": 8801, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இரவில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்:மதுரை-ராமேஸ்வரம் செல்லும் பொது மக்கள் தவிப்பு| Dinamalar\nஇரவில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்:மதுரை-ராமேஸ்வரம் செல்லும் பொது மக்கள் தவிப்பு\nதிருப்புவனம்:மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் இரவு நேரங்களில் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக பரமக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடி மண்டலம் சார்பாக இந்த வழித்தடத்தில் 144 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர மதுரை, ஈரோடு, சேலம், திரூப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nதிருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை பகுதிகளில் இருந்து மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்பவர்கள் பலரும் இரவு நேரங்களில் மாட்டுத்தாவணி வந்து தொலை துார பேருந்துகள் மூலமாக திருப்புவனம், திருப்பாச்சேத்தி வருவது வழக்கம்.மதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு 13 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அரசு பஸ்களில் கட்டண உயர்விற்கு பின் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு கட்டண குறைப்பிற்கு பின் 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பலரும் 18 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக இரவு நேரங்களில் பயணிகளிடம் 18 ரூபாய்க்கு பதிலாக 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தட்டி கேட்கும் பயணிகளை பஸ்களில் ஏற்றுவதில்லை, பாதி வழியிலேயே இறக்கி விடுகின்றனர்.\nநேற்று முன்தினம் நள்ளிரவு மதுரை புதுக்குளம் கிளை பணிமனையைச் சேர்ந்த வண்டி எண் டி.என், என்1228 என்ற எண்ணுள்ள அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகளிடம் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பயணிகள் கண்டக்டரிடம் கேட்ட போது இயந்திரத்தில் வருவதை தான் உங்களிடம் வசூலிக்கிறேன்.எனக்கு எதுவும் தெரியாது 25 ரூபாய் கொடுத்து பயணம் செய்யுங்கள்.இல்லையென்றால் இறங்கி விடுங்கள் என பதிலளித்துள்ளார். இந்த திடீர் கட்டண உயர்வால் கூலி தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nபணிமனை மேலாளரிடம் கேட்ட போது குறிப்பிட்ட பஸ்சில் சென்ற கண்டக்டரிடம் விசாரிக்கிறேன் என அலைபேசியை துண்டித்து விட்டார். மதுரை- ராமேஸ்வரம் வழித்தடத்தில் டிக்கெட் பரிசோதனை நடைபெறுவதே கிடையாது.இதனால் ஒரு சில ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவது கிடையாது. கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் முறைகேடு நடக்கின்றன. எனவே போக்குவரத்து துறை தவறு செய்யும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45063-writer-has-killed-our-son-for-bad-habit.html", "date_download": "2018-08-20T18:45:42Z", "digest": "sha1:EXECWGKWODBBTXA3ONPTB3V75TSXZECA", "length": 15557, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகனை கொலை செய்தால் தலா 2 ஏக்கர் ! எழுத்தாளர் செளபாவின் திட்டம் | Writer has killed our son for bad habit", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nமகனை கொலை செய்தால் தலா 2 ஏக்கர் \nஎழுத்தாளர் செளபா தனது மகன் விபினை கொலை செய்ய உதவியவர்களுக்கு தலா 2 ஏக்கர் தர முன் வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.\nமதுரை மாவட்டம் எஸ்எஸ் காலனியில் வசித்து வந்தவர் செளந்திரபாண்டியன். செளபா என நண்பர்களால் அழைக்கப்படும் இவர் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர். நெப்போலியன் நடித்த ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம் இவர் எழுதிய கதைதான். இவர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மனைவி லதா அரசுக் கல்லூரியில் முதல்வராக பணிபுரிகிறார். குடும்பச் சண்டை காரணமாக பிரிந்து வாழும் இவர்களுக்கு விபின் (27) என்ற மகன் இருந்தார்.\nஇவர் மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. தாய்-தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததால், இருவரின் வீட்டிலும் அவ்வப்போது வாழ்வதும், பெரும்பாலும் நண்பர்களுடன் வெளியில் தங்குவதையும் விபின் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். நண்பர்களுக்கு பணத்தை வாரி செலவழிக்கும் இவர், அந்தப் பணத்தை தனது தாய் தந்தையிடமே பெற்றுள்ளார். குறிப்பாக தனது தந்தை செளபாவிடம்தான் அதிகம் பணத்தை கேட்டு பெற்றுள்ளார். இதனால் மகன் விபின் மீது கடும் அதிருப்தியிலும், ஆத்திரத்திலும் செளபா இருந்துள்ளார்.\nஇருப்பினும் மகன் என்பதால் தனது கோபங்களை கட்டுப்படுத்திக்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் விபின் செலவுக்காக காசு கேட்க, செளபா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தந்தை வாங்கி கொடுத்த விலையுயர்ந்த காரை விபின் விற்றுள்ளார். இந்தச் செய்தி தெரிந்த பின், விபின் மீது செளபா மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். காரை விற்ற பணமும் தீர்ந்து போக மேலும் பணம் வேண்டும் என செளபாவிடம் சென்று கேட்டுள்ளார் விபின். அப்போது காரை ஏன் விற்றாய் என செளபா கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தந்தையை விபின் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதன் பிறகு ஒரு வாரமாக விபினை காணவில்லை.\nஇந்நிலையில் தனது மகனை நீண்ட நாட்களாக காணவில்லை என விபினின் தாய் லதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் தனது மகன் மீது, தனது கணவர் ஆத்திரத்துடன் இருந்ததையும் தெரிவித்துள்ளார். இதனால் செளபாவிடம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் செளபாவின் பதில்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட, கிடுக்கிப்பிடி கேள்விகளை அடுக்கியுள்ளனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.\nஅதன்படி காவல்துறையினரிடம் செளபா அளித்த வாக்குமூலத்தில், ‘ஒரே மகன் அவன். போதைப் பழக்கத்தால் சீரழிஞ்சுட்டான். அவன் தொல்லை தாங்க முடியல. அதுனால என் ஓரே மகன நானே கொன்னுட்டேன். சுத்தியால அடித்ததும் அவன் மயங்கி விழுந்து இறந்துட்டான். அப்புறம் திண்டுக்கல்ல இருக்க என் தோட்டத்து வீட்டுல அவன் உடலை எரிச்சுப் புதைச்சுட்டேன்’ என்று கூறியுள்ளார். அவருக்கு கணேசன் மற்றும் பூமி என்ற இரு நண்பர்கள் உடலை புதைக்க உதவியுள்ளனர். இதையடுத்து செளபாவை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரின் நண்பர்களான கணேசன் மற்றும் பூமியையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில், சொத்துகளை கேட்டு தினமும் போதையில் வந்து சௌபாவிடம் மகன் விபின் தொந்தரவு செய்து வந்தாராம். ஒரு கட்டத்தில் மகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஏப். 30-ம் தேதி கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற நிலையில், தோட்டத்து ஊழியர்களை அழைத்து அவர்களிடம் மகனின் தொந்தரவுகளை சொல்லி அழுது புலம்பி இருக்கிறார்.\n‘‘ நீங்களும் அடிக்கடி தோட்டத்தில் விபின் செய்யும் காரியங்களை நேரில் பார்த்தவர்கள் என்ற முறையில் சொல்கிறேன். அவனுக்கு முடிவு கட்டவில்லையெனில் சொத்துக்காக என்னை கொலை செய்யவும் துணிந்துவிட்டான். எனக்கு உதவுங்கள்’’ எனக் கெஞ்சியதாகவும், இச்சம்பவத்தை முடித்துக் கொடுத்தால் தலா 2 ஏக்கர் எழுதிக் கொடுக்கிறேன் என்று ஊழியர்களுக்கு செளபா உத்தரவாதமும் கொடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.\nகர்நாடகாவில் 166 கோடி பறிமுதல்\nஒரு ‘கமா’ மாறிப் போனதால் ஒரு வியாபாரி உயிரே பறிபோனது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது\nகொலை, கொள்ளை என 113 வழக்கு: கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்திய ’காட்மதர்’ கைது\nஅப்பாவுக்காக களத்தில் குதித்த ராஜமவுலி மகன்\nமகனின் அன்புக்காக தாயாக மாறிய ஒரு தந்தை - நெகிழ்ச்சி சம்பவம்..\nகவனக்குறைவால் விபத்து : விக்ரம், துருவ் நற்பணி மன்றம்\nநடிகர் விக்ரம் மகன் ஜாமினில் விடுவிப்பு\nநோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் காலமானார்\nகுடும்பத் தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகாவில் 166 கோடி பறிமுதல்\nஒரு ‘கமா’ மாறிப் போனதால் ஒரு வியாபாரி உயிரே பறிபோனது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-08-20T18:05:08Z", "digest": "sha1:LAGOYZRPVX5TK67PSUHX3YTXAE4GQXZG", "length": 13477, "nlines": 173, "source_domain": "news7paper.com", "title": "மூன்று மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த வெற்றி: கண்ணீர் விட்டு அழுத ஆண்டி முர்ரே - News7Paper", "raw_content": "\nமூன்று மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த வெற்றி: கண்ணீர் விட்டு அழுத ஆண்டி முர்ரே\nசென்னையில் பெண்கள் பாதுகாப்பு மையம்: காவல் ஆணையர் திறந்துவைத்தார்; புகார் எண் வெளியீடு\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nஅந்த சதத்தை மறக்கமுடியாது; எனக்கு இந்த சதம் பெரிதாகத் தெரியவில்லை: மனம்திறந்த விராட் கோலி\nஎம்.ஜி.ஆர்.-ன் ‘டாட்ஜ் கிங்க்ஸ்வே’ காரைப் பார்க்கணுமா.. அப்போ மறக்காம ‘இங்க’ வாங்க\nவெயிலு மழையில ஆடுனா மூணு ரூபாதான் சம்பளம் – கஸ்துரி ஒப்பன் டாக்\nகெளதம் மேனனுடன் என்ன பிரச்சினை- கார்த்திக் நரேன் விளக்கம்\nமருத்துவமனைக்கு செல்ல மாட்டேன்… கருணாநிதியை நலம் விசாரிக்க மாட்டேன்… நடிகை ஓவியா\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\nகளிநடம் புரிந்த மேகங்களின் கூடல் விளையாட்டு – பிரமிக்க வைக்கும் புகைப்படத் தொகுப்பு\nசாதாரண பால் மாதிரி தாய்ப்பாலையும் ஃபிரிட்ஜில வைக்கலாமா எந்த பாத்திரத்தில் வைக்கணும்\nஇந்த ஆடிப்பெருக்கில் உங்களுடைய ராசிக்கு என்னென்ன விஷயங்கள் பெருகப்போகுது\nகாதுக்குள்ள அப்பப்போ கொய்ங்ங்…. ன்னு சத்தம் கேட்குதா… இத செஞ்சா சரியாகிடும்… | Top…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் மூன்று மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த வெற்றி: கண்ணீர் விட்டு அழுத ஆண்டி முர்ரே\nமூன்று மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த வெற்றி: கண்ணீர் விட்டு அழுத ஆண்டி முர்ரே\n3 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றியின் மூலம் வாஷிங்டன் ஓபன் டென்னிஸில் காலிறுதிப் போட்டியில் நுழைந்திருக்கிறார் ஆண்டி முர்ரே.\nவாஷிங்டன் ஓபன் டென்னிஸில் ரோமானிய வீரர் மாரியஸ் கோபிலை வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே.\nஇதில் 6 -7, 6 -3, 7 – 6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.\nநீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கிடைத்த வெற்றி என்பதால் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த முர்ரே அதன்பின் களத்தைவிட்டு வெளியே செல்லாமல். தனது நாற்காலியில் உட்கார்த்து அழத் தொடங்கிவிட்டார்.\nசுமார் 1 நிமிடத்துக்கும் மேலாக முர்ரே அழுது கொண்டிருந்தார். பின் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே விடை பெற்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.\nஆண்டி முர்ரே மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்று மணி நேரப் போராட்டம்\nPrevious articleசென்னையில் பெண்கள் பாதுகாப்பு மையம்: காவல் ஆணையர் திறந்துவைத்தார்; புகார் எண் வெளியீடு\nசென்னையில் பெண்கள் பாதுகாப்பு மையம்: காவல் ஆணையர் திறந்துவைத்தார்; புகார் எண் வெளியீடு\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nஅந்த சதத்தை மறக்கமுடியாது; எனக்கு இந்த சதம் பெரிதாகத் தெரியவில்லை: மனம்திறந்த விராட் கோலி\nபார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்…: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட்...\nபிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்\nஇன்றைய இரவு சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யலாம்.. என்னலாம் செய்யவே கூடாது.. என்னலாம் செய்யவே கூடாது\nசீனாவிடமிருந்து வாங்கிய கடன்களை அடைக்க ஐ.எம்.எப். நிதியைப் பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடாது: அமெரிக்கா எச்சரிக்கை;...\nஒரு மணி நேரம் தாங்க.. ஒரு வருஷ வித்தையும் மொத்தமாக இறங்கிருச்சு.. புளகாங்கிதப்படும் ராணா\nசினிமா போன்று கொள்ளைச் சம்பவம்: காரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டு ரூ.40 லட்சம் திருட்டு\n‘கேலி செய்த இங்கிலாந்து வீரர்கள்’; ‘பதிலடி கொடுத்த ஜாகிர்கான்’: டிராவிட் தலைமையில் வென்றது குறித்து...\nஓரமாக நில்லுங்கள் என்று கூறிய ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது\nஸ்ரீரங்கத்தில் நடந்த சம்பவத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/06115902/1005356/Independence-Day-Flower-Festival.vpf", "date_download": "2018-08-20T18:46:10Z", "digest": "sha1:VDPUXRWX52KOKTHEGGBGBYZPP4V66UZG", "length": 9744, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "சுதந்திர தின மலர்க் கண்காட்சி தொடக்கம் - லால் பாக் பூங்காவில் திரண்ட பொதுமக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுதந்திர தின மலர்க் கண்காட்சி தொடக்கம் - லால் பாக் பூங்காவில் திரண்ட பொதுமக்கள்\nபெங்களூருவில் உள்ள‌ லால் பாக் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள சுதந்திர தின மலர்க் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.\nபெங்களூருவில் உள்ள‌ லால் பாக் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள சுதந்திர தின மலர்க் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். 208-வது ஆண்டாக நடைபெற்ற இந்த மலர்க் கண்காட்சியில், சுதந்திர போராளிகள், அமர் ஜவான் ஜோதி, இஸ்ரோ ஏவுதளம், போர் ஏவுகணை மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பூக்கும், 87 ரக வண்ண மலர்களும் காட்சி படுத்தப்பட்டன.\nஒண்டி வீரன் நினைவு நாள் - பல்வேறு அமைப்பினர் பேரணி\nதிருநெல்வேலியில் ஒண்டி வீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது\nஅண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றம்\nசுதந்திர தினத்தை ஒட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.\nசுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்\nபாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.\n7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்\nலாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.\n\"ஆக. 22 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை\" - மத்திய அரசு திட்டவட்டம்\nஇஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வருகிற 22 ம் தேதி கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது.\nஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் : ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்\nஸ்ரீசைலம் அணையிலிருந்து ஆர்ப்பரித்து தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.\n\"தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு\" - ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை\nநாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் மத்தியில் பாஜக தலைமையில் அமையும் ஆட்சிக்கு, அதிமுக ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n\"வாஜ்பாய் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் அதுவே உண்மையான அஞ்சலி \" - பிரதமர் மோடி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுகளை நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇடுக்கியில் திரும்புகிறது இயல்பு வாழ்க்கை : கடைகள் திறப்பு\nதென் மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் குறைந்து விட்டதால், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதியில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது\nபக்ரீத் பண்டிகை : ஒரு ஆடு ரூ.5 லட்சத்துக்கு விற்பனை\nபக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் ஆடு விற்பனை களை கட்டியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thinappuyalnews.com/archives/136135", "date_download": "2018-08-20T18:48:28Z", "digest": "sha1:UW7K4ZP5Y2JM4OMI4VNKJPET5TU3BUIJ", "length": 5723, "nlines": 47, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "​​​​​​​​​​​​​​​​​​​​​​யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய தவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா..!! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n​​​​​​​​​​​​​​​​​​​​​​யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய தவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா..\n​​​​​​​​​​​​​​​​​​​​​​யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய\nதவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா 2017\nயா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் தவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா 14.10.2017 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் யோகர் சுவாமிகள் மண்டபத்தில் நடைபெற்றது.\nவித்தியாலய அதிபர் திரு.கே.கே.தவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் கனகரட்ணம் விந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பிரதேச கல்வி அதிகாரி திரு. எஸ். தேவகுமாரன் அவர்களும் மேலும் முன்னாள் அதிபரும் கோட்டைக்கல்வி அதிகாரியுமான திருமதி சிவபாலன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை உப அதிபர் ரீ. கோபாலகிருஸ்ணன் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் திரு. என். கிருஸ்ணகுமார், உப அதிபர் பீ.சர்வானந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nநிகழ்வில் கல்வி, விளையாட்டு, அடைவுமட்டம், அபிவிருத்தி என கல்விசார் செயற்பாடுகளில் முதன்மை நிலையில் உள்ள மாணவர்கள் அனைவரும் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்நிகழ்வில் விருந்தினர்கள் அழைத்துவரப்படுவனையும், பிரதம விருந்தினரான யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். கனகரட்ணம் விந்தன் அவர்கள் உரையாற்றுவதனையும், மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைப்பதனையும், விருந்தினர்கள் மேடையில் அமர்ந்திருப்பதனையும் படங்களில் காணலாம்.\nPrevious யாழில் தந்தையின் மண்டையினை பிளந்த மகள்..\nNext மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/news/63238/nithyamenon-news", "date_download": "2018-08-20T18:33:21Z", "digest": "sha1:JZRJUMDRSLWJJRDMWZWELPDHH2OCPOXU", "length": 8089, "nlines": 132, "source_domain": "newstig.com", "title": "அதுக்காக எல்லாம் வாயைக் கட்டி வயித்த கட்ட முடியுமா நித்யா மேனன் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஅதுக்காக எல்லாம் வாயைக் கட்டி வயித்த கட்ட முடியுமா நித்யா மேனன்\nசென்னை: நித்யா மேனன் அளித்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nமெர்சல் படத்தில் ஐஸாக நடித்து தளபதி ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகிவிட்டார் நித்யா மேனன். பூசினாற் போன்று இருந்த அவர் தற்போது வெயிட் போட்டு குண்டாகிவிட்டார்.\nஅவர் குண்டானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஎன்ன நித்யா இப்படி தொப்பையும், தொந்தியுமா குண்டாகிவிட்டீர்களே என்று ரசிகர்கள் கேட்டனர். அவர் இடத்தில் வேறு எந்த நடிகை இருந்திருந்தாலும் டென்ஷனாகி அய்யய்யோ குண்டாகிவிட்டேனே என்று புலம்பித் தள்ளியிருப்பார்.\nநித்யா மேனனோ கூலாக உள்ளார். ஷூட்டிங் இல்லாதபோது வீட்டில் நன்றாக சாப்பிட்டேன், வெயிட் போட்டுவிட்டது. அதற்கு என்ன. வெயிட் போடுகிறது என்பதற்காக பிடித்ததை சாப்பிடாமல் இருக்க முடியாது என்கிறார் நித்யா.\nஉடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள பெயருக்கு சாப்பிட்டு, ஜிம்மே கதி என்று கிடந்து கடினமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் நித்யா வித்தியாசமானவராக உள்ளார்.\nபுதுப் படம் ஒன்றில் நித்யா மேனன் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். அதனால் அவர் தனது உடல் எடையை குறைக்க உள்ளார். வெயிட் பிரச்சனையை நித்யா கூலாக கையாளும் விதம் அனைவருக்கும் பிடித்துள்ளது.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article நடிகையின் பெயரில் போலி ஆதார் கார்டு உருவாக்கி மோசடி நடிகை புகார்\nNext article இந்த ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு இதெல்லாம் நடந்தே தீரும் கொஞ்சம் கவனமா இருங்க\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nதல தோனியின் பொங்கல் பரிசு ஏர் போர்டில் அவர் இறங்கி வந்ததும் பறந்த விசில்கள் மாஸ் தான்\nஅழகிய மகள்களுடன் மதுபாலா ஆச்சர்யத்துடன் ரசிகர்கள் கேட்கும் கேள்வி...\nபோலி நிதி நிறுவனத்திடம் பணத்தை இழந்த ராகுல் டிராவிட் மற்றும் சாய்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1086&cat=7", "date_download": "2018-08-20T19:18:04Z", "digest": "sha1:WUGZEOXCXIIBGTR665NXO2724J7GHLXE", "length": 6737, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஒகேனக்கல் | Hogenakkal built on tourists - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஒகேனக்கல்\nபென்னாகரம்: விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களை கட்டியது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மெயினருவியில் கொட்டிய தண்ணீரில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகையும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் பரிசல் ஓட்டிகள், மீன் பிடிப்பவர்கள், சமையல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கூட்டம் அலைமோதியதால் ஒகேனக்கல் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் விடுமுறை கர்நாடகா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகுற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் உற்சாகம்\nசுற்றுலா பயணிகள் வராமல் களையிழந்த ஒகேனக்கல்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபுத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_7.html", "date_download": "2018-08-20T18:22:49Z", "digest": "sha1:SA4RCS5FKDF5VR4CZTVBXQ7NUV2NZH74", "length": 5134, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு நகரில் பாரிய விபத்து – மயிரிழையில் உயிர்தப்பிய மூவர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு நகரில் பாரிய விபத்து – மயிரிழையில் உயிர்தப்பிய மூவர்\nமட்டக்களப்பு நகரில் பாரிய விபத்து – மயிரிழையில் உயிர்தப்பிய மூவர்\nமட்டக்களப்பு –திருமலை வீதியில் இன்று இரவு இடம்பெற்ற பாரிய விபத்தில் மூவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.\nமட்டக்களப்பு நகரில் தாண்டவன்வெளியில் கன்டயினர் ஒன்று கார் ஒன்றை மோதியுள்ளதுடன் காரில் பயணித்தவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.\nபிரதான வீதியால் வந்த கார் குறுக்கு வீதியொன்றில் திரும்பும்போது பின்னால் வந்த கன்டயினர் மோதியுள்ளது.\nஇது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/india/03/123595?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:11:26Z", "digest": "sha1:SDEERLAQ3NG37LQETUXWQ4K4EX6OEYFJ", "length": 7478, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மதுக்கடையை எதிர்த்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதுக்கடையை எதிர்த்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா\nமதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை மர்ம கும்பல் ஒன்று மது பாட்டிலால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பணக்காடி கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றகோரி மனு எழுதிய அப்பகுதி சமூக ஆர்வலர் செல்வி, மனுவில் ஊரார் பலரிடம் கையெழுத்து வாங்கினார்.\nஇதை நேற்று நடைபெறும் மனு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇதையறிந்த விஜய் என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் செல்வி இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசாரும் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி சென்றுவிட்டனர்.\nபொலிசார் சென்ற அடுத்த சிறிது நேரத்தில், செல்வியை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை தாக்க முற்பட்டனர். தப்பியோடிய செல்வியின் முதுகில் மதுபாட்டிலை உடைத்து குத்தினர்.\nபலத்த காயமடைந்த செல்வி, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product-category/religion/page/2/", "date_download": "2018-08-20T18:17:36Z", "digest": "sha1:CAFI2G7POJNDNFV3MOGGRY6KKKO7QRJT", "length": 15298, "nlines": 460, "source_domain": "tamilnool.com", "title": "சமயம் Archives - Page 2 of 13 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/world/2018/feb/10/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2860508.html", "date_download": "2018-08-20T18:23:54Z", "digest": "sha1:I2PXLLYLUBKUNBRXZ56UTUGNCJEQJHL3", "length": 9836, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "டிரம்ப் பட்ஜெட்டுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்- Dinamani", "raw_content": "\nடிரம்ப் பட்ஜெட்டுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்\nபல மணி நேர இழுபறிக்குப் பிறகு, அரசு செலவுகளுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இடைக்கால பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை நள்ளிரவு ஒப்புதல் அளித்தது.\nஇதையடுத்து, 3 வாரங்களுக்குள் நாட்டின் அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதற்கான அபாயம் நீங்கியது.\nஅமெரிக்காவில், வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி வரையிலான அரசுச் செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி கோரும் மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் வியாழக்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.\nஎனினும், அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக அளிக்கப்பட்டிருந்த கெடு நேரமான நள்ளிரவு 12.00 மணி வரை ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே இதுதொடர்பான உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது.\nஇதையடுத்து, அரசுத் துறைகளை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்க முடியாத நிலையில், அந்தத் துறைகளை முடக்குவதற்கான சூழல் ஏற்பட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்புதான் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததால் அரசுத் துறைகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பட்ஜெட் மசோதாவுக்கு ஆதரவாக 240 வாக்குகளும், எதிராக 186 வாக்குகளும் பதிவானது.\nஇதனைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்துக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.\nஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பாமல் தடுக்கும் வகையிலான சட்டம் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் இயற்றப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை அண்மையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.\nஇதனால் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள், அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவதைத் தவிர்த்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு நிர்பந்தம் கொடுக்கும் முயற்சியாகவே, இடைக்கால பட்ஜெட் மசோதாவுக்கு எம்.பி.க்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45072-chennai-it-employee-lavanya-recovered-fully-from-robbers-attack.html", "date_download": "2018-08-20T18:46:49Z", "digest": "sha1:R6D6NZHUR24A7LKDNG6GNJ47CYHFEMLL", "length": 13432, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘எனக்கு கிடைத்த 2வது வாழ்க்கை இது’ -கொடூர தாக்குதலில் மீண்ட லாவண்யா உற்சாகம்! | Chennai IT Employee Lavanya recovered fully from Robbers Attack", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n‘எனக்கு கிடைத்த 2வது வாழ்க்கை இது’ -கொடூர தாக்குதலில் மீண்ட லாவண்யா உற்சாகம்\nவழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மென்பொறியாளர் லாவண்யா முழுமையா‌க குணமடைந்ததை அடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். கொள்ளையர் தாக்குதலில் இருந்து தாம் மீண்டுவர உறுதுணையாக இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் ‌அவரது குடும்பத்தினரிடம்தான் தனது திருமண செய்தியை முதலில் கூறியதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்‌.\n“எனக்கு திருமணம் நிச்சயம் ஆன‌‌ உடன் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அவரது மனைவியிடம்தான் முதலில் தெரிவித்தேன். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனமார வாழ்த்து தெரிவித்தனர். நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் ஆய்வா‌ளர் சிவக்குமாரின் மனைவியுடன் பேசினேன். அப்போது உனக்கான நாள்‌வரும் என்று அவர் கூறினார், எனக்கு திருமணம் நிச்சயம் ஆ‌ன பின் முதலில் அவரிடம் கூற நினைத்தேன், அதன்படியே செய்துள்ளேன்” என்றார்.\nஆந்திராவைச் சேர்ந்த மென்பொறியாளர் லா‌ண்யா சென்னையில் பணியாற்றி வருகி‌‌றார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் லாவண்யா வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பெரும்பாக்கம் அருகே வந்த போது வழிப்பறிக் கும்பல் லாவண்யாவை மறித்தது. அவர்களிடம் சிக்காமல் துணிச்சலுடன் தப்பியோட முயன்ற லாவண்யாவை வழிப்பறிக் கும்பல் ‌கத்தியால் தாக்கியது. கொள்ளையர்கள் லாவண்யாவிடம் இருந்து இருசக்கர வாகனம், 2 செல்போன்கள், லேப்டாப் மற்றும் அவர் அணிந்திருந்த கைச்செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய லாவண்யாவை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇந்த வழக்கில் தொடர்புடைய விநாயகமூர்த்தி, நாரா‌யண மூர்த்தி, லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த லாவண்யா தான் உயிர்‌ பிழைக்க காரணமாக இருந்‌த சென்னை மாந‌கர காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொள்ளையர்களால் தாம் பாதிக்கப்பட்டது தெரிந்து தம்மை திருமணம் செய்துகொள்ள முன்வந்த ரவிச்சந்திர ரெட்டி என்பவரை மணந்து கொள்ளப்போவ‌தாக லாவண்யா கூறினார்.\nகாவல்துறையினர் அவர்களது குடும்பத்தில் ஒருவர் போல தம்மை நடத்தியதாக லாவண்யா கூறினார். சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் ‌என்று லாவண்யா கேட்டுக்கொண்டுள்ளார். இது தனக்கு கிடைத்துள்ள இரண்டாவது வாழ்க்கை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்த லாவண்யா, தனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது திருமணத்துக்கு காவல்துறையும், ‌தமிழக மக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஉடலுறுப்பு தானத்தால் ஏழு பேருக்கு மறுவாழ்வு\n‘பயங்கரவாதிகளின் தந்தை திலகர்’: 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐ.ஜி. மீது பெண் போலீஸ் அதிகாரி பாலியல் புகார் - விசாரணைக்கு உத்தரவு\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\nசெயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் \n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் \nராகுல் பாதுகாப்பு குறித்து காவல்துறை விளக்கம்\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு\nகேட்டது ஐபோன்.. கிடைத்தது துணி துவைக்கும் சோப்பு..\nசரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி\nகர்ப்பிணி வயிற்றில் உதைத்த காவலர் - 7 நிமிடத்தில் பிறந்த குழந்தை\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடலுறுப்பு தானத்தால் ஏழு பேருக்கு மறுவாழ்வு\n‘பயங்கரவாதிகளின் தந்தை திலகர்’: 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vedabase.com/ta/bg/10/7", "date_download": "2018-08-20T19:21:25Z", "digest": "sha1:7B6XRFTR5YFFLUW5EQWSPPQPNC5IMHYZ", "length": 6792, "nlines": 31, "source_domain": "www.vedabase.com", "title": "Bg 10.7 | Bhaktivedanta Vedabase Online", "raw_content": "\nநூல்கள் » பகவத் கீதை உண்மையுருவில் » அத்தியாயம் பத்து: பூரணத்தின் வைபவம்\nஏதாம் விபூதிம் யோகம் ச\nமம யோ வேத்தி தத்த்வத:\nஏதாம் — இவ்வெல்லா; விபூதிம் — வைபவம்; யோகம் — யோகசக்தி; ச — கூட; மம — எனது; ய: — யாரொருவன்; வேத்தி — அறிகின்றானோ; தத்த்வத: — உண்மையில்; ஸ: — அவன்; அவிகல்பேன — பிறழாத; யோகேனே — பக்தித் தொண்டில்; யுஜ்யதே — ஈடுபட்டுள்ளான்; ந — இல்லை; அத்ர — இதில்; ஸம்ஷய: — சந்தேகம்.\nஎனது இத்தகு வைபவத்தையும் யோக சக்தியையும் எவன் உண்மையாக அறிகின்றானோ, அவன் களங்கமற்ற பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றான்; இதில் சந்தேகம் இல்லை.\nபரம புருஷ பகவானைப் பற்றிய ஞானம், ஆன்மீக பக்குவத்தின் மிகவுயர்ந்த சிகரமாகும். பரம புருஷரின் பல்வேறு வைபவங்களில் ஒருவனுக்கு திடமான நம்பிக்கை ஏற்படாத வரை, அவனால் பக்தித் தொண்டில் ஈடுபட இயலாது. 'கடவுள் பெரியவர் ' என்பதை மக்கள் பொதுவாக அறிவர், ஆனால் கடவுள் எவ்வாறு பெரியவர் என்பதை அவர்கள் விபரமாக அறிவதில்லை. இங்கே அத்தகு விவரங்களைக் காணலாம். கடவுள் எவ்வாறு பெரியவர் என்பதை உண்மையில் ஒருவன் அறிந்தால், பின்னர் இயற்கையாகவே அவன் சரணடைந்த ஆத்மாவாக ஆகி, தன்னை பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுத்துகிறான். பரமனின் வைபவங்களை உண்மையாக அறியும்பொழுது, அவரிடம் சரணடைவதைத் தவிர மாற்று வழிகளிலிருந்து இந்த உண்மை ஞானத்தைப் பெற முடியும்.\nஇந்த அகிலத்தின் நிர்வாகத்திற்காக, எல்லா கிரகங்களிலும் பல்வேறு தேவர்கள் உள்ளனர் பிரம்மா, சிவபெருமான், நான்கு குமாரர்கள் மற்றும் இதர முன்னோர்கள் ஆகியோர் அத்தகு தேவர்களில் தலைமையானவர்களாவர். உலகத்தின் பிரஜைகளுக்கு பல்வேறு முன்னோர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் பரம புருஷரான கிருஷ்ணரிடமிருந்து பிறந்தவர்கள். முழுமுதற் கடவுளான கிருஷ்ணரே எல்லா முன்னோருக்கும் ஆதியான முன்னோராவார்.\nஇவை பரம புருஷரின் வைபவங்களில் ஒரு சிறு பகுதியே. ஒருவன் இவற்றில் திடமான நம்பிக்கை கொள்ளும்போது, அவன் எவ்வித சந்தேகமும் இன்றி சிறந்த நம்பிக்கையுடன் கிருஷ்ணரை ஏற்று, பக்தித் தொண்டில் ஈடுபடுகிறான். பகவானுக்கு அன்புடன் பக்தித் தொண்டு செய்வதில் ஒருவனது விருப்பத்தை அதிகரிப்பதற்கு, இத்தகு குறிப்பிட்ட அறிவு அவசியம். கிருஷ்ணர் எவ்வாறு பெரியவர் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. ஏனெனில், கிருஷ்ணருடைய சிறப்பை அறிபவன் தீவிரமான பக்தித் தொண்டில் நிலைபெற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/92442", "date_download": "2018-08-20T18:04:43Z", "digest": "sha1:KEYMUGHZFTSE27XFJJQA6ENMWQAYYFXZ", "length": 6681, "nlines": 137, "source_domain": "www.zajilnews.lk", "title": "நோன்பும் நொந்த மக்களும் - Zajil News", "raw_content": "\nHome கவிதை நோன்பும் நொந்த மக்களும்\nகட்ட வழி ஏதும் வழியின்றி\nஎத்தனையோ பேர் சஹர் செய்வார்\nபெரு நாள் நெருங்கி வர\nநொந்து கூலி வேலை செய்து\nதோள் கொடுக்க வர வேண்டும்\nPrevious articleமரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nNext articleமஹிந்தவின் இப்தாரில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் நிலை விளங்கியது\nகடல் மேல் பறக்க வைத்தான்\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/03/blog-post_29.html", "date_download": "2018-08-20T18:35:48Z", "digest": "sha1:UIZM73QNRZ5FKOTUVE7XOCL2WWJS5JEG", "length": 2879, "nlines": 58, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: கார்ட்டூன் . . . கார்னர் . . .", "raw_content": "\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\nBSNL சேவைகளை பயன்படுத்துவீர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017\n30-03-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல் . . .\nஇனிய யுகாதி . . . வாழ்த்துக்கள் . . .\n5.4.17 கவன ஈர்ப்பு நாள்\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை . . .\nதில்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து யெ...\nதமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவெற்றி ... வெற்றி ... TNTCWU மாபெரும் வெற்றி\nபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல். . .\nமாவட்டந்தழுவிய போராட்ட அறிக்கை . . .\nவங்கிக் கடன்.... யுனியன் பேங்க்-நீட்டிப்பு . . .\nஎம்.பி.க்களில் 443 கோடீஸ்வரர்கள் . . .\nசெய்தி . . .துளி . .\nகார்ட்டூன் . . . கார்னர்\nநமது தமிழ் மாநில சங்கத்தின் சுற்றறிக்கை . . .\nமாவட்டத்தழுவிய போராட்டம் ... தயாராகுவீர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.musicjinni.com/8w0eVCSjhWO/5-Reasons-People-Hate-VIJAY-TV.html", "date_download": "2018-08-20T18:18:31Z", "digest": "sha1:2TM2YGUUJCHMKR72RRCCV2ESHQ2F5LK5", "length": 4722, "nlines": 34, "source_domain": "www.musicjinni.com", "title": "5 Reasons People Hate VIJAY TV | Music Jinni", "raw_content": "\nவிஜய் டிவி'ஐ வெறுப்பதன் காரணம் என்ன\nஅக்காளை திருமணம் செய்து தங்கையுடன் குடும்பம் நடத்தும் தனுஷ்\nசூர்யா இருந்த நிலையை பார்த்து ஆடிப்போன பிரபலம் விஜய் என்ன செய்தார் தெரியுமா விஜய் என்ன செய்தார் தெரியுமா\nசர்ச்சையில் சிக்கிய Super Singer Winner பிரித்திகா - வெற்றி செல்லாது\nவெறும் தண்ணீர் போதும் மாரடைப்பைத் தடுக்க..\nஇந்த மூன்று சிலைகளை பூஜை அறையில் வைத்தால் நடக்கும் அதிசயம்\nஇறப்பதற்கு முன் சசிகலா குறித்து உண்மையை வெளியிட்ட நடராஜன் வெளியான அதிர்ச்சி வீடியோவால் பரபரப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://galeyd.com/search/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2018-08-20T18:23:45Z", "digest": "sha1:TV2JR5VKHMUPXH2QFNSFJM7ABPNL5K3J", "length": 7135, "nlines": 149, "source_domain": "galeyd.com", "title": "பக்தி பாடல் டவுன்லோட் Mp3 [2.18 MB] | Top Music Download", "raw_content": "\nResults for பக்தி பாடல் டவுன்லோட்\nFree பக்தி பாடல் டவுன்லோட் Download Mp3 ● Free Mp3 பக்தி பாடல் டவுன்லோட் ● Mp3 Downloader பக்தி பாடல் டவுன்லோட் Free Download ● Mp3 Download பக்தி பாடல் டவுன்லோட் Mobile ● Download Free பக்தி பாடல் டவுன்லோட் Music Online ● Mp3 பக்தி பாடல் டவுன்லோட் Songs Free Download ● Mp3 Download பக்தி பாடல் டவுன்லோட் Youtube.\nசிம்பொனியின் 15 சிறந்த பக்தி பாடல்கள் தொகுப்பு | Top 15 Symphony Tamil Devotional hits\nराधे राधे बरसाने वाली राधे || அசல் ராதே ராதே BARSANE வாலி ராதே || 84 காஸ் யாத்திரை || விபுல் இசை\nஸ்ரீ ஹனுமன் சாலிசா பஜனைகள் ஹரிஹரன் மூலம் [முழு ஆடியோ பாடல்கள் Juke பெட்டியில்]\nகுல்ஷன் குமார் தேவி பக்தி பஜனைகள் நான் சிறந்த தேவி பஜனைகள் நான் டி-சீரிஸ் பக்தி சாகர்\nதமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு | Superhit Tamil Devotional Songs\n12 சிறந்த திருப்பதி பெருமாள் பாடல்கள் | Purattasi Perumal Songs tamil\nதிரை இசையில் மலர்ந்த அம்மன் பக்தி பாடல்கள் || Thirai Isayil Amman Seleted H dSong\n• திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் Thiruchendoorin Kadalorathil Senthil Nadhan\n• Om Shivaya . part-2 நமசிவாய நமசிவாய ஓம்நமசிவாய\n• உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் பாடல் கனகதாரா ஸ்டோத்திரம் (KANAKADHARA STOTRAM)\n• கடன் தீர பணம் சேர ரிண விமோச்சன லிங்கேஸ்வரா பாடல்-kadan theera panam sera rinavimochana lingeswara\n#பக்திபாடல்டவுன்லோட் #பக்திபாடல்டவுன்லோட்Mp3 #பக்திபாடல்டவுன்லோட்Ringtone #பக்திபாடல்டவுன்லோட்Video #பக்திபாடல்டவுன்லோட்Mp4 #பக்திபாடல்டவுன்லோட்Lyrics #பக்திபாடல்டவுன்லோட்Chord #Mp3 #FreeMp3 #FreeMp3Download\nசீவலப்பேரி பாண்டி Mp3 சாங்\nசீவலப்பேரி பாண்டி Mp3 டவுன்லோடிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://newstig.com/news/60768/Arjun-to-take-Villain-role-in-Vishwaasam", "date_download": "2018-08-20T18:32:40Z", "digest": "sha1:QPLPX5XITWPZMULVMFZNXLHYXUVHVUS3", "length": 6746, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "விஸ்வாசம் படத்தின் வில்லன் இவர் தான் ரசிகர்கள் கொண்டாட்டம் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nவிஸ்வாசம் படத்தின் வில்லன் இவர் தான் ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் அஜித் – இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகவுள்ள படத்தின் தலைப்பு விஸ்வாசம். இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். விவேகம் படத்தை தயாரித்த சத்யாஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் வில்லன் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஏற்கவனே அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.\nஇது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அக்ஷன் கிங் அஜித்திற்கு வில்லனான விஷயம் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது\nPrevious article நேற்று அடித்த சரக்கு நாற்றம் இன்னும் வீசுதா அதைத் தடுக்க இதோ சில வழிகள்\nNext article ரஜினிக்கு முறைத்த முகம் கமலுக்கு சிரித்த முகம் கோபாலபுரத்து நவரச ஸ்டாலின்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஉலகின் பெரிய ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது வானத்தை ஆளப்போகும் ஃபல்கான் ஹெவி\nமீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கா சாதகமான தீர்ப்புக்கு பின்னணி என்ன\nவிடை தெரியாத புதிர்களுடனேயே புதைக்கப்படும் தாரகை மயிலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-08-20T18:17:17Z", "digest": "sha1:QMDYFJK35A5FDHA4YJVM27PSDLUY46QH", "length": 11449, "nlines": 229, "source_domain": "tamilnool.com", "title": "முயற்சிக்கு முந்நூறு கதவுகள் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nபுகழ்பெற்றவர்களின் சுய முன்னேற்றச் சிந்தனைகள் ₹33.00\nSKU: 100056 Category: தன்னம்பிக்கை Tag: சுயமுன்னோற்றம்\nBe the first to review “முயற்சிக்கு முந்நூறு கதவுகள்” மறுமொழியை ரத்து செய்\nதோல்வியை ருசியுங்கள் வெற்றியை ரசியுங்கள்\nபுகழ்பெற்றவர்களின் சுய முன்னேற்றச் சிந்தனைகள்\nஅன்புள்ள மனிதன் அன்பை அருளாக மாற்றினால்\nமுதிர்ச்சியான மனநிலையின் அடையாளமாகத் திகழும் பொறுமை எனும் மனப்பாங்கை ஆராய்ந்து நோக்குகிறது இந்நூல்.\nபயணங்களிலேயே சிறப்பான அநுபவங்களைத் தருவது இரயில் பயணம் என்பதை இரசனையோடும் யதார்த்தமாயும் விளக்கிச் சொல்லும் இனிய நூல்.\nவாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு உதயமூர்த்தியின் பதில்கள்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2017/04/rbi-report-inflation-stock-market.html", "date_download": "2018-08-20T18:12:59Z", "digest": "sha1:TW3HGLZRL6IAWNAQB5MAI64MHO3I2SQ6", "length": 9741, "nlines": 78, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ரிசர்வ் வங்கி அறிக்கை தரும் சில உண்மைகள்", "raw_content": "\nரிசர்வ் வங்கி அறிக்கை தரும் சில உண்மைகள்\nநேற்று ரிசர்வ் வங்கி தமது கால் வருட நிதி கொள்கைகளை அறிவித்தது.\nசந்தையிலும் பெரிதளவு வட்டி விகிதங்களை குறைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆனாலும் வளர்ச்சி தொடர்பாக ரிசர்வ் வங்கி தரும் சில தரவுகளை சந்தை நம்பி இருந்தது.\nஅது போல, CRR, ரெபோ ரேட் போன்ற விகிதங்களில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. ஆனால் ரிவர்ஸ் ரெபோ ரேட்டில் சில மாற்றங்களை செய்தது.\nஅதாவது ஏற்கனவே இருக்கும் 5.75% என்பதில் இருந்து 6% என்று வட்டி விகிதங்களைக் கூட்டியது.\nபார்க்க: CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன\nரெபோ ரேட் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வாங்கிய பணத்திற்கு கொடுக்கும் வட்டி. அதே சமயத்தில் ரிவர்ஸ் ரெபோ என்றால் ரிசர்வ் வங்கி வங்கிகளின் பணத்திற்கு வைத்து இருப்பதற்கு கொடுக்கும் வட்டி.\nஇங்கு ரிவர்ஸ் ரெபோ கூட்டப்பட்டிருப்பதன் மூலம் ரிசர்வ் வங்கியானது வங்கிகளின் பணத்திற்கு அதிக வட்டி கொடுக்கும். இவ்வாறு வட்டி கூட்டப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை.\nரிசர்வ் வங்கியின் முக்கிய இலக்கே பணவீக்கத்தை 4% என்ற அளவில் கொண்டு வருவது தான்.\nஆனால் நாம் முன்னர் சொன்னவாறே, நாட்டில் தற்போது நிலவும் வறட்சி பணவீக்கத்தை அதிக அளவில் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nபார்க்க: இந்திய பங்குச்சந்தை எதிர்நோக்கும் பாதகமான இரு காரணிகள்\nஇதனால் 2017ன் முதல் அரை ஆண்டில் 4.5% என்றும், இரண்டாவது பிற்பகுதியில் 5% என்ற அளவிலும் பணவீக்கம் உயர வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளார்கள்.\nஇதனைக் கட்டுப்படுத்த ஒரு முறையாக ரிவர்ஸ் ரெபோ ரேட்டை கூட்டி உள்ளார்கள். இதனால் வங்கிகள் மேலும் அதிக அளவில் பணத்தை ரிசர்வ் வங்கியிடம் வைப்பாக வைத்துக் கொள்ளும்.\nஇது பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தி பணவீக்கத்தையும் கட்டுக்கும் கொண்டு வரும் என்பது ஒரு எதிர்பார்ப்பாகும்.\nஇதனால் தான் சந்தையில் எல்லோரும் நிப்டி 9500யைத் தொடும் என்று சொல்லும் சூழ்நிலையில் நாம் சிறிது மாற்று திசையில் யோசிக்க வேண்டி உள்ளது. இந்த வறட்சி தடையை சந்தை எதிர்மறையாக கூட எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.\nஆனால் ஜிடிபி வளர்ச்சி 7.4% என்று சொல்லி இருப்பதன் மூலம் நமது நெஞ்சில் ஓரளவு பாலை வார்த்துள்ளார்கள் என்றே சொல்லலாம்.\nதற்போதைக்கு சந்தை ட்ரேடிங் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஆனால் முதலீடு செய்பவர்களுக்கு கீழ் நோக்கிய திருத்தம் என்பது கட்டாய தேவை.\nஇது தவிர, வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் சார்ந்த பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம் என்று கூறி இருப்பதன் மூலம் ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45048-lavanya-who-recovered-from-thieves-attack-in-pallikaranai-said-thanks-to-tn-police-and-people.html", "date_download": "2018-08-20T18:47:16Z", "digest": "sha1:FZOTDUEBN4G5SOT6GYMAKESO54RNSQ6U", "length": 12667, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘10 நாட்கள் என் முகத்தை நானே பார்க்கவில்லை’ கொள்ளையர்கள் தாக்குதலில் உயிர் பிழைத்த லாவண்யா உருக்கம் | Lavanya who recovered from thieves attack in pallikaranai said thanks to tn police and people", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n‘10 நாட்கள் என் முகத்தை நானே பார்க்கவில்லை’ கொள்ளையர்கள் தாக்குதலில் உயிர் பிழைத்த லாவண்யா உருக்கம்\nவழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nபள்ளிக்கரணை அருகே நடந்த வழிப்பறி கொள்ளையர்கள் தாக்குதலில் லாவண்யா படுகாயம் அடைந்தார். பின்னர், பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யாவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக விநாயகமூர்த்தி, நாராயணமூர்த்தி, லோகேஷ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் விநாயகமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காவல் ஆணையரை நேரில் சந்தித்து லாவண்யா நன்றி தெரிவித்தார். காவல் ஆணையருடன் செய்தியாளர்களை சந்தித்த லாவண்யா, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றிய காவல்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக கூறினார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய லாவண்யா, “என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. அதில் இருந்து மீண்டு வந்ததற்கு என்னுடைய மன உறுதிதான் காரணம் என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால், என்னுடைய மன உறுதி ஒரு சதவீதம் தான் காரணம். காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எனக்கு அளித்த ஆதரவு தான் நான் மீண்டு வந்ததற்கு காரணம். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த இரண்டு ஆய்வாளர்கள் என்னை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். என் வாழ்வில் நடந்த மோசமான சம்பவமாக இதனை கருதவில்லை. எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றி.\nஎனக்கு திருமண நிச்சயம் நடந்துள்ளது என்பதையும் மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நேர்ந்த சம்பவத்தையும் அறிந்த பிறகும் திருமணத்திற்கு மாப்பிள்ளை குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். கமிஷ்னர் என்னை வந்து பார்த்த போது, எனக்கு கடவுள் இரண்டாவது வாழ்க்கை கொடுத்துள்ளார் என்று கூறினார். என்னை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருக்கும் என்னுடைய உட்பிக்காக இந்த வாழ்க்கை கிடைத்துள்ளது. எனக்கும் நிறைய பயம் இருந்தது. முதல் பத்து நாட்கள் என்னுடைய முகத்தை நானே பார்க்கவில்லை. எனக்கு ஆன காயங்களில் இருந்து நான் மிக விரைவில் குணமாகிவிட்டேன்” என்றார்.\nநூற்றாண்டு விழாவால் சேதமடைந்த ஓடுதளம்: 10 நாள் மட்டுமே நடைபெறும் உதகை குதிரை ரேஸ் \nஎம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிசிடிவி கேமரா வளையத்திற்குள் வரும் சென்னை\n‘எனக்கு கிடைத்த 2வது வாழ்க்கை இது’ -கொடூர தாக்குதலில் மீண்ட லாவண்யா உற்சாகம்\n டிவி தொகுப்பாளர் மீது ஹீரோயின்கள் பாய்ச்சல்\nபணிக்கு சென்று வீடு திரும்பாத மகள்: பதறும் தந்தை\nஐடி ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட விவகாரம்: 11பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐ.டி ஊழியர் லாவண்யா பேட்டி\nகாவல் ஆணையரிடம் உருக்கமாக நன்றி கூறிய ஐடி ஊழியர் லாவண்யா..\nபெண் ஐ.டி ஊழியரை தாக்கி வழிப்பறி: 3 பேர் கைது\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநூற்றாண்டு விழாவால் சேதமடைந்த ஓடுதளம்: 10 நாள் மட்டுமே நடைபெறும் உதகை குதிரை ரேஸ் \nஎம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/92147", "date_download": "2018-08-20T18:07:05Z", "digest": "sha1:NKMWBKSSL6JO5HXS7LRQV737DAU4X5LO", "length": 6685, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவானோருக்கான கலந்துரையாடல் நாளை சம்பூரில் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவானோருக்கான கலந்துரையாடல் நாளை சம்பூரில்\nதிருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவானோருக்கான கலந்துரையாடல் நாளை சம்பூரில்\nதிருகோணமலை மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கான கலந்துறையாடலும்,ஆலோசனைக்கூட்டமும் நாளை (28) திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nகிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கலந்துறையாடலில் மன்றங்களின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும்,சபைகளின் ஒழுங்கு விதிமுறைகள் சம்பந்தமாகவும், உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது தொடர்பாகவும் கலந்துறையாடப்பபடவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்தார்.\nஇக்கலந்துறையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஓட்டமாவடி தேசிய பாடசாலையின் OCC – 90 நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு\nNext articleகுப்பைகளை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து ரீ.-56 ரக துப்பாக்கி மீட்பு\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/video-games-consoles", "date_download": "2018-08-20T19:00:19Z", "digest": "sha1:7IOHJKKY3W4S7VSUSBV67WEYTVGUKL6H", "length": 4619, "nlines": 110, "source_domain": "ikman.lk", "title": "கடுவெல யில் வீடியோ கேம்ஸ் மற்றும் கொன்சோல்ஸ் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-10 of 10 விளம்பரங்கள்\nகடுவெல உள் வீடியோ கேம்ஸ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/2015/11/21/vijayakanth-next-film/", "date_download": "2018-08-20T18:02:40Z", "digest": "sha1:RW45CNZQESYUVQVYLQAHE43M5HAGGMWK", "length": 6095, "nlines": 43, "source_domain": "angusam.com", "title": "தேர்தலை மையப்படுத்தி வசனங்கள் மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த் – அங்குசம்", "raw_content": "\nதேர்தலை மையப்படுத்தி வசனங்கள் மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்\nதேர்தலை மையப்படுத்தி வசனங்கள் மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்\nஅரசியலில் எதிர்கட்சி தலைவராக வலம் வரும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடைக்காமல் மக்கள் பணியில் பிஸியாக இருந்தார். அரசியலில் தீவிர கவனம் செலுத்திய பிறகு, நடிப்பதைக் குறைத்துக்கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில் விஜயகாந்த் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார்.\nவிஜயகாந்த் தான் இயக்கி நாயகனாக நடித்த ‘விருதகிரி’ படம் கடந்த 2010-ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு, தன் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் மட்டும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வெற்றியடையவில்லை.\nஇந்நிலையில், 5 ஆண்டு இடை வெளிக்குப் பிறகு ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனும் நடிக்கிறார்.\nதமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு தனி ஒருவன் படத்திற்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அறிமுக இயக்குநர் அருண் பொன்னம் பலம் இயக்குகிறார்.\nஇதன் படப்பிடிப்பு துவக்க விழா சென்னையில் இன்று காலை சென்னையில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் இப்படத்திற்கு பூஜை பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது\nஇதற்கான படப்பிடிப்பை சென்னை தவிர, வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஅரசியலில் சூறாவளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜயகாந்த், இப்போது மீண்டும் நடிப்பில் அசத்தலாக வலம் வரப்போகிறார் என்கிறார்கள் கேப்டன் ரசிகர்கள். மேலும் தமிழகத்தில் சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதும், அந்த படத்தில் தேர்தலை மையமாக வைத்து வசனங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nதிதி நாளாக மாறிய கல்யாண நாள்… திக்.. திக்.. ராஜேஷ் \nஒரு மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 2பேர் பலி திருச்சியில் பரவும் கொடூர காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanatham.net/index.php/science-technology-news/item/421-2017-01-20-17-38-48", "date_download": "2018-08-20T18:46:45Z", "digest": "sha1:CN3R2TYKM4PIEC2WS5ZH5CBTY4RXHY76", "length": 8244, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் - eelanatham.net", "raw_content": "\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும்\nஜல்லிக்கட்டு நடத்த தமிழக அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் அதற்கு தடை கோருவது எப்படி என்பது குறித்து பீட்டா அமைப்பு நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு உருவாக்கியுள்ள அவசர சட்ட வரைவுக்கு, மத்திய சட்டம், கலாசாரம், வனத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளன.\nகுடியரசு தலைவர் நாளேயே சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் \"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது. விலங்குகளை காப்பாற்ற வேண்டியது பீட்டா அமைப்பின் கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு என்பதே சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் உடனேயே ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு உரிய ஆயத்தப் பணிகள் செய்துள்ளது. எனவே சட்டத்திற்கு விரைந்து தடை பெற்றுவிட என்ன செய்யலாம் என பீட்டா ஆலோசித்து வருகிறது.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 20, 2017 - 22645 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 20, 2017 - 22645 Views\nMore in this category: « போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nமாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்:\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத்\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://orutamilsex.sextgem.com/athikaalai%20il%20oru%20kama%20kaliaatam%20sex%20story%20tamil", "date_download": "2018-08-20T19:04:21Z", "digest": "sha1:CFA6ZVYSFHKVG5SP2DCOHEZRRUHATAQD", "length": 14988, "nlines": 28, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "அதிகாலையில் ஒரு காமக்களியாட்டம் tamil sex story", "raw_content": "\nஅதிகாலையில் ஒரு காமக்களியாட்டம் காம கதை\nஅசந்து போய் தூங்கிக்கொண்டிருந்தேன்.அதிகாலை நேரமது.காலை மணி 4 இருக்கும்.தை மாதக்குளிரில் நல்ல கனமான ஒரு போர்வையில் என்னை அடக்கி சுகமாக தூங்கிக்கொண்டிருந்தேன்.கனவில் நடந்தது போல்தான் இருந்தது முதலில்.என் மீது ஏதோ ஒன்று பரவுவதுபோல் ஆனால் பின் தான் தெரிந்தது அது கனவில்லை நிஜத்தில் என்று.எனக்கு லேசாக முழிப்பு தட்டியது.லேசாக கண் விழித்து பார்த்தபோது என் இடுப்பின் மீதாக என்னை பின்னிருந்து ஒரு கை அணைத்திருப்பதை.எனக்கு அது ஒரு சுகத்தை அளித்தபோதிலும் நான் ஒரு பதில் நடவடிக்கையும் செய்யாதிருக்க அந்த கை மெல்ல என் இடுப்பை வருடத்தொடங்கியது.உங்களுக்கே தெரியும் அதிகாலை குளிரில் அது மாதிரியான வருடல் என்ன சுகத்தையும் என்ன எழுச்சியையும் தருமென்று.\nஇருந்த போதிலும் நான் எதுவுமே செய்யாதிருக்க அந்த கை மெல்ல இடுப்பை வருடியபடி கீழாக இறங்கியது.ஏற்கனவே என் தம்பி எழும்ப தொடங்கியிருந்த வேலையில் அந்த கையின் இலக்கு என் தம்பிதான் என்ற எண்ணம் எனக்கு இன்னும் எழுச்சியைத்தர என்னின் எழுச்சி கட்டுக்கடங்க்காத வண்ணம் புறப்பட நிற்கும்ன் ராக்கெட்டாக தினவெடுத்து நின்றது.அன்று பார்த்து நான் ஜட்டிவேறு அணியாததால் என் எழுச்சி கைலியையும் போர்வையையும் தாண்டி கூடாரமிட்டு நின்றது.\nஇப்போது அந்த கை என் கைலியை அணாசயமாக ஒதுக்கி விட்டு என் தம்பியை அனுக என் தம்பியோ தனக்கு கிடைக்கவிருக்கும் அந்த ஆசை அரவணைப்பை வரவேற்க தயாராகி துடிப்புடன் நின்றான்.அந்த மென்மையான கை என்னவனை மெல்லமாக தொட்டது.லேசான வருடல் இதமான சீண்டல் என மிக நளினமாக என் தம்பியை அந்த கை கையால எனக்கோ எங்கோ பறப்பது போன்ற உணர்வு.நளினமாகவும்,மென்மையாகவும் என்னவனை கையாண்டுகொண்டிருந்த அந்த கை இப்போது என்னவனை இருகப்பற்றி உருவத்தொடங்க இனியும் பொருப்பது ஆணுக்கு அழகல்ல என்னும் எண்ணத்தோடு திரும்பி அந்த கைக்கு சொந்தமான முகம் காண திரும்பியபோதுதான் அந்த கைக்கு சொந்தமான அந்த அழகு தேவதையை கண்டேன்.\nசிவந்த மேனி,மாசு மருவற்ற முகம் எனக் கலக்களான அந்த பூங்குழலி என்னை காமம் தோய்ந்த ஒரு பார்வை பார்க்க, அந்த பார்வை எனக்கு அவளின் காமத்தேவையை சொல்லாமல் சொன்னது.பெண்ணவள் காமத்தை தீர்ப்பது\nதானே காளை நம் கடமை என்ற கடமை உணர்வில் நான் அந்த பைங்கிளியின் முகத்தோடு என் முகத்தை நெருங்க அவளே என்னை தன் முகத்தோடு தழுவி என் இதழோடு தன் இதழை பதித்து எனக்கு இதழ் என்னும் காமக்கருவி சுரக்கும் போதையூட்டும் அந்த ரசத்தை விருந்தாக தந்தாள்.\nநான் அந்த ரசத்தின் போதையில் மயங்கி இன்னும் உறிஞ்ச பலங்கொண்ட மட்டும் என் இதளால் அவளின் இதழில் உறிஞ்ச அவளோ என்னையும் மிஞ்சமட்டும் என்னின் இதழில் தன் பலம் காட்டினாள்.இப்படியாக எங்களின் இந்த இதழ் யுத்தம் இங்கே நடந்துகொண்டிருக்க என் கரம் அவளின் சங்கு கழுத்து,சந்தன தோள்கள் என பரவி வந்து இறுதியில் அவளின் தனம் என்னும் அந்த காமக்கோபுரத்தில் வந்து நின்றது.\nஅவள் அணிந்திருந்த நைட்டியின் மேலாகவே மென்மையாக தன்மையாக அந்த தாமரைத்தனங்களை என் கைகள் வருடியபோது அந்த தன்மைத்தனங்களின் இருக்கத்தின் மூலம் அந்த தனங்களுக்கு சொந்தமான அந்த காமத்து அரசி பெற்றிருந்த காமத்தின் அளவு.அப்படி ஒரு இருக்கம்.மென்மையில் காமத்தின் மேன்மை சொன்ன இருக்கம்.மென்மையாகத்தான தொடங்கினேன்.ஆனால் அந்த தனங்களின் இருக்கம் என்னை அழுத்தமாக்கியது.அழுத்தி, அழுத்தி,திரும்ப, திரும்ப , நான் அந்த தாமரை மலர்களை பிசைந்தபோதிலும் அவைகள் கொஞ்சமும் தளரவில்லை,தொய்யவில்லை.இன்னும் இன்னுமென அப்படியே இருக்கமாகவே நின்றன அந்த காமத்தையூட்டும் அமுதக்கலசங்கள்.\nநான் மென்மையாக அவளின் காதுகளில் சொன்னேன்,அந்த அமுதக்கலசங்கள் என் பார்வைக்கும் விருந்தாகவேண்டுமென்று.நான் சொன்னது முதலில் \"ம்ம்ம்,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,போங்கள் சினுங்கினாள் ஆனால் நான் மறுபடி கேட்டதும் இதற்காகத்தான் காத்திருந்தவள்போல் தன் நைட்டியை அப்படியே உருவினாள்.\nஅந்த காமத்து அரசி உள்ளேயாக தன் தனங்களை மிக சுதந்திரமாக விட்டுருந்தாள் எதுவும் அணியாமல் இப்போதும் கூட அந்த தனங்கள் திமிர் கொண்ட பார்வையாய் நேராகவே நின்றன,சற்றும் தொய்யாமல்.\nஇடைக்கு கீழேயாக பாவாடை மட்டும் இருக்க.நான் அந்த பாவாடை நாடாவை பற்றி இழுத்து அந்த பாவாடையையும் உருவி அந்த தங்கச்சிலையை முழுமையாக தரிசித்தேன்.\nஅழகென்றால் அப்படியொரு அழகு.முழுமையான அழகு,அப்படியே தழுவினேன்.அந்த தங்கமென்று மின்னிய காம அரசியை.\nஇப்போது காமக்கோபுரமாம் அந்த தாமரைத்தனங்களில் என் முகம் பதித்தேன்.பின் மெல்ல என் இத்ழுக்குள் அந்த தனங்களின் கலசமான ஒரு காம்பினை சுவைக்க அது ஒரு முந்திரிபருப்பு போன்று விரைத்து எனக்கு காமக்கிளர்ச்சியை அளித்தது.மாறி,மாறி,அந்த தனங்களொடும் தனங்களின் கலசங்களோடும் விளையாடி இன்புற்று இங்கே என் இதழ்கள் விளையாட அங்கே என் கரங்களோ மெல்ல அவளின் இடையில் தடுமாறி இன்னும் இறங்கி இன்பபுரியாம் அவளின் காமக்கோட்டையில் விளையாடத்தொடங்கியிருந்தன.\nஅந்த காமக்கோட்டையை காக்கின்ற அந்த கரு கரு காமப்ப்யிரோடு அலைபாய்ந்த்கு விளையாடி அவளுக்கு காமக்கிளர்ச்சியை இன்னும் ஊட்டி அவளீன் காமக்கோட்டையில் காம ரசத்தை தெப்பமென ஊரவைத்து அந்த காம ரசம் காமத்தூண்களாம் அவளின் தொடை வழியாக வடியத்தொடங்கின.\nமெதுவாக என் விரலால் அந்த காமக்குட்டையை கிளர அது அவளுக்கு இன்னும் இன்பத்தை இன்னும் தர அவள் \"ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் '\" என இன்னும் இன்னுமென முனகலின் உச்சத்துக்கு சென்றாள்.\nஇனியும் அவளை காக்க வைப்பது முறையில்லை என்ற உணர்வோடு அவளை வசமாக்கி, என் தம்பியாண்டானை தயார்படுத்தி அந்த இன்பபுரிக்குள் என் தம்பியாண்டானை பயணிக்க செய்து நானும் காமப்ப்யணத்தை தொடங்கினேன்.முன்னும்,பின்னுமான புதிரான பயணமது எந்தம்பியாண்டானுக்கு.முடியாது நீண்டால் இன்னும் நன்றாயிருக்கும் ஆனால் முடிக்கவேண்டும் இப்போதென்ற துடிப்பு தரும் இனிமையான பயணமெனக்கு.அப்படியான அந்த பயணம் சில மணித்துளிகள் நீடித்து இறுதியில் எனக்கு காமக்கிறு கிறுப்பைத் தந்து என் அமுத ரசத்தை அந்த காமபுரி வாங்கி முடிய நான் மூச்சு வாங்க படுக்கையில் விழுந்தேன்.அவளோ என்னின் மார்பில் முகம் பதித்து என் மீது சாய்ந்தாள்.\n(இவ்வளவு நேரம் பேன்னு கதை கேட்டு கையில புடிச்சு ஆட்டினீங்களே அந்த பெண் யாரு என்னன்னு யாராவது கேட்டீங்களாய்யா.இப்ப சொல்லுறேன் கேட்டுக்கங்க அது வேறு யாருமில்ல நான் ஆசை ஆசையாய் காதலித்து கை பிடித்த என் சொந்த பொண்டாட்டிய்யா பொண்டாட்டி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-20T18:05:43Z", "digest": "sha1:MCUFKR7E3R42QV57W74JCQEZZCCLDWHC", "length": 10555, "nlines": 174, "source_domain": "news7paper.com", "title": "இது பெரிய கேவலம்: வைஷ்ணவி ஆவேசம் - News7Paper", "raw_content": "\nடெல்லியில் முஸ்லிம் இளைஞரைத் தாக்கி தாடியை அகற்றிய மூவர் கைது\nமும்பை புறநகர் ரயிலில் பயணிகளை பயமுறுத்திய பாம்பு: அலறியடித்து நடுங்கியபடி பயணம் செய்த கொடுமை\nகள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக சிறுவன் உட்பட 4 பேர்…\nஇங்கிலாந்துக்காக பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் என்ன- ரகசியம் உடைக்கிறார் அஸ்வின்\nதிடிரென தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன் காரணம் இதுதான்…\nஇது பெரிய கேவலம்: வைஷ்ணவி ஆவேசம்\nஅஜீத் பட இயக்குனர் மர்ம மரணம்….\nகிகி’ நடனம் ஆடிய ரெஜினாவுக்கு சிக்கல்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\nவயிற்று சதையைக் கரைக்கும் கத்தரிக்காய்… ட்ரை பண்ணி பாருங்களேன்… | Great Health Benefits…\nஉலகமே கொண்டாடும் இந்த இந்தியரை பற்றி நமக்கு ஏன் தெரியவில்லை\nஒரே வாரத்தில் தலை பேனை எப்படி ஒழிக்கலாம்… எந்த செலவும் இல்லாம… | Home…\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது அதை எப்படி போக்குவது\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome சினிமா இது பெரிய கேவலம்: வைஷ்ணவி ஆவேசம்\nஇது பெரிய கேவலம்: வைஷ்ணவி ஆவேசம்\nபிக்பாஸ்-2 ஆரம்பத்தில் சுமாராக போனது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பாக மாறியுள்ளது. எல்லோரும் கடந்த சில நாட்களாக பிக்பாஸை தீவிரமாக பார்க்க தொடங்கியுள்ளனர், இதற்கு முக்கிய காரணம் வீட்டில் நடக்கும் சண்டைகள் தான்.\nமஹத், யாசிகா இருவரும் வந்ததில் இருந்து மிக நெருக்கமாக இருக்கிறார்கள். அசிங்கமாக பேசி வருகின்றனர். இன்றைய பிக்பாஸில் வைஷ்ணவி ‘நீங்கள் இருவரும் உங்கள் பெயரை மிகவும் டேமேஜ் செய்கிறீர்கள், இது பெரிய கேவலம்.\nமஹத் முதலில் நீங்கள் நடிப்பதை நிறுத்துங்கள்’ என்று கோபமாக அட்வைஸ் செய்துள்ளார்.\nPrevious articleஇங்கிலாந்துக்காக பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் என்ன- ரகசியம் உடைக்கிறார் அஸ்வின்\nNext articleகள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக சிறுவன் உட்பட 4 பேர் கைது\nதிடிரென தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன் காரணம் இதுதான்…\nஅஜீத் பட இயக்குனர் மர்ம மரணம்….\nகிகி’ நடனம் ஆடிய ரெஜினாவுக்கு சிக்கல்\nபார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்…: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட்...\nஇன்றைய இரவு சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யலாம்.. என்னலாம் செய்யவே கூடாது.. என்னலாம் செய்யவே கூடாது\nஇந்தோனேசியாவில் பூகம்பம்: 10 பேர் பலி 40 பேர் காயம்\nகருணாநிதிக்கு இந்த பிரச்னையால தான் தொற்று வந்ததா நமக்கு வந்தா எப்படி சமாளிக்கலாம் நமக்கு வந்தா எப்படி சமாளிக்கலாம்\nஅரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின், விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு\nசாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி\nஎன்னது… டாப்ஸிக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சா மாப்பிள்ளை யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/experts-review-madurai-meenakshi-amman-temple-310835.html", "date_download": "2018-08-20T18:53:50Z", "digest": "sha1:SQ3PIZKFS53D354SO32RCCFLNWICEIKN", "length": 10112, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை... வல்லுநர்கள் குழு | Experts review in Madurai Meenakshi Amman temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மதுரை ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை... வல்லுநர்கள் குழு\nமதுரை ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை... வல்லுநர்கள் குழு\nஆக. 28ல் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்\nநெல்லை ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து.. அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்\nசீனாவில் ரசாயன ஆலையில் பெரிய தீ விபத்து.. 19 பேர் பலி: 60 பேர் படுகாயம்\nபழனி கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் கருகி நாசம்\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழ்ந்த தீவிபத்தில் ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வல்லுநர்கள் குழு தெரிவித்தனர்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பற்றி எரிந்த தீ, மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. இதையடுத்து 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.\nஇந்நிலையில் அங்குள்ள வீரவசந்த மண்டபத்தில் இருந்த புறாக்கள் கருகின. அத்துடன் அந்த மண்டபமும் சேதமாகியது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆயிரங்கால் மண்டபம் சேதமடையவில்லை என்று அன்றைய தினமே மாவட்ட நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டது. இதனிடையே துணை முதல்வர், துறை அமைச்சர்கள் என ஆய்வு செய்தனர்.\nஇந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்தது. அப்போது அந்த குழுவினர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில், வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.\nமேலும் இடிபாடுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வசந்த மண்டபத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கப்படும் என நிபுணர் குழு தெரிவித்தது.\n(மதுரை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nfire accident madurai meenakshi amman தீவிபத்து மதுரை மீனாட்சி அம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/ireland-woman-marries-a-ghost-299204.html", "date_download": "2018-08-20T18:53:44Z", "digest": "sha1:MIEKOUXQQHBCXDYUGKX4L3MUVCTC3QI7", "length": 11984, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறந்தவரை திருமணம் செய்துகொண்ட பெண்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nஇறந்தவரை திருமணம் செய்துகொண்ட பெண்- வீடியோ\nஉலகில் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கும். வாழ்க்கை மோசமாக இருக்கிறது, மிகவும் நன்றாக இருக்கிறது என்று பலரும் கூற கேட்டு இருப்போம். அதேபோல் அயர்லாந்து பெண்மணியும் அங்கு இருக்கும் பத்திரிக்கைகளுக்கு தன்னுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்து இருக்கிறார். ஆனால் இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால் அவர் திருமணம் செய்து கொண்டது ஒரு பேயை. பேய்க்கு மனிதருக்கும் நடந்த இந்த திருமணத்தால் இரண்டு வருடமாக அயர்லாந்தில் அந்த பெண் வைரலாக இருக்கிறார்.\nஅயர்லாந்தில் இருக்கும் 'அமாண்டா டீக்' என்ற பெண் சிறுவயதில் இருந்து கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2016ல் அவர் கரிபியன் கடல் கொள்ளையர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் 300 வருடத்திற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார்.\nகரிபியனை சேர்ந்த 'ஜாக் லார்ஜ்' என்பவரை அந்த பெண் திருமணம் செய்துள்ளார். அவர் பேயாக வந்து தன்னிடம் காதல் சொன்னதாக சொல்லியுள்ளார். முதலில் நண்பர்களாக இருந்தோம் பின் காதலித்தோம் என்று கூறியுள்ளார். இவர் தன் திருமணத்திற்கு நண்பர்களை எல்லாம் அழைத்து இருக்கிறார்.\nஇவர் திருமணத்தை அயர்லாந்து அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் சென்ற வருடம் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இன்னும் அவர் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. பேயுடன் நடக்கும் திருமணத்திற்கு எந்த நாடு ஒப்புக் கொள்கிறதோ அங்கு குடியுரிமை வாங்க அவர் முடிவெடுத்துள்ளார்.\nஇறந்தவரை திருமணம் செய்துகொண்ட பெண்- வீடியோ\nஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம் Kofi Annan died\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்\nவாஜ்பாய் மறைவு: அமெரிக்கா அரசு சார்பில் இரங்கல்-வீடியோ\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nசீனா உருவாக்கும் உலகின் பெரிய மின்கோபுரம்-வீடியோ\nஇந்தியா மட்டுமில்லாமல் மற்ற சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன-வீடியோ\nகட்டியணைக்க முயற்சித்த ஐஜி...தமிழக பெண் எஸ்பி பகீர் புகார்\nகேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை இறக்கி விட்ட அதிகாரிகளால் பரபரப்பு\nபாகிஸ்தான் சிறையில் இருந்த 30 இந்தியர்கள் விடுதலை-வீடியோ\nஇந்திய நிதியில் இலங்கையில் வீடுகள்...தமிழர்களுக்கு பிரதமர் மோடி ஒப்படைத்தார்-வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியாது என நாசா அறிக்கை-வீடியோ\nநம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலி...வீடியோ\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2017/08/14/green-chillies/", "date_download": "2018-08-20T19:09:38Z", "digest": "sha1:5MUA3B3SP2SE7QBI36PMVOKBAWZ5GQSA", "length": 11654, "nlines": 188, "source_domain": "yourkattankudy.com", "title": "பச்சை மிளகாயின் மகத்துவம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபச்சை மிளகாயில் பல வகைகள் இருக்கிறது. இதில் கொலஸ்ட்ரல் மற்றும் கலோரிகள் இருக்காது. அதை விட பச்சை மிளகாயில் இருப்பது விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் தான்.இதனால் உடலுக்கு எத்தகைய நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nபச்சை மிளகாயில் விட்டமின் சி அதிகம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். அதே போல, நோய்த் தொற்று ஏற்ப்பட்டாலும் அதனை பரவாமல் காத்திடும்.\nபச்சை மிளகாய் மென்று சாப்பிட்டால் எச்சில் அதிகமாக சுரக்கும். இதனால் நாம் உட்கொள்ளும் உணவுப்பொருள் எளிதாக ஜீரணமாகும்.\nபச்சை மிளகாயில் மினரல்ஸ் இருக்கிறது. குறிப்பாக பொட்டாசியம், இரும்பு மற்றும் மக்னீசியம் இருக்கிறது. இவை சீரான இதயத்துடிப்பிற்கும், ரத்த அழுத்தத்திற்கும் மிகவும் அவசியமானது.\nபச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள உதவிடும். அனீமியாவை எதிர்த்துப் போராடும். நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவிடும்.\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரையளவு அதிகரிக்காமல் பாதுகாத்திடும்.\nபச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி தண்ணீரில் கரையக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களை உருவாக்கிடும். இதனால் கொலாஜன் வேதிப்பொருளை சுரக்க உதவிடும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கொலாஜன் என்ற வேதிப்பொருள் மிகவும் முக்கியம். அவை பச்சை மிளகாயில் இருக்கிறது.\nபச்சை மிளகாயில் இயற்கையாகவே இருக்கும் சிலிக்கான் சத்து தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். முடியின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஃபோலிக்கல்ஸ் மற்றும் டெஸ்ட்டோஸ்டிரோன் வளர்ச்சியும் அதிகரிப்பதால் நரை முடி வருவது தவிர்க்கப்படும்.\nபச்சை மிளகாயில் சுத்தமாக கலோரி இல்லை என்பதாலும், நம் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதாலும் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக பச்சை மிளகாய் கொழுப்பை கறைத்திடும்.\nபச்சை மிளகாயில் விட்டமின் ஏ இருக்கிறது.இவை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. ஐந்து வயதிற்கு மேற்ப்பட்ட எந்த வயதினரும் பச்சை மிளகாயை தாராளமாக எடுக்கலாம்.\nபச்சை மிளகாயில் அதிகப்படியான கால்சியம் மற்றும் விட்டமின் கே இருக்கிறது. இவை எடுத்துக் கொள்வதால் காயம் ஏற்ப்பட்டால் அதிக ரத்தம் வெளியேறுவது தவிர்க்கப்படும். அதாவது ரத்தம் சீக்கிரம் உறைந்திடும். அதே நேரத்தில் எலும்புகளுக்கு வலு அளித்திடும்.\nபச்சை மிளகாயில் காப்சய்சின் இருக்கிறது இவை நம் மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவிடும் என்டோர்பின்ஸ் சுரக்க உதவிடும் இதனால் ஸ்ட்ரஸ் குறைந்திடும்.\nநன்மைகள் ஏரளமாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி எடுத்தால் அது ஆபத்தில் தான் முடியும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n« ஸாவியா பள்ளிவாயல் ஜமாஅத்தார்களிடம் கையளிப்பு\nஇந்திய அணி வெளிநாட்டில் பெற்ற முதலாவது வரலாற்று வெற்றி »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்' தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nடில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்...\nஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - ஹரீஸ் எம். பி.\nஅறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/02/01/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1/", "date_download": "2018-08-20T18:16:23Z", "digest": "sha1:VWOSWNHTVDJPYU4UVCGQ6SPQYNUPMDFN", "length": 8775, "nlines": 160, "source_domain": "mbarchagar.com", "title": "ஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஸ்ரீ துர்க்கை அம்மன் போற்றி\n1 ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி\nஓம் ஆனந்தம் அளிப்பாய் 10\nஓம் இரு சுடர் ஒளியே\nஓம் உலகத்தை காத்திடுவாய் 20\nஓம் என் துணை இருப்பாய்\nஓம் ஐயுறவு தீர்ப்பாய் 30\nஓம் காமகலா ரூபிணியே 40\nஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் 50\nஓம் சாந்த மனம் தருவாய்\nஓம் சீலம் தருவாய் 60\nஓம் தாயே நீயே 70\nஓம் தூயமனம் தருவாய் 80\nஓம் பிழை தீர்ப்பாய் 90\nஓம் போர் மடத்தை அளிப்பாய்\nஓம் மாதவன் தங்கையே 100\nஓம் போற்றி போற்றி போற்றியே108\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← அஷ்ட பைரவர்கள் தம்பதி சகிதமாக காட்சி…\nகோயில்ன் ராஜகோபுரத்தில் பல்வகை உருவச் சிற்பங்களும்… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45205-41-killed-as-dust-storm-lightning-wreak-havoc-across-india.html", "date_download": "2018-08-20T18:45:15Z", "digest": "sha1:JM53UDK5K3HMY3ZPBDDGTQYA7DZXDMAP", "length": 9377, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடமாநிலங்களில் தொடரும் புழுதிப்புயல், மழை: 41 பேர் பலி | 41 Killed As Dust Storm, Lightning Wreak Havoc Across India", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nவடமாநிலங்களில் தொடரும் புழுதிப்புயல், மழை: 41 பேர் பலி\nவடமாநிலங்களில் தொடரும் புழுதிப்புயல், மழை காரணமாக 41 பேர் பலியாகியுள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்.\nஉத்தரபிரதேசத்தில் காசியாபாத், சஹாரான்புர் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் 18 பேர் உயிரிழந்தனர். சாலை, ரயில், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.\nஇதேபோல், மேற்குவங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் உயிரிழந்தனர். டெல்லியில் 109 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் பெய்த கனமழைக்கு இருவர் உயிரிழந்தனர். இதேபோல், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.\nகனமழையால் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.\n10 நாட்களுக்கு முன் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப் புயல் வீசியதால் 134 பேர் உயிரிழந்தனர். 400 பேர் பாதிக்கப்பட்டனர்.\nகர்நாடக தேர்தல் முடிந்ததும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n7வயது சிறுமியை கொன்ற பெண் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nகேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\nமூன்று மாநிலங்களில் கனமழைக்கு எச்சரிக்கை\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nமத்திய அரசு செய்த மீட்பு நடவடிக்கைகள் என்ன - பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட்\nகேரளாவுக்கு உதகை வியாபாரிகள் சார்பில் 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்\nகண்ணீருடன் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்\n'பெரிய அளவில் மீட்புப்பணி‌ நடப்பது இதுவே முதல்முறை' : பேரிடர் மீட்புப் படை\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக தேர்தல் முடிந்ததும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n7வயது சிறுமியை கொன்ற பெண் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2018/03/sandhar-techno-ipo-review.html", "date_download": "2018-08-20T18:12:25Z", "digest": "sha1:2BACYLIS7WH377MW6CAQOUEFWT63CUEB", "length": 7541, "nlines": 77, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Sandhar Techno IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nவேகமாக வெளிவரும் IPOக்கள் காரணமாக அது பற்றியே அதிகமாக எழுத வேண்டி உள்ளது.\nஇதனால் சந்தை நிலவரத்தை கொஞ்சம் அதிகமாக அலசலாம் என்பது பற்றிய கட்டுரையும் தள்ளி போகிறது.\nஅதனைப் பற்றி நாளை எழுதி விட முயற்சிக்கிறோம்.\nஇன்று Sandhar Technologies என்ற நிறுவனத்தின் ஐபிஒ வெளியீடை பார்ப்போம்.\nநாளை மார்ச் 21 என்பது விண்ணப்பங்களுக்கான கடைசி நாள். ஒரு பங்கின் விலை 332 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநிறுவனத்தில் இருக்கும் கடன் சுமையைக் குறைப்பதற்காக ஐபிஒ வெளியீட்டின் மூலம் 300 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.\nSandhar Technologies நிறுவனமானது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது.\nவிரிவாக பார்த்தால், Locking System என்று சொல்கிறார்கள். கார்களுக்கு தேவையான தானியங்கி கதவுகள் முதல் பைக் லாக் செய்வது வரை உதிரி பாகங்களை தயாரித்து கொடுத்து வருகிறது.\nமுப்பது வருடங்களுக்கு மேலும் தேவையான தொழில் துறை அனுபவத்தை கொண்டுள்ளது.\nகடந்த மூன்று வருடங்களில் லாபம் வருடத்திற்கு 20% என்ற அளவில் கூடியுள்ளது.\nதற்போது ஐபிஒ மூலம் கிடைக்கும் பணத்தை கடனுக்கு பயன்படுத்திக் கொண்டால் வட்டி குறைந்து லாபம் இன்னும் கூடவும் வாய்ப்பு உள்ளது.\nஒரு பங்கின் விலையான 332 ரூபாயில் P/E மதிப்பு 29க்கு அருகில் வருகிறது.\nஇதே துறையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் மற்ற நிறுவனங்களை பார்த்தால் சராசரியாக 35 என்ற அளவில் உள்ளன.\nஅதனால் மலிவான விலை தான். சந்தையில் வெளிவரும் போது 10% வரை லாபம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/92149", "date_download": "2018-08-20T18:07:40Z", "digest": "sha1:XKJUIY5DV2V7JRBF7FCIJK4DKSGTQZVL", "length": 6883, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "குப்பைகளை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து ரீ.-56 ரக துப்பாக்கி மீட்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் குப்பைகளை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து ரீ.-56 ரக துப்பாக்கி மீட்பு\nகுப்பைகளை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து ரீ.-56 ரக துப்பாக்கி மீட்பு\nமட்டக்களப்பு வாகரை, கதிரவெளி பிரதேசத்தில் வீட்டுத் தோட்டப் பகுதியில் குப்பைகளைப் புதைக்கத் தோண்டிய குழிக்குள்ளிருந்து நேற்று (26) சனிக்கிழமை ரீ.-56 ரக துப்பாக்கி வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, வீட்டுத் தோட்ட விவசாயி ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் குப்பைகளைப் புதைப்பதற்காக குழி ஒன்றை வெட்டிய போது பொலித்தீனால் சுற்றப்பட்ட மர்மப் பொதியொன்று வெளிக்கிழம்பியுள்ளது.\nஅது சந்தேகத்திற்குற்குரிய பொருளாக இருக்கலாம் என ஊகித்த அவர் விடயத்தைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.\nஸ்தலத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் பொலித்தீனால் சுற்றப்பட்ட பொதியை குழியிலிருந்து வெளியே எடுத்து பரிசோதித்த போது இந்தத் துப்பாக்கி நன்கு சுற்றிக்கட்டப்பட்டு துருப்பிடிக்காமல் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nபொலிஸார் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleதிருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவானோருக்கான கலந்துரையாடல் நாளை சம்பூரில்\nNext articleரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதியாக இஷாக் ரஹுமான்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/iit-roorkee-invites-application-20-associate-professor-posts-000970.html", "date_download": "2018-08-20T18:03:13Z", "digest": "sha1:4DFVU2WN3RUYNJCYX4IEXQRVTGJY7S3T", "length": 8102, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூர்கி ஐஐடி-யில் பேராசிரியர் வேலை!! | IIT Roorkee Invites Application for 20 Associate Professor Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூர்கி ஐஐடி-யில் பேராசிரியர் வேலை\nரூர்கி ஐஐடி-யில் பேராசிரியர் வேலை\nசென்னை: ரூர்கியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில்(ஐஐடி) அசோசியேட் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிபப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விண்ணப்பங்களுக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமொத்தம் 20 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் பிளானிங், பயோடெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.iitr.ac.in/administration/pages/Openings+Faculty.html என்ற லிங்க்கைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பலாம்.\nகல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பள விவரம் போன்றவற்றை ரூர்க்கி ஐஐடி இணையதளமான -ல் காணலாம்.\nரூர்க்கி ஐஐடி-யானது 1847-ல் நிறுவப்பட்டதாகும். உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி நகரில் அமைந்துள்ளது. 1949-ல் இதற்கு பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்தது. 2001-ல் இது ஐஐடி-யாக மாற்றப்பட்டது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://flypno.blogspot.com/2012/12/blog-post_25.html", "date_download": "2018-08-20T18:05:20Z", "digest": "sha1:C4GCLRVWUCM5S52L3FJYUQWBCKITEHBC", "length": 18931, "nlines": 110, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: இந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு ஒரே வழி இஸ்லாம்தான்!", "raw_content": "\nசெவ்வாய், 25 டிசம்பர், 2012\nஇந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு ஒரே வழி இஸ்லாம்தான்\nஎன்னடா இவன் திரும்ப திரும்ப இதை பத்தியே எழுதுகிறான் என்று எண்ணாதீர்கள், என்ன செய்வது வேற வழியில்லை, சில விஷயங்களை அதற்க்கு ஏற்ற இடங்களில் சொன்னால்தான் அது குறைந்தது ஒரு 60% மக்களிடம் போயி சேரும். “இடம், பொருள் பார்த்து பேசவேண்டும்” என்பதில் எனக்கு முழு உடன்பாடு.\nஇன்று பல கோணங்களில் பலவிதமாக சமீபத்திய டெலி சம்பவத்தை பற்றி கருத்துக்கூறினாலும், நாம் ஒரு சில விஷயங்களை மறுக்கமுடியாது. அதாவது விக்கிபீடியா என்கின்ற வலைதளத்தில் இந்தியாவில் நடந்த கற்பழிப்புகள் மற்றும் பெண்கலுக்கு எதிரான செயல்களை பட்டியலிட்டுள்ளார்கள் அந்த பட்டியலை பார்பதற்க்கு முன்னாள், நமது புண்ணாக்கு தேசத்தில் கற்பழிப்பு சம்பந்தமாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பதை பார்ப்போம்.\nஇந்தியாவை பொறுத்தவரை கற்பழிப்பு என்பது ஒரு பொதுவான குற்ற செயல் ஆகிவிட்டதாம், மேலும் இந்தியாவில் ஒவ்வொரு 34 நிமிடத்திர்க்கு ஒரு பெண் கற்பழிக்கவோ அல்லது கற்பழித்து கொல்லபடுகிறாள் என்கிறது ஒரு ஆய்வு. இன்னும் ஒரு படி மேல இந்தியாவில் 25% பெண்கள் 15 வயதிர்க்கு முன்பே இரண்டு விடுகிறார்களாம், அதில் அதிகமானோர் கற்பழித்து கொலை செய்ய படுகிறார்களாம். 1971 முதல் இந்தியாவில் கற்பழிப்பு 700% வளர்ந்துள்ளதாம் (ஒ இதைதான் இந்தியா 2020-இல் வல்லரசு ஆகிவிடும் என்கிறார்களா), 2001 ஆம் ஆண்டில் மட்டும் 26,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். மேலும் அதே ஆண்டு பதிவான 256,329 குற்றங்களில் 228,650 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ( இந்திய நாட்டை கூட இந்தியர்கள் பெண்ணாக தான் பார்க்கிறார்கள்). மேலும் இந்த கற்பழிப்புகள் அதிகமா தாழ்த்தப்பட்ட வர்காத்தினர் மீதே அதிகமாக செய்யபடுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வல்லரசு கனவை கூறிவிட்டு, அந்த வலைத்தளம் இந்தியாவில் இது வரை நடைபெற்ற கற்பழிப்புகளை பற்றி ஒரு பட்டியலிடுகிறது:-\n1. 1973 –ஆம் ஆண்டு அருணா ஷன்பௌக் என்கின்ற நர்ஸ் வேலை செய்த ஒரு பெண் அதே மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் ஒருவரால் ஆண்டு கற்பழிப்பட்டார், ஆனால் இந்த கேஸ் 2011 ஆம் ஆண்டுதான் தீர்பளிக்கப்பட்டது. அதுவும் வெறும் 7 ஆண்டு சிறைத்தண்டனை. ஆனால் அந்த பெண்ணிர்க்கோ இதன் மூலம் பார்வை பறிபோனது, சுவாச மண்டலம் பாதிப்படைந்ததான் மிச்சம்.\n2. 1974 ஆம் ஆண்டு 16 வயது பெண் ஒருத்தி இரண்டு போலீஸ்காரர்களால் போலீஸ் நிலையத்திலேயே கற்பழிக்கப்பட்டால். ஆனால் நீதிமன்றம் அவளை அந்த வழக்கில் விபச்சாரீ என்றும், உடம்பில் எந்த வித காயங்களும் இல்லை என்றும் கூறி அவர்களை விடுதலை செய்தது.\n3. 1991 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள குனன் புஷ்போரா என்கின்ற கிராமத்தில் இந்தியா ராணுவம் கிட்டதட்ட 100 பெண்களை கற்பழித்தார்கள், இதில் கல்யாணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் மற்றும் கற்பிணியை கூட விட்டு வைக்கவில்லை. இவை அனைத்தும் கும்பலாக செய்தார்கள்.\n4. 1992 ஆம் ஆண்டு அஜ்மீரில் பண்வரி தேவி என்கின்ற பெண்மணி, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டால், அவர்கள் அவளுடைய கணவனை அடித்து போட்டுவிடு இந்த தீய செயலை செய்தார்கள்.\n5. அதே 1992 ஆம் ஆண்டு, நம்ம தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் வச்சாத்தி என்கின்ற கிராமத்தில் வனத்துறைனரும், காவல்துறையினரும் சேர்ந்து 18 பெண்களின் கற்புக்களை சூறையாடினர். ஆனால் இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டு தான் தீற்பழிக்கப்பட்டது, இதில் மொத்தம் 215 பேர்களுக்கு சிறை தண்டனை வழக்கப்பட்டது.\n6. 1996 ஆம் ஆண்டு, சூர்யாநெல்லி இடுக்கியை சேர்ந்த 16 வயது பெண் தொடர்ந்து 40 நாட்கள் 42 பேர்களால் கற்பழிக்கப்பட்டால். இதர்க்கும் சரியான தீர்ப்பு வழங்கபடவில்லை.\n7. 1999 ஆம் ஆண்டு, அஞ்சனா மிஷ்ரா அங்கீன்ற ஒரிஸ்ஸாவை சார்ந்த பெண் தன்னுடைய தோழி ஒருத்தியுடன் போகும் பொழுது 3 பேர்களால் தடுக்கப்பட்டு தன்னுடைய தோழியின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டால்.\n8. 2004 ஆம் ஆண்டு தங்கஜம் மனோரமா, என்கின்ற பெண்மணி 17 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டால். அந்த 17 பேர்களும் ராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.\n9. 2005 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சரி எஸ் நாயர் என்ற பெண் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி 6 நபர்களால் கற்பழிப்பட்டால். இதில் இவளை இது போல செய்ததற்க்கு முக்கிய காரணம் லதா நாயர் என்கின்ற பெண்மணிதான்.\n10. அதே 2005 ஆம் இம்ரான என்கின்ற பெண்மணி தன்னுடைய மாமனாறினாலேயே கற்பழிக்கபடுகிறாள். இதர்க்கும் சரியான ஒரு தீர்ப்பு வழங்கபடவில்லை.\nஇங்கே மேல குறிப்பிட்டது மட்டுமில்லாமல் இந்தியாவில் இன்னும் ஏறலாமான கர்ப்ழிப்புகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது, அதுமட்டுமில்லாத மேலே உள்ள எந்த ஒரு கற்பழிப்பீர்க்கு மரணதண்டனை விதிக்கவில்லை, பெண்களை புனிதமாக பார்க்கும் இந்த இந்திய திருநாட்டில் இந்த தெருநாய்களை இப்படி விட்டால், 2020 இல்லை, உலகம் அழியும் வரை இந்தியா வல்லரசில்லை, ஒரு புள்ளை புடுங்க கூட லாய்க்கில்லாமல் போய்விடும்.\nஇதர்க்கெல்லாம் ஒரே முடிவு, இஸ்லாமிய முற்றவியல் தண்டனைகள்தான், ஒருத்தன் திருடுறானா கைய்ய வெட்டு, ஒருத்தன் கொலை செய்கிறானா கைய்ய வெட்டு, ஒருத்தன் கொலை செய்கிறானா தூக்கில் போடு (கொலையானவனுடைய உறவினர்கள் மன்னித்தால் அவனை மன்னித்துவிடு), நான் ஒன்றும் உங்களை முழுவதுமாக இஸ்லாத்திர்க்கு வார சொல்லவில்லை, குறைந்தது உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துங்கள், மிருகத்தை விட கேவலமான இவர்களை மக்கள் மன்றத்தில் வைத்து தூக்கிலிடுங்கள், இல்லை மக்களிடத்தில் விட்டுவிட்டு இவர்கள்தான் என்று கூறிவிட்டு சென்று விடுங்கள், மாற்றத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nமேலும் இறைவன் தான் திருமறையில் கூறிகின்றான்:- -\nநபியே நீர் மூமீனான ஆண்களுக்கு கூறுவீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும், அது அவர்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.\nநீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம், அது மாநாகேடனாதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.\nஆண்களும் பெண்களும் எப்படி காட்டுபாட்டுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல், இதற்க்கு ஒரு மாத சாயம் பூசாமல், ஒரு நாட்டின் வழிமுறையாக மாற்றினால், குறைந்தது 3020 இல் ஆவது இந்தியா வல்லரௌ ஆக கொஞ்சம் வாய்ப்புள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\n2012 இல் நாம் மறந்த சில மறக்கமுடியா நிகழ்வுகள்\nமூதேவி மோடி இதுவரை சாதித்தது என்ன\nஇந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு இஸ்லாதான் ஒரே ...\nஇந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு ஒரே வழி இஸ்லாம்தா...\nஇஸ்லாத்திர்க்கு எதிரான கமலஹாசனின் மற்றுமொரு முகம்\nஇந்த மிருகங்களை என்ன செய்யலாம்\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு – இந்து தீவிரவாத...\nசில சமயங்களில் சில மனிதர்கள்\nவரலாற்றில் கொஞ்சம் கூட உண்மைய காணோம்.\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/food/03/169108?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:13:25Z", "digest": "sha1:6GWXK5DD52WQTLPEJZR5I7C3RRHLFEXP", "length": 9094, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடியுங்கள்: எடை அதிகரிக்காது\nஉடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் என்று கூறுவார்கள்.\nஅது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.\nஎந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.\nகொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.\nகொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.\nவால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.\nதேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.\nகொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=64452", "date_download": "2018-08-20T18:58:49Z", "digest": "sha1:FCJIPY3GFVZ4SYN7FG52C5O2OEYAFHKJ", "length": 1556, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`பட்ஜெட் 2018’ - கமல் சொல்லும் சாதக பாதகங்கள்", "raw_content": "\n`பட்ஜெட் 2018’ - கமல் சொல்லும் சாதக பாதகங்கள்\nமத்திய பட்ஜெட் குறித்து பேசிய கமல் ‘மத்திய அரசின் கடைக்கண் பார்வை விவசாயிகளின் பக்கம், கிராமத்தின் பக்கம் சற்றே திரும்பியிருக்கிறது. மனதுக்கு சற்றே இதமாக இருக்கிறது. நடுத்தர வர்கத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாகக் கருதுகிறேன். அறிஞர்களுடன் கலந்தாலோசித்து என் கருத்தைத் தெளிவாகச் சொல்லுவேன்’ என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://e-kalanchiyam.blogspot.com/2018/06/the-elephant-and-the-twig.html", "date_download": "2018-08-20T18:09:07Z", "digest": "sha1:M7URZ7AUVVIKMXEF6373NMGKMD646HXX", "length": 18569, "nlines": 80, "source_domain": "e-kalanchiyam.blogspot.com", "title": "யானையும் குச்சியும்", "raw_content": "\nபற்சுவைக் களஞ்சியம் தமிழில் பல சுவையான தகவல்களை கொண்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் அறிவார்ந்த விடயங்களைத் தமிழ் மொழியில் களஞ்சியப்படுத்துவதாகும்.\nயானையை எதில் கட்டிப் போடலாம் யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டலாம். இது உண்மையா என நீங்கள் கேட்கலாம். ஆம் என யானையும் குச்சியும் (The Elephant And The Twig) என்ற நூல் கூறுகின்றது. ஜெஃப் தாம்ஸன் எழுதிய இந்த நூல் சுய விழிப்புணர்வுக்கும் சுய முன்னேற்றத்திற்கும் உகந்ததால், இது “நேர் சிந்தனைக் கலை” என்று அழைக்கப்படுகின்றது.\nபெரிய மரங்களையே சாய்த்துவிடும் யானைக்கு குச்சி ஒன்றுமில்லைதான். ஆனால், குச்சியை ஒன்றுமில்லை என நினைக்காதவாறு அதற்கு மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டது.\nயானை குட்டியாய் இருக்கம்போது, ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் கட்டிப்போட்டுவார்கள். குட்டி யானை அதிலிருந்து விடுபடுவதற்கு பல முயற்சிகள் செய்து தோற்றுவிடும். சில நாட்கள் போராடிப் பார்த்த குட்டி, ஒருகட்டத்தில் தன்னால் இதிலிருந்து விடுபடமுடியாது என்ற முடிவுக்கு வந்து, பிணைப்பிலிருந்து விடுதலை பெறும் முயற்சியை நிறுத்திவிடும். வளர்ந்தும், தன்னைப் பிணைத்திருப்பது சாதாரண விடயம் என்று நினைப்பதில்லை.\nநாமும் இந்த யானையைப் போல்தான். நமது திறமைகள் எவை, நம்மால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை விளங்கிக்கொள்ளாமல், சாதாரண மனத்தடைக்குப் பயந்து ஒதுங்கி நிற்கிறோம். அந்த பிணைப்பிலிருந்து வெளியே வரத் தயங்குகிறோம். நாம் ஒவ்வொருவரும் யானைப் பலம் கொண்டவர்கள். நம்மை சிறு குச்சிகள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை முறித்து எறிந்துவிட்டு வெளியேறும் போதுதான் நமது முழு பலமும் முழுத்திறமையும் உலகிற்குத் தெரியும்.\nயானையும் குச்சியும் என்ற நூலில் ஜெஃப் தாம்ஸன் 14 முக்கியமான விதிமுறைகளைச் சொல்கிறார். அவை சுருக்கமாக பின்வருமாறு:\nஎதையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம் இப்போதே\nநம்முடைய உலகில் நாமே கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள்.\nநாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கப் போகிறீர்கள்\nஉங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை. அந்த சக்தியை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்வது என்று யோசியுங்கள்.\nவாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்யமாட்டார்கள். நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.\nசுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள். உங்கள் செயல்வேகம் அதிகரிக்கும்.\nஇலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்.\nஉங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள். அநாவசியமான நேரக் கொல்லிகளை விரட்டியடியுங்கள்.\nநதியைப்போல் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமானால், நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.\nதேவைதான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.\nநேர்மை முக்கியம். இலக்கை அடையக் குறுக்கு வழிகள் வேண்டாம்.\nநல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப்போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது.\nஅடுத்தவர் உங்கள் மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதன் யார் அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, மாறாக வேகப்படுத்தும்\nசுய முன்னேற்றம் நூல் மதிப்பீடு\nLabels: சுய முன்னேற்றம் நூல் மதிப்பீடு\nகருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nகுரான் இஸ்லாமியர்களுக்கு இறை வேதமாக உள்ளது. அவர்கள் குரான் இறைவனால் ஜிப்ரயீல் என்ற வானவர் மூலம் முகம்மதுவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்பட்டது என நம்புகின்றனர். குரானில் எழுதப்பட்டுள்ளவை நேரடியான கடவுளின் வார்த்தைகள் என இஸ்லாமியர் நம்புகின்றனர். குரான் மிகவும் தூய்மையானது எனவும், அழிவற்றதெனவும், மாற்றமில்லாதது எனவும் அவர்கள் நம்புகின்றனர். இஸ்லாமியர்களின் வாழ்க்கை இதனை ஒட்டியே இருக்க வேண்டும். குரான் சொல்லப்பட்டவாறு வாழாதவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது. அவன் பெயரளவில்தான் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொள்ள முடியும். குரான் இல்லாவிட்டால், இஸ்லாம் இல்லை. குரான் இறை வேதமாக இல்லாவிட்டால், இஸ்லாம் என்ற மதமே பொய்.\nமுகம்மதுவினால் தன்னைப் பின்வற்றியவர்களுக்கு குரானை வாய்மொழியாக சொல்லிக் கொடுத்தார். குரானின் தோற்றம் கி.பி. 609–632 காலப்பகுதி ஆகும். குரானில் உள்ள கருத்துக்கள் ஏற்கெனவே கிறிஸ்தவர்களின் விவிலியத்திலும் (பைபிள்), யூதர்களின் டனாக் (Tanakh) அல்லது தோரா (Torah) எனும் யூத சமயத்தினரின் புனித நூலிலும் காணப்படுகின்றது. இதனை குரானின் 3:3 வசனம் உறுதி செய்கிறது. குரான் 3:3 உண்மையைக் கொண்டு…\nஇன்று இணையத்தை கைபேசியிலோ, கணனியிலோ பயன்படுத்தும் பலர் பேஸ்புக்கையும் (முகநூல்) பயன்படுத்தத் தவறுவதில்லை. ஆனால், பலர் மெது மெதுவாக இதற்கு அடிமையாகிவிடும் நிலை உள்ளது. நீங்கள் பேஸ்புக் பாவனையாளரா அதன் மீதான உங்களது ஆர்வத்தை அளவிடும் பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் பேஸ்புக் அடிமைத்தன அளவுகோலொன்றினை உருவாக்கியுள்ளார்கள்.\nநோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் ‘பேர்கன் முகநூல் அடிமைத்தன அளவுகோல்’ (Bergen Facebook Addiction Scale) ஆகும். சுமார் 400 பேரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சினையை அடுத்தே இதனை அவர்கள் தயாரித்துள்ளனர்.\nபேர்கன் முகநூல் அடிமைத்தன அளவுகோல்\n* நான் அடிக்கடி மிகவும் அதிகமான நேர்த்தை பேஸ்புக்கில் செலிவிடுகிறேன். (நான் நினைப்பதைவிட அதிக நேரம் அதில் செலிவிடுகிறேன்.\n* நான் இரவில் அதிக நேரம் போஸ்புக்கில் இருப்பதால், காலையில் அடிக்கடி சோர்வுக்குள்ளாகிறேன்.\n* நான் பேஸ்புக்கில் மிகவும் அதிக நேரம் செலவு செய்வது பற்றி என் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\n* நான் வேலை த…\nநமது பிறப்பு ஆரம்பக் கையிருப்பு. நமது இறப்பு முடிவுக் கையிருப்பு. சார்புப் பார்வை நம் சட்டக்கட்டுப்பாடு. திறனுள்ள சிந்தனைகள் எம் சொத்துக்கள். இதயம் நமது நடப்புச் சொத்து. ஆன்மா அசையாச் சொத்து. மூளை எமது நிலையாக வைப்பு. சிந்தனை நடப்புக் கணக்கு. சாதனைகள் நமது முதலீடு. குணவியல்பும் நெறிமுறையும் நம்முடைய கையிருப்புப் பொருள். நண்பர்கள் நமது பொது சேமிப்பு. பண்பும் நடத்தையும் நமது நல்லெண்ணம். பொறுமை எமது சம்பாதித்த வட்டி. அன்பு நமது பங்கீடு. பிள்ளைகள் மிகையூதிய பலன். கல்வி எம் வணிக குறியீடு. அறிவு நம்முடைய மூலதனம். அனுபவம் எம்முடைய உயர் மதிப்புத் தொகை. இலக்கு என்பது கையிருப்பு குறிப்பை சரியாக கணக்கிடுதல். குறிக்கோள் என்பது சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட கணக்கு விருதைப் பெறுவது.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/best-diy-overnight-face-masks-for-getting-fair-skin-016791.html", "date_download": "2018-08-20T18:31:10Z", "digest": "sha1:K52IGCETRRR63OP5KV2TNL67C73U7DYX", "length": 21195, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் முகம் சிவப்பழகு பெறனுமா!! அப்போ இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்க !! | Best DIY Overnight Face Masks For Getting Fair Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்கள் முகம் சிவப்பழகு பெறனுமா அப்போ இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்க \nஉங்கள் முகம் சிவப்பழகு பெறனுமா அப்போ இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துங்க \nஇந்த காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை சிவப்பாக நிறமேற்றுவதற்கும் அழகாக மெருகேற்றுவதற்கும் நிறைய பியூட்டி பொருட்களை வாங்கி நிறைய பணத்தை செலவழிக்கின்றனர். ஆனால் அதற்கு கிடைக்கும் ரிசல்ட் என்னவோ நமக்கு திருப்தி அளிப்பதாக இருப்பதில்லை.\n2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க...\nஆனால் உங்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை வழங்கும் இந்த பேஸ் மாஸ்க் கண்டிப்பாக நல்ல பலனை அளிக்கும். இந்த பேஸ் மாஸ்க்கை இரவில் பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமம் நிறமேறுவதுடன் அழகாகவும் பொலிவாகவும் மாறும். பியூட்டி பொருட்கள் இல்லாத விலையே இல்லாதே அழகை இயற்கையாகவே பரிசளிக்கும்.\nபொதுவாக நம்ம முகம் கருப்பாக மாறுவதற்கு இரண்டு காரணங்களான சரும நிறமாற்றம், சன் டேன் ஆகியவை காரணம் ஆகும். இந்த பேஸ் மாஸ்க் இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒழித்துக்கட்டி நமக்கு சிவப்பழகை கொடுக்கிறது.\nஇந்த பேஸ் மாஸ்க்கில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ளீச்சிங் ஏஜென்ட் சருமம் சிவப்பழகை பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரவு நேர முழுவதும் இதை முகத்தில் போட்டு இருப்பதால் சரும துளைகளில் ஊடுருவி ஒரு சிறந்த நன்மைகளை கொடுக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1.வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ் மாஸ்க்\nஉங்கள் முகம் சிவப்பழகு பெறுவதை இந்த பேஸ் மாஸ்க் இரவிலேயே தனது வேலையை செய்து விடுகிறது. இதை வாரம் ஒரு முறை இரவு நேரத்தில் பயன்படுத்தி வந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.\n1 பழுத்த வாழைப் பழம்\n1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்\nபழுத்த வாழைப்பழத்தை ரோஸ் வாட்டருடன் சேர்ந்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதை நன்றாக முகத்தில் அப்ளே செய்ய வேண்டும் . இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்\n2.யோகார்ட் மற்றும் வெள்ளரிக்காய் பேஸ் மாஸ்க்\nஇந்த இரண்டு பொருட்களும் சருமம் சிவப்பழகை பெறும் பொருட்களை கொண்டுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை என்று இந்த மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக சிவப்பழகை பெறுவீர்கள்.\n1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்\nநறுக்கிய வெள்ளரிக்காயை நன்றாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\n3.லெமன் ஜூஸ் மற்றும் தேன்\nஇதில் சரும நிறத்தை மெறுகேற்றும் பொருளுடன் சரும ப்ளீச்சிங் பொருட்களும் அடங்கியுள்ளன. எனவே இதை இரவு நேரத்தில் பயன்படுத்தும் போது நல்ல நிற மாற்றத்தையும் ஆரோக்கியமான சருமத்தையும் கொடுக்கிறது.\n1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்\n1 டேபிள் ஸ்பூன் தேன்\nலெமன் ஜூஸ் தயாரித்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து கொள்ளவும் . இந்த மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவ வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும்\n4. மஞ்சள் தூள் மற்றும் ஆலிவ் ஆயில்\nஇந்த இரண்டு பாரம்பரிய மருத்துவ பொருட்களும் சருமத்திற்கு நிறத்தை தருவதோடு சரும கரும்புள்ளிகள் மற்றும் ஆரோக்கியமான சருமம் கிடைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் அழகு பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் ஒரு முறை இரவு நேரத்தில் பயன்படுத்தி வந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்\n1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்\n1டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்\nமேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும். முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளே செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும் . காலையில் எழுந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும்\n5. பால் பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய்\nஇரவு முழுவதும் அப்படியே அப்ளே செய்து இந்த மாஸ்க்கை விட்டு விடுவதால் நல்ல ப்ளீச்சிங் செய்து சருமத்தின் நிறத்தை மெறுகேற்றுகிறது. வாரமுறையில் இதை பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம்.\n1/2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்\n1 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய்\nமேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்\n6.ஸ்ட்ரா பெர்ரி மற்றும் க்ரீன் டீ\nஸ்ட்ராபெர்ரியில் உள்ள பொருட்கள் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனுடன் க்ரீன் டீ சேர்க்கும் போது முகத்தில் உள்ள அழுக்குகளையும் நீக்கி சருமம் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.\n1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ\nஸ்ட்ராபெர்ரியை நன்றாக அரைத்து கொள்ளவும். அதனுடன் க்ரீன் டீ சேர்க்கவும். கொஞ்சம் டீ குளிரும் வரை காத்திருக்கவும். இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும். முகம் மற்றும் கழுத்தில் நன்றாக மாஸ்க்கை அப்ளே செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும்\n7.சீரகம் மற்றும் தர்பூசணி மாஸ்க்\n7.சீரகம் மற்றும் தர்பூசணி மாஸ்க்\nஇந்த இரண்டு பொருட்களிலும் சருமத்தை சிவப்பாக்கும் பொருட்கள் இருக்கின்றன. வார முறையில் இந்த பேஸ் மாஸ்க்களை அப்ளை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்\n1 டீ ஸ்பூன் தர்பூசணி ஜூஸ்\nஒரு பெளலில் சீரகத்தை ஊற வைத்து கொள்ளவும். இதனுடன் தர்பூசணி ஜூஸ் சேர்த்து கொள்ளவும். நன்றாக கலக்கி முகத்தில் அப்ளே செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ் மாஸ்க்களை வார முறையில் இரவு நேரத்தில் பயன்படுத்தி வந்தால் உங்கள் சரும நிறம் மெறுகேறி இருப்பதை காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஆண்களின் சருமத்தை இளமையாக வைக்கும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்...\nஇந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்...\nஆண்களின் முகத்தை இளமையாக வைக்கும் 8 ஆயுர்வேத முறைகள்..\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்...\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநமக்கு ராஜா ராணி கதை தெரியும்...ஆனால், ராஜா ராணி அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா..\nதேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா.. அதற்கு இந்த ஒரு இலையே போதும்.\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nகிளியோபாட்ராவின் 8 ரகசிய அழகு குறிப்புகள் வேண்டுமா.. இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஒரு பழமே போதும் உங்களை உலக அழகி போல மாற்றுவதற்கு...\nபெண்களை ஈசியாக இம்ப்ரெஸ் செய்வது, கவர்வது எப்படி\nRead more about: beauty tips skin care அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு\nAug 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://atsnoida.blogspot.com/2012/10/25-10-2012-kuralum-porulum-from-avvai.html", "date_download": "2018-08-20T18:50:37Z", "digest": "sha1:XTS5TKIDB67BYZVFU7PDSTIU3ZVEOCI4", "length": 21240, "nlines": 377, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 25-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஐப்பசி –௯(9)வியாழன், திருவள்ளுவராண்டு 2043\nபுது தில்லி NCR பகுதியில் வசிக்கும் மக்கள் கவனத்திற்கு…\nநாம் ஒன்று சேர்ந்து பணிகள் செய்ய அனைத்தும் நமக்கு நலமாக முடியும் எனும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு இவ்வருட தீபாவளிக்கு தேவையான இனிப்பு/கார வகைகளை நாம் ஒன்று பட்டு அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொழுது குறைந்த விலையில், நல்ல பொருள்களை வாங்க முடியும் அல்லது இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும் எனும் முடிவுடன் ஒரு புது முயற்சியை அவ்வை தமிழ்ச் சங்கம் துவங்கியுள்ளது. உங்களுக்கு தேவையான பொருள்களின் பட்டியலை எங்களுக்கு அனுப்பவும்.\n1. உணவு வகைகளின் விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் தனியாக வாங்குவதை விட குறைவாகவே இருக்கும்.\n2. உங்கள் தேவையை 31-10-2012 க்குள் அனுப்பவும்.\n3. இது புது முயற்சி என்பதால், உங்கள் ஒத்துழைப்பு தேவை, எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த நடவடிக்கை.\nஇது நாம் நம் மேல் கொண்டிருக்கும் ஒற்றுமையையும் , நம்பிக்கையையும் பரிசோதிக்கும் ஒரு முயற்சியும் கூட.\nஅனுப்ப வேண்டிய தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், பொருள்களை சேர்ப்பிக்க வேண்டிய விலாசம்.\nRibbon pakoda (ரிப்பன் பகோடா)\nநண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1295 தினங்களாக \"தினமும் ஒரு குறளும் -பொருளும்\" தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 35 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து குறள்களையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nகல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.\nகணவன் (கல்லான் + ஆனாலும்) படிக்காதவன் ஆனாலும், அன்பு பாராட்டாது இருந்தாலும் (புல்லுதல் = தழுவுதல்) மனைவி வெறுப்பு கொள்ளாது கணவனுக்கு உரிய மரியாதைக் கொடுக்க வேண்டும்.\nகுறளும் பொருளும் – 1298\nகாமத்துப்பால் – கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்\nஎள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்\nபிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.\nசப்பானிய சிலந்தி நண்டின் (Japanese spider crab, Macrocheira kaempferi) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.\nமேலிட தலைவர்கள் என்னை சமரசம் செய்யவில்லை பா.ஜனதாவில் ... - தினத் தந்தி\nஊழல் புகார் குறித்து மத்திய அரசு விசாரணை நிதின் கட்காரிக்கு ... - தினத் தந்\nபிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம் - தினத் தந்தி\nஅமெரிக்காவில் இந்திய பெண் படுகொலை; பேத்தி கடத்தல் துப்பு ... - தினத் தந்தி\n2 லட்சம் பேர் கண்டுகளித்தனர் அலங்கார வண்டிகளுடன் மைசூர் தசரா ... - தினத் தந்தி\nமும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபின் கருணை மனுவை ... - தினத் தந்தி\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்க கோரி 36 ... - தினத் தந்தி\nநாடு கடத்தப்படுவதிலிருந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட ... - 4தமிழ்மீடியா\nரோம்னி மகன் மன்னிப்பு - மாலை சுடர்\nஎங்கள் ஆயுத தொழிற்சாலையை இஸ்ரேல் தாக்கியது: சூடான் ... - மாலை மலர்\nகிங்பிஷர் விமான ஊழியர்கள் சம்பள பிரச்னைக்கு தீர்வு - தினகரன்\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி இன்று தொடக்கம் - தினமணி\nஇங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டம்: இந்திய \"ஏ' அணியில் யுவராஜ் சிங் - தினமணி\nதுலீப் கோப்பை கிரிக்கெட் கிழக்கு மண்டல அணி 232 ரன்னில் ஆல் ... - தினத் தந்தி\nகலைமாமணி டாக்டர். ஆர்பிஎன் அவர்களின் சமயச் சொற்பொழிவு \"சீதா கல்யாணம்\"\nகர்நாடக இசை மேதை டி.வி கோபாலகிருஷ்ணன் குழுவினர் வழங்கும் \"இன்னிசை கச்சேரி \"\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?p=2694", "date_download": "2018-08-20T18:32:50Z", "digest": "sha1:OMGCFV3ZO2SODJXY5ZLOVKRKPVDOWSS6", "length": 4022, "nlines": 90, "source_domain": "datainindia.com", "title": "09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] 09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை இனி ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக அல்லது லேப்டாப் மூலமாக செய்து வாரம் ரூ.2000/-க்கு மேலே சம்பாதிக்கலாம்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://deivathamizh.blogspot.com/2015/05/blog-post_30.html", "date_download": "2018-08-20T18:24:32Z", "digest": "sha1:AUOBUWOSY3BN4FRMRMWNYZGMUW3YPJ2B", "length": 13276, "nlines": 114, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: சிவஞான இன்னமுதம்", "raw_content": "\nபிறப்பும் இறப்பும் இல்லாப் பெரியோன் என்று இலக்கியங்களும் புராணங்களும் சிவபெருமானைத் துதிக்கின்றன. அதனால் தான் சுவாமியை முழுமுதல் கடவுள் என்கிறோம். \" முழுதுமாய் வந்து \" தன் மனத்தில் குடிகொண்டவன் பெருமான் என்கிறார் மாணிக்கவாசகர். ஆனால் அடியவர்களுக்காக எந்தக் கோலமும் எவ்வுருவமும் ஏற்கின்றான் அவன். அந்தணனாய் வந்து ஆண்டுகொண்ட அப்பெருமானே, வேடனாகவும், தாயுமானவனாகவும், பன்றிகளுக்குப் பால் கொடுக்கும் தாய்ப் பன்றியாகவும் , மாலயனுக்கும் அறிய முடியாத தீப் பிழம்பாகவும் தோன்றி அருள் செய்ததாகப் புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இப்படி எளியவனாகவும் அரியவனாகவும் விளங்கும் பரம்பொருளை , \" யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய் \" எனத் திருவாசகம் போற்றுகிறது. இதையே அப்பரும், \" காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் \" என்பார்.\nசிந்தையில் உதித்த ஒரு எண்ணத்தை இங்கு பகிர்வோம். பால் கொடுத்தபின் குழந்தைக்கு அப்பால் புரை ஏறாதவாறு தாய்மார்கள் அக்குழந்தையின் முதுகில் தட்டுவதைப் பார்த்திருக்கிறோம். நாள் பூராகவும் இதுபோல் எத்தனை தட்டுக்களை அக்குழந்தை முதுகில் வாங்குமோ தெரியாது. மதுரையில் வந்தி என்ற அடியாள் தந்த பிட்டைக் கூலியாக ஏற்று , மண் சுமந்தபிறகு அம்மண்ணைப் பெருக்கெடுத்து ஓடும் வைகைக் கரையில் கொட்டாமல் விளையாடிக் கொண்டிருந்த பெருமானைப் பாண்டியன் சினத்துடன் தன் கைப் பிரம்பால் ஒரு தட்டுத் தட்டினான்.( அடித்தான் என்று எழுத மனம் வரவில்லை). எல்லா உலகமும் அவன் வடிவே ஆதலால் அப்படித் தட்டியது, எல்லா உலகத்து உயிர்கள் மேலும் விழுந்தது. இப்படி ஒரு தட்டு தட்டியதற்கே அனைத்து உயிர்களும் அடி வாங்கியபோது, ஒரு தாயாரிடம் தோன்றி பலமுறை முதுகில் தட்டு வாங்கினால் எல்லா உயிர்களும் பலமுறை அடிபடுமே என்ற பரம கருணையினால் தானோ என்னவோ அவன் யாரிடத்தும் பிறக்கவில்லை போலத் தோன்றுகிறது. இது முழுவதும் கற்பனையாகத் தோன்றலாம். உண்மையைச் சொல்லப்போனால் ஆராய்ச்சி எதுவும் செய்யாமலிருக்கும் போது தினசரி தியானத்தின் பொழுது பெருமான் அறிவுறுத்தும் பலவற்றில் இதுவும் ஒன்று.\nஞானம் என்பது படிப்பதாலோ, கேட்பதாலோ அனுபவத்தாலோ வருவதைக் காட்டிலும் பெரும்பகுதி இறைவன் அருளால் கைவரப் பெறுவது என்பதை நாம் உணர வேண்டும். ஞானிகளில் ஒரு சிலரே இறைவனை ஓரளவாவது அறிவர் \" ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்\" என்பார் அப்பர் பெருமான். ஞானிகளுக்கே இந்நிலை என்றால் நம்மவர்கள் சிந்திப்பதோ ஆராய்வதோ எப்படி சாத்தியமாகும் ஞானத்திற்கெல்லாம் இருப்பிடமாகவும் ஞான மயமாகவும் திகழும் ஈசனோ எவரிடத்தும் அந்த ஞானத்தைக் கல்லாமலேயே பிறருக்கு உபதேசிப்பவன். \" கலைஞானம் கல்லாமே கற்பித்தானை \" என்பது தேவாரம்.\nஉலகம் உய்ய வேண்டி ஞானசம்பந்தக் குழந்தைக்குத் தனது இணைபிரியா ஜகன்மாதாவான அம்பிகையின் மூலம் சிவஞானத்தைத் தந்து அருளினான். அதை, \" சிவஞானத்து இன்னமுது\" என்றார் சேக்கிழார். அப்போது அக்குழந்தைக்கு எல்லாக் கலை ஞானமும் ஓதாமலேயே வந்து அடைந்தது. அதனைப் பெரிய புராணம் விவரிப்பதை இங்கு காண்போம்:\nமூன்று வயதுக் குழந்தை செய்த தவம் தான் என்ன அக்குழந்தையின் தந்தையான சிவபாத இருதையர் செய்த தவம் அல்லவா சம்பந்தரைத் தோற்றுவித்தது அக்குழந்தையின் தந்தையான சிவபாத இருதையர் செய்த தவம் அல்லவா சம்பந்தரைத் தோற்றுவித்தது ஆனால் சேக்கிழார் இங்கு அக்குழந்தையைத் \" தவ முதல்வர் \" என்று வாயாரப் புகழ்கிறார். எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கமுடியாத பேறு அல்லவா இந்தப் பாலகனுக்குக் கிடைத்திருக்கிறது ஆனால் சேக்கிழார் இங்கு அக்குழந்தையைத் \" தவ முதல்வர் \" என்று வாயாரப் புகழ்கிறார். எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கமுடியாத பேறு அல்லவா இந்தப் பாலகனுக்குக் கிடைத்திருக்கிறது அக்குழந்தை செய்த தவம் தான் என்ன என்று நமது அறிவுக்கு எட்டவில்லை அல்லவா அக்குழந்தை செய்த தவம் தான் என்ன என்று நமது அறிவுக்கு எட்டவில்லை அல்லவா அதனால் தான் நாம் சொல்லிக் கொள்கிறோமே, ஆறு அறிவு என்று: அது வேறு; ஞானம் வேறு. ஞானிகளுக்கே விளங்காத ஒப்பற்ற தவம் அது. அதிலும் முதல்வராகத் திகழப் போகும் அச்சிறுவனை இதைக் காட்டிலும் வேறு எப்படி அழைப்பது\nபெற்ற ஞானமோ சிவஞானம். ஆகவே பெயரும் சிவஞானசம்பந்தர் என்று ஆயிற்று. அந்த ஞானம் வந்தபின்னர் சிவனது திருவடிகளை மட்டுமே தியானிக்கும் ஞானம் மேலோங்கியதால் அதனை \" சிவனடியே சிந்திக்கும் திருப் பெருகு சிவஞானம்\" என்றார் தெய்வச் சேக்கிழார் . அது கைவந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு எது பிறவி அறுக்கும் மருந்து ஆகிவிட்ட ஞானம் ஆனபடியால், அதனை, \" பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் \" என்றார். அந்த ஞானத்திற்கு ஒப்போ அதைவிட உயர்வோ கிடையாது என்பதை \" உவமை இல்லாக் கலைஞானம்\" என்றார். நம்மில் சிலர் கடவுளை உணர்ந்து விட முடியும் என்று பேசுகிறார்கள் அல்லவா பிறவி அறுக்கும் மருந்து ஆகிவிட்ட ஞானம் ஆனபடியால், அதனை, \" பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் \" என்றார். அந்த ஞானத்திற்கு ஒப்போ அதைவிட உயர்வோ கிடையாது என்பதை \" உவமை இல்லாக் கலைஞானம்\" என்றார். நம்மில் சிலர் கடவுளை உணர்ந்து விட முடியும் என்று பேசுகிறார்கள் அல்லவா ஆனால் உணர்வுக்கும் அரிய பொருளே என்று மணிவாசகர் கூறியதுபோல் உணர்வுக்குள் அடக்க முடியாத இறைவனை, \" உணர்வரிய மெய்ஞ்ஞானம் \" மட்டுமே அடையாளம் காட்டும். இவை அனைத்தையும் சீர்காழிக் குளக் கரையில் சிவஞானப் பால் உண்ட சம்பந்தப் பெருமான் பெற்றார் என்ற பெரிய புராண வரிகள் இன்புறத்தக்கன.\nசிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்\nபவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்\nஉவமை இலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்\nதவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்\nஎன்பன தெய்வச் சேக்கிழாரின் அற்புத வருணனை.\nதிருமுறைகளில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி \nகாஞ்சிப் பெரியவர்களும் தேவாரமும் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanatham.net/index.php/component/k2/itemlist/tag/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-20T18:47:56Z", "digest": "sha1:R5PCUJRJYBASM2QRBWW3KJGDPUPNHTU2", "length": 6613, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: ஏறு தழுவல் - eelanatham.net", "raw_content": "\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/91854", "date_download": "2018-08-20T18:07:08Z", "digest": "sha1:HIBJDS2I656RCULG2KKJBRKFUCFBLWSR", "length": 8115, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ரொட்டவெவ கஞ்சா விவகாரம்; பொலிஸ் சாஜன் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் .. - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ரொட்டவெவ கஞ்சா விவகாரம்; பொலிஸ் சாஜன் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் ..\nரொட்டவெவ கஞ்சா விவகாரம்; பொலிஸ் சாஜன் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் ..\nதிருகோணமலை ரொட்டவெவ பகுதியில் வீடொன்றில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வீட்டை சோதனையிடச்சென்ற பொலிஸ் சார்ஜன் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று (19) பிற்பகல் 1.30 மணியளவில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த தாக்குதலினால் ரொட்டவெவ பொலிஸ் நிலைய சார்ஜன் ஜெய்னுதீன் (59438) மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான் ஜெய்னுலாப்தீன் ஹூஸைன் ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசம்பவம் குறித்து தெரியவருவதாவது ரொட்டவெவ பகுதியிலுள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவ்வீட்டை சோதனையிட்ட போது 345 கிரேம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அவ்வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளதாகவும் இதேவேளை பொலிஸார் சோதனையிட்ட போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரொருவரையும் கைது செய்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இன்னும் பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleபலஸ்தீன் மக்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை தருகிறது: NFGG\nNext articleமட்டக்களப்பு தமிழ் முஸ்லிம் விவசாயிகள் மகிழ்ச்சி\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-20T18:06:41Z", "digest": "sha1:6QXZQ5BL63GD5P5H7YU4WQZWHDYYTGWF", "length": 15360, "nlines": 179, "source_domain": "news7paper.com", "title": "அஸ்வின், ஷமி அசத்தல்: இங்கிலாந்தை 287 ரன்களில் சுருட்டியது இந்தியா - News7Paper", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஅஸ்வின், ஷமி அசத்தல்: இங்கிலாந்தை 287 ரன்களில் சுருட்டியது இந்தியா\nஜெயலலிதா மீது அவதூறு செய்யும் வகையில் ஸ்கிரிப்ட் அரசியல் நடத்துகிறார் கமல்: பிக் பாஸ்…\nபிஹார் சிறுமிகள் பலாத்காரம்; தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை: அடையாளங்களை வெளியிட ஊடகங்களுக்குத்…\nகிகி’ நடனம் ஆடிய ரெஜினாவுக்கு சிக்கல்\n“தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு கார்த்திக் நரேன்” – அரவிந்த் சாமி புகழாரம்\n‘பியார் பிரேமா காதல்’ கோபப்பட்ட சிவா\n‘சூர்யா 37’ அப்டேட்: அறிமுகப் பாடலைப் பாடிய செந்தில் கணேஷ்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\nவயிற்று சதையைக் கரைக்கும் கத்தரிக்காய்… ட்ரை பண்ணி பாருங்களேன்… | Great Health Benefits…\nஉலகமே கொண்டாடும் இந்த இந்தியரை பற்றி நமக்கு ஏன் தெரியவில்லை\nஒரே வாரத்தில் தலை பேனை எப்படி ஒழிக்கலாம்… எந்த செலவும் இல்லாம… | Home…\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது அதை எப்படி போக்குவது\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் அஸ்வின், ஷமி அசத்தல்: இங்கிலாந்தை 287 ரன்களில் சுருட்டியது இந்தியா\nஅஸ்வின், ஷமி அசத்தல்: இங்கிலாந்தை 287 ரன்களில் சுருட்டியது இந்தியா\nபர்மிங்ஹாமில் நடந்து முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், முகமது ஷமியின் திறமையான பந்துவீச்சால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஅபாரமாகப் பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.\nஇந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் களம் காண்கிறது.\nகவுண்டி போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா அமரவைக்கப்பட்டு, கே.எல்.ராகுல் அழைக்கப்பட்டுள்ளார்.\nமுதல் நாள் ஆட்டமான நேற்று இந்தியாவின் உமேஷ் யாதவின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால், அஸ்வினும், முகமது ஷமியும் அபாரமாகப் பந்துவீசினார்கள். முதல்நாள் ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டு இழப்புக்கு 285 ரன்கள் குவித்திருந்தது. களத்தில் சாம் கரன் 24 ரன்களுடனும், ஆன்டர்ஸன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.\n2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சாம் கரன், ஆன்டர்சன் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார்.\nவேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் ஓவரை அஸ்வினை வீசச் செய்து, கேப்டன் விராட் கோலி துணிச்சலான முடிவை எடுத்தார். ஆனால், அதற்கேற்றார்போல் போல் முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே ஆன்டர்ஸன் அடித்தார்.\n2-வது ஓவரை முகமது ஷமி வீசினார். சாம் கரன் தான் சந்தித்த 4-வது பந்தில், தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்துக் கூடுதலாக ரன் ஏதும் சேர்க்காமல், நேற்று சேர்த்த 24 ரன்களோடு ஆட்டமிழந்தார்.\nஇங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 89.4 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ், இசாந்த் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.\nPrevious articleஜெயலலிதா மீது அவதூறு செய்யும் வகையில் ஸ்கிரிப்ட் அரசியல் நடத்துகிறார் கமல்: பிக் பாஸ் மீது புகார் அளித்த வழக்கறிஞர் பேட்டி\nNext articleஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜெயலலிதா மீது அவதூறு செய்யும் வகையில் ஸ்கிரிப்ட் அரசியல் நடத்துகிறார் கமல்: பிக் பாஸ் மீது புகார் அளித்த வழக்கறிஞர் பேட்டி\nபிஹார் சிறுமிகள் பலாத்காரம்; தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை: அடையாளங்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை\nபார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்…: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட்...\nஇன்றைய இரவு சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யலாம்.. என்னலாம் செய்யவே கூடாது.. என்னலாம் செய்யவே கூடாது\n2001க்குப் பின் முதல் முறையாக நஷ்டமடைந்த ஐசிஐசிஐ வங்கி | ICICI Bank Reports...\nமரத்தடியில் பாடம்: வகுப்பறை இல்லாதததால் சத்தீஸ்கரில் 10 ஆண்டுகளாக தொடரும் அவலம்\nஇன்னைக்கு ஆடி வெள்ளி… உங்க ராசிக்கு என்னென்ன பலனைத் தரப்போகுது\nதமிழ்நாட்டுக்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும்: குருமூர்த்தி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளில் சிலவற்றை மாற்ற வேண்டும்: பிரதமரிடம் கர்நாடக முதல்வர் குமாரசாமி...\nசென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.14 கோடி திட்டச் செலவில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%87.156379/", "date_download": "2018-08-20T18:11:55Z", "digest": "sha1:DZUVILALTSJJA7KEECO6V7DCUYDGPR3I", "length": 11860, "nlines": 364, "source_domain": "indusladies.com", "title": "நேசமுள்ள வான்சுடரே!!!! | Indusladies", "raw_content": "\nமஞ்சரியின் முதல் பயணம். பாதி சந்தோசம் மற்றும் பாதி பயத்துடனும் இருந்தாள்.\nகவலையுடன் இருந்த அம்மாவை பார்த்தாள்.\nஅம்மா நான் நல்லபடியா போய்ட்டு வந்துடுவேன் மா.. நீ பயந்துகாதே என்று சமாதான படுத்திவிட்டு அப்பாவை பார்த்தாள்.\nஅப்பாவின் முகத்தில் பெருமிதம்.. தன் மகள் சாதித்து விட்டாள் என்று..\nஅம்மா, \"நீ சென்னை வந்தப்போவே என்னாலே முடியலை, இப்போ இவ்ளோ தூரம் போகறேனு வேற சொல்லுரேயெடீ\" என்றாள்.\nஅம்மா எப்பொழுதும் இப்படித்தான் வீட்டிலிருந்து ரயிலில் சென்னை வரும் போது கூட ரொம்ப பயப்படுவாள். இரவெல்லாம் தூங்காமல் இருப்பாள்.காலையில் நான் வந்து சேர்ந்து விட்டேன் என்று சொல்லும் வரை அவளுக்கு நிம்மதி இருக்காது.இப்போது எப்படி தாங்கி கொள்ள போகிறாளோ. மஞ்சரி மனதுக்குள் கவலை பட ஆரம்பித்தாள்.\nஅதற்குள் அப்பா அம்மாவை சமாதான படுத்திவிட்டார்.\n\"யாருக்கு கிடக்கும் இப்படி ஒரு வாய்ப்பு.. நல்ல படியா போய்ட்டு வா'னு சொல்லாம இப்போ எதுக்கு பொலாம்பிக்கிட்டு இருக்கே\"\"அவளுக்கு ஒண்ணும் ஆகாது. எவ்ளோ பேரு போறாங்க பாரு அவங்க எல்லாம் போய்ட்டு வரலயா\"\nஅம்மா, \"போகிறதுல பிரச்சனை இல்லேங்க அங்க போய் எப்படி தனியா இருப்பா.. எங்க தங்குவா.. எனக்கு நினைச்சாலே பயமா இருக்கு\", என்றாள்\nஅப்பா அதற்கு அவளோட ஆபீசில் எல்லாம் ஏற்பாடு செஞ்சுடுவங்க.. அதுக்கெல்லாம் பயப்படாதே.. என்றார்\nஅம்மா என்னிடம் திரும்பினாள், \"போய்ட்டு ரெண்டு மாசத்துல வந்துருவே இல்லெடி அதுக்கு மேல ஆகாதே\n\"அம்மா வந்திடுவேன் மா.. லேட் எல்லாம் ஆகாது\"\nஅம்மாவிற்கு ஆயிரம் கேள்விகள் மகள் எப்படி தனியாக இருந்து சமாளிப்பால் என்று..\nதந்தையும் மகளும் பாதி கேலியும் பாதி உண்மையுமாய் அவளை சமாதான படுத்தினார்கள்.எப்படியோ ஒரு வழியாக மஞ்சரி புறப்படும் நேரமும் வந்தது.இவ்வளவு நேரம் விளையாட்டாக இருந்தவள் கண்ணீருடன் விடைபெற்று உள்ளே சென்றாள்.\nமுதல் பயணம்.. அதுவும் தனியாக..\nஆஃபீஸ்'இல் எல்லாரிடமும் கேட்டு கொஞ்சம் தெரிந்து வைத்து இருந்தாள்.. அதனால் தன்னுடய பயத்தை வெளியில் காட்டி கொள்ளாமல் ஓரளவு சமாளித்தாள்.\nஎப்பொழுதுமே மஞ்சரி அப்படித்தான். தெரியாத விஷயத்திலும் நுழைந்து கொஞ்சம் அனுபவத்தை ஏற்படுத்தி கொள்வாள்\nஇப்பொழுது அவள் முதல் பயணம் எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்....\nநேசமுள்ள வான்சுடரே - 9\nநேசமுள்ள வான்சுடரே - 8\nநேசமுள்ள வான்சுடரே - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=7d1b44c4403fbb5d93dd80ad3b5ede3a", "date_download": "2018-08-20T18:30:44Z", "digest": "sha1:TJPNX36SPZQCAJDLTI77IYPKVGQ4VOJH", "length": 30954, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanniarasu.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-08-20T18:32:28Z", "digest": "sha1:JK44SSDT5WXTRZPIQAFT6E75QB4EK5WD", "length": 16624, "nlines": 73, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: லிங்கா படப் பிரச்சனை - விடுதலைச் சிறுத்தைகள் ஞாயத்தின் பக்கமே நிற்போம்!", "raw_content": "\nலிங்கா படப் பிரச்சனை - விடுதலைச் சிறுத்தைகள் ஞாயத்தின் பக்கமே நிற்போம்\nபால் வியாபாரம் பார்த்தாலும் சரி; துணி வியாபாரம் பார்த்தாலும் சரி... ஒரே பாடல் காட்சியில் பெரும் பணக்காரன் ஆகிவிடுவார் கதாநாயகன். பாடல் முடிந்தவுடனேயே காரிலிருந்து இறங்குவார்.\nஅப்படித்தான் சினிமா வியாபாரமும். கோடிகளைக் குவிக்க ஆசைப்பட்டுக் கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களாக, விநியோகஸ்தர்களாக, கதாநாயகர்களாக ஆயிரக் கணக்கில் திரிகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள் சிலர். கோவணமாவது மிஞ்சியதே என்று ஊரைத் தேடி ஓட்டம் பிடிக்கிறார்கள் பலர்.\nசினிமா சூது நிறைந்த உலகம். பெயரில்தான் தர்மனாக இருப்பார்கள். பெண்டாட்டி, பிள்ளைகளை விற்று சினிமா எடுக்கும் தர்மன்களாக மாறியிருக்கிறார்கள். இலாப-நட்டம் எந்தத் தொழிலிலும் உண்டு. சினிமாத் தொழிலில் மட்டும் புகழும் சேர்த்து உண்டு. அப்படித்தான் இலாப நோக்கத்தோடு அண்மையில் 'லிங்கா' திரைப்படத்தை வாங்கிய வியாபாரிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.\nநடிகர் ரஜினிகாந்த் என்ற ஒற்றைப் பிம்பத்தை வைத்து, வியாபாரம் செய்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாட்களில் சென்னை போன்ற பெரு நகரங்களின் சாலைகள் ஸ்தம்பித்துப் போகும். ரசிகர்களின் பணம் சாலைகளில் பட்டாசாக வெடித்துச் சிதறும். அந்த அளவுக்கு ஒரு 'ஓபனிங்' உண்டு. அதற்காகத்தான் பல கோடி ரூபாயைக் குதிரைப் பந்தயத்தில் கொட்டுவதுபோல் கொட்டுகிறார்கள்.\nஇப்படிக் கொட்டுகிற சில படங்கள் 'ஓஹோ'வென ஓடுகின்றன. ஏராளமான படங்கள் வந்த வேகத்திலேயே திரும்பி விடுகின்றன.\nஇப்படி கமலின் எத்தனையோ படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. 'ஆளவந்தான்', 'ஹேராம்' போன்றவை வியாபார அளவில் தோல்விப் படங்கள்தான். தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்திய படங்கள்தான். அதைப் போல முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்கள் பல தோல்வியைச் சந்தித்துள்ளன. இந்தப் படங்களை வாங்கிய விநியோகஸ்தர் எவரும் சம்மந்தப்பட்ட நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்டதில்லை. அடுத்தடுத்த படங்களை வாங்கி நட்டத்தைச் சரி செய்துகொண்டார்கள். இதுதான் திரையுலக மரபு. இத்தகைய சுமூகமான உறவை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் பரஸ்பரம் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.\nஆனால் இப்போது, 'லிங்கா' படத்தின் விநியோகஸ்தர்கள் திரு. ரஜினி அவர்களிடம் நஷ்ட ஈடு கேட்பது நியாயம்தானா நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மீதும் அவரது படங்கள் மீதும் நமக்கு பல விமர்சனங்கள் உண்டு. அது வேறு. ஆனால், புகழ்பெற்ற ஒரு கலைஞரை முன்வைத்து, 'பிளாக்மெயில்' செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nதிரு. ரஜினிகாந்த் அவர்கள் ஒரு தொழில்முறைக் கலைஞர். சம்பளம் வாங்கினார்; நடித்துக் கொடுத்தார். அவ்வளவுதான் அவரது 'ரோல்'. இயக்குநரும் அப்படித்தான். இதில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும்தான் இலாப வேட்டையாடத் துடிப்பவர்கள். இந்தக் குதிரைப் பந்தயத்தில் அடித்தால் ஜாக்பாட். இல்லையென்றால் தெருவிற்கு வரவேண்டியதுதான். இப்படி எத்தனையோ தயாரிப்பாளர்கள் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். வாரத்திற்கு பத்து திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதில் ஓரிரு படங்கள் மட்டுமே தப்பித்துக்கொள்கின்றன. மற்ற படங்கள் எல்லாம் ஒரு காட்சிகூட ஓடுவதில்லை. முன்பெல்லாம் தொழில் முறை வியாபாரிகளாக இருந்து சினிமாவை தொழிலாகப் பார்த்து நட்டம் ஏற்பட்டாலும் பொறுமையோடு காத்திருந்து வியாபாரம் செய்தார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல. கார்ப்பரேட் நிறுவனங்கள் சினிமாவைக் கைப்பற்றிவிட்டன. அது மட்டுமல்லாமல் 'ரியல் எஸ்டேட்', சட்டத்திற்குப் புறம்பான 'நம்பர் 2' பிஸினஸ் மூலம் சம்பாதித்து சினிமாவுக்குள் வருபவர்கள்தான் இப்போது அதிகம். அப்படி தொழில்முறை விநியோகஸ்தர்களாக இல்லாதவர்களாகச் சேர்ந்து 'லிங்கா' படத்தை கொள்ளை இலாபம் கிடைக்கும் என்ற பேராசையில் வாங்கினார்கள். அவர்களின் முதல் வியாபாரமே நட்டத்தில் முடிந்துவிட்டது.\nஒரு தொழிலில் இலாபம்-நட்டம் வருவது சகஜம்தான். சினிமா என்பது இப்போது தொழிலாக இல்லாமல் சூதாட்டமாக மாறிவிட்டது. இந்தச் சூதாட்டத்தில் அரசியல்வாதிகளை இழுப்பது அநாகரிகம். அதைவிட அநாகரிகம் நடித்த நடிகர்களிடம் நட்டஈடு கேட்பது. லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை நட்டம் அடைந்ததாகச் சொல்லப்படும் விநியோகஸ்தர்கள் யாருமே தொழில்முறை விநியோகஸ்தர்கள் அல்ல. அதுதான் இங்கு பிரச்சனை.\nஉண்மையிலேயே நட்டஈட்டை வேந்தர் மூவிஸிடம்தான் இவர்கள் கேட்க வேண்டும். அதைவிடுத்து திரு. ரஜினி அவர்களிடம் கேட்பது தவறானது. லிங்கா படத்தின் மூலம் இலாபம் அடைந்திருந்தால் அதிக இலாபம் அடைந்துவிட்டோம் என்று அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு எந்த விநியோகஸ்தராவது இலாபத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்களா அல்லது இலாபம் அடைந்தோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்களா அல்லது இலாபம் அடைந்தோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்களா லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் நட்டம் அடைந்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரதம், பிச்சையெடுக்கும் போராட்டம் என்று மிரட்டுவது தொழிலுக்கே எதிரானது. இதில் அரசியல்வாதிகளை இழுப்பது ஆபத்தானது.\nபாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அடுத்தடுத்த படங்களை வாங்கித்தான் நட்டத்தைச் சரி செய்ய வேண்டுமே தவிர, மிரட்டுவது, பிளாக்மெயில் செய்வது சரியல்ல. அதாவது பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாக இருப்பதாக, தவறாக ஒரு சிலர் கட்சியின் பெயரை திரையுலகில் பயன்படுத்தி வருவதாகக் கேள்விப்படுகிறோம். அப்படிப் பயன்படுத்தினால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nகடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பு நடிகர் ரஜினி அவர்களுக்கு எதிராக விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, விநியோகஸ்தர்கள் சார்பாக ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, \"எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்துவதற்காக சீமான் வருகிறார், தலைவர் திருமாவளவன் அவர்களும் வரவேண்டும். அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்குமா\" என்று கேட்டார். அதற்கு நான், \"இது உங்கள் திரையுலகப் பிரச்சனை. படத்தில் நட்டம் ஏற்பட்டதற்காக நடிகரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்பது முறையானதுமல்ல. எனவே நாங்கள் இதில் தலையிட மாட்டோம்\" என்று சொன்னதும் அமைதியாகிவிட்டார்கள்.\nஆகவே, லிங்கா திரைப்படப் பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அது கண்டனத்துக்குரியது. அப்படிப் பயன்படுத்துவது தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.\nவிடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை எந்தத் தளத்திலும் ஞாயத்தின் பக்கமே நிற்போம்\nஇன்னுமாடா இந்த ஒலகம் ஒங்கள நம்புது\nலிங்கா படப் பிரச்சனை - விடுதலைச் சிறுத்தைகள் ஞாயத்...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95.%E0%AE%AA%E0%AF%8A.%E0%AE%A4.%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-08-20T18:34:03Z", "digest": "sha1:R7K62FB6XJUAFHZT4FWXGXT25WMIGR6T", "length": 4057, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nArticles Tagged Under: க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்..\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-mar-31/general-knowledge/117053-lightning-information.html", "date_download": "2018-08-20T18:58:24Z", "digest": "sha1:T4CWPC2SFFLYK3OAWR4NKL2MNUJT47GA", "length": 18817, "nlines": 477, "source_domain": "www.vikatan.com", "title": "ஒளியே... ஒளியே! | Lightning Information - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nசுட்டி விகடன் - 31 Mar, 2016\nமீட் டு த கோர்ட்\nவயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்\nதூங்கா நகரில் உளியின் ஓசை\nநாம் வாழ நீரைக் காப்போம்\nசந்தைக்குச் சென்று பாடம் படித்தோம்\nநான் யார், என் இடம் எது\nசின்னக் கோடு பெரிய கோடு\nஅஞ்சு நிமிஷத்தில் செஃப் ஆகலாம்\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nசந்தோஷம் வருத்தம் எல்லாமே டிரம்ஸ்தான்\nடாப் 10 ஆப்ஸ் 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\n‘ஒளி’ என்ற ஒன்று இல்லாவிட்டால், இந்த உலகமே தோன்றியிருக்காது. நம் கண்களால் பார்ப்பதால், கண்களில் இருந்துதான் ஒளி வருகிறது என ஒரு காலத்தில் நினைத்தார்கள். ஒளி பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பார்ப்போமா\nநாம் வாழ நீரைக் காப்போம்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/thamizh-thai-velvi/", "date_download": "2018-08-20T18:26:37Z", "digest": "sha1:NQJBXLLDXKX65LFY7YDARDZRB7EQTLRX", "length": 6108, "nlines": 71, "source_domain": "dheivamurasu.org", "title": "சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி\nதமிழ்த்தாய் வேள்வி – விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும்.\nஇடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர், சென்னை 53.\nநாள்: 4-2-2018. நேரம்: மாலை 3.00 முதல்\nTags: தமிழ் தாய், தமிழ் தாய் வாழ்த்து, தமிழ்த்தாய், விஜயேந்திரர் -\n«கிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/08/4_9.html", "date_download": "2018-08-20T18:37:10Z", "digest": "sha1:VERWPL6UZJXMZAC4VGOXITWD7EURLEXB", "length": 16003, "nlines": 105, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: டெல்லி சுல்தானேட் வரலாறு 4", "raw_content": "\nஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015\nடெல்லி சுல்தானேட் வரலாறு 4\nகுரித்களின் ஆட்சிக்குப்பிறகு, டெல்லி சுல்தானேட்டின் இரண்டாவது ஆட்சியாளர்களாக கில்ஜி ஆட்சிவம்சத்தினர்கள் தோன்றினார்கள். இவர்களும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்கி இனத்தவர்கள். தற்போதைய ஆப்கானிஸ்தானின் கில்ஜி என்ற கிராமத்திலிருந்து வந்தவர்கள். துண்டுத்துண்டாக ஆண்டுகொண்டிருந்த பகுதிகளை ஒன்றுபடுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். டெல்லியின் குரித் ஆட்சியாளர் குதுப்தீன் அய்பக்கிடம் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி என்பவர் இராணுவ ஜெனெரலாக இருந்தார். இவர்தான் முதலில் பெங்காலை வெற்றி கொள்ள துணை புரிந்தார். இவருக்கு பிறப்பிலேயே கால் முட்டியிலிருந்து அடிப்பாதம் வரை வழக்கத்தைவிட நீண்டிருக்கும். ஆனால் இடுப்புக்கு மேற்புறம் குறைவாக இருக்கும். கோர் பகுதியில் ஆரம்பத்தில் திவான் இ அர்தாக நியமிக்கப்பட்ட இவர் குதுப் அல்தீன் படையில் சேர ஆர்வம் காட்டினார். ஆனால் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டு, கிழக்குப்புறம் சென்று மாலிக் ஹிஸ்பர் அல்தீனுடன் சேர்ந்து வட இந்தியாவில் பதயூன் போரில் கலந்து கொண்டார். சிலகாலம் கழித்து அவ்த் பகுதிக்குச் சென்ற இவரின் திறமை அறிந்த மாலிக் ஹுசம் அல்தீன், பக்தியார் கில்ஜிக்கு பெரிய பண்ணை ஒன்றை மிர்சாபூர் மாகாணத்தில் கொடுத்தார். அங்கிருந்து பக்தியார் கில்ஜி திறமையும், வேகமும் கொண்ட இஸ்லாமிய படை ஒன்றைத்தயார் செய்து அருகாமை பகுதிகளை வென்றார். மிகச்சிறந்த 18 குதிரைவீரர்களைக் கொண்ட இவர் படை மிகவும் புகழ்பெற்றது. 1203 ல் பீகாரை வென்றதின் பிறகு, டெல்லி ஆட்சியாளரின் கவனம் பெற்றார். லட்ச்மன் சென் என்பவரை எதிர்த்து நபத்விப் பகுதியை வென்றார். 1206 ல் தேவகோட்டையை விட்டு திபெத் நோக்கி புறப்பட்ட பக்தியார் கில்ஜி அலி மர்தான் கில்ஜி என்பவரை கிழக்குப்பகுதியின் முக்கியமான பாரிசல் பகுதியைக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டார். அஸ்ஸாமை வென்று உடல்நலம் சரியில்லாமல் தேவகோட்டை திரும்பிய பக்தியார் கில்ஜியை கொடுமைக்காரன் அலி மர்தான் கில்ஜி படுகொலை செய்தார். பக்தியார் கில்ஜியின் படையிலிருந்த முஹம்மது ஷிரான் கில்ஜி என்பவர் பழிவாங்கும் விதமாக அலி மர்தான் கில்ஜியைக் கைது செய்தார். பக்தியார் கில்ஜிக்குப் பிறகு, கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பொறுப்புக்கு வந்தார். சிறையிலிருந்து தப்பித்த அலி மர்தான் கில்ஜியை குதுப்தீன் அய்பக் பெங்காலின் கவர்னராக நியமித்தார். இரண்டாண்டுகள் கவர்னராக இருந்த அவரை கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி கொன்று மீண்டும் தான் பெங்காலின் கவர்னராக வந்தார். தேவகோட்டையிலிருந்த பெங்காலின் தலைநகரத்தை கௌருக்கு மாற்றி பலமான கடற்படையை அமைத்தார். 15 ஆண்டுகள் பெங்காலை நிர்வகித்த கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி கிழக்கு பெங்காலின் வாங்கா, அஸ்ஸாமின் கமரூபா, வடபீகாரின் டிர்ஹுத், வட ஒரிஸ்ஸாவின் உத்கலா ஆகியவற்றை வென்று கப்பம் செலுத்த வைத்தார். கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பீகாரை வென்றபின் இவர் வளர்ச்சியின் மீது கவனம் கொண்ட டெல்லி சுல்தான் இல்டுட்மிஷ் இவரை அடக்கும் வண்ணமாக 1224 ல் இருபடைகளுடன் பெங்கால் மீது படையெடுத்தார். பீகாரின் தெலியாகர் என்ற இடத்தில் மோதிக் கொண்டதில் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜியின் கடற்படையும், தரைப்படையும் தோல்வியடைந்தன. இதனால் டெல்லிக்கு 8,000,000 டாகாவும், 38 யானைகளையும் கொடுக்கச் சொல்லி, தனது பெயரிலேயே நாணயமும் வெளியிட வேண்டுமென்று சுல்தான் இல்டுட்மிஷ் உத்தரவிட்டார். இல்டுட்மிஷ் படைகளை விலக்கிக் கொள்ள மீண்டும் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பெங்காலை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டார். இதனால் மீண்டும் படையெடுத்து வந்த இல்டுட்மிஷ் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜியைக் கொன்று பெங்காலை டெல்லி சுல்தானேட்டுடன் நேரடியாக இணைத்துக் கொண்டார். நாலாந்தா பல்கலைக்கழகத்தைச் சேதப்படுத்தியதாக சொல்லப்படும் கியாஸுத்தீன் இவாஸ் கில்ஜி பல மஸ்ஜித்களையும், மதரஸாக்களையும் இந்தியப் பகுதிகளில் கட்டினார்.\nஅடுத்து கில்ஜி குடும்பத்தில் மாலிக் ஃபிருஸ் என்பவருக்குப் பிறந்த ஜலாலுத்தீன் ஃபிருஸ் கில்ஜி என்பவரை டெல்லி சுல்தான் கைய்குபாத் பாரான் பகுதியில் தலைவராகவும், இராணுவ தளபதியாகவும் நியமித்திருந்தார். சுல்தான் கைய்குபாத் வலிப்பு நோயால் உறுப்புகள் செயலிழக்க, டெல்லித் தலைவர்கள் கைய்குபாதின் மூன்றுவயது குழந்தை கயுமார்ஸை சுல்தானாகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய ஜலாலுத்தீன் கில்ஜியும், அவர் மகன்களும் டெல்லியில் நுழைந்து குழந்தை கயுமார்ஸைக் கொன்று, எதிர்த்த இராணுவத்தை வென்று டெல்லியின் சுல்தானேட்டைக் கைப்பற்றினார்கள். சுல்தான் கைய்குபாதைக் கொன்று யமுனா நதியில் வீசினார்கள். பின்னர் டெல்லி சுல்தானேட்டின் முதல் கில்ஜி ஆட்சிவம்ச ஆட்சியாளராக ஜலாலுத்தீன் கில்ஜி 1290 ல் ஆனார். முந்தைய குரித் ஆட்சியாளர் பால்பனின் கீழ் இருந்தவர்களின் நிர்வாகத்தை அவர்களிடமே ஒப்படைத்தார். தன் மூத்த மகனுக்கு ‘கான் கானன்’ என்றும், இரண்டாவது மகனுக்கு ‘அர்கலி கான்’ என்றும், மூன்றாவது மகனுக்கு ‘கத்ர் கான்’ என்றும் பட்டங்களை வழங்கினார். தன் இளைய சகோதரருக்கு ‘யக்ருஷ் கான்’ என்று பட்டமளித்து இராணுவ அமைச்சராக்கினார். மருமகன்களான அலாவுத்தீன் கில்ஜி, அல்மாஸ் பெக் ஆகியோருக்கும் அரண்மனையில் பதவிகள் வழங்கினார். 1292 ல் 100,000 வீரர்களுடன் சூறாவளி போல் இந்தியாவுக்குள் வந்த மங்கோலியப் படைகளை சாதுரியமாக வென்றார். 1296 ல் தன் மருமகன் அலாவுத்தீன் கில்ஜியால் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் ஜுனா முஹம்மது என்றழைக்கப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி இரண்டாவது கில்ஜி ஆட்சிவம்ச டெல்லி சுல்தான் ஆனார். மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று பெயர் பெற்ற இவரிடம் மாலிக் காஃபூர் என்ற திறமையான அரவாணி தளபதியாக இருந்தார். கொஞ்சம் மாலிக் காஃபூரைப் பற்றி தெரிந்து கொண்டு மேலே செல்வோம்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 8:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nடெல்லி சுல்தானேட் வரலாறு 1\nடெல்லி சுல்தானேட் வரலாறு 2\nடெல்லி சுல்தானேட் வரலாறு 3\nடெல்லி சுல்தானேட் வரலாறு 4\nடெல்லி சுல்தானேட் வரலாறு 5\nடெல்லி சுல்தானேட் வரலாறு 6\nடெல்லி சுல்தானேட் வரலாறு 7\nடெல்லி சுல்தானேட் வரலாறு 8\nடெல்லி சுல்தானேட் வரலாறு 9\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2017/04/bs3-auto-company-sales-discount.html", "date_download": "2018-08-20T18:13:17Z", "digest": "sha1:D73HNTTHANX4XNIL2U4FAFORCN6N6S53", "length": 10164, "nlines": 80, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: BS-3 தடை, ஆட்டோ நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கலாம்?", "raw_content": "\nBS-3 தடை, ஆட்டோ நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கலாம்\nஇரு தினங்கள் முன் நீதி மன்றம் BS-III விதி முறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு தடை விதித்து விட்டது.\nஇது எப்படி ஆட்டோ நிறுவனங்களை பாதிக்கும் என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nஒவ்வொரு நாடும் வாகனங்கள் எந்த அளவு சுற்று சூழலை பாதிக்கலாம் என்பதில் வரையறைகளை வைத்துள்ளன.\nஅதன் படி தான் ஆட்டோ நிறுவனங்கள் வாகனங்களை தயாரிக்க முடியும்.\nஇந்தியாவில் Bharath Stage (BS) என்ற குறியீடுகளில் பல நிலைகளில் குறிப்பிடுகிறார்கள். அதன் படி தற்போது வரை BS-III என்ற நிலையில் பின்பற்றப்படுகிறது.\nஆனால் இந்த நிலை வரிசை ஐரோப்பியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருக்கும் அளவிற்கு தரமானதாக இல்லை.\nஉதாரனத்திற்கு BS-3 என்ற நிலையில் ஒரு வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிராம் கார்பன் மோனாக்ஸ்ட் வாயுவை வெளியிடுவதாக இருந்தால் BS-4 என்ற அடுத்த தரத்தில் 0.75 கிராம் அளவு தான் வாயு வெளியிட முடியும்.\nதற்போது கோர்ட் அணைத்து வாகனங்களும் குறைந்த பட்சம் BS-4 என்ற தரத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி விட்டது.\nஇதன் காரணமாக தற்போது பரவலாக BS-3 வழிமுறையை பின்பற்றப்படும் வாகனங்களை ஏப்ரல் ஒன்றுக்கு மேல் பதிவு செய்ய முடியாது.\nமொத்தத்தில் ஒன்பது லட்ச வாகனங்கள் இப்படி தேங்கி போனதால் மார்ச் மாத கடைசி தினங்களில் பல வாகனங்களுக்கு பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்பட்டன.\nஇந்த சலுகையால் மக்கள் காய்கறி வாங்கி செல்வதை போல் பைக் வாங்க முடிந்ததை செய்திகளில் பார்க்க முடிந்தது.\nஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற விதி முறைகள் வந்தால் வாங்கியவர்களுக்கு கஷ்டம் தான்.\nஇவ்வாறு ஆட்டோ நிறுவனங்கள் கடுமையாக சலுகை வழங்கியதால் மார்ச் முடிந்த காலாண்டில் வாகன விற்பனை கூடி உள்ளது. ஆனால் சலுகை காரணமாக லாப மார்ஜின் குறைந்த பட்சம் 3% அளவாவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் எதிரொலியை வரவிருக்கும் காலாண்டின் நிதி முடிவுகளில் நாம் பார்க்க முடியும்.\nஹீரோ, டாட்டா, மகிந்திரா, அசோக் லேலேண்ட் போன்ற நிறுவனங்களில் அதிக பாதிப்பு இருக்கும் என்பது போல் தெரிகிறது.\nஇந்த சலுகை இழப்பை இந்த காலாண்டில் குறுகிய அளவில் பாதிக்கும் காரணியாக பார்க்கலாம்.\nஆனால் நீண்ட கால அளவில் BS-4 விதி முறைகளுக்கு ஏற்றவாறு எஞ்சின் மற்றும் உதிரி பாகங்களை தயாரிக்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் செலவு தான். அதே சமயத்தில் வாகன எரிபொருள் தயாரிக்கும் ஆயில் நிறுவனங்களும் இந்த புதிய தரத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஅந்த வகையில் நீதி மன்றத்தின் இந்த முடிவு நிறுவனங்களுக்கு சுமையான பாதிப்பு, ஆனால் சுற்று சூழலுக்கு நல்லது.\nஅதே நேரத்தில் ஏற்கனவே இந்த பட்டியலில் வைத்து இருக்கும் வாகனங்களை வைத்து இருப்போருக்கு Resale மதிப்பு என்பது மிகவும் குறைவாகவே கிடைக்கும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-aug-15/fa-pages/121812-fa-pages.html", "date_download": "2018-08-20T18:58:33Z", "digest": "sha1:CESVE3KZFYARHN7ZYNA7GOBMQDKKXU52", "length": 17591, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "புள்ளிகளை இணைத்து உயிர்களை உருவாக்கு! | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nசுட்டி விகடன் - 15 Aug, 2016\nஅடிமை விதையும் சுதந்திர வேரும்\nடோரா, புஜ்ஜி சொல்லும் கதை\nஆளை மாற்று; எண்ணை உருவாக்கு\nபுள்ளிகளை இணைத்து உயிர்களை உருவாக்கு\nவட்டமாக அமர்ந்து வகுத்திகள் அறிவோம்\nகல்லின் கன அளவு என்ன\nசீட்டைத் திறந்து இணையைக் கண்டுபிடி\nகட்டங்களை நிரப்பி, மதிப்பீடு பெறு\nஆப்ஸில் அசத்தும் அரசுப் பள்ளிகள்\nகுறும்புக்காரன் டைரி - 16\nபுள்ளிகளை இணைத்து உயிர்களை உருவாக்கு\nமாணவர்களின் வரையும் திறனை மேம்படுத்த, இந்தப் பயிற்சியை அளிக்கலாம். புள்ளிகள் மூலம் ஓர் உருவத்தை இணைக்கச் செய்து, அதற்குப் பொருத்தமான வண்ணம் தீட்டச் செய்து மதிப்பீடு அளிக்கலாம்.\nவட்டமாக அமர்ந்து வகுத்திகள் அறிவோம்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://headlinestv.in/news?u=1&page=8&per-page=22", "date_download": "2018-08-20T19:01:58Z", "digest": "sha1:26KFKVRAMBPSFUOW42M5SXOHOLWCHBOI", "length": 2481, "nlines": 88, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\nமாவோயிஸ்டுகளைக் கட்டுப்படுத்த 10 மாநில முதலமைச்சர்களுடன் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை... >>\nமருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது#Headlinestv... >>\nமீண்டும் விவசாயிகள் ... >>\nகேரள மாநிலம் திருச்சூர்... >>\nகோவாவில் பொது இடங்களில்... >>\nமல்லையாவை நாடு கடத்த... >>\nபான் அட்டையுடன் ஆதார்... >>\nபாகிஸ்தான் மீது தாக்குதல்... >>\nஓடும் பேருந்தில் மாணவி... >>\nஅமித் ஷா தமிழகம் வருகை |... >>\nஅமித்ஷா வருகையால் அரசியல்... >>\nகூடங்குளம் 3-வது, 4-வது அணு... >>\nகுஜராத் மாநில போக்குவரத்து... >>\nவயிற்றில் தலையுடன் பிறந்த... >>\n7வது ஓய்வூதிய குழு... >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/22195-2012-12-04-09-41-25", "date_download": "2018-08-20T18:59:18Z", "digest": "sha1:ECHVYK2FFJ26MAJL7D5QHAEOJQYCAWOM", "length": 11302, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி", "raw_content": "\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 04 டிசம்பர் 2012\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட்......1 தேக்கரண்டி\nசிக்கனை நன்கு கழுவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். அதனை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும் தக்காளியை மிக்சியில் நன்கு அரைத்து வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் மிளகாய்த் தூள், மல்லி தூள், மிளகுபொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி போட்டு சிவக்காமல் வறுத்து அதிலேயே அரைத்த தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வதக்கிய வெங்காயம், வதக்கிய தக்காளி + மிளகாய் தூள், மல்லி தூள் போன்றவற்றைப் போட்டு அதிலேய இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, எலுமிச்சை சாறு, தயிர், ஒரு தேக்கரண்டி, உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். இதனை குளிர் பதனப் பெட்டியில் உள்ள பிரீசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். 24 மணி நேரம் வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.\nபின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு போட்டு, அது சிவந்ததும், சிக்கனைப் போட்டு வதக்கவும். தீயைக் குறைத்து வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து, அதில் தேங்காய்ப் பாலை விடவும். மசாலா மற்றும் தேங்காய்ப் பால் நீர் வற்றி வரும்போது, அதில் மல்லி, புதினா + கறிவேப்பிலை தூவி இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Video_New.asp?id=120&cat=49", "date_download": "2018-08-20T19:19:13Z", "digest": "sha1:BJJDWAC4DAHSPNEIKZDN3DYAG7SEB3IO", "length": 8122, "nlines": 214, "source_domain": "www.dinakaran.com", "title": "Today Rasi Palan Videos- Dinakaran Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video,,Tourism Videos,Special Programme Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசெய்திகள் சன் செய்தி நேரலை இன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம் மற்றவை ஆடி மாத அம்மன் தரிசனம் ஐய்யப்பன் பாடல்கள் சிவராத்திரி வைகுண்ட ஏகாதசி நவராத்திரி வைகாசி விசாகம் சிறப்பு பாடல்கள் பொங்கல்\nநல்ல காலம் பிறக்குது | Dt 23-09-16\nநல்ல காலம் பிறக்குது | Dt 30-08-16\nநல்ல காலம் பிறக்குது | Dt 23-08-16\nநல்ல காலம் பிறக்குது | Dt 17-08-16\nநல்ல காலம் பிறக்குது Dt 01-08-16 | Sun TV\nநல்ல காலம் பிறக்குது Dt 27-07-16 | Sun TV\nநல்ல காலம் பிறக்குது Dt Dt 19-07-16 | Sun TV\nநல்ல காலம் பிறக்குது Dt 15-07-16 | Sun TV\nநல்ல காலம் பிறக்குது Dt 13-07-16 | Sun TV\nநல்ல காலம் பிறக்குது Dt 11-07-16 | Sun TV\nநல்ல காலம் பிறக்குது Dt 08-07-16 | Sun TV\nநல்ல காலம் பிறக்குது Dt 01-07-16 | Sun TV\nநல்ல காலம் பிறக்குது Dt 28-06-16 | Sun TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T18:33:42Z", "digest": "sha1:TPYF7HPCCTZD7XTEPUXC3PMYZSOTWMA3", "length": 6525, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\nஎஸ். டி. செல்ல பாண்டியன்\nகூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nபி. வி. நரசிம்ம ராவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2012, 12:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/news/60966/vijay-tv-anchor-dd-new-look", "date_download": "2018-08-20T18:33:49Z", "digest": "sha1:DIKVBPHRALHLMXIDZJLGPNTTMBIPRE2N", "length": 6734, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "என்னம்மா ஆச்சு உன் கண்ணுக்கு DD யை பார்த்து வியந்த ரசிகர்கள் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஎன்னம்மா ஆச்சு உன் கண்ணுக்கு DD யை பார்த்து வியந்த ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை DD, இவர் பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருகிறார், இவரை விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே அழைக்கலாம்.\nமேலும் தொகுப்பாளினி DD சின்னத்திரை தாண்டி தற்பொழுது படத்திலும் நடித்து வருகிறார், இவர் பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார் மேலும் ஆல்பம் ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார்.\nஇப்படி இருக்க தொகுப்பாளினி DD அவரின் டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதில் DD-யின் கண்கள் மிக வித்யாசமாக இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அமேலும் பல ரசிகர்கள் DD லென்ஸ் அணிதுள்ளார் என கூறி வருகிறார்கள்.\nPrevious article நாச்சியார் பட நாயகி இவானா என்ன படிக்கிறார் உண்மையான வயது தெரியுமா\nNext article இதனால் தான் அந்த தொலைக்காட்சியிலிருந்து திடீரென வெளிவந்தேன் தேவதர்ஷினி\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nகேரளாவில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ரகசியமாக\nஇவர்களைப் போன்ற ஒழுக்கமான ராணுவம் உலகத்திலேயே கிடையாது யாரைப் பாராட்டினார் தெரியுமா\nகள்ளக்காதலை கைவிடாத மனைவி... கொன்று எரித்த கணவன் கிரிஷ்ணகிரியில் நடந்த பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:19:45Z", "digest": "sha1:FRFSZJMZRS5P5K4C5PSUXA6XCL3RT6DP", "length": 10547, "nlines": 224, "source_domain": "tamilnool.com", "title": "என் பழைய பனை ஓலைகள் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஎன் பழைய பனை ஓலைகள்\nஎன் பழைய பனை ஓலைகள்\nபெய்யெனப் பெய்யும் மழை ₹130.00\nஎன் பழைய பனை ஓலைகள்\nBe the first to review “என் பழைய பனை ஓலைகள்” மறுமொழியை ரத்து செய்\nகாசி ஆனந்தன் நறுக்குகள் பாகம் 2\nகவிஞர் கண்ணதாடனின் தென்றல் வெண்பா 1000\nலண்டாய் (ஆஃபகான் பெண்களின் வாய்மொழிப்\nகவிக்கோ அப்துல் ரகுமானின் அருமையான கவிதைத் தொகுப்பு.\nகாசி ஆனந்தன் கவிதைகள் பாகம் 2\nமிகவும் நேர்ப்பட பேசுகிற இக்கவிதைகள், தமிழின் புதிய உயரங்கள் என்று பெருமை சேர்க்கிறது இந்நூல்.\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=807490", "date_download": "2018-08-20T19:19:06Z", "digest": "sha1:RPAPJSXFDAXZE7KN7O4UN2K7LKWGMFT7", "length": 8936, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல் கணவனுக்கு திருமண ஏற்பாடு நடந்ததால் 2வது கணவனுடன் வசித்த இளம்பெண் தற்கொலை சேலத்தில் பரபரப்பு | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமுதல் கணவனுக்கு திருமண ஏற்பாடு நடந்ததால் 2வது கணவனுடன் வசித்த இளம்பெண் தற்கொலை சேலத்தில் பரபரப்பு\nசேலம், பிப்.13: சேலம் வீராணம் அருகே டி.பெருமாபாளையம் காந்திநகர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி பெருமாள்(30). இவருக்கும், வீரபாண்டியை சேர்ந்த பூமணி(22) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வினோத்குமார்(24) என்பவருடன் பூமணிக்கு பழக்கம் ஏற்பட்டது.\nஇது ஊர்மக்களுக்கு தெரியவந்ததால், சில மாதங்களுக்கு முன்பு ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில், கணவன், மனைவியை பிரித்து வைத்த பஞ்சாயத்தார், வாலிபர் வினோத்குமாரையே பூமணி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெருமாளுக்கு ₹1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறியது. அதன்படி, பெருமாளுக்கு ₹1.40 லட்சத்தை இழப்பீடாக கொடுத்த பூமணி, வினோத்குமாரை 2வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.\nஇந்நிலையில், பெருமாளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையறிந்த பூமணி, கடந்த 4 நாட்களுக்கு முன் பெருமாள் வீட்டுக்கு சென்று, திருமண ஏற்பாடு குறித்து விசாரித்தார். ஆனால், அவரிடம் பெருமாள் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த பூமணி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதனிடையே, ஆத்தூர் அருகே தலைவாசலுக்கு வேலைக்கு சென்று விட்டு வந்த 2வது கணவர் வினோத்குமார், மனைவியை காணாமல் தேடினார்.\nநேற்று முன்தினம், பூமணி கிணற்றில் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின் பேரில், சடலத்தை மீட்ட வீராணம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கணவருக்கு திருமணம் நடக்கும் வேதனையில் பூமணி தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்\nஐஓசி பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்படிஜிட்டல் பேமெண்ட் சிஸ்டம் அறிமுகம்\nமேட்டூர் அணை வலதுகரையில் வெள்ளப் போக்கியில் கண்காணிப்பு தீவிரம் ஆக்கிரமிப்புகளால் கால்வாயாக மாறியது\nசூரியன் எப்.எம்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி பரிசு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாஜவினர் அஞ்சலி\nவீரகனூரில் மணல் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T19:01:03Z", "digest": "sha1:SXBI32FTU5UOHQMMYRWYWESCI2TSOVGT", "length": 2605, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தேங்காய் பால் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபச்சரிசியை 2மணிநேரம் ஊறவைக்கவும். தேங்காயை துறுவிவைக்கவும்.அரிசி,தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து பால் எடுக்கவும்.\nவடிகட்டிய பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.ஏலக்காயை தட்டிபோட்டு இறக்கவும். சூடாக குடிக்க நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/mk-stalin-urges-rs-1-crore-should-provide-in-thoothukudi/", "date_download": "2018-08-20T18:47:55Z", "digest": "sha1:SSMFNI7H5CDZLTDGXO4KKPCEWSQ7FAXU", "length": 13486, "nlines": 112, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி: ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "\nதுப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி: ஸ்டாலின் வலியுறுத்தல்\nதுப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி: ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. சார்பில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டது.இதற்கு தி.மு.க. சட்ட மன்ற கொறடா சக்கரபாணி தலைமை தாங்கினார். அவருக்கு சட்டமன்ற சபாநாயகர் இருக்கை போன்று மேடையில் தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.\nகூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச்சேர்ந்த எம்.எல். ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சட்டசபையில் வாசிப்பது போல் சக்கரபாணி திருக்குறள் வாசித்தார்.\nபின்னர் மு.க.ஸ்டாலின் ஒரு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், மக்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்யாமல் அலட்சியப்படுத்தியதால்தான் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. நேற்று சட்டமன்றத்தில் இதுபற்றி முறையாக பேச அனுமதிக்கவில்லை.\nஎனவே இன்று மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது என்றார். இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nபிறகு மு.க.ஸ்டாலின் மாதிரி சட்டமன்றம் சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சார்பில் பல்வேறு விதத்தில் ரூ.100 கோடி வைப்பு தொகை உள்ளது. அதில் இருந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.\nஇந்த தீர்மானத்தை ராமசாமி (காங்கிரஸ்), அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் வழிமொழிந்தனர். தீர்மானத்துக்கு ஆதரவாக உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nகீதாஜீவன்:- 1993-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1995-ல் உற்பத்தி தொடங்கியது.\nநச்சுக்காற்று, சுகாதாரக் கேடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கடந்த 22-ந்தேதி சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இப்போராட்டம் குறித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்களிடம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.\nஆனால் திடீரென்று அந்த மக்கள் மீது தேவையின்றி துப்பாக்கி சூடு நடத்தி 13 உயிரை பறித்து இருக்கிறார்கள். இதற்கு முறையான விசாரணை நடத்த வேண்டும்.\nஅனிதா ராதாகிருஷ்ணன்:- ஊர்வலம் அமைதியாக நடந்தது. யாரிடமும் ஆயுதம் இல்லை. வன்முறையும் நடைபெறவில்லை. ஆனால் திட்டமிட்டு அந்த படுகொலையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய முதல்-அமைச்சர் டி.வி.யில்தான் இதை பார்த்தேன் என்கிறார். சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.\nதுரைமுருகன், தங்கம் தென்னரசு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்பட பல்வேறு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.\nவசந்தகுமார் (காங்):- ஸ்டெர்லைட் ஆலை எங்கள் மாநிலத்துக்கு தேவையில்லை என்று மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் புறக்கணித்தன. ஆனால் இதற்கு அனுமதி வழங்கியது இன்றைய அ.தி.மு.க. அரசு. இவ்வளவு பெரிய போராட்டத்தில் பலர் உயிரிழந்த பிறகும் அதுபற்றி தனக்கு தெரியாது என முதல்-அமைச்சர் சொன்னது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு.\nகூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்தது\nகேரள பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை\nராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் மீட்பு\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/see-or-keep-these-things-with-you-based-on-your-stars-018972.html", "date_download": "2018-08-20T18:33:18Z", "digest": "sha1:SAFD62LOE3FVGY4EDP3VRA2S53ELMH2T", "length": 17386, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பொருட்களை தினசரி பார்த்தாலோ (அ) உடன் வைத்துக் கொண்டாலோ வெற்றி தேடிவரும்! | See or Keep These Things With You Based on Your Stars - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த பொருட்களை தினசரி பார்த்தாலோ (அ) உடன் வைத்துக் கொண்டாலோ வெற்றி தேடிவரும்\nஇந்த பொருட்களை தினசரி பார்த்தாலோ (அ) உடன் வைத்துக் கொண்டாலோ வெற்றி தேடிவரும்\nஒவ்வொருவருக்கும் தன்னுடைய வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தோல்விகள் நமக்கு விடா முயற்சியை கற்றுத் தரும் என்றாலும் கூட, தொடச்சியான தோல்விகளால் பலர் சோர்வடைந்து போவார்கள்.. அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம்...\nஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card), கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.\nராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான். கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதனை உண்மை என்று எப்படி நம்புவது இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி ஆய்வு செய்கையில், புராண இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை அறிய முடிந்தது. அவைகளைப்பார்ப்போம். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேராகும். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார். பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார்.\nபகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார். எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.\nஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.\nஸ்ரீருத்திரனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரையாகும். திருவாதிரை நட்சத்திரத்தின் உருவம் மண்டையோடு என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீருத்திரன் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவன்.\nமேற்கண்ட புராண, இதிஹாச தகவல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை, தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.\nபரணி - யோனி,அடுப்பு, முக்கோணம்\nகிருத்திகை - கத்தி,கற்றை,வாள், தீஜ்வாலை\nரோகிணி - தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம்\nபூசம் - புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின் மடி\nஆயில்யம் - சர்ப்பம், அம்மி\nமகம் - வீடு, பல்லாக்கு, நுகம்\nபூரம் - கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை\nஉத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை\nசித்திரை - முத்து, புலிக்கண்\nசுவாதி - பவளம், தீபம்\nவிசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்\nஅனுசம் - குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்\nகேட்டை - குடை, குண்டலம், ஈட்டி\nமூலம் - அங்குசம், சிங்கத்தின்வால், யானையின் துதிக்கை\nதிருவோணம் - முழக்கோல், மூன்றுபாதச்சுவடு, அம்பு\nஅவிட்டம் - மிருதங்கம், உடுக்கை\nசதயம் - பூங்கொத்து, மூலிகைகொத்து\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇளைஞர்களுக்கு அப்துகலாம் கூறிய பயனுள்ள அறிவுரைகள்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nJan 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/kannur-university-invites-application-03-professor-posts-000934.html", "date_download": "2018-08-20T18:03:31Z", "digest": "sha1:5LANP3Q2YBME5SSADFQQMERDFFG4OFST", "length": 7828, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "கண்ணூரில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை இருக்கு...! | Kannur University Invites Application for 03 Professor Posts - Tamil Careerindia", "raw_content": "\n» கண்ணூரில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை இருக்கு...\nகண்ணூரில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை இருக்கு...\nசென்னை: கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்க பிப்ரவரி 2-ம் தேதிக்குள் விண்ணபு்பம் செய்யலாம்.\nஆந்த்ரோபாலஜி பிரிவில் ஒரு பணியிடமும், பயோடெக்னாலஜி அண்ட் மைக்ரோபயலாஜி பிரிவில் ஒரு பணியிடமும், ஆங்கிலத் துறையில் ஒரு பணியிடமும் காலியாகவுள்ளன.\nயுஜிசி விதிகளின்படி பேராசிரியர் நியமனம் இருக்கும். வயது வரம்பும் யுஜிசி விதிகளின்படி இருக்கும். விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் the Registrar, Kannur University, Thavakkara, Civil Station (P.O), Kannur-2, Pin-670002 என்ற முகவரிக்கு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் இருக்கும்.\nவிண்ணப்பக் கட்டணமாக பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000 வசூலிக்கப்படும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படும்.\nகூடுதல் விவரங்களுக்கு கண்ணூர் பல்கலைக்கழகத்தின் இணையதளமான http://www.kannuruniversity.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://muslimpage.blogspot.com/2007/05/blog-post_05.html", "date_download": "2018-08-20T18:58:35Z", "digest": "sha1:G2WRUTQLIYEJVWJAU3YQ2ZUDZMKJK4MH", "length": 12616, "nlines": 97, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: எம்மதமும் சம்மதங்க!", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nதிருமண வரன் விளம்பரங்களில் \"மதம் ஓர் தடையில்லை\" \"எம்மதமும் சம்மதம்\" என்று சிலர் குறிப்பிடுவார்கள். இந்த பாலிசியைக் கடைபிடித்து சீனிவாசன் என்ற இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஏமாற்றுக்காரன் பற்றிய செய்தியப் பாருங்க\nமுஸ்லீம் பெண்ணை மணந்த இந்து வாலிபர்\nகிறிஸ்தவ பெண்ணை ஏமாற்றி திருமணம்\nசென்னை: முஸ்லீம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட இந்து வாலிபர், அதை மறைத்து விட்டு கிறிஸ்தவப் பெண் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.\nசென்னை காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன். செல்போன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் ரஸியா பேகம் என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் கடந்த 2001ம் ஆண்டு காதல் மலர்ந்தது. ரஸியா பேகம் ஆசிரியையாக உள்ளார்.\nஇருவரும் வேறு வேறு மதம் என்பதால் இருவரது வீடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்து முறைப்படி ரஸியா பேகத்தை கல்யாணம் செய்து கொண்டார் சீனிவாசன். அதன் பின்னர் இருவரும் தனி குடித்தனத்தை ஆரம்பித்தனர்.\nஇருவரது குடும்பத்தினரும் இவர்களை ஏற்றுக் ரொள்ளவில்லை. இருந்தாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இருவரும் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை நாளாக நாளாக கசக்க ஆரம்பித்தது.\nஅடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டார் சீனிவாசன். ரஸியா பேகமும் கொடுத்து வந்தார்.\nஇந்த நிலையில்தான் தனது செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த மைதிலி என்ற பெண் மீது காதல் கொண்டார் சீனிவாசன். மைதிலியிடம் தனக்கு திருமணம் ஆன விவகாரத்தை மறைத்து அவரைக் காதலிக்க ஆரம்பித்தார் சீனிவாசன்.\nமைதிலியின் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டனர். மைதிலி கிறிஸ்தவப் பெண் என்பதால் அவரது கல்யாணம் பிராட்வேயில் உள்ள கிறிஸ்தவ பேராலாயத்தில் நடந்தது.\nஇந்த நிலையில் இதுகுறித்துக் கேள்விப்பட்டார் ரஸியா பேகம். அதிர்ச்சி அடைந்த அவர் தேவாலயத்திற்கு விரைந்தார். ஆனால் அதற்குள் கல்யாணம் ஆகி விட்டது. மண்ணடியில் உள்ள கல்யாண மண்டபத்தில் வரவேற்பு நடப்பதாக தெரிய வந்தது.\nஇதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் ரஸியா பேகம். பின்னர் அங்கு விைரந்தார். போலீஸாரும் மண்டபத்திற்கு விரைந்து வந்தனர். நடந்ததை அறிந்து மைதிலி குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.\nஇதையடுத்து மைதிலியின் தந்தையும் ஒரு புகார் கொடுத்தார்.\nரஸியா பேகம் மற்றும் மைதிலியின் தந்தை கொடுத்த புகார்களின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனைக் கைது செய்தனர்.\nஇந்து வாலிபர் இரு மதத்தைச் சேர்ந்த பெண்களை மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்கிறார்கள் என்று ஒப்பாரி வைப்பவர்கள் அனேகமாக தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் இனி சொல்ல வேண்டும். அதிக பட்சம் நான்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மார்க்க அனுமதி இருந்தாலும் முஸ்லிம்களில் 99% ஒருவனுக்கு ஒருத்தி என்றே வாழ்கிறார்கள் .\nஇது போன்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லா மதங்களிலும் உண்டு. ஏமாற்றியவர் இந்துவாக இருந்தாலும் கைது செய்யப் பட்டுள்ளாரே ஆகவே இதை பெரியமனசு பண்ணி பெரிசு படுத்தாமல் விட்டுவிடுங்கள் என்று நடுநிலையாளர்கள் சொல்லலாம்.\nவிபச்சாரம் + ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களாகக் கருதப்பட்டு பொதுவில் வைத்து தண்டிப்பதன் மூலம் இதுபோன்ற ஏமாற்றுக்காரர்கள் உருவாகாமால் இருக்க ஒரு சமூகக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது இஸ்லாம்.\nஆனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன் எப்படியும் பதினைந்து நாட்களுக்குள் வெளிவந்து மீண்டும் தன் கைவரிசையைக் காட்டுவார். அப்போதும் நமது பத்திரிக்கைகள் மூன்று பெண்களை ஏமாற்றியவன் XXXX ஆவது பெண்ணை ஏமாற்றும்போது கைது என்று ஏமாற்றுபவர்களுக்கு புகழாரங்களுடன் ஊடக முக்கியத்துவம் கொடுத்து இன்னும் பல ஏமாற்றுக்காரர்களை உருவாக்குவார்கள்\nஏமாற்றுக்காரர்களை நம் நாட்டு சட்டத்தால் தண்டிக்க முடியாது\nஅவர்கள் சட்டத்தையும் ஏமாற்றத் தெரிந்தவர்கள்\nஇதே மாதிரி ஒரு செய்தியை (இதில் மோசடி இருப்பதாக தெரியல) வைத்து காவி பரிவாரக் கும்பல்கள் கும்மியடிப்பதை இங்கே பாருங்க.\nஇந்துத்துவாக்களுக்கு 'அரசியல்' பண்ண ஒரு காரணம் கிடைத்து விட்டது.\nLabels: அரசியல், காதல், காவிக்கும்பல், மோசடி\n//ஏமாற்றுக்காரர்களை நம் நாட்டு சட்டத்தால் தண்டிக்க முடியாது\nஅவர்கள் சட்டத்தையும் ஏமாற்றத் தெரிந்தவர்கள்\nஇவர்களைத்தான் ஏமாறாதவன் என்று சொல்வாங்களோ\nநல்லடியார் உங்கள் வரவுக்கு நன்றி\n//இவர்களைத்தான் ஏமாறாதவன் என்று சொல்வாங்களோ\nஏமாற்றுபவன் எந்த கொம்பனாக இருந்தாலும் ஒரு நாளைக்கு மாட்டுவான் :-)\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=214&cat=7", "date_download": "2018-08-20T19:18:19Z", "digest": "sha1:DZAVFSV42JKSKKJGMFLXYUORIR3MBYFQ", "length": 16633, "nlines": 162, "source_domain": "www.dinakaran.com", "title": "முதுமலை யானை முகாம் உருவானது எப்படி? | How did the elephant camp in Mudumalai evolved? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nமுதுமலை யானை முகாம் உருவானது எப்படி\nகோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் முதுமலைக்கு போகாமல் திரும்ப மாட்டார்கள். அங்கு நடக்கும் யானை சவாரி பிரபலமானது. காட்டு யானைகளை கண்டாலே தொடை நடுங்கி ஓடும் நமக்கு, இந்த யானைகளை கண்டால் வருடி பார்க்க தோன்றும். கொஞ்சம் கூட பயம் வராது. இயல்பாக காட்சியளிக்கும். இதற்கு காரணமே முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தான்.\nமுதுமலை யானை முகாம் தோன்றியதில் ஒரு வரலாற்று பின்னணியே உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டி எடுத்து செல்லும் பணிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரங்களை கொண்டு செல்லும் யானைகள் தினமும் ஓய்வெடுப்பதற்கு 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.\nபின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமில் பராமரிக்கப்பட்ட யானைகளுக்கு ஒவ்வொரு விதமான வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 6 வயது முதல் 15 வயது வரையிலான யானைகளுக்கு இலகுவான வேலைகளும், 15 வயது முதல் 25 வயது வரையிலான யானைகளுக்கு கொஞ்சம் கடினமான மரங்களை தூக்கும் வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 25 வயது முதல் 40 வயது வரையிலான யானைகளுக்கு தான் வேலையே அதிகம்.\nமிக கடினமான அனைத்து வேலைகளையும் இந்த யானைகள் தான் செய்யவேண்டும். அதன் பின்னர் மீண்டும் கொஞ்சம் பணி சுமை குறையும். 58 வயதானால் போதும். ராஜ மரியாதை தான். அரசாங்க வேலையில் இப்போது 58 வயதினருக்கு ஓய்வு கொடுப்பது போல் இந்த யானைகளுக்கும் ஓய்வு கொடுப்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது. பின்னர் முகாமிலேயே பராமரிக்கப்படும். எந்த வேலையும் கொடுப்பதில்லை. மற்ற யானைகளுக்கு போல் அவ்வப்போது தேவையான உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படும். முகாமில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடக்கும் போது மட்டும் இந்த யானைகளுக்கு முதல் மரியாதை உண்டு. இந்த முகாமில் அதிக ஆண்டுகள் வசித்த யானை ரதி. 77 வயதை கடந்து கடந்த 10 நாட்களுக்கு முன் மரணம் அடைந்தது. தற்போது 68 வயதான பாமா முகாமில் ஓய்வெடுத்து வருகிறது.\nவனப்பாதுகாப்பு சட்டம் 1927ல் அமலுக்கு வந்த பின்னர் மரங்கள் வெட்டுவது குறைந்தது. அதன் பின்னர் முகாமில் வளர்க்கப்படும் யானைகளை சவாரிக்கு பயன்படுத்துவது, வனக்கொள்ளைகளை தடுப்பது, காட்டு யானைகளால் தொல்லை ஏற்படும் பகுதிகளுக்கு அழைத்து சென்று விரட்டியடிப்பது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் 24 யானைகள் உள்ளன. இதில் 1972ல் ஒரே யானைக்கு பிறந்த இரட்டையர்கள் சுஜய், விஜய் ஆகியோரும் அடக்கம்.\nதென்னிந்தியாவில் உருவான முதல் யானை முகாம் என்பது பலர் அறியாத விஷயம். 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nவில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம்\nஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு\nஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இசைப் பேரா(தேவா)லயம்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958493&Print=1", "date_download": "2018-08-20T18:18:53Z", "digest": "sha1:ULZ3G64PC3WETOS7GTX5F7RTHMTMSS2C", "length": 4270, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ| Dinamalar\nஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ\nசென்னை: ‛ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு உள்ளேன்' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.\nமதுரையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது: 14 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., கொடி பறக்கும் பொதுக்கூட்டத்தில் நான் பேசுகிறேன். கருணாநிதிக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன். தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன். தி.மு.க.,வை அழிக்கவிட மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamounaku.com/2017/01/2017-promise-prophetic-message-prophet.html", "date_download": "2018-08-20T18:22:43Z", "digest": "sha1:SOGROZKZCVAWBDHMKTHJEVHBL6Q3VY7Q", "length": 4703, "nlines": 128, "source_domain": "www.tamounaku.com", "title": "2017 Promise & Prophetic Message Prophet Sadhu Sundar Selvaraj - தேடி வந்த தெய்வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nஎனது மக்களின் கண் செதில்கள் கழன்று விழ செபியுங்கள்...\nஉனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://rssairam.blogspot.com/2016/08/blog-post_70.html", "date_download": "2018-08-20T18:38:28Z", "digest": "sha1:NDIQIKDVHEOXYL2NC5GIFN4D2TXVVUCW", "length": 8835, "nlines": 73, "source_domain": "rssairam.blogspot.com", "title": "துப்பாக்கிச் சூடு பீதி: அமெரிக்க விமான நிலையம் தாற்காலிக மூடல் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதுப்பாக்கிச் சூடு பீதி: அமெரிக்க விமான நிலையம் தாற்காலிக மூடல் \nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகர விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதால் எழுந்த பதற்றத்தையடுத்து அந்த விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டது.\nகலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையம், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.\nஅப்போது அந்தப் பகுதியில் துப்பாக்கியால் சுடுவதைப் போன்ற சப்தம் கேட்டதைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடினர்.\nஇதையடுத்து அந்த விமான நிலையத்தின் மையப் பகுதியில், பயணிகள் வந்து போகும் பகுதி மூடப்பட்டது.\nமேலும், அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்த போலீஸார், துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.\nஇதில், மக்களை பீதிக்குள்ளாக்கிய அந்த இரைச்சல் துப்பாக்கிச் சப்தமல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து அந்த விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. சப்தத்தை எழுப்பியவர் என்ற சந்தேகத்தின் பேரில், \"úஸாரோ' முகமூடி வீரனைப் போல உடையணிந்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து விமான நிலையக் காவல்துறை வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nலாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் எவரும் துப்பாக்கியால் சுடவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_705.html", "date_download": "2018-08-20T18:21:26Z", "digest": "sha1:L2T6CVZC6YLBQOPYB5DTZX6OF3XW3YAJ", "length": 5241, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "பூநகரி இளைஞர் முகாம் இன்று ஆரம்பம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பூநகரி இளைஞர் முகாம் இன்று ஆரம்பம்.\nபூநகரி இளைஞர் முகாம் இன்று ஆரம்பம்.\nகிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச இளைஞர்யுவதிகளின் தலைமைத்துவ ஆற்றலை விருத்தி செய்யும் முகமாக இளைஞர்களை பயிற்றுவிக்கும் இளைஞர் முகாம் வேலைத்திட்டம் இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஜெயபுரம் விவசாய பண்ணை வளாகத்தில் இளைஞர் சேவை அதிகாரி திரு\nஅ.ஜெயாளன் ஒழுங்கமைப்பில் பூநகரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இம் முகாம் வேலைத்திட்டத்தில் 100 இளைஞர் யுவதிகள் பங்குபற்றவுள்ளனர்.\nஇன்று 27ம் திகதி ஆரம்பமாகும் இளைஞர் முகாம் எதிர்வரும் 29.04.2018 ம் திகதி பிரதேச சம்மேளன புதிய நிருவாகத் தெரிவுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_14.html", "date_download": "2018-08-20T18:23:32Z", "digest": "sha1:AHTRKE4EIAAVBAU4NSR6FKI6S7KZVIVJ", "length": 7098, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் விளம்பி புது வருட விளையாட்டு விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » தேற்றாத்தீவு » தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் விளம்பி புது வருட விளையாட்டு விழா\nதேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் விளம்பி புது வருட விளையாட்டு விழா\nதேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் புது வருட விளையாட்டு விழாவானது இன்று(6.05.2018) தேற்றாத்தீவு கடற்கரை பொது விளையாட்டு மைதானத்தில் கழக்தின் தலைவர் சி.லம்போதரன் தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் இவ் விளையாட்டு விழாவிற்கு .சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பு.யோகநாதன், சிறப்பு அதிதியாகவும் ம.நடநாஜா முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், த.தவராணி பிரதேச சபை உறுப்பினர், ரி.தேவரஞ்சன் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் இ.சாணக்கியக் இராசமாணிக்கம் மக்கள் அமைப்புத் தலைவர் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்\nஇவ் விளையாட்டு விழாவின் 15 வயதுக்கு மேல்பட்ட கீழ்பட்ட மரதன் ஒட்டமானது இன்று காலை இடம் பெற்றது 15 மேல்பட்ட வருக்கன ஒட்டதினை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் ஆரம்பித்து வைத்தார். பின்நேர நிகழ்வில் தரம் -5 க.பொ.த.ச/த மற்றும் உ/த ஆகிய பரீட்சையில் சிறந்த சாதனையை நிலை நாட்டியவர்களுக்கும் பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கொளரவிக்கப்பட்டதுடன் தேற்றாத்தீவின் மூத்த கலைஞர் த.விஸ்வலிங்கத்தின் கலைசேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பல சுவார்ஸ்யமான போட்டி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதுடன் பரிசில்களும் வழங்ப்பட்டது\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://adiraimysha.blogspot.com/2015/02/blog-post_74.html", "date_download": "2018-08-20T18:27:42Z", "digest": "sha1:JOP6RIGDS45I7VIEB2N2DYL2KUTNMDF6", "length": 11198, "nlines": 34, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருமா !?", "raw_content": "\nஅவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருமா \nமனிதனது வாழ்வில் மகிழ்வைத்தொலைத்து மனநிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும்.\nஅனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவைகள்யாவும் நடைமுறை வாழ்வில் நிகழக் கூடிய சந்தேகங்களேயாகும்.\nஉதாரணமாகச் சொல்வதாயின் வீட்டைப் பூட்டிவிட்டோமா. சமையல் கேஸை ஆஃப் செய்தோமா. சமையல் கேஸை ஆஃப் செய்தோமா. பாக்கிப் பணம் திரும்பப் பெற்றோமா.. பாக்கிப் பணம் திரும்பப் பெற்றோமா.. அல்லது வெளியில் செல்லும்போதோ, பயணத்திலோ, அலுவலகப்பணியிலோ, ஏதாவது ஒருபொருளை எடுத்துவர மறந்துவிட்டு கொண்டுவந்தோமா.. அல்லது வெளியில் செல்லும்போதோ, பயணத்திலோ, அலுவலகப்பணியிலோ, ஏதாவது ஒருபொருளை எடுத்துவர மறந்துவிட்டு கொண்டுவந்தோமா.. இல்லையா. என்று சந்தேகப்படுவது அடுத்துச் சொல்வதானால் சந்தேகநிலையில் உள்ள சில அறியாத விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வது, ஆதார மில்லாத சில செய்திகளை கேள்விப்படும்போது சந்தேகத்தோரனையில் கேட்பது இதுபோன்ற இப்படி பலவகையில் ஒருமனிதனுக்கு நடைமுறை வாழ்வில் அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு.\nஆனால் சிலரது சந்தேகங்கள் அவசியமற்றதாக நின்றாலும் குற்றம், நடந்தாலும் குற்றம், பார்த்தாலும் குற்றம்,பேசினாலும் குற்றம் என்று சொல்வதுபோல சதா எல்லாவற்றிற்கும் எல்லா விசயத்திற்கும் சந்தேகப்படுவது ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்பவாழ்வில் திருமண வாழ்வில் ஏற்ப்படும் சந்தேகம்தான் எல்லா சந்தேகங்கங்களை விடவும் மிக மோசமானவையாகவும் பிரச்சனைக் குரியவையாகவும் இருக்கிறது.இந்த சந்தேகம்தான் நிம்மதியைத் தொலைக்கச் செய்து விடுகிறது. இச்சந்தேகம் கொண்டவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததாக தெரியவில்லை.\nசந்தேகம் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் குணங்களில் ஒன்றாக இருந்தாலும் . அதேசமயம் சூழ்நிலையைப் பொறுத்து ஏற்ப்படக் கூடியவையாக இருக்கிறது. இப்படி சூழ்நிலைச் சந்தேகங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து அதிகபட்சம் ஏற்றுக்கொள்ள கூடியவைகளாகவும் இருக்கிறது. அர்த்தமுள்ள சந்தேகங்கள் ஆரோக்கியமானதே அதேசமயம். அர்த்தமில்லா அவசியமற்ற சந்தேகங்கள் சந்தோசத்தை தொலைத்து சங்கடத்தை ஏற்ப்படுத்தக் கூடியவையாக இருக்கிறது.\nஒருவருக்கு அவசியமற்ற சந்தேகங்கள் சதா எந்நேரமும் மனதைவிட்டு மாறாமல் இருக்குமானால் எதற்க்கெடுத்தாலும் சந்தேகக் கண்களால் பார்த்துப்பழகி அதுவே ஆட்கொள்ளத்தொடங்கி விட்டால் அதுவே நாளடைவில் மனநோயாளியாகக்கூட மாறிவிட வாய்ப்பாகிவிடுகிறது.\nஆகவே பெற்றோர்களானாலும், கணவன் மனைவி, பிள்ளைகளானாலும், சகோதர,சகோதரி உறவினார்கள் மற்றும் நட்புக்களானாலும் புரிந்துணர்வு மிகமிக அவசியம் இருக்கவேண்டும். ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.நம்பிக்கை தளர்ந்து வலுவிழந்து விடுமாயின் அந்த இடத்தை சந்தேக நோய் தான் ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு பிரச்சனைகளுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.\nதேவையற்ற சந்தேகத்தினால் எத்தனையோ கணவன் மனைவிமார்களும், குடும்பங்களும், உறவுகளும் நட்புக்களும் சிதறுண்டு நாலாப்புறமும் பிரிந்து கிடப்பதை நாம் இவ்வுலகில் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம் பல ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிகிறோம். இப்படி அவசியமற்ற சந்தேகத்தினால் ஏற்ப்படும் பிரிவுகளை நினைக்கும்போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.\nகுடும்பப் பிரச்சனையில் ஏற்ப்படும் சந்தேகங்கள் கணவன்மனைவிக்குள் ஏற்ப்படும் கருத்துவேறுபாடுகளினால் சந்தேகங்கள் நாளடைவில் பெரிதாகி வளர்ந்து காரணத்தை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் சந்தேகத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அநியாயத்திற்கு தன்னை மாய்த்துக் கொண்டவர்களும் நிறையபேர் உண்டு.\nமற்ற சந்தேகங்களை விட ஒருமனிதனுக்கு குடும்ப உறவில் சந்தேகம் வந்து விட்டால் அவனிடம் எவ்வளவு செல்வமிருந்தாலும் பணிவிடை செய்ய ஆயிரம் உதவியாளர்கள் இருந்தாலும் மனதில் நிம்மதிமட்டும் இருப்பதில்லை.. நிம்மதியில்லாத வாழ்க்கை நரகவேதனைக்குச் சமம் என்றுதான் சொல்லமுடியும்.நம்பிக்கைதான் வாழ்க்கை இதை நன்கு உணர்ந்தவர்கள் இன்புற்று வாழ்வார்கள். இல்லையேல் துன்பத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு நடைபிணமாகத்தான் வாழமுடியும். ஆகவே அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருவதில்லை என்பதை உணர்ந்து அவசியமற்ற சந்தேகங்களை தவிர்த்துக் கொண்டு தமது இவ்வுலக வாழ்க்கையை ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்வோமாக...\nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/439-2017-01-26-11-16-33", "date_download": "2018-08-20T18:47:02Z", "digest": "sha1:4AGZDAYJXZZGLZ5XWCG4SUSFVMOZDHQE", "length": 8746, "nlines": 125, "source_domain": "eelanatham.net", "title": "தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் - eelanatham.net", "raw_content": "\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 45378 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 45378 Views\nMore in this category: « தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை தெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/f63-2011", "date_download": "2018-08-20T18:34:00Z", "digest": "sha1:ABZA7I57PM6AMTVAEOVVK437SXGPHPQ7", "length": 20034, "nlines": 263, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011\nதமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011\n2011 - போட்டி முடிவுகள்\nஉரைநடை, கட்டுரை, அனுபவம், கதையும் கதை சார்ந்ததும், கவிதையும் கவிதை சார்ந்ததும், ஹைக்கூவும் அதன் வகைமையும், நகைச்சுவை, புகைப்படம்\nஹைக்கூ போட்டி - ...\nமழை - கவிதை போட்...\nகாதலர் தினம் - ஹ...\nதமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\n1, 2, ... , 11, 12by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nஅ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-jul-15/sports/107838.html", "date_download": "2018-08-20T18:57:41Z", "digest": "sha1:Z3KKSX7Q2264BNYVR3DVQZ6RTLDNKW3S", "length": 17330, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி மனசு! | Chutti manasu | சுட்டி விகடன்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nசுட்டி விகடன் - 15 Jul, 2015\nபறந்து சென்ற குக்கீஸ் பட்டாம்பூச்சி\nகுட்டிச் சிறுத்தைகளே... வெளியே வாருங்கள்\nவெற்றிக்கு வித்திட்ட 10 மடங்கு மனபலம்\nகிராமத்தில் இருந்து ஒரு சதுரங்க ராஜா\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nபாட்டுப் பாடி சங்ககாலம் அறிவோம்\nதொப்பி மூலம் DEGREE அறியலாம்\nசூப்பராகச் செய்வோம் கல்வி இணைச்செயல்பாடு\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://headlinestv.in/news/2018%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E2%80%98%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%3F", "date_download": "2018-08-20T18:59:40Z", "digest": "sha1:CBXLQUUT5OLWYCWCSNNGFLS4G26MSSTA", "length": 2148, "nlines": 37, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\n2018 ஜனவரி முதல் ‘ஹால்மார்க்’ தங்கம் கட்டாயம்\nபொதுமக்கள் வாங்கும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கடைகளில் விற்கப்படும் நகைகளில், தங்கத்தின் தரம் குறித்த, 'ஹால்மார்க்' முத்திரை இடம் பெறுவது கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மக்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்வது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.\nமேலும் அனைத்து நகை கடைகளிலும், ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளை மட்டுமே, விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை, 2018 ஜனவரிக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/toyota/punjab/ludhiana", "date_download": "2018-08-20T19:13:08Z", "digest": "sha1:GFO5T7BYSQQCTAACUHJX5POLBH4CY67Q", "length": 5103, "nlines": 67, "source_domain": "tamil.cardekho.com", "title": "3 டொயோட்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் லூதியானா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டொயோட்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள லூதியானா\n3 டொயோட்டா விநியோகஸ்தர் லூதியானா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n3 டொயோட்டா விநியோகஸ்தர் லூதியானா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45073-bal-gangadhar-thilagar-is-a-father-of-terrorism-textbook-controversy.html", "date_download": "2018-08-20T18:47:10Z", "digest": "sha1:5ZBWIE4CEYYEI3D5XBFNOVD6SFKPK5HQ", "length": 10328, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பயங்கரவாதிகளின் தந்தை திலகர்’: 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை | Bal gangadhar thilagar is a father of terrorism: Textbook controversy", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n‘பயங்கரவாதிகளின் தந்தை திலகர்’: 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தால் சர்ச்சை\nராஜஸ்தான் மாநிலத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான குறிப்புப் புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரை ‘தீவிரவாதத்தின் தந்தை’என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தானில் மாநில பாடநூல் வாரியம் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறது. ஆனால் அப்படி வழங்கப்படும் புத்தகங்கள் ஹிந்தி மொழியில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி புரியாது என்பதால் அவர்கள் குறிப்புப் புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களும் தனியார் வெளியீடு சார்பில் வழங்கப்படும் குறிப்பு புத்தகங்களையே பயன்படுத்தி வருகின்றனர். அதில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியில் குறிப்பு புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதிர திலகர் ‘ தீவிரவாதத்தின் தந்தை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகுதி 22-ல் 267-ம் ஆம் பக்கத்தில் இந்தச் சர்ச்சை கருத்து வெளியாகி உள்ளது. 19ம் நூற்றாண்டின் தேசிய இயக்கத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் என்ற தலைப்பில் பாலகங்காதர திலகரை ‘தீவிரவாதத்தின் தந்தை’ என விமர்சிக்கப்பட்டுள்ளது.\n“ பால கங்காதர திலகர் தேசிய இயக்கத்தின் பாதையை எடுத்துக் காட்டினார். அதனால் அவர் பயங்கரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கெஞ்சுவது மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என நம்பினார். அதனால் அவர் நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தூண்டினார். சுதந்திரத்திற்கான மந்திரத்தை அவர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். அதன் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சியார்களின் கண்களுக்கு அவர் ஒரு முள்செடி போன்றே தெரிந்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பு புத்தகத்தின் ஆசிரியர், திலகர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய விழிப்புணர்பு குறித்து சரியான சொற்களை பயன்படுத்தாமல் மோசமான வார்த்தைகளால் ‘தீவிரவாதத்தின் தந்தை’ என குறிப்பிட்டுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n‘எனக்கு கிடைத்த 2வது வாழ்க்கை இது’ -கொடூர தாக்குதலில் மீண்ட லாவண்யா உற்சாகம்\nரவுடிகளை நடுங்கவைத்த ‘பாம்பே பாய்’ தெரியுமா : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘எனக்கு கிடைத்த 2வது வாழ்க்கை இது’ -கொடூர தாக்குதலில் மீண்ட லாவண்யா உற்சாகம்\nரவுடிகளை நடுங்கவைத்த ‘பாம்பே பாய்’ தெரியுமா : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/kadal_thamarai/tvr02.asp", "date_download": "2018-08-20T18:18:07Z", "digest": "sha1:KSZ25UCYILEVPNFZWC7LFOUKHZZZL3N5", "length": 45150, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Founder T.V.R. Life History, Life Story & Biography", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் » கடல் தாமரை\nஇந்த வரலாறு தோன்றிய வரலாறு\nஐம்பதுகளில், நானும், என்போன்ற பல இளைஞர்களும், எழுத்தாளர் கள், கவிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்களது ரசிகர்களாகத்தான் இருந்து வந்தோம். கலைஞர்கள் கூட அப்படித்தான். அக்காலத்தில் திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்த எம்.கே.டி., பாகவதரும் இதற்கு விதிவிலக்கல்ல. பத்திரிகை ஆசிரியர்கள் தங்களைப் பற்றி ஒரு வரி பாராட்டி எழுத மாட்டார்களா என ஏங்கிய காலமது.\nஅந்தக் காலத்தில் பத்திரிகைகளுக்கு இன்று போல ஊர் ஊருக்கு விற்பனையாளர்கள் கிடையாது. மாத, வார இதழ்கள் எல்லாம் தபாலில்தான் வரும். அவை வரும் கிழமைகளில், நாங்கள் தபாலா பீசுக்கு முன்னதாகவே போய் இதழ்களை வாங்கி, அங்கேயே குப்பையும், இடிபாடுகளும் நிறைந்த படிக்கட்டுகளில் உட்கார்ந்து படித்துவிட்டுத் தான் வீட்டிற்கு வருவோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல.\nபாரதி என்ற கவிஞன் எங்கள் ஊரில் பிறந்தவன். அப்போது கவிஞன் என்றால் தெரியாது. புலவன் என்றுதான் கூற வேண்டும். பாரதியின் நினைவாக ஒரு வாசகசாலை ஊரில் உருவாக்க இளைஞர் களான நாங்கள் ஆசைப்பட்டோம். இதற்காக பிரபலமான கல்கி ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை ஊருக்கு அழைத்திருந்தோம். அவரது வருகையும், நினைவு மண்டபம் எழுந்ததும் தனியான பெரிய கதை. பாரதி மண்டபம் எழுந்ததும், ஏராளமான எழுத்தாளர் கள், பாரதிக்கு அஞ்சலி செய்ய ஊருக்கு வந்த வண்ணம் இருந்தனர். நாங்கள் சிலர் அவர்கள் பின்னால் சுற்றினோம். அவர்களது சம்பா ஷணைகளை ஆவலுடன் கேட்டோம். எழுத்தாளர்கள் மீது அசாதாரணமான காதல் கொண்டோம்.\nபாரதியாரை, கவிஞர், தேசிய கவிஞர், மகாகவி என்றெல்லாம் அழைப்பர்; ஆனால், அவன் ஒரு பத்திரிகையாளன் என்பதே என்னை கவர்ந்தது.\nநானும் பத்திரிகையாளனாக வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அன்றைக்கு பத்திரிகையாளன் என்றால் எங்களைப் போன்ற சிலரைத் தவிர யாருமே மதிப்பது இல்லை. பத்திரிகை ஒரு தொழிலாக இல்லாத காலம் அது. எழுதப் படிக்கத் தெரியாத பெரும் கூட்டம் எங்கே காசு கொடுத்து பத்திரிகை வாங்கப் போகிறது பத்திரிகைகளில் கொடுக்கப்பட்ட சம்பளம் வெளியில் சொல்ல முடியாதது. பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஒருநாளைத் தள்ளுவது ஒரு யுகத்தைத் தள்ளுவது போலாகும். பத்திரிகைதான் என் லட்சியம் என்று துணிந்த பின், எனக்கு என் உடன்பிறந்த சகோதரியே தன் பெண்ணை மணம் செய்து தர சம்மதிக்கவில்லை. அந்தக்காலம் எப்படி என்பதை சுட்டிக் காட்டவே இந்த சுயபுராணம்.\nதிருவனந்தபுரத்தில் இருந்து, ‘தினமலர்’ பத்திரிகை திருநெல்வேலிக்கு வந்த நேரம் அது. அப்போது நான் ஒரு பிரபலமான பத்திரிகை யின் நிருபராக இருந்து வந்தேன். எனக்கு, ‘தினமலர்’ பிடித்தது. அதன் கண்ணோட்டம், செய்திகள், தலைப்புகள் என்னைக் கவர்ந்தது. ஏன், ‘தினமலர்’ பத்திரிகைக்கும் நிருபராக இருக்கக் கூடாது என எண்ணி திருநெல்வேலி சென்றேன். ஆனால், எனக்கு முன்னதாகவே ஒரு செல்வாக்கான பத்திரிகை நிருபர், ‘தினமலர்’ பத்திரிகை நிருபர் பதவியை தனக்கே வாங்கி வைத்து இருந்தார் என்பது அங்கு சென்ற பின்னர் தெரிந்தது.இருந்தாலும், றிபரவாயில்லை, நானும் எழுதுகிறேன். . . பிடிக்கிறதா பாருங்கள்றீ என, அப்போது மானேஜராக அங்கு இருந்த இளைஞரிடம் கூறி, செய்திகள் அனுப்பத் தொடங்கினேன். ஒரே வாரத்தில் நானே எட்டயபுரம் நிருபர் என டி.வி.ஆரே கையப்பம் செய்து உத்திரவு அனுப்பி இருந்தார்.\nபின்னர் டி.வி.ஆரை அடிக்கடி சந்திக்கும் நிலை. பல, அவரது அழைப்பால் சென்றதாக இருக்கும். ‘அந்தக் கிராமத்துக்குப் போய் வா இது ஒரு பிரச்னை நன்றாக விசாரித்து விரிவாக எழுது இது ஒரு பிரச்னை நன்றாக விசாரித்து விரிவாக எழுது’ இப்படிப் பல வழிகாட்டல்கள். ஒருவனிடம் திறமை ஒளிந்து கொண்டிருந்தால் அதைக் கண்டுபிடித்து சிறப்பாக வேலை வாங்கத் தெரிந்தவர் டி.வி.ஆர்., அப்போது என்னிடம் இருந்த ஒரே வாகனம் சைக்கிள்தான். ரோடே இல்லாத கிராமங்களில், காய்ந்து கிடக்கும் கண்மாய்களின் ஊடே, கருவமுள்களின் குத்தலுக்குத் தப்பித்து கிராமம் கிராமமாகச் சென்று அவைகளை சிறந்த சித்திரங்களாக்கி, ‘தினமலர்’ மூலம் படம் பிடித்து காட்டத் தொடங்கினோம்.\n‘தினமலர்’ புதிய, புதிய வாசகர்களைப் பெற்றது; வளர்ந்தது. அத்துடன் அந்தக் கால அரசியல்வாதிகள், அதிகாரிகள், ‘தினமலர்’ சுட்டிக்காட்டும் பிரச்னைகளை படித்து, முடிந்த அளவு தீர்வுகளும் செய்து வந்தனர். ‘தினமலர்’ பத்திரிகையாளன் பெரிதும் மதிக்கப் பட்டான்.\nஎன் சொந்த வாழ்க்கையில் ஒரு பேரிடி விழுந்தது 1970-71ல். பேனாவைத் தூக்கி எறிந்துவிட்டு, பித்துப்பிடித்தவன் போல் ஆனேன். இதைக் கேள்விப்பட்ட டி.வி.ஆர்., என்னை திருநெல்வேலிக்கு வரச்சொல்லி பேனாவை மீண்டும் கையில் கொடுத்து எழுதத் துபண்டினார். அன்று மட்டும் அவர்கள் அதைச்செய்யாதிருந்தால் எனக்கு எழுத்தாளன் என்ற முகவரியே இல்லாமல் போயிருக்கும்.\nஎன்னை அழைத்த நேரம், திண்டுக்கல்லில் உபதேர்தல் வர இருந்தது. தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து, அண்ணா தி.மு.க., வை உருவாக்கி, இந்தத் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரம். திண்டுக்கல் தேர்தலுக்கு நானே விசேட நிருபர். என் சொந்த மன உளைச்சலையும் அது தீர்த்து புதிய மனிதனாக்கியது. ஏற்கனவே பத்திரிகையாளன் பாரதி மேல் காதல் கொண்ட நான், அதற்கான ஆதாரங்களை வெகு பாடுபட்டு சேர்த்து,பெரிய நுபல் எழுதி, அச்சுக்கு கொடுத்திருந்தேன். அப்போதே தமிழக பத்திரிகையாளர்களது வாழ்க்கை முழுவதும் தொகுக்கப்பட வேண்டு மென்ற ஆசை உதித்தது. ஒரு தனி நபர் செய்யக்கூடிய பணி அல்ல அது.\nடி.வி.ஆர்., 1984ல் அமரரானார். அதற்கு மூன்றாண்டுகள் முடிந்த பின், டி.வி.ஆரது வாழ்க்கை வரலாற்றை எழுதலாமே என்ற ஆசை எழுந்தது. டி.வி.ஆரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் திரட்டுவதில் பல சிக்கல்கள் இருந்தன. டி.வி.ஆர்., நாட்குறிப்பு ஏதும் வைத்திருந்ததாகத் தெரிய வில்லை. அவரது குமாரர்கள் கல்லூரிகளில் படிக்க ஊரை விட்டுச் சென்றுவிட்டதால், டி.வி.ஆரது நடுவயது வாழ்க்கைப் பற்றி முழுமை யாக அவர்களால் கூற இயலவில்லை. திருநெல்வேலி வந்த பின்னர் அவரது வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் உள்ள வாழ்க்கை எப்படி இருந்தது தடயம் கிடைப்பது மிகக் கடினமாகவே இருந்தது.\nநான் சோர்வடையவில்லை. தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கைச் சரித நூல்கள் ஒன்று விடாமல் படித்தேன். தமிழ்த்தாத்தா உ.வே.சாமி நாதய்யர், ‘என் சரிதம்’ எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் அவரோ, தேதி வாரியாக எழுதி உள்ளார். நானோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டவனாக இருந்தேன்.\nஇந்த நிலையில் ‘கல்கி’ பற்றி சுந்தா எழுதி, 1976ல் வெளிவந்த, ‘பொன்னியின் புதல்வன்’ நுபலைப் படிக்க நேர்ந்தது. அதில், உலகில் வெளிவந்த வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் பலவற்றையும், அதன் ஆசிரியர்கள் கையாண்ட யுக்திகளையும், சுந்தாவும், ‘கல்கி’ ஆசிரியர் ராஜேந்திரனும் படித்து பார்த்த விவரங்கள் இருந்தன. அதில் ஒன்று, ‘பேர்ல் பக்கின்’ வாழ்க்கை வரலாறு. இது பேட்டி வடிவில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு இப்போது புதிய வழி கிடைத்துவிட்டது. டி.வி.ஆரது பழைய நண்பர்கள் பலரைக் கண்டு, அவர்களிடம் பேட்டிகள் கேட்டு, நுபலை எழுதி முடிக்கலாம் என்பதே எனக்குக் கிடைத்த புதிய வழி.\nடி.வி.ஆரின் நண்பர்கள் யார் யார் எங்கே இருக்கிறார்கள் இதுவெல்லாம் புதிராகவே இருந்தது. திருவனந்தபுரம், ‘தினமலர்’ பழைய இதழ்களின் தொகுப்புக்கள் அனைத்தையும் கவனமாகப் படித்தேன். அதில் உள்ள செய்திகளில் அடிக்கடி வரும் பெயர்களை குறித்துக்கொண்டேன். சில பெயர்களுக்கு, பதவிகளும், இன்னும் சிலருக்கு சிறிய படத்துடன் செய்திகளும் இருந்தன. இவைகளை கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தில் தேடத் தொடங்கினேன்.\nநான் சேகரித்த பெயர்கள் 164. இவர்களுக்கு இப்போது வயது 75க்கும் அதிகம் இருக்கும். பலரைப் பற்றி விவரம் கிடைக்கத்தான் செய்தது. ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர் என்பதைத்தான் தெரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. ஒரு சிலர் வயது அதிகமானதால் சொன்ன வரிகளையே மணிக்கணக்கில் கீறல் விழுந்த ரெக்கார்டுகள் ஒலிப்பது போல ஒலித்தனர். பலர் படுத்த படுக்கை. மிகவும் கஷ்டப்பட்டு வீட்டைக் கண்டுபிடித்துப் போனால், ‘ஒரு வாரம் முன்னால் வரக்கூடாதா அவர் காலமாகி ஒரு வாரமாகிறதே அவர் காலமாகி ஒரு வாரமாகிறதே’ என்ற சொல்லைக் கேட்கும் நிலை.\nஎப்படியோ . . . இந்த துப்பறியும் வேலையில் 59 பேரை கண்டுபிடித்து விட்டேன். இதற்கு பெரிதும் உதவிய முழுப்பெருமையும் நாகர் கோவிலில் நீண்டகாலம் எங்கள் நிருபராக இருந்த ரிச்சர்டை சாரும். கிட்டத்தட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு மாதங்கள் என்னுடன் நடையாய் நடந்தார். திருவனந்தபுரத்தைப் பொறுத்தவரை, குழித்துறை நிருபர் கே.எஸ். ஆறுமுகம் பிள்ளையின் உதவி மறக்க முடியாதது. யாருமே அண்ட முடியாத மூன்று முக்கியமானவர்களை அன்றைய நிருபர் சம்சுதீன் அணுகி உதவிகள் பெற்றுத்தந்தார். ஒரு நபர் சிக்கினால், அவர், தனக்கும், டி.வி.ஆருக்கும் வேண்டிய ஒருவரது முகவரியைத் தருவார். இப்படியாக 60 பேரை பேட்டி கண்டு விவரங்கள் பெற்றேன்.\nநான் பார்த்த அனைவருமே டி.வி.ஆர். மீது தேவதா விஸ்வாசம் உள்ள நண்பர்களாக இருந்தனர். ஒரு சில உதாரணங்களை கூறியே ஆக வேண்டும். மாறாயக்குட்டிபிள்ளை கடும் இதய நோயாளி, பேசவே கூடாது என்று டாக்டர்கள் தடை போட, அவரது வீட்டார், றிவீட்டில் பிள்ளை இல்லைறீ என, என்னைத் திரும்ப அனுப்பிவிட்டனர். தொடர்ந்து போன் மூலம் தொடர்புகொண்டதில், ஒருமுறை அவரே பேசினார். உடனே வீட்டுக்கு வரச் சொன்னார். மூன்று நிமிஷம் பேசினால் ஒரு மாத்திரை சாப்பிட்டாக வேண்டும். மாத்திரை பாட்டிலை மேஜை மீது வைத்துக் கொண்டு, ‘டி.வி.ஆரைப் பற்றி நினைத்தாலே வியாதி குறைந்துவிடும்’ என்று கூறிய தகவல்கள் என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது.\nமுன்னாள் எம்.பி., சிவன்பிள்ளை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். என் கடிதம் கிடைத்ததும், தனக்கு உதவியாள ராக இருந்தவர்களிடம் ஒவ்வொரு நாளும் சில வரிகளை சொல்லி எழுதி அனுப்பியது மறக்க முடியாதது. புதுச்சேரி தேச பக்தரும், முன்னாள் அமைச்சருமான வ.சுப்பையா அவர்கள் உடல்நலம் கெட்டு நாக்கு பேச இயலாத நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் பேச்சு வரும் என்றனர். பல நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் பேச முடிந்தது. உடனே அவரது மனைவியார் சரஸ்வதி மூலம் தந்தி கொடுத்து வரச்சொல்லி கூறிய தகவல்கள் அபூர்வமான தாகும்.\nதஞ்சைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த வி.ஐ.சுப்பிர மணியத்திற்கும், டி.வி.ஆருக்கும் தொடர்பு உண்டு என தெரிந்து தஞ்சைக்கு தபால் எழுதினேன். உடனே புறப்பட்டு வரச்சொல்லி தந்தி கொடுத்தார். இந்த நுபல் எழுத தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வதாகவும், வேண்டுமானால் புரூப் கூட திருத்தித் தருவதாகவும் அவர் கூறியது எனக்கு புது தெம்பை உண்டாக்கியது. வயதான நிலையில் முன்னாள் ரயில்வே உதவி அமைச்சர் ஓ.வி. அழகேசன் அவர்களை செங்கல்பட்டில் அவரது வீட்டில் சந்தித்தேன். அவரோ, ‘நான் ரயில்வே அமைச்சராக இருந்தவன் என்பதை நினைவு வைத்துள்ளவர் நீங்கள்தான்’ என்று வேதனையுடன், வேடிக்கையாக கூறி, டி.வி.ஆர்., பற்றி நினைவுகளை கூறினார்.\nடி.வி.ஆரின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை அவர்களது சொந்தக் காரர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அதில் எனக்கு நம்பிக்கை யில்லை. கண்ணதாசன் ஒருசமயம் கூறினார்: புதுச்சேரி போய் இருந்தேன். பாரதியார் வசித்த வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரருக்கு 85 வயதிருக்கும். பாரதியார் காலம் முதல் அந்த வீட்டிலேயே உள்ளார். அவரிடம் பாரதியாரைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என போய் கேட்டேன். அதற்கு அவர், ‘நன்றாகத் தெரியும். ஆனால் அவருக்கு (பாரதியாருக்கு) இத்தனை புகழ் வரும் என்று அன்றே தெரிந்திருந்தால் அவருடன் நெருங்கிப் பழகி இருப்பேனே’ என்றா ராம். . . இதைப் போலத்தான் புகழ் வந்தபின் ஒவ்வொருவரும் பல கதைகளை சொல்வர்; அவைகள் வரலாறு ஆகாது.\nஆனால், றிசென்னையில் வசித்த எழுத்தாளர் பரந்தாமன் நிறைய தகவல் தரலாம்றீ என்று டி.வி.ஆருக்கு நெருக்கமானவர்கள் பலர் கூற, அவரை பல முறை சென்னை சென்று பார்த்தேன். எழுத்தாளர் களிடம் ஒன்றை எழுதி வாங்குவது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் நினைவுபடுத்தி சென்னைக்குத் தவறாமல் கார்டு ஒன்று போடுவேன். இது எட்டு மாதம் நடந்தது. இந்த கார்டு தொந்தரவு பொறுக்க முடியாமல் அபூர்வமாக ஏராளமான இளமை நினைவுகளை சுவையாக எழுதி அனுப்பினார் பரந்தாமன்.\nதென்குமரி தமிழர் போராட்டம் என்றால் தேச பக்தர் மணி அண்ணாச்சி தான் நினைவுக்கு வருவார். பிடிவாதக்காரர், தன்மான உணர்வு மிக்கவர், பெரும் சாதனைகளைச் செய்தவர். எழுத்தாளர். நெருங்கிப் பழக பலரும் கொஞ்சம் பயப்படவே செய்தனர். நான் போய் பார்த்தபோது பழைய ரெக்கார்டுகள், மினிட்டுகள், புகைப் படங்கள் எல்லாவற்றையும் தேடித் தந்து, சந்தேகங்கள் பலவற்றைத் தீர்த்து வைத்தார். தமிழர் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பற்றி திருவனந்தபுரம் உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் தலைமையில் நீதி விசாரணை நடைபெற்றது. அந்த தீர்ப்பு விவரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை. திருவனந்தபுரத்தில் தேடினால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் சேர்ந்த பின்னர் அங்கிருந்து பல ரெக் கார்டுகளை கொண்டுவரவில்லை என்று கூறிவிட்டனர். தேடோ தேடென்று தேடினேன். நல்ல வேளையாக, பிரபல வழக்கறிஞரும், முன்னாள் எம்.பி.,யுமான ஏ.ஏ.இரசாக்கிடம் ஒரு பிரதி இருந்தது. ‘நான்கு மணிநேரம்தான் தர முடியும்’ என்ற கண்டிப்புடன் தந்து உதவினார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் பல பொதுகாரியங்கள், அதற்காக அச்சான நோட்டீஸ்கள், பத்திரிகை செய்திகள் பலவற்றையும் தேதி வாரியாக பைண்டிங் செய்து வைத்திருப்பவர் படேல் சுந்தரம் பிள்ளை. அந்த முதியவர் வீட்டுக்கு பலதடவை போய் பல சந்தேகங் களை தீர்த்துக்கொண்டேன். நாகர்கோவில் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டை 1958ல் டி.வி.ஆர்., முன்னின்று நடத்தினார். அது பற்றி ‘கல்கி’யில் வெளியான கட்டுரையை நகல் எடுத்துக்கொள்ள உதவினார், ‘கல்கி’ ஆசிரியர் ராஜேந்திரன்.\nபடங்கள் வேண்டுமே. . . ஒரு படம்கூட டி.வி.ஆர்., வீட்டில் இல்லை. அந்தக்காலத்தில், ‘பிளாஷ்’ கிடையாது. கட்டிடங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்க முடியாது. முக்காலியில் கேமிரா, அதன் மீது ஒரு பெரிய கருப்பு போர்வை, எல்லாரையும் திறந்த வெளியில் வரிசையாக உட்கார்த்தி, றிகொஞ்சம் சிரியுங்கள்றீ என கூறி படமெடுப்பார் போட்டோ கிராப்பர்.\nபெரிய, பெரிய குரூப் போட்டோக்கள் இரண்டு தலைமுறைக்கு முந்தியது. கன்னியாகுமரி மாவட்ட பங்களாக்களில் ஏதோ ஒரு கிடங்கில் கிடந்த படங்களைத் தேட, டி.வி.ஆரின் நண்பர்கள் அனுமதித்தனர். அவைகளை தேடி எடுத்து அழுக்கு நீக்கி அபூர்வமாக அழகாக மீண்டும் பிரதி எடுத்துத் தந்தார் நாகர்கோவில் நியூ ஸ்டூடியோ உரிமையாளர் என்.எஸ்.கே.பெருமாள். நல்லவேளையாக வாஞ்சியூர், திருநெல்வேலி தச்சநல்லுபர் அலுவலகங்களை அப்போதே படம் எடுத்து வைத்தேன். இன்று அங்கே பெரிய பெரிய பங்களாக்கள் காணப்படுகின்றன.\nநுபலை வடிவமைக்க மதுரை, சென்னையில் உள்ள, ‘தினமலர்’ சகோதர, சகோதரிகள் தொடர்ந்து உதவினர். அவர்களது கடுமையான உழைப்பை மறக்க முடியாது. இதன் புரூப்களைப் பார்த்து பிழைகளை திருத்தி உதவியவர்கள் பேராசிரியர் வளன் அரசு மற்றும் தமிழப்பன். டி.வி.ஆரின் இளமைக் கால சம்பவங்கள் அதிகம் கிடைக்கவில்லை. மத்திய காலத்தில் - ‘தினமலர்’ ஆரம்பமாவதற்கு முன் - ஏராளமான பொது தொண்டுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ‘தினமலர்’ தொடங்கிய பின் தனது பத்திரிகை மூலம் மக்கள் சேவையை பெரிய அளவில் செய்து முடித்துள்ளார். ஆகவே, பத்திரிகையை நேரடியாக டி.வி.ஆர்., கவனித்த கால் நுபற்றாண்டு பணிகள் சிலவற்றையும் தொட்டுக் காட்டி உள்ளேன்.\nஇது ஒரு தனி நபரது வரலாறு மட்டுமல்ல . . . கால் நுபற்றாண்டு கன்னியாகுமரி மாவட்ட, தமிழக வரலாறுகள் சிலவும் இணைந் துள்ளன. உண்மையில், ‘தினமலர்’ தொடக்க கால முதல் இன்று வரை செய்த மக்கள் பணிகள் பற்றி ஒரு பெரிய ஆய்வு நுபல் வருவதே நியாயம். அதை பிற்காலத்தில் யாராவது செய்வர் என்ற நம்பிக்கை உண்டு. பேட்டிகள் தந்து உதவிய 60 பெரியோர்களில் நுபல் வெளிவர வருஷங்கள் பல ஆனதால், இன்றைக்கு 10 பேர் இருப்பார்களா என்பதே சந்தேகம். பணியில் உதவிய அந்த அமரர்களுக்கு எனது மனப்பூர்வமான அஞ்சலிகளை கூறிக்கொள்வது அவசியமாகி உள்ளது. இந்த நுபலில் எல்லா தகவல்களையும் சொல்லிவிட்டதாக நினைக்கக்கூடாது. இது ஒரு சிறிய ஆரம்பம். எதிர்காலத்திலும் இதன் தொடர்ச்சியை யாராவது ஒருவர் செய்வார் என நம்புகிறேன்.\nமூன்று கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் தந்த குழந்தை டி.வி.ஆர்,. அவரது மகத்தான சாதனையான, ‘தினமலர்’ இதழின் சின்னம் தாமரை. ஆகவே இவைகளை நினைவுபடுத்தும் வகையில் நுபலுக்கு, ‘கடல் தாமரை’ என்று பெயர் சூட்டி உள்ளேன்.\n» தினமலர் முதல் பக்கம்\n» கடல் தாமரை முதல் பக்கம்\nகேர ' லாஸ் '\nஅழகிரி பேரணி: தலைவர்களுக்கு அழைப்பு ஆகஸ்ட் 20,2018\n வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகளுக்கு நிதி ஒதுக்கீடு ஆகஸ்ட் 20,2018\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு ஆகஸ்ட் 20,2018\nமணிசங்கர் அய்யர் மீண்டும் சேர்ப்பு ஏன்\nவாராக்கடன் பிரச்னை; ரகுராம் ராஜனிடம் யோசனை ஆகஸ்ட் 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44871-government-will-bring-ordinance-if-top-court-dilutes-dalit-law-ram-vilas-paswan.html", "date_download": "2018-08-20T18:47:03Z", "digest": "sha1:PXT35HLBEYVJ2ZT2AM4BJRPXZFD5FQD3", "length": 9597, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்சி/எஸ்டி சட்டத்தை காக்க அவசர சட்டம் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தகவல் | Government Will Bring Ordinance If Top Court Dilutes Dalit Law Ram Vilas Paswan", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nஎஸ்சி/எஸ்டி சட்டத்தை காக்க அவசர சட்டம் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தகவல்\nஎஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்தால், அவசர சட்டம் மூலம் அச்சட்டம் பாதுகாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.\nசென்னை வந்த மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீர்த்துப் போகச் செய்யாது என்று நம்புவதாகத் தெரிவித்தார். அது நடக்காமல் போனால், அவசர சட்டம் இயற்றுவதன்மூலம் எஸ்சி/எஸ்டி சட்டத்தில் மாற்றங்கள் இல்லாமல் மத்திய அரசு பாதுகாக்கும் என்றும் பாஸ்வான் தெரிவித்தார்.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் மாற்றமின்றி தொடர்ந்திட எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.\nகாஷ்மீரில் சென்னை இளைஞர் உயிரிழப்பு: மெக்பூபா முப்தி பதவி விலக வலியுறுத்தல்\nகாவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 மாதங்கள் ரேசன் வாங்காவிட்டால் ரேசன் அட்டை ரத்து - மத்திய அமைச்சர்\nஎஸ்சி, எஸ்டி விவகாரத்தில் அவசரச் சட்டம்\nகுழந்தைகளில் ஏது மதம் : ஆசிஃபாவின் தந்தை\n''வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச்செய்வதா\nமோடிக்கு ரத்தத்தில் கடிதம்: அந்தக் கோரிக்கை என்ன\nஎஸ்.சி, எஸ்.டி தடுப்பு சட்டம் - நாடு முழுவதும் வெடித்த போராட்டங்கள்\nஜி.எஸ்.டி விலைமாற்ற கெடு நீட்டிப்பு: மத்திய அமைச்சர்\nநீட் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால் என்ன செய்யலாம்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: சட்ட முன்வடிவு நிறைவேறியது\nRelated Tags : எஸ்சி/எஸ்டி , வன்கொடுமை தடுப்புச் சட்டம் , ராம்விலாஸ் பாஸ்வான் , Ram Vilas Paswan , Ordinance , SC/ST Act\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீரில் சென்னை இளைஞர் உயிரிழப்பு: மெக்பூபா முப்தி பதவி விலக வலியுறுத்தல்\nகாவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு - 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2017/09/india-economy-slow-down.html", "date_download": "2018-08-20T18:13:25Z", "digest": "sha1:73GY57PCJEVFEG6XVE2LZATEHMGVMTNC", "length": 12524, "nlines": 91, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பங்குச்சந்தையின் தொடர்ச்சியான சரிவின் பின் பல காரணிகள்", "raw_content": "\nபங்குச்சந்தையின் தொடர்ச்சியான சரிவின் பின் பல காரணிகள்\nஇன்றுடன் தொடர்ந்து ஐந்து நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிந்து வருகிறது.\nஇதற்கு ஆரம்ப புள்ளியாக வட கொரியாவின் மிரட்டல்கள் இருந்தன.\nஇதற்கு முன்னர் வருடந்தோறும் வட கொரியா மிரட்டல்கள் கொடுப்பது வாடிக்கையான ஒன்று தான்.\nஆனால் இந்த முறை ட்ரம்ப் தான், கிம் ஜாங்கிற்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்ற பாணியில் வார்த்தை விளையாடல்களை தொடர்ந்து வருகிறார்.\nபொதுவாக கொரியன்கள் வார்த்தை விளையாட்டிற்கு எளிதில் டென்சன் ஆகக் கூடியவர்கள்.\nஅதனை கிம் ஜாங் சீரியஸாக எடுத்துக் கொண்டு ஹைட்ரஜன் குண்டு போட்டு விடுவேன் என்று அளவிற்கு சென்று விட்டார்.\nநாம் முன்பு சொன்னது போல் சீனா, ரஷ்யா மேசைககு வராத வரை தற்போதைய பதற்றங்களில் பெரிய அளவு மாற்றங்கள் வரப் போவதில்லை.\nதற்போது வேண்டும் என்றால் சீனா, ரஷ்யா தாங்கள் பொருளாதார தடை விதித்து விட்டோம் என்று ஐநாவிற்கு கண் துடைப்புகளை காட்டலாம்.\nஆனால் போர் என்று வந்தால் கண்டிப்பாக சீனா, ரஷ்யா நாடுகள் அமெரிக்கா பக்கம் வராது. அது மூன்றாம் உலக போர் என்ற அளவிற்கு செல்லாமல் இருந்தால் நல்லது.\nஆனால் தொடர்ந்து எட்டு மாதங்களாக உயர்வில் இருந்த சந்தை தற்போது கரடியின் பிடியில் வந்துள்ளது.\nஇதற்கு மேல் சொன்ன உலக நிகழ்வு மட்டும் காரணமில்லை.\nஇது வரை எதிர்பார்ப்பில் மட்டுமே சந்தை நிப்டியை உச்சத்திற்கு எடுத்து சென்றது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் நிதர்சனமாகும் காலம் தள்ளப்படுகின்றது என்பதை சந்தை உணர ஆரம்பித்துள்ளது.\nரூபாய் ஒழிப்பு நடவடிக்கையின் 'கிடைக்கும் என்று சொல்லப்பட்ட' முக்கிய பலன்கள் கிடைக்கவில்லை. ஆனால் அதிக அளவு நபர்கள் வருமான வரிக்குள் வந்தது போன்ற புற வழிப் பலன்கள் தான் அதிகமாக இருந்தன.\nஇது பணப் புழக்கத்தை பெரிதளவு பாதித்ததால் முதல் இரண்டு காலாண்டுகளில் பொருளாதாரம் தேக்க நிலைக்கு சென்றது.\nஅதன் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட GSTயில் நடைமுறையில் இருந்த குறைபாடுகள் அடுத்த இரண்டு காலண்டுகளையும் பாதிக்கும் போல் தெரிகிறது.\nஇவை இரண்டிற்கும் இடையே ஒரு கால இடைவெளி இருந்து இருந்தால் GDP இந்த அளவு பாதிக்கப்பட்டு இருக்காது.\nஇந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரு வகையில் நல்லது தான். ஆனாலும் அவை கொண்டு வரப்பட்ட காலங்களும், அவசர கோலமாக முன் திட்டமிடுதல் இல்லாதல் போன்றவை GDPயை மன்மோகன் காலத்தில் இல்லாத அளவிற்கு கீழ் நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.\nஇந்த நிலையில் தான் ஜெட்லி 50,000 கோடி அளவிற்கு திட்டங்களை அறிவித்து பொருளாதார தேக்கத்தை சரிப்படுத்த முனைந்துள்ளார்.\n என்ற கேள்விகள் இருக்கும் சூழ்நிலையில் இந்த ஐம்பதாயிரம் கோடியை அரசு எங்கிருந்து எடுக்க போகிறது என்ற கேள்விகள் வருகிறது.\nபுதிதாக வந்த GSTக்கு வணிகர்கள் தயார் படுத்திக்க கொள்ளாததால் ஏற்கனவே வந்து கொண்டிருந்த வணிக வரியும் குறைந்துள்ளது.\nஇதனால் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் கணக்கு போட்டு வைத்து இருந்த வருமானமும் குறைய வாய்ப்பு உள்ளது.\nஇந்த ஐம்பதாயிரம் கோடியை இந்த வருமானத்தில் கை வைத்தால் பட்ஜெட்டில் துண்டு விழும்.\nஇது நிதி பற்றாக்குறையை 3.2% அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கை பிசக வைக்கும்.\nஅப்படி நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் சமயத்தில் சர்வதேச கிரெடிட் ஏஜென்சிகள் இந்திய ரேட்டிங்கை குறைத்து விட வாய்ப்பு உள்ளது.'\nஅவ்வாறு குறைத்தால் வெளிநாட்டு முதலீடுகள் வருவது கடினம்.\nஇப்படி, ஒரு திரிசங்கு நிலை ஏற்பட்டது தான் அருண் ஜெட்லி அவசர கூட்டம் போடுவதற்கும், மோடி ஒரு குழுவை அமைப்பதற்கும் முக்கிய காரணம்.\nஇறுதியாக பார்த்தால் இந்த பாதிப்பு ஒரு தற்காலிகம் தான். தற்காலிகம் என்றால் ஒரு வருடம் வரை சுணக்கம் தரலாம்.\nஆனால் அதன் பின் மீள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஅதனால் ஒவ்வொரு முறை குறையும் போது கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை வாங்கி போடலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilwin.com/community/01/190462", "date_download": "2018-08-20T18:04:32Z", "digest": "sha1:7J7YVSQFB6HMZLFESKBQTY2223XMCKB6", "length": 8916, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் வாழ்வை தவற விட்ட வெளிநாட்டவர்! இலங்கை இளைஞர்களால் கிடைத்த மகிழ்ச்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகொழும்பில் வாழ்வை தவற விட்ட வெளிநாட்டவர் இலங்கை இளைஞர்களால் கிடைத்த மகிழ்ச்சி\nகொழும்பில் பதாதையுடன் நின்ற வெளிநாட்டவருக்கு உதவிய இலங்கை இளைஞர்கள் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nகொழும்பு கங்காராமைக்கு அருகில் சீன நாட்டவர் ஒருவர் பதாதையுடன் நின்றுள்ளார்.\nஅந்த பதாதையில், எனது மடிக்கணனி காணாமல் போயுள்ளது, அதனை கண்டுபிடித்து கொடுத்தால் பணம் வழங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனை அவதானித்த இலங்கை இளைஞர்கள் சிலர் குறித்த சீன நாட்டவரை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, “முச்சக்கரவண்டியில் மடிக்கணனி மறந்து வைத்துவிட்டதாகவும், அதில் அலுவலக ஆவணங்கள் இருந்ததாகவும், கணனி தவறும் பட்சத்தில் தனது தொழில் உட்பட வாழ்க்கை கேள்விக்குறியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த தகவல்களை பார்த்த குறித்த முச்சக்கரவண்டி சாரதி, சீன நாட்டவருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார்.\nபின்னர் சீன நாட்டவரை ஒருவாறு தேடி கண்டுபிடித்த முச்சக்கர வண்டி சாரதி, அவரிடம் மடிக்கணனியை ஒப்படைத்துள்ளார்.\nபதாதையில் எழுதப்பட்டது போன்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு 30000 ரூபாவை சீன நாட்டவர் சன்மானமாக வழங்கியுள்ளார்.\nகணனியை கண்டுபிடிக்க உதவிய அனைத்து இலங்கை இளைஞர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/04/blog-post_46.html", "date_download": "2018-08-20T18:04:33Z", "digest": "sha1:XNBTSXN2QS4PSMKBT5I4VZFJQRXYGLWS", "length": 17111, "nlines": 263, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : விஜய் மல்லைய்யாவுக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை?", "raw_content": "\nவிஜய் மல்லைய்யாவுக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 ஜட்ஜ் = 10 வருசத்துக்கு முன் 200 கோடி திருடுனியா\nகைதி = ஆமாங்க எஜமான்\nஜட்ஜ் = உனக்கு 200 கோடி அபராதம்\n லவ் லெட்டர்னே, இதுல எதுவுமே எழுதலையே\nஏதாவது எழுதுன லெட்டர்னா போலீஸ் கிட்டே புகார் தருவீங்க, இப்போ என்ன செய்வீங்க\n3 டியர், பழம் நழுவி பால்ல விழும்னு நினைச்சேன்\nபாழுங்கிணத்துல விழுந்திடுச்சு, வடை போச்சே\nகுழப்பாதீங்க, பழம் தானே போச்சு\n4 சார், திரட்டி ஃபங்க்சன்ல எள் தர்லை.\nபெண் வயக்சுக்கு வரும்போது எள்ளுருண்டை கொடுப்பாங்கன்னாங்களே\n5 இனி ஃபேஸ்புக் வர மாட்டேன், ஒரு பையனை லவ் பண்றேன்\n எப்படியும் அவன் வேற யார் கூடயாவது கடலை போடறானானு கண்காணிக்க வருவீங்க இல்ல\n இது கோவலனின் செல் ஃபோன் தான்\nகண்ணகி, ஏதாவது ஆதாரம் இருக்கா\nஅதுல டூயல் சிம் இருக்கும் பாருங்க, அவருக்கு எல்லாமே டபுள் தான்\n7 ஜட்ஜ் = எப்படி திடீர்னு ஃபாரீன் போனீங்க\nவிஜய் மல்லைய்யா = 7000 கோடி அடிக்கனும்னு முடிவு பண்ணப்பவே ஃபிளைட் புக் பண்ணிட்டனுங்க\nஇப்போத்தானே 200 கோடி அடிச்சிருக்கேன், இன்னும் அடிக்கவேண்டியது 6800 கோடி இருக்கு,விஜய் மல்லைய்யாவை முந்தனும்\n நாளைக்கு என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்களா\nஆமா, நாளை சண்டே, நர்ஸ்ங்க எல்லாம் லீவ், எந்த பயமும் இல்லாம நிம்மதியா அனுப்பலாம்\n உங்க பொண்ணு என்னை விரும்புது, கட்டி வைங்க.\nஃபேஸ்புக்ல நான் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் லைக்குது\n11 பழம் நழுவி பால்ல விழும்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள...\nசைடு டிஷ் நழுவி சரக்குல விழுந்திடுச்சு\n12 வரலாறு மிஸ் வனஜா= புராணக்கதை ஏதாவது சொல் பார்ப்போம்\nலொள் மாணவன் = சுய புராணக்கதை வேணா சொல்ட்டா\n13 பைத்தியம் மாதிரி லூசுத்தனமா மெண்டல் மாதிரி இருக்கேன்\n உங்களை மாதிரி இயல்பா இருக்கும் பொண்ணுங்களை பிடிக்கும்\n14 மேனேஜர் சார், வழக்கமா லோனுக்கான வட்டி 0.8% தானே, திடீர்னு 2% வசூல் பண்றீங்க\n7000 கோடி நட்டத்தை இப்டித்தான் வசூல் பண்ணி சரி செய்வோம்\n15 டியர், முதல் இரவில் வந்து என்ன வேடிக்கை\nபழம் நழுவி பால்ல விழட்டும்னு பார்த்துட்டு இருக்கேன்\n16 டியர், உங்களூக்கு புல்லாங்குழல் வாசிக்கத்தெரியும்மா\nம்ஹூம், குமுதம் , விகடன் , சினிமித்ரன், திரைச்சித்ரா வேணா டெய்லி வாசிப்பேன்\n17 டியர், நான் எப்போ வெளில கிளம்பினாலும் என் கையை இறுக்கமாப்பிடிச்சுக்கறீங்களே\nநீ போய்ட்டா செலவுக்கு பணம் யார் தருவா\n18 சொத்துக்குவிப்பு வழக்குக்கு சாட்சியா ஒரு பசு மாட்டை ஏன் கோர்ட் க்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க\n66 கோடி சொத்து சேர்த்தது யார்\n19 ஜட்ஜ் = விஜய் மல்லையாவை பார்த்தீங்களா\nமோடி = இதை ஏன் என் கிட்டே கேட்கறீங்க\nநீங்களும் வெளி நாட்ல இருக்கீங்க, அவரும் அங்கே தானே இருக்கார்\n20 உங்களுக்கு உமா வைத் தெரியுமா\nதெரியும், விஜய் ரசிகை, தெறிஉமா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nகளம் - சினிமா விமர்சனம்\nமனிதன் - சினிமா விமர்சனம்\nபங்குனி உத்திரம் முருகருக்கு அரோகரா அரோகரா கலைஞருக...\nஇப்போ நமக்கு நாமே பொய் சொல்வது அப்பாவா\nசீனத்தலைவர் vs ரஷ்யத்தலைவர் vs விஜய்\nகலைப்புலி தாணு வந்ததும் எல்லாம் நக்கலா சிரிக்கறாங்...\nஅடாது கேப்டன் அடம் பிடித்தாலும் விடாது கலைஞர்\nஜாதி மல்லி ஜாதி முல்லை\nஇந்த குலுக்கலை உங்களுக்கு வழங்குபவர் உங்கள் சரிதா ...\n,நம்ம கட்சிதான் முன்னிலைன்னு கருத்து கணிப்ப...\nமணல் கொள்ளையை யார் கண்டுக்காம இருக்காங்களோ அவர்களு...\nஅதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணைக்கண்டால்\nகமல் , அமீர்கான் விஜய் மல்லைய்யா\nநம்பி வாங்க,லோன் வாங்கிட்டு போங்க\nசிம்பு தேவன் vs அட்லி\nஅய்யய்ய்யோ திருடன் திருடன்.. கொல்லைப்பக்கம் வந்திர...\nடீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மா...\nபாரத் பிதா கே கலைஞர்.பாரத் மாதா கி ஜெ\nசத்ரியன் + சேதுபதி + தங்க மீன் கள் = தெறி\nஎல்லா”மே” “மே”ல இருக்கறவன் பார்த்துக்குவான்\nடாக்டர். பொண்ணுங்க பக்கத்துல வந்தாலே கை காலெல்லாம்...\nவிஜய் மல்லைய்யாவுக்கு பிடி வாரண்ட்\nஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்-Jacobinte Swargar...\nFAN (HINDI) - சினிமா விமர்சனம்\nதெறி - சினிமா விமர்சனம்\nதெறி - காமெடி கும்மி\nநித்யானந்தா, ரஞ்சிதா திருப்பதி திருபத்னி\nவிஜய் மல்லைய்யா vs ஸ்ரீ ஸ்ரீ\nஆண்களுக்கு ஆபத்து என வதந்தி: வீடுகள் முன்பு பெண்கள...\nவிஜய் மல்லையாவும், தென் காசி டீச்சரும்\nகிட்னி கல் பிரச்சனை வராமல் இருக்க\nகட்சில நெ 2 வுக்கெல்லாம் இடம் இல்லை, நெ1 மட்டும் த...\nஉப்புமா அடிக்கடி சாப்ட்டா ஆஸ்துமா வரும்\nஅய்யா திருமா, உங்களுக்கு வெச்சுட்டாங்க குருமா\nLOVE GAMES - சினிமா விமர்சனம் ( ஹிந்தி) கில்மா க்ர...\nதிமுக வின் கடைசி அஸ்திரம்\nஉங்க படத்துக்கு ஏன் அன்வர் னு டைட்டில் வெச்சிருக்க...\nயார் காமெடி பண்ணாலும் இது மொக்கை காமெடின்னு ஒரு பொ...\nதமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்னு கலைஞரே கேட்கல...\nKING LIAR - சினிமா விமர்சனம் ( மலையாளம்) காமெடி\nவிஜய் மல்லைய்யாவுக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை\n அவனை மட்டும் லவ் பண்றீங்களே\n டெய்லி அரை கிலோ வெயிட் ஏறிக்கிட்டே இருக்...\nஎதிர் வீட்டு ஃபிகர் பேரு மேரி, நான் சொன்னது தப்புன...\nபக்கத்து வீட்டுல இருக்கும் பக்கா பிகரை கரெக்ட் பண்...\nஐஸ்வர்யா அஃபிசியல் VS ஐஸ்பர்சனல் - தனுஷ் அதிர்ச்...\nஹலோ நான் பேய் பேசறேன் - சினிமா விமர்சனம்\nநான் ரதி யைப்பார்த்தேன்- அய்யய்யோ பாத்துட்டேன் பாத...\nடேய், நீ எவ்ளோ லோன் வாங்கினே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mbarchagar.com/2017/02/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2018-08-20T18:16:01Z", "digest": "sha1:MAVRAVQ7AHMFFDSPHOTFOQRF33RIX5HZ", "length": 4250, "nlines": 59, "source_domain": "mbarchagar.com", "title": "பெண்கள் செய்யத்தகாத செயல்கள் எவை – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nபெண்கள் செய்யத்தகாத செயல்கள் எவை\nபெண்கள் பூசணிக்கய் திருஷ்டி சுற்றி உடைக்கக் கூடாது.\nகர்ப்பமுள்ள பெண்கள் தேங்காயையும் (சிதறு காயாக) உடைக்கக் கூடாது.\nகணவனுக்குத் தெரியாமல் தர்மம் செய்யலாகாது (பெண்கள் கண்ணீர் விட்டால் வீட்டில் செல்வம் ஒருநாளும் தங்காது)\nதலையை விரித்துப் போட்டுக்கொண்டிருப்பதும், அவ்வாறே உட்கார்ந்திருப்பதும் இரு கைகளாலும் தலையைச் சொரிவதும் கூடாது.\nஇரவில் வீட்டைப் பெருக்க்க் கூடாது.\nபகலில் குப்பையைச் சேர்த்து வைக்காமல் பெருக்கியவுடன் கொண்டு போய்க் கொட்டிவிட வேண்டும்.\nதிருமணமான பெண்கள் காலில் மெட்டி இல்லாமல் இருக்கக் கூடாது.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← விநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த…\nபெண்கள் தலைக்குமேல் இருகைகளையும் உயர்த்திக்குவித்து வணங்கலாமா… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/employment/", "date_download": "2018-08-20T18:25:07Z", "digest": "sha1:BKQNYYYI2RNWDD5IIUHQIPHNG4PQKHB4", "length": 11213, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Employment News in Tamil | Job Updates in Tamil | Dinamani", "raw_content": "\nதிட்டமிட்டபடி இன்று ரயில்வே தேர்வு\nரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n பேங்க் ஆஃப் பரோடாவில் அதிகாரி வேலை; இன்றே கடைசி\nரிசர்வ் வங்கியில் மருத்துவ ஆலோசகர் வேலை\nவங்கிகளில் 4102 புரொபஷனரி அதிகாரி வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nபட்டதாரிகளுக்கு 42 ஆயிரம் சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை\nவிமான நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை\nஏர் இந்தி விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவன்ததில் நிரப்பப்பட உள்ள ஏர்கிராப்ட் டெக்னீசியன்\nதிட்டமிட்டபடி இன்று ரயில்வே தேர்வு\nகுரூப் 2ஏ தேர்வு: 27-இல் சான்றிதழ் சரிபார்ப்பு\n கப்பல் பணிமனையில் 318 பயிற்சிப் பணிகள்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனங்களில் வேலை\nதிட்டமிட்டபடி இன்று ரயில்வே தேர்வு\nரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுத்தேர்வு விடைத்தாள் திருத்திய விவகாரம்: 1,000 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்\nபொதுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதது தொடர்பாக 1,000 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.\nகுரூப் 2ஏ தேர்வு: 27-இல் சான்றிதழ் சரிபார்ப்பு\nகுரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 27 -ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.\nஆராய்ச்சி உதவியாளர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் நுகர்வோர் சட்டம், சட்ட இயல் இருக்கையில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு பூர்த்தி செய்யப்பட்ட\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு: ஆக. 16-இல் தொடக்கம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16 -ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் முதல் பள்ளிகளிலேயே அவர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய\nரயில்வே தேர்வு: 1.19 லட்சம் பேர் எழுதினர்\nரயில்வே துறையில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வியாழக்கிழமை நடந்த முதல் கட்ட தேர்வில் 1.19 லட்சம் பேர் பங்கேற்றனர்.\nஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில்\nதலைமையாசிரியர் பணியிடத்துக்கு இன்று கலந்தாய்வு\nஅரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்துக்கு பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.\nசுருக்கெழுத்து தட்டச்சர் பதவி உயர்வில் புதிய நடைமுறை: அரசு உத்தரவு\nசுருக்கெழுத்து தட்டச்சர் பதவி உயர்வில் புதிய நடைமுறையைப் பின்பற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தர நிலையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/high-court-bench-madurai-orders-file-report-fire-accident-meenakshi-amman-temple-310595.html", "date_download": "2018-08-20T18:52:49Z", "digest": "sha1:T6VBRSF4QSBSPDCJC2QRZTUTIFQDB2IY", "length": 10691, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு! | High court bench of Madurai orders to file a report on the fire accident in Meenakshi Amman temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு\nமீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு\nகேரள வெள்ள பாதிப்பு அதி தீவிர பேரிடராக அறிவிப்பு\nதங்கராசா வாஜ்பாய் இறந்து விட்டாரே.. மதுரை சின்னப் பிள்ளை கண்ணீர் மல்க அஞ்சலி\nகட்சியும் ரெடி... கொடியும் ரெடி... மதுரையைக் கலக்கும் \"கதிமுக\"... அழகிரி ஆதரவாளர்களால் பரபரப்பு\n10 வருஷமா டிடிவி தினகரன் எங்கே போனார்.. என்ன சொல்லி வாக்கு கேட்பார்.. அமைச்சர் உதயகுமார் கேள்வி\nமதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தால் வரலாற்று சிறப்பு மிக்க வசுந்தராயர் மண்டபம் பெரும் சேதமடைந்தது.\nஇந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அபுல் கலாம் ஆசாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.\nஅனைத்து கோவில்களில் தீத்தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்றும் ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. மேலும் மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தின் தற்போதைய நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழ் மேம்பாட்டு வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை வரும் 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையையும் பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.\n(மதுரை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nmadurai meenakshi amman temple fire accident high court bench report மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து உயர்நீதிமன்ற கிளை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/381-100", "date_download": "2018-08-20T18:48:11Z", "digest": "sha1:LZXLLCWX7LPPT2AZDSE4WKPXPSBXFTAN", "length": 8758, "nlines": 110, "source_domain": "eelanatham.net", "title": "இந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி - eelanatham.net", "raw_content": "\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி\nஇந்தியாவில் உள்ள பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. இதில் இது வரை 96 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது. காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nலக்னோ,மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரெயில் பாதையாக இருப்பதால் பல ரெயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.\nமூன்று ,நான்கு முறை அதிர்ந்த ரெயில் -- பயணி பேட்டி\nவிபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த , கிருஷ்ண கேஷவ் என்பவர் , விபத்து நடந்த போது மூன்று நான்கு முறை பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறினார்.\n`` நான் எஸ்-12 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது காலை சுமார் 3 மணி இருக்கும்., நான் விழித்துக்கொண்டேன். . எங்கும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் பெட்டியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை`` என்றார் அவர்.\nமேலும் கூறிய கிருஷ்ண கேஷவ், ``நாங்கள் எல்லோரும் பெட்டியில் இருந்து இறங்கினோம். வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்த்து. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டிருந்ததையும், சில பெட்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருந்ததையும் பார்த்தோம்``, என்றார்.\n` அக்கம்பக்கத்திலிள்ள கிராமங்களிலிருந்து பலர் வந்து சிக்கிக்கொண்ட பயணிகளை வெளியே கொண்டுவர உதவினர்,`` என்றார் கேஷவ்.\n``போலிஸார் ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் வந்தனர். ஆம்புலன்ஸ்கள் வந்தன . ஆனால் எங்களுக்கு மேலும் உதவி வேண்டும்`` என்றார் கேஷவ்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Nov 20, 2016 - 43869 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Nov 20, 2016 - 43869 Views\nMore in this category: « பெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை பிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://farmingnature.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-08-20T18:09:12Z", "digest": "sha1:L6C3G5NXAAG2WDMML7EJCY6FLBWXWMKT", "length": 10226, "nlines": 57, "source_domain": "farmingnature.blogspot.com", "title": "Natural farming: உரம் உங்களை கைவிடாது!", "raw_content": "\nகேள்வியே பட்டிராத பெயர்களில் எல்லாம் புதிது புதிதாக மக்களைத் தாக்குகின்றன நோய்கள். பல நோய்களுக்கும் காரணமாகச் சொல்லப்படுவது, செயற்கை உரங்கள் மற்றும் ரசாயன பூச்சிக் கொல்லிகளின் அதிகபட்ச பயன்பாடு. இயற்கையோடு இணைந்திருந்த நம் முன்னோர் காலத்தில் இத்தனை நோய்கள் இருந்ததில்லை.\nவசதி இருப்பவர்கள் செயற்கை உரக் கலப்பில்லாமல் இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுகளை வாங்கி, ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், புதுப்புது பிரச்னைகளுடன் வாழ்க்கைப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லையா\nஇயற்கை விவசாயத்துக்குப் பயன்படற மண் புழு உரம் இருக்கிற போது, உயிரைப் பறிக்கிற செயற்கை உரங்களை ஏன் திரும்பிப் பார்க்கணும்’’ எனக் கேட்கிறார் சரஸ்வதி. துறையூர், ஒட்டம்பட்டியைச் சேர்ந்த இவருக்கும், இவரது குடும்பத்தாருக்கும், மண்புழு உரம் தயாரிப்புதான் வாழ்க்கைக்கான ஆதாரம்’’ எனக் கேட்கிறார் சரஸ்வதி. துறையூர், ஒட்டம்பட்டியைச் சேர்ந்த இவருக்கும், இவரது குடும்பத்தாருக்கும், மண்புழு உரம் தயாரிப்புதான் வாழ்க்கைக்கான ஆதாரம் ‘‘அஞ்சாவதுக்கு மேல படிக்கலீங்க. கல்யாணத்துக்குப் பிறகு பத்து மாடுங்க வச்சு வளர்த்திட்டிருந்தோம்.\nபராமரிக்க வசதியில்லாம, வித்துட்டோம். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப, எங்க ஊர்ல மண் புழு உரம் தயாரிக்கிறது பத்தி\nமீட்டிங் போட்டாங்க. அதைப் பார்த்துட்டு, கத்துக்கிட்டு வந்து, பண்ண ஆரம்பிச்சோம். பொதுவா மண்புழுக்களை விவசாயிகளோட நண்பன்னு சொல்வாங்க. மண்புழு உரம், பயிர்களுக்கு பாதகமே பண்ணாது.\nநோய் வராமக் காப்பாத்தும். இந்த உரத்துல தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துன்னு எல்லாம் உண்டு. தொடர்ந்து பயன்படுத்தினா, மண் வளம் அதிகரிக்கும். பயிர்களோட வேர் வளர்ச்சியும், பூக்கும், காய்க்கும் சக்தியும் அதிகமாகும். வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவிகிதம் கூடுதல் மகசூல் பார்க்கலாம். பெரிய அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு மட்டுமில்லாம, சின்னத் தோட்டம், நர்சரி வச்சுப் பராமரிக்கிறவங்களும் மண்புழு தயாரிப்புத் தொழிலில் நம்பி இறங்கலாம். உரம் உங்களைக் கைவிடாது’’ என நம்பிக்கைத் தருகிறார்.\nமூலப்பொருள்கள் : மாட்டு எரு, மண் புழு, வைக்கோல், பழைய கோணி, தண்ணீர், தென்னை மட்டைகள், மூடி போட்ட தொட்டிகள் அல்லது வாளிகள். எங்கே வாங்கலாம்\n : மாட்டு எருவை மாடுகள் வளர்ப்போரிடம் வாங்கலாம். கிராமங்களில் மாட்டுப்பண்ணைகள் அதிகம் என்பதால் அங்கே சுலபமாகக் கிடைக்கும். விவசாயிகளிடமோ அல்லது ஏற்கனவே மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களிடமோ புழுக்களை வாங்கலாம். ஒரு டிராக்டர் அளவு மாட்டு எருவே ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு கிலோ புழுவின் விலை 350 ரூபாய். வண்டி வாடகை, கொட்டகை அல்லது தொட்டி கட்டும் செலவுகள் தனி.\nஇட வசதி : பெரிய அளவில் தொடங்க நினைப்போர், கொட்டகை போட்டு, 5 அடி அளவுள்ள தொட்டிகள் கட்டி தனி இடத்தில் தொடங்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், மூடிகளோடு கூடிய ஒரே அளவிலான தொட்டிகளிலேயே கூட புழுக்களை வளர்க்கலாம்.\n : தொட்டிகளில் எருவைக் கொட்டி, புழுவைக் கலந்து விட்டு, 15 நாள்களுக்கு தண்ணீர் விட வேண்டும். சமையலறைக் கழிவுகளைக் கூட தினமும் தொட்டியில் போட்டு, மண்ணால் மூடி விடலாம். புதிதாக மண் போட வேண்டியதில்லை.\nமண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே உரம். புழுக்களை விட்ட 7 முதல் 14 நாள்கள் கழித்து மேல்பரப்பில் குருணை வடிவில் காணப்படும் புழுவின் எச்சங்களைத் தனியே சேகரிக்க வேண்டும். பிறகு அதை சலித்தால், கிடைப்பதுதான் மண்புழு உரம்.\n : கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், விவசாயிகளிடம் விற்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள், நர்சரி வைத்திருப்போரிடமும், வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களிடமும் விற்பனைக்குக் கொடுக்கலாம்.\n : ஒரு மூட்டை உரம் 250 ரூபாய். ஒரு நாளைக்கு 5 அடி அளவுள்ள ஒரு தொட்டியிலிருந்து 1 மூட்டை உரம் எடுக்கலாம். 50 சதவிகித லாபம் உறுதி.\n : ஒரே நாள் பயிற்சி. கட்டணம் 250 ரூபாய்.\nமதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி\nசத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள்\nஇளைஞன் ஒருத்தரால் இவ்வளவும் முடியுமா\nசுவையான குடிநீரைப் பெற முடியும்\nசூரிய ஒளி மருந்து தெளிப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html", "date_download": "2018-08-20T18:49:00Z", "digest": "sha1:IZS3H5HZK4J7ZZPHZMDGFPZSJ6XWRLKG", "length": 216725, "nlines": 988, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: 'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா?", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா\nதமிழ் இஸ்லாமியர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று கேட்கும் பல சகோதர சகோதரிகளுக்காக, இஸ்லாமியர்களின் சார்பில் விளக்கம் சொல்வதற்காகவே இந்த இடுகை விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள். தயவுசெய்து விவாதிக்கவேண்டாம் விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள். தயவுசெய்து விவாதிக்கவேண்டாம் இதன் மூலம் 'பொங்கல்' சம்பந்தமாக இஸ்லாமியர்கள் மீதுள்ள‌ சிறு சிறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் களையப்பட்டு, நமக்கிடையே இருக்கும் சகோதரத்துவம் நீடிக்கவேண்டும் என்பதே நம் ஆவல்.\n(குறிப்பு: சென்ற வருடம் 19/01/2011 அன்று வெளியிட்ட இந்தப் பதிவின்போது கேட்டுக் கொண்டது \"தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்\" என்பது. நியாயமான சுய விளக்கங்களுக்குப் பிறகும் புரிந்துணர்வில்லாத சிலரும் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஆரோக்கியமான விவாதத்தின் மூலமாவது புரியவைப்போம் என்ற நோக்கத்தில் \"விவாதிக்கவேண்டாம்\" என்பது. நியாயமான சுய விளக்கங்களுக்குப் பிறகும் புரிந்துணர்வில்லாத சிலரும் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஆரோக்கியமான விவாதத்தின் மூலமாவது புரியவைப்போம் என்ற நோக்கத்தில் \"விவாதிக்கவேண்டாம்\" என்ற வேண்டுகோள் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கருத்துக்களாக இருந்தாலும் அழகிய முறையில் சொல்லுங்கள்.)\nதை மாதம் முதல் நாளிலிருந்து 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா என்பது, முழுமையான இயற்கை நெறிகளை மட்டும் சார்ந்த, அறுவடையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு வேளாண்மைத் திருவிழாவாகத்தான் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது. பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கூட இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வந்தனர். காலம் முழுதும் உழைக்கும் உழவர்களின் சந்தோஷத்திற்காக அந்த மிராசுதாரர்கள் அன்றைய தினம் அவர்களுக்கு புத்தாடைகள், நெல், கரும்பு, பழங்கள், பணம், தேவையான இன்னபிற பொருட்களையெல்லாம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பி வைப்பார்கள். அதைப் பெற்றுக் கொள்ளும் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கூடி புத்தரிசியில் பொங்கலிட்டு, உண்டு மகிழ்ந்து, ஓய்வெடுத்து சந்தோஷத்தைக் கொண்டாடி வந்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல... எந்த மதமும் சாராத ஒரு விழா, வணக்க வழிபாட்டுடன் தொடர்பில்லாத ஒரு விழா, தமிழர் திருவிழாவாகக் கொண்டு வர‌ப்பட்ட ஒரு விழா தனிப்பட்ட‌ மத வழிபாடுகள் ஊடுருவியதாக மாறிவிட்ட‌து.\nஆம், தற்காலப் பொங்கலை எடுத்துக் கொண்டால் எல்லா மதத்தவர்களும் சேர்ந்துக் கொண்டாடும் வகையில் அதன் கொண்டாட்டங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை 'ஒட்டு மொத்த தமிழர்களும் ஒற்றுமையுடன் எந்த வித ஜாதி, மத பேதமுமின்றி கொண்டாடக்கூடிய‌ ஒரே விழா பொங்கல் திருவிழா' என்று சொல்வது இன்றைய பொங்கல் கொண்டாட்டத்திற்கு நிச்சயமாக பொருந்தாது. ஒவ்வொரு மதத்தின‌ருக்கும் அவரவர்களுக்கென்ற சில அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. அந்தந்த மக்கள் அவற்றை முறையாக கடைப்பிடிப்பதிலும், தங்கள் இறைக்கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதிலும் அவரவருக்கும் உரிமையுண்டு. அதேபோல் ஒருவரின் வணக்க விஷயங்களில் அடுத்தவர் தலையிடுவதும், தங்களின் வணக்க வழிபாடுகளை அடுத்தவர்களிடம் வலுக்கட்டாயமாக‌ திணிப்பதும் முறையானதல்ல. எனவேதான் இஸ்லாம் மார்க்கம் மற்ற‌ மதங்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை.\nஆனால் \"தமிழர்களாக இருந்தாலே 'தமிழர் திருநாள்' எனப்படும் பொங்கலைக் கொண்டாடதான் வேண்டும்\" என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும். பொங்கல் கொண்டாடவில்லையென்றால் தமிழுக்கோ மற்ற தமிழர்களுக்கோ எதிரானவர்களாகவோ, தமிழ்ப் பற்று இல்லாதவர்களாகவோ யாரும் ஆகிவிடமாட்டார்கள். பொங்கல் பொதுவான ஒரு திருநாளாக இருந்தால் அதில் எந்தவொரு மதத்தினுடைய வழிபாட்டு அம்சங்களும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான ஒரு விழாவாக இருக்கவேண்டும். அதைவிடுத்து சூரிய வழிபாடு, படையல், பசு வழிபாடு, ஆராதனை என பிற‌ மார்க்கத்தில் தடுக்கப்பட்ட அனைத்தும் புகுத்தப்பட்ட ஒன்றை 'தமிழர் அனைவருக்கும் பொதுவான திருநாள்' () என்று கூறி கொண்டாட வலியுறுத்துவது, நிச்சயமாக பிற‌ மத/மார்க்கக் கொள்கைகளை அலட்சியப்படுத்தும் விதமாவே உள்ளது. சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் கூடி சந்தோஷ‌மாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாளாக பொங்கல் இருக்கட்டுமே என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கலாம். அதை 'மதச் சார்பற்ற தமிழர் திருவிழா'வாக மட்டும் கொண்டாடினாலே தவிர, மதச் சடங்குகளோடு பின்னிப் பிணைந்துள்ள இன்றைய பொங்கலை 'தமிழுணர்வு உள்ளவர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்' என்று சொல்வதில் எந்த விதத்திலும் நியாயமில்லை.\nமதச் சார்பற்று அனைவரும் கொண்டாட 'சமத்துவப் பொங்கல்' என்று தமிழக‌ அரசாங்கம் கொண்டு வந்த முறையில் கூட, எல்லா மதத்தவர்களும் விருந்தாளிகளாக அழைக்கப்படுவார்களே தவிர, கொண்டாடும் விதத்தை அரசாங்கம் அனைவருக்கும் பொதுவாக்கவில்லை. அதே சம்பிரதாயங்கள் மற்றும் வழிபாடுகளோடுதான் மதச் சார்பற்ற () ஒரு அரசாங்கமும் சமத்துவப் பொங்கல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட மறுப்பது பற்றி மற்ற‌ மக்களிடையே பரவலாக எழும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் குறிப்பிடவேண்டியுள்ளது.\n‍‍தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள பொங்கல் திருவிழாவை ஏன் தமிழ் இஸ்லாமியர்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் கொண்டாட மறுக்கிறீர்கள்\nபிற மத வணக்கங்களையும் வழிபாடுகளையும் உள்ளடக்கிய‌தாக மாற்றப்பட்ட ஒரு விழாவை, 'தமிழ்க் கலாச்சாரம்' என்ற பெயரில் அடுத்தவர்க‌ளும் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு யாருக்கும் எந்த விதத்திலும் உரிமையில்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். நவீனங்களின் முன்னேற்றங்களைப் பயன்படுத்திவரும் நாம், போக்குவரத்திற்கு மாட்டு வண்டியைப் பயன்படுத்துவதுதான் நமது கலாச்சாரம் என பிடிவாதம் பிடிக்க முடியுமா வேஷ்டி அணிவதுதான் தமிழனின் பண்பாடு என்று கூறினால் அதைக் கடைபிடித்துதான் ஆகவேண்டுமா வேஷ்டி அணிவதுதான் தமிழனின் பண்பாடு என்று கூறினால் அதைக் கடைபிடித்துதான் ஆகவேண்டுமா அனைவராலும் அது சாத்தியப்படுமா இப்படி அன்றாட வாழ்க்கை விஷயங்களிலேயே நம்மை தமிழ்க் கலாச்சாரப்படி மாற்றிக் கொள்ள முடியாதபோது, தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவரவர்களின் இறைக் கொள்கையில் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியும்\nஇஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை வணக்கமின்றி ஒரு விழாவைக் கொண்டாடுவதற்கு எந்த தடையுமில்லை. (உதாரணமாக சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாக்கள் போன்று.) ஏனெனில் ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும், அவனல்லாத எந்த படைப்பினங்களையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முதன்மையானது ஒரே இறைவன் அல்லாத பல தெய்வ வணக்கங்களாகவும், படைப்பினங்களை வணங்கும் விழாவாகவும் இருக்கும் பட்ச‌த்தில் அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதன் கட்டளைக்கு அடிபணிந்தே இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்த்துக் கொள்கிறார்களே தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது.\n‍‍‍நீங்களும் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் தமிழரின் திருநாளான பொங்கலை மதம் சார்ந்த காரண‌ங்களைக் கூறி புறம் தள்ளிவிட்டு, எப்படி 'தமிழர்கள்' என்று கூறிக் கொள்கிறீர்கள்\n'பொது விழா' என்று வாயளவில் சொல்லப்படும் ஒன்றை தனிப்பட்ட ஒரு மதம் சார்ந்த விஷயங்களைச் சேர்த்து கொண்டாடும்போது, அந்த விழாவை நடைமுறைப்படுத்த எது சிக்கலாக உள்ளதோ அதே மதம் சார்ந்த காரணங்களைதானே கூறமுடியும் இல்லாத வேறு ஒரு காரணத்தைக் கூறமுடியாது. மேலும் உங்கள் கேள்வியில் தமிழனாக இருப்பதற்கு முஸ்லிமாக இருக்கக் கூடாதோ என்ற சந்தேகம் வருகிறது. கடவுள் கொள்கையால் முஸ்லிம்களாகவும், தேசத்தால் இந்தியர்களாகவும் வாழும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு 'மொழியால் தமிழர்கள்தான்' என்று உரிமையோடு கூறிக் கொள்வதில் எந்த தயக்கமுமில்லை இல்லாத வேறு ஒரு காரணத்தைக் கூறமுடியாது. மேலும் உங்கள் கேள்வியில் தமிழனாக இருப்பதற்கு முஸ்லிமாக இருக்கக் கூடாதோ என்ற சந்தேகம் வருகிறது. கடவுள் கொள்கையால் முஸ்லிம்களாகவும், தேசத்தால் இந்தியர்களாகவும் வாழும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு 'மொழியால் தமிழர்கள்தான்' என்று உரிமையோடு கூறிக் கொள்வதில் எந்த தயக்கமுமில்லை எனவே பொங்கல் கொண்டாடாவிட்டாலும் (அவர்கள் இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவ‌ர்களோ) தமிழர்கள் தமிழர்கள்தான்.\n‍அப்படியானால் மத‌த்தின் பெயரால் தமிழ்ப் பண்பாட்டை மறுப்பதோ, வெறுப்பதோ சரியானதுதானா\n'தமிழ்ப் பண்பாடு', 'தமிழ்க் கலாச்சாரம்', 'தமிழர் திருநாள்' என்று 'தமிழ்'படுத்தி மட்டுமே பார்க்கிறீர்களே தவிர, அதை மற்றவர்களும் நடைமுறைப்படுத்த முடியாத சிக்கல்கள் நிறைந்துள்ளதை நீங்கள் உணரவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக பானையில் திருநீரு பூசி குங்குமம் வைப்பதும், மாடுகளுக்கு திலகமிட்டு ஆராதனை செய்வதும், தங்கள் விருப்ப‌ தெய்வங்களின் படங்களை வைத்து படையல் செய்வதும், சூரியனை வழிபட்டு பூஜிப்பதும் அவரவர்களின் உரிமை, விருப்பம். முன்பே சொன்னதுபோல் இஸ்லாம் பிற‌ மதங்களின் கொள்கை விஷயங்களில் தலையிடுவதில்லை. அதேபோல் எந்த நிலையிலும் தன்னுடைய அடிப்படை கொள்கைகள் தகர்க்கப்படுவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. ஆக, மதக் கொள்கைகள் கலக்காத ஒரு விழாவாக பொங்கல் இருக்குமானால் உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. தவிர இன்றைய வழக்கத்திலுள்ள‌ பொங்கலை இஸ்லாமியர்கள் கொண்டாடாமல் இருப்பதால் தமிழ்ப் பண்பாட்டை அவர்கள் வெறுப்பதாக ஆகாது. அவரவர் இறைக்கொள்கையின் உறுதிப்பாடு என்று எடுத்துக் கொள்வதுதான் மிகவும் நியாயமானது\nஇல்லையென்றால் பொங்கல் விழாவின்போது அனைவரும் ஒரே மத சடங்குகளின் பின்னால் செல்லாமல் அவரவர்க‌ளும் தங்க‌ளின் இறைவனை வணங்கி, பொங்கலிட்டு கொண்டாடலாமே\nஇஸ்லாத்தைப் பொறுத்தவ‌ரை வணக்கம், வழிபாடு என்று வந்தாலே அவரவர்களும் தாங்கள் நினைத்தப‌டியெல்லாம் வணக்கங்களை அமைத்துக் கொள்வதற்கு அனுமதியில்லை. ஒவ்வொரு வணக்கங்களுக்கும் ஒரு வரையறையை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதனால்தான், இஸ்லாமிய மக்களே அறியாமையினால் செய்யும் தர்கா வழிபாடு, சந்தனக்கூடு மற்றும் மூட நம்பிக்கைகள் கொண்ட வணக்கங்கள்/சடங்குகளை விட்டும் விலகி வாழும்படி பல இஸ்லாமிய அறிஞர்களும் உபதேசித்து வருகிறார்கள். அப்படியிருக்க பொங்கலுக்காக ஒரு தனி வழிபாடு செய்வது என்பது சாத்தியமில்லாதது. ஏனெனில் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றை தெரிந்தே செய்ய எந்த இஸ்லாமியர்களும் முன்வருவதில்லை. மற்றபடி பொங்கல் என்றாலே அறுவடை காலத்தின் மகிழ்ச்சிக்காக‌ புத்தரிசியைச் சமைத்து, கூடி சாப்பிடுவது மட்டும்தான் என்றால், அந்த கொண்டாட்டத்தில் முஸ்லிம்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.\nதமிழர்கள் அனைவரும் இந்த பொங்கல் திருவிழாவை ஒரே மாதிரியாகக் கொண்டாடினால்..\nஎப்படி ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்ததோ, அந்த நிலைக்கு அதைக் கொண்டு வந்தால் நீங்கள் சொல்வதுபோல் எல்லோரும் ஒரே மாதிரியாக நிச்சயம் கொண்டாடுவோம். திருநீரு பூசுவதில் ஆரம்பித்து எந்தவித சடங்கு/சம்பிரதாயங்கள், பூஜை/புனஸ்காரங்கள், படையல்/வண‌க்கமின்றி ஒரு பொங்கல் கொண்டாட அனைவரும் சேர்ந்து முன் வந்தால் அதற்கு இஸ்லாமியர்கள் தள்ளி நிற்கமாட்டார்கள். மேலே சொன்ன‌வை எதுவுமின்றி பொங்கல் சாத்தியமென்றால் ஆண்டுக்கொருமுறை அறுவடை காலத்தில் நாம் அனைவரும் கூடி பொங்கலிட்டு, பகிர்ந்துண்டு மகிழ்வோம் சரியான புரிந்துணர்வோடு சந்தோஷமாக வாழ்வோம்\nஅஸ்மா ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க ஒவ்வொன்றையும்.\nநீங்கள் எல்லாம் பொங்கல் கொண்டாட வில்லை என்று யார் அழுதார்கள். எனக்கு தெரிந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டு குடும்பத்துடன் உண்டு களிக்கும் எம் இலாமிய நண்பர்கள் நிறைய பேர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் உம்மைப்போல வீண் தர்க்கமும் விதண்டாவாதமும் செய்வதில்லை. அவர்கள் எங்களுடன் இருப்பதால் இஸ்லாமும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. உம்மை போண்டவர்கள் எல்லாம் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்வதே தவறு அய்யா. ஊரை கெடுத்து வைத்தது போதும். இனி இது போன்ற அரை வேக்காட்டுதனமாக எழுதாதீர்.\nஉங்கள இந்தியாவ விட்டு அடிச்சு வெரட்டிட்டு நாங்க இங்கயே தான் இருப்போம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nஅற்ப்புதமான ஆக்கம். மனமார்ந்த பாராட்டுக்கள். அது சரி நீங்க யாருக்கு இந்த விளக்கம்லாம் குடுத்து இருக்கீங்க தமிழ்நாட்டில இருக்க தன் மார்க்கம் தனக்கு மற்றவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று சொல்ற யாரும் இந்த கேள்விய கேட்கல சகோதாரி. இது ஒரு இந்து மதவெறி உள்ள ஒரு கூட்டம் தான் கேட்குது. நீங்க என்ன விளக்கம் குடுத்தாலும் இவங்களுக்கு புரியாது. நம்மளோட அன்பா, சகோதரர்களா பழகுற அனேக மாற்று மத சகோதரர்களுக்கு தெரியும் நாம் ஏன் பொங்கல் கொண்டாடுவது இல்லை என்று. அதனால் தான் அவர்கள் அந்த கேள்வியை கேட்கவில்லை. இதை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.\nநான் பொங்கல் கொண்டாட முடியாது, தீபாவளியும் கொண்டாட முடியாது. என்ன பண்ணுவீங்க உங்கனால என்ன பண்ண முடியும்\nடிஸ்கி 1 : இது என்னோட தனிப்பட்ட கருத்து. தயவு செய்து பிரசுரிக்கவும்.\nநீங்க தமிழ்மேல வச்சிருக்க பற்று புல்லரிக்க வைக்குது. நாங்க இனத்துரோகிங்க எப்படியோ போறோம். நீங்க தமிழ் ஆர்வலர் ஆச்சே, கோவில்கள்ல நடக்கிற பூஜைய தமிழுக்கு மாத்தச் சொல்லுங்களேன் . முடியுமா உங்களால\nடிஸ்கி 1 : இது கக்கு மாணிக்கம் மற்றும் அவர் தம் தோழர்களுக்கு மட்டுமே.\nஅட போடு அரிவாளே அப்படி\n//அற்ப்புதமான ஆக்கம். மனமார்ந்த பாராட்டுக்கள்//\n//அது சரி நீங்க யாருக்கு இந்த விளக்கம்லாம் குடுத்து இருக்கீங்க தமிழ்நாட்டில இருக்க தன் மார்க்கம் தனக்கு மற்றவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று சொல்ற யாரும் இந்த கேள்விய கேட்கல சகோதாரி. இது ஒரு இந்து மதவெறி உள்ள ஒரு கூட்டம் தான் கேட்குது. நீங்க என்ன விளக்கம் குடுத்தாலும் இவங்களுக்கு புரியாது. நம்மளோட அன்பா, சகோதரர்களா பழகுற அனேக மாற்று மத சகோதரர்களுக்கு தெரியும் நாம் ஏன் பொங்கல் கொண்டாடுவது இல்லை என்று. அதனால் தான் அவர்கள் அந்த கேள்வியை கேட்கவில்லை. இதை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.//\nஅந்த மாதிரியான‌ மதவெறிக் கூட்டம்தான் இதுபோன்ற தேவையில்லாத பிரச்சனைகளை எல்லாம் அவ்வப்போது கிளப்பிவிட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது எல்லோரும் புரிந்து வைத்துள்ள உண்மைதான் சகோ. அதைப் பார்த்து சிலநேரங்களில் நம்முடன் சகோதரத்துவத்துடன் பழகி வரும் மாற்றுமத நண்பர்கள்கூட \"பொங்கல் நீங்களும் கொண்டாடலாமே\"ன்னு புரியாமல் கேட்கிறார்கள் என்பதால்தான் இஸ்லாமியர்கள் சார்பாக சுயவிளக்கம் சொல்லி இதுபோன்று பதிவிட அவசியமாகியது சகோ. இதன் மூலம் அதுபோன்ற புரியாத மக்களுக்கு தெளிவு கிடைத்தால் சந்தோஷமே\n//நான் பொங்கல் கொண்டாட முடியாது, தீபாவளியும் கொண்டாட முடியாது. என்ன பண்ணுவீங்க உங்கனால என்ன பண்ண முடியும் உங்கனால என்ன பண்ண முடியும்\n:)) சுதந்திர இந்தியாவுல இருந்துக்கிட்டே என்ன மாதிரிலாம் நாட்டாமைப் பண்ணுறாங்க பாருங்க சகோ. அடுத்தவங்க மார்க்க விஷயத்தில் யாராலும் எதுவும் பண்ண முடியாதுதான். இதைப் புரிஞ்சவங்க மட்டும் அமைதியா இருக்காங்க.\n//உழைக்கும் உழவர்களின் சந்தோஷத்திற்காக அந்த மிராசுதாரர்கள் அன்றைய தினம் அவர்களுக்கு புத்தாடைகள், நெல், கரும்பு, பழங்கள், பணம், தேவையான இன்னபிற பொருட்களையெல்லாம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பி//\nஇன்றும் இந்தப் பழக்கம் எங்கள் ஊரில் இருந்து வருகிறது அக்கா. நமது பெருநாளுக்கும் பரிசு தந்து, அவர்களது திருநாளுக்கும் மனமகிழ்வோடு எல்லாம் கொடுத்து, அவர்கள் தரும் பதார்த்தங்களையும் பெற்றுக் கொள்வோம்.\nநல்ல விளக்கங்கள். வேளாண் விழாவாக இருந்தது, எப்போதிருந்து தற்போதைய பொங்கல் விழாவாக மாறியது என்ற தகவல் ஏதும் தெரியுமா அக்கா\nபொங்கலுக்கு முன்னால் இந்த பதிவு\nஅஸ்மா ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க ஒவ்வொன்றையும்.\nதேவையானவற்றை தெளிவாக்கினால்தான், சிறு சிறு ஆதங்கங்களும் பெரிய கசப்புகளாக மாறாமல் இருக்கும். ஆனா நாம எது சொன்னாலும் அதன் நல்ல நோக்கத்தைப் புரிந்துக் கொள்ளாமல் 'விதண்டாவாதம்', 'பழமை வாதம்' என்று வாய்க்கு வந்தபடி பேசவே சிலர் யோசிப்ப‌தில்லை. அவர்களைப் பற்றி நாம் கவலைக் கொள்ளாமல் விட்டுவிடுவதே நல்லது. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தோழி ஆமினா\n@ கக்கு - மாணிக்கம்...\n//நீங்கள் எல்லாம் பொங்கல் கொண்டாட வில்லை என்று யார் அழுதார்கள்//\nயாரும் அழத் தேவையில்லை சகோ. வலிந்து வந்து வற்புறுத்தும் சகோதர‌ர்கள், கொண்டாட மறுப்பதின் உண்மை நிலையை விளங்கிக் கொள்வதற்காகவே இந்த இடுகை என்று ஆரம்பத்திலேயே குறிப்படப்பட்டுள்ளதைப் பார்க்கவில்லையோ\n//எனக்கு தெரிந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டு குடும்பத்துடன் உண்டு களிக்கும் எம் இலாமிய நண்பர்கள் நிறைய பேர்கள் உள்ளனர்//\n அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் செய்கிறார்கள். அதனால் எல்லோரும் அறியாமையில்தான் இருக்கவேண்டுமா என்ன\n//அவர்கள் எல்லாம் உம்மைப்போல வீண் தர்க்கமும் விதண்டாவாதமும் செய்வதில்லை//\nஅமைதியான‌ முறையில் விளக்கம் சொல்வதே வீண் தர்க்கம், விதண்டாவாதம் என்றால், உங்களுடைய வார்த்தைகளை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது சகோ\n//அவர்கள் எங்களுடன் இருப்பதால் இஸ்லாமும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை//\nஇஸ்லாமியர்கள் செய்யும் தவறினால் இஸ்லாம் குறைந்து போய்விடும் என்று யாரும் சொல்லவில்லை.\n//உம்மை போண்டவர்கள் எல்லாம் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்வதே தவறு அய்யா//\nஆ..ஊ.. ன்னு இரண்டு எழுத்து சொன்னாலே நீங்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது, நாட்டைவிட்டு ஓடுங்கள் என்றுதான் சொல்வீர்கள்(எல்லோரும் அல்ல, உங்களை மாதிரியான ஆட்கள்). அதைச் சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையுமில்லை சகோ. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன் இன்னுயிரையும், வாழ்வின் அனைத்து சுகங்களையும் இழந்து நின்றவர்களின் வாரிசுகள், என்றுமே இந்திய மண்ணின் மைந்தர்கள்தான்\n//ஊரை கெடுத்து வைத்தது போதும். இனி இது போன்ற அரை வேக்காட்டுதனமாக எழுதாதீர்//\n\"விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள். தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்\" என்று ஆரம்பத்திலேயே கேட்டுக்கொண்ட பிறகும் இப்படியெல்லாம் பேசும் நீங்கள்தான் சகோ ஊரையும் உலகத்தையும் கெடுக்காமல் இருக்கணும். இங்கு சொல்லப்பட்டதெல்லாம் நெருங்கிய நண்பர்கள் எங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு விடையாகவும், இன்னும் பல சகோதரர்களின் ஆதங்கங்க‌ளுக்கு விளக்கமாகவும் முழு வேக்காட்டுடன்தான் எழுதப்பட்டுள்ளது. இவ்வள‌வு படிப்படியாக விளக்கங்கள் சொல்லியும் சரியான புரிந்துணர்வு இல்லாத உங்களின் பின்னூட்டம்தான் 'அரை'க்கூட இல்லை, கால் வேக்காட்டுத் தனமாக உள்ளது.\nஅழகிய முறையில் உங்கள் கருத்துக்கள் இருந்திருக்குமானால் வீணாக உங்களுக்கு இவ்வளவு பெரிய பதில் சொல்லும் இந்த நேரம் மிச்சமாகியிருக்கும் :(\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா\n//இன்றும் இந்தப் பழக்கம் எங்கள் ஊரில் இருந்து வருகிறது அக்கா. நமது பெருநாளுக்கும் பரிசு தந்து, அவர்களது திருநாளுக்கும் மனமகிழ்வோடு எல்லாம் கொடுத்து, அவர்கள் தரும் பதார்த்தங்களையும் பெற்றுக் கொள்வோம்//\nரொம்ப சந்தோஷம் ஹுஸைனம்மா, அதுபோன்ற சகோதரத்துவம் தொடர வாழ்த்துக்கள் எங்க ஊர் பக்கமும் அதுபோன்று நட்பு பாராட்டிக் கொள்வது இன்று வரை உண்டு.\n//நல்ல விளக்கங்கள். வேளாண் விழாவாக இருந்தது, எப்போதிருந்து தற்போதைய பொங்கல் விழாவாக மாறியது என்ற தகவல் ஏதும் தெரியுமா அக்கா\nஅறுவடை நாளைக் கொண்டாடி மகிழ வந்த ஒரு விழா சிறுக சிறுகதான் மாற்றம் கண்டதே தவிர, குறிப்பிட்ட நாளிலிருந்து திடீரென மாற்றம் பெறவில்லை ஹுஸைனம்மா.\nபொங்கலுக்கு முன்னால் இந்த பதிவு\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... முன்பே போடதான் உடல்நிலை சரியில்லையே ஆயிஷா :) கருத்திற்கு நன்றிமா\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\nகருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ.\nநண்பர் கக்கு-மணிக்கம் அப்வர்களுக்கு பதில் கொடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் உரிய முறையில் பதில் கொடுத்து விட்டீர்கள் மேலும் விவாதம் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதனால் விவாதம் செய்யும் என்னத்தை கைவிட்டு\nஇந்த பதிவிற்கான விளக்கத்திற்கு வருகிறேன்\nஆதி திராவிட பழங்குடி மக்களிடம் உருவ வழிபாடு இருக்கவில்லை ஆதி+ பரா+சக்தி=ஆதிபராசக்தியை தான் வழங்கினார்கள். ஆதி என்றால் இந்த உலகமும் உலகிலுள்ள உயிரினங்களும் தொன்றுவதற்கு முன்பே இருந்த. பரா என்றால் பெரிய, சக்தி என்றால் இறைவன்(அரபியில் அல்லாஹீ அக்பர்)அனைத்தையும் மிஞ்சிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய இறைவனை வானை நோக்கி கைகூப்பி வணங்கினார்கள்\nஆதி திராவிட மக்கள் மிருகங்களை வணங்கவில்லை\nஇன்னும் சொல்லப் போனால் மிருகங்களை வேட்டையாடி உண்டார்கள்\nஉணவை சமைத்து படையல் வைக்கிற பழக்கம் அவர்களிடம் இருக்கவில்லை\nதாலி கட்டுகிற பழக்கம் அவர்களிடம் இல்லை\nஊர்த்தலைவர் முன்னிலையில் பிடித்து இருக்கிறதா ஏத்துக்கொண்டாயா என்பார் மணமகளும் மணமகளும்\nஒப்புக் கொண்டவுடன் திருமணம் முடிந்துவிடும்\nவரதட்சனை பெண்ணிடம் வங்கும் பழக்கம் இருக்கவில்லை மணமகன் தான் வேட்டையாடிய பொருள்களை மணமகளுக்கு கொடுத்தான்.\nமொழியியல் அடிப்படையிலேயே ‘திராவிடம்’ பேசியவர்களுக்கு வலுவான வரலாற்றுச் சான்றுகளாகச் சிந்துசமவெளி அகழ்வுகள் அமைந்தன.\nதிராவிட மொழிகள் என்பதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், துளு,மலையாளம் தவிர ’ப்ராஹூய்’ என்பதும் ஒன்று.பலூசிஸ்தானத்தில் வழக்கத்திலிருந்த மொழி.இதனடிப்படையில் சிந்துவெளி நாகரிகத்தை’புரோட்டா எலாமோ’அரபிய நாகரிகக் கூறுகளுடையது என மெக் ஆல்பின் போன்ற\nவரலாற்றிஞர்கள் நிறுபித்தனர் எனவே தொல் இந்திய நாகரிகம் என்பது மேற்காசிய(மெசடோபிய)எலாமைட் அரபிய நாகரிகத்துடன் தொடர்புடையது\nதிராவிடக் கருத்தியலை அரசியற் தளத்தில் மிகப்பெரிய வீச்சுடையதாக்கிய பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் மேற்குறித்த உண்மைகளின் அடிப்படையில்’இஸ்லாமியர்கள் திராவிடர்களே’என்றார்\n’இஸ்லாம்என்பது திராவிடம்என்பதன் அரபிச் சொல்’\nஆக ஆதி தமிழர்கள் சரியான முறைப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது. நம்ம கக்கு- மணிக்கம் சொன்ன மாதிரி ஊரை கெடுத்து பார்பனியர்கள் தங்களின் உலையில் போட்டார்கள்.\nபார்பனியம் சடங்கு சம்பிரதாயம் வயிலாக ஆதி தமிழர் வாழ்வில் ஊடுருவி அவர்களின் வணக்க வழிபாடுகளை மாத்திப் போட்டார்கள்.\nநம்ம வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி\nவெள்ளையாக இருப்பவன் எப்படி பொய் சொல்வன் என்று கேட்பது போல\nபார்ப்பன வெள்ளைத்தொல் சொன்னதிற்கேல்லாம் தலையாட்டினார்கள்\nஇவர்கள் நோகமால் நொங்கு திண்டார்கள்\nபார்பன மனுதர்ம சட்டப்படி பிரமனன் விவசாயம் செய்யக்கூடாது விவசாய இரும்பிலான கருவிகளை பார்ப்பன் தொடுவது தீட்டு\nஅதாவது சூத்திர்ர்கள் சகதியில் உழன்று (சூத்திர்ர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் அதானால் சகதி அழுக்கில் இருப்பார்கள் என்றார்கள்) அருவடை செய்து களத்து மேட்டில் அளக்கும் போதே சாமிக்கு பாடி அளந்து விட்டுதான் அவர்களுக்கு அளக்க வேண்டும்\nவீட்டுக்கு தானியங்களை கொண்டு வந்து சேர்த்தவுடன் கோவில்களுக்கும் (பார்ப்பன் பிரம்மாவின் தலையில் பிறந்த்தால் தேவர்கள் தெய்வம்) சாமிகளான பார்ப்பனர்களுக்கும் படைக்க வேண்டும் இது தை மாசத்துல அறுவடை காலங்களில் நடக்கும் சம்புரதாயம்.\nஇப்படி ஒரு சமுதாயம் ஒசியில் வயிறு வளர்க்க எற்ப்படுத்தப்பட்ட சடங்கு சம்புரதாயம் இல்லாமல் எந்த சடங்குக்கும் உட்பாடமல்\nபொங்கல் வைத்தால் அனைவரும் சந்தோஷமாக சப்பிடுவதற்கு என்ன தடை இருக்கப் போகிறது\nஅல்ஹம்துலில்லாஹ் யார் மனதையும் புண்படுத்தாமல் நமது(இஸ்லாமியர்கள்) நிலையை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அக்கா...:)\n//அல்ஹம்துலில்லாஹ் யார் மனதையும் புண்படுத்தாமல் நமது(இஸ்லாமியர்கள்) நிலையை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அக்கா...:)//\n'யார் மனதையும் புண்படுத்தாமல்' என்பது நேர்மையான பார்வைக் கொண்ட யாருக்குமே புரியும் சகோ. ஆனால் இதற்கும் வந்து விதண்டாவாதம் பண்ணுகிறார்களே... என்ன சொல்வது தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி சகோ.\nநேற்று விளக்கமளித்து நீண்ட பின்னூட்டம் போட்டேன்\nஅது மனதை புன்படுத்துவது போல் இருந்தது என்று நினைக்கிறேன் அதுதான் தங்கள் வெளியிட வில்லையே\nநேற்று விளக்கமளித்து நீண்ட பின்னூட்டம் போட்டேன்\nஅது மனதை புன்படுத்துவது போல் இருந்தது என்று நினைக்கிறேன் அதுதான் தங்கள் வெளியிட வில்லையே//\nஎந்த பின்னூட்டமும் உங்களிடமிருந்து வரவில்லையே சகோ இந்த தலைப்பில் இதுதான் உங்களின் முதல் பின்னூட்டம். நீங்க send பண்ணும்போது ஏதாவது error வந்திருக்குமோ இந்த தலைப்பில் இதுதான் உங்களின் முதல் பின்னூட்டம். நீங்க send பண்ணும்போது ஏதாவது error வந்திருக்குமோ மீண்டும் அதை முடிந்தால் அனுப்புங்களேன்\nநண்பர் கக்கு-மணிக்கம் அப்வர்களுக்கு பதில் கொடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் உரிய முறையில் பதில் கொடுத்து விட்டீர்கள் மேலும் விவாதம் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதனால் விவாதம் செய்யும் என்னத்தை கைவிட்டு\nஇந்த பதிவிற்கான விளக்கத்திற்கு வருகிறேன்\nஆதி திராவிட பழங்குடி மக்களிடம் உருவ வழிபாடு இருக்கவில்லை ஆதி+ பரா+சக்தி=ஆதிபராசக்தியை தான் வழங்கினார்கள். ஆதி என்றால் இந்த உலகமும் உலகிலுள்ள உயிரினங்களும் தொன்றுவதற்கு முன்பே இருந்த. பரா என்றால் பெரிய, சக்தி என்றால் இறைவன்(அரபியில் அல்லாஹீ அக்பர்)அனைத்தையும் மிஞ்சிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய இறைவனை வானை நோக்கி கைகூப்பி வணங்கினார்கள்\nஆதி திராவிட மக்கள் மிருகங்களை வணங்கவில்லை\nஇன்னும் சொல்லப் போனால் மிருகங்களை வேட்டையாடி உண்டார்கள்\nஉணவை சமைத்து படையல் வைக்கிற பழக்கம் அவர்களிடம் இருக்கவில்லை\nதாலி கட்டுகிற பழக்கம் அவர்களிடம் இல்லை\nஊர்த்தலைவர் முன்னிலையில் பிடித்து இருக்கிறதா ஏத்துக்கொண்டாயா என்பார் மணமகளும் மணமகளும்\nஒப்புக் கொண்டவுடன் திருமணம் முடிந்துவிடும்\nவரதட்சனை பெண்ணிடம் வங்கும் பழக்கம் இருக்கவில்லை மணமகன் தான் வேட்டையாடிய பொருள்களை மணமகளுக்கு கொடுத்தான்.\nமொழியியல் அடிப்படையிலேயே ‘திராவிடம்’ பேசியவர்களுக்கு வலுவான வரலாற்றுச் சான்றுகளாகச் சிந்துசமவெளி அகழ்வுகள் அமைந்தன.\nதிராவிட மொழிகள் என்பதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், துளு,மலையாளம் தவிர ’ப்ராஹூய்’ என்பதும் ஒன்று.பலூசிஸ்தானத்தில் வழக்கத்திலிருந்த மொழி.இதனடிப்படையில் சிந்துவெளி நாகரிகத்தை’புரோட்டா எலாமோ’அரபிய நாகரிகக் கூறுகளுடையது என மெக் ஆல்பின் போன்ற\nவரலாற்றிஞர்கள் நிறுபித்தனர் எனவே தொல் இந்திய நாகரிகம் என்பது மேற்காசிய(மெசடோபிய)எலாமைட் அரபிய நாகரிகத்துடன் தொடர்புடையது\nதிராவிடக் கருத்தியலை அரசியற் தளத்தில் மிகப்பெரிய வீச்சுடையதாக்கிய பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் மேற்குறித்த உண்மைகளின் அடிப்படையில்’இஸ்லாமியர்கள் திராவிடர்களே’என்றார்\n’இஸ்லாம்என்பது திராவிடம்என்பதன் அரபிச் சொல்’\nஆக ஆதி தமிழர்கள் சரியான முறைப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது. நம்ம கக்கு- மணிக்கம் சொன்ன மாதிரி ஊரை கெடுத்து பார்பனியர்கள் தங்களின் உலையில் போட்டார்கள்.\nஅவர்களின் வணக்க வழிபாடுகளை மாத்திப் போட்டார்கள்.\nநம்ம வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி\nவெள்ளையாக இருப்பவன் எப்படி பொய் சொல்வன் என்று கேட்பது போல பார்பனியம் சடங்கு சம்பிரதாயம் வயிலாக ஆதி தமிழர் வாழ்வில் ஊடுருவி\nபார்ப்பன வெள்ளைத்தொல் சொன்னதிற்கேல்லாம் தலையாட்டினார்கள்\nஇவர்கள் நோகமால் நொங்கு திண்டார்கள்\nபார்பன மனுதர்ம சட்டப்படி பிரமனன் விவசாயம் செய்யக்கூடாது விவசாய இரும்பிலான கருவிகளை பார்ப்பன் தொடுவது தீட்டு\nஅதாவது சூத்திர்ர்கள் சகதியில் உழன்று (சூத்திர்ர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் அதானால் சகதி அழுக்கில் இருப்பார்கள் என்றார்கள்) அருவடை செய்து களத்து மேட்டில் அளக்கும் போதே சாமிக்கு பாடி அளந்து விட்டுதான் அவர்களுக்கு அளக்க வேண்டும்\nவீட்டுக்கு தானியங்களை கொண்டு வந்து சேர்த்தவுடன் கோவில்களுக்கும் (பார்ப்பன் பிரம்மாவின் தலையில் பிறந்த்தால் தேவர்கள் தெய்வம்) சாமிகளான பார்ப்பனர்களுக்கும் படைக்க வேண்டும் இது தை மாசத்துல அறுவடை காலங்களில் நடக்கும் சம்புரதாயம்.\nஇப்படி ஒரு சமுதாயம் ஒசியில் வயிறு வளர்க்க எற்ப்படுத்தப்பட்ட சடங்கு சம்புரதாயம் இல்லாமல் எந்த சடங்குக்கும் உட்பாடமல்\nபொங்கல் வைத்தால் அனைவரும் சந்தோஷமாக சப்பிடுவதற்கு என்ன தடை இருக்கப் போகிறது\n//அவர்களின் வணக்க வழிபாடுகளை மாத்திப் போட்டார்கள்....... சடங்கு சம்புரதாயம் இல்லாமல் எந்த சடங்குக்கும் உட்பாடமல் பொங்கல் வைத்தால் அனைவரும் சந்தோஷமாக சப்பிடுவதற்கு என்ன தடை இருக்கப் போகிறது//\nஉங்கள் தகவ‌லில் சில, நான் கேள்விப்படாத‌ புதியவையாக உள்ளன. நன்றி சகோ. அவர்கள் எப்படியிருந்தாலும் சரி. 'தமிழர் திருவிழா'()வான பொங்கல் கொண்டாடாதவர்கள், மொழிப்பற்று, நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற பிரச்சாரம் செய்வது தவறானது என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டால் போதும். அதையும் மீறி 'இந்தியாவில் வாழ்வது கூட தவறு' என்று அதிமேதாவித்தனமாக அடாவடி பேச்சு பேசுகிறார்களே...)வான பொங்கல் கொண்டாடாதவர்கள், மொழிப்பற்று, நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற பிரச்சாரம் செய்வது தவறானது என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டால் போதும். அதையும் மீறி 'இந்தியாவில் வாழ்வது கூட தவறு' என்று அதிமேதாவித்தனமாக அடாவடி பேச்சு பேசுகிறார்களே... மதச் சார்பற்ற ஒரு நாட்டில், தன் மார்க்கக் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்க‌ளை நாடு கடத்தும் இந்த உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார் மதச் சார்பற்ற ஒரு நாட்டில், தன் மார்க்கக் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்க‌ளை நாடு கடத்தும் இந்த உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார் இவர்கள் என்று திருந்துவார்களோ.. இவ்வளவு விளக்கியும் புரியாவிட்டால் நாம் என்னதான் செய்ய‌ முடியும் ஒரே இறைவனுக்கு மட்டுமே தலைவணங்கிப் பழகிய‌ ஒரு சமுதாயம், தன் இறைக் கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளட்டும். உண்மையான சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ முன்வரட்டும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.\nமூன்று பகுதிகளாக நீங்க பிரித்து அனுப்பிய பின்னுட்டங்களை publish பண்ணினால், நேற்று நீங்க அனுப்பிய பின்னூட்டமும் சேர்ந்து இப்போது publish ஆகியுள்ளது :) பார்த்தால் அது spam ல் கிடந்துள்ளது. எப்படியோ தலை, வால் எல்லாம் புரியிற மாதிரி போட்டாச்சு :)) நீங்க கஷ்டமெல்லாம் கொடுக்கவில்லை சகோ. இவ்வளவு தூரம் மெனக்கெட்டதே பெரிய விஷயம் :) பார்த்தால் அது spam ல் கிடந்துள்ளது. எப்படியோ தலை, வால் எல்லாம் புரியிற மாதிரி போட்டாச்சு :)) நீங்க கஷ்டமெல்லாம் கொடுக்கவில்லை சகோ. இவ்வளவு தூரம் மெனக்கெட்டதே பெரிய விஷயம் முதல் இரண்டு பாகங்களிலும் தெரியாத புதிய‌ நிறைய விஷயங்கள் கொடுத்துள்ளீர்கள். ரொம்ப நன்றி சகோ.\nசகோதர/சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..\nதெளிவா சொல்லி இருக்கீங்க. அல்ஹம்துலில்லாஹ். நம்மை பார்த்து கேள்வி கேட்கும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு எதிரான எந்தவொரு விசயத்தையும் எங்களால் செய்ய முடியாது. நீங்கள் எங்களை புரிந்து கொள்ள முயற்சிக்காதவரை இது போன்ற தவறாக பார்வைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)\nசரி, வேறு எங்கு போக சொல்கின்றீர்கள்...எங்கள் நிலையிலிருந்து சிந்தித்து பாருங்கள் என்பதை தவிர வேறு பதிலில்லை...\n/* சகோதரர் சுக்கு மாணிக்கம்,\nஅஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)\nசரி, வேறு எங்கு போக சொல்கின்றீர்கள்...எங்கள் நிலையிலிருந்து சிந்தித்து பாருங்கள் என்பதை தவிர வேறு பதிலில்லை...\nகக்கு கெல்லாம் இப்படி பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க. நான் அப்படி சொல்ல மாட்டேன் சகோ.\nஉங்கள அடிச்சு விரட்டி விட்ட பிறகு.... நான்... நான்..நான் .. இங்குதான் இருப்பேன் என்பதை மிக்கப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n//இஸ்லாத்திற்கு எதிரான எந்தவொரு விசயத்தையும் எங்களால் செய்ய முடியாது. நீங்கள் எங்களை புரிந்து கொள்ள முயற்சிக்காதவரை இது போன்ற தவறாக பார்வைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்//\nஇவர்கள் இன்று இல்லாவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் ஒருநாள் புரிந்துக் கொள்வார்கள் சகோ. ஆனால் மற்றவர்களின் கொள்கைகளையும் உரிமைகளையும் சரியான முறையில் புரிந்து, உள்ளொன்றும் புறமொன்றும் இல்லாமல் அழகான முறையில் நடந்துக் கொள்ளும் பிற‌மத சகோதரர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருக்கதான் செய்கிறார்கள்.\nகவனக் குறைவாக‌ எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அந்த சகோ, 'கக்கு - மாணிக்கம்'.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\n//ஒரு வேளாண்மைத் திருவிழாவாகத்தான் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது.//\nஅன்னியர் படையெடுப்பிற்குப் பின் தானே அன்னிய மதங்களும் வந்தன, அதற்கு முன்பு தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் என்றாலே இந்துக்கள் மட்டும் தானே,\nஅதனால் தமிழர்கள் எல்லோரும் சூரியனுக்கும் பசுவிற்கும் நன்றி பகர்வதை கொண்டாட்டமாக கூடி செய்வதில் பேதம் இருக்கவில்லை.\nஆனால் இன்று என்ன செய்வது எல்லாம் எம் தலைவிதி. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பேதம், பேதம், பேதம், தான்\nஎல்லா கொண்டாட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டு உம்மென்று இருக்க வேண்டியது தான்.\nயார்தான் அரசியல் வியாதிகளின் வியாதிகளைக் குணமாக்கப் போகிறார்களோ\n//அன்னியர் படையெடுப்பிற்குப் பின் தானே அன்னிய மதங்களும் வந்தன,//\nகைபர் கணவாய் வழியாக பிராமணர்கள் மனிதர்களை ஏனிப்படி மாதிரி பிரிஞ்சு அடுக்குற மாதத்த கொண்டு வந்தாங்க சரியாக சொன்னீர்கள்\n//அதற்கு முன்பு தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் என்றாலே இந்துக்கள் மட்டும் தானே//\nதிராவிடர், கிராதர், முண்டா,போன்ற இனங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள்தான் இந்த மண்ணின் உண்மையான தொல்குடி மக்கள்.அவர்களிடம் இந்துமதமும் இருக்கவில்லை.\nசங்கராச்சாரி அவர்களின் வக்குமூலத்தை பாருங்கள்\nஹிந்து என்பது நாம் பூர்வீக பெயரல்ல, வைதீக மதம், சனாதன தருமம் என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை என்கிறார்.\nமேலும் அவர் சொல்லும் போது\nசைவம், வைணவம், சாக்தம்,கெளமாரம்,காணாபத்யம் என்ற ஆறு மாதங்களாக பிரிந்து மோதிக் கொண்டிருந்த நம்மை\nஇந்து மதம் என்று பெயர் சூட்டி ஒன்று சேர்த்தவன் பிரிட்டிஷ்காரன் தான் என்கிறார்\nஆக,ஹிந்து(சிந்து என்பதன் பாரசீக உச்சரிப்பு)என்ற சொல்லைத் தந்தவர்கள் பாரசீகர்கள்-முஸ்லிம்கள்; அந்த’ஹிந்து’வை ஒரு மதமாக ஒன்று சேர்த்தவர்கள் பிரிட்டிஷ்க்காரர்கள்.\n//ஆனால் இன்று என்ன செய்வது எல்லாம் எம் தலைவிதி. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பேதம், பேதம், பேதம், தான்//\n1.சிதம்பரம் கோயில்ல உள்ளே விடாம வெளியே நிறுத்தப்பட்டவன் இந்துவா இல்லை உள்ளே இருந்து கொண்டு ஊரை சுருட்டி தின்னும் தீட்சிதன் கிழ் சாதி மக்களுக்கு சம உரிமை கொடுக்கவில்லை\n2.ராமேஸ்வரம் கோயிலில் இங்கு பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டுன்னு சமயலறைக்கு வெளியே எழுதி வைச்சிருக்கானே அந்த பிராமண இந்துவா இல்லை கல்லறைக்கு போனா அடிச்சி வெளிய அனுப்புராய்ங்க\n3.தனிக் குவளை, தனிச் சேரி என்றும், பிராமின்ஸ் ஒன்லி என்ற வீட்டு வாடகை விளம்பரங்களிலும் சிரிக்கும் தீண்டாமையை கடைபிடிப்பவர்களையும் பாத்தா\nஎனக்கும் மனசுக்கு வருத்தமாகத்தான் இருக்குண்ணே\nவாக்குவாதங்கள் வேண்டாம் என்ற உங்களின் அறிவுறுத்தலின் பேரில் சும்மா போகிறேன்.\nசகோ......கக்கு மாணிக்கத்திற்கு கைதர் அண்ணன் பதில் கொடுத்து விட்டார் பாராட்டுக்கள்.\n//அன்னியர் படையெடுப்பிற்குப் பின் தானே அன்னிய மதங்களும் வந்தன, அதற்கு முன்பு தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் என்றாலே இந்துக்கள் மட்டும் தானே//\nஇதையே காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருந்தால் அது உண்மையாகிவிடாது. உண்மை வரலாறுகள் மக்களுக்கு தெரியாமல் இல்லை அனானிமஸ் மேலே சகோத‌ரர் ஹைதர் அலி அவர்களின் விளக்கங்களைப் பாருங்கள். இதுவரை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் தெரிந்துக் கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இது\n//அதனால் தமிழர்கள் எல்லோரும் சூரியனுக்கும் பசுவிற்கும் நன்றி பகர்வதை கொண்டாட்டமாக கூடி செய்வதில் பேதம் இருக்கவில்லை. ஆனால் இன்று என்ன செய்வது எல்லாம் எம் தலைவிதி. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பேதம், பேதம், பேதம், தான்//\n:)) நல்ல காமெடிதான் போங்க உங்க ஆசைப்படியே முதல்ல வந்தது ஏதோ ஒரு மதமாக இருந்துட்டு போகட்டும். அதற்காக பின்னால் வந்தவர்களும் அதைதான் ஃபாலோ பண்ண‌னும் என்று எப்படிங்க ஆளாளுக்கு உரிமையை கையில் எடுத்துக்கிட்டு இப்படி நாட்டாமை பண்ணுறீங்க உங்க ஆசைப்படியே முதல்ல வந்தது ஏதோ ஒரு மதமாக இருந்துட்டு போகட்டும். அதற்காக பின்னால் வந்தவர்களும் அதைதான் ஃபாலோ பண்ண‌னும் என்று எப்படிங்க ஆளாளுக்கு உரிமையை கையில் எடுத்துக்கிட்டு இப்படி நாட்டாமை பண்ணுறீங்க தனிப்பட்ட மதம் சார்ந்த நாடுகளில் கூட ஒரே மதத்தை அனைவரும் ஃபாலோ பண்ணுவதுதான் பேதமில்லாதது, ஒற்றுமைக்கு வழி வகுப்பது என்று சொல்வதில்லை, சொல்லவும் முடியாது தனிப்பட்ட மதம் சார்ந்த நாடுகளில் கூட ஒரே மதத்தை அனைவரும் ஃபாலோ பண்ணுவதுதான் பேதமில்லாதது, ஒற்றுமைக்கு வழி வகுப்பது என்று சொல்வதில்லை, சொல்லவும் முடியாது மதச்சார்பற்ற இந்தியாவில்தான் இந்த கூத்துகளெல்லாம்.. ஹ்ம்.. மதச்சார்பற்ற இந்தியாவில்தான் இந்த கூத்துகளெல்லாம்.. ஹ்ம்.. ஒருவரின் மதத்தையோ, மார்க்கத்தையோ அடுத்தவர்களும் மதித்து, சாதி/மத கண்ணோட்டத்தில் எந்த இடையூறும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் அழகிய முறையில் சகோதரத்துவத்தை பேண தெரிந்தாலே போதும், 'பேதம்'என்ற வார்த்தையே காணாமல் போகும்\n//எல்லா கொண்டாட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டு உம்மென்று இருக்க வேண்டியது தான்//\nநீங்க கொண்டாடுவதோ அதைத் தூக்கிப் போடுவதோ உங்க இஷ்டம் ஆனால், அடுத்தவர்கள் தங்கள் இறைக் கொள்கைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு வரவேண்டும் என்று வலியுறுத்தும் சகோதரர்களுக்காகவே இவ்வளவு விளக்கங்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சரியான முறையில் புரிந்துக் கொள்ளுங்கள்.\n//..... எனக்கும் மனசுக்கு வருத்தமாகத்தான் இருக்குண்ணே//\nதங்களின் வருத்தம் நியாயமானதுதான் சகோ. இறைவன் நாடினால் விரைவில் மாற்றம் காணுவார்கள். தேவையான விளக்கங்கள் தந்ததற்கு ரொம்ப‌ நன்றி சகோ.\nவாக்குவாதங்கள் வேண்டாம் என்ற உங்களின் அறிவுறுத்தலின் பேரில் சும்மா போகிறேன்//\nரொம்ப நன்றி சகோ. விவாதங்கள் வீண் தர்க்கங்களாக ஆவதைவிட, ஆரோக்கியமான முறையில் கருத்துக்களைப் பரிமாறுவது நல்லதல்லவா\n//சகோ......கக்கு மாணிக்கத்திற்கு கைதர் அண்ணன் பதில் கொடுத்து விட்டார் பாராட்டுக்கள்//\nஅன்புள்ள சகோதரி நீங்கள் கருத்துரை மட்டுருத்தல் வைப்பது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.\n//அன்புள்ள சகோதரி நீங்கள் கருத்துரை மட்டுருத்தல் வைப்பது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது//\nநல்லது சகோ. ஏற்கனவே வைத்துவிட்டேன். சில கருத்துக்கள் பெயரில்லாமலே (அனானிமஸாக) வந்தால்கூட, மற்றவர்களுக்கும் தெரியட்டும் என்றுதான் வெளியிடுகிறேன். ஆலோசனைக்கு நன்றி சகோ.\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..\nமாஷாஅல்லாஹ் சிறப்பான தெளிவான பதிவு. & சகோ.கக்கு-மாணிக்கத்துக்கு சரியான மறுமொழி.\nஇனி யாராவது பொங்கல் என்று வாயைதிறந்தாலே... அவர்களுக்கு டேரக்ட் லிங்க் இந்த பதிவுதான் அவர்களுக்கு 'மசாலா பொங்கல்'.\n//மாஷாஅல்லாஹ் சிறப்பான தெளிவான பதிவு. & சகோ.கக்கு-மாணிக்கத்துக்கு சரியான மறுமொழி. இனி யாராவது பொங்கல் என்று வாயைதிறந்தாலே... அவர்களுக்கு டேரக்ட் லிங்க் இந்த பதிவுதான் அவர்களுக்கு 'மசாலா பொங்கல்'.\nஇஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாடவில்லை என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் இந்த லிங்க்கை கொடுங்க சகோ. எல்லோரும் இல்லாவிட்டாலும் சிலராவது புரிந்துக் கொள்ளட்டும், இன்ஷா அல்லாஹ் அதென்ன மசாலா பொங்கல்..:)) நல்லாதான் இருக்கு புதுப்பெயரா :-) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.\n நீங்கள் சொல்லிய விதம் மிக்க அருமை....\nசகோ.கக்கு-மாணிக்கம் மற்றும் மற்ற ஹிந்து சகோதரர்களுக்கு ..... கீழ்காணும் லிங்க்கை சொடுகி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளுங்கள்..\nஇந்து மதம் எங்கே போகிறது\nமேலும் கடவுள் கோட்பாடு - (டாக்டர். ஜாகிர் நாயக் Vs ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்) and\nஹிந்து மற்றும் இஸ்லாம் மதத்திற்கிடையேயான ஒற்றுமை (http://niduronline.blogspot.com)\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.\nஇன்று தான் பொருமையாக உட்கார்ந்து உங்களுடைய இந்த பகுதியையும் மற்றவர்களுடைய கருத்தையும் படித்தேன்.\nமிகவும் அருமையான,தெளிவான விளக்கத்தோடு எழுதியுள்ளீர்கள்.(மாஷா அல்லாஹ்)\nநீங்கள் சொன்னது ஒரு சில மாற்று மத சகோதரர்கள் நிச்சயம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்வார்கள்.சுக்கு சகோதரர் போன்றவர்களுக்கெல்லாம் என்னதான் விளக்கம் சொன்னாலும் அதை காதில் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை.எனவே விட்டு விடுவோமாக....\nஉங்களுடைய அழகான எழுத்திற்க்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nஇன்று தான் பொருமையாக உட்கார்ந்து உங்களுடைய இந்த பகுதியையும் மற்றவர்களுடைய கருத்தையும் படித்தேன்//\n//நீங்கள் சொன்னது ஒரு சில மாற்று மத சகோதரர்கள் நிச்சயம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்வார்கள்.சுக்கு சகோதரர் போன்றவர்களுக்கெல்லாம் என்னதான் விளக்கம் சொன்னாலும் அதை காதில் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை.எனவே விட்டு விடுவோமாக....//\nஎதிர்ப்பவர்கள், எதிர்க்காதவர்கள் அனைவரும் புரிந்துக் கொண்டால் சந்தோஷம்தான்\n'யார் மனதையும் புண்படுத்தாமல்' என்பது நேர்மையான பார்வைக் கொண்ட யாருக்குமே புரியும் சகோ. ஆனால் இதற்கும் வந்து விதண்டாவாதம் பண்ணுகிறார்களே... என்ன சொல்வது\nஎன்னைப் பொறுத்தவரை இவர்களை புறக்கணிப்பதே சிறந்தது.எனது ஓர்குட் சுயவிவர முகப்பு படமாக அல்லாஹ்வின் திருபெயரை வைத்து இருந்தேன்.\nஅதற்க்கு ஒரு ஹிந்து சகோதரர் சொன்னார்\n'' அரபிக் மொழியில் அல்லா பெயரை தங்கள் அடையாள படமாக இருக்கிறது.அதை மாற்றி அல்லா என்று தமிழில் எழுதி அதை வைத்து கொள்ளவும்.அல்லது அரபியாவுக்கு சென்று குடியேறவும்.இது தமிழ்நாடு.தமிழ் நாட்டில் தமிழ் காற்றை சுவாசித்து தமிழன் உழுது தரும் உணவை உண்டு விட்டு ,தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு,தமிழ் பேசி பிழைத்து கொண்டு, தமிழுக்கு எதிராக இருக்கும் நீ அரபியாவில் போய் குடியேறலாம்.\nமுதலில் தாய் மொழியை,தாய் நாட்டை நேசி பிறகு உன் மதத்தை நேசி.அதையும் உன் தாயு மொழியில் வழிபடு ''\nக்கு மாணிக்கம் அவர்களும் அந்த ரகம் போல.\n//என்னைப் பொறுத்தவரை இவர்களை புறக்கணிப்பதே சிறந்தது//\nஆமாம் சகோ, புரிகிறதோ.. புரியாத மாதிரி நடிக்கிறார்களோ.. இதுபோன்றவர்களை அலட்சியப்படுத்துவதே நல்லது.\n//அதை மாற்றி அல்லா என்று தமிழில் எழுதி அதை வைத்து கொள்ளவும்.அல்லது அரபியாவுக்கு சென்று குடியேறவும்//\nஇந்த உரிமைதான் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை.\n//முதலில் தாய் மொழியை,தாய் நாட்டை நேசி பிறகு உன் மதத்தை நேசி.அதையும் உன் தாயு மொழியில் வழிபடு//\nநாட்டுப்பற்று, மொழிப்பற்று என்பதின் அளவுகோலை இவர்கள் புரிந்து வைத்திருப்பதின் லட்சணம் அவ்வளவுதான்\n//க‌க்கு மாணிக்கம் அவர்களும் அந்த ரகம் போல//\n ஆனால் அவரும் ஒருநாள் புரிந்துக் கொள்ள‌லாம்.\nபதிவை விட கருத்துரைகளில் விஷயம் அதிகம் இருக்கு .. ஒரு எதிர் கருத்து போட்டு நிறைய விளக்கங்கள் கிடைக்க வைத்த சகோ கக்குக்கு நன்றி . இதுவும் ஒரு ஆரோக்கியமான விவாதமே..\nபதிவை விட கருத்துரைகளில் விஷயம் அதிகம் இருக்கு ..//\nஉண்மைதான் சகோ. நல்ல கருத்துக்களை பதிந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும்தான் நன்றி சொல்லணும்.\n//ஒரு எதிர் கருத்து போட்டு நிறைய விளக்கங்கள் கிடைக்க வைத்த சகோ கக்குக்கு நன்றி .\n:))) இந்த விளக்கங்கள் அவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்தால் சந்தோஷமே\nஅர்த்தமுள்ள பதிவும், பின்னூட்டங்களுக்கு ஆவேசமில்லாத ஆரோக்கியமான பதில்களும்\nமீண்டும் மீண்டும் படிக்க வைத்தது.\nஅர்த்தமுள்ள பதிவும், பின்னூட்டங்களுக்கு ஆவேசமில்லாத ஆரோக்கியமான பதில்களும்\nமீண்டும் மீண்டும் படிக்க வைத்தது.\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... தங்களின் கருத்துக்கு ரொம்ப சந்தோஷம். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத துஆ செய்யுங்க, நன்றி சகோ.\nபொங்கல் என ஏன் ஒற்றைப்பார்வைப்பார்க்கணும், அது கூட பல நிகழ்வுகள் இருக்கு. அதை எடுக்கலாம் இல்லையா தமிழ்ப்புத்தாண்டு என்பதும் தை 1 என கொண்டு வந்தார்கள் எத்தனைப்பேர் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொன்னீங்க\nயாரேனும் சர்க்கரைப்பொங்கல் கொடுத்தால் கூட சாப்பிடமல் இது எங்களுக்கு ஏற்புடையதில்லை என்கிறார்கள் சிலர்.ஆனால் நாங்க எல்லாம் பிரியாணி கொடுத்தா சாப்பிடுவோம் :-)\nஉங்களுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்\nதமிழ் புத்தாண்டு,பொங்கல் மற்றும் உழவர் திருநாள்,திருவள்ளுவர் பிறந்த நாள் வாழ்த்துகள்.\n2008 இல் எழுதிய இப்பதிவையும் ஒரு முறைப்பார்க்கவும்.\nதை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை\nநீங்கள் சாமிக்கு படைக்காமல் எதை வேண்டுமென்றாலும் குடுங்கள். நல்லா சாப்பிடறோம். தினமும் கொடுங்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவோம். மற்றபடி பிற தெய்வங்களுக்கு படைத்ததை நிச்சயம் சாப்பிட மாட்டோம்.\nநீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு உதாரணம், கடந்த வாரம் எங்கள் ஊரில் ஒரு இஸ்லாமியரின், சொந்தக்காரரின் திருமணம் நடந்தது. அதில் பாட்டு கச்சேரி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் நடந்தது. இஸ்லாம் திருமணத்தை எழிமையாக நடத்தச் சொல்கிறது. ஆனால் அங்கு அளவிற்கு அதிகமான ஆடம்பரம் நடந்தது. அதோடு இல்லாமல் இஸ்லாம் தடை செய்த பாட்டு கச்சேரி எல்லாம் நடந்தது. அந்த திருமணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை, புறக்கணித்துவிட்டேன். எனவே, நாங்கள் மாற்று மதத்தவர்களிடம் தான் அவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று இல்லை. யாராக இருந்தாலும் கொள்கைக்கு விரோதமாக இருந்தால் புறக்கணிப்புதான். எங்களுக்கு வேறு வழி இல்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nமுஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் 15 January 2012 at 13:22\nபொங்கல் என்று மட்டும் ஏன் பார்க்கிறீர்கள் தமிழ்ப்புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள், உழவர் திருநாள் என்றெல்லாம் பார்க்கலாமே என்று கேட்டதுக்கு பதிலே சொல்லவில்லை.\nசாமிக்கு படைத்தா சாப்பிட மாட்டேன் என்கிறீர்கள் சரி உங்கள் கொள்கை அது. நான் குறிப்பிட்ட மற்றவையும் அப்படியேவா\nநீங்கள் ஒரு தொழிலாளி என வைத்துக்கொள்வோம் ,கொடியேற்றி, தொழிற்சங்க முன்னோடிகள் படத்துக்கு மாலைப்போட்டு தொழிலாளர் தினம் கொண்டாடினால் கூட புறக்கணிப்பீர்களா மாலைப்போடுவதும் வழிப்பாடு போல தானே.பொங்கலும் ஒரு வகையில் தொழிலாளர் தினமே.\nஇன்னொரு முக்கியமான செய்தி தெரியுமா, சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டேன்னு இருந்தால் இங்கே கொலைப்பட்டினி தான் இருக்கணும். நாற்று நடும் போதே தேங்கா உடைச்சு , சூடம் கொளுத்தி அவங்க அவங்க குல தெய்வத்துக்கு படைச்சுட்டு ,பொறிக்கடலை எல்லாம் கொடுப்பாங்க. முதல் நாற்றை ஈசானிய மூலைல நடுவாங்க. மேலும் அந்த பட்டம் (ரோவ்) ல விளையும் விளைச்சல் எல்லாம் குல தெய்வ கோவிலுக்கு கொடுப்பாங்க.சிலர் நெற்கதிர்களை மாலையாக கட்டி படையல் வைப்பாங்க.\nஇத எதுக்கு சொல்றேன் என்றால் வயலில் விளையும் ஒவ்வொரு நெல்மணியும் படையலுக்கு உள்ளாகிடுது. இப்போ சாப்பாடு வேண்டாம் சொல்லிடுவிங்களா\nஓவ்வொரு தானியத்திலும் அது யாருக்கு போய் சேரணும் என்று எழுதி இருக்கும்னு சொல்வாங்க,அதெல்லாம் அரேபியாவில விளைஞ்சா தான் உண்டு போல,எனவே நீங்களும் இறக்குமதி செய்தே சாப்பிடுங்க.அதான் மார்க்க ரீதியாக ஏற்புடையது. என்ன நான் சரியா தானே சொல்கிறேன் :-))\n//பொங்கல் என ஏன் ஒற்றைப்பார்வைப்பார்க்கணும், அது கூட பல நிகழ்வுகள் இருக்கு. அதை எடுக்கலாம் இல்லையா\nஏற்கனவே சொன்னதுபோல் வணக்க, வழிபாடுகள் நுழைக்கப்படாமல் எந்தப் பொங்கலும் இல்லை என்கிறபோது எதைக் கொண்டாட சொல்றீங்க சகோ\n//தமிழ்ப்புத்தாண்டு என்பதும் தை 1 என கொண்டு வந்தார்கள் எத்தனைப்பேர் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொன்னீங்க\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்லிதான் ஆகணுமா எங்களின் புத்தாண்டான 'முஹர்ரம்' அன்று \"இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்து\" என நாங்கள் சொல்லி நீங்கள் என்றைக்காவது பார்த்ததுண்டா எங்களின் புத்தாண்டான 'முஹர்ரம்' அன்று \"இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்து\" என நாங்கள் சொல்லி நீங்கள் என்றைக்காவது பார்த்ததுண்டா ஆக தேதி, மாதம், புதிய ஆண்டு என்பதெல்லாம் அவரவர்களின் வாழ்வின் நடைமுறை வசதிக்காக அமைத்துக் கொண்ட ஒன்று. இதற்காக வாழ்த்து சொல்லும் பழக்கத்தை விரும்பியவர்கள் நடைமுறைப்படுத்திக் கொள்ளட்டும். இஸ்லாமியப் புத்தாண்டு உட்பட நாங்கள் எந்தப் புத்தாண்டுக்கும் வாழ்த்து சொன்னதில்லை, சொல்லவும் மாட்டோம்.\n//யாரேனும் சர்க்கரைப்பொங்கல் கொடுத்தால் கூட சாப்பிடமல் இது எங்களுக்கு ஏற்புடையதில்லை என்கிறார்கள் சிலர்.ஆனால் நாங்க எல்லாம் பிரியாணி கொடுத்தா சாப்பிடுவோம் :-)\nஉங்களுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்\nதமிழ் புத்தாண்டு,பொங்கல் மற்றும் உழவர் திருநாள்,திருவள்ளுவர் பிறந்த நாள் வாழ்த்துகள்//\nஇதற்கு சகோ சிராஜ் அவர்களின் பதிலே உங்களுக்கு போதும்.\nவவ்வால் நேரடியா பதிவை மட்டும் படிச்சிட்டு கீழே வந்துட்டார் போல :-))\n//வவ்வால் நேரடியா பதிவை மட்டும் படிச்சிட்டு கீழே வந்துட்டார் போல :‍-))//\nமுஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் 15 January 2012 at 09:14\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அஸ்மா அருமையான விளக்க கட்டுரை கொடுத்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\nவேண்டாவெறுப்புடன் மறுமொழியிடும் மறுமொழியாளர்களுக்கு சகோ.ஹைதர் அலியின் பதில்களும் அருமை.\n@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்\n//அருமையான விளக்க கட்டுரை கொடுத்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்//\n//வேண்டாவெறுப்புடன் மறுமொழியிடும் மறுமொழியாளர்களுக்கு சகோ.ஹைதர் அலியின் பதில்களும் அருமை//\n சகோ.ஹைதர் அலி அவர்களுக்கு இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nஅனானியாக வந்து ஒரு நபர் இட்ட கமெண்ட்டில் சில சகோதர பதிவ‌ர்களை அநாகரிகமான முறையில் குறிப்பிட்டிருந்ததால் அவை நீக்கப்ப‌ட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது:\n ஊரோடு ஒத்து வாழ் என்பதும் தமிழ் பழமொழி தான். பொங்கல் பிடிக்கவில்லையா சரி விடுங்க. மத்தவங்க கொண்டாடுவாங்கதானே//\n//அப்புறம் இஸ்லாமிய மதமே அன்னிய மதம் தானே. இஸ்லாம் திருட கூடாதுன்னு சொல்லுது./ஆனா வந்தேறி துலுங்க மன்னர்கள் இந்து கோயில்களை இடித்து கொள்ளை அடித்து மக்களை துண்புறுத்தியது எல்லாம் மறந்து போகனுமா மத நல்லிணக்கம் என்பது ஒன்று இருக்கிறது அது என்ன வென்றால் உன் சுதந்திரம் உன் முகத்தின் மூக்கு வ்ரை தான் என்பதே//\n//அனானியாக வந்து ஒரு நபர் இட்ட கமெண்ட்டில் சில சகோதர பதிவ‌ர்களை அநாகரிகமான முறையில் குறிப்பிட்டிருந்ததால் அவை நீக்கப்ப‌ட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது://\nஅனானியாக வருவதே அதற்குத்தனே மொட்டைக் கடுதாசிக்கும் பதில் சொல்லி விவோம்.\n ஊரோடு ஒத்து வாழ் என்பதும் தமிழ் பழமொழி தான். பொங்கல் பிடிக்கவில்லையா சரி விடுங்க. மத்தவங்க கொண்டாடுவாங்கதானே//\nபொங்கல் பிடிக்கவில்லையேன்று யாரு சொன்ன அதற்காக செய்யப்படுகிற சடங்குகளை தான் வேண்டாம் என்று சொல்லுகிறோம்.\n//சரி விடுங்க. மத்தவங்க கொண்டாடுவாங்கதானே//\nபேஷா கொண்டாடுங்கே யாரு ராசா யாரு உங்கள தடுத்தது\n//அப்புறம் இஸ்லாமிய மதமே அன்னிய மதம் தானே.//\nசரிங்கே எந்த மதம் இந்தியாவிற்கு அந்நியமானதுதில்லை அதுவும் இந்த பொங்கள் சடங்குகள் எப்படி இந்தியாவிற்கு சொந்தமானது உங்க புஸ்த்தகத்தில் இருந்து படித்து நாலு வரி சொல்லுங்கள் அதற்கு பிறகு இஸ்லாம் அந்நிய மார்க்கமாக இருந்தாலும் திராவிட பழங்குடி மக்களுக்கு ஏற்ற மார்க்கம் என்பதையும் அவர்களின் அடிமை விலங்குகளை எப்படி உடைத்தது என்று சொல்லுகிறேன்.\n//இந்த பொங்கள் சடங்குகள் எப்படி இந்தியாவிற்கு சொந்தமானது உங்க புஸ்த்தகத்தில் இருந்து படித்து நாலு வரி சொல்லுங்கள்//\nஉங்களை மாதிரி ஆளைத்தான் தேடினேன்..\nஇனி நீங்களே பதில் சொல்லுங்க..\n1-அரிசி விளைச்சல் அறுவடை மகசூலுக்கு...\nசூரியன் மட்டுமா ஒரே காரணம்..\nஅந்த பயிரின் இலை பச்சையம் (CHLOROPHYLL),\nபகலில் கார்பண் டை ஆக்சைட்,\nகாவிரியில் தண்ணீர் விட்ட கர்நாடகாகாரன் அல்லது\nஆற்றில் மணல் எடுக்காமல் நிலத்தடி நீரை விட்டுவைத்த அரசியல்வாதி, இயற்கையான மண்வளம்,\nயூரியா, டி.ஏ.பி, பாக்டம்பாஸ் உரம்,\nஇவற்றை உருவாக்கிய ரசாயண நிறுவனங்கள்,\nஇதை ஊக்கப்படுத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்கள்,\nவிளைந்ததை வாங்க காத்திருக்கும் சந்தை & பொதுமக்கள்...\nஇப்படியாக, அரிசி விளைச்சல் அறுவடை மகசூலுக்கு...\nஇவ்வளவு காரணிகள் இருக்கும் போது...\nசூரியனுக்கு மட்டும் படையல் வணக்கம் நன்றி எல்லாம் எதற்காக.. இதற்கெல்லாம்-இவங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லையே ஏன்..\nஎந்த ஒரு தமிழரும், வெறும் அரிசியை மட்டுமே சமைத்து பொங்கி சாப்பிட்டு வாழவில்லை. உப்பு, வெங்காயம், தக்காளி, எண்ணெய், பருப்பு வகைகள், உளுந்து வகைகள், கோதுமை, மிளகாய், இஞ்சி-பூண்டு, மசாலா அயிட்டங்கள்... இப்படி நிறைய விவாசாய பொருட்கள் மக்களின் தினப்படி வாழ்வில் அத்தியாவசியமாக இருந்துகொண்டு இருக்க...\nஅரிசிக்கு மட்டும் சூரியனுக்கு நன்றி சொல்வது ஏன்.. உப்பு மற்றும் மற்ற பருப்பு, தானிய, எண்ணெய்வித்து, காய்கறிகளுக்கு எல்லாம் அவை விளைந்து மகசூல் தரும்போது சூரியனுக்கு நன்றி/வணக்கம்/படையல் எல்லாம் ஏன் இல்லை..\nஅவைகள் எல்லாம் சூரிய ஒளி இல்லாமல் இருட்டிலா விளைந்தன..\nஇப்படி அனைத்து காரணிகளுக்கும் அனைத்து விளைச்சளுக்கும் மூல காரணியாக இருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி, எந்த ஒரு உணவையும், உணவுத்துகளையும் வாய்க்குள் போட்டால், இறைவனின் கருணையை போற்றி நன்றி கூறி, \"இறைவனின் பெயரால்...\" என்று சொல்லி சாப்பிட ஆரம்பிக்கும் முஸ்லிம்கள்... ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும்... அருந்தும்போதும்... நித்தம் நித்தம் தினம் தினம் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனரே.. ஆண்டின் 366 நாளும்... ஒரு நாளில் பல முறையும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முஸ்லிம்களை எதற்கு 'ஒரே ஒருநாள் மட்டும் பொங்கல் கொண்டாடினால் போதும்' என்று சிறுமைபடுத்துகிறீர்கள்..\nமற்ற அனைத்து தமிழ் மக்களும்...\nமுஸ்லிம்களை பின்பற்றி, ஆக அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி...\nமுஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல்,\nதினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...\nமுஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் 16 January 2012 at 14:55\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ முஹம்மத் ஆஷிக் தங்களின் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் வாவ்.....வாவ்....வரே...வாவ்...நம்ம கவுண்டமணி ஸ்டைல்ல சொல்லனும்னா அட்ராசக்கை...அட்ராசக்கை....அட்ராசக்கைனான\nஅவரு ஏதோ பொழுது போகாம போட்ட ஒரு வரிக்கா இப்டி அவர வாடி வதைக்கிறீங்க.... :)\n//மற்ற அனைத்து தமிழ் மக்களும்...\nமுஸ்லிம்களை பின்பற்றி, ஆக அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி...\nமுஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல்,\nதினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...\nஇது என்ன போங்காட்டம் மற்ற மதத்தினர் என்ன சாப்ப்பிடும் போது அவங்க கடவுளுக்கு நன்றி சொல்லாமலா சாப்பிடுறாங்க.\nஇந்துக்கள், கிருத்துவர்கள் என எல்லாருமே அவர்கள் கடவுளை நினைவு கூர்கிறார்கள்.\nஏன்யா இப்படி நீங்க தான் சக்கரத்தை கண்டுப்பிடிச்சா போல சொல்லிகிட்டு ,அதெல்லாம் கண்டுப்பிடிச்சு பல காலம் ஆச்சு. இஸ்லாமே வரலாற்று ரீதியா பார்த்தா புதுசா முளைத்த மதம்.\nஎனவே யாருக்கும் எதுவும் கற்றுக்கொடுக்கவோ, புதிய தகவல்களோ அதில் இருக்குனு சொல்லிக்கிட்டு திரிய வேண்டாம்.எல்லாமே எல்லா மதத்திலும் இஸ்லாம் சொல்வதற்கு முன்னரே சொல்லிட்டுப்போய்டாங்க.\nஉங்களின் இஸ்லாம் பற்றிய வரலாற்று அறிவு.... ///இஸ்லாமே வரலாற்று ரீதியா பார்த்தா புதுசா முளைத்த மதம்.///.....மிகப்பெரிய பூச்சியம் என்று இப்படியா உலகுக்கு பறை சாற்றுவது..\nசரி, சரி, இப்போதாவது உண்மையை அறிந்து கொள்ளவும். இவ்வுலகின் முதல் மனித ஜோடிகளே முஸ்லிம்கள்தான். முதல் மனிதரான ஆதம்(அலை..) தான் முதல் நபி(இறைத்தூதர்). அவர்கள் பின்பற்றிய-எடுத்துரைத்த மார்க்கம் இஸ்லாம்..\nகாலப்போக்கில் மக்கள் தம் வாழ்வியல் மார்க்கத்தை புறந்தள்ளி தம் மனோ இச்சையில் நடக்கும்போது அவ்வப்போது நிறைய இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் புணரமைத்தனர்.\nஇறுதிக்கு முன்னர் வந்தவர்தான் ஜீசஸ் கிருஸ்து எனப்படும் ஈசா (அலை..) அவர் மக்களுக்கு சொல்லி புணரமைத்த மார்க்கமும் அதே இஸ்லாம்தான்.\nஇறுதியாக வந்தவர்தான் முஹம்மத்(ஸல்..) நபி. அவர் புணரமைத்த மார்க்கமும் அதே ஆஆஆஆஆதி மார்க்கமான இஸ்லாம்தான்..\nகாலத்தால் முந்திய முதல் ஆதி மார்க்கம் இஸ்லாம்தான். இதன்படிதான் மற்றவை ஒழுங்க்குபடுத்தப்படல் வேண்டும் அல்லவா..\nமிகச் சரியான, நேர்மையான பதில் யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் வந்து பதில் சொல்லமுடியும். இதையும்கூட‌ குரூப் என்ற அடிப்படையில் பார்க்கிறீங்க‌. மற்றவர்களும் தங்களிடம் நியாயமான பதில் இருந்தால் சொல்லலாமே, யார் வேண்டாம் என்றது அதுசரி... இந்த ஒற்றைவரி கமெண்ட் சொல்லக்கூட அனானியாகதான் வரணுமா\n//இப்படியாக, அரிசி விளைச்சல் அறுவடை மகசூலுக்கு...\nஇவ்வளவு காரணிகள் இருக்கும் போது...\nசூரியனுக்கு மட்டும் படையல் வணக்கம் நன்றி எல்லாம் எதற்காக.. இதற்கெல்லாம்-இவங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லையே ஏன்.. இதற்கெல்லாம்-இவங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லையே ஏன்..\n//இப்படி நிறைய விவாசாய பொருட்கள் மக்களின் தினப்படி வாழ்வில் அத்தியாவசியமாக இருந்துகொண்டு இருக்க...\nஅரிசிக்கு மட்டும் சூரியனுக்கு நன்றி சொல்வது ஏன்..\n//அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி...\nமுஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல்,\nதினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...\nதங்களின் முத்தான மூன்று கேள்விகளுக்கும் ஒரு பெரிய சபாஷ் சகோ & ஜஸாகல்லாஹ் ஹைரா\n@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்\n//தங்களின் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் வாவ்.....வாவ்....வரே...வாவ்...///\nசகோ முஹம்மத் ஆஷிக், சகோ சிராஜ், சகோ ஹைதர் அலி மற்றும் அறிவுப்பூர்வமான வாதங்களையும், சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களையும் எடுத்து வைக்கும்‌ அனைவருக்கும் இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக உங்கள் வருகைக்கும் நன்றி சகோ.\n//இஸ்லாம் திருட கூடாதுன்னு சொல்லுது./ஆனா வந்தேறி துலுங்க மன்னர்கள் இந்து கோயில்களை இடித்து கொள்ளை அடித்து மக்களை துண்புறுத்தியது எல்லாம் மறந்து போகனுமா\nஇஸ்லாமிய முறைப்படி திருட கூடாது சரிதான்.ஆனால் கஜினி மட்டுமல்ல பண்டைய மன்னர்களின் போர்கள் என்பவன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான் கஜினி திருடிவிட்டு உடனே போய்விட்டான் ஆனால் பார்ப்பனர்கள் கைபர் கணவாய் வழியாக வந்து சடங்கு சம்புரதயம் என்று சொல்லி காலங்கலமாக பாமரர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் திருடுவதை மறந்தது ஏணோ\nஅப்புறம் உங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு மறதியை நான் நினைவுப் படுத்துகிறேன் மறக்க வேண்டாம் அவுங்கரசீப் நமது தமிழ்நாட்டு குமரகுருபரருக்கு காசியில் நிலம் ஒதுக்கி மடம் கட்டிக் கொடுத்தது.இன்னும் நிறைய முகலாய மன்னர்கள் (கவனிக்கவும் துலுக்க மன்னர்கள் என்று நான் சொல்லவில்லை)கோயில்களுக்கும்\nமடங்களுக்கும் நிறைய மானியங்கள் சொத்துக்கள் அளித்ததையும் தாங்கள் மறந்து விட வேண்டும் சரி இதையேல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன் இடித்ததை மட்டும் தான் நினைவில் வைத்துக் கொள்வேன் என்று அடம் பிடித்தால்\nபடையேடுத்து வரும் மன்னர்கள் கோயிலை இடிப்பதில் பொதுப் புத்தியோடு இருந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் இதில் இந்து,முகலாய மன்னர்கள் என்ற பேதமில்லை எனேன்றால் இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடம் மட்டுமல்ல.மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன.தஞ்சாவூர் போயி இருக்கீகளா தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்\n தஞ்சை பெரிய கோவில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண/புத்த கோயில்களை இடித்து கட்டப்பட்டவைதானே.இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம்,பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடுத்து விட்டு அந்த ஊர்களுக்கு’ஜனநாதமங்கலம்’ என்று தன்னுடைய பெயரை சூட்டவில்லையா\nசுபதாவர்மன் (கி.பி.1193-1120)என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா கஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்முலம் செய்கிற அதிகாரி(தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரியை நியமித்தார் என்ற ஆதாரபூர்வமான வரலாறு படித்ததில்லை.\nமறக்க வேண்டாம் வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே\n திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய வேண்டும் என்று எனக் காரணம் சொல்லி அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டது குறித்துப் பெரியபுராணத்திலேயே சன்றுகள் உள்ளன. அப்புறம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றி கொன்றதை வருட வருடம் விழாவாக அதே மாதிரி சமணர்கள் மாதிரி பொம்மைகளை கழுமரத்தில் ஏற்றுகிற வக்கிரத்தை சடங்குன்னு சொல்லுறீங்களே விஷயம் தெரிந்தவன் எனப்பா ஒரு சமூகத்தை கழுமரத்தில் ஏற்றி கொன்றதை விழாவாக எடுக்கிறீர்கள் நாங்கள் கொண்டாட மட்டோம் என்று மறக்காமல் சொன்னல்\nஉங்களுக்கு ஏண் கோபம் வருகிறது என்ன பண்ணி தொலைக்கிறது உங்களுக்கு மறந்தது பலருக்கு இன்னும் நினைவில் இருக்கிறதே\nஆனால் நீங்கள் எதையும் மறக்கப்பிடாது வரலாறு முக்கியம் கஜினி முக்கியம்\n//விஷயம் தெரிந்தவன் எனப்பா ஒரு சமூகத்தை கழுமரத்தில் ஏற்றி கொன்றதை விழாவாக எடுக்கிறீர்கள் நாங்கள் கொண்டாட மட்டோம் என்று மறக்காமல் சொன்னல்\nஉங்களுக்கு ஏண் கோபம் வருகிறது என்ன பண்ணி தொலைக்கிறது உங்களுக்கு மறந்தது பலருக்கு இன்னும் நினைவில் இருக்கிறதே\nஆனால் நீங்கள் எதையும் மறக்கப்பிடாது வரலாறு முக்கியம் கஜினி முக்கியம்//\nநீங்கள் மிகவும் விஷயம் தெரிந்தவர் என தெரிகிறது, பொங்கல் தமிழர் திருநாளா என்பதற்கு வேறு எங்கோ தாவுகிறீர்கள். அப்படியே கீழ் கண்டவையும் நீங்கள் அறிந்த விஷயங்களா எனப்பார்த்து சொல்லுங்கள்.\nமேலும் இந்திய மன்னர்கள் , மற்ற மன்னர்களின் கோட்டை, அரண்மன்னைகளை மட்டும் தாக்குவார்கள். கோவில்களை அல்ல என்பது வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரியும்.\n1)முகரம் என்ற புனித மாதத்திலேயே கர்பலாவில் நடந்த படுகொலைகள், இன்றும் ஷியா பிரிவினர் மட்டம் என்ற பெயரில் கத்தியால் உடலில் அடித்து ரத்தம் சிந்தி நினைவு கூர்கிறார்கள்.\n2)திமூர் இந்திய படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.\n3)அஹமது ஷா அப்தாலி படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.\n4) தலிபான்கள் இந்த நவீன உலகிலும் பாமியன் புத்த சிலைகளை இடித்தது.\nஇதையும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புரமா சமண,புத்த விகாரைகளை இடிச்சது பத்தி பேசுங்களேன்.\nநீங்கள் ரத்தம் தோய்ந்த்த பலிப்பீடத்தில் அமர்ந்துக்கொண்டு ஏதோ சமரச சன்மார்க்க ஞானிப்போல பேசுவதால் தான் இவற்றை பட்டியல் இட்டேன், இன்னும் கூட இருக்கு. தமிழர்ப்பண்டிகையா பொங்கல் என்பதோடு நின்றால் நலம். அப்படி இல்லை எல்லாம் பேசுவோம் என்றாலும் பேசுவோம்.\nஅண்ணே வவ்வால் நான் தமிழன் சத்தியமாக ஆங்கிலம் தெரியாது\nஒசியாக கிடைக்குது என்பதற்காக யாருவுட்டு பிளாக்கிலாவது போயி வெட்டி எடுத்து போடுவது தான் சரிதான் ஆனால் எனக்கு புரியவில்லையே என்ன் பன்றது தமிழில் இதே மாதிரியான லிங்குகளை தேடிப்பிடித்து வெட்டிக் கொண்டு வந்து கொட்டவும் கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன்.\n//நீங்கள் ரத்தம் தோய்ந்த்த பலிப்பீடத்தில் அமர்ந்துக்கொண்டு ஏதோ சமரச சன்மார்க்க ஞானிப்போல பேசுவதால் தான் இவற்றை பட்டியல் இட்டேன், இன்னும் கூட இருக்கு. தமிழர்ப்பண்டிகையா பொங்கல் என்பதோடு நின்றால் நலம். அப்படி இல்லை எல்லாம் பேசுவோம் என்றாலும் பேசுவோம்.//\nஇருங்கே ராசா சுத்தி ஒரு தடவை பார்த்துக் கொள்கிறேன் மர நாற்காலியில் ஒக்காந்து இருக்கிறேன் ம்ம்ம் தொடருவோம் ராசா\n//2)திமூர் இந்திய படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.\n3)அஹமது ஷா அப்தாலி படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.\n4) தலிபான்கள் இந்த நவீன உலகிலும் பாமியன் புத்த சிலைகளை இடித்தது.\nஇதையும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புரமா சமண,புத்த விகாரைகளை இடிச்சது பத்தி பேசுங்களேன்.//\nஇவுகள ஒங்க ஆளுதான் துலுக்க மன்னர் என்று சொல்லி ஆரம்பித்து வைத்தார் கவணிக்க\nநான் அந்த மன்னர்களை அப்படி விளிக்கவில்லை கவனிக்கவும்\nஅவுங்கரசீப் நமது தமிழ்நாட்டு குமரகுருபரருக்கு காசியில் நிலம் ஒதுக்கி மடம் கட்டிக் கொடுத்தது.இன்னும் நிறைய முகலாய மன்னர்கள் (கவனிக்கவும் துலுக்க மன்னர்கள் என்று நான் சொல்லவில்லை)கோயில்களுக்கும்\nமடங்களுக்கும் நிறைய மானியங்கள் சொத்துக்கள் அளித்ததையும் தாங்கள் மறந்து விட வேண்டும்\n//மேலும் இந்திய மன்னர்கள் , மற்ற மன்னர்களின் கோட்டை, அரண்மன்னைகளை மட்டும் தாக்குவார்கள். கோவில்களை அல்ல என்பது வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரியும்.//\n.இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம்,பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடுத்து விட்டு அந்த ஊர்களுக்கு’ஜனநாதமங்கலம்’ என்று தன்னுடைய பெயரை சூட்டவில்லையா\n//சுபதாவர்மன் (கி.பி.1193-1120)என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா கஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்முலம் செய்கிற அதிகாரி(தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரியை நியமித்தார் என்ற ஆதாரபூர்வமான வரலாறு படித்ததில்லை.//\nஅப்ப இதுலாம் என்ன ராசா உற்சாவ திரு விழாவில் சமண பொம்மைகளை\nஆமா நீங்க தசவாதரம் கமல் படம் பார்க்கவில்லையா சிவனடியார் ஹரி கோயிலுக்குள் நுழைந்து அள்ளி கடலில் போடுவதை வரலாற்று செய்தி ஐயா அது மறக்க வேண்டாம்\n//1)முகரம் என்ற புனித மாதத்திலேயே கர்பலாவில் நடந்த படுகொலைகள், இன்றும் ஷியா பிரிவினர் மட்டம் என்ற பெயரில் கத்தியால் உடலில் அடித்து ரத்தம் சிந்தி நினைவு கூர்கிறார்கள்.\n2)திமூர் இந்திய படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.\n3)அஹமது ஷா அப்தாலி படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.\n4) தலிபான்கள் இந்த நவீன உலகிலும் பாமியன் புத்த சிலைகளை இடித்தது.\nஇதையும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புரமா சமண,புத்த விகாரைகளை இடிச்சது பத்தி பேசுங்களேன்.//\nசுருக்கமாக தமிழில் சொல்லிவிட்டு ,அதற்கான தரவாகத்தான் ஆங்கில மூலத்தினை வெட்டி ஒட்டியுள்ளேன். இதற்கு மேலும் தமிழ் வேண்டும் என்ற ஆவல் இருக்கும் எனில் அது போலியான தமிழ் ஆர்வமாகவே தோன்றுகிறது.\nஏன் எனில் தமிழர் திருநாள் என்று சொல்லப்ப்டுவதை இல்லை என்று சொல்லத்தான் இந்தப்பதிவே. நீங்களும் இல்லை என்று தான் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இப்போ மட்டும் தமிழ்... தமிழ் என்றால் எப்படீ :-))\n//இதையும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புரமா சமண,புத்த விகாரைகளை இடிச்சது பத்தி பேசுங்களேன்.//\nஇவுகள ஒங்க ஆளுதான் துலுக்க மன்னர் என்று சொல்லி ஆரம்பித்து வைத்தார் கவணிக்க//\nஇப்போ நீங்க என் கூட பேசுறிங்களா அவர்க்கூடவா அப்போ நானும் அவர் என்ன சொன்னார் பாருங்க இவர் என்ன சொல்லி இருக்கார் பாருங்க என்று சொல்லி ஜல்லி அடிக்க வேண்டியது தான்.\nநான் சமண, புத்த விகாரை இடிப்புகளைப்பேசலாம் ஆனால் நீங்க கஜினி முகம்மதை தவிர எல்லாம் ரொம்ப்ப நல்லவங்க என்று சொல்லிக்கொண்டு இருந்ததால் மற்றவையும் சொன்னேன்.\nநீங்கள் ஏன் சம்பந்தம் இல்லாமல் புத்த.சமணத்து போகிறீர்கள் என்பதற்காகவே நான் மற்றதை பட்டியலிட்டேன்.\nஇரட்டை கோபுரத்தில் என்ன அமெரிக்க ஜனாபதியா குடி இருந்தார் போய் இடிக்க என்று கேட்க ரொம்ப நேரம் ஆகாது. இங்கே தமிழர் பண்டிகை குறித்தானா பேச்சு என்பதால். மற்றவை வேண்டாம் என பார்க்கிறேன்.\nயாரோ ஒருவர் பதிவின் சாராம்சத்துக்கு ஏற்ப பேசாமல் பேசினால் , இதான் சாக்கு என்று நீங்கள் ஏன் பாய்கிறீர்கள். இப்போது பேசுவது வேறு என்று சொல்ல இயலாதா உங்களுக்கு.\nவன்முறை என்று பட்டியல் இட்டால் இரத்தத்தில் வளர்ந்த மதம் தான் அதிகம் சேதம் ஆகும்.\n//அவுங்கரசீப் நமது தமிழ்நாட்டு குமரகுருபரருக்கு காசியில் நிலம் ஒதுக்கி மடம் கட்டிக் கொடுத்தது.இன்னும் நிறைய முகலாய மன்னர்கள் (கவனிக்கவும் துலுக்க மன்னர்கள் என்று நான் சொல்லவில்லை)கோயில்களுக்கும்\nமடங்களுக்கும் நிறைய மானியங்கள் சொத்துக்கள் அளித்ததையும் தாங்கள் மறந்து விட வேண்டும்//\nஅமெரிக்காவில் மசூதிகள் கட்ட இடமும், சிறப்பு சலுகையும் அமெரிக்க அதிபர் கொடுத்திருப்பதை நீங்கள் மறக்க வேண்டாம் என்று சொன்னால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வீர்களா\nஅவுரங்க சீப் என்ன இந்திய மன்னரா , அவரே ஆக்ரமிப்பாளார், சொந்த மண்ணின் மைந்தர்களுக்கு அவர்கள் பூமியில் இடம் கொடுத்தார் மறக்காமல் இருங்கள் என்பது என்ன ஒரு கொடுமையான சிந்தனை.\n//அப்ப இதுலாம் என்ன ராசா உற்சாவ திரு விழாவில் சமண பொம்மைகளை\nஇதுக்கு தானே கர்பலாவில் நடந்த கொலை , மொகரம் அன்னிக்கு ஏன் கத்தியால அடிச்சு ரத்தம் சிந்துறான்ங்க இன்றும், புனித மாதம் மொகரம்லா ஏன் ராசா :-)) கேட்டேன் பதிலே இல்லை.\n//ஆமா நீங்க தசவாதரம் கமல் படம் பார்க்கவில்லையா சிவனடியார் ஹரி கோயிலுக்குள் நுழைந்து அள்ளி கடலில் போடுவதை வரலாற்று செய்தி ஐயா அது மறக்க வேண்டாம்//\nஆகக்கூடி உங்களுக்கு ஒரு நடிகர் தான் முன்னுதாரணம் :-)) அவர் காட்டுவது தான் வரலாறு.சரி உன்னைப்போல் ஒருவன் நீங்க பார்க்கலையா , சிறுப்பான்மையினர் தீவிரவாதம் செய்தால் கொல்ல சொல்கிறார். படம் பார்த்துட்டு அதுல வருவது உண்மைனு கிளம்பினா இப்படி தான் ஆகும்.\nமாஷா அல்லாஹ்.. எவ்வளவு அடுக்கடுக்கான தகவல்கள் கொடுத்திருக்கீங்க‌ சகோ\n// தமிழில் இதே மாதிரியான லிங்குகளை தேடிப்பிடித்து வெட்டிக் கொண்டு வந்து கொட்டவும் கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன்//\n//இருங்கே ராசா சுத்தி ஒரு தடவை பார்த்துக் கொள்கிறேன் மர நாற்காலியில் ஒக்காந்து இருக்கிறேன்//\nஹஹ்..ஹா..ஹா.. தொடர்ச்சியான‌ காமெடிகள் :))))\nநீங்க நாத்து நடுவதை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க. நான் அரிசியை பற்றிகூட பேசவில்லை. சமைத்த உணவை பற்றி பேசுகிறேன். நீங்கள் நாற்று நடும்பொழுது சாமி கும்பிட்டால் அந்த உணவை சாப்பிடாதீர்கள் என்று இஸ்லாம் கூறவில்லை சகோ. பிற தெய்வங்களுக்கு படைத்த உணவை சாப்பிடாதீர்கள் என்று தான் கூறுகிறது. இஸ்லாம் என்ன சொல்கிறதோ அதுதான் எங்களுக்கு முக்கியம். மற்றவர்களின் லாஜிக் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை சகோ.\nமேலும், இன்று கோவி கண்ணனின் தளத்தில் நான் இட்ட பதிலின் ஒரு பகுதியை இங்கு மீழ் பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவதாலே இங்கே பதிவிடுகிறேன்.\n\"இஸ்லாமியர்கள் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது. பொங்கல் அன்று இயற்கையை வணங்குவோம் என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்புறம் பொங்கல் கொண்டாட வர வில்லை என்று கோபப்படுகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை உணவு இயற்கை கொடுத்தது, அதனால் அதை வணங்குகிறீர்கள். எந்த தவறும் இல்லை. தாராளமாக வணங்குங்கள். எங்களை பொறுத்தவரை உணவு மற்றும் அனைத்தும் இறைவன் கொடுத்தது, ஆகவே அவனுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உணவு கிடைத்ததற்காக தனியாக ஒரு நாளில் நன்றி சொல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை, ஆகவே நாங்கள் பொங்கல் கொண்டாடவில்லை. அறியாமல் இருப்பவர்களுக்காகத் தான் இந்த விளக்கம். மற்றபடி விதாண்டவாதம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில், நீங்கள் கொண்டாடுவதால் நாங்கள் கொண்டாட முடியாது. யாருக்கு நன்றி செலுத்துவது என்பது எங்களைப் பொறுத்தது, அதை நீங்கள் திணிக்க முடியாது.\"\nநான் முன்னரே கேட்டக்கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை,\nதொழிலாளர் தினத்த்தில் ஒரு தொழிலாளியாக பங்கெடுப்பீர்களா\nதை ஒன்றை பொங்கல் என்று மட்டும் பார்க்காமல் தமிழ்ப்புத்தாண்டு என்றாவது எடுத்துக்கொள்வீர்களா\nதை -1 இல் திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என்றாவது ஏற்பீர்களா\nபிறகு உங்கள் கேள்விகளுக்கு போகலாம்.\nஉங்கள் கேள்விக்கு எல்லாம் அவர் சொல்லும் பதில் அப்புறம்...\nஎன் கேள்விக்கு பதில் சொல்லுங்க வவ்வால்....\nஇந்த 'வவ்வால்' என்ற பெயர் உங்க அப்பா அம்மா வெச்ச இயற்பெயரா...\nநீங்க ஒரு கேள்வி கேட்டா அதுக்கு ஒருத்தர் ஒரு பதில் குடுத்தா...\nஅதைக்கண்டுக்காம, \"இதுக்கு பதில் சொல்லு... அப்புறம் கேளுன்னு வேறு கேள்விக்கு பறந்து தாவுவது.. அதுக்கு பதில் சொன்னா... வேற கேள்வி கேட்டு \"முதலில் இதுக்கு பதில் சொல்லுன்னு...\" புதுக்கேள்விக்கு பறந்து தாவுறது...---போன்ற பறந்து பறந்து தாவும் செயல்களினால் நீங்களே உங்கள் இயல்புக்கு ஏற்ற \"மிகச்சரியான பெயரை\" தேர்ந்த்டுத்து பொருத்தமாக வைத்துக்கொண்டீர்களா...\nபிளீஸ் ஆன்சர் மீ... இதுக்கு பதில் தெரியாம... தூக்கமே வர மாட்டேங்கு வவ்வால்...\n/* தை -1 இல் திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என்றாவது ஏற்பீர்களா\nதாராளமாக ஏற்பேன்... இதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் விசேஷமாக எதுவும் செய்ய மாட்டேன்.\nஇதுவரை தொழிலாளர் தினம் நான் கொண்டாடியது இல்லை. அவ்வளவு ஏன், எனக்கு இரு பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளுக்கும் சேர்த்து இதுவரை 7 பிறந்த நாட்கள் வந்து உள்ளன. ஒரு தடவை கூட நான் கொண்டாடியது இல்லை.\nஇப்பொழுது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்கிறேன்... முடிந்தால் நாளை சந்திக்கலாம் வவ்வால்.\nநான் 3.44 க்கு சகோ.சிராஜிடம் கேள்விக்கேட்டுள்ளேன், அப்போது உங்கள் கேள்விகள் வந்திருக்க கூட இல்லை. நீங்கள் கேள்விக்கேட்ட நேரம் 4.58 ஆகும், நான் எப்பை உங்களுக்கு முன் கூட்டியெ பதில் அளிக்க முடியும். இதில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பதாக குற்றம் வேறு சாட்டுகிறீர்கள். என்ன நேரம் என்பதை காபி & பேஸ்ட் செய்து போட்டுள்ளேன். பதிவிலும் இருக்கு பார்த்துக்கொள்ளலாம். இது என் பதிவும் அல்ல நான் ஏமாற்ற :-))\nஉங்களை மாதிரி ஆளைத்தான் தேடினேன்..\nஇனி நீங்களே பதில் சொல்லுங்க..\nஉங்கள் கேள்விக்கு எல்லாம் அவர் சொல்லும் பதில் அப்புறம்...\nஎன் கேள்விக்கு பதில் சொல்லுங்க வவ்வால்....//\nஎடுத்ததுமே குற்றம் சாட்ட வேண்டும் என்றே , அர்த்தமே இல்லாமல் பேசுவதற்கு பதில் வேறு வேண்டுமா அப்புறம் இங்கே தான் ரிப்ளை வசதி இருக்கு, என் கமெண்டில் ரிப்ளை எனப்போடாமல் அனானி கமென்டில் போய் ரிப்ளை கொடுத்து வைக்குறிங்க :-))\nசிராஜிடம் கேட்ட கேள்விகள் எதுவும் புதிதல்ல, முதல் பின்னூட்டத்திலேயே கேட்கப்பட்டவை அதற்கு பதில் சொல்லாமல் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சொன்னதால் மற்றவைக்கு என்ன என்று கேட்க தானே செய்வாங்க.\n//இந்த 'வவ்வால்' என்ற பெயர் உங்க அப்பா அம்மா வெச்ச இயற்பெயரா...//\nநீங்க இப்படித்தான் விதண்டாவாதமா பேசணும்னு ஆசைப்பட்டா அதுக்கும் நான் தயார். ஆனால் முன் என்ப்பதிவில் வாங்கிக்கட்டிக்கொண்டது போல ஆகிடும் :-))\nஇது நானா வச்சுக்கிட்ட பெயர். சரியா.\nஇப்போ சிட்டிசன் ஆப் வோர்ல்ட் னு போட்டுக்கிறிங்களே , அது நீங்க படிச்சு வாங்கின பட்டமா. இல்லை உங்க பாஸ்ப்போர்ட்ல நாடு பேரு இல்லாம இப்படித்தான் போட்டு வாங்கினிங்க இல்லை வாங்குவிங்க :-))\nபேரப்பத்தி எல்லாம் விமர்சிக்கும் முன்னர் கொஞ்சம் உங்க லட்சணத்தையும் பாருங்கய்யா :-))\nநீங்க கேட்டக்கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் ,ஒவ்வொரு பருக்கையிலும் உண்பவர் பெயர் இருக்கும் என்று ஏன் நம்புகிறார்கள், வெங்காயம், வெள்ளைப்பூண்டை எல்லாம் சேர்க்கவில்லை.\nவிதண்டாவாதம் தான் செய்ய விருப்பம் எனில் செய்யலாம் வாங்க. :-)\nவவ்வால்களை பத்தி சொல்லனும்னா நிறைய இக்கிது. ஒரு லட்சம் பாலூட்டிகள் இந்த உலகில் இருந்ததாகவும் அவற்றில் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் தற்போது 4000 பாலூட்டிகள் மாத்திரமே உள்ளதாகவும் கூறுகின்றார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு பிறகு பல உயிரினங்களை உயிரியல் கண்காட்சிகளில் மாத்திரமே காணக்கூடிய நிலை ஏற்படும் என்றும் திட்ட வட்டமாக கூறுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் பல விலங்குகளின் நிலை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது. தங்கள் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக் உண்ணக்கூடிய அதிசயத்திலும் அதிசயம். வவ்வால்கள் பொதுவாக ஒரு சமுதாயமாக கூடி வாழுகின்றன. ஒரு கூட்டத்தில் 2000க்கம் மேற்ப்பட்ட வவ்வால்கள் வாழுகின்றன. இவைகள் வருடம் முழுதும் தங்களுக்கு உணவுத்தட்டுபாடின்றி கிடைக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து வாழுகின்றன.\nஉங்களுக்கெல்லம் மன்டைய கசகி சொல்லி புரிய வெக்கமுடியது\nசகோ.வவ்வால்... ஒரு கேள்வி கேட்டா என்னன்னவோ சொல்றீங்க...\nநான் உங்களிடம் கேட்டதுதான் முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் கேள்வி..\nவவ்வால் காரணப்பெயர் பற்றி. ஏனென்றால், உங்கள் பெற்றோருக்கு என் பாராட்டு சென்று விடக்கூடாது அல்லவா..\nபாராட்டு: இயல்புக்கேற்ற சரியான பெயரை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துகள்.. அவ்ளோதான் என் நோக்கம். ஓவர்.\nஅப்புறம்தான் உங்களின் இந்த தேவையற்ற காமெடி அரங்கேற்றம்....\n//உங்கள் கேள்விக்கு எல்லாம் அவர் (இவர் சிராஜ்) சொல்லும் பதில் அப்புறம்...\nஎன் கேள்விக்கு பதில் சொல்லுங்க வவ்வால்....(இது அடுத்து நான் கேட்க இருந்த வவ்வால் பெயர்க்காரணம் பற்றி)//\n'எங்கப்பர் குதிருக்குள் இருக்கார்' னே சொல்லிட்டது போல...\nநீங்களாக முன் வந்து மூக்கு வேர்த்து உளறிக்கொட்டிய பின்னர் தெரிஞ்சிக்கிட்டேன்.\nஅந்த மூன்று கேள்விகளுக்கும் நீங்கள் அனானியாகவே வந்து பதில் சொல்லலாம் என்ற சலுகை உங்களுக்கு அளிக்கப்படுகிறது..\nகூடவே...///நீங்க கேட்டக்கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் ,ஒவ்வொரு பருக்கையிலும் உண்பவர் பெயர் இருக்கும் என்று ஏன் நம்புகிறார்கள், வெங்காயம், வெள்ளைப்பூண்டை எல்லாம் சேர்க்கவில்லை.///...இந்த மூன்று வரிகளுக்கு விளக்கவுரை தெளிவுரையுடன்.\n//முன் என்ப்பதிவில் வாங்கிக்கட்டிக்கொண்டது போல ஆகிடும்//---யாரு...நீங்கதானே.. அங்கே நீங்க பதிலே சொல்லாமே தவ்வி பறந்து எஸ்கேப் ஆனமாதிரி இங்கேயும் தவ்வி பறந்து நழுவிட வேண்டாம் இம்முறை..\n\"ச்சே... என்னப்பா... இதுவரை யாருமே கேட்கலயே இதைப்பத்தி\"ன்னு எனக்கு பயங்கர கவலை... கடைசியா நீங்கதான் சூப்பரா கேட்டுட்டீங்க, ரொம்ப தாங்க்ஸ் சகோ.வவ்வால். அதுக்கு ஒரு தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரிய பதில் இருக்கு. இறைநாடினால் கூடிய விரைவில் என் வலைப்பூவில்.... உங்களுக்காக அந்த ஸ்பெஷல் பதிவு வரும்..\n...... அதுக்கு ஒரு தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரிய பதில் இருக்கு. இறைநாடினால் கூடிய விரைவில் என் வலைப்பூவில்.... உங்களுக்காக அந்த ஸ்பெஷல் பதிவு வரும்..\n ஆவலா எதிர்ப்பார்க்கிறோம் சகோ :) விரைவில் இன்ஷா அல்லாஹ் பதிவிடுங்க. தங்களின் வருகைக்கும் அறிவார்ந்த கேள்விக் கணைகளுக்கும் மிக்க நன்றி. (ஜஸாகல்லாஹ் ஹைரா\nமுஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். எதிர் குரூப் அவ்வாறு செய்யத் தயாரா பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.\n//முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன்//\nஇஸ்லாமியர்கள் மீது தவறுதலான புரிதல் கொண்டவர்கள் சிலர் இருந்தாலும், வேண்டுமென்று தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, சொல்லியே மக்களிடத்தில் வெறுப்பேற்ற முயற்சி செய்பவர்களே அதிகம். அதனால் இன்ஷா அல்லாஹ், கண்டிப்பாக பதிவிடுங்க சகோ. தங்களின் வருகைக்கும், அறிவார்ந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. (ஜஸாகல்லாஹ் ஹைரா\n//அப்புறம் இஸ்லாமிய மதமே அன்னிய மதம் தானே. இஸ்லாம் திருட கூடாதுன்னு சொல்லுது./ஆனா வந்தேறி துலுங்க மன்னர்கள் இந்து கோயில்களை இடித்து கொள்ளை அடித்து மக்களை துண்புறுத்தியது எல்லாம் மறந்து போகனுமா மத நல்லிணக்கம் என்பது ஒன்று இருக்கிறது அது என்ன வென்றால் உன் சுதந்திரம் உன் முகத்தின் மூக்கு வ்ரை தான் என்பதே//\nதிருவிதாங்கூர் சமஸ்தானம் கோவில்ல திப்பு சுல்தான் காலத்து தங்க நாணயம் 70 கிலோ, பிரெஞ் நாட்டு தங்க நாணயம் 50 கிலோ எப்படி வந்தது இதிலிருந்து புரியலா ஊரை கொள்ளை அடித்து உலையில் போட்ட களவாணி யாருன்னு ஆப்வே வெள்ளைகார கமுனட்டியோட குஜாவை துக்கனா அயல்நாட்டு தேசபத்திக்கள் இவனங்கெல்லாம் பிரதமர், முதலைமைச்சுர் ஆனா கூவியே வித்தேபோடுவா, இவனங்கெலே குன்டு வெப்பா, இப்போ நாட்டை சினாவுக்கு விலை பேசரனுங்கா, கம்பத்தல பாக்ஸ்த்தான் கொடி ஏத்தரனங்கா. என்னைக்குமே இந்திய கொடி மட்டும் ஏத்தமட்டதா கேடி பயா புல்லா. எப்படிதா புரியலா எப்பவுமே கொள்ளபுறத்தல வரங்க இந்தியவுக்கு வந்தாதே அப்படிதானே ஊருக்குள்ளே ரொம்பா நல்லவனுங்கே\n//தமிழர்ப்பண்டிகையா பொங்கல் என்பதோடு நின்றால் நலம். அப்படி இல்லை எல்லாம் பேசுவோம் என்றாலும் பேசுவோம்.//\nஎன்னது இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு ..... ஆரம்பிச்சுவச்சது நீங்க...\nஇன்னும் ஒரு எதிர் கேள்வி கேட்டு நிறைய பதில் கிடைக்க வைத்த சகோ வவ்வாலுக்கு ந்ன்றி :-)\nஇப்படி அனைத்து காரணிகளுக்கும் அனைத்து விளைச்சளுக்கும் மூல காரணியாக இருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி, எந்த ஒரு உணவையும், உணவுத்துகளையும் வாய்க்குள் போட்டால், இறைவனின் கருணையை போற்றி நன்றி கூறி, \"இறைவனின் பெயரால்...\" என்று சொல்லி சாப்பிட ஆரம்பிக்கும் முஸ்லிம்கள்... ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும்... அருந்தும்போதும்... நித்தம் நித்தம் தினம் தினம் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனரே.. ஆண்டின் 366 நாளும்... ஒரு நாளில் பல முறையும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முஸ்லிம்களை எதற்கு 'ஒரே ஒருநாள் மட்டும் பொங்கல் கொண்டாடினால் போதும்' என்று சிறுமைபடுத்துகிறீர்கள்..\nமற்ற அனைத்து தமிழ் மக்களும்...\nமுஸ்லிம்களை பின்பற்றி, ஆக அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி...\nமுஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல்,\nதினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...\nமாஷா அல்லாஹ் நடுநிலையாலர்களுக்கு இந்த பதில் போதுமானது.\nநடுநிலையாளர்கள் இதற்கு முன்பே தெளிவுபெற்றிருப்பார்கள் என நினைக்கிறேன் சகோ. விதண்டாவாதம் பண்ணுகிறவர்களுக்கு சகோதரர்களின் பதில்கள் மூலம் தெளிவு கிடைத்தால் சரிதான் :) நன்றி சகோ.\n@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்\n//தங்களின் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் வாவ்.....வாவ்....வரே...வாவ்...///\nசகோ முஹம்மத் ஆஷிக், சகோ சிராஜ், சகோ ஹைதர் அலி மற்றும் அறிவுப்பூர்வமான வாதங்களையும், சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களையும் எடுத்துவைக்கும்‌ அனைவருக்கும் இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக சிறந்த நற்கூலிகளைக் கொடுப்பானாக உங்கள் வருகைக்கும் நன்றி சகோ.\n//என்னது இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு ..... ஆரம்பிச்சுவச்சது நீங்க...\nகருத்து பரிமாற வாய்ப்பிருந்தால் இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்...\nபரவாயில்ல சகோ. லேட்டானாலும் வருகை த‌ந்தமைக்கு நன்றி :)\n//கருத்து பரிமாற வாய்ப்பிருந்தால் இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்...//\nஇன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வந்து தொடரலாம் :)\nமுஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். எதிர் குரூப் அவ்வாறு செய்யத் தயாரா பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.\n நீங்கள் மட்டுமல்ல, எந்த ஒரு முஸ்லிமும் ஒரே தட்டில்\n-சகிப்புதன்மையோடு அல்ல- சகோதர வாஞ்சையோடு சாப்பிட தயாராக இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிய தாருங்கள்\nதமிழ் இஸ்லாமியருக்கு இருக்கும் தெளிவு கேரளத்துல இல்லைங்க. 4 நாள் லீவு போட்டுப் போய் ஓணம் கொண்டாடிட்டு வராங்கே. கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா\nஅப்புறம் அரபி கத்துகிட்டு சவூதி போயிட்டா எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கலாம் பாருங்க.\n//தமிழ் இஸ்லாமியருக்கு இருக்கும் தெளிவு கேரளத்துல இல்லைங்க. 4 நாள் லீவு போட்டுப் போய் ஓணம் கொண்டாடிட்டு வராங்கே. கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா\nஅப்புறம் அரபி கத்துகிட்டு சவூதி போயிட்டா எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கலாம் பாருங்க//\nதமிழ் இஸ்லாமியர்கள் தெளிவா இருக்காங்கன்னு சொல்லவாவது உங்களுக்கு மனம் வந்ததே... அதுக்கே உங்களை நிச்சயம்() பாராட்டணும் சகோ. ஆனாலும் கேரள இஸ்லாமியர்க‌ள் அரபி கத்துக்கிட்டு சவூதி போறதுக்கு முன்னாடி நாங்க மலையாளம் கத்துக்கிட்டு வந்துடுறோம் இருங்க) பாராட்டணும் சகோ. ஆனாலும் கேரள இஸ்லாமியர்க‌ள் அரபி கத்துக்கிட்டு சவூதி போறதுக்கு முன்னாடி நாங்க மலையாளம் கத்துக்கிட்டு வந்துடுறோம் இருங்க ஏன்னா இஸ்லாமியர்கள் நாட்டைவிட்டுப் போனால் மகிழ்ச்சியா இருக்கலாம்னு பகல்கனவு காண்கிற உங்களைப் போன்றவர்களைப் பற்றி கொஞ்சம் அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும்ல.. அதுக்குதான்\nபொங்கல் முடிந்து அடுத்த பொங்கலே வரப்போகுது, இப்ப வந்து இந்த கேள்விய கேட்டுகிட்டு இருக்கீங்க. பொங்கலுக்கு அடிச்சிட்டு மட்டையாகி இப்பதான் தெளிஞ்சிங்களா\nகவலையே படாதீங்க, சகோ அஸ்மா சொன்ன மாதிரி முதலில் மலையாளம் கத்துகிட்டு ஓணம் கொண்டாட்ரவங்கள திருத்த முயற்சி பண்றோம். யாரோ 4 முஸ்லிம் பண்ணா அதெல்லாம் இஸ்லாமிய சட்டம் ஆகிடாது ராசா. எத கொண்டட்ரதுன்னு எங்களுக்கு தெரியும், நீங்க போய் உங்களுக்கு உண்டானத தண்ணி அடிச்சிட்டு கொண்டாடுங்க.\nஅப்படியே முல்லை பெரியாறு விசயத்தில் கேரளத்துக் காரனுக்கு இருக்கும் பொறுப்பு தமிழனுக்கு இல்லைன்னு சொன்னா அய்யா ஏத்துக்குவீன்களா \nபொங்கல் முடிந்து அடுத்த பொங்கலே வரப்போகுது, இப்ப வந்து இந்த கேள்விய கேட்டுகிட்டு இருக்கீங்க. பொங்கலுக்கு அடிச்சிட்டு மட்டையாகி இப்பதான் தெளிஞ்சிங்களா\n// யாரோ 4 முஸ்லிம் பண்ணா அதெல்லாம் இஸ்லாமிய சட்டம் ஆகிடாது ராசா. எத கொண்டட்ரதுன்னு எங்களுக்கு தெரியும்//\nபொட்டுல அடிச்ச மாதிரி பதில் :) எவ்வளவு சொன்னாலும் புரிந்துக் கொள்ளாத மாதிரியே ஆக்ட் பண்ணிக் கொண்டிருந்தா இப்படியும் பதில் சொல்லும்படி ஆகிவிடுகிறது. என்ன செய்ய..\nஅப்படியே முல்லை பெரியாறு விசயத்தில் கேரளத்துக் காரனுக்கு இருக்கும் பொறுப்பு தமிழனுக்கு இல்லைன்னு சொன்னா அய்யா ஏத்துக்குவீன்களா \n:-)) நன்றி சகோ :)\nபல வரலாற்று தகவல்கள் உங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தெரிந்து கொண்டேன். வவ்வால் பற்றிய (அட பறவையைப் பற்றி சொன்னேன்) தகவல் அல்லாஹ்வின் மகத்துவத்தை மேலோங்கச் செய்கிறது...மாஷா அல்லாஹ்... இடையிடையே சில பல சிரிப்புவெடிகள் (எ.கா. இஸ்லாம் புதுசா முளைத்த மதம் என்ற கண்டுபிடிப்பு, ஆஷிக்கின் கவலை தீர்ந்த விதம்). மாற்று மத சகோதரர்கள் எதில் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நம்மள சவூதிக்கு துரத்தரதிலேயே கவனமா இருக்கறாங்கப்பா...ஹையோ ஹையோ\nஆனால் எத்தனை முறை மீள்பதிவுகள் போட்டாலும் இதே கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்ஷா அல்லாஹ் பதில்களும் வந்துகொண்டேயிருக்கும்.\n//மாற்று மத சகோதரர்கள் எதில் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நம்மள சவூதிக்கு துரத்தரதிலேயே கவனமா இருக்கறாங்கப்பா...ஹையோ ஹையோ//\n'மாற்று மத சகோதரர்கள்' என எல்லோரையும் அப்படி சொல்லிவிட முடியாதுமா எண்ணங்கள் சரியில்லாத சிலர்தான் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.\n//ஆனால் எத்தனை முறை மீள்பதிவுகள் போட்டாலும் இதே கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்ஷா அல்லாஹ் பதில்களும் வந்துகொண்டேயிருக்கும்//\n:)) அவர்கள் தெளிவடையும்வரை நாமும் விளக்கம் சொல்லிக் கொண்டே இருப்போம். இன்ஷா அல்லாஹ் என்றாவது ஒருநாள் இஸ்லாத்தின் சரியான கொள்கையைப் புரிந்துக் கொள்வார்கள்.\nநீண்ட நாட்களுக்குப் பின் வருகைத் தந்தமைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி பானு :)\nவிரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..\nசாரி அஸ்மா நானும் அனைவரையும் நினைத்து குறிப்பிடவில்லை... உங்கள் பதிவில் வீண்விவாதம் செய்தவர்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருந்தேன்.\n//சாரி அஸ்மா நானும் அனைவரையும் நினைத்து குறிப்பிடவில்லை... உங்கள் பதிவில் வீண்விவாதம் செய்தவர்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருந்தேன்.//\nநீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரிந்தது பானு :) ஆனாலும் உங்கள் கருத்தில் அப்படியொரு புரிதலும் உள்ளது என்பதால் சொன்னேன், வேறொன்றுமில்லை :)\nஇந்தப் பதிவில் வீண்விவாதம் செய்தவர்கள் போன்று வெளியிலும் இருக்கிறாங்கபா.. ஒருத்தவ‌ங்க சொல்றதைப் பார்த்து அது சரியா, நியாயமா, உண்மையான்னு சுயமா யோசிக்காம 'ஆமா சாமி' போடுறவங்க அவங்க. அப்படிப்பட்டவ‌ங்களுக்கு நம்மை விரட்ட அருகதை இல்லைன்னு அவங்க புரிஞ்சிக்கிட்டா சரிதான் :)\nநான் ஈழத்தை (இலங்கை ) சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் தமிழன் .நாங்கள் எங்கட தொழுகை கூடத்தில (சேர்ச் ) தை பொங்கல் கொண்டாடுறோம் .பொங்கல் என்பது ஒரு நன்றி திருவிழா ,ஆதாவது இந்துக்கள் சூரியனை தங்கள் இறைவன கொண்டு கொண்டாடுகிறார்கள் .கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஏக இறைவனாகிய இயேசுவுக்கு நன்றி கூறி கொண்டாடுகிறோம் .\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=742692", "date_download": "2018-08-20T18:17:54Z", "digest": "sha1:RHSRCXYB45YKM6AKIZVWI3RZYOQS66JG", "length": 37401, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "குஜராத் போல் இந்தியா மாறவேண்டுமா? | Dinamalar", "raw_content": "\nவாங்க படிக்கலாம்... சிறந்த நூல்களின் முழுமையான தொகுப்பு\nகுஜராத் போல் இந்தியா மாறவேண்டுமா\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nமத்திய அரசின் 3 தாரக மந்திரம் : சுதந்திர தின உரையில் ... 114\nரஜினி விமர்சனம்: அதிமுக கடும் கோபம் 81\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\n'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் ... 79\nதி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ., மேலிடம் ... 225\nஅழகிரி வியூகம்; தி.மு.க., திக்... திக்... 169\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\nகுஜராத்திலும் சரி, வெளி மாநிலங்களிலும்சரி, பெரும்பாலும் எல்லோருமே சில கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். இதே அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு முதலமைச்சர்களின்கீழ் வேலை செய்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மட்டும் எப்படி அவர்களால் திட்டங்களைத் திட்டமிட்ட சமயத்திலோ அல்லது முன்னதாகவோ முடிக்க முடிகிறது எப்படி அவர்களால் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது எப்படி அவர்களால் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது எப்படிப் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க முடிகிறது எப்படிப் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க முடிகிறது ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்துள்ளது ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்துள்ளது எப்படி அவர்களுக்குள், முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் திறன் வந்தது\nஅனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில், நரேந்திர மோடி என்பவரின் தன்னிகரற்ற தலைமை என்பதுதான்.\nவெற்றிகரமாகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காரணங்களில் ஒன்றாக, மோடியின் கலந்தாலோசிக்கும் பண்பு கருதப்படுகிறது.\nஅதற்கு ஆதாரமாக, நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தும் சிந்தனை முகாமை (சிந்தன் ஷிபிர்) சொல்லலாம். இந்த மூன்று நாள் முகாமில், நரேந்திர மோடி உள்பட அனைத்து அமைச்சர்களும், அரசின் உயர் அதிகாரிகளும், கலெக்டர்களும், மாவட்ட டெவலெப்மெண்ட் அதிகாரிகளுமாக சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர். இந்த முகாம் பொதுவாக நகருக்கு வெளியே அமைதியான சூழலில் நடைபெறுகிறது.\nயோகா மற்றும் தியானப் பயிற்சியோடு ஆரம்பிக்கும் இந்தப் பயிற்சி முகாமில் மோடியும் மற்ற அதிகாரிகளோடு சேர்ந்து இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.\nஇந்த முகாமில் முக்கியமாக, கடந்த ஆண்டின் வெற்றி, தோல்விகள் அலசப்படுகின்றன. மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்பதால், படிப்பினைகளைப் பறிமாறிக்கொள்ளும் தளமாக இது விளங்குகிறது.\nமேலும், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தான் திரண்டுள்ளோம் என்ற உறுதி நிலை நாட்டப்படுகிறது.\nஇந்த முகாமில், தற்போது மாநிலத்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன, எந்தப் பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும், எந்தெந்தத் திட்டங்களை வரும் ஆண்டில் செயல்படுத்தலாம், அவற்றைச் செயல்படுத்துவதில் என்னென்ன சவால்கள் உள்ளன, அவற்றை எதிர்கொள்வது எப்படி போன்றவை மிக ஆழமாக விவாதிக்கப்படுகின்றன.\nஇந்த விவாதங்களின் அடிப்படையில், வரும் ஆண்டுக்கான குறிக்கோள், துறைவாரியாக எட்டப்படுகிறது.\nஇத்தகைய அணுகுமுறை, மோடியின் வெற்றிக்கு மிக அடிப்படையான காரணம் ஆகும். யார் யார் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்களோ அவர்களைத் திட்டமிடலிலும் சுதந்தரமாக ஈடுபட வைப்பதன் மூலம் அவர்களின் சாதிக்கும் உணர்வை மோடி தூண்டிவிடுகிறார். வருடாந்திர ‘கன்யா கேலவாணி’ நிகழ்ச்சியின்போது பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கோரி குஜராத்தின் கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எவ்விதம் செல்கிறார்கள் அவர்களுக்கு அந்த உணர்வு எவ்விதம் வந்தது அவர்களுக்கு அந்த உணர்வு எவ்விதம் வந்தது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இது.\nசிந்தனைப் பயிற்சி முகாமில், மிக முக்கியமாக மோடி, தனது கனவை, லட்சியத்தை நேரடியாக அதனைச் செயல்படுத்தப் போகும் அதிகாரிகளோடு பகிர்ந்துகொள்வதோடு, அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து, அனைவரையும் ஒரே லட்சியமான முன்னேறிய குஜராத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.\nஇது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாத ஒன்று.\nஇன்னுமொரு வித்தியாசம், அரசு அதிகாரிகளின் ‘இடமாற்றம்’ என்பது தண்டனையாகவோ அல்லது ஆயுதமாகவோ குஜராத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.\nஅதிகாரிகளுக்கு அவர்கள் குறிக்கோளை அடையத் தகுந்த கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அவர்கள் ஒரே பொறுப்பில் இருப்பதால், அரசும், அந்த அதிகாரியும் நினைத்த நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடிகிறது.\nகுஜராத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, பல தென்னிந்திய, குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளைப் பார்க்க முடிந்தது. பலர் அங்கே பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்கள். சுதந்தரமாக, அரசியல் கலப்பில்லாமல் மக்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்படும் சூழ்நிலை உள்ளதால், அவர்கள் கால நேரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், குறிக்கோளை நோக்கித் திடமாக முன்னேறுகிறார்கள்.\nகடந்த 9 ஆண்டுகளில், மாநிலக் கல்வித்துறை வெறும் மூன்று செயலர்களை மட்டுமே கண்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆண்டுக்கு ஆண்டு புதுச் செயலளர்களைப் பார்க்கும் நிலைதான் உள்ளது.\nஅகமதாபாத் மாநகராட்சியின் ஓர் உயரதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், ‘நாங்கள் எல்லாம் அரசு அதிகாரிகள் அல்லர், செயல் வீரர்கள்’ என்று சொன்னார். பல்வேறு கடினமான திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருந்தபோதும்கூட அவரிடம் காணப்பட்ட உறுதித்தன்மை, நம்பிக்கை போன்றவை, ஓர் அரசு அதிகாரியுடன் பேசும் உணர்வைக் கொடுக்காமல், வேகமாக முன்னேறிவரும் ஓர் இளம் தொழிலதிபரிடம் பேசியது போன்றே இருந்தது. ஒரு சிறந்த தேசப் பற்று மிக்க தலைவரிடம் பேசியது போன்ற உணர்வையும் அது ஏற்படுத்தியது.\n2004-ம் ஆண்டிலிருந்து கிளாஸ் 1 மற்றும் கிளாஸ் 2அரசு அதிகாரிகளுக்கு ‘கர்மயோகி பயிற்சி’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முகாமில், அரசு அதிகாரிகளும் ஆசிரியர்களும் கலந்துகொள்கின்றனர். இதன்மூலம் அவர்களுக்குத் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்யப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇதில் மாநிலத்தில் உள்ள 2.25 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஇந்தப் பயிற்சி முகாம், அரசு அதிகாரிகளை, மக்களை நோக்கிச் சென்று, மக்கள் பணியாற்றச் செய்துவருகிறது என்றால் மிகையல்ல.\nமக்களுக்கு மக்களைக் கொண்டு தொண்டு செய்:\nமோடி அரசின் மிக அடிப்படைச் சித்தாந்தமான, ‘மக்களுக்கு மக்களைக் கொண்டு தொண்டு செய்’ என்பதை அவருடைய எல்லாத் திட்டங்களிலும் காணமுடிகிறது. மக்கள், எந்தத் திட்டத்தையும் தங்கள் திட்டமாகப் பார்க்கவேண்டும். தங்கள் கனவு நனவாகப் போவதுபோல் எண்ணி, தங்களின் பங்களிப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுக்கவேண்டும். அது தங்கள் திட்டம்தான், அதற்குச் செயல் வடிவம் கொடுக்க அரசு உதவி மட்டுமே செய்கிறது என்ற வகையில்தான் அவர்கள் சிந்திக்கவேண்டும்.\nஅதனால் தான், எந்தத் திட்டத்தையும் ஆரம்பிக்கும்போது, வெறும் அறிவிப்பு அல்லது நிதி ஒதுக்கீட்டோடு மட்டும் நின்றுவிடாமல், பல மட்டங்களிலும் அந்தத் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பயனாளிகள் மன்றங்கள் ஆகியோரின் பங்களிப்பு, அரசு அதிகாரிகளின் கடும் உழைப்பு ஆகியவை மிகுதியாக இருக்கின்றன.\nநான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, பொதுவாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், எல்லாருமே, ‘இது நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். இத்திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் நேரடியாகக் கண்காணிக்கிறார். இத்திட்டத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தாகவேண்டும். அதற்குத் தேவைப்படும் எந்த உதவிகளையும் மோடி செய்வார்’ என்பதாகும்.\nஇது, அவர் மக்களின் கனவைத் தன் கனவாக்கி, அவர்களைக் கொண்டே அதை நனவாக்குவதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.\nகுஜராத்தில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற்றன. ஆனால், அனைத்தும் திட்டமிட்டபடி, ஒன்றன்பின் ஒன்றாக, மிகச் சரியாக நடைபெற்றுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முழுமையான, ஒத்திசைந்த வளர்ச்சியாக அது உள்ளது. உலகமே வியக்கத்தக்க வளர்ச்சியாகவும் அது உள்ளது.\nஇதற்குக் காரணம் ஒன்றுதான். நரேந்திர மோடி என்ற நபரின் ஈடு இணையற்ற தலைமைத்துவப் பண்பு.\nஇந்தியாவின் கலங்கரை விளக்கமாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. பல அறிவுரைகளுக்கும் செயல் விளக்கங்களுக்கும் அயல் நாடு செல்லும் காலம் போய், இப்போதெல்லாம் மற்ற மாநில அரசுகள் குஜராத் நோக்கிச் செல்கின்றன.\nமகாத்மா காந்தியைபோல இந்தியாவின் இதயத்தைப் புரிந்துகொண்டு மக்களுக்காகத் தொண்டாற்றும் பொறுப்பும் கடமையும் உள்ள ஒருவரை, வல்லபபாய் பட்டேலைப் போன்ற எடுத்த காரியங்களை எத்தகைய சவால்களையும் தாண்டி முடிக்ககூடிய வல்லமை கொண்ட ஒரு தலைவரை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.\nஇன்றைய காலகட்டத்தில் தரையில் கால் வைத்துக்கொண்டு, அதே நேரம் மிகப்பெரிய கனவுகளையும் நனவாக்கிக்கொண்டிருக்கும் நரேந்திர மோடியால்தான் இந்தியர்களின் இந்தக் கனவையும் நனவாக்க முடியும்.\nபதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள: http://www.kizhakku.in\n(நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nPM Rani - new delhi, கருத்து நெத்தியடி. கண்டிப்பாக இந்தியர்கள் அனைவரும் சிந்தித்து ஒரு முறை மோடிக்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும்.\nபுத்திசாலி தாமஸ் ஜார்ஜ் அவர்களே- தமிழக முதலமைச்சர் கூட தமிழர்களைத்தான் அங்கிருந்து கூட்டி வந்தார் இந்தியர்கள அனைவரையுமா அழைத்துவந்தார் அவரவர் மாநிலத்திற்கு அந்தந்த முதலமைச்சர்தான் பொறுப்பு. ஆனால் மோடி மீதுமட்டும் ஏன் உனக்கு இந்த வெறுப்பு. காரணம் அவர் ஒரு இந்து என்பதால்தானே ஷபீர் என்ற அறிவாளி தமிழ் நாடு தான் அவருக்கு சொர்கமாம் அவர் காணும் சொர்க்கத்தில் மின்சாரம் இருக்காது போலும் தண்ணீர் பஞ்சம் இருக்கும் போலும். அது சொர்கமா அல்லது நரகமா அவரவர் மாநிலத்திற்கு அந்தந்த முதலமைச்சர்தான் பொறுப்பு. ஆனால் மோடி மீதுமட்டும் ஏன் உனக்கு இந்த வெறுப்பு. காரணம் அவர் ஒரு இந்து என்பதால்தானே ஷபீர் என்ற அறிவாளி தமிழ் நாடு தான் அவருக்கு சொர்கமாம் அவர் காணும் சொர்க்கத்தில் மின்சாரம் இருக்காது போலும் தண்ணீர் பஞ்சம் இருக்கும் போலும். அது சொர்கமா அல்லது நரகமா சிங்கப்பூர் பாலா என்பவர் கேட்கிறார் முன்பு ஒரு வாய்ப்பு கொடுத்தபோது என்ன கிழித்தார்கள். 60 வருடம் ஆண்ட காங்கிரஸ் ஐ விட 6 ஆண்டுகள் ஆண்ட பிஜேபி அதிகமாகவே செய்துள்ளது. இன்றும் வறுமை வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது. இதெல்லாம் 60 ஆண்டுகால ஆட்சியால் தீர்கமுடின்தாதா சிங்கப்பூர் பாலா என்பவர் கேட்கிறார் முன்பு ஒரு வாய்ப்பு கொடுத்தபோது என்ன கிழித்தார்கள். 60 வருடம் ஆண்ட காங்கிரஸ் ஐ விட 6 ஆண்டுகள் ஆண்ட பிஜேபி அதிகமாகவே செய்துள்ளது. இன்றும் வறுமை வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது. இதெல்லாம் 60 ஆண்டுகால ஆட்சியால் தீர்கமுடின்தாதா இது தெறியாமல் எதவும் பேசவேண்டாம் சிங்கபூர் சீமானே கோவை அருணன் சொல்லியுள்ளது மிகவும் சரி. இங்கே ஒரு கக்கூஸ் கட்டினால் கூட அங்கே ஒரு ஜெயலலிதா படம் வைப்பார்கள். இலவச பஸ் பாஸ் கொடுத்தல் அதில் படம் இவை எல்லாம் ஜெயலலிதாவின் பணத்திலிருந்து செய்கிறாரா இது தெறியாமல் எதவும் பேசவேண்டாம் சிங்கபூர் சீமானே கோவை அருணன் சொல்லியுள்ளது மிகவும் சரி. இங்கே ஒரு கக்கூஸ் கட்டினால் கூட அங்கே ஒரு ஜெயலலிதா படம் வைப்பார்கள். இலவச பஸ் பாஸ் கொடுத்தல் அதில் படம் இவை எல்லாம் ஜெயலலிதாவின் பணத்திலிருந்து செய்கிறாரா கோவை பிரபு கூறும் செய்தி என்னை பிரமிக்க வைக்கிறது. விஸ்வநாதன் , வேலூர்\nஅய்யய்யோ, வேண்டாம் கடவுளே, எங்களை வேரறுத்து விடுவார்கள். இது பயம் அல்ல. அனைத்து மக்களுக்கும் அடைக்கலம் தந்து அனைவரையும் வாழ வைக்கும் ஒரே இனம், ஒரே இடம் தமிழன், தமிழகம். தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sltj.lk/30372/", "date_download": "2018-08-20T18:48:39Z", "digest": "sha1:3AI3XZHPM5CEMB7VEDOFUQOK5DG2Q3DF", "length": 27953, "nlines": 258, "source_domain": "www.sltj.lk", "title": "மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்..", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nமிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும்.\nமஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.\nஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.\nஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் இறைவனுக்கு இது சாத்தியமானதே\nமிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை இறைவன் ஏன் ஏற்படுத்திக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் வசனத்தில் இருந்து அறியலாம்.\n(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.\nஇந்த நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடம் கூறிய பொழுது சிலர் நம்ப மறுத்து மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.\nமிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன.\nஅல்லாஹ் நாடினால் மிகச் சிறிய அளவு நேரத்தில் விண்ணகம் அழைத்துச் செல்ல முடியும்; அவனது ஆற்றல் அளப்பரியது என்று நம்புவதுதான் மிஃராஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதை நம்ப மறுப்பவர் அல்லாஹ்வின் ஆற்றலில் ஐயம் கொண்டவராவார். அவரது ஈமான் சந்தேகத்துக்கு உரியதாகும்.\nமிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எந்தக் குறிப்பும் இல்லை.\nஎந்த ஆண்டில், எந்த மாதத்தில், எந்தத் தேதியில் நடந்தது என்பதில் அறிஞர்கள் சொந்தக் கருத்தாக பலவாறாக கூறியுள்ளனர். இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.\nரஜப் மாதம் 27 ல் தான் மிஃராஜ் நடந்தது என்று பரவலாக மக்கள் நம்புவது ஆதாரமற்றதாகும்.\nஅந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஒரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை.\nமிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்\nரஜப் 27 ஆம் இரவு தான் மிஃராஜ் நடைபெற்றது என்று நம்பி அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல பித்அத்தான காரியங்களைச் செய்கின்றனர்.\nமிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர் என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.\nஇதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்லிகள், மவ்லித் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிக்கின்றனர்.\n6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும்; அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3 ஆம் கலிமாவை 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.\n3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.\nஇரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃப, லிஈலாஃபி குறைஷ் ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி எழுதி வைத்துள்ளனர்.\nஇது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.\nஇவை நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.\nயார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)\nநூல் : புகாரீ 2697\nநமது கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)\nநூல் : முஸ்லிம் 3243\nதாமாக புதிய வணக்கங்களை உருவாக்கிக் கொண்டவர்களை நோக்கி அல்லாஹ் கேட்கும் கேள்வியைக் காணுங்கள்\nஉங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா\nஅல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதாகக் கருதப்படும்.\nஅல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்குத்தான் எந்த வணக்கத்தையும் நாம் செய்ய வேண்டும். ஆனால் நபியைப் பின்பற்றாமல் அல்லாஹ்வின் அன்பை யாரும் பெற முடியாது என்று அல்லாஹ் கற்றுத்தருகிறான்.\nநீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக\nஇன்னும் சிலர் இந்த இரவில் பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.\nஉமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக\nஉங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.\nஅல்லாஹ்வின் இந்த அறிவுரையை எதிர்த்து பணிவில்லாமல் எழுந்து, குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:\nசெய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),\nஎனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்சிப்போமாக\nPrevious புனித குர்ஆனுடன் போர் தொடுக்கும் மவ்லிது பாடல்கள் – நோட்டிஸ்\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்\nஇரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”\nஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/filmfare-august-2018/", "date_download": "2018-08-20T18:06:34Z", "digest": "sha1:4F6JASLII4RONQ4VLUBK5LD6HL7Z4DWB", "length": 8869, "nlines": 166, "source_domain": "news7paper.com", "title": "Filmfare - August 2018 - News7Paper", "raw_content": "\nஒசாமா பின் லேடன் மகன் திருமணம்: அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புத் தீவிரவாதி மகளை…\nதினகரன் குக்கர் டோக்கன் கொடுத்து கூட்டத்துக்கு ஆள் சேர்த்தார்: திவாகரன் விமர்சனம்\n2022-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும்; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் 7 மணி நேரத்தில் 10 இடங்களில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி\nசிசிடிவி, போலீஸ் இரண்டுமே வேலைசெய்ய வேண்டிய தேவை: நடிகர் பிரசன்னா\nராகுலை சந்தித்த பிரபல நடிகர்… இப்போது சீரியல் நடிகையுடன் இணைகிறார்…\nஎன்னாது, மறுபடியும் பிக் பாஸ் வீட்டில் காயத்ரியா\nநீங்க யாரு அனுமதி கொடுக்க… தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் கேள்வி\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\nபெண்ணிடம் ‘ஹாட்’ போட்டோ கேட்டு ஹார்ட் அட்டாக் வாங்கிக் கொண்ட இளைஞர்\nஉடம்புல இருக்குற மொத்த கொழுப்பையும் ஒரே வாரத்துல கரைக்கணுமா இந்த ஜூஸ குடிங்க… |…\n… யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்\nஃபேன் இல்லாம தூங்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற ஆளா நீங்க… அது எவ்ளோ டேன்ஞ்சர்னு பாருங்க……\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome இதழ்கள் ஆங்கில இதழ்கள் Filmfare – August 2018\nராகுலை சந்தித்த பிரபல நடிகர்… இப்போது சீரியல் நடிகையுடன் இணைகிறார்…\nசெல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்\nசாலை மறியலில் ஈடுபட்ட நடிகை ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு\nகாதலியை ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வீடு புகுந்து திருட்டு: சினிமா துணை நடிகர் நண்பருடன்...\nவச்சிக்கிறேண்டா, வச்சிக்கிறேன்.. யுவன் ஷங்கர் ராஜா புரொடக்‌ஷன்ஸ் தானே.. சிவா செம டென்ஷன்\nசென்னையில் பெண்கள் பாதுகாப்பு மையம்: காவல் ஆணையர் திறந்துவைத்தார்; புகார் எண் வெளியீடு\n35ஏ சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும்: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை\n60 வயது மாநிறம்.. என்னாவா இருக்கும்.. ஆர்வத்தைத் தூண்டும் ராதாமோகன் | Radhamohan next...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/20121636/1177792/Sonali-Bendre-on-how-son-Ranveer-is-her-support-through.vpf", "date_download": "2018-08-20T18:10:45Z", "digest": "sha1:DD42O2PUOQYRLLWAQYT4RVZEFOACCS5X", "length": 14473, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "புற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய சோனாலி பிந்த்ரே || Sonali Bendre on how son Ranveer is her support through fighting Cancer", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபுற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய சோனாலி பிந்த்ரே\nதமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு புற்றுநோய் இருப்பதை தயங்கி தயங்கி தனது மகனிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre\nதமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு புற்றுநோய் இருப்பதை தயங்கி தயங்கி தனது மகனிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre\nதமிழில் பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே.\nதிரைப்பட இயக்குனரான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்ட இவர், 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனாலி பிந்த்ரே தற்போது நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சோனாலி அவரது சமூக வலைதள பக்கத்தில், தனது மகன் ரன்வீருடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, எனது மகன் ரன்வீர், வலிமை மற்றும் நல்ல விசயத்திற்கான அடிப்படையாக இருக்கிறான் என தெரிவித்துள்ளார்.\nஅவன் 12 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 8 நாட்களுக்கு முன் பிறந்தது, எனது மனதில் ஆச்சரியத்தினை நிறைத்தது. அதில் இருந்து அவனது மகிழ்ச்சி மற்றும் நலம் ஆகியவையே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாக இருந்தது.\nபுற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது குறித்து, அதனை அவனிடம் சொல்வதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. அவனை பாதுகாக்க நாங்கள் அதிகம் விரும்பினோம். அவனிடம் அனைத்து உண்மைகளையும் கூறுவது அவசியம் என அறிந்திருந்தோம். எப்பொழுதும் திறந்த மனதுடன் மற்றும் நேர்மையுடனேயே நடந்து கொண்டோம். அவன் இந்த விசயத்தினை பக்குவமுடன் எடுத்து கொண்டான்.\nஎனக்கு வலிமையாகவும், நல்ல விசயத்திற்கான அடிப்படையாகவும் ஆகிவிட்டான். அவன் கோடை விடுமுறையில் இருக்கிறான். அவனுடன் நான் நேரம் செலவிட்டு வருகிறேன். நாங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் வலிமையை பெற்று கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். #SonaliBendre\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமுழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\nகேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\nஇயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nகாதலர் தினம் பட நாயகி சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் - அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதாக உருக்கம்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/11113157/1169304/tamarind-ginger-pickle.vpf", "date_download": "2018-08-20T18:10:41Z", "digest": "sha1:CVAIOM55W3H2OMJCQLP3FXFTI73SFXPU", "length": 13376, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "தயிர் சாதத்திற்கு அருமையான இஞ்சி - புளி ஊறுகாய் || tamarind ginger pickle", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதயிர் சாதத்திற்கு அருமையான இஞ்சி - புளி ஊறுகாய்\nதயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,\nபச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),\nபுளி - சிறிய எலுமிச்சை அளவு,\nவெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,\nவெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nதேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nபுளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.\nதாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும்.\nஅதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.\nபச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.\nஅதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.\nசூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி.\nகுறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் பக்கோடா\nநெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்\nவைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்\nகேரளா ஸ்பெஷல் காளன் செய்வது எப்படி\nபெண்கள் சிசேரியன் செய்ய மருத்துவரை வற்புறுத்த காரணம்\nகத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nபாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nகாரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி\nதயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்\nநாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/109599-tamil-nadu-social-progress-improved.html", "date_download": "2018-08-20T19:00:30Z", "digest": "sha1:Q64VOGRJMKHT2D6G4TUNHY6G6FMJ6FT6", "length": 24618, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவின் சமூக வளர்ச்சிக்கு முன்மாதிரி தமிழகம்தான், குஜராத் அல்ல! | Tamil Nadu Social Progress improved", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nஇந்தியாவின் சமூக வளர்ச்சிக்கு முன்மாதிரி தமிழகம்தான், குஜராத் அல்ல\nசமூகத்தின் தேவைகள் என்னென்ன, அவை எந்தளவுக்குப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதன் மூலமே ஒரு சமூகத்தின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கீட்டை Institute for Competitiveness and the Social Progress Imperative என்ற நிறுவனம் மேற்கொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.\nஇந்த ஆய்வறிக்கையில் உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும், அதன் ஒவ்வொரு பகுதியிலும் சமூக வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டின்படி சர்வதேச அளவில் இந்தியா 93-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பட்டியலில் கேரளா (68) முதல் இடத்திலும், இமாசலப்பிரதேசம் (65) இரண்டாவது இடத்திலும், தமிழகம் (65) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.\n`குஜராத் மாடல்’ என்று மோடி ஆதரவாளர்கள், குஜராத்தை முன்னுறுத்தியே மற்ற மாநில அரசுகளை விமர்சிக்கின்றனர். ஆனால், மேற்கண்ட ஆய்வு முடிவு, சம அளவிலான முன்னேற்றத்திற்குத் தமிழகத்தையே முன் மாதிரியாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த அமைப்பு வேறு எந்த மாநிலத்தையும் இதுபோன்று பாராட்டவில்லை. சமூக வளர்ச்சிக்கான பட்டியலில் குஜராத் மாநிலம் 15-வது இடத்தில் இருக்கிறது. கடைசி மூன்று இடங்களில் அஸ்ஸாம் (49), ஜார்கண்ட் (48), பீகார் (45) மாநிலங்கள் உள்ளன.\nமேம்படுத்தப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியதில் இரண்டாவது இடத்தையும், எழுத்தறிவு, பாலின சமத்துவம், இணைய இணைப்பு, செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிப் பயன்பாடு உள்ளிட்ட கணக்கீட்டில் பத்தாவது இடத்தையும், குடும்பக்கட்டுப்பாடு, ஆண்-பெண் விகிதம், நிதி மற்றும் நீதி அமைப்புகளின் செயல்பாடு, கல்லூரிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட கணக்கீட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nதமிழகத்தில் அடிப்படைத் தேவைகள் அதிகம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், சர்வதேச அளவிலான முன்னேற்றத்துக்கு இணையாகப் பல பிரிவுகளில் முன்னேற்றம் கண்டுவருகிறது. தமிழ்நாடு, இந்தியாவில் உயர் சமூக முன்னேற்றமுள்ள மாநிலங்களில் ஒன்றாக மாறியிருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தவிர, தமிழ்நாடு மருத்துவம், கல்வி மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் சிறந்த முறையில் மேம்பட்டு வருவதாகவும், பொது வினியோகம், வளர்ச்சித் திட்டங்களைச் சிறந்த முறையில் செயல்படுத்துவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளது.\nஅண்டை மாநிலமான கேரளா சமூக உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துவதால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவச் சேவைகள் பிரிவிலும் கேரளா முன்னணியில் இருக்கிறது. அதிக வருமானம் கொண்ட மாநிலங்களாக டெல்லி, குஜராத், ஹரியானா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் இருக்கின்றன. இங்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி சிறப்பாக இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவளர்ச்சியடைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தாலும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முதியோருக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு கடைசி இடத்தில் இருக்கிறது என்பது வருத்தமான விஷயமே. தமிழ்நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களில் பெரும்பாலானவை முதியோர்கள் வசிக்கும் இடங்களில் நடந்துள்ளன. அதேபோல், வீடுகளில் தனித்து வசிக்கும் முதியோர்கள் படுகொலை செய்யப்படுவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.\nஇனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்து அனைத்துத் துறையிலும் முன்னேற்றத்தை எட்ட வேண்டும்.\nஉஷ்ஷ்ஷ்ஷ்... ஆயிரம் யானைகள் வாக்கிங் போகுது... திகில் சைலன்ட் வேலி - ஊர் சுத்தலாம் வாங்க... பாகம் -2 #SilentValley\nஞா. சக்திவேல் முருகன் Follow Following\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nகொலம்பஸ் அமெரிக்காவுக்குப் போக வழிகாட்டிய மேப் இதுதான்..\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nஇந்தியாவின் சமூக வளர்ச்சிக்கு முன்மாதிரி தமிழகம்தான், குஜராத் அல்ல\nஉலகக் கோப்பை குரூப்கள் ரெடி... குரூப் ஆஃப் டெத் எது\nமாட்டிறைச்சி தடை அறிவிப்பாணையைப் திரும்பப் பெற்ற மத்திய அரசு\nகோலி 156 நாட் அவுட்; இந்தியா முதல் நாளில் 371 ரன்கள் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-08-20T18:27:32Z", "digest": "sha1:7VBP254FHRVJUDTVRMARCH2GJSR6ZH7M", "length": 5462, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "தமிழிசை | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nமதிப்புரை: திருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும்\nதிருமுறைத் தமிழிசையின் தொன்மையும் சிறப்பும் வரலாறும் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் நூலாசிரியருடைய பரந்துபட்ட அறிவு செந்தமிழ் இசையின் நீள அகலங்களைக் கண்டு இறுதியில் ஆழ்ந்து அதன் ஆழத்தை ஆழ்ந்து நோக்கி அதன் எல்லையை அளந்து காட்ட முனைவது அவருடைய பேராராய்ச்சித் திறனுக்கு இந்நூல் மற்றுமோர் சான்றாகும். பேரருட் திறனால் நமக்குக்...\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-08-20T18:18:50Z", "digest": "sha1:73FH2ZPFA6FYYQAP2333LHXML3Y6JN3O", "length": 10916, "nlines": 227, "source_domain": "tamilnool.com", "title": "கவிஞர் கண்ணதாடனின் தென்றல் வெண்பா 1000 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nகவிஞர் கண்ணதாடனின் தென்றல் வெண்பா 1000\nகவிஞர் கண்ணதாடனின் தென்றல் வெண்பா 1000\nகாசி ஆனந்தன் கவிதைகள் பாகம் 2 ₹100.00\nகவிஞர் கண்ணதாடனின் தென்றல் வெண்பா 1000\nBe the first to review “கவிஞர் கண்ணதாடனின் தென்றல் வெண்பா 1000” மறுமொழியை ரத்து செய்\nமிகவும் நேர்ப்பட பேசுகிற இக்கவிதைகள், தமிழின் புதிய உயரங்கள் என்று பெருமை சேர்க்கிறது இந்நூல்.\nஎன் பழைய பனை ஓலைகள்\nகாசி ஆனந்தன் கவிதைகள் பாகம் 2\nகாசி ஆனந்தன் நறுக்குகள் பாகம் 2\nபாரதிதாசன் காதல் கவிதைகள் 1\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t52718-25", "date_download": "2018-08-20T18:34:35Z", "digest": "sha1:YI2HZ2OYAM3JDUDV7WV5XVEBS7KFMEGJ", "length": 22330, "nlines": 183, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஊட்டியில் ரோஜா கண்காட்சி துவங்கியது : 25 ஆயிரம் மலர்களால் உருவான 'இந்தியா கேட்' அசத்தல்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஊட்டியில் ரோஜா கண்காட்சி துவங்கியது : 25 ஆயிரம் மலர்களால் உருவான 'இந்தியா கேட்' அசத்தல்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஊட்டியில் ரோஜா கண்காட்சி துவங்கியது : 25 ஆயிரம் மலர்களால் உருவான 'இந்தியா கேட்' அசத்தல்\nஊட்டியில் நேற்று துவங்கிய ரோஜா கண்காட்சியில்,\n25 ஆயிரம் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட,\n'இந்தியா கேட்' சுற்றுலா பயணியரை கவர்ந்தது.\nநீலகிரி மாவட்டம், ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனை\nமுன்னிட்டு, 4000 ரகங்களில், 30 ஆயிரம் ரோஜாசெடிகள்\nவளர்க்கப்பட்டுள்ளன. நேற்று காலை, ரோஜா கண்காட்சியை,\nகலெக்டர் இன்சென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.\nகண்காட்சியில், ஊட்டி தோட்டக்கலைத்துறை சார்பில்,\n12 அடி நீளம், 16 அடி உயரத்தில், 25 ஆயிரம் ரோஜா மலர்களால்\nஜல்லிக்கட்டு காளைஅதன் முன்புறம்,குழந்தைகளை கவரும்\nவகையில், 5,000 மலர்களால், சோட்டா பீம் உருவம்\nரோஜா இதழ்களால்உருவான, 'ட்வீட்டி' கார்ட்டூன் ரங்கோலியும்,\nமதுரை மாவட்ட தோட்டக்கலையினர் சார்பில், 6,000 ரோஜா\nமலர்களால், ஜல்லி கட்டு காளை; ஈரோடு தோட்டக்கலை\nதுறையினரால், 6000 ரோஜா மலர்களில் மயில் உருவம்;\nகிருஷ்ணகிரி தோட்டக்கலை துறையினரின் 5,000 மலர்களை\nபயன்படுத்தி படகு உருவம்; 200 ரோஜா மலர்களால் கல்யாண\nமாலை மற்றும் ரோஜா இதழ்களாலான திருநெல்வேலி ரோஜா\nஅல்வா ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.\nதனியார் நிறுவனங்கள் சார்பில் பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட\nரோஜா மலர்செடிகள், ரகங்கள் சேகரிப்பு, கொய்மலர் வகைகள்,\nவணிக ரீதியாக பயிர் செய்யப்படும் ரகங்கள், மலர்செண்டுகள்,\nமாலைகள், ரோஜா இதழ்களிலிருந்து தயார் செய்யப்படும்\nபொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு, தனித்தனியாக\nஇன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில்,போட்டியாளர்களுக்கு\nரூ. 50 லட்சம் வருவாய் :\nகடந்த, 21ம் தேதி முதல் தொடர் விடுமுறையையொட்டி, ஊட்டிக்கு,\nசுற்றுலா பயணியர் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.\nஏப்., 21 முதல்,மே 12 வரை ரோஜா பூங்காவுக்கு, இரண்டு லட்சம்\nசுற்றுலா பயணியர் வருகை தந்துள்ளனர்.சுற்றுலா பயணியரின்\nவருகையால், டிக்கெட் வருமானம், 50 லட்சம் ரூபாயை எட்டியது.\nசுற்றுலா பயணியருக்கு விற்பனை செய்ய, தயார் செய்து\nவைக்கப்பட்ட, 1.5 லட்சம் ரோஜா நாற்றுகளை, 20 முதல்\n30 ரூபாய் வரை கொடுத்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.\nகுதிரை பந்தயம் : ஊட்டியில் நேற்று துவங்கிய குதிரை பந்தயத்தை\nசுற்றுலா பயணியர் ஆர்வமுடன் ரசித்தனர். 'மெட்ராஸ் ரேஸ்\nகிளப்' சார்பில், நடப்பாண்டின் குதிரை பந்தயம் நேற்று துவங்கியது.\nமுதல் நாளில், எட்டு குதிரை பந்தயங்கள் நடந்தன. ஜூன் 14 வரை\nநடக்கும் பந்தயங்களில், நீலகிரி கோல்டு கப், 1000 கின்னீஸ்,\n2000 கின்னீஸ், டர்பி உட்பட, 10 பந்தயங்கள் மட்டும் இந்த சீசனில்\nநேற்று நடந்த பந்தயங்களை சுற்றுலா பயணியர் ஆர்வமுடன்\nகண்டு ரசித்தனர். அடுத்த பந்தயம், மே, 17ல் நடக்க உள்ளது.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2015/04/india-software-companies-profit-down.html", "date_download": "2018-08-20T18:14:32Z", "digest": "sha1:A2IQCDEPL4A6SSAH7Y6CX23TSKCM27DZ", "length": 7258, "nlines": 79, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தொடர்ந்து வீழ்ச்சி அடையும் ஐடி பங்குகள்", "raw_content": "\nதொடர்ந்து வீழ்ச்சி அடையும் ஐடி பங்குகள்\nகடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு நிதி அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.\nஇதில் முன்னெப்போதும் இல்லாத அளவு மென்பொருள் பங்குகள் மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐடி பங்குகளை குறிப்பிடும் குறியீடு மூன்று மாதங்களில் இல்லாத அளவு வீழ்ந்துள்ளது.\nஇதற்கு ஐடி நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு நிதி அறிக்கைகளை கொடுக்காததும் ஒரு காரணம்.\nTCS தான் முதலில் வீழ்ச்சியை ஆரம்பித்தது. முன்னேற்றத்திற்கான அறிகுறியும் பெரிய அளவில் தென்படவில்லை.\nசொல்லிக் கொள்ளும்படி இல்லாத TCS லாப அறிக்கை\nஅதனை தொடர்ந்து HCL நிறுவனமும் எதிர்மறை வளர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது சாதகமான விடயம்.\nநேற்று வந்த விப்ரோ அறிக்கையும் பரவாயில்லை என்பது போன்ற அறிக்கை தான்.\nPersistent Systems நிதி அறிக்கை ஓரளவு வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.\nஅடுத்து இன்போசிஸ் அறிக்கை ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.\nயூரோ நாணயம் பெரியளவில் வீழ்ந்தது தான் ஐடி கம்பெனிகள் காரணமாக கூறுகின்றன. அதையும் தாண்டி வருமானத்தில் பெருமளவு மாற்றத்தைக் காண முடியவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்.\nநல்ல ஐடி பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் தருணம். இந்த சமயத்தில் தான் இன்போசிஸ் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனாலும் அவர்கள் வளர்ச்சியை பார்த்த பிறகு தான் ஏதும் சொல்ல முடியும் நிலை.\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2018-08-20T18:07:31Z", "digest": "sha1:VJSJRVGRZLWXUYB6BKFQCFDBRKRQJKLL", "length": 14284, "nlines": 180, "source_domain": "news7paper.com", "title": "நடிகை தீபிகா, ரன்வீர் சிங் என்னை திட்டி தாக்கினார்கள்: குமுறும் ரசிகை | Fan accuses Deepika, Ranveer of attacking her - News7Paper", "raw_content": "\nதிருப்பதி பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டம்:மாணவர்கள், பெற்றோர் பீதி\nகட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்\nஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை…\nஎப்படி இருக்கிறது கருணாநிதி உடல்நிலை – இந்து தமிழ் திசை\nநடிகை தீபிகா, ரன்வீர் சிங் என்னை திட்டி தாக்கினார்கள்: குமுறும் ரசிகை | Fan…\nடாம் குருஸுக்காக போர் விமானம் கொடுத்து உதவிய அபுதாபி\n‘சர்கார்’ படத்திற்காக இலங்கை தியேட்டர்கள் இப்போதே தயார்\n‘கை ராட்டை’யைச் சுற்றியதால் சர்ச்சை… பிரபல நடிகருக்கு நோட்டீஸ் | kkvib issues legal…\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\n… யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்\nஃபேன் இல்லாம தூங்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற ஆளா நீங்க… அது எவ்ளோ டேன்ஞ்சர்னு பாருங்க……\nபெண்களுக்கு மார்பில் அழற்சி, அரிப்பு வந்தா என்ன செய்யணும்\nஇந்த மூன்று ராசிக்காரர்கள் இன்னைக்கு கொஞ்சம் கவனமா இருக்கலாமே\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome சினிமா நடிகை தீபிகா, ரன்வீர் சிங் என்னை திட்டி தாக்கினார்கள்: குமுறும் ரசிகை | Fan accuses...\nநடிகை தீபிகா, ரன்வீர் சிங் என்னை திட்டி தாக்கினார்கள்: குமுறும் ரசிகை | Fan accuses Deepika, Ranveer of attacking her\nமும்பை: நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் தன்னை தாக்கியதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.\nகாதலர்களான நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் யாருக்கும் தெரியாமல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர்.\nஅங்கு அவர்கள் டிஸ்னிலேண்டிற்கு சென்றபோது பலருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை.\nஜெய்னப் கான் என்ற ரசிகை தீபிகா மற்றும் ரன்வீரை அடையாளம் கண்டுகொண்டார். அவர் அவர்களை தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார். இதை பார்த்த தீபிகா சிரித்தபடியே வந்து அந்த பெண்ணின் கேமராவை பறித்து, திட்டியதுடன் தன்னை தாக்கியதாக ஜெய்னப் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.\nதீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கை வீடியோ எடுத்த ஜெய்னப் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் ரன்வீர் மற்றும் தீபிகா தன்னை திட்டியதுடன், தாக்கியதாக ஜெய்னப் புகார் தெரிவித்துள்ளார். ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டதற்கு தன்னை அவர்கள் திட்டியதாக ஜெய்னப் கூறியுள்ளார்.\nநான் விடுமுறையை கழிக்க அங்கு சென்றிருந்தேன். நான் ரன்வீர், தீபிகாவை பின்தொடரவில்லை. அவர்களின் தீவிர ரசிகை என்பதால் வீடியோ எடுத்தேன். தூரத்தில் இருந்து என்னை போன்று யார் வேண்டுமானாலும் வீடியோ எடுத்திருக்கலாம். நான் வீடியோ எடுத்ததை பார்த்த தீபிகா சிரித்தபடியே என்னை நோக்கி வந்தார். நான் கூட அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வருகிறார் என்று நினைத்தால் கண்டபடி திட்டிவிட்டார் என்கிறார் ஜெய்னப்.\nநான் ரன்வீர், தீபிகாவை வீடியோ எடுத்தது தொடர்பாக அவர்களின் ரசிகர்கள் என்னை திட்டுகிறார்கள். ரன்வீர், தீபிகா ரசிகர்களை கொண்டாடுவது போன்று நடிக்கிறார்கள். நிஜத்தில் அவர்களை ஒரு முறை பாருங்கள், நான் சொல்வது உண்மை என்பது உங்களுக்கே தெரியும் என்கிறார் ஜெய்னப்.\nPrevious articleதிருப்பதி பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டம்:மாணவர்கள், பெற்றோர் பீதி\nடாம் குருஸுக்காக போர் விமானம் கொடுத்து உதவிய அபுதாபி\nபார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்…: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட்...\nநடிகை அன்னபூர்ணாவின் மகள் கீர்த்தி தூக்கு போட்டு தற்கொலை | Actress Annapurna’s daughter...\nகாதலியை ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வீடு புகுந்து திருட்டு: சினிமா துணை நடிகர் நண்பருடன்...\nஇந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயார்\nடெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி ; போதுமான விதை, உரங்களை...\n‘கை ராட்டை’யைச் சுற்றியதால் சர்ச்சை… பிரபல நடிகருக்கு நோட்டீஸ் | kkvib issues legal...\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை: 6-ம் தேதி தாக்கல் செய்யாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை: உயர் நீதிமன்றம்...\n‘இன்றைய காதல் டா’… டி.ராஜேந்தரின் புதிய படம்.. வில்லியாக நமீதா\nராக யாத்திரை 10: துள்ளி துள்ளிப் பாடும் ராகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/hindu-tamil-thisai-11-08-2018/", "date_download": "2018-08-20T18:07:34Z", "digest": "sha1:M7HLSCQO5JYGIDWYI64EHCEL2NT5ZBLM", "length": 8723, "nlines": 165, "source_domain": "news7paper.com", "title": "Hindu Tamil Thisai 11-08-2018 - News7Paper", "raw_content": "\nசோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nகார் விபத்து வழக்கில் நடிகர் துருவ் விக்ரம் கைது: 3 ஆட்டோக்கள் சேதம்; ஒருவர்…\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மு.க. முத்து\n5 நிமிஷத்தில கிழிச்சிடுவேன்னீங்க, கிழிங்க பார்ப்போம்: வைஷ்ணவியை அதிர வைத்த கமல் | Kamal…\nஇனி தமிழ்நாட்டில் யாராவது மொட்டை கடுதாசி எழுதுவாங்க\nஐஸ்வர்யா மீது ஈர்ப்பு ஏற்பட்டது ஆனால் காதல்…: பிளேட்டை மாத்திப் போட்ட ஷாரிக் |…\nபிக் பாஸ் மேடையில் கவிதை வாசித்த கருணாநிதி: கண் கலங்கிய கமல் | Karunanidhi’s…\nஉங்கள் சாட் ஹேக் செய்யப்படலாம்: வாட்ஸ் ஆப்-க்கு செக் பாயின்ட்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்… | Beauty…\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்.. அண்மை ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு…\nதாய்ப்பால் கொடுக்கையில் ஏற்படும் முதுகு வலிக்கு என்ன காரணம் எப்படி போக்குவது\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nகாமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா | Sangeetha pays tribute...\nவிஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கு\nபெண்கள் மார்பகத்தை பற்றி அறியப்படாத 10 உண்மைகள் – வினா, விடைகள்\nகேரள வெள்ள பாதிப்பு.. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிவாரண உதவி\nஅசாமில் எஸ்டி பிரிவில் சேர்க்கக் கோரி கோச் ராஜ்பாங்ஷி சமூக அமைப்பினர் ரயில் மறியல்...\nஉலகின் நம்பர் 1 அணியை 107 ரன்களுக்கு ஊதினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்: லார்ட்ஸ் டெஸ்ட்டில்...\nபிஹார் மாநிலம் முசாபர்பூரில் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/awards/vikram-29.html", "date_download": "2018-08-20T18:26:27Z", "digest": "sha1:UQKYTAQIECECX3MIUZZZG5KUCU34LVP4", "length": 10521, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குவைத்தில் விக்ரமுக்கு பாராட்டு விழா | Vikram to be praised in Kuwait - Tamil Filmibeat", "raw_content": "\n» குவைத்தில் விக்ரமுக்கு பாராட்டு விழா\nகுவைத்தில் விக்ரமுக்கு பாராட்டு விழா\nபிதாமகன் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரமுக்கு வருகிற 10ம் தேதி குவைத்தில் பாராட்டு விழா நடக்கிறது.\nபிதாமகன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2003ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற நடிகர் விக்ரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வரும் 2ம் தேதி டெல்லியில் நடக்கும் வழங்கும் விழாவில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவருக்கு இந்தவிருதை வழங்குகிறார்.\nஇதைப் பாராட்டி வரும் 10ம் தேதி குவைத்தில் விக்ரமுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவை பிரண்ட்லைனர்ஸ் என்றஅமைப்பு நடத்துகிறது. இது குவைத் நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் இணைந்து உருவாக்கிய சேவை அமைப்பாகும்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் செய்து வருகிறார்.\nவிக்ரமை தந்துவிட்டேன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.பிதாமகன் இயக்குனர் பாலாவும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்கினார்.\nகுவைத்திற்கான இந்திய தூதரக அதிகாரி, விக்ரம் குறித்த சிறப்பு மலரை வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் விக்ரம் நடித்த படங்களின்காட்சிகளும் திரையிடப்படுகின்றன. பின்னர் விக்ரம் எத்தனை விக்ரமடா என்ற தலைப்பில் சங்கமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள்நடைபெறுகின்றன.\nஇந்த விழா மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வழங்கப்படுகிறது.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகுறுக்கே வந்த ஜோதிடம்: சர்ச்சை நாயகியை முதல்வராக்குவாரா ரஜினி\nநீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…\nஇன்று குரு பெயர்ச்சி: கல்லா கட்டும் தொலைக்காட்சிகள்\nபழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா\nஎனக்கு பசங்களைத்தான் அதிகம் பிடிக்கும்-சோனா\nசென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் டிவி நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா\nப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/usa/03/169103?ref=archive-feed", "date_download": "2018-08-20T18:11:44Z", "digest": "sha1:2XVUDIOGP6PRYSUGEPSSYRHGKH7B6SBL", "length": 9394, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு: டிரம்ப் குறித்து திடுக்கிடும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு: டிரம்ப் குறித்து திடுக்கிடும் தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குறித்து யாருக்கும் தெரியாத அந்தரங்க விடயங்கள் அவர் பற்றி வெளியாகியுள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்நாட்டின் பிரபல பத்திரிக்கையாளர் மைக்கேல் உல்ப் 18 மாதங்களாக டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களிடம் பேட்டி எடுத்துள்ளார்.\nஅதில் கிடைத்த விபரங்களை சேகரித்து Fire and Fury: Inside the Trumps White House என்ற புத்தகத்தை மைக்கேல் எழுதியுள்ளார்.\nதற்போது இந்த புத்தகம் டிரம்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.\nஅதில், ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவது அவருக்கே கூட சந்தேகமாகத் தான் இருந்துள்ளது.\nவெள்ளை மாளிகையை பார்த்து டிரம்ப் இப்போதும் பயப்படுவதாகவும் அங்கு இருக்க அவருக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nடிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று கூறப்பட்டு இருக்கிறது.\nதன் நண்பர்களை எப்படி எல்லாம் அவர் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் பேட்டி அளித்துள்ளனர்.\nமேலும் டிரம்பின் சட்டைகளையும் யாரும் தொடக்கூடாது, யாராவது இதன் மூலம் தன் உடலில் விஷத்தை செலுத்தி கொன்று விட முடியும் என்று அவர் சந்தேகப்பட்டு இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.\nஇதோடு டிரம்ப் குடும்பத்தாரே அவர் தேர்தலில் தோற்க வேண்டும் என நினைத்துள்ளனர்.\nஇதன் மூலம் டிரம்ப் மகள் இவாங்கா பெரிய ஆளாக மாறமுடியும், மேலும் இவாங்கா கணவர் ஜெராட் குஷ்னரும் பிரபல மனிதராக மாற முடியும் என்று கூறப்பட்டு உள்ளது.\nதற்போது டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்கி இவாங்கா அந்த பதவியை பிடிக்க எல்லா திட்டத்தையும் தயார் செய்துவிட்டதாகவும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7868-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF", "date_download": "2018-08-20T18:09:03Z", "digest": "sha1:SI7OE2F4ZNTYJWCZTBUF5WPNYJRVOORC", "length": 15739, "nlines": 233, "source_domain": "www.brahminsnet.com", "title": "நீங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லைய&#", "raw_content": "\nநீங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லைய&#\nThread: நீங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லைய&#\nநீங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லைய&#\nபலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.\nவாழ்க்கையில் நிம்மதி என்பது எங்கே இருக்கிறது. நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லையே என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதுண்டு. மனதில் எழும் இந்த ஆதங்கம் சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஇதே எண்ணம் தொடருமானால் வாழ்வில் விரக்தியும், சலிப்புமே மிஞ்சும். ‘எதுவாக இருந்தாலும் வாழ்க்கையை நேசித்து வாழ்ந்து விடு’ என்றான் ஒரு தத்துவ ஞானி. வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்\nஇதற்கான விடையை சீனதத்துவ ஞானியான லா வோ த் ஸ§வின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.\n‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.\n‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா’ என்று ஞானி கேட்டார்.\n‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை’ என்றான்.\n‘அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு’ என்றார் ஞானி.\n‘நீ என்ன செய்வாய்’ என்றார் ஞானி.\n‘நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்’ என்றான் அரசன்.\n‘எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.’ என்றார். சரி என்றான் மன்னன்.\nஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.\n‘அது கிடக்கட்டும்’ என்ற ஞானி ‘நீ இப்போது எப்படி இருக்கிறாய்’ என்று கேட்டார்.\n‘முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா\n‘அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய் இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய் இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்’ விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.\n‘அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல.. (இது) எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்’ என்று கூறி விடைபெற்றார் ஞானி.\nஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை. மூலாதாரத்தில் ஒருமுகப்படுத்தி மென்மையான சக்தியை எழுப்புகிறான் அவன். விருப்பு, வெறுப்பு அற்ற அவனது மனம் சிறு குழந்தையினுடையது போன்றது. இயேசுவிடம் சீடர்கள் கேட்கின்றனர். ‘விண்ணரசு யாருக்கு உரியது. நாங்கள் விண்ணுலகில் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று.’\n‘ஒன்றும் செய்ய வேண்டாம். ‘ என்கிறார் இயேசுநாதர். ஒரு குழந்தையை சுட்டிக்காட்டி ‘உங்கள் மனம் இந்த குழந்தையினுடையது போல் ஆகி விட்டால் விண்ணரசு உங்களுடையது’ என்றார்.\nகுழந்தை அனைத்தையும் நம்பும். அனைத்தையும் ஏற்கும். கண்டதை அப்படியே சொல்லும். குழந்தையிடம் அறியாமை உண்டு. நாம் அறியாமையில் இருந்து அறிந்த நிலைக்கு வந்தோம். பின்பு அதையும் கடந்து விடல் வேண்டும். அதுவே ஞானத்திற்கு மேலான நிலை.\nராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார் ‘காலில் ஒரு முள் தைத்தால் மற்றொரு முள்ளால் அதனை அப்புறப்படுத்துவோம். அந்த முள் இருந்த இடத்தில் இந்த முள்ளை வைப்பதில்லை. இரண்டையும் தூக்கி தூரப் போடுவோம். அது போல் அஞ்ஞானம் என்ற முள்ளை ஞானத்தால் எடு. பிறகு இரண்டையுமே தூக்கி எறிந்து விடு’ என்று.\nஅத்தகையவன் செயல்படுவான். ஆனால், அவன் செயல்களால் அவனுக்கு எந்த பலனும் இருக்காது. அவன் தகுதி அவனை தலைமையிடத்தில் வைக்கும். ஆனால் அவன் ஆதிக்கம் செலுத்த மாட்டான். அவனிடம் நேசித்தல் என்பது மட்டும் இருக்கும்.\nஆழ்ந்த உள்ளுணர்வினால் அவன் அனைத்து மாசுகளும் நீங்கியவனாக இருப்பான். ‘இத்தகையவன் தான் சுவர்க்கத்தின் கதவுகளை மூடித்திறக்கும் தாய் பறவை போன்றவன்’ என்று லா வோத் ஸ கூறுகிறார். நான்கு திக்குகளையும் ஊடுருவும் பிரகாசம் அவனிடம் உண்டு. உள்ளும், புறமும் ஊடுருவிய ஒரு வெட்டவெளியை உணர்ந்தவன் அவன். இதையே சிவவாக்கியரும் சொல்கிறார். அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைத்த வாசலும் சொல்லு வாசல் ஓரைந்தும் சொம்மி விம்மி நின்றதும் நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பதில்லையே.\nஆழ்ந்த தியானம் அமைதியை கொடுக்கும். அது புதிய கதவுகளை திறக்கும்.\n« வீட்டிற்குள் நுழையக்கூடாத ஆமை எது தெரிய& | political cartoon »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/9068-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2018-08-20T18:09:30Z", "digest": "sha1:EXFWDWCOW6YYSE7CRBVF5HV5HEKLTGSJ", "length": 9056, "nlines": 194, "source_domain": "www.brahminsnet.com", "title": "புரட்டாசி மாதம்: பெருமாள் கோயில்களைத் தர", "raw_content": "\nபுரட்டாசி மாதம்: பெருமாள் கோயில்களைத் தர\nThread: புரட்டாசி மாதம்: பெருமாள் கோயில்களைத் தர\nபுரட்டாசி மாதம்: பெருமாள் கோயில்களைத் தர\nஒரு நாள் ஒன்பது பெருமாள் தரிசன சுற்றுலா: இந்தத் திட்டத்தின்கீழ் சென்னை, அதைச் சுற்றியுள்ள பெருமாள் கோயில்களை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள், திருமழிசை ஜெகநாத பெருமாள், பொன்விளைந்த களத்தூர் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ பெருமந்தூர் ஆதிகேசவ பெருமாள், பழைய சீவரம் லட்சுமி நரசிம்மசுவாமி, திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், பொன்பதர்கோட்டம் சதுர்புஜ ராமர், மாமல்லபுரம் ஸ்தல சையன பெருமாள், திருவிடந்தை ஆதி வராக பெருமாள், நித்ய கல்யாண பெருமாள் ஆகிய 9 பெருமாள் கோயில்களையும் ஒரே நாளில் தரிசிக்க ஏற்பாடு செய்வதே சிறப்பம்சமாகும். நபருக்கு கட்டணமாக ரூ.520 வசூலிக்கப்படும். பேருந்து பிரதி வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8 மணிக்கு வந்தடையும்.\nஒரு நாள் காஞ்சிபுரம் திவ்யதேசம் சுற்றுலா: இந்தத் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களை தரிசிக்க அழைத்து செல்லப்படுவர். ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஆதிவராக பெருமாள், உலகளந்த பெருமாள், நிலா துண்ட பெருமாள், பவளவண்ணர் பெருமாள், வைகுண்ட பெருமாள், திருவேக்கை யதோத்தகாரி, அஸ்தபுஜம் பெருமாள், திருத்தங்க விளக்கு பெருமாள், திருவேலுக்கை அழகிய சிங்கர், திருபாடகம் பாண்டவ தூதர், திருப்புக்குழி விஜயராகவ பெருமாள் ஆகிய திருக்கோயில்களை தரிசிக்கலாம்.\nஞாயிறு காலை 6 மணிக்குப் புறப்பட்டு, அன்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும். பேருந்துக் கட்டணமாக குளிர்சாதன வசதியுடன் நபருக்கு ரூ.890-ம், குளிர்சாதன வசதியில்லாமல் நபருக்கு ரூ.715 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சுற்றுலாத் திட்டங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேலாளர்(சுற்றுலா) தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 2 வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரியிலோ அல்லது 044-25384444,25383333,25389857 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« நேபாளத்தில் 1500 வருட பழமையான சிவாலயம் | புரட்டாசி மாதம்: பெருமாள் கோயில்களைத் தர »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news---------1281-4334936.htm", "date_download": "2018-08-20T19:12:07Z", "digest": "sha1:7ADF3J6R4WBPYTLP7M3PISCZEDQKKNDE", "length": 3890, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "வைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் 'ஒரு அடார் லவ்' படத்தின் கியூட் டீசர்", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - விகடந் - வைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் 'ஒரு அடார் லவ்' படத்தின் கியூட் டீசர்\nவைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் 'ஒரு அடார் லவ்' படத்தின் கியூட் டீசர்\nஎல்லோரிடமும் ரீச்சான பிரியா பிரகாஷோட பாப்புலாரிட்டிய வீணக்கவேண்டாம்னு நினைச்ச படக்குழு மீண்டும் ஒரு சியூட் வரல் விடியோவை படத்தின் டீசராக ரிலீஸ் செஞிருக்காங்க.\nTags : வைரலான, பிரியா, பிரகாஷ், வாரியரின், அடார், படத்தின், கியூட், டீசர்\nகேரள மக்களுக்கு உதவிய திருப்பூர் திருநங்கைகள்\n''இணைந்த இருவர்... இணையாத தொண்டர்கள்..\nதி.நகரில் ஷாப்பிங் செய்ய உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா - வரம்பு மீறல் அபாயங்கள்\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:19:23Z", "digest": "sha1:3FU5RZGD4KE4ORBDO7E7TNEZIO3QWEE7", "length": 10988, "nlines": 229, "source_domain": "tamilnool.com", "title": "திருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி 1 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nபட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் ₹45.00\nஸ்ரீ சிவ புராணம் ₹160.00\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nBe the first to review “திருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி” மறுமொழியை ரத்து செய்\nசிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூன்று நாயன்மார் கதை வெண்பாக்களில்\nஅபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம்\nஇக்கால வாழ்வியலில் திருவாசகத் திருநெறி\nபட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/03/blog-post_2357.html", "date_download": "2018-08-20T18:58:27Z", "digest": "sha1:CLQMYULEAWYLN3J6GFGDCFMYPCLMT3VV", "length": 27735, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அநீதியான பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றது இலங்கை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅநீதியான பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றது இலங்கை\nதர்மத்தை மீறி பலம்வாய்ந்த நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தத்தைப் பிரயோகித்தமை ஒன்றும் இரகசியமல்ல\nசர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தர்மத்தை மீறி பலம்வாய்ந்த நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தத்தைப் பிரயோகித்தமை ஒன்றும் இரகசியமல்ல. ஜெனீவா முடிவு நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்ததொன்று. எனினும் நாடு என்ற வகையில் இந்த அநீதிக்கு எதிராக உச்சளவில் போராடினோம் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார்.\nஅத்துடன் பெரும்பான்மை வாக்குகளால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப் பட்டபோதும் பிரேரணைக்கு எதிராக வாக்காளித்த மற்றும் வாக்களிப்பில் நடுநிலைவகித்த நாடுகளைப் பார்க்கும்போது இந்தப் பிரேரணையை பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லையென்பது தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் ஜெனீவா பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவிப்பதுடன், இந்த நாடுகளின் நட்புக் கரங்களை மேலும் வலுவாகப் பற்றிக்கொண்டு முன்செல்லவுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பிரேரணைக்கு எதிராகவும், நடுநிலைவகித்த நாடுகளை நோக்கும் போது இந்தப் பிரேரணையை உலகின் பெரும்பாலான நாடுகள் நிராகரித்துள்ளமை தெளிவாகப் புலனாகிறது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.\nஜெனீவா மனித உரிமைப் பேரவையின் முடிவுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று விசேட அறிக்கை யொன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் 25வது அமர்வில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சில முக்கியமான இடத்தைவகித்து இலங்கைக்கு எதிரான மனித உரிமைப் பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டுள்ளன. இந்தப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக நிராகரிக்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மூன்று தசாப்தங்கள் நாட்டில் நிலவிய யுத்தத்தை மூன்றே வருட குறுகிய காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவந்து யுத்தத்தினால் அழிவுற்ற நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.\nதேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கையில் 1505 முதல் 1948 வரை நாட்டை ஆக்கிரமித்திருந்த வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகள், புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் என்பன வழங்கிய தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் சில பலமுள்ளவர்களின் குறுகிய அரசியல் நோக்கத்தை அடைந்துகொள்ளும் நோக்கில், மூன்றுவருட காலமாக இத்தகைய பிரேரணைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு அந்த நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன.\nநாடு இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சர்வதேச சட்டத்தை மீறியே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. யுத்தத்துக்கு முகங்கொடுத்த மேலும் பலநாடுகள் உள்ளபோது இலங்கையை மட்டும் குறிவைத்து செயற்பட்டதால், இந்தப் பிரேரணையை அநீதியானதாகவே கொள்ளமுடியும்.\nஇந்தப் பிரேரணை மூலம் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையைப் பற்றிய தப்பான அபிப்பிராயத்தைக் கொண்ட பாரபட்சமாக செயற்படுகின்ற ஒரு அதிகாரியாகும் என்பது சில காலங்களுக்கு முன்பே உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.\nஇத்தகைய பிரேரணையைக் கொண்டுவந்து இதற்கு முன்னிலை வகித்து செயற்பட்ட நாடுகள் இலங்கையை அரசியல் ரீதியாக பலமிழக்கச் செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அந்த நோக்கம் ஒருபோதும் வெற்றிபெறாது என்பதை நாம் உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.\nஇந்த அநீதியான பிரேரணைக்கு எதிரான, எமது மக்கள் கருத்து நாட்டில் மூன்றில் ஒரு வீத மக்கள் பங்கேற்கும் இரு மாகாண சபைகளுக்குமான இன்றைய தேர்தலின் முடிவுகள் உலகுக்கு வெளிப்படுத்தும். அநீதிக்கு எதிராக போராடும்போது சிறியநாடு, பெரியநாடு என்பது முக்கியமில்லை என்ற செய்தியை நாம் நாட்டுக்கும் உலகுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். எமது நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் எமது கட்சி உட்பட சகல முற்போக்கு அணிகளும் ஒன்றி ணைந்து செயற்படுவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\n அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆ...\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா வை எல் எஸ் ஹமீட்\nகடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2018-08-20T18:07:16Z", "digest": "sha1:AWKE4YAVVUPO2WDLNKYLIP2DYC63YNJT", "length": 13991, "nlines": 176, "source_domain": "news7paper.com", "title": "கட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம் - News7Paper", "raw_content": "\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதல்வர் பேச்சுவார்த்தை: தேர்தலுக்குப் பிறகு ஆதரவளிக்க ஒப்புதல்\nவருவாயை பெருக்க புது திட்டம்: தனியாருக்கு 189 ஹெக்டேர் நிலம் குத்தகைக்கு விடப்படும் –…\nஹாட்லைன் வசதி: இந்தியா சீனா பேச்சுவார்த்தை\nதிருப்பதி பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டம்:மாணவர்கள், பெற்றோர் பீதி\nநடிகை தீபிகா, ரன்வீர் சிங் என்னை திட்டி தாக்கினார்கள்: குமுறும் ரசிகை | Fan…\nடாம் குருஸுக்காக போர் விமானம் கொடுத்து உதவிய அபுதாபி\n‘சர்கார்’ படத்திற்காக இலங்கை தியேட்டர்கள் இப்போதே தயார்\n‘கை ராட்டை’யைச் சுற்றியதால் சர்ச்சை… பிரபல நடிகருக்கு நோட்டீஸ் | kkvib issues legal…\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\n… யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்\nஃபேன் இல்லாம தூங்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற ஆளா நீங்க… அது எவ்ளோ டேன்ஞ்சர்னு பாருங்க……\nபெண்களுக்கு மார்பில் அழற்சி, அரிப்பு வந்தா என்ன செய்யணும்\nஇந்த மூன்று ராசிக்காரர்கள் இன்னைக்கு கொஞ்சம் கவனமா இருக்கலாமே\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் கட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்\nகட்சியில் சேர்ந்த உடனேயே ரஜினிகாந்துக்கு தலைமை பதவி தரமாட்டோம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்\nஅதிமுகவில் யாராக இருந்தாலும் தொண்டராகச் சேர்ந்து படிப்படி யாகத்தான் தலைமை பதவிக்கு வர முடியும். ரஜினியை எடுத்த உடனேயே தலைமை பதவிக்கு சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.\nஅதிமுகவில் ரஜினிகாந்த் சேர விரும்பினால் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் பாண்டியராஜன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:\nஅதிமுகவின் கொள்கையை ஏற்று கட்சியில் சேர யார் வந்தா லும் அவர்களை சேர்த்துக் கொள் வோம். ஆனால், தொண்டராகத் தான் தங்களை கட்சியில் இணைத் துக் கொள்ள முடியும்.\nதொடர்ந்து சிறப்பாக கட்சிப் பணியாற்றினால் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் தலைமை பதவிக்கு வரலாம். ரஜினி, கமல் என யாராக இருந்தாலும் அதிமுகவில் தலைமை பதவியை உடனே பெற முடியாது.\nசிலரது தூண்டுதலால் கூட்டுற வுத் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் ஒரு சில சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. எங்களிடம் கோரிக்கைகளை வைத்திருந்தால் நிறைவேற்றி இருப்போம். என்னிடம் எந்த சங்கமும் இதுவரை கோரிக்கை மனு அளிக்கவில்லை.\nரேஷன் கடை ஊழியர்கள் போராட்ட அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்\nPrevious articleஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை\nNext articleதிருப்பதி பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டம்:மாணவர்கள், பெற்றோர் பீதி\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதல்வர் பேச்சுவார்த்தை: தேர்தலுக்குப் பிறகு ஆதரவளிக்க ஒப்புதல்\nவருவாயை பெருக்க புது திட்டம்: தனியாருக்கு 189 ஹெக்டேர் நிலம் குத்தகைக்கு விடப்படும் – ரயில்வே அமைச்சகம் முடிவு\nஹாட்லைன் வசதி: இந்தியா சீனா பேச்சுவார்த்தை\nபார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்…: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட்...\nநடிகை அன்னபூர்ணாவின் மகள் கீர்த்தி தூக்கு போட்டு தற்கொலை | Actress Annapurna’s daughter...\nசெல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்\nதமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ … ஹீரோ கார்த்தியா\nகருணாநிதி உடல்நிலை; திமுக தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்:...\nலஞ்சம் கொடுத்தால் இனி 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் அமலுக்கு வந்தது\nதமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை காவல் நிலையங்கள் தயார்...\n; ஆசியக் கோப்பை அட்டவணையை மாற்றுங்கள்”: ஐசிசியை விளாசிய சேவாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/five-habits-that-can-cause-creep-your-weight-016981.html", "date_download": "2018-08-20T18:31:17Z", "digest": "sha1:ENYI6W2RHMOHCBPNBNFEZLYDYY2SRFTK", "length": 12972, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் எடை குறையவேயில்லைன்னு கவலையா? அப்போ இந்த பழக்கங்கள் எல்லாம் உங்ககிட்ட இருக்கா? | Five habits that can cause creep your weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடல் எடை குறையவேயில்லைன்னு கவலையா அப்போ இந்த பழக்கங்கள் எல்லாம் உங்ககிட்ட இருக்கா\nஉடல் எடை குறையவேயில்லைன்னு கவலையா அப்போ இந்த பழக்கங்கள் எல்லாம் உங்ககிட்ட இருக்கா\nஉடல் உழைப்பு இல்லாதது, சரியான உணவுமுறைகளை பின்பற்றாதது தான் உடலில் தங்கிடும் கொழுப்புகளுக்கு காரணம். நீங்கள் அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களினால் எங்கெல்லாம் கொழுப்பு சேரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nதவறு என்றே தெரியாமல் தினமும் வழக்கமாக செய்யும் சில தவறுகளால் என்ன தான் டயட் இருந்தாலும் உடல் எடை குறையாததற்கு இது முக்கிய காரணமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபடுக்கையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது தூங்குவது போன்றவற்றால் வயிற்றில் கொழுப்பு சேரும்.\nநம்மையும் அறியாமல் கூன் முதுகிட்டு உட்கார்ந்துவிடுவோம் இதனால் முதுகு வளைவத்தன்மையுடன் காணப்படும்.\nசிலர் காலையில் முழித்தாலும் படுக்கையை விட்டு எழுந்தரிக்காமல் புரண்டு கொண்டேயிருப்பர். பெட்ஷீட்டை மூடி அறையை இருட்டாக்கி அதிக நேரம் புரள்வதும் தவறு\nஅதிகாலையில் சூரிய ஒளி கிடைத்தால் அது நம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்திடும்.\nசராசரியாக ஒருவர் 600 கலோரிகளை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வேலைப்பளூ,அவசரம், டயட் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி காலை உணவை குறைவாக எடுத்துக் கொண்டாலும் அது உடல் எடையை அதிகரிக்கச்செய்திடும்.\nஇன்னும் சிலர் காலை உணவையே தவிர்ப்பதை பழக்கமாக்கி கொண்டிருப்பர். இது முற்றிலும் தவறானது.\nஒருவர் பத்து மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்கினால் அது நமக்கு சோம்பலையே உருவாக்கிடும். அதே போல குறைந்த தூக்கம் ஸ்ட்ரஸ் ஏற்படுத்திடும். சோம்பலாக இருப்பதால் சுறுசுறுப்பாக எந்த வேலையினையும் செய்யப் பிடிக்காமல் ஒரேயிடத்தில் உட்கார்ந்து இருப்பது தேவையின்றி அதிக உணவுகளையும் எடுக்கத்தோன்றிடும்.\nசராசரியாக ஒருவர் ஏழு மணி நேரம் தூங்குவது ஆரோக்கியமானது.\nதினமும் வெயிட் செக் செய்வது. இது கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும் ஆராய்ச்சியாளர்கள் இது நல்ல பலனை கொடுப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். தினமும் உங்களின் எடை எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதிக்க வேண்டும்.\nஇது உங்களையே உற்சாகப்படுத்தும். கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுப்பதற்கு முன்னால் யோசிக்க வைக்கும். மனரீதியாக இது வெற்றியடையும் என்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஉயிக்கொல்லி நோயான ப்ளட் பாய்சனிங் பற்றி தெரியுமா\nகொழுப்பு, சர்க்கரையை விரட்டும் பலே பாகற்காய் டீ... இப்படி செஞ்சா கசக்கவே கசக்காது...\nபன்னீர் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு மற்றும் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய் ஏற்படாதாம்..\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஉங்களுடைய ரத்த தட்டுக்களை அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...\nவாயில வசம்பு வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா பாட்டி வைத்தியத்தில் அதற்கு பதில் இருக்\nஆண்-பெண் உடலுறவை கெடுக்கும் சர்க்கரை நோய்... இவர்களால் உடலுறவு கொள்ள முடியுமா..\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஆணுறையை காட்டிலும் பெண்ணுறைக்கே அதிக பலன்கள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்..\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nRead more about: ஆரோக்கியம் மருத்துவம் உடல் எடை தூக்கம் காலை உணவு health obesity food sleep weight loss\nAug 31, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/05/30114800/1166606/islam-worship.vpf", "date_download": "2018-08-20T18:12:07Z", "digest": "sha1:RNZ3YQBS63OC5HWSMZ3IVVJU4XKNZKPN", "length": 17284, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "நபிகள் நாயகத்தின் இறுதி ஹஜ்ஜுப் பயணமும் மக்களின் சந்தேகங்களும் || islam worship", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநபிகள் நாயகத்தின் இறுதி ஹஜ்ஜுப் பயணமும் மக்களின் சந்தேகங்களும்\nநபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், ஆழ் மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள்.\nநபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், ஆழ் மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள்.\nநபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், ஆழ் மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர்.\n'என்னுடைய இறைவனிடத்திலிருந்து வந்த வானவர் 'இந்த அபிவிருத்தி மிக்கப் பள்ளத்தாக்கில் தொழுவீராக இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக' எனக் கட்டளையிட்டார்' என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் நின்று கூறினார்கள்.\nமதியவேளை தொஹ்ர் தொழுகைக்கு முன்பாக நபி (ஸல்) இஹ்ராமுக்காகக் குளித்து நறுமணத்தைத் தடவி, தொழுகையை நடத்தினார்கள். தொழுத இடத்திலிருந்தே ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்து நிறைவேற்றுவதாக நிய்யத் செய்து கொண்டு ‘தல்பியா’ கூறினார்கள். ஒட்டகத்தின் மீதேறியும் தல்பியா கூறினார்கள், வழிப் பிரயாணத்தில் தொடர்ச்சியாகத் தல்பியா கூறினார்கள். கிட்டத்தட்ட எட்டு நாட்களைக் கழித்துக் கஅபாவை வந்தடைந்தார்கள். தவாஃப் செய்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தார்கள். ஆனால், இஹ்ராமைக் களையவில்லை. ஏனெனில், நபி (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிறைவேற்றுவதற்காக, தங்களுடன் குர்பானி பிராணியையும் அழைத்து வந்திருந்தார்கள்.\nகுர்பானி பிராணியைத் தன்னுடன் கொண்டுவராத தோழர்களை உம்ரா முடித்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அதற்குத் தோழர்கள் தயங்கினர். அதைப் பார்த்து நபி (ஸல்) “நான் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பயணத்தை நாடினால் என்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டு வரமாட்டேன். என்னுடன் இப்போது குர்பானி பிராணி இல்லை என்றால் நானும் இஹ்ராமைக் களைந்திருப்பேன்.” என்று கூறினார்கள். அதன் பிறகே பிராணி கொண்டு வராத தோழர்கள் இஹ்ராமைக் களைந்தனர்.\nமினாவில் தொஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அங்கு மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். 'நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்' என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்' என்றார்.\nஅதற்கு நபியவர்கள் 'பரவாயில்லை; எறிந்து கொள்ளும்' என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் 'பரவாயில்லை' என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் 'பரவாயில்லை செய்து கொள்ளுங்கள்' என்றே பதிலளித்தார்கள். ஃபஜர் தொழுகைக்குப் பின் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின் அரஃபா நோக்கி பயணமானார்கள். அரஃபாவில் ஒரு கூடாரத்தில் தங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்டு ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நபி (ஸல்) உரையாற்றினார்கள்.\n மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது” என்று தமது உரையை ஆரம்பித்தார்கள்.\nஅர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 2:25:1534, 1558, 1:3:83\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nதவறு செய்தவர்களை மன்னிப்பதே மனித மாண்பு\nதயம்மம் - தண்ணீரின்றி சுத்தம் செய்யும் முறை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/11/blog-post_26.html", "date_download": "2018-08-20T18:48:50Z", "digest": "sha1:WFL5ZB3YHGX5WLWL3LOFIW2TT3RYCWW5", "length": 14741, "nlines": 115, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: செல்ஃபோன் திருட்டுக்கு முற்றுப்புள்ளி", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nஒரு காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்தவை இப்போது அவசியமாகிவிட்டன. அவசியத் தேவைகளுக்கான பொருட்கள் அதிகமாகிப் போனதால், அத்துடன் அவற்றைப் பாதுகாக்கவேண்டிய சூழலும் அவசியமாகிவிட்டது. அதனால் நமக்கு அவசியமான பொருட்களை பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்துக் கொள்வதும் இப்போது அவசியமல்லவா..\nபணக்காரர்கள் மட்டுமே புழங்கும் பொருட்கள் என்று கருதப்பட்டு, இப்போது அனைவராலும் புழங்கப்படக்கூடிய பொருட்களின் பட்டியலில் இன்று செல்ஃபோன் முக்கிய இடம் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே செல்ஃபோன் புழங்குவதை ஆச்சரியமாக வாய்பிளந்து பார்த்த காலம் மாறி, இப்போது ஏழை எளிய மக்களும் சுல‌பமாக பயன்படுத்தும் வகையில் மிகவும் நியாயமான விலைகளில், குறைவான‌ கட்டணங்களோடு கிடைப்பது சந்தோஷமான விஷய‌ம்தான். இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முத‌ல், பால்காரர்கள், பஞ்சு மிட்டாய் - முறுக்கு வியாபாரிகள், தெருக்களில் வந்து மீன் விற்கும் மீன்காரம்மாக்கள் உட்பட எல்லோர் கையிலும் செல்ஃபோனைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது செல்ஃபோன் புழங்குவதை ஆச்சரியமாக வாய்பிளந்து பார்த்த காலம் மாறி, இப்போது ஏழை எளிய மக்களும் சுல‌பமாக பயன்படுத்தும் வகையில் மிகவும் நியாயமான விலைகளில், குறைவான‌ கட்டணங்களோடு கிடைப்பது சந்தோஷமான விஷய‌ம்தான். இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முத‌ல், பால்காரர்கள், பஞ்சு மிட்டாய் - முறுக்கு வியாபாரிகள், தெருக்களில் வந்து மீன் விற்கும் மீன்காரம்மாக்கள் உட்பட எல்லோர் கையிலும் செல்ஃபோனைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது அதே சமயம், செல்ஃபோன்கள் இவ்வளவு எளிதாகக் கிடைக்கும்போது அவற்றைத் திருடுபவர்கள் மட்டும் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் என்றில்லை, எல்லா நாடுகளிலும் இந்த செல்ஃபோன் திருட்டு நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.\n'திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பல்லவியை எதுவரைதான் பாடிக் கொண்டு இருப்பது முதலில் செல்ஃபோனுக்கு மட்டுமாவது இந்த நிலை மாறட்டுமே முதலில் செல்ஃபோனுக்கு மட்டுமாவது இந்த நிலை மாறட்டுமே அதற்காகதான் 'செல்ஃபோன் திருடன் திருந்தாவிட்டால் அந்த செல்ஃபோனே அவனுக்கு ஆப்பு வைக்கும்' என்ற இந்த‌ செய்தி\nஇதற்கு முன்னால் சிலர் இதைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் மெயிலில் வந்த இந்த செய்தி எனக்கு புதியதாக இருந்ததால், இதுவரை அறிந்திராதவர்கள் பயன்பெறட்டும் என்று அந்த‌ தகவலை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.\nஉங்களின் MOBILE PHONE தொலைந்துவிட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.காவல் நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்றுஅழைக்கப்படும்(INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம். இந்த IMEI NO தான் நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது.உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கிக் கொள்வார்கள். (இந்த முதல் பகுதி முன்னரே அனைவரும் அறிந்ததுதான். இதோ தொடர்ந்து வரும் இரண்டாவ‌து பகுதிதான் புது செய்தி)\nGUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும். அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாடு முடக்கப்படலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது. எனவே அது சிக்கலான‌ விஷயம்.\nஅவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து தன்னுடைய‌ SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும். எனவே அவர் தப்பிக்க முடியாது. எத்தனை முறை அவர் SWITCH ON/OFF செய்தாலும் அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவலாக வந்துக்கொண்டே இருக்கும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்குச் சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துக்கொள்ளுங்கள்.\nஇதைப் பயன்படுத்திப் பார்த்து, பலன் இருந்தால் அனைவரோடும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் செல்ஃபோன் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்\nLabels: சமுதாய நலன்கள், செய்திகள், தொழில் நுட்ப தகவல்கள், மெயிலில் வந்தவை\nபயன்பட்டது சந்தோஷம். வருகைக்கு நன்றி சகோ\nநல்ல தகவல் அஸ்மா. இதுவரை கேள்விபடாதவையாகவே இருந்தது .......\nநல்ல பகிர்வு அஸ்மா.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியவை.\nநல்ல தகவல் அஸ்மா. இதுவரை கேள்விபடாதவையாகவே இருந்தது .......//\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... நீங்களும் புதிதாக கேள்விப்பட்டதில் சந்தோஷம் :) நன்றி ஆமினா\n//நல்ல பகிர்வு அஸ்மா.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியவை//\n உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானா.\nஅஸ்மா,உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்.\n//அஸ்மா,உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்//\nமிக்க சந்தோஷம், உங்கள் விருதைப் பெற்றுக் கொண்டேன். உங்களின் அன்பான விருதுக்கு நன்றி ஆசியாக்கா\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news--------1295-4594126.htm", "date_download": "2018-08-20T19:09:39Z", "digest": "sha1:6O7SSYAD64E2R3VPWA46L3JMRGCVNERO", "length": 3644, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "கர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; 'எங்களை ஆட்சியமைக்க ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - கர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; 'எங்களை ஆட்சியமைக்க ...\nகர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; 'எங்களை ஆட்சியமைக்க ...\nதினத் தந்தி புதுடெல்லி,. இதனைதொடர்ந்து 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளை தவிர 222 தொகுதிக்கு நடந்த தேர்தலில் 72.36 சதவீத... -.\nTags : கர்நாடகாவில், ஆட்சியமைத்த, ஜனதா, எங்களை, ஆட்சியமைக்க\nதேசிய பேரிடராக அறிவிக்க தயக்கம்: கேரளாவின் வெள்ளத்தை 'தீவிர ...\nதலைவர், பொருளாளர் தேர்வு: ஆக.28-ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்\nபாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவிய விவகாரம்: தக்க ...\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ...\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:18:44Z", "digest": "sha1:2LMSW5MTEBCYVY77BDXPI5TOX2ZJNUAJ", "length": 10391, "nlines": 230, "source_domain": "tamilnool.com", "title": "கேள்வி பதில் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nதிருவாசகம் (பெரிய எழுத்து) ₹800.00\nவாரியாரின் ஒரு வரி பதில் ₹25.00\nBe the first to review “கேள்வி பதில்” மறுமொழியை ரத்து செய்\nஷம்பாலா எனும் ஞானப் பள்ளத்தாக்கு\n(இமயமலையில் மறைந்துள்ள ஆன்மீக ரகசியங்கள்)\nவாரியார் சுவாமிகளின் எளிமையான உரை\nபெரிய அளவு, பெரிய எழுத்து, கெட்டி அட்டை\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை\nகுமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/kadal_thamarai/tvr08.asp", "date_download": "2018-08-20T18:18:11Z", "digest": "sha1:GE3SBK62LAM7ORSPJFWWMAOLD3GS64DA", "length": 103582, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Founder T.V.R. Life History, Life Story & Biography", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் » கடல் தாமரை\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nகன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றுதல், மற்ற மாவட்டக்காரர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாகும். இதற்குச் சில அடிப்படைக் காரணங்கள் உள்ளன. குமரி மாவட்டம் நீண்ட நெடுங்காலம், மலையாள ஆட்சியில் இருந்தது. இங்கு மலையாள மொழியின் நெருக்குதலில் ஒவ்வொரு நாளும் சிக்கித் தவித்தவர்கள் இவர்கள். பள்ளிகளில் மலையாள மொழிக்கே முதலிடம். தமிழ்மொழி இங்கு தாழ்த்தப்பட்ட வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற காரணங்களே, இங்குள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழி யின் மீது கூடுதல் பற்று ஏற்படக் காரணமாக இருந்தது.\nதமிழ் புறக்கணிக்கப்படும் வேதனையைக் கவிமணி அழகாகக் கூறியிருக்கிறார். நாஞ்சில் நாட்டில் பிறந்த பெரும் கவிஞர் கவிமணிக்கு ஆரம்பப் பள்ளிகளில் கூடத் தமிழ்மொழி இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையை உண்டாக்கியது. நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் தாய்த் தமிழகத்துடன் இணைய, அம்மக்களைத் தயாரித்த பெருமை கவிமணிக்கே உண்டு. அவரது வேதனையை 1917ம் ஆண்டே திருவனந்த புரத்தில் இருந்து வெளியிடப்பட்ட, ‘தமிழன்’ பத்திரிகையில் வெளிவந்த, ‘மருமக்கள் வழி மான்மியத்தில்’ கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.ஒருவர் மரணமடைந்து விடுகிறார். அங்கு வந்தவர்கள் மரணமடைந்தவர் மகனை நோக்கி :\n உன் தந்தை தலைமாட்டிலிருந்து திருவாசகத்தில் சிற்சில பதிகம்படிறீ எனச் சொல்லி, பண்ணை வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தனர். பயலும் அதைத் திறந்து பார்த்தான். ‘ஆரே தமிழை அறிபவர்’ என்றான். ‘பள்ளியில் தமிழும் படித்தேனோ’ என்றான். ‘பள்ளியில் தமிழும் படித்தேனோ’ என்றான். ‘பரீட்சையில் தமிழுமொரு பாடமோ’ என்றான். ‘பரீட்சையில் தமிழுமொரு பாடமோ’ என்றான். ‘என்னால் படிக்க இயலாது’ என சுவரில் சாய்ந்து சும்மா இருந்தான்’ என்றான். ‘என்னால் படிக்க இயலாது’ என சுவரில் சாய்ந்து சும்மா இருந்தான்- என்று தமிழ் அன்று ஒதுக்கப்பட்டதை வேதனையுடன் கூறினார்.\nடி.வி.ஆர்., பற்றி, கேரளப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஏசுதாசன் கூறுகையில் . . . அன்றைக்குக் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவில், ‘விரிவுரையாளர்’ பதவிதான் இருந்தது. றிதமிழ்த்துறைக்கு விரிவுரை யாளர் பதவி மட்டும் இருப்பது போதாது, பேராசிரியர் பதவியும் தர வேண்டும்றீ என்று, டி.வி.ஆர்., எடுத்த முயற்சியே அப் பல்கலைக் கழகத்தின் முதல் பேராசிரியர் என்ற தகுதியை எனக்குத் தேடித் தந்தது. கேரளாவில் இருந்த தமிழ் ஆசிரியர்களின் நிலை அன்றைக்கு மிகவும் பரிதாபமானது. அவர்களுக்கு மதிப்புக் கிடைக்கத் தனது பத்திரிகை மூலம் தொடர்ந்து போராடி வெற்றி கண்டவர் டி.வி.ஆர்., அவர் தமிழ் மொழியைப் பழைய காலப் போக்கில் இருந்து, புதிய பார்வையில் பார்த்தவர்.\nதிவானாக இருந்த போது தமிழர்கள் பிரச்னைகளுக்கு சர்.சி.பி., உதவியது உண்டு. சுதந்திரத்திற்குப் பின் சர்.சி.பி., பதவியில் இல்லாத போது, ஒரு பெரிய இடைவெளி. அதை நிரப்புவது சாமான்யமன்று. அந்தப் பணியை ஏற்று நடத்தி வெற்றியும் கண்டவர் டி.வி.ஆர்., திருவிதாங்கூர் தமிழர்கள் பற்றி ஓர் ஆய்வு நடத்தப்படுமானால், அதில் டி.வி.ஆரின் தனிப்பெரும் சக்திகளும், வெற்றிகளும் தெரிய வரும் என்றார். தமிழ் மொழியும், வரலாறும் மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் செய்வதைப் போல விஞ்ஞானப் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். பத்தாம் பசலித்தனமாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டி ருக்கக் கூடாது. நவீனங்கள் அதிகம் வர வேண்டும். உலகம் நமது மொழியை ஏற்றுக்கொண்டு பாராட்டும் வகையில் நமது பார்வையும் பணியும் இருக்க வேண்டும் என்பது டி.வி.ஆர்., கொள்கை.\nஇதன் காரணமாகவே தனது பத்திரிகையைப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையைக் கொண்டு துவக்கி வைத்தார் என்றால், தமிழ் மொழி மீதும், உண்மையான தமிழ் அறிஞர்கள் மீதும் டி.வி.ஆருக்கு எத்தனை பெரிய மதிப்பு இருந்தது என்று சொல்லவும் வேண்டுமோ\nகுமரி மாவட்டத்தில் ஆறாவது தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு\nதமிழ் எழுத்தாளர்களின் ஆறாவது மாநில மாநாடு மே 31, ஜூன் 1, 1958ல் குமரி மாவட்டத்தில் நடைபெற்றது. அதுவரை தலைநகர் சென்னையில் மட்டுமே நடைபெற்ற இம்மாநாடு, முதல் முறையாக ஒரு மாவட்டத்தில் நடைபெற்றது என்பதால் இதற்குப் பல சிறப்புக்கள் உண்டு. இம்மாநாட்டை நடத்துவதில் பெரும் பொறுப்புகளை ஏற்றவர் டி.வி.ஆர்.,இவ்வளவு பெரிய மாநாட்டை குமரி மாவட்டத்தில் நடத்த ஏற்றுக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுவது இயற்கையே. குமரி மாவட்டம் என்ற தமிழர்கள் வாழும் பகுதி, தங்களைச் சார்ந்ததுதான் என்ற உணர்வே இல்லாமல் இருந்தனர் தாய்த்தமிழ் மக்கள். தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று இப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றபோது கூட, இப்பிரச்னையில் தமிழகப் பத்திரிகைகள் தங்களது உணர்வுகளைச் சரியான முறையில் வெளிப் படுத்தவில்லை.\nதலைநகரில் உள்ள பிரபலமான பத்திரிகைகள் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, கல்கி, விகடன் இவற்றின் பிரதிநிதிகளை, போராட்ட காலத்தில் குமரி மாவட்டத்திற்கு அழைத்து மாவட்டம் முழுவதும் அவர்களைச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் செய்து, நிலைமைகளை அவர்களும் உணரச் செய்தவர் டி.வி.ஆர்., பத்திரிகைகள் நினைத்தால் உண்மையான மாற்றம் கொண்டுவர முடியும் என்பது அவரது அசைக்க முடியாத கொள்கை. தாய்த் தமிழகத்துடன் இணைந்துவிட்ட குமரி மாவட்டம் பற்றி இனியாவது தமிழ் எழுத்தாளர்கள் முழுக்கவனம் செலுத்த முன்வர வேண்டும்; அவர்கள் எழுத்து வன்மையால் மட்டுமே புதிய குமரி மாவட்டம் பல துறைகளில் முன்னேற்றம் காண முடியும் என்று முழுக்க முழுக்க நம்பினார். இந்த எண்ணத்தின் எதிரொலிதான், தமிழ் எழுத்தாளர் மாநில மாநாட்டைக் குமரி மாவட்டத்தில் நடத்த ஏற்றுக்கொண்டார் என்பது நிச்சயமாகிறது.\nஎழுத்தாளர் மாநாட்டில், ‘தினமலர்’ நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., நிகழ்த்திய வரவேற்புரையை அப்படியே தருகிறோம் . . .\nஇது தமிழ் எழுத்தாளர் ஆறாவது மாநாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் வரவேற்புக்குழுத் தலைமை பெருமையை எனக்கு அளித்த இந்த மாவட்ட எழுத்தாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று மாநாடு கூடும் இந்த ஜில்லாவைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் . . . தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது, அதங்கோட்டு ஆசான் தலைமையில் என்று வரலாறு கூறும். அந்த ஆசான் வாழ்ந்த ஊரான ஆதங்கோடு இங்கிருந்து பத்து மைல் துபரத்தில் தான் இருக்கிறது.\nஎத்தனையோ தமிழ் அறிஞர்கள் இங்கு தோன்றியிருக்கின்றனர். ஸ்ரீமான்கள் கே.என்.சிவராஜபிள்ளை, செய்கு தம்பி பாவலர், தசாவ தானம் ஆறுமுகம் பிள்ளை முதலானவர்களை நீங்கள் அறிவீர்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றி அறியாத தமிழர்களே இல்லை எனலாம். கலை உலகில் புகழ் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், புகழ் பரப்பிக்கொண்டிருக்கும் டி.கே.எஸ்.சகோதரர்களும் இந்த ஜில்லா மக்களே. நீலத்திரைக் கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி எங்களை எப்பொழுதுமே காத்துக் கொண்டிருக்கிறாள். நாங்கள் அண்மைக் காலம் வரை மலையாள நாட்டுடன் இணைந்தி ருந்தோம். பெரிய போராட்டம் நடத்தி இப்போதுதான் தமிழகத்தோடு இணைய முடிந்தது. மலையாளச் சூழ்நிலையில் இருந்தும் கூட, இந்தப் பகுதி, தாய் மொழிக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறது என்பதை நீங்கள் சற்று ஊன்றிக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nநம்முடைய விசேஷ அழைப்பின் பேரில் இங்கு வந்திருக்கும் எழுத்தாளர் பெருமக்களையும், ஏனைய பெரியோர்களையும் நான் இந்த மாவட்ட மக்களின் சார்பில் வரவேற்கிறேன். நீங்கள் இங்கு வந்து எங்களைக் கவுரவப்படுத்தியதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.\nபெரியோர்களே . . .\nஎழுத்தாளர்கள் யார் என்று பார்ப்போமாயின், கம்பர், காளிதாசன், முதல் இன்று ஒரு சிறிய பத்திரிகைக்கு கதை எழுதுபவராக உள்ள எல்லாருமே ஒரே வர்க்கம்தான். தமிழ் எழுத்தாளர்கள் பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல; ஒருபடி மேலாகக் கூடச் சொல்லாம். புதிய படைப்பிலோ, மொழிபெயர்ப்பிலோ, தழுவலிலோ தமிழ் மொழி வேகமாக முன்னேறி வருகிறது. ஆட்சி மொழியாகி, கல்லூரி மொழியாகவும் ஆகிவிட்டால், அது தன் முழுப் பொலிவுடன் விளங்கத் தொடங்கும். அப்போது இன்றிலும் பன்மடங்கு எழுத்தாளர் கள் நாட்டில் தோன்றுவர். அவர்களுக்குக் கவுரவத்தோடு நல்ல ஊதியமும் கிடைக்கும்.\nதமிழ்நாட்டில் கல்வியறிவு இன்று மேற்கு நாடுகளைப் போலவோ, அண்டையிலுள்ள கேரளத்தைப் போலவோ கூடப் பரவவில்லை. அப்படியிருந்தும், தமிழ் தின, மாத, வாரப் பத்திரிகைகள் எல்லாம் இந்தியாவிலேயே கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றன. நூற்றுக்கு நூறு என்ற கல்விநிலை எய்திவிட்டால் எழுத்தாளர்களுக்கு ஒய்வு எடுக்க முடியாத நிலை வந்துவிடும். அவர்களுக்கு ஒளிவீசும் எதிர்காலம் அப்பொழுது உண்டு. தமிழ்மொழிக்குப் பாரம்பரியமும், மாபெரும் வரலாறும் உண்டு. அவற்றை நன்றாக உணர்ந்துதான் புதிய வழிகளை நமக்கு பாரதியார் காட்டினார். ‘நறை செவிப் பெய்தன்ன’ என்ற கம்பனின் சொற் றொடரை, ‘தேன் வந்து பாயுது காதினிலே’ என்று புதிய சிருஷ்டி போல் தந்த வியப்பைப் பாருங்கள். நாமும் நம் முன்னோர் தந்த கருவூலத்தைக் காப்பாற்ற வேண்டும். நம்மில் பலர் உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் கற்று அதன் சாரத்தை எல்லாம் நம் தாய்மொழியில் கொணரச் செய்ய வேண்டும்.\nவிஞ்ஞானத் துறையில் ஆங்கிலத்தை விட ரஷ்ய மொழி முன்னேறி விட்டது என்று, ‘ஹாலடேன்’ எழுதியிருக்கிறார். ரஷ்ய மொழியை நம்மில் அநேகர் கற்று, விஞ்ஞான அறிவைத் தமிழில் வளர்க்க வேண்டும். விஞ்ஞானத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது பல சிரமங்கள் ஏற்படலாம், அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒருவித மணிப்பிரவாள நடையோடு எழுதினாலும் குற்றமில்லை. காலப் போக்கில் அது மாறி, நல்ல உருவில் அமைந்து விடும். ஆரம்ப காலத்தில், வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கொண்டு ஒரு மணிப்பிரவாள நடையாகத்தான் தமிழில் வசனமும் இருந்தது. இப்பொழுது அந்த நடை முற்றிலும் மாறித் தனக்கென ஒர் உயர்ந்த பாணியில் மிளிருகிறதல்லவா . . .\nவடமொழியில் எத்தனையோ தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கின்றனர். பேனாவின் சக்தி, வாளின் சக்தியை மிஞ்சியது என்று ஒரு பெரியார் சொன்னார். வாளைப் போல் அழிவுப் பாதையில் நம் பேனாவை செலுத்தாமல், ஆக்க வேலைக்குப் பயன்படுத்துவோம் என்று விரதம் கொள்ளுவோமாக. தமிழை உலகப் பெருமொழிகளில் ஒன்றென ஆக்குவது நமது கடமை; அதைச் செய்தே தீருவோம். லிபி சீர்திருத்த விஷயத்திலும் நாம் முன்னேற்றக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல் நலம். எழுத் தாளர்கள் என்றுமே வறுமை நிலையில் இருப்பவர்கள் என்ற அவலச் சொல்லை மாற்றி, அவர்களை மேம்பாடுறச் செய்யும் வழிகளை வகுத்தல் வேண்டும்.\nநமது தலைமை அரசாங்கம் இப்பொழுது எழுத்தாளர்களைக் கொஞ்சம் கவனிப்பதாகத் தெரிகிறது. நம்முடைய சுதந்திரத்திற்குப் பங்கம் வராமல் பார்க்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. நாமும் நம்மை அறியாமல் அரசாங்கம் என்ற பொறியில் விழுந்து விடக் கூடாது. மாநாட்டின் தலைவராக வீற்றிருக்கும் ஸ்ரீ சாமிநாத சர்மா, ஒரு சிறந்த எழுத்தாளர். தமிழகத்தில் அரசியல் அறிவினை முதிரச் செய்த தொண்டர்களுள் ஒருவர். சிறந்த பத்திரிகை ஆசிரியராக விளங்கியவர். பண்பட்ட உள்ளமும், ஒழுக்கமும் நிரம்பியவர். அவர்கள் இந்த மாநாட்டைச் சிறப்புற நடத்தித் தருவார் என்பது திண்ணம். நம் வேண்டுகோளுக்கிணங்கி, இதைத் திறந்து வைக்க வந்திருக்கும் பெரியவர் மத்திய கலாச்சார மந்திரி ஹபூமாயூன் கபீர், பாரத நாட்டிற்குப் பெருமை அளிக்கும் தலை சிறந்த கல்வி அறிவாளர்களுள் ஒருவர். சொல் திறனும், எழுத்துத் திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். ஆளும் திறனும் உண்டு என்பதனை உலகுக்கு எடுத்துக் காட்டுபவர். அவர்கள் இப்பணியை ஏற்றது நமது பாக்கியமே. (‘தினமலர்’ செய்தி, ஜூன் 1, 1958)\nதமிழ் எழுத்தாளர் மாநாடு தொடக்க நாளில் \"தினமலர்'ப் பத்திரிக்கையில் டி.வி.ஆர்., எழுதிய தலையங்கம்.\nநமது இராஜ்ஜியத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றும்படி தமிழ் எழுத்தாளர்கள் கோரியிருக்கின்றனர். இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கை திடீரென உதித்துள்ள புதிரல்ல. இராஜ்யப் பிரிவினை விவகாரம் தோன்றிய நாள் தொட்டுக் கோரப்படும் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை எக்காரணம் கொண்டோ அதிகாரத்தில் இருப்பவர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த அலட்சியம் அகம்பாவத்தின் சின்னம் என்று கூட எதிர்க்கட்சிகள் கூறித் தீர்த்து விட்டன.\n‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டும்படி கோரி உயிர்த்தியாகம் வரையிலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பதவியில் இருப்பவர்கள் அசையவில்லை. சென்னையில் மிகப் பெரும்பான்மைக் கட்சியாகக் காங்கிரஸ் விளங்கி வருவதால், அக்கட்சிக்குச் சர்வாதிகாரமாக நடக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. அந்த மெஜாரிட்டி பலத்தை மனத்தில் கொண்டு, அடம் பிடிப்பது எந்த விதத்திலும் உகந்த நடவடிக்கையாக முடியாது. ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் கோருவது தமிழனின் அடிப்படை உரிமை. அந்த விஷயத்தின் மீது இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துவது எதற்கு என்று தெரியவில்லை. காங்கிரஸ்காரர்களில் மெஜாரிட்டியின ரும், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டுவதை விரும்புகின்றனர். கட்சிக் கட்டுப்பாட்டின் காரணமாக அவர்களுக்கு இதர கட்சி யினரைப் போல பகிரங்கமாகக் கூற முடியவில்லை.\nசென்னையிலுள்ள காங்கிரஸ்காரர்கள், தங்கள் கமிட்டியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று அழைத்து வரும்போது, தாங்கள் வசிக்கும் இராஜ்ஜியத்தை மட்டும், ‘தமிழ் நாடு’ என்று அழைக்கத் தயங்குவானேன்\nசென்னை இராஜ்ஜிய மக்கள் அனைவருமே மொழியின் பேரால் இந்த இராஜ்யம் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர், தி.மு.க., - தி.க., - தமிழரசுக் கழகம், பி.சோ., - கம்யூ., ஆகிய எல்லாக் கட்சிகளுமே, ‘தமிழ்நாடு’ என்ற பெயரை எதிர்பார்க்கிறது. அங்ஙனம் எல்லாரும் ஒருமுகமாக விரும்பும் அப்பெயரை உடனே சூட்ட வேண்டியது அரசாங்கத் தலைமையாரின் கடமையாகும்.\nஅரசியலோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளாத எழுத்தாளர் சங்கத்தினரும், ‘தமிழ்நாடு’ என்று பெயரிட வேண்டும் என்று விரும்புவதையாவது மதித்து, அவர்களின் கோரிக்கையை அங் கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஅரசாங்க அலுவல் மொழி தமிழாக மாறிவரும் இக்கட்டத்தில், இராஜ்ஜியத்தின் பெயரை மட்டும், ‘தமிழ்நாடு’ என்று மாற்றாமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது... மலையாளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய பகுதிகள் சென்னையோடு இருந்த போது வழங்கப்பட்ட பெயரே இப்போதும் தொடரட்டும் என்று கூறுவது விதண்டாவாதம். ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியின் சொல், நடைமுறை சாத்தியமாக வேண்டியது முக்கியம்.\n‘தமிழ்நாடு’ என்று பெயர் ஏற்படும் பொழுதுதான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் இயற்கையான பெருமிதம் ஏற்பட முடியும். எந்தப் பெயர் இருந்தால் என்ன என்றெல்லாம் கூறுவது வெறும் வேதாந்தமே. தமிழர்களுக்கென்று தமிழின் பெயர் விளங்கும் இராஜ்ஜியம் தேவை. தமிழர்களின் கலை, பண்பு, கலாச்சாரம் ஆகிய அனைத்தும் முன் னேறத் ‘தமிழ்நாடு’ என்று தனிப்பெயர் தேவை. இந்தத் தேவையை உணர வேண்டும். உணர்ந்தால் பெயரை மாற்றிக் கொள்வதில் கஷ்டம் இல்லை. ‘தமிழ்நாடு’ என்ற பெயரை இதரக் கட்சியினர் விரும்புவதை அரசியல் நோக்கோடு அரசாங்கம் கருதினாலும், எழுத்தாளர்கள் விஷயத்தில் அதேக் கண்ணோட்டம் ஏற்பட வேண்டியதில்லை. ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்காக அவர்கள் இதுவரையிலும் எழுதியும், பேசியும் வருவது தெரிந்ததே. எனினும், அதற்குப் பரிகாரமும் கிடைக்கவில்லையானால் அவர்கள் மனவேதனை அடைவது இயற்கையே. அரசாங்கம் இனியும் வீண் சடங்குகளுக்கு வழி வகுக்கா மல் விரைவில், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்கு முன் வரு வார்களாக\nடிசம்பர் 1, 1968 முதல் தான், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அண்ணாத் துரை முதலமைச்சராக இருந்தபோது சூட்டப்பட்டது.\nதமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி ஜூன் 6, 1958 கல்கி இதழில் லால்குடி கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரையின் சுருக்கம்...\nஎழுத்தாளர் பெருமக்களே . . . வருக . . . வருக . . . மாநில மாநாட்டுத் தலைவர் அவர்களே வருக புத்துலகச் சிற்பிகளே வருக . . . வருக புத்துலகச் சிற்பிகளே வருக . . . வருக ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டை அணி செய்ய வந்துள்ள அழியாப் புகழ் வாய்ந்த அறிஞர்களே வருக . . . வருக . . . வருக\nஉங்கள் அனைவரையும் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராகிய நாகர்கோவில் மக்கள் சார்பில் மனமார மகிழ்வுடன் வரவேற்கிறோம். எழுத்தாளர்களாகிய உங்களுக்கு ஒரு சேர நல் வரவேற்பு வழங்கும் வாய்ப்பைத் தமிழகத்தில் பெற்றுள்ள முதல் நகர்மன்றம் நாகர்கோவில் நகர்மன்றமே என்று எண்ணும்போது எங்கள் இதயம் இன்பக் கடலாகிறது.\nநாகர்கோவில் நகர மன்றத்தார் அளித்த இந்த வரவேற்புரையைக் கேட்டவுடன் எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. எழுத்தாளர் களுக்கா இத்தகைய வரவேற்பு\nஆட்சிப் பீடத்தில் உள்ள அமைச்சர்களையும், பெரிய பெரிய அரசியல் தலைவர்களையும் மட்டுமே வரவேற்றுப் பெருமை சூடிக் கொள்ளும் நகர்மன்றம், அமைச்சர்களையும், காவியக் கலைஞர்களை யும் உருவாக்கும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்துத் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொண்டிருக் கிறது என்று வியந்து கொண்டிருக்கும் பொழுது...\n‘என்ன அண்ணாச்சி இங்கேயே நிக்கிறீங்களே, ஊர்வலம் கிளம்பி விட்டதேறீ என்று, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அன்பர் ஒருவர் என் தோளில் கைவைத்துக் குலுக்கினார்; ஊர்வலத்தை நோக்கி விரைந்தேன். பாண்டும், மேளமும் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல, மாநாட்டுப் பிரதிநிதிகளும் நகர்ப் பொது மக்களும் சூழ்ந்திருந்த காரில், மாநாட்டுத் தலைவர் ஸ்ரீ வே.சாமிநாத சர்மாவும் அமைச்சர் ஸ்ரீ ஹபூமாயூன் கபீர் அவர்களும், திருவாளர்கள் எஸ்.குண்டப்பா, எஸ்.சங்கரராஜ் நாயுடு, ப.ஜீவானந்தம், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் டி.வி.இராமசுப்பையர் முதலியோரும் பவனி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nஅங்கங்கே பலர் தலைவர்களுக்கு மாலை சூட்டி மகிழ்ந்தனர். இதுவரையில் இது போன்ற ஒரு மாபெரும் ஊர்வலத்தை நாகர் கோவில் கண்டதேயில்லை என்று பேசிக்கொண்டனர். ‘வழக்கம்போல் சென்னையிலேயே இந்த ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாடும் நடந்திருந்தால் இத்தகையதொரு காட்சியைக் கண்டி ருக்க முடியுமாறீ என்று யாரோ கூறியதும் என் காதில் விழுந்தது. ஊர்வலம், மாநாடு நடைபெற இருக்கும் சேது லட்சுமிபாய் உயர்தரப் பாடசாலைக் கட்டடத்தை அடைந்தது. அந்தக் கட்டடத்தைப் பார்த்து, இது உயர்நிலைப் பள்ளியா, மாபெரும் கல்லுபரியா என்று வியக்கதவர்களே கிடையாது. வீதி மட்டத்தில் இருந்து 50 அடி உயரத்திற்குப் படிப்படியாக உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளித்தது அந்தப் பள்ளி. அதற்குள் ஒலிப் பெருக்கியில் பித்துக்குளி முருகதாசின் பிரார்த் தனை கீதம் கணீரென்று ஒலித்து, அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் திரு.டி.வி.இராமசுப்பையர் தமது அழகிய வரவேற்புரையை நிகழ்த் தினார்.\nதமது கருத்துச் செறிவு நிறைந்த தொடக்க உரையில் மத்திய அமைச்சர் ஹுமாயூன் கபீர் அவர்கள் குறிப்பிட்டதாவது:\nஇந்திய மொழிகளில், எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கே உண்டு. இலக்கிய வளம் நிறைந்தது தமிழ். இனிமை மிக்கது தமிழ் மொழி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைப் பேரிலக்கிய வளம் நிறைந்த மொழி தமிழே. அது மட்டும் அல்ல, சங்கிலிக் கோவை போல் தடைபடாத, விடுபடாத நீண்ட மரபு, தமிழைப் போல் வேறெந்த மொழிக்குமே கிடையாது. ஆண்டுகள் பல்லாயிரம் ஆன பின்பும் இளமைப் பொலிவு குன்றாக் கன்னி மொழி இது.\nஅரசியல் ஆதரவு காரணமாக எந்த மொழியும் வளர்வதில்லை, வாழையடி வாழையாகப் பல எழுத்தாளர்கள் தோன்றி மொழிகளை வளம் குன்றாமல் செய்து வந்தனர் என்றுதான் சரித்திரம் கூறுகிறது.\nதாகூரின் அறிவுத் திறத்தால் வங்காள மொழி சிறந்த மொழியாகி விட்டது. எனவே, அம்மொழி மாகாண மொழியாவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. பல ஐரோப்பிய நாடுகளில் வங்காள மொழி கற்பிக்கப்படுகிறது என்றால், அதற்கு அரசியல் மறைகளோ, பொருளா தாரத் தத்துவங்களோ காரணம் அல்ல. வற்றாத ஊற்றுப் போன்ற அரும்பெரும் கருத்துக்கள் அடங்கிய நூல்களைத் தாகூர் அம்மொழி யில் எழுதி அதை வளப்படுத்தி இருப்பதே காரணம். தமிழ் எழுத்தாளர்களும் இதைக் கடைப்பிடித்து, கலை அழகும், கருத்தழகும் செறிந்த நூல்களை உருவாக்குவார்களானால் அவர்கள் பெரிய சாதனைகளைச் செய்தவர்கள் ஆவர்.\nதொன்மை நிறைந்த மொழிகள் எனக் கருதப்படும் சீன, சமஸ்கிருத மொழிகள் கடந்த காலத்தில் எத்தனையோ மாறுதல்களுக்கு ஆளாகி விட்டன. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி சிறிதும் மாறவில்லை.எழுத்தறிவில்லாதவர்கள் கூடத் தமிழ்க் காவியங்களைப் பிறர் படிக்கக் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடியப் பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. இந்தக் காரணத்தால்தான் உலகின் எந்த மொழியையும் விடத் தமிழ்மொழி சிறந்ததெனக் கருதப்படுகிறது என்று, தமிழ் மொழி பற்றி தமது கருத்துக்களைக் கூறினார். தொடர்ந்து எழுத்தாளர் கள் அரசியலில் ஈடுபடாமல் தங்கள் உணர்ச்சிகளையும், சிந்தனைகளை யும் மொழி வழியாய் வெளியிட வேண்டும் என்று கூறித் தமது தொடக்க உரையை முடித்தார், விஞ்ஞான ஆராய்ச்சி, கலாச்சார இலாகா அமைச்சர், பேராசிரியர் ஹபூமாயூன் கபீர்.பிறகு பலத்த கரகோஷங்களுக்கு இடையே தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும், ஆறாவது மாநாட்டுத் தலைவரும் ஆன அறிஞர் வெ.சாமிநாதசர்மா தமது தலைமை உரையை அரங்கேற்றினார்.\nதமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றிய காலத்தில் இருந்து அதற்கு முறையே தலைமை தாங்கித் திறம்பட நடத்தி வந்த அறிஞர்கள் ஐவருக்கும் முதலில் தமது அஞ்சலியைத் தெரிவித்துப் பேசலுற்றார் . . . தமிழில் சிறுகதை இலக்கியம் வளர்ந்திருப்பது போல் நாவல், நாடக இலக்கியங்கள் வளரவில்லை. கட்டுரைகளும், கடித இலக்கியங் களும், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய துறைகளில் நல்ல நுபல்களும் எழுதப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமூகம், மனோதத்துவம், தாவரம், பிராணி வர்க்கங்கள், உடற்கூறு ஆகிய சாஸ்திரங்களைப் பற்றித் தமிழில் சரியான நுபல்கள் வரவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nசுயமாகத் தொழில் விரும்புவோர், இப்பொழுது ஆங்கிலத்தின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கிறது. தொழில் நுட்பங்களைக் கூறும் புத்தகங்கள் தமிழில் வேண்டாமா எழுத்தாளர்களே இதைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். இந்தத்துறை நோக்கி நமது எழுதுகோலை செலுத்த வேண்டும். சீக்கிரமாகவும், வேகமாகவும் செலுத்த வேண்டும் என்று, தலைவர் தமது நீண்ட தலைமை உரையில் குறிப்பிட்டார். அதன் பிறகு நாஞ்சில் நாடு பெற்ற தவச் செல்வர் தசாவதானி ஜனாப் செய்குதம்பிப் பாவலரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துத் தமக்கே உரிய தமிழ் உரையை நிகழ்த்தினார் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் . . . றிசெய்குதம்பிப் பாவலரின் நினைவாட்சித் திறன் இணையற்றது; இமயம் போன்றது. அவர் படிக்காத தமிழ் நூல்களும், அவர் மனத்தில் பதியாத தமிழ்ப்பாக்களும் கிடையாது. ஒரே சமயத்தில் நுபறு பேர் நுபறுவிதமாகக் கேட்கும் கேள்விகளை மனத்தில் அடுக்கி, அவர்களுக்குத் தகுந்த பதிலை அடுத்தடுத்துத் தரும் அவரது ஆற்றலைக் கண்டு வையமே வியக்கும். . .றீ\nநீலத்திரை கடல் ஓரத்தில் நின்று\nநித்தம் தவம் செய்யும் குமரி\nகாத்து எல்லாம் பெருகச் செய்வாளாக.\nஉலகின் வயதில் மூத்த மொழி என்ற பெருமையைத் தமிழ் பெற்றுள்ளது. இதுபோல் பல உலக மூத்த மொழிகள் இன்றைக்கு நலிந்து, சிதைந்து, ஆய்வாளர்கள் மட்டுமே அணுகும் வகையில் ஒதுங்கிவிட்டன. அது மக்கள் மொழியாக வளராமல் போனது ஏன் வயது அதிகம் என்பது ஒன்று மட்டுமே ஒரு மொழிக்குப் பெருமையாகி விடாது.காலம் காலமாகப் பல்வேறு அறிஞர்கள் தங்களுடைய உழைப்பால் மொழியை வளப்படுத்தி ஏற்றமுறச் செய்து வந்தது தான் இந்தப் புகழுக்கெல்லாம் காரணம். தொல்காப்பியர் தொட்டுப் பாரதி வரை இந்தப் பரம்பரை தொடர்கிறது; இது வரலாறு.\nஆனாலும், தமிழ்நாட்டின் பெரிய துரதிருஷ்டம் . . . தமிழ் மொழிக்கு ஏற்றம் தரப் பாடுபடும் அறிஞர்கள் போதிய அளவு மதிக்கப்பட்ட தில்லை. அவர்களது ஆய்வுகளுக்கு ஒட்டு மொத்தமான அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை. வாழ் நாளெல்லாம் இந்த அறிஞர்கள் வறுமையில் வாடினர். தங்களது ஆய்வுகளுக்குப் பொருளுதவி கேட்டு இவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களது பெரும் தியாகங்களால் மட்டுமே தமிழ் மொழி இன்றைக்கும் சீர் இளமைத் திறன் கொண்டு உலக அரங்கில் விளங்குகிறது என்பதைப் புரிந்துகொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு.இந்தப் பெருங்குறை டி.வி.ஆர்., இதயத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தது. தன்னந்தனியாகத் தமிழ் மொழியின் ஏற்றத்திற் காகப் பாடுபட்டு வரும் அறிஞர்களைப் போற்றுகிறவர்களும், பாராட்டுகிறவர்களும், உதவுகிறவர்களும் இல்லாமல் போனால் மொழி வளர்ச்சி என்பதெல்லாம் ஏட்டோடு நின்றுவிட வேண்டியது தான்.\nஇந்த வகையில் தனது இறுதிக் காலம் வரை பல்வேறு துறையைச் சார்ந்த தமிழ் அறிஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் பரிவும், பாசமும் கொண்டு அன்பு செலுத்தி, டி.வி.ஆர்., செய்த உத விகள் ஏராளம். மொழி வளர்ச்சி பழைய தலைமுறையோடு நின்று விடக்கூடாது, இளம் தலைமுறை யினரும் இதில் ஆர்வமுடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும் என்று அவருக்குத் தணியாத ஆவல் இருந்தது.\nபாளையங்கோட்டைத் தூய யோவான் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பா.வளன் அரசு பாளையங்கோட்டையில் 1940ல் பிறந்தார். பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்ற இவர், காரைக்குடி அழகப்பாவில் எம்.ஏ., பட்டமும், மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., பட்டமும் பெற்றார்.\nசிறந்த எழுத்தாளர். கட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், வீரமாமுனிவர் ஒரு விளக்கம், பாரதியின் புதுமை நலம், துறை தோறும் திரு.வி.க., தேம்பாவணித் திறன் போன்ற பல்வேறு நூல்களையும் இருபதிற்கு மேற்பட்ட சிறப்பு மலர்களையும் வெளிக்கொண்டு வந்தார். இலக்கியத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்ற இவர் சிறந்த பேச்சாளர்.\nதிருநெல்வேலி வந்த பின்னரும் இந்தப் பணி மிகச் சீராகவே தொடர்ந்து நடைபெற்றது. இது பற்றிப் பேராசிரியர் வளன் அரசு கூறுவதைக் கேட்கலாம்:\nஎனக்கு டி.வி.ஆரிடம், ’58ல் இருந்து தொடர்பு உண்டு. அன் றைக்கு நெல்லையில் தமிழ்ப்பற்று மிகவும் அதிகமாகக் கொண்ட இளைஞர்கள் பலர் ஒன்றாகக் சேர்ந்து தமிழ்த் தொண்டில் ஈடுபட்டிருந்தோம். தச்சநல்லுவரில் ‘தினமலர்’ அலுவலகம் வந்த பின் நாங்கள் டி.வி.ஆருடன் தொடர்பு கொண்டோம். அப்போது இளைஞர்களான எங்களை அவர் வழிப் படுத்திய முறையை, ஆர்வத்தை, இன்றைக்கும் கூட எண்ணி எண்ணி வியக்கிறேன். அப்போது நாங்கள் ஆண்டுக்கு எப்படியும் மூன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். அந்த நிகழ்ச்சிகளில் டி.வி.ஆர்., கண்டிப்பாக கலந்துகொள்வார்; எல்லா உதவிகளையும் செய்வார். ‘தினமலர்’ எங்கள் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். எந்த அலுவல் இருந்தாலும் எங்களைக் கண்டுவிட்டால் அவற்றை ஒதுக்கிவிட்டு, எங்களுடன் நீண்ட நேரம் விவாதிப்பார். அவரிடமுள்ள ஆழ்ந்த தமிழ்ப்பற்றை நாங்கள் கண்டு வியப்பில் ஆழ்வோம். அவரது தமிழ்ப் பற்று மேலெழுந்தவாரியாக இருக்காது.\nதமிழில் நல்ல பயிற்சி பெற்ற இளைஞர் பலருக்குத் தனது அலுவலகத்தில் வேலை கொடுத்தார். அவரது ஆதரவில் பலர் தமிழகம் பெருமைப்படத்தக்க வகையில் இன்று முன்னணியில் உள்ளனர். நாங்கள், ‘தனித்தமிழ் இலக்கியக் கழகம்’ என்று ஒர் அமைப்பு வைத்திருந்தோம். டி.வி.ஆர்., முதன் முதல் இந்த கூட்டத்திற்கு வந்து, ‘தனித்தமிழ்க் கழகமா மற்ற உலக மொழிகளில் இருந்து நீங்கள் தனியாக இருக்க ஆசைப்படுகிறீர்களா மற்ற உலக மொழிகளில் இருந்து நீங்கள் தனியாக இருக்க ஆசைப்படுகிறீர்களாறீ என்று கேட்டார். நாங்கள் சொன்னோம், ‘அப்படியல்ல; அரசியல் சார்பு இல்லாமல் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தனித்துப் பாடுபடும் கழகம் இது’ என்று.\nஉடனே, ‘அரசியல் தொடர்பு ஒரு மொழிக்கு மிகவும் அவசியம். மக்களாட்சியில் அது இல்லாமல் மொழி முன்னேற முடியாது. எந்த ஒரு வகையில் எடுத்தாலும் நாம் ‘தனி’ என்ற உணர்வு கூடாது; தனிமைப்பட்டு விடுவோம். அதற்காக மொழிக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாத அரசியல்வாதிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டு மென்பதல்ல என் கருத்து’ என்று நல்லாசிரியர் போன்று டி.வி.ஆர்., எங்களுக்கு எடுத்துக் கூறினார். நமது வட்டாரத் தமிழ் அறிஞர்கள் பற்றி, நாம் பெருமைப்பட வேண்டும். அவர்களை நமது படைக்கு முன்னணித் தளபதிகளாக்க வேண்டும்றீ என்று கூறுவார். இந்த வகையில் அவருக்குப் பாரதி, வ.உ.சி., இருவரிடமும் மிக அதிகமான பற்று இருந்தது. வ.உ.சி.,யின் தமிழ்ப் பணிகள் வெளிவரவேண்டுமென்று அன்றைக்கே அவருக்குப் பெருவிருப்பம் இருந்தது. ஒட்டப்பிடாரத்தில் ஆண்டுதோறும் வ.உ.சி., விழா எடுக்க அவரது துபண்டுகோல் மிக முக்கியமாயிருந்தது. அந்த விழாக்களுக்குத் ‘தினமலர்’ தனி முக்கியத்துவம் தரும்.\nதமிழ் இலக்கியத் தொடர்பாக ஒரு தமிழ்ப் பத்திரிகை அன்று இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்த பெருமை மட்டுமல்ல. மற்றத் தமிழ்ப் பத்திரிகைகளும் இதற்கு உதவ முன்வர, றிதினமலர்றீ இதழும் ஒரு காரணமாகும்.ீரமாமுனிவரது முன்னுபறாவது ஆண்டு விழா 1977ல் வந்தது. அதைச் சிறப்பாகக் கொண்டாட எங்களைத் துபண்டியவர் டி.வி.ஆர்., விழாவில் கலந்துகொண்டு ஓர் அறிவுரையே நிகழ்த்தினார்.\nவீரமாமுனிவர் ஓர் இத்தாலிக்காரர். போக்குவரத்து வசதி இல்லாத காலம் அது. கடல் கடந்து இங்கு வந்து, தமிழ் மொழியைக் கற்று, அவர் எவ்வளவு ஆராய்ந்து எழுதி நமது தமிழ்மொழியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் பார்த்தீர்களா . . . மொழி வளர்ச்சி என்பதில் மதம், இனம், எதுவும் தலையிடக் கூடாது. வீரமாமுனிவரை நீங்களும் பின்பற்றிப் பாடுபட முன்வர வேண்டும். மொழி உணர்வு தேவை; வெறி கூடாது. நாடு கடந்து தமிழ் மொழியின் புகழ் மேலோங்க நீங்கள் ஒவ்வொருவரும் வீரமாமுனிவராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். டி.வி.ஆருக்கு வள்ளலாரிடம் ஈடுபாடு உண்டு. திருநெல்வேலி நகரில் நடைபெறும் வள்ளலார் விழாக்களுக்குத் தவறாது வருவார். நாங்கள் அறிந்தவரை அன்னதானம் போன்றவற்றை அவர் விரும்புவ தில்லை. ஆனால், வள்ளலார் விழாவில் அன்னதானம் இருப்பது அவசியம் என்று அவர் கூறியதோடு, அதற்குப் பொருளுதவியும் செய்துவிட்டு, ‘நான் உதவினேன் என்பது வெளியில் தெரிய வேண்டாம்’ என்பார்.\nகூடியவரை எளிய தமிழில் பேசுவது நல்லது என்பது அவரது கொள்கை. ஒரு காலத்தில் சமஸ்கிருதத் தமிழ், பின் இன்று ஆங்கிலத் தமிழாக உள்ளது. சுத்தமாகத் தமிழ் என்பது இந்த விஞ்ஞான உலகில் கடினம். தமிழின் தனித்தன்மை கெட்டு விடக்கூடாது. அதற்காக மக்களுக்குப் புரியாதக் கொடுந்தமிழ் தேவை இல்லைறீ என்பார். அறிவியல் தமிழ் என்பது இயலுமா, இயலாதா என்ற விவாதம் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அறிவியல் துறையில் உலகம் வெகு வேகமாக முன்னேறிவிட்டது. தாய்மொழி மூலம் அறிவியல் வராதபோது, தமிழருக்கு இயல்பாக உள்ள அறிவியல் சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் வரும் என்று கனவுகூடக் காண வேண்டியதில்லை.\nதனது வாழ்க்கையை அறிவியல் தமிழுக்காக ஒதுக்கியவர், முது பெரும் ஆராய்ச்சியாளர் பெ.நா. அப்புசாமி. தமிழ் மூலம் அறிவி யலைத் தெரிந்துகொள்ள வேண்டு மென்பதற்காக இந்த அறிஞர் எழு திக் குவித்தவை ஏராளம். வாழ்க் கையை அந்தத்துறைக்கே ஒதுக்கி னார் என்று கூறிவிடலாம்.\n\"தமிழ் மொழியில் அறிவியல் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பெ.நா.அப்புசாமி. தமிழ் வளர்த்த பரம்பரையில் நெல்லை மாவட்டத்தில் பெருங்குளத்தில் டிச.,31, 1841ல் பிறந்த அப்புசாமி, அடிப்படையில் சிறந்த வழக்கறிஞர். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்.\nகலைமகள் பத்திரிக்கையில் ஆரம்ப காலத்தில் தமிழில் விஞ்ஞானம் பற்றி எழுதத் தொடங்கி 70 ஆண்டுகள் எழுதிக் குவித்தவை ஏராளம். இவருக்கு வட மொழி, ஆங்கிலப் புலமை உண்டு. இவை அனைத்தையும் தமிழ் மொழி வளர்ச்சிக்குச் செலவிட்டார். கம்ப ராமாயணத்தில் ஆராய்ச்சியும் ஈடுபாடும் அதிகம் கொண்டவர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். தமிழில் அறிவியலை எழுத இயலும் என நிரூபித்தவர். மே 16, 1986ல் காலமான இவர் தமிழ் மொழிக்குச் செய்த பணி மிகவும் சிறப்பானது.\nஉண் மையில் இந்த முதுபெரும் எழுத் தாளர் ஒரு கட்டுரையை எழுதி, ‘இந்து’ பத்திரிக்கைக்குத் தபாலில் சேர்க்க தானே கொண்டு சென்று அங்கேயே தனது உயிரை விட்ட வர். உண்மையில் இவரது இறுதி மூச்சும் தமிழ், தமிழ், தமிழ்தான் ‘இந்த மாமேதையிடம் டி.வி. ஆருக்கு உள்ள தொடர்புகள், கால் நுபற்றாண்டைத் தாண்டியதாகும்றீ என்றார், பேரறிஞரது மகள் அம் மணி சுப்பிரமணியம். டி.வி.ஆர்., பற்றித் தனது நினைவில் உள்ள வற்றை அவர் கூறினார் . . .\nசென்னையை விட்டு என் தந் தையார் 1972ல் இங்கு (திருநெல் வேலிக்கு) வந்து விட்டார். கிட்டத் தட்ட கால் நுபற்றாண்டுகள் டி.வி. ஆர்., - பெ.நா.அ., தொடர்புகள் மிக நெருக்கமானதாகவே இருந்தது.\nதமிழ் மூலம் அறிவியல், மக்களிடம் செல்ல பத்திரிகைகள் பொறுப்பேற்க வேண்டுமென்பது என் தந்தையின் ஆசை. இதுபற்றி இருவரும் பலகாலம் நீண்ட விவாதம் நடத்தி உள்ளனர். ‘நாம் கண்டுபிடிக்காத ஒன்றுக்குப் பழம்பெரும் தமிழ் நுபல்களில் அதற்குத் தக்க சொல் உண்டா என்று தேடுவது தேவையில்லை. அதைத் தமிழில் அந்த மொழிச் சொல்லாகவே வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும்’ என்று இருவரும் கூறுவர். விஞ்ஞானப்பூர்வமாகத் தமிழ்மொழி தன்னை மாற்றிக்கொள்ள, முதலில் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இருவரும் முடிவு எடுத்தனர். இதை டி.வி.ஆர்., முதன் முதலில் தனது பத்திரிகை மூலம் நடைமுறைப்படுத்தினார்.\nநான் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை. எனது கல்விப் பணியில் டி.வி.ஆருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்க டி.வி.ஆர்., பெரும் முயற்சி மேற்கொண்டார். பெண்கள் கல்வியில் வெகுவாக முன்னேற வேண்டும் என்பதில் என் தந்தையார் போல டி.வி.ஆரும் தீவிரம் காட்டியதுண்டு. இருவரும் புரட்சிகரமான, முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இருவரும் பழமையில் உள்ள நல்ல அம்சங்கள் சிலவற்றை தவிர, பழமையை அப்படியே ஏற்றுக் கொண்டதில்லை. தமிழ் மொழி உலக அரங்கில் எல்லாத் துறைகளிலும் உலக மொழி களுக்கு ஈடாக மிக விரைவில் முன்னேற வேண்டுமென்பதே இவர்களது விவாதமாக எப்போதும் இருந்து வந்தது.\nவயதில் என் தந்தையார் டி.வி.ஆரை விடப் பெரியவர் என்பதால், டி.வி.ஆர்., என் தந்தையாரிடம் கலந்து பேச அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். மணிக்கணக்கில் இருவரும் ஏதோ புதிய உலகில் இருந்து பேசிக்கொண்டிருப்பர். அவை பொழுதுபோக்குப் பேச்சுக்கள் அல்ல. ஏனெனில் இருவருக்கும் தங்கள் பணிக்குப் பொழுது காணாதே என்ற கவலைதான் இருந்து வந்தது. ஏராளமான நூல்களை இருவரும் கொடுத்து வாங்கிக்கொள்வர். அறிவியல், தமிழ், நவீனகால அறிவியல், தமிழில் சிறுவர்களுக் கானஅறிவியல் என்ற அடிப்படையில் இவர்கள் ஏராளமான ஆசைகளை, திட்டங்களை வைத்திருந்தனர்.\nபுதுமையை ஏற்கும் ஆர்வம் டி.வி.ஆரிடம் இருப்பது, என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். வெகுவாக அதை அவர் பாராட்டுவார். வாரம் ஒரு முறை, ‘தினமலர்’ இதழுடன் ‘சயன்ஸ்’சப்ளிமெண்ட் கொண்டு வர என் தந்தை டி.வி.ஆரிடம் யோசனை கூறியதுண்டு. அதற்கு, ‘தமிழில் சயன்ஸ் பற்றி நீங்கள் ஒருவரே சிந்தித்து எழுது கிறீர்கள். உங்கள் முயற்சியினால் பல இளைஞர்கள் இந்தத் துறைக்கு வருவர் என எதிர்பார்க்கிறேன். அப்படி வரும் போது நிச்சயம் ‘சயன்ஸ் சப்ளிமெண்ட்’ கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன். தமிழில் சயன்ஸ் பற்றி எழுத எழுத்தாளர்கள் இல்லாமல் என்ன செய்வது எனத் தனது வேதனையை டி.வி.ஆர்., கூறி உள்ளார். என் தந்தையாருக்கு மதுரைப் பல்கலைக் கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கியது. அதற்கானப் பாராட்டு விழா திருநெல்வேலியில் டி.வி.ஆர்., தலைமையில் நடைபெற்றது. (ஆகஸ்ட் 17, 1977)\nஇருவரும் தமிழ் மொழியை உலக அரங்கில் புகழ்மிக்க மொழியாக அரியணையில் ஏற்ற பெரும் பாடுபட்டார்கள் என்றார் அம்மணி சுப்ரமணியம்.\nபத்திரிகைத் தொழில் டி.வி.ஆருக்குப் பாரம்பரியமல்ல. பத்திரிகைத் தொழிலில், எழுத்துலகில் தனித்தன்மை பெற்றிருந்த மித்திரன் ஜி.சுப்பிரமணிஐயர், வ.ரா., கல்கி, டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற மிகச் சிறந்த படைப் பிலக்கியவாதியும் அல்ல டி.வி.ஆர்., அவருக்கு பத்திரிகைத் தொழில் பாரம்பரியமில்லா விட்டாலும் கூட, தானே ஒரு வழிமுறையை வகுத்து, அதை அங்குலம் அங்குலமாக வளர்த்துத் ‘தினமலர்றீப் பத்திரிகைக்கு ஒரு தனிப் பாரம்பரியத்தையே தமிழ் நாட்டில் அவர் உருவாக்கி இருக்கிறார்.\nஎழுத்தாளர்களை, எழுத்தாளராக ஒருவர் உருவாவதற்கு முன்பே அல்லது எழுதக் தொடங்கும் ஆரம்பக் காலத்திலேயே எடை போட்டுக் கண்டுபிடிக்கும் தனி ஆற்றல் டி.வி.ஆருக்கு இருந்தது. சுதேசமித்திரன் ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு இந்தப் பார்வை இருந்திருக்கிறது. குட்டி சமஸ்தானத்தின் புலவன், பின்னர் தமிழாசிரியன், பாரதியைக் கண்ட உடன், இவன் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளனாக வருவான் என மதிப்பிட அவரால் முடிந்துள்ளது. சரியான கொள்கையையும், அதைச் சரியான நேரத்தில் கொண்டு செலுத்தவும் டி.வி.ஆரால் முடியும். பல எழுத்தாளர்களைத் தனது உறுதியான கொள்கைகளுக்குத் தக்கபடி ஊக்கப்படுத்தி எழுதச் செய்வது அவரது தனித்தன்மை. தனது குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய ஓர் இளைஞனை, உடல்நலம் சரியில்லாத நிலையில் படுத்த படுக்கையில் பார்த்தார் டி.வி.ஆர்., அவனால் எழுந்து நடமாட முடியாது. தமிழில் அவனுக்கு அ, ஆ கூடத் தெரியாது. இவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளனாக உருவானான். அவர், சுந்தர ராமசாமி.\nஅவர் கூறுகிறார் . . .\nஎன் தாயார் பெயர் தங்கம்மாள். அவர் பிறந்து வளர்ந்தது தழுவிய மகாதேவர் கோவில் கிராமந்தான். எனது தாயாருக்கு உறவினர் இராமசுப்பையர். ஏழு வயதில் இருந்து பத்து வயது வரை என் தாயாரும், இராமசுப்பையரும் ஒன்றாக விளையாடிய குழந்தைகள்.\nதமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளரான சுந்தரராமசாமி மே 30, 1931ல் பிறந்தவர். தனது சுயமுயற்சியில் தமிழ் மொழியை 18 வயதுக்கு மேல் கற்றுத் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்தவர். தனக்கெனத் தனியான இலக்கியப் பார்வை கொண்டவர், \"ஒரு புளிய மரத்தின் கதை, \"ஜே.ஜே.சில குறிப்புக்கள்,' என்ற புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தவர்.\nஇவரது சிறுகதைகள் ஐந்து தொகுதிகள் வெளியாகி உள்ளன. மலையாளம், இந்தி, கன்னடம், ருஷ்ய, செக் மொழிகளில் இவரது கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. '59ல் இருந்து கவிதைகள் பலவும் எழுதி வருகிறார். பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர் இங்கெல்லாம் இவர் அழைக்கப்பட்டு இவரது இலக்கியச் சேவைக்காகப் பாராட்டப் பெற்றவர். இவரது \"நடுநிசி நாய்கள்' என்ற கவிதைத் தொகுப்பிற்கு 1987ம் ஆண்டின் \"ஆசான்\nஎனக்குச் சின்ன வயதாக இருக்கும்போது மிகவும் உயர்வாகவும், மதிக்கத்தக்கவராகவும் டி.வி.ஆர்., பற்றி எங்கள் அம்மா பேசுவாள். அவள், ‘இராமசுப்பு’ என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்போ தெல்லாம் நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனாலும் கூட எனக்கும், என் சகோதரிக்கும், அம்மா சொல்வதைக் கேட்டுக் கேட்டு அவரிடம் தனி மதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.\nநாங்கள் 1939 வரை கோட்டயத் தில் இருந்தோம். பின்னர் நாகர் கோவிலுக்கு வந்ததும் டி.வி.ஆரு டன் சந்திப்பு ஏற்பட்டது. வாரத் திற்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை எங்கள் வீட்டுக்கு வருவார். அம்மா ஓர் ஆஸ்துமா நோயாளி. பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்வார். என் 10 வயதில் 1941ல் உடம்பு சரியில்லாமல் படுத்து விட்டேன். இளம்பிள்ளை வாதத்தில் சிக்கிக் கொண்டேன். அப்போது அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வரு வார். என் அப்பா, அம்மா எல்லா ருக்கும் ஆறுதல் கூறுவார். மாலை யில் அநேகமாக நாலரை மணி முதல் ஐந்து மணிக்குள் வருவார். அந்நேரம் எனக்கு நன்கு தெரியும். அவர் வரமாட்டாரா என்று எதிர் பார்க்கும் பழக்கமும் எனக்கு வந்துவிட்டது.\nசதா படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால், பொழுது போவது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அப்போது ஒரு நாள் அவர் என்னிடம், ‘நான் நாகர்கோவில் கிளப்பின் செயலாளர். உனக்கு வேண்டிய புத்தகங்கள் அங்கிருந்து கிடைக்கச் செய்கிறேன். புத்தகங்கள் படிப்பதால் பொழுது போகும், அறிவு வளரும்’ என்று யோசனை கூறினார். புத்தகங்கள் படிக்கும் வழக்கமே அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. பள்ளியில் நான் தமிழ் படிக்கவில்லை. இங்கிலீஷ், சமஸ்கிருதம், மலையாளம் தான் படித்தேன், தமிழ் படிப்பது எப்படி எனது 18வது வயதில், அதாவது, 1947ல் சிலேட்டு வாங்கி தமிழ் எழுத்துக்களை எழுதிப் படிக்கத் தொடங்கினேன். இந்த என் முயற்சியைக் கண்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டு, என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார் டி.வி.ஆர்.,\nதமிழ் நன்றாகப் படிக்கத் தெரிந்த பின் நான் படித்த இரண்டாவது புத்தகம் புதுமைப் பித்தனின் ‘காஞ்சனை...’ உண்மையைச் சொல்லப் போனால்அந்தப் புத்தகம்தான் என்னை எழுத்தாளனாகவே ஆக்கியது. என் 20வது வயதில், 1951ல், ‘புதுமைப் பித்தன் நினைவுமலர்’ ஒன்று வெளியிட்டேன். அதுதான் நான் வெளியிட்ட முதல் புத்தகம். அதை நான் வெளிக் கொண்டுவரப் பல உதவிகளை டி.வி.ஆர்., செய்தது இன்று எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது என்றார். திறமை உள்ளவர்களை ஊக்குவிக்கும் குணம் தமிழகத்தின் புகழ்பெற்ற சில பத்திரிகை ஆசிரிய மேதைகளிடம் இருந்துள்ளது. அந்த குணம் டி.வி.ஆரிடமும் இருந்ததே அவர் வெற்றியின் ரகசியம்.\n\"பி.ஸ்ரீ.,' என்று தமிழ் எழுத்தாளர்களால் புகழ்ப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, நெல்லை மாவட்டம், தென் திருப்பேரையில், ஏப்., 11, 1886ல் பிறந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து இவர், காவல்துறையில் சில காலம் பணியாற்றி உள்ளார். அதனை உதறி விட்டு பின்னர் முழுக்க முழுக்கத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டார்.\nதமிழ்ப் பத்திரிகை உலகின் அதுவும் இலக்கியப் பிரியர்களுக்கு பி.ஸ்ரீ., என்ற பெயர் நன்கு தெரிந்திருந்த காலம் ஒன்றுண்டு. தமிழ் நுபல்கள் எழுதுவதையே முழுக்க முழுக்கத் தொழிலாகக் கொண்ட இவரது, கம்ப சித்திரம், சித்திர இராமாயணம் ஆகிய தொடர்கள் பல வருஷங்கள் விகடனில் தொடராக வெளிவந்தது.\nஆழ்வார்களது தெய்வீகக் கதைகளின் விமர்சனமும் புகழ்பெற்றது. இதுபோலவே, சிவ நேசச் செல்வர், இராமானுஜர், கம்பனில் ஆழ்வார்களின் சாயல் ஆகிய நூல்கள் பி.ஸ்ரீ.,யின் தனி முத்திரையுடன் திகழ்கின்றன. சாகித்திய அகடமி, பரிசளித்து இவரைக் கவுரவித்தது. சென்னையில் வாழ்ந்த இவர், கடைசிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான விட்லாபுரத்தில் வசித்தார். அப்போது அவர், ‘தினமலர்’ இதழில் எழுதி வந்தார். 96வயது வரை பத்திரிகைகளில் எழுதிய முதுபெரும் எழுத்தாளாரான இவர், அக்டோபர் 28, 1981ல் காலமானார்.\nடி.வி.ஆரின் பெருமதிப்பைப் பெற்ற பி.ஸ்ரீ.,யின் 93வது ஆண்டு விழா பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது இவருக்கு, ‘கம்பராமாயணக் கலங்கரை விளக்கம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில், டி.வி,ஆர்., மற்றும் இலக்கியவாதிகள் விழாவில் கலந்து கொண்டு, பி.ஸ்ரீ.,யின் தமிழ்த் தொண்டுகளைப் பாராட்டிப் பேசினர். இந்த பாராட்டு விழா நடத்த டி.வி.ஆர்., பெரும் காரணமாக இருந்தார்\n» தினமலர் முதல் பக்கம்\n» கடல் தாமரை முதல் பக்கம்\nகேர ' லாஸ் '\nஅழகிரி பேரணி: தலைவர்களுக்கு அழைப்பு ஆகஸ்ட் 20,2018\n வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகளுக்கு நிதி ஒதுக்கீடு ஆகஸ்ட் 20,2018\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு ஆகஸ்ட் 20,2018\nமணிசங்கர் அய்யர் மீண்டும் சேர்ப்பு ஏன்\nவாராக்கடன் பிரச்னை; ரகுராம் ராஜனிடம் யோசனை ஆகஸ்ட் 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-20T18:31:34Z", "digest": "sha1:MPO77AQLT6YXIUP4ERQOBHADFM7WTIPA", "length": 10025, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 இல் ஆறாம் பிலிப்பு\n19 சூன் 2014 - பொறுப்பில்\nபிலிப்பு வான் பாப்லோ அல்பான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு\nகிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் சோஃபியா\nபிலிப்பு VI (Felipe VI, எசுப்பானிய ஒலிப்பு: [feˈlipe], பெயரிடலின்போது: பிலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா ; பிறப்பு 30 சனவரி 1968) எசுப்பானிய அரசராவார். அரச வாரிசாக இருந்த போது பிலிப்பு, அசுத்துரியாசின் இளவரசர் என்று அழைக்கப்பட்டார்.\nஇவர் எசுப்பானிய அரசர் வான் கார்லோசுக்கும் அரசி சோஃபியாவிற்கும் இரண்டு மகள்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த மகனாவார்.\nசூன் 2, 2014 அன்று அரசர் வான் கார்லோசு தமது மகன் பட்டமேற்க ஏதுவாக தாம் பதவி விலகவிருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிலிப்பு, சூன் 19, 2014 அன்று பிலிப்பு VI என்று எசுப்பானிய அரசராக முடிசூடிக்கொண்டார்.[2][3][4]\n↑ \"பூர்போன் மாளிகை\". மூல முகவரியிலிருந்து 18 பிப்ரவரி 2011 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"பிலிப்பு எசுப்பானியாவின் அரசராகிறார்\". பிபிசி. 18 சூன் 2014. http://www.bbc.co.uk/news/world-europe-27916036. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2014.\n↑ கோவன், பியோனா (13 சூன் 2014). \"எசுப்பானியாவிற்கு இனி இரண்டு அரசர் மற்றும் அரசிகள்\". தி டெலக்ராப். பார்த்த நாள் 9 அக்டோபர் 2014.\n↑ \"பெலிப்பு VI முடிசூடல்\". எல் பெய்சு (3 சூன் 2014). பார்த்த நாள் 9 அக்டோபர் 2014.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2014, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://deivathamizh.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-08-20T18:24:48Z", "digest": "sha1:SHP2VCCI3HUN75KTSXJ72VXO4B5X4442", "length": 14745, "nlines": 112, "source_domain": "deivathamizh.blogspot.com", "title": "Deiva Thamizh: தெய்வ பக்தி", "raw_content": "\nநாம் ஒரு ஊருக்குப் புறப்படும்போதுதான் எத்தனை வேண்டுதல்கள் நெற்றியில் விபூதி இட்டு விட்டு வாசல் வரையில் கூட வந்து அனுப்பி வைக்கும் தாயார். \"பத்திரமாய்ப் போய்விட்டு வாப்பா\" என்று வழி அனுப்பிவைக்கும் தந்தை. \" ரயிலுக்குப் போகும் முன்பு தெருக் கோடியில் உ ள்ள பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டுப் போ\" என்று உள்ளே இருந்து குரல் கொடுக்கும் தாத்தா. \" சகுனம் சரியாக இருக்கா என்று பார்த்து அனுப்பி வை \" என்று சொல்லும் பாட்டி. இதெல்லாம் சரிதான். விக்னம் எதுவும் இல்லாமல் ஊருக்குப் போய்விட்டுத் திரும்பியவுடன் யாராவது தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கிரார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். மறுபடியும் ஊருக்குப் போகும் போதுதான் ஸ்வாமி ஞாபகம் வருமோ என்னவோ\nநல்ல பண்புடைய நண்பர் ஒருவர் சொன்னார்: \" எனக்கு தெய்வ நம்பிக்கை இருந்தபோதும் பக்தி மட்டும் வருவது இல்லை. அப்படி பக்தி ஏற்படவேண்டுமானால் ஏதாவது வழி இருக்கிறதா\" என்று கேட்டார். இதற்கு பதில்கள் பலவிதமாக இருக்கலாம். அவருடைய மனம் ஏற்றுக்கொள்வது போலப் பதில் சொல்வது சிரமான காரியம் தான்\" என்று கேட்டார். இதற்கு பதில்கள் பலவிதமாக இருக்கலாம். அவருடைய மனம் ஏற்றுக்கொள்வது போலப் பதில் சொல்வது சிரமான காரியம் தான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய நிலை கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டிய நிலை \" பக்தி ஏற்படுவதற்கு முதலில் இறைவனைப் பற்றிய நினைவு வர வேண்டும். அது அடிக்கடி வரும்போது பக்தியாக மலர்கிறது\" என்றேன். \" அதெப்படி \" பக்தி ஏற்படுவதற்கு முதலில் இறைவனைப் பற்றிய நினைவு வர வேண்டும். அது அடிக்கடி வரும்போது பக்தியாக மலர்கிறது\" என்றேன். \" அதெப்படி\" என்பதுபோலப் பார்த்தார் நண்பர். இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஏற்படவே, பதில் சொல்வதில் இருந்த தயக்கம் நீங்கத் தொடங்கியது.\n\" முன்பெல்லாம் இப்போதுபோல வாழ்க்கைமுறை கிடையாது. அவரவர்கள் நியமப்படி வாழ்வது சாத்தியமாக இருந்தது. உதாரணமாக, சந்தியா காலம் ( அஸ்தமன வேளை) வந்தால் அப்போது அனுஷ்டானங்கள் செய்வதைக் கடமையாகக் கொண்டிருந்தபடியால். ஈச்வர ஞாபகம் வருவது எளிதாக இருந்தது. எல்லா உயிரினங்களும் தமது இருப்பிடத்தை நாடும் சமயமாதலால் , சிவாய,மகேச்வராய.சம்பவே,பினாகினே ,சசிசேகராய ... என்று பெரியவர்கள்,பரமேச்வரனது நாமாக்களைச் சொல்லி வந்தார்கள். கோயில்களில் நடக்கும் சாயரட்சை, மகாப்ரதோஷம் ஆகிய பூஜா காலங்களில் சிவ தரிசனத்திற்குச் சென்று வந்தார்கள். இந்தக் காலத்திலோ , பலர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு வெகு நேரம் ஆகி விடுகிறது. சிலர் அந்த நேரத்தில்தான் ,ஹோட்டல்,சினிமா ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்கள். இப்படிப் பட்ட காலத்தில் தெய்வ ஞாபகம் வந்தால் தானே பக்தி வருவதற்கு\nஞான சம்பந்தர் பாடினார்,\" உண்ணினும்,பசிப்பினும்,உறங்கினும் நின் ஒண் மலர் அடியல்லால் உரையாது என் நா...\" என்று. அதாவது, சாப்பிடும்போதும், பசித்து இருக்கும்போதும், தூங்கும் போதும் உனது மலரடிகளை என்னுடைய நாக்கு மறக்காது என்பது இதன் பொருள். எப்போது பார்த்தாலும் பணம் பற்றிய நினைவே இருக்கும் இந்தக் காலத்தில் இறைவனின் நினைவு எவ்வளவு பேருக்கு வரும் புண்ணியம் செய்தவர்களுக்கே அது கிடைக்கும். இனிமேல் பிறவாமல் இருக்கும் வரம் பெற வேண்டுமானால் அவனை என்றும் மறவாமல் இருக்கும் வரம் வேண்டிப் பெறவேண்டும்.இப்படித்தானே காரைக்கால் அம்மையாரும் வேண்டினார்.\nகாலையில் எழுந்தவுடன் சிவசிந்தையோடு எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். \"கோட்டூர் நற் கொழுந்தே..\" என்று சம்பந்தர் சொல்லியபடி எழுந்திருந்து , பல் துலக்கி சுத்தம் செய்துகொண்டு, சிவ நாமாக்களைச் சொல்லியபடியே, விபூதி அணிந்த பிறகே காப்பி ஞாபகம் வர வேண்டும். பலருக்குப் பல் துலக்கும் முன்பே காப்பி ஞாபகம் வருவது துரதிருஷ்டமே பின்னர் ,அலுவலகம் செல்லும் முன்னர், தெய்வ சிந்தனை சில நிமிடங்களாவது வரும்படிப் பழக்கிக் கொள்ள வேண்டும். மத்தியானம் சாப்பிடும் முன்பு அன்னபூரணியையும் , சோ ற்றுத்துறை ஈச்வரனையும் ஒரு நிமிஷமாவது தியானித்துவிட்டுப் பிறகு உணவு உட்கொள்ளலாம். மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும் விபூதி அணிந்து சிவ நாமாக்களைச் சொல்லலாம். படுக்கும் முன்பு ஒரு நிமிஷமாவது சிவசிதம்பரம் என்று உச்சரிக்கலாமே பின்னர் ,அலுவலகம் செல்லும் முன்னர், தெய்வ சிந்தனை சில நிமிடங்களாவது வரும்படிப் பழக்கிக் கொள்ள வேண்டும். மத்தியானம் சாப்பிடும் முன்பு அன்னபூரணியையும் , சோ ற்றுத்துறை ஈச்வரனையும் ஒரு நிமிஷமாவது தியானித்துவிட்டுப் பிறகு உணவு உட்கொள்ளலாம். மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும் விபூதி அணிந்து சிவ நாமாக்களைச் சொல்லலாம். படுக்கும் முன்பு ஒரு நிமிஷமாவது சிவசிதம்பரம் என்று உச்சரிக்கலாமே இப்படிச் செய்து வந்தால் நமக்குப் பக்தி ஏற்படுவதற்கு இறைவன் அருளுவான். பிறகுதான் , பாராயணம், க்ஷேத்ர தரிசனம் ஆகியவை எல்லாம் படிப்படியாகக் கைகூடும். பக்தி இல்லாமல் க்ஷேத்ராடனம் செய்வது பிக்னிக் போல் ஆகிவிடும். எவ்வளவு கோயில்களுக்கு யாத்திரை போகிறோம் என்பதைவிட, எவ்வளவு கோயில்களில் பக்தியோடு, மனம் ஒன்றி வழிபடுகிறோம் என்பதே முக்கியம். அதைத்தான் அப்பரும், \"ஒன்றி இருந்து நினைமின்கள் \" என்று பாடினார்.\nசிவ நாமம் கேட்பதே நம்மைப் பக்திப் பாதைக்குக் கொண்டு செல்ல எதுவாக அமையும். \" புகழ் நாமம் செவி கேட்க\" வேண்டும் என்று ஞான சம்பந்தக் குழந்தையும் பாடியிருப்பதால், முதலில் நாமத்தைக் கேட்ட பின்பு அதை நாம் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். நாட்களை வீணாகத் தள்ளாமல் , நஞ்சை உண்டு உலகத்தைக் காத்த உத்தமனுக்கு ஆட்செய்ய வேண்டும். அது அவ்வளவு சுலபமானதாகத் தெரியவில்லையே அதற்காகத்தான், அதற்கு முதல் படியாக, \"அரன் நாமம் கேளாய்\" என்று சம்பந்தப் பெருமான் உபதேசிக்கிறார். அப்படி நாம் சிவ நாமாவைச் சொன்னால் பலன் பெறப் போவது நாம் மட்டும் அல்ல. நமது குலமும் சுற்றமும் கூடத்தான் அதற்காகத்தான், அதற்கு முதல் படியாக, \"அரன் நாமம் கேளாய்\" என்று சம்பந்தப் பெருமான் உபதேசிக்கிறார். அப்படி நாம் சிவ நாமாவைச் சொன்னால் பலன் பெறப் போவது நாம் மட்டும் அல்ல. நமது குலமும் சுற்றமும் கூடத்தான் நவக்கிரகங்களால் நமக்குத் தீமை ஏற்படும் நிலை ஏற்பட்டால் ,அப்போது அத் துன்பத்திலிருந்து சிவக்ருபை நம்மைக் காப்பாற்றும் என்பது , பலனை ஆணையிட்டு வழங்கும் ஆசார்ய மூர்த்தியின் வாக்கு. இதோ அந்தப் பாடல்:\nநாளாய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே\nஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்\nகேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளி\nகோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே.\nநண்பரும் புறப்பட்டு விட்டார். அவர் செவியில் ஹரன் நாமத்தைக் கேட்பித்தாகி விட்டது. அவர் உன்னிப்பாகக் கேட்டதைப் பார்த்தால் , இவ்வளவு நேரம் சொன்னதும் வீணாகாது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. \"எல்லாம் அரன் நாமமே சூழ்க;வையகமும் துயர் தீர்கவே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstig.com/technology/news/62028/That-is-exactly-why-we-will-be-attacked-on-March-18th", "date_download": "2018-08-20T18:34:54Z", "digest": "sha1:2XL3SF6CNMDCW7GIRADV5XASB5662TQF", "length": 15023, "nlines": 135, "source_domain": "newstig.com", "title": "சரியாக மார்ச் 18-ல் தாக்கப்படுவோம் பின்னர் பல விபரீதங்களை சந்திப்போம் ஏன் எதனால் - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செய்திகள்\nசரியாக மார்ச் 18-ல் தாக்கப்படுவோம் பின்னர் பல விபரீதங்களை சந்திப்போம் ஏன் எதனால்\nஅறிவியல் வார்த்தைகளின்கீழ் நாம் ஒரு மிகப்பெரிய காந்த புயலை எதிர்கொள்ளப்போகிறோம். தி ரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்சஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி வருகிற மார்ச் 18 அன்று கூறப்படும் காந்த புயலானது நமது பூமியை தாக்கும். முதலில் அது பூமி கிரகத்தின் பூகோளமயமான சூழலை (மண்ணியல் சூழ்நிலை- geomagnetic atmosphere) பாதிக்கும்.\nபூமிவாசிகளே முதலில் உங்களை நீங்களே ஆசுவாசப் படுத்திக்கொள்ளுங்கள். நமது கிரகத்திற்க்கான தேவைகளை ஒளிசக்தி வழியாக பூர்த்தி செய்து வந்த சூரியன் இந்த வார இறுதியில் நமக்கு முற்றிலும் தேவையில்லாத ஒன்றை வெளிக்கிடப்போகிறது.\nஅறிவியல் வார்த்தைகளின்கீழ் நாம் ஒரு மிகப்பெரிய காந்த புயலை எதிர்கொள்ளப்போகிறோம். தி ரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்சஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி வருகிற மார்ச் 18 அன்று கூறப்படும் காந்த புயலானது நமது பூமியை தாக்கும். முதலில் அது பூமி கிரகத்தின் பூகோளமயமான சூழலை (மண்ணியல் சூழ்நிலை- geomagnetic atmosphere) பாதிக்கும். பின்.\nபின்னர் தொடர்ச்சியான முறையில், பல சிக்கல்களை நாம் எதிர்கொள்வோம். காந்த புயல்கள் பொதுவாக தொலைத்தொடர்பு அமைப்புகளை உடைக்கும் வல்லமை கொண்டவைகளாகும். அதாவது ரேடியோ தகவல்தொடர்புகளை தகர்க்கும், ரேடார் அலைவரிசைகளை இடைமறிக்கும் மற்றும் ரேடியோ வழிசெலுத்தல் முறையை பாதிக்கும்.\nஸ்பேஸ்டெய்லி.காம் (spacedaily.com) அறிக்கையின்படி நாம் எதிர்கொள்ளப்போகும் இந்த காந்த புயலானது, இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் மற்றும் அட்ரினலின் சுரப்பு அதிகரிப்பு ஆகிய மனித உடல்நலகோளாறுகளையும் ஏற்படுத்தும். இதன் அர்த்தம் உயிரினங்களும் பாதிக்கப்படும்.\nதலைவலி, தலைச்சுற்று மற்றும் தூக்க தொந்தரவு.\nமேலும் மார்ச் 18 அன்று பூமியை தாக்கும் காந்த புயலால் உலகெங்கிலும் உள்ள சிலருக்கு தலைவலி, தலைச்சுற்று மற்றும் தூக்க தொந்தரவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக டெனொப்கீக்.காம் (denofgeek.com) தெரிவித்துள்ளது. இந்த காந்த புயல் என்றால் என்ன. இதற்கு முன்னால் எப்போது ஏற்பட்டது. இதற்கு முன்னால் எப்போது ஏற்பட்டது.\n(எளிமையான வார்த்தைகளில்) காந்த புயல் என்பது சூரிய புயல் என்றும் அழைக்கப்படும். சூரிய காற்றின் (சூரிய வெடிப்பு/ சூரிய பட்டொளி) விளைவால் ஏற்படும் ஆதீத சக்தி பகிர்வே காந்த புயலாகும். இந்த பகிர்வானது நிகழும் போது, பூமியின் காந்தப்புலத்தின் மீதான தற்காலிக பாதிப்பு ஏற்படும்.\n2018-ஆம் ஆண்டில் நிகழப்போகும் முதல் காந்த புயலானது, பூமி மீது தாக்கும் மூன்றாவது காந்த புயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் ஏற்பட்ட மின்காந்த புயல்களானது மின்சக்தி கட்டங்களை முற்றிலுமாக குழப்பின. அதன்வழியாக கற்ற படத்தின்படி, இதுபோன்ற நிகழ்வுகளின் போது அத்தியாவசியம் அல்லாத மின் கட்ட அமைப்புகளை மூடும்படி பொறியாளர்கள் பரிந்துரைக்கின்றன.\nஏனெனில் ஒரு கடுமையான காந்த புயலானது சாத்தியமான மின் கட்ட ஏற்ற இறக்கத்தை பாதிக்கும் வல்லமை கொண்டிருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு ஆராய்ச்சி மையத்தின்படி (JRC), ஒரு சக்திவாய்ந்த சூரிய புயலானது ஒரு கண்டத்தின் ரயில்வே அமைப்பையே பாதிக்கும். அதாவது ரயில்களை வழிசெலுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை எதிர்மறையாக பாதிக்கும் திறன்களை கொண்டது.\nஅதிகாரத்திமிர் பிடித்து அலைந்த அமெரிக்கா முட்டாளான கதை.\nஇதே போன்ற சூரிய புயலொன்று அதிகாரத்திமிர் பிடித்து அலைந்த அமெரிக்காவை முட்டாளாக்கி, உலக யுத்தமொன்றை தூண்டிவிட்ட ஒரு கதையும் உள்ளது. 'கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமையாம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, கேனப்பய ஊரு என்பது அமெரிக்கா என்பதற்கும், கிறுக்குப்பய நாட்டாமை என்பது அதன் ஆளுமைகள் தான் என்பதற்கும் மிக சிறந்த எடுத்துக்காட்டு தான் - அந்த சம்பவம். கொஞ்சம் தவறியிருந்தால் பூமியில் ஒரு பிரளயமே உண்டாகியிருந்திருக்கும். சரி, அப்படி என்னதான் நடந்தது.\nபனிப்போர் (Cold War) என்பது இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1990-வரை அமெரிக்காவிற்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த ஒரு வளர்ச்சி போட்டியாகும். அப்படியான பனிப்போரின் போது இந்த இரண்டு 'வல்லரசு' நாடுகளும் தமது இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களை வளர்த்துக் கொண்டன. பிற உலக நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிகழ்த்தி உலகில் தனது செல்வாக்கையும். ஆதிக்கத்தையும் மேம்படுத்தின.\nPrevious article காவிரி விவகாரம் மட்டுமில்லை பல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார் கமல் கடும் விமர்சனம்\nNext article இவர் தான் உண்மையான அறம் நயன்தாரா புகைப்படம் உள்ளே\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஅதிமுகவில் இருந்து விலகிய பிரபல பாடகி\nஎன் தம்பி இறந்துட்டான், அவன் ஹெல்மெட் அணிந்திருக்கலாம் நடிகர் ஆதி கண்ணீர்\nஇடுப்பில் புலி டாட்டூ வரைந்துகொண்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:18:11Z", "digest": "sha1:GI4A3C4A5Z7L3G2YHNGAAP2VCHF3JVE7", "length": 10896, "nlines": 228, "source_domain": "tamilnool.com", "title": "மார்க்கண்டேயர் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஸ்ரீ சீரடி சாய்பாபா ₹30.00\nவிநாயகர் வழிபாட்டு நூல் ₹50.00\nBe the first to review “மார்க்கண்டேயர்” மறுமொழியை ரத்து செய்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும்\nபுகைப்படங்களுடன் திரிபுரம் எரித்த திருத்தலத்தின் சிறப்புகளை முழுமையாக விளக்கும் நூல்.\nசிறுத்தொண்டர், கண்ணப்பர், திருநீலகண்டர் ஆகிய மூன்று நாயன்மார் கதை வெண்பாக்களில்\nஷம்பாலா எனும் ஞானப் பள்ளத்தாக்கு\n(இமயமலையில் மறைந்துள்ள ஆன்மீக ரகசியங்கள்)\nஇக்கால வாழ்வியலில் திருவாசகத் திருநெறி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/11721-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-08-20T18:08:23Z", "digest": "sha1:OTWX3CIV7A4DG7EHECPJFQXTF5S6R24E", "length": 13497, "nlines": 234, "source_domain": "www.brahminsnet.com", "title": "தசஹரதசாமி அல்லது பாபஹர தசமி", "raw_content": "\nதசஹரதசாமி அல்லது பாபஹர தசமி\nThread: தசஹரதசாமி அல்லது பாபஹர தசமி\nதசஹரதசாமி அல்லது பாபஹர தசமி\nநாளை மறுதினம், 28-5-2015, வியாழக்கிழமை,பாபஹர தசமி என்று அழைக்கப்படுகிறது. வைகாசி மாத வளர்பிறை தசமி அன்று இது அனுஷ்டிக்கப்படுகிறது. அதைப்பற்றி சில விவரங்களை அறிவோம்.\n\"தசஹரதசமி' என்கிற, \"பாபஹர தசமி'\nவைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமிதிதி, \"தசஹரதசமி' என்றும், \"பாபஹர தசமி' என்றும் கூறப்படுகிறது.\nஇந்நாளில்தான் ஸ்ரீராமபிரான், இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற பாபம் நீங்க, மணலில் லிங்கப் பிரதிஷ்டை செய்து சேதுக்கரையில் வழிபட்டார் என்று \"ஸ்ரீ காந்தம்' என்னும் நூல் கூறுகிறது.\nவைகாசி சுக்லபட்ச தசமி திதியானது பத்துவிதப் பாபங்களைப் போக்கும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்திலும் கோயிலுக்குள்ளிருக்கும் புனித நீர்நிலைகளிலும் நீராடினால் பாபங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.\nமறுபிறப்பு இல்லாத நிலைபெறுவதற்கு பாப புண்ணியங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். பாபம் செய்தால் நரகம்; புண்ணியம் செய்தால் சொர்க்கம்; இந்த இரண்டும் வீடுபேற்றுக்கு முட்டுக்கட்டைகள் என்று கூறப்படுவதால், \"நல்லதை நினை; நல்லதைச் செய்; நல்லதே நடக்கும்' என்று பகவான் கிருஷ்ணன் கூறியதுபோல் தீவினைகள் செய்யாமல். நம்மால் முடிந்த அளவு அனைவருக்கும் நல்லது செய்தாலே மறுபிறவி இல்லாத வாழ்வு கிட்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது.\nஇந்த காலகட்டத்தில் பூலோகத்தில் மானிடர்களாகப் பிறந்த ஜீவன்கள் துலாக்கோலின் சமநிலை போல வாழமுடியாது என்பதால்தான் இந்த வைகாசி சுக்லபட்ச தசமியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த வினைகளைப் போக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பினைத் தருகிறது. அதனால் தீவினைகள் அழியும் எனப்படுவதால் \"பாபஹர தசமி' போற்றப்படுகிறது.\nஅது என்ன பத்துப் பாபங்கள்\nவாக்கினால் செய்வது நான்கு; சரீரத்தால் செய்வது மூன்று; மனதால் இழைப்பது மூன்று. ஆக, இந்தப் பத்துப் பாபங்களையும் போக்கிக் கொள்ள இந்தப் \"பாபஹர தசமி' உதவுகிறது.\n அவை,கடுஞ்சொல்; உண்மையில்லாத பேச்சு; அவதூறாகப் பேசுவது; அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.\nசரீரத்தால் செய்வது மூன்று: அவை, நமக்குக் கொடுக்கப்படாத பொருள்களை நாம் எடுத்துக் கொள்வது; அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது; பிறர் மனைவி மீது ஆசைப்படுவது.\nமனதால் இழைக்கப்படும் பாபங்கள் மூன்று: அவை, மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது; மனதில் கெட்ட எண்ணங்களை நினைத்தல்; மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.\nஇந்தப் பத்து பாபங்களும் குறிப்பிட்ட புண்ணியகாலமான வைகாசி அமாவாசைக்குப் பின்வரும் தசமி அன்று சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.\nராமேஸ்வரம் செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியம். எனவே, அந்தப் புண்ணிய காலத்தில் தங்கள் ஊரின் அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ, குளத்திலோ நீராடலாம். நதியிலும் ஆற்றிலும் நீர் இல்லாது போனாலும், சிவபெருமானையும், திருமாலையும் மனதில் நினைத்து இனிமேல் பாபங்கள் செய்யமாட்டேன்' என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு, வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாபங்கள் நீங்கும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.\nவைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமிதிதியில் கங்காதேவி, தேவலோகத்திலிருந்து பகீரதன் முயற்சியால் பூலோகத்திற்கு இறங்கி வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்காதேவியை நினைத்து நீராடினாலும் நம்முடைய பாபங்கள் நீங்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.\nவைகாசி அமாவாசைக்குப்பின், பிரதமையிலிருந்து தசமி வரை கங்கை நதியில் நீராடினால் பாபங்கள் நீங்குவதுடன், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்' என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.\nஇந்நாளில் முன்னோர்களுக்குப் பின் பிதுர்பூஜை செய்வது, போற்றப்படுகிறது. ஏழைகளுக்கு வஸ்திரதானம் அன்னதானம் செய்தால் கூடுதல் புனிதம் கிட்டுவதுடன் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று வேத நூல்கள் கூறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/health/2017/nov/14/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2807659.html", "date_download": "2018-08-20T18:25:09Z", "digest": "sha1:UOOGSYZFWXVQPFH7ICITW2SRZBWMYEFX", "length": 8898, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "சர்க்கரை நோயை வெல்ல...- Dinamani", "raw_content": "\nவயது வேறுபாடு இன்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சர்க்கரை நோய் பாதிக்கும். உலகமெங்கும் பரவலாக இந்த நோய் காணப்படுகிறது. இந்த நோயினால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறை:\nசிறுவர்களை தாக்குகிற இந்த நோய்க்கு \"ஜுவனைல் டயபடிஸ்' என்று பெயர். இந்த நோய் பாதித்தவர்களுக்கு இன்சுலின் சுரக்காது. இன்சுலின் சுரக்கும் உயிர் அணுக்கள் செயலிழந்து விடுகின்றன. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி மருந்தையே நம்பியே இருக்க வேண்டியுள்ளது. இந்த நோயுடன் மற்றவர்களைப் போல் வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இப்போதைய மருத்துவ வளர்ச்சியில் இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியவில்லை என்றாலும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இனிமையாக வாழலாம்.\nசர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வரும்.\nஅதிகமாக தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.\nஅதிகமாகப் பசிப்பதுடன், அடிக்கடி சோர்வு ஏற்படும்.\nஉடல் எடை திடீரென மிக வேகமாகக் குறையும்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.\nஇந்த நோயைக் கர்ப்பத்தின்போது மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சிறு வயது முதல் இந்த நோய் தொடர்ந்து இருந்து அதனுடன் திருமண வாழ்க்கை, கர்ப்பம் தரித்தல் என்பது ஒரு வகை. இந்த வகையில் இந்த நோய் ஆரம்பித்த நாள் முதல் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். அதோடு பிரசவிக்கும் வரை அடிக்கடி ரத்தப் பரிசோதனை செய்து மிகவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்தப் பரிசோதனையில் சர்க்கரையின் அளவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120 மில்லி கிராமுக்குக் குறைவாக இருத்தல் வேண்டும். ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை, கருக் குழந்தைக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்க்கரை நோய்: தேவை துல்லிய சிகிச்சை\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44925-girija-vaidyanathan-in-the-race-contestant-of-cabinet-secretary.html", "date_download": "2018-08-20T18:44:59Z", "digest": "sha1:7XO7E7BGSLMITS6S2UXB5MO5HX4MLKGW", "length": 10965, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அமைச்சரவை செயலாளருக்கான போட்டியில் கிரிஜா வைத்தியநாதன்..? | Girija Vaidyanathan in the race contestant of Cabinet secretary", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nமத்திய அமைச்சரவை செயலாளருக்கான போட்டியில் கிரிஜா வைத்தியநாதன்..\nமத்திய அமைச்சரவை செயலாளராக உள்ள பிரதீப் குமார் சின்காவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான போட்டியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனும் இருப்பதாக தகவல் கசிய தொடங்கி உள்ளது.\nமத்திய அமைச்சரவை செயலாளராக கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் பிரதீப் குமார் சின்கா. கடந்த 1977ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட இவர், மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார். வரும் 2019ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியுடன், மத்திய அமைச்சரவை செயலாளராக இருக்கும் பிரதீப் குமார் சின்காவின் பதவிக்காலம் முடிவடைகிறது.\nஇந்நிலையில் மத்திய அமைச்சரவையின் அடுத்த செயலாளர் பதவிக்கான போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிஜா வைத்தியநாதனும் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிஜா வைத்தியநாதன் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ளார். கிரிஜா வைத்தியநாதன் ஒருவேளை அப்பதவிக்கு நியமிக்கப்படும் பட்சத்தில் அவர் தான் மத்திய அமைச்சரவை செயலாளராக பதவி வகிக்கும் முதல் பெண் ஆவார். இப்போட்டியில் கிரிஜா வைத்தியநாதனோடு சேர்த்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு மத்திய அமைச்சரவை செயலாளருக்கான போட்டியில் குஜராத்தை சேர்ந்த மூத்த பெண் அதிகாரியான கௌரி குமாரும் இருந்தார். ஆனால் அப்போட்டியில் பிரதீப் குமார் சின்கா வெற்றி பெற்று மத்திய அமைச்சரவை செயலாளரானார். அதனால் கௌரி குமாருக்கு அப்பதவி கிடைக்காமல் போனது. கிரிஜா வைத்தியநாதனின் தந்தை வெங்கிடரமணன் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று ரயில்வே கூலி; இனிமேல் அரசு அதிகாரி -சக்சஸ்மேன் ஸ்ரீநாத்\n‘காலா’பாடல்கள் இணையத்தில் வெளியீடு: மாலையில் வழக்கம்போல் விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிரிஜா வைத்தியநாதன் மத்திய உள்துறை அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு\nமுதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி, தலைமைச் செயலாளர் சந்திப்பு\n'அரசுமுறை பயணத்திற்கு அனுமதி அவசியம்' : தலைமைச் செயலாளர்\nகிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதி: நிதித்துறை செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு\nஅதிகாரிகளை விட குறைவான சம்பளம் வாங்கும் குடியரசு தலைவர்\n7வது ஊதியக்குழு பரிந்துரையை முதல்வரிடம் வழங்கினார் நிதித்துறை செயலாளர்\nஜாக்டோ ஜியோ கோரிக்கை:அக்டோபர் 13க்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nபள்ளிக் கல்வித்துறைக்கு புதிய முதன்மைச் செயலர்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநேற்று ரயில்வே கூலி; இனிமேல் அரசு அதிகாரி -சக்சஸ்மேன் ஸ்ரீநாத்\n‘காலா’பாடல்கள் இணையத்தில் வெளியீடு: மாலையில் வழக்கம்போல் விழா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilbiblestudy.org/137", "date_download": "2018-08-20T18:39:53Z", "digest": "sha1:FJBDB5BUDYFNZIYWKR5AYVZXLLJYGFXE", "length": 21063, "nlines": 83, "source_domain": "www.tamilbiblestudy.org", "title": "கிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி | Tamil Bible Study", "raw_content": "\nகிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி\nகிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி\nவேதாகமத்தின் வெளிப்படுத்தல் புத்தகத்தில் 1000 வருட கிறிஸ்த்துவின் ஆட்சி இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் வெளியரங்கமான ஆட்சியா அல்லது ஆவிக்குரிய ஆட்சியா அல்லது சொல்லளவிலான ஆட்சியா என்பது குறித்து பல அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இறையியலாளர்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூன்று முக்கிய பிரிவுகள் காணப்படுகின்றன. அதேபோல இரண்டு சாட்சிகள் யார் என்பது குறுத்தும், “666” இலக்கத்தின் கருத்து என்ன என்பது குறித்தும், கிறிஸ்துவின் இரகசிக வருகையும் சபை எடுத்துக்கொள்ளப்படுதலும் ( Rapture) குறித்தும் இவர்களிடையே பாரிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nமிலேனியம் என்ற சொல் லற்றின் மொழியாகும். மிலேனியம் என்ற சொல்லுக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள் கூறப்படுகின்றது.\nபழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள மேசியாவின் பொற்கால யுகம் என்று சொல்லப்படும் காலம் இதுவென பல கிறிஸ்த்தவர்கள் நம்புகிறார்கள். ( உதாரணமாக சங்கீதம். 72, சங். 110, ஏசா. 2;1-2. ஏசா.11; 1-11, எசேக்.34, தானி. 2 போன்றவை )\nஇயேசுக் கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகைக்கான காலத்தை யும், நேரத்தையும் யாரும் அறிந்திருக்கவில்லை. இந்த விடயத்தில் ஆவிக்குரிய விளக்கங்களை சபைகள் இன்னமும் ஒரேமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை.\nமிலேனியம் சம்பந்தமான மூன்றுவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவை ஒன்றுக் வித்தியாசப்பட்டுக் காணப்படுகின்றன.\nஇங்கு மிலேனியத்திற்கு முன்பாக A, Pre, Post அர்த்தமுள்ள வார்த்தைகள் காணப்படுகின்றன்.\nதமிழில் விசுவாசம் என்ற சொல்லிற்கு எதிர்ச் சொல்லாக அவிசுவாசம் என்ற சொல்லுள்ளது. இங்கு விசுவாசத்திற்கு முன்பாக “அ” என்ற எழுத்துப்பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மிலேனியம் என்ற எழுத்திற்கு முன்பாக “A” சொல் பாவிக்கும் போது அமிலேனியம் என்ற சொல்வருகின்றது. அதன் அர்த்தம் ஆயிரம் வருட ஆட்சி இல்லை என்பதாகும்.\n“Pre “என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அர்த்தம் முன்பு என்பதாகும்.மிலேனியம் என்ற சொல்லிற்கு முன்பாக பிறி என்ற சொல்லைச் சேர்க்கும் போது அது பிறிமிலேனியம் என்று பொருள்படும். பிறிமிலேனியம் என்றால் ஆயிரம் வருட ஆட்சிக்கு முன்பு என்று பொருள்படும்.\nஅதேபோல் “Post”என்ற சொல்லிற்கு பின்பு என்ற அர்த்தமாகும். இதனை மிலேனியம் என்ற சொல்லிற்கு முன்பு சேர்க்கும் போது போஸ்மிலேனியம் என்ற சொல் உருவாகின்றது.போஸ்மிலேனியம் என்ற சொல்லிற்கான அர்த்தம் ஆயிரம் வருட ஆட்சிக்கு பின்பு எனபதே கருத்தாகும்.\nஇங்கு பிறி என்றும்,போஸ் என்றும் எதனைப் பற்றிக் கூறப்படுகின்றது என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் எழலாம்.. இயேசுவின் 2ம் வருகையைக்குறிப்பதற்காகவே இந்த வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன.\nஇதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது\nPremillennialism = ஆயிரம்வருட ஆட்சிக்கு முன்பு இயேசுவின் வருகை இடம்பெறும்.\nPostmillennialism = ஆயிரம்வருட ஆட்சிக்கு பின்பு இயேசுவின் வருகை இடம்பெறும்.\nAmillennialism = ஆயிரம்வருட ஆட்சி இல்ல\nஆயிரம்வருட ஆட்சி என்பது வெளியரங்கமானது என்று பிறிமிலேனியக் கொள்கையாளர்கள் கருதுகின்றார்கள். மிலேனியத்திற்கு முன்பாக இயேசுக்கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகை இடம் பெறும்.( உபத்திரப காலத்திற்கு முன்பாக, உபத்திரப காலத்திற்கு இடையில், உபத்திரப காலத்திற்கு பிற்பாடு இயேசு வருவார் என்ற கொள்கையை பிறிமிலேனிய கொள்கையாளர்கள் கருதுகிறார்கள், ஆனாலும் ஆயிரம் வருட ஆட்சிக்கு முன்பாக இது இடம்பெறும் என நம்புகிறார்கள்.)\nஇந்தக் கொள்கையாளர்கள் மத்தியில் இரண்டுவிதமான விளக்கங்கள் உண்டு.\n1) இறையியல் பிறிமிலேனிய கொள்கை;-\nஉபத்திரப காலத்தின் முடிவில் அர்மகதோன் யுத்தம் இடம்பெறும், சாத்தான் மறியல்வைக்கப்படுவான், இஸ்ரவேலர்கள் மீது இயேசுவின் ஆளுகை ஆரம்பமாகும்.( 19; 19—20;6) இந்த ஆயிரம்வருட ஆட்சிக்காலத்தில், இஸ்ரவேலர்கள் குறித்து பழைய ஏற்பாட்டில் க;றப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ( ஏசாயா 2 ;4, 9;6-7, 11;6-7, 35; 5-6, 42; 1.) மிலேனியத்தின் முடிவில் சாத்தானின் புரட்சி, கிறிஸ்துவிற்கு எதிராக ஏற்படும், அதன் பிற்பாடு பிசாசானவன் அக்கினிக் கடலுக்குள் தள்ளப்படுவான். அதன் பிற்பாடு கர்த்தர் புதிய வானத்தையும் பூமியையும் உருவாக்குவார்.\n2. சரித்திர பிறிமிலேனிய கொள்கை.உபத்திரப காலத்திற்குப் பிற்பாடு இயேசுக்கிறிஸ்த்துவின் வருகை ஏற்படும், அதன்பிற்பாடு ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படும். அர்மகதோன் யுத்தத்தில் கிறிஸ்து அந்திக்கிறிஸ்துவின் ஆயுத்தாரிகளை வெற்றிகொள்வார், அத்துடன் அந்திக்கிறிஸ்த்துவை கொலை செய்வார். கிறிஸ்த்து பிசாசினைத் தோற்கடித்த முதலாவது நிலை இதுவாகும். கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயிரம் வருட ஆட்சியில் விசுவாசிகள் இணைந்து கொள்வார்கள். சாத்தான் இந்தக்காலத்தில் கட்டிவைக்கப்படுவான். கிறிஸ்த்துவின் ஆயிரம் வருட ஆட்சி உலகில் ஏற்படுத்தப்படுவதனால், இஸ்ரவேல் தேசம் இயேவின் பக்கமாக திரும்பும் இக் கொள்கை யாளர்கள் நம்புகிறார்கள், இதனால் பழைய ஏற்பாட்டின் அனேக தீர்க்க தரிசனங்கள் நிறைவேறும். ஆயிரம் வருட ஆட்சியில் இணைந்து கொள்வதற்காக கர்த்தருக்குள் மரித்த விசுவாசிகள் மட்டும் உயிர்த்தெழுவார்கள் என்று சரித்திர பிறிமிலேனியக் கொள்கையாளர்கள் நம்புகிறார்கள். அயிரம்வருட அரசாட்சியின் முடிவில் மரித்த அவிசுவாசிகள் யாவரும் உயிர்த்தெழுவார்கள்—அந்நேரத்தில் அவர்கள் நியாயந்தீர்கப்படுவார்கள், அதன்முடிவில் புதிய வானமும், புதிய பூமிஙும் கர்த்தரால் உருவாக்கப்படும்.\nஇக் கொளகையுடையோர் ஆயிரம்வருட அரசாட்சி வெளியரங்கமானது அல்ல என்றும், இது கிறிஸ்த்து பரமேறிய நாள்முதல் அவரது இரண்டாம் வருகை வரும் நாட்கள் வரையான காலப்பகுதியென்றும் கூறுகின்றார்கள். அதாவது மிலேனியம் என்பது விசுவாசிகளின் இருதயத்தில் கிறிஸ்த்துவின் அரசாட்சி இடம்பெறுதல் என்றும், சபையிலும் கிறிஸ்த்துவின் ஆட்சி நடைபெறும் காலப்பகுதி என்றும் கருதுகின்றார்கள். இந்தக் காலத்தைச் சபைக் காலம் என்றும் அழைக்கின்றார்கள். இந்தக் காலம் கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகையுடன் நிறைவுபெறும் என்றும் நம்புகின்றார்கள்.. இக்கொள்யுடையோர் உபத்திரப காலம் என்பது ஒன்றும் இல்லை என்று நம்புகின்றார்கள், ஆனால் சபைக்காலத்தில் ஏற்படும் பலவிதமான உபத்திரபவங்களையே உபத்திரப காலம் என நம்புகின்றார்கள். இவர்களுடைய நம்பிக்கையின்டி வெளிப்படுத்தல் 20; 1-6 இல் கூறப்பட்டுள்ள மிலேனியம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நம்புகின்றார்கள்.\nகடைசிக்காலம் நெருங்கும்போது,சாத்தானின் கூட்டங்கள் எல்லாம் அந்திக்கிறிஸ்த்துவுடன் இணைந்து, மிகுந்த உபத்திரபத்தை சபைக்கும் விசுவாசிகளுக்கும் ஏற்படுத்துவான்.( 2.தெச 2;1-3) பாவிகள் யாவரும் ஒன்றாய் இணைந்து தங்கள் பலத்தை அதிகரித்துக் கொண்டு, விசுவாசிகளை மேலும்மேலும் துன்ப்ப் படுத்துவார்கள்.. கிறிஸ்த்து வெளிப்படும் நாளில்மட்டுமே தீவினை முற்றுமுழுதாக நிறுத்தப்படும். ஜீவனுள்ளோரும், மரித்தவர்களும் நியாயந்தீர்க்கப்பட்ட பின்பு , கிறிஸ்த்து தன்னுடை நித்திய ராஜ்ஜியத்தை நிறுவுவார்.\nஇக்கொள்கையுடையோர் சபையினால் எற்படுத்தப்படும் சமாதான காலமே போஸ்மிலேனியக் காலம் என நம்புகிறார்கள். கடைசிக்காலத்தில் , சாத்தான் கட்டவிழ்த்து விடப்படுவான், ஆனால் அக்காலத்தில் கிறிஸ்த்து திரும்பிவந்து சாத்தானைத் தோற்கடித்துநித்திய ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவார் என நம்புகின்றார்கள்.\nசபையினால் “கிறிஸ்தவமயமாக்கப்பட்ட”உலகத்திற்கு கிறிஸ்த்து திரும்பிவருவார் என போஸ்மிலேனியக் கொள்கையுடையோர் நம்புகிறார்கள்,அதாவது ஆயிரம்வருட ஆட்சி சபையினால் உருவாக்கப்படும் என்றும், மிலேனியத்திற்குப்பிற்பாடுதான் கிறிஸ்த்து உலகத்திற்கு மீண்டும் வருவார் எனவும் நம்புகிறார்கள். சபையானது சமூகங்களை படிப்படியாக மாற்றிக்கொண்டிருக்கின்றது என நம்புகின்றார்கள்,(மத். 13;31-33). உபத்திரபகாலம் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மிரண்பாடுகளே என போஸ்மிலேனியக் கொள்கையாளர்கள் நம்புகின்றார்கள். குழியிலிருந்து சாத்தான் கட்டவிழ்த்து விடப்பட்டவுடன் மிலேனியம் முடிவிற்கு வரும் என நம்புகின்றார்கள்.அதன் பிற்பாடு கிறிஸ்த்து சகலரையும் நியாயந்தீர்ப்பதற்காக உலத்திற்கு வருவார்என்றும், அத்துடன் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உருவாக்குவார் என்றும் நம்புகின்றார்கள். உலகத்திற்கு நற்செய்தியை பரம்பும் முழப்பொறுப்பையும் சபை கொண்டுள்ளது என்று போஸ்மிலேனியக்கொள்கையாளர்கள் நம்புகின்றார்கள்.\nPosted in தேவ செய்தி\nஇயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள் »\n2 Responses to “கிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி”\nஇயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்\nகிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி\nஇயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/people-who-changed-some-most-common-viewpoints-018868.html", "date_download": "2018-08-20T18:33:36Z", "digest": "sha1:26TV4V7K6QE7ELAOI54FX4KUDFFCCZWH", "length": 21826, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாதனையாளர்கள் எல்லாரும் பின்பற்றிய வழி இது தான்!! வெற்றிக்கான சூப்பர் டிப்ஸ் | People Who Changed Some Most Common Viewpoints - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சாதனையாளர்கள் எல்லாரும் பின்பற்றிய வழி இது தான்\nசாதனையாளர்கள் எல்லாரும் பின்பற்றிய வழி இது தான்\nசாதனையாளர்கள் எல்லாம் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு சாதனையாளர் பின்னாலும் உணர்ச்சி பெருக்குள்ள ஓர் கதை விவரிக்கப்படும்.\nமிகவும் கடினமாக உழைத்தார்கள் என்று சொல்வதை விட அவர்களைப் பற்றிச் சொல்லும் போதோ அல்லது அவர்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கும் போது பிறரை விட இவர்கள் இந்த விஷயத்தை சற்று வித்யாசமாக செய்தார்கள். அல்லது சிந்தனையை மாற்றினார்கள் என்று சொல்லலாம். அப்படி நாம் சாதனையாளர்கள் என்று நாம் வியந்து பார்க்கும் நபர்கள் வித்யாசமாக என்ன செய்திருக்கிறார்கள், அவர்களது விசித்திர சிந்தனை எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவயது ஒரு பொருட்டல்ல :\nகாலம் கடந்து விட்டது என்று நாம் எந்த காலத்திலும் நினைத்து விடக்கூடாது என்பதன் சாட்சியாக இருப்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.\n195க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். திரை உலகின் ஜாம்பவான் என்றே சொல்லலாம். இப்போது எழுபதுகளில் இருக்கும் அமிதாப் இன்றளவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅப்பா பணக்காரராக இருந்தால் அவரது மகன் பணக்காரனாக முடியும் என்ற அரதப்பழசான எண்ணத்தை உடைத்தவர் அம்பானி.\nதன் கையில் இருந்த பத்து ரூபாயை வைத்து தொழிலை துவங்கினார். துல்லியமான தொலை நோக்கு பார்வையினால் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பணக்கார குடும்பமாக அம்பானி குடும்பம் மாறியது. மத்திய அரசுக்கு கிடைக்கக்கூடிய மொத்த வரிகளில் ஐந்து சதவீதம் அம்பானி குடும்பம் தான் கட்டுகிறது.\nதொடர் முயற்சி மட்டுமே வெற்றியின் அடித்தளம் என்று வாழ்ந்தவர் சச்சின் . கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சச்சினின் ஆரம்ப நாட்கள் அவ்வளவு எளிமையானதாக இருந்திருக்கவில்லை.\nநிறையத்தோல்விகளை சந்தித்தே இந்த பெரும் சாதனையை செய்திருக்கிறார். கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் தன்னுடைய பெயரை பதிய வைத்திருக்கிறார்.\nஎன்னுடைய சாதனைக்கு தடையாக இருப்பது என்னுடைய உடல் தான் என்று ஸ்டீஃபன் ஹாக்கிங்கை பார்த்தால் யாரும் சொல்ல மாட்டார்கள்.\nஇவர் ஒரு காஸ்மாலஜிஸ்ட், பிஸிசிஸ்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய காஸ்மாலஜி துரையின் இயக்குநர். இவரது ரெவலுயூஸ்னரி தியரிக்கள் எல்லாம் உலகையே மாற்றியது.\nஎல்லாம் சரி,இவருக்கு உடலளவில் என்னப் பிரச்சனை..... இவருக்கு தாக்கியிருப்பதோ மோட்டார் நியூரான் என்ற ஒரு வகை தசை இறுக்க நோய். இது உடல் அசைவுகள் மட்டுமல்ல குரலையும் பறித்துக் கொண்டுவிடும். வாழ்நாள் முழுமைக்கும் சர்க்கர நாற்காலி தான். பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இவரது கண்டுபிடிப்பை எண்ணி வியக்கிறார்கள்.\nஇந்தக்கதை பலரும் சொல்லக்கூடும். அப்படியான சூழ்நிலை சரியாக அமையவில்லை, எனக்கு அப்போது சூழ்நிலை சரியில்லை படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியவில்லை என்று சொல்லக் கேட்டிருப்போம். அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் ஒப்ரா வின்ஃப்ரேயின் கதையைக் கேளுங்கள்.\nமிசிசிபியில் பிறந்த ஓப்ராவின் இளமைக்காலம் முழுவதும் கொடூர வறுமை ஆட்கொண்டிருந்தது. மிகவும் கண்டிப்பான குடும்பம், சின்ன சின்ன தவறுகளுக்கு கூட பயங்கரமான அடி உதை விழுந்ததது. ஒன்பது வயதில் மாமா, குடும்ப நண்பர் மற்றும் உறவினர் ஒருவர் என மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தக் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியாமல் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறினார்.\nபதினான்கு வயதில் கர்ப்பமானார். சத்துக்குறைபாடு காரணமாக அந்த குழந்தையும் இறந்தது. பின்னர் செய்தி வாசிப்பாளாரக, நிகழ்ச்சித்தொகுப்பாளராக என நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டேயிருந்தார்.\nஇன்றைக்கு வட அமெரிக்காவில் பில்லியனாரக இருக்கும் ஒரே கறுப்பினப் பெண் ஓப்ரா தான்.\nபோர்ச்சுகலுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வந்தார். வந்த இடத்தில் ஒருவர் காதலித்து திருமணம் செய்ய அது விவாகரத்தில் முடிந்தது.\nஒரு குழந்தையுடன் தனியாளாக அனாதரவாய் நின்ற அந்தப் பெண்மணி வயிற்று பிழைப்புக்காக புத்தகக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு புத்தகங்களின் மீது ஏற்பட்ட தீராக் காதலினால் இவரும் ஒரு புத்தகம் எழுதினார்.\nஅதனை வெளியட நினைத்த போது பல தடங்கல்கள். பலரும் இது ஒரு பிரதி கூட விற்காது என்று தீர்க்கமாக சொல்லி வாயை அடைத்தார்கள்.\nதன் கதையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து சொந்த செலவில் புத்தகத்தை வெளியிட்டார். யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மிகவும் வேகமாக விற்பனை சூடுபிடித்தது.\nவரலாற்றிலேயே அதிக விற்பனையான புத்தகம் என்ற சாதனையை படைத்தது இவரது புத்தகம்.இப்போது பெரும் பணக்காரராக இருக்கும் பெண்மணி தான் ஜே.கே. ரவ்லிங்.\nகல்லூரி படிப்பை கூட முடிக்காத இளைஞர் தான் பில் கேட்ஸ். இன்றைக்கு உலகிலேயே மிகப்பெரும் முதன்மை பணக்காரராக திகழ்கிறார், இவர் ஆரம்பித்த முதல் தொழிலும் தோல்வி தான்,அதற்காக எல்லாம் அவர் முடிங்கி விட வில்லை.\nவெற்றி என்பது இன்ஸ்டண்ட் விஷயமல்ல என்பதை உணர்ந்தவர் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்.\nமைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தை துவங்கி புதிய புரட்சியை ஏற்படுத்தி இன்றைக்கு உலகில் நம்பர் 1 பணக்காரராக திகழ்கிறார்.\nதனிமனிதனால் என்ன செய்ய முடியும்\nநெல்சன் மண்டேலா. தென் ஆப்ரிக்காவின் தந்தை, தென் ஆப்ரிக்காவின் பிரதமராக 1994 முதல் 1999 வரை இருந்தவர். மக்களுக்கு ஆதரவாக எண்ணற்ற முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்.\n1961 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கி புரட்சியை ஏற்படுத்தினார். அதனால் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆனாலும் தான் கண்ட கனவு, அமைதி ஆகியவற்றில் எந்த சமரசமும் அவர் கொள்ளவில்லை. எண்ணற்ற விருதுகளை வாங்கி உலக மக்களின் ஆதரவைப் பெற்றார்.\nவிட்டுக் கொடுப்பது எளிது :\nஆப்பிள் நிறுவனம் பற்றி இன்றிருக்கும் சிறு குழந்தைக்கு கூட தெரியுமளவிற்கு மிகவும் பிரபலமாக இருக்கிறது. உலகின் தொழில்நுட்பத்தில் நம்பர் 1 இடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனம் தான்.\nபுதிய நிறுவனத்தை துவங்கியவுடன் எல்லாமே வளர்ச்சிப்பாதையில் சென்று விட்டது அவரும் பெரும் பணக்காரர் ஆகிவிட்டதாக நினைக்காதீர்கள் தான் உருவாக்கிய கம்பெனியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் பல நிறுவனங்களை உருவாக்கினார். மறுபடியும் புத்துணர்ச்சி பெற்றது ஆப்பிள் நிறுவனம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇளைஞர்களுக்கு அப்துகலாம் கூறிய பயனுள்ள அறிவுரைகள்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/03/5417.html", "date_download": "2018-08-20T18:35:57Z", "digest": "sha1:GX2DPWKZNCWTAKH5WBASR66NANHGTOQS", "length": 3618, "nlines": 68, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: 5.4.17 கவன ஈர்ப்பு நாள்", "raw_content": "\n5.4.17 கவன ஈர்ப்பு நாள்\nநமது தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\nBSNL சேவைகளை பயன்படுத்துவீர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017\n30-03-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல் . . .\nஇனிய யுகாதி . . . வாழ்த்துக்கள் . . .\n5.4.17 கவன ஈர்ப்பு நாள்\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை . . .\nதில்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து யெ...\nதமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவெற்றி ... வெற்றி ... TNTCWU மாபெரும் வெற்றி\nபாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல். . .\nமாவட்டந்தழுவிய போராட்ட அறிக்கை . . .\nவங்கிக் கடன்.... யுனியன் பேங்க்-நீட்டிப்பு . . .\nஎம்.பி.க்களில் 443 கோடீஸ்வரர்கள் . . .\nசெய்தி . . .துளி . .\nகார்ட்டூன் . . . கார்னர்\nநமது தமிழ் மாநில சங்கத்தின் சுற்றறிக்கை . . .\nமாவட்டத்தழுவிய போராட்டம் ... தயாராகுவீர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://tamilnool.com/product/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-08-20T18:19:03Z", "digest": "sha1:YISPPHFLE5GTSXSDK7GYSYR7H6HLSO3Q", "length": 10658, "nlines": 224, "source_domain": "tamilnool.com", "title": "அறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்? - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஅறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில\nஅறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில\nஅறிஞர் அண்ணா அறிவுரைகள் ₹30.00\nஅறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில\nBe the first to review “அறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில” மறுமொழியை ரத்து செய்\nவங்கதேசத்தை உருவாக்கியவர்கள் தமிழ் ஈழத்தை\nசே குவேரா: வாழ்வும் மரணமும்\nகாசி ஆனந்தன் தமிழீழம் என்னும் நெருப்பு\nவேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட\nசிங்களவரின் நூறாண்டு காலச் சாணக்கியம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி சிறுவர் சேக்கிழார் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.thinappuyalnews.com/archives/119794", "date_download": "2018-08-20T18:52:22Z", "digest": "sha1:63VBJM6PDZWU7XHK2TXDVSS4OSJ5ANML", "length": 3884, "nlines": 46, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பாம்பை உணவாக உட்கொண்ட ராஜநாகம்.. பின்பு வயிற்றிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிசயம்!! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபாம்பை உணவாக உட்கொண்ட ராஜநாகம்.. பின்பு வயிற்றிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிசயம்\nபாம்பு என்றால் படையே அஞ்சும் என்பார்கள். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மற்ற உயிரினங்களை காட்டிலும் வலிமையானது. அவ்வாறு கருநாகம் அல்லது ராஜநாகம் என்று அழைக்கப்படும் பாம்பு வகையானது நச்சு பாம்பு வகைகளிலே மிக நீளமானது.\nஇந்த பாம்புகள் பெரும்பாலும் மற்ற வகை பாம்புகளையே உணவாக உட்கொள்கின்றது. இவை ஒரு நாள் உணவு உட்கொண்டால் பல நாட்கள் உணவு இல்லாமலே உயிர் வாழும் தன்மை கொண்டது. இதன் விஷம் மிகவும் கொடியது.\nஇந்த ராஜநாகம் மற்ற வகை பாம்பு ஒன்றை உணவாக உட்கொண்டுள்ளது பிறகு அந்த பாம்பு ராஜநாகத்தின் வயிற்றில் இருந்து உயிருடன் வெளிவந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிசய காணொளியை நீங்களே பாருங்க.\nவீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்\nPrevious வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஒன்று கூடல்\nNext 6 வயது சிறுமி பலி – நானுஓயாவில் அசாதாரண சூழ்நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/22172643/1004302/Mentally-retarded-girl-tortured2-arrestedKanyakumari.vpf", "date_download": "2018-08-20T18:46:53Z", "digest": "sha1:SAGOLGC4L567OPDBAK4PHWXZICZCT5GK", "length": 9207, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, காப்பக வார்டன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆலங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களுக்கான காப்பகத்தில், 17 வயது சிறுமி தங்க இசக்கி, உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், 4 நாட்களாக இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமி சூடு வைத்து சித்ரவை செய்யப்பட்டதை கேள்விபட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். சிறுமியை கொடுமைப்படுத்திய காப்பக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகோயிலில் தீ மிதித்த போது தவறி விழுந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை - வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் நேற்று தீ மிதித்த இருவர் கால்தவறி தீயில் விழுந்து காயமடைந்தனர்.\nஉபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவான கலைப்பூங்கா...\nஉபயோகமற்ற பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை வாபஸ்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வாபஸ் பெற்றுள்ளது.\nஅப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.\nபிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்\nசென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்\nமனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்\nகர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-08/on-youth-in-view-of-world-synod-060818.html", "date_download": "2018-08-20T18:42:56Z", "digest": "sha1:TLD5ZSDQCGAWAWREC2WNEQOTR2WCVJCI", "length": 11542, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை – அவமானத்தை சவாலாக்கியவர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇமாச்சல பிரதேசத்தின் மந்தி நகரம் (ANSA)\nஇமயமாகும் இளமை – அவமானத்தை சவாலாக்கியவர்\nஎன் அன்னை பேருந்தில் சந்தித்த அவமானமே, என்னை ஐபிஎஸ் அதிகாரியாக்கியிருக்கிறது - இளம்பெண் ஷாலினி\nமேரி தெரேசா - வத்திக்கான்\nநான்கு ஆண்டுகளுக்கு முன் ஐபிஎஸ் (IPS) பயிற்சி முடித்த இளம்பெண் ஷாலினி அவர்கள், இமாச்சல பிரதேசத்தில் குல்லு மாவட்ட காவல்துறை எஸ்பியாக பணியாற்றி வருகிறார். அம்மாநிலத்தில், சாதாரண கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஷாலினி அவர்களின் தந்தை பேருந்து நடத்துனர். அவரின் அம்மா, வீட்டில் தையல் இயந்திரம் வைத்து, குடும்பச் செலவுகளுக்கு, கணவருக்கு உதவியாக இருக்கிறவர். ஷாலினிக்கு எட்டு வயது நடந்தபோது, ஒருநாள் அம்மாவுடன் பேருந்தில் பயணம் செய்தார் அவர். அப்போது, அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஆண் பயணி ஒருவர், கம்பியில் கைவைப்பதுபோல், அவரின் அம்மாவின் மீது உரசியபடி வர, பல முறை ஷாலினியின் அம்மா எச்சரித்தும் கண்டுகொள்ளாத அந்த நபர், வழக்கமாக பேருந்தில் ஆண்கள் கேட்பதுபோல, நீ என்ன பெரிய டிசியா உன் பேச்சை கேட்க. என்று கேட்டுள்ளார். இது சிறுமி ஷாலினியின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. காவல் துணை ஆணையர் (DCP) என்பது, ஒரு பெரிய பதவி, மற்றும், அந்த அதிகாரி சொன்னால் இதுபோன்ற தகராறு செய்யும் ஆண்கள்கூட அஞ்சுவார்கள் என்பதை, பின்னர் தெரிந்துகொண்டார் சிறுமி ஷாலினி. ஆகவே படித்து டிசிபி ஆகவேண்டும் என்று மனதுக்குள் அன்றே நினைத்துக் கொண்டார் அவர். அதனால், சோர்ந்துவிடாமல் அதை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார், அதுவே அவரின் வைராக்கியமாக மாறியது. ஷாலினியின் குடும்பம், நடுத்தரக் குடும்பத்தைவிட சற்று வசதி குறைந்த குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வு பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், தான் இவ்வளவு உயரத்துக்கு வந்ததற்கு காரணம் பெற்றோர்தான் என்றும், பிளஸ்டூ தேர்வில் குறைந்த அளவே மதிப்பெண் பெற்றபோதும், என் பெற்றோர் என்னைத் தேற்றி, உன்னால் முடியும் என்று படிக்க வைத்தார்கள் என்றும் ஷாலினி அவர்கள் கூறியுள்ளார். பிளஸ்டூ தேர்வுக்குப் பின்னர், கல்லூரியில் வேளாண் துறையில் பெற்ற பட்டம், ஷாலினிக்கு ஐபிஎஸ் கனவுக்கு பெரிதும் உதவியது. இலவசமாக கிடைத்த இணைய வசதிதான், சிவில் தேர்வுக்கு பயிற்சிபெற இவருக்கு உதவியது. ஐபிஎஸ் அகடாமியில் பயிற்சி பெற்று, 65வது பேட்சில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஷாலினி, ஏஎஸ்பியாக ஷிம்லாவில் நியமிக்கப்பட்டார். தற்போது குல்லு மாவட்ட எஸ்பியாக பணியாற்றுகிறார். எனது தந்தை வாழ்வில் பல இன்னல்கள், அவமானங்களைச் சந்தித்தவர். ஆயினும், மிசௌரியில் உள்ள அகடாமியில் நாங்கள் உள்ளே நுழைந்த அந்த நிமிடம், வாங்க சார் என்று, அவரை மரியாதையாக அழைத்தனர். அந்த நேரத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்லியுள்ளார், ஷாலினி. (தி இந்து நாளிதழ்)\nஉலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. செய்தி\nவாரம் ஓர் அலசல் – இயற்கையின் எச்சரிக்கை மணி\nஇமயமாகும் இளமை – காவல்துறை அதிகாரியின் கருணை\nஉலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. செய்தி\nவாரம் ஓர் அலசல் – இயற்கையின் எச்சரிக்கை மணி\nஇமயமாகும் இளமை – காவல்துறை அதிகாரியின் கருணை\nஇல்லத்தரசிகள் ஊதியம் பெறத் தகுதி\nதிருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கருக்கு கடிதம்\nரிமினி 39வது கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-jan-31/fa-pages/114787-fa-pages.html", "date_download": "2018-08-20T18:58:56Z", "digest": "sha1:K4GHNUAVTFYICM5UCYREPTZUYNSJRPEX", "length": 18991, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "மனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்! | FA Pages - Chutti VIkatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nசுட்டி விகடன் - 31 Jan, 2016\nக்யூட் ஸ்டோரி - 1\nக்யூட் ஸ்டோரி - 2\nபலூனை ஊதினால் வண்டி நகரும்\nஉங்க டூத் பேஸ்ட்டில் சிரிப்பு இருக்கா\nஅட்டைகளை இணைத்தால், கிடைக்கும் திருக்குறள்\nவகுப்பறைக்கு வந்த ஊராட்சி மன்றம்\nமனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்\nஜோரா வெச்சோம் ஜாலி பொங்கல்\nதன்னம்பிக்கை தந்த கடல் பூதம்\nகற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்\nமூக்கால் பார்க்கலாம்... காதுகளால் படிக்கலாம்\nவகுப்புக்கு வரும் மிக்கி மவுஸ்\nகார்ட்டூன் பார்த்தேன்... வில்லை எடுத்தேன்\nமாற்றம் கொடுத்த சூப்பர் ஹீரோக்கள்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 5\nதேசத் தலைவர்கள் முதல் சோட்டா பீம் வரை\nமனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்\nமனப்பாடப் பகுதிகளை உங்கள் கைப்பட தாளில் எழுதிக்கொள்ளுங்கள். அதை, புதுவருடக் காலண்டரின் மேல் ஒட்டுங்கள். மனப்பாடப் பகுதி காலண்டர் தயார். தினமும் நாட்காட்டித் தாளைக் கிழிக்கும்போது, கூடவே மனப்பாடப் பகுதியையும் படித்துவிடலாம்.\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news---------1295-4594559.htm", "date_download": "2018-08-20T19:09:37Z", "digest": "sha1:SUCDUMFL72VMFR4ZUWK33HIL7SVIPABS", "length": 3582, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "ஆர்டரைப் படிக்காமல் அவசர கதியில் கைதி விடுதலை: கையைப் ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - ஆர்டரைப் படிக்காமல் அவசர கதியில் கைதி விடுதலை: கையைப் ...\nஆர்டரைப் படிக்காமல் அவசர கதியில் கைதி விடுதலை: கையைப் ...\nTags : ஆர்டரைப், படிக்காமல், அவசர, கதியில், கைதி, விடுதலை, கையைப்\nதேசிய பேரிடராக அறிவிக்க தயக்கம்: கேரளாவின் வெள்ளத்தை 'தீவிர ...\nதலைவர், பொருளாளர் தேர்வு: ஆக.28-ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்\nபாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவிய விவகாரம்: தக்க ...\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ...\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2018/08/blog-post_9.html", "date_download": "2018-08-20T18:05:27Z", "digest": "sha1:7YCY7LP5JBU5TVRQKRASGSIA4V63CQU2", "length": 39739, "nlines": 194, "source_domain": "www.nisaptham.com", "title": "திமுகவின் ஸ்லீப்பர் செல் ~ நிசப்தம்", "raw_content": "\nநினைவு தெரிந்த காலத்திலிருந்தே நான் திமுகவை விரும்புகிறவன். இரண்டாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் பிளேடு வைத்து உதயசூரியனை வரைய அது அடுத்தடுத்த பல பக்கங்களைக் கிழித்து 'உங்க பையனுக்கு இப்பவே அரசியல்' என்று ஆசிரியை அப்பாவிடம் சொல்லி உதை வாங்கியதிலிருந்தே அந்த உணர்வு இருக்கிறது. ஏழாம் வகுப்போ அல்லது எடடாம் வகுப்போ படிக்கும் போது பள்ளிக்கூடப் பையில் ஒரு சட்டையை ஒளித்து வைத்து மாலையில் அதை அணிந்து உதய சூரியனுக்கு வாக்கு கோரி தேர்தல் பரப்புரையில் பேசியிருக்கிறேன். அப்பொழுது ஒன்றியச் செயலாளராக இருந்த செல்வராஜ் 'பையனுக்கு மாணவர் அணியில் ஒரு போஸ்டிங் போட்டுடுவோம்' என்று பேசப் போக அந்த விவகாரம் அப்பாவுக்குத் தெரிந்து முற்றுப் புள்ளி வைத்தார்.\nசுய வரலாறு பேச வேண்டியதில்லை. ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். ஒருவனின் ஆரம்ப கட்டத்தில் உருவாகும் அரசியல் சார்ந்த ஆர்வம், பள்ளிக்காலத்தில் விதைக்கப்படும் உணர்வுகள் என்பவைதான் அவனை எதிர்காலத்திலும் வடிவமைக்கின்றன. எனக்கு கிடைத்த நட்புகளும், அவர்கள் வாசிக்கக் கொடுத்த புத்தகங்களும், அவர்களுடன் நடத்திய உரையாடல்களும், எங்கள் ஊர்ச் சூழலும் என்னைத் திராவிட சித்தாந்தத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவனாக வளர்த்திருக்கிறது.\nஇதில் மறைக்க என்ன இருக்கிறது என்னளவில் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்படுகிறேன்.அவ்வளவுதான்.\nஎந்த அரசியல் சார்புமில்லாமல் நம் சூழலில் ஒருவன் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு சித்தாந்தம் ஒருவனை தனக்குள் ஈர்க்கும். தேசியம், திராவிடம், இந்துத்துவம், கம்யூனிசம், தமிழ் தேசியம், சாதியம் என்று ஏதாவதொரு ஈர்ப்பு ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். 'இதை வெளிப்படையாக பேச வேண்டியதில்லை' என்று வேண்டுமானால் அமைதியாக இருந்து கொள்ளலாம் அல்லது சூழலுக்கு ஏற்ப சரி தவறு குறித்துப் பேசலாம். அப்படி எதுவுமே இல்லாமல் 'புதிய இயக்கத்தை உருவாங்குவேன்' என்று கிளம்பலாம். நம்முடைய உயரம் நமக்குத் தெரிய வேண்டும். குடும்ப, பொருளாதாரச் சூழல் போன்றவைதான் நம்மை முடிவு செய்ய வைக்கின்றன.\nதிராவிடக் கொள்கைகளைச் சாரும் போது எனக்கு ஈடுபாடுள்ள தேசியம், இறை நம்பிக்கை, காந்தியம், சுயச் சார்பு என்பனவற்றோடு முரண்பாடுகள் உண்டாகின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி நான் திமுக அனுதாபிதான். அரசியல் ரீதியாக திமுக வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறவன்தான்.\nஇன்று வரையிலும் திமுகவின் தேர்தல் அரசியலுக்கு எந்த வகையிலும் ஆதரவு தெரிவித்து எழுதியதில்லை. ஆனால் அதற்காக எப்பொழுதும் அப்படியே இருக்கப் போவதுமில்லை. வேறொரு சித்தாந்தம் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளில் ஆக்டொபஸ் போல நாம் வாழும் சூழலை ஆக்கிரமிக்கத் தயாராகும் போது பால்யத்திலிருந்து நாம் நம்பிய சித்தாந்தத்தை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா என்று ஆதங்கம் கொள்வது மனிதனின் சாதாரண மனநிலை. அப்படியொரு மனநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தத் தருணத்தில் கலைஞர் மறைவு என்பது உணர்வு ரீதியாக அசைத்துப் பார்க்கிறது.\nநாம் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தலைவர் கலைஞர் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இங்கு எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கும். தனிமனித தாக்குதல் இருக்கும். விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் பொது வாழ்க்கை என்பது சாத்தியமே இல்லை. காந்தியாக இருந்தாலும் சரி; மண்டேலாவாக இருந்தாலும் சரி. அவர்கள் வாழும் காலத்தில் எதிரிகள் இருப்பார்கள். மட்டம் தட்டுவார்கள். ஆனால் வாழ்ந்து முடிந்த பிறகு தலைவர்கள் அடையாளம் ஆக்கப்படுவார்கள். கலைஞரும் விதிவிலக்கில்லை.\nஅதே சமயம், லெனின் குறிப்பிட்டது போல ஒருவரின் உடல்தான் மரணிக்கிறது. அவரது அரசியல் இல்லை. கலைஞரின் அரசியல் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உட்பட்டதுதான். அப்படியான உரையாடல்கள் வழியாகவும் செயல்பாடுகளின் வழியாகவும் சித்தாந்தங்கள் உயிர்ப்பு பெறுகின்றன அல்லது மடிந்து போகின்றன. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் உருவாக்கிய திராவிட சித்தாந்தமும் அப்படியானதொரு செயல்பாடுகள் வழியாகவே அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும்.\nஇது வெறும் ஒரு மனிதரின் மரணம் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. இயக்கம், சித்தாந்தம் சம்பந்தப்பட்டது.\nகலைஞருக்குப் பிறகு திமுக என்ன ஆகும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அரசியல் இயக்கத்தை சார்ந்து வளர்ந்த ஒரு சித்தாந்தம் அதன் தலைமை அசைவுறும் போது வலுவிழந்து போக வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஸ்டாலின் முழுமையாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டுவிட்டார் என்றுதான் அவருடைய சமீபத்திய செயல்பாடுகளும் பக்குவமும் காட்டுகின்றன. 'உங்க அப்பாவுக்கு மெரினாவில் இடமில்லை' என்று சொல்லும் போது 'அதையும் பார்த்துவிடுவோமே' என்று ஒரு கண்ணசைப்பைக் காட்டியிருந்தால் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு நிலைமை விபரீதம் ஆகியிருக்கக் கூடும்.\nஒரு மனிதருக்கு இதைவிடவும் ஒரு அழுத்தம் வேறு என்ன இருந்துவிட முடியும் அப்பாவின் ஆசையான அண்ணாவின் அருகில் இடம் என்பதை நிறைவேற்ற முடியாது போலிருக்கும் சூழல். தன்னிடம் மிகப்பெரிய இயக்கம் இருக்கிறது. அடித்து நொறுக்கும் தொண்டர் படை இருக்கிறது. ஆளும் வர்க்கத்திடம் தோற்றுப் போனால் தன் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும். அவகாசம் இல்லை. என்ன செய்ய வேண்டும் அப்பாவின் ஆசையான அண்ணாவின் அருகில் இடம் என்பதை நிறைவேற்ற முடியாது போலிருக்கும் சூழல். தன்னிடம் மிகப்பெரிய இயக்கம் இருக்கிறது. அடித்து நொறுக்கும் தொண்டர் படை இருக்கிறது. ஆளும் வர்க்கத்திடம் தோற்றுப் போனால் தன் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும். அவகாசம் இல்லை. என்ன செய்ய வேண்டும் எவ்வளவு பெரிய அழுத்தம் இது எவ்வளவு பெரிய அழுத்தம் இது இருந்த குறுகிய காலத்தில் பிரச்சினையை வழக்கு வழியாக எதிர்கொண்டதும், தீர்ப்பு வரும் வரை அவர் காட்டிய பொறுமையும், தீர்ப்பைக் கேட்டு மகனாக உடைந்து அழுத தருணமும் அவர் மீதான நம்பிக்கையை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.\nநான் திமுகவின் ஸ்லீப்பர் செல் எல்லாம் இல்லை. நேரடியாகவே திமுகவை ஆதரிக்கிறேன். மாற்று சித்தாந்த, அரசியல் இயக்க நண்பர்களுக்கு இது உறுத்தலாக இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும் வெளிப்படையாக எதையும் பேசிவிடாமல் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளலாம். அதுதான் அவசியமா என்ன\nஅவரவருக்கு எப்படி ஒரு சித்தாந்தம், அரசியல் பார்வையோ அப்படித்தான் எனக்கும்.\nகலைஞின் மறைவு நிறைய பேருக்குள் உறைந்திருந்த வாஞ்சையை வெளிக்கொண்டு வந்துள்ளது.\nஎடப்பாடியிடம் ஸ்டாலின் பேசும் போதே இதை எடுத்து சொல்லியாகி விட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிரியாக இருந்தவர் கருணாநிதி. அவருக்கு எடப்பாடி இடம்கொடுத்தால் அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை ஸ்டாலினிடம் எடுத்து சொல்லியாகி விட்டது. அதே போல நீதி மன்றத்தில் வலுவாக எல்லாம் எடப்பாடி தரப்பு வாதாட வில்லை. வாதாடவும் மாட்டோம் என்று ஸ்டாலினிடம் உறுதி அளித்தபடி செய்யப்பட்டது. எனவே இதுதான் தீர்ப்பு என்று ஸ்டாலினிற்கு கண்டிப்பாக தெரியும்.\nநீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை செயல்படுத்துகிறோம் என்று எடப்பாடி ஒரே வரியில் பதில் சொல்லி, மெரினாவில் நல்லடக்கம் செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.\nஅதிகாரிகள் தரப்பில், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் அமைப்பதற்கு ஐந்து வழக்குகள் எதிராகப் போட்டிருக்கிறார்கள். அவற்றை வாபஸ் வாங்கினால்தான், இப்போது கருணாநிதிக்கு இடம் தரமுடியும் என்றார்கள். இந்த விஷயம்தான், வழக்கு விசாரணையின்போது முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐந்து வழக்குகளையும் சம்பந்தப்பட்டவர்கள் வாபஸ் பெற்றனர். இதனால், ஜெயலலிதாவுக்கு கட்ட இருக்கும் மணிமண்டபத்துக்கான ரூட் கிளியர் ஆனது. இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் ஜெகஜோதியாய் அமைய வழிவகுத்துவிட்டது. ஸ்டாலினும் எடப்பாடியும் கூட்டு வைத்து கொண்டு செயல்படுகின்றனர் என்ற அதிமுக தொண்டர்களின் சந்தேகமும் தீர்க்கப்பட்டது.\nஇறந்தவரை பற்றி பேசுவது சரி அல்ல. ஆனால் ஏதோ காமராஜர் அளவுக்கு பேசுவதைத்தான் தாங்க முடிய வில்லை\nஇன்று கருணாநிதிக்கு பல பேரிடம் இருந்து அனுதாப அலை இருக்கிறது. காரணம், திமுக தமிழ்நாட்டை ஆண்டு கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகி விட்டன. தமிழ் மக்களின் பரம்பரை நோயாக மறதி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. என்னமோ கருணாநிதி ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியது போல் இன்று சிலர் நினைப்பது வியப்பு அளிக்கிறது.\nபொது மக்கள் குடிக்கும் தண்ணீருக்காக போராடிய நேர்மையான, எளிமையான பெண் என்றும் பாராமல் பட்ட பகலில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொல்லப்பட்டது யார் ஆட்சியில் பின், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த பாவிகளை அண்ணா பிறந்த நாளில் 'நன்னடத்தைக் கைதிகள்' பின், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த பாவிகளை அண்ணா பிறந்த நாளில் 'நன்னடத்தைக் கைதிகள்' என்று விடுதலை செய்தது யார்\nகாலையில் நடை பயிற்சிக்கு சென்ற தா. கிருட்டிணன் வெட்டிகொல்லப்பட்டார். அதுவும் திமுக ஆட்சியில் தான். கட்சியில் இத்தனை காலம் உழைத்தவரை, பெரியார் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவரை, கருணாநிதியின் நண்பர், மூத்த தலைவர் என்றும் பாராமல் அழகிரி வெட்டி கொன்ற போது கருணாநிதி விரல் அசைக்க வில்லையே. கருணாநிதி இருக்கும் வரை நமக்கு ஒன்னும் ஆகாது என்று நம்பியவரை இப்படியா கழுத்து அறுப்பது\nஅதை விட கொடுமை, கோர்ட் உத்தரவின்படி காவல்துறை வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்தனர். ஆனால் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவரை கூட காவல் துறை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்க முடிய வில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல பேர் இன்றைக்கு கோடீஸ்வரர்கள் என்பது கூடுதல் தகவல். எல்லாமே கருணாநிதி ஆட்சியில் தானே நடந்தது\n2009 ஜனவரி 9-ல் திருமங்கலம் இடைத்தேர்தல் மறக்க முடியுமா இந்தத் தேர்தலை வென்று கொடுத்ததற்காக அழகிரியை தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தினார் கருணாநிதி. இந்திய தேர்தல் ஆணையமே மிரளுமளவுக்கு விஞ்ஞான ரீதியில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்ட தேர்தல். \"திருமங்கலம் பார்முலா\" என்று இந்திய அளவில் அனைத்து கட்சிகளும் இந்த பார்முலாவை பேசி, பேசி தமிழ் நாட்டின் மானத்தை வாங்கினர். இந்த பார்முலாவை கண்டு பிடித்து கற்று கொள்ள வைத்த பெருமை கருணாநிதிக்கே கிடைக்கும்\nமன்னித்து விடுங்கள். நான் ஏதும் கற்பனை பண்ணி சொல்ல வில்லை. இறந்தவரை பற்றி சொன்னதற்கு வருந்துகிறேன். இனிமேலே வாய்ப்பு இல்லையே, அதனால் சொன்னேன்.\nநம் மாநில நலனுக்காக திமுக பாதுகாக்கபட வேண்டிய இயக்கம்\n பொதுத்தளத்தில் இருக்கும் யாரும் குறிப்பாக எழுத்தாளர்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள். காரணம் பயம். ஆனால் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு அசாத்திய தைரியம் இருக்கிறது.\nஉங்கள் இடமிருந்து இதுபோன்ற ஒரு பதிவைத்தான் எதிர் நோக்கி காத்து இருந்தேன். வாழ்க வளமுடன்\nசரி, இப்போது தந்தை போய், மகன் வந்து இருக்கிறார். அதை விட்டு விடுவோம். பிரியாணி பிரச்சனைக்கு வருவோம்.\nமாணவரணி தலைவர் யுவராஜின் - CCTV காட்சிகள் மட்டும் இல்லையென்றால், ஸ்டாலின் இப்படி இறங்கி வருவாரா\nதிமுக நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் உள்ளே நுழைந்து இலவச பிரியாணி கேட்டு சண்டை போட்டு அத்துடன் கேஷியர் முகத்தில் குத்துவிட்டனர். அவருடன் வந்த குண்டர்களும் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற செய்தியில் இருந்து மேற்படி கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் அறிவர். இச்செய்கையினால் மக்களின் வாக்கு வங்கி போய் விடுமோ என்ற கவலை. எனவே தான் இந்த சந்திப்பு நாடகம்\nசர்வதேச தொலைக்காட்சியான சி. என். என் வரை இவர்களது \"பெருமை\" சென்றிருக்கிறது. வேறு வழி இல்லை. பயத்தால் வந்தார். 2 ஜி ஊழலை விட, இந்த ஓசி பிரியாணியின் செய்திதான் உலகெங்கும் ஒலித்தது.\nஅந்த யுவராஜ் நபரை நிரந்தரமாக நீக்கவில்லை. தற்காலிக நீக்கம் தான். இன்று பிரியாணி திருடனை சஸ்பெண்ட் செய்துவிட்டு, நாளை ஹார்லிக்ஸ் திருடனை சேர்த்து கொள்வார்கள்.\nதந்தையும் மகனும் காமராஜரை, இந்திராவை நா கூசாமல், அநியாயமாக பேசிய பேச்சுக்கள் தான் எத்தனை வெயிலிலும் மழையிலும் உழைத்த அந்த நல்ல மனிதனை பெருந் தலைவனை கொடைக்கானலில் உல்லாசம் என்று பேசியதை வரலாறு மன்னிக்காது. இன்று தமிழகத்தில் குடிக்காத இளம் தலைமுறையை பார்ப்பது அரிது. மது விலக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லியும் கேக்க வில்லை. தனி மனித ஒழுக்கம் இல்லாது என்ன பயன் வெயிலிலும் மழையிலும் உழைத்த அந்த நல்ல மனிதனை பெருந் தலைவனை கொடைக்கானலில் உல்லாசம் என்று பேசியதை வரலாறு மன்னிக்காது. இன்று தமிழகத்தில் குடிக்காத இளம் தலைமுறையை பார்ப்பது அரிது. மது விலக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லியும் கேக்க வில்லை. தனி மனித ஒழுக்கம் இல்லாது என்ன பயன் மனைவி, துணைவி, இணைவி என்று எத்தனை பெயர்கள்\nஆனால் வரலாறு மிக பெரிய பாடத்தை கற்று கொண்டு இருக்கிறது. தமிழக மக்கள் இவர்களைத்தான் கொண்டாடுவார்கள். மாற வேண்டியது தலைவர்கள் இல்லை. மக்கள்தான். ஆனால் அவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள், உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என்று வரலாறு தெளிவாக கற்று கொடுத்து விட்டது போல் உணர்கிறேன். திருமுருகன் காந்தி போன்ற மனிதர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nவழக்குகளை எப்பாடு பட்டாவது வாபஸ்தான் வாங்கி இருக்கிறாரே தவிர வாதாடியது .. பல கமிஷன்கள் இவருக்காவே பாேடப்பட்டது என்பது வரலாறு ...\nலஞ்சத்தை நியாயப்படுத்த \" தேனை எடுப்பவன் புறங்கையை நக்குவான்\" என்று புது அர்த்தம் கூறியவர் ....எது எப்படியாே தேனையும் எடுத்தார் ..புறங்கையை யும் நக்கினார் ... இதுதான் அவரது எதார்த்தம் ...\nஒலகத்துல எந்த இனத்திற்கும் இல்லாத , செத்தவன விமர்சனம் பண்ணகூடாதுங்கிற, நாகரீகம், பண்பாடு, கெழபோல்டு இதெல்லாம் மழுங்கிப்போன தமிழினத்திற்கு மட்டுமே உண்டு என்பதை இதுபோன்ற நிகழ்வுகளும், உங்களைப்போன்றவர்களின் பதிவுகளும் அவ்வப்போது சுட்டிக்காட்டுகின்றன,\nநீங்க திராவிட இயக்க ஆதாரவாளரா அதை முன்பு ஆதரித்தது சரி,,,\nஇப்பொழுதும் ஆதரிக்கிறீர்கள் என்று சொல்வதைதான் ஜீரணிக்க முடியல,,,,,\nசத்யராஜ் அமைதிப்படைல சொன்ன மாதிரி,, நம்ம சனங்களுக்கு அழுவாச்சின்னா ரொம்ப பிடிக்கும், மூக்கசிந்திக்கிட்டே ஓட்டுப்போடறதுல அவங்களுக்கு அலாதி பிரியம்,,, மணிகண்டன் போன்ற வெளிப்படையான பதிவர்களே மேலே சொன்ன டயலாக்குகளுக்கு உதாரணமாக திகழும்போது அங்கு கூடிய மக்கள் கூட்டத்தை வேறென்ன சொல்ல,,,, காலாகாலத்துல நாடாளுமன்றத்தோட சேத்து தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரோணும், அதுல திமுக நிக்கோணும்,,,,சூராதி சூரன் வீராதி வீரன் பண்பின் சிகரம் ஸ்டாலின் கெலிச்சி தமிழ்நாட்டு சிம் ஆகோணும்,,,,\nகருணாநிதி ஆத்துமா மேலயிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கோணும்,,,,,\nமணிகண்டன் இந்த பதிவு சுவராஸ்யமா இருந்தது,,, அப்படியே இவ்விசயத்தில் கனிமொழியின் அளப்பற்கரிய முயற்சியை பற்றியும் ஒரு பதிவு பாராட்டி போடுங்களேன்,,,\nசெய்த ஊழல்கள், ஜனநாயக படுகொலைகள், அநாகரிகமான அரசியல் அனைத்தும் மறந்து தற்பொழுது புனிதர் ஆகி விட்டார். இதுதான் இன்றைய நிலை.\n//. இரண்டாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் பிளேடு வைத்து உதயசூரியனை வரைய அது அடுத்தடுத்த பல பக்கங்களைக் கிழித்து //\nநான் நான்காம் வகுப்பு படிக்கும் போது பரீட்சை பேடில் பேனாவால் உதயசூரியன் வரைந்தேன். பள்ளி முடியும் வரைக்கும் அதுதான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnewsnow.com/bharathiraja-statement-about-tamilthaaivaazhthu-issue/", "date_download": "2018-08-20T19:04:18Z", "digest": "sha1:M4LH34FXNFUONXEURP6OYOXUXYZLFZJZ", "length": 15641, "nlines": 214, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் தமிழை நீஷபாஷை என்கிறீர்கள்! பாரதிராஜா பாய்ச்சல். | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nநாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் தமிழை நீஷபாஷை என்கிறீர்கள்\nநாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் தமிழை நீஷபாஷை என்கிறீர்கள்\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது குறித்த சர்சையில்இயக்குநர் பாரதிராஜா மிக காட்டமாக ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:\nஎன் இனிய தமிழ் மக்களே\nதமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது சிந்திக்க வேண்டிய சூழலிலே ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான்.\nகேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும் எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு நிலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசிய கவிஞர் வைரமுத்துவை அநாகரிமாகப் பேசிய மதவாதிகளைக் கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன். அந்தச் செம்மொழியை – மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா\nவாழ்வது தமிழ்மண். சுவாசிப்பது தமிழ்க்காற்று. சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்யமாட்டேன் என்று தேசியகீதத்துக்கு மட்டும்தான் மரியாதை செய்வேன் என்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா\nஅறிவார்ந்த தமிழ்க் கூட்டமே, நம் முதுகின்மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீ விழிக்கவில்லையென்றால் உன் உயிரையும் உன் மொழியையும் அழித்து இனத்தையும் அழித்து வாழும் இந்த ஒரு கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு .\nஎந்தத் தமிழனாவது புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்கிறாய் . தமிழில் சொல் என்று போராடியிருக்கிறானா கோயில்களில். இல்லை. சமஸ்கிருதமொழியை அவமானப்படுத்தியிருக்கின்றானா. இல்லை.\nநாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம். ஆனால் நீங்கள்தான் எங்கள் பூமியில் வந்து வாழ்ந்து கொண்டு எங்களைப் புறக்கணிக்கின்றீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப் படித்ததுமில்லை. பழித்ததுமில்லை. நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் தமிழை நீஷபாஷை என்று கூறுகின்றீர்கள்.\nவர்ணாசிரமம்-மனுதர்மம் என்று மனிதர்களைப் பிரித்த இந்து மத வாதிகளே … இன்று தமிழ்நாட்டில் தமிழையே தவிர்க்கின்றீர்களா நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து… அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டாயா நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து… அதுதான் எங்கள் உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டாயா தமிழ் நீஷபாஷை, சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரிகம் கூட மறந்தது ஏன்\nதள்ளாத வயதில் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார் கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்ற வரலாறு தமிழ்நாட்டிலே உண்டு . தெரியுமா தமிழ்நாட்டிலிருந்து கொண்டு தமிழர்களின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது.\nஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய சந்தர்ப்பம் இது.\nபூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப் பட்டது. சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னை இகழ்ந்தவன் நடுங்கிப் புலியெனச் செயல்செய்ய புறப்படு வெளியில் என்று பாடிய பாரதிதாசன் பாடலைப் போல், தமிழா ஒன்று சேர். தமிழா, தமிழால் ஒன்றுபடு. நீறுபூத்த தமிழ்ச் சமுதாயத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.ஒன்று. ஒற்றுமைப்படு. தமிழால் இனத்தால் ஒன்று சேர். தமிழ் வாழ்க\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nபலரின் பாராட்டை பெற்றுவரும் -தஞ்சாவுர் “கத்துக்குட்டி“\nமலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளர்-அம்ப்ரோஸ் நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராகிர்\nநிஜமே நிழலாக நடிக்கும் படம்- “கிரிஷ்ணம்”\n3௦ நாட்கள் வேலை செய்யுறதுக்கு 2 கோடி கொடு என்றால் ரொம்பவும் டூமச்-சீறும்ஜே .சதீஷ்குமார்\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nகணவருக்கான தயாரான கனவு படம் கொடுத்த காதல் மனைவி – “தொட்ரா”\n“கேணி”-படத்திற்கு கிடைத்த கேரளா அரசு விருது\nஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை\n365 நாட்களும் மகளித் தினம் தான்-மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் சினிமாவிற்கு பல திறமைசாலிகளை கொடுக்கயிருக்கும் புது பாட்டு சேனல்\nமீண்டும் பயணிக்க போகும் இரு இயக்குனர்கள் -சுந்தர பாண்டியன்2\nகோலமாவு கோகிலா - விமர்சனம்\n2683 தமிழக மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-20T18:33:20Z", "digest": "sha1:Q2HFI7GYZGIKCNLLTAMCOU6A5EU34OI6", "length": 13052, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n20ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை குறித்து அறிய, காண்க திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்.\n22 டிசம்பர் 1419 (அகவை 48–49)\nயோவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் மற்றும் எதிர்-திருத்தந்தையர்கள்\nபல்தசாரே கோசா (c. 1370 – 22 டிசம்பர் 1419) என்பவர் இருபத்திமூன்றாம் யோவான் என்னும் பெயரினை ஏற்று மேற்கு சமயப்பிளவின் போது பீசாவிலிருந்து திருத்தந்தை பதவிக்கு உரிமை கொண்டாடியவர்களுள் ஒருவர் ஆவர். கத்தோலிக்க திருச்சபையில் இவர் எதிர்-திருத்தந்தை எனக்கருதப்படுகின்றார்.\nபொலோக்னாவின் சட்ட முனைவர் பட்டம் பெற்றப்பின்பு, மேற்கு சமயப்பிளவின்போது உரோமைச்செயலகத்தில் பணி புரிந்தார். திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் 1402 இல் இவரை கர்தினாலாக உயர்த்தினார். 1403 முதல் 1408 வரை இவர் பொலோக்னாவுக்கான திருப்பீடத்தூதுவராகப்பணியாற்றினார்.[1] மேற்கு சமயப்பிளவுக்கு முடிவுகான 1408இல் இவர் பன்னிரண்டாம் கிரகோரியினை விட்டுப்பிரிந்து பீசா பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டார். அச்சங்கம் ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக தேர்வு செய்தது.. மே 1410இல் ஐந்தாம் அலெக்சாண்டர் இறக்கவே மே 25 இவர் திருத்தந்தையாக தேர்வானார்.\nமேற்கு சமயப்பிளவுக்கு முடிவுகான காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் நவம்பர் 5, 1414இல் கூடியது. இதன் இரண்டாம் அமர்வில் இது உரோமையின் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் ஒப்புதலைப்பெற்றது. இதல் மூன்று திருத்தந்தையரும் தானாக பணி துறக்கக் கோரப்பட்டது.\nமுதலில் இதற்கு இருபத்திமூன்றாம் யோவான் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், பின்னர் பிற திருத்தந்தையரும் பதவி விலகினால், தாமும் விலகுவதாக மார்ச் 2, 1415 அன்று அறிவித்தார். எனினும் மார்ச் 20 அன்று சங்கத்திலிருந்து தப்ப முயன்ற இவரை கைது செய்து இவரிடமிருந்து பதவி துறப்பு பெறப்பட்டது. திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் பதிள் ஆள் அவரின் பணிதுறப்புக்கடிதத்தை சங்கத்தினர்முன் வாசித்தார். அவிஞ்ஞோனின் பதின்மூன்றாம் பெனடிக்ட் இச்சங்கத்தின் முடிவை ஏற்காததால் அவர் திருச்சபையினை விட்டு விலக்கப்பட்டார். இதன்பின்பு திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார். இது இச்சிக்கலுக்கு முடிவாக அமைந்தது.\nஇருபத்திமூன்றாம் யோவான் ஐந்தாம் மார்ட்டினின் தேர்வை ஒப்புக்கொன்டாலும், அவர் கைதியாக இருந்தார். 1418இல் பிணைத்தொகை செலுத்தி விடுதலையானார். 1419இல் இவர் துஸ்குலுமின் கர்தினால் ஆயராக்கப்பட்டார். இதன் பின்பு சிலமாதங்களில் இவர் இறந்தார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கு சமயப்பிளவின் திருத்தந்தையரும் எதிர்-திருத்தந்தையரும்\nபதினொன்றாம் கிரகோரி உரோமைக்கு திரும்புதல்\n- மேற்கு சமயப்பிளவின் முடிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2014, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/page/4/", "date_download": "2018-08-20T18:26:25Z", "digest": "sha1:IMUV545HSKVY7BJJZYK3R5V3O5OGFACI", "length": 11710, "nlines": 412, "source_domain": "dheivamurasu.org", "title": "தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு | தமிழா வழிபடு தமிழில் வழிபடு. வாழ்வியல் சடங்குகள் செய்ய, பயிற்சி பெற | Page 4", "raw_content": "\nநவராத்திரி வழிபாடு பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3)\nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 3) நவராத்திரி வழிபாடு. 1.நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா பொழுது போக்கா 2.நவராத்திரி (சிறப்பு தத்துவ) வழிபாடு 3.திருமகள் 108 போற்றி. நூலின் விலை ரூ.30\nசிரீ ஹயக்ரீவர் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் – சலங்கை பூசை – 11.08.2017 @ ஃபாவன் டேக் அரங்கம் – கீழ்ப்பாக்கம் – முன்னிலை : முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்\nவிநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள், உள்ளுறை\nபண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 2) விநாயகர் சதுர்த்தி வழிபாடு உள்ளுறை, வழிபாட்டு முறைகள், விநாயகர் அகவல், 108 போற்றி, போற்றி நானூறு. நூல் விலை: ரூ.30/- தொடர்பு: 94449 03286 / 9380919082\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய நூல்கள்\nஉலகத் தமிழ்ச் சங்க மாநாடு\nஉலகத் தமிழ்ச் சங்க மாநாடு நடத்துதற்கான கலந்தாய்வுக் கூட்டம் – சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம்\nதெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்\n29 06 2017 ஐயா குருபிரான் அவர்களின் தமையனார் தெய்வத்திரு. மு.பெ.சத்தியானந்தம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் வழிபாடும் ஒன்பதாம் திருமுறை முந்றோதலும்\nதிரு நம்பி ஆரூரரின் திருக்கூத்து தரிசனம்\n06-08-2017 திரு நம்பி ஆரூரரின் திருக்கூத்து தரிசனம்\nசிவ.காஞ்சிராஜன் சிவத்திருமதி. மாலா காஞ்சிராஜன் இணையரின் மணி விழா\n07-08-2017 சிவத்திரு. சிவ.காஞ்சிராஜன் சிவத்திருமதி. மாலா காஞ்சிராஜன் இணையரின் மணி விழா – அம்பத்தூர் , பானுநகர் மல்லிகா திருமண மண்டபத்தில்\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் நாடு விடுதலை பெற்றது\n‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம் உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கப்பட்டவரல்லர். எனவே, இராஜாஜி அவர்களிடம்...\nவிராலிமலை திருப்புகழ் ஐந்துபூதமும் விரிவுரை\n08.07.2017 விராலிமலை திருப்புகழ் ஐந்துபூதமும் விரிவுரை – கொற்றவை திருக்கோயில் – தமிழ்த் தாய் தேசுமங்கையர்க்கரசி அரங்கம்\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://flypno.blogspot.com/2013/01/blog-post_5564.html", "date_download": "2018-08-20T18:04:54Z", "digest": "sha1:WUJPB2G7YC2V7KYCCBJUGYRIE7EMBEAW", "length": 13134, "nlines": 104, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: விஸ்வரூப தொடர் -என் அன்பு சகோதர சொந்தங்களே!!", "raw_content": "\nசெவ்வாய், 29 ஜனவரி, 2013\nவிஸ்வரூப தொடர் -என் அன்பு சகோதர சொந்தங்களே\n​​​​​​​​​ என் அன்பு சகோதர சொந்தங்களே\nபணதுக்குதான் ரசிகன் – நாம் உதவிக்குத்தேவை ஒரு நண்பன் (அவன் ஒரு முஸ்லிமா கூட இருக்கலாம்).\nநடிகனை நினைத்து உன் நண்பனை இழந்துவிடாதே\nஇன்னைக்கு முஸ்லிம் மாதம், நாளைக்கு இந்துமதம், நாளான்னைக்கு கிறிஸ்துவ மாதம் இதுதான் இவர்களின் பொழைப்பு.\nஎத்தனை பேர் ஒரு முஸ்லிம் நண்பனுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள் இது முஸ்லிமுக்கும் பொருந்தும் பிறர் கஷ்டத்தில் இருக்கும்போது (இது இஸ்லாத்தின் பண்பு) மற்றும் அனைவருக்கும் பொருந்தும்-நம்மீது தவறு இருப்பின்\nநம்ம கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி – நாமலே சண்டை போடலாமா\nபடம் எத்தனை வேண்டுமென்றாலும் வரும் போகும் எதர்க்காக ஒரு குறிப்பிட்ட மததினரை மட்டும் காயப்படுத்த வேண்டும். இவர்கள் கூறும் தீவிரவாதிகள் வேற எந்த மதத்திலேயும் இல்லையா\nஒரு திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படம் எவ்வளவு நச்சு கருத்து நிறைந்ததாக இருக்கும். உங்கள் சகோதர மததினருடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.\nசிலர் கூறுகின்றனர் படத்தை பார்க்காமலேயே ஏன் எதிர்க்கிறீர்கள் என்று விஷம் என்று தெரிந்துகொண்டு குடித்து பார்த்துத்தான் தூக்கி போடுவேன் என்பதில் எந்த அறிவும் இல்லை. தமிழக திரைப்பட வரலாற்றில் தொடர்ந்து ஒரு சிறுபான்மை இனம் கடுமையாக தாக்கப்படு, கேவலபடுத்தப்பட்டு வரும் போக்கின் உச்சக்கட்டம்தான் இந்த விஸ்வரூபம். இன்னும் சிலர் கேட்கிறார்கள் இது வரை இந்த மாதிரி படமே வரவில்லையா அப்பவெல்லாம் சும்மா இருந்துட்டு இப்ப மட்டும் என்ன\nஅப்படியில்லை, சமீபத்தில் டெல்லியில் நடந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை ஒட்டி கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன, ஏன் இதற்க்கு மட்டும் இவ்வளவு போராட்டம், இதுவரை இந்தியாவில் கர்ப்ழிப்பே நடக்கவில்லையா என்று கேட்பது போன்றுதான் உள்ளது. அன்று நடந்த போராட்டம் இதுவரை நடந்தேறிய அனைத்து கற்பழிப்புக்கும் சேர்த்து மக்கள் கொந்தளிதாதன் விளைவே அது. அதே போல தான் இந்த விஸ்வரூபம், பொறுத்து பொறுத்து பொங்கி எழுந்துள்ளோம். புரிந்துகொள்ளவும்.\nவெறும் பக்ரீத் பண்டிகையில் முஸ்லிகளிடம் பிரியாணி வாங்கி சாப்பிடுவதிலும் வாழ்த்து சொல்வதிலும் மட்டும் இல்லை மதநல்லிணக்கம், அவர்களின் பாயும் அநியாயமான, நேர்மையற்ற தாக்குதல்களை தட்டி கேட்பதும் தான் உண்மையான சகோதராதுவம், அதர்க்காக உங்களை அடி உடை வாங்க சொல்லவில்லை, அதற்க்கு நாங்கள் இருக்கின்றோம், நேர்மையாக உள்ள குமுறல்களை புரிந்தவர்களாக நீங்கள் செய்யவேண்டியது ஒரு சில நிமிடங்கள் சிலவு செய்து உங்கள் முக புத்தகத்தில் “I AM STRONGLY AGAINST VISHVARUBAM AS ITS BADLY HURTS MY MUSLIM BROTHERS FEELINGS” என்று பதிவிடுங்கள் நாங்கள் உங்களை போலவே கௌரவத்துடனும் சகோதராதுவதுடனும் வாழவேண்டும் என்பதுதான். அவ்வாறே வாழ்ந்தும் வருகிறோம். அதில் எந்த விட சந்தேகமும் இல்லை. ஆனால் இது போன்ற கேவலமான படங்களினால் தமிழ்நாட்டில் பல கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு மீண்டும் தலைத்தோங்கிய சகோதர்த்துவம் செத்துவிடுமோ என்று இஸ்லாமியர்களாகிய நாங்கள் அஞ்சுகிறோம்.\nஇதுவரை என்னுடைய நட்பு வட்டாரத்தில் உள்ள எனக்கு தெரிந்த நேர்மையாக சிந்திக்கும், பிரச்சனைகளை அறிவுபூர்வமாக அணுகும் மாற்று மாத நண்பர்கள், இவ்விசாயத்தில் சமூக அக்கறை இல்லாமல் இதுவரை மௌனம் காப்பதுதான் மனதிர்க்கு வேதனையாக இருக்கின்றது.\nசற்று நேரம் எங்கள் பக்கம் இருந்து புரிந்து கொள்ள முயலுங்கள். காயப்பட்டுக்கிடக்கும் ஒரு சமூகத்தை இப்படி அன்னியபடுத்தாதீர்கள், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வக்கிரங்களை ஆதரிக்காதீர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral உள்ளங்கள் மேம்பட, சமுதாய சிந்தனை, சிந்திபதற்க்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nவிஷ்வரூபத்தொடர் - இது தேவையா\nவிஷ்வரூபத்தொடர் - எந்த அப்பன் இப்படி செய்வான்\nவிஸ்வரூபத்தொடர் - தீர்ப்பும், தடையும்\nவிஸ்வரூப தொடர் -என் அன்பு சகோதர சொந்தங்களே\nவிஷவரூப தொடர் - பாரதிராஜா என்ன அவ்வளவு பெரிய அப்பா...\nவிஸ்வரூபம் திரைப்படம் எங்கும் ஓடாது\nஇந்தியாவுக்குள் வந்த ஒரு கூட்டம் யார் என்று சொல்லத...\nஒரு இஸ்லாமியனினதும், ஒரு நியாயவாதியினதும் பார்வை இ...\n401 வது பதிவு, குறைந்தது 4 பேர் படிப்பாங்களா\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375447", "date_download": "2018-08-20T19:19:56Z", "digest": "sha1:IN5XPVQWMM5YXDBQ67FYQXE5GVDVSNVN", "length": 12316, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "டிடிவி குக்கர் சின்னம் கேட்ட வழக்கில் EPS, OPS தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் | Filed in the Delhi High Court on EPS and OPS in the case of DTV cooker logo - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடிடிவி குக்கர் சின்னம் கேட்ட வழக்கில் EPS, OPS தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்\nடெல்லி: தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலின்போது பயன்படுத்த குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ்,இபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வழக்கை பிப்.15ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி நேற்று உத்தரவிட்டார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி என ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக அம்மா அணி என்று டிடிவி.தினகரனும் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து எதிரெதிர் அணியாக செயல்பட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். பின்னர் அதிமுகவின் கட்சி , இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தங்களுக்கு ஒதுக்கக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதையடுத்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டையும் மதுசூதனன் தலைமையிலான் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிக்கு கடந்தாண்டு இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.\nஇதையடுத்து அதிமுக அம்மா அணியென தனியாக செயல்பட்டு வந்த தினகரன் அணி அந்த பெயரை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து நடந்து முடிந்த ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ஆர்கே.நகர் இடைத்தேர்தலின் போது சுயேச்சையாக வழங்கப்பட்ட குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தற்போது இடைத்தேர்தலில் போது பயன்படுத்திய குக்கர் சின்னத்தை எங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கடந்த மாதம் டிடிவி.தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.இந்த நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. இதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் குக்கர் சின்னம் தொடர்பாக எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து நீதிபதி உத்தரவில்,” டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டார்.\nttv dinakaran cooker logo தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம்\nஇந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பது உறுதியானது\nகேரளாவை உலுக்கிய மழை வெள்ளம் தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு: மத்திய அரசு நடவடிக்கை...நோய் பரவுவதை தடுக்க மருத்துவ முகாம்கள்\nஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் புதிய குழு: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் வேலை மோசடி: மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 2 பேர் கைது\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45058-6-goats-missing-in-a-same-day-at-vizhupuram.html", "date_download": "2018-08-20T18:46:51Z", "digest": "sha1:PWHHJTRI5WF7K4N4UECF4CUN3HJ2JADT", "length": 12352, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மர்ம விலங்கு? இரவில் கதறும் ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த கிராமம்! | 6 Goats Missing in a Same day at Vizhupuram", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n இரவில் கதறும் ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த கிராமம்\nவிழுப்புரத்தில் ஒரே இரவில் ஆறு ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு, மேலும் இரண்டு ஆடுகளை இழுத்துச் சென்றுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள செங்காட்டு மலையை ஒட்டிய பகுதியில் உள்ள சாத்தனந்தல், மேல்தாங்கல், சோழங்குணம் கிராமங்களில் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம், கன்று குட்டிகள், ஆடுகள், நாய்களை மர்ம விலங்கு தொடர்ந்து கொன்று வந்தது. அப்போது நீலகிரி வன உயிர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி, கால்தடம், கழிவுகளை அடையாளம் கண்டு அப்பகுதியில் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். கோடை காலத்தில் மலை மீது தண்ணீர் வறண்டதால் அங்கிருந்து கீழ் பகுதிக்கு சிறுத்தை வந்துள்ளது. மழை பெய்ததும் சிறுத்தையின் தாக்குதல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்ய கேமிராக்களையும் வனத்துறையினர் பொருத்தினர்.\nஅதன்பின்னர் சில நாட்கள் குறைந்திருந்த சிறுத்தையின் தாக்குதல், மீண்டும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. செங்காட்டு மலைக்கு அருகில் உள்ள இல்லோடு மலை அடிவாரத்தில் இருந்த கால்நடைகள் சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகின. அதன்பிறகு மழை துவங்கியதால் சிறுத்தையின் தாக்குதல் நின்றது. இந்நிலையில் கடந்தாண்டு செஞ்சி பகுதியில் பருவமழை சரியாக பொழியவில்லை. ஏரி, குளங்கள் நிரம்பாமல் வறண்டுள்ளன. மலைகளிலும் சுனைகள், நீர்நிலைகள் வறண்டுவிட்ட நிலையில், நேற்று இல்லோடு கிராமத்தில் ஆடுகளை மர்ம விலங்கு கொன்றுள்ளது. மலையடிவாரத்தில் உள்ள சேகர் (37) என்பவர், நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்தில் உள்ள ஓலை கொட்டகையில் 10 வெள்ளாடுகளையும், ஒரு குட்டி ஆட்டையும் கட்டி வைத்து விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார்.\nநீண்ட நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது ஒரு குட்டியும், ஐந்து ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தன. அதில் மூன்று ஆடுகள் அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி உயிர் தப்பி இருந்தன. மேலும் இரண்டு ஆடுகளை மர்ம விலங்கு இழுத்து சென்றுள்ளது தெரிய வந்தது. ஆடுகளை தாக்கியது சிறுத்தையா அல்லது வேறு விலங்கா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மலை அடிவாரத்தில் மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க நான்கு இடங்கிளில் வனத்துறையினர் கேமராக்களை பொருத்தியுள்ளனர்.\n‘காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பகத் சிங்கை சிறையில் பார்க்கவில்லை’ பரப்புரையில் பொய் சொன்ன மோடி\nநீட் வயது உச்சவரம்பை உறுதி செய்தது நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏடிஎம்மில் 32 ஆயிரம் நூதன முறையில் திருட்டு \nமகளின் பாலியல் வன்கொடுமைக்கு தாயே உடந்தையான கொடூரம்\nஅரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய ஆசிரியர் : குவியும் பாராட்டுக்கள்\nஅகச்சிவப்பு கதிர் கேமராவில் சிக்கிய பனி சிறுத்தைகள்\nநீட் தோல்வி: மாணவி தற்கொலை முயற்சி\n“என்ன மன்னிச்சிருங்க அப்பா” - பிரதீபா உருக்கமான கடிதம்\nபிரதீபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமருத்துவமே படிப்பேன் என இலட்சியம் கொண்ட பிரதீபா - உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பகத் சிங்கை சிறையில் பார்க்கவில்லை’ பரப்புரையில் பொய் சொன்ன மோடி\nநீட் வயது உச்சவரம்பை உறுதி செய்தது நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:06:56Z", "digest": "sha1:GAKZRZIS5XX2ZUBPU7TAS5XQOJV72QNF", "length": 14680, "nlines": 168, "source_domain": "news7paper.com", "title": "சீனாவின் சக்திக்கு முன் சுஷ்மா அடிபணிந்து விட்டார்- டோக்லாம் விவகாரத்தில் ராகுல் விமர்சனம் - News7Paper", "raw_content": "\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா கால் இறுதிக்கு முன்னேற்றம்; கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி…\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான சர்வதேச விருது: நோபல் பரிசுக்கு நிகரானது\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை: ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nசீனாவின் சக்திக்கு முன் சுஷ்மா அடிபணிந்து விட்டார்- டோக்லாம் விவகாரத்தில் ராகுல் விமர்சனம்\n‘எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு மறதி வந்தா பொண்ணு தருவாங்களா’… கஜினிகாந்த் விமர்சனம்\nஇன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள்… பட்டியலை பாருங்கள்\nஓவியா-சிம்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு\nவிஸ்வரூபம் 2′ மீது வழக்கு: விளம்பரத்திற்காக போடப்பட்டதா\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசாம்சங் ஸமார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\nஇந்த ஆடிப்பெருக்கில் உங்களுடைய ராசிக்கு என்னென்ன விஷயங்கள் பெருகப்போகுது\nகாதுக்குள்ள அப்பப்போ கொய்ங்ங்…. ன்னு சத்தம் கேட்குதா… இத செஞ்சா சரியாகிடும்… | Top…\nநம்ம பாட்டி காலத்து அரிசிதான் உலகின் ஆரோக்கியமான அரிசினு இன்று ஆராய்ச்சிகள் சொல்கிறதாம்…\nபிறந்த குழந்தையின் கண் பார்வை வளர்ச்சி: 0 முதல் 12 மாதங்கள் வரை\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் சீனாவின் சக்திக்கு முன் சுஷ்மா அடிபணிந்து விட்டார்- டோக்லாம் விவகாரத்தில் ராகுல் விமர்சனம்\nசீனாவின் சக்திக்கு முன் சுஷ்மா அடிபணிந்து விட்டார்- டோக்லாம் விவகாரத்தில் ராகுல் விமர்சனம்\nடோக்லாம் விவகாரத்தில் வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் சக்திக்கு முன்பாக சுஷ்மா அடிபணிந்து விட்டார் என்று அவர் கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு சிக்கிம் மாநிலத் தின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன் றது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவம் இடையே 50 நாட்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் பதில் அளிக்கும்போது, “முதிர்ச்சியான ராஜதந்திரத்தின் மூலம் டோக்லாம் பிரச்சினையில் எவ்வித இழப்பு மின்றி தீர்வு காணப்பட்டுள்ளது. டோக்லாமில் என்ன நிலை காணப் பட்டதோ, அதே நிலை நீடிக்கிறது. அங்கு எந்தவொரு மாற்றமும் இல்லை” என்றார்.\nஇது தொடர்பாக ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத் தில், “சீனாவின் சக்திக்கு முன்பாக சுஷ்மா ஸ்வராஜ் அடிபணிந்து விட்டார். இது நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிகுந்த வீரர் களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“டோக்லாமில் சீனா தனது செயல்பாடுகளை மீண்டும் சத்த மின்றி தொடங்கிவிட்டது. இதற்கு இந்தியாவோ, பூடானோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று அமெரிக்க எம்.பி. ஒருவர் கூறிய தாக வெளியான செய்தியையும் ராகுல் தனது ட்வீட் உடன் இணைத்துள்ளார்.\n“பரஸ்பர சவுகரியம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை உறுதி செய்யவே பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேசினர். இரு தலைவர்களின் இந்த சந்திப்பில் 3 நோக்கங்களும் நிறைவேறியுள்ளது” என்றும் சுஷ்மா குறிப்பிட்டார்.\nPrevious articleதகவல் உரிமை சட்டத்தில் திருப்பதி தேவஸ்தானம்: நடிகை ரோஜா வலியுறுத்தல்\nNext articleவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை: ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா கால் இறுதிக்கு முன்னேற்றம்; கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான சர்வதேச விருது: நோபல் பரிசுக்கு நிகரானது\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை: ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nபார்க் ஹோட்டல் பார்ட்டி நினைவிருக்கா ஸ்ரீகாந்த், நீங்க என்னுடன்…: ஸ்ரீ ரெட்டி பகீர் போஸ்ட்...\nபிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்\nஇன்றைய இரவு சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யலாம்.. என்னலாம் செய்யவே கூடாது.. என்னலாம் செய்யவே கூடாது\nசினிமாவின் பொல்லாதவன் தனுஷுக்கு இன்று 35வது பிறந்தநாள்…\nகர்ப்பகாலத்தில் பெண்கள் விரதமிருப்பது நல்லதா\nகருணாநிதி உடல்நலம் பெற்று தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும்: பாஜக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள்...\nசின்ன வயசுலயே விறைப்புத்தன்மை குறைய என்ன காரணம் எப்படி சரிசெய்யலாம்\nஇங்கிலாந்துடன் நாளை முதல் டி20 போட்டி: சவாலுக்கு தயாரா கோலி படை\nகருணாநிதியின் அசைவுக்காக ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பித்து நிற்கிறது: டி.ராஜேந்தர் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.ujiladevi.in/2012/12/blog-post_17.html", "date_download": "2018-08-20T18:49:50Z", "digest": "sha1:DPFUGICWT3AXW2ZOI6YHIYUFJFQHSSI3", "length": 39228, "nlines": 115, "source_domain": "www.ujiladevi.in", "title": "மானும் சிங்கமும் உன் முன்னால்... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமானும் சிங்கமும் உன் முன்னால்...\nஅன்பெனும் தேரில் ஏறி கருணையின் வடிவாக வந்த குருவென்ற ஞான பொருளே உன்னை தினம் தினம் தொழுவது எப்படி உன்னை தினம் தினம் தொழுவது எப்படி குளிர்ந்த உன் பாதத்தில் வீழ்ந்து என் பாவத்தை கழுவும் படி அழுவது எப்படி குளிர்ந்த உன் பாதத்தில் வீழ்ந்து என் பாவத்தை கழுவும் படி அழுவது எப்படி அஞ்ஞானம் என்ற பாதாள சிறையில் இருந்து மீண்டு நான் எழுவது எப்படி அஞ்ஞானம் என்ற பாதாள சிறையில் இருந்து மீண்டு நான் எழுவது எப்படி கசடும் அசடும் நிறைந்த என் மனதில் தத்துவ விதைகளை ஊன்றி வெளிச்ச பயிர் வளர உழுவது எப்படி\nகன்னக்கோல் பிடித்த கள்வரின் கூட்டத்தில் நாயகனாக நானிருக்கிறேன். தங்கமும் வெள்ளியும் தகதகவென மின்னுகின்ற வயிர குவியலும் என் நெஞ்சத்தை ஈர்க்கிறது. பஞ்சு மெத்தையின் மேல் பண கட்டுகளை விரித்து தூங்காமல் காத்திருக்கும் பொழுதுக்காக ஏங்குகிறேன் ஏங்கி ஏங்கி கண்ணீர் வடித்து நீ கொடையாக கொடுத்த ஒவ்வொரு மணித்துளியையும் வீணடித்து விளையாடுகிறேன்.\nசின்ன இடையழகும் சிங்கார நடையழகும் சிருங்கார நகைப்பழகும் முத்து பல்லழகும் முடிந்து வைத்த முடியழகும். கத்தும் குயில் ஓசையாய் கண்டத்தில் எழும்புகின்ற வார்த்தை இசையழகும் வரிசங்க கழுத்தழகும் வண்ணமுகில் தவழும் மார்பழகும் சுண்ட்டி இழுத்தென்னை வில்லாக வழைக்கிறது.\nதேனுக்குள் விழுந்துவிட்ட சிற்றெறும்பு போல பாலுக்குள் விழுந்துவிட்ட பட்டாம் பூச்சியை போல நூலுக்குள் சிறைபட்டு கொண்ட வண்டினை போல மனித ஊனுக்குள் அகப்பட்டு காமம் என்ற மத்து கடைய விஷமில்லாத நாகம் பசி கொண்டு துடிப்பது போல துடிதுடித்து பதைபதைத்து ஒளிபொருந்திய கண்கள் குருடாகி வாழ்க்கை பாதையெல்லாம் தடுமாறி கிடக்கிறேன்.\nகண்ணுக்கு எட்டும் நிலமெல்லாம் என் கைவசம் வேண்டும். கண்ணாடி மாளிகைக்குள் இருந்து நான் அரசாள வேண்டும். மன்னாதி மன்னரெல்லாம் வந்து என் வாசலில் காத்திருக்க வேண்டும். என் உத்தரவு பெற்ற பிறகே சூரியனும் உதித்து எழ வேண்டும். சீறுகின்ற கடலலையும் என் பெயரை சொன்னால் சுருட்டி கொண்டு பின்னாலே நகர வேண்டும். என் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் சூறாவளி காற்றும் சும்மா இருக்க வேண்டும். ஆகாயம் பூமியெல்லாம் என் அதிகார கொடி மட்டுமே பட்டொளி வீசி பறக்க வேண்டும்.\nஇப்படியே என் ஆசை நதி பெருக்கெடுத்து ஓடியது எப்படியும் சாகாமல் கல்பகோடி காலம் வாழ்வோம் என்ற அகங்கார ஊழி காற்று என்னிடம் மட்டுமே சுழன்று சுழன்று வீசியது தேடிய பணமெல்லாம் ஒருநாளில் கரையும் மயான வாசல் வரை கூட அது துணைக்கு வராது சொர்க்கத்தில் இடம் தேடி தராது. ஞானம் இல்லாமல் நிழலை நிஜமென்று பின்தொடர்ந்து சென்ற நான்.....\nநூலில்லாத பட்டம் வானத்தில் பறக்காது சோறு இல்லாத பானை சுகத்தை தராது. நீர் இல்லாத குளம் கொக்குகளை கவராது பால் இல்லாத பசுக்கு புல் கூட கிடைக்காது. என்பதை அறிந்தவுடன் கன்னத்தில் அறையப்பட்ட கயவன் போல் ஒருநிமிடம் நின்றேன். அப்போது என் குருவே உன் திருவடி நிழலை தரிசனம் கண்டேன்.\nஇரத்த நதி நரம்பு பாதையில் நடைபோடும் காலம்வரை மங்கையரின் மேல் மயக்கம் தொடரும் தசைகள் சுருங்கி உடல் ஆட்டம் கண்டால். நூர்க்காத இராட்டினம் போல் மூலையில் கிடப்பாய். அதிகாரம் கைவிட்டு போனால் ஆட்டு குட்டி கூட உந்தன் கூந்தலை கடிக்கும் பணமும் பதவியும் பகட்டு என்றாவது ஒருநாள் மறைந்து போகும். எப்போதும் மறையாத எப்போதும் அழியாத ஆனந்த சரினத்தை உனக்கு காட்டுகிறேன் என்று கரம் நீட்டி என்னை அழைத்தாய்.\nஉன் விரல் பற்றி சோலைக்குள் நடந்தேன் சீறுகின்ற பாம்பு கூட உனக்கு குடை பிடிப்பதை கண்டேன். கொல்லவரும் புலியும் உன் பாதம் பணிவதை கண்டேன். அஞ்சி ஓடுகின்ற புள்ளிமான் கூட்டம் உன் நிழலின் சலனத்தை உணர்ந்த பிறகு சிங்கத்தின் முன்னால் நின்று குட்டிக்கு பால் கொடுப்பதை கண்டேன்.\nஇருளை போக்குவது குருவென்றாய் இதத்தை தருவதும் அவரென்றேன் அருளை தருவது குருவென்றாய் அமுதை தருவதும் அவரென்றேன் மருளை நீக்குவது குருவென்றாய் மயக்கம் போக்குவதும் அவரென்றேன் திருவை தருவது குருவென்றாய் தீர்க்கம் தருவதும் அவரென்றேன்\nஉருவில் சிறியவர் ஆனாலும் உணர்த்தும் அறிவில் பெரியவர் அவரன்றோ கருவில் இருக்கும் குழந்தைக்கும் அறிவை தருவது அவரன்றோ தெருவில் கிடக்கும் ஏழைக்கும் தீன தயாளன் அவரன்றோ மறைந்த உண்மை தெரிந்து மன்னவன் திருவடி தொழ நினைத்தேன்\nஅன்பெனும் தேரில் ஏறி கருணையின் வடிவாக வந்த குருவென்ற ஞான பொருளே உன்னை தினம் தொழுவது எப்படி குளிர்ந்த உன் பாதத்தில் வீழ்ந்து என் பாவத்தை கழுவும் படி அழுவது எப்படி குளிர்ந்த உன் பாதத்தில் வீழ்ந்து என் பாவத்தை கழுவும் படி அழுவது எப்படி அஞ்ஞானம் என்ற பாதாள சிறையில் இருந்து மீண்டு நான் எழுவது எப்படி அஞ்ஞானம் என்ற பாதாள சிறையில் இருந்து மீண்டு நான் எழுவது எப்படி கசடும் அசடும் நிறைந்த என் மனதில் தத்துவ விதைகளை ஊன்றி வெளிச்ச பயிர் வளர உழுவது எப்படி\nகுருஜியின் மற்ற இலக்கிய கட்டுரையை படிக்க\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://naangamthoon.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:49:05Z", "digest": "sha1:DQJWDRLH2ZN5XWWGEKJPL5OX27TLI4AQ", "length": 6363, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news மாவட்டம் Archives - Naangamthoon", "raw_content": "\nஅரியலூர் இராமேஸ்வரம் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கரூர் காஞ்சிபுரம்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை\nசென்னை தலைமை செயலகம் முன்பு …\n2 லட்சம் கனஅடி நீர் திறப்பு;காவிரியில் வெள்ளப்பெருக்கு\nகனமழை.,குமரி, நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை\nசென்னையில் 6 மணி நேரத்தில் 35 மி.மீ. மழைப்பதிவு\nசென்னையில் நேற்று மாலை 5 மணி…\nசென்னை கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் எடப்பாடி…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சி.பி.ஐ.க்கு அதிரடி மாற்றம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n“கலைஞர் திமுக”என்னும் போஸ்டர்களால் அரசியலில் பரபரப்பு\nவாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 14 வது இடம்\nவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற…\nசென்னையின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/25325", "date_download": "2018-08-20T18:05:21Z", "digest": "sha1:SLQ76O4X5MG2KQL4KYU55POCGNIHNTIL", "length": 7066, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு ஷிப்லி பாறூக் உதவி - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் காத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு ஷிப்லி பாறூக் உதவி\nகாத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு ஷிப்லி பாறூக் உதவி\nகிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காத்தான்குடி அஷ்-ஷூஹதா பள்ளிவாயலுக்கு 55,000.00 ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதணங்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கும் வைபவம் அண்மையில் அஷ்-ஷுஹதா பள்ளிவாயலில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பள்ளிவாயல் தலைவர், நிர்வாகசபை உறுப்பினர்கள் உட்பட அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,காத்தான்குடி நகரில் ஒருசில பள்ளிவாயல்களை தவிர எனைய பள்ளிவாயல்கள் பல்வேறு குறைபாடுகளுடன் தேவைகளுடையனவாக காணப்படுகின்றன. அவைகளை இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியோடு நிவர்த்தி செய்வதற்கு முயற்ச்சி செய்துகொண்டிருக்கின்றேன்.\nஅந்த வகையில் இப்பள்ளிவாயலுக்கு தேவையாக இருந்த ஒலிபெருக்கி குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக ஒலிபெருக்கி சாதணங்களை இன்று வழங்கியிருக்கின்றேன் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இப்பள்ளிவாயலுடைய அபிவிருத்திற்கு தன்னால் முடியுமான உதவிகளை வழக்குவேன் என்று தெரிவித்தார்.\nPrevious articleகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nNext articleகர்ப்பிணி பெண்களும், குங்குமப்பூவும்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/02150757/Cross-Languages.vpf", "date_download": "2018-08-20T18:29:40Z", "digest": "sha1:GY7YJSWP45H2BXVQMVDHXH2IDJS47YEY", "length": 15720, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cross Languages || சிலுவை மொழிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமானிடருடைய பாவங்களைச் சுமந்து ஒரு பாவியாகவே உருமாறி, பாவியின் கோலம் கொண்டு சிலுவையில் மரிக்கிறார் இயேசு.\nஇயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று உரத்த குரலில் கத்தினார் (மத்தேயு 27:45)\nஇயேசு சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தை இது.\nவலியின் வார்த்தை, நிராகரிப்பின் வார்த்தை. வலிகளிலேயே மிகப்பெரிய வலி நிராகரிக்கப்படும் வலி தான். இயேசு இப்போது நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.\nமக்களின் பாவங்களைப் போக்கவேண்டுமெனும் மாபெரும் லட்சியத்தின் வருகை அவர். விண்ணின் மகிமையைத் துறந்து, மண்ணின் புழுதியில் புரண்டு, வியர்வைக் கரையில் நடந்து, இறையரசை அறிவித்துத் திரிந்தவர் இயேசு.\nகடைசியில் மதவாதிகளாலும், அதிகாரிகளாலும், ஆளும் வர்க்கத்தாலும், ஏன் கூட இருந்த நண்பராலுமே நிராகரிக்கப்பட்டார்\nநிராகரிப்பின் வலி அவருக்குப் புதியதல்ல. இப்போதைய இயேசுவின் கதறல் மக்கள் அவரை நிராகரித்ததால் வந்ததல்ல. அவரது தந்தையாம் கடவுள் அவரை நிராகரித்ததால்.\nநாம் நினைப்பது போல ஆணியின் கூர்மைகளைத் துளைத்ததாலோ, சாட்டையின் நுனி முதுகைக் கிழித்ததாலோ எழுந்த வலியல்ல இது. அத்தகைய உடல்வலியை இயேசுவின் மன வலிமை தாங்கி விடும். ஆனால் இப்போதைய கதறல் ஒலி உடல் வலி அல்ல, இதயத்தின் வலி.\nஉலகின் பாவங்களைப் போக்கவேண்டும் எனில் மானிடரின் பாவங்களை எல்லாம் தோளில் சுமக்க வேண்டும். மானிடருடைய பாவங்களைச் சுமந்து ஒரு பாவியாகவே உருமாறி, பாவியின் கோலம் கொண்டு சிலுவையில் மரிக்கிறார் இயேசு.\n“அவரோ நம் குற்றங்களுக்காகக் காய மடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என ஏசாயா 53:5 அதை தீர்க்க தரிசனமாய் சொன்னது.\nஇருளும் ஒளியும் ஒரே இருக்கையில் அமரமுடியாது. பாவமும் புனிதமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. இயேசு புனிதத்தின் வடிவமாய் இருந்தபோது எப்போதும் தந்தையின் அருகாமையில் இருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செபத்தில் தந்தையோடு தனித்திருந்தார்.\nஇப்போதோ அவர் புனிதத்தின் நிலையை இழந்து பாவத்தின் சுமையை ஏற்றிருக்கிறார். இந்தக் கணத்திலிருந்து அவரால் தந்தையின் அருகில் இருக்க முடியாது. புனிதம் எனும் தந்தையும், பாவம் எனும் மகனும் இப்போது எதிரெதிர் துருவங்கள் போல மாறிப்போகின்றனர்.\nபாவம் இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் என்பதை “உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” (ஏசாயா 59:2) எனும் வசனம் விளக்குகிறது.\nஇந்த வலியை முன்கூட்டியே உணர்ந்த இயேசு, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்” (மத் 26:39) என தந்தையிடம் வேண்டினார்.\nஎப்போதும் ‘அப்பா’ என கடவுளை அழைத்து வந்த இயேசு இப்போது, ‘இறைவா’ என அழைக்கிறார். பாவம், தந்தை மகன் உறவை உடைக்கிறது. இப்போது பாவிக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவு நிலையே இருவருக்கும் இடையே இருக்கிறது.\nஉலகம் தொடங்கும் முன்னமே தந்தையோடு இணைந்திருந்தவர் இயேசு. விண்ணின் மகிமை எப்படிப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் சோதனைகளை அவர் எளிதாய்த் தாண்டினார். எந்த சோதனை தரும் மகிழ்ச்சியையும் விடப்பெரியது விண்ணக வாழ்க்கை என்பது அவருக்கு மிகத்தெளிவாய் தெரியும்.\n“என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” (சங் 22) என்பது அந்தக்கால பிரபலமான ஒரு பாடலின் தொடக்கம். இயேசு அந்தப் பாடலின் வரியைத் தொடங்கிவைத்தார். அதைக் கேட்டவர்களின் மனதில் அந்தப் பாடல் முழுமையாய் ஒலிபரப்பாகியிருக்க வேண்டும். “உண்மையாகவே இவர் கடவுளுடைய மகன்” என சிலர் நம்பிக்கை கொள்ள அதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.\nஅந்தப் பாடல் இயேசுவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவீது மன்னனால் எழுதப்பட்டது. மெசியா பற்றிய பாடல். இயேசுவைப் பற்றிய பாடல்.\n“மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்...” என இயேசுவின் சிலுவை நிலையை பாடல் விவரிக்கிறது.\nசிலுவை மரணம் வழக்கத்தில் இல்லாத அந்த காலத்திலேயே, ‘என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்’ என இந்த சங்கீதம் தீர்க்கதரிசனமாய் பேசுகிறது. “என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்” என்றெல்லாம் சிலுவைக் காட்சியை பதிவு செய்திருக்கிறது.\nஇயேசு அந்த பாடலின் முதல் வரியை வலியின் ஒலியாய் ஒலிக்கச் செய்து, தான் ‘மெசியா’ என்பதை குறிப்பால் உணர்த்தினார். நமது பாவங்களை அவர் சுமந்து தீர்த்தார்.\nஉயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு அவரோடு சரணடைவோருக்கு, அவரது அரசில் நிச்சயம் இடம் உண்டு.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thinappuyalnews.com/archives/136142", "date_download": "2018-08-20T18:50:35Z", "digest": "sha1:KOH6NRGFANE6WIALHR6JOQX7FNNYU3RJ", "length": 12734, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்..!! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nமாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்..\nஇராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தைச் செலுத்திய பாடசாலை மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் 3 மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தைச் செலுத்திய பாடசாலை மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் 3 மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇராஜகிரிய, சில்வா குறுக்குவீதியில் நேற்றுக் காலை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகெப் ரக வாகனம் ஒன்று மதில் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வாகனத்தில் பயணித்த கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.\nமேலும் 9 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த கெப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, குறித்த கெப் ரக வாகனத்தை தொடர்ந்து பயணித்த சிறிய ரக வாகனமொன்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வானத்தையும் மாணவரகளே செலுத்திச் சென்றுள்ளமை சி.சி.ரிவி. காணொளி மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதியான பாடசாலை மாணவரின் சாரதி அனுமதி பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.\nகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குறித்த விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தைச் செலுத்திய மாணவன் தன்னிடம் சாரதி அனுமதி பத்திரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, சிகிச்சைபெற்றுவரும் 9 மாணவர்களில் 3 மாணவர்களின் நிலை கவலைக்கிடமான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇது­தொ­டர்­பாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் அதி­காரி ஒருவர் தெரி­விக்­கையில்,\nபாட­சா­லையில் நேற்று நடை­பெ­ற­வி­ருந்த ஊடக விழா­வுக்­கான ஏற்­பா­டு­களை நேற்று முன்­தி­ன­மி­ரவு மேற்­கொண்­டு­விட்டு சென்ற போதே ராஜ­கி­ரிய பகு­தியில் இந்த விபத்துச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.\nகொழும்பு ரோயல் கல்­லுரி மாண­வர்கள் 10பேர் பய­ணித்த டபல் கெப் ரக வாகனம் நேற்று அதி­காலை 1. 50மணி­ய­ளவில் ராஜ­கி­ரிய சில்வா மாவத்­தையில் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. மாண­வர்கள் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­டு­விட்டு வீட்­டுக்கு திரும்­பும்­போதே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.\nராஜ­கி­ரிய சில்வா மாத்­தைக்கு அருகில் மொரகஸ் முல்­லயில் இருந்து ராஜ­கி­ரிய நோக்கி பய­ணித்த வாக­னத்தை செலுத்தி வந்த மாண­வ­னுக்கு அந்த இடத்தில் இருந்த வலைவில் வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் அருகில் இருந்த வீடொன்றின் மதிலில் மோதி­யுள்ள நிலையில் வாகனம் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.\nவிபத்தில் உயர்­தர வகுப்பில் கல்வி கற்­று­வரும் கல்­கி­சை­யைச்­சேர்ந்த அமான் கிசன் மொஹமட் அமான் கிசில் என்ற 18வயது என்ற மாணவன் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் வாக­னத்தில் இருந்த 9பேர் காய­ம­டைந்­த­துடன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் அவ­சர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். பின்னர் அவர்­களில் 3பேர் அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றனர்.\nஇதே­வேளை, இந்த கெப் வாக­னத்­துக்கு பின்னால் வந்த மற்­று­மொரு கார் இந்த மதிலில் மோதி­யதில் வாக­னத்தின் சாரதி காய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுளார். விபத்து தொடர்­பாக வெலிக்­கடை பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.\nவிபத்தில் உயி­ரி­ழந்த ரோயல் கல்­லூ­ரியின் உயர்­தர வகுப்பு மாண­வனின் . இறுதி கிரியை நேற்று இரவு நடை­பெற்­றது.தெஹி­வளை மைய­வா­டியில் ஜனாசா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. சம்­ப­வத்தில் காய­ம­டைந்­த­வர்­களில் இருவர் 9ஆம் ஆண்டு மாணவர்களாவர்.\nவிபத்தையடுத்து ரோயல் கல்லூரியில் நேற்று நடைபெறவிருந்த ஊடக விழா இலக்கிய விழா என்பன பிற்போடப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த நூல் வெளியீட்டு விழாவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nPrevious ​​​​​​​​​​​​​​​​​​​​​​யா/ கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய தவத்திரு யோகர் சுவாமிகள் ஞாபகார்த்த பரிசளிப்பு விழா..\nNext 85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classifieds.lk/ta/", "date_download": "2018-08-20T18:12:13Z", "digest": "sha1:GLJP3GAS4MV7PURYYPZVD5XKJIDQOSY4", "length": 9316, "nlines": 154, "source_domain": "classifieds.lk", "title": "Classifieds.lk : Sri Lanka Classified Ads | #1 Advertising Website in Sri Lanka", "raw_content": "\nகணனிகள் மற்றும் துணைக் கருவிகள்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nவண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி\nபாரஊர்தி, பேரூந்து மற்றும் அதிபாரமான பாரஊர்தி\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nதனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்\nஆடைகள், பாதணிகள் மற்றும் துணை கருவிகள்\nவெள்ளை பொருட்கள் மற்றும் சமயலறை பொருட்கள்\nவேறு வீட்டு மற்றும் தனிப்பட்ட பாவனை பொருட்கள்\nஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\nதிரைப்படங்கள், புத்தகங்கள் , இதழ்கள்\nவேறு ஓய்வு நேரம், விளையாட்டுக்களும் , பொழுதுபோக்கு\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபாகங்களும் அறைகளும், கொழும்பு 05\nவணிக உடைமை, கொழும்பு 05\nவீடுகள், கொழும்பு 05 | For Rent\nமேசை கணனிகள், கல்கிசை | For Sale | Rs. 40,000\nகையடக்க தொலைபேசிகள், பரந்தன் | For Sale | Rs. 800\nAll categoriesஇலத்திரனியல்நிலபுலன்கள் மற்றும் சொத்துகார்கள் மற்றும் வாகனங்கள்தொழில்கள் மற்றும் சேவைகள்தனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்ஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குசெல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகள்கல்விஉணவு மற்றும் விவசாயம்\nதனிப்பட்ட மற்றும் வீட்டு உபகரணங்கள்\nஓய்வு நேரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://flypno.blogspot.com/2012/11/blog-post_5495.html", "date_download": "2018-08-20T18:05:10Z", "digest": "sha1:W73ALIYGF7XKOQWL3P6L6JAIEDULWXR5", "length": 18216, "nlines": 98, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: முஸ்லிம்களில் மட்டும்தான் இருக்கிறார்களா?.", "raw_content": "\nஞாயிறு, 18 நவம்பர், 2012\nகிட்டதட்ட உலகத்தில் உள்ள அனைத்து மொழி திரைபடங்களிலும் முஸ்லிமைதான் ஒரு சமுதாய விரோத போக்கு உள்ள ஆளாகவும், அப்பாவி மக்களை அன்றாடம் கொலை செய்யும் ஒரு தீவிரவாதியாகவும், சித்தரிக்கின்றார்கள், இது இன்று நேற்றில்லை, சினிமா உருவானதில் இருந்து நடைபெற்று வருகின்றது.\nஆனால் உண்மை என்னவோ அதுவல்ல. முஸ்லிம்களில் இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கின்ற உங்களின் வாதங்களை நான் மறுக்கவில்லை. இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் முஸ்லிம்களில் மட்டும்தான் இருக்கிறார்களா\nமேலும் எக்காலத்திலும் சினிமாக்களில் ஒரு தரப்பு நியாயத்தையும் அதை தட்டிக்கேக்குற ஹீரோவையும் மட்டுமே காட்டி படத்தை ஹிட் பண்ணிடுறாங்க. இதுல இவிங்க தீவிரவாதியா காண்பிக்கிறவனை வெறுமனே ஒரு சாதாரண மனிதனாக காட்டாமல் அவனை ஒரு மதத்தின் போர்வையில் அதுவும் முஸ்லிமகத்தான் காட்டி காசுபார்க்கின்றன, இந்த காவி இந்தியாவில்.\nஆனா...குறைந்தது வெளிநாட்டு தீவிரவாதிகள்னு சொல்லி இருக்கலாம். இதுவரை இந்தியாவில் நடைபெற்ற குன்‌டுவெடிப்பில், 1992 ஆம் ஆண்டு மும்பையிலும், மற்றும் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு இந்த இரண்டை தவிர மற்ற அனைத்தும் முஸ்லிமல்லாதவர்கள்தான் செய்தார்கள் என்று கர்கரே அவர்கள் நிரூபித்தார். ஆனால் இன்றைய தமிழ் சினிமாக்கலும், ஊடகங்களும் சேர்ந்து இந்தியாவில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு முஸ்லீம்தான் காரணமா இருக்க முடியும் என்கின்ற ஒரு கொடிய விஷத்தை இந்தியர்கள் (தமிழர்கள்) மீது திணித்துக்கொண்டுள்ளார்கள்.\nமுஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்று நொடிக்கொரு சினிமா காட்டுமளவிர்க்கு, ஒரு விடுதலை புலி (இவர்கள் மட்டும் அப்பாவிகளை கொள்ளவில்லையா இஸ்லாமியர்கள் தொழும் பள்ளிவாயல்களில் துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி முஸ்லீம்களை கொள்ளவில்லையா இஸ்லாமியர்கள் தொழும் பள்ளிவாயல்களில் துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி முஸ்லீம்களை கொள்ளவில்லையா), நக்சலைட்டுகள் (இவர்கள் முஸ்லிமல்ல) இவர்களை எல்லாம் தீவிரவாதி என்று சொல்வதில்லை, ஏன் முஸ்லிம் மட்டும் தீவிரவாதி), நக்சலைட்டுகள் (இவர்கள் முஸ்லிமல்ல) இவர்களை எல்லாம் தீவிரவாதி என்று சொல்வதில்லை, ஏன் முஸ்லிம் மட்டும் தீவிரவாதி மாமியார் உடைத்தாள் மண்பானை, மருமகள் உடைத்தாள் பொன்பானையா\nஇந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தி எடுக்கப்படும் சினிமாவிர்க்கும், இந்த மதசார்பில்லாத (பெயரளவில் மட்டும்) ஒரு நாட்டோட மதச்சார்பில்லாத சென்சார் போர்ட் எப்பாடு அனுமதிக்குண்ணுதான் தெரியலை (என்னது அவிய்ங்க வீட்டு பொண்ணுங்க துப்பட்டா இல்லாமலே சுடிதார் போட்டுகிட்டு சுத்துவாங்களா (என்னது அவிய்ங்க வீட்டு பொண்ணுங்க துப்பட்டா இல்லாமலே சுடிதார் போட்டுகிட்டு சுத்துவாங்களா\nஇன்று சினிமாக்களில் காட்டப்படும் தீவிரவாதிகள், ஒரு பக்கத்து வீட்டுக்காரனாகவோ, எதித்த வீட்டுக்காரனாகவோ, இருப்பானோ என்று சந்தேகிக்கிற ஒரு விஷத்தை மனுசங்ககிட்ட பரப்பிக்கிட்டு இருக்கின்றன.\nஇன்றைய காலக்கட்டத்தில் சினிமா என்பது மிகப்பெரிய மக்களை கேனப்பயல் ஆக்க கூடிய ஒரு ஆயுதம் என்றால் அது மிகையாகாது. அதுவும் இந்த இந்தியாவில், இன்று இந்தியாவில் இருக்கும் மக்கள் தனக்கும், தனது குடும்பத்திர்க்கும் ஒரு நோய் வந்தால் கூட கவலைபடுவதில்லை, ஆனால் கேவலம் ஒரு ரஜினிக்கோ, அமிதாபசனுக்கோ ஒண்ணுக்கு வரவில்லை என்றால் ஒன்பது நாள் சாப்பிட மாட்டேண்கிறான், வேலைக்கு போக மாட்டேன்கிறான். சினிமாவில் பொய்யாக நடிக்கும் ஒருத்தனை பார்த்து சந்தோஷம், தூக்கம், ஏக்க படும் இவன், இவன் பெரியம்மாக்கு வயிற்றுவலி என்றால், பெரியப்பா இருக்கிறார் பார்த்துப்பார் என்று பம்புறான்.\nரோட்டில் ஒருத்தன் குடித்து விட்டு ரகளை செய்தால் அவனை போட்டு அடிக்கிறோம், ஆனால் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடிக்கொண்டு திரிகிறோம், கொஞ்சம் கூட லாஜிக் இல்லைதானே ஊர்ல ஒருத்தன் ரவுடிதானம் செய்தால் வெறுக்கிறோம், அதுவே சினிமாவில் ஹீரோ வில்லனா நடித்தால் அவனுக்கு கடவுட் வைக்கிறோம் ஊர்ல ஒருத்தன் ரவுடிதானம் செய்தால் வெறுக்கிறோம், அதுவே சினிமாவில் ஹீரோ வில்லனா நடித்தால் அவனுக்கு கடவுட் வைக்கிறோம்\nஇதுவரை எந்த ஒரு சினிமாக்காரனாவது, 100% உண்மையை எந்த படத்திலாவது எடுத்ததுண்டா இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிவினை உண்டானது என்பதின் உண்மை நிலையை எடுக்கும் துணிவு எந்த டைரக்டருக்கு இருக்கு இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிவினை உண்டானது என்பதின் உண்மை நிலையை எடுக்கும் துணிவு எந்த டைரக்டருக்கு இருக்கு என்ன முடியாத அளவிர்க்கு கோடிகளை கொள்ளை அடித்த இந்த கேடிகளை பிணம் தின்னி அரசியல்வாதிகளை பற்றி புட்டு புட்டு வைத்து படம் எடுக்க யாருக்கு தில் இருக்கு என்ன முடியாத அளவிர்க்கு கோடிகளை கொள்ளை அடித்த இந்த கேடிகளை பிணம் தின்னி அரசியல்வாதிகளை பற்றி புட்டு புட்டு வைத்து படம் எடுக்க யாருக்கு தில் இருக்கு இந்தியா தேசப்பற்றை காட்ட முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டி பணம் சம்பாதிக்கும் இந்தியா சினிமா நாய்களே இந்தியாவில் குஜராத்தில் அழிக்கப்பட்ட என் சமுதாயத்தை பற்றி ஒரு வரி உன்னால் உண்மையை சொல்ல முடியுமா இந்தியா தேசப்பற்றை காட்ட முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டி பணம் சம்பாதிக்கும் இந்தியா சினிமா நாய்களே இந்தியாவில் குஜராத்தில் அழிக்கப்பட்ட என் சமுதாயத்தை பற்றி ஒரு வரி உன்னால் உண்மையை சொல்ல முடியுமா சரி அதுக்கூட வேண்டாம், இந்தியா சுதந்திதிர்க்கு பாடுபட்ட உண்மையான முஸ்லிம்களின் வாழ்க்கையா பற்றிய படம் உன்னால் எடுக்க முடியுமா சரி அதுக்கூட வேண்டாம், இந்தியா சுதந்திதிர்க்கு பாடுபட்ட உண்மையான முஸ்லிம்களின் வாழ்க்கையா பற்றிய படம் உன்னால் எடுக்க முடியுமா இல்லை, காந்தியை சுட்டுக்கொள்ளும் பொது தான் கைய்யில் இஸ்மாயில் என்று முஸ்லிமீன் பெயரை பச்சை குத்தி இருந்த அந்த காவி வேசிக்கு பொறந்தவனின் உண்மை வரலாற்றை உன்னால் படமாக எடுக்க முடியுமா\nஇப்படி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டப்படும் சினிமாக்களை தியேட்டர்களில் பார்த்து கைதட்டி ரசிக்கும், அதுவும் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில், மதச்சார்பில்லாத நாட்டில் வாழும் மானமுள்ள மனிதர்களுக்கு கொடுக்கப்படும் செருப்படிகள் என்ற உண்மையை நாம வெளங்கிக்கிடணும்.....\nஇப்படி விசில் அடித்தும், கைதட்டியும் ரசிக்கும் நாம், எப்படி உணர்வோம், காஷ்மீர் மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்று ஈராக்கில் அமெரிக்கா கண்டுபிடித்த ஆயுதம்தான் என்ன ஈராக்கில் அமெரிக்கா கண்டுபிடித்த ஆயுதம்தான் என்ன இங்கே தீபாவளியில் கூட பட்டாசு வெடிக்க பயப்படும் நாம் பாலேஸ்தீனில் பச்சிளம் குழந்தைகள் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்று எப்படி உணர்வோம் இங்கே தீபாவளியில் கூட பட்டாசு வெடிக்க பயப்படும் நாம் பாலேஸ்தீனில் பச்சிளம் குழந்தைகள் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்று எப்படி உணர்வோம் ஏன் நாளைக்கே கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடுற மக்களின் போராட்டத்தையும் தீவிரவாதம்னு சித்தரித்து எடுக்கப்படும் சினிமாக்களும் வரும், அதற்க்கும் நாம் விசில் அடித்து கைதட்டி கொண்டாடும் ஒரு கீழ்தரமான சாதியாய்த்தான் இருப்போம். ஏன்னா நமக்கு பொழுது போக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்...அதுவும் ஒரு மூணு சண்டை, நாலு பாட்டு அதுல ஒண்ணு குத்து பாட்டுனு இருந்தால் சொல்லவா வேணும்.\nபடத்துக்கு ஒருத்தியோடு படுத்து செல்லும் உனக்கு வேண்டுமென்றால் ஆயிரம் பெயர்கள் இருக்கலாம், உலக நாயகன், கேப்டன், ஆக்சன் கிங், தள, தளபதி இப்படி எந்த எழவோ வேண்டுமென்றாலும் இருந்துட்டு போ, தேவை இல்லாமல் ஏன் எங்களை சீண்டி பார்க்கிறாய், இதுவரை நாங்கள் அமைதியாக சொல்லிப்பார்த்துட்டோம், இனி சொல்லமாட்டோம், செயல்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nஆட்டை பார்த்து ஓநாய் அழுததாம்\nரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகள...\nமூதேவி முருகதாசும், வீணாபோன விஜையும் துப்பாக்கி வ...\nஅதை சரி செய்ய என்ன செய்யலாம்\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/section/sports/page/4/international", "date_download": "2018-08-20T18:14:46Z", "digest": "sha1:H6FRMKDI5MESC7PPMXOMNMCGQNZCG2NP", "length": 12326, "nlines": 192, "source_domain": "news.lankasri.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமைதானத்தின் நடுவில் திடீரென தோன்றிய வீரர் புதுமையான முறையில் கால்பந்து வீரர் அறிமுகம்\nகால்பந்து 1 week ago\nமழையால் ரத்தான இங்கிலாந்து- இந்தியா முதல் நாள் ஆட்டம்: டிக்கெட் பணத்தை திருப்பி வழங்கும் லார்ட்ஸ் மைதானம்\nகிரிக்கெட் 1 week ago\nகால்பந்து போட்டியின் இடையே நடுவரின் மண்டையை உடைத்த ரசிகர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nதொடர் வெற்றிகளை பதிவு செய்யும் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nடோனி வசிக்கும் பங்களாவை பார்த்திருக்கீங்களா\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஇங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் என்னை கொன்றிருப்பார்: திடுக்கிடும் தகவலை கூறிய ராணுவ வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nகிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு திருமணமா\nஏனைய விளையாட்டுக்கள் August 10, 2018\nஇந்திய அணியிடம் பணிந்தது இலங்கை அபார வெற்றியின் மூலம் பதிலடி\nகோஹ்லிக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் சொன்ன முக்கியமான அட்வைஸ் என்ன தெரியுமா\nகோஹ்லியின் மனைவி அனுஷ்காவை கிண்டலடித்த ரசிகர்கள்: பிசிசி எப்படி அனுமதித்தது என ஆத்திரம்\nஏனைய விளையாட்டுக்கள் August 09, 2018\nதடைக்குப் பின் மீண்டும் அணிக்கு திரும்பும் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல்\n7 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் டென்னிஸ் விளையாடுவேன்: சானியா மிர்சாவின் வைரல் வீடியோ\nஇந்திய வீரர்களுக்கு பந்து வீசிய சச்சின் டெண்டுல்கர் மகன்\nஏனைய விளையாட்டுக்கள் August 09, 2018\nஇந்திய அணியுடன் அனுஷ்கா ஷர்மா: Like செய்து சர்ச்சைக்கு உள்ளான ரோஹித் ஷர்மா\nஏனைய விளையாட்டுக்கள் August 09, 2018\nகருணாநிதி கிரேட்.. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் August 09, 2018\nதென் ஆப்பிரிக்காவை 3 ஓட்டங்களில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை\nகொஞ்சம் பொறுமையா இருங்க: ரசிகர்களிடம் கெஞ்சிய விராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் August 09, 2018\nபஹ்ரைனுக்கு பறக்கும் இலங்கை கரப்பந்தாட்ட அணி: ஏன் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் August 08, 2018\nகிளி மாவட்ட பாட­சா­லை­களுக்கு விளையாட்டு உப­க­ர­ணங்­கள் கையளிப்பு\nஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜொலிஸ்ரார் அணி: இறுதியில் வெற்றியை பதிவு செய்த சென்றலைட்ஸ் அணி\nஏனைய விளையாட்டுக்கள் August 08, 2018\nஅம்பாறை அணியை வீழ்த்திய வல்வை எப்.சி அணிக்கு இலகு வெற்றி\nகருணாநிதிக்கு பிடித்த வீரர் இவர்தான்\nஏனைய விளையாட்டுக்கள் August 08, 2018\n17 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் றேஞ்­சர்ஸ் அணி மகு­டம் சூடி­யது\nசிக்கிய வீடியோ ஆதாரம்: கேள்விக்குறியாகும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் எதிர்காலம்\nஏனைய விளையாட்டுக்கள் August 08, 2018\nதன் மீது பலாத்கார குற்றம் சுமத்திய பெண்ணை திருமணம் செய்த வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் August 08, 2018\nஇனி எப்படி ஐயா அந்த காந்த குரலை கேட்பேன் இந்திய கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன் சிங் தமிழில் உருக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் August 08, 2018\nகருணாநிதி மறைவு: TNPL ஆட்டங்கள் ரத்து\nமாகாண ரீதியிலான கரப்பந்தாட்டத்தில் சம்பியனாகியது ஆவ­ரங்­கால் மத்தி அணி\nஏனைய விளையாட்டுக்கள் August 07, 2018\nதேசிய மட்ட குமித்தேயில் தங்கம் வென்ற யாழ் மத்தியின் மைந்தன்\nஏனைய விளையாட்டுக்கள் August 07, 2018\nதேசிய ரிதி­ய­லான கராத்தேயில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் August 07, 2018\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/f36-forum", "date_download": "2018-08-20T18:33:25Z", "digest": "sha1:63MMN6N45HBOEE4FOOC2U2V7CZOTJSEC", "length": 28558, "nlines": 479, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இந்து மதம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் \n» முத்தமிழ் அறிஞர் கலைஞர்\n» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்\n» வெளிச்சத்தில் ஒரு கனவு நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n» பார் போற்றும் பாரதி தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» வானவில்லின் எட்டாவது நிறம் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...\n» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)\n» மிக உயர்ந்த சிகரங்கள்\n» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)\n» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:\n» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)\n» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)\n» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி\n» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.\n» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...\n» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....\n» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...\n» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…\n» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…\n» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பல்சுவை - தொடர் பதிவு\n» நகைச்சுவை - ரசித்தவை\n» 5 வரி கதைகள் -\n» அருவிகூட ஜதி இல்லாமல்\n» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்\n» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி\n» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்\n» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு\n» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்\n» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …\n» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்\n» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\n» ராஜமௌலி படம் சமந்தா பதில்\n» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ -\n» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகனககிரீஸ்வரர் - பொன்மலைநாதர் கோயில்\nதைப்பூசத் திருநாள் - சிறப்புகள்\nமதுரை மீனாட்சி அம்மன் கிளி\nகாஞ்சிப் பெரியவர் சொன்ன கதை -- குப்பண்ணா\nகாஞ்சிப் பெரியவர் சொன்ன கதை\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nபிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\nஇனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\nபலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்\nஅழகர் வைகையில் இறங்குவது ஏன்\nவாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி\nஇறைவன் எந்தெந்த வடிவங்களில் அருள் செய்கிறான்...\nநாளை நரசிம்ம சதுர்த்தசி: விரதமிருப்பது எப்படி\nசித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் இதுதான்\nமீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்\nநரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்\nஅமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது\nகல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\nசீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் `திருமுலைப்பால் வைபவம்\nபராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nசுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள் :\nஇது நம்ம வீட்டு கல்யாணம்\nவிஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nதிருச்செந்தூர் முருக கடவுளே குலதெய்வம்\nசித்திரை, வைகாசி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையின் சிறப்பு\nதிரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\nவிருச்சிக ராசிக்காரர்களே... சுபச் செலவுகள் அதிகரிக்கப்போகிறது... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.sltj.lk/category/branch/sltj-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:48:37Z", "digest": "sha1:G62OXCM2WQHVQY7K6JSXNQT4OXUTBXFF", "length": 19715, "nlines": 286, "source_domain": "www.sltj.lk", "title": "SLTJ திருகோணமலை மாவட்டம்", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nஅரிசிமலை விகாரை விகாராதிபதிக்கு அல் குர்ஆனின் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு..\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புல்மோட்டைக் கிளை சார்பாக 23/02/2018 அன்று புல்மோட்டை அரிசிமலை விகாரை விகாராதிபதி அவர்களை\nபுல்மோட்டை விசேட அதிரடிப்படை அதிகாரிக்கு அல் குர்ஆன் அன்பளிப்பு..\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புல்மோட்டைக் கிளையின் சார்பாக 19/02/2018 அன்று புல்மோட்டை விசேட அதிரடிப்படை(STF) அதிகாரிக்கு புனித அல்\nSLTJ மூதூர் கிளை நடாத்திய இரத்த தான முகாமில் 68 நபர்கள் இரத்தம் வழங்கினர்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூதூர் கிளையினால் 05/08/17 அன்று நடைபெற்ற இரத்த தான முகாமில் 95 நபர்கள் கலந்து\nSLTJ புல்மோட்டை கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனை பிரச்சாரம்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புல்மோட்டை கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனை பிரச்சாரம் 21.07.2017 அன்று புல்மோட்டை திருகோணமலை\nSLTJ புல்மோட்டை கிளையின் போதைப்பொருள் ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) புல்மோட்டை கிளையின் போதைப்பொருள் ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம் (13.07.2017) அன்று சகோதரர் ஹஸ்ஸான் ரமீஸி அவர்களால்\nSLTJ புல்மோட்டை கிளை சார்பில் வெள்ள நிவாரண நிதி சேகரிப்பு\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக புல்மோட்டை அரபாத் நகர் பகுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி,\nSLTJ திருகோணமலை ஏற்பாடு செய்த ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) திருகோணமலை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி 22.04.2017ம் திகதி\nSLTJ குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணிகள் சுகாதார துறை பொலிஸ் பிரிவினர் மற்றும்\nSLTJ புல்மோடடை கிளையின் முதலாவது தெருமுனை பிரச்சாரம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் புல்மோடடை கிளையின் முதலாவது தெருமுனை பிரச்சாரம் (24.03.2017) அன்று\nதிருகோணமலையில் டெங்கு நோயிற்கு எதிராக மூன்றாம் கட்டமாக களமிறங்கும் தவ்ஹீத் ஜமாஅத்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பின் வளர்ச்சியால் கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் நாடு பூராகவும் 16479 பேர்\nSLTJ திருகோணமலை ஏற்பாடு செய்திருந்த 5ஆம் கட்ட டெங்கு விழிப்புணர்வு மற்றும் களப்பணி\nஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தின் அனுசரனையுடம் சுகாதார துறை பொலிஸ் பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின்\nSLTJ மூதூர் கிளையின் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூதூர் கிளை ஏற்பாடு செய்த பெண்கள் தர்பியா நிகழ்ச்சி சகோ. சாஜஹான் (ஷர்கி) மற்றும் நவ்சீன்\nSLTJ திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தின் இரண்டாம் கட்ட டெங்கு ஒழிப்பு\nஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் திருகோணமலை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டாம் கட்ட டெங்கு ஒழிப்பு களப்பணி கிண்ணியா பிரதேசத்தில்\nSLTJ திருகோணமலை மாவட்ட நிர்வாகம் நடாத்திய விசேட டெங்கு ஒழிப்பு\nதிருகோணலை மாவட்டத்தில் சுமார் 1000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில், பொது மக்களை\nSLTJ திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தின் அவசர செயற்குழு\nதிருகோணலை மாவட்டத்தில் டெங்கு நோயால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதனால், பொது மக்களை டெங்கு நோயில் இருந்து பாதுகாக்கும் முகமாக ஸ்ரீலங்கா\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்\nஇரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”\nஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ujiladevi.in/2011/11/blog-post_04.html", "date_download": "2018-08-20T18:49:41Z", "digest": "sha1:XGOJMG7JSGATKZL57XSKGP5OTGM7P5CU", "length": 46657, "nlines": 151, "source_domain": "www.ujiladevi.in", "title": "கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ \nகனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே தள்ளாத வயதில் கலைஞரின் பிள்ளைபாசத்தையாவது மனதில் கொண்டு ஜாமீன் கொடுத்திருக்கலாம் அல்லவா\nபிள்ளை பாசம் என்பது உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது ஆகும் இதில் ஒருவர் பிள்ளை பாசம் உயர்ந்தது மற்றவர்களுடையது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது பிள்ளைகளை சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டு வெளியில் வர மாட்டார்களா என்று இந்த நாட்டில் ஏராளமான பெற்றோர்கள் ஏங்கி தவித்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஏக்கத்தை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டுமென்றால் நாட்டில் சட்டம் நீதி என்று எதுவுமே தேவையில்லை\nமேலும் கனிமொழி பெண் ஒரு குழந்தைக்கு தாய் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை அதற்காக தப்பு செய்தால் விசாரிக்க கூடாதா தண்டனை தான் தரக்கூடாதா முறைகேடுகளில் இடுபடுவதற்கு முன்பு நாம் ஒரு பெண்ணாயிற்றே குழந்தைக்கு தாய்யாயிற்றே தப்பு செய்யலாமா என்று யோசித்திருக்க வேண்டும் நாட்டின் நிதி ஆதாரத்தையே அசைத்து பார்க்க கூடிய குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட பிறகு நான் பெண் என்னை விட்டு விடு என்று சொல்வது பெண்ணினத்தை இழிவு படுத்துவதாகும் இன்னும் சொல்ல போனால் மிக பெரிய மோசடியாகும்\nதமிழக முதல்வர் அண்ணா நூலகத்தை மாற்றி குழந்தைகள் மருத்துவமனை அமைக்க போகிறாராமே\nஅரசு என்பது நாட்டினுடைய எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ குழந்தை பருவத்திலிருந்தே சரியான மருத்துவ வசதிகள் மக்கள் பெறும்படி செய்ய வேண்டும் இது நல்ல அரசாங்கத்தின் கடமை அந்த வகையில் குழந்தைகளுக்காக தனிமருத்துவ மனை அமைக்க இருப்பது வரவேற்க படவேண்டிய விஷயமாகும்\nஅதே நேரம் அந்த மருத்துவமனை நல்லபடியாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை நகர்த்தி விட்டு ஆரம்பிக்க பட வேண்டும் என்று சிந்திப்பதை கூட ஜீரணிக்க இயலாது காரணம் ஒரு மனிதனின் உடல் நலத்தை பாதுகாக்க மருத்துவம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மனநலத்தை வளர்க்கும் நூல்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது\nபுதிய சட்டமன்ற கட்டிடத்தை புறக்கணித்தல் செம்மொழி பூங்காவை மாற்றுதல் சமசீர் கல்வியை நிறுத்தி வைத்தல் போன்ற செயல்கள் அம்மையாரின் ஆட்சியில் களங்கம் என்றே சொல்ல வேண்டும் அந்த களங்க வரிசையில் இப்போது நூலகமும் சேர்ந்திருக்கிறது\nமீண்டும் மீண்டும் நான் சொல்வது கலைஞர் போட்ட திட்டங்களை எல்லாம் நீக்குவது நிறுத்துவது என்று முதல்வர் முடிவு செய்துவிட்டால் முதலில் இலவச சலுகைகளையும் டாஸ்மார் கடைகளையும் நிறுத்தட்டும் இழுத்து மூடட்டும் அதன் பிறகு மற்ற திட்டங்களை பார்த்து கொள்ளலாம் இதை செய்ய அரசுக்கு துணிச்சல் இல்லை தைரியம் கிடையாது மக்கள் நலத்தில் உண்மையாகவே ஜெயலலிதா அவர்கள் அக்கறை கொண்டவர் என்றால் கருணாநிதி கொண்டுவந்த மது கடைகளை மூடட்டும் அதை செய்ய அவருக்கு மனம் வரவே வராது\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பாராத வண்ணம் வைகோ அவர்கள் நல்ல வளர்ச்சியை காட்டியிருக்கிறாரே இது எதை காட்டுகிறது\nநமது தமிழ் நாட்டில் திமுக,அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தேமுதிக வை பரவலாக கருதுகிறார்கள் அக்கட்சி புதியது என்றாலும் சீரான முறையில் வளர்ந்துவருவதை பார்க்கும் போது இந்த கூற்று சரியாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது\nஆனால் தேமுதிக வை பொறுத்தவரை அந்த கட்சியின் அதிகார பீட தலைவர்கள் யாருக்கும் பண்பட்ட அரசியல் ஞானம் இருப்பதாக கருத முடியவில்லை இந்த நிலையில் அதன் வளர்ச்சி என்பது சினமா கவர்ச்சியை மையமாக வைத்து எதேச்சையாக நடக்கும் விபத்து என்றே என் அனுபவ அறிவு சொல்கிறது இந்த விபத்தை சாதகமாகவோ பாதகமாகவோ கொண்டுவருவது அக்கட்சி தலைவரின் கையில் உள்ளது\nஆனால் மதிமுக என்பது கவர்ச்சியால் உருவான கட்சி அல்ல ஒரு பண்பட்ட அரசியல் இயக்கம் எப்படி பிறக்க வேண்டுமோ அப்படி பிறந்தது ஆகும் அதன் தலைவரும் ஒரு சராசரி மனிதர் அல்ல இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அறிவிலும் மக்கள் நலனில் நாட்டம் கொள்வதில் முதல்மையானவர் வைகோ என்பதே என் கருத்து\nஅரசியலில் கலைஞரை விட ஜெயலலிதவை விட சிறந்தவர் வைகோ ஆனால் அவரிடம் இருக்கும் ஒரே பலவீனம் உணர்ச்சி வசப்படல் காலத்திற்கு ஏற்ற நடைமுறைக்கு உகந்த செயல்களை செய்வதில் அவருக்கு ஏனோ அதிக அக்கறை இல்லை\nபல்வேறு பொது பணிகளில் அறிவு பூர்வமாக அவர் செயல்பட்டாலும் தமிழக தமிழர் மீது காட்டுகிற அக்கறையை விட ஈழத்தமிழர்களின் மீது அதிகமாக காட்டுகிறார் என்ற குற்ற சாட்டும் அவர் மீது இருக்கிறது இதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்\nமேலும் ஒரு கட்சியோடு கூட்டு வைத்து விட்டால் தன் சொந்த கட்சியை அவர் மறந்து விடுகிறார் அப்படி இல்லாமல் பட்டி தொட்டி எங்கும் கட்சியை வளர்ப்பதில் அவர் அக்கறை செலுத்தினால் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மதிமுக வளரும் என்பதில் ஐயம் இல்லை உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தந்திருக்கும் அங்கிகாரத்தை ஆதாரமாக கொண்டு இனிவரும் காலங்களில் அவர் செயல்பட்டால் நாட்டுக்கும் நல்லது அவருக்கும் நல்லது.\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செலலவும்\nதமிழன் தலை விதி அந்த லட்சணத்தில் தான் உள்ளது .ஏதாவது திராவிட கட்சியை ஆதரித்து தான் ஆகணும் .காரணம் தமிழனுக்குள் அவ்வளவு எளிதில் ஒற்றுமை வரும் என்று நம்ப முடியவில்லை .\nஜெ,கருணாவிற்கு மாற்றாக ஆள்வதற்கு தராதரமும் தகுதியும் வை.கோ விற்கு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.\nகுருஜி ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு மாற்றேல்லாம் வைகோ கிடையாது..இவரும் மற்றவர்களுக்கு சளைத்தவர் கிடையாது...முன்னாள் பிரதமரையும் அவருடன் பத்துக்கும் மேற்பட்டவர்களையும் கொலை பண்ணிய குற்றவாளிகளுக்கு விதிக்க பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அந்த கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடும் இவரெல்லாம் நேர்மையான சிறந்த அரசியல்வாதி கிடையாது...தூக்கு தண்டனை விதிக்க பட்ட கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர் அந்த கொலைகாரர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் நிலைமையை சிறிதாவது நினைத்து பார்த்திருப்பாரா..ஒரு சிறிய கூட்டம் தமிழ் நாட்டில் கொலை காரர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதை பார்த்து பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக காஸ்மீரில் ஒரு கூட்டம் போராட்டம் நடத்துகிறது...அப்புறம் நாட்டில் நீதியை எப்படி நிலை நாட்ட முடியும்...பாதிக்கபடும் அப்பாவி மக்களை பற்றி இவர் சிறிதாவது கவலை பட்டதுண்டா..எனவே வைகோ சிறந்த நேர்மையான அரசியல் வாதி எல்லாம் கிடையாது..\nகருணாநிதிக்கு அடுத்து வைகோ வருவார் என்பதெல்லாம் கற்பனையானது இது எந்தகாலத்திலும் நடக்காது. விடுதலைப்புலிகள், சந்தனக்கடத்தல் வீரப்பன், மற்றும் அணுமின் உலை போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது பெயரை கெடுத்துகொன்டுள்ளார் இது எந்தகாலத்திலும் நடக்காது. விடுதலைப்புலிகள், சந்தனக்கடத்தல் வீரப்பன், மற்றும் அணுமின் உலை போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது பெயரை கெடுத்துகொன்டுள்ளார் இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை செல்வாக்கு இருப்பதாக சொல்வது ஒருவகையான மாயத்தோற்றமே செல்வாக்கு இருப்பதாக சொல்வது ஒருவகையான மாயத்தோற்றமே ராஜீவ் மற்றும் 16 தமிழர்களை கொன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் ராஜீவ் மற்றும் 16 தமிழர்களை கொன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் இதெல்லாம் கொடுமை இவர் தமிழக அரசியலிலிருந்து விலகுவது நல்லது. தனித்து நின்று ஒரு கவுன்சிலர் ஆகக்கூடமுடியாது இதே நிலை தான் நெடுமாறனுக்கும் இதே நிலை தான் நெடுமாறனுக்கும்\nவெறும் உணச்சிவசப்படும் ஒருவர்,நாட்டின் அரசியலை புரிந்துகொள்ளாதவர்,பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டியவர் எப்படி நிர்வாகம் செய்வார்\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுகளை வைத்து வைகோவின் எதிர்காலத்தை முடிவு செய்ய முடியாது...சொல்லப்போனால் உள்ளாட்சி தேர்தலில் பி.ஜே.பி 2 நகராட்சிகளை கைப்பற்றியதோடு நிறைய இடங்களையும் கைப்பற்றியிருப்பது அதன் வளர்ச்சியை காட்டுகிறது ... வைகோவிடம் ஜெயலலிதாவின் தலைமை குணமும் , கலைஞரின் அரசியல் சாமர்த்தியமும் இல்லை ...\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/92152", "date_download": "2018-08-20T18:08:07Z", "digest": "sha1:OD4IVRF3VGWPZO2QW66KJW7ZBBITORA7", "length": 5872, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதியாக இஷாக் ரஹுமான் - Zajil News", "raw_content": "\nHome Sports ரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதியாக இஷாக் ரஹுமான்\nரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதியாக இஷாக் ரஹுமான்\nபவர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று 26 சனிக்கிழமை இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் விஷேட அதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இபலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.\nசிறந்த ஆட்ட நாயகனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் விருதிணை வழங்குவதை படத்தில் காணலாம்.\nPrevious articleகுப்பைகளை புதைக்க தோண்டிய குழிக்குள்ளிருந்து ரீ.-56 ரக துப்பாக்கி மீட்பு\nNext articleசீரற்ற வானிலை; கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/07/blog-post_6.html", "date_download": "2018-08-20T18:06:20Z", "digest": "sha1:26ITZXS7O5L7YNAZUTKTNW63VGYVKY5M", "length": 18140, "nlines": 264, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய்ய?", "raw_content": "\nஎனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய்ய\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 டியர், ஒரு பிரபல ட்வீட்டர் என்னை ஃபாலோ பண்ணிட்டார், எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா\nஏம்மா அவனே ஒரு எருமை, இதுல என்ன பெருமை\n2 1975 ல் கமல் -ன் அந்தரங்கம் படம் பிரமாதம்\nஇதை ஏன் இப்போ சொல்றே\nஅந்தரங்கத்தை விமர்சிக்கக்கூடாதுன்னு சில்ர் சொல்றாங்களே,அதான் விமர்சிச்சேன்\n3 விதை இல்லா திராட்சையை ரவிக்கையில் கை இல்லா வனிதை வாங்கிச்சென்றாள்- இதுக்கு இங்க்லீஷ்ல என்ன\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ஃபிகர் பர்ச்சேஸ்டு சீட்லெஸ் க்ரேப்\n அனுதாப ஓட்டு வாங்க உடல்நிலை சுகவீனம்னு நாடகம் போடப்போறீங்களாமெ\nஐடியா இருக்கு, உண்ணாவிரத நாடகமே எடுபடலை,அதான் யோசிக்கிறேன்\n5 டாக்டர், கடல் கன்னிக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருக்குமா\n6 கலைஞர், ஜெ இருவரும் ஊழல்வாதிகளே\nஓஹோ, அப்போ யார் ் ஜெயிப்பாங்க\nஊழலில் நெ 1 ஜெயிக்க வாய்ப்பு இல்லை\nஅப்போ நீ அதிமுக பி டீமா\n7 டாக்டர் க்கு படிச்சா பொண்ணுங்க தானா் நம்ம மேல விழுவாங்களா\nஇப்பவெல்லாம் படிக்கற பசங்களை பொண்ணுங்க மதிக்கறதில்லை.குடிக்கற தறுதலைங்களைத்தான்\n8 கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம்.அதே தவறை எதிர்காலத்தில் செய்ய மாட்டோம்.வெரைட்டியாக செய்வோம்.எனவே வாக்களிப்பீர்,,..\n உடம்பு சரி இல்லைனு படுத்துக்குங்க.அனுதாப வாக்கு 10%,வந்தா ஜெயிச்சுடலாம்.\nபடுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு உதார் விட நான்.என்ன எம்ஜிஆரா\n10 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அதிக வாய் ப்புகள் தரப்படும்.சாம்ப்பிள் பார்த்திருப்பீர்கள்\n உங்க ஆட்சி அமைஞ்சா பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா\nவெளி ஆட்களால் ஒரு ஆபத்தும் வராது\n12 நமீதா ஸ்ரீகாந்த்தை பலாத்காரப்படுத்தும் வீடியோ க்ளிப் மாட்டி இருக்கு, தானிக்கு தீனி எப்பூடி\n அது இந்திரவிழா பட க்ளிப்பிங்க்ஸ்\n13 புருசனை அடிப்பதற்கு பல ஆயுதங்கள்\nஅன்பே , நீயே செம கட்டை, உனக்கு எதுக்கு பூரிக்கட்டை\n14 உங்க ஆஃபீஸ் எப்பவும் கலகலப்பா இருக்குமாமே\nஆமா, ஏகப்பட்ட சில்றைப்பசங்க இருக்கானுங்க\n15 அதென்ன ட்விட்டர்ல நைட் ஆயிட்டா நிறைய பேரு சோகமாயிடறாங்க\nவரும்போதுதான் அப்டி, பொண்ணுங்க கூட பேசிட்டா சுகம் ஆகிடுவாங்க\n16 யார் அதிகம் சீட்டுகள் ஜெயிப்பார்கள்.\n17 கதை தெரிவில் விஜய்ஆண்டனி, அருள்நிதி மாதிரி சின்னநடிகர்களுக்கு இருக்குற தெளிவு கூட 50 படங்கள் நடித்த நம் ஆதர்சங்களுக்கு இல்லயே\nஹீரோயிசம் , பஞ்ச் டயலாக்,100 கோடி டார்கெட் பார்க்கவே நேரம் சரியா இருக்கு\nடாக்டர்,எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல.\nவாழ்க்கை, வழுக்கை 2ம் பிடிக்காது , ஆனா ஏத்துக்கிட்டுதான் ஆகனும்\nசார்,விஜய் ரசிகர்கள் நினைச்சா திமுகவை ஜெயிக்க வைக்க முடியுமாமே\nபுலியையே ஜெயிக்க வைக்க முடியலை, எப்டி சிம்ம ராசியை தோற்கடிக்க முடியும் அவங்களால\nஎனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய்ய\n1ம் செய்ய முடியாது. இ[ப்போதைக்கு சிவாஜி-அம்பிகா நடிச்ச வாழ்க்கை தான் இருக்கு, இனி யாராவது ரீமேக்கினா தான் உண்டு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nடீச்சரை லவ்வுபவர்கள் தங்கள் காதலை ஓப்பன் பண்ண உகந்...\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம் னு ஏன் டைட்டில் வெச்...\nதமிழ் நாட்டில் அடிமையா இருந்தாதான் அமைச்சர் பதவியே...\nஇன்ஸ்பெக்டர்.அடிச்ச வழக்கு சூர்யா மேல.எதுக்காக ஜோத...\n யாரையும் பழி.வாங்க மாட்டோம்னு போன மாசம்தான...\nபெண்கள் வாழ்க்கையில் விளையாடுவது இந்தக்கணக்கில் வர...\nஉலுக்கித்தான் பறிக்கனும் உதிராது மாங்கனி - பாமக + ...\nசிங்கிள் டீ க்கு கூட வழி இல்லைனு யாரும் புலம்ப வழி...\nபஸ் ல ரஜினி ரசிகையை எதுக்கு கட்டிப்பிடிச்சே\n என் மென்சன்க்கு ஏன் ரிப்ளையே பண்றதில்ல...\nசொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் அடிக்க அனுமத...\n அக்னி நட்சத்திரம் ல பார்த்த மாதிரி அப...\nகபாலி - சினிமா விமர்சனம் ( சிபிஎஸ்)\nவாக்கு வங்கியில் வறுமை, இதில் என்ன பெருமை\nகபாலி - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பு...\nசெல்பி.வித் எமன் பை விமன்\nகுழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்....\nஇந்த வீட்டை ஏன் ரெ...\nஎல்லாரும் வண்டு முருகன் ரேஞ்ச்ல\nஜெ ஆட்சியில் எப்போதும் தளபதிகளுக்கு சோதனைக்காலமே\nஆட்சி பாதிலயே அவுட் ஆகிடும்னு ஜோசியர் சொன்னாரா\nபடித்த தம்பதிகளே அதிக விவகாரத்து... உச்ச நீதிமன்றம...\n தொடை தெரியற மாதிரி மிடி போட்டுட்டு ஊருக்...\nவை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா\nதேர்தல் முடிவு கற்றுக்கொடுத்த பாடம்\nகெமிஸ்ட்ரி டீச்சரை லவ் பண்ணினா\nமேடம், டி எல் வாங்கன்னு டி எம் பண்ணாக்கூட பிடிச்சு...\n108% சதவீத வாக்குப் பதிவு\n கள்ளச்சாராயம் காய்ச்ச இப்போ என்ன அவசரம்\n ன்னு கேட்டா கோபப்படாதவன் யார்\nஉங்க தலைவர் கொள்ளை அடிச்சாரா\n ஆட்சி அமைவதற்கு முன் ஐ லவ் யூ சொல்...\nதேவாலயம் ,இளையராஜா ஆலயம், ரஹ்மான் ஆலயம்\nஅண்ணன் தான் உள்ளடி வேலை பண்ணி இருக்கார் போல\nசெல்லக்குட்டி பிரதிபா சினிமா தியேட்டர் ஓனர் வாரிசு...\nகாஜல் அகர் “வால் போஸ்டர்”\nதில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்\nஇரட்டை விரல் காட்டிய ஸ்மிருதி இரானி.\nஅன்புமணி ,கேப்டன் பட்ட கஷ்டங்கள்\nசகாயம் அறிக்கையை காப்பியடித்தாரா ஜெ\nஎனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய...\nமருதாணி மீரா , மீரு ஹியர்,மீரா முகுந்த்,மேரிமீரா,ம...\nசன் டிவி, கலைஞர் டிவி சொத்துக்களை கலைஞர் தரத்தயாரா...\nசாய் பல்லவி சாயுமா சாயாதா\nசுவாதி கொலை வழக்கு- போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகள...\nநஷ்டத்தில் இயங்கிவரும் மின்வாரியம், vs லாபத்தில் இ...\nதமிழிசை- தமிழக சி எம்\nசுவாதி கொலை- புலனாய்வில் புதிய தகவல்\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ப...\nசுவாதி கொலையில் நடந்தது என்ன\nஅப்பா - திரை விமர்சனம்\nடியர், நீயும் ட்விட்டர்ல இருக்கே, நானும் ட்விட்டர...\nசிம்பு காதலியை மாத்திட்டாரு குஷ்பூ கட்சியை மாத்திட...\nஜாக்சன் துரை - திரை விமர்சனம்\nதிருப்பூர் பெண் ட்வீட்டர்கள் 3 பேரும் செம விபரம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13031403/Problems-in-getting-sulphuric-acid-for-dye-plants.vpf", "date_download": "2018-08-20T18:27:16Z", "digest": "sha1:L4AFAZWFDEUL7A7RD4G7VHSPD2XE3PEP", "length": 13891, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Problems in getting sulphuric acid for dye plants due to closure of sterile plant in Tuticorin || தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல் + \"||\" + Problems in getting sulphuric acid for dye plants due to closure of sterile plant in Tuticorin\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் சாய ஆலைகளுக்கான சல்ப்யூரிக் ஆசிட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே போதுமான அளவு சல்ப்யூரிக் ஆசிட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தில் சாய ஆலைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த சாய ஆலைகளில் துணிகளுக்கு சாயமேறும் பணியில் பல்வேறு விதமான ரசாயனங்கள், நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன. முதல் நிலை சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் சாயக்கழிவுநீரின் காரத்தன்மை சீராக்கும் பணியில் இந்த ஆசிட் பயன்படுகிறது.\nமேலும், இதனை கட்டுக்குள் கொண்டுவர சல்ப்யூரிக் ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் சாய ஆலைகளிலும் சல்ப்யூரிக் ஆசிட் முக்கிய மூலபொருளாக இருந்து வருகிறது. திருப்பூரில் உள்ள 18 பொது சுத்திகரிப்பு மையங்கள், தனியார் சுத்திகரிப்பு மையங்கள், சாய ஆலைகள் உள்ளிட்டவைகளுக்கு மாதம் தோறும் 1,100 டன் அளவு சல்ப்யூரிக் ஆசிட் தேவைப்படுகிறது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து சாய ஆலை சுத்திகரிப்பு துறையினர் சல்ப்யூரிக் ஆசிட் கொள்முதல் செய்தனர். ஒரு டன் சல்ப்யூரிக் ஆசிட் ரூ.3,500-ஆக இருந்தது. தாமிரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் சுத்திகரிப்பின் போது இந்த சல்ப்யூரிக் ஆசிட் கிடைக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் இந்த ஆசிட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு டன் சல்ப்யூரிக் ஆசிட் 16 ஆயிரத்து 800-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சாய ஆலை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து சாய ஆலை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-\nதிருப்பூர் சுத்திகரிப்பு மையம், சாய ஆலைகளுக்கு தேவையான சல்ப்யூரிக் ஆசிட்டை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மொத்த விலையில் வர்த்தகர்கள் கொள்முதல் செய்து திருப்பூர் சாய ஆலைகளுக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் திருப்பூர் சாய ஆலை நிறுவனங்களின் தேவைக்காக வெளிமாநிலங்களில் இருந்து சல்ப்யூரிக் ஆசிட் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடும் தட்டுப்பாடு காரணமாக ரூ.3500-ஆக இருந்த ஒரு டன் சல்ப்யூரிக் ஆசிட் விலை ரூ.16 ஆயிரத்து 800-ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த ஆசிட் இல்லாவிட்டால் சுத்திகரிப்பு மற்றும் சாயமேற்றும் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால், விலை அதிகமாக இருந்தாலும் கட்டாயம் அவற்றை வாங்கி உபயோகப்படுத்த வேண்டிய நிலைக்கு சாய ஆலை நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். சாய ஆலைகளுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்கனவே பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில் சல்ப்யூரிக் ஆசிட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மேலும் எங்களை கவலையடைய செய்துள்ளது. பின்னலாடை தொழிலின் நலன் கருதி தேவையான அளவு சல்ப்யூரிக் ஆசிட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/Inaiyathalaimurai/2018/06/07183413/1000752/INAIYATHALAMURAI07062018.vpf", "date_download": "2018-08-20T18:47:06Z", "digest": "sha1:74JULWELC5QMWGYBCWJNDMDD27O2L44M", "length": 4230, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இணைய தலைமுறை 07.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 13.07.2018\nஇனி தாஜ்மஹால் அருகில் புகைப்படம் எடுக்கலாம்\nஇணைய தலைமுறை - 12.07.2018\nகட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார் கமல்\nஇணைய தலைமுறை - 11.07.2018\nராகுல் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்..\nஇணைய தலைமுறை - 10.07.2018\nவாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\nஇணைய தலைமுறை - 09.07.2018\nநெட்டிசன்கள் டிரெண்டாக்கும் கருப்பு நிறம்..\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/world/96487", "date_download": "2018-08-20T18:03:45Z", "digest": "sha1:BUJPMU3OCUW3ESI3TBCAUR2CBW6REHSR", "length": 7344, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கைகள் அமைக்க 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கிய ஹார்வர்டு தமிழ் சங்கம்", "raw_content": "\nஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கைகள் அமைக்க 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கிய ஹார்வர்டு தமிழ் சங்கம்\nஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கைகள் அமைக்க 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கிய ஹார்வர்டு தமிழ் சங்கம்\nஅமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய இருவரும் இறங்கினர்.\nதமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய 2 பேரும் வழங்கியுள்ளனர். தமிழக அரசு தன் பங்காக 10 கோடி ரூபாய் வழங்கியது. மீதமுள்ள ரூ.23 கோடிக்கு அதிகமான நிதியை உலக தமிழர்களிடம் நன்கொடையாக அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நிதி திரட்டும் முயற்சியில் மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் சார்பில் செயின்ட் லூயிஸ் நகரில் முத்தமிழ் விழா மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முத்தமிழ் விழாவில் தமிழ் நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஅதைத்தொடர்ந்து கடந்த 11-ம் தேதி நிதி திரட்டும் இசை விழா நடைபெற்றது. இந்த விழாலில் பாடகர்கள் தமிழ் பாடல்களை பாடினர். நிகழ்ச்சி முடிவில் திரட்டப்பட்ட 30,000 டாலர்கள் மிஸ்ஸோரி தமிழ் சங்கத்தால் ஹார்வர்டு பல்கலைகழகத்திற்கு தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக வழங்கப்பட்டது.\nதொண்டு நிறுவனங்களுக்கு 340 கோடி டாலர்கள் நன்கொடை\nகனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் - சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது\n36 ஆயிரம் அடி ஆழத்தில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள்\nபிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\nதவறான விமானத்தில் ஏறி 1500 மைல் பயணித்த டைரக்டர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:06:23Z", "digest": "sha1:S2OCDA4AMC3OWKUMSMDDCN4UAPTHRVQC", "length": 19870, "nlines": 174, "source_domain": "news7paper.com", "title": "காற்றில் ராகம் மீட்டும் வீணை கலைஞர் துரை சுவாமி- பெங்களூரு சாலைக்கு இன்று அவரது பெயர் சூட்டப்படுகிறது - News7Paper", "raw_content": "\nஉலக மசாலா: ஐயோ… மீன்கள் பாவம்…\nகர்நாடகாவில் கனமழை எதிரொலி; தமிழகத்துக்கு 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு: காவிரி…\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்\nகாற்றில் ராகம் மீட்டும் வீணை கலைஞர் துரை சுவாமி- பெங்களூரு சாலைக்கு இன்று அவரது பெயர்…\nபியார் பிரேமா காதல்: கச்சிதமான காதல் படம்\nவில்லனாக நடிக்கும் சிம்பு – இந்து தமிழ் திசை\nசூப்பர் பையன்டா நீ… மகனுக்கு ஜெயம் ரவி பிறந்தநாள் வாழ்த்து\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கலைஞராக நடிக்க ஆசை: பிரகாஷ் ராஜ் | If…\nஉங்கள் சாட் ஹேக் செய்யப்படலாம்: வாட்ஸ் ஆப்-க்கு செக் பாயின்ட்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nபில்லி சூன்யங்களில் ஏன் எலுமிச்சை பழம் பயன்படுத்துகிறார்கள்\nஆண்களின் இளநரைகளை மறைய செய்யும் வகை வகையான பீட்ரூட் ஹேர் கலரிங்..\nதோள்பட்டை வலியை எளிதில் குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் | Remedies for shoulder pain\nஆண்மை குறைவை குணமப்படுத்தும் இந்த சின்ன விதைகள் பற்றி தெரியுமா..\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் காற்றில் ராகம் மீட்டும் வீணை கலைஞர் துரை சுவாமி- பெங்களூரு சாலைக்கு இன்று அவரது பெயர் சூட்டப்படுகிறது\nகாற்றில் ராகம் மீட்டும் வீணை கலைஞர் துரை சுவாமி- பெங்களூரு சாலைக்கு இன்று அவரது பெயர் சூட்டப்படுகிறது\nஒரு குளிர்கால மாலையில் தஞ்சா வூரில் இருந்து மைசூருவுக்கு மயிலாடுதுறை எக்ஸ்பிரஸில் பயணமானேன். சில நூற்றாண்டு களுக்கு முன் கும்பகோணம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மைசூர், மேல்கோட்டை, ஹாசன் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்தோரின் வாரிசுகள் நிரம்பி இருந்தனர்.\nரயில் தடதடக்கும் சத்தத்திற்கு மத்தியில் கர்நாடக சங்கீத கச்சேரி யின் விமர்சன கூட்டம் தொடங்கி யது. அங்கிருந்த அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவ‌ர் மேனி சிலிர்த்தவாறு வீணை வித்வான் மைசூர் துரை சுவாமி ஐயங்காரை பற்றி சிலாகித்தார். அடுத்த கணமே யூ-டியூப்பில் துரை சுவாமி ஐயங்காரின் வீணை இசையில் மூழ்க தொடங்கினேன்.நடிகர் ரஜினி காந்த் நடித்த ஜானி படத்தில் இளையராஜா மீட்டிய வீணை யொலி ஏற்படுத்திய மயக்கத்தை துரை சுவாமி ஐயங்காரின் வீணை யும் செவ்வனே செய்தது.\nஇந்தியாவின் பாரம்பரிய இசை யிலும், கர்நாடக இசையிலும் பிரபல மான வீணை வித்வான் மைசூர் வி.துரை சுவாமி ஐயங்கார் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்ட‌கத்தாவல்லி கிராமத்தில் 1920-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி பிறந்தார். இவரது தாத்தா ஜனார்த்தனர் நல்ல பாடகராக இருந்ததாலும், தந்தை வெங்கடேசர் வீணை இசைக் கலைஞராக இருந்ததாலும் அதன் தாக்கம் துரை சுவாமியிடம் அதிகமாகவே இருந்தது.\nதொடக்கத்தில் தன் தந்தை யிடம் வீணை இசை பயின்ற இவர், பிரபல வீணை வித்வான் வேங்கடகிரியப்பாவிடம் மாணவ ராக‌ சேர்ந்தார். மைசூரு மகாராஜா குடும்பத்தின் ஆஸ்தான இசை வித்வானாக இருந்த வேங்கட கிரியப்பாவிடம் சுமார் 15 ஆண்டு கள் வீணை இசை கற்றார்.\nமுத்தையா பாகவதர் பாடிய பல கீர்த்தனைகளையும் கற்று தேர்ந்த துரை சுவாமி தனது 12 வயதிலே கச்சேரி செய்ய தொடங்கினார். 13-வது வயதில் மைசூரை ஆண்ட நான்காம் கிருஷ்ணராஜ உடையார் முன்னிலையில் கச்சேரி செய்தார். இவரது இசையில் மகிழ்ந்த மகாராஜா துரை சுவாமிக்கு 50 வெள்ளி காசுகளை பரிசாக வழங்கி பாராட்டினார்.\nபின்னர் மைசூர் அரண்மணை வாத்தியக் குழுவின் ஆஸ்தான வித்வானாகவும் நியமித்தார்.\nபெரும்பாலான வீணை வித்வான் கள் கான்டாக்ட் மைக்ரோஃபோன் பயன்படுத்தி கச்சேரிகள் செய்த னர். ஆனால் துரை சுவாமி ஐயங் கார் பாரம்பரியமான வீணையில் இருந்து வெளிப்படும் இயல்பான ராகம் தான் சிறந்தது என்று கூறி, நவீன தொழில்நுட்ப கருவிகளை தவிர்த்தார். இதனால் இவரது வீணை இசைக்கு ‘’மைசூர் பாணி’’ என்ற புதிய பெயரே உருவானது. இந்த மைசூரு பாணியிலான‌ வீணை இசையில் மகாராஜா குடும்பத்தையும், விருந்தினர்களை யும் தொடர்ந்து 6 தலைமுறைகள் கட்டிப்போட்டார்.\nஅகில இந்திய வானொலி நிலையத்தில் கச்சேரி செய்ய தொடங்கிய இவர் அங்கு 25 ஆண்டுகள் இசை தயாரிப்பாளராக பதவி வகித்தார்.\n1944-ல் துரை சுவாமி ஐயங்கார் சென்னையில் முதன்முதலாக பங்கேற்ற இசைக் கச்சேரியில் மணி ஐயர், சவுடையா, லால்குடி ஜெயராமன், எம்.எஸ்.கோபால கிருஷ்ணன், டி.என்.கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர் கள் இவருடன் இணைந்து பக்க வாத்தியம் வாசித்துள்ளனர். உஸ்தாத் அலி அக்பர் கான், அம்ஜத் அலிகான் உள்ளிட்ட பிரபல கலை ஞர்களுடன் ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடு களில் நடந்த சர்வதேச இசை விழாக்களில் வீணை மீட்டியுள்ளார்.\nஇசைத்துறையில் மைசூர் வி.துரை சுவாமி நிகழ்த்திய சாதனைக்காக மத்திய அரசின் பத்மபூஷண் விருது, சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகா மணி விருது உள்ளிட்ட விருது களைப் பெற்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இறுதிவரை இசைத் தொண்டாற்றி வந்த மைசூர் வி.துரைசுவாமி 1997-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி பெங்களூருவில் காலமானார்.\nஅவரது வீணை எழுப்பிய ஒலி காற்றில் கலந்து பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கிறது. இதனை அங்கீ கரிக்கும் வகையில் பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத் ராஜ், மல்லேஸ்வரத்தில் உள்ள 13-வது கிராஸ் சாலைக்கு மைசூர் வீணை வித்வான் வி. துரை சுவாமி ஐயங்கார் பெயரை சூட்ட உள்ளார். 98-வது பிறந்த தினமான இன்று நடைபெறும் விழாவில் ஸ்ரீ யாதகிரி நாராயண ராமானுஜ ஜீயர், அந்த தொகுதி எம்எல்ஏ அஷ்வத் நாராயணா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.\nஇந்த அறிவிப்புக்கு துரை சுவாமி மகன், பிரபல வீணை வித்வான் டி. பாலகிருஷ்ணா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nPrevious articleநாகூர் தர்கா பெயரில் ரூ.5, 10 நாணயங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்: அதிமுக எம்பிக்கள் கோரிக்கை\nNext articleரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்\nஉலக மசாலா: ஐயோ… மீன்கள் பாவம்…\nகர்நாடகாவில் கனமழை எதிரொலி; தமிழகத்துக்கு 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்\nகாமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா | Sangeetha pays tribute...\nபெண்கள் மார்பகத்தை பற்றி அறியப்படாத 10 உண்மைகள் – வினா, விடைகள்\n04.12.1945ல் கருணாநிதி எழுதிய ஒரு விசித்திரமான கடிதம் – கலைஞரின் தமிழும், ஆளுமையும்\nபேயுடன் காதல், கலவியில் ஈடுபட்டு வந்த பெண், இப்போது குழந்தை பெற்றெடுக்க விருப்பம்\nகருணாநிதி மறைவுக்கு புகழஞ்சலி சூட்டிய தெலுங்கு ஊடகங்கள்\nகேரளாவைப் போல் தமிழக பாஜக இளைஞர் அணியிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியரை அதிக அளவில் சேர்க்க...\n5,000 கி.மீ. தூரம் பாயும், அணு ஆயுதம் ஏந்தி செல்லும் அக்னி-5 ஏவுகணை ராணுவத்தில்...\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்; மத்திய அரசு மீட்டு வர வேண்டும்: ஜி.கே.வாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/hr-head-of-private-firm-shot-in-gurugram-by-worker.html", "date_download": "2018-08-20T18:12:49Z", "digest": "sha1:DBDORHWOU375ZVHEM6A3KJ335VFICLFT", "length": 5916, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "HR Head Of Private Firm Shot In Gurugram By Worker | தமிழ் News", "raw_content": "\nவேலையில் இருந்து தூக்கிய ஹெச்.ஆரை... துப்பாக்கியால் சுட்ட இளைஞர்\nவேலையில் இருந்து நீக்கியதால் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியை(ஹெச்.ஆர்), இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக தினேஷ் சர்மா என்பவர் பணியாற்றி வந்தார். இவரது அலுவலத்தில் பணிபுரிந்த ஜோகிந்தர் நடத்தை விதிகளை மீறியதற்காக அவரை பணியிலிருந்து தினேஷ் நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோகிந்தர் என்னை வேலையிலிருந்து நீக்கியதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க நேரிடும் என பலமுறை எச்சரித்துள்ளார்.\nஆனால் தினேஷ் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று தனது காரில் தினேஷ் சென்று கொண்டிருந்தபோது ஜோகிந்தர் வழிமறித்துள்ளார். ஆனால் தினேஷ் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோகிந்தர் தினேஷை கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுவிட்டு நண்பனுடன் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார்.\nஇதில் படுகாயமடைந்த தினேஷை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தப்பிச்சென்ற ஜோகிந்தர் மற்றும் அவனது கூட்டாளி இருவரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.\nகொட்டும் மழையில் '2 மணி' நேரம் நனைந்த காவலர்.. வைரல் வீடியோ\nசவுதி அரேபியாவில் வெளியான முதல் 'இந்தியப்படம்' இதுதான்\nஜடேஜாவை ஓங்கி 'அறையத்' தோன்றியது: ரோகித் ஷர்மா\n'இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லாதீங்க'..வெதர்மேன் எச்சரிக்கை\n'ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு'.... பெற்ற தாயை அடித்துக்கொன்ற மகள்\nயூ ட்யூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thinappuyalnews.com/archives/136145", "date_download": "2018-08-20T18:47:53Z", "digest": "sha1:VOL4UQCOYSB2M2UESEVYRBLLU2H6KPKX", "length": 5860, "nlines": 50, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி..!! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி..\nதுபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா. இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் பாடுகிற ஆற்றல் இவருக்கு ஏற்கனவே உண்டு. பள்ளியில் நடைபெறுகிற போட்டிகளில் ஆங்கில மொழி பாடல்களையும் பாடி உள்ளார்.\nஇந்த நிலையில் இவர் கடந்த ஒரே வருடத்தில் 80 மொழிகளில் பாடல் பாடுகிற ஆற்றலை பெற்றுள்ளார். இன்னும் 5 மொழிகளில் பாட கற்றுக்கொண்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.\nஆந்திர மாநிலத்தை சேர்ந்த கேசிராஜூ சீனிவாஸ் என்பவர் 76 மொழிகளில் பாடி அதுதான் கின்னஸ் சாதனை ஏட்டில் உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது.\nஇந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.\nஅடுத்த மாதம் 29-ந் தேதி இவர் 85 மொழிகளில் பாட திட்டமிட்டுள்ளார்.\nமுதன் முதலாக அன்னிய மொழி என்கிற வகையில் ஜப்பானிய மொழி பாடலைத்தான் கற்றேன். எனது தந்தையின் தோழி, ஜப்பானை சேர்ந்த சரும நோய் மருத்துவ நிபுணர். அவர் ஓராண்டுக்கு முன்னர்தான் துபாய்க்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்தபோது ஜப்பானிய பாடல் பாடினார். எனக்கு அந்த பாடல் ரொம்பவும் பிடித்தது. அதை கற்றேன். வழக்கமாக 2 மணி நேரத்தில் ஒரு பாடலைப் பாட கற்றுக்கொண்டு விடுவேன். உச்சரிப்பதற்கு சற்று எளிதாக இருந்தால், இன்னும் விரைவாக கற்றுக்கொண்டு விடுவேன். பெரிய பாடலாக இல்லாத பட்சத்தில் அரை மணி நேரத்திற்குள் பாட கற்றுக்கொண்டு விடுவேன்.\nஇவரைப் பொருத்தவரையில் ஜெர்மன், பிரெஞ்சு, ஹங்கேரி மொழி பாடல்கள்தான் கடினமாக இருக்கிறதாம்.\nPrevious மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்..\nNext இரணைமடு நிரம்பி வழிகிறது ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-08-20T18:04:16Z", "digest": "sha1:KJ75B4NNRAOW3XRC3R6VAMNSHJNWQK6P", "length": 6913, "nlines": 143, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!", "raw_content": "\nஅம்மி மீது அவள் வைக்க..\nநல்ல கவிதை, நல்ல நடை, ஆனா எனக்கு ஒன்னும் புரியல அதை பத்தி கவலைப்படாதீங்க, இன்னும் எழுதுங்க\nதமிழ் மணத்தில் இணைத்து விடுங்கள் இன்னும் பிரபலமாகும்\nஅதிகாலை ஒளி அதை ஜன்னல் வழி நோக்கிவிட்டு.. மீண்ட...\nஉன்னால், சுவர்சாய்ந்து புன்னகைகள்.. பல் துலக்கும...\nசுவர் நோக்கும் தனிமைகள், அதில் பிம்பங்கள் உனதேனோ\nவிளைவுகள் பற்றியன்று.. வினைகள் பேசுவதாம் விஞ்ஞானம...\nதென்றலாய் இருந்திட எண்ணம்... எங்கும் சுழலா, நில...\nவாழ்வின் எல்லை, இதன் பொருள்விளக்கம் தெரியாது.. இ...\nகண்ணீர்கவிதை, ஆம்.. ரசித்து உயிர் ஊன்றி எழுதல் நீ...\nதேவை.. உனது ஆழ்முத்தங்கள் விழைவது என் .. வெட்க...\nநல்லதோர் வீணை செய்தோம், அதன் நரம்புகள் நவின்றவை, ...\nநம்மிடை நெருக்கங்கள், குறைந்ததாய் சிறு எண்ணம்.. ...\nஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...\nசில்லிடும் மழைக்காற்று ஜன்னல் வழி உள்புக, ஏனோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:27:44Z", "digest": "sha1:TFTBAVMM66ACYDBYCSUIRNM5VWUFV3PA", "length": 5437, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "பொங்கல் புராணம் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nஉ முருகா பொங்கலும் புதுக்கதையும் – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் முதலில் பொங்கல் வாழ்த்துக்கள் ஆமாம் பொங்கலுக்கு ஏன் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொள்ள வேண்டும் ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம் ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தைப் பூசத்துக்கு தமிழ் வாழ்த்துக்கள் இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை காரணம்,பொங்கல் வாழ்த்தைக் கூறி எதை எதையோ எழுதி வாழ்த்தட்டை அனுப்புகிறோமே அந்த...\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://universaltamil.com/author/ut-photography-team/", "date_download": "2018-08-20T18:53:12Z", "digest": "sha1:UYN2ODNU52TNMAIGPYCHV3SOSONYN6Q4", "length": 11852, "nlines": 154, "source_domain": "universaltamil.com", "title": "UT X, Author at Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT X\n966 இடுகைகள் 0 கருத்துக்கள்\nஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற பேச்சு தொடர்பில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை...\nவாக்குப் பெட்டிகள் இன்று காலை முதல் விநியோகம் – படம் இணைக்கப்பட்டுள்ளது\nவாக்குப் பெட்டிகள் இன்று காலை 8.00 மணி முதல் விநியோகம்\nதேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் விசேட சேவை இன்று நள்ளிரவு வரை திறந்திருக்கும்\nபுலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிராக எந்தவித விசாரணைகளும் இல்லை – இராணுவ...\nஇலங்­கையின் 70 ஆவது சுதந்­தி­ர­தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வு – புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது\nநேற்றிரவு மேற்கொண்டதிடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1670 பேர் கைது\nரவி கருணாநாயக்கவை கைது செய்ய சதித் திட்டம் – பந்துல எம்.பி.\nசுதந்திர தின நிகழ்வுக்காக பிரித்தானிய இளவரசர் இன்று இலங்கை விஜயம்\nஎனது குடியுரிமை பறித்தாலும் மக்களுடன் போராடுவேன்- மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை- ரணில்\nவடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம் டக்ளஸ்\nபல்கலைக்கழ மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்\nசிங்கப்பூர் பிரதமரின் இலங்கை விஜயம் – புகைப்பட தொகுப்பு\nகோட்டாவின் சேவையை மறந்து விடாதீர்கள்\nதேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு – 197 கைது\n‘லசந்த கொலை‘யில் புதிய தகவல்கள் வெளியானது\nஅமெரிக்கா, இஸ்ரேல், இந்தியாவின் கூட்டு முஸ்லிம் உலகிற்கு ஆபத்தானது\nஊழல் மற்றும் திருட்டில் ஈடுபடுபவர்களை துப்பறவு செய்ததன் பின்னர்தான் பதவியை துறந்து வீடு செல்லவுள்ளதாக...\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/?ref=home-jvpnews", "date_download": "2018-08-20T18:24:45Z", "digest": "sha1:FKO5UVSFQXR5QWVSOR6OXV4A3XCKQW3C", "length": 37630, "nlines": 424, "source_domain": "www.dinamani.com", "title": "முகப்பு- Dinamani", "raw_content": "\nஉதவுவதன் மூலம் பேரிடருக்கே பேரிடர் கொடுக்க முடியும்.. உதவுங்கள் தோழர்களே\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் இயன்றதைக் கொடுக்கலாம்.. நேரடியாகக் கொண்டு சேர்க்க முடியாதவர்களுக்காகவே இந்த நல்வாய்ப்பு\nகேரள மழை வெள்ளம் அதிதீவிர பேரிடர் : மத்திய அரசு அறிவிப்பு\nகேரள மழை வெள்ள பாதிப்புகள் 'அதிதீவிர பேரிடர்' என்று அறிவிக்கப்படுகிறது. கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிய பேரிடர் என்று இது தீர்மானிக்கப்படுகிறது.\nவாஜ்பாய் இரங்கல் கூட்டத்தில் 65 ஆண்டுகால நட்பை நினைவுகூர்ந்த அத்வானி\n65 ஆண்டுகாலம் எங்களின் நட்பு நிலைத்தது என்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இரங்கல் கூட்டத்தில் அத்வானி உருக்கமாக பேசினார்.\nஇந்த வாரப் பலன் (ஆக. 17 - ஆக. 23)\nஇந்த வாரம் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்..\nதினமணி இணையதளம் நடத்தும் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2-ஆம் நாள் முடிவு: பதக்கப் பட்டியலில் 8-ஆவது இடத்தில் இந்தியா\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2-ஆவது நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது.\nஎந்த எதிர்ப்புகளுக்கும் அஞ்சாதவர் வாஜ்பாய்: இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம்\nதலைவர், பொருளாளர் தேர்தல் குறித்து ஆக.28 திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு: அன்பழகன் அறிவிப்பு\nசிறுமி அனுப்ரியாவுக்கு அன்புப் பரிசளித்த ஹீரோ சைக்கிள்ஸ்\n'வெள்ள மீட்பு சேவைக்கு பணம் வழங்கப்படும் என்பது வருத்தமளிக்கிறது' - கேரள மீனவர்கள் உருக்கம்\nமிட்டாய்களை தியாகம் செய்து கேரள வெள்ளத்துக்கு உதவிய ஏழை மாணவர்கள்\nநன்றி சொல்ல உனக்கு.. சமூகதளத்தில் வைரலாகும் கேரளாவின் தேங்க்ஸ்\nகேரள மக்களுக்கு உதவ திருமணத்தை ஒத்திப்போட்ட மருத்துவருக்கு ஒரு சல்யூட்\nதூய்மைப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் பவள வண்ணப் பெருமாள் கோயில் திருக்குளம்\nஓசி பிரியாணி கேட்டு தாக்கிய வழக்கு: தேடப்பட்டு வந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண்\nஜி டிவியின் அட்டகாசமான வெப் தொடர் கள்ளச்சிரிப்பு\nமிட்டாய்களை தியாகம் செய்து கேரள வெள்ளத்துக்கு உதவிய ஏழை மாணவர்கள்\n வாழ்வியல் அற்புதத்தை விளக்கும் சீன நாடோடி கதை\nதமிழகம் வருகிறது வாஜ்பாயியின் அஸ்தி: நாடு முழுவதும் 100 நதிகளில் கரைக்க முடிவு\nவிடுதலை கோரி ஆளுநருக்கு எழுதிய கடிதம்: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பேரறிவாளனுக்கு அனுமதி\nஆப்கன்: 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை பிணைக்கைதிகளாக சிறைபிடித்த தலிபான்கள்\nமீனவப் படகை சரி செய்த பாகிஸ்தான் கடற்படை: நீங்க நல்லவங்களா கெட்டவங்களா\nஆசிய விளையாட்டுப் போட்டி: வெள்ளி வென்றார் 19 வயது இந்திய வீரர் லக்‌ஷய்\nசுருளி அருவியில் 8வது நாளாகக் குளிக்கத் தடை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைப்பு\nமெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது கேரளா\nமிகவும் பயனுள்ள வீட்டுமனைக் கண்காட்சி இது\nஒரு கிலோ இனிப்புகளின் விலை ரூ 9000: எங்கு\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nஉங்கள் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று ஆசையா இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்\nஆடிப் பாடி வளைந்து நெளிந்து தலைகீழாய் சுழன்று வகுப்பெடுக்கிறது இந்த ரோபோ\nஅண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nசிபிஎஸ்சி தரம் குறைந்து விட்டதா: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி\nசுருளி அருவியில் 8வது நாளாகக் குளிக்கத் தடை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nமீனவப் படகை சரி செய்த பாகிஸ்தான் கடற்படை: நீங்க நல்லவங்களா கெட்டவங்களா\nவிடுதலை கோரி ஆளுநருக்கு எழுதிய கடிதம்: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பேரறிவாளனுக்கு அனுமதி\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்த உண்டியல் காசை கேரளாவுக்குக் கொடுத்த சிறுமிக்குக் கிடைத்த பரிசு\nF I R முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன \nதகவல் உரிமைச் சட்டம், 2005\nஅரசு அல்லது தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கவனக்குறைவிற்கு பொறுப்பாக்க முடியுமா\nதமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் (ஒழுங்குமுறை) சட்டம், 1997\nமத அரசியல்-7: கிறிஸ்தவம்-கிறிஸ்தவ மத பிரிவுகள்\nமத அரசியல்-6: கிறிஸ்தவம் - பெந்தகோஸ்து\nமத அரசியல்-5: கிறிஸ்தவம் - புரோடஸ்டன்ட்\n14. அசுரத்தனமான சிக்ஸர்களை குவிப்பதில் ரோஹித் சர்மாவுக்கு நிகர் ரோஹித் சர்மாதான்\n12 . கண்ணாமூச்சி விளையாட்டு\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n13. டெங்கு காய்ச்சல் 4 - ரத்தக்கசிவும் தட்டணுக்களும்\nலேசர் - இல்லாத பிரச்னைக்கான ஒரு நல்ல தீர்வு\nநம்மை நாமே சரி செய்து கொள்ள அரிய ரகசியம்.. ப்ளீஸ் படிச்சிட்டு யாருக்கும் சொல்லாதீங்க\n15. கிருஷ்ணா, ராமா சேவா\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 18. வெஃகாமை\nகுவியத்தின் எதிரிகள் - 24. சினிமா நட்சத்திரங்களின் தீபாவளிப் பேட்டிகள்\nசாவியின் பேத்தி நான், தமிழை அவமதிக்க மாட்டேன்: பிக் பாஸில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி விளக்கம்\nடேனியலின் திட்டம் என்னவென்றால், தமிழைப் பயன்படுத்தி மக்களிடம் அனுதாப ஓட்டுகள் பெறவேண்டும் என்பதுதான்...\nஜி டிவியின் அட்டகாசமான வெப் தொடர் கள்ளச்சிரிப்பு\nரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘இங்லீஷ், விங்லீஷ்’ நடிகை சுஜாதா குமார் மரணம்\nஆறு மாதத்துக்கு தேர்தல் இல்லை: நடிகர் சங்க பொதுக் குழுவில் தீர்மானம்\nகேரளா வெள்ளத்துக்கு உதவி செய்யவில்லையா: ரசிகரின் சீண்டலும் காஜல் அகர்வாலின் காரமான பதிலும்\nகேரள வெள்ள பாதிப்பு: ரூ 35 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விக்ரம்\nஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் வினேஷ் போகத்\nநான் கபில் தேவ் அல்ல, பாண்டியா\nஆசிய விளையாட்டுப் போட்டி: வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் குமார்\nஆசிய விளையாட்டுப் போட்டி: முதல் தோல்வியைச் சந்தித்தது இந்திய கபடி அணி\nஆசிய விளையாட்டுப் போட்டி: அரையிறுதியில் சாக்‌ஷி மாலிக் தோல்வி\nடெஸ்ட்: 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய பாண்டியா (விடியோ)\nதினமணி.காமின் பிரம்மாண்ட சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி\nஇது கனவுக் கன்னிகளின் கதையல்ல... கனவுக் கண்ணன்களின் கதை\nஉங்கள் முகம் தெய்விக அழகுடன் தேஜஸாக ஜொலிக்க வேண்டுமா\nஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா குறைந்த பட்சம் குழந்தைகள் நலனுக்காக\nகொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவிண்ணப்பிக்கலாம் வாங்க... தமிழ்நாடு தபால் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்டெல் நிறுவனத்தில் வேலை\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுகள் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று அறிவிப்பு\nவேலை... வேலை... வேலை... கோவை நீதிமன்றத்தில் வேலை\n தெற்கு ரயில்வேயில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை\n உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ கிடைக்க இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்துங்கள்\nநடிகை பூஜா குமாரின் அழகு ப்ளஸ் ஆரோக்கிய ரகசியம்\nஅக்ரஹாரம் இல்லை... இது அக்கரகாரம் எனும் மூலிகைச் செடி\nமஞ்சள் நிறமாக சளி வெளியேறுதல், வாயில் புண் மற்றும் பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவு குணமாக\nகல்லீரல்-கணைய பாதிப்பு அறிகுறிகள் முன்கூட்டியே தெரியாது: நிபுணர்கள் தகவல்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆக.21-ல் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்\nமதுரை ஆவணிமூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்...\nதிருமலைநம்பியின் 1045-வது அவதார உற்சவம்\nதூய்மைப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் பவள வண்ணப் பெருமாள் கோயில் திருக்குளம்\nஆவணி மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nஇழந்த செல்வம் / பொருளை மீண்டும் பெற சிவபுரநாதர் கோவில், சிவபுரம்\n105. ஒடுங்கும் பிணிபிறவி - பாடல் 9\nபத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11\nமகரம் அது கெட இரு குமிழ் அடைசி..\nகார்களின் விலையை உயர்த்தியது மாருதி சுஸுகி\nகார் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி தனது தயாரிப்புகளின் விலையை ரூ.6,100 வரை உயர்த்தியுள்ளது.\nஜூலை மாத வாகன விற்பனை நிலவரம்\nமாருதி சுஸுகி நிகர லாபம் ரூ.1,975 கோடி\nஅமெரிக்காவில் அறிமுகமாகவிருக்கும் பறக்கும் கார்கள்\nமாருதி சுஸுகி வாகன உற்பத்தி 2 கோடியை தாண்டி சாதனை\nடாப் 10 கார் விற்பனை: ஆல்டோவை விஞ்சிய டிசையர், ஸ்விஃப்ட்\nஐசிஎஃப் பசுமைக் கலைப் பூங்கா: பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\nகழிவுகள் மற்றும் உபயோகமற்ற உதிரி பாகங்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை கொண்ட பசுமைக் கலைப் பூங்கா\nமாமல்லபுரத்தில் தேங்கிய மழைநீர்: சுற்றுலாப் பயணிகள் அவதி\nமாமல்லபுரம் சுற்றுலா நகரில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றதால் சுற்றுலா இடங்களைப் பார்வையிட முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nமாமல்லபுரம் புராதனச் சின்னங்கள்: பார்வையாளர் கட்டணம் உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி\nசர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை பார்வையிடுவதற்கான\nதேர்தலில் வாக்களிக்க மின்னணு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்கிற கருத்து சரியா என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்..\nசெயல்படாத ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்\nபருக்கள் மறைய எளிய வழிகள்\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nகேரளாவுக்கு உதவுவோம்: உங்களால் முடிந்ததை கொடுத்து உதவ இதோ ஒரு வாய்ப்பு\nகேரளாவில் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தால் மாநிலமே உருகுலைந்து போயுள்ளது.\nதினமணி.காமின் பிரம்மாண்ட சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி’\n தினமணி இணையதளத்தின் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி’ ல் கலந்து கொள்ள நீங்கள் தயாரா\nஇன்று கருட பஞ்சமி: என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஎம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும்..\nகைபேசி தொலைந்தாலும் தகவல்களைப் பாதுகாக்கலாம்\nகைபேசியை தொலைந்து விட்டால், அதை வாங்க செலவிட்ட பணத்துக்காக கவலைப்படுவதில்லை.. மாறாக\nஐஏஎஸ் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி\nஇன்றைய இளைஞர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுத வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர்\nபேங்க் ஆஃப் பரோடாவில் வேலை, பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் வேலை, ரிசர்வ் வங்கியில் வேலை\n‘சென்னையின் சமையல் ராணி’ - தினமணி இணையதளம் நடத்தும் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018\nஅடுத்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தை மிரட்டுமா\nநான் மீட்டெடுத்த ‘சுதந்திரத்தை’ என்னிடமே கொடுத்து விடுங்களேன் தத்துப் பாட்டி கீதாவின் உருக்கமான வேண்டுகோள்\nகுடகு பகுதியில் மனிதனால் உருவாக்கப்படும் மிகப்பெரிய பேரிடர் காத்திருக்கிறது: எச்சரிக்கும் நிபுணர்கள்\nமக்கள் பேராசையுடன் நதிகளை ஆக்ரமித்தார்கள், இன்று நதிகள் ஆக்ரோஷத்துடன் மக்களை ஆக்ரமிக்கின்றன\nஅத்தியாயம் 78 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nமுதலாம் ராஜேந்திர சோழன் பன்மடங்கு வெற்றிகளைக் குவித்தான்.\nதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள் என்று மு.க. அழகிரி கூறியிருப்பது...\nதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பின்னால்தான் உள்ளார்கள்: மு.க. அழகிரி\nகடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்\nஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2014/09/4.html", "date_download": "2018-08-20T18:40:32Z", "digest": "sha1:47CUTNVSZAFI6MWBRM7W65WEC5HYBLOX", "length": 12320, "nlines": 101, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: அப்பாஸிட்கள் வரலாறு 4", "raw_content": "\nவெள்ளி, 26 செப்டம்பர், 2014\nஇன்னுமொரு அரபுக் காதல் கவிதைக்களஞ்சியம் ‘லைலா, மஜ்னூன்’ ஆகும். இறுதியில் சோகம் ததும்பும் இது ஈரானிய, பெர்ஷிய, அஜர்பை ஜான், துருக்கிய மொழிகளில் மேன்மைப் படுத்தப்பட்டது. இது ஏழாம் நூற்றாண்டில் உமய்யாத்களின் ஆட்சியின்போதே எழுதப்பட்டது. இதன் தழுவல் தான் மேற்கத்தியரின் ‘ரோமியோ ஜூலியட்’ ஆனது. ஒன்பதாம் நூற்றாண்டின் அரபுக் கவிஞர்கள் அல் முதன்னபி, அபு தம்மாம் மற்றும் அபு நுவாஸ் ஆகியோர் பாக்தாதில் கலீஃபாக்களின் அரண்மனைக்கு சென்று வருபவர்களாக இருந்தார்கள். அப்பாஸிட் காலத்தில் தத்துவம் இஸ்லாத்துடன் இணைந்து கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. சிந்தனையாளர்களான அல் கிண்டி, அல ஃபராபி, அல் ஜாஹிஸ், இப்ன் அல் ஹைதம் மற்றும் அவிசின்னா ஆகியவர்களின் தத்துவங்கள் புகழ்வாய்ந்தவை. எட்டாம் நூற்றாண்டுகளின் இறுதியில் சீனாவின் காகித உற்பத்தி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு அறிமுகமானது. அதை பெரிதும் வரவேற்று காகித ஆலையை உருவாக்கி இஸ்லாமிய ஆட்சிதான் பத்தாம் நூற்றாண்டுகளில் அதை ஸ்பெயின் வழியாக ஐரோப்பா கொண்டுசென்று இன்று உலகம் முழுவதும் இன்றியமையாத நிலைக்கு இட்டுச் சென்றது. அதேபோன்று வெடி மருந்து தயாரிப்பு நுட்பமும் சீனாவின் மூலம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு வந்து பொட்டாசியம் நைட்ரேட்டுடன் இணைத்து வெடிமருந்து துகள்களை தயாரித்து உலகம் முழுவதும் பரவலாக்கினார்கள்.\nஅப்போது புதிய முறையாக இயந்திரத்தறியில் நூல் உற்பத்தி செய்யப்பட்டும், ஐரோப்பியர்களுடன் இணைந்து அல் அண்டலூஸ் வழியாக பாதாம், சிட்ரஸ் கனிவகைகளை வரவழைத்து சர்க்கரை தயாரிக்கப்பட்டதும் இஸ்லாமிய ஆட்சியில் தான். கடற்பயணத்திற்கென வழிகாட்டும் வரை படம் தயாரித்தது. முதன்முதலில் வியாபாரக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. பதினாறாம் நூற் றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வரும் வரை இந்தியப் பெருங்கடலில் இஸ்லாமியர்களின் கப்பல்களே கோலோச்சின. இதற்காக மெடிட்டரேனியன் கடலில் இணைக்கும் வகையில் கடல்வழிகளை அமைத்து வெனிஸ், ஜினோவா மற்றும் கேடலோனியா போன்ற ஐரோப்பிய நகரங்களுடன் வாணிபம் செய்தார்கள். இந்த கடல் வாணிபத்திற்கு ஹோர்முஸ் துறைமுகம் தளமாக இருந்தது. கடல்வழியில் சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே மத்திய ஆசியாவைக் கடக்க பயன்பட்ட ‘சில்க் ரோட்’ என்னும் கடல்வழி முஸ்லீம் பேரரசில் தான் இருந்தது.\nஇன்றைய உலகத்தின் தொழிற்சாலைப் பயன் பாட்டுக்கான பலவற்றை அன்றே இஸ்லாமிய பொறியாளர்கள் உருவாக்கி இருந்தார்கள். விண்ட் பவுடர், டைடல் பவுடர், ஹைட்ரோ பவுடர் போன்றவற்றை கண்டுபிடித்தார்கள். முக்கியமாக பெட்ரோலிலிருந்து மண்னெண்ணை வடிகட்டும் நுட்பத்தை கண்டுபிடித்தார்கள். ஏழாம் நூற்றாண்டிலேயே நாட்டின் தொழிற்கூடங்களில் வாட்டர் மில்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஹரிஸாண்டல் வீல், வர்டி கல் வீல் போன்றவற்றையும் பயன்படுத்தி முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். சிலுவைப்போரின் போதே அல் அண்டலூஸ், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் பல ஆலைகளை நிர்வகித்திருந்தார்கள். அவைகளில் விவசாயத்திற்கும், தொழிற் கூடங்களுக்கும் தேவையானவற்றைத் தயாரித்தார்கள். மேலும் பழங்காலத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட வேலைகளுக்கு இஸ்லாமிய பொறியாளர்கள் பல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்று கண்டுபிடித்து அணைகளுக்கு பயன்படுத்தி இருந்தார்கள். பல தொழிற் சாலைக்கு பயன்படும் கண்டுபிடிப்புகளை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியதும் இஸ்லாமியர்கள் தான். துணி, காப்பி, சர்க்கரை, கயிறு தயாரித்தல், தரைவிரிப்பு, சில்க் மற்றும் காகித ஆலைகளை முதல் முதலில் பயன்படுத்தினார்கள். வேதியி யல் மற்றும் தொழிற்சாலைக்கான ஆயுதங்கள் செய்யும் நுட்பத்தை பனிரெண் டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப் படுத்தினார்கள்.\nஅப்பாஸிட்கள் தங்கள் பேரரசில் வசித்த முஸ்லீம் அல்லாதவர்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். தினசரி வாழ்க்கையில் அனைவரும் அரபி மொழி பேசும் அளவுக்கு சுமூக உறவு இருந்தது. இது ஒருவருக்கொருவர் அறிவாற்றலைப் பறிமாறிக்கொள்ள பயன்பட்டது. பெரும்பான்மையான அறிவுத் திறமையும், தொழில்நுட்பமும் சிலுவைப்போரின் போது ஐரோப்பாவில் கொள் ளையடித்துச் செல்லப்பட்டது. அப்பாஸிட்களின் ஆட்சி 1258 ல் மங்கோலியர்களின் பாக்தாத் படையெடுப்பால் முடிவுக்கு வந்தது.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் முற்பகல் 8:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13014-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-!", "date_download": "2018-08-20T18:09:33Z", "digest": "sha1:MNEJJIWWQJZOOKSZ7V5NQMGHHXRODPLH", "length": 7650, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "சோள பணியாரம் !", "raw_content": "\nசோளம் – ஒரு கப்\nஉளுந்து – கால் கப்\nவெந்தயம் – 1 டீ ஸ்பூன்\nசின்ன வெங்காயம் – ஒரு கையளவு\nபச்சை மிளகாய் – 2 -3\nஉப்பு – தேவைக்கு ஏற்ப\nசோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.\nபிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து 'அப்பக்காரலில்' எண்ணெய் விட்டு பணியாரம் செய்யவும்.\nதித்திப்பு வேண்டும் என்றால், அரைத்த இந்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய் பொடி போட்டு, கலந்து அப்பம் செய்தால், அது இனிப்புப் பணியாரம்.\nஇது உடம்புக்கு ரொம்ப நல்லது\nnet இல் பார்த்தது : உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. ‘என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும். எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n« சாமை 'தயிர் சாதம்' | கேழ்வரகு முள்ளு தேன்குழல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1940623", "date_download": "2018-08-20T18:15:53Z", "digest": "sha1:JWBEE3GIZH2ZBCQGHPUFWVGDAT4WTOTB", "length": 18277, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தாலும் 'ரெடி' ! Dinamalar", "raw_content": "\nபிரமாண்ட வரவேற்பு; நெதன்யாஹு மகிழ்ச்சி\nரஜினி கட்சி; கவலைப்படாதீங்க பா.ஜ.,\nபதிவு செய்த நாள் : ஜனவரி 17,2018,22:30 IST\nகருத்துகள் (92) கருத்தை பதிவு செய்ய\nசென்னையில், நேற்று நடந்த விழாவில், நடிகர் கமலுடன் பங்கேற்ற நிலையில், ''ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க தயார்,'' என, நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசினார். நேற்றைய விழாவில் கமல் கலந்து கொண்டதால், கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்த கேள்விக்கு, 'காலம் தான் பதில் சொல்லும்' எனக் கூறி, நழுவினார்.\nநடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி துவங்கப் போவதாக, 2017 டிச., 31ல் அறிவித்தார். அதன்பின், ரசிகர்களையும், பொது மக்களையும் இணைப்பதற்கு வசதியாக, 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற இணையதளத்தையும்,\n'மொபைல் ஆப்' வசதியையும் துவக்கினார். அதில், ஏராளமானோர் உறுப்பினராகி வருகின்றனர். அவர்களின் முழு விபரங்களும் சேகரிக்கப் படுகின்றன. பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களை, பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றை உருவாக்கும் பணியும், ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.\nரஜினி, முழு வீச்சாக அரசியல் கட்சி துவங்க, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திரை உலகில் அவருக்கு போட்டியாளரான கமல், அரசியலிலும் போட்டியாளராக கள மிறங்க உள்ளார்.அவர், பிப்., 21ல், புதியகட்சி துவக்கி, தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, நேற்று முன்தினம் அறிவித்தார்.\nபிரபல நடிகர்கள் இருவரும், அரசியல் கட்சி துவக்கப் போவதாக அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி, அரசியலுக்கு வரப் போவதாக\nஅறிவிக்கும் முன், கமல், அரசின் செயல்பாடு களை விமர்சித்து, தான் அரசியலுக்கு வரப் போவதை உணர்த்தினார். அவர், அரசியல் பிரவேசத்தை அறிவிப்பதற்கு முன், ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அதே வேகத்தில், கமலுக்கு முன், புதிய கட்சியை ரஜினி துவக்குவாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டு உள்ளது.\nஇந்த சூழ்நிலையில், நேற்று சென்னையில், 'அனிமேஷன்'தொழில்நுட்பத்தில் உருவாகும், கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு பட துவக்க விழா நடந்தது. இவ்விழாவில், புதிய கட்சி துவங்க உள்ள, நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்றனர்.இவ்விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினி, தன் வீட்டில் இருந்து புறப்பட்டபோது, நிருபர்களை சந்தித்தார்.\nஅப்போது, அவர் கூறுகையில், ''எம்.ஜி.ஆரின் கொள்கைகளை, அ.தி.மு.க.,வினர் ஓரளவு பின்பற்றுகின்றனர். அரசியலில், கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து, காலம் தான் பதில் சொல்லும். தற்போதைய சூழலில், ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும், சந்திக்க தயாராக உள்ளேன்,'' என்றார்.அவருடைய அறிவிப்பு, நேற்று முதல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஆறு மாதத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டுமென்றால், கூடிய விரைவிலேயே கட்சியை உருவாக்கி, அறிவிக்க வேண்டும். இதுவரை ஆமை வேகத்தில் செயல்பட்டு வந்த ரஜினி, சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை முடுக்கி விடுவார் என, ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\n- நமது நிருபர் -\nRelated Tags ரஜினி Rajii தனிக்கட்சி ஆன்மீக அரசியல் aanmeega arasiyal ரஜினி மன்றம் rajini mandram நடிகர் கமல் Actor Kamal சட்டசபை தேர்தல்\nகாத்திருக்கிரோம் தங்கள் கண்ணசைவிற்காக, எம் தலைவா.\nநாசிர் உசைன் - தமிழன்டா - Singara Chennai,இந்தியா\n6 மாசத்துல தேர்தல் அப்போதான் நாங்க நம்புவோம்.\nஒரு காலத்தில் போதையில் மதுரை ஏர்போர்ட் கண்ணாடியை உடைத்து ரகளை செய்தவர் திடிரென்று சாமியாராகப் போய்விடுவதாக சொல்லி பரபரப்பு கொடுத்தவர் ராகவேந்திரா கல்யாண மண்டபம் ரசிகர்களுக்கு எழுதிவைத்து விடப்போவதாக அதன் திறப்புவிழாவில் பொய் கூறியவர் இம்மாதிரி மனிதரையம் தமிழகமக்கள் நம்புவது வேதனைதான் ஒருவேளை திருந்தி மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் கல்யாணமண்டபத்தை மக்கள் நன்மைக்கு உதவும் வகையில் டிரஸ்ட் ஆரம்பித்தபின் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்குமே\nதமிழனுக்கள் எப்போதுமே முக்கால் லூசு முழுபயித்தியம் என்னும் ரகம் சினிமாபயித்திம்பிடிச்ச வெறியணுக்களே அதிகம் முகவின் உபாயம் 2 /3 தமிழனுக்கா டாஸ்மாக்கிலேதான் வாசம என்றநிலை உருப்படியான ஜனத்து க்கு இதெல்லாம் கவலையே இல்லே எவன் ஆண்டாளும் தன நிலை மாறாது என்று திடமான நம்பிக்கை ,மக்களே விழித்துக்கொள்ளனும் திக திமுக அண்ட் அதிமுகவுக்கு கல்தா கொடுக்கவேண்டும் .அதுலேயும் எந்த சினிமா காரனும் ஆள வரவேண்டாம் என்று உறுதி யா இருக்கவேண்டும் மார்க்கெட்போனால் முதல்வனா ஆயிட்டு மக்களை ஏமாற்றானும் பயித்தியங்கள் போல பல தமிழனும் அதுகளுக்கு காவடி துக்க என்னய்யா ஆட்ச்சி இருக்கு நல்லாட்ச்சி காமராசர் ஐயாகூடவே செத்துப்போச்சு...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44962-ngo-points-out-49-translation-errors-in-neet-tamil-question-paper.html", "date_download": "2018-08-20T18:45:10Z", "digest": "sha1:IMDFKA2HWTXJZXHEEFEGUP4TJ7FKP2CN", "length": 10557, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் ! | NGO points out 49 translation errors in NEET Tamil question paper", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nநீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் \nநடந்து முடிந்த நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் 49‌ இடங்களில் மொழிப் பெயர்ப்பு பிழைகள் உள்ளன.\nநீட் தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அல்லாமல் 9 பிராந்திய மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படுகின்றன. பிற மொழி வினாத் தாள்களில் ஆங்கில மொழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் தமிழில் வழங்கப்பட்டிருக்கும் வினாத்தாளில் சரியான மொழிப் பெயர்ப்பு இல்லாததால் 49 இடங்களில் பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்கள் தவறான விடையளிக்க நேரலாம் எனக் குற்றம்சாட்டியுள்ளது தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று.\nCheetahவிற்கு சிறுத்தை என மொழிப் பெயர்க்காமல் சீத்தா என மொழிப் பெயர்த்திருக்கிறது சி.பி.எஸ்.இ. இதேபோல், கூட்டுறவு என்ற சொல்லுக்கு பதில் பகிர்ந்துறவு என்றும், வெளவாலுக்கு பதிலாக வவனவால் என்றும், ஆக்டோபஸ்ஸுக்கு பதில் ஆதடபஸ் என்று மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் உள்ளது போன்று நேரடிக் கேள்விகளாக அல்லாமல் வினாக்கள் கேட்கப்படும் எனக் கூறப் படுகையில் இத்தகைய பிழைகள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர் நீட் பயிற்சியாளர்கள்\nதமிழ் மொழியில் வல்லுநர்களைக் கொண்டு மொழிப் பெயர்க்காததும், நீட் தேர்வுக்கு தமிழில் புத்தகம் இல்லாததும் இதுபோன்ற பிழைகள் ஏற்படுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த இது போன்ற விஷயங்களில் சி.பி.எஸ்.இ கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே கல்வியாளர்கள், மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.\nநிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைப்பு ஆவணங்களை திருட நடந்த முயற்சியா \n‘அப்பா என்று அழைத்த சிறுமி’யை சீரழித்த கொடூரன் - திட்டமிட்டு பிடித்த காவல்துறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணினி மூலமாகவே நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை\nதமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமித்ததா - அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் விளக்கம்\nநீட் வினாத்தாள் விவகாரம் : சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு\nநீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு\nநீட் கருணை மதிப்பெண் வழக்கு: 20ம் தேதி விசாரணை\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்..\nமருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்\nRelated Tags : நீட் தமிழ் வினாத்தாள் , நீட் தேர்வு , பிழைகள் , NEET , Tamil question paper\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைப்பு ஆவணங்களை திருட நடந்த முயற்சியா \n‘அப்பா என்று அழைத்த சிறுமி’யை சீரழித்த கொடூரன் - திட்டமிட்டு பிடித்த காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44855-nhrc-issues-notices-to-tamil-nadu-and-cbse-central-board-of-secondary-education-over-reports-of-hardships-faced-by-students-writing-neet.html", "date_download": "2018-08-20T18:45:31Z", "digest": "sha1:AZT52T2X4HU7RNKYSSQE75A2W2M5BLRS", "length": 10052, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிப்பு - சிபிஎஸ்இக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | NHRC issues notices to Tamil Nadu and CBSE Central Board of Secondary Education over reports of hardships faced by students writing NEET", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nநீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிப்பு - சிபிஎஸ்இக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nநீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக, தமிழக அரசு தலைமைச் செயலரும், சிபிஎஸ்இ தலைவரும் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலங்களில் சென்று தேர்வெழுதியது தொடர்பாகவும் , மாணவர் உடன் சென்ற கிருஷ்ணசாமி உயிரிழந்தது தொடர்பாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.\nமேலும், “கடும் மன உளைச்சலுக்கு மத்தியில், மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதும் நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. போதுமான மையங்களை ஒதுக்க மாநில அரசும், சிபிஎஸ்இயும் தவறிவிட்டன. மாணவர்கள் ஏன் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனவும் பதிலளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n“நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு தங்களது மாநிலத்தில் வசதிகள் செய்து தராதது என்பது மாநில அரசு, சிபிஎஸ்இயின் தோல்வியை காட்டுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களையும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது” என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.\nஹெட்போனில் பாடல் கேட்ட பெண் உயிரிழப்பு\nகடவுளுக்கே ஏசி போட்ட கான்பூர் வாசிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு\nமுல்லைப் பெரியாறு விவகாரம்: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு\nவாஜ்பாய் மறைவுக்கு தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nசிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கலைக்கப்படாது : தமிழக அரசு\nசிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர்\nகுழந்தைக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை : அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி\n'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு \nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது - தமிழக அரசு\nகருணாநிதி மறைவால் நாளை விடுமுறை, 7 நாள் துக்கம் : தமிழக அரசு\nRelated Tags : நீட் தேர்வு , மாணவர்கள் அலைக்கழிப்பு , தேசிய மனித உரிமைகள் ஆணையம் , சிபிஎஸ்இ , தமிழக அரசு , NHRC , NEET , CBSE , TN Govt\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹெட்போனில் பாடல் கேட்ட பெண் உயிரிழப்பு\nகடவுளுக்கே ஏசி போட்ட கான்பூர் வாசிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45248-thiruvallur-sisters-request-mercy-killing.html", "date_download": "2018-08-20T18:45:29Z", "digest": "sha1:H3L4UEXT6Y456NK5JEERPOJLK2UZ3GDB", "length": 9019, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணைக் கொலை செய்யுங்கள்: ஆட்சியரிடம் சகோதரிகள் மனு | Thiruvallur sisters request Mercy Killing", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகருணைக் கொலை செய்யுங்கள்: ஆட்சியரிடம் சகோதரிகள் மனு\nதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சகோதரிகள் இருவர் தங்களை கருணைக் கொலை செய்யக் கோரி மனு அளித்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் எல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 12 சென்ட் நிலம் உள்ளது. அவரது வாரிசுகளான ஜெயலட்சுமி, கன்னியம்மாள், சாரதா ஆகியோர் அந்த நிலத்திற்கு உரியவர்கள் என்ற நிலையில், சக்கரவர்த்தி என்பவர் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்திற்கு உரிமைக் கொண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தாலும், சக்கரவர்த்தி ஆயுதப்படை காவலர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வீட்டையும், சொத்தையும் மீட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது தங்களை கருணை கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nபாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணுக்கு, காவல்நிலையத்திலும் கொடுமை\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெறியாட்டம் - 12 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”என் மகனை கருணைக் கொலை செய்து விட்டேன்” தந்தையின் பகீர் வாக்குமூலம்\n என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” - அற்புதம்மாள் வேதனை\nகருணைக் கொலை செய்யுங்கள்: 28 மீனவ குடும்பங்கள் ஆட்சியரிடம் மனு\nகருணைக் கொலைக்கு முன் உயிரிழந்த யானை: கண்ணீர் விட்ட ஐஏஎஸ் அதிகாரி\nயானையை கருணைக்கொலை செய்யலாம்: நீதிமன்றம் அனுமதி\n“இந்திய அரசே என்னை கருணைக் கொலை செய்”: திருநங்கை ஷானவி கண்ணீர் கடிதம்\nதிருவள்ளூர் ஆட்சியருக்கு ஊதியம் வழங்க இடைக்காலத் தடை\nகருணைக் கொலை செய்யுங்கள்.. ராஜீவ் கொலை வழக்கு கைதி கதறல்\nஇந்தியா டிக்ளர் - இங்கிலாந்து 521 ரன்கள் இலக்கு\nஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணுக்கு, காவல்நிலையத்திலும் கொடுமை\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெறியாட்டம் - 12 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yogicpsychology-research.blogspot.com/2018/07/blog-post_4.html", "date_download": "2018-08-20T18:46:11Z", "digest": "sha1:IRLGJ3C2TAZYHMYIQDKWEZN4ZQ5Y5RQS", "length": 34128, "nlines": 283, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: சிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nசிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்\nஅண்மையில் ஒரு நண்பர் தமிழ் நாட்டில் கோயிலில் உள்ள சிலைகள் எல்லாம் திருடப்பட்டு போலிச் சிலைகளை வைத்திருக்கிறார்கள், இவர்களை எல்லாம் கடவுள் தண்டிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்.\nமேலும் கடவுள் இப்படியானவர்களை எல்லாம் ஏன் வைத்திருக்கிறார் என என்னிடம் கேள்வியும் தொடுத்தார்.\nஅதற்கு நானும் வெகு சிரத்தையுடன் \"இந்த திருட்டையெல்லால் செய்விப்பதே, கடவுள்தான் பின்னர் எப்படி அவர்களையெல்லாம் தண்டிப்பார்\"\nஉடனே அந்த நபரிற்கு தூக்கி வாரிப்போட்டதுபோல் முகபாவனையுடன் \"ஆன்மீகவாதியான நீங்கள் இப்படிச் சொல்லலாமா\nநானும் பிரம்ம சூத்திரம் என்ன சொல்லுகிறது என்றேன், அவருக்கு பிரம்ம சூத்திரம் என்னவென்பது தெரியவில்லை. அதற்கு சரி \" சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்\" , பிரம்மம் என்றால் உங்கள் புரிதலுக்கு கடவுள் என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, பார்த்தீர்களா இங்கே எல்லாம் பிரம்மம் என்றால் திருட்டை செய்பவனும் பிரம்மத்தின் கூறுதானே என்றேன்.\nஅதற்கு நீங்கள் வெறும் தத்துவம் பேசுகிறீர்கள் என்றார்,\nநானும் விடவில்லை தத்துவம் என்பது உண்மையைக்கூறுவது, தத்துவம் சொல்லுவது பொய்யாகாது, ஆகவே திருட்டை செய்வது கடவுள் என மேலும் குழப்பினேன்.\nஅவருக்கோ குழப்பம் மேலிட அப்படியானால் திருட்டை செய்வது சரியா என்றார்\nஅதற்கு நான் இல்லை, பிழை கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்றேன்.\nஇதற்கு அவர் மேலும் குழம்பி நீங்கள் என்னை குழப்புகிறீர்கள் என்றார்.\nநானும் குழப்பம்தான் தெளிவுக்கு வழி, ஆகவே குழம்பித்தான் தெளியவேண்டும் என்றேன்.\nஅதற்கு அவர் இந்தக்குழப்பத்தை என்னால் தாங்கமுடியாது, நீங்கள் கூறவருவதை தெளிவாக கூறிவிடுங்கள் என்றார்.\nஅதற்கு நான் திருமூலர் இறைவன் எங்கு இருக்கிறார், கோவில் எங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்\nஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்\nவள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘\nசரி, இப்போது நாம் என்ன செய்கிறோம் கோயிலிற்கு போவது எதற்காக\nகோயில் போவது எமது குறைகளை சொல்லி அழ,\nசெய்த பாவங்களில் இருந்து தப்ப,\nதனது செல்வச் செருக்கை காட்ட,\nதனது பெயரை சரித்திரத்தில் புகழ் நிலை நாட்ட,\nதானக்கும் சந்ததிக்கும் புண்ணியம் கிடைக்க,\nகோயில் கட்டினால் உபரி வருமானத்தை கணக்கு காட்டலாம்,\nஇப்படிச் சொல்ல அப்படியானால் எமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களா ஆகமங்கள், சாஸ்திரங்கள் இயற்றி கோயில் கட்டிவைத்துள்ளார்கள், இவை எல்லாம் பொய்யா\nஅதற்கு நாம், உண்மை எமக்குள் இருக்கின்றது அதை அறிய கஷ்டமானவர்களுக்கு ஒரு மாதிரியுரு (model) தேவையல்லாவா, அதற்காக கட்டப்பட்டதுதான் கோவில், அதாவது இயல்பின் மனிதன் ஐந்து புலன் கள் வழி செல்பவன். அவனை அவன் செல்லும் வழியில் உண்மையை அறியவைத்து, பின்னர் உள்ளே உண்மையை அறியும் உத்திக்காக செய்யப்பட்டவையே கோயில்கள் என்றோம்.\nஅப்படியானால் நாம் கோயிலிற்கு செல்வதால் ஒருபலனும் இல்லையா என்றார் ஏன் இல்லை நிச்சயமாக உண்டு ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோயிலை சென்று தரிசித்து அந்தக்கோயிலின் அமைப்பை ஆழ்மனதில் பதிப்பித்து வாருங்கள், அவை ஆழ்மனத்தில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் ஆற்றலுள்ள குறியீட்டு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அல்லாமல் கோவிலில் சென்று வீணா உங்கள் புலம்பல்களை கொட்டாதீர்கள்.\nமேலும் கோவில்களின் அமைப்பு மனப்பிராண சக்திகளை அதிகரிக்கும் வல்லமை உள்ளன. அங்கு சென்று உங்கள் குறைகளை கொட்டினால் அவை உங்களுக்கும் அதிகரித்து, சமூகத்திலும் அதிகரிக்கும். அதுவே இப்போது நடைபெறுகிறது. திருடுவதற்கும், ஏமாற்றுவதற்கும், கடவுளிடம் சென்று வேண்டி கோயிலில் உள்ள ஆற்றலிடம் சேர்த்து இன்று திருட்டும் கொள்ளையையும் அதிகரித்துள்ளோம். இறை என்பது ஒரு சக்தி, அதற்கு நல்லதும் கெட்டதும் ஒன்றுதான். இதனால்தால் புராணங்களில் கடவுளே அசுரனுக்கும் வரத்தை தருகீறார், தேவரையும் காப்பாற்றுகிறார்.\nஆகவே எமது எண்ணங்களும், மனமும்தான் கோயிலின் சக்தியால் அதிகரிக்கப்படுகிறது.\nஅவரும் ஆமோதித்து தலை ஆட்டிவிட்டு நீங்கள் முதலில் கூறிய \"இந்த திருட்டையெல்லால் செய்விப்பதே, கடவுள்தான் பின்னர் எப்படி அவர்களையெல்லாம் தண்டிப்பார்\" என்பதற்கு விளக்கம் சொல்லவில்லையே என்றார் விடாக்கண்டனாக\nநானும் சிரித்துக்கொண்டு \"ஒவ்வொரு காலத்திலும் சமூகம் உண்மையை மறந்து அறியாமையில் மூழ்கி துன்பம் உறும்போது இறைசக்தி உண்மையை அறியும் தூண்டலை ஏற்படுத்தும், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் எமது முன்னோர்கள் சமூகத்திற்கு ஞானத்தை வழங்க, சமூக செழிக்க ஏற்படுத்தப்பட்ட கோயில்கள் முற்காலத்தில் அரசரின் அதிகாரப்பசிக்கும், புகழ்வேட்கைக்கும் சிக்கி நாசமாகி, இன்றும் அதே நிலைதான். ஆக மக்கள் தமக்குள் இறைவனைக் கண்டு நல்ல பண்புகளை ஏற்படுத்தி, நல்லதொரு சமூகத்தை உருவாக்க தான் கோயிலில் இல்லை, உனக்குள் இருக்கிறேன் எனக் காட்ட இந்த திருட்டுகளை நடாத்துகிறார்\" என்றேன்.\nஅதற்கு அவர் மேலும் ஆதங்கத்தோடு \"இதைச் செய்பவர்களுக்கு தண்டனை கட்டாயம் இருக்கும்தானே\nஅதற்கு நானும் சிரித்துக்கொண்டு \"ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயம் விளைவு உண்டு, அந்த விளைவை தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை, ஆக இந்த செயலை செய்பவர்கள் அதற்குரிய விளைவை கட்டாயம் பெறுவார்கள்\"\nநான் கூறவந்த கருத்தின் விளக்கம், உண்மையில் மனிதர்களின் சமூகத்தின் மனத்தில் அறம் குன்றி, எதற்காக நாம் கோயிலிற்கு செல்கிறோம், பூஜை செய்கிறோம், திருவிழா எடுக்கிறோம் என்ற உண்மையெல்லாம் அறியாமையின் விளைவாக மறந்து, தன் புகழிற்கும், பணத்திற்கும், அதிகாரத்திற்கும் என மாறியபொழுது கோயில் திருட்டுக்கூடமாகி விட்டது, ஆகவே கடவுள் எம் உள்ளே இருக்கிறார், அந்தக்கடவுளை எம்முள் உணர எமது குணம் தெய்வ குணமாக இருக்க வேண்டும், தெய்வ குணம் எம்முள் வளர்ந்தால் கோயிலில் தெய்வ சக்தி வளரும் என்று மேலும் விளக்கி விட்டு உரையாடலை முடித்துக்கொண்டோம்.\nகடவுளை எமது சொந்தப்பிரச்சனைகளுக்கு கூப்பிடுவதில் உள்ள அபாயம்\nஇன்று காலை ஒரு சுவாரசியமான உரையாடல், எமது பிரச்சனைகளுக்கு கடவுளை அழைத்தால் இறுதியில் அவர் எல்லோருக்கும் சங்கு ஊதி விடுவார் என்றேன். ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nயோக சாதனைக்கு உயர் சிந்தனைத் திறன்\nமன அழுத்தம் பற்றிய உரையாடல்\nகுவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02\nகுவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nஎப்போதும் உற்சாகமாக இருக்க கால தத்துவம்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 17\nஎன் மாணவன்: சாதனா உரையாடல்கள் - 16\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 15\nசிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்\nஎன்மாணவன்: சாதனா உரையாடல் - 14\nசீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்...\nஆணவத்தை ஆக்கும் அஷ்ட பாசங்கள்\nசிவபுராணமும் ஸ்ரீ வித்தையின் குருபாதுகா தியானமும்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 13\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 12\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nமந்திர ஜெபத்தின் இரகசியம் - ஸ்ரீ அரவிந்தர் கூறியது...\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/my-wife-does-not-know-that-i-was-woman-018924.html", "date_download": "2018-08-20T18:33:34Z", "digest": "sha1:GUNDGHK2HDKK2FMHL3GSA2VMWABTZTAW", "length": 26436, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "நான் ஒரு பெண் என்பது, என் மனைவிக்கு 10 வருடங்களாக தெரியாது! | My Wife Does Not Know That I Was Woman! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நான் ஒரு பெண் என்பது, என் மனைவிக்கு 10 வருடங்களாக தெரியாது\nநான் ஒரு பெண் என்பது, என் மனைவிக்கு 10 வருடங்களாக தெரியாது\nஇது அமெரிக்காவின் மினசோட்டா (Minnesota) எனும் பகுதியில் வாழ்ந்து வரும் ஆணின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்...\nநான் 'ஆண்' என்பதை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியாது. பிறப்பால் நான் ஆண் என்பதற்கு பதிலாக பெண்ணாக இருந்திருக்கலாம் என்பதே எனது ஆயுட்கால விருப்பம். ஆனால், அது கடைசி வரை என்னால் அடைய முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதே என் ஆயுட்கால மன நோயாக மாறிவிட்டது.\nலாராவிடம் (என் மனைவி) இதுகுறித்து சொல்லிவிட வேண்டும் என பலமுறை நான் எண்ணியதுண்டு. ஆனால், இந்த சமூகம் மற்றும் மக்களின் மீதுள்ள அச்சமும், லாரா என்னைவிட்டு பிரிந்துவிட்டால் நான் என்ன ஆவான் என்ற சோகமும் இதுக்குறித்து அவளிடம் ஒரு வார்த்தைக் கூட கூற முடியாத சூழலில் என்னை சிக்க வைத்துள்ளது.\nநான் எப்போதிருந்து எப்படி மாறினான், எனக்கு என்ன ஆனது என்று எனக்கே தெரியவில்லை. எனது 17 வயதிலிருந்து நான் நானாக இல்லை என்பதை மட்டும் நான் அறிவேன்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநான் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்த மாணவன். என் கல்லூரிக் காலத்தில் நான் விரும்பியது, நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. நான் எனது கல்லூரிப் படிப்பை கொலராடோவில் பயின்றேன்.\nதிடீரென எனக்கு அடிக்கடி நன்கு வியர்க்கும். அதன் காரணம் என்ன என்பது ஆரம்பத்தில் என்னால் புரிந்துக் கொள்ள இயலவில்ல.\nஎன் சட்டை முழுவதும் வியர்வையில் நனைந்துவிடும். முகத்தில் வழியும் வியர்வையை கர்சீப் கொண்டு துடைத்துக் கொண்டே இருப்பேன். எனது ஆடை விலகாமல் பார்த்துக் கொள்ள துவங்கினேன். நான் ஏன் இப்படி செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை.\nஎன்னிடம் நான் மட்டுமே இந்த மாற்றங்களை கவனித்தேன். என் நண்பர்கள் எப்போதும் போலவே என்னுடன் பழகி வந்தனர்.\nபோகப்போக, நான் ஆணாக இருப்பதே எனக்கு பிடிக்கவில்லை. நான் ஏன் ஒரு பெண்ணாக பிறக்கவில்லை என எண்ணி வருந்த ஆரம்பித்தேன். எப்படியாவது இந்த எண்ணங்கள் இருந்து அல்லது ஆணாக இருப்பதில் இருந்து தப்பித்து நான் விரும்புவது போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை என்னுள் அதிகமாக இருந்தது. ஆசை என்பதை விட, ஏக்கம் என்று கூறினால், அது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.\nஆனால், எனக்கு ஆண்கள் மீது விருப்பமோ, காதலோ வந்ததே இல்லை. எனக்கு எப்போதுமே பெண்களை தான் பிடிக்கும். ஆனால், நானும் பெண்ணாக இருக்க விரும்புகிறேன். இதுதான் எனது பிரச்சனையே. இதற்கான தீர்வு எனக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை. கொஞ்சம், கொஞ்சமாக என்னைத் தனிமைப் படுத்திக் கொள்ள நினைத்தேன். ஆனால், அது கடைசி வரை நடக்காமலே போனது. அதற்கு காரணம் லாரா.\nஅப்போது எனக்கு 17 வயது. கல்லூரியின் உணவு விடுதி பகுதியில் அமர்ந்து தனியாக உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்போது லாராவும் அங்கே இருந்தாள். ஆனால், அப்போது, அந்த தருணத்தில் நான் லாராவை கவனிக்கவே இல்லை. என்னுள் ஓடிய எண்ணங்கள் அனைத்தும் எப்படி பெண்ணாக நான் மாற முடியும், இந்த ஆண் உடலில் இருந்து எப்படி தப்பிக்க முடியும் என்பது மட்டுமே.\nஃபேஸ்புக் துவக்கப்பட்ட ஆரம்பக்கட்ட காலம் அது என கருதுகிறேன். அனைவருக்கும் ஃபேஸ்புக் மீது ஒருவித மோகம் அதிகரித்து வந்த நாட்கள் அது. அன்று இரவு, லாரா என்ற பெண்ணிடம் இருந்து எனக்கு செய்தி ஒன்று வந்தது. நான் தான் சொன்னேனே, எனக்கு பெண்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும் என்று. பெரும் மகிழ்ச்சி, அவள் மிகவும் அழகானவளும் கூட. நாங்கள் பேச ஆரம்பித்தோம்.\nஅன்று கல்லூரியில் நான் அணிந்திருந்த டிஷர்ட் பிடித்துப் போய், என்னை ஃபேஸ்புக்கில் தேடிப் பிடித்ததாக கூறினாள். ஆம் அன்று நான் எனக்கு பிடித்த ஒரு ராக்ஸ்டாரின் படம் பதித்த டிஷர்ட் அணிந்திருந்தேன். அதுவே, எனக்கு லாரா கூறிய பிறகு தான் தெரியும். அவளுக்கும் அந்த கலைஞரை பிடிக்கும் என்பதை அவள் பின்னர் கூறியதன் மூலம் அறிந்துக் கொண்டேன்.\nமரங்கள் நிறைந்த பூங்கா அருகே அமைந்திருக்கும் சாலையில் என்னுடன் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என தனது விருப்பத்தை அறிவித்தாள் லாரா. யார் வேண்டாம் என்பார்கள். லாரா போன்ற அழகிய பெண் அழைத்தால் யாரும் நோ சொல்ல மாட்டார்கள். உடனே ஓகே போகலாம் என்றேன்.\nமறுநாள் மாலையே அது நிஜமானது. நாங்கள் இருவரும் சாலையின் இருபுறமும் மரங்கள் நிறைந்த பூங்கா ஒன்றில் நடந்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நாங்கள் நடந்தபடி பல விஷயங்களை பேசி, மகிழ்ந்து, சிரித்து எங்களை பற்றி ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக் கொண்டோம்.\nஎங்களுக்குள் ஒரு நட்பு மலர்ந்தது. உண்மையில் அவள் மீது சீக்ரெட் கிரஷ் கொண்டிருந்தேன் நான். இது அவளுக்கு தெரியாது. நாங்கள் கொஞ்ச நாட்கள் டேட்டிங் செய்து வந்தோம். ஒருமுறை படத்திற்கு சென்று வீடு திரும்பிய போது முத்தமிட ஆசை என கூறினேன். கன்னத்தில் மட்டும் என்றால் ஒகே என்றாள். அவளை அன்று தான் முதல் முறையாக முத்தமிட்டேன்.\nகொஞ்ச நாட்கள் கழிந்தன... எனக்கு உண்மையான முத்தம் வேண்டும் என மீண்டும் எனது ஆசையை அவளிடம் தெரிவித்தேன். நாம் இருவரும் நிஜமாகவே நண்பர்கள் தானா என கேட்டாள். இல்லை என்பதே உண்மையான பதில். எல்லாருக்கும் நீ என்னை காதலிக்கிறாயா என கேட்டாள். இல்லை என்பதே உண்மையான பதில். எல்லாருக்கும் நீ என்னை காதலிக்கிறாயா என்று கேட்டு, ஆம் என பதில் அளித்து காதல் உறவு துவங்கும்.\nஆனால், எனக்கும் லாராவுக்கும் இடையேயான காதல், இல்லை என்ற பதிலில் துவங்கியது. இது நட்பா என அவள் கேட்ட கேள்விக்கு, நான் இல்லை என கூறிய தருணத்தில் மலர்ந்தது எங்கள் காதல். லிப்லாக் முத்தமும் பரிசாக கிடைத்தது.\nநாங்கள் இருவரும் காதலிக்க துவங்கிய போது எங்கள் வயது 18. அனைவருக்கும் முதல்காதல் வெற்றிகரமாக அமையுமா என்ற அச்சம் இருக்கும். ஆனால், எனக்கு மிக எளிமையாக அதுவாக அமைந்தது. லாரா போன்ற ஒரு பெண்ணை துணையாக ஏற்பதற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஇப்படி நிம்மதியாக சென்றுக் கொண்டிருந்த தருணத்தில், என்னுள் உறங்கிக் கொண்டிருந்த அந்த மிருகம் மீண்டும் விழித்துக் கொண்டது.\nலாராவுடனான இந்த நாட்களில், என்னுள் இருந்த \"நான் யார்\" என்ற குழப்பம் கொஞ்ச காலம் காணாமல் போயிருந்தது. ஆனால், அந்த எண்ணங்கள் மீண்டும் என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. இதற்கு நடுவே, லாராவுடன் காதல், படிப்பு முடித்து வேலை... அடுத்து எங்கள் திருமணம் என பல விஷயங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.\nஎனக்கும் லாராவுக்கும் திருமணமும் நடந்தது. ஆனால், நான் அவளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு பெண் என்பதை அவளிடம் கூறவில்லை. ஆம், உடல் மட்டுமே ஆணாக இருந்து என்ன பயன் நான் அவளை உண்மையாக நூறு சதவிதம் மகிழ்விக்க வேண்டும் என்றால் ஒரு ஆணாக இருக்க வேண்டுமே.\nநான் அறிவேன், என்னால் நிச்சயம் அவளை நூறு சதவிதம் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், அவளை விட்டு தனியாகவும் என்னால் இருக்க முடியாது.\nஅதற்கு என நான் ஒரு திருநங்கையா என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். நான் திருநங்கையும் கிடையாது. நான் பிறப்பால் ஏன் ஒரு பெண்ணாக இல்லை என்ற எண்ணம் மட்டுமே என்னுள் மிகுந்த மன அழுத்தம் மற்றும் வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.\nஎன்னால் லாராவுடன் உடலுறவில் ஈடுபட முடியும், என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். உடலால் நான் ஒரு ஆரோக்கியமான ஆண் தான். ஆனால், மனதால்\nமனம் முன் வர மறுக்கிறது\nஉடலுறவில் ஈடுபட வேண்டும் என்றால் முதலில் மன ரீதியாக ஒரு இணைப்பு உண்டாக வேண்டும். மன ரீதியாக இருவர் முழுமையாக இணையாமல், ஏற்படும் உடலுறவு யாரும் கற்பழிப்புக்கு சமம் என கருதுகிறேன். அனைத்திற்கும் மேல், எனக்கு பிறக்கும் குழந்தைக்கும் இதே பிரச்சனை (எனக்கு இருக்கும் பிரச்சனை) வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் என்னிடம் நிறையவே இருக்கிறது.\nநானும், லாராவும் ஒருவரை ஒருவர் அறிந்து இன்றுடன் பத்து வருடங்கள் ஆகிறது. இன்று வரை நான் ஒரு பெண் என்பதை அவளிடம் கூறாமல் ஏமாற்றி வருகிறேன். இதை நினைக்கும் போதெல்லாம் என்னுள் பெரும் வலி ஏற்படுகிறது. பல சமயங்களில் லாராவிடம் இதுக்குறித்து கூறிவிடலாம் என யோசிப்பேன். ஆனால், அதன் பின் அவள் என்ன முடிவு எடுப்பாள் என சிந்திக்கும் போது வேண்டாம் என தீர்மானம் செய்துவிடுவேன்.\nநான் ஒரு பெண்ணாக வாழ்ந்து வருகிறேன் என்பதை பத்து வருடமாக தெரியாமலே என்னுடன் இருந்து வருகிறாள் என் மனைவி லாரா.\nஇதற்கான தீர்வு தான் என்ன நான் என்ன செய்ய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் என பல கேள்விகள் என்னுள் தினம் தினம் எழுந்துக் கொண்டே இருக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nநீங்கள் நினைப்பதை காட்டிலும் இவை உருவத்தில் ஜைஜாண்டிகானவை - புகைப்படத் தொகுப்பு\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nமறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nRead more about: pulse insync life சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் வாழ்க்கை\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/today-is-the-last-date-submitting-applications-mbbs-000194.html", "date_download": "2018-08-20T18:04:24Z", "digest": "sha1:JE3VOVGCGCNEJFBY32TAX56WXURPGCR2", "length": 7487, "nlines": 77, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க கெடு முடிந்தது! | Last date for submitting applications for MBBS - Tamil Careerindia", "raw_content": "\n» எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க கெடு முடிந்தது\nஎம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க கெடு முடிந்தது\nதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமையோடு கெடு முடிந்தது.\nதமிழகத்தில் மே 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 19 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 2,555 இடங்கள் உள்ளன.\nஇவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவிதம் என 383 இடங்கள் தவிர்த்து, 2,172 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.\nஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கான மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் சில தினங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மேலும் 100 இடங்கள் கிடைக்கும். அதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதம் 85 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2257 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடைபெறும்.\nவிண்ணப்பங்களைப் பெறுவதற்கும், விண்ணப்பிப்பதற்கும் மே 28-ஆம் தேதி கடைசி நாள். 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் எத்தனை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் விரைவில் வெளியாகும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/109528-history-of-the-cartoon-character-shin-chan.html", "date_download": "2018-08-20T19:00:05Z", "digest": "sha1:TGMOU2F3ISZN6GRUJS4JBWMPMEXLNUSH", "length": 28032, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "`ஷின் - ஷானுக்கு இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது!' - யார் இந்த ஷின் - ஷான்? | History of the cartoon character shin chan", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\n`ஷின் - ஷானுக்கு இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது' - யார் இந்த ஷின் - ஷான்\nபென்சில் ஓவியம் போன்ற உடல், குட்டை உருவம், பெருத்த தலை, `கியா கியா' குரல் - இவர்தான் மிஸ்டர் ஷின் - ஷான். இணைய உலகின் லேட்டஸ்ட் சூப்பர்ஸ்டார். இந்த கார்ட்டூன் கேரக்டருக்கு, வயது பாரபட்சமில்லாமல் எல்லாரும் லைக்ஸ் குவிக்கிறார்கள். அதுவும் ஓவியா ஆர்மிக்கு போட்டியாக ஷின் - ஷான் ஆர்மி தொடங்கும் அளவுக்கு. யார் இந்த ஷின் - ஷான் ஏன் இந்தத் திடீர் ட்ரெண்ட்\nஷின் - ஷான் பிறந்த கதை:\nஜப்பானில் `மாங்கா' காமிக்ஸ்கள் மிகவும் பிரபலம். `மாங்கா' என்றால் படங்கள் என அர்த்தம். எனவே, படக்கதைகளுக்கு அந்தப் பெயர் வந்துவிட்டது. 19-ம் நூற்றாண்டில் ஜப்பானில் கலாசாரத்தைப் பிரதிபலித்த இந்தப் படக்கதைகள் மெதுவாக கமர்ஷியல் பாதையில் திரும்பின. ஆக்‌ஷன், சாகசம், ரொமான்ஸ், காமெடி என எல்லா ஜானர்களிலும் `மாங்கா' வெளுத்துவாங்க, அதற்கேற்றார்போல் புதுப்புது கேரக்டர்களும் உருவாகிக்கொண்டே வந்தன. அப்படி 1990-ம் ஆண்டில் யூத் பத்திரிகைகாக உருவாக்கப்பட்ட கேரக்டர்தான் ஷின் - ஷான். முழுப்பெயர் க்ரேயான் ஷின் - ஷான். அந்த இதழில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணிபுரிந்த யூஷி யோஷிடோ என்பவரின் கைவண்ணத்தில்தான் இந்தச் சுட்டிச் சிறுவன் பிறந்தான்.\nஅந்த கார்ட்டூனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே, அதை டிவி தொடராக மாற்ற முடிவெடுத்தார்கள். அசாஹி என்கிற ஜப்பானிய டிவி-யில் ஷின் - ஷான் வலதுகால் எடுத்து வைத்துப் பிரவேசித்தான். 1992-ம் ஆண்டு ஏப்ரலில் முதல் எபிசோடு டெலிகாஸ்ட் ஆனது. எடுத்தவுடன் ஆஹோ ஓஹோவென வரவேற்பு கிடைக்கவில்லை. நான்கு சதவிகித ரேட்டிங்தான் கிடைத்தது. ஆனால், இந்தத் தொடர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாக பத்தே மாதங்களில் 20 சதவிகித ரேட்டிங்கில் வந்து நின்றது. இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த கார்ட்டூன் தொடரும் இப்படி ஒரு வரவேற்பைப் பெற்றதில்லை. பட்டித்தொட்டி எல்லாம் பேசுபொருளானான் ஷின் - ஷான்.\nடிவி தொடருக்குக் கிடைத்த சிவப்புக் கம்பள வரவேற்பு சினிமா உலகை உறுத்த, ஷின் - ஷானை அனிமேஷன் படமாக உருவாக்கத் திட்டமிட்டார்கள். உடனே வேலைகளைத் தொடங்கி படத்தையும் வெளியிட்டார்கள். படமும் ஹிட். அன்றிலிருந்து இன்று வரை ஜப்பானில் ஷின் - ஷான் ராஜ்ஜியம்தான். 940 எபிசோடுகளைக் கடந்து, 25 முழு நீள அனிமேஷன் படங்களாக அவதரித்து 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் சக்கைபோடு போடுகிறான் ஷின் - ஷான். இது அவனுக்கு 25-வது ஆண்டு.\nஅப்படி என்ன இருக்கிறது ஷின் - ஷானில்\nஐந்து வயது கிண்டர்கார்டன் சிறுவனான ஷின் - ஷானுக்கு, ஓரிடத்தில் இருக்கவே முடியாது. ஏதாவது செய்து தன்னை பரபரப்பாகவே வைத்துக்கொள்வான். அவன், அம்மா மிஷே, அப்பா ஹிரோஷி, தங்கை ஹிமாவாரி, நாய் ஷிரோ என அளவான குடும்பம். தன் குடும்பத்தையும், ஏரியாக்காரர்களையும், நண்பர்களையும் தன் சேட்டைகளின் மூலம் எப்படி பாடாய்படுத்துகிறான் அவன் என்பதுதான் இந்த காமிக்ஸின் மையக்கதை.\nஆளைப் பார்க்கவே சிரிப்பாக இருக்கும். இதுபோக அந்தக் `கியா கியா...' குரலும் கிச்சுகிச்சு மூட்டும் வசனங்களும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போக, ஷின் - ஷானைக் கொண்டாடத் தொடங்கினார்கள். மழலை மனதுக்கு மொழி முக்கியமல்லவே. எனவே, ஜெர்மனி, அமெரிக்கா, இந்தியா, சீனா, டென்மார்க், பிரான்ஸ் என ஏகப்பட்ட நாடுகளில் இவனுக்கு ரசிகர்கள் உருவானார்கள். இந்தியாவில் 2006-ம் ஆண்டு முதல் ஷின் - ஷான் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியான மூன்று மொழிகளிலும் செம ஹிட். முக்கியமாக தமிழில் ஷின் - ஷான் பேசும் வசனங்கள் எல்லாம் ரகளை ரகம். `அமைதி அமைதி அமைதியோ அமைதி' என்ற ஷின் - ஷான் வசனம் இப்போது நிறைய பேரின் காலர் ட்யூன்\nகுழந்தைகள் கொண்டாடிய அளவுக்கு பெற்றோர்களால் ஷின் - ஷானைக் கொண்டாட முடியவில்லை. காரணம், ஷின் - ஷான் கேட்கும் கேள்விகள். அவை எல்லாம் வயதுக்கு மீறிய கேள்விகள் எனக் கொந்தளித்தார்கள் ஜப்பானிய பெற்றோர்கள். `அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கும் ஒரு கேரக்டரை, குழந்தைகள் இந்த அளவுக்குக் கொண்டாடுவது துரதிர்ஷ்டவசமானது' என விமர்சகர்கள் ஊடகங்களில் எழுதித் தள்ளினார்கள். போதாகுறைக்கு சில இரட்டை அர்த்த வசனங்கள், அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள் எல்லாம் வர, விமர்சனங்கள் வலுத்தன. டப் செய்யப்பட்ட நாடுகளிலும் இதே பிரச்னை உருவாக, குடும்பத்தோடு பார்க்கும் விதமாகக் காட்சிகளையும் வசனங்களையும் மாற்றி அமைத்தார்கள்.\nஇந்தியாவிலும் இதே பிரச்னை எழுந்தது. வரிசையாக எழுந்த விமர்சனங்களால் செய்தி ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தொடருக்கு 2008-ம் ஆண்டில் தடை விதித்தது. தடைக்கு எதிராகவும் குரல்கள் எழ, சென்சார் போர்டின் தணிக்கைக்குப் பிறகு தொடர்ந்து வெளியானது ஷின் - ஷான். 2009-ம் ஆண்டில் ஷின் - ஷானை உருவாக்கிய யோஷிடோ மரணமடைய, ஒரிஜினல் தொடர் நிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு அவரின் உதவியாளர்கள் துணையோடு புதிதாக அடுத்த சீஸன் தொடங்கப்பட, இப்போது வரை ஜப்பானின் கார்ட்டூன் ராஜாவாக வலம்வருகிறான் ஷின் - ஷான்.\n2006-ம் ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய தொடர் ஏன் இப்போது வைரலானது ஃபேஸ்புக்கில் இதற்காக திடீரென பக்கங்களும் மீம்ஸ்களும் தோன்ற ஆரம்பித்ததுதான் இதற்குக் காரணம். அவர்களின் புண்ணியத்தில் மீசை வைத்த குழந்தைகளை அடையாளம் கண்டுகொண்டதுதான் இதில் நடந்த ஒரே சாதனை\n” - எச்சரிக்கும் ‘தி மார்ஷியன்” பட எழுத்தாளர்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nகொலம்பஸ் அமெரிக்காவுக்குப் போக வழிகாட்டிய மேப் இதுதான்..\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n`ஷின் - ஷானுக்கு இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது' - யார் இந்த ஷின் - ஷான்\nஇடுக்கி அணையும் முல்லைப் பெரியாரும் உடைந்துபோய்விடும் - திருப்பூரில் வைகோ பேச்சு\nகுமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட ஒகி புயல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n`மலேசியாவில் ஜல்லிக்கட்டு'... கடல் தாண்டும் வீரவிளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110139-employee-in-the-government-hospital-employee-absorb.html", "date_download": "2018-08-20T19:00:59Z", "digest": "sha1:O7ASSHB4UCNNF43CPK2KZUKRYAO3PEU7", "length": 17986, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு மருத்துவமனையின் பணத்தைக் கையாடல்செய்துவிட்டு தலைமறைவான ஊழியர்! | Employee in the Government Hospital Employee absorb", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nகொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nபீகார் காப்பகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு பதிவு\nஅரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி\n - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம்\nஅரசு மருத்துவமனையின் பணத்தைக் கையாடல்செய்துவிட்டு தலைமறைவான ஊழியர்\nதேனி கானாவிலக்குப் பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இங்கே, அலுவலக உதவியாளராகப் பணிபுரிபவர், அசோக். இவர், மருத்துவமனையின் பணத்தை கையாடல்செய்துவிட்டுத் தலைமறைவானதாக நமக்கு தகவல் கிடைத்தது. அதை உறுதிப்படுத்த மருத்துவமனை டீனை போனில் தொடர்புகொண்டு பேசினோம். “இப்போதைக்கு என்னால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. எவ்வளவு பணம் கையாடல் நடந்திருக்கிறது என்பதுபற்றி ஆய்வுசெய்துகொண்டிருக்கிறோம். அதன்பிறகு போலீஸில் புகார் கொடுக்க இருக்கிறோம். அதன்பிறகு முழுத் தகவலும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்” என்றார்.\nமருத்துவமனை ஊழியர்கள் சிலரிடம் விசாரித்தோம். “அசோக், வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை. ஆனால், ஒரு கோடி ரூபாய் வரை கையாடல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவர், மருத்துவமனைக்கு அருகே பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டிவருகிறார். தனது அப்பா முனியசாமியின் வேலை, வாரிசு அடிப்படையில் அசோக்குக்குக் கிடைத்தது. வெளியில் நல்லவராகத்தான் இருந்தார். இப்படி ஒரு காரியம் செய்வார் என்று தெரியவில்லை. சில நாள்களாகவே மருத்துவமனைக்குச் சரியாக வருவதில்லை. வந்தாலும் வெளியில் வேலை என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார். எவ்வளவு தொகையை கையாடல் செய்தார் என்று அதிகாலை முதல் அலுவலகத்தில் ஆய்வுசெய்துவருகிறார்கள். இனிமேல்தான் முழு விவரமும் தெரியவரும்” என்றனர்.\nவீ.சக்தி அருணகிரி Follow Following\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nஅரசு மருத்துவமனையின் பணத்தைக் கையாடல்செய்துவிட்டு தலைமறைவான ஊழியர்\nமணிசங்கர் ஐயர் நீக்கம் திட்டமிட்ட விளையாட்டே\nஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஉப்பு அரசியலும்... கள்ள நாணயம் உருவான கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://yourkattankudy.com/2018/05/13/", "date_download": "2018-08-20T19:08:44Z", "digest": "sha1:X7VWC55CHPLXVKINGERWMFFQJGOTWIJP", "length": 5259, "nlines": 149, "source_domain": "yourkattankudy.com", "title": "13 | May | 2018 | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nகல்முனை: கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வில் கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் (13) ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் விளையாடவிருந்தனர். Read the rest of this entry »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு\nபுவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்' தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்\nடில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்...\nஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - ஹரீஸ் எம். பி.\nஅறபா நோன்பும் துல்ஹஜ்மாத ஏனைய அமல்களும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/itemlist/tag/modi", "date_download": "2018-08-20T18:46:55Z", "digest": "sha1:HB43KXG3WUT3TST35JHKAORXZJYRJXBI", "length": 18061, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: modi - eelanatham.net", "raw_content": "\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.\nஇதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.\nமோடி நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து ராஜாஜி அரங்கம் வந்த மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார். சசியின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு\nபுதிதாக வெளியிட உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஇந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள், முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம்.\nஇது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாமாம்.\nபூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்கிறார்கள். இந்த தகவல் வதந்தியா, உண்மையா என்பதை நாளை வியாழக்கிழமை வங்கி திறந்ததும் நாமே போய் வாங்கி பார்த்துவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்.\nஇந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூடங்குளம் புதிய அணு உலை உள்ளிட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாடு நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nகடும் பனி காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக இந்தியா வந்து சேர்ந்த புடினை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் கோவா துணை முதல்வர் பிரன்சிஸ் டிசோசா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இடையே இந்தியா, ரஷ்யா நாடுகள் இடையேயான 17ம் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு, காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றியும் அதில் உயிரிழந்த 19 இந்திய வீரர்கள் பற்றியும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தையிலும் அவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ரஷ்ய நாடுகளுக்கிடையேயான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை:\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nகோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி, தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்குகிறது. இதில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு 'பிரிக்ஸ்' ஆகும். இதன் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மாநாடு ரஷியாவின் உபா நகரில் நடந்தது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் கோவா மாநிலத் தலைநகரான பனாஜி நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடக்கிறது.\nஇதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதைத்தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரிக்ஸ் மாநாட்டின் இடையே புதின், ஷின்பிங் ஆகியோரை மோடி சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nஅப்போது காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி மோடி எடுத்துக் கூறி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்கிறார். மேலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் வற்புறுத்துவார். பாகிஸ்தான் சேட்டைகள் செய்தால், இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது, பதிலடி கொடுத்தே தீரும் என்று ஜின்பிங்கிடம், மோடி தெரிவிக்க உள்ளார்.\nஇவ்விரு தலைவர்களும் மாலை 5.40 மணியளவில் சந்திக்க உள்ளதாகவும், சீன அதிபர் மதியம் 1.10 மணிக்கு இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-05-06-55-50", "date_download": "2018-08-20T18:58:37Z", "digest": "sha1:HQPQJE736JQY4OVVT7LJ7VLI5DO7P7PN", "length": 8917, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "அருந்ததியர்கள்", "raw_content": "\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஅருந்ததியர் குறித்த சிறு விளக்கம்\nஅருந்ததியர்கள் மீது பள்ளர்கள் தாக்குதல்\nகுற்றம் 23 - பார்த்து, ரசிக்கக்கூடிய ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர்\nசக்கிலியர்களின் குலதெய்வங்கள் - சென்றாயப் பெருமாள் - வீரமாத்தி அம்மன்\nசந்தையூர் சுவர் – உண்மை அறியும் குழு அறிக்கை\nசந்தையூர் தீண்டாமைச் சுவர் - ஆய்வின் அறிக்கை\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nசாதியச் சமூகம்: குடிப்பிள்ளை (சாதிப்பிள்ளை)\nதிட்டக்குடியில் அருந்ததியர் நிலத்தைக் கைப்பற்ற நடந்த ஜாதியத் தாக்குதல்\nதீபாவளி மகிழ்ச்சிக்குள் ஒளிந்திருக்கும் துப்புரவு தொழிலாளர்களின் துயரம்\nபுது நானூறு 203. உயிரினம் அழியுமே\nபுறக்கணிக்கப்படும் ஒண்டிவீரன் நினைவு நாள்\nமுடிவற்று எரிந்து கொண்டே இருக்கும் தலித்துகளின் குடிசைகள்\nமுஸ்லிம்கள் சிலரிடம் மாற வேண்டிய பார்வை\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/31626-2016-10-10-02-21-26", "date_download": "2018-08-20T19:01:36Z", "digest": "sha1:4YCIGCALE7OSZK5DRVB437JTSIAHJ6B4", "length": 22661, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "'ரெமோ' சொல்ல வரும் உண்மை எது?", "raw_content": "\nதமிழ் சினிமா பாடல்களில் கவிஞர் வாலி முதல் சிம்பு வரை – பேசப்படும் பெண் பாதுகாப்பும், பேசப்படாத பெண்உரிமையும்\nபெண் விடுதலை பேசும் ‘இறைவி’\nசாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...\n'இறைவி' சினிமா - ஒரு பார்வை\nஏகாதிபத்தியம் கிரேக்கத்தில் நடத்திய சனநாயகப் படுகொலை\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nபெரியார் எதிர்த்த ‘ஆண்மை’யும் ‘கேட்டர் பில்லர்’ நாயகியும்\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2016\n'ரெமோ' சொல்ல வரும் உண்மை எது\nஎந்த அடிப்படையும் இல்லாத, நிற வேற்றுமையை மிக அதிக அளவில் பாராட்டுகிற, எவ்வித புரிதலுமற்ற, மிகவும் தட்டையான மலினமான காதலையே சொல்ல வருகிறது சிவாவின் ரெமோ.\nஒரு கேள்வி. ஒரு தெருவில் 10 பெண்கள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். கீர்த்தி போல் வெள்ளையாய், அழகாய் ஒரே ஒரு பெண். ஏனைய 9 பேரும் மாநிறத்தில் இருக்கிறார்கள் எனக்கொள்வோம். அதே தெருவில் இருக்கும் 10 ஆண்களும் கீர்த்தி என்கிற ஒரு பெண்ணின் மேலேயே மெரிசலானால், ஏனைய 9 பெண்களுக்கு காதல் அவர்களுக்கு காதல் இருக்க கூடாதா அவர்களுக்கு காதல் இருக்க கூடாதா அவர்கள் காதலிக்கப்பட தகுதியே இல்லாதவர்களா அவர்கள் காதலிக்கப்பட தகுதியே இல்லாதவர்களா வெள்ளையாய் அழகாய் இருப்பவர் மட்டுமே காதலிக்கப்பட தகுதியானவரா\nஇந்த பின்னணியில், ரெமோவை ஒரு பக்கா ரேசிஸ்ட் ஃபிலிம் என்று சொல்லிவிடலாம்.\nகீர்த்தி கதைப்படி ஒரு மருத்துவர். சிவா நடிகராக முயல்பவர். நாளை திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்பின்றி சிவா என்கிற கேரக்டர் மனைவி சம்பாதித்து வர, வீட்டை பார்த்துக் கொள்வாரா அப்படியானால் ஈகோ பிரச்சனை வந்து விவாகரத்துக்கு குவியும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை என்ன சொல்ல வருகிறது அப்படியானால் ஈகோ பிரச்சனை வந்து விவாகரத்துக்கு குவியும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை என்ன சொல்ல வருகிறது\nபார்க்கப் போனால், சிவாவின் எல்லா படங்களிலும் நாயகன் - நாயகி காதலில் யாதொரு தர்க்கமும் இருந்ததில்லை. குறைந்தபட்ச புரிதல் கூட இருந்ததில்லை. சிவாவின் கேரக்டர்கள் செய்வதெல்லாம் ஃப்ராடுத்தனங்கள் தான். கதாநாயகி எதையாவது ஆசைப்பட்டால் உடனே அதை போலியாக உருவாக்கி பிக்கப் செய்வது..\nசுருக்கமாக சொன்னால் ஏமாற்றுவது.. சிவாவின் படங்களில் உள்ள ஒரே ஒரு நல்ல விஷயம், ஏமாற்றி லவ் செய்வதோடு நிறுத்திக் கொள்வது தான்.. வயிற்றை ரொப்பிவிட்டு ஓடி ஒளிவது, கைவிடுவது போன்றவைகளெல்லாம் இந்த படங்களை பார்ப்பதினால் சூடேறி மற்ற ஆண்கள் செய்து மாட்டிக் கொள்வார்கள்... இப்படியான வயிற்றை ரொப்பும் ஆசாமிகளுக்கு உற்சாக மருந்தாய் இருப்பது சிவா போன்ற நடிகர்களின் படங்கள் தான்.. வேறு மாதிரி சொல்வதானால், இப்படி வயிற்றை ரொப்பும் ஆசாமிகளுக்காய் படங்கள் நடித்து தான் சிவா போன்றவர்கள் தங்களது வெற்றிப் பயணத்தை மேற்கொள்கிறார்கள்...\n1. பார்க்க சுமாரான பெண்களின் அகமன தேவைகள், ஆசைகள் போன்றவைகள் குறித்து சிவாவின் படங்கள் பேசுவதே இல்லை..\n2. இன்னொரு மோசமான விஷயம், அழகான பெண்களுக்கென்று சிவாவின் படங்கள் வரையும் வட்டம் தான்.. அழகான பெண்.. அவள் இன்னதுதான் செய்கிறவளாக இருக்க வேண்டும்.. அதைத் தாண்டி அவள் போய்விடக் கூடாது.. அழகான பெண் மருத்துவர் நான்கு ஆண் மருத்துவர்களுடன் இணைந்து முகாம்கள், கலந்தாய்வுகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளக் கூடாது. அப்படி மேற்கொண்டால், ஆராய்ச்சியில் பங்கேற்கும் மற்ற ஆண் மருத்துவர்கள் கண்டிப்பாக பெண் மோகிகளாக மட்டுமே இருப்பார்கள். உடனே சிவா நடுவில் புகுந்து அந்த ஆண் மோகியின் முகத்தைக் கிழித்து தன் தூய உள்ளத்தை நிலை நாட்டி மீண்டும் ஹீரோ ஆகிவிடுவார்.\n3. சிவாவின் படங்களில் அழகான கதா நாயகிக்கு அறிவான ஒழுக்கமான ஒரு மேதாவி நண்பன் இருந்துவிட வாய்ப்பே இல்லை. சிவா மட்டும் தான் ஒரே ஒரு நல்லவர். வல்லவர். நாலும் தெரிந்தவர்.\n4. அழகான படித்த அறிவான ஆண் சிவாவின் படங்களில் ஏதோ ஒரு கொடூர எண்ணப்பாடு கொண்டவராகவோ, அல்லது குறுகலான மனம் படைத்தவராகவோ தான் இருக்க முடியுமே ஒழிய நல்லவராக வல்லவராக வெளிப்பட வாய்ப்பே இல்லை.\n5. அமெரிக்க மாப்பிள்ளை என்பவர் எப்போதும் ஒரு ஆணாதிக்க வாதம் நிறைந்த, காசு வெறி பிடித்தவராகவே தமிழ்ப் படங்களில் வெளிப்படுவார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கவர்மென்ட் பள்ளியில் சொற்ப செலவில் படித்து சொந்த முயற்சியில் பொறியியல் முடித்து, சம்பாதித்து குடும்பத்தை பொருளாதாரத்தில் முன்னுக்கு கொண்டு வந்து இந்திய போலி சமூகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவினதான திறமை, மற்றும் அறிவால், அமெரிக்கா போன்ற நாடுகள் சுவீகரித்துக்கொண்ட ஆண்களெல்லாம் தமிழ்ப் படங்களில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுவார்கள்.\nஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம்.\nஅழகான பெண் மருத்துவர், தன் துறை சார்ந்து விவாதங்கள் செய்ய விழைபவராக இருந்துவிடவே கூடாது. ஏனெனில் அப்படியான விவாதம் செய்ய அவரது துணையும் ஒரு மருத்துவராக இருக்க வேண்டும். அதைத்தான் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்கிறதே சிவாவின் படங்கள்.\nபெண்களை இப்படியும் தான் மோசமாக சித்தரிக்கிறார்கள். கொடுமை என்னவென்றான் இந்த படம் இங்கே அமெரிக்காவிலும் ஓடுகிறது. என் தேசத்து படம் என்று நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள அமேரிக்கர்கள் கேட்டால் நான் இந்த படத்தை எப்படி கை காட்டுவது ரெமோவைக் காட்டினால் நாட்டின் மானமே போய்விடும்.\nஅதாவது சிவாவின் படங்களில் பெண் மருத்துவராக இருந்தாலும் மூளையைக் கழற்றி வைத்தவராகத்தான் இருக்க வேண்டும். சிவா எப்படி இப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்கிறார் என்பது சுத்தமாக விளங்கவில்லை. இவருக்கு பெண்கள் மீது எந்த புரிதலும் இருப்பது போல் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், பெண்களை இவர் தனது படங்களின் வாயிலாக மிக மிக மோசமாக மலினமாக சித்தரிக்கிறார். கொடுமை என்னவென்றால், இந்த சிவாவுக்கு ஆண் விசிறிகளை விட பெண் விசிறிகளே அதிகம். இதையெல்லாம் கேள்விப்படுகையில், பெண்ணியம் , பெண் சுதந்திரம், பெண் உரிமை, ஆணாதிக்கம் போன்றவைகள் எல்லாம் உண்மையில் என்ன என்கிற தீவிரமான யோசனை வந்துவிடுகிறது. இவரது படங்களை தொடர்ந்து பார்த்து, இவரை ஊக்குவித்து வாழ்த்தி வாழ வைக்கும் பெண்கள் எப்படிப்பட்ட மன நிலையைக் கொண்டவர்கள் என்கிற தீவிர சிந்தனை வந்துவிடுகிறது.\n\"சிவா என்கிற நடிகரை எனக்குப் பிடிக்கும்\" என்று சொல்லும் பெண்கள் ஏதோ ஒரு மனப்பிறழ்வை கொண்டவர்கள் என்றே என்னால் அணுக முடிகிறது.\n1991ல் வெளியான சின்னத்தம்பி என்கிற படத்திற்கு எவ்விதத்திலும் குறைவல்ல 2016ல் வெளியாகியிருக்கும் ரெமோ. இடையில் சரியாக 25 வருடங்கள் கடந்திருக்கின்றன. சின்னத்தம்பி படம் 1991ல் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படம். ரெமோவில் சிவா 2016ல் பெண்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். இந்த இரண்டு தகவலையும் தொடர்பு படுத்தி பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது விளங்கலாம். இன்றைய தலைமுறை பெண்களுக்கு 1991 காலகட்டத்தின் பெண்கள் அதாவது அம்மாக்களுடனான உரையாடல்கள் ஆரோக்கியமான திசையில் இல்லை என்பதையே இது குறிப்பதாக நான் எடுத்துக் கொள்கிறேன். இது நிச்சயம் ஒரு மோசமான தகவல் தான்.\nரெமோ என்கிற இந்த படம் எந்த உண்மையையாவது பேசுகிறது என்றால் அது இதைத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/category/swiss?ref=tamilwin", "date_download": "2018-08-20T18:14:32Z", "digest": "sha1:F33CK3ELUYCRKGAOD5VG7UHLCHJ7DC2K", "length": 12397, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Swiss Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri News | tamilwin", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோபி அன்னானுக்கு அஞ்சலி செலுத்தும் சுவிட்சர்லாந்து: தனிச் சிறப்புக் காரணம்\nசுவிற்சர்லாந்து 8 hours ago\nசுவிட்ஸர்லாந்தின் தலைநகரத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்\nசுவிற்சர்லாந்து 13 hours ago\nசுவிஸில் வீதிக்கு வந்த தமிழ் குடும்ப சண்டை.. பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nசுவிற்சர்லாந்து 1 day ago\nசிறப்பாக இடம்பெற்ற சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேர்த் திருவிழா\nசுவிட்சர்லாந்தில் மூடுவிழா காணும் அகதிகள் முகாம்கள்: வெளியான பின்னணித் தகவல்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nசுவிற்சர்லாந்தில் கைகொடுக்க மறுத்ததால் முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை மறுப்பு\nசுவிற்சர்லாந்து 2 days ago\nசுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன\nசுவிற்சர்லாந்து 2 days ago\nசுவிஸ்ஸில் திருமண மோதிரத்தை தொலைத்த இளைஞரை தேடும் பொலிஸ்: சுவாரசிய காரணம்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nஜெனிவாவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களின் அடையாளம் தெரிந்தது\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிஸ் அரசின் நடவடிக்கை: டீசல் வாகனங்களுக்கு தடை\nசுவிற்சர்லாந்து 4 days ago\nஒசாமாவின் தண்டனையை உறுதி செய்த சுவிஸ் உச்சநீதிமன்றம்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிட்சர்லாந்தில் இளம் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல்: ஆர்ப்பாட்டத்தில் குதித்த 4 நகர மக்கள்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nலூட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மனின் வெகு கோலாகல தேர்த்திருவிழா\nவாழ்வதற்கு மிகச்சிறந்த நகரங்கள் பட்டியல்: சுவிஸ் நகரங்களுக்கு எத்தனையாவது இடம்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம்\nசுவிற்சர்லாந்து 7 days ago\nஜெனிவா வானவேடிக்கை நிகழ்ச்சியில் பொலிஸாருக்கு நேர்ந்த சோகம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஇந்தோனேஷியா நிலநடுக்கம்: உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் ஏஜென்சி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் வேகமாக பரவும் பால்வினை நோய்: வெளியான அதிர்ச்சி தகவல்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் பார்மசி அருங்காட்சியகத்தில் நச்சுப்பொருள் தாக்குதல்: ஒருவர் மரணம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஅகதிகளுக்காக அதிரடி திட்டம் வகுத்து செயல்படுத்தும் சுவிஸ் அரசு\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிஸ் மருத்துவமனைகளில் பரவி வரும் நோய்க்கிருமி: எச்சரிக்கை தகவல்\nசுவிற்சர்லாந்து August 09, 2018\nஆண்டு தோறும் பில்லியன் கணக்கில் வருவாய் இழக்கும் சுவிட்சர்லாந்து: காரணம் என்ன தெரியுமா\nசுவிற்சர்லாந்து August 08, 2018\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அகதிகள் குறித்த சுவிஸ் படம்\nசுவிற்சர்லாந்து August 07, 2018\nசுவிட்சர்லாந்தில் ஈரான் அகதி தொடர்பில் நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து August 06, 2018\nஅதிகரிக்கும் வெப்பநிலையால் சுவிட்சர்லாந்து நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ள அபூர்வ மாற்றம்\nசுவிற்சர்லாந்து August 06, 2018\nசுவிட்சர்லாந்தில் பெற்றோரால் கடுமையாக தாக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிற்சர்லாந்து August 05, 2018\nசுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளான விமானங்கள்: 23 பேர் பலியானதாக வெளியான தகவல்\nசுவிற்சர்லாந்து August 05, 2018\n12 வயது மகனை சாரதியாக்கிய தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து August 04, 2018\nசுவிட்சர்லாந்தில் நாய்களுக்கு காலணிகள்: புதிய கட்டுப்பாடு\nசுவிற்சர்லாந்து August 04, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/10/blog-post_18.html", "date_download": "2018-08-20T18:49:50Z", "digest": "sha1:WCCNNBJSG2WYRWELR3W5JDFKVG4HKVCJ", "length": 5375, "nlines": 58, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: இந்திய நீதி மன்றங்களில்...", "raw_content": "\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா குர்பானி பிறை கேள்வி-பதில்கள் வரலாற்றுத் தொடர்கள் சட்டங்கள் திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) வழிகேடுகள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள் பேலியோ உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nஇந்திய நீதிமன்றங்களில் மைனாரிட்டி குடிமக்களுக்கு சரியான நீதி...\n- சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி.முத்து கிருஷ்ணன் அவர்களின் உரை கீழே காண்க:\nLabels: அயோத்தி, செய்திகள், பாபரி மஸ்ஜித், வீடியோ\nபத்து நிமிடத்தில் ரொம்ப அழகாக தெளிவாக உண்மையாக கூறியிருக்கிறார்.\nஅநீதிவான்கள் எட்டாயிரம் பக்கம் என்னத்த கிழிச்சானுங்கன்னு தெரியல.\n//பத்து நிமிடத்தில் ரொம்ப அழகாக தெளிவாக உண்மையாக கூறியிருக்கிறார்.\nஅநீதிவான்கள் எட்டாயிரம் பக்கம் என்னத்த கிழிச்சானுங்கன்னு தெரியல//\n நீதி தெரிந்த இதுபோன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கூட இல்லாமலா போய்விடுவார்கள் இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான், இன்ஷா அல்லாஹ்\nகருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/2018/07/06164702/1174865/Volvo-XC40-Launched.vpf", "date_download": "2018-08-20T18:09:56Z", "digest": "sha1:TQS7IBNIQXJTZ4V45R3QZ5VSZLUS4AMZ", "length": 13243, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் வால்வோவின் புதிய எஸ்.யு.வி. வெளியானது || Volvo XC40 Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் வால்வோவின் புதிய எஸ்.யு.வி. வெளியானது\nவால்வோ நிறுவனத்தின் XC40 எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வால்வோவின் விலை குறைந்த மாடலாக இந்த எஸ்.யு.வி. இருக்கிறது.\nவால்வோ நிறுவனத்தின் XC40 எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வால்வோவின் விலை குறைந்த மாடலாக இந்த எஸ்.யு.வி. இருக்கிறது.\nவால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக வால்வோ XC40 அமைந்திருக்கிறது.\nமே 2016-இல் அறிமுகம் செய்யப்பட்ட 40 சீரிஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய எஸ்.யு.வி. முன்பக்க கிரில் பார்க்க வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்த XC60 போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் பகலில் எரியும் தார் வடிவிலான மின்விளக்குகள் இடம்பெற்றிருக்கிறது.\nபின்புறம் ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு, இன்டகிரேடெட் ரூஃப் ஸ்பாயிலர், டூயல் டோன் ரியர் பம்ப்பர் மற்றும் ட்வின் க்ரோம் எக்சாஸ்ட், L-வடிவிலான டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. சென்டர் கன்சோலில் க்ரோம் ட்ரிம் மற்றும் செங்குத்தான ஏ.சி. வென்ட் மற்றும் செங்குத்தான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் வால்வோ XC40 மாடலில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 190 பி.எச்.பி. பவர், 400 என்.எம். டார்கியூ செயல்திறன், 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மாட்யூலர் ஆர்கிடெக்ச்சர் தளம் சார்ந்து வெளியாகும் முதல் மாடலாக XC40 இருக்கிறது.\nவால்வோவின் சிறிய எஸ்.யு.வி. மாடல் என்ற வகையில் இந்த மாடல் அதிகளவு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வால்வோ XC40 விலை ரூ.39.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய காரின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டது. வால்வோ XC40 காரை முன்பதிவு செய்வோர் ரூ.5 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nஇந்தியாவில் வால்வோ XC40 முன்பதிவுகள் துவங்கியது\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/22180149/1164905/Vishal-condolences-to-Sterlite-Shootout.vpf", "date_download": "2018-08-20T18:09:59Z", "digest": "sha1:TVXQ5SCO3PNXEQ2YCEKYSF7HDUST6MYK", "length": 15782, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "2019-ஏ விழித்துக் கொள் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்கு விஷால் கண்டனம் || Vishal condolences to Sterlite Shootout", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n2019-ஏ விழித்துக் கொள் - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்கு விஷால் கண்டனம்\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள விஷால், அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #SterliteProtest #Bansterlite\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள விஷால், அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #SterliteProtest #Bansterlite\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.\nஅப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.\nஇதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல் நடிகர் விஷாலும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விஷால் கூறியிருப்பதாவது,\nஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படட்டது கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுநலனை கருத்தில் கொண்டே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் சுயநலம் இல்லை. 50,000 பேர் கூடி போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த ஊரின் நலனை கருத்தில் கொண்டே போராடுகிறார்கள்.\nஅன்பிற்குரிய பிரதமரே, அமைதி காத்தது போதும், இப்போதாவது பேசுங்கள். போராட்டம் என்பதே ஜனநாயகம் தான் என்னும் போது, மக்கள் ஏன் அதை செய்யக் கூடாது.\nஇந்த அரசு மக்களுக்காகத் தான் செயல்படுகிறதா. 2019-ஆம் ஆண்டே விழித்துக் கொள். என்று கூறியிருக்கிறார். #SterliteProtest #Bansterlite #SaveThoothukudi\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமுழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\nகேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\nஇயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nஸ்டெர்லைட் விவகாரம்- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கவேண்டும்- அதிமுக நிர்வாகி தலைமையில் பொதுமக்கள் மனு\nஸ்டெர்லைட் நிர்வாகப் பிரிவை திறக்க தடையில்லை - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை ஆகஸ்ட் 17ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/01105831/1173665/Pawan-Kalyan-fans-threatened-to-kill-Ranu-Desai.vpf", "date_download": "2018-08-20T18:09:54Z", "digest": "sha1:IVT4MYDWCXVFBPDGPWEJHK3SGSJR4WKZ", "length": 14936, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரேணு தேசாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த பவன் கல்யாண் ரசிகர்கள் || Pawan Kalyan fans threatened to kill Ranu Desai", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரேணு தேசாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த பவன் கல்யாண் ரசிகர்கள்\nதெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ரசிகர்கள் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் ரேணு தேசாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். #PawanKalyan #RenuDesai\nதெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ரசிகர்கள் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் ரேணு தேசாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். #PawanKalyan #RenuDesai\nபிரபுதேவா, பார்த்திபன் இணைந்து நடித்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக வந்தவர் ரேணுதேசாய். தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.\nரேணுதேசாய்க்கும், தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் சகோதரருமான பவன் கல்யாணுக்கும் படங்களில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்து, 2009–ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் ரேணுதேசாய்க்கும், பவன் கல்யாணுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2013–ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். சமீபத்தில் இன்னொருவருடன் தனக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக ரேணுதேசாய் அறிவித்தார். ‘‘நான் தவறான இடங்களில் அன்பை தேடினேன். இப்போது உண்மையான காதலரை கண்டுபிடித்து விட்டேன்’’ என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.\nஒரு ஆணுடன் கைகோர்த்து இருப்பதுபோன்ற படத்தையும் வெளியிட்டார். இரண்டு தினங்களுக்கு முன்பு காதலருடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் புதிய வாழ்க்கையை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்து நிச்சயதார்த்த படத்தையும் வெளியிட்டார். அதில் காதலர் முகம் பாதிதான் தெரிந்தது. காதலர் யார் என்ற விவரத்தை ரேணுதேசாய் ரகசியமாக வைத்துள்ளார்.\nநிச்சயதார்த்த படத்தை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் கோபமுற்று நடிகை ரேணுதேசாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ‘‘பவன் கல்யாண் எங்கள் கடவுள். அவரை காயப்படுத்தாதீர்கள். மீறி காயப்படுத்தினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும். மீண்டும் திருமணம் செய்யாதீர்கள். பல பெண்கள் தனியாக வாழ்கிறார்கள். உங்களுக்கு மட்டும் திருமணம் எதற்கு என்று சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை மிரட்டல் குறித்து போலீசில் புகார் அளிப்பது குறித்து ரேணுதேசாய் ஆலோசித்து வருகிறார்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமுழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\nகேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\nஇயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nதெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் கட்சியில் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்\nபவன் கல்யாண் மீது மான நஷ்ட வழக்கு தொடர சந்திரபாபு நாயுடு மகன் முடிவு\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thinappuyalnews.com/archives/136149", "date_download": "2018-08-20T18:48:14Z", "digest": "sha1:QJBGCJLWD5MICDAXTN4GGEQYZ5MIH6OX", "length": 3441, "nlines": 46, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இரணைமடு நிரம்பி வழிகிறது ..!! – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇரணைமடு நிரம்பி வழிகிறது ..\nவட மாகாணத்தில் நிலவும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கிளிநொச்சி நீர்பாசன திணைக்கள காரியாலயம் தெரிவித்துள்ளது.\nஇந்தநிலையில், இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 18.5 அடிகளில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரணைமடுக் குளத்தில் இதுவரை 36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் அரைவாசிக்கும் மேல் நீர்மட்டம் நிரம்பியுள்ளது.\nகடந்த காலங்களில் நிலவிய வறட்சி காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 7 அடியாக குறைந்திருந்தது.\nகுளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமகா கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தயாராகி வருகின்றனர்.\nPrevious 85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி..\nNext வவுனியாவில் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34607-2018-02-14-05-23-40", "date_download": "2018-08-20T19:00:25Z", "digest": "sha1:DCYRMAN6MN2YVZLX2MDKLM25VFJCMY3D", "length": 25779, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "சமூக மாற்றத்தோடு சேர்ந்து காதலைக் கொண்டாடுவோம்", "raw_content": "\nஜாதி - தாலி - சடங்குகளைத் துறந்த காதலர்கள்: இறையரசி - தமிழமுதன்\nஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே\n ( என் ஜாதியைத் தவிர)\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nபிறவி வருண சாதி - தீண்டாமை எதில் எதில் இருக்கிறது\nசாதிய ஆணவக் கொலைகளின் பொருளாயத அடிப்படை\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2018\nசமூக மாற்றத்தோடு சேர்ந்து காதலைக் கொண்டாடுவோம்\nவழக்கம் போல காதலர் தினம் பெரும் மனக்கிளர்ச்சியுடன் காதலர்கள் மத்தியில், மழையோடு கலந்த மண்வாசமும், செடிகொடிகளின் பச்சை வாசனையும் சேர்ந்து மயக்கும் மனநிலையாய் உருப்பெற்று மூச்சிக்குழாய் முழுவதும் படர்ந்து, சுவாசிக்க சுவாசிக்க அதன் நறுமணத்தில் கிறங்கிப் போய் கிளர்ச்சி அடைந்து, இடம் பொருள் மறந்து, அவர்களை திக்குமுக்காடச் செய்துகொண்டு இருக்கின்றது. காதலர்கள் தங்களது கைபேசிகளை கூடுமானவரை இன்று மட்டுமாவது பெற்றோரின் பார்வையில் இருந்து மறைந்துபோகச் செய்ய படாதபாடு பட்டுக் கொண்டிருப்பார்கள். எந்த நொடியிலும் வரும் தன் காதல் இணையின் வாழ்த்துகளுக்காக தூக்கத்தை எல்லாம் இரவிற்கே பரிசாகக் கொடுத்துவிட்டு ஓர் அழகான கவிதைக்காக காத்துக் கிடப்பார்கள். எந்த நொடியிலும் காதலை சுமந்துவரும் அந்தக் குறுஞ்செய்தி இரவின் நீளத்தை உடைத்து நொறுக்கிவிட, ஒரு சம்மட்டியாய் காத்துக் கிடக்கின்றது. நாசிதுவாரங்களில் மிக சிரமப்பட்டு சென்றுவரும் காற்று, நுரையீரல் முழுவதும் நிரம்பி இருக்கும் காதலின் நறுமணம் உறைந்த காற்றுப்பைகளை கடந்துசெல்ல மனமில்லாமல் தங்கிப் போக கொஞ்சம் கூடுதல் அவகாசம் கேட்கும். எல்லையற்ற வானம் இன்றுமட்டும் ஏனோ இலவசமாக தன்னைக் கடந்துபோக இறகுகளை காதலர்களுக்கு மட்டும் கள்ளத்தனமாக பரிசளித்து விடுகின்றது.\nஎல்லாம் தவறாக இருந்தாலும், எல்லாம் சரியாக இருந்தாலும் எது சரி, எது தவறு என்று கண்டுபிடிக்கும் கருவிகள் இன்று ஒரு நாள் மட்டும் மூளைக்குள் வேலை நிறுத்தம் செய்து வேண்டியபடி தப்புகளையும், சரிகளையும் தாராளமாக சரிகளாக மாற்றித் தந்து காதலின் கரங்களை வலுப்படுத்துகின்றது. கரம் கோர்த்து, காதலை வெளிப்படுத்தலாம்; தீராத அன்பின் மிகுதியை வெளிக்காட்ட முத்தம் கூட தரலாம்; உலக காதல் இலக்கியங்கள் பற்றி உணர்ச்சிப்பெருக்குடன் உரையாடலாம்; ஆனால் எங்கே கரம் பற்றுவது, எங்கே முத்தம் கொடுப்பது, குறைந்த பட்சம் உரையாடவாவது இந்தச் சமூகம் காதலர்களை அனுமதிக்கின்றதா ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து நடந்தாலே சமூகத்தின் பண்பாட்டையே கெடுத்து குட்டிச்சுவராக்க புறப்பட்ட இரண்டு குட்டிச்சாத்தான்களை பார்ப்பது போலத்தானே தனது வக்கிரம் நிறைந்த சனாதனக் கண்களால் அவர்களைப் பார்க்கும் சமூகத்தில் அல்லவா நாம் வாழ்கின்றோம் ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து நடந்தாலே சமூகத்தின் பண்பாட்டையே கெடுத்து குட்டிச்சுவராக்க புறப்பட்ட இரண்டு குட்டிச்சாத்தான்களை பார்ப்பது போலத்தானே தனது வக்கிரம் நிறைந்த சனாதனக் கண்களால் அவர்களைப் பார்க்கும் சமூகத்தில் அல்லவா நாம் வாழ்கின்றோம் காதலைக் கொண்டாட நாம் என்ன குறுந்தொகை காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலப்பதற்கு. இது சாதிவெறி பிடித்த நாய்களும், மதவெறி பிடித்த நாய்களும் ரத்தம் தோய்ந்த தனது நாக்குகளை சுழற்றியபடி காதலர்களைக் கடித்துக் குதற டிராகுலா பற்களுடன் வீதியில் உலாவும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். கன்னித்திரைகளுக்குப் பின்னால் தங்களின் குடும்ப மானத்தை மறைத்துவைத்த சாதியத்திற்கு தங்களை ஒப்புவித்த பெற்றோர்கள் கன்னித்திரையின் வாசலில் கடும் ஆயுதங்களுடன் காவல் இருக்கின்றார்கள்.\nஅந்த வாசலில் நுழைவதற்கான குறிகளை அவர்கள் ஜோசியக்காரனின் கட்டங்களில் இருந்து கண்டுபிடித்து, கடவுளின் பெயரால் தங்களின் காவலை விலக்கிக் கொள்கின்றார்கள். நேற்றுவரை யார் என்றே தெரியாத ஒருவனுடன் படுத்து, குடும்பம் நடத்து என்று கற்புப் பெற்றோர்கள் கட்டளை இடுகின்றார்கள். இதைப் பிற்போக்குவாதிகள் ஆங்கிலத்தில் arranged marriage என்கின்றார்கள். ஆனால் முற்போக்குவாதிகளோ பெத்த பொண்ணை கூட்டிக்கொடுக்கும் விபச்சார திருமணம் என்கின்றார்கள். களவுக் காதலை கைப்பற்றிய கற்புக் காதல், அதை வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை காட்டேறிகளின் துணையுடன் அழித்தொழித்து கன்னித்திரையை காசுகொடுத்து விற்பனை செய்வதே கற்பு என்ற இலக்கணத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் குறுந்தொகையை ரசிப்பவர்கள், அகநானூறைப் படித்து அகமகிழ்பவர்கள். இருப்பினும் சாதி என்று வந்துவிட்டால், கற்பு என்று வந்துவிட்டால், சாக்கடையில் படுத்துருளவும் தயங்காதவர்கள். ஆதித்தமிழனின் அறுசுவை உணவை மறந்து, வந்தேறி பார்ப்பனக் கும்பலின் சாதிய வர்ணாசிரம மலத்தை தன்னுடைய உணவாக வரித்துக்கொண்டவர்கள். இவர்களின் மத்தியில் இருந்துதான் காதல் பிரசவிக்க வேண்டி இருக்கின்றது. பிணந்தின்னும் கழுகுகள் மத்தியில் இருந்து கோழிக்குஞ்சுகளை பாதுகாக்க வேண்டி இருக்கின்றது.\nகாதலுக்காக உருகி, உருகி கவிதை எழுதும் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சாதி ஆணவப் படுகொலைகளைப் பற்றிய எந்தப் பதைபதைப்பும் இருப்பதில்லை. அவர்களுக்கு இளவரசனைத் தெரியவில்லை, கோகுல்ராஜையும், உடுமலை சங்கரையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இவர்கள் ஏன் இந்தச் சமூகத்தால் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் ஒதுக்குவதில்லை. அவர்கள் காதலை அந்தரத்தில் உருவான அதிசயமாகப் பார்க்கின்றார்கள். ஆனால் அது வளர வேண்டுமா அல்லது வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டுமா என்பதை இந்தச் சாதிய சமூகம்தான் தீர்மானிக்கின்றது என்ற எளிய கணக்கைக்கூட தெரிந்துகொள்ளாமல் கற்பனையில் கோட்டை கட்டி இறுதியில் சாதியாலும், மதத்தாலும் உருக்குலைக்கப்பட்ட தங்களுடைய காதலை தூக்கிக்கொண்டு ஆற்றாமையில் கண்ணீர்விட்டு கதறுகின்றார்கள்.\nகாதலில் அரசியல் இல்லை, கொஞ்சம் கூட சமூகம் சார்ந்த புரிதல் இல்லை. திரையிசைப் பாடல்களுக்கும், காதல் ரசம் சொட்டும் கவிதைகளுக்கும் அப்பால் இடைவிடாமல் ஒலிக்கும் சாதிய ஓநாய்களின் வன்மம் நிறைந்த ஊளையை அவர்கள் செவிமடுப்பதில்லை. தக்கையான, தட்டையான காதல் எதைச் சாதிக்கின்றதோ, இல்லையோ, தனது சாவை அது நிச்சயம் வெகு சீக்கிரமாக சாதித்துக் கொள்ளும். எந்தக் காதல் சாதி ஒழிப்புடனும், மத ஒழிப்புடனும், சமூக மேம்பாட்டுடனும் பின்னிப் பிணைந்து உருவாகின்றதோ, அந்தக் காதல்தான் தன் வாழ்நாளை நீட்டித்துக்கொண்டு வாழும் தகுதியைப் பெறுகின்றது.\nஆதி தமிழ்ச்சமூகம் காதலைக் கொண்டாடிய சமூகம், களவுக்காதலை தன்னுடைய வாழ்வியல் நெறியாய் வரித்துக்கொண்ட சமூகம். இன்று அந்தக் காதலை அறமற்ற கற்பு நெறி கரையானாய் அரித்து தின்றுகொண்டு இருக்கின்றது. இதை அழித்து, ஒழிக்காமல் தமிழன் என்றுமே மானமுள்ள மனிதனாய் இயற்கையோடு இயைந்த காதலை ஏற்றுக்கொண்டவனாய் வாழ முடியாது. ஊருக்கு ஒரு வைப்பாட்டி வைத்திருப்பவனும், இருக்கும் ஒரு பொண்டாட்டியையும் வைத்து வாழத் துப்பில்லாமல் துரத்திவிட்டவனும் காதலைப் பற்றி கண்ணியக்குறைவாகப் பேசுகின்றார்கள் என்றால் சாதிய, மதவாதிகளின் கற்புக்காதல் என்பது பாஞ்சாலியையும், தசரதனையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கற்புக்காதல் என்பதாகப் புரிந்துகொள்க.\nகாதலர்கள் தங்களுக்குள் ரோஜாவைவோ, இல்லை வாழ்த்து அட்டைகளையோ, பரிசுப்பொருட்களையோ பரிமாறிக் கொள்வதைப் போன்று பெரியாரையும், மார்க்சையும், அம்பேத்கரையும் பரிமாறிக் கொள்ளுங்கள். அது இன்னும் உங்கள் காதலை வாசமுள்ளதாக மாற்றும். ரோஜாவை வைத்து வீழ்த்த முடியாத சாதியையும், மதத்தையும் பெரியாரையும், மார்க்சையும், அம்பேத்கரையும் வைத்து வீழ்த்த முடியும். காதலை முற்போக்காகக் கொண்டாடுங்கள். அதைச் சமூக மாற்றத்தைச் சாதித்துக் காட்டும் மிகப்பெரும் சக்தியாக உருமாற்றுங்கள். ஒரே சாதிக்குள் பெண் எடுப்பதையும், பெண்கொடுப்பதையும் அவமானமாகக் கருதுங்கள். காதலுக்குள்ளாக இருந்து முகிழும் உணர்வை வெளிக்காட்டத் தெரியவில்லை என்றால், அதை இப்படி புரிந்துகொள்ளுங்கள். சாதிக்கு எதிராகவும், மதத்திற்கு எதிராகவும் போராடவில்லை என்றால் அந்தக் காதல் அழிந்து, சாதியையும், மதத்தையும் வைத்து பிழைப்பு நடத்தும் பிற்போக்குவாதிகளின் கரங்கள் வலுப்பட்டுவிடும் என்பதைத்தான் உங்களால் சொல்லமுடியாத அந்த உணர்வு உணர்த்துகின்றது. உண்மையைத்தான் சொல்கின்றேன், தோழர்களே... நம்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-10th-july-2017/", "date_download": "2018-08-20T18:07:40Z", "digest": "sha1:P746JDKR5HQP5QCEO5EG4H5OA6I4NTIY", "length": 13335, "nlines": 110, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 10th July 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 10-07-2017, ஆனி- 26, திங்கட்கிழமை, பிரதமை திதி பகல் 11.26 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.09 வரை பின்பு திருவோணம். மரணயோகம் இரவு 07.09 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.\nகேது திருக்கணித கிரக நிலை 10.07.2017 புதன்\nஇன்றைய ராசிப்பலன் – 10.07.2017\nமேஷம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nரிஷபம் இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nமிதுனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nகடகம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்லது நடக்கும்.\nசிம்மம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.\nகன்னி இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நல்ல பலனை தரும்.\nதுலாம் இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.\nவிருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.\nதனுசு இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nமகரம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nகும்பம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் உங்கள் பிரச்சனைகள் குறையும்.\nமீனம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sltj.lk/category/branch/sltj-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:49:15Z", "digest": "sha1:AISIHFR2BWM4GAS44QYZSPFVKYPXLPQX", "length": 18540, "nlines": 292, "source_domain": "www.sltj.lk", "title": "SLTJ அனுராதபுர மாவட்டம்", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nSLTJ நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை வழமை போன்று இன்று காலை 06.30\nSLTJ தென்னாவ கிளையின் டெங்கு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி\nஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 01/04/20 17 இன்று சனிக்கிழமை தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்னாவ\nSLTJ தென்னாவ கிளையின் முதலாவது பொதுக்கூட்டம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தென்னாவ கிளையின் முதலாவது பொதுக்கூட்டம் 2017.03.17ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nSLTJ தென்னாவ கிளையின் இரத்ததான முகாம்..\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) – தென்னாவ கிளையின் இரத்ததான முகாம் 14.02.2017 செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்து\nநாச்சியா தீவில் SLTJ யின் புதிய கிளை உதயம்..\nஅனுராதபுர மாவட்டம் – நாச்சியா தீவில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை அனுராதபுர மாவட்ட நிர்வாகிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nSLTJ கலாவெவ கிளையின் தர்பியா நிகழ்ச்சி – 2017-02-24\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை ஏற்பாடு செய்த தர்பியா நிகழ்ச்சி கபீர் (Dip.in ISc), ஷாமில் (மஜீதி)\nசிறப்பாக நடைபெற்ற கலாவெவ கிளையின் இரத்ததான முகாம் – படங்கள்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்திய இரத்ததான முகாம் 22.12.2016 அன்று கலாவெவ மத்திய கல்லூரியின்\nஹொரவப்பொதானையில் தவ்ஹீ்த் ஜமாஅத்தின் புதிய கிளை ஆரம்பம்\nஅனுராதபுர மாவட்டத்தில் ( ஹோரோவ்பொத்தானை ) குழுமிவாக்கடை என்ற ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது.\nSLTJ கலாவெவ கிளை நடத்தும் “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” விளக்க பொதுக் கூட்டம் – 28.10.2016\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்தும் முஹம்மத் ரசூலுல்லாஹ் விளக்கக் கூட்டம் – 28.10.2016\nSLTJ கலாவெவ கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 14.10.2016 அன்று நடைபெற்றது. உரை.\nSLTJ கலாவெவ கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 30.09.2016 அன்று நடைபெற்றது.\nசிறப்பாக நடைபெற்ற SLTJ நேகம கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நேகம கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 25.09.2016 அன்று நடைபெற்றது.\nSLTJ கலாவெவ கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் 23.09.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ.\nSLTJ தென்னாவை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்\nSLTJ தென்னாவை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 22.09.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. கபீர் DISc\nSLTJ கலாவெவ கிளை நடத்திய இரத்ததான முகாம் – படங்கள்\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளையின் 10வது இரத்ததான முகாம் 31.07.2016 அன்று கலாவெவ, முஸ்லிம் மத்திய\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்\nஇரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”\nஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://news7paper.com/murasoli-12-08-2018/", "date_download": "2018-08-20T18:07:18Z", "digest": "sha1:24CK4RJ5B6DUVNHK2QPNCK3AY3T3YNS6", "length": 8555, "nlines": 164, "source_domain": "news7paper.com", "title": "Murasoli 12-08-2018 - News7Paper", "raw_content": "\nசிலை கடத்தல் விவகாரம்; உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nசோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nகார் விபத்து வழக்கில் நடிகர் துருவ் விக்ரம் கைது: 3 ஆட்டோக்கள் சேதம்; ஒருவர்…\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nத்ரிஷான்னா ‘குஞ்சுமணி’, சயீஷான்னா ‘ஜூஸி’: ஏன் ஆர்யா, ஏன் இப்படி\nகேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.5 லட்சம்: தென்னிந்திய நடிகர் சங்கம் நிதியுதவி\n5 நிமிஷத்தில கிழிச்சிடுவேன்னீங்க, கிழிங்க பார்ப்போம்: வைஷ்ணவியை அதிர வைத்த கமல் | Kamal…\nஇனி தமிழ்நாட்டில் யாராவது மொட்டை கடுதாசி எழுதுவாங்க\nஉங்கள் சாட் ஹேக் செய்யப்படலாம்: வாட்ஸ் ஆப்-க்கு செக் பாயின்ட்\nஆப்பிளை பின்னுக்கு தள்ளிய ஹூவெய் | News7 Paper\nரூ.399க்கு 3.5 ஜிபி டேட்டா: ஆஃபரை நீடித்த ஜியோ\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்… | Beauty…\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்.. அண்மை ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு…\nதாய்ப்பால் கொடுக்கையில் ஏற்படும் முதுகு வலிக்கு என்ன காரணம் எப்படி போக்குவது\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nகாமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா | Sangeetha pays tribute...\nவிஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கு\nபெண்கள் மார்பகத்தை பற்றி அறியப்படாத 10 உண்மைகள் – வினா, விடைகள்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி\nபேசும் படங்கள்: மழையில் தத்தளிக்கும் கேரளா\nமுதல் ஆளாக எழுந்து கடைசி ஆளாக தூங்கியவர் கருணாநிதி: பிரசாந்த் உருக்கம் | Prashanth...\nமினிமம் பேலன்ஸ் இல்லை என எந்த வங்கி எவ்வளவு அபராதம் வசூலித்துள்ளது.. முழுப் பட்டியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/left-side-neck-pain-causes-treatment-018881.html", "date_download": "2018-08-20T18:33:42Z", "digest": "sha1:TFRYZ3HBH4ZGCMZBBZ4JUGSOG2MBHCZR", "length": 20971, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "கழுத்தின் இடது பக்கம் மட்டும் அடிக்கடி வலிக்கிறதா? அப்போ இது தான் காரணம்! | Left Side Neck Pain Causes And Treatment - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கழுத்தின் இடது பக்கம் மட்டும் அடிக்கடி வலிக்கிறதா அப்போ இது தான் காரணம்\nகழுத்தின் இடது பக்கம் மட்டும் அடிக்கடி வலிக்கிறதா அப்போ இது தான் காரணம்\nஇன்றைய நவீன யுகத்தில் பலரது வாழ்க்கை முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டாகியிருக்கிறது. நாள் முழுவதும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்ககூடிய வேலை, அதை விட கணினி முன்பாக மணிக்கணிக்கில் உட்கார்ந்திருக்கிற வேலை தான் இன்றைக்கு பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது.\nஇதனால் பல இளைஞர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை ஏற்படுகிறது. டெஸ்க் ஜாப் என்று தேடித் தேடி தேர்ந்தெடுப்பதினால் உண்டாகும் சோம்பேறித்தனத்தினால் ஏராளமான உடல் நல ஆபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை இறுதியில் தான் தெரிந்து கொள்ளப்படுகிறது.\nஇவற்றில் முதன்மையானதும், பெரும்பாலான மக்களால் அவதிக்குள்ளாகும் பிரச்சனை என்றால் அது கழுத்து வலி தான். கழுத்து வலி தானே என்று நாம் சாதரணமாக எடுத்து கொள்வது உடல் நலனில் பெரும் பிரச்சனையை உருவாக்கிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் உட்காரும் பொசிசன் மற்றும் கணினி வைத்திருக்கும் பொசிஷன் இரண்டுமே கழுத்து வலிக்கு மூலக் காரணி.\nகழுத்து நரம்புகள் முதுகுத்தண்டுடன் இணைந்திருப்பதால், கழுத்து வலியுடன் சேர்ந்துமுதுகுத் தண்டு வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.\nசில நேரங்களில் கழுத்து வலி தோல்பட்டை வலியாகவும் அடையாளப்படுத்தப்படும். இவற்றில் இடது பக்கம் மட்டும் நீண்ட நாட்கள் கழுத்து வலி இருந்தால் என்ன காரணி, அதற்கு மருந்தாக என்ன எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளாம்.\nஇடது பக்க கழுத்து வலிக்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது உள்ளுருப்புகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கும்.\nகுறிப்பாக இதயம்,ரத்த நாளங்கள், கணையம் மற்றும் பித்தப்பையில் உண்டாகிற ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கூட இடது பக்கம் கழுத்து வலி ஏற்படும்.\nஇதைத் தவிர ஏதேனும் நரம்புக் கோளாறு இருந்தாலோ அல்லது முதுகுத்தண்டு பகுதியில் கட்டி ஏற்பட்டிருந்தால் கூட இடது பக்க கழுத்தில் வலி ஏற்படக்கூடும்.\nஅதை விட உங்களது அன்றாட வழக்கம் எப்படியிருக்கிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.\nநீண்ட நேரம் கணினி முன்பாக உட்கார்ந்திருப்பது, அதிக நேரம் குனிந்து படித்துக் கொண்டேயிருப்பது, தூங்கும் போது ஒரே நிலையில் நாள் முழுவதும் ஈடுப்பட்டிருப்பதால் வயிற்றை அழுத்தி படுத்திருப்பது கூட இந்த பிரச்சனையை உண்டாக்கிடும்.\nகழுத்து தசைகளுக்கு அதிக டென்ஷன் ஏற்படும் போது அதீத கழுத்து வலி ஏற்படும். தவறான பொசிசனில் நீண்ட நேரம் தூங்கும் போது உங்களையும் அறியாமல் வலி ஏற்பட்டிடும்.\nநீண்ட நேரம் ஒரே பொசிசனில் இருப்பதால் கழுத்து தசை டெம்ப்பராக ஒரே நிலையில் வைத்திருப்பதாலும் தசை சோர்வடையும்.\nஏதேனும் காயத்தினால் அதுவும் உள் காயம் ஏற்பட்டிருந்தால் கூட கழுத்து வலி ஏற்படக்கூடும்.குறிப்பாக விப்லாஷ் எனப்படக்கூடிய நிதானமில்லாத திடீர் அதிர்வினால் கூட கூட கழுத்து வலி ஏற்படலாம். சில நேரங்களில் தோல்பட்டை வலி, மயக்கம் ஏற்பட்டால் கூட இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.\nசெர்விக்கல் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை ஏற்பட்டால் கூட கழுத்து வலி ஏற்படும். அதீத எடை தூக்கினால் கூட கழுத்தில் வலி ஏற்படும். சில நேரங்களில் கழுத்தில் வலியைத் தாண்டி முன் அறிகுறியாக சில வித்யாச உணர்வுகள் கூட ஏற்படுவதுண்டு.\nபோன் ஸ்புருஸ் என்ற பிரச்சனை ஏற்ப்பட்டிருந்தால் கழுத்தின் அசைவுகள் குறைந்திடும். சாதரணமாக கழுத்தின் அசைவுகளுக்கு கழுத்தில் இருக்கும் தசை நார்கள் எளிதாக அசையும் வண்ணம் இருக்க வேண்டும்.\nFibromyalgia என்ற ஒரு வகை நோய் பாதிப்பினால் கூட உங்களுக்கு இடது பக்க கழுத்து வலிக்கலாம். இந்த நோய் தாக்கினால் அது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய திசுக்களை எல்லாம் அழித்திடும், இதனால் நம்முடைய உடல் அசைவுகள் வெகுவாக குறைந்திடும்.\nஇது பாதிக்கப்படும் பகுதிகளில் எல்லாம் சருமம் விறைப்பாக மாறிடும். பெரும்பாலும் இது கழுத்துப் பகுதிகளில் தான் அதிகமாக ஏற்படுகிறது.\nவீக்கத்துடன் கூடிய வலி அல்லது கழுத்தை திருப்பி பார்ப்பதில்,குனிந்து நிமிர்வதில் சிக்கல் அல்லது வலி ஏற்படுவது இதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.\nமேற்ச்சொன்ன இந்த நோயைத் தவிர இடது பக்க கழுத்து வலிக்கு இன்ன பிற காரணங்களும் சொல்லப்படுகிறது.\nபுற்றுநோய், தைராய்டு சுரப்பியில் தாக்குகிற புற்றுநோயின் முதல் அறிகுறி கழுத்து வலியாகத் தான் இருக்கும். ஆனால் தைராய்டு சுரப்பி புற்றுநோய் மிகவும் அபூர்வமாகத்தான் தாக்குகிறது.\nஇதைத் தவிர, கட்டி, முதுகுத்தண்டில் ஏற்படுகிற கட்டி ஆகியவற்றிற்கு கூட இடது பக்க கழுத்து வலி எடுக்கும்.\nஇடது பக்க கழுத்து வலி பெரும்பாலும் உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளினால் மட்டுமே ஏற்படுவதால் வலி ஏற்பட்டவுடன் உங்களுடைய வாழ்க்கை முறையை ஒரு முறை சரி பார்த்தல் நலம்.\nதொடர்ந்து நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள். ஏனென்றால் இது புற்றுநோய் மற்றும் தசைகளை உருக்கிடும் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்பதால் ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது நல்லது.\nஉடல் எடை அதிகமாக இருந்தால் கூட கழுத்து வலி ஏற்படும். அதனால் உடல் எடையை குறைதிடுங்கள். அதே போல அதிக எடையுள்ள பொருட்கள் தூக்குவதை தவிர்க்க வேண்டும்.\nசரியான தூக்கம் மற்றும் முறையான உணவுப்பழக்கம் இருந்தால் இதனை மிகவும் எளிதாக குறைத்திடலாம்.\nபொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது.\nகீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nநொச்சி இலைகளை எடுத்து நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nகுடும்பத்தைக் கலைக்கும் குறட்டையை முற்றிலுமாக விரட்டுவது எப்படி\nவெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதால், மலச்சிக்கல் மற்றும் மூலநோய் ஏற்படுமா\nவாயில் ஏற்படும் துர்நாற்றம் இத்தனை அபாயமானதா விவரம் தெரிய இத படிங்க\nவயிற்று சதையை குறைக்க இது மட்டும் செஞ்சா போதும்\nகருமுட்டை தானம் என்ற பெயரில் சுரண்டப்படும் பெண்கள்\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nரத்த அழுத்தம் சரியாக பராமரிக்க இது மிகவும் அவசியம்\nவிந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் இதில் சற்று கவனம் இருக்கட்டும்\nஇணையத்தில் அதிகமான மருத்துவ செய்திகளை பார்ப்பவர்கள் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்\nகீழ் வயிற்று தசையை குறைக்க இத செய்யுங்க\nவிரைவில் உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது இது மட்டும் தான்\nஎன்ன செஞ்சாலும் கொலஸ்ட்ரால் குறையவே மாட்டீங்குதா\nRead more about: மருத்துவம் ஆரோக்கியம் கழுத்து வலி வீட்டு மருத்துவம் health pain tips home remedies\nJan 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_2.html", "date_download": "2018-08-20T18:04:44Z", "digest": "sha1:GQBERAQHNT6ZCEGEL255SJSQNFYQKF5X", "length": 27158, "nlines": 302, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நண்பேன்டா - சினிமா விமர்சனம்", "raw_content": "\nநண்பேன்டா - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 1:22:00 PM நண்பேன்டா - சினிமா விமர்சனம் 1 comment\nஹீரோ வழக்கம் போல் ஹீரோயினை எதேச்சையாப்பார்த்து பார்த்ததும் லவ்வறாரு. ஃபிரண்டோட ரூம்ல தங்கறாரு. எதிர் வீட்ல தான் ஹிரோயின்.\nஹீரோயின் ஒரு பேங்க்ல ஒர்க் பண்ணுது.ஹீரோ பல ரூட் விட்டு பிராக்கெட் போடறாரு.அதுக்கு ஹீரோயின் டிமிக்கி கொடுத்துட்டே இருக்கு . இடைவேளை ட்விஸ்ட்டா என்னைப்பத்தி பயங்கரமான ஒரு ஃபிளாஸ்பேக் இருக்குனு பில்டப் தருது . என்னைப்பத்தின பழைய விஷயங்களைத்தெரிஞ்சுக்கிட்ட பின் லவ் பண்ணுனு சொல்லுது. எங்கே சிம்பு பிரபுதேவா ஆர்யா மேட்டரெல்லாம் வெளில வந்துடுமோன்னு தமிழன் பதர்றான்.\nஅப்போதான் ஹீரோயின் சொல்லுது . நான் ஒரு கொலை செஞ்சு ஜெயில் தண்டனை பெற்ற குற்றவாளிங்குது\nஇந்த பயங்கரமான ட்விஸ்ட்டோட இடைவேளை, இதுக்குப்பின் என்ன ஆகுது \nஹீரோவா தமிழ் நாட்டின் மக்கா நாள் முதல்வர் உதயநிதி ஸ்டாலின் . ஆள் நல்லா தேறிட்டார் . டயலாக் டெலிவரி , டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் ஓக்கே . வசனத்தில் சிம்புக்கு மறைமுகமா கவுண்ட்ட்ர் கொடுக்கறார்\nஹீரோயினா நயன் தாரா..டிரஸ்சிங் சென்ஸ் ராணி. , தென்னகத்தின் மான்செஸ்டர் கோவை மாதிரி மான் செஸ்ட் டர் இந்தப்பாவை . ஹை ஹீல்ஸ் போட்டு இவர் நடக்கும்போது போதை த:ளும்புது. பாடல் காட்சிகளில் ஆடை அலங்காரம் அசத்தல் , பல காட்சிகளீல் குஷ்பூக்கே டஃப் ஃபைட் தர்றார் , நடிப்பில் இல்லை பேக் யூ லோஓஓஓஒ நெக் ஜாக்கெட் டிசைனில். ஒரு மெடிக்கல் மிராக்கிள் ட்விட்டர்ல நயன் ஃபோட்டோ போட்ட லேடி ட்வீட்டர் இன்னைக்கு போட்ட நெயில் பாலீஸ் கலர் ல நயனும் வருது, வாட் எ கோ இன்சிடெண்ட்\nகாமெடியனா நிஜமான ஹீரோவா சந்தானம் முன் பாதியில் ஹீரோவுக்கு நிகரான காட்சிகள் பின் பாதியில் ஹீரோவை விட அதிக காட்சிகள் . பெரிய அளவில் கவுண்ட்ட்டர் குடுக்கலை இருந்தாலும் மக்கள் ரசிக்கறாங்க\nமனோபாலா காமெடி லைட்டா பண்றாரு\nவில்லனா வரும் நான் கடவுள் மொட்டை வரும்போதெல்லாம் தியேட்டர் ஆரவாரம்\n1 காலைல சூப்பர் பிகரை பாத்தேண்டா\nஎவனாவது சுமாரான பிகரைப்பார்த்தேன்னு சொல்றீங்ளா\n2 ஸ்ரீ தேவியை சின்ன வயசில் பாத்தா எப்டி இருக்கும்\nகை விரல் சூப்பிக்கிட்டே இருக்கும் # ந\nஅவசரத்தில் செஞ்ச அண்டா மாதிரி \n4 பொண்ணுங்களுக்கு பின்னாலயே பாலோ பன்ற பையனை விட முன்னால டேரா வர்ற பையனைத்தான் பிடிக்கும் #,ந\n5 இந்த சாங் போட்டதும் ஆடுன பொண்ணை அயிட்டம்னு எப்டி கண்டுபிடிச்சே\nசந் = ஏன்னா இது ஐட்டம் சாங் #,ந\n6 உனக்கும் லவ் ஃபெய்லியரா\n எந்திரன் சிட்டிக்கே லவ் இருக்கும்போது எனக்கு இருக்கக்கூடாதா>\n7 பீடிக்கட்டு மாதிரி இருக்கான் , இவன் தான் பி டி மாஸ்டரா\n8 சந் = என்னடா பாய் விட்டுக்கல்யாணத்துல சாம்பார் சாதம் போட்ட மாதிரி பார்க்கறே பாய் விட்டுக்கல்யாணத்துல சாம்பார் சாதம் போட்ட மாதிரி பார்க்கறே\nமான் தயிர் சாதம் சாப்பிட்ட மாதிரி ஒரு சத்தம்\nஃபோன்ல உங்களுக்கு கிஸ் கொடுத்தேன் # ந\n10 க்ளீன் சேவ் செஞ்ச கிங்க்காங் மாதிரி இருப்பீங்களே , இப்படி முகமூடி போட்ட மூஞ்சூறு மாதிரி ஆகிட்டீங்களே ,சந்தானம் டூ மொட்டை #ந\nபடம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்\n1கை தட்ட கூச்சல் போட 80,பேர் அடியாள்கள் கூட்டிட்டு.வந்திருக்காக.கும்தலக்கடி கும்மாவாகழகம்னா சும்மாவா\n2 காக்கி சட்டை ஓப்பனிங் சீன் சிங்கம் உல்டா ரீமிக்ஸ்.#,ந\n3 டேய் ஜோக் சொன்னபின் கை தட்டுங்கடா.250 ரூபா வாங்கிட்டு.2000,ரூபாக்கு கை தட்டாதீங்கடா #,ந\n4 காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி ,கெட்டப் சூப்பர்.ஹீரோவே இவர் தான்\n5 2 லவ்வர் லாலி பாப் 2 கோடி நாயகி நயன் என்ட்ரி.ஹைஹீல்ஸ் போட்ட ஹைலிட்டா போல்டா கிளாமர் காட்டும் போர்ன்விட்டா\n6 ஹீரோயின் பேரு \"ரம்\"யா.ஏதோ குறியீடு\nநயன் டிசர்ட் ல LOVE PINK னு வசனம்\n8 அவள் என்னைப்பார்த்த் பாடலில் நயனின் சின்ட்ரெல்லா கவுன் கலக்கல்.ஆடை வடிவமைப்பாளர் ராக்கிங்\n9 உலகப்புகழ் பெற்ற பெறப்போகும் நயன் டாஸ்மாக் ல.சரக்கு வாங்கும் சீன்\n10 உதயநிதி டூ நயன்.= நான் லவ் டார்ச்சர் பண்ற.ஆளில்லை #,சூசகமா சிம்புவை தாக்கறாரா \n11 லெமனா தேகத்தில் தகதகக்கும் தமனா என்ட்ரி\n1 எம் ராஜேஷ் சிஷ்யர் என்னும் லேபிள் நல்ல வியாபாரம் ஆக உதவி\n2 சந்தானம் ஹீரோ என உதயநிதியிடம் சொல்லாமல் சமாளிச்சது . அவர் தான் ஹீரோ என நம்ப வெச்சது\n3 நயன் தாராக்கு ஆடை அலங்காரம் அசத்தல்\n4 ஃபாரீன் லொக்கேஷனில் ஆடும் டூயட் சீன் இந்தியன் அக்கடான்னு நாங்க பாட்டு டான்சை நினைவுபடுத்தினாலும் அருமை ,க்ரூப் டான்சர்ஸ் கலக்கல் ஃபிகர்ஸ் ,அதுவும் ஃபாரீன் ஃபிகர்ஸ்\n1 டாட்டா பிர்லா பட ஆர் பார்த்திபன் கவுண்டமணி காம்போ காட்சிகள் பல இடங்களில் உல்டா\n2 பேங்க் ல ஒர்க் பண்ணும் ஹீரோயினுக்கு ஏன் லேடீஸ் ஹாஸ்டல்\n3 ஹீரோவின் நண்பரின் வீட்டு எதிரே தனி வீடு போல் சில காட்சிகள் , லேடீஸ் ஹாஸ்டல் போல் சில காட்சிகள் . எடிட்டிங் ஃபால்ட்டா\n4 திருடியா க வரும் அந்த வில்லி கேரக்டர் போர்சன் தேவையே இல்லாதது\n5 எம் ராஜேஷ் ஃபார்முலாவை அச்சு அசல் பிசகாமல் அப்டியே டிட்டோ உல்டா அடிக்கனுமா/\nசி பி கமெண்ட் =நண்பேன்டா- சந்தானம் காமெடி , நயன் தாராவின் கிளாமர் காப்பாத்திடும் - விகடன் மார்க் - 41,ரேட்டிங் = 2.75 / 5, ஏ, பி யில் 15 நாள் ஓடும்\nஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 41\nகுமுதம் ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே\nரேட்டிங் = 2.75 / 5\nடிஸ்கி - கொம்பன் - சினிமா விமர்சனம்\nதமிழன் பதறுரான் சூப்பர் கமென்ட்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரசன்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/31193640/1004947/Fight-in-front-of-Parliment.vpf", "date_download": "2018-08-20T18:46:42Z", "digest": "sha1:7PRJYZ5DUWFZYMMLJ2JUASK4LSRMCJUF", "length": 10429, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் - மத்திய அமைச்சர் -காங். எம்.பி வாக்குவாதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் - மத்திய அமைச்சர் -காங். எம்.பி வாக்குவாதம்\nநாடாளுமன்றம் முன்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோருக்கு இடையே திடீரென வார்த்தைப்போர் ஏற்பட்டது\nநாடாளுமன்றம் முன்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோருக்கு இடையே திடீரென வார்த்தைப்போர் ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டில், 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது தொடர்பாக இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.\nகேரள உள்கட்டமைப்பு குறைபாட்டுக்கு காங்கிரஸ் காரணம் - சுப்பிரமணியன் சுவாமி\nகேரளாவில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஒதுக்கிய நிதிகளில், காங்கிரஸ் அரசு முறைகேடு செய்ததால், உள்கட்டமைப்பு வசதிகள் மோசமானதாகி விட்டதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்\nலோக்பால் தேர்வு குழு கூட்டதை காங்கிரஸ் புறக்கணித்ததால், அமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து தாமதம்.\nலோக்பால் தேர்வு குழு கூட்டதை காங்கிரஸ் புறக்கணித்ததால், லோக்பால் அமைப்பை உருவாக்குவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.\nபண மழையை பொழிந்த காங்கிரஸ் தலைவர்...\nகுஜராத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாகூர், பாடகர் மீது பணத்தை மழையாக அள்ளி வீசிய வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது....\nதோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்\nதோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்\n\"ஆக. 22 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை\" - மத்திய அரசு திட்டவட்டம்\nஇஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வருகிற 22 ம் தேதி கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது.\nஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் : ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்\nஸ்ரீசைலம் அணையிலிருந்து ஆர்ப்பரித்து தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.\n\"தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு\" - ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை\nநாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் மத்தியில் பாஜக தலைமையில் அமையும் ஆட்சிக்கு, அதிமுக ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n\"வாஜ்பாய் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் அதுவே உண்மையான அஞ்சலி \" - பிரதமர் மோடி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுகளை நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇடுக்கியில் திரும்புகிறது இயல்பு வாழ்க்கை : கடைகள் திறப்பு\nதென் மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் குறைந்து விட்டதால், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதியில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது\nபக்ரீத் பண்டிகை : ஒரு ஆடு ரூ.5 லட்சத்துக்கு விற்பனை\nபக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் ஆடு விற்பனை களை கட்டியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/30161932/1004865/Karunanidhi-health-issue-Veeramani.vpf", "date_download": "2018-08-20T18:46:44Z", "digest": "sha1:2IAPXLV47Y63N3FUCB6FD5B7TBF7OKHJ", "length": 10779, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக-வினர் பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக-வினர் பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி\nமருத்துவர்களின் சிகிச்சையால் திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வருவதாக அறிக்கையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.\nகருணாநிதி உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் திமுக-வினர் ஈடுபட வேண்டாம் என்றும், கருணாநிதியை மதிப்பது அவர் கட்டிக்காத்து வந்த கொள்கையை மதிப்பதுதான் என அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.மருத்துவமனை முன்பு பூசணிக்காய் உடைப்பது, கூட்டுப் பிரார்த்தனையில் சிலர் ஈடுபட்ட படத்தை பார்த்து வேதனை அடைந்ததாக கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அதிமுகவில் நிகழ்ந்த மூடநம்பிக்கை சம்பவங்கள் தி.மு.க.விலும் நுழைத்துவிட சிலர் முயற்சி செய்யக்கூடும் என அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா\nமெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசெல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nபாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்\n\"குழம்பி போய் அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nஉலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் நடைபெறும் பாசன கால்வாய் மேம்பாட்டு பணிகளை, தூர்வாரும் பணிகளுடன் ஒப்பிட்டு, திமுக செயல் தலைவர் மு..க. ஸ்டாலின், குழம்பிப்போய் அறிக்கை வெளியிட்டு உள்ளதாக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nவரும் 28ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்\nமு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுக்குழு வருகிற 28 ம் தேதி சென்னையில் கூடுகிறது\n\"தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு\" - ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை\nநாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் மத்தியில் பாஜக தலைமையில் அமையும் ஆட்சிக்கு, அதிமுக ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n\"கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிவாரணப்பொருள் \" - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு\nகனமழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தேமுதிக சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\n\"வாஜ்பாய் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் அதுவே உண்மையான அஞ்சலி \" - பிரதமர் மோடி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுகளை நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nதகுதி நீக்க வழக்கு - எம்.எல்.ஏ.க்கள் தரப்பு பதில் வாதம்\nசபாநாயகரின் உத்தவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaikadhalan.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2018-08-20T19:15:00Z", "digest": "sha1:2FSO45ESOXOUERUEQ75522HBEW7W5BOT", "length": 53806, "nlines": 580, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "நுரையீரலில் ஒரு லப்டப் | கவிதை காதலன்", "raw_content": "\nஇந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.\nLabels: காதல் கவிதைகள், ரொமான்ஸ் கவிதைகள்\n குறிப்பாக ஆடைகளின் அவஸ்தை, தண்டவாளம்\nகவிதைகளும் அதற்கான படங்களும் மிக அருமை..\nநல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறீர்களா இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா\nநல்லா இருக்குனு வழக்கமா சொல்லி சொல்லி போர் அடிச்சிடுச்சுங்க.\nஅதுனால ஓட்டு மடடும் போட்றேன்.\nசிவா என்கிற சிவராம்குமார் said...\n \\\\அனைத்துக் கொள்ளும் நேரங்களில்தான் நினைவுக்கு வருகிறது ஆடைகளின் அவஸ்தை//\nகைகள், அவஸ்தை மிக நன்று :)\nஎல்லாக் கவிதைகளுமே நன்றாக இருந்தன\nநிகழ்வில் புரிகின்ற காதலை போல் எல்லாம் சுகமாய்....\nகாதலின் வெளிப்பாடு கவிதை நடையில்\nகவிதைகள் சூப்பர் டா.ஆனால் இந்த முறை கவிதைகளை விட படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருகிறது.\nகலக்கிட்ட மச்சி.சூப்பர் ஒ சூப்பர் டா.எனக்கு ஒன்னு மட்டும் புரியல மச்சி.கோச்சிகாத டா இந்த சின்ன மூளைக்கு அது எட்டவே இல்ல.ஆடைகளின் அவஸ்தை ஆடைகளுக்கா அல்லது அவர்களுக்கா.எதுவாக இருந்ந்தாலும் எப்படி பார்த்தாலும் கவிதை கலக்கல் மச்சி.செம romance டா.இந்த கவிதையோட படம் ரொம்பவும் டச்.இந்த கட்டிபிடி வைத்தியத்துக்கு தான் என்ன ஒரு மகிமை...\nசெம எடுத்துக்காட்டு மச்சி இந்த கவிதைக்கு தண்டவாளம்.இணையுமா இல்லை இணையாதாஎன் நெடுந்தூர ரயில் பயணங்களில் நான் யோசித்த அதே நினைவுகள்,உன் வரிகளில்.இது கூட ஒரு பயம் தானே.ஒரு சிலருக்கு இணையும்,பலபேருக்கு பிரியும்,இணைந்தவருக்கு காதல்,பிரிந்தவருக்கு காவியம்.\nஇந்த கவிதையோட படம் கலர் புல் இல்லாம கருப்பு வெள்ளையா இருக்கிறது ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.அது தான் இந்த கவிதையோட பிளஸ்.\nவழக்கம் போல மீண்டும் ஒரு அற்புதமான படைப்பு. கலக்கிட்ட மச்சி,வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் கிறுக்கல்களின் CRACKக்குகளுக்காக.\nஎப்புடி சார் உங்களுக்கான பதில்,\n//நல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறீர்களா இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா\nகவிதா காதலன் கவிதை எழுதக்கூட இவ்வளவு நேரம் எடுக்க மாட்டாரு.படங்களுக்காக தான்.\nநன்றி நண்பரே... எது உங்களை மிகவும் கவர்ந்தது என்று\n குறிப்பாக ஆடைகளின் அவஸ்தை, தண்டவாளம்\nநன்றி ஜீ.. நீங்க சொன்ன ரெண்டுமே எனக்கும் ரொம்ப பிடிச்சது..\nநன்றி தோழியே.... கள்ள ஓட்டு போடலையே...\nகவிதைகளும் அதற்கான படங்களும் மிக அருமை..//\nநன்றி ரமேஷ்.. தொடர்ந்து படியுங்கள்.\nநல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு\nகவிதை கூட ஈஸியா எழுதிடுறேன். ஆனா படங்கள் தேடுறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..\nநல்லா இருக்குனு வழக்கமா சொல்லி சொல்லி போர் அடிச்சிடுச்சுங்க. அதுனால ஓட்டு மடடும் போட்றேன்//\nம்ம்ம்ம்.... நல்ல ஓட்டா போடுங்க தோழி\n// சிவா என்கிற சிவராம்குமார் said...\n \\\\அனைத்துக் கொள்ளும் நேரங்களில்தான் நினைவுக்கு\nகைகள், அவஸ்தை மிக நன்று :) //\nநன்றி பாலாஜி.. தொடர்ந்து படியுங்கள்\nஎல்லாக் கவிதைகளுமே நன்றாக இருந்தன\nநன்றி மோகன். ஃபேஸ்புக்'ல இருக்கீங்களா\nநிகழ்வில் புரிகின்ற காதலை போல் எல்லாம் சுகமாய்....\nஉங்க கமெண்ட்டே கவிதையா இருக்கு நண்பா\nகாதலின் வெளிப்பாடு கவிதை நடையில்\nநன்றி நண்பரே.. காதல் ஒரு சுகமான விஷயம் தானே.\n// ஸ்வீட் ராஸ்கல் said... //\nமச்சி.. அந்த காதலன் ஆடைகளோட அவஸ்தையை பத்தி நினைத்து பார்ப்பதாகத்தான் அந்த கவிதை பேசுகிறது. உனக்கு அந்த அவஸ்தையை பத்தி சொல்லி தெரிய வேண்டியதில்லை.. ஹி..ஹி..\nஅந்த ஃபோட்டோ பிளாக் அண்ட் ஒயிட்'ல இருக்கிறதுக்கு கூட ஒரு அர்த்தம் இருக்கு.. ஆக்சுவலா அது கலர்போட்டோதான். நான்தான் கலர் மாத்தி இருக்கேன். அந்த தண்டவாளம் கவிதை நான் ரொம்ப ரொம்ப அனுபவிச்சு எழுதினது. நிறையவாட்டி இது சேர்ந்து இருக்கா இல்லை சேராம இருக்கான்னு ரொம்ப குழம்பி இருக்கேன். ஐமீன் தண்டவாளத்தை சொன்னேன்.\nஅருமையாய் இருக்குங்க கவிதைக்காதலன் உங்கள்து கவிதைகள் அனைத்தும்...உங்களுக்கு நடப்பு சொல்லும் யதார்தமும் பிடிபட்டு இருக்கிறது.கவிதைக்கு பொய்யழகு என ஏகதேச அணியின் பயன்பாடும் பிடிபட்டு இருக்கிறது. நல்ல ரசனை... உங்களை என் உள்ளத்தில் உயர்த்திப்பிடிக்கும் கலங்கரை...இத்தனை நாள் குடத்திலிட்ட விளக்காய் அமிழ்ந்து கிடந்த காதலை சொல்கிறேன்.சொன்னால் தான் காதல்...எழுதினால் தான் கவிதை காதலன். :))).\nஸ்வீட் ராஸ்கல் சார்.. அந்த ஆடை கவிதையை உற்றுக்கவனிச்சீங்கன்னாத்தான் தெரியும், அதில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் காமம். ஆனா அதை அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிட முடியாதபடி வார்த்தைகளுக்குள் ஒளிச்சி அழகா வெளிப்படுத்தி இருக்கார் கவிதை காதலன்.. சூப்பர்ப்...\nரயில்வே டிராக் அடிக்கடி உங்க கவிதையில வருதே.. சம்திங்க் இருக்கு...\nஇணைஞ்சாலும் சரி, பிரிஞ்சாலும் சரி அந்த டிராக் எப்பவும் உங்களை தொடர்ந்துகிட்டேதான் இருக்கும். டோண்ட் ஒர்ரி..\nடிராக்ல தான்ன் அதிகமாக ஆக்சிட்ண்ட் நடக்குதே.. டிராக் தொடருமே தவிர, எபவும் இனையாது....\nமிஸ்டர் சைலண்ட்'க்கு நான் பதில் சொல்றதைவிட விஷ்ணு சொன்னா கரெக்ட்டா இருக்கும்ன்னு நினைக்குறேன்\nஒரு சிலருக்கு இணையும்,பலபேருக்கு பிரியும்,இணைந்தவருக்கு காதல்,பிரிந்தவருக்கு காவியம்//\nஸ்வீட் ராஸ்கல்.. சாக்லேட் கிடைச்சிடுச்சேன்னு.. ஸ்வீட் ஸ்டாலுக்கு அடி போடுறீங்களா\nஎப்பவும் போல கவிதைகளும்.. அதற்கான படங்களும் மிக அருமை..\nகாதலும் கவிதைகளும் இங்கே படமாய்.. அழகு..வழ்த்துகள்...\nடிராக்ல தான்ன் அதிகமாக ஆக்சிட்ண்ட் நடக்குதே.. டிராக் தொடருமே தவிர, எபவும் இனையாது....\nவணக்கம் mr. sillent சார்........ எப்படி இருக்கீங்க \nடிராக்ல ஆக்சிடன்ட் நடக்கும். ஆனா டிராக் ஆக்சிடன்ட் ஆகாதே சார்........................\nஏன் அதுல ட்ரெயின் ஓடும் போது இணையுறது இல்லையா.............. அதுவும் இல்லாம ஒவ்வொரு ஜெங்சண்ளையும் ஒன்ன சேர்ந்து குட்டிவேற போடுதே பாக்கலையா\nபோங்க சார், இன்னும் நீங்க சின்ன பையனவே இருக்கீங்க.... சின்ன சின்ன கேள்வி எல்லாம் கேக்கமா பெருசா கேளுங்க...........\n(குறிப்பு :- நீங்க இன்னும் வளரவே இல்ல அம்மா கிட்ட சொல்லி காம்ப்ளான் குடுக்க சொல்லுங்க)\nமுதல் முறை கேக்குறேன் நுரையிரலில் லப்டப்..........................\n//டிராக்ல ஆக்சிடன்ட் நடக்கும். ஆனா டிராக் ஆக்சிடன்ட் ஆகாதே //\nஅட அட அட... என்னமா பின்றாங்கப்பா விஷ்ணு நான் உங்களுக்கு நான் உங்களுக்கு சாக்லேட் என்ன ப்ரூட்சாலாட்டே வாங்கித்தர்றேன். சைலண்ட் சைலண்டா இருக்கிறது நல்லதுடோய்\n//ஏன் அதுல ட்ரெயின் ஓடும் போது இணையுறது இல்லையா.//\nசார் டிரயின் ஓடும் போது தண்டவாளமும் டிரயினும்தான் இணையும்.\nதண்டவாளங்கள் எபவும் இணையாது...என்ன சொல்லவர்ரேமுன்னு புரிஞ்சுககுங்க. தண்டவாளங்கள் எபவும் இணையாது... எபவும் இணையாது\nசார் டிரயின் ஓடும் போது தண்டவாளமும் டிரயினும்தான் இணையும்.\nதண்டவாளங்கள் எபவும் இணையாது...என்ன சொல்லவர்ரேமுன்னு புரிஞ்சுககுங்க. தண்டவாளங்கள் எபவும் இணையாது... எபவும் இணையாது\nஓகே சார், ட்ரெயினுக்கு விளக்கம் சொல்லிடிங்க, ஜெங்சனுக்கு ஒண்ணுமே சொல்லல ஏன் முடியலையா\nஉங்க பிரச்னை தண்டவாளம் இணையுறது மட்டும் தானே \nஇங்க கவிதைக்காதலன் பீல் பண்றது தண்டவாளத்தை பத்தி மட்டும்தான். ஜெங்சனை பத்டி இல்ல. ஜங்க்சனுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை ஏன் தண்டவாளத்தை பத்தி உங்களால ப்தில் பெச முடியலை தண்டவாளம் இணையாது தானே. பதில் சொலுங்க\nஇத்தனை நாள் குடத்திலிட்ட விளக்காய் அமிழ்ந்து கிடந்த\nகாதலை சொல்கிறேன்.சொன்னால் தான் காதல்...எழுதினால்\nதான் கவிதை காதலன். :))).//\nநன்றிங்க கார்த்திகேயன்.. உங்க பின்னூட்டம் ரொம்ப\nநன்றி ரிஷபன்.. தொடர்ந்து வாருங்கள்.\nஸ்வீட் ராஸ்கல் சார்.. அந்த ஆடை கவிதையை உற்றுக் கவனிச்சீங்கன்னாத்தான் தெரியும்//\nஷ்வேதா.. முடியலை.. உங்களுக்கு NDTVல வேலை கொடுத்தது தப்பே இல்லை..\nஇணைஞ்சாலும் சரி, பிரிஞ்சாலும் சரி அந்த டிராக் எப்பவும் உங்களை தொடர்ந்துகிட்டேதான் இருக்கும்.\nஉங்க வார்த்தைகள் ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nஎன்னுடன் இணையனும்ன்னு அவசியமே இல்லை. நீங்க\nசொன்ன மாதிரி அது தொடர்ந்திருந்தாலே போதும்.\nஎப்பவும் போல கவிதைகளும்.. அதற்கான படங்களும் மிக அருமை..//\nமிக்க நன்றி பாபு.. எந்தக்கவிதை பிடிச்சிருந்துதுன்னு சொல்லவே இல்லையே..\nமுதல் முறை கேக்குறேன் நுரையிரலில் லப்டப்.....தொடர்ந்து எழுதுங்கள்....//\nமிக்க நன்றி விஷ்ணு சார். உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது\nடிராக்ல தான்ன் அதிகமாக ஆக்சிட்ண்ட் நடக்குதே.. //\nசைலண்ட் சார் எத்தனை விபத்துக்களை சந்தித்தாலும் எங்கள் பயணம் எப்பவும் தடைபடாது. சொல்லப்போனா ஒரு விபத்துக்கு அப்புறம்தான் பயணம் இன்னும் அருமையா போய்கிட்டு இருக்கு.\n//டிராக் தொடருமே தவிர, எபவும் இனையாது....தண்டவாளங்கள் எபவும் இணையாது... எபவும் இணையாது\nசார் தண்டவாளங்கள் எப்பவும் இணையாது. நீங்க சொல்ற அந்த கருத்தை ஒத்துக்குறேன். ஆனா தண்டவாளங்கள் எப்பவும் பிரியாது. எவ்ளோ தூரமானாலும் அது தொடர்ந்துகிட்டேதான் வரும். அதை நீங்க புரிஞ்சுக்கணும்.\nநன்றி காதலன் சார்,என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு.மிஸ்.ஸ்வேதா நிச்சயமாவே உற்று கவனிச்சா தான் அதில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் காமம் தெரிகிறது.மிக்க நன்றி.\n//ஸ்வீட் ராஸ்கல்.. சாக்லேட் கிடைச்சிடுச்சேன்னு.. ஸ்வீட் ஸ்டாலுக்கு அடி போடுறீங்களா\nசாக்லேட் நான் எதிபார்காத ஒன்று.கிடைச்சிடுச்சி,ஸ்வீட் ஸ்டால் எல்லாம் வேணாங்க.அதுவா கிடைக்கனும்னு இருந்தா கிடைக்கும்.\nஎன்ன விடுங்க தென்றல், Mr.silent ஐ கொஞ்சம் கவனிக்க கூடாதா\nநீ கொடுத்ததே Mr.Silent க்கு போதும்ன்னு நினைக்குறேன்.ஆனா அத விட காதலன் சார் விட்டாரு பாரு ஒரு பஞ்ச்,\n//சைலண்ட் சார் எத்தனை விபத்துக்களை சந்தித்தாலும் எங்கள் பயணம் எப்பவும் தடைபடாது. சொல்லப்போனா ஒரு விபத்துக்கு அப்புறம்தான் பயணம் இன்னும் அருமையா போய்கிட்டு இருக்கு.//\nஊடலுக்கு பிறகு தானே யா கூடல்.\n//சார் தண்டவாளங்கள் எப்பவும் இணையாது. நீங்க சொல்ற அந்த கருத்தை ஒத்துக்குறேன். ஆனா தண்டவாளங்கள் எப்பவும் பிரியாது. எவ்ளோ தூரமானாலும் அது தொடர்ந்துகிட்டேதான் வரும். அதை நீங்க புரிஞ்சுக்கணும்//\n100/100 உண்மையான வார்த்தை,பாவம் அவருக்கு அது தெரியாம வாக்கு வாதம் பண்ணிட்டாரு.இன்னும் அமுல் பேபி யாவே இருகுறாரே பாவம்.\nSilent சார் இப்படியே இருக்காதீங்க,பொல்லாத உலகம் Silent ஆ எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்க புனை பெயர் மாதிரி இருந்திடும்.\nmr. silent தயவுசெஞ்சி அந்த தண்டவாளம் image பாருங்க.\nபார்த்துட்டு அது சேருதா இல்லையானு சொல்லுங்க.\n(silentunu பேரு வச்சிக்கிட்டு இப்படி வாய தொறக்க கூடாது இதுவே உங்களுக்கு புரியல)\nஐயோ இந்த சின்ன விசயமே இவருக்கு புரியலையே இவருகூடையா நா சண்டை போட்டேன்\nஎன் வாழ்க்கைல முதல் முறையா \"பத்து \" நிமிசத்த வேஸ்ட் பண்ணிட்டேன்...\nதண்டவாளம் சேர்ற மாதிரி இருக்கும். ஆனா உடனே பிரிஞ்சிடும். அது கூட தெரியலை விஷ்ணு சாருக்கு..\n//என் வாழ்க்கைல முதல் முறையா \"பத்து \" நிமிசத்த வேஸ்ட் பண்ணிட்டேன்//\nநான் பத்துவருஷத்தையே வேஸ்ட் பண்ணிட்டேன்....\n//ஸ்வீட் ராஸ்கல் said... //\nSilent சார் இப்படியே இருக்காதீங்க,பொல்லாத உலகம் Silent ஆ எல்லாத்தையும் முடிச்சிட்டு உங்க புனை பெயர் மாதிரி இருந்திடும்.//\nஉண்மைதான் சார்.. இது பொல்லாத உலகம் நயவஞ்சக நரிகளைத்தன் இந்த உலகம் நம்பும். நீங்க அந்த உலகத்தை இப்பொ நம்றிங்க. அது ஒரு நாள் உங்களியும் கவுதிடும். நம்பி மோசம்ச் செய்யுற உலகம் இதான்\n//உண்மைதான் சார்.. இது பொல்லாத உலகம் நயவஞ்சக நரிகளைத்தன் இந்த உலகம் நம்பும். நீங்க அந்த உலகத்தை இப்பொ நம்றிங்க. அது ஒரு நாள் உங்களியும் கவுதிடும். நம்பி மோசம்ச் செய்யுற உலகம் இதான்//\nபோதும் நிறுத்துறீங்களா Mr.Silent. என்ன பழகுனீங்க நீங்க, 10 வருஷமா பழகுநேன்ன்னு சொல்லறீங்க.என்னுடைய இந்த ஆழமான நண்பர்கள் 3 பேர் கூடையும் 10 நாள் பழகுனவன் கூட இப்படி பேச மாட்டான்.உங்கள மாதிரி,விஷ்ணு மாதிரி 10 வருஷமா பழகுற பாக்கியம் எனக்கு கிடைக்கல.நல்ல நண்பர்கள் வாழ்கைல அவ்வளவு சீக்கிரம் கிடைக்க மாட்டாங்க,நீங்க இழந்துடீங்க,நா இழக்க மாட்டேன் என் உயிரே பிரிந்தாலும்.உனக்கு என்ன தெரியும் என் நண்பன பத்திஎன்ன எவ்வளவு பெரிய விஷயத்துல இருந்தெல்லாம் என் நண்பன் திருத்தி வெளிய கொண்டு வந்து இருக்கான்னு தெரியுமாஎன்ன எவ்வளவு பெரிய விஷயத்துல இருந்தெல்லாம் என் நண்பன் திருத்தி வெளிய கொண்டு வந்து இருக்கான்னு தெரியுமா.இந்த இடத்துல சொல்ல முடியாது,நேர்ல வா சொல்றேன்.மொதல்ல நீங்க நல்ல நண்பனா இருங்க,உங்க கூட பழகுறவங்களும் அந்த மாதிரியே இருப்பாங்க.நீங்க என்ன தப்பு பண்ணீங்கன்னு எனக்கு தெரியாது,ஆனா என் மணியும்,விஷ்ணுவும் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாங்கன்னு நா நம்புறேன்,நம்புவேன்.\nநயவஞ்சக நரிகள்னு சொல்றீங்க,இதுக்கு மணியும்,விஷ்ணுவும் என்ன சொல்ல போறாங்கனு தெரியாது,நா ஒன்னே ஒன்னு சொல்றேன்.SAME TO U.\nநல்ல நண்பன் நயவஞ்சகனா இருக்க மாட்டான்,அப்படி நயவஞ்சகனா இருந்தா அவன் நல்ல நண்பனா இருக்க மாட்டான்.ஒரு வேளை நீங்க சொல்றா மாதிரி இந்த நயவஞ்சக உலகம் என்ன கவுத்துடுச்சினா,என்ன தூக்கி விடுற முதல் கைகள் என் இந்த 3 நண்பர்களோட கைகளாதான் இருக்கும்.\nஸ்வீட் ராஸ்கல்.. உணர்ச்சிவசப்படாதீங்க. அவர் ஏதோ வருத்தத்துல சொல்றாரு. காமெடியா எடுத்துக்குங்க.\n//நல்ல நண்பன் நயவஞ்சகனா இருக்க மாட்டான்,அப்படி நயவஞ்சகனா இருந்தா அவன் நல்ல நண்பனா இருக்க மாட்டான்//\nசூப்பர் வசனம். எநதபபடத்துல சார் வருது\n//மணியும்,விஷ்ணுவும் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாங்கன்னு நா நம்புறேன்,நம்புவேன்.//\nமணியும் விஷ்ணுவும் தப்பு பண்ணி இருக்காங்ன்னு நான் சொன்னெனா.. நான் பொதுவ இந்த உலகத்தைபபத்தி சொன்னேன். உங்களுக்கு ஏன் குத்துது ஐயோ காமெடி. இதுக்கு பெரு தன் எங்க அப்பா குதிருக்குள்ள இல்லைங்கிறது...\nதண்டவாளம் சேர்ற மாதிரி இருக்கும். ஆனா உடனே பிரிஞ்சிடும். அது கூட தெரியலை விஷ்ணு சாருக்கு..\nநன்பேரே :- ரோஜால முள்ளு இருக்குன்னு வர்த்த படாதே...... முள் செடியில் ரோஜா இருக்குன்னு சந்தோஷ படு\n(நா ரெண்டாவது ரகம், நீங்க முதல் ரகம்)\nஅதுனாலத்தான் பிரிஞ்சு வர்ற ரெண்டு ட்ராக் ஒன்ன சேருதுன்னு எனக்கு தோணுது.\nசேர்ந்து வர்ற ரெண்டு ட்ராக் பிரிஞ்சு போகுதுன்னு உங்களுக்கு தோணுது.\nஉண்மைதான் சார்.. இது பொல்லாத உலகம் நயவஞ்சக நரிகளைத்தன் இந்த உலகம் நம்பும். நீங்க அந்த உலகத்தை இப்பொ நம்றிங்க. அது ஒரு நாள் உங்களியும் கவுதிடும். நம்பி மோசம்ச் செய்யுற உலகம் இதான்//.\nஇது நீங்க சொன்னது தானே,எத வெச்சி நா அந்த உலகத்தை இப்பொ நம்புரேன்னு நீங்க சொன்னீங்க,உங்க மனசுல இருக்குற தப்பான எண்ணம் வெளிய வந்துருச்சி.\nஇப்படி எல்லாத்தையும்,அதவாது எல்லாத்தையும்.புரியுதா சார் எல்லாத்தையும் செஞ்சிட்டு,சொல்லிட்டு,நா பொதுவா சொன்னேன்.நா பண்ணது எல்லாமே சரி அப்படின்னு சொன்னா என்ன அர்த்தம்.\nவடிவேல் சொல்றா மாறி சின்ன புள்ள தனாமா இல்ல இருக்கு.போங்க சார் காமெடி பண்ணாதீங்க.\n//நல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறீர்களா இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா\nஅணைத்துகொள்ளும் நேரங்களில்தான் நினைவுக்கு வருகிறது...\n//நல்லாயிருக்குங்க, எனக்கொரு சந்தேகம், நீங்க கவிதைக்கு படங்களை தேர்வு செய்கிறீர்களா இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா இல்லை படங்களுக்கு கவிதை எழுதுகிறீர்களா\nசர்வேசன் சார்.. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nஅணைத்துகொள்ளும் நேரங்களில்தான் நினைவுக்கு வருகிறது...\nமாணவரே.. தங்கள் கமெண்ட் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.\nகவிதைகளும் அதற்கான படங்களும் மிக அருமை\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nஒரு காதல் இங்கே காதலிக்கிறது - கடைசி பாகம்\nஒரு காதல் இங்கே காதலிக்கிறது\nமைனா - சில ஆச்சர்யங்கள்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/98471", "date_download": "2018-08-20T18:06:09Z", "digest": "sha1:5GFQ2XN7UPZIZXOPV6DRAYMI3YGYEZPW", "length": 7539, "nlines": 131, "source_domain": "tamilnews.cc", "title": "இந்தியா இலங்கை சுற்றுலா செல்ல", "raw_content": "\nஇந்தியா இலங்கை சுற்றுலா செல்ல\nஇந்தியா இலங்கை சுற்றுலா செல்ல\nஇந்தியா இலங்கை சுற்றுலா செல்ல சிறந்த Travels- near air travels dk@gmail.com\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதல் செட்டிநாடு உணவு வரை\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள்\nசுற்றுலா பட்டியலில் மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில்\nசுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் , மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முதல் செட்டிநாடு உணவு வரை\nமீனாட்சி அம்மன் கோயில் வட இந்தியாவில் முகலாயர் காலத்து அரண்மனைகள், கோட்டைகள் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக உள்ளன. . இந்தியாவில் மிக அதிகமான கோயில்களும், கலாச்சார பெருமைகளும் தமிழகத்தில் நிறைந்துள்ளது. பல ஊர்கள் பெரியதாக இருந்தாலும் அவைகள் குறுநகரங்களாகவே கருதப்படுகின்றன. மதுரையில் மீனாட்சி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள மீனாட்சி கோயில் மிக பரந்து விரிந்துள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், இந்தியாவின் மிகச் சிறந்த, பழமையான வம்சாவளியான சோழர்களால் கட்டப்பட்டது.வாழை இலை விருந்து:பல நூறு கோயில்கள் தமிழக கிராமங்களில் அமைந்துள்ளன. இவற்றில் வரையப்பட்டுள்ள குகை ஓவியங்கள் 9ம் நூற்றாண்டை சேர்ந்தவை. கோயில்கள் மட்டும் கலாச்சாரத்தை போற்றுபவைகள் அல்ல. செட்டிநாடு பகுதியில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பர்மா தேக்கினால் செதுக்கப்பட்ட வீடுகள் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. மசாலா சுவை மற்றும் நறுமணத்துடன் தமிழகத்தில் சமைக்கப்படும் உணவுகள் மற்றும் வாழை இலையில் பரிமாறப்படும் முறையும் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவை தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் திறக்கப்பட்டு வருகிறது. சிறந்த சுற்றுலா நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகப்பலில் இருந்து கடலில் விழுந்த பெண்- 10 மணி நேரம் போராடி மீட்பு\nகுழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nடென்மார்க்கின் புகழ் பெற்ற எழுத்தாளர் பெனி ஆனர்சன் 17/08/2018மரணம்\nகப்பலில் இருந்து கடலில் விழுந்த பெண்- 10 மணி நேரம் போராடி மீட்பு\nகுழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vanniarasu.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-08-20T18:32:27Z", "digest": "sha1:M57FP4GSDOEZA64U46JV2BYJY63JINNI", "length": 42581, "nlines": 107, "source_domain": "vanniarasu.blogspot.com", "title": "வன்னி அரசு: கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன?", "raw_content": "\nகரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன\nகரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன கருத்துத் திணிப்பு வன்முறையாளர்களுக்கு பதிலடி\n\"\"உயரிய நோக்கத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை துரோகிகளும் எதிரிகளும் திசைமாற்ற நினைப்பார்கள். அவற்றையயல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இலக்கை அடைய முடியும்\nமேதகு பிரபாகரனின் இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதியற்ற தமிழ்த்தேசம் படைக்க தமிழ்நாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளாய் களமாடிக் கொண்டிருக்கிறோம்.\nகாலம் காலமாய் கட்டிக்காத்து வந்த சாதியவாதிகளின் ஆதிக்கத்தை உடைத்து ஒடுக்கப்பட்ட அனைவரையும் அரசியல் அதிகாரத்தின் அருகில் அழைத்து வந்துகொண்டிருக்கிறார் \"எழுச்சித்தமிழர்' தொல். திருமாவளவன் அவர்கள். அதேபோல் தமிழ், தமிழ்த்தேசியம், மேதகு பிரபாகரன் என்கிற விடுதலைச் சொற்கள் சேரிகளிலும் குப்பங்களிலும் இன்றைக்கு உச்சரிக்கப்படுகிறதென்றால் அதற்குக் காரணம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்தான்.\nஇன்றைக்கு தமிழ்த்தேசிய எழுச்சி தமிழகத்தில் நெருப்பாய் அனலடிக்கிறது என்றால் அதற்குக் காரணமாகநேர்மையான தமிழ்த்தேசியவாதிகளின் விரல் விடுதலைச் சிறுத்தைகளைத்தான் சுட்டிக்காட்டும். அந்தளவிற்கு திராவிட அரசியலுக்கு மாற்றான ஆற்றலாய் வளர்ந்து வருகிற விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணிகள் வெகுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிற சூழலில், விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சியை வளர்ச்சியைப் பிடிக்காத சில \"நச்சுவாதிகள்' சிறுத்தைகளுக்கெதிராக அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.\nஈழத் தமிழர்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்துவிட்டதாக அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றனர்.\nஈழ விடுதலை அரசியலில் கடந்த கால் நூற்றாண்டாய் களமாடி வருபவர் எழுச்சித் தமிழர். தேசிய இன விடுதலை குறித்த, மார்க்சிய, பெரியாரிய, கருத்தியலோடு தமிழகத்தில், இந்திய அளவிலேயே உருவான முதல் அம்பேத்கர் இயக்கம் என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். அம்பேத்கர் இயக்கமென்றால், தமிழகத்தில் திராவிட பொதுவுடைமைக் கட்சிகளுக்கு கொடிகட்டவும், போஸ்டர் ஒட்டவும், கூட்டம் சேர்க்கவும்தான் என்கிற நிலையை மாற்றி \"அதிகாரப் பகிர்வு' என்கிற அளவில் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்.\nதலித்துகளும் தமிழர்கள்தான் என்று பொதுஅரங்கில் தலைநிமிர்வை உருவாக்கியவர் எழுச்சித்தமிழர்தான். இதைப் பொறுக்க முடியாத தமிழ்த் தேசிய முலாம் பூசிக்கொண்டு திரியும் சாதியவாதிகள் ஆற்றாமையால் வாய்க்கு வந்ததைப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.\nஅந்த வரிசையில் தற்போது, \"மீனகம்' என்கிற இணையத் தளத்தில் இராவணன் என்கிற பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் மக்கள் விரோதி, கீழ்க்கண்ட அவதூறுகளை கூச்சநாச்சமில்லாமல் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.\n1. முத்துக்குமார் மூலம் தமிழகத்தில் எழவிருந்த எழுச்சியை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தடுத்துவிட்டார்.\n2. தி.மு.க.வின் தலைவர் சொல்லித்தான் இப்படிச் செய்துவிட்டார்.\n3. முத்துக்குமாரின் உடலை அவரது சொந்த ஊரான கொழுவை நல்லூருக்குப் போகவிடாமல் திருமாவளவன் தடுத்துவிட்டார்.\n4. புரசைவாக்கம் கடைவீதி வழியாகச் செல்லத் தடை விதித்தார்.\n5. கல்லூரிகளும் விடுதிகளும் காலவரையற்ற வகையில் மூட தி.மு.க. அரசு உத்தரவிட்ட நிலையில் மாணவர்கள் முத்துக்குமார் உடலை ரோட்டில் போட்டு மறியல் செய்தபோது வன்னி அரசு மூலம் ரவுடித்தனம் செய்து உடலை அடக்கம் செய்தது.\nஇப்படிப் போகிறது அந்த நபரின் அவதூறு குற்றச்சாட்டுகள். இதற்குப் பதில் கூறும் முகமாக இக்கட்டுரையை எழுதவில்லை. முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து சனவரி 29 வியாழன் காலை முதல் சனவரி 31 சனி நள்ளிரவில் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்படும் வரை உடனிருந்தவன் என்கிற முறையில், நடந்தது என்ன என்பதைச் சொல்லும் விதமாகத்தான் எழுதுகிறேன். அதுமட்டுமல்ல, முத்துக்குமார் எனது நண்பர். விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல்தான் தமிழர் விடுதலைக்கான அரசியல் என்று முழுமையாக நம்பியவர். இக்கருத்தை அநேகமுறை என்னிடம் கூறியவர். எழுச்சித் தமிழர் மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டத்தில் நான்கு நாட்களும் மறைமலைநகர் திடலில்,\"\"அண்ணன் ஏன் சாகவேண்டும் நான் சாகிறேன்'' என்று கூறிக்கொண்டு மிகுந்த மனஉளைச்சலில் இருந்தவர்.\nசாகும் தறுவாயில், \"\"பிரபாகரனிடமும் திருமாவளவனிடமும் என் சாவைச் சொல்லுங்கள்'' என்று சொல்லிச் செத்தவர்.\nஅத்தகைய முத்துக்குமார் சாவின் மூலம் எழவிருந்த எழுச்சியை எழுச்சித் தமிழர் தடுத்தார் என்று சொல்வது, வேடிக்கையிலும் வேடிக்கை. இது முத்துக்குமாரின் ஈகத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.\nகரும்புலி முத்துக்குமாரின் உடலை எங்கு வைக்க வேண்டும் என்பதை முழுக்க முழுக்க முடிவு செய்தது இயக்குநர் புகழேந்திதான். வணிகர் சங்கத் தலைவர் திரு. த. வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதல்படி தோழர் புகழேந்திதான் இதை நெறிப்படுத்தினார். மருத்துவமனையில் தோழர் புகழேந்தியுடன் முழுக்க முழுக்க நான் இருந்தேன். அப்போது காவல்துறையின் உதவி ஆணையர் திரு. சாரங்கன் \"முத்துக்குமாரை தமிழ்த் தீவிரவாதி' என்று சொன்னபோது காவல்துறையை எதிர்த்துக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது விடுதலைச் சிறுத்தைகள்தான். அதன்பின் ம.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. ஜோயல் அவர்களின் தலைமையில் வழக்கறிஞர்கள் வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nபின்னர் முத்துக்குமாரின் வித்துடல் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்டு கொளத்தூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nமறுநாள் காலை 10 மணிக்கு கொளத்தூரில் உள்ள வணிகர் சங்கக் கட்டடத்தில் தலைவர்கள் வைகோ, பழ.நெடுமாறன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, இராமதாசு, எழுச்சித் தமிழர், த. வெள்ளையன் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.\nஅப்போது வெள்ளையன் அவர்கள், முத்துக்குமாரின் வித்துடலை கொழுவைநல்லூருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், அன்றைய கொந்தளிப்பான சூழலைக் கணக்கிட்டு, அதனை வேண்டாம் என்று வாதிட்டவர் மருத்துவர் இராமதாசு அவர்களும், தா. பாண்டியன் அவர்களும்தான்.\nஇறுதியில் மூத்த அரசியல் தலைவர்களின் கருத்துகளே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அண்ணன் வெள்ளையன் எவ்வளவோ கெஞ்சியும் அவரது குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. அடுத்து சென்னையில் எங்கு எரியூட்டுவது என்கிற விவாதம் எழுந்தபோது, கொளத்தூரில் உள்ள சுடுகாட்டில்தான் எரியூட்ட வேண்டும் என்று சொன்னவர்கள் அதே மூத்த அரசியல் தலைவர்கள்தான். ஆனால் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர்தான், \"\"முத்துக்குமார் உடலை மூலக்கொத்தளத்தில்தான் எரியூட்ட வேண்டும். அங்குதான் மொழிப்போர் ஈகியர் நினைவிடம் இருக்கிறது. ஆகவே, முத்துக்குமாரின் வித்துடல் அங்கு எரியூட்டப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும்'' என்று அக்கூட்டத்தில் பேசினார். ஆனால் மருத்துவர் இராமதாசு அவர்கள், \"\"கொளத்தூரிலிருந்து மூலக்கொத்தளம் சுடுகாட்டின் தொலைவு அதிகமாக இருக்கிறது. கலவரம் எதுவும் வரலாம்'' என்று அச்சமூட்டினார்.\nஅதற்கு அண்ணன் வெள்ளையன் அவர்கள், \"\"கொழுவைநல்லூருக்குத்தான் கொண்டு போகவில்லை. மூலக்கொத்தளத்திற்காவது போவோம்'' என்று உருக்கமாக வேண்டினார்.\nஇறுதியில் மூலக்கொத்தளம் என்றே முடிவானது. சனி மாலை முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் அனைத்துத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இடையிடையே அந்த கொளத்தூர் சாலையில் பிரச்சனைகள் வந்தவண்ணம் இருந்தன.\nதிடீரென பிற்பகல் 3 மணியளவில் சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்க முயற்சிப்பதாக என்னிடம் சொன்னார்கள். \"நக்கீரன்' பிரகாஷ், \"ஜூனியர் விகடன்' பாரதி தமிழன், \"குமுதம்' ஏகலைவன், \"தமிழா தமிழா' பாண்டியன் ஆகியோரோடு பேசிக்கொண்டிருந்த நான் உடனடியாக பிரச்சனை நடந்த இடத்துக்குப் போனேன். அங்கு \"டைம்ஸ் நவ்' செய்தியாளர் தன்யா ராஜேந்திரன் உள்ளிட்ட ஆங்கில ஊடகவியலாளர்களை சிலர் விரட்டிக் கொண்டிருந்தனர்.\n\"ஈழ விடுதலைக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செய்திகள் ஒளிபரப்புவதாக' சொல்லித்தான் அவர்களை விரட்டினர். இந்த வேலையைச் செய்தது மாணவர்கள் அல்ல. மாணவர்கள் பெயரில் ரவுடித்தனம் செய்த சில பேர்வழிகள். நான், ஏகலைவன், தமிழா தமிழா பாண்டியன் ஆகியோர் சேர்ந்து ரவுடித்தனம் செய்தவர்களிடம் பேசி சமரசம் செய்தோம். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சனைகள் வந்தவண்ணமே இருந்தன. தி.மு.க. மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபுகூட இப்படித்தான் விரட்டப்பட்டார்.\nஇப்படியான சூழலில்தான் முத்துக்குமாரின் வித்துடலை எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடந்தன. தலைவர்கள் வீரவணக்க உரை நிகழ்த்தினர். புலிக்கொடி போர்த்தி முத்துக்குமார் உடல் சுமந்த வாகனம் நகர்ந்தது. அப்போது வண்டியில் ஏறிநின்ற இயக்குநர் அமீர் அவர்களின் காலைப் பிடித்துச் சிலர் கீழே இழுத்தனர்.\n\"\"மாணவர்கள் மட்டுமே ஏற வேண்டும். ஏனென்றால் மாணவர்களிடம்தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தில் இருக்கிறது'' என்று ஒருவர் கத்தினார். அவருக்கு ஏறக்குறைய 40 வயது இருக்கும். அவர் மாணவராம் பின்னர் அமீர் இறங்கிவிட்டார். அப்போது மாலை 6 மணியாகிவிட்டது.\nஇந்நிலையில், நான் ஏற்கனவே அறிந்திருந்த சிலர், திடீரென மாணவர்கள் என்கிற போர்வையில், புரசைவாக்கம் கடைவீதிகள் வழியாகத்தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று வண்டியை மறித்துச் சாலை மறியல் செய்தனர்.\nமாலை 4 மணியளவில் கொளத்தூர் தொடங்கிய ஊர்வலம் மூலக்கொத்தளம் இடுகாட்டைச் சென்றடைந்தபோது நள்ளிரவு 12 மணி. தலைவர்கள் பழ. நெடுமாறன், நல்லக்கண்ணு போன்றவர்கள் நடக்க முடியாமல் வாகனங்களில் வந்தனர். எமது தலைவர் எழுச்சித் தமிழரும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் கடைசிவரை நடந்து வந்தனர். புரசைவாக்கம் கடைவீதி வழியாகச் சென்றால் 5 மணி நேரம் கூடுதலாக நடக்க வேண்டியிருக்கும்.முத்துக்குமாரின் வித்துடல் விடியற்காலைதான் மூலக்கொத்தளம் போய்ச் சேரும். மேலும், வந்திருந்த பெண்களும் தோழர்களும் சோர்வடைய நேரும். ஆதலால்தான் எமது தலைவர் புரசைவாக்கம் பகுதிக்குள் போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.\nமக்களுடைய சிரமங்களையும் கணக்கிலெடுப்பவர்தான் நல்ல தலைவராக முடியும். அந்த வகையில் மக்கள் தலைவரான எங்கள் தலைவர் அந்த நேரத்தில் அப்படி வேண்டுகோள் வைத்தார். புரசைவாக்கம் வீதிகள் வழியாக முத்துக்குமார் வித்துடலைக் கொண்டு சென்றால்தான் தமிழகத்தில் எழுச்சி ஏற்படுமா அப்பகுதிகளில் மட்டும்தான் தமிழர்கள் வசிக்கிறார்களா\nகரும்புலி முத்துக்குமாரின் வித்துடலை போகவிடாமல் மறித்து நடுரோட்டில் போட்டால்தான் கல்லூரிகளும் விடுதிகளும் திறப்பார்கள் என்கிற மலிவான \"பிளாக் மெயில்' அரசியலுக்காகவா கரும்புலி முத்துக்குமார் மாய்ந்தான் அன்று முத்துக்குமாரின் வித்துடல் வாகனத்தை எந்தக் கல்லூரி மாணவர்கள் மறித்தார்கள் அன்று முத்துக்குமாரின் வித்துடல் வாகனத்தை எந்தக் கல்லூரி மாணவர்கள் மறித்தார்கள் குங்குமம் செய்தியாளராக இருக்கும் எனது நண்பர் தோழர் அருள் எழிலன் எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் குங்குமம் செய்தியாளராக இருக்கும் எனது நண்பர் தோழர் அருள் எழிலன் எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் அவரும் சாலை மறியலில் உட்கார்ந்து இருந்தாரே\nதலைவர்கள் பழ. நெடுமாறன், வைகோ, த. வெள்ளையன், நல்லக்கண்ணு ஆகியோரோடு எங்கள் தலைவர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் காத்திருக்கின்றார். அப்போது \"\"யாரோ தகராறு செய்கிறார்கள். முத்துக்குமாரைச் சுமந்துவரும் வண்டி நடுரோட்டிலேயே நிற்கிறது'' என்று சொன்னபோது, அண்ணன் வைகோ அவர்களும் எங்கள் தலைவரும் ஒரு சேர,\"\"இது தவறானது. உடனே போய் வாகனத்தை இழுத்து வாருங்கள்'' என்று சொன்னபோது நானும் தோழர்களும் அங்கே போய் சொல்லிப்பார்த்தோம். யாரும் எழுவதாகத் தெரியவில்லை. இயக்குநர்கள் சேரன், ராம் ஆகியோர் கெஞ்சிப் பார்த்தார்கள். மறியலில் ஈடுபட்டோர் எழவில்லை. கல்லூரிகளைத் திறந்தால்தான் நாங்கள் எழுவோம்'' என்றார்கள்.\nஅப்போது நான், \"\"இப்படி நடுரோட்டில் உட்கார்ந்து அரசியல் பண்ணுவது சரியா நாம் எல்லோருமே அமைதியாக முத்துக்குமாரை எரியூட்டிய பின், கோபாலபுரத்தையோ அறிவாலயத்தையோ முற்றுகையிடுவோம் அதற்கு நீங்கள் தயாரா நாம் எல்லோருமே அமைதியாக முத்துக்குமாரை எரியூட்டிய பின், கோபாலபுரத்தையோ அறிவாலயத்தையோ முற்றுகையிடுவோம் அதற்கு நீங்கள் தயாரா'' என்று கேட்டேன். ஆனால் யாரும் அதற்கு பதில் சொல்லாமல், \"\"கல்லூரிகளை உடனே திறந்தால்தான் நாங்கள் எழுந்திருப்போம்'' என்று மீண்டும் மீண்டும் கத்த அடம்பிடித்தனர்.\nஅரசு எந்திரத்தின் யதார்த்ததைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அவர்களிடம் என்ன பேசி என்ன பயன் ஆகவே, வண்டியை மறித்து நின்றவர்களை அப்புறப்படுத்தினேன். மூலக்கொத்தளத்தில் காத்திருந்த தலைவர்கள் வீரவணக்கம் செலுத்திய பின் முத்துக்குமாரின் வித்துடல் எரியூட்டப்பட்டது. இதுதான் நடந்தது. ஆனால் அவதூறுகளைச் சாதாரணமாகப் பரப்புகிறார்கள்.\nகரும்புலி முத்துக்குமாரின் வீரமரணம் எதைக் காட்டுகிறது அவரது மரண சாசனத்தின் உள்ளடக்கம் என்ன அவரது மரண சாசனத்தின் உள்ளடக்கம் என்ன மரணிக்கும் தறுவாயில்,\"\"பிரபாகரனிடத்திலும் திருமாவளவனிடத்திலும் சொல்லுங்கள் என்று சொன்னானே முத்துக்குமார், அதன் அர்த்தம் என்ன மரணிக்கும் தறுவாயில்,\"\"பிரபாகரனிடத்திலும் திருமாவளவனிடத்திலும் சொல்லுங்கள் என்று சொன்னானே முத்துக்குமார், அதன் அர்த்தம் என்ன எதுவுமே தெரியாமல் விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் குறிவைத்து அவதூறு நெருப்பைப் பற்ற வைக்கிறார்களே என்ன காரணம்\nநடந்ததை மறைத்து, வடிகட்டிய பொய்யைத் துணிச்சலாக எழுதுவதற்கான பின்னணி என்ன இதைப் பற்றிச் சொல்லித்தான் தீர வேண்டும்.\nஇன்றைக்கு திராவிட அரசியலுக்கு மாற்றாய் வளர்த்தெடுக்கப்படுகிற அரசியல் தமிழ்த்தேசிய அரசியல்தான். இந்த அரசியலை முழுவீச்சாய் பரப்பி வருபவர் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்தான். ஊருக்கு வெளியே இருந்த சேரி மக்களை பொதுத்தளத்திற்குக் கொண்டு வந்ததோடு, பொதுத் தளத்திலும் அதிகாரப் பங்கீட்டு யுத்தம் நடத்தி வருபவரும் எங்கள் தலைவர்தான். அதிகார மையத்திலிருப்பவர்களுக்கு இவையயல்லாம் எரிச்சலாகத்தான் இருக்கும்.\nகரும்புலி முத்துக்குமாரின் வித்துடல் எரியூட்டப்படுவது தொடர்பாகவும் எங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் முடிவு செய்தது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்தான். இந்த இயக்கத்தில் எங்கள் தலைவர் மட்டுமல்லாமல் தா.பாண்டியன், வைகோ, நெடுமாறன், இராமதாசு ஆகியோரும் அங்கம் வகித்தார்கள். எங்கள் தலைவரின் முடிவாக எதுவுமே இல்லை.\nஎதனையும் எங்கள் தலைவரால் கருத்தாகத் தெரிவிக்க முடிந்ததே தவிர, முடிவாக எடுக்க முடியவில்லை. அதற்கு ஒரு உதாரணம், \"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்று பெயர் வைப்பதற்கு முன், \"ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்றுதான் வைக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழர் கூறினார். ஆனால், இராமதாசும், நெடுமாறனும் \"\"அப்படிப் பெயர்வைத்தால் கம்யூனிஸ்டுகள் வருவதற்கு யோசிப்பார்கள்'' என்று கூறியதால் \"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' உருவானது. இதனை எத்தனை பேர் விமர்சனம் செய்தார்கள்.\nஎங்கள் தலைவர் மறைமலை நகரில் சாகும்வரை உண்ணாநிலை தொடங்கிய சனவரி 15ஆம் தேதி முதலே, விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் முழுக்க சாலை மறியல்களில் ஈடுபட்டு, 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்களே. அப்போது சிறுத்தைகளைத் தவிர யாராவது போராட்டத்தில் ஈடுபட்டார்களா\nஉண்ணாநிலைப் போராட்டத்தின் இறுதி நாளன்று எழுச்சித் தமிழர் பேசும்போது, தமிழகத்தில் \"\"காங்கிரசை புல்பூண்டு இல்லாமல் ஆக்குவோம் என்று பேசியதை, மறுநாள் இராமதாசு கண்டித்தாரே இதற்காக அவரை யாரேனும் கண்டித்தார்களா\nமுத்துக்குமார் வீரச்சாவைத் தழுவியபோது விடுதலைச் சிறுத்தைகள், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்று தமிழக அரசுக்கு எதிராக முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத் தமிழர் சிக்கலில், எங்கள் தலைவர் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசுக் கட்சிகளை நேர்மையாகவும் துணிவாகவும் விமர்சனம் செய்துதான் பேசினார்.\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் மற்ற தலைவர்கள், கலைஞரை மட்டுமே வசைபாடிக் கொண்டிருந்தது ஏன் எல்லா தலைவர்களும் சேர்ந்து தங்கள் கோரிக்கைக்காக முதல்வர் கலைஞரைச் சந்தித்து நெருக்கடி கொடுத்திருக்கலாமே எல்லா தலைவர்களும் சேர்ந்து தங்கள் கோரிக்கைக்காக முதல்வர் கலைஞரைச் சந்தித்து நெருக்கடி கொடுத்திருக்கலாமே\nஈழ விடுதலை ஆதரவுப் போராட்டக் களத்தில் சனவரி மாதம் மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் 316 பேர் சிறைப்படுத்தப்பட்டார்கள். சிறுத்தைகள் அல்லாத தமிழ்த் தேசியவாதிகள் எத்தனை பேர் இப்படிக் கொத்துக் கொத்தாய்ச் சிறைக்குப் போனார்கள் பால்ரஸ் குண்டுகள் கடத்தலிலும், புலிகளுக்கு எரிபொருள் கடத்திய வழக்கிலும் சிறுத்தைகள் கைது என்று செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். அப்போதுகூட உங்களுக்கு நெஞ்சறுக்கவில்லையா பால்ரஸ் குண்டுகள் கடத்தலிலும், புலிகளுக்கு எரிபொருள் கடத்திய வழக்கிலும் சிறுத்தைகள் கைது என்று செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். அப்போதுகூட உங்களுக்கு நெஞ்சறுக்கவில்லையா நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று. இப்படி எதையுமே செய்யாதவர்கள் ஆற்றாமையினால் பொய்யையும் புரட்டையும் பேசுவதும் எழுதுவதும் ஏன்\nஈழத்தமிழர்களின் ஒரே நம்பிக்கை என்று சொல்லப்பட்ட \"ஈழத் தாய்'ஜெயலலிதா, இப்போது காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியைச் சந்தித்துப் பேசியது ஏன்\nகரும்புலி முத்துக்குமார் வீரச்சாவடைந்து ஓராண்டாகியுள்ளது. இப்போதுகூட ஒரு வீரவணக்க அஞ்சலி செலுத்த முன்வராத ஜெயலலிதாதான் ஈழத் தமிழர்களின் நம்பிக்கைத் தாயா தேர்தல் அரசியலுக்காக யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை வெளியிட்டுத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா ஈழ ஆதரவாளரா தேர்தல் அரசியலுக்காக யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை வெளியிட்டுத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா ஈழ ஆதரவாளரா 25 ஆண்டுகள் ஈழ விடுதலைக்காகத் தன்னை ஒப்புவித்த எங்கள் தலைவர் துரோகியா 25 ஆண்டுகள் ஈழ விடுதலைக்காகத் தன்னை ஒப்புவித்த எங்கள் தலைவர் துரோகியா தேர்தல் முடிந்த மறுநாளிலிருந்து ஜெயலலிதா ஈழம் குறித்துப் பேசமாட்டார் என்று எங்கள் தலைவர் எழுச்சித் தமிழர் சொன்னது இன்று உண்மையாகவுள்ளது\n'\"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றவர்கள். இப்போது என்ன சொல்லப் போகின்றனர்\nதேர்தல் அரசியலில் எந்தக் கூட்டணியில் இருப்பது என்பது அந்தந்தக் கட்சி சுயமாக முடிவெடுப்பது. இந்தக் கூட்டணியில்தான் இருக்க வேண்டும் என்பது கருத்தைத் திணிக்கும் ஆதிக்கவெறிப் போக்கு அல்லவா\n தலித்துகள் என்றால், \"\"சமூகத் தளத்தில் மட்டுமல்ல, அரசியல் தளத்திலும் நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்'' என்பது ஆதிக்க வெறியன்றி வேறென்ன\nஇன்றைக்கு தமிழ்த் தேசியத் தளத்திற்குள் சில புல்லுருவிகள் நுழைந்து, தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க நினைக்கும் \"இராவணன்' மாதிரி ஆட்கள், ஒரு முத்துக்குமார் மட்டுமல்ல, 19 போராளிகள் தீக்குளித்து வீரச்சாவை அடைந்தபோது என்ன புடுங்கினார்கள் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடாமல், எழுச்சியை முடக்கியதாகச் சிறுத்தைகள் தலைவர் மீது குற்றம் சுமத்திவிட்டு சினிமா தியேட்டர்களில் சுற்றுகிறார்களே,இதுதான் எழுச்சியா\n”அண்ணன் ஏன் சாகனும்; நான் சாகிறேன்”\nகரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது...\nCopyright © வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2018/02/punjab-national-bank-fraud.html", "date_download": "2018-08-20T18:14:14Z", "digest": "sha1:HE24OC5PJMWQ5LBUFRJVNM5UCWKL6NGF", "length": 13968, "nlines": 111, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பஞ்சாப் வங்கியில் முறைகேடு நடந்தது எப்படி?", "raw_content": "\nபஞ்சாப் வங்கியில் முறைகேடு நடந்தது எப்படி\nமோடி ஒவ்வொரு முறையும் டிஜிட்டல் பண வர்த்தகம் பற்றி பேசும் போதும் பொது மக்களுக்கு பயம் வருவதற்கு முக்கிய காரணம் இந்திய வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளும் ஒன்று.\nகருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூபாய் ஒழிப்பு முறையைக் கொண்டு வந்தார்.\nஆனால் வெளியில் இருந்த 95% பணமும் மீண்டும் வங்கிக்கு உள்ளே வந்து விட்டது என்று சொன்ன பிறகு நடைமுறையில் எங்கோ தவறு நடக்கிறது என்றும் யூகிக்க முடிந்தது.\nஎங்கோ என்றால் வேறு எங்கும் இல்லை, வங்கி அதிகாரிகளே துணை புரிகிறார்கள்\nமுப்பது, நாற்பது சதவீத கமிசனுக்கு ஆசைப்பட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்ற துணை புரிந்தனர்.\nஇப்படிப்பட்ட அதிகாரிகளை நம்பி பொது மக்கள் எப்படி தங்கள் சேமிப்பு பணத்தை வங்கியில் போடுவார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு முறைகேடு தற்போது வெளியே வந்துள்ளது.\nபஞ்சாப் தேசிய வங்கி இந்தியாவில் இரண்டாவது பெரிய அரசு வங்கியாகும்.\nஅரசு வங்கிகள் அனைத்தும் வாராக் கடன்களில் மூழ்கி இருக்கும் சூழ்நிலையில் ஓரளவு பரவாயில்லை என்ற ரகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வங்கி.\nஇங்கு தான் தற்போது 11,000 கோடி அளவிற்கு பெரிய முறைகேடு நடந்துள்ளது.\nபஞ்சாப் தேசிய வங்கியின் மொத்த மூலதன மதிப்பே 36,000 கோடி என்பதால் இந்த மோசடியை எப்படி சமாளிக்க போகிறது என்பது தான் இப்பொழுது கேள்விக்குறி.\nசரி. முறைகேடு என்ன என்பது பற்றி பார்ப்போம்.\nபொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஏதேனும் அடமானங்களை கொடுத்து 90 நாட்களுக்கான குறுகிய கால கடன்களை பெறுவது வழக்கம்.\nஇந்தக் கடன் தொகையானது பொருட்களை ஏற்றுமதி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வங்கியின் சார்பில் வழங்கப்படும்.\nஅதனை நம் நாட்டில் இறக்குமதி செய்யும் நபர்கள் 90 நாட்களில் இந்தக் கடன்களை செட்டில் செய்ய வேண்டும்.\nஇதற்காக வங்கி மற்றும் இறக்குமதி செய்யும் நபர் என்ற இரண்டு பிரிவனரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வர்.\nஇதனை Letter Of Understanding (LoU) என்று குறிப்பிடுபவர்.\n2010ல் பஞ்சாப் தேசிய வங்கியில் மும்பை கிளை ஒன்றின் ஊழியர்கள் இந்த LoU படிவத்தை போலியாக தயாரித்து வைர நிறுவனங்களை நடத்தும் நீரவ் மோடி என்பவருக்கு கொடுத்துள்ளனர்.\nஅதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் SWIFT பண முறையில் பணத்தை இறக்குமதி பொருட்களை விற்பவருக்கும் அனுப்பி விட்டனர்.\nஇவ்வாறு செல்லும் பணம் வங்கியின் மென்பொருளிலும் கணக்கு வைக்கப்பட வேண்டும்.\nஆனால் இந்த தவறு தெரியாமல் இருப்பதற்காக வங்கியின் மென்பொருளில் கணக்கு வைக்காமல் விட்டு விட்டனர்.\nஆக, நீரவ் மோடிக்கு வாங்கும் பொருளுக்கு பணமும் செட்டில் செய்யப்பட்டு விட்டது. பொருளும் கிடைத்து விட்டது. ஆனால் எல்லாம் பஞ்சாப் வங்கியின் புண்ணியத்தால்.\nஇந்த முறைகேடின் மூலம் மட்டும் பஞ்சாப் தேசிய வங்கிக்கு கிட்டத்தட்ட 11,000 கோடி அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஇதில் பல கேள்விகள் வருகின்றன.\n2010ல் நடந்த முறைகேடு எட்டு வருடங்களுக்கு பிறகு தான் தெரிய வந்துள்ளது. அப்படி என்றால், ஆடிட்டிங்கில் ஒவ்வொரு காலாண்டும் என்ன தான் சரி பார்த்தார்கள்\nஒரு வங்கியின் ஒரு கிளையில் இவ்வளவு பெரிய அளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மற்ற வங்கிகள், மற்ற கிளைகளில் இன்னும் எவ்வளவு மோசடி நடந்து இருக்கும்\nஇரண்டு ஊழியர்கள் தான் இதனை செய்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை வெறும் இரண்டு ஊழியர்கள் மட்டும் மூடி மறைத்து விட முடியுமா\nநாம் முன்பு ஒரு பதிவில் பிக்ஸ்ட் டெபாசிட் எவ்வளவு தூரம் பாதுகாப்பானது\nஅதில் ஒன்று வங்கியில் போட்டவர்கள் பணம் பாதிக்கப்படும். அல்லது அரசுக்கு வரி கொடுப்பவர்கள் இப்படி தாரை வார்த்துக் கொடுக்கப்படும் என்று கூறி இருந்தோம்.\nவைர வியாபாரி நீரவ் மோடியிடம் இருந்து ஐயாயிரம் கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்தாலே தற்போது சாதனை தான்.\nஅப்படி என்றால் மீதி பணத்தை இதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நாம் தான் தாரை வார்க்க வேண்டும்.\nஇந்திய நிதி கட்டமைப்பு நம்பிக்கையை பெறும் தருணமிது அது தவறும் என்றால் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும்...\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sltj.lk/29985/", "date_download": "2018-08-20T18:48:08Z", "digest": "sha1:PRUU4NBXH35OUGSQJV3HDD3FOWNDW4LN", "length": 11352, "nlines": 206, "source_domain": "www.sltj.lk", "title": "கிருத்தவர்களுடனான விவாத ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nகிருத்தவர்களுடனான விவாத ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.\nகிருத்தவர்களுடனான விவாத ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிருத்தவர்களுக்கும் – ஏழாம் நாள் அட்வெந்து சீர்திருத்த இயக்கம் (Seventh Day Adventist Reform Movement) இடையிலான விவாத ஒப்பந்தம் இன்று (15.10.2017) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது.\n ஆகிய இரு தலைப்புகளில் எதிர்வரும் 17.12.2017 மற்றும் 24.12.2017 ஆகிய இரு நாட்களில் விவாதம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.\nPrevious SLTJ யின் இறுதி வாய்பையும் வேண்டுமென்று தட்டிக் கழித்து விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓடினார் ACK முஹம்மத்\nNext SLTJயுடன் விவாதிப்பதற்காக ஒப்பந்தம் செய்த கிருத்தவர்கள் விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓட்டம்.\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்\nஇரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”\nஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://atsnoida.blogspot.com/2012/05/30-05-2012-kuralum-porulum-from-avvai.html", "date_download": "2018-08-20T18:50:29Z", "digest": "sha1:ZANZI3TYXAB4VILCKID67WY3YN5IFU6W", "length": 19246, "nlines": 320, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 30-05-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nவைகாசி -௧௭(17),புதன், திருவள்ளுவராண்டு 2043\nபிறருக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள்.\nகுறளும் பொருளும் - 1181\nகாமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல்\nநயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்\nவிரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்\nவடிவமைப்பாளர் குழந்தை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.\nசெல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்\nசில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.\nஎங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.\nஇவ்விரண்டும் இரு மாறுபட்ட இடங்கள். ஒன்று பழமையின் அருங்காட்சியகம். இன்னொன்று புதுமையின் அங்காடி வளாகம். உங்களுடன் கூட வருபவர்களின் விருப்பத்தைப் பொறுத்து இடத்தை தேர்ந்தெடுங்கள் எங்கு அதிக நேரம் செலவு செய்யலாம் எனத் தீர்மானியுங்கள். ஜன்பத் மார்க்கெட்டில் பனீர் பகோடா நன்றாக இருக்கும் என கேள்வி. முயற்சித்துப் பாருங்கள். பாலிகா பஜாரில் டி-ஷர்ட் களும் எலேக்ட்ரோனிக் பொருள்களும் கிடைக்கும். இது சென்னையின் பர்மா பஜார் போன்ற இடம். பொருள்களின் அழகை மட்டும் பார்த்து மயங்கி விடாமல் கொஞ்சம் யோசித்து வாங்கவும். ரிஸ்க் எடுக்க விரும்புவர்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் வாங்க சிறந்த இடம்.\nAgarsen Ki Bouli - அகர்சென் படிக் கிணறு ) : குதுப் மினார் பகுதியில் இந்த மாதிரியான படிக் கிணறை பார்க்க தவறியவர்களுக்கு இன்னொரு சான்ஸ் இங்கே. மகாபாரத காலத்தில் அகர்சென் எனும் அரசரால் கட்டப்பட்ட இந்த படிக்கிணறு பின்னர் 14ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. தண்ணீர் தேக்கத்தின் அவசியம் மட்டுமின்றி, அதன் தேக்க அளவிற்கேற்ப மக்கள் தண்ணீரை உபயோகிக்கக் வேண்டி நீரை அணுக தேவையான வசதிகளை செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அழகிய படிக் கிணறு. கிணறு மட்டுமன்றி, யாத்ரிகளின் ஓய்வு இடமாகவும் பயன்படுத்த வேண்டி கட்டப்பட்ட பன்னோக்குக் கட்டிடம். ஜன்பத் மார்கெட் பகுதியில் இருந்து 1 KM தொலைவில் ஹைலி ரோட்டில்.\nஹனுமான் மந்திர்- மகாபாரத காலத்தில் பாண்டவ வம்சத்தினரால் கட்டப்பட்டதாக கருதப்படும் ஐந்து கோவில்களில் ஒன்று. ஏற்கனவே மெஹ்ரோலியில் உள்ள யோகமாதா கோவில் ஒன்றைப் பார்த்தோம். இவ்விரண்டைத் தவிர மற்ற மூன்று கோவில்கள் கல்காஜி மந்திர் எனப்படும் காளிகோவில் ( லோட்டஸ் டெம்ப்ளே அருகே), பைரவ் கோவில் ( புராணா கிலா மற்றும் பிரகதி மைதான் அருகே) நிலி சத்திரி மந்திர் (நிகம்போத் காட் அருகே)\nஇந்தக் கோவிலுக்கு ராமாயணம் மற்றும் ஹனுமான் சாலிசா எழுதிய துளசிதாஸ் வந்தபோது அப்போதைய முகலாய மன்னர் அவருக்கு இக்கோவிலை பரிசளித்தாகவும், இங்குள்ள ஒரு ஸ்தூபியில் உள்ள பிறை சந்திர வடிவத்தின் காரணமாக பின்னர் வந்த முகலாய பேரரசர்களும் இக்கோவிலை அழிக்கவில்லை எனவும் ஒரு கருத்து உண்டு. இங்கு \"ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்\" எனும் மந்திரம் ஆகஸ்ட் 1, 1964ல் இருந்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பது ஒரு கின்னஸ் சாதனை.\nகுருத்வாரா பங்களா சாஹிப் : முன்னர் 17 ம் நூற்றாண்டின் ராஜா ஜெய் சிங் அவர்களின் ஜெய்சிங்புரா அரண்மனை இன்று ஒரு புனித சீக்கியத் தலமாக விளக்குகிறது. 1664ல் சீக்கிய குருவான குரு ஹர் கிஷன் இங்கு தங்கியிருந்தார். அப்போது டில்லி மக்கள் அம்மை மற்றும் கலரா நோய் தாக்குதலுக்கு உள்ளாகினர். குரு ஹர் கிஷன் இங்குள்ள ஒரு கிணற்றிலிருந்து எடுத்து தந்த நீர் ஒரு அரு மருந்தாக உதவியது. பின்னர் ராஜா ஜெய் சிங் இக்கிணற்றை ஒரு நீர் தேக்கமாக மாற்றினார். இன் நீர்த்தேக்கத்தின் நீருக்கு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. குருவின் நினைவாக கட்டப்பட்ட சீக்கியத் திருக்கோவில். இங்கு தரிசனம் மட்டுமின்றி உங்களால் முடிந்த சேவைகளையும் செய்ய வாய்ப்பு உண்டு.\nஉங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/141", "date_download": "2018-08-20T18:32:58Z", "digest": "sha1:2XNUKYLPB6I7FF54VIPOAEPYIEV2S4C3", "length": 10080, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "குறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில் | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nகுறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில்\nகுறைந்த நேரம் தூங்குபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு : புதிய ஆய்வில்\nநாள்தோறும் 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nநாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4238 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறினார்.\nமேலும், மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும். நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.\nசிறுநீரகம் பெண்கள் மருத்துவமனை பிர்ஹாம் சிகிச்சை உறுப்பு\nபற்களுக்கான சில வைத்திய ஆலோசனைகள்\nசிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதில்லை. அதிலும் பால்ய வயதில் உள்ளவர்கள் பெற்றோர்களாலும், தங்களின் விருப்பதாலும் காபோஹைட்ரேட் மற்றும் சொக்லெட்களை\n2018-08-18 11:48:10 காபோஹைட்ரேட் சொக்லெட்கள் பெற்றோர்கள்\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nபொதுவாக எம்மில் பலரும் வயிற்று வலி வந்தால் அது குறித்து தீவிர கவனம் கொள்ளாமல் ‘அதுவா வரும் அதுவா சரியாகும்’ என்று எண்ணிவிடுகிறார்கள். வயிற்று வலியை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-08-18 10:16:21 வயிற்று வலி வைத்தியர்கள்\nபொதுவாக எம்மில் பலரும் தற்போது அலுலவகங்களில் (ஏசி) குளிரூட்டி வசதிப் பொருத்தப்பட்ட இடங்களில் தான் பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் ஒவ்வாமைக்கும் ஆளாகிறார்கள்.\n2018-08-16 15:15:09 அலுலவகங்கள் மூக்கடைப் குளிரூட்டி\nதோல் பாதிப்புக்குறிய சிறந்த சிகிச்சை முறை “கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்“ என வைத்தியர்கள் கூறுகின்றனர். வீதியில் செல்வோர், அலுவலகத்தில் பணியாற்றுவோர், வீட்டில் ஓய்வில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் தங்களின் உடலில் பல பகுதிகளில் சொறிந்து\n2018-08-15 14:49:54 தோல் சிசிக்சை வைத்தியர்\nFacial Palsy என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை\nஐம்பது வயதைக் கடந்த சிலருக்கு இரவில் உறங்கி காலையில் படுக்கையிலிருந்து எழும் போது வாயை திறந்து பேச முடியாமலும், உதவிக்கு அழைக்கும் போது பேச்சு முழுமையாக இல்லாமல் குழறியபடியும் இருக்கும்.\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/university-southampton-uk-offers-m-sc-audiology-admission-001493.html", "date_download": "2018-08-20T18:03:27Z", "digest": "sha1:ZFPJ4AS324DI7JD6PFU2FVIJM7HIMNHQ", "length": 7491, "nlines": 77, "source_domain": "tamil.careerindia.com", "title": "உலகப்புகழ் சௌதாம்ப்டன் பல்கலை.யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா...!! | University of Southampton, UK Offers M.Sc (Audiology) Admissions - Tamil Careerindia", "raw_content": "\n» உலகப்புகழ் சௌதாம்ப்டன் பல்கலை.யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா...\nஉலகப்புகழ் சௌதாம்ப்டன் பல்கலை.யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா...\nடெல்லி: பிரிட்டனில் புகழ்பெற்ற சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி (ஆடியோலஜி) படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n1972-ல் இந்தப் படிப்பு சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. ஆடியோலஜிக்குப் புதியவர்கள், பேச்சு தெரப்பி நிபுணர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு இந்தப் படிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்தப் படிப்பில் சேர ஹானர்ஸ் படித்திருக்கவேண்டும். மேலும் ஐஇஎல்டி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.\nகல்வி உதவித்தொகையும் மாணவர்கள்பெற முடியும். 2016 செப்டம்பரில் இந்த படிப்பு தொடங்கும். ஜூன் 30-க்குள் விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். விண்ணப்பங்களைப் பெற http://www.southampton.ac.uk/engineering/postgraduate/taught_courses/audiology/msc_audiology.page என்ற லிங்க்கைக் கிளிக் செய்யும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/01/point-break-2016.html", "date_download": "2018-08-20T18:07:13Z", "digest": "sha1:RCOT35AZIRHMPLT3UBXCQYICBI3ZEDM3", "length": 21701, "nlines": 248, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : POINT BREAK- (2016)-திரை விமர்சனம்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 1:30:00 PM POINT BREAK- FILM REVIEW, பாய்ண்ட் பிரேக் (2016)-திரை விமர்சனம் No comments\nநடிகர் : எட்கர் ரமிரேஜ்\n1991-ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தை இப்போது 3டி-யில் ரீமேக் செய்திருக்கிறார்கள். மலையில் இருந்து குதிப்பது, வானில் பறப்பது என்று எதற்கும் அஞ்சாமல் தங்கள் உயிரை பணயம் வைத்து கொள்ளையடிக்கும் ஒரு குழுவை ஹீரோ எப்படி பிடிக்கிறான் என்பதுதான் பாய்ண்ட் பிரேக் படத்தின் கதை.\nஜானி ஒரு இளம் எப்.பி.ஐ. அதிகாரி மட்டும் அல்ல, சாகச வீரனும்கூட. ஆனால் மோட்டர் சைக்கிள் சாகசத்தின்போது தன் நண்பன் இறந்த பிறகு, சாகசங்கள் செய்வதை விட்டுவிட்டு எப்.பி.ஐ.-யில் வேலைக்கு சேர்கிறான்.\nஅவன் வேலை பார்க்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடிக்கடி கொள்ளை நடக்கிறது. மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் உயிரை பணயம் வைத்தும் கொள்ளையடிக்கும் இந்த குழுவை பிடிக்க முடியாமல் போலீஸ் திணருகிறது.\nஇதனையடுத்து ஹீரோ ஜானியை அந்த குழுவினரோடு பழகவைத்து, அவன் மூலமாக கொள்ளை கூட்டத்தை பிடிக்க திட்டமிடுகிறது போலீஸ். ஜானியும் அந்த குழுவோடு நெருக்கமாகிவிடுகிறான். அந்த குழுவின் தலைவனான வில்லன் போதி, ஜானிக்கு கடல் சறுக்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கிறான்.\nசாகச விரும்பியான ஜானி வந்த வேலையை மறந்துவிட்டு சர்பிங்கில் மூழ்கிவிடுவதோடு, அந்த குழுவை இருக்கும் டெய்லரையும் காதலிக்க தொடங்குகிறார். இதனை அறிந்துக்கொண்ட போலீஸ் ஜானிக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதனால் அந்த குழுவின் செயல்பாடுகள் பற்றி தனது மேல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கிறான்.\nபின்னர், வில்லன்கள் ஒரு வங்கியை கொள்ளையடிக்கும்போது ஜானியும் மற்ற போலீஸ் அதிகாரிகளும் அவர்களை விரட்டுகிறார்கள். அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவனை கொல்ல ஜானிக்கு வாய்ப்பு கிடைத்தும் அவன் கொல்லாமல் விட்டுவிடுகிறான். இதனால் மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகிறான். கொள்ளை கூட்டத்திற்கும் ஜானி ஒரு போலீஸ் என்று தெரிந்துவிடுகிறது. வில்லன் போதி ஜானியின் காதலியான டெய்லரைக் கடத்துகிறான். அவளை விடுவிக்க வேண்டுமென்றால், ஜானி தங்களுடன் சேர்ந்து ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட வேண்டுமென சொல்கிறான்.\nஇறுதியில் ஜானி, கொள்ளைக்கூட்டத்துடன் இணைந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு தனது காதலியை காப்பாற்றினாரா அல்லது உண்மையான போலீஸ் அதிகாரியாக தனது கடமையை ஆற்றினாரா அல்லது உண்மையான போலீஸ் அதிகாரியாக தனது கடமையை ஆற்றினாரா\n1991-ம் ஆண்டு வெளிவந்த படத்துடன் ஒப்பிடும்போது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலக்கியிருக்கிறார் இயக்குனர் எரிக்சன் கோர். மற்றபடி படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nவானில் பறப்பது, சர்ப்பிங் செய்யும் காட்சிகள் எல்லாம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால் பழைய படத்தில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்லை. இந்த படத்தின் இயக்குனர் ‘பாஸ்ட் அண்ட் தி ப்யூரியஸ்’ படத்தில் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமொத்தத்தில் ‘பாய்ண்ட் பிரேக்’ தடுமாற்றம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/19130055/1177567/Dhanush-to-play-as-Politician-in-Bollywood.vpf", "date_download": "2018-08-20T18:12:40Z", "digest": "sha1:CSARV3IIEXEZI5O2JXFHNM25XGL4WPVQ", "length": 12102, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீண்டும் அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ் || Dhanush to play as Politician in Bollywood", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ்\n‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush #Raanjhanaa\n‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush #Raanjhanaa\n‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்லாமல் இருந்த தனுஷ், தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.\nதனுஷ் - சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அபய் தியோல் நடிப்பில் வெளியான `ராஞ்சனா’ படத்திற்கு ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், `ராஞ்சனா’ இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.\nமுதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் குந்தன் குமார் பாத்திரம், இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை பின்னப்பட்டிருக்கிறதாம். கொடி படத்துக்கு பிறகு ஒரு முழு நீள அரசியல் கதையில் தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Dhanush #Raanjhanaa2\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமுழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\nகேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\nஇயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/11153152/1183203/Dindugal-near-government-bus-stop-students.vpf", "date_download": "2018-08-20T18:12:42Z", "digest": "sha1:5B7DMBOTWPFC3PTANJ2NBB6KXA6H3DOH", "length": 13519, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டுக்கல்-கோவிலூருக்கு அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் தவிப்பு || Dindugal near government bus stop students", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிண்டுக்கல்-கோவிலூருக்கு அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் தவிப்பு\nதிண்டுக்கல்லில் இருந்து கோவிலூருக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து கோவிலூருக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து எரியோடு வழியாக கோவிலூருக்கு தினசரி காலை மற்றும் மாலையில்அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. புங்கம்பாடி கிராமத்துக்குள் வந்து பின்னர் கோவிலூர் செல்லும் பாதை சேதமடைந்து இருந்ததால் அந்த பஸ் கடந்த 1 வருடத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டது.\nஇந்த பஸ்சில் புங்கம்பாடி, தங்கம்மாபட்டி, ஆர்.கே.புதூர், தொப்பாநாயக்கனூர், ஆவள கவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் சென்று வந்தனர்.\nஆனால் தற்போது பஸ் இயக்கப்படாததால் 2 கி.மீ தூரம் நடந்து புங்கம்பாடி பிரிவில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மாலை நேரங்களில் நீண்ட தூரம் நடந்து வரும் மாணவர்கள் மயக்கமடைந்து விழும் நிலையும் ஏற்படுகிறது.\nஎனவே மாணவர்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nகுடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nதூத்துக்குடியில் தேர்தல் கல்விக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி\nவிக்கிரவாண்டி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல் - 5 பேர் படுகாயம்\nவிழுப்புரம் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 960 மதுபாட்டில்கள் பறிமுதல்\nமு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக வேண்டும்- திமுக வடக்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்\nசென்னையில் கல்லூரிகள் திறந்த முதல்நாளே விபரீதம்: பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது\nமாணவர்களின் ஆன்லைன் படிப்புகளின் நன்மைகள்\nஎதையும் தாங்கும் இதயத்துடன் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் - வைத்திலிங்கம் எம்.பி.\n50 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கல்லூரி மாணவர்கள் சந்திப்பு\nமாணவர்களின் வெற்றிக்கு வித்திடும் பழக்கங்கள்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nமாற்றம்: ஆகஸ்ட் 11, 2018 15:31\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/11-Healthiest-foods-for-summer-diet/", "date_download": "2018-08-20T18:47:23Z", "digest": "sha1:YDVOLATXPPYNIXONVL2C2HLJ54TTMQUX", "length": 13433, "nlines": 212, "source_domain": "www.skymetweather.com", "title": "11 Healthiest foods for summer diet", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/91864", "date_download": "2018-08-20T18:06:52Z", "digest": "sha1:D3BBCUWYSSX7KU3WBQWQMRCKEFW4NZS5", "length": 7642, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்! இன்னாலில்லாஹ் ... - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nமட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nஓட்டமாவடியில் மீன் சந்தையில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்கு சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் வாழைச்சேனை ஹைறாத் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதி ஏ.எல்.எம்.ஹனீபா (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மஞ்சுள (வயது 34) என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nமரணமடைந்தவர் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.\nPrevious articleகிழக்குப் பல்கலைக் கழக விஷேட பொதுப் பட்டமளிப்பு\nNext articleதடைகளைத் தாண்டி இதயசுத்தியுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வோம்: கண்டியில் அமைச்சர் ரிஷாட்\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraimysha.blogspot.com/2013/10/3.html", "date_download": "2018-08-20T18:28:06Z", "digest": "sha1:R4OWVEFUAVAWH227TDAY2ISJRLR25KYI", "length": 3994, "nlines": 64, "source_domain": "adiraimysha.blogspot.com", "title": "அதிரை மெய்சா'வின் : [ 3 ] ஏங்கி நின்றான்..!!! ஏக்கம் தொடர்கிறது...", "raw_content": "\n[ 3 ] ஏங்கி நின்றான்..\nகை நிறைய காசு பணம்...\nகாற்றாய் பறந்த காசு பணம் எண்ணி....\nபணம் கேட்கும் செய்தி கேட்டு....\nவாள் பாய்ந்த வெந்த புண்ணாய்...\nவீண் பழிகள் சுமந்து அவனும்....\nகால் போன போக்கில் போனான்....\nமனம் போன போக்கில் போனான்...\nமானம் போகும் காட்சி கண்டு....\nசிரம் நிமிர்ந்து சுற்றார் கண்டு....\nதுக்கம் அவனை தூங்க மறுக்க....\nநித்தம் ஒரு நினைவு சுமந்து....\nவீதியில் பார்த்த ஆறுயிர் நண்பன்....\nமீண்டும் என்று செல்வாய் என்றான்....\nஎப்போ செல்வீர் எஜமான் என்றான்...\nஉங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://flypno.blogspot.com/2013/01/blog-post_23.html", "date_download": "2018-08-20T18:05:04Z", "digest": "sha1:X5PAMMQHYNBIY74N7HCSJ6QJPW6ZGHT3", "length": 12035, "nlines": 108, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: தேவைப்பட்டால் உயிரையும் குடுப்போம்..!!!", "raw_content": "\nபுதன், 23 ஜனவரி, 2013\nதுப்பாக்கி படத்துக்கு முஸ்லிம் சமுதாயத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியதும் போயஸ் கார்டனுக்கு ஓடினான் இந்த கூறுகெட்ட கமலஹாசன். அதற்கடுத்து விஷ்வரூபத்தில் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் அமைக்கபடவில்லை என்று பேட்டி அளித்தான் இந்த கூட்டிக்குடுப்பவன்.\nஅதர்க்கடுத்து விஷ்வரூபத்தை பார்த்தப் பிறகு முஸ்லிகளே எனக்கு பிரியாணி போடுவார்கள் என்றான் (போடத்தான் போகிறோம் பிரியாணி உன் படத்தை அடக்கம் செய்துவிட்டு) அதற்கடுத்து படத்தை டி.டி.ஹெச் சில் முதலில் வெளியிடுவேன் என்றான் (தியேட்டரில் ஓடாது என்று தெரிந்துக் கொண்டுதான் இந்த முடிவுக்கு வந்தான் இந்த மூதேவி).\nதியேட்டர் உரிமையாளர்களுக்கும், அவனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் வேண்டுமென்றே ரிலீஸ் தேதியை தள்ளிக்கொண்டே போனான் (பல பொன்னுகளை தள்ளிக்கொண்டு போனது போன்று).\nஉன்னை உயிருடன் விட மாட்டோம், குண்டு வைத்து கொள்வோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் விடுத்த பயங்கர மிரட்டலை அடுத்து டி.டி.ஹெச் சை ஒரேடையாக கை கழுவி விட்டு பொங்கலில் தியேட்டர்களில் விலேயிட முடிவுசெய்தான்.\nபொங்கலில் ரிலீஸ் செய்தால் முஸ்லிம் சமுதாய மக்கள் எதிர்பினால் பிரச்சனை உருவாகலாம் என்றுக் கருதி 25ல் தள்ளிபோட்டான். அதர்க்கடுத்து முஸ்லிம் சமுதாயத்தை சம்மந்தப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு நான் ஒரு கண்ணாடி தான் சமுதாயத்தில் நடப்பதை பிரதிபலிதேன் என்றான். (அப்படி என்றாள் சினிமாவில் கூட்டிக்குடுக்கும் தொழில் செய்யும் அனைவரை வெளிக்காட்டி ஒரு சினிமா எடுக்க துணிச்சல் உண்டா இந்த மாமா பாயலுக்கு)\nஎனவே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே பயங்கரவாதியாகவும், கேவலமாகவும் சித்தரித்து காட்டி சினிமா எடுத்து பிழைப்பை ஓட்டும் இவனை போன்றவர்கள், இதற்க்கு பதிலாக தன் தாய், பொண்டாட்டி, தன்னுடை மகள்களை கூட்டிகுடுத்து பிழைப்பு நடத்தலாம் (என்னது அதைத்தான் செய்கிறானா\nஇன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தௌஹீத் ஜாமாத்தின் போராட்டாத்திர்க்கு தோழ் குடுப்போம், தேவைப்பட்டால் உயிரையும் குடுப்போம்.\nஇனி எந்த வகையிலும் இந்த சினிமாக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வாழும் முஸ்லிம் சமுதாயத்தை வம்புக்கிழுக்கும், போக்கு இத்துடன் முடிவு பெற வேண்டும்,\nமுஸ்லிம்களில் வாழு இஸ்லாமிய காவிகறைபடிந்த கமல் ரசிகர்களே, ஒரு கேனப்பய தன்னுடைய வலைதளத்தில் எழுதியுள்ளான்(http://worldcinemafan.blogspot.in/2013/01/blog-post_23.html) நீங்கள் இந்த மாணம்கெட்ட போறம்போக்கு கமலின் படத்திர்க்கு ஆதரவு தருவீர்கள் என்று சற்று சிந்தித்து பாருங்கள், இவன் படத்தில் முஸ்லீம்கள் தங்கள் வீட்டு பெண்களை அடுத்தவனுக்கு கூட்டி குடுப்பது போன்று சித்தரித்துள்ளான். “நீங்கள் என்ன அவ்வாறுதான் செய்கிறீர்களா சற்று சிந்தித்து பாருங்கள், இவன் படத்தில் முஸ்லீம்கள் தங்கள் வீட்டு பெண்களை அடுத்தவனுக்கு கூட்டி குடுப்பது போன்று சித்தரித்துள்ளான். “நீங்கள் என்ன அவ்வாறுதான் செய்கிறீர்களா” அப்படி நீங்கள் ஆதரித்தால் அவன் சொல்வதும் உங்களைத்தான்\nசிந்தியுங்கள், சமுதாயத்தோடு ஒன்று பாடுங்கள்.\nநன்மையை ஏவி, தீமையை தடுத்து நாள் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர் 03:104\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral ஊடகங்கள், சமுதாய சிந்தனை, சிந்திபதற்க்கு\nபுதன், ஜனவரி 23, 2013 2:58:00 பிற்பகல்\nபுதன், ஜனவரி 23, 2013 3:03:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nவிஷ்வரூபத்தொடர் - இது தேவையா\nவிஷ்வரூபத்தொடர் - எந்த அப்பன் இப்படி செய்வான்\nவிஸ்வரூபத்தொடர் - தீர்ப்பும், தடையும்\nவிஸ்வரூப தொடர் -என் அன்பு சகோதர சொந்தங்களே\nவிஷவரூப தொடர் - பாரதிராஜா என்ன அவ்வளவு பெரிய அப்பா...\nவிஸ்வரூபம் திரைப்படம் எங்கும் ஓடாது\nஇந்தியாவுக்குள் வந்த ஒரு கூட்டம் யார் என்று சொல்லத...\nஒரு இஸ்லாமியனினதும், ஒரு நியாயவாதியினதும் பார்வை இ...\n401 வது பதிவு, குறைந்தது 4 பேர் படிப்பாங்களா\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/noolagamfeb18/34602-2018-02-13-06-35-24", "date_download": "2018-08-20T18:59:45Z", "digest": "sha1:NKYY4Y2OQI5TKGJ4QCAEEQE3HHMWR5X6", "length": 44162, "nlines": 285, "source_domain": "keetru.com", "title": "கி.ரா. படைப்புகளில் நடையியல் கூறுகள்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என் அறிவுப் பசியைத் தீர்த்தது\nதமிழியல் ஆய்வுவெளி - கல்விப்புலம் சார்ந்த உரையாடல்\nவக்கிரங்களின் விளையாட்டு - ஆ.மாதவனின் கதைகள்\nஎங்கேயும் எப்போதும் - நூல் அறிமுகம்\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\n'செம்பருத்தி' நாவல் - ஒரு பார்வை\nவிளம்பர யுகத்தில் இலக்கிய வெளி படும்பாடு\nபெயல் - ஒரு பெருமழைப் பீதியின் கோட்டோவியம்\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று\nபெரியார் சிலைக்கு மாலை போடுவது குற்றமாம்\nவிலைக்கு விற்கப்படும் நீட் தேர்வர்களின் விவரங்கள்\nமுனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்\nமைக்கா சுரங்கத் தொழிலாளர் சேமநலநிதி மசோதா\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 16, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: உங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2018\nகி.ரா. படைப்புகளில் நடையியல் கூறுகள்\nசாதாரண மேம்போக்கான பொதுமொழி நடையை விட வட்டார வழக்கு நடைமொழி ஆழமானது, அது மக்களின் ஆன்மாவிலிருந்து உதிப்பது, அதற்கே என்று ஒரு மொழிச் சிறப்பு உண்டு என்று பேச்சு மொழியில் எழுதப்படும் நடை குறித்து கி. ராஜநாராயணன் குறிப்பிடுகிறார். (கோபல்லபுரத்து மக்கள், 2014 பக்.272) தமிழ்த்தாய்க்குச் செட்டிநாட்டில் ஒருமுகம், கொங்கு நாட்டில் ஒருமுகம், சோழ நாட்டில் ஒன்று, நெல்லைச் சீமையில் ஒன்று, கரிசல்காட்டில், தொண்டைநாட்டில், நாஞ்சில் நாட்டில், மதுரை மண்ணில், இன்னும் பல, இப்படி வட்டாரந்தோறும் அவளுக்குத் திருத்தமான முகங்கள் இருக்கின்றன. முகத்துக்கு ஒரு நாக்கு இருக்கிறது. நாக்குக்கு ஒரு பேச்சு இருக்கிறது என்று வட்டார வழக்குகளைக் குறித்தும் எழுத்துவழக்கை நிஜமான நடை அல்ல சக்களத்தி நடை என்றும் குறிப்பிடுகிறார். பேச்சு நடையில் பல சௌகரியங்கள் உண்டு. தோன்றுகிற கருத்துக்களைப் பொய்யில்லாமல் பூச்சு இல்லாமல் மொழி அழகு என்கிற பேரில் விருதாச் சிங்காரிப்பு இல்லாமல் அப்படியே தரமுடியும். மொழியின் இனிமை பேச்சு நடையில்தான் புலப்படும். (கி. ராஜநாராயணன் கட்டுரைகள் 2011, 416)\nஅவரது மேற்கண்ட கூற்றுக்களுக்குத் தக்கவாறு படைப்பாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் தாம் படைத்த நாவல், சிறுகதைகளானாலும் சரி, கட்டுரை, கடுதாசிகளானாலும் சரி எல்லாவற்றிலும் பேச்சு மொழியையே பெரிதும் கையாண்டுப் படைப்புகளைத் தந்துள்ளார். பேச்சு மொழியில் பிறமொழிச் சொற் கலப்பு அதிகமிருக்குமே. அதற்கும் அவர் பதில் சொல் கிறார். பிறமொழிகளிலிருந்து உணவு, உடை, வாகனாதிகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பெறுவதைப் போலவே பிறமொழிச் சொற்களையும் பெற்று பயன்படுத்தலாம் என்பது கி.ராவின் கருத்து. இவையே கி. ராஜநாராயணனின் படைப்பு மொழிக் கொள்கை என்று கொள்ளலாம். அவர் கதை சொல்லத் துணியும்போது தேர்ந்தெடுக்கும் மொழித்தேர்வு இதனடிப்படையிலே அமைவதனை அவரது படைப்பு களில் காணமுடிகிறது. அவரது படைப்புகளில் காணப் படும் வேறு சில நடையியல் கூறுகளை இனி இக் கட்டுரையில் காணலாம்.\nபொதுவாக மீக்கூறுகள் (suprasegmentals) பேச்சு மொழியிலேயே இடம்பெறுகின்றன. நாம் பேசும் போது இசையோட்டத்தோடே பேசுகிறோம். ஒரே வாக்கியத்தின் இசையோட்டத்தைக் கூட்டியோ, குறைத்தோ, இயல் பாகவோ உச்சரித்து அவ்வாக்கியத்தின் பொருளை வேறுபடுத்திவிட முடியும்.\nஇவ்வாறு இசையோட்டம் பேச்சு மொழியில் அமைவதனைக் காணலாம். பேச்சுமொழியில் கதை சொல்லும்போது கி. ராஜநாராயணன் இசையோட்டத்தை எழுத்தில் தருவதற்குச் சில உத்திகளைக் கையாளுகிறார். சொற்களுக்கிடையே இடைவெளி (pause) விட்டு எழுதுவது தான் எழுத்து மொழியின் மரபாகும். ஆனால் சொற்களை அசைகளாகப் பிரித்து அசைகளுக்கு இடையே இடைவெளிகளை விட்டு இசையோட்டத்தை உணர்த்த முயற்சி செய்கிறார் கி. ராஜநாராயணன். அதாவது ஒரே சொல்லை இரண்டாகப் பிரித்தும், சொல்லுக்கு இடையில் புள்ளிகளிட்டும், சொல்லில் வரும் ஒரு மெய்யலியையோ, உயிரொலியையோ (அளபெடையாக) கூட்டியும் இசையோட்டத்தை உணரச் செய்கிறார். நல்ல என்ற சொல்லை ந...ல்ல என்றும், சிறிய என்பதனை சிறிய்ய என்றும் தனி என்பதனைத் தனீ என்றும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு மீக்கூறுகளை கி,ராஜநாராயணன் வெளிப் படுத்துகிறார். சில எடுத்துக்காட்டுக்கள் காண்போம் (கோபல்லபுரத்து மக்கள்)\nநல்...ல நல்...ல நிலாவும் லேசான குளிரும் இருக்கணும் (ப.8)\nகொஞ்...சம் இன்னும் கொஞ்...சம் (ப.9)\nதூர...த்துலெ தூ...ரத்துலெ எங்கோ இவரு மாடு ஞா... என்று (ப.106)\nநீ...ளமாக சூத்திரக் கயிற்றை நீ...ளமாக விட்டு (ப.137)\nநிறைய்ய செம்பு நிறைய்ய பால் (ப.6)\nபெரிய்ய போதையினால் சிவந்த பெரிய்ய கண்கள் (ப.128)\nவரீசையாக இப்படி வரீசையாக சொல்லிக் கொண்டே போவார் (ப.95)\nசரீ ம், சரீ, பயலே எப்படி இருக்கே (ப.57)\nநல்ல என்பதற்கும் நல்...ல என்பதற்கும் இடையே இசையோட்ட வேறுபாடு(intonation variation) உள்ளதனை ஒரே சொல்லைப் பிரித்துக் காட்டி உணர்த்துகிறார். இத்தகைய உத்தியைக் கி.ராவின் படைப்புகளில் அதிகமாகக் காணமுடிகிறது.\nஇரண்டு உயிரொலிகளுக்கு இடையில் வரும் சில மெய்யெழுத்துக்கள் மென்மையாக உச்சரிக்கப்படுவது தமிழ் உச்சரிப்பின் இயல்பு. பகல் என்ற சொல்லை உச்சரிக்கும் போது (pahal) என்று தான் உச்சரிப்போம். (pakal) என்று உச்சரிப்பதில்லை, வேகம் என்ற சொல்லை உச்சரிக்கும்போது (veekah)என்று தான் உச்சரிப்போம் (veekam) என்று உச்சரிக்க மாட்டோம். இது தமிழ் மொழியின் உச்சரிப்பு விதி. எழுதும்போது ககரம் போட்டு எழுதி விடுவோம். அதுவேறு. கி.ராவின் கட்டுரையிலிருந்து இதற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தரலாம்.\n‘சொல்லும்மா உன் அம்மா பாக்குறதுக்கு\nகுழந்தை பளிச்சென்று பதில் சொன்னது\nமக்கள் தமிழ் வாழ்க என்ற கட்டுரையில் இவ்வாறு எழுதியுள்ளார். (கி.ராஜநாராயணன் கட்டுரைகள் 2002 412) அழகாக என்ற சொல்லை அழஹ்ஹா என்று உச்சரிப்பிற்கேற்ப மாற்றி எழுதிப் புதுமையைப் புகுத்தியுள்ளார். இது ஓர் எடுத்துக்காட்டே. அவரது படைப்பு முழுவதும் தேடிப் பார்த்தால் இன்னும் இத்தகைய புதுமைகள் பல காணமுடியும்.\nமரபிலக்கணங்களில் சொல்லப்படாத சந்திவிதி யன்றை கி.ரா தம் படைப்புகளில் பயன்படுத்துகிறார். நிலைமொழி ஈற்றில் இரண்டாம் வேற்றுமையோ, நான்காம் வேற்றுமையோ இருக்க வருமொழி முதலில் க, ச, த, ப இடம் பெற்றால் இரண்டுக்கும் நடுவில் க, ச, த, ப மெய்யெழுத்து மிகும் என்பது சந்தி விதியாகும். லகரத்தை ஈறாகவுடைய நிலைமொழிக்குப் பின்னர் க, ச, த, ப ஒற்று மிகுவதில்லை. லகரவீற்று நிலைமொழியை அடுத்து வல்லொற்று மிகும் சந்தி விதியைக் கி.ரா தம் படைப்பு முழுவதும் பெரும்பாலும் பயன்படுத்துகிறார். சில எடுத்துக்காட்டுக்கள் (கோபல்லபுரத்து மக்கள்)\nஇந்த சந்திவிதி படைப்பாசிரியருக்கு எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. மலையாள மொழியின் தாக்கமாக இருக்கலாம் அல்லது பழைய ஓலைச் சுவடிகளில் பின்பற்றப்பட்ட சந்திவிதிகளாகவும் இருக்கலாம். இதனையே ஒரு நடையியல் உத்தியாக இருக்கட்டுமே என்றும் நினைத்திருக்கலாம்.\nஒரு சொல்லுக்கு இயல்பான அல்லது மரபு வழிப் பட்ட சொற்சேர்க்கைகள் உண்டு. இதனை ஆங்கிலத்தில் collocations என்று கூறுவர். இலக்கியம் சம்பந்தமான விவாதம் என்றோ உரையாடல் என்றோ கூறலாம். எடுத்துக்காட்டாக இலக்கிய அரட்டை என்று கூறுவதில்லை. இந்த சொற்சேர்க்கை விதிகளை மீறுவ தாகும். படைப்பாளிகள் இத்தகைய சொற்சேர்க்கை விதிகளை மாற்றிப் புதிய புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கிச் சொற்களைப் புதிய பொருளில் பயன் படுத்துவர். இந்த உத்தியை கி.ரா தம் படைப்புகளில் பெரிதும் கையாண்டுள்ளார். கள்ளம் என்ற சொல் கள்ளச்சந்தை, கள்ளச்சாராயம், கள்ளக்கடத்தல், கள்ளநோட்டு போன்ற சொற்களோடு இணைந்து சட்ட விரோதமான என்ற பொருளில் பயன்படுத்தப் படுகின்றது. கி.ரா கள்ளப்பசி என்ற சொல் சேர்க்கையைக் கையாளுகிறார். (வேதம் ப.46) சாயந்திரமாகிவிட்டால் வயிற்றில் ஒரு கள்ளப்பசி வரும் என்பது அவர் கையாண்டுள்ள வாக்கியம். இன்னொரு எடுத்துக் காட்டைக் காண்போம். கடலின் தலைமாட்டில் போய் அமர்ந்தோம் (வேதம். 47). மேற்கண்ட வாக்கியத்தில் தலைமாடு என்ற சொல் சற்று புதிய வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமாடு என்ற சொல்லின் பொருள் படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின் தலையிருக்கும் பகுதி என்பதாகும்.\nபெரும்பாலும் உயர்திணைப் பெயர்களோடே இச்சொல் வரும். கடலுக்கு ஏது தலையோ காலோ கடற்கரையைத் தான் கடலின் தலைமாடு என்று கி.ரா கூறுகிறார். அதாவது அச்சொல்லைப் புதிய பொருளில் கையாண்டுள்ளார். ராச்சாப்பாடுவரை பேச்சுக் கச்சேரிதான் (வேதம் 46) என்றொரு வாக்கியம். பொதுவாகக் கச்சேரி என்ற சொல் பாட்டுக்கச்சேரி, நாட்டியக்கச்சேரி போன்ற சொற்களோடுதான் வரும். பேசிப் பேசிப் பொழுதைப் போக்குவதைத்தான் கி.ரா பேச்சுக்கச்சேரி என்ற தொடரால் குறிக்கிறார்.\nகடைசியாக இன்னொரு உதாரணம். புதுவை மக்களின் சிநேக மனப்பான்மையைக் குறித்து விவரிக்கும் போது பழகப்பழக அவர்களிடம் அன்பு மினுங்கும் (வேதம் ப.53) என்றொரு தொடரைப் படைத்துள்ளார். தங்கம், இரும்பு போன்ற உலோகங்களே மினுங்கும் சக்தி படைத்தவை. காதில் கம்மல் மினுங்கிற்று, தண்ட வாளம் நிலவொளியில் மினுங்கியது போன்ற வாக்கியங் களில் இதனை அறிந்து கொள்ளலாம். அன்பு மினுங்கும் என்ற சொற்சேர்க்கை முற்றிலும் புதியது. வெளிப்படும் என்ற பொருளில் இது வந்துள்ளது. கி.ரா தமது படைப்புகளில் புதிய புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கியுள்ளார். இவை படைப்புக்கு அழகியல் சேர்ப்பதோடு மொழிக்கும் வளம் சேர்க்கின்றன.\nகி.ராவின் எழுத்தில் அடிக்கடிக் காணப்படும் ஓர் நடையியல் கூறாகச் சொலவடைகளைக் குறிப்பிடலாம். சொலவடைகளைச் சொலவம், சொலவாந்திரம் எனப் பல சொற்களால் குறிப்பிடுகிறார். தமிழ்ச் சொல வடைகள் குறித்து ஒரு பொருள் பொதிந்த கட்டுரையும் எழுதியுள்ளார் (2011, 59). சொலவடைகளைத் தனியே வைத்துப் பொருள் காண்பது அரிது என்றும் அவற்றைப் பனுவலில் வைத்துப் புரிந்து கொள்வது எளிதென்றும் அக்கட்டுரையில் விளக்குவார். கிராமங்களில் ஊழியம் செய்யும் தோழர்கள் அம்மக்களிடையே புழங்கும் சொலவடைகளை உடனடியாகத் திரட்ட வேண்டும் என்று தம் விருப்பத்தினையும் கி.ரா பதிவு செய்துள்ளார். சொலவடைகளுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்\n· எறைஞ்ச நாயக்கர் பெரிய நாயக்கர்\n· அடிச்ச ஏருக்கும் வார்த்த கூழுக்கும் சரி\n· அட்டமத்துச் சனி பிட்டத்துத் துணியையும் உரிந்து கொண்டது\n· ஒழைக்கிறவன் ஒரு கோடி ஒக்காந்து திங்கறவன் ஒம்பது கோடி\nபழமொழிகள், சொலவடைகள் போன்றவை பண்பாட்டுச் செல்வங்களாகத் (Cultural Resource) திகழ்கின்றன. அவை மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அத்தகைய பண்பாட்டுச் செல்வங்களைப் படைப்பாளிகள் பயன்படுத்திக் கொள்வதில் வியப்பேதும் இல்லை. அவற்றை அறிந்த மக்கள் அவற்றைப் படைப்பில் வாசிக்கும்போது திருப்தியைப் பெறுகின்றனர். பழைய தெரிந்த ஒன்றைப் புதிய சூழலில் பார்ப்பது ஒருவித வாசிப்பு இன்பத்தைக் கொடுக்கும். இந்த நடையியல் உத்தியை (Inter textuality) என்று குறிப்பிடுவர் நடையியல் ஆய்வாளர்கள். எழுத்தாளர் கி. ரா அவர்களும் இந்த உத்தியைத் தம் படைப்பில் வெற்றிகரமாகக் கையாண்டு உள்ளார்.\nஅவ்வாறே நாட்டார் வழக்காற்றுக் கதைகளையும் தேவைக்கேற்றாற்போல கதையோடு சேர்த்துப் புதினம் புனைவதையும் ஒரு நடையியல் உத்தியாகக் கையாள் கிறார். கி.ரா அண்மையில் எழுதிய வேதபுரத்தார்க்கு என்ற சுயசரிதைப் புதுநாவலில் பல கதைகளை இணைத் துள்ளதைக் காணமுடிகிறது. அந்தப் பாதையின் நிலா வெளிச்சத்தில் தான் நாங்கள் மூன்று பேரும் நடந்து போய்க் கொண்டிருந்தோம். மாரீஸ§ம், ராமசாமியும் ஒரு பாகத்துக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தார்கள் என்று கதை சொல்லும் போதே நிலவைப் பற்றிய ஒரு கதையைச் சேர்த்துவிடுகிறார். நிலவுக்குத் தேய்பிறை ஏன் ஏற்பட்டது என்ற வினாவோடு கதை சொல்லத் தொடங்குகிறார். இதுவும் ஓர் நடையியல் உத்தியே. கி.ராவின் தனி முத்திரையாக இதனைக் குறிப்பிடலாம்.\nவட்டார வழக்கில் புனைகதை படைக்கும்போது வட்டார வழக்குச் சொற்கள் ஏராளமாகப் பயின்றுவரும். கதை மாந்தரின் மொழியறிவைப் பிரதிபலிப்பதாகவே வட்டார வழக்குச் சொற்கள் அமைகின்றன. படைப்பாளிக்கு வட்டார வழக்குச் சொற்களுக்கு நிகரான பொதுச் சொற்கள் தெரிந்திருந்தாலும் நிலம் சார்ந்த மக்களின் மொழியோட்டத்தில் புதைந்துவிட்ட சொற்களோடு வெளிப்படும் அம்மக்களின் மொழிவழியே தான் அவர்களை முழுமையாகத் தரிசிக்க முடிகின்றது. கதையோட்டத்தைப் பூரணமாகப் புரிந்து கொள்வதற்கு வட்டார வழக்குச் சொற்கள் தடையாகக் கூட இருக்கலாம். இவற்றைத் தவிர்த்து எழுதலாமே என்று வாசகர்களை சிலர் ஆதங்கப்படலாம். இவை ஒரு பகுதியைச் சார்ந்த சொற்கள் என்று கூட குறை கூறலாம். ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் கி.ரா கவலைப் படவில்லை. ஒரு பழந்தமிழ்ப் பாடலை வாசித்துவிட்டு சில சொற்களுக்கும் பொருள் புரியவில்லையே என்று அதனைக் குறை கூறுகிறோமா இல்லையோ முயற்சி செய்து அதனைக் கற்று மகிழ்ந்து போற்றுகிறோ மன்றோ அவ்வாறுதான் வட்டார வழக்குச் சொற் களையும் கற்க வேண்டும். கரிசல் சீமையில் பயன் படுத்தப்படும் சொற்கள் நாவலுக்குப் புதுமை சேர்க்கின்றன. சில எடுத்துக்காட்டுக்கள்\nபோகணி: ஆளுக்கு ரண்டு போகணி மூணு போகணின்னு குடிச்சிட்டு (ப.10)\nகுலுக்கை: கம்மம்புல் எடுக்க குலுக்கைக்குள் இறங்குவதில்லை (ப.32)\nஎசலிப்பு: அச்சிந்த்தலுக்கும் கிட்டப்பனுக்கும் இடையில் இப்படி வெளியில்த் தெரியாத எசலிப்பு இருக்கிறது (ப.20)\nவாப்பாறுதல்: மூணு பேரையும் கொண்ணு தானும் செத்தான் என்று வாப்பாறினர் (ப.25)\nவாளித்தல்: கிட்டப்பன் களத்தில் பொலியை வாளித்துக் கொண்டிருந்தான் (ப.31)\nஅரணிப்பு: பருத்திச் செடிகளின் அரணிப்பு பார்த்துப் பார்த்து சந்தோஷப்படும்படியாக இருந்தது (ப.79)\nகி.ரா அவர்களே வட்டார வழக்குச் சொல்லகராதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். வட்டார வழக்குச் சொற்களைச் சரியாகப் புரிந்துகொள்ள விஸ்தாரமான ஒரு அகராதி தமிழில் இல்லாதது பெரிய்ய குறை என்றும் குறிப்பிடுகிறார். (கோபல்ல கிராமத்து மக்கள் ப.272)\nஒலிக்குறிப்புச் சொற்கள் சம்பவம் நடந்த இடத்திற்கே வாசகர்களை இட்டுச் செல்லும் ஆற்றல் படைத்தவை. அவை கண்ணாலும், காதாலும், மூக்காலும், காலாலும் உணரப்படுவது போலவே படைக்கப்படும் சொற்கள். அவையும் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும் தன்மை வாய்ந்தவை. படைப்பிலக்கியத்தில் பளிச்சென்று பொருள் உணர்த்தக் கூடியவை. கி.ரா தம் படைப்புகளில் ஏராளமான ஒலிக்குறிப்புச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.\nநெகு நெகு: அவள் உடம்பு அவன் பார்வையில் நெகு நெகு என்று பளபளத்து (ப.28)\nசக்கென்று: படுக்கப்போட்டு மேலே ஏறி சக்கென்று உட்கார்ந்து விட்டான் (ப.190)\nகசுபுசு: கசுபுசு கசுபுசு கசுபுசு என்று சன்னமான குரலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் (ப.170)\nமார்மார்: மார் மார்ண்ணு கத்தி சதசதண்ணு\nவட்டாரத்தில் காணப்படும் ஒலிக்குறிப்புச் சொற்களோடு ஆசிரியர் படைப்பு நோக்கி உருவாக்கிக் கொண்டே ஒலிக்குறிப்புச் சொற்கள் ஒருமுறை தோன்றி மறைவனவாக இருக்கலாம்.\nபடைப்பாளிகள் கதை சொல்கிற போக்கில் புதிய சொற்களைப் படைத்து மொழிக்கு வளம் சேர்ப்பர். கனிகளை உண்டு களித்த பறவைகள் தங்களை அறியாமலே விதைகளை எடுத்துச் சென்று தாவரங்களை விருத்தி செய்வதைப் போலவேதான் படைப்பாளிகளும். படைப்பாளிகள் படைத்த சொற்களில் சில நிலைபெற்று வழக்கில் பெருகும். சில சொற்கள் ஈசல் போல ஒரு முறை தோன்றி மறைந்துவிடும். கி.ராவின் படைப்பு களில் புதுப்புதுச் சொற்கள் வருவதைக் காணமுடிகின்றது. எடுத்துக்காட்டு\nஇட்லன்: இங்கிலாந்தைப் பிடிக்காம இந்த இட்லன் லேட்டாக்கிட்டே இருக்கானே\nஏரோப்பிளையம்: வெள்ளக்காரன் ஏரோப்பிளையம் கண்டுபிடிச்சதைப் (ப.199)\nஅசையாத்தனம்: கேப்டனுடைய மௌனம், அசையாத்தனம் மாலுமிகளுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது (ப.250)\nஒரு கட்டுரையில் கி.ரா எருமைப்பாலன் என்ற தொகைச் சொல்லைப் படைத்துள்ளார். அந்தச் சொல்லையும் அதன் பயன்பாட்டையும் அக்கட்டுரையி லிருந்து எடுத்துக் கீழே தருகிறோம்.\nகம்மாயில் கொண்டு போய் மாட்டை நீய விடுகிறதோ கழுவுறதோ, உண்ணிகளைப் பொறுக்கி அப்புறப்படுத்துகிறதோ தட்டித் தடவிக் கொடுக் கிறதோ அடேயப்பா அந்த விஷயத்தில் அவன் எருமைப்பாலன் தான் (கோபாலன் மாதிரி) (கரிசல் காட்டுக் கடுதாசி 2007 ப.124). எருமைப்பாலன் என்ற சொல்லைப் படைத்து எப்படிக் கையாண்டுள்ளார் பார்த்தீர்களா அந்த விஷயத்தில் அவன் எருமைப்பாலன் தான் (கோபாலன் மாதிரி) (கரிசல் காட்டுக் கடுதாசி 2007 ப.124). எருமைப்பாலன் என்ற சொல்லைப் படைத்து எப்படிக் கையாண்டுள்ளார் பார்த்தீர்களா அவரது எல்லாப் படைப்புகளிலும் இத்தகைய சொற்களைக் கண்டறியலாம் அல்லவா அவரது எல்லாப் படைப்புகளிலும் இத்தகைய சொற்களைக் கண்டறியலாம் அல்லவா கதை சொல்கிற வாக்கில் தெலுங்கு சொற்களையும் இடத்திற்குத் தகுந்தாற்போல பயன்படுத்திப் படைப்பில் வெற்றி காண்கிறார்.\nஅரிசியின் இந்த மணம் கொண்ட ருசிக்கு கம்மங்க என்று தெலுங்கில் சொல்லுவது, தமிழில் இந்த ருசிக்கு எப்படிப் பெயரிட என்று எனக்குத் தெரியவில்லை (கரிசல்காட்டுக் கடுதாசி ப.76)\nஅவரது படைப்பு முழுவதையும் ஒருங்கே வைத்து ஆராய்ந்தால் அவரது புதுமையான நடையியல் கூறுகளைக் கண்டறியலாம். தமிழ் வளர்ச்சிக்கு அவரது பங்கு மிகவும் மகத்தானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewforum.php?f=20&sid=97759f0c5176c46c6a4a494a5abf275e", "date_download": "2018-08-20T18:27:12Z", "digest": "sha1:5E6NPEVLRYW6WT2I74MZEUYWB4IMHDXQ", "length": 37250, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "சொந்தக்கவிதைகள் (Own Stanza ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசொந்தக்கவிதைகள் (Own Stanza )\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:13 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅவள் என் எழில் அழகி\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 10th, 2016, 11:26 am\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 6th, 2016, 12:36 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஅத்தன அழகையும் எங்க பதுக்கி வச்சிருக்க...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநீ காதலியில்லை என் தோழி\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 13th, 2016, 10:49 pm\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கவிப்புயல் இனியவன் » செப்டம்பர் 5th, 2016, 9:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=04eeedd66d958aa9bc3288cf6fa72519", "date_download": "2018-08-20T18:14:40Z", "digest": "sha1:RRVYLDXFFZLZH5YXPQ5PTXMSUS5DYNU7", "length": 42580, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=11164&page=1", "date_download": "2018-08-20T19:16:19Z", "digest": "sha1:GCPPAAY6BAJOKU5OLFH4AP5XK5LUCKKB", "length": 6848, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Dog Exhibition held in the USA: Dogs participation in more than 3000 fairy tales|அமெரிக்காவில் நடைபெற்ற நாய் கண்காட்சி : 3000க்கும் மேற்பட்ட விசித்திர தோற்றத்தில் நாய்கள் பங்கேற்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஅரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்\nசோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்\nஇரும்பு தொழிற்சாலையில் பைப் வெடித்து 2 பேர் சாவு\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி குரோம்பேட்டை மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nஅமெரிக்காவில் நடைபெற்ற நாய் கண்காட்சி : 3000க்கும் மேற்பட்ட விசித்திர தோற்றத்தில் நாய்கள் பங்கேற்பு\nஅமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில், பல்வேறு வகையான நாய்களை அவற்றின் உரிமையாளர்கள் பங்கேற்க செய்தனர்.அமெரிக்காவில் செயல்பட்டு வரும் Westminster Kennel Club dog ஆண்டுதோறும் நாய் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, 142வது கண்காட்சி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு, தாங்கள் செல்லமாக வளர்த்த நாய்களை கண்காட்சியில் பங்கேற்க செய்தனர்.\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஹஜ் யாத்திரைக்காக மெக்காவில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/latest-news", "date_download": "2018-08-20T18:25:05Z", "digest": "sha1:4REMUQADKUSEKGZF7US27E4QNR2Q5TLB", "length": 9613, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani: Latest News in Tamil | Online Tamil News | Live Tamil News", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2-ஆம் நாள் முடிவு: பதக்கப் பட்டியலில் 8-ஆவது இடத்தில் இந்தியா\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 2-ஆவது நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்கு\n3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்திய அணி இங்கிலாந்துக்கு 521 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.\nமுதல் இன்னிங்ஸில் தவறவிட்ட சதத்தை 2-ஆவது இன்னிங்ஸில் அடித்த கோலி\nஇங்கிலாந்துடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி சதமடித்தார்.\nசிறுமி அனுப்ரியாவுக்கு அன்புப் பரிசளித்த ஹீரோ சைக்கிள்ஸ்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கேரள வெள்ள நிதிக்கு அளித்த சிறுமி அனுப்ரியாவுக்கு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை சைக்கிளை பரிசளித்தது.\nதலைவர், பொருளாளர் தேர்தல் குறித்து ஆக.28 திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு: அன்பழகன் அறிவிப்பு\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க ஆக.28ல் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nவாஜ்பாய் இரங்கல் கூட்டத்தில் 65 ஆண்டுகால நட்பை நினைவுகூர்ந்த அத்வானி\n65 ஆண்டுகாலம் எங்களின் நட்பு நிலைத்தது என்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இரங்கல் கூட்டத்தில் அத்வானி உருக்கமாக பேசினார்.\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம்\nரஃபேல் போர் ரக விமான ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு அனில் அம்பானி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஎந்த எதிர்ப்புகளுக்கும் அஞ்சாதவர் வாஜ்பாய்: இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை\nமறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-க்கு, தில்லியில் அனைத்து கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nகேரளத்துக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணம்: விஜயகாந்த் அறிவிப்பு\nகேரளத்துக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தேமுதிக சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\n'வெள்ள மீட்பு சேவைக்கு பணம் வழங்கப்படும் என்பது வருத்தமளிக்கிறது, எங்களுக்கு பணம் வேண்டாம்' - கேரள மீனவர்கள் உருக்கம்\nவெள்ள மீட்பு சேவைக்கு பணம் வேண்டாம் என்று கேரள மீனவர்கள் தெரிவித்துள்ளது அம்மாநில மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/07/5_20.html", "date_download": "2018-08-20T18:37:00Z", "digest": "sha1:3JNPUUUXJ7K5SCOK4BM3LRXQQEFLJ7ZD", "length": 22040, "nlines": 103, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: சௌதி அரேபியா வரலாறு 5", "raw_content": "\nதிங்கள், 20 ஜூலை, 2015\nசௌதி அரேபியா வரலாறு 5\nஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் இப்ன் சௌதின் எட்டாவது மகனாவார். 1921 ல் ரியாதில் பிறந்த இவரின் தாயார் ஹஸ்ஸா அல் சுதைய்ரி ஆவார். அரச குடும்பத்தினர் படிப்பதற்காக இப்ன் சௌத் அவர்களால் துவக்கப்பட்ட பிரின்ஸ் பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி படித்தார். இவருக்கு ஷெய்க் அப்துல் கானி கயாத் அவர்கள் ஆசிரியராக இருந்தார். மார்க்கக்கல்வி பயில்வதற்காக மக்காவிலும் படித்தார். தாயாரின் அறிவுரையின் பேரில் அரச ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றார். 1945 ல் முதல்முறையாக அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு ஐக்கியநாட்டு சபையின் ஒரு தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்காகச் சென்றார். பின் 1953 ல் ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவிற்கு சௌத் குடும்பத்தின் சார்பாக இங்கிலாந்து சென்றார். நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சராக 1953 ல் பதவி பெற்றார். 1959 ல் லீக் ஆஃப் அராப் ஸ்டேட்ஸ் என்னும் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 1962 ல் சௌதியின் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது மொத்த அரபுநாடுகளின் தலைவராக எகிப்தில் 1965 ல் கலந்து கொண்டார். 1967 ல் துணைப் பிரதமராகப் பதவி பெற்றார். மன்னர் காலித் இறந்தபோது இவருக்கு இருந்த இரண்டு மூத்த சகோதரர்களான இளவரசர் நாசரும், இளவரசர் ஸாதும் மன்னராக போதிய தகுதி இல்லாத காரணத்தால் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் ஆட்சிக்கு வந்தார். ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் பட்டத்து இளவரசராக 1986 ல் அறிவிக்கப்பட்ட போது இருபுனித பள்ளிகளுக்கும் பாதுகாவலராக இருந்தார். 1979 ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக சௌதிக்கும் ஏதேனும் பாதிப்பு வருமோ என்று அச்சப்பட்ட ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 1982 ல் ஈரானுடனான போரின்போது சதாம் ஹுசெய்னுக்கு ஆதரவாக இருந்தார்.\nஃபஹ்த் எப்போதுமே ஐக்கியநாட்டுசபைக்கு ஆதரவாக இருந்தார். சௌதியின் மொத்த வருமானத்தில் 5.5. சதவீதத்தை சௌதி முன்னேற்ற நிதி அமைப்புக்கு கொடுத்து வந்தார். வெளி அமைப்புகளான போஸ்னியன் முஸ்லீம்கள், யூகோஸ்லாவ் போர், நிக்காராகாவன் ஆகியவற்றிற்கு மாதம் ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்து உதவினார். அமெரிக்க நட்பை பெரிதும் விரும்பினார். சௌதியின் இராணுவ விமான நிலையங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தார். 1988 ல் நியூக்ளியர் சக்திளைத் தாங்கிச் செல்லும் CSS-2 என்னும் ஏவுகணைகள் 60 வாங்கினார். அல்ஜீரியாவுக்கும், மொரோக்கோவுக்கும் இடையே சமாதானத் தூதுவராக செயல்பட்டார். குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின் போது எதிர்த்த அரபு நாடுகளுக்கு தலைமை தாங்கினார். சிரியா அதிபர் ஹஃபீஸ் அஸ்ஸாதுக்கும், எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கும் இடையே சிறப்பு ஒப்பந்தம் காண காரணமாய் இருந்தார். பல மில்லியன்களை மார்க்க விஷயங்களுக்காக செலவு செய்தார். பழைய இஸ்லாமிய கொள்கைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். மார்க்கத்துக்கென தனி போலீஸ் படையை நிர்மாணித்தார். ஷெய்க் அப்த் அல் இப்ன் பாஸி சௌதி இளைஞர்களை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மோசமான கலாச்சாரம் கொண்ட நாடுகளுக்குப் பயணிப்பதை எதிர்த்து வெளிப்படையாக பேசியதை ஆதரித்தார். 1990 ல் குவைத்தை சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக் படைகள் ஆக்கிரமித்தபோது ஈராக் படைகள் சௌதி குவைத் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தன. இதனால் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ், அமெரிக்கபடைகளை வரவழைத்து சௌதியின் எல்லையில் நிறுத்தினார். இதற்கு சௌதி அரேபிய மக்களிடமிருந்தும், அரச குடும்பத்தின் சுதைய்ரி சகோதரர்கள் ஏழு பேரும் எதிர்த்தார்கள். இவரது ஆட்சியிலும் அரச குடும்பத்தினர் ஆடம்பரமான செலவுகள் செய்தார்கள். மிகப் பெரிய இராணுவ செலவீனமாக 90 பில்லியன் டாலர்களுக்கு அல் யமாமாஹ் ஆயுத கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக சௌதி அரேபியாவின் மருத்துவமனை, சாலை, பள்ளிக்கூடங்களுக்கான கட்டுமானப் பணிகள் 1986 லிருந்து 1999 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.\nஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் தொடர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார். இவர் 60 வயதானபோது உடல் எடை கூடி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் பக்கவாதம் எனப்படும் உடலின் ஒரு பகுதி செயலிழந்தது. தடி ஊன்றியும், சக்கர நாற்காலியிலும் நடமாடினார். இவரின் அலுவலக நடவடிக்கைகளை இளவரசர் அப்துல்லாஹ் கவனித்துக் கொண்டார். இவரது மூத்த மகன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்த இளவரசர் ஃபைசல் பின் ஃபஹ்த் இறந்த போது ஸ்பெயின் இருந்தார். 2002 ல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை இவரின் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள் என்றும் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்பெயினில் கோஸ்டா டெல் சோல் என்ற இடத்தில் ஒரு அரண்மனை வைத்திருந்தார். 147 மீட்டர் நீளத்தில் இரண்டு நீச்சல்குளங்கள், பால்ரூம், உடற்பயிற்சிக்கூடம், திரைஅரங்கம், சிறிய தோட்டம், தீவிர கண்காணிப்பு கொண்ட மருத்துவமனை, நான்கு அமெரிக்க ஏவுகணைகள், இரண்டு இயக்க அறைகள் கொண்ட பிரமாண்டமான யாட் என்னும் சொகுசுக்கப்பல் வைத்திருந்தார். அதன் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 150 மில்லியன் டாலரில் சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருந்தார். லண்டனில் சூதாட்டம் தடை செய்திருந்த போது தனது ஹோட்டல் அறையிலிருந்து கள்ளத்தரகர்கள் மூலம் சூதாடி பல மில்லியன் டாலர்களை இழந்தார். இவர் பலமுறை திருமணம் செய்தவர். மனைவிகள் அல் அனூத், அல் ஜொவ்ஹரா ஆகியோர் இறந்து போனார்கள். மனைவிகள் ஜவ்ஸா, அல் ஜொவ்ஹரா, மோதி, ஜொஸாஃஅ, துர்ஃபா, வத்ஃபா, லொல்வா, ஷெய்கா, சீடா ஆகியோரை மணவிலக்கு அளித்திருந்தார். ஜனன் ஹர்ப் மட்டும் இறக்கும் வரை இருந்தார். இவருக்கு ஆறு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தார்கள். ரியாதின் கிங் ஃபைசல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 2005 ஆகஸ்டு மாதம் மரணமடைந்தார். இவர் எப்போதும் அணிந்திருக்கும் சிறப்பு அரபு அங்கியுடனேயே (தவ்ப்) அடக்கம் செய்யப்பட்டார். இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் மஸ்ஜிதுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மூத்த இமாம் ஷெய்க் அப்துல் அஜீஸ் அல் ஷெய்க் இறுதித் தொழுகை நடத்தப்பட்டது. இவரது இறுதித்தொழுகை நாடெங்கிலும் உள்ள மஸ்ஜிதுகளிலும் நடத்தப்பட்டது. உடல் மகன் அப்துல் அஜீஸால் இரண்டு கி.மீ தூரம் சுமக்கப்பட்டு அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சௌதி அரேபியாவின் கொடியில் இஸ்லாமிய ஷஹாதா பொறிக்கப்பட்டுள்ளதால் கொடி எப்போதும் அறைக் கம்பத்தில் வைக்கப்படாது. அனைத்து இஸ்லாமிய நாடுகளும் மௌனம் அனுசரித்தது. பல வெளிநாட்டு தலைவர்களும் அடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.\nஃபஹ்த் பின் அப்துல் அஜீஸுக்குப் பிறகு, 2005 ல் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இவர் இரு புனிதபள்ளிகளின் பாதுகாவலராகவும் இருந்தார். 1924 ல் ரியாதில் பிறந்த இவர் மன்னர் அப்துல் அஜீஸின் பத்தாவது மகனாவார். சௌத் குடும்பத்தின் நெடுநாள் பகையாளிகளான அல் ராஷித் குடும்பத்தைச் சேர்ந்த ஃபஹ்தா பின்த் அசி அல் ஷுயைய்ம் இவரது தாயார் ஆவார். இதனாலேயே இவர் அதிகாரம் பெற பல் ஆண்டுகள் ஆனதாக ஒரு பேச்சு உண்டு. பலமான ஷம்மர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தாயார் இவருக்கு ஆறு வயது ஆகும்போதே இறந்துவிட்டார். 1963 ல் சௌதியின் தேசிய பாதுகாப்புப்படையின் தளபதியாக இருந்தார். இதனால் இக்வான் படையை நிர்வகிக்கும் வாய்ப்பைப் பெற்று சௌத் குடும்பத்தின் முன்ணனிக்கு வந்தார். இந்த SANG எனப்படும் சௌதி தேசியபாதுகாப்புப்படை ஜனதிரிய்யா என்னும் கொண்டாட்டத்தின் போது கிராமிய நடனங்கள், ஒட்டகப்பந்தயம், பழங்குடியின பாரம்பரியம் ஆகியவற்றை நடத்தும். 1975 ல் மன்னர் காலிதால் துணைப்பிரதமராகவும் ஆக்கப்பட்டார். இதனால் சௌதியை ஆட்சிசெய்யும் முக்கிய மூன்று நபர்களில் ஒருவரானார். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட சௌதியின் இளவரசர்கள் இதை எதிர்த்தார்கள். மன்னர் ஃபஹ்த் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது நாட்டின் தலைமையை ஏற்றிருந்தார். 2001 ல் அமெரிக்கா அழைத்தபோது, அவர்கள் இஸ்ரேலுக்கு சாதகமாக இருந்ததால் புறக்கணித்தார். இஸ்ரேல் பாலஸ்தீன பெண்களின் மீது காட்டிய கொடூரத்தனத்தை கண்டனம் செய்தார். அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பிறகு, அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினார். 2005 ல் சௌதி அரேபியாவின் இளைஞர், இளைஞிகள் வெளிநாடுகளில் நான்காண்டு இருந்து படிக்க அனைத்துச் செலவுகளையும் அரசு ஏற்க நிதியளித்தார். இதனால் 25 நாடுகளில் 70,000 மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். பொதுமருத்துவ பரிசோதனைக்காக (மார்பு புற்றுநோய் பரிசோதனை உட்பட) 3 மில்லியன் ஹஜ் பயணிகளுக்கென செலவிட்டார். அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்தார். நோரா அல் ஃபயாஸ் என்னும் அமெரிக்காவில் படித்தவரை துணை கல்வி அமைச்சராக்கினார். தன் மைத்துனர் ஃபசல் பின் அப்துல்லாஹ்வை கல்வி அமைச்சராக்கினார். 2010 ல் உலமாக்களின் மூத்த குழுவை ஃபத்வா தீர்ப்பளிக்க அனுமதித்தார்.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 7:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசௌதி அரேபியா வரலாறு 1\nசௌதி அரேபியா வரலாறு 2\nசௌதி அரேபியா வரலாறு 3\nசௌதி அரேபியா வரலாறு 4\nசௌதி அரேபியா வரலாறு 5\nசௌதி அரேபியா வரலாறு 6\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=64762", "date_download": "2018-08-20T18:59:03Z", "digest": "sha1:BYFEXY5BQN3LCLYXRIREBRQPFYCT7CXG", "length": 1526, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஃபேஸ்புக் லைவ் செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை!", "raw_content": "\nஃபேஸ்புக் லைவ் செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை\nவியட்நாம் கடல் பகுதியில் நச்சுக் கழிவுகளைக் கொட்டிய தைவான் நிறுவனத்துக்கு எதிராக மீனவர்கள் பேரணியாகச் சென்றதை சூழலியர் ஆர்வலர் ஹோங்க் டக் பின்ஹ் (Hoang Duc Binh) என்பவர் ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார். இதையடுத்து, அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி அவருக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/01181612/1005010/Kadambur-Raju-Manimantapam-Sivanthi-Adithan.vpf", "date_download": "2018-08-20T18:45:09Z", "digest": "sha1:KX5VK7HGYZNRRG2HPWF5MXMCYIK32JTL", "length": 8514, "nlines": 75, "source_domain": "www.thanthitv.com", "title": "சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒரு சில வாரங்களில் நடைபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n* டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒரு சில வாரங்களில் நடைபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n* அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மாபெரும் சைக்கிள் பேரணி திருச்செந்தூரில் வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் இன்று நடைபெற்றது.\n* இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விரைவில் முதலமைச்சரின் அனுமதி பெற்று டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு ஒரு சில வாரங்களில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றார்.\nகிணற்றில் தவறி விழுந்த 3 காட்டுயானைகள் - யானைகளை மீட்கும் பணியில் வனத்துறை தீவிரம்\nகிணற்றில் தவறி விழுந்த 3 காட்டுயானைகள் - யானைகளை மீட்கும் பணியில் வனத்துறை தீவிரம்\nகோயிலில் தீ மிதித்த போது தவறி விழுந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை - வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் நேற்று தீ மிதித்த இருவர் கால்தவறி தீயில் விழுந்து காயமடைந்தனர்.\nஉபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவான கலைப்பூங்கா...\nஉபயோகமற்ற பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை வாபஸ்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வாபஸ் பெற்றுள்ளது.\nஅப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.\nபிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்\nசென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்\nமனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்\nகர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://universaltamil.com/category/food/?filter_by=popular", "date_download": "2018-08-20T18:53:09Z", "digest": "sha1:VV53ECULT2R6KHTU5WO3NWZ6JMYDNNWN", "length": 6320, "nlines": 130, "source_domain": "universaltamil.com", "title": "Food Archives – Leading Tamil News Website", "raw_content": "\n பெண் தானானு பாத்து வாங்குங்க…\nUBM HOTEL PERUNTHURAI – 25 வகையான அசைவ உணவு செம்ம வைரல் வீடியோ\nஇறம்புட்டான் பற்றிய அறிய வேண்டிய அரிய தகவல்கள் – Rambuttan\nநாவூரும் பீசா சாப்பிட போகிறீர்களா\nபுற்றுநோய் வராமல் தடுக்க இது அவசியம்\nடேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி\nமுட்டை பக்கோடா குழம்பு செய்வது எப்படி\nவீட்டில் செய்ய கூடிய சீஸ் ஸ்டிக்\nருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி\nகொளுத்தும் கோடை வெயில் குளுகுளு உணவுகள்\nமாம்பழ லட்டு செய்யத் தெரியுமா\nசிக்கன் நகட்ஸ் தயாரிப்பது எப்படி\nயூடியூபை கலக்கும் சமையல் பாட்டி\nவெஜிடேபிள் சக்கர சமோசா- நோன்பு பெருநாள் ஷ்பெஷல்\nயப்பானியர்கள் சாப்பிடும் உருசியான உணவுகள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_789.html", "date_download": "2018-08-20T18:57:46Z", "digest": "sha1:ZVENNHZ7TU433VV4BVGISHNOWW2XMXPT", "length": 19123, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ஆணாக மாறிய பெண்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ஆணாக மாறிய பெண்\nதென்கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்தவர் நடாலியா(38)என்பவர் ஊரில் உள்ளவர்களிடம் இருந்து 2 லட்சத்து 26 ஆயிரத்து 530 கடன் வாங்கி விட்டு கொடுக்கமுடியாது நின்றதுடன் கடன் கொடுத்தவர்களும் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்த அவர் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டார்.\nஆணாக மாறிய நடாலியாவின் தற்போதைய பெயர் ஆன்ட்ரியன் என்பதுடன் அசர் அந்த பெயரில் புதிய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளதுடன் மேலும் பலரிடம் தன்னுடைய புதிய பெயரை பயன்படுத்தி கடனையும் வாங்கியுள்ளார்.\nஇந்நிலையில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவான நடாலியாவை தேடிச் சென்ற பொலிசாருக்கு அப்படி ஒரு பெண்ணே இல்லை என்பதுடன் ஆன்ட்ரியன் என்ற ஆண் என்பவர் தான் இருக்கிறார் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\n அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆ...\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா வை எல் எஸ் ஹமீட்\nகடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kollywoodtoday.net/news/actress-vedhika-press-release/", "date_download": "2018-08-20T18:02:34Z", "digest": "sha1:BUYLWVRK6H5T5RXEUIAR5CNXVOFVYLT2", "length": 9025, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Actress Vedhika Press Release", "raw_content": "\nபரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். 2012 ல் வெளிவந்த ” த பாடி ” என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு 2013 ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் நல்ல புகழை தேடிதந்தது.\nபாலிவுட் படவாய்ப்பு குறித்து கேட்டபோது, இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார் வேதிகா.\nவேதிகா தேர்வு செய்யப்பட்டது குறித்து, நாடு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பல ஆடிஷன்களுக்கு பிறகு தங்களிடம் வேதிகா சிக்கியதாக கூறுகிறார் இயக்குனர் ஜித்து ஜோசப்.\nஅப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி கதாபாத்திரம் அவருக்கு அழகாக பொருந்துகிறது என்றும் இம்ரான்- வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்றும் இயக்குனர் கூறுகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் மும்பையில் தொடங்கியது, அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரீஷியசில் விரைவில் தொடங்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_14.html", "date_download": "2018-08-20T18:22:39Z", "digest": "sha1:S4KCO7FOXTT6I24UHRUSL7JH7O6BUQKB", "length": 6682, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மீனவர்களுக்கான விற்பனை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மீனவர்களுக்கான விற்பனை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது\nமீனவர்களுக்கான விற்பனை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது\nமட்டக்களப்பு பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மீனவர்களுக்கான சிற்றுண்டிசாலை மற்றும் விற்பனை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மாவட்டத்தில் பல வாழ்வாதார நிதி உதவி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது . இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கி வருகின்றது\nஇதன் கீழ் மாவட்ட செயலகத்தின் நிதி உதவியின் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்க மீனவர்களுக்கான சிற்றுண்டிசாலை மற்றும் விற்பனை நிலையம் பாலமீன்மடு இறங்குதுறை பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது .\nமாவட்ட அரசாங்க அதிர் எம் .உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார் .\nஇந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாலே ஆர் . நெடுஞ்செழியன் , மாவட்ட பொறியியலாளர் டி ,சுமன் மற்றும் பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்க தலைவர் ,செயலாளர் உட்பட பாலமீன்மடு – திராய்மடு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.revmuthal.com/2015/04/income-tax-online-easier.html", "date_download": "2018-08-20T18:03:03Z", "digest": "sha1:DIZJWGDJ7ZNKB6OBL4X537JLPXJ3G3BA", "length": 5925, "nlines": 71, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இனி வருமான வரி படிவங்களை போஸ்டில் அனுப்ப வேண்டாம்", "raw_content": "\nஇனி வருமான வரி படிவங்களை போஸ்டில் அனுப்ப வேண்டாம்\nகடந்த வருடம் வருமான வரி பதிவு செய்யம் போது யோசித்ததுண்டு.\nஇ-படிவங்கள் என்று தான் பெயர். ஆனால் எல்லாம் பதிவு செய்த பிறகு பிரிண்ட் எடுத்து போஸ்டில் அனுப்ப வேண்டி இருக்கிறதே என்று நினைத்ததுண்டு.\nஇது இ-படிவம் என்பதன் முழுப் பயனை அனுபவிக்க முடியாமல் தடுத்து இருந்தது.\nதற்போது வருமான வரித்துறை மாற்றி விட்டது. நல்ல முடிவு.\nஇனி இ-பைல் செய்த பிறகு போஸ்டில் அனுப்ப வேண்டாம்.\nஅதற்கு உங்களது ஆதார் எண்ணை வருமான வரி படிவத்தில் இணைக்க வேண்டும்.\nஉங்கள் ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணுக்கு OTP முறையில் ரகசிய குறியீடு அனுப்பப்படும்.\nஅதில் உள்ள குறியீட்டை டைப் செய்தால் வேலை முடிந்தது.\nபெருமளவு வேலை மிச்சம்ப்பா..கோடி புண்ணியம் வருமான வரி அதிகாரிகளுக்கு\nஆதார் தொடர்பாக கோர்ட் பல தீர்ப்புகள் வழங்கினாலும் அது இல்லாமல் இனி வேலைக்கு ஆகாது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/12102", "date_download": "2018-08-20T18:34:25Z", "digest": "sha1:LY7TYCLP2AMELAZCESC4MVFHGU4LAOY6", "length": 14216, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "“டபள் சான்ஸ்” மூலம் இரு வெற்றி வாய்ப்புகள் | Virakesari.lk", "raw_content": "\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nவிஸ்வமடு பகுதியில் தீபரவியதில் பல மரங்கள் எரிந்து நாசம்\nஅடையாளம் தவறியே வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ் பொலிஸார்\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\n“டபள் சான்ஸ்” மூலம் இரு வெற்றி வாய்ப்புகள்\n“டபள் சான்ஸ்” மூலம் இரு வெற்றி வாய்ப்புகள்\nஅபிவிருத்தி லொத்தர் சபையின் லக்கின அதிர்ஷ்டம் அறிமுகப்படுத்தும் “டபள் சான்ஸ்” புதிய சீட்டிழுப்பினூடாக அதற்குரிய லொத்தர் டிக்கெட்டினைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மென்மேலும் வெற்றி வாய்ப்புகளை அள்ளி வழங்க அபிவிருத்தி லொத்தர் சபையினர் தீர்மானித்துள்ளனர்.\nஏற்கனவே இலக்கின அதிர்ஷ்டம் சீட்டிழுப்பினூடாக வெல்லப்படும் பரிசுகளுக்கு மேலதிகமாக டபள் சான்ஸ் விஷேட சீட்டிழுப்பின் போது தெரிவு செய்யப்படும் இரண்டு இலக்கங்களைப் பொருந்தச் செய்தும் பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஇதன் அடிப்படையில் விஷேட சீட்டிழுப்பில் தெரிவு செய்யப்படும் ஒரு இலக்கத்திற்கு ரூபா 50 உம், இரண்டு இலக்கங்களுக்கு ரூபா 1,000 உம், உள்ளடங்கலாக அதிகளவிலான ரூபா 1,000 மற்றும் ரூபா 50 பணப்பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உண்டு என்பதனையும் அபிவிருத்தி லொத்தர் சபை அறியத் தருகின்றது.\nஇந்த சீட்டிழுப்பிலுள்ள விஷேட அம்சம் என்னவெனில், ஒருவர் முதலாவது சீட்டிழுப்பில் வெற்றி பெறும் அதேசமயம் டபள் சான்ஸ் எனப்படும் இரண்டாவது சீட்டிழுப்பிலும் வெற்றி பெற்றாரானால், சீடடிழுப்புகள் இரண்டுக்குமான இரண்டு பரிசுகளைப் பெற்றுப் கொள்ளும் வாய்ப்பு அவருக்குண்டு. இவ்வாறு புதிதாக அறிமுகப்படுத்தப்படும் டபள் சான்ஸ் லொத்தர் டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு பரிசுகளை அள்ளி வழங்குவதற்குத் தயாராயுள்ளதாக அபிவிருத்தி லொத்தர் சபை அறிவித்துள்ளது.\nஇந்த புதிய டிக்கெட்டின் முதல் சீட்டிழுப்பு 2016 இம் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிவப்பு நிற லக்கின அதிர்ஷ்டம் டிக்கெட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இந்த நிகழ்ச்சியினூடாக தொடர்ந்து 03 மாதங்களுக்கு ஏராளமான பணப்பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளுமுகமாகவும் அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.\nதொடர்ச்சியாக லொத்தர் டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்காக புதிய லொத்தர் ஒன்றினை வடிவமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே அபிவிருத்தி லொத்தர் சபை லக்கின அதிர்ஷ்டம் லொத்தரில் சில மாற்றங்களை ஏற்படுத்தி “டபள் சான்ஸ்” என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதனூடாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\nஇந்த புதிய சீட்டிழுப்பின் மூலம் அதிகதிகமான பலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அதிகதிகமான லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்து அவற்றுக்குக் கிடைக்கும் வழக்கமான பரிசு அல்லது “டபள் சான்ஸ்” ஊடாகக் கிடைக்கும் விஷேட பரிசுகளையும் பெற்றுக் கொள்ளுமாறு, லொத்தர் டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களிடம் அபிவிருத்தி லொத்தர் சபை கேட்டுக் கொள்கின்றது.\nஅபிவிருத்தி லொத்தர் சபை லக்கின அதிர்ஷ்டம் அறிமுகம் டபள் சான்ஸ் புதிய சீட்டிழுப்பு டிக்கெட் கொள்வனவு வாடிக்கையாளர் அபிவிருத்தி லொத்தர் சபை\nடெனாகா பார்கின் வாகன தரிப்பிட கட்டண சேவைக்கு பிரீமீ (FriMi) டிஜிட்டில் வங்கி தெரிவு\nதெற்கு ஆசியாவில் பாரிய வாகன தரிப்பிட முகாமைத்துவ நிறுவனமான டெனாகா கார் பார்க் தமது கொடுப்பனவு பங்காளராக இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வங்கியான பிரீமீ (FriMi) உடன் அண்மையில் கைகோர்த்துள்ளது.\n2018-08-20 15:42:26 டிஜிட்டல் வங்கி ஸ்மார்ட் சிட்டி டெனாகா பார்க்\nசுற்றாடலுக்கு சார்பான உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தயாராகும் கிறிஸ்ப்றோ\nகிறிஸ்ப்றோ 100 வீத சுற்றாடலுக்கு சார்பான (Go Green) செயற்பாடு ஊடாக தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.\n2018-08-20 15:09:47 கிறிஸ்ப்றோ உற்பத்தி கோழி உற்பத்தி\nஅறிமுகமாகி ஒரு மணி நேரத்தினுள் விற்பனையில் சாதனைபடைத்த nova3 series\nஉலகில் சமீபத்தில் அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ள மொபைல் தொலைபேசிச் சாதனமான Huawei nova3 series கடந்த வாரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று தனது முதலாவது விற்பனை தினத்தை நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தது.\n2018-08-17 15:47:35 மொபைல் தொலைபேசி விற்பனை வர்த்தகநாமம்\nஸ்ரீலங்கா டெலிகொம்மின் இலாபம் 13 வீதத்தால் அதிகரிப்பு\nஸ்ரீலங்கா டெலிகொம் PLC 2018 ஜுன் 30 ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாதத்திற்கான தனது குழும நிதி செயல்திறன் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.\n2018-08-17 14:10:40 டெலிகொம் பில்லியன் ஸ்ரீலங்கா\nமொபிடெல் கேஷ் பொனன்ஸா 2018 : காலியைச் சேர்ந்தவருக்கு 2 ஆவது Mercedes Benz\nஅனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜுலை மாத மொபிடெல் கேஷ் பொனான்ஸா அண்மையில் மாத்தறை நகரில் நடைபெற்றது.\n2018-08-17 10:41:06 வாடிக்கையாளர் பணப்பரிசு கொடுப்பனவு\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/05/29173128/1000425/IPL21MAY18.vpf", "date_download": "2018-08-20T18:47:44Z", "digest": "sha1:FWUBMC2FPS7K264ZWBBPAQB3LZ5N7H7V", "length": 5930, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐ.பி.எல் திருவிழா - 21.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.பி.எல் திருவிழா - 21.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 21.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 21.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\nவிளையாட்டு திருவிழா 20.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.\n\"சூப்பர் கில்லீஸ் உடன் ஒரு நாள்\" - 15-08-2018\nதமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முக்கிய அணியான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nவிளையாட்டு திருவிழா 03.08.2018 - தனி ஆளாக போராடிய கோலி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாங்க. பேட்ச் அவ்வளவு தான்னு எதிர்பார்த்த போது, தனி ஆளா நின்னு போராடினாரு கேப்டன் கோலி.\nவிளையாட்டு திருவிழா 02.08.2018 - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இங்கிலாந்து 287 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\nவிளையாட்டு திருவிழா 01.08.2018 - தூத்துக்குடி, திருச்சி இன்று பலப்பரீட்சை\nதூத்துக்குடி திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கின்றன .இந்த போட்டி திருச்சி அணிக்கு வாழ்வா சாவா போட்டி ஆக உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-08-20T18:25:54Z", "digest": "sha1:QX32AFOGT7FYXLBKR5EGXRMITI546RWX", "length": 4680, "nlines": 67, "source_domain": "dheivamurasu.org", "title": "திருவண்ணாமலை கார்த்திகைத்தீப வெண்பா | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » திருவண்ணாமலை கார்த்திகைத்தீப வெண்பா\nதிருவண்ணாமலை கார்த்திகைத்தீப வெண்பா(download pdf)\nமார்கழி பாராயண தொகுப்பு நூல்»\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nமுருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா\nமுருக பக்தி மாநாடு 2018 – இலங்கை – வாழ்த்துப்பா\n“அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்”\nதமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு , எட்டாம் குழாம் தொடக்கவிழா\nயோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16277-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T18:10:36Z", "digest": "sha1:2SE3EYYLX3R6KO6UXYXPR7MP5VG5LXOQ", "length": 14813, "nlines": 265, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்புகழ்அம்ருதம்", "raw_content": "\nஒருவரை யொருவர்தேறி அறிகிலர் மதவிசாரர்\nஉடலது சதமெனாடி களவுபொய் கொலைகளாடி\nவருமொரு வடிவமேவி யிருவினை கடலுளாடி\nமருவிய பரமஞான சிவகதி பெறுகநீறு\nதிரிபுர மெரியவேழ சிலைமத னெரியமூரல்\nதிருசரஸ் வதிமயேசு வரியிவர் தலைவரோத\nசுரர்பதி அயனுமாலு முறையிட அசுரர்கோடி\nசுககுற மகள்மணாள னெனமறை பலவுமோதி\nஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர்\nஒரு குண வழி உறாத பொறியாளர்\nஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் = ஒருவர் சொல்லுவதைமற்றொருவர் இன்னதென்று தெரிந்து அறிய மாட்டாதவர்களாகிய. மத விசாரர் = மத வாதிகள். ஓரு குண வழி உறாத பொறியாளர் = ஒரு கொள்கை வழியில் நிலைத்து நிற்காத குணத்தை உடையவர்கள்.\nஉடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி\nஉற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின்\nஉடல் அது சதம் என நாடி = இந்த உடல் நிலையானது என்று நினைத்து களவு பொய் கொலைகள் = களவும், பொய்யும், கொலையும் ஆடி உற = செய்து கொண்டு வர நமன் நரகில் வீழ்வர் = யம லோகத்து நரகத்தில் விழுவார்கள் அது போய் பின் = அந்த நிலை போன பின்னர்.\nவரும் ஒரு வடிவம் மேவி இரு வினை கடலுள் ஆடி\nமறைவர் இன அனைய கோலம் அது ஆக\nவரும் = ஏற்படும் ஒரு வடிவம் மேவி = வினையினால் வருகின்ற ஒரு உடம்பை எடுத்து இரு வினை கடலுள் ஆடி =நல்வினை, தீ வினை என்னும் இரு வினைகளாகிய கடலில் உளைந்து மறைவர் = மறைந்து போவார்கள் இன அனைய கோலம் அதுவாக = இத்தகையோரது வாழ்வு இப்படியாக\nமருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு\nவடிவுற அருளி பாதம் அருள்வாயே\nமருவிய = திருவருள் பொருந்திய பரம ஞான சிவகதி பெறுக =பரமஞான மயமான சிவகதியைப் பெற்று நீறு அருளி = திருநீற்றினை வடிவுற அருளி = நல்ல நிலையைப் பெற எனக்குநல்கி பாதம் அருள்வாயே = உனது திருவடியைத் தருவாயாக.\nதிரி புரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல்\nதிரு விழி அருள் மெய் ஞான குரு நாதா\nதிரிபுரம் எரிய = முப்புரங்கள் எரிந்து விழவும் வேழ சிலை =கரும்பு வில்லைக் கொண்ட மதன் எரிய = மன்மதன் எரிந்துவிழவும் மூரல் = புன் சிரிப்பாலும் திரு விழி = திருக்கண்ணாலும் அருள் மெயஞ் ஞான குரு நாதன் = அருள் புரிந்த மெய்ஞ்ஞான குரு நாதனும்.\nதிரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத\nதிரு நடனம் அருளு(ம்) நாதன் அருள் பாலா\nதிரு = இலக்குமி சரஸ்வதி = கலைமகள் மயேசுவரி = மகேஸ்வரி இவர் தலைவர் ஓத = இவர்களுடைய தலைவர்களான திருமால், பிரமன், உருத்திரன் என்றமும்மூர்த்திகளும் ஓதிப் போற்ற திரு நடம் அருளும் நாதன் =திரு நடனம் புரிபவனும் ஆகிய சிவ பெருமான். அருள் பாலா= அருளிய குழந்தையே.\nசுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி\nதுகள் எழ மெய் ஞான அயிலோனே\nசுரர் பதி = தேவர்கள் தலைவனான இந்திரனும் அயனும் மாலும் முறையிட = பிரமனும், திருமாலும் ஓலமிட அசுரர் கோடி துகள் எழ = அசுர கோடிகள் பொடியாகுமாறு விடும் =செலுத்திய மெய்ஞ்ஞான அயிலோனே = மெய்ஞ்ஞான வேலாயுதனே.\nசுக குற மகள் மணாளன் என மறை பலவும் ஓதி\nதொழ முது பழநி மேவு பெருமாளே.\nசுக = இன்பத்தைத் தரும் குற மகள் = குறமகள் வள்ளியின்மணாளன் = கணவன் என = என்று மறை பலவும் ஓதி தொழு= வேதங்கள் பலவும் போற்றிப் புகழ முது பழநி மேவு பெருமாளே = பழைய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.\nஒருவர் சொல்லுவதை மற்றொருவர் இன்னதென்று தேர்ந்து அறியாத சமய வாதிகள் நிலையாத மனத்தை உடையவர்கள், இவ்வுடல் நிலையானது என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்து மறைந்து போவர். பின்னர் மற்றொரு உருவத்தை அடைந்து, இருவினைக் கடலில் உளைந்து, மறைவர்.\nஇங்ஙனம் அடியேன் அலையாமல், திரிபுரங்களையும், மன்மதைனையும் எரித்தவரும், மெய்ஞ்ஞான குருநாதரும், இந்திரனும், பிரமனும், ருத்திரனும் போற்ற நடனம் செய்பவருமான சிவபெருமான் அருளிய குழந்தையே, இந்திரனும், பிரமனும், மாலும் ஓலமிட அசுரர்களைத் தூளாகச் செலுத்திய மெய்ஞ்ஞான வேலாயுதனே,வள்ளியின் கணவனே, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.\nஅ. சமய வாதிகள் .....\n• காதிமோதி வாதாடு நூல்கற்றிடுவோரும்...மாறிலாத மாகாலனூர்புக் கலைவாரே).............................................திருப்புகழ் (காதிமோதும்)\nஆ. உடலது சதமென நாடி ......\n(எரியெனக் கென்னும் புழுவோ எனக்கெனும் இந்த மண்ணும்\nசரியெனக் கென்னும் பருந்தோ எனக்கெனும் தான் புசிக்க\nநதியெனக் கென்னும் பூன்னாய் எனக்கெனும் இந்நாறுடலைப்\nபிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே)--- பட்டினத்தார்.\nபுரத்தை சிரித்து அழித்தார். மன்மதனைப் பார்த்து எரித்தார்.\n« திருப்புகழ்அம்ருதம் | திருப்புகழ்அம்ருதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17135-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T18:10:38Z", "digest": "sha1:G5IEXKYQRNVFZY7SQGCVH4ECR6F47P22", "length": 50226, "nlines": 311, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்புகழ்அம்ருதம்", "raw_content": "\nதாந்தன தானதன தாந்தன தானதன\nசாந்தமில் மோகவெரி காந்திய வாவனில\nசாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்\nஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு\nஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்\nகாந்தளி னானகர மான்தரு கானமயில்\nகாண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி\nவேந்தகு மாரகுக சேந்தம யூரவட\nவேண்டிய போதடியர் வேண்டிய போகமது\nசாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம்\nமூண்டு அவியாத சமய விரோத\nசாந்தம் இல் = மன அமைதி இல்லாத மோக எரி =காமம் என்னும் நெருப்பின். காந்தி = ஒளியையும். அவா அனிலம் = ஆசை என்னும் காற்றையும். மூண்டு = மும்மரமாகத் தோன்றி (பின்பு) அவியாத = அடங்காத. சமய விரோத = சமயப் பகைசம்பந்தமான.\nசாம் கலை வாரிதியை நீந்த ஒணாது உலகர்\nதாம் துணையாவர் என மடவார் மேல்\nசாம் கலை = அழிந்து போகின்ற கலை நூல். வாரிதியை = கடலையும். நீந்த ஒணாது = நீந்தமுடியாமல். உலகர் = உலகத்து மக்கள். தாம் துணை ஆவர் என = அவர்களே துணையாவர் எனக்கருதி. மடவார் மேல் = மாதர்கள் மேல் (மயக்கம்கொண்டு).\nஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு\nதோய்ந்து உருகா அறிவு தடுமாறி\nஏந்து = அவர்கள் தாங்கும். இள வார் = இளமைஉள்ளதும் கச்சு அணிந்ததும். முளரி = தாமரைமொட்டுப் போன்றதுமான கொங்கையிலும். சாந்துஅணி மார்பினொடு = சந்தனம் அணிந்த மார்பிலும். தோய்ந்து = படிந்து. உருகா = மனம் உருகி. அறிவு தடுமாறி = அறிவு தடுமாட்டம் கொண்டு.\nஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம்\nயான் தனி போய் விடுவது இயல்போ தான்\nஏங்கிட = திகைக்க. ஆருயிரை = என் அரிய உயிரைவாங்கிய = கவர வரும். காலன் வசம் = யமன்கையில் பட்டு. யான் = நான் தனி போய்விடுவது =தனியாகச் செல்வது (அ) அடியோன் அநாதை போல்துணை உற்றவனாய் போய் விடுவது. இயல்போ தான் = தகுதியோ தான்\n[யான் தனி போய் விடுவது\n(இந்நிலை வராமலிருக்க முருகன் திருவடிகளைச் சதா தியானிக்க வேண்டும்.\n1. காலன் உயிர் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ - ,\n2. சூலம் பிடித்து எம பாசம் சுழற்றி தொடர்ந்து வரும் கலன் தனக்கு ஒரு காலும் அஞ்சேன் ஆலம் குடித்த பெருமான் குமாரன் ஆறுமுகவன் வேலும் திருக் கையும் உண்டே மெய்த்துணையே ] [ ] நடராஜன்\nகாந்தளில் ஆன கர மான் தரு கான மயில்\nகாந்த விசாக சரவண வேளே\nகாந்தளில் ஆன = காந்தள் மலர் போன்ற கர மான் =திருக்கரங்களை உடையவளும் மான் தரு = மான்பெற்ற கான மயில் காந்த = காட்டு மயிலைப்போன்றவளுமாகிய (வள்ளியின்) காந்த = கணவனேமணவாளா விசாக = விசாகனே (அ) விசாக நாளில் அவதரித்தவனே சரவண =சரவணனே (அ)சரவணப் பொய்கையில் திரு உரு காட்டிய தெய்வமே வேளே = செவ்வேளே (அ) வீடு பேற்றில் விருப்பம் விளை விப்பவனே\nகாண் தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி\nஆள் தகையே இபம் மின் மணவாளா\nகாண் தகு = காணத் தக்க. தேவர் பதி = தேவர்கள்தலை நகரான அமராவதியை. ஆண்டவனே =ஆண்டவனே சுருதி ஆண் தகையே = வேதப்பொருளான நம்பியே (அ) வேதம் புகழும்ஆண்மையும் தகுதியும் அமைந்தவனே,இபம் மின் மணவாளா = யானை போற்றி வளர்த்ததேவசேனையின் மணவாளனே.\nவேந்த குமார குக சேந்த மயூர வட\nவேங்கட மா மலையில் உறைவோனே\nவேந்த = அரசனே குமார = குமரனே (அ) என்றும்பதினாறாக இருப்பவனே குக = குகனே (அ) உள்ளக்குகையில் விளங்குபவனே சேந்த = சேந்தனே மயூர = மயில் வாகனனே வட வேங்கட மா மலையில் உறைவோனே = தமிழ் நாட்டின் வட எல்லையில்திருவேங்கட மலையில் என்றும் எழுந்தருளிஇருப்பவனே\nவேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது\nவேண்ட வெறாது உதவு(ம்) பெருமாளே.\nவேண்டிய போது = புனித அடியார்கள் விரும்பும்போது வேண்டும் போதெல்லாம் வேண்டிய போகம் அது = (தங்களுக்கு) வேண்டிய சுகத்த வேண்ட =உன்னிடம் விண்ணப்பித்துக் கொள்ள வெறாது =வெறுப்புக் காட்டாமல் உதவு பெருமாளே = உதவுகின்ற பெருமாளே\nமன அமைதி இல்லாத காமம் என்ற தீ ஒளியையும், ஆசை என்ற காற்றையும்,\nவெகுவாகத் தோன்றிப் பின் அடங்காத சமய வாதங்களில் அழிந்து போகின்ற சாத்திர நூல் கடலையும், நீந்த முடியாமல் உலக மக்களே துணை எனக் கருதி,விலை மாதர்களின் இளமையிலும், கொங்கையிலும் மனம் உருகி, அறிவு தடுமாறி,நமன் என் உயிரைக் கவர்ந்து செல்ல வரும்போது நான் தனியாகச் செல்லுவது தகுதியோ\nகாந்த மலர் போன்ற கையை உடைய மான் பெற்ற வள்ளியின் கணவனே,\nயானை போற்றி வளர்த்த தேவசேனையின் மணவாளனே, வேந்தனே, குகனே, வடவேங்கட மலையில் உறைபவனே, வேண்டும் போதெல்லாம் வேண்டுவனவற்றை வெறுக்காமல் கொடுத்து உதவும் பெருமாளே. நான் துணை இன்றி யமனுடன் போதல் தகுமோ\nகுகஸ்ரீ இரசபதி அவர்களின் விளக்க உரை\nசெங்காந்தள் என்பது ஒரு வகை மலர். அது ஐந்து இதழ்களை உடையது. குளிர்ந்த அம்மலர் கொடை நடையைக் குறிப்பிடும். நிறம், வடிவு, தொழில் நிலையை எண்ணி அவைகள் திருமகள் திருக்கரம் போல்வன என்கிறோம். எவர் அருகர் எவற்கு ஈதல் வேண்டும் இப்படி மருண்டு நோக்கும் திருமகளாரை காந்தளிர் ஆன கர மான் என்று கருதுகிறோம். மானும் மயிலும் வனத்தில் இருப்பவை. ஆதலால் வள்ளியாரை மான்தரு கானமயில் என மனனம் செய்கிறோம். முதலில் முகுந்தர் கண்களில் இருந்து முளைத்தார். இடையில்\nசிவ முனிவர் விழியில் இருந்தார். இறுதியில் மான் வயிற்றிலிருந்து மலர்ந்தார். கந்தப் பரமா, அவர்க்கு நீர் காந்தர் ஆனீர் . கந்தனை அன்பு மயில் கவர்ந்தது. வாழ்விக்கும் காந்தன் அருளால் மயிலை வசீகரித்தான். இப்படி நயம் தோன்ற சொல்கிறார் நல்லோர்.\nவி = பறவை, சாகன் = ஊர்பவன். இதன் படி நீ ஒரு மயிலை ஊர்பவன். வலத்தில் ஒரு மயிலை வைத்தவன். விசாக நட்சத்திரத்தில் வெளிப்பட்டவன்\nஎன்று ஒரு பொருளும் உண்டு. இவைகளை எண்ணி விசாகா என\nகூறுகிறோம். ச = மங்களம், ர = கொடையாளன், வ = அமைதி, ண = மறம் வென்றோன். அதனுடன் திருவளர் பொய்கையில் திருமுகம் காட்டியவன் ஆகிய உன்னை சரவணா என்பது தான் சால்பு. வேளே நீ கரு வேளை நாண வைத்தோன் . முத்தி விருப்பூட்டும் முதல்வன் நீ தானே அத்தா விண்ணவர் முருகருக்கு பட்டம் சூட்டினர். இன்று முதல் எமது இறை நீ என்றனர். இது கந்த புராண செய்தி. இதன் படி தேவர்பதி, தேவர் சேனாதிபதி முதலிய திரு நாமங்கள் மா பெரும் வான் உலக மன்னன் ஆயினை. இதனால் உன்னை தேவர் பதி ஆண்டவனே என்று தெரிந்து கூவுகிறோம்.\nஓதலாம். ஓதி ஒடுங்லாம். அவ்வமயம் எங்கிருந்தோ பேரோசை எழுகிறது. ஓசை ஒலியாகிறது. நாதமாகி நயம் காட்டுகிறது. நாதத்தில் லயித்த போது எத்தனையோ நுட்பங்கள் விரைந்து செவியில் வந்து விழுகின்றன. செவியில் வந்து சேரும் செய்திகளை சுருதி என்று நாங்கள் சொல்லுகின்றோம். அவைகளால் தான் ஆண்மையும் தகு திறமுடைய, நலம் சிறந்த நம்பி என அறிகிறோம். சுருதி ஆண் தகை என்று சொல்லுகிறோம்.\nவான தேவர்கள் ஞான தேவியை என்றும் உன் இடத்தில் இருத்திளர்.\nபொன்னாய் மின்னும் அப்பூவையின் மணம் கண்டு மகிழும் நின்னை இபமின் மணவாளா என ஏத்துவோம். வள்ளியார் தமிழ் பேசுபவர். அவளின் காந்தன் என வட மொழியில் பெயர் ஏற்பார். பேசா வடமொழியை தேவயானையார் பேசுவார்.மணவாளா என்று விருது தமிழில் பெயர் ஏற்பார். பெரும, நின் ஆடலே ஆடல். ஒவ்வொரு உலகிற்கும் வேந்தர் ஒருவர் உளர். நீ எவ்வுலகிற்கும் ராஜா. ஆதலின்வேந்த என அடை மொழி கொடாமல் அழைக்கிறோம்.\nவித்திலிருந்து விளைவாகி பின் வீங்கி வெடிப்போர் பிறர். நீ புறத்தில்\nகுமரன். அகத்தில் குகன். காணுமாறு உன்னைக் காட்டுவை, கண்ட பின் அந்தப்புற சந்திப்பு உற்சவத்தில் அணுவற உயிர்களில் கலப்பை.\nஇவைகளை உணர்ந்தே குமரா, குகா என்று கூறி களிப்போம்.\nசேந்து என்பது சிவப்பு நிறம். செந்நிற மேனியன். செந்தழல் வண்ணன். போரொளிப் பிழம்பு எனப் பெறும் அத்தா நின்னை சேந்தா என விளித்து சிந்தை மகிழும். ஓம் மயில் ஊர்ந்தது முதல் நிலை. இந்திர மயிலில் ஏறியது இடை நிலை. சூர மயில் ஏறியது இறுதிச் செய்தி. இப்படி மும்மை மயிலில் ஊர்ந்து மூவகை உயிர்களுக்கும் அருள் புரி முதலாளியாம் உன்னை மயூரா என்று இடையறாது கூறும் எங்கள் வாய். திருமால் திருப்பதிகள் 108. அவைகளில் ஒன்று திருவேங்கடம். வடநாட்டு திருப்பதிகள் 12. அவைகளில் முதலாவது இது. ஆதலின் வட வேங்கடம் என்று திருவாய் மலர்வர் திருமாலடியர். வேம் = பாவம்,கடம் = எரித்தல் புகல் அடைந்தவரின் பாவத்தை போக்குவதால் இத்திருப்பதிக்கு திருவேங்கடம் எனப் பெயர். – வெல் கொடும் பவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் நங்கலம் பொருந்தும் சீர் வேங்கட மலையானது - என திருவேங்கட புராணம் புகலும். புரந்தரன்\nமகனாக மாதவன் மனைவிகளுடன் மகிழ்ந்து நின்றபோது மாலினி எனும் புலை மகளிடம் மயங்கினான். மனையைத் துறந்தான். மது அருந்தினான். புலால் புசித்தான். இறுதியில் வறியன் ஆனான். நோய் பல எய்தி நொந்தான். பித்தனாகி பிதற்றினான். படாத பாடு பல பட்டான். அலைந்து திரிந்தான். திருமலை அடைந்தான். தீவினை தீர்த்தான். மதி மலர்ந்தது. திருமாலை சேவித்தான். பரம பதம் எய்தினான் என்று புனித ஒரு வரலாற்றையும் அப்புராணம் புகலுகிறது. மற்றும் வேம் = அழிவின்மை, கடம் = பெரும் செல்வம். அழிவில்லா செல்வத்தை தன்னை அடைந்தோருக்கு அருளுவது ஆதலின் அம்மலைக்கு வேங்கடம் எனும் பெயர் விளைந்தது.இது வராக புராண அறிவிப்பு குன்றுதோராடிய குமரா, இப்படி எல்லாம் சிறக்க இருக்கும் வேங்கட மலையில் எழுந்தருளி இருக்கின்றாய். அதனால் உன்னை வடவேங்கட மாமலையில் உறைவோனே என வாழ்த்துகிறோம். கேட்ட பொருளியும் கேடில்லா தாதா நீ, ஆதலின் நின்னை அடியார்கள் நம்பி உள்ளனர். பொன் கேட்பார், பொருள் கேட்பார், அணி கோட்பார், எணி கோட்பார்., நிலம் கேட்பார், தோள் வலம் கேட்பார், மங்கை இவளை மணக்கச் செய், இங்ஙனம் எல்லாம் இம்மை தா, மறுமை தா, வீடு தா,வாழச் செய், பணியச் செய், ஓதச் செய், உருகச் செய், என்று யாது கேட்டபடியே இருப்பர் உத்தம சித்தரான உன் அடியார்கள். நீயும் சலிக்க மாட்டாய். என் அடியார்கள் தானே கேட்பவர்கள் என மகிழ்வை. ஓயாது\nஅவர்கட்கு உதவும் உன்னை வெறாது உதவும் பெருமாளே என்று அன்புக் குரல் கொடுத்து அழைப்போம். இது தான் முறை. இதற்கு மாறான செய்திகள் பல இருக்கின்றனவே. சொல்லவா பிரபு \nதிருவேங்கடம் எங்கள் சொத்து. மற்ற எச்சமயத்தாருக்கும் இங்கு இடம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள் வைணவர்கள். அறிவிலாதவரை மாடே என்று விளிப்பர் மக்கள்.\nஅந்த மாடு சிவனுக்கு வாகனம். அழிவு செய்வதால் அவன் பெயர் அரன் என்று ஆயது. அவன் இருப்பது வெள்ளி மலை அவன் பெயர் ஐந்தெழுத்தில் அடங்கும். ஏந்தினன் சூலம். எரி மேனியன் அவன். அப்பப்பா எவ்வளவு பயங்கரம். காண்பதும் நலம். குரல் கேட்பது புண்ணியம் என்று கருடனைக் கூறுவர். அந்த கருடன் எங்கள் பெருமாளுக்கு ஊர்தி. ஜலார்ணவராதலால் குளிர்ந்தவர் எங்கள் திருமால். அறிஞர் அவரை நாராயணர் என்று அழைப்பர். அவர் இருப்பது பயனே மிகுந்த பாற்கடல். எட்டு எழுத்துக்கு உரியன் எங்கள் எம்மான். அவர் ஏந்தியது தர்ம சக்கரம். அரன் நாராயணன் நாமம், ஆண்விடை புள் ஊர்தி, உறை நூல் மறை உறையும் கோயில் வரை நீர், கரும அழிப்பு அளிப்பு, கையது வேல் நேமி, உருவம் எரி கார் மேனி என்று இதை பக்குவமாக அங்கள் ஆழ்வார் பறை அளிக்கிறார். இப்போது தெரிகிறதா திருமானார் ஏற்றம் என்ன என்ற புது விருதை அவர்கள் புகல்கிறார்கள். யாரைப் பார்த்து ஐயா பேசுகிறீர் இப்படித் திரும்பும். திருப்பதியில் வில்வார்ச்சனை தினமும் நிகழ்கிறது. ஆதியில் அது சிவலாயம். அதை உங்கள் ஆழ்வார்கள் அறிவார்கள். - தாழ்சடையும் நீள்முடியும் பொன் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன்நாணும் தோன்று மால் சூழும் திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்தது - என்ற பக்குவமாக இணைத்துப் பாடி விட்டு போனார்கள்.\nராமானுஜர் செய்த திரிசனத்தால் எங்கள் சிவனார் இன்று திருமாலாக சேவை தருகிறார். இதை அறியாமல் உளறாதீர் என்று சதுரம் கட்டி உரைக்கிறார் சைவர். அவசரப்படாதீர்கள். வைஷ்ணவி, ஜனனி எனும் இரு சக்திகள் இங்கு எழுந்தருளிஇருக்கின்றனர். கர்ப்பக்கிரகத்தின் மதில் மேல் சிங்கங்கள் இருப்பது தெரிகிறதா வேங்கடேஸ்வரருக்கு அபிஷேகம் வெள்ளிக்கிழமை அவருக்கு சாத்தும் பரிவட்டம் 36 முழம் ( 18 + 18 ) இந்த அளவு இரு சக்திகளுக்குத் தான் உரியது. மேலும் அந்த ஆடையில் பச்சைக் கற்பூரம் பரிமளிக்கிறது. கண்ணிருந்தால் பாருங்கள். காது படைத்தவர் கேளுங்கள். இந்த அனுபவங்களுக்கு உரியவர் திருமாலா வேங்கடேஸ்வரருக்கு அபிஷேகம் வெள்ளிக்கிழமை அவருக்கு சாத்தும் பரிவட்டம் 36 முழம் ( 18 + 18 ) இந்த அளவு இரு சக்திகளுக்குத் தான் உரியது. மேலும் அந்த ஆடையில் பச்சைக் கற்பூரம் பரிமளிக்கிறது. கண்ணிருந்தால் பாருங்கள். காது படைத்தவர் கேளுங்கள். இந்த அனுபவங்களுக்கு உரியவர் திருமாலா எங்கள் தேவியா . அத் தேவியை பெருமாள் ஆக்கினாலும் தாய்மை சீறுவது இல்லை. அக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கிறாள் எங்கள் அம்பிகை என்று சாக்தேயர் வந்து சதுர் கச்சேரி செய்கிறார். நிறுத்துங்கள் உங்கள் பேச்சை. நான் செல்வதைக் கேளுங்கள். இது சுப்ரமண்ய ஸ்தலம் தான். இங்கு கௌமாரி எனும் சக்தி இருப்பதால் இது குமரன் கோயிலே என்பதில் தப்பில்லை. குன்றுதோறாடலில் இதுவும் ஒன்று. திருவேங்கடம் முருகன் தலம் என்று எங்கள் அருமை கந்த புராணம்\nஅறிவிக்கிறது. வேங்கட சுப்ரமண்யம் என்னும் மக்கள் வைத்துக் கொள்ளும் பெயரும் இதை வலியுருத்துகிறது. இங்கு குமார தாரை எனும் தீர்த்தம் இருக்கிறது. அபிஷேக ஆராதனை முறைகளும் அவன் முருகன் தான் என அறிவிக்கின்றன. குகனேரி என்பது அங்குள்ள சரவணத்தின் பெயர். அதைக் கோனேரி என திரித்து இது தான் புஷ்கரிணி என்கிறார்கள். என்று கொட்டு கொட்டு என்று பேச்சைக் கொட்டுகிறார்கள் கௌமாரர்கள். ஒரு கவிராயர் திருவே திகழ் மலை மேல் ஏறுகிறார். முருகா, குமரா, குகா என உரு ஏற்றியபடியே வருகிறார். சன்னதியைச் சார்ந்தார். பெருமாளை நோக்கினார். ஐயோ என அலறினார். - வட வேங்கட மலையில் வாழ் முருகா நித்தம் திடம் ஓங்கும் நின் சீர் தெரிந்தும் மடம் ஓங்க நாமத்தைச் சாத்தினார் நம்மையும் என் செய்வாரோ காமற்று இங்கு ஆரிருப்பார் காண் – என்று பதைத்துப் பாடினார். விரு விரு என்று மலை இறங்கி ஓடினார்.. என்ன கூத்து இது கருவில் இருந்தே திருவான தம் சமயத்தை தாம் உணர்ந்து அவைகள் அறிவித்த முறைகளை உணர்ந்து ,அனுஷ்டித்து படிக்கிரமமான அவைகளால் படி ஏறாமல் வீண் வாதி பிரதிவாதங்களில் தலையிட்டு மக்கள் வேதனை எய்துவதா கருவில் இருந்தே திருவான தம் சமயத்தை தாம் உணர்ந்து அவைகள் அறிவித்த முறைகளை உணர்ந்து ,அனுஷ்டித்து படிக்கிரமமான அவைகளால் படி ஏறாமல் வீண் வாதி பிரதிவாதங்களில் தலையிட்டு மக்கள் வேதனை எய்துவதா . என்ன சங்கடம் இது. எவையும் சகோதர சமயங்கள் என்று எண்ணாமல் ஒன்றதே பேரூர் வழி ஆறு\nஅதற்குள என்ற உண்மையை அச்சமய ஆச்சார்ரியர்களும் தம்\nகொள்கையவர்கட்கு சிறப்பாக சொல்லி மற்றவர்கட்கு பொதுவாகஎவ்வழிபாடும்\nநல்லதே என்ற அறிவித்திருப்பதையும் அறியாமல் தம் அறிவிற்கு தக்கபடி புனித நுட்பங்கட்கு பொருள் செய்து சாந்தத்தின் தனிப் பெரும் குறை சமய வாத பிரதி வாதங்களை வளர்த்து தம் சமய மோகாவேசத்தால் மூர்தண்டம் ஆகி, உள்ளம் நாற,உடல் வியர்க்க, கண்கள் சிவக்க, எம் சமய மக்கள் எத்தனை கோடியர் என்று ஆரவாரித்து தாமும் கெட்டு பிறர் அமைதிதையும் குலைத்துசாவது தான் சம்ரதாயமா\nசாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனில மூண்ட அவியாத சமய விரோத சாங்கலை வாரிதியை நீந்த ஒணாது உலகர் தாம் துணை ஆவர் என ஏமாந்து காய்ந்து , தீய்ந்து, கரிவது இயல்போ துரையே இந்த ஆரவார சந்தையில் ஆட்டம் போட்டு அதனுடன் ஏந்திளயாரின் இளம் குய நாச்சியர் காமக் கனலால் கண் அவிந்து கருத்து நைந்து கலங்குவது முறையோ எங்கள் இறையோனே இந்த ஆரவார சந்தையில் ஆட்டம் போட்டு அதனுடன் ஏந்திளயாரின் இளம் குய நாச்சியர் காமக் கனலால் கண் அவிந்து கருத்து நைந்து கலங்குவது முறையோ எங்கள் இறையோனே நீர் கான மயில் காந்தன்.வள்ளியோடு செய்த உன் வாத பிரதி வாதங்கள் அன்பும் அருளும் மோதிய அருமை நடை. இருமையில் அத் தேவியை அணைத்துக் கொண்டாய். நாங்களும் காந்தர். இது காந்திப் போகும் கயமைத் தனம். எங்கள் வாதங்கள் இருளும் மருளும் இணைந்த நிலை. பிணங்கி எவரும் பிரியும் நடை. நீரும் வள்ளியாரும் இறவா பிறவா சிவயோகத்தர். எங்கள் வாழ்க்கை பொய்மையில் பொன்றும் நிலை வாக்காலும், மனத்தாலும் காயத்தாலும் வம்பே எங்களில் வளர்ந்தது. வந்தேன் என்று காலன் வருவானே. செய்த பாவம் எல்லாம் அப்போது சிரிக்குமே. கட்டித் தழுவிய உறவினரும் கை விட ஊராரும் ஒதுக்கி விட அகதியாய் காலன் கையில் அகப்பட்டுக் கொள்வதோ நீர் கான மயில் காந்தன்.வள்ளியோடு செய்த உன் வாத பிரதி வாதங்கள் அன்பும் அருளும் மோதிய அருமை நடை. இருமையில் அத் தேவியை அணைத்துக் கொண்டாய். நாங்களும் காந்தர். இது காந்திப் போகும் கயமைத் தனம். எங்கள் வாதங்கள் இருளும் மருளும் இணைந்த நிலை. பிணங்கி எவரும் பிரியும் நடை. நீரும் வள்ளியாரும் இறவா பிறவா சிவயோகத்தர். எங்கள் வாழ்க்கை பொய்மையில் பொன்றும் நிலை வாக்காலும், மனத்தாலும் காயத்தாலும் வம்பே எங்களில் வளர்ந்தது. வந்தேன் என்று காலன் வருவானே. செய்த பாவம் எல்லாம் அப்போது சிரிக்குமே. கட்டித் தழுவிய உறவினரும் கை விட ஊராரும் ஒதுக்கி விட அகதியாய் காலன் கையில் அகப்பட்டுக் கொள்வதோ நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறதே.\nகாந்தா, விசாகா, சரவணா, வேளே, ஆண்டவனே, ஆண்தகையே, மணவாளா,சேந்தா, குமாரா, குகா மயூரா, வடவேங்கட மாமலையில் உறைவோனே, உதவும் பெருமாளே, என்னைக் காக்க நீ இருக்க அதுயேன் காலன் கை வசப்படுவது முறையோ வா ஐயா வந்து இந்த அகதியைக் கா ஐயா என்று கதறியபடி மக்கள் குறைகளை\nதம் மேல் ஏற்றி திருவாய் மலர்ந்த திருப்புகழ் இது\nபார்க்க ஸ்வாமி என்றால் குமார ஸ்வாமியே\nதிருப்பதி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கபிலேஸ்வரர் என்ற கோயில் உள்ளது. அங்கு ‘சுப்பிரமணிசுவாமிவாரு’ சன்னதி உள்ளது. அருணகிரியார் அவரைத்தான் ‘வடவேங்கட மாமலை மேவிய பெருமாளே’ என்கிறாறோ. ‘வடவேங்கடத்துள் உறைபவன் மருகன்’ என்று திருவாஞ்சியம் திருப்புகழில் சொல்வதின் மூலம் அப்படித்தான் எனத்தோன்றுகிறது\nஅக்டோபர் 2013ல் கிடைத்த செய்தி\n‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’‘எப்படி’ என்று கேட்டார் பெரியவர்.\n‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாகஇருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும்வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம்தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக்கடவுளல்லவா’என்றார் கி.வா.ஜ.. ‘சரி இதில் உன்னுடைய கருத்து என்ன’ –என்று கேட்டார் பெரியவர்.\n‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும்இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன்கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ.\nஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா\n‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப்படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி.அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது\nதிருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன்கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்குவாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்திக்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். ஒரு காலத்தில் திருப்பதி,தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின்,அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில்ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அதுஇருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும்சொல்வது பொருந்துகிறது’ என்றார்.\nபிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில்கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்றுபணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதைகி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார். கி.வா.ஜ.வுக்கோ ஒரேபரவசம்.\nஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின்பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதைஅவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்\nகி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள்இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றேநெசவாள கிராமம் ஒன்று உள்ளது. அவர்களுக்கும் காலம் காலமாகமுப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம்இருப்பதைக் கூறினார். உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள்பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்திஆறு தானே’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும்கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகேபுரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாகபெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிறகேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்:\n‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாகமாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும்,வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில்இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனேபெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம்.இது ஒரு கோணம்.\nஅடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம்ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன்.அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல்உள்ள ஆலயம் அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன்அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nதனி போய் விடுவது இயல்போ தான்....\nஉயிர் போம் அத் தனி வழிக்கே... கந்தர் அலங்காரம்\n« திருப்புகழ்அம்ருதம் | திருப்புகழ்அம்ருதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sltj.lk/category/branch/horapola-branch/", "date_download": "2018-08-20T18:46:41Z", "digest": "sha1:ADVWJ47DQOJDX42XSU6H3LEM2XTQTDNU", "length": 17822, "nlines": 277, "source_domain": "www.sltj.lk", "title": "ஹோறாப்பொள", "raw_content": "\nஅழைப்பு – ஆசிரியர் கருத்து\nSLTJ ஹோறாப்பொள கிளையின் பெருநாள் தொழுகை\nSLTJ ஹோறாப்பொள கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி ஒளிபரப்பு.\nகாலத்தின் தேவையை கருதி 18.06.2014 ஆம் திகதி குடிநீர் விநியோஹிக்கும் சபையில் ஒத்தியோஹத்தர்கலாகே கடமை புரியும் இரண்டு பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த\nSLTJ சார்பாக மாடாடுகமயில் பயான் நிகழ்ச்சி.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக 06.06.2014 அன்று சிறப்பு பயான் நிகழ்ச்சி மாடாடுகமயில் நடைபெற்றது. இதில்\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக தனிநபர் தஃவா.\nஅல்லாஹ்வினருளால் எமது கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தஃவா செயற்றிட்டங்களில் ஒன்றாக தனிநபர் தஃவா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக மடாடுகமையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி.\nஅல்லாஹ்வினருளால் எமது கிளை முன்னெடுத்து வருகின்ற தஃவா செயற்றிட்டங்களில் ஒன்றாக மடாடுகமையில் ஏற்பாடு செய்து நடாத்திய பெண்களுக்கான விஷேட பயான்\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாசப் புத்தகம் வழங்கள்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக ஏழை மாணவி ஒருவருக்கு இலவச அப்பியாசப் புத்தகம் கிளை தலைவர்\nSLTJ ஹோராப்பொல கிளையின் பெண்கள் பயான்.\nஅல்லாஹ்வின் மாபெரும் அருளால் விமர்சனங்களைத் தாண்டி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத், ஹோராபொள கிளையில் 2014.04.05 நடைபெற்ற பெண்களுக்கான\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.\nஅல்லாஹ்வினருளால் கடும் விமர்ச்சனக்களுக்கு மத்தியிலும் SLTJ ஹோராப்பொல கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ. ஜெய்ரூஸ் தவ்ஹீதி யினால்\nSLTJ ஹோராப்பொல கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி.\nஅல்லாஹ்வினருளால் o3.04.2014 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் ஹோராப்பொல கிளையில் நடைபெற்ற பெண்களுக்கான பிக்ஹு வகுப்பில் “பாங்கும்\nSLTJ ஹோராப்பொல கிளையின் அங்கவீனவர்களுக்கான மனித நேயப்பணி.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக கடந்த 01.04.2014 அன்று கெக்கிராவை, மஹ எலகமுவ என்ற இடத்தில்\nLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கள்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக கடந்த 01.04.2014 அன்று ஏழை மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள்\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாப் புத்தகம் வழங்கள்.\nSLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற சமூக சேவைத் திட்டங்களில் 2014.03.31 ம் திகதி கிளை த’வா நிலையத்தில்\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக கடந்த 31.03.2014 அன்று மழைத் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில்\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச ஆடை விநியோகம்.\nSLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற சமூக சேவைத் திட்டங்களில் 2014.03.27 ம் திகதி கிளை த’வா நிலையத்தில்\nSLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச ஆடை விநியோகம்.\nSLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற சமூக சேவைத் திட்டங்களில் 2014.03.27 ம் திகதி கிளை த’வா நிலையத்தில்\nசிட்டி கிளை – கண்டி (2)\nSLTJ மட்டக்களப்பு மாவட்டம் (167)\nSLTJ திருகோணமலை மாவட்டம் (23)\nSLTJ குருநாகல் மாவட்டம் (27)\nSLTJ அனுராதபுர மாவட்டம் (19)\nSLTJ அம்பாறை மாவட்டம் (224)\nSLTJ புத்தளம் மாவட்டம் (134)\nSLTJ களுத்தரை மாவட்டம் (117)\nSLTJ கண்டி மாவட்டம் (113)\nSLTJ கொழும்பு மாவட்டம் (162)\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்\nஇரவு நேர நற்சிந்தனை – “அல்லாஹ்வின் அருட்கொடைகள்”\nஆண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_804.html", "date_download": "2018-08-20T18:46:01Z", "digest": "sha1:7LX5XBWKE6W7EQQXZ67N6Z5GUAG2FX5E", "length": 6464, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரபல பாதாள உலகக் குழு தலைவரின் மனைவி கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரபல பாதாள உலகக் குழு தலைவரின் மனைவி கைது\nபிரபல பாதாள உலகக் குழு தலைவரின் மனைவி கைது\nபாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகம்பஹா காவல்துறை அதிகாரிகள் நேற்று அவரின் இல்லத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, அவரின் இல்லத்திலிருந்து 9மில்லி மீற்றர் ரக கைக்குண்டுகள் 46 மற்றும் கைத்துப்பாக்கி உற்பத்தி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ஆங்கில மொழி புத்தகம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, கைதுசெய்யப்பட்ட அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், காவல்துறை பாதுகாப்பில் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.\nபாதாள உலகக் குழு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள ஒஸ்மன் குணசேகர தற்போது வெளிநாட்டில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/boralesgamuwa/other-education", "date_download": "2018-08-20T19:02:34Z", "digest": "sha1:SHEWPS3AQ7H57ODJ5OFTZEF55ZNTMUT6", "length": 3806, "nlines": 87, "source_domain": "ikman.lk", "title": "பொரலஸ்கமுவ யில் இதர கல்வி விளம்பரங்களிற்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nபொரலஸ்கமுவ உள் இதர கல்வி\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naangamthoon.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-20T18:46:46Z", "digest": "sha1:IEZ53X44QR7LNOSI2LUTLT7GTCXWVZSM", "length": 6768, "nlines": 102, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news பள்ளி வேன் விபத்து; 2 குழந்தைகள் சேற்றில் சிக்கி பலி", "raw_content": "\nபள்ளி வேன் விபத்து; 2 குழந்தைகள் சேற்றில் சிக்கி பலி\nபள்ளி வேன் விபத்து; 2 குழந்தைகள் சேற்றில் சிக்கி பலி\nகேரளாவில் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 6 குழந்தைகள் மற்றும் ஒரு ஆயா ஆகியோர் பள்ளி முடிந்ததும், பள்ளி வேனில் ஏறி சென்றனர். வேனை அனில்குமார் என்பவர் ஓட்டினார்.\nசிறிதுதூரம் சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பகவதியம்மன் கோவில் குளத்தில் பாய்ந்தது. சேறு நிறைந்த அந்த குளத்தில் சிக்கி ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் பலியானார்கள்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.\nதமிழக அரசு தரப்பில் காவல் துறையினருக்கு அச்சுறுத்தல்: பொன்.ராதா\nகுழாய் மூலம் வீடுகளுக்கு காஸ் விநியோகிக்கும் திட்டம்…. சென்னையில் அறிமுகம்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nவெஜிடபிள் கைமா இட்லி ரெசிபி \nதீபாவளி ஸ்பெஷல் – காராச்சேவு எப்படிச் செய்வது \nசுவையான இனிப்பு சீடை – தீபாவளி ஸ்பெஷல்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி.,கைது செய்ய சி.பி.ஐ. நோட்டீஸ்\nஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்\nசிம்பிளான பேபி கார்ன் மஞ்சூரியன் ரெசிபி\nஆசிய விளையாட்டு போட்டி:சாய்னா நேவால் கால் இறுதியில் தோல்வி\nகடற்படை விமான தளத்தில் கொச்சி விமான சேவை மீண்டும் இயக்கம்\nதுருக்கிஅமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இறுதி விசாரணை:ஓரு வாரத்தில்…\nநடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு\nபுதிய உச்சத்தினை தொட்ட சென்செக்ஸ், நிப்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வரும் டாப்சி\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3167-IYER-AAPATHSTHAMBA-SOOTHRAM-AMAVASYA-SANKRAMANA-THARPANA-VILAKKAM-YAJUR-VEDAM", "date_download": "2018-08-20T18:09:13Z", "digest": "sha1:MF6PZEMTRYDXWYPFTAFQRQSCGBFZXKAL", "length": 28183, "nlines": 284, "source_domain": "www.brahminsnet.com", "title": "IYER AAPATHSTHAMBA SOOTHRAM AMAVASYA/SANKRAMANA THARPANA VILAKKAM YAJUR VEDAM", "raw_content": "\nயஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம்\n. காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.\nஅமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.\nஇரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.\nஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.\nமமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்\nஅபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச\nயோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே\nஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..\nநாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள\n(பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம்\nவசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம்\nசொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே\nகையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.\nபூணல் இடம்: தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும் .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா\nஅதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.\nஅபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:\nபூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)\nஅபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.\nபூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”\nஅஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்…………கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.\nமற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………\n(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்\nஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.\nஎன்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.\nவர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும். இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.\n1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா\nமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \\\nமாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை\nகோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;\nகோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.\nமாதா மஹ வர்க்கம் தர்பணம்:\n1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\n……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\n……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.\nஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\nஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத\nநமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின்\nலோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.\nஇதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.\nஉத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு.\nஅல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.\nபவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,\nயேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத\nஎன்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.\nஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956 ல் வெளி யிட பட்ட து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7486-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T18:09:14Z", "digest": "sha1:ETDK4TQ5RZVJIEZOLH2ETHMZQK6E4JX3", "length": 13805, "nlines": 236, "source_domain": "www.brahminsnet.com", "title": "வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்", "raw_content": "\nThread: வடமொழியில் ஐம்பெருங் காவியங்கள்\nதமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் ஐந்து நூல்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறன. வடமொழியிலும் இதைப் போல முக்கியமாக பஞ்ச மகா காவியங்கள் என்று ஐந்து பெருங்காவியங்களை சொல்வர்.\nகுமாரசம்பவம், ரகுவம்சம் ஆகிய காளிதாசனின் படைப்புகள், பாரவியின் கிராதார்ஜுநீயம், மாகரின்சிசுபாலவதம், ஸ்ரீஹர்ஷரின் நைஷதசரிதம் ஆகியவையே அந்த ஐம்பெருங்காப்பியங்கள். சமஸ்க்ருதம் கற்கும்பொழுது மேலே குறிப்பிட்ட காவியங்களை இதே வரிசையில் பயில சொல்வார்கள்.\nஇந்த பஞ்ச மகா காவியங்கள் குறித்து ஸ்லோகம ஒன்றும் உண்டு…\nத்³வே க்ருதீ ப்ரக்ருதே: பும்ஸோ த்³வே சைகமுப⁴யோரபி|\nபஞ்சஸ்வேதேஷு பாண்டி³த்யம் புருஷார்தோ² ஹி பஞ்சம:||\nத்³வே க்ருதீ ப்ரக்ருதே – இரண்டு மகாகாவியங்கள் (ரகுவம்சம், குமாரசம்பவம்) பிரகிருதி தத்துவத்துக்கானது\nத்³வே பும்சா: – இரண்டு மகாகாவியங்கள் (கிராதார்ஜுநீயம், சிசுபாலவதம்) புருஷ தத்துவத்துக்கானது\nஏகம் ச உப⁴யோரபி – ஒரு மகா காவியம் இரண்டு தத்துவங்களுக்குமானது\nஇவ்வைந்தையும் கற்றுக் கொள்வதால் பெறும் அறிவு வாழ்வின் பொருளான அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்குக்கு ஈடான ஒரு பொருளை ஐந்தாவதாக கண்டு அடைந்ததாக ஆகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் சாராம்சம்.\nநைஷதசரிதம் வரை கற்ற ஒருவரை மகாமகோபாத்யாயர் என்ற விருதினை பெறுவதற்கு தகுதியானவராக கருதுவர். இந்த காவியங்களை விட மிகவும் கடுமையான எளிதில் புரிந்து கொள்ள முடியாத காவியங்களும் சமஸ்க்ருதத்தில் இருந்தாலும் பஞ்ச மாகா காவியங்கள் என்று இவற்றை சொல்வது ஏன் என்று பார்ப்போம்.\nஒரு காவியத்தை மகா காவியம் என்று சொல்வதற்கு உரிய இலக்கணத்தை அலங்கார சாத்திரம் என்கிற நூல் வகுக்கிறது. அலங்கார சாத்திரத்தில் சமஸ்க்ருத காவியங்களை பொதுவாக இரண்டு பெரும் வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன, ஸ்ரவ்யகாவியங்கள் (கேட்டு ஆனந்தப் படக்கூடியவை), திருஸ்ய காவியங்கள் (நாடகமாக பார்த்து ரசிக்கத் தக்கவை).\nஸ்ரவ்ய காவியங்களை மேலும் மூன்று பிரிவாக பிரிக்கப் படுகிறது. அவையாவன கத்ய காவியங்கள் (உரை நடை வடிவில் உள்ளவை), பத்ய காவியங்கள் (கவிதைகள்), சம்பு காவியங்கள் (கவிதைகளும் உரைநடையும் இணைந்தவை).\nஇவற்றில் பத்ய காவியங்கள் மேலும் பல வகையாக பிரிக்கப் படுகின்றன. அவையாவன மகா காவியங்கள், கண்ட காவியங்கள், லகு காவியங்கள் ஆகும். ஆகவே மகா காவியங்கள் என்று சொல்லப் படுபவை கவிதை வடிவில் பத்ய காவியங்களாக இருக்கும். மகா காவியங்கள் எப்படி இருக்கும் அவற்றின் லக்ஷணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.\n• ஒரு மகாகாவியம் பல சர்க்கம் (அத்தியாயம்) கொண்டதாக பிரிக்கப் பட்டிருக்க வேண்டும்.\n• அப்பெருங்காவியத்தின் தலைவன் பெரும் வீரனாக அதாவது தெய்வமாகவோ, வீரம் செறிந்த க்ஷத்ரீயனாகவோ இருக்க வேண்டும். சில சமயங்களில் சங்கிலி தொடராக பல அரசர்கள் ரகு வம்சம் போன்ற காவியங்களில் பாடப் படுவதும் உண்டு.\n• ஒவ்வொரு சர்க்கத்திலும் கவிதையின் சந்தம் வெவ்வேறு விதமாக மாற்றப் படுவது சிறப்பு.\n• நவரசங்களில் சொல்லப் படும் காதல் (சிருங்காரம்), வீரம் ஆகியவையே பெரும்பாலும் மகா காவியங்களில் முக்கியமானதாக இடம்பெற வேண்டும். புத்த சரிதம் போன்ற மகாகாவியங்களில் சாந்த ரசமும் இடம் பெறுவது உண்டு.\n• சந்திரன் அல்லது சூரிய உதயம், இரவு, மாலை, படையெடுப்பு போன்ற பதினெட்டு வகையான காட்சிகள் இடம் பெறுவது சிறப்பு.\n• இப்பெருங்காவியங்களின் பாடுபொருள் இதிகாசங்களான ராமாயணம் அல்லது மகா பாரதத்திலிருந்தோ அல்லது பெருஞ்செயல் புரிந்த மாமனிதனின் கதையாகவோ இருப்பது சிறப்பு.\nஇவ்வாறு குறிப்பிடப்படும் இலக்கணத்தின் அனைத்து அம்சங்களையும் முன் சொன்ன ஐம்பெருங் காப்பியங்கள் சிறப்பாக தன்னிடத்தே கொண்டுள்ளன. ஆகையால் தான் அவை பஞ்ச மகா காவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.\n[நன்றி: பாரதீய வித்வத் பரிஷத் குழுமம்]\n ரிலாக்ஸ் ப்ளீஸ்… (சம்ஸ்க்ருதத்தில்) | லகு நிபந்தாவளி-தாமரை »\nஅடை, அத்தி, எப்படி, கவிதை, சிறப்பு, மனிதனின், மொழி, ராம, ராமா, color, link\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9A-2/", "date_download": "2018-08-20T19:05:13Z", "digest": "sha1:KSJ47FM3HGHWQP62VFBOX73OHCLC6BG4", "length": 6448, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி\nமுன்பெல்லாம் நம் முன்னோர் வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருப்பார்கள். இதுவே ஒரு நச்சு நீக்கும் வழிமுறைதான். இந்த அவசர காலகட்டத்தில் விரதம் இருக்க யாருக்கும் நேரம் இல்லை. எங்கே பார்த்தாலும் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம்தான். மசாலா பொருட்களையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்கிறோம்.\nஇப்படி சமச்சீர் இல்லாத உணவுப்பொருட்களை உண்பதால்தான் தேவையில்லாத பொருட்களெல்லாம் நம் உடம்பில் சேர்ந்து நச்சாக மாறிவிடுகிறது. இந்த நச்சுக்கள் முதலில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன. பிறகு, நச்சுக்களின் வகைக்கு ஏற்ப நோய்களாக நம் உடலில் உருவாக ஆரம்பிக்கின்றன.\nநம் உடலில் சேரும் தேவையில்லாத நச்சுக்களை கரைக்கும் தன்மை காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் உண்டு. சிட்ரஸ் பழங்களில் குறிப்பாக ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சையில் இருக்கும் சிட்ரஸ்பெக்டின் என்ற பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. மாதுளம் பழத்திற்கு புண்களை குணமாக்கும் தன்மையும் பப்பாளிக்கு அல்சரை குணமாக்கும் தன்மையும் உண்டு.\nபழங்களின் ராஜா என்று சொல்லப்படும் வில்வபழம், எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய் போன்றவற்றிற்கு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை அதிகம். குளோரோஃபில் அதிகமுள்ள பச்சை காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரைவேக்காடு வேகவைத்த கீரைகள், சிறிய வெங்காயம், கத்தரிக்காய், பாகற்காய் போன்ற போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவழக்கமாக குடிக்கும் டீயில் பால், சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து சாப்பிடலாம். அருகம்புல் கஷாயம், பால் கலக்காத டீ இந்த இரண்டும் உடலில் சேர்ந்துவிடும் தேவையில்லாதவற்றை நீக்கும் குணம் கொண்டவை. வெற்றிலை போடுவதும்கூட இதற்கு சிறந்த முறைதான். எப்போதும் நாம் சாப்பிட்ட பிறகுதான் பழங்களை எடுத்துக்கொள்வோம்.\nஆனால் சாப்பிடுவதற்கு முன்புதான் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் நச்சுக்களை சேராமல் தடுக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2015/06/1_16.html", "date_download": "2018-08-20T18:38:20Z", "digest": "sha1:KRYKD7QFS2WPW4MIW5VJKM52K7FXOJLF", "length": 22340, "nlines": 105, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: மன்னரும், போரும் 1", "raw_content": "\nசெவ்வாய், 16 ஜூன், 2015\nசரித்திரங்களைப் படித்து விட்டு முஸ்லீம் மன்னர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்களா என்று நினைக்க வேண்டாம். கிரேக்க, ரோம கிறிஸ்தவ மன்னர்களின் வரலாறுகள் வன்முறைகளும், காமமும் மிகைத்திருக்கும். 7 ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கு பிறகு, மாற்றம் வந்தது. இறையச்சத்துடன் ஆட்சி செய்தார்கள். மக்களுக்கு நல்லாட்சியைத் தந்தார்கள். முறையாக திருமணம் செய்த பெண்களையே அந்தப்புரங்களில் வைத்திருந்தார்கள். நாளடைவில் அதிகாரம், பதவி மோகம் என்று கொஞ்சம் கொஞ்சமாக தீனின் பாதையை விட்டு விலகிப்போனார்கள். பிரிட்டிஷார் தங்கள் ஆட்சிப்பிரதேசங்களில் சூரியன் மறைவதே இல்லை என்று பெருமை அடித்துக் கொண்டார்கள். அது பொய் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பிரதேசங்களுக்குப் முன் ஒன்றுமே இல்லை. இஸ்லாமியர்கள் கண்டங்களை ஆண்டார்கள். 6 ம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த காட்டுமிராண்டி ஆட்சி இஸ்லாமியர்களுக்குப் பின் தான் மாறியது. முஸ்லீம்களின் ஆட்சி சரித்திரத்தில் இல்லை என்றால் உலகின் போக்கே மாறி இருக்கும்.\nஇந்தியாவில் மௌரியர்கள், குப்தர்கள், சாணக்கியர்கள், சேர, சோழ, பாண்டியன் மற்றும் சிறிய மன்னர்கள் என்று பெரிய சரித்திரத்தையே எழுதி வைத்திருக்கிறார்கள். குப்தர்கள் தான் இந்துக்களின் மனுஸாஸ்திர அமைப்பை உண்டாக்கினார்கள். அந்த ஒரே காரணத்திற்காக குப்தர்களின் காலம் பொற்காலம் என்று எழுதிக் கொண்டார்கள். இருப்பதிலேயே போதை மிகுந்தது மன்னனாய் இருப்பது தான். தான் நினைப்பது நடக்கும். ஏறக்குறைய இறைவனுக்கு அடுத்தது போல் தாம் தான் என்ற எண்ணம் தோன்றும். (உதாரணம் ஷத்தாத், ஃபிர் அவ்ன்). அந்த பதவிக்கு வர தந்தை, மகன், தாய், தாரம், சகோதரன், சகோதரி என்று எந்த உறவுகளையும் கூட கொல்ல தயங்க மாட்டார்கள். மன்னனின் பிள்ளைகள் கல்வியுடன் கூடிய அந்தப்புரங்களில் தான் வளர்வார்கள். அங்கு மன்னனின் மனைவிகள், பணிப்பெண்கள், அரவாணிகள், வாசனைப் பொருள்கள், மது, நாட்டிய நாடக கேளிக்கைகள் என்று தான் பெரும்பாலும் இருக்கும். ராஜ பிள்ளைகளுக்கு கல்வி, போர் பயிற்சி கற்றுக் கொடுக்க வரும் ஆசிரியர்கள் ராஜ குடும்பத்து தாய் அல்லது மகனின் மனவோட்டத்திற்கு ஏற்பதான் பாடம் நடத்த முடியும். ஒவ்வொரு மனைவியும் அடுத்து தன் மகனுக்குதான் ஆட்சி வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பிள்ளைகளோ அந்தப்புரத்தின் அசிங்கங்களிலிருந்து தப்பித்து வருவது மிகமிக கடினம். ஆயிரக்கணக்கான இளவரசர்களின் வாழ்க்கை அந்தப்புரத்தோடு முடிந்துவிட்டிருக்கிறது. 20 வயதிற்குள் நோய் வந்து இறந்த வரலாறுகள் உண்டு. சில தாயார்களின் வளர்ப்பு மற்றும் பொறுப்பு ஒன்றுதான் அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுக்க உதவும். ஒரு இளவரசன் மன்னன் ஆனான் என்றால் முழுப்பொறுப்பும் அவன் தாயையே சாரும்.\nஜனநாயக முறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஒருவர் பதவிக்கு வந்தால், தோற்றவர்கள் அடுத்த தேர்தலுக்குள் வென்றவரை தோற்கடிக்க சிந்திப்பார்கள். தகுந்த காரணம் இல்லாமல் கொல்ல முற்பட மாட்டார்கள். ஆனால் மன்னனாய் இருப்பது எந்த நொடி மரணம் என்று பயந்தபடியே வாழவேண்டும். கூடலுக்குச் செல்லும் மன்னன் மனைவியின் நிர்வாணத்தைத் தவிர அனைத்தையும் அறையிலிருந்து நீக்க செய்த வரலாறுகள் உண்டு. இந்த அச்ச உணர்வே ஒரே மனைவியைத் தவிர்த்து பல பெண்களை மணப்பார்கள். மேலும் மன்னர்களின் உணவுப்பழக்கத்தால் அளவுக்கதிகமான உறவை நாடுவார்கள். அதை ஒரே மனைவியால் தீர்த்துவிட முடியாது. நாட்டு பிரச்சினை, போர் சிந்தனை, உயிர் பயம் என்று பல கலவையில் மன்னர்கள் இருப்பார்கள் கிரேக்க, ரோம மன்னர்களின் கதை மிகவும் அருவருப்பானது. தனது பிள்ளைகளையே காணாமல் மரணித்த மன்னர்கள் உண்டு. அதே சமயத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே முதல் காரியமாக வாரிசுகளைக் கொல்வார்கள். அப்படி கொல்ல மனமில்லை என்றால் கண்களைக் குருடாக்கி விடுவார்கள். ஆகக் கடைசி கண்களைக்கட்டி திசை தெரியாமல் பயங்கர மிருகங்கள் வாழும் காட்டில் மாறு கால் மாறு கை வாங்கி விட்டு விட்டு வந்து விடுவார்கள். மனநோயாளிகளாக ஆக்கி விடுவார்கள். அறிவிப்பு செய்யாமல் ஒரு மன்னன் இறந்து போனால், அனைத்து வாரிசுகளும் மந்திரிகளை, தாயாரை, மக்களை கைக்குள் அடக்கி வாளெடுத்து நிற்பார்கள். தன் குறிப்பிட்ட பிள்ளையின் தன்மை அறிந்து ஆட்சிக்கு தயார் படுத்திய மன்னர்களும் உண்டு.\nமன்னன் அந்தப்புரங்களுக்கு இளைப்பார மட்டுமே வருவார். பல மன்னர்களுக்கு தனது சொந்த பிள்ளைகளையே தெரியாது. அந்தப்புரங்களில் வளர்ந்து வந்த பல நல்ல மன்னர்களும் உண்டு. சுல்தான் சுலைமான், முதலாம் செலிம், ஔரங்கஸேப், மன்னர் சௌத் (இவர் சௌதியை வென்றெடுக்க இவரின் பாட்டியின் வளர்ப்பே காரணம்) இப்படி பலபேர் உண்டு. மன்னர்களும் எச்சரிக்கை காரணமாக எந்தநிலையிலும் எந்த உணவும் உண்ணவோ அருந்தவோ மாட்டார்கள். மன்னருக்கு முன் அவைகளை ருசித்துப் பார்க்க என்று பணியாள் வைத்திருப்பார்கள். ராஜ பெண்களும் தன் மகனுக்குதான் அடுத்த மன்னன் பதவி என்று மற்ற மனைவிகளின் பிள்ளைகளை தகுதியற்ற நிலைக்கோ அல்லது கொல்லவோ செய்வார்கள். வளர்ந்த பிள்ளைகளோ பதவி மோகத்திற்காக தன் சகோதரன் தான் என்பதை மறந்து ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிப்பார்கள். சரியான வாரிசின்றி தகுதியற்ற கெட்ட இளவரசர்கள் மன்னனான வரலாறுகளும் உண்டு. இவைகளெல்லாம் வெறும் முஸ்லீம் மன்னர்களின் குடும்பத்தில் தான் என்று எண்ணிவிடாதீர்கள். எல்லா மன்னர்களின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். சிலரை நாம் வாழ்ந்து கெட்டான் என்று சொல்வோம். ஆனால், உலக சரித்திரத்தில் பல ராஜகுடும்பத்து வாரிசுகள் கெடுவதற்காகவே வாழ்ந்தார்கள். ராஜ வாழ்க்கையின் ஆரம்ப அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் மேற்சொன்னவைகளை எழுதினேன்.\nஅடுத்த விஷயத்திற்கு போவோம். ஒரு நாட்டின் நிர்வாகம், இராணுவ அமைப்புகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அமைத்தார்கள். பல அரிய கண்டுபிடிப்புகள், விவசாயம், கலை, கலாச்சாரம், நகர அமைப்புகள் என்று பல அற்புதங்களை நிகழ்த்தினார்கள். 7 ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லீம் மன்னர்கள் காட்டிய வழியில் தான் இன்றைக்கும் பல நாடுகள் நிர்வாகம் செய்கின்றன. 14 ம் நூற்றாண்டிற்கு பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நேர்மை, வல்லமை குறைய மெதுவாக தலைதூக்கிய மேற்கத்திய ஆட்சியாளர்கள் மீண்டும் மதம் சார்ந்த காட்டுமிராண்டி ஆட்சியையே நடத்தினார்கள். அவர்களின் பிரதேசங்களிலிருந்து முதலில் முஸ்லீம்களை விரட்ட 4 நூற்றாண்டுகள் எடுத்துக்கொண்டார்கள். பின் 18 ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லீம்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பல அரிய கண்டுபிடிப்புகளின் நுணுக்கங்களை மின்சாரம் கொண்டு நவீனப்படுத்தி தாங்கள் கண்டுபிடித்தது போல் பெருமை அடித்துக் கொண்டார்கள்.\nமனிதகுலத்திற்கு குர்ஆன் அருளப்பட்டதற்கு பின் இஸ்லாமிய ஆட்சியாளர்தான் மொத்த உலகுக்கும் எல்லாவற்றிற்கும் வழிகாட்டி இதில் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால் 7 ம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த மன்னர்களின் வரலாறு, சொல்லப்பட்டிருக்கலாம், இருந்திருக்கலாம் என்றுதான் இருக்கும். அதே நேரத்தில் சில உண்மைகளும் உள்ளன அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இஸ்லாமிய வரலாறு கடல்கடந்து சான்றுகளுடன் கட்டிடங்களாகவும், கலை வடிவங்களாகவும் இந்தியாவிலிருந்து ஸ்பெயின் வரை ஆதாரத்துடன் நின்று பறைசாற்றுகிறது.\nபோர் என்பது யாரால் எங்கு, எப்படி நடந்தாலும் ஒரு துயரமான சம்பவமே. அதை அல்லாஹுத்தாலா குர்ஆனில் சொன்னதை மேலே அறிந்திருப்பீர்கள். அது நாகரீகம் அடைய ஆரம்பித்த காலத்திலிருந்து அறிவு முதிர்ச்சியின் சிகரத்தில் இருக்கும் இன்று வரை அப்படித்தான். காரணம் போர் என்பது எத்தரப்புக்கும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது. வெற்றி தோல்வி வேறு விஷயம். போரினால் உறவுகள் இழக்கப்படுகின்றன, உணவு, வீடுகள் இழக்கப்படுகின்றன. உடல் உறுப்புகள் சிதைக்கப்படுகின்றன. மருத்துவ, வாகன, கல்வி போன்ற உதவிகள் தடைபடுகின்றன. எஞ்சி இருப்பவர்களுக்கு பல துயரங்களுக்குப் பிறகு, ஒரு வேளை நல்வாழ்வு கிடைக்குமானால் பல ஆண்டுகள் ஆகும். தனி மனித சண்டை, நோய், இயற்கை சீற்றம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை விட கொடுமையானது போர். அவைகளில் இன்னார் இறந்து போய்விட்டார் என்று தெரிந்துவிடும். ஆனால் போரினால் சிதறிய குடும்பத்தில் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாது. (தற்போது அப்படியல்ல) போர் நீங்கலாக மேற்சொன்னவைகளுக்கு முற்றுப்புள்ளி உண்டு. ஆனால், போரினால் பாதிக்கப்பட்டு எஞ்சியவர்களின் மனநிலை பாதிப்பு, பொருளாதார பாதிப்பு, ஊனமான வாழ்க்கை நிலை எண்ணிப்பார்க்கும் போதே மனம் பதைக்கும். அமெரிக்காவில் ஹிரோஷிமா, நாகாசாகியில் வீசிய குண்டில் இன்றைக்கும் அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 100 ல் 80 குழந்தைகள் ஏதாவது ஒரு குறையுடன் தான் பிறக்கின்றன. அதேபோல் தான் வியட்நாம், ஈராக், ஆஃப்கானிஸ்தான் நாடுகளிலும் இருக்கின்றன.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 7:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-08-20T18:03:10Z", "digest": "sha1:RJGFBU2LD7WB25PSWK76MILC3CYR3E3J", "length": 21171, "nlines": 199, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: எங்கும் குடி மயம்", "raw_content": "\nநேற்று ராஞ்சியில் விமானம் ஏறும்போது பீடித்த ஆயாசம் நேற்றிரவு சென்னை வந்த பிறகும் இன்று ஞாயிறன்றும் நீடித்தது. நான்கு நாட்கள் ராஞ்சி பல்கலையில் விடாமல் தினமும் ஆறு மணி நேரம் உரையாற்றியது அதன் பின் முப்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தனித்தனியாக கல்விப்புல அறிவுரை வழங்கியது என்று சோர்ந்துவிட்டேன். வழக்கமாக இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எனக்கு உற்சாகம் குறைவதில்லை. தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் பலரையும் போலவே நானும் வாய் ஓயாமல் பேசக்கூடியவன்தான்; மேடையிலிருந்து முழங்கினால் பேருரை, வகுப்பறை என்றால் உரை, குழுவில் நண்பர்களோடு என்றால் உரையாடல். அவ்வளவுதான். பெயர்தான் வித்தியாசம். மற்றபடி பேசுவதை நிறுத்துவதே இல்லை. மற்றவர்களின் அந்தரங்க அனுபவத்தைக் கூட எதற்கும் நம்பளே பேசிவிடுவோமே என்று பேசிவிடுவதும் உண்டு; அந்த மாதிரியான சூழ்நிலைகளில் தொண்டை கரகரத்து போய் நம் குரலும் கூட அடுத்தவர் குரல் போல ஒலித்து ஒத்துழைக்கும். இப்படி பேசுவதையெல்லாம் எழுதிப் போட்டால் வருடாந்திர புத்தகக் கண்காட்சிக்கு பத்து புத்தகங்கள் தேறிவிடும். ஆகையால் ஆயாசம் தொடர்ந்து பேசியதால் ஏற்பட்டது அல்ல.\nசெவ்வாய் இரவு ராஞ்சி பல்கலை விருந்தினர் இல்லத்தில் போய் இறங்கியதுமே என் நண்பர் வடகிழக்கு மாநிலங்களில் மூத்த நாட்டுப்புறவியல் பேராசிரியர் எனக்காகக் காத்திருப்பதாக அறிந்தேன். உடையை மாற்றக்கூட இல்லாமல் நேராக அவருடைய அறைக்கு விரைந்தேன். பேராசிரியர் நிறை போதையில் கையில் ஒரு கோப்பை மதுவோடு தள்ளாடிக்கொண்டிருந்தார். வந்தாயா பார்த்தாயா இந்த புத்தகத்தை இந்த வருடம் 2012இல் வெளிவந்தது என்றொரு குண்டு ஆங்கில புத்தகத்தைத் தூக்கிப்போட்டார். சர்வதேச நாட்டுப்புறவியல் துணைவன். பதிப்பித்தது யார் என்று பார்த்தேன். வைலி ப்ளாக்வெல். நெடுஞ்சாலை கொள்ளைக்காரர்களாயிற்றே கடுமையான விலையாயிருக்குமே என்றேன். நம்மூர் பணத்திற்கு 12,700 ரூபாய்தான் என்றார் பேராசிரியர். இந்தியா கட்டுரையில் உன்னைப் பற்றி ஒரு நீள பத்தி இருக்கிறது. உன் புத்தகங்களுக்கும் கட்டுரைகளுக்கும் 16 குறிப்புகள் புத்தகம் முழுவதும் இருக்கின்றன ஆனால் என்னைப் பற்றி கண்ட கிறுக்கன்களோடு சேர்த்து என் பெயரும் ஒரே ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது என்று கத்திய அவர் மதுக்கோப்பையை முழுவதுமாய் வாயில் கவிழ்த்தார்.\nஇரவெல்லாம் தொடர்ந்து குடித்திருப்பார் போலும். மறுநாள் காலையில் நானும் அவரும் கருத்தரங்கக்கூடத்திற்கு நடந்து போய் சேர்ந்தபோது அவர் உடல் வலிப்பு வருவதற்கு முந்தைய படிநிலை போல ஆடிக்கொண்டிருந்தது; கைகால்கள் ஒரு பக்கமாய் இழுத்துக்கொண்டிருந்தன. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. அவரையும் என்னையும் உள்ளடக்கி மொத்தம் நான்கு பேர் அந்த பயிற்சிக் கருத்தரங்கில் உரையாற்றுவதாக ஏற்பாடு. ஒருவர் அவர் வீட்டில் ஏதோ துஷ்டி என்று வரவில்லை; மற்றொருவர் ராஞ்சி பல்கலையைச் சேர்ந்தவர் அவருக்கு ஏகப்பட்ட கருத்தரங்க நிர்வாகப் பொறுப்புகள்; இப்போது ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டாரா அத்தனை உரைகளையும் நானே ஆற்ற வேண்டிய பொறுப்பு என் தலையில் விடிந்தது.\nஅதீத குடியினால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் விதிவிலக்கல்ல மாறாக அவரே விதி; என் தலைமுறைக்கு முந்தைய ஒரு தலைமுறை இந்திய நாட்டுப்புறவியல் பேராசிரியர்களில் முக்கால்வாசிப் பேர் மதுவுக்கு அடிமையாகி சீரழிவுக்கு உள்ளானவர்களே. தமிழ் சிறு பத்திரிக்கை உலகும் அகில இந்திய நாட்டுப்புறவியல் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் உலகும் அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரே வகையானதே ஆகும். வித்தியாசம் என்னவென்றால் பேராசிரியர்களை பத்திரமாக கவனித்துக் கொள்ள அவருடைய மாணவர்கள் இருப்பார்கள் என்பதுதான்.\nஇந்திய குரு சிஷ்ய பரம்பரையின் மதிப்பீடுகளெல்லாம் முழுமையாக உள்வாங்கப்பட்ட ஒரே இடம் பல்கலைக் கழகங்களின் ஆராய்ச்சித் துறைகள்தான். ஆராய்ச்சி வழிகாட்டியாக இயங்கும் பேராசிரியருக்கு ஆராய்ச்சி மாணவர்கள் கொத்தடிமைகளாய் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்பது மரபின் நீட்சி. ஷூவுக்கு பாலிஷ் போடுவது, சாக்சைத் துவைப்பது வீட்டு வேலை செய்வது என்பதிலிருந்து கல்விப்புல கட்டுரைகள் எழுதுவதில் ஒத்தாசை செய்வது என்பது வரை தொண்டூழியங்கள் எண்ணற்றவை. குடித்துவிட்டு கீழே கிடக்கும் பேராசிரியர்களை அவர்கள் அறைகளில் கொண்டு சேர்ப்பது, உணவு ஊட்டி விடுவது, அவிழ்ந்த உடைகளை சரி செய்வது என பல வேலைகளும் குரு சிஷ்ய தொண்டூழியங்களின் பகுதிகளே. ஆய்வேடுகளின் தரத்தினால் அல்ல தொண்டூழியங்களின் சிரத்தையினாலேயே பெரும்பான்மையான ஆய்வுப்பட்டங்கள் பெறப்படுகின்றன. ராஞ்சியில் என் நண்பர்-பேராசிரியரை அவருடைய மாணவர்கள் சிறப்பாக கவனித்துக்கொண்டதை நான் வெகுவாக பாராட்டிப் பேசினேன். கருத்தரங்கு முடிந்தபின் என்னை சந்தித்த அவருடைய மாணவி தலை எழுத்தே என்று செய்கிறோம் சார் என்று குட்டை உடைத்தபோது மனமும் உடலும் வெகுவாக சோர்ந்துவிட்டன.\nவெளி நாட்டிலிருந்து வந்திருக்கும் விஞ்ஞானி நண்பர் ஒருவரின் பொருட்டு இன்று ஞாயிறு என் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தேன். பல்வேறு விஞ்ஞான துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் வந்திருந்தனர். உரையாடல் ராஞ்சியில் நடைபெற்ற சம்பவங்களை நோக்கித் திரும்பியது. எனக்கு முந்தைய தலைமுறை நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து போன கதைகளை நான் சொல்லச் சொல்ல இதர விஞ்ஞானம் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் மதுவின் பாதிப்பினால் குடும்பங்களை சொந்தப்பிள்ளைகளை கவனிக்காமல் சீரழிந்தவர்களின் கதைகளை மற்றவர்கள் சொல்ல ஆரம்பித்தனர். ஒரு துறை பாக்கியில்லாமல் எங்கும் மது வியாபித்திருப்பதாகத் தோன்றியது.\nஇரவு உணவு முடிந்து விருந்தினர் அனைவரும் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டனர். என் சின்ன மகன் தூங்காமல் எனக்காகக் காத்திருந்தான். நேற்று அவனுக்கு கராத்தே ப்ரௌன் பெல்ட் பரீட்சை. நான் ராஞ்சியிலிருந்து திரும்பும் பயணத்தில் இருந்ததால் அவனோடு பரீட்சையை ஒட்டி நடக்கும் கராத்தே டெமான்ஸ்டிரேஷனுக்கு என்னால் செல்ல இயலவில்லை. அதனால் அவன் கோபமாய் இருப்பான் என்று எனக்குத் தெரியும். காலையில் இருந்து தூங்கிக் கழித்தாயிற்று அப்புறமாக நண்பர்கள் விருந்து என்று போய்விட்டது. பொம்மூ நீ நேற்று கராத்தே டெமான்ஸ்டிரேஷன் பிரமாதமாகப் பண்ணிணியாமே என்றேன். ஓரிரு நிமிடங்கள் பாராமுகமாய் இருந்தவன் நான் கொஞ்ச கொஞ்ச ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவனும் அவன் அண்ணனுமாய் கராத்தே நிகழ்வு கதைகளை உற்சாகமாகச் சொல்லலாயினர். ஏதோ நல்லூழ்தான் நான் குடி பழகவில்லை அடிமையாகவும் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nகல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள் | சிறுகதை\nதேவதேவனுக்கு விருது என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்\nசில்வியா எழுதாத கதை “மு என்ற இராமதாசு” | சிறுகதை\nமர்ம நாவல் | சிறுகதை\nதமிழ் மறமகளிர்க்கு அசரீரீ சொன்ன புராணக்கதை | சிறுக...\nநாடகத்திற்கான குறிப்புகள் | சிறுகதை\nநித்ய அனுசந்தான கோவில் திருமொழி\nஅரவிந்தன் நீலகண்டனுக்கு டாப் 10 கேள்விகள்\nயோக நித்திரை ஏகினான் ஶ்ரீமான் எம்டிஎம்\nமகாகவி பாரதியார் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி ஆற்றிய ...\nஅரவிந்தன் நீலகண்டனின் எதிர்வினை குறித்து\nசமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு\nசூஃபி இசையும் இஸ்லாமிய மெய்ஞானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=535094", "date_download": "2018-08-20T18:17:59Z", "digest": "sha1:RC36NMYRDUSF2D2TZYLEFAC4S7TZWHUR", "length": 26105, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "Chennai Day 373 | மனதை தொட்ட குரல்...| Dinamalar", "raw_content": "\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nமத்திய அரசின் 3 தாரக மந்திரம் : சுதந்திர தின உரையில் ... 114\nரஜினி விமர்சனம்: அதிமுக கடும் கோபம் 81\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\n'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் ... 79\nதி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ., மேலிடம் ... 225\nஅழகிரி வியூகம்; தி.மு.க., திக்... திக்... 169\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\nவிலைவாசி உயர்வால், குடும்பம் நடத்த முடியாமல், நடுத்தர பிரிவு மக்களே திணறி வருகின்றனர். நிலையான சம்பளம் இல்லாமல், வாழ்க்கையை நடைபாதையில் நகர்த்துபவர்களும் உள்ளனர். பிராட்வே நடைபாதையில் வசிக்கும் பவானி தினசரி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார் என்பது அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து...\nஆமாங்க. எங்கம்மா, நான், என் பொண்ணு, என் பேரன்னு ஐந்து தலைமுறையா இங்க தான் இருக்கிறோம். இதே எடத்துல தான், எங்க தாத்தா இருந்தாரு. இது அவரு புடிச்ச இடம். இப்ப நாங்க இருக்கிறோம்.\nமூணாவது வரைதான் படிச்சேன். இந்த ரோட்டுல தான் எப்பவும் விளையாடிட்டு இருப்பேன். விவரம் தெரிஞ்சதும், வீட்டு வேலைகளுக்கு போக ஆரம்பிச்சுட்டேன்.\nஎனக்கு 13 வயசுல நடந்துச்சு. அப்போ அவருக்கு 27 வயசு இருக்கும்.\nஇல்லை. காதல் திருமணம். துரத்தி, துரத்தி காதலிச்சாரு. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.\nமூணு பொண்ணுங்க... இரண்டு பசங்க...\nபசங்க ஐந்தாவது, பொண்ணுங்க மூணாவது வரை படிச்சுருக்காங்க. பொண்ணுங்க இங்க இருந்தா கெட்டு போயிடுவாங்கன்னு, ரெண்டு பேரையும், ஒன்பது வய”ல கேரளாவுக்கு, வீட்டு வேலைக்கு அனுப்பிட்டேன். வய”க்கு வந்ததும் பொண்ணுங்கள, அவங்களே திருப்பி அனுப்பி வச்சுட்டாங்க.\nமுதல் பொண்ணுக்கு, 15 வயசுல கல்யாணம் பண்ணோம். அவங்க வீட்டுக்காரு எய்ட்ஸ் நோயால இறந்துட்டாரு. அதனால, என் தம்பிய இரண்டாவதா எடுத்துருக்கோம். (\"எடுத்துக்குறோம்' என்றால், தாலி கட்டி கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது) இரண்டாவது பெண்ணுக்கு, 14 வய”ல கல்யாணமாச்சி. கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமாயிட்டா. அதுனால, அந்த பையனையே கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். பின்னாடி, வீட்டுக்காரு சரியில்லன்னு வாழல. என் கூட தான் இருக்கா. மூணாவது பெண்ணு வேலைக்கு போயிட்டு இருக்கா.\nஒரு பையன் மீன்பாடி வண்டி ஓட்டுறான். இன்னொரு பையன் ஆட்டோ மெக்கானிக்கா இருக்கான். பசங்க பாரீஸ் சுத்தி இருக்குற கடையில தான் வேலை செய்யுறாங்க. சம்பாதிக்குற காசுல பாதி, குடிக்க தான் செய்யுறாங்க.\nகணவர் என்ன வேலை செய்கிறார்\nமுதல, பிக் பாக்கெட் அடிச்சுட்டு இருந்தாரு. இப்ப ரிக்ஷா வண்டி ஓட்டுறாரு.\nதெரியாது. வாரத்துக்கு இரண்டு நாள் தான் வேலைக்கு போவார். அதுல வர காசையும் குடிச்சே அழிச்சுடுவாரு. செலவுக்குன்னு ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டாரு.\nஅடிக்கடி வரும். குடிச்சுட்டு வந்து அடிப்பாரு. யாருக்காவது சாதகமாக பேசினா, சந்தேகப்பட்டு அடிப்பாரு. இங்க இருக்கிற எல்லா பொண்ணுங்க நிலைமையும் இது தான். அடிபட்டு சாகறதுக்கு பதிலா, கணவருடன் வாழாமல், யாரையாவது எடுத்துக்குறாங்க.மூணு, நாலு பேரை எடுத்துக்கிட்டவங்களும் உண்டு. ஆம்பளைகளும் அதே மாதிரி இருக்காங்க. இங்க இது சாதாரணமாக நடக்கும்.\nவீட்டு செலவ எப்படி சமாளிக்குறீங்க\nபூ கட்டுறதுல, 100 ரூபா கிடைக்கும். பிராட்வே கடைகளில அட்டை பெட்டி, காகிதத்தை கொட்டுவாங்க. அதை எடுத்து விற்பேன். 150 ரூபா கிடைக்கும். அதுல தான் குடும்பத்த நடத்துறேன். பசங்க, நாலு நாள் வேலைக்கு போனா, நாலு மாசம் வேலைக்கு போக மாட்டா ங்க. என்ன பண்ணுறது என் தலையெழுத்து.\nஇன்னைக்கு என்ன வேணுமோ அத வாங்கி சமைப்பேன். இல்லன்னா, ஓட்டலில் சாப்பிடுவோம். திட்டமிட்டு வாழறது பத்தி எல்லாம் தெரியாது.\nரேஷன் கார்டு, அடையாள அட்டைன்னு எல்லாத்துக்கும் எதிரே உள்ள கடை அட்ரச தான் கொடுப்போம். கடையில விசாரிச்சுக்குவாங்க.\nஎந்த பொருளையும் வாங்கி வைக்க முடியாது. வீடு இருந்தா அழகா வைச்சு பாக்கலாம். இங்க ரோட்டுல தான் எல்லாத்தையும் வைக்க வேண்டி இருக்கு. இதனால, யாரு, வரா, போறான்னு ரோட்டையே பார்க்க வேண்டி இருக்கு. வீட்டுல இருந்தா, பூட்டிட்டு ஒரு வாரம் கூட வெளிய போயிட்டு வரலாம். ரோட்டுல இருக்குறதால வெளிய எங்கும் போக முடியாது.\nவீட்டுல தங்க ஆசை இருக்கா\nயாருக்கு தான் வீட்டுல தங்க ஆசை இருக்காது. ஒரு தடவை, ரோட்டு வாழ்க்கையே வேணாம்ன்னு, வாடகை வீடுக்கு போனேன். ஆசாரமான வீடு. எங்க வீட்டுக்காரு அங்க குடிச்சுட்டு வந்துட்டாரு. அதுனால கோபத்துல, அவர வீட்டுக்குள்ளயே வச்சி பூட்டிட்டு வந்துட்டேன். அதோட வாடகை வீட்டுக்கு போறதயே வுட்டுட்டேன்.\nகொடுக்குற வீட்டை வித்துடுறதா சொல்லுறாங்களே\nசூழ்நிலை தான் காரணம். சில பேர் வித்துடுறாங்க. கஷ்டம்ன்னு வாடகைக்கு விட்டுட்டு, இங்க நிறைய தங்குறாங்க. குடிச்சவங்க\nகிட்ட கூட நிறைய பேர் வீட்டை எழுதி வாங்கியிருக்காங்க.\nஅழாத நாளே இல்லை. ரோட்டுல, பிளாஸ்டிக் கட்டிட்டு பயந்துட்டே குளிக்கணும். உடம்பு சரியில்லைன்னாலும் நடுரோட்டில படுக்கணும். மழை வந்தா தூங்க இடம் இல்லாம, முழிச்சுட்டு இருக்கணும். இதை விட வேற என்ன கஷ்டம் இருக்கு. எனக்கு இங்க இருக்க புடிக்கலனா எங்கயாவது போயிடுவேன். ரொம்ப நாள் கழிச்சு தான் வருவேன். இந்த வாழ்க்கை வாழுறதுக்கு வாழாமலே இருக்கலாம்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇதை படுச்சதும் ரொம்ப கஷ்டமா இருக்கு.. எத்தன பேரு இப்படி கஷ்ட படரகளோ.. இத கண்டிப்பா சட்டமும் தலைவர்களும் நினைத்தாள் மாற்ற முடியும்... ஆனால் நாம் தலைவர்களோ\nஇந்த லட்சணத்தில 2020la வல்லரசு ஆயிடுவோமா\nஇந்த நிலைமையில 2020௦ல வல்லரசு ஆயிடுவோமா. \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/08/06081449/1005334/Vijay-Sethupathi-Productions-Merku-Thodarchi-Malai.vpf", "date_download": "2018-08-20T18:47:32Z", "digest": "sha1:NEG5E2DF2HUZ45OJSXHX4SWLYMHWKVZU", "length": 7357, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "விஜய் சேதுபதி தயாரிப்பில் \"மேற்கு தொடர்ச்சி மலை\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிஜய் சேதுபதி தயாரிப்பில் \"மேற்கு தொடர்ச்சி மலை\"\nவிஜய் சேதுபதி தனது தயாரிப்பில் உருவான திரைப்படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவிஜய் சேதுபதி தனது தயாரிப்பில் உருவான திரைப்படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் 'மேற்கு தொடர்ச்சி மலை'. இந்த படத்திற்கு இளையராஜா இசைமைத்துள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது.மலைவாழ் மக்களின் வாழ்வியலை அழகிய கதையாக உருவாக்கியுள்ளனர்.தற்போது இப்படம் குறித்து, தயாரிப்பாளர் விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமகிழ்ச்சியில் அஜித், விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் டீசரை வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\n\"நான் வாயை திறந்தால், பூகம்பம் வெடிக்கும்\" - நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nமுழு உண்மைகளையும் வெளியிட்டால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி எச்சரித்துள்ளார்\nகேரள வெள்ளம் : கீர்த்தி சுரேஷ் ரூ. 15 லட்சம் நிதியுதவி\nமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கீர்த்தி சுரேஷ் நேரில் வழங்கினார்.\n'கோலமாவு கோகிலா' இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்...\n'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.\nரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் த்ரிஷா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு ஏற்கனவே சிம்ரன் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில், தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார்.\nஅமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா : சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்பு\nஅமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/07120142/1005409/Government-College-Accommodation-Buildings-Open-Chief.vpf", "date_download": "2018-08-20T18:47:25Z", "digest": "sha1:GYE6RSOTS3CL5DE3SMEEYQ3HAPBNXE63", "length": 10723, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ரூ.29 கோடி செலவில் அரசு கல்லூரி ,விடுதி கட்டடங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.29 கோடி செலவில் அரசு கல்லூரி ,விடுதி கட்டடங்கள்\nஅரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மகளிர் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஇதேபோல் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை சார்பில் 29 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் மகளிர் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nநிகரகுவா நாட்டில் அரசுக்கு ஆதரவு எதிர்ப்பு ஊர்வலங்கள்\nநிகரகுவா நாட்டில் அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு வேறு பேரணிகள் நடைபெற்றன.\n\"கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும்\" - ஸ்டாலின் கோரிக்கை\nகொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபள்ளி கட்டடத்தை சூழ்ந்த வெள்ள நீர் - அடிக்கடி விடுமுறை விடுவதால் கல்வி பாதிப்பு\nமயிலாடுதுறையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குழந்தைகளின் கல்வி பாலாகியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.\nஇளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் - விடுதி வார்டன் புனிதாவிற்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்\nகோவை மகளிர் விடுதியில் உள்ள இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் புனிதாவிற்கு வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.\n\"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்\" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல்லூரி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - மாணவர்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு\nகொடைக்கானல் அருகே கல்லூரி பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகோயிலில் தீ மிதித்த போது தவறி விழுந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை - வில்லிவாக்கம் பாலியம்மன் கோயிலில் நேற்று தீ மிதித்த இருவர் கால்தவறி தீயில் விழுந்து காயமடைந்தனர்.\nஉபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவான கலைப்பூங்கா...\nஉபயோகமற்ற பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை வாபஸ்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு வாபஸ் பெற்றுள்ளது.\nஅப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்\nஆறுமுகசாமி கமிஷன் முன், அப்பல்லோ டாக்டர்கள் அருள் செல்வன் மற்றும் ரவிக்குமார் இருவரும் ஆஜர் ஆனார்கள்.\nபிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவம் - நீதிமன்றத்தில் சரணடைந்தார் யுவராஜ்\nசென்னை வளசரவாக்கம் பிரியாணி கடை தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்\nமனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்\nகர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216724.69/wet/CC-MAIN-20180820180043-20180820200043-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}