{"url": "http://canadamirror.com/srilanka/04/161434", "date_download": "2018-05-27T03:00:07Z", "digest": "sha1:MCU72QCXC3LID52NJMRPWY7IFM6P57PY", "length": 5194, "nlines": 60, "source_domain": "canadamirror.com", "title": "உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nஉள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள்\nவடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் பெரும்பாலானவை வெளிவந்த நிலையில், பெரும்பான்மை பலம் குறித்து நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.\nபல தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும், தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசிறிய கட்சிகளும், தேசியக் கட்சிகளும் வடக்கு, கிழக்கில் விகிதாசார ஒதுக்கீட்டில் கணிசமான ஆசனங்களை வென்றுள்ளன.\nஇதனால், யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தொங்கு சபைகளே அமையவுள்ளன.\nஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டாக அல்லது, இணைந்தே சபைகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை எதிர்த்து போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கணிசமான ஆசனங்களை பெற்றுள்ளமை இந்நிலைக்கு காரணமாக மாறியுள்ளது.\nஇம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தல், புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார அடிப்படையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/05/blog-post_7806.html", "date_download": "2018-05-27T03:37:57Z", "digest": "sha1:MK2B77GKC4ZWSKUEMY6GNPTKKNTPO55L", "length": 13809, "nlines": 123, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழ‌க்க‌ரை அருகே லாரி விப‌த்து!குளிர் பான‌ங்க‌ள் சாலையில் சித‌றிய‌தால் போக்குவ‌ர‌த்து பாதிப்பு!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழ‌க்க‌ரை அருகே லாரி விப‌த்துகுளிர் பான‌ங்க‌ள் சாலையில் சித‌றிய‌தால் போக்குவ‌ர‌த்து பாதிப்பு\nகீழ‌க்க‌ரை காஞ்சிர‌ங்குடி அருகில் குளிர் பான‌ம் ஏற்றி வந்த‌ லாரியின் பின் ப‌க்க‌ ட‌ய‌ர் வெடித்து நிலைதடுமாறி த‌லை குப்புற‌ க‌விழ்ந்து குளிர் பான‌ங்க‌ள் ந‌டுரோட்டில் சித‌றிய‌தால் சிறிது நேர‌ம் போக்கு வ‌ர‌த்து பாதிக்க‌ப்ப‌ட்ட‌து.\nதேவிப‌ட்டிண‌த்திலிருந்து கீழ‌க்க‌ரைக்கு குளிர் பான‌ லாரி ஒன்றை தேவிப்ப‌ட்டிண‌த்தை சேர்ந்த‌ டிரைவ‌ர் வெங்க‌டேஷ்)24) ஓட்டி வ‌ந்தார்.உட‌ன் சேல்ஸ் மேன் முத்துகுமார் என்ப‌வ‌ரும் வ‌ந்துள்ளார்.ககாஞ்சிர‌ங்குடி ப‌ஸ் ஸ்டாப் அருகில் வ‌ரும் போது பின் ப‌க்க‌ ட‌ய‌ர் வெடித்து நிலை த‌டுமாறிய‌ லாரி த‌லைகுப்புற‌ க‌விழ்ந்த‌தாக‌ அப்ப‌குதியில் உள்ள‌வ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.இருவ‌ரும் காய‌மின்றி த‌ப்பின‌ர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழ‌க்கரை ஹ‌மீதியா மெட்ரிக் ...\nகீழ‌க்க‌ரை நக‌ராட்சி கூட்ட‌ம்:ந‌க‌ராட்சியின் இல‌வ‌...\nகீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 25வது...\nஏர்வாடி அருகே வேன் விப‌த்தில் 2பேர் ப‌லி\nகீழ‌க்க‌ரை-‍ ராம‌நாத‌புர‌ம் சாலையில் பைக் விப‌த்து...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் ஊழ‌ல்,முறைகேடு நில‌வுவ‌த...\nகீழ‌க்க‌ரை ச‌முக‌ ந‌ல‌ அமைப்பான‌ நாஸா சார்பில் கோட...\nகீழக்கரையில் அப்பாவிக‌ள் மீது கொலை வ‌ழ‌க்கு\nகீழ‌க்க‌ரை அருகே த‌ர‌ம‌ற்ற‌ சாலை என‌ புகார்\nகீழ‌க்க‌ரையில் பெண்ணை கேலி செய்த‌தாக‌ ஒருவ‌ர் கைது...\nமீன் பிடி த‌டை கால‌ம்கீழ‌க்க‌ரை அருகே ப‌ட‌குக‌ள் ...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் முறைகேடுக‌ள் தொட‌ர்ந்தால...\nகீழ‌க்கரை மீன‌வ‌ர் கூட்டுற‌வு ச‌ங்க‌ புதிய‌ அலுவ‌ல...\nகீழ‌க்க‌ரை ப‌குதியில் அர‌சு சார்பில் நீச்ச‌ல் ப‌ய...\nகீழ‌க்க‌ரை க‌ட‌ற்க‌ரையோர‌ம் பூங்கா அமைக்கும் திட்ட...\nஎஸ்.டி.பி.ஐ சார்பில் கீழக்க‌ரையில் க‌ல‌ந்துரையாட‌ல...\nகீழ‌க்க‌ரையில் ப‌ழைய‌ சேத‌ம‌டைந்த‌ மின்க‌ம்ப‌ங்க‌ள...\nகீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ தீவுகளுக்கு‌ க‌ண்ணாடி இழை ப...\nகுடிநீர் விநியோக‌த்திற்க்காக‌ மாலாக்குண்டுவில் 5 ஆ...\nகீழ‌க்க‌ரை 18வ‌து வார்டில் கிண‌ற்றுநீரில் க‌ழிவுநீ...\nகீழ‌க்க‌ரை சேரான் தெரு ப‌குதி குப்பைக‌ளை அக‌ற்ற‌ ந...\nதெற்கு தெரு ப‌குதியில் காண்ட்ராக்ட‌ரின் த‌ர‌ம‌ற்ற‌...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌ர‌ம‌ற்ற‌ ஜென‌ரெ...\nகீழ‌க்க‌ரை தாசிம் பீவி ம‌க‌ளிர் க‌ல்லூரியில் புதிய...\nகீழ‌க்க‌ரையில் அதிக‌ரித்த‌ நாய்க‌ளை க‌ட்டுப‌டுத்த‌...\nகீழ‌க்க‌ரை அருகே லாரி விப‌த்து\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான...\nகீழ‌க்க‌ரையில் த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கி கிளை...\nகீழ‌க்க‌ரையில் சிட்டி யூனிய‌ன் வ‌ங்கி இட‌ மாற்ற‌ம்...\nகீழ‌க்க‌ரை முஸ்லீம் ப‌ஜார் ப‌குதியில் குப்பைக‌ளை அ...\nகைராத்துல் ஜ‌லாலியா பள்ளி மாண‌வ‌ர் இம்ரான்கான் 110...\nக‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்ய‌ த‌யார்\nகீழ‌க்க‌ரையில் சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ளை மாண‌வியர் ப...\nகீழ‌க்க‌ரை முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளியில் 100 ச‌த‌...\nஇஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வர்‌ ம‌ற்றும் மாண‌வி...\n+ 2 தேர்வு முடிவு\nகுறைந்த‌ செலவில் மின்சாரம் தயாரிக்கும் க‌ருவி\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் லாரி மூல‌ம் க‌ழிவு ...\nகீழ‌க்க‌ரை சாலைக‌ளில் சுற்றி திரிந்த‌ க‌ன்று\nரத்ததான கொடையாளர்க‌ள் 1 ல‌ட்ச‌த்திற்கும் மேற்ப‌ட்ட...\nசேதமடைந்த நிலையில் நகராட்சி வணிக வளாகம்\nமுக்கிய சாலையில் அபாய பள்ளம் \nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியை க‌ண்டித்து 3 க‌வுன்சில‌ர்க...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் லாரிக‌ள் மூல‌ம் குட...\nஇறந்த நிலையில் க‌ரை ஒதுங்கிய‌ கடல்பசு \n ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விலையில்லா சீர...\nகீழக்கரை கல்லூரி மாணவர் கணிதத்துறையில் முதலிடம் \nகீழக்கரை மீனவர் கூட்டுறவு சங்க தேர்த‌ல்\nகீழ‌க்கரை ந‌கராட்சி கூட்ட‌த்தில் நகராட்சி அலுவலக ம...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி திட்ட‌ ப‌ணிக‌ளில் முறைகேடு\nபாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு ...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் 20மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ணி நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2014/11/", "date_download": "2018-05-27T03:25:18Z", "digest": "sha1:ISD7ZZ6UIPKVEV3SW3ACN4L4DPM62RUI", "length": 55034, "nlines": 423, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: November 2014", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nகலப்படம் பற்றிய விழிப்புணர்வு கவிதைகள் தொகுத்து வெளியிட விருப்பம்.உதவிட வேண்டுகிறேன்.\nகேடு கெட்ட உலக வாழ்க்ககை வெறுத்ததால்\nசாகவேண்டி தற்கொலை செய்ய முயற்சித்தான் முனுசாமி...\nகடைக்கு சென்று தாம்புக் கயிறு வாங்கி\nஉத்திரத்தில் சுருக்கிட்டு, தலையை உள்நுழைத்து\nஅந்தோ... பரிதாபம் கயிறு அறுந்துவிட\nமூட்டைப்பூச்சி மருந்து குடித்தால் சகலாம் -என்ற\nஒரு முதியவரின் அறிவுரை புத்தியில் மின்ன,\nகடைக்குச் சென்று வாங்கி வந்து,\nசிறு நேரம் வாந்தி, சிறிது நேரம் தலைச்சுற்றல்\nஊற்றி முயற்சித்தான் முடிவு வழக்கம் போல்....\nசீரிய சிகிச்சையில் செத்தே விட்டான்...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/07/2014 05:07:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/07/2014 05:00:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.\nதமிழனின் நீர் மேலாண்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு..நொய்யல் நதியும் ஆகும்.\nமேற்குத்தொடர்ச்சி மலையில் கோயமுத்தூருக்கு மேலே சுமார் இரண்டாயிரம் அடி உயரத்தில் மழை பெய்யும்போது அந்த மழைநீரானது சிறுசிறு ஓடைகளாக உருப்பெற்று ஏழு ஓடைகளாகிறது.இந்த ஏழு ஓடைகளும் ஒன்று சேர்ந்து குஞ்சரான்முடி என்று பெயர் பெறுகிறது.இதுதான் சிறுவாணி அடிவாரத்தில் காணும் கோவை குற்றாலம் ஆகும்.இந்த கோவை குற்றாலத்தை ப்ரியாறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க இன்னொரு பக்கத்தில் அதாவது வெள்ளிங்கிரி மலையிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பெய்யும் மழை ஐந்து ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை என்று பெறுகிறது.இந்த ஓடை பெரியாறுடன் செம்மேடு அருகில் கலக்கிறது.\nஇந்த பெரியாறு மட்டும் நொய்யல் என்று அழைக்கப்படுவதில்லை\nஇந்த பெரியாறுடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்ப்புடி ஓடை,பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த சின்னாறு சாடிவயல் வழியாக ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலைப்படுகையில் ஒன்று சேர்கிறது.பெரியாறு மற்றும் சின்னாறு சேர்ந்தவுடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் இருபது ஓடைகளை ஒன்று சேர்த்து வரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறு தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது.இதை வைதேகி நீர்வீழ்ச்சி என்பர்.\nதொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய அனைத்து ஆறுகளும் ஒன்று சேர்ந்தபிறகுதான் நொய்யல் ஆறு என்று பெயர் பெறுகிறது. இந்த நொய்யல் ஆறு பேரூர்,கோவைநகர்,சூலூர்,திருப்பூர்,கொடுமணல்,காங்கயம்,வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்னும் கிராமத்தில் காவிரி நதியுடன் இந்த நொய்யல் ஆறு கலக்கிறது.\nநொய்யல் ஆற்றின் சராசரி நீளம் 160கி.மீ. முதல் 170கி.மீ. ஆகும்.இந்த ஆற்றின் சராசரி அகலம் 30அடி ஆகும்.நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகள் 32 எண்ணிக்கை ஆகும்.குளங்கள் 19 ஆகும்.\nநொய்யல் ஆற்றில் வருடம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு பத்து மாதங்கள் தண்ணீர் வரத்து உள்ளது. இந்த தண்ணீரையும் மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரையும் நாம் முறையாக பயன்படுத்த வேண்டும்.\nஆண்டிபாளையம் குளம். நொய்யல் ஆற்றின் நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டு. நொய்யல் ஆற்றில் வருகின்ற தண்ணீர் மங்கலம் அருகேயுள்ள தடுப்பணையால் தடுக்கப்பட்டு 7 கி.மீ வாய்க்கால் மூலம் ஆண்டிபாளையம் குளத்திற்கு வருகிறது. இந்தக்குளம் நிரம்பியவுடன்.. வெளியேறும் நீர் மீண்டும் நொய்யலை அடைகிறது.\nநொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும்போது அந்த தண்ணீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து பின்னர் சிறிய வாய்க்கால் மூலமாக குளங்களுக்கு தண்ணீரை எடுத்துச்செல்லும் முறை நொய்யல் ஆற்றில் பயன்படுத்தப்படுகிறது.நொய்யல் ஆறு வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் வேகம் மணிக்கு ஒருமுறை மாறுபடும் தன்மை கொண்டது. அதனால் திடீர் என குளங்களை நிரப்பிவிடும்.அதனால் குளம் அழியும் ஆபத்து உள்ளது.\nஅதனால்தான் தடுப்பணைகள் மூலம் தடுத்து சிறு வாய்க்கால் வழியாக பாதிப்பு இல்லாமல் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சோழர்கள் காலத்திலும் பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nகூடுதுறையில் நொய்யல் என்று பெயர் பெற்ற பிறகு கோவையை நோக்கி ஓடி வருகிறது.அதே சமயம் நொய்யலின் குறுக்கே எந்த தடுப்பு இருந்தாலும் அதை தகர்த்துக்கொண்டு ஓடி வர காரணம் உள்ளது.\nகாரணம் கூடுதுறையில் இருந்து ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் ஒரு மீட்டர் தாழ்வாக உள்ளது.அதனால் 30கிலோமீட்டர் தூரமுள்ள கோவையை நோக்கி ஓடிவரும் நொய்யல் ஆற்றின் நிலை 15மீட்டர் தாழ்வாக இறங்கியுள்ளது.\nஇந்த புவியமைப்பின் நிலை காவிரி ஆற்றுடன் கலக்கும் இடம் வரை இயற்கையாகவே அமைந்துள்ளது.இதனால்தான் சொய்யல் ஆறு சீறிப்பாய்ந்து வருகிறது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/07/2014 06:55:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.மு.க. M.P.திருச்சி சிவா அவர்களது வழிகாட்டுதலை நாமும் பின்பற்றுவோம்.\nகொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\n என்ற தலைப்பில் திருச்சி சிவா அவர்கள் மனித சமூக விழிப்புணர்வுக்காக தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.சமூகம் சார்பாக மதிப்பிற்குரிய ஐயா திருச்சி சிவா M.P.தி.மு.க.அவர்களை வாழ்த்துவோம் வாங்க...மனித உறவு மேம்பட நமது வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளலாம் வாங்க..\nபதிவிட்ட nammatrichy.com அவர்களுக்கு நன்றிங்க..\nதி.மு.க. மாநிலங்களை உறுப்பினரும், தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளருமான திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி 2014 ஆகஸ்டு மாதம் 02ஆம் தேதி நள்ளிரவில் மரணமடைந்தார்.அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுவோம்.\n - திருச்சி சிவா M.P\nபன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.\nஅவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.\nஇதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதே இல்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.\nஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.\nபொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.\nஎந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.\nமூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.\n1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.\nவிருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், எண்ணைக்கான வருவோர் அதனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி;\nபொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.\nபண்டிகைகளும், திருநால்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.\nஇத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தன ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது.\nநேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு பேசுவதற்குதானே ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.\nகாலம் கடந்து பயன்படுத்தினால் பயனத்துப்போவது பதார்த்தங்கள் மட்டுமா வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.\nஇத்தனை கற்றும் கடமை தவரியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசகினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருபாயே.\nஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததைஎல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.\nநினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.\nபேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிரவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........\nஇவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.\nஎனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், \"வருதப்படதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் \" என்று சமாதானப் படுத்தினார்.\nநான் அவரிடம் கேட்டேன் , \" நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.\nஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன் அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என சொன்னேன்.\nஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோj ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.\n தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.\nஎன் மனைவிக்கு என்னை உணர்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்\nஉங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்\nநான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.\nஅவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின்\nநினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............\nஇதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.\nதி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி நேற்று (02-08-2014ஆம் தேதி) நள்ளிரவில் மரணம் அடைந்தார்.\nதி.மு.க. மாநிலங்களை உறுப்பினரும், தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளருமான திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி சில வருடங்களுக்கு முன் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில வாரங்களுக்கு முன் அவர் சொந்த ஊரான திருச்சிக்கு வந்தார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநேற்று காலை முதலே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (2ஆம் தேதி) நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/07/2014 06:01:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.\nநடிப்புலகில் ஒரு மாசற்ற மாணிக்கம்.தனிமனித ஒழுக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு நம்ம கொங்குத்தமிழன் நடிகர் சிவக்குமார் அவர்களது வாழ்க்கைக்குறிப்பு இதோ கவிதையாக..........பதிவிட்ட கவிதாயினி அமுதா பொற்கொடி அவர்களுக்கு நன்றிங்க நம்ம கொங்குத்தமிழன் நடிகர் சிவக்குமார் அவர்களது வாழ்க்கைக்குறிப்பு இதோ கவிதையாக..........பதிவிட்ட கவிதாயினி அமுதா பொற்கொடி அவர்களுக்கு நன்றிங்க\nமாய உலகில் ஒரு மாசற்ற சுவடு-\nநடிகர் சிவக்குமார் வாழ்க்கை குறிப்பு.......\nஅக்டோபர் 27-1941 ஆம் ஆண்டு\nஅற்ப ஆயுளில் தந்தை தமயனை இழந்ததால்\nஆவி கொண்ட ஓவியம் கற்க\nதேடிச் சென்றாய் சென்னை கலைக் கல்லூரி\nமேவிடும் உன் கை அசைவால்\nபிரகதீசுவரர் ஆலயமும் மீனாட்சி அம்மன் கோவிலும்\nதிருமலை திருப்பதியும் திருமலை நாயக்கர் மகாலும்\nஉன் பயணம் அங்கே தொடரவில்லை\nவிபத்தானாலும் 1965-ல் உன் திரையுலக பிரவேசம்\nமுகப்பானது மூத்தோர் ஆசி பெற்றதனால்\nமூன்று தலைமுறை அதிலே கண்டாய்\nமுத்தாய்ப்பாய் மூன்று திரைப்பட விருது வென்றாய்\nநடித்த திரைப்படம் இருநூறுக்கு மேல்\nஉயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன்,\nரோசாப்பூ ரவிக்கைகாரி, சிந்து பைரவி\nஉன் நடிப்பு பயணத்தில் மகுடம் சூடின\nமாய உலகில் மாசற்று நின்றவனே - எதுவும்\nமுடித்த எண்ணம் உன்னில் வரவில்லை\nதேடல் வாழ்க்கையின் தூண்டுகோல் அல்லவா\nநடிப்பிற்கு நான் இலக்கணம் இல்லை\nஉன்னை நீயே ஆய்ந்து கொண்டாய்\nஉனக்குள் பிறந்தது உண்மை ஞானம்\nகசடான பழைய புகழை சுமக்காதே\nகடக்க வேண்டிய தூரம் வெகுதூரம்\nகாசுக்காய் அடுத்தவன் வசனம் பேசியது போதும்\nஉன் பார்வையில் விழுந்தது இலக்கிய வண்ணம்\nபேச்சில் சொல் அலங்காரம் இல்லை\nவீச்சில் உண்மை உறைந்து இருந்தது - அதனால்\nஎம்மவர் உள்ளத்தில் அது நிறைந்தது\nமனித நேயம் மனவளம் என\nஉன் உரை கரை புரண்டு ஓடியது\nஇது \"ராஜ பாட்டை அல்ல\" என் நூல் எழுதி\nஎழுத்தாளன் எனும் பட்டயம் சேர்த்தாய்\nஉமை ஒரு பாகமாய் கொண்ட சிவன் போல்\nஉன் வாழ்க்கை துணைவியாய் இலக்குமியை ஏற்றாய்\nமுத்தமிழ் போல் மூன்று பிள்ளைகள் ஈன்றாய்\nஏற்பு அடைய நல வித்திட்டாய்\nசொன்னதைச் செய்யும் செயல் வீரன் நீ\nசிவக்குமார் கல்வி அறக்கட்டளையை அமைத்து\nஏழை எளிய மக்கள் உயர\nகல்விக் கட்டணம் உகந்து ஈன்றாய்\nஉன் அகரம் இன்று சிகரம் தொட்டது\nநீயே நிரந்தரம் என்றாய் உனக்குள்\nமனமே நம் வினை ஊக்கி - அதனால்\nஇதுவும் கடந்து போகும் என்ற\nமறை கூறும் முறை கொண்டு வாழ்பவனே\nகரை அற்ற திரையுலகில் வரை கொண்டு நின்றவனே\nபறை அடித்து உன் புகழைப் பாரெல்லாம் நான் உரைக்க\nமறுமுறை நீ பிறந்தாலும் - இப்புவி\nவாழ்க நீ பல நூற்றாண்டு\nவான் புகழும் வள்ளுவம் போல்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/07/2014 05:43:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nதி.மு.க. M.P.திருச்சி சிவா அவர்களது வழிகாட்டுதலை ந...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/index.php?page=239", "date_download": "2018-05-27T03:18:15Z", "digest": "sha1:7DG5DER4DUD4HSGFYDVASQMIYKWXJPYW", "length": 3722, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "'பை (π)அப்ராக்சிமேஷன் டே' (Pi Approximation Day) தெரிந்து கொள்வோம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\n'பை (π)அப்ராக்சிமேஷன் டே' (Pi Approximation Day) தெரிந்து கொள்வோம்\nநேற்று உலக \"பை\" தினம் கொண்டாடப்படĮ...\n1\tதிருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி\n1\tதிருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்\n1\tதிருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை\n1\tதிருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\n1\tதிருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி\nதிருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்\nதிருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை\nதிருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\nதிருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/02/", "date_download": "2018-05-27T03:25:43Z", "digest": "sha1:S64HUCYK4XDE2IBDAH5JVMB52Z5LEYOT", "length": 191066, "nlines": 781, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: February 2011", "raw_content": "\nவானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்\nதற்கொலை தகவல்கள் .. ஏன்\nதமிழ் செய்தி தாள்களில் தினம் தென்படும் விஷயம் தற்கொலை செய்திகள். எதற்கு இதனை அவசியம் வெளியிடுகிறார்கள் என புரியவில்லை. எங்கோ சென்று தற்கொலை செய்து கொண்ட யாரென்றே தெரியாத ஒரு நபர் பற்றி, அவர் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி வெளியிடுகிறார்கள் என்றாலாவது அதில் அர்த்தம் உள்ளது. ஊரில் நடக்கும் தற்கொலைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது சில தவறான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில பிரச்சனைகள், குழப்பங்கள் இருக்கும்.. சற்று வீக்கான மன நிலையில் உள்ளோருக்கு இத்தகைய செய்திகள் மனதின் ஓரத்தில் போய் பதிந்து தொந்தரவு தரும் என்பதோடு, சில நேரம் அவர்களையும் அத்தகைய தவறான முடிவுக்கு யோசிக்க வைக்கும். கொலை போன்ற செய்திகளாவது அவற்றை பார்த்து நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கணும் என்ற விதத்தில் ஓகே. ஆனால் இத்தகைய தற்கொலை செய்திகளை பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். (நாம் செய்வதை செய்து விடுவோம். அப்புறம் அவர்கள் இஷ்டம்)\nமலேசியா வாசுதேவன் மறக்க முடியாத பாடல்கள்\nசமீபத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன் பல அற்புத பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடியவற்றில் எனக்கு மிக பிடித்த மூன்று பாடல்கள்:\nகோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)\nவா வா வசந்தமே (புது கவிதை)\nஇதில் \"அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா\" பாடல் ரொம்பவே ஸ்பெஷல்.\nசேவை செய்த காற்றே பேசாயோ\nபள்ளி சென்ற கால பாதைகளே.. பாலங்கள் மாடங்கள் ..ஆஹா.\nபுரண்டு ஓடும் நதி மகள்.... இரண்டு கரையும் கவிதைகள்\nதனித்த காலம் வளர்த்த இடங்களே. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்\nஇந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும்.\nஎஸ்.பி. பி & ஜேசுதாஸ் கோலோச்சிய காலத்தில் மலேஷியா வாசுதேவன் நிறைய சாதித்தது பெரிய விஷயம் தான். நடிகராகவும் பல படங்களில் கலக்கியிருப்பார். We will miss you Malaysia Sir \nஒரு முறை அய்யாசாமி மனைவி சமையல் முழுக்க முடிச்சிட்டு \" தோசை மட்டும் எல்லாருக்கும் ஊற்றி, பேக் பண்ணிடுங்க\"ன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. மனைவி, குழந்தை, தனக்கு என எல்லாருக்கும் நல்லா தோசை ஊத்தி முடிச்சிட்டுதான் அய்யாசாமி கிளம்பினார். சாயங்காலம் வந்து பார்த்தா, அடுப்பு \"சிம்மில்\" ஆப் செய்யாமலே இருக்கு. நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ஹவுஸ் பாஸ் செம ரெய்டு விட்ட பிறகு \"கல் மேலே இருந்ததால், அடுப்பு ஆப் செய்யாதது தெரியலே\" என பம்மினார். இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.\nஎங்கள் வீட்டுக்கருகே உள்ள ஒரு ஹோட்டலில் குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு கருவிகள் வெளியில் வைத்துள்ளனர். மேலும் அபூர்வ சகோதரர்கள் கமல் போல உயரம் குறைந்த ஒரு மனிதர் எப்போதும் ஒரு பபூன் உடை அணிந்து நின்று கொண்டு குழந்தைகளை பார்த்து சிரிக்கிறார். அடிக்கடி இங்கு செல்லும் போது நான் கவனித்தது குழந்தைகள் இல்லா விடில், இவர் பெண்களை மட்டும் தான் பார்த்து சிரிக்கிறார். ஆண்களை அதிகம் கண்டு கொள்வதில்லை. ஒரு சில முறை இவரை பார்த்து நான் சிரித்தும், பேச முயன்றும் முடியாமல் போக சற்று கஷ்டமாய் இருந்தது. அப்புறம் தான் நினைத்து கொண்டேன்: இவரும் ஒரு ஆண் தானே,. இங்கு தான் பெண்களை பார்க்கவும் சிரிக்கவும் அவருக்கு முடிகிறது சில உணர்வுகள் அனைவருக்கும் பொது\nசட்ட சொல் : ப்ரோபேட் (Probate)\nஒருவர் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். அந்த உயில் படி அவரது சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் \"ப்ரோபேட்\" எனப்படும். அப்படியானால் உயில் மட்டும் எழுதினால் போதாதா என்றால் போதாது. அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்தி படுத்திகொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள வேண்டும்.\nரசிக்கும் விஷயம் நீர் வீழ்ச்சி\nநீர் வீழ்ச்சியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதில் குளிப்பது அதை விட பெரிய மகிழ்ச்சி. நண்பர்கள் , குடும்பம் என யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும். நீர் வீழ்ச்சியில் பல வேறு ஸ்டைல்களில் குளிக்கலாம். உட்கார்ந்து, படுத்து, உள்ளே போய் கல்லில் சாய்ந்தவாறு (கிட்ட தட்ட தூங்குவது மாதிரி) என பல விதமாய் குளித்து, உடன் வந்தவர்கள் நான் எங்கே என தேடி பிடித்து இழுத்து போகும் வரை வெளியே வர மாட்டேன். சிவப்பான கண்களுடன் குளித்து முடித்து வந்ததும் நல்லா பசிக்கும் பாருங்க.புல் கட்டு கட்டலாம். சாப்பிட்டு முடித்ததும் \" அடுத்து எப்ப குளிக்க போகலாம்\" என்று ஆரம்பித்து விடுவேன்.. ம்ம் இதை எழுதும் போதே மறுபடி குற்றாலம் போகணும் போல இருக்கு..\nLabels: சட்ட சொல் விளக்கம், வானவில்\nதற்கால நடிகர்களில் அமீர்கான் வெகுவாக கவர்கிறார். இவரது படங்களில் அன்பையும், நம்பிக்கையும் காட்டும் காட்சிகள் பல நேரம் கண்ணிலிருந்து சில துளி நீர் வர வைத்து விடுகிறது.\nசமீபத்தில் பீப்ளி லைவ் படத்தின் சீடி வாங்கி வந்தேன். ஏன் இந்த படம் என ஹவுஸ் பாஸ் கேட்க \"அமீர்கான் தயாரிச்சது\" என்றேன். \" வெறும் அமீர்கான் படம் மட்டுமே பாக்கலாம் போல.. எல்லாமே அருமையா இருக்குள்ள\nடைம்ஸ் ஆப் இந்தியா சமீபத்தில் சென்ற பத்து ஆண்டின் சிறந்த பத்து படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிட்டது. அதில் நான்கு படங்கள் அமீர்கான் நடித்தது இது தவிர ஷாருக் நடித்தவை இரண்டு, வேறு எந்த நடிகர்க்கும் இரண்டு படம் கூட இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அமீர்கானின் தாக்கத்தை இதிலிருந்தே உணரலாம்.\nநான் ரசித்த நான்கு அமீர்கான் படங்களை இங்கு பகிர்கிறேன். இதில் கஜினி தவிர்த்து மற்றவை டைம்ஸ் ஆப் இந்தியா டாப் டென்னில் வந்தவையே. நான் பார்க்காத அமீர் கானின் நல்ல படங்கள் இருந்தால் நீங்கள் சொல்லுங்களேன். உங்களுக்கு நன்றி சொல்லியவாறே நிச்சயம் பார்ப்பேன்.\nஇந்த படத்தில் முதலில் நம்மை கவருவது இதன் கதை. பிறர் சொல்கிறார்களே என ஏதோ ஒரு கோர்ஸ் படிக்காமல் தனக்கு மிக ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து படிப்பதும், அதே துறையில் வாழ் நாளை கழிப்பதும் தான் வெற்றி பெற ஒரே வழி என்பதே படம் சொன்ன சேதி. அமீர் 19 வயது இளைஞனாக நடித்தும், எந்த உறுத்தலுமின்றி ரசிக்க முடிகிறது. ஹீரோயினுடன் ஒரே ஒரு பாடல் காட்சி. இதை தவிர்த்து தேவையற்ற சண்டை, வன்முறை ஏதுமில்லை.\nஅமீர் கானின் புதிரான பாத்திரமும், கடைசி அரை மணி நேரத்தில் அவர் பற்றிய முழு கதையும் விரிவதும் நம்மை ஈர்க்கிறது. அமீர், புரொபசர், மாதவன் என அற்புதமாய் கேரக்டர்கள் உருவாக்கிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படம் நெடுகிலும் அமீர் சொல்லும் \" ஆல் இஸ் வெல்\" ...அருமை வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு இந்த காட்சி முழுவதுமே வெரி இன்டரஸ்டிங். இந்த சீன் முடிந்து வெள்ளத்தின் நடுவே நின்று கொண்டு, புரொபசர் அமீருக்கு பேனா தருவார் பாருங்கள் கிளாஸ் \nமசாலா படம் தான். தமிழில் ஏற்கனவே பார்த்தும் விட்டோம். எப்பவும் ரீமேக் படங்களை ஒரிஜினலுடன் ஒப்பிட்டு எவையெல்லாம் சரியில்லை என பட்டியலிடுவது நமக்கு வழக்கம். ஆனால் இந்த படம் பார்த்து விட்டு அப்படி ஒன்றே ஒன்று சொல்லுங்களேன் பார்க்கலாம் சூர்யா செய்ததை விட மிக அற்புதமாக தன் அனுபவத்தின் மூலம் நடித்திருந்தார் அமீர். சூர்யா பணக்கார பிசினஸ் மேனாக ரொம்ப ஸ்டைலாக நடித்திருந்தாலும் கஜினியாக எப்போதும் திரு திருவென முழிப்பார். ஆனால் அமீர் கஜினியாகவும் உடல், முக பாவங்களில் அசத்தியிருந்தார். இதற்காக எயிட் பேக் உடல் வேறு சூர்யா செய்ததை விட மிக அற்புதமாக தன் அனுபவத்தின் மூலம் நடித்திருந்தார் அமீர். சூர்யா பணக்கார பிசினஸ் மேனாக ரொம்ப ஸ்டைலாக நடித்திருந்தாலும் கஜினியாக எப்போதும் திரு திருவென முழிப்பார். ஆனால் அமீர் கஜினியாகவும் உடல், முக பாவங்களில் அசத்தியிருந்தார். இதற்காக எயிட் பேக் உடல் வேறு தமிழை விட வித்யாசமான ஆனால் ரசிக்கும் படி கிளைமாக்ஸ். அசின் தமிழிலும் ஹிந்தியிலும் கலக்கிய படம். காமெடியன் இல்லாமல் ஹீரோயினே நகைச்சுவை ஏரியாவுக்கு இன் சார்ஜ் ஆக்கிய இயக்குனருக்கு வணக்கம் தமிழை விட வித்யாசமான ஆனால் ரசிக்கும் படி கிளைமாக்ஸ். அசின் தமிழிலும் ஹிந்தியிலும் கலக்கிய படம். காமெடியன் இல்லாமல் ஹீரோயினே நகைச்சுவை ஏரியாவுக்கு இன் சார்ஜ் ஆக்கிய இயக்குனருக்கு வணக்கம் பாப் கார்ன் மசாலா படம். Fully Entertaining \nஅமீரை நான் கவனிக்க ஆரம்பித்தது இந்த படத்துக்கு பின் தான். கிரிக்கெட் பிடிக்காத என் பெண் போன்றவளுக்கும் கூட இந்த படம் பிடித்தது சுதந்திர போராட்ட காலத்து கதையின் பின்னணியில் கிரிக்கெட் கலந்து எடுத்த கதை. பிரிட்டிஷாரிடம் வரி கட்ட முடியாது என போராடுகின்றனர் ஒரு கிராம மக்கள். பிரிட்டிஷார் ஒரு கட்டத்தில் \"எங்களுடன் கிரிக்கெட் மேட்ச் ஆடி ஜெயித்தால் வரி கட்ட தேவையில்லை; தோற்றால் ரெண்டு மடங்கு வரி கட்ட வேண்டும்\" என பந்தயம் கட்டுகிறார்கள். கிரிக்கட் என்றால் என்னவென்று தெரியாத கிராம மக்களை வைத்து அமீர் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.\nஇரண்டு நாட்கள் நடக்கும் அந்த கிரிக்கெட் மேட்ச் உணர்வு குவியல். கை சரியில்லாத ஒருவனை எல்லோரும் கிண்டல் செய்ய, அவனையே ஸ்பின் பவுலாரக்கி விக்கெட் அள்ளும் காட்சிகள் அட்டகாசம். அமீர் டீமில் ஆடும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யம். கடைசி பந்தில் நாலு ரன் தேவைப்பட அமீர் அடிக்கும் ஷாட்டை எதிர் அணி கேப்டன் கேட்ச் பிடித்து விடுகிறார். ஆனாலும் அமீர் அணி ஜெயிக்கிறது. எப்படி என்று கேட்டால், இதுவரை நீங்கள் படம் பார்க்க வில்லை என்று அர்த்தம். அவசியம் பாருங்கள் . கிரிக்கெட்டும் தேச உணர்வும் கலந்து கட்டி அடித்து ஜெயித்தார்கள். ஓடுமா ஓடாதா என சரியாக சொல்ல முடியாத, இப்படி ஒரு ரிஸ்க்கான படத்தை தயாரித்தது அமீரே தான்.\nசிறு வயது முதல் இன்று வரை நான் பார்த்த படங்களிலேயே ஒரு மிக சிறந்த படம் இது. டிஸ்லெக்சியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டு எதையும் புரிந்து கொள்ள சிரம படும் ஒரு சிறுவனின் கதை. படத்தின் ஹீரோ இந்த சிறுவனே அமீர் என்ட்ரி இடைவேளையின் போது தான்.\nசிறுவனின் பள்ளிக்கு ஆசிரியராக வரும் அமீர்தான் அவனது நோயை புரிந்து கொள்ளுகிறார். அவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதில் அவனை செலுத்துகிறார். மற்ற பாடங்களையும் வித்யாசமான முறையில் கற்று தருகிறார். சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையும் முன்னேற்றமும் பெறுகிறான். படத்தின் இறுதியில் ஒரு ஓவிய போட்டி நடக்கிறது. இதில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுகிறார்கள். படத்தில் இந்த ஓவிய போட்டி நடக்கும் போது பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க, காட்சிகளை பார்த்து சிரித்தவாறே இருப்போம். பாடல் முடியும் போது அமீர் வரைந்த படத்தை காட்டுவார்கள். அப்போது நம்முள் துவங்கும் ஆனந்த அழுகை படம் \" End \" போடும் வரை தொடரும். பல முறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் எனக்கு இதே அனுபவம் தான். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஆசிரியர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம் இது. இதன் இயக்கமும் அமீர்கான் எனும் போது அவரின் மீது மதிப்பு கூடி போகிறது\nபடத்தின் கடைசி ஷாட்டில் கோடை விடுமுறைக்கு, ஊருக்கு செல்லும் சிறுவன் அமீர்கானிடம் விடை பெற்று விட்டு, தன் தந்தையின் காரில் ஏற போகிறான். அப்போது தள்ளி நிற்கும் அமீரை பார்த்து விட்டு, அன்பின் மிகுதியில் ஓடி வந்து மீண்டும் அமீரின் கைகளில் தஞ்சம் புக, அமீர் அவனை தூக்கி சிறு குழந்தை போல் சுற்றுவார். இத்தகைய படம் தந்ததற்காக அமீர்கானையே அப்படி தூக்கி சுற்றலாம்\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nநெகிழ்வான நட்சத்திர வார அனுபவங்கள்\nதமிழ் மண நட்சத்திர வாரம் மிக நெகிழ்வான உணர்வுகளையும், புது அனுபவம் மற்றும் நண்பர்களையும் தந்து விட்டு இன்றுடன் முடிகிறது.\nசொந்த கதை ஓரளவு இருந்தாலும், இனி நட்சத்திர பதிவர் ஆவோருக்கு உதவும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு...\nஎந்த ஒரு பெரிய விஷயம் தனி மனிதன் திட்டமிட்டாலும், அதை செயல் படுத்த ஒரு குழு நிச்சயம் தேவைப்படுகிறது . இந்த வார பதிவுகளுக்கு பின்னால் சிறு குழு உதவி உள்ளது. அவர்களை அறிய செய்யவும் நன்றி சொல்லவும் இது ஒரு வாய்ப்பு.\nதமிழ் மணம், தனது நட்சத்திர பதிவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறது என அறியேன். ஆனால் நம் வாரம் துவங்க 15 நாட்கள் முன்பு ஒரு மெயில் அனுப்பி, நட்சத்திர பதிவராக இருக்க சம்மதமா என கேட்கின்றனர். பொதுவாய் இத்தகைய அரிய வாய்ப்புகள் வாழ்க்கையில் வந்தால், தவற விடுவதில்லை (தொலை காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டும் தற்போது \"எஸ்\" சொல்வது கொஞ்சம்; \"நோ\" சொல்வது நிறைய )\nதமிழ் மணம் மெயில் வந்த அன்று எனக்கு போர்ட் மீட்டிங். மேலும் அடுத்த பத்து நாட்களுக்கு என்னுடன் டிப்பார்ட்மண்டில் இருக்கும் ஒரே நபரும் விடுப்பில் செல்கிறார். இதனால் அதிக வேலை என்பதோடு தினம் வீட்டுக்கு செல்லவும் தாமதமாகும். எனவே இரு நாள் யோசித்தேன். வாய்ப்பை தவற விட வேண்டாம் என்று இரு நாளுக்கு பின் சரி சொன்னேன்.\nசரி சொன்ன அன்றிலிருந்தே என்னை பொறுத்த வரை நட்சத்திர வாரம் துவங்கி விட்டது. தினம் ஒவ்வொரு பதிவாக எழுத ஆரம்பித்தேன். சனி ஞாயிறில் இன்னும் சற்று அதிக பதிவுகள் எழுதப்பட்டன. நட்சத்திர வாரம் காதலர் தினத்தில் துவங்கி உலக கோப்பை துவங்கும் நேரத்தில் முடிவது தெரிந்தது. இரண்டுக்கும் சிறப்பு பதிவுகள் தேவை என புரிந்தது.\nமேலும் நட்சத்திர வாரம் துவங்கும் திங்கள் கிழமைக்கு முன் நான்கு நாட்கள் (வியாழன் முதல் ஞாயிறு வரை ) அலுவல், பின் சொந்த வேலையாக ஊரில் இருக்க மாட்டேன்.இந்த நான்கு நாட்களும் இணையம் பக்கமே வர முடியாது. இது தெரிந்து அனைத்து பதிவுகளும் மிக முன்பே தயார் செய்யப்பட்டது.\nதினம் ஒரு பதிவு வெளியிடுவதா, ரெண்டு பதிவு வெளியிடுவதா என சற்று குழப்பம். முந்தய நட்சத்திரங்களை பார்க்க பலர் தினம் ரெண்டு பதிவுகள் போட்டிருந்தனர். சிலர் தினம் ஒரு பதிவும் வெகு சிலர் அந்த ஒன்று கூட ஒரு சில நாட்களில் போடாமலும் இருந்தனர். சரி நாம் புதியதாய் ஏழெட்டு பதிவுகளும், பழையவனற்றில் அதிகம் வாசிக்க படாத நல்ல பதிவுகள் நான்கைந்தும் ரீ ரைட் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி கிட்ட தட்ட அனைத்து பதிவுகளும் நட்சத்திர வாரம் துவங்க நான்கு நாட்கள் முன்பே தயார்.\nமுதல் நாள் காதலர் தின சிறப்பு பதிவுக்கு பின்னூட்டங்கள் (வழக்கம் போல் வாழ்த்து சொல்லி) நிறைய வந்தது. மதியம் போட்ட பெண்கள் டயலாக்ஸ்க்கு அதிக பின்னூட்டங்கள் இல்லை. \"சரி தினம் இரண்டு போடுவது தவறோ ஏகப்பட்ட பதிவு எழுதுறான்\" என மக்கள் வெறுக்கிறார்களோ என ஒரு எண்ணம். சரி இன்னொரு நாள் பார்க்கலாம் என நினைத்தேன். மறு நாள் பால குமாரன் பதிவுக்கு எதிர்பார்த்த படி பின்னூட்டங்கள் & ரெஸ்பான்ஸ் செம. பின்னூட்டங்கள் தவிர மெயில் & போனில் பதிவர் அல்லாத பழைய & புது நண்பர்கள் இந்த பதிவு பற்றி பேசினர். இதை விட ஆச்சரியம் இந்த ஒரு வாரத்தில் எழுதிய பதிவுகளில் மிக அதிக ஹிட்ஸ் வாங்கியது செவ்வாய் மதியம் வெளியிட்ட வேலை நீக்கம் என்கொயரி அனுபவம் பதிவு தான். இது ஓர் மீள் பதிவு ஏகப்பட்ட பதிவு எழுதுறான்\" என மக்கள் வெறுக்கிறார்களோ என ஒரு எண்ணம். சரி இன்னொரு நாள் பார்க்கலாம் என நினைத்தேன். மறு நாள் பால குமாரன் பதிவுக்கு எதிர்பார்த்த படி பின்னூட்டங்கள் & ரெஸ்பான்ஸ் செம. பின்னூட்டங்கள் தவிர மெயில் & போனில் பதிவர் அல்லாத பழைய & புது நண்பர்கள் இந்த பதிவு பற்றி பேசினர். இதை விட ஆச்சரியம் இந்த ஒரு வாரத்தில் எழுதிய பதிவுகளில் மிக அதிக ஹிட்ஸ் வாங்கியது செவ்வாய் மதியம் வெளியிட்ட வேலை நீக்கம் என்கொயரி அனுபவம் பதிவு தான். இது ஓர் மீள் பதிவு தினம் ரெண்டு பதிவு போடலாமா, மீள் பதிவு போடலாமா என்ற ரெண்டு தயக்கங்களையும் வேலை நீக்கம் பதிவுக்கான வரவேற்பு உடைத்தது.\nஇந்த வாரத்தில் எனக்கு மிக பிடித்த பதிவுகள் அம்மா, சீனு சார் & பால குமாரன் சந்திப்பு ஆகியவை. நண்பர்கள் வரவேற்பு அதிகம் கிடைத்தது என்பதற்காக மட்டுமில்லாமல் \"Straight from my heart \" & மனதில் நீண்ட நாள் ஊறி கிடந்து பின் வெளி வந்ததாலும் பிடித்தவை.\nபதிவில் மிக முக்கியமாய் கடைசி பகுதி அனைவரையும் கவரும் படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததும் இந்த வாரம் தான். அந்த கடைசி பாரா படிப்பவர்களை நெகிழ்த்துவதாகவோ, சிறு ஷாக் தருவதாகவோ, புன்னகை புரிய வைப்பதாகவோ இருத்தல் நலம் என உணர்ந்தேன்.\nஒரு குழுவே உதவியது என்றேன்; அவர்கள்:\nநண்பன் தேவா: கல்லூரியில் எனது ஜூனியர். சில பதிவுகளை இவனுக்கு அனுப்பி கருத்து கேட்டேன். வாசித்து விட்டு உடன் சில மாற்றங்கள் சொன்னான். அவன் சொன்ன மாற்றங்கள் அனைத்தும் நண்பர்களால் பின்னூட்டங்களில் பாராட்டப்பட்டன. தில்லியில் இருந்தாலும் அநேகமாய் இந்த ஒரு வாரம் தினம் ஒரு முறை பேசி கொண்டிருந்தான். அவனால் ஒரு குறிப்பிட்ட நாள் இணையம் பக்கம் வர முடியாமல் இருந்த போதும் எஸ். எம். எஸ் அனுப்பி இன்றைக்கு ரெஸ்பான்ஸ் எப்படி என்று கேட்டான். இது போன்ற ஆதரவும் எதிர் பார்ப்பும் எழுதும் யாருக்கும் பெரிய பலம்.\nபதிவர் ராம லட்சுமி : மூத்த பதிவரான இவரிடம் பல ஆலோசனைகள் பெற்றேன். மேலும் இவர்தான், கூகிளில் ஒவ்வொரு பதிவுக்கும் எவ்வளவு ஹிட்ஸ் என தெரிவதை பார்க்க சொல்லி தந்தார் (இந்த வாரம் தான் இது தெரிந்தது; இன்னும் தெரியாமல் இருப்போருக்கு: நமது டேஷ் போர்டில் நியூ போஸ்ட், எடிட் போஸ்ட் என்றெல்லாம் இருக்கும் அல்லவா அதன் கடைசியில் Stats என்று இருக்கும் பாருங்கள். அதனை கிளிக் செய்தால் இந்த வாரம், மாதம், ஆல் டைம் பாபுலர் பதிவுகளை பார்க்கலாம்)\nயூ டியூப் மூலம் வீடியோ பதிவேற்ற தெரிந்தாலும் அதை பதிவில் அப்லோட் செய்ய தெரியாமல் இருந்தேன். கேபிள் மூலம் இவ்வாரம் தான் கற்றேன் (ஆதி மனிதன் ஒரு முறை பின்னூட்டத்தில் சொன்னாலும் அப்போ புரியலை)\nமாலை நேரத்து பதிவுகளை வெளியிட , தமிழ் மணம் & இன்ட்லியில் சேர்க்க உதவியது நண்பர் மாதவன் (அலுவலகத்தில் தமிழ் மணம் & இன்ட்லி Access இல்லை). ஒவ்வொரு முறையும் மிக சரியாக நான் சொன்ன நேரத்தில் சேர்ப்பித்தார் தம்பி மாதவன். (ஒரு நாள் மட்டும் அந்த வேலையை ஈரோடு கதிர் செய்தார் (அலுவலகத்தில் தமிழ் மணம் & இன்ட்லி Access இல்லை). ஒவ்வொரு முறையும் மிக சரியாக நான் சொன்ன நேரத்தில் சேர்ப்பித்தார் தம்பி மாதவன். (ஒரு நாள் மட்டும் அந்த வேலையை ஈரோடு கதிர் செய்தார்..கதிரோட சர்வீசுக்கு எல்லையே இல்லை போல )\nஆணும் பெண்ணும் கதை வெளியிடுவதற்கு முதல் நாள் தான் எழுத பட்டது. பதிவர் ரேகா ராகவன் உடனே வாசித்து விட்டு, சற்று ரீ- ரைட் செய்து தந்தார்.\nமற்றும் கிரிக்கெட் பதிவுக்கு குறைந்த நேரத்தில் பதில் சொன்ன அனைத்து பதிவர்கள் தமிழ் மணத்தின் சங்கர பாண்டி தமிழ் மணத்தின் சங்கர பாண்டி இப்படி இவர்கள் அனைவரின் உதவி இல்லா விடில் உங்களின் ஆதரவும் பாராட்டும் கிடைத்திருக்காது.\nநட்சத்திர பதிவர்கள் ஆக போகிறவர்களுக்கு சொல்ல விரும்புவது: தகவல் வந்ததுமே வேலை துவக்கி விடுங்கள். உங்கள் வாரம் துவங்கும் முன் அனைத்து பதிவுகளும் தயாராய் வைத்திருங்கள். கடைசி நேரத்தில் எதுவும் வைத்து கொள்ள வேண்டாம். அப்போது தான் கரன்ட் போகும்; நெட் அவ்வப்போது வேலை செய்யாது. உங்களுக்கே ஜூரம் வரும்; அலுவலகத்தில் வேலை அதிகமாகும்; குழந்தையை டாக்டரிடம் கூட்டி போக வேண்டியிருக்கும் (இவை அனைத்தும் எனக்கு நடந்தது) பதிவுகளை சற்று பாலிஷ் செய்வது & வெளியிடுவது மட்டுமே அந்த வார வேலையாக இருப்பது நலம்.\nஇந்த ஒரு வாரத்தில் பெற்றதும் இழந்ததும்:\nபுதிதாய் 13 தொடரும் நண்பர்கள்\nவழக்கத்தை விட அதிகமான ஹிட்ஸ்கள் (தினம் ரெண்டு பதிவு எழுதியதாலும் இருக்கலாம்)\nஸ்டோர் செய்து என்றைக்கும் வாசிக்கும் படியான சில நேரடி மெயில்கள்\nபழைய நண்பர்கள் தொலை பேசி செய்து பேசிய நெகிழ்வான நிமிடங்கள்\nசுஜாதாவிற்கு ஸ்ரீ ரங்கம் போல எனக்கு நீடாமங்கலம் என உணர்ந்தது (அவரோடு ஒப்பீடு ரொம்ப ஓவர் என எனக்கே தெரிகிறது. \"சொந்த ஊர் கதைகள் \" என்ற அளவில் மட்டும் இதை உணர்க. இன்னும் 10 சதவீதம் கூட எங்க ஊர் & வித்யாச மனிதர்கள் பற்றி எழுதலை. இனி எழுதணும் )\n10 நாளாக பத்திரிக்கை வாசிக்கவே இல்லை\nதினம் கணினியில் அதிகம் இருந்து கண்கள் சிவந்து ஓய்வுக்கு கெஞ்சியது\nஒரு சில நாள் ஓரிரு மணி நேரம் தூக்கம் குறைந்தது (ஆம் ஒரு சில நாள் ஓரிரு மணி நேரம் மட்டுமே தூக்கத்தை பெரும்பாலும் தியாகம் செய்வதில்லை)\nசில நாட்கள் யோகா & ஜிம்முக்கு ரெஸ்ட்\nகுழந்தை பாடத்தில் சுத்தமாய் கவனம் செலுத்த வில்லை\nமுக்கியமாய்: ஹவுஸ் பாஸ் \" ஏங்க..உங்க கூட பேசியே நாளாச்சு; ஒரு அப்பாயன்ட்மென்ட் குடுங்க\" என்று கேட்கும் நிலை வந்ததால், கடைசி ரெண்டு நாட்கள் ஒரு பதிவோடு நிறுத்தி விட்டேன். வேறு இரு பதிவுகள் கிட்ட தட்ட தயாராய் இருந்தாலும், பாலிஷ் செய்கிறேன் என கணினியில் உட்கார்ந்து, வார கடைசியிலும் மனைவி & குழந்தை உடன் நேரம் செலவிடாமல் போக விரும்பலை.\nநண்பர்கள் கடந்த ஒரு வார வழக்கப்படி தினம் இங்கு வந்து ஏமாறாதீர்கள். இனி முன்பு போல் அதிக பட்சம் வாரம் இரு பதிவுகள் மட்டுமே வரும்.\nஉங்கள் அனைவரின் அன்பிற்கும், வாசிப்பிற்கும் நெகிழ்வான நன்றி.\nமற்றொரு சிறு மகிழ்வான செய்தி: தமிழ் மணத்தின் இந்த வார சிறந்த பதிவர்களில் வீடு திரும்பலுக்கு நான்காம் இடம்\nஇந்த ஒரு வாரத்தில் நீங்கள் ரசித்த பதிவு பற்றியும், ஒரு வாரமாய் இந்த ப்ளாக் வாசித்திருந்தால், பொதுவாய் எப்படி இருந்தது என்றும் ஓரிரு வரிகள் சொன்னால் ஒரு சிறு குழந்தையை மகிழ்வித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் (யப்பா பின்னூட்டம் போடுங்க என்பதை எப்படி டீசன்ட்டா கேக்குறான் பாருங்க )\nகல்லூரி காலத்தில் நான் எழுதிய சிறு கவிதையுடன் இந்த நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்:\nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம்\nஉலக கோப்பை யாருக்கு: 8 அணிகளை அலசும் பிரபல பதிவர்கள்\nகிரிக்கெட் உலக கோப்பை இன்று துவங்குகிறது. மாணவர்கள் படிக்கும் இந்த நேரத்தில் தேர்வு துவங்குவது சரியா என ஓர் வருத்தம் இருந்தாலும், தேர்வு நேரம் என்பதால் திருவிழாவை மிஸ் பண்ண முடியுமா இந்த முறை யார் வெல்லுவார்கள், அணிகளின் பலம், பலவீனம் என்ன இதோ பதிவர்கள் அலசுகிறார்கள். குறுகிய நேரத்தில் உடன் பதில் எழுதி தந்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி\nபதில் சொன்ன பதிவர்கள் யாரும் மூணு அணிகளை கண்டுக்கலை. அவங்க என்ன பாவம் பண்ணாங்க முதலில் அவர்களையும் பற்றி கொஞ்சம்:\nநியூசிலாந்து (கடைசியா எப்ப ஜெயிச்சோமுனு அவங்களுக்கே மறந்திருக்கும் ; பங்களாதேஸ் கிட்டயே சொந்த ஊரில் இப்ப தான் உதை வாங்கினாங்க )\nபாகிஸ்தான் (யார் கேப்டன் என்பதே கடைசி நிமிஷம் வரை முடிவு செய்யலை. முக்கிய புள்ளிகள் மூணு பேர் மேட்ச் பிக்சிங்கில் வெளியேற்றம்)\nவெஸ்ட் இண்டீஸ் (இவங்க கேப்டன் யாருன்னு தெரியுமா டேரன் சாமி இவர் பாட்ஸ்மேனா பவுலாரான்னு அடுத்து கேட்டு கஷ்ட படுத்த விரும்பலை. பவுலர். கெயில், போலார்ட், பிராவோ, சந்தர் பால் ன்னு நாலு நல்ல வீரர்கள் இருக்காங்க. அவ்ளோ தான்)\nவெறும் கேள்வி பதில் என்றால் சற்று போர் அடிக்குமே என அங்கங்கு நம்ம பின்னூட்டம் அடைப்பு குறிகளுக்குள்..\nஉலக கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என நினைக்கிறீர்கள்\nஒரு அணியை மட்டும் சொல்ல முடியாது. இந்தியா, செளத் ஆஃப்ரிக்கா, இலங்கை. இந்த மூன்றில் ஒன்று வாங்கும் என்பது என் எண்ணம். காரணம் இந்தியாவும், இலங்கையும் ஹோம் கிரவுண்டில் ஆடும் பாக்கியம் பெற்றவர்கள். பாகிஸ்தானுக்கும் ஆசியாவில் ஆடுவது நல்ல விஷயம்தான். ஆனால் அவர்களிடம் கன்ஸிஸ்டென்சி இல்லை. செளத் ஆஃப்ரிக்காவுக்கு அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதுவரை கருணை காட்டாத உலக கோப்பையம்மன் இந்த முறை அருள் புரிய வாய்ப்பு அதிகமென நினைக்கிறேன். (உலக கோப்பையம்மன் \nபலம்: தோனியின் தலைமை, சச்சினின் பூர்த்தியாக World cup கனவு, Momentum\nX factor : கம்பீர், சாகீர் கான்\nபலம் : பவுலிங், , Fielding.\nபலவீனம் : மிடில் ஆர்டர்\nX factor : மலிங்கா, சங்கக்கரா\nபலம் : மொத்த டீமும், மற்றும் momentum\nபலவீனம் : ஆசிய அணிகளின் ஸ்பின் அட்டாக்கை எதிர்கொள்வது,\nX factor : ஆம்லா, டுமினி\nஎந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்\nஇந்தியா, செளத் ஆஃப்ரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான்\nயார் மேன் ஆப் தி சீரீஸ்\nசாகீர்கான் - இந்தியா ஜெயித்தால் இவர்தான் அதிக விக்கெட் எடுத்திருப்பார்.\nஷேன் வாட்சன் - செமி ஃபைனல் வந்தாலே போதும். ஆல் ரவுண்டர் என்பதால் நிறைய வாய்ப்பு\nமனதளவில் இந்தியா என்றாலும் தென் ஆப்பிரிக்காவிற்கும் சம வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன்.\nஏனெனில் மிகச்சிறந்த பந்துவீச்சு, அருமையான துவக்கம் தரக்கூடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள், நல்ல களத்தடுப்பாளர்கள் என்று Well Balanced அணியாக தென்னாப்ரிக்காவை சொல்ல முடியும்..\nபலம்: பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங்\nX factor : டேல் ஸ்டீன் .மிரள வைக்கும் தனது வேகப் பந்தினால், ஆட்டத்தின் போக்கை வெகுவிரைவில் நிர்ணயம் செய்யக் கூடியவர்.\nஎந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா..\nஇன்றைய தேதியில் நல்ல ஃபார்மிலும், ஏறக்குறைய தான் சந்திக்கும் போட்டிகளை வெற்றிபெறும் அளவுக்கும் வலிமை வாய்ந்த அணிகள் இவைகள் தான்..\nயார் மேன் ஆப் தி சீரீஸ் \nசேவாக் காரணம் - சிறிது நேரம் களத்தில் நின்றால் பெரிய அளவில் ரன்களை குவிக்கிறார்\nஷேன் வாட்சன் : ஆஸ்திரேலியா) - சமீப காலமாக பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பிரகாசிக்கிறார்\nபதிவர் முரளி குமார் பத்மநாபன்\nஉலக கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என நினைக்கிறீர்கள்\nஏன்னா நான் இந்தியாவில்தான் இன்னும் இருக்கேன் :-)\nபலம்: விராத் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் அன்பிரிக்டபில் யுவி இதுபோக சுழற்பந்துவீச்சுக்கு உறுதுணையான ஆசிய ஆடுகளங்கள்\nபலவீனம் : வேகப்பந்துவீச்சு, மாற்று விக்கெட் கீப்பர் இல்லாதது மற்றும் பிரவீன், ருத்ரபிரதாப்சிங் போன்ற டெக்னிகல் பெளலர்கள் இல்லாதது\nX factor : கண்டிப்பாக விராத் கோலியேதான். ட்ராவிட்டையும் கங்கூலியையும் மிக்ஸ் பண்ண செம்ம்ம் ப்லெண்ட் இவன், சரியா ட்யூன் பண்ணா இந்தியாவுக்கு ஒரு ஸ்பெசலிஸ்ட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெடி\nஎந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்\nதென் ஆப்ரிக்கா, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீஸ்\nதென் ஆப்ரிக்கா எல்லா வகையிலும் டேலண்டான ஒரு டீம். இலங்கை மிக வலுவான பேட்டிங் ஆர்டரும் அதைவிட ஸ்பெசலான பெளலிங் டீமும்\nஇந்தியா, ஒரு அருமையான டீம் செட்டாகியிருக்கிறது திறமையை கணக்கிட்டாலும் நமக்குதான் வெற்றிஎப்பொதுமில்லாதபடி ஒரு லக்கிமேனை கேப்டனாக கொண்டிருப்பதால் அதிர்ஸ்டத்தைக் கணக்கிட்டாலும் நமக்குதான் வெற்றி\nமேன் ஆப் தி சீரீஸ் \nஇந்தியாவில் ஷேவாக் அல்லது ரெய்னாவிற்கு வாய்ப்புள்ளது.\nவாங்க மாரா; சொல்லுங்க. எந்த அணி ஜெயிக்கும்\nஎந்த அணி ஜெயிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மூன்று அணிகள் கிட்டத்தட்ட சம பலத்தில் இருக்கின்றன.\nபலம்: பலமான பேட்டிங் ஆர்டர், திறமை சாலி ஸ்பின்னர்கள்\nபலவீனம்: ஜாகிர் கானைத் தவிர ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சன் இல்லாதது\nX-factor - சச்சின் டெண்டுல்கர்.\nபலம்: சொந்த நாட்டில் 4 லீக் மேட்சுகள் ஆடுவது. நல்ல ஸ்பின்னர்கள்\nபலவீனம்: தில்ஷானைத் தவிர அதிரடியாக ஆடக்கூடிய ஆட்டக்காரர்களும், ஆல்ரவுண்டர்கள் இல்லாததும்.\nX-factor - ஏஞ்செலோ மேத்யூஸ்\nபலம்: ஸ்பின் பவுலிங் ஆடக்கூடிய ஆம்லா, டீ வில்லியர்ஸ் போன்றோர் அணியில் இருப்பது. குட் ஃபீல்டிங் யூனிட்\nபலவீனம்: ப்ரஷர் மேட்ச்களில் சொதப்புவது - chokers\nமேன் ஆஃப் த சீரிஸ் - இந்திய அணி பவுலர் அஸ்வின் தான்.வேற ஆரு (ரொம்ப தான் அஸ்வினை நம்புறீங்க. முதல்ல எல்லா மேட்சும் அவர் விளையாடுவாரான்னு பாக்கணும்)\nபதிவர் சித்ரா (வாங்கம்மா நீங்க ஒரு லேடியாவது வந்தீங்களே)\nஇலங்கை ஜெயிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. ஆசிய கண்டத்து நாடுகளுக்கு பிட்சின் காரணமாய் இம்முறை சற்று advantage உள்ளது. இலங்கை அணி consistent ஆக நன்கு ஆடுகிறது\nபலம்: அற்புதமான கலவையான பவுலிங் அட்டாக் & சங்ககாரா\nபலவீனம்: லோயர் மிடில் ஆர்டர் பட்டிங்\nஎந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்\nஇந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா & தென் ஆப்ரிகா\nஇவை நான்கும் தான் டாப் 4 அணிகள். இங்கிலாந்து தற்போது நன்கு ஆடினாலும் இந்தியாவில் சொதப்பும் வழக்கம் உள்ளதால் சேர்க்கவில்லை\nயார் மேன் ஆப் தி சீரீஸ் வாங்க கூடும்\nஐயா கலக்க போவது யாரு\n கடைசி வரை ஸ்ட்ராங் பேட்டிங் லைன் அப் (கடைசி வரையா நல்லா பாத்தீங்களா\n: டாப் வீரர்களான சச்சின் ஜாகிர், சேவாக் இவர்களுக்கு உள்ள இஞ்ஜூரி\nX Factor : டோனி & சச்சின்\nவீர்களின் பலம் பலவீனத்தை கொண்டு, சரியாக கணிக்கும் திறமை தோனிக்கு இருப்பதை, பல போட்டிகளில் (ஐ.பி.எல்) உட்பட கண்கூடாகப் கார்த்திருக்கிறோம்.மேலும் அவர் கூல் ஆசாமி.அதிர்ஷ்டமுள்ள ஆள் கூட...\nபெரும்பாலும் சொந்த மண்.. அல்லது சப்-காண்டினென்ட் சூழல்.. இந்தியா விற்கு நல்ல வாய்ப்பு..\nபலவீனம் : மோசமான பீல்டிங் ..சொல்ல போனா மிஸ் பீல்டிங், கேட்ச் கோட்டை விடுவது & ஒழுங்கா ஓடி ரன் எடுக்காதது\nஎந்த அணி செமி பைனல் போகும் \nசவுத் ஆப்ரிக்கா : ஸ்மித் கேப்டன்சி அருமை பொதுவாக consistent ஆக ஆடுறாங்க சப் காண்டினென்ட் பிட்சுகள் தான் அவர்களுக்கு பலவீனம். அதோட முக்கிய மேட்ச்களில் அவர்களுக்கு உள்ள பேட் லக்\nSriLanka : சப் காண்டினென்ட் பிட்சு இவர்களுக்கு பெரிய பலம். நல்ல பேட்டிங், பவுலிங் உள்ள அணி. எந்த வீக்னசும் தெரியலை.\nஇங்கிலாந்து : ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஜெயித்த சூட்டில் இருக்காங்க.\nஇந்த நான்கு அணிகளும் செமி பைனல் வர கூடும் (ம்ம் எதோ கொஞ்சம் மாத்தி இங்கிலாந்தை சேத்து சொன்னீங்க. டேன்க்சு)\nஇந்தியா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிற்கு கொஞ்சம் அதிகமாக.\nபலம்: தற்போதைய ஃபார்ம்தான் பலம். முன் வரிசை சொதப்பினாலும், சச்சின் ஆட்டமிழந்தாலும் என எந்தச் சூழலிலும் வெற்றியைக் குறி வைக்கும் அணியாக தற்போதைய அணி திகழ்கிறது.\nபலவீனம்: அணியின் மீதான எதிர்பார்ப்பு.\nX factor :யூசுஃப் பதான் மற்றும் சுரேஷ் ரெய்னா. பந்து வீச்சில் அஷ்வின் பிரகாசிப்பார்\nயார் மேன் ஆப் தி சீரீஸ் வாங்க கூடும்\nயூசுஃப் பதான். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கலக்குவார் என எதிர்பார்க்கிறேன். 1999ல் கலக்கிய லான்ஸ் க்ளூஸ்னர் போல இந்த உலகக் கோப்பையில் யூசுஃப் திகழ அதிக வாய்ப்புள்ளது.\nஒவ்வொரு அணிகளின் வெற்றி வாய்ப்பு எதைச் சார்ந்துள்ளது\nஇந்தியா: சேவக்கின் துவக்கம், யூசுஃப்பின் ஆல் ரவுண்டர் திறமை.\nஇலங்கை: சங்ககாராவின் ஃபார்ம், மலிங்கா, அஜந்தா மெண்டீஸின் பவுலிங்.\nஆஸி: ஷேன் வாட்சனின் ஓபனிங், பாண்டிங்கின் + ப்ரட் லீஃபார்ம்\nதென்னாப்பிரிகா: ஹசிம் ஆம்லாவின் துவக்கம், காலிஸின் ஆல்ரவுண்டர் திறமை.\nமற்றும் பாகிஸ்தானின் - அஃப்ரிடி, யூனுஸ்கான், இலங்கையின் பீட்டர்சன், ஸ்டிராஸ், வெ.இண்டீஸின் க்கெய்ல் + பொலார்ட், நியூஸியின் ஸ்டைரிஸ், ஓரம் ஆகியோரும் அதிரடி சரவெடியை வெடிக்கத் தயாராகத்தான் உள்ளார்கள்.\nலெட்ஸ் வெல்கம் த கேம்\nடிஸ்கி: இன்று மாலை பதிவு இல்லை\nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம்\nஎன் சிறு வயது நண்பன் நந்து. பாலகுமாரனை பார்க்க என்னுடன் வந்தவன் என்றால் உங்களுக்கு எளிதாக புரியும் இவனது தந்தை சீனு சார் எனக்கு ஆறு, ஏழு, எட்டு மூன்று வருடமும் வகுப்புகள் எடுத்தார். எனது all time favourite teacher-களுள் இவர் முக்கியமானவர்.\nசீனு சார் வகுப்பு என்றால் பசங்களுக்கு ரொம்ப குஷி.. அனேகமாக பசங்களை அடிக்கவே மாட்டார். நான் படித்த மூன்று வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததால் அடி வாங்கிய ஞாபகம்...\nரொம்ப ஜாலியாக பாடம் எடுப்பார். அவருக்கு மிக பிடித்த பாடம் ஆங்கிலம். ரொம்ப நன்றாக, எளிமையாக எடுப்பார். கிராமத்திலிருந்து படித்த பல சிறுவர்களுக்கு ஆங்கிலம் ஒரு கடினமான பாடமாயிருக்கும். ஆனால் சீனு சார் எடுத்தால், அந்த பாடம் சுவாரஸ்யமாகி விடும்.\nவாரத்தில் குறைந்தது ஒரு நாள் வகுப்பு ஏதும் எடுக்க மாட்டார். எதாவது எழுதிக்கொண்டு, திருத்திக்கொண்டு இருப்பார். எங்களுக்கோ பாடம் நடத்தாமல் அரட்டை அடிக்க விடுவதில் செம குஷி...\nநந்துவை பார்க்க சார் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன். முதலில் போக ஆரம்பித்த காலத்தில் சீனு சாரின் தந்தை கோபால் ராவ் வாசல் அருகிலேயே இருப்பார். இவரும் ஒரு புகழ் பெற்ற தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கோபால் ராவ் தாத்தா என்னையும் நந்துவின் மற்ற நண்பர்களையும் பார்த்தாலே திட்டுவார். (மிக வயதானதன் விளைவு...) நாங்கள் அவர் பேசுவதை கண்டு கொள்ளாத மாதிரியும், ஆனால் சற்று பயந்தும் தான் போய் வருவோம். கோபால் ராவ் தாத்தா எனக்கு \"பூனை குட்டி\" என பட்ட பெயர் வைத்திருந்தார்.அவருக்கு பயந்து சத்தமே இல்லாமல் பூனை குட்டி போல் நான் வந்து போவேனாம்...\nமாணவர்கள் பல நேரம் பேனாவிற்கு இங்க் போடாமல் வந்து விடுகிறார்கள் என்பதால் சீனு சார் பள்ளியில் இங்க் விநியோகம் செய்தார்.\nஒவ்வொரு கிளாஸ்-க்கும் ஒரு இங்க் லீடர் இருப்பான். மேலும் ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய இங்க் லீடரும் உண்டு. பெரிய இங்க் லீடர் எல்லா வகுப்புக்கும் சென்று, யாருக்கு தேவையோ அவர்களுக்கு இங்க் போட்டு விட்டு, ஒவ்வொரு வகுப்பு இங்க் லீடரிடம் பணம் வசூலித்து வருவான். நான் மூன்று வருடமும் என் வகுப்பிற்கான இங்க் லீடர் ஆக இருந்தேன். கடைசி வருடம் நான்தான் பெரிய இங்க் லீடர் இது எனக்கு அப்போது பெருமையான பதவியாக இருந்தது இது எனக்கு அப்போது பெருமையான பதவியாக இருந்தது சாரின் பையன், மற்றொரு வகுப்பில் இருந்தும் என்னை தான் பெரிய இங்க் லீடர் - ஆக்கினார் என ரொம்ப பெருமை. ( ஆனால் சார், தன் பையனிடம் விட்டால், வசூல் ஆன பணம் முழுக்க தன்னிடம் தராமல் பள்ளிக்கு வெளியில் விற்கிற கடலை மிட்டாய் வாங்கியே தின்னுடுவான் என்பதால் தான், என்னிடம் விட்டார் என்று பின்பு தான் தெரிந்தது)\nநான் பெரிய இங்க் லீடராக இருந்த போது இவ்வாறு நினைத்தேன்: \"இந்த சீனு சார் பிழைக்க தெரியாதவரா இருக்கார் பசங்க இங்க் போட்டுட்டு காசு குடுக்காட்டி பேசாம விட்டுடறார்; நிறைய பேர் காசு கொடுக்காம சாரை ஏமாத்துறாங்க\" .\nஇதற்கு என் வழியில் ஒரு தீர்வு கண்டேன். சார் வீட்டுக்கு நான் தான் சென்று இங்க் எடுத்து வருவேன். அப்போது காலி இங்க் பாட்டில்களில் தண்ணீர் பிடித்து சென்று, வீட்டில் உள்ள பெரிய இங்க் பாட்டிலில் கலந்து விடுவேன். இங்க் உடன் தண்ணீர் கலந்தால் பாதிபேர் பணம் தரா விட்டால் கூட சீனு சாருக்கு நஷ்டம் வராது என நினைத்தேன். இப்படி சாருக்கு தெரியாமல் இங்கில் தண்ணீர் கலந்து விற்றது ரொம்ப நாள் மனதை உறுத்தி கொண்டே இருந்தது. பல வருடங்கள் கழித்து வேலைக்கெல்லாம் சென்றபின் நான் இதனை அவரிடம் கூற, வழக்கமாய் சொல்லும் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி, சிரித்தவாறே செல்லமாய் திட்டினார்.\nசீனு சாருக்கு வகுப்பில் நான் தான் எப்பவும் செல்ல பிள்ளை. என் அண்ணன்கள் இருவரும் முன்னர் அவரிடம் படித்ததால், அவர்கள் பெயரில் எதாவது ஒன்றை சொல்லி தான் என்னை கூப்பிடுவார். எனது சரியான பெயரில் ஒரே ஒரு முறை கூட கூப்பிட்ட வரலாறே கிடையாது.\nஅவர் என்ன சொன்னாலும் உடனே நான் செய்து விடுவேன். இது எதோ சோப் போட வேண்டும் என்பதால் அல்ல, அவர் மேல் உள்ள அதிகப்படியான அன்பினால்தான் என அவருக்கு தெரியும். ஒரு முறை வகுப்பில் ரொம்ப குஷி மூடில் , \"கோவிந்தா (என் அண்ணன் பெயர்).. இப்படி வந்து உட்கார்\" என சேரில் அமர்ந்தவாறே, தனது மடியை காட்டினார். சற்றும் யோசிக்காமல் நான் சென்று அவர் மடியில் உட்கார்ந்து விட்டேன்.வகுப்பில் எல்லோரும் சிரித்த பின் தான் வெட்கமாகி ஓடி வந்தேன். அப்புறம் தான் நான் என்ன செய்கிறேன் என பார்க்கவே அவர் இப்படி சொன்னார் என புரிந்தது.\nஅவரது பையன் நந்துவும் நானும் வெவ்வேறு வகுப்பில் படித்தோம். மூன்று வகுப்பிற்கும் சேர்த்து ஒவ்வொரு பாட தேர்வு பேப்பரையும் ஒரே சார் திருத்துவார். இவர் திருத்தும் போது எங்க ரெண்டு பேருக்கும் அந்த பேப்பரில் மட்டும் ஒரே மார்க் தான் போடுவார். இருவரையும் அருகருகில் நிற்க வைத்து கொண்டே எங்களின் பேப்பரை திருத்துவார். ஒரே மார்க் போட்டு விட்டு, \"OK தானே பிரச்சனை இல்லையே\" என கேட்பார். சரி சரி என இருவரும் தலை ஆட்டுவோம்.\nஎங்கள் ஊரில் பிராமணர்கள் கணிசமாக உண்டு. அதில் சிலர் வீட்டு வாசல் தாண்டி கூட உள்ளே போக முடியாது. ஆனால் என்னை போன்று நன்கு பழக்கமானவர்கள் சீனு சார் வீட்டு அடுப்படி வரை செல்வோம். அதிகம் பழகாத கிராமத்து ஏழை மாணவர்களும் கூட சகஜமாக இவர் வீட்டினுள் வந்து போவார்கள். சீனு சார் மாணவர்களை நடத்தும் விதத்தில் எந்த வித்யாசமும் பார்த்தது இல்லை (துரதிஷ்ட வசமாய் நிறைய ஆசிரியர்கள் அப்படி இல்லை)\nஎட்டாம் வகுப்பிற்கு பிறகு நான் மன்னார்குடி சென்று முதன் முறையாக ஆங்கில மீடியத்தில் படித்தேன். பத்தாவதில் 367 மார்க்குகள் வாங்கினேன். இது மிக குறைவு என என் பெரிய அண்ணன் ஒரு வாரம் பார்க்கும் போதெல்லாம் அடிப்பதும், அவமானப்படுதுவதுமாக இருந்தார். ஒரு நாள் எங்கள் கடையில் வைத்து மார்க் குறைவு என என்னை கண்ட படி திட்டிக்கொண்டு இருந்தார். இதை கடைக்கு கீழே சைடில் நின்று கேட்டவாறே இருந்த சீனு சார், உடனே மேலே வந்து எனது அண்ணனை left and right வாங்கி விட்டார். \"எட்டாவது வரை தமிழ் மீடியமில் படித்தவன் திடீரென இங்கிலிஸ் மீடியமில் படிச்சு இந்த அளவு வாங்கியேதே பெருசு. அவனை போய் ஏன் திட்டுறே\" என அண்ணனுக்கு டோஸ் விட்டார். அதன் பின்தான் அண்ணன் என்னை திட்டுவதை குறைத்தார்.\nஎன் திருமணத்துக்கு வெளி நாட்டில் இருந்ததால் நந்துவால் வர முடியவில்லை. இதை போன் பண்ணி அம்மா, அப்பாவிடம் புலம்பி தீர்த்து விட்டான். சீனு சாரும், அம்மாவும் வந்திருந்து நெடு நேரம் இருந்து அனைவரையும் வரவேற்று உபசரித்தார்கள். அன்றைக்கு மண்டபத்தில் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த சாரை பார்த்த போது நெகிழ்வாக இருந்தது. எங்கள் ஊர் மக்கள் சீனு சார் ஏன் இவனுக்காக இவ்வளவு மெனக்கெடுகிறார் என நினைத்திருக்க கூடும்.\nகிட்டத்தட்ட 65-67 வயது வரை ரொம்ப ஆக்டிவ் ஆக இருந்த சீனு சார் கடைசி இரு ஆண்டுகளில் உடல் நலம் குன்றி விட்டார். அவர் வீட்டுக்கு எப்போது போனாலும் நின்றவாறே எதாவது வேலை செய்து கொண்டே தான் இருப்பார். அவர் சும்மா இருந்து பார்க்கவே முடியாது. அப்படிப்பட்டவரை படுக்கையில் பார்க்க கஷ்டமாக இருந்தது. புகை பழக்கம் மற்றும் டூ வீலரில் அதிகம் பயணம் செய்தது அவரது வயதான காலத்தில் படுத்தி விட்டது.\nதன் கடைசி காலத்தில் அவரது விருப்பப்படி நீடாமங்கலம் வந்து, கொஞ்ச காலம் இருந்து விட்டு தன் சொந்த மண்ணில் மறைந்தார். அவர் இறந்த போது நான் ஏதோ ஒரு வேலையாக வெளியூரில் இருந்ததால் கலந்து கொள்ள முடிய வில்லை. நந்து அடுத்த பத்து நாளும் ஸ்ரீரங்கத்தில் தங்கி அவருக்கு காரியங்கள் செய்து கொண்டிருந்தான்.\nஒரு ஞாயிறு சென்னையிலிருந்து அவனை பார்க்க ஸ்ரீரங்கம் சென்றேன். அன்று தான் அவருக்கு பத்தாம் நாள் காரியம் என்பதே தெரியாமல், ஆனால் சரியான நாளன்று சென்று விட்டேன். அவன் அம்மா \" சாருக்கு பிடிச்ச ஸ்டூடன்ட் சரியா பத்தாம் நாள் வந்துட்டே பார்\" என்றும் சாரை பற்றியும் சொல்லியவாறே இருந்தார்.\nநந்து சாருக்கு செய்யும் காரியங்களில் என்னையும் உடன் இருத்தி கொண்டான். சொந்த காரர்களில் யாரோ, நான் பிராமணன் இல்லை என்பதை முணுமுணுக்க நந்து கண்டு கொள்ளவே இல்லை. எல்லாம் முடிந்து அனைவரும் சட்டை போடாமல் பூணுலுடன் அமர்ந்து சாப்பிட உட்கார, நான் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட ரொம்பவும் தயங்கினேன். அப்போதும் பிடித்து இழுத்து பக்கத்தில் அமர வைத்தான் நந்து. சாப்பாடு பரிமாற வந்தவர் பூணுல் இல்லாததால் என்னை சற்று வித்யாசமாய் பார்த்தார். \" நாலு கழுதை வயசாயிடுச்சு. எப்ப தான் பூணுல் போட போறே எப்ப கல்யாணம் பண்ண போறே எப்ப கல்யாணம் பண்ண போறே\" என்று நந்து என்னை பார்த்து கமன்ட் அடிக்க, தேவையான பதில் கிடைத்து விட்டதால் எனக்கும் சேர்த்து உணவு பரிமாறினார் அவர்\nஅன்றைக்கு நந்து எனக்கு சீனு சார் மாதிரி தான் தெரிந்தான்.\nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம், நீடா நினைவுகள்\nஆணும் பெண்ணும் - சிறுகதை\nகுளிப்பதற்காக பாத் ரூமுக்குள் வாணி நுழைந்த அடுத்த நிமிடம் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்குள் நின்று விட்டது. அவசரமாய் குளிக்க ஆரம்பித்த சற்று நேரத்தில் லேண்ட் லைன் அலறியது. \" அவராகத்தான் இருக்கும் செல்போனை எடுக்க வில்லை என்றதும் லேண்ட் லைனில் யாருடனாவது பேசிக்கிட்டிருக்கிறாளோ என செக் பண்ணியிருப்பார்\".\nயோசித்தவாறே குளித்து முடித்து உடை மாற்றும் போது மீண்டும் அழைத்தான் நிதின்.\n\" போனை கூட எடுக்காம என்ன பண்ணிக்கிட்டிருந்தே\n\" இப்போ அங்க மணி என்ன \nபேச்சை மாற்ற எண்ணியவள் \" சாப்பிட்டீங்களா\n\"ஆச்சு. சப்பாத்தி. தினமும் ரொட்டி சப்பாத்தின்னு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சு எனக்கு\"\n\" ம்ம்... என் சமையல் அருமை தெரியணும்ல\"\nஒரு சில நொடி மௌனத்திற்கு பிறகு \" அடுத்த வீட்டு ரவி இன்னிக்கு எந்த ஷிப்ட் போறான் \nரவி ஷிப்ட்டில் வேலைக்கு போவதால் இப்போ வீட்டில் இருப்பானோ, அதனால்தான் வாணி போனை எடுக்கலையோ என்று அடுத்த சந்தேகம்\n\"தெரியலைங்க. அவங்க வீட்டுல யாரையும் இன்னிக்கு நான் பாக்கலை \"\n\"அவன் உன்னை பாக்குற பார்வையே சரியில்லை. ஜாக்கிரதையா இருன்னு சொல்ல வந்தேன். வீட்டை பூட்டிட்டேள்ள\n\" பிளைட் எட்டு மணிக்கு வந்துடுச்சுன்னா டின்னர் சாப்பிட வந்துடுவேன்னு நினைக்கறேன்\"\nஅவன் பேசி முடித்ததும் அலுப்புடன் நாற்காலியில் சாய்ந்தாள். திருமணமாகி ரெண்டு வருடமாகிறது. \" ஒரு வேளை குழந்தை வந்திருந்தால், இவ்வளவு தூரம் சந்தேகப்பட மாட்டானோ என்னவோ ம்ம்... கடவுள் இன்னும் கண் திறக்கலை\" அடிக்கடி தோன்றி மறையும் எண்ணம் மறுபடி..\nவேலை விஷயமாக வெளி நாடு அல்லது உள் நாட்டிலேயே எங்காவது ஒரு ஊர் என்று மாதத்திற்கு பத்து நாளாவது டூர் போவான் நிதின்.\nஅந்த பத்து நாளும் அவளுக்கு கொடுமையாய் இருக்கும். சமைக்கவே பிடிக்காது. ஒரு ஆளுக்காக சமையல் என்ன வேண்டியிருக்கு என்று சோம்பேறித்தனம் வந்து விடும். கண்கள் டி.வியை பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் வேற எதையாவது நினைக்கும். எவ்வளவு தான் புலம்புவது வயதான காலத்தில் அம்மாவை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நிறைய விஷயங்களை வாணி அவர்களிடம் சொல்வதே இல்லை.\n\"பி. எஸ். சி.க்கு பதில் அப்பாவிடம் சண்டை போட்டாவது இஞ்சினீரிங் படிச்சிருந்தா இப்போ வேலைக்கு போயிருக்கலாம். தப்பு பண்ணிட்டேன்\" என்று அவ்வப்போது ஆட்கொள்ளும் சுய வெறுப்பு..\n\" இரவு என்ன சமைப்பது ம்ம்.. தினமும் இது ஒரு பிரச்சனை. என்ன சமைப்பது என்று யோசிப்பதே பாரமாய் ஆகி விட்டது. மதியம் ஒரு தூக்கம் போட்டு விட்டு, மாலை காய்கறி வாங்கிகிட்டு வந்து டின்னர் ரெடி பண்ணனும்...\" யோசித்தவாறே காலை சாப்பாட்டை முடித்தாள்.\nஇரவு எட்டரைக்கு கார் வந்தது. வாசலை திறந்து வைக்க முடியாதபடி கொசுக்கள். ஜன்னல் வழியே பார்த்து விட்டு மகிழ்ச்சியோடு ஓடி வந்தாள். நிதின் காருக்கு பணம் தந்து விட்டு வாணியை பார்த்து சிரித்தான்.\n\" எப்படி இருந்துச்சு மீட்டிங்\nஉள்ளே வந்து சாக்ஸை கழட்டியவாறு \" காபி குடு\" என்றான்.\nகாபி போட உள்ளே ஓடினாள். சோபாவில் அமர்ந்தவனின் கண்ணில் முதலில் பட்டது போனும், அருகிலிருந்த காலர் ஐ டியும். மெதுவாய் சென்று காலர் ஐ டியை அழுத்தி எங்கிருந்தெல்லாம் போன் வந்ததென பார்த்தான். அம்மா நம்பர், அப்பா நம்பர்,அதற்கடுத்து அவள் தோழி திவ்யாவின் நம்பர்..\" பார்த்துவிட்டு மீண்டும் சோபாவிற்கு வந்து விட்டான்.\nகாபி குடிக்கும் போது அருகில்வந்த வாணியிடம் \" இதென்ன உன்னிடமிருந்து புது ஸ்மெல் புதுசா ஸ்ப்ரே ஏதும் வாங்கினியா \"\n\" நீங்க இல்லாம என்னிக்குங்க நான் அதெல்லாம் வாங்கியிருக்கேன் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் \" என்றாள்.\nகுளிக்கப் போகும் போதுதான் வாணியின் செல்போன் கண்ணில் பட்டது. கதவை மூடி விட்டு இன்கமிங் கால்களை ஆராய்ந்தான். ஏதோ ஓர் தெரியாத எண்ணிலிருந்து இரு முறை போன் வந்துள்ளதே \nசாப்பிட்டு முடித்ததும் \" டயர்டா இருக்கு படுக்கலாம்\" என்றான்.\n\" என்னங்க ஒன்னுமே பேச மாட்டேங்கறீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு\nபடுத்த பிறகு கேட்டான். \" ஏதோ ஒரு நம்பரிலிருந்து இன்னிக்கு ரெண்டு தடவை போன் வந்துருக்கே யார் அது\n அது ஏதோ கிளப்பிலேந்து போன் பண்ணி மெம்பராகுங்கன்னாங்க \".\n\"அவங்க எதுக்கு ரெண்டு தடவை போன் செய்யணும்\n\" முதல் தடவையே \" இண்டரெஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன். தெரியாம மறுபடி போன் பண்ணிட்டு சாரி கேட்டாங்க\"\n\"இதை என்னை நம்ப சொல்றியா\n\"\"ஐயோ ஏங்க இப்டி பேசுறீங்க. எப்படி புரிய வைக்கிறது. நான் என்ன தப்பா நடந்துட்டேன் எதை வச்சு ஏன் மேலே சந்தேக படுறீங்க எதை வச்சு ஏன் மேலே சந்தேக படுறீங்க \" பேச்சு அழுகையாக மாறியது.\nநிதின் மெளனமாக படுத்திருந்தான். நாளை அந்த நம்பருக்கு போன் செய்து பார்த்திருந்தா உண்மைலேயே அது கிளப் தானான்னு தெரிஞ்சிருக்கும். ச்சே இவள் கிட்டே கேட்காம அதைச் செய்திருக்கலாம். இப்ப அழ ஆரம்பிச்சிட்டாளே இவள் கிட்டே கேட்காம அதைச் செய்திருக்கலாம். இப்ப அழ ஆரம்பிச்சிட்டாளே\n\" குளவி கூட்டில கை வச்சிட்டமோ இன்னிக்கு தூங்கின மாதிரி தான். எப்படி வரும் தூக்கம் இன்னிக்கு தூங்கின மாதிரி தான். எப்படி வரும் தூக்கம் ம்ம்.. அந்த சைனாக் காரி என்னமா மசாஜ் பண்ணா ம்ம்.. அந்த சைனாக் காரி என்னமா மசாஜ் பண்ணா சான்சே இல்ல. கடைசி நாள் தான் பார்த்தோம் அவளை. முன்னாடியே வராம போய்ட்டா \" அவனுள் எண்ணங்கள் ஓடியபடியே இருக்க...\nLabels: சிறுகதை, தமிழ் மண நட்சத்திர வாரம்\n\"ரசிக்கும் விஷயம்\" என வானவில்லில் பிடித்த சிலவற்றை ஒரு பாராவிற்கு மிகாமல் எழுதுவது வழக்கம். அப்படி ஒரு பாராவிற்குள் அடக்க முடியாத ரொம்ப ரொம்ப பிடித்த இரண்டு விஷயங்கள் இந்த பதிவில்:\nபரோட்டோவை எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப பிடிக்கும். வழக்கமாய் நடக்கும் ஒரு சம்பவம் சொன்னால் உங்களுக்கு புரியும்.\nஓட்டல்களுக்கு செல்வதென்றால், பொதுவாய் வெவ்வேறு இடங்களுக்கு செல்வோம். அப்படி எங்கு சென்றாலும் வித வித டிஷ்களை முயற்சிப்போம். ஆர்டருக்கு எல்லாம் சொல்லி முடித்து விட்டு இறுதியில் நைசாக \"ஒரு பரோட்டா\" என்பேன். மனைவியும் பெண்ணும் \"அதானே\" என்று சிரிப்பார்கள். பரோட்டா மீதான காதல் தொடங்கியது இன்று நேற்றல்ல பள்ளி காலத்திலிருந்தே\nநீடாமங்கலத்தில் வஹாப் சார் புரோட்டா கடை இருந்தது. வஹாப் சார் எங்கள் ஊர் பள்ளியில் எங்களுக்கு கணக்கு பாடம் எடுத்தவர். ரொம்ப அருமையாக, எளிமையாக நடத்துவார். அவர் வைத்திருந்த பரோட்டா கடை தான் இது. சில நேரம் மாலையில் அவரும் கல்லாவில் அமர்ந்திருப்பார். இவர் கடை பரோட்டா சூடாகவும் செம டேஸ்டியாகவும் இருக்கும்.\nஏழாவது படித்த போது தம்பு சாமி என்ற நண்பனும் நானும் கடை தெருவில் நடந்து போகிறோம். வஹாப் சார் கடையை கடக்கும் போது எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது. ஒருவனிடம் பத்து காசும் மற்றொருவனிடம் பதினைந்து காசும் மட்டுமே உள்ளது. ஒரு பரோட்டா விலையே முப்பது காசு. அதுக்கே அஞ்சு காசு குறையுது. \" சரி அஞ்சு காசு கடன் சொல்லிட்டு ஒரு பரோட்டா வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடலாம்\" என முடிவு செய்தோம். கடையில் அன்றைக்கு நல்ல வேளையாக சார் இல்லை.\nகல்லாவில் இருந்தவரிடம் ஐந்து காசு குறைகிற விஷயத்தை சொன்னோம். சிரித்த படி சரி என்று சொல்லி விட்டார். இவர் தான் பரோட்டாவை பிய்த்து போட்டு சாப்பிடும் பழக்கத்தை எங்களுக்கு ஏற்படுத்தினார். சுட சுட இருக்கும் பரோட்டாவை அனாயாசமாக பிய்த்து போடுவார். இப்படி பிய்த்து போட்டால் நிறைய குருமா ஊற்றி சாப்பிடலாம் என்பது மற்றொரு தொழில் ரகசியம்.\nஉள்ளே சென்று அமர்ந்தோம். ஒரே ஒரு பரோட்டோவை ஒரே இலையில் ரெண்டு பேரும் சாப்பிட்டோம். குருமா மட்டும் ; \"ஊத்து..ஊத்து\" என எக்கச்சக்கமா வாங்கினோம். சாப்பிட்டு முடித்து வெளியே வந்த போது இருந்த திருப்தி இருக்கே அடடா \nதஞ்சை செல்லும் போதெல்லாம் சாந்தி பரோட்டா கடையில்,பரோட்டா சாப்பிடாமல் வருவதில்லை. டால்டாவில் செய்தது எனினும் மொறு மொறுவென்று சூப்பரா இருக்கும்.\nதஞ்சையில் மற்றொரு சிறந்த பரோட்டா கிடைக்கும் இடம் சிலோன் பரோட்டா கடை. ஞானம் தியேட்டர் அருகே இருந்த இந்த ஹோட்டலில் உள்ள பரோட்டா செம பெரிதாக இருக்கும். குருமாவும் வித்யாசமாக இருக்கும். இரண்டு பரோட்டாவிற்கு மேல் சாப்பிடவே முடியாது.\nபரோட்டாவை வீட்டில் செய்வது ரொம்ப கஷ்டம். செய்தாலும் சப்பாத்தி மாதிரி தான் இருக்கிறது. ஓட்டல்களில் என்ன டெக்னிக் செய்கிறார்களோ ஓட்டல் பரோட்டா தான் பெஸ்ட் என்ன தான் ஹவுஸ் பாஸ் \" மைதா மாவு. எண்ணை நிறைய.. வெயிட் போடும்\" என மிரட்டினாலும் பரோட்டா மேல் உள்ள காதல் தொடர்கிறது. தொடரும்.\nசின்ன வயது முதலே சிறு குழந்தைகள் மேல் கொள்ளை பிரியம். கடைசி குழந்தையானதால் என்னை எல்லோரும் கொஞ்ச, நான் கொஞ்ச யாருமில்லாமல் போனது பெரிய ஏக்கமாய் தெரிந்தது. \" எனக்கு தம்பி- தங்கச்சி வேணும்\" என அம்மாவிடம் அழுவது அடிக்கடி நடக்கும். \"ஆப்பரேஷன் பண்ணியாச்சு. இனிமே பிறக்காது\" என்றால் புரியாமல் அழுவேன்.\nபெரியண்ணனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பின்தான் நான் கொஞ்ச குட்டி பாப்பா கிடைத்தது. தங்க நிறத்தில் பொம்மை போலிருப்பான். அவனுக்கு \"பொம்மு\" என்று நான் வைத்த பெயர் நிலைத்து விட்டது.\n\" பொம்மு யார் செல்லம் \" என கேட்டு, \" சித்தப்பா செல்லம்\" என சொல்லி கொடுத்து அதற்கு நான் தொடர்ந்து கை தட்டி, கை தட்டி கேட்க பயல் ரொம்ப குஷியாயிட்டான். அவனது அம்மா, அப்பா யார் உருட்டி, மிரட்டி கேட்டாலும் \" சித்தப்பா செல்லம்\" என்றே சொல்லுவான்.\nஅவனுக்கு ஏழு, எட்டு வயதிருக்கும் போது அண்ணன் குடும்பம் திருச்சியிலிருந்தது . நானும் திருச்சி சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். முதலில் சில காலம் வெளியிலும் பின் அண்ணன் வீட்டிலேயும் தங்கினேன். சில நாட்கள் தெரு கடைசியில் வரும் என்னை பார்த்து விட்டு \" \" சித்தப்பா ஆஆ \" என கத்தியவாறு செருப்பு போடாமல் ஓடி வருவான். அவ்வளவு பிரியம் அவனுக்கு Frooti குடிக்க ரொம்ப பிடிக்கும். கடைக்கு கூட்டி போய் Frooti வாங்கி தந்து விட்டு, \" நீ குடிச்சிட்டு எனக்கு பாதி தரணும்\" என்பேன். \"சரி சரி\" என குடிச்சிட்டு டப்பாவை குடுத்தால் கொஞ்சம் கூட மிச்சமிருக்காது. நான் ஏமாந்ததை பார்த்து மகிழ்ச்சியாய் சிரிப்பான்.\nஅடுத்து அக்காவிற்கு பிறந்த குழந்தைகளை கொஞ்சுவது வழக்கமானது . சிசேரியன் ஆபரேஷன் என்பதால் அக்காவும், வயதானதால் அம்மாவும் தூக்க முடியாமல் - அந்த இரு குழந்தைகளுக்கும் Vaccine போட தூக்கிச் சென்றே தலை நிற்காத சிறு குழந்தைகளை தூக்கி பழக்கமானது.\nகல்யாணமானபின் குழந்தையை குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது இதிலேயே காலை பொழுதுகள் மகிழ்வுடன் கழிந்தன. அப்போது வீடியோ கேமரா வாங்குமளவு வசதி இல்லாததால் என் பெண் செய்த சேஷ்டைகளை எல்லாம் தனி நோட்டில் எழுதி வைத்தேன். அவற்றை இப்போதும் படிக்க சொல்லி கேட்டு, சிரிப்பாள் அவள் .\nகுழந்தை பிறந்த அன்று அது கடவுள் போல என்பார்கள். பிறந்த அன்றே குழந்தைகளை பார்க்கவும் அன்றே கையில் தூக்கி பார்க்கவும் மிக விரும்புவேன்.\nவீட்டிற்கருகே இருக்கும் சிறு குழந்தைகள் எப்போதுமே எனக்கு தோஸ்தாக இருக்கும். அரிதாக தற்போதுள்ள தெருவில் யாருமில்லை :((\nஉடன் படித்த வக்கீல் நண்பர்களுடன் குடும்ப சகிதம் சந்திப்பதும், வெளியூர் டூர் செல்வதும் வருடத்திற்கு சில முறை நடக்கிறது. இந்த வக்கீலுங்க அங்க வந்தும் கோர்ட்டு, ஸ்டே, ஜட்ஜ்னு அவனுங்க கதைகளை பேசிக்கிட்டு இருப்பாங்க. நான் அவர்கள் பசங்களுடன் விளையாட போயிடுவேன். பசங்க முதலில் \"அங்கிள்\" என்று ஆரம்பித்து, அப்புறம் \" வாடா போடா\" ரேஞ்சுக்கு நம்மளை கூப்பிடுவாங்க.ஆனா இவர்களிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கு. :)))\nநம் அனைத்து கவலைகளையும் தற்காலிகமாய் மறந்து சிரிக்க, இளமை காலத்தை மீண்டும் ஒரு முறை நாம் வாழ, உதவிடும் தருணங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நிமிடங்களே \nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம்\nஅம்மாவை பற்றி எங்கு எழுத ஆரம்பிப்பது \" ப்ளாகிலே என்னென்னவோ எழுதுறியே. என்னை பத்தி எழுத மாட்டியா \" ப்ளாகிலே என்னென்னவோ எழுதுறியே. என்னை பத்தி எழுத மாட்டியா \" என குழந்தை மாதிரி அம்மா கேட்ட பிறகும் ஏன் ஒண்ணரை வருடமாக எழுதலை \" என குழந்தை மாதிரி அம்மா கேட்ட பிறகும் ஏன் ஒண்ணரை வருடமாக எழுதலை எத்தனையோ கேள்விகளுடன் எழுத துவங்குகிறேன்\nஅம்மாவின் சொந்த ஊர் மன்னார்குடி. அப்பாவிற்கு கும்பகோணம். திருமணத்திற்கு பின் இருவரும் இந்த இரண்டு ஊருக்கும் நடுவில் உள்ள நீடாமங்கலத்தில் வந்து செட்டில் ஆனார்கள்.\nபெற்ற ஆறு குழந்தைகளில் இரண்டு சிறு வயதிலேயே இறந்து விட்டன. நான்தான் கடைக்குட்டி. எனக்கு முன் பிறந்த குழந்தை இறந்ததால் அம்மா சோகத்திலேயே இருக்க, அதை மறக்க என்னை பெற்றதாக அப்பா சொல்லுவார். இருவரும் அவர்கள் நாற்பதுகளில் இருந்த போது பிறந்தவன் நான்.\nஅம்மாவின் தினசரி & முக்கிய குறிக்கோள்: பசங்க நல்லா சாப்பிடணும். நான்கு குழந்தைகள் இருந்தும் அம்மா சிம்பிளான சமையல் செய்ததில்லை. காலை & இரவு ரெண்டு வேளையும் டிபன். அதுவும் பூரி, இடியாப்பம், புட்டு, பொங்கல் என தினம் வித்யாசமாய் செய்வார். அந்த காலத்தில் கிரைண்டர், மிக்சி இல்லாமல் அம்மி கல்லிலேயே எவ்வளவு அரைத்திருப்பார்\nமிக அதிக தொந்தரவு தந்த பிள்ளை நானாக தான் இருப்பேன். ஏழு வயது வரை பால் குடித்த பையன். தெருவில் விளையாடி கொண்டிருக்கும் போது நடுவில், \" இரு.. பால் குடிச்சிட்டு வந்துடுறேன்\" என சொல்லிட்டு வந்து தாய் பால் குடித்துட்டு போவேன். தெருவில் யார் வீட்டிலாவது சிறு குழந்தைக்கு பால் குடுப்பதை பார்த்தால் வீட்டுக்கு வந்து எனக்கும் குடு என்று கேட்பேன். இப்படி நானாக நிறுத்தும் வரை, அவர் நிறுத்தாமல் தன் ரத்தத்தை பாலாக தந்து கொண்டு தான் இருந்தார்.\nசற்று வளர்ந்ததும், பல் துலக்கி விட்டு, காலையே கதை புத்தகத்தை கையில் எடுத்து விடுவேன். (அப்போ நோ டிவி) அம்மா \" குளிடா. சாப்பிடுடா\" என சொல்லி கொண்டே இருப்பார். சொன்னதையே மறுபடி, மறுபடி சொல்வதால் \"டேப் ரிக்கார்டர்\" என அவருக்கு பெயர் வைத்தோம். \"டேப்பு .. சும்மா இரு\" என திட்டுவேன். டேப் நிற்காமல் பேசியதையே பேசியவாறு இருக்கும் .. வேலை முடியும் வரை.\nஅம்மா, அப்பா இருவருமே என்னை திட்டியதோ, அடித்ததோ இல்லை (அது பெரிய அண்ணன் டிப்பார்ட்மன்ட்). வாழ்க்கையில் என்னை அம்மா அடித்த ஒரே சம்பவத்தை மறக்க முடியாது. ACS படித்த போது \" கோர்ஸ் ரொம்ப கஷ்டமாயிருக்கு. படிக்கலை. வக்கீலாகவே பிராக்டீஸ் செய்றேன்; இல்லாட்டி ஜிராக்ஸ் கடை வைக்கிறேன்\" என கொஞ்ச நாள் ஊரில் வந்து உட்கார்ந்து விட்டேன். அனைவரும் ரொம்ப வற்புறுத்தி பரீட்சை எழுத வைக்க, அந்த க்ரூப் பாஸ் செய்தேன் அதற்கடுத்த கடைசி க்ரூப் சற்று எளிது. நானே தைரியமாக எதிர் கொண்டு கோர்ஸ் முடித்தேன்.\nஇந்த தகவலை போனில் சொல்லி விட்டு மகிழ்ச்சியுடன் ஊருக்கு வந்தேன். வீட்டில் அம்மா பெரிய குச்சியுடன் நின்றிருந்தார். உள்ளே நுழைந்ததும் குச்சியால் என் காலில் ஓங்கி அடித்தவாறு \" படிக்க மாட்டேன்னு சொன்னியே. இப்ப பாத்தியா இப்ப பாத்தியா \" என செம அடி. நான் ஆச்சரியத்தில் சிரித்தவாறே அடி வாங்கினேன்.\nஅப்பா எப்போதும் கடையிலேயே இருக்க, பசங்களை நன்கு படிக்க வைத்தது அம்மா தான். என்ன ஜூரம் இருந்தாலும் பள்ளிக்கூடம் போயிடனும் என்று தான் சொல்லுவார். பள்ளியிலிருந்து வந்ததும் டாக்டரிடம் கூட்டி போய் புலம்புவார்.நான்கு பிள்ளைகளும் நன்கு படித்து, மிக நன்றாக செட்டில் ஆனதால், இன்று ஊரில் எங்கள் குடும்பத்தை தான் \"அவங்களை மாதிரி படித்தால் நல்ல வேலைக்கு போகலாம்\" என உதாரணமாக காட்டுவார்கள். இதன் பின்னால் அம்மாவின் உழைப்பும் தியாகமும் உள்ளது.\n\"பெரிய குடும்பத்தில் கடைசி பிள்ளைங்க உருப்படாம போயிடும். நீ நல்ல நிலைமைக்கு வந்தது ஆச்சரியம் தாண்டா\" என்பார்.\nஅம்மாவிடம் ஒரு பழக்கம். சுற்றியிருக்கும் எல்லாருக்கும் ஏதாவது வேலை குடுத்து கொண்டே இருப்பார். \" நீ ஏதாவது கம்பனியில் மேனேஜராகவோ, கட்டிடம் கட்டுற மேஸ்திரியாகவோ போய்ருக்கணும். நல்லா வேலை வாங்கியிருப்பே\" என்பேன். வேலை செய்பவர்கள் இல்லா விட்டால் தெருவில் நின்றவாறு ரோடில் செல்பவர் யாரையாவது கூப்பிட்டு \" சித்த வாயேன். இந்த வேலையை செஞ்சு குடேன்\" என்பார். அதில் சிலர் கண்டு கொள்ளாமல் போனாலும், யாரையாவது கூப்பிட்டு தன் வேலை முடியும் வரை ஓய மாட்டார். அவர்களுக்கு காபி, உணவு போன்றவை தந்ததாலும், அம்மாவின் இயல்பான Innocence-க்காகவும் அம்மாவை எல்லோருக்கும் பிடிக்கவே செய்யும்.\nநான் கல்லூரியில் படிக்கும் போது அம்மாவிற்கு இருதயத்தில் பிரச்சனை வந்து உடன் கண்டு பிடித்ததால் உயிர் பிழைத்தார். 20 வருடங்களாக நோயுடனும் மாத்திரைகளுடன் தான் உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது. \" நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேனோ \" என்று சொல்லியே எனக்கு 25 வயதில் திருமணம் செய்தார்கள். \" அடுத்த தீபாவளிக்கு இருப்பேனான்னு தெரியாது\" எனும் போதெல்லாம் \" என்னோட சின்ன வயசுலேந்து இப்படி தான் சொல்றே; இருவது வருஷம் ஓடி போச்சு\" என்று அவரை அடக்குவது வழக்கம்.\nஅம்மாவிற்கு சிறியதாக பயப்படவே தெரியாது. தலை வலி என்றாலே \" பிரைன் டியூமரா இருக்குமோ \" என்று தான் கேட்பார். எனக்கும் இந்த \"வியாதி\" இருந்து தற்போது குறைத்து விட்டேன்.\nசுஜாதா ஒரு முறை \" அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை\" என்று எழுதி இருந்தார். இது அப்பாவிற்கு மட்டுமல்ல, அம்மாவிற்கும் பொருந்த கூடும் என புரிந்தது. வாசித்த போதே வலித்தது. அந்த நிலை எனக்கு வர கூடாது என நினைத்தேன்.\nஎனக்கு திருமணம் முடிந்து அம்மாவிற்கும் வயதான பின்தான் அம்மா மேல் அன்பை காட்ட ஆரம்பித்தேன். \"டார்லிங்\" என்று தான் கூப்பிடுவேன். ஊருக்கு செல்லும் போதெல்லாம் நான் முத்தம் குடுப்பது, கொஞ்சுவது அவருக்கு ரொம்ப சந்தோசம். \"இவன் மட்டும் தான் என்னை இப்படி கொஞ்சுறான்\nஅம்மாவிற்கு பொடி & வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் ரொம்ப வருஷம் இருந்தது. இரண்டு பழக்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுவதுமாய் நிறுத்தினார்.\nமுதல் அண்ணனுக்கு திருமணம் ஆனபோது அவர் அருகிலுள்ள ஊரில் வேலை பார்த்தாலும் அம்மா தனி குடித்தனம் வைத்தார். எங்கள் அனைவருக்குமே அப்படி தான் செய்தார். \"தள்ளி இருந்தால் தான் உறவு கெடாது\" என தெளிவாய் இருந்தார்.\n\"தவமாய் தவமிருந்து\" படம் பார்த்து விட்டு \"அம்மா அப்பாவை என்கூட வைத்தே தீருவேன்\" என அவர்களை வற்புறுத்தி சென்னை அழைத்து வந்தேன். ஓரிரு மாதங்களில் சென்னையும், டென்ஷனில் நான் போடும் கூச்சலும் பிடிக்காமல் மீண்டும் ஊருக்கே சென்று விட்டனர்.\nஅம்மா தன்னுடைய இறப்பிற்காக, கடைசி நாளுக்காக காத்து கொண்டிருக்கிறார். கடந்த ரெண்டு வருடங்களாகவே அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. ஒரு முறை மூன்று நாள் கோமாவில் இருந்து டாக்டர்கள் கை விரித்த பின்னும், மிராக்கில் போல உயிர் பிழைத்தார்.\nநடப்பது சிரமமானது. பின் உட்காருவதே சிரமமானது.தற்போது வாக்கர் பிடித்து நிற்கவும், சற்று உட்காரவும் செய்கிறார். சிறு வயதில் அம்மாவை மிக கஷ்ட படுத்திய, பல வருடங்கள் பேசாது இருந்த பெரியண்ணன் தான் இப்போது அவரை பார்த்து கொள்கிறார்.\nஅம்மாவை ஒரு குழந்தை போல் பார்த்து கொள்ளும், மருந்து & உணவு தரும் அப்பாவின் அன்னியோன்னியம்.. அனைவரும் வியக்கும் விஷயம்.\n\" நான் சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்கடா, முடியலை\" என தற்போதெல்லாம் அடிக்கடி சொல்கிறார். \"வேண்டிக்குறேம்மா; நீ கஷ்டப்படாம நல்ல படியா சாகணும்னு தினம் வேண்டிக்குறேன்; ஆனா சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்க முடியலை. மனசு வரலைம்மா\" என்றேன்.\nஅடுத்த முறை தஞ்சை செல்லும் போது இந்த பதிவை பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவிடம் காட்டுவேன்.\nடார்லிங் ஐ லவ் யூ\nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம்\nஹைதை ராமோஜி பிலிம்சிட்டி பயணம்:வீடியோ & படங்களுடன்\nஹைதராபாத் செல்பவர்கள் தவற விட கூடாத இடம் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி. குறிப்பாய் பள்ளி செல்லும் குழந்தைகள் மிக என்ஜாய் செய்ய கூடிய இடம் இது. காலை எட்டு மணி போல் திறக்கிறார்கள். திறக்கும் போதே சென்று மாலை ஏழு மணிக்கு மூடும் வரை இருந்து பார்த்தால் தான் பெரும்பாலான இடங்களை பார்க்க முடியும் டிக்கட் விலை ஒரு ஆளுக்கு Rs.600 டிக்கட் விலை ஒரு ஆளுக்கு Rs.600 எனவே, முழுதும் யூடிலைஸ் செய்ய காலையே சென்று விடணும்.\nஎந்த வித உணவு பொருட்களும் உள்ளே அனுமதிப்பதில்லை. லாக்கர் ரூமில் வைத்து விட சொல்கிறார்கள். நாங்கள் எடுத்து சென்ற ஸ்நாக்ஸ் கூட அப்படி தான் வைக்க வேண்டியதாயிற்று.\nடிக்கட் எடுத்ததும் பஸ்ஸில் நம்மை கூட்டி செல்கிறார்கள். வரிசையாக பஸ்கள் வந்த வண்ணம் மக்களை ஏற்றி சென்ற வண்ணம் உள்ளன. சனி, ஞாயிறுகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.\nராமோஜி ராவ் என்பவர் ஆந்திராவின் பெரிய பிசினஸ் மேன். சினிமா தொழில் மட்டுமல்லாது ஈ டிவி, பேப்பர், ஹோட்டல் என பலவித வியாபாரம் வெற்றிகரமாக செய்கிறார். அவரின் பல நாள் கனவே இந்த பிலிம் சிட்டி. உங்கள் இடப்பக்கம் நீங்கள் பார்க்கும் படம் பிலிம் சிட்டி உள்ளே உள்ள அவர் வீடு.\nபிலிம் சிட்டி 1666 ஏக்கர் நிலபரப்பில் உள்ளது. நாம் பஸ்ஸில் உள்ளே செல்ல இருபது நிமிடம் ஆகிறது. அவ்வளவு இடமும் மலை போல் உள்ளது.\nபஸ்ஸில் ஒரு குறிப்பிட இடத்தில இறக்கி விடுகிறார்கள். இங்கு ராட்டினம் போன்ற சில விளையாட்டுகள் உள்ளன. அவற்றை முழுதும் தவிர்த்து விட்டு அருகில் குட்டி பசங்களை கவரும் வண்ணம் உள்ள ஒரு சில விஷயங்களை மட்டும் பார்த்து விட்டு அடுத்த இடம் கிளம்பினோம்.\nஒரு இடத்திலிருந்து அடுத்த இடம் செல்ல மறுபடி பஸ் தான். இம்முறை வெறும் மலைகளாக இல்லாமல் Heart of the Film city-ஐ காட்டினார்கள்.\nவழி முழுவதும் நிறைய தோட்டங்கள் .. ஒவ்வொன்றுக்கும் \" மொகல் கார்டன்\" என்றும் மற்றும் பல்வேறு பெயர்களும் சொல்கிறார்கள். பலவற்றை இறங்கி பார்க்க நேரமில்லை. பசுமையும் மலர்களும் பார்க்க அவ்வளவு அழகு இங்கெல்லாம் கூட பிலிம் மற்றும் டிவி ஷூட்டிங்குகள் நடக்கும் போலும்.\nதிஹார் ஜெயில் செட்டிங் & வசூல் ராஜா படத்து ஹாஸ்பிடல். படங்களை பெரிதாய் பார்க்க படம் மேல் கிளிக் செய்து பார்க்கலாம்.\n\"பாம்பே ஸ்லம் ஏரியா\" , \" மெட்ராஸ் ஏரியா\" \"திகார் ஜெயில்\" \" \"வசூல் ராஜா படத்து ஹாஸ்பிடல்\" என சொல்லியவாறே இருக்க பஸ் அவற்றையெல்லாம் விரைவில் கடக்கிறது.\nகுறிப்பிட்ட ஒரு தோட்டம் அருகே இறக்கி விட, அங்கு அற்புதமான பொம்மலாட்டம் நடந்தது. ஹைதை பயண கட்டுரை முதல் பதிவில் ஒரு படம் போட்டு \" இங்கே என்ன நடக்குது\" என கேட்டிருந்தேன். பொம்மலாட்டம் என சரியாய் கணித்தவர்கள் உங்களுக்கு நீங்களே \"ஷொட்டு\" கொடுத்து கொள்ளலாம்.\nபொம்மலாட்ட கலைஞர்களுடன் சிறு அளவளாவல்\nஇப்படி ஒவ்வொரு இடத்திலும் இறங்கி அங்கு ஒவ்வொன்றாய் பார்த்தாவறே சிறிது நடந்தால், மறுபடி வேறு பஸ், நம்மை வேறு இடத்திற்கு கூட்டி செல்ல தயாராய் நிற்கிறது.\nமுதல் பதிவு: படங்கள் மட்டும் இங்கே\nஇரண்டாம் பதிவு : ரயில் பயணம் ( First ஏசி அனுபவம்) இங்கே\nமூன்றாம் பதிவு: சார்மினார், சலார்ஜங், NTR பார்க் இங்கே\nபிலிம் சிட்டியில் மாறி மாறி பார்த்த இடங்களில் குறிப்பிடத்தக்கவை:\n1 . \"Caves \" (குகை) : நிஜமான குகைக்குள் நுழைந்தது போல் உள்ளது. ஆனால் எல்லாம் கார்ட்போடில் ஆனது. உள்ளே சில பொம்மைகள் (நாக்கை நீட்டிய படி நகரும் பாம்பு etc ) குழந்தைகளை கவரும் வண்ணம் உள்ளன. ரொம்ப ரசித்த இடம் இது.\n2. ராஜா காலத்து செட்டிங்குகள். உள்ளே நுழையும் போதே சந்திரமுகி வேட்டையன் சிரிப்பு போலவும், படத்தில் வருவது போன்ற மியூஸிக்கும் போட்டு அசத்துகிறார்கள். இங்கு உள்ள அனைத்து ராஜா மண்டப செட்டிங்குகளும் தத்ரூபம்.\n3. உலகின் பல்வேறு விஷயங்களும் ஒரே இடத்தில் நகரும் பொம்மைகளாக வடிவமைத்துள்ளனர். இதனை நாம் குட்டி காரில் நகர்ந்தாவறே பார்க்கிறோம். இந்த ஐந்து நிமிடங்களும் மெய் மறந்து தான் போயிடுவோம்.\n(ஒரு சில காரணங்களால் சிறு சிறு வீடியோவாக எடுத்துள்ளேன். பொருத்தருள்க).\n4. \"படம் எடுப்பது எப்படி\" என நிஜமாய் செய்து காட்டுகிறார்கள். உங்களில் நடிக்க யார் ரெடி என கேட்டு நம்மில் ஒருவரே ஹீரோயினாக மாற, கண் முன்னே அவர் நடிப்பதை மற்றொரு படத்துடன் இணைத்து காட்டி அசத்துகிறார்கள். இதை நேரில் பார்க்கும் போது வேறு சில சுவாரசியம் இருக்கும் என்பதால் முழுதும் சொல்லாமல் விடுகிறேன். படம் எடுக்கும் இடத்தில் ஒரே இடத்தில் ஐநூறு பேர் அமரும் அளவுக்கு மூன்று ஹால்கள் உள்ளன. முதலாவதில் தான் நடிக்க சொன்னது. அது முடிந்ததும் அடுத்த ஹால் திறக்க, அங்கே ஓடுகிறோம். அங்கு ரீ ரிக்கார்டிங் செய்வது எப்படி என முன்னர் நடித்த காட்சிக்கு நம்மில் இரு சிறுவர்களை வைத்தே ரீ ரிக்கார்டிங் செய்து காட்டுகிறார்கள். பின் அடுத்த ஹால் திறக்க, அங்கே அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து காட்டுகிறார்கள்.\nஎன்ன ஒன்று இங்கு எல்லாவற்றையும் விளக்குபவர் பேசுவது முழுக்க ஹிந்தியில். ஹிந்தி புரியாட்டி பேய் முழி முழிக்க வேண்டியது தான்.\n5. மற்றொரு இடத்தில் நிஜமான சண்டை காட்சியை நம் முன்னே நிகழ்ச்சி காட்டுகின்றனர். நம் தலைக்கு மேலேயே உள்ள ரோப்பை பிடித்தவாறு வந்து குதிக்கும் ஹீரோ வில்லன்களுடன் கை சண்டை & துப்பாக்கி சண்டை போடுகிறார்.\n6. டைட்டானிக் கப்பல் போல உள்ள செட்டின் கீழே குட்டி பசங்க விளையாட வீடியோ கேம்ஸ் உள்ளது. இதற்கு சற்று தள்ளி Water gameம் உள்ளது. அவர்களே நீச்சலுக்கு வேறு தனி உடை தருகிறார்கள். பெரும்பாலும் ஆண்களும் குழந்தைகளும் உள்ளே போய் பந்துகளை போட்டு விளையாடுகிறார்கள்.\nபொதுவாய் மாலை ஆறு மணிக்கெல்லாம் மூடி விடுவார்கள் போலும். நாங்கள் சென்ற டிசம்பர் இறுதியில் ஏழரை வரை திறந்திருந்தது.\nசினிமா மேல் ஆசை இல்லாத மனிதர்கள் ரொம்ப குறைவு. அப்படி ஆசை உள்ள யாரும் நிச்சயம் சென்று வர வேண்டிய இடம் பிலிம் சிட்டி.\nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம், பயண கட்டுரை, ஹைதராபாத்\nவேலை நீக்கம்: ஒரு என்கொயரி அனுபவம்\nபத்து வருடத்துக்கு முன் நேர்ந்த அனுபவம் இது. இதனை வாசிக்கும் நீங்களும் ஒரு நிறுவனத்தில் பணி புரிபவர் என்ற முறையில் இந்த அனுபவம் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.\nநான் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு அட்டண்டர் இருந்தான். எப்பவும் ரொம்ப காமெடியாக பேசுவான். அவன் பேசினால் சிரிக்காமல் யாரும் இருக்க முடியாது. கல்யாணம் ஆகி அவனுக்கு குழந்தையும் உண்டு. \"வக்கீல் சார்...வக்கீல் சார்...\" என்றே கூப்பிடுவான். அவனது பெயர் ராபின் (மாற்றப்பட்டுள்ளது).\nதிடீரென அவனை பற்றி ஒரு தகவல்.. உடன் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் அவன் தவறாக நடக்க முயன்றதாகவும், அந்த பெண் அழுது கொண்டே ஓடி போய், பெர்சனல் டிபார்ட்மன்ட்டில் புகார் தந்ததாகவும் செய்தி...(அப்போது HR டிபார்ட்மன்ட்டை பெர்சனல் டிபார்ட்மன்ட் என்பர்).ராபினை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று நிறுவனம் முடிவெடுத்து, லீகல் டிபார்ட்மன்ட்டில் என்னிடம் இந்த வேலை வந்தது.\nநிரந்தர ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது பற்றி விசாரிக்க, அது ரொம்ப சிரமமான நடைமுறை என்று புரிந்தது. முதலில் ஒரு ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்ப வேண்டும். பின் அவன் செய்த குற்றங்களை உள்ளடக்கி சார்ஜ் ஷீட் தயார் செய்ய வேண்டும். இதன் பின், ஒரு என்கொயரி நடத்தி, அதில் அவன் மீது உள்ள குற்ற சாட்டுகள் உண்மை என நிரூபணம் ஆனால் மட்டுமே அவனை வேலையை விட்டு நீக்க முடியும்.\nஇந்த நிலையில் ராபின் பற்றிய மற்றொரு அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது. ராபின் ஒரு எய்ட்ஸ் நோயாளி நாங்கள் வெளியே அனுப்புவது எய்ட்ஸ் என்பதால் என்று விஷயம் திசை மாறி விட கூடாது.உண்மையில் கம்பெனிக்கு அப்படி பட்ட எண்ணம் இல்லை. ஒரு பெண் ஊழியரிடம் தவறாக நடப்பது தவறான முன் உதாரணம் ஆகி விடக்கூடாது என்பதால் மட்டுமே ராபினை வேலையை விட்டு நீக்க முடிவு செய்தனர்.\nஷோ காஸ் நோட்டிஸ் & சார்ஜ் ஷீட் போன்ற விஷயங்கள் முடிந்து என்கொயரி வந்து விட்டது. சட்டம் படித்த நான் என்கொயரி ஆபிசரானால் அவனும், தனக்கு வக்கீல் உதவி கேட்பான் என்பதால், அலுவலகத்தில் உள்ள மற்றொரு சீனியர், என்கொயரி ஆபிசர் ஆக நியமிக்க பட்டார். ஆனால் இவர் பின்னால் என்னையும் சேர்த்து ஒரு டீமே இயங்கியது.\nஎன்கொயரி நடந்தது. என்கொயரியில் ராபின் தானே வாதாடினான். தான் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க வில்லை என்று கூறினான். மேலும், கம்பெனி முன் வைத்த அனைத்து சாட்சிகளையும் அவனே குறுக்கு விசாரணை செய்தான். ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல் அனைத்து சாட்சிகளையும் கேள்விகளால் உடைத்தான்.\nஎன்கொயரி நடக்கும் போதே ராபின் பல முறை என்னை நேரிலும், தொலை பேசியிலும் மிரட்டினான். என்கொயரி ஆபிசர் இருந்தாலும் அவரின் பின்னால் இயங்குவது நான் தான் என அவனுக்கு நன்றாக தெரியும்.\" வக்கில் சார்.. நான் சாக போறவன்... நீங்க வாழனும் . ஞாபகம் வச்சிக்குங்க.\" என்பான். அவனது மிரட்டல்களை நான் பொருட் படுத்த வில்லை. ஆனால் அவனை அலட்சிய படுத்தாமல், ஒதுக்காமல் பேசி வந்தேன்.\nஎன்கொயரி ஒரு வழியாய் முடிந்தது.அந்த நேரத்தில் வந்த ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு, செக்ஸ் தொல்லை தருவதாக ஒரு பெண் ஊழியர் புகார் கூறினால், அதற்கு வேறு எந்த சாட்சியும் தேவை இல்லை என்றும், அதற்கு மிக அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியது. இதன் அடிப்படையில் ராபின் நீக்க பட்டான்.\nஇத்தனை விஷயங்களையும், அந்த கொடுமையான காலத்தையும் உறுதியுடன் எதிர் கொண்ட அந்த பெண்ணை நிச்சயம் பாராட்ட வேண்டும்.\nவேலை நீக்கத்தை எதிர்த்து ராபின் conciliation officer - என்ற அரசு ஊழியரிடம் அப்பீல் செய்தான். இந்த ஆபிசர் ஒரு பெண். பிரச்சனை முழுதையும் புரிந்து கொண்டு, அவர் சொன்னார்: \" அவனுக்கு இழப்பீடு என எதாவது பணம் கொடுத்து கேசை இப்பவே முடிச்சிடுங்க.. இல்லா விட்டால் அவன் லேபர் கோர்ட் போவான்; விஷயம் இழுத்து கொண்டே போகும்; இங்கு பணம் வாங்கி கொண்டு அவன் ஒத்து கொண்டால், அதுக்கு மேல் அவன் அப்பீல் போக முடியாது\" .\nஎனக்கு இதில் உடன் பாடு இல்லை. ஆனால் கம்பெனி கேசை இழுத்தடிக்காமல், உடனே முடிக்க எண்ணினர். நாம் பணம் தந்தால் நாம் செய்தது தவறு என்று ஒப்பு கொண்ட மாதிரி ஆகிடும் என வாதிட்டேன். ஆனால் நிறுவனம் ஒரு சிறு தொகை (பத்து வருடம் முன் 25,000 என நினைக்கிறேன்) தந்து பிரச்சனையை அந்த ஆபிசர் முன் முடித்தனர். அதன் பிறகு நான் அவனை பார்க்க வில்லை. அவன் எவ்வளவு நாள் உயிரோடு இருந்தானோ .. அறியேன்..\nஇந்த என்கொயரி மூலம் நான் அறிந்தவை:\n1. ஒரு நிரந்தர ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது சாதாரணமான விஷயம் அல்ல. இதனால்தான் பல கம்பெனிகள் யாரையாவது வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்றால் அவர்களை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள்.\n2. மேனஜர் ஆக (Supervisory cadre) உள்ள ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது எளிது. என்கொயரி போன்றவை தேவை இல்லை. அதே போல் பிசினஸ் சரி இல்லை என்பதால் செய்யப்படும் ரெட்ரேன்ச்மென்ட் (Retrenchment) போன்றவற்றிற்கும் என்கொயரி தேவை இல்லை.\n3. லேபர் கோர்ட்டுகள் பெரும்பாலும் ஊழியர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்குகின்றன.\n4. ஒரு ஊழியர் செய்யும் தவறுக்கு நிகரான தண்டனையே ஒரு கம்பெனி வழங்க வேண்டும். உதாரணமாக , ஒரு பிக் பாக்கெட் குற்றத்துக்கு எப்படி கோர்ட் மரண தண்டனை வழங்க முடியாதோ, அது போல். ஒரு சாதாரண குற்றத்திற்கு ஒரு ஊழியரை கம்பெனி வெளியே அனுப்ப முடியாது. சொல்ல போனால், வேலையை விட்டு அனுப்புவது என்பது ஒரு ஊழியருக்கு தரப்படும் மிக அதிக பட்ச தண்டனை ( மரண தண்டனைக்கு சமம்) என்றே கோர்ட்டுகள் கருதுகின்றன.\nநிற்க. ராபின் என்னுடன் பேசிய கடைசி வரிகள் இதோ: :\n\" வக்கீல் சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்... இந்த கம்பெனிகாரங்க எனக்கு பணம் தர ஒத்துக்கிட்டு இருக்க மாட்டனுங்க.. நீங்க தான் அவன் பாவம்னு எனக்காக பேசி வாங்கி கொடுத்திருபீங்க.. எனக்கு தெரியும் ரொம்ப தேங்க்ஸ் சார் \nஇன்றைய காலை பதிவு: பாலகுமாரனுடன் சந்திப்பு\nஹைதை ராமோஜி பிலிம் சிட்டி ஏராளமான படம் & வீடியோக்களுடன்\nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம்\n\"பாலகுமாரனை சந்தித்தது பற்றி எழுதுகிறேன்\" என பதிவுகளில் சில முறை குறிப்பிட்டு கொண்டே இருந்தாலும் இன்று வரை எழுதலை. பதிவர் பலா பட்டறை ஷங்கர் மாதிரி சிலர் , \" யோவ் நீ நிஜமா பாத்தியா இல்லியா \" என சட்டையை உலுக்கி கேட்காத குறை தான். பாலகுமாரனை சந்தித்தது ஒரு முறையல்ல, மூன்று முறை; அவற்றை சுவாரஸ்யம் கருதி ரிவர்சில் பகிர்கிறேன்..\nசென்னை மயிலாப்பூரில் 2006-ல் ஒரு இலக்கிய விழா. திரு. பாண்டிய ராஜன் (Mafoi) அழைப்பில் சென்றிருந்தேன். எனது அடுத்த இருக்கையில் வெள்ளை சட்டை, வேஷ்டியில் பாலகுமாரன். அன்றைய விழாவில் அவர் இறுதியில் யாருக்கோ நினைவு பரிசு தர மட்டுமே மேடை ஏறினார். ரெண்டு மணி நேரத்திற்கும் மேல் அருகிலேயே அமர்ந்துள்ளேன். முதல் முறை மெல்லியதாய் சிரித்ததை தவிர இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை. ரொம்ப நேரம் கழித்து தான் தோன்றியது. ஒரு காலத்தில் ஆதர்சமாய் இருந்த எழுத்தாளர் அருகில், அவரை உரசியவாறு பல மணி நேரம் அமர்ந்தும் சில வார்த்தை கூட பேச தோன்ற வில்லையே அப்படி அமர்ந்திருப்பது எந்த மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் தர வில்லையே அப்படி அமர்ந்திருப்பது எந்த மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் தர வில்லையே ம்ம்..காலம் எத்தகைய மாற்றங்களையெல்லாம் செய்கிறது \n1995 என நினைவு. எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் ஒரு மாலை நேரத்தில் வீட்டில் படுத்தவாறே ஏதோ புத்தகம் படித்த படி இருக்க, ஊர் நண்பன் ஒருவன் ஓடி வந்து சொல்கிறான்: \" சீக்கிரம்.. கடை தெருவுக்கு வா,, உன்னை பால குமாரன் கூப்பிடுறார்\".\n\"ஆலங்குடி கோயிலுக்கு போயிட்டு வந்தவர் நம்ம ஊரில் டிபன் சாப்பிட நின்னுருக்கார். ஓட்டல் வெளியில் வந்து நின்னவரை நாங்க பாத்து போய் பேசினோம். அப்போ எங்க ஊரில் ஒருத்தர் எழுதின லெட்டர் உங்க புக்கில வந்திருக்குன்னு சொன்னோம். அப்படியான்னு ஆச்சரியமா\" அவர் இருக்காரா\nவீட்டிலிருந்து அந்த ஹோட்டலுக்கு நடந்த மூன்று நிமிடத்தில் முதல் சந்திப்பு ஞாபகத்தில் ஓடியது. என்னை நினைவிருக்குமா\nநீடாமங்கலத்தில் ஓட்டல் வெளியே பாலகுமாரன் நின்றிருந்த காட்சி இன்னும் நினைவில் உள்ளது. சென்று அறிமுக படுத்தி கொண்டேன். என்ன செய்கிறேன் என கேட்டார். பாலகுமாரன் அப்போது விசிறி சாமியார் உள்ளிட்ட ஆன்மீக சமாச்சாரம் நிறைய எழுத ஆரம்பித்து விட்டார். அப்போது எழுதிய சில நாவல்கள் பெயர் சொல்லி வாசித்தீர்களா என்றார். \" இல்லை\" என்றேன். அவர் முகம் சற்று மாறியது. அவரது நாவல்களில் பிடித்தது என அவரது மெர்குரி பூக்கள், இரும்பு குதிரை உள்ளிட்ட சில நாவல்கள் பெயர் சொன்னேன். குடும்பத்தார் ஓட்டல் உள்ளிருந்து வந்து காரில் அமர்ந்தனர். பத்து நிமிடம் போல் பேசி விட்டு கிளம்பி விட்டார்.\nகல்லூரி காலத்தில் பாலகுமாரன் ரசிகன் என்பதை விட வெறியன் என்று தான் சொல்ல வேண்டும். பாலகுமாரனை பற்றி யாரும் தவறாக பேசினாலே கோபம் வந்து விடும். வீட்டில் வேறு யாருக்கும் பாலகுமாரன் எழுத்துக்கள் பிடிக்காது. போலவே நெருங்கிய நண்பர்களான நந்து மற்றும் மோகனும் கூட அவரை கிண்டல் செய்து என்னை வெறுப்பேற்றுவார்கள்.\nபாலகுமாரன் தொடர்கள் ஒரே நேரத்தில் பாக்யா (மாலை நேரத்து மயக்கம்), சாவி (பந்தய புறா), விகடன் (பயணிகள் கவனிக்கவும்) என வந்து கொண்டிருந்தது. இவை ஒவ்வொன்றையும் வாசித்து விட்டு நான் எழுதிய கடிதங்கள் அந்தந்த புத்தகங்களில் அரை பக்க அளவில் வெளி வந்தன. ஜூனியர் விகடனில் பிரசுரமான \" இனிது இனிது காதல் இனிது\" தொடர் முடிந்ததும் மூன்று பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு பதில் எழுதிய பாலகுமாரன் \" உங்களது இந்த கடிதம் புத்தகத்தில் பிரசுரமாகும். சென்னை வந்தால் போன் செய்து விட்டு வீட்டிற்கு வரவும்\" என எழுதி இருந்தார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.\nசென்னை செல்லும் வாய்ப்பு வந்தது. அப்போது சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தான் நண்பன் நந்து. தகவல் சொன்னதும் \" வா..வா. இந்த தடவையாவது என்னோட தண்ணி அடிப்பியா\n\"மாப்ளே அந்த பேச்சு பேசினே.. உன்னை பாக்கவே வரலை\"\n\" சரிடா. விடு.. எப்ப வர்றே\nவிரைவில் வந்தேன். சென்ற வேலையை விட பாலகுமாரனை சந்திப்பதே முக்கிய வேலையென மனம் சொன்னது. காலையே பாலகுமாரனுக்கு போன் செய்தேன். அவரது கடிதத்தை நினைவூட்ட, பகல் பதினோரு மணிக்கு வர சொன்னார். நந்துவும் நானும் சென்றோம்.\nஎங்களை உள்ளே அழைத்து அமர சொன்னவர் \"எழுத்தாளனை எதுக்கு பாக்கனும்னு நினைக்கிறீங்க\" என்று பேச ஆரம்பித்தார். நான் சொன்ன பதில்களையும் கூடவே என் மூக்கையும் உடைத்து நொறுக்க ஆரம்பித்தார். சற்று அடி வாங்கியதும் மெள்ள \"நீங்க தான் சார் லெட்டரில் \"சென்னை வந்தால் போன் செய்து விட்டு வீட்டுக்கு வரவும்'னு எழுதியிருந்தீங்க. நானாக கேட்கலை\"\nஅதன்பின் வேறு விஷயங்களுக்குள் நுழைந்தார். சட்டம் படிப்பதாக அறிந்ததும் அறிவுரை தொடங்கியது. \"ஐயருங்க எல்லாம் சூப்பரா இங்கிலிஸ் பேசுவானுங்க. நீயும் இங்கிலிஸ் பேச கத்துக்கோ\" நந்து எதுவும் பேசாமல் நாங்கள் இருவரும் பேசுவதை பார்த்து கொண்டிருந்தான்.\nபொதுவான விஷயங்கள் பேசும் போது நான் அவரது கதை மாந்தர்கள் அல்லது அவரது கட்டுரையில் \"பாலகுமாரனாக\" உள்ளவரின் நிலை பாட்டை எடுத்தேன். அவர் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் பேசினார். அதிர்ச்சியாக இருந்தது. சாதாரண கதைகள் என்றால் சரி. அவர் அப்போது எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அவரின் பயோகிராபி தான். கதைகளில் மட்டுமல்ல, அதற்கு முந்தய வாரம் குமுதத்தில் கூட, தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது முன் பின் தெரியாத அனைவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்தியதாக எழுதி இருந்தார். நேரில் தன் ரசிகன் மீது நேச உணர்வின்றி பேசியது ஜீரணிக்க சிரமமாயிருந்தது.\nஅவரின் எழுத்தும் அவரும் வேறு வேறாய் இருப்பதாய் நான் சொல்ல, \"ஆம் அவையெல்லாம் கதை\" என்றார். அப்படியானால் கட்டுரைகள் காட்டிய பால குமாரன்\nஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் இல்லத்தில் அமர்ந்து பேசிய போதும் \"தண்ணீர் குடிக்கிறீர்களா \" என்று கூட பேச்சுக்கு கேட்க வில்லை. பன்னிரண்டு மணி மொட்டை வெயிலில் வெளியே வந்தோம்.\nநந்துவிற்கு சிரிப்பு தாளலை. என்னை கிண்டல் செய்து சிரித்தவாறே வந்தான்.\nஎனது ஆதர்ச எழுத்தாளரின் பிம்பம் ஒரு மணி நேரத்தில் உடைந்து நொறுங்கிய அதிர்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாய் உள் வாங்கி கொண்டிருந்தேன்.\nஅந்த சம்பவத்தின் தாக்கத்தை நான் பேசிய அடுத்த ஒரு வரியில் சொல்லி விடலாம். சட்ட கல்லூரியில் நான்கு வருடமாய் படித்தும், அதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் \"பழம்\" என்று நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்டவன், முதன் முறையாய் கேட்டேன்\n\" மாப்ளே தண்ணி அடிக்கலாமா\nதமிழ் மண ஸ்டாரின் காதல்கள்\nஹைதை ராமோஜி பிலிம் சிட்டி ஏராளமான படம் & வீடியோக்களுடன்\nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம்\nகாதல் ஸ்பெஷல்:பெண்கள் டயலாக்ஸ்& காதல் பாடல் வரிகள்\nரசித்த சில காதல் வரிகள்\nகண்ணாடி முன்னே பேசிபார்த்தால் வார்த்தைகளெல்லாம் முண்டியடிக்கும்\nமுன்னாடி வந்து பேசும்போதோ வார்த்தைகளெல்லாம் நொண்டியடிக்கும்....\nஎந்த பேனா வாங்கும் போதும் என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்\nஇதற்கு பெயர் தான் காதலா\nநீ நின்ற இடமென்றால் விலை ஏறிப்போகாதோ\nநீ செல்லும் இடமெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ\nஎன்னோடு வா வீடு வரைக்கும்\nஎன் வீட்டை பார் என்னை பிடிக்கும்\nகண்கள் எழுதும்,இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா\nஒரு வார்த்தை இல்லையே.... இதில் ஓசை இல்லையே\nஇதை ஏனோ தினம் படித்திட முடிகிறதே\nகாதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை\nகாயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை\nஉன் கையில் சேர ஏக்கமில்லை உன் தோளில் சாய ஆசையில்லை\nநீ போன பின்பு சோகமில்லை என்று பொய் சொல்ல தெரியாதடி\nஉன் அழகாலே..உன் அழகாலே.. என் வெயில் காலம் அது மழை காலம்\nநீங்கள் ரசித்த காதல் வரிகளை பின்னூட்டத்தில் சொல்லலாம்.\nகாதல் ஸ்பெஷல் : பெண்கள் டயலாக்ஸ்\nகல்லூரியில் ஒன்றாய் படித்த இரு நண்பர்களுக்கு (தனித்தனியே) கல்யாணமாகி ஐந்து வருஷமாயிடுச்சு. இருவருக்கும் நடந்தது காதல் திருமணம் தான்.\nகாதலியாக இருந்த போதும், பின் மனைவியாக மாறிய பின்னும், பெண்கள் பேச்சு எப்படி மாறுகிறது என பகிர்கிறார் ஒருவர்.\nமற்றவரோ பேச்சு மட்டுமல்லாது பெண்கள் வாழ்க்கை முறையும் காதல் & கல்யாணத்தில் எப்படி மாறுது என டீப்பா நோட் பண்ணி சொல்கிறார். மேலே படிங்க.\nVERSION - I முதல் நண்பர் சொன்னது\n\"ஏன் சீக்கிரமா போனை வச்சிடீங்க இன்னும் கொஞ்சம் பேசக் கூடாதா இன்னும் கொஞ்சம் பேசக் கூடாதா\n\"உங்க பெஸ்ட் ப்ரெண்ட் யாரு\" (\"அவனை ஒழிக்கணும் முதல்லே ..\")\n\"ரெண்டு நாள் என்னை பாக்கலை.. அதுக்குள்ளே இளைச்சி போய்டீங்க..\"\nதிருமணம் முடிந்த உடன் :\n\"என்னோட சமையல் உங்களுக்கு பிடிச்சிருக்கா\n\"இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு\n\"நம்ம வீட்டுக்கு அடுத்தது என்ன வாங்கலாம்\n\"உங்க குடும்பத்தில் எல்லாருமே ஒரு மாதிரி தான் இருக்கீங்க ..\"\n\"கிரிக்கெட்டையே கட்டிடுட்டு அழுங்க ..\"\n\"எங்க குடும்பத்தை கிண்டல் பண்ணலேன்னா உங்களுக்கு தூக்கம் வராது\n\"எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிடோம்னு இருக்கு\"\n\"வீட்டு நினைப்பு கொஞ்சமாவது இருக்கா\n\"என் மேல உங்களுக்கு கொஞ்சமாவது பிரியம் இருக்கா\n\"உங்களுக்கு ஒன்னுமே தெரியாது \"\nVERSION - II இரண்டாம் நண்பர் சொன்னது\nகிப்ட் எல்லாம் ஒன்னும் வேணாம். காசு செலவு பண்ணாதீங்க\nஎங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும்.\nஅப்பா கோவிச்சிபாறு வெளியே போக வேணாம்.\nதிருமணம் முடிந்த உடன் :\nஎங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். அதோட உங்க பேமிலியும் பிடிக்கும்\nஎடை : 55 கிலோ\nFriends: பக்கத்துல புதுசா கல்யாணம் ஆகி வந்து இருக்காங்க .\nஹோட்டல் : சரவண பவன்\nஇது வரைக்கும் எனக்கு என்ன வாங்கி கொடுத்து இருக்கீங்க\nஎங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். நீங்க பரவா இல்ல. ஒங்க பேமிலி சரி இல்ல.\nFriends : அடுத்த தெருவுக்கு புதுசா வந்திருக்கும் பங்கஜம் மாமி\nஹோட்டல் : கை ஏந்தி பவன்\nஎங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். நீங்க எல்லாம் சுத்த மோசம்\n(ஹஸ்பன்ட் பதில் : மீட்டிங்கில் இருந்தேன் (Or) போன் சைலன்ட் மோடில் இருந்தது கவனிக்கலை)\nFriends: ரோடுக்கு அந்த பக்கம் மூணாவது தெருல புதுசா குடி வந்து இருக்காங்க. (இந்த தெருவில் யாரும் சரி இல்லை)\nMovies I like: எந்த படமுமே நல்லா இல்ல\nஹோட்டல் : \"வீட்டுக்கே பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க\"\nடிஸ்கி: இவற்றை சொன்ன அந்த ரெண்டு \"தைரியசாலிகள்\" தங்கள் பெயரை சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கிருக்காங்க.\nநாளைய பதிவு: பாலகுமாரனுடன் சந்திப்பு\nLabels: தமிழ் மண நட்சத்திர வாரம்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்\nநெகிழ்வான நட்சத்திர வார அனுபவங்கள்\nஉலக கோப்பை யாருக்கு: 8 அணிகளை அலசும் பிரபல பதிவர்க...\nஆணும் பெண்ணும் - சிறுகதை\nஹைதை ராமோஜி பிலிம்சிட்டி பயணம்:வீடியோ & படங்களுடன்...\nவேலை நீக்கம்: ஒரு என்கொயரி அனுபவம்\nகாதல் ஸ்பெஷல்:பெண்கள் டயலாக்ஸ்& காதல் பாடல் வரிகள்...\nஇவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்\nஹைதை பயணம்:சார்மினார்,NTR பார்க் & சலார்ஜங்\nஹைதராபாத் பயண கட்டுரை: First ஏசி அனுபவம்\nவானவில்: சிறுத்தை சினிமாவும், Warrant-ம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nவேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு பார்வை\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-05-27T03:17:26Z", "digest": "sha1:YLWVDNYFRCIJKACCFL2PATWI7FQUEMP7", "length": 25223, "nlines": 439, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்...\nஇலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்...\n'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nசனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்\nமுடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்\nசந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலை...\nநாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா...\n\"இயற்கை அனர்த்தம்\" நூல்வெளியீடு - 24.02.2013\nஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமை...\nஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சி...\nபட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nகிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரா...\nசுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார...\nவிசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீக...\nஇந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்ட...\nமாணவர்களிடம் பணம் அறவிட கூடாது\nமட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுக...\n1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு ம...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ...\nமண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளிய...\nஇரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க ...\nமாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது\nவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இ...\nஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்...\nஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்கள...\nவடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்பட...\nகாதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி\nபாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வாழ வைக்க கிடைத்த வா...\nதீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா\nஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்க...\nவடகொரியா அணு குண்டு சோதனை\nஉணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனு...\nமுனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெ...\nசுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கற்பிணித் தாய்மாருக்க...\nபோரதீவுப்பற்று பிரதேசசபையின் புதிய அலுவலகத்துக்கான...\nமட்டக்களப்புக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கொக்குகள...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம் பீகா...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்கு அடிக்கல்...\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்ட...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியா...\nபொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயா...\nமுஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி ...\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக...\nகிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட...\nஇன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப...\nபல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை\n65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்...\nஉலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’...\nசித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்\nமட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துர...\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\n2000 குளங்கள் புனரமைப்புக்கு மேலும் 500 மில்லியன் ...\nதிருகோணமலையில் இடம்பெற உள்ள சுதந்திர தினத்தின் ஒத்...\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nஇளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இளம் உள்ளங்களுக்கான ஆன்மீக சுகம் எனும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை வேலைத்திட்டத்தின் ஊர்வலமொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு, ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், மாவட்டத்திலுள்ள இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த சமயங்களைச் சேர்;ந்த மத பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nஅத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி திருமதி எஸ்.கலாராணி, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் உட்பட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்டத்தின் ஊர்வலம், நந்தகோபன் மண்டபம் வரை சென்றது. இதையடுத்து இளைஞர் யுவதிகளுக்கான ஆன்மீக உரைகளும் சமயப் பிரமுகர்களினால் நிகழத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்...\nஇலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்...\n'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nசனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்\nமுடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்\nசந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலை...\nநாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா...\n\"இயற்கை அனர்த்தம்\" நூல்வெளியீடு - 24.02.2013\nஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமை...\nஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சி...\nபட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nகிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரா...\nசுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார...\nவிசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீக...\nஇந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்ட...\nமாணவர்களிடம் பணம் அறவிட கூடாது\nமட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுக...\n1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு ம...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ...\nமண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளிய...\nஇரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க ...\nமாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது\nவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இ...\nஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்...\nஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்கள...\nவடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்பட...\nகாதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி\nபாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வாழ வைக்க கிடைத்த வா...\nதீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா\nஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்க...\nவடகொரியா அணு குண்டு சோதனை\nஉணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனு...\nமுனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெ...\nசுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கற்பிணித் தாய்மாருக்க...\nபோரதீவுப்பற்று பிரதேசசபையின் புதிய அலுவலகத்துக்கான...\nமட்டக்களப்புக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கொக்குகள...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம் பீகா...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்கு அடிக்கல்...\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்ட...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியா...\nபொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயா...\nமுஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி ...\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக...\nகிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட...\nஇன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப...\nபல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை\n65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்...\nஉலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’...\nசித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்\nமட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துர...\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\n2000 குளங்கள் புனரமைப்புக்கு மேலும் 500 மில்லியன் ...\nதிருகோணமலையில் இடம்பெற உள்ள சுதந்திர தினத்தின் ஒத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E9%80%81", "date_download": "2018-05-27T02:57:05Z", "digest": "sha1:TGK6QCXFRTTXJUC47VGAM77OKKLMNIWZ", "length": 4788, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "送 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் ---送--- (ஆங்கில மூலம் - to deliver) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aathimanithan.blogspot.com/2011/11/blog-post_22.html", "date_download": "2018-05-27T03:10:09Z", "digest": "sha1:JACXG6HWPUNAVKZCJSTE4VX7Y35IAAJQ", "length": 17730, "nlines": 143, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: ரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை", "raw_content": "\nரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை\nதமிழ் திரை உலகில் ரஜினி வில்லனாக உலா வந்த நேரம். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ரஜினி படம் என்றால் எப்போதும் \"நோ\" தான். அவன் கெட்டவன், அவன் படத்துக்கெல்லாம் போக கூடாது என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்(இன்றைய ரஜினி ரசிகர்கள் கோபித்து கொள்ள கூடாது).\n16 வயதினிலே \"பரட்டை\" ஆகட்டும், மூன்று முடிச்சு வில்லன் காரக்டர் ஆகட்டும். நம்பியார், அசோகன் காலத்திற்கு பிறகு வில்லன் என்றால் ரஜினி, ரஜினி என்றால் வில்லன் என்றால் மிகையாகாது. அதிலும் மூன்று முடிச்சில், நீச்சல் தெரியாத கமலஹாசனை தண்ணீரில் விழும் போது அதை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாத ரஜினி, ஸ்ரீதேவி எவ்வளவோ கெஞ்சியும் தனக்கு நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு துடுப்பை போட்டபடி \"மனநிலைகள் யாருடனோ, மாயவனின் விதிவலைகள்..\" என்று முகத்தை அவ்வளவு இறுக்கமாக வைத்துக்கொண்டு பாடும் பாடல் காட்சியில் யாருக்குமே ரஜினியை பிடிக்காது. இப்போது உள்ள அனைத்து வில்லன்களும் அப்படி ஒரு கெட்ட பெயர் வாங்க ரொம்ப கஷ்ட பட வேண்டும்.\nஅதன் பிறகு ஹீரோ ரோல் பண்ண ஆரம்பித்த பிறகு, அவருடைய ஸ்டைலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக சினிமா ரசிகர்கள் அடிமை ஆக ஆரம்பித்தார்கள். குழந்தைகளிடம் ரஜினி ஸ்டைல் பாப்புலராக ஆரம்பித்தது. எதார்த்தமாக கையை காலை தூக்கினால் கூட அது என்ன ரஜினி ஸ்டைலா என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த காலக்கட்டத்திலேயே (இன்றும் அவர் முன்னணி ஹீரோ தான்) அவருடைய நூறாவது படமாக \"ராகவேந்தர்\" வெளிவந்தது. இது தமிழக தாய்மார்களிடம் பெரும் வரவேற்பையும், ரஜினியை பற்றிய மாற்று கருத்தையும் உருவாக்கியது.\nஅன்றிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினியை ரசிக்க ஆரம்பித்தார்கள். ரஜினி படமென்றால் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பார்க்கலாம் என்ற அளவில் அவரை பற்றிய கண்ணோட்டம் மாறியது. அதன்பிறகு வந்த படங்களில் காரக்டர் ரோல், கிராமத்தான், காமெடி ரோல் என பல வேடங்கள் ஏற்று தான் ஒரு முழு நடிகன் என நிரூபிக்க ஆரம்பித்தார். அவருடைய படங்கள் பெரும்பாலும் நன்றாகவே ஓடின.\n80 களின் இறுதியில் தனக்கென தமிழகத்தில் ஒரு பெரும் படையையே ரசிகர்களாக உருவாக்கி வைத்திருந்தார் ரஜினி. அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. அவருடைய போயஸ் கார்டன் இல்லத்திலேயே.\n// அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. //\nஅன்றைய கால கட்டத்திலேயே சூப்பர் ஸ்டாரை சந்தித்த தலைவர் ஆதிமனிதன் வாழ்க... வாழ்க..\nநல்ல தொகுப்பு. சூப்பர் ஸ்டார் பற்றிய வில்லன் இமேஜ் ஆனால் பைரவியிலேயே உடைய ஆரம்பித்து விட்டதென்று நினைக்கிறேன். ஸ்ரீ ராகவேந்திரர் படம் அவரை வெகு உயரத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nநூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்\nதமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெற...\nகோடை விடுமுறை கொண்டாட்டங்கள் - சாண்டியாகோ சபாரி பார்க்\nஇந்தியாவில், சென்னையில் இருக்கும் போது பக்கத்தில் உள்ள கிண்டி பார்க்கையோ வண்டலூர் மிருககாட்சி சலையையோ பார்க்க முடிவதில்லை. காரணம் பல. அதில்...\nஅமெரிக்காவின் உல்லாச நகரம் : லாஸ் வேகாஸ் போலாம் வாங்க...\nலாஸ் வேகாஸ். உல்லாச உலகின் தலை நகரம் என்றும் கூறலாம். அமெரிக்காவின் நவாடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்நகரம் முற்றிலும் பாலை வன பிரதேசம். அமெர...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...\nBlack Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்கள...\nரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை\nஅமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெ...\nஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -\nஅனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்\nஅட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.\n\"டைனமிக்\" கல்யாணமும், கட்டிப்பிடி முத்தம் கொடு கலா...\nசான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள்\nகன்னடர்களுக்காக கவலை படும் ஜெயலலிதா\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/srilanka/04/161435", "date_download": "2018-05-27T02:58:24Z", "digest": "sha1:6TGF6TEVIJ2Y3CJTGVWXPP3QY6XT5WWE", "length": 6749, "nlines": 62, "source_domain": "canadamirror.com", "title": "இதுவரை முதலிடத்தை பிடித்துள்ள கட்சி விபரம் - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nஇதுவரை முதலிடத்தை பிடித்துள்ள கட்சி விபரம்\nவௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ள கட்சியின் விபரம் வெளியாகியுள்ளது.\nஅதற்கமைய ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 27 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 9 தொகுதிகளிலும் , ஐக்கிய தேசிய கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளது.\nவௌியாகியுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண முன்னிலையில் உள்ளது.\nஇதுவரை, சுமார் 50க்கும் அதிகமான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உள்ளாட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஅனைத்து வட்டாரங்களின் வாக்களிப்பு பெறுபேறுகளும்மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அவற்றில் சில அஞ்சல் வாக்குகளின் பெறுபேறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன.\nஎனினும் சில உள்ளாட்சி சபைகளின் பெறுபேறுகளில் அஞ்சல் வாக்களிப்பின் பெறுபேறுகள் உள்ளடக்கப்படாதுள்ளன.\nஇந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை மீண்டும்மீண்டும் பரிசீலிக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தொலைநகல் மற்றும் தொலைபேசிகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களை, தரவு கட்டமைப்புகள் உட்புகுத்தும் வரையில், ஊடகங்களுக்கு பெறுபேறுகளை வழங்க முடியாத நிலை நிலவுகிறது.\nஇதனால் பெறுபேறுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்படும் வரையில் பொறுமைக் காக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/", "date_download": "2018-05-27T03:31:23Z", "digest": "sha1:26ABLXIEYHLTECUO6XJIVG3FZWML7LVH", "length": 5441, "nlines": 147, "source_domain": "onetune.in", "title": "OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News - news", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபடே குலாம் அலி கான்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள் • இசையமைப்பாளர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poonspakkangkal.blogspot.com/2006/03/blog-post_22.html", "date_download": "2018-05-27T03:05:23Z", "digest": "sha1:HQHUQX5TJBZBN42MFLPEN6HHJZUYMWNF", "length": 14082, "nlines": 140, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: சும்மா இருந்தா", "raw_content": "\n\"சும்மா இருந்தா சோத்துக்கு கஷ்டம்\nசோம்பல் பட்டா நாட்டுக்கு நஷ்டம்.\"\nஇப்படி ஒரு பாட்டை எங்க அப்பா நேரம் அடிக்கடி பாடுவாரு. (சினிமா பாட்டுங்கறாரு..தெரியலை).\nஒரு நாள் கூட நாங்க சும்மா சோம்பல்பட்டுகிட்டு உக்காந்திருந்தா அவருக்குப் பொறுக்காது. ஏதாவது வெளிவேலை கொடுத்துடுவாரு இல்ல வீட்டைக் க்ளீன் பண்ணலாம்னு ஆரம்பிச்சிடுவாரு..\nஅப்படி இருந்த நான் இந்தக் கம்பனில சேர்ந்த புதுசுல ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டேங்க.. [எந்தக் கம்பனின்னு கேக்காதீங்க.. நான் இன்னும் ரொம்ப நாள் இங்க இருக்கணும்னு நினைச்சிகிட்டிருக்கேன்.]\nமுதல் ஒரு வாரம் தலை நிமிர முடியாமல் வேலை.. நான் போகவேண்டிய கட்டாய பயிற்சிகளைக் கூட அடுத்த மாதம் பார்த்துக் கொள் என்றார் என் மானேஜர்.\nஎல்லாம் வெட்டி வேலை தான். இருந்தாலும் ரொம்ப அவசரம் என்பதால் முக்கியமாகி விட்டது. ஒரு வாரம் முழுவதும் என் மானேஜரே நாங்கள் இருக்கும் இடம் தேடி வந்து \"என்னாச்சு\" என்று நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தார்\nஅந்த ஒரு வாரம் முடிந்ததும் அதுவும் இல்லாமல் போனபோது தான் அந்த வேலையின் அருமை புரிந்தது. ரெண்டு வாரம் சும்மானாச்சுக்கும் ஆபீஸ் வந்தேன். அப்படியும் வராமல் இருக்க விடுகிறார்களா.. அது எப்படி முடியும் ஒவ்வொரு நாளும் வந்துட்டு வேலை இருக்கான்னு கேக்கணும், இல்லைன்னா நம்பளை மறந்துட்டாங்கன்னா ஒவ்வொரு நாளும் வந்துட்டு வேலை இருக்கான்னு கேக்கணும், இல்லைன்னா நம்பளை மறந்துட்டாங்கன்னா தவிரவும், இப்படி ஒழுங்கா ஆபீஸ் வந்தா, வெட்டியாக இருப்பது நான் மட்டும் இல்லை என்று கொஞ்சம் சின்ன ஆறுதல்.\nகாலை வந்தவுடன் ஒரு காபி - பின்பு\nகனிவு கொடுக்கும் நாலு forwards\nமாலை முழுதும் மீண்டும் காபி - இடையில்\nமூன்று மணிவரை மதிய உணவு\nஎன்று நாளொரு தலைப்பும் பொழுதொரு அரட்டையுமாக இருந்த என் நாட்கள் ஒரு மாதம் போல எல்லா கட்டாயப் பயிற்சிகளுக்கும் செல்வதிலேயே கழிந்தது.\nஅடுத்த மாதம் நான் ஒரு முடிவுக்கு வந்து, என் மானேஜரைப் போய்ப் பார்த்தேன்.\n\"ரஞ்சித், அந்த ப்ராஜக்ட் முடிஞ்சிடுத்தே.. க்ளயண்ட் கன்ஃபர்ம் பண்ணிட்டாரா\n\"பண்ணிட்டாங்களே, உங்களுக்கு அந்த மெயில் வரல்லயா\nநான்: (மனதுக்குள்)அனுப்பினாத்தானேய்யா வரும்; (வெளியில்) இல்லயே எனக்கு cc இருக்கா\nரஞ்சித்: ஓ, உங்க பேர் இல்ல.. சரி இப்போ அனுப்பிடறேன். (அப்புறம் இன்னும் என்ன என்பது போல் ஒரு பார்வை)\nநான்: அடுத்து ஏதாவது ப்ராஜக்ட் வருதா\nரஞ்சித்: இந்த க்ளயண்ட் கிட்டேர்ந்து தான் அடுத்த ப்ராஜக்ட் எதிர்பார்க்கறோம். இன்னும் ஒரு மாசத்துல தெரியும்.\nநான்: அப்டீன்னா, இப்போ இன்னும் நாலு வாரத்துக்கு ஏதேனும் ட்ரெயினிங் இருக்கா\nரஞ்சித்: நீங்க அந்த மேண்டேடரி ட்ரெயினிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா\nநான்: அதெல்லாம் ரெண்டு வாரம் முன்னாடியே முடிச்சாச்சு\nரஞ்: (பேனாவை உருட்டியபடி தீவிரமாக சிந்தித்தவாறே) உங்களுக்கு ஜாவா தெரியுமா\nநான்: (சரிதான் ஜாவா ஆரக்கிள் என்ற புது ப்ராஜக்ட்டில் போடப் போகிறார் போலும் என்று எண்ணிக்கொண்டே) நல்லா தெரியும், ரெண்டு ப்ராஜக்ட் பண்ணி இருக்கேன்\nரஞ்:(ரஞ்சித் முகத்தில் இப்போ ஒரு தெளிவு. இத இதத்தான் எதிர்பார்த்தேன் என்று மனதிற்குள் சொல்லிக்கிறார் போல) J2EE\nநான்: இல்லை, ஆனா கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்\nரஞ்: பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை. நீங்க இன்னும் மூணு மாசத்துல ASP, J2EE எல்லாம் படிச்சிடுங்க... மூணு மாசத்துல இந்த க்ளயண்ட்டே இன்னோரு ப்ராஜக்ட் குடுக்கறதா சொல்லிருக்கான்.\n(கவனிக்க, இப்போ மூணு மாசம் ஆய்டுச்சு...)\nநான்: இப்போ பண்ண ப்ராஜக்ட் C++ தானே\nரஞ்: புதுப் ப்ராஜக்ட்டும் C++ தானிருக்கும். நீங்க எதுக்கும் தெரிஞ்சு வச்சிகிட்டா நல்லது தானே அதோட, உங்களுக்கு லீவ் ஏதாவது வேணும்னாலும் இந்த மூணு மாசத்துல எடுத்துக்குங்க. அப்புறம் கஷ்டம் தான்.\nஇத்துடன் அவர் போன் பேச ஆரம்பித்துவிட்டார்.\nநான் திரும்பி வந்தேன். நானும் இந்த வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து ஜாவா படித்துக் கொண்டே தான் இருக்கிறேன், இதுவரை உபயோகிக்கும் யோகம் வரவில்லை, இனிமேல் J3EE வேறு படிச்சு அதை வேற மறந்து போகணுமா.. ம்ஹ்ம்..\nஇனி ஒருமுறை அவர்கிட்ட போய் வேலை கேக்கறத விட பழையபடி ஒரு நாளைக்கு நாலு காபி, ரெண்டு சிற்றுண்டி, ஒரு பேருண்டின்னு நாளை ஓட்டிடலாம்னு பாக்கறேன்..\nஎல்லாம் ஒரு நாலு மாசம் கழிச்சு பாக்கலாம். இப்ப தான் இந்த தமிழ் மணத்தைக் கண்டுபிடிச்சிட்டோமே.\n//காலை வந்தவுடன் ஒரு காபி - பின்பு\nகனிவு கொடுக்கும் நாலு forwards//\n\"இதோட ஒரு நாளைக்கு ஆறு பதிவு\"ன்னும் உங்க டைம் டேபிள்ல எழுதி வச்சுக்குங்க. மூணு மாசம் போறதே தெரியாது.\nகைப்புள்ள, நல்ல யோசனை.. இப்போ தான் பப்ளிஷ் பண்ணிட்டு பாக்கறேன், அதுக்குள்ள பின்னூட்டம் போட்டுட்டீங்க...\nஇன்னைய கோட்டால இன்னும் அஞ்சு பதிவு பாக்கி இருக்கு...ரெடி...ஸ்டெடி...கோ\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/152018", "date_download": "2018-05-27T03:40:33Z", "digest": "sha1:G3SJSPZA6CG6MATDREJ5LJGCZKI5F4XO", "length": 7642, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“மறுதேர்தல் நடத்தினால்தான் ஜசெக பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு “மறுதேர்தல் நடத்தினால்தான் ஜசெக பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்”\n“மறுதேர்தல் நடத்தினால்தான் ஜசெக பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்”\nகோம்பாக் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுக்கேற்ப ஜசெக மறு தேர்தலை நடத்த வேண்டும் – அவ்வாறு செய்யாவிட்டால் அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள், என துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.\nசங்கங்களின் 1966-ஆம் ஆண்டு சட்டங்களுக்கேற்ப, பொதுத் தேர்தல் நடத்தப்படும்போது ஒரு கட்சியின் வேட்பாளரின் வேட்புமனு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் அதிகாரத்துவ பொறுப்பாளர்களால் கையெழுத்திடப்பட வேண்டும் என்றும் ஹமிடி மேலும் கூறினார்.\nதற்போதைய நிலவரப்படி ஜசெகவின் பொறுப்பாளர்கள் சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்றும் ஹமிடி விளக்கினார்.\nகடந்த சனிக்கிழமை (8 ஜூலை 2017) கோம்பாக் அம்னோ தொகுதியின் ஆண்டுப் பேராளர் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது ஹமிடி இதனைத் தெரிவித்தார்.\nPrevious articleபிக் பாஸ்: நடிகர் கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார்\nNext articleடிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு கொண்டவர்களுக்கு பயிற்சிகள்\nஅம்னோ தலைவர் பொறுப்புகளை சாஹிட் ஹமிடி வகிப்பார்\nபினாங்கு: ஜசெக போட்டியிட்ட 7 நாடாளுமன்றம் – 19 சட்டமன்றங்களில் வெற்றி\nசாஹிட் ஹமிடியின் இறுதிக் கட்டப் பிரச்சாரம் சிகாமாட் தொகுதியில்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஹாங்காங் புறப்பட்டனர்\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\n1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்: குலசேகரன்\n“ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்\nமைபிபிபி இரண்டாகப் பிளவுபட்டது – 2 தேசியத் தலைவர்கள்\nஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)\nஅருள் கந்தா மீது கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizhkadalan.blogspot.com/2009/06/", "date_download": "2018-05-27T03:24:38Z", "digest": "sha1:VFVXQB2HBPNXDSX6WA3JX7WRANSDHKRU", "length": 8431, "nlines": 146, "source_domain": "tamizhkadalan.blogspot.com", "title": "வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: 06/01/2009 - 07/01/2009", "raw_content": "\nஎன் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த காதலை\nவார்த்தைகள் வராமல் தத்தளித்து நின்றேன் .\nஎன் நிலை கண்டு கேட்டாள் என் தோழி,\nஒன்றுமில்லை என்று சொன்னேன் அவளிடம் ,\nநிச்சயம் ஏதோ இருக்கிறது ஆனால் சொல்ல தயங்குகிறாய்,\nஏன் நான் உன் தோழி இல்லையா,\nஎன்னிடம் சொல்ல கூடாதா என்றாள் .\nஆம் நீ என் தோழிதான் ,\nஉலுக்கினால் திடுக்கிட்டு விழித்தேன் ,\nமுடியாமல் போகவே சமாளித்தேன் .\nஆம் அவளுக்கு தெரிய வேண்டாம் என் வேதனை ,\nகாதல் புத்தகத்தை படித்து விட்ட என் மனதை நொந்து கொண்டேன் ,\nநான் எப்படி கூறுவேன் தோழி ,\nநான் உன் தோழியை காதலிக்கிறேன் என்று.\nகாதலுக்கு முன், நட்பு வென்றது ..\nநீ தண்ணீர் மட்டுமே குடித்து,\nஓரு ஆள் சோறிருந்தும் உண்ணாமல்...\nவிளையாடி வந்த பிள்ளைக்கு ஊட்டி விட்டாய்.\nஅவன் பசி பொறுக்க மாட்டன் என்பதை உணர்ந்து.\nஅவனக்கு மட்டும் புத்தாடை வாங்கினாய்.\nஅறுசுவை உணவு மற்றும் பலகாரத்தை,\nஅவனுக்கு ஊட்டி அவன் விழுங்கும் அழகை,\nஉன் மனம் அவன் வளர்ச்சியிலேயே,\nவேகமாய் போகாவிட்டாலும் விவேகமாய் நகர்கிறது.\nஆறாத ரணத்தோடு உன் வாழ்வு நகர்ந்தாலும்.,\nபெற்ற பிள்ளைக்காய் மூச்சை வைத்திருக்கிறாய்.,\nஅவன் சிரிப்பில் நீ மகிழ்கிறாய்.\nஇனியும் வாழ்வாய் அவன் வாழ்வுக்காய்.\nஉன் தாய்மைக்கு தலை வணங்குகிறேன்.\nஉனது இலக்கை நீ அடைய,\nபனியில் நனைந்திருந்த அவள் முகம்,\nகார் மேகமாய் படர்ந்திருந்த அவள் கூந்தல்,\nஇமை கொட்டாமல் பார்க்க தூண்டும் அவள் கண்கள்,\nபாதையில் கடக்கும் போதும் அவள் வாசம்,\nபார்த்து பார்த்து ரசித்தேன் அவள் அழகை,\nபாராமல் சுவாசித்தேன் அவள் மீது மோதிய காற்றை.\nஅவள் நினைவில், என் மனம் முழுக்க அவள்.,\nபின் தினந்தோறும் காத்து கிடந்தேன்.,\nபார்த்தாலே பரவசம் அவள் சிரிப்பால்..\nகரை தொடும் அலையாய் நான்.,\nஅவளோடு சேர முடியாமல் அருகே வந்து போகிறேனோ...\nகரை கடக்க ஓர் நாள்...\nஆனால் அவள் துயரம் காண....\nவணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம்.\nஅதிகம் சொல்ல எதுவும் இல்லை, எழத வேண்டும் என்பதே எனது ஆசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-samantha-07-02-1840702.htm", "date_download": "2018-05-27T03:27:14Z", "digest": "sha1:PJQ7IIH6BR5LVFPITT5JDCB33RLLKUUY", "length": 5150, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.! - Nayantharasamanthaanushka - நயன்தாரா - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nஆத்தாடி இந்த நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா - வாய் பிளக்கும் ரசிகர்கள்.\nதமிழ் முன்னணி நடிகைகளாக நடித்து வருபவர்கள் நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள். இவர்கள் அனைவருமே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர்.\nதற்போது இந்த வருடத்திற்கான இவர்களது சம்பள விவரங்கள் வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது, இவர்களுக்கே இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் வியப்படைந்து வருகின்றனர், ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.\nநயன்தாரா - 3 கோடி (விஸ்வாசம் 5 கோடி)\nஅனுஷ்கா - 3 கோடி\nசமந்தா - ரூ 1.5 கோடி\nதமன்னா - ரூ 1.5 கோடி\nகீர்த்தி சுரேஷ் - ரூ 1 கோடி\nகாஜல் அகர்வால் - ரூ 1.5 கோடி முதல் 2 கோடி வரை\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2013/02/blog-post_4459.html", "date_download": "2018-05-27T03:12:22Z", "digest": "sha1:ALJGCLXUQEUFZRJJXIR3SSNY5KPATBHD", "length": 28291, "nlines": 443, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்...\nஇலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்...\n'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nசனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்\nமுடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்\nசந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலை...\nநாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா...\n\"இயற்கை அனர்த்தம்\" நூல்வெளியீடு - 24.02.2013\nஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமை...\nஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சி...\nபட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nகிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரா...\nசுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார...\nவிசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீக...\nஇந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்ட...\nமாணவர்களிடம் பணம் அறவிட கூடாது\nமட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுக...\n1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு ம...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ...\nமண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளிய...\nஇரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க ...\nமாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது\nவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இ...\nஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்...\nஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்கள...\nவடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்பட...\nகாதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி\nபாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வாழ வைக்க கிடைத்த வா...\nதீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா\nஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்க...\nவடகொரியா அணு குண்டு சோதனை\nஉணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனு...\nமுனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெ...\nசுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கற்பிணித் தாய்மாருக்க...\nபோரதீவுப்பற்று பிரதேசசபையின் புதிய அலுவலகத்துக்கான...\nமட்டக்களப்புக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கொக்குகள...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம் பீகா...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்கு அடிக்கல்...\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்ட...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியா...\nபொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயா...\nமுஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி ...\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக...\nகிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட...\nஇன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப...\nபல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை\n65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்...\nஉலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’...\nசித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்\nமட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துர...\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\n2000 குளங்கள் புனரமைப்புக்கு மேலும் 500 மில்லியன் ...\nதிருகோணமலையில் இடம்பெற உள்ள சுதந்திர தினத்தின் ஒத்...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும்\nமனித உரிமையை பேணுவதில் வளர்முக நாடுகளுக்குள் இலங்கை முன்னிலை:\nஜெனீவாவில் இவ்வாண்டு நடைபெற வுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங் கைக்கு எதிராக கொண்டு வரப்படும் மனித உரிமை தொடர் பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது இந்தியா இலங்கையை ஆதரிக்குமென்று நாம் திடமாக நம்புவதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.\nஉலகில் உள்ள பெரும்பாலான வளர்முக நாடுகளைவிட இலங்கை மனித உரிமையை பேணிப் பாதுகாப்பதில் முன்னிலையில் இருக்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்கட்டினார். இவற்றின் அடிப்படையிலேயே இந்தியா ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் பிரேரணையின் போது இலங்கையை ஆதரித்து வாக்களிக்கும் என்று நாம் திடமாக நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.\nஇந்தியாவில் கேரள மாநிலத்தில் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய அமைச்சர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்கனவே நடவடிக்கையை எடுத்திருக்கிறார் என்றும் அத்துடன் ஜனாதிபதி தேசிய அபிவிருத்தி திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nநாடெங்கிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரம் வளம்பெற்று வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் கடந்தாண்டில் இந்தியா அமெரிக்காவின் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த போதிலும் இன்று நாட்டில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதனால் நிச்சயம் இந்த தடவை இந்தியா எங்களை ஆதரிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்தியா மட்டுமல்ல சர்வதேச சமூகமும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.\nஇந்தியா எங்களுடைய நெருங்கிய அயல் நாடு மட்டுமன்றி நீண்டகால நட்பு நாடாகும். இந்தியாவை எப்போதும் இலங்கைக்கு உதவி செய்த நண்பனாகவே பார்க்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.\nஇந்தியாவும் இலங்கையும் நீண்டகாலம் பரஸ்பர வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளுக் கிடையில் 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து பல்வேறு முதலீடுகளை இரு நாடுகளிலும் செய்திருக்கின்றன. நட்பு நாடுகளான இலங்கையும் இந்தியாவும் என்றென்றும் பரஸ்பர உதவி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளன என்றும் அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்...\nஇலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்...\n'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nசனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்\nமுடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்\nசந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலை...\nநாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா...\n\"இயற்கை அனர்த்தம்\" நூல்வெளியீடு - 24.02.2013\nஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமை...\nஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சி...\nபட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nகிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரா...\nசுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார...\nவிசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீக...\nஇந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்ட...\nமாணவர்களிடம் பணம் அறவிட கூடாது\nமட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுக...\n1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு ம...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ...\nமண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளிய...\nஇரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க ...\nமாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது\nவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இ...\nஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்...\nஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்கள...\nவடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்பட...\nகாதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி\nபாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வாழ வைக்க கிடைத்த வா...\nதீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா\nஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்க...\nவடகொரியா அணு குண்டு சோதனை\nஉணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனு...\nமுனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெ...\nசுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கற்பிணித் தாய்மாருக்க...\nபோரதீவுப்பற்று பிரதேசசபையின் புதிய அலுவலகத்துக்கான...\nமட்டக்களப்புக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கொக்குகள...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம் பீகா...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்கு அடிக்கல்...\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்ட...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியா...\nபொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயா...\nமுஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி ...\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக...\nகிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட...\nஇன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப...\nபல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை\n65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்...\nஉலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’...\nசித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்\nமட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துர...\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\n2000 குளங்கள் புனரமைப்புக்கு மேலும் 500 மில்லியன் ...\nதிருகோணமலையில் இடம்பெற உள்ள சுதந்திர தினத்தின் ஒத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2018/01/blog-post_20.html", "date_download": "2018-05-27T03:27:38Z", "digest": "sha1:EUI2CXYKICB3ZYZ4Y6GQBPVCJMESN75H", "length": 19297, "nlines": 354, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: புத்தகக் காட்சியில் ஒரு அரங்கத்தை தெரிஞ்சுக்கலாமா?- கருப்புப் பிரதிகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n1977ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலும் இராசதுரைய...\nதிரைப்பட இயக்குனர் கலாநிதி தர்மசேன பத்திராஜ காலமா...\nநித்யானந்தா* உருவபொம்மை எரிப்பு போராட்டம்\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பாளர்களையே குறி...\nபுத்தகக் காட்சியில் ஒரு அரங்கத்தை தெரிஞ்சுக்கலாமா\nபுத்தகக் காட்சியில் ஒரு அரங்கத்தை தெரிஞ்சுக்கலாமா\nசென்னை புத்தகக் காட்சியில் எண் 596 புத்தக அரங்கில் இளைஞர்கள் அதிகம் வட்டமடிப்பதைக் காண முடிகிறது. அதுமட்டுமல்லாது சமகால அரசியலும் அங்கு வாசகர்களால் விவாதிக்கப்படுகிறது.\nசுமார் 14 வருடங்களாக அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சமூக நீதி தத்துவங்களையும், அவர்களது வாழ்வியல் முறைகளையும் மக்களிடையே தொடர்ந்து எடுத்துச் செல்கிறது கருப்புப் பிரதிகள் பதிப்பகம்.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் என நாட்டின் பல்வேறு முதன்மைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு மாணவர்கள் தரப்பு குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் அம்பேத்கரும், சாதிய தீண்டாமைகளுக்கு நிரந்தர எதிர்ப்புக் குரலாகிப் போன பெரியாரின் புத்தகங்களும்தான் இப்பதிப்பகத்தின் முக்கிய அடையாளங்கள்.\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கருப்புப் பிரதிகள் அரங்கத்தில் உள்ள புத்தகங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார் கருப்புப் பிரதிகள் நிறுவனர் நீலகண்டன்.\n\"இந்த வருடம் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் புதிய வெளியீடாக ‘அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும், உண்மைகளும்’ என்ற தலைப்பில் கவிஞர் ம. மதிவண்ணன் எழுத்தில் புதிய நூல் வந்துள்ளது. இந்நூல் அம்பேத்கரை இன்னும் எவ்வாறு ஆழமாக வாசிக்க வேண்டும் என்பதை கூறுகிறது.\nஇதனையடுத்து, இலக்கிய சமூகங்களில் திருநங்கைகள் எழுதும் புத்தகங்கள் சமீப காலமாக வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் லிவிங் ஸ்மைல் வித்யா 'மரணம் மட்டுமா மரணம்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு வந்துள்ளது.\n'சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்' – பெரியார் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு அதே வேளையில் தனித்துவமான பெண் அரசியலை பேசியவர்களின் கட்டுரைகள், பேச்சுகள் ஆகியவை முனைவர் மு. வளர்மதியால் தொகுக்கப்பட்டு இரண்டாம் தொகுப்பாக வெளிவந்துள்ளது.\nகுமரன் தாஸ் எழுதிய 'சேது கால்வாய் திட்டமும் ராமேஸ்வரம் தீவு மக்களும்' நூல் முக்கியமானது இந்த நூலில் மீனவ சமூகம் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை பற்றிய முக்கிய நூல் வாசகர்களுக்காக உள்ளது. எழுத்தாளர் தேவாவின் மொழிபெயர்ப்பு நூலான 'குழந்தைப் போராளி' ஆகியவை உள்ளன.\nபெண் படைப்பாளிகளில் ஜெயராணியின் 'சாதியற்றவளின் குரல்', தமயந்தியின் 'ஒரு வண்ணத்துப்பூச்சியும் சிறு மார்புகளும்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் அதிகளவில் வாசகர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.\nஇத்துடன் கருப்புப் பிரதிகளின் நிரந்த அடையாளமாக ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் ஷோபா சக்தி எழுதிய 'பாக்ஸ் கதைகள்', 'கண்டி வீரன்' ஆகியவை அரங்கில் இடப்பெற்றுள்ளன.\n‘பெரியார் – அறம் அரசியல் அவதூறுகள்’ சாதி எதிர்ப்பு அரசியலையும், அவை சார்ந்த படைப்புகளையும் கருப்புப் பிரதிகள் தங்கள் அடையாளமாக வெளியிட்டு வருகிறது. வெளியிட விரும்புகிறது\" என்றார் நீலகண்டன்.\nஎந்தப் புத்தகம் இந்த முறை வாசகர்களால் அதிகம் வாங்கப்பட்டுள்ளது...\n“வாசகர்களால் திரும்பத் திரும்ப அம்பேத்கர் சார்ந்த நூல்களும், பெரியார் சார்ந்த நூல்களும், சாதி ஒழிப்பு நூல்களும் எங்கள் கடையில் அதிகம் வாங்கப்படுகின்றன. புதிதாக வந்த எழுத்தாளர்களை விடவும் அம்பேத்கரின் ‘நான் இந்துவாக சாகமாட்டேன்’, ‘சாதி ஒழிப்பு’ ஆகிய நூல்கள் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக விற்பனையாகி வருகின்றன.\nஇளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் புத்தகத் தேர்வுகள் இந்த புத்தகக் கண்காட்சியில் எப்படி உள்ளது\nநல்ல மாற்றம் காணப்படுகிறது. குறிப்பாக இவர்கள் பெரியார், அம்பேத்கர் நூல்களை தேடிப் பிடித்து வாங்குகிறார்கள். சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆணவக் கொலைகள், காதல் கலப்புத் திருமணத்தால் எழக்கூடிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரியாரையும், அம்பேத்கரை நோக்கி இளைஞர்கள் நகர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுக்கிறது. இந்த மாற்றம் எங்களுக்கு நம்பிக்கையும் ஆச்சரியத்தையும் தந்துள்ளது\"\n\"பெண் வாசகர்கள் எண்ணிக்கை புத்தகக் கண்காட்சியில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது. தற்போது இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட ஒரு இல்லத்தரசியிடம் நீங்கள் என்ன புத்தகம் வாங்க விரும்புகீறிர்கள் என்று கேட்டதுபோது, அதற்கு அவர் 'நான் இந்து வாக சாகமாட்டேன்' என்ற புத்தகத்தை குறிப்பிட்டார். இம்மாதிரியான பதிலை நீங்கள் ஒரு வருடத்துக்கு முன் ப்ரவலாகக் காண முடியாது.\nமுன்பெல்லாம் குடும்பத் தலைவிகள் சமையல், ஜாதகம், கோலம் புத்தகங்கள் வாங்குவார்கள். தற்போது இது முற்றிலும் மாறி இருக்கிறது. ரமணி சந்திரனை தேடுவர்கள் தற்போது அம்பேத்கரை தேடுகிறார்கள். அவர்கள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்\" என்றார் நீலகண்டன்.\nநன்றி * த இந்து\n1977ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலும் இராசதுரைய...\nதிரைப்பட இயக்குனர் கலாநிதி தர்மசேன பத்திராஜ காலமா...\nநித்யானந்தா* உருவபொம்மை எரிப்பு போராட்டம்\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பாளர்களையே குறி...\nபுத்தகக் காட்சியில் ஒரு அரங்கத்தை தெரிஞ்சுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-05-27T03:39:39Z", "digest": "sha1:D6DFUJCJNX3SNFMW7HN56FLQU6WUTYTM", "length": 6446, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈந்தணைவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஐந்து ஈந்தணைவிகளுடன் கூடிய கோபால்ட்டுத் தொகுதி [HCo(CO)4]\nஒருங்கிணைவு வேதியியலில், ஈந்தணைவி அல்லது ஈனி (ligand) என்பது, ஒரு ஒருங்கிணை தொகுதியில், நடுவில் உள்ள உலோக அணுவொன்றுடன் இணைந்திருக்கும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி ஆகும். உலோகத்துக்கும் ஈந்தணைவிக்கும் இடையில் உள்ள பிணைப்பின்போது பொதுவாக ஈந்தணைவியின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலத்திரன்கள் உலோக அணுவுக்கு வழங்கப்பட்டிருக்கும். உலோக - ஈந்தணைவிப் பிணைப்பு சமவலுப் பிணைப்பாக அல்லது அயனிப் பிணைப்பாக இருக்கக்கூடும். மேலும், உலோக-ஈந்தணைவிப் பிணைப்பு வரிசை ஒன்றிலிருந்து மூன்று வரை இருக்கலாம். ஈந்தணைவிகள் பெரும்பாலும் லூயிசுக் காரங்களாக இருக்கின்றன. மிகவும் அரிதாக இவை லூயிசு அமிலமாகவும் இருக்கக்கூடும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2015, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2013/10/blog-post_14.html", "date_download": "2018-05-27T03:10:00Z", "digest": "sha1:FLJJCPVQPZJP6IFOBRO2KCRWBXEJ7EV3", "length": 14228, "nlines": 155, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "டிஇடி தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா? முழு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nடிஇடி தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா முழு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் (தாள் 2), தவறாக இடம்பெற்றிருந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அக்கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார்.\nஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஜூலை 12 இல் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தாள் 2 தேர்வை எழுதிய விஜயலெட்சுமி 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத் தேர்வில் அவர் எழுதிய பி வரிசை கேள்வித் தாளில், 115 ஆவது கேள்வி தவறாக இடம்பெற்றிருப்பதால், அதற்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு: இந்த கேள்வித் தாளில் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள 115 ஆவது கேள்வியில் உள்ளீடற்ற கோளம் (ஹாலோ ஸ்பியர்) என்றும், அதே கேள்வி தமிழில் உள்ளீடற்ற உருளை (ஹாலோ சிலிண்டர்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோளம் - உருளை இரண்டும் வெவ்வேறானது.\nஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள கேள்வியைப் பொருத்தவரை, அதற்குப் பதில் தேர்வு செய்வதில் எவ்விதப் பிரச்னையும் கிடையாது. ஆனால், தமிழில் இடம்பெற்ற கேள்வியில், உள்ளீடற்ற உருளையின் பரப்பு கேட்கப்பட்டிருக்கிறது. உருளையின் உயர அளவு கொடுக்காத நிலையில், பரப்பளவைக் கணக்கிட முடியாது. ஆகவே, மனுதாரரின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவர், மேற்படி கேள்விக்கு விடை அளித்திருக்கும் நிலையில், அவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, அவர் பெற்றுள்ள மதிப்பெண் 90 எனக் கணக்கிடப்பட வேண்டும்.\nஅதேநேரம், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழைப் பெற தகுதியானவரா என்பதை கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கலாம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/congratulations-thenmozhi-thenuraj-rulers-of-penmai.66787/", "date_download": "2018-05-27T03:38:54Z", "digest": "sha1:TL52LRA7I42QMURFOGECQM4OZ2VDMSXK", "length": 10869, "nlines": 409, "source_domain": "www.penmai.com", "title": "Congratulations THENMOZHI (thenuraj) - Ruler's of Penmai | Penmai Community Forum", "raw_content": "\nவாழ்த்துக்கள் புதிய அட்லாண்டா 'மகாராணி' தேன்மொழி என்கிற தேனுராஜ்.\nகுறிப்பு: இன்று மதியம் சைவ மற்றும் அசைவ உணவு விருந்து ஏற்பாடு செய்து உள்ளது. இத்தகவலை நமது அட்லாண்டா மகாராணி சொன்னார். ஆகையால், தாங்கள், உங்க குடும்பற்றினர்களும் அழைத்து வாருங்கள்.\nஅனைவரும் வாரீர்.. வாரீர்... வாரீர்....\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nவாழ்த்துக்கள் புதிய அட்லாண்டா 'மகாராணி' தேன்மொழி என்கிற தேனுராஜ்.\nகுறிப்பு: இன்று மதியம் சைவ மற்றும் அசைவ உணவு விருந்து ஏற்பாடு செய்து உள்ளது. இத்தகவலை நமது அட்லாண்டா மகாராணி சொன்னார். ஆகையால், தாங்கள், உங்க குடும்பற்றினர்களும் அழைத்து வாருங்கள்.\nஅனைவரும் வாரீர்.. வாரீர்... வாரீர்....\nரொம்ப சந்தோஷமா இருக்கு.... உங்க எல்லாருக்கும்தான் நான் நன்றி சொல்லணும்.....\nஎல்லாம் சரி .... விருந்து .....\nஎங்க வீட்டுல சைவ விருந்துதான் கிடைக்கும் அண்ணா.... அசைவம் நோ.... ஓகே னா எல்லாரும் வாங்க.... எங்கள் கதவுகள் திறந்து இருக்கும் நம் பெண்மை தோழிகளுக்கும்... அண்ணாக்களுக்கும்.... அக்காக்களுக்கும்.... தங்கைகளுக்கும்....\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/ear-piercing-precautions-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95.84246/", "date_download": "2018-05-27T03:40:20Z", "digest": "sha1:7WJ6PA3BQOIMVWXKSS7D7BJJ7LLMIV23", "length": 13546, "nlines": 398, "source_domain": "www.penmai.com", "title": "Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது க&# | Penmai Community Forum", "raw_content": "\nEar Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது க&#\nநமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்\n* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்\n* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.\n* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.\n* காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.\n* அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.\n* காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.\n* சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.\n* உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.\n* குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.\n* குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.\n* காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி\nRe: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&\nRe: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது Ĩ\nRe: Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது &\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&\nRe: குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனி&\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: Ear Piercing Precautions - குழந்தைகளுக்கு காது குத்தும் போது Ĩ\n - காதுகுத்துதல் என்ற சொல்லுக்கு ஏமாற்ற Spiritual Queries 2 Jul 25, 2014\n - காதுகுத்துதல் என்ற சொல்லுக்கு ஏமாற்ற\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2013/06/blog-post_19.html", "date_download": "2018-05-27T03:16:14Z", "digest": "sha1:4X7OHA5MSGWGRN2Y4Z5FSNLQCBEG5EZL", "length": 46996, "nlines": 602, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: பாமெண்ணையால் வந்த வினை !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nசெய்திகளில் படித்திருப்பீர்கள், கடந்த மூன்று நாட்களாக கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் புகைமூட்டம், ஜூன் மாதம் துவங்கி அக்டொபர் வரையிலும் இந்த பகுதிகளில் புகைமூட்டம் இருக்குமாம், இந்தோனேசியா சுமத்திரா தீவில் காட்டுத்தீ 'ஏற்படும்' அதனால் தான் புகை என்றே நான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறேன், வெயில் காலத்தில் காட்டில் தீ பற்றுவது இயல்பு, அது காட்டுத்தீயாக பரவி புகை மூட்டம் கிளம்பும் போல என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன்.\nசிங்கப்பூர் துவங்கி மலேசியா கோலாலம்பூர் நோக்கிய பேருந்து பயணத்தில் வழியெங்கும் பாம் எண்ணை மரங்களைக் காணலாம், ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் காட்டுப்பகுதிகளை அழித்து தான் அவை உருவாக்கியுள்ளனர் என்பது அவற்றைப் பார்க்கும் பொழுதே விளங்கிக் கொள்ள முடியும். தென்னை மரங்களைவிட பாம் எண்ணை மரங்கள் மகசூல் மிகுதியாகக் கொடுத்து முதலாளிகளுக்கு மிகுதியான பணம் ஈட்டித்தருவதால் மலேசியாவில் கிட்டதட்ட பாதி நாட்டு பரப்பளவில் பாமாயில் விவாசயம் தான்.\nகடந்த மூன்று நாளில் இன்று உச்சமாக சுற்றுச் சூழல் காற்று எண் 290 (PSI index) தொட்டு இருக்கிறது, முன்பு 1997ல் 224 ஆக இருந்ததே உயரிய அளவாம், அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. காலையில் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது 120....140... பகல் 2 மணிக்கு 160 பின்னர் 4 மணிக்கு 172 ஐ நெருங்கியது. பிறகு குறையவே அலுவலகம் முடிந்து மாலை 8 மணிக்கு 190ஐ தொட்டது, 100க் மேல் சென்றாலே புகை வாடையையும் உணர முடியும், 190 என்று தெரிந்தவர்கள் முகத்தில் முகமுடியுடன் சென்றார்கள், இரவு 9 மணிக்கு PSI 290 ஐ தொட்டு இருக்கிறது, 300க்கும் மேல் சென்றால் எதிரே வருபவர்கள் தெரியாது, போக்குவரத்திற்கு வாய்ப்பில்லை, கப்பல் விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்படும், அல்லது பாதிவழியிலேயே நிறுத்தப்படும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்படுவார்கள்.\nவழக்கமாக இரவு 11 மணி வரை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் ஆள் அரவே இல்லை, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர், சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன, அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடம் தாண்டி புகைப்பிடித்தால் தண்டம் கட்ட வேண்டிய சிங்கப்பூரில் எல்லா இடத்திலுமே புகை. நிலமை இன்னும் சில நாட்கள் நீடித்தால் .....அவசரகால அறிவிப்புகள் கூட வெளிவந்தால் வியப்பில்லை, எங்கள் வீட்டில் முடிந்த அளவு பகல் பொழுதில் கூட சன்னல் கதவுகள் அனைத்தையும் சாத்திதான் வைத்திருக்கிறோம், இருந்தும் வீட்டினுள்ளும் புகை நெடியை உணர முடிகிறது.\nவரலாறு காணாத புகை மூட்டம் என்று தலைப்பிட்டு தொலைகாட்சியிலும், இணைய செய்திகளிலும் தகவல்கள் வெளி இடுகிறார்கள். சுற்றுலா வந்தவர்களுக்கு மோசமான அனுபவங்கள், நிலமை சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் இவை வெறும் காட்டுத் தீயால் ஏற்பட்டது தானே என்று என்னைப் போல் நினைத்தவர்களுக்கு. கிடைக்கும் தகவல்கள் மனித பேராசைகளே இதற்கு காரணம் என்று தெரியவர அதிர்ச்சி தான். புகையை கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள் என்று சிங்கப்பூர் சுற்றுச் சூழல் அமைச்சு இந்தோனேசியாவை கேட்க, அவர்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அதற்கு முற்றிலும் உதவ எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர் - மலேசிய முதலாளிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பதில் கூறியுள்ளனர். அதாவது\nசமையல் எண்ணை நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணை மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசியா காடுகளிலும் கை வைத்துள்ளனர், இவற்றில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் சிங்கப்பூர் மலேசியாவை சேர்ந்த முதலாளிகளாம், காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நடைபெறும் செயலாம். இந்த ஆண்டு கூடுதலான பகுதிகளை அழித்திருக்க வேண்டும், அதன் எதிர்விணையைத் தான் தற்பொழுது நாங்கள் அனுபவிக்கின்றோம்.\nஇந்தோனேசியா ஏழை நாடு இத்தனை ஆண்டுகளுக்கு பாமாயில் மரங்களுக்கு குத்தகைக்கு இடம் வேண்டும் என்றால் காடுகளை கைகாட்டிவிட்டு கையெழுத்து போட்டு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள், அவர்களையும் குறை சொல்ல முடியாது. போட்டித் தன்மை நிறைந்த உலகத்தில் எதையாவது அழித்தால் வருமானம் வந்தால் சரி என்று நினைக்கும் முதலாளிகளை குறைச் சொல்ல முடியாமல் அரசுளும் கையை பிசைகின்றன, ஏனென்றால் எல்லாம் அரசாங்கம் அனுமதித்தப்படியே நடக்கின்றன, விளைவு மக்களுக்கு தான் எல்லா வகையிலும் இழப்பு.\nபாமாயில் வாங்குவதை நிறுத்தினால் ஒருவேளை காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்பட்டுவதை தடுக்கலாம், ஆனால் அவையெல்லாம் கடல்கடந்து வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து பாமாயிலுக்காக முதலிடு செய்யப்படுவதை தடுத்தால் எரியும் காடுகளை தடுக்கலாம். பெரிய அளவு உயிர் சேதம் நடந்தால் ஒருவேளை அவர்கள் அது பற்றி யோசிக்கக் கூடும். அதுவரை இவை வழக்கம் போல் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகிவிடும்.\nஇதை எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால்\nபொழைச்சு கிடந்தால் பின்னர் பார்ப்போம். (குறைந்துவருவதாகவுக் குறிப்பிட்டுள்ளனர்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/19/2013 11:37:00 பிற்பகல் தொகுப்பு : இந்தோனேசியா, சிங்கப்பூர், நிகழ்வுகள், மலேசியா\nமிக மோசமான நிலை தான். இப்படியான நிலையை கடைசியாக பார்த்தது 1997. இப்போது மீண்டும். அச்சமயத்தில் ஆரோக்கிய பாதிப்பினால் சிலர் இறந்தும் போனார்கள்.\nடின்னர் சாப்பிட மாலேசியா வரும் சிங்கை வாகனங்கள் இன்று குறைவு. வேலைக்கு சுலபமாக போனது ;-)\nவியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 12:27:00 GMT+8\nஒவ்வொரு வருடமும் சிங்கை மற்றும் இந்தோனேஷியா அரசாங்கமும் இதை கட்டுப்படுத்த பல தகவல்களை பரிமாறிக்கொண்டாலும் சரியான பலன் இல்லாதது போல் தோன்றுகிறது.நான் அங்கு இருந்த போது சேட்டலைட் படங்களை எடுத்து இந்தோனேஷியாவுக்கு கொடுத்து உதவியது சிங்கை.சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்ககூடியது.\nவியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 12:45:00 GMT+8\n/காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது /\nவியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 1:05:00 GMT+8\nஅடடா...... நானும் எதோ காட்டுத் தீ என்றுதான் நினைத்தேன். பாம் ஆயில் வியாபாரம் என்று தெரிவித்தமைக்கு நன்றி.\nகுழந்தைகள் பத்திரம். நீங்களும் கவனமாக இருங்கள்.\nகுமார் சொல்வது போல ஆஸ்துமாவில் அவதிப்படும் மக்களுக்கு கூடுதல் கஷ்டம்தான்:(\nவியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 5:31:00 GMT+8\nவியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 7:18:00 GMT+8\nநவீன யுகத்தில் முதலாளிகள் நோக்கம் உருவாக்க எதை வேண்டுமொன்றாலும் உருக்குலைக்கலாம்.\nவியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 8:51:00 GMT+8\nவியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 4:19:00 GMT+8\nஇன்றைய பகல் காற்று தூய்மைக்கேடு படு கேடு, PSI 371 புள்ளிகள் வரை சென்றது\nவியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 11:02:00 GMT+8\n//காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது//\nஉண்மை இப்படியிருக்க இந்தோனேசிய மக்கள் நல அமைச்சர் சிங்கப்பூர் சின்னபிள்ளை மாதிரி நடக்குது, இது காட்டு தீ என்று கதை சொல்கிறார்.\nவெள்ளி, 21 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 1:00:00 GMT+8\nகாடுகளை மனித சுயநலத்திற்காக அழிப்பது எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லை. இந்தியாவில்தான் இயற்கை வளங்கள் கேட்பாரற்று அழிக்கப் படுகின்றன என்றால் வெளிநாடுகளிலும் இதே நிலைதானா\nஞாயிறு, 23 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 12:38:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nமோடி ஆண்டால் என்ன கேடி ஆண்டால் என்ன \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஅனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA - *A1* இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால் அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2016/11/", "date_download": "2018-05-27T03:26:42Z", "digest": "sha1:FADDTJLZRF3QHLCBKJSELU5X3HTTAHZU", "length": 31287, "nlines": 345, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: November 2016", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\n2016நவம்பர் 19 ந் தேதி இன்று சத்தியமங்கலம் புத்தகத்திருவிழாவிற்கான வாகன ஒலிபெருக்கி பிரச்சாரத்தில் இசுலாமிய சகோதரருடன் நான்...\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/19/2016 08:37:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/13/2016 09:02:00 முற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம். நம்ம சத்தியமங்கலத்தில் 2016 வருகிற நவம்பர் 21ந் தேதி முதல் 27 ந் தேதி வரை புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.அது சமயம் நிறைவு நாளான 27 ந் தேதி அன்று சாலைப்பயணத்தில் தொல்லையாஇல்லையா என்ற தலைப்பில் பொதுமக்களுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் சுவையான விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது..அனைவரும் வருக.விவாதத்தில் பங்கு பெறுக.\nபரமேஸ்வரன் தாளவாடி கிளை 9585600733\nகுணசேகரன் சத்தி கிளை 9976617530\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/12/2016 02:29:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்\nகற்றனைத்தூறும் அறிவு - குறள்.\n''நான் சார்ந்துள்ள அரசியலையோ,மதத்தையோ,இனத்தையோ பயன்படுத்தமாட்டேன்''.விதைகள் வாசகர் வட்டத்தில் இணைந்து எந்த பலனும் எதிர்பாராமல் இயன்றளவு பணிசெய்கிறேன்.இதை மனதார சம்மதிக்கிறேன்''-உறுதிமொழி\nசத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்\nநாள்; 2016நவம்பர்8 ந் தேதி மாலை5.00மணி.\nஇடம்; பி.வி.லாட்ஜ் கூட்ட அரங்கு.\nவணக்கம்.இன்று மாலை 5.00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பி.வி.லாட்ஜ் கூட்ட அரங்கில் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக நடத்தும் புத்தகக்காட்சி திருவிழா பற்றிய மறு பரிசீலனைக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் கூடுதலாக சமூக ஆர்வலர்கள் இருபது நபர்கள் பங்கேற்றனர்.\nஇன்றைய கூட்டத்தின் சிறப்பு என்னவென்றால்,\nசமூக வளர்ச்சிக்காக பயன்படும் சத்தி புத்தகத் திருவிழாவில்\n''நான் சார்ந்துள்ள அரசியலையோ,மதத்தையோ,இனத்தையோ பயன்படுத்தமாட்டேன்''.விதைகள் வாசகர் வட்டத்தில் இணைந்து எந்த பலனும் எதிர்பாராமல் இயன்றளவு பணிசெய்கிறேன்.இதை மனதார சம்மதிக்கிறேன்''\nஎன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இத்துடன் அனுசரித்தும் விட்டுக்கொடுத்தும் ஒற்றுமை காப்பதாக ஏற்றுக்கொண்டதும் வரவு,செலவு உட்பட செயல்பாட்டில் குறைகளை சுட்டிக்காட்டவும்,தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளவும் வேண்டும் என்ற ஒருமித்த கருத்து ஏற்பும்.சமூக வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/08/2016 03:49:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்.\nவாங்க, சாதி,மத,இன,அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஏற்ற தாழ்வின்றி சமமாகப் பணியாற்றுவோம்.\nவருகிற 2016நவம்பர்21ந் தேதி முதல் 27ந் தேதி வரை நம்ம சத்தியமங்கலம் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடத்த உள்ள புத்தகக் கண்காட்சிக்கான ஆலோசனை மறுபரிசீலனைக் கூட்டம் நாளை (அதாவது 2016 நவம்பர்8 ந் தேதி)மாலை 5.00மணிக்கு சத்தி பேருந்து நிலையம் அருகிலுள்ள (P.V.LODGE) பி.வி. லாட்ஜ் கூட்ட அரங்கில் திட்டமிட்டபடி குறித்த நேரத்திற்கு துவங்க உள்ளதால் முந்தைய கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதவர்களும் தகவல் கிடைக்கப்பெறாமல் இதனை தகவலாகக் கிடைக்க பெற்றவர்களும் இதனையே அழைப்பிதழாக ஏற்று சமூகத்தின் மீது அக்கறையுள்ள மற்றவர்களையும் அழைத்துவந்து தவறாமல் பங்கேற்று தங்களது ஆலோசனைகளைக் கூறி சமூக வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதலைவர் - திருமிகு.யாழினி ஆறுமுகம் - 9003790297\nசெயலாளர் - திருமிகு.C.பரமேஸ்வரன்,- 9585600733\nபொருளாளர்- திருமிகு.வினோத் ராஜேந்திரன்,- 9626614491\nஆலோசகர்; அரிமா K. லோகநாதன் - 9443021196\nகல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்,\n(ஈ) திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/06/2016 07:44:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்\nகற்றனைத்தூறும் அறிவு - குறள்.\n2016 நவம்பர் 4-ந் தேதி இன்று மாலை 5.00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள யாழினி புத்தக நிலைய வளாகத்தில் சத்தியில் புத்தகக்கண்காட்சி நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் திருமிகு.யாழினி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.\nசத்தியமங்கலத்தின் முதுபெரும் எழுத்தாளர் திருமிகு கால சுப்பிரமணியம் அவர்கள் உட்பட விதைகள் வாசகர் வட்ட உறுப்பினர்கள்,மற்றும் திருமிகு.ரமேஷ்குமார் ஆசிரியர் ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிட மேல்நிலைப்பள்ளி,திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,,திருமிகு.முத்துராஜ் அரசுப்பள்ளி ஆசிரியர்,திருமிகு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,திருமிகு.ஸ்டாலின் சிவக்குமார்,ரீடு இயக்குநர் திருமிகு.கருப்புசாமி,ஈரோடு பாரதி புத்தகாலயா திருமிகு.இளங்கோ, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவரும் மக்கள் சிந்தனைப்பேரவை உறுப்பினருமான திருமிகு.ராபின்ராஜாஜி, சத்திகிளைஅரசுப் பேருந்து நடத்துநரும் சமூக ஆர்வலருமான திருமிகு.குணசேகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை பதிவு செய்தனர்.\nஅப்போது கீழ்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n(1)சத்தியில் வருகிற நவம்பர் 21ந் தேதி மாலை தொடக்கவிழா நடத்துவது,\n(2)மாவட்ட கல்வி அலுவலர்,சத்தி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்,மற்றும் ஸ்டாலின் குணசேகரன் ஆகிய சான்றோர்களால் புத்தகக்கண்காட்சியினை துவக்கிவைப்பது.\n(3)புத்தகக்கண்காட்சி காலை10.30மணி முதல் இரவு 8.30மணிவரை நடத்துவது,\n(4)கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக படிப்பாளர் மேடை துவக்குவது,\n(5)ஈரோடு நிமிர்வு கலையங்கத்தின் பறை இசை நடத்துவது,(மறைந்து வரும் கிராமியக்கலைகளை வெளிக்கொணர்வது)\n(6)சத்தியமங்கலம் வட்டார எழுத்தாளர்களை அடையாளப்படுத்தி பாராட்டு வழங்குவது,\n(7)சத்தியமங்கலம் முதுபெரும் எழுத்தாளர் திருமிகு காலசுப்பிரமணியம் அவர்களின் புத்தகங்கள் தொகுத்து வெளியிடுவது,\n(8)பள்ளி மாணவ,மாணவியருக்கு அறிவுசார் போட்டிகள் நடத்துவது,\nநிகழ்ச்சி திருமிகு முத்து அவர்களால் நடத்துவது,\n(10)நாளிதழ்கள்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,துண்டறிக்கைகள்,சுவரொட்டிகள்,விளம்பரத் தட்டிகள்,வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் வாயிலாக விளம்பரங்கள் செய்வது,\n(11)சமூக விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடுவது,\n(13) சிறந்த பேச்சாளர்களை அழைத்து மக்களுக்கு விழிப்புரை நடத்துவது,\n(14)சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது,\n(15) ஆலோசனைக்கூட்டத்தில் சூழ்நிலை காரணமாக கலந்துகொள்ள இயலாதவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாத 8ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு இன்று நடைபெற்ற இடம் பற்றாக்குறை காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள P.V.லாட்ஜில் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துவது,\nசத்தியமங்கலம் புத்தகக்கண்காட்சி 2016 நிகழ்ச்சி\nஆலோசகர்; அரிமா K. லோகநாதன் - 9443021196\nகல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்,\n(ஈ) திருமிகு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,\nஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இன்று கலந்துகொள்ள இயலாத சமூக ஆர்வலர்கள் இதனையே அழைப்பாக ஏற்று வருகிற 8 ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பேருந்து நிலையம் அருகிலுள்ள P.V.லாட்ஜ் கூட்ட அரங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் விவரம்.\n(1) திருமிகு.யாழினி ஆறுமுகம் -9003790297\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 11/04/2016 04:24:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayvee.blogspot.in/2009/09/", "date_download": "2018-05-27T03:24:49Z", "digest": "sha1:KZVO23OMDD75VEP6S5T4JJFNLPNQ6TIC", "length": 14616, "nlines": 259, "source_domain": "mayvee.blogspot.in", "title": "தினசரி வாழ்க்கை: September 2009", "raw_content": "\nசீனா நாட்டு தொழில் நுட்பம்\nகொள்ள முடியாத நிலையில் நான்\nசத்தத்தை நிறுத்த வலது கையின்\nஜோடி இடது கை கொண்டு\nமேல் பட்டனை அறைய போன்னேன்\nஐந்நூறு ரூபாய் அதன் விலை தெரிந்து\nஊமை ஆனது எனது கைகள்\nஆடுகிறதே என்மேல்: கழிவறை தனிமை\nமறக்க முடியவில்லை பழைய நினைவுகளை\nகாணாத கனவுகளுக்கான தேடல்களுடன் மனிதர்கள்\nபொருள்கள் வாங்க உதவும் பொருளாதார தேடல்\nதந்து விடுமோ என் மகிழ்ச்சிக்கான பொருளை.....\nடிஸ்கி - மூன்று கவிதைகளையும் இன்னும் நான் முழுமையாய் எழுதி முடிக்கவில்லை .......\nA to Z அ முதல் ஃ\n1. A – Avatar (Blogger) Name / Original Name : ம்ம்ம்ம் .... ஒபாமா. இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது ; சொல்லிபுட்டேன்\n : அப்பாஸ், யுவா ; 25 வருட நட்பு\n : Lisa Loeb தானே .... ரொம்ப பிடிக்கும்\n கட்டாயமாய் என் அறிவு இல்லை\n திருச்சி ....... ஒரு காலத்தில் சோழர் தலைநகரம்\n ஓசியில் கிடைத்தால் எது வேண்டுமானாலும் ஓகே\n - எந்த காலமாய் இருந்தாலும் அனுபவிக்க மனசு வேண்டும்\n ; எனக்கு கவிதை எழுத தெரியாதுங்க (இன்னும் நிறைய இருக்கு)\n அப்படி ஒன்றும் சிறப்பாய் இல்லை....... எதை போட்டாலும் சாப்பிட்டு விடுவேன்\n (சில நேரங்களில் உண்மை கசக்கும்)\n1. அன்புக்குரியவர்கள் : எல்லோருமேதான்\n2. ஆசைக்குரியவர் : அம்மா, அப்பா\n3. இலவசமாய் கிடைப்பது : வாழ்க்கை\n4. ஈதலில் சிறந்தது : நம்மால் முடிகிற எல்லாமே\n5. உலகத்தில் பயப்படுவது : மனிதர்களை கண்டு தான்\n6. ஊமை கண்ட கனவு : அது எனக்கு எப்படி தெரியும் ( நான் ஊமை இல்லையே)\n7. எப்போதும் உடனிருப்பது : தைரியம்\n8. ஏன் இந்த பதிவு : சமுதாய நலனுக்காக\n9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : கட்டாயம் ஐஸ்வர்யா இல்லை\n10.ஒரு ரகசியம் : ஒன்றுக்கு பிறகு இரண்டு வருகிறது\n11.ஓசையில் பிடித்தது : உன்னால் முடியும்\n12.ஔவை மொழி ஒன்று : ஊக்கமது கைவிடேல்.\n(என்னை யாரும் கூப்பிடவில்லை ..... அதனால் சுயம்புவாய் எழுதுகிறேன் இந்த பதிவை)\n(கவிதையை எழுதியவர் ஹேமா. பல வேலைகளுக்கிடைய எனக்காக நான் கேட்டதற்காக எழுதி தந்துள்ளார்.)\nகடவுளாகிய சாத்தான் - 2\nஅவள் அழகு ஐந்து அடி துரத்தில்\nகடவுள் மனதில் இச்சைகளின் சீம்பால்\nநான் கடவுள் உருவத்தில் சாத்தானின்\nஉணர்வுகள் கொண்ட கலவை நான்\nபிறழ்வு நினைவுகளின் பிதறல் ......\nநாங்கள் இருவர் தனி அறையில்\nஅவர்கள் என் கடவுளும் என்\nஎன் சாத்தானை அடக்கி கொண்டு\nஓர் உணர்வு தீவிரவாதம் நடக்கிறது\nகடவுளின் காதலுக்கும் சாத்தானின் காமத்திற்கும்\nகாதலின் முடிவு காமம் கடவுளுக்கு\nசாத்தானின் காமம் காதலின் சாட்சி\nஅவளின் வெட்கம் ; சிரிப்பு\nபுதிது எனக்கு இந்த மாதிரியான களம்\nகடவுளாய் இருப்பதா இல்லை சத்தனாய் இருப்பதா \nகேள்விகள் என் மனதில் ....\nகாலத்தின் களம் கடந்து போனது\nவெளி உலகில் கடவுள் வேடமிட்ட சாத்தான்\nமுகம் காட்ட காத்து இருப்பான்\nசரித்திரத்தில் மிகவும் முக்கியமான நாள் இது; நகைச்சுவை பதிவுகளால் நம்மை சிரிக்க வைத்த தாரணி ப்ரியாவின் பிறந்த நாள் இன்று .\nஇவருடைய இலக்கிய பணி மேம்மேலும் வளர வாழ்த்துக்கள்(ஹி ஹி ஹி ஹி)\nவாழ்க்கையில் எல்லா வித சந்தோசத்தையும் இவர் பெற்று வாழ்த்திட என் வாழ்த்துக்கள் .......\nLabels: பிறந்த நாள், வாழ்த்துக்கள்\nசினிமா போஸ்டர் நாயகிகளை பார்க்கும்\nபசு தோல் போர்த்திய புலியாய்\nநிலை அறிந்த சுழ்நிலை தெரிந்த\nமுகம் காட்ட காத்து இருப்பான்\nஎன்ன கொடுமை சார் இது........\nA to Z அ முதல் ஃ\nகடவுளாகிய சாத்தான் - 2\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/india/03/127259?ref=category", "date_download": "2018-05-27T03:17:32Z", "digest": "sha1:3VDXSVFKYCNGK35KELRW23TB2NE3PHEE", "length": 8156, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பெற்றோர் துன்புறுத்தலால் தற்கொலை செய்த காதல் ஜோடி - கணவனுக்கு ஆயுள் தண்டனை - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெற்றோர் துன்புறுத்தலால் தற்கொலை செய்த காதல் ஜோடி - கணவனுக்கு ஆயுள் தண்டனை\nபெற்றோரின் தொடர் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.\n1995-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.\nபெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்துள்ளனர். ஆனால், பெற்றோர்களின் தொடர் துன்புறுத்தலால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் காதலன் பிழைத்துக்கொள்ள, காதலி மரணமடைந்துவிட்டார்.\nஇந்த வழக்கில் அந்தப் பெண்ணை, காதலன் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் காதலன் மீது குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தன் காதலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் காதலன். இருவரும் விஷம் எடுத்துக்கொண்டுள்ளனர். இதில் காதலி விஷம் அதிகமாக எடுத்துக்கொண்டதால் உயிருக்கு தவித்து வந்துள்ளார்.\nஉதவி தேடிச் சென்ற காதலன் திரும்பி வரும் முன்னர், அப்பெண் வலி பொறுக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் காதலனுக்கு இந்தியச் சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/tamil/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2018-05-27T03:36:08Z", "digest": "sha1:NZTRQ5WFIY4U3R6K6OLWQATBGH2X3W36", "length": 7179, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "மிருகங்கள் கலாய்க்கும் நிலையில் மனிதர்கள்,... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » மிருகங்கள் கலாய்க்கும் நிலையில் மனிதர்கள்,…\nமிருகங்கள் கலாய்க்கும் நிலையில் மனிதர்கள்,…\nகுதிரையும், கழுதையும் ஒன்றுக்கொன்று பேசி கொள்கிறது.\nகுதிரை- நான் பாய்ந்து ஓடினால் பூமியே அதிரும், தெரியுமில்லை.\nகழுதை- நான் எட்டி உதைச்சால் எட்டு பல்லாவது கொட்டும். தெரியுமில்லை.\nகுதிரை- ரொம்ப அழகாக இருக்கும் பெண்களை அரபு குதிரைனு சொல்வாங்க தெரியுமில்லை\nகழுதை- நிறைய மனிதர்கள் உருப்படாத கழுதைனு பேர் வாங்கின்டு இருக்காங்க, தெரியுமில்லை..\nகுதிரை- சரி, இந்த மனிதர்கள் மாதிரி உருப்படாத பெருமை பேச்சு வேண்டாம். வா, உருப்படற வேலையை பார்ப்போம்.\nமிருகங்கள் கலாய்க்கும் நிலையில் தான் இன்று பல மனிதர்கள், இருக்கிறார்கள். வெற்றி பேச்சு பேசாமல் வெட்டி பேச்சு பேசி கொண்டிருக்கிறார்கள்.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇந்திய டாக்டர்கள் சொந்த நாட்டில் ராஜா,…ஆனால், அமெரிக்காவுக்கு\nதம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-33-%E0%AE%86/", "date_download": "2018-05-27T03:23:12Z", "digest": "sha1:PHJLUKCSAUVSP7VSMGIEFIGMGYWDMK7A", "length": 8379, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "யாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு நாளை » Sri Lanka Muslim", "raw_content": "\nயாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு நாளை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது. அதன் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடாத்தப்படும் என்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n33 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச் செய்தியாளர் சந்திப்பு நேற்று(6) புதன்கிழமை பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய துணைவேந்தர் மேலும் தெரிவிக்கையில்,\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்முறை இரண்டு பகுதிகளாக நடாத்தப்படவுள்ளன. முதலாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 5 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.\nஇந்த பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள் பீடம், முகாமைத்துவ வணிக பீடம், கலைப்பீட சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.\nஇவர்களில், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் கலாநிதி பட்டத்தையும், 64 பேர் பட்டப்பின் தகைமைகளையும், முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த 293 பேர் வியாபார நிருவாக மாணி பட்டத்தையும், 48 பேர் வணிகமாணி பட்டத்தையும், கலைப்பீட சட்டத்துறையைச் சேர்ந்த 63 பேர் சட்டமாணி பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 53 பேர் விவசாய விஞ்ஞானமாணி பட்டத்தையும், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகின் 58 பேர் மருத்துவ ஆய்வு கூடத் தொழில் நுட்பம், மருந்தாளர், தாதியம் ஆகிய துறைகளில் விஞ்ஞானமானி பட்டங்களையும், வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 84 பேர் பிரயோக விஞ்ஞான மாணி பட்டத்தையும், 110 வணிக கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 110 பேர் வணிகமாணி பட்டத்தையும் 10 பேர் நேரடியாகப் பிரசன்னமாகாத நிலையிலும் பட்டங்களைப் பெறவுள்ளனர் என்றும்,\nஎதிர்வரும் 2018, மார்ச் மாதம் நடைபெறவுள்ள 33 ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியில் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம், மருத்துவ பீடம், கலைப்பீடம், மற்றும் உயர்பட்டப் படிப்புகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், வெளிவாரியாகப் பட்டம் பெறுபவர்களின் பட்டங்களும் உறுதிப்படுத்தப்படவுள்ளன என்று துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.\nஐந்து அமர்வுகளில் முதலாம் அமர்வு காலை 9 மணிக்கும், இரண்டாவது அமர்வு காலை 10.45 க்கும், மூன்றாவது அமர்வு மதியம் 1.15 க்கும், நான்காவது அமர்வு பி.ப 3 மணிக்கும், ஐந்தாவது அமர்வு 4.30 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளன.\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும் -அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nஎம்பிலிபிட்டியவில் மாட்டிறைச்சி விற்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2011/11/", "date_download": "2018-05-27T03:13:15Z", "digest": "sha1:RGVBKBXHERKUR25QGL2JSMYH7VFYPLBE", "length": 5713, "nlines": 141, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: November 2011", "raw_content": "திங்கள், 21 நவம்பர், 2011\nஉள்ளார்ந்த பறை சாற்றலின் வெளிப்பாடா\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 நவம்பர், 2011\nஆட்சி மாற்றம் (என்பது) பொய்தான்\nகட்சி நாற்றம் (என்பது) மெய்தான்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 3:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t49849-topic", "date_download": "2018-05-27T03:09:30Z", "digest": "sha1:7EEHOP35R57ZMDNYML4XPMSQPNPKGZV4", "length": 13251, "nlines": 159, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சுட்டது நிஜம்…", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ibctamil.com/community/80/100618", "date_download": "2018-05-27T03:00:59Z", "digest": "sha1:EPOW4BEI7EFAFKSQYD4GARDD2LSFSIND", "length": 10915, "nlines": 100, "source_domain": "ibctamil.com", "title": "மே-18 நிகழ்விற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் உயிர் தப்பிய மக்களை கண்டுகொள்வதில்லை! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nமே-18 நிகழ்விற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் உயிர் தப்பிய மக்களை கண்டுகொள்வதில்லை\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் நிகழ்வை நடத்துவதற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் முள்ளிவாய்க்கால் கொடூரத்திலிருந்து உயிர் தப்பி வாழ்வாதார உதவிகளுக்காக காத்திருக்கும் மக்களை கண்டுகொள்வதில்லை என்றும் ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசனம் வெளியிட்டுள்ளார்.\nஇறுதி கட்ட போரில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் போரில் இருந்து மீண்டு வந்த மக்களுடைய கதைகள் அவர்களின் அனுபவங்களை உள்ளடக்கிய முள்ளிவாய்க்கால் பதிவுகள் எனும் நூல் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிறுவனத்தால் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்கால் பதிவுகள் என்ற நூல் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு யாழ்.பொது நூலகத்தில் அடையாளம் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தர்சா ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\nபோரினால் பாதிக்கப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் இருந்து உயிருடன் மீண்டுவந்த மக்களின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் இவ்வாறான நூலொன்று வெளியிட்டு வைப்பதற்கான காரணத்தை அடையாளம் அமைப்பின் பிரதிநிதி தெளிவுபடுத்தினார்.\nஇதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகந்தினி தெய்வேந்திரம் இவ்வாறான நூல்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.\nஇதனையடுத்து அங்கு உரையாற்றிய ஊடகவியலாளர் உதயராசா சாளின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக நடைபெற்றுவரும் அரசியல் போட்டி குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார். அது மாத்திரமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் நிகழ்வை நடத்துவதற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் முள்ளிவாய்க்கால் கொடூரத்திலிருந்து உயிர் தப்பி எந்தவித வாழ்வாதார உதவிகளும் இன்றி உதவிகளுக்காக காத்திருக்கும் மக்களை கண்டுகொள்வதில்லை என்றும் ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசனம் வெளியிட்டுள்ளார்.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ibctamil.com/srilanka/80/100605", "date_download": "2018-05-27T03:22:31Z", "digest": "sha1:AV4ZDWCKZFLIFZL3HCDBCOIOYQZHVAXF", "length": 9750, "nlines": 101, "source_domain": "ibctamil.com", "title": "மதுபோதையில் சென்ற பெண்களில் ஒருவர்மீது சட்ட நடவடிக்கை! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nமதுபோதையில் சென்ற பெண்களில் ஒருவர்மீது சட்ட நடவடிக்கை\nமதுபோதையில் உந்துருளியில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்படி, மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nயாழ்.இருபாலைச் சந்திப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக உந்துருளியில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.\nவிபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்துக்கு விரைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரும் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து இன்று வெளியேறியதுடன் அவர்களில் உந்துருளியைச் செலுத்தி வந்த பெண், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nசம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்களும் 23,24 வயதுகளையுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவைச் சேரந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-27T03:36:54Z", "digest": "sha1:F7EEXIFKTH2ZX2HTGUKLUOCABGPVJXNB", "length": 10076, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய இரும்புவழி நிதியறிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்திய இரும்புவழி நிதியறிக்கை என்பது இந்தியாவின் இரும்புப்பாதைப் போக்குவரத்தை கையாளும் இந்திய இரும்பூர்தித்துறையின் வருடாந்திர நிதி நிலை அறிக்கை ஆகும். இதை இரயில்வே நிதியறிக்கை என்றும் குறிப்பிடுவர். இது ஒவ்வொரு ஆண்டும், இந்திய இரும்புவழி அமைச்சகத்தின் சார்பில் இரும்புவழி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.\nஒவ்வொரு ஆண்டும், இந்திய ஒன்றியத்தின் நிதியறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் இரும்புவழி நிதியறிக்கை தாக்கல் செய்யப்படும்.\nஆங்கிலேய இரும்புவழி பொருளியலறிஞரான வில்லியம் அக்வொர்த் தின்[1] தலைமையிலான 10 உறுப்பினர்களைக்கொண்ட, 1920-21 ஆண்டின் அக்வொர்த் குழுவின் பரிந்துரையான அக்வொர்த் அறிக்கை தான், இரும்புவழித்தடங்களின் மறுசீரமைப்பிற்கு வித்திட்டது. 1924-ல் இந்தியாவின் இரும்புவழி நிதிகள், அரசின் பொதுநிதியிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. இப்பழக்கம் இன்றும்கூட சுதந்திர இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. [2][3][4]\nஇரும்புவழி நிதியறிக்கையின் தாக்கல் முதன்முறையாக 24 மார்ச், 1994-ஆம் திகதியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 2004-ஆம் ஆண்டிலிருந்து 2009-ன் மே மாதம் வரை, இரும்புவழி அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தொடர்ச்சியாக ஆறு முறை இரும்புவழி நிதியறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். 2009-ல், அவரின் பதவிக் காலத்தில்₹108 கோடிக்கான ($1.6 பில்லியன்) நிதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.[5]\n2000ஆவது ஆண்டில், மம்தா பானர்ஜி, முதல் பெண் இரும்புவழி அமையச்சராக பதவியேற்றார். 2002ஆம் ஆண்டு, அவர் இரும்புவழி நிதியறிக்கையை தாக்கல் செய்தபோது, இரு வேறு மத்திய அரசுக் கூட்டணியில் (தே ஜ கூ மற்றும் ஐ மு கூ) அங்கம் வகித்த ஒரே பெண் இரும்புவழி அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.\n2014ஆம் ஆண்டின் இரும்புவழி நிதியறிக்கையில், இரும்புவழி அமைச்சரான டி. வி. சதானந்த கெளடா இந்தியாவின் முதல் புல்லெட் தொடருந்து மற்றும் 9 அதிவிரைவு இரும்புவழித் தடங்களை பற்றி அறிவித்தார். [6]\n2016 இந்திய இரும்புவழி நிதியறிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/canada/04/164981", "date_download": "2018-05-27T03:34:42Z", "digest": "sha1:GRFU3I6WUZW2U7YDOXHY3CQMQJ3QMWR3", "length": 4706, "nlines": 58, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவின் கடல்சார் மாகாணங்களில் தீவிர பனிப்புயல்! - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nகனடாவின் கடல்சார் மாகாணங்களில் தீவிர பனிப்புயல்\nஹலிவக்ஸ்-நோவ ஸ்கோசியாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.பலத்த பனிப்பொழிவுடன் கூடிய தீவிர பனிப்பொழிவு கடல்சார் மாகாணங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇப்பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்கிழமை பிற்பகல் சில பகுதிகளில் 25சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநோவ ஸ்கோசியாவில் வலிமையான காற்று மணித்தியாலத்திற்கு 110கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு தெரிவித்திருப்பதுடன் சேதங்களும் ஏற்படலாம் என கருதப்படுகின்றது.\nவிமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.\nமின்சார இழப்பிற்கு தயாராகுமாறு வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/140239", "date_download": "2018-05-27T03:41:28Z", "digest": "sha1:X4UTWAVGJSVUJO2GOO6LDCZPLK7XXAW3", "length": 5569, "nlines": 81, "source_domain": "selliyal.com", "title": "மோடெனாசின் 3 புதிய இரக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured வணிகம் மோடெனாசின் 3 புதிய இரக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்\nமோடெனாசின் 3 புதிய இரக மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்\nஷா ஆலம் – மலேசியாவிலுள்ள மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் மோடெனாஸ் (MODENAS) தற்போது மூன்று புதிய இரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகரிஷ்மா 125, எலெகன் 250 ஆகிய இரு இரகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.\nஅதோடு, எடாரான் மோடெனாஸ் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனமும், கிம்கோ (Kymco) என்ற புதிய இரக ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.\nதாய்வானிலுள்ள கௌசியங் நகரில் அமைந்துள்ள வாங் யங் மோட்டார் நிறுவனத்தின் கீழ் அனைத்துலகத் தரத்தில் கிம்கோ உருவாக்கப்பட்டுள்ளது.\nநேற்று இந்த மூன்று இரக மோட்டார்களும் ஷா ஆலமிலுள்ள இஓஎன் தலைமையகத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.\nகரீஷ்மா 125-ன் விலை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 5,278 ரிங்கிட், எலெகன் 250-ன் விலை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 13,599 ரிங்கிட், கிம்கோவின் விலை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 22,790 ரிங்கிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமியன்மார் முஸ்லீம்களுக்கு ஆதரவாக மலேசியாவில் ஆர்ப்பாட்டம்\nNext article“மரியா சின் கைது சட்டத்துக்குட்பட்டதுதான்” – அபாண்டி அலி\n“ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்\nமைபிபிபி இரண்டாகப் பிளவுபட்டது – 2 தேசியத் தலைவர்கள்\nஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)\nஅருள் கந்தா மீது கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vignesg-shivan-24-01-1840504.htm", "date_download": "2018-05-27T03:40:27Z", "digest": "sha1:C46RC3C2HXVFDYYUULOZ2AN2XXJCLMBL", "length": 7356, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.! - Vignesg Shivan - விக்னேஷ் சிவன் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த தல பட இயக்குனர், இசையமைப்பாளர் இல்லை என்றால் இன்று நான் இல்லை - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\nதமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்னேஷ் சிவன், இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பிரபல இயக்குனர்களில் ஒருவரானார்.\nஇவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்புவின் போடா போடி படத்தின் ரிலீஸ் தாமதமானது, அடுத்த வாய்ப்புகளை எண்ணி கவலை பட்டபோது எனக்கு இவர்கள் தான் உதவி செய்தார்கள் என கூறியுள்ளார்.\nஅவர்கள் வேறு யாரும் இல்லை இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தானாம். இவருடைய இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n▪ TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.\n▪ விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.\n▪ மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\n▪ மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.\n▪ 100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.\n▪ நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் உண்மை தானா - ரகசியத்தை போட்டுடைத்த அனிருத்.\n▪ சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.\n▪ சூர்யாவுக்காக கோவிலில் விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா.\n▪ 50 நாட்களை கடந்த அறம் - விக்னேஷ் சிவன் பாராட்டு.\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t38809-15", "date_download": "2018-05-27T03:22:57Z", "digest": "sha1:Z3TJZ2NMOQQDYGSIMAAVROX3N5SX4A3J", "length": 9457, "nlines": 119, "source_domain": "www.thagaval.net", "title": "கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nகணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்\nபாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மத்திய முசாபர்கார்ஹ் நகரில் கடந்த செப்டம்பரில் ஆசியா பீபி என்ற இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை. அவரை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தினை நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.\nபாகிஸ்தானின் கிராம பகுதிகள் மற்றும் ஏழை குடும்பங்களில் கட்டாய திருமணம் நடப்பது வழக்கம்.\nஇந்நிலையில் திருமணத்திற்கு பின் கடந்த வாரம் கணவருக்கு கொடுக்க இருந்த பாலில் ஆசியா விஷம் கலந்துள்ளார். ஆனால் அதனை கணவர் குடிக்கவில்லை.\nஅதன்பின்னர் அந்த பால் ஆனது லஸ்சி, மோர் என தயார் செய்யப்பட்டு கணவரின் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் முல்டான் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆசியா மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.\nஆசியாவின் காதலர் என கூறப்படும் நபர் மற்றும் அவரது அத்தை ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின்படி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ibctamil.com/community/80/100619", "date_download": "2018-05-27T03:04:21Z", "digest": "sha1:EYFMOBHZJLBYIVR6EYAMJE36ELNDGG3P", "length": 9826, "nlines": 97, "source_domain": "ibctamil.com", "title": "இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழப்பு! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nஇராணுவத்திடம் சரணடைந்தவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழப்பு\nபோரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்டவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இந்த நிலை தொடர்ந்தால் நேரடி சாட்சிகள் முழுமையாக அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (15.05.2018) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பதிவுகள் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தனது கணவனை ஒப்படைத்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக தேடி அலையும் சுகந்தினி தெய்வேந்திரம் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் யார் நடத்துவது என்பது தொடர்பில் எழுந்திருந்த சர்ச்சை தொடர்பிலும் தனது கணவரை ஸ்ரீலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்து கடந்த ஒன்பது ஆண்டுகலாக தேடி அலையும் சுகந்தினி தெய்வேந்திரம் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.\nபோரை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து முள்ளிவாய்க்கால் கொடூரத்தை நினைவுகூறவோ நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளவோ முன்வராத தரப்பினர் இம்முறை முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் நினைவேந்தலுக்காக போட்டிபோடுவது வேடிக்கையாக இருப்பதாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதியான சுகந்தினி தெய்வேந்திரம் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://brahma-kumaris-murli.blogspot.com/2017/04/bk-murli-19-april-2017-tamil.html", "date_download": "2018-05-27T03:35:29Z", "digest": "sha1:MZ7WVRAJC2Q2YKXOULI36B5DN5YNAI7H", "length": 41150, "nlines": 33, "source_domain": "brahma-kumaris-murli.blogspot.com", "title": "BK Murli Today - Today Brahma Kumaris Murli: BK Murli 19 April 2017 Tamil", "raw_content": "\n19.04.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் தேகத்தின் உணர்விஷிருந்து விடுபட்டுக் கொண்டே செல்லுங்கள். நான் இவ்வளவு நல்லவன், தனவான், இவையனைத்தையும் விட்டு, தன்னை ஆத்மா என உணருங்கள்.\nஎந்த ஒரு நிச்சயம் அல்லது தாரணையின் ஆதாரத்தில் குழந்தைகள் நீங்கள் தங்களின் மிக உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்ள முடியும்\nமுதஷில் நான் ஆத்மா என்ற நிச்சயம் வேண்டும் - இப்போது நாம் சரீரத்தை விட்டு, வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அதனால் இந்த உலகத்தின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது. 2. நமக்குப் படிப்பு சொல்லித் தருபவர் மற்றும் உடன் அழைத்துச் செல்பவர் சிவபாபா. அவரது ஸ்ரீமத் படி நாம் நடக்க வேண்டும். ஸ்ரீமத் படி நடந்து தனக்கும் தன்னுடைய உற்றார் உறவினருக்கும் நன்மை செய்ய வேண்டும். எந்தக் குழந்தைகள் ஸ்ரீமத் படி நடப்பதில்லையோ, அல்லது யாருக்கு கற்றுத் தரும் தந்தை மீது நிச்சயம் இல்லையோ, அவர்கள் ஒன்றுக்கும் உதவ மாட்டார்கள். அவர்கள் போகப்போக மறைந்து போவார்கள். உயர்ந்த அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்ள முடியாது.\nகுழந்தைகள் நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள், மற்றும் அறிவீர்கள், நாம் பாபாவின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம் என்று. எந்த ஒரு சந்நியாசி அல்லது உற்றார் உறவினர் முன்பாகவோ அமர்ந்திருக்கவில்லை. நீங்கள் அறிவீர்கள், எந்த மிக இனிய தந்தையை ஜென்ம-ஜென்மாந்தரமாக நினைவு செய்கிறோமோ, அவருக்கு முன்பாகத் தான் நாம் அமர்ந்துள்ளோம். நாமும் உயிருடன் இருக்கும் போதே அவருடைய குழந்தையாக ஆகி யிருக்கிறோம். சந்நியாசிகளுக்கோ சீடர்கள் உருவாகின்றனர். அவர்கள் இருப்பதோ அவர்களின் வீட்டிலேயே தான் இல்லையா அவர்கள் சீடர்கள் (பின்பற்றுவோர்) எனச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் பின்பற்றுவதில்லை. குழந்தைகள் நீங்கள் பின்பற்ற வேண்டும். புத்தியில் இது நினைவிருக்க வேண்டும்-நாம் ஆத்மா, எங்கே பாபா செல்வாரோ, அங்கே நாம் செல்வோம். நிராகார் பாபா பரந்தாமத்திலிருந்து இங்கே வந்துள்ளார், தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்குவதற்காக. வருவதோ தூய்மை இல்லாத உலகத்தில், தூய்மையற்ற சரீரத்தில் தான். யார் முதல் நம்பரில் தூய்மையாக இருந்தாரோ, யார் 84 பிறவிகள் எடுத்துள்ளாரோ, அவருக்குள் பிரவேசமாகித் தான் இவை அனைத்தையும் புரிய வைக்கிறார். இங்கே அநேகம் குழந்தைகள் அமர்ந்துள்ளனர். ஆசிரியர் யாரோ ஒருவருக்கு மட்டும் கற்றுக் கொடுப்பாரா என்ன அவர்கள் சீடர்கள் (பின்பற்றுவோர்) எனச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் பின்பற்றுவதில்லை. குழந்தைகள் நீங்கள் பின்பற்ற வேண்டும். புத்தியில் இது நினைவிருக்க வேண்டும்-நாம் ஆத்மா, எங்கே பாபா செல்வாரோ, அங்கே நாம் செல்வோம். நிராகார் பாபா பரந்தாமத்திலிருந்து இங்கே வந்துள்ளார், தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்குவதற்காக. வருவதோ தூய்மை இல்லாத உலகத்தில், தூய்மையற்ற சரீரத்தில் தான். யார் முதல் நம்பரில் தூய்மையாக இருந்தாரோ, யார் 84 பிறவிகள் எடுத்துள்ளாரோ, அவருக்குள் பிரவேசமாகித் தான் இவை அனைத்தையும் புரிய வைக்கிறார். இங்கே அநேகம் குழந்தைகள் அமர்ந்துள்ளனர். ஆசிரியர் யாரோ ஒருவருக்கு மட்டும் கற்றுக் கொடுப்பாரா என்ன பகவான் சொல்வது அர்ஜுனனுக்கு மட்டும் தான் என்று இருக்க முடியாது. குழந்தைகள் அறிவார்கள், நாம் ஆத்மாக்கள் பாபாவின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம். ஆசிரியர் யாராவது ஒருவருக்கு மட்டும் கற்றுத் தருவாரா என்ன பகவான் சொல்வது அர்ஜுனனுக்கு மட்டும் தான் என்று இருக்க முடியாது. குழந்தைகள் அறிவார்கள், நாம் ஆத்மாக்கள் பாபாவின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம். ஆசிரியர் யாராவது ஒருவருக்கு மட்டும் கற்றுத் தருவாரா என்ன அர்ஜுனனுக்கு மட்டும் பகவான் சொல்கிறார் என்று இருக்க முடியாது. குழந்தைகள் அறிவார்கள், நாம் ஆத்மாக்கள் தந்தையின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம். வேறு எந்த ஒரு சத்சங்கத்திலும் இது போல் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்குப் புரிய வைக்கப் படுகிறது - நீங்கள் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். சரீரத்தையோ இங்கேயே தான் விட்டுவிட வேண்டும். எனவே, தேக உணர்வை விட்டு விட வேண்டும் நான் எவ்வளவு நல்லவன், செல்வந்தன் இந்த மாதிரியான எண்ணத்தை நீக்கி விட வேண்டும். நான் ஆத்மா என்று நிச்சயம் செய்ய வேண்டும். பாபாவை நினைவு செய்து-செய்தே பாபாவுடன் சென்று விட வேண்டும். சிவபாபா சொல்கிறார், எனக்கோ தேகத்தின் அபிமானம் இருக்க முடியாது. ஏனென்றால் எனக்குத் தன்னுடைய சரீரம் என்பதே கிடையாது. உங்களுக்கும் முதலில் இந்த தேக அபிமானம் கிடையாது. எப்போது ஆத்மாக்கள் நீங்கள் என்னிடம் இருந்தீர்களோ, அதன் பிறகு 84 பிறவிகளின் பாகத்தில் நடித்தீர்கள். நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் இராஜ்ய பாக்கியத்தை அடைந்திருந்தோம். பிறகு இழந்து விட்டோம். இப்போது மீண்டும் உங்களை முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். சரீரங்களையோ எடுத்துச் செல்ல மாட்டேன். இது பழைய சரீரம், இதன் உணர்வையோ புத்தியிலிருந்து நீக்கி விட வேண்டும். தனது இல்லற விவகாரத்திலேயே தான் இருக்க வேண்டும். இது சந்நியாச மடம் கிடையாது. தன்னுடைய வீடு- வாசலையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களோ வீடுவாசலை விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். தந்தை குழந்தைகளை அது போல் விட்டுவிடுமாறு செய்வதில்லை. பாபா சொல்கிறார், தங்களின் குழந்தைகளுக்கு நினைவு படுத்துங்கள் - சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று. புரிய வைத்துக் கொண்டே இருப்பீர்களானால் அவர்களுக்கும் சிவபாபா மீது அன்பு ஏற்பட்டு விடும். சிவபாபா எவ்வளவு இனிமையான மற்றும் அன்பானவர் அர்ஜுனனுக்கு மட்டும் பகவான் சொல்கிறார் என்று இருக்க முடியாது. குழந்தைகள் அறிவார்கள், நாம் ஆத்மாக்கள் தந்தையின் முன்னிலையில் அமர்ந்துள்ளோம். வேறு எந்த ஒரு சத்சங்கத்திலும் இது போல் புரிந்து கொள்வதில்லை. உங்களுக்குப் புரிய வைக்கப் படுகிறது - நீங்கள் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். சரீரத்தையோ இங்கேயே தான் விட்டுவிட வேண்டும். எனவே, தேக உணர்வை விட்டு விட வேண்டும் நான் எவ்வளவு நல்லவன், செல்வந்தன் இந்த மாதிரியான எண்ணத்தை நீக்கி விட வேண்டும். நான் ஆத்மா என்று நிச்சயம் செய்ய வேண்டும். பாபாவை நினைவு செய்து-செய்தே பாபாவுடன் சென்று விட வேண்டும். சிவபாபா சொல்கிறார், எனக்கோ தேகத்தின் அபிமானம் இருக்க முடியாது. ஏனென்றால் எனக்குத் தன்னுடைய சரீரம் என்பதே கிடையாது. உங்களுக்கும் முதலில் இந்த தேக அபிமானம் கிடையாது. எப்போது ஆத்மாக்கள் நீங்கள் என்னிடம் இருந்தீர்களோ, அதன் பிறகு 84 பிறவிகளின் பாகத்தில் நடித்தீர்கள். நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் இராஜ்ய பாக்கியத்தை அடைந்திருந்தோம். பிறகு இழந்து விட்டோம். இப்போது மீண்டும் உங்களை முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். சரீரங்களையோ எடுத்துச் செல்ல மாட்டேன். இது பழைய சரீரம், இதன் உணர்வையோ புத்தியிலிருந்து நீக்கி விட வேண்டும். தனது இல்லற விவகாரத்திலேயே தான் இருக்க வேண்டும். இது சந்நியாச மடம் கிடையாது. தன்னுடைய வீடு- வாசலையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களோ வீடுவாசலை விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். தந்தை குழந்தைகளை அது போல் விட்டுவிடுமாறு செய்வதில்லை. பாபா சொல்கிறார், தங்களின் குழந்தைகளுக்கு நினைவு படுத்துங்கள் - சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று. புரிய வைத்துக் கொண்டே இருப்பீர்களானால் அவர்களுக்கும் சிவபாபா மீது அன்பு ஏற்பட்டு விடும். சிவபாபா எவ்வளவு இனிமையான மற்றும் அன்பானவர் அனைவரையும் இங்கே தங்க வைத்து விட்டால் பிறகு குழந்தைகளை யார் பராமரிப்பார்கள் அனைவரையும் இங்கே தங்க வைத்து விட்டால் பிறகு குழந்தைகளை யார் பராமரிப்பார்கள் அது போல் இங்கே அநேகக் குழந்தைகள் உள்ளனர், இங்கிருந்து சரீரத்தை விட்டுச் செல்கின்றனர். பிறகு அடுத்த பிறவி எடுத்து பாபாவிடம் ஆஸ்தி பெறுவதற்காக வருவார்கள், சந்திக்கவும் செய்வார்கள். நாம் ஆத்மா என்ற நிச்சயம் இருக்க வேண்டும். இந்த சரீரத்தை விட்டுத் திரும்பிச் செல்ல வேண்டும். இங்கே நமது மனதை ஈடுபடுத்தக் கூடாது. சந்நியாசிகள் சொல்கின்றனர், பிரம்ம தத்துவத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்று. அநேக விதமான வழிமுறைகள் உள்ளன. இங்கோ ஒரு பாபா மட்டுமே. தந்தை வந்துள்ளார், குழந்தைகள் நம்மை வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக. சத்யுகத்தில் மற்ற அனைத்து தர்மங்களும் இருக்கவில்லை. இப்போது சத்யுகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்போது பாபா மீண்டும் அவதரித்துள்ளார். நீங்கள் இப்போது புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். மறு அவதாரம் என்று ஒருவருக்கு மட்டுமே சொல்வார்கள். அநேகக் குழந்தைகள் எழுதுகின்றனர்- பாபா, எங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. எப்போதாவது கொஞ்சம் கோபம் வந்து விடுகிறது. ஆம் குழந்தைகளே, இதுவோ நடக்கத் தான் செய்யும். நோய் என்றால் உடனே விடுபட்டு விடுமா என்ன அது போல் இங்கே அநேகக் குழந்தைகள் உள்ளனர், இங்கிருந்து சரீரத்தை விட்டுச் செல்கின்றனர். பிறகு அடுத்த பிறவி எடுத்து பாபாவிடம் ஆஸ்தி பெறுவதற்காக வருவார்கள், சந்திக்கவும் செய்வார்கள். நாம் ஆத்மா என்ற நிச்சயம் இருக்க வேண்டும். இந்த சரீரத்தை விட்டுத் திரும்பிச் செல்ல வேண்டும். இங்கே நமது மனதை ஈடுபடுத்தக் கூடாது. சந்நியாசிகள் சொல்கின்றனர், பிரம்ம தத்துவத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்று. அநேக விதமான வழிமுறைகள் உள்ளன. இங்கோ ஒரு பாபா மட்டுமே. தந்தை வந்துள்ளார், குழந்தைகள் நம்மை வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக. சத்யுகத்தில் மற்ற அனைத்து தர்மங்களும் இருக்கவில்லை. இப்போது சத்யுகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்போது பாபா மீண்டும் அவதரித்துள்ளார். நீங்கள் இப்போது புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். மறு அவதாரம் என்று ஒருவருக்கு மட்டுமே சொல்வார்கள். அநேகக் குழந்தைகள் எழுதுகின்றனர்- பாபா, எங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. எப்போதாவது கொஞ்சம் கோபம் வந்து விடுகிறது. ஆம் குழந்தைகளே, இதுவோ நடக்கத் தான் செய்யும். நோய் என்றால் உடனே விடுபட்டு விடுமா என்ன அனைத்து குணங்களும் வெளியேறி-வெளியேறி குணமற்றவர்களாக ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது அனைத்து குணங்களும் நிரம்பியவராக ஆக வேண்டும். உங்களுக்கு அளவற்ற செல்வம் கிடைக்கிறது. அங்கே பேராசையின் விசயமோ கிடையாது. இங்கே பேராசை வசமாகி எவ்வளவு திருட்டு முதலியன செய்கின்றனர் அனைத்து குணங்களும் வெளியேறி-வெளியேறி குணமற்றவர்களாக ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது அனைத்து குணங்களும் நிரம்பியவராக ஆக வேண்டும். உங்களுக்கு அளவற்ற செல்வம் கிடைக்கிறது. அங்கே பேராசையின் விசயமோ கிடையாது. இங்கே பேராசை வசமாகி எவ்வளவு திருட்டு முதலியன செய்கின்றனர் அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் தானியங்களின் கிடங்கு கெட்டுப்போகிறது. பிறகு எரித்து விடுகின்றனர். இங்கோ மனிதர்கள் பட்டினியால் சாகின்றனர். நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், நமக்கு சிவபாபா படிப்பு சொல்லித் தருகிறார். முதலில் சிவபாபா நமக்குக் கற்பிக்கிறார் என்ற நிச்சயம் எப்போது இல்லையோ, அப்போது எந்த ஒரு வேலைக்கும் ஆக மாட்டார்கள். பாபா புரிய வைத்துள்ளார், ஆத்மா நீங்கள் தூய்மை இழந்தவர் ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்ரீமத் படி அவசியம் நடக்க வேண்டும். தனது வழிமுறைப்படி நடத்தக் கூடாது. உற்றார் உறவினருக்கு ஸ்ரீமத் மூலம் நன்மை செய்ய வேண்டும். கடிதம் எழுத வேண்டும். ஸ்ரீமத் படி எழுதவில்லை என்றால் தீமை செய்தவராகிறீர்கள். அநேகர் மறைவாகக் கடிதம் எழுதுகின்றனர். பாபா ஆசிரியர் அமர்ந்துள்ளார் என்றால் பாபாவுக்குச் சொல்ல வேண்டும். பாபா உங்களுக்கு அந்த மாதிரி கடிதம் எழுதக் கற்றுத் தருவார், அதைப் படிக்கிறவருக்கு மெய் சிலிர்த்து விடும். பாபா தடை செய்வதில்லை. பற்றுதலை விட்டவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் தர்மம் வீட்டில் இருந்து எப்படித் தொடங்கும் அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் தானியங்களின் கிடங்கு கெட்டுப்போகிறது. பிறகு எரித்து விடுகின்றனர். இங்கோ மனிதர்கள் பட்டினியால் சாகின்றனர். நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், நமக்கு சிவபாபா படிப்பு சொல்லித் தருகிறார். முதலில் சிவபாபா நமக்குக் கற்பிக்கிறார் என்ற நிச்சயம் எப்போது இல்லையோ, அப்போது எந்த ஒரு வேலைக்கும் ஆக மாட்டார்கள். பாபா புரிய வைத்துள்ளார், ஆத்மா நீங்கள் தூய்மை இழந்தவர் ஆகி விட்டிருக்கிறீர்கள். இப்போது தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்ரீமத் படி அவசியம் நடக்க வேண்டும். தனது வழிமுறைப்படி நடத்தக் கூடாது. உற்றார் உறவினருக்கு ஸ்ரீமத் மூலம் நன்மை செய்ய வேண்டும். கடிதம் எழுத வேண்டும். ஸ்ரீமத் படி எழுதவில்லை என்றால் தீமை செய்தவராகிறீர்கள். அநேகர் மறைவாகக் கடிதம் எழுதுகின்றனர். பாபா ஆசிரியர் அமர்ந்துள்ளார் என்றால் பாபாவுக்குச் சொல்ல வேண்டும். பாபா உங்களுக்கு அந்த மாதிரி கடிதம் எழுதக் கற்றுத் தருவார், அதைப் படிக்கிறவருக்கு மெய் சிலிர்த்து விடும். பாபா தடை செய்வதில்லை. பற்றுதலை விட்டவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் தர்மம் வீட்டில் இருந்து எப்படித் தொடங்கும் அநேகர் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் மறைந்து விடுகின்றனர். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் தொடர முடிவதில்லை. இது போல் அநேகம் ஆண்கள் வருகின்றனர், அவர்களின் மனைவிமார் வருவதில்லை. அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சிவபாபா எழுதுகிறார், நீங்களோ பலவீனமாக இருக்கிறீர்கள். அவர்களுக்கும் புரிய வையுங்கள். நீங்களோ, உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தீர்கள், ஆணையை ஏற்று நடப்போம் என்று. நீங்கள் உங்கள் மனைவியையே கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியவில்லை என்றால் விகாரங்களை எப்படி வசப்படுத்த முடியும் அநேகர் ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் மறைந்து விடுகின்றனர். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் தொடர முடிவதில்லை. இது போல் அநேகம் ஆண்கள் வருகின்றனர், அவர்களின் மனைவிமார் வருவதில்லை. அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சிவபாபா எழுதுகிறார், நீங்களோ பலவீனமாக இருக்கிறீர்கள். அவர்களுக்கும் புரிய வையுங்கள். நீங்களோ, உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தீர்கள், ஆணையை ஏற்று நடப்போம் என்று. நீங்கள் உங்கள் மனைவியையே கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடியவில்லை என்றால் விகாரங்களை எப்படி வசப்படுத்த முடியும் உங்கள் கடமை மனைவியைத் தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும். அன்போடு புரிய வைக்க வேண்டும். சாஸ்திரங்களில் இவை அனைத்தும் இச்சமயத்தின் விஷயங்கள் தான் எழுதப்பட்டுள்ளன. பிராமணர்களாகிய நீங்களும் முதலில் புத்தியற்றவர்களாகவே இருந்தீர்கள். இப்போது பாபா புத்திவான் ஆக்கியிருக்கிறார்.\nநீங்கள் அறிவீர்கள், சிவபாபா 5000 ஆண்டுகளுக்கு முன்பு இது போலத்தான் பாகத்தை நடித்திருந்தார். இதே மாதிரித் தான் புரிய வைத்திருப்பார். இந்த பிரம்மாவும் கூட அறிந்து கொண்டுள்ளார். நீங்கள் இப்போது புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். யார் நல்லபடியாக சேவை செய்கின்றனரோ, அவர்கள் தான் ஃபரிஸ்தா ஆவார்கள். பழைய கணக்கு-வழக்கு இருந்து விட்டால் தண்டனை பெற நேரிடும். இப்போது நீங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். சிவபாபா உங்களுக்குச் சொல்கிறார். பிரம்மா சொல்கிறார் எனப் புரிந்து கொள்ள வேண்டாம். சிவபாபா சொல்கிறார், குழந்தைகளே, இப்போது நாடகம் முடியப் போகிறது. நீங்கள் என்னிடம் யோகம் வைப்பீர்களானால் தூய்மையாகி விடுவீர்கள். நீங்கள் அறிவீர்கள், இப்போது நாயகன் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். மேலும் உங்களுக்குப் பாடம் கற்பிக்கவும் செய்கிறார். எவ்வளவு அதிசயம் நீங்கள் எவ்வளவு சௌபாக்கியசாலிகள் அப்போது ஒருவரின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும் இல்லையா நீங்கள் அனைவரைக் காட்டிலும் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்கள் எனச் சொல்கின்றார். நான் ஸ்ரீஸ்ரீ. உங்களை ஸ்ரீ-ஸ்ரீயாக, சிரேஷ்டமானவர்களாக ஆக்குகிறேன். சிரேஷ்ட உலகத்தை உருவாக்குகிறேன். இங்கே எவ்வளவு தூய்மை இல்லாத மனிதர்கள் உள்ளனர் நீங்கள் அனைவரைக் காட்டிலும் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்கள் எனச் சொல்கின்றார். நான் ஸ்ரீஸ்ரீ. உங்களை ஸ்ரீ-ஸ்ரீயாக, சிரேஷ்டமானவர்களாக ஆக்குகிறேன். சிரேஷ்ட உலகத்தை உருவாக்குகிறேன். இங்கே எவ்வளவு தூய்மை இல்லாத மனிதர்கள் உள்ளனர் அவர்கள் தங்கள் மீது ஸ்ரீ என்ற டைட்டிலை வைக்கச் செய்கின்றனர். நீங்கள் இராவணன் மீது வெற்றி பெற்றுக் கொண்டே செல்கிறீர்கள். உங்கள் ஆத்மா ரூப ஊசியில் துரு ஏறி இருக்கிறது. இப்போது காந்தம் (சிவபாபா)வந்து தூய்மைப் படுத்துகிறார். தூய்மையாவீர்களானால் அவருடன் கூடவே செல்வீர்கள். கறையை நீக்குவதற்காக பாபாவை நினைவு செய்யுங்கள். மாதாக்கள் ஸ்ரீகிருஷ்ணரின் வாயில் வெண்ணெயைப் பார்க்கின்றனர். அது சொர்க்கம் என்ற வெண்ணெய். இரண்டு பூனைகள் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றன. வெண்ணெய் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தான் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர் தனியாக ஒன்றும் இராஜ்யம் செய்ய மாட்டார். சூரியவம்சி, சந்திரவம்சி அரச பரம்பரை நடைபெறுகிறது. அதன் பிறகு இராஜாக்களின் பரம்பரை வந்து விடுகிறது. அதுவும் மிகப் புராதன காலத்திருந்தே நடந்து வந்துள்ளது. பின்னால் பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யம் நடைபெறுகிறது.\nஇப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை பார்ட் நடிப்பதற்காக அனுப்பி வைத்திருந்தார். சொர்க்கத்தில் நாம் மிகவும் சுகமாக இருந்தோம். 21 பிறவிகளுக்கான ஆஸ்தி பாரதத்தில் தான் பாடப்படுகின்றது. அந்தக் கன்யாக்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கச் செய்கின்றனர். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார் இருந்தாலும் சிலருடைய பழைய கெட்டுப்போன அவகுணங்கள் வெளியேறுவதில்லை. பாபா பெரிய மார்ஷலாகவும் (சேனைத்தலைவர்) உள்ளார். பாபாவுடன் கூடவே தர்மராஜரும் உள்ளார். ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் அவருடைய வலது கரமாகிய தர்மராஜரும் உள்ளார். பாபாவின் மடியில் பிறவி எடுத்தனர். பிறகு வெளியில் சென்று இறந்து விடுகின்றனர் என்றால் எவ்வளவு நஷ்டமாகி விடுகிறது இருந்தாலும் சிலருடைய பழைய கெட்டுப்போன அவகுணங்கள் வெளியேறுவதில்லை. பாபா பெரிய மார்ஷலாகவும் (சேனைத்தலைவர்) உள்ளார். பாபாவுடன் கூடவே தர்மராஜரும் உள்ளார். ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் அவருடைய வலது கரமாகிய தர்மராஜரும் உள்ளார். பாபாவின் மடியில் பிறவி எடுத்தனர். பிறகு வெளியில் சென்று இறந்து விடுகின்றனர் என்றால் எவ்வளவு நஷ்டமாகி விடுகிறது ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் செத்துப் போகின்றனர். எவ்வளவு புரிய வைக்கிறார் - புத்தி மூலம் மட்டும் புரிந்து கொள்ளுங்கள், பாபா நாங்கள் உங்களுடையவர்கள் என்று. இச்சமயம் உலகம் முழுவதும் கல்புத்தியாக உள்ளனர். இந்த பாபாவும் (பிரம்மா) சொல்கிறார், நான் சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படித்திருந்தேன். எதுவும் தெரியாமல் தான் இருந்தேன். எனக்கு இந்தக் கல்வி ஒரு குரு மூலமாகக் கிடைத்தது என்று யாராவது சொன்னால் குருவிடமிருந்து கல்வி ஒருவருக்கு மட்டும் தான் கிடைக்குமா என்ன ஸ்ரீமத் படி நடக்கவில்லை என்றால் செத்துப் போகின்றனர். எவ்வளவு புரிய வைக்கிறார் - புத்தி மூலம் மட்டும் புரிந்து கொள்ளுங்கள், பாபா நாங்கள் உங்களுடையவர்கள் என்று. இச்சமயம் உலகம் முழுவதும் கல்புத்தியாக உள்ளனர். இந்த பாபாவும் (பிரம்மா) சொல்கிறார், நான் சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படித்திருந்தேன். எதுவும் தெரியாமல் தான் இருந்தேன். எனக்கு இந்தக் கல்வி ஒரு குரு மூலமாகக் கிடைத்தது என்று யாராவது சொன்னால் குருவிடமிருந்து கல்வி ஒருவருக்கு மட்டும் தான் கிடைக்குமா என்ன குருவைப் பின்பற்றுவோரோ அநேகம் பேர் இருப்பார்கள். குருவின் கல்வி பெற்றுக் கொள்ளப் படுகிறது என்றால் குருவின் பதவியும் கூட எடுத்துக் கொள்ளப் படும். இந்த விஷயமோ தனிப்பட்டது. சிவபாபா இவர் மூலமாகக் கல்வி கற்பித்து அனைவரிடமிருந்தும் புத்தியோகத்தை நீக்கி வைக்கிறார். திடீரென அனைத்தையும் விட வைத்தார். அநேகக் குழந்தைகளும் கூட இது போல் தான் செய்தனர். பட்டி நடைபெற வேண்டும் என இருந்தது. பாக்கிஸ்தானில் குழந்தைகளுக்கு எவ்வளவு பரிபாலனை நடைபெற்றது குருவைப் பின்பற்றுவோரோ அநேகம் பேர் இருப்பார்கள். குருவின் கல்வி பெற்றுக் கொள்ளப் படுகிறது என்றால் குருவின் பதவியும் கூட எடுத்துக் கொள்ளப் படும். இந்த விஷயமோ தனிப்பட்டது. சிவபாபா இவர் மூலமாகக் கல்வி கற்பித்து அனைவரிடமிருந்தும் புத்தியோகத்தை நீக்கி வைக்கிறார். திடீரென அனைத்தையும் விட வைத்தார். அநேகக் குழந்தைகளும் கூட இது போல் தான் செய்தனர். பட்டி நடைபெற வேண்டும் என இருந்தது. பாக்கிஸ்தானில் குழந்தைகளுக்கு எவ்வளவு பரிபாலனை நடைபெற்றது புத்திவான்களின் புத்தியாகிய பாபா அமர்ந்திருந்தார். நாம் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்குச் சொன்னோம், நல்ல தானியம் கிடைக்கவில்லை என்று. உடனே ஆபீசர் சொல்லிவிட்டார்-எது வேண்டுமோ, விரும்பியதை எடுத்துச் செல்லுங்கள். புத்தியின் பூட்டைத் திறப்பவராக பாபா இருந்தார். கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது. குமாரிகள் எவ்வளவு அடி வாங்குகின்றனர் புத்திவான்களின் புத்தியாகிய பாபா அமர்ந்திருந்தார். நாம் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்குச் சொன்னோம், நல்ல தானியம் கிடைக்கவில்லை என்று. உடனே ஆபீசர் சொல்லிவிட்டார்-எது வேண்டுமோ, விரும்பியதை எடுத்துச் செல்லுங்கள். புத்தியின் பூட்டைத் திறப்பவராக பாபா இருந்தார். கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது. குமாரிகள் எவ்வளவு அடி வாங்குகின்றனர் எவ்வளவு நினைவு செய்கின்றனர் பாபா, உங்களுடைய அற்புதம்-எங்களுக்கு ஈஸ்வரிய லாட்டரி கிடைத்துள்ளது. குழந்தைகள் எவ்வளவு இனிமையானவர்களாக ஆக வேண்டும் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்களையும் கை தூக்கிவிட வேண்டும். படைப்பவர் (ஸ்தூல தந்தை) ஓடி விட்டால் படைப்பின் நிலை என்னவாகும் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்களையும் கை தூக்கிவிட வேண்டும். படைப்பவர் (ஸ்தூல தந்தை) ஓடி விட்டால் படைப்பின் நிலை என்னவாகும் இங்கே சந்நியாசிகளுக்கு இந்த பாகம் இருந்தது, அந்தச் சமயம் தூய்மையின் தேவை இருந்தது. இந்த விளையாட்டு முழுவதும் உருவாக்கப்பட்டதாகும். முழு இராஜதானியும் இங்கே ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் தூய்மையற்றவர்களை தூய்மையாக்க மாட்டார்கள். இந்த சங்கமயுகம் தான் புகழ் பெற்றதாகும். பாபா சொல்கிறார், நான் முன்பும் கூட சொல்லியிருந்தேன் - கல்ப-கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன் என்று. அவர்கள் பிறகு ஒவ்வொரு யுகத்திலும் வருவதாகவும், கச்ச மச்ச அவதாரம் எனவும் எழுதி விட்டுள்ளனர். மனிதர்களும் சத் சத் (உண்மை உண்மை) எனச் சொல்லிக் கொண்டே உள்ளனர். சுயராஜ்யம் இல்லையா இங்கே சந்நியாசிகளுக்கு இந்த பாகம் இருந்தது, அந்தச் சமயம் தூய்மையின் தேவை இருந்தது. இந்த விளையாட்டு முழுவதும் உருவாக்கப்பட்டதாகும். முழு இராஜதானியும் இங்கே ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் தூய்மையற்றவர்களை தூய்மையாக்க மாட்டார்கள். இந்த சங்கமயுகம் தான் புகழ் பெற்றதாகும். பாபா சொல்கிறார், நான் முன்பும் கூட சொல்லியிருந்தேன் - கல்ப-கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன் என்று. அவர்கள் பிறகு ஒவ்வொரு யுகத்திலும் வருவதாகவும், கச்ச மச்ச அவதாரம் எனவும் எழுதி விட்டுள்ளனர். மனிதர்களும் சத் சத் (உண்மை உண்மை) எனச் சொல்லிக் கொண்டே உள்ளனர். சுயராஜ்யம் இல்லையா சந்நியாசிகள் எப்போதுமே சாந்தி வேண்டுகின்றனர். சுகத்தை வேண்டுவதில்லை. ஞானம் சரியில்லை எனச் சொல்வார்கள். உலகத்தில் சுகம் எங்கே உள்ளது சந்நியாசிகள் எப்போதுமே சாந்தி வேண்டுகின்றனர். சுகத்தை வேண்டுவதில்லை. ஞானம் சரியில்லை எனச் சொல்வார்கள். உலகத்தில் சுகம் எங்கே உள்ளது இராமர் இருந்தார் என்றால் இராவணனும் இருந்தான். கிருஷ்ணர் இருந்தாரென்றால் கம்சனும் இருந்தான். மேலும் சொர்க்கத்தில் அளவற்ற சுகம் இருந்தது. கிருஷ்ணர் மீது இவ்வளவு அன்பு செலுத்துகின்றனர். அவரோ சொர்க்கத்தில் தான் கிடைப்பார். இப்போதோ உங்கள் மனதின் ஆசைகள் பூர்த்தி ஆகின்றன. நீங்கள் அறிவீர்கள், பாபா கிருஷ்ணபுரிக்கு அழைத்துச் செல்வதற்காகப் புருஷார்த்தம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார். ஆக, பாபாவிடம் உண்மை மற்றும் தூய்மை மிகவும் வேண்டும். மறைப்பதால் அதிக நஷ்டம் ஏற்பட்டு விடும். சொல்லாத காரணத்தால் தவறுகள் பெருகிக் கெண்டே போகும். பாபா, எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஸ்ரீமத் தருகிறார். பிறகும் கூட யாராவது அறிவுரைப்படி நடக்கவில்லை என்றால் என்ன செய்வது\nபாபா புரிய வைக்கிறார், ஈஸ்வரியக் குழந்தைகளாகிய உங்களிடம் மிகவும் ராயல்டி (கம்பீரம்) மற்றும் புத்திசாலித் தன்மை வேண்டும். மிகுந்த அன்போடு நீங்கள் அனைவர்க்கும் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பரமபிதா பரமாத்மாவோடு உங்களுக்கு என்ன சம்மந்தம் எனக் கேட்கின்றனர். அவரோ சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால் சொர்க்கத்தின் எஜமானருக்குரிய ஆஸ்தி இருக்க வேண்டும். உங்களுக்கு ஆஸ்தி இருந்தது. அதை இழந்து விட்டீர்கள். மீண்டும் உங்களுக்குத் தருகிறேன். இந்த லட்சுமி-நாராயணர் இங்கே லட்சியமாக உள்ளது. பாபா நிச்சயமாக சத்யுகத்தின் இராஜ்ய பதவியைத் தான் தருவார். குழந்தைகள் நீங்கள் சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் உயிர் தானம் கொடுக்க வேண்டும்-21 பிறவிகளுக்கு. நீங்கள் தான் மகான் புண்ணிய ஆத்மா. உங்களைப் போன்ற புண்ணியாத்மாக்கள் யாரும் இருக்க முடியாது. புண்ணியத்தின் உலகத்திற்குச் செல்லப் போகிறவர்கள் நீங்கள். மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். இது பதீத-பாவனர் தந்தை மற்றும் தாதா. குழந்தைகளை வேஷ்யாலயத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து சிவாலயத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். இதை பயங்கர நரகம் என்றும் சொல்கின்றனர். இங்கே துக்கத்தின் மேல் துக்கம். பாபா வந்துள்ளார், துக்கதாமத்திலிருந்து வெளியேற்றி சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக. நாம் இப்படிப்பட்ட பரலௌகிக் தாய்-தந்தையிடம் சதா சுகம் பெறுவதற்காக, சந்திப்பதற்காக வந்துள்ளோம். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். உங்களுக்குக் குஷி உள்ளது-நாம் சிவாலயத்தை ஸ்தாபனை செய்பவராகிய போலாநாத் பண்டாரியிடம் செல்கிறோம். சிவனைத் தான் நினைவு செய்யவும் வேண்டும். இரதத்தை அல்ல. நல்லது.\nஇனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.\n1. பாபாவிடம் சதா உண்மையாக இருக்க வேண்டும், எதையும் மறைக்கக் கூடாது. மிக-மிக ராயல்டியுடனும் (கௌரவமாகவும்) புத்திசாலித் தனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.\n2. 21 பிறவிகளுக்கு ஒவ்வொருவருக்கும் உயிர் தானம் கொடுப்பதற்கான சேவை செய்து புண்ணியாத்மா ஆக வேண்டும். ஆத்மா ரூப ஊசி மீது துரு படிந்துள்ளது. அதை நினைவு யாத்திரையில் இருந்து, அகற்றிவிட வேண்டும்.\nலைட் (ஒளி) ஆகி ஞான யோகத்தின் சக்திகளைப் பிரயோகத்தில் கொண்டுவரக் கூடிய பயன்படுத்தக் கூடிய ஆத்மா ஆகுக \nஞானி-யோகி ஆத்மாவாகவோ ஆகியிருக்கிறீர்கள், இப்போது ஞான, யோகத்தின் சக்தியைப் பயன்பாட்டில் கொண்டுவரக் கூடிய நடைமுறைபடுத்தும் ஆத்மா ஆகுங்கள். எப்படி விஞ்ஞான சாதனங்களின் உபயோகம் ஒளி மூலமாக நடைபெறுகின்றது. அது போல் அமைதி சக்தியின் ஆதாரம் கூட ஒளி தான். அவிநாசி பரமாத்ம ஒளி, ஆத்மிக ஒளி மற்றும் அதனுடன் கூடவே நடைமுறை ஸ்திதியும் கூட ஒளி தான். ஆக, எப்போது ஏதேனும் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அப்போது சோதித்துப் பாருங்கள், ஒளி இருக்கிறதா இல்லையா என்று. ஸ்திதி மற்றும் சொரூபம் டபுள் லைட்டாக (ஒளி-சக்தி) இருக்குமானால் பிரயோகத்தின் வெற்றி சுலபமாகி விடும்.\nஜீவன்முக்த் நிலையை அனுபவம் செய்வதற்காக விகல்பங்கள் (நிச்சயமற்ற தன்மை) மற்றும் விகர்மங்களில் இருந்து விடுபடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=9055cb114d9115cd07192f427936e0bd", "date_download": "2018-05-27T03:43:36Z", "digest": "sha1:B3I3YFG62GC42QNZ7YZ52CX6UZSSSJHN", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-27T03:18:58Z", "digest": "sha1:C4CVHW5BADGUOTKPIIRRQ6PY32ZK5T3I", "length": 9972, "nlines": 108, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": நான் தான் சொன்னேன்ல...", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nஎன்னடா இவ்ளோ நாளா பதிவே காணோம்னு பார்த்தீங்களா நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல... ஸ்ரீரங்கம் ரங்கநாயகி சன்னதில, தல விருட்சம் பக்கத்துல ஒரு சுலோகம் இருக்கும். அந்த சுலோகத்த படிச்சா, செல்வம் சேரும்னு எல்லாம் இந்த பதிவுல சொன்னேன்ல... இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு...\nநான் அதை படிச்சுட்டு வந்ததும், இவ்ளோ நாளா ஆர்டர் தராத பார்ட்டி, தேடி வந்து ஆர்டர் குடுத்துட்டு போய்ட்டாங்க. அதுவும் எப்படி இவ்வளவு நாள் நான் போட்டோ ஆல்பம் டிசைனிங்க்கு வாங்கின சார்ஜ் ரொம்ப கம்மி, மத்தவங்க எல்லாம் என்போல ஒண்ணரை மடங்கு அதிகமா வாங்கறாங்கனு சொல்லி, super charge கொடுத்திருக்காங்க.\nஅதுக்காக ஒன்பதரை மணிக்கு முன்னால் சூரியனை பார்த்திராத நான், இந்த பத்து நாட்களாக இதற்காகவே ஆறு, ஏழு மணிக்கெல்லாம் எழுந்து 'Hard work' எல்லாம் பண்ணி (சிரிக்காதீங்க...) வொர்க்க முடிச்சு குடுத்தேன். தலைவர் பிரிண்ட் போட்ட இடம், ஆல்பம் ஒட்டின இடம், அவருடைய கஸ்டமர் என எல்லா இடங்களிலும் 'சூப்பரா இருக்குனு' ஒரே பாராட்டு மழையாம்.... (ஏ.... எல்லாரும் பாத்துக்கோங்க... நானும் டிசைனர் தான்... நானும் டிசைனர் தான்...)\nஸோ.... இந்த காரணத்துக்காகதான் ஒரு பத்து பதினஞ்சு நாளா பதிவு போட முடியல. அடுத்ததுக்கும் இதே மாதிரி நாள் ஆகும்னு நெனைக்கறேன். ஏன்னா, நமக்கு அடுத்த ஆர்டரும் கிடச்சுடுச்சுல்ல மக்கா....\nOK... Jokes apart.... என்னதான் நான் ஏற்கனவே Hardworker ஆ இருந்தும், ஏற்கனவே நல்ல designer ஆ இருந்தும், (அட... நம்புங்கப்பா...) இந்த குறிப்பிட்ட ஆளிடம் ஆர்டர் கிடைக்காமல் இருந்தது. இப்ப கிடைச்சதுக்கும், சார்ஜ் அதிகமாக்கி வருமானம் உயர்ந்ததற்க்கும் ஒரே காரணமா நான் நினைப்பது அந்த மந்திரங்கள் தான். ஸோ என்னால முடிஞ்ச காரியமா இந்த பதிவை நான் ரங்கநாயகிக்கு டெடிகேட் செய்யறேன்... (பதிவுலகில பதிவ டெடிகேட் செஞ்ச முதல் ஆள் நானாதான் இருக்கும்னு நினைக்கறேன். ரைட்டா\nஎப்பவுமே நான் பதிவு போட்டா, அது யாராவது ஒருத்தருக்காவது ஏதாவது ஒரு விஷயமாவது தெரிஞ்சுக்க உபயோகமா இருக்கணும்னு நினைப்பேன். அதனால இந்த பதிவுல என் மெசேஜ் - ஸ்ரீ ரங்கம் போனீங்கன்னா, அந்த மந்திரங்களை படிச்சுட்டு வாங்க...\nநல்ல விஷயம்தான் . வாழ்த்துக்கள். மென்மேலும் உயருங்கள்\n//எப்பவுமே நான் பதிவு போட்டா, அது யாராவது ஒருத்தருக்காவது ஏதாவது ஒரு விஷயமாவது தெரிஞ்சுக்க உபயோகமா இருக்கணும்னு நினைப்பேன். அதனால இந்த பதிவுல என் மெசேஜ் - ஸ்ரீ ரங்கம் போனீங்கன்னா, அந்த மந்திரங்களை படிச்சுட்டு வாங்க...//\nதொடரட்டும் உங்கள் மகத்தான பணி....\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/5150/arulnidhi-karu-palaniyappan-movie/", "date_download": "2018-05-27T03:21:18Z", "digest": "sha1:54HHGDNSP7YPKQJNB7JCS67PMKSGMFHT", "length": 5788, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "அருள்நிதி கரு.பழனியப்பன் இணையும் படம் ‘முதல்வன் 2’...?! - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nஅருள்நிதி கரு.பழனியப்பன் இணையும் படம் ‘முதல்வன் 2’…\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கரு.பழனியப்பன் அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தை ‘உறுமீன்’, ‘மரகத நாணயம்’ படங்களை தயாரித்த access நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது இந்தப் படம்.\nஇந்தப் படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இத்தலைப்பின் மூலம் இது ‘முதல்வன்’ இரண்டாம் பாகமோ என்று கேள்வி எழுந்துள்ளது. காரணம் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூன் கேரக்டரின் பெயர் புகழேந்தி. இதில் முதல்வராகப் பதிவியேற்கும் அர்ஜூன் ‘புகழேந்தி எனும் நான்’ என்று ஆணை எடுப்பார். இதனையே தலைப்பாக வைத்திருப்பதால் பெரும் கவனம் இப்படத்தின் மீது குவிந்துள்ளது.\nஉடல்நிலை பற்றிய வதந்தி வருத்தப்பட்ட எஸ்.பி.பி\n‘’இது என் இந்தியா அல்ல’’ – ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://techislam.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-27T03:37:08Z", "digest": "sha1:SU5A6PGPAVWMH6OETHCI7F3V6LTTND6O", "length": 4457, "nlines": 77, "source_domain": "techislam.com", "title": "உங்கள் கணனியில் நேரடியாக அல் குர்ஆன் திலாவத் கேட்க இலகு வழி - Tech Islam | இஸ்லாம் தொழில்நுட்பம் | ඉස්ලාම් තාක්ෂණය", "raw_content": "\nஉங்கள் கணனியில் நேரடியாக அல் குர்ஆன் திலாவத் கேட்க இலகு வழி\nஉங்கள் கணனியில் நேரடியாக அல் குர்ஆன் திலாவத் கேட்க இலகு வழி\nஆரம்பமாக நீங்கள் இதை செயற்படுத்த இணையம் தேவை என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.\nநீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:\nDesktop இல் Right Click செய்து New என்பதை Click பண்ணுங்கள்.\nபின்பு அதில் உள்ள Shortcut என்பதை கிளிக் பண்ணினால் பின்வரும் ஒரு Box தோன்றும்.\nஅதிலே கீழ்வரும் இணைய முகவரியில் ஒன்றை Paste செய்யுங்கள்.\nபலதரப்பட்ட இமாம்களின் கிராஅத் : mms://50.22.223.13/radio\nஇமாம் மாஹிர் அல் முஅய்கிலி : mms://50.22.223.13/maher\nபின்பு Next என்பதை Click செய்யுங்கள்.\nபின்பு அந்த குர்ஆன் ஓதுபவரின் பெயரை இடுங்கள்.\nபின்பு Finish என்பதை அழுத்தினால் கீழே காணப்படுவது போன்று Media Player இன் Icon காணப்படும். இனி அதை Open செய்தால் குர்ஆனை கேட்கலாம்.\nTwitter தனது பாவனையாளர்களிடம் அவசரமாக Paasword ஐ மாற்றுமாரு வேண்டுகிறது\nஅமெரிக்கா பெருவில் அமைந்துள்ள வானவில் மலை\nஇன்று முதல் Twitter இல் 280 எழுத்துக்களில் எழுதலாம்\nFacebook இல் நாமாக எவ்வாறு ஒரு Frame உருவாக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2013/11/", "date_download": "2018-05-27T03:15:15Z", "digest": "sha1:2DXJ76ZZCQNCKVRIR6GTZGZXPHLBPU4Z", "length": 6370, "nlines": 148, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: November 2013", "raw_content": "திங்கள், 25 நவம்பர், 2013\nயாவும் இருந்தது இருக்கிறது இருக்கும்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 10:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 நவம்பர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 9:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 நவம்பர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/154002-2017-12-07-10-11-02.html", "date_download": "2018-05-27T03:22:29Z", "digest": "sha1:3GJ7Z74YE2L2HDZ7XHCNJGQEWLBVRR63", "length": 10984, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "மதத்தை முன்னிறுத்தி எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது : பாஜகமீது மம்தா தாக்கு!", "raw_content": "\nமோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட வீதி வீதியாக சென்று விளக்கவேண்டும் » 4 ஆண்டு பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகளா - வேதனைகளா 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் செயல்பாடுகள் சாதனைகள் அல்ல - ...\nசாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகாதே தமிழா » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை சென்னை, மே 25 தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்ப...\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\nஞாயிறு, 27 மே 2018\nமதத்தை முன்னிறுத்தி எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது : பாஜகமீது மம்தா தாக்கு\nவியாழன், 07 டிசம்பர் 2017 15:40\nகொல்கத்தா, டிச. 7 வளர்ச்சியை முன்னிறுத்துவ தற்கு பதிலாக மதத்தை முன் னிறுத்தி எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்று பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா சாடியுள்ளார். மக்கள் எந்த வகையான உணவை உண்ண வேண்டும் என ஆணையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில், அந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையிலான நிகழ்ச்சி மேற்கு வங்கத் தலைநகர், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மம்தா மத்திய அரசு மீதும், பாஜக மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத் தார். இதுதொடர்பாக நிகழ்ச்சி யில் அவர் மேலும் பேசிய தாவது:\nமத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்தோ அல்லது பாஜகவின் பிரிவினைவாதக் கொள்கைகள் குறித்தோ கருத்து தெரிவிப்ப வர்களுக்கு மிரட்டல் விடுக்கப் படுகிறது. அப்படித்தான் திரிண மூல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய ஆட்சியாளர்கள் மிரட் டினர். அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொண் டனர்.\nஎத்தகைய அச்சுறுத்தல் களை விடுத்தாலும் மத்திய அரசின் மக்கள் விரோத நட வடிக்கைகளுக்கு எதிராக எழுப் பப்படும் கண்டனக் குரல்களை தடுத்து நிறுத்த முடியாது. சரியான தலைவர் என்பவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நான் செயல்படு கிறேன். ஆனால், பாஜகவோ மக்களிடையே பிரிவினை யையும், மோதலையும் ஏற் படுத்தும் நடவடிக்கையில் ஈடு படுகிறது. சமூக நல்லிணக் கத்தை குலைக்க விழைகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பாக இத்தகைய பிரித்தாளும் அரசியல் (பாபர் மசூதி இடிப்பு) ஆரம்பித்தது. இன்றள வும் அந்த அவலம் தொடர் கிறது. இத்தகைய சக்திகளின் சதி வலையில் சிக்காமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வளர்ச்சியை முன் னிறுத்தி அரசியல் நடவடிக்கை களை மேற்கொள்ளலாம். அல்லது மக்களின் அடிப் படைத் தேவைகளை முன்னி றுத்தி அரசியல் செய்யலாம். அவற்றை எல்லாம் விடுத்து மதத்தையும், ஜாதியையும் அடிப்படையாகக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது. ஆட்சியும் நடத்த முடியாது.\nமக்கள் எந்த உணவை உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவர்கள் யார் அந்த உரிமை எவருக்கும் இல்லை. எனது உயிர் இருக்கும் வரை இந்தக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். அதை எவராலும் தடுக்க முடியாது என்றார் மம்தா.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://veeduthirumbal.blogspot.com/2015/02/", "date_download": "2018-05-27T03:11:55Z", "digest": "sha1:Y73J72O5ILMU5JD6NUKYZJW3R5AOYPA4", "length": 14406, "nlines": 244, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: February 2015", "raw_content": "\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 4- பட்டம் வெல்ல போவது ஹரிப்ரியாவா\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 4- இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nபிப்ரவரி 20 - இன்று - மாலை சென்னையில் இறுதி போட்டி நடக்கவுள்ளது.\nயார் வெல்லுவார் இந்த பட்டத்தை\nகேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த பரத் - இறுதிக்கட்டத்தை எட்டிய ஒரே ஆண் போட்டியாளர். நிச்சயம் ஆஹோ ஓஹோ எல்லாம் இல்லை.. ஆண்களுக்கு ஒரு சீட்டு என்ற அடிப்படையில் இங்கிருக்கிறார்..அவ்வளவே .. டைட்டில் ஜெயிக்க வாய்ப்பெல்லாம் இல்லை....\nஆரம்பத்தில் இவரை அதிகம் கவனித்ததில்லை; ஆனால் வொயில்ட் கார்ட் ரவுண்ட் வந்தபோது செமையாக பாடினார். குறிப்பாக \"பறை\" குறித்த பாடலின் இறுதியில் உணர்ச்சி மேலிட அழுத காட்சி.. விஜய் டிவி க்கு கிடைத்த வர பிரசாதம்...பல முறை அதனை காட்டியே அந்த வாரம் முழுதும் பார்க்க வைத்தனர்.\nகுட்டி பெண் அனுஷ்யாவிற்கு வளமான எதிர்காலம் உண்டு \nஇலங்கையை சேர்ந்த ஜெஸ்ஸிகா மிக மேலும் இல்லாமல் - வெளியேறும் நிலையும் அதிகம் காணாமல் - இறுதிக்குள் நுழைந்தவர். வொயில்ட் கார்ட்டில் அதிக ஓட்டுகள் வாங்கியது இவரே.\n\"விடை கொடு எங்கள் நாடே \" இவர் பாடிய போது நம் இலங்கை நண்பர்களை நினைத்து நம்மையும் கண்ணீர் சிந்த வைத்தார்.\nவெளி நாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுகள் மிக அதிகம் இவருக்கு கிடைக்க வாய்ப்புண்டு. இருப்பினும் பட்டம் வெல்லுவார் என நான் கருத வில்லை.\nமெலடி குயீன்.. சிரிஷா. பல வித பாடல்களையும் அற்புதமாக பாட வல்லவர். வொயில்ட் கார்டில் ஜட்ஜ்களால் மிக அதிகம் பாராட்டப்பட்டாலும் - ஆறாவது மற்றும் கடைசி நபராக உள்ளே நுழைந்தார்.\nடைட்டில் ஜெயிக்காவிடில் கூட முதல் மூன்று இடங்களுக்குள் வருவார் என நினைக்கிறேன். ஓட்டுகள் பதிவாக துவங்கிய கடந்த சில நாட்களாக மக்களுக்கு மிக பிடித்தமான பாடல்களை தேர்வு செய்து பாடி வருவது இவர் தான்.\nஎனது பேவரிட் ஸ்பூர்த்தி தான். குட்டி தேவதை போல இருப்பார். 9 வயதில் இவரது திறமை வியக்க வைக்கிறது. அனைத்து வகை பாடல்களையும் சிறிதும் தடுமாறாமல் பாடி அசத்தும் ஸ்பூர்த்தி - இளம் வயதிலிருந்தே பாடி அசத்தும் ஸ்ரேயா கோஷல் போல் சிறப்பாக வருவார் என நினைக்கிறேன்\nஇவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே டைட்டில் இவருக்கு கிடைக்காமல் போகலாம்\nகடந்த சில மாதங்களாக சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்க்கும் பெரும்பாலான மக்களால் \"டைட்டில் வின்னர்\" என்று கணிக்கப்பட கூடியவர் ஹரிபிரியா. முறைப்படி சங்கீதம் கற்காவிடினும் இசை மீதுள்ள ஈர்ப்பால் - கடினமான பாடல்களை கூட அனாயசமாக பாடுவார். தந்தை இசை கலைஞராக இருந்து இளம் வயதில் காலமான பின் - மிக ஏழ்மையில் உழலும் குடும்பம் இவருடையது. மிக திறமை சாலியான இவர் டைட்டில் வின்னர் ஆனால் - அதில் எந்த கேள்வியும் எழ முடியாது.\nமாலை ஆறரைக்கு துவங்கும் போட்டியின் ஒளிபரப்பு முடிய இரவு 1 அல்லது 2 மணி ஆகும். அதுவரை விழித்திருந்து பார்க்க முடியுமா என்பது சந்தேகமே \nபேசாமல் விஜய் டிவி 3 நாள் முன்பு \"சிவராத்திரி\" வந்ததே - அதே நாளில் இறுதி போட்டியை நடத்தியிருக்கலாம்.. நாமும் சிவராத்திரிக்கு விழிப்பதாய் நினைத்து கொண்டு முழுதும் பார்த்திருப்போம் \nஇறுதி போட்டி நிகழ்ச்சி பற்றி பின்னர் எழுதுகிறேன்.\nLabels: சினிமா, டிவி சிறப்பு நிகழ்ச்சிகள்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 4- பட்டம் வெல்ல போவது ஹரிப...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nவேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு பார்வை\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_18.html", "date_download": "2018-05-27T03:34:02Z", "digest": "sha1:E4RJWL5VA7K2LPWJFH2LVX2UI22PBS4Z", "length": 19623, "nlines": 337, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியக் குடியரசுத்தலைவரின் வாழ்த்துச்செய்தி", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசிங்கப்பூரில் நடந்த தமிழ் இணையம் 2004 மாநாட்டிற்கான (11-12 டிசம்பர் 2004) இந்திய குடியரசுத்தலைவரின் வாழ்த்துச்செய்தி\nதமிழ் இணைய வளர்ச்சி: உயர்ந்த லட்சியம் எதுவாகும்\nஎன்னுடைய கணிணியிலிருந்து இண்டர்நெட் மூலமாக எந்தவிதமான தகவல்களையும் விஞ்ஞான நிகழ்ச்சிகளையும், தொழில்நுட்ப அறிவுத்தாள்களையும், எண்ணக்களஞ்சியங்களையும் search engine கள் மூலமாக ஒரு சில விநாடிகளில் ஆங்கிலத்தில் அறிய முடிகிறது. எனக்கு ஓர் எண்ணம் ஆங்கிலத்தில் எனக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை ஆங்கிலத்திலும் சில மேற்கத்திய நாட்டு மொழிகளில் மட்டுமே மெஷின் மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கிறது. நான் அறிந்த வரையில் எந்த மொழியில் தயாரிக்கிறோமோ அதே மொழியில்தான் நாம் தகவலை client server and web architecture மூலமாக திரும்பப் பெற முடியும். சில search engine கள் மட்டும் மேற்கத்திய மொழிகளிலிருந்து (French, German, Spanish, Italian & Portugese) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத்தருகிறது. ஆங்கிலத்தில் உள்ள தகவல் களஞ்சியங்கள் தமிழர்களுக்கு தமிழில் கிடைக்க வேண்டுமானால் அதை எந்த எந்த விதங்களில் நாம் அடைய முடியும் என்பதை இந்த மாநாட்டு நிபுணர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.\n2. இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர்\nஇதுவரை நாம் ஒவ்வொருவரும் சிறு சிறு முயற்சிகள் செய்து தமிழ் இண்டர்நெட் வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம். இந்நிலை மாறி நமக்கு ஒரு பெரிய இலட்சியம் அவசியம். அந்த இலட்சியம் என்னெவென்றால் தமிழ் சார்ந்த இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர் அடிப்படை கட்டமைப்புகளான browser, web server, application server, database server, mail server களை சொந்தத் தமிழ் மொழியில் unicode version 4.0 மூலமாக open source code வழியே வடிவமைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் ஒருங்கிணைத்து தமிழ் வழியே இண்டர்நெட் தகவல் பரிமாற்றங்களையும், தொடர்புகளையும், store செய்தலையும், retrieve செய்தலையும் செயல்படுத்திக் காட்டவேண்டும். இதன் மூலம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தாய்மொழி வழியே ஏராளமான அறிவுக் களஞ்சியங்கள் நேரடியாகச் சென்றடையும். தமிழ் வளர்ச்சி, தமிழ் படைப்பு, தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்கள் செயல்பாடு எல்லாம் இதன் மூலம் பெருகும். நீங்கள் இந்த இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மட்டும் அல்ல, மற்ற இந்திய மொழிகளும் இந்த அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாறி அம்மொழிகளுடன் தொடர்பு கொள்ள ஒரு ஊன்றுகோலாக அமையும். இந்த அடிப்படை கட்டமைப்பு தமிழ் உலகம் முழுதும் பயன் படுத்தப்படும் போது மற்ற search engineகள் அதன் சொந்த மொழியிலேயே எடுத்து உலகிலுள்ள எல்லாத் தமிழர்களுக்கும் கொடுக்க ஏதுவாக இருக்கும். இந்த இரண்டு எண்ணங்களும் நிறைவேற்றப்பட்டால் பல மொழி அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தும் தமிழருக்கு தமிழிலேயே கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் தமிழ் மொழி அறிவுக் களஞ்சியங்கள் (கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், அறிவியல் விஞ்ஞானம், தொழில்நுட்பம்) அனைத்தும் search engineகள் மூலமாக உலகெங்கும் சென்றடையும்.\nவாழ்த்துக்கள் இது தொடர்பாக விவாதிக்க , பங்கேற்க இனையத்தில் எதேனும் தளம் இருக்கிறதா\nவிவாதத்திற்கு என தனியான தளம் எதுவும் இல்லை. இதற்கான தேவை உள்ளது என்பதை உத்தமம் குழுவினருக்குத் தெரிவிக்கிறேன்.\n குழுமத்தில் லினக்ஸ் இயக்குதளத்தைத் தமிழ்ப்படுத்தும் முயற்சிகள் பற்றி பேசப்படுகிறது.\nபிற இயக்குதளங்கள் மீதான விவாதத்திற்கு - முக்கியமாக மைக்ரோசாஃப்ட், மேகிண்டாஷ் ஆகியவற்றை தமிழாக்குதல் குறித்த விவாதங்களுக்கு என சரியான தளம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2010/06/blog-post_20.html", "date_download": "2018-05-27T03:28:00Z", "digest": "sha1:35SEGRDZMQMPCCM5TEIWCXFUILKG4LSJ", "length": 11803, "nlines": 194, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: திண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதிண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.\nதிண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.\nகுடியிருப்பு பகுதியில் குடிசை தொழில் என்று கூறி,அண்டிதோடு எரித்து,அதில் வரும் புகையினால், அப்பகுதியில் குடியிருப்போருக்கு, அல்லல் தினம் கொடுத்து வந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை, ஆய்வு செய்து புகையினால், அருகில் குடியிருப்போருக்கு சுவாச கோளாறுகள் வருமென்று, குறைகள் களைய அறிவிப்பு அனுப்பினோம். குறைகள் களைய மனமில்லை.\nஎப்படி வேண்டுமானாலும் தயாரிப்போம். எங்களை கேட்க, எங்கள் நிறுவனத்தை ஆய்வு செய்ய அருகதை உண்டா உங்களுக்கு இதுதான் கிடைத்த பதில். சளைக்கவில்லை நிர்வாகமும். குழு ஒன்று அமைத்து அறிக்கை பெற்றது.\nமூன்று முறை விசாரணைக்கு வர சொல்லி, அவர் தரப்பு நியாயங்கள் ஏதேனும் இருந்தால் எடுத்து சொல்ல அழைத்தோம். எடுத்து சொல்ல வரவில்லை.\nதொழிலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது நிர்வாகம். தொடர்ந்து நடத்தியதால், மூடி சீல் வைக்கப்பட்டது மாலை நாலு மணியளவில். பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்.\nஅன்றிரவே ஆரம்பித்தன பிரச்சனைகள். சீலிட்ட வீட்டிற்குள் இறக்கி விடப்பட்டனர் இரு நபர்கள். தணிந்த வீடுகள் தொடர்ந்து இருந்ததால், பூட்டிய வீட்டிற்குள் புகுந்துவிட்ட புண்ணியவான்கள். அத்தனை பேரிடமும் அவசரமாய் சொன்னார்கள்-ஆளிருந்த வீட்டை சீலிட்டுவிட்டதாக.\nகாவல் துறை உதவியுடன், கயவர்களை, சீலுடைத்து வெளியேற்றினோம், இரவு மணி ஒன்றானது. இதற்குள் ஆயிரம் மிரட்டல்கள்.இன்ன பிற. திறந்து விட்டு ஆட்களை வெளியேற்றி, மீண்டும் சீல் வைத்தோம்.\nஎல்லாரும் எந்னாவோ எழுதும்போது நீங்கள் எழுதுவது ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. உணவு தயாரிப்பில் நேர்மையாக இருக்க மிகுந்த திறன் வேண்டும்\nவந்து வாசித்து வாக்களித்தோருக்கும், வாழ்த்தியவர்களுக்கும் மிக்க நன்றி.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்\nவலைச்சர தள இணைப்பு : புதனின் புத்திரர்கள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது\nதிண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.\nசோயா உண்போம் சோகம் தவிர்ப்போம்\nஹோட்டல் உணவே உடலுக்கு உகந்தது\nதொடரும் சோதனைகள் துரத்தும் சோகங்கள்.\nஉணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவட...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2013/08/blog-post_2746.html", "date_download": "2018-05-27T03:14:21Z", "digest": "sha1:DH7J7GDYIH3OIVQSQV3JCP52WATFJ3ON", "length": 28392, "nlines": 444, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரச...\nகாமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு...\nதமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்த...\nஅமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரண...\nபுலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரி...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பா...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எ...\nமட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விரு...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்கும...\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்\nகூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ...\nகூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வ...\nகூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிள...\nபுதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம...\nசிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்;...\nஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்\nஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு\nகரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு\nகிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி\nஎம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்...\nலயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள...\n‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான ச...\nபட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்ச...\nகிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி வி...\nமாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு\nகிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது ...\nத.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியி...\nமக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் ...\n4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அம...\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­கள...\nகிழக்கு முதலைமைச்சர் மட்டு வெபர் மைதானத்துக்கு விஜ...\nகிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய சிலர் முயல்கின்...\nஎகிப்தில் கடும் மோதல்கள் : 150 பேர் பலி : பல நகரங்...\nTNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்...\n67வது சுதந்திர தினம், நாளை\nசமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகி...\nகூத்தமைப்பின் தேர்தல் வசூல் களைகட்டுகிறது\n23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று ...\nசொந்த முயற்சியில் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா வேலை பூர்த்தியடையும் நி...\nவாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது\nகூட்டமைப்பின் குடிம்பி சண்டை கிளிநொச்சியில் அரங்கே...\nஇனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச்...\nஇன்று சிந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று சி...\nஎழுத்தாளர்களை வளர்த்தெடுத்தவர் அமரர் சிவகுருநாதன்\nஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nகோழி கூவி பொழுது விடிவதில்லை\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்...\nஅமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தேரோட்டம்\nஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி\nகுடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்\nஅக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விப...\nகிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களி...\nகப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பல...\nமுன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் வ...\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nவடக்கில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தாம் அதிக விருப்பு வாக் குகளைப் பெறுவதற்காக தமக்கிடையே கோஷ்டி மோதல் களில் உக்கிரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. ஒருவர் ஒட்டும் போஸ்டருக்கு மேலாக உடனே அடுத்தவர் வந்து தமது போஸ்டர் களை ஒட்டி தமக்கிடையே கைகல ப்பிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதைப் பரவலாக அவதா னிக்க முடிகிறது. இதில் அதிகமாக தமிழரசுக் கட்சியினரின் வேட்பாளர்களே ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனிடையே கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளிடையேயும் பாரிய போட்டி நிலவுவதைக் காண முடிகிறது. வேட்பாளர் தெரிவில் புறக்கணித்தமை, சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் கனடா விஜயம் தொடர்பாக எழுந்துள்ள நிதிச் சர்ச்சைகள் தொடர்பாக சுரேஷ் பிரமச்சந்திரன் தனது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார்.\nதனது அணி வேட்பாளர்கள் தோற்றாலும் பரவாயில்லை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி அடைய வேண்டும் என்பதில் இவர் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாகத் தெரிய வருகிறது. அதேபோன்று கூட்டணிக் கட்சிகளின தலைவர்களான ஆனந்தசங்கரி, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும் தமது எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டாது தமது வேட்பாளர்கள் மூலமாகச் சாதித்து வருகின்றனர்.\nஇதேவேளை வீரவசனங்களுடன் தனது பிரசாரத்தை ஆரம்பித்த கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் கூட்டுக் கட்சிகளின் உக்கிரமான உட்பூசல் நிலை காரணமாக தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டாது அலுவலகத்திலேயே முடங்கிக் கிடப்பதாகத் தெரியவருகிறது.\nமாவை சேனாதிராஜாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் வடமாகாண உள்ளூர் தலைவர்கள் பலருக்கும் விக்கினேஸ்வரனின் வருகை இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஒன்றாகவே இருந்து வருகிறது.\nஅத்துடன் மாவை சேனாதிராஜாவும் வெளியே நட்பைக் காட்டினாலும் உள்ளே தனக் கேற்பட்ட அவமானத்தை மறந்துவிடாதவரா கவே செயற்பட்டு வருகிறார். இதனை அவரது இரண்டு தேர்தல் பிரசாரக் கூட்ட உரைகளிலிருந்து தெளிவாகக் காண முடிகிறது.\nபட்டம் பதவிக்காக கட்சியின் கொள்கைகளையும் இதுவரை காலமும் கட்டிக் காத்து வந்த ஒற்றுமையையும் சீர்குலைத்துள்ள தமது தமிழ்த் தலைவர்களது நிலை கண்டு தமிழ் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளதுடன் அரசாங்கக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கவும் முற்பட்டுள்ளனர். அதன் காரண மாகவே ஆளுங்கூட்டணி வேட்பாளர்களது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் திரண்டு வருகை தருவதைக் காணமுடிகிறது.\nமாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரச...\nகாமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு...\nதமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்த...\nஅமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரண...\nபுலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரி...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பா...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எ...\nமட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விரு...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்கும...\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்\nகூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ...\nகூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வ...\nகூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிள...\nபுதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம...\nசிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்;...\nஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்\nஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு\nகரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு\nகிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி\nஎம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்...\nலயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள...\n‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான ச...\nபட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்ச...\nகிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி வி...\nமாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு\nகிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது ...\nத.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியி...\nமக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் ...\n4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அம...\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­கள...\nகிழக்கு முதலைமைச்சர் மட்டு வெபர் மைதானத்துக்கு விஜ...\nகிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய சிலர் முயல்கின்...\nஎகிப்தில் கடும் மோதல்கள் : 150 பேர் பலி : பல நகரங்...\nTNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்...\n67வது சுதந்திர தினம், நாளை\nசமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகி...\nகூத்தமைப்பின் தேர்தல் வசூல் களைகட்டுகிறது\n23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று ...\nசொந்த முயற்சியில் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா வேலை பூர்த்தியடையும் நி...\nவாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது\nகூட்டமைப்பின் குடிம்பி சண்டை கிளிநொச்சியில் அரங்கே...\nஇனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச்...\nஇன்று சிந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று சி...\nஎழுத்தாளர்களை வளர்த்தெடுத்தவர் அமரர் சிவகுருநாதன்\nஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nகோழி கூவி பொழுது விடிவதில்லை\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்...\nஅமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தேரோட்டம்\nஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி\nகுடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்\nஅக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விப...\nகிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களி...\nகப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பல...\nமுன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ibctamil.com/srilanka/80/100607", "date_download": "2018-05-27T03:03:16Z", "digest": "sha1:LHXY7PTYH7OTF2QO2MEDFKQCISDG2H2X", "length": 10775, "nlines": 105, "source_domain": "ibctamil.com", "title": "தமிழகத்திலிருந்து கடல்வழியாக தாயகம் திரும்பிய குடும்பம் கைது! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக தாயகம் திரும்பிய குடும்பம் கைது\nதமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து கடல் மார்க்கமாக தாயகம் திரும்பிய சகோதரன், சகோதரி மற்றும் சகோதரியின் பிள்ளைகள் உள்ளிட்ட நான்கு பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nமேலும் அவர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்த படகோட்டிகள் இருவரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவர்களை காங்கேசன்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினர் கைது கைது செய்துள்ளனர்.\nதிருகோணமலையைச் சேர்ந்த குடும்பமே இதில் கைதாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகுறித்த குடும்பம், கடந்த 2006ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக கடல்வழியாக தமிழகம் சென்றுள்ளதுடன் பன்னிரெண்டு வருடங்களாக தமிழக இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளனர்.\nஇவர்கள் வசித்த அகதி முகாமில் போதிய வசதிகள் இன்மை மற்றும் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதிலுள்ள இடர்பாடுகளால் இவர்கள் கடல் வழியாக சட்டவிரோமான முறையில் நாடு திரும்பியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை இந்த ஆறு பேரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்தனர்.\nதமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து கடல் மார்க்கமாக தாயகம் திரும்பிய சகோதரன், சகோதரி மற்றும் சகோதரியின் பிள்ளைகள் இருவர் என 4 பேரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர்.\nஅவர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்த மாதகலைச் சேர்ந்த படகோட்டிகள் இருவரும் வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nதமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய குழந்தைகள் உட்பட நால்வரை காங்கேசன்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று (16) அதிகாலை கடற்படையினர் கைது செய்தனர்.\nகைதான 6 பேரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட நால்வரையும் விடுவித்த நீதிவான் கருணாகரன், படகோட்டிகள் இருவரையும் வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/world/04/161191", "date_download": "2018-05-27T03:06:37Z", "digest": "sha1:FQSO2W6SAJTIHU6R2YL55N4VMCITO32F", "length": 7778, "nlines": 63, "source_domain": "canadamirror.com", "title": "செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட கார், பாதையில் இருந்து விலகி வேறு திசையில் சென்றது. - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nசெவ்வாய்க்கு அனுப்பப்பட்ட கார், பாதையில் இருந்து விலகி வேறு திசையில் சென்றது.\nஅமெரிக்காவில் இருந்து பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட டெஸ்லா கார், அதன் பாதையில் இருந்து ஆஸ்டீராய்டு பெல்ட் பகுதிக்கு சென்றுகொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவில் புளோரிடா மாகாணம், கேப் கேனவரலில் அமைந்து உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் ஹெவி’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு நிற டெஸ்லா காரை சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.\nஅந்த கார், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையேயான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 6 மாதங்களில் செவ்வாய்க்கு அருகே செல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.\nஆனால் அதிக உந்து சக்தி காரணமாக அந்த கார் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தடத்தை கடந்து அதிக தூரம் சென்று விட்டது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் சென்ற அந்த கார், தற்போது விண்வெளியில் மிகவும் தூரமான ஆஸ்டீராய்ட் பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறது.\nஇந்த தகவலை எலோன் மஸ்க், டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.\nஅமெ­ரிக்க நேரப்­படி செவ்வாய் பிற்­பகல் 3.45 மணிக்குஇந்த ரொக்கெட் ஏவப்­பட்டது.\nவழ­மை­யாக சோத­னை­யாக ஏவப்­படும் ரொக்­கெட்­டு­களில் சரக்குப் பகு­தியில் கொங்­கிறீட், இரும்பு போன்ற பொருட்­களே வைக்­கப்­பட்­டி­ருக்கும்.\nஆனால், ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வ­னத்தின் ஸ்தாப­கரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான இலோன் மஸ்குக்கு இது அலுப்­பூட்தியதால்,\nடெஸ்லா நிறு­வ­னத்தின் Tesla Roadster (ரோட்ஸ்டெர்) ரக காரை மேற்­படி ரொக்­கெட்டின் சரக்குப் பகு­தியில் இணைத்து விண்­வெ­ளிக்கு அனுப்பினார் இலோன் மஸ்க்.\nசிவப்புக் கிர­கத்தை நோக்கி சிவப்பு கார் அனுப்­பப்­ப­டு­வ­தாகவும், இந்தக் கார் ஏவப்­ப­டும்­போது வெடித்துச் சித­றா­விட்டால் பல பில்­லியன் வரு­டங்கள் விண்­வெ­ளியில் வலம் வரும் என இலோன் மஸ்க் தெரிவித்து இருந்த நிலையில், செவ்வாய் சென்ற கார் அதன் பாதையில் இருந்து ஆஸ்டீராய்டு பெல்ட் பகுதிக்கு சென்றுகொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/12/1_17.html", "date_download": "2018-05-27T03:29:43Z", "digest": "sha1:KQZCU5C4L2C35BWMMYDJ3M2PYAXFBBSU", "length": 15107, "nlines": 131, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: +1 தேர்வில் நபிகள் பெயர் பிழையாக அச்சடிப்பு !மாணவர்கள் ஆவேசம் !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\n+1 தேர்வில் நபிகள் பெயர் பிழையாக அச்சடிப்பு \nராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 அரையாண்டு தேர்வு தமிழ் முதல் வினாத்தாளில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என இருந்ததால், பெரியபட்டினத்தில் முஸ்லிம் அமைப்பு மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் 18வது கேள்வியில் \"அபூபக்கருடைய அன்பின் ஆற்றலும், நரிகள் நஞ்சு தீர்த்து அருளியதும்' என்ற கேள்வி இடம் பெற்றது. இதில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என பிழையாக இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சிக்கும் ஆவேசத்துக்குள்ளாகினர்.\nபெரியபட்டினம் பி.எப்.ஐ., நகர் தலைவர் முகம்மது சலீம், மாவட்ட செயலாளர் அசன் அலி, எஸ்.டி.பி.ஐ.,தொகுதி தலைவர் பைரோஸ் கான் மற்றும் ஏராளமானோர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.\nஅங்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் தமிழாசிரியர் முருகனிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.\nஎஸ்.டி.பி.ஐ., தொகுதி செயலாளர் பைரோஸ் கான் கூறியதாவது:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், வரலாற்று சம்பவங்களை திரித்துக் கூறும் விதமாகவும் கேள்வி அமைந்துள்ளது. துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nமுதன்மை கல்வி அலுவலர் செல்லம் கூறியதாவது: அச்சுப்பிழையால் இந்த தவறு நேர்ந்தது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி தவறை சரி செய்ய கூறியிருந்தோம். இதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.\nஇதற்கெல்லாம் முஸ்லிம் அசிரியர்கள் இல்லாததற்கு சாட்சி \nஅரசு துறையில் என்று கால் பதிகிரோமோ அன்று தான் இது போன்ற எத்தனையோ சமுக பிரச்சனைக்கு தீர்வு \nஅல்லது மிண்டும் உறங்குமா என்று பார்போம் \nஎது எதற்கோ உங்கள் கண்டனத்தையும் , கருத்தையும் பதிவு செய்யும் மக்களே \nஇதற்கு மட்டும் எங்கே போனீர்கள் \nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை குப்பை கிடங்கை சுற்றுலா தலமாக்குவோம் \nநகராட்சி கமிஷனர் இல்லாத கீழக்கரை நகராட்சி \nபுது கிழக்கு தெருவில் புதிய சங்கம் உதயம் \nதாசிம் பீவி கல்லூரி பிரம்மாண்ட விழாவில் விஜய் டிவி...\nதாசிம் பீவி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு விழா ம...\nகீழக்கரையில் அடமானம் என்ற பெயரில் வீடு மற்றும் சொத...\n(டிச28 புதன்)இலவச மருத்துவ முகாம்\nகீழக்கரை ஹமீதியா பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா\nகீழக்கரை கடற்கரையில் திடீர் சுவைமிகு குடிநீர் ஊற்ற...\n\"கீழை இளையவன்\" என்ற பெயரில் புதிய வலைதளம் \nகீழக்கரையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை \nதமுமுக மற்றும் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற‌ இலவச ...\nகீழக்கரையில் ஏழு ஆட்டோக்கள் பறிமுதல் \nகீழக்கரை சாலைகளில் உறிஞ்சும் குழாய்கள் மூலம் கழிவு...\nகீழக்கரையில் பொது மக்களிடம் வாஷிங் மெஷின் தருவதாக ...\nகீழக்கரையில் (டிச29 வியாழன்) மூன் டிவி சார்பில் மற...\nகீழக்கரையில் 23டிசம்பர் வெள்ளியன்று இஸ்லாமிய கருத்...\nகீழ‌க்க‌ரை பகுதி க‌டலில் பாம்புக‌ள் \nகீழ‌க்க‌ரையில் மீன் ப‌த‌னிடும் நிலைய‌ம்\nநிலத்திற்கான அரசின் மதிப்பீடு மறுபரிசீலனை\nஇலவச மிக்ஸி,கிரைண்டர் வழங்கும் விழா \nதமுமுக கீழக்கரை நகர் புதிய நிர்வாகிகள் தேர்வு \nகீழக்கரை முழுவதும் புகைபோக்கி இய‌ந்திர‌ம் மூல‌ம் க...\n+1 தேர்வில் நபிகள் பெயர் பிழையாக அச்சடிப்பு \nகீழக்கரை சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் நக...\nகீழக்கரை அரசு தலைமை மருத்துவரின் நடவடிக்கையால் நோய...\nகீழக்கரை - ஏர்வாடி சாலைகளில் தள்ளப்படும் மனநோயாளிக...\nகண்ணாடிகள் கவனம்., M அப்துல் ரஹ்மான் M.P.\nகைராத்துல் ஜலாலியா பள்ளி அருகே சுகாதார கேடு \nநகராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு \nதாசிம் பீவி கல்லூரிக்கு மலேசியாவின் சரவாக் முதல்வர...\nகீழக்கரையில் மலேசியாவின் சராவ‌க் மாநி...\nகீழக்கரை நகராட்சி சேர்ம‌ன் என்ற பெயரில் புதிய வலைத...\n1வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் ப...\nராமேஸ்வரம் - மதுரை பகல் நேர ரயில்கள் இயக்க கோரிக்க...\nகீழக்கரையில் பிப்ரவரி 2 முதல் பிளாஸ்டிக் பை,கப்களு...\nகீழக்கரை அலவாய்கரைவாடியில் தீ விபத்து \nரோட்டரி சங்கத்தின் இலவச மருத்துவ முகாமில் 300பேர் ...\nகீழக்கரையில் நகராட்சி துணை தலைவர் அலுவலகம் திறப்பு...\nபோலீஸ் பொதுமக்கள் சார்பில் விளையாட்டு போட்டி \nநகராட்சி தலைவரின் விரைவான செயல்பாடு \nராமநாத‌புர‌ம் ர‌யில்வே கேட் அகற்றி புதிய மேம்பாலம்...\nகீழக்கரை குப்பை பிரச்சனை முடிவுக்கு வருகிறது \nபெற்றோர்களுடன் கல்வி ஆலோசனை கூட்டம் \nகீழக்கரை முழுவதும் கழிவுநீர் வாய்கால் துப்புரவு பண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2014/11/", "date_download": "2018-05-27T03:12:13Z", "digest": "sha1:45ZA5RWTTCYTWO7PEJLSPSFLMIM6LPXG", "length": 7616, "nlines": 168, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: November 2014", "raw_content": "வியாழன், 27 நவம்பர், 2014\nகப்பலை அலை மேல் செலுத்துகிறது\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 8:37 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 நவம்பர், 2014\nகண்ணுக்குத் தெரிகின்ற ஒளி மின்னல்கள்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 10:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 நவம்பர், 2014\nயாவும் தந்ததிந்த தீயும் காற்றும்: Everything created by Air & Fire dust.\nமனதில் சுடர் ஏற்றி நிற்பாய்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:14 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 6 நவம்பர், 2014\nஅநியாயத்துக்காக துருப் பிடித்த கத்தி\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 10:18 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nயாவும் தந்ததிந்த தீயும் காற்றும்: Everything creat...\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://veeduthirumbal.blogspot.com/2016/02/", "date_download": "2018-05-27T03:12:17Z", "digest": "sha1:F64AOVDVUDIWMXW7CVYW3AGKNBFVYYYQ", "length": 27321, "nlines": 303, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: February 2016", "raw_content": "\nசேதுபதி & மிருதன் : விமர்சனம்\n90 களில் சேதுபதி ஐ. பி. எஸ் என்றொரு விஜயகாந்த் படம் - ஏவியெம் தயாரிப்பில் வந்தது. இப்போது 2016 ல் - விஜய்சேதுபதி நடிப்பில்..\nதீயவர்களை ஒடுக்கும் நல்ல போலிஸ் கதை தான்.. ஆனால் ட்ரீட் மேன்ட்டில் சற்று வித்யாசம் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக - போலிஸ் குடும்பம் பற்றி படங்கள் அதிகம் பேசுவதில்லை (தங்க பதக்கம் போன்ற ஒரு சில படங்கள் தவிர்த்து) ரம்யா நம்பீசன் என்ற அழகிய மனைவி - மற்றும் குழந்தைகளுடனான ஹீரோவின் பாசம் - முக்கிய அம்சமாக படம் நெடுகிலும் வருகிறது..\nபோலிஸ் ஹீரோ - வில்லனை பிடிக்க போய் ஒரு பெரும் பிரச்சனைக்குள் சிக்கி கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது - த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்துள்ளனர்.\nவிஜய் சேதுபதி கெட் அப், அன்பு, ரொமான்ஸ் எல்லாம் ஓகே ; நடையில் தான் (சினிமா) போலீஸ்க்கான கம்பீரம் மிஸ்ஸிங்.\n செமையாய் வெயிட் போட்டு எல்லா பக்கமும் ஒரே அளவில் இருக்கிறார்..\nபடத்தில் நான்கைந்து சுவாரஸ்ய - கைதட்டல் வாங்கும் சீன்கள் உண்டு.\nகுறிப்பாக \"நான் யாரு\" பாடல் முதன் முறை வில்லனுக்கு பின்னணியில் - அவர் பாத்திரத்தை establish செய்ய ஒலிக்கிறது. அதே பாட்டு பின் ஹீரோவிற்கு ஒலிக்கும்போது காட்சிகள் பட்டாசு.\nசேதுபதி - அவுட் ஸ்டாண்டிங் அல்ல.. பாஸ் மார்க் \nஆங்கிலத்தில் \"சோம்பி\"யை பின்னணியாக கொண்ட பல படங்கள் வந்துள்ளனவாம். (நான் கண்டதில்லை) ; தமிழுக்கு இது புதுசு.\nசோம்பி கதையில் - அண்ணன்- தங்கச்சி செண்டிமெண்ட்- காதல் மேட்டர் எல்லாம் நுழைத்துள்ளனர் (தமிழ் என்று வந்தபின் இவற்றை செய்து தானே ஆகணும் \nவழக்கமான கதையின்றி - ஒரு வித்யாசமான முயற்சிக்கு பாராட்டு... குறிப்பாக குறைந்த அளவு செலவு மற்றும் தொழில் நுட்பத்தில் படம் முழுதும் எடுத்துள்ளது பாராட்டுக்குறியது.\nஆனால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் எத்தனை பேர் சாகிறார்கள் என போட்டியே வைக்கலாம். அந்த அளவு தீபாவளி துப்பாக்கி போல ஜெயம் ரவி சுட்டு தள்ளி கொண்டே இருப்பது ஆயாசமாக இருக்கிறது.\nதங்கைக்காக ரிஸ்க் எடுப்பது ஓகே; ஒரு தலையாய் காதலிக்கும், - யாரோ ஒருவனை மணக்க நிச்சயமான பெண்ணுக்காக - ஒரு மனிதன் உயிரையே தருவாரா என்ன \nபடம் மாஸ் ஹிட் ஆனால் இன்னொரு பாகம் எடுக்கலாம் என்கிற ஆசையுடன் இரண்டாம் பாகத்திற்கு கொக்கி போட்டு முடிக்கிறார்கள்.\nமிருதன் - வித்யாச படம் விரும்புவோருக்கு மட்டும் \nவிசாரணை -தமிழின் இரண்டாவது மிகச்சிறந்த படமா \nட்ரைலர்- மற்றும் பிற விமர்சனங்கள் மூலம் இந்நேரம் கதை பலருக்கும் தெரிந்திருக்கும்\nசந்தேக கேசில் அழைத்து செல்லப்படும் 4 இளைஞர்கள் - துன்புறுத்தி குற்றத்தை ஒப்பு கொள்ள சொல்கிறது ஆந்திர காவல் துறை.. ஒருவழியாய் அதில் தப்பி தமிழக காவல் துறை வசம் வருகிறார்கள் ...\nபிற்பகுதியில் இன்னுமொரு குற்றம் - இன்னொரு விசாரணை - சில்லிட வைக்கும் கிளைமாக்ஸ் ...\n3 உண்மை சம்பவங்களை அடிப்படையாய் வைத்து கதை நகர்கிறது\nமுதலாவது சந்திர குமார் என்கிற ஆட்டோ ஓட்டுனர் - தன் வாழ்வில் நடந்ததை எழுதிய \"லாக் அப்\" அனுபவம்..\nஇரண்டாவது - ஆடிட்டர் ஒருவர் விசாரணையின் போது \"தற்கொலை\" செய்து கொண்ட நிகழ்வு..\nஇறுதியாக நாம் கேள்விப்படும் ATM என்கவுன்ட்டர்கள்..\nவிசாரணையின் போது போலிஸ் கொடுக்கும் டார்ச்சர், ஸ்டேஷனில் நிகழும் மரணம் (கஸ்டடியல் டெத்) & என்கவுன்ட்டர் என 3 வித கொடூரங்களை படம் தொட்டு செல்கிறது.\nமுதல் பகுதியில் நால்வரும் வாங்கும் அடிகள்.. நிச்சயம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க அஞ்சுவர்.\nமுதல் பகுதியில் போலிஸ் டார்ச்சருக்கு உள்ளாவோர் ஏழைகள்.. அன்றாடங் காய்ச்சிகள். முகவரி இல்லாமல் பூங்காவில் உறங்குபவர்கள்.. இரண்டாம் பகுதியில் மிக பெரும் ஆடிட்டர் டார்ச்சருக்கு ஆளாகிறார்.. ஏழைகள் மட்டுமல்ல, ஆட்சியில் இருப்போருக்கு எதிர் பக்கம் என்றால் - பணம் உள்ளோருக்கும் இந்நிலை நிகழலாம் என்கிற உண்மையை சொல்லாமல் சொல்கிறது திரைக்கதை.\nவிமர்சனத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.. இப்படத்தில் வில்லன் - காட்டப்படவே இல்லை; கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகார மையம் - அவர்கள் தான் போலிசை ஆட்டி படிக்கிறார்கள் என்று.. மிக சரியான பார்வை அது \nதினேஷ், சமுத்திரகனி, கிஷோர் மூவர் நடிப்பும் வெகு இயல்பு, சின்ன சின்ன பாத்திரங்களில் வருவோரும் கூட திறமையான நடிப்பை வெளிக்காட்டுகிறார்கள் ..\nநல்ல விஷயங்களை கூறியாயிற்று.. இனி மற்றவை..\nஇப்படத்திற்கு விகடனில் 61 மார்க் தந்திருந்தனர். இது 16 வயதினிலே விற்கு பிறகு மிக அதிக மார்க் வாங்கிய படமாம் \nநிச்சயம் சரியில்லை என்றே நம்புகிறேன். தமிழில் கடந்த 40-45 ஆண்டுகளில் வந்த படங்களில் இது இரண்டாவது சிறந்த படமென நிச்சயம் நான் கருதவில்லை. விகடன் போடும் மார்க் வரிசையில் 50 மார்க் வாங்க வேண்டிய படமிது.. விஜய் டிவி நடுவர்கள் போல விகடனும் இப்படி சில நேரங்களில் புரியாத புதிராகி விடும்...\nபாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்திற்கு விகடன் 50 மார்க் தந்த நினைவு.. அந்த வரிசையில் - அதே போன்ற தரத்தில் - அதே அளவு மார்க் பெற வேண்டிய படம் தான் விசாரணை..\nவிசாரணை - நல்ல படம் பார்க்க எண்ணுவோர் காண்க \nஇறுதிசுற்று-பூலோகம்- ஈட்டி- தற்காப்பு- கதகளி சினிமா விமர்சனங்கள்\nஇறுதிசுற்று-பூலோகம்- ஈட்டி- தற்காப்பு- கதகளி சினிமா விமர்சனங்கள்\nமையக்கதை - சக் தே இந்தியா (ஹிந்தி) யை ஒட்டியது தான்.. காதல் பரிமாணமும், தனி நபர் விளையாட்டும் தான் வித்யாசம்...\nநிச்சயம் ஒரு ரசிக்கத்தக்க முயற்சி..\nமிக முக்கிய காரணம் மாதவன் மற்றும் ரித்திகா மாதவன் பாத்திர படைப்பு.. அட்டகாசம் மாதவன் பாத்திர படைப்பு.. அட்டகாசம் மனிதர் அலட்டிக்கொள்ளாமல் அற்புதமாய் செய்துள்ளார்..\n நிஜ குத்து சண்டை பெண்ணை ஹீரோயின் ஆக்கியதில் உள்ளது இயக்குனரின் சாமர்த்தியம். கிளைமாக்சில் ரித்திகா வில்லனை உதைப்பதும், மாதவன் மீது தாவி ஏறுவதும் அமர்க்களம் படம் முழுவதும் ரசிக்கும் படி பெர்பார்ம் செய்துள்ளார் (தொடர்ந்து நடிப்பாரா படம் முழுவதும் ரசிக்கும் படி பெர்பார்ம் செய்துள்ளார் (தொடர்ந்து நடிப்பாரா\nநாசர் மற்றும் ராதா ரவி நிறைவு.\nவிளையாட்டு குறித்த எல்லா படங்களும் அதில் உள்ள பாலிடிக்ஸ் பற்றி சொல்லத் தவறுவதில்லை.. (சொல்லாமல் இருக்க முடியாது தான்.. விளையாட்டில் பாலிடிக்ஸ் நீக்கமற நிறைந்திருப்பதால் \nரித்திகா மற்றும் அவர் அக்கா -இடையே உள்ள உறவை - இயக்குனர் - பெண்ணாக இருப்பதால் ரொம்ப அருமையாக கையாண்டுள்ளார்.\nஅழகான பீல் குட் மூவி.. நல்ல சினிமா விரும்பி பார்க்கும் ரசிகர்கள் அவசியம் காணலாம் \nகுத்து சண்டை குறித்து அண்மையில் வெளியான இன்னொரு படம்.. இதுவும் கூட வட சென்னை பின்னணியே \nமீடியாவை ரவுண்டு கட்டி அடிக்கும் திரைக்கதை - சென்சேஷன் தேடி எப்பவும் அலையும் விஜய் டிவி பற்றி சொல்கிறார்களோ என்று நினைக்க வைத்தது.\nஜெயம் ரவி - கடும் உழைப்பு மற்றும் Apt performance (இருப்பினும் விகடனில் இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது தந்ததில் எனக்கு உடன் பாடில்லை.. )\nஜன நாதன் படங்களில் இருக்கும் கம்மியூநிசம் இதிலும் உண்டு..\nதேவையற்ற காட்சிகள் ஏதுமின்றி - கதை நேர் கோட்டில் பயணிக்கிறது..\nபாடல்கள் நன்றாய் இருந்திருந்தால் படம் இன்னும் பெரிதாய் பேசப்பட்டிருக்கும்...\nநேரமிருப்பின் ஒரு முறை கண்டு களிக்கலாம் \nவழக்கமான பழிவாங்கல் கதை தான் - திரைக்கதை மற்றும் முடிவில் மட்டும் சின்ன வித்யாசம்..\nபடம் துவங்கி கொஞ்ச நேரத்தில் வில்லன் இறக்க, அவரை கொன்றது யார் என்று நகர்கிறது படம் ..\n2 மணி நேரம் தான் ரன்னிங் டைம் ; ஆனால் முக்கால் வாசி படம் ஒரே நாளில் நடப்பதால், எதோ 4 மணி நேரம் ஓடுகிற மாதிரி ஒரு பீலிங்..\nமிக பெரிய ஆறுதல்.. ஹீரோயின் கேத்ரினா தெரசா.. அம்மணி சற்று பூசினார் போல் இருந்தாலும், முக பாவம் மற்றும் நடிப்பு - கியூட்.\nசில மாதங்களுக்கு முன்பு பார்த்த படம். இருப்பினும் நீங்கள் தவற விடாமல் பார்க்க வேண்டும் என்பதால் எழுதுகிறேன்\nஇன்னொரு ஸ்போர்ட்ஸ் கதை.. நிச்சயம் வித்யாசமான பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது..\nகுறிப்பாக ஹீரோவுக்கு - சின்னதாக அடிபட்டு ரத்தம் வந்தாலே - நிற்காது என்கிற விஷயம்..\nஅதர்வா சிக்ஸ் பேக்கில் மிரட்டுகிறார். அவரின் கடும் உழைப்பு + Dedication படம் முழுதும் தெரிகிறது. மறைந்த நடிகர் முரளியின் மகன் அவருக்கு பெருமை சேர்க்கும் படி வளர்ந்து வருவது மகிழ்ச்சி தருகிறது.\nஸ்ரீ திவ்யா - அழகு..\nரசிக்கத்தக்க ஒரு படம்.. இது வரை காணாவிடில் நிச்சயம் பாருங்கள்.. \nஆரம்பத்தில் நல்ல கதைப்பா; கொஞ்சம் வித்யாசமா முயற்சி பண்ணிருக்காங்கன்னு தோணுச்சு. போக போக, அதுவும் படம் முடியும்போது .. ரணகளம் \nஹீரோ -வில்லன்- தெருவில போறவன், வர்றவன், ஒரே சீன் வந்தவன் இப்படி எல்லாரையும் போட்டு தள்றாங்க கிளை மாக்சில்.. படம் புடிச்ச ஒளிப்பதிவாளராவது உயிர் புழைச்சாரான்னு தெரியலை..\nவிசாரணை -தமிழின் இரண்டாவது மிகச்சிறந்த படமா \nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nசேதுபதி & மிருதன் : விமர்சனம்\nவிசாரணை -தமிழின் இரண்டாவது மிகச்சிறந்த படமா \nஇறுதிசுற்று-பூலோகம்- ஈட்டி- தற்காப்பு- கதகளி சினிம...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nவேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு பார்வை\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2003/05/", "date_download": "2018-05-27T02:59:48Z", "digest": "sha1:NQZWPTG5S2JN55UHLQNK6LCZF3IIQ66M", "length": 12806, "nlines": 287, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: May 2003", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதாய்லாந்து அரசு தகவல் தொடர்பு தொழில் நுட்பம் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு குறைந்த விலையில் மக்களுக்கு கணிணிகள் போய்ச் சேர ஒரு புதுமையைப் படைத்திருக்கிறது.\nThe Hindu (25/03/2003) இல், ஆனந்த் பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரையில், \"சின்சமுத்\" என்னும் desktop கணிணிகள் வெறும் ரூ. 12,000 த்துக்கும், \"சுத்சகோர்ன்\" என்னும் laptop கணிணிகள் வெறும் ரூ. 22,000 க்கும் கிடைப்பதாக செய்தி வந்துள்ளது.\nஇது இந்தியாவில் நடப்பது எந்த நாளோ\nமருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பு நிறுத்தம்\nதமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சில நாட்கள் முன்னர் படிப்பு நிறுத்தல் போராட்டம் நடத்தினர். காரணமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு அனுமதி தரவிருப்பதைக் காட்டினர். அரசு மருத்துவர்களும் இதற்கு ஆதரவு தந்தனர்.\nவிளைவு: நடுத்தர, மற்றும் அதற்குக் கீழ் உள்ள மக்களுக்குத்தான் தொல்லை.\nதனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி தருவதில் என்ன தவறு இதனால் மருத்துவப் படிப்பு வியாபர மயமாக்கப்படும், பட்டம் பெற்று வரும் மருத்துவர்கள் தரமில்லாதவர்களாக இருப்பார்கள் என்று வேலை/படிப்பு நிறுத்தம் செய்வோர் கூறுவது சிரிக்கத் தக்கது.\nதற்போது தமிழகத்தின் கல்லூரிகளில் 73,875 பொறியியல் இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் அரசுத் துணையோடு நடக்கும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் வெறும் 5,870 தான். தனியார் கல்லூரிகளின் இடங்களோ 68,005. ஆனால், மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்த மட்டில், மொத்த இடங்கள் வெறும் 1,255 மட்டுமே இதில் ஒரே ஒரு தனியார் கல்லூரிதான் அடக்கம், 320 இடங்களோடு. (தகவல்: The Hindu, 24/05/2003)\nஇந்தத் தொகை, நிச்சயமாக 10,000-த்தையாவது தாண்ட வேண்டும். அப்பொழுதுதான் தேவையான அளவிற்கு மருத்துவர்கள் மாநிலத்திற்குக் கிடைப்பார்கள். அரசினால், இத்தனை கல்லூரிகளைக் கட்ட முடியாது. தனியார் துறையினால் மட்டுமே முடியும். இப்படியிருக்க மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏன் இந்த முடிவை எதிர்க்க வேண்டும்\nதனியார் கல்லூரிகளின் தரத்தை நிச்சயிக்க வேண்டியது அதற்கான அரசின் துறைகள் மட்டுமே. படிப்பு/வேலை நிறுத்தம் செய்யும் கற்றுக்குட்டி மாணவர்களும் பொறுப்பு இல்லாத மருத்துவர்களும் அல்ல.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பு நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t43329-topic", "date_download": "2018-05-27T03:23:31Z", "digest": "sha1:TD3BYCD7CU3DGGPXEAJHW26NY4FDVB2J", "length": 13545, "nlines": 158, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஒற்றையடி பாதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nவிட்டுச் சென்ற தடயம் நான்.\nநாளொரு நீளம் நகர்ந்தேன் நான்.\nஎழுதி முடித்த இதிகாசம் நான்\nஇதயக் காற்றின் திசையே வீசுங்கள்.\nமேடு பள்ளங்கள் கண்டு துவளாதீர்\nநேற்றைய பொழுது முள் என்றால்\nநடை போட நீ வந்தால்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t51227-topic", "date_download": "2018-05-27T03:23:13Z", "digest": "sha1:6DTKEZU4XISHK6W55E6UTSIYXVHM6D22", "length": 11861, "nlines": 130, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "வண்ணப் பூவைப் பார்த்து என்ன சொன்னது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nவண்ணப் பூவைப் பார்த்து என்ன சொன்னது\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nவண்ணப் பூவைப் பார்த்து என்ன சொன்னது\nவண்டு, வண்ணப் பூவைப் பார்த்து\nகாற்று, பூவைச் சிரிக்க வைத்து\nகரையை நோக்கி அலை விரைந்து\n அது போல் நன்றி நீயும்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ibctamil.com/srilanka/80/100608", "date_download": "2018-05-27T03:02:07Z", "digest": "sha1:KDT3VRWQRDO266WRV3U3JWJR2F2Q3TW6", "length": 8207, "nlines": 98, "source_domain": "ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவின் தெற்கே வேகமாகப் பரவிவரும் வைரஸ் காய்ச்சல்! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nஸ்ரீலங்காவின் தெற்கே வேகமாகப் பரவிவரும் வைரஸ் காய்ச்சல்\nஸ்ரீலங்காவின் தென் மாகாணத்தில் ஒருவித வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதாக சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nகுறித்த பகுதியில் ஒருவித காய்ச்சல் வேகமாகப் பரவிவந்தமையையடுத்து மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவானது. இந்த நிலையில் குறித்த காய்ச்சலுக்கு காரணம் ஒருவித வைரஸ் தொற்றே என உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.\nஇதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,\n”இந்த நிலைமைக்குத் தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருகிறது. சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார்.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/05/12015353/Australian-Open-BadmintonIndian-players-at-the-end.vpf", "date_download": "2018-05-27T03:16:02Z", "digest": "sha1:TYUGJFHNGM6BHLX3F3PATUUWJDN3FWN2", "length": 8406, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Open Badminton: Indian players at the end of the quarter failed || ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய வீரர்கள் தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய வீரர்கள் தோல்வி\nஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 14–21, 6–21 என்ற நேர்செட்டில் சீனா வீரர் லூ குவான்சூவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.\nஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 14–21, 6–21 என்ற நேர்செட்டில் சீனா வீரர் லூ குவான்சூவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–23, 13–21 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் லீ செக் யூவிடம் தோல்வி அடைந்து நடையை கட்டினார். இந்த ஆட்டம் 42 நிமிடம் நீடித்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி 17–21, 21–19, 21–18 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த அர்ஜூன்–ராம்சந்திரன் ஷ்லோக் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. ஒலிம்பிக் சிறப்பு பயிற்சித் திட்டம்: சானியா மிர்ஸா விடுவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=1927", "date_download": "2018-05-27T03:01:12Z", "digest": "sha1:J2FUL5IJ4AP2Q54ZOYXLETUKN47ZCODB", "length": 16371, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "உலகைச் சுற்றும் பெட்டிகள்- வி.பி.ஹரிஸ், விட்கோ.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉலகைச் சுற்றும் பெட்டிகள்- வி.பி.ஹரிஸ், விட்கோ.\n''எங்களுக்குப் பூர்வீகம் கேரளா. ஆனால், சென்னையில் தொழில் தொடங்கினால் விற்பனை நன்றாக இருக்கும் என்று நினைத்து, பாரிமுனையில் 1951-ல் தொழிலைத் தொடங்கினோம். இன்று பெங்களூரு, கொச்சி, கொல்கத்தா என்று இந்தியா முழுக்க ஷோரூம்கள் வைத்துள்ளோம்.\nஅப்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மக்களிடம் இருந்த வரவேற்பைப் பார்த்து பிளாஸ்டிக் பொருட்களுக்கான மொத்த விற்பனையாளராக இருந்தோம். நிறுவனத்தின் வளர்ச்சியும், பெயரும் நிலைபெறத் தொடங்கியது இந்த காலகட்டத்தில்தான். குறிப்பாக, டிராவல் பேக்குகள், பெட்டிகள் போன்றவற்றில் தனி அடையாளம் எங்களுக்குக் கிடைத்தது. மற்ற விற்பனையாளர்கள் வெளியிலிருந்து பெட்டிகளை வாங்கி பெயரை மட்டும் மாற்றி விற்பனை செய்த நேரத்தில் நாங்களே உற்பத்திச் செய்தோம். இதுதான் எங்களுக்கு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது.\nஆனால், தொழில் போட்டிகளையும் வாடிக்கையாளர் தேவைகளையும் அறிந்து செயல்படுவது எங்களுக்குச் சவாலாக இருந்தது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை நான் ஏற்றேன்.\nஒரே மாதிரியான வடிவத்தில் பெட்டிகளை தராமல், வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப பல்வேறு வடிவங்களில் தந்தோம். அப்படி நாங்கள் தயாரித்து தந்த 'வீல்’ வைத்த பெட்டிகள் எங்களுக்குத் தனி அடையாளத்தைத் தந்தது.\nஎங்களுக்கு அடுத்தகட்ட நெருக்கடியாக அமைந்தது வெளிநாட்டு பிராண்டுகளின் வரவு. அந்த போட்டியைச் சமாளிக்க சில்லறை விற்பனையில் இறங்கினோம். அதற்கான ஷோரூமை பாரிஸில் தொடங்கி, மொத்த விற்பனைக் கடையில் இருந்த அனைத்து சூட்கேஸுகளையும் கொண்டு வந்து காட்சிக்கு வைத்தோம்.\nஅடுத்த கட்டமாக, அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்ததால் பிளாஸ்டிக் பெட்டிகளின் உற்பத்தியைக் குறைத்து, சில வெளிநாட்டு பிராண்டுகளையும் எங்கள் ஷோரூம்களில் விற்பனை செய்யத் தொடங்கினோம்.\nஇதனால் எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். என்னதான் பாரம்பரிய நிறுவனமாக இருந்தாலும் சில்லறை விற்பனையில் தரத்திற்கும், வாடிக்கையாளர் சேவைக்கும் ஏற்பவே வளர்ச்சி இருக்கும் என்பதை அறிந்து, அதையே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறோம். அடுத்து, ஷாப்பிங் மால்களிலும் ஷோரூமை தொடங்கிவிடுவோம்.\nஒவ்வொருவரது கையில் இருக்கும் பெட்டிகளும் எங்கள் நிறுவனத்தில் வாங்கப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://neo-lemurian.blogspot.com/2006/05/blog-post_14.html", "date_download": "2018-05-27T03:11:48Z", "digest": "sha1:NVTIZ6Q2HMKP6SEK7AHVEPLNCNTSW2OM", "length": 8337, "nlines": 105, "source_domain": "neo-lemurian.blogspot.com", "title": "பஃறுளி முதல் கூவம் வரை: கணக்குப் புலிகள்!", "raw_content": "பஃறுளி முதல் கூவம் வரை\nவரலாறு என்பது பழைய கதை அன்று\nதி.மு.க-வின் வெற்றியைப் பொறுக்க முடியாத 'பரம்பரைப் பகை' தொடர்ந்து விஷம் கக்கி வருவது தெரிந்ததே நம் பகைவருக்கு கணக்குச் சொல்லித் தரும் தேர்தல் அலசல் இதோ\n(சும்மா இருக்கலாம்னு பாத்தாலும் 'பகை' விடமாட்டேங்கிதேப்பா\nஞாயிறு ஹிந்துவிலே வந்த இந்த புள்ளிவிவரம் முழுச் 'செய்தியையும்' தெரிவித்துவிடவில்லை என்பது - சற்றே சிந்திக்கக் கூடிய அனைவர்க்கும் புரியத்தான் செய்யும்\nகலைஞர் மீது தாக்குதல் - சதிவேலையா\nஇட ஒதுக்கீடும், 'ரவி ஸ்ரீநிவாஸின்' கட்டுடைப்பும்\nசிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடு...\nசிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடுப்பு\nமயிலாடுதுறையில் கிடைத்த கல்வெட்டு குறித்த செய்தியை மே 1 -இலேயே ஹிந்துவில் படித்திருந்தாலும், அப்போது வலைப்பதிய இயலவில்லை. இருந்தாலும் - அத...\nஇனி எந்தத் தனி மனிதனும் தமிழினத்தின் தலைவனாக கருதிக் கொள்ள முடியாது; அந்த ஏமாற்று வேலை இனி நடக்காது. எவன் காரிருள் சூழும்போது , இனத்துக்காக...\nதூ தூ தூ தூ தூ தூ.....யவர்கள்\nதூ தூ தூ தூ தூ தூயவர்கள் சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள் சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள் போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது\nதமிழ்நதியின் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் புளுகு மூட்டைகள்\nதமிழ்நதி அவர்களின் வலைப்பக்கங்களில் படித்த மிக இன்றியமையா, காலத்துக்குத் தேவையான கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். முழுமையாக... இதைப் பதிவி...\nகைபர் போலன் ஏர்வேஸும், அபிஷ்டுகளும்\nஆகக்கூடி கைபர் கணவாய்ப் பயணம் என்கிற ஈராயிரம் வருடக் கனவு நனவாகப் போகிற மகிழ்ச்சியில் மாமாக்களும், மாமிகளும் ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள்...\nதாமரையின் அரசியல் ஆற்றுப்படுத்தும் மடல்\nசீமானுக்கு - தாமரை என்கிற அற்புதமான தமிழச்சி எழுதிய அரசியல் \"ஆற்றுப்படுத்தும்\" மடல் படித்தேன். என் மனையிலும் பதித்து வைக்க வேண்டும...\nகர்ணனை மயக்கும் பசப்புக்காரி பாஞ்சாலி\nகுழலியின் இந்த அருமையான காலத்திற்கேற்ற பதிவைப் படித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தினகரனில் இன்று காலை(பிப்.12 ஆம் நாள்) வெளிவந்திருக்கும் ...\n'அவாள்'களுக்கு 'டாட்டா' காட்டுகிறார் தயாநிதி மாறன்\nசும்மாவே 'இவாள்'களுக்கு திமுக என்றால் எட்டிக்காய்; இப்போது ஜெ. மாமியின் தமிழக (கொடுங்)'கோல்' ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற் ...\nதென்கடல் இரகசியங்களும், குரங்கு கட்டிய பாலங்களும்\nவணக்கம் :) 'குமரிக்கண்டம்' என்றும் 'லெமூரியா' என்றும் தமிழர்களால் அறியப்பட்டிருக்கும் - தமிழர்களின...\nஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம்\n( படம் நன்றி : \"தி ஃரண்ட்லைன்\" ) கிட்டத்தட்ட ஒரு வருடமாக 'ஆதிச்சநல்லூர்' அகழ்வாய்வுகள் குறித்த செய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadhukkam.blogspot.com/2013/02/1.html", "date_download": "2018-05-27T03:03:45Z", "digest": "sha1:KAXEHKUIP3VWKXSAWXQVOVNJRBVHUDKP", "length": 13052, "nlines": 69, "source_domain": "sadhukkam.blogspot.com", "title": "சதுக்கம்: பொருட்கள் மதிப்பு வாழ்வு - 1", "raw_content": "\nமீப்பெரும் கனவான வாழ்வின் அலைகளில் நீந்தும் மீன்...\nபொருட்கள் மதிப்பு வாழ்வு - 1\nதனிமனிதன் தன்னுடைய இருப்பின் சாராமையை (independence) தனித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சமூகத்தின் நிலையான அதிகாரங்கள், வரலாற்று பாரம்பரியம், புறக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் தொழில்நுட்பங்களுக்கு எதிரான முயற்சிகளில் இருந்துதான் நவீன வாழ்க்கையின் ஆழமான பிரச்சனைகள் வழிகின்றன என்கிறார் சிம்மெல். ஆதிமனிதன் தன்னுடைய மெய் இருப்பிற்காக இயற்கையோடு நிகழ்த்திய போராட்டங்களின் நவீன வடிவத்தை இவ்வெதிர்ப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வரலாற்று ரீதியாகவே அரசியல், மதம், அறம், பொருளாதாரம் இவற்றோடு உருவாகிவிட்ட பிணைப்பிலிருந்து சுதந்திரத்திற்கான, மனிதனர்கள் அனைவரிலும் சமமாக இருந்த அசல் இயல்பான மதிப்பீடுகள் தடையின்றி முன்னேறுவதற்காக 18ம் நூற்றாண்டு அழைப்பு விடுத்திருக்க; 19ம் நூற்றாண்டு, மனிதனின் சுதந்திரத்திற்கு கூடுதலாக அவனை தனிச்சிறப்பு (unique) மிக்கவனாக, இன்றியமையாதவனாக ஆக்கும் அவனுடைய தனித்துவம் (வேலைப் பங்கீடோடு தொடர்புடையது) மற்றும் அவனுடைய சாதனைகளோடு ஆனால் அதே சமயம் மற்றவர்களின் பதில் நடவடிக்கைகளோடு மேலும் சார்ந்திருத்தலை வளர்த்தது.\nமனிதர்கள் பொருட்களை உண்டாக்கி மதிப்பை (value) தோற்றுவித்து பிறகு அவற்றிடமிருந்து ஒரு தள்ளியிருத்தலை உருவாக்கி பின்பு அந்த தூரத்தை கடக்க முயற்சி செய்கின்றனர். அருகிலிருக்கும் பொருட்களும், அடைவதற்கு மிக தூரத்திலிருக்கும் பொருட்களும் மதிப்பிருப்பதாக கருதப்படுவதில்லை. பற்றாக்குறை, நேரம், தியாகம் மற்றும் அவற்றை அடைவதற்கான நெருக்கடிகளும் மதிப்பை உருவாக்கும் கூடுதல் காரணங்கள்.\nநகர வாழ்க்கை வேலைப் பங்கீட்டிற்கும் நிதிமயப்படுத்தலுக்கும் வழி வகுக்கிறது. நிதிசார் பரிவர்த்தனைகள் அதிகமாக ஒரு தனிமனிதன் என்பவன் யார் என்பதிலுருந்து அவனால் என்ன செய்ய முடியும் என்பதிலுருந்து அவனால் என்ன செய்ய முடியும் என்பதாக மாற்றம் நிகழ்கிறது. (சிம்மெல்)\nஅறிவொளிக்கால, ரொமாண்டிசிச, நவீனத்துவ பின்நவீனத்துவ காலம் வரைக்குமான சித்திரங்களை சிம்மெலின் இவ்வாக்கியங்கள் வழங்குகின்றன.\nநவீனத்துவ காலம் பொருட்களின் மறு உருவாக்கத்தின் வழியாக அடையாளப் படுத்தப்பட்டதென்றால் பின் நவீனத்துவ காலத்தில் அப்படி மறு உருவாக்கப் பெற்ற பொருட்களின் பெருக்கத்தை அதன் மதிப்பை குறுகிய காலத்தில் துய்த்து ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக உள்ளது.\n என்பதை அனைத்தும் மற்றும் எத்தனையாக\nபொருட்களின் நீண்ட கால வாழ்வு மதிப்பு மிக்கதாக இருந்தது போய் குறுகிய கால இருப்பே அதன் மதிப்பை கூட்டுவதாக உள்ளது. காலத்தின் வேகத்தை இந்த குறுகிய காலமே தாக்குப் பிடிக்கும் மதிப்பின் வழியாக அதிகரித்திருக்கிறோம். ஒளி அளவு வேகத்தின் மூலம் காலத்தை நீட்டிக்க முடியும் என்கிற ஐன்ஸ்டீனிய விதிக்கு எதிராக இருக்கும் நீண்ட காலத்தை இந்தத் துய்ப்பின் வழியாக குறிகிய ஒன்றாக மாற்றும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெருக்கம் நிறைவை அளிப்பதற்கு பதிலாக அனைத்தையும் அன்லிமிடெடாக வழங்கி நிறைவை எடுத்துக் கொள்கிறது. அனைத்துப் பொருட்களின் மீதும் எவ்வித மதிப்புமின்றியே துய்க்கிறோம். அதன் மதிப்பும் தனித்துவத்தை அலங்கரிப்பதற்காகவே வழங்கிக் கொள்கிறோம்.\nபொருட்களின் வழியாக மதிப்புமிக்கதகாக உருவாக்கப்பட்ட நவீன வாழ்க்கை அப்பொருட்களின் வழியாகவே மதிப்பற்றதாக மாறிவிட்டது. இந்தியா போன்ற சமூகங்களில் நவீன பொருட்கள் சார் வாழ்க்கையின் மீதான ஏக்கமும் நகரங்களில் பொருட்களின் மீதான நிறைவின்மையையும் ஒருங்கே நிலவுகின்றன. இந்நிலையில் ஒரு கேள்வி மட்டுமே முன்னிற்கிறது. நாம் யாராக இருக்கிறோம் என்பது போய் நாம் எங்கே இருக்கிறோம் என்பது போய் நாம் எங்கே இருக்கிறோம்\nஒரு பெருநகரத்தில் வாழும் மனிதனும் கிராமத்தில் வாழும் மனிதனும், மனிதன் என்னும் அளவில் கூட இப்போது சமமாக எண்ணப்படுவானா என்பது சந்தேகம். செழிப்பும், செழிப்பு மிக்க இடங்களில் வாழ்தலுமே மதிப்பை உருவாக்கி மனிதன் என்பதற்கான அர்த்தத்தை அளிக்கின்றன.\nநவீனத்துவம் உருவாக்கிய தனிச்சிறப்புமிக்க (unique) அடையாளம் காலாவதியாகி கூட்டுத்தனிச்சிறப்பு (collective uniqueness) உதா, அபார்ட்மெண்ட் வாசம், Gated Community living, தொழில்சார்ந்து (profession) உருவாகும் தோழமையுணர்வு போன்றவற்றால் தனிமனித புற அடையாளங்கள் வழியாக அன்றி கூட்டு அடையாளங்களை தனிமனிதன் எய்துவதால் அவனது தனிச்சிறப்பு கட்டமைக்கப்படுகிறது.\nமுற்றுப் பெறாத பயணத்தில் வழி தொலைத்து புதுப் பாதைகளில் நகரும் பயணி\nபொருட்கள் மதிப்பு வாழ்வு - 1\nஎங்கெல்ஸ் பிறந்த நாளன்று வாசித்த கட்டுரை\nநரகம், I, 32 - ஜோர்ஜ் லூயி போர்ஹே\nவைகறையின் அரை-வெளிச்சத்திலிருந்து மாலையின் அரை-வெளிச்சம் வரை, ஒரு சிறுத்தை...\nதேனியில் நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட எனது உரை\nவரலாறும் இலக்கியமும் – தாண்டவராயன் கதை நாவல் அனுபவம் முன்வைத்து மனிதன் என்கிற சமூக உயிரிக்கு இருவித இருப்பு நிலைகள் உண்டு. ஒன்று, வரல...\nவாசித்துக் கொண்டிருக்கும் ”Wonders of Numbers\"ல் பின்வரும் கேள்வி ஒன்றும் அதற்கான விடையும் அளிக்கப்பட்டிருந்தது. கேள்வி : பூமியில் வ...\nஇஸ்ரேல் : பொறுக்கி அரசின் இன்னொரு சாகசம்\nசெய்தி 1. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிலிருக்கும் காஸா நகர மக்களுக்கு 10000 டன் உதவிப் பொருட்களை இங்கிலாந்து, துருக்கி, அய்ர்லாந்து, அல்ஜீரியா, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/&id=41254", "date_download": "2018-05-27T03:00:52Z", "digest": "sha1:547IMIQDPAWNCLK3OQYH4R4NAMKS7KRP", "length": 18235, "nlines": 151, "source_domain": "tamilkurinji.co.in", "title": "நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு,Priya Prakash​ Varrier complaint: Muslims in Hyderabad lodge police ,Priya Prakash​ Varrier complaint: Muslims in Hyderabad lodge police Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nநடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு\nஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திரைப்படத்தில் வரும் ‘மணிகயா மலரயா பூவே’ பாடலில் பிரியா பிரகாஷின் முக பாவனைகளை முஸ்லிம் மதத்துக்கு எதிராக இருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓமர் உலு இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் ‘ஒரு அடர் லவ்’ படமாகும். இந்த படத்தின் நாயகி பிரியா பிரகாஷின் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஒரு சில நாட்களில் இணையத்தில் பெரும்பாலானவர்களை இவரின் பாடல் கவர்ந்து இழுத்தது.\nஇந்நிலையில், இந்தப் பாடல் படமாக்கிய விதம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தவாகக் கூறி ஐதராபாதில் உள்ள பளாக்னமா போலீஸ் நிலையத்தில் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சிலர் புகார் அளித்துள்ளனர்.\nஇந்த திரைப்படத்தில் வரும் மணிகயா மலரயா பூவே பாடல், இறைத்தூதர் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து போலீஸில் புகார் அளித்த அதான் ஓமர் கூறுகையில், ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் இயக்குநர் ஒரு முஸ்லிம், அவர் அதில் வரும் பாடலான மணிகயா மலரயா பூவே பாடலை நபிகள் நாயகத்துடன் தொடர்பு படுத்தி படமாக்கியுள்ளார். நபிகள் நாயகத்துக்கும் அவரின் மனைவி கதிஜியாவுக்கும் இடையிலான காதலைக் குறிக்கும் வகையில் அந்த பாடல் இருக்கிறது. இது இறைத்தூதரை அவமானப்படுத்தும் பாடலாக அமைந்து இருக்கிறது.\nஇது தொடர்பாக 57 பேர் கையொப்பமிட்ட புகாரை போலிஸில் அளித்து இருக்கிறோம். பிரியா பிரகாஷ் மீது புகார் கொடுக்கவில்லை. இயக்குநர் மீதுதான் புகார் அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.\nஇது குறித்து பளாக்னுமா மண்டல போலீஸ் துணை ஆணையர் சயீத் பயாஸ் கூறுகையில் “ முஸ்லிம் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், சட்ட ஆலோசனை செய்ததன் அடிப்படையில், ஐபிசி பிரிவு 295 ஏ பிரிவின் கீழ் திரைப்படத்தின் இயக்குநர் ஓமர் லுலு மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.\nநாங்கள் முஸ்லிம் மதகுருக்களின் ஆலோசனையை கேட்க இருக்கிறோம். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல்\nகேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்ட தன்னை ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21 வது வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் . இவர் மீது தொடர்ந்து பல நடிகைகள் பாலியல்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் கூறினார்.மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்\n“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்\nதமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார் விவேக்.வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nமுதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\nகேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\n“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்\" நடிகை சர்வீன் சாவ்லா\"\nதன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா\nசிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி\nகாவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக ‘டூலெட்’ தேர்வு\n“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nகாவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்\n‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து\nபணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்\nபிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி\nபாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்\nநடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2015/11/", "date_download": "2018-05-27T03:20:59Z", "digest": "sha1:V6F6IDW35HH35PI2DWKQ5EZTYEUMKOI7", "length": 8405, "nlines": 177, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: November 2015", "raw_content": "ஞாயிறு, 29 நவம்பர், 2015\nகண்ணீரும் தண்ணீரும்.TEARS AND WATER\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 3:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 நவம்பர், 2015\nTsunami & undouse fire ஆழிப் பேரலையில் ஒரு அணுவாய் ஊழித்தீக் காலத்தில் ஒரு மணித்துகளாய்...\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 3:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 நவம்பர், 2015\nநம்பிக்கைக்கு ஊறு.Harm to Belief\nசுடுகாட்டு வேம்பின் கசப்பும் உடல் நலம்\nகோவில் பொங்கல் இனிப்பும் உடற் பிணி\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 4:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாற்று அடித்தால் பறந்திடும் கொசு\nகாற்று அடித்தாலும் பறக்காத பசு\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 4:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோயிலுக்கு பணி புரிவதை விட\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 2:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nகண்ணீரும் தண்ணீரும்.TEARS AND WATER\nTsunami & undouse fire ஆழிப் பேரலையில் ஒரு அணுவாய்...\nநம்பிக்கைக்கு ஊறு.Harm to Belief\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2013/06/11/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-05-27T03:25:17Z", "digest": "sha1:BH7UMCHGRTKLVSPJXEBJP7QCDWWZBQ5K", "length": 32843, "nlines": 240, "source_domain": "sathyanandhan.com", "title": "போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← திருட்டுக்கு இந்தோனேசிய நீதிபதியின் தீர்ப்பு\nபிறந்த குட்டியை ஏன் ஒட்டகச் சிவிங்கி மீண்டும் மீண்டும் உதைக்கிறது\nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23\nPosted on June 11, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23\nராஜகஹத்தின் மூங்கிற் காட்டில் அனந்த பிண்டிகா புத்தரின் தரிசனத்துக்காகக் காந்திருந்தார். ஜனங்கள் நிறையவே சேர்ந்திருந்தனர். மலைச் சரிவாயிருந்தாலும் செங்குத்தாகச் சரியாததால், புத்தர் மற்றும் சீடரின் குடில்கள் உயரத்தில் எளிதாகக் கண்ணில் பட, அவரின் வருகைக்காகக் காத்திருந்தனர். முன் வரிசைக்குச் செல்ல அனந்த பிண்டிகாவுக்கு இயலவில்லை. மக்கள் கிட்டத்தட்ட ஒரு அரை வட்டமாக நெருக்கியடித்தபடி புத்தரின் நல்ல தரிசனத்தை எண்ணி உற்சாகமாயிருந்தனர். இதற்கு முன் அனந்த பிண்டிகா புத்தரின் உரையைக் கேட்டதில்லை. ஆனால் மகத நாடு முழுக்க வியாபார விஷயமாகச் சென்ற இடமெல்லாம் அவர் பற்றிய மதிப்பும் வியப்பும் மிக்க விவரங்களைக் கேள்விப் பட்டிருந்தார்.\nபுத்தர் தென்பட்ட உடனேயே சலசலப்பு அடங்கி அனைவரும் அவர் சொற்களைக் கவனமாய்க் கேட்க விழைந்து அமைதி காத்தனர்.\nஅனந்த பிண்டிகா மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் வண்ணம் புத்தர் சரிவில் மெல்ல இறங்கி, சீடர்கள் கூட்டத்தை விலக்கி வழிவகுக்க, கூட்டத்தின் மத்தியில் இருந்த ஒரு பாறையின் மீது ஏறி நின்றார். அனந்த பிண்டிகாவுக்கு மிகவும் அருகாமையில் வந்து பாறையின் மீது அவர் ஏறி நின்ற போது, தனது புண்ணியமெல்லாம் ஒன்றாய் வந்து புத்தர் வடிவில் தனக்கு அருளுவது போல இருந்தது. சாந்தமும் கருணையும் நிறைந்த அவரது திருமுகத்தைக் கண்டதும் உணர்ச்சிமயமாகி அனந்த பிண்டிகாவின் கண்கள் பனித்தன.\n“நீங்கள் அனைவரும் பௌத்தம் நாம் உய்யும் வழி காட்டும் என்னும் நம்பிக்கையில் வந்திருக்கிறீர்கள். இந்த நம்பிக்கையில் ஒன்று பட்ட நீங்கள் பௌத்தம் என்னும் வழியில் நிற்கத் துணிவுடனும் தீர்மானத்துடனும் முன் வர வேண்டும். துணிவுக்கும் தீர்மானத்துக்கும் ஒரு வனவாசித் தாயின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியே நமக்கு உதாரணமாகும். பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையைக் குடிலின் உள்ளே விட்டு அவள், வாயிலில் தினை மாவை உரலில் இடித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரம் முடிந்து இருள் கவியும் நேரம். தீப்பந்த வெளிச்சத்துக்காக வரும் பூச்சிகள் மாவின் மீது விழாத படி ஒரு மூங்கிற் கூடையின் மத்தியில் துளையிட்டு அதன் வழியே உலக்கையைச் செலுத்தி மிகவும் கவனமாகப் பணியில் ஈடுபட்டிருந்தாள். கணவன் வீட்டுக்குத் திரும்பும் நேரம். ஒரு சலசலப்பு ஏற்பட அவர்தானா என்று நிமிர்ந்தவளுக்குப் பெரிய அதிர்ச்சி. பதுங்கி இருந்த ஒரு புலி பாயும் நிலையில் நின்றிருந்தது. ஒரு கணம் திக்கித்த அவள் உள்ளே உறங்கும் தன் குழந்தையை நினைத்தாள். தீப்பந்தத்தை எடுத்துச் சுழற்றியபடி புலியின் மீது பாய்ந்து விட்டாள். புலி இதை எதிர்பார்க்கவே இல்லை. முதல் அடி தீயுடன் அதன் முகத்தில் விழ அது பின் வாங்கியது. அவள் சுழற்றிய வேகத்தில் தீப்பந்தம் இன்னும் பெரிதாக எரிந்தது. அதில் இருந்த கொதிக்கும் எண்ணைத் துளிகள் சூடாகப் புலியின் முகத்தின் மீது தெறிக்க அது துடிதுடித்துத் தீயைக் கண்டு பயந்து வந்த வழியே ஓடி விட்டது.\nபுலியையோ வேறு எந்த மிருகத்தையோ வேட்டையாடியோ அவைகளுடன் போரிட்டோ பழக்கமில்லாதவள் அந்தத் தாய். ஆனால் தன் குழந்தையைப் பாதுக்காக்கும் தீர்மானமும் எல்லையற்ற தாயன்புமே அந்தத் தாய்க்கு அபாரமான துணிச்சலையும் சக்தியையும் கொடுத்தன.\nஇந்த அன்புதான், இத்தகைய தீர்மானமான அன்பு ஒன்றுதான் பௌத்தத்தின் செய்தி. தாயும் மகனும் சகோதர்களும் உறவும் என்று நாம் காட்டும் அன்பு – சகஜீவிகள் அனைவருக்கும் என்று விசாலமானதாக, சமூகம் முழுவதையும் உள்ளடக்கும் பூரணமான ஒன்றாகப் பரிணமிக்க வேண்டும். தான், தன் குடும்பம், தன் சுற்றம், தனக்கு உதவி செய்தோர் என்னும் சிறிய வட்டத்தைத் தாண்டி, சகஜீவிகள் அனைவரின் மீதும் அன்பு செலுத்துவது என்பது எளிதானதோ சுலபமானதோ அல்ல. தன்னலம் மறக்க, தன்னலம் ஏற்படுத்தும் இடையறா ஆசைகள் பற்றுகள் அறுபட வேண்டும். அந்த சாதனையை நிகழ்த்த, தியானமும் நன்னெறியுமான ஒரு வாழ்க்கை முறைக்கு நாம் மாற வேண்டும். அந்த மன மாற்றம் ஒரு பரிபூரணமான பரிணாமமாக மேம்படும் தீர்மானத்தில் நிலைக்க பௌத்தம் வழிகாட்டும். வாழ்க்கை என்பது தனிமனித வாழ்க்கை என்னும் கண்ணோட்டம் மாறி மனித இனத்தை, மற்ற உயிர்களை, அனைவரது வாழ்க்கையை உள்ளடக்கியது என்னும் உன்னதமான நிலைக்கு நம்மை நாமே உயர்த்திக் கொள்வோம்.\nஅனந்த பிண்டிகா தான் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. புத்தரைத் தனியாக சந்தித்து ஓரிரு வர்த்தைகளேனும் பேச அவருடைய குடிலுக்கு விரைந்தவர்கள், தத்தம் வீட்டுக்குக் கலைந்து சென்றவர்கள், யாருமே அவரது கவனத்தைக் கலைக்கவில்லை.\nபணம், லாபம், சொத்து, செல்வம் என்று தாம் வாழ்ந்த வாழ்க்கையில் என்ன குறை இருந்தது என்பதை மகான் புத்தர் தெளிவு படுத்திய பரவசத்தில், அதை உள்வாங்கும் ஆனந்தத்தில் திளைத்து அவர் வெகுநேரம் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார்.\n“உங்கள் மகத நாட்டின் கலை நயம் மிக்க கம்பளங்கள், பட்டாடைகள், பொம்மைகள் அனைத்தையும் பார்த்தேன். நன்றி. நீங்கள் வணிகர் என்று கேள்விப் பட்டேன்”\n“அவ்வாறெனில் என்னைக் காண வந்ததில் ஒரு வணிக நோக்கம் இருக்கலாமே\n“வணிகம் என்று கூற முடியாது. ஒரு ஆன்மீகப் பணிக்கு உங்கள் உதவி தேவை”\n“எங்கள் கோசல நாட்டுத் தலைநகரான சவாத்தி வரை, மகத நாட்டிலிருந்து வந்திருக்கும் தங்களுக்கு அதை கூறத் தயக்கம் என்ன\n‘உங்கள் அழகிய ஜேதாவனத்தைக் கண்டேன். மலர்களும் கொடிகளும் செடிகளும் மான்களும் பறவைகளுமாய் அழகின் உதாரணமாக இருக்கிறது ஜேதாவனம்”\n“நல்லது. உங்களுக்கும், அந்த வனத்துக்கும் , ஆன்மீகத்துக்கும் என்னால் தொடர்பு படுத்திப் பார்க்க இயலவில்லையே\n“மகான் புத்தருக்கு அந்த வனத்தைத் தாங்கள் தர இயலுமா\n“புத்தர் தங்களைத் தூதுவராக அனுப்பினாரா\n“இல்லை இளவரசரே. அவரது பக்தன் நான். அவருக்கு அது மிகவும் ரம்மியமான சூழலாக இருக்கும் என்று கருதித் தங்களிடம் வந்தேன்”\n“அவர் சாக்கிய முனி என்றும், புத்தர் என்றும் ஞானம் சித்திக்கப் பட்டவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அழகிய என் ஜேதாவனத்தை அவருக்குப் பரிசாகத் தர எப்படி இயலும்\n“தாங்கள் அனுமதித்தால் நான் ஒன்று கூறலாமா\n“கூறுங்கள். நீங்கள் கோசல நாட்டில் புத்தருக்காக இடம் தேடும் போது பேசித் தானே தீர வேண்டும்\n“நான் அதை விலைக்கு வாங்க அனுமதி உண்டா\nசில கணங்கள் ஜேதா மௌனிக்க அனந்த பிண்டிகாவுக்கு அச்சமாகி விட்டது.\nகடகடவென்று சிரித்த ஜேதா “நீங்கள் ஓய்வெடுங்கள். ஓரிரு நாட்கள் எங்கள் சவாத்தி நகரை சுற்றிப் பாருங்கள்” என்று கூறி எழுந்து போய் விட்டான்.\nஅன்று இரவெல்லாம் அனந்த பிண்டிகாவுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. ஜேதா கோபிக்கவில்லை. அதே சமயம் சம்மதிக்கவுமில்லை என்பதே உண்மை. புத்தருக்காக எடுக்கும் இந்த முயற்சி வீணாகிப் போய்விடக் கூடாதே.\nமறுநாள் காலை அனந்த பிண்டிகா நகரைச் சுற்றிப் பார்த்தார். மகதம் போன்றே மக்கள் நட்பாகத்தான் பழகினர். புத்தரைப் பற்றிப் பலரும் கேள்விப் பட்டிருந்தனர். எப்போது கோசலம் வருவார் என்று வினவினர். அவர்களோடு பேசப் பேச ஜேதாவும் இதே போல மனதுக்குள் ஆர்வமும் மரியாதையும் புத்தரின் மீது வைத்திருப்பான் என்றே தோன்றியது. வெறும் கையோடு திரும்புவதை எண்ணிக் கூடப் பார்க்க இயலவில்லை அனந்த பிண்டிகாவால்.\nஇரண்டாம் நாள் ஜேதாவே அழைக்க அனந்தபிண்டிகா அவன் முன் வணங்கி நின்றார். “இன்னும் அந்த எண்ணம் இருக்கிறதா வணிகரே\n“ஒரு மகானுக்காகக் கேட்பதில் தவறில்லையே\n“உங்களால் அதிக பட்சம் என்ன விலை கொடுக்க இயலும்\n“தங்கள் எடைக்கு எடை தங்கம் தருகிறேன் இளவரசரே”\n“அது அந்த வனத்தின் அழகுக்கு முன் ஒன்றுமே கிடையாது அனந்தபிண்டிகரே”\nசற்றே யோசித்த பிறகு அனந்தபிண்டிகா “அந்த வனம் முழுவதும் செப்புக் காசுகளை வைத்தால் எவ்வளவு வருமோ அதை விலையாகத் தருகிறேன் இளவரசரே” என்றார்.\n“வனம் மிகவும் பெரியது அனந்தபிண்டிகரே”\n“பரவாயில்லை இளவரசரே. புத்தரின் அருளால் எங்கள் பரம்பரைச் செல்வம், நான் ஈட்டியவை இவற்றில் பாதியை வைத்து அத்தனை செப்புக் காசுகளைக் கொண்டு வருவேன்”\n“புத்தரிடம் உங்கள் எண்ணத்தைக் கூறி அவர் ஆசீர்வதித்தால் காசுகளுடன் வாருங்கள்”\nராஜகஹ மூங்கில் வனத்தில் ஆனந்தன் எதிரே அமர்ந்திருந்தார் அனந்தபிண்டிகா.\n“புத்தருக்கு சொந்தமாக ஜேதாவனம் இருக்க வேண்டும் என்பது உமது ஆசையா\nஇந்தக் கேள்வியே அனந்தபிண்டிகாவுக்கு வியப்பாக இருந்தது. புத்தருக்கு சொந்தமாக இருக்க வேண்டியது தானே அந்த எழிலும் அமைதியும் நிறைந்த ஜேதாவனம் “ஆம் ஆனந்தரே. புத்தரை விடவும் அது சொந்தமாக வேறு யாருக்குத் தகுதி உண்டு “ஆம் ஆனந்தரே. புத்தரை விடவும் அது சொந்தமாக வேறு யாருக்குத் தகுதி உண்டு\n“அது இல்லை அனந்தபிண்டிகா. நீங்கள் புத்தரையோ பௌத்தத்தையோ விளங்கிக் கொண்டது போலவே தெரியவில்லையே\nஅனந்தபிண்டிகாவுக்கு மூக்கை உடைத்தது போல இருந்தது இந்தக் கேள்வி. புத்தரை விளங்கிக் கொள்ளாமலா பௌத்தத்தின் மகத்துவம் புரியாமலா இவ்வளவு முயற்சி எடுத்தேன் “ஏன் ஆனந்தரே புத்தரின் அருள் கோசலத்துக்கும் கிடைக்கட்டும் என்று சவாத்தியில் இந்த வனத்தைக் கண்ட போது முயற்சி எடுத்தேன். எல்லா தேசங்களிலும் புத்தரின் கருணை கடாட்சம் பட்டுமே\n“அப்படி இல்லை அனந்தபிண்டிகரே. புத்தருக்கு சொந்தமானதும் வேறு எந்த பிட்சுவுக்குமே சொந்தமானதும் ஒரு திரு ஓடும் சில உடைகளுமே. நிலம், தோட்டம் , சொத்து என மகான் புத்தரின் பெயரில் இருக்க அவர் ஒப்ப மாட்டார்”\nஅனந்தபிண்டிகாவுக்கு வானமே இடிந்துத் தரையில் விழுந்தது போல இருந்தது. ஜேதா ஒப்பமாட்டார் என நினைத்திருந்த போது அவர் கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டாகி விட்டது. மகதத்தைப் போல, கபிலவாஸ்துவைப் போல, கோசலமும் சவாத்தி நகரமும் புண்ணிய பூமிகளாகக் கூடாதா அவரையும் அறியாமல் அவரது கண்களில் நீர் வழிந்தது.\nஆனந்தர் பதறி எழுந்தார் “என்ன அனந்த பிண்டிகரே எதற்கு இப்படிக் கண்ணீர் சிந்துகிறீர்கள் எதற்கு இப்படிக் கண்ணீர் சிந்துகிறீர்கள் இறுதி முடிவு புத்தபிரானுடையதே. அவரிடமே கேட்டு விடுவோம்”\nபுத்தர் நாட்கணக்கில் தியானத்தில் இருப்பது தெரிந்த அனந்தபிண்டிகாவுக்கு மனச் சோர்வு அதிகரித்தது. எடுத்த முடிவில் பின் வாங்க வேண்டாம் என நினைத்தார். ஜேதாவனத்தை நிரப்ப எத்தனை மூட்டை செப்புக்காசு தேவைப்படும் என்ற ஒன்று மட்டுமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தது.\nஅனந்தபிண்டிகா தமது சொத்துக்கள் பலவற்றையும் விற்கும் செய்தி ராஜகஹம் தாண்டி மகதத்தின் பல வியாபாரிகளுக்கும் புதிராக இருந்தது. நல்ல நிலையில் வெற்றிகரமாக வணிகம் செய்யும் அனந்தபிண்டிகாவுக்கு திடீரென என்ன ஆயிற்று\nஅனந்தபிண்டிகாவின் மிகப் பெரிய மாளிகைக்கு எதிரே இருந்த மைதானத்தில் மலை போல செப்புக்காசுகள் குவிக்கப் பட்டு இரவு பகலாகப் பணியாட்கள் காவல் காத்தனர்.\nதினமும் மூங்கில் வனத்துக்கு புத்தரின் தரிசனத்துக்காகப் போய் வருவது, சொத்துக்களைக் காசாக்குவது என்னும் இரண்டு வேலைகளை மட்டுமே செய்தார் அனந்தபிண்டிகா. வண்டிகளில் காசு மூட்டைகளை ஏற்றும் வேலையையும் தொடங்கி விட்டார்.\nஒரு நாள் காலை ஆனந்தர் அனந்தபிண்டிகாவை புத்தரிடம அழைத்துச் சென்றார். அனந்தபிண்டிகா நடுங்கும் குரலில் தம் கோரிக்கையை முன் வைத்தார்.\n“தங்கள் விசுவாசம் பௌத்தத்தின் மீது இருக்கட்டும். என் மீது அல்ல” என்றார் புத்தர்.\n“ஜேதாவனம் உங்களுக்கும் பௌத்தத்துக்கும் ஆன்மீகத்துக்கு ஏற்ற அமைதியும் ரம்மியமுமான சூழல் உள்ளது புத்ததேவரே”\nபுத்தர் சில நொடிகள் காத்த மௌனத்தில் அனந்தபிண்டிகாவுக்குப் பதட்டத்தில் வியர்த்து வழிந்தது.\n“தங்கள் அன்பைத் தட்டிக் கழிக்க விரும்பவில்லை. புத்தருக்கு இல்லை ஜேதாவனம். பௌத்த சங்கத்துக்கு உரியதாக இருக்கும். தங்கள் விருப்பப் படியே செய்யுங்கள்” ஆனந்தக் கண்ணிருடன் புத்தரின் பாதம் பணிந்தார் அனந்தபிண்டிகா.\nஐநூறுக்கும் மேற்பட்ட வண்டிகளில் மூட்டை மூட்டையாக வந்த காசுகளைப் பார்த்து சவாத்தி நகரமே அதிசயித்து ஜேதாவனத்தைச் சுற்றிக் கூடியது. தரையே தெரியாத படி காசுகளால் நிரப்பிய பிறகும் ஐம்பது வண்டிகளில் காசு மூட்டைகள் மீதம் இருந்தன.\n“நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்” என்று அவர் தோளில் தட்டி, சிற்பிகளை அழைத்து ஒரு சிலாசாசனம் எழுதச் சொன்னான் ஜேதா.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← திருட்டுக்கு இந்தோனேசிய நீதிபதியின் தீர்ப்பு\nபிறந்த குட்டியை ஏன் ஒட்டகச் சிவிங்கி மீண்டும் மீண்டும் உதைக்கிறது\nவாழ்க்கையின் ரகசியம் – 7\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D", "date_download": "2018-05-27T02:58:11Z", "digest": "sha1:KKURQONL34VHAHTQE6WZL7OKI22XRTOL", "length": 6423, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலா அப்துல் பத்தாஹ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅகமது சைப், லைலா செயிப்\nஅலா அப்துல் பத்தாஹ் (Alaa Abd El-Fattah, அரபு மொழி: علاء أحمد سيف عبد الفتاح) ஒர் எகிப்திய மனித உரிமைகள் செயற்பாட்டாளர், வலைப்பதிவாளர், நிரலாளர். இவர் உள்ளடக்கத்தை தணிக்கை செய்யாத எகிப்திய வலைப்பதிவு திரட்டிகளை உருவாக்கியதற்காக அறியப்படுகிறார். இவர் பல்வேறு மென்பொருட்களின் அரபுமொழிப் பதிப்புக்களுக்கும் பங்களித்துள்ளார்.\nஎகிப்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-05-27T03:36:23Z", "digest": "sha1:3PKKJ6P2CGLHROYZPDKRMTQNDWX2T4FP", "length": 10293, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகிள் இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகூகிள் இசை (Google Music) என்பது கூகிளின் இணைய வழி இசை கேட்கும் சேவை. இது ஒரு இணைய இசை சேமிப்பு நிலையமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன்ஸ் என்ற சேவைக்கு போட்டியாக கூகிளால் ஆரம்பிக்கப்பட்டது. மே 10, 2011 இல் இசேவைதொடங்கப்பட்டது\nஅண்ட்ராய்டு இசை சேமிப்பு சந்தை\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\n3D Warehouse · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=673811", "date_download": "2018-05-27T03:27:11Z", "digest": "sha1:NUTNLP5IWCLV2YR2FTIA47J5DKISYGBC", "length": 11061, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்!", "raw_content": "\n – யாழ். கட்டளைத் தளபதி\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nசர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nசர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.\nதாதியர் சேவையை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டி விசேட விருது ஒன்று சுகாதார அமைச்சருக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.\nதாதியர் சேவையின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர்களை பாராட்டி விருதுகளும் பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகையடக்க தொலைபேசியால் வந்த வினை-மயிரிழையில் உயிர்தப்பியது குடும்பம்\nஇலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் GPS தொழில்நுட்பம்\nபூநகரி பரந்தன் வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் இழுபறி\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\n – யாழ். கட்டளைத் தளபதி\nபேச்சுவார்த்தைக்காக இன்னும் பார்த்திருக்கிறேன்: ட்ரம்ப்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/phpthumb-php/", "date_download": "2018-05-27T03:18:25Z", "digest": "sha1:T6PAUVOZ6ZKUE2DRLIDN2CKZAESEZI47", "length": 2345, "nlines": 64, "source_domain": "jesusinvites.com", "title": "phpThumb.php – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nஇயேசுவின் சிலுவைப்பலி- ஓர் ஆய்வு\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 2) \nவேலைக்காரன் காதை வெட்டியக் கதை\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nபாரிசம் என்பதின் பொருள் என்ன\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/06/blog-post_14.html", "date_download": "2018-05-27T03:34:27Z", "digest": "sha1:UVSJVRS77LUZXTTAV46UXV457P2RRUH3", "length": 12961, "nlines": 98, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு இயங்கிய டவுன் பஸ் ஒரு மாதமாக நிறுத்தம்", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு இயங்கிய டவுன் பஸ் ஒரு மாதமாக நிறுத்தம்\nகீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு தினமும் இயங்கிய அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரான கீழக்கரை 3ம் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். கீழக்கரையைச் சேர்ந்த 90 சதவீத மக்கள் தங்களது அனைத்து தேவைகளுக்கும் ராமநாதபுரம் சென்று வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் ராமநாதபுரத்திற்கு தினமும் செல்கின்றனர்.\nபொதுமக்களின் நலன் கருதி கீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு 3 அரசு டவுன் பஸ்கள், ஒரு தனியார் டவுன் பஸ் தினமும் இயங்கப்பட்டது. தற்போது 2 அரசு டவுன்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் தொலைதூர பஸ்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் பயணிகள் அனைவரும் அரசு டவுன் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் மேற்கூரை, படிக்கட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nநாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படுவதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது,’ அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயங்கிய 3 டவுன் பஸ்களில் பழுதான ஒரு பஸ் பணிமனையில் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பஸ் இயக்குவது குறித்து கிளை மேலாளர் தான் தீர்மானிக்க வேண்டும்’ என்றனர்.\nதனியார் நிறுவன ஊழியர் ஜமீல் கூறுகையில்,’ தனியார் டவுன் பஸ் மராமத்து பணிக்காக சென்று விட்டது. பழுதடைந்த அரசு டவுன் பஸ்சிற்கு மாற்று பஸ் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மராமத்து பணி மந்தகதியில் நடைபெறுவதால் பஸ்கள் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் 2 கிமீ தூரம் நடந்து மெயின் ரோட்டிற்கு வரவேண்டியுள்ளது. இதனால் நடந்து செல்ல இயலாத பெண்கள், முதியவர்கள் ரூ.50 கொடுத்து ஆட்டோவில் மெயின் ரோடு வந்து பஸ்சில் செல்கின்றனர். பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்து கழகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nஉத்திரகோசமங்கையில் விவசாயிகளுக்கு விதை சேகரிப்பு க...\nகீழக்கரை, ஏர்வாடியில் இன்று மின்தடை\nகீழக்கரையில் தொடரும் சிலிண்டர் தட்டுப்பாடு\nஅரசியல் ஆதாயம் தேடும் ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ \nகும்பிடுமதுரை கிராமத்தில் கீழக்கரை குப்பைகளை கொட்ட...\nகீழக்கரை குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு \nபுது மாப்பிள்ளை கொலை: 8 பேர் மீது வழக்கு\nதோணிப்பாலம் அருகில் அரசு பஸ்சும், வேனும் நேருக்குந...\nசெல்போன் நிறுவன ஜெனரேட்டரில் தீ\nசுகாதார‌ கேட்டிற்கு கார‌ண‌ம் ந‌கராட்சி த‌லைவ‌ர் ப‌...\n100வது நாளை நோக்கி சாலையில் விழுந்த மரம் \nதெருக்களில் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம...\nசெம்பி சேகு நூர்தீன் காக்கா ம‌றைவு: அபுதாபி அய்மான...\nகீழக்கரை அரசு மருத்துவமனை மீது தாக்குதல்\nகீழக்கரை பள்ளிகளுக்கு அரசு வெளியிட்ட புதிய கட்டண வ...\nசூதாட்டம் 8 பேர் கைது கீழக்கரை அதிமுக செயலாளர் தப...\nகீழக்கரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு இயங்கிய டவுன்...\nகீழக்கரை அருகே இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்...\nகரையில் ஒதுங்கிய புள்ளி மான்\nகாயமடைந்த வெளிநாட்டு புறாவுக்கு சிகிச்சை\nகீழக்கரையில் திறப்பு விழாவிற்கு 2 ஆண்டாக காத்திருக...\nகீழக்கரை புது கிழக்குதெருவில் குப்பைகளை கொட்ட இடம்...\nகீழக்கரை +1 மாணவர் மரணத்தில் மர்மம் \nகீழக்கரையில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்வரிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2016/11/", "date_download": "2018-05-27T03:21:19Z", "digest": "sha1:T4KFK6VBAWI5GEQSIXG52YZPEUR4F4S3", "length": 6912, "nlines": 157, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: November 2016", "raw_content": "செவ்வாய், 29 நவம்பர், 2016\nTimeஉனக்குத் தெரிந்த பட்டாம்பூச்சி You only know that Butterfly\nகாலம் பல வழிப்படும் காலில்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 9:23 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 நவம்பர், 2016\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 6:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 நவம்பர், 2016\nஎன்னுள்ளே நீயும் உன்னுள்ளே நானும் You are in me and I am in you.\nஇறக்கி விட‌ முடியாமல் இறங்கிக் கொள்ளாமல்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 6:57 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nTimeஉனக்குத் தெரிந்த பட்டாம்பூச்சி You only know t...\nஎன்னுள்ளே நீயும் உன்னுள்ளே நானும் You are in me an...\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1503120914561?CCTV-cameras-installed-in-former-CM-Jayalalitha-s-Kodanadu-bungalow", "date_download": "2018-05-27T03:27:44Z", "digest": "sha1:KY5NCZQLGFFKRQDWI4M2CQYH3NT3LZ3N", "length": 7863, "nlines": 84, "source_domain": "www.newstm.in", "title": "கொடநாடு எஸ்டேட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்", "raw_content": "\nகொடநாடு எஸ்டேட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்\nகொடநாடு எஸ்டேட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இந்த பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஓம் பகதூர் என்பவர் பங்களாவுக்கு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு காவலாளி படுகாயத்துடன் மீட்கப்பட்டார். பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை திருட முயற்சிக்கும் போதே கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து காவலாளியை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டிய நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனிடையே கொடநாடு கொலை வழக்கு குறித்து விசாரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனி விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார். மேலும், பாதுகாப்பிற்காக கொடநாடு பங்களாவை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன் பேரில் தற்போது கொடநாடு பங்களாவை சுற்றிலும் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஶ்ரீ திவ்யாவின் மார்டன் லுக் படங்கள்\nமணிரத்னம் பட நாயகியின் கிளாமர் படங்கள்\nஹீரோயின் ஆன இந்த குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரிகிறதா\nஶ்ரீ திவ்யாவின் மார்டன் லுக் படங்கள்\nமணிரத்னம் பட நாயகியின் கிளாமர் படங்கள்\nஹீரோயின் ஆன இந்த குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரிகிறதா\nஅபியும் அனுவும் - திரை விமர்சனம்\nகாதலன் கண்முன்னே இளம்பெண் பாலியல் பலாத்காரம்\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்\nகாதலன் கண்முன்னே இளம்பெண் பாலியல் பலாத்காரம்\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்\nகாஷ்மீர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nகல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்\nரஜினிக்காக அரசியல் ஒத்திகை : 20-ந் தேதி திருச்சியில் மாநாடு\nநடிகை கடத்தல் விவகாரம் : ரம்யா நம்பீசனிடம் விசாரணை\nசெய்தியாளர்கள் சந்திப்பு ரத்து; இணைவதில் இழுபறி\nசென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா\nகல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்\nரஜினிக்காக அரசியல் ஒத்திகை : 20-ந் தேதி திருச்சியில் மாநாடு\nநடிகை கடத்தல் விவகாரம் : ரம்யா நம்பீசனிடம் விசாரணை\nசெய்தியாளர்கள் சந்திப்பு ரத்து; இணைவதில் இழுபறி\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.in/2012/09/blog-post_17.html", "date_download": "2018-05-27T03:21:19Z", "digest": "sha1:TRWI267SM6KDWAA6HPMZ4FMSO5WQHUHN", "length": 18455, "nlines": 396, "source_domain": "anmikam4dumbme.blogspot.in", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: உப்பு", "raw_content": "\nஉப்பு பற்றி சமீபத்தில் பேச்சு எழுந்தது. உப்புக்கும் ஆன்மீக சமாசாரங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. பல விஷயங்களை விசாரிக்கும் போது இது தெரிகிறது. சீரியஸாக பூஜை, ஹோமம் செய்வதானால் காலை விழித்தபின், நீரோ உணவோ ஏதுமில்லாமலே செய்யச்சொல்கிறார்கள். ஒரு வேளை அப்படி ஏதும் அருந்த வேன்டும் என்ற உடல் நிலை இருந்தால், பாலோ கஞ்சியோ குடிக்கலாம். ஆனால் அதில் உப்பு இல்லாமலே இருக்க வேண்டும். (காப்பிக்கு உப்பு போடுவதில்லைதான். ஆனால் கஞ்சி பத்தி சொல்ல வருகிறேன்\nஓரிரண்டு நாட்கள் செய்யணும் ஹோமங்கள் இருக்கலாம். சமீபத்தில் சஹஸ்ர சண்டி ப்ரோக்ராம்கள் சில் நடைபெற்றன. அப்படி செய்தால் அத்தனை நாளும் உப்பில்லாமலேதான் சாப்பாடு.\nகாரீரேஷ்டி என்று ஒரு இஷ்டி. மழை வேண்டி செய்வது. கருப்பு அரிசி கருப்பு ஆடைகள் அணிந்து செய்வர். சுமார் 3 வாரங்கள் நடக்கும். அதில் பங்கெடுக்கும் அனைவருமே உப்பில்லாமலே அத்தனை நாட்களும் செய்ய வேண்டும். முன் ஒரு முறை இப்படி செய்துவிட்டு ,மழை பெய்யவில்லை என்று காஞ்சி பெரியவரிடம் போய் புகார் செய்தார்கள். அவர் \"ஏண்டா, உப்பில்லா பத்தியம் எல்லோரும் இருந்தீங்களோ\" என்று கேட்டார். போனவர்கள் முகம் தொங்கிப்போய்விட்டது.\nசித்ரா பௌர்ணமி போல சில விரதங்களும் இதே போலவே உப்பில்லா பத்தியம் அனுசரிக்க வேண்டியன.\nஆக பொதுவாகவே சீரியஸாக செய்கிற கர்மாக்களில உப்பு விலக்கப்பட்டு இருக்கு.\nசாப்பாட்டிலேயே வாழை இலை போடுகிறார்களே, அதன் கீழ்- நம் பக்கம் இருக்கும் பாதியில் அன்னம் பாயசம் மாதிரி உப்பில்லாதவற்றையே பரிமாறுவார்கள். நடுவில் இருக்கும் நரம்பு அதை இரண்டா பிரிக்குதாம். மேல் பாதியில உப்புள்ளவற்றை வைக்கிறார்கள். ஏன்னு கேட்டா அன்னத்தை வயித்திலே இருக்கும் அக்னிக்கு ஹோமம் செய்வதாக சொல்கிறாங்க\nக்ளாசிகலாக வைதீகமாக செய்து வரும் ஹோமங்கள் எதிலும் உப்புள்ளவற்றை ஹோமம் செய்யச் சொல்லவில்லை.\nஆனா எங்கே தேடினாலும் ஏன்னு விளக்கம் இல்லை.\nஉப்பு ராஜஸ குணத்தை தூண்டுகிறது. “ஏண்டா இப்படி கொஞ்சம் கூட ரோஸம் இல்லாம இருக்கியே உப்பு போட்டு சாப்படறயா இல்லையா உப்பு போட்டு சாப்படறயா இல்லையா“ ன்னு கேள்வி கூட கேட்பதுண்டு.\nஇறையை அணுகி செய்ய வேண்டிய காரியங்களில சாத்வீகமே அதிகமாக இருக்கணும். அதனால இப்படி ராஜஸத்தை தூண்டுகிறதை விலக்கச்சொல்லி இருக்கலாம்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nபஞ்சதஶீ - 1 - 42\nபஞ்சதஶீ - 1- 41\nபஞ்சதஶீ 1 - 40\nபஞ்சதஶீ - 1 - 39\nஎல்லோருக்கும் பொதுவான பூஜை முறை\nதினசரி பூஜை - 18\nதினசரி பூஜை - 16\nதினசரி பூஜை - 15\nதினசரி பூஜை - 14\nதினசரி பூஜை - 13\nதினசரி பூஜை - 12\nஅந்தோனி தெ மெல்லொ (308)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/55018-kamalhassan-kiss-scene-grammer.art.html", "date_download": "2018-05-27T03:31:04Z", "digest": "sha1:LOR6NUUJSM3ZUOKSIEX3AB6ZHPMF527Q", "length": 22418, "nlines": 385, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமல்ஹாசனின் லிப்லாக் இலக்கணங்கள்! | kamalHassan Kiss Scene Grammer!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅடுத்தடுத்து ஆயிரம் லவ்வர் பாய்கள் அவதரித்தாலும், கமல்ஹாசன் எப்போதுமே காதல் இளவரசன்தான். அதிலும் லிப்லாக் (இதழ் முத்தங்கள்) காட்சிகள் எல்லாம் வெறுமனே மோக வெளிப்பாடாக இல்லாமல், பல்வேறு மனநிலைகளின் ’அழுத்தமான’ பிரதிபலிப்பாக இருக்கும். புன்னகை மன்னனில் தொடங்கிய ‘இச் அத்தியாயம்’ ஒரு பாடல் கூட இல்லாத ‘தூங்காவனம்’ வரை தொடர்கிறது.\nஅதைப் பற்றிய ஒரு கிக் கமெண்ட்ரி.\nகடலோர கவிதைகளும் , புன்னகை மன்னனும் 1986-ம் ஆண்டுதான் வெளியானது. கடலோர கவிதைகளில் நடிப்பிற்காக பேசப்பட்ட ரேகா, புன்னகை மன்னனில் அதிகம் சிலாகிக்கப்பட்டது அந்த பசுமை சூழ் பச்சக் பச்சக்கிற்குதான். அடுத்த நொடி தற்கொலை செய்யும் மனநிலையில் கொடுக்கப்படும் அந்தக் கடைசி முத்தத்தில்தான்... எத்தனை அழுத்தம்\nநடிகை ஊர்மிளாவின் முதல் மலையாளப் படம். படம் தெலுங்கிலும் டப்பிங் ஆனது. படத்தில் இடம்பெற்ற ஊர்மிளா-கமல் கிஸ் செம ஹிட் ஹாட் ரகம். வாழ்க்கையில் முதல் முதலாய் ஒருவன் முத்தம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அதை அப்படியே தத்ரூபமாக பதிவு செய்திருப்பார் கமல்.\nதன் குடும்பம், பணம் எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஒருவனின் வாழ்க்கைதான் படம். அந்த மனஅழுத்தத்துக்கு நடுவிலும் ரொமான்ஸ் தருணங்களை கவிதையாகப் புகுத்தியிருப்பார்கள். கல்யாணம் தள்ளிப் போய் கடமையில் கண்ணாக இருக்கும் நர்ஸ் சுகன்யாவுக்கு கமல் முத்தம் கொடுக்கும் சூழ்நிலை... பார்வையாளர்களுக்கே ஜிவ்வென இருக்கும். அதுவரை சுகன்யாவிடம் தன் காதலைச் சொல்லியிருக்க மாட்டார் கமல். அந்த முத்தம்தான் லவ் புரபோசலே\nகமல்-அர்ஜுன் இருவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டிய படம். அதற்கு நிகராக கமலும் கௌதமியும் ஆதர்ச தம்பதிகளாக குளியலறை, படுக்கையறை நெருக்கத்தில் மிரட்டியிருப்பார்கள். கமல் மீது கௌதமிக்கு உண்மையாக காதல் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் தொடங்கியிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், குருதிப்புனலில்தான் அது மிக மிக அழுத்தமாகப் பதிவாகியிருக்க வேண்டும். அந்தளவு இருவரும் படத்தில் ஆத்மார்த்தமாக வாழ்ந்திருப்பார்கள்.\nவங்காள பெண்ணான ராணி முகர்ஜியுடன் கல்கத்தாவில் கமல் செய்யும் சேட்டைகள் எல்லாம்... இப்போதும் புதுமணத் தம்பதிகள் முயற்சிக்கும் ஜில்ஜாலி கலாட்டா. அதே படத்தில் கட்டுப்பெட்டி பெண்ணான வசுந்தரா தாஸை விட்டு வைத்திருக்க மாட்டார் நம்ம ஆளு.\nவிவாகரத்தான மனைவி, ஹீரோயினான த்ரிஷாவுடன் டிஷ்யும் டிஷ்யும் சண்டை என படத்தில் எங்கும் முத்தத்துக்கான வாய்ப்பே இல்லை. ஆனால், போகிறபோக்கில் மது ஷாலினியை இழுத்து வைத்து பச்சக் பச்சக்கென கிஸ்ஸடிப்பார் கமல்.\nஇப்போ தெரியுதா, இன்னும் கமல் ஏன் காதல் இளவரசன்களுக்கு செம சவால் கொடுக்கிறார் என்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயோகி பாபு, இதை நீங்கள் உணர்ந்தால் 'செம'..\n``கைல காசு இல்லாத நாள்கள்ல, கபாலி கோயில் அன்னதானம்தான் நம்ம மீல்ஸ்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n``என்னை மாற்றி விடாதீர்கள்...''- முதல்வருக்கு தூதுவிட்ட உளவுத்துறை அதிகாரி #SterliteProtest\nநடுரோட்டில் டி.டி.வி தினகரனும் வைகோவும் திடீர் சந்திப்பு..\nகாடுவெட்டி குரு வளர்ந்த கதையும்... கடந்து வந்த பாதையும்\n’ - தோனி நெகிழ்ச்சி\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n' - இங்கிலாந்து எம்.பி,. போர்க்கொடி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nஅஜித்துக்கு அட்வைஸ் பண்ண வித்யூலேகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/caesar", "date_download": "2018-05-27T03:22:10Z", "digest": "sha1:6APLZIKHBQRZ3PAFQUKIGLPI4LEY53IB", "length": 4224, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "caesar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகேயஸ் ஜூலியஸ் சீசர் (கிமு 100-44) என்ற முதல் ரோமப் பேரரசர்\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bestqueen12.blogspot.com/2016/12/18.html", "date_download": "2018-05-27T02:57:49Z", "digest": "sha1:BWBAJ7AVJW2ENL62WOQ4ES232SSQ6QZD", "length": 17259, "nlines": 148, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பூங்காவனம் 18 ஆவது இதழ் மீதான பார்வை", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nபூங்காவனம் 18 ஆவது இதழ் மீதான பார்வை\nபூங்காவனம் 18 ஆவது இதழ் மீதான பார்வை\nகலாபூஷணம் மாவனல்லை எம்.எம். மன்ஸுர்\nகாலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் 18 ஆவது இதழ் கையில் கிடைத்தது. திருமதி சுகந்தி இராஜகுலேந்திராவின் முகப்புப் படத்தைத் தாங்கி அட்டைப்படம் வந்திருக்கிறது. உள்ளே நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரை, நூல் விமர்சனம் என்பவற்றோடு வழமையான அம்சங்கள் இதழில் இடம்பிடித்திருக்கின்றன. இதில் நேர்காணல், மூன்று சிறுகதைகள், பதினொரு கவிதைகள், இரு கட்டுரைகள், நூல் மதிப்புரை, ஒரு குறுங்கதை என்பன காணப்படுகின்றன.\nதிருமதி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களுடனான நேர்காணலில் அவர், தனது வாழ்க்கை அனுபவங்களையும், கலை உலக ஈடுபாடுகளையும் விளக்கியிருக்கிறார். இவர், சட்டத் துறையைத் தேர்ந்து எடுத்துக் கொண்டதால் சட்டத் தரணியாக கடமையாற்றினாலும் எழுத்து ஈடுபாடுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். என்றாலும் அதற்கான கால நேரம் அதிக இடம் கொடுப்பதில்லை. திருமதி. இராஜகுலேந்திரா வடமாராட்சி பருத்தித் துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர். பாடசாலை நாட்களில் நடனம், நாடகம், விளையாட்டு, பேச்சு, கவிதை என பல்துறை ஈடுபாடு கொண்டவராகக் காணப்படுகிறார். இரண்டு மகள்களுக்குத் தாயாக இருப்பதோடு, கணவர் உட்பட இவர்கள் நாள்வருமே இலக்கிய ஈடுபாடு உள்ளவர்களாகக் காணப்படுவது சிறப்புக்குரியது.\nசிறுகதைகளை நோக்குவோமேயானால் கினியம இக்ராம் எம். தாஹா எழுதியுள்ள ஷமுயற்சி| என்ற சிறுகதை ஒரு மாணவனின் விடா முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. போட்டிச் சிறுகதை ஒன்றுக்காக அந்த மாணவன் மேற்கொள்ளும் முயற்சியினால் அகில இலங்கைப் போட்டியில் போட்டியிட்டு முதல் இடத்தைப் பெறக்கூடிய வாய்ப்பை அந்தச் சிறுகதை ஏற்படுத்தித் தருகிறது.\nஎஸ்.ஆர். பாலசந்திரன் எழுதியுள்ள ஷசபலம்| என்ற கதை மனித உணர்ச்சிகளுக்கு மனிதன் முதலிடம் கொடுப்பதனால் ஏற்படப் போகின்ற விபரீதத்தை விளக்குகிறது. வீட்டுப் பணிப் பெண்ணாக சிறு வயது முதல் ஈடுபட்டு வரும் சிறுமி பெரியவளாக வளர்ந்து வனப்பு மிகு கன்னிப் பெண்ணாக காட்சி தரும் போது வீட்டு எஜமானுக்கு விருந்தாகப் போகும் போது ஏற்படுகின்ற ஷசலனம்| மயிரிழையில் உயிர் தப்புகிறது.\nகிண்ணியா ஜெனீரா ஹைருள் அமான் எழுதியுள்ள ஷமலரைத் தாவிச் செல்லும் வண்டு| என்ற கதை தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருப்பதைச் சாட்டாகக் கொண்டு வேறு ஒரு திருமணம் முடித்து குடித்தனம் செய்யும் கணவனின் கொடுமையைப்பற்றி விளக்குகிறது. எத்தனை எத்தனை குடும்பங்களில் இத்தகைய நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றனவோ\nசூசை எட்வேட்டின் ஷஇரந்துண்டு வாழ்வதில் சுகமுண்டு| என்ற சிறுகதை, அன்றாடம் பிச்சை எடுத்துப் பிழைக்கும் இரண்டு பெண் பிறவிகளைப் பற்றியது. அவர்கள் பிறவிப் பிச்சைக்காரர்கள் அல்லாவிட்டாலும் கூட சந்தர்ப்ப வசத்தால் பிச்சை எடுக்க நேரிடுகிறது. சிவப்பிரகாசம் - பத்மாவதித் தம்பதியினருக்கு இப்பிச்சைக்காரப் பெண்களால் புதிய அனுபவம் ஒன்று ஏற்படுகிறது. தம்மிடம் பிச்சை கேட்டு வந்த இரு பெண்களையும் பிச்சை எடுக்கவிடாது உழைத்து உண்பதற்கு புத்திமதி சொல்லி தனது தோட்டத்தில் வேலை செய்யும்படி பணித்துவிட்டு உண்ண உணவும், வேலைக்குக் கூலியும் கொடுத்துவிட்டு, உடுக்க உடையும் கொடுக்கத் தயாரான போது மீண்டும் வேலைக்கு வருவதாகக் கூறிச் சென்ற பெண்கள் அதன்பிறகு அங்கு வரவேயில்லை. பிச்சையே மேல் என மீண்டும் மேனி நோகாமல் உழைப்பதற்கு பிச்சைத் தொழிலுக்கே சென்றுவிடுகின்றனர். இச்செய்கையானது அட்டையைத் தூக்கி மெத்தையில் வைத்த கதையாகிவிட்டது.\nவழமைபோன்று கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இவ்விதழிலும் இடம்பெற்றிருக்கிறது. இம்முறை கவிதை பற்றிய அரிய பல குறிப்புக்களை கவிஞர் ஏ. இக்பால் தந்திருக்கிறார். கவிதையின் ஆரம்பம், அதில் நாட்டுப் பாடல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய குறிப்புக்களை எல்லாம் சங்க கால கவிதை எடுத்துக் காட்டுகளோடு நன்றாகவே ஆராய்ந்து இருக்கிறார்.\nமேலும் லண்டன் நுணாவிலூர் கா. விசயரத்தினம் குறந்தொகையில் இரு காட்சிகள் என்ற தலைப்பில் தனது கட்டுரையைத் தந்திருக்கிறார். குறுந்தொகைக் காட்சிகள் இரண்டில் முதலாவதைக் கூடலூர் கிழார் இயற்றிய குறுந்தொகைப் பாடல்களில் இருந்து 167 வது பாடலைத் தெரிவு செய்து காட்சியை விரித்திருக்கிறார். அதே போன்று காட்சி இரண்டுக்கு இரயனாரகப் பொருளில் இருந்து இரண்டாவது செய்யுளைத் தெரிவு செய்து அதற்கான காட்சியைத் தந்திருக்கிறார். இரண்டாவது எடுத்துக் கொள்ளப்பட்ட செய்யுளில் ஷஷகொங்குதேர் வாழ்க்கை|| என்ற செய்யுள் அரச சபையில் புலவர் நக்கீரரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட அருமையான செய்யுள். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்டவர். வாதிட்டு இறைவனுக்கே சவால் விடப்பட்ட அருமையான பாடல் காட்சியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.\nஜீவநதி வெளியீடான கவிஞர் ஷெல்லிதாசனின் ஷஷநகர வீதிகளில் நதிப் பிரவாகம்|| என்ற கவிதைத் தொகுதியைப் பற்றிய நூல் மதிப்பீட்டினை நிலாக்குயில் தந்திருக்கிறார். இவர் நூலில் இருந்து எடுத்துக் காட்டாக சில கவிதைகளைத் தந்து நூல் மதிப்பீட்டினைப் பெறுமதியாக்கி இருக்கிறார்.\nஇன்னும் பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்களும், புதிதாக வெளிவருகின்ற நூல்களைப் பற்றிய விபரங்களோடு நூலகப் பூங்காவும் இடம் பிடித்திருக்கின்றன. மொத்தத்தில் இந்த சஞ்சிகை தரமான பூங்காவனமாகக் காட்சி தருகிறது\nபிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்\nவெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்\nவிலை - 100 ரூபாய்\nபூங்காவனம் இதழ் 26 பற்றிய பார்வை\nபூங்காவனம் இதழ் 25 பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனம் 24 ஆவது இதழ் பற்றிய கண்ணோட்டம்\nபூங்காவனத்தின் 23 ஆவது இதழ் மீதான பார்வை\nபூங்காவனம் 22 ஆவது இதழ் மீது ஒரு பார்வை\nபூங்காவனம் 21 ஆவது இதழ் பற்றிய ஒரு கணிப்பீடு\nபூங்காவனம் 20 ஆவது இதழ் மீதான பார்வை\nபூங்காவனம் 19 ஆவது இதழ் மீதான பார்வை\nபூங்காவனம் 18 ஆவது இதழ் மீதான பார்வை\nபூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை\nபூங்காவனம் 16 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு\nபூங்காவனம் 15 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு\nபூங்காவனம் 14 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் தேசகீர...\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaitamils.blogspot.com/2011/01/7.html", "date_download": "2018-05-27T03:34:14Z", "digest": "sha1:DQB4ZI5T2T2V5VLASN354GBEPILJU5ED", "length": 7405, "nlines": 67, "source_domain": "chennaitamils.blogspot.com", "title": "விண்டோஸ் 7_பயர்பாக்ஸ்_ஐபாட் - பெயர் காரணங்கள் | சென்னை தமிழ்'S", "raw_content": "\nவிண்டோஸ் 7_பயர்பாக்ஸ்_ஐபாட் - பெயர் காரணங்கள்\nஇன்று உலகமே கொண்டாடும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான பெயர்கள் எப்படி உருவாகின என்ற சுவாரஸ்யத்தை இப்போது நீங்கள் அறிந்து கொள்ளப் போகின்றீர்கள்.......\nவிண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் என்ற பெயரினையே விட்டு விடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருள்களின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித்தன்மையை காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது.\nஆனால் இந்தப்பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; அதனால் இந்தப்பெயர் இப்படித்தான் இருக்கும்; இந்தப் பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்கு கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.\nஎல்லா நிறுவனங்களை போல மொஸில்லாவும் தன் பிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது. முதலில் பயர்பேர்ட் ( Fire Bird ) என்றுதான் இதற்கு பெயர் சூட்டியது. ஆனால் இந்த இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்ததால் பயர்பாக்ஸ் எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பது செங்கரடிப் பூனையின் பெயர். ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களை கேட்ட போது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.\nஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் ( Hub ) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு கணினி மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள்.\nகீ போர்டில் இயங்காத கீகளிலும் தட்டச்சு செய்ய\nகலர்புல் டைட்டில் பாரை உருவாக்க \nவிண்டோஸ் 7_பயர்பாக்ஸ்_ஐபாட் - பெயர் காரணங்கள்\nஎப்படி அனுப்ப வேண்டும் - SMS\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nவைர வரிகள் - 2\nவைர வரிகள் - 1\nபோட்டோ + கமென்ட் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ethir.org/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-27T03:10:15Z", "digest": "sha1:EF3IH6N44M7QNFNJ7U7GXN22XFW4XEU2", "length": 11364, "nlines": 644, "source_domain": "ethir.org", "title": "பாரதி – எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nதேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது\n81 . Views .– பாரதி – – தேசிய விடுதலை என்பது ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மூடிமறைத்துக்கொண்டு அதன் மேல் ஏறி நின்று பேசவதல்ல. எம்மத்தியில் உள்ளவர்கள் சிலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் எம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே. இவர்களை இனம் கண்டு மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவது முக்கியம். அடித்து வீழ்த்தும் வசனங்களால் பச்சை இனவாதம் பேசும் சிலரால் விடுதலை என்ற பதமே பொருள் இழந்து விடும் அபாயம் இருக்கிறது. ஒரு இனமக்கள் ஏன் தேசியத்தை நோக்கி நகர்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்....\tRead More\nகுமரன் போஸ் -வேலை உரிமையைத் திரும்ப வழங்கு – பாரதி\nஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்\n68 . Views .சொலிடாரிட்டி நாள் தொடர்பான அறிக்கையும் தொடர்ச்சியான போராடடத்தில் அடுத்த கட்ட நகர்வுகள்மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஏன் விலகவேண்டும் என்பதற்குரிய காரணங்கள் – பாரதியின் கருத்துக்கள் -மகரந்தச் சிதறலுக்காக செவ்வி எடுத்தவர் நவஜோதி Part 1 Part 2 Part 3\tRead More\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\n35 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூடக்...\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n78 . Views .முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம்...\nஅரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்\nஇலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்\nபுதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2016/06/blog-post_10.html", "date_download": "2018-05-27T03:25:29Z", "digest": "sha1:XG7AXVZODFCRQXR5YYR2FE2L7FPEDGWW", "length": 21830, "nlines": 160, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: அசோகமித்திரனின் ஒற்றன்-வாழ்க்கைப் பயணம்", "raw_content": "\nஇன்று நாவல் என்றால் எல்லா சாத்தியங்களிலும் எழுதுவது வாடிக்கையாகிவிட்டது. அதன் தளம் பரந்துபட்டதாக மாறியிருக்கிறது. நாவலைக் கட்டமைக்கும் விதத்தில் பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. ஆனால் 1985-லேயே தன் ஒற்றன் நவாலில் புதுமையைப் புகுத்தியவர் அசோகமித்திரன். அன்றே அவர் அப்படி எழுதியுள்ளார் என்று இன்று பெருமைப்படுகிறோம். ஆனால் அன்று புத்தகம் விற்பனையாகாமல் தேங்கிக்கிடந்தது. அதனால் பதிப்பாளரைப் பார்க்கவே தான் சங்கடப்பட்டதாக அவரே முன்னுரையில் சொல்கிறார். நாவலின் ஒவ்வொரு அத்தியாமும் முழுமைபெற்ற சிறுகதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா அத்தியாங்களையும் இணைக்கும் மெல்லிய சரடு அசோகமித்திரன்தான். ஏனெனில் நாவலின் மையப் பாத்திரமாக, கதைசொல்லியாக வருவது அவர்தான். அமெரிக்காவின் அயோவா சிடியில் ஏழு மாத காலம் பல்வேறு நாட்டு எழுத்தாளர்களுடன் தங்கியிருந்தபோது தனக்கு நேர்ந்த அனுவங்களையே நாவலாக்கியிருக்கிறார். பயணக் கட்டுரை, சிறுகதை, நாவல் என்ற முப்பரிமாணங்களைக் கொண்டதாக இந்நூல் மிளிர்கிறது.\nவிமான நிலையத்திலிருந்து அசோகமித்திரன் கிளம்புவதிலிருந்து நாவல் தொடங்குகிறது. முன்பின் தெரியாத இடத்தில் ஏற்படும் தடுமாற்றங்கள். உணவிற்கான பிரச்சினை. மனதுக்கும் உடலுக்கும் ஏற்படும் ஒவ்வாமை. மொழி கலாச்சாரம் ஆகிவற்றால் சக எழுத்தாளர்களுடன் பேசுவதில் இருக்கும் தடுமாற்றம். அவர்களுடன் உறவு கொள்வதில் எழும் சிக்கல்கள். வந்த நேரத்தில் சொந்த நாட்டில் ஏற்படுகிற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தவிப்பு. ஒவ்வொருவருக்கிடையே ஏற்படும் சிநேகம் மற்றும் விரோத பாவம். தட்பவெப்ப மாறுபாட்டால் எழும் அசௌகரியங்கள். இருக்கும் இடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு செல்லும்போது ஏற்படும் பிரயாணச் சிக்கல்கள். நம் ஊர் போலவே கடைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகள். பல சின்னஞ் சிறு விசயங்கள்கூட தெரியாமல் அவதிப்படுவது. போன்ற ஏராளமான அனுபவங்களை சாறுபிழிந்து கொடுத்திருக்கிறார் அசோகமித்திரன். ஒவ்வொரு விசயத்தையும் நுணுக்கமாக அவர் தனக்குள் கிரகித்துக்கொண்டு எழுதிய அவரது எழுத்தாற்றல் அசாதாரணமானது. நாம் முன்பின் அறியாத தேசத்தில் அலைந்ததான ஒரு உணர்வு நமக்கு வருகிறது.\nநடைபாதையில் வரிசையாக நின்ற அந்தப் பத்துப் பதினைந்து பேர்களுடைய முகங்களையும் கடைசி முறையாகப் பார்த்தேன். நன்கு பழகிப்போன முகங்கள். எவ்வளவோ உற்சாகமும் நம்பிக்கையும் பகிர்ந்து கொள்ளுதலும் நினைவூட்டும் முகங்கள். எனக்கு இனிமேல் பார்க்கக் கிடைக்காத முகங்கள். நான் இனிமேல் அவர்களை பார்க்க முடியாமல் போகும், என்றென்றுமாக.\nநாவலின் இறுதி வரிகள் இவை. நாவல் முழுதும் நகைச்சுவை ததும்ப எழுதிய அசோகமித்திரன், இறுதி வரிகளின் மூலம் மொத்த நாவலின் தொனியையே மாற்றிவிடுகிறார். நாம் இருக்கும் இடத்தோடு நம் மனம் பந்தப்பட்டு, அந்த இடத்தின் மீது ஒரு வாஞ்சை ஏற்பட்டுவிடுகிறது. அந்த இடத்தில் இருக்கும் வரை அதன் முக்கியத்துவமும் அருமையும் நமக்குத் தெரிவதில்லை. ஆயிரம் குறைகளும் குற்றங்களும் சொல்லித் திரிகிறோம். ஆனால் அதை இழந்தபின்னர்தான் அதன் மதிப்பும் முக்கியத்துவமும் நமக்குத் தெரியவருகிறது. இது எல்லா சந்திப்பு பிரிவுகளிலும் நிலைத்திருக்கும் ஒரு அம்சம். அந்த பிரிவு சொல்லமுடியாத ஒரு சோகத்தை, வெறுமையை நம் மனதில் நிரப்பிச்செல்கிறது. நாவலின் கடைசிப் பகுதியைப் படிக்கும்போது நாம் அடையும் உணர்வு அத்தகையதே.\nமனம் பல்வேறு சிந்தனைகளுக்கு ஆட்பட்டுக் கலங்கி, அது இப்படியாகுமோ இது இப்படியாகுமோ என்ற கவலைகளில் தறிகெட்டு ஓடும்போது அதைப் பிடித்து நிலைநிறுத்தும் லகானாகத்தான் புத்தக வாசிப்பு இருக்கிறது. அந்த வாசிப்பு வாழ்க்கை மீதான நம் புரிதல்களை விஸ்தரிக்கும்போது நம் மனம் அலைபாய்வது மட்டுப்படுகிறது. அதனால் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது எளிதாகிறது. நம் வாழ்க்கைப் பயணத்தை லகுவாக்கும் வி்த்தையை ஒற்றன் நமக்குள் விதைத்துச்செல்கிறது. அசோகமித்திரன் தன் எழுத்துக்களில் எதையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. அவர் படைப்பிலேயே எல்லாம் உள்ளது. வாசகன்தான், வாசிப்பினூடாக பயணித்து தனக்கு வேண்டியவற்றைக் கண்டடையவேண்டும். ஜெயமோகன் சொன்னதுபோல், “படைப்புகளை ஒட்டி கற்பனை செய்யவோ சிந்திக்கவோ பயிற்சியில்லாத வாசகர்களுக்கான எழுத்தல்ல இது.” தேர்ந்த வாசகர்களுக்கானது என்பதுதான் உண்மை.\n(மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஜனவரி 29, 2013)\nLabels: அசோகமித்திரன், ஒற்றன், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணம்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nதற்போது வாங்கிய எட்டு புத்தகங்கள் பற்றி சில குறிப்...\nஇந்திரா பார்த்தசாரதியின் மூன்று கதைகள்\nஅ.முத்துலிங்கத்தின் 'கடவுச்சொல்': தலைமுறை இடைவெளி\nகிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு': மறக்க முடியா...\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nவைக்கம் முகம்மது பஷீரின் இரு முக்கிய நாவல்கள்\nக.நா.சுவின் இரு நாவல்கள்: எண்ணங்களின் சுழலும் வாழ்...\nஅசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் -பின்தொடரும் நிழல்...\nசா.கந்தசாமியின் சாயாவனம்: இயற்கையோடு தோழமை\nநாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும் -சி....\nஜியாங் ரோங்கின் ஓநாய் குலச்சின்னம்: வாழ்க்கைக்கான ...\nந.சிதம்பர சுப்ரமண்யனின் இதயநாதம்: இதயத்திற்கு இதம்...\nஜி.நாகராஜனின் கடைசி தினம் -சிமோகன்\nவிக்தோர் ஹ்யூகோவின் 'மரண தண்டனைக் கைதியின் இறுதி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2018-05-27T03:08:35Z", "digest": "sha1:LSNBH3SAUNRUJG2JG7M5KVVFGODN5NHK", "length": 4502, "nlines": 145, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: நான்! – அகரம் அமுதன்", "raw_content": "\nஅகரமுதல 211, ஐப்பசி 19-25, 2048 / நவம்பர் 05 – நவம்பர் 11, 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 நவம்பர் 2017 கருத்திற்காக..\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 1:30 AM\nLabels: akaramuthala, அகரமுதல, அகரம் அமுதன், நான்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nஎம்மை ஆள எமக்குத் தெரியும்\nகசங்கிய காகிதங்களின் கருணைமனு – தமிழ்சிவா\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nபுறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: பரணர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-05-27T03:21:25Z", "digest": "sha1:H7TCXVH72ZDBYJIXAVNCWVQBXEQAPD52", "length": 4411, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "புரட்சித் தலைவர் பிடல் காஸ்டோவின் மகன் தற்கொலை » Sri Lanka Muslim", "raw_content": "\nபுரட்சித் தலைவர் பிடல் காஸ்டோவின் மகன் தற்கொலை\nகியூபா புரட்சியாளர் பிடல் காஸ்டோவின் மூத்த மகன் டயஸ் பலார்ட்(வயது 68). மனவிரக்தியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமுன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அணுசக்தி இயற்பியலாளராக கடமையாற்றிய டயஸ் பலார்ட் கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் அகாடமியின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வந்தார்.\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டயஸ் பலார்ட் மன அழுத்தத்திலிருந்து விடுபடாத காரணத்தினால் விரக்தியடைந்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி அந்த நாட்டிற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2016-ஆம் ஆண்டு தனது 90-ஆவது வயதில் உயிரிழந்தார். அவர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் அவரது மகன் தற்கொலை செய்தது கியூபா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\n70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: சிக்கினார் பிரபல ஆசாமி\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து கட்டு கட்டாக பணம், விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nசக ஊழியரை ஹேண்ட்சம் என்று அழைத்த தொகுப்பாளினி – பணியை விட்டு நீக்கிய நிறுவனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B7%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%99%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41383", "date_download": "2018-05-27T03:25:55Z", "digest": "sha1:JJO67ILEO73K4L6PR7XJIVIINBLZOFGN", "length": 19202, "nlines": 153, "source_domain": "tamilkurinji.co.in", "title": "கோரிக்கைளை நிறைவேற்ற மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்: வாபஸ் ஆகிறது விவசாயிகள் போராட்டம்!,Kisan rally: government agrees to demands, farmers withdraw protesttamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,Kisan rally: government agrees to demands, farmers withdraw protesttamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகோரிக்கைளை நிறைவேற்ற மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்: வாபஸ் ஆகிறது விவசாயிகள் போராட்டம்\nகோரிக்கைளை நிறைவேற்ற மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்: வாபஸ் ஆகிறது விவசாயிகள் போராட்டம்\nவிவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nமுழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கிஷான் சபா என்ற அமைப்பு நாசிக்கில் இருந்து மும்பைக்கு மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.\nஇதன்படி அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகளை திரட்டியது. ஆயிரக்கணக் கான விவசாயிகள் நாசிக்கில் திரண்டார்கள். அவர்கள் கடந்த 6-ந்தேதி நாசிக்கில் இருந்து 180 கி.மீ. தூரமுள்ள மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.\nஇதில் 35 ஆயிரம் பேர் பங்கேற்று இருப்பதாக கூறப் பட்டது. சட்டசபையை நோக்கிய விவசாயிகளின் இந்த பிரமாண்ட பேரணி மராட்டியத்தின் மற்ற விவசாயிகளையும் இவர்களது பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இது மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து இருக்கிறது.\nஅம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.காலையில் பேரணி சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், நள்ளிரவிலேயே விவசாயிகள் ஆசாத் மைதானம் நோக்கி நடக்க தொடங்கினர்.\nசுமார் 75 ஆயிரம் விவசாயிகள் ஆசாத் மைதானத்தில் இருப்பதாகவும், இன்னும் ரெயில், பஸ் மூலம் அதிகமான விவசாயிகள் வந்து கொண்டிருப்பதாக மாநில கிசான் சங்க தலைவர் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயாராக இருப்பதாக மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், விவசாயிகளின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்து இருப்பதாகவும் இதனால், போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த தகவலை நீர் வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன் வெளியிட்டார். இது குறித்து கிரிஷ் மகாஜன் கூறுகையில், விவசாயிகள் கோரிக்கை அனைத்தையும் அரசு நிறைவேற்ற தயாராக உள்ளது.\nபோராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். விவசாயிகள் அனைவரும் தங்கள் ஊருக்கு திரும்பச்செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளதை புனேயில் உள்ள தேசிய வைரலாஜி சோதனைக்கூடும் உறுதி செய்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.கேரளாவில் கடந்த சில தினங்களாக நிபா வைரஸ் பரவி\nகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை\nகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம் அதிகரித்து உள்ளது, வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களில் 10 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு நிபா\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nசன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nதிருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nகதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nஉடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்\nமும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nகர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்\n5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்\nஇளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது\nகாமன்வெல்த் குத்துச்சண்டை - இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் பலி\nபோலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி\nகாவிரி விவகாரம் - பா.ம.க. சார்பில் தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16030045/Reconciliation-of-Ranjunkudi-Fort-of-the-District.vpf", "date_download": "2018-05-27T03:20:29Z", "digest": "sha1:Q6ZQTHAHMBRU6OQHWYN4L6LQVUMCNGAW", "length": 11532, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Reconciliation of Ranjunkudi Fort of the District Conference of Artists Association || ரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் பதற்றத்தினை தணிக்க பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு முடிந்தது\nரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் + \"||\" + Reconciliation of Ranjunkudi Fort of the District Conference of Artists Association\nரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 7-வது மாநாடு நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அகவி தலைமை தாங்கினார். தேவன்பு, திரவியராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் மாநாடு தொடக்க உரையாற்றினார். செல்வபாண்டியன், எட்வின் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநாடு நிறைவாக மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரன் பேசினார். கலை இலக்கிய பண்பாடு மற்றும் வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் செல்வகுமார் தாக்கல் செய்தார். அறிக்கை மீதான விவாதமும், சங்கத்தின் புதிய மாவட்டக்குழு நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.\nசுற்றுலா மையம் அமைக்க வேண்டும்\nமாநாட்டில், தாய்மொழி கல்வியை பாழடிக்கிற தமிழக அரசின் ஆங்கில வழி ஆரம்ப பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, மழலையர் தாய்மொழி பள்ளிகளை அரசு உருவாக்கிட வேண்டும். பெரம்பலூரில் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையை புனரமைத்து சுற்றுலா மையம் அமைத்து அரசு பராமரிக்க வேண்டும். பெரம்பலூர் மக்களின் கலை, இலக்கிய வெளிப்பாடுகளுக்கு ஏற்ற வகையில், அரங்கத்துடன் கூடிய திறந்தவெளி மைதானத்தை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட துணை தலைவர் ராமர் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக மாநாட்டில் சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம் என்கிற தலைப்பில் கருத்தரங்கமும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் இசை, கவிதை, நாடகம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மாநாட்டில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை யானை மிதித்து கொன்றது\n2. பெண்ணை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி இறந்த வாலிபர் உடல் மீட்பு\n3. மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் சாலை மறியல்\n4. குடிப்பழக்கத்தை தந்தை விடமறுத்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை\n5. உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கலெக்டர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-bravia-kdl-43w950c-109-cm-43-full-hd-3d-smart-led-tv-price-pqZ7PP.html", "date_download": "2018-05-27T03:31:05Z", "digest": "sha1:XW3QFEOLBFSTYE446WKM3IH5WV2EG7S5", "length": 17463, "nlines": 368, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 65,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 109.22 cm\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் பிட்டுறேஸ் Photo Sharing Plus\nஇதர பிட்டுறேஸ் Full HD 3D LED TV\nசோனி பிறவியே கடல் ௪௩வ்௯௫௦க் 109 கிம் 43 பிலால் ஹட ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lion-muthucomics.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-27T03:37:33Z", "digest": "sha1:ICO7JAKISYSWRVK24PWGIGIE6W3IC5TP", "length": 107933, "nlines": 375, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: September 2012", "raw_content": "\n14 மணி நேர மின்வெட்டுக்கு நடுவில் தத்ததளிக்கும் சிவகாசியிலிருந்து வணக்கங்கள் எதிலும் உள்ள 'பளிச்' பக்கத்தைப் பார்த்திடுவோமே என்ற எங்கள் நகரின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி சிந்தித்தேன்... எதிலும் உள்ள 'பளிச்' பக்கத்தைப் பார்த்திடுவோமே என்ற எங்கள் நகரின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி சிந்தித்தேன்... டிசைன் பிரிவில் ; கம்ப்யூட்டர் பிரிவில் ; அச்சுப் பிரிவில் ; லாமினேஷன் பிரிவில் என்று ஒப்படைத்த எந்தப் பணிகளும் நடந்தேறிட வாய்ப்பில்லை என்பதால், 'அக்கடா'வென தலைக்குக் கையை வைத்துக் கட்டையைக் கிடத்த அவகாசம் கிடைக்கிறதே - அந்த மட்டிற்கு ஜாலி தான் என்று தோன்றியது \nதிண்ணை சிந்தனைகள் செல்லும் திசைகள் ; வழங்கிடும் முத்துக்கள் தான் எத்தனை,எத்தனை இயந்தரத்தலை மனிதர்களின் கிளைமாக்சில் வருவது போல் நமது இரும்புக்கை மாயாவியாரை (கோவைகாரரை அல்ல இயந்தரத்தலை மனிதர்களின் கிளைமாக்சில் வருவது போல் நமது இரும்புக்கை மாயாவியாரை (கோவைகாரரை அல்ல) வரவழைத்து, பாட்டரிகளில் இருந்து மின்சாரத்தை உறிஞ்சி இருளில் மூழ்கிக் கிடக்கும் நகரை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்திட முடிந்தால் - 'அடடே பிரமாதமாக இருக்குமே' என்ற சூப்பர் ஐடியா ) வரவழைத்து, பாட்டரிகளில் இருந்து மின்சாரத்தை உறிஞ்சி இருளில் மூழ்கிக் கிடக்கும் நகரை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்திட முடிந்தால் - 'அடடே பிரமாதமாக இருக்குமே' என்ற சூப்பர் ஐடியா நமது சட்டித் தலையன் ஆர்ச்சியை களத்தில் இறக்கி, பரபரவென்று பைண்டிங் பணிகளை அசுர வேகத்தில் முடித்திட முடிந்தால் - மின்வெட்டாவது, ஒன்றாவது - எல்லா மாதங்களும் இதழ்கள் ஜரூராய் தயாராகிடுமே என்ற அறிவுபூர்வமான சிந்தனை மறு நொடியில் நமது சட்டித் தலையன் ஆர்ச்சியை களத்தில் இறக்கி, பரபரவென்று பைண்டிங் பணிகளை அசுர வேகத்தில் முடித்திட முடிந்தால் - மின்வெட்டாவது, ஒன்றாவது - எல்லா மாதங்களும் இதழ்கள் ஜரூராய் தயாராகிடுமே என்ற அறிவுபூர்வமான சிந்தனை மறு நொடியில் 5 லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு நமது \"தலை\" ஸ்பைடரை தனது ஹெலிகாரில் கிளப்பி விட்டு சந்தாப் பிரதிகளைப் பட்டுவாடா செய்திடச் செய்தால் - ST கூரியரைத் தேடி அலையத் தேவை இராதே என்ற இன்னொரு சிந்தனை முத்து 5 லிட்டர் ஸ்பீட் பெட்ரோல் போட்டு விட்டு நமது \"தலை\" ஸ்பைடரை தனது ஹெலிகாரில் கிளப்பி விட்டு சந்தாப் பிரதிகளைப் பட்டுவாடா செய்திடச் செய்தால் - ST கூரியரைத் தேடி அலையத் தேவை இராதே என்ற இன்னொரு சிந்தனை முத்து So இருளிலும் முத்துக்கள் - அவை சிந்தனை முத்துக்களோ ; காமிக்ஸ் முத்துக்களோ - உருவாக வாய்ப்புள்ளதென்பதை புரிந்து கொண்டே, தட்டுத் தடுமாறி நமது பணிகளை பார்த்து வருகின்றோம் So இருளிலும் முத்துக்கள் - அவை சிந்தனை முத்துக்களோ ; காமிக்ஸ் முத்துக்களோ - உருவாக வாய்ப்புள்ளதென்பதை புரிந்து கொண்டே, தட்டுத் தடுமாறி நமது பணிகளை பார்த்து வருகின்றோம் தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி தற்போது நமது டீம் முழுவதுமே இரவுக் கழுகுகளாய் உருமாறிப் பணி செய்வதால் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் அக்டோபர் 15 -ல் தயாராகி விடும் என்பது தான் சந்தோஷச் சேதி அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் அது மட்டுமல்லாது கேப்டன் டைகரின் \"தங்கக் கல்லறை\" கூட நவம்பர் முதல் தேதிக்கே தயாராகி விடும் So உங்கள் தீபாவளிக்கு சிவகாசிப் பட்டாசுகளோடு டைகர் & கோவின் வாண வேடிக்கைகளும் துணை இருக்கும் \nஇடையில் வரவிருக்கும் பெரிய இதழ்களின் பணிகளை முடித்துவிட்டால் மெகா இதழான NEVER BEFORE ஸ்பெஷல் மீது கவனம் செலுத்திட இயலும் என்பதால் ஒரு வித பரபரப்பு என்னுள் இப்போதெல்லாம் இதன் மத்தியில் இங்கே இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு பற்றிய track ஒன்று ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் இதன் மத்தியில் இங்கே இரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு பற்றிய track ஒன்று ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் ஏற்கனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஒரு பகுதியினை நான் தெளிவாகவே எடுத்துச் சொல்லி விட்டேன் ஏற்கனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஒரு பகுதியினை நான் தெளிவாகவே எடுத்துச் சொல்லி விட்டேன் சிக்கல்களின் மீதப் பரிமாணங்களை சிலாகித்தோ ; இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள் சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் சிக்கல்களின் மீதப் பரிமாணங்களை சிலாகித்தோ ; இந்தக் கனவை நடைமுறைப்படுத்திட எங்களது உழைப்பை செலவிடும் பட்சத்தில் - நிச்சயம் அடுத்த 6 மாதங்களாவது வேறு புது இதழ்கள் சாத்தியப்படாது என்பதைப் பற்றியோ பேசி, ஒரு சீராய் பயணித்துக் கொண்டிருக்கும் நமது புது இதழ்களின் சாலையை கரடு முரடாக்கிக் கொள்வது விவேகமாகாதென்று நினைக்கிறேன் அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அது மட்டுமல்லாது இந்த ஆயிரம் ரூபாய் ; ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றெல்லாம் விலைகள் வைத்து நமது காமிக்ஸ்களை சராசரியான நண்பர்களின் தொடும் தூரத்திற்கு வெகு அப்பால் கொண்டு நிறுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை புதன் கிழமை மாலை நமது அலுவலகத்திற்கு வந்ததொரு உள்ளூர் சிறுவன் கையில் இருந்ததோ ரூபாய் 100 ; ஆனால் அவன் இன்னும் வாங்கிடாத நமது சமீபத்திய இதழ்கள் 3 புதன் கிழமை மாலை நமது அலுவலகத்திற்கு வந்ததொரு உள்ளூர் சிறுவன் கையில் இருந்ததோ ரூபாய் 100 ; ஆனால் அவன் இன்னும் வாங்கிடாத நமது சமீபத்திய இதழ்கள் 3 அவன் கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் ; இறுதியாக நியூ லுக் ஸ்பெஷல் இதழை தேர்வு செய்த பின்னும், டபுள் த்ரில் மீது லயித்து நின்ற அவனது பார்வை என்னுள் ஒரு விதக் கலக்கத்தை ஏற்படுத்தியது அவன் கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் ; இறுதியாக நியூ லுக் ஸ்பெஷல் இதழை தேர்வு செய்த பின்னும், டபுள் த்ரில் மீது லயித்து நின்ற அவனது பார்வை என்னுள் ஒரு விதக் கலக்கத்தை ஏற்படுத்தியது நூறு ரூபாய் இதழ்களெனும் போதே இந்த நிலை என்றால், கனவிலும் எட்டிட இயலா 4 digit விலைகள் இது போன்ற ஏக்கங்கள் எத்தனைக்கு விளைநிலங்கள் ஆகிட வாய்ப்புத் தருமோ \nமறுபதிப்புகள் ஆண்டொன்றுக்கு ஆறு இதழ்களே என்று நாம் தீர்மானித்தது நினைவிருக்கலாம் அவற்றில் 5 கறுப்பு வெள்ளை இதழ்களும் ; ஒன்றே ஒன்று ரூபாய் நூறு விலையிலான வண்ண இதழாகவும் இருக்கும் என்று சொல்லி இருந்தேன் அவற்றில் 5 கறுப்பு வெள்ளை இதழ்களும் ; ஒன்றே ஒன்று ரூபாய் நூறு விலையிலான வண்ண இதழாகவும் இருக்கும் என்று சொல்லி இருந்தேன் அதில் சின்னதாய் ஒரு அதிகரிப்பு ; black & white இதழ்கள் 6 + வண்ண மறுபதிப்பு 1 - ஆக மொத்தம் 7 இதழ்கள் என்று திட்டமிட்டுள்ளேன் அதில் சின்னதாய் ஒரு அதிகரிப்பு ; black & white இதழ்கள் 6 + வண்ண மறுபதிப்பு 1 - ஆக மொத்தம் 7 இதழ்கள் என்று திட்டமிட்டுள்ளேன் அந்த ஒரு வண்ண இதழ் ஆண்டின் இறுதி இதழாக ; பெரும்பான்மையினரின் தேர்வாக அமைந்திடும் .. அந்த ஒரு வண்ண இதழ் ஆண்டின் இறுதி இதழாக ; பெரும்பான்மையினரின் தேர்வாக அமைந்திடும் .. So பாக்கி 6 இதழ்களை அதிக தாமதமின்றி அறிவித்து விட்டால், குழப்பங்களுக்கு இடம் தந்திடாது என்று தோன்றுகிறது So பாக்கி 6 இதழ்களை அதிக தாமதமின்றி அறிவித்து விட்டால், குழப்பங்களுக்கு இடம் தந்திடாது என்று தோன்றுகிறது \nமறுபதிப்புகள் என்ற உடனேயே நம் முத்து காமிக்ஸ் மும்மூர்த்திகள் முன்னணியில் ஆஜர் ஆகிடுவதை தவிர்க்க இயலாதே So பிள்ளையார் சுழி போட்டு வைக்கப் போகும் இதழ் நமது \"மாயாவி டைஜெஸ்ட் -1 \" பிரத்யேகமாக மாயாவியின் சாகசங்களை மாத்திரமே தாங்கி வரவிருக்கும் இந்த இதழில் - கீழ்க்கண்ட 3 கதைகள் இடம் பிடித்திடும் :\nநமது பத்து ரூபாய் லயன் ; முத்து இதழ்கள் வெளிவந்த அதே சைசில் (19cm x 13 cm ) ; black & white -ல் 368 பக்கங்களுடன் ; அருமையான வெள்ளைக் காகிதத்தில், கெட்டியான அட்டைப்படத்தோடு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் banner -ல் இந்த வரிசை தொடர்ந்திடும். அடுத்த இதழாக வரவிருப்பது - லாரன்ஸ் டேவிட் டைஜெஸ்ட் -1 அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி... அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி... கதைகளின் பட்டியல் இதோ :\nஇதழ் எண் 3 - \"ஜானி நீரோ ஸ்பெஷல் -1 \" கதைகளின் வரிசை இதோ :\nஇந்த 9 கதைகளுமே அற்புத சாகச விருந்துகள் என்பதோடு ; சமீபத்தில் மறுபதிப்பாகா கதைகள் என்பதாலும் தேர்வாகின்றன முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் முடிந்தளவிற்கு இந்த digest -களுக்கு Fleetway பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைன்களை நாமும் உபயோகிக்க முயற்சிப்போம் 'மறுபதிப்பில் மும்மூர்த்திகள் மட்டும் தானா 'மறுபதிப்பில் மும்மூர்த்திகள் மட்டும் தானா லயனின் ஆரம்ப - ஆதர்ஷ நாயகரான குற்றச் சக்கரவர்த்திக்கு இடமில்லையா லயனின் ஆரம்ப - ஆதர்ஷ நாயகரான குற்றச் சக்கரவர்த்திக்கு இடமில்லையா ' வென புருவத்தை உயர்த்தும் நண்பர்களின் பொருட்டு - இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு ' வென புருவத்தை உயர்த்தும் நண்பர்களின் பொருட்டு - இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு \"ஸ்பைடர் ஸ்பெஷல்-1 \"-ல் இந்த 3 கதைகள் வந்திடும் :\nஇதில் முதல் இரு கதைகள் லயனின் ஆண்டுமலர் & தீபாவளி மலர்களில் பல கதைகளின் மத்தியினில் இணைந்து வந்தவை என்பதால், இது நாள் வரை நமது மறுபதிப்பு வலையில் சிக்கிடாமல் போனது அதே போல் மரண ராகம் இதழ் கூட மறுபதிப்பானதாய் நினைவில்லை எனக்கு \nஇதழ் எண் 5 - நிறைய நண்பர்களுக்கு சற்றே வியப்பைத் தரும் ஒரு தேர்வாக இருந்திடலாம் எனினும், இது வரை போனிலும், நேரிலும், கடிதங்களிலும் எக்கச்சக்கமான வாக்குகளைப் பெற்ற காரணத்தால், மினி லயனின் ஆரம்ப 4 இதழ்களும் ஒரு சேர - \"மினி லயன் டைஜெஸ்ட் -1 \" ஆக மறுபதிப்பாகிடும் எனினும், இது வரை போனிலும், நேரிலும், கடிதங்களிலும் எக்கச்சக்கமான வாக்குகளைப் பெற்ற காரணத்தால், மினி லயனின் ஆரம்ப 4 இதழ்களும் ஒரு சேர - \"மினி லயன் டைஜெஸ்ட் -1 \" ஆக மறுபதிப்பாகிடும் இவை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு வெறும் பெயர்களாக இருந்திட்டால் நான் வியப்படைய மாட்டேன் ; ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னே - ரூபாய் 1 விலையில் (நம்பித் தான் ஆக வேண்டும் இவை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு வெறும் பெயர்களாக இருந்திட்டால் நான் வியப்படைய மாட்டேன் ; ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்னே - ரூபாய் 1 விலையில் (நம்பித் தான் ஆக வேண்டும் ) வந்த கலக்கலான ஆகஷன் கதைகள் இவை ) வந்த கலக்கலான ஆகஷன் கதைகள் இவை ஒரிஜினலில் மெகா பாக்கெட் சைஸ் இதழ்கள் தான் என்ற போதிலும் தற்சமயம் இதர மறுபதிப்புகள் போல் சற்றே பெரிதாய் வந்திடும் ஒரிஜினலில் மெகா பாக்கெட் சைஸ் இதழ்கள் தான் என்ற போதிலும் தற்சமயம் இதர மறுபதிப்புகள் போல் சற்றே பெரிதாய் வந்திடும் இதோ அந்தக் கதைகளின் பட்டியல் \nஇதழ் எண் 6 -ம் ஒரு சுவாரஸ்யமான தேர்வு என்றே சொல்லுவேன் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல - இது ஒரு \"VINTAGE DETECTIVE DIGEST \" ஏற்கனவே கோடிட்டுக் காட்டியது போல - இது ஒரு \"VINTAGE DETECTIVE DIGEST \" ரிப் கிர்பி ; காரிகன் ; விங் கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி ஆகிய நால்வரின் டாப் சாகசங்களில் ஒவ்வொன்றைக் கொண்ட இந்த இதழில் கீழ்க்கண்ட கதைகள் இடம் பெற்றிருக்கும் :\nகுரங்கு தேடிய கொள்ளையர் புதையல் (சார்லி)\nரோஜா மாளிகை ரகசியம் (ரிப் கிர்பி)\nஇவை அனைத்துமே முத்து காமிக்ஸில் வெளி வந்த சமயம் தொடங்கி ; இன்று வரை நம்மை மெய்மறக்கச் செய்யும் கதைகள் என்பதில் சந்தேகமே கிடையாதே புதிதாய் படிக்கவிருக்கும் நண்பர்களுக்கு இது நிச்சயம் ஒரு பிரமிப்பான அனுபவமாய் அமையப் போவது உறுதி \n2013 -க்கான இந்த 6 இதழ்கள் நீங்கலாக - டிசெம்பர் 2013 -ல் ஒரு வண்ண மறுபதிப்பு ரூபாய் - 100 விலையில் ; 112 பக்கங்களோடு வந்திடும் இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே.. இதில் இடம் பிடிக்கக் கூடிய கதைகளின் தேர்வு முழுக்க முழுக்க உங்களிடமே.. நம் இதழ்களில் இதற்காக ஒரு கூப்பன் இருந்திடும் ; அவற்றில் உங்கள் தேர்வுகளை தெளிவாக எழுதி அனுப்பிடலாம் \nSo புலரவிருக்கும் புத்தாண்டின் மறுபதிப்புப் பட்டியல் இதுவே கொஞ்சம் உடன்பாடும் ; நிறைய மாறுபட்ட கருத்துக்களும் இந்தத் தேர்வுகளுக்கு இருந்திட வாய்ப்புண்டு என்பதை நான் அறிவேன் கொஞ்சம் உடன்பாடும் ; நிறைய மாறுபட்ட கருத்துக்களும் இந்தத் தேர்வுகளுக்கு இருந்திட வாய்ப்புண்டு என்பதை நான் அறிவேன் எனினும் பெரும்பான்மையான நமது வாசகர்களின் வேண்டுகோள்களின் பிரதிபலிப்பே எனது இந்தப் பட்டியலே தவிர - எனது தனிப்பட்ட விருப்புகளுக்கு இங்கு இடமோ ; வெறுப்புகளுக்குக் கல்தாவோ தந்திட நான் முனைந்திடவில்லை என்பதே நிஜம் எனினும் பெரும்பான்மையான நமது வாசகர்களின் வேண்டுகோள்களின் பிரதிபலிப்பே எனது இந்தப் பட்டியலே தவிர - எனது தனிப்பட்ட விருப்புகளுக்கு இங்கு இடமோ ; வெறுப்புகளுக்குக் கல்தாவோ தந்திட நான் முனைந்திடவில்லை என்பதே நிஜம் உங்களின் reactions நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திடுமென்பது எனக்குத் தெரியும் உங்களின் reactions நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திடுமென்பது எனக்குத் தெரியும் \nதாமதமாகினும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களோடு எனது வணக்கங்களும் உரித்தாகுக \nபிள்ளையாரின் பிறந்தநாட்கள் எப்போதுமே ஒரு விதப் பரபரப்பையும், உற்சாகத்தையும் என்னுள் கொண்டு வருவதுண்டு கொழுக்கட்டைகளைப் போட்டுத் தாக்கிட ஒரு சூப்பர் வாய்ப்பென்பதைத் தாண்டி, நிறைய பள்ளிப் பருவ நினைவுகளையும் கொண்டு வந்திடும் மகிமை இந்நாளுக்கு உண்டு என்னைப் பொருத்த வரை கொழுக்கட்டைகளைப் போட்டுத் தாக்கிட ஒரு சூப்பர் வாய்ப்பென்பதைத் தாண்டி, நிறைய பள்ளிப் பருவ நினைவுகளையும் கொண்டு வந்திடும் மகிமை இந்நாளுக்கு உண்டு என்னைப் பொருத்த வரை எங்கள் நகரின் மையத்தில் உள்ளதொரு பிள்ளையார் கோவிலின் வாசலில் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் பெரியதொரு மேடை அமைக்கப்பட்டு, பள்ளி மாணாக்கரிடையே ஒரு பேச்சுப் போட்டி நடைபெற்றிடும். எங்கள் பள்ளியின் சார்பாக அனுப்பப்படும் போட்டியாளர்களில் அடியேனும் அடக்கம். ஊரின் மையப் பகுதியில் ரோட்டை மறித்து மாலையில் நடத்தப்படும் போட்டி என்பதால் தெருக்களில் நல்ல கூட்டம் கூடிடுவது வழக்கம். பள்ளியில் மேடைகளில் பேசும் போதே ஒரு விதக் கூச்சம் மனுஷனை பிடுங்கிடும் போது, வீதிகளில் ஏராளமான கூட்டத்தின் நடுவே பேசிடணும் என்றால் கேட்கவும் வேண்டுமா எங்கள் நகரின் மையத்தில் உள்ளதொரு பிள்ளையார் கோவிலின் வாசலில் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் பெரியதொரு மேடை அமைக்கப்பட்டு, பள்ளி மாணாக்கரிடையே ஒரு பேச்சுப் போட்டி நடைபெற்றிடும். எங்கள் பள்ளியின் சார்பாக அனுப்பப்படும் போட்டியாளர்களில் அடியேனும் அடக்கம். ஊரின் மையப் பகுதியில் ரோட்டை மறித்து மாலையில் நடத்தப்படும் போட்டி என்பதால் தெருக்களில் நல்ல கூட்டம் கூடிடுவது வழக்கம். பள்ளியில் மேடைகளில் பேசும் போதே ஒரு விதக் கூச்சம் மனுஷனை பிடுங்கிடும் போது, வீதிகளில் ஏராளமான கூட்டத்தின் நடுவே பேசிடணும் என்றால் கேட்கவும் வேண்டுமா \"பில்டிங் ஸ்ட்ராங் ;பேஸ்மென்ட் வீக் \" என்ற கதை தான் \"பில்டிங் ஸ்ட்ராங் ;பேஸ்மென்ட் வீக் \" என்ற கதை தான் அதுவும் மேடையில் மாணவிகள் தங்கு தடைகளின்றி விளாசிடும் போது, நமது வரிசை வருவதற்காகக் கீழே காத்திருப்பது - 'ஐயோடா சாமி' அனுபவம் அதுவும் மேடையில் மாணவிகள் தங்கு தடைகளின்றி விளாசிடும் போது, நமது வரிசை வருவதற்காகக் கீழே காத்திருப்பது - 'ஐயோடா சாமி' அனுபவம் \"பிள்ளையாரப்பா....எனக்குப் பரிசெல்லாம் கிடைக்காவிட்டிலும் பரவாயில்லை; இத்தனை கூட்டத்தின் மத்தியில் ; அதுவும் இப்படிப் பின்னி பெடல் எடுக்கும் பெண் பிள்ளைகள் மத்தியில் என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ளாது இருந்தாலே போதும்\" என்று வேண்டிய மாலைகள் நிறையவே நினைவுக்கு வருகின்றன \nநினைவுகளைக் கொணரும் இந்த சதுர்த்தி தினத்தில், வெகு சமீபத்தில் பெங்களுருவில் நமது நண்பர்களை சந்தித்ததும், அவர்களது கேள்விகளும் 'பளிச்' என்று நினைவில் நிற்கின்றது. ஆங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையே சின்னதொரு பதிவாய்ப் போட்டிட promise பண்ணி இருந்ததும் நினைவில் நிற்பதால், here goes :\nசூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எப்போது நிச்சயம் வருகிறது தானே ----> சந்தேகமே வேண்டாம்...சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் நிச்சயம் உண்டு அடுத்த வாரத் துவக்கத்தில் அச்சுப் பணிகளைத் தொடங்கிடவிருக்கின்றோம் . இம்மாத இறுதிக்குள் இதழ் அச்சாகி ; அக்டோபர் 10 தேதிக்கு முன்னதாகவே உங்களை வந்தடையும்.\n-----> மாற்றம் ஒன்று மாத்திரமே மாறாதது ; ஆனால் இதற்கு விதிவிலக்கென்று ஏதேனும் இருக்குமாயின், அது தான் \"இரும்புக்கை மாயாவி\"யின் குறையா மவுசு தமிழில் காமிக்ஸ் என்பதற்கே ஒரு அடையாளம் தந்த நம் மறையும் மனிதர் - ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்த பின்னும் தனது (தமிழ்) காமிக்ஸ் பயணத்தின் வேகத்தை மட்டுப்படுத்திடுவதாகத் தெரியவில்லை தமிழில் காமிக்ஸ் என்பதற்கே ஒரு அடையாளம் தந்த நம் மறையும் மனிதர் - ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்த பின்னும் தனது (தமிழ்) காமிக்ஸ் பயணத்தின் வேகத்தை மட்டுப்படுத்திடுவதாகத் தெரியவில்லை தனிப்பட்டமுறையில் 'it's time to move on' என்று நான் நினைத்திட்டாலும், மறுபதிப்புகள் எனும் உங்களின் கோரிக்கை விடாது தொடர்வதால், மாயாவி & கோ. 2013 - ல் நிச்சயம் தொடர்வர் ; reprint களில் \n--------->பெங்களுருவில் சந்தித்த நண்பர்களில் கணிசமானோர் - நமது இந்த வலைப்பதிவைத் தவறாது வாசிக்கும், ஆனால் நேரமின்மை காரணத்தாலோ ; தமிழில் டைப் செய்யத் தெரியாதென்ற காரணத்தினாலோ பின்னூட்டங்கள் இடாத passive followers ஆகையால், இங்கே கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திடுவதை படித்துப் பரிச்சயம் கொண்டிருந்தாலும், தங்களது சொந்த விருப்பு - வெறுப்புகளை அதிகம் வெளிப்படுத்தியிரா மௌனிகள் - at least என்னை சந்தித்திட்ட வரை ஆகையால், இங்கே கருத்துப் பரிமாற்றங்கள் நடந்திடுவதை படித்துப் பரிச்சயம் கொண்டிருந்தாலும், தங்களது சொந்த விருப்பு - வெறுப்புகளை அதிகம் வெளிப்படுத்தியிரா மௌனிகள் - at least என்னை சந்தித்திட்ட வரை பேச வாய்ப்புக் கிடைத்த போது ஒவ்வொருவரும் தத்தம் ஆதர்ஷ நாயகர்கள் பற்றி ; தங்களின் மறுபதிப்புத் தேர்வுகள் பற்றி ; சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் பற்றி என்று வெளுத்துக் கட்டி விட்டனர் பேச வாய்ப்புக் கிடைத்த போது ஒவ்வொருவரும் தத்தம் ஆதர்ஷ நாயகர்கள் பற்றி ; தங்களின் மறுபதிப்புத் தேர்வுகள் பற்றி ; சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் பற்றி என்று வெளுத்துக் கட்டி விட்டனர் அவர்களில் நிறையப் பேர் கேட்டது : \"வண்ணத்தில் மறுபதிப்பு சாத்தியமா அவர்களில் நிறையப் பேர் கேட்டது : \"வண்ணத்தில் மறுபதிப்பு சாத்தியமா\"என்பதே வண்ணத்தில் ஒரு இதழைத் தயாரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நான் பட்டியலிட எத்தனித்தால், அது ஒரு அழுகாச்சி மெகா சீரியல் போல் ஆகிடும் என்பதால் நான் மழுப்பிக் கொண்டே நடையைக் கட்டிடுவது வழக்கம் ஆனால் சமீபமாய் , இந்த \"வண்ணம் வேண்டும்\" என்ற கோரிக்கை உரக்க ஒலிப்பதால் , அதன் மறுபக்கமுள்ள மண்டை நோவுகளையும் உங்களுக்குப் பரிச்சயமாக்கும் வேளை வந்துவிட்டதென்று தோன்றுகிறது ஆனால் சமீபமாய் , இந்த \"வண்ணம் வேண்டும்\" என்ற கோரிக்கை உரக்க ஒலிப்பதால் , அதன் மறுபக்கமுள்ள மண்டை நோவுகளையும் உங்களுக்குப் பரிச்சயமாக்கும் வேளை வந்துவிட்டதென்று தோன்றுகிறது நான் பல முறை சொல்லியுள்ளது போல, நமது பலமும், பலவீனமும் நமது அமைப்பின் அளவே நான் பல முறை சொல்லியுள்ளது போல, நமது பலமும், பலவீனமும் நமது அமைப்பின் அளவே பெரியதொரு அலுவலகம், எக்கச்சக்கமான ஆள், அம்பாரமெல்லாம் நமது காமிக்ஸ் பிரிவிற்கு எனக் கிடையாது பெரியதொரு அலுவலகம், எக்கச்சக்கமான ஆள், அம்பாரமெல்லாம் நமது காமிக்ஸ் பிரிவிற்கு எனக் கிடையாது சொல்லப் போனால்,பணியாளர்களின் சம்பளமும், தொலைபேசிக் கட்டணங்களும் தவிர்த்து, நமது காமிக்ஸ் பிரிவின் தலையில் வேறு எந்த செலவினங்களையும் சுமத்துவதில்லை. நான் அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் போது கூட, அதில் ஒரு அணா வாகினும் காமிக்ஸ் பிரிவின் பொறுப்பாகிடாது சொல்லப் போனால்,பணியாளர்களின் சம்பளமும், தொலைபேசிக் கட்டணங்களும் தவிர்த்து, நமது காமிக்ஸ் பிரிவின் தலையில் வேறு எந்த செலவினங்களையும் சுமத்துவதில்லை. நான் அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் போது கூட, அதில் ஒரு அணா வாகினும் காமிக்ஸ் பிரிவின் பொறுப்பாகிடாது தற்சமயம் நாம் பின்பற்றி வரும் இந்த நேரடி விற்பனை முயற்சியில் - முன்பைப் போல் கடன் தரும் அவஸ்தைகள் ; வசூலுக்காகச் செருப்புகள் தேய்விப்பது போன்ற தொல்லைகள் கிடையாது தற்சமயம் நாம் பின்பற்றி வரும் இந்த நேரடி விற்பனை முயற்சியில் - முன்பைப் போல் கடன் தரும் அவஸ்தைகள் ; வசூலுக்காகச் செருப்புகள் தேய்விப்பது போன்ற தொல்லைகள் கிடையாது ஆனால் தற்சமயம் நாம் அச்சிடும் பிரதிகளில் உடனே விற்பனை செய்வது தோராயமாக 60 % மாத்திரமே ; மீதமுள்ள 40 % நம் கைவசம் ஸ்டாக்காக இருந்து, சிறுகச் சிறுகவே விற்பனை ஆகிடும். ஒரு குறைந்தபட்ச printrun ஆவது இல்லாவிடில், விலையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாதென்பது பத்திரிகை உலக economics ஆனால் தற்சமயம் நாம் அச்சிடும் பிரதிகளில் உடனே விற்பனை செய்வது தோராயமாக 60 % மாத்திரமே ; மீதமுள்ள 40 % நம் கைவசம் ஸ்டாக்காக இருந்து, சிறுகச் சிறுகவே விற்பனை ஆகிடும். ஒரு குறைந்தபட்ச printrun ஆவது இல்லாவிடில், விலையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாதென்பது பத்திரிகை உலக economics ஆகையால் ஒவ்வொரு வண்ண இதழுக்கும் தற்சமயம் நம் முதலீடும் அதிகம் ; முடங்கும் தொகையும் அதிகம் ஆகையால் ஒவ்வொரு வண்ண இதழுக்கும் தற்சமயம் நம் முதலீடும் அதிகம் ; முடங்கும் தொகையும் அதிகம் அவ்வப்போது வந்திடும் புத்தகத் திருவிழாக்களில் விற்பனை ; E -Bay ஆன்லைன விற்பனை ; ஏஜெண்டுகளின் ரொக்கக் கொள்முதல்கள் என்று சிறுகச் சிறுக விற்பனைகள் நடந்தேறி வருவதால் சற்றே பாதை சுலபமாகி வருகின்றது அவ்வப்போது வந்திடும் புத்தகத் திருவிழாக்களில் விற்பனை ; E -Bay ஆன்லைன விற்பனை ; ஏஜெண்டுகளின் ரொக்கக் கொள்முதல்கள் என்று சிறுகச் சிறுக விற்பனைகள் நடந்தேறி வருவதால் சற்றே பாதை சுலபமாகி வருகின்றது இந்த சூழலில் வண்ணத்தில் மறுபதிப்பு என்று புதிதாக இன்னொரு சாலை அமைப்பதென்பது உங்கள் பாக்கெட்களுக்கு மாத்திரமன்றி எங்களது பாக்கெட்களுக்கும் நலம் தரா விஷயம் இந்த சூழலில் வண்ணத்தில் மறுபதிப்பு என்று புதிதாக இன்னொரு சாலை அமைப்பதென்பது உங்கள் பாக்கெட்களுக்கு மாத்திரமன்றி எங்களது பாக்கெட்களுக்கும் நலம் தரா விஷயம் இது ஒருபக்க நடைமுறைச் சிக்கலென்றால், தயாரிப்பில் சந்திக்கும் \"பெண்டு நிமிர்த்திகளுக்குப்\" பஞ்சமே கிடையாது இது ஒருபக்க நடைமுறைச் சிக்கலென்றால், தயாரிப்பில் சந்திக்கும் \"பெண்டு நிமிர்த்திகளுக்குப்\" பஞ்சமே கிடையாது வண்ண மறுபதிப்பான \"தங்கக் கல்லறை\" இதழுக்கான பணிகளும் தற்போது நடந்தேறி வருவதால், அதில் எழும் பிரச்னைகளை first hand ஆக சமாளித்து வருகின்றேன் வண்ண மறுபதிப்பான \"தங்கக் கல்லறை\" இதழுக்கான பணிகளும் தற்போது நடந்தேறி வருவதால், அதில் எழும் பிரச்னைகளை first hand ஆக சமாளித்து வருகின்றேன் இதழைப் படிக்கும் சமயம் வந்திடும் போது இது பற்றி எழுதுகிறேன் இதழைப் படிக்கும் சமயம் வந்திடும் போது இது பற்றி எழுதுகிறேன் எல்லாவற்றிற்கும் மேலாக, புதிதாய் ஒரு பணியை ; ஒரு ப்ராஜெக்டை கையில் எடுத்திடும் போது தோன்றும் உற்சாகம், ஒரு மறுபதிப்பிற்கு மறுவடிவம் தந்திட முயலும் போது எழுந்திடுவதில்லை எல்லாவற்றிற்கும் மேலாக, புதிதாய் ஒரு பணியை ; ஒரு ப்ராஜெக்டை கையில் எடுத்திடும் போது தோன்றும் உற்சாகம், ஒரு மறுபதிப்பிற்கு மறுவடிவம் தந்திட முயலும் போது எழுந்திடுவதில்லை So ஆண்டுக்கு ஒரு மறுபதிப்பு - முழு வண்ணத்தில் ; பெரிய சைசில் என்பது நிச்சயம் So ஆண்டுக்கு ஒரு மறுபதிப்பு - முழு வண்ணத்தில் ; பெரிய சைசில் என்பது நிச்சயம் அதில் வந்திடவிருக்கும் கதைத் தேர்வுகள் முழுக்க முழுக்க உங்கள் கைகளில் அதில் வந்திடவிருக்கும் கதைத் தேர்வுகள் முழுக்க முழுக்க உங்கள் கைகளில் கள்ள ஓட்டோ - நல்ல ஓட்டோ போட்டு நீங்கள் தேர்வு செய்யும் கதைகள் வண்ணத்தில் (மறுபதிப்பாய்) வந்திடும் \n\"மின்னும் மரணம்\" வண்ணத்தில் திரும்பவும் போடலாமே -------இக்கேள்விக்கு பதில் இதோ - மேலே உள்ளதால்...I will let this one pass by \nமினி லயன் எல்லாவற்றையும் மறுபதிப்பு போட்டே தீர வேண்டும் மினி லயனின் அந்த ஆரம்பக் கதைகள் - ஒரு ரூபாய் விலையில் வந்தவை என்பதாலோ, என்னமோ இன்னமும் என் நினைவில் நின்றிடும் இதழ்கள். பின்னர் வெவ்வேறு விலைகளில் வந்தாலும், சுவாரஸ்யமான combination களைக் கொண்டு ஒவ்வொரு இதழும் வெளியானதாய் என் மனதுக்குப்பட்டது மினி லயனின் அந்த ஆரம்பக் கதைகள் - ஒரு ரூபாய் விலையில் வந்தவை என்பதாலோ, என்னமோ இன்னமும் என் நினைவில் நின்றிடும் இதழ்கள். பின்னர் வெவ்வேறு விலைகளில் வந்தாலும், சுவாரஸ்யமான combination களைக் கொண்டு ஒவ்வொரு இதழும் வெளியானதாய் என் மனதுக்குப்பட்டது மறுபதிப்பு ப்ரோக்ராமில் மினி லயனுக்கு இடம் ஒதுக்குவது சிரமம் தராதென்று நினைக்கிறேன் மறுபதிப்பு ப்ரோக்ராமில் மினி லயனுக்கு இடம் ஒதுக்குவது சிரமம் தராதென்று நினைக்கிறேன் \nடெக்ஸ் வில்லர் ஏன் ஆளைக் காணோம் 'பதுங்குவது பாய்வதற்கே' என்று பஞ்ச் டயலாக் விட்டால் நன்றாகவே இருக்கும் ; எனினும் நிஜம் அதுவல்ல 'பதுங்குவது பாய்வதற்கே' என்று பஞ்ச் டயலாக் விட்டால் நன்றாகவே இருக்கும் ; எனினும் நிஜம் அதுவல்ல டெக்ஸ் கதைகளின் பிரதானம் கருப்பு, வெள்ளை என்பதாலும், அதன் வடிவமைப்பு நமது தற்சமயப் பெரிய சைசிற்கு அத்தனை ஏற்றதல்ல என்பதாலும், 2012 -ன் காலெண்டரில் அவருக்கு இடம் தந்திட்டு என்னை நானே குழப்பிக் கொள்ளத் தயாராக இல்லை. புதிய பாணி ; புதிய விற்பனை முறைகள் அனைத்துமே ஓரளவுக்குப் பரிச்சயமான பின்னே மாறுபட்ட விலைகள் ; அமைப்புகள் என்று முயற்சிக்கலாம் என்பதே எனது சிந்தனையாக இருந்தது இவ்வாண்டின் துவக்கத்தில் டெக்ஸ் கதைகளின் பிரதானம் கருப்பு, வெள்ளை என்பதாலும், அதன் வடிவமைப்பு நமது தற்சமயப் பெரிய சைசிற்கு அத்தனை ஏற்றதல்ல என்பதாலும், 2012 -ன் காலெண்டரில் அவருக்கு இடம் தந்திட்டு என்னை நானே குழப்பிக் கொள்ளத் தயாராக இல்லை. புதிய பாணி ; புதிய விற்பனை முறைகள் அனைத்துமே ஓரளவுக்குப் பரிச்சயமான பின்னே மாறுபட்ட விலைகள் ; அமைப்புகள் என்று முயற்சிக்கலாம் என்பதே எனது சிந்தனையாக இருந்தது இவ்வாண்டின் துவக்கத்தில் இப்போது ஓரளவிற்குத் தெளிவு பிறந்திருப்பதால் நமது டாப் ஸ்டாரான டெக்ஸின் வருகைக்கு ரூட் க்ளியர் ஆகி விட்டது. இரவுக் கழுகார் பிப்ரவரி 2013 -ல் பிரச்சனமாகிறார் - ரூபாய் ஐம்பது விலையில் - ஒரு 240 பக்க சாகசத்தோடு \nமாண்ட்ரேக் கதைகள் ஏன் வருவதில்லை இப்போதெல்லாம் எனது ஆதர்ஷ காமிக்ஸ் நாயகர்கள் பட்டியலில் மாண்ட்ரேக்குக்கு நிச்சயம் இடமுண்டு : ஆனால் உங்களில் எத்தனை பேர் அவரது சாகசங்களை ரசித்திட நிஜமாகத் தயாரென்று நானறியேன் எனது ஆதர்ஷ காமிக்ஸ் நாயகர்கள் பட்டியலில் மாண்ட்ரேக்குக்கு நிச்சயம் இடமுண்டு : ஆனால் உங்களில் எத்தனை பேர் அவரது சாகசங்களை ரசித்திட நிஜமாகத் தயாரென்று நானறியேன் நமது பத்து ரூபாய் இதழ்களில் மாண்ட்ரேக் வந்து கொண்டிருந்த வேளைகளில் விற்பனை செம மந்தம் என்பது அவரை ஓரங்கட்டிட ஒரு பிரதான காரணம் நமது பத்து ரூபாய் இதழ்களில் மாண்ட்ரேக் வந்து கொண்டிருந்த வேளைகளில் விற்பனை செம மந்தம் என்பது அவரை ஓரங்கட்டிட ஒரு பிரதான காரணம் நீங்கள் தயாரென்றால் - நானும் தயாரே... நீங்கள் தயாரென்றால் - நானும் தயாரே... தூங்கிக் கொண்டிருக்கும் அவரது கதைகளை எனது மேஜையிலிருந்து விடுதலை கொடுத்த புண்ணியமும் நமக்குச் சேரும் \nநமது சர்குலேஷன் இப்போது எவ்வளவு பெரிதாய் இல்லாத போதிலும், நிச்சயம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று எண்ணிடச் செய்யும் ஒரு நம்பிக்கையான நம்பர் பெரிதாய் இல்லாத போதிலும், நிச்சயம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று எண்ணிடச் செய்யும் ஒரு நம்பிக்கையான நம்பர் \nஜான் ஸ்டீல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஆனதன் ரகசியம் '30 நாட்களில் அப்பாடக்கராவது எப்படி '30 நாட்களில் அப்பாடக்கராவது எப்படி ' என்று புத்தகங்கள் எதையும் படித்து ஜான் ஸ்டீல் நம் இதழ்களில் தற்சமயத்து இடத்தைப் பிடித்திடவில்லை' என்று புத்தகங்கள் எதையும் படித்து ஜான் ஸ்டீல் நம் இதழ்களில் தற்சமயத்து இடத்தைப் பிடித்திடவில்லை '60 களின் இறுதியிலும் ; '70 -களின் துவக்கங்களிலும் Fleetway வெளியீடுகளில் மிகுந்த வரவேற்புப் பெற்றதொரு ஹீரோ ஜான் ஸ்டீல் '60 களின் இறுதியிலும் ; '70 -களின் துவக்கங்களிலும் Fleetway வெளியீடுகளில் மிகுந்த வரவேற்புப் பெற்றதொரு ஹீரோ ஜான் ஸ்டீல்அவரது கதைகளில் திறமையான ஓவியரின் பணியும்;யதார்த்தமான கதைக்களங்களை உருவாக்கும் கதாசிரியரின் கைவண்ணத்தையும் ரசித்திட முடியும். ஜான் ஸ்டீல் கதைகளின் காலகட்டம் புராதனமானதென்பதால், லார்கோ ;XIII போன்ற சமகாலத்து நாயகர்களின் பளபளப்பு தென்படுவது இயலாக் காரியம் ; but still கழிக்கும் ரகமல்ல அவரது கதைகளில் திறமையான ஓவியரின் பணியும்;யதார்த்தமான கதைக்களங்களை உருவாக்கும் கதாசிரியரின் கைவண்ணத்தையும் ரசித்திட முடியும். ஜான் ஸ்டீல் கதைகளின் காலகட்டம் புராதனமானதென்பதால், லார்கோ ;XIII போன்ற சமகாலத்து நாயகர்களின் பளபளப்பு தென்படுவது இயலாக் காரியம் ; but still கழிக்கும் ரகமல்ல தவிர இவரது கதைகளின் நீளம் ஜாஸ்தி கிடையாதென்பதால் நமது இதழ்களின் பின்பக்கங்களில் இவரை நுழைத்திடுவது சுலபமாகுகிறது \nஇரத்தப் படலம் முழுவதையும் வண்ணத்தில் மறுபதிப்பு முடியுமா இரத்தப் படலம் - முழுத் தொகுப்பு சுருக்கமாய்ச் சொல்வதெனில் ஒரு வைராக்கியத்தின் வெளிப்பாடு இரத்தப் படலம் - முழுத் தொகுப்பு சுருக்கமாய்ச் சொல்வதெனில் ஒரு வைராக்கியத்தின் வெளிப்பாடு அதனை கருப்பு வெள்ளையில் வெளியிடுவதிலேயே தொங்கிப் போன நாக்கு தெருவைக் கூட்டாத குறை தான் அதனை கருப்பு வெள்ளையில் வெளியிடுவதிலேயே தொங்கிப் போன நாக்கு தெருவைக் கூட்டாத குறை தான் மீண்டும் அதனை வண்ணத்தில் வெளியிடுவதென்பது சுகமான கற்பனையாகவே இருந்திடும் மீண்டும் அதனை வண்ணத்தில் வெளியிடுவதென்பது சுகமான கற்பனையாகவே இருந்திடும் இரத்தப் படலம் கதைகளில் வசனங்களுக்குப் பஞ்சமே கிடையாது ; பக்கம் பக்கமாய் ஒவ்வொரு பாத்திரமும் பேசுவது சகஜம் என்பது நாமறிவோம் . வண்ணத்தில் அந்தந்த வசன பலூன்களுக்குள் ஓரளவிற்காவது வாசிக்க இயலும் சைசில் எழுத்துக்களை அமைக்க வேண்டுமெனில், மீண்டும் 18 பாகங்களையும் crisp ஆக மொழிபெயர்த்திடல் அவசியம் இரத்தப் படலம் கதைகளில் வசனங்களுக்குப் பஞ்சமே கிடையாது ; பக்கம் பக்கமாய் ஒவ்வொரு பாத்திரமும் பேசுவது சகஜம் என்பது நாமறிவோம் . வண்ணத்தில் அந்தந்த வசன பலூன்களுக்குள் ஓரளவிற்காவது வாசிக்க இயலும் சைசில் எழுத்துக்களை அமைக்க வேண்டுமெனில், மீண்டும் 18 பாகங்களையும் crisp ஆக மொழிபெயர்த்திடல் அவசியம் புதிய மொழிபெயர்ப்பில் முந்தைய கருப்பு வெள்ளைக் கதையின் நடையில் இருந்த சுவாரஸ்யம் குன்றிடாமல் ; சங்கதிகள் ஏதும் கத்திரிக்கப்படாது அமைகிறதாவென்று பார்த்துக்கொள்வதிலேயே பெண்டு கழன்று விடும். 'அப்படியே எடுத்தோம் ; வண்ணத்தை மாத்திரமே சேர்த்தோம் - இதழ் ரெடி' என்றதொரு magic noodles பார்முலா கிட்டிட்டால் எல்லாமே சுலபமாகிடும் புதிய மொழிபெயர்ப்பில் முந்தைய கருப்பு வெள்ளைக் கதையின் நடையில் இருந்த சுவாரஸ்யம் குன்றிடாமல் ; சங்கதிகள் ஏதும் கத்திரிக்கப்படாது அமைகிறதாவென்று பார்த்துக்கொள்வதிலேயே பெண்டு கழன்று விடும். 'அப்படியே எடுத்தோம் ; வண்ணத்தை மாத்திரமே சேர்த்தோம் - இதழ் ரெடி' என்றதொரு magic noodles பார்முலா கிட்டிட்டால் எல்லாமே சுலபமாகிடும் அது வரை கனவுகளே நம் தோழர்களாக இருத்தல் அவசியம் - இரத்தப் படலத்தைப் பொருத்த வரையிலாவது \nகிராபிக் நாவல் என்றால் என்ன இது அடிக்கடி வருமா எமனின் திசை மேற்கு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி இருக்கும் -நிச்சயமாக இது போல் மாறுபட்ட கதைகள் கிடைக்கும் போது நிச்சயம் வெளியிடுவோம் - அவை கௌபாய் ரகக் கதைகளாக அல்லாது இருந்தாலும் \nஸ்பைடர் கதைகளை ரசிக்க அப்படி என்ன பெரிய பிரச்னை இது ஒவ்வொருவரின் ரசனையினையும் சார்ந்த சங்கதி என்பதால், ரொம்பவே sensitive ஆன விஷயமாகிறது இது ஒவ்வொருவரின் ரசனையினையும் சார்ந்த சங்கதி என்பதால், ரொம்பவே sensitive ஆன விஷயமாகிறது இதில் எனது அபிப்ராயம் எதுவாக இருப்பினும், வாசகர்களின் ஆர்வத்திற்கோ, வேட்கைக்கோ நான் தடையாக நிற்கப் போவதில்லை இதில் எனது அபிப்ராயம் எதுவாக இருப்பினும், வாசகர்களின் ஆர்வத்திற்கோ, வேட்கைக்கோ நான் தடையாக நிற்கப் போவதில்லை சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் இதழ் வெளியான பின்னே இதனைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் இதழ் வெளியான பின்னே இதனைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் \n\"கார்சனின் கடந்த காலம் \" reprintபோடாமல் விட்டுடாதீங்க ரீப்ரின்ட் - ரீப்ரின்ட் - உங்கள் சாய்ஸ் - உங்கள் சாய்ஸ் \nகேப்டன் டைகர் கதைகளின் குறைபடிப் பாகங்களை எப்போது நிறைவு செய்வதாக திட்டம் செப்பனிட வேண்டிய சாலைகள் ; உருவாக்க வேண்டிய மேம்பாலங்களென - நம் நாட்டு நெடுஞ்சாலைகளைப் போல் டைகர் கதைகளிலும் நமக்கு ஏகப்பட்ட வேலை பாக்கி உள்ளது செப்பனிட வேண்டிய சாலைகள் ; உருவாக்க வேண்டிய மேம்பாலங்களென - நம் நாட்டு நெடுஞ்சாலைகளைப் போல் டைகர் கதைகளிலும் நமக்கு ஏகப்பட்ட வேலை பாக்கி உள்ளது பணியைத் துவக்கியாச்சு..இனி பொறுமையாய் ஒவ்வொன்றாய் முடிக்க வேண்டியது தான் \nஇரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் \nபுதிதாய் என்ன கதைகள் வரப் போகின்றன மர்ம மனிதன் மார்ட்டின் & ராபின் வருவது உறுதியாகிவிட்டது . மதியில்லா மந்திரி ; சாகச வீரர் ரோஜர் ; ப்ருனோ பிரேசில் ஆகியோரும் உண்டு பட்டியலில். இன்னும் ஒரு சில நாயகர்கள் என் லிஸ்டில் உள்ளனர் ; நவம்பரில் அவர்களைப் பற்றி எழுதிகிறேனே \nஇந்தப் புது பாணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் - \"WOW \" ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் - \"WOW \"\nமறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் தயக்கமெல்லாம் கிடையாது கடல் அளவு சர்வதேசத் தரம் நம் முன்னே புதிதாய்க் காத்திருக்கும் போது, பெருங்காய டப்பாவை முகர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பது எவ்விதம் சுவாரஸ்யம் அளிக்குமென்பது தான் எனது கேள்வி \"எமனின் திசை மேற்கு\" ரகத்தில் காத்திருக்கும் அற்புதங்கள் எத்தனையோ \"எமனின் திசை மேற்கு\" ரகத்தில் காத்திருக்கும் அற்புதங்கள் எத்தனையோ லார்கோவின் புதுப் பாணியில் இன்னும் நம் கைபடாத கதைவரிசைகள் எத்தனையோ லார்கோவின் புதுப் பாணியில் இன்னும் நம் கைபடாத கதைவரிசைகள் எத்தனையோ அந்தத் தேடலில் நமது creative energy செலவாகினால் எனக்கு சந்தோஷமே \nவேதாளரின் புதிய கதைகளை ஏன் போடக் கூடாது வேதாளரின் புதுப் பாணிக் கதைகளை நிறைய ஆங்கிலப் பதிப்பகங்கள் முயற்சித்து, கையைச் சுட்டுக் கொண்டு நிறுத்தி விட்டன. முந்தைய கதைகளை உங்களுக்கு ஆர்வமிருப்பின் உயிர்ப்பித்துக் கொண்டு வர உரிமையாளர்களிடம் பேசிப் பார்க்கலாம் \nசூ.ஹீ .சூ .Spl வண்ணத்தில் போட முடியாதா \nதிகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் இரண்டாம் திகில் இதழின் மறுபதிப்பு \"தங்கக் கல்லறை\"யின் பின்னே வந்திடும் இரண்டாம் திகில் இதழின் மறுபதிப்பு \"தங்கக் கல்லறை\"யின் பின்னே வந்திடும் இதழ் 3 - maybe மறுபதிப்புப் பட்டியலில் \nகபிஷ் ; இன்ஸ்பெக்டர் கருடா போன்ற கதைகளை ஏன் போடுவதில்லை இப்போதெல்லாம் மும்பையிலிருந்து Rang Rekha Features எனும் நிறுவனம் மேற்படிக் கதைகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்தது. நீண்ட காலமாய் தொடர்பின்றிப் போனதால், இப்போதைய நிலவரம் சரியாகத் தெரியவில்லை. விசாரித்துப் பார்க்க வேண்டும் \nவாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன கவனிக்கப் படவேண்டியதொரு சங்கதி தமிழில் சிறார்கள் படிக்கக் கூடிய காமிக்ஸ் இதழ் ஒன்றை உருவாக்க முடிந்தால் அற்புதமாக இருக்கும் \nடைகர் digest ; பிரின்ஸ் digest ; சிக் பில் digest என்று தனித்தனியாய்ப் போட்டால் என்ன மீண்டும் நமது விற்பனை முகவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது இதழ்களைக் கேட்டு வாங்குவதை கடந்த ஓரிரு மாதங்களாய் நாங்கள் பார்த்து வருகின்றோம். கொஞ்சம் அவகாசமளித்தால் விற்பனை எண் இன்னும் சற்றே தாட்டியமாகிட வாய்ப்புண்டு என்று உறுதியாக நம்பத் தோன்றுகிறது மீண்டும் நமது விற்பனை முகவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது இதழ்களைக் கேட்டு வாங்குவதை கடந்த ஓரிரு மாதங்களாய் நாங்கள் பார்த்து வருகின்றோம். கொஞ்சம் அவகாசமளித்தால் விற்பனை எண் இன்னும் சற்றே தாட்டியமாகிட வாய்ப்புண்டு என்று உறுதியாக நம்பத் தோன்றுகிறது அந்த பொழுது புலரும் போது எல்லாமே சாத்தியமே \nNEVER BEFORE ஸ்பெஷல் ஜனவரியில் நிச்சயமா You bet முழு மூச்சாய்ப் பணிகள் நடந்தேறி வருகின்றன சொல்லப் போனால் கடந்த ஒரு மாதமாகவே நான் இங்கே வலைப்பதிவிற்கு ஒதுக்கும் நேரம் கூட குறைந்து விட்டது - NEVER BEFORE ஸ்பெஷல் இதழின் பணி மும்முரத்தில் சொல்லப் போனால் கடந்த ஒரு மாதமாகவே நான் இங்கே வலைப்பதிவிற்கு ஒதுக்கும் நேரம் கூட குறைந்து விட்டது - NEVER BEFORE ஸ்பெஷல் இதழின் பணி மும்முரத்தில் ஜனவரி 2013 -ல் உங்கள் கைகளில் இதழ் இருப்பது நிச்சயம் \nபெரும்பான்மையான சங்கதிகள் நாம் இங்கே ஏற்கனவே போட்டுத் துவைத்தவைகளே என்ற போதிலும், புது வாசகர்களுக்கு இவை சுவாரஸ்யத்தைத் தரலாமென்று தோன்றியது எழுதிடுவதில் எனக்குக் கிடைத்த சந்தோஷம், படிக்கும் உங்களுக்கும் கிடைத்தால் ரெட்டிப்பு மகிழ்ச்சியே எழுதிடுவதில் எனக்குக் கிடைத்த சந்தோஷம், படிக்கும் உங்களுக்கும் கிடைத்தால் ரெட்டிப்பு மகிழ்ச்சியே \nவணக்கம். சிவகாசியில் இரு பெரிய அம்மன் கோவில்கள் இருப்பதால், ஒவ்வொரு கோடையிலும், ஒன்றுக்கு இரண்டாகத் திருவிழாக்கள் நடந்தேறுவது வழக்கம். பள்ளி ஆண்டு விடுமுறைகளை ஒட்டிய ஏப்ரலில் ஒன்றும், மே மாதம் இன்னொன்றும் என எங்களது சிறு வயதுக் குதூகலங்கள் இந்தத் திருவிழாக்களின் வருகையைச் சுற்றியே இருந்திடுவது வழக்கம். முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அந்த அப்பட்டமான சந்தோஷத்தை ; கலப்படமில்லாக் குதூகலத்தை ; கடந்த சனி & ஞாயிற்றுக் கிழமைகள் உணர்ந்திடும் ஒரு ஆச்சர்ய அனுபவம் நமது பெங்களுரு COMIC CON திருவிழாவின் புண்ணியத்தில் கிட்டியது \nபெரிதானதொரு எதிர்பார்ப்பையோ ..ஏராளமான பிரதிகளையோ சுமந்து செல்லாமல், ரம்யமான பெங்களுருவில் சனி காலையில் நானும், எனது புதல்வன் விக்ரமும், நமது காமிக்ஸின் \"பிரபல முகமும், குரலுமான\" எங்களது விற்பனை மேலாளர் ராதாகிருஷ்ணன் சகிதம் இறங்கிய போதே நமது வாசக நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள் துவங்கிட்டன ராதாகிருஷ்ணனின் கைபேசி எண் நிறைய நண்பர்களுக்குப் பரிச்சயம் என்பதால், ஆர்வமான வினவல்கள் ; விசாரிப்புகள் என்று காலை 9 மணிக்கு முன்னதாகவே களை கட்டத் துவங்கியது ராதாகிருஷ்ணனின் கைபேசி எண் நிறைய நண்பர்களுக்குப் பரிச்சயம் என்பதால், ஆர்வமான வினவல்கள் ; விசாரிப்புகள் என்று காலை 9 மணிக்கு முன்னதாகவே களை கட்டத் துவங்கியது நிகழ்ச்சி நடந்திடும் கோரமங்களா ஸ்டேடியத்திற்கு வழி கண்டு பிடித்து ஒன்பது மணிக்கு அங்கே ஆஜராகிய போது, பெரிய , பெரிய டெம்போக்களிலும் வேன்களிலும், இதர பங்கேற்பாளர்களின் சரக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திட முடிந்தது நிகழ்ச்சி நடந்திடும் கோரமங்களா ஸ்டேடியத்திற்கு வழி கண்டு பிடித்து ஒன்பது மணிக்கு அங்கே ஆஜராகிய போது, பெரிய , பெரிய டெம்போக்களிலும் வேன்களிலும், இதர பங்கேற்பாளர்களின் சரக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திட முடிந்தது காலை பத்து மணிக்கு மேல் திருவிழா துவங்கிடவிருக்க , தத்தம் ஸ்டால்களைத் தயார்படுத்திட ஒன்பது மணிக்கு அனுமதி தந்திட்டார்கள். மெள்ள அரங்கினுள் நுழைந்தால், அங்கே பரிச்சயப்பட்டதொரு முகம் நம்மை வரவேற்றிட நின்றது காலை பத்து மணிக்கு மேல் திருவிழா துவங்கிடவிருக்க , தத்தம் ஸ்டால்களைத் தயார்படுத்திட ஒன்பது மணிக்கு அனுமதி தந்திட்டார்கள். மெள்ள அரங்கினுள் நுழைந்தால், அங்கே பரிச்சயப்பட்டதொரு முகம் நம்மை வரவேற்றிட நின்றது அதிகாலையே பெங்களுரு வந்துவிட்டதாகவும், இங்கே அரங்கு வாயிலில் எட்டு மணிக்கெல்லாம் வந்து 'தேவுடு ' காத்திருப்பதாகவும் நமது வாசக நண்பர் சொல்லிய போது அவர்தம் முகத்தில் அயற்சியினைப் பார்த்திட முடியவில்லை ; மாறாக கொப்பளிக்கும் உற்சாகமே தெரிந்தது அதிகாலையே பெங்களுரு வந்துவிட்டதாகவும், இங்கே அரங்கு வாயிலில் எட்டு மணிக்கெல்லாம் வந்து 'தேவுடு ' காத்திருப்பதாகவும் நமது வாசக நண்பர் சொல்லிய போது அவர்தம் முகத்தில் அயற்சியினைப் பார்த்திட முடியவில்லை ; மாறாக கொப்பளிக்கும் உற்சாகமே தெரிந்தது நமக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டால் எண் B17 சிறிதென்ற போதிலும் நல்லதொரு இடத்தில அமைந்திருந்தது நமக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டால் எண் B17 சிறிதென்ற போதிலும் நல்லதொரு இடத்தில அமைந்திருந்தது 'விறு விறு' வென்று எங்கள் பணியாளர்கள் நாங்கள் கொண்டு வந்திருந்த போஸ்டர்கள் ; பெரிய banner ஆகியவற்றை ஸ்டாலில் ஒட்டிடத் தயார் ஆக, வரிந்து கட்டிக் கொண்டு நம் நண்பரும் செயலில் இறங்கினார் \nபத்தே நிமிடங்களில் நமது ஸ்டால் 'பளிச்' என்று காட்சியளித்தது வரவிருக்கும் \"தங்கக் கல்லறை \" அட்டைப்படத்தின் blowup ; மையமாய் சூ.சூ.Spl -ன் (முழுவதும் பூர்த்தி செய்யப் படாத ) முன்பக்க டிசைன் ; நமது நாயகர்களின் ஒரு குட்டி அறிமுகம் கொண்ட நான்கு பக்க போஸ்டர் - ஆங்கிலத்தில் ; இரத்தப் படல முழுத் தொகுப்பின் அட்டைப்பட blow up ; WILD WEST ஸ்பெஷலின் blowup என்று நமது ஸ்டாலின் சுவர்கள் சுவாரஸ்யமாகவே தெரிந்ததாக எனக்குப் பட்டது \nபக்கத்தில் கடை போடத் துவங்கிக் கொண்டிருந்த இதர பங்கேற்பாளர்களை பராக்குப் பார்க்க அரங்கத்தை ஒரு ரவுண்ட் அடித்தேன் காமிக்ஸ் பதிப்பகங்கள் ; விற்பனையாளர்கள் மட்டுமென்று இல்லாது, t -ஷர்ட் விற்பனை மையங்கள் ; காமிக்ஸ் தொடர்புடைய பொம்மைகள், விளையாட்டுப் பொருட் விற்பனை நிலையங்கள் ; அரிய காமிக்ஸ் சித்திரங்களின் சேகரிப்பைக் கொண்டதொரு கடை ; காமிக்ஸ் ஓவியர்கள் பயன்படுத்திடும் பல்வேறு சித்திர சாதனங்களின் விற்பனைக் கூடம் ; சர்வதேச அளவில் காமிக்ஸ் ; அனிமேஷன் போன்ற கலைகளில் பயிற்சி தந்திடும் பள்ளிகளின் ஸ்டால்கள் என்று காமிக்ஸ் தொடர்புடைய சங்கதிகளாய் அரங்கமே நிறைந்திருந்தது நிறைவாக இருந்தது காமிக்ஸ் பதிப்பகங்கள் ; விற்பனையாளர்கள் மட்டுமென்று இல்லாது, t -ஷர்ட் விற்பனை மையங்கள் ; காமிக்ஸ் தொடர்புடைய பொம்மைகள், விளையாட்டுப் பொருட் விற்பனை நிலையங்கள் ; அரிய காமிக்ஸ் சித்திரங்களின் சேகரிப்பைக் கொண்டதொரு கடை ; காமிக்ஸ் ஓவியர்கள் பயன்படுத்திடும் பல்வேறு சித்திர சாதனங்களின் விற்பனைக் கூடம் ; சர்வதேச அளவில் காமிக்ஸ் ; அனிமேஷன் போன்ற கலைகளில் பயிற்சி தந்திடும் பள்ளிகளின் ஸ்டால்கள் என்று காமிக்ஸ் தொடர்புடைய சங்கதிகளாய் அரங்கமே நிறைந்திருந்தது நிறைவாக இருந்தது \"நானொரு காமிக்ஸ் காதலன் \" என்று சொன்னால், \"ஆஹா..நேற்று வரை பயல் நல்லா தானே இருந்தான் \"நானொரு காமிக்ஸ் காதலன் \" என்று சொன்னால், \"ஆஹா..நேற்று வரை பயல் நல்லா தானே இருந்தான் \" என்ற பாணியிலான பார்வைகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இங்கே நிச்சயமிருக்காது என்ற உணர்வு ; தொடர்ந்து இங்கே ஆஜராகப் போகும் ஒவ்வொருவரும் காமிக்ஸ் எனும் சுவையை நேசிக்கும், சுவாசிக்கும் அன்பர்களாகத் தான் இருப்பார்கள் என்ற realisation ஒரு இனம் சொல்ல இயலா இதத்தை தந்தது \nமணி பத்து அடிக்கும் போது வேக நடையாய் நம் வாசகர்கள் ஒருவர் பின் ஒருவராய் அங்கே பிரசன்னமாக () எனக்குள் சின்னதாய் ஒரு நம்பிக்கை துளிர் விடத் துவங்கியது ) எனக்குள் சின்னதாய் ஒரு நம்பிக்கை துளிர் விடத் துவங்கியது நான் ஏற்கனவே எழுதி இருந்தது போல, அசாத்தியமான விற்பனையை எதிர்பார்த்தெல்லாம் நாங்கள் COMIC CON -க்குப் புறப்பட்டிருக்கவில்லை நான் ஏற்கனவே எழுதி இருந்தது போல, அசாத்தியமான விற்பனையை எதிர்பார்த்தெல்லாம் நாங்கள் COMIC CON -க்குப் புறப்பட்டிருக்கவில்லை மாறாக, நமது இரண்டாவது வருகையின் தொடர்ச்சியாக ; இந்த வலைப்பதிவில் நாம் எண்ணப் பரிமாற்றங்கள் செய்திடத் துவங்கியதன் தொடர்ச்சியாக - வாசக நண்பர்களை சந்திக்கவும், அவர்தம் கருத்துக்களை அறிந்திடவும் இதுவொரு platform ஆக அமைந்திட வேண்டுமே என்ற அவா மட்டுமே என்னுள் மேலோங்கி நின்றது மாறாக, நமது இரண்டாவது வருகையின் தொடர்ச்சியாக ; இந்த வலைப்பதிவில் நாம் எண்ணப் பரிமாற்றங்கள் செய்திடத் துவங்கியதன் தொடர்ச்சியாக - வாசக நண்பர்களை சந்திக்கவும், அவர்தம் கருத்துக்களை அறிந்திடவும் இதுவொரு platform ஆக அமைந்திட வேண்டுமே என்ற அவா மட்டுமே என்னுள் மேலோங்கி நின்றது அரங்கம் முழுவதிலும் தமிழ் முகங்கள் நம்மது மாத்திரமே என்பதால், நம்மை சந்தித்திட வருகை தரும் நண்பர்களை சுலபமாய் அடையாளம் காண முடிந்த போது எனது எதிர்பார்ப்பு பொய்க்காது என்று புரிந்தது \nமிகச் சின்ன அவகாசத்திற்குள் நம் ஸ்டால் செம பிஸியாகி விட்டது பெங்களுருவில் வசிக்கும் ; பணி புரியும் நண்பர்கள் ; தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிரத்யேகமாக இதற்கெனவே ஒரு ட்ரிப் அடித்திருந்த அன்பர்கள் என்று ஒரு காமிக்ஸ் காதல் குழுமம் அங்கே சற்றைக்கெல்லாம் உருவாகி விட்டிருந்தது பெங்களுருவில் வசிக்கும் ; பணி புரியும் நண்பர்கள் ; தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிரத்யேகமாக இதற்கெனவே ஒரு ட்ரிப் அடித்திருந்த அன்பர்கள் என்று ஒரு காமிக்ஸ் காதல் குழுமம் அங்கே சற்றைக்கெல்லாம் உருவாகி விட்டிருந்தது ஒவ்வொருவரின் முகத்தில் தாண்டவமாடிய சந்தோஷமும், கண்களில் தெரிந்த ஒளியும், எவ்வித சந்தேகமும் வைத்திடவில்லை - நம் இதழ்களின் மீது அவர்களுக்குள்ள நேசத்தினைப் பற்றி \nஒவ்வொருவரும் சரவெடியாய்க் கேள்விகளைத் தொடுத்தனர் \nசூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எப்போது \n\"மின்னும் மரணம்\" வண்ணத்தில் திரும்பவும் போடலாமே \nமினி லயன் எல்லாவற்றையும் மறுபதிப்பு போட்டே தீர வேண்டும் \nடெக்ஸ் வில்லர் ஏன் ஆளைக் காணோம் \nமாண்ட்ரேக் கதைகள் ஏன் வருவதில்லை இப்போதெல்லாம் \nநமது சர்குலேஷன் இப்போது எவ்வளவு \nஜான் ஸ்டீல் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஆனதன் ரகசியம் \nஇரத்தப் படலம் முழுவதையும் வண்ணத்தில் மறுபதிப்பு முடியுமா \nகிராபிக் நாவல் என்றால் என்ன \nஸ்பைடர் கதைகளை ரசிக்க அப்படி என்ன பெரிய பிரச்னை \n\"கார்சனின் கடந்த காலம் \" reprintபோடாமல் விட்டுடாதீங்க \nகேப்டன் டைகர் கதைகளின் குறைபடிப் பாகங்களை எப்போது நிறைவு செய்வதாக திட்டம் \nஇரும்புக்கை எத்தனின் இறுதிப் பாகங்கள் \nபுதிதாய் என்ன கதைகள் வரப் போகின்றன \nஇந்தப் புது பாணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது \nமறுபதிப்புக்கு ஏன் இவ்வளவு தயக்கம் \nவேதாளரின் புதிய கதைகளை ஏன் போடக் கூடாது \nசூ.ஹீ .சூ .Spl வண்ணத்தில் போட முடியாதா \nதிகில் ஆரம்ப இதழ்களை தொடர்ந்து மறுபதிப்பு செய்வதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் \nகபிஷ் ; இன்ஸ்பெக்டர் கருடா போன்ற கதைகளை ஏன் போடுவதில்லை இப்போதெல்லாம் \nவாண்டுகள் படிப்பதற்காக முந்தைய ஜூனியர் லயன் பாணியில் ஏதாச்சும் வெளியிட்டால் என்ன \nடைகர் digest ; பிரின்ஸ் digest ; சிக் பில் digest என்று தனித்தனியாய்ப் போட்டால் என்ன \nNEVER BEFORE ஸ்பெஷல் ஜனவரியில் நிச்சயமா \nலக்கி லூக்கின் தோட்டாக்களின் வேகத்திற்கு வந்து விழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியது ஒரு நிஜமான சுவாரஸ்ய அனுபவம் நிறைய நண்பர்கள் நமது காமிக்ஸ்களைப் படிக்கத் துவங்கிய காலகட்டங்களைப் பற்றிச் சொல்லியவாறே சுகமாய் பின்னோக்கிப் பயணித்ததைப் பார்த்திட முடிந்தது நிறைய நண்பர்கள் நமது காமிக்ஸ்களைப் படிக்கத் துவங்கிய காலகட்டங்களைப் பற்றிச் சொல்லியவாறே சுகமாய் பின்னோக்கிப் பயணித்ததைப் பார்த்திட முடிந்தது அப்போது திடுமென இன்னொரு சென்னை நண்பர் அங்கே ஆஜராகினார் - கௌபாய் தொப்பியும், பெல்ட்டும் சகிதமாய்...முன்பக்கத்தில் டெக்ஸ் வில்லரின் படமும் , பின்னே கேப்டன் டைகரின் ப்ரிண்டும் போடப்பட்டதொரு T -ஷர்ட் அணிந்து \nபேசிக்கொண்டே நமது புது இதழை (WILD WEST Spl ) நம் நண்பர்களுக்கு நான் வழங்கிட, செல்போன் காமராக்களும் ; டிஜிட்டல் காமராக்களும் ஆங்காங்கே பளிச்சிட்டன எனது கல்யாணத்தின் போது கூட யாரும் என்னை இத்தனை போட்டோக்கள் எடுத்ததாய் எனக்கு நினைவில்லை எனது கல்யாணத்தின் போது கூட யாரும் என்னை இத்தனை போட்டோக்கள் எடுத்ததாய் எனக்கு நினைவில்லை எப்போதுமே spotlight -ஐத் தவிர்ப்பதில் ஆர்வமாய் இருந்திடும் எனக்கோ , நண்பர்களின் உத்வேகத்தைப் பார்த்திட்ட போது 'நோ' சொல்லிட இயலவில்லை எப்போதுமே spotlight -ஐத் தவிர்ப்பதில் ஆர்வமாய் இருந்திடும் எனக்கோ , நண்பர்களின் உத்வேகத்தைப் பார்த்திட்ட போது 'நோ' சொல்லிட இயலவில்லை இந்த இரு நாள் திருவிழாவில் நான் மெய்யாக சந்தோஷப்பட்டது நண்பர்கள் பலரும் தம் குடும்பங்களோடு ஆஜராகி இருந்ததன் பொருட்டே இந்த இரு நாள் திருவிழாவில் நான் மெய்யாக சந்தோஷப்பட்டது நண்பர்கள் பலரும் தம் குடும்பங்களோடு ஆஜராகி இருந்ததன் பொருட்டே கணவர்கள் மெய்மறந்து நம் ஸ்டாலில் புத்தக வேட்டை நடத்திக்கொண்டே என்னிடமும் பேசிக் கொண்டிருக்க, துணைவிகள் லேசான புன்முறுவலோடு அங்கே கூடி நின்ற அத்தனை காமிக்ஸ் ரசிகர்களையும் பார்த்திட்டது சுவாரஸ்யமான அனுபவம் கணவர்கள் மெய்மறந்து நம் ஸ்டாலில் புத்தக வேட்டை நடத்திக்கொண்டே என்னிடமும் பேசிக் கொண்டிருக்க, துணைவிகள் லேசான புன்முறுவலோடு அங்கே கூடி நின்ற அத்தனை காமிக்ஸ் ரசிகர்களையும் பார்த்திட்டது சுவாரஸ்யமான அனுபவம் \"காமிக்ஸ் புக்-னா பைத்தியமா ஆகிடுவார் சார் \"காமிக்ஸ் புக்-னா பைத்தியமா ஆகிடுவார் சார் புக் வந்த நாளைக்கு கேட்கவே வேண்டாம் \" என்று ஒரு திருமதி என்னிடம் சொல்லிட...\"இங்கே நிற்கும் நாங்கள் எல்லோருமே அதே ரகம் தான் புக் வந்த நாளைக்கு கேட்கவே வேண்டாம் \" என்று ஒரு திருமதி என்னிடம் சொல்லிட...\"இங்கே நிற்கும் நாங்கள் எல்லோருமே அதே ரகம் தான் \" என்று நான் பதில் சொன்ன போது அவருக்கு சிரிப்பு \" என்று நான் பதில் சொன்ன போது அவருக்கு சிரிப்பு சில துணைவியர் தாங்களும் இப்போது காமிக்ஸ் படிக்கத் தொடங்கி இருப்பதாகவும் ; ஒரு சிலர் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வாசகிகள் என்று சொன்ன சந்தோஷத் தருணங்களும் இருந்தன சில துணைவியர் தாங்களும் இப்போது காமிக்ஸ் படிக்கத் தொடங்கி இருப்பதாகவும் ; ஒரு சிலர் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வாசகிகள் என்று சொன்ன சந்தோஷத் தருணங்களும் இருந்தன அப்போது வேகமாய் ஒரு இளைஞர் வந்திட்டார் - அப்போது வேகமாய் ஒரு இளைஞர் வந்திட்டார் - \"இங்கிலிஷில் இதை வெளியிட்டால் என்ன \"இங்கிலிஷில் இதை வெளியிட்டால் என்ன \" என்ற கேள்வியுடன் தாய்மொழியில் படிக்கும், ரசிக்கும் அனுபவத்திற்கு அது ஈடாகாது ; அதே போல் ஆங்கிலத்தில் வரும் ஒரு காமிக்ஸை ஆங்கிலத்திலேயே மறுபதிப்பு செய்வதில் என்ன சவால் இருந்திட முடியுமென்று நான் கேட்டேன் தமிழில் படிப்பது நிச்சயம் ஒரு கௌரவக் குறைச்சல் அல்லவே என்பதை நான் சொல்லிய போதும் தமிழ தெரிந்த அந்த நண்பர், அவ்வளவாக convince ஆகவில்லை என்பது எனக்குப் புரிந்தது \nஇடையே நமது பெங்களுரு நண்பர், தமது வலைப்பூவிற்காக என்னைக் குட்டியாகவொரு impromptu வீடியோ பேட்டி எடுத்திட்டார் கேள்விகள் என்று முன் ஏற்பாடாக எதனையும் கொண்டிடாமல் மனதிற்குத் தோன்றியதை அவர் கேட்டிட, பெரிதாய் எந்த ஒரு சிந்தனையுமின்றி நானும் பேசினேன் கேள்விகள் என்று முன் ஏற்பாடாக எதனையும் கொண்டிடாமல் மனதிற்குத் தோன்றியதை அவர் கேட்டிட, பெரிதாய் எந்த ஒரு சிந்தனையுமின்றி நானும் பேசினேன் வாஞ்சையாய் சுற்றி நின்ற நமது நண்பர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் அந்த நொடியின் சந்தோஷத்தில் பங்கேற்ற பரபரப்புத் தெரிந்தது வாஞ்சையாய் சுற்றி நின்ற நமது நண்பர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் அந்த நொடியின் சந்தோஷத்தில் பங்கேற்ற பரபரப்புத் தெரிந்தது நானும் எனது புதல்வனும் இதர ஸ்டால்களில் நடந்தேறிடும் சங்கதிகளை ரசித்திட ஒரு ரவுண்ட் கிளம்பினோம் நானும் எனது புதல்வனும் இதர ஸ்டால்களில் நடந்தேறிடும் சங்கதிகளை ரசித்திட ஒரு ரவுண்ட் கிளம்பினோம் அருகாமையில் இருந்த RANDOM HOUSE இந்தியா விற்பனை மையத்திலும் சரி, Westland ஸ்டாலிலும் சரி, ஆங்கில கிராபிக் நாவல்கள் செம சுறுசுறுப்பாய் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன அருகாமையில் இருந்த RANDOM HOUSE இந்தியா விற்பனை மையத்திலும் சரி, Westland ஸ்டாலிலும் சரி, ஆங்கில கிராபிக் நாவல்கள் செம சுறுசுறுப்பாய் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன விலைகள் 200 ; 300 என்று இருந்த போதிலும் காமிக்ஸ் ஆர்வம் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அங்கே மாங்கு மாங்கென்று பில் போட்டுக்கொண்டிருந்த காஷியர்களே சாட்சி விலைகள் 200 ; 300 என்று இருந்த போதிலும் காமிக்ஸ் ஆர்வம் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அங்கே மாங்கு மாங்கென்று பில் போட்டுக்கொண்டிருந்த காஷியர்களே சாட்சி இன்னொரு பக்கமோ மேடையில் பிரபல வட இந்திய காமிக்ஸ் ஓவியர்களோடு கலந்துரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது இன்னொரு பக்கமோ மேடையில் பிரபல வட இந்திய காமிக்ஸ் ஓவியர்களோடு கலந்துரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது ஆங்காங்கே பிரபல காமிக்ஸ் நாயகர்கள் ; காமெடியன்கள் ; வில்லன்கள் போல் மேக்கப் போட்டுக்கொண்டு COMIC CON ஏற்பாடு செய்திருந்த ஆசாமிகள் உலவிட, வந்திருந்த பார்வையாளர்களில் பலர் அசத்தும் காமிக்ஸ் கெட்டப் களிலும் கலக்கிக் கொண்டிருந்தனர் ஆங்காங்கே பிரபல காமிக்ஸ் நாயகர்கள் ; காமெடியன்கள் ; வில்லன்கள் போல் மேக்கப் போட்டுக்கொண்டு COMIC CON ஏற்பாடு செய்திருந்த ஆசாமிகள் உலவிட, வந்திருந்த பார்வையாளர்களில் பலர் அசத்தும் காமிக்ஸ் கெட்டப் களிலும் கலக்கிக் கொண்டிருந்தனர் இந்தியாவிற்கு இது போன்ற pioneering முயற்சி எத்தனை விலைமதிப்பற்றது என்பதை அப்போது உணர முடிந்தது இந்தியாவிற்கு இது போன்ற pioneering முயற்சி எத்தனை விலைமதிப்பற்றது என்பதை அப்போது உணர முடிந்தது பெரியதொரு கண்காட்சியல்ல என்பதால் இங்கும் அங்கும் ரெண்டு சுற்று சுற்றி விட்டு நமது ஸ்டாலுக்கே திரும்பினோம். பைன் ஆர்ட்ஸ் ஸ்கூலில் இருந்து வந்திருந்த ஓவிய மாணவர்கள் சிலர் ஆர்வமாய் பேசிச் சென்ற பின்னர் , வட இந்திய காமிக்ஸ் இணையதளத்தின் சார்பாய் ஒரு இளம் நிருபர் சின்னதாய்ப் பேட்டி எடுக்கும் பாணியில் கேள்விகள் கேட்டார் பெரியதொரு கண்காட்சியல்ல என்பதால் இங்கும் அங்கும் ரெண்டு சுற்று சுற்றி விட்டு நமது ஸ்டாலுக்கே திரும்பினோம். பைன் ஆர்ட்ஸ் ஸ்கூலில் இருந்து வந்திருந்த ஓவிய மாணவர்கள் சிலர் ஆர்வமாய் பேசிச் சென்ற பின்னர் , வட இந்திய காமிக்ஸ் இணையதளத்தின் சார்பாய் ஒரு இளம் நிருபர் சின்னதாய்ப் பேட்டி எடுக்கும் பாணியில் கேள்விகள் கேட்டார் நமது காமிக்ஸின் வயது நாற்பது என்று சொன்ன போது அவர் கண்ணில் தெரிந்த ஆச்சர்யம் ஒரு நொடிப் பொழுதுப் பெருமிதத்தை விதைத்தது எனக்குள் \nபேசியதோடு டாட்டா காட்டிடாது அனேக வாசகர்கள் தங்களிடமில்லாத இதழ்களை வாங்கிக் கொண்டே நமது பில்லிங் பிரிவையும் பிசி ஆக்கினார்கள் WILD WEST ஸ்பெஷல் சுடச் சுட விற்பனை WILD WEST ஸ்பெஷல் சுடச் சுட விற்பனை நண்பர்களுக்கு அனுப்பிட 10 பிரதிகள் வாங்கி, அந்த 5 கிலோ சுமையை சந்தோஷமாய்த் தூக்கிச் சென்ற நண்பரும் அதில் சேர்த்தி நண்பர்களுக்கு அனுப்பிட 10 பிரதிகள் வாங்கி, அந்த 5 கிலோ சுமையை சந்தோஷமாய்த் தூக்கிச் சென்ற நண்பரும் அதில் சேர்த்தி எங்கள் மேல் காட்டப்பட்டு வரும் இந்த நேசத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும், துளியும் நிபந்தனை இல்லா சங்கதிகளே என்ற போதிலும் எங்களுக்குள்ள பொறுப்பின் ஆழத்தை உணர்த்திடும் நினைவூட்டிகளாகவே நான் அவற்றைப் பார்த்திட்டேன் எங்கள் மேல் காட்டப்பட்டு வரும் இந்த நேசத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும், துளியும் நிபந்தனை இல்லா சங்கதிகளே என்ற போதிலும் எங்களுக்குள்ள பொறுப்பின் ஆழத்தை உணர்த்திடும் நினைவூட்டிகளாகவே நான் அவற்றைப் பார்த்திட்டேன் நமது இந்தப் புது அவதாரின் ஆதாரத்தில் எத்தனை கனவுகள் ; எத்தனை எதிர்பார்ப்புகள் உங்களுள் உருவாகியுள்ளன என்பது நாங்கள் அறிந்தது தான் என்ற போதிலும் அதனை நேரடியாகக் கேட்டு..உணர்ந்திடும் போது அதன் தாக்கமே வேறாகிறது நமது இந்தப் புது அவதாரின் ஆதாரத்தில் எத்தனை கனவுகள் ; எத்தனை எதிர்பார்ப்புகள் உங்களுள் உருவாகியுள்ளன என்பது நாங்கள் அறிந்தது தான் என்ற போதிலும் அதனை நேரடியாகக் கேட்டு..உணர்ந்திடும் போது அதன் தாக்கமே வேறாகிறது மதியத்திற்கு மேலே வாசகர்களின் வருகை சற்றே மட்டுப்பட்டது மதியத்திற்கு மேலே வாசகர்களின் வருகை சற்றே மட்டுப்பட்டது குடும்பத்தோடு வந்திருந்ததொரு நண்பர் என்னிடம் பேசிடத் தயங்கியவாறே தள்ளி நின்றே நம் ஸ்டாலைப் படம் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்க, அவரை அழைத்துப் பேசிய போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசப் பிரவாகம் மெய்யாக என்னை உலுக்கியது. \"நீங்கள் 17 வயசிலேயே வெளிநாடெல்லாம் போய் காமிக்ஸ் கதை வாங்கி வந்தது பற்றியெல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டே இருப்பார் ' என்று அவரது துணைவியார் கூறிய போது விக்கித்துப் போனேன. முகமறியா தூரத்தில் ; வெறும் பெயராகவும் ; ஹாட்லைன் எனும் ஒரு பக்கத் தொடர்பு மாத்திரமே பாலமாக இருந்திட்ட போதிலும், காமிக்ஸ் எனும் நேசம் இத்தனை சக்தி வாய்ந்ததா என்பதை உணர்ந்திட இயன்ற போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு குடும்பத்தோடு வந்திருந்ததொரு நண்பர் என்னிடம் பேசிடத் தயங்கியவாறே தள்ளி நின்றே நம் ஸ்டாலைப் படம் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்க, அவரை அழைத்துப் பேசிய போது அவர் முகத்தில் தெரிந்த பிரகாசப் பிரவாகம் மெய்யாக என்னை உலுக்கியது. \"நீங்கள் 17 வயசிலேயே வெளிநாடெல்லாம் போய் காமிக்ஸ் கதை வாங்கி வந்தது பற்றியெல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டே இருப்பார் ' என்று அவரது துணைவியார் கூறிய போது விக்கித்துப் போனேன. முகமறியா தூரத்தில் ; வெறும் பெயராகவும் ; ஹாட்லைன் எனும் ஒரு பக்கத் தொடர்பு மாத்திரமே பாலமாக இருந்திட்ட போதிலும், காமிக்ஸ் எனும் நேசம் இத்தனை சக்தி வாய்ந்ததா என்பதை உணர்ந்திட இயன்ற போது வார்த்தைகள் வரவில்லை எனக்கு அவர்தம் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டேன் ..எனினும் அவர்களிடம் அதன் ஒரு பிரதியை அனுப்பிடச் சொல்ல இயலாது போயிற்று அவர்தம் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டேன் ..எனினும் அவர்களிடம் அதன் ஒரு பிரதியை அனுப்பிடச் சொல்ல இயலாது போயிற்று இந்த வலைப்பதிவைப் படித்திடும் நண்பராக அவர் இருந்திடும் பட்சத்தில், please - ஒரு மின்னஞ்சலில் அப்புகைபடத்தினை எனக்கு அனுப்பிடுங்களேன் \nநான்கு மணிக்கு மேலே தாக்குப் புடிக்க முடியவில்லை ; வாசகர்களின் வருகையும் குறைவாக இருப்பது போல் தோன்றியதால், எங்கள் பணியாளர்களை மட்டும் ஸ்டாலில் விட்டு விட்டு நானும் என் பையனும் புறப்பட்டோம். நாங்கள் கொண்டு வந்திருந்த இதழ்களில் 75 % அதற்குள்ளாகவே விற்றுப் போய் இருந்ததால், ராதாக்ருஷ்ணன் என் கையில் ரூபாய் 18,000 ௦௦௦௦௦௦ திணித்த போது உன் புருவங்கள் உயர்ந்தன சென்னை புத்தக விழாவிற்குப் பின் இது போன்ற விற்பனை வேகத்தை சந்தித்திராத எங்களுக்கு - பெங்களுருவில் இந்த விறுவிறுப்பு ஜிவ்வென்று உற்சாகம் கூடிடச் செய்தது சென்னை புத்தக விழாவிற்குப் பின் இது போன்ற விற்பனை வேகத்தை சந்தித்திராத எங்களுக்கு - பெங்களுருவில் இந்த விறுவிறுப்பு ஜிவ்வென்று உற்சாகம் கூடிடச் செய்தது உடனடியாக சிவகாசிக்கு போன் செய்து மேற்கொண்டு பிரதிகளை மாலை பஸ் மூலம் அனுப்பிடச் சொல்லி வைத்தேன் உடனடியாக சிவகாசிக்கு போன் செய்து மேற்கொண்டு பிரதிகளை மாலை பஸ் மூலம் அனுப்பிடச் சொல்லி வைத்தேன் அன்றிரவு தூங்கும் போது கேப்டன் டைகரும், ஒற்றைக்கை ஆசாமிகளும், நிறைந்த கல்லாப்பெட்டிகளுமாய் எனது சொப்பனங்கள் ஒரே சித்திரமயமாய் இருந்தன \nமறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன \nதொடர்ந்து முதல் நாளைப் போலவே சரமாரியான கேள்விகள், குழுமி நின்ற நண்பர்களிடமிருந்து WILD WEST இதழில் டெக்ஸ் வில்லரின் வருகை பற்றி ; டைகரின் பாக்கி இரு பாகங்கள் பற்றி விளம்பரங்கள் வந்திருந்ததால் ரொம்ப திருப்தியாக இருந்தனர் கௌபாய் கதை ரசிகர்கள் WILD WEST இதழில் டெக்ஸ் வில்லரின் வருகை பற்றி ; டைகரின் பாக்கி இரு பாகங்கள் பற்றி விளம்பரங்கள் வந்திருந்ததால் ரொம்ப திருப்தியாக இருந்தனர் கௌபாய் கதை ரசிகர்கள் WILD WEST இதழின் இரு கதைகளுக்குமே அற்புதமான பாராட்டுக்கள் கிட்டிய போது,என் மனதில் அடுத்து வரவிருக்கும் சூ.ஹீ.சூ.SPL க்கு எவ்வித reactions வந்திடவிருக்கிறதோ என்று சிந்தனைகள் ஓடிய வண்ணம் இருந்தன \nஇரண்டாவது நாளும் விறுவிறுப்பான விற்பனை நாங்கள் கொண்டு வந்திருந்த Full Set புக்ஸ் முழுவதும் காலி ஆகி ஒன்றிரண்டு நண்பர்கள் ஏமாற்றத்தோடு திரும்பவும் நேர்ந்தது நாங்கள் கொண்டு வந்திருந்த Full Set புக்ஸ் முழுவதும் காலி ஆகி ஒன்றிரண்டு நண்பர்கள் ஏமாற்றத்தோடு திரும்பவும் நேர்ந்தது எல்லாவற்றையும் விட, \"உசுப்பி விடும்\" விதமாய் மேஜை மேல் நின்ற :இரத்தப் படலம்\" மாதிரிப்ப்ரதி எக்கச்சக்க நண்பர்களின் கண்ணை உறுதிக் கொண்டே இருந்தது எல்லாவற்றையும் விட, \"உசுப்பி விடும்\" விதமாய் மேஜை மேல் நின்ற :இரத்தப் படலம்\" மாதிரிப்ப்ரதி எக்கச்சக்க நண்பர்களின் கண்ணை உறுதிக் கொண்டே இருந்தது அது விற்பனைக்கு அல்ல...மாதிரி மாத்திரமே என்று எங்கள் பணியாளர்கள் அன்பாய்ச் சொல்லிட, தீராத ஏமாற்றம் சில நண்பர்களுக்கு அது விற்பனைக்கு அல்ல...மாதிரி மாத்திரமே என்று எங்கள் பணியாளர்கள் அன்பாய்ச் சொல்லிட, தீராத ஏமாற்றம் சில நண்பர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாய் நம்மிடம் ஸ்டாக் இருந்த இதழுக்கு இப்போது தேடல் வேட்டை துவங்குகிறது ஒன்றரை ஆண்டுகளாய் நம்மிடம் ஸ்டாக் இருந்த இதழுக்கு இப்போது தேடல் வேட்டை துவங்குகிறது சமயம் கிடைத்த போது மற்ற இந்திய காமிக்ஸ் பதிப்பகங்களின் ஸ்டாலுக்கு சின்னதாய் ஒரு விசிட் அடித்தேன். இங்கிலிஷில் வெளியிடப்படும் இந்த கிராபிக் நாவல்கள் இன்றைய இந்திய ஓவியர்களின் அசாத்தியப் பரிணாம வளர்ச்சியினை showcase செய்யும் விதத்தில் இருந்தது பிரமாதமாகத் தெரிந்தது. ஒரு சில பதிப்பகங்களின் கதைக் களங்கள் விநோதமாய் இருந்த போதிலும் ரோவோல்ட் ; Campfire போன்ற பதிப்பகங்களின் படைப்புகள் நிஜமாகவே அற்புதம் சமயம் கிடைத்த போது மற்ற இந்திய காமிக்ஸ் பதிப்பகங்களின் ஸ்டாலுக்கு சின்னதாய் ஒரு விசிட் அடித்தேன். இங்கிலிஷில் வெளியிடப்படும் இந்த கிராபிக் நாவல்கள் இன்றைய இந்திய ஓவியர்களின் அசாத்தியப் பரிணாம வளர்ச்சியினை showcase செய்யும் விதத்தில் இருந்தது பிரமாதமாகத் தெரிந்தது. ஒரு சில பதிப்பகங்களின் கதைக் களங்கள் விநோதமாய் இருந்த போதிலும் ரோவோல்ட் ; Campfire போன்ற பதிப்பகங்களின் படைப்புகள் நிஜமாகவே அற்புதம் இவற்றில் தரமானவற்றை நாம் தமிழில் வெளியிட முயற்சித்தால் என்னவென்று நமது பெங்களுரு நண்பர் வினவிட, அந்தக் கோரிக்கையை என் தலைக்குள் ஒரு ஓரமாய் பத்திரப்படுத்தியுள்ளேன் இவற்றில் தரமானவற்றை நாம் தமிழில் வெளியிட முயற்சித்தால் என்னவென்று நமது பெங்களுரு நண்பர் வினவிட, அந்தக் கோரிக்கையை என் தலைக்குள் ஒரு ஓரமாய் பத்திரப்படுத்தியுள்ளேன் அவர்களது இதழ்களில் பளிச் ரகத்தில் தெரிந்த சிலவற்றை வாங்கி வந்துள்ளேன் ; படித்துப் பார்த்து விட்டு மேற்கொண்டு சிந்திக்கலாமென்ற எண்ணம் \nமீண்டும் நிறைய நண்பர்கள் ; எக்கச்சக்கமான சிரித்த முகங்கள் ; ஏராளமான கை குலுக்கல்கள் ; அங்கே இங்கேவென காமெராக்களின் கிளிக்குகள் என்று பொழுது ஓடியதே தெரியவில்லை நான் அன்று பிற்பகல் ரயிலில் சென்னை புறப்பட வேண்டி இருந்ததால் மதியத்திற்கு மேல் ஸ்டாலில் இருந்து புறப்பட்டுவிட்டேன் நான் அன்று பிற்பகல் ரயிலில் சென்னை புறப்பட வேண்டி இருந்ததால் மதியத்திற்கு மேல் ஸ்டாலில் இருந்து புறப்பட்டுவிட்டேன் அது வரை நம்மோடு ஒவ்வொரு நிமிடமும் காத்திருந்த அன்பான நண்பர்களுக்கு விடை கொடுப்பது நிஜமாகவே கஷ்டமான காரியமாய் இருந்தது அது வரை நம்மோடு ஒவ்வொரு நிமிடமும் காத்திருந்த அன்பான நண்பர்களுக்கு விடை கொடுப்பது நிஜமாகவே கஷ்டமான காரியமாய் இருந்தது மீண்டும் சென்னையில் சந்திக்கலாமென்ற போது அனைவரது முகங்களிலும் உற்சாகம் மீண்டும் சென்னையில் சந்திக்கலாமென்ற போது அனைவரது முகங்களிலும் உற்சாகம் அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 40,000 -ஐ தொட்டு இருந்தது அன்றைய இரவு COMIC CON நிறைவு பெற்ற போது எங்களின் 2 நாள் விற்பனை ரூபாய் 40,000 -ஐ தொட்டு இருந்தது பிரமித்துப் போனோம் என்பது நிச்சயம் ஒரு understatement \nரயிலில் பயணிக்கும் போது என் சிந்தைகள் அங்கும் இங்குமாய் அலை பாய்ந்தன 2 நாட்களில் நான் பார்த்திட்ட முகங்கள் ; அந்தக் கண்களில் பளீரிட்ட உவகை ;நான் அனுபவித்திட்ட அந்த நேசத்தின் விலைமதிப்பற்ற பரிமாணம் என்று ஒவ்வொன்றாய் எனக்குள்ளே மெள்ள மெள்ள பதிவாகிக் கொண்டே இருந்தது 2 நாட்களில் நான் பார்த்திட்ட முகங்கள் ; அந்தக் கண்களில் பளீரிட்ட உவகை ;நான் அனுபவித்திட்ட அந்த நேசத்தின் விலைமதிப்பற்ற பரிமாணம் என்று ஒவ்வொன்றாய் எனக்குள்ளே மெள்ள மெள்ள பதிவாகிக் கொண்டே இருந்தது \" More things are wrought by prayer than this world dreams of\" என்று பிரபல ஆங்கிலக் கவிஞர் சொல்லி இருந்தது நமக்கு நிரம்பவே பொருந்தும் என்பதையும் உணர்ந்திட முடிந்தது \" More things are wrought by prayer than this world dreams of\" என்று பிரபல ஆங்கிலக் கவிஞர் சொல்லி இருந்தது நமக்கு நிரம்பவே பொருந்தும் என்பதையும் உணர்ந்திட முடிந்தது நமக்காக ; நமது வெற்றிக்காகப் பிரார்த்திக்கும் உள்ளங்கள் இத்தனை இருந்திடும் போது ; நமது ஒவ்வொரு வெற்றியையும் தத்தம் வீட்டுக் குழந்தையின் சாதனை போலப் பாவித்திடும் இத்தனை நேச நெஞ்சங்கள் இருக்கும் போது புயலோ ; இடியோ ; மழையோ நம்மைத் தளரச் செய்ய சாத்தியமே இல்லை நமக்காக ; நமது வெற்றிக்காகப் பிரார்த்திக்கும் உள்ளங்கள் இத்தனை இருந்திடும் போது ; நமது ஒவ்வொரு வெற்றியையும் தத்தம் வீட்டுக் குழந்தையின் சாதனை போலப் பாவித்திடும் இத்தனை நேச நெஞ்சங்கள் இருக்கும் போது புயலோ ; இடியோ ; மழையோ நம்மைத் தளரச் செய்ய சாத்தியமே இல்லை Thanks folks \nகுட்டியாய் சில பின் குறிப்புகள் \nஇரு நாட்களும் நம்மை சந்திக்க வந்த நண்பர்கள் அனைவரையும் இங்கே குறிப்பிடுவது இயலாத காரியமென்பதால் நான் எவர் பெயர்களையும் இங்கே எழுதிடவில்லை எவ்வித இருட்டடிப்பும் இதன் நோக்கமல்ல ; நண்பர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விடின் அது சங்கடத்தைத் தரும் என்ற ஒரே காரணமே இதன் பின்னணியில் \nCOMIC CON 2012 அதிரடி வெற்றியினைத் தொடர்ந்து இதனை அடுத்த ஆண்டும் பெங்களுருவிலேயே 3 நாள் விழாவாகக் கொண்டாடிட அதன் அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் சென்னைக்கும் COMIC CON வருகை புரியும் நாள் தொலைவில் இராதென்று நம்புவோமாக சென்னைக்கும் COMIC CON வருகை புரியும் நாள் தொலைவில் இராதென்று நம்புவோமாக \nவணக்கம். தொலைவில் ஒரு புள்ளியாய்த் தெரிந்திட்ட பெங்களுரு COMIC CON 2012 வரும் சனிக்கிழமை என்று நெருங்கி விட்டது \nசெப்டம்பர் 8 & 9 தேதிகளில் கோரமங்களா ஸ்டேடியத்தில் நடந்திடவிருக்கும் இந்த காமிக்ஸ் திருவிழா எனக்குமே ஒரு புது அனுபவம் அமெரிக்காவில் நான் பார்த்திட்ட காமிக்ஸ் convention - அளவில் ; பிரம்மாண்டத்தில் ; மிகப் பெரிதென்ற போதிலும் இந்தியாவிற்கு சமீபத்திய இந்தப் புதிய முயற்சிகள் ஒரு சந்தோஷமான வருகையே அமெரிக்காவில் நான் பார்த்திட்ட காமிக்ஸ் convention - அளவில் ; பிரம்மாண்டத்தில் ; மிகப் பெரிதென்ற போதிலும் இந்தியாவிற்கு சமீபத்திய இந்தப் புதிய முயற்சிகள் ஒரு சந்தோஷமான வருகையே தமிழ் தாய்மொழியாக அல்லாததொரு நகரில் நடந்திடும் இந்தத் திருவிழாவில் நமக்கு எத்தனை தூரம் வரவேற்பிருக்குமென்று கணித்திடத் தெரியவில்லை என்ற போதிலும், நமது படைப்புகளை showcase செய்திடவும், பிறரது படைப்புகளை ரசித்திடவும் இது நல்லதொரு வாய்ப்பாகப் பார்த்திடுகின்றோம்\nநமது ஸ்டால் எண் B -17 குட்டியானதொரு இடம் தான் என்ற போதிலும் நம்மிடம் தற்சமயம் ஏராளமான ஸ்டாக் இல்லை என்பதால் கூடுதல் கட்டணத்தை அவசியப்படுத்தும் பெரிய ஸ்டால் தேவை இராதென்று நினைத்தோம். அடுத்த COMIC CON சென்னையில் நடந்திட வாய்ப்பிருக்கும் பட்சத்தில், நிச்சயம் பெரியதொரு ஸ்டாலில் கலக்கிடலாம் \nWILD WEST SPECIAL அழகாகத் தயாராகி வருகின்றது. வரும் சனிக்கிழமையன்று காலையில் பெங்களுருவில் நமது ஸ்டாலில் இதழ் கிடைக்கும் ; அதே தேதியில் சிவகாசியிலிருந்து உங்களது சந்தா பிரதிகளும் அனுப்பிடப்படும் 'உலகத் தொலைகாட்சிகளில் \" முதன்முறையாக என்ற பாணியில், என் நினைவுக்குத் தெரிந்த வரைக்கும் வெளியீட்டுத் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஒரு லயன் இதழ் தயார் ஆவது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன் 'உலகத் தொலைகாட்சிகளில் \" முதன்முறையாக என்ற பாணியில், என் நினைவுக்குத் தெரிந்த வரைக்கும் வெளியீட்டுத் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஒரு லயன் இதழ் தயார் ஆவது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன் கடந்த 2 வாரங்களாய் முகம் சுளிக்காது செயலாற்றிட்ட எங்களது டீம் - க்கு எனது நன்றிகள் என்றும் உண்டு \nCOMIC CON விழாவிற்கும், நமது ஸ்டாலுக்கும் உங்களை வரவேற்பது எங்களது பெருமை \nSeptember 8th சனிக்கிழமை காலை 10 -00 முதல் மாலை 5 -00 வரையும்\nSeptember 9th ஞாயிறு காலை 10 -00 முதல் மதியம் 1 மணி வரையிலும்\nநான் நமது ஸ்டாலில் இருப்பேன். இதர நேரங்களில் நமது பணியாளர்கள் அங்கே இருந்திடுவார்கள் \nஎன்னிடம் பேச எண்ணிடும் நண்பர்கள் வழக்கம் போல் 9842864584 என்ற நம்பருக்கு சனி & ஞாயிறு போன் அடிக்கலாம் \n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\nநண்பர்களே, வணக்கம். So far…so good என்பேன் நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://polambifying.blogspot.com/2009/04/blog-post_29.html", "date_download": "2018-05-27T03:23:13Z", "digest": "sha1:Z62F47ZOF4QTBWXE55E6PYDA57IYQYKC", "length": 18578, "nlines": 174, "source_domain": "polambifying.blogspot.com", "title": "பொலம்பல்கள்: ஏன், எதற்கு ??", "raw_content": "\nஇந்த இரண்டு விடயங்களும் ரொம்ப நாளாவே இப்படி தான் இருக்கா இல்லை இப்போ சமீபமா அதிகம் ஆகி இருக்கான்னு தெரியலை. நான் சமீபமா ரொம்ப கவனிக்கறேன்.\nஅ. கேள்விக்கு பதில் கேள்வியாக \nஎனக்கு தெரிஞ்சு இப்போ எல்லாம் ஒரு கேள்விக்கு பதில் பதிலா வருதுன்னா, அது ஒன்னு தான் 'நீ எப்படி இருக்கே', 'ம்ம் ஏதோ இருக்கேன்', 'நல்ல இருக்கேன்' இவ்வளவு தான்.\nஇதைத்தவிர வேற எந்த கேள்வி கேட்டாலும், அதுக்கு பதில் திரும்ப ஒரு கேள்வியாத்தான் வருது.\nஎங்க அக்கா கிட்டே, 'ஏங்கா, போன் நம்பர் மாத்தினியே எனக்கு தரணும்னு தோணிச்சா அப்படின்னு கேட்டேன் \nஇதுக்கு என்ன பதில் தரணும் எசமான். 'மறந்துட்டேன்', 'இல்லை தரலை', 'இந்த நம்பர் இப்போ தர்றேன் வெச்சுக்கோ', இதுமாதிரி எது சொன்னாலும் சரி.\nஆனா, வர்ற பதில் என்ன தெரியுமா, 'நீ தந்தியா நம்பர் மாத்தின அப்போ\nசரி நம்ம வீட்டுல தான் இந்த பிரச்சனைன்னு பாத்தா, சின்ன விடயத்துல இருந்து, பெரிய பெரிய விடயம் வரைக்கும் இப்படித்தான் இருக்கு. 'ஏன்டா உங்க ஆளு மூணு பேரை கொன்னுட்டாங்களே, அதுக்கு தண்டனையும் இல்லை ஒன்னும் இல்லை, இது நியாயமாடா' அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் என்ன தெரியுமா 'உங்காளுகளும் தான் எட்டு பேரை சாகிடிச்சாங்க, அதுக்கு என்ன பண்ண முடியும்' அப்படின்னு பதில் வருது. ஆகா மொத்தம் இதுக்கு பதிலே கிடையாது, செத்தவும் உசுருக்கும் மதிப்பு கிடையாது.\nநாம முடிஞ்சா வரைக்கும் நம்ம கிட்டே கேக்கபடற கேள்விக்கு பதில் நேரடியா சொல்லி பழகுனா, அது பல விடயங்களுக்கு ரொம்ப நல்லது. பிரச்சனைகள் குறைய வாய்ப்பு இருக்கு. இந்த விடயத்தை நான் கொஞ்ச நாளா பின்பற்ற முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.\nஇப்போ தேர்தல் நேரம் இது ரொம்ப நல்லா பயன்படும். அவன் என்ன செஞ்சான், இவன் என்ன செஞ்சான் அப்படின்னு கேள்வி மட்டும் தான் கேப்பாங்க. நான் என்ன செய்ய போறேன்னு எவனும் சொல்றது இல்லை. சொன்னாலும் எவனும் கேக்க போறதும் இல்லை.\nஆ. இரு கோடுகள் :\nநான் சின்ன புள்ளையா இருக்கும் போது விளையாட்டா ஒரு கேள்வி கேப்பாங்க. ஒரே அளவுல ரெண்டு கோடு வரைஞ்சு, ஒன்னை இன்னொன்றை விட பெருசாக்கி காட்ட சொல்லுவாங்க. எல்லாருமே அதுக்கு ஒரு கோடை பெருசாக்குவாங்க. மாத்தி யோசி மக்கான்னு சொல்லி, ஒரு கோடை அழிச்சு சின்னாதாக்கி இப்பவும் இது பெருசாகிடிச்சுன்னு சொன்ன ஆட்களும் உண்டு.\nஇந்த தத்துவத்தை நம்ம மக்கள் நல்லாவே புரிஞ்சு வெச்சு இருகாங்க. இது அடித்தள மக்கள் கிட்டே இருந்து அரசன் ஆளுறவன் வரைக்கும் இருக்கு.\nதிரைப்படம் ஒலி நாடா வெளியீட்டு விழா நடக்குது, ஒரு இயக்குனரை கூப்பிட்டு இசை அமைப்பாளரை பாராட்டி பேச சொல்லி கூப்பிடறாங்க. நம்ம ஆள் என்ன பண்றாரு, இவருக்கு போட்டியாகவோ இல்லை இன்னொரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரை சூசகமா சொல்லி, இவரு அதை போல எல்லாம் இல்லை அப்படின்னு பேசுறாரு. நம்ம மக்களை பொறுத்த வரைக்கும் ஒருத்தனை புகழ்ந்து பேசறதுன்னா இன்னொருத்தனை திட்டி பேசறது அப்படிங்கற முடிவுல இருக்காங்க.\nஇந்த பாட்டு எப்படி இருக்கு, அந்த பாட்டை விட நல்லா இருக்கு. ஏன் உங்களுக்கு அந்த பாட்டுல இருக்கற நல்ல விடயம் தெரியலையா, இல்லை இப்படி சொன்னாத்தான் கை தட்டுராங்களா.\nஇதுக்கு எல்லாம் காரணம் யாருன்னா நாம தான். ஆமாங்க ஒரு படம் இரண்டரை மணி நேரத்துக்கு எடுக்கறாங்க அதை அப்படியே கிண்டல் பண்ணி அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ 'லொள்ளு சபா' அப்படிங்கறதுக்கு தானே அமோக ஆதரவு தர்றோம். கேட்டா காமடியாம்.\nஏன் நம்ம பதிவுலகத்துலையே எதிர் பதிவுக்கு தானே மவுசு கூட. :)\nஇந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா \nஇந்த பதிவு ஏன் போட்ட\nகொஞ்சம் வித்தியாசமாத்தான் யோசிச்சு இருக்கீங்க.. :-)\n//இந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா \nரொம்ப தெளிவா யோசனைப் பண்ணி எழுதியிருக்கீங்க.\nநீங்க சொல்வது மிக நல்ல விசயம்தான். கடைபிடிக்க நானும் முயற்சி செய்கின்றேன்\nஎனக்கு புரிஞ்ச மாதிரி இருக்கு. அதானே\nகொமாரு, இதெல்லாம் அரசியல்ல சகஜம், கண்டுக்காதே.\nவித்யா, என்னையே திரும்ப கவுக்கறீங்களே :)\nகார்த்திக், இந்த விடயத்தை நான் கொஞ்ச நாலா பின்பற்ற முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதான்.\nராகவன் அண்ணா, முயற்சி பண்ணி எதாவது வித்யாசம் தெரிஞ்சா சொல்லுங்க.\nமயில், எம்புட்டு நாளு இப்படியே சொல்லிட்டு இருக்கறது \nபொலம்பல்கள் என்று தலைப்பை வைத்துக் கொண்டு அருமையான\nநல்லா சிந்திச்சு இருக்கீங்க. அலசி ஆராய்ந்து ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் அருமையா சொல்லி இருக்கீங்க.\nஉறவில் ஆரம்பித்து, திரைப்பட ஒலி நாடாவில் புகுந்து, பதிவின் எதிர் பதிவு வரை அலசி இருக்கீங்க.\nநீங்கள் கூறி இருப்பது போல் நேர்மறையான பதில்கள் நன்றாக இருக்கும். நான் எப்பவுமே அப்படி எல்லாரும் பேசினா என்னான்னு தோணும்.\nஎனது சிந்தனை உங்களின் இந்த பதிவுகளில் பல வரிகளில் ஒத்துப் போகின்றது.\nஒரே மாதிரி யோசிக்கும் ஒற்றுமையை நினைத்து எனக்கே என் மீது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. எனது சிந்தனை தவறு இல்லை என்று.\nரம்யா, நன்றி விலாவாரியான பதிவுக்கு. நீங்களும் இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்கன்னு நினைச்சு ரொம்ப சந்தோசம். (நான் தனி மரம் இல்லைன்னு தெளிய வெச்சுடீங்க. :) )\nஸ்ரீமதி, ஹி ஹி ஹி .. வாட் டு டூ .. :) (என்ன புது பழக்கம் இது :) :) :) )\nகார்க்கி, அது முன்னாடியே கொட்டிகிட்டு தான் சகா இருக்கு.\nஇப்படி கேள்விக்கு எதிர்க் கேள்வி கேக்குறது மதுரக்காரைங்கதேன். அவிங்க கிட்ட இருந்து எல்லா பயபுள்ளைகளும் சொல்ல ஆரம்பிச்சுருச்சுக.\nநான் என்ன செய்ய போறேன்னு எவனும் சொல்றது இல்லை. சொன்னாலும் எவனும் கேக்க போறதும் இல்லை. //\nஇந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா \nஏன் அதை நீங்க செஞ்சீங்களா\n//கார்க்கி, அது முன்னாடியே கொட்டிகிட்டு தான் சகா இருக்கு.//\nஅது அழகாத்தான்(ஹிஹி..எனக்கு சொன்னேன்) அப்புறம் நடுவுல கொட்டிட போது..(ஹிஹி இது உங்களுக்குத்தான் சொன்னேன்)\nநான் முடிஞ்சா வரைக்கும் அதை கடைபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.\nகார்க்கி, ஹி ஹி ஹி :)\nSK - நல்லா இருக்கு பதிவு. ஜெர்மனில எங்க இருக்கீங்க SK \nநேரம் அதிகம் கிடைச்சு ரொம்ப யோசிச்சிருக்கறாப்ல இருக்கு.\nநம்ம இவ்ளோ லேட் ஆ வந்து படிக்கிறோமேன்னு கவலையோட படிச்சா.....செம பொலம்பலா இல்ல இருக்குது\nநன்றி. நீங்க யாருகிட்டயாவது பேசும் பொது இதை கவனிச்சு பாருங்க. :)\nஅட உண்மையாதாங்க. நீங்களே கவனிச்சு பாத்திட்டு சொல்லுங்க.\nஉங்க நாட்டுல தாங்க இருக்கேன். :)\nநாங்களும் சமைப்போம்ல - வெஜ். புலாவ்\nஇந்திய குழந்தைகளின் மறு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://qtrtweets.com/twitter/8.05/77.666666666667/30/?z=10&m=roadmap", "date_download": "2018-05-27T03:37:26Z", "digest": "sha1:BPMFZ4XDEQDYG6SMXDXLUT3VET7H2WU4", "length": 25457, "nlines": 487, "source_domain": "qtrtweets.com", "title": "Tweets at Tamil Nadu around 30km", "raw_content": "\nRT @kanyakumarimeme: ஒவ்வொரு தமிழனும் 100வாட்டி திருப்பி திருப்பி இந்த VIDEO va பாக்கணும்... நம்ம நெனச்சத விட ரெம்ப ரெம்ப கொடூரமா நடந்திரு…\nஇன்னும் எத்தனை #காலமடா என் சமூகம்(தமிழ்)வீழும்...😐\n#காத்தோடு...🌬 கலந்தாலும் அது தான் என் #அடையாளம்...💪\n@news7tamil சுட்டது போலீஸ்டா..கைது பொதுமக்களா\n🚫சாதி ,மதம் பாத்து ஓட்டு போட்டது 😊\n🚫சாகுற வரைக்கும் இந்த கட்சிக்குதா ஓட்டு போடு…\nRT @rubins_roy: நம் மக்களுக்கு ஆறுதல் கூறுபவரையோ, நம் தமிழர்களின் உயிரை மாயித்த மிருகத்தன்மையை சுட்டிக்காட்டுபவரையோ,கிண்டல் செய்வது(esp tro…\nமாவட்ட செயலாளர், ITwing, அமமுக குமரிமாவட்டம்\nRT @THALA_JEEN: ’நாங்க 'தல'கணம் பிடிச்சி ஆடலடா\n'தல' குணம் பிடிச்சி வாழுறோம் \nRT @THALA_JEEN: ’நாங்க 'தல'கணம் பிடிச்சி ஆடலடா\n'தல' குணம் பிடிச்சி வாழுறோம் \nஎப்போதும் ஒரு பிரச்சனைனா அந்த பிரச்சனய பாக்காத.. அந்த பிரச்சனைக்கான காரணம் என்னனு பாரு....\nதாயும் தாய்த்தமிழும் நீடூழி வாழ்க/ எல்லா மதங்களும் மூடநம்பிக்கையின் மூட்டையே/ சாதி மதமில்லா தமிழகம்/ மனசாட்சியே உண்மையான கடவுள்\nRT @VimalRavishank1: `10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு' - கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி #thoothukudi #TrafficR…\nகணினியில் தமிழை வளர்க்கத் துடிக்கும் தமிழன்\nRT @VimalRavishank1: `10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு' - கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி #thoothukudi #TrafficR…\nRT @VimalRavishank1: `10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு' - கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி #thoothukudi #TrafficR…\nநான் பிறக்கும் போது @iam_str இவர் ரசிகன் இல்லை... வாழும் போதும், சாவும் போதும் அவர் ரசிகனே....\nRT @kanyakumarimeme: காலைல ஆட்ச்சியர் அலுவலகம் பக்கம் நிற்க்கும் போது ஒரு பஸ் தள்ளி போய் நின்றது கூட்டமா மக்கள் ஓடினாங்க நல்ல வேளை எந்த து…\nமறவன் குடியிருப்பு ஊர் அசனம்.\n\" அறுவடை செய்ததன் நன்றியாகவும், பாவத்திற்குப் பரி…\nதூத்துகுடியில் 29ம் தேதி மீண்டும் பேரணி\nRT @jayaprakashuae: ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் வருகிறது-\nRT @kanyakumarimeme: ஒவ்வொரு தமிழனும் 100வாட்டி திருப்பி திருப்பி இந்த VIDEO va பாக்கணும்... நம்ம நெனச்சத விட ரெம்ப ரெம்ப கொடூரமா நடந்திரு…\nRT @Akwin4u: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை சேப்பாக்கம் அருகே #திருநங்கைகள் ஒப்பாரி போராட்டம் - நன்றி அக்கா…\nசூழ்நிலைக்காக நாம மாறுனது போதும்..\nஇனிமேல் நமக்கு ஏத்த மாதிரி இந்த சூழ்நிலைய மாத்துவோம்..✌✌\nநம் மக்களுக்கு ஆறுதல் கூறுபவரையோ, நம் தமிழர்களின் உயிரை மாயித்த மிருகத்தன்மையை சுட்டிக்காட்டுபவரையோ,கிண்டல் செய்வது…\nRT @KKAjith_FC: ’நாங்க 'தல'கணம் பிடிச்சி ஆடலடா\n'தல' குணம் பிடிச்சி வாழுறோம் \nஅறவழியிலும் சட்ட வழியிலும் போராடி வெற்றி பெறுவோம்..\nதூத்துக்குடியில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்…\nஅடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களாசரித்திரம் காணாத புரட்சி வெடிக்…\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்…\nRT @kanyakumarimeme: காலைல ஆட்ச்சியர் அலுவலகம் பக்கம் நிற்க்கும் போது ஒரு பஸ் தள்ளி போய் நின்றது கூட்டமா மக்கள் ஓடினாங்க நல்ல வேளை எந்த து…\nRT @VimalRavishank1: #Thoothukudi கலவரத்தை நேரடியாக சந்தித்து, அங்கு நடந்த அநியாயங்களை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டிய நமது விகடன் நிருபர்…\nRT @THALA_JEEN: எனக்கு #அஜித்குமார் தான் ரொம்ப பிடிக்கும் - #சீனத்தமிழர் #williamChia\nRT @VimalRavishank1: `10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு' - கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி #thoothukudi #TrafficR…\n🔥உன்னையும் மண்ணையும் வென்று வா.. தீ...ராத ஓர் தேவையை கொண்டுவா நூ...\nராயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்...\nRT @VimalRavishank1: `10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு' - கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி #thoothukudi #TrafficR…\n😑உயிர் என எண்ணிய உறவுகள் பல\nRT @VimalRavishank1: `10 பேரைச் சுட்டுக்கொன்றால் ஆட்சியைக் கலைக்க சட்டம் இருக்கு' - கொந்தளிக்கும் ட்ராஃபிக் ராமசாமி #thoothukudi #TrafficR…\nஇந்த கேடு என்னோடு போகட்டும்......\nஎன் சந்ததிகள் நன்றாக வாழட்டும் .....\nஎன்று போராடியவர்களை கொன்று குவித்த BJPயின் எடுபிடி அரசே பதவிவிலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2012/08/blog-post_7.html", "date_download": "2018-05-27T03:25:06Z", "digest": "sha1:FXEFN7XPMNYFSYFIGREGOQIF6CJX4HBW", "length": 11493, "nlines": 116, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": புதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nபுதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு\nNew post சம்பந்தமான டிப்ஸ்\nபுதிதாக ப்ளாக் எழுத வருபவர்கள் தங்களுக்கென்று தனி தளத்தை உருவாக்கிக் கொள்வது எளிதே. ஆனால் தங்கள் தளத்துக்கு மற்றவர்களை வரவைப்பது எப்படி என்பது தெரியாமல் குழம்புவார்கள். ரொம்ப சிம்பிள்ங்க. உங்கள் தளத்தை திரட்டிகளுடன் இணைக்க வேண்டும். இதற்கென்று பதிவுலகில் பிரபலமான திரட்டிகளாக இன்ட்லியையும், தமிழ்மணத்தையும் ஆனந்த விகடன் எனக்கு அறிமுகப்படுத்தியது.\nஎனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ஒரு தளத்தை உருவாக்கியதும் ஆசையாக கூகுளில் போய் டைப் செய்து பார்த்தேன். வரவில்லை. எனக்கோ குழப்பம். சரி, பதிவாவது போடுவோம். யாராவது கமென்ட் போடுவாங்கன்னு வெயிட் பண்ணினேன். அந்த பக்கமா யாராவது வந்துட்டு போனதுக்கு கூட அறிகுறி இல்லை. அந்த சமயத்துல ஆனந்தவிகடன் ல ஒரு ஆர்டிகிள் வந்திருந்தது. அதில் தான் மேற்கண்ட திரட்டிகள் எனக்கு அறிமுகம் ஆகின.\nநாம் பதிவு எழுதினா பத்தாது, அதை படிக்க ஆளுங்க வரணும். அப்படி வரணும்னா எல்லாரும் வரும் இடத்தில நம்ம சரக்கை வைக்கணும். ஆயிரம் பேர் வர்ற இடத்துல ஒரு பத்து பேர் உங்க பதிவு பார்க்க வரமாட்டாங்க அதுல ரெண்டு பேர் கமென்ட் போட மாட்டாங்க அதுல ரெண்டு பேர் கமென்ட் போட மாட்டாங்க அதனால நீங்க பதிவு எழுதினதும் உங்க பதிவை இது போன்ற திரட்டிகளில் இணையுங்க. இது ரெண்டு மட்டும் தான் திரட்டின்னு மத்ததுல இணைக்காம போய்டாதீங்க. மத்த பிரபல பதிவர்களுடைய பதிவுகளுக்கு கீழே இது போன்ற திரட்டிகளின் ஓட்டுப் பட்டை இருக்கும். அந்த திரட்டிகளை கூகுளில் டைப் செய்து அவற்றில் மெம்பர் ஆகிக்கொள்ளுங்கள். இனி நீங்கள் ஒவ்வொரு பதிவு போட்ட பின்பும், திரட்டிகளின் தளத்தில் submit செய்துவிடுங்கள். உங்க பதிவு பிடிச்சிருந்தா, படிச்சவங்க வோட்டு போட்டுடுவாங்க.\nஓட்டு போடறதுல என்ன நன்மைன்னு கேக்கறீங்களா நிறைய பேர் வோட்டு போட்டா உங்க பதிவு அந்த திரட்டிகளின் முதல் பக்கத்துலயே உங்க பதிவை காட்டும். குறைவான வோட்டுனா கடைசி பக்கங்களில் காட்டும். இன்னும் சொல்லப்போனா உங்க தளத்துல விளம்பரம் தர வாய்ப்பு கேட்டு பெரிய பெரிய நிறுவனங்கள் உங்க கதவை தட்டும். ஆனா அதுக்கு நீங்க இங்கிலீஷ்ல பதிவு எழுதணும் . தமிழ்ல பதிவு எழுதினா விளம்பர லட்டு கிடைக்காது.\nமேலும் ப்ளாக் எழுதுவது சம்பந்தமா ஏதாவது டவுட் வந்தா தயவு செஞ்சு என்னை கேக்காதீங்க. நான் அந்த அளவு எக்ஸ்பர்ட் இல்ல. நல்லா தெரிஞ்ச நண்பர்கள் இது குறித்து நிறைய பதிவு இட்டிருக்கிறார்கள் எனக்கு சந்தேகம்னா www.bloggernanban.com ல பார்ப்பேன். (இன்னும் நிறைய நண்பர்கள் உங்களுடைய தளங்களில் எழுதி இது சம்பந்தமா இருந்தால் இங்கே குறிப்பிடலாம் )\nஓகே... இப்ப களம் இறங்குங்க நண்பர்களே \nகோவை மு சரளா said...\nபுதிய நண்பர்களுக்கு பயன்படும்... தொடருங்கள்... நன்றி...\nஎல்லாம் சரி ஏன் நமது திரட்டியை இணைக்க வில்லை..\nபயனுள்ள பதிவு தொடருங்கள்... நன்றி...\n@ வரலாற்று சுவடுகள், கோவை மு. சரளா, தனபாலன், முத்து\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nபுதிய பதிவர்களுக்கு சின்ன வழிகாட்டி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2018-05-27T03:21:48Z", "digest": "sha1:KYH4MOIPM25OZIAJJJK7KHYWIBIRUJWT", "length": 7367, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக்கி போயே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 20 மார்ச்சு 1973 (1973-03-20) (அகவை 45)\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 25.23 26.67 34.12 25.36\nஅதிக ஓட்டங்கள் 85 129 226* 129\nபந்துவீச்சு சராசரி 42.65 35.57 32.50 31.92\nசுற்றில் 5 இலக்குகள் 3 1 22 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – 2 –\nசிறந்த பந்துவீச்சு 5/62 5/21 8/93 5/21\nபிடிகள்/ஸ்டம்புகள் 18/– 33/– 124/– 88/–\nசூலை 20, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nநிக்கி போயே (Nicky Boje, பிறப்பு: மார்ச்சு 20 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 43 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 115 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 212 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 288 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 -2006 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், [ 1995 -2005 ஆண்டுகளில் [ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-05-27T03:31:05Z", "digest": "sha1:VLUMS6QPOZP7GRBAFMEIWHXPHL3MQ7PS", "length": 10592, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹவுரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமேலிருந்து:ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம்\nஹவுரா தலைமை அஞ்சலகம் - 711101\nநபன்னா எச் ஆர் பி சி கட்டிட வளாகம்\nஹவுரா மாநகராட்சி தலைமை அலுவலகம்\n12302 அவுரா ராஜதானி விரைவுவண்டி\nஹவுரா மாநகராட்சி விளையாட்டுத் திடல்\nரத்தன் சக்ரவர்த்தி (திரிணாமூல் காங்கிரஸ்)\nவங்காளம், ஆங்கிலம் மற்றும் இந்தி\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஹவுரா வடக்கு, ஹவுரா நடு, ஹவுரா தெற்கு, சிப்பூர்\nஹவுரா (Howrah) ஒரு தொழில்துறை நகரம். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இங்கு ஹவுரா மாவட்டத் தலைமையகம் உள்ளது. மேலும் மாவட்டத்தின் ஹவுரா சதார் உட்பிரிவின் தலைமையகம். ஹவுரா ஊக்லி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவின் இரட்டை நகரமாக உள்ளது. ஹவுரா கொல்கத்தாவுக்கு பின்னர் இரண்டாவது சிறிய மாவட்டமாக உள்ளது. கொல்கத்தா ஹவுராவுடன் கங்கை நதியின் மேல் நான்கு பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nஹவுரா - கொல்கத்தாவை இணைக்கும் ஊக்லி ஆறு மேம்பாலம்\nஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஹவுரா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2018, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.panuval.com/biography-life-history-autobiography-memoirs", "date_download": "2018-05-27T03:29:53Z", "digest": "sha1:MABPHJTEI2UMN4ACYDB5DGT3P7REIK2S", "length": 16055, "nlines": 462, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - வாழ்க்கை / தன் வரலாறு", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாலச்சுவடு இதழ்(மே - 2018)\nஉயிர்மை (மே - 2018) இதழ்\nஅந்திமழை இதழ்(மே - 2018)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாழ்க்கை / தன் வரலாறு\nவாழ்க்கை / தன் வரலாறு\nவாழ்க்கை / தன் வரலாறு\nமனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போத..\nஅண்டை நாடுகள் பலவற்றிலும், ராணுவ ஆட்சியும் சர்வாதிகார அடக்குமுறையும் இருந்தாலும், எவ்வளவோ நெருக்கடிக..\nஇன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ..\nஅக்னிச்சுடர்கள்:அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்\nபதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்ற..\nஅடியாள் - ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம்\n\"போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை. வீடு புகுந்து அடித்தா..\nசோவியத்திலும் சீனாவிலும் நடைமுறைக்கு வந்த கம்யூனிசக் கொள்கையின் இந்திய வடிவம் மேற்கு வங்கம் என்றால் ..\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு\nஅண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு - அருணன் :பெரியார் - மணியம்மை திருமணமா தி.மு.க. பிறப்புக்கு காரணம்\nஅறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிக..\n‘என்னுடைய சக்தி, மட்டையால் நான் உருவாக்கும் வேகம், மட்டைக்கு நான் கொடுக்கும் வீச்சு ஆகியவையே...’ மகே..\nஅத்வானியின் சுவாசம் ஹிந்துத்வா என்றால் ஆர்.எஸ்.எஸ். அவரது உயிர். ஆனால் அந்த இரண்டுமே அவருடைய வாழ்க்க..\nஅம்பானியின் இளைய மகன் என்ற அந்தஸ்துடன் வர்த்தக உலகத்துள்குள் பிரகாசமாக நுழைத்தார் அனில். ஆனால் அதுவே..\nஅனில் அம்பானி வென்ற கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/world/04/161394", "date_download": "2018-05-27T03:25:06Z", "digest": "sha1:MZAN3OPU2XFSW5GVMNRWNPZYGQMU4KHP", "length": 5134, "nlines": 57, "source_domain": "canadamirror.com", "title": "துரத்தி அடிக்கப்பட்ட டிரம்ப் - கிம்: தென் ஆப்ரிக்கா குளிர்கால ஒலிம்பிக்கில் சர்ச்சை.. - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nதுரத்தி அடிக்கப்பட்ட டிரம்ப் - கிம்: தென் ஆப்ரிக்கா குளிர்கால ஒலிம்பிக்கில் சர்ச்சை..\nதென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2018 போட்டிகள் நேற்று கோலாகலமாக துவங்கின. இந்த போட்டிகள் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.\nஇதன் துவக்க விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கலந்து கொண்டார். மேலும், தென்கொரிய அதிபர் மூன் ஜே உள்பட அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டனர்.\nஆனால், இந்த நிகழ்வின் போது டிரம்ப் மற்றும் கிம் ஒருவர் மீது ஒருவர் கை போட்டு கொண்டு வந்தார்கள். இதை பார்த்தவுடன் தென் கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை விரட்டி அடித்தனர்.\nஆம், இரு நண்பர்கள் அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்களை போல் உருவ அமைப்பை கொண்டவர். அதோடு அவர்களை போல் மேக் அப் போட்டு வந்திருந்தனர். இதை கண்டுபித்ததால் நிகழ்ச்சியில் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக இருவரையும் வெளியே துரத்தியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2012/04/blog-post_7666.html", "date_download": "2018-05-27T02:58:28Z", "digest": "sha1:IHGPZBPQJNHM55PTHE6IFO56QB7X6AKG", "length": 64098, "nlines": 669, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: * ஏழு தலைமுறை ஆணாதிக்கப் பெருமை !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \n* ஏழு தலைமுறை ஆணாதிக்கப் பெருமை \nபார்பனர்கள் சந்தியா வந்தனம் சொல்றச்சே....சொல்லும் போது ஏழு தலைமுறைகளின் பெயர்களாக அவர்களுடைய அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா கொள்ளுத் தாத்தாவின் அப்பா, கொள்ளுத் தாத்தாவின் தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தாவின் கொள்ளுத் தாத்தா பெயர்களைக் குறிப்பிட்டு இப்படியான பெருமைக் குரிய பாரம்பர்யத்தில் பிறந்திருக்கிறேன் என்று நினைக்கும் படி மந்திரம் இருக்கும். இவ்வாறு பரம்பரைகளின் பெயரைத் தெரிந்துள்ள பார்பனர்களில் சிலர் பார்பனர் அல்லாதவர்களைப் பார்த்து 'மூன்று தலைமுறைக்கு முன் உன் முன்னோர் பெயர் தெரியுமா ' என்று நக்கலாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள், வலைப்பதிவிலும் முன்பு இத்தகைய விவாதங்கள் ஓடியது. நாடோடிகள் படத்தில் சசிக்குமார் ஒரு காட்சியை வைத்து தனக்கு அவருடைய தந்தையின் முன்னோர்களைத் தெரியும் என்று குறிப்பிட்டு ஒவ்வொரு ஊர் மற்றும் அவர்கள் வசித்த இடங்களைப் பற்றி படத்தில் கூறி கைதட்டல் பெறுவார். பார்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் நம்ம அப்பங்காரன் இதையெல்லாம் நமக்குச் சொல்லவில்லையோ என்று நினைத்து வருந்துவார்கள். நாம் எதோ தவறு செய்து முன்னோர்களை புறக்கணித்துவிட்டோம் என்றே நினைப்பர்.\nமுப்பாட்டன் பெயர்களை நினைவு வைத்திருப்பதோ அது ஒருவரின் தனிப்பட்ட பெருமைக்குரிய ஒன்று என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால் இவர்களில் எத்தனை பெயர் தாய் வழி உறவையோ அல்லது தந்தையின் அப்பா, தாத்தா.......கொள்ளுத்தாத்தாவின் கொள்ளுத்தாத்தாவின் மனைவிப் பெயரையோ தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தான் என் கேள்வி. ஆணிய சிந்தனையில் (தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே) என்பதாக குடும்பத் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்களுக்கும் கொடுத்த மதிப்பை அவர்களின் மனைவியர் பெயர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள் \nஒரு குழந்தைக்கு பெற்றோர் என்றால் அதில் அப்பா - அம்மா இருவரும் சம அளவில் தான், இதில் தந்தையின் தந்தையை மற்றும் அவருடைய தந்தை என நினைவு வைத்திருப்பவதும், முன்னோர்களைப் போற்றுவதாகக் கூறுவதும் அதைப் பெருமை என்றும் அவ்வாறு தெரியாதவர்கள் தன் வரலாறு தெரியாதவர்கள் என்று தூற்றுவதும் நகைப்புக்கு இடமானதே.\nநான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது அம்மாவின் தாத்தா - பாட்டி வரை மற்றும் அப்பாவின் தாத்தா - பாட்டிவரை பெயர்களை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆனாலும் நினைவில் வைக்கும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை, நமக்கு யார் என்றே தெரியாதவர்களை நாம் அவர்களின் வழி வந்தவர்களாகவே இருந்தாலும் கேட்டுத் தெரிந்து போற்றுவதால் என்ன பலன் எதோ ஒரு கட்டத்தில் வாரிசே இல்லாமல் போகும் ஒருவரின் பரம்பரைகள் உலகத்தில் வாழ்ந்ததே இல்லை என்று ஆகிவிடுமா \nஇந்தியாவில் மட்டுமல்ல பிற மதங்களிலும் அவ்வாறே முந்தைய இடுகையில் கொடுத்திருக்கும் ஏசுவின் பரம்பரைப் பட்டியலில் ஆண்கள் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, அது தொடர்பான வேறு பட்டியலில் சில இடங்களில் மட்டுமே சில பெண் பெயர்கள் வருகின்றன.\nஏழு தலைமுறை பெருமையை வெளியே சொல்ல தந்தை மற்றும் தாய் இருவரின் பெற்றோர்கள் அவர்களுக்கு மேலே உள்ளவர்கள் என 14 * 2 = 28 பெயர்கள் அல்லது ஏழு தலைமுறை எண்ணிக்கையில் தன்னையும் சேர்த்துக் கொண்டல் 12 * 2 = 24 பெயர்கள் தெரிந்திருந்தால் உங்கள் பரம்பரைப் பெயரைப் பெருமையாகச் சொல்லுங்கள் ஆனால் அதை வெளியே சொல்வதால் மற்றவர்களுக்கு எந்த பலனும் இல்லை.\nஏழு தலைமுறைப் பெயர்கள் தெரிவதால் நானும் எம் முன்னோர்களும் மேலானவர்கள், வந்த வழி தெரிந்தவர்கள் என்று கூறுவது நகைப்புக்கிடமானதே. பரம்பரைப் பெருமை என்பது ஆண்ட பரம்பரை அல்லது பே.......ட பரம்பரை, ராசராசன் வாரிசு என்று சொல்வதோ இல்லை, உங்கள் முன்னோர்கள் இன்றும் நினைவு கொள்ளத் தக்க ஏதேனும் ஊருக்குள் நல்லது செய்துள்ளார்கள் என்றால் அது தான் பெருமையானது, முகம் தெரியாத நடிகர்கள் மீது வைத்திருக்கும் தீராக் காதல் போன்றதே நாம் பார்க்காத முன்னோர்களை நினைத்து பெருமை பேசுவதும். வெற்றுப் பெருமை அதனால் யாருக்கும் பயனில்லை.\nதற்போதைய ஏழு தலைமுறைப் பெருமை என்பது ஆணாதிக்க பெருமை தான், இவற்றில் வெளியே சொல்வது அருவெறுப்பானது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 4/12/2012 06:22:00 பிற்பகல் தொகுப்பு : சமூகம், நட்சத்திர இடுகை\nஇதில் ஆண் ஆதிக்கம் பெண் விடுதலைக்கு எல்லாம் வேலை இருப்பதாக தோன்றவில்லை...\nY chromosome / மரபுஅணுவின் இணைப்பை தான் இங்கே சுட்டிகாடுகிரர்கள் என்று எண்ணுகிறேன். அது அற்ற ஒரு உலகம் என்றால் அங்கு அடையாளத்திற்கான தேவையே இல்லாத வித்தியாசமோ தனித்துவமோ இல்லாத உலகமாக இருக்குமோ என்னவோ அது நல்லதா இல்லையா என்பதை கூற இயலவில்லை.\nதிருமணம் ஒரு சமூக வரையறுப்பு... நான்கு தலைமுறைக்கு மேல் ஒருவன் பெயரை குறிப்பிடும் பொது குறிப்பிட்ட நபர்க்கு அந்த தலைமுறை இணைப்பு அவன் மனைவியால் மட்டுமே கொடுக்கப்படும் ஒரு விஷயம். இதில் அந்த மனைவியின் பெயர் குறிப்பிட வில்லை அனால் அவர்களை மரியாதையுடன் வணங்குவதாகவே கருதுகிறேன். மேலும் ஸ்ரார்தம் போன்ற விஷயங்களில் மூன்று தலைமுறை வரையில் பெண்களின் பெயரும் இடம்பெருகிரதேன்றே நினைக்கிறன் - என் ஞாபகம் தவறில்லை என்றால்.\nதிருமணங்களின் பொது இதுபோன்ற தலைமுறை பெயர்களை குறிபிடுவது வழக்கம். இது ராமாயனத்திலும் வருகிறது. ராமனின் தலைமுறை இக்ஷ்வாகு வரையும் சீதையின் தலைமுறை முதல் ஜனக ராஜாவும் அவர் தந்தை நிமி ராஜா வரையிலும் குறிப்பிட படுகிறது.\nபொதுவாக பலவிஷயங்கள் நமது கலாச்சாரங்களில் சாதாரணமாக குரிபிட்டவையோ அல்லது ஒரு விஷயத்தின் பொருதே மட்டும் குரிப்பிடவைகளோ ஊதி ஊதி hype கொடுத்து பெரிதாக படுகின்றன. சனாதனத்தில் ஊதி பெருசாக சொல்ல தேவைகள் இருபதில்லை. பெருமைபடுபவர்களும் அல்லது இதை சொல்லி மற்றவர்களை கீழ்படுதுபவர்களையும் நொந்து கொள்ளவதை விட சொல்வதற்கு ஒன்றும் இல்லை.\nஒரு விஷயம் நிச்சயம், நம் முன்னோர்களை புரிந்து கொள்வது மூன்றோ, ஏழோ, பதினாலோ, இருபதினாலோ - எந்த ஒரு முக்கிய சந்தர்பத்தில் அவர்கள் செயல் என்னவாக இருந்தது என்பதை புரிந்துகொள்வது நம் அடிப்படையை பொட்டில் அறைதாற்போல் சொல்லும் ஒரு விஷயமாக எடுத்துகொள்ளலாம். உதரணத்திற்கு இயேசுவின் தலைமுறையினரில் பொதுவாக காணபடுவது இறைவன் பால் அவர்கள் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த புரிதல் பொருட்டு தலைமுறையினரை வணங்குவதும் அவர்களை நினைவில் கொள்ளுவதும் தவறில்லை என்று எண்ணுகிறேன்\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:31:00 GMT+8\nநான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது அம்மாவின் தாத்தா - பாட்டி வரை மற்றும் அப்பாவின் தாத்தா - பாட்டிவரை பெயர்களை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்\nநாங்களும் பெரியவர்களிடம் கேட்டு ஜெனி மரம் கணிணியில் வரைந்திருக்கிறோம்..\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:51:00 GMT+8\nதெய்வத்திருமணங்களில் பிரரவம் என்கிற சடங்கில் ஏழு தலைமுறைப் பெயர்கள் ராகமாக சொல்வார்கள் மந்திரம் மாதிரி ஒலிக்கும்.. அருமையாக இருக்கும்..\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:53:00 GMT+8\nகடந்த கால ஆணாதிக்க சமூகத்தை எதிர்ப்பது மட்டுமல்லாது, நிகழ்காலத்திற்குள் ஊடுருவும் அதன் வேர்களை வெட்டி எறிய முயற்சிக்கும் தங்களது எண்ணத்திற்கு காலத்திற்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:56:00 GMT+8\n//இதில் ஆண் ஆதிக்கம் பெண் விடுதலைக்கு எல்லாம் வேலை இருப்பதாக தோன்றவில்லை...//\n//Y chromosome / மரபுஅணுவின் இணைப்பை தான் இங்கே சுட்டிகாடுகிரர்கள் என்று எண்ணுகிறேன்.//\nஇதுபோன்ற வார்த்தைகளை இன்னும் எப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்க முடியும் நண்பரே கொஞ்சம் பொறுப்புடன் நாம் செயல்படுவது, பல மேம்படல்களுக்கு வழிவகுக்கும். நன்றி\nவியாழன், 12 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:09:00 GMT+8\nகோவியாரே, உங்களுக்கு சரியாக தெரியாவிடில் உங்கள் நண்பர் கேசவனிடம் கேட்டு எழுதவும். நீங்கள் சொல்லுவது தேவதைகளுக்கு நமஸ்காரம் செய்யும் சமயத்தில் சொல்லுவது. அதில் தாத்தா பேரும் வராது அப்பா பேரும் வராது. இந்த ரிஷிகளின் வம்சத்தில் வந்தவன் , இந்த வேதத்தை (ரிக்/யசுர்/சாமம்/அதர்வணம் ) அத்யயனம் பண்ணுபவன் என்று வரும்\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 1:14:00 GMT+8\nதனது பரம்பரை மூதாதையரை நினைவுகூர்வதில் என்ன தப்பு இருக்கிறது என்று புரியவில்லை அண்ணா. எனக்கும் தமிழ்நாட்டில் வாழ்ந்த எனது முன்னோர்கள் வாழ்ந்த இடங்களை பார்க்கவும் அவர்கள்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும் விருப்பமாக இருக்கிறது.\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 3:23:00 GMT+8\n//இதில் ஆண் ஆதிக்கம் பெண் விடுதலைக்கு எல்லாம் வேலை இருப்பதாக தோன்றவில்லை...\nY chromosome / மரபுஅணுவின் இணைப்பை தான் இங்கே சுட்டிகாடுகிரர்கள் என்று எண்ணுகிறேன்.//\nதிரு இராகவ், X குரோமோசோம் என்ன தவறு செய்தது, மேற்படி பரம்பரைப் பெருமைகளில் ஒரு பெண் பெற்றொருக்கு ஒரே குழந்தையான பிறகு அவளுக்கு திருமணம் செய்ய அவர்களது முன்னோர்கள் நினைக்கப்படவில்லை என்பதையாவது ஒப்புக் கொள்கிறீர்களா \nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:08:00 GMT+8\nநான் சென்ற முறை ஊருக்குச் சென்ற போது அம்மாவின் தாத்தா - பாட்டி வரை மற்றும் அப்பாவின் தாத்தா - பாட்டிவரை பெயர்களை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்\nநாங்களும் பெரியவர்களிடம் கேட்டு ஜெனி மரம் கணிணியில் வரைந்திருக்கிறோம்..//\nநல்லது, பெற்றோர்களின் பெற்றோர்கள் அனைவரையும் நினைவில் வைத்திருப்பது சிறப்பானது, இந்தக் கட்டுரையின் சாடல் தந்தைவழியில் ஆண்களை மட்டும் நினைவு படுத்திக் கொள்வதை பெருமையாக குறிப்பிடுகிறர்கள் என்பது தான்\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:10:00 GMT+8\nதெய்வத்திருமணங்களில் பிரரவம் என்கிற சடங்கில் ஏழு தலைமுறைப் பெயர்கள் ராகமாக சொல்வார்கள் மந்திரம் மாதிரி ஒலிக்கும்.. அருமையாக இருக்கும்..//\nஅதில் ஆண் பெண் இருவரையும் குறிப்பிட்டார்களா \nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:10:00 GMT+8\nகடந்த கால ஆணாதிக்க சமூகத்தை எதிர்ப்பது மட்டுமல்லாது, நிகழ்காலத்திற்குள் ஊடுருவும் அதன் வேர்களை வெட்டி எறிய முயற்சிக்கும் தங்களது எண்ணத்திற்கு காலத்திற்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்\nதிரு வே சுப்ரமணியன் ஒத்தக் கருத்துகளுக்கு மிக்க நன்றி\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:11:00 GMT+8\nகோவியாரே, உங்களுக்கு சரியாக தெரியாவிடில் உங்கள் நண்பர் கேசவனிடம் கேட்டு எழுதவும். நீங்கள் சொல்லுவது தேவதைகளுக்கு நமஸ்காரம் செய்யும் சமயத்தில் சொல்லுவது. அதில் தாத்தா பேரும் வராது அப்பா பேரும் வராது. இந்த ரிஷிகளின் வம்சத்தில் வந்தவன் , இந்த வேதத்தை (ரிக்/யசுர்/சாமம்/அதர்வணம் ) அத்யயனம் பண்ணுபவன் என்று வரும்//\nஇங்கு யாரும் பார்பனர்கள் நான் குறிப்பிட்டுள்ளதில் தவறு என்று மறுதளித்தாகத் தெரியவில்லை.\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:12:00 GMT+8\nதனது பரம்பரை மூதாதையரை நினைவுகூர்வதில் என்ன தப்பு இருக்கிறது என்று புரியவில்லை அண்ணா. எனக்கும் தமிழ்நாட்டில் வாழ்ந்த எனது முன்னோர்கள் வாழ்ந்த இடங்களை பார்க்கவும் அவர்கள்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும் விருப்பமாக இருக்கிறது.\nபரம்பரைப் பெருமை என்றால் தாய் தந்தையர் இருவரின் பெயர்களை தெரிந்து வைத்திருந்து அவர்கள் பெருமைக் குரிய நற்செயல் செய்திருந்தால் போற்றுவதில் தவறு இல்லை\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:12:00 GMT+8\n/இங்கு யாரும் பார்பனர்கள் நான் குறிப்பிட்டுள்ளதில் தவறு என்று மறுதளித்தாகத் தெரியவில்லை/\nகமென்ட் போட்டவங்க யார் பிராமணர் என்று எனக்குத் தெரியாது...நான் அறிந்ததை சொன்னேன். ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம் .ஆனால் உங்கள் நண்பர் விடுமுறை முடிந்து வந்தவுடன் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்ளவும்\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:10:00 GMT+8\n//கமென்ட் போட்டவங்க யார் பிராமணர் என்று எனக்குத் தெரியாது...நான் அறிந்ததை சொன்னேன். ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம் .ஆனால் உங்கள் நண்பர் விடுமுறை முடிந்து வந்தவுடன் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்ளவும்//\nபின்னூட்டம் போட்டவர்களின் ரிஷி மூலம் எனக்கும் தெரியாது, அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமும் இல்லை, ஆனால் பார்பனர்களும் இந்தப் பதிவை படித்திருப்பார்கள் என்ற பொருளில் தான் மேலே சொல்லியுள்ளேன்.\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:16:00 GMT+8\nநீங்கள் சொல்வது தவறு, சந்தியா வந்தனத்தில் ஏழு தலைமுறை பெயர் எல்லாம் வராது\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51:00 GMT+8\nசென்னை - திருச்சிக்கு வழி சொல்லுங்கனு கெட்டா எனக்கு இன்த பக்கம் கோயமுத்தூருக்கும் வழி தெரியும் இதயும் நான் சொல்லியெ தீருவேன் நீங்க கேட்டெ ஆகனும்நா... சொப்பா\nபல மேம்படல்களுக்கு வழிவகுக்கும்.\" - இவைகளால் அல்லது இவைகளை சாடுவதால் மேம்படல்களுக்கு வழி கிடைக்கும் என்று நம்ப முடியவில்லை.\nசனாதனத்தில் பென்களை பொற்றும் இடங்கள் எராளம். அங்கெல்லாம் இது என்ன பென் ஆதிக்கம் என்றால்... அதை பொல் தான் இதுவும் இருக்கிரது.\nஇது குறிப்பாக எங்கு இடம் பெருகிறது என்று எணக்கு தெரியவில்லை,இங்கு பொருள் உள்ளதாக படுவதினால் கூறுகிரென். குருவிடம் கல்வி கற்க வந்த சிருவனிடம் நீ யார் பிள்ளை எனற கேள்விக்கு தன் தாயின் பதிலை குருவிடம் கூருகிரான், நான் என் தாய் ஜாபாலாவின் மகன், எனக்கு படிக்க விருப்பம்- என்கிற அளவில். இதை குருவும் ஏற்கிறாற். இது சனாதன மரபில் வருகிர ஒன்ரு.\nநான் சொல்ல வருவது இதை தான், இதை இதன் பொருட்டு செய்ய வேண்டும் எனும் பொது அதை அப்படி தான் செய்ய வேண்டும். காலபொக்கில் இதை எதற்க்கு ஏண் செய்கிறொம் என்ரு கேள்வி எழந்து விடை கண்டால் நல்லது. இல்லை விடை நம் சிற்றறிவிற்கு இன்னும் எட்ட வில்லை என்ரால் தெடலை நிருதாமல் செயலையும் தொடர்வதெ சரி.\nஅது ஒருவாராக மேம்படல்களுக்கு வழி வகுக்கும்.\n\"@எல் கே கூறியது...\"-பொல் சந்தியாவன்தனதிர்கும் மூதாதயர் பெயர்களை சொல்வதர்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் தெரின்த வரை மூதாதயர் பெயர்களை சொல்லும் இடங்களும் உன்டு. அதன் பொறுட்டெ இங்கு பின்னூட்டம் இடுகிரென்.\nசனி, 14 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:21:00 GMT+8\nஅப்பா வழியில் 7 ம் அம்மா வழியில் 5 ம் தெரியும் எனக்கு :)\nதிங்கள், 16 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:05:00 GMT+8\nஅப்பா வழியில் 7 ம் அம்மா வழியில் 5 ம் தெரியும் எனக்கு :)//\nஅதெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது, (7 x 2) * 2 (பெற்றோர்கள்) மொத்தம் 28 பெயர் தெரிந்தால் வாங்க, மற்றபடி செல்லாது. ஆணாதிக்கம் தான்.\nதிங்கள், 16 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:07:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nநித்தியானந்தன் இந்திய சமய அடையளமா \nபேரண்டம் பற்றிய வியப்பான தகவல்கள்\n* தமிழர்களின் வீண் பெருமை \n* போகாத ஊருக்கு சில வழி \n* தமிழ் புத்தாண்டு மீசை மயிரா \n* ஏழு தலைமுறை ஆணாதிக்கப் பெருமை \n* ஆதாமின் மரபணுவும் ஏசுவின் இரத்த வகையும் \n* உலக அழிவை நாடும் மத நம்பிக்கைகள் \n* மொய்க்கும் கண்களைப் பார்த்த அச்சம் \n* இது தான் 'உயர்' தமிழா - ஒரு மொழிப் பெயர்ப்பு - ஒரு மொழிப் பெயர்ப்பு \n* சிங்கப்பூர் - மலேசியா, இந்தியா - பாகிஸ்தான் \n* எதிர் கிருமி (Anti-Virus) மென்பொருள் இல்லாமல் கண...\n* மறுபடியும் கிடைத்த நல்வாய்ப்பு \nபூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 5 \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஅனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA - *A1* இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால் அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/05/blog-post_1.html", "date_download": "2018-05-27T03:37:18Z", "digest": "sha1:VG3GVNTNTURAD5BL6MJLUHBQFLHBT242", "length": 16137, "nlines": 130, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி திட்ட‌ ப‌ணிக‌ளில் முறைகேடு!ப‌ணிக‌ளை ம‌று ஆய்வு செய்ய‌ வேண்டும்!கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் பாதுகாப்பு க‌ழ‌க‌ம் தீர்மான‌ம்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி திட்ட‌ ப‌ணிக‌ளில் முறைகேடுப‌ணிக‌ளை ம‌று ஆய்வு செய்ய‌ வேண்டும்ப‌ணிக‌ளை ம‌று ஆய்வு செய்ய‌ வேண்டும்கீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் பாதுகாப்பு க‌ழ‌க‌ம் தீர்மான‌ம்\nகீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌க‌ மாதாந்திர‌ கூட்ட‌ம் ந‌க‌ர் அலுவ‌ல‌க‌த்தில் தலைவ‌ர் த‌மீமுதீன் த‌லைமையில் ந‌டைபெற்றது.\nகூட்ட‌த்திற்கு துணை த‌லைவ‌ர் மாணிக்க‌ம் ,செய‌லாள‌ர் முகைதீன் இப்ராகிம்,இணை செய‌லாள‌ர் செய்ய‌து சாஹீல் ஹ‌மீது,பொருளாள‌ர் முக‌ம்ம‌து சாலிஹ் ஹுசைன்,செய்தி தொட‌ர்பாள‌ர் ஜெக‌தீஷ் ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.\nகூட்ட‌த்தில் கீழ்க‌ண்ட‌ தீர்மாண‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.\n1,அண்டை மாநில‌மான‌ கேர‌ளா ஆந்திரா உள்ப‌ட‌ 17 மாநில‌ங்க‌ளில் ந‌டைமுறையில் இருக்கும் லோக் ஆயுக்தா என்ற‌ ஊழ‌லுக்கு எதிராக‌ விசார‌ணை செய்யும் ஒரு மாநில‌ நீதிய‌மைப்பை த‌மிழ்நாட்டிலும் விரைவில் அம‌ல்ப‌டுத்த‌ ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் ஆவ‌ண‌ செய்ய‌ வேண்டும் என்றும்,\n2,இல‌ங்கையில் த‌னி ஈழ‌ம் அமைய‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ம‌ற்றும் இலங்கையில் இருந்து புல‌ம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளிட‌ம் பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும் என்கிற‌ த‌னி தீர்மாண‌த்தை இந்திய‌ அர‌சு ஐநாவில் மீண்டும் வ‌லியுறுத்த‌ வேண்டும் என்றும்,\n3,கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியின் 2011 ‍ 2012 கால‌க‌ட்ட‌த்தில் ந‌டைபெற்ற‌ அனைத்து திட்ட‌ ப‌ணிக‌ளிலும் முறைகேடுக‌ள் ந‌டைபெற்று இருப்ப‌தால் ப‌ணிக‌ளை ம‌று ஆய்வு செய்ய‌ வேண்டும் என்றும்\n4,கீழ‌க்க‌ரை காவ‌ல்நிலைய‌த்துக்கு கூடுத‌ல் காவ‌லர் நிய‌மிக்க‌ வேண்டும் என்ப‌தாக‌ தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.\nகூட்ட‌த்தில் செயற்க்குழு உறுப்பின‌ர்க‌ள் முச‌ம்மில் ஹுசைன்,சீனி முக‌ம்ம‌து சேட்,அபு பைச‌ல்,ப‌வுசுல் அமீன் உள்ப‌ட‌ உறுப்பின‌ர்க‌ள் ப‌ல‌ர் கல‌ந்து கொண்ட‌ன‌ர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழ‌க்கரை ஹ‌மீதியா மெட்ரிக் ...\nகீழ‌க்க‌ரை நக‌ராட்சி கூட்ட‌ம்:ந‌க‌ராட்சியின் இல‌வ‌...\nகீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 25வது...\nஏர்வாடி அருகே வேன் விப‌த்தில் 2பேர் ப‌லி\nகீழ‌க்க‌ரை-‍ ராம‌நாத‌புர‌ம் சாலையில் பைக் விப‌த்து...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் ஊழ‌ல்,முறைகேடு நில‌வுவ‌த...\nகீழ‌க்க‌ரை ச‌முக‌ ந‌ல‌ அமைப்பான‌ நாஸா சார்பில் கோட...\nகீழக்கரையில் அப்பாவிக‌ள் மீது கொலை வ‌ழ‌க்கு\nகீழ‌க்க‌ரை அருகே த‌ர‌ம‌ற்ற‌ சாலை என‌ புகார்\nகீழ‌க்க‌ரையில் பெண்ணை கேலி செய்த‌தாக‌ ஒருவ‌ர் கைது...\nமீன் பிடி த‌டை கால‌ம்கீழ‌க்க‌ரை அருகே ப‌ட‌குக‌ள் ...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் முறைகேடுக‌ள் தொட‌ர்ந்தால...\nகீழ‌க்கரை மீன‌வ‌ர் கூட்டுற‌வு ச‌ங்க‌ புதிய‌ அலுவ‌ல...\nகீழ‌க்க‌ரை ப‌குதியில் அர‌சு சார்பில் நீச்ச‌ல் ப‌ய...\nகீழ‌க்க‌ரை க‌ட‌ற்க‌ரையோர‌ம் பூங்கா அமைக்கும் திட்ட...\nஎஸ்.டி.பி.ஐ சார்பில் கீழக்க‌ரையில் க‌ல‌ந்துரையாட‌ல...\nகீழ‌க்க‌ரையில் ப‌ழைய‌ சேத‌ம‌டைந்த‌ மின்க‌ம்ப‌ங்க‌ள...\nகீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ தீவுகளுக்கு‌ க‌ண்ணாடி இழை ப...\nகுடிநீர் விநியோக‌த்திற்க்காக‌ மாலாக்குண்டுவில் 5 ஆ...\nகீழ‌க்க‌ரை 18வ‌து வார்டில் கிண‌ற்றுநீரில் க‌ழிவுநீ...\nகீழ‌க்க‌ரை சேரான் தெரு ப‌குதி குப்பைக‌ளை அக‌ற்ற‌ ந...\nதெற்கு தெரு ப‌குதியில் காண்ட்ராக்ட‌ரின் த‌ர‌ம‌ற்ற‌...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌ர‌ம‌ற்ற‌ ஜென‌ரெ...\nகீழ‌க்க‌ரை தாசிம் பீவி ம‌க‌ளிர் க‌ல்லூரியில் புதிய...\nகீழ‌க்க‌ரையில் அதிக‌ரித்த‌ நாய்க‌ளை க‌ட்டுப‌டுத்த‌...\nகீழ‌க்க‌ரை அருகே லாரி விப‌த்து\nகீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான...\nகீழ‌க்க‌ரையில் த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கி கிளை...\nகீழ‌க்க‌ரையில் சிட்டி யூனிய‌ன் வ‌ங்கி இட‌ மாற்ற‌ம்...\nகீழ‌க்க‌ரை முஸ்லீம் ப‌ஜார் ப‌குதியில் குப்பைக‌ளை அ...\nகைராத்துல் ஜ‌லாலியா பள்ளி மாண‌வ‌ர் இம்ரான்கான் 110...\nக‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்ய‌ த‌யார்\nகீழ‌க்க‌ரையில் சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ளை மாண‌வியர் ப...\nகீழ‌க்க‌ரை முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளியில் 100 ச‌த‌...\nஇஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வர்‌ ம‌ற்றும் மாண‌வி...\n+ 2 தேர்வு முடிவு\nகுறைந்த‌ செலவில் மின்சாரம் தயாரிக்கும் க‌ருவி\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் லாரி மூல‌ம் க‌ழிவு ...\nகீழ‌க்க‌ரை சாலைக‌ளில் சுற்றி திரிந்த‌ க‌ன்று\nரத்ததான கொடையாளர்க‌ள் 1 ல‌ட்ச‌த்திற்கும் மேற்ப‌ட்ட...\nசேதமடைந்த நிலையில் நகராட்சி வணிக வளாகம்\nமுக்கிய சாலையில் அபாய பள்ளம் \nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியை க‌ண்டித்து 3 க‌வுன்சில‌ர்க...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் லாரிக‌ள் மூல‌ம் குட...\nஇறந்த நிலையில் க‌ரை ஒதுங்கிய‌ கடல்பசு \n ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விலையில்லா சீர...\nகீழக்கரை கல்லூரி மாணவர் கணிதத்துறையில் முதலிடம் \nகீழக்கரை மீனவர் கூட்டுறவு சங்க தேர்த‌ல்\nகீழ‌க்கரை ந‌கராட்சி கூட்ட‌த்தில் நகராட்சி அலுவலக ம...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி திட்ட‌ ப‌ணிக‌ளில் முறைகேடு\nபாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு ...\nகீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் 20மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ணி நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2017/12/06.html", "date_download": "2018-05-27T03:12:27Z", "digest": "sha1:5J6GQ723MJFWM5ETIAYUEWSWD33PCQU2", "length": 16167, "nlines": 168, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 – சி.இலக்குவனார்", "raw_content": "\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 – சி.இலக்குவனார்\nஅகரமுதல 216, கார்த்திகை 24 -மார்கழி 01, 2048 / திசம்பர் 10 – திசம்பர் 16, 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 திசம்பர் 2017 கருத்திற்காக..\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05 தொடர்ச்சி]\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06\nதொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது. வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு தமிழ்நாடாகவே இருந்தது.\nஇம் முப்பெரு நாடுகளும் பன்னிரண்டு நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன என்பதும், அப்பகுதிகளில் செந்தமிழே மொழியாக வழங்கியது என்பதும் தொல்காப்பிய நூற்பா ஒன்றால்*அறியலாகும். ஆட்சி முறையால் மூன்று நாடுகளாக இருந்தபோதிலும், மொழியாலும் பண்பாட்டாலும் தமிழகம் ஒரே நாடாகத்தான் கருதப்பட்டு வந்துள்ளது. முழு உரிமை வாய்ந்த தனி நாடாக இருந்தபோதிலும் உலகின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது.\n“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்று பனம்பாரனார் கூறுவது காண்க. புலவர்கள் நில இயற்கை வகையால் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் தமிழகத்தை நான்கு வகையாகப் பிரித்தனர். தமிழகத்தை நான்கு நிலமாகக்கொண்டு ஆராய்ந்த கண்ணோட்டத்துடன் உலகத்தையும் நோக்கினர். ஆதலின், உலகத்தை ‘நானிலம்’ என அழைத்தனர்.\nகாடும் காடு சார்ந்த இடத்தை முல்லை என்றும், மலையும் மலைசார்ந்த இடத்தைக் குறிஞ்சி என்றும், வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம்என்றும், கடலும் கடல் சார்ந்த இடத்தை நெய்தல் என்றும் அழைத்தனர்.\nபாலை நிலம் அன்று தோன்றப் பெறவில்லை போலும். அன்றியும் பாலை என்பது செயற்கையால் உண்டாகி, மீண்டும் மக்கள் உழைப்பால் மறையக் கூடிய இயல்பினது. ஆதலின், தமிழர், நிலைத்த பிரிவினுள் ஒன்றாக அதனைக் கருதிலர் என்று கொள்ளலாம்.\nஒரு நாடு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதனைச் சங்ககாலத் தமிழர் நன்கு அறிந்திருந்தனர். ‘நாடு’ என்னும் சொல்லுக்கு ‘விரும்பு’, ‘தேடியடை’ என்னும் பொருள்கள் உள. ஆதலின், மக்கள் விரும்புவதற்குரிய இடம், தேடிவந்து தங்குவதற்குரிய இடம் எதுவோ, அதுவே நாடாகும். வளமற்ற வறண்ட வெற்றிடம் நாடாகும் தகுதியினையுடையது ஆகாது. அக்கால மெய்யுணர்வாளரும் அரசியல் அறிஞருமான வள்ளுவர் பெருமான் ‘நாடு’ என்பது எவ்வாறு இருத்தல் வேண்டும் எனக் கூறுவது எக்காலத்துக்கும் எல்லா நாடுகட்கும் மிகவும் பொருந்துவதாகும். அவர் கூறியுள்ளதாவது:\nநாடு என்பது மக்களுக்கு வேண்டியனவற்றை யெல்லாம் தன்பால் பெற்றிருக்க வேண்டும்; அங்ஙனமின்றிப் பிற நாடுகளின் உதவியை என்றும் நாடிக் கொண்டிருக்கும் நாடு நாடாகாது.\nஅது, பெருஞ் செல்வமுடைமையால் பிறநாட்டு மக்களாலும் விரும்பத்தக்க சிறப்பினதாய் இருத்தல் வேண்டும்.\nஎவ்விதக் கேடுமின்றி நன்றாக விளையக் கூடியதாய் இருத்தல் வேண்டும்.\nபிற நாட்டு மக்கள் புகலிடம் தேடி வந்த காலத்தில் அவர்களை ஏற்றுப் புரந்து அரசுக்கு வேண்டும் இறைப் பொருள் முழுவதையும் உளம் ஒத்துக் கொடுக்க வேண்டும்.\nபகைவராலும் இயற்கையாலும் உண்டாகும் கேடுகள் அற்றும், கேடுகள் உண்டான போதும் செல்வம் குறையாத நிலையிலும் உள்ளதே சிறந்த நாடாகும்.\nபெரிய நீர்நிலைகளும், மலைகளும், ஆறுகளும், உறுதிவாய்ந்த அரண்களும் நாட்டுக்கு இன்றியமையாத உறுப்புகளாகும்.\nபிணி இன்மை, செல்வம், விளைபொருள்கள், இன்பம் நுகரும் வாய்ப்புகள், அச்சமின்றி வாழும் காவல் நிலை ஆகியவை நாட்டிற்கு அணிகளாகும்.\nநாட்டு மக்களுக்கு வருத்தும் பசியும், நீங்காத பிணியும், அழிவை உண்டுபண்ணும் பகையும் இல்லாமல் வாழும் நாடே நாடாகும்.\nநாட்டில் ஒன்றுக்கொன்று முரண்படும் பல குழுக்களும், நாட்டைக் கெடுக்கும் உட்பகையும், அரசுக்குத் தொல்லை தரும் கொல்வினைக் குறும்பரும் இருத்தல் கூடாது.\nநாட்டில் என்றும் குறையாத விளைபொருள்களும், புதியன புனையத் தக்க அறிவியற் பெரியார்களும், நுகர்ச்சிப் பொருள்களில் குறைவற்ற செல்வர்களுமாக நிறைந்திருப்பதே நாடாகும்.\nஎல்லாவற்றாலும் சிறந்து, நல்லாட்சியை உடையதாகவும் நாடு இருத்தல் வேண்டும். இல்லையேல் பயனற்றதாகும்.\nஇவ்வாறு திருவள்ளுவர் கூறியுள்ள குறிக்கோளுக்கு ஏற்ப நாட்டை அமைக்க மக்களும் மன்னரும் முயன்று உழைத்தனர்.\n*செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் (தொல்.எச்சம்-4)\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 6:44 AM\nLabels: akaramuthala, Prof.Dr.S.Ilakkuvanar, அகரமுதல, சங்கக் காலம், சி.இலக்குவனார், தமிழர் வாழ்வியல்\n“தமிழரசனின் காலத்தின் குறள் பெரியார்” குறித்து மின...\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5.\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப...\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nகாலத்தின் குறள் – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4.\n‘காலத்தின் குறள் பெரியார்’ – அணிந்துரை: சுப. வீரபா...\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப...\nமனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப...\n – ஏரூர் கே. நெ...\nஇனிது இயற்கைக் குளியல் - சுதாகர்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்பு...\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nகாக்கா காக்கா இயல் கொண்டுவா\n‘வள்ளுவர் கண்ட இல்லறம்’ – சி.இலக்குவனார் : 1. மீள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2018/03/ii.html", "date_download": "2018-05-27T03:37:40Z", "digest": "sha1:UH3AB2UV2L7AYVGSFLMY2ZAH4ASTDUQZ", "length": 15628, "nlines": 314, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: அதிரையின் முத்திரை II", "raw_content": "\nஉங்களை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளை விரட்ட வேண்டு...\nமனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்\nகாவேரி ஆறு இன்றைய நிலை பாரு\nதமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத் ...\nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் ...\n - அபு ஹாஷிமா விசா வாங்காமல் டிக்...\nமனித நேயமும் மத நல்லிணக்கமும் ஏ.ம்.ஸயீத் .\nமூஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்\n‘மனிதருள் மாணிக்கம்’ லால்பேட்டை மர்ஹூம் ந.ப. முகம்...\nசங்க நடவடிக்கையில் உன் பங்கு என்ன தம்பி\n“இல்லறச் செடியில் மழலை மலர் பூக்கப் போகிறதாம்\nஉலமாக்கள் ஆலோசகர்களாக திகழ வேண்டியது காலத்தின் தே...\nபெண்கள் தொழில் புரிதல் - பகுதி 3\nவெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்\nஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை ப...\nமுஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா\nநெஞ்சில் நிறைந்த நீடு;ர் சயீது\nவிடியலை நோக்கி / பி. எம். ஆர். ஹாஜிரா பானு\nதித்திக்கும் திருமறை /அப்துல் வஹ்ஹாப், சாஹிப் எம்...\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\n*ஜே.கிருஷ்ணமூர்த்தி* ------ *தவறவிடப்பட்ட ஞானம்*\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்/ உலகம் உற்று நோக்...\nanbudanseasons அன்புடன் சீசன்ஸ் : ஆலோசனை என்பது ஒ...\nபடியுங்கள் என்று ஒரு நாளும் சொன்னதில்லை\n400 மொழிகளில் அசத்தும் தமிழக சிறுவனை\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் மௌலவி அல்ஹாபிழ் ப...\n தமிழக அரசியல் களம் மீண்டும் கொ...\nநமது வாசிப்பின் நீளம் என்ன :\nஎனக்கு மிகவும் முக்கிய நாள்\nதமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம்...\nஅவள் வேகமாக வந்து நின்றாள்.\nகாணாமல் போன முஸ்லிம் கிராமம்...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nஅறிவுக் கடலில் சங்கமம் ….\n ( பாகம் 4 )\nமுஸ்லீம் பட்டதாரிகளுக்கு இலவசமாக IAS / IPS படிப்பத...\nமுஸ்லீம் இளைஞர்கள் இன்னும் முன்னோக்கி நகரணும்..\nஇறைவன் நமக்கு தந்த அருளை ரசித்து அருந்துங்கள் .\nநெட்டிசன் நோட்ஸ்: ஸ்டீபன் ஹாக்கிங் - பெயரல்ல இயற்ப...\nமுன்னேற்றத்தின் தேடலில் / தேடல் ....\nகண்ணைக் கவரும் பட்டங்களால் நிறைந்த வானம்\nஇத்துணை அவசரமாக எதற்குக் கூப்பிட்டிருப்பார் \nவீட்டு வாடகை ஒப்பந்தம் சொல்லும் சங்கதி\nபெரியார் பற்றி கலைஞர் கவிதையாக தருகிறார் mohamed...\nபிடர்கொண்ட சிங்கமே பேசு - வைரமுத்து | கலைஞர்\nசிரியா மண்ணே சிரி... / கவிஞர் வைரமுத்து\nயாருக்காக உங்கள் கொள்கைகளை நிலை நாட்டப் போகிறீர்கள...\nமதச்சார்பற்ற சிரியாவிற்குள் இத்தனை தீவிரவாதக் குழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pulambals.blogspot.com/", "date_download": "2018-05-27T02:53:19Z", "digest": "sha1:P5MZKJI7KJLZZNRZJLFLYFC57EQTYRH6", "length": 27597, "nlines": 194, "source_domain": "pulambals.blogspot.com", "title": "புலம்பல்ஸ்", "raw_content": "\nநாட்டு நடப்பு குறித்து எமது புலம்பல்களை இங்கு கொட்டுவதாக உத்தேசம். அது மட்டுமல்ல .....\nஹைதராபாத் சார்மினாரின் - அவல நிலை\nசமீபத்தில் ஹைதராபாத் சார்மினாருக்கு சென்றிருந்தேன். அதன் அவல நிலை கண்டு ஆந்திர அரசாங்கம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு கீழ்க்கண்ட மின்னஞ்சலை அனுப்பினேன். பதிலொன்றும் இதுவரை இல்லை.\nபுளிமூட்டைப் பேருந்துகள் - சென்னை\nகூட கொஞ்சம் பஸ்ஸுங்க வுட்டாத்தான் இன்னாவாம்\n'தகவல் அறியும் உரிமை மசோதா' மிகவும் சக்தி வாய்ந்தது.\n'தகவல் அறியும் உரிமை மசோதா' மிகவும் சக்தி வாய்ந்தது. அது, சாதாரண மக்களுக்கு, ஜனநாயகத்தில் பங்கேற்பதற்கும், பங்களிப்பதற்கும் சிறந்த வாய்ப்பளிக்கிறது. அதன் வீச்சை சமீப காலம் வரை அறியாமல் தானிருந்தேன். ஆனால், சில வலைத்தளங்களை பார்வையிட்ட போது, அது புரிந்து விட்டது. பரிவர்தன் அதில் ஒன்று.\nRTI என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த மசோதாவிற்கேவான அமைப்பு இது. இதன் சக்தியை மக்களுக்குப் புரிய வைப்பதற்கும், சாதாரண மக்கள் தங்கள் அன்றாட பிரச்சனைகளை RTI மூலம் எப்படி தீர்த்துக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்துவதற்காகவும் இவர்கள் பாடுபடுகிறார்கள்.\nஉதாரணமாக, உங்கள் தெருவில் தெருவிளக்கு எரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஒரு கம்ப்ளயின்ட் கொடுக்கலாம்.. 'தகவல் அறியும் உரிமை மசோதா' எப்படி இதற்கு உதவும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், சரியான கேள்வியைக் கேட்பதன் மூலம், சரியான தகவல்களைத் தரச் சொல்வதன் மூலம், இது போன்ற சிறு-சிறு பிரச்சனைகளைக் கூட RTI மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் இவர்கள். அது பற்றி மற்றொரு பதிவில்.\nRTI யினால் எந்த மாதிரியான தகவல்கள் பெற முடியும் என்ற ஐயம் உங்களுக்கு இருந்தால், மேலும் படியுங்கள்.\nஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருக்கு வருடம் ஒன்றுக்கு 2 கோடி ஒதுக்கப்படுகிறது. அவரின் தொகுதி மேம்பாட்டிற்கு. எல்லா எம்.எல்.ஏ.க்களும் இந்தப் பணத்தை முழுவதுமாகச் செலவழித்து விடுவதில்லை. பலர் உறுப்படியாகச் செலவழிப்பதில்லை.\nபலர் செலவு ஆரம்பிப்பதே இல்லை.\nஉங்கள் தொகுதி எம்.எல்.ஏ. இதில் எந்தக் கட்சி என்று அறிந்து கொள்ள RTI உதவும். ஆமாம். இந்த 2 கோடியில், எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது எதற்கெல்லாம் போன்ற எல்லாத் தகவல்களையும், ஒரு RTI போட்டு கறந்து விடலாம். நம்பமுடிகிறது\nசரி. இதற்கு எவ்வளவு செலவாகும்\nதமிழகத்தில் ஒரு நயாப் பைசா செலவழியாது. இலவசம். தகவல் அறியும் 'உரிமை' அல்லவா இது ஆனால், சில மாநிலங்களில் கட்டணம் உண்டு. (இந்தியாவிலேயே, தகவல் அரியும் உரிமை மசோதாவை இயற்றிய முதல் மாநிலம் என்பதும், எந்த அமைப்பின் தூண்டுதலும் இல்லாமல், தமிழக அரசே முன்வந்து இயற்றிய மசோதா இதுவென்பதும் உபரி தகவல்.)\nஇந்த விண்ணப்பத்தை யாரிடம் அளிப்பது\nநகர மேம்பாட்டுத் துறை அலுவலகம். (அதாவது, எம்.எல்.ஏ. நிதிக்கு - நிதி ஒதுக்க எந்த அமைச்சகம் பொறுப்போ, அந்த அமைச்சகத்தின் அலுவலகம்.)\nதகவல் எவ்வளவு நாளில் கிடைக்கும்\nஒரு மாதத்திற்குள் தந்தாக வேண்டும். இல்லையென்றால் மேலதிகாரியிடம் செல்லலாம். (சில மாநிலங்களில், ஒரு மாதத்தில் தகவல் வரவில்லையென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் இருக்கிறது. தமிழகத்தில், இதற்கு வழி இல்லை.)\n1. இதற்குண்டான விண்ணப்பம், இங்கு இருக்கிறது. தமிழில். (பக்கத்தின் இறுதியில் பார்க்கவும்.)\n2. எம்.எல்.ஏ. நிதி சம்பந்தமான கேள்வி இங்கு இருக்கிறது. (அதை முடிந்தவரை தமிழ்ப்படுத்தி கீழே கொடுத்திருக்கிறேன். மொழி பெயற்ப்பு சரி இல்லையென்றால், உங்கள் கருத்துக்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.)\nமேற்சொன்ன இரண்டையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.\nசட்டமன்றத் தொகுதி உறுப்பினர், தொகுதி மேம்பாட்டுத் நிதியிலிருந்து, நிதி வருடம் 2004 ல் தொகுதி எண் _______ ற்கு ஆற்றப்பட்ட பணிகளின் கீழ்க்கண்ட விவரங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்:\nபணி குறித்து சிறிது விவரம்\nஇந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த சட்டமன்ற உறுப்பினரின் நிதியில் எவ்வளவு தொகை இருந்தது\nஇந்த நிதிக்கு நடப்பு நிதியாண்டில் உறுப்பினருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது\nமேற்ச்சொன்ன மொத்த தொகையிலிருந்து, மேம்பாட்டுப் பணிகளுக்கு எவ்வளவு பணம் இதுவரை ஒதுக்கப்பட்டிருக்கிறது\nநிதி ஒதுக்கலுக்கு காத்திருக்கும் பணிகளின் மொத்த நிதித் தேவை\nஇந்தத் தகவல் எதற்கு பயன்படும்\nசட்டமன்றத் தேர்தல் வருகிறது. உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யின் பணிகளை சீர் தூக்கிப் பார்க்க இது உதவும்.\nஉங்கள் பகுதியில், ஏதாவது வேலை நடைபெற வேண்டுமென்றால், உங்கள் எம்.எல்.ஏ. சாக்குப்-போக்கு சொல்லாமல் கிடுக்கிப்பிடி போட இது உதவும்.\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தகவல் பெற்று, அதை உங்கள் பகுதி மக்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nமாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்தல் தவறா\nநாம், நாம் குடியிருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை, வேலை பார்க்கும் இடம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல் மாணவர்கள் தங்கள் வகுப்பறையை, அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே போல், கழிப்பறையையும்.\nபள்ளிக்கூடங்களில் பொதுவாக சுற்றுப் புறத்தையும், கழிப்பறையும் சுத்தப்படுத்த ஆயா என்றழைக்கப்படும் பணிப்பெண்களை வேலைக்கு வைத்திருப்பர். ஆனால், மாணவர்கள் தாங்கள் உபயோகிக்கும் கழிப்பறையை தாங்களே சுத்தம் செய்கிறார்கள் என்றால், அது மிகவும் சிறப்பு.\nஇந்த வேலையைத் தான் செய்யப் பணிக்கப் பட்டனர் - ஈரோடு கணபதிபாளையம் பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி மாணவர்கள்.\n'நல்ல விஷயம் தானே' என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், கலெக்டர், தலைமை ஆசிரியையும், விஜயலட்சுமி என்ற டீச்சரையும், தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டார்.\nஅந்தப் பள்ளியில், இது நடைமுறையில் இருக்கும் பழக்கம் தானாம். இன்று இருவர், நாளை இன்னொறு இருவர் - என்று, ஒவ்வொரு நாளும் கழிப்பறை மாணக்கர்களால் சுத்தம் செய்யப்படும்.\nஒரு விஷயம். அன்று வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய விஜயலட்சுமி டீச்சை பணித்திருக்கிறார். இது கண்டிக்கப் பட வேண்டியது தான். ஆனால், இதற்காக டீச்சர்கள் பணி நீக்கம் செய்யப்படுதல் கொஞ்சம் ஓவர். அதற்கு மாறாக, இந்த முறையை ஒழுங்கு படுத்தி, சிறப்பாக நடைமுறைப் படுத்தியிருக்கலாம்.\n\"இது போல் ஏதாவது பள்ளியில், மாணவர்களை வருப்பறையை சுத்தம் செய்யச் சொன்னதாகத் தெரிந்தால், தலைமை ஆசிரியையும், டீச்சரும் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்\" - இது கலெக்டரின் கண்டிப்பு.\nபுதுப்பிக்கப் பட்டிருக்கும் பொது மருத்துவமனை.\n-- 104 கோடி செலவில் ஆறு மாடி கட்டடம்.\n-- 16 அறுவை சிகிச்சை அறைகள்.\n-- சர்வதேசத் தர உபகரணங்கள்.\n-- குளிரூட்டப் பட்ட வார்ட்கள்.\n-- முழுக்க கணினி மயமாக்கப் பட்டது.\nஇந்த மாற்றங்களுடன், ஏழை எளிய மக்களுக்கு சிறப்பாக சேவையும் புரியும் என்று நம்புவோம். (ஏழை, எளியோர் அல்லாதோர் பொது மருத்துவமனையை உபயோகிப்பதில்லை தானே\nஅவசரத்திற்கு இல்லாவிட்டாலும், வருடத்திற்கு ஒரு முறையேனும் நடுத்தர, மேல்த்தர வர்க்கமும் இங்கு செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். ஒரு கண்காணிப்பு நோக்கத்திலாவது.. நம் சக மெஜாரிட்டி குடிமக்கள் உபயோகிக்கும் மருத்துவமனை அல்லவா\nசென்னையில் தனியார் குட்டிப் பேருந்துகள்.\nஇந்தச் செய்தி சென்னைவாசிகளுக்கு கண்டிப்பாக மிகவும் மகிழ்ச்சியளிக்கும்.\nஉலகின் தலைசிறந்த தீம் பார்க்கள் - Forbes இங்கு வரிசைப் படுத்தியிருக்கிறது. (ரீடிஃப் செய்தித் துண்டு)\nஇந்தியாவில் நான் முதன் முதலில் சென்ற தீம் பார்க், \"விஜிபி தங்கக் கடற்கரை\". குறைந்தது பத்து வருடங்களுக்கு முன். நீளமான தோசை தின்றதும், கூட வந்த ஏதோ ஒரு அரை டிக்கெட்டைக் காணாமல் தேடியதும் ஞாபகமிருக்கிறது. வேறொன்றும் தெளிவாக நினைவில் இல்லை.\nஐந்தாறு வருடங்களுக்கு முன் \"கிஷ்கிந்தா\". வேலை இடத்திலிருந்து கூட்டிச் சென்றார்கள். கூட்டமாக இரண்டு வேன்களில் சென்றோம். நிறைய ரைட்ஸ்கள். நல்ல அனுபவமாக இருந்தது.\nநான் என் குடும்பத்தார் மூல கேள்விப் பட்ட வரை, கேரளாவில் எங்கோ, \"வீகா லாண்ட்\" என்று ஒரு தீம் பார்க். மிகச் சிறப்பாக இருக்கிறதாம்.\nநீங்கள், இந்தியாவில், அல்லது வேறு நாடுகளில் எந்தெந்த தீம் பார்க்களுக்குச் சென்று இருக்கிறீர்கள் உங்கள் அனுபவம் எப்படி\n\"Dictionary.com\" அப்டீன்னு ஒரு வலைத்தளம் இருக்குது. நான் அடிக்கடி விஸிட் செய்யும் ஒரு தளம். வலையில் ஏதேனும் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அர்த்தம் புரியாத வார்த்தைகளுக்கு உடனடியாக அர்த்தம் புரிந்துகொள்ள மிகவும் கையகமாக (handy) இருக்கும் தளம்.\nஇந்தத் தளத்திலிருந்து தினமும் எனக்கொரு மின்னஞ்சல் வருகிறது. அதாவது, \"Word of the Day\".\nதினம் ஒரு வார்த்தை, அதன் அர்த்தம், அதை உபயோகிக்கும் முறைக்கு இரண்டு அல்லது மூன்று உதாரணங்கள், வார்த்தையின் ரிஷி-மூலம்.\nஎல்லா வார்த்தைகளும் மனதில் பதிந்து விடும் என்பதல்ல; என்னளவில், பத்தில் ஒன்று பதிந்தாலே போதும் தான்.\nஇது போல், தமிழில் ஏதேனும் ஒரு சேவை இருந்தால், சிறப்பாக இருக்கும். அதாவது, ஆங்கில வார்த்தைகள் குறைவாக பயன்படுத்த வேண்டும். அதற்கு ஈடான தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன என்று கூறுபவர்கள், புதிய கலைச் சொற்க்கள் போன்றவற்றை புழக்கத்தில் விட இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.\nSubscribe க்கு தமிழ் வார்த்தை என்ன Guidance க்கு தமிழ் வார்த்தை என்ன Guidance க்கு தமிழ் வார்த்தை என்ன சில சொற்களுக்கு, தமிழில் வார்த்தை சிந்திக்கும் போது, i just draw a blank.\nஹைதராபாத் சார்மினாரின் - அவல நிலை\nபுளிமூட்டைப் பேருந்துகள் - சென்னை\n'தகவல் அறியும் உரிமை மசோதா' மிகவும் சக்தி வாய்ந்தத...\nமாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்தல் தவறா\nL-RAMP நடத்தும் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி.\nCustomer Support : மார்க் ஸ்பீக்கிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/10/blog-post_23.html", "date_download": "2018-05-27T03:29:04Z", "digest": "sha1:634XLZTDIPFFMR4FX57WFKW5NGGKKEJO", "length": 21143, "nlines": 139, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விலங்காயிருப்பதன் விடுதலை:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்றைய கிராதத்தின் இவ்வரிகளைப் படித்து விட்டு சற்று திகைத்து அமர்ந்திருந்தேன். \"விலங்கு என்பதை அவன் கற்ற குருநிலைகளில் தன்னை அறியாதது, எனவே பிரம்மம் என்பதை உணரவியலாதது என்றே சொல்லியிருந்தனர். புலன்களில் விடுதலையின்றி விலங்கிடப்பட்டது. முற்றிருளே அதன் முதற்குணம்.\nஆனால் அவரைப்பார்த்தபின் எதிரே வரும் விலங்குகளை நோக்கியபோது அவை முழுவிடுதலைகொண்டவை என்று தோன்றியது. காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மென்பஞ்சுத்துகள்கள் போலிருந்தன அவை. தானென்று உணரும் ஒன்றை அவை சுமந்தலையவில்லை. எனவே திசைதேடித் தவிக்கவில்லை. தானற்ற ஒன்றை கணம்தோறும் உணர்ந்து திகைத்து நெஞ்சழியவில்லை. விலங்கென்று ஆவதே விடுதலை போலும். கற்றுக்கற்று சென்றடையும் இடம் அதுவே என்றால் சொல்லென அமைந்து சுழற்றிக்கொண்டுசெல்லும் இம்மாயப்பெருக்கின் நோக்கம்தான் என்ன\" பிரயாகையில் இருந்தே என்னைத் துரத்தும் கேள்வி இது. வெய்யோனின் தீர்க்கதமஸ் பகுதி இதை இன்னும் தூண்டி விட்டிருந்தது. அப்பகுதி வந்த சமயத்தில் உங்களுக்கு எழுத வேண்டும் என நினைத்து நம் குழுமத்தில் மட்டுமே பகிர்ந்த ஒரு கடிதம் கீழே (இந்த வருடத் துவக்கத்தில் எழுதியது). உங்களிடம் பகிர வேண்டும் எனத் தோன்றியது.\nஇந்த புத்தாண்டு (2016) ஜெ குறிப்பிட்டிருப்பதைப் போன்று சற்று கலங்கித் தான் பிறந்திருக்கிறது. குறிப்பாக தீர்க்கதமசின் கதை மிகவும் சலனப்படுத்தியது. மிக எளிதாகத் தீர்க்கதமசை கூண்டிலேற்றி அச்சலனத்திலிருந்து வெளிவந்திருக்க இயலும். அவ்வாறு செய்தும் பார்த்தேன். பலனில்லை. அக்கதையின் எதோ ஒரு அம்சம் என்னை மிக மிகத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது.\nதீர்க்கதமஸ் – முடிவுறா இருள் என்று கருவிலேயே பெயர் பெற்று வருகிறார். இவரின் கதை முதற்கனலில் அம்பிகையின் வியாசருடனான இரவின் போது வருகிறது. அதில் மமதை உதத்யரால் அவரின் அனைத்தையும் உண்ணத் தூண்டும் பேரவாவின் தூல வடிவாக உருவாக்கப்படுகிறாள். எனவே உடலால் அவள் பிரகஸ்பதியை வேண்டாம் என்று சொன்னாலும் உள்ளத்தால் அவரை அணைவதை விரும்புகிறாள். அவளின் பேரவா என்னும் விழைவே தீர்க்கதமசின் ஆதார குணமாகிறது. ஆங்கிரசின் புதல்வர்களான உதத்யரும், பிரஹஸ்பதியும் குடலும், நாவும் போல, பசியும் தேடலும் போல இருந்தனர் என்று முதற்கனல் சொல்கிறது. இவர்களின் உறவில் பிறந்த தீர்க்கதமஸ் இவ்விரு குணங்களின் சங்கமமாகவே பிறக்கிறார். அவரிடம் வெளிப்படுவதே இரண்டே இரண்டு உணர்ச்சிகள் தாம். கட்டற்ற பசி, கட்டற்ற காமம். ஆதியுணர்ச்சிகள். அனைத்து விலங்குகளுக்கும் பொதுவான உணர்ச்சிகள்.\nஅவரும் தன்னை அந்த விலங்குகளில் ஒருவராகவே வைத்துப் பார்க்கிறார். அவர் கற்ற வேதமெல்லாம் விலங்குகளின் ஒலியிலேயே, ஆதி ஒலியிலேயே வெளிப்படுவதால் தான் அவர் எண்ணியதை அவர் வேதச் சொல் நிலை நாட்டுகிறது. அவர் மானுடராக, மானுட நாவில் வேதத்தை உச்சரிக்கவில்லை. அவ்வேதப் பகுதிகளை மானுடம் அறிந்து கொண்ட அந்த ஆதி விலங்கின் குரலில் உச்சரிக்கிறார். எனவே தான் அவரின் வருண மந்திரத்திற்கு மழை பொழிகிறது. அவர் எந்த உறவுகளிலும் இல்லை. அனைத்தையும் தனக்காக மட்டுமே உறிஞ்சிக் கொள்வதே தன்னறம் என்று கொண்டிருக்கிறார்.\nஆச்சரியம் என்னவென்றால் அவருடன் உறவு கொண்டாடியவர்களும் தங்களை கட்டற்ற ஒரு விலங்காக, தம்மைச் செலுத்தவேண்டிய ஆதியுணர்ச்சியை அறிந்தவர்களாக, அதில் நிறைவுற்றவர்களாக ஆவது தான். அவரின் மனைவியான பிரத்தோஷி தன் அழகின்மையால் அவரின் மனைவியாக்கப் பட்ட தன் ஊழை நொந்து வாழ்ந்து அவரின் ஏவலாளாக எஞ்சுகிறாள். அந்த வஞ்சமே அவரை பரிசலில் தனியாக அனுப்புகையில் தான் வெறும் ஒரு அன்னை விலங்கு மட்டுமே என்று அவளை எண்ண வைக்கிறது.\nஆனால் அசுர குல வாலியின் மனைவி சுதேஷணையும் அவள் தோழிகளும் பூரண காமத்தை முழுதுணர்வதால் விடுதலை அடைந்தவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்குள் உள்ள ஆதி விலங்கால் மட்டுமே அந்த காமத்தைத் தாங்க இயலும். அந்த ஆதி விலங்கின் கொண்டாட்டத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே தன்னுள் தான் நிரம்பி அமைகிறார்கள். தங்களுக்குள் ஒரு விடுதலையை உணர்கிறார்கள். சுதேஷணையின் அந்த விடுதலைக்கு முதற்காரணம் அவள் இந்த பிரபஞ்ச நடனத்தில் பெண் எனத் தனது இடத்தை அறிந்து கொண்டதும், ஆண் என்பதன் வரையறையைப் புரிந்து கொண்டதுமே.\n‘ஆண் என்பது முதன்மையாக தந்தை. காமமென்பது முதன்மையாக ஆண்மை. ஆண்மை என்பது முதன்மையாக கனிவின்மை. உவகை என்பது வெறும் விலங்காக எஞ்சுவது’, என்று மிகத் தெளிவாக வரையறுக்கிறது வெண்முரசு. அந்த வரிசையைப் பாருங்கள். முதலில் தந்தை – அடுத்த தலைமுறையை உருவாக்குவது என்பதற்கு மேல் இதில் வேறு எந்த பொருளையும் கொள்ள இயலாது. அதற்கான கருவியே காமம். இரண்டாவது ஆண்மை – காமத்தில் ஆடும் இருவரும் கனிவு இல்லாமல், தன்னினைவு இல்லாமல் ஒருவரை ஒருவர் உண்ணும் வேட்கை மட்டுமே கொண்டவர்களாக எஞ்சும் போதே காமம் தன் முழுப் பொருளையும் அடைகிறது. மூன்றாவது கனிவின்மை – இந்த வரிசையில் முக்கியமான வார்த்தை. கனிவு என்பது அன்பை முன்னிறுத்துவது. அன்பு ஒளியால் ஆனது. இந்த உலகமாகவும், அதில் உள்ள மானுட சமூகங்களாகவும், அதன் கலாச்சாரங்களாகவும் மாறி நிற்கும் மாயை கனிவே. காமம் இருளின் வழி. அங்கே கனிவுக்கு இடமில்லை. தக்கன பிழைக்கும் காட்டின் நீதியே அங்கு செல்லுபடியாகும். அதை முழுமையாக உணர்ந்து, விலங்காக எஞ்சுவதே உண்மையான உவகை.\nஉண்மையில் தீர்க்கதமஸ் நம்மைப் பார்த்து நவீன கவிதையில் பேசியிருந்தால் இவ்வரிகள் வந்திருக்கும்.\n‘சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே\nஎப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்\nஅன்பின் தோல்வியைக் காணுங்கள்.’ – உபயோகமில்லா பொருட்கள் – தேவதச்சன்.\nஇந்த கவிதையின் விவாதத்தில் தேவதச்சன் குறிப்பிட்ட, ‘அன்புக்கு பின்புலமாக அன்பை விட மகத்தான உணர்வு ஒன்று இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மீண்டும் மீண்டும் சிந்தித்து அன்பை விட மகத்தான அந்த ஒன்று சுதந்திரம் என்று கண்டுபிடித்தேன். அன்புக்கும், தன் நிலையில் இருக்ககூடிய சுதந்திரத்துக்கும் முரண்பாடு வருமாயின், சுதந்திரத்தையே தேர்ந்தெடுக்கவேண்டும்’ என்ற தரிசனத்தின் வாழ்ந்து மறைந்த உதாரணமே தீர்க்கதமசும், சுதேஷ்ணை உட்பட நிறைவடைந்த பெண்களும். உண்மையில் நாம் அசூயை கொள்ளும் பிறரிடத்தில் இருப்பது நம்மிடம் இல்லாத சுதந்திரமே. அவர்களின் தளைகள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் நம்மைத் தளைத்திருக்கும் தறிகளில் எவையெல்லாம் அவர்களுக்கு இல்லை என்பது நமக்கு உடனடியாகத் தெரிவதாலேயே அசூயை கொள்கிறோம். இந்த தளைகள் அனைத்தும் இழக்க இழக்க நாம் சென்று சேரும் இடம் தூய விலங்கு நிலையே. அங்கு அனுபவிப்பதே முழு விடுதலை.\nஆனால் நாம் எதையும் உணர இயலாமல், நிலைகொள்ளாமல் நிற்கிறோம். ஏன் அசுர குல வாலியின் மனைவி சுதேஷணை அடைவது இதே வகைக் குழப்பம். ‘வெறும் கருவைச் சுமக்கும் ஊன் தேரா அசுர குல வாலியின் மனைவி சுதேஷணை அடைவது இதே வகைக் குழப்பம். ‘வெறும் கருவைச் சுமக்கும் ஊன் தேரா’ என்ற அவளின் வினாவை என்பதை சற்று நீட்டித்தால் இன்றும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையின் ஆதி வேரை அடைந்து விடலாம்(முதல் பெண்ணியவாதி...). அதை மொத்த மானுடத்துக்கும் நீட்டித்தால் அவரவர் வாழ்வின் அர்த்தம் என்ன என்ற மெய்ஞானத் தேடலைச் சென்று சேர்ந்து விடலாம். அந்த ஞானத் தேடலின் உக்கிரத்தைத் தாங்க இயலாது, கொண்ட கேள்விகளுக்கு விடையும் கண்டடைய இயலாமல் இருப்பவர்களுக்கு வெண்முரசு ஒரு முதிய சேடி வாயிலாக மிகப் பொருத்தமான நடைமுறைவாத பதிலைத் தருகிறது. ‘விழி தொடும் எல்லையை தெய்வங்கள் வகுத்தளிக்கின்றன. உன் உளம் தொடும் எல்லையை நீயே வகுத்துக் கொண்டால் அறங்கள் எளிதாகின்றன. விரிந்து பரவுபவர் எங்கும் நிலைகொள்ள முடியாதவர். எத்திசையும் செல்ல முடியாதவர்.’ குறைந்த பட்சம் நமது எல்லையுணர்கையில் குவிய வேண்டிய ஒரு புள்ளியாவது தென்படும். நாமும் நிலை கொள்ளலாம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/03/blog-post_59.html", "date_download": "2018-05-27T03:15:56Z", "digest": "sha1:JNCIDZ6JX5KHT3ZE52GYLEGYHND3FQAM", "length": 8245, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மானுட உறவுகளின் கதை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் மாமலரை இதுவரை வந்த நாவல்களிலேயே செறிவானது என்று சொல்லலாம். இப்படி எல்லா நாவல்களுக்கும் சொல்வார்க்ள்தான். முன்னர் வந்தநாவல்களில் தத்துவச்செறிவு இருந்தது. தத்துவமே செறிவானதுதான். ஆகவே அந்த இறுக்கமும் தீவிரமும் ஆச்சரியப்படுத்தவில்லை.\nஆனால் இது முழுக்கமுழுக்க மானுட உறவுகளின் கதை. ஆகவே இதன் செறுவு ஆச்சரியப்படுத்துகிறது. ஒரே அத்தியாயத்தில் எத்தனை விஷயங்கள் வந்துசெல்கின்றன. பலவர்றை நினைவிலேயே வைத்துக்கொள்ள முடியவில்லை. நாவலாக வந்தபின்னர்தான் நினைவில் நிறுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன்.\nஉதாரணமாக, இந்திரன் சச்சியை எந்தெந்த வடிவில் எல்லாம் வந்து சந்திக்கிறான் என்னும் பகுதி. அதேபோல அவன் வளையல்போடவரும் அந்த இடமே ஒரு நல்ல சிறுகதை. வளையலுக்குள் கை நுழைவதை யானை கோட்டைக்குள் நுழைவதுபோல என்றும் கைமுண்டுகளை மத்தங்கள் என்றும், சொல்லியிருக்கும் இடமெல்லாம் கிளாஸிக்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\nமாமலர் 53 – வேங்கை விடு தூது\nஅம்பாலிகை - விளையாட்டுச் சோலை\nஉள்ளிருந்து உயிர் குடிக்கும் ஒட்டுண்ணி ( மாமலர் ...\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nகோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)\nவைர மலர் (மாமலர் -36)\nகலங்கவைக்கும் கள்ளமின்மையின் இறப்பு (மாமலர் -38)\nமாமலர் 34 - நடைபிணம்\nஆகிவரும் ஆளுமை (மாமலர் - 34, 35)\nஊழ் நிகழ்த்தும் ஊஞ்சலாட்டம் (மாமலர்-34)\nஎண்ணங்களைக் கடைந்து முடிவெடுத்தல் ( மாமலர் -34)\nமாமலர் 33 – செவிலி அன்னை\nகொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/17.html", "date_download": "2018-05-27T03:28:03Z", "digest": "sha1:EQGJACTTUX4TZUXTH6HX4EFT3M32ZIOM", "length": 8797, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "17வருடங்களின் பின்னர் தண்டனை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / 17வருடங்களின் பின்னர் தண்டனை\nடாம்போ May 12, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகிண்ணியா, ஆலங்கேணியில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் முதலாவது எதிரிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தார் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர்.\n2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி கிண்ணியா, ஆலங்கேணி பொலிஸ் காவலரணுக்கு அருகில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கொன்றமை தொடர்பில் கிண்ணியாவைச் சேர்ந்த இருவரும், புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.\nவழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் பெயர் குறிக்கப்பட்ட முதலாம் எதிரி குற்றவாளி என்று இனங்காணப்பட்டு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nபனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nமன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்\nஅனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வ...\n பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்\nதூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலை சய்த தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனபப...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2015/09/blog-post_33.html", "date_download": "2018-05-27T03:04:50Z", "digest": "sha1:TY74EUDVYTDSJX2PJ5FIGYZSAW3EF62C", "length": 28297, "nlines": 162, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: க.நா.சுவின் நாவல்கள்: சில குறிப்புகள்", "raw_content": "\nக.நா.சுவின் நாவல்கள்: சில குறிப்புகள்\nக.நா.சுவின் ‘பொய்த்தேவு’ அனைவரும் அறிந்த பிரபலமான நாவல். அதைத் தவிரவும் மேலும் ஒன்பது நாவல்களை க.நா.சு எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. க.நா.சு.நூற்றாண்டை ஒட்டி அவரது பல நாவல்களை நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில், அசலான நாவல் முயற்சி அவர் நாவலில் இருந்தே தொடங்குகிறது. அவர் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். விதவிதமான தினுசுகளில் நாவல்களை எழுதிப் பார்த்த அவரின் எழுத்தாற்றல் பிரமிப்பை ஊட்டுவது. தமிழ் இலக்கியத்தில் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளிகளில் சிறந்தவரான அவர் எழுதிய இந்நாவல்கள் ஒவ்வொரு இலக்கிய ஆர்வலரும் அவசியம் படித்து இன்புறத் தக்கவை. நற்றிணைப் பதிப்பகம் இந்நாவல்களை நோ்தியாகவும் அழகாகவும் வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். நாவலைப் பற்றி அவரே எழுதிய சில முன்னுரைக் குறிப்புகளைப் படிப்பதன் மூலம் அவர் நாவல்களின் பரந்துபட்ட தன்மையை அறிவதோடு, அவற்றை வாசிக்கவேண்டும் என்ற உந்துதலையும் நாம் பெறுகிறோம். (கடைசி இரு நாவல்களைப் பற்றிய குறிப்புகள் சி.மோகன் எழுதியவை).\n1. கோதை சிரித்தாள்: நன்றி மறவாத ஒரு மாணாக்கன் தன் பழைய உபாத்தியாயரையும், சில நாட்கள் தனக்கு உணவு அளித்துத் தன் குடும்பத்தில் ஒருவனாக நடத்திய உபாத்தியாயரின் மனைவியையும் எண்ணித் திரும்பி வந்தால் எப்படி உணருவான், என்ன செய்வான் என்று சொல்லிப் பார்க்க எனக்கு ஆசை. இதை உணர்ச்சி வசப்பட்டு விடாமலும் மெலோட்ராமாடிக்காகச் சொல்லாமல் சொல்லிச் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் கோதை சிரித்தாள் நாவலை எழுத ஆரம்பித்தேன்.\n2. ஒருநாள்: ஆரம்ப முதலே என் நாவல்களில் பலருக்கும் பிடித்த நாவலாக 'ஒருநாள்' அமைந்ததை என்னால் உணர முடிந்தது. சாத்தனூர் என்ற கிராமமும் அதன் மக்களும் என்னைத் தாக்கிப் பாதித்த வேகத்தில் எழுதிய நாவல். பல சுவாரசியமான மனிதர்களை நானே நேரில் கண்டு தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு விரிவாக உருவாக்கினேன். இந்த நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு வேகம் இருந்தது. வேகம் கெட வேண்டும் என்கிற நினைப்புள்ள எனக்குக்கூட இந்த வேகம் பிடித்ததாக இருந்தது. நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறையைச் சேர்ந்த சிலரும் அப்படியே எண்ணுவார்கள் என்று நம்புகிறேன்.\n3. சர்மாவின் உயில்: நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதி விட்டேன். இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசியமான பகுதிகளை அகற்றவும் நாவலைச் சுருக்கமாக எழுதவும் எனக்குப் பயன்பட்டது. இந்நாவலில் வரும் கதையோ சம்பவங்களோ ஜோசியமோ முக்கியமல்ல. ஆனால் குணச் சித்திரங்கள், மனப்போராட்டம், உலகமே ஒரு குடும்பம் என்கிற சித்தாந்தம் இவற்றில் நம்பிக்கை வைத்து நான் எழுதிய நாவல் 'சர்மாவின் உயில்'. எனக்குத் திருப்தி தந்த முதல் நாவல் இது.\n4. அவரவர் பாடு: எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது. சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து 'அவரவர் பாடு' என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு.\n5. ஆட்கொல்லி: ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாரவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.\n6. பித்தப்பூ: மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. எல்லாச் சம்பவங்களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை.\n7. அவதூதர்: 'அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும் போது சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும். பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்துவரவில்லை என்றார்கள். இந்த நம்பிக்கைகள், அதிசயங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன்.\n8. அசுரகணம்: க.நா.சு.நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். இப்படைப்பில் புறநிகழ்வுகள் வெகு சொற்பம். மன நிகழ்வுகளால் கட்டமைக்கப் பட்டிருக்கும் நாவல். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஓர் எண்ணம் எழுந்து, அது அதன் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து, பரவி வியாபிக்கிறது. மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்.\n9. வாழ்ந்தவர் கெட்டால்: தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. நாவலின் பரப்பு சிறியது. பாத்திரங்களும் நிகழ்வுகளும் விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுபவை. ஆனால் இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிப்பூட்டக் கூடியது. மனித மனங்களின் புதிர்ப் பாதைகளில் நம்மைச் சுழற்றி எறிந்து திகைக்க வைக்கிறது இப்படைப்பு. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு மேதைமையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது.\n(திருத்திய மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஏப்ரல் 4, 2013)\nLabels: க.நா.சு., நற்றிணை, நாவல்கள்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nக.நா.சுவின் நாவல்கள்: சில குறிப்புகள்\n‘கு.ப.ரா’வும் அவரது மூன்று சிறுகதைகளும்\n‘தமிழை யார் எடுத்துச் செல்வது\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nக.நா.சுவின் ‘சர்மாவின் உயில்’- வாழ்க்கை Vs இலட்சிய...\nஃப்ரன்ஸ் காஃப்காவின் ‘தீர்ப்பு’: அதீதப் புனைவின் அ...\nப.சிங்காரமும் ‘புயலிலே ஒரு தோணி’யும்\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nஎனக்குப் பிடித்த செகாவ் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post_79.html", "date_download": "2018-05-27T03:35:05Z", "digest": "sha1:BICJEQDRRI2SO4CFC73VSEXMFUNCSKSJ", "length": 12563, "nlines": 154, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வாளெனும் காலம்:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளெனும் காலம்:\nவெண்முரசில் வரும் குறள்களைத் தனித்திரியாகவே தொகுக்கலாம். தற்போது கிராதம் 45 ல் விருத்திரன் கூற்றாக ஒரு குறள் வந்திருக்கிறது. ‘“அரசே, இந்திரனின் படைகள் அணுகிவிட்டன. நகருக்குள் அவை நுழைந்துகொண்டிருக்கின்றன” என்றார் அமைச்சர். “இனி ஒருகணம்கூட நமக்கு இல்லை” என்று கூவினார். “ஆம், காலம்…” என்று விருத்திரன் சொன்னான். “நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது. அவ்வாறே ஆகுக”’. இதே குறள் சொல்வளர்காட்டிலும் வந்துள்ளது. (சொல்வளர்காடு 55). தன் கையில் கிடைத்த நாரையின் இறகை வைத்து அதன் இடத்தை உசாவும் தருமனிடம், அந்த சூதன், ‘அரசே, இதோ இதேபோல ஒரு சிற்றோடை. அது வேகவதி. அதிர்ஸ்யை என்றும் அதற்கு பெயர் உண்டு. வாள் போல வளைந்தது. நாள் என ஒன்றுபோல் காட்டி உயி்ர் ஈரும் ஒளி கொண்ட வாள். அதற்கு அப்பால் நின்றிருந்தான் வேடன். வில்நாண் இழுத்து அதில் அம்புபூட்டி இழுத்து ஆண்பறவையை குறிவைத்தான். அந்தச் சிற்றோடைக்கு இப்பால் அமர்ந்து மெய்மைதேடி விழிமூடியிருந்தான் அவன் நூற்றுவர்வழிப் பெயரன். ’\nகாலம் என்பதை உயிர் எடுக்கும் வாள் என உருவகப் படுத்திய விதம் அலாதியானது. அந்த காலம் ஒரு வேகமான ஆறாக ஓடுகிறது என்கிறது வெண்முரசு. வேகவதி என்கிறது. அது அதிர்ஸ்யை என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது அ-திர்ஸ்யை : காண இயலாதது. ஆம், காலம் என்பதைக் காண இயலுமா என்ன ஆயினும் இப்புடவியை நோக்கின் அது ஒரு சிற்றோடை தான் என்கிறது வெண்முரசு. துவக்கமும், முடிவும் கொண்ட ஒரு ஓடை. ஏதோ ஓர் பேர் ஒழுக்கில் சென்று இணைவது. வேடன் இருக்கும் இடத்தில் தான் விருத்திரனும் இருக்கிறான். அவர்களுக்கு ஓடை தெரியவில்லை. ஒரு துளி தான் தெரிகிறது. எனவே கணம் கணமேன அதை உணர்கிறார்கள். எனவே காலம் வாளென அவர்கள் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது, ஒரு முழு வெண்ணைக் கட்டியைத் துண்டு துண்டாக வெட்டும் கத்தி போல. அதே வேடன் மெய்மை அறிந்து இக்காலத்தையே ஓர் ஒழுக்காகக் காணும் இடத்தில் இருக்கையில் முழுக் காலமும் ஒரு கணமெனச் சுருங்கிவிடுகிறது, அந்த ஓடையின் துவக்கமும் முடிவும் தெரிந்து விடுகிறது. அக்கணத்தில் அவன் படைத்த காவியம் அக்காலம் இருக்கும் வரை எஞ்சுகிறது. அக்குறள்\n‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்;\nவாள் அது உணர்வாற் பெறின்.’\nநிலையாமை என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது. நிலையாமை என்பதில் காலத்தைக் கொண்டு வந்த வள்ளுவரின் மேதமையை என்னவென்று சொல்வது மிக மிக எளிமையாக, பொருள் அறியாமல் பொருள் சொல்லப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. இதைக் குறித்த ஜெ வின் பார்வை தனித்துவமானது.\n‘உணர்ந்து பார்ப்பவரின் கண்ண்ணில் பார்வைக்கு ஒன்றுபோலவே இருக்கக்கூடிய பற்பல நாட்களாகத் தன்னைப் பிரித்துக்காட்டும் அது ஒரே வெட்டாக உயிரை வெட்டித்தறிக்கும் வாள் போன்றதாகும்.\nகாலம் நம்மால் துளித்துளியாக உணரப்படுகிறது. நொடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் வருடங்கள். இவை நம் பிரக்ஞையால் உணரப்படுபவை. துண்டுபட்ட காலம் இது. [கண்டகாலம்].\nஆனால் இந்தப் பகுப்புக்கு அப்பால் காலம் என்பது என்ன அது ஒரே பெருநிகழ்வு. துண்டுபடாத காலம் அது [ அகண்டகாலம்] பிரபஞ்சம் என்பது ஒரே பெருநிகழ்வு. நாம் பிரித்துக்கொள்ளும் காலம் இல்லையேல் அது ஒரு கணம் என்றே சொல்லலாம்.\nஇருவகைக் காலத்தையும் ஒரேவரியில் சொல்கிறது இக்குறள். மின்னல் போலக் கண்ணிமைக்கும் கணத்தில் நிகழ்வதை நாள் நொடி எனப்பிரித்து உணர்ந்து அதில் திளைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்.’\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2011/01/blog-post_04.html", "date_download": "2018-05-27T03:28:33Z", "digest": "sha1:ISI7CI7NPKOCBTZRDLKJRO3J7GR5EWR6", "length": 17587, "nlines": 408, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா\nநேற்று ரஷ்ய கலாசார மையத்தில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில், 2010-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படத்துண்டுகள் கீழே. நாஞ்சில் நாடன் பேச வருவதற்குள் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகிவிட்டதால், அவர் பேசுவதை வீடியோ எடுக்கமுடியவில்லை. ஆடியோ மட்டும்தான்.\nநாஞ்சில் நாடன் நூல்களை வாங்க\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக வாசகர் ராஜகோபாலன்\nநாடக நடிகர் பாரதி மணி\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ஏற்புரை\nவிஜய்வீரப்பன் சுவாமிநாதன் Tue Jan 04, 10:30:00 AM GMT+5:30\nஇப்பொழுது தான் சுரேஷ் கண்ணன் பதிவிட்டிருந்தார். அதற்குள் வலை ஏற்றி விட்டீர்கள்.\nகண்மணி குணசேகரன் பேசக் கேட்பது இதுவே முதன்முறை. இந்தப் பேச்சையும், மொழியையும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்\nவிழாவுக்கு நேரடியாக வர முடியாத குறையைப் போக்கி விட்டது வீடியோ பதிவு.\nவிழாவுக்கு வர முடியாத குறையைப் போக்கி விட்டது இப் பதிவு.\nமிக மிக மிக நன்றி..திரு பத்ரி\nமிக அருமையாகவும் நிறைவாகவும் இருந்தது. நன்றி பத்ரி.\nஇறுதிப் பகுதியில் ஏனோ எனக்கு வீடியோ தெரியவில்லை. நாஞ்சில் நாடனின் குரல் மட்டுமே கேட்க முடிந்தது. மற்ற வீடியோக்கள் எல்லாம் நல்லபடியாகவே இருந்தன.\nமிக்க நன்றி சார், இது ஒரு மறக்க முடியாத நிகழ்வின் பதிவு..... உங்களுக்கு கோடி நன்றிகள்\n நாஞ்சில் பேச்சைப் பிடிப்பதற்குள் வீடியோ (FLIP)-ல் இடம் தீர்ந்துவிட்டது. எனவே வேறு ஆடியோ ரெகார்டரில் பிடித்து, சும்மா ஒரு படத்தை அந்த இடத்தில் போட்டு, நிரப்பி, யூட்யூபில் ஏற்றிவிட்டேன். வீடியோ என்னிடம் கிடையாது.\nஇந்த நிகழ்வின் முழு ஒலிப்பதிவு எந்த தளத்தில் கிடைக்கும் \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்\nகருப்புப் பணம் - 2\nபுத்தகக் கண்காட்சி பதிநான்காம் நாள் (இறுதி)\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி\nபுத்தகக் கண்காட்சி பதிமூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பனிரெண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பதினொன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பத்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஒன்பதாம் நாள்\nகணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது\nபுத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்\n2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருது...\nபுத்தகக் கண்காட்சி ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஆறாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஐந்தம் நாள்\nபுத்தகக் கண்காட்சி நான்காம் நாள்\nபுத்தகக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nகதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி\nகதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்\nஅறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்\nபுத்தகக் கண்காட்சி முதல் நாள்\nநாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா\nகதம்பம் - 3 - வரலாறு முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-38274726", "date_download": "2018-05-27T04:01:53Z", "digest": "sha1:4VCYEZ2DLOMOFQODT437R5MFSASDUJZS", "length": 6972, "nlines": 108, "source_domain": "www.bbc.com", "title": "சசிகலா பொதுச்செயலாளராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசசிகலா பொதுச்செயலாளராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக மறைந்த தமிழக முதல்வரின் தோழியான வி.கே. சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.\nஅவர் இன்று விடுத்திருக்கும் ஒரு அறிக்கையில், ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இணைந்து செயல்பட்டு, அவருடைய சிந்தனையை உள்வாங்கியிருப்பவர் என பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.\nஜெயலலிதாவைப் போல கட்சியை ராணுவ அமைப்பைப் போல நடத்துவதற்கு சசிகலா பொதுச்செயலாளர் ஆவதுதான் ஒரே வழியென பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.\nஅதற்கு மாற்றுக் கருத்து அ.தி.மு.கவில் இல்லை என்றும் அப்படி மாற்றுக்கருத்துக் கொண்டிருப்பவர்கள் அ.தி.முகவினர் இல்லை என்றும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.\nஅ.தி.மு.கவை அழித்திட வேண்டுமென எண்ணம் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளே இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளைப் பரப்புவதாகவும் ஒரு புறம் ஜெயலலிதாவைப் பாராட்டி, இரங்கல் தெரிவித்துவிட்டு மறுபுறம் கட்சி சார்ந்த கோமாளிகளின் மூலம் வதந்திகளைப் பரப்புவதாக அவர் கூறியிருக்கிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000016759.html", "date_download": "2018-05-27T03:27:23Z", "digest": "sha1:LZ7X7NAJI7RUW4IR6ZFNIX5VKFYYS5XT", "length": 5466, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "முப்பால் முற்றும்", "raw_content": "Home :: விளையாட்டு :: முப்பால் முற்றும்\nநூலாசிரியர் கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஊஞ்சல் உறவுகள் அஜாத சத்ரு பூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின\nஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் வாழ்வின் வளர்ச்சிக்குத் திட்டமிடுங்குகள்\nசெவக்காட்டுச் சித்திரங்கள் தேங்காய் - எலுமிச்சை வேண்டியது அருளும் சதுரகிரி\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaitamils.blogspot.com/2011/02/creativity.html", "date_download": "2018-05-27T03:32:07Z", "digest": "sha1:4ECSUXWDXBDO3DMS474UWP5HVQZFGPET", "length": 7713, "nlines": 98, "source_domain": "chennaitamils.blogspot.com", "title": "கிரியேட்டிவிட்டி (Creativity) | சென்னை தமிழ்'S", "raw_content": "\nபோட்டி நிறைந்த இந்த உலகில் ஆளுக்கொரு லட்சியம் இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். வாய்ப்பு என்பது, ரோட்டுக் கடையில் கிடைக்கும் வடையைப்போல எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.\nவாய்ப்புகளை தட்டிப்பறிக்க லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.\nசினிமா தியேட்டர்களில் நீண்ட க்யூவில் மணிக்கணக்கில் நின்று நாம் டிக்கெட் கவுன்டரின் அருகில் செல்லும் போது, 'ஹவுஸ் புல்' போர்டு போட்டு கவுன்டரை மூடினால் எப்படி இருக்கும் இம்மாதிரியான சம்பவங்கள், தோல்விகள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.\nஎப்படித்தான் நமக்கான டிக்கெட்டைப் பெறுவது\nபோட்டிகளின் மத்தியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் நமக்கு, இங்கு தான் கிரியேட்டிவிட்டி(Creativity) என்னும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.\nகிரியேட்டிவிட்டி என்பது, முற்றிலும் புதிய யோசனைகளை, திட்டங்களை உருவாக்குவது அல்லது ஏற்கனவே இருக்கும் யோசனைகளை, திட்டங்களை முற்றிலும் புதிதாக மேம்படுத்துவது.\nஅந்த புதிய யோசனை அல்லது திட்டம் முற்றிலும் உங்களுடையதாகவும், வேறு யாரும் இதுவரை யோசித்திராத ஒன்றாகவும் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.\nநமக்கான லட்சியம் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைவது என்றால், எல்லோரும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் பாதையை தவிர்த்து, மற்றொரு பாதையைக் கண்டுபிடிப்பதுதான் கிரியேட்டிவிட்டி. எல்லோரும் யோசிக்கும் திசையில் யோசிக்காமல், வேறு திசையில் யோசிப்பவனே வாய்ப்புகளை பெறுகிறான்.\nவித்தியாசமாக சிந்திப்பது சிந்தனை அளவில் மட்டுமே இருந்து விடக்கூடாது. அதனைச் செயல்படுத்துவதுதான் முக்கியம்.\nகிரியேட்டிவாகச் சிந்தித்து செயல்படுவது எப்படி\n1. கூட்டத்தில் இருந்து விலகு.\n3. சிந்தனை மட்டும் செய்யாதே. செயல்படு\n\"ஜீன்ஸ் பேண்ட் பிறந்த சுவாரஸ்ய கதை\" - விரைவில்\nசும்மா நச்சினு இருக்கு தல..\nபடங்களுடன் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்\nஜீன்ஸ் பேண்ட் - பிறந்த கதை\nஎன்ன கொடுமை சார் இது\nஎடிசன் - வெற்றி ரகசியங்கள்\nவிவேகானந்தர் - வீர வரிகள்\nநேர்காணலுக்கு தேவையான 10 பொருத்தம்\nநீங்கள் எந்த வருஷத்து மாடல் \nFolder - Lock சாப்ட்வேர்\nபோட்டோ + கமென்ட் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lion-muthucomics.blogspot.com/2015/09/", "date_download": "2018-05-27T03:35:13Z", "digest": "sha1:T6L2WLFAW3ZUF72V7RIAGH5WIHCEH7PB", "length": 173970, "nlines": 388, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: September 2015", "raw_content": "\nவணக்கம். பெங்களூரில் ஒரு நண்பர் உண்டு ; பெரியதொரு பைக் ரசிகர் அவர் ஹார்லே டேவிட்சன் எனும் அந்த மொக்கை சைஸ் பைக்கை செல்லப் பிள்ளை போலப் பராமரித்துக் கொண்டு வார இறுதியாகி விட்டால் அதற்கெனப் பிரத்யேகமாய் வாங்கி வைத்திருக்கும் ஒரு கருப்பு லெதர் டிரெஸ்சைப் போட்டுக் கொண்டு 'தட்..தட்..தட்..' என்று அந்த அசுரனை ஒட்டிக் கொண்டு கூர்க் ; கோவா என்று நெடும்பயணம் செல்லும் ஒரு கிளப்பில் அங்கத்தினர் ஹார்லே டேவிட்சன் எனும் அந்த மொக்கை சைஸ் பைக்கை செல்லப் பிள்ளை போலப் பராமரித்துக் கொண்டு வார இறுதியாகி விட்டால் அதற்கெனப் பிரத்யேகமாய் வாங்கி வைத்திருக்கும் ஒரு கருப்பு லெதர் டிரெஸ்சைப் போட்டுக் கொண்டு 'தட்..தட்..தட்..' என்று அந்த அசுரனை ஒட்டிக் கொண்டு கூர்க் ; கோவா என்று நெடும்பயணம் செல்லும் ஒரு கிளப்பில் அங்கத்தினர் வார நாட்களில் பிசியானதொரு தொழில் அதிபராக இருப்பினும், வெள்ளி மதியங்கள் நெருங்கி விட்டாலே இருப்புக் கொள்ளாது தவிக்கத் தொடங்கி விடுவார் வார நாட்களில் பிசியானதொரு தொழில் அதிபராக இருப்பினும், வெள்ளி மதியங்கள் நெருங்கி விட்டாலே இருப்புக் கொள்ளாது தவிக்கத் தொடங்கி விடுவார் சீரியசாய் நாம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனைகளோ அங்கே அந்தப் பகாசுர பைக்கின் மேலே தான் லயித்து நிற்கும் சீரியசாய் நாம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனைகளோ அங்கே அந்தப் பகாசுர பைக்கின் மேலே தான் லயித்து நிற்கும் அவரை ஒரு மாதிரியாய்ப் பார்த்ததனாலோ-என்னவோ, சனி இரவு ஆகும் போதே என் தலைக்குள் எழும் அந்த familiar குறுகுறுப்பை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது அவரை ஒரு மாதிரியாய்ப் பார்த்ததனாலோ-என்னவோ, சனி இரவு ஆகும் போதே என் தலைக்குள் எழும் அந்த familiar குறுகுறுப்பை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது இல்லாததொரு மைக்செட் திடீரென்று என் முன்னே ஆஜராவதும் ; எனது வீடிருக்கும் முட்டுச் சந்து மெகா மேடையாய் உருமாறுவதும், அடியேன் குற்றால அருவியாய் சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்றென்று ஆற்றுவதும் விட்டலாச்சார்யா படங்களின் காட்சிகள் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் தலைக்குள் துளிர்விடுவது சமீக காலங்களின் வாடிக்கையாகிப் போய் விட்டது இல்லாததொரு மைக்செட் திடீரென்று என் முன்னே ஆஜராவதும் ; எனது வீடிருக்கும் முட்டுச் சந்து மெகா மேடையாய் உருமாறுவதும், அடியேன் குற்றால அருவியாய் சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்றென்று ஆற்றுவதும் விட்டலாச்சார்யா படங்களின் காட்சிகள் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் தலைக்குள் துளிர்விடுவது சமீக காலங்களின் வாடிக்கையாகிப் போய் விட்டது So என்ன தான் '3 வாரத்து பிரேக்' என்று நேற்று அறிவித்திருப்பினும், இங்கே சட்டென்று திரும்பியுள்ள வெப்பமின்மையும், சில புரிதல்களும் நமது சாலையை சீக்கிரமே செப்பனிட்டுள்ளது போல் உணரச் செய்தன So என்ன தான் '3 வாரத்து பிரேக்' என்று நேற்று அறிவித்திருப்பினும், இங்கே சட்டென்று திரும்பியுள்ள வெப்பமின்மையும், சில புரிதல்களும் நமது சாலையை சீக்கிரமே செப்பனிட்டுள்ளது போல் உணரச் செய்தன தவிர, நான் ஒரு இடைவெளி விட எண்ணியதும் என் பொருட்டல்ல - தர்க்கத்தில் சிக்கி நின்ற நண்பர்கள் சற்றே cool off செய்திடும் பொருட்டு மட்டுமே எனும் பொழுது எனது எண்ணம் சீக்கிரமே நிறைவேறி விட்டதாய்த் தோன்றிய பிற்பாடு விரதத்தைத் தொடரும் அவசியம் எழவில்லை தவிர, நான் ஒரு இடைவெளி விட எண்ணியதும் என் பொருட்டல்ல - தர்க்கத்தில் சிக்கி நின்ற நண்பர்கள் சற்றே cool off செய்திடும் பொருட்டு மட்டுமே எனும் பொழுது எனது எண்ணம் சீக்கிரமே நிறைவேறி விட்டதாய்த் தோன்றிய பிற்பாடு விரதத்தைத் தொடரும் அவசியம் எழவில்லை இதை விடவும் சிக்கலான தருணங்களை நம் தளம் பார்த்துள்ளது தான் ; கடுமையாய் விமர்சனங்கள் என்பக்கமாய் வைக்கப்பட்ட பொழுதிலும் normal service தொடரவே செய்துள்ளது இந்த ரூட்டில் இதை விடவும் சிக்கலான தருணங்களை நம் தளம் பார்த்துள்ளது தான் ; கடுமையாய் விமர்சனங்கள் என்பக்கமாய் வைக்கப்பட்ட பொழுதிலும் normal service தொடரவே செய்துள்ளது இந்த ரூட்டில் ஆனால் இம்முறை மோதல் நண்பர்களுக்கு மத்தியினில் என்றதனாலேயே என் சங்கடம் பன்மடங்காகியது ஆனால் இம்முறை மோதல் நண்பர்களுக்கு மத்தியினில் என்றதனாலேயே என் சங்கடம் பன்மடங்காகியது Anyways - all's well that ends well \nவிலையில் / பக்க நீளத்தில் அக்டோபரின் இதழ்களுள் முதன்மையாய் நின்றிடும் தோர்கலின் \"சாகாவரத்தின் சாவி\" அட்டைப்பட first look இதோ இந்தத் தொடரின் கதைகள் அனைத்துமே கிளாசிக் ரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஒரிஜினலாய் வரையப்பட்ட எல்லா ராப்பர்களுமே நமக்கும் tailor made என்று சொல்லலாம் இந்தத் தொடரின் கதைகள் அனைத்துமே கிளாசிக் ரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஒரிஜினலாய் வரையப்பட்ட எல்லா ராப்பர்களுமே நமக்கும் tailor made என்று சொல்லலாம் So இந்த 2 பாகக் கதையின் தொகுப்புக்கு ஒரிஜினல் அட்டை டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் So இந்த 2 பாகக் கதையின் தொகுப்புக்கு ஒரிஜினல் அட்டை டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் என்ன - இரண்டாவது கதைக்கான டிசைன் கொஞ்சம் ஆக்ஷன் நிறைந்ததாய்த் தோன்றியதால் அதனை முன்னட்டைக்குப் புரமோஷன் தந்துள்ளது மட்டுமே மாற்றம் \nகதையின் மொழிபெயர்ப்பு நமது சீனியர் எடிட்டரின் கைவண்ணம் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும் ; அதே போல எடிட்டிங்கின் பொருட்டு கதை # 2-க்குள் நான் நுழையவிருப்பதாகவும் அதே பதிவில் சொல்லியிருந்தேன் முதல் பாகம் பெரிதாய் சிரமங்கள் வைக்காது 'கட..கட..'வென ஓடியதற்கு நேர்மாறாய் இரண்டாம் கதையினில் நிறையவே ஸ்பீடு -பிரேக்கர்கள் தென்பட்டன முதல் பாகம் பெரிதாய் சிரமங்கள் வைக்காது 'கட..கட..'வென ஓடியதற்கு நேர்மாறாய் இரண்டாம் கதையினில் நிறையவே ஸ்பீடு -பிரேக்கர்கள் தென்பட்டன கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பினை மொழிபெயர்ப்பது நிறையவே concentration -ஐ அவசியப்படுத்தும் பணி எனும் பொழுது - பணியின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அதனை ஒரே சீராய் தக்க வைப்பது (எழுதும் ) அனுபவம் சார்ந்ததொரு விஷயம் கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பினை மொழிபெயர்ப்பது நிறையவே concentration -ஐ அவசியப்படுத்தும் பணி எனும் பொழுது - பணியின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அதனை ஒரே சீராய் தக்க வைப்பது (எழுதும் ) அனுபவம் சார்ந்ததொரு விஷயம் முதன்முறையாகப் பேனா பிடிக்கும் அப்பா இத்தனை தூரம் சமாளித்ததே ரொம்பப் பெரிய விஷயம் என்பது புரிந்தது முதன்முறையாகப் பேனா பிடிக்கும் அப்பா இத்தனை தூரம் சமாளித்ததே ரொம்பப் பெரிய விஷயம் என்பது புரிந்தது So அவசியமாகிடும் இடங்களில் rewrite செய்து இரண்டாம் பாகத்தையும் அழகாய் நிறைவு செய்து அச்சும் 90% முடித்து விட்டோம் So அவசியமாகிடும் இடங்களில் rewrite செய்து இரண்டாம் பாகத்தையும் அழகாய் நிறைவு செய்து அச்சும் 90% முடித்து விட்டோம் திங்கட்கிழமை பாக்கி பத்து சதவிகித அச்சுப் பணியும் நிறைவு பெற்றான பின்னே இதழ்கள் பைண்டிங்கின் பொருட்டு புறப்படும் திங்கட்கிழமை பாக்கி பத்து சதவிகித அச்சுப் பணியும் நிறைவு பெற்றான பின்னே இதழ்கள் பைண்டிங்கின் பொருட்டு புறப்படும் தற்போது மின்னலாய் தலைதூக்கி நிற்கும் மின்வெட்டுப் பிரச்சனை பெருசாய் வேட்டு வைக்காது போயின் புதன்கிழமை (30-sept ) நமது கூரியர்கள் புறப்படும் தினமாய் அமைந்திடும் \nகதையை முழுசாய் படித்துப் பார்க்கும் போது சமீப நாட்களில் நண்பர்களில் ஒருசாரார் வலியுறுத்தி வரும் - சகஜ நடை சாத்தியமாகி இருப்பதாகவே பட்டது 'மச்சி..மாமூ..dude' என்று தோர்கல் பேசுவதெல்லாம் நடவாக் காரியம் என்றாலும் - அந்தக் காலத்து R.S மனோஹரின் புராண நாடகங்களைப் பார்த்த feel நிச்சயமாய் இம்முறை தோர்கலில் இருந்திடாது என்றே நினைக்கிறேன் 'மச்சி..மாமூ..dude' என்று தோர்கல் பேசுவதெல்லாம் நடவாக் காரியம் என்றாலும் - அந்தக் காலத்து R.S மனோஹரின் புராண நாடகங்களைப் பார்த்த feel நிச்சயமாய் இம்முறை தோர்கலில் இருந்திடாது என்றே நினைக்கிறேன் இந்த வார இறுதிக்குள் ரிசல்ட் தெரிந்து விடும் எனும் போது எனது ஈரைந்து விரல்கள் தவிர இன்னொரு பத்து விரல்களும் எங்கள் வீட்டிலிருந்தே குறுக்கப்பட்ட நிலையில் காத்திருப்பது நிச்சயம் \nஇம்மாதத்து இதழ்களில் நீங்கள் இன்னமும் பார்த்திரா ஒரே அட்டைப்படமும் - இதோ உங்கள் முன்னே \nஇந்தப் பதிவை நான் டைப் செய்யத் தொடங்கும் பொழுது தான் திருத்தங்கள் முடிந்த நிலையில் இது நமக்குக் கிட்டியது எனும் பொழுது - தற்போதையத் தயாரிப்புப் பணிகளுள் மிகப் பெரிய bottleneck தலைகாட்டுவது அட்டைப்பட டிசைனிங்கினில் தான் அதனை எவ்விதமேனும் சீர் செய்ய முடியும் பட்சத்தில் 2016-ல் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியை பெவிகால் போட்டுப் பிடித்துக் கொள்ள முடிந்திருக்கும் நமக்கு அதனை எவ்விதமேனும் சீர் செய்ய முடியும் பட்சத்தில் 2016-ல் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியை பெவிகால் போட்டுப் பிடித்துக் கொள்ள முடிந்திருக்கும் நமக்கு இங்கேயும் நமது ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளில் 2 புதிய (சென்னை ) டிசைனர்களைத் தேடி பிடித்துள்ளோம் தான் ; ஆனால் நாம் எதிர்பார்ப்பதை அவர்களிடமிருந்து வரவழைக்க மின்னஞ்சல் பரிமாற்றங்களும், போனில் சொல்லும் விபரங்களும் பற்ற மாட்டேன்கிறது என்பது தான் சிக்கலே இங்கேயும் நமது ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளில் 2 புதிய (சென்னை ) டிசைனர்களைத் தேடி பிடித்துள்ளோம் தான் ; ஆனால் நாம் எதிர்பார்ப்பதை அவர்களிடமிருந்து வரவழைக்க மின்னஞ்சல் பரிமாற்றங்களும், போனில் சொல்லும் விபரங்களும் பற்ற மாட்டேன்கிறது என்பது தான் சிக்கலே (7 நாட்களில் எமலோகம் அவர்களுள் ஒருவரின் கைவண்ணம் (7 நாட்களில் எமலோகம் அவர்களுள் ஒருவரின் கைவண்ணம் ) இம்முறையும் முன்னட்டை FLEETWAY -ன் ஒரிஜினல் டிசைன் - பின்னணி coloring மாற்றங்களோடு ) இம்முறையும் முன்னட்டை FLEETWAY -ன் ஒரிஜினல் டிசைன் - பின்னணி coloring மாற்றங்களோடு பின்னட்டையோ - ரொம்ப மாதங்களுக்கு முன்பாக எகிப்திய ஓவியர் ஒருவர் நமக்குப் போட்டுத் தந்த டிசைனின் சற்றே refined version பின்னட்டையோ - ரொம்ப மாதங்களுக்கு முன்பாக எகிப்திய ஓவியர் ஒருவர் நமக்குப் போட்டுத் தந்த டிசைனின் சற்றே refined version (இதன் பென்சில் ஸ்கெட்சை நாம் caption எழுதும் போட்டிக்கெல்லாம் பயன்படுத்தி இருந்தது அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது (இதன் பென்சில் ஸ்கெட்சை நாம் caption எழுதும் போட்டிக்கெல்லாம் பயன்படுத்தி இருந்தது அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது \nMoving on, 2 வாரங்களுக்கு முந்தைய பதிவில் நான் ஜாலியாய் preview கொடுத்திருந்த கதைகளின் டிஜிட்டல் பைல்களை முழுமையாய் கோரிப் பெற்று கவனத்தை ஒவ்வொன்றின் மீதும் செலுத்த முனைந்தேன் (என்னையும் சேர்த்து) நிறையப் பேரின் ஆர்வங்களைக் கிளறியிருந்த PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது (என்னையும் சேர்த்து) நிறையப் பேரின் ஆர்வங்களைக் கிளறியிருந்த PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது தவிர, கதையின் ஓட்டத்துக்கே அவை அவசியம் என்பதாய்த் தோன்றும் போது - நம் சென்சார் கத்திரிகளை அங்கே மேய விட முகாந்திரமிராது தவிர, கதையின் ஓட்டத்துக்கே அவை அவசியம் என்பதாய்த் தோன்றும் போது - நம் சென்சார் கத்திரிகளை அங்கே மேய விட முகாந்திரமிராது So வேறு வழியே இன்றி PANDEMONIUM தொடரினை கடாசிடும் அவசியம் நேர்கிறது \nஅப்புறம், சமீபமாய் பிரெஞ்சில் வெளியாகியுள்ள ஆல்பங்களின் ரிப்போர்ட் வழக்கம் போல் படைப்பாளிகளிடமிருந்து நமக்கு வந்திருந்தது மாதம் 4 இதழ்களை வெளியிட்டு விட்டு நாம் காலரை காது வரை தூக்கி விட்டுக் கொள்ளும் வேளையில் அவர்களோ ஆளுக்கு மாதம் சுமார் 20 ஆல்பங்களை வெளியிடுவதைப் பார்க்கும் போது 'காதல்' பட பரத போல மண்டையில் கொட்டிக் கொண்டே ஓடத் தான் தோன்றுகிறது மாதம் 4 இதழ்களை வெளியிட்டு விட்டு நாம் காலரை காது வரை தூக்கி விட்டுக் கொள்ளும் வேளையில் அவர்களோ ஆளுக்கு மாதம் சுமார் 20 ஆல்பங்களை வெளியிடுவதைப் பார்க்கும் போது 'காதல்' பட பரத போல மண்டையில் கொட்டிக் கொண்டே ஓடத் தான் தோன்றுகிறது Anyways - அவற்றுள் ஒரு ஆல்பம் என் கவனத்தை ஈர்த்தது Anyways - அவற்றுள் ஒரு ஆல்பம் என் கவனத்தை ஈர்த்தது ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ஆனால் வழக்கம் போல அழகான பையனும், நவநாகரீக அம்மணியும் லவ்விக் கொள்ளும் சம காலத்து frame இதற்கில்லை இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ஆனால் வழக்கம் போல அழகான பையனும், நவநாகரீக அம்மணியும் லவ்விக் கொள்ளும் சம காலத்து frame இதற்கில்லை மாறாக - கதையின் ஹீரோ ஒரு அவலட்சணமான பையன் மாறாக - கதையின் ஹீரோ ஒரு அவலட்சணமான பையன் அரண்மனையின் சிறைக்கூடத்தில் இருக்கும் தாயொருத்தி பெற்று எடுத்த காரணத்தினால் அந்த மழலையும் சிறைக்கூடத்திலேயே வளர வேண்டிய சூழல் அரண்மனையின் சிறைக்கூடத்தில் இருக்கும் தாயொருத்தி பெற்று எடுத்த காரணத்தினால் அந்த மழலையும் சிறைக்கூடத்திலேயே வளர வேண்டிய சூழல் இது தான் உலகமென்ற சிந்தனையில் சந்தோஷமாய் வளரும் அந்த சிறுவனின் வாழ்க்கையிலும் ஒரு நாள் காதல் மலர்கிறது இது தான் உலகமென்ற சிந்தனையில் சந்தோஷமாய் வளரும் அந்த சிறுவனின் வாழ்க்கையிலும் ஒரு நாள் காதல் மலர்கிறது அவன் இதயத்தைத் திருடியவளோ மன்னரின் மகள் அவன் இதயத்தைத் திருடியவளோ மன்னரின் மகள் தொடர்வது என்னவென்பதே இந்த 64 பக்க one shot ஆல்பம் தொடர்வது என்னவென்பதே இந்த 64 பக்க one shot ஆல்பம் நம் சினிமாக்களுக்கு ஏற்றதொரு ஸ்கிரிப்ட் என்ற ரீதியில் BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது நம் சினிமாக்களுக்கு ஏற்றதொரு ஸ்கிரிப்ட் என்ற ரீதியில் BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் எப்படியிருப்பினும் இதனை இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்க்கும் ஆர்வம் எழுந்துள்ளது எப்படியிருப்பினும் இதனை இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்க்கும் ஆர்வம் எழுந்துள்ளது 'அய்யய்யோ..ஆரம்பிச்சாச்சா ' என்ற அபாய மணிகள் மடிப்பாக்கங்களிலும், பேடா நகரங்களிலும் , மங்கள நகரங்களிலும் ஒலிக்கக் கூடும் என்பது தெரிந்த விஷயமே - ஆனால் படைப்பாளிகள் முயற்சிக்கும் புதுப் புது பாணிகளை அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுவதே எனது இது போன்ற தகவல்களின் (தற்போதைய) பின்னணி \nஅப்புறம் புதுக் கதைகளின் குவியலுக்குள் உலக காமிக்ஸ் ரசனைகளின் ஒரு பிரபலமான கதைக்களம் கொண்டதொரு புதுத் தொடரும் கண்ணில் பட்டது அது APOCALYPSE என்ற genre -ல் வெளியாகும் ஒரு புதிய கதை வரிசை அது APOCALYPSE என்ற genre -ல் வெளியாகும் ஒரு புதிய கதை வரிசை என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ; எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ; எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் இவற்றைப் பின்னணியாகக் கொண்டு அமெரிக்காவிலும் சரி ; ஐரோப்பாவிலும் சரி - ஏகப்பட்ட வெற்றித் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன இவற்றைப் பின்னணியாகக் கொண்டு அமெரிக்காவிலும் சரி ; ஐரோப்பாவிலும் சரி - ஏகப்பட்ட வெற்றித் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன ஒரு powerful நாயகன் ; அதிரடி ஆக்ஷன் ; லாஜிக் நூல்பிடித்துச் செல்லும் கதைக்களம் ; பன்ச் டயலாக்குகள் ; ஒரு கிளைமாக்ஸ் என்று நாம் இதுவரைப் பழகியுள்ள சகல சமாச்சாரங்களையும் துடைத்து விட்டு - இந்தப் புது உலகினுள் நுழைந்து பார்ப்பின் - ஏராளமாய் புது வாசிப்பு அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடும் ஒரு powerful நாயகன் ; அதிரடி ஆக்ஷன் ; லாஜிக் நூல்பிடித்துச் செல்லும் கதைக்களம் ; பன்ச் டயலாக்குகள் ; ஒரு கிளைமாக்ஸ் என்று நாம் இதுவரைப் பழகியுள்ள சகல சமாச்சாரங்களையும் துடைத்து விட்டு - இந்தப் புது உலகினுள் நுழைந்து பார்ப்பின் - ஏராளமாய் புது வாசிப்பு அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடும் உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை \"வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்\" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை \"வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்\" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா யோசித்துப் பாருங்களேன் guys \nபுறப்படும் முன்பாய் சின்னதொரு கோரிக்கை மட்டுமே சர்ச்சைகள் ; சலனங்கள் ; வெளிநடப்புகள் என்ற திருஷ்டிப் பரிகாரங்கள் எல்லாமே நேற்றைய நிகழ்வுகளாகவே இருந்து விட்டு போகட்டும் சர்ச்சைகள் ; சலனங்கள் ; வெளிநடப்புகள் என்ற திருஷ்டிப் பரிகாரங்கள் எல்லாமே நேற்றைய நிகழ்வுகளாகவே இருந்து விட்டு போகட்டும் அவற்றிலிருந்து அவசியமான பாடங்களை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டென்பதால் நான் இதன் பொருட்டு லெக்சர் செய்யவெல்லாம் போவதில்லை அவற்றிலிருந்து அவசியமான பாடங்களை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டென்பதால் நான் இதன் பொருட்டு லெக்சர் செய்யவெல்லாம் போவதில்லை அதே போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் நான் கோபித்துக் கொண்டு மூட்டையைக் கட்டி கிளம்பி விடுவேன் என்ற ரீதியிலான மௌன நிர்ப்பந்தங்களும் இங்கு துளியும் அமலில் இராது அதே போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் நான் கோபித்துக் கொண்டு மூட்டையைக் கட்டி கிளம்பி விடுவேன் என்ற ரீதியிலான மௌன நிர்ப்பந்தங்களும் இங்கு துளியும் அமலில் இராது உங்கள் பார்வையில் அவசியமெனத் தோன்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எப்போதும் போலவே சுதந்திரமாய் பதிவிடலாம் உங்கள் பார்வையில் அவசியமெனத் தோன்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எப்போதும் போலவே சுதந்திரமாய் பதிவிடலாம் ஏற்கனவே நம்மூர்களில் அடிக்கும் அனலே ஜாஸ்தி என்பதால் - உங்கள் பின்னூட்டங்களில் அது மட்டும் குறைவாய் இருப்பின், நிச்சயம் உரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் கிடையாது ஏற்கனவே நம்மூர்களில் அடிக்கும் அனலே ஜாஸ்தி என்பதால் - உங்கள் பின்னூட்டங்களில் அது மட்டும் குறைவாய் இருப்பின், நிச்சயம் உரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் கிடையாது இது எப்போதுமே உங்கள் தளமே என்பதில் என்றைக்கும் மாற்றம் இராது \nநான் கோருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் : 'இவன் இந்தக் கட்சியா - அந்தக் கட்சியா ' ; 'இவன் அவருக்கு நெருக்கமானவனா - எனக்கு தூரத்திலிருப்பவனா ' என்ற ரீதியில் அவ்வப்போது பரீட்சைகள் வைக்காது இருப்பின், சந்தோஷத்துடன் என் பணிகளைப் பார்த்திடுவேன் ' என்ற ரீதியில் அவ்வப்போது பரீட்சைகள் வைக்காது இருப்பின், சந்தோஷத்துடன் என் பணிகளைப் பார்த்திடுவேன் கிளைக்குக் கிளை தாவுவது ; அந்தர் பல்டிகள் அடிப்பது என்ற ஆஞ்சநேயச் சேட்டைகளை எல்லாம் எனக்குப் பரிச்சயம் என்பதால் அவரைப் போலவே நெஞ்சினைத் திறந்து காட்டும் ஆற்றலும் என்னிடம் இருக்குமென்று நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம் தான் கிளைக்குக் கிளை தாவுவது ; அந்தர் பல்டிகள் அடிப்பது என்ற ஆஞ்சநேயச் சேட்டைகளை எல்லாம் எனக்குப் பரிச்சயம் என்பதால் அவரைப் போலவே நெஞ்சினைத் திறந்து காட்டும் ஆற்றலும் என்னிடம் இருக்குமென்று நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம் தான் ஆனால் நீங்கள் அனைவருமே எனக்குப் பிரியமானவர்களே ; சம அளவில் முக்கியமானவர்களே என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்டிட நெஞ்சினைப் பிளக்கும் ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரும் அல்ல நான் ; நெஞ்சைத் திறந்து சிகிச்சை செய்து விட்டுத் திரும்பத் தைத்து விடும் டாக்டர் செரியனும் அல்ல நான் ஆனால் நீங்கள் அனைவருமே எனக்குப் பிரியமானவர்களே ; சம அளவில் முக்கியமானவர்களே என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்டிட நெஞ்சினைப் பிளக்கும் ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரும் அல்ல நான் ; நெஞ்சைத் திறந்து சிகிச்சை செய்து விட்டுத் திரும்பத் தைத்து விடும் டாக்டர் செரியனும் அல்ல நான் So அந்தப் பரீட்சைகளை மட்டும் இல்லாது போயின் நிம்மதியாய் நடை போடுவேன் So அந்தப் பரீட்சைகளை மட்டும் இல்லாது போயின் நிம்மதியாய் நடை போடுவேன் Thanks for reading folks மீண்டும் சந்திப்போம் - எல்லாம் நலமே \nAnd - இது உங்கள் யூகக் குதிரைகளுக்கு கொஞ்சம் தீனி போட்டிட (Of course - சிற்சிறு மாற்றங்களுக்கு உட்பட்டது (Of course - சிற்சிறு மாற்றங்களுக்கு உட்பட்டது \n விநாயகர் சதுர்த்தியைத் தாண்டிய நாட்கள் எங்கள் ஊருக்கு எப்போதுமே பரபரப்பானவையாக இருப்பது வழக்கம். அக்டோபர் இறுதிகளிலோ / நவம்பர் துவக்கத்திலோ வருகை தரும் தீபாவளியை முன்னிட்டு – பட்டாசுக் கடைகள் எல்லாமே தூக்கத்தை முடித்துக் கொண்டு கண் திறக்கக் துவங்குவது இந்த வேளைகளில் தான் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஆர்டர் தந்திடும் பொருட்டு ‘படா முதலாளிகள்‘ சிவகாசியை நோக்கிப் படையெடுப்பதும் இப்போது முதல் தான் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஆர்டர் தந்திடும் பொருட்டு ‘படா முதலாளிகள்‘ சிவகாசியை நோக்கிப் படையெடுப்பதும் இப்போது முதல் தான் So- செப்டம்பர் இறுதி; அக்டோபர் என்றாலே ஊருக்குள் ஒரு சின்ன buzz இருப்பது நடைமுறை So- செப்டம்பர் இறுதி; அக்டோபர் என்றாலே ஊருக்குள் ஒரு சின்ன buzz இருப்பது நடைமுறை அந்தப் பரபரப்பு சிறுகச் சிறுக பட்டாசு அல்லாத இதர தொழில்களுக்கும் தொற்றிக் கொள்ள அதிக நேரமெடுக்காது என்பதால் – ஆவலாய்க் காத்துள்ளோம் நாமும்\nஅக்டோபரின் வருகைக்குத் தயாராகும் விதமாய் ரிப்போர்டர் ஜானியின் “காலனின் காலம்” + திருவாளர் லக்கி ஜுனியரின் “புயலுக்கொரு பள்ளிக்கூடம்” – இரு இதழ்களுமே தயாராகி விட்டன இதோ – நமது ஆதர்ஷ சுட்டி லக்கியின் அட்டைப்பட first look; மற்றும் உட்பக்கங்களின் preview இதோ – நமது ஆதர்ஷ சுட்டி லக்கியின் அட்டைப்பட first look; மற்றும் உட்பக்கங்களின் preview ‘Oklahoma Jim’ என்ற பெயரோடு வெளிவந்துள்ள இந்தக் கதை – சுட்டி லக்கி தொடரின் ஆல்பம் # 2. ஆனால் சுட்டிக்கென தனியாக தொடர் ஏதும் இல்லாத காரணத்தால் இவை one shots போலவே பாவிக்கப்பட்டு, லக்கி லூக்கின் கதை வரிசையிலேயே இடம்பிடிக்கின்றன ‘Oklahoma Jim’ என்ற பெயரோடு வெளிவந்துள்ள இந்தக் கதை – சுட்டி லக்கி தொடரின் ஆல்பம் # 2. ஆனால் சுட்டிக்கென தனியாக தொடர் ஏதும் இல்லாத காரணத்தால் இவை one shots போலவே பாவிக்கப்பட்டு, லக்கி லூக்கின் கதை வரிசையிலேயே இடம்பிடிக்கின்றன 1997-ல் ஒரிஜினலாக வெளிவந்த கதை என்பதால் இதனில் கதாசிரியர் மோரிஸ் பணியாற்றவில்லை 1997-ல் ஒரிஜினலாக வெளிவந்த கதை என்பதால் இதனில் கதாசிரியர் மோரிஸ் பணியாற்றவில்லை இருப்பினும் அந்தக் குட்டிப் பயலும், குட்டி ஜாலி ஜம்பரும் இணைந்து frame-களில் வலம் வரும் வேளைகளில் வசீகரத்தில் துளியும் குறை தெரியவில்லை இருப்பினும் அந்தக் குட்டிப் பயலும், குட்டி ஜாலி ஜம்பரும் இணைந்து frame-களில் வலம் வரும் வேளைகளில் வசீகரத்தில் துளியும் குறை தெரியவில்லை மோரிஸே பெருமைப்பட்டிருப்பார் இவற்றைக் கண்டு\nஇவையெல்லாம் டிஜிட்டல் யுகத்தில் பிறந்த கதைகள் என்பதால் – கலரிங் பாணிகளும் பட்டையைக் கிளப்புவதில் வியப்பில்லை And இம்முறையும் நம்மவர்கள் அச்சில் சிரத்தையோடு பணி செய்திருப்பதால் – சுட்டி லக்கி ஹேப்பி அண்ணாச்சி And இம்முறையும் நம்மவர்கள் அச்சில் சிரத்தையோடு பணி செய்திருப்பதால் – சுட்டி லக்கி ஹேப்பி அண்ணாச்சி 2013-ல் ஈரோட்டுத் திருவிழாவின் சமயம் இதன் முதல் இதழ் வெளியானதும்; அந்த “நாக்கார்; மூக்கார் பாஷை” ஒரு ரவுண்ட் வந்ததும் நமது வலைப்பதிவின் ஒரு சந்தோஷ அங்கம் 2013-ல் ஈரோட்டுத் திருவிழாவின் சமயம் இதன் முதல் இதழ் வெளியானதும்; அந்த “நாக்கார்; மூக்கார் பாஷை” ஒரு ரவுண்ட் வந்ததும் நமது வலைப்பதிவின் ஒரு சந்தோஷ அங்கம் இந்த லிங்க்கைப் பிடித்துப் போய் பார்த்தால் – அந்த நாட்களது உற்சாகத்தை திரும்பவும் ஒரு முறை வாழ்ந்து பார்த்த அனுபவம் கிட்டிடக் கூடும் இந்த லிங்க்கைப் பிடித்துப் போய் பார்த்தால் – அந்த நாட்களது உற்சாகத்தை திரும்பவும் ஒரு முறை வாழ்ந்து பார்த்த அனுபவம் கிட்டிடக் கூடும்\nஅக்டோபரின் இதழ் # 3ம் தயாரே; ராப்பர் நீங்கலாக பொன்னன் அதிகமாய் நமக்கு நடைப்பயிற்சி வழங்காதிருப்பின் – ”சிறைப் பறவைகள்” கூட அடுத்த சில நாட்களில் முழுமையாகத் தயாராகி நிற்கும் பொன்னன் அதிகமாய் நமக்கு நடைப்பயிற்சி வழங்காதிருப்பின் – ”சிறைப் பறவைகள்” கூட அடுத்த சில நாட்களில் முழுமையாகத் தயாராகி நிற்கும் அதன் பின்னே பணிகள் பாக்கியிருப்பது பிரபஞ்சத்தின் புதல்வரின் double ஆல்பத்தின் மீதே அதன் பின்னே பணிகள் பாக்கியிருப்பது பிரபஞ்சத்தின் புதல்வரின் double ஆல்பத்தின் மீதே தோர்கலின் கதைகள் ஒரு classic ரகம் என்பதால் அவற்றின் மொழிநடைகள் ஒருவிதப் புராதனக் கலவையில் தான் இருந்திடும் தோர்கலின் கதைகள் ஒரு classic ரகம் என்பதால் அவற்றின் மொழிநடைகள் ஒருவிதப் புராதனக் கலவையில் தான் இருந்திடும் மொழிபெயர்ப்பு பணிகள் பற்றிய விவாதம் இங்கே ஒன்றிரண்டு நாட்களாய் ஓடிக் கொண்டிருக்கும் போதே என் மேஜையில் கிடந்ததோ – ‘மகாப் பிரபு‘; ‘தயாள தெய்வங்கள்‘; ‘பேதைப் பெண்ணே‘ என்ற ரீதியிலான வரிகளைக் கொண்ட கதை மொழிபெயர்ப்பு பணிகள் பற்றிய விவாதம் இங்கே ஒன்றிரண்டு நாட்களாய் ஓடிக் கொண்டிருக்கும் போதே என் மேஜையில் கிடந்ததோ – ‘மகாப் பிரபு‘; ‘தயாள தெய்வங்கள்‘; ‘பேதைப் பெண்ணே‘ என்ற ரீதியிலான வரிகளைக் கொண்ட கதை தற்செயலாய் நிகழும் இது போன்ற coincidences-ஐ எண்ணிப் புன்னகைக்காமல் இருக்க இயலவில்லை தற்செயலாய் நிகழும் இது போன்ற coincidences-ஐ எண்ணிப் புன்னகைக்காமல் இருக்க இயலவில்லை தோர்கலும் நவீனமாய்; சமகாலத் தமிழ் பேசினால் எவ்விதமிருக்குமென்று கற்பனை செய்து பார்த்தேன்... தோர்கலும் நவீனமாய்; சமகாலத் தமிழ் பேசினால் எவ்விதமிருக்குமென்று கற்பனை செய்து பார்த்தேன்... ”சாமி... வாங்குகிற டின் பற்றாதா ”சாமி... வாங்குகிற டின் பற்றாதா” என்று மைண்ட்-வாய்ஸ் உரக்க ஒலிக்க, ஒழுங்கு மரியாதையாய் எடிட்டிங் வேலைகளுக்குள் தலையை நுழைத்துக் கொண்டேன்” என்று மைண்ட்-வாய்ஸ் உரக்க ஒலிக்க, ஒழுங்கு மரியாதையாய் எடிட்டிங் வேலைகளுக்குள் தலையை நுழைத்துக் கொண்டேன் இதில் ஒரு highlight என்னவெனில் இந்த தோர்கல் ஆல்பங்களின் தமிழாக்கம் நானோ – கருணையானந்தமோ கிடையாது; நமது சீனியர் எடிட்டரே இதில் ஒரு highlight என்னவெனில் இந்த தோர்கல் ஆல்பங்களின் தமிழாக்கம் நானோ – கருணையானந்தமோ கிடையாது; நமது சீனியர் எடிட்டரே சில பல மாதங்களுக்கு முன் – “போரடிக்கிறது; ஏதாவது எழுதட்டுமா சில பல மாதங்களுக்கு முன் – “போரடிக்கிறது; ஏதாவது எழுதட்டுமா” என்று கேட்ட பொழுது நான் டைலன் டாக்கின் ‘நள்ளிரவு நங்கையின்‘ ஆங்கில ஸ்கிரிப்டைக் கொடுத்திருந்தேன்” என்று கேட்ட பொழுது நான் டைலன் டாக்கின் ‘நள்ளிரவு நங்கையின்‘ ஆங்கில ஸ்கிரிப்டைக் கொடுத்திருந்தேன் முத்து காமிக்ஸ் வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் எப்போதாவது ஒரு கபிஷ் கதைக்கோ; இன்ன பிற filler pages-க்கோ தந்தையார் மொழிபெயர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்; ஆனால் நானறிந்த வரைக்கும் ஒரு முழுநீளக் கதையில் அவர் பணியாற்றியது கிடையாது. அந்த அனுபவமின்மை ( முத்து காமிக்ஸ் வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் எப்போதாவது ஒரு கபிஷ் கதைக்கோ; இன்ன பிற filler pages-க்கோ தந்தையார் மொழிபெயர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்; ஆனால் நானறிந்த வரைக்கும் ஒரு முழுநீளக் கதையில் அவர் பணியாற்றியது கிடையாது. அந்த அனுபவமின்மை () டைலன் டாக்கின் மொழிபெயர்ப்பில் தெரிந்தது) டைலன் டாக்கின் மொழிபெயர்ப்பில் தெரிந்தது வசனங்களுக்கு நம்பர் போடுவதில் தொடங்கி – கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கத் திணறியிருந்தது வரை முதன்முறையாக பேனா பிடிக்கும் பாங்கை வழிநெடுகிலும் இனம் காண்பதில் சிரமமே இருக்கவில்லை வசனங்களுக்கு நம்பர் போடுவதில் தொடங்கி – கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கத் திணறியிருந்தது வரை முதன்முறையாக பேனா பிடிக்கும் பாங்கை வழிநெடுகிலும் இனம் காண்பதில் சிரமமே இருக்கவில்லை அதிலும் க்ளைமேக்ஸில் டைலனின் டயலாக்குகள் ரொம்பவே பேஸ்தடித்திருந்தன அதிலும் க்ளைமேக்ஸில் டைலனின் டயலாக்குகள் ரொம்பவே பேஸ்தடித்திருந்தன அவற்றை இயன்றளவு சரிக்கட்டிட முயன்று தோற்றுப் போய்; கதையின் இறுதிப் பகுதியை முழுவதுமாய் rewrite செய்திருந்தேன் அவற்றை இயன்றளவு சரிக்கட்டிட முயன்று தோற்றுப் போய்; கதையின் இறுதிப் பகுதியை முழுவதுமாய் rewrite செய்திருந்தேன் So- 'இன்னொரு கதை இருந்தால் கொடுத்தனுப்பு So- 'இன்னொரு கதை இருந்தால் கொடுத்தனுப்பு ' என்று கேட்ட போது நிறையவே விழித்தேன்' என்று கேட்ட போது நிறையவே விழித்தேன் அப்புறம் தான் தோர்கலின் அந்த classic ஸ்டைல், அப்பாவின் எழுத்துப் பாணிக்கு சரிவரக் கூடுமோ என்று தோன்றியது அப்புறம் தான் தோர்கலின் அந்த classic ஸ்டைல், அப்பாவின் எழுத்துப் பாணிக்கு சரிவரக் கூடுமோ என்று தோன்றியது தினமும் காலையில் ஆபீஸிற்கு வந்து எழுதத் தொடங்கி ; சுடச் சுட அவற்றை என்னிடம் காட்டி மாற்றங்கள் / திருத்தங்கள் செய்வதென்பது தொடரும் நாட்களில் நிகழ்ந்தது தினமும் காலையில் ஆபீஸிற்கு வந்து எழுதத் தொடங்கி ; சுடச் சுட அவற்றை என்னிடம் காட்டி மாற்றங்கள் / திருத்தங்கள் செய்வதென்பது தொடரும் நாட்களில் நிகழ்ந்தது இறுதியில் ஒரு முறை முழுவதுமாய் rewrite செய்து – fresh ஆக என்னிடம் ஒப்படைத்ததை நமது டைப்செட்டிங் பிரிவில் தந்து விட்டு நான் அடுத்த பணிகளுக்குள் மூழ்கியிருந்தேன் இறுதியில் ஒரு முறை முழுவதுமாய் rewrite செய்து – fresh ஆக என்னிடம் ஒப்படைத்ததை நமது டைப்செட்டிங் பிரிவில் தந்து விட்டு நான் அடுத்த பணிகளுக்குள் மூழ்கியிருந்தேன் நிறைய வாசிப்பது ;எழுதுவது என்பதெல்லாம் கண்களுக்கு சிரமம் என்பதால் தேவையற்ற strain வேண்டாமென அப்பாவுக்கு டாக்டர்கள் ஏற்கனவே சொல்லியிருந்ததால் – அந்த ஆரம்பத்து ஆர்வ முயற்சிகளை நான் அதன் பின்பு ஊக்குவிக்கவில்லை நிறைய வாசிப்பது ;எழுதுவது என்பதெல்லாம் கண்களுக்கு சிரமம் என்பதால் தேவையற்ற strain வேண்டாமென அப்பாவுக்கு டாக்டர்கள் ஏற்கனவே சொல்லியிருந்ததால் – அந்த ஆரம்பத்து ஆர்வ முயற்சிகளை நான் அதன் பின்பு ஊக்குவிக்கவில்லை அதே சமயம் டைப்செட்டிங் முடிந்து கிடந்த தோர்கலை ‘அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம்‘ என மேஜையில் அடுக்கி விட்டிருந்தபடியால், அப்பாவின் மொழிபெயர்ப்பு எவ்விதமிருன்தது என்பதைப் பார்க்க மறந்தும் போயிருந்தது அதே சமயம் டைப்செட்டிங் முடிந்து கிடந்த தோர்கலை ‘அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம்‘ என மேஜையில் அடுக்கி விட்டிருந்தபடியால், அப்பாவின் மொழிபெயர்ப்பு எவ்விதமிருன்தது என்பதைப் பார்க்க மறந்தும் போயிருந்தது டைலன் டாக்கின் அனுபவம் அடிமனதில் கும்மியடிக்க, ஒரு லேசான பயத்தோடு தான் போன வாரம் கதையைக் கையில் எடுத்தேன் டைலன் டாக்கின் அனுபவம் அடிமனதில் கும்மியடிக்க, ஒரு லேசான பயத்தோடு தான் போன வாரம் கதையைக் கையில் எடுத்தேன் ஆரம்பத்தில் லேசாக ஆட்டம் தந்த வண்டி, போகப் போக ஸ்மூத்தாகவே பயணிப்பதை உணர்ந்த போது நிம்மதிப் பெருமூச்சு ஆரம்பத்தில் லேசாக ஆட்டம் தந்த வண்டி, போகப் போக ஸ்மூத்தாகவே பயணிப்பதை உணர்ந்த போது நிம்மதிப் பெருமூச்சு முதல் கதையை முடித்து விட்ட நிலையில் பெரிதாக மேடு-பள்ளங்கள் தட்டுப்படவில்லை பயணத்தில் முதல் கதையை முடித்து விட்ட நிலையில் பெரிதாக மேடு-பள்ளங்கள் தட்டுப்படவில்லை பயணத்தில் So கதை # 2-க்குள் இன்றைக்கு புகுந்து, வெற்றிகரமாய் பணிகளை முடித்து விட்டேனெனில், ஒரு \"இளம் 74 வயதே ஆன எழுத்தாளரின்\" படைப்பு தயாராகியிருக்கும் So கதை # 2-க்குள் இன்றைக்கு புகுந்து, வெற்றிகரமாய் பணிகளை முடித்து விட்டேனெனில், ஒரு \"இளம் 74 வயதே ஆன எழுத்தாளரின்\" படைப்பு தயாராகியிருக்கும் \"ஈகோ என்றால் வீசம்படி எவ்வளவு \"ஈகோ என்றால் வீசம்படி எவ்வளவு \" என்பது தான் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே ஏன் தந்தையின் அடையாளம் \" என்பது தான் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே ஏன் தந்தையின் அடையாளம் 18 வயதாகும் நாட்களிலேயே நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் முகம் சுளிக்காது சரி சொன்னவர், 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் டியூஷனுக்கு செல்லும் மாணவனைப் போல ஒரு கட்டுரை நோட்டோடு ஆபீசுக்கு வந்து எனக்கு எழுதிக் காட்டிய அந்தக் காலைகள் மறக்க இயலாதவை 18 வயதாகும் நாட்களிலேயே நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் முகம் சுளிக்காது சரி சொன்னவர், 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் டியூஷனுக்கு செல்லும் மாணவனைப் போல ஒரு கட்டுரை நோட்டோடு ஆபீசுக்கு வந்து எனக்கு எழுதிக் காட்டிய அந்தக் காலைகள் மறக்க இயலாதவை \"தந்தைக்குக் கற்பித்த பெரிய அப்பாடக்கர் \" என்ற ரீதியில் இதனை நான் சொல்ல முனையவில்லை \"தந்தைக்குக் கற்பித்த பெரிய அப்பாடக்கர் \" என்ற ரீதியில் இதனை நான் சொல்ல முனையவில்லை அது போன்ற குடாக்குத்தன கற்பனைகள் பிழைப்புக்கு ஆகாது என்பது எப்போதுமே நினைவில் கொண்டிருப்பேன் அது போன்ற குடாக்குத்தன கற்பனைகள் பிழைப்புக்கு ஆகாது என்பது எப்போதுமே நினைவில் கொண்டிருப்பேன் ஆனால் இந்த வயதிலும் ஒரு புது முயற்சியின் பொருட்டு அவர் காட்டிய முனைப்பையும், ஆர்வத்தையும் highlight செய்திடவே இந்த update \nMoving on , சமீப வாரங்களாய் ரீங்காரமிட்டு வரும் 'டெக்ஸ் சந்தா உண்டா - இல்லியா ' என்ற விவாதங்களின் மீதாகவும் கவனத்தைத் திருப்புவோமா ' என்ற விவாதங்களின் மீதாகவும் கவனத்தைத் திருப்புவோமா 2016-ன் அட்டவணைத் திட்டமிடல்கள் பற்றிய பேச்சு துவங்கிய சமயங்களிலேயே அக்டோபர் இறுதி வரை பொறுமை காத்திட வேண்டியிருக்குமென தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தேன் 2016-ன் அட்டவணைத் திட்டமிடல்கள் பற்றிய பேச்சு துவங்கிய சமயங்களிலேயே அக்டோபர் இறுதி வரை பொறுமை காத்திட வேண்டியிருக்குமென தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தேன் இருப்பினும் நண்பர்களில் சிலர் தொடர்ச்சியாய் அதே கேள்வியை முன்வைத்து வருவது தர்மசங்கடமானதொரு நிலையை உருவாக்கி வருகிறது இருப்பினும் நண்பர்களில் சிலர் தொடர்ச்சியாய் அதே கேள்வியை முன்வைத்து வருவது தர்மசங்கடமானதொரு நிலையை உருவாக்கி வருகிறது ஒவ்வொரு ஆண்டும் அட்டவனையை அக்டோபர் இறுதி வரையிலும் நாம் இழுப்பதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணமுண்டு ஒவ்வொரு ஆண்டும் அட்டவனையை அக்டோபர் இறுதி வரையிலும் நாம் இழுப்பதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணமுண்டு ஒவ்வொரு அக்டோபரின் துவக்க வாரத்தில் அரங்கேறும் பிரான்க்பர்ட் சர்வதேசப் புத்தக விழாவானது எல்லா முக்கியப் பதிப்பகங்களின் காலெண்டரிலும் ஒரு HUGE HUGE தருணம் ஒவ்வொரு அக்டோபரின் துவக்க வாரத்தில் அரங்கேறும் பிரான்க்பர்ட் சர்வதேசப் புத்தக விழாவானது எல்லா முக்கியப் பதிப்பகங்களின் காலெண்டரிலும் ஒரு HUGE HUGE தருணம் காமிக்ஸ் பதிப்பகங்கள் மட்டுமென்றில்லாது, எல்லா ரகப் பதிப்பகங்களும் அந்த அக்டோபரின் 5 நாட்களுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பிலிருந்தே முஸ்தீபுகளில் இறங்கி விடுவார்கள் காமிக்ஸ் பதிப்பகங்கள் மட்டுமென்றில்லாது, எல்லா ரகப் பதிப்பகங்களும் அந்த அக்டோபரின் 5 நாட்களுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பிலிருந்தே முஸ்தீபுகளில் இறங்கி விடுவார்கள் 'தலை போகின்ற அவசரம்' ; நெருக்கடி ' என்றால் தவிர செப்டெம்பரில், ஒவ்வொரு பதிப்பகத்தின் லைசென்சிங் பிரிவிலிருந்தும் தவித்த வாய்க்கு ஒரு டம்ளர் தண்ணீர் கூடக் கேட்டு வாங்கிடவே இயலாது 'தலை போகின்ற அவசரம்' ; நெருக்கடி ' என்றால் தவிர செப்டெம்பரில், ஒவ்வொரு பதிப்பகத்தின் லைசென்சிங் பிரிவிலிருந்தும் தவித்த வாய்க்கு ஒரு டம்ளர் தண்ணீர் கூடக் கேட்டு வாங்கிடவே இயலாது இது தான் யதார்த்தம் என்பதால் தொடரும் ஆண்டுக்கான கதைத் தேர்வுகள் ; அவற்றுள் எது-எதுக்கெல்லாம் கலரில் டிஜிட்டல் கோப்புகள் உள்ளன இது தான் யதார்த்தம் என்பதால் தொடரும் ஆண்டுக்கான கதைத் தேர்வுகள் ; அவற்றுள் எது-எதுக்கெல்லாம் கலரில் டிஜிட்டல் கோப்புகள் உள்ளன ; எவை black & white -ல் மாத்திரமே சாத்தியம் ; எவை black & white -ல் மாத்திரமே சாத்தியம் என்பதெல்லாமே அந்த பிரான்க்பர்ட் fever ஓய்ந்தான பின்னே தான் இறுதிப்படுத்திட இயலும் என்பதெல்லாமே அந்த பிரான்க்பர்ட் fever ஓய்ந்தான பின்னே தான் இறுதிப்படுத்திட இயலும் ஆகஸ்ட் - ஐரோப்பிய கோடை விடுமுறைகள் ; செப்டெம்பர் - அவர்ளது பிரான்க்பர்ட் முஸ்தீபுகள் எனும் பொழுது - ஜூலையிலேயே மறு ஆண்டுக்கான வேலைகளை செய்து முடிப்பது தான் நம் முன்னே உள்ள alternative ஆகஸ்ட் - ஐரோப்பிய கோடை விடுமுறைகள் ; செப்டெம்பர் - அவர்ளது பிரான்க்பர்ட் முஸ்தீபுகள் எனும் பொழுது - ஜூலையிலேயே மறு ஆண்டுக்கான வேலைகளை செய்து முடிப்பது தான் நம் முன்னே உள்ள alternative ஆனால் அந்த சமயங்களில் நமது பணிகள் உச்சத்தில் இருப்பது ஒரு பக்கமெனில், நடப்பு ஆண்டில் எந்தெந்த நாயகர்கள் எவ்விதம் உங்களிடம் மார்க்குகள் வாங்குகிறார்கள் என்பதை நான் பார்த்திடவும் ஜூலை ரொம்பவே early அல்லவா ஆனால் அந்த சமயங்களில் நமது பணிகள் உச்சத்தில் இருப்பது ஒரு பக்கமெனில், நடப்பு ஆண்டில் எந்தெந்த நாயகர்கள் எவ்விதம் உங்களிடம் மார்க்குகள் வாங்குகிறார்கள் என்பதை நான் பார்த்திடவும் ஜூலை ரொம்பவே early அல்லவா So இவையெல்லாம் எங்களது back end சிக்கல்கள் So இவையெல்லாம் எங்களது back end சிக்கல்கள் இதன் பொருட்டு நான் அனுஷ்டிக்க அவசியமாகிடும் மௌனத்தை ஆளுக்கொரு விதமாய் அர்த்தம் பண்ணிக் கொண்டு சஞ்சலம் கொள்வதன் லாஜிக் புரியவில்லை இதன் பொருட்டு நான் அனுஷ்டிக்க அவசியமாகிடும் மௌனத்தை ஆளுக்கொரு விதமாய் அர்த்தம் பண்ணிக் கொண்டு சஞ்சலம் கொள்வதன் லாஜிக் புரியவில்லை And இதுமட்டுமன்றி - புது நாயகர்கள் சேர்க்கை - ஏற்கனவே உள்ள ஆசாமிகளில் யாருக்கேனும் தர வேண்டிய கல்தா பற்றியெல்லாம் சிந்திக்க சற்றே நேரம் எடுத்துக் கொள்கிறேனே guys And இதுமட்டுமன்றி - புது நாயகர்கள் சேர்க்கை - ஏற்கனவே உள்ள ஆசாமிகளில் யாருக்கேனும் தர வேண்டிய கல்தா பற்றியெல்லாம் சிந்திக்க சற்றே நேரம் எடுத்துக் கொள்கிறேனே guys ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இதழும் ஒரு விதத்தில் ஒரு புதுப் பாடம் கற்பித்து வரும் நாட்களில், செய்த சொதப்பல்களிலிருந்து பாடம் படித்துக் கொள்ளவும் இந்தக் கூடுதல் அவகாசம் உதவிடும் தானே \nசமீபமாய் 'என் பெயர் டைகர்' அறிவிப்பினைத் தொடர்ந்து விலை பற்றி எழுந்த சர்ச்சைகளும், விமர்சனங்களும் நான் எதிர்பாரா ஒரு விஷயம். அன்றைய பொழுதை நாம் கடந்து வந்திருப்பினும் சந்தா அறிவிப்பினில் இதே போன்ற உராய்வுகள் நேர்ந்திடக் கூடாதே என்ற எண்ணத்தை என்னுள் ஆழமாய் விதைத்த நாள் அது 'ஒரே நாளில் கல்லா கட்டப் பார்க்கிறேன்' என்ற ரீதியிலான விமர்சனங்களும், அதன் பின்னணியாகச் சொல்லப்பட்ட காரணங்களும் என்னை நிறையவே சங்கடப்படுத்தின 'ஒரே நாளில் கல்லா கட்டப் பார்க்கிறேன்' என்ற ரீதியிலான விமர்சனங்களும், அதன் பின்னணியாகச் சொல்லப்பட்ட காரணங்களும் என்னை நிறையவே சங்கடப்படுத்தின So இனியும் இது போன்ற வெற்றுக் கல்வீச்சுகளுக்கு முகாந்திரம் தந்திடக் கூடாதென்ற வைராக்கியம் உள்ளே குடிபுகுந்த சமயமே, சந்தாவின் திட்டமிடலில் ஆடம்பரங்களை இயன்ற அளவு தவிர்த்தல் நலம் என்றும் எனக்குள் ஒரு ஜாக்கிரதையுணர்வு குடி புகுந்தது So இனியும் இது போன்ற வெற்றுக் கல்வீச்சுகளுக்கு முகாந்திரம் தந்திடக் கூடாதென்ற வைராக்கியம் உள்ளே குடிபுகுந்த சமயமே, சந்தாவின் திட்டமிடலில் ஆடம்பரங்களை இயன்ற அளவு தவிர்த்தல் நலம் என்றும் எனக்குள் ஒரு ஜாக்கிரதையுணர்வு குடி புகுந்தது பற்றாக்குறைக்கு 2 தனித்தனி இதழ்களாய் ரூ.75+ ரூ.100 என்ற விலைகளில் (ஓராண்டுக்கு முன்பாக) அறிவிக்கப்பட்டிருந்த டெக்ஸ் கதைகள் ஒருங்கிணைந்த தீபாவளி மலராகிடும் போது அந்த 560 பக பருமனுக்கு ஈடுதர பைண்டிங்கில் book sewing முறையை நடைமுறைப்படுத்திட வேண்டி வரும் பற்றாக்குறைக்கு 2 தனித்தனி இதழ்களாய் ரூ.75+ ரூ.100 என்ற விலைகளில் (ஓராண்டுக்கு முன்பாக) அறிவிக்கப்பட்டிருந்த டெக்ஸ் கதைகள் ஒருங்கிணைந்த தீபாவளி மலராகிடும் போது அந்த 560 பக பருமனுக்கு ஈடுதர பைண்டிங்கில் book sewing முறையை நடைமுறைப்படுத்திட வேண்டி வரும் இல்லையேல் நாளாசிரியாய்'நடுவிலே சில பக்கங்களைக் காணோம்' என்ற கதையாகிடும். தையலுக்கு ; அதைத் தொடரும் பைண்டிங் முறைகளுக்கு ; கூடுதல் கன ராப்பருக்கு ; அதனில் நாம் செய்ய நினைத்துள்ள சிறு வேலைப்பாட்டிற்கு எனும் பொருட்டு (சந்தாவில் மாற்றம் செய்யாது) ரூ.25 விலையினை கூட்டினால் - \"குனிந்தால் குட்டா இல்லையேல் நாளாசிரியாய்'நடுவிலே சில பக்கங்களைக் காணோம்' என்ற கதையாகிடும். தையலுக்கு ; அதைத் தொடரும் பைண்டிங் முறைகளுக்கு ; கூடுதல் கன ராப்பருக்கு ; அதனில் நாம் செய்ய நினைத்துள்ள சிறு வேலைப்பாட்டிற்கு எனும் பொருட்டு (சந்தாவில் மாற்றம் செய்யாது) ரூ.25 விலையினை கூட்டினால் - \"குனிந்தால் குட்டா நிமிர்ந்தால் தான் ஆச்சா \" என்ற ரீதியில் குரல்கள் ஒலிக்கும் நாட்களிவை எனும் போதே - தொடரும் ஆண்டுக்கான costing-களை நிதானமாகவே சரி பார்த்துக் கொள்வோமே என்று நினைக்கத் தான் தோன்றுகிறது அதன் பொருட்டும் இந்த அவகாசம் அவசியம் தானே அதன் பொருட்டும் இந்த அவகாசம் அவசியம் தானே பாதி வழியில் ஏதேனும் மாற்றமெனில் அதன் பொருட்டும் குட்டு வாங்கவிருப்பது அடியேன் தான் எனும் போது அதனிலிருந்து தப்பிக்கவாவது ஹெல்மெட் மாட்டிக் கொள்ள கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்கிறேனே \nஎல்லாவற்றிற்கும் மேலாக - கோரப்படும் அபிப்பிராயங்கள் சகலத்தின் மீதும் உடனடியாய் positive பலன் தெரியாது போயின் - அது கருத்துச் சொன்னவர்களுக்கான அவமரியாதை என்ற ரீதியிலான சிந்தனைகளும் சங்கடத்தைத் தருகின்றன மனதில் அவ்வப்போது தோன்றுவதை தயங்காது இங்கே வெளிப்படுத்துவதே நமது 3.5 ஆண்டுகளின் பாணி மனதில் அவ்வப்போது தோன்றுவதை தயங்காது இங்கே வெளிப்படுத்துவதே நமது 3.5 ஆண்டுகளின் பாணி And மாறிடும் ரசனைகளுக்கேற்ப நமது தீர்மானங்கள் ; சிந்தனைகள் வளைந்து கொடுக்கும் விதமாய் flexible ஆக ; fluid ஆக இருத்தல் அவசியம் என்றும் நிறைய முறைகள் வலியுறுத்தியுள்ளேன் And மாறிடும் ரசனைகளுக்கேற்ப நமது தீர்மானங்கள் ; சிந்தனைகள் வளைந்து கொடுக்கும் விதமாய் flexible ஆக ; fluid ஆக இருத்தல் அவசியம் என்றும் நிறைய முறைகள் வலியுறுத்தியுள்ளேன் இங்கே நான் கோரிப் பெரும் inputs சகலமும், சரியான சந்தர்ப்பத்தில் அமலுக்கு வருவது தான் நடைமுறை இங்கே நான் கோரிப் பெரும் inputs சகலமும், சரியான சந்தர்ப்பத்தில் அமலுக்கு வருவது தான் நடைமுறை ஆனால் 'இன்றே-இப்போதே' என்ற ரீதியிலான எதிர்பார்ப்புகள் இந்த ஒற்றை விஷயத்தில் அமலுக்கு வருவது எத்தனை தூரம் practical \n அக்டோபர் இறுதி வரை அவகாசம் கோரியிருந்த நான் அதற்கு மேலும் உங்களைக் காக்க வைப்பின் உங்கள் சலனங்கள் புரிந்திடும் ; ஆனால் அதற்கு ஒன்றரை மாதங்கள் பாக்கியிருக்கும் நாட்களிலிருந்தே இதன் பொருட்டு தூக்கங்களும், புன்னகைகளும் தொலைந்திடத் தான் வேண்டுமா More than anything else - உங்களை நான் அலைய விட்டுப் பார்ப்பது போலவும் ; 'சார்..சார்..' என்று என்னைத் தாஜா செய்ய வைப்பதாகவும் தோற்றம் எழுந்திடவும் வாய்ப்புகள் உண்டன்றோ guys More than anything else - உங்களை நான் அலைய விட்டுப் பார்ப்பது போலவும் ; 'சார்..சார்..' என்று என்னைத் தாஜா செய்ய வைப்பதாகவும் தோற்றம் எழுந்திடவும் வாய்ப்புகள் உண்டன்றோ guys \"வாங்கிட ரெடி \" என்று நீங்கள் தயாராய் நிற்கும் போது - 'சார்..சார்..என்று உங்கள் தயவுகளை நாடி முன்னே நிற்க வேண்டியவன் முறைப்படி நான் தானே நண்பர்களே நான் கோருவதெல்லாம் - இடையிடையே மாற்றங்களுக்கு அவசியம் தரா ஒரு சுவாரஸ்யமான அட்டவணையினை final செய்திட முறையான அவகாசம் மட்டுமே \nசரி, இத்தனை தூரம் வந்தான பின்னே - தேங்காயை உடைத்தே விடுவோமே \"தனி டெக்ஸ் சந்தா\" எனும் பொழுது - நம் முன்னே உள்ள options - இரண்டே \nOPTION # 1 : இத்தாலிய பாணியில் மாதமொரு 104 பக்க black & white இதழ் ; கதைகள் தொடர்ச்சியாய் ஓடிக் கொண்டே இருக்கும் ; so ஆண்டொன்றுக்கு 12 தனித்தனி இதழ்கள் \nஇந்தத் தொடர்கதை சங்காத்தமே வேண்டாமெனில் :\nOPTION # 2 - ஆண்டுக்கு 6 இதழ்கள் (220 பக்க complete சாகசத்தோடு) நாம் தற்சமயமே இது போன்ற கதைகளில் கிட்டத்தட்ட நான்கோ / ஐந்தோ வெவ்வேறு பாணிகளில் வெளியிட்டு வருகிறோம் தானே நாம் தற்சமயமே இது போன்ற கதைகளில் கிட்டத்தட்ட நான்கோ / ஐந்தோ வெவ்வேறு பாணிகளில் வெளியிட்டு வருகிறோம் தானே So தொடரும் ஆண்டில் \"6\" எனும் எண்ணிக்கையைத் தொட்டு விட்டதன் ஒரே காரணத்தால் அதனை \"தனி டெக்ஸ் சந்தா\" என்று அறிவிப்பதில் பெரிதாய் புதுமை ஏதும் இல்லையல்லவா So தொடரும் ஆண்டில் \"6\" எனும் எண்ணிக்கையைத் தொட்டு விட்டதன் ஒரே காரணத்தால் அதனை \"தனி டெக்ஸ் சந்தா\" என்று அறிவிப்பதில் பெரிதாய் புதுமை ஏதும் இல்லையல்லவா So தற்சமயத் திட்டமிடலின்படி ஆண்டுக்கு 6 டெக்ஸ் இதழ்கள் - தனித் தனி இதழ்களாய் - ரெகுலர் சந்தாவிலேயே என்றே இறுதி செய்துள்ளேன் So தற்சமயத் திட்டமிடலின்படி ஆண்டுக்கு 6 டெக்ஸ் இதழ்கள் - தனித் தனி இதழ்களாய் - ரெகுலர் சந்தாவிலேயே என்றே இறுதி செய்துள்ளேன் இவை தவிர TEX மறுபதிப்பு (கள்) \nஇதற்கிடையே உங்கள் எதிர்பார்ப்புகள் - ரெகுலர் சந்தாவில் வழக்கம் போல் நாலு டெக்ஸ் + இன்னுமொரு பிரத்யேக டெக்ஸ் சந்தா வழித்தடமா என்பது எனக்குப் புரியவில்லை எனது திட்டமிடல்களின்படி 6 ரெகுலர் (புது) இதழ்கள் என்றாலே சுமார் 1400 பக்கங்கள் எனும் பொழுது - இதற்கு மேலாக ஒரு EXCLUSIVE TEX TRACK வேறு சேர்ப்பதெனில் ஆண்டுக்கு சுமார் 3000 பக்கங்களுக்கு வறுத்த கறிக் காதலருக்கும், இரவுக் கழுகாருக்கும் நான் பன்ச் டயலாக் எழுதியே உங்களைப் பஞ்சராக்கும் நிலை தான் புலரும் And சந்தேகமே இல்லாது அது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமானமாகிடும் And சந்தேகமே இல்லாது அது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமானமாகிடும் \"டெக்ஸ் மோகம்\" உள்ளதென்பதற்காக அதற்கு முறையான நியாயம் செய்ய முடியாது போயின் அந்த முயற்சி வியர்த்தமாகிப் போகும் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது \nSo - இது தான் நமது நிலைப்பாடு - படைப்பாளிகளின் இறுதி தலையசைப்பிற்கு உட்பட்டு இதனில் ஒருக்கால் OPTION #1 - worth a try - மாதந்தோறும் 'தல' ஒரு 104 பக்கத் தனி இதழில் வரட்டுமே என்று நீங்கள் நினைப்பின் - நான் ரெடி இதனில் ஒருக்கால் OPTION #1 - worth a try - மாதந்தோறும் 'தல' ஒரு 104 பக்கத் தனி இதழில் வரட்டுமே என்று நீங்கள் நினைப்பின் - நான் ரெடி நீங்கள் உங்கள் சிந்தைகளை அறிந்திட ஆவலாய்க் காத்திருப்பேன் \nஒரு பண்டிகை...ஒரு மைக் டெஸ்டிங்....ஒரு பதிவு..\nஉங்களில் நிறையப் பேரைப் போலவே புதிய பின்னூட்ட முறையினுள் புகுந்து நானும் பாயைப் பிறாண்டாத குறை தான் என்பதால் - நள்ளிரவில் எழுந்து அமர்ந்தொரு விநாயகர் சதுர்த்திப் பதிவுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டேன் இதனை 'மைக் டெஸ்டிங்..1..2.33...' பாணியாக எடுத்துக் கொள்வோம் ; இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று இதன் பின்னூட்ட அனுபவங்களும் சொல்லிடும் பட்சத்தில் - 'போன மச்சான் திரும்பி வந்தான்' என ஞாயிறு பதிவினில் நமக்குப் பரிச்சயமான பழசுக்கே வாபசாகி விடுவோம் இதனை 'மைக் டெஸ்டிங்..1..2.33...' பாணியாக எடுத்துக் கொள்வோம் ; இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று இதன் பின்னூட்ட அனுபவங்களும் சொல்லிடும் பட்சத்தில் - 'போன மச்சான் திரும்பி வந்தான்' என ஞாயிறு பதிவினில் நமக்குப் பரிச்சயமான பழசுக்கே வாபசாகி விடுவோம் So கடிதம் எழுதத் தயாராகி விட்ட தலீவரைக் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பிடித்து நிறுத்தி வையுங்களேன் guys So கடிதம் எழுதத் தயாராகி விட்ட தலீவரைக் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பிடித்து நிறுத்தி வையுங்களேன் guys (ஈரோடு விழா முடிந்த கையோடு தலீவர் அனுப்பிய 7 பக்கக் கடிதத்தை சமீபமாய்த் தான் பார்த்தேன் (ஈரோடு விழா முடிந்த கையோடு தலீவர் அனுப்பிய 7 பக்கக் கடிதத்தை சமீபமாய்த் தான் பார்த்தேன் \nஇது நடுநிசியின் திடீர் பதிவென்பதால் வழக்கமான முன்னோட்டங்கள் ; பின்னோட்டங்கள் என்றெல்லாம் வில்லுப்பாட்டுப் பாடாது ; சமீபமாய் நான் பார்த்த, சில பல புதுக் கதைத் தொடர்கள் பற்றியதொரு preview show-வாக இருந்திடும் இந்த டிரைலர்கள் சுவாரஸ்யமாகத் தெரிந்திடும் பட்சத்தில் ; இவற்றின் மீது நாம் இன்னும் கொஞ்சம் ஆர்வம் காட்டிடலாம் என உங்களுக்குத் தோன்றும் பட்சத்தில் - அந்த 'தனிச் சந்தா' தண்டவாளத்தில் இவைகளைப் பரிசீலிக்க முயற்சிக்கலாம் \nAND : பெரிய எழுத்துக்களில் ஒரு எச்சரிக்கைப் பலகையினை முன்கூட்டியே தூக்கி நிறுத்தி விடுகிறேனே......\nஇவை எல்லாமே நான் சமீபமாய்ப் பார்க்க / பரிசீலிக்க நேரம் எடுத்துக் கொண்ட தொடர்கள் மட்டுமே தவிர ; இவையெல்லாம் 'வரப் போகும்' பட்டியலில் இடம் பிடித்திருக்கும் விஷயங்கள் அல்ல - at least 2016-ன் ரெகுலர் சந்தாவிற்குள் \nஅப்புறம் - இவை எல்லாமே ஒவ்வொரு விதத்தில் மாறுபட்ட கதைகள் / ரசனைகள் என்பதால் உங்களுக்கு அவை பிடித்திடா பட்சத்தில் -1 என்ற அபிப்பிராயப் பதிவோடு தாண்டிச் சென்றிடலாமே - ப்ளீஸ் \"அய்யோ ..இதெல்லாம் வரப் போகுதா \"அய்யோ ..இதெல்லாம் வரப் போகுதா கிழிஞ்சது போ \" என்ற ரக எண்ணங்கள் சிதறல்களாய் இங்கு விரவிடாது இருப்பின் மகிழ்வேன் \nபிரெஞ்சுப் பதிப்புலகில் எனக்கு ரொம்ப காலமாகவே ஒரு சின்ன ஆச்சர்யம் உண்டு தங்களுக்கு சிறிதும் அண்மையில் இல்லாததொரு தேசத்தின் மீது ; கலாச்சாரங்களில் துளியும் சம்பந்தமில்லா ஒரு நாட்டின் மீது பிரெஞ்சுக் காமிக்ஸ் ஒளிவட்டம் இத்தனை அதிகம் பாய்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நிறைய முறை யோசித்திருக்கிறேன் தங்களுக்கு சிறிதும் அண்மையில் இல்லாததொரு தேசத்தின் மீது ; கலாச்சாரங்களில் துளியும் சம்பந்தமில்லா ஒரு நாட்டின் மீது பிரெஞ்சுக் காமிக்ஸ் ஒளிவட்டம் இத்தனை அதிகம் பாய்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நிறைய முறை யோசித்திருக்கிறேன் அந்த \"அமெரிக்கக் காதல்\" கௌபாய் கதைகளின் ரூபத்தில் ஒரு பக்கம் வழிந்தோடுவது சகஜம் எனில் தொடர்ந்த 19-ஆம் நூற்றாண்டின் முதல் quarter -ன் மீது அது மீண்டும் மையல் கொண்டு நிற்பது உண்டு அந்த \"அமெரிக்கக் காதல்\" கௌபாய் கதைகளின் ரூபத்தில் ஒரு பக்கம் வழிந்தோடுவது சகஜம் எனில் தொடர்ந்த 19-ஆம் நூற்றாண்டின் முதல் quarter -ன் மீது அது மீண்டும் மையல் கொண்டு நிற்பது உண்டு ஜனவரி 1920-ல் அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது ஜனவரி 1920-ல் அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது 'சரக்கை' விற்பதோ ; வாங்குவதோ ; எடுத்துச் செல்வதோ குற்றமென ஆன பின்னும் மக்களிடையே அதற்கொரு வெறித்தனமான தேவை இருந்து வந்தது 'சரக்கை' விற்பதோ ; வாங்குவதோ ; எடுத்துச் செல்வதோ குற்றமென ஆன பின்னும் மக்களிடையே அதற்கொரு வெறித்தனமான தேவை இருந்து வந்தது அந்த நேரம் பார்த்து இத்தாலியில் முசோலினி சர்வாதிகார ஆட்சியினைப் பிரகடனம் செய்திட, சாரை சாரையாய் இத்தாலிய மக்கள் அமெரிக்கக் கரையினில் தஞ்சம் புகுந்தனர் அந்த நேரம் பார்த்து இத்தாலியில் முசோலினி சர்வாதிகார ஆட்சியினைப் பிரகடனம் செய்திட, சாரை சாரையாய் இத்தாலிய மக்கள் அமெரிக்கக் கரையினில் தஞ்சம் புகுந்தனர் அவர்களுள் நிறையப் பேர் அமெரிக்காவின் மாபியா கும்பல்களில் ஐக்கியமாகிட - ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு வட்டமும் சிறுகச் சிறுக இந்தக் குற்ற முதலைகளின் பிடிக்குள் ஓசையின்றி அடங்கிப் போயின அவர்களுள் நிறையப் பேர் அமெரிக்காவின் மாபியா கும்பல்களில் ஐக்கியமாகிட - ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு வட்டமும் சிறுகச் சிறுக இந்தக் குற்ற முதலைகளின் பிடிக்குள் ஓசையின்றி அடங்கிப் போயின அக்டோபர் 1929-ல் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணா ஒரு வீழ்ச்சியை சந்தித்ததன் பின்னே, நாடெங்கும் வேலையின்மை தாண்டவமாடியது அக்டோபர் 1929-ல் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணா ஒரு வீழ்ச்சியை சந்தித்ததன் பின்னே, நாடெங்கும் வேலையின்மை தாண்டவமாடியது அதுநாள் வரையிலும் செல்வச் செழிப்பில் மிதந்து வந்ததொரு நாட்டுக்கே இந்த புது சூழலைக் கையாளத் தெரிந்திருக்கவில்லை அதுநாள் வரையிலும் செல்வச் செழிப்பில் மிதந்து வந்ததொரு நாட்டுக்கே இந்த புது சூழலைக் கையாளத் தெரிந்திருக்கவில்லை So 1939-ல் உலகப் போர் துவங்கிடும் முன்பான காலகட்டம் கூட அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய பகுதி என்று சொல்லலாம் \nஇந்தக் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு பிரெஞ்சில் நிறையக் கதைகளும், தொடர்களும் உருவாகியுள்ளன அவற்றில் நமக்கு நேரடியாய் எவ்வித சம்பந்தமும் இல்லாவிடினும், கிட்டத்தட்ட 80-90 ஆண்டுகளுக்கு முன்பான நாகரீக உலகின் உச்ச சின்னமான அமெரிக்காவின் இன்னொரு முகத்தினை தரிசிக்கும் ஜன்னல்களாக இது போன்ற கதை வரிசைகளைப் பார்த்திடலாம் அவற்றில் நமக்கு நேரடியாய் எவ்வித சம்பந்தமும் இல்லாவிடினும், கிட்டத்தட்ட 80-90 ஆண்டுகளுக்கு முன்பான நாகரீக உலகின் உச்ச சின்னமான அமெரிக்காவின் இன்னொரு முகத்தினை தரிசிக்கும் ஜன்னல்களாக இது போன்ற கதை வரிசைகளைப் பார்த்திடலாம் (இப்போவே கண்ணைக் கட்டுதே...என்று எண்ணும் நண்பர்கள், ஒரு கொழுக்கட்டையைக் கூடுதலாய் உள்ளே இறக்கிக் கொண்டு 'தம்' பிடித்துத் தொடரலாமே (இப்போவே கண்ணைக் கட்டுதே...என்று எண்ணும் நண்பர்கள், ஒரு கொழுக்கட்டையைக் கூடுதலாய் உள்ளே இறக்கிக் கொண்டு 'தம்' பிடித்துத் தொடரலாமே \nஅப்படியொரு பின்னணியினில் சமீபமாய் வெளியானதொரு 2 ஆல்பம் கொண்ட கதை தான் BLUENOTE இந்தக் கதையினை சென்றாண்டே ஆசை ஆசையாய்ப் புரட்டினேன் நான் ; ஆனால் அச்சமயம் பாகம் 2 வெளி வந்திருக்கவில்லை எனும் போது பெரிதாய் அதன் மீதொரு அபிப்பிராயம் உருவாக்கிட இயலவில்லை \n\"மதுவிலக்கின் இறுதி நிமிடங்கள்\" என்பது ஆல்பத்தின் பெயர் 1930-ல் அமெரிக்காவில் குடிபெயர வரும் ஒரு முன்னாள் குத்துச் சண்டை வீரர் தான் கதையின் நாயகர் 1930-ல் அமெரிக்காவில் குடிபெயர வரும் ஒரு முன்னாள் குத்துச் சண்டை வீரர் தான் கதையின் நாயகர் ஒரு சதுரத்துக்குள் புகுந்து எதிராளியை நொங்கி எடுக்கும் அந்த பாக்சிங் ஆட்டத்துக்கே ஒரு முற்றுப்புள்ளிடா சாமி என்ற வைராக்கியத்தோடு நியூ யார்க்கின் கரைகளில் ஒதுங்குகிறார் ஜாக் டாய்ல் ஒரு சதுரத்துக்குள் புகுந்து எதிராளியை நொங்கி எடுக்கும் அந்த பாக்சிங் ஆட்டத்துக்கே ஒரு முற்றுப்புள்ளிடா சாமி என்ற வைராக்கியத்தோடு நியூ யார்க்கின் கரைகளில் ஒதுங்குகிறார் ஜாக் டாய்ல் இனியும் பந்தயங்களுக்காக பாக்சிங் செய்யப் போவதில்லை என்பதில் தீர்மானமாய் உள்ளான் ஜாக் இனியும் பந்தயங்களுக்காக பாக்சிங் செய்யப் போவதில்லை என்பதில் தீர்மானமாய் உள்ளான் ஜாக் ஆனால் விதி அவனை விடாது துரத்துகிறது - ஒரே ஒரு இறுதி சண்டைக்கு பாக்சிங் மேடையினில் ஏறியே தீர வேண்டுமென்ற சூழல்களை உருவாக்கும் விதமாய் ஆனால் விதி அவனை விடாது துரத்துகிறது - ஒரே ஒரு இறுதி சண்டைக்கு பாக்சிங் மேடையினில் ஏறியே தீர வேண்டுமென்ற சூழல்களை உருவாக்கும் விதமாய் ஒரே நேரத்தில் சொர்க்கமாகவும், நரகமாகவும் பரிமாணங்களைக் காட்டக் கூடிய நியூயார்க் நகரில் ஜாக்கின் வாழ்க்கையே ஆல்பம் # 1. பாருங்களேன் அந்த மாறுபட்ட ஓவிய பாணிகளை ; கண்ணை உறுத்தா வர்ணக் கலவைகளை \nஆல்பம் # இரண்டிற்கும் அதே பெயர் தான் ; இம்முறையும் கதையின் பின்னணி மிரட்டலான நியூ யார்க் தான் இதுவோ இசை ஆல்பம் வெளியிடும் வெறியோடு கரை ஒதுங்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றிய கதை இதுவோ இசை ஆல்பம் வெளியிடும் வெறியோடு கரை ஒதுங்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றிய கதை ஒரே கால கட்டத்தை ; ஒரே மண்ணை - இரு வேறு நிலைகளிலிருந்து பார்த்திடும் இருவரின் வாழ்க்கைப் போராட்டங்களே BLUE NOTE -ன் பின்னணி ஒரே கால கட்டத்தை ; ஒரே மண்ணை - இரு வேறு நிலைகளிலிருந்து பார்த்திடும் இருவரின் வாழ்க்கைப் போராட்டங்களே BLUE NOTE -ன் பின்னணி நியூயார்க்கின் இரவுகள் ; அதன் கருணையிலா முகம் என அந்த சித்திரங்களில் ஒரு மெல்லிய கதை சொல்லியுள்ளார் ஓவியர் \nஎன்றோ முடிந்து போனதொரு யுகத்தை ; எங்கோ ஒரு உலக வரைபட மூலையின் மாந்தர்களை ; அவர்கள் வாழ்க்கை முறைகளை ; அந்த சோகங்களை நாம் பார்த்து சாதிக்கப் போவதென்ன என்ற கேள்வி உங்கள் உதடுகளில் இருப்பின், அதற்கான பதில் என்னிடம் நிச்சயமில்லை என்ற கேள்வி உங்கள் உதடுகளில் இருப்பின், அதற்கான பதில் என்னிடம் நிச்சயமில்லை ஆனால் - மனித உணர்வுகளைச் சொல்ல முற்படும் இது போன்ற கதைகளும் என்றைக்கோ ஒரு தூரத்து நாளிலாவது நம் (காமிக்ஸ்) வாசிப்புக் களங்களில் இடம் பிடித்தால் நிச்சயமாய் என் வதனத்தில் ஒரு குட்டியூண்டு \"ஈஈ\" இடம்பிடித்து நிற்கும் ஆனால் - மனித உணர்வுகளைச் சொல்ல முற்படும் இது போன்ற கதைகளும் என்றைக்கோ ஒரு தூரத்து நாளிலாவது நம் (காமிக்ஸ்) வாசிப்புக் களங்களில் இடம் பிடித்தால் நிச்சயமாய் என் வதனத்தில் ஒரு குட்டியூண்டு \"ஈஈ\" இடம்பிடித்து நிற்கும் (இப்போதைக்கு அந்தப் புன்னகை தலீவர் 'ணங்..ணங்' என அருகாமையிலுள்ள சுவற்றில் முட்டிக் கொள்ள முற்படுவதைப் பார்த்தும் ; மடிப்பாக்கத்தில் ஒருத்தர் விழுந்தடித்துக் கொண்டு ரிவர்ஸ் கியர் போடுவதை ரசிப்பதிலும், மக்கன் பேடாவோடு ஏதேனும் மூளைச்சலவைப் பேடா போட வாய்ப்புள்ளதா என்று வினவிடும் பெங்களூராரை ரசிப்பதிலுமே எழுந்து நிற்கிறது (இப்போதைக்கு அந்தப் புன்னகை தலீவர் 'ணங்..ணங்' என அருகாமையிலுள்ள சுவற்றில் முட்டிக் கொள்ள முற்படுவதைப் பார்த்தும் ; மடிப்பாக்கத்தில் ஒருத்தர் விழுந்தடித்துக் கொண்டு ரிவர்ஸ் கியர் போடுவதை ரசிப்பதிலும், மக்கன் பேடாவோடு ஏதேனும் மூளைச்சலவைப் பேடா போட வாய்ப்புள்ளதா என்று வினவிடும் பெங்களூராரை ரசிப்பதிலுமே எழுந்து நிற்கிறது \nதொடர்வது SHERMAN என்றதொரு 6 பாகக் கதை இங்கும் களம் அமெரிக்காவே கால கட்டமோ - இரண்டாம் உலக யுத்தம் துவங்கிடும் தருணமும், அது முற்றுப் பெற்று உலகமெங்கும் ஒரு புனர்ஜென்மம் எடுக்க விளையும் 1950-களின் முதல் பகுதியும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக நிற்கும் ராபர்ட் ஷெர்மன் சுட்டுக் கொல்லப்படுகின்றார் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக நிற்கும் ராபர்ட் ஷெர்மன் சுட்டுக் கொல்லப்படுகின்றார் துடித்துப் போகும் அவர் தந்தை ஜே ஷெர்மன் தன ஒரே மகனின் கொலையின் பின்னணியினைத் துருவிப் புறப்படுகிறார் துடித்துப் போகும் அவர் தந்தை ஜே ஷெர்மன் தன ஒரே மகனின் கொலையின் பின்னணியினைத் துருவிப் புறப்படுகிறார் அந்த நீண்ட சதி வலையில் தனக்கும், தனது இறந்த காலத்துக்கும் பெரியதொரு பங்கிருப்பதை ஜே உணர்கிறார் அந்த நீண்ட சதி வலையில் தனக்கும், தனது இறந்த காலத்துக்கும் பெரியதொரு பங்கிருப்பதை ஜே உணர்கிறார் அமெரிக்காவில் தொடங்கும் கதை ஜெர்மனிக்கும் நீள்கிறது ; யுத்தத்தின் பின்னணியில் அமெரிக்காவில் தொடங்கும் கதை ஜெர்மனிக்கும் நீள்கிறது ; யுத்தத்தின் பின்னணியில் ஒரு உலக யுத்தம் நிகழும் போது அந்நாடுகளில் தினசரி வாழ்க்கைகள் ; வர்த்தகங்கள் எவ்விதம் மாற்றம் காண்கின்றன ; யுத்த அரக்கனின் நிழலில், மனிதர்களுக்குள் தூங்கிக் கிடக்கும் பேராசை அரக்கன் எவ்விதம் விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதை இந்த 6 பாகத் தொடர் சொல்கிறது ஒரு உலக யுத்தம் நிகழும் போது அந்நாடுகளில் தினசரி வாழ்க்கைகள் ; வர்த்தகங்கள் எவ்விதம் மாற்றம் காண்கின்றன ; யுத்த அரக்கனின் நிழலில், மனிதர்களுக்குள் தூங்கிக் கிடக்கும் பேராசை அரக்கன் எவ்விதம் விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதை இந்த 6 பாகத் தொடர் சொல்கிறது சித்திரங்கள் சற்றே நுணுக்கங்களின்றி இருப்பது போல் தோன்றினாலும், கதையோடு ஒன்றிப் போகும் வேளைகளில் நமக்குப் பெரிதாய் ஒரு வித்தியாசம் தெரியாது போய் விடுகிறது சித்திரங்கள் சற்றே நுணுக்கங்களின்றி இருப்பது போல் தோன்றினாலும், கதையோடு ஒன்றிப் போகும் வேளைகளில் நமக்குப் பெரிதாய் ஒரு வித்தியாசம் தெரியாது போய் விடுகிறது நிறைய விருதுகள் பெற்றுள்ள இந்தத் தொடரில் ஆங்கங்கே adults only விஷயங்கள் சரளமாய் வருவதன் காரணமாகவே இதனை \"இரத்தப் படலத்தின்\" வாரிசாய் நாம் இன்னமும் அறிவிக்காது இருக்கிறோம் நிறைய விருதுகள் பெற்றுள்ள இந்தத் தொடரில் ஆங்கங்கே adults only விஷயங்கள் சரளமாய் வருவதன் காரணமாகவே இதனை \"இரத்தப் படலத்தின்\" வாரிசாய் நாம் இன்னமும் அறிவிக்காது இருக்கிறோம் நிறைய மனித உணர்வுகளை வெகு கிட்டே இருந்து காட்டிடும் இந்தக் கதைத் தொடர் 288 பக்கங்கள் கொண்டதொரு சாகசம் \nபிரெஞ்சுப் பதிப்புலகில் SOLEIL எனும் ஒரு சமீப காலத்து நிறுவனம் பல அட்டகாசமான கதைகளைத் தன்னிடம் கொண்டுள்ளது எனது சமீப ஊர்சுற்றல்களின் பொழுது இவர்களையும் சந்தித்ததன் பலனாய் SOLEIL -ன் படைப்புகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாய் தமிழில் பார்த்திடும் வாய்ப்பு உருவாகியுள்ளது எனது சமீப ஊர்சுற்றல்களின் பொழுது இவர்களையும் சந்தித்ததன் பலனாய் SOLEIL -ன் படைப்புகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாய் தமிழில் பார்த்திடும் வாய்ப்பு உருவாகியுள்ளது இவர்களது கேட்லாக்கை பரிசீலனை செய்யவே ஒரு வாரம் பிடித்தது எனக்கு இவர்களது கேட்லாக்கை பரிசீலனை செய்யவே ஒரு வாரம் பிடித்தது எனக்கு அவற்றுள் நமக்கு எது ஆகும், ஆகாது என்ற பரிசீலனை ஒரு பக்கமிருக்க - பார்த்த நொடியிலேயே என்னை மிரளச் செய்ததொரு படைப்பு தான் PANDEMONIUM என்றதொரு 168 பக்க - 3 பாகக் கதைத் தொடர் அவற்றுள் நமக்கு எது ஆகும், ஆகாது என்ற பரிசீலனை ஒரு பக்கமிருக்க - பார்த்த நொடியிலேயே என்னை மிரளச் செய்ததொரு படைப்பு தான் PANDEMONIUM என்றதொரு 168 பக்க - 3 பாகக் கதைத் தொடர் (தலைவிரித்தாடும் குழப்பம் ; திகில் என்பது போன்ற பொருள் எடுத்துக் கொள்ளலாம் \nதிரும்பவும் கதை மையமிடுவது அமெரிக்காவினில் தான் 1951-ன் கோடைக் காலம் ; காச நோய் கண்ட தன இளம் மகளை அமெரிக்காவின் பிரசித்தி பெற்றதொரு TB சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்கிறாள் ஒரு தாய் 1951-ன் கோடைக் காலம் ; காச நோய் கண்ட தன இளம் மகளை அமெரிக்காவின் பிரசித்தி பெற்றதொரு TB சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்கிறாள் ஒரு தாய் ஆனால் அங்கே அவர்கள் சந்திக்கப் போவது மருத்துவ சிகிச்சையினை அல்ல ; ஆனால் பல இருண்ட விவகாரங்களை மட்டுமே என்பதை அவள் அறிந்திருக்க வழியில்லையே ஆனால் அங்கே அவர்கள் சந்திக்கப் போவது மருத்துவ சிகிச்சையினை அல்ல ; ஆனால் பல இருண்ட விவகாரங்களை மட்டுமே என்பதை அவள் அறிந்திருக்க வழியில்லையே என்றைக்கோ மூடப்பட்டிருந்த ரயில் தடத்தினில் இருந்து இரவினில் கேட்கும் ரயிலின் விசிலோசை ; திகைக்கச் செய்யும் சில திகில் தோற்றங்கள் என சிறுமி அங்கே சந்திப்பது எல்லாமே இருளின் ராஜ்யத்தை தான் என்றைக்கோ மூடப்பட்டிருந்த ரயில் தடத்தினில் இருந்து இரவினில் கேட்கும் ரயிலின் விசிலோசை ; திகைக்கச் செய்யும் சில திகில் தோற்றங்கள் என சிறுமி அங்கே சந்திப்பது எல்லாமே இருளின் ராஜ்யத்தை தான் மிரட்டலான சித்திரங்கள் ; நிஜ நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட இந்தக் கதையிலும் 'adults ஒன்லி' சமாச்சாரங்கள் தவிர்க்க இயலா விதத்தில் கதையோடு இணைந்து கிடப்பதால் இதனை என்ன செய்வதென்ற யோசனையில் மண்டையைப் பிய்ச்சிங் மிரட்டலான சித்திரங்கள் ; நிஜ நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட இந்தக் கதையிலும் 'adults ஒன்லி' சமாச்சாரங்கள் தவிர்க்க இயலா விதத்தில் கதையோடு இணைந்து கிடப்பதால் இதனை என்ன செய்வதென்ற யோசனையில் மண்டையைப் பிய்ச்சிங் இது தான் அந்த சிகிச்சை மையம் பற்றிய நிஜத்தின் பின்னணி : https://en.wikipedia.org/wiki/Waverly_Hills_Sanatorium\nஇரத்தம், ஆவி, TB என்ற பக்கமிருந்து திரும்பிட இதொவொரு மாற்றம் : \"என் தாத்தா ஒரு ஆவியாக்கும் \" என்ற தொடரோடு இத்தாலிய தாய்க்கும், வியட்நாம் தந்தைக்கும் பிறக்கும் குட்டிப் பயல் தான் நம் கதையின் ஹீரோ பத்தே வயதுப் பாலகனின் தாத்தா இறந்து போய் விடுகிறார் பத்தே வயதுப் பாலகனின் தாத்தா இறந்து போய் விடுகிறார் பொடியனின் தாயும், தந்தையும், எலியும், பூனையுமாய் தினசரி சண்டை போட்டுக் கொண்டிருக்க - ஒரு விவாகரத்து விரைவில் அங்கே அரங்கேறும் சூழல் பொடியனின் தாயும், தந்தையும், எலியும், பூனையுமாய் தினசரி சண்டை போட்டுக் கொண்டிருக்க - ஒரு விவாகரத்து விரைவில் அங்கே அரங்கேறும் சூழல் அப்போது தான் மேலுலகில் இருந்து தன பிரியமான ஈரானைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டுத் திரும்புகிறார் தாத்தா - ஆவியாய் அப்போது தான் மேலுலகில் இருந்து தன பிரியமான ஈரானைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டுத் திரும்புகிறார் தாத்தா - ஆவியாய் இந்த நல்லெண்ண ஆவியால் பொடியனுக்கு நேரும் சங்கடங்களும், சௌகர்யங்களுமே இந்தக் கதைத் தொடர் இந்த நல்லெண்ண ஆவியால் பொடியனுக்கு நேரும் சங்கடங்களும், சௌகர்யங்களுமே இந்தக் கதைத் தொடர் இடையிடையே அந்தப் பள்ளி வயசுச் சிரார்களுக்கே உரிய சிரமங்கள், வீட்டில் அமைதி இல்லாது போகும் சமயம் நேரும் சங்கடங்கள் என செல்லும் கதை இது இடையிடையே அந்தப் பள்ளி வயசுச் சிரார்களுக்கே உரிய சிரமங்கள், வீட்டில் அமைதி இல்லாது போகும் சமயம் நேரும் சங்கடங்கள் என செல்லும் கதை இது வித்தியாசமாய்த் தோன்றியது ; இன்னும் கொஞ்சம் பரிசீலனை தேவை என முத்திரை குத்தி வைத்துள்ளேன் \nஇன்னமும் எனது மேஜையில் குவிந்து கிடக்கும் கதைகள் எல்லாவற்றையும் பற்றி இங்கே ஒரு note எழுதுவதாயின் - கோழி கூவிடும் என்பதால் இத்தோடு இந்த 'out of the blue \" பதிவை நிறைவு செய்து கொண்டு தலையணை தேடலில் கிளம்பிடுகிறேன் நாளைய பொழுதை கொழுக்கட்டைகளோடும் ; TV பட்டிமன்றங்களோடும் கழித்திடவிருக்கும் புண்ணியவான்களை நோக்கியொரு ஏக்கப் பெருமூச்சை விட்டபடிக்கு gud nite சொல்லிப் புறப்படுகிறேன் - எங்களுக்கு வழக்கம் போல் வேலை நாளை நாளைய பொழுதை கொழுக்கட்டைகளோடும் ; TV பட்டிமன்றங்களோடும் கழித்திடவிருக்கும் புண்ணியவான்களை நோக்கியொரு ஏக்கப் பெருமூச்சை விட்டபடிக்கு gud nite சொல்லிப் புறப்படுகிறேன் - எங்களுக்கு வழக்கம் போல் வேலை நாளை And \"காலனின் காலம்\" & சிறைப் பறவைகள் அச்சாகும் நாள் கூட And \"காலனின் காலம்\" & சிறைப் பறவைகள் அச்சாகும் நாள் கூட சுட்டி லக்கி ஏற்கனவே அச்சாகி விட்டது - என்பதால் அக்டோபர் அட்டவணையில் தோர்கல் மட்டுமே இப்போதைக்குப் பாக்கி சுட்டி லக்கி ஏற்கனவே அச்சாகி விட்டது - என்பதால் அக்டோபர் அட்டவணையில் தோர்கல் மட்டுமே இப்போதைக்குப் பாக்கி Bye guys....\nவணக்கம். “எதிர்பார்க்கவேயில்லை இந்த வெற்றிகளை...“; “ ஹைய்யோ... சந்தோஷ ஆச்சர்யமிது“; “ ஹைய்யோ... சந்தோஷ ஆச்சர்யமிது“ என்றெல்லாம் நான் பீலா விடப் போவதில்லை நமது செப்டம்பர் இதழ்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் மீது கருத்துச் சொல்லும் முயற்சியினில் \nதெளிவாகவே தெரிந்திருந்தது – நமது பேர்ரோ சிட்டியின் bad boy பௌன்சர் பலரக உணர்வுகளை நம்மிடையே கிளறச் செய்திடுவான் என்று ‘இது தேவை தானா‘ என்ற கேள்வியிலிருந்து; ‘அடேங்கப்பா‘ என்ற மிரட்சி வரையில் பௌன்சர் நிறைய reactions-களுக்குக் காரணமாக இருந்திடுவான் என்பதில் நம்மில் யாருக்குமே ஐயப்பாடிருந்திராது தான்\nAnd – கேப்டன் பிரின்ஸின் (வண்ண) மறுபதிப்பு சத்தமில்லாமல் சிக்ஸர் அடிக்குமென்பதையும் யூகிக்க அதிக சிரமம் இருந்திருக்கவில்லை கதையின் அந்தப் பனிக்களமும், ஓவியர் ஹெர்மனின் சித்திர அதகளமும் பற்றாதென கலரிங்கிலும் படைப்பாளிகள் கலக்கியிருந்தது நிஜமான visual treat-க்கு வழி வகுத்திருந்தது \nகமான்சே கதையினிலும் சித்திர / வர்ண மாயாஜாலங்கள் தொடர்ந்திட்டாலும் – ‘ஸ்கூலுக்குப் போக மாட்டேன்‘ என்று அடம்பிடிக்கும் பச்சாவைப் போல – ‘துப்பாக்கியைத் தூக்கவே மாட்டேன்‘ என்று ரெட் பிடித்த அடம் தான் எனக்குள் லேசாக நெருடியது ‘ என்று ரெட் பிடித்த அடம் தான் எனக்குள் லேசாக நெருடியது ‘அட.... க்ளைமேக்சில் மனுஷன் பொங்கி எழப் போகிறான் போலும் ‘அட.... க்ளைமேக்சில் மனுஷன் பொங்கி எழப் போகிறான் போலும்‘ எனப் பார்த்தால் – அங்கே கூட மலங்க மலங்க மொட்டைத் தலையோடு ஆசாமி முழித்து நிற்பதைப் பார்த்த போது – ‘ஆஹா... இன்னிக்கு 666 பண்ணையின் முன்னாள் ஃபோர்மேனுக்கு நம்மவர்களிடம் கும்பாபிஷேகம் காத்துள்ளது டோய்‘ எனப் பார்த்தால் – அங்கே கூட மலங்க மலங்க மொட்டைத் தலையோடு ஆசாமி முழித்து நிற்பதைப் பார்த்த போது – ‘ஆஹா... இன்னிக்கு 666 பண்ணையின் முன்னாள் ஃபோர்மேனுக்கு நம்மவர்களிடம் கும்பாபிஷேகம் காத்துள்ளது டோய்‘ என்று மெல்லிய பயம் குடியேறியது எனக்குள்‘ என்று மெல்லிய பயம் குடியேறியது எனக்குள் ஆனால் ‘தட தட‘வென்று ஓடும் காட்டாற்று வெள்ளத்தையும் ரசிக்கத் தெரியும்; சலசலக்கும் சிற்றோடையையும் மதிக்கத் தெரியும் என்று உங்கள் ரசனைகளின் இன்னொரு பரிமாணம் தலைதூக்கியதால் – ரெட்டின் அந்த மொட்டைத் தலையும், எனது இந்த சொட்டைத் தலையும் தப்பித்தது\nடைலன் டாக்கின் “வா.ஒ.வி“ பொறுத்தவரை – இதனை ஆண்டின் இறுதி வரை நான் தள்ளிக் கொண்டே சென்றதற்கொரு சின்ன காரணமுண்டு தான் டைலனின் ஆரம்பம் தடாலடியாக இருந்தாலும் – தொடர்ந்த 2 கதைகள் நம்மிடையே so-so ரக வரவேற்பை மட்டுமே ஈட்டியிருந்தது தெரிந்த சமாச்சாரம் தானே டைலனின் ஆரம்பம் தடாலடியாக இருந்தாலும் – தொடர்ந்த 2 கதைகள் நம்மிடையே so-so ரக வரவேற்பை மட்டுமே ஈட்டியிருந்தது தெரிந்த சமாச்சாரம் தானே ‘இது அவசியம் தானா ; அதிலும் இது வண்ணத்தில் அவசியம் தானா‘ என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் – “வா.ஒ.வி“ நிச்சயமாய் அந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான பதிலை வழங்கிடுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது ‘ என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் – “வா.ஒ.வி“ நிச்சயமாய் அந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான பதிலை வழங்கிடுமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது தவிர – டைலனை black & white-ல் போடவே வேண்டாமே என்ற அடம் ஜுனியர் எடிட்டரிடமிருந்தும் கூட தவிர – டைலனை black & white-ல் போடவே வேண்டாமே என்ற அடம் ஜுனியர் எடிட்டரிடமிருந்தும் கூட So- உறுதியான ‘ஹிட்‘ கதையை; கலக்கும் வர்ணங்களோடு ஆண்டின் இறுதியை ஒட்டிய நேரத்தில் களமிறக்கினால் – தொடரும் ஆண்டின் அட்டவணையில் டைலன் டாக்கின் இடம் குறித்து எவ்வித சர்ச்சைகளும் இராதே என்ற யோசனை தான் டைலனின் செப்டம்பர் விஜயத்தின் பின்னணியில் So- உறுதியான ‘ஹிட்‘ கதையை; கலக்கும் வர்ணங்களோடு ஆண்டின் இறுதியை ஒட்டிய நேரத்தில் களமிறக்கினால் – தொடரும் ஆண்டின் அட்டவணையில் டைலன் டாக்கின் இடம் குறித்து எவ்வித சர்ச்சைகளும் இராதே என்ற யோசனை தான் டைலனின் செப்டம்பர் விஜயத்தின் பின்னணியில் நிறைய லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே இருப்பினும் – ஒரு மனதைத் தொடும் ஆக்கமாக இது இருந்திடுமென்ற நம்பிக்கையோடு இருந்தோம் & அது நிஜமானதில் சந்தோஷமே\nSo- ஒரு ‘ஹிட்‘ மாதத்து திருப்தியோடு நமது caravan புதிய இலக்கை நோக்கி நகர்ந்திடும் வேளையும் துவங்கி விட்டதென்பதால் – its time to look ahead தொடரும் அக்டோபரிலும் 4 இதழ்கள் உண்டு ; இந்த நான்குமே ஒன்றுக்கொன்று தொடர்பிலா genre-களில்; பாணிகளில் உள்ளவை தான் \n- தோர்கலின் – ‘சாகாவரத்தின் சாவி‘\n- சுட்டி லக்கியின் – ‘புயலுக்கொரு பள்ளிக்கூடம்‘\n- ரிப்போர்டர் ஜானியின் – ‘காலனின் காலம்‘\n- (மறுபதிப்பு) ‘சிறைப் பறவைகள்‘\nஒரு 104 பக்க இதழ்; இரு நார்மல் ரக இதழ்கள்; ப்ளஸ் ஒரு மறுபதிப்பு என்று கிட்டத்தட்ட இம்முறையும் சென்ற மாதத்தின் template தான் என்ற போதிலும் – ‘அந்த மறுபதிப்புக்கும்‘; ‘இந்த மறுபதிப்புக்கும்‘ ஒரு வண்டி வேறுபாடு உள்ளது\nகேப்டன் பிரின்ஸின் கதைகளுக்குப் பெரும்பாலும் “புராதனம்“ என்ற factor செல்லுபடியாவதில்லை சமுத்திரங்களில் சாகஸம் செய்யும் இந்த rough & tough நாயகர்களை எந்தவொரு காலகட்டத்திலும் நாம் ரசித்திட சிரமமிராது என்பது என் நம்பிக்கை சமுத்திரங்களில் சாகஸம் செய்யும் இந்த rough & tough நாயகர்களை எந்தவொரு காலகட்டத்திலும் நாம் ரசித்திட சிரமமிராது என்பது என் நம்பிக்கை ஆனால் மும்மூர்த்திகளின் ஒரு முக்கிய அங்கமான நமது லாரன்ஸ்-டேவிட் ஜோடியின் அந்நாட்களது ஆக்கங்களில் ‘நச்‘சென்று எழுபதுகளின் முத்திரை பதிந்திருக்கும் ஆனால் மும்மூர்த்திகளின் ஒரு முக்கிய அங்கமான நமது லாரன்ஸ்-டேவிட் ஜோடியின் அந்நாட்களது ஆக்கங்களில் ‘நச்‘சென்று எழுபதுகளின் முத்திரை பதிந்திருக்கும் ரோட்டில் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்று - ஒரு டப்பா காரில் தொற்றிக் கொண்டு போய் தெருக்கோடியில் உள்ள; ஃபோன் பூத்தில் உளவுத்துறைத் தலைமையகத்தை டேவிட் தொடர்பு கொள்வதை இன்றைய Iphone 6S தலைமுறை படிப்பதை என் மனக்கண்ணில் லேசாகக் கற்பனை செய்து பார்த்தேன் ; சிரிப்பதா; அழுவதா என்று தெரியவில்லை ரோட்டில் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்று - ஒரு டப்பா காரில் தொற்றிக் கொண்டு போய் தெருக்கோடியில் உள்ள; ஃபோன் பூத்தில் உளவுத்துறைத் தலைமையகத்தை டேவிட் தொடர்பு கொள்வதை இன்றைய Iphone 6S தலைமுறை படிப்பதை என் மனக்கண்ணில் லேசாகக் கற்பனை செய்து பார்த்தேன் ; சிரிப்பதா; அழுவதா என்று தெரியவில்லை ஆனால் இவர்களது மறுபதிப்புகள் ‘காலத்தின் கட்டாயம்‘ என்றதொரு சூழல்; ‘மும்மூர்த்திகளை மறந்த நீ – ஷெரீப் டாக்புல்லாகக் கடவாய்‘ என்ற ரேஞ்சில் சாபங்கள் என்றெல்லாம் ஈட்டிய பிற்பாடு – நமக்கு வேறு மார்க்கமிருக்கவில்லை ஆனால் இவர்களது மறுபதிப்புகள் ‘காலத்தின் கட்டாயம்‘ என்றதொரு சூழல்; ‘மும்மூர்த்திகளை மறந்த நீ – ஷெரீப் டாக்புல்லாகக் கடவாய்‘ என்ற ரேஞ்சில் சாபங்கள் என்றெல்லாம் ஈட்டிய பிற்பாடு – நமக்கு வேறு மார்க்கமிருக்கவில்லை இன்று இந்த மறுபதிப்புத் தண்டவாளத்தில் ஓடும் கரி எஞ்சின்கள் புராதனச் சின்னங்களாய் இருப்பினும் – விற்பனையில் குறையே வைக்காது ‘குப்-குப்-குப்‘ என்று சீராய் ஓடுவதென்னவோ நிஜம் தான் – ஆனால் அவ்வப்போது கண்ணில் விழும் அந்தப் ‘புராதன‘ கரித் தூசி தான் லேசாய் உறுத்துகிறது இன்று இந்த மறுபதிப்புத் தண்டவாளத்தில் ஓடும் கரி எஞ்சின்கள் புராதனச் சின்னங்களாய் இருப்பினும் – விற்பனையில் குறையே வைக்காது ‘குப்-குப்-குப்‘ என்று சீராய் ஓடுவதென்னவோ நிஜம் தான் – ஆனால் அவ்வப்போது கண்ணில் விழும் அந்தப் ‘புராதன‘ கரித் தூசி தான் லேசாய் உறுத்துகிறது தொடரும் ஆண்டுகளில் மும்மூர்த்திகளும்; கூர்மண்டையரும் மறுபதிப்பு பவனியைத் தொடர்வது நிச்சயம் – இதற்கென நாம் முதலீடு செய்துள்ளது ஒரு வளமான மன்னரின் பணயத் தொகைக்கு ஈடானது என்பதால் தொடரும் ஆண்டுகளில் மும்மூர்த்திகளும்; கூர்மண்டையரும் மறுபதிப்பு பவனியைத் தொடர்வது நிச்சயம் – இதற்கென நாம் முதலீடு செய்துள்ளது ஒரு வளமான மன்னரின் பணயத் தொகைக்கு ஈடானது என்பதால் So தொடரும் நாட்களிலும் இந்த மறுபதிப்புகளின் பொருட்டு உங்கள் ஆதரவு எங்களுக்கு ரொம்ப ரொம்பத் தேவை \n‘சிறைப் பறவைகள்‘ அந்நாட்களிலேயே பிரமாதமான மொழிபெயர்ப்போடு வெளியான கதையென்பதால் – சிற்சில மாற்றங்களைத் தாண்டி பெரிதாய் பட்டி-டிங்கரிங் ஏதும் செய்திட அவசியப்படவில்லை And- அந்தப் பெரிய சைஸில்; தெளிவான சித்திரங்கள் ரொம்பவே கம்பீரமாய் நடைபோடுகின்றன And- அந்தப் பெரிய சைஸில்; தெளிவான சித்திரங்கள் ரொம்பவே கம்பீரமாய் நடைபோடுகின்றன எனது கொள்ளுப்பேரன் காலத்திற்கு முன்பாக இவை மீண்டும் ஒரு சுற்று மறுபதிப்புக் காண்பது சாத்தியமில்லையென்பதால் – lets enjoy these oldies one last time folks எனது கொள்ளுப்பேரன் காலத்திற்கு முன்பாக இவை மீண்டும் ஒரு சுற்று மறுபதிப்புக் காண்பது சாத்தியமில்லையென்பதால் – lets enjoy these oldies one last time folks உலகின் வேறு எந்த மூலையிலும் இவற்றை எந்த விலை கொடுத்தாலும் பார்த்திட முடியாது என்ற வகையில் we are truly unique with these Fleetway reprints \nமறுபதிப்பின் மீதான topic-ல் இருக்கும் போதே- சின்னதொரு விண்ணப்பமும் கூட ‘ஒரேயொரு வேதாளர் கதையாச்சும் ப்ளீஸ் ‘ஒரேயொரு வேதாளர் கதையாச்சும் ப்ளீஸ்‘ ; ‘வைரஸ்-X‘ மட்டுமாவது‘ ; ‘வைரஸ்-X‘ மட்டுமாவது‘ ; ‘மினி லயன்‘ மறபதிப்பு‘ ; ‘மினி லயன்‘ மறபதிப்பு‘ என்றெல்லாம் அவ்வப்போது வந்திடும் மின்னஞ்சல் வினவல்களுக்கு என்ன பதில் போடுவதென்றே தெரியாத நிலை தான் நம்மவர்களுக்கு ‘ என்றெல்லாம் அவ்வப்போது வந்திடும் மின்னஞ்சல் வினவல்களுக்கு என்ன பதில் போடுவதென்றே தெரியாத நிலை தான் நம்மவர்களுக்கு So அத்தகைய கோரிக்கைகளை அனுப்பும் நண்பர்களே - சற்றே பொறுமையாய் இந்த மும்மூர்த்திகளின் last hurray விழாவை – தொடரும் 2 / 3 ஆண்டுகளில் நாம் அழகாய் நடத்தியாகும்வரை காத்திருங்களேன் So அத்தகைய கோரிக்கைகளை அனுப்பும் நண்பர்களே - சற்றே பொறுமையாய் இந்த மும்மூர்த்திகளின் last hurray விழாவை – தொடரும் 2 / 3 ஆண்டுகளில் நாம் அழகாய் நடத்தியாகும்வரை காத்திருங்களேன் அதன் பின்னர் – மறுபதிப்புத் தடத்தில் உங்களின் wish list-ஐ தடதடக்கச் செய்திடலாம் அதன் பின்னர் – மறுபதிப்புத் தடத்தில் உங்களின் wish list-ஐ தடதடக்கச் செய்திடலாம் அதுவரையிலும் அவ்வப்போது தலைகாட்டும் பிரின்ஸ் / லக்கி / சிக் பில் / டெக்ஸ் மறுபதிப்புகள் தொடர்ந்திடத் தான் செய்யும் ; ஆனால் இந்த Fleetway சமாச்சாரம் முடிந்தான பின்னே மறுபதிப்புகளில் இன்னும் கூடுதல் variety பார்த்திடல் சாத்தியமாகும் \nஅக்டோபரின் பரபரப்பு மீட்டர்களை பிசியாக வைத்திருக்கப் போகுமொரு முக்கிய நாயகரை இந்த வார முன்னோட்டத்தில் பார்த்திடப் போகிறோம் And- இதுவே அவருக்கும் 2015ன் முதல் + இறுதி வாய்ப்பும் கூட And- இதுவே அவருக்கும் 2015ன் முதல் + இறுதி வாய்ப்பும் கூட ரிப்போர்டர் ஜானி தான் அந்த ஆசாமி என்பதை நான் சொல்லவும் தான் வேண்டுமா – என்ன ரிப்போர்டர் ஜானி தான் அந்த ஆசாமி என்பதை நான் சொல்லவும் தான் வேண்டுமா – என்ன “காலனின் காலம்“ ஒரு அக்மார்க், ஜானி த்ரில்லர் “காலனின் காலம்“ ஒரு அக்மார்க், ஜானி த்ரில்லர் இதோ அந்த இதழின் அட்டைப்பட first look இதோ அந்த இதழின் அட்டைப்பட first look ஒரிஜினல் டிசைன் + நமது ஓவியரின் கைவண்ணம் + நமது டிசைனரின் மெருகூட்டல் என்ற கூட்டாஞ்சோற்றுப் படைப்பு இது ஒரிஜினல் டிசைன் + நமது ஓவியரின் கைவண்ணம் + நமது டிசைனரின் மெருகூட்டல் என்ற கூட்டாஞ்சோற்றுப் படைப்பு இது சென்ற மாதம் Pastel shades-களில், மெல்லிய வர்ணங்களில் ராப்பர்களில் ஒரு பகுதி அமைந்திருந்தன... இம்மாதமோ ‘பளிச்‘ வர்ணங்களின் தருணம் சென்ற மாதம் Pastel shades-களில், மெல்லிய வர்ணங்களில் ராப்பர்களில் ஒரு பகுதி அமைந்திருந்தன... இம்மாதமோ ‘பளிச்‘ வர்ணங்களின் தருணம்\nஇது final version அல்ல ; இன்னும் சிற்சிறு மாற்றங்கள் இதனில் உண்டு...\nகதையைப் பொறுத்தவரை நான் புதுசாய் எதையும் சொல்லித் தான் ஜானியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நிலை கிடையாதென்பதால் இதுவொரு அனல் பறக்கும் சாகஸம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன் And இம்முறையும் வர்ணஜாலங்கள் ஒரிஜினல்களில் பிரமாதமாய் அமைந்திருப்பதால்- நமது printing அகப்பையிலும் அழகாய் வந்திடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது And இம்முறையும் வர்ணஜாலங்கள் ஒரிஜினல்களில் பிரமாதமாய் அமைந்திருப்பதால்- நமது printing அகப்பையிலும் அழகாய் வந்திடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது Fingers crossed அப்புறம் ஏற்கனவே நான் சொல்லியிருந்தது போல- ஜானி ஒரு முற்றிலும் மாறுதலான பாணியில்- புதுக் கதாசிரியர் / ஓவியர் கூட்டணியில்- புதிதாய் வலம் வரத் துவங்கியுள்ளார் - பிரெஞ்சு மொழியில். புத்தாண்டில் new look ஜானியை நாம் தரிசிப்போமா - அல்லது தற்போதைய பாணிக் கதைகளே தொடரட்டுமா - அல்லது தற்போதைய பாணிக் கதைகளே தொடரட்டுமா உங்கள் தேர்வு என்னவாகயிருக்கும் folks \nசென்ற வாரப் பதிவின் தலைப்புகளை ‘மாத்தி யோசிக்கும்‘ போட்டிக்கு வந்திருந்த சில பல சீரியஸ் & not so சீரியஸ் முயற்சிகள் ஸ்வாரஸ்யமாய் இருந்தன ஒரு மாதிரியாய் 400+ பின்னூட்டங்களுக்குள் புகுந்து navigate செய்து பார்த்து விட்ட போது- எல்லாப் பெயர்களுமே அழகாய் இருப்பதாய்த் தோன்றியது ஒரு மாதிரியாய் 400+ பின்னூட்டங்களுக்குள் புகுந்து navigate செய்து பார்த்து விட்ட போது- எல்லாப் பெயர்களுமே அழகாய் இருப்பதாய்த் தோன்றியது இறுதில் நான் zone-in செய்தது நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் கீழ்க்கண்ட பெயர்களின் மீதே :\nஎனக்குள் ஒருவள் - (பௌன்சர்)\nபனியுடன் ஒரு பந்தயம் (பிரின்ஸ்)\nஎன் உடன் இறப்பே (டைலன்)\nபுரவியில் ஒரு துறவி (\nSo- அறிவித்தபடியே 2016-ல் வரக் காத்துள்ள லக்கி லூக் சாகஸத்திற்குப் பெயரிடும் பொறுப்பை நண்பரிடம் ஒப்படைக்கிறோம் கதையின் ஆங்கிலப் பெயர் – ‘The Oklahoma Land Rush கதையின் ஆங்கிலப் பெயர் – ‘The Oklahoma Land Rush ' டெக்ஸ் கதையில் நாம் பார்த்த அதே குடியேற்றத்திற்கு இடம்பிடிக்கும் பிரயத்தனங்களை – லக்கியின் ஸ்டைலில் சொல்லியிருக்கும் ஆக்கமிது ' டெக்ஸ் கதையில் நாம் பார்த்த அதே குடியேற்றத்திற்கு இடம்பிடிக்கும் பிரயத்தனங்களை – லக்கியின் ஸ்டைலில் சொல்லியிருக்கும் ஆக்கமிது So -அதற்கேற்றதொரு தலைப்பை தயார் செய்து சொல்லுங்களேன் கார்த்திக் So -அதற்கேற்றதொரு தலைப்பை தயார் செய்து சொல்லுங்களேன் கார்த்திக் (\"சாத்விக் கா சிங்\" போன்ற போஜ்புரி தலைப்புகள் நஹி சாஹியே (\"சாத்விக் கா சிங்\" போன்ற போஜ்புரி தலைப்புகள் நஹி சாஹியே \nAnd caption எழுதும் போட்டிக்கு நண்பர் ரமேஷ்குமாரின் இந்த வரிகள் tick அடிக்கப்படுவதால் லக்கி லூக்கின் ஆங்கில இதழொன்று நமது அன்பளிப்பாய் அவருக்கு அனுப்பப்படும் \nடெக்ஸ் Says: நீ எந்தக் கதை வில்லனப்பா\nZombie 1 Says: நான் வில்லனெல்லாம் கிடையாது. \"சலூனே சமாதி\" (வெளியீடு நிர் #4355) கதையில் ஒரு உதாருக்காக நீ மேல் நோக்கி சுட்டபோது மாடி ரூமில் சம்பந்தமில்லாமல் செத்தவன் நான்... உன்னை..\nZombie 2 Thinks: அதோ... எவனுடைய தொப்பியையோ குறிவைத்து சுடுகிறேன் பேர்வழியென்று பின்னாலிருந்த என் தொப்பைக்குள் குண்டு அனுப்பியவன்.. தோ வரேன்..\nமறக்கும் முன்பாக – ஏற்கனவே \"The லயன் 250\"-க்கான பெயர் முன்மொழிந்தமைக்கு போராட்டக்குழுத் தலீவருக்கும், மாயாவி சிவாவுக்கும் டெக்ஸ் கதாசிரியரின் ஆட்டோகிராப் தாங்கிய இதழ் இந்த மாதம் நமக்கு எட்டி விடும் இத்தாலியில் ஆகஸ்டில் கோடை விடுமுறைகளென்பதால் ஜுலை கடைசி முதலாகவே திரு.போசெல்லி அவர்களை எட்டிப் பிடிக்க இயலவில்லை என்பதே தாமதத்திற்குக் காரணம்\nMoving on, நமது டி.வி. விளம்பர முயற்சிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன தினத்தந்தி TV & News 7 சேனல்களின் prime time-ல் சனி & ஞாயிறுகள் தொடர்ச்சியாய் air செய்யப்படும். அடுத்த மாதம் முதல் சன் நியூஸ்; புதிய தலைமுறை என்று முயற்சிக்கவுள்ளோம். ‘டி.வி.யா தினத்தந்தி TV & News 7 சேனல்களின் prime time-ல் சனி & ஞாயிறுகள் தொடர்ச்சியாய் air செய்யப்படும். அடுத்த மாதம் முதல் சன் நியூஸ்; புதிய தலைமுறை என்று முயற்சிக்கவுள்ளோம். ‘டி.வி.யா அதெல்லாம் நல்லிக்கும்; லலிதா ஜுவல்லரிக்கும் தான் தாக்குப் பிடிக்கும் அதெல்லாம் நல்லிக்கும்; லலிதா ஜுவல்லரிக்கும் தான் தாக்குப் பிடிக்கும்‘ என்று எண்ணிக் கிடந்த என்னை அசைத்துப் பார்த்த புண்ணியம் ஜு.எ.வைச் சாரும்‘ என்று எண்ணிக் கிடந்த என்னை அசைத்துப் பார்த்த புண்ணியம் ஜு.எ.வைச் சாரும் ராத்திரியே விளம்பரங்களுக்கான பலன்கள் தெரியாவிட்டாலும் – சிறுகச் சிறுக நம் வட்டம் பெருகிட இந்தத் துவக்கம் ஒரு பலன் தருமென்ற நம்பிக்கையுள்ளது \nஅப்புறம் சென்ற பதிவில் டாக்புல்லின் ரசிக சிகாமணி - கிட் ஆர்ட்டின் கண்ணன் நீளமாய் எழுதியிருந்த \"லுலுலாயி காவியத்துக்குப்\" பாராட்டாய் 'என் பெயர் டைகர்' hard cover வண்ணப் பதிப்பு ஒன்றினை அன்பளிப்பாய் இங்குள்ள நண்பர் ஒருவர் வழங்கிட ஆசை தெரிவித்து நமக்கு மின்னஞ்சல் செய்துள்ளார் So அந்த ரசிகரின் வாழ்த்துக்களோடு 'எ.பெ.டை' உங்களைத் தேடி வந்திடும் கண்ணன் ; நீங்கள் இதற்கென முன்பதிவு செய்திட வேண்டியிராது \nBefore I log off – இதோ இன்னுமொரு வாய்ப்பு – உங்கள் கற்பனைக் குதிரைகளைக் களமிறக்க இங்கிலாந்தில் ஒரு காமிக்ஸ் ஆர்வலர் இந்தச் சித்திரத்தை ஓவியர் ஒருவரைக் கொண்டு பிரத்யேகமாய் தயார் செய்திருக்கிறார் இங்கிலாந்தில் ஒரு காமிக்ஸ் ஆர்வலர் இந்தச் சித்திரத்தை ஓவியர் ஒருவரைக் கொண்டு பிரத்யேகமாய் தயார் செய்திருக்கிறார் நம் ஆதர்ஷங்கள் இருவர் இதனில் இருப்பதைப் பார்த்த போது உங்களோடு இதனைப் பகிர்ந்திடத் தோன்றியது நம் ஆதர்ஷங்கள் இருவர் இதனில் இருப்பதைப் பார்த்த போது உங்களோடு இதனைப் பகிர்ந்திடத் தோன்றியது இதற்குப் பொருந்துமொரு நயமான caption ஒன்றினை எழுதுங்களேன் இதற்குப் பொருந்துமொரு நயமான caption ஒன்றினை எழுதுங்களேன் ஆளுக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே guys ஆளுக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே guys இம்முறை பரிசு – ரிப்போர்டர் ஜானியின் நியூ லுக் ஆல்பம் \nAnd என்றோ ஒரு சமயம் எனக்கு சில பல டஜன் தர்ம அடிகளை வஞ்சனையின்றிச் சம்பாதித்துக் கொடுத்த ஒரு episode 2016-ல் காத்துள்ளது என்ற சேதியோடு புறப்படுகிறேன் யார் அதன் நாயகர் - அந்த சாகசம் எதுவென்று யூகிக்க அதிக சிரமிராது என்ற நம்பிக்கையோடு நடையைக் கட்டுகிறேன் Bye now all \nவணக்கம்.ஞாயிறுப் பதிவுகள் உங்களுக்கு எவ்விதமொரு பழக்கமாகி விட்டனவோ - அதே கதை தான் எனக்கும் - சனியிரவு முதற்கொண்டே மண்டைக்குள் வசன நடை ஓடத் தொடங்கிவிடுகிறது ஆனால் அழுத்தமான சில கதைகள் வெளியாகியுள்ள இந்த வேளையில் நமது focus அவற்றின் மீதும், அவற்றின் விமர்சனங்கள் மீதும் லயித்து நிற்பது நலமே என்று தோன்றியதால் , கொஞ்சமே கொஞ்சமாய் ஒரு பிரேக் விடத் தீர்மானம் செய்தேன் ஆனால் அழுத்தமான சில கதைகள் வெளியாகியுள்ள இந்த வேளையில் நமது focus அவற்றின் மீதும், அவற்றின் விமர்சனங்கள் மீதும் லயித்து நிற்பது நலமே என்று தோன்றியதால் , கொஞ்சமே கொஞ்சமாய் ஒரு பிரேக் விடத் தீர்மானம் செய்தேன் எனினும், ஞாயிறு காலை எழுந்த நேரம் முதலாய்ப் பாயைப் பிறாண்டாத குறை என்பதால் இதோ ஆஜர் - சில இலகு ரக சிந்தனைகளோடும், கேள்விகளோடும் \nமுதலில் நான் கோர எண்ணியது இம்மாத இதழ்களுள் ஒன்றான சா.ஒ.சி. தொடர்பானதொரு கேள்வி guys கமான்சே தொடரானது டெக்ஸ் பாணியிலோ ; டைகர் பாணியிலோ ; தடாலடிக் கதைகள் ஆகாது என்பதில் இரகசியமில்லை கமான்சே தொடரானது டெக்ஸ் பாணியிலோ ; டைகர் பாணியிலோ ; தடாலடிக் கதைகள் ஆகாது என்பதில் இரகசியமில்லை கதையின் தலைப்புக்கு நியாயம் செய்வது போல் நாயகர் ரெட் பொதுவாகவே கொஞ்சம் சாது தானே கதையின் தலைப்புக்கு நியாயம் செய்வது போல் நாயகர் ரெட் பொதுவாகவே கொஞ்சம் சாது தானே ஹெர்மனின் சித்திர அதகளம் தான் இவருக்கு ஒரு பெரும் பூஸ்ட் என்பதில் சந்தேகமில்லை ஹெர்மனின் சித்திர அதகளம் தான் இவருக்கு ஒரு பெரும் பூஸ்ட் என்பதில் சந்தேகமில்லை My question is : தொடரும் காலங்களில் கமான்சே தொடர்வதில் உங்களுக்கு இசைவு தானா My question is : தொடரும் காலங்களில் கமான்சே தொடர்வதில் உங்களுக்கு இசைவு தானா 2016-ன் நம் அட்டவணையின் கடைசி ஒன்றிரண்டு சீட்களில் நாயகர்கள் துண்டைப் போட்டு இடம் பிடிக்கும் தருணமிது என்பதால் இந்தக் கேள்விக்கான உங்கள் பதில்களுக்கு மதிப்பு நிறையவே உண்டு folks 2016-ன் நம் அட்டவணையின் கடைசி ஒன்றிரண்டு சீட்களில் நாயகர்கள் துண்டைப் போட்டு இடம் பிடிக்கும் தருணமிது என்பதால் இந்தக் கேள்விக்கான உங்கள் பதில்களுக்கு மதிப்பு நிறையவே உண்டு folks ஆகையால் இம்மாத இதழைப் படித்த பின்பு உங்களின் சிந்தனைகள் please \nதொடர்வது இன்னொரு விளிம்பு நிலை நாயகர் டைலன் பற்றிய கேள்வி இவரது கதைகளைப் போட்டால் உள்ளூரில் விற்கிறதோ - இல்லியோ, இத்தாலியில் வரிந்து கட்டிக் கொண்டு ஆர்டர்களைக் குவித்து விடுகிறார்கள் என்பது கண்கூடு இவரது கதைகளைப் போட்டால் உள்ளூரில் விற்கிறதோ - இல்லியோ, இத்தாலியில் வரிந்து கட்டிக் கொண்டு ஆர்டர்களைக் குவித்து விடுகிறார்கள் என்பது கண்கூடு அதற்குள்ளாய் சுமார் 200 பிரதிகள் பீட்சா தேசத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டன அதற்குள்ளாய் சுமார் 200 பிரதிகள் பீட்சா தேசத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டன \"வாராதோ ஓர் விடியலே \" டைலனின் கதை வரிசையினில் ஒரு மாறுபட்ட படைப்பு என்பதால் இது நிச்சயமாய் நம்மிடம் ஷொட்டுக்களைப் பெறுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது And இவை ரொம்பவே ஆரம்ப நாட்கள் மட்டுமே என்ற போதிலும், இதுவரையிலான விமர்சனங்கள் thumbs up ரகமே என்பது புரிகிறது And இவை ரொம்பவே ஆரம்ப நாட்கள் மட்டுமே என்ற போதிலும், இதுவரையிலான விமர்சனங்கள் thumbs up ரகமே என்பது புரிகிறது இங்கே எனது கேள்வி - டைலன் தொடர வேண்டுமா இங்கே எனது கேள்வி - டைலன் தொடர வேண்டுமா ; வேண்டாமா என்பதல்ல ; டைலன் கலரில் தொடர்வது ஓகே-வா - அல்லது இவருக்கு கருப்பு-வெள்ளை போதுமா என்பதே இது பற்றிய உங்களின் சிந்தனைகள் ப்ளீஸ் \nMoving on - நமது இம்மாத மறுபதிப்பு இதழ் தொடர்பாய் ஒரு பொதுவான கேள்வி இதற்கான பதில்களைத் தெரிந்து கொண்டு நான் உடனடியாய் ஒரு action plan -ஐ அமலுக்கு கொணரப் போவதில்லை எனினும், மண்டையின் ஒரு மூலையில் நிற்கும் இவை தொடர்பானதொரு long term planning -க்கு உங்கள் பதில்கள் உதவிடும் என்று தோன்றுவதால் கேட்டு வைக்கிறேன் இதற்கான பதில்களைத் தெரிந்து கொண்டு நான் உடனடியாய் ஒரு action plan -ஐ அமலுக்கு கொணரப் போவதில்லை எனினும், மண்டையின் ஒரு மூலையில் நிற்கும் இவை தொடர்பானதொரு long term planning -க்கு உங்கள் பதில்கள் உதவிடும் என்று தோன்றுவதால் கேட்டு வைக்கிறேன் நமது முத்து காமிக்ஸின் மறுபதிப்புகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க - அதே பாணிகளில் மீண்டும் black & white இதழ்களாக அல்லாது ( லயனின் / திகிலின் / மினி-லயனின் டாப் ஹிட்ஸ் கதைகளுள்) நீங்கள் வண்ண அவதாரில் பார்த்திட விரும்பும் கதைகள் எவையாக இருக்கும் நமது முத்து காமிக்ஸின் மறுபதிப்புகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க - அதே பாணிகளில் மீண்டும் black & white இதழ்களாக அல்லாது ( லயனின் / திகிலின் / மினி-லயனின் டாப் ஹிட்ஸ் கதைகளுள்) நீங்கள் வண்ண அவதாரில் பார்த்திட விரும்பும் கதைகள் எவையாக இருக்கும் சின்னதாய் ஒரு பட்டியல் மட்டும் ப்ளீஸ் - with your டாப் 6 selections சின்னதாய் ஒரு பட்டியல் மட்டும் ப்ளீஸ் - with your டாப் 6 selections இங்கே 'தலையின்' கதைப் பட்டியல் வேண்டாமே - ப்ளீஸ் ; அதைத் திகட்டத் திகட்டக் கேட்டாகி விட்டோமே இங்கே 'தலையின்' கதைப் பட்டியல் வேண்டாமே - ப்ளீஸ் ; அதைத் திகட்டத் திகட்டக் கேட்டாகி விட்டோமே பிரின்ஸ் போன்ற கதைகளை வண்ணத்தில் மறுபதிப்பிடுவதெனில் பெரிய பட்ஜெட்களுக்கு அவசியமின்றிப் போய் விடுகிறது என்பதால் இது போன்ற கதைகளுக்குள் உங்களின் தேர்வுகளை அமைத்திட்டால் சுலபமென்பென் \nஎனது கேள்வி எண் நான்கு - ஜாலியானது சென்ற பதிவின் தலைப்பை இம்மாத இதழ்களின் தலைப்புகளுக்கு apply செய்து - கொஞ்சம் மாற்றித் தான் யோசியுங்களேன் guys சென்ற பதிவின் தலைப்பை இம்மாத இதழ்களின் தலைப்புகளுக்கு apply செய்து - கொஞ்சம் மாற்றித் தான் யோசியுங்களேன் guys இதே 4 இதழ்களுக்குப் புதிதாய் பெயர்கள் சூட்டுவதெனில் உங்களின் உருவாக்கங்கள் என்னவாக இருந்திடும் இதே 4 இதழ்களுக்குப் புதிதாய் பெயர்கள் சூட்டுவதெனில் உங்களின் உருவாக்கங்கள் என்னவாக இருந்திடும் Leg pulling ரகத்தில் இல்லாது - சீரியசாக முயற்சித்துப் பாருங்களேன் Leg pulling ரகத்தில் இல்லாது - சீரியசாக முயற்சித்துப் பாருங்களேன் BEST 4 மாற்றுப் பெயர்களை முன்வைக்கும் நண்பருக்கு - 2016-ன் ஒரு லக்கி லுக் இதழுக்கான பெயர்சூட்டும் உரிமையைப் பரிசாக்கிடுவோமே \nகேள்வி எண் 5 - மீண்டும் கொஞ்சம் long term planning தொடர்பானதே BATMAN கதைகளுக்கான உரிமைகளைப் பெற்றிட நாம் குட்டிக்கரணங்கள் அடித்து வருவதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன் BATMAN கதைகளுக்கான உரிமைகளைப் பெற்றிட நாம் குட்டிக்கரணங்கள் அடித்து வருவதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன் அதனில் 90% வெற்றி கண்டுள்ள நிலையில் - அடுத்த 4 ஆண்டுகளுக்காவது நாம் வெளியிட எண்ணிடும் BATMAN கதைகளைக் கொண்டதொரு மெகா பட்டியலை உருவாக்கிட வேண்டியுள்ளது அதனில் 90% வெற்றி கண்டுள்ள நிலையில் - அடுத்த 4 ஆண்டுகளுக்காவது நாம் வெளியிட எண்ணிடும் BATMAN கதைகளைக் கொண்டதொரு மெகா பட்டியலை உருவாக்கிட வேண்டியுள்ளது ஐரோப்பாவில் போல ஒவ்வொரு மூன்று மாதமும் ஆர்டர் தந்து அவ்வப்போது கதைகளை வாங்கிக் கொள்ளும் வசதிகள் இங்கே கிடையாது என்பதால் - ஏக் தம்மில் ஒட்டு மொத்த selection களையும் தெரியப்படுத்திடும் அவசியம் இங்குள்ளது ஐரோப்பாவில் போல ஒவ்வொரு மூன்று மாதமும் ஆர்டர் தந்து அவ்வப்போது கதைகளை வாங்கிக் கொள்ளும் வசதிகள் இங்கே கிடையாது என்பதால் - ஏக் தம்மில் ஒட்டு மொத்த selection களையும் தெரியப்படுத்திடும் அவசியம் இங்குள்ளது இயன்ற அளவு நான் முயற்சி செய்து வரும் போதிலும், ஒற்றை ஆளாய் BATMAN கதைக் கடலினுள் மூழ்கி எல்லா முத்துக்களையும் கரை சேர்ப்பது அசாத்தியம் இயன்ற அளவு நான் முயற்சி செய்து வரும் போதிலும், ஒற்றை ஆளாய் BATMAN கதைக் கடலினுள் மூழ்கி எல்லா முத்துக்களையும் கரை சேர்ப்பது அசாத்தியம் So - உங்களுள் உள்ள BATMAN ரசிகர்கள் / collectors இதனில் எனக்கு உதவிட வேண்டி வரும் guys So - உங்களுள் உள்ள BATMAN ரசிகர்கள் / collectors இதனில் எனக்கு உதவிட வேண்டி வரும் guys உங்களின் வாசிப்புக் களங்களில் இருந்து தரமான ; நமக்கு ஒத்துப் போகக் கூடிய கதைகளின் பட்டியல்களைப் போட்டு அனுப்பிட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் \nகோரிக்கை # 6 - நம் இரவுக் கழுகாரைச் சார்ந்தது ஈரோட்டில் நாம் மறுபதிப்பிட தேர்வு செய்த \"பழி வாங்கும் புயல்\" கதையின் ஒரிஜினல் இத்தாலியப் பெயரினை தேடிக் கண்டு பிடிக்கும் பணி நம் முன்னே நிற்கிறது ஈரோட்டில் நாம் மறுபதிப்பிட தேர்வு செய்த \"பழி வாங்கும் புயல்\" கதையின் ஒரிஜினல் இத்தாலியப் பெயரினை தேடிக் கண்டு பிடிக்கும் பணி நம் முன்னே நிற்கிறது அந்நாட்களில் பொனெல்லியில் ஆர்டர் செய்வது கடுதாசி மார்க்கமாய் எனும் பொழுது முறையாக அந்த விபரங்களை நாம் database -ல் போட்டு வைத்திருக்கும் சாத்தியமில்லை அந்நாட்களில் பொனெல்லியில் ஆர்டர் செய்வது கடுதாசி மார்க்கமாய் எனும் பொழுது முறையாக அந்த விபரங்களை நாம் database -ல் போட்டு வைத்திருக்கும் சாத்தியமில்லை And அந்நாட்களது டெலெக்ஸ் ; பாக்ஸ் செய்திப் பரிமாற்றங்கள் எல்லாமே இப்போது வெள்ளைக் காகிதங்களாய் மட்டுமே பைல்களில் துயில் பயில்கின்றன And அந்நாட்களது டெலெக்ஸ் ; பாக்ஸ் செய்திப் பரிமாற்றங்கள் எல்லாமே இப்போது வெள்ளைக் காகிதங்களாய் மட்டுமே பைல்களில் துயில் பயில்கின்றன So - யாரேனும் நண்பர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பின், ஏன் வேலை சற்றே சுலபமாகிடும் \nBefore I sign off - கனமான கதைகள் கொண்டதொரு வார இறுதியினை லேசாக்கிட ஒரு லேசான முயற்சி இதோ உள்ள நம்மவரின் சித்திரத்துக்குப் பொருந்தும் ஒரு நயமான caption எழுதிடுங்களேன் இதோ உள்ள நம்மவரின் சித்திரத்துக்குப் பொருந்தும் ஒரு நயமான caption எழுதிடுங்களேன் சிற்சில நிபந்தனைகள் ப்ளீஸ் : ஆளுக்கு மூன்றே வாய்ப்புகள் மட்டுமே ; and இது இன்று ஒரு நாளைக்கு மட்டுமான போட்டி மட்டுமே ; so இன்றிரவுக்குள் இதன் கடையை மூடி விடுவோம் சிற்சில நிபந்தனைகள் ப்ளீஸ் : ஆளுக்கு மூன்றே வாய்ப்புகள் மட்டுமே ; and இது இன்று ஒரு நாளைக்கு மட்டுமான போட்டி மட்டுமே ; so இன்றிரவுக்குள் இதன் கடையை மூடி விடுவோம் வெற்றி பெறும் வாசகருக்கு ஒரு CINEBOOK ஆங்கில லக்கி லுக் இதழ் நம் அன்பளிப்பு வெற்றி பெறும் வாசகருக்கு ஒரு CINEBOOK ஆங்கில லக்கி லுக் இதழ் நம் அன்பளிப்பு so தட்டி விடலாமே அந்தக் கற்பனைப் புரவிகளை so தட்டி விடலாமே அந்தக் கற்பனைப் புரவிகளை Bye for now all \nP.S : And இன்னமுமொரு முக்கிய கேள்வி : இருக்கும் நாயகர் பட்டியலே ஆஞ்சநேயர் வால் போல் நீண்டு நிற்கும் போது - இப்போதைக்குப் புது அறிமுகங்களும் அவசியம் என்று நினைக்கிறீர்களா guys - அல்லது தற்போதைய தொடர்கள் ஏதேனும் முடிவுறும் வரை புதுசுக்குள் தலை நுழைக்காது இருப்பதே உத்தமம் என்று சொல்வீர்களா \nவணக்கம். என்னவோ தெரியவில்லை - கடைசி மூன்று மாதங்களாகவே நமது டெஸ்பாட்ச் தினம் ஒரு வெள்ளிக் கிழமையாகவே அமைந்து வருகிறது அதிலும் இன்றைக்கு எங்கள் நகரில் காலை 9 முதல் இரவு 7 வரை முழு மின்தடை என்ற குண்டை E.B தூக்கிப் போட்டிருந்தது வியாழன் இரவினில் அதிலும் இன்றைக்கு எங்கள் நகரில் காலை 9 முதல் இரவு 7 வரை முழு மின்தடை என்ற குண்டை E.B தூக்கிப் போட்டிருந்தது வியாழன் இரவினில் வார இறுதிக்குள் உங்கள் கைகளில் புத்தகங்கள் இல்லாது போனால் லியனார்டோ தாத்தா தனது அசிஸ்டண்டுக்குத் தரும் 'கவனிப்பு' தான் நமக்கும் கிட்டும் என்ற பரபரப்போடு பைண்டிங் பணியாளர்களையும், நமது பேக்கிங் பணியாளர்களையும் பகல் பொழுதில் சுத்தமாய்ப் பெண்டைக் கழற்றி விட, மாலை 4 மணிக்கு முன்பாகவே உங்களின் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன - 4 இதழ்கள் அடங்கிய டப்பாக்களில் வார இறுதிக்குள் உங்கள் கைகளில் புத்தகங்கள் இல்லாது போனால் லியனார்டோ தாத்தா தனது அசிஸ்டண்டுக்குத் தரும் 'கவனிப்பு' தான் நமக்கும் கிட்டும் என்ற பரபரப்போடு பைண்டிங் பணியாளர்களையும், நமது பேக்கிங் பணியாளர்களையும் பகல் பொழுதில் சுத்தமாய்ப் பெண்டைக் கழற்றி விட, மாலை 4 மணிக்கு முன்பாகவே உங்களின் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன - 4 இதழ்கள் அடங்கிய டப்பாக்களில் அசாத்திய வேலை இன்றைக்கு நம்மவர்களுக்கு அசாத்திய வேலை இன்றைக்கு நம்மவர்களுக்கு So -நாளைக் காலையில் உங்கள் நகர் கூரியர்களின் கதவுகளின் வலிமைகளைப் பரிசோதிக்கத் தொடங்கிடலாம் \nAnd \"என் பெயர் டைகர்\" பற்றிய அறிவிப்பை இம்மாத இதழ்களில் ஏதேனும் ஒரு மூலைக்குள் நுழைக்க வாய்ப்பில்லாது போய் விட்டது இந்த மின்தடை சிக்கலினால் எங்கள் UPS தாக்குப் பிடித்த வரைக்கும் இதற்கான அறிவிப்பு + முன்பதிவுப் படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து பிரதிகளுள் நுழைத்திருந்தோம் ; but அது ஒரு 100-ஐத் தாண்டியிராது எங்கள் UPS தாக்குப் பிடித்த வரைக்கும் இதற்கான அறிவிப்பு + முன்பதிவுப் படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து பிரதிகளுள் நுழைத்திருந்தோம் ; but அது ஒரு 100-ஐத் தாண்டியிராது So இதுவே நமது முதல் official அறிவிப்பாய் எடுத்துக் கொள்ளுங்களேன் guys So இதுவே நமது முதல் official அறிவிப்பாய் எடுத்துக் கொள்ளுங்களேன் guys ஒரு முழு வண்ண deluxe பதிப்பு + ஒரு economy black & white பதிப்பு என்ற இந்த பரீட்சார்த்த பார்முலாவுக்கு பெரும்பான்மை நண்பர்கள் thumbs up தந்திருப்பதால் - we are going ahead with it as planned ஒரு முழு வண்ண deluxe பதிப்பு + ஒரு economy black & white பதிப்பு என்ற இந்த பரீட்சார்த்த பார்முலாவுக்கு பெரும்பான்மை நண்பர்கள் thumbs up தந்திருப்பதால் - we are going ahead with it as planned (மாயாவி.சிவா : உங்களுக்கு மட்டும் மாற்றிப் பொருள்பட்டதன் காரணம் விளங்கவில்லை எனக்கு (மாயாவி.சிவா : உங்களுக்கு மட்டும் மாற்றிப் பொருள்பட்டதன் காரணம் விளங்கவில்லை எனக்கு ; ஏதேனும் ஒரு வடிவம் மட்டும் தான் சாத்தியமெனில் அந்த சாய்ஸை நான் வழங்கியிருக்கவே மாட்டேனே - கண்ணை மூடிக் கொண்டு குறைந்த விலையிலான economy பதிப்புக்கு அறிவிப்பே வெளியிட்டு இருப்பேனே ; ஏதேனும் ஒரு வடிவம் மட்டும் தான் சாத்தியமெனில் அந்த சாய்ஸை நான் வழங்கியிருக்கவே மாட்டேனே - கண்ணை மூடிக் கொண்டு குறைந்த விலையிலான economy பதிப்புக்கு அறிவிப்பே வெளியிட்டு இருப்பேனே இந்த dual edition பற்றிய உங்களின் சிந்தனைக் கோரல் தானே கடந்த பதிவின் நோக்கமே இந்த dual edition பற்றிய உங்களின் சிந்தனைக் கோரல் தானே கடந்த பதிவின் நோக்கமே \nAnd - மிஸ்டர்.டைகர் கதைவரிசையில் 5 கதைகளா - 6 கதைகளா என்ற சந்தேகமும் வேண்டாமே இந்தக் கதைச் சுற்றில் மொத்தம் 5 பாகங்களே & இந்த சாகசம் 5 பாகங்களில் நிறைவு பெறுகிறது ஆனால் நான் கடந்த பதிவினில் 5+1 என்று குறிப்பிட்டுச் சென்றிருந்தது காரணத்தோடு தான் ஆனால் நான் கடந்த பதிவினில் 5+1 என்று குறிப்பிட்டுச் சென்றிருந்தது காரணத்தோடு தான் படைப்பாளிகள் இந்த 5 பாகக் கதையின் மையப் புள்ளிகளை ஒன்று திரட்டி ஒரு விதமான ரீமேக் செய்து ஆறாவதாய் ஒரு ஆல்பத்தை 2007-ல் வெளியிட்டுள்ளனர் படைப்பாளிகள் இந்த 5 பாகக் கதையின் மையப் புள்ளிகளை ஒன்று திரட்டி ஒரு விதமான ரீமேக் செய்து ஆறாவதாய் ஒரு ஆல்பத்தை 2007-ல் வெளியிட்டுள்ளனர் சொல்லப் போனால் டைகர் தொடரின் இறுதி ஆல்பம் என்ற வகையில் இதுவொரு collector's edition சொல்லப் போனால் டைகர் தொடரின் இறுதி ஆல்பம் என்ற வகையில் இதுவொரு collector's edition ஆனால் அதே கதையைப் புதியதொரு பார்வைக் கோணத்தில் சொல்லியுள்ளது மட்டுமே வித்தியாசம் ஆனால் அதே கதையைப் புதியதொரு பார்வைக் கோணத்தில் சொல்லியுள்ளது மட்டுமே வித்தியாசம் So இதனையும் தற்போது \"எ.பெ.டை\" கதையோடு இணைத்து விட்டால் ஒரே கிச்சடியை மாறி மாறிக் கிளறியது போல் ஒருவித அலுப்புத் தட்டி விடும் So இதனையும் தற்போது \"எ.பெ.டை\" கதையோடு இணைத்து விட்டால் ஒரே கிச்சடியை மாறி மாறிக் கிளறியது போல் ஒருவித அலுப்புத் தட்டி விடும் \"எ.பெ.டை\" வெளி வந்து கொஞ்ச அவகாசத்துக்குப் பின்பாக இந்த one shot 62 பக்க அல்பத்தை (தேவையென்று நினைப்பின்) வெளியிட்டுக் கொள்வோமே \nஇதனில் கதாசிரியர் சார்லியரின் பங்கும் உண்டு என்பதால் - சேகரிப்பின் பொருட்டு இதற்கொரு பிரத்யேக மதிப்பிருக்கலாம் \nசரி...நாளைய பொழுது பௌன்சரின் பொழுதா டைலனின் பொழுதா என்ற கேள்விக்கு பதிலறியக் காத்திருப்போம் - ஆவலாய் படிக்கப் படிக்க ஒவ்வொரு இதழ் பற்றியும் உங்களின் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் படிக்கப் படிக்க ஒவ்வொரு இதழ் பற்றியும் உங்களின் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் \nP.S : மதுரைப் புத்தக விழாவின் இறுதி 3 நாட்கள் காத்துள்ளன காலை முதல் நமது ஸ்டாலில் புதிய வெளியீடுகள் கிடைக்கும் காலை முதல் நமது ஸ்டாலில் புதிய வெளியீடுகள் கிடைக்கும் \nவணக்கம். சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம் ; ஆனால் இந்த ஞாயிறின் பதிவுக்கான உங்களின் பலதரப்பட்ட எண்ணச் சிதறல்கள் என்னுள் நிறைய சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது என்பது தான் நிஜம் விலை அதிகமே என்ற ஆதங்கத்தை முன்வைத்துள்ள நண்பர்களும் சரி ; அதன் அவசியங்களைச் சுட்டிக் காட்டிய நண்பர்களும் சரி - நம் மீது உண்மையான ஈடுபாடு கொண்டவர்களே என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை எனும் போது வருத்தங்களுக்கும் இடமில்லை விலை அதிகமே என்ற ஆதங்கத்தை முன்வைத்துள்ள நண்பர்களும் சரி ; அதன் அவசியங்களைச் சுட்டிக் காட்டிய நண்பர்களும் சரி - நம் மீது உண்மையான ஈடுபாடு கொண்டவர்களே என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை எனும் போது வருத்தங்களுக்கும் இடமில்லை And ஒரு ஆரோக்கியமான விவாதத்தால் தளம் நிரம்பிடும் போது பார்க்கப் / படிக்க ரொம்பவே நயமாக உள்ளது And ஒரு ஆரோக்கியமான விவாதத்தால் தளம் நிரம்பிடும் போது பார்க்கப் / படிக்க ரொம்பவே நயமாக உள்ளது மாறுபடும் பார்வைகள் ; ஆத்மார்த்த அக்கறையோடு சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை நிதானமாய்ப் படித்த போது எனக்குள்ளும் சில பல டப்பாக்களை 'டிக்' அடிக்க சாத்தியமானது என்பது ப்ளஸ் பாய்ன்ட் மாறுபடும் பார்வைகள் ; ஆத்மார்த்த அக்கறையோடு சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை நிதானமாய்ப் படித்த போது எனக்குள்ளும் சில பல டப்பாக்களை 'டிக்' அடிக்க சாத்தியமானது என்பது ப்ளஸ் பாய்ன்ட் 2016-ன் அட்டவணை கூப்பிடு தூரத்தில் உள்ள இத்தருணத்தில் இந்த மினி சர்ச்சையும் ஓர் விதத்தில் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டேன் \n\"விலை\"....\"சரியான விலை\" என்ற ரீதியிலான கேள்விக்குள்ளே நுழையும் முன்பாக எனக்கு 11-ஆம் வகுப்பில் பொருளாதாரப் பாடம் நடத்திய ஆசிரியர் தான் நினைவுக்கு வருகிறார் DEMAND (தேவை) எனும் நேர்கோடும், SUPPLY (வரத்து) எனும் இன்னொரு நேர்கோடும் உரசிக் கொள்ளும் புள்ளி தான் விலை என்று போர்டில் படம் போட்டுச் சொல்லிக் கொடுப்பார் DEMAND (தேவை) எனும் நேர்கோடும், SUPPLY (வரத்து) எனும் இன்னொரு நேர்கோடும் உரசிக் கொள்ளும் புள்ளி தான் விலை என்று போர்டில் படம் போட்டுச் சொல்லிக் கொடுப்பார் ஆனால் அவரிடம் நமது காமிக்ஸ் துறையின் பொருளாதாரக் கோட்பாடுகளைச் சொல்லியிருந்தால் - 'ஆளை விடுங்க சாமி ஆனால் அவரிடம் நமது காமிக்ஸ் துறையின் பொருளாதாரக் கோட்பாடுகளைச் சொல்லியிருந்தால் - 'ஆளை விடுங்க சாமி' என்று ஓட்டமாய் ஓடியே போயிருப்பார் ' என்று ஓட்டமாய் ஓடியே போயிருப்பார் Simply because \"விலை\" என்று நம்மிடையே தற்போது புழக்கத்தில் இருக்கும் அந்த ரூ.40 ; 50 ; 60 என்ற நம்பர்கள் எல்லாமே தற்போதைய DEMAND-ன் அடிப்படையில் நிர்ணயம் ஆகிடுபவை அல்ல Simply because \"விலை\" என்று நம்மிடையே தற்போது புழக்கத்தில் இருக்கும் அந்த ரூ.40 ; 50 ; 60 என்ற நம்பர்கள் எல்லாமே தற்போதைய DEMAND-ன் அடிப்படையில் நிர்ணயம் ஆகிடுபவை அல்ல இன்றைய தேதிக்கு உள்ளதொரு தேவை + கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குள்ளாக எழுமென்று நாம் எதிர்பார்க்கும் தேவையையும் இணைத்து ஒரு குருட்டுக்கணக்கில் தான் print run -ஐ நிர்ணயம் செய்கின்றோம் ; and அதன் அடிப்படையில் தான் விலையும் நிர்ணயம் காண்கிறது இன்றைய தேதிக்கு உள்ளதொரு தேவை + கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குள்ளாக எழுமென்று நாம் எதிர்பார்க்கும் தேவையையும் இணைத்து ஒரு குருட்டுக்கணக்கில் தான் print run -ஐ நிர்ணயம் செய்கின்றோம் ; and அதன் அடிப்படையில் தான் விலையும் நிர்ணயம் காண்கிறது So துவக்கப் புள்ளியிலேயே நாம் நிறைய compromise செய்து கொள்ளத் தயாரான பின்பு தான் இன்றைய ரெகுலர் விலைகள் சாத்தியமாகின்றன So துவக்கப் புள்ளியிலேயே நாம் நிறைய compromise செய்து கொள்ளத் தயாரான பின்பு தான் இன்றைய ரெகுலர் விலைகள் சாத்தியமாகின்றன (ஆஹா...அடுத்த விலையேற்றத்துக்கு பிட்டைப் போட்டுட்டானா (ஆஹா...அடுத்த விலையேற்றத்துக்கு பிட்டைப் போட்டுட்டானா என்ற கேள்வி உங்கள் மனதில் இழையோடத் தொடங்கினால் - worry not ; இன்றைய விலைகளில் 2016-ல் எவ்வித மாற்றங்களும் கிடையவே கிடையாது என்ற கேள்வி உங்கள் மனதில் இழையோடத் தொடங்கினால் - worry not ; இன்றைய விலைகளில் 2016-ல் எவ்வித மாற்றங்களும் கிடையவே கிடையாது ) \"என் பெயர் டைகர்\" விலை அதிகமென்ற கருத்துக் கொண்ட நண்பர்களிடம் நான் கோரிடும் புரிதல் இது மட்டுமே ) \"என் பெயர் டைகர்\" விலை அதிகமென்ற கருத்துக் கொண்ட நண்பர்களிடம் நான் கோரிடும் புரிதல் இது மட்டுமே ஆண்டுதோறும் எங்கள் கிட்டங்கியிலிருந்து வெளியே செல்லும் சரக்குகளுக்கும் , உள்ளே புகுந்திடும் புதுச் சரக்குகளுக்கும் மத்தியினில் ஒரு மல்யுத்தப் போட்டி நடத்தினால் புது வரவுகள் ஒரே நொடியில் hands down ஜெயித்து விடும் ஆண்டுதோறும் எங்கள் கிட்டங்கியிலிருந்து வெளியே செல்லும் சரக்குகளுக்கும் , உள்ளே புகுந்திடும் புதுச் சரக்குகளுக்கும் மத்தியினில் ஒரு மல்யுத்தப் போட்டி நடத்தினால் புது வரவுகள் ஒரே நொடியில் hands down ஜெயித்து விடும் கொஞ்ச காலம் காத்திருப்பினும் விற்றுக் கொள்ளக் கூடிய ரெகுலர் இதழ்களுக்காக இந்தப் பொதி சுமப்புப் படலத்தை செய்திடுவது நமக்குப் பழகிப் போய் விட்டது ; ஆனால் விற்பனை guarantee இல்லா விலை கூடுதலான இதழ்களின் பொருட்டு நாம் அதே பாணியை / பணியைத் தொடரத் தயங்குவதே customized imprints எனும் குடைக்குக் கீழே 'எ.பெ.டை' இதழினை ஐக்கியமாக்கிடும் முயற்சி கொஞ்ச காலம் காத்திருப்பினும் விற்றுக் கொள்ளக் கூடிய ரெகுலர் இதழ்களுக்காக இந்தப் பொதி சுமப்புப் படலத்தை செய்திடுவது நமக்குப் பழகிப் போய் விட்டது ; ஆனால் விற்பனை guarantee இல்லா விலை கூடுதலான இதழ்களின் பொருட்டு நாம் அதே பாணியை / பணியைத் தொடரத் தயங்குவதே customized imprints எனும் குடைக்குக் கீழே 'எ.பெ.டை' இதழினை ஐக்கியமாக்கிடும் முயற்சி So ரெகுலர் சந்தா விலைகளில் \"எ.பெ.டை\".இதழைப் புகுத்திட இயலாததன் பின்னணி இதுவே \nஅடுத்த கேள்வி - why now இந்த இதழின் அறிவிப்புக்கு இப்போதென்ன அவசியமென்ற வினா..... இந்த இதழின் அறிவிப்புக்கு இப்போதென்ன அவசியமென்ற வினா..... இன்னும் 45 நாட்களில் 2016-ன் அட்டவணை உங்களிடம் ஒப்படைக்க வேண்டிய வேளை இது இன்னும் 45 நாட்களில் 2016-ன் அட்டவணை உங்களிடம் ஒப்படைக்க வேண்டிய வேளை இது சில அர்த்தஜாமத்துச் சிந்தனைகளின் பேரில் அட்டவணையில் சில கூட்டல்கள், கழித்தல்கள் அவ்வப்போது நடந்து வந்தாலும் - ஒரு விஷயத்தில் மட்டும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை சில அர்த்தஜாமத்துச் சிந்தனைகளின் பேரில் அட்டவணையில் சில கூட்டல்கள், கழித்தல்கள் அவ்வப்போது நடந்து வந்தாலும் - ஒரு விஷயத்தில் மட்டும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை அது தான் - 2016-ல் டைகருக்கு ஒரு slot கூட இல்லாத சங்கதி அது தான் - 2016-ல் டைகருக்கு ஒரு slot கூட இல்லாத சங்கதி இளம் டைகர் கதைகள் தொடராய் செல்வதால் அவற்றைக் கையாள சங்கடம் ; இந்த மிஸ்டர்.ப்ளூபெர்ரி தொடரில் 5+1 கதைகள் உள்ள நிலையில் அவற்றையும் அட்டவணைக்குள் நுழைக்க வாய்ப்பில்லை இளம் டைகர் கதைகள் தொடராய் செல்வதால் அவற்றைக் கையாள சங்கடம் ; இந்த மிஸ்டர்.ப்ளூபெர்ரி தொடரில் 5+1 கதைகள் உள்ள நிலையில் அவற்றையும் அட்டவணைக்குள் நுழைக்க வாய்ப்பில்லை So 2016-ல் மட்டுமல்ல ; தொடரும் ஆண்டுகளிலும் இதே சிக்கல்களின் காரணமாய் \"டைகர் எக்ஸ்பிரஸ் \" புறப்படவே போவதில்லை என்பது தான் கஷ்டமான ; கசப்பான நிஜம் So 2016-ல் மட்டுமல்ல ; தொடரும் ஆண்டுகளிலும் இதே சிக்கல்களின் காரணமாய் \"டைகர் எக்ஸ்பிரஸ் \" புறப்படவே போவதில்லை என்பது தான் கஷ்டமான ; கசப்பான நிஜம் டைகர் போன்றதொரு ஆர்ப்பரிக்கும் நாயகரை இப்படி VRS கொடுத்து மூலையில் அமரச் செய்ய மனது கேட்கவில்லை என்பதோடு - டைகர் ரசிகர்களின் கடுப்பையும் 2016 அட்டவணை ஈட்டிடுமே என்ற ஆதங்கமும் எனக்குள்ளே டைகர் போன்றதொரு ஆர்ப்பரிக்கும் நாயகரை இப்படி VRS கொடுத்து மூலையில் அமரச் செய்ய மனது கேட்கவில்லை என்பதோடு - டைகர் ரசிகர்களின் கடுப்பையும் 2016 அட்டவணை ஈட்டிடுமே என்ற ஆதங்கமும் எனக்குள்ளே So அட்டவணை ; அடுத்தாண்டுச் சந்தா என்ற ஒரு வட்டத்துக்குள் புகுந்திடும் முன்பாக \"எ.பெ.டை\" அறிவிப்பை வெளியிட்டால் - மேற்சொன்ன சிக்கல்களில் பெரும்பான்மையைத் தவிர்த்துக் கொள்ளலாமே என்று தோன்றியது So அட்டவணை ; அடுத்தாண்டுச் சந்தா என்ற ஒரு வட்டத்துக்குள் புகுந்திடும் முன்பாக \"எ.பெ.டை\" அறிவிப்பை வெளியிட்டால் - மேற்சொன்ன சிக்கல்களில் பெரும்பான்மையைத் தவிர்த்துக் கொள்ளலாமே என்று தோன்றியது \nடைகரின் இன்றைய கதைகள் அவ்வளவாய் சோபிக்காது போனமைக்கு எனது நெகடிவ் பில்டப் தான் காரணம் என்ற கருத்தை எவ்விதம் அணுகுவதென்று எனக்குத் தெரியவில்லை எனது பில்டப்போ / பில்டப்பின்மையோ ஒரு கதையின் வெற்றி / தோல்வியை நிர்ணயம் செய்திடப் போகிறதா - என்ன எனது பில்டப்போ / பில்டப்பின்மையோ ஒரு கதையின் வெற்றி / தோல்வியை நிர்ணயம் செய்திடப் போகிறதா - என்ன நானென்ன அத்தனை ஞானமுள்ள விமர்சகனா நானென்ன அத்தனை ஞானமுள்ள விமர்சகனா - அல்லது நீங்கள் தான் அறியாக் குழந்தைகளா - அல்லது நீங்கள் தான் அறியாக் குழந்தைகளா நான் திரும்பத் திரும்பச் சொல்ல வருவதெல்லாம் - நாம் டைகரின் உச்சத்தை எடுத்த எடுப்பிலேயே தரிசனம் செய்து பழகி விட்டதால் - நார்மலான கதைகள் கூட ஒரு மாற்றுக் குறைவாகத் தெரியக்கூடுமென்பதெ நான் திரும்பத் திரும்பச் சொல்ல வருவதெல்லாம் - நாம் டைகரின் உச்சத்தை எடுத்த எடுப்பிலேயே தரிசனம் செய்து பழகி விட்டதால் - நார்மலான கதைகள் கூட ஒரு மாற்றுக் குறைவாகத் தெரியக்கூடுமென்பதெ \"ஜொலிக்கும் சாவுகளையும்\" ; \"சொர்ணச் சுடுகாடுகளையும்\" அளவுகோல்களாகக் கொள்ளாது டைகரின் இதர சாகசங்களை அணுகினால் சிக்கலிராது என்பதே எனது நிலைப்பாடு \"ஜொலிக்கும் சாவுகளையும்\" ; \"சொர்ணச் சுடுகாடுகளையும்\" அளவுகோல்களாகக் கொள்ளாது டைகரின் இதர சாகசங்களை அணுகினால் சிக்கலிராது என்பதே எனது நிலைப்பாடு தவிர, ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கதைக்கும் நான் அதே \"ஆஹா..ஓஹோ..\" பில்டப் / முன்னோட்டங்கள் செய்யத் தொடங்கினால் - மிச்சம் சொச்சமிருக்கும் எனது நம்பகத்தன்மையை அரிசோனாவின் கணவாய்களில் தான் தேட வேண்டி வருமன்றோ தவிர, ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கதைக்கும் நான் அதே \"ஆஹா..ஓஹோ..\" பில்டப் / முன்னோட்டங்கள் செய்யத் தொடங்கினால் - மிச்சம் சொச்சமிருக்கும் எனது நம்பகத்தன்மையை அரிசோனாவின் கணவாய்களில் தான் தேட வேண்டி வருமன்றோ And \"எ.பெ.டை. கதைகள் மின்னும் மரண தரத்தில் இராதே ; அதன் பொருட்டு காசைச் செலவு செய்வதா And \"எ.பெ.டை. கதைகள் மின்னும் மரண தரத்தில் இராதே ; அதன் பொருட்டு காசைச் செலவு செய்வதா \" என்ற வினாக்கு சத்தியமாய் என்னிடம் விடையில்லை - simply becos இவை அனைத்துமே ஒரு அமர படைப்பாளியின் ஆக்கங்களின் ஒரு பகுதி \" என்ற வினாக்கு சத்தியமாய் என்னிடம் விடையில்லை - simply becos இவை அனைத்துமே ஒரு அமர படைப்பாளியின் ஆக்கங்களின் ஒரு பகுதி சச்சின் ஆடிய அத்தனை ஆட்டங்களிலுமா சதம் போட்டு விட்டார் சச்சின் ஆடிய அத்தனை ஆட்டங்களிலுமா சதம் போட்டு விட்டார் அத்தனை இன்னிங்சிலுமா சொக்க வைத்தார் அத்தனை இன்னிங்சிலுமா சொக்க வைத்தார் அவரும் தடவித் தடுமாறிய நாட்கள் எராளமன்றோ அவரும் தடவித் தடுமாறிய நாட்கள் எராளமன்றோ இருந்தாலும் அவர் பாட்டிங் செய்ய களமிறங்கும் ஒவ்வொரு முறையும் நம் நம்பிக்கைகளும் அவரோடு கைகோர்த்துச் சென்றன தானே இருந்தாலும் அவர் பாட்டிங் செய்ய களமிறங்கும் ஒவ்வொரு முறையும் நம் நம்பிக்கைகளும் அவரோடு கைகோர்த்துச் சென்றன தானே அது போலவே காமிக்ஸ் உலகின் ஒரு பிதாமகரின் படைப்பை தரிசிக்க ஆவல் காட்டுவோமே guys அது போலவே காமிக்ஸ் உலகின் ஒரு பிதாமகரின் படைப்பை தரிசிக்க ஆவல் காட்டுவோமே guys இளம் டைகர் தொடரைப் போல நீண்டு செல்லாது ஒரே இதழில் இதன் முழுக் கதையையும் படிக்க முடியுமெனும் போது உற்சாக லெவெல்களை இன்னும் சற்றே அதிகமாக்கிக் கொள்ளக் கூடாதா \n\"விலை\" என்ற இந்த விவாதம் இங்கே துவங்கிய சமயம் நான் டில்லி விமானநிலைய மசால் தோசையோடு ஜாலியாக லாலி பாடிக் கொண்டிருப்பினும், ஜூனியர் எடிட்டர் எனக்கு போன் அடித்துத் தகவல் சொன்ன பின்னே, போனில் புகுந்து பின்னூட்டங்களைப் பார்க்கத் தொடங்கினேன் அப்போது என் முன்னே இருந்த புத்தகக் கடைக்குள் நுழைந்து எப்போதும் போலவே காமிக்ஸ் பிரிவினில் பார்வையை ஓட விட்டேன் அப்போது என் முன்னே இருந்த புத்தகக் கடைக்குள் நுழைந்து எப்போதும் போலவே காமிக்ஸ் பிரிவினில் பார்வையை ஓட விட்டேன் மிரளச் செய்யும் நான்கு இலக்க விலைகளில் சில பல சூப்பர்மேன் ; பேட்மேன் இதழ்கள் ; அப்புறமாய் ரூ.195 விலைகளில் Campfire காமிக்ஸ் ; ரூ.220 விலையில் ANA காமிக்ஸ் ; ரூ.395 ; ரூ.595 விலைகளில் சென்னையில் தயாராகும் கிராபிக் நாவல்கள் ( மிரளச் செய்யும் நான்கு இலக்க விலைகளில் சில பல சூப்பர்மேன் ; பேட்மேன் இதழ்கள் ; அப்புறமாய் ரூ.195 விலைகளில் Campfire காமிக்ஸ் ; ரூ.220 விலையில் ANA காமிக்ஸ் ; ரூ.395 ; ரூ.595 விலைகளில் சென்னையில் தயாராகும் கிராபிக் நாவல்கள் () ; ரூ.300 விலைகளில் GARFIELD என்று குவிந்து கிடந்தன ) ; ரூ.300 விலைகளில் GARFIELD என்று குவிந்து கிடந்தன வேறொரு மொழி ; வேறொரு விற்பனை பாணி ; வேறொரு மார்கெட் ; வேறொரு தயாரிப்புத் தரம் என்ற போதிலும் அவர்கள் அனைவரது விலைகளும் நம்மை விட ஏகமாய் அதிகமிருப்பது கண்கூடு வேறொரு மொழி ; வேறொரு விற்பனை பாணி ; வேறொரு மார்கெட் ; வேறொரு தயாரிப்புத் தரம் என்ற போதிலும் அவர்கள் அனைவரது விலைகளும் நம்மை விட ஏகமாய் அதிகமிருப்பது கண்கூடு ஆனால் அந்த விலைகளே அவர்களது விற்பனைகளுக்கும் தடங்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது - ஒவ்வொரு இதழின் மீதும் படிந்து கிடந்த ஒரு வண்டித் தூசியைப் பார்க்கும் போது ஆனால் அந்த விலைகளே அவர்களது விற்பனைகளுக்கும் தடங்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது - ஒவ்வொரு இதழின் மீதும் படிந்து கிடந்த ஒரு வண்டித் தூசியைப் பார்க்கும் போது எல்லாப் பக்கங்களிலும் காமிக்ஸ் விலைகள் கூடி வருவது பற்றி காமிக் லவர் குறிப்பிட்டிருந்ததை நான் சரியாக அந்நேரமே கவனிக்க, இந்தத் துறைக்கு இதுவொரு புலி வால் பிடித்த கதையே என்பது புரிந்தது எல்லாப் பக்கங்களிலும் காமிக்ஸ் விலைகள் கூடி வருவது பற்றி காமிக் லவர் குறிப்பிட்டிருந்ததை நான் சரியாக அந்நேரமே கவனிக்க, இந்தத் துறைக்கு இதுவொரு புலி வால் பிடித்த கதையே என்பது புரிந்தது 'விலை ஏற்றினால் விற்காது - விலை ஏற்றாவிட்டால் தாக்குப் பிடிக்க முடியாது 'விலை ஏற்றினால் விற்காது - விலை ஏற்றாவிட்டால் தாக்குப் பிடிக்க முடியாது ' என்பதே அந்த சிறு வட்டம் ' என்பதே அந்த சிறு வட்டம் நம் பாடாவது அந்த வகையில் தேவலை என்று நினைத்துக் கொண்டேன் - முழுவதுமாய் நேரடி விற்பனையையும் சார்ந்திராது ; முழுக்க முழுக்க முகவர்களின் சகாயங்களையும் நாடியே காலத்தை ஒட்டாது ஏதோ ஒரு அந்தி மண்டலத்தில் பயணிக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேன் நம் பாடாவது அந்த வகையில் தேவலை என்று நினைத்துக் கொண்டேன் - முழுவதுமாய் நேரடி விற்பனையையும் சார்ந்திராது ; முழுக்க முழுக்க முகவர்களின் சகாயங்களையும் நாடியே காலத்தை ஒட்டாது ஏதோ ஒரு அந்தி மண்டலத்தில் பயணிக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேன் நண்பர் ஆதி தாமிரா சொல்லியிருந்த அந்த ஷேர் ஆட்டோ உவமை நமது தற்போதைய சூழ்நிலையை கச்சிதமாய் விளக்கும் சங்கதி நண்பர் ஆதி தாமிரா சொல்லியிருந்த அந்த ஷேர் ஆட்டோ உவமை நமது தற்போதைய சூழ்நிலையை கச்சிதமாய் விளக்கும் சங்கதி நாம் ஒரு மாத இதழைப் போல தோற்றம் தந்தாலும், நாம் மாதப் பத்திரிகை அல்ல ; customized imprints என்று சொல்லிக் கொண்டாலும் - முழுமையாக அந்தக் கிளையிலும் நாம் தஞ்சம் புகுவதில்லை நாம் ஒரு மாத இதழைப் போல தோற்றம் தந்தாலும், நாம் மாதப் பத்திரிகை அல்ல ; customized imprints என்று சொல்லிக் கொண்டாலும் - முழுமையாக அந்தக் கிளையிலும் நாம் தஞ்சம் புகுவதில்லை இங்குமன்றி ; அங்குமன்றி காலமெல்லாம் குட்டிக் கரணங்கள் அடிப்பதே நம் பாணி என்பது நமக்கொரு சாபமா - வரமா இங்குமன்றி ; அங்குமன்றி காலமெல்லாம் குட்டிக் கரணங்கள் அடிப்பதே நம் பாணி என்பது நமக்கொரு சாபமா - வரமா \nசரி...விலை குறைப்புக்கு வர்ணங்களைக் குறைப்பதும் ஒரு வழி என்ற option -ஐ முன்வைத்தேன் -உங்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு Again காமிக்ஸ் லவர் சொல்வதும் சரி தான் - black & white -ல் ஒரு கம்பீரம் உண்டென்பதில் ; and கார்த்திக் சோமலிங்காவின் கருத்தும் கிண்டலுக்குச் சொல்லப்பட்டது அல்ல - 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் இதனையே வர்ணத்தில் போடலாமே என்ற கோரிக்கை எழக்கூடும் என்ற விதத்தில் Again காமிக்ஸ் லவர் சொல்வதும் சரி தான் - black & white -ல் ஒரு கம்பீரம் உண்டென்பதில் ; and கார்த்திக் சோமலிங்காவின் கருத்தும் கிண்டலுக்குச் சொல்லப்பட்டது அல்ல - 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் இதனையே வர்ணத்தில் போடலாமே என்ற கோரிக்கை எழக்கூடும் என்ற விதத்தில் பற்றாக்குறைக்கு கலர் பிரிண்டர் + ஸ்பைரல் பைண்டிங் மார்க்கெட்டிங் முயற்சிகளுக்கு நாமே இன்னொரு களத்தை உருவாக்கி விட்டது போலாகியும் விடுமன்றோ \nசரி..விலை காரணமான சங்கடங்களுக்குத் தீர்வு தான் என்னவென்று சென்னை திரும்பும் போதே சிந்திக்கத் தொடங்கினேன் Hardcover பைண்டிங்குக்கு கல்தா கொடுத்து விட்டால் ஒரு தொகை குறையும் என்பதால் அதனை நடைமுறைப்படுத்தி விடலாம் Hardcover பைண்டிங்குக்கு கல்தா கொடுத்து விட்டால் ஒரு தொகை குறையும் என்பதால் அதனை நடைமுறைப்படுத்தி விடலாம் நம் இலாபத்திலும் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்வதன் மூலம் விலைகளில் கொஞ்சம் சலுகை கிட்டிட வழி பிறக்கும் நம் இலாபத்திலும் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்வதன் மூலம் விலைகளில் கொஞ்சம் சலுகை கிட்டிட வழி பிறக்கும் So கூரியர் கட்டணம் சேர்த்து முன்பதிவுக்கு விலை (தமிழகத்துக்குள்) ரூ.415 என்று அமைத்திடலாம் So கூரியர் கட்டணம் சேர்த்து முன்பதிவுக்கு விலை (தமிழகத்துக்குள்) ரூ.415 என்று அமைத்திடலாம் (கூரியர் + பேக்கிங் டப்பா கட்டணங்கள் மட்டுமே ரூ.50--க்குக் குறையாது )\nசரி..இது தவிரவும் வேறு ஏதேனும் சாத்தியமா என்ற யோசனை தொடர்ந்தது ரொம்ப காலமாக எனக்குள்ளே ஒரு ஓரத்தில் குடியிருந்த சிந்தனையானது லேசாய் எட்டிப் பார்க்க - 'அட..இதைக் கூட முயற்சித்தால் என்ன ரொம்ப காலமாக எனக்குள்ளே ஒரு ஓரத்தில் குடியிருந்த சிந்தனையானது லேசாய் எட்டிப் பார்க்க - 'அட..இதைக் கூட முயற்சித்தால் என்ன ' என்று நினைக்கத் தோன்றியது ' என்று நினைக்கத் தோன்றியது இந்த இதழை மட்டுமேனும் வண்ணத்தில் ஒரு delux edition ஆகவும் ; black & white -ல் ஒரு economy edition ஆகவும் உருவாக்கினால் சரி வருமா இந்த இதழை மட்டுமேனும் வண்ணத்தில் ஒரு delux edition ஆகவும் ; black & white -ல் ஒரு economy edition ஆகவும் உருவாக்கினால் சரி வருமா என்ற யோசனை தான் அது என்ற யோசனை தான் அது ஒரே இதழை 2 வெவ்வேறு விதங்களில் வாங்குமொரு option -ஐத் தந்து வாசகர்களிடையே ஒருவித ஏற்ற தாழ்வை நாமே உருவாக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்ததால் / இருப்பதால் இந்தத் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வரவில்லை ஒரே இதழை 2 வெவ்வேறு விதங்களில் வாங்குமொரு option -ஐத் தந்து வாசகர்களிடையே ஒருவித ஏற்ற தாழ்வை நாமே உருவாக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்ததால் / இருப்பதால் இந்தத் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வரவில்லை ஆனால் ஒரு இதழை விலை காரணமாய் வாங்காமலே போவதை விட ; அதனை B &W -ல் வாங்குவதில் தவறில்லை என நண்பர்கள் கருதினால் - இந்தப் பரிசோதனைக்கு நாங்கள் ரெடி ஆனால் ஒரு இதழை விலை காரணமாய் வாங்காமலே போவதை விட ; அதனை B &W -ல் வாங்குவதில் தவறில்லை என நண்பர்கள் கருதினால் - இந்தப் பரிசோதனைக்கு நாங்கள் ரெடி And yes, இது வம்பை நாமே விலை கொடுத்து வாங்கும் முயற்சி என்பது தெரியாதில்லை And yes, இது வம்பை நாமே விலை கொடுத்து வாங்கும் முயற்சி என்பது தெரியாதில்லை தொடரும் ஒவ்வொரு புது முயற்சிக்கும் இந்தப் பாதை சாத்தியமல்ல என்பதும் , ஒவ்வொரு தடவையும் நண்பர்களில் ஒருசாரார் இதே போன்ற economy edition கோரிக்கையை முன்வைக்க நேரிட்டால் அதற்கு செவி சாய்ப்பது சிரமமாகிடலாம் என்பதெல்லாம் நன்றாகவே புரிகிறது எனக்கு தொடரும் ஒவ்வொரு புது முயற்சிக்கும் இந்தப் பாதை சாத்தியமல்ல என்பதும் , ஒவ்வொரு தடவையும் நண்பர்களில் ஒருசாரார் இதே போன்ற economy edition கோரிக்கையை முன்வைக்க நேரிட்டால் அதற்கு செவி சாய்ப்பது சிரமமாகிடலாம் என்பதெல்லாம் நன்றாகவே புரிகிறது எனக்கு But விலைகள் குறித்து இப்படியொரு ஆதங்கம் நண்பர்களிடையே நிலவிடும் பட்சத்தில் அதனை முடிந்தளவுக்கு சரி செய்திட நாம் கொஞ்சம் சிரமம் மேற்கொள்வதில் தவறில்லை என்று மனதுக்குப் பட்டது But விலைகள் குறித்து இப்படியொரு ஆதங்கம் நண்பர்களிடையே நிலவிடும் பட்சத்தில் அதனை முடிந்தளவுக்கு சரி செய்திட நாம் கொஞ்சம் சிரமம் மேற்கொள்வதில் தவறில்லை என்று மனதுக்குப் பட்டது So - கீழ்க்கண்ட ஒரு வாய்ப்பையும் பரிசீலனை செய்யுங்களேன் guys :\nதற்போது டெக்ஸ் வில்லர் கருப்பு-வெள்ளைக் கதைகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை காகிதம்\nஅதே 256 பக்கங்கள் ;\nஇந்த விலை முன்பதிவுகளுக்கு மாத்திரமே \nநீங்கள் ரெடி என்றால் - இந்த ஆட்டத்தை ஆடிப் பார்க்க நாங்களும் ரெடி guys மேலோட்டமாய்ப் பார்க்கையில் இதன் சாதக-பாதகங்கள் தெரியத் தான் செய்கின்றன ; but உங்கள் பார்வைகளில் இந்த proposal எவ்விதம் தெரிந்திடக் கூடுமென்று முழுமையாய் கணிக்கத் தெரியவில்லை மேலோட்டமாய்ப் பார்க்கையில் இதன் சாதக-பாதகங்கள் தெரியத் தான் செய்கின்றன ; but உங்கள் பார்வைகளில் இந்த proposal எவ்விதம் தெரிந்திடக் கூடுமென்று முழுமையாய் கணிக்கத் தெரியவில்லை \nAnd before I wind off - ஓட்டை வாய் உலகநாதன் ஒரு அறிவிப்போடு எட்டிப் பார்க்கிறார் :\nசமீப காலங்களில் நமது பரிசோதனை முயற்சிகள் விற்பனை எனும் அளவுகோல்களைத் திருப்திகரமாய்த் தாண்டவில்லை என்பதால் அவற்றை சற்றே ஆறப் போட்டிருக்கிறோம் என்பதில் இரகசியமில்லை கிராபிக் நாவல்கள் ; புது கதைக் களங்கள் என்றாலே ஓரம் கட்டுவோம் என்ற சிந்தனை நண்பர்களின் ஒரு அணிக்கு இருப்பது கண்கூடு கிராபிக் நாவல்கள் ; புது கதைக் களங்கள் என்றாலே ஓரம் கட்டுவோம் என்ற சிந்தனை நண்பர்களின் ஒரு அணிக்கு இருப்பது கண்கூடு ஆனால் இந்த சிந்தனைகளுக்குள் என்னை முழுமையாய் இணைத்துக் கொள்ள முடியவில்லை ஆனால் இந்த சிந்தனைகளுக்குள் என்னை முழுமையாய் இணைத்துக் கொள்ள முடியவில்லை வித விதமாய் கதைகள் ; புதுமைகள் என காமிக்ஸ் உலகம் ஒரு பக்கம் புயல் வேகத்தில் பயணம் செய்து வர - நாம் பழகிப் போன அதே பார்முலாக்களை விடாப்பிடியாய்த் தொடர்வது என்றேனும் ஒரு நாள் அயர்ச்சிக்கு ரோடு போடக் கூடும் என்ற மெல்லிய பயம் என்னுள்ளே உள்ளது வித விதமாய் கதைகள் ; புதுமைகள் என காமிக்ஸ் உலகம் ஒரு பக்கம் புயல் வேகத்தில் பயணம் செய்து வர - நாம் பழகிப் போன அதே பார்முலாக்களை விடாப்பிடியாய்த் தொடர்வது என்றேனும் ஒரு நாள் அயர்ச்சிக்கு ரோடு போடக் கூடும் என்ற மெல்லிய பயம் என்னுள்ளே உள்ளது So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது வழக்கமான கதைகளை ரசிக்கும் நண்பர்களுக்கு ஜனவரியில் வழக்கமான விருந்து அமர்க்களமாய்க் காத்துள்ளது வழக்கமான கதைகளை ரசிக்கும் நண்பர்களுக்கு ஜனவரியில் வழக்கமான விருந்து அமர்க்களமாய்க் காத்துள்ளது ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன நீங்கள் இரண்டையும் சுவைக்கத் தயாராக இருப்பின் குதூகலம் கொள்வேன் நீங்கள் இரண்டையும் சுவைக்கத் தயாராக இருப்பின் குதூகலம் கொள்வேன் \nஒரு பண்டிகை...ஒரு மைக் டெஸ்டிங்....ஒரு பதிவு..\n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nமுதல் பார்வையில் ஏப்ரலின் TOP \nஒரு பண்டிகை...ஒரு மைக் டெஸ்டிங்....ஒரு பதிவு..\nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\nநண்பர்களே, வணக்கம். So far…so good என்பேன் நான் குறிப்பிடுவது ஆண்டின் துவக்க இதழ்களது செயல்பாடுகள் பற்றியே என்பது நிச்சயம் புரிந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2018/01/1_5.html", "date_download": "2018-05-27T03:23:42Z", "digest": "sha1:F4LYXCK3K6JLOHH7VCGGUERDO54O4KUT", "length": 14994, "nlines": 158, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. அணிந்துரையும் முன்னுரையும்", "raw_content": "\nசங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. அணிந்துரையும் முன்னுரையும்\nஅகரமுதல 219, மார்கழி 16 - மார்கழி 22, 2048 / திசம்பர் 31 – சனவரி06, 2018\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nஅணிந்துரை – பேராசிரியர் திரு. ம.சண்முக சுந்தரனார்\n‘சங்ககாலச் சான்றோர்கள்’ என்னும் தலைப்புக்கொண்ட இந்நூலில் திரு. ந. சஞ்சீவி அவர்கள், விருந்தினர்க்கு அறுசுவை அடிசில் சமைத்து அளிப்பது போல, பழந்தமிழ் நூல்களின் சுவைகளையெல்லாம் பிழிந்து தமிழருக்கு ஒர் இலக்கிய விருந்து அளித்துள்ளார். வீரமும் பரிவும், நேர்மையும் நெறியும், வள்ளன்மையும் தெளிவும் இக்கட்டுரைகளில் ஊறி வழிகின்றன. பழந்தமிழ்ப் புலவர்களும் அவர்கள் அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி அவர்களைப் பெருமைப்படுத்திய புரவலர்களும் இதில் கண் நிறைந்த காட்சியளிப்பதோடு, தங்கள் சுவை மிக்க செந்தமிழ்ப் பாடல்களால் செவிக்கின்பமும் ஊட்டி நம் உள்ளங்களை ஊக்குவிக்கின்றார்கள். அவர்களது வாழ்க்கை வரலாறுகளின் பல சீரிய பகுதிகள் இதில் இவ்வாசிரியருக்கே சிறப்பான உணர்ச்சியும் கவர்ச்சியும் மிக்க தோரணையில் ஒரு பேசும் படம் போல நம்முன் தோன்றுகின்றன. தமிழ் நாட்டுச் செந்தமிழ் மேடை வீரர்களிடையே தலையாயவர்களுள் ஒருவராக மதிக்கப் பெறும் ஆற்றலும் புகழும் தம் இளமையிலேயே பெற்றுள்ள திரு. சஞ்சீவியோடு சென்ற மூன்று ஆண்டுகள் இடைவிடாது பழகும் நல்வாய்ப்புப் பெற்ற எனக்கு, அவரது இனிய குரலும், ஆர்வமும் கற்பனையும் ததும்பும் பேச்சும் இந்நூலின் வரிகளூடே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சங்கத் தமிழும் அவ்வரிகளுக்கு உரம் பாய்ச்சி நிற்கின்றது. அவ்வகையில் இந்நூலினைப் பாட்டிடை யிட்ட ஒர் உரை நடைக் காவியத் தொகுப்பு எனலாம். இப்பண்புகளோடு இதில் திரு. சஞ்சீவி மிக்க மதிப்புடன் அடுத்து நெருங்கிப் பழகிய முனைவர் மு. வ., திரு. வி. க. அவர்களின் நடை நயங்களும் இடையிடையே தோய்ந்து சொட்டிக் கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய சிறப்புகளோடு அமைந்துள்ள இந்நூல் தமிழ் நாட்டுக் கல்லூரிகளில் கலை பயிலும் மாணவர்கட்கும் தமிழில் ஆர்வமிக்கவர்கட்கும் எல்லையற்ற இன்பமும் அறிவும் ஊட்டும்என்பதில் ஐயமில்லை. திரு. சஞ்சீவி இலக்கியத் துறையில் இத்தகைய முயற்சிகளில் மேலும் மேலும் ஈடுபட்டுத் தமிழன்னையின் சேவையில் தலை சிறந்து விளங்கவேண்டுமென்பது எனது அவா.\nநம் வாழ்விற்கு எஞ்ஞான்றும் வழி காட்ட வல்லனவாய்த் திகழும் ஒளி விளக்கங்களை இருவகையாகப் பாகுபடுத்தலாம்: ஒரு வகை, ‘மாசறு காட்சி’ படைத்த திறவோர் யாத்த அற நூல்கள். மற்றொரு வகை, அவ்வறவோரின் நூல்கள் வழி வாழ்ந்து புகழ் கொண்ட பெருமை சான்ற சான்றோர்களின் நல்வாழ்க்கை முறைகள். திருக்குறள் போன்ற அறநூல்களை அறிவுகொண்டு ஆராய்ந்து கற்பதாலும், இதயம் கொண்டு உணர்ந்து பண்படுவதாலும் மனித வாழ்க்கை அடைய வல்ல பயன்கள் பலவாகும். அவ்வாறே அவ்வறநூல்கள் நுவலும் வாழ்வின் இலக்கணங்கட்கு ஓர் இலக்கியமாய் இவ்வுலகில் வாழ்ந்து காட்டிய சான்றோர்களின் பல்வகையான பயன் நிறைந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட வரலாறுகளை அறிந்து தெளிவதாலும், பல திறப்பட்ட ஒளி படைத்த உணர்ச்சி அலைகள் ஆடிப் பாடும் அவர்களின் வாழ்வுக் கடலில் படிந்து உள்ளம் குளிர்தலாலும் நம் உயிர் வாழ்க்கை காண வல்ல நன்மைகள் பலவாகும். ஆயினும், எளியதாம் பின்னைய வழியாலேயே அரியதாம் முன்னைய நெறியால் பெற வல்ல பயன்கள் பலவற்றையும் பெறல் கூடும் என்பது எண்ணிப் பார்ப்பவர் எவர்க்கும் இனிதின் விளங்கல் திண்ணம்.\nஇக்கருத்தோடு யான் சங்க இலக்கிய உலகில் புகுந்தேன். அவ்விலக்கிய நல்லுலகில் யான் கண்டு பழகிப் பெரும்பயனடையக் காரணராயிருந்த சான்றோர் பலர் ஆவர். அவருள் தலைமை சான்ற அறுவரின் அருமை பெருமைகளையும், இலக்கிய உலகில் அவர்களோடு யான் பழகிய போது பெற்ற இன்பத்தையும் பயனையும் ஒருவாறு அனைவருக்கும்-சிறப்பாகத் தமிழ் இளைஞர்கட்கும்-எடுத்துரைக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் எழுந்த முயற்சியே ‘சங்ககாலச் சான்றோர்கள்’ என்னும் இந்நூல்.\n*அன்பும் அறிவும் ஆற்றலும் பொருந்திய தமிழ் நாட்டு வீர இளைஞர்கட்கு*\nசங்கக்காலச் சான்றோர்கள்: ந. சஞ்சீவி\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 2:48 PM\nLabels: akaramuthala, அகரமுதல, சங்கக்காலச் சான்றோர்கள், தமிழறிஞர்கள், ந. சஞ்சீவி\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 9\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nதிருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 : வெ....\nகாலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழ...\nஅகல் விளக்கு – மு.வரதராசனார். 4.\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4\nகாலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழ...\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 3....\nஅகல் விளக்கு – மு.வரதராசனார். 3 .\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nகாலத்தின் குறள் பெரியார் : 2 – ச.ச.வேலரசு (எ) தமிழ...\nதிருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ....\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2...\nஅகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\nகாலத்தின் குறள் பெரியார் :1 – ச.ச.வேலரசு (எ) தமிழர...\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1....\nசங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. அணிந்துரைய...\n – கவிக்கோ துரை வச...\nஅகல் விளக்கு – மு.வரதராசனார் 1. அறிமுகம்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ourpesalai.blogspot.com/2015_01_01_archive.html", "date_download": "2018-05-27T03:04:31Z", "digest": "sha1:FA2S2MAM4C5OGQYDWBRB7CRLOIBE25OT", "length": 3435, "nlines": 66, "source_domain": "ourpesalai.blogspot.com", "title": "Our Pesalai: januar 2015", "raw_content": "\nகத்திருப்பு கவிதை ஆக்கம் Christy Revel\nEmat Croos · உடக்கு பாஸ் மண்டபம்... திருப்பாடுகளின் காட்சிக் கூடமிது தத்ரூபமாய் அரங்கேறும் இ...\nபேசாலை.... Emat Croos வந்தாரை வாழ்விக்கும் வசந்த சாலை வந்து சென்றோரும் போற்றிடும் புகழ் சாலை ஊருக்குள் இழையோடும் பிரதான சாலை மன்ன...\n பேசாலையில் சோக்ரா என்று சொன்னால் அது லோறன்ஸ் பீரிஸ் அவர்களை அல்லது அவர்களின் பிள்ளைகளை குறிக்கும், இவ ர்களை இன்றும் சி...\n ஆயிரம் கண்கள் வேண்டுமே, இப்பாரினில் ஆனந்தப் புன்னகைக் கோலங்கள் கண்டிட, மாதா உம் ப...\nபேசாலையில் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களைப்பறிய பக்கம் இது\nகத்திருப்பு கவிதை ஆக்கம் Christy Revel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1503381310871?O-Pannerselvem-has-to-receive-another-4-departments'+", "date_download": "2018-05-27T03:17:39Z", "digest": "sha1:TUE7L3APF7KJPHWQQ3ZNWRFBNB2ONGQV", "length": 7401, "nlines": 85, "source_domain": "www.newstm.in", "title": "ஓபிஎஸ்க்கு கூடுதல் இலாக்காக்கள் : அறிவிப்பு வெளியீடு", "raw_content": "\nஓபிஎஸ்க்கு கூடுதல் இலாக்காக்கள் : அறிவிப்பு வெளியீடு\nஓபிஎஸ்க்கு கூடுதல் இலாக்காக்கள் : அறிவிப்பு வெளியீடு\nநேற்று துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு கூடுதல் இலாக்காக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக அணிகள் இணைந்ததையடுத்து, ஓபிஎஸ் துணை முதல்வராக நேற்று பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அமைச்சரவையும் மாற்றம் செய்யப்பட்டது. ஓபிஎஸ்க்கு நிதித்துறை, வீட்டுவசதித்துறை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிக்கை ஆளுநர் மாளிகையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇதன்படி, ஜெயக்குமார் வகித்து வந்த துறைகளான திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், பாஸ்போர்ட் ஆகியவை பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார், தன்னிடம் மீதமுள்ள துறைகளான மீன்வளத்துறை, நிர்வாக சீர்திருத்தத்துறை ஆகியவற்றை கவனிப்பார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போது பன்னீர்செல்வத்திடம் துணை முதல்வர் பதவியுடன் 6 துறைகள் உள்ளன.\nஶ்ரீ திவ்யாவின் மார்டன் லுக் படங்கள்\nமணிரத்னம் பட நாயகியின் கிளாமர் படங்கள்\nஹீரோயின் ஆன இந்த குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரிகிறதா\nஶ்ரீ திவ்யாவின் மார்டன் லுக் படங்கள்\nமணிரத்னம் பட நாயகியின் கிளாமர் படங்கள்\nஹீரோயின் ஆன இந்த குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரிகிறதா\nஅபியும் அனுவும் - திரை விமர்சனம்\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்\nகாஷ்மீர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்\nகாஷ்மீர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஒரு நாளைக்கு 15 -18 மணி நேரம் வேலை செய்யும் பிரதமர் மோடி: அமித் ஷா புகழாரம்\nசசிகலா வீடியோ : பெங்களூரு சிறைத்துறை அதிகாரி மாற்றம்\nஆதரவு வாபஸ்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ\nஅடுத்தடுத்து ஆளுநரை சந்திக்க இருக்கும் எதிர் அணிகள்\nசென்னை தினம்... வரலாறு தெரிஞ்சிக்கோங்க\nசசிகலா வீடியோ : பெங்களூரு சிறைத்துறை அதிகாரி மாற்றம்\nஆதரவு வாபஸ்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ\nஅடுத்தடுத்து ஆளுநரை சந்திக்க இருக்கும் எதிர் அணிகள்\nசென்னை தினம்... வரலாறு தெரிஞ்சிக்கோங்க\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t39031-topic", "date_download": "2018-05-27T03:16:30Z", "digest": "sha1:3CPRPVQYEKA6EXPYINSJCFG3G2XT5KUE", "length": 7786, "nlines": 127, "source_domain": "www.thagaval.net", "title": "வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nவீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nவீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீர, தீர செயல் புரிந்த\nகுழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார்.\nநாடு முழுவதும் இன்று 14-11-17 குழந்தைகள் தினம் கோலாகலமாக\nகுழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், அறிவுசார்\n2017ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகளாக தேர்வு\nசெய்யப்பட்டவர்களுக்கு ராஷட்டிரபதி பவனில் இன்று நடந்த\nவிழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.\nவிழாவில் ஜனாதிபதியுடன் குழந்தைகள் புகைப்படம் எடுத்து\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/07/how-open-ppf-account-post-office-008271.html", "date_download": "2018-05-27T03:01:44Z", "digest": "sha1:MC7IS75AAMBWX5PE43MWPQXXKJKAO2KD", "length": 22804, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தபால் நிலையத்தில் பிபிஎப் கணக்கை திறப்பது எப்படி..? | How To Open A PPF Account In Post Office - Tamil Goodreturns", "raw_content": "\n» தபால் நிலையத்தில் பிபிஎப் கணக்கை திறப்பது எப்படி..\nதபால் நிலையத்தில் பிபிஎப் கணக்கை திறப்பது எப்படி..\nதபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் இனி ஆதார் கட்டாயம்\nபிஎப், பிபிஎப், எப்டி, என்பிஎஸ் மற்றும் என்எஸ்சி: வரிப் பயன்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பல..\nபிபிஎப் பணத்தை திரும்ப பெறுவது மற்றும் அதன் மூலம் கடன் பெறுவது எப்படி\nPPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை எங்கெல்லாம் துவங்கலாம்..\nசிறு சேமிப்பு திட்டம் மீதான வட்டி குறைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nபிபிஎப் திட்டத்தில் அத்தனை அம்சங்கள் உள்ளதா..\nபொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் ஒரு நீண்ட கால முதலீட்டு விருப்பமாகும். பாதுகாப்பு, வருமானம் மற்றும் வரி சலுகைகள் ஆகியவை PPF முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.\nஅரசாங்க ஆதரவுடைய PPF முதலீடுகள், உங்கள் முதலீடு பாதுகாப்பானதாக்குகிறது. கடன் விருப்பங்கள் மற்றும் ஒரு குறைந்த பராமரிப்பு செலவுகள் இத்திட்டத்திற்கு கூடுதல் போனஸ்.\nபொது மற்றும் தனியார் வங்கிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் PPF கணக்கை நீங்கள் திறக்கலாம். எப்படி அஞ்சல் அலுவலகத்தில் உங்கள் PPF கணக்கை தொடங்குவது என்று இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.\nஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், சுய வேலைவாய்ப்பு அல்லது வேறு எந்த பிரிவாக இருந்தாலும் PPF கணக்கிற்கு தபால் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஒருவர், ஒரு PPF கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும். நீங்கள் இரண்டு கணக்குகளைத் திறந்துவிட்டால், அது இரண்டாவது கணக்கை மூடுவதற்கு வழிவகுக்கும், மற்றும் முக்கிய தொகை மட்டும்தான் திரும்பித்தரப்படும் அதற்க்கு வட்டி திரும்ப தரப்படாது.\nசிறுவர்களுக்கும் PPF கணக்கை திறக்க முடியும். தந்தை அல்லது தாயார் அவர்கள் சார்பாக கணக்கு திறக்க முடியும். தந்தை மற்றும் தாய் இருவரும் ஒரே சிறுவருக்கு கணக்கைத் திறக்க முடியாது, அவர்களில் ஒருவர் மட்டுமே ஈடுபட வேண்டும். பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, இந்த கணக்கைத் தொடர முடியாது, டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை அவர்களுக்கு திருப்பிச் செலுத்தபடும்.\nஎன்ஆர்ஐ-கள் (NRI) ஒரு PPF கணக்கைக் திறக்க முடியாது. இந்தியாவில் வசிக்கும் ஒருவர் PPF கணக்கு வைத்திருந்தால், பின்னர் அவர்கள் ஒரு NRI ஆனால் அவர் 15 ஆண்டுகள் மட்டுமே கணக்கு தொடரலாம்.\nPPF கணக்கை திறப்பதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் ஒரு PPF கணக்கை தொடங்குவதற்க்கு தேவையான ஆவணங்கள் பட்டியல் இங்கே.\nசமீபத்தில் எடுக்கபட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்\nவைப்பு தொகை (குறைந்தபட்சம் ரூ .100)\nஅஞ்சல் அலுவலகத்தில் PPF திறப்பதற்கு ஒரு சில முன்நிபந்தனைகள் மட்டுமே உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லா உங்கள் அருகில் உள்ள ஏதேனும் ஒரு அஞ்சல் அலுவலகத்திர்க்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரை சந்திக்க வேண்டும்.\nஅருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை அல்லது துணை அஞ்சல் அலுவலகத்தை கண்டுபிடித்து அங்கே போகவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து PPFகணக்கு ஆரம்பிக்க தேவையான படிவத்தை பூர்த்தி செய்யவும். நீங்கள் இணையத்திலிருந்து படிவத்தை டவுன்லோட் செய்யலாம். படிவத்தில் வழங்கப்பட்ட இடத்தில் உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி அதனுடன் கையெழுத்திடுங்கள்.\nஅவசியமான ஆவணத்தின் புகைப்பட நகலை படிவத்துடன் சேர்த்து, உங்கள் வைப்புத் தொகையுடன் தபால் அலுவலக நிர்வாகிக்கு சமர்ப்பிக்கவும்.\n1.04.2017 முதல், PPF கணக்கின் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.9% (கூட்டு ஆண்டுக்கு) ஆகும். தொடக்கக் கணக்குக்கான குறைந்தபட்ச தொகை ரூ. 100 ஆகும். குறைந்தபட்சம் ரூ 500 மற்றும் ரூ .150,000 ஆகியவை நிதி ஆண்டில் அதிகபட்சமாக டெபாசிட் செய்யப்படலாம்.\nசிறு சேமிப்பு திட்டம் மீதான வட்டி குறைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nஒரு நபருக்கு ஒரு PPF கணக்கை தனது பெயரில் திறக்க முடியும். PPF கூட்டுக் கணக்கு துவங்குவதற்க்கு எந்தவிதமான வாய்ப்பு இல்லை.\nகணக்கு வைத்திருப்பவர் PPF கணக்கிற்காக nomineeகளை நியமிக்கலாம். PPF கணக்கிற்கு அதிகபட்சமாக நான்கு பேர் நியமிக்கப்படலாம்.\nபிபிஎஃப் கணக்கிற்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். கணக்கு வைத்திருப்பவர் கணக்கின் காலவரை நீட்டிக்க விரும்பினால், அவர் அதை நீட்டிக்க முடியும். இந்த கால நீடிப்பு 5 ஆண்டுகள். 7 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் PPF கணக்கை திரும்பப் பெற முடியாது.\nPPF கணக்கு வைத்திருப்பவர்கள் 3வது ஆண்டின் தொடக்கத்தில் PPF க்கு எதிராக கடன் பெறலாம்.\nIT சட்டம் 80Cஇன் படி தபால் அலுவலகங்களில் PPF வைப்புத்தொகை வருமானத்தில் இருந்து குறைப்பதற்க்கு வாய்ப்பு உள்ளது . தபால் அலுவலகத்தில் PPF கணக்கைத் திறக்க விரும்பாத ஒருவர் SBI, PNB, HDFC போன்ற முன்னணி வங்கிகளில் ஒரு கணக்கைப் பெற முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநரேந்திர மோடி அரசின் 4 வருட ஆட்சி சாதனைகள் என்ன தெரியுமா\nஅனில் அகர்வால் ஒருவருக்காக 13 பேரின் உயிரை காவு கொடுத்த காவல் துறை.. யார் இவர்..\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/16023522/Against-Bangladesh194-runs-in-20-oversSri-Lankan-achievement.vpf", "date_download": "2018-05-27T03:23:51Z", "digest": "sha1:GHR7W7BOOOSPGUMINDA4JBUB2QNIPPDV", "length": 10135, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Against Bangladesh 194 runs in 20 overs Sri Lankan achievement to drive target || வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 194 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து இலங்கை சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் பதற்றத்தினை தணிக்க பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு முடிந்தது\nவங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 194 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து இலங்கை சாதனை + \"||\" + Against Bangladesh 194 runs in 20 overs Sri Lankan achievement to drive target\nவங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் 194 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து இலங்கை சாதனை\nஇலங்கை – வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.\nஇலங்கை – வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் வங்காளதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். சவுமியா சர்கார் (51 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (66 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் திரட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி வெற்றிகரமாக விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான். இந்த சாதனை வெற்றிக்கு குசல் மென்டிஸ் (53 ரன், 27 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ‌ஷனகா (42 ரன், 24 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), திசரா பெரேரா (39 ரன், 18 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோரின் அதிரடி துணை நின்றது.\n20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 தோல்விகளுக்கு பிறகு இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இவ்விரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. ரஷித்கான் ஆப்கானின் சொத்து விட்டு கொடுக்க மாட்டோம்: பிரதமர் அஷ்ரப் கானி\n2. டோனிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வோம் ரெய்னா சொல்கிறார்\n3. 20 ஓவர் போட்டி: உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் ரஷித்கான்- சச்சின் தெண்டுல்கர்\n4. ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி தடை\n5. ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் சென்னை–ஐதராபாத் அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/chief-minister-o-panneerselvam-consulting-tamilnadu-police-jallikattu-issue/", "date_download": "2018-05-27T03:23:11Z", "digest": "sha1:OEH7ZVISNT7SKGQHLGON5PAEA55TY3WW", "length": 10033, "nlines": 114, "source_domain": "makkalmurasu.com", "title": "ஜல்லிக்கட்டு: காவல் துறையினருடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை - மக்கள்முரசு", "raw_content": "\nஜல்லிக்கட்டு: காவல் துறையினருடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள், உலக அளவில் பிரபலமாகி வருகிறது.\nதமிழகத்தை தாண்டி, தேசிய அளவில் பரவியுள்ள இப்போராட்டம் வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்று வரும் நிலையில், இன்று கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nசென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருவதால், போராட்டத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையில் நேற்று இரவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய தமிழக அமைச்சர்கள், அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்ட அமைப்பை தடை செய்வது குறித்தும் அறிக்கை வெளியிடுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் போலீஸ் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷ்னர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமக்கள் போராட்டத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த ஆலோசனையின் போது முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்…\n← மவுன போராட்டம் நடத்திய சிம்புவை பாராட்டிய சீமான் திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/12/blog-post_55.html", "date_download": "2018-05-27T03:31:29Z", "digest": "sha1:HDHQW2WCEBRVRJ6F7XK4OVC5C5TBARPX", "length": 6905, "nlines": 146, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இந்திரனும் ராமனும் கிருஷ்ணனும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nராமனாகப் பிறந்தவன்தான் தன்னை வெல்ல தன் இயல்புகளை எல்லாம் எடுத்துகொண்டு கிருஷ்ணனாகப்பிறந்துள்ளான் என இந்திரன் சொல்லும் இடம் மிக நுட்பமானது. வரலாற்றைப்பார்த்தால் இந்திரன் உருமாறித்தான் கிருஷ்ணனின் உருவம் உருவாகி வந்திருப்பதைக் காணமுடியும். இந்திரனின் எல்லா சிறப்புத்தன்மைகளும் கிருஷ்ணனுடையவையாக ஆகிவிட்டன. தந்திரமாகப்போர் செய்வது, மாறுவேடத்தில் போய் ஏமாற்றிவிடுவது, பெண்களைக் கவர்வது எல்லாம் உண்மையில் இருவருக்கும் பொதுவான குணங்களாக உள்ளன.\nஇந்திரன் பிராமணனாகச்சென்று வருணனையும் விருத்திரனையும் ஏமாற்றுவதைப் பார்க்கும்போதுகிருஷ்ணனும் இதேபோல கர்ணனை ஏமாற்றியதை நினைத்துக்கொண்டேன். இந்த மாற்றம் இந்து மதத்தில் நடந்த மிகப்பரிய தலைகீழ் மாற்றம். இதை நிகழ்த்தவே மகாபாரதப்போர் நடந்தது என நீங்கள் சொல்லியிருப்பது அற்புதமான ஒரு சரித்திர தரிசனம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநஞ்சும் அமுதே , மாயையும் அசலே\nஅர்ஜுனன் கண்ட வட்ட வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_868.html", "date_download": "2018-05-27T03:17:52Z", "digest": "sha1:3NHMZ656BCRMFTB42QH4NET3Z7G4O3PO", "length": 10195, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "இரவிரவாக இரணைதீவில் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இரவிரவாக இரணைதீவில் போராட்டம்\nடாம்போ April 23, 2018 இலங்கை\nஆயுதங்களுக்கு மத்தியில் நிராயுதபாணிகளாக தங்களின் சொந்த மண்ணுக்குள் நுழைந்துள்ள இரணைதீவு மக்களின் இன்றைய எழுச்சிப்போராட்டம் இரவிரவாக தொடர்கின்றது.போராட்டத்திலீடுபட்டுள்ளவர்கள் அப்பகுதியிலுள்ள தேவாலயத்தில் தங்கியுள்ள நிலையினில் உணவு பொருட்கள் கடல் வழி எடுத்து செல்லப்படுகின்றது.மறுபுறம் கடற்படை காவல் கடமையிலீடுபட்டுள்ளது.\nகிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பு போராட்டம் ஒரு வருடத்தை இன்று பூர்த்தி செய்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nபேரணி மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த இரணைமாதா நகரில் கண்டன பேரணியொன்றை இன்று நடத்தியிருந்ததுடன் திடீரென கடலில் இறங்கி கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரணைதீவு கிராமத்திற்கு செல்லப்போவதாக எச்சரித்து இறுதியில் சுமார் 250 பேர் வரையில் தரையிறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரையேனும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\n1992ம் ஆண்டு முதல் இரணைதீவு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இரணைமாதா குடியிருப்பு கிராமத்தில் வாழவைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.\nபனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nமன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்\nஅனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வ...\n பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்\nதூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலை சய்த தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனபப...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.roselleparknews.org/ta/block-party-request-clarifies-previous-stated-requirements/", "date_download": "2018-05-27T02:58:57Z", "digest": "sha1:FI6UOVVUWVZ4N452ZIFV5H5NYAFP4OEL", "length": 7394, "nlines": 64, "source_domain": "www.roselleparknews.org", "title": "பிளாக் கட்சி வேண்டுகோள் முந்தைய கூறியது தேவைகள் விளக்கமளித்துள்ளது| Roselle பார்க் செய்திகள்", "raw_content": "\nபிளாக் கட்சி வேண்டுகோள் முந்தைய கூறியது தேவைகள் விளக்கமளித்துள்ளது\nஅச்சடி / பதிவிறக்கம் / E-Mail:\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nபேஸ்புக் இல் எங்களை போன்ற\nஇன்று வாரம் மாதம் எல்லா\nராபர்ட் கார்டன் மாணவர்கள் சாதனைகள், விருதுகள் அங்கீகாரம் PARCC இல்\nஆர்.பி குடியுரிமை Recieves NJCPA உதவித்தொகை\nமறுமதிப்பீடு நிறுவனம் வழங்கப்பட்டது மதிப்பீடுகளில் ஒப்பந்த\n2018 Townwide கேரேஜ் விற்பனை / மொத்த தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nபவர் செயலிழப்பு Roselle பார்க் பாகங்கள் பாதிப்பு\nபெண் சாரணர்கள் பள்ளி மதிய உணவுகள் செய்ய ஆரோக்கியமான மாற்றங்கள் முன்மொழியலாம்\nபோலீஸ் உடல் கேமரா மேன் மீட்பு கார் எரியும் இருந்து பதிவுசெய்யலாம்\nஅரிசி அறிவிப்பு: இது என்ன, ஏன் அதை தவறாக அறிவித்துள்ளதாக அவர்\nகவுன்சில் நிலையம் கட்டுப்பாடு ஆணைகள் எய்தினார், தேவையற்றதைப் போடும் கட்டளை நிராகரிக்கிறது\nராபர்ட் கார்டன் மாணவர்கள் சாதனைகள், விருதுகள் அங்கீகாரம் PARCC இல்\nஆர்.பி குடியுரிமை Recieves NJCPA உதவித்தொகை\nமறுமதிப்பீடு நிறுவனம் வழங்கப்பட்டது மதிப்பீடுகளில் ஒப்பந்த\nபெண் சாரணர்கள் பள்ளி மதிய உணவுகள் செய்ய ஆரோக்கியமான மாற்றங்கள் முன்மொழியலாம்\nபள்ளி மாவட்ட சாசனம் seatbelts பெற்றிருக்கும் மட்டும் பேருந்துகள் செய்ய\nகுழுவிற்கு மூன்று ரியான் சொத்து அபிவிருத்தி தீர்மானங்கள் எய்தினார்\nபோ நியமனம் ஷெர்மன் & ராபர்ட் கார்டன் பள்ளி முதல்வர்கள்\nபோ நியமனம் ஷெர்மன் & ராபர்ட் கார்டன் பள்ளி முதல்வர்கள்\nபெண்கள் & ஜென்டில்மென், ; Roselle பார்க் வாரியர்ஸ்\nகவுன்சில் நிலையம் கட்டுப்பாடு ஆணைகள் எய்தினார், தேவையற்றதைப் போடும் கட்டளை நிராகரிக்கிறது\nபதிப்புரிமை © Roselle பார்க் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amalapaul-15-02-1840830.htm", "date_download": "2018-05-27T03:14:38Z", "digest": "sha1:HFEQK3NMGJVX757QM45ECFXCGRI7JD22", "length": 6181, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.! - Amalapaul - அமலா பால் | Tamilstar.com |", "raw_content": "\nகாதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் அமலா பால். இந்த படத்தை அடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.\nதனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, விஜயுடன் தலைவா என பல வெற்றி படங்களிலும் நடித்து இருந்தார். மேலும் இவர் இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார்.\nஇந்நிலையில் இவர் தற்போது காதலர் தினத்தை தன்னுடைய செல்லக்குட்டியுடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை அமலா பாலே அவருடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கூறியுள்ளார்.\n▪ `திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n▪ விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு\n▪ தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்\n▪ இந்து வாலிபரை காதலிக்கும் அமலா பால்\n▪ நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்\n▪ நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்\n▪ தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி\n▪ தனுஷ் பலவித திறமை கொண்டவர்: அமலாபால்\n மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி\n▪ மக்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நேரமிது- அமலா பாலின் எதிர்க்கால திட்டம்\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mazhimegam.blogspot.com/2010/05/blog-post_19.html", "date_download": "2018-05-27T03:09:37Z", "digest": "sha1:DSYXBUTMOCKRSV54WRQU4MJVNCA2H4XC", "length": 7792, "nlines": 133, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: பழசோ புதுசோ மதுரை மதுரைதான்!", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nபழசோ புதுசோ மதுரை மதுரைதான்\nஇது மின்னஞ்சலில் வந்த புகைப்படங்களின் தொகுப்பு...\nஇந்தப் புகைப்படங்கள் 1858 ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nLabels: 1858, madurai, புகைப்படங்கள், மதுரை, மின்னஞ்சல் புகைப்படங்கள்\nகூட்ட நெரிசலே இல்லாம என்ன அழகா அமைதியா இருக்கு \nபடங்கள் வெள்ளை அழகு. கொள்ளை அழகுனு சொல்லத்தான் ஆசை.\n\\\\\"பழசோ புதுசோ மதுரை மதுரைதான்\nஇப்படங்களை நானும் மின்னஞ்சலில் ரசித்திருக்கிறேன். அருமையான பகிர்வு.\nதலைப்பும் படங்களும் மிக மிக அருமை\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\n நவராத்திரி விரத காலம் பயறுவகைகளை நிறைய பயன்படுத்தும் காலம். பொதுவாகவே மழைக் காலம் நம் உடம்பில்...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nசொல்லாத சமையல் ரகசியங்கள் (4) தண்ணி ரகசியங்கள்\nதண்ணின்னதும் முண்டியடிச்சிட்டு வந்து எட்டிப்பார்த்தவங்க ஏமாந்து போயிட்டீங்களோ... :-) தண்ணின்னா அந்ந்தத் தண்ணி இல்லீங்க... நீர்நிலைகளை உறிஞ...\nஇப்போதெல்லாம் விடுமுறையில், திருச்சிக்குப் போகவேண்டுமென்று பேச்செடுத்தாலே அங்கே இரண்டு நாள்தான் இருக்கமுடியும். அதுக்கு சரின்னு சொன்னா வரேன்...\nஊரிலிருந்து அந்த அப்பா, அமெரிக்காவிலிருக்கும் தம் மகனை அழைத்துச் சொன்னார், \" உன்னுடைய இந்த நாளை வீணடிப்பதற்காக நான் வருத்தப்படுகிறேன...\nஐ நா சபையின் கேள்வியும், அர்த்தம் புரியாத நாடுகளு...\nஇவங்களைக் கொஞ்ச நேரம் கவனிக்காம விட்டுட்டா...\nபழசோ புதுசோ மதுரை மதுரைதான்\nஎங்கே தொலைத்தோம் நம் உடல்நலத்தை\nநம்மளப்பத்தி என்னல்லாம் பேசிக்கிறாங்க பாருங்க...(ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/india/03/117342?ref=right_related", "date_download": "2018-05-27T03:05:39Z", "digest": "sha1:6PTMVPW6VM5G35IN5B33HAGR4YYLUIF5", "length": 7093, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "உச்ச நீதிமன்ற தடையை தகர்த்தெறிந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு! நாம் தமிழர் அதிரடி - right_related - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉச்ச நீதிமன்ற தடையை தகர்த்தெறிந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு\nதமிழகத்தில் உச்ச நீதிமன்ற தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் ஏறு தழுவல் விழாவை முன்னெடுத்து நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nதமிழகர்களின் பண்பாட்டு குறியீடான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஆனால், இந்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். இது தமிழக மக்களிடையே சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், தற்போது கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் உச்ச நீதிமன்ற தடையை மீறி ஏறு தழுவல் விழாவை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.\nஇச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2011/01/abcd.html", "date_download": "2018-05-27T03:21:10Z", "digest": "sha1:T7GWF6GU5PN4LUOHONZA2DIDL2UJURAE", "length": 10084, "nlines": 172, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": இனிமே ABCD எப்படி கத்துதரப்போறாங்க?", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nஇனிமே ABCD எப்படி கத்துதரப்போறாங்க\nநாம படிச்சப்ப ABCD எப்படி சொல்லி தருவாங்க\n(ஒண்ணும் இல்ல, அப்படியே நமக்கு ஞாபகம் வருதான்னு check பண்ணிக்கிட்டேன்)\nஆனா இப்பவெல்லாம் technology உடைய தாக்கம் அதிகமா ஆகிட்டதால இனிவரும் நாட்களில் எப்படி ABCD கத்துக்குடுப்பாங்கனு தெரியுமா\nஒரு சின்ன கேம். மௌசை வைத்து ஸ்க்ரோல் பண்ணாமல் அம்புக்குறி பட்டனை உபயோகித்து A FOR என்ன B FOR என்ன என்று அடுத்து வருவதை யூகித்து விட்டு விடையை பாருங்கள்.\n இது எனக்கு குறுஞ்செய்தியாக வந்தது. ஆனாலும் மறுக்க முடியாத உண்மை தானே\nபின்னூட்டம் இடுபவர்களுக்கு தனியாக நன்றி சொல்ல ஆரம்பித்துவிட்டதால் இனி ஓட்டு போடுபவர்களுக்கு நன்றிகள்னு போடலாமா னு பார்க்கறேன்.\nஆனா இப்பவெல்லாம் technology உடைய தாக்கம் அதிகமா ஆகிட்டதால இனிவரும் நாட்களில் எப்படி ABCD கத்துக்குடுப்பாங்கனு தெரியுமா\nகண்டிப்பாக இனிவரும் காலங்களில் இதுதான் நடக்கும்\nஏன்னா டெக்னாலாஜி சோ மச் இம்ப்ரூடுவ்யா....\n//பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனியாக நன்றி சொல்ல ஆரம்பித்துவிட்டதால் இனி ஓட்டு போடுபவர்களுக்கு நன்றிகள்னு போடலாமா னு பார்க்கறேன்.//\n இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்.........\nஇந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.........\nகேட்க நினைத்தால் மீன் வேண்டும் என கேட்காதே\nதூண்டில் வேண்டும் என்று கேள்//\nநிச்சயமாக கேட்போம் நல்லாருக்குங்க தொடர்ந்து எழுதுங்க.........\nவணக்கம், உங்கள் வலைத்தளத்தை எங்கள் பாசமிகு அண்ணன் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா)சிரிப்பு போலீஸ் அவர்கள் வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்...\nநல்லாருக்கே A B C D.\nThank You manavan, Kumar, Dinesh Kumar, Manoj. ட்விட்டரா இருந்தா என்ன டச் ஸ்க்ரீனா இருந்தா என்ன\nA- Apple என்பது மாறவே இல்லை:-)\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nடிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தாளை பூர்த்தி செய்யும் போது...\nமொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை திரும்பப்பெறும்...\nபாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்\nஇனிமே ABCD எப்படி கத்துதரப்போறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/11/blog-post_97.html", "date_download": "2018-05-27T03:33:25Z", "digest": "sha1:2N22ZJBDYTDNL7SHH3CK65ABGFR5ALFU", "length": 6969, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மேற்குதிசையின் அதிபன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவருணன் மேற்குதிசையின் அதிபன். அவன் ஏன் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறான் என்பதை நினைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவில் மழை தெற்கிலிருந்துதான். அப்படியென்றால் வருணன் ஏன் மேற்குத்தெய்வம்\nமழையின் அருமையை உணர்ந்த மேற்குப்பாலைவன மக்களின் தெய்வம் அது. ஆகவேதான் மேற்கே தெய்வமாக இருக்கிறான். சண்டன் அதைச் சொல்கிறான். அவன் அசுர தெய்வமாக ரிக்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறான் என்று. அதை அர்ஜுனன் காணவும் செய்கிறான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதேவி ஜடரை (கிராதம் 24)\nவெண்முரசு எனும் சிறுகதை தொகுப்பு\nபகடி எனும் சிற்றுளி. (கிராதம் -7)\nமழைப்பாடலும் அரபு தாய்வழி மரபும்\nவிழைவுகளின் ஊற்றுமுகம் (கிராதம் -7)\nபுலவரைப் போற்றாத புத்தேள் உலகு - 2 (நேற்றைய கடிதத்...\nகிராதம் – புலவரைப் போற்றாத புத்தேள் உலகு\nமரத்தை மறைக்கும் மாமதம். (கிராதம் - 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2011/02/25.html", "date_download": "2018-05-27T03:23:23Z", "digest": "sha1:A3G4QAOQRIGR7EK7T7YKOVICAWQMLSLP", "length": 10712, "nlines": 197, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை.\nநெல்லையில் புதிதாய் வந்துள்ள தனியார் கண் மருத்துவ மனையில், இன்று கண்புரை நோயாளிகளுக்கு பயன்படும், 'குளுட் ஐஒஎல்' (Glued IOL)அறுவை சிகிச்சைமுறை அறிமுகபடுத்தபட்டுள்ளது. நாடு முழவதும், கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 55 சதிவிகிதம் பேர் கண் புரை நோயால் பதிக்கபட்டுள்ளவர்கள்.\nஅவர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் வந்துள்ளது இந்த சிகிச்சை. பதினைந்து நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். நெல்லைக்கு முதன்முதலில் வந்துள்ளது. வரவேற்கலாம். மேலதிக தகவல்களுக்கு: http://videos.dragarwal.com/index.php\nசாரி, நேற்று மாலை வரவேண்டிய தகவல். நேரமின்மை காரணமாய், இன்று இடம்பெற்றது. BETTER LATE THAN NEVER.\n'உப்பு கரிக்கும்' ஒரு செய்தியுடன் விரைவில் உங்களை சந்திகின்றேன்.\nலேட்டா வந்தாலும், இதுதான் லேட்டஸ்ட் நியூஸ் நல்ல விஷயங்களைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது நல்ல விஷயங்களைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது ஆமா அந்த பாம்புக்கடிக்கு இலக்கான நண்பரின் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது\nவிசாரித்தேன். நல்லாயிருக்கின்றார். ஆவலுக்கு நன்றி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது\nமக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.\nமார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு....\nஅடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் ப...\nபிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.\nஉப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.\nஇன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை...\nஇன்றைய நெல்லை-24-பாம்பாட்டியை பாம்பு படுத்திய பாடு...\nஉணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்.\nஇன்றைய நெல்லை-23- மாநில அளவில் நெல்லை மாணவர்கள் சா...\nஇன்றைய நெல்லை-22-சில்லறைதனமான சிறுநீரக திருட்டு.\nஇன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற...\nபட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள...\nஇன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.\nஇன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்\nஇன்று போல் என்றும் வாழ்க\nஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/51998.html", "date_download": "2018-05-27T03:31:31Z", "digest": "sha1:GQBGWPXUVJ5YNQUU2AAO5NJ7MXF4P3AG", "length": 18742, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "கௌதம் மேனனைக் கட்டிப்போட்ட இயக்குநர் | Gautham Menon tweeted on Mohan Raja's Thani Oruvan!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகௌதம் மேனனைக் கட்டிப்போட்ட இயக்குநர்\nதனி ஒருவன் படத்திற்காக இயக்குநர் மோகன் ராஜா மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் எதிர்பாரா விதமான பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் மோகன் ராஜா, ரீமேக் ராஜா என்ற பெயரை மாற்றவே இந்த சொந்த ஸ்க்ரிப்டை இரண்டு வருடங்களாக உருவாக்கி படமாக்கியதாக கூறினார்.\nபலரும் படம் குறித்து நல்ல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துவரும் நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் தனது பாராட்டுகளையும் படம் குறித்த கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ’தனி ஒருவன் படத்திற்காக வாழ்த்துகள் இயக்குநர் ராஜா, பார்வையாளர்களை நிர்பந்தப்படுத்தாமல், கதையுடன் ஒன்றச் செய்து கட்டிப்போட்டுவிட்டீர்கள்.\nஉங்கள் பாதையில் நீங்கள் ஒரு படம் கொடுத்திருப்பது சிறப்பு.இதற்காக நான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருணம் இது. என்று கௌதம் மேனன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனி ஒருவன் படத்திற்காக இயக்குநர் மோகன் ராஜா மற்றும் அரவிந்த் சாமி இருவரும் எதிர்பாரா விதமான பாராட்டுகளை பெற்று வருகிறார்கள்.\nயோகி பாபு, இதை நீங்கள் உணர்ந்தால் 'செம'..\n``கைல காசு இல்லாத நாள்கள்ல, கபாலி கோயில் அன்னதானம்தான் நம்ம மீல்ஸ்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n``என்னை மாற்றி விடாதீர்கள்...''- முதல்வருக்கு தூதுவிட்ட உளவுத்துறை அதிகாரி #SterliteProtest\nநடுரோட்டில் டி.டி.வி தினகரனும் வைகோவும் திடீர் சந்திப்பு..\nகாடுவெட்டி குரு வளர்ந்த கதையும்... கடந்து வந்த பாதையும்\n’ - தோனி நெகிழ்ச்சி\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n' - இங்கிலாந்து எம்.பி,. போர்க்கொடி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n50 வயது தொடக்கத்தில் இந்தி இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudhiyabhoomi.blogspot.com/2009/01/blog-post_4768.html", "date_download": "2018-05-27T03:35:38Z", "digest": "sha1:XLG2GM2OVA4O7MEZE4FNIZ3RRSZC2GZI", "length": 4821, "nlines": 91, "source_domain": "pudhiyabhoomi.blogspot.com", "title": "புதியதோர் உலகம் செய்வோம்...: என்.டி.ராஜ்குமார் கவிதை", "raw_content": "\n\"அம்மாவிற்கு உளுந்துவடை ரொம்பப் புடிக்கும்\nநான் விடியற்காலையில் எழுந்து குடிக்கும் முதல் கோப்பை\nஎந்த அவசியத்திற்கு வைத்திருக்கும் பணமானாலும் சரிதான்\nகேட்ட உடனே யெடுத்துத்தரும் ஒற்றை ரூபாயில்கூட\nஅவளின் அதீத அன்பு நிறைந்திருக்கும்\nஇருப்பினும் நான் தாயில்லா பிள்ளையானால் என்ன செய்வேன்\nகட்டாயப்படுத்தி கூலிவேலைக்கு அழைத்துச் சென்றுவருகிறேன்\nகொஞ்சமிருந்து ஓய்வெடுக்கும் சுக்குக்காப்பிக் கடையில்\nசூடு மணக்க வடைபோடுகிறான் தொழிலாளி\nபோன மாதமே பாதுகாத்து வைத்திருக்குமிந்த\nதினமும் கடந்துசெல்கிறானிந்த அம்மாவின் செல்வம்...\"\nகல் திறந்த கணம் - க.மோகனரங்கன்\nஇன்னும் செதுக்கப்படாமலொரு சிற்பம் - சூத்ரதாரி.\nஒரு மனிதன் முயலாக - யூமா.வாசுகி.\nபட்சிகளுக்கான பாடம் - வி.அமலன் ஸ்டேன்லி\nவிலகின தடத்தில் - பூமா.ஈஸ்வரமூர்த்தி.\nஇந்தச் சிங்கம் - எம்.யுவன்\nஏதோ ஒரு பறவை - உமா மகேஸ்வரி.\nகோடைகாலக் குறிப்புகள் - சுகுமாரன்.\nவண்ணத்துப் பூச்சி - கள்ளழகர்\nமுன்பெல்லாம் - பூமா ஈஷ்வரமுர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1733978", "date_download": "2018-05-27T03:11:46Z", "digest": "sha1:TGLU6GRTW2NMD7KNZTGBDK5WX6TRKDCM", "length": 27257, "nlines": 375, "source_domain": "www.dinamalar.com", "title": "'ஆர்.கே.நகர் பார்முலா' உருவாகும்:ராமதாஸ் ஆதங்கம்| Dinamalar", "raw_content": "\n'ஆர்.கே.நகர் பார்முலா' உருவாகும்:ராமதாஸ் ஆதங்கம்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 532\nவிராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் : மோடி 117\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: ... 216\nநாகர்கோவில்;''திருமங்கலம் பார்முலா பெயர் மாறி 'ஆர்.கே.நகர் பார்முலா' உருவாகும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறிய தாவது: தமிழக அரசின் நிதி செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும். பொருளாதாரம் மோசமாகி கொண்டிருக்கிறது. இலவசம், மானியத்துக்கான ஒதுக்கீடு 29 ஆயிரம் கோடியில் இருந்து 68 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. வருவாயின் பெரும்பகுதியை இலவசத்துக்கு செலவிட்டால், உள்கட்டமைப்பு வசதிக்கு எப்படி பணம் கிடைக்கும்ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் போட்டி போட்டு பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளன. அ.தி.மு.க., ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது; முதற்கட்டமாக இரண்டாயிரம் ரூபாய்க்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.\nவெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள், மத்திய பாதுகாப்பு படையை பணியில் அமர்த்த வேண்டும் தி.மு.க.,வின் 'திருமங்கலம் பார்முலா' மாறி, 'ஆர்.கே. நகர் பார்முலா' உருவாகும் என தோன்றுகிறது.நிதி அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பட்ஜெட்டை ஜெ., சமாதியில் வைத்து எடுத்து சென்றுள்ளார். இது தமிழகத்துக்கு தலைகுனிவு. பட்ஜெட்டை சசிகலா இருக்கும் சிறைக்கும் கொண்டு சென்றிருப்பார்களா\nஜெ., ஆட்சி 'ஜீரோ ஆட்சி'; பழனிசாமி ஆட்சி 'மைனஸ் ஆட்சி'. தமிழகத்தை ஊழல் ஆள்கிறது. டில்லியில் தமிழக விவசாயிகள் ஆறு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை அன்புமணி மட்டுமே சந்தித்து பேசியுள்ளார். 'நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும்' என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூடாத பட்சத்தில் பா.ம.க., போராட்டம் நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., ... மே 27,2018 16\nமோடி 4 ஆண்டு எப்படி மே 26,2018 4\nகர்நாடகாவில் துவங்கியது காங்., - ம.ஜ.த., மோதல் மே 26,2018 31\nமருத்துவமனையில் கடைசியாக ஜெ., பேசியது... என்ன\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆமாம் இவரு ஆதங்கத்த இப்ப இங்க யாரு கேட்டா அவனவன் ஊரு பத்திகிட்டு எறியிதுன்னு பயந்து கிட்டு இருக்கான் அவனவன் ஊரு பத்திகிட்டு எறியிதுன்னு பயந்து கிட்டு இருக்கான் இவரு பீடிக்கு நெருப்பு கேட்டுகிட்டு இருக்காரு இவரு பீடிக்கு நெருப்பு கேட்டுகிட்டு இருக்காரு பாவம்நிலைமை இப்படி ஆயிபோச்சே கோவாலு\nதங்களை எவ்வளவு சுரண்டினாலும் அதை உணராதவரை தட்டிக்கேட்க முடியாதவரை அந்த தருணம்வரை சாதி மத பின்துணை இல்லாத கட்சிகள் முன்னிறுத்தப்படும் வரை ஜனநாயகத்தில் கூட்டுக்கொள்ளை அங்கீகரிக்கப்படுகிறது. நாளை இந்தம்மா கூட்டத்தை பிஜேபி ஆதரிக்க முன்வந்தாலும் அச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வளவு தூரம் எல்லாம் நடந்தபின்பும் எதிர் கட்சிகள் ஏன் ஒன்று சேர மறுக்கிறார்கள் ஒன்று கூடி சனங்களை நேரிட வேண்டியதுதானே. முடியாதே ஏன் இவர்கள் எல்லாம் அந்தம்மா ஆட்சி தொடர கை கோர்த்தவர்கள். அதாவது மடியில் கனம் உள்ளவர்கள். சாதியை காட்டியாவது இதனால் தான் நன் தனியாக நிக்கிறேன் என்று மக்களை நம்பவைக்கலாம்.\nஇருக்குற பனத்தை எல்லாம் சொரண்டி எடுத்துட்டாங்க இனிமே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவுங்களூக்கு எல்லாம் எதுவுமே கிடைக்காது அதனால பாமக எல்லாம் இனிமேல் அரசியல் பண்ணாது அது தன்னிறைவை எப்பவோ அடைஞ்சிடுச்சி அதனால பாமக எல்லாம் இனிமேல் அரசியல் பண்ணாது அது தன்னிறைவை எப்பவோ அடைஞ்சிடுச்சி\nபாவம் அப்ப டங்க் சிலிப்பு ஆயி சில வீர வசனம் பேசுனது எல்லாம் உண்மைதான் என்ன பண்றது காலத்தின் கோலம் திராவிட கட்சிகளூம் ஜாதியின் மாயையில் மாட்டிகிட்டு முழிச்சதன் விளைவை இவுங்க அறுவடை பண்ணீகிட்டாங்க என்ன பண்றது காலத்தின் கோலம் திராவிட கட்சிகளூம் ஜாதியின் மாயையில் மாட்டிகிட்டு முழிச்சதன் விளைவை இவுங்க அறுவடை பண்ணீகிட்டாங்க பின்னே சும்மவா பலே ஜகஜால கில்லடிங்க இல்ல பின்னே சும்மவா பலே ஜகஜால கில்லடிங்க இல்ல\nஊழலை பேச முடியாது வைத்தியர் அவர்களே காரணம் உங்களின் மகன் வழக்கு டில்லியில் நிலுவையில் இருக்கிறது ரூ 5.10, அண்ட் 25.க்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த உங்களின் சொத்துக்கணக்கை வெளிக்கொண்டுவந்து தங்கள் எப்படி சொத்து சேர்த்தித்தீர்கள் என்பதை விளக்கலாமே ..நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே .. வாருங்கள் மருத்துவரேஉங்களை உள்ளே அனுப்ப சரியான நேரம் வந்துவிடலாம்\nஆனால் திருமங்கலம் பார்முலா போல மோசமான உதாரணமாக இந்த முறை RK நகர் பார்முலா அமையாது என்று நான் நம்புகிறேன்.........\nஜாதிய பார்முலாக்களுக்கு இது பெட்டர். தான் டாக்டர் , ஏன் ஜாதியை வைத்து அரசியல் செய்யா கூடாது இந்தியாவில் சட்டம் கொண்டு வரவேண்டி போராட்டம் செய்ய வேண்டியது தானே , அதில் பணம் சம்பாதிக்க முடியாது என்று தானே ஜாதியை வைத்து அரசியல் செய்கிறான் ....\nஐயா நீங்களும் ஜாதிய பார்முலாவை விட்டு வெளியே வாருங்ககள்... ஒத்த கொள்கை உள்ள கட்சிகளுடன் சேர்ந்து ஊர் சேர்ந்து தேர் இழுங்கள் ..கண்ணதாசன் விவசாயியை பற்றி பாடிய பாடலை நினைவு கூறுங்கள்... \"யாரோடும் பேதம் இல்லை... ஊரோடு சேர்ந்துண்ணலாம்..\" உங்கள் கட்சியில் உள்ளவர்கள் மனதை உங்களால்தான் விசாலம் ஆக்க முடியும்...மக்கள் அனைவரும் பிரிவினையை விட்டு \"அனைவருக்கும் சுதந்திரம்... சமத்துவம்... சகோதரத்துவம்\" என்று உயரிய எண்ணத்திற்கு பாடு படுங்கள்...நல் ஆட்சி அமைய உதவுங்கள்...\nபாமக இடை தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை உயர்த்தியிருக்கலாம்\nபலமா அது எங்க இருக்கு மகனை முதல்வராக்க அத எல்லாம் எப்பாவோ அடகு வச்சாச்சி மகனை முதல்வராக்க அத எல்லாம் எப்பாவோ அடகு வச்சாச்சி\nமூ. மோகன் - வேலூர்,இந்தியா\nஒரு கிராம் தங்க காசுன்னு இன்னொரு அஸ்திரமும் இருக்கே அதை மறந்திட்டாரா மருத்துவர் ஐயா\nஅதுவும் ஒரு லக்ஷம் காசுகள் வருமானவரி/அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உறங்குகிறார்கள். மாநில அரசு,மற்றும் காவல் துறை விநியோக மேற்பார்வை செய்கிறது....\nஜாதிய பார்முலாக்களுக்கு இது எவ்வளவோ பெட்டர்.\nஇவர் சொல்றது எல்லாமே நியாயமானது தான், ஆனாலும் இவருக்கும் விமர்சிக்கும் தகுதி இல்லை,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.karutthukkalam.com/2011/10/", "date_download": "2018-05-27T03:32:19Z", "digest": "sha1:WSQZT3Q5UW7SLEO25G77ZBMVDZYXW5XY", "length": 23316, "nlines": 133, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: October 2011", "raw_content": "\nஞாயிறு, 30 அக்டோபர், 2011\nஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அன்னா ஹசாரே குழு...\nசில மாதங்களுக்கு முன் வரை எந்த ஊடகத்தினை பார்த்தாலும் ஒரு வாக்கியம் 'இது இந்தியாவின் இரண்டாம் சுதந்திரப் போராட்டம்' என்று\n74 வயதான அன்னா ஹசாரே, தனது கிராமத்தின் வளர்ச்சியை முன் மாதிரியாக கொண்டுவந்தமைக்காக பத்ம ஸ்ரீ(1990), பத்ம பூஷன் (1992) போன்ற உயரிய விருதுகளைப்பெற்றவர். மேலும் மாநில, மதிய அரசுகளால் பல விருதினை பெற்றுள்ளார் (விருதுகளை வாங்கவில்லை, பெற்றுள்ளார்\nஇந்திய ராணுவத்திலிருந்து வரும் ஓய்வூதியத்தை மட்டுமே தனது வருமானமாகக் கொண்டுள்ள ஹசாரே, ஏப்ரல் 16 ஆம் தேதி தனது சொத்து விபரத்தை தாக்கல் செய்தார், அதில் அவருக்கு வங்கியில்\n67,183 மற்றும் கையிருப்பாக 1,500 உள்ளதாக தாக்கல் செய்தார்.\nஏப்ரல் 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் என்று அவரின் முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் பதிமூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.\nதிரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஊழல் எதிர்ப்பு காட்சியினை அன்று முதல்\nஅனைத்து ஊடகங்களும் புத்துணர்ச்சி பெற்று ஒளிபரப்பத் தொடங்கின...\nஇதில் இவருடன் முன்னாள்/இந்நாள் நேர்மையாளர்கள் சிலர்\nசேர்ந்துக்கொண்டு 'இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்' என்று ஒரு அமைப்பை\nதொடங்கி அதற்கு புத்துனர்வ்வு கொடுத்தனர்.\nஹராரே 'நினைப்பதை' மக்களிடத்திலும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள்\nஇவர்கள் தாம். இப்படியாக சில பல வாரங்கள் ஊடகங்களில்\nஇவர்கள் 'காட்சியளிக்க' இவர்களின் எண்ணங்களோ வேறு மாதிரியாக\nஇந்திய நாட்டில் நாடாளுமன்றமே உயர்ந்ததாக கொண்டிருக்கும் வேலையில்,\nஅவர் குழுவில் 'இருந்த' கேஜ்ரிவால், ஹசாரே தான் நாடாளுமன்றத்தைவிட\nமுக்கியமானவர் என்று ஒரு கருத்தினை தெரிவித்தார்.\nமேலும், இது போன்ற பல வீண் வீர வசனங்கள் பத்திரிகைகளுக்கு அள்ளி வீசி அரசாங்கத்தை கோபப்படுத்தி வந்தனர்.\nபிரஷாந்த் புஷன் (அடிபட்டதற்கு முன்)\n), இப்படியாக விட்டால் நமது நிலை\n'இன்னும்' மோசமாகி விடும் இந்த குழுவினை அடக்க வேண்டும் என்று\nநினைத்துக்கொண்டிருந்த வேலையில், குழுவில் இருந்த பிரஷாந்த் பூசன்\nகாஷ்மீர் பற்றி கூறிய தவறான கருத்தால் அடி, உதய் வாங்கியது மட்டுமலாமல்,\nஅன்னா ஹசாரே குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். குழுவிலேயே இருந்தால் அவர்களுக்கும் அவப்பெயர் வந்துவிடுமோ என்று\nஅவர்கள் நினைத்தார்களோ என்னவோ, நமக்கு தெரியாது\nஒவ்வொரு பேட்டியிலும் தனது கருத்தினை மாற்றி, மாற்றி சொல்லும் 'திறமை'\nவாய்ந்த ஹசாரே, இனி எந்தக் கருத்தும் கூறப்போவதில்லை என்று சில\nநாட்களுக்கு முன், தன்னைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் காரணமாக மௌனவிரதம்த்தைக் கடைபிடிக்கப்போவதாக அண்ணா ஹசாரே முடிவெடுத்துள்ளார்.\nஇப்படியாக இருக்க ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அரசாங்கத்தை கொச்சை படுத்தியதாக குழுவில் உள்ள கிரண் பேடி மேல் சில புகார்களும் எழுந்துள்ளது... மேலும் இவர்களின் போராட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியின் 'நிலை' என்ன என்று ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஊழலுக்கு எதிராக இருக்கும் குழுவில் இடம் பெற்றிருக்கும் கேஜ்ரிவால் 9.15 லட்சம் வரி பாக்கி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை புகார் கூறியுள்ளது. மேலும் குழுவில் சேர்ந்த நிதியில் தனது அறக்கட்டளைக்கு சில ஒதுக்கிகொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.\nலோக்பால் நிறைவேரவிடால் காங்கிரஸ்க்கு எதிராக பிரசாரம் செய்வோம், நிறைவேற்றினால் காங்கிரஸ் க்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று (ஏதோ லோக்பால் நிறைவேற்றினாலே ஊழல் ஒழிந்துவிடுவது போலவும், நிறைவேற்றினால் இதுவரை நடந்த ஊழளெல்லாம் சரியான முடிவிற்கு வந்துவிடுவது போலவும்) ஏக வசனங்கள் பேசிக்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே குழு, ஆரம்பமாவதற்கு முன்பே ஆட்டம் கண்டு வருகிறது என்பது தான் உண்மை\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 6:42:00 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 அக்டோபர், 2011\nமே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல்.\nபுற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.\nபுற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை.\nஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.\n14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.\nஅதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம். இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது.\n2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம் ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள்.\nஅதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம் உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள்.\nஎக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன.\nஅந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம்.\nஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது. அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது.\nஇதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், \"பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது.\nஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: \"பேச்சைக் குறை' .\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 4:05:00 4 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\nஆரம்பத்திலேயே ஆட்டம் கண்ட அன்னா ஹசாரே குழு...\nCopyright © 2017 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124784-social-activist-raised-question-about-government-employee-lock-up-murder.html", "date_download": "2018-05-27T03:03:12Z", "digest": "sha1:JWSHYBJQG76QRUFT64YM6QXGWXWIZLW7", "length": 24887, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "எப்படிக் கொல்லப்பட்டார் சூனாம்பேடு சிற்றரசு? - அதிர்ச்சி அளித்த லாக்அப் மரணம் | Social activist raised question about government employee lock up murder", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஎப்படிக் கொல்லப்பட்டார் சூனாம்பேடு சிற்றரசு - அதிர்ச்சி அளித்த லாக்அப் மரணம்\nகாஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு காவல் நிலையத்தில் அரசு ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.\nசூனாம்பேடு காவல் நிலையத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கைதி சிற்றரசு 02.05.2018 அன்று அதிகாலையில் மர்மமான சூழலில் உயிரிழந்தார். சிற்றரசு கழிவறையில் தான் அணிந்திருந்த நீல நிற ஜட்டியைக் கயிறுபோல் பயன்படுத்தி, கழுத்தைச் சுற்றி தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி “சிற்றரசு தன் ஜட்டியைக் கயிறுபோல் பயன்படுத்தி, கழுத்தைச் சுற்றி தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை, விசாரணை அதிகாரிகளின் தரப்பில் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா அதை உறுதிப்படுத்துவதாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹடிமானி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். நீதிமன்ற நீதிபதி விசாரணை முடிந்ததாகவும் அவர் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.\nபின்வரும் கேள்விகள் சிற்றரசின் மரணம் ஏன் கொலையாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தைப் பலமாக எழுப்புவதாக உள்ளது.\nதற்கொலை முயற்சி நடந்த இடம் சிறையிலுள்ள கைதி அறையிலுள்ள கழிவறை என இருக்கையில் சிசிடிவி கேமராவில் கைதி அறையின் நுழைவாயில் மட்டுமே பதிவாகும் நிலை இருக்கையில், கழிவறையில் நடந்த இச்சம்பவத்தை சிசிடிவி கேமரா எப்படி பதிவு செய்யும் ஒரே ஒரு ஜட்டி துணையுடன் தாழ்ப்பாளில் ஒரு முணையை மாட்டி கழுத்தைச் சுற்றி தூக்கிட்டு தற்கொலை செய்வது சாத்தியமா ஒரே ஒரு ஜட்டி துணையுடன் தாழ்ப்பாளில் ஒரு முணையை மாட்டி கழுத்தைச் சுற்றி தூக்கிட்டு தற்கொலை செய்வது சாத்தியமா அதுவும் முடிச்சு இல்லாமல் இருந்தால் ஜட்டியின் அளவை கணக்கில் கொண்டால் இது சாத்தியம்தானா\nஒரு முணையைத் தாழ்ப்பாளில் மாட்டியிருந்தபோது தாழ்ப்பாளே உடைந்து பெயர்ந்து வந்துள்ள நிலையில் உயிரிழப்பு என்பது சாத்தியமா. தாழ்ப்பாள் கழிவறைக் கதவின் நடுப்பகுதியில் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. அது உண்மையெனில் கழிவறையின் உயரம் தோராயமாக 5 அடி என இருக்கையில், அதாவது 2.5 அடி மட்டுமே தரைமட்டத்திலிருந்து தாழ்ப்பாள் இருந்துள்ளது எனக்கொண்டால் அதில் ஜட்டியை மாட்டி தற்கொலை செய்துகொள்வது என்பது சாத்தியமா\nகழுத்தின் முன்புறம் மற்றும் கொஞ்சமாகப் பக்கவாட்டில் மட்டுமே கழுத்து இறுக்கப்பட்டதற்கான அறிகுறி தோலில் இருக்கும்போது முழுமையாகக் கழுத்து இறுக்கப் படாத நிலையில் உயிரிழப்பது என்பது தற்கொலை மூலம் சாத்தியம்தானா. தடயவியல் புத்தகங்களில், கழுத்தை வேறு ஒருவர் நெறிக்கும் சூழலில் மட்டுமே ஊதா மற்றும் நீலநிற ரத்தக் கசிவுடன் தோலில் ஏற்படும் காயம் (ECCHYMOSES) சாத்தியம் என இருக்கையில், தற்கொலை மூலம் தூக்கிடும்போது அது சாத்தியமல்ல என்பதும் தெளிவாக இருக்கையில் அது ஏன் கொலையாக இருக்கக் கூடாது மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்யும்போது தோலில் ஏற்படும் காயம் கோணலாக (Oblique) இருக்கும் என்பதும் புத்தகங்களில் தெளிவாக இருக்கும்போது, சிற்றரசுவின் கழுத்தில் உள்ள காயத்தைப் பார்த்தால் அது பெரும்பாலும் நேர்கோட்டில் இருப்பதாகவே உள்ளது மீண்டும் அவர் ஏன் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடாது என்ற முக்கிய கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது. மேலும், அக்காயம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என இருந்தால் கழுத்தில் தற்போது இருக்கும் இடத்துக்கு மேலே அக்காயம் இருந்திருக்கும் என்பதையும் விசாரணை கணக்கில் கொள்ள வேண்டும். காவல் நிலையத்தில் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற புகார் வந்துள்ள நிலையில், அதன்மூலம் ஏற்பட்ட காயத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கை கணக்கில் கொள்ளுமா. பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்படும் வீடியோ கிராஃபி காட்சிப் பதிவு பாதிக்கப்பட்டவருக்கு சிரமமின்றி கிடைக்குமா.\nசென்னை உயர் நீதிமன்றமும் அவருடைய மனைவி வெண்ணிலா தொடர்ந்த வழக்கில் அவர் சார்பில் ஒரு மருத்துவரும் பிரேதப் பரிசோதனை செய்யும்போது உடனிருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர் சார்பில் ஒரு மருத்துவர் கூட இருப்பது விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என இருந்தும் ஏன் உயர் நீதிமன்றம் அதை நிராகரித்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை.\nமேற்கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nகாவனூர், மருங்கூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்கவில்லை\nஉறையாமல் கொட்டும் ரத்தம்... ஆண் குழந்தைகளை தாக்கும் ஹீமோஃபிலியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fuelcellintamil.blogspot.com/2007/12/sunlight-and-nuclear-fusion.html", "date_download": "2018-05-27T03:13:08Z", "digest": "sha1:BCONANJB52X5L22VT5ESPYDYZEUIQJ5Z", "length": 11557, "nlines": 78, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: சூரிய ஒளி - அணுக்கரு சேர்தல் (Sunlight and Nuclear Fusion)", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nஇந்தப் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இப்பதிவுகளில் உள்ள தமிழ் சொற்கள், குறிப்பாக அறிவியல் சொற்கள், சரியான அர்த்தத்தில் பயன்படுத்தப்படாவிட்டால், திருத்த்வும். நான் தமிழில் அறிவியல் சொற்களைப் பயன்படுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன.\nநாம் பொதுவாகப் பேசுவது போல ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து எழுதுகிறேன். தூய தமிழில் எழுத வேண்டும் என்பதை விட, சாதாரணமாகத் தமிழ் பேசுபவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதுகிறேன். எனவே பொருள் சரியாக, புரியும் படி இருந்தால் அதை கடினமான சொல்லாக மாற்ற விரும்பவில்லை. நன்றி.\n\"சூரியனுக்கு எப்படி ஒளி வருகின்றது\" என்றால், அது அணு வினை (nuclear reaction) ஆகும். குறிப்பாக, ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணு உருவாகும் வினை ஆகும். மனித குலம் இப்பொழுது யுரேனியம் என்ற தனிமத்தின் அணுக்கருவைப் பிளந்து (nuclear fission) அதில் வெளிப்படும் ஆற்றலை மின்சாரமாக்கும் வழியை தெரிந்து வைத்திருக்கின்றது. இதை வைத்து அணுகுண்டு / nuclear bomb செய்யவும் தெரிந்து வைத்திருக்கிறோம். இந்த வகையில் யுரேனியம் (அல்லது புளூட்டோனியம்) போன்ற தனிமங்கள் தேவை. இவை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.\nஅணுக்கருக்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து , புது அணுவை உருவாக்கும் தொழில் நுட்பம் (nuclear fission technology) ஓரளவு தான் நமக்கு தெரியும். இந்த முறையில் குண்டு செய்யும் தொழில் நுட்பம் சில நாடுகளில் உள்ளது. ஆனால், கட்டுப்பாடாக (control செய்து) ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு, அதை மின்சாரமாக மாற்ற இன்னமும் வழி தெரியவில்லை. இந்த முறையில் நமக்கு தேவையான பொருள் ஹைட்ரஜன் மட்டுமே. இந்த முறையில், ஒரு லிட்டர் தண்ணீரில் இருக்கும் ஹைட்ரஜன், ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுதும் தேவையான மின்சாரத்தை தரும். (இது நாம் கணக்கு போடாமல் சொல்கிறேன். சரியாக கணக்குப்போடத்தெரிந்து பொறுமையுடன் கணிப்பவர்கள் இதை திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்). அதனால், இது தீருமோ என்ற கவலை இல்லை.\nஇங்கு சில கேள்விகள்: ஒரு ஹைட்ரஜனில் ஒரு புரோட்டானும் ஒரு எலக்ட்ரானும் இருக்கும். ஒரு ஹீலியத்தில் இரண்டு புரோட்டானும் இரண்டு நியூட்ரானும் அணுக்கருவில் இருக்கும். வெளியே இரண்டு எலக்ட்ரான்கள் இருக்கும். இப்போது, ஹைட்ரஜன் இணைந்து ஹீலியம் வருவது எப்படி\n (இரண்டு நியூட்ரான்கள் எங்கிருந்து வரும்\n ( 2 புரோட்டான் + 2 எலக்ட்ரான் = 2 நியூட்ரான்\n* எப்படியோ, ஹைட்ரஜன் சேர்ந்து ஹீலியம் ஆனால் அதிலிருந்து ஆற்றல் ஏன் வர வேண்டும்\n* இரண்டு எலக்ட்ரான்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் (repulsive force). அதனால் அவை ஒரே இடத்தில் இருக்க முடியாது. இது கூலும் விதி (Coloumbs law) எனப்படும். ஹீலியம் அணுக்கருவில் இரண்டு ப்ரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்கள் எப்படி பக்கத்திலேயே இருக்கின்றன சரி, நியூட்ரான்களுக்காவது மின்னூட்டம் (சார்ஜ்) இல்லை, அவற்றை விட்டுவிடலாம். இரண்டு ப்ரோட்டான்கள் எப்படி அருகருகே இருக்கின்றன சரி, நியூட்ரான்களுக்காவது மின்னூட்டம் (சார்ஜ்) இல்லை, அவற்றை விட்டுவிடலாம். இரண்டு ப்ரோட்டான்கள் எப்படி அருகருகே இருக்கின்றன கூலும் விதிப்படி ப்ரோட்டான்களுக்கு இடையே எதிர்ப்பு விசை (repulsive force) இருக்காதா\n* ஹீலியமாவது பரவாயில்லை. யுரேனியம் போன்ற தனிமங்களில், 100க்கும் மேற்பட்ட ப்ரோட்டான்கள் மிகச் சிறிய இடத்தில் இருக்கின்றன. எப்படி இவ்வளவு ப்ரோட்டான்களும் (கூலும் விதியின் படி இருக்கும் எதிர்ப்பு விசையை மீறி) இருக்கின்றன\nநாம் 10ம் வகுப்பு படிக்கும் பொழுது ஹைட்ரஜனில் ஒரு ப்ரோட்டான் , ஹீலியத்தில் 2 ப்ரோட்டான் என்று படிக்கிறோம். கூலும் விதிப்படி 2 ப்ரோட்டான் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்றும் படிக்கிறோம். ஆனால் ஹீலியத்தில் 2 ப்ரோட்டான்கள் சேர்ந்து இருப்பதன் ரகசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. விடை தெரிய M.Sc.க்கு மேல் படிக்க வேண்டி இருக்கின்றது. விடை தெரியாவிட்டால் கவலை இல்லை. ஆனால், 10 வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு கேள்வி எழ வேண்டும் என்பது என் ஆசை. அப்படி எழாவிட்டால், ஆசிரியராவது இந்தக் கேள்விகளை அவர்கள் மனதில் தூவ வேண்டும்.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nFuel Cell - எரிமக்கலன் வடிவமைப்பு. பகுதி-5\nசூரிய ஒளி - அணுக்கரு சேர்தல் (Sunlight and Nuclear...\nFuel Cell- எரிமக்கலன் பகுதி 9\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/11/51.html", "date_download": "2018-05-27T03:16:46Z", "digest": "sha1:6RB4MV6K7S4FZ4WWJAUEYJ2SV452XXET", "length": 4007, "nlines": 82, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: காலத்தின் வரலாறு - 51", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nகாலத்தின் வரலாறு - 51\nபத்தாவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. இயற்பியல் விதிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சூப்பர் கிராவிட்டான் என்ற துகளை வைத்து எடுக்கப் பட்ட முயற்சிகள் பற்றி கேட்கலாம். அடுத்து, இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்டிரிங் தியரி பற்றியும் கேட்கலாம்.\nசுமார் 5.8MB, 6 நிமிடங்கள்.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nகாலத்தின் வரலாறு - 54\nகாலத்தின் வரலாறு - 53\nகாலத்தின் வரலாறு - 52\nகாலத்தின் வரலாறு - 51\nகாலத்தின் வரலாறு - 50\nகாலத்தின் வரலாறு - 49\nகாலத்தின் வரலாறு - 47\nகாலத்தின் வரலாறு - 46\nகாலத்தின் வரலாறு - 45\nகாலத்தின் வ்ரலாறு - 40 - 44\nகாலத்தின் வரலாறு - 33\nகாலத்தின் வரலாறு - 32\nகாலத்தின் வ்ரலாறு - 31\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/tamil/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A", "date_download": "2018-05-27T03:35:18Z", "digest": "sha1:2MOLLM3B4NZE3IEGHZNULO3TDKVPTKN4", "length": 12099, "nlines": 237, "source_domain": "onetune.in", "title": "இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும்.... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும்….\nஇரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும்….\nபேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில்\nஇருந்தான். போரில் பெற்ற மாபெரும்\nவெற்றிதான் அதற்குக் காரணம். அந்த\nஅழைத்து “உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும்\nமுதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன்\nஒரு வீடு கட்டிக் கொள்ள\n“உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய\nமாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்”\nஅடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன்.\nதனக்கு சொந்தமாக ஒரு தங்கும்\nவிடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம்\nமூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன்\nதனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும்,\nஎன்று கேட்டான். அதற்கும் நெப்போலியன்\nகடைசி தளபதி ஒரு யூதன். அவன்\nவிடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான்.\nஅதற்கு மன்னன் நெப்போலியன் “உன்\nவிடுப்பு நாளை முதல் தொடங்கும்”\nஅவன் பணித்தவுடன் வெளியே வந்த\nதளபதிகளில் முதல் மூவரும் யூதனைப்\nபார்த்து “சரியான முட்டாளாக இருக்கிறாயே\nஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல்\nகூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில்\nகிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த\nவாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த\nவேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ்\nவேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக்\nகொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட\nஇப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல\nகரைந்து கொண்டே போய் மறக்கப் படும்\nமற்ற தளபதிகள் “அப்படி நடந்தால் மன்னனிடம்\nயூதத் தளபதி சொன்னான் “நண்பர்களே.\nமன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக்\nகளிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில்\nபெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில்\nமற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும்.\nஅதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள்\nதுறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன்\nநிற்கிறது. நாளை உங்கள் துறையில்\nஏதாவது தவறு நடந்தால் நீங்கள்\nதலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள்\nபரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால்\nநான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்”\nஇதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள்.\nயூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக்\nஅரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய\nஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும்\nநூறு ரூபாய்களை விட மேலானது.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்….\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1503159410780?Thirumavalavan-meets-Karunanidhi'+", "date_download": "2018-05-27T03:25:08Z", "digest": "sha1:YDXSMYEW6ZMQER5Q2B7JXIY25ZZFKSBI", "length": 6881, "nlines": 85, "source_domain": "www.newstm.in", "title": "கருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு", "raw_content": "\nகருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு\nகருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு\nகடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டுவரும் திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு வருகிற செப்டம்பர் 17ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் கொடுக்கவே திருமாவளவன் அவரை சந்தித்து வந்துள்ளார்.\nஇதற்கு பின் பேட்டி அளித்த திருமாவளவன், \"விசிக-வின் இந்த மாநாடு நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான விவகாரத்தில் பாஜக-வின் தலையீடு இருப்பதாகவே நான் கருதுகிறேன்\" என்று கூறினார்.\nஶ்ரீ திவ்யாவின் மார்டன் லுக் படங்கள்\nமணிரத்னம் பட நாயகியின் கிளாமர் படங்கள்\nஹீரோயின் ஆன இந்த குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரிகிறதா\nஶ்ரீ திவ்யாவின் மார்டன் லுக் படங்கள்\nமணிரத்னம் பட நாயகியின் கிளாமர் படங்கள்\nஹீரோயின் ஆன இந்த குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரிகிறதா\nஅபியும் அனுவும் - திரை விமர்சனம்\nகாதலன் கண்முன்னே இளம்பெண் பாலியல் பலாத்காரம்\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்\nகாதலன் கண்முன்னே இளம்பெண் பாலியல் பலாத்காரம்\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்\nகாஷ்மீர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசெங்கோட்டை, நெல்லைக்கு புதிய ரயில்கள் இயக்க முடிவு\nசோதனைகள் வந்தால், அதை கண்டு அஞ்சப்போவதில்லை- முதலமைச்சர்\nவங்கி ஊழியர்கள் 22ம் தேதி போராட்டம்\n'கர்நாடக அணை கட்டுவதை அரசு எதிர்க்கிறது'- முதல்வர்\nஅணிகள் இணைப்பு முக்கிய பிரச்னையா\nசெங்கோட்டை, நெல்லைக்கு புதிய ரயில்கள் இயக்க முடிவு\nசோதனைகள் வந்தால், அதை கண்டு அஞ்சப்போவதில்லை- முதலமைச்சர்\nவங்கி ஊழியர்கள் 22ம் தேதி போராட்டம்\n'கர்நாடக அணை கட்டுவதை அரசு எதிர்க்கிறது'- முதல்வர்\nஅணிகள் இணைப்பு முக்கிய பிரச்னையா\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-27T03:36:43Z", "digest": "sha1:RMOI6R67ETZT4HTN527EKZMCOEXHIY56", "length": 6265, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சங்க காலப் பெண்பாற் புலவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:சங்க காலப் பெண்பாற் புலவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎதற்காக பெண்பாற் புலவர்கள் என்று கூற வேண்டும் வெறுமனே பெண் புலவர் என்று கூறினாற் சரி தானே.--பாஹிம் (பேச்சு) 07:29, 8 மார்ச் 2015 (UTC)\nபெண் கவிஞர்களுக்கு கவிதாயினி என்ற சொல் இருப்பதைப் போல பெண் புலவர்களை குறிக்க ஏதேனும் சொல் இருக்கிறதா பயனர்:செல்வா, பயனர்:Ravidreams பயனர்:AntanO --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:02, 10 ஏப்ரல் 2015 (UTC)\n--செல்வா (பேச்சு) 16:14, 17 ஏப்ரல் 2015 (UTC)\nபுலத்தி என்பதை சில நேரங்களில் புலச்சி என்பதற்கு இணையாகவும் பயன்படுத்தலாம். புலையன் புலச்சி. புலவர் என்பது பொதுப்பெயர்.\n[[பயனர்:Jagadeeswarann99 அதே போல் கவிஞர் என்பதும் பொதுப்பெயர் தான். கவிஞன், கவிதாயினி ஒருமையில் குறிப்பிடப்படும் பாற்பெயர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:10, 4 திசம்பர் 2015 (UTC)\nஅவை ஒருமையில் குறிப்பிடப்படுபன என்பதை தெரித்தமைக்கு நன்றி, நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:03, 6 சனவரி 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2016, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-27T03:36:49Z", "digest": "sha1:NFEBTFBBRGLEOQMPYWTSTJNGEFWHTWXU", "length": 12041, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொறிஸ் பெக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெல்லப் பெயர் Boom Boom\nநாடு மேற்கு ஜெர்மனி (1983–1990)\nஓய்வு பெற்றமை 30 ஜூன் 1999\nவிளையாட்டுகள் வலது கை (one-handed backhand)\nவெற்றிப் பணம் US $25,080,956\nஆஸ்திரேலிய ஓப்பன் W (1991, 1996)\nஅமெரிக்க ஓப்பன் W (1989)\nஆஸ்திரேலிய ஓப்பன் QF (1985)\nதகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: N/A.\nபொறிஸ் பெக்கர் 22, நவம்பர், 1967, லைமன், ஜெர்மனி (Boris Franz Becker) ஒரு முன்னாள் ரெனிஸ் வீரரும், ஒலிம்பிக் சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். 6 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 3 விம்பிள்டன் பட்டங்களை வென்றவர். தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும், இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றி பெற்றவர். [1] உலக ரெனிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருந்து சாதனை படைத்தவர். தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்று இன்று வரை ரெனிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக இருப்பவர்.[2]\nமேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் செக்கொஸ்லொவோக்கியாவில் வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தாயாரின் குடும்பத்தின் ஒரு பகுதியினர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். [3], [4][சான்று தேவை]. இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக் கலைஞர்.\n1 பெருவெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்)\nபெருவெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்)[தொகு]\nவெற்றியாளர் 1985 விம்பிள்டன் புற்றரை கெவின் குர்ரென் 6–3, 6–7(4–7), 7–6(7–3), 6–4\nவெற்றியாளர் 1986 விம்பிள்டன் (2) புற்றரை இவான் லென்டில் 6–4, 6–3, 7–5\nஇரண்டாமிடம் 1988 விம்பிள்டன் புற்றரை இசுடீபன் எட்பர்க் 6–4, 6–7(2–7), 4–6, 2–6\nவெற்றியாளர் 1989 விம்பிள்டன் (3) புற்றரை இசுடீபன் எட்பர்க் 6–0, 7–6(7–1), 6–4\nவெற்றியாளர் 1989 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை இவான் லென்டில் 7–6(7–2), 1–6, 6–3, 7–6(7–4)\nஇரண்டாமிடம் 1990 விம்பிள்டன் புற்றரை இசுடீபன் எட்பர்க் 2–6, 2–6, 6–3, 6–3, 4–6\nவெற்றியாளர் 1991 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைதரை இவான் லென்டில் 1–6, 6–4, 6–4, 6–4\nஇரண்டாமிடம் 1991 விம்பிள்டன் புற்றரை மிச்சேல் இசுடிச் 4–6, 6–7(4–7), 4–6\nஇரண்டாமிடம் 1995 விம்பிள்டன் புற்றரை பீட் சாம்ப்ரஸ் 7–6(7–5), 2–6, 4–6, 2–6\nவெற்றியாளர் 1996 ஆத்திரேலிய ஓப்பன்(2) செயற்கைதரை மைக்கேல் சாங் 6–2, 6–4, 2–6, 6–2\nஉலக முதல் தர டென்னிஸ் வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.karutthukkalam.com/2012/10/", "date_download": "2018-05-27T03:31:47Z", "digest": "sha1:UJCUO6FHECD3SEI7LSQV7LL66RUCMF3J", "length": 12126, "nlines": 131, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: October 2012", "raw_content": "\nபுதன், 10 அக்டோபர், 2012\nஎனத்தொடங்கி கேட்பவர் மனதுக்குள் கற்பனைக் குதிரைகளை கட்டவிழ்த்துவிடும் கதைச் சொல்லிகளின் நிலை இப்போது கேள்விக்குறியாகிவிட்டது...\nகதை என்று சொல்லும்போதே உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, துள்ளலை அதை அனுபவித்தோர் மட்டுமே உணர\nஅதிலும் கிராமத்துக்கதைகள் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை..\nகுழந்தைகளுக்குச் கதை சொல்லித்தருவது சிறப்பு வடிவம்...\nசுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஓரளவுக்கு பாதிப்பில்லாமல் நிகழ்ந்து வந்த கதை சொல்லும் பழக்கம் மெல்லமெல்ல நலிந்து, இப்போது அதன் தடம் மறைந்துவருகிறது..\nபுதிய சிந்தனைக்கான கருவாகக் கருதப்படும் கதைகள் நீதி போதனைகளை உணர்த்தவும், வெற்றிக்கான கனவு,\nதன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, திறமைகளை மேம்படுத்தவும் வகைசெய்யும் வலிமையுடையது..\nஅந்தவகையில், நல்ல கருத்துகளை விதைக்கும் கதைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்க சொல்வது அரிதாகி வருகிறது..\nமாறாக, கல்வி பெறுவதில் ஆங்கில மோகமும், எப்படியாவது கூடுதல் மதிப்பெண்களை எடுக்கவேண்டும்\nஎன்ற வேகமும் மேலோங்கி வருகிறதே தவிர, பிற திறன் வெளிப்பாட்டுக்கான முயற்சிகள் குறைவே..\nசுருங்கச்சொன்னால்,மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகின்றனர்..\nஇதனால் மன அழுத்தம், உளைச்சலுக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதோடு, சில நேரங்களில் தவறிழைக்கவும்\nவகுப்பு ஆசிரியரையே கொன்ற மாணவன், வகுப்புத்தோழியை பலாத்காரம் செய்த மாணவர்கள் என, அவர்களைத் தொடர்புபடுத்தி ஒழுக்கநெறி மீறல் செய்திகள் தொடர்வது கவலையளிக்கிறது..\nஇதுபோன்ற சம்பவங்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நூல்களைப் படிப்பது, விளையாடுவது,\nபயிற்சிபெறுவது என பல நிகழ்வுகளோடு, நீதி போதனைகளை உணர்த்தும் கதைகளைச் சொல்லித்தருவதில் காட்டும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் விளைவும் பெரிய காரணம் என்பதை மறுக்க முடியாது..\nபல ஆண்டுகளுக்கு முன்வரை பள்ளிகளில் நீதி போதனைக்கென நேரம் ஒதுக்கப்பட்டு தனி வகுப்புகள் நடத்தப்பட்டன..\nஆமையும் முயலும், வலையுடன் பறந்த புறா என பல கதைகள்...\nநேர்மை, பேராசை, தியாகம், ஒற்றுமை, உழைப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை என பல வாழ்வியியல் போதனைகளை உணர்த்துவதாக இருந்தது..\nஇன்றைக்கோ, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்றால் என்ன என கேட்கும் நிலை உள்ளது..\nபள்ளிகளில்தான் இந்நிலை என்றால் பெரும்பாலான வீடுகளிலும் கதைகளுக்குத் தட்டுப்பாடாகத்தான் உள்ளது..\nஇந்த நிலைக்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட சீரழிவும் முக்கிய காரணம்..\nஇன்றைக்கு கதை என்ற பெயரில் டி.வி. மாயாஜாலங்களைக் காண்பதின் விளைவு தெரியாமல் மாணவர்கள், இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்...\nபொதுவாக சமூகத்தில் நேரிடும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் சினிமா, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சில காரணிகளைக்கூறி தப்பித்துவிடுகிறோம்..\nசமுதாயத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் மாணவர்களுக்கு கதைகளைக் கூறி, நீதி போதனைகளைக்\nகல்விக்காக பல திட்டங்களை உருவாக்கும் அரசுகள், நீதி போதனைகளைக் கற்பிக்க தனி வகுப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கலாம்..\nகுழந்தைகளுக்கு கதை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்..\nஅதை அவர்களுக்குச் சொல்லித்தரும் பழக்கம் நம்மிடையே இப்போது குறைந்து போகலாம்..\nஆனால், எதிர்காலத்தில் அவர்கள் தங்களது வாரிசுகளுக்குச் சொல்வதற்கு ஒரு கதை இப்போதே தயாராகி வருகிறது..\nவீட்டுக்கு வீடு இரண்டொரு கதை சொல்லிகள்\nஅவர்கள் நிறைய கதைகளைச் சொல்லித்\nஏதோ காரணங்களால் அவர்கள் படிப்படியாக முதியோர்\nகற்பனை வளம் இல்லாமல் முடியும்...\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 1:02:00 2 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\nCopyright © 2017 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.95012/", "date_download": "2018-05-27T03:21:38Z", "digest": "sha1:PPKHSSV5XUVWL3BSLN25ZLZHW4SSZRND", "length": 25959, "nlines": 244, "source_domain": "www.penmai.com", "title": "ஆறு சுவை அவசியம் தேவை | Penmai Community Forum", "raw_content": "\nஆறு சுவை அவசியம் தேவை\nஆறு சுவை அவசியம் தேவை​\nநம்முடைய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறையில், அறுசுவை உணவே, சமச்சீரான உணவாகச் சொல்லப்படுகிறது. இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என ஆறு சுவை உணவுகளைச் சாப்பிடும்போது, அவை ஏழு விதமான தாதுக்களை அளிக்கும். இதில் ஏதேனும், ஒரு சுவையைத் தவிர்த்து வந்தாலும், உடலில் நோய்கள் ஏற்படும். இதனால்தான், வருடப்பிறப்பு அன்று, வெல்லம், மாங்காய், உப்பு, வேப்பம்பூ என அனைத்துச் சுவையும் கலந்த, பச்சடியை செய்வார்கள். வருடம் முழுவதும், ஆறு சுவைகளையும் சேர்த்துக்கொள்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள். உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த ஆறு சுவைகளுமே பஞ்ச பூதங்களின் தன்மையால் ஆனவை.\nஉடலுக்குச் சக்தியையும் மனதுக்கு இனிமையையும் தரக்கூடியது. இனிப்பை முதலில் சாப்பிட்டே ஆகாரத்தைத் தொடங்க வேண்டும். இதனால், கப தோஷம் உண்டாகும். கடைசியாகச் சாப்பாட்டை முடிக்கும்போது, துவர்ப்பு சாப்பிடுவதால், அது இனிப்பை பேலன்ஸ் செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். உடைந்த எலும்பை ஒன்று சேர்க்கும். மூளையில் செரட்டோனின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கும்.\nரிஃபைண்டு சர்க்கரை, இனிப்புச் சுவையின் பலனைத் தராது. இனிப்பு என்றால், பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை, தேன், பசு நெய் இவைதான். அளவோடு சாப்பிட வேண்டும்.\nஉடலில் கப தோஷம் பெருகும். இதனால், உடல் பருமன், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், அஜீரணம், மேக நோய், கழுத்து சுரப்பி வீக்கம். சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வரலாம். வெறும் இனிப்புச் சுவை மட்டுமே சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.\nபித்தம், சூடு அதிகரிக்கும். இதனால், சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை, தேன், நுங்கு சேர்த்துக்கொள்ளலாம். இனிப்புத் திராட்சை மாதவிலக்கைச் சீராக்கும். உலர் திராட்சை இதயத் துடிப்பைச் சீராக்கும். இனிப்புச் சுவையுள்ள செவ்வாழை கண் பார்வையைக் கூர்மையாக்கும். கொய்யா, எலும்பை உறுதியாக்கும்.\nஜீரணமண்டலம் நன்கு செயல்பட, புளிப்பு தேவை. எலுமிச்சை, புளி, கொடும்புளி, மாதுளங்கம், மாங்காய், அன்னாசிப்பழம், மோர் இவற்றின் மூலம் புளிப்பைப் பெறலாம். மிதமான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றிலிருந்து பெறப்படும் புளிப்பு, உடல் வளர்ச்சிக்கு உதவும். மிதமாகப் புளித்த இட்லி, தோசை மாவு, மோர் இவற்றால், உணவை ஜீரணிக்கும் என்சைம்கள் நிறையக் கிடைக்கும்.\nஇட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், ஒவ்வொரு நாளும் அதில், நொதித்தல் நடக்கும். இது மறைமுகமாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். இன்று அரைத்து, நாளை சாப்பிடுவதுதான் நல்லது. புளிக்குழம்பு, காரக்குழம்பு அதிகம் சேர்த்தாலும், பித்தம் அதிகரிக்கும். இதனால், ரத்தம், தசைகளில் புளிப்புத்தன்மை ஏறி, உடல் வலி, சரும வறட்சி, சரும நோய்கள் வரலாம்.\nஜீரண சக்தி குறையும். மந்தத்தன்மை அதிகரிக்கும். அசதி, சோர்வு இருந்துகொண்டே இருக்கும்.\nஉணவுக்குச் சுவை தருவது மட்டுமல்ல, எலும்பு மற்றும் மஜ்ஜைகளை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும். நாட்டு மருந்துக் கடையில் ‘சைந்தலவனம்’ என்ற உப்பை வாங்கிப் பயன்படுத்தலாம். சோடியம், பொட்டாசியம் போன்ற எல்லா தாது உப்புக்களும் அதில் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.\nஅயோடைஸ்டு உப்பு, தாதுக்களை எல்லாம் பிரித்துவிட்டு, வெறும் அயோடினை மட்டுமே சேர்த்துத் தரும். இதைச் சாப்பிடுவதால், எந்தப் பலனும் இல்லை. கடல் ஒரங்களில் கிடைக்கும் காய்கறிகள், மீன்கள், பால் இவற்றிலேயே அயோடின் இருக்கிறது. அதனால், அயோடின் உப்பு தேவையற்றது.\nசிப்ஸ், லேஸ், குர்குரே பர்கர் போன்றவற்றைச் சாப்பிட்டாலோ, சோடா, பிரிசர்வ்டு டிரிங் குடித்தாலோ, மோனா சோடியம் குளுட்டமேட் (MSG) கலந்த உணவுகளைச் சாப்பிட்டாலோ உடம்பில் சோடியம் கலந்த உப்பு சேர்ந்துகொண்டே இருக்கும். சோடியம் உப்பு, சிறுநீரகத்தில் பிரச்னைகளை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.\nஉடலில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். தேவை இல்லாத நீர் சேரும். ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும். பித்தத்தை அதிகரித்து, சீக்கிரமே நரை முடி, முடி உதிர்தல், கொட்டுதல், வழுக்கை போன்ற பாதிப்புகள் வரும். எனவே, உப்பை அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஉப்பு சாப்பிட்டால் தப்பு என்று, உப்பைக் குறைத்துவிடவும் கூடாது. இதனால், எலும்பு மஜ்ஜை வலுவிழந்துபோகும். சிலருக்குக் கெண்டைக்காலில் தசைப் பிடிப்பு ஏற்படும். தசைகள் சோர்வடையும். தலைசுற்றல் வரும்.\nகாரம் என்றாலே, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் என்று ஆகிவிட்டது. மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கடுகு போன்றவையும் காரச்சுவைதான். காய்ந்த மிளகாயைத் தவிர்த்து, மற்ற காரப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. காரச் சுவை, உடல்பருமனைக் குறைக்கும். மலத்தை இளக்கும். உடலைத் தூய்மையாக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். வலிமையைப் பெருக்கும். குடல் புழுக்களை அழிக்கும்.\nஉடலில் காரத்தன்மை அதிகமாகும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிக்கலாம். பலத்தைக் குறைத்து, பலவீனத்தை அதிகப்படுத்தும். இடுப்பில் தேவையற்ற வலிகள் உண்டாகும். மிளகு, பெருங்காயம், இஞ்சி, சித்திரமூலம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் காரம் உடலுக்கு நல்லது.\nசின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் காரத்தைக் கொடுத்து வளர்க்க வேண்டும். நிறையப் பேர் “என் குழந்தை காரமே சாப்பிட மாட்டா” என்று பெருமையாகச் சொல்வார்கள். இது தவறான பழக்கம். இனிப்பு மட்டுமே சாப்பிடும் குழந்தைகளுக்கு, குடல் புழுக்கள் உருவாகும். இதனால், சரும நோய்கள், சரியான வளர்ச்சியின்மை, சளி, இருமல், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வரும். அந்த மாதிரி குழந்தைகளுக்கு இனிப்பு சுவையைக் குறைத்து, மிளகு போன்ற காரச்சுவையை அதிகரித்து வந்தாலே, நல்ல பலன் கிட்டும். மிதமான அளவு உண்ண வேண்டும்.\nமுகத்தைச் சுளிக்கவைக்கும் சுவை. ஆனால், உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படும். ரத்தத்தை சுத்திகரிக்கும். நன்னாரி, சந்தனம், வேம்பு, சீந்தில் மற்றும் பாகற்காய், வெந்தயம், சுண்டைக்காய் போன்றவற்றின் மூலம் கசப்புச் சுவையைப் பெறலாம். உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும். தொண்டைப் புண்களை ஆற்றும். தோல் நோய்கள், குடல் புழுக்களுக்குக் கசப்பு சிறந்தது. நரம்புத் தளர்ச்சி மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் கை, கால்களில் எரிச்சல் இருக்கும். அந்த எரிச்சலைக் கசப்புத்தன்மை தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.\nஉடலில் தாதுக்களைக் குறைக்கும். வாயுவை அதிகப்படுத்தும். இதனால் வாயுத் தொல்லை ஏற்படலாம். கசப்பு உணவுகளை அதிகம் வறுத்துச் சாப்பிட்டால், உடல் முழுவதும் வலிகள் வரலாம். கசப்புச் சுவை அளவோடு இருக்க வேண்டும்.\nரத்தம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nபெரிய நெல்லிக்காய், வாழைப்பூ, நாவல்பழம், அத்தி, கடுக்காய், தாமரைத்தண்டு, சீரகம், புதினாவிலிருந்து இந்தச் சுவையைப் பெறலாம். பித்த கபத்தைச் சரிசெய்யும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். அனைத்து புண்களையும் ஆற்றும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.\nஉடலில் வாயு அதிகரிக்கும். இதயத்தில் வலி ஏற்படலாம். கழுத்து, பின்புறத் தோள்பட்டைக்கு நடுவில் வலி வரலாம். உடல் எடையைக் குறைக்கும். ஆண்மைத்தன்மை குறையும். மலச்சிக்கல் பிரச்னை வரும்.\nஇரும்புச்சத்து கிரகிக்கும் தன்மையை இழக்கும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.\n‘புளிப்பா சாப்பிடனும் போல் இருக்கு. ஒரு எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமே; என்று தோன்றும். நாக்கு ஏங்கும்போது, வாயில் எச்சில் ஊறும். வாந்தி, சோர்வு, வயிறு மந்தமாக இருக்கும்போது உப்பில் போட்ட எலுமிச்சை, நார்த்தங்காய், மாங்காய் சாப்பிட்டால் நன்றாக பசி எடுத்து ஜீரணமாகும். உடலில் எனர்ஜி குறையும்போது, சோர்வா இருக்கும்போது இனிப்புச் சுவை சாப்பிடத் தோன்றும். அப்போது உடனடியாக உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும். இப்படி உடலானது உணர்வின் மூலம், தன்னைத் தானே ‘ஹீல்’ பண்ணிக் கொள்ளும்.\nகுளிர் காலத்தில், வெளியில் அதிகக் குளிர் இருப்பதால், உடலினுள் அக்னி கொழுந்துவிட்டு எரியும். இதனால், பசி அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் இனிப்பு ஆகாரங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் கொடுத்தால், நன்கு ஜீரணமாகும். வெளியில் சுட்டெரிக்கும் வெயில் இருந்தால், உடலில் வெப்பம் குறைவாக இருக்கும். இதனால் அதிகம் பசி எடுக்காது. எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.\nசாப்பாட்டின் மீதான ஆர்வம் குறைந்து, உடலில் உப்புச் சத்து வெளியேறுவதால், தண்ணீர், பழச்சாறு, மோர் குடித்தாலே போதும் என்ற மனநிலை ஏற்படும். இந்தத் தருணத்தில் கோடை காலப் பழங்கள், நீராகாரங்கள் சாப்பிடலாம். எந்தெந்த காலகட்டத்தில் என்ன மாதிரியான நோய்கள் வரும் என்பதை அறிந்து, அதற்கேற்ப சாப்பிட்டாலே, உடல் சீராக இருக்கும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஆறு சுவையும் அஞ்சறைப்பெட்டியும் Nature Cure 6 May 22, 2015\nFood Six Tastes - ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு\nஆறு சுவைகள் (six tastes)\nFood Six Tastes - ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு\nஆறு சுவைகள் (six tastes)\nSix Tastes - ஆறு சுவைகள்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2012/06/2.html", "date_download": "2018-05-27T03:01:00Z", "digest": "sha1:HE4MMJH6P6KR4XWQ2S4RG3CFUYUBRB7V", "length": 66747, "nlines": 602, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 2 !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nதிரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 2 \nஎதிர்ப்பார்ப்புகளுடன் எங்கு சென்றாலும் அது கொஞ்சமேனும் நிறைவேறாவிட்டால் பிறகு எதையும் ரசிக்க முடியாது, 'பின்டன்' ரிசார்டுகள் அவ்வளவு மோசமில்லை என்றாலும் என் போன்றவர்கள் சுற்றுலாத் தளத்தில் பகல் முழுவதும் சுற்றி சுற்றி வந்து எதாவது செய்து ((Activities) கொண்டு அந்த இடத்தை முற்றிலும் சலிக்கும் வரை இல்லாவிட்டாலும் கால் வலிக்கும் வரை சுற்றிவர விரும்புவர்.\nஇங்கு 'பின்ட'ன் சுற்றுலா வளாகம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே என்பதால் நம் விருப்பப்படி சுற்றிவர எதுவும் இல்லை, அதற்கான வசதி வாய்ப்புகளும் இல்லை என்ற எண்ணம் வர நாளைய பொழுதை எப்படி கழிப்பது என்றவாறு நினைத்துத் தூங்கி காலை 7:30 மணிக்கு எழுந்தேன், குழந்தைகளும் எழுந்து கொண்டார்கள், அவர்களை கிளப்பச் சொல்லிவிட்டு ரெடிமேட் காப்பியை சுடுநீரில் கலக்கி குடித்துவிட்டு அறையை விட்டு கடற்கரைக் பகுதிக்கு வந்தேன்.\nநேற்று மாலைப் பார்த்த கடலா இது கடல் தண்ணீர் 200 மீட்டர் தொலைவு வரை உள் வாங்கி இருந்தது, கடற்கரை பாறைத் திட்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது, ஒரு 100 மீட்டர் தொலைவு வரை உள்ளே சற்று பயத்துடன் தான் நடந்தேன், ஏனெனில் கடல் தரைகளை நம்ப முடியாது, புதை மணலாக இருந்து உள்ளே இழுத்தால் கடல் தண்ணீர் 200 மீட்டர் தொலைவு வரை உள் வாங்கி இருந்தது, கடற்கரை பாறைத் திட்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது, ஒரு 100 மீட்டர் தொலைவு வரை உள்ளே சற்று பயத்துடன் தான் நடந்தேன், ஏனெனில் கடல் தரைகளை நம்ப முடியாது, புதை மணலாக இருந்து உள்ளே இழுத்தால் அப்படி ஒரு ஆபத்தான அனுபவம் வீட்டருகே இருக்கும் கடற்கரையில் எனக்கு நேர்ந்ததால், நிதானமாக காலடிகளை எடுத்து வைத்தேன், ஈரம் என்பது தவிர்த்து கட்டாந்தரை போல் தான் இருந்தது நேற்று மாலையில் கடல் நீர் இருந்த பகுதிகள். 200 மீட்டர் உள் வாங்க 2 மீட்டர் உயரத் தண்ணீர் கீழே இறங்கி இருக்க வேண்டும், ஆனால் அவை எங்கு சென்றது அப்படி ஒரு ஆபத்தான அனுபவம் வீட்டருகே இருக்கும் கடற்கரையில் எனக்கு நேர்ந்ததால், நிதானமாக காலடிகளை எடுத்து வைத்தேன், ஈரம் என்பது தவிர்த்து கட்டாந்தரை போல் தான் இருந்தது நேற்று மாலையில் கடல் நீர் இருந்த பகுதிகள். 200 மீட்டர் உள் வாங்க 2 மீட்டர் உயரத் தண்ணீர் கீழே இறங்கி இருக்க வேண்டும், ஆனால் அவை எங்கு சென்றது ஒரு வேளை சுனாமி அந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் இருந்தாலும் சுற்றிலும் நாடுகள் அரணாக இருப்பதால் பெரிய சுனாமிக்கு வாய்ப்பில்லை. அந்தப் பகுதியில் கடல் நீரோட்டங்கள் அந்தக் கடற்கரைப் பகுதி நீரை உயர்வாகவும் தாழ்வாகவும் ஆக்குகிறது என்பது பிறகு தான் புரிந்தது, நான் சென்று வந்த பிறகு சரியாக ஒரு மணி நேரத்தில் நேற்று மாலைப் பார்த்த அளவுக்கு கடல் நீர் கரை வரை வந்திருந்தது. மறுநாள் காலையும் இதே போன்று தான் கடல் நீர் உள்வாங்கி இருந்தது.\nகடற்கரையைச் சுற்றிவிட்டு முந்தைய நாள் சென்ற விலங்குகளின் காட்சிக் குடில் வழியாக திரும்பவம் விடுதியை அடைந்தேன், இது போன்ற 3 - 5 நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதிகளில் காலை உணவு இலவசம் தான், 50க்கும் மேற்பட்ட உணவு வகைகளை விருப்பம் போல் எடுத்து திண்ணும் பபே முறையில் அமைத்திருப்பார்கள், பழச்சாறுகள் மற்றும் காபி, தேனீர் கூட இருக்கும், ரொட்டி வகைகள், நூடுல்ஸ், சோறு, கஞ்சி, ஆம்லேட், ஆப்பாயில், வெட்டிய பழங்கள், சோள மாவில் செய்யப்பட்ட கெல்லாக்ஸ் வகைகள், எல்லாமும் இருக்கும், சைவ உணவு தான் சாப்பிடுவது வழக்கம் என்பதால் எனக்கு ப்ரெட், கெல்லாக்ஸ் மற்றும் கஞ்சி தவிர்த்து வேற எதுவும் கொஞ்சம் தள்ளி சூடான இட்லிகள், வடைகள், பில்டர் காபி இருந்தது, அதனருகில் இந்திய முகங்கள் நிறைய பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர், ஆனால் தமிழ் குரல் எதுவும் கேட்கவில்லை, ஆகா இட்லி என்று நினைத்து அருகே சென்றால் அது தனியாக ஒரு தனியார் நிறுவனம் அவர்கள் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாம், விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு அதில் பங்கு இல்லை என்றார்கள், போச்சுடா.....சரி என்று சொல்லிவிட்டு அறைக்கு திரும்பி குளித்துவிட்டு தயாராக இருந்த குழந்தைகளை கூட்டி வந்து அதே உணவகத்திற்கு வந்து, சாப்பிட முடிந்த வகைகளை மட்டும் சாப்பிட்டோம், அடுத்து எங்கு செல்வது என்கிற திட்டம் எதுவும் இல்லாததால் பொறுமையாக சாப்பிட்டு முடிக்க 45 நிமிடம் ஆகியது. அங்கிருந்து கடற்கரைப் பகுதிக்கு வந்தோம் முன்பு சொன்னது போல் கடல் நீர் கரை வரை வந்திருந்தது, சுற்றிப் பார்த்துவிட்டு 15 நிமிடம் நடந்து நேற்று உருட்டு பந்து விளையாண்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.\nமழைத்தூறல் இருந்தது, விடுதியில் கொடுத்த பொழுது போக்கு விளையாட்டுகளுக்கான கூப்பானில் நடைபெறும் பல்வேறு பொழுது போக்கு நிகழ்வுகளுக்கான இடம் அங்கு தான் இருந்தது, கொஞ்சம் உயரமானப் பகுதி அது கீழே இறங்க கடற்கரையில் முடிந்தது, அதாவது ஒரு பக்கம் கடற்கரையில் விடுதி மறுபக்க கடற்கரையில் இந்த பொழுது போக்கு திடல். துப்பாக்கி சுடுவது மற்றும் வில் அம்பு ஆகியவற்றை செயல்படுத்த நமக்கு அனுமதி இருந்தது, 30 அம்புகளைக் கொடுத்தார்கள், எதிரே 30 மீட்டர் தொலைவில் இருந்த வட்டக் குறியில் (டார்கெட்) அடிக்க வேண்டும், நானும் மகளும் அம்புகளை எய்தினோம் (இந்த 'எய்' என்கிற தமிழ் வினைச் சொல்லில் இருந்து தான் Aim வந்திருக்குமோ ) . பயிற்சிகள் இல்லாததால் பாதிக்கு மேல் டார்கெட்டில் விழவில்லை, அதன் பிறகு மழை பொழிந்ததால் அம்பு எய்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கும் சில வட இந்தியர்கள் குழந்தைகளுடன் வந்து கரே முரே என்று பேசிக் கொண்டு வந்துவிட்டார்கள், பின்னர் துப்பாக்கி சுடுதலில் கொஞ்சம் நேரம் சுட்டுவிட்டு வந்தேன், முப்பது குண்டுகள் வரைக் கொடுத்தார்கள், இரண்டு மிமி நீளம் உள்ள மிக சிறிய ஈயக்குண்டு தான், பொருத்துவதும் எளிதாகத்தான் இருந்தது. குறிப்பார்த்து துப்பாக்கிச் சுடுவது எளிதாகத்தான் இருந்தது. மழை கொஞ்சம் குறைந்திருந்தது, அடுத்து ) . பயிற்சிகள் இல்லாததால் பாதிக்கு மேல் டார்கெட்டில் விழவில்லை, அதன் பிறகு மழை பொழிந்ததால் அம்பு எய்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கும் சில வட இந்தியர்கள் குழந்தைகளுடன் வந்து கரே முரே என்று பேசிக் கொண்டு வந்துவிட்டார்கள், பின்னர் துப்பாக்கி சுடுதலில் கொஞ்சம் நேரம் சுட்டுவிட்டு வந்தேன், முப்பது குண்டுகள் வரைக் கொடுத்தார்கள், இரண்டு மிமி நீளம் உள்ள மிக சிறிய ஈயக்குண்டு தான், பொருத்துவதும் எளிதாகத்தான் இருந்தது. குறிப்பார்த்து துப்பாக்கிச் சுடுவது எளிதாகத்தான் இருந்தது. மழை கொஞ்சம் குறைந்திருந்தது, அடுத்து யானை ஏற்றம் குதிரை ஏற்றம் எல்லாம் அங்கே நடப்பதாகச் சொனனர்கள், ஆனால் அதெல்லாம் மாலை மூன்று மணிக்கு மேல் தானாம். அங்கிருந்து விடுதி இலவசப் பேருந்திற்கு ஒரு 20 நிமிடம் காத்திருந்து ஏறினோம், நான் முந்தைய நாள் இரவு உணவு வாங்கிய விடுதிக்கு அருகே இறக்கிவிட அங்குள்ள கடற்கரையை ஒட்டி நடந்தோம், சற்று தொலைவில் கடற்கரை படகு விளையாட்டுகளுக்கான பகுதி இருந்தது, அங்கும் வட இந்தியர்கள் தான் கடல் விளையாட்டுகளில் மும்மரமாக இருந்தனர்.\n பெயருக்குக் கூட தென்னிந்தியர்கள் ஒருவரையும் பார்க்க முடியவில்லை, வட இந்தியர்களைப் பொருத்த அளவில் பணக்காரர்கள் ஏழைகள் என்கிற இரண்டே வர்கம் உண்டு போலும், பணக்காரர்கள் குடும்பமாக வந்து நன்றாக நாடுகளை சுற்றிப் பார்த்து அனுபவிக்கிறார்கள். பணத்தை தண்ணீராக செலவு செய்கிறார்கள். அந்தப் பகுதியில் சற்று நேரம் நின்றுவிட்டு மணியைப் பார்க்க மாலை 2 ஐ நெருங்கியது, அங்கிருந்து பேருந்தை எடுத்து விடுதிக்கு வந்தோம், விடுதி முகப்பில் இந்தோனேசிய பாரம்பரிய சிறிய நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்தது, சற்று நேரம் பார்த்துவிட்டு அறைக்குச் சென்று, ரெடிமேட் நூடுல்ஸ் உள்ளிற்றவற்றை தின்றுவிட்டு ஓய்வெடுத்துவிட்டு விடுதி மையப்பகுதிக்கு வந்தோம்.\nமாலை 3 மணி, இந்த விடுதியை விட்டு பிறப் பகுதிகளைப் பார்க்கவே முடியாதா பேருந்தில் 10 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு கடைத்தெருவுக்கு கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள், ஆனால் பேருந்திற்கு பெரியவர்களுக்கு 5 வெள்ளியும் குழந்தைகளுக்கு 3 வெள்ளியும் கட்டணமாம், எப்படியாவது இங்கிருந்து சென்றால் சரி தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், அதற்குள் யானை ஏற்றமும் குதிரை ஏற்றமும் நினைவுக்கு வர, மீண்டும் காலையில் சென்ற பொழுது போக்குப் பகுதிக்குச் சென்றால் அங்கு உயரமான கோபுரத்தில் (டவரில்) இருந்து கயிற்றில் தொங்கிவரும் மற்றொரு செயல்பாடுகளும் துவங்கி இருந்தது, எனக்கு உயரம் அச்சமில்லை என்றாலும் மனைவியும் மகளும் விரும்பினார்கள், சிறுவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களை கயிற்றில் தொங்கிவரும் அந்த விளையாட்டுக்கு அனுப்பி வைத்தேன், 70 அடி உயர கோபுரத்தில் 50 அடி உயரத்தில் இருந்து கயிறு 200 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு உயரம் குறைவான பகுதியில் இணைக்கப்பட்டு இருக்கும், அதில் பாதுகாப்பு பட்டிகளைக் மாட்டிவிட்டு தொங்கவிடுகிறார்கள், 20 வினாடிகளில் மறுபக்கம் சறுக்கியபடி வந்துவிடமுடியும், அதில் தொங்கி வரும் போது கைகளை விரித்து வந்தால் பறப்பது போல் ஒரு அனுபவம் கிடைக்கும், அனுபவம் நன்றாக இருந்ததாக மனைவியும் மகளும் தெரிவித்தார்கள்.\nஅந்தப் பகுதிக்குச் சற்று கீழே யானைச் ஏற்றத்திற்கான இடம் இருந்தது, 7 யானைகள் வரை வைந்திருந்தார்கள், அதில் 4 பெண் யானைகளாம், 3 ஆண் யானைகளாம், யானை மீது பயணம் செய்பவர்கள் பாகனின் தொள் பட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், அம்பாரியெல்லாம் கிடையாது, மகளும் மனைவியும் அச்சப்பட நான் மட்டும் தான் யானைச் ஏற்றத்திற்கு சென்றேன், அது இலவசம் தான், ஓட்டல் கட்டணத்துடன் இணைந்தது தனியாக பணம் கொடுக்கத் தேவை இல்லை. யானைகளில் ஏறுபவர்களும் பாகனும் காலணி அணிந்திருந்தனர், எனக்கு யானை கணபதி, வினாயகர் என்கிற எண்ணம் எல்லாம் எதுவும் இல்லை, அது தவிர்த்து உட்காரப் போகும் யானை ஆணா பெண்ணா (பெண் யானையும் பிள்ளையாரா ) என்றெல்லாம் தெரியாது, இருந்தாலும் காலணியை கழட்டுவது என்றே நான் முடிவு எடுத்து இருந்தேன். காரணம் யானை மனிதர்களுடன் நெருக்கமாக, அன்பாகப் பழகும் ஒரு விலங்கு அதன் மீது காலணியுடன் ஏறுவதற்கு எனக்கு மனதில்லை. நெல்லு மூட்டை அடுக்கிய மாட்டு வண்டியில் மூட்டை மீது ஏறி உட்கார்ந்திருப்பதைப் போன்று தான் இருந்தது, யானை அசைந்து நடக்க கொஞ்சம் அதன் தசைகள் அசைய, நமக்கு இருக்கமான மூட்டையில் அமர்ந்திருப்பதைக் காட்டிலும் நொழ நொழ உணர்வு ஏற்படும், தொலைவில் பார்க்க பாறை உடம்பு போல் இருக்கும் யானை, மேல் அமர்ந்து பார்க்க முதுகில் கூரான முடிகள் நெருக்கமாக இருந்தது, மேலே துணி இருந்ததால் முடி என் உடலில் குத்தவில்லை. யானைப் பாகன் உற்சாகமாகப் பேசினார். 8 ஆண்டுகளாக பாகனாக இருக்கிறாராம், நாள் தோறும் அவருடைய ஊரில் இருந்து 30 கிமீ பைக்கில் வந்து செல்வாராம், ஊதியமாக சிங்கை வெள்ளி மதிப்பில் 700 வெள்ளிகள் கொடுக்கிறார்களாம். 7 யானைக்கும் சேர்ந்து 10 பேர் பணியில் இருக்கிறார்கள், யானை காடு போன்ற பகுதிகுள் நடந்து சென்றது, அங்கிருந்து சற்று சரிவில் ஏறிச் சென்றது, மேலே உட்கார்ந்திருக்கும் போது சற்று அச்சமாகத்தான் இருந்தது, தமிழில் தானே இருக்கிறது யானைக்கும் அடி சறுக்கும் பழமொழி. பயப்படாதீர்கள், யானை ரொம்பவும் வலிமையான விலங்கு நிதானமாக ஏறும் என்றார், 10 நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து விட்டார், இறங்கி காலணிகளை அணிந்து கொண்டேன், அடுத்து யானைகளை வைத்து (வித்தை) காட்சியாம். துவங்க இருந்தார்கள், ஆனால் அதற்கு கட்டணம் பெரும் தலைக்கு 20 வெள்ளி, சிறியவர்களுக்கு 10 வெள்ளி. 50 வெள்ளி அழ என்னால் முடியாது தவிர யானை வித்தைகளை ஏற்கனவே சிங்கை விலங்கியல் பூங்காவில் பார்த்து 2 திங்கள் கூட ஆகாத நிலையில் அங்கிருந்து கிளம்பிவிட்டோம் ஒரு யானை ஏற்றத்திற்கான மற்ற கூப்பனும் பயன்படுத்தவில்லை.\nமணி மாலை 4:30 ஆகி இருந்தது, விடுதிக்குச் சென்று கட்டணப் பேருந்தில் ஏறி அவர்கள் குறிப்பிட்ட விடுதிக்கு வெளியே 10 கிமீ தொலைவில் இருக்கும் கடைத் தெருவைச் சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து அதற்கான பேருந்து வந்ததும் ஏறினோம். விடுதி வளாகத்தைவிட்டு சோதனைச் சாவடி தாண்டி ஒரு சாலையில் பிரிந்து சென்றது வாகனம், அந்த பகுதிகள் உயரம் குறைவான மரங்களாலும், செடிகளாலும் புதர்கள் அடங்கிய காட்டுப் பகுதி நடுவே சாலைகள் அமைத்திருக்கிறார்கள், சாலைக்கு அருகே மின் கோபுரங்களும் இருந்தன. அந்தப் பகுதியில் சுற்றுலாத் தளங்கள் தவிர்த்து பொது மக்களுக்கான குடியிருப்போ, நகங்களோ இல்லை, சுமார் 20 கிமீ பரப்பளவில் பல்வேறு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன, 15 நிமிடப் பயணத்திற்கு பிறகு இது தான் அந்த கடைத் தெரு என்று ஒரு இடத்தில் பேருந்து நின்றது.\nஅந்த கடைத்தெருவின் பெயர் 'பசர் ஒளே ஒளே(Pasar/Bazar Ole Ole)' பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸுகள் இருக்கும் என்று நினைத்து வந்த இடத்தில் 20 மர வீடுகளை அமைத்து அதில் கடைகள் இருந்தன, அவற்றில் மசாஜ் குடில்கள் மற்றும் சுற்றுலா பரிசு பொருள்கள், உணவு பொருள்கள் விற்கும் கடைகள் தவிர்த்து எதுவும் இல்லை, பேருந்து கட்டணமாக 13 வெள்ளிகள் செலுத்தி வந்தது இதைப் பார்க்கத்தானா \nதிரும்பப் போகலாம் என்று பார்த்தால் அடுத்து பேருந்து ஒரு மணி நேரம் சென்று தான் கிளம்புமாம், ஒரு மணி நேரம் அங்கே பொழுதை ஓட்டுவது கடுப்பாகத்தான் இருந்தது, அங்கு தண்ணீர் பாட்டில் விலை குறைவாக இருந்தது 2 வெள்ளிக்கு இரண்டு பாட்டில் கிடைத்தது, இதுவாவது விலைக் குறைவாக இருக்கிறதே என்று நினைத்தே வாங்கினேன், பின்னர் அக்கம் பக்கம் வீடுகளுக்குக் கொடுக்க நினைவுப் பொருள்கள் சில வற்றை வாங்கினோம், இளநீர் கிடைத்தது ஒரு இளநீர் 3 வெள்ளி, பெரிய இளநீர் தான் என்றாலும் அதே இளநீர் ஜோகூரில் 3 ரிங்கிட் அதாவது அந்த விலையில் பாதிக்கும் குறைவே, மலேசியாவை ஒப்பிட இந்தோனேசியா ஏழை நாடு தான். இங்கு விலைகள் எல்லாம் டிமாண்ட் என்ற வகையில் ஏற்றமாகவே விற்கிறார்கள், சுற்றுலாவருபவர்களுக்கு வேறு எங்கேயும் வாங்க வாய்ப்பில்லாத நிலையில் அவர்களிடம் இருந்து கரந்துவிட முடியும் என்றே விலைக் கூடுதலாகவே விற்கிறார்கள். கடைத்தெரு என்று விடுதி காட்டிய இடமும் விடுதியினரால் புறநகரில் அமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர்த்து சிறப்பாக அதில் ஒன்றும் இல்லை, மசாஜ் செய்து கொள்ளாதவர்கள், உணவு விடுதிக்குள் செல்லாதவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு அந்த இடத்தில் 10 நிமிடத்திற்குமேல் வேலை இல்லை. ஒரு மணி நேரத்தை நகர்த்திவிட்டு பேருந்து நின்ற இடத்திற்கு வந்து பேருந்தில் ஏற பேருந்து புறப்படது, மாலை 6:30 ஆக விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.\nவிடுதிக்கு பின்னே இருந்த மாலை நேரக் கடற்கரையில் சற்று நேரம் சுற்றிவிட்டு அலைகளில் கால் நனைத்துவிட்டு விடுதி அறைக்கு வந்தோம், பொடியன் பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் செய்யவில்லை, அவ்வப்போது ஐபோனைக் கேட்டு அடம்பிடித்து வாங்கி விளையாடினான். இரவு உணவு நேற்று சாப்பிட்ட நாண் வகை உணவு இன்னிக்கும் சாப்பிட சலிப்பு என்றார்கள் மகளும் மனைவியும், பின்னர் விடுதியில் அமைந்த உணவகத்தில் அறைக்கே உணவு எடுத்து வந்து தரும் ஏற்பாடுகள் இருந்ததால் வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் மற்றும் ப்ரைட் நூடுல்ஸ் பட்டியலில் இருக்க அதைத் தேர்வு செய்து அழைத்துக் கேட்டுக் கொள்ள உணவு வந்து சேர்ந்தது, ஒரு ப்ளேட் 12 வெள்ளி மொத்தம் 24 வெள்ளி அதனுடன் சேவைக்கட்டணம், வரி உள்ளிட்டவைச் சேர்த்து 30 வெள்ளிக்கு கட்டண ரசீதும் வந்தது, பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு போததற்கு ரெடிமேட் நூடுல்ஸ் போட்டு சாப்பிட்டுவிட்டு, தொலைகாட்சியை ஓடவிட்டோம் சிங்கை தொலைகாட்சியின் மணல் கயிறு திரைப்படம் ஓடிக் கொண்டு இருந்தது, படுத்தப்படியே பார்த்துக் கொண்டு இருந்தோம், நான் பாதியில் தூங்கிவிட்டேன்.\nஅடுத்த நாள் பெரிய திட்டம் ஒன்றும் இல்லை, அதற்கு வாய்ப்புகளும் இங்கு இல்லை,\nமறுநாள் நன்பகல் விடுதி அறையை ஒப்படைக்க வேண்டும், அதுவரை என்ன செய்வது \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/13/2012 02:19:00 பிற்பகல் தொகுப்பு : அனுபவம், இந்தோனேசியா, பயணக் கட்டுரை, பின்டன்\nஇன்னிக்குப் பரவாயில்லாம பொழுது நல்லாவே போயிருக்கு போல\nஅந்த ஃப்ளையிங் ஃபாக்ஸ்லே பறந்து வரும்போது ஜோரா இருக்கும்.\nநானும் யானை மேலே ஏற மாட்டேன். பாவம் புள்ளையார் என்ற நினைப்புதான்:-)\nபோனவாரம் மணல்கயிறு படம் வலையில் இறக்கி வச்சு தினம் கால்மணி/அரைமணியாப்பார்த்து முடிச்சேன்.\nபுதன், 13 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 6:10:00 GMT+8\nஇன்னிக்குப் பரவாயில்லாம பொழுது நல்லாவே போயிருக்கு போல\nஅந்த ஃப்ளையிங் ஃபாக்ஸ்லே பறந்து வரும்போது ஜோரா இருக்கும்.\nநானும் யானை மேலே ஏற மாட்டேன். பாவம் புள்ளையார் என்ற நினைப்புதான்:-)\nபோனவாரம் மணல்கயிறு படம் வலையில் இறக்கி வச்சு தினம் கால்மணி/அரைமணியாப்பார்த்து முடிச்சேன்.//\nஆமாம், பொழுது ஓரளவு உற்சாகமாகப் போனது, பையனும் பொண்ணும் இருக்காங்களே, நாம சோர்ந்து உட்கார்ந்திருந்தாலும் அவங்க ஓய்வெடுக்க விடமாட்டாங்க, கடைத்தெரு என்று போன இடம் தேறவில்லை, ஒரு மணி நேரம் ரொம்பவே அலுப்பை ஏற்படுத்தியது.\nபுதன், 13 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 6:21:00 GMT+8\nபுதிய இடத்தை தெரிந்து கொண்டோம். இயற்கையோடு அமைந்த இடமாகத் தெரிகிறது.\nவியாழன், 14 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 12:29:00 GMT+8\nவியாழன், 14 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 12:47:00 GMT+8\nஅந்த் ஃப்ளியிங் பாக்ஸ் பார்க்க அருமையாக இருந்தது\nபொதுவாக அனைத்து புகைப்படங்களையும் பார்க்கையில்\nஅந்த சுற்றுலாத் தனம் அனைத்தும் மிக சுத்தமாக இருப்பது போல் பட்டது\nபடங்களுடன் பதிவும் அருமை.தொடர வாழ்த்துக்கள்\nவியாழன், 14 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 6:26:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகுடியரசு தலைவர் தேர்தல் குளறுபடிகள் \nதிரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 3 \nதிரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 2 \nதிரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 1 \nஅரசு அதிகாரி + கார்ப்ரேட் ஒப்பந்தம் = (பாலியல்) க...\nகாணாமல் போனவை - கிணறு \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஅனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA - *A1* இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால் அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2013/06/blog-post_6285.html", "date_download": "2018-05-27T03:12:42Z", "digest": "sha1:4VEPHW7PI3GKZNIEWCNQ7QLUEOLI46HY", "length": 60043, "nlines": 205, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: காசியபனின் அசடு: சிதறி வீழ்ந்த நட்சத்திரம் –எஸ்.ராமகிருஷ்ணன்", "raw_content": "\nகாசியபனின் அசடு: சிதறி வீழ்ந்த நட்சத்திரம் –எஸ்.ராமகிருஷ்ணன்\nகாசியபனின் அசடு தமிழ் நாவல்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருசத்தின் பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது இப்பதிப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் நகுலன்.\nகாசியபன் என்ற புனைபெயர் கொண்ட குளத்து 53வது வயதில் தான் எழுத துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.\nகாசியபனின் தேர்ந்த எழுத்துமுறை நாவலின் கதை சொல்லலை உன்னதமாக்கியிருக்கிறது. 123 பக்கத்திற்கு இது ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமையாக விவரிக்கிறது. கணேசன் என்ற அந்த ஹோட்டல் பணியாளன் வாழ்வில் தோற்று போனவன். ஆனால் அது குறித்து அவனிடம் அதிக புகார்கள் இல்லை. அவன் கயிறு அறுபட்ட பட்டம் போல காற்று கொண்டு செல்லும் திசையெல்லாம் அலைந்து திரிகிறான். பிரம்மாண்டமான நாவல்கள் தரும் மனவெழுச்சிக்கு சற்றும் குறைவில்லாதது அசடு. ஒருவகையில் அசடு நாவலில் வரும் கணேசன் காம்யூவின் அந்நியன் நாவலில் வரும் மெர்சோவிற்கு நிகரானவன். இருப்பு தான் இருவரது தடுமாற்றம். தத்தளிப்பு.\nகாசியபன் அதிகம் கவனம் பெறாமலே போய்விட்ட மிக சிறந்த எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் வசித்த அவர் தத்துவம் படித்தவர். எல்.ஐ.சியில் பணியாற்றியவர். சில வருசங்கள் மதுரையில் வேலை செய்திருக்கிறார். பிறகு கேரளாவில். ஆரம்ப கல்வியை கேரளாவில் படித்தால் மலையாளம் மிக நன்றாக வரும். அத்துடன் வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி துவங்கி பன்னாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து படித்து தெளிவுற்றவர். தமிழில் அவர் மிகவும் விரும்பி படித்த இருவர் மௌனியும் க.நா.சுவும். பேசாத மரங்கள் என்ற கவிதை தொகுதியும் கிரகங்கள், வீழ்ந்தவர்கள் இவரது பிற நாவல்கள்.\nகணேசனைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதாயின் அவன் சாமர்த்தியமற்றவன். அதனால் அசடாக கருதபடுகிறான். சாமர்த்தியம் என்ற சொல்லின் உள்ளே திறமை என்பதையை தாண்டிய தந்திரம் ஒன்று உள்ளது. அதை உருவாக்கிக் கொள்வதன் வழியே வாழ்வில் வெற்றியை அடைவதே பெரும்பான்மையினரின் குறிக்கோள். அதில் பலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கணேசன் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்ளவேயில்லை. கவனமாக விலக்கிப் போகிறான்.\nஅவன் வாழ்வைப் பரிகசிக்கிறான். அதனிடமிருந்து எதையும் அவன் யாசிக்கவில்லை. பல நேரங்களில் தெரிந்தே தோற்றுப்போகிறான். அதற்கு நிறைய மனத்துணிச்சல் வேண்டும். மற்றொன்று வாழ்வை கண்டு பயங்கொள்ளாத போராட்ட குணம் வேண்டும். இரண்டும் அவனிடமிருக்கிறது.\nஅதை அவன் தனது லௌகீக வாழ்க்கைக்கு உரியதாக மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கான எத்தனிப்பே அவனிடம் இல்லை. அந்த வகையில் அவன் ஒரு துறவி. ஆனால் வாழ்க்கை நெருக்கடிக்களுக்குள்ளாகவே அவன் தன் துறவுத்தன்மையை அடைந்துவிட்டான். அதை ஒரு போதும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.\nகணேசனின் கதையை அவன் மறைவிற்கு பிறகு அவனது ஒன்றுவிட்ட தம்பி சொல்வது போலவே நாவல் துவங்குகிறது. நாவலின் இந்தக் கதை சொல்லும் முறை இடைவெட்டாக கணேசன் வாழ்க்கையையும் கதை சொல்லியின் வாழ்க்கையும் ஒன்று கலக்கிறது. சுயசரிதைத் தன்மை மிக்க கதை போல தெரிந்தாலும் புனைவின் வழியே இந்த சுயசரிதை தன்மை தொடர்ந்து கலைக்கபடுகிறது.\nகணேசன் சிறுவயதில் அம்மாவை இழந்தவன். அப்பா மறுமணம் செய்து கொண்டதால் பாட்டி வீட்டிற்கு வந்துவிடுகிறான். பாட்டிக்கு அவன் தாயில்லாத பிள்ளை என்று செல்லம். கணேசனுக்கு படிப்பில் ஆர்வமில்லை. ஆற்றில் குளிப்பதும் மணலில் விளையாடுவதும் தான் விருப்பம். அவன் மீன்பிடிக்கும் சிறுவர்களுடன் நட்பாக பழகுகிறான். அவன் மீது பாட்டிக்கு சொல்லமுடியாத ப்ரியம். அது ஏன் என்று எவருக்குமே புரியவில்லை. அவனது தாத்தா அவனுக்கு பூணூல் கல்யாணம் செய்து அழகு பார்க்கிறார். பாட்டியின் எதிர்பாராத மரணம் அவனை நிர்கதி ஆக்குகிறது. அவன் வேறுவழியில்லாமல் அப்பா வீட்டிற்கு போகிறான்.\nஅங்கே சித்தி அவனை மிகவும் பாரபட்சமாக நடத்துகிறாள். சித்தி பிள்ளைகள் அவனோடு ஒட்டுவதேயில்லை. ஆனால் அதை ஒரு போதும் கணேசன் குற்றம் சொல்வதேயில்லை. ஒரு நாள் வீட்டை விட்டு ஒடத்துவங்குகிறான். அந்த ஒட்டம் அவன் சாவு வரை நிற்கவேயில்லை. அவனுக்கு தான் என்ன செய்து பிழைப்பது என்று தெரியவில்லை.\nகாசி துவங்கி கல்கத்தா. ஹைதராபாத், பூனா என்று எங்கெங்கோ அலைந்து ஹோட்டல்களில் வேலை செய்கிறான். சில நாட்கள் ஒரு இரும்பு சாமான் செய்யும் பட்டறையில் வேலை பார்க்கிறான். சில வாரம் ஜவுளிக்கடை வேலை. ஆனால் எதிலும் இருப்பு கொள்ளமுடியவில்லை. அவனது சுபாவம் அப்படி. அவனுக்கு முதுகுவளைந்து வேலை செய்யத் தெரியாது. யாரிடமும் இணக்கமாக பேசவும் தெரியாது. ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்களை இஷ்டமானால் சாப்பிடு இல்லாவிட்டால் எழுந்து போய்விடு என்று கத்துவான்.\nஆனால் அவனை ஹோட்டல் ஊழியர்கள் துவங்கி ரிக்ஷாகாரர்கள், பிச்சைகார்கள், இரவுகாவலாளிகள். சாலையோர கடைவைத்திருப்பவர் என்று பலருக்கும் பிடித்திருக்கிறது. அவன் மீது அன்பாக இருக்கிறார்கள். அவன் கஷ்டமான நேரங்களில் தம்பிக்கு கடிதம் எழுதி பணம் கேட்கிறான். அதை மறக்காமல் உடனே திருப்பியும் அனுப்பிவிடுகிறான். இப்படியாக தோற்றுக்கொண்டே போய் முடிவில் அவன் மதுரைக்கு வந்து சேர்கிறான்\nமதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிய வீதிகள், அழகர் திருவிழா, மதுரையின் சிறிய சந்துகள், உணவகங்கள் என்று நாவல் விவரிக்கும் மதுரையின் சித்திரம் அற்புதமானது. காசியபன் நகரின் சித்திரங்களை கோட்டோவியம் போல உயிருள்ளதாக வரைந்து காட்டுகிறார். நாவலின் மையப்படிமம் போல மதுரை நகரம் வருகிறது. அதிலும் அங்குள்ள சைவ உணவகங்கள் அதை நடத்தும் பாலக்காட்டு ஐயர்கள். அங்கு வேலைக்கு வந்துள்ள மலையாளிகள் என்று மதுரைக்கு பிழைக்க வந்த எளிய மனிதர்களை நாவல் மிக அழகாக சுட்டிக்காட்டுகிறது\nபிழைப்பதற்காக கோவலனே மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறான். அந்த வழியில் நானும் வந்துவிட்டேன் என்று சொல்லும் கணேசன், கல்பாத்தி ஆண்டி ஐயர் ஹோட்டலில் வேலைக்கு சேர்த்து கொள்கிறான். அது கூட அவனாக கேட்டு பெறவில்லை. அவனது கோலத்தை கண்ட ஐயர் அவராகவே கடையில் வேலைக்கு சேர்த்து கொள்கிறார். அவனால் அந்த கடை வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை. ஆனாலும் அவன் மேல் உள்ள ப்ரியத்தால் அவனை கடையில் வைத்திருக்கிறார் ஐயர்.\nபல வருசத்திற்குப் பிறகு ஒரு நாள் அவனது அப்பா பிச்சைகார கோலத்தில் வந்து சேர்கிறார். தம்பி வீட்டில் இருப்பதை அறிந்து அவரை பார்க்க போகிறான் கணேசன். அப்போது கணேசனும் அவனது அப்பாவும் பேசிக் கொள்ளும் இடம் வருகிறது. தமிழ் நாவல்களில் இவ்வளவு கச்சிதமாக, பரஸ்பர மனவெறுப்பை உமிழும் காட்சி வேறு எதையும் வாசித்தேயில்லை.\nபிச்சைகாரன் போல மெலிந்து ஆளே உருக்குலைந்து போய் நிற்கும் அப்பாவிடம் கணேசன் கேட்கும் முதல்கேள்வியே எங்கே வந்தீர் ஒய் என்பதே. அவர் தயக்கத்துடன உன்னையெல்லாம் பாத்துட்டு போகலாம்னு தான் என்கிறார். உடனே கணேசன் என்னை உனக்கு என்ன பார்வை ஒய், உங்க பிள்ளை சுப்புடு தானே என்கிறான். அவர் உடனே நீரும் பிள்ளை தானே .உன்னை பார்க்கபடாதா என்று ஆதங்கபடுகிறார். ஊர்ல போய் என்ன பண்ண போறீர் அங்கே யாரு இருக்கா. எங்கே தங்குவீர் என்று கேட்க அவர் உறவினர்கள தன்னைக் கவனித்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். உடனே பட்டால் தான் பாப்பானுக்கு புத்திவரும். போய் பாரும் என்று எகத்தாளமாக பதில் தருகிறான் கணேசன்.\nஇருவருமே கடந்தகால கசப்பின் சுவையை மறக்க முடியவில்லை. ஆனால் இவ்வளவு கடுமை கொண்ட கணேசன் அப்பாவை மீனாட்சி தரிசனத்திற்காக கோவிலுக்கு கூட்டிப் போகிறான். திரும்பி வரும் போது அவருக்கு புதுவேஷ்டியும் ஒரு டிரங் பெட்டியும் வாங்கித் தருகிறான். பிறகு தம்பியிடம் ஆதங்கமாக சொல்கிறான்\nசினேகமா இருக்க வேண்டிய வயசிலே நானும் சினேகமாக இருக்கிலே அவரும் இருக்கிலே. நான் ஒரு விதமா திண்டாடுறேன். அவர் வேறு ஒரு விதமாக என்று குறிப்பிடுகிறான்.\nஇந்த வாசகம் போன்ற ஒன்றையே தஸ்தாயெவ்ஸ்கி அவரது அப்பாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். கரமசோவ் சகோதர்களில் வரும் தகப்பன் கரசோவ் போலவே இந்த அப்பா கதாபாத்திரம் இருக்கிறது. அல்யோஷா போலவே கணேசன் இருக்கிறான். அவனது அண்ணன் இவானை நினைவுபடுத்துகிறான். கணேசன் மணந்து கொள்ளும் பெண்ணான சாவித்ரி கூட குருஷ்கா என்ற பெண் கதாபாத்திரத்தின் சாயலில் தான் இருக்கிறாள். இது ஒப்பீடு அல்ல. மாறாக இந்த கதாபாத்திரங்கள் மனதில் உடனே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகிறார்கள். காசியபன் தஸ்தாயெவ்ஸ்கி மீது தீவிரமான ஈடுபாடு கொண்டவர்\nஅசடு நாவலில் அவரது அப்பா பிச்சைகார கோலத்தில் வந்து நிற்கும் போது ஒரு ஆளின் சிரிப்பை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்து விடலாம் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் வரி மேற்கோளாக காட்டப்படுகிறது. அல்யோஷாவிற்கு இருப்பது போன்றே கணேசனுக்கும் ஆழமான இறைநம்பிக்கையிருக்கிறது. அது அன்பிலிருந்து உருவாவது. அவன் வாழ்வில் தோற்று நசிந்து போன நிலையில் ஞானப்பானை என்ற வேதாந்த நூலை விருப்பத்துடன் படிக்கிறான்.\nகணேசனின் செய்கை பலநேரங்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் வேறுவேறு கதாநாயகர்களை நினைவுபடுத்துகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகர்கள் தனது வீழ்ச்சிக்கு காரணமாக தன்னையன்றி வேறு ஒருவரையும் ஒருபோதும் நினைப்பதேயில்லை. அது போலவே உலகின் மீதான தன்னுடைய ஈர்ப்பையும் நம்பிக்கையையும் அவர்கள் கைவிடுவதுமில்லை. கணேசன் அது போன்ற ஒரு கதாபாத்திரமே.\nஅவனுக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைக்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் அப்பாவின் அன்பிற்காக ஏங்குபவர்கள். அப்பாவின் அன்பு கிடைக்காமல் இறந்து போன அம்மாவைப் பற்றி நினைத்து கொள்பவர்கள். சொந்த சகோதர்கள் மீது அன்பு கொள்ள முடியவில்லையே என்று கசிந்து அழுபவர்கள். தன்னைக் காதலிக்கும் பெண் தன்னை ஏமாற்றிய போதும் அவளை விட்டுப் பிரிய முடியாமல் வேதனை கொள்கிறவர்கள். இப்படி நிறைய ஒற்றுமைகள்.\nஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகர்களுக்கு வரும் மனக்கொந்தளிப்பு கணேசனிடம் இல்லை. அவன் தனது இடையுறாத பயணத்தின் வழியே தன் இருப்பு வெறும் நீர்குமிழ்மட்டுமே. அது அழுகு காட்டி அழிந்துவிடக்கூடியது என்பதை அறிந்து கொண்டிருக்கிறான். ஒருவகையில் அவனது இலக்கற்ற பயணம் அவனை ஆறுதல் படுத்துகிறது. முன்அறியாத மனிதர்களை அவன் நேசிக்கிறான். அவர்களும் கணேசனை நேசிக்கிறார்கள். ஆனால் தன்னை எவராவது பராமரிக்க துவங்கும் போது அது கணேசனை அமுக்க துவங்கிவிடுகிறது. அதிலிருந்து தப்பி வெளியேறி ஒடுகிறான்.\nநாவலின் துவக்க பகுதியில் சாலையில் செத்து நாறிக் கொண்டிருக்கும் எலியின் சித்திரம் ஒன்று இடம் பெறுகிறது. வாகனங்களைக் கடந்து ஒடிய எலி ஒன்றை காகங்கள் ஒன்று சேர்ந்து கொத்தி கொத்தி உடலை துண்டாக்குகின்றன. முடிவில் எலி தோலும் சதையுமாக பியந்து தெருவில் நாறிக்கிடக்கிறது. கடந்த காலத்தில் எலி தன்னால் ஆன மட்டும் ஆட்டங்களை ஆடியிருக்க கூடும். நிறைய திருட்டுதனங்களைக் செய்திருக்க கூடும். சாவின் முன்னால் அதன் கடந்த காலம் அர்த்தமற்று போய்விடுகிறது என்ற குறிப்பு வருகிறது. அந்த எலி தான் கணேசன். அவன் வாழ்க்கை காகங்கள் துரத்தி கொல்லும் எலியை போன்றதே. ஒரு இடத்தில் கணேசனே அதையும் சொல்கிறான்.\nவாழ்க்கையில் நாம் செய்யும் அத்தனை பாவங்களும் ஆட்டபாட்டங்களும் செத்தபிறகு நம்மோடு மறைந்துவிடுகின்றன என்று. அவனது வேதாந்தம் படிப்பில் உருவானதில்லை. மாறாக வாழ்க்கை அவனுக்கு கற்று தருகிறது.\nஒரு இடத்திலும் வேர்விட முடியாத அவனுக்கு திருமணம்பேசி முடிக்கபடுகிறது. கல்யாண நாளிலே பெண்ணின் குடும்பம் மிக மோசமானது என்று எச்சரிக்கிறார் கல்பாத்தி ஆண்டி ஐயர். கணேசன் அதை பெரிதாக எண்ணவில்லை. திருமணமாகி கிராமத்திலே ஹோட்டல் நடத்துகிறான். அவனுக்கு குழந்தை பிறக்கிறது. அதைப்பற்றி கேட்கும் தம்பியிடம் கல்யாணம் பண்ணிகிட்டா எது நடந்தாலும் நடக்காட்டியும் குழந்தை பெறந்துவிடும். அதில் சந்தோஷப்பட என்னயிருக்கிறது என்கிறான். தன் மனைவிக்கு அடுத்த ஆண்களுடன் கள்ளஉறவு இருக்கிறது என்று தெரிந்தும் அவள் மீது பாசம் காட்டுகிறான். காமம் அவனை அவள் முன்பாக மண்டியிட செய்கிறது. அதற்காக அவனே மன வருத்தம் கொள்கிறான்.\nபிறகு மனைவியை அழைத்து கொண்டு வந்து மதுரையிலே ஹோட்டல் பணியாளராக வேலை செய்கிறான். அங்கும் மனைவியின் கள்ளஉறவு தொடர்கிறது. அதை சகித்து கொள்ள முடியவில்லை. ஹோட்டல் வேலையை விட்டு வீடு மாற்றுகிறான். மனைவி போட்டு தரும் இட்லி வடை பஜ்ஜிகளை தெரு தெருவாக கூவி விற்கிறான். அந்த வேலையும் நிலைபெறவில்லை. அவனால் தன்னை சுகமாக வாழ வைக்க முடியாது என்று ஒரு நாள் மனைவி வேறு ஒரு ஆளோடு ஒடிப்போய்விடுகிறாள். இனிமேல் வாழ்வில் என்னபிடிப்பு இருக்கிறது என்று கணேசன் தனியே வாழ ஆரம்பிக்கிறான். சில நாட்களில் திரும்பவும் கல்கத்தாவிற்கு போய்விடுகிறான். அங்கிருந்து காசி பூனா என்று சுற்றியலைகிறான். உடல்நலமற்று வீழ்கிறான். கவனிப்பார் யாருமில்லாத மனத்துயர் அவனைப் பற்றிக் கொள்கிறது.\nவயோதிக தோற்றம் போலாகி ஒரு நாள் கொச்சியில் வசிக்கும் தம்பியை தேடி வருகிறான். அந்தக் கோலத்தில் கணேசனை காண தம்பிக்கு மனம் பதறுகிறது. வீட்டிலே தங்க வைக்கிறான். தம்பி பிள்ளைகளுக்கு கணேசனை ரொம்பவும் பிடித்துபோய்விடுகிறது. அவர்கள் வீட்டிலே சில காலம் இருக்கிறான். பிறகு ஒரு நாள் தான் ஊருக்கு போவதாக பணம் வாங்கி கொண்டு உள்ளுரிலே சுற்றியலைகிறான். அவனது மனதை ஒருவரும் புரிந்து கொள்ள முடியவேயில்லை. கடைசியாக மதுரைக்கு வருகிறான். கடைநிலைமனிதர்களுடன் ஒன்று சேர்ந்து அலைகிறான். கிடைத்தை சாப்பிடுகிறான். தன்னை அழித்து கொள்ள துவங்குகிறான்.\nஒரு நாள் நோய் முற்றிய நிலையில் ஆண்டி ஐயர் கடைக்கு போகிறான். அவனை மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிட்சை செய்கிறார்கள். குணமாகி வெளிவந்து சில நாட்கள் கல்யாண வீடுகளுக்கு சமையல் வேலை செய்ய போகிறான்.\nபின்னொரு நாளிரவு அவன் ஒரு கடையின் வெளியே அரைவேஷ்டியை போர்த்திக் கொண்டு உறங்குவதுபோல செத்துகிடக்கிறான். ஆண்டி ஐயரே அவனை தூக்கி கொண்டு போய் தத்தனேரி மயானத்தில் காரியம் செய்கிறார். கோவலனை போன்ற துர்மரணம் தான் இதுவும். ஆனால் கணேசனுக்காக அழுவதற்கு யாருமேயில்லை.\nஅவன் வாழ்வின் கசப்பை முழுமையாக குடித்து களிம்பேறியிருந்தான். இந்த மரணம் கூட ஒரு வருசத்தின் பிறகு தற்செயலாக குருவாயூர் கோவிலில் வைத்து கணேசனின் தம்பிக்கு ஆண்டி ஐயரின் மருமகன் வழியாக நினைவு கொள்ள படுகிறது\nதன்னுடைய அப்பா இறந்து போனதை நாலைந்து மாதம் கழிந்து சந்தோஷமாக வந்து கணேசன் சொல்வது போன்ற ஒரு காட்சி நாவலில் உள்ளது. அவன் வாழ்வும் அப்படியே முடிந்து போய்விடுகிறது. அவனை நினைவு கொள்ளும் ஆண்டி ஐயரின் மருமகன் பாவம் நல்லவன் என்கிறான். கணேசன் தன் வாழ்நாளில் சம்பாத்தித்து அது மட்டுமே.\nநாவலின் இடைவெட்டாக காயங்குளம் என்ற சித்தபிரமை கொண்ட ஒருவன பாடிக் கொண்டேயிருக்கிறான்.அவன் பாடல் வாழ்க்கை வெறும் மாயை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறது. நாவல் அந்த பாடலை முடிவிலும் நினைவு கொள்ள வைக்கிறது\nஅசடு நாவலின் தனித்துவத்திற்கு முக்கிய காரணம் அதை சொல்ல வந்த காசியபன் கணேசனை அவனது இயல்பான பலவீனங்களுடன் உருவாக்கியது. மற்றொன்று அவன் எங்கும் எதையும் போதிப்பதில்லை. அவன் தனது பாடுகளை நேரடியாக எதிர்கொள்கிறான். வேதனைபட்டு கடந்து போகிறான். வாசிக்கும் நாம் கணேசனுக்காக கண்ணீர் விடுகிறோம். நாவலை வாசித்து முடிக்கும் போது வாசகன் அடையும் துயரம் ஆழ்ந்த வடு போன்று என்றும் உடனிருக்க கூடியது.\nகாசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி, அது அற்புதமானது. இதே கேலியை நகுலனிடம் கவனித்திருக்கிறேன். ஆ.மாதவனிடம் கூட இருக்கிறது. காசியபனிடம் அது சற்று தூக்கலாகவே இருக்கிறது. ஒருவேளை அது திருவனந்தபுரத்தின் விசேச இயல்புகளில் ஒன்றாக இக்கேலி இருக்ககூடுமோ என்றும் தோன்றியது. கணேசனை பற்றி விவரிக்கும் போது அவர் தேர்வு செய்யும் சொற்களும் விவரணையும் விசேசமானவை. அதுபோலவே உரையாடல்கள் நாவல் முழுவதும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன.\nநாவல் மூன்று காலகட்டங்களை விரிவாக விவரிக்கிறது. ஒன்று கணேசனின் பால்யகாலம். அங்கே கணேசன் செல்லபிள்ளை. அவனை சுற்றி நடக்கும் உலகை அவன் புரிந்து கொள்வதேயில்லை. மாறாக அதன் செழுமைக்கு தன்னை ஒப்படைத்து கொள்கிறான். அவனை பார்த்து மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள். விதவிதமான சாப்பிடுகிறான். ஊர் சுற்றுகிறான். எதையும் பயமின்றி செய்து பார்க்கிறான்.\nஇரண்டாம் நிலை அவனது அலைச்சல்மிக்க வாலிப வயது. எந்த வேலையும் செய்ய லாயக்கிலாதவன் ஹோட்டலில் சர்வராகிவிடுவான் என்று ஒரு இடத்தில் அவனே குறிப்பிடுகிறான். அவன் இந்தியா முழுவதும் சுற்றிவருகிறான். பசித்த மனிதர்களை பார்த்தபடியே இருக்கிறான். பசி மனிதனின் இயல்பை மாற்றிவிடுவதை அவன் கண்கூடாக காண்கிறான். அந்த பாடம் அவனுக்கு வாழ்க்கையின் மீது பற்றற்ற மனநிலையை உருவாக்கிவிடுகிறது. எதற்காக தான் வேலையை விட்டு போகிறேன் என்று அவன் ஒரு போதும் சொல்வதேயில்லை. அவனால் எங்கும் தேங்கிவிட முடியாது என்றே சொல்கிறது.\nஆற்றோடு வளர்ந்தவன் என்பாதல் அந்த குணம் வந்துவிட்டதோ என்றும் தோன்றுகிறது. அவன் ஒடிக் கொண்டேயிருக்கிறான். யாரும் அவனை துரத்தவில்லை. ஆனால்ஒடிக் கொண்டேயிருக்கிறான். அந்த ஒட்டம் அவனை பல இடங்களில் காலைவாறிவிடுகிறது. அவனாக விரும்பி சில இடங்களில் ஒய்வு கொள்கிறான்.\nஅவனால் மனிதர்களை அவர்களது சகல பலவீனங்களுடன் ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதை அவன் மற்றவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறான். அங்கே தான் கணேசன் தோற்று போக துவங்குகிறான். உலகின் பார்வையில் சம்பாதிக்கத் தெரியாதவன் அசடே. அவன் நிறைய பொய் பேசவும் தந்திரங்களை கையாளவும் தெரிந்திருக்கவில்லை. சமையலறை பல்லி போல கரிப்புகைக்குள் ஒட்டிக் கொண்டு கிடைத்ததை சாப்பிட்டு வாழ பழகிவிட்டிருக்கிறான்.\nஅவன் ஆசைப்பட்ட ஒன்றே ஒன்று அவனது திருமணம். அது கூட உடலின் தூண்டுதலால் தான். காமம் அவனை எளிதாக ஜெயித்துவிடுகிறது. பிறகு அவனது மனைவி முறைகேடான உறவுகளில் ஈடுபடுவதை அவனால் தடுக்கமுடியவில்லை. ஆனால் அவளை வெறுக்கவில்லை. மாறாக அவளை எப்படியாவது தன்னைப் புரிந்து கொள்ள வைக்க போராடுகிறான். தம்பி வீட்டில் தன்மனைவியை அழகர் கோவில் திருவிழா பார்க்க அழைத்து வரும் ஒரு நிகழ்வு நாவலில் உள்ளது. அது தான் மதுரையில் நடைபெறும் அழகர்கோவில் விழா பற்றிய மிக முக்கியமான இலக்கியபதிவு.\nஅந்த இரவு நாவலின் கொந்தளிப்பான இரவு. இரவில் சிதிறி வீழும் நட்சத்திரம் ஒன்றை போல அது விவரிக்கபடுகிறது. மதுரையின் பூர்வீகமான காலத்தின் மிச்சம் பீறிடுகிறதோ என்று கூட தோன்றுகிறது. கணேசன் அத்தனை கொண்டாட்டம் களிப்பு யாவின் இடையிலும் ஆறாத துயர் கொண்டேயிருக்கிறான். மனைவியின் துரோகம் அவனை ஆள்கொல்லி நோய் போல அரிக்க துவங்குகிறது.\nமூன்றாவது நிலை மனைவி அவனை பிரிந்துபோய்விட்ட நிலையில் போக்கிடம் புரியாமல் தடுமாறி அலையும் கணேசனின் நோயுற்ற காலம். அது அவன் விரும்பி சிதைவதை காட்சிபடுத்துகிறது. கணேசன் கடவுளின் கருணையை ஒரு போதும் எதிர்பார்க்கவேயில்லை. மாறாக தனது வலி தானே தனக்கு ஏற்படுத்திக் கொண்டது. தன் தகப்பன் அப்படி தான் அழிந்தான். தானும் அவன் வழியே செல்கிறேன் என்று சொல்வது போன்றேயிருக்கிறது\nநாவலின் ஊடாக கன்யாகுமரி மாவட்டத்தின் கரமனை கிராமமும் அதன் வளமையான இயற்கை சூழலும், ஆறும் அக்ரஹாரத்து வீடுகளும் அங்கு வாழ்ந்தவர்களின் ஆசைகள், கனவுகளும் துல்லியமாக விவரிக்கபடுகின்றன. தெப்பம் ஒன்றில் மிதந்து செல்வது போல நாவல் முன்பின்னாக நகர்ந்தபடியே இருக்கிறது. சம்பவங்களை கதை சொல்லி வளர்த்து எடுப்பதில்லை. மாறாக ஏதோ ஒரு புள்ளியில் சொல்ல துவங்கி அங்கிருந்து வளர்த்து செல்கிறார். பின்பு இன்னொரு புள்ளியில் துண்டித்துவிடுகிறார். ஆக இந்த நாவல் ஒரே நேரத்தில் கணேசன் கதையை சொல்வது போன்ற அவன் அண்ணன் வாழ்வையும் விவரிக்கிறது.\nவெற்றி பெற்றவர்களை மட்டுமே வாழ்க்கை எப்போதும் கொண்டாடுகிறது. தோல்வியுற்றவர்கள் மறக்கடிக்கபட்டு விடுகிறார்கள் என்று கசப்புணர்விலிருந்தே நாவல் துவங்குகிறது. கணேசன் தமிழ் நாவல் உலகின் மறக்க முடியாத கதாபாத்திரம். நாவலின் ஒரு இடத்தில் அப்பா சிறுவயதில் ஏதோ திட்டுவார். ஆனால் என்ன திட்டுவார் என்று மறந்துபோய்விட்டது என்ற வரி இடம்பெறுகிறது.\nஇது முக்கியமான பதிவு. பால்யத்தில் நடைபெற்ற பலசம்பவங்கள் வெறும்காட்சிகளாகவே மனதில் தங்கிவிடுகின்றன. அப்போது நடைபெற்ற உரையாடல்கள் நம்மிடம் தங்குவதேயில்லை. மனம் அதற்காக எப்போதும் ஏங்கவே செய்கிறது. இன்னொரு விதமாக சொல்வதாயின் அப்பா பேசியதை எழுதுவது போன்றே அவர்பேச மறந்து போனதையும் எழுத வேண்டிய அவசியமிருக்கிறது.\nநாவலில் கணேசன் சொல்லாத பலவும் மறைமுகமாக சுட்டிகாட்டபடுகிறது. அதை கணேசன் சொல்ல தயங்குகிறான். மறைத்து கொள்கிறான். மறந்து போக முயற்சிக்கிறான். ஆனால் யாரோ அவன் மறைக்க விரும்பியதை திரும்ப திரும்ப நினைவுபடுத்தியயே இருக்கிறார்கள். காற்றில் புகை கரைவது போல கணேசன் இருப்பு நம் கண்முன்னே கரைந்து போவதை நாம் காணமுடிகிறது. அதுவே நாவலின் மிகப்பெரிய வெற்றி.\n2004ம் ஆண்டு தனது எண்பத்தைந்தாவது வயதில் காசியபன் இறந்த செய்தி கணேசனின் மரணம் போலவே வெறும் தகவலாக மட்டுமே தோன்றி மறைந்து போனது தான் தமிழ் சூழலின் தலைவிதி.\nஅசடு கொண்டாப்பட வேண்டிய மிக முக்கிய நவீனநாவல். நமது கவனிமின்மை அதை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்திருக்கிறது. மறுவாசிப்பு வழியே இந்த நாவல் உன்னதமான புத்தெùழுச்சியை அடையும் என்றே நம்புகிறேன். அதை சாத்தியமாக்குவது நம் கையில் தானிருக்கிறது.\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nமோகமுள் நாவல் பிறந்த கதை –தி.ஜானகிராமன்\nகாசியபனின் அசடு: சிதறி வீழ்ந்த நட்சத்திரம் –எஸ்.ரா...\nகாசியபனின் 'அசடு' –வெங்கட் சாமிநாதன்\nபல்லக்குத் தூக்கிகள் –சுந்தர ராமசாமி\nகோவில் காளையும் உழவு மாடும் –சுந்தர ராமசாமி\nநாயுடன் வந்த பெண் -செகாவ்\nஎட்டுத் திக்கும் மதயானை –நாஞ்சில் நாடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-55/", "date_download": "2018-05-27T02:58:07Z", "digest": "sha1:HCMGMZXRO3CJMK5AREQ7KU6GCKGA3HVE", "length": 7362, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை ஹன்சியா றஊஃப் ராஜினாமா! » Sri Lanka Muslim", "raw_content": "\nதென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை ஹன்சியா றஊஃப் ராஜினாமா\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்களின் பாரபட்சமான நடவடிக்கையின் காரணமாக அப்பல்கலைக்கழத்தின் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கான நிலையத்தின் இயக்குணர் பேராசிரியை ஹன்சியா றஊப் அவர்கள் 22.01.2018 இலிருந்து செயற்படாவண்ணம் திடீரென இராஜினாமா செய்துள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது:\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம் நாஜிம் அவர்கள் 2015ஆம் ஆண்டு பதவியேற்றவேளையில் தான் இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த இடத்திலிருந்து மேலும் முன்னேற்றிச் செல்லப் போவதாகவும் தான் இப்பல்கலைக்கழகத்தில் ஒரு முறை மாத்திரம்தான் உபவேந்தராகக் கடமையாற்றவிருப்பதாகவும் கூறியிந்தார். ஆனால் அவரது சமகாலப் போக்கானது மீண்டும் ஒருமுறை உபவேந்தர் பதவிக்கும் விண்ணப்பிக்கும் நோக்கைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.\nஇதன் காரணமாக இப்பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியை ஹன்சியா றஊப் அவர்களது இந்த இராஜினாமா காணப்படுகின்றது.\nகடந்த ஒன்றரை வருடகாலமாக இந்தப் பணிப்பாளர் பதவியிலிருந்த போது இந்நிலையத்தின் முகாமைக்கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்குச் சந்திப்பதற்கோ அல்லது தனிப்பட்ட தொழில் நிமித்தமாக சந்திப்புக்களுக்கோ இவ்வுபவேந்தர் தொலைபேசி அழைப்புமூலமோ அல்லது குறுஞ்செய்தி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அனுமதியளித்திருந்ததாகவும் தான் இந்த முறை உபவேந்தர் பதவிக்கு விண்ணக்கப் போவதாக அறிந்தவுடன் தற்போதைய உபவேந்தர் இந்தப் பணிப்பாளர் பதவிக்குட்பட்ட இந்நிலையத்தின் செயற்பாடுகளைக்கூட செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றும் ஆகக்குறைந்தது சந்திப்பதற்கான வாய்ப்பினைக்கூட வழங்காமலும் பல்கலைக்கழகத்தில் இல்லாமலிருப்பதாகவும் கடைசியாக நடைபெற்ற பல்கலைக்கழக மூதவையில் இவ்வுபவேந்தர்மீது சரமாரியான காட்டம் காட்டிவிட்டு இவ்வியக்குனர்ர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஇது பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியின்மீது அக்கறையுள்ள பலரையும் இந்நிறுவனத்தின் வளர்ச்சியையும் பாதிப்படையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.\nபல்கலைக் கழகக் கற்றோர் சங்கமும் நலன் விரும்பிகளும்\n“Job vacancies” whats app குழுமத்தினது வருடாந்த ஒன்று கூடல்\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை\nஇரத்தினபுரி: வெள்ளத்தில் மத்தியில் இப்தார் – நீங்களும் உதவலாம்\nஇனவிகிதாசாரப்படி திருகோணமலையில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vijayapathippagam.com/index.php/publishers/publisher-col3/uyirmai-pathippagam/eluthum-vaalkayum-detail", "date_download": "2018-05-27T03:22:03Z", "digest": "sha1:NPGWU4YAEQQWKAAXWD3ZIDVHCHXEC6RD", "length": 4061, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": "உயிர்மை பதிப்பகம் : எழுத்தும் வாழ்க்கையும்", "raw_content": "\nBack to: உயிர்மை பதிப்பகம்\nஇந்நூல் முழுவதும் சுஜாதாவின் மனத்திரையில் ஓடும் காட்சிகளால் அடுக்கப்பட்ட கோப்புகளாக இருக்கிறது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.\nஇந்நூல் முழுவதும் சுஜாதாவின் மனத்திரையில் ஓடும் காட்சிகளால் அடுக்கப்பட்ட கோப்புகளாக இருக்கிறது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இவர் சந்தித்த மனிதர்கள், பொருள்கள், உணர்வுகள் என்று பாதித்த விஷயங்களை புரிதலோடு பகிர்ந்து இருக்கிறார் அனைத்து கட்டுரையும் நம்மை பிரமிக்க வைக்கிறது, குறிப்பாக டைரி பற்றிய இவரின் எண்ணம் என்னை மேலும் இவரின் எழுத்தின் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2010/08/blog-post_13.html", "date_download": "2018-05-27T03:29:27Z", "digest": "sha1:MW56OH46J2NDMKHECUZ5UQ77NIRHGCDH", "length": 56217, "nlines": 591, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): டூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nகால ஓட்டத்தில் காணமல் போனவைகள் தொடரில் இந்த பாகத்தில் தமிழகத்தில் பலரால் மறக்க முடியாத அந்த கால பொழுது போக்கு சாதனமான டுரிங் டாக்கிஸ் பற்றி இந்த வாரம் பார்ப்போம்\nநெற்றிவேர்வை நிலத்தில் சிந்தி உழைத்த தமிழனை களைப்பு போக்கி சினிமா கலை வளர்ந்த அல்லது வளர்ந்த இடம் கிராமத்து டூரிங் டாக்கிஸ்கள் என்றால் அது மிகையில்லை.\nஇன்று ஐநாக்ஸ் சத்தியம் போன்ற திரையரங்குகளில் ஒரு படம் பார்க்க நுழைவு கட்டணமாக இன்று ரூபாய் 120ல் இருந்து 150,180 வரை கட்டணம் வசூலிக்கின்றார்கள், ஆனால் அப்போது படம் பார்க்க டூரிங் டாக்கி்ஸ் வசூலித்த கட்டணம் 30 பைசா அப்போது தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை 4லிருந்து 5ரூபாய் அவ்வளவுதான்.\nஅப்போதும் படம்தான் பார்த்தோம் இப்போதும் படம்தான் பார்க்கிறோம் என்ன சற்று வசதிகளைஅதிகப்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவுதான். அது காலத்தின் கட்டாயம். இப்போது படம் பார்க்கும் போது சிம்ரன் வந்து நெஞ்சு அல்லது ...தடவி படம் பார்க்க வைக்கிறாரா எதற்க்காக இவ்வளவு கட்டணம் பாருங்கள் டாபிக் விட்டு கோபத்தில் வெளியே போய் விட்டேன்.\nஅப்போது டிவி எல்லோர் வீட்டிலும் தன் அழிச்சியாட்டத்தை அரம்பிக்காத நேரம். அதுவும் கலர் டிவி என்பது எல்லோருக்கும் பகல்கணவாய் இருந்த கால கட்டம் அது. உழைத்து களைத்த அத்தனை பேருக்கும் அரும் மருந்து இந்த டூரிங் டாக்கிஸ்கள்தான்.\nசரி ஏன் டுரிங் டாக்கிஸ் தெரியுமாசினிமா பேசாத காலகட்டத்தில் இருந்து பேசும் காலகட்டத்துக்கு வந்த போது அது பேசியதால் அதாவது டாக் செய்ததால் அதற்கு டாக்கிஸ் என்று பெயர் வைத்தார்கள்.\nடுரிங்டாக்கிஸில் படம் பார்க்கின்றது என்பது என்னை பொருத்தவரை ரொம்ப சந்தோஷமான செயல் என்பேன். ஒரு நாளைக்குஇரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடுவார்கள் மாலைக்காட்சி அடுத்தது இரவு காட்சி. மாலை காட்சி இரவு எழு மணிக்கும், இரவு காட்சி பத்து மணிக்கும் ஆரம்பிப்பார்கள்.\nடாக்கிஸ்ல் படம் துவங்கும் அழகே அழகு. முதலில் கூம்பு ஒலி பெருக்கியில் நாதஸ்வரம் இரவு 6.50க்கு போடுவார்கள். கிராமத்தில் படம் பார்க்க செல்லும் எல்லோர் வீட்டிலும் சின்ன பதட்டம் வந்து ஓட்டிக்கொள்ளும்.\n“கொட்டாயில பாட்டு போட்டுட்டான் எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க”\nஎன்றவுடன் அடித்து பிடித்து ஓடிய அந்நநாளைய நினைவுகள் என்னை அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்கின்றன.\nநாதஸ்வரம் 5 நிமிடத்தில் முடிந்து ஒரு வெஸ்டன் இசை ஒளிக்க ஆரம்பிக்கும் அது முடிந்த உடன் சர்வ நிச்சயமாக எந்த மைனர் வந்தாலும் வரா விட்டாலும் படம் ஆரம்பித்துவிடும்அதானால் நாங்கள் அனைவரும் நடையில் ஓட்டத்தை சேர்ப்போம்.\n30 பைசா டிக்கெட் தரை டிக்கெட்டில் படம் பார்பது போன்றதொறு சுகம் எனக்கு தெரிந்து சத்தியம் ஐநாக்சில் கூட இல்லை என்பேன்.பறந்த மணல் பகுதி அதில் நடுவில் கட்டை அல்லது சிமென்ட் கட்டை கட்டி ஆண்கள் பெண்கள் என்று பிரித்து இருப்பார்கள். அந்த வயதில் நாங்கள் பெண்கள் பகுதியில்தான் உட்காருவோம் ஏன் என்றால் அம்மாதானே படத்துக்கு அழைத்து செல்வார் அதனால்தான். அதே போல் படம் தெரியவில்லை என்றால் கூடுதலாக மணல் கூட்டி அதன் மீது உட்காருவோம்.\nயாரவது எதிரில் மறைத்தால் அவர் பின்புறம் மணலை கொஞ்சம் நோண்டினால் அவர் மெல்ல கீழ் இறங்குவார்.\nஅதே போல் பசங்களுக்குள் விளையாடும் விளையாட்டும் அதுவே. மண் கூட்டி உட்கார்வதும் அதனை பின்னால் இருந்து பறிக்கும் தமிழர்களின் அரசியல் விளையாட்டை அப்போதே நாங்கள் விளையாடுவோம்.\nஅதே போல் இருபாலிணத்தையும் பிரிக்கும் கட்டை சுவர் பக்கம் ஆண்கள் பக்கம் என்றாலும் பெண்கள் பக்கம் என்றாலும் உட்காரவே கூடாது அப்படி உட்கார்ந்தால் ஒரு லிட்டர் பெனாயிலில் கை கழுவ வேண்டும் கட்டை சுவர் ஓரம் எல்லாம் வெற்றிலைபாக்கு எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள்\nபடம் முதல் இன்டர் வெல் விடும் போது அந்த கால முங்கள் ஊர் டாக்கி்ஸ்ல் அழது வடியும் 40 வாட்ஸ் பல்பு அழுது வடிந்து கடமைக்காக எரியும்.அப்போது கட்டை குரலில் தேங்காய் ரொட்டி முருக்கேய்,\nதேங்காய் ரொட்டி முருக்கேய் என்று காலனி பசங்க அலுமினிய தட்டில் வைத்து தேங்காய் ரொட்டி முருக்கு போன்றவற்றை விற்ப்பார்கள்.\nஅதற்க்கு தட்டு முருக்கு என்று செல்ல பெயர் கூட உண்டு.\nஎங்க அம்மா ஒரு கஞ்சபிசினாரி வீட்டில் ஏற்கனவே இருக்கும் காராசேவ், முருக்கு போன்ற தின்பண்டங்களை ஓயர் கூடையில் போட்டு எடுத்து வந்து விடுவாள்.\nகாளிமார்க் சோடா பாட்டிலில் அந்த காலத்து லோக்கல் பெப்சி கலர் கலர்கலராக இருக்கும் அது பிரிட்ஜ் இல்லாத காலம் அல்லது அந்த ஊர் டாக்கிஸ்க்கு கட்டுபடி ஆகாததால் தேர்மக்கோல் ஐஸ்கட்டிகள் வாங்கி ஐஸ் சீக்கிரம் உருகாமல் இருக்க உமி போட்டு வைத்து இருப்பபார்கள். ஒரு கலர் 1,50 ரூபாய் அதை வாங்கி கட்டையில் சாய்ந்தபடி ஸ்டைலாக வாங்கி குடித்த காலமும் உண்டு.\nமுக்கோன பன்னில் ஜாம் தடவி அதில் கலர் கலரான சேமியா போல் வெள்ளை ஜாம் மேல் ஒட்ட வைத்து இருப்பார்கள். அது என்னுடைய பேவரிட் திண்பண்டம்\nஇப்போது போல் அப்போது எல்லாம் புது படங்கள் டென்டு கொட்டாய்க்கு வரவே வராது. அல்லது வினியோகஸ்த்தர்கள் கொடுக்கவும் மாட்டார்கள்,அன்பே வா, துணிவே துனை,சவாலேசமாளி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மாயாபாஜார்,வசந்த மாளிகை போன்ற பழைய படங்கள்தான் திரையிடப்படும்.\nசிவாஜி படத்துக்கு நிறைய பெண்கள் கூட்டத்தை பார்க்கலாம். எம்ஜியார் படத்துக்கு நிறைய ஆண்கள் கூட்டத்தையும் கொஞ்சமாக பெண்கள் கூட்டமும் இருக்கும். முக்கியமாக பாட்டாளி மக்கள் கூட்டம் மிக ஆதிகமாக வருவார்கள், நிறைய விசிலும் கூடவே சாராய நெடியும் பின்னி பெடெலெடுக்கும்.\nரஜினி கமல் படத்துக்க எல்லா சின்ன பசங்களும் வந்து கொட்டாய் சுற்றி ஓடிபிடித்து விளையாடுவதுமாக சண்டை போட்டுக்கொள்வதுமாக இருப்பார்கள் கமல் படங்கள் வந்ததால் அரும்பு மீசை வாலிபர் பட்டாளம் கைலியை ஏற்றி கட்டிக்கொண்டு வந்து நி்ற்க்கும். வெள்ளிக்கிழமையானால் படம் கண்டிப்பாக மாறிவிடும் எல்லோரும் பார்த்த படம் என்பதால் அந்த படத்துக்கு ஆயில் காலம் ஒரு வாரம்தான்.\nபெண்கள் பக்கம் நான் உட்கார்ந்து படம் பார்க்கும் போது ஒரு நெலியவைக்கும் பிரச்சனை என்ன வென்றால் நம்மை சின்ன பையன் என்று எண்ணி நம் எதிரிலே துணி தூக்கி சுச்சு போவார்கள் . அதை விட கொடுமை ஆயாக்கள் எல்லாம் நின்ற படியே சுச்சு போவார்கள். அதனாலே நான் அடம் பிடித்து ஆண்கள் பக்கம் போய் உட்காருவேன்.என் அம்மா ஏன் அந்த பக்கம் போய் உட்காருகின்றாய் -என்று எப்படி காரணம் கேட்டாலும் என்னால் பதில் சொல்லமுடியாது...\nஅதே போல் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் சட்டென தகர சேரை மடக்கி ஒளிவரும் ஓட்டையை அடைத்தும் ரகளை செய்வார்கள். முதல்நாள் படம் ஓட்டுவதில் பிரச்சனை என்றால் ஒரு பாஸ் கொடுத்து அனுப்புவார்கள் அதை எடுத்து போய் டிக்கெட் இல்லாமல் படம் பார்க்கலாம். அந்த பாசுக்கு வேறு அடித்து கொள்வார்கள்...\nகால மாற்றத்தில் காணாமல் போனாலும் இன்றளவும் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது டுரிங் டாக்கிஸ்கள்தான். எப்போது அந்த டெண்ட் கொட்டைகளை பார்த்தாலும் பழைய நினைவுகள் என்னில் நிழலாடும் எங்கள் ஊர் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஜெகதாம்பிகா என்ற டெண்ட் கொட்டகை இருந்தது, அந்த நினைவுகள்இதை எழுதும் போது எல்லாம் நினைவுக்கு வருகிறது.\nஇந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்\nஎன்ற ஆண்பாவம் படத்து பாடல் எங்கேயோ கேட்பது போல் இல்லை, அந்த பாடலில் வரும் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை.....\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: அனுபவம், எழுதியதில் பிடித்தது, மீள்பதிவு\n//இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்\nஅது ஒரு காலம்.... அழகிய காலம்...\nநாங்களும் கஷ்டபட்டு ஏதாவது மொக்கை போட்டுட்டு இருக்கமுல்ல, அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ஒரு பிடிப்பு இருக்கும், இல்லன்ன பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வில்லை என்பதற்காக இந்த அப்பாவி பிள்ளை பதிவுகளை இடாமல் போயிடுவான், ஏன் இந்த பாவம் உங்களுக்கு ,, வாங்க உடனே வந்து பாருங்க என்னாத்த கிழிக்கிறான் எண்டு.\n//இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்\nஅது ஒரு காலம்.... அழகிய காலம்...\nநீ திருந்த வே மாட்டியா ராசா\n//நம்மை சின்ன பையன் என்று எண்ணி நம் எதிரிலே துணி தூக்கி சுச்சு போவார்கள் . அதை விட கொடுமை ஆயாக்கள் எல்லாம் நின்ற படியே சுச்சு போவார்கள்.//\nஅட்டகாசமான பதிவு. பால்ய கால நினைவுகளை கிளறி விட்டீர்கள்.\nஎன் நினைவில் - முதல் முதலாக டூரிங் கொட்டாயில சங்கேமுழங்கு \"வாத்தியார்\" படம் பார்த்தேன். கோவை சாய்பாபா காலனி அருகே இருந்த ஒரு கொட்டாயில. வருஷம் 1973-ல. ஏசி-ல இல்லாத ஒரு மகிழ்ச்சி அப்போ அந்த டூரிங் கொட்டாயில் இருந்துச்சி \nஜாக்கி..அந்த நாட்களில்..அம்பத்தூரில் என் பெற்றோருடன் பார்த்த படங்கள்...பழைய நினைவுகள்..டூரிங் டாக்கீஸ் மசால்வடை...எல்லாவற்றையும் ஞாபகப் படுத்தி விட்டீர்கள்..\nஒரே டிக்கெட்டில் இரண்டு படங்களும் போட்டிருக்கிறார்கள்ஜாக்கி..அந்த நாட்களில்..அம்பத்தூரில் என் பெற்றோருடன் பார்த்த படங்கள்...பழைய நினைவுகள்..டூரிங் டாக்கீஸ் மசால்வடை...எல்லாவற்றையும் ஞாபகப் படுத்தி விட்டீர்கள்..\nஒரே டிக்கெட்டில் இரண்டு படங்களும் போட்டிருக்கிறார்கள் :)))\nநீங்க தெருவுல இருக்கிற வெள்ளை துணியை எல்லாம் ஒன்ன கட்டி ...ஸ்க்ரீன் ஆக்கி படம் ஓட்டுவங்களே..அதுல படம் பார்த்து இருக்கீங்களா அருமையா இருக்கும்... அப்படி நான் பார்த்த அன்பே வா படத்தை இன்றளவும் மறக்க முடியாது\nநானும் எவ்வளவோ தியேட்டர் ல படம் பார்த்தாலும் ..எங்க ஊர் பிளக் தியேட்டர் ல படம் பார்த்த மாதிரி வராது.\nஎங்கள் ஊரிலும் இரண்டு டூரிங் டாகீஸ்கள்(சரியா) இருந்தன. கால ஓட்டத்தில் கரஞ்சே போயிருச்சு. அதுல ஒன்னு சுடு காட்டுக்கு பக்கத்துல. பல நேரத்துல படத்தோட பிணம் எரியிறது கூட பார்க்கலாம்.\nஎங்க அம்மா ஒரு கஞ்சபிசினாரி வீட்டில் ஏற்கனவே இருக்கும் காராசேவ், முருக்கு போன்ற தின்பண்டங்களை ஓயர் கூடையில் போட்டு எடுத்து வந்து விடுவாள்.//\nமிக அருமை. மிக நன்றி. பழைய நினைவுகள் பசுமையானவை. மீள அதிக நேரம் தேவை.\nஉங்கள் சேவை எங்களூக்கு தேவை.\nபடம் அருமை, பாலாஜி டூரிங் டாக்கீஸ் , எங்கு இருக்கிறது, போரூர் பக்கமா.\nகீழ்கட்டளை இன்னமும் தனலெட்சுமி டூரிங் டாக்கீஸ் இருக்கிறது என நினைக்கிறேன். லக்கி லுக் கூட முன்பு கீழ்கட்டளை தனலெட்சுமி குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தார்.\nநன்றி நண்பரே கடந்து போனதையும் , மறந்து போன்றதையும் மீண்டும் திரும்பி பார்ப்பதில் இருக்கும் ஒரு மகிழ்ச்சியை வேறு எதுவும் கொடுக்க இயலாது . மிகவும் சிறப்பான பதிவு .\nமறந்துபோன இனிமையான நினைவுகளை மீண்டும் இதயங்களில் நிரப்பி சென்றது உங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி .\nஅண்ணே.. இன்னும் மதுரையில ஒண்ணு ரெண்டு டாக்கிச் இருக்கு.. ஆனா அங்கன பிட்டு படம்தான் ஓட்டுறாங்க...\nஅண்ணே கொட்டாய் படங்கள் எல்லாம் சூப்பர் ... அந்த காலம் பசுமைக் காலம் ...\nடூரிங் கொட்டாய்களைப் பற்றிய தெளிவான, ஆழமான பதிவு. அந்த நாட்களில் மதுரையில் படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது.\nநல்ல பதிவு ஜாக்கி சார்,\nஓட்டு போட்டுட்டேன்...இதுல பாருங்க எங்கள் ஊர் சினிமாக் கொட்டகை.. னு தலைப்பெல்லாம் வச்சு எங்க ஊர் டூரிங் டாக்கிஸ் அதுனுடன் எங்கள் அனுபவமெல்லாம் எழுதலாம்னு நினைத்து இன்னைக்குதான் பாதி டைப் பண்ணி வச்சுருந்தேன் ... ..அதுக்குள்ள முந்திட்டிங்களே... சார்..\nநான் திங்கள் அன்று எழுதுகிறேன் .. படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.\nஎனக்கு உங்கள் இந்த பதிவில் இருக்கும் போட்டோஸ் காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி வேண்டும்\nநல்ல பதிவு ஜாக்கி சார்,\nஓட்டு போட்டுட்டேன்...இதுல பாருங்க எங்கள் ஊர் சினிமாக் கொட்டகை.. னு தலைப்பெல்லாம் வச்சு எங்க ஊர் டூரிங் டாக்கிஸ் அதுனுடன் எங்கள் அனுபவமெல்லாம் எழுதலாம்னு நினைத்து இன்னைக்குதான் பாதி டைப் பண்ணி வச்சுருந்தேன் ... ..அதுக்குள்ள முந்திட்டிங்களே... சார்..\nநான் திங்கள் அன்று எழுதுகிறேன் .. படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.\nஎனக்கு உங்கள் இந்த பதிவில் இருக்கும் போட்டோஸ் காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி வேண்டும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிர...\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)...\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....\nவிடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்கள...\nஇனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•20...\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்தி...\n(RESTRAINT-2008\\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)\nவம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...\nபாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•20...\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)\nபாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக...\nதிருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....\n1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்ப...\nமினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•20...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/actor-vishal-press-meet-at-april-18/", "date_download": "2018-05-27T03:40:11Z", "digest": "sha1:H72JWLTL755GDGWU4NSHOAULPBGNRG2K", "length": 17177, "nlines": 121, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..!", "raw_content": "\n“ஏப்ரல் 20 முதல் படப்பிடிப்பும், பட வெளியீடும் துவங்கும்…” – நடிகர் விஷால் அறிவிப்பு..\n“வருகிற ஏப்ரல் 20-ம் தேதி முதல் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பும், வெளியீடும் ஆரம்பமாகும்…” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் அறிவித்திருக்கிறார்.\nநேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தரப்பு முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இது குறித்து தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.\nஇதற்கடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழ்த் திரையுலகத்தின் அடுத்தக் கட்ட நகர்வுகளைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் பேசினார்.\nஇந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் விஷால் பேசும்போது, “தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.\nஇனிமேல் சினிமா தியேட்டர்களின் கட்டணம் 150 ரூபாய்க்கு மேல் இருக்காது.\nதமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மயமாக்கப்படும்.\nடிக்கெட் விற்பனை இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும்.\nதயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஅரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்\nதமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன் மூலம் அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதிவரையிலான வெளியீட்டு படங்களை இப்போதே பட்டியலிட இருக்கிறோம்.\nஇனி வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே வெளியிட அனுமதிக்கப்படும். இதைக் கண்காணிக்கவும் ஒரு புது குழு அமைக்கப்படும்.\nவரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியாகும். முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியாகும்.\nகடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகளும் வரும் ஏப்ரல் 20, வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.\nஆனால், படப்பிடிப்பை துவக்க புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம்.\nஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அந்த படக் குழு தயாரிப்பாளர் சங்கத்தின் முன் அனுமதியை பெற வேண்டும்.\nஅதற்கு அந்த படக் குழுவினர் முழு கதையையும் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும்,\nஎந்தெந்த நாட்களில், எந்தெந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்கிற விவரத்தை கொடுக்க வேண்டும்.\nபடத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nதொழில் நுட்ப கலைஞர்களின் ஒப்பந்த பட்டியலை கொடுக்க வேண்டும்.\nஇந்த விபரங்களையெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கடிதம் கொடுக்கும்.\nஅந்த அனுமதி கடிதத்தை பெப்சி அமைப்பில் படக் குழுவினர் கொடுத்தால் மட்டுமே, பெப்சி தொழிலாளர்கள் அந்த படத்தில் பணியாற்றுவார்கள்.\nஇந்த புதிய விதியின்படியே வரும் வெள்ளிக்கிழமை முதல் படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும்.\nசம்பளப் பிரச்சினை தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் முடிவெடுக்கப்படும்.\n‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ‘காலா’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது. இதற்கு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப் பெரியது.” என்றார் விஷால்.\nஇந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, கௌரவ செயலாளர் கதிரேசன், FEFSI தலைவர் R.K.செல்வமணி, கௌரவ செயலாளர் S.S.துரைராஜ், செயற்குழு உறுப்பினர்களான R.K.சுரேஷ், உதயகுமார், A.L.உதயா, பிரவீன் காந்த், மிட்டாய் அன்பு மற்றும் S.S. குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nactor vishal cinema industry strike slider tamil film producers council tfpc union காலா திரைப்படம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்த் திரைப்பட வேலை நிறுத்தம் நடிகர் தனுஷ் நடிகர் விஷால் வுண்டர்பார் பிலிம்ஸ்\nPrevious Post'தரமணி' வசந்த் ரவியும், மிஷ்கினும் இணைந்து நடிக்கும் புதிய படம்.. Next Postதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2013/02/blog-post_6.html", "date_download": "2018-05-27T03:26:10Z", "digest": "sha1:7ASOGVPJLYKWFZSIIUN7IEVHNF6WJKXW", "length": 7893, "nlines": 159, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: அரசு தரப்பில் அழகாய் எடுத்துரைக்க தீர்ப்புரைகள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅரசு தரப்பில் அழகாய் எடுத்துரைக்க தீர்ப்புரைகள்.\nஉணவில் கலப்படம் செய்பவர்கள் மீது, வழக்கு தொடுத்தால் மட்டும் போதாது. அவற்றை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, எதிர் தரப்பின் குறுக்கு விசாரணையில் பதில் சொல்வது என்பது சாதாரண காரியமில்லை. அவ்வாறு, நீதிமன்றத்தில் நமது அரசு தரப்பை எடுத்துரைக்கும்போது, பல்வேறு சந்த்ர்ப்பங்களில் நமக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க பயன்படுபவையே இதனடியில் காணப்படும் திரட்டு. இது எனக்கு ஒவ்வொரு வழக்கு வாதாடும்போதும், ஏற்பட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் தேடி கண்டுபிடிக்கப் பட்டவை. அவற்றில் பல, நாம், புதிய உணவு பாதுகாப்பு சட்ட அமலாக்கத்திற்கும் பயன்படுபவை பல உள்ளன.\nLabels: அரசு தரப்பு, உணவு பாதுகாப்பு சட்டம், குற்ற வழக்குகள், சாதகமான தீர்ப்புகள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயன்படுத்த அறிவிப்பு ம...\nஅரசு தரப்பில் அழகாய் எடுத்துரைக்க தீர்ப்புரைகள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி -நிற...\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி-பாகம...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/52457.html", "date_download": "2018-05-27T03:30:10Z", "digest": "sha1:5TPVC7Z2A67KCZIRW4DKBA4NXMOGSAZK", "length": 20210, "nlines": 375, "source_domain": "cinema.vikatan.com", "title": "உடலைப் பற்றிக் கவலைப்படாத அஜித் | Ajith Is Such a good Man Says Sakthivel Vasu!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉடலைப் பற்றிக் கவலைப்படாத அஜித்\nகதாநாயகர்களுக்குக் காவல்துறைஅதிகாரி வேடத்தில் நடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அந்தவேடத்தில் நடிக்க உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவேண்டும். எனவே கடுமையான உடற்பயிற்சிகள் செய்து சிக்ஸ்பேக் எல்லாம் வைத்துக்கொண்டு நடிப்பார்கள்.\nஒருபடத்தில் காவல்துறைஅதிகாரி வேடம் என்றாலே உடனடியாக எல்லோரும் இப்படித்தான் தயாராவார்கள். அதிலிருந்து மாறுபட்டு காவல்துறைஅதிகாரி வேடம் என்றாலும் அலட்டிக்கொள்ளாமல் அப்படியே இருக்கும் நடிகர்களைப் பற்றிய தகவலைச் சொன்னார் சக்திவேல்வாசு. இயக்குநர் பி.வாசுவின் மகன்தான்.\nஅவர் காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் தற்காப்பு படவிழாவில் பேசும்போது, போலிஸ்கேரக்டர்னா கடுமையா ஒர்க்அவுட் பண்ணி சிகஸ்பேக் வைக்கணும்னு தான் எல்லோரும் நினைப்பாங்க, என்னிடமும் டைரக்டர், இந்தக்கேரக்டருக்கு ரொம்ப கரெக்டா உடம்பை வெச்சிருக்கணும்னு சொன்னார், நான் என்னால் முடிஞ்சவரை செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் செய்தும் இருக்கிறேன், அது நன்றாக அமைந்திருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.\nநாம சினிமாவில் இதுவரைக்கும் தங்கப்பதக்கம் சிவாஜி, வால்டர்வெற்றிவேல் சத்யராஜ் உட்பட எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கோம், எல்லோருமே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கிற உடம்போடு போலிஸாக நடித்தவர்கள் இரண்டே பேர்தான்.\nஒண்ணு அஜித், அடுத்து கார்த்தி. சிறுத்தையில் அப்படியே சின்னத்தொப்பையோட நடிச்சிருப்பார். உடலைப் பற்றிக் கவலைப்படாமல் நடிச்சாங்க. இவங்கதான் உண்மையான தமிழ்நாட்டுபோலிஸ். அவங்களை மக்களும் ஏத்துகிட்டாங்க என்று பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயோகி பாபு, இதை நீங்கள் உணர்ந்தால் 'செம'..\n``கைல காசு இல்லாத நாள்கள்ல, கபாலி கோயில் அன்னதானம்தான் நம்ம மீல்ஸ்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n``என்னை மாற்றி விடாதீர்கள்...''- முதல்வருக்கு தூதுவிட்ட உளவுத்துறை அதிகாரி #SterliteProtest\nநடுரோட்டில் டி.டி.வி தினகரனும் வைகோவும் திடீர் சந்திப்பு..\nகாடுவெட்டி குரு வளர்ந்த கதையும்... கடந்து வந்த பாதையும்\n’ - தோனி நெகிழ்ச்சி\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n' - இங்கிலாந்து எம்.பி,. போர்க்கொடி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nபாகுபலி வசூலைச் சமன்செய்தது தனிஒருவன்\nஒருநாள் கூத்துக்காக தலைகீழாக மாறினார் அட்டகத்தி தினேஷ்- இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/11/how-paytm-payment-bank-airtel-payment-bank-are-different-009606.html", "date_download": "2018-05-27T03:16:43Z", "digest": "sha1:WHKAIVBOGKO3TJ6HGR7YVBVEDBYYWBVJ", "length": 19937, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சாதாரண வங்கிக்கும் பேடிஎம் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? | How Paytm Payment Bank, Airtel Payment Bank are different from normal banks - Tamil Goodreturns", "raw_content": "\n» சாதாரண வங்கிக்கும் பேடிஎம் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா\nசாதாரண வங்கிக்கும் பேடிஎம் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா\nவாரா கடன் அதிகரிப்பால் 4-ம் காலாண்டில் ரூ.7,718 கோடி ரூபாய் நட்டம் அடைந்த எஸ்பிஐ..\n18 மாதத்தில் புதிய தலைவர்.. எச்டிஎப்சி வங்கியில் உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம்..\nஎஸ்பிஐ வங்கியில் NEFT பரிவர்த்தனை எவ்வாறு ரத்துச் செய்வது\nபிக்சட் டெபாசிட் டிடிஎஸ் பணத்தினை வங்கிகள் அரசுக்கு செலுத்துகின்றனவா\nஇணைய வங்கி பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.. அதிலுள்ள சாதகப் பாதகங்கள் யாவை..\nஏர்செல்-ன் முன்னால் தலைவர் சி சிவசங்கரன் நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு பதிவு\nஒவ்வொரு நாளும் நிதி துறையில் டிஜிட்டல் மையத்தின் ஆதிக்கம் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் ஒரு காட்டமாக மத்திய வங்கி பேமெண்ட்ஸ் வங்கி சேவைகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. பேமெண்ட்ஸ் வங்கி சேவையும் பிற வங்கிகளைப் போன்றே அனைத்து நிதி சேவைகளையும் வழங்கினாலும் கடன் மட்டும் வழங்காது. இரண்டு நாட்களுக்கு முன்பு பேடிஎம் நிறுவனம் தனது சேவையினை வணிக ரீதியாகத் துவங்கியுள்ளது.\nதற்போது இந்தியாவில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி என நான்கு வங்கிகள் சேவையில் உள்ளன. எனவே பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கும் சாதாரண வங்கி சேவைக்கும் என்னவெல்லாம் வித்தியாசம் என இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.\nசாதாரணமாக வங்கிகளில் 3.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களில் சேமிப்புக் கணக்குகளில் உள்ள தொகைக்கு லாபம் அளிக்கப்படுகிறது. இதுவே ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி 7.25 சதவீதமும், பேடிஎம் வங்கி சேவை 4 முதல் 7 சதவீதம் வரையிலும், இந்தியா போஸ்ட் பேமெம்ட்ஸ் வங்கி சேவை 4.5 சதவீத முதல் 5.5 சதவீதம் வரை லாவம் அளிக்கிறது. இதுவே ஆர்பிஎல் மற்றும் யெஸ்பேங்க் போன்ற வங்கிகள் 7 சதவீதம் வரை சேமிப்புக் கணக்குகளில் உள்ள தொகைக்கு லாபம் அளிக்கின்றன.\nபல வங்கிகள் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கின்றன. ஆனால் பேமெண்ட்ஸ் வங்கி சேவையில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nபொதுவாக வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிப்பது வழக்கம். இந்தியா போஸ்ட் பேமென்ஸ் வங்கியும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை செய்யும் போது 5 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி பிற வங்கிகளுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 0.5 சதவீதம் கட்டணமாக வசூலிக்கிறது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கட்டணம் ஏதும் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறியுள்ளது.\nபேமெண்ட்ஸ் வங்கி சேவையினை எளிதாக வீட்டில் இருந்தபடியே ஆதார் உதவியுடன் உருவாக்க முடியும். ஆனால் ஆவணச் சரிபார்ப்பிற்கு மட்டும் அருகில் உள்ள கிளைக்குச் செல்ல வேண்டும்.\nபோஸ்டல் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இரண்டு முதல் வருடத்திற்கு இலவச ரூபே டெபிட் கார்டும், இரண்டாம் வருடம் முதல் ஆண்டுக்கு 100 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கின்றன.\nமேலும் செக் புக்குகள் வேண்டும் என்றாலும் 100 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nஅனில் அகர்வால் ஒருவருக்காக 13 பேரின் உயிரை காவு கொடுத்த காவல் துறை.. யார் இவர்..\nஇந்தியாவில் 7 மாதத்தில் 39 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது: ஈபிஎப்ஓ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2012/08/html.html", "date_download": "2018-05-27T03:11:31Z", "digest": "sha1:OKDS2YHP36VHPBY3YK63KT74L5KRR22A", "length": 2272, "nlines": 24, "source_domain": "www.anbuthil.com", "title": "html-----என்கோடிங்/டீ கோடிங் செய்ய சிறந்த தளம் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome blog இணையத்தளம் html-----என்கோடிங்/டீ கோடிங் செய்ய சிறந்த தளம்\nhtml-----என்கோடிங்/டீ கோடிங் செய்ய சிறந்த தளம்\nநீங்கள் ப்ளாக்கில் இணையம் சம்பந்தப் பட்ட டெக்னிகல் பதிவு போடுபவர்களாக இருந்தால் சில நேரம் html-கோடிங்குகளை பதிவில் கொடுக்க வேண்டியிருக்கும்.பிலாக்கர் எடிட்டர் நேரடியாக html- கோடிங்கை ஏற்றுக் கொள்ளாது என்பதால் அதை என் கோடிங் செய்து எழுத வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் பதிவில் நாம் தரும் கோடிங் தெரியாது.உதாரணமாகஎன்பதை அப்படியே எழுதினால் தெரியாது.அதை
என்று மாற்றி எழுதினால் மட்டுமே பதிவில் தெரியும்.\nhtml ஐ கோடிங் டீ-கோடிங் செய்ய இந்த தளம் வசதியாக இருக்கிறது.\nhtml-----என்கோடிங்/டீ கோடிங் செய்ய சிறந்த தளம் Reviewed by அன்பை தேடி அன்பு on 6:11 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.karutthukkalam.com/2013/10/", "date_download": "2018-05-27T03:31:34Z", "digest": "sha1:ODC3JWVKQMD4KUKCQAKO3KNTM2UKRADP", "length": 11311, "nlines": 87, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: October 2013", "raw_content": "\nசெவ்வாய், 29 அக்டோபர், 2013\nபழகலாம் வாங்க - பாகம் மூன்று\nஅன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டான் அப்பு. பொதுவாக பள்ளி முடிந்து வழியிலிருக்கும் சிறிய காலி இடத்தில் தன் பள்ளிப் பையை வைத்து விட்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு தான் வீட்டுக்கு வருவான்.\nவீட்டைப் பூட்டிக்கொண்டு எதிர் வீட்டில் வசித்த ராசு வீட்டில் சாவியை கொடுத்து விட்டு, ரேஷன் கடைக்கு சென்றிருந்தார் அப்புவின் அம்மா. விளையாடிவிட்டு பசியோடு வீட்டுக்கு வந்து, கதவு சாதி இருப்பதை பார்த்து மீண்டும் பையை கழட்டி கதவருகே வைத்துவிட்டு எதிர் வீட்டுக்கு சென்றான்.\nதன் குழந்தையோடு அவனுக்கும் நொறுக்கு தீனி கொடுத்து, 'மைலோ'வும் குடுத்தார் ராசுவின் அம்மா. தன் அம்மா வந்தவுடன் வீட்டுக்கு துள்ளி குதித்து சென்றான் அப்பு.\nமறுநாள் இரண்டாம் சனிக்கிழமை, பள்ளி விடுமுறை என்பதால் தெருவே கலகலத்திருந்தது. முதலத்தையிடம் ( முதல் + அத்தை. முதல் வீட்டில் வசித்து வந்த ஒரு பெண்மணி, எல்லா குழந்தைகளும் அவரை அத்தை என்று தான் அழைப்பர்.) கதை சொல்லும்படி அவரை சூழ்ந்து கொண்டு அமர்ந்தனர். தம் ஊர் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கும்பலில் ஒருவன் 'பேய்' கதை சொல்லுங்க அத்தை என்று கேட்டதும், இப்போது 'வடிவேலு சொல்லும் வசனமான' ஏண்டா... நல்ல தான போயிட்டிருந்துச்சு... என்ற தோணியில்.. பேய் கதை எல்லாம் வேணாம் நீங்க இதையே சொல்லுங்க என்று மெதுவாக அவர் காதில் சொன்னான்.\nமணி எட்டு ஆனதும் ஒவ்வொருவராக வீட்டுக்கு கிளம்பவும், சரி நாளைக்கு மிச்ச கதைய சொல்லறேன் என்று அத்தையும் வீட்டுக்கு கிளம்பினார். இரவு உணவு உண்ட பின்னர் வீட்டிலேயே தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ராசு. சிறிது நேரம் செஸ், அப்பாவுடன் சிறிது நேரம் முந்தைய ஞாயிற்றுக் கிழமை புதிதாக வாங்கியிருந்த சதுரங்கம் விளையாடிவிட்டு தூங்கினான்.\nஞாயிற்றுக் கிழமை, ஞாயிறு உதயமானது தான் தாமதம், மடமடவென குளியலை முடித்துக் கொண்டு, நண்பர்களை அழைத்துக்கொண்டு வாடகை சைக்கிள் கடை நோக்கி படை எடுத்தனர். கடையை நெருங்கியவுடன் ஒவ்வொருவரும் நல்ல, பளபளப்பான சைக்கிளை 'இது எனக்கு, அது எனக்கு' என்று போட்டி போட்டு எடுத்துக் கொண்டு, ரிஜிஸ்டர் நோட்டில் அவரவர் பெயரை சொல்லிவிட்டு 'எவ்ளோ மணிக்கு பாய் வரணும்' என்று கேட்டுக்கொண்டு சிட்டென பறந்தனர்\nநேரமானதும் சைக்கிளை விட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு நல்ல தூக்கம் தூங்கி எழுந்து, நான்கு மணிக்கு 'இலங்கை' வானொலியில் பாடல்கள் கேட்க தயாராக உட்கார்ந்தான். ஒரு மணிநேரம் பாடல்கள் கேட்டுவிட்டு மீண்டும் விளையாட கிளம்ப தயாரானதும், நாளைக்கு ஸ்கூல்க்கு போகணும், கொஞ்ச நேரம் படிச்சுட்டு விளையாடப் போ என்று அம்மா சொல்லவும், இதோ வந்துடறேன் அம்மா என்று கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடிவிட்டான்.\nவியர்த்து விருவிருக்க ஓடி பிடித்து விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு தான் காலில் குத்தியிருந்த முள் வலிக்க ஆரமித்து ரத்தம் கட்டி இருந்தது கண்டு மெய் சிலிர்த்து, 'ஆஅஆ' என்று கத்திக் கொண்டு உட்கார்ந்தான். கல்லுப்பை (கல்+உப்பு) சிறிய துணியில் வைத்து நெருப்பில் காட்டி இரத்தம் கட்டிய இடத்தில் அப்பா ஒத்தடம் கொடுத்தார்.\nஇரண்டு நாட்கள் விளையாடியதை நினைத்துக் கொண்டே ஒவ்வொரு வீட்டிலும் தம் நண்பர்கள் உறங்க கண் அயர்ந்தனர்.\nஇன்று... உறங்க நேரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மடிக்கணினி முன் சமூக வலை தளத்தில் இருந்து வெளி வராமலும், பத்து தெரு தள்ளி இருந்த நண்பனின் வீட்டுக்கு துள்ளி குதித்து ஓடிய கால்கள், வண்டி இருந்தாலும் பக்கத்து தெருவுக்கு செல்ல சோம்பல் வயப் பட்டிருக்கிறது. தத்தம் வேலைகளை வழக்கமான அட்டவணையிலேயே தினமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் அவ்வபோது நண்பர்கள் கூட்டத்தோடு சேர்ந்து சில நேரம் இப்போதிருக்கும் மழலைகள் என்ன விளையாடுகிறார்கள் என்றும் கவனிப்போம்\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 11:12:00 6 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\nபழகலாம் வாங்க - பாகம் மூன்று\nCopyright © 2017 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://booktamil.blogspot.com/2010/09/blog-post_989.html", "date_download": "2018-05-27T03:01:30Z", "digest": "sha1:WK2FRZKR5EKC2P7HJIS5S3KCGDYBKJME", "length": 9682, "nlines": 103, "source_domain": "booktamil.blogspot.com", "title": "டீலா ஆர் நோ டீலா | தமிழன் மென்-புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.\nடீலா ஆர் நோ டீலா\n விவாதத்தில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். முதலில் டி.வி.ஷோ வந்ததா - இல்லை கம்யுட்டர் விளையாட்டு முதலில் வந்ததா யார் காப்பி அடித்தது என்று தெரியவில்லை..விளையாட்டை பாருங்கள்\nபிரபல விளையாட்டு டீலா - நோ -டீலா...இதை நமது கம்யுட்டரில விளையாடலாம்.சற்று பெரிய விளையாட்டு இது.(580 எம்.பி.கொள்ளளவு) இதன் டோரன்ட் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கி டவுண்லோடு செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.\nஇதில் நீ்ங்கள் ஒருவர் விளையாட போகின்றீர்களா - இரண்டு பேரா என முடிவு செய்யவும்.அதற்கு முன் விளையாட்டை பற்றி சிறு முன்னோட்டம். இந்த நிகழ்ச்சியை நீங்கள் டி.வி.யில் பார்த்திருந்தால் உங்களுக்கு விளையாட்டை பற்றி தெரிந்திருக்கும். இல்லாத பட்சத்தில் இந்த விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇதில் சிங்கில் பிளேயரை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\n26 சூட்கேஸ்களில் பெண்கள் வரிசையாக நிற்பார்கள். இதில ஏதாவது ஒரு பெட்டியை தேர்வு செய்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் 6 பெட்டிகளை தேர்வு செய்து வரிசையாக திறக்க சொல்ல வேண்டும்.குறைந்த ரூபாய்மதிப்பு உள்ள பெட்டியை தேர்வுசெய்தால் நமது பணமதிப்பு உயரும். அது அதிர்ஷ்டத்தை பொருத்ததே...இவ்வாறே அனைத்து பெட்டிகளையும் திறந்து விளையாடலாம். ஒவ்வொரு சுற்று முடிவிலும் உங்களுக்கு கொடுக்கும் பணத்தின் அளவை சொல்லுவார்கள். அதற்கு ஒற்றுக்கொண்டால் டீல் முடித்துவிடலாம். இல்லையென்றால் நோ டீல் அழுத்தி விளையாடலாம்.விளையாடி பாருங்கள் வித்தியாசமாக இருக்கும். இதிலும் இன்னும் பிற விளையாட்டுகள் உள்ளது. அதையும் விளையாடி பாருங்கள்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.\nபதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.\nஆண்லைன் தமிழ் நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.:\nதமிழன் நகைச்சுவை - 8\nஎன் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்\nஆற்றல் மின்னணுவியல் (power electronic)\nதமிழன் நகைச்சுவை - 7\nதமிழன் நகைச்சுவை - 6\nதமிழன் நகைச்சுவை - 5\nதமிழன் நகைச்சுவை - 4\nவிரும்பிய software ஐ potable ஆக மாற்றுவது எப்படி \nகணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop\nMicrosoft office இல் tab வசதியினைக் கொண்டு வருவது ...\nமழையே... ( கவிதை )\nதமிழன் நகைச்சுவை - 3\nவரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்...\nபோட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உர...\nஇலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான இணைய உலாவி(Browser) - K...\nசமூக தளங்களில்(Social Networks) பகிர கூடாத 10 தகவல...\nஉங்கள் கணினியை சுத்தம் செய்ய Ccleaner Latest versi...\nஇணையம் மூலம் போட்டோ டிசைன் செய்ய\n1 GB அளவிலான கோப்பினை மெயில்'ல் எளிதாக அனுப்ப \nதமிழன் நகைச்சுவை - 2\nடெக்ஸ்ட் பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற - படிக்க\nபோட்டோஷாப் செய்முறை பயிற்சி 1\nடீலா ஆர் நோ டீலா\nபிடிஎப்-பைலில் புகைப்படங்களை தனியே பிரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2011/12/2011.html", "date_download": "2018-05-27T02:55:39Z", "digest": "sha1:PMRFOBVFDZOXZ5OQKZY6LTGK5KPPHJPI", "length": 29038, "nlines": 280, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": ஈரோடு சங்கமம் 2011 - நடந்தது என்ன ?", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nஈரோடு சங்கமம் 2011 - நடந்தது என்ன \nஆஹா... ஈரோடு சங்கமம் பத்தி நான் தான் சுடச்சுட முதல் பதிவு தர போறேனா\n திங்கள் கிழமையோ செவ்வாய் கிழமையோ சங்கவி போன் பண்ணி இருந்தார். 'ஈரோட்டில் சங்கமம் நடக்க போகுது. நீங்க கண்டிப்பா வர்றீங்க. போன வருஷமும் வரேன்னு சொல்லிட்டு வரவே இல்ல. இந்த முறை கண்டிப்பா வாங்க. நிறைய பெண் பதிவர்களும் வர்றாங்க'ன்னு சொன்னார். போன வருஷமே சங்கவி எழுதுன பதிவுல எல்லார் வாயிலும் ஜொள்ளு வடியற அளவு, உணவு ஏற்பாடு பத்தி எழுதி இருந்தாரா... எங்க இந்த தடவை மிஸ் ஆயிடுமோன்னு வேற ஒரு எண்ணம். நாமளும் இந்த வருஷம் கொஞ்சம் வளந்துட்டோமா... (அட உயரத்துலப்பா...) அதனால கண்டிப்பா வரேன்னு துண்டு போட்டுட்டேன்.\nஎப்படா ஞாயித்து கிழமை வரும்...எல்லாரையும் பார்க்கலாம்னு நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். ஞாயித்து கிழமை காலை சங்கவிக்கு 'எப்ப வரட்டும் ஆரம்பிச்சுட்டாங்களான்னு' போன் பண்ணினேன். 9.30 க்கு வந்துடுங்கன்னு சொன்னார். நம்ம நாட்டோட தேசிய வியாதியே லேட்டா வர்றது தான ஆரம்பிச்சுட்டாங்களான்னு' போன் பண்ணினேன். 9.30 க்கு வந்துடுங்கன்னு சொன்னார். நம்ம நாட்டோட தேசிய வியாதியே லேட்டா வர்றது தான அதனால மேடம் (நாந்தான்) கரெக்டா பத்து மணிக்கு போயிட்டேன். போனதும் நம்ம பேரு , ப்ளாக் அட்ரஸ் எல்லாம் எழுத சொல்லி உள்ள அனுப்பினாங்க. ஏசி ஹால்ல நிறைய பேர் உக்கார்ந்திருந்தாங்க. ஒரு குறும்படம் காமிச்சாங்க. நான் படம் முடியும் நேரத்துல போனதால அதை பத்தி எழுத முடியல.\nமணி பத்தரை ஆச்சு. ஈரோடு கதிர், மகேஸ்வரன், பொதிகை செய்தி வாசிப்பாளர் அருள்மொழி மூணு பேரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிச்சாங்க. மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தான் chief guest . தலைவர் தாமோதர் சந்துரு அருமையா நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அப்பறம் பெரிய தலைகளா பார்த்து ஒரு 15 பேருக்கு விருது வழங்கினாங்க. எழுத்துல பார்த்தவங்களை நேர்ல பார்க்கறது வித்யாசமா இருந்துது. அட இவங்களா அவங்க, அவங்களா இவங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது. சிலபேரை அங்க தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி அறிமுகம் இல்லை. இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள்.\nவிருது வழங்கினதும், ஸ்டாலின் சாரின் உரை. விருது பெற்றவர்களின் ஏற்புரை. பாலாசியின் நன்றியுரை. அப்பறம் எல்லா ப்ளாகர்சும் உங்களை அறிமுகப்படுத்திக்கோங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அப்பவே கால்வாசி கூட்டம் கிளம்பி வெளில போய்டுச்சு. அப்பறம் ஒவ்வொருத்தரா இன்ட்ரோ குடுத்துட்டு அவங்கவங்க பிரெண்ட்ஸ கூட்டிட்டு வெளில போய்ட்டாங்க. அப்ப பாதி கூட்டம் வெளில போய்டுச்சு.\nபோச்சுடா... நாம இன்ட்ரோ பண்ணிக்கறதுக்குள்ள\nமீதி கூட்டமும் போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு போய் நானும் பண்ணிக்கிட்டேன். நல்ல வேளை.... நான் சாதாரணமானவள் அப்படிங்கற பேர்ல ப்ளாக் எழுதறேன்னு சொன்னப்ப 'ஒ...நீங்க தானா' அப்டின்னு கணிசமான அளவுல சொன்னாங்க. (எவ்ளோ பேர்னு கேக்காதீங்க. இருந்த கால்வாசி கூட்டத்துல கணிசமான பேர்) அதுலயும் அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் சாரும், கோகுலத்தில் சூரியன் வெங்கட் சாரும் கான்பிடன்டா சொன்னதுக்கு அவங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.\nஅதுக்கப்பறம் லஞ்ச். இது குறித்த detail தகவலுக்கு சங்கவியோட பதிவு நாளைக்கு வரும். சுருக்கமா, மட்டன், சிக்கன், தலைக்கறி, முட்டை பணியாரம், எலும்பு குழம்பு, பருப்பு பாயாசம். சாப்டுட்டு வெத்தலை பாக்கு போட்டுட்டு வந்தாச்ச்ச்ச்ச்ச்.....\nவேற யாராவது பதிவு போட்ருப்பாங்க. படிக்கலாம்னு பார்த்தேன். யாரும் போடல. நம்மள மாதிரி நீங்களும் என்ன ஆச்சுன்னு எதிர்பார்த்திட்டு இருப்பீங்களேன்னு நானே பதிவை போட்டுட்டேன். போட்டோஸ் எங்கன்னு தான கேக்கறீங்க சி.பி சார் ஒரே பதிவுல 600 போட்டோ போடறேன்னு சொல்லி இருக்கார். அவரோடதுல பார்த்துக்கங்க..\nநானும் இன்று கூட்டத்திற்கு வந்திருந்தேன் தங்களையும் பார்த்தேன்.. தங்கள் பேச்சையும் கேட்டேன்..தங்களுக்கு முன்பாகவே நான் பதிவிட்டுவிட்டேனே\nஆஹா முந்திக்கிட்டீங்களே, மீ 10 நிமிஷம் லேட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n>>. நான் சாதாரணமானவள் அப்படிங்கற பேர்ல ப்ளாக் எழுதறேன்னு சொன்னப்ப 'ஒ...நீங்க தானா' அப்டின்னு கணிசமான அளவுல சொன்னாங்க\nhaa haa மேடம், ரீல் அந்து போச்சு, அவ்வ்வ்வ்\nMANO நாஞ்சில் மனோ said...\nபதிவர் சந்திப்பு பாகம் வெளி வருமா... சீக்கிரம் முடித்து விட்டீர்களே ..\nஅருமையான நிகழ்வு உங்களுடை படைப்பு அருமை நானும் வந்திந்தேன்\n//போச்சுடா... நாம இன்ட்ரோ பண்ணிக்கறதுக்குள்ள\nமீதி கூட்டமும் போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு போய் நானும் பண்ணிக்கிட்டேன். நல்ல வேளை.... நான் சாதாரணமானவள் அப்படிங்கற பேர்ல ப்ளாக் எழுதறேன்னு சொன்னப்ப 'ஒ...நீங்க தானா' அப்டின்னு கணிசமான அளவுல சொன்னாங்க. (எவ்ளோ பேர்னு கேக்காதீங்க. இருந்த கால்வாசி கூட்டத்துல கணிசமான பேர்) //\nபதிவர் சந்திப்பின் முதல் பதிவு பகிர்வுக்கு நன்றிங்க\nநேரடியாக நிகழ்ச்சியைப் பார்ப்பது போல இருந்த்து பதிவு\nநானும் இன்று கூட்டத்திற்கு வந்திருந்தேன் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது தங்களை புகைப்படம் எடுக்கமுடியவில்லை மன்னிக்கவும்.இது எனக்கு முதல் சங்கமம் பயன் உள்ளதாக இருந்தது\nகிரைம் ஸ்டோரி மாதிரி இருக்கே நீங்க தான் கிரிமினல்லா\nஅருமையான எழுத்துநடை. இப்போ தான் உங்களை பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்க.\nஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...\n// அதுலயும் அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் சாரும், கோகுலத்தில் சூரியன் வெங்கட் சாரும் கான்பிடன்டா சொன்னதுக்கு அவங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். //\nசாப்பிட்ட உடனே ஜூட் ஆகிட்டீங்க\nபோல.. காரியத்துல கண்ணா இருந்து இருக்கீங்க.. :)\nஈரோடு சங்கமம் 2011 புகைப்படங்களை காண இங்கே செல்லுங்கள்\nஉங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கண்டிப்பா எழுதுவீங்கன்னு தெரியும் :-)\nஎனக்கும் இந்த மாதிரி சந்திப்புகளில் கலந்து கொள்ள ஆசைதான். என்ன செய்ய சூழ்நிலை தடுகிறது\nகாதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25\nவலைபதிவர் சந்திப்பில் பதிவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...\nபடம் இல்லையென்றாலும் அருமையான பதிவு.\n@மதுமதி, மனோ, வெளங்காதவன், ராஜராஜேஸ்வரி, ரத்னவேல்\n//தங்களுக்கு முன்பாகவே நான் பதிவிட்டுவிட்டேனே//\nசரி... பெண் பதிவர்கள்ல முதல்ன்னு வெச்சுகோங்க :)\n//மீ 10 நிமிஷம் லேட்//\nபரவாயில்ல விடுங்க.. நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்கன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே\n// மேடம், ரீல் அந்து போச்சு,//\nஅந்துபோனது தெரியாத அளவு படம் காட்ட நாங்க என்ன செந்தில் சாரா இப்ப தாங்க Initial stage ல இருக்கோம்.\n வராதவர்கள் என்ன ஆச்சுன்னு ஆர்வமா காத்திருப்பாங்களேன்னு எழுதினது. அதனால அப்படி இருக்கும்.\n// தங்களை புகைப்படம் எடுக்கமுடியவில்லை மன்னிக்கவும்.//\nஅட பரவா இல்லைங்க ... நல்லது தான். ஒண்ணும் பிரச்சனை இல்ல. என் படத்த ப்ளோக்ல போட்டவங்களையே என் போட்டோவ எடுத்துடுங்கன்னு கெஞ்சிகிட்டு இருக்கேன். (அப்பா திட்டுவாரு)\nநடந்தது என்னன்னாவே கிரிமினல் ஸ்டோரி தானா\nஅட... நானும் உங்ககிட்ட பேசணும்னு தான் நினைச்சேன். உங்கள சுத்தி செம Fans ஆ.. நெருங்கவே முடியல. நான் சாப்டுட்டு கை கழுவிட்டு வர்றப்ப, நீங்க காரியத்துல கண்ணா இருக்க கெளம்பிட்டு இருந்தீங்க. ;-) வண்டி எடுக்க வந்தப்ப பேசலாம்னு இருந்தேன். தயக்கமா இருந்துச்சு. அதான் வந்துட்டேன்.\nநானும் போன வருஷம் சூழ்நிலையை காரணம் சொல்லிட்டு இருந்தேன். மனமிருந்தால் மார்க்கபந்து சாரி மார்க்கமுண்டு.. :)\nமேடம்... உங்கள் கவிதைகள் ரியல்லி சூபர்ப்...\nஅருமையான சந்திப்பு.. பகிர்வுக்கு நன்றி\nஈரோடு பதிவர் சந்திப்பை பற்றி மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள் மேடம். பகிர்வுக்கு நன்றி.\nசுருக்கமானு சொலிட்டு சாப்பிட்டு வெத்தல பாக்கு போட்ட வரைக்கும் சொல்லி ஆச்சு :)\nசிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.....அருமை...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...\nநானும் போன வருஷம் சூழ்நிலையை காரணம் சொல்லிட்டு இருந்தேன். மனமிருந்தால் மார்க்கபந்து சாரி மார்க்கமுண்டு.. :)//\nஅடுத்த பதிவுலக சந்திப்புக்கு வர முயற்சி பன்றேனுங்க\nதொடர்பதிவுன்னா என்னனே எனக்கெல்லாம் தெரியாதுங்க.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க. நீங்க எதிர்பார்க்கற அளவு நம்ம கிட்ட சரக்கு இல்லைங்க. (உளவுத்துறை அளவுக்கு வொர்த் இல்லைன்னு பொலம்ப வெச்சுட்டீங்களே...)\nஎல்லாரும் கட்டு கட்டுன்னு கட்டி இருக்கீங்க.. நாங்கள்லாம் கலந்துக்கவே முடியாதுபோல:(\nசாதாராணமாவே நான் ப்ளாக் படிக்கிறதில்ல, ஏன்னா அது எனக்குபிடிக்கிறதில்ல.அப்படியே சாதாரணமா இணைய உலா வரும்போது “சாதாராணமானவள்” என்ற டைட்டில் கண்ணுல மாட்டிச்சு. ”சாதாராணமானவள்” என்ற டைட்டில் சாதாராணமான டைட்டில் இல்ல, டைட்டுல இருந்தா கூட இந்தமாதிரி டைட்டில் சாதாராணமா யாருக்கும் தோனாது.இது சாதாராணம் இல்ல, சதா திங்க் பன்னிகிட்டே இருக்கிறவங்களுக்குத்தான் இப்படில்லாம் தோனும்.நவ் ஐ திங் இது சம்’திங்’ ஸ்பெஷல்.\nஇப்ப ப்ளாக் படிக்கிற மூட் இல்ல, அதுனால கமெண்டிங் மட்டும் சரியா\nஇன்னொரு நாள் வந்து படிச்சுக்கிறேன். ஆனா நோ கமெண்ட் ஓகே வா\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nஈரோடு சங்கமம் 2011 - நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/captain-070730.html", "date_download": "2018-05-27T03:15:49Z", "digest": "sha1:2DQVUIROHXVBGYDA3LY2M5R3U7OVZV5H", "length": 10276, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வித்தகன் விஜய்காந்த் | Oru thadavai Jeyicha Pathaathu…- Captains new punch line! - Tamil Filmibeat", "raw_content": "\nவாய் பஞ்சர் ஆனாலும், பன்ச் வசனம் பேசினால்தான் தமிழ் சினிமாவில், வண்டி ஓட்ட முடியும். அந்த வகையில், கேப்டன் விஜயகாந்த்தின் புதிய படத்தில் பன்ச் டயலாக்குகள் வரிசை கட்டி வெளுத்து வாங்க வருகின்றன.\nவழக்கமாக படத்தில் இடம் பெறும் வசனங்களில் ஆங்காங்கு பன்ச் வசனம் வைப்பது வழக்கம். ஆனால் வசனமே பன்ச் ஆக இருப்பது விஜயகாந்த் படங்களில் மட்டுமே. எப்போதாவது நார்மலாக வசனங்கள் இருக்கும்.\nஅந்த பாரம்பரியத்தின்படி விஜயகாந்த் நடிக்கும் 150வது படமான வித்தகனில் சூடு பறக்கும் பன்ச் வசனங்கள் இடம் பெறுகிறதாம். இந்த பன்ச் வசனங்களை கேப்டனுக்காக இயக்குநர் மாதேஷ் எழுதியுள்ளாராம்.\nஒரு தடவை ஜெயிச்சா பத்தாது, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும் - இது ஒரு பானை சோறுக்கு ஒரு சாம்பிள் பருக்கை\nஇதுகுறித்து மாதேஷ் கூறுகையில், விஜயகாந்த் சார் இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார் (வராவிட்டால்தான் ஆச்சரியம்). ஆனால் இந்தப் படத்தில் வித்தியாசமாக செய்திருக்கிறார். இந்த கேரக்டர் கேப்டனுக்கு மட்டும்தான் பொருந்தும். வேறு யாரும் இந்த ரோலை செய்யவே முடியாது. அதுதான் இந்த கேரக்டரின் விசேஷமே என்கிறார்.\nவிரைவில் வித்தகன் குழு கனடாவுக்குப் பறக்கவுள்ளது. அங்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஒரு மாதத்திற்கு நடத்தவுள்ளனர். பிறகு சில காட்சிகளை அமெரிக்காவிலும் போய் படமாக்க உள்ளனர்.\nவித்தகன் கதை என்னவாக இருக்கும் என குழம்பித் தவிக்க வேண்டியதில்லை. விஜயகாந்த் நடித்துள்ள 149 படங்களையும் ஒருமுறை ரெஃபர் செய்து வைத்துக் கொண்டால், வித்தகன் படத்தின் கதையையும் ஈசியாக கண்டுபிடித்து விடலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்காவில் திட்டமிட்ட வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய ரஜினி.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nஆ, ஊன்னா அமெரிக்கா பறக்கும் விக்கி, நயன்தாரா: தீயாக பரவிய புகைப்படம்\nஅமெரிக்காவில் என்ன செய்கிறார் ரஜினி\nஅமெரிக்காவில் ஹாயாக மெட்ரோவில் சென்ற ரஜினி: வைரல் புகைப்படம்\nஇன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினி.. அரசியல் கட்சி, காலா ரிலிஸுக்கு இடையே சின்ன பிரேக்\nRead more about: அமெரிக்கா இயக்குனர் கனடா கேப்டன் கேரக்டர் தமிழ் சினிமா படப்பிடிப்பு பன்ச் வசனம் போலீஸ் வேடம் மாதேஷ் விஜயகாந்த் வித்தகன் வித்தியாசம் captain director mathesh punch line vijayakanth vithagan\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/namitha7.html", "date_download": "2018-05-27T03:13:55Z", "digest": "sha1:4CJFCE3VZ3DEBH652QJWTVZNCADE6KX7", "length": 10121, "nlines": 134, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நமீதா இருக்க பயமேன்! | Nameetha in Prashanths new Movie - Tamil Filmibeat", "raw_content": "\n» நமீதா இருக்க பயமேன்\nஆணழகன் பிரஷாந்த்துடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் கட்டழகி நமீதா.\nமூத்த நடிகர்களுடன் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த நமீதா, முதல் முறையாக சின்னப் பையன் பிரஷாந்த்துடன் ஜோடி சேருகிறார். தகப்பன் சாமி எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரஷாந்த்துக்கு 3 ஜோடிகள் (எங்கதான் தம்பிக்கு மச்சம் இருக்கோ). கவர்ச்சிக்கு நமீதா, நடிப்புக்கு சந்தியா, போதாதற்கு சுஜா என்றஒரு புதுமுகத்தையும் புக் பண்ணியிருக்கிறார்கள்.\nஎல்லா ஹீரோவுக்கும் சரியான ஹீரோயின் கிடைப்பது பிரச்சினையாக இருக்கும். ஆனால் பிரஷாந்துக்கு மட்டும் அந்தப் பிரச்சினையே இல்லை. யாருடன் ஜோடிசேர்ந்து நடித்தாலும் பட்டையைக் கிளப்பி விடுவார். இப்போது தகப்பன் சாமியிலும் நமீதாவுடன் சேர்ந்து கலக்கத் தயாராகி வருகிறார்.\nவின்னர் படத்தில் கிரணை, குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியது போல, தகப்பன் சாமியிலும் நமீதாவையும் நச் என்று காட்டப்போகிறார்களாம். அதே நேரத்தில் சந்தியாவுக்கு கொஞ்சம் டீசன்ட்டான வேடமாம். புதுமுகம் சுஜாவும் கவர்ச்சிக்கு ஒகே சொல்லியுள்ளாராம்.\nநமீதா சமீப காலமாக துணி போட்டுத்தான் நடிக்கிறாரா, இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார். ஆணை படத்தில்நமீதாவின் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சிக்கி அர்ஜூன் திணறி வருகிறாராம். பாதிக் காட்சிகளை சென்சார்காரர்கள் வெட்டித் தள்ளி விடுவார்கள் என்ற ரேஞ்சுக்குமிதமிஞ்சிய அளவுக்கு கிளாமர் உள்ளதாம்.\nஎதையெல்லாம், எப்படியெல்லாம் போகஸ் செய்ய வேண்டுமோ, அப்படியெல்லாம் செய்து அசத்தியிருக்கிறாராம் நமீதா. அவரது திமிறலைப் பார்த்து ரசிகர்கள்பெருமூச்சு விடப் போவது நிச்சயம் என்கிறது ஆணை படக் குழு.\nநமீதா இருக்கும் நம்பிக்கையில்தான் தகப்பன் சாமி படக் குழுவினர் தெம்பாக இருக்கிறார்களாம். காமடிக்கு கருணாஸும், கஞ்சா கருப்பும் உள்ளார்கள். தேவாவின்மகன் ஸ்ரீகாந்த் தேவாதான் இசை. ஹரியின் உதவியாளரான ஷிவசண்முகம் படத்தை இயக்கப் போகிறார்.\nதகப்பன்சாமி என்று அழகான பெயர் வைத்துள்ளார்கள். படத்தில் அழகிகளின் கொட்டத்தை மட்டும் காட்டாமல் நல்ல கருத்துக்களையும் வைப்பார்கள் என்றுநம்புவோம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/interview/shreya-070214.html", "date_download": "2018-05-27T03:15:02Z", "digest": "sha1:MVLD2T52OLRN23S4VFYDDVK4DTCIZTDZ", "length": 11683, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அழகான ஆண்களும் ஷ்ரியாவும்! | Interview with Actress Shriya - Tamil Filmibeat", "raw_content": "\n» அழகான ஆண்களும் ஷ்ரியாவும்\nசிவாஜி நாயகி ஷ்ரியாவுக்கு தண்ணி குடிக்கும் பழக்கம் மட்டும்தான் இருக்கிறதாம், வேறு எந்த கெட்ட பயக்கமும் கிடையாதாம்.\nமருமகப் பிள்ளை தனுஷுடன் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் சூப்பராக ஓடி விட்டதால், மாமனார் ரஜினியுடன் நடித்துள்ள சிவாஜியின்சூப்பரோ சூப்பர் ஓட்டத்தை எதிர்பார்த்து ஆவலோடு காத்துள்ளார் ஷ்>யா.\nபக்திக்குப் பெயர் போன ஹரித்வார் தந்த அழகு மயில்தான் ஷ்ரியா. படிச்சது, வளர்ந்தது எல்லாமே டெல்லியில். கல்லூரிக் காலத்தில், சகபுள்ளைகளிடம் செம செல்வாக்குடன் திகழ்ந்தவராம் ஷ்>யா.\nகாதலுக்கு உதவுவது, கலாய்ப்பது என சகலகலாவல்லியாக கலக்கியவராம் ஷ்ரியா. இப்படியாக வளர்ந்து வந்த ஷ்>யாவுக்கு ஒரு ஆல்பத்தில்திறமை காட்டும் சந்தர்ப்பம் வந்தது. ஜாலியாக அதை முடித்துக் கொடுத்தார்.\nஅதைப் பார்த்து தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு வரவே, பாதை மாறிப்போய் தென்னிந்தியாவுக்கு வர வேண்டியதாயிற்றாம்.\nஇப்பத்தான் ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். எனது போர்ஷன் முடிந்து விட்டது. சிறப்பாக வந்துள்ளது படம். சூப்பர் ஸ்டார் நடிப்பைப் பார்த்துரசிகர்கள் மிரளப் போகிறார்கள். அவ்வளவு கலக்கலாக அசத்தியுள்ளார் தலைவர்.\nஇந்தப் படத்தை என்னால் மறக்கவே முடியாது. அவ்வளவு அனுபவங்கள். ரஜினி சார் எனக்கு நிறைய அட்வைஸ்கள் கொடுத்துள்ளார், நடிப்புக்குடிப்ஸ் கொடுத்துள்ளார். நிறையப் பேசுகிறார், ஆனால் அதில் ஒரு வார்த்தை கூட அனாவசியானது கிடையாது. அதுதான் சூப்பர் ஸ்டார்\nபடக் காதலில் கலக்குகிறீர்கள். நிஜக் காதல் அனுபவம்\nஅப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. இதுவரை நான் காதலிக்கவில்லை. இனிமேல் வருமோ, தெரியாது. ஆனால் நிறையப் பேரை நான் சைட்அடித்துள்ளேன். அழகான ஆண்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவேன். ஆனால் அது ஒருபோதும் காதலாக மாறியதில்லை.\nஆண்களைப் பார்த்ததும் காதல் வரும் என்று கூறுவது சும்மா டுபாக்கூர். பெண்கள் அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் விழ மாட்டார்கள். ரொம்பதிடமானவர்கள் நாங்கள்.\nகிளாமர் எனக்குப் பிடித்திருக்கிறது. உடலும் ஒத்துழைக்கிறது. ஆனால் ஆபாசமாக இருக்கும்படியாக நடிக்க மாட்டேன். ரசிக்கும்படியாகத்தான்எனது கிளாமர் இருக்கும். காமெடி ரோல்களில் நடிக்கவும் ரொம்ப ஆசை.\nபார்ட்டிகளுக்குப் போவதில் தப்பே இல்லை. ஆனால் தண்ணி அடிப்பதும், தாறுமாறாக ஆடுவதும்தான் தப்பு. அதை நான் செய்ய மாட்டேன்,செய்ததும் இல்லை.\nஎனக்கு மது அருந்தும் பழக்கம் எல்லாம் கிடையாது. நான் தண்ணி அடிப்பதாகவும், டான்ஸ் ஆடுவதாகவும் வரும் தகவல்கள் எல்லாமே பொய்.உண்மையில் நான் வெறும் பச்சத் தண்ணியை மட்டும்தான் குடிப்பேன், ரொம்பவும் விரும்பி அருந்துவது இளநீர்.\nஎனக்கு நிறைய பிரண்ட்ஸ். அவர்கள் பார்ட்டிக்குப் போவார்கள். நான் கூடமாட ஒத்தாசையாக உடன் போவேன், அவ்ளோதான் என்று கண்கள்மின்ன முடித்தார் ஷ்>யா.\nபச்சப் புள்ளையா இருக்காரே ஷ்ரியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/movies/kaatru-veliyidai/fan-quiz.html", "date_download": "2018-05-27T03:14:38Z", "digest": "sha1:I7VLNXSA3QH4HRIOP3SLO43SQOROSD2Y", "length": 4818, "nlines": 130, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காற்று வெளியிடை ரசிகர் வினாடி வினா | Kaatru Veliyidai Movie Fan Quiz in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nபுகைப்படங்கள் ரசிகர் புகைப்படங்கள் ரசிகர் கருத்து கணிப்பு ரசிகர் வினாடி வினா\nவினாடி வினா மற்றும் சவால்களை சேர்க்கவும்.\nகாற்று வெளியிடை வினாக்கள் ஏதுமில்லை \nவினாடி வினா மற்றும் சவால்களை சேர்க்க..\nகாற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை\nகாற்று வெளியிடை – 'மணி சார்' என்னும்..\nமதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து..\nஉங்க மணிரத்னத்தை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே: குஷ்புவை..\nGo to : காற்று வெளியிடை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/jyothika-070818.html", "date_download": "2018-05-27T03:14:18Z", "digest": "sha1:R7BINFAX2PPG3KOAHDOY34ZDTVYMSUIU", "length": 8847, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யா-ஜோதிகா மகள் பெயர் தியா | Surya-Jyothika name daughter as Diya - Tamil Filmibeat", "raw_content": "\n» சூர்யா-ஜோதிகா மகள் பெயர் தியா\nசூர்யா-ஜோதிகா மகள் பெயர் தியா\nசூர்யா, ஜோதிகா தம்பதிக்குப் பிறந்துள்ள செல்ல மகளுக்கு தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nசிவக்குமார் அறக்கட்டளை சார்பில் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று நிதியுதவி வழங்கப்பட்டது.\nகிட்டத்தட்ட 28 வருடங்களாக சிவக்குமார் இந்த உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் இன்று மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி அளித்த சூர்யா, லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் நிதியுதவி வழங்கினார்.\nபின்னர் அவர் பேசுகையில், அப்பாவின் ஆலேசானைப்படி இனி இந்த அறக்கட்டளை அகரம் பெளண்டேஷன் என்ற பெயரில் செயல்படும்.\nகிராமப்புற மாணவர்கள் கல்வியில் இந்த அறக்கட்டளை இனி அதிக கவனம் செலுத்தும்.\nசெங்கல்பட்டு அருகே பாலூர் அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியை தத்தெடுக்கவுள்ளோம் என்றார்.\nதொடர்ந்து அவர் பேசுகையில், எங்கள் மகளுக்கு தியா என பெயர் சூட்டியுள்ளோம். உங்கள் ஆசிர்வாதமும் அன்பும் என் குழந்தைக்கு வேண்டும் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநயன்தாரா வெற்றியின் ரகசியம் இது தானா\nநடிகை மாளவிகா இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா..\nகாதலர் தினம் கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா\nநடைபயிற்சி நல்லது- குடும்பத்துடன் வாக்கிங் செல்லும் தல\nநான் நடிகை என தெரிந்து விடாதபடி என் குழந்தைகளை வளர்த்தேன்...: ஜோதிகா\nவீர மரணம் அடைந்த முகுந்த் வீட்டுக்கு சென்ற விஜய்\nRead more about: astrologer குடும்பம் கோலிவுட சிவக்குமார் சூர்யா சென்னை செப்டம்பர் ஜோதிகா ஜோதிடர் மகள் மருத்துவமனை யோகம் வைபவம் chennai daughter function hospital jyothika sivakumar surya\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.karutthukkalam.com/2017/11/this-is-america-6_29.html", "date_download": "2018-05-27T03:35:24Z", "digest": "sha1:T56NTJ5S3MKK5UPFT2NF6NJ4DUKCL2VM", "length": 37331, "nlines": 134, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழை!", "raw_content": "\nபுதன், 29 நவம்பர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழை\n இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏதோ பொறாமை வரும், கோவம் வரும் என்றெல்லாம் சொன்னேனே அதில் பாதி எந்த இடத்தி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். மீதி என்ன என்றால்... இப்படி பறந்து கிடைக்கும் அமெரிக்காவில் காட்டுக்கு நடுவே சென்றாலும் சாலை அற்புதமாக போடப் பட்டிருக்கும், ஒருசில இடம் கன்னாபின்னா மேடு, ஒரு வீடும் கண்ணுக்கு தென்படவில்லையே, இந்த பக்கம் ஒன்னும் இல்லையே, இது அடர்ந்த காடாச்சே, என்று என்னென்ன தோணுமோ அந்தந்த இடத்துக்கு சென்றாலும் அங்கெல்லாம் \"தரமான ரோடு\" போடப் பட்டிருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் நான் குறைந்தது இருபதாயிரம் மைல்கள் பயணித்திருப்பேன், முகம் சுழிக்கும் அளவு எங்கும் சாலையை கண்டதில்லை.\nஇங்கே பனிக்காலத்தில் சாலையில் பனி விரைவில்கரையவும், வண்டிகள் வழுக்காமல் செல்லவும் கல்லுப்பு தூவுவார்கள் பல truckகுகள் (தனியார் மற்றும் அரசு வண்டிகள்) தொடர்ந்து சாலையை சுத்தம் செய்துக்க கொண்டே இருக்கும், சாலையில் பனி இல்லாமல் , மக்கள் வேலைக்கு செல்ல சிரமம் இல்லாமல் இருக்க தொடர்ந்து பணியை அகற்றிக்கொண்டே இருப்பார்கள். அதே போல சாலையின் இரு புறமும் அங்கங்கே மழை தண்ர் செல்ல வடிகால் இருக்கும், எவ்வளவு பெரிதாக மழை வந்தாலும் சாலையில் தண்ணீர் தேங்கவே தேங்காது\nடிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அவ்வவ்போது பனி பொழியும். சில ஆண்டுகள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த பனி கரைவதற்கு மே மாதம் இறுதி வரை கூட ஆகும். இந்த பனியை பற்றி சொல்லும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த தலைப்பு அமெரிக்காவில் உள்ள பருவ காலங்களைப் பற்றி தான் இந்த தலைப்பு என்று ஆம், இங்கிருக்கும் பருவ காலங்களை பற்றி இந்த தலைப்பில் பார்ப்போம்.\n2015இல் பெய்த பெரும் பனிக்கு (Blizzard) அடுத்த நாள் எடுத்த படம்.\nஇங்கு நான் வந்திறங்கியது அக்டோபர் மாதம். மரங்களில் உள்ள இலைகளெல்லாம் ஆரஞ்சு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும், சிகப்பு நிறத்திலும் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது. ஆஹா... சினிமாவில் வருவது போலவே இருக்கிறதே என்று மிக பரவசமாக இருந்தது. இப்படித்தான் எப்பொழுதும் இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன். ஒரு வாரம் இருக்கும், வழக்கம் போல அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வழக்கமான பாதையில் நடந்து சென்றேன், மரங்களில் இருந்த இலைகளெல்லாம் உதிர்ந்திருந்தன என்னடா இது... இவ்வளவு அழகா இருக்கே என்று நினைத்ததாலோ என்னவோ எல்லா இலைகளும் கொட்டி விட்டது என்று நினைத்துக்கொண்டே வருத்தத்தில் அன்று அலுவலகம் சென்றேன். பிறகு தான் இங்கிருக்கும் பருவ காலம் பற்றி புரிய ஆரமித்தது.\nநம்மூரிலும் இலையுதிர் காலம் இருக்கிறது, நான் படித்த வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியிலும், ஓசூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முழு ஆண்டு பரிட்சை விடுமுறைக்கு முன்னர் பள்ளியிலிருக்கும் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து இருக்கும், ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது பச்சைபசேலென்று புதிதாக இலைகள் வந்திருக்கும். இதுதான் எனக்கு தெரிந்த இலையுதிர்காலம், ஆனால் இங்கோ... இலையுதிர்காலம் என்றால் நாட்டிலிருக்கும் மொத்த மரமும்மொட்டையாகிவிடுகிறது\nசெப்டம்பர், அக்டோபர் மாதம் முதல் குளிர் ஆரமிக்கும். அக்டோபர் மாதம் முதல் பகலில் வெயிலும் (மிதமான வெயில் தான்) இரவில் குளிரும் இருக்கும்... குளிர் அதிகமாக ஆக, பச்சை இலைகளெல்லாம் நிறம் மாற ஆரமிக்கும். ஒரு வேலை வெயில் அதிகமாக இருந்தால் நிறம் மாறுவதற்கு தாமதம் ஆகும். நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பருவம் மாறும். அதாவது வடக்கில் குளிர் செப்டெம்பர் மாதமே ஆரமித்துவிடும். நியூ ஜெர்சியில் செப்டெம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் குளிர் ஆரமிக்கும், அப்படியே வாஷிங்டன், விர்ஜினியா என்று தெற்கு நோக்கி செல்லும். சரி இதுல என்ன இருக்கு என்கிறீர்களா) இரவில் குளிரும் இருக்கும்... குளிர் அதிகமாக ஆக, பச்சை இலைகளெல்லாம் நிறம் மாற ஆரமிக்கும். ஒரு வேலை வெயில் அதிகமாக இருந்தால் நிறம் மாறுவதற்கு தாமதம் ஆகும். நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பருவம் மாறும். அதாவது வடக்கில் குளிர் செப்டெம்பர் மாதமே ஆரமித்துவிடும். நியூ ஜெர்சியில் செப்டெம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் குளிர் ஆரமிக்கும், அப்படியே வாஷிங்டன், விர்ஜினியா என்று தெற்கு நோக்கி செல்லும். சரி இதுல என்ன இருக்கு என்கிறீர்களா ஆம், இதுல தான் விஷயம் இருக்கு.... இப்படி குளிர் ஆரமித்தவுடன் தான் இயற்கை விரும்பிகளுக்கு கொண்டாட்டமே.\nஎனது குடியிருப்பிலிருந்து ரெண்டு தெரு தள்ளி...\nகுளிர் ஆரமித்த மாநிலங்களில் முதலில் இலைகளின் நிறம் மாற... மாற இயற்கையின் அழகு நாளெல்லாம் கண்டு கழித்தாலும் மேலும் மேலும் ரசிக்கத் தூண்டும். அந்த சமயங்களில் இந்த நிற மாற்றத்தை கண்டு களிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வரும், ஆனால் சரியான நாட்களில் வந்தால் தான் இந்த இயற்க்கை அழகை காண முடியும். அதனால் தான் இந்த நிறம் மாற்றங்களை கண்காணிக்க பல வலைத்தளங்கள் இருக்கின்றன. பல வலை தளங்களில் எழுதுபவர்கள் தினமும் சில முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து இன்று இவ்வளவு விழுக்காடு நிறம் மாறியிருக்கிறது, அவ்வளவு விழுக்காடு இலைகள் உதிர்ந்திருக்கிறது என்று நேரடி update கொடுத்துக் கொண்டிருப்பர். இதை பொறுத்து தான் மக்கள் சுற்றிப்பார்க்க திட்டமிடுவர். குறிப்பிட்ட ஒரு வாரம் அலலது அதற்கும் குறைவான நாட்கள் மட்டும் தான் நிறங்கள் இருக்கும், இந்த காலத்தில் இலைகள் பலவீனமாக இருக்கும், அதனால் இந்த சமயத்தில் வரும் மழை, காற்று போன்றவற்றால் நாளுக்கு நாள் இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும்.\nமேலே குறிப்பிட்டது இது தான்\nஇலைகள் முதலில் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும், குளிரை பொறுத்து வேகமாக ஆரஞ்சு நிறத்துக்கு அடுத்து மாறும், அதிலிருந்து சிகப்பு நிறமாக மாறும், மழை, காற்றிலிருந்து தப்பியது என்றால் brown நிறமாக மாறி அதன் பின்னர் உதிர்ந்து விடும். மரத்தில் ஒரு இலைகூட இல்லாமல் மொட்டை மரமாக மூன்று மாதங்கள் இருக்கும். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் மொத்த நாடும், அல்லது எனக்கு தெரிந்தமட்டில் குறைந்தபட்சம் ஒரு இருபது மாநிலங்களிலாவது மொத்தம் மரமும் மொட்டையாக இருக்கும். இத்தனை நாள் வழி நெடுக்க பச்சை பசேலென்று இருந்த மரங்களெல்லாம் களையிழந்து இருக்கும். இதெல்லாம் சில நாட்களுக்கு தான்.... ஏனென்றால் இதன் பின்னர் தான் பனிகாலம்ஆரமித்து, மொட்டை மரங்களை பனி அலங்கரிக்கும்.\nபெரும்பாலும் டிசம்பர் மூன்றாவது வாரம் முதலெல்லாம் பனி பொழிய ஆரமித்துவிடும். முதல் பனி கொள்ளை அழகு ரோஜா படைத்து பாட்டுலதானேபனியை முதன் முதலில் பார்த்தோம் ரோஜா படைத்து பாட்டுலதானேபனியை முதன் முதலில் பார்த்தோம் நிச்சயம் நம் மக்கள் எங்கு கண்ணிலும் புகைப் படம் எடுத்துக்கொண்டிருப்பர். அதை பார்ப்பதே ஒரு அழகு நிச்சயம் நம் மக்கள் எங்கு கண்ணிலும் புகைப் படம் எடுத்துக்கொண்டிருப்பர். அதை பார்ப்பதே ஒரு அழகு பொறுமையாக கவனித்தால் பனி ஒரு அழகு இலைபோல பொழியும். சாரல், தூறல், மழை... இதுபோல Flurry, Snow. எனக்கு தெரிந்து இது இரண்டு வார்த்தைகள் தான். Flurry என்பது சாரல், குட்டி தூறல் போல ஒவ்வொரு வெள்ளை பூ போல மென்மையாக வெள்ளை சாரல் பொழியும். இதுவே பெரிதாக வரும்போது மழைபோல பனி பொழியும்.\nஅங்கே தெரியும் Signalஐ தாண்டினால் எனது bus stop.\nபனியில் ஒரு மான் குட்டி\nஇந்தப் படத்தில் இருப்பவர் தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறார்\nமுன்பு சொன்னது போல தான், நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கே பனியின் அளவு மாறும். Maine, New Hampshire, Upstate New York (நயாகரா நீர் வீழ்ச்சி, அமெரிக்க - Canada எல்லை) பகுதியெல்லாம் பெரும்பாலும் அதிகமாக பனிபொழியும் இடங்கள். நியூ ஜெர்சியும் அதிகம் பனிபொழியும் இடம் என்றாலும் மேற் கூறிய இடங்களை விட குறைந்த அளவில் தான் பனி இருக்கும். இந்த மூன்று முதல் நான்கு மாதங்கள் குளிர் -25 வரை செல்லும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் -29 ஆக இருந்தது குளிர். மொட்டை மரங்களெல்லாம் குல்லாய் போட்டது போல பனியால் மூடப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்\nஇந்த குளிர் காலங்களில் மக்கள் அணியும் ஆடைகளும் மாறும். வெளியில் செல்ல வேண்டும் என்றாலும், வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் குளிருக்கான ஆடைகள் அணிவதற்க்கே கூடுதலாக ஒரு ஐந்து, பத்து நிமிடங்கள் ஆகும். Thermal Wear என்று ஒன்று உண்டு, சட்டை, pant இரண்டும் இருக்கும், உடம்பை சூடாக இருக்கு வைக்கும் ஆடை. இதை போட்டுக்கொண்டு, இதன் மேலே வழக்கமான சட்டை, pant அணிந்துக்கொண்டு, அதன் மேல் குளிருக்கான Jacket (ஆம், இப்படித்தான் சொல்கிறார்கள் அதன் பெயரை), சிலர் அந்த jacket அணிவதற்கு முன் sweater கூட போட்டுக்கொள்வார்கள், அதன் பிறகு குல்லா, கைக்கு gloves... சப்ப்ப்ப்ப்பா... இதை type பண்ணவே அஞ்சு நிமிஷம் ஆயிடிச்சு\nஇந்த குளிர் காலத்தில் பனிச்சறுக்கு, snow tubing, ice கட்டியில் சிற்பம் வடிப்பது போன்று பனி காலத்துக்கு ஏற்ப பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். பனிக்காலங்களில் எல்லாம் சூரியன் இருக்காதா என்ன என்று தோணலாம், இருக்கும்... மாலையில் வீட்டில் வெளிச்சத்துக்கு tubelight போட்டு தூங்கும் முன் அணைப்பதுபோல வெறும் வெளிச்சத்துக்காக மட்டும் தினமும் சூரியன் வந்துபோகும். உடம்பில் சூடு உரைக்கவே உரைக்காது. ஆனால் பளிச்சென்று கண்ணில் வெளிச்சம் படும், எல்லா இடங்களும் பனியால் சூழ்ந்து இருக்கும், அதனால் சூரிய வெளிச்சம் பட்டு எல்லா பக்கத்திலிருந்தும் வெளிச்சம் பிரதிபலிக்கும். இதனால் கண் கூசாமல் இருக்க தான் Sunglass அதிகம் அணிகிறார்கள். அது கண்ணை இந்த அதீத வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கும்.\nஇங்கே மழைக்காலம் என்று தனியாக ஒன்று கிடையாது. பனிக்காலம் இறுதியிலும், இலையுதிர்காலம் இறுதியிலும், வசந்தகாலத்தின் ஆரம்பத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். சில மாநிலங்களில் இது மாறுபடும். ஆக, மார்ச் மாதம் இறுதி முதல் சற்று மழை பெய்து ஏற்கனவே பெய்த பனியை கறையவைக்க ஆரமிக்கும். இதுதான் வசந்த காலத்தின் ஆரம்பம். இலைகளெல்லாம் அழகாக துளிர் விட ஆரமிக்கும். சில பகுதிகளில் Cherry Blossom என்று சொல்லப்படும் Cherry மரங்கள் நடப்பட்டிருக்கும், சில ஊர்களில் அந்த Cherry Blossomஐ காண ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் கூட்டம் களைகட்டும். குறிப்பாக வாஷிங்டனில் இது மிக பிரபலம்.\nஇது வீட்டுக்கு பக்கத்துலயே எடுத்தது\nபூத்துக்கு குலுங்கும் cherry blossom.\nஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்டு அமெரிக்காவில் நடப்பு பட்ட இம்மரங்கள் இந்த வசந்த காலத்தின் ஆரமத்தில் பெரும் அழகாக இருக்கும் மரம் முழுதும் Pink, வெள்ளை சில நேரத்தில் ஊதா நிறத்திலும் மொத்த மரமும் பூத்திருக்கும். இது வெறும் இரண்டு நாட்கள் நாட்டும் தான் இப்படி இருக்கும், இந்த இரண்டு நாட்களில் காண தவறினால் மீண்டும் அடுத்த ஆண்டு மட்டும் தான் இந்த அழகை காண முடியும்.\nஇந்நாட்டில் பெரும்பாலும் இப்படித்தான். இயற்கையின்மாற்றங்களை கால அட்டவணை போட்டு மக்கள் ரசிப்பார்கள். அரசாங்கமும், தனியார் பொழுதுபோக்கு துறையும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்லவும், வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியில் சென்று பொழுது போக்க காலத்துக்கு ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்களை அட்டவணை போட்டு கடைபிடிப்பார்கள். ஏப்ரல், மே முதல் குளிர் குறைய ஆரமிக்க... ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் இங்கே கோடை காலம்\nநிறைந்த ஆடையிலிருந்து குறைந்த ஆடைகளுக்கு மாறும் காலம்; மக்களுக்கு குறைந்த இலைகளிலிருந்து முழுதும் இலைகளால் நிறைந்திருக்கும் காலம்; மரங்களுக்கு\nபள்ளிகளுக்கு மூன்று மாதங்கள் விடுமுறை. அலுவலகத்தில் பலர் விடுமுறை எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் காலம். நீச்சல், Scuba diving, para sailing என்று கோடை காலத்துக்கு ஏற்ற பொழுது போக்கு அம்சங்கள் ஆரமிக்கும்.\nகுளிர்காலம் முழுக்க கடலில் தண்ணீர் வெகு ஜில்லென்று இருக்கும். யாரும் கடற்கரைக்கு செல்ல மாட்டார்கள்... நீர் நிலைகள் உறைந்து பணியாள் படர்ந்திருக்கும்... ஏரியில் தண்ணீர் உறைந்த பின்னர் நடக்கவேய முடியும்... ஆனால் யாராவது பார்த்தல் அனுமதிக்க மாட்டார்கள், அது மிக ஆபத்தாக முடியும் ஒருவேளை மிகவும் கெட்டியாகவில்லை என்றால் அட... கடற்கரையை கோடை காலத்துக்கு தான் திறப்பாங்கன்னா பாத்துகோங்களேன் அட... கடற்கரையை கோடை காலத்துக்கு தான் திறப்பாங்கன்னா பாத்துகோங்களேன் அதென்ன கடையா திறக்கறதுக்குன்னு நினைக்கிறீங்களா அதென்ன கடையா திறக்கறதுக்குன்னு நினைக்கிறீங்களா ஆமாம்... இங்கே இருக்கு எல்லா கடற்கரையும் நம்மூரில் இருப்பது போல இலவசம் இல்லை... beachஇல் குறிப்பிட்ட தூரம் வெவ்வேறு சிலரால் நிர்வகிக்கப்பட்டு வரும். $10 அலலது $20 கட்டணம் இருக்கும் ஒரு முழு நாளுக்கு. கையில் ஒரு band கட்டிவிடுவார்கள். அவவ்ளவுதான், மற்ற படி கடலில் அவர்கள் போட்ட எல்லை கோடு வரை நீந்தலாம், விளையாடலாம்... பலர் sunbath எடுத்துக்கொண்டிப்பார்கள். மேலும் Lifeguard அந்தந்த பகுதியில் மக்களை கவனித்து கொண்டே இருப்பார்கள் கடலில் தத்தளித்தால் உடனே வந்து காப்பாற்ற ஆட்கள் இருந்து கொண்டே இருஓப்பார்கள். பீச்சில் சற்று குப்பை இருந்தாலும் டபக்கென்று உடனே வந்து கொண்டு சென்று சுத்தம் செய்து விடுவார்கள்.\nஇப்படியாக மூன்று மாதம் கோடை முடிந்து மெதுவாக மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் மிதமான குளிரிலிருந்து மீண்டும் இலையுதிர் காலம் ஆரமிக்கும்..... இந்த நான்கு காலங்களையும் காட்டும் படங்களாக, ஒரே இடத்தை நான்கு காலங்களிலும் நான் எடுத்த படத்தை ஒரு காணொளியாக இங்கே உங்களுக்காக இனப்பிப்பு கொடுத்துள்ளேன்.\nSpring -> Summer -> Fall -> Autumn -> Winter இதுதான் பருவகால சுழற்சி. இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால்... ஆறு மாதங்கள் விரைவில் இருட்டிவிடும்.... ஆறு மாதங்கள் மிக தாமதமாக இருட்டும்.... நான் பள்ளியில் படித்த in summer days are longer, nights are shorter; in winter days are shorter, nights are longer என்பதற்கு அர்த்தம் இங்கு வந்த பின்னர் தான் புரிந்தது அதாவது நான்காம் வகுப்பில் படித்த பாடத்தின் practical அர்த்தம் இருபது ஆண்டு கழித்து தான் காண நேர்ந்தது அதாவது நான்காம் வகுப்பில் படித்த பாடத்தின் practical அர்த்தம் இருபது ஆண்டு கழித்து தான் காண நேர்ந்தது அக்டோபர் முதல் மாலை நான்கு மணிக்கே \"கும்மிருட்டாக\" இருக்கும். நான்கு மணிக்கெல்லாம் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும், காலையில் ஏழு மணிக்கு மேல் தான் சூரிய உதயம் இருக்கும், வெளிச்சம் வரும். மார்ச்சு மாதம் கழித்து மெதுவாக சூரிய அஸ்தமனம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிமிடம் தாமதம் ஆகி, ஆகஸ்ட் இறுதி வரை இரவு ஒன்பது மணிக்கு தான் சூரிய அஸ்தமனம் ஆகும், இரவி பத்து மணி வரை நல்ல வெளிச்சம் இருக்கும் அக்டோபர் முதல் மாலை நான்கு மணிக்கே \"கும்மிருட்டாக\" இருக்கும். நான்கு மணிக்கெல்லாம் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும், காலையில் ஏழு மணிக்கு மேல் தான் சூரிய உதயம் இருக்கும், வெளிச்சம் வரும். மார்ச்சு மாதம் கழித்து மெதுவாக சூரிய அஸ்தமனம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிமிடம் தாமதம் ஆகி, ஆகஸ்ட் இறுதி வரை இரவு ஒன்பது மணிக்கு தான் சூரிய அஸ்தமனம் ஆகும், இரவி பத்து மணி வரை நல்ல வெளிச்சம் இருக்கும் இந்த சமயத்தில் தான் Day Light Saving என்று ஒன்று உண்டு இதை சுருக்கி DST என்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாட்டில் எல்லோருமே கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின் திருப்பி வைப்பார்கள்... மார்ச் மாதம் இரண்டாம் வாரம் கடிகாரத்தை ஒரு மணி நேரம் அதிகப் படுத்தி வைப்பார்கள்.\nஇப்படியாக எந்த காலமாக இருந்தாலும் வெளியே சென்று இயற்கையுடன் இணைந்திருக்க, இயற்கையை ரசிக்க என்று ஒரு விஷயம் இருக்கும். அதை தவற விட்டால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் ஹ்ம்ம்.. இப்போதிருக்கும் பருவ மாற்றத்தை பார்த்தால், அடுத்த வருடம் என்பது ஒரு மாயை... காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டால் தான் இயற்கையை ரசிக்க முடியும்\n*** அடுத்த அத்தியாயம் விரைவில்.... ***\nஇந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் பிற்பகல் 5:07:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடிக்கும் போதே குளிரை கைல் கால் ஆடுது. எங்க ஊரில் இந்த பனி பிரச்சனை இல்லை ... வருசத்துக்கு ஒருமுறை அருகில் உள்ள மலைக்கு சென்று ரெண்டு மணி நேரம் ஆட்டம் பாட்டம் மற்றும் செலஃபீ எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுவோம்..\n29 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:45\n29 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:37\n30 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 1:58\n30 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:16\nநன்றி திரு ப.கந்தசாமி அவர்களே\n30 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:30\nநன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே\n30 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழ...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க...\nCopyright © 2017 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodtalkies.com/ta/cine_news/cine-bits/who-is-the-composer-of-vijay-62nd-film", "date_download": "2018-05-27T02:58:30Z", "digest": "sha1:YUERH6IIILLD4HNOSIT2TUWTICZIOO3C", "length": 5725, "nlines": 89, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Who is the composer of vijay 62nd film - Kollywood Talkies", "raw_content": "\nவிஜய் 62வது படத்தில் இசையமைப்பாளர் யார் \nவிஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு மெர்சல் படத்திற்கு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 62வது படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நயன்தாரா, ரகுல்பிரீத் சிங் போன்ற நடிகைகள் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இசையமைப்பது யார் என்பது சஸ்பென்சாக உள்ளது.\nதயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலைக்கு நடிகர் கமல்ஹாசன் போட்ட டுவிட்.\nகந்துவட்டி கொடுமையால் நெல்லையில் உள்ள ஒரு குடும்பம் தீக்குளித்த சம்பவம் இப்போதும் பலரால் மறக்க முடியாத ஒரு விஷயம். அதேபோல் தற்போது சினிமாவிலும் கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமா ...\nஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர்\nபிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒ ...\nவிஜய் ஆண்டனி கவுரவ வேடத்தில்\nஇயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை தனி ஒரு மனிதனாக சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்து போராடுபவரான டிராபிக் ராமசாமியின் கதை இப்போது திரைப்படமா ...\nநாளை அண்ணாதுரை படத்தின் ஆடியோ விழா\nபிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தின் ஆடியோ விழாவின்போது அந்த படம் சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகளை திரையிட்ட நிலையில், நவம்பர் 15-ந்தேதி வெளியாகும் அண்ணாதுரை ...\nகடைசி நாளில் எடுத்த செல்பி வேலைக்காரன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் , நயன்தாரா முதன்முறையாக இணையும் வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவுபெற்றுள்ளது.கடைசி நாளில் எடுத்த செல்பியை ட்விட்டரில் வெளிட்டார் நடிகர் RJ பாலாஜி.கிறிஸ்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/case-against-tamil-nadu-chief-minister-o-panneerselvam/", "date_download": "2018-05-27T03:23:28Z", "digest": "sha1:TFV7JLLPCB5M5RF3DU4CI3QUGTV462JZ", "length": 9793, "nlines": 114, "source_domain": "makkalmurasu.com", "title": "முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு - மக்கள்முரசு", "raw_content": "\nமுதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் திடீரென்று கலவரமாக உருவெடுத்து, தற்போது சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில், எதற்கு எடுத்தாலும் வழக்கு போடும் டிராபிக் ராமசாமி, குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.\nஇந்த நிலையில், குடியரசு தினத்தன்று சென்னை கோட்டையில் கொடி ஏற்ற உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையிட்டுள்ளார்.\nதமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் கொடியேற்றப் போவதால், தமிழகத்தின் ஆளுநர் சார்பாக, முதல்வர் கொடியேற்றுகிறார்.\nஎனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார். ஆளுநர் இல்லாதபட்சத்தில், தலைமை நீதிபதி கொடியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதற்குப் பதில் அளித்துப் பேசிய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், தேவைப்பட்டால் இதுபற்றி டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்யலாம் எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, அவர் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்…\n← ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது: அபிஷேக் சிங்வி →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://neo-lemurian.blogspot.com/2012/", "date_download": "2018-05-27T02:58:09Z", "digest": "sha1:TEKHB56HKECB2S5GGA6EKPQV477HH5MC", "length": 7208, "nlines": 100, "source_domain": "neo-lemurian.blogspot.com", "title": "பஃறுளி முதல் கூவம் வரை: 2012", "raw_content": "பஃறுளி முதல் கூவம் வரை\nவரலாறு என்பது பழைய கதை அன்று\nஅப்போது எங்கிருந்தாய் \"திராவிட\" நிதியே\nசிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடுப்பு\nமயிலாடுதுறையில் கிடைத்த கல்வெட்டு குறித்த செய்தியை மே 1 -இலேயே ஹிந்துவில் படித்திருந்தாலும், அப்போது வலைப்பதிய இயலவில்லை. இருந்தாலும் - அத...\nஇனி எந்தத் தனி மனிதனும் தமிழினத்தின் தலைவனாக கருதிக் கொள்ள முடியாது; அந்த ஏமாற்று வேலை இனி நடக்காது. எவன் காரிருள் சூழும்போது , இனத்துக்காக...\nதூ தூ தூ தூ தூ தூ.....யவர்கள்\nதூ தூ தூ தூ தூ தூயவர்கள் சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள் சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள் போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது\nதமிழ்நதியின் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் புளுகு மூட்டைகள்\nதமிழ்நதி அவர்களின் வலைப்பக்கங்களில் படித்த மிக இன்றியமையா, காலத்துக்குத் தேவையான கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். முழுமையாக... இதைப் பதிவி...\nகைபர் போலன் ஏர்வேஸும், அபிஷ்டுகளும்\nஆகக்கூடி கைபர் கணவாய்ப் பயணம் என்கிற ஈராயிரம் வருடக் கனவு நனவாகப் போகிற மகிழ்ச்சியில் மாமாக்களும், மாமிகளும் ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள்...\nதாமரையின் அரசியல் ஆற்றுப்படுத்தும் மடல்\nசீமானுக்கு - தாமரை என்கிற அற்புதமான தமிழச்சி எழுதிய அரசியல் \"ஆற்றுப்படுத்தும்\" மடல் படித்தேன். என் மனையிலும் பதித்து வைக்க வேண்டும...\nகர்ணனை மயக்கும் பசப்புக்காரி பாஞ்சாலி\nகுழலியின் இந்த அருமையான காலத்திற்கேற்ற பதிவைப் படித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தினகரனில் இன்று காலை(பிப்.12 ஆம் நாள்) வெளிவந்திருக்கும் ...\n'அவாள்'களுக்கு 'டாட்டா' காட்டுகிறார் தயாநிதி மாறன்\nசும்மாவே 'இவாள்'களுக்கு திமுக என்றால் எட்டிக்காய்; இப்போது ஜெ. மாமியின் தமிழக (கொடுங்)'கோல்' ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற் ...\nதென்கடல் இரகசியங்களும், குரங்கு கட்டிய பாலங்களும்\nவணக்கம் :) 'குமரிக்கண்டம்' என்றும் 'லெமூரியா' என்றும் தமிழர்களால் அறியப்பட்டிருக்கும் - தமிழர்களின...\nஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம்\n( படம் நன்றி : \"தி ஃரண்ட்லைன்\" ) கிட்டத்தட்ட ஒரு வருடமாக 'ஆதிச்சநல்லூர்' அகழ்வாய்வுகள் குறித்த செய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2018/01/blog-post_12.html", "date_download": "2018-05-27T03:39:40Z", "digest": "sha1:VEYNJFGMBT57AUOT7OYRNFADXSWARPQ3", "length": 9294, "nlines": 179, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கரீம் அப்துல் ஜப்பார் - உலகின் மாபெரும் கூடைப்பந்து சாம்பியன்.", "raw_content": "\nகரீம் அப்துல் ஜப்பார் - உலகின் மாபெரும் கூடைப்பந்து சாம்பியன்.\nகரீம் அப்துல் ஜப்பார் - உலகின் மாபெரும் கூடைப்பந்து சாம்பியன். பொதுவாக இவரைப்போன்றவர்கள் புத்தகம் எழுதினால் அது இவர்கள் சார்ந்த துறை குறித்தே அதிகமாக இருக்கும். ஆனால், தன்னுடைய சமீபத்திய நூலில், கூடைப்பந்து குறித்து பேசுவதை அறவே தவிர்த்திருக்கிறார் கரீம். மாறாக, லு அல்சின்டர் என பெயரிடப்பட்டு வளர்ந்த தான் கரீம் அப்துல் ஜப்பாராக மாறியது வரை மட்டுமே தன் நூலில் பேசுகிறார். மிகச்சரியாக இந்த நூலுக்கு \"நான் கரீமாகியது எப்படி\n1971-ஆம் ஆண்டு Milwaukee Bucks அணி அதனுடைய முதல் கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது. இதற்கு முழுமுதற்காரணம் லு அல்சின்டர். இது நடந்த அடுத்த நாள், இஸ்லாமை தான் தழுவுவதாக அறிவித்தார். விளையாட்டு உலகம் அதிசயத்தது. ஆனால், இஸ்லாம் நோக்கிய தன்னுடைய பயணம் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியதாகவும், இனி தான் கரீம் அப்துல் ஜப்பார் என அழைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இனவெறியின் கொடூரம், இஸ்லாமின் அருமையை தனக்கு உணர்த்தியதாகவும், இஸ்லாமை இயற்கையான ஒரு மார்க்கமாக தான் உணர்ந்ததாகவும் தன் நூலில் எழுதுகிறார் கரீம். குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி மற்றும் மால்கம் எக்ஸ் போன்றவர்கள் இஸ்லாம் நோக்கிய தன்னுடைய பயணத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் மறக்காமல் குறிப்பிடுகிறார்.\nமுஹம்மது அலி மற்றும் மால்கம் எக்ஸ் எப்படி தொடர்ந்து பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார்களோ அது போலவே கரீம்மும் அவருடைய இந்த நூலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n17 ஆண்டுக்கு முன் குடும்பத்தைவிட்டு பிரிந்த மகன் ம...\nகனடா TET தொலைக்காட்சி - செம்மல் மணவை முஸ்தபா அவர்க...\nமிகப்பெரிய பள்ளிவாசல் ஹாசன் II காஸாபிளாங்கா The A...\nசீறாப்புராணம் விலாதத்துக் காண்டம் கடவுள் வாழ்த்துப...\nசெம்மொழியான தமிழ் மொழியாம்.... - அபு ஹாஷிமா\nசீறாப்புராணம் ' - உமறுப்புலவர்\nமேற்குச் சூரியன் ......அபு ஹாஷிமா\nபழங்கால இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் புதுப்பிக்கப்ப...\nகல்லீரல் மாற்று அறுவை சிக...\nகிளியனூர் டாக்டர் முஹம்மது ரீலா\nகரீம் அப்துல் ஜப்பார் - உலகின் மாபெரும் கூடைப்பந்த...\nபற்களின் வாழ்வே முளைத்து விழுவதிலும்,....\nஇதை படித்தால் கண் கலங்கி போவீர்கள்\nஅஜீஸ்_அன்சாரிக்கு அமெரிக்காவில் கோல்டன்_குளோப் விர...\nசிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்\nஇல்லற வாழ்வே இனிக்கும் வாழ்வு \nஓய்வில்லா ஓட்டத்தில் ஒரு விடுமுறை ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://ourpesalai.blogspot.com/2011_04_01_archive.html", "date_download": "2018-05-27T03:03:02Z", "digest": "sha1:PUJKT6BA6DL3ACKQXBV3S2Z4QNFUDGQA", "length": 41618, "nlines": 141, "source_domain": "ourpesalai.blogspot.com", "title": "Our Pesalai: april 2011", "raw_content": "\nஅருட் திரு அமரர் Z.N.Croos OMI\nஎங்கள் கிராமத்து மக்கள் பக்தியிலே தழைத்தோங்கியவர்கள் அதுவும் வெற்றி அன்னைமீது அளவில்லா நேசம் கொண்டவர்கள். இதுவரைகாலமும் பேசாலை மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தது கிடையாது. இயற்கை அழிவோ அல்லது யுத்த அழிவோ பெருமளவு நடந்தது கிடையாது. மிகப்பழைய காலத் திலே பெருவாரி நோய் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போன தாக மக்கள் கூறுவதுண்டு. அந்தக்காலத்தில் இருந்து பேசாலைமக்கள் தமது ஊரை சகல விக்கினங்களில் இருந்து காப்பாற்றவேண்டுமென தாயாரை நோக்கி மன்றாடுவதுண்டு. சம்மனசுகளின் இராக்கினியே என்ற மன்றாட்டை ஒவ்வொரு நாளும் பூசைமுடிந்தவுடன் மிக உருக்கமாக எங்கள் மக்கள் மன்றாடு வதுண்டு. இவ்வாறு அன்னையால் எங்களுக்கு தரப்பட்ட தவப்புதல்வன்தான் அருட்தந்தை இசட் என் குருஸ் என்று அழைக்கப்படும் குருசுசுவாமி என்ற மன்றாட்டை ஒவ்வொரு நாளும் பூசைமுடிந்தவுடன் மிக உருக்கமாக எங்கள் மக்கள் மன்றாடு வதுண்டு. இவ்வாறு அன்னையால் எங்களுக்கு தரப்பட்ட தவப்புதல்வன்தான் அருட்தந்தை இசட் என் குருஸ் என்று அழைக்கப்படும் குருசுசுவாமி இவர் எங்கள் ஊர் முதல் தவப்புதல்வ னும் மன்னார் மறைமாவட்டத்தின் முதற்குருவும் இவர்தான் என நினைகின் றேன்.இவர் மட்டுமல்ல இவரது குடும்பத்தில் இருந்து பலர் குருக்களாகவும் கன்னியாஸ்திரிகளாகவும் வந்துள்ளனர் அதனால் தான் இவரது குடும்பத்தை பேசாலைமக்கள் குருகுலம் என்று அழைப்பார்கள். குருசு சுவாமி ஓர் பிரசங்கப் பீரங்கி இவர் எங்கள் ஊர் முதல் தவப்புதல்வ னும் மன்னார் மறைமாவட்டத்தின் முதற்குருவும் இவர்தான் என நினைகின் றேன்.இவர் மட்டுமல்ல இவரது குடும்பத்தில் இருந்து பலர் குருக்களாகவும் கன்னியாஸ்திரிகளாகவும் வந்துள்ளனர் அதனால் தான் இவரது குடும்பத்தை பேசாலைமக்கள் குருகுலம் என்று அழைப்பார்கள். குருசு சுவாமி ஓர் பிரசங்கப் பீரங்கி நரகம் என்று சொல்லி பிரசங்கிக்கும்போது உண்மயிலேயே நடுக்கம் எடுத்துவிடும் நரகம் என்று சொல்லி பிரசங்கிக்கும்போது உண்மயிலேயே நடுக்கம் எடுத்துவிடும் இவருக்குப்பின் கிட்டதட்ட 40 வருடங்களாக ஒரு குருவும் எங் கள் ஊரில் முளைக்கவில்லை. எங்களுக்கு ஒரு சுவாமி இருந்தாலும் அவர் 100 சுவாமிகளுக்கு சமமானவர் என்று மனதை தேற்றிக்கொண்டிருக்கும் போதுதான் அருட்திரு ஜெரோம் அவர்கள் குருவாக மாறினார் அது பெரும் ஆனந்தமாகவும் அதற்குப்பின் அதிக குருக்களும் உருவாகினார்கள். இன்று ஒரே குடும்பத்தைச்சார்ந்த இருவர் ஒரே நாளில் குருவாக திருநிலைப்படுத்தப் படும் பெரும்பாக்கியத்தை பேசாலைமக்கள் அனுபவிக்க இருக்கின்றார்கள் அதையிட்டு நான் பூரிப்படைகின்றேன். நேசமுடன் பேசாலைதாஸ்\nவெலிச்சோர் ஞானப்பிரகாஸம் டயஸ் V.G.Dias\nவெலிச்சோர் ஞானப்பிரகாஸம் டயஸ் V.G.Dias என்றால் தான் உங்களுக்கு இலகுவாகப்புரியும் என்று நினைகின்றேன். அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஓர் ஆணழகன் இந்த VGDias. சிவந்தமேனி அதற்கேற்றாற்போல சிகை அலங்காரம் உயர்ந்த கம்பீரமான தோற்றம். ஒரு இந்தி நடிகரைப்பார்ப்பது போல ஓர் பிரமை பள்ளிச்சிறுவனாய் (பயல்) நான் இருந்தபோது எனக்குள் நான் போட்டுக்கொண்ட கற்பனை எடைகள் இவை. இளமைக்காலதிலேயே ஒரு தொழில் அதிபராக உயர்ந்தவர். மீன்பிடித்துறை மட்டுமல்ல ஞானமலர் என்ற பெயரில் ஒரு Transport Company, விவசாயம், தரவையில் நிலத்திற்கு பொலிட்தீன் விரித்து நெல் சாகுபடிசெய்து சாதனைகண்டவர். பேசாலையில் யப்பான் உதவியுடன் மீன் டின் தொழிற்சாலை அமைக்கும் பூர்வாங்க முயற்ச்சி வில் இறங்கியபோதுதான் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. சமூக ஆர்வலர் 1964 இல் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தால் சேதமாக்கப்பட்ட பள்ளிக்குடத்தை சீர்செய்து ஒரு பெரிய மண்டபத்தையும் அவர் கட்டிக்கொடுத்தார். அவருக்கு ஆயுள் அதிகமாக இருந்திருந்தால் இன்னமும் அதிகமாக செய்திருப்பார் ஆனால் காலான் அதற்கு இணங்க்வில்லை அது பேசாலைமக்களின் துர் அதிஸ்டம் பள்ளிச்சிறுவனாய் (பயல்) நான் இருந்தபோது எனக்குள் நான் போட்டுக்கொண்ட கற்பனை எடைகள் இவை. இளமைக்காலதிலேயே ஒரு தொழில் அதிபராக உயர்ந்தவர். மீன்பிடித்துறை மட்டுமல்ல ஞானமலர் என்ற பெயரில் ஒரு Transport Company, விவசாயம், தரவையில் நிலத்திற்கு பொலிட்தீன் விரித்து நெல் சாகுபடிசெய்து சாதனைகண்டவர். பேசாலையில் யப்பான் உதவியுடன் மீன் டின் தொழிற்சாலை அமைக்கும் பூர்வாங்க முயற்ச்சி வில் இறங்கியபோதுதான் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. சமூக ஆர்வலர் 1964 இல் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தால் சேதமாக்கப்பட்ட பள்ளிக்குடத்தை சீர்செய்து ஒரு பெரிய மண்டபத்தையும் அவர் கட்டிக்கொடுத்தார். அவருக்கு ஆயுள் அதிகமாக இருந்திருந்தால் இன்னமும் அதிகமாக செய்திருப்பார் ஆனால் காலான் அதற்கு இணங்க்வில்லை அது பேசாலைமக்களின் துர் அதிஸ்டம் இதனைவாசிக்கும் உறவுகள் அவரது படத்தை அனுப்பினால் இதிலே இணைத்துவிடலாம்\nபேசாலைக்கிராமத்தில் புகழ்பூத்த பெரும்மக்களில் உயர்திரு எலியாஸ் பீரிஸ் அவர்களும் ஒருவராவார். இவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் கமலஹாசனின் நாயகன் திரைப்படம் என் நினைவில் தொத்திக்கொள்ளும். காதிலே கடுக்கன் தொங்கும் குடும்மி கட்டியிருப்பார் வெற்றிலை சிலவேளை புகையிலை மென்றுகொண்டிருப்பார். நூறுவயது எட்டியபோதும் கூட அவர் மூக்கு கண்ணாடி பாவித்ததாக நான் அறியேன். வெள்ளை ஜிப்பாய் வெள்ளை வேட்டி எப்போதும் அணிந்திருப்பார். அதிகம் படித்திராத ஒருமனிதர் ஆனாலும் மன்னார் அரசாங்க அதிபர் தொடக்கம் பொலிஸ் இராணுவ உயர் அதிகாரிகள் இவரைக்காண்டால் எழுந்து நின்றுமரியாதை செய்ததை நான் பார்த்திருக்கி ன்றேன். பேசாலைமக்களினால் தந்தை என்று அன்புசெய்யப்பட்டவர் இவரது இறுதி ஊர்வலத்தில் தாயகத்தந்தைக்கு அன்பு அஞ்சலி என்று ஊர்மக்களினால்\nஎழுதப்பட்டிருந்தது. தன் மூத்தமகனை ஒரு டாக்டராக படிக்கவைத்தார். இரண்டாவது மகன் சமாதானநீதவானாகவும் மூன்றாவது மகனை தபால் மாஸ்டராகவும் இன்னொருமகனை டாக்டராகவும் உருவாக்கி சாதனை படை த்தார். என்னதான் பிள்ளைகள் படித்திருந்தாலும் தந்தையைப்போல ஊர்மக்கள் மனதில் யாருமே இடம் பிடிக்கவில்லை. நூறுவயதுக்குமேல் வாழும் பாக்கியத்தை கடவுள் இவருக்கு வழங்கினார். ஐம்பதாவது கல்யாண வைரவிழாக்கண்டவர். இப்படிப்பட்ட சகல செளபாக்கியத்தையும் வெற்றி அன்னை அவருக்கு கொடுத்தாள் அதன் காரணம் அவர் வெற்றி அன்னை மீது வைத்திருந்த அளவில்லா நேசம் ஆகும்.\nநினைவில் நிலைத்தவர்கள் டயஸ் மாஸ்டர்\nவெள்ளை நிற மல்லிகையோ வேரெந்த மாமலரோ வள்ளல் அடியினுக்கு வாய்த்த மலர் எதுவோ வள்ளல் அடியினுக்கு வாய்த்த மலர் எதுவோ வெள்ளைநிற மல்லிகையுமில்லை வேரெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது. இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் டயஸ் மாஸ்டரின் நினைவுகள் சுழன்றுவரும். காரனம் அவர் அணியும் ஆடை. ஆள்பாதி ஆடைபாதி என்பார்களே அது அவருக்கு நன்றாகப் பொருந்தும். அவர் ஆடைமட்டுமல்ல அவர் உள்ளம் கூட கள்ளம் கபடமற்ற வெள்ளைக்கமலம் போன்றது. ஆசிரியராக தோன்றுகின்ற ஓர் குழந்தை வெள்ளைநிற மல்லிகையுமில்லை வேரெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது. இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் டயஸ் மாஸ்டரின் நினைவுகள் சுழன்றுவரும். காரனம் அவர் அணியும் ஆடை. ஆள்பாதி ஆடைபாதி என்பார்களே அது அவருக்கு நன்றாகப் பொருந்தும். அவர் ஆடைமட்டுமல்ல அவர் உள்ளம் கூட கள்ளம் கபடமற்ற வெள்ளைக்கமலம் போன்றது. ஆசிரியராக தோன்றுகின்ற ஓர் குழந்தை அவர் வாயில் எப்போதும் ஆங்கில வார்த்தைகள் தாராளமா கப்புரளும். சரித்திர பாடம் படிப்பிக்கும் போது சுவாரஸ்யமாகப் படிப்பிப்பார். இலங்கையின் முதல் பிரதமர் டி எஸ் சேனநாயக்காவும் அவர் மகன் டட்லியும் இவரது கதாநாயகர்கள் அவர் வாயில் எப்போதும் ஆங்கில வார்த்தைகள் தாராளமா கப்புரளும். சரித்திர பாடம் படிப்பிக்கும் போது சுவாரஸ்யமாகப் படிப்பிப்பார். இலங்கையின் முதல் பிரதமர் டி எஸ் சேனநாயக்காவும் அவர் மகன் டட்லியும் இவரது கதாநாயகர்கள் கிரிக்கட் விளையாடுவார் பொதுவாகச்சொன்னால் கிராமத்தில் வாழும் ஓர் பிரிட்டிஸ்காரன்\nநேர்மை இவரது சிறந்த பண்பு அதற்கு ஒரு சான்று இங்கே சிரிமா அரசாங்கம் காணி உச்சவரம்புச்சட்டம் அமுலாகிய போது தனக்கு அளவுக்கு மிஞ்சிய காணி இருப்பதாக அரசுக்கு அறிவித்து அதை அரசுக்கு வழங்கியவர் ஒருவேளை இது மடத்தனமாகத்தோன்றலாம் ஆனால் உண்மை நேர்மை இதற்குப்பின்னால் இருப்பதை நாம் கவனிக்கலாம். எங்கள் பேசாலையில் வாழ்ந்த வித்தியாசமான நல்ல மனிதர்களிள் இவரும் ஒருவர்\nநினைவுகளில் நீங்காதவர்கள் அமரர் ஜெகநாதன் பீரிஸ்\nசமூக ஆர்வலன், ஏழைப்பாங்காளன், பண்பா ளன், உத்தியோகப்ப ற்றற்ற பிரிகேடியர், ஊருக்கு ஒரு அண்ணன் ஜெகநாதன் அண்ணன் இப்படி யாக பேசாலை மக்களால் நேசிக்கப்பட்டவர் தான் அமரர் லோறன்ஸ் ஜெகநாதன் பீரிஸ் அவர் கள். அண்ணன் அவர்கள் இறுதி ஊர்வலத்தில் பதாதைகளில் எழுதப்பட்ட வாசகங்கள் தான் மேலே தரப்பட்ட பட்டங்கள். ஒருவனுக்கு இத் தனை பட்டங்களா அப்படி அவர் என்னதான் செய்தார் அப்படி அவர் என்னதான் செய்தார் இதை நான் எழுதுவது பொருத்தமா கது என்றுதான் நினைத்தேன். அப்படி நான் எழு தாவிட்டால் மின் எழுத்துக்களில் ஊர் போற்றிய ஒரு அண்ணனின் நினைவுக்குறிப்புகள் இடம் பெறாமல் போய்விடுமோ என்ற ஓர் ஆதங்கத் தில் ஒரு பேசாலை குடிமகனாக நினைத்துக் கொண்டு எழுதுகின்றேன். ஒருவனின் வாழ்வு எப்படியோ அப்படி அவன் மரணமும் அமையும் இதை நான் எழுதுவது பொருத்தமா கது என்றுதான் நினைத்தேன். அப்படி நான் எழு தாவிட்டால் மின் எழுத்துக்களில் ஊர் போற்றிய ஒரு அண்ணனின் நினைவுக்குறிப்புகள் இடம் பெறாமல் போய்விடுமோ என்ற ஓர் ஆதங்கத் தில் ஒரு பேசாலை குடிமகனாக நினைத்துக் கொண்டு எழுதுகின்றேன். ஒருவனின் வாழ்வு எப்படியோ அப்படி அவன் மரணமும் அமையும் உண்மைதான், பணம் பட்டம் பதவி அதிகாரம் படி ப்பு இவைகளைக்கொண்டு மனிதன் மதிக்கப்படு கின்ற தற்கால உலகிலே இவை எதுவுமில்லா மால் ஒரு மனிதன் அவன் இறப்பிலே மதிக்கப்பட் டான் என்பது அண்ணனின் இறப்பு உறுதிசெய் தது. மக்கள் ஒரு மனிதனின் உண்மையான இதய அன்பை மிக சரியாக எடைபோடுகின்றார்கள் என்பதற்கு பேசாலை மக்கள் ஓர் உதாரணம் உண்மைதான், பணம் பட்டம் பதவி அதிகாரம் படி ப்பு இவைகளைக்கொண்டு மனிதன் மதிக்கப்படு கின்ற தற்கால உலகிலே இவை எதுவுமில்லா மால் ஒரு மனிதன் அவன் இறப்பிலே மதிக்கப்பட் டான் என்பது அண்ணனின் இறப்பு உறுதிசெய் தது. மக்கள் ஒரு மனிதனின் உண்மையான இதய அன்பை மிக சரியாக எடைபோடுகின்றார்கள் என்பதற்கு பேசாலை மக்கள் ஓர் உதாரணம் என் ஊரைப்பற்றி நான் பெருமைப்படுகின்றேன். அண்ணன் ஜெகநாதன் பீரிஸ் தன் சகோதரங்களைப்போல பட்டதாரி அல்ல, தன் பெற்ற பிள்ளைகளைப்போல பொறி யியலாளர் அல்ல. பணமில்லாதவர் பள்ளிக்குச் சென்று சரியாக படித்ததும் கிடையாது என் ஊரைப்பற்றி நான் பெருமைப்படுகின்றேன். அண்ணன் ஜெகநாதன் பீரிஸ் தன் சகோதரங்களைப்போல பட்டதாரி அல்ல, தன் பெற்ற பிள்ளைகளைப்போல பொறி யியலாளர் அல்ல. பணமில்லாதவர் பள்ளிக்குச் சென்று சரியாக படித்ததும் கிடையாது அவருக்கு த்தெரிந்த தெல்லாம் பாசமும் அன்பும் பண்பும் மட்டும்தான். அவருக்குள் இருக்கும் பாச உணர்வு அவரோடு பிறந்த உடன்பிறப்புகளில் யாருக்கும் கிடையாது அவருக்கு த்தெரிந்த தெல்லாம் பாசமும் அன்பும் பண்பும் மட்டும்தான். அவருக்குள் இருக்கும் பாச உணர்வு அவரோடு பிறந்த உடன்பிறப்புகளில் யாருக்கும் கிடையாது அவரைப் பற்றி நிறைய எழுதலாம். அவர் இறந்தபின் அவருக்கு கிடைத்த மரியாதை யே தனிரகம் அவரைப் பற்றி நிறைய எழுதலாம். அவர் இறந்தபின் அவருக்கு கிடைத்த மரியாதை யே தனிரகம் இராணுவம் பொலிஸ் ஏன் புலிகள் கூட மரியாதை செலுத்தினார்கள். இவருக்கு இருக்கும் சிறப்பான அம்சம் எது வென் றால் யார் எந்த நேரத்திலும் என்ன உதவிகேட்டாலும் தயங்காமல் செய்வார் அதன் கடினம் சிக்கல் இவைகளை ஆராயமல் செய்வார் இதுதான் பேசாலை மக்களுக்கு அவர் மீது பிடித்த காரியம் இராணுவம் பொலிஸ் ஏன் புலிகள் கூட மரியாதை செலுத்தினார்கள். இவருக்கு இருக்கும் சிறப்பான அம்சம் எது வென் றால் யார் எந்த நேரத்திலும் என்ன உதவிகேட்டாலும் தயங்காமல் செய்வார் அதன் கடினம் சிக்கல் இவைகளை ஆராயமல் செய்வார் இதுதான் பேசாலை மக்களுக்கு அவர் மீது பிடித்த காரியம் இராயப்பரைப்போல யோசி க்காமல் கடலில் இறங்கி நடக்க நினைப்பார் இராயப்பரைப்போல யோசி க்காமல் கடலில் இறங்கி நடக்க நினைப்பார் தூய்மையான அன்பு அப்படித்தான் செய்யும். ஒரு முறை ஒரு ஏழைத்தாய் அண்ணனிடம் வந்து இராணுவத்தால் பிடிக்கப்பட்ட தன் பிள்ளையை மீட்டுத்தரும்படி அழுது கொட்டியிருக்கின்றாள் பொறுக்கமுடியாத அண்ணன் இராணுவத்திடம் சென்று பிடிபட்டவன் தன் சொந்தம் என்று சொல் லியுள்ளார் உண்மையி லேயே பிடிபட்டவன் ஒரு நிஜமான சிறந்த புலிப்போராளி. பிடித்ததோ அனு ராதபுர இராணுவம். இவர் பிடிபட்டவன் தன் சொந்தம் என்று சொன் னதும் இராணுவம் அண் ணனைப் பிடித்து அடித்து உடைத்துள்ளார்கள் நல்லகாலம் தள்ளாடி பிரிகேடியார் வந்தபடியால் உயிர்தப்பினார். இப்படி இன்னொரு சம்பவம் தூய்மையான அன்பு அப்படித்தான் செய்யும். ஒரு முறை ஒரு ஏழைத்தாய் அண்ணனிடம் வந்து இராணுவத்தால் பிடிக்கப்பட்ட தன் பிள்ளையை மீட்டுத்தரும்படி அழுது கொட்டியிருக்கின்றாள் பொறுக்கமுடியாத அண்ணன் இராணுவத்திடம் சென்று பிடிபட்டவன் தன் சொந்தம் என்று சொல் லியுள்ளார் உண்மையி லேயே பிடிபட்டவன் ஒரு நிஜமான சிறந்த புலிப்போராளி. பிடித்ததோ அனு ராதபுர இராணுவம். இவர் பிடிபட்டவன் தன் சொந்தம் என்று சொன் னதும் இராணுவம் அண் ணனைப் பிடித்து அடித்து உடைத்துள்ளார்கள் நல்லகாலம் தள்ளாடி பிரிகேடியார் வந்தபடியால் உயிர்தப்பினார். இப்படி இன்னொரு சம்பவம் கடலுக்கு செல்லக் கூடாது என இராணுவ உத்த ரவு, ஊர்மக்கள் தொழில் இல்லாமல் சரியாக கஸ்டப்பட்டார்கள். தள்ளாடி பிரிகேடியர் தென்ன க்கோன் அவர்கள் ஜெகநாதன் அண்ணனுக்கு நன்கு பழக்கம் எனவே தள்ளாடி முகாம் சென்று பிரிகேடியரை சந்தித்து நிலமைகளை சொல்லி தொழிலுக்கு போக உத்தரவு கேட்டிருக்கின் றார் அந்தநேரம் பார்த்து சிலாவத்துறையில் தாக்கு தல் நடத்தப்பட்டது உடனே பிரிகேடியர் தொழில் விடயமாக இன்னொரு நாள் ஆறுதலாக முடிவெ டுப்போம் எனச்சொல்லி பிரிகேடியர் அவசரமாக கிளம்பி விட்டார். அண்ணன் பேசாலைக்கு திரும் பிவந்தார் கொஞ்சம் போதையில், வந்ததும் நீங் கள் தொழிலுக்குப் போங்கள் நான் பார்த்துக் கொள்கின்றேன் எனச் சொல்ல அவர் வார்த்தை யை கேட்டு எல்லோரும் கடலுக்கு கிளம்பிவிட் டனர் கடலில் நேவிக்காரன் எல்லோரையும் பிடிக்க மீனவர்களோ பிரிகேடி யர் உத்தரவு எனச்சொல்ல கடலில் நேவிக்கும் தரையில் ஆமிக்கும் இடையே தகராறு கடலுக்கு செல்லக் கூடாது என இராணுவ உத்த ரவு, ஊர்மக்கள் தொழில் இல்லாமல் சரியாக கஸ்டப்பட்டார்கள். தள்ளாடி பிரிகேடியர் தென்ன க்கோன் அவர்கள் ஜெகநாதன் அண்ணனுக்கு நன்கு பழக்கம் எனவே தள்ளாடி முகாம் சென்று பிரிகேடியரை சந்தித்து நிலமைகளை சொல்லி தொழிலுக்கு போக உத்தரவு கேட்டிருக்கின் றார் அந்தநேரம் பார்த்து சிலாவத்துறையில் தாக்கு தல் நடத்தப்பட்டது உடனே பிரிகேடியர் தொழில் விடயமாக இன்னொரு நாள் ஆறுதலாக முடிவெ டுப்போம் எனச்சொல்லி பிரிகேடியர் அவசரமாக கிளம்பி விட்டார். அண்ணன் பேசாலைக்கு திரும் பிவந்தார் கொஞ்சம் போதையில், வந்ததும் நீங் கள் தொழிலுக்குப் போங்கள் நான் பார்த்துக் கொள்கின்றேன் எனச் சொல்ல அவர் வார்த்தை யை கேட்டு எல்லோரும் கடலுக்கு கிளம்பிவிட் டனர் கடலில் நேவிக்காரன் எல்லோரையும் பிடிக்க மீனவர்களோ பிரிகேடி யர் உத்தரவு எனச்சொல்ல கடலில் நேவிக்கும் தரையில் ஆமிக்கும் இடையே தகராறு அடுத்த நாள் காலையில் கோவில் முன்றலில் இராணு வம் ஊர்மக்களை விசாரிக்க ஊர்மக்களோ ஜெகநாதன் அண்ணன் சொன்னார் நாங்கள் போனோம் என்றார்கள் விசாரிக்க வந்த பிர்கே டியர் தென்னக்கோன் ஜெகநாதன் அண்ணனை ப்பார்த்து நீ பிரிகேடியரா அடுத்த நாள் காலையில் கோவில் முன்றலில் இராணு வம் ஊர்மக்களை விசாரிக்க ஊர்மக்களோ ஜெகநாதன் அண்ணன் சொன்னார் நாங்கள் போனோம் என்றார்கள் விசாரிக்க வந்த பிர்கே டியர் தென்னக்கோன் ஜெகநாதன் அண்ணனை ப்பார்த்து நீ பிரிகேடியரா அல்லது நான் பிரிகே டியரா அல்லது நான் பிரிகே டியரா என வினாவ அண்ணன் தலையைச் சொரிய மக்களும் இராணுவமும் சிரிக்கத்தொட ங்கினார்கள். மனம் இளகிய பிரிகேடியர் தென்ன க்கோன் நிபந்தனைப்படி மீன் பிடிக்க உத்தரவு வழங்கினார் அன்றில் இருந்து அண்ணன் ஜெகநாதன் அவர்கள் பேசாலைமக்களின் இதய த்தில் பிரிகேடியராக தரமுயர்ந்து நின்றார்\nஉயர்திரு சி.அ.துரம் மாஸ்டர் அவர்கள்\nவின்சன் சார்ச்சிலுக்கு சுருட்டு, கவிஞர் தாகூருக்கு தாடி, ஹிட்லருக்கு மீசை, காந்திக்கு கைத்தடி எங்கள் துரம் மாஸ்டருக்கு பிரம்பு ஆம் பிரம்பை கையாள்ளாதவன் தன் பிள்ளையை பகைக்கின்றன் என்று வேதம் சொல்கின்றது. (உபஆகமம்) எங்களையெல்லாம் தன்பிள்ளை என்று நேசித்த காரனத்தால் துரம் மாஸ்டர் கையில் பிரம்பேந்தினார். ஊரெல்லாம் தன்பிள்ளை என்றவருக்கு அவரோடு கூட வாழ ஒரு பிள்ளை இல்லை. இருந்த ஒன்றயும் கடவுள் எடுத்துக்கொண்டார். சாதாரன ஒரு பாடசாலையாக இருந்த பத்திமா படசாலை இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் அது துரம் மாஸ்டரின் அயராத சேவை என்றே சொல்லமுடியும் இதில் துணையாக இருந்த ஆசிரியர்களில் திரு நேசம் மாஸ்டர், திரு முகுத்தார் மாஸ்டரும் கனிசமான பங்களிப்பு செலுத்தியுள்ளனர். சவேரியார் கல்லூரி எருக்கலம்பிட்டி என்று உயர்தர கல்விக்காக பேசாலை மாணவர்கள் படை எடுத்தபோது உத்தியோக பற்றற்ற முறையில் உயர்வகுப்பை நிறுவி அதன் மூலம் ஆசிரியை அஸம்ரா பிரீஸ் அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது பெரும் சாதனை ஆம் பிரம்பை கையாள்ளாதவன் தன் பிள்ளையை பகைக்கின்றன் என்று வேதம் சொல்கின்றது. (உபஆகமம்) எங்களையெல்லாம் தன்பிள்ளை என்று நேசித்த காரனத்தால் துரம் மாஸ்டர் கையில் பிரம்பேந்தினார். ஊரெல்லாம் தன்பிள்ளை என்றவருக்கு அவரோடு கூட வாழ ஒரு பிள்ளை இல்லை. இருந்த ஒன்றயும் கடவுள் எடுத்துக்கொண்டார். சாதாரன ஒரு பாடசாலையாக இருந்த பத்திமா படசாலை இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் அது துரம் மாஸ்டரின் அயராத சேவை என்றே சொல்லமுடியும் இதில் துணையாக இருந்த ஆசிரியர்களில் திரு நேசம் மாஸ்டர், திரு முகுத்தார் மாஸ்டரும் கனிசமான பங்களிப்பு செலுத்தியுள்ளனர். சவேரியார் கல்லூரி எருக்கலம்பிட்டி என்று உயர்தர கல்விக்காக பேசாலை மாணவர்கள் படை எடுத்தபோது உத்தியோக பற்றற்ற முறையில் உயர்வகுப்பை நிறுவி அதன் மூலம் ஆசிரியை அஸம்ரா பிரீஸ் அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது பெரும் சாதனை துள்ளித்திரியும் வயதிலே எம் துடுக்கடக்கி பள்ளியிலே பயிலவைத்த பண்பான ஆசான் அவர் துள்ளித்திரியும் வயதிலே எம் துடுக்கடக்கி பள்ளியிலே பயிலவைத்த பண்பான ஆசான் அவர் அவர் அதிபராக இருந்த காலத்திலே தமிழ்தின விழாக்கள் அனைத்திலும் எம் பாடசாலையே முதலிடம் வகிக்கும் அவர் அதிபராக இருந்த காலத்திலே தமிழ்தின விழாக்கள் அனைத்திலும் எம் பாடசாலையே முதலிடம் வகிக்கும் நாராய் நாராய் செங்கால் நாராய் நீயும் நின்,, என்ற சத்திமுற்றுப்புலவன் பாடலை இசையோடு பழக்கிய அந்த நினைவுகள் இன்னும் மனதில் அசைபோடுகின்றது. சுடுமணல் நிரம்பிய மத்திய மைதானத்தை ஊராரின் சிரமதானப்பணி மூலம் களிமண் நிரப்பிய அந்த குதுகல நாள் இப்ப கூட மனசுக்குள் மத்தாப்புபோல இருக்கின்றது. கணக்கிலே புலி நாராய் நாராய் செங்கால் நாராய் நீயும் நின்,, என்ற சத்திமுற்றுப்புலவன் பாடலை இசையோடு பழக்கிய அந்த நினைவுகள் இன்னும் மனதில் அசைபோடுகின்றது. சுடுமணல் நிரம்பிய மத்திய மைதானத்தை ஊராரின் சிரமதானப்பணி மூலம் களிமண் நிரப்பிய அந்த குதுகல நாள் இப்ப கூட மனசுக்குள் மத்தாப்புபோல இருக்கின்றது. கணக்கிலே புலி ஏன் தமிழ் இலக்கியத்திலும் இசையிலும் அவர் வல்லவர். ஒருமுறை மணிமாஸ்டர் என்ற விடத்தல்தீவு மாஸ்டர் மாற்றலாகிப்போன சமயம் அவருக்கு பிரியவிடைவைபத்திற்காக மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக்கவலைகள் மறைந்ததம்மா என்ற சினிமாபாடாலை மணிவண்ணன் மாஸ்டருக்கு மாற்றி அமைத்த சம்பவம் மறக்கமுடியுமா\nஅன்னாரின் பெயர் சொல்லாத பிள்ளைகள் இல்லை ஆனாலும் அவருடைய பெயர் கொள்ள ஒரு பிள்ளை இல்லை இருந்தபோதும் அவர் எங்கள் அன்பு அறிவுலக அப்பாவாக என்றுமே எங்கள் மனதில் இருக்கின்றார்.\nமின் நினைவாலையம் எம் தந்தைக்கு:\nநம்ம ஊர் படைப்பாளன் உதயன்\nS.A. உதயனின் \"வாசாப்பு\" நூல் அறிமுக விழா 16 தை 2011 அன்று பேசாலை ஆலய மண்டபத்தில் அருட் தந்தை ஜெரோம் OMI அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டத்தரணி பிரிமுஸ் சிராய்வா பிரதம அதிதியாகவும், ஊரைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.\nஅறிவொளி அளித்துலகாளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம்\nஅறிவொளி அளித்துலகாளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம்\nஇதுதான் பேசாலை மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிராதான மண்ட பத்தின் நுழை வாயில் இதன் வலது பக்கத்தில் அமைந்துள்ள கட்டிடம் பின்னாளிலே தொழிலதிபராக இருந்து மறைந்த திரு, வெலிச்சோர் ஞானப்பிரகசம் டயஸ் அவர்க ளினால் நிர்மானிக்கப்பட்டது. பேசாலை மகாவித்தியாலய மனது தற்போது பல பெரிய கட்டிடங்களையும் பிரமாண்ட மான விளையாட்டுத்திடலையும் அரங்க மேடைகளோடு கம்பீரமாகத்திகழ்கின்றது இதன் வலது பக்கத்தில் அமைந்துள்ள கட்டிடம் பின்னாளிலே தொழிலதிபராக இருந்து மறைந்த திரு, வெலிச்சோர் ஞானப்பிரகசம் டயஸ் அவர்க ளினால் நிர்மானிக்கப்பட்டது. பேசாலை மகாவித்தியாலய மனது தற்போது பல பெரிய கட்டிடங்களையும் பிரமாண்ட மான விளையாட்டுத்திடலையும் அரங்க மேடைகளோடு கம்பீரமாகத்திகழ்கின்றது அறிவொளி அளித்துலகளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம் என்று காலைவெயில் முகத்தில் சுழிரென்று சுட, கூசும் கண்களோடு பாட சாலைக்கீதத்தை பாடும் போது இனம்புரியா சந்தோசம் மனதில் குடிகொள்ளும். அதிபர் அல்லது ஆசிரியர் ஒருவர் அன்றைய நாளுக்குரிய புத்திமதிகளையும் ஆலோசனை களயும் வழங்குவார். ஒவ்வொரு ஆசானும் தெய்வங்களகஎமக்குத்தெரி வா ர்கள் உண்மையும் அதுதான் அறிவொளி அளித்துலகளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம் என்று காலைவெயில் முகத்தில் சுழிரென்று சுட, கூசும் கண்களோடு பாட சாலைக்கீதத்தை பாடும் போது இனம்புரியா சந்தோசம் மனதில் குடிகொள்ளும். அதிபர் அல்லது ஆசிரியர் ஒருவர் அன்றைய நாளுக்குரிய புத்திமதிகளையும் ஆலோசனை களயும் வழங்குவார். ஒவ்வொரு ஆசானும் தெய்வங்களகஎமக்குத்தெரி வா ர்கள் உண்மையும் அதுதான் அப்படி தெய்வமாக் எனக்குத்தென்பட்ட ஒரு சிலர் ஆசிரியை திருமதி ஜெகநாதன், தலைமை ஆசிரியர் திரு சாமிநாதன், திரு, முகுத்தார் இப்படிப்பலர். ஒவ்வொருவருக்கும் அவரவர் பள்ளி வாழ்க்கை அற்புதமான காலங்களாகும். அதனைச் சொல்லும் பாணியானது சேரனின்அல்பம், பாலுமகேந்திராவின் அழியாதகோலங்கள் போன்ற திரைப்படங்களாக மனதில் விரியும். உங்களுக்கும் உங்கள் பாடசாலை பற்றிய நினைவுகள் மலருகின்றதா அப்படி தெய்வமாக் எனக்குத்தென்பட்ட ஒரு சிலர் ஆசிரியை திருமதி ஜெகநாதன், தலைமை ஆசிரியர் திரு சாமிநாதன், திரு, முகுத்தார் இப்படிப்பலர். ஒவ்வொருவருக்கும் அவரவர் பள்ளி வாழ்க்கை அற்புதமான காலங்களாகும். அதனைச் சொல்லும் பாணியானது சேரனின்அல்பம், பாலுமகேந்திராவின் அழியாதகோலங்கள் போன்ற திரைப்படங்களாக மனதில் விரியும். உங்களுக்கும் உங்கள் பாடசாலை பற்றிய நினைவுகள் மலருகின்றதா அப்படியானால் அதனை பகிர்ந்து கொள்ளலாமே\nஉலகத்திலேயே நாமறிந்தளவில் இரண்டாவது தடவையாக ஒரே குடும்ப த்தைச்ச் சேர்ந்த இரு சகோதரர்கள் ஒரே நாளில் திருநிலை ப்படுத்தப்பட உள்ளனர். இந்த பெருமையை எமக்கு தேடிதந்தவர்கள் எமது பேசாலை யைச் சேர்ந்த அருட் சகோதரர்கள் ஜெகன் (அமதி) அவர்களும் அவரது இளைய சகோதரர் டேவின் (IVD) ஆகியோராவர். இதற்கு முதல், தற்போ தைய பாப்பரசர் Benedikt XVI (Joseph Aloisius Ratzinger ) அவர்களும், அவரது சகோதரர் Georg Ratzinger இருவருமே முதன்முதலில் ஒருமித்து குருப்பட் டம் பெற்ற சகோதரர்களாவர் (They were both ordained in Freising on 29 June 1951 by Cardinal Michael von Faulhaber of Munich). அருட் சகோதரர்கள் ஜெகன் (அமதி) அவர்களும் அவரது இளைய சகோதரர் டேவின் (IVD) இவர்கள் இருவரது குருப்பட்டமும் சித்திரை மாதம் 28ம் திகதி, மன்னார் ஆயர் அவர்களின் தலைமையில் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.\nஅருள்மழை பொழியும் என் அம்மா\nEmat Croos · உடக்கு பாஸ் மண்டபம்... திருப்பாடுகளின் காட்சிக் கூடமிது தத்ரூபமாய் அரங்கேறும் இ...\nபேசாலை.... Emat Croos வந்தாரை வாழ்விக்கும் வசந்த சாலை வந்து சென்றோரும் போற்றிடும் புகழ் சாலை ஊருக்குள் இழையோடும் பிரதான சாலை மன்ன...\n பேசாலையில் சோக்ரா என்று சொன்னால் அது லோறன்ஸ் பீரிஸ் அவர்களை அல்லது அவர்களின் பிள்ளைகளை குறிக்கும், இவ ர்களை இன்றும் சி...\n ஆயிரம் கண்கள் வேண்டுமே, இப்பாரினில் ஆனந்தப் புன்னகைக் கோலங்கள் கண்டிட, மாதா உம் ப...\nபேசாலையில் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களைப்பறிய பக்கம் இது\nஅருட் திரு அமரர் Z.N.Croos OMI\nவெலிச்சோர் ஞானப்பிரகாஸம் டயஸ் V.G.Dias\nநினைவில் நிலைத்தவர்கள் டயஸ் மாஸ்டர்\nநினைவுகளில் நீங்காதவர்கள் அமரர் ஜெகநாதன் பீரிஸ்\nஉயர்திரு சி.அ.துரம் மாஸ்டர் அவர்கள்\nநம்ம ஊர் படைப்பாளன் உதயன்\nஅறிவொளி அளித்துலகாளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம்...\nஅருள்மழை பொழியும் என் அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thannambikkai.org/2018/05/page/2/", "date_download": "2018-05-27T03:21:57Z", "digest": "sha1:3GXDO7INX3YTWCFUPJ6HZW2AEWKJ3CHV", "length": 49584, "nlines": 173, "source_domain": "thannambikkai.org", "title": " May 2018 - Page 2 of 3 - தன்னம்பிக்கை", "raw_content": "\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nதாராபுரம் சுருணிமகன் on May 2018\nநீங்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெற வேண்டுமானால், “வெற்றி பெற வேண்டும்” என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, அந்த எண்ணத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். அந்த எண்ணத்தை நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். முதலை, ஒரு விலங்கைப் பற்றிக் கொண்டால், அவ்வளவுதான் அதன் வாயில் மாட்டிக் கொண்ட விலங்கு தப்பிக்கவே முடியாது. முதலை தான் பிடித்த பிடியையும் விடாது. அதுவோல நீங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஉங்களுடைய வெற்றி உங்களால் உண்டு பண்ணப்படுகின்றது. மற்றவர்களால் அல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். “இந்தச் செயலில் நான் வெற்றி பெறுவேன்” என்று நீங்கள் கூறுவதோடு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நம்பிக்கை ஒன்றுதான் உங்களுடைய வெற்றியின் படிக்கட்டுகளாக அமையும்.\nவெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்யுங்கள் கடுமையாக உழையுங்கள், உங்களைத்தேடி வெற்றி என்ற காதலி ஓடோடி வருவாள். “வெற்றி மகத்தானதுதான். ஆனால் தோல்வி அதை விட மனத்தானதாக இருக்கும்” என்று கூறுகிறான், வால்ட் வில்மன் ஏனென்றால் அனுபவங்களை நமக்குக் கற்றுத் தருகின்ற ஆசானாகத் தோல்வி விளங்குகிறது.\nநீண்ட காலமாக ஒருவர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றிகிட்டவில்லை. காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் செக்குமாடு போல ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரிடம் திட்டமிட்ட உழைப்பு இல்லை. திட்டமிட்ட உழைப்பு அவரிடம் இருந்திருந்தால், வெற்றிக்கன்னி அவரை வட்டமிட்டு வளைத்துக் கொண்டிருப்பாள்\nஇந்திய இளைஞர்களே உழவன் என்பவன் அவனுக்காக மட்டும் உழைப்பவன் அல்ல.\nஇந்த உலகத்துக்காக வியர்வை சிந்தி உழைப்பவன் ஆவான். உழவனது உழைப்பு உழவனுக்கு மட்டும் பயன்படுவதில்லை.\nஇப்படி இருக்கையிலும் உழவன் மனித சமுதாயத்தாலும், அரசாங்கத்தாலும் மதிக்கப்படுவதில்லை. மாறாக மிதிக்கப்படுகிறான்.\nஉலகின் உயிர்த்தொழிலான பயிர்த்தொழில் இன்றைய சூழ்நிலையாலும், தவிர்க்க முடியாத பல காரணங்களினாலும் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகிறது.\nவிவசாயத்தைக் கண்டுகொள்ள சரியான சட்டமும் இல்லை; முறையான திட்டமும் இல்லை.\nதான் உற்பத்தி செய்த பொருள்கள் பல்வேறாகப் பின்னப்பட்டு, வடிவமைக்கப்பட்டு நம் முன் இருக்கின்ற நவீனப் பொருட்கள் எல்லாம் விவசாய உற்பத்தியின் பிரதிபலனாக உருவானவையாகும்.\nமதிக்கப்பட வேண்டிய உழவன் ஏன் மிதிக்கப்படுகின்றான் இதற்கெல்லாம் காரணம் என்ன உழவனுக்குள்ளும் உழவுக்குள்ளும் இருக்கும் மகிமையையும், சிறப்பையும், பெருமையையும், அவசியத்தையும், இதுவரை யாரும் அறிந்ததில்லை அதனால் தான்.\nஉழவனின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅவ்வாறு நாம் அனைவரும் தெரிந்து கொண்டோமானால், உழவனையும், உழவுத் தொழிலையும் வணங்கத் தொடங்கி விடுவோம்.\nஉழவுக்குள் எத்தனை விசயங்கள் மறைந்துள்ளன; அடங்கியுள்ளன.\nதாழ்வு மனப்பான்மையுடன் உழவர்கள் தொழில் செய்யக்கூடாது.\nமுதலில் இவ்வுலகத்திற்கும், உலக வளர்ச்சிக்கும், உழவுத் தொழிலுக்கும் என்ன தொடர்பு என்பதையும், இதன் தேவையையும் முதலில் உழவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅப்படித் தெரிந்து கொண்டு, உங்கள் தொழிலை நீங்கள் செய்யும் போது தான் உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் அதிகரிக்கும், தாழ்வு மனப்பான்மை ஒழியும். உழவுத் தொழிலே உலகில் உயர்ந்தது என்பதை நாம் அனைவருமே அறிந்து கொள்ள முடியும்.\nவிவசாயத்தில் எத்தனை எத்தனை சிறப்பம் சங்கள் அடங்கியுள்ளன.\nஉலகையும் உழவையும் உழவனையும் மனதில் கொண்டு, உழவனின்றி உலகில்லை என்ற தலைப்பில் யாம் எழுதிய தனிப் புத்தகத்திலிருந்து இதோ ஒரு சில பக்கங்களை உங்களுக்குக் காண்பிக்கின்றேன்.\nஉலகின் முதுகெலும்பாக விவசாயம் தான் அன்று முதல் இன்று வரை இருக்கின்றது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவில்லை.\nகம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும் நாமெல்லாம் வேலை பார்த்து வாழ்க்கையை நாகரீகமாக நடத்துகிறோம், காட்டிலும் சேற்றிலும், மேட்டிலும் அநாகரீகமாகத் தொழில் செய்து வாழ்கிறார்கள் உழவர்கள் என்ற நகரவாசிகள் விவசாயிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர்.\nசிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா\nகௌரிசங்கர் செந்தில்வேல் on May 2018\nமனித உடலில் சிறு நீரகங்களின் பங்கு அபரிமானதாகும். அவை உடலில் சேரும் கழிவுகளை சுத்திகிரித்து ஆரோக்கிய வாழ்வை தருகிறது. இந்த சிறுநீரகங்களில் கற்கள் ஏற்பட என்ன காரணம் என்பது தொடர்பாக டாக்டர் கௌரி சங்கர் செந்தில்வேலிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nசிறுநீரகங்கள் எந்த பகுதியில் உள்ளன\nஎல்லோருக்கும் 2 சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. சிறுநீரகம் முதுகுதண்டின் இருபுறமும் விலா எழும்பின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. ரத்தத்தில் உள்ள நட்சுப்பொருட்கள் மற்றும் உடலில் உள்ள தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுகிறது.\nசிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்கள் என்ன\nகால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்ற பொருட்களின் அளவு சிறுநீரில் அதிகமானால் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இவை படிக உருவம் பெற்று, பெரிதாகி சிறுநீரக கற்களாகிவிடுகிறது.\nசிறுநீரக கற்களுக்கான அறிகுறிகள் யாவை\nசிறுநீரக கல் சிறுநீர்க்குழாய் நோக்கி (UR-WTER) நகரும் போது துடிக்க வைக்கும் வலி, விட்டு விட்டு வரும். வலி, ஒற்றை முதுகு வலி மற்றும் கற்கள் நகர்கவதை பொருத்து விலா எலும்புகளின் நடுவிலோ, வயிற்று பகுதியின் கீழோ, பிறப்பு உறுப்புகளின் பக்கமாகவோ ஏற்படலாம். சிறுநீரில் ரத்தம் கழிதல், வலி அதிகமானால் வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கு வலி இல்லாமல் வேறு பரிசோதனையின்போதும் தெரிய வரலாம்.\n என்பதை உறுதி செய்வது எப்படி\nசி.டி ஸ்கேன் அல்லது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சிறப்பு எக்ஸ்ரே மூலமாகவும் கண்டு பிடிக்கலாம்.\nஅறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கற்களை அகற்ற முடியுமா\nமுடியும். 5-7 மி.மீ. அளவிலான கற்கள் வேறு சிகிச்சையின்றி வெளியேறிவிடும். 9 மி.மீ மேலான கற்கள் சிறுநீர்க்குழல் வழியாக வெளியேறுவது கடினம். அப்போது மின் அலைகளை செலுத்தி கல் நொறுக்குதல் சிகிச்சை (Eswl -லித்தோடிரிப்ஸி) கற்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழல் (மேல்பகுதி)யில் இருக்கும் போது பரிந்துரைக்கப்படலாம்.\nஅனந்தகுமார் இரா on May 2018\nஎன்னை பேஸ்கட்பாலில் சேர விடுங்கப்பா\nஎன்று சிணுங்குகிறாள் செல்ல மகள்.. ‘\nஇங்கே பார் ஒழுங்கா தர்சாதம் எல்லாம் சாப்பிட்டு கொஞ்சம் சதைப்பிடி கொஞ்சம் பலமாயிரு உடனே சேர்த்துக்கலாம்.. பேஸ்கட் பாலில் வேகம் ரிஃபளக்ஸ், எனர்ஜி எல்லாமே தேவைப்படும்.. நீங்க காலை நேரத்தில் பி.வி. சிந்து மாதிரி முனரைக்கெல்லாம் எழுந்திரிக்காட்டியும் அட்லீஃஸ்ட் ஐந்தரைக்காவது தானா கண் விழிச்சு உடற்பயிற்சி செய்ய போலாம்ங்க அப்பானு நாம பயிற்சி செய்யலாம். அதன்பிறகு உனக்கு ரிப்ஃளக்ஸ் கூடும்.. இல்லைன்னா அக்கா மாதிரி ரிஸ்ட்ல( மணிக்கட்டு) ஃபராக்சர் ( எலும்பு முறிவு) ஆகிடும் என்று அப்பா சைன்ஸ் ( அறிவியல் ) கலந்து மகளின் உணர்வுகளோடு மோதுகின்றார். இது நிறைய வீடுகளில் நிகழ்கின்ற சமாச்சாரங்கள் தான்…\nரீஃப்ளக்ஸ் (உடன் பிரதி செயல் வினை ஆற்றல்- என்று ஒரு முழத்திற்கு தயக்கத்தோடு தமிழ்படுத்தி திருப்தி அடையலாம்.) ரிஃப்ளக்ஸ் என்பது நமது உடலின் மீது மூளை செலுத்தும் ஆதிக்கம். மூளை நினைக்கும் வேகத்தில் உடலால் செயல் புரிய வைக்கும் ஆற்றல். மகாகவி பாரதியோட நல்லதோர் வீணை செய்தே பாட்டில் விசையறு பந்தினை போல மனசு சொல்ற இடம் நோக்கி பாய்கின்ற உடல் வேண்டும் என்று சொல்லி இருப்பார் அது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.\nதொடர்ந்து பயிற்சி அத்தகைய ஆற்றலை உடல்மன காம்போ (இணை)க்கு கொடுக்கின்றது. கிரிக்கெட்டில் வீராட்கோலியை ப்ரண்ட் புட் ஆஃப் ட்ரைவ் ஆடுவது மாதிரி ஒரு கச்சிதமான ரிஃப்ளக்ஸ் வர.. பலமுறை ஆடிய நினைவாற்றல் அப்புறம் அதைத் தொடர்ந்து இது அப்படி பிரில்லியண்ட் என்று சொல்லப்படும் மெச்சப்படும் அதி அற்புதமான மெமரி லாஜிக் காம்பினேஷன் இதைத்தான் சமயோஜிதம் என்று பாராட்டுகின்றார்கள் பெரியோர்கள்.\nமிச்சிகன் பல்கலைக்கழகத்திலே ஆராய்சியாளர்கள் மெமரிஸ்டர் அப்படீன்னு ஒரு சிலிக்கான் அடிப்படை யிலான எலக்ட்ரானிக் பொருளை கண்டு பிடிச்சிருக்காங்க.. இதை கொள்கலன் கணினி செயல்பாட்டு முறையின் புத்தம் புது வெளியீடு என்று சொல்லலாம். இந்தக் கொள்கலன் கணினி முறைகள் தகவல்களை சேகரித்து நினைவகமாக மாறி கிட்டத்தட்ட மூளை நரம்புமாதிரி மாறி இயந்திரங்களை மனுசங்க மாதிரி யோசிக்க கத்துக் கொடுக்கின்றதாம்.\nவெற்றி உங்கள் கையில் – 53\nகவிநேசன் நெல்லை on May 2018\nவாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. “ஏழையாய் இருப்பதுதான் எனக்குப் பிரச்சினை. நோய் வந்தால்கூட தீர்க்க முடியவில்லை. நன்றாக சாப்பிட முடியவில்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. குழந்தைகள் கேட்பதை வாங்கித் தர முடியவில்லை. சொந்தமாக வீடு இல்லை. உறவுக்காரர்களின் உதவி இல்லை” என ஒரு பக்கம் வறுமையில் வாடுபவர்களும், ஏழ்மை நிலையில் இருப்பவர்களும் கவலைக்கொள்கிறார்கள்.\n“வாழ்க்கையில் பணக்காரனாகி விட்டால் எந்தக் கவலையும் இல்லை. பிரச்சினைகளும் இல்லை” என்று அவர்களில் சிலர் நினைக்கிறார்கள்.\nபணக்காரனாகி விட்டால், பிரச்சினைகளும், கவலைகளும் ஓடிவிடுமா\nஇந்தக் கேள்விக்கு விடை காண உலகிலுள்ள முக்கிய உளவியல் வல்லுநர்கள் முயன்றுள்ளார்கள். அவர்களின் ஆய்வுப்படி “ஏழைகளுக்கு மட்டுமல்ல, பணக்காரர்களும் கண்ணீர் வடிக்கிறார்கள். கவலைப்படுகிறார்கள். பிரச்சினைகளோடுதான் வாழ்கிறார்கள்” என்று கண்டறியப்பட்டுள்ளது.\n“அக்கறைக்கு இக்கறை பச்சை” என்பதைப்போல மனிதர்களில் சிலர் ஒருவர் வாழ்வை எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஏழையாய் இருப்பவர்களில் சிலர்,“பணக்காரர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்று நினைக்கிறார்கள். அதேவேளையில் பணக்காரர்களாக இருப்பவர்களில் பலர் “ஏழையாய் இருந்தால் இந்த தொந்தரவு இல்லை. பணத்தையும் பாதுகாக்க முடியவில்லை. உறவுகளையும் அரவணைத்துச் செல்ல முடியவில்லை. யாரையும் நம்ப முடியவில்லை” என்று வேதனைப்படுகிறார்கள்.\n” என்பது இப்போது விடை காண முடியாத கேள்வியாக மாறிவிட்டது. எந்த வாழ்க்கை வாழ்ந்தாலும், பிரச்சினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால், பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதைப்பற்றிதான் நமது சிந்தனை அமைய வேண்டும். மாறாக,“ஐயோ எனக்குப் பிரச்சினை இருக்கிறது” என்று அலறி துடிப்பவர்களின் வாழ்க்கை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது.\nவாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்\nமித்ரன் ஸ்ரீராம் on May 2018\n“பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு”\nஎன்பதே உங்கள் வாழ்வை உயர்த்தும் ஒரே வழி.\nவாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே \nகுருகுல காலம் தொட்டு ஆசிரியர்களும், ஞானிகளும் அறிவைப்பற்றி எத்தனையோ விஷயங்களை, விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார்கள். அவைகளில் பல அறிவுரைகளாகவும், போதனைகளாகவும் நம் கருத்துக்களத்தில் பொதிந்து கிடக்கின்றது. சில படிப்பினைகளாகவும் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅறிவாளியாக இருப்பது எப்படி என்று மட்டும் நாம் தெரிந்துகொள்ளாமல், சாமர்த்தியக்காரனாக இருப்பது எப்படி என்றும் நம் புத்திக்குப் புகட்டி இருக்கிறோம். அவற்றை சரியான விதத்தில் நமது வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயன்படுத்துகிறோமா என்ற கேள்விக்கு ஒவ்வொருவரின் மனசாட்சியே பதில் சொல்ல முடியும்.\nகண்ணன் அர்ச்சுனனுக்கு போர்களத்தில் சொன்ன விஷயங்கள் – படிப்பினையா\nசகுனி போர் நடக்கும் முன்பும், நடக்கும் போதும் சொன்ன விஷயங்கள் – படிப்பினையா\nமுன்னது, அறிவின் சரியான பாதை – பின்னது அறிவின் அழிவுப்பாதை\nஒருவரது புத்திக்கூர்மை – மற்றவரை ஏமாற்ற உதவும் ஒரு வழியாக இருந்தால் – அந்தப்பாதை அழிவுப்பாதை தான்.\nஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட மனித இனத்தின் இன்றைய பிரஜைகளே நீங்களும் நானும். வரலாறு படைக்கும் பொறுப்பும் நமக்கும் இருக்கின்றது.\nஆதிவாசியாக, காட்டில் விலங்கோடு விலங்காக வாழ துவங்கிய மனித இனம், அதே விலங்கிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள போராடியதும், விலங்கையே தனது உணவாக எண்ணினால் – ஆச்சரியம்தான் நமக்கு விடையாக.\n ஆனந்தமான வாழ்வுக்கு “அறிவு” அவசியம் என்று அறிக\nஇன்றைய சூழலில் அறிவு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்\n“அறிவு” தனிமனித வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதாய்\n“அறிவு” சிக்கல்களை தீர்க்கும் சிறப்பான யோசனையாய்\n“அறிவு” அவலங்களைப் போக்கும் அற்புத ஆசானாய்\nமெர்வின் on May 2018\nமுதல் உலகப்போரிலே தீவிரமாக ஈடுபட்ட இத்தாலிக்கு போரின் விளைவு கொடுமையாக இருந்தது. இந்தப் போரிலே நேச நாடுகள் வெற்றி பெற்றும் கூட்டாளியான இத்தாலிக்கு சரியான பங்கு தரவில்லை.\nதன்மானம் உணர்வு கொண்ட இத்தாலி மக்களுக்கு இந்த அவமானம் பெரிய வேதனையைத் தந்தது. ஒரு பக்கம் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியால் வேலை நிறுத்தம் செய்தனர்.\nமறுபக்கம் போரில் ஈடுபட்டு வீடு திரும்பிய வீரர்கள் சலுகை கேட்டு கிளர்ச்சி செய்தனர். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை கைப்பற்றிக் கொண்டு புரட்சி செய்தார்கள். தொழிற்சங்கங்கள் தொழிற்சாலைகளை நடத்த முடியாமல் திணறினார்கள்.\nஇந்தச் சமயத்தில்தான் முசோலினி கருப்புச் சட்டை தொண்டர்களை உருவாக்கி வைத்திருந்தார். இந்த இயக்கத்திற்கு முதலாளிகள் ஆதரவு தந்தார்கள்.\nமுசோலினி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய இயக்கத்தை தீவிரப் படுத்தினார். ராணுவ வீரர்கள் முசோலினிக்கு ஆதரவு தந்தனர்.\nசமதர்மவாதிகளை இரும்புக்கரம் மூலம் நசுக்கினார் முசோலினி. அதன்பயன் பாஸிசவாதிகள் இத்தாலியில் ஆட்சியை கைப்பற்றினார்கள். முசோலினி ஏழைகளை பணக்காரர்களுக்கு எதிராகவும் மோதவிட்டு தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார்.\nமுயற்சியே முன்னேற்றம் – 4\nபன்னீர் செல்வம் Jc.S.M on May 2018\nஅன்றாட வாழ்வில் முயற்சி என்பதைத் தெரிந்து கொள்ள இரு உயிரினங்களைக் கூறலாம். ஒன்று எறும்பு மற்றது சிலந்தி.\nஎறும்பு சிறிய உயிரினம். அதனுடைய சுறுசுறுப்பும், தொடர் உழைப்பும் நம்மிடம் வந்து விட்டால், நாம் நினைப்பதைச் சாதிக்கும் வல்லமையுடன் வாழ முடியும்.\nசாதாரணமாக ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதையில் தடையை உண்டாக்கினால், அது சோர்ந்துவிடாமல், வேறு பாதையைத் தேடும்.\nஎல்லாப் பாதைகளையும் மூடி விட்டாலும் முயற்சி செய்து கொண்டே இருக்கும். முதலில் தரையில் அங்குமிங்கும் செல்லும், பிறகு மேலே ஏறி கிழே இறங்கும்.\nமனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றிய உயிரினம். இவை தோன்றி பல மில்லியன் வருடங்களாயின. நான்கு அறிவு உள்ளது. தொடு உணர்வு, சுவை உணர்வு, வாசனை உணர்வு மற்றும் பார்வை உணர்வு உள்ளது. காதுகள் இல்லை; ஆனால் அசைவு மற்றும் அதிர்வுகள் மூலம் தன் கால்களால் தரையைத் தொடும் போது கேட்கிறது.\nஒரு மணி நேரத்தில் சுமார் 300 மீட்டர் ஓடக்கூடியது. அதன் நீளத்தை விட பல மடங்கு தூரம் ஒரு நிமிடத்தில் ஓடும்\nகுளிர் பிரதேசமான அண்டார்டிக்காவில் இல்லை.\nராணி எறும்பு சுமார் 30 வருடங்கள் உயிர் வாழும்.\nஆண் எறும்புகள் சில வாரங்களே வாழும்.\nவேலைக்கார எறும்புகள் சுமார் 3 வருடங்கள் வாழும்.\nகுளிர் காலங்களில் உறக்க நிலையில் கழிக்கும்.\nதம் வசிப்பிடத்திலிருந்து சுமார் 700 அடி தூரம் வரை பயணிக்கும்.\nதன் எடையை விட 10 முதல் 50 மடங்கு எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும்.\nதாக்குதலுக்குள்ளாகும் போது இணைந்து செயல்பட்டு தாக்குதலை முறியடிக்க முயற்சிக்கும்.\nசுறுசுறுப்பு: எறும்பைப் போல எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தொடர் முயற்சியால் சுறுசுறுப்பைப் பெறுகிறது.\nசிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5\nகிரிஜா இராசாராம் on May 2018\nஉலகில் தோன்றும் உயிருடைய தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள், உயிரற்ற ஜடப் பொருட்கள் அனைத்தும் தனக்கென்று ஒரு மதிப்பைப் பெற்றுள்ளது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று வாசங்கள் கருத்தை உறுதிப் படுத்துகின்றன. மதிப்பு என்ற சிறுகதையில் மனிதனின் மதிப்பு பற்றி ஒரு உவமையின் மூலம் எடுத்துக்காட்டுகின்றது.\nஒரு புகழ்பெற்ற பேச்சாளர், ஒரு கருத்தரங்கில் பேசும் பொழுது, அங்கிருந்த 200 பார்வையாளர்களிடம் ஒரு புதிய நூறு ரூபாயைக் காட்டி, இந்த நூறு ரூபாய் உங்களுக்குப் பிடித்துள்ளதா பிடித்தவர்கள் தங்களின் கையை உயர்த்துங்கள் என்றார். பார்வையாளர்கள் 200 பேரும் கையை உயர்த்தினர் பின், தன் கையில் உள்ள ரூபாய் நோட்டை கையால் கசக்கினார். அந்த நோட்டை உங்களில் ஒருவருக்கு தரவிரும்புகிறேன். இதைப் பெற்றுக் கொள்ள விரும்புவர் கையை உயர்த்துங்கள் என்றார். அதற்கு அவையில் உள்ள 200 பேரும் உயர்த்தினார்கள். அடுத்து அதே ரூபாய் நோட்டை தனது நெருப்பு காலால் போட்டு மிதித்தார். அது மேலும் கசங்கி காணப்பட்டது. அதைப் பார்வையாளர்களிடம் காண்பித்து தற்போது இது யாருக்கு தேவை என்றார் அதிசிய தக்க வகையில் மீண்டும் அனைவரும் கையை உயர்த்தினார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் ரூபாய் நோட்டு எவ்வளவு தான் கசங்கி காணப்பட்டாலும் அதன் மதிப்பு குறையப் போவது இல்லை. பேச்சாளர், பின் தன் கருத்தைப் பின் வருமாறு கூறினார்.\nஎப்படி ரூபாய் நோட்டின் மதிப்பு குறையவில்லையோ அதே போல் தான் மனிதனும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மதிப்பு உடையவன். வாழ்க்கையில் பிரச்சனைகள் மனிதனை கசக்கிப்பிழிகின்றன. சில தவறான முடிவுகளாலும், சூழ்நிலைகளைச் சரியாகக் கையாளத் தெரியாமல் சில தவறுகளைச் செய்வதாலும் நம்மை நாமே ஒன்றிற்கும் பயன் படாதவர்கள் என்று நம்மை நாமே தாழ்த்தி எடைபோடுவது பெரிய தவறு. இந்த ரூபாய் நோட்டு எப்படி கசங்கினாலும் அதன் மதிப்பு குறையவில்லையோ அதுபோல் உங்கள் வாழ்வில் எது நடந்தாலும், எது நடக்கவிருந்தாலும் உங்கள் மதிப்பை கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் மதிப்பிற்குரியவர் என்று கூறி பார்வையாளர் களிடம் தன்னம்பிக்கை என்ற விதையை விதைத்தார்.\nவெற்றி பெற்றவர்களெல்லாம் என்ன குணங்களால் சாதனை படைத்தவர்கள் என்று தெரிந்து கொண்டால் நாமும் அதே குணங்களை பின்பற்றலாம். அதே வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.\nஅதேபோல தான் ஒரு நாட்டின் விசயமும். ஜப்பானும், அமெரிக்காவும், ஸ்வீடனும் எப்படி முன்னேறி இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு நாமும் அந்த சில அணுகுமுறைகளை, திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.\nஏன் கூடாது, முதலில் நமக்குப் படிக்கும் ஆர்வம், தெரிந்து கொள்ளும் துடிப்பு, அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்று புரிந்து கொள்ளும் கூர்மை வேண்டும்.\nஅடுத்ததாக அந்த குணங்களை நாம் நம் வாழ்வில் நமக்கென்ன சூழ்நிலையில் எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.\nவெற்றி தரும் குணங்களைப் பற்றிய சிந்தனை சாதனை புரிந்தவர்களின் தன்மைகளைப் பற்றிய நினைவுகள் சதா நம் மனதில் இருக்க வேண்டும். இதைத்தான் விழிப்புணர்வு என்று சொல்வார்கள்.\nவிழிப்புணர்வுக்கு முக்கியமான ஐந்து குணங்களை, மனோபாவங்களை நாம் குறிப்பிட முடியும். இவை தான் அவர்களது சாதனைகளுக்கு அடிக்கல்லாக இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedmandir.com/content/questions-answers-december-23-2017", "date_download": "2018-05-27T03:47:30Z", "digest": "sha1:WVLZGUI3RIDBEZWBQPV44PWOKKRZK5AM", "length": 7915, "nlines": 74, "source_domain": "vedmandir.com", "title": "Questions & Answers - December 23, 2017 | www.vedmandir.com", "raw_content": "\nஇந்த புத்தகத்தில் தினசரி வேதவழி செய்ய வேண்டிய ஹோமவிதி, எளிய தமிழில் பொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் மொழி பெயர்த்துள்ளார். 53 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 35/- மட்டுமே. வேத மந்திரங்களின் அர்த்தங்களை விளக்கும் இந்த அரிய புத்தகத்தைப் பெற்று, தினமும் வேதவழி அனுஷ்டானங்களை செய்து, வாழ்வில் அளவில்லாத ஆனந்தத்தை அடையவும்.\n2. வேதம் - அம்ருத சஞ்ஜீவனி\nVEDAS - A DIVINE LIGHT, PART 2 என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பான இந்த புத்தகம் உங்கள் வாழ்வை நல்வழியில் மாற்றி அமைக்க உதவும் ஒரு அரிய புத்தகமாகும். இப்புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 229 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 130/- மட்டுமே. இணைய தளத்தின் மூலம் இப்புத்தகத்தை ஆர்டர் செய்பவர்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும்.\nசூரைக் காற்றில் பறப்பதல்ல பெண்ணின் கற்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_542.html", "date_download": "2018-05-27T03:19:48Z", "digest": "sha1:6333HXCRGPMB5ABCVMY3F4W7HX6HOWBA", "length": 10261, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "இனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு சந்திரகுமாரும் அஞ்சலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு சந்திரகுமாரும் அஞ்சலி\nஇனஅழிப்பிற்குள்ளான மக்களிற்கு சந்திரகுமாரும் அஞ்சலி\nடாம்போ May 17, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்காலில் மக்களே கொல்லப்படவில்லையென மஹிந்த அரசிற்கு குடைபிடித்த முன்னாள் நாடாளுமன்ற சந்திரகுமார் உயிரிழந்த மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வொன்றை கிளிநொச்சியில் நடத்தியுள்ளார்.\nஇறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.\nநேற்று புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து ஆத்மசாந்தி பிரார்த்தனையை மேற்கொண்டனர்.\nஒருவொரு வருடமும் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது வழக்கமாகுமென தெரிவிக்கப்பட்டுமுள்ளது.\nமுன்னதாக முள்ளிவாய்க்காலில் எவரும் கொல்லப்படவில்லையென கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பேரணிகளில் முன்னின்று சந்திரகுமார் குரல் கொடுத்து வந்திருந்தார்.\nஆனால் தற்போது அவரும் நினைவேந்தல் நடத்தினால் தான் மக்கள் அங்கீகாரத்தை பெறலாமென்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nபனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nமன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்\nஅனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வ...\n பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்\nதூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலை சய்த தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனபப...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanniexpressnews.com/2018/04/article_27.html", "date_download": "2018-05-27T03:17:03Z", "digest": "sha1:UBSNCM3ZWV5FFEXCAHRY66TQJIP2WTOC", "length": 42792, "nlines": 122, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "திருமலை ஆசிரியைகளின் இடமாற்றம் உடனடியாக ரத்துச்செய்யப்பட வேண்டும் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிருமலை ஆசிரியைகளின் இடமாற்றம் உடனடியாக ரத்துச்செய்யப்பட வேண்டும்\n-வை எல் எஸ் ஹமீட்\nசண்முகா தேசியப்பாடசாலையின் ஒருநாள் ஆர்ப்பாட்டம் குறித்த ஆசிரியர்களுக்கு உடன் இடமாற்றத்தை வழங்க வைத்திருக்கிறது. அரச யந்திரம் அவ்வளவு வேகமாக செயற்பட்டிருக்கின்றது. குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை என்பதால் இடமாற்ற அதிகாரம் மத்திய கல்வி அமைச்சிற்குரியது. அவசரத்தேவைகளுக்காக மாகாண கல்விப் பணிப்பாளர் இடமாற்றத்தை வழங்க முடியும். ஆனால் அது மத்திய கல்வி அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nகிடைக்கின்ற தகவல்களின்படி மாகாண கல்விப் பணிப்பாளரின் உத்தரவுப்படியே தற்போது இடமாற்றம் வழங்கப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சு அதனை உறுதிப்படுத்த வேண்டும். மாகாண கல்விப்பணிப்பாளர் யாருடைய உத்தரவின்பேரில் அல்லது அழுத்தத்தின் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றார்; என்பது தெரியவில்லை. ஏதோவொரு பலமான சக்தி இதன்பின்னால் செயற்பட்டிருக்கலாம்; என்பது நிராகரிக்கக் கூடியதல்ல. அவ்வாறு ஒரு சக்தி செயற்பட்டிருந்தால் அதனை அடையாளம்காண முடியுமென்றால் இதன் பின்னால் உள்ள திட்டத்தின் ஆழ, அகலத்தை அளவிடுவது சற்று இலகுவாகலாம்.\nஇந்த இடமாற்றம் எந்த பாடசாலைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது; என்ற தகவல் இதனை எழுதும்வரை அறிய முடியவில்லை. அது ஒரு முஸ்லிம் பாடசாலையாயின் குறித்த ஆசிரியைகள் ஆறுதலடைவார்கள். ஆனால் இங்குள்ள பிரச்சினை முஸ்லிம் பாடசாலையா இந்துப்பாடசாலையா என்பதல்ல. என்ன காரணத்திற்காக இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது; என்பதுதான் முக்கியமானது.\nஇலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக வட-கிழக்கு முஸ்லிம்களின் தாய்வழி தமிழ் பரம்பரையாகும். எனவே தமிழ் கலாச்சாரத்தில் இஸ்லாத்திற்கு முரண்படாத விசயங்களை பின்பற்றுவதை நமது தந்தைவழி முன்னோர் தடுக்கவில்லை. இதனால் பல தமிழ் கலாச்சார பாரம்பரியங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்தன. பல இன்று மருவி விட்டபோதும் சில இன்னும் இருக்கின்றன.\nஉதாரணமாக, மோதிரம் போடுதல், கூறை கொண்டுசெல்லல், சீதனம், தாலி, வட்டா மாற்றுதல், எண்ணை மாற்றுதல், தென்னம்பிள்ளை பாளை போட்டால் விழா எடுத்தல்; வசதி படைத்த குடும்பத்தினர் மாப்பிள்ளை பெண் வீட்டை நெருங்கும்போது வீதியில் வெள்ளை விரித்து மாப்பிள்ளையை அழைத்து வரல் இவ்வாறு அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவற்றில் பல வழக்கொழிந்து விட்டன. இந்த வரிசையில்தான் சாரி அணிதல் கலாச்சாரமும் இருந்து வந்தது. இன்னும் இருக்கின்றது.\nஅன்றைய காலம், நவீன நாகரீகங்கள் கிராமங்களை எட்டிப்பார்க்காத காலம். கல்வி, குறிப்பாக பெண் கல்வி அதன் அடிமட்ட நிலையில் இருந்த காலம். பெண்களின் நடமாட்டம் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்த காலம். மாமியார் வீட்டுக்கு செல்வதாக இருந்தாலும் பகல் தூங்கச்சென்று இரவு உலாவரும் வேளையில் நிலா வொளியில் கொண்டவன் ஐம்பது அடி முன்னே நடக்க நாணத்தின் நயனங்கள் தன்னை சிறைகொள்ள, தன்னுடன் வயதான பாட்டியை அல்லது உறவுக்காற குழந்தை ஒன்றை அழைத்துக்கொண்டு தயங்கித்தித் தயங்கி பின்னே மனைவி நடந்தசென்ற காலமது.\nஅந்தக்காலத்தில் சாரி ஒரு பெண்ணுக்கு போதுமானதாக இருந்தது. இன்று காலம் மாறிவிட்டது. கணவனின் அருகே வீதியில் நடந்துசெல்ல தயங்கியவள் இன்று எத்தனையோ அந்நிய ஆடவர்களுடன் இரண்டறக்கலக்க வேண்டியநிலை. அது கல்விக்கூடமாக இருக்கலாம், வேலைசெய்யும் அலுவலகமாக இருக்கலாம். பயணம் செய்யும் பேரூந்தாக இருக்கலாம்.\nஇது அந்தப் பெண்ணின் குற்றமல்ல. நாம் இன்று வாழும் உலகமது. காலம் மாறலாம். காலத்தின் கோலம் மாறலாம். கலிமாச் சொன்ன பெண்ணின் கண்ணியம் மாறாது. அன்று வீடே உலகமென வாழ்ந்தவளுக்கு சாரி போதுமானதாக இருந்தது. இன்று உலகமே வீடாக மாறிய உலகில் தன் கண்ணிம் காக்க அதிகௌரவமான ஆடை தேவைப்படுகிறது.\nஅந்நிய ஆடவன்முன் தன்னை முழுமையாக மறை என்கிறது; அவள் கொண்ட மார்க்கம். அதற்காக அவள் தேர்ந்தெடுத்த ஆடைதான் “ அபாயா”. அது அரேபிய உடையாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். அவள் அபாயா உடுப்பது அராபியப் பெண் உடுத்தாள் என்பதற்காக அல்ல. அவள் உடுத்தும் அபாயாவை அராபியப் பெண்ணும் உடுக்கிறாள்; என்பதற்காக அவள் என்ன செய்ய முடியும்.\nஇன்று மேற்கத்தைய நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்களும் அபாயாதான் அதிகமாக உடுக்கிறார்கள். அராபிய உடை என்பதற்காக அல்ல; அதி பாதுகாப்பான உடை என்பதற்காக.\nஇந்த உடை உங்கள் கண்களை உறுத்துவதேன் நாகரீகம் என்ற போர்வையில் ஆடைகுறைப்புச் செய்து அலங்கோலமாய் அரிவையர் திரியும் உலகில் நாகரீகத்தின் வளர்ச்சி என் நாயனின் கட்டளையை தீண்ட முடியாது என்று, முழுமையாக தன்னை மறைத்து முழுமதியாய் வரும் என் சகோதரியின் கோலம் உன் கண்களை உறுத்துவதேன்\nகண்ணியம்காக்க உடுத்த ஆடையை குற்றம் என்று இடமாற்றம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று இது அனுமதிக்கப்பட்டால் நாளை ஒவ்வொரு பாடசாலையாக இது தொடரும். இன்று ஆசிரியைகளில் கைவைக்க அனுமதித்தால் நாளை அது மாணவிகளைத் தொடரும். அந்நிய மதப்பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவரக் கூடாதென்பர். அதன்பின் நீளக்காற்சட்டை கூடாதென்பர்.\nஒன்றில் அரசு ஒரு கொள்கைத் தீர்மானமெடுக்கட்டும், “ முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகளும் தமிழ் பாடசாலைகளில் தமிழ் ஆசிரிய, ஆசிரியைகளும் மாத்திரமே கற்பிக்க வேண்டுமென்று. இது ஏற்படுத்தப்போகின்ற நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் அரசு தீர்வைக் கூறட்டும். அல்லது அவரவர் கலாச்சார ஆடைகள் அணிவதில் அடுத்தவர் மூக்கை நுழைக்கக்கூடாது;என்று சுற்றுநிருபம் அனுப்பட்டும்.\nஆடை சுதந்திரம் தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எடுக்க வேண்டும்.\nஇது ஒரு பாடாசாலை நிகழ்வு என எடுக்க வேண்டாம். இதை அனுமதித்தால் இது ஒரு தொடர் சங்கிலியாக மாறும். உரிமைக்காக போராடுவதாக தேர்தல் மேடைகளில் கூறினால் போதாது. எம் மார்க்கம் கூறிய ஒழுக்கமான ஆடை என்பது எமது பிரதான உரிமை. அதை விட்டுக்கொடுக்க முடியாது.\nதிருமலை ஆசிரியைகளின் இடமாற்றம் உடனடியாக ரத்துச்செய்யப்பட வேண்டும் Reviewed by Vanni Express News on 4/27/2018 05:40:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதடை நீக்கம் இல்லை - 7 பெண்கள் சவூதியில் கைது\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரி...\nவிமானப் பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் கைது\nதுபாய் நாட்டில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுபோதையில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி...\nஇலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்\nஇலங்கை அணியின் வீரர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது. இதன்படி வீரர்களில் வேதன உயர்வு 30...\nவீரர்களின் கைகளில் கறுப்புப்பட்டி - காரணம் என்ன \nஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியி...\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 வது தொடர் கடந்த மாதம் 7 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சு...\nமுந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா\n-எஸ். ஹமீத் முந்தாநாள் (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்...\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/05015523/Hrithik-Roshan-joins-exwife.vpf", "date_download": "2018-05-27T03:02:51Z", "digest": "sha1:KOIOSSMEXJNLACIJGZ6W2R2J7FBWQH4K", "length": 10295, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hrithik Roshan joins ex-wife? || முன்னாள் மனைவியுடன் சேரும் ஹிருத்திக் ரோஷன்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மனைவியுடன் சேரும் ஹிருத்திக் ரோஷன்\nமுன்னாள் மனைவியுடன் சேரும் ஹிருத்திக் ரோஷன்\nவிவாகரத்து செய்த முன்னாள் மனைவியுடன் ஹிருத்திக் ரோஷன் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், சூசனும் 2000-ல் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக நகர்ந்த ஹிருத்திக்கின் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி சூசன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nஅதன் பிறகு விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். ஹிருத்திக் ரோஷன் சமரசம் செய்தும் பலன் இல்லை. இதனால் இருவருக்கும் கோர்ட்டு 2014-ல் விவாகரத்து வழங்கியது. அப்போது குழந்தைகளை சூசன் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.\nபின்னர் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையில் சிக்கினார் ஹிருத்திக். தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கங்கனா ரணாவத் சாடினார். அதனை ஹிருத்திக் ரோஷன் மறுத்தார். ஒருவருக்கொருவர் வக்கீல் நோட்டீசும் அனுப்பினார்கள். தற்போது அந்த பரபரப்பு அடங்கியுள்ளது. இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனும் சூசனும் மீண்டும் நெருக்கமாகி உள்ளனர்.\nஇருவரும் குழந்தைகளுடன் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. ‘அவெஞ்சர்’ ஹாலிவுட் படம் பார்க்க சூசனையும், குழந்தைகளையும் ஹிருத்திக் ரோஷன் அழைத்துச் சென்றார். சமீபத்தில் சூசன் வீட்டில் நடந்த தனது மகன் ரிதான் பிறந்த நாள் விருந்துக்கும் சென்று இருந்தார். ஹிருத்திக் ரோஷனும், சூசனும் பழைய கோபத்தை மறந்து மீண்டும் காதல் வயப்பட்டு இருப்பதாகவும், சேர்ந்து வாழ்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. பட அதிபர்கள் சங்கம் இறுதி கெடு வடிவேல் நடிக்க தடை\n2. கதறி அழுத சன்னிலியோன்\n3. பிரபல நடிகர் மீது 8 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு மன்னிப்பு கோரினார்\n4. நடிகர் சவுந்தரராஜா திருமணம்\n5. பணம் எடுத்து விட்டு திரும்பி வராத மகனுக்காக ஒரு வருடம் காத்திருந்து உயிரிழந்த இந்தி நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11858", "date_download": "2018-05-27T03:05:47Z", "digest": "sha1:WQC3OQQVUFBFJQ7DG4AIDUVPCAFV7PAX", "length": 13447, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "Facebook | இந்தியாவில் ஃபேஸ்புக் வருவாய் 27% அதிகரிப்பு!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇந்தியாவில் ஃபேஸ்புக் வருவாய் 27% அதிகரிப்பு\nஇந்தியாவில் ஃபேஸ்புக் பயனாளர்கள் மூலம் அந்நிறுவனத்திற்கு வருவாய் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்திய ஃபேஸ்புக் வருவாய் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.\n2014 ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில் இந்தியாவில் ஃபேஸ்புக் வருவாய் 97.6 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 2015 ஆம் ஆண்டு நிதி ஆண்டு முடிவில் அதன் வருவாய் 27 சதவிகிதம் உயர்ந்து 123.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2012-13ல் இதன் வருவாய் 75.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா தான் மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாயின்படி, இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக 9 ரூபாய் என்ற மதிப்பில் பேஸ்புக் நிருவனம் வருவாயை ஈட்டி வருகிறது. அமெரிக்காவில் ஒரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் மூலமாக 630 ரூபாயை ஃபேஸ்புக் வருவாயாக ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/11/8.html", "date_download": "2018-05-27T03:38:05Z", "digest": "sha1:YHFMOSFJS7ESSSIKCA2KWUSSPB75OLV5", "length": 12392, "nlines": 124, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரையில் பூட்டியிருந்த வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு!மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரையில் பூட்டியிருந்த வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டுமர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது\nகீழக்கரை அஹமது தெருவை ஹசனா லெப்பை மனைவி ரஹ்மான் பீவி(49) இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டிலிருந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள 8 1/2 பவுன் மதிப்புள்ள நகையை திருடி சென்றுள்ளதாக காவல் துறையில் புகார் செய்தார்.\nஇதன் பேரில் எஸ்.ஐ கோட்டைசாமி தலைமியிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறனர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nஇஸ்லாமியா பள்ளியில் சமையல் கலை நிகழ்ச்சி\nபேருந்து நிலைய வணிக வளாகம் ஒரு பகுதி இடிந்து சேதம்...\nபல ஆண்டுகளாக பலனில்லாத மின்சார டிரான்ஸ்பார்மர்\nகீழக்கரையில் பூட்டியிருந்த வீடு புகுந்து 8 பவுன் ந...\nகீழக்கரையில் பிடிபட்ட இருதலைமணியன் பாம்பு\nகீழக்கரை அருகே கிணறு தோண்டும் போது விபத்து\nவபாத் அறிவிப்பு (காலமானார் )\nதேங்காய் நார் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்...\nஇஸ்லாமியா துவக்கப்பள்ளி கட்டிட பணிக்கு ஜவாஹிருல்லா...\nராமநாதபுரம் - கீழக்கரை நெடுஞ்சாலையில் மணல் குவியலா...\nதுபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்திற...\n18வது வார்டில் தொடரும் அவலம்\nமதுரை - துபாய் முதல் விமான சேவை துவங்கியது \nஉலக இஸ்லாமியர்களில் செல்வாக்குமிக்க 500பேரில் ஒரு...\nபாலை தேசத்து கீழைவாசிகள் ...பகுதி 4 \n வேதனை தவிர்க்க தேவை வேக ம...\nகீழக்கரையில் பட்டமரம் அகற்ற நடவடிக்கை\nதனி தாலுகா உள்ளிட்ட கிடப்பில் உள்ள கீழக்கரை நகருக...\nதெற்கு தெரு ஜமாத்தை ச...\nபள்ளி அருகில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை\nகீழக்கரையில் புதிய கடை திறப்பு நிகழ்ச்சி\nகீழக்கரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் பிணம...\nகீழக்கரையில் எரியாத தெரு மின்விளக்குகளை சீர் செய்ய...\nநவ23ல் மதுரை - துபாய் நேரடி விமானம்\nபள்ளிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டி \nகீழ‌க்க‌ரையில் நாளை( 13 புதன் நவ2013) மின் த‌டை\nகீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியில் பட்டம் விடும்...\nகலங்க வைக்கும் கழிவுநீர் கால்வாய்\nபோலி ஐடிக்களில் அவதூறு மற்றும் மிரட்டல் குறித்து ந...\nகீழக்கரையில் ரத்த வகை கண்டறியும் முகாம்\nகாலியாக உள்ள 15வது வார்டு கவுன்சிலர் பதவி\nதாசிம்பீவி கல்லூரி மாணவியர் பதநீரிலிருந்து தயாரித்...\nஏர்வாடியில் மன நல சிகிச்சை மையம் \nவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்க்கு இழப்பீடு தராத...\nசென்னை விமான நிலையத்தில் ஹஜ் பயணிகளுக்கு சிறப்பான ...\nகீழக்கரை பகுதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளி...\nகீழக்கரை பகுதியில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை அமை...\nகீழக்கரையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்...\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டி \nபாலை தேசத்து கீழைவாசிகள் ...பகுதி 3 \nகீழக்கரையில் இன்று (03/11/2013) பலத்த மழை தொடங்கிய...\nகீழக்கரை அருகே கார்-லாரி மோதல்\nகீழக்கரை மஹ்தூமியா பள்ளி மாணவி சாதனை \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கீழக்கரையில் புகை...\nகீழக்கரையில் வார்டுவாரியாக மின் கம்பங்களில் அடையாள...\n ந‌கராட்சி த‌லைவ‌ர் உள்ளிட்டோர் ...\nமுஸ்லிம் பொதுநல சங்கம் - சமுதாய நல அறக்கட்டளை சார்...\nசேதமடைந்த நிலையில் கீழக்கரை தோரண வாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudhiyabhoomi.blogspot.com/2009/01/blog-post_4994.html", "date_download": "2018-05-27T03:33:35Z", "digest": "sha1:HESO3IEZ25OW3SDMYUNJ7GEWFGBUA4IQ", "length": 4619, "nlines": 88, "source_domain": "pudhiyabhoomi.blogspot.com", "title": "புதியதோர் உலகம் செய்வோம்...: இன்னும் செதுக்கப்படாமலொரு சிற்பம் - சூத்ரதாரி.", "raw_content": "\nஇன்னும் செதுக்கப்படாமலொரு சிற்பம் - சூத்ரதாரி.\nஇன்னும் அரசமரத்தடி கிடைக்காத ஏக்கத்தில்\nஇன்னொரு விநாயகன் முகம் திருப்பிக்கொள்ள\nமுதுகில் சாய்ந்திருந்தனர் ஒன்பது கன்னிமார்கள்.\nகொட்டும் மழைக்கு ஒதுங்கி ஒடுங்கின\nசுவைக்க முடியாக் கரும்புடன் காமாட்சியம்மன்.\nதுளையற்ற குழலை இசைத்தபடி ஆயர்பாடிக்காரன்.\nஇன்னுமொரு தேவி காலடியில் மூச்சின்றி கிடக்க\nஉளியொன்று கண் திறந்து கொண்டிருந்தது.\nஉடைந்து தெறித்த நெருப்புத் துணுக்குகள்\nமோதி விழுந்தன காத்திருக்கும் கண்களில்\nஎந்தக் கல்லில் ஒளிந்து கிடக்கிறதோ\nஅவன் செதுக்க நினைத்த சிற்பம்...\"\nகல் திறந்த கணம் - க.மோகனரங்கன்\nஇன்னும் செதுக்கப்படாமலொரு சிற்பம் - சூத்ரதாரி.\nஒரு மனிதன் முயலாக - யூமா.வாசுகி.\nபட்சிகளுக்கான பாடம் - வி.அமலன் ஸ்டேன்லி\nவிலகின தடத்தில் - பூமா.ஈஸ்வரமூர்த்தி.\nஇந்தச் சிங்கம் - எம்.யுவன்\nஏதோ ஒரு பறவை - உமா மகேஸ்வரி.\nகோடைகாலக் குறிப்புகள் - சுகுமாரன்.\nவண்ணத்துப் பூச்சி - கள்ளழகர்\nமுன்பெல்லாம் - பூமா ஈஷ்வரமுர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/28_17.html", "date_download": "2018-05-27T03:28:59Z", "digest": "sha1:6ZBGKED5E6LPZNG5VCMSH7GK7YTHBGWB", "length": 10117, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட் - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்\nதமிழ்நாடன் April 17, 2018 புலம்பெயர் வாழ்வு\n14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா\n120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பளிப்பு நடைபெறுவதுடன் 20 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்வாரிதி என்ற சிறப்புப் பட்டமும் 25 ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்மாணி என்ற சிறப்புப் பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து தமிழாலயத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு விசேடமான பட்டமளிப்பு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2017 இல் 12 ஆம் ஆண்டில் தேர்வெழுதிச் சித்தியடைந்த 217 மாணவர்களைத் தாயகத்திலிருந்து விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாக வருகை தந்திருந்த பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளித்தனர்.\nபனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nமன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்\nஅனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வ...\n பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்\nதூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலை சய்த தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனபப...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2017/05/blog-post_13.html", "date_download": "2018-05-27T03:30:17Z", "digest": "sha1:FXCVDGIFLQU77ABI3MQX6C2SDAVGGDS7", "length": 18302, "nlines": 314, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: கேட்டேன்,கேட்டேன்...", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nசத்தம் இல்லாத school கேட்டேன்\nயுத்தம் இல்லாத classroom கேட்டேன்\nமொத்தத்தில் என்றென்றும் கல்வி கேட்டேன்\nஉயிரைக் எடுக்காத time table கேட்டேன்\nஒற்றைப் பாடமாவது off ஐக் கேட்டேன்\nஇருமுகம் இல்லாத staff ஐக் கேட்டேன்\nதிறமைக்குச் சரியான பொறுப்பைக் கேட்டேன்.\nபூச்சிகள் இல்லாத canteen கேட்டேன்\nஇளமை கெடாத party கேட்டேன்\nபறந்து பறந்து off ஐ கேட்டேன்\nClean பண்ணிய toilet கேட்டேன்\nபஸ்ஸின் ticket ஐ குறைக்கக் கேட்டேன்\nதானே படிக்கும் மாணவரை கேட்டேன்\nபயிற்சிகள் செய்யும் பிள்ளைகள் கேட்டேன்.\nDaily எழுதும் marker கேட்டேன்\nநீலம் கறுப்பில் ஒவ்வொன்று கேட்டேன்\nக்ளாஸ் ரூம் போக lift ஐ கேட்டேன்\nகிடந்து உருள staff room கேட்டேன்.\nருசித்துக் குடிக்க கூர்லிங்ஸ் கேட்டேன்.\nஎட்டிப் பறிக்க பழங்கள் கேட்டேன்\nகளைப்பு மறக்க சிறு தூக்கம் கேட்டேன்\nகஷ்டம் தெரியா உழைப்பைக் கேட்டேன்.\nO/L க்கெல்லாம் ஒரு எக்ஸ்ஸாம் கேட்டேன்\nA-L க்கெல்லாம் சுயபடிப்பு கேட்டேன்\nParents க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்\nStudents க்கெல்லாம் ஒழுக்கம் கேட்டேன்.\nநாடு முழுதும் சம கல்வி கேட்டேன்\nகல்வி கெடாத sports ஐ கேட்டேன்\nவகுப்பு முழுக்க அமைதி கேட்டேன்\nஆசிரியர் வரும்போதே எழும்ப கேட்டேன்.\nவிஞ்ஞானம் எல்லாம் உயரக் கேட்டேன்\nகணக்கை தீயாய் படிக்கக் கேட்டேன்\nவணிகம் கடந்த ஞானம் கேட்டேன்\nதமிழை ஒழுங்காய் எழுத கேட்டேன்.\nPoya கடந்தும் விடுமுறை கேட்டேன்\nCasual medical இன்னும் கேட்டேன்\nSteps ஏறாத வகுப்புகள் கேட்டேன்\nகால் வலிக்கு மருந்து கேட்டேன்.\nபண்கொண்ட கலைகள் பயிலக் கேட்டேன்\nஅதற்கு இருக்கும் வசதியை கேட்டேன்\nபயன் கெடாத வளங்களைக் கேட்டேன்\nசுருங்க விடாத பெறுபேறு கேட்டேன்.\nVice principal ஆ ஒருநாள் இருக்கக் கேட்டேன்\nசுற்றும் கதிரையில் சுழலக் கேட்டேன்\nBathroom போக மறைவிடம் கேட்டேன்\nகேட்டதும் லீவை தரும்படி கேட்டேன்\nவிழுந்தால் ஊரில் விழவே கேட்டேன்\nஅழுதால் கூட ஆறுதல் கேட்டேன்.\nதனிமை என்னோடு போகக் கேட்டேன்\nஎப்போதும் சிரிக்கின்ற Principal கேட்டேன்\nமஹிந்தோதயா போல் எல்லா க்ளாஸ் ரூம் கேட்டேன்\nவிடுதி போல் ஒரு கட்டிடம் கேட்டேன்.\nவீட்டுக்கு குறைந்த வாடகை கேட்டேன்\nதவணைக்கு தவறாமல் வரும் team ஆட்களை ஓடக் கேட்டேன்\nகேட்டவுடன் கொடுக்கும் transfer ஐக் கேட்டேன்\nஅலைய விடாத வேலையைக் கேட்டேன்.\nசொந்த ஊரில் தொழிலைக் கேட்டேன்\nகாலம் எல்லாம் பிடித்த ஸ்கூல் கேட்டேன்.\nவருடத்திற்கு ஒரு பிரியாணி கேட்டேன்.\nதகைமை இருக்குற பதவியை கேட்டேன்\nபட்டம் வேண்டாம் நிம்மதி கேட்டேன்.\nநியாயம் கேட்கும் ஊரை கேட்டேன்\nஊரைத் திருத்தும் இளைஞர்கள் கேட்டேன்\nபடிப்பைத் தாங்கும் உள்ளம் கேட்டேன்\nதுரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்.\nபடிக்க விடாதவனை துரத்தக் கேட்டேன்\nதாய் தந்தை ஏமாற்றாத பிள்ளை கேட்டேன்\nகல்வி வேண்டாட்டி தந்தைக்கு உதவக் கேட்டேன்\nகயவனை அறிய cctv கேட்டேன்.\nபொழுது போக்க TV கேட்டேன்\nசின்ன சின்ன நேரங்கள் கேட்டேன்\nஇடைவேளையில் பார்க்க DISH TV கேட்டேன்\nசீரியஸ் இல்லாத vp கேட்டேன்\nவாரம் ஒரு லீவு கேட்டேன்\nஒரு வரியில் எழுதும் லெஸன் ஐ கேட்டேன்.\nகுறைந்த பட்சம் இங்கிரிமென்ட் கேட்டேன்.\nTeaching teaching வேண்டாம் என்று\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/13/2017 04:30:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஅரசு போக்குவரத்துக்கழகங்களில் அவல நிலை\nஎட்டுப் போடு எல்லாம் பறந்தோடும்\nஉணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது...\n\"பேலியோ டயட்\" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.\nஇல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை ...\nவிஜயகாந்த் என்னும் அற்புத மனிதர்.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/girl-knife-sheaves-genital-boyfriend-madhya-pradesh/", "date_download": "2018-05-27T03:28:50Z", "digest": "sha1:OWHSS2PEHC5FVTWKG2T55B65U4HYHYQY", "length": 11147, "nlines": 117, "source_domain": "makkalmurasu.com", "title": "மத்திய பிரதேசத்தில் காதலனின் பிறப்புறுப்பை கத்தியால் அறுத்த பெண் - மக்கள்முரசு", "raw_content": "\nமத்திய பிரதேசத்தில் காதலனின் பிறப்புறுப்பை கத்தியால் அறுத்த பெண்\nமத்திய பிரதேசத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற தனது காதலனின் பிறப்புறுப்பை அறுத்த காதலியை போலீசார் கைது செய்தனர்.\nமத்தியப்பிரதேசம் மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள நவ்கவான் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரும் கடந்த மூன்றாண்டுகளாக உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர்.\nவெவ்வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருந்தபோதும், அந்த வாலிபரை ஒரு கோயிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அந்த இளம்பெண், அந்த வாலிபருடன் பலமுறை படுக்கையை பகிர்ந்து கொண்டார்.\nஇந்நிலையில், தன்னை ஒதுக்கிவிட்டு, அதே கிராமத்தில் பெற்றோர் நிச்சயித்து வைத்துள்ள வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள தனது காதலன் சம்மதம் தெரிவித்து விட்டதாக தோழிகள் மூலம் அந்த பெண்ணுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, கடந்த 23-ஆம் தேதி இரவு தாங்கள் எப்போதும் ரகசியமாக சந்திக்கும் இடத்துக்கு அந்த வாலிபரை வரவழைத்த அந்த இளம்பெண், கடைசியாக உங்களுடன் உடலுறவு வைத்துகொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தினார்.\nஅந்த வாலிபரும் அதற்கு இணங்கி, உச்சகட்ட இன்பத்தில் திளைத்திருந்தபோது, மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் அவரது பிறப்புறுப்பை வெட்டி, துண்டித்தார்.\nவலியுடன், அங்கிருந்து ஓடிய அந்த வாலிபர் யாரிடமும் சொல்லாமல் துடிதுடித்தபடியே இருக்க, அவருக்கு ஏற்பட்ட ரத்தப் போக்கை கண்டு பதற்றம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்ததில், உண்மை வெளியே வந்தது.\nஇதையடுத்து அந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்த அவரது பெற்றோர், இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளம் பெண்ணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்…\n← பாகிஸ்தானில் பெண் எம்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த அமைச்சர் கவிஞர் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் கேரளாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிடுகிறார் →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2018/02/blog-post_66.html", "date_download": "2018-05-27T03:29:51Z", "digest": "sha1:L2LZ2PRLHPRQ62A2HU576QJMFUZ7ZRTQ", "length": 11591, "nlines": 193, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: வெள்ளை துப்பட்டி", "raw_content": "\nபால்ய நாட்களின் நினைவுகளை நாளும் சுமக்கையில் இந்த வெள்ளை துப்பட்டியும் அந்நினைவுகளோடு இணைந்து கலக்க விளைவு வெண்மையாய் சற்று மென்மையாய் காற்றில் அசைந்தாடி இதயத்தை வருடிக் கொண்டிருக்கிறது இன்னமும்\nஇப்போதெல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் வளரும் தலைமுறையில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் \"ஹிஜாப்\" என்றாலே அது தற்பொழுது பலரும் அணியும் கருப்பு நிறத்தினாலான \"புர்கா\" என்றழைக்கப்படும் ஆடை மட்டுமே என்று மனதில் அழுந்தப் பதிந்துப் போய்விட்டது\nஆயினும் கூட கிட்டத்தட்ட பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை வெள்ளை துப்பட்டிக்கு எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை, கடலூர் மட்டும் அருகிலுள்ள சில மாவட்டத்தின் ஊர்களிலுள்ள இஸ்லாமிய பெண்களிடையே அதற்கிருந்த மவுசு என்பது அலாதியான ஒன்று\nவெள்ளை துப்படியிலும் கூட இருவகைகள் உண்டு ஒன்று முழு அல்லது பெரிய துப்பட்டி மற்றொன்று அரை அல்லது சிறிய துப்பட்டி இரண்டையுமே அப்போதெல்லாம் இஸ்லாமிய சமூகத்தின் பெண்கள் ஹிஜாபாக விரும்பி அணிவார்கள்.\nதுப்பட்டி அணிவதில் கூட சில ஊர்களுக்கென்று பிரத்யேகமான முறை உண்டு.\nஉள்நாட்டிலேயே இவ்வை துப்பட்டிகள் கிடைத்தாலும் கூட சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவிலிருந்து பயணம் வருபவர்கள் கொண்டு வருபவைகள் நேர்த்தியும் தரமும் மிக்கவையாக விளங்கின அரபுநாடுகளிலிருந்து வருபவர்கள் கொண்டு வந்ததும் கூட இந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதே எனலாம்.\nஎனக்கு தெரிந்தவகையில் எம்.எஸ் துப்பட்டி (பரங்கிப்பேட்டையில் அறிமுகம் செய்யப்பட்டதாக சொல்வார்கள்) அதோடு ராஜா ராணி, பூக்காச்சி மற்றும் ஜாக்கோட் இப்படி பல பெயர்களில் துப்பட்டி வகைகள் வந்ததுண்டு.\nவெள்ளை துப்பட்டியில் எம்ப்ராய்டிங் வேலைப்பாடுகள் செய்ய தனி தையல்கடைகள் எல்லாம் அப்போது இருந்தது துவைப்பதற்கு தனிவகை சோப்பு மற்றும் குருவி நீலம் எல்லாம் மிக பிரசித்தமாய் இருந்தன. பிறகு காலப்போக்கில் வெள்ளை துப்பட்டி கொஞ்சம் வண்ணம் பூசி பூக்கள் கூட போட்டுப்பார்த்தது.\nதொன்னூறுகளின் கடைசியில் இரண்டாயிரத்தின் துவக்கத்தில் அரபுநாட்டின் இருந்து கொண்டுவரப்பட்ட புர்கா கொஞ்சம் கொஞ்சமாக துப்பட்டியை கபளீகரம் செய்ய அது கிட்டத்தட்ட மறைந்து மறந்துபோன நிலையே எங்கள் பகுதிகளில்.....\nவீட்டிலுள்ள பெண்களோடு சிறுவயது பிள்ளைகள் வெளியில் சென்றால் அந்த துப்பட்டியின் முந்தானையை பிடித்துத்கொண்டே சென்றதெல்லாம் இப்போதும் மனக்கண் முன்னே அழகான நிழலாடலாக....\n ( பாகம் 3 )\nஇவர் ஒரு வாழும் தெரசாவோ .\nபழையன போற்றுதும் புதியன புகுதலும் இயல்பு ,வாழ்த்து...\nதமிழ்ப் பேசும் ஆங்கில படம்.\nஇதுவும் ஓர் வகை மனிதாபிமானம்தான்\nஉங்கள் தலைக்கு மேலே உயராத ....\n\"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்க...\nஅறிய வேண்டிய அரிய மனிதர்கள் ... 17 சமுதாயக்கவிஞர்...\nதகுதியை வளர்த்துவிட்டால். கடின்ம் எளிமை ஆகிவிடும்\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் எழுத்தாளர் 'சீர்...\nநாகப்பட்டினம் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்...\nபழையன போற்றுதும் புதியன புகுதலும் ஒரு புதையலைப்பார...\n ( பாகம் 3 )\nகாயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QI...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் டி. ஏ. ஆசிம் Cola...\nகல்வி - படிப்பு - கற்றல்\n‘குழந்தையைத் திட்டவே மாட்டேன்’ என்று சொல்கிறவரா நா...\nசூஃபித்துவம் – உயர் உளவியல்\n*புதிய சிந்தனை அல்ல இது....* *புத்துணர்சியூட்டும்...\nஅஜ்மானில் தமிழக கல்வியாளருடன் ஒரு சந்திப்பு\nஅறிய வேண்டிய அறிய மனிதர்கள்...(5). பேராசிரியை நசீ...\nபள்ளிவாசல்ல பயான் பேசுர மாதிரி\nஒன்ஸ் அப்பான் எ டைம் .... / Abu Haashima\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-05-27T03:11:43Z", "digest": "sha1:MQNK7PCD55WD5EZPT2LMUYKUO4NDIEQG", "length": 3492, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "சவூதி அரேபியாவில் நடுரோட்டில் நடனம் ஆடிய சிறுவன் கைது » Sri Lanka Muslim", "raw_content": "\nசவூதி அரேபியாவில் நடுரோட்டில் நடனம் ஆடிய சிறுவன் கைது\nசவுதி அரேபியாவில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடுரோட்டில் நடனம் ஆடிய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nநகரில் உள்ள போக்குவரத்துகள் அதிகம் நிறைந்த ரோட்டில் 14 வயது சிறுவன் ஒருவன், 1990 ஆம் ஆண்டில் வெளியான ஹிட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது, இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.\nஇது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகும் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் அபராதம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.\nஷீயா கிளர்ச்சியாளர்கள் சௌதி மீது ஏவுகணை தாக்குதல்; ரியாத் அருகே ஒருவர் பலி\nசவூதி அறிஞரின் அபாயா பத்வாவின் உண்மை நிலை என்ன \nமக்காவில் பெண்கள் கேம் விளையாடியதால் சர்ச்சை\nமுஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை – செளதி இமாமின் கருத்துக்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/what-is-meant-by-repentance/", "date_download": "2018-05-27T03:13:13Z", "digest": "sha1:ESDV66U4R7GCFFATR72OBGCTZGSGFBPR", "length": 6643, "nlines": 178, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மனந்திரும்புதல் என்றால் என்ன? - Tamil Christian Messages", "raw_content": "\nமனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை மையமாக வைத்து, இந்த சிற்றேட்டில் சற்று விரிவாக சிந்திப்போம். மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை மையமாக வைத்து, இந்த சிற்றேட்டில் சற்று விரிவாக சிந்திப்போம். பேதுருவானவர் கொர்நேலியு வீட்டிற்குப் போனபொழுது ஆவியானவர் அவர்கள் மேலே இறங்கினதை நாம் வாசிக்கிறோம். இங்கு கொர்நேலியுவுக்கு ஆண்டவர் தம்முடைய தூதனைக்கொண்டு ஒரு செய்தியை அனுப்புகிறார். அது, “நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்” (அப் 11:14). “இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை பேதுரு உங்களுக்கு சொல்லுவான்” என்று சொல்லப்படுவதை நாம் வாசிக்கிறோம். இந்த இரட்சிக்கப்படுவதற்கேதுவான காரியம் என்ன “இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்” (அப் 11:18). அன்பானவர்களே “இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்” (அப் 11:18). அன்பானவர்களே ஜீவனுக்கு (இரட்சிப்புக்கு) ஏதுவானதுதான் மனந்திரும்புதல். மனந்திரும்புதல் என்பது ஜீவனைக் கொடுப்பது. மனந்திரும்புதல் என்பது தேவன் நம்முடைய வாழ்க்கையைப் புதுப்பிப்பதாகும்.\nமெய்யான மனதிரும்புதல் - Tamil Christian Messages\n[…] 18 மெய்யான மனதிரும்புதல் யோவேல் […]\n[…] நீங்கள் இந்த செய்தியை புத்தக வடிவிலு… (Click here) […]\nNext story நீ தேவனோடு ஒப்புரவான நபரா\nPrevious story கிருபையினால் மாத்திரமே இரட்சிப்பு\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_18.html", "date_download": "2018-05-27T03:22:47Z", "digest": "sha1:EXT6U7YATFT4OTAE6JHMKV2I6WOHXKAE", "length": 10029, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதம்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதம்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 04, 2018 இலங்கை\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று காலை 4.15 மணிக்கு ஜித்தாவில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 282 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இன்று பகல் 01.25 மணி ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 04.50 மணிக்கு சென்னையில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 127 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய சுமார் 2 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளன. இன்று காலை 06.10 மணிக்கு பாகிஸ்தானின் லாஹுரில் இருந்து வருகை தர இருந்த விமானம் காலை 9.45 மணிக்கும், அந்த நேரத்திற்கு க்வன்சுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த விமானம் இன்று பகல் 01.20 மணி ஆகும் என்று கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை இன்று காலை 07.35 மணிக்கு கொச்சி நோக்கி புறப்பட இருந்த விமானம் இன்று பகல் 12.30 மணி வரை தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 08.36 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட இருந்த விமானம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்களில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் காரணமாக நேற்றைய தினம் முதல் விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nபனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nமன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்\nஅனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வ...\n பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்\nதூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலை சய்த தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனபப...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://khanbaqavi.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2018-05-27T03:00:26Z", "digest": "sha1:APEZQH4N7CENCBDTFEO4BH4ONCEQBN3U", "length": 12374, "nlines": 203, "source_domain": "khanbaqavi.blogspot.com", "title": "கான் பாகவி: درس اللغة العربية العصرية - الدرس الأوّل", "raw_content": "\nஅமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில், இஸ்லாமியப் பொருளாதாரத் துறை தொடர்பான ஆய்வுகள் குறித்த விவர இருக்கை ஒன்று உண்டு.\n(4ديزل (டீசல்) (5بترول(பெட்ரோல்) (6دُكتور(டாக்டர்)\n(20ثاني أكسيد (வேதியியல்) ஈருயிரகை PIOXIDE\n2. ஜெர்மனி 2. பிரிட்டன் 3. வியட்நாம் 4. தென்கொரியா 5. மலேசியா\nநுகர்வு கலாசாரம் - ஜும்ஆ உரை\n21ஆம் நூற்றாண்டில் உலமாக்களின் பங்கு - ஆலிம்களின் கருத்தரங்கு\nகுழந்தைச் செல்வம் - ஜும்ஆ உரை (16.11.2012)\nதிருக்குர்ஆன் ஆய்வு - இளம் ஆலிம்களே\nமெளலவி.முஹம்மது கான் பாகவி அவர்களை முதல்வராக கொண்ட...\n 12 அ. முஹம்மது கான் *பாகவி* அதுவென்ன சுன்னத் வல்ஜமாஅத் அறிவும் ஆர்வமும் மிக்க மாணவக் கண்மணிகளே அறிவும் ஆர்வமும் மிக்க மாணவக் கண்மணிகளே ‘அகீதா’ எனும் கொள்கைவியலைப் ...\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி - ஒரு வரலாற்றுப் பார்வை\nஇஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணம்\nநவீன அரபிமொழி (Modern Arabic) ஏன் அவசியம்\nகான் பாகவி - உரைகள்\nபேராசிரியர், மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு\nகுடும்பப் பிரச்சினகள் - தீர்வு\nஅண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை, பாகம் - 1 (குவைத்)\nஅண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை, பாகம் - 2 (குவைத்)\nஅண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை, பாகம் - 3\nஅண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை, பாகம் - 4\nஇஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம், பாகம் - 1 (குவைத்)\nஇஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம், பாகம் - 2 (குவைத்)\nஇஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம், பாகம் - 3 (குவைத்)\nஸகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம் [பாகம் - 1]\nஸகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம் பாகம் 1 from Khanbaqavi on Vimeo.\nஸகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம் [பாகம்-2]\nஸகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம் [பாகம்-3]\nஸகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம் பாகம் 3 from Khanbaqavi on Vimeo.\nஇதில் இடம்பெறும் ஆக்கங்களை எடுத்தாளும்போது அதை மேற்கோளாகக் குறிப்பிடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/jallikattu-affair-today-huge-rally-vellore/", "date_download": "2018-05-27T03:20:21Z", "digest": "sha1:56PMSFLZ26W742G34BAKKXHWBRPDJ5GM", "length": 9244, "nlines": 114, "source_domain": "makkalmurasu.com", "title": "ஜல்லிக்கட்டு விவகாரம் வேலூரில் இன்று பிரம்மாண்ட பேரணி - மக்கள்முரசு", "raw_content": "\nஜல்லிக்கட்டு விவகாரம் வேலூரில் இன்று பிரம்மாண்ட பேரணி\nவேலூர் ஜல்லிக்கட்டுக்கு விழாவுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி காட்பாடியில் எருது விடும் பாதுகாப்புச் சங்கத்தினர் கருப்புச் சின்னம் அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படாவிடில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, பொங்கலை கருப்புத் தினமாக அனுசரிக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.\nஇதில் சங்க நிர்வாகிகள் முரளி, முருகன், ஞானசேகரன், பால்ராஜ், உறுப்பினர்கள், காளை உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்\nவேலூர் மாவட்டத்தில் பேரணி நடத்திவருகின்றனர் போராட்டத்தில் பொது மக்களிடையே தள்ளு முள்ளு நடந்து வருகின்றது. இப்போராட்டம் மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் தீவிரமாவதால் மத்திய மாநில அரசு ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்…\n← பைரவா தமிழ் படத்தின் விமர்சனம் ஜல்லிக்கட்டு ஆதரவாக சேலத்தில் அமைதிப் போராட்டம் →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sellankoottam.blogspot.com/2012/08/kongu-vellalar-marrage-customs.html", "date_download": "2018-05-27T03:08:02Z", "digest": "sha1:TRJ2HAJ5YOUN3PHN5PUAUI6AL23XLU4J", "length": 13194, "nlines": 158, "source_domain": "sellankoottam.blogspot.com", "title": "Sellan Kulam (Kongu Vellala Gounder): Kongu Vellalar Marrage customs", "raw_content": "\nகொங்கு வெள்ளாளர் இல்லத் திருமணச்சீர்கள்\nதம் மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல்\nவாசல் கவுலி குறிப்பு கேட்டறிதல்\nமாப்பிள்ளை வீட்டார் நிச்சயார்த்தம் மூலம் பெண்ணை உறுதி செய்தல்\nஅருமைப் பெரியவர்களுக்கு தாம்பூலம் வழங்குதல்\nதிருமணநாள் குறித்து பெண் மடியில் வெற்றிலை கட்டுதல்\nதட்டார் பூட்டும் தாலிக்கும் பொன்னோட்டம் பார்த்தல்\nமணநாள் குறித்து தேன்பனை ஓலை எழுதல் (பத்திரிக்கைக் அச்சடித்தல்)\nமுகூர்த்த நெல் போட்டு வைத்தல்\nவிறகு வெட்டி பிளந்து மூன்று கத்தையாகக் கட்டுதல்\nசம்மந்திகள் உப்புச்சக்கரை மாற்றி சிகப்பு பொட்டு வைத்தல்\nமாப்பிள்ளை வீட்டில் பருப்பும் சோறும் விருந்துண்ணல்\nபதினெண் கட்டுக் கன்னிகளுக்ளூக்குத் தாம்பூலம் கொடுத்தல்\nபெண்ணெடுக்கும் மாமனுக்குத் தாம்பூலம் வழங்குதல்\nஇணைச்சீர் செய்யும் சகோதரிக்கும் தாம்பூலம் வழங்குதல்\nபெண் கூரைச்சேலை சோமான் உருமாலை வாங்குதல்.\nபெண் வீட்டில் பந்தல் போடுதல்\nமாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் புறப்படுதல்.\nஎழுதிங்கள் சீர்சாமான்கள், நிறைநாழி, முக்காலி, மண்மேல்பலகை பேழைக்கூடைசீர், படி விநாயகர்பூஜை சேகரித்து வைத்தல்\nமணமகள் வீட்டார் சீர்தண்ணீர் கொண்டுவருதல்\nமுகூர்த்தக்கால் வெட்டி வர மணமக்களின் வீட்டார்கள் பால் மரத்திற்கு பூஜை செய்தல்\nவினாயகர் பூஜையுடன் மாப்பிளை வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்\nபசுமாட்டு சாணத்தில் தரைமெழுகி பிள்ளையார் பிடித்து அருகு சூடுதல்\nமணமகன் வீட்டில் வெற்றிலை மூட்டை கட்டுதல்\nமணமகள் வீட்டில் சீர்தண்ணீர் கொண்டு வருதல்\nகணபதி பூஜையுடன் பெண் வீட்டார் முகூர்த்தக்கால் போடுதல்\nவெற்றிலைக் கூடையை பேழைக்கூடையில் வைத்து பூஜை செய்து பெண் மடியில் 30 வெற்றிலை கட்டி கணபதியை கும்பிடுதல்\nமணமக்கள் வீட்டார் மணநாள் குறித்தல்\nசிறப்பு வைத்தல், கரகபானை புடச்சட்டி வாங்குதல்\nமேல்கட்டு கட்ட கட்டுக்கன்னிக்குத் தாம்பூலம் வழங்குதல்\nபிரமன் பூஜை செய்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து வருதல்\nமணமகனுக்கு முகவேலை செய்ய குடிமகனுக்கு தாம்பூலம் வழங்குதல், மணமகனுக்கு முகம் வழித்துத் தண்ணீர் வார்த்தல்\nமணமகனுக்கு ஆக்கைப் போட்டு தண்ணீர் வார்த்தல்\nமணமக்களுக்கு பட்டினி சாப்பாடு போடுதல்\nமணமகனுக்கு செஞ்சோறு சுற்றி எரிதல்\nஇணைச்சீர் மணவறை அலங்காரம் மடியில் வெற்றிலை கட்டுதல்\nமங்கள வாழ்த்தை குடிமகன் சொல்லுதல்\nதாயார் மகனுக்கு தயிர் அன்னம் ஊட்டுதல்\nமகன் தாயை வணங்கி, ஆசிபெற்று பூங்கொடிக்கு மாலை சூடல்\nமணமகன் குதிரைமேல் செல்ல மடத்தான் குடைபிடித்தல்\nமாப்பிள்ளையை விடுதி வீட்டிற்கு அழைத்துச் செல்லல்\nபொன்பூட்ட வந்தவருக்கு பூதக்கலம் தான் படைத்தல்\nமாமன் பொட்டிட்டு பொன்முடித்து பட்டம் கட்டி பெண் எடுத்தல்\nவாசல் படியில் நெல் போடுவது\nசூரிய நமஸ்காரம் செய்து மணமகள் மணமகனின் கால் கழுவுதல்\nமாங்கல்யத்திற்கு கணபதி பூஜை செய்தல்\nமணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அணிவித்தல்\nமங்கள வாழ்த்து குடிமகன் சொல்லுதல்\nமணமகளுக்கும் மணமகனுக்கும் கங்கணம் அவிழ்த்தல்\nமணமக்கள் மணவறையைச் சுற்றி வருதல்\nமணமகனுக்கும் மணமகளுக்கும் தண்ணீர் வார்த்தல்.\nமணமக்களுக்கு புதுப்புடவை, சோமன் உருமாலை தரல்.\nமணமகனுக்குச் மணமகள் தட்டுவாச்சாதம் போடுதல்.\nமணமன் மோதிரத்தை மைத்துனன் பிடுங்குவது.\nமாப்பிள்ளை வீட்டில் பெண் காண்பது.\nமணமக்களு தாயார் பால் அன்னம் ஊட்டல்.\nமணமக்கள் விநாயகர் கோயிலில் வழிபடல்.\nபெரியோர்களை தம்பதிகள் கும்பிட்டு மஞ்சள் நீராடுதல்.\nவினாயகருக்கு மடக்கில் பானைப்பொங்கள் வைத்தல்.\nவினாயகர் கோயிலில் சம்மந்தம் கலக்குவது.\nமணமகள் எடுத்தமாமனுக்கு விருந்து வைத்தல்.\nமணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்துச்செல்லல்\nமணமகள் ஊர் கிணற்றில் தாம்பூலம் விட்டு தண்ணீர் கொண்டு வருதல்\nமணமக்களை பெண்வீட்டிற்கு அழைத்து வருதல்\nமணமகன் சகோதரி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வருதல்\nகுலதெய்வ கோயிலுக்கு கல்யாணபடி கொண்டு செல்லுதல்\nமணமகள் வீட்டில் மணமகனுக்கு எண்ணெய் நீர் குளிப்பாட்டி விருந்து வைத்தல்\nமணமகன் சகோதரி மணமக்களுக்கு விருந்து வைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ahimsaiyatrai.com/2015/01/kattumalaiyanur.html", "date_download": "2018-05-27T03:05:18Z", "digest": "sha1:IKQFZ2S24DBPCZQIM7HM56ETNPL7R46K", "length": 14950, "nlines": 170, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: KATTUMALAIYANUR - காட்டுமலையனூர்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : காட்டுமலையனூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → செஞ்சி → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 65 கி.மீ.\nகாஞ்சிபுரம் → வந்தவாசி → சேத்பட் → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 112 கி.மீ.\nவிழுப்புரம் → வேட்டவலம் சாலை → கோனலூர் முன் திருப்பம் → காட்டுமலையனூர் = 53 கி.மீ.\nதிருவண்ணாமலை → வேட்டவலம் சாலை → கோனலூர் திருப்பம் → காட்டுமலையனூர் = 19 கி.மீ.\nசெஞ்சி → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 34 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nகாட்டுமலையனூர் என்னும் சிறிய கிராமம் 17 கி.மீ. தொலைவில் திருவண்ணாமலையிலிருந்து வேட்டவலம் சாலையில் (14 கி.மீ.ல் வடதிசை திருப்பம்) உள்ளது. மிகச் சிறிய எண்ணிக்கையில் சமணர்கள் வாழ்ந்திருந்தாலும் சென்ற நூற்றாண்டின் இறுதியில் அழகிய ஜிநாலயம் ஒன்றை எழுப்பி ஸ்ரீமகாவீரருக்கு அர்ப்பணித்துள்ளனர். ஆனால் அவ்வாலயத்தில் 500 ஆண்டுகளைக் கடந்த ஜிநரின் சிற்பம் ஒன்று வழிபாட்டில் உள்ளது. அருகிலுள்ள ஆற்று மணற்படுக்கையில் இருந்து கொண்டு வரப்பட்டது.\nநாற்புறம் சுவருடன் அமைந்துள்ள இவ்வாலயம் கீழ்திசையில் நுழைவைக் கொண்டுள்ளது. சிறிய குடகரை இரு இரும்புக் கதவுகளுடன் அடுத்து ஒரு பலிபீடத்துடன் தெருவின் பார்வையில் உள்ளது. ஆலயத்தின் முன்பகுதியின் மேல் உள்ள அழகிய மாடத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் சுதைச்சிற்பம் ஒன்று காட்சி அளிக்கிறது. இருபுறமும் சிங்கங்களின் சுதையுடன் காணப்படுகிறது. ....\nசெவ்வக வடிவில் அமைந்துள்ள ஆலயம் கருவறை மற்றும் முன்மண்டபமாக பிரிக்கப்பட்டுள்ளது. கருவறை வேதிகையில் ஸ்ரீமஹாவீரரின் அழகிய தற்கால கற்சிற்பம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதன் மேல்புறம் முக்குடை, இருபுற சாமரைதாரிகளுடன் காணப்படும் வட்டப்பகுதி யாளி மற்றும் அழகிய பூவேலைப் பாடுகளுடன் செதுக்கப் பட்டுள்ளது. மேலும் அதன் கீழ்புறம் அடர்ந்த பிடரியுடன் கூடிய சிம்மம் ஒன்று லாஞ்சனமாக வடிக்கப்பட்டுள்ளது.\nகருவறைப் பகுதிக்கு மேல் எளிய வகை விமானம் பத்ம ஏக கலசத்துடன் காட்சியளிக்கிறது. மேலும் அதன் கிரீவப்பகுதியின் நாற் திசைகளிலும் அழகிய நான்கு ஜிநர்களின் சுதைச் சிற்பம் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. வேதிப்பகுதியை சுற்றிலும் தளமிடப்பட்ட திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது.\nமிகவும் குறைந்த எண்ணிக்கையில் சமணர்கள் வசித்தாலும் அவ்வாலயத்தில் அனைத்து பூஜைகளும் பண்டிகைகளும் அந்தந்த பருவ நாட்களில் நடைபெறுகின்றது.\nமெய்யன்பர்களின் தொடர் விஜயத்தினால் மட்டுமே இது போன்ற வரலாற்று சின்னங்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்க முடியும். (இல்லாவிடில் தென்மாவட்ட சமண கலைசின்னங்கள் போல் சீரழிந்துவிடும்)\nதொடர்புக்கு: ஸ்ரீவிருஷபதாஸ் - - +91 7708171956\nPopular Posts - பிரபலமானவைகள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/index.php?page=241", "date_download": "2018-05-27T03:24:47Z", "digest": "sha1:6PMN3NSOEJQEYZDIL5NHYSF7QTGDCIN2", "length": 4514, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "அகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஅகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\n1\tதிருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி\n1\tதிருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்\n1\tதிருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை\n1\tதிருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\n1\tதிருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி\nதிருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்\nதிருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை\nதிருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\nதிருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_842.html", "date_download": "2018-05-27T03:35:46Z", "digest": "sha1:SS653BEKDLCYIUMXPPDKSWODZGHNIFRJ", "length": 16401, "nlines": 178, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வண்டு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமொத்த வெண்முரசிலும் சில நாள் வாழும்படி கோருகிறேன் என்று நீங்கள் வாழ்த்திய பிறகு நிஜமாலுமே,வெண்முரசு தவிர வேறு எதுவும் படிக்க இயலாமல் போயிற்று. தெய்வ மிருகம், கலைக்கணம் ஆகியவை மட்டுமே ,வெண்முரசை தாண்டி படித்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம் என்னுடைய ஓய்வு நேரம், படிக்கலாம் என்று தோன்றும் நேரம் முழுவதும் நீங்களே ஆக்கிரமித்துக் கொண்டீர்கள் என்றே சொல்லலாம். வெண்முரசு என்னுடைய துணையாக மாறிப் போனது.\nஇப்போது \"இந்திர நீலம்\" படித்துக் கொண்டிருந்தாலும் கர்ணனின் தொடையை வண்டு துளைத்த பகுதியை \"பிரயாகை\"யில் படித்த பிறகு, எழுதத் தோன்றியதுதான், என்னுடைய இந்த பகிர்வுக்கு காரணம்\nவலியை இம்மாதிரி உணர்ந்து எழுதுவது \"காட்சிப் படுத்துவதை\"தோற்கடிக்க முடியும் என்பதை கண்கூடாக உங்கள் எழுத்துக்களில் இருந்தே தெரிந்து கொண்டேன். மஹாபாரதத்தை நீங்கள் உங்கள் கற்பனையோடு இயைந்து எழுதினாலும், இதுநாள் வரை கேட்ட கதையை தாண்டி நீங்கள் எழுத முடியாத வரைமுறை அவ்வப்போது உங்களை மிகுந்த கட்டுப் பாட்டுக்கு உள்ளாக்கும் என்று உணர முடிகிறது. அந்த சமயத்திலும் வண்டு வரும் பாதையின் குறுக்காக கர்ணன் தொடை மறைத்துக் கொண்டிருந்த போது, வந்து துளைக்க எதுவாக இருக்கிறது, என்கிற அந்த கற்பனையின் ஆரம்ப சரடு திகைக்க வைக்கிறது.மேலும் வலியை இம்மாதிரி விரும்பி உணர்ந்து கர்ணன், துரியனிடம் கூறுவதாக எழுதியிருப்பது எழுத்தின் முலமாக காட்சிப் படுத்துவதின் உச்சக்கட்டம் என்று தோன்றுகிறது\nவலியை விரும்பி ஏற்ற தருணம் எனக்கும் வாய்த்தது..\nபதினைந்து வருடங்களுக்கு முன் நாகர்கோயிலிருந்து பாசஞ்சர் ரயில் வண்டியில் மதுரைக்கு இரவு 10.30 மணிக்கு ஏறியபோது, ஜன நெருக்கடி மிகவும் குறைவாய் இருந்தது ஒரு திகிலை ஏற்படுத்தினாலும், அந்தத் தனிமையை விரும்பி ஏற்றிருக்கிறேன். என்னுடைய பகுதியில் யாருமே இல்லை....விளக்குகள் எரியவில்லை..விசிறிகளில் பேனாவைக் கொண்டு சுழற்றியும் ஓடாததால் மின்சாரம் இல்லை என்று தெரிந்துகொண்டேன்..ரயில் கிளம்பியதும் குளிர் அதிகமாக, அதே சமயத்தில் அந்த குளிரை அனுபவிக்க, இருளில் தடவி கண்ணாடி ஜன்னலைத் தாண்டி, வரிகளுடன் கூடிய ஷட்டரை நகர்த்தியபோது, எனது வலது கை விரல்களின் மேல் விழுந்துவிட்டது வலியின் உச்சக்கட்டத்தில் விரல்கள் மறத்து போனவுடன், விரல்கள் துண்டாகிவிட்டன போலும் என்று நினைத்துக் கொண்டு, சிரமப்பட்டு இடது கையில் தூக்கியபோது வலி படிப்படியாக நகரத் துவங்கியதும்,நான் வலது மோதிர விரலில் அணிந்திருந்த மோதிரம் காரணமாக என் விரல்கள் துண்டாகவில்லை என்று தெரிந்து கொண்டேன். விரல்களில் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றால் தான் ஆச்சரியம் வலியின் உச்சக்கட்டத்தில் விரல்கள் மறத்து போனவுடன், விரல்கள் துண்டாகிவிட்டன போலும் என்று நினைத்துக் கொண்டு, சிரமப்பட்டு இடது கையில் தூக்கியபோது வலி படிப்படியாக நகரத் துவங்கியதும்,நான் வலது மோதிர விரலில் அணிந்திருந்த மோதிரம் காரணமாக என் விரல்கள் துண்டாகவில்லை என்று தெரிந்து கொண்டேன். விரல்களில் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றால் தான் ஆச்சரியம் அந்த இரவு வேலையில் ரயிலை நிறுத்தி மருத்துவரை அணுகுவதற்கு பதிலாக வலியைத் தாங்கிக் கொண்டு அதிகாலை மதுரை அடைந்த பிறகு மருத்துவரை சந்திக்கலாம் என்று உறுதி பூண்டு அமைதியாக அமர்ந்துவிட்டேன்\nஎன் நண்பர்கள் காலையில் என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும் வரை ஒவ்வொரு நொடியும் நான் வலியில் திளைத்தது இன்னும் நினைவிருக்கிறது.வியர்வை ஆறாகவும், சில சமயத்தில் கழுத்து வழியாக முதுகினூடே ஒரு கோடாக இறங்கியதும், சில சமயம் மூச்சுத்திணறல் அதிகமாகியதும் இப்பகுதியை நான் உங்களுக்கு எழுதும்போதும் உணர முடிகிறது. வலியைத் தாண்டிய களைப்பில் மார்பின் மேல் விரல்களை சிறிது நேரம் அயர்ந்து உறங்கி விட்டேன்\nநண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, சுவர்ண மோதிரம் போயிற்றே என்று உரையாடிக் கொண்டிருந்தபோது...இல்லை அந்த வலியிலும், இருட்டிலும், ஷட்டர் விழுந்த வேகத்தில், தெறித்துப் போன மோதிரத்தையும், விலை உயர்ந்த மரகதக் கல்லையும் தேடி எடுத்துவிட்டேன் என்று சொன்னபோது நண்பர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.\nமேலும் அந்த மோதிரம் என் பாட்டியின் \"மோதிரம்\" கல் வைத்த மோதிரமாக எனக்கு என் பாட்டனாரால் பரிசளிக்கப் பட்டிருந்தது.\nஎன் தந்தையிடம் நான் பகிர்ந்து கொண்டபோது உணர்ந்த பரவசமும், வலியும் கர்ணனின் அனுபவத்தை உங்கள் எழுத்துக்கள் முலமாக படித்தபோது மீண்டும் உணர்ந்தேன். விரல்களில் எலும்பு முறிவின் காரணமாக வாய்த்த கோணலும், விரல் மடக்கும் போது ஒவ்வொரு முறையும் உணரும் வலியும் எனக்கு இன்னுமொரு நினைவுக் கோவையை பரிசளித்துள்ளது.\nபாஞ்சாலியை பாண்டவர்கள் ஐவரும் எவ்வாறு ஏற்கிறார்கள் அவர்களுடைய மணவாழ்க்கை, பாஞ்சாலியுடனான முதல் இரவுகள் அவர்கள் இயல்பு படி அமைவதும், பீமன்,அர்ஜுனன்,ஆகியோருடன் திரௌபதியின் கூடல் கிளர்ச்சியை ஏற்படுத்தினாலும், நாகரீகமான எழுத்தின் சிகரம்\nஏழு அன்னையர்கள், கூர்ஜரம்,பால்ஹிகர்கள், சேதி நாடு, போன்றவற்றில் எனக்கு இருக்கும் சந்தேகங்களை, இந்த வருடம் டிசம்பர், விஷ்ணுபுரம் சந்திப்பு, கோவை ராஜஸ்தானி சங் கூட்டத்தில் உரையாடுவதற்காக சேமித்து வைத்திருக்கிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/vip-2-movie-collection-reports/", "date_download": "2018-05-27T03:22:44Z", "digest": "sha1:LUIV4M6OYTFFCYFFQ5Q5RW5WFIUGP2RM", "length": 11024, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் வசூல் கணக்கை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு", "raw_content": "\n‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் வசூல் கணக்கை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு\nகடந்த வெள்ளியன்று வெளியான ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் வசூல் கணக்கினை படத்தின் தயாரிப்பாளரான தாணு இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.\nஇன்று மதியம் தி பார்க் ஹோட்டலில் நடைபெற்ற ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் சக்ஸ்ஸ் பிரஸ்மீட்டில் இந்த முழு புள்ளி விபரங்களையும் தாணு வெளியிட்டார்.\nசென்னை, செங்கல்பட்டு உரிமையை சத்யம் சினிமாஸ் வாங்கியதாக குறிப்பிட்டார்.\nசென்னை, செங்கல்பட்டு – 6 கோடி 70 லட்சம்\nகோவை – 3 கோடி 72 லட்சம்\nமதுரை – 2 கோடி 40 லட்சம்\nதிருச்சி – 2 கோடி 10 லட்சம்\nசேலம் – 1 கோடி 95 லட்சம்\nவட ஆற்காடு – 1 கோடி 48 லட்சம்\nதென் ஆற்காடு – 1 கோடி 65 லட்சம்\nதிருநெல்வேலி – 1 கோடியே 30 லட்சம்\nஇதன்படி பார்த்தால் தமிழகத்திலேயே கடந்த 5 நாட்களில் தியேட்டர்கள் மூலமாக கிடைத்த மொத்த வசூல் 21 கோடியே 30 லட்சம் ரூபாயாகும்.\nஇது தவிர கேரளாவில் 2 கோடியே 75 லட்சம் ரூபாயும், மலேசியாவில் 5 கோடியே 30 லட்சம் ரூபாயும், சிங்கப்பூரில் 1 கோடியே 38 லட்சம் ரூபாயும், அமெரிக்காவில் 1 கோடியே 48 லட்சம் ரூபாயும் வசூலாகியிருப்பதாகத் தெரிவித்தார் தாணு.\nஇதன்படி பார்த்தால் முதல் 5 நாட்களின் முடிவில் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் உலகளாவிய வசூல் தொகை 32 கோடியே 21 லட்சம் ரூபாயாகும்.\nவரும் 18-ம் தேதி தெலுங்கிலும், 25-ம் தேதி ஹிந்தியிலும் இந்தப் படம் ரிலீஸாகவிருப்பதால் படத்தின் ஒட்டு மொத்த வசூல் நிச்சயமாக 70 கோடியைத் தாண்டிவிடும் என்பது உறுதி.\nactor dhanush actress amalapaul actress kajol director soundarya rajinikanth producer thaanu v creations vip-2 movie vip-2 movie collection report இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தயாரிப்பாளர் தாணு நடிகர் தனுஷ் நடிகை அமலாபால் நடிகை கஜோல் வி கிரியேஷன்ஸ் வி.ஐ.பி.-2 திரைப்படம் வேலையில்லா பட்டதாரி-2 திரைப்படம்\nPrevious Post'விவேகம்' படத்தி்ன் டிரெயிலர் Next Post\"தனுஷ் சிங்கத்தின் பால்; தாணு ஸார் தங்கக் கிண்ணம்...\" - நடிகர் விவேக்கின் ஒப்பீடு..\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\n“உதவியும் செய்வேன். ஆனால் ஏமாளியாகவும் இருக்க மாட்டேன்” – நடிகர் அரவிந்த்சாமி பேச்சு..\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மே 11-ம் தேதி வெளியாகிறது..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.panuval.com/thanneer-3660060", "date_download": "2018-05-27T03:31:29Z", "digest": "sha1:34JKFLP5VKNAHAAI6A4EXDCFW6ZJH7OQ", "length": 14144, "nlines": 340, "source_domain": "www.panuval.com", "title": "தண்ணீர் - அசோகமித்திரன் - Thanneer - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாலச்சுவடு இதழ்(மே - 2018)\nஉயிர்மை (மே - 2018) இதழ்\nஅந்திமழை இதழ்(மே - 2018)\nமணல் வீடு - இதழ்(31 & 32)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையு..\nமானசரோவர் - அசோகமித்திரன்:பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ..\nஇரண்டு விரல் தட்டச்சு:நிஜாம் ரெயில்வேயில் முப்பது நாற்பது ஆண்டுகள் பழையதான பொருள்களை ‘கண்டம்ண்டு’ என..\nவிடுதலை - அசோகமித்திரன் ( குறுநாவல்கள்):இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனை-வருமே முற்றுந் துறந்த ..\nஅசோகமித்ரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும்(1956-2016)தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அச..\nஅசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற, அமர சிருஷ்டிகள் என்பேன். இந்த இரண்டு நாவல்களையும்போல், இப்போது அவரால்கூட எழுதமுடியாது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை உலக இலக்கியத்தில் குறிப்பாக ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்தான் இதுபோன்ற படைப்புகள் தென்படுகின்றன. ரஷ்ய இலக்கியத்தில் இதுபோல் கதை சொல்பவர்கள் குப்ரினும், செகாவும்.\nஅசோகமித்திரன் போல் இவ்வளவு இறுக்கமாக உணர்ச்சி களையும் சம்பவங்களையும் பின்னிக் கதை எழுதும் படைப்பாளி, வேறு எந்த இந்திய மொழியிலாவது இருக்கிறாரா என்று தெரியவில்லை. இருக்கச் சாத்தியமில்லை என்றே என் உள்ளுணர்வு கூறுகிறது.\nஇந்த பாஷையும், இந்தத் தேசமும் பெருமை கொள்ளத்தக்க இலக்கிய கர்த்தா அசோகமித்திரன்.\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையு..\nமானசரோவர் - அசோகமித்திரன்:பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ..\nஇரண்டு விரல் தட்டச்சு:நிஜாம் ரெயில்வேயில் முப்பது நாற்பது ஆண்டுகள் பழையதான பொருள்களை ‘கண்டம்ண்டு’ என..\nவிடுதலை - அசோகமித்திரன் ( குறுநாவல்கள்):இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனை-வருமே முற்றுந் துறந்த ..\nஅசோகமித்ரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும்(1956-2016)தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அச..\nஅசோகமித்திரன்- குறுநாவல்கள்(முழுத் தொகுப்பு):தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட..\nஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்\nநாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-may-20/editor-page/140941-editor-opinion.html", "date_download": "2018-05-27T03:26:11Z", "digest": "sha1:OT5S4CMSXWPIK2LJ4RS2HENNCIO3MFDP", "length": 16241, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வதைக்காதீர்கள்! | Editor opinion - Nanayam Viaktan | நாணயம் விகடன் - 2018-05-20", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வதைக்காதீர்கள்\nஉங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய் - எளிதாக அடையும் வழி\nஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கியது சரியா\nஎஃப் & ஓ டிரேடிங்கில் புதிய மாற்றங்கள்... சிறு முதலீட்டாளர்களைக் காக்கும் செபி\nஷேர் டிப்ஸ் எஸ்.எம்.எஸ் உஷார்\nஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது\nவளரும் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘யெஸ்’\nகுறையும் ரூபாய் மதிப்பு... தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா\nவாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது\nதொடர் வருமானம்... டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\n - 21 - பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்... குழந்தைகளின் கல்வித் தேவைக்கு ஏற்ற ஃபண்ட்\nஇனி உன் காலம் - 19 - இயல்பாக எதிர்கொள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\n - மெட்டல் & ஆயில்\n - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nநாணயம் விகடன் - 20 May, 2018\nபெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வதைக்காதீர்கள்\nகடந்த 24-ம் தேதி முதல் பெட்ரோல் விலை மாறாமலே இருக்கிறது. கர்நாடக மாநிலத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் விலை மாற்றப்படாமல் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியானபின் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்ப\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஉங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய் - எளிதாக அடையும் வழி\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nகழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன”\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ibctamil.com/community/80/100574", "date_download": "2018-05-27T02:57:01Z", "digest": "sha1:VQWK3UKIQ7DV73VSXH5LRPT5KMWFAJTB", "length": 9471, "nlines": 96, "source_domain": "ibctamil.com", "title": "கனகபுர வீதி வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது; ரஜினிகாந்! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nகனகபுர வீதி வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது; ரஜினிகாந்\nகனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது என பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட டிப்போ கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது தற்போதைய நிலையில் பொருத்தமற்றது என கரைச்சி பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர் தா.ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.\nகரைச்சி பிரதேச சபையினால் மேற்குறித்த வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பெரும்பாலானவை அனுமதி பத்திரம் பெறாது அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அவற்றை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைந்துள்ள வர்த்தகர்களை மேலும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த வியாபாரிகளில் பலர் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், இவர்கள் வியாபார நிலையங்களை அமைக்கும் போது பிரதேச சபையும் இருந்தது எனவே அப்போது அமைதியாக இருந்துவிட்டு. இப்போது அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்வது பொருத்தமற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை எமது வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2018/01/blog-post_19.html", "date_download": "2018-05-27T03:28:31Z", "digest": "sha1:O3DNIL7SDHUMBGGNKHJNSRESBNG2ZXNR", "length": 10748, "nlines": 155, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: இதுவும் கடந்து போகும்", "raw_content": "\n(தோன்றியது: 16.01.2018. இறுதி வடிவம் எட்டியது: 19.01.2018)\nLabels: இதுவும் கடந்து போகும், கவிதைகள், கேசவமணி\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovaihappening.blogspot.com/2013/09/walk-for-cause.html", "date_download": "2018-05-27T03:14:51Z", "digest": "sha1:XP2SYBCZS7FPIAHRREBDXSBKBVC6FQSB", "length": 10337, "nlines": 160, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: Walk for a cause", "raw_content": "\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nஸ்மார்ட் கார்டு… நாளை (01-10-2013) முகாம் நடக்கும்...\nமூத்த குடிமக்கள் சங்கம் துவக்க விழா\nஉலக இதய தின சிறப்பு கருத்தரங்கம்\nஸ்மார்ட் கார்டு… நாளை (29-09-2013) முகாம் நடக்கும்...\nகல்லூரி அட்மிஷன் 30ம் தேதி கடைசி\nஸ்மார்ட் கார்டு… நாளை (28-09-2013) முகாம் நடக்கும்...\nஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆள் தேர்வு\nபந்தநல்லூர் ஸ்ரீ சந்திரசேகர பாகவதருக்கு விருது\nஅக்ரி & ப்ளோரிடெக் 2013\nவிமானப்படைக்கு ஆட்சேர்ப்பு கோவையில் சிறப்பு பயிற்ச...\nஸ்மார்ட் கார்டு... நாளை (23-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (22-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (21-09-2013) முகாம் நடக்கு...\nகோவை கல்வி மாவட்டங்களுக்கு இடையே செஸ் போட்டி\nஸ்மார்ட் கார்டு... நாளை (19-09-2013) முகாம் நடக்கு...\nநவராத்திரி இசை விழா – 2013\nஸ்மார்ட் கார்டு... நாளை (18-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (16-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (15-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (14-09-2013) முகாம் நடக்க...\nவன உயிரின வாரம் வினாடி - வினா போட்டி\nவன உயிரின வாரம் வினாடி - வினா போட்டி\nகோவையில் அக்., முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளி...\nஸ்மார்ட் கார்டு... நாளை (11.09.2013) முகாம் நடக்கு...\nஜி.வி., ஆடியோ விஷன் ஷோரூம் திறப்பு விழா\nகோவை - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் அறிமுகம்\nஸ்மார்ட் கார்டு... நாளை (08.09.2013) முகாம் நடக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mayvee.blogspot.in/2010/09/", "date_download": "2018-05-27T03:10:46Z", "digest": "sha1:FQB45NA7SPFABY3BURYIESRZPALX7663", "length": 23886, "nlines": 214, "source_domain": "mayvee.blogspot.in", "title": "தினசரி வாழ்க்கை: September 2010", "raw_content": "\nஇருந்தே அப்பா மீசையோடு தான்\nசிறு வயதில் வேறயாருடைய மீசையும்\nஅப்பாவின் மீசை போல் இருந்ததில்லை ...\nநீங்கள் என் அப்பாவை பார்த்ததில்லை\nஇடது பக்கமும் வலது பக்கமும்\nசம சீராய் வளர்ந்துவிட்ட முடிகள்\nகருப்பு வண்ணம் கொண்ட முடிகள்\nபொழுது : அதன் வண்ணங்களும் மாறும்\nஅந்த கருப்பு மீசையின் வெளிபாடுகள்\nமுடிகளுக்கு வாசனை இல்லை என்று\nநான் படித்த அறிவியல் சொன்னாலும்\nஅது அப்பாவின் மீசைக்கில்லை என்று\nதொழிற்சாலையில் இருந்து வந்த அப்பாவை\nஓடி சென்று அணைத்த பொழுது\nவேர்வை வாசத்துடன் மீசையின் வாசத்தையும் உணர்ந்தேன்\nசலூனில் அப்பாவின் மீசைக்கு அருகே கத்தி கத்திரி வரும்\nபொழுதெல்லாம் கடவுளை ஆயிரம் முறையாவது\nகடவுள் நல்லவராய் தான் இருந்தார்\nஎல்லா பிள்ளைகளை போல தான்\nஎனக்கும் அறிவியலின் புரியாத புதிர்களில்\nஒன்றாக இருந்தது அப்பாவின் மீசை.\nஒரு சமயம் தாத்தா இறந்த\nசெய்தி கேட்டு அப்பா அழுதார்\nஅப்பா அழுதுவிட்டார் என்ற அதிர்ச்சியே\nஅவரது மீசை மீதான பிம்பம் உடைந்து விடுமோ\nஊர் போய் சேரும் வரை\nஅப்பாவை நேர் கொண்டு பார்க்கவில்லை\nஅப்பாவின் மீசை தரும் தைரியத்தை\nகொஞ்ச நேரம் அம்மாவின் முந்தானை\nஊர் மக்கள் ; சொந்தம் ; குடும்ப நண்பர்கள்\nஎன்று நிறைய ஆண்கள் இருந்தார்கள் அங்கு\nஎந்த மீசையும் அப்பாவின் மீசையை\nபோல் அழகு இல்லை ...\nஇருட்டு அறையில் தூங்க வைக்க பட்டோம்\nஇரவில் தீடிரென்று வந்த சூரிய வெளிச்சம் போல்\nகதவை திறந்து கொண்டு வந்த பெரியம்மா\nஎங்களை எழுப்பி கையோடு அழைத்து சென்றார்.\nஏன் எதற்கு எங்கே என்று கேட்பதற்குள்\nமூன்று அறைகள் தள்ளி இருந்த அறைக்குள்\nகொண்டு செல்ல பட்டோம் .\nஅங்கே தாத்தாவின் தலையை பிடித்த மாதிரி\nஅப்பா நின்று இருந்தார் : கொஞ்சம் வித்த்யாசமாக\nஐந்து நிமிடங்கள் புரியாத புதிருக்கு\nகாணாமல் போன மீசை பதிலாய்\nகூட்டத்தில் எல்லோருக்கும் மீசை இருந்தது\nஅப்பாவுக்கு இல்லை : இருந்தாலும் அழகு இருந்தது\nஅது நான் ரசித்த அழகில்லை.\n\"தாத்தா உங்க அப்பாவோட மீசையையும் சேர்த்து சாமிகிட்ட கொண்டு போயிட்டாரு\"\nLabels: அனுபவம், கவிதை, புனைவு\nநடிகர் முரளி - மக்கள் உணர மறந்துவிட்ட ஒரு சகாப்தம்.\nமுயல் ஆமை கதையில் நாம் என்றாவது ஜெயித்த ஆமையின் வெற்றியின் பாத சுவடுகளை பற்றி கவலை பட்டு இருக்கிறோமா \nஇங்கே ரசிப்பு தன்மை என்பது பந்தய குதுரையின் மேல் பணம் கட்டுவது போலாகிவிட்டது.\nமனுஷன் உயிருடன் இருக்கும் பொழுதெல்லாம் யாரும் கவனிப்பதில்லை. மக்களுக்கு இல்லாத ஒன்றின் மேல் தான் அதிகமான விருப்பும் இருக்கிறது. புதிய ஒன்றை ஒருவன் விரும்பும் பொழுது, அவன் ஏற்கனவே விரும்பி கொண்டிருந்த பொருளின் மீதான விரும்பம் காரணமே இல்லாமல் குறைகிறது : நிலையான விருப்பம் இல்லாத மனிதனுக்கு என்றுமே அமைதி இல்லை.\nரசிப்பு ஒப்பீடுகள் தான் தமிழ் சினிமாவின் மிக பெரிய எதிரி. ஆனால் ஒரு விஷயத்தை ஏற்று கொள்ள தான் வேண்டும் : ரசிபதற்க்கு என்று சினிமாவில் அதிகமில்லை.\nஇதை ஏன் சொல்கிறேனென்று எனக்கு தெரியவில்லை.\nநடிகர் முரளியை எனக்கு ரொம்ப பிடிக்கும் : என்ன காரணம் என்று தெரியாது.\nஅவர் இறந்த செய்தி கேட்டன்று , அவர் நடித்த இதயம் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.\nகொஞ்ச நாளை எனக்கு எழுத்தாளர் தேவன் மீதான பித்து அதிகமாகி கொண்டே போகிறது. எழுத்தில் அப்படி ஒரு சுவாரசியம். மை ஊற்றி எழுதினாரா இல்லை மயக்க போடி போட்டேளுதினாரென்று தெரியவில்லை : நேரம் காலம் போவதே தெரியவில்லை. ஸ்ரீமான் சுதர்சனம் படித்தேன், பிறகு அவரெழுதிய சிற்பல கட்டுரை மற்றும் சிறுகதை தொகுப்புகளை படித்தேன். எழுத்துக்களோடு வாசகனை வாழ வைக்கும் சிறந்தவர்களில் அவருமொருவரென்று சில நாட்கள் முன்னர் தானுணர்ந்து கொண்டேன். தற்பொழுது துப்பறியும் சாம்புவின் சேட்டைகளை ரசித்துக்கொண்டிருக்கிறேன் .\nநான் பொதுவாய் \"தொல்லை\" காட்சியை அதிகம் பார்பதில்லை. அதனாலே பல நல்ல நிகழ்ச்சிகளை தவற விட்டிருக்கிறேன், அதில் நாளைய இயக்குனரும் ஓன்று. அதிலும் நலனின் குறும்படங்களிருக்கும் குறும்பு தனத்தை மிகவும் ரசித்தேன், அவைகளை யூடுபில் ( YOUTUBE ) பார்த்தபொழுது. நிச்சயம் நலன் சினிமா துறையில் பெரிய ஆளாய் வருவாரென்று நம்புகிறேன்.\nவெற்றி - இந்த எண்ணம் ஒருவனின் மனதிற்குள் வரும் பொழுதே, மற்றொருவன் தோல்வி அடைந்தால் தான் ஒருவன் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் வருகிறது, மக்கள் வெற்றியின் இலக்கணத்தையே மாற்றிவிட்டார்கள். போட்டிகள் நிறைந்த உலகத்தில் யாரும் WIN - WIN STRATEGY கையாள்வதில்லை.\nஎன்னை கேட்டால் வெற்றி அடைவதற்கும் சிறப்பாக செயல் படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும்.\nஏற்கனவே நானெழுதிய \"தேவதையின் கை\" யின் பாதிப்பிலிருந்தே நானின்னும் வெளிவரவில்லை. அதற்குள் அடுத்த காதல் கதைக்கான கரு உதயமாகி விட்டது. \"கம்ப்யூட்டர் கிளாஸ்\" இது தான் கதையின் தலைப்பு. நான் இளநிலை கல்லூரி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு ஒரு வருடம் வெட்டியாகயிருந்தேன், அப்பொழுது நடந்த ஒரு சம்பவத்தை வைத்து எழுத போகிறேன். சுவையாக இருக்குமென்று நம்புகிறேன். அதிலொரு வசனம் இப்படி வருகிறது \"IS CAMERA CELL PHONE THERE SAY TRUE OR FALSE ....\" (இனிமேல் கடவுளே வந்தாலும் தமிழர்களை முடியாது)\nகொஞ்ச நாள் முன்பு நான் 1960 யில் வெளிவந்த \"PEEPING TOM \" என்றொரு படத்தை பார்த்தேன். மனநிலை சார்ந்த திகில் படம் அது. அந்த படத்தில் இருக்கிற கதையே ஓரிரு வரிகள் தான், அதனால் கதையை சொல்ல விருபவில்லை. ஆனால் பயத்தோடு ஒவ்வொரு பெண்ணையும் கொலை செய்யும் இடமாக இருக்கட்டும், கடைசியில் கதாநாயகியை கொள்ள மனமில்லாமல் தன்னை தானே மாய்த்து கொள்ளும் இடமாக இருக்கட்டும் ..... அதை நீங்களே பார்த்து கொள்ளுங்களேன்.\nTHE DARK ROOM என்று ஒரு ஆங்கில நாவலை படித்தேன் - இது தமிழிலும் இருட்டு அறை என்று விகடன் பதிப்பகத்தின் முலம் வெளி வந்திருக்கிறது. அந்த கால குடும்ப தலைவியை பற்றின்ன கதை. ஏக்கம், அதன் முலம் அவள் அடையும் ஏமாற்றம், தலைவனை கவர எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, தலைவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு, அதனால் அவள் எடுக்கும் முடிவு : அதில் அவள் அடையும் தோல்வி : அதனால் வேறு வழி இல்லாமல் மீண்டும் குடும்ப சிறைக்கே வரும் அந்த குடும்ப தலைவியின் மன போராட்டங்களை ரொம்ப வர்ணனை இல்லாமல் காட்சிகளின் மூலமாகவே சொல்லிருக்கிறார் RK நாராயண்.\nஇதே போன்ற மனநிலையில் இருக்கின்ற ஒரு தலைவி எடுக்கும் விபரீத முடிவை கதையாக வைத்து தான் ALEXANDRA PROJECT படத்தை எடுத்தார்களென்று நண்பன் சொல்ல கேட்டிருக்கிறேன்.\nஎண்ணியதெல்லாம் எழுதிவிட்டேனாயென்று தெரியவில்லை. நினைவிலிருந்தவற்றை எழுத்துக்களில் கொண்டுவர நேரம் தானில்லை. இன்னும் எழுதிருப்பேன் சுவை குறைந்து விடுமோயென்ற ஐயத்தில் (இப்பொழுது மட்டும் இருக்கா ) இதோடு நிறுத்தி விடுகிறேன்.\nLabels: எண்ணங்கள், கலவை, சினிமா, புத்தகம்\nமிட்டாய் வீடு - பார்க்க வேண்டிய குறும்படம்\nகல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது. ஆனால் அது காதல் திருமணமாக இருந்தால் சொர்க்கமாய் இருக்கிற வீட்டில் நிச்சயிக்க படுகிறது. முதல் முதலில் காதலியை வீட்டில் அறிமுக படுத்தும் பொழுது, அம்மா - காதலி இருவருக்கும் என்ன மாதிரியான மனநிலைமை இருக்குமென்று நல்ல எடுத்து காட்டிருக்கிறார் இயக்குனர் (\"காதலில் சொதப்புவது எப்படி\" எடுதரே அவரே தான் ..... )\nதிரு. பாலாஜி மற்றும் அவருடைய டீம் - வாய்ப்புகளே இல்லை ; பாராட்ட வார்த்தைகளில்லை.\nபாலாஜியோட குறும்படங்கள் மேல எனக்கொரு சொல்ல முடியாத பிரியம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் - பொதுவாய் ரொம்ப பார்த்து பார்த்து தான் யூடுபில் சில பல சேனல்களை follow செய்வேன் - ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த குறும்படத்தை பார்த்த உடனே subscribe பண்ணிட்டேன்.\nஇயக்குனர் கொஞ்சம் குறும்புகாரர் போலிருக்கு - அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்சிகளில் தெரிகிறது, குறிப்பாய் \"இதோட போதுமே\" என்று பையன் அப்பாவை பார்த்து சொல்லும் பொழுது. அதென்ன காட்சி குறும்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.\nகுறும்படம் ஆரம்பித்ததில் இருந்து எட்டாவது நிமிஷம் வரைக்கும் இதொரு நகைச்சுவை பட பதிவென்றே நினைத்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன்..... ஆனால் அதன் பிறகு தான் நிகழ்ச்சியான வசன அமைப்புகளிலும் காட்சி அமைப்புகளிலும் இயக்குனர் நம்மை பெரிதும் கவர்கிறார்.\nஅதிலும் அந்த காதலியின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படும் நிமிஷம் - நன்றாக சிரித்துவிட்டேன்.\nஎன்னை சிரிக்க வைத்த மற்றொரு காட்சி - ஆரம்ப காட்சி தான் ( இயக்குனருடைய குறும்பின் உச்சமென்றே சொல்லலாம்).\nஇந்த குறும்படம் உணர்த்தும் மற்றொரு விஷயம் - நிதர்சன வாழ்வில் நாம் நம்முடைய மூளை வேலை செய்யும் முன்னரே, நம்முடைய உணர்வுகளை வெளிகாட்டி விடுகிறோம், அது மற்றவர்களை காயபடுதும் என்று அறியாமல். சுயநல கோவங்களுக்கு என்றுமே மதிப்பில்லை .\nஇந்த குறும்படத்தை பற்றி இன்னும் சொல்ல நிறைய தோன்றுகிறது, ஆனால் நேரமில்லாததால் இதோடு முடித்து கொள்கிறேன். என்னால் ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும் - இது உங்களுக்கொரு நல்ல ரசிப்பனுபவத்தை தருமென்பதை.\nLabels: youtube, எண்ணங்கள், குறும்படம்\nஎன்ன கொடுமை சார் இது........\nமிட்டாய் வீடு - பார்க்க வேண்டிய குறும்படம்\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=2c72d7d399b512f46069ff251735fa13", "date_download": "2018-05-27T03:43:46Z", "digest": "sha1:5J7OWNMXCZ4CDL5ORCDR4HESAMU7QCKO", "length": 29987, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=1508&view=unread&sid=4fc6a238c855a0b34cd92a69ac895c4a", "date_download": "2018-05-27T03:11:20Z", "digest": "sha1:754T7JMOMGKVNYQHJND7U6K7YDCZFC4M", "length": 30591, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் புதிய பதிவுகள் இடுவது எப்படி\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் புதிய பதிவுகள் இடுவது எப்படி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரத்தில் புதிய பதிவுகள் இடுவது எப்படி\nபூச்சரத்தில் பதிவுகள் இடுவது மிகவும் சுலபம். இதோ ஒரு புதிய உறுப்பினர்கள் எவ்வாறு பதிவை இடுவது என்பதை விளக்குகிறேன்.\nபுதிய உறுப்பினர்கள் முதலில் தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் ஒரு சிறு அறிமுக பதிவை இட வேண்டும்.அதையே எவ்வாறு இடுவது என்று சொல்கிறேன்.\nதாங்கள் உறுப்பினர் அறிமுக பகுதியில் பதிவு இட முதலில் தாங்கள் பூச்சரத்தில் புகுபதிகை[Login] செய்துகொள்ளுங்கள். பிறகு கீழ்காணும் படங்களை பின்பற்றி பதிவுகளை போடலாம்.\nஇப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் புதிய பதிவுகள் இடுவது எப்படி\nபுதிதாய் இணைவோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புத்தகம் போல தொகுத்து பதிவிட்டது அருமை ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T03:13:12Z", "digest": "sha1:5WHSRSM7BMPVUP5D32HWCKZOPT227IT4", "length": 8528, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "குறைந்த நேரம் செலவிடும் பயன்பாட்டாளர்கள்: புலம்பும் ஃபேஸ்புக் » Sri Lanka Muslim", "raw_content": "\nகுறைந்த நேரம் செலவிடும் பயன்பாட்டாளர்கள்: புலம்பும் ஃபேஸ்புக்\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஃபேஸ்புக்கில் வருகின்ற நியூஸ் ஃபீட்ஸில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது பற்றி அறிவிப்பதற்கு முன்பே, ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த பக்கத்தில் மிகவும் குறைந்த நேரமே செலவிட்டுள்ளனர்.\nசில வைரலான காணொளிகளை வெளியிடுவது சமூக வலைதளத்தில் செலவிடும் நேர அளவை சுமார் 5 சதவீதம் குறைத்திருப்பதாகவும், அல்லது தினமும் சுமார் 50 மில்லியன் மணிநேரம் என்றும் 2017ஆம் ஆண்டு கடந்த 3 மாதங்களாக இருந்து வந்துள்ளது.\nஇருப்பினும், இந்த வீழ்ச்சிக்கு பின்னரும் எதிர்பார்த்ததைவிட சிறந்த முடிவுகளை பெற்றிருப்பதாக அது கூறியுள்ளது.\nஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தொடர்பாடலை முதன்மை படுத்துவது என்பது மிகவும் ஊக்கமளிப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் சாக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.\n“ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை அதிகரிகரிப்பதைவிட, மக்கள் ஒருவொருக்கொருவர் இணைந்திருப்பதற்கு உதவுவது மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறியுள்ளார்.\nமக்களின் நல்வாழ்வுக்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இந்த சேவை நல்லதாக அமையும் என்று நாம் உறுதி செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து பதிவிடப்படுபவற்றை முதன்மைப்படுத்துவதற்காக நியூஸ் ஃபீட்ஸ்களில் மாற்றங்களை உருவாக்க போவதாக கடந்த ஜனவரி மாதம் ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.\nஇதற்காக வணிகம் மற்றும் செய்தி வெளியீடுகளில் இருந்து வருகின்ற உள்ளடக்கங்களை குறைவாக பிரபலப்படுத்தும் என்றும் தெரிவித்தது.\nகடந்த ஆண்டு கடைசி மூன்று மாதங்கள் மாதாந்தர பயன்பாட்டாளர்கள் 14 சதவீதம் அதாவது 2.13 பில்லியன் உயர்ந்து இருந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட சற்று குறைவான வளர்ச்சியே.\nஃபேஸ்புக்கின் விளம்பர வருவாய் ஈட்டும் அமெரிக்காவிலும், கனடாவிலும் தினமும் பயன்படுத்துவோர் சுமார் 7 லட்சமாக வீழ்ச்சியடைந்து அந்த காலாண்டில் 184 மில்லியனாக இருந்துள்ளது.\nஆண்டு வருவாய் கடந்த ஆண்டு 47 சதவீதமாக 40 பில்லியன் டாலருக்கு மேலாக இருந்தது. லாபம் 56 சதவீதமாக சுமார் 16 பில்லியனாகும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க வரி சட்டம் மூலம் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் 2.3 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியிருந்தும் இந்த லாபம் கிடைத்துள்ளதாக இந்த நிறுவனம் கூறியிருக்கிறது.\nஇந்த நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளை மிகவும் வலுவானது என்று தெரிவித்திருக்கும் ஜிபிஹெச் இன்சைட்ஸ் ஆய்வாளர் டேனியல் இவெஸ், ஃபேஸ்புக்கின் இந்த உத்திப்பூர்வ திட்டம் சரியாக நேரத்திற்கு சரியான மருந்து என்று விளக்கியுள்ளார்.\nஃபேஸ்புக்கின் பங்குகள் தொடக்கத்தில் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், இந்த முடிவுகள் வெளியான பின்னர் விரைவாக ஏறுமுகம் கண்டது.\n70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: சிக்கினார் பிரபல ஆசாமி\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து கட்டு கட்டாக பணம், விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nசக ஊழியரை ஹேண்ட்சம் என்று அழைத்த தொகுப்பாளினி – பணியை விட்டு நீக்கிய நிறுவனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thannambikkai.org/2017/11/01/22634/", "date_download": "2018-05-27T03:08:33Z", "digest": "sha1:ER5P3QFS4QEIVPUWCMNYWCCIPCHMSPPT", "length": 8452, "nlines": 74, "source_domain": "thannambikkai.org", "title": " தன்னம்பிக்கை மேடை - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » தன்னம்பிக்கை மேடை\nAuthor: சைலேந்திர பாபு செ\nஎன் கண்முன்னே நடக்கும் சில தவறான நடத்தைகள் என்னைப் பெரிதும் பாதிக்கிறது. அச்சமயத்தில் மட்டும் கோபம் அதிகளவு தோன்றுகிறது. இத்தருணத்தில் நான் என்ன செய்வது\nஉங்கள் கண்முன்னே நடக்கும் சில தவறான நிகழ்வுகள் உங்களைப் பெரிதும் பாதிக்கிறதா அந்த சமயத்தில் இவற்றைக் கண்டு உங்களுக்கு கோபம் அதிகம் தோன்றுகிறதா அந்த சமயத்தில் இவற்றைக் கண்டு உங்களுக்கு கோபம் அதிகம் தோன்றுகிறதா அப்படி என்றால் நீங்கள் ஒரு நல்ல மனிதன், உணர்ச்சி உள்ள மனிதன், தேசபக்தன் என்று பொருள். உங்களுக்குப் பாராட்டுகள்.\nஆனால் நீங்கள் இத்தருணத்தில் என்ன செய்வது என்று ஆலோசனை கேட்டுள்ளீர்கள். இதில் ஒரு சிக்கல் இருக்கவே இருக்கிறது. அது என்னவென்றால் உங்கள் கண்முன்னே நடக்கும் தவறான நடத்தைகள் என்னென்ன என்று நீங்கள் குறிப்பிடவில்லை. தவறுகளைப் பட்டியலிட்டு விரிவாக இருவரிக் கேள்வியில் உங்களால் கூறமுடியவில்லை என்று எனக்குப் புரிகிறது. எனவே அந்தத் தவறுகள் இவையாக இருக்குமோ என்று நான் கற்பனை செய்கிறேன்.\nஉழுவதற்குச் சொந்த நிலமில்லாத நமது விவசாயிகளின் பரிதாப நிலை.\nவிவசாயம் செய்தவர்கள் தற்கொலை செய்த கொடுமை.\nசொந்தமாக வீடு இல்லாத பல குடும்பங்களின் பரிதவிப்பு.\nஆரோக்கியமான உடல் இருந்தும் பிச்சை எடுக்கும் சோம்பேறிகள்.\nசத்தான உணவும், மருத்துவ வசதியும் கிடைக்காத கர்ப்பிணிப் பெண்கள்.\nஏழைகளை ஏய்த்து வாழும் முதலாளிகள்.\nவேலை வாங்கித்தருகிறேன் என்று பணத்தை வாங்கி ஏமாற்றியவன்.\nவாடகைக்கு வந்து விட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வாடகைக்குக் குடியிருப்பவன்.\nகாலிமனையைப் பத்திரம் போட்டு மோசடி செய்த அயோக்கியன்.\nரோட்டை மறித்து ஆலயம் கட்டிய சுயநல பக்திமான்.\nபிள்ளைகளின் பொதுத் தேர்வு நேரத்தில் ஒலிப்பெருக்கி வைத்து தொல்லை தரும் ஆலய நிர்வாகி.\nஆற்றில் இரசாயனம் சாயம் கலந்த தொழிற்சாலை முதலாளி.\nபள்ளிக்குப் போகும் பெண் பிள்ளையைத் திருமணம் செய்து வைத்தவர்கள்.\nஒரு 300 சதுர அடி வீடு கூட கட்ட இயலாத பல ஆயிரம் பேர் இருக்கும் போது ஒரு சிலர் பத்தாயிரம் சதுர அடிக்கு வீடு கட்டுவது.\nஉணவு இல்லாமல் உழைப்பாளிகள் இருக்கும் போது ஒரு கோடி ரூபாய்க்கு திருமண செலவு செய்து உணவை வீணாக்கும் பொறுப்பில்லாத பணக்காரர்கள்.\nகல்லூரியில் சேர்ந்தும், எந்த கவலையும் இன்றி ஊர் சுற்றித் திரியும் மகன்.\nகல்லூரியில் படிக்கப் போன மகள் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட சோகம்.\nபள்ளிக்கல்வி முடித்தப் பிள்ளையைக் கல்லூரியில் சேர்க்க முடியாமல் பரிதவிக்கும் தந்தை.\nசென்ற ஆண்டு ரோடு போட்டது, இந்த ஆண்டு மழையில் காணாமல் போனது.\nஊரெங்கும் சாக்கடை, குப்பை மேடு, துர்நாற்றம்.\nஎதுக்கெடுத்தாலும் லஞ்சம், ஒரு சான்றிதழ் வாங்க லஞ்சம், வீடுகட்ட அனுமதி வாங்க லஞ்சம், வேலை இடமாற்றம் கேட்டால் லஞ்சம்.\nசிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்\nநவம்பர் மாத உலக தினங்கள்\nநெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து \nஉள்ளே பார் உன்னை தெரியும்..\nவிரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்\nசுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nமுதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.\nவெற்றி உங்கள் கையில்- 47\nவாழ நினைத்தால் வாழலாம் – 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/05/blog-post_11.html", "date_download": "2018-05-27T03:00:18Z", "digest": "sha1:LG5PBC2TH7B22PDCP2XR4UQSB4KULKNJ", "length": 26107, "nlines": 288, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வானம் -விமர்சனம்", "raw_content": "\nதாய் மூகாம்பிகை, தேவரின் திருவருள் போன்ற படங்கள் பார்த்துள்ளீர்களா இத்தகைய படங்களின் காட்சிகள் பின்வருமாறு இருக்கும்:\nமுதல் காட்சி: முத்துராமன்- கே.ஆர். விஜயா தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கு மருமகளே காரணம் என்கிறார் மாமியார் மன வேதனை உடன் கே.ஆர் விஜயா சாமி படம் முன்பு அழுகிறார் .\nஇரண்டாம் காட்சி: ஸ்ரீ காந்த் ஒரு ஏமாற்று பேர்வழி. நம்ப வைத்து கழுத்தறுப்பது இவர் வேலை. கன்னத்தில் மச்ச்சதுடன் ஒரே மாடுலேஷனில் பேசி யாரையோ ஏமாற்றுவார் இவர் (எல்லா படத்திலும் இவருக்கு இந்த கேரக்டர் தான்)\nமூன்றாம் காட்சி: ஏ. வி. எம் ராஜனுக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம். கடன் தொல்லையால் நொந்து போயிருக்கிறார் இவர். இப்படியாக சிவகுமார் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனை வைத்து இன்னும் இரு கிளை கதைகள் மாறி மாறி காண்பிப்பார்கள். கடைசி காட்சியில் பழனி மலையிலோ, தாய் மூகாம்பிகை சந்நிதியிலோ இவர்கள் அனைவரும் ஒன்று கூடுவர். அது தான் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை.\nஇந்த ரக கதையொன்று நீண்ட நாள் கழித்து தெலுகு ரீ மேக்காக வந்துள்ளது. அது தான் வானம். கடைசி காட்சியில் கோயிலுக்கு பதில் இங்கு ஆஸ்பத்திரி.\nமேற்சொன்ன தெய்வ கதைகள் டைட்டில் ஓடும் போதே ஒரு பாட்டு போடுவார்கள். பின் டைட்டில் முடிந்து வசனம் ஆரம்பிக்கும் முன்பே சீர்காழி கோவிந்தராஜனோ, கே.பி. சுந்தராம்பாளோ ஒரு பாட்டு பாடுவார்கள். வானத்திலும் இதே போல் டைட்டிலில் ஒன்று, படம் துவங்கும் முன் ஒன்று என டபிள் பாட்டு போடுகிறார்கள்.\nசரி வானத்திற்கு வருவோம். ஐந்து குட்டி கதைகள். இவை அனைத்திலும் வரும் மனிதர்களும் வாழ்க்கையில் அநியாயத்துக்கு கஷ்டப்படுகிறார்கள். இவை மிக விரிவாக சொல்லப்படும் போது அயர்ச்சியாக உள்ளது. \"ஏம்பா.. சினிமா பார்ப்பதே சற்று ஜாலியாக இருக்கத்தான் இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே \" என பெருமூச்சு எழுகிறது. ஹீரோ சிம்பு \"என்ன வாழ்க்கை இது இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே \" என பெருமூச்சு எழுகிறது. ஹீரோ சிம்பு \"என்ன வாழ்க்கை இது \" என எப்போதும் அலுத்து கொள்கிறார். மற்ற கேரக்டர்களுக்கும் இதே நிலைமை தான். நல்ல வேளையாக சிம்புவின் நண்பராக சந்தானம் வருகிறார். இவர் மட்டும் இல்லா விடில் நாம் படம் முழுதும் சிரிப்பை நினைத்து கூட பார்க்க முடியாது.\nஐந்து கிளை கதைகளில் நம் மனதை சற்றேனும் பாதிப்பது சரண்யா குடும்பக்கதை தான். கிட்னியை விற்று பிழைக்கும் ஏழைகள் பற்றியும், அதில் உள்ள நெட்வொர்க் பற்றியும் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. ஒரு லட்சத்திற்கு கிட்னி விற்கப்படுகிறது. நடுவில் உள்ள ப்ரோக்கர்கள் ஒவ்வொருவரும் கமிஷன் அடிக்க, கடைசியில் 37 ,000 ரூபாய் கிட்னி தானம் தந்தவர்கள் கையில் கிடைப்பதை பார்க்க மனது வலிக்கிறது.\nசிம்பு ஒரு ஆர்டிபீசியல் காதலியை நியூ இயர் பார்ட்டிக்கு அழைத்து செல்ல நாற்பதாயிரம் பணம் சேர்க்க அலைகிறார். என்னே லட்சியம் அனுஷ்கா பலான தொழிலை வெறுத்து ஓடுகிறார். இனியாவது திருந்தி வாழவா என்றால், அதற்கு இல்லை; முழு பணமும் கமிஷன் இன்றி தனக்கே வரும்படி தனி வியாபாரம் செய்வேன் என்கிறார். பிரகாஷ் ராஜ் ட்ராக் சற்று பரவாயில்லை எனினும் மிகை படுத்தல் நிறையவே உள்ளது.\nகிளைமாக்சில் பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தாலும் முழுதாக உள்ள ஹீரோ, \" என்ன வாழ்க்கைடா இது \" என்று தெளிவாக சொல்லி விட்டு செத்து போகிறார்.\nநல்ல விஷயங்களே இல்லையா என்றால், உள்ளது பார்ப்போம்.\nஹீரோ-ஹீரோயின் என்கிற வழக்கமான பார்முலா இல்லாமல் வித்யாசமான கதைக்களன் சற்று மாறுதலாகத்தான் உள்ளது. (மெலோ டிராமாவை குறைத்திருக்கலாம்). சந்தானம் ஆங்காங்கு நன்கு சிரிக்க வைக்கிறார். விரல் வித்தை செய்யாத சிம்பு சற்று ஆறுதல். அனுஷ்கா அழகு பிரகாஷ் ராஜ் கொடுத்த பாத்திரத்தில் சரியே செய்துள்ளார் . \"தெய்வம் வாழ்வது எங்கே\" பாடல் வரிகளும், பாடலும் சிந்திக்க வைக்கிறது. முதலில் சொன்ன மாதிரி சரண்யா ட்ராக் சற்று மனதை பாதிக்கிறது.\nஆயினும் ஆனந்த விகடன் 44 மார்க் தருமளவு நிச்சயம் இந்த படம் இல்லை. திரைக்கதையில் தமிழுக்கென்று மாறுதல் செய்கிறோம் என சொதப்பி விட்டார்களோ என்னவோ தமிழ், தெலுகு ரெண்டு படமும் பார்த்த நண்பர்கள் தான் சொல்லணும்.\nசிலர் நன்றாக உள்ளதாக சொன்ன படம் நமக்கு ஏன் பிடிக்கலை என யோசிக்கிறேன். சில நேரங்களில் படங்களை நாம் எந்த மன நிலையில் பார்க்கிறோம், நமது அந்த நேரத்து மன அழுத்தம் இவற்றை பொறுத்தும் நமக்கு பிடிப்பது மாறுபடலாம்தான். ஆனால் ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும். வானத்தில் அது நடக்க வில்லை என்பதே கசப்பான உண்மை.\nவிமர்சனம் வல்லமை இணைய இதழில் பிரசுரமானது. நன்றி அண்ணா கண்ணன் \nLabels: சினிமா விமர்சனம், வல்லமை\nஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும்.\n//ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும். //\nமிகச் சரி, ஒத்துக் கொள்கிறேன், பட் எந்த ஒரு படத்தையும் எந்த முன் முடிவுக்களுமின்றியல்லவா நாம் பார்க்க முற்பட வேண்டும் ( மனநிலை என்பது வேறு, முன் முடிவுகள் என்பது வேறு )\n//ஏம்பா.. சினிமா பார்ப்பதே சற்று ஜாலியாக இருக்கத்தான் இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே //\nஇது ( இதை ) கூட ஒரு முன் முடிவு என்று நான் நினைக்கிறேன்.\nசந்தானம் இருப்பதால் பாஸ் ( எ ) பாஸ்கரன் மாதிரியோ, சிம்பு நடிப்பதால் விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரியோ இருக்கும் என நினைத்து ( முன் முடிவுகள் ) போனால் கண்டிப்பாக ஏமாற்றம் தான்,\nஜாலிக்காகத்தான் நீங்கள் படம் பார்ப்பீர்கள் என்று முடிவு செய்து விட்டால் விமர்சனம் படித்து விட்டோ ( அ ) நண்பர்களிடம் அது ஜாலியான படமா என்றோ கேட்டு விட்டு செல்வது தானே நம் ஏமாற்றத்தை குறைக்க உதவும்\nஇது என் புரிதல் அண்ணா.\nவரதராஜலு .பூ 10:04:00 AM\n//ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும். //\nஅமைதி அப்பா 1:03:00 PM\n//தாய் மூகாம்பிகை, தேவரின் திருவருள் போன்ற படங்கள் பார்த்துள்ளீர்களா\nபள்ளிப் பருவத்தில் கீற்றுக் கொட்டகையில் பார்த்தப் படத்தை சொல்லி பள்ளி நாட்களுக்கு அழித்து சென்று விட்டீர்கள்.\n// \"ஏம்பா.. சினிமா பார்ப்பதே சற்று ஜாலியாக இருக்கத்தான் இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே \" என பெருமூச்சு எழுகிறது. //\nசீரியல் பாக்குற கூட்டத்த இழுக்கத்தான் .. வேணும்னுதான் இப்படி..\nபாருங்க மகளிர் அணி.. சீரியல விட்டுட்டு தியேட்டருக்கு படை எதுக்கப் போறாங்க..\nஅனுஷ்கா ந‌டித்திருந்தும்...ய‌ங் சூப்ப‌ர் ஸ்டார் ந‌டித்த‌த‌ற்காக‌வே இந்த‌ ப‌ட‌ம் பார்க்க‌வில்லை/மாட்டேன்\nமோகன் குமார் 8:11:00 PM\nஸ்வீட் என்ற பெயரில் கமெண்ட் போட்டவரே, நீங்கள் என்னை திட்டி எழுதினாலும் பரவாயில்லை, கமெண்ட் போட்ட மற்ற நண்பரை அநாகரீகமாக எழுதியதால் நீக்குகிறேன். கமேன்ட்டை நீக்கினால் எனக்கு பயம் என நினைப்பேன் என்று எழுதியிருந்தீர்கள். பரவாயில்லை அப்படியே நினைத்து கொள்ளுங்கள். அநாகரிகமான வார்த்தைகளை எழுதுவதை தவிர்ப்பது நலம்.\nமோகன் குமார் 8:36:00 PM\nஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் என்னை திட்டி எழுதிய பல கமெண்டுகளும் இங்கு பிரசுரம் ஆகி உள்ளது. ஆனால் ஆபாசமான முறையிலும், பிறர் மனம் புண்படும் வகையிலும் எழுதுவது தவறு.\nப்ரோபைல் இல்லாது அத்தகைய கமெண்டுகள் வந்தாலும், சைபர் கிரைமில் பணி புரியும் நண்பர் மூலம் அந்த ஐ.டி கண்டுபிடித்து அவர்கள் மீது போலிஸ் நடவடிக்கை ( கிரிமினல் சட்டப்படி ) எடுக்க முடியும். இதை நான் மட்டுமல்ல பதிவு எழுதும் யாரும் செய்யலாம். எனவே அத்தகைய மோசமான கமெண்டுகளை இங்கு மட்டுமல்ல பிற பதிவுகளிலும் தவிருங்கள்.\nபெயர் தெரியாத ஐ.டி யில் ஒளிந்து கொண்டு இத்தகைய ஆபாச கமெண்டுகள் போடுவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். முடிந்தால் பிறரை சந்தோஷ படுத்துங்கள். கஷ்டபடுத்தாதீர்கள்.\nமோகன் குமார் 6:39:00 AM\nபதிவு வெளி வந்த நாளன்று நண்பர்கள் எழுதிய பிற கமெண்டுகள் ப்ளாகர் ஒரு நாள் மக்கர் பண்ணிய போது காணாமல் போய் விட்டது. பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில் : கமலின் தெளிவான பதில் / அம்மாவின் அமைச்சர...\nவானவில்: சென்னை சூப்பர் கிங்க்ஸ்; பதிவர்கள் பதில்க...\nவானவில்: ஹோம் சுவீட் ஹோம் / வானவில்லில் பதிவர்கள்\n\"யூ ஆர் அப்பாயிண்டட் \" - புத்தக விமர்சனம்\nகல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் \nவானவில்: டிவியில் மேதின சிறப்பு நிகழ்ச்சி -டைம்ஸ் ...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nவேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு பார்வை\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gtamilcinema.in/tag/keerthi-suresh/", "date_download": "2018-05-27T03:26:41Z", "digest": "sha1:KUKIXXINGKFGNFTMIZ26PAOKDAEQP6O2", "length": 11115, "nlines": 159, "source_domain": "www.gtamilcinema.in", "title": "Keerthi suresh Archives - G Tamil News", "raw_content": "\nதூத்துக்குடி துயரம் கருதி சாமி 2 டிரைலர் வெளியீடு தள்ளிவைப்பு\nசமீபத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தோர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காக்கிச் சட்டையில் ரத்தக்கறை பட்ட அந்த நிகழ்வுக்கு அரசியல் மட்டுமல்லாமல் பல துறை சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க வேலைகள் கனஜோராக நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நாளை (26 மே) அன்று படத்தின் டிரைலர் வெளியீடு நடைபெறுவதாக இருந்தது. காக்கிச் சட்டையின் […]\nஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்து ‘நடிகையர் திலகம்’ என்றறியப்பட்ட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு. அவர் வாழ்க்கை முடிந்த எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கும் கதை. அப்போதுதான் பத்திரிகையில் சேர்ந்த சமந்தா, சாவித்ரியின் வாழ்வைக் கட்டுரையாக்கச் செய்யும் ஆய்வில் அப்பாவின் முகம் கூடத் தெரியாமல் அம்மாவின் அரவணைப்பில் ஒரு நடிப்பு விலாசம் பெற சாவித்ரி மேற்கொண்ட போராட்டம், அந்தப் போராடத்துக்குள் ஜெமினி கணேசனுடன் காதல் மலர்ந்து அவரைக் காதல் […]\n12 லட்சம் பார்வைகளைக் கடந்த நடிகையர் திலகம் டீஸர்\nநடிகையர் திலகம் படத்தில் எனக்கு 120 உடைகள் – கீர்த்தி சுரேஷ்\n‘நடிகையர் திலகம்’ என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பட்டப் பெயரிலேயே வைஜெயந்தி மூவீஸ், ஸ்வப்னா சினிமா தயாரிக்கிறது. நாக் அஷ்வின் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாகிறார். அவருடன் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா, பிரகாஷ் ராஜ், மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் அஷ்வின், நடிகை கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, படத்தை […]\nதூத்துக்குடி பலிகளுக்கு மக்கள் நீதி மய்யம் நீதி பெற்றுத்தரும் – கமல்\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\nஎன் காதல் பதட்டத்தைப் போக்கினார் விஜய் ஆண்டனி – காளி அம்ரிதா\nகாலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு\nவிஷாலும் அர்ஜுனும் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்- சமந்தா அக்கினேனி\nதூத்துக்குடி பலிகளுக்கு மக்கள் நீதி மய்யம் நீதி பெற்றுத்தரும் – கமல்\nராஜ் டிவியில் ஒரேநாளில் தொடங்கும் 5 புதிய தொடர்கள்\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nதூத்துக்குடி பலிகளுக்கு மக்கள் நீதி மய்யம் நீதி பெற்றுத்தரும் – கமல்\nராஜ் டிவியில் ஒரேநாளில் தொடங்கும் 5 புதிய தொடர்கள்\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nஇந்தியா வெல்லாமல் போயிருந்தால் துரதிருஷ்டம் – அதிரடி தமிழன் தினேஷ் கார்த்திக்\nயாழ் திரைப்படம் – ஒரு விமர்சனப் பார்வை\n12 லட்சம் பார்வைகளைக் கடந்த நடிகையர் திலகம் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://balavin.wordpress.com/2009/01/", "date_download": "2018-05-27T03:01:35Z", "digest": "sha1:YB2H5DA2QY7EO4PMNNKV6CK2BVYHOYLV", "length": 15272, "nlines": 97, "source_domain": "balavin.wordpress.com", "title": "January | 2009 | அன்பே சிவம்!", "raw_content": "\nதாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை\nநாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தில் அனாதையாக ஒரு உறவுக்கு ஏங்கிக்கொண்டு தான் இருப்பார்கள். அப்படி சிறு வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து அனாதையாக வாழ்ந்து ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தோடு சேரத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதை தான் இந்த திரைப்படம்.\nசர வெடியுடன் அதிரும் மேளத்துடன் ஆரம்பிக்கிறது கதை. கதையின் நாயகன் ஒரு அநாதை. மார்க்கெட்டில் வொர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறான். எதோ ஒரு அரசியல் காரணத்துக்காக அங்கிருக்கும் கடைகளை மூட சொல்லி ரவுடி கள் சில பேர் பொது மக்களை துன்புறுத்த நமது நாயகன் கடைக்குள் வைத்து பூட்ட படுகிறான். ஆனால் அதிரடியாக கதவை வெல்ட் வைத்து வெளியே வந்து ரவுடிகளை துவம்சம் செய்கிறான். மக்கள் அவனை புகழ. சந்தோஷத்தில் கானம் இசைக்கிறான்.\nஇந்த கட்டத்தில் நமது கதையின் நாயகியை சந்திக்கிறான். அவர்களது முதல் சந்திப்பு மோதலில் தொடங்க அவளது தந்தையின் முன்னாலேயே அவளுக்கு அறிவுரை கூறுகிறான். பிறகு தொடர்ச்சியாக இருவருக்கும் சந்தர்பமாக மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவளின் தந்தை செய்யும் ஒரு சூழ்ச்சியின் மறுமொழியாக ஒரு திருமண நிகழ்ச்சியில் ஊரார் முன்னிலையில் தான் அவளை காதலிப்ப தாக கூறுகிறான். பிறகு நடக்கும் சம்பவங்களில் ஒரு கட்டத்தில் அவனது நல்ல மனது புரிந்து கொள்ள அவளும் அவன் மீது காதல் கொள்கிறாள்.\nஇவர்களின் காதல் வளர அவள் தந்தையும் இவர்கள் காதலுக்கு சம்மதிக்கிறான்.அவர்கள் தாய் தந்தையரை அழைத்து வர சொல்கிறான். நாயகியும் அவனிடம் தாய் தந்தையரை அழைத்து வருமாறு கூற அவன் தொடர்ச்சியாக மறுக்கிறான். அவளும் ஒரு கட்டத்தில் நீ ஒரு ஆனாதயா என்று கேட்டு விடுகிறாள். இல்லை என மறுக்கும் அவன் தான் ஏன் ஆனதையாக வாழ்கிறான் என்பதை விவரிக்கிறான்.\nகாட்சி பின்னோக்கி நகர, அவனது சிறு வயதில் தாய் தந்தை அண்ணன் தங்கை அனைவருடனும் சந்தோசமாக வாழ்கிறான், திருவிழாவில் தன் அண்ணன் ஒரு மா பெரும் தவறு செய்கிறான். அதற்காக இவன் தந்தையிடன் ஊரார் முன்னிலையில் அடி வாங்கு கிறான். அவமானம் தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடி வருகிறான். நாயகி இவனது கதையை கேட்டு அவனை ஆறுதல் படுத்தி இவ்வளவு நாட்கள் ஆகி விட்டது.இனி அவமானத்தை மறந்து நீ ஊருக்கு போய் தாய் தந்தையரை பார்க்குமாறு கூறுகிறாள்.\nசம்மதித்த அவனும் தன் சொந்த ஊருக்கு போகிறான். நேராக வீட்டுக்கு செல்கிறான். ஆனால் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சொத்துக்களை அபகரித்து கொண்டு, ஒற்றை சொல்லால் தன் தந்தையின் உயிரை பறித்து, மகாலட்சுமியாக பாவிக்க வேண்டிய தன் தாயை மாட்டு கொட்டகையிலும், தன் அன்பு தங்கையை ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு குடிசை வீட்டிலும் கஷ்டப்பட வைத்து இருக்கிறான் தன் அண்ணன் என்பதை தன் நண்பர்களின் மூலம் அறிகிறான்.\nதனது சொத்தை திரும்ப அடைந்து தனது தாயையும் தங்கையும் பழைய நிலைக்கு கொண்டு வந்த பிறகுதான் தான் யார் என்பதை அவர்களுக்கு தெரிய வைக்க போவதாக நண்பர்களிடம் சூளுரை க்கிறான். இதில் அவன் வெற்றி அடைந்து மீண்டும் தனது குடும்பத்தோடும் காதலியோடும் இணைகிறனா என்பது தான் மீதி கதை.\n2005 ஆம் ஆண்டு வெளியாகி தமிழகம் எங்கும் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சிவகாசி’. இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியவர் வெற்றி பட இயக்குனர் பேரரசு. இவர் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். ஊரின் பெயர்களை தனது திரைப்படங்களின் பெயராக வைப்பது தான் இவரது பாணி. cameo roleகளில் (திரை படத்தின் இயக்குனரோ, ஒரு பிரபலமோ ஒரே ஒரு காட்சியில் தோன்றுவது) நடிப்பதற்கும் இவர் பெயர் போனவர். யாரோ ஹாலிவுட்லில் கூட, ஆல்ப்ரட் ஹிட்ச்காக் க்காம் அவர் கூட இப்படி தான் தோன்றுவாராம்.\nநான் பாட்டுல நிம்மதியா இருந்தேங்க. என் பிரண்டு ஒருத்தன் சும்மா எப்ப பாத்தாலும் உலக சினிமா, உலக சினிமான்னு உயிரை எடுப்பாங்க.. நான் அவன் கம்ப்யூட்டர்ல இந்த DVDய போட்டா…அனாவிசியமா என் சிஸ்டத்துல வைரஸ் எத்தற வேல வெசுக்காதேம்பான்.\nஆனா ஊனா மஜித் மஜிதி, இங்க்மெர் பெர்க்மென், விட்டோரியா டெசிகா, கீஸ்லோவெஸ்கி, அந்திரேய் தர்க்கோயெவ்ஸ்க்கி, ஸ்டேன்லி குப்ரிக், பெட்ரிகோ ஃபெலினி, ரோமன் போலன்ஸ்கி, வால்டர் செலஸ், பெட்ரோ அல்மதோவர், அகிராகுரசோவா, ரோபெடோ பென்கினி, ஜீன் பியேர் ன்னு வாயில நொலயாத டைரக்டருங்க பேரா சொல்லுவான். அப்பறம் மூச்சுக்கு முன்னூறு தடவ ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்க பத்தி பேசுவான், ரெம்ப நாள் அவரு அவங்க தாத்தான்னே நெனச்சேன். நானும் ஒரு நாள் டென்ஷன் ஆகி சரி ரெண்டு படத்த பாத்தர்ரதுன்னு உக்காந்து பாத்தேங்க…\nLadri di biciclette, (Bicycle theives) அப்படின்னு ஒரு இத்தாலிய படம், ஒரு ஏழையாம், சைக்கிள்ல தொலைச்சிர்றானாம் , அப்பனும் மகனும் பஜார்ல ஒரு நா பூர தேட்றானுகலாம் கடைசில சைக்கிளும் கெடைக்கலையாம் . என்னத்த படம் எடுக்கரானுகளோ…\nஅப்புறம் Bacheha-Ye aseman (Children of heaven)ன்னு இன்னொரு இரானிய படம், யாருப்பா அந்தாளு ம்ம், மஜித் மஜிதியாம், இந்தாள் பாருங்க எப்படி படம் எடுதிருக்கான்னு, ஏழை குடும்பமாம், அண்ணன், தங்கச்சியாம். தங்கச்சி shoe வ தெக்க போன அண்ணன் வார வழில தொலைச்சு புட்றானாம், அப்புறம் அவங்க வீட்டுக்கு தெரியாம அத அப்புடியே சமாளிச்சு, ஓட்ட பந்தயத்துல மூணாவது பரிசா ஒரு shoe தராங்கன்னு சொல்லி பல்ல கடிச்சுகிட்டு 10 கிலோ மீட்டர் ஓடி, தெரியாம் இந்த லூசு பைய முதல் பரிசா வேற வாங்கி… படம் எடுக்க தெரியலேன்னா சும்மா இருக்க வேண்டியது தான…கடுப்புகள கெளப்பிகிட்டு…இவங்களுக்கெல்லாம் படம் எடுக்க காசு குடுகறான் பாருங்க அவங்கள சொல்லணும்..\nஆனந்த யாழை மீட்டுகிறாயடி நெஞ்சில்\nமாமா டவ்சர் அவுந்திச்சி ரப ரப ரப ரப ரப ரப ரப்பா\nநான் எங்க எப்பிடி இருக்க வேண்டியவன்\nஉங்களை போன்ற தமிழ் ஆர்வலர்களால் இந்த வலைப்பூ திறக்கப்பட்டது\nநான் எங்க எப்பிடி இருக்க வேண்டியவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://foodsafetynews.wordpress.com/2016/06/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1/", "date_download": "2018-05-27T03:24:01Z", "digest": "sha1:BVJ6L5PDFHWLNNOHJZ2SA5LJOOOIBL5Z", "length": 17629, "nlines": 186, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "விழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > DISTRICT-NEWS, Villupuram\t> விழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை\nவிழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை\nவிழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழக்கடைகளில் ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பழக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், சமரேசன், கதிரவன், முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் எம்.ஜி.சாலை, நேருஜி சாலை, பாகர்ஷா வீதி, திரு.வி.க. வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் உள்ள பழக்கடைகளில் ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா\n5 டன் மாம்பழங்கள் பறிமுதல்\nஅப்போது, செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழங்களை விற்பனை செய்யக்கூடாது என பழக்கடை வியாபாரிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, வண்டிமேடு, பூத்தமேடு பகுதிகளில் உள்ள பழக்குடோன்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.\nஇதில் விழுப்புரம் வண்டிமேடு வள்ளலார் தெருவில் உள்ள ஒரு பழக்குடோனில் இருந்த மாம்பழங்களை சோதனை செய்ததில் ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மாங்காய்களை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்திய 5 கிலோ ரசாயன கற்களையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழங்களை விற்பனை செய்வதால் அதை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும். எனவே இதுபோன்ற மாம்பழங்களை விற்பனை செய்யாதீர்கள். அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கினார்கள்.\nFood business operators asked to obtain licence by August 4 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு: 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது\nபாஸ்ட் புட் கடைகளில் தரமற்ற உணவு பொருள்\nதரமற்ற உணவு பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு நோட்டீஸ்\nதூத்துக்குடியில் 200 கிலோ அழுகிய மாம்பழம் அழிப்பு ; அதிகாரிகள் திடீர் ஆய்வு\nஉணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nதனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nவாழை இலைக்கு மாற்றாக இதர மரங்களின் இல்லை\nகல்லூரி உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nகல்லூரி உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nஉணவு கலப்படத்தை அறிய சிறப்பு முகாம்:சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு\nஉணவு கலப்படத்தை அறிய சிறப்பு முகாம்\nவணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் பலகைகளை வைக்க கலெக்டர் உத்தரவு\nபுகார் தெரிவிக்க புதிய வசதி\nதிருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி பேக்கரி, குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-05-27T03:37:27Z", "digest": "sha1:BGBPPYF2VKZ4KBZKDM2LW62TGEWVV6JA", "length": 12646, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓக்லகோமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஓக்லஹோமாவின் கொடி ஓக்லஹோமா மாநில\n(இலத்தீன்: எல்லாம் தொழிலுக்கு வெற்றி)\nபெரிய நகரம் ஓக்லஹோமா நகரம்\n- மொத்தம் 69,898 சதுர மைல்\n- அகலம் 230 மைல் (370 கிமீ)\n- நீளம் 298 மைல் (480 கிமீ)\n- நெட்டாங்கு 94° 26' மே - 103° மே\n- மக்களடர்த்தி 50.3[1]/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி கருப்பு மேசா[2]\n- சராசரி உயரம் 1,296 அடி (395 மீ)\n- தாழ்ந்த புள்ளி சிறு ஆறு[2]\nஇணைவு நவம்பர் 16, 1907 (46வது)\nஆளுனர் சி. ப்ராட் ஹென்ரி (D)\nசெனட்டர்கள் ஜேம்ஸ் எம். இன்ஹாஃப் (R)\nதாமஸ் ஏ. கோபர்ன் (R)\n- மாநிலத்தின் பெரும்பான்மை நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5\n- கென்டன் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6\nசுருக்கங்கள் OK Okla. US-OK\nஓக்லஹோமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஓக்லஹோமா நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவது மாநிலமாக 1907 இல் இணைந்தது,\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appamonline.com/2018/04/30/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-05-27T03:29:49Z", "digest": "sha1:SILRUW33SRUJ42HFHPG2NWFWOSSVS2YZ", "length": 8841, "nlines": 82, "source_domain": "appamonline.com", "title": "ஆசீர்வதிப்பார்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்” (சங்.115:12).\nகர்த்தர் யார் யாரை ஆசீர்வதிப்பார் இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார் என்று 115-ம் சங்கீதம் 12,13-ம் வசனங்களிலே வாசிக்கிறோம்.\nதேவனோடு ஜெபத்திலே போராடி, வெற்றி பெறுகிறவன்தான் இஸ்ரவேல். ஊக்கமாய் ஜெபிக்கிறவர்களை, கர்த்தர் நிச்சயமாய் ஆசீர்வதிப்பார். இரண்டாவதாக ஆரோன் குடும்பத்தார் என்றால், குடும்பமாக கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள், அவர்களை கர்த்தர் நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார். மூன்றாவதாக, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தால், தீமையை விட்டு விலகி நன்மை செய்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.\nஒருமுறை ஒரு சகோதரி சொன்னார்கள், “ஐயா, முன்பெல்லாம் குடிசை வீட்டில் இருந்தோம். இப்பொழுது இரண்டு மாடி வீட்டை தந்திருக்கிறார். முன்பு எங்களுக்கு பழைய சைக்கிள்தான் இருந்தது. இப்பொழுது புதிய கார் வாங்கியிருக்கிறோம். முன்பு சொறி பிடித்த வங்கு நாய் தான் இருந்தது. இப்பொழுது, இரண்டு அல்சேஷன் நாய் வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டே போனார்கள். அவர்களிடம் பேசிப் பார்த்தபோது, அவர்கள் உலகப் பிரகாரமான ஆசீர்வாதத்தை ருசித்திருக்கிறார்களே தவிர இரட்சிக்கப்படவில்லை.\nபுதிய ஏற்பாட்டிலே மிகச் சிறந்த ஆசீர்வாதம் பாவ மன்னிப்பு, இரட்சிப்பின் சந்தோஷம், நித்திய ஜீவன், தெய்வீக சந்தோஷம், சமாதானம், மனநிறைவு ஆகும். ஆசீர்வாதங்களிலே நான்கு வகை உண்டு. 1) உலகப்பிரகாரமான ஆசீர்வாதம். 2) ஆவிக்குரிய ஆசீர்வாதம். 3) உன்னதத்திற்குரிய ஆசீர்வாதம். 4) நித்தியத்திற்குரிய ஆசீர்வாதம். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே, ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே.1:3).\nஉலகப்பிரகாரமாக நம்முடைய தகப்பன்மார், முற்பிதாக்கள் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்களும் உண்டு. சாத்தான் காண்பிக்கிற போலியான ஆசீர்வாதங்களும் உண்டு. ஆனால் அதே நேரம், கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதங்களும் உண்டு. அதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சில சொத்துக்களை முற்பிதாக்கள் தவறான வழியில் சம்பாதித்திருப்பார்களானால், சொத்துக்களோடு சாபங்களும் வந்துவிடும். நிலபுலன்கள் இருக்குமே தவிர, அதை அனுபவிக்கிற சக்தி இருக்காது.\nஅதுபோல சாத்தான் சில ஆசீர்வாதங்களைக் காட்டக்கூடும். குதிரை ரேசில் ஜெயித்து பணத்தைக் கொண்டு வரக்கூடும். லாட்டரி டிக்கெட் மூலமாக செல்வங்களைக் கொண்டு வரக்கூடும். லஞ்சம் வாங்குதல், குறுக்கு வழிக்குச் செல்லுதல், முதலிலே பணம் ஈட்டினாலும், முடிவிலே நிம்மதி இருப்பதில்லை. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைந்து சமாதானத்தைக் கெடுத்துவிடக்கூடும். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் மேன்மை என்ன வேதம் சொல்லுகிறது, “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதி. 10:22).\nநினைவிற்கு:- “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்” (ஆதி.12:2,3).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/158368", "date_download": "2018-05-27T03:39:46Z", "digest": "sha1:IQQF27XDEJGKOHBT4TG6KKUH6RRJC3XJ", "length": 4741, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "770 மில்லியன் டாலர் நிலுவை: இந்தியா மீது நிசான் வழக்கு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் 770 மில்லியன் டாலர் நிலுவை: இந்தியா மீது நிசான் வழக்கு\n770 மில்லியன் டாலர் நிலுவை: இந்தியா மீது நிசான் வழக்கு\nடோக்கியோ – ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் மோட்டார், இந்தியாவிற்கு எதிராக அனைத்துலக நடுவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.\nஇந்தியா இன்னும் 770 மில்லியன் டாலர் சலுகைத் தொகையைச் செலுத்தவில்லை என்று கூறி, நிசான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ரைட்டர்ஸ் செய்தி கூறுகின்றது.\nPrevious articleஅமெரிக்காவில் சுறா தாக்கி பிரபல இந்திய வம்சாவளிப் பெண் மரணம்\nNext articleஆர்.கே.நகர்: விஷால், ஜெ.தீபா வேட்பு மனுத் தாக்கல்\nமகாதீரின் முதல் வெளிநாட்டுப் பயணம் ஜப்பான் நாட்டுக்கு\nஜப்பானில் பொங்கல் விழா – தமிழ்ச் சங்கம் கொண்டாடியது\nவாழைப்பழத் தோலையும் சுவையாக்கிய ஜப்பான்\nஸ்டார் பத்திரிக்கை – பினாங்கு அச்சக வசதிகளை மூடுகிறது\n“ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்\nமைபிபிபி இரண்டாகப் பிளவுபட்டது – 2 தேசியத் தலைவர்கள்\nஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)\nஅருள் கந்தா மீது கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/152870-2017-11-16-09-37-50.html", "date_download": "2018-05-27T03:20:20Z", "digest": "sha1:T4PZF7YI2PVUDSB32FPPG5EIMWFZ334S", "length": 14645, "nlines": 74, "source_domain": "viduthalai.in", "title": "இளைஞர்களுக்கான இனிப்பும் - கசப்பும்!", "raw_content": "\nமோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட வீதி வீதியாக சென்று விளக்கவேண்டும் » 4 ஆண்டு பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகளா - வேதனைகளா 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் செயல்பாடுகள் சாதனைகள் அல்ல - ...\nசாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகாதே தமிழா » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை சென்னை, மே 25 தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்ப...\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\nஞாயிறு, 27 மே 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»இளைஞர்களுக்கான இனிப்பும் - கசப்பும்\nஇளைஞர்களுக்கான இனிப்பும் - கசப்பும்\nவியாழன், 16 நவம்பர் 2017 14:59\nநேற்று (15.11.2017) உலக நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதைத் தடுக்கும் நாளாகும்.\nஇந்தியா உலகத்தின் நீரிழிவு நோயின் தலைமை நாடு என்பதோ, தமிழ்நாடும் இதில் முன்னணி பங்கு வகிக்கிறது என்பதோ பெருமைப்படத்தக்கதா வேதனையுடன் கூடிய பதில் இல்லை என்பதே\nநான் ஏற்கெனவே பல முறை இப்பகுதியில் எழுதியுள்ளதைப் போன்று, இந்த நோய் - சர்க்கரை நோய், ஒரு முறை நமக்குள் படையெடுத்து இடம் பிடித்து விட்டால், பிறகு என்ன செய்தாலும் அதை முழுவதும் விரட்டி அடித்து விடவோ, ஓட்டி விடவோ முடியாது - இன்று வரை, நாளை எப்படியோ\nவயது முதிர்ந்தவர்களை மட்டுமே தாக்கி, படை யெடுத்து ஆக்கிரமித்துக் கொண்ட இந்த ஆட் கொல்லி - மெல்ல மெல்ல பல உறுப்புகளைப் பழுதாக்கி தாக்கிக் கொல்லும் நோய் இந்நோய் ஆகும் அதனால் தான் டாக்டர்கள் இதை ஒரு சந்திப்பு நிலைய நோய் (Junction Disease) என்று பொருத்தமாக வர்ணிக்கிறார்கள் போலும்\n இந்த சந்திப்புத் தொடர் வண்டி நிலையத் திலிருந்து பல தொடர் வண்டிகள் புறப்படுவது போல, அதன் தாக்குதல் கண்களை நோக்கி இருக்கும். விழித்திரைகளைப் பாதித்து, குளுக்கோமா என்பதன் மூலம் படிப்படியாக பார்வையை இழக்கும் தண் டனையை - அது நமக்கு அளிக்கும் (இத்தண்டனைக்கு மேல் முறையீடு - அப்பீல்கள் - கிடையாது என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்\nகால் விரல்கள் - புண்கள், பிறகு 'கேங்கரின்' மூலம் கால்களையோ, விரல்களையோ வெட்டி விடும் நிலை.\nஇதய நோய் அதிகமாகி முக்கியமாக நம்மை மரணபுரியை நோக்கி அழைத்துச் செல்லும்; சாவின் சாகாத தூதுவன் ஆகவும் இருக்கும்.\n'ஸ்ட்ரோக் (Stroke) என்ற பக்கவாத நோயையும் அளிக்கும் கொடுமையை இந்நோய் அளிக்கலாம்\nஇவை உங்களை பயமுறுத்த அல்ல. தக்கப் பாதுகாப்புடன் - வருமுன்னர் காத்து நீங்கள் - ஏன் நாம் - வாழ வேண்டும் என்பதற்காக\nதடுத்துக் கொள்ள - அடிக்கடி ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை உடற்பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\n\"முதியோர்கள் - அல்லது 70, 80 வயது தாண்டிய முதுகுடி மக்கள்தான் இப்படிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - நாங்கள் இளைஞர்கள், வாலி பர்கள் தானே நாங்கள் எதைச் சாப்பிட்டாலும் செரிமானம் ஆகக் கூடிய வயதுதானே\" என்ற அலட்சிய பதிலைக் கூறாதீர்கள், இளைஞர்களே\nஇக்காலத்தில் உங்கள் வயதினரும் அதிகம் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் பழுதடைந்து வாழ்நாளின் பல்வேறு வாய்ப்புகள், இன்பத் துய்ப்புகளைக்கூட இழந்திடும் பரிதாப நிலை ஏற்பட்டு விடும்.\nமருத்துவச் செலவை பின்பு பல்லாயிரக்கணக்கில் செய்து, வேதனையை, வலியை, இழப்பை அனுப விப்பதற்குப் பதில் 'வருமுன்னர் காத்தல்' அறி வுடைமை அல்லவா\nஇளைஞர்கள் பலரும் நம் வீடுகளில் கவலை யோடும், பொறுப்போடும் சமைக்கும் நம் அம்மாக் களின் உணவை அலட்சியப்படுத்தி விட்டு, வெளி நாட்டு உணவகங்களின் - வேக உணவுகளை (Fast Food) தின்பது, Coke - கொக்கோகோலா மற்றும் சுவையூட்டப்பட்ட போத்தல் குடிநீர்களை - அவை களின் தற்காலிக சுவைக்காக, நிரந்தர உடல் வலிமையை விலைபேசி வீணாவதைப்பற்றிக் கவலைப்பட மறுக்கின்றனரே\nஎப்போதோ ஒரு முறை சாப்பிடுவதை நாம் தடுக்கவில்லை; அன்றாடம் - அனுதினமும் இந்த வெளிநாட்டு வேக உணவுகளைக் கொண்டு வயிற்றை நிரப்புவது - பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா என்று மைதா என்ற உடல் நலனைப் பாழ்படுத்தும் வகையறாக்களை உண்ணும் வாடிக்கை என்றால் அதன் விளைவு வருங்காலத்தில் 'தீராத நோயாக' நமக்குத் திரும்பி வந்தே தீரும்\nஎனவே உணவால் எச்சரிக்கை, நாக்குக்கும், மூளைக்கும் (ஏன் பற்பல நேரங்களில் வயிற்றுக்கும் கூட) ஏற்படும் மனப் போராட்டத்தில் நாக்கு(ச்சுவை)தான் வெற்றி பெறும் தற்காலிகமாக\n'இறுதிச் சிரிப்பு' போல இறுதி வெற்றி மூளைக் குத்தான் நண்பர்களே, மறவாதீர் காலந்தாழ்ந்து உணர்ந்து, வருந்தி என்ன பயன்\nஎனவே உணவில் மிகுந்த கவனத்துடன். கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, வளமை என்பது பணம் சம்பாதிப்பதில்லை; நோயற்ற வாழ்வில்தான் உள்ளது என்ற 'குறைவற்ற செல்வம்' அதுவே என்பதை உணருங்கள்\nஇனிப்புச் சுவையை எப்போதும் தள்ளிட வேண்டாம் - அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளாமல் உடல் நலம் பேணுங்கள்\n-கி வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2017/10/05/9%E2%80%8B%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-05-27T03:33:45Z", "digest": "sha1:NDCDI7CS2EVBJBZSYJ66SXUPWIFVWGHK", "length": 6753, "nlines": 183, "source_domain": "sathyanandhan.com", "title": "எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா – பகுதி -6 →\nஎனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில்\nPosted on October 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில் bangalorereview\nஎன்னும் இணைய இதழில் தோல் பை ‘ சிறுகதை வெளியாகி உள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தக் கதை இன்றும் நவீனத்தின் நுட்பத்துக்கு ஒரு உதாரணமான கதை. புதிதாய் எழுத வருவோருக்கு சாத்தியங்கள் பற்றிய ஒரு சாளரத்தைத் திறப்பது. முதன் முதலாய் இதை வெளியிட்ட கனவு இதழுக்கும் , அன்புடன் மொழிபெயர்த்த தோழி ஜெயந்தி சங்கருக்கும் மற்றும் இணைய இதழுக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in சிறுகதை and tagged கனவு, சிறு கதை, ஜெயந்தி சங்கர், தோல் பை, மொழிபெயர்ப்பு. Bookmark the permalink.\n(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா – பகுதி -6 →\nவாழ்க்கையின் ரகசியம் – 7\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\nவேகநரி on வாங்க வம்பளப்போம் – திரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/srilanka/04/161241", "date_download": "2018-05-27T03:14:24Z", "digest": "sha1:4JBVVSTGPPIAZLSK3OUUCWEXXZMLK7PZ", "length": 6939, "nlines": 81, "source_domain": "canadamirror.com", "title": "தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nதேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம்\nஉள்ளுராட்சித் தேர்தல் முறைப்பாடுகளை ஏற்பதற்காக தேசிய முறைப்பாட்டு விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇந்த முறைப்பாட்டு விசாரணை நிலையம் இள்றுக் காலை 6 மணி தொடக்கம் இயங்கும். இன்று சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளையும் கருத்துக்களையும் விசாரித்தறிந்து உரிய நடவடிக்கை எடுப்பது நிலையத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு மாகாணங்களுக்காகவும் பிரத்தியேக தொலைபேசி மற்றும் தொலைநகல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\n2018.02.10 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உள்ள10ர் அதிகார சபைகள் வாக்கெடுப்பு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டிய முறைப்பாடுகள் அல்லது கண்காணிப்புக்கள் இருப்பின் அது தொடர்பாக செயற்படுவதற்கு தேர்தல்கள் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் வாக்கெடுப்பு தினத்தன்று காலை 6.00 மணியிலிருந்து செயற்படுமெனவும்இ முறைப்பாடுகளை அல்லது கண்காணிப்புக்களை சமர்ப்பிப்பதற்கு கீழே காட்டப்பட்டுள்ள தொலைநகல் இலக்கங்களும்இ தொலைபேசி இலக்கங்களும் அதற்;காக குறித்தொதுக்கப்பட்டுள்ளதென இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.\nமாகாணம் தொலைபேசி இலக்கம் தோலைநகல் இலக்கம்\nசப்பிரகமுவ மாகாணம் 011-2866498 011-2866428\nமேலதிக தொலைபேசி இலக்கம் - 011-2866529 தொலைநகல் இலக்கம் - 011-2866446\nதொலைபேசி இலக்கம் தொலைநகல் இலக்கம்\n2018 பெப்ரவரி 08 ஆந் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ibctamil.com/srilanka/80/100598", "date_download": "2018-05-27T03:18:19Z", "digest": "sha1:IOWBE2FBASJ7J45U2W464O3KPTUIQUGQ", "length": 10666, "nlines": 100, "source_domain": "ibctamil.com", "title": "பெருதோட்டத் துறையில் சுகாதார வசதிகளுக்கு முக்கியத்துவம்: அமைச்சர் ராஜித சேனாரத்ன! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nபெருதோட்டத் துறையில் சுகாதார வசதிகளுக்கு முக்கியத்துவம்: அமைச்சர் ராஜித சேனாரத்ன\nஸ்ரீலங்காவின் பெருந்தோட்டத்துறையிலுள்ள மக்களின் சுகாதார வசதிகளை முக்கியப்படுத்தி மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தினை இங்கு தருகிறோம்.\nபெருந்தோட்டத் துறையில் 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த துறையின் மனதவள சக்தியில் 90 சதவீதமானவர்கள் பெண்களாவர். இந்த பிரதேசத்தில் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மர்களின் போசாக்கு நிலை நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகiயில் மிகவும் தளர்வு மட்டத்தில் காணப்படுகின்றது.\nஇதனால் தோட்டத்துறையில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கி அதற்கான தேவைகளை வழங்க அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது தோட்டத்துறையில் தோட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்கள் என்ற ரீதியில் 450 நிலையங்கள் தோட்டமுகாமையாளர்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இந்த மருந்தகங்களை மேம்படுத்துவதன் மூலம் தோட்ட மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக நாட்டில் ஏனைய கிராம மற்றும் நகர்ப்பிரதேசங்களில் பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சுகாதார வசதிகளை இந்த மக்களும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்காக தோட்டப்பிரதேசத்தில் உள்ள பொதுகமக்களுக்கு இடம்வழங்கும் வகையில் தோட்ட சுகாதாரகட்டமைப்பை அரசாங்கத்தின் சுகாதார கட்டமைப்புடன் ஒன்றிணைப்பதற்கும் இதன் கீழ் தற்பொழுது தோட்ட முகாமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து தோட்ட சுகாதார நிறுவனங்கள் கட்டம் கட்டமாக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது.\nஇதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=31662967b251af018ae18084a89d842b", "date_download": "2018-05-27T03:33:28Z", "digest": "sha1:OMMXBUGO5WBFBANFPVDHYGTQ76AJWLHU", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2010/12/blog-post_03.html", "date_download": "2018-05-27T03:14:06Z", "digest": "sha1:LTGRKUMSHRAVM2QQJUF6JYNM6JCHF5F4", "length": 24407, "nlines": 250, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": திருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nதிருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)\nதிருக்குறள் ஒண்ணும் புரிஞ்சுக்க கஷ்டமான மொழி நடையில நம்ம தலைவர் திருவள்ளுவர் எழுதல. ரொம்ப ஈசியாதான் எழுதி இருக்கிறார். கொஞ்சம் முயற்சி செஞ்சு ஆர்வத்துடன் கவனிச்சா, ஒரே தடவையில அர்த்தம் பதிஞ்சு போகுது. இந்த தளத்துல நிறைய பெரியவர்கள் இதுவரை கொடுத்துள்ள அளவுக்கு திருக்குறள் விளக்கம் எதிர்பார்க்காதீங்க. ஒரு சாதாரண ஆளா, சாதாரண முறையில என் சிற்றறிவு புரிஞ்சுகிட்ட விதத்தில விளக்கம் குடுக்கறேன். முடிஞ்சவரைக்கும் விரிவா இல்லாம, சுருக்கமா தர முயற்சிக்கறேன். உங்களுக்கும் எளிதா புரியும்.\n1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஅதாவது: கடவுள் தான் எல்லாத்துக்கும் அடிப்படை\n2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்\nஅதாவது: கடவுளை கும்பிடாட்டி படிச்சும் வேஸ்ட்டு\n3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nஅதாவது: கடவுளை நினைச்சுட்டே இருந்தா சாகாம ரொம்ப நாள் என்ஜாய் பண்ணலாம்.\n4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு\nஅதாவது: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளை சேர்ந்தா No Problem at all.\n5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nஅதாவது: கடவுளை உண்மையா விரும்பினா பாவம் புண்ணியம் எல்லாம் பிரச்சனை இல்ல\n6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nஅதாவது: கண்டதையும் பண்ணாம கண்டிப்போட இருந்தா 'கன்' மாதிரி இருக்கலாம்.\n7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅதாவது: கடவுள்கிட்ட சரணாகதி அடையாதவங்க கவலை பட்டுகிட்டேதான் இருப்பாங்க\n8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅதாவது: கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான். ஆனா கைவிட்ருவான்\n9. கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான்\nஅதாவது: 'தல' யை (கடவுளை) வணங்காட்டி தலையே வேஸ்டு\n10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஅதாவது: ஆண்டவனையே நினைச்சா அடுத்த பிறவியே கிடையாது.\n11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nஅதாவது: மழை தான் அமிர்தம்\n12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nஅதாவது: மழை தான் உணவு\n13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஉள் நின்று உடற்றும் பசி\nஅதாவது: மழை மட்டும் இல்லாட்டி பசி நம்மள வாட்டிடும்\n14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்\nஅதாவது: மழை பெய்யாதுனா உழவர் உழ மாட்டார்\n15. கேடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஅதாவது: கெடுப்பது - கொடுப்பது ரெண்டுமே மழை தான்.\n16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nஅதாவது: மழை இல்லாட்டி ஓரறிவுள்ள புல்கூட முளைக்காது.\n17.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nஅதாவது: மழை இல்லாட்டி கடலும் வத்திடும்\n18.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nஅதாவது: மழை இல்லாட்டி தேவர்களுக்கு பூஜையும் கிடையாது, ஒண்ணும் கிடையாது...\n19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nஅதாவது: மழை இல்லாட்டி மத்தவங்களுக்கான தானமும், தனக்கான தவமும் செய்ய முடியாது.\n20. நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nஅதாவது: தண்ணி இல்லாட்டி எப்படி உலகம் இல்லையோ அதே போல மழை இல்லாட்டி யாரும் ஒழுக்கமா இருக்க முடியாது.\n21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nஅதாவது: பற்றில்லாதவங்கள பெருமையா சொல்றதே நூல்களுக்கு துணிவு.\n22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nஅதாவது: பற்றில்லாதவங்கள பெருமையோட எண்ணிக்கையும் இதுவரை பிறந்து இறந்தவங்க எண்ணிக்கையும் சமம்\n23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nஅதாவது: ஆராய்ந்து தெளிந்து அறத்தை மேற்கொண்டால் பெருமை.\n24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஅதாவது: ஐம்புலன்களை அறிவால அடக்கினவன் வீடுங்கற உலகத்துக்கு விதை போன்றவன்\n(Sorry Friends. இந்த குறளை என் ஸ்டைல்ல சுருக்கமா விளக்க முடியல. )\n25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nஅதாவது: ஐம்புலன்களை அடக்கினவனுக்கு உதாரணம் இந்திரன் தான்\n26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nஅதாவது: முடியாததை முடிச்சு காட்டுறவன் தான் பிஸ்தா\n27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்\nஅதாவது: ஐந்து புலன்களின் வேலையின் வகையை அறிந்தவனிடம் உலகம் உள்ளது.\n28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nஅதாவது: ஒருத்தரோட வாக்கின் பெருமைய அவங்க சொல்லிட்டு போன வார்த்தைகளே காட்டிடும்\n29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nஅதாவது: நல்ல குணத்தை எல்லாம் மலை மாதிரி வெச்சிருக்கற நல்லவன் ஒரு செகண்ட் கோபப்பட்டாலும் கோபப்படுத்தினவன் முடிஞ்சான்\n30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nஅதாவது: எல்லோர்கிட்டயும் அருளோட இருக்கறவன்தான் அந்தணன் (ஐயர் as well as Higher)\n31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஅதாவது: சிறப்பும் செல்வமும் கிடைக்க அறவழியே நல்லது.\n32.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nஅதாவது: அறம் தான் top. அதை மறந்தா flop\n33.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெல்லும்வா எல்லாஞ் செயல்அதாவது: விடாமல் அறச்செயலை செய்யணும்\n34.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்\nஅதாவது: அப்பழுக்கில்லாத அறத்தை பின்பற்றுபவனே அறன். மத்ததெல்லாம் வெறும் ஆரவாரம்\n35.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஅதாவது: அறம்னா வேற ஒண்ணும் இல்ல, பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இது நாலும் இல்லாம இருக்கறது தான்.\n36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nஅதாவது: வயசுப்பசங்களா இருக்கறப்பவே அற வழில போங்க. வயசான காலத்துல பார்த்துக்கலாம்னு விட்ராதீங்க.\n37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிபை\nஅதாவது: பல்லக்குல போறவனுக்கும், பல்லக்கு தூக்கறவனுக்கும் அறத்தின் பயனை விளக்காதீங்க. ஏன்னா, அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறதுதான் அறம்\n38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nஅதாவது: தினமும் செய்யும் அறம், அடுத்தடுத்த பிறவி வருவதை அடைக்கும் கல்லாகும்\n39. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்\nபுறத்த புகழும் இலஅதாவது: அறவழியில வர்றது தான் ஒரிஜினல் புகழ். ஒரிஜினல் இன்பம்.\n40. செயற்பால தோறும் அறனே ஒருவற்கு\nஅதாவது: எவ்வளவு முடியுமோ அவ்ளோ முயற்சி பண்ணி அறம் செஞ்சுக்கோ. அதே சமயம் பழி வராம காத்துக்கோ.\n41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nஅதாவது: குடும்பஸ்தன்னு யார சொல்வாங்க அவன மையமா வெச்சு வாழும் பெற்றோர், மனைவி, குழந்தைக்கு துணையா இருக்கறவனை தான்.\n43.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nஅதாவது: முன்னோர்களையும், தெய்வத்தையும் , விருந்தாளிங்களையும், சொந்தக்காரங்களையும் கூடவே தன்னை தானும் அறநெறி தவறாமல் போற்றுவது இல்லறத்தானின் சிறந்த கடமை.\n44.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅதாவது:சமுதாயத்துக்கு அஞ்சி நியாயமா வாழ்ந்தா குடும்ப வாழ்வில குறைவு இருக்காது.\n45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது: குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\n(இந்த போஸ்ட் வாரத்துக்கு ஒரு முறை குறளுக்கு விளக்கம் எழுதும்போது update ஆகிக்கிட்டே இருக்கும். )\nகடவுளை நினைச்சுட்டே இருந்தா ரொம்ப நாள் என்ஜாய் பண்ணலாம்.//////\nஉங்கள் ஸ்டைலும் நல்லா தாங்க இருக்கு\nஇருங்க இருங்க வள்ளுவரை கூட்டிட்டு வந்து கேஸ் போடுறேன்\nஇது போதுமே எதுக்கு வழ வழா கொழ கொழா\nநல்ல விளக்கம் .ரொம்ப அருமை .பட்டவோன்ன பத்திக்கிற பாணி . பொருளையும் அதோட சின்னதா விளக்கி இருந்தால் தேசிய அவோர்ட தூக்கி தரலாம்.யெஸ் கொனுட்டையா \nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nதமிழ்மண விருதில் ஒரு சுயேட்சைக்கு டெபாசிட் கிடைச்ச...\nபல்கலைக்கழக தேர்வில் ஜெயிப்பது எப்படி\nநீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்\nஏ டண்டணக்கா.... ஏ டணக்குணக்கா...\nஏற்கனவே அழகா இருக்கறவங்க இதை படிக்க வேண்டாம்.\nதிருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)\nபதிவர் சாதாரணமானவள் கோர்ட்டுக்குப் போனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/index.php?page=2", "date_download": "2018-05-27T03:28:34Z", "digest": "sha1:ULAV4AKW4JX5PAN2MIAT6DK5BVJPZEAF", "length": 4068, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "வலைபதிவில் தமிழை செயல்படுத்தி / பயன்படுத்துவது எப்படி? « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nவலைபதிவில் தமிழை செயல்படுத்தி / பயன்படுத்துவது எப்படி\nஆங்கிலத்தில் பதிவு எழுதுவதென்றால் நேரடியாக தட்டச்சு செய்து அப்படியே பதிவேற்றிவிடலாம். ஆனால் தமிழ் தட்டச்சு சிறிது சிரமமாகவே இருக்கும், தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் அதற்க்கு தேவையான Font install செய்து உபயோகிப்பார்கள்.\n1\tதிருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி\n1\tதிருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்\n1\tதிருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\n1\tதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 229\n1\tதிருக்குறள் கதைகள்: 166. பிரியாவின் குறை\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி\nதிருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்\nதிருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை\nதிருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\nதிருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/153877----60-----.html", "date_download": "2018-05-27T03:22:47Z", "digest": "sha1:BC67RCLRHUAM73BE7KRYQIOGTSG2QSTU", "length": 14469, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "ஜாதி ஒழிப்புப் போராட்ட 60ஆம் ஆண்டு நினைவு - நிகழ்வு விளக்கக் கூட்டம்", "raw_content": "\nமோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட வீதி வீதியாக சென்று விளக்கவேண்டும் » 4 ஆண்டு பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகளா - வேதனைகளா 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் செயல்பாடுகள் சாதனைகள் அல்ல - ...\nசாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகாதே தமிழா » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை சென்னை, மே 25 தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்ப...\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\nஞாயிறு, 27 மே 2018\nஜாதி ஒழிப்புப் போராட்ட 60ஆம் ஆண்டு நினைவு - நிகழ்வு விளக்கக் கூட்டம்\nசெவ்வாய், 05 டிசம்பர் 2017 15:38\nமேட்டுப்பாளையம், டிச.5- ஜாதி ஒழிப்புப் போராட்ட 60ஆம் ஆண்டு நினைவு -- நிகழ்வு விளக்கக் கூட்டம் நடந்தேறி யது.\nஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட் டத்தை கொளுத்தும், ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அறிவித்ததையொட்டி கழகத் தோழர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை கொளுத்தினார்கள்\nஅதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு 6 மாதங்கள் முதல் 3ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் விளைவாக சிறையிலும், சிறை யிலிருந்து வெளியே வந்த பின்பும் 18 பேர் மறைவுற்றனர். இந்த ஜாதி ஒழிப்புப் போராட் டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு- நினைவு நிகழ்வாகவும், இப் போராட்டத்தில் ஜாதியை ஒழித்திட, தன் இன்னுயிரை யும் இழந்த கருஞ்சட்டை தோழர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் \"சிறப்புக்கூட்டம்\" மேட்டுப் பாளையம் கழக மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் 26.11.2017 ஞாயிற்றுக் கிழமை இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையம் அன்ன பூர்ணா உணவக அரங்கில் கொள்கை வீச்சோடு நடந்தது.\nஇக்கூட்டத்திற்கு மேட்டுப் பாளையம் கழக மாவட்ட திராவிடர் மாணவர் கழகத் தலைவர் ரா.அறிவுமணி தலைமை தாங்கினார். கோவை மண்டல கழக மாணவரணிச் செயலாளர் ரா.சி.பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.\nநிகழ்வில் சிறப்போடு பங்கேற்ற திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் உரை யாற்றியதாவது: உலக வரலாற் றிலேயே இன இழிவை ஒழிக்க பத்தாயிரம் பேர் பங்கேற்ற ஒரு போராட்டம் உண்டு என்றால்... அது ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட் டத்தை கொளுத்த தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து நடத்திய சட்ட எரிப்புப் போராட்டமே யாகும் அந்த போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியாக வும், போராட்டத்தில் சிறை சென்று மறைவுற்ற கழகத் தோழர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் இந் நிகழ்வு நடைபெற்றுக் கொண் டிருக்கிறது என்று உரையாற் றினார்.\nதமிழன் மீது தொடுக்கப்பட்ட போர்\nகூட்டத்தில் கலந்து கொண்டு \"தமிழன் மீது தொடுக்கப்பட்ட போர்\" என்ற தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.\nமேட்டுப்பாளையம் கழக மாவட்டத் தலைவர் சு.வேலுச் சாமி, செயலாளர் அர.வெள் ளியங்கிரி, அமைப்பாளர் செல் வராஜ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப்பையன், கோவை மாவட் டத் தலைவர் சிற்றரசு, செய லாளர் தி.க.செந்தில்நாதன், மாநில கழக மாணவரணி துணைச் செயலாளர் ஆ.பிரபாகரன், கோவை மண்டல மாணவரணிச் செயலாளர் ரா.சி.பிரபாகரன், கோவை மண்டல இளைஞரணிச் செய லாளர் வெள்ளகோவில் ச.மணிகண்டன், மேட்டுப்பாளை யம் மாவட்டபகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.வீரமணி, செயலாளர் திருவள்ளுவர், பகுத்தறிவாளர் ரா.ரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகரக் கழகத் தலைவர் சந்திரன், செய லாளர் கோ.அர.பழனிச்சாமி, மேட்டுப்பாளையம் கழக மாவட்ட முன்னாள் தலைவர் பா.பாலசுப்பிரமணி, காரமடை ஒன்றியப் பொறுப்பாளர் ஏ.எம்.ராஜா, கோவை மாவட்டக் கழக இளைஞர ணியைச் சார்ந்த பிரபு, விவேக், கோவை மாவட்ட மாணவ ரணித் தலைவர் சக்தி பழனி யப்பன், அமைப்பாளர் விஜ யன், கோவை ராகுல், பிரதீப் மேட்டுப்பாளயம் நகர திரா விடர் மாணவர் கழக அமைப் பாளர் செ.அன்பரசு, நகரக் கழக இளைஞரணித் தலைவர் நந்தகுமார், செயலாளர் சிவக் குமார், திராவிடர் மாணவர் கழகத்தின் வேல்ஸ்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி அமைப் பாளர் கவின், புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைவர் ரா.அன்புமதி, செய லாளர் வீரமணி, காரமடை வெள்ளியங்காடு அரசு மேல் நிலைப் பள்ளி அமைப்பாளர் பிரபாகரன் அன்னூர் தமிழ் மணி, சுரேஷ் அம்பேத்கர், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த ராமசாமி, பெரியசாமி உள்ளிட்டகழகத் தோழர்களும் கழக ஆதரவாளர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப் பித்தனர். திராவிடர் மாணவர் கழகத்தின் மேட்டுப்பாளையம் கழக மாவட்டச் செயலாளர் விக்னேஷ் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_433.html", "date_download": "2018-05-27T03:35:18Z", "digest": "sha1:V56GQ25NQDBOM2IZMLPJNJA5INJNOQ6H", "length": 41078, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களின் அச்சத்தை, அரசாங்கம் போக்குமா..?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களின் அச்சத்தை, அரசாங்கம் போக்குமா..\nகாலியின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இன­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தென் மாகாண முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மன்றி முழு இலங்கை முஸ்­லிம்­க­ளையும் அதிர்ச்­சி­யிலும் அச்­சத்­திலும் ஆழ்த்­தி­யுள்­ளது.\nகடந்த 13 ஆம் திகதி இடம்­பெற்ற வீதி விபத்துச் சம்­பவம் ஒன்றை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­க­லா­கவும் மோத­லா­கவும் மாற்­று­ம­ள­வுக்கு இரு தரப்­பிலும் தவ­றுகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன.\nஇரு சமூ­கங்­க­ளையும் சேர்ந்த பொறுப்­பு­ணர்ச்­சி­யற்ற இளை­ஞர்கள் சிலர் தமக்­கி­டையில் முரண்­பட்டுக் கொண்­ட­மை­யா­னது, இப் பகு­தியில் இன­வா­தத்தைத் தூண்டி முஸ்­லிம்­களைக் கரு­வ­றுக்கத் தருணம் பார்த்­தி­ருந்த சக்­தி­க­ளுக்கு வாய்ப்­பினை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளது என்­பதே கசப்­பா­யினும் உண்­மை­யாகும்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்­க­மவில் இடம்­பெற்ற பாரிய வன்­மு­றை­க­ளுக்கு அடுத்­த­தாக இடம்­பெற்ற குறிப்­பி­டத்­தக்க வன்­முறைச் சம்­ப­வ­மாக 2017.11.17 அன்று காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.\nஎவ்­வாறு அளுத்­க­மவில் பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க அளுத்­க­மவில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­ட­னவோ, அதே­போன்­றுதான் கிந்­தோட்­டை­யிலும் பொலிசார் மற்றும் விசேட அதி­ரடிப் படை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் இன­வா­திகள் தமது கைவ­ரி­சையைக் காட்­டி­யுள்­ளனர்.\nஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் படை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டது போன்று, கிந்­தோட்­டை­யிலும் பாது­காப்பு படை­யி­னரின் பிர­சன்னம் திட்­ட­மிட்டு குறைக்­கப்­பட்டே இத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதற்­கான சாட்­சி­யாக அப் பகுதி வாழ் முஸ்லிம் மக்கள் உள்­ளனர். அப்­ப­டி­யானால் பதற்­றமும் அச்­சமும் நில­விய அப் பகு­தி­யி­லி­ருந்து முன்­ன­றி­வித்­த­லின்றி பாது­காப்பை விலக்­கு­வ­தற்­கான உத்­த­ரவை வழங்­கி­யது யார் அர­சி­யல்­வா­தி­களா அல்­லது பாது­காப்பு அதி­கா­ரி­களா என்­பது கண்­ட­றி­யப்­பட வேண்டும்.\nகடந்த அர­சாங்­கத்தில் அர­சி­யல்­வா­தி­களும் பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­களும் இன­வாதக் கண்­ணோட்­டத்தில் நடந்து கொண்­டதன் கார­ண­மா­கவே இலங்கை வாழ் முஸ்­லிம்கள் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டுக்கு அனுப்­பினர். அது­மாத்­தி­ர­மன்றி தற்­போதை ஆட்­சி­யா­ளர்கள் தேர்­தல்­களில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நம்­பியே முஸ்­லிம்கள் நல்­லாட்சி அர­சொன்றை தாபிக்க வாக்­க­ளித்­தனர்.\nதுர­திஷ்­ட­வ­ச­மாக இந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்­திலும் இவ்­வா­றா­ன­தொரு கறை படிந்த சம்­பவம் தென் மாகாண முஸ்லிம் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இதன் மூலம் எந்­த­வொரு அர­சாங்­கத்­தி­னாலும் முஸ்­லிம்­க­ளின பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் வழங்க முடி­யாது எனும் அவ­நம்­பிக்­கையும் அச்­சமும் முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது. கிந்­தோட்டை பிர­தே­சத்­திற்கு கடந்த சில தினங்­க­ளாக விஜயம் செய்த பிர­தமர் உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­க­ளிடம் முஸ்­லிம்கள் இந்தக் கருத்­தையே திரும்பத் திரும்ப வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.\nஎன­வேதான் தற்­போ­தைய அர­சாங்கம் அர­சி­யல்­வா­திகள் மத்­தி­யிலும் பாது­காப்பு தரப்­பினர் மத்தியிலும் உள்ள இனவாத சிந்தனை கொண்டவர்களை இனங்கண்டு அவர்களை பதவி நீக்கம் செய்யவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்திலும் இவ்வாறான வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாது தடுக்க முடியும். இன்றேல் அன்று அளுத்கம, இன்று கிந்தோட்டை, நாளை எங்கே எனும் முஸ்லிம்களின் அச்சத்தை எவராலும் போக்க முடியாது போய்விடும்.\nவிடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிhயர் தலையங்கம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_510.html", "date_download": "2018-05-27T03:32:39Z", "digest": "sha1:R7I5F7QMR66SP5EBFINKJP3FCWSEDKDL", "length": 38044, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிந்தோட்ட கலவரம், பொலிஸ்மா அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிந்தோட்ட கலவரம், பொலிஸ்மா அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும்\nகிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர் மன்னிப்பு கேட்பதை விட இராஜினாமா செய்வதே பொருத்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்‌ஷ தெரிவித்தார்.\nஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...\nஒரு தவறு நிகழ்கிறது. அந்த தவறுக்கு உடனடியாக நீதியை நிலைநாட்ட இயலாது போனாலும் சற்று தாமதமாக நீதியை நிலைநாட்டுவதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அப்படியான விடயங்களுக்கு என்னால் உடனடியாக நீதியை நிலைநாட்ட முடியாது போய்விட்டதென ஒருவர் கூறி மன்னிப்பு கோருவாராக இருந்தால் அதனை மன்னிக்கலாம்.\nஇன்னுமொரு விடயமுள்ளது.அந்த விடயத்துக்கு குறித்த உரிய நேரத்தில் தான் நீதியை நிலைநாட்ட வேண்டும். அதற்கு தவறினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும். அதனை பின்னர் ஈடுசெய்ய முடியாது. அப்படியான விடயங்களுக்கு குறித்த சந்தர்ப்பத்தில் என்னால் நீதியை நிலைநாட்ட முடியாது என ஒருவர் கூறி மன்னிப்பு கோருவாராக இருந்தால் அவரை மன்னிக்க முடியாது. பாதிப்புக்கு ஏற்ற வகையிலான தண்டனை வழங்க வேண்டும்.\nகிந்தோட்டை போன்ற கலவர சந்தர்ப்பங்களின் போது உடனடியாக நீதியை நிலைநாட்ட வேண்டும். அதன் போதான சிறு பொடு போக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இது இலங்கை பொலிஸ் மா அதிபருக்கும் தெரியாததல்ல. அவ்வாறான சந்தர்ப்பத்தில் பொலிஸ் மா அதிபர், தான் நீதியை நிலைநாட்ட தவறிவிட்டதாக மன்னிப்பு கோருவது பொருத்தமானதல்ல. பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பொலிசாரின் பொடுபோக்கினாலேயே கிந்தோட்டை கலவர பூமியாக மாறியதென கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகரணம் தப்பினால் மரணம் என்ற சந்தர்ப்பத்தில் இப்படி சிறு பிள்ளைகள் போன்று காரணம் சொல்லாமா என சிந்தித்து பாருங்கள். இவர் இது போன்று பல தடவைகள் மன்னிப்பு கோரியுள்ளார். பொலிஸ் மா அதிபர் என்பவர் நெஞ்சை நிமிர்த்தி செல்ல வேண்டிய ஒருவர். அவர் எதற்கு எடுத்தாலும் மன்னிப்பு கோருவது அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானதல்ல. அவர் தனது பதவிக்கு மரியாதை வழங்குபவராக இருந்தால் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். அதுவே இப் பதவியில் எதிர்காலத்தில் உட்கார இருப்பவர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.\nபாடசாலை பிள்ளைகளைப் போல தவறு செய்வதும் அதற்கு மன்னிப்பு கோருவதும் என இதுவே பொலிஸ் மா அதிபருக்கு வாடிக்கையாகி போய்விட்டது என அவர் குறிப்பிட்டார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhul-24-01-1840502.htm", "date_download": "2018-05-27T03:38:05Z", "digest": "sha1:J5KGBX2KHNZWBNFQ2F7Q5E5ROHXXBPX5", "length": 5031, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "22 வயதான இளம் நடிகர் ரயில் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம் - Prabhul - பிரபுல்- | Tamilstar.com |", "raw_content": "\n22 வயதான இளம் நடிகர் ரயில் விபத்தில் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்\nமராத்தி திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் பிரபுல், இவர் நேற்று அதிகாலை ரயில் விபத்தில் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபிரபுல் நேற்று அதிகாலை ரயிலின் வெளியே தொங்கியபடி பயணம் செய்துள்ளார், அப்போது ரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தன்னால் தொங்க முடியாமல் கை நவவி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇவருடைய உடலை போலீசார் உறவினரிடம் ஒப்படைத்து விட்டனர், இருப்பினும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ibctamil.com/community/80/100621", "date_download": "2018-05-27T03:02:52Z", "digest": "sha1:JDJNOHAXUIZFG3KO3DJ6M2TG6KVBNFOB", "length": 9423, "nlines": 100, "source_domain": "ibctamil.com", "title": "கிளிநொச்சியில் மதுபான சாலைகளுக்கு பதிலாக தொழிற்சாலைகள் வேண்டும்; மக்கள் வலியுறுத்தல்! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nகிளிநொச்சியில் மதுபான சாலைகளுக்கு பதிலாக தொழிற்சாலைகள் வேண்டும்; மக்கள் வலியுறுத்தல்\nகிளிநொச்சியில் மதுபான சாலைகளுக்கு பதிலாக தொழிற்சாலைகளை அமைத்து, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபெரிய பரந்தனில் மதுபானசாலைகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (16.05.2018) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், மதுபானசாலைகள் அமைக்கப்படுவதால் பெண்கள் , சிறுவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகிளிநொச்சி – பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் பெண்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மதுபானசாலையை அமைப்பதற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.\nகஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளின் பாவனையால் இளைஞர் சமூகம் சீரழிவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த விடயத்தில் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, மதுபானசாலையை அமைக்க அனுமதி வழங்க கூடாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாதர் சங்கப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமதுபானசாலையை அமைப்பதற்கு எதிரான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கரைச்சி பிரதேச சபை தலைவர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் பிரதேச மக்கள் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/23/paytm-launches-payments-bank-007898.html", "date_download": "2018-05-27T03:00:42Z", "digest": "sha1:DK7K3J6FDZOBWYAGWRC5NBTAXMWGKHES", "length": 16769, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்று முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் ஆரம்பம்.. 4 சதவீத வட்டி..! | Paytm launches payments bank - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்று முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் ஆரம்பம்.. 4 சதவீத வட்டி..\nஇன்று முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் ஆரம்பம்.. 4 சதவீத வட்டி..\nசென்னை நிறுவனத்தை 40 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய பேடிஎம்..\nசென்னை நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பேடிஎம்..\nபேஸ்புக்-இன் புதிய சேவை.. கண்ணீர் வடிக்கும் பேடிஎம்..\nபேடிஎம்-ன் புதிய சேவை.. இனி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்\nஇதுதான் முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்.. சிக்கியது யார் தெரியுமா..\nஇ-வாலெட்டுடன் கேஒய்சி இணைப்பது எப்படி.. இ-வாலெட்டை முறையாகப் பயன்படுத்துவது எப்படி..\nஇந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பிரிவில் கொடிகட்டி பறக்கும் பேடிஎம் நிறுவனம் மே 23(இன்று) தனது பேமெண்ட்ஸ் வங்கி வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.\nஆன்லைன் சந்தையைப் போலவே போட்டி மிகுந்த இத்துறையில் அடுத்த 3 வருடத்தில் 50 கோடி வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ளது.\nசீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் மிகப்பெரிய முதலீட்டில் இயங்கும் பேடிஎம், புதிதாகத் துவங்கியுள்ள பேமெண்ட்ஸ் வங்கியின் வைப்புத் திட்டத்திற்குச் சதவீத வட்டியை அளிக்க முடிவு செய்துள்ளது.\nதற்போது வங்கிகள் அனைத்தும் பரிமாற்றத்திற்குக் கட்டணத்தை வசூலித்து வரும் நிலையில் பேடிஎம் நிறுவனம் அனைத்து இணைய வழி பரிமாற்றத்தையும் இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் டெப்பாசிட் செய்வோருக்கு கேஷ்பேக் ஆஃப்ரும் அளிக்கிறது.\nஇப்புதிய பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்காகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும் இந்த முதலீட்டுத் தொகை அடுத்தச் சில வருடங்களில் 1000 கோடி வரை உயரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபேடிஎம் பேமெண்ட் வங்கி முதல் வருடத்தில் மட்டும் சுமார் 31 வங்கிகளை, 3000 வாடிக்கையாளர் சேவை முனைகள் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்ததுள்ளது.\nபொதுவாகப் பிற வங்கிகளைப் போல் அல்லாமல் பேமெண்ட்ஸ் வங்கிக் கடன் அளிக்க முடியாது, ஆனால் வங்கிகள் அளிக்கும் அனைத்து விதிமானச் சேவைகளையும் இந்தப் பேமெண்ட்ஸ் வங்கி அளிக்க முடியும்.\nசமீபத்தில் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவங்கியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nநரேந்திர மோடி அரசின் 4 வருட ஆட்சி சாதனைகள் என்ன தெரியுமா\nசர்வதேச சந்தைக்கு செல்லும் ஜியோ.. ஐரோப்பாவில் கால்பதிக்க முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2016/06/blog-post_13.html", "date_download": "2018-05-27T03:11:30Z", "digest": "sha1:YWXBHLG5ELZUHHXUU6NCAHY6GIJP6W3W", "length": 7731, "nlines": 208, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: \"தீண்டத்தகாதவர்களும்\" காந்தியும் - அருந்ததிராயின் விரிவுரை", "raw_content": "\n\"தீண்டத்தகாதவர்களும்\" காந்தியும் - அருந்ததிராயின் விரிவுரை\nசமூக அரசியல் மனித உரிமைகள் போராளியான அருந்ததிராய், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை இது. தலித்தியம் , அம்பேத்காரியம், மற்றும் காந்தியம் என்பனவற்றுக்கிடையிலான ஊடாட்டம் குறித்து ஆழமாக இந்தக் காணொளியில் விளக்குகின்றார்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமூதாட்டி மூவலூர் இராமாமிர்தம் நினைவு தினம் சிறப்ப...\nகண்ணீரும் புன்னகையும்: கைம்பெண்கள் கோயிலுக்குள் நு...\nமேடையில் ஒலித்த ஒற்றைக் குரல்\n\"தீண்டத்தகாதவர்களும்\" காந்தியும் - அருந்ததிராயின் ...\nபுதிய வெளிச்சம்: உலக அரங்கை நோக்கி தலித் இலக்கியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://kovaihappening.blogspot.com/2013/09/awareness-programmes-on-eye-donation.html", "date_download": "2018-05-27T03:05:03Z", "digest": "sha1:VXIN6NIZD4BFKX43QRF4QAWWM2CTGTLQ", "length": 11383, "nlines": 165, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: Awareness programmes on eye donation", "raw_content": "\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nஸ்மார்ட் கார்டு… நாளை (01-10-2013) முகாம் நடக்கும்...\nமூத்த குடிமக்கள் சங்கம் துவக்க விழா\nஉலக இதய தின சிறப்பு கருத்தரங்கம்\nஸ்மார்ட் கார்டு… நாளை (29-09-2013) முகாம் நடக்கும்...\nகல்லூரி அட்மிஷன் 30ம் தேதி கடைசி\nஸ்மார்ட் கார்டு… நாளை (28-09-2013) முகாம் நடக்கும்...\nஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆள் தேர்வு\nபந்தநல்லூர் ஸ்ரீ சந்திரசேகர பாகவதருக்கு விருது\nஅக்ரி & ப்ளோரிடெக் 2013\nவிமானப்படைக்கு ஆட்சேர்ப்பு கோவையில் சிறப்பு பயிற்ச...\nஸ்மார்ட் கார்டு... நாளை (23-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (22-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (21-09-2013) முகாம் நடக்கு...\nகோவை கல்வி மாவட்டங்களுக்கு இடையே செஸ் போட்டி\nஸ்மார்ட் கார்டு... நாளை (19-09-2013) முகாம் நடக்கு...\nநவராத்திரி இசை விழா – 2013\nஸ்மார்ட் கார்டு... நாளை (18-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (16-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (15-09-2013) முகாம் நடக்கு...\nஸ்மார்ட் கார்டு... நாளை (14-09-2013) முகாம் நடக்க...\nவன உயிரின வாரம் வினாடி - வினா போட்டி\nவன உயிரின வாரம் வினாடி - வினா போட்டி\nகோவையில் அக்., முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளி...\nஸ்மார்ட் கார்டு... நாளை (11.09.2013) முகாம் நடக்கு...\nஜி.வி., ஆடியோ விஷன் ஷோரூம் திறப்பு விழா\nகோவை - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் அறிமுகம்\nஸ்மார்ட் கார்டு... நாளை (08.09.2013) முகாம் நடக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/section/others/international", "date_download": "2018-05-27T02:55:13Z", "digest": "sha1:2SRNL6EIC5NAF2VFSVXOA5YXKMSOVRX7", "length": 11598, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Others Tamil News | Breaking news headlines and Best Reviews on Others | Latest World Others News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇப்படியான கிரக சேர்க்கைகள் இருந்தால் இயற்கைக்கு மாறான மரணம் நிகழும்\nமாலைத்தீவுகள் பற்றி தெரிந்துக் கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்\n 16 பேர் பலி... 127,913 பேர் பாதிப்பு\nஅகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு புதிய தலைவர் தெரிவு\nஅபிவிருத்தி 2 days ago\nசுயதொழில் கடன்திட்ட பயனாளிகளின் உற்பத்திபொருள் கண்காட்சி\nமன். புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை உயர் தர கலைபிரிவு மாணவர்களின் ஓவிய கண்காட்சி\nவடக்கு கிழக்கில் ஐ.பி.சி நிறுவனத்தின் இரண்டாவது கைத்தொழில்பேட்டை\nதுப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nவெள்ளத்தில் மூழ்கியது கிண்ணியாவின் பகுதிகள்\nவெள்ளப் பெருக்கால் ஆட்டம் கண்டது களனி ஆற்றின் மேல் போடப்பட்ட பாலம்\nஇதுவரை 13 பேர் பலி - ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிப்பு - இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும்\nதனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்னால் காத்திருக்கும் மாணவர்கள் தொடர்பில் விசனம்\nதொடர் சாதனை படைக்கும் பட்டிருப்பு மண்டூர் விக்னேஸ்வரா மாணவர்கள்\nஇலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை 6 பேர் பலி - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை\nவவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்\nகளுத்துறை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை\nயார் இந்த காக்கா... ஏன் அவர் அழவேண்டும் ..\nபனி மூட்டத்தால் முழுமையாக மறைந்து போன மலையகம்\nமழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்கும் நாட்டு மக்களை அவதானமாக செற்படுமாறு அறிவிப்பு\nஇலங்கையில் தொடரும் அடைமழையால் மின்சாரம் தடைப்படும் அபாயம்\nவவுனியாவில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி\n இலங்கை அரச இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன்\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை\nகொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாடுகள்\nஇலங்கைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் மாற்றம் கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை\nவடமாகாண பொலிஸ் விளையாட்டு விழா வவுனியாவில்\nதிடீரென காட்சி கொடுத்த நீர்வீழ்ச்சி - வியப்பில் மக்கள்\nதேர்வில் தோல்வியடைந்த மாணவன்: விருந்து வைத்து கொண்டாடிய தந்தை\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-05-27T03:03:33Z", "digest": "sha1:2L32GLFURUKFEB6CEGPLBZKZ77SZZ3MW", "length": 9135, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "அமைச்சர் றிஷாதை போன்று, வேறு யாராவது வில்பத்து விடயத்தை உறுதியாக பிடித்துக்கு நிற்பார்களா? » Sri Lanka Muslim", "raw_content": "\nஅமைச்சர் றிஷாதை போன்று, வேறு யாராவது வில்பத்து விடயத்தை உறுதியாக பிடித்துக்கு நிற்பார்களா\nஇலங்கை நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற மிகப் பெரும் சவால்களில் ஒன்றாக வில்பத்து பிரச்சினையை சுட்டிக்காட்டலாம். அந்த பிரச்சினை அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கின்றது. அவ்வாறு எழும் போதெல்லாம், அதனை எப்படி எப்படியெல்லாம் சமாளிக்க முடியுமா, அத்தனை விதத்திலும் சமாளித்துக்கொண்டிருப்பவர் அமைச்சர் றிஷாத் மாத்திரமே.\nவேறு யாரையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்ட முடியாது. இது அந்த மக்களுக்கு மாத்திரமல்ல, இலங்கை மக்களுக்கே நன்றாக தெரியும். இதற்காக எத்தனையோ வழக்குகளை அவரது தொழில் சுமந்து வருகிறார். எதிர்வரும் ஐந்தாம் திகதி கூட, ஒரு வழக்கை எதிர்கொள்ளவுள்ளார்.\n இது தேர்தல் காலம். இந்த காலத்தில் ஒரு அரசியல் பிரதிநிதி எவ்வாறு செயற்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அமைச்சர் றிஷாத் இலங்கை பூராகவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந் நேரத்தில் இப்படியான ஒரு வழக்கை எதிர்கொள்வது மிகவும் சவாலானது. ஒரு நாள் அதற்கென்றே அவர் நேரம் செலவு செய்ய வேண்டும்.\nஇது தேர்தல் காலம் என்பதால், பல நாட்கள் முன்பே, தான் திட்டமிட்டு வைத்திருந்த நிகழ்வுகள் குழம்பி போய்விடும். இது அவருக்கு பெரும் தலையிடியை வழங்கும். அவர் இந்த தலையிடியை யாருக்காக எதிர்கொள்கிறார்\nஅமைச்சர் ஹக்கீம் மறைந்த தலைவர் உருவாக்கிய மு.கா என்ற மா பெரும் விருட்சகத்தின் தலைவராக உள்ளார் ( தற்போது மு.காவானது அழிவின் விளிம்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ) இவர் இதற்காக ஒரு பிரச்சினையாவது முன்னின்று எதிர்கொண்டுள்ளாரா இவர் மீது இனவாதிகளின் ஒரு வழக்காவது உள்ளதா..\nஅன்று தீகாவாபி பிரச்சினை தோன்றிய போது, மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மதிப்புக்குரிய சோம தேரருடன் விவாதம் செய்தது போன்ற, எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தார். அதே விதத்தில் இன்று இனவாதிகள் மூலம் தோன்றக் கூடிய பிரச்சனைகளை அமைச்சர் றிஷாதே எதிர்கொண்டு வருகிறார். இதனை நன்றாக சிந்திப்போர் அறிந்துகொள்ள முடியும்.\nதற்போதெல்லாம் பல கோணத்திலும் இலங்கை முஸ்லிம்கள், இனவாதிகளின் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதால். இதனையெல்லாம் எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவராக, இன்றுள்ளவர்களில் அமைச்சர் றிஷாதை மாத்திரமே கை நீட்டிக் காட்டலாம். இதனை வைத்து சிந்திப்போர், இன்று இலங்கை முஸ்லிம்களின் தலைவராகும் தகுதியும் தேவையும் அமைச்சர் றிஷாதுக்குள்ளது.\nஇப்படியான மர்ஹூம் அஷ்ரபிடம் இருந்த, அமைச்சர் றிஷாதிடம் உள்ள பண்புகளை அமைச்சர் ஹக்கீமிடமெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இன்றெல்லாம் அமைச்சர் ஹக்கீம் ஒரு ஊடகத்தின் முன் நின்று, ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதில் வழங்க அஞ்சுகிறார். எந்த ஊடகத்தின் முன் செல்வதுமில்லை. இப்படியானவர் எவ்வாறு இனவாதிகளுடன் மோதுவார்.\nஇதற்குள் இவர் ஒரு சட்டத்தரணியும் கூட. அமைச்சர் றிஷாதோ ஊடகங்களின் முன் தைரியமாக சென்று சிங்கத்தை போன்று கர்ச்சிக்கின்றார். இதுவே, மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். மர்ஹூம் அஷ்ரபை போன்று மக்களுக்காக போராடும் அமைச்சர் றிஷாதா, பிரச்சினை என்றாலே ஓடி ஒளியும் அமைச்சர் ஹக்கீமா\nகல்முனை பிரதேச நலனில் அக்கறையுள்ளவர்களின் ஆதங்கம்\nபாஜக எழுச்சியால், இலக்கு வைக்கப்படும் இந்திய முஸ்லிம்கள்’\nநுண்கடன் திட்டங்களால் அழிவடையவுள்ள சமூகம்\nஒரு தமிழரின் பார்வையில் மாட்டிறைச்சி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/144349-2017-06-07-09-56-59.html", "date_download": "2018-05-27T03:11:49Z", "digest": "sha1:5EUYD5ORYWY6JF5CFCAR7O7U4LB5SY4N", "length": 29075, "nlines": 114, "source_domain": "viduthalai.in", "title": "வானிலையாளராக நீங்களும் திகழலாம்!", "raw_content": "\nமோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட வீதி வீதியாக சென்று விளக்கவேண்டும் » 4 ஆண்டு பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகளா - வேதனைகளா 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் செயல்பாடுகள் சாதனைகள் அல்ல - ...\nசாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகாதே தமிழா » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை சென்னை, மே 25 தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்ப...\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\nஞாயிறு, 27 மே 2018\nவானில் தவழும் மேகங்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா மழைக்காலம், வறட்சிநிலை ஆகியவை எப்படிக் கணிக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா மழைக்காலம், வறட்சிநிலை ஆகியவை எப்படிக் கணிக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா பருவ நிலைக் கணிப்புகள், பருவநிலை மாறுதல்கள் பற்றி ஆர்வமிருந்தால் மெட்ராலஜி என்று சொல்லப்படும் வானிலையியலை ஒரு படிப்பாகவே தேர்வு செய்யலாம்.\nவளிமண்டல அறிவியல்களின் கிளையாக வானிலையியல் திகழ்கிறது. பருவநிலை மற்றும் தட்பவெப்பத்தைக் கண்காணிப்பதும் பருவ நிலையில் மாறுதல்களை விளைவிக்கக் கூடிய அம்சங்களை ஆராய்வதும் வானிலையியல் ஆகும்.\nஒரு வானிலையிலாளர் கணிதம், இயற்பியல் நன்கு அறிந்தவராகத் திகழவேண்டும். பிரச்சினை களைத் தீர்ப்பதில் வல்லமை, முடிவெடுக்கும் திறன், தரவுகளை அலசும் திறன் (டேட்டா அனாலிசிஸ்), தொடர்புத் திறன் ஆகியவைக் கொண்டவராக இருக்க வேண்டும். இன்றைய வானிலையியலா ளர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், கணிப் பொறி மென்பொருள்களையும் பயன்படுத்துவதால் கணிப்பொறித் திறனும் அவசியமாக உள்ளது.\nஒரு வானிலையியலாளர் வெப்பத்தை அளக்க தெர்மாமீட்டரைப் பயன்படுத்துகிறார். காற்றின் வேகத்தைக் கணிக்க அனிமாமீட்டரையும் மழையின் அளவு மற்றும் வளிமண்டல அழுத் தத்தை அளக்க பாரோமீட்டரையும் பயன்படுத்து கிறார். காற்றின் ஈரப்பதத்தையும் அதன் தரத்தையும் அவர்கள் அளக்கிறார்கள். இன்று பருவநிலையைக் கணிக்க செயற்கைக்கோள்கள் முதல் டாப்ளர் ராடார்கள் வரை உயர் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nசெயற்கைக்கோள்கள் மேகங்களின் உருவாக்கத் தையும் உலகளவிலான வானிலை மாறுதல்களையும் கணிப்பதில் சிறப்பாகப் பணியாற்றுகின்றன. கண்டங்கள், கடல்கள், துருவப்பகுதிகள் ஆகிய வற்றைக் கவனித்து அவற்றால் விரிவான விவரங் களை அளிக்கமுடியும். சூறாவளி போன்ற பெரிய நிகழ்வுகளை முன்பே கணிப்பதில் செயற்கைக் கோள்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.\nடாப்ளர் ராடார்களில் ஒலி அலைகளை ராடார் ஆன்டெனா மூலம் ஒலிபரப்பி அவற்றின் பிரதிபலிப்புகள் பதிவுசெய்யப்படுகின்றன. பனிப் படிமங்கள் அல்லது தூசித் துகள்களை அந்த ஒலி அலைகள் மோதும்போது அவற்றின் அலைவெண் மாறுகிறது. டாப்ளர் ராடார்கள் புயல்களைக் கணிக்க உதவுகின்றன.\nகல்வித்தகுதி: பிளஸ் டூவில் கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் படித்துத் தேறியிருக்க வேண்டும். பி.எஸ்சி. இளங்கலைப் படிப்பில் கணிதம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ ப்ரோகிராம் இன் மீட்டியராலஜி படிக்க இளங்கலைக் கல்வி அடிப்படைத் தகுதியாக உள்ளது. இந்தியா முழுவதும் வானிலையியலுக்கான கல்வியில் வானிலையியல் அடிப்படைகள், பருவ நிலை அளவீடு மற்றும் அலசல், பருவநிலை கணிப்பு, வளிமண்டல இயற்பியல் மற்றும் வெப்ப இயக்கவியல் (தெர்மோடைனமிக்ஸ்), கடல்சார் வானிலையியல் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படு கின்றன. தரவுகள் திரட்டல், பகுப்பாய்வு மற்றும் கணினி மாடலிங் முதலிய திறன்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.\nதி இந்தியன் மெட்ராலஜிக்கல் டிபார்ட்மெண்ட், க்ரூப் இரண்டு நிலைத் தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதிகள்,\n# பி.டெக்., கணினி அறிவியலில் பொறியியல், அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்\n# பி.டெக். அல்லது எம்.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ்\n# எம்.எஸ்சி. இயற்பியல், கணிதம், அப்ளைட் ஃபிசிக்ஸ் அல்லது அப்ளைட் மேத்ஸ் (ஆஸ்ட்ரானமி அல்லது ஆஸ்ட்ரோபிசிக்ஸ் பாடம் சேர்ந்திருக்க வேண்டும்)\n# மாஸ்டர்ஸ் இன் மெட்டராலஜி, அட்மாஸ்ஃ பியரிக் சயன்சஸ் அல்லது ஜியோ ஃபிசிக்ஸ்.\nஇத்தேர்வில் மேற்கண்ட தகுதிகளுடன் வெற்றி பெறுபவர்கள் வானிலையியலில் ஒரு ஆண்டு சிறப்புப் பயிற்சி பெறுவார்கள். அறிவியல் பட்ட தாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக இந்தியன் மெட்ராலஜி துறைக்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nபி.ஏ., பி.எஸ்சி. பட்டதாரிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்\nசாஃப்ட்வேர் தயாரிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியமானது அதன் தரத்தை உறுதிசெய்யும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் பணி. இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 30 ஆயிரம் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். சர்வதேச மென்பொருள் தர சோதனை வாரியமான மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ ஜிமீstவீஸீரீ னிuணீறீவீtஹ் ஙிஷீணீக்ஷீபீ மிஷிஜினிஙி, சாஃப்ட்வேர் டெஸ்டிங் சான்றித ழுக்கான தேர்வு நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணராக ஆகலாம்.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் சாப்ட் வேர் வேலை என்றதுமே அதில் பொறியியல் பட்டதாரிகளுக்குத்தான் வாய்ப்புகள் இருக் கும் என நினைக்கத் தோன்றும். ஆனால், பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கும் மென் பொருளைப் பரிசோதிக்கும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் கலை, அறிவியல் பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.\nதொழில்நுட்பத்திறன் அடிப்படையில் மேல்நிலை பதவிகளுக்குச் செல்லவும் அதற்கேற்ற ஊதியம் பெறவும் இத்துறையில் வாய்ப்பு உண்டு. இதில் பயிற்சி பெறுவதற்கு அதிகச் செலவும் கிடையாது. ரூ.20 ஆயிரத் தில் பயிற்சி முடித்துவிடலாம். அய்.எஸ்.டி. கியூ.பி , ஆன்லைனில் நடத்தும் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்று எளிதாகப் பணியில் சேர்ந்துவிடலாம்.\nஇத்துறை தொடர்பான பயிற்சி, வேலை வாய்ப்புகள் குறித்துச் சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் அமிட்டிசாஃப்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.ஆர்.ஜெயகுமார், சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் ஆண்டுக்குச் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஐ.டி. நிறுவனங்களில் அய்ந்தில் ஒரு பகுதியினர் சாஃப்ட்வேர் டெஸ்டிங் பணியாளர்களாக இருப்பார்கள்.\nஇதில் நிபுணராக ஒரு மாதப் பயிற்சி போதுமானது. இண்டர்நேஷனல் சாஃப்ட்வேர் டெஸ்டிங் குவாலிட்டி போர்டு நடத்தும் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆன்லைனில் நடத்தப்படும் இத்தேர்வில் எப்போது வேண்டுமானாலும் கலந்துகொள்ள லாம். இந்தத் தேர்வுக்கு முழுநேரப் பயிற்சி என்றால் 4 வாரங்களும், பகுதி நேரப் பயிற்சி எனில் 6 வாரங்களும் அளிக்கிறோம். சாஃப்ட்வேர் டெஸ்டிங் தொடர்பான அடிப்படை விஷயங்கள், அதற்கான கணினி டூல்களை கையாளும் முறை, சாஃப்ட்வேரில் உருவாகக்கூடிய குறைபாடுகளை முன்கூட்டியே ஊகித்து அவற்றுக்குத் தீர்வு காண்பது போன்றவை பயிற்சியில் அடங்கும்.\nபயிற்சியை முடித்தவர்கள் ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர் களுக்குத் தேர்ச்சி சான்றிதழ் வழங்குவார்கள். தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். தேர்வுக் கட்டணமும் அதிகம் கிடையாது. ரூ.4,500 மட்டுமே. இந்தத் தேர்ச்சி சான்றிதழ் மூலம் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் வேலைக்குச் சேரலாம் என்கிறார்.\nஅமெரிக்காவின் தற்போதைய புதிய கொள்கையால் இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத் துறைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்பு இத்துறையிலும் இருக்காதா என்று கேட்டால், சாஃப்ட்வேர் தர மேம் பாட்டுக்கு அய்.டி. நிறுவனங்கள் அதிக முக்கி யத்துவம் கொடுக்கும் சூழல் உருவாகும்போது, சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறைக்கு வேலை வாய்ப்புகள் மேலும் பெருகுமே ஒழியக் குறையாது என்கிறார் ஜெயகுமார்.\nபி.பி.ஓ., கால்சென்டர் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பகல்-இரவு பார்க்காமல் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருப்பதால், தற்போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பலர் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறை நோக்கி வந்துகொண்டி ருக்கிறார்கள் என்கிறார் அவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறையில் பயிற்சி அளித்து வருகிறது இவருடைய நிறுவனம்.\nஇதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து முன்னணி நிறுவனங்களில் பணிவாய்ப்பும் பெற்றுக்கொடுத்துள்ளது. பயிற்சி பெறு வோருக்கு இந்த நிறுவனமே சிறப்பு தேர்வு நடத்தி டிப்ளமா இன் சாஃப்ட்வேர் டெஸ்டிங் என்ற பட்டத்தையும் வழங்குகிறது.\nவேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் துறை குறித்து இளை ஞர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்று ஆதங்கப்படும் ஜெயகுமார், அடிப்படைக் கணித அறிவும், அறிவியல் பின்புலமும், கணினி அறிவும் கொண்ட கலை அறிவியல் பட்டதாரிகள் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம் என உறுதியாகக் கூறுகிறார். இத்துறையைப் பொறுத்தவரை பணியில் சேர்ந்த பிறகும், இண்டர்நேஷனல் சாஃப்ட்வேர் டெஸ்டிங் குவாலிட்டி போர்டு நடத்தும் அட்வான்ஸ்டு, டெஸ்டிங் மேனேஜ்மென்ட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுத் தொழில்நுட்பத் தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்ந்து நம்மைத் தகவமைத்துக்கொண்டால் உள் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.\n# டெஸ்ட் இன்ஜினியர், சீனியர் டெஸ்ட் இன்ஜினியர், டெஸ்ட் அனலிஸ்ட், டெஸ்ட் லீட், டெஸ்ட் மானேஜர் என அடுத்தடுத்துப் பெரிய பொறுப்புகளுக்குச் செல்லலாம்.\n# டெஸ்ட் லீட் பதவிக்கு ரூ.50 ஆயிரத் துக்கு மேல் சம்பளம் கிடைக்கும்.\n# திறமை இருப்பின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் வரலாம்.\n# பி.ஏ., பி.எஸ்சி. பட்டதாரிகளும் சாஃப்ட்வேர் டெஸ்டிங் நிபுணர் ஆகலாம்.\n# அடிப்படைக் கணித அறிவும், கணினி அறிவும் போதுமானது.\n# சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு நிகரான வேலைவாய்ப்பு, ஊதியம், பதவி உயர்வு உண்டு.\n# ஆரம்ப நிலையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமலேரியா: கண்டுபிடிக்க புதிய வழி\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளில் சாதனை\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nநேரு அறிக்கையும் மகமதலியும் 16.12.1928- குடிஅரசிலிருந்து...\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nஇந்து கடவுள்கள்: சுப்பிரமணியனது பிறப்பு\nவடநாட்டுக் கடவுள்கள் 02.09.1928- குடிஅரசிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/117699-sonu-ke-titu-ki-sweety-review.html", "date_download": "2018-05-27T03:35:50Z", "digest": "sha1:AOO4CAZUNVZCJRKGYYCWAHZOB3CSEKG6", "length": 27322, "nlines": 384, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"இந்தியில் ஒரு 'பூவா தலையா'... ஜெயிக்கிறது யாரு?\" - 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' படம் எப்படி? | Sonu ke Titu ki Sweety Review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\"இந்தியில் ஒரு 'பூவா தலையா'... ஜெயிக்கிறது யாரு\" - 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' படம் எப்படி\nகாதலா - நட்பா என்ற போரில், 'நட்புதான் எங்கள் சொத்து' என்று கெத்தாகக் கைக்கோத்து நடக்கும் இரு பால்யகால நண்பர்களின் காமெடி- எமோஷனல் ஸ்டோரி 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி'.\nசோனுவும் (கார்த்திக் ஆர்யான்), டிட்டுவும் (சன்னி சிங்) சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். டிட்டுவுக்கு ஒவ்வொரு முறையும் பிரேக்அப் ஏற்படுவதற்கு சோனு காரணமாக இருப்பதோடு, டிட்டுவைக் கல்யாணம் செய்துகொள்வதிலிருந்து தடுக்கவும் செய்கிறான். இந்நிலையில், டிட்டுவுக்கு ஸ்வீட்டியுடன் (நுஷ்ராத் பருச்சா) நிச்சயதார்த்தம் நடக்கிறது. இவர்களின் காதல் துளிர்விடும் சமயத்தில் சோனுவிற்கு ஸ்வீட்டி வில்லியாக மாறுகிறாள். இறுதியில், நட்பா, காதலா என்ற பாசப் போரட்டத்தில் யார் வெல்கிறார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறது 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி'.\nகாதலுக்கும், நட்புக்குமான மோதலைக் கூறும் சினிமாக்கள் பல இருந்தாலும், இப்படம் சற்று வித்தியாசப்பட்டு, காதலையே வில்லனாகக் காட்டியிருக்கிறது. 'காதல் வேறு, கல்யாணம் வேறு... கல்யாணத்தை நோக்கில் கொள்ளாமல் காதலிக்கலாம்' என்ற நியூ ஏஜ் கருத்தை எந்தவொரு நெருடலும் இல்லாமல், அழுத்தமாகக் கூறியிருக்கிறார், இயக்குநர் லுவ் ரஞ்சன்.\nபார்க்கும் பெண்களைத் தன்வசம் ஈர்த்து, காதல் எனும் மாயைக்குள் சிக்காமல், வாழ்க்கையை ஜஸ்ட் லைக் தட்டாக எடுத்துக்கொள்ளும் சோனு. வாழ்க்கையில் என்ஜாய்மென்ட் அவசியம், அதேசமயம் காலாகாலத்தில் கல்யாணம் செய்து செட்டில் ஆவதும் அவசியம் என்று யோசிப்பதோடு மட்டுமல்லாமல், கல்யாணத்தில் ஈடுபாடு இல்லாத தனது நண்பனை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயலும் ஜெம் பெர்சனாக டிட்டு. எப்போதும் ஈகோ க்ளாஷோடு இருக்கும் பர்ஃபெக்ட் வில்லியாக ஸ்வீட்டி என இந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் படத்தில் சிறு தொய்வுகூட ஏற்படவிடாமல் அதகளப்படுத்தியிருக்கின்றனர். துணை கதாபாத்திரமாக நடித்திருக்கும் பிஹு (இஷிதா ராஜ் ஷர்மா) 'ப்யார் கா பன்ச்நாமா' படத்தின் ஸ்டைலையே இதிலும் பின்பற்றியிருக்கிறார். மாடர்ன் உடையில் வரும் கலாசாரப் பெண்ணாக வீட்டில் இருக்கும் அனைவரின் மனதைக் கவரும் வகையில் நடந்துகொள்ளும், இவரது குழந்தைத்தன நடிப்பை, வேறு யாராலும் செவ்வனே செய்திருக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.\nமிக நெருக்கமாக இருக்கும் நண்பர்களுக்கு இடையே வரும் ஸ்வீட்டி, ஆரம்பத்தில் நல்லவளாகக் காண்பிக்கப்படுவதும், இடைவேளையில் திடீரென்று வில்லியாக மாறுவதற்குமான பின்னணி காரணங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருந்தால், அந்தக் காட்சி இடைவேளைக்காகவே வைக்கப்பட்ட டெம்ப்ளேட் காட்சிபோல இருந்திருக்காது. படத்தில் வரும் அடல்ட்ஸ் ஒன்லி காமெடி வசனங்களை அநாயசமாக ஹேண்டில் செய்துள்ளார் வசனகர்த்தா ராகுல் மோடி. மேலும், பின்னணி இசையும், ஸ்வீட்டி வசனம் பேசும்போது பின்னணியில் ஒலிக்கும் 'நாயக் நஹி கல்நாயக் ஹை து' பாடலின் டைமிங் நம்மை 'அட' போட வைக்கிறது.\nகதையில் காதல் ரொம்ப ஸ்ட்ராங்காக இருந்த போதிலும், இறுதியில் டிட்டு கல்யாணத்தைக் கால் ஆஃப் செய்வதற்கான காரணத்தையும், அக்காட்சியில் பேசப்பட்டிருக்கும் வசனத்தையும் கூடுதல் சிரத்தையுடன் செய்திருந்தால் க்ளைமாக்ஸ் இன்னும் வலிமையாக இருந்திருக்கும். தனது நண்பன் இரண்டு வார்த்தைகள் எமோஷனலாகப் பேசினான் என்பதற்காக மாலையைத் தூக்கி எறிந்துவிட்டு வரும் நட்பதிகாரக் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் பாஸ்.\nஇப்படத்திற்கு மொத்தம் ஆறு பேர் இசையமைத்துள்ளனர். எனினும், 'யோ யோ ஹனி சிங்'கின் தொனி சற்று ஓங்கியிருக்கிறது. படத்தில் கோவா மற்றும் ஆம்ஸ்டெர்டாமின் கலர்ஃபுல் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்களைத் திரையிலிருந்து அகற்றவிடாமல் ஒன்றியிருக்கச் செய்துள்ளது.\nசோனுவின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சில காட்சிகளில் நமக்கே, 'இவன் ஒருவேளை சைக்கோவா இருப்பானோ' என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. இந்த அளவுக்குத் தன்மீது உரிமை எடுத்துக்கொள்ளும் ஒருவனை, டிட்டு ஏன் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இயக்குநர் கூறியிருக்கலாம். பாலிவுட்டின் வெல்கம் சம்மர் ட்ரீட்டுக்குச் சிறந்த படமாக 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' இன்னும் ஸ்வீட்டாக அமைந்திருக்கிறது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகுழந்தை தெய்வம் முதல் குடும்பத் தலைவி வரை... ஸ்ரீதேவியின் அரை நூற்றாண்டு பயணம்\n1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி சிவாகாசியிலுள்ள மீனம்பட்டியில் பிறந்தவர். வழக்கறிஞர் அய்யப்பன் ஐயங்கார் - ராஜேஸ்வரி தமபதிக்கு மகளாக பிறந்தார். Sridevi, an indomittable actress of indian cinema passed away\n'டாம் அண்ட் ஜெர்ரி' சண்டைபோல் ஜாலியாக ஒரு படம் பார்க்க விரும்புபவர்களுக்கு 100 சதவிகித என்டர்டெயின்மென்ட் தரும் 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி'.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயோகி பாபு, இதை நீங்கள் உணர்ந்தால் 'செம'..\n``கைல காசு இல்லாத நாள்கள்ல, கபாலி கோயில் அன்னதானம்தான் நம்ம மீல்ஸ்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n``என்னை மாற்றி விடாதீர்கள்...''- முதல்வருக்கு தூதுவிட்ட உளவுத்துறை அதிகாரி #SterliteProtest\nநடுரோட்டில் டி.டி.வி தினகரனும் வைகோவும் திடீர் சந்திப்பு..\nகாடுவெட்டி குரு வளர்ந்த கதையும்... கடந்து வந்த பாதையும்\n’ - தோனி நெகிழ்ச்சி\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n' - இங்கிலாந்து எம்.பி,. போர்க்கொடி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n\"ஸ்ரீதேவிக்குக் கொடுத்த மரியாதையை ஆராயி, மதுவுக்கும் கொடுத்துதான் ஆகணும்\" - நடிகர் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/10020036/Actor-Arvindasamy.vpf", "date_download": "2018-05-27T02:59:29Z", "digest": "sha1:TAVV7LJGHRUG5FOLS6WLWSPXG7MQSAQS", "length": 10156, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Arvindasamy || டைரக்டராகும் நடிகர் அரவிந்தசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடைரக்டராகும் நடிகர் அரவிந்தசாமி + \"||\" + Actor Arvindasamy\nநடிகர் அரவிந்தசாமி மீண்டும் பிஸியாக நடிக்கிறார்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல், சதுரங்க வேட்டை-2, நரகாசுரன், வணங்கா முடி, செக்க சிவந்த வானம் ஆகிய 5 படங்களை நடிகர் அரவிந்தசாமி கைவசம் வைத்துள்ளார். இரண்டாவது ரவுண்ட் சினிமா பயணம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“நல்ல கதை, கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக வருகிறேன். அழுத்தமான கதை அமைந்தால் வில்லனாகவும் நடிப்பேன். மலையாளத்தில் மம்முட்டி நடித்த படத்தை தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பெயரில் உருவாக்கி உள்ளோம். இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.\nமணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறோம். விரைவில் டைரக்டராக முடிவு செய்துள்ளேன். கதை தயாராகியுள்ளது. புதுமுகங்களும் பிரபல நடிகர்கள் சிலரும் நடிக்கின்றனர். நடிகர்கள் சம்பளத்தை தயாரிப்பாளர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.\nபடம் நன்றாக ஓடினால் அதிக சம்பளமும், நஷ்டம் அடைந்தால் குறைந்த சம்பளமும் கொடுக்கிறார்கள். எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் யாருக்கு எனது ஆதரவு என்பதை சொல்ல முடியாது. ஓட்டு போடுவது ரகசியமானது. நீட் தேர்வு பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது. அதை எதிர்ப்பது ஒரு புறம் இருந்தாலும் அந்த தேர்வை எழுதித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்போது அதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்பது என் கருத்து.\nகல்வி முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதில் விட்டுவிடவேண்டும். பெற்றோர்கள் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க கூடாது.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. பட அதிபர்கள் சங்கம் இறுதி கெடு வடிவேல் நடிக்க தடை\n2. கதறி அழுத சன்னிலியோன்\n3. பிரபல நடிகர் மீது 8 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு மன்னிப்பு கோரினார்\n4. நடிகர் சவுந்தரராஜா திருமணம்\n5. பணம் எடுத்து விட்டு திரும்பி வராத மகனுக்காக ஒரு வருடம் காத்திருந்து உயிரிழந்த இந்தி நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/auth3341.html", "date_download": "2018-05-27T03:26:46Z", "digest": "sha1:CUQ6DOROR6FH7BOK4OKSDMO56DMFQZ3I", "length": 5193, "nlines": 123, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஅரசியர் மூவர் அரசியர் மூவர் கவிக்கு நாயகன் கம்பன்\nA.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன்\nதத்துவமும் பக்தியும் தம்பியர் இருவர் தம்பியர் இருவர்\nA.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன்\nநாடும் மன்னனும் நாடும் மன்னனும் நாடும் மன்னனும்\nA.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன் A.S. ஞானசம்பந்தன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஆதிசைவர்கள் வரலாறு - நூலுக்கு ‘ தினமணி 13.05.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், கிழக்கு பதிப்பகம், விலை 130.00ரூ.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, இரண்டாம் மரணம் - நூலுக்கு ‘ தினமலர் 13.05.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். இரண்டாம் மரணம், எஸ்.ரங்கராஜன், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/polaroid-ledpo24a-236-inches-hd-ready-led-tv-price-pqxQo6.html", "date_download": "2018-05-27T03:29:32Z", "digest": "sha1:ZI7UO2EOCMDG4VM2ERX4KFITQOZQNHTD", "length": 17235, "nlines": 369, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Apr 23, 2018அன்று பெற்று வந்தது\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவிஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 9,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. போலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - விலை வரலாறு\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே டிபே HD Ready (HDR)\nபாக்களிட் மாடுலே Edge LED\nகாம்போனென்ட் வீடியோ ய பிபி பிற இன்புட் Yes\nபோலராய்டு கேட்ப்போ௨௪ஞ் 23 6 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n3.5/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ethir.org/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-27T02:57:44Z", "digest": "sha1:C3HFUPX7CSRAR3ELD53UJA7T3LQSJU3U", "length": 13833, "nlines": 655, "source_domain": "ethir.org", "title": "எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது – எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nHome > செய்திகள் செயற்பாடுகள் > எமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது\nஎமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது\nதற்போதய அரசின் கொள்கைகள் குடிவரவாளர் மற்றும் அகதிகளுக்கு எதிரானது. இந்த நிலைப்பாட்டை நாம் மாற்றுவதானால் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டச் சக்திகளுடன் நாம் இணைய வேண்டும். நாம் இந்தக் கொள்கைகள் சரி என ஏற்றுக் கொள்ளவில்லை என்ற செய்தியைப் பதிய வேண்டும்.\nநாம் போராட்டச் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை உட்துறை அமைச்சுக்கு தெரியப் படுத்துவது அவசியம். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் சரியான கொள்கைப் பக்கம் நிற்பது மட்டுமின்றி எமது கோரிக்கைகளுக்கான ஆதரவையும் நாம் திரட்ட முடியும்.\nஅகதி கோரிக்கையாளர் வேலை செய்யும் உரிமையை வழங்கு – தடுப்பு முகாம்களை மூடு போன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவு தரும்படி நாம் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம். அகதிகள் உரிமை இயக்கத்திற்கு ஆதரவும் உதவியும் திரட்ட உள்ளோம். அகதிக் கோரிக்கையாளர்கள் எதிர் கொள்ளும் பல இன்னல்கள் இந்த நாட்டு மக்கள் பலருக்கு தெரியாது. எமது பிரச்சார நடவடிக்கைகள் மூலம் எமது நிலவரத்தை விளக்குவது மட்டுமின்றி – அதை மாற்றுவதற்கான பெரும்பான்மை மக்கள் ஆதரவையும் திரட்ட உள்ளளோம்.\nஆதரவானவர்களின் கையெழுத்து மற்றும் விபரங்கள் திரட்டுவது மட்டுமின்றி முடிந்தவர்க அகதிகள் உரிமை இயக்கத்தில் இணைந்து எமது கோரிக்கைகள் வெல்ல உதவுமாறும் கோர இருக்கிறோம். இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க திரண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nசொலிடாரிட்டி நாள் (Solidarity Day) 2017\nலண்டன் ஊர்வலம் -அகதிகள் உரிமை அமைப்பும் இணைந்து போராட்டம்.\nசர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n78 . Views .முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில்...\nபுதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்\n71 . Views .பிரித்தானியாவின் உழைக்கும் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி...\nசிரியா மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n188 . Views .சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, பிரித்தானிய...\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\n35 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூடக்...\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n78 . Views .முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம்...\nஅரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்\nஇலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்\nபுதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/01/blog-post_08.html", "date_download": "2018-05-27T03:31:45Z", "digest": "sha1:5GNDZX7XNGZAWYG5EDYYCPOMLENR7OER", "length": 13829, "nlines": 124, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: விபத்து பகுதியில் ஒளிரும் பிளாஸ்டிக் விளக்குகளை உடைக்கும் விஷமிகள் !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nவிபத்து பகுதியில் ஒளிரும் பிளாஸ்டிக் விளக்குகளை உடைக்கும் விஷமிகள் \nஉடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகள‌\nகீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வண்ணாந்துறை அருகே வளைவில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதனையடுத்து அரசு சார்பில் விபத்துகளை தவிர்க்கும் விதமாக‌ வளைவுகளில் ஏராளமான‌ கற்கள் பதித்து இரவு நேரங்களில் ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை பொருத்தியிருந்தார்கள். இதன் மூலம் ஒளிரும் விளக்குகள் இரவு நேரம் வாகன ஒட்டிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது .\nஇந்நிலையில் விஷமிகள் சிலர் கற்களில் பதிக்கப்பட்டிருந்த ஒளிரும் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் விளக்குகளை உடைத்துள்ளனர். விபத்தை தவிர்க்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகளை உடைத்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரையில் (01-02-12)புதன்கிழமை மின்சார தடை \nகீழக்கரை தோட்டத்தில் அதிரடிப்படைக்கு பயிற்சி \nகீழ‌க்கரையில் திருட‌ப்ப‌ட்ட‌ ந‌கைக‌ள் மீட்பு \nகீழக்கரையில் குடியரசு தினவிழா கொண்டாட்ட‌ம் \nசைக்கிளில் இந்தியாவை சுற்றும் வெளிநாட்டு தம்பதியின...\nஆயிர‌க்கணக்கானோர் கலந்து கொண்ட‌ மத நல்லிணக்க பேரணி...\nக‌லெக்ட‌ரிட‌ம் துணை சேர்ம‌ன் மற்றும் கவுன்சிலர்கள்...\nஇரண்டாவது முறையாக அதே தேதியில் நகைகளை கொள்ளையடித்த...\nமாவட்ட கைப்பந்து போட்டி கீழக்கரை மூர் அணி கோப்பையை...\nகல்லூரி வேலை வாய்ப்பு முகாமில் வேப்கோ- டிவிஎஸ் நிற...\n10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலதிட்ட உதவிகள் \nகீழை இளையவனின்‌ புதிய வலைதளம் துவக்கம் \nபணி நேரத்தில் ஆளில்லாத வாகனமாக நகராட்சி அலுவலகம்\nகீழக்கரை கல்லூரியில் பல் வேறு மாநிலங்களிலிருந்து க...\nகீழக்கரை நகராட்சியில் வரலாறு காணாத கூச்சல்,குழப்பம...\nகீழக்கரையில் வீடு கட்டும் பணியில் விபத்து \nஸ்கார்பியோ கார் பயன்படுத்தி ஆடுகளை திருடியதாக இருவ...\n18வது வார்டு சின்னக்கடை தெரு செல்லும் வழியில் துரி...\nகாலி செய்ய மறுத்ததால் கட்டிடத்தை இடித்ததாக 4 பேர் ...\nஅன்பு நகரில் மத நல்லிணக்கம் உள்ளிட்ட முப்பெரும் வி...\nகுப்பைகள் அகற்றும் பணியில் தொய்வு\nசின்ன‌க்க‌டை தெரு செல்லும் பகுதியில் குப்பையான சால...\nமினி பஸ் பயணத்தில் மின்சார‌ம் தாக்கும் அபாய‌ம் \nதிருப்புல்லாணி பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ர...\nமக்கள் கூட்டத்தால் புதிய கடல் பாலத்தில் திடீர் கடை...\nபெரியபட்டிணத்தில் காவல் நிலையம் தேவை \nகாவல் நிலையத்தில் நகராட்சி தலைவர் -துணை தலைவர் கோர...\nசீலா மீன் விற்பனையில் முஜீப் குற்றச்சாட்டில் உண்மை...\nஇந்திய அளவில் தடகள போட்டிக்கு கீழக்கரை கல்லூரி மாண...\n17வது வார்டு ஜாமியா நகர் கழிவு நீர் பிரச்சனைக்கு த...\nகீழக்கரையில் வாடகை வாகனங்களுக்கு பெண் டிரைவர்கள் ந...\nசதக் கல்லூரியில் பிரேசில் நாட்டவர்கள் கலந்து கொண்ட...\nஅமைச்சர் உத்தரவின் பேரில் கீழக்கரை அரசு மருத்துவமன...\nகீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 6 ஓட்டுநர்க...\nகடற்கரையில் புதிய பாலம் அருகே குப்பைகளை கொட்டி எரி...\nஅத்திலை தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் \nகீழக்கரைக்கு விரைவில் பெண் மருத்துவர் \nகீழக்கரையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வா...\nகீழக்கரை கல்லூரியில் 500 மாணவர்களுக்கு புதிய தொழில...\nவிபத்து பகுதியில் ஒளிரும் பிளாஸ்டிக் விளக்குகளை உட...\nகடற்கரை பாலத்தில் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் விள...\nகீழக்கரையில் வெளிநாட்டு புறா வியாபாரம் \nகமிஷனருக்கு நகராட்சி துணை தலைவர் புகார் மனு \nநகராட்சியில் 41.5 லட்சம் டெண்டரில் முறைகேடு புகார்...\nமலிவு விலை ஆந்திர‌ சீலா மீன்கள் கிலோ ரூ500க்கு வி...\nகீழக்கரை நகருக்குள் மீண்டும் மின் கட்டண அலுவலகம் \nபுதிய கடல் பாலத்தில் குவியும் மக்கள் \nகீழக்கரைக்கு முக்கியத்துவம் அளித்த அமைச்சர்கள்\nகீழக்கரையில் 37.5பவுன் நகை திருட்டு \nஇணையதளம் மற்றும் செல்போனில் தொந்தரவு\nகீழக்கரையில் அரைகுறையாக‌ அமைக்கபடும் தரமற்ற சாலைகள...\nதுப்புரவு செய்பவ‌ர்களே குப்பையை சாலையில் குவிக்கும...\nகீழக்கரையில் லிபியாவின் ஆலிவ் செடிகள் \nபல்லாண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஹமீதியா முன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://neo-lemurian.blogspot.com/2006/04/blog-post_114556688664234818.html", "date_download": "2018-05-27T03:11:14Z", "digest": "sha1:GE3EUNMWKPBJ6YQAITJJUBSDED3YM7CM", "length": 14169, "nlines": 125, "source_domain": "neo-lemurian.blogspot.com", "title": "பஃறுளி முதல் கூவம் வரை: கலைஞரால்தான் பொடா சிறையிலிருந்து வெளியே வந்தோம் - சுபவீ", "raw_content": "பஃறுளி முதல் கூவம் வரை\nவரலாறு என்பது பழைய கதை அன்று\nகலைஞரால்தான் பொடா சிறையிலிருந்து வெளியே வந்தோம் - சுபவீ\nவில்லிவாக்கத்தின் திமுக வேட்பாளரை ஆதரித்து அம்பத்தூரில் நடந்த பொதுக்கூட்ட்டத்தில் பேராசிரியர் 'அடலேறு' சுபவீ அவர்கள் பேசியிருக்கிறார் :\n* கலைஞரின் முயற்சியால்தான் - நானும், வைகோவும் மற்ற பொடாவில் கைது செய்யப்பட்டவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தோம்\n* வைகோ சிறையிலிருந்த போது எழுதிய நூல்கள் சிறப்பானவை;ஆனால் இப்போது அதற்கு நேர் எதிராக அவர் செயல்பாடுகள் உள்ளது. எனவே வைகோவின் நூல்களைக் கொளுத்தவேண்டும்.\n* ஜெ. தமிழின அடையாளங்களுக்கு எதிரானவர்; அவரை விமர்சிப்பவர்களைக் கொலை கூடச் செய்து விடுவார்.\n* தமிழகத்தில் சனநாயகம், தமிழின உணர்வு ஆகியவை தழைத்தோங்க திமுக கூட்டணிக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.\nகூட்டத்தில் கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான் - ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nசுபவீ அவர்களின் பேட்டியை தினகரன் வெளியிடுவதும், தினகரன் பேட்டியை நீங்கள் வெளியிடுவதும், தனக்கு ஆதரவளிக்கிறார் என்பதற்காக அவரை திமுக உபயோகப்படுத்திகொள்வதும் இன்னமும் திமுக ஒரு தீவிரவாதக்கட்சி என்ற எண்ணத்தைத்தான் மக்கள் மனதில் உறுதிப்படுத்தும். இன்னமும் திமுக திருந்தவில்லை என்பதாலேயே அதிமுக பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. இதுபோன்ற ஆதரவுகள் திமுகவுக்கு பலவீனமே தவிர பலம் அல்ல. இந்த பேட்டியை அதிமுக தகுந்த முறையில் உபயோகப்படுத்தினால், திமுகவுக்கு டெப்பாஸிட் காலி. ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு திமுக டெப்பாஸிட் காலியானதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கூட்டணிக்குப் பிறகு வைகோவும் திருமாவும் அடக்கி வாசிக்கிறார்கள். காரணம், அதிமுகவின் ஓட்டு வங்கி வைகோ- திருமாவின் அரசியலுக்கு எதிரானது. அதே காரணத்தால், திமுகவிற்கு ஆதரவு தரக்கூடிய மக்கள் கூட இப்படிப்பட்ட பேட்டிகளை கண்டு, அதிமுகவுக்கே வாக்களிக்க கூடும். தேர்தல் நேரத்தில் சுபவீயின் பேட்டியை தினகரன் வெளியிட்டது மடத்தனம்\nதினகரனில் சுபவீ செவ்வி பற்றிய என் பதிவை பிளாக்கர் தின்று விட்டதா என்று தெரியவில்லை - அதன் சுட்டி இதோ :\nஇந்துத்துவத்தின் இன்னொரு முகம்' ஜெயலலிதா என்று அடித்துச் சொல்லுகிறார் பேராசிரியர் சுபவீ அவர்கள் - தினகரனில் இன்று(22/4/06) வந்துள்ள செவ்வியில். செவ்வியின் சுட்டி:\nஅப்புறம் நீங்கள் சொல்வது போலெல்லாம் மக்கள் மடையர்கள் அல்லர் போன நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ இங்கே இருந்தபோதும், நெடுமாறன், சுபவீ ஆகியோர் திமுக அணியை ஆதரித்தபோதும் - நீங்கள் இப்போது சொல்லும் இதே காரணங்கள் அப்போது இன்னும் வலுவாக ஜெ. அணியால் வைக்கப்பட்டனவே\nஉங்களுக்கு ஒரு கூடுதல் செய்தி :\nசுபவீ திமுக அணியை ஆதரித்து தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார்; அதன் விவரம் இங்கே படிக்கவும் :\n'அவாள்'களுக்கு 'டாட்டா' காட்டுகிறார் தயாநிதி மாறன்...\nபொடாவுக்காக ஜெ. மன்னிப்புக் கேட்டாரா\nகலைஞரால்தான் பொடா சிறையிலிருந்து வெளியே வந்தோம் - ...\n'பரம்பரைப் பகையை' எதிர்கொள்ள இனமான வீரர்கள் அணிவகு...\nசிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடுப்பு\nமயிலாடுதுறையில் கிடைத்த கல்வெட்டு குறித்த செய்தியை மே 1 -இலேயே ஹிந்துவில் படித்திருந்தாலும், அப்போது வலைப்பதிய இயலவில்லை. இருந்தாலும் - அத...\nஇனி எந்தத் தனி மனிதனும் தமிழினத்தின் தலைவனாக கருதிக் கொள்ள முடியாது; அந்த ஏமாற்று வேலை இனி நடக்காது. எவன் காரிருள் சூழும்போது , இனத்துக்காக...\nதூ தூ தூ தூ தூ தூ.....யவர்கள்\nதூ தூ தூ தூ தூ தூயவர்கள் சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள் சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள் போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது\nதமிழ்நதியின் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் புளுகு மூட்டைகள்\nதமிழ்நதி அவர்களின் வலைப்பக்கங்களில் படித்த மிக இன்றியமையா, காலத்துக்குத் தேவையான கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். முழுமையாக... இதைப் பதிவி...\nகைபர் போலன் ஏர்வேஸும், அபிஷ்டுகளும்\nஆகக்கூடி கைபர் கணவாய்ப் பயணம் என்கிற ஈராயிரம் வருடக் கனவு நனவாகப் போகிற மகிழ்ச்சியில் மாமாக்களும், மாமிகளும் ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள்...\nதாமரையின் அரசியல் ஆற்றுப்படுத்தும் மடல்\nசீமானுக்கு - தாமரை என்கிற அற்புதமான தமிழச்சி எழுதிய அரசியல் \"ஆற்றுப்படுத்தும்\" மடல் படித்தேன். என் மனையிலும் பதித்து வைக்க வேண்டும...\nகர்ணனை மயக்கும் பசப்புக்காரி பாஞ்சாலி\nகுழலியின் இந்த அருமையான காலத்திற்கேற்ற பதிவைப் படித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தினகரனில் இன்று காலை(பிப்.12 ஆம் நாள்) வெளிவந்திருக்கும் ...\n'அவாள்'களுக்கு 'டாட்டா' காட்டுகிறார் தயாநிதி மாறன்\nசும்மாவே 'இவாள்'களுக்கு திமுக என்றால் எட்டிக்காய்; இப்போது ஜெ. மாமியின் தமிழக (கொடுங்)'கோல்' ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற் ...\nதென்கடல் இரகசியங்களும், குரங்கு கட்டிய பாலங்களும்\nவணக்கம் :) 'குமரிக்கண்டம்' என்றும் 'லெமூரியா' என்றும் தமிழர்களால் அறியப்பட்டிருக்கும் - தமிழர்களின...\nஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம்\n( படம் நன்றி : \"தி ஃரண்ட்லைன்\" ) கிட்டத்தட்ட ஒரு வருடமாக 'ஆதிச்சநல்லூர்' அகழ்வாய்வுகள் குறித்த செய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sellankoottam.blogspot.com/2012/08/mangala-vaazhthu-song-mangala-vaazhthu.html", "date_download": "2018-05-27T03:14:33Z", "digest": "sha1:2A4N4W75QYIOTNUJNJYWRGJDHUNYFPN6", "length": 35166, "nlines": 382, "source_domain": "sellankoottam.blogspot.com", "title": "Sellan Kulam (Kongu Vellala Gounder): Mangala Vaazhthu Song", "raw_content": "\nகவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய மங்கல வாழ்த்து வாழி\nநல்ல கணபதியை நாம்காலமே தொழுதால்\nஅல்லல் வினையெல்லாம் அகலுமே, சொல்லரிய\nதும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்\nஅலைகடல் அமிழ்தம் ஆரணப் பெரியவர்\nதிங்கள் மும்மாரி செல்வஞ் சிறந்திட\nகந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்\nசந்திரர் சூரியர் தானவர் வானவர்\nமுந்திய தேவர் மூவருங் காத்திட\nநற்கலி யாணம் நடத்திடும் சீர்தனில்\nதப்பித மில்லாமல் சரஸ்வதி காப்பாய்\nசீரிய தினைமா தேனுடன் கனிமா\nபாரிய கதலிப் பழமுடனே இளநீர்\nசக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்\nமிக்கத்தோர் கரும்பு விதவிதக் கிழங்கு\nஎள்அவல் நற்பொரி இனித்த பாகுடனே\nபொங்கல் சாதம் பொரிகறி முதலாய்\nசெங்கை யினாலே திரட்டிப் பிசைந்து\nஆரமுது அருந்தும் அழகு சிறந்த\nஅடியேன் சொல்லை அவனியில் குறித்துக்\nகடுகியே வந்தென் கருத்தினில் நின்று\nநினைத்த தெல்லாம் நீயே முடித்து\nமனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்\nமங்கல வாழ்த்தை மகிழ்ந்து ஓத\nஎன்குரு நாதன் இணையடி போற்றி\nகிரேதா திரேதா துவாபரம் கலியுகம்\nசெம்பொன் மகுடம் சேரன் சோழன்\nபைம்பொன் முடியும் பாண்டியன் என்னும்\nமூன்று மன்னர் நாட்டை ஆளுகையில்\nகருவுரு வாகித் திருவதி அவள்புகழ்\nநிறந்த மானிடம் தாயது கருப்பம்\nவாழ்வது பொருந்தி வளமாய் நலமாய்\nசெம்மை யுடனே சிறந்திடுங் காலம்\nஇந்திரன் தன்னால் இங்குவந்த நாளில்\nபக்குவ மாகிப் பருவங் கண்டு\nதிக்கில் உள்ளோர் சிலருங் கூடி\nவேதியன் பக்கம் விரைவுடன் சென்று\nசோதிடரை அழைத்துச் சாத்திரங் கேட்டு\nஇந்தமாப் பிள்ளை பேர்தனைச் சொல்லி\nஇந்த பொண்ணின் பேர்தனைச் சொல்லி\nஇருவர் பேரையும் ராசியில் கேட்டுக்\nகையில் ஓடிய ரேகைப் பொருத்தம்\nஒன்பது பொருத்தம் உண்டாவெனப் பார்த்துத்\nதாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு\nவாசல் கௌலி வலிதென நிமித்தம்\nதெளிவுடன் கேட்டுச் சிறியதோர் பெரியோர்\nகுறிப்புச் சொல்லும் குறிப்பையும் கேட்டு\nஉத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டு\nபொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து\nமச்சினன் ஊருக்கு வண்டியில் சென்று\nவெண்கல முரசு வீதியில் கொட்டத்\nதங்க நகரி தானாயலங் கரித்து\nமுத்துக்கள் தன்னை முசம்பரங் கொட்டி\nசித்திரக் கூடம் சிறக்கவே விளக்கி\nஉரியவர் வந்தார் உன்மகளுக் கென்றே\nபிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி\nநாளது குறித்து நல்விருந் துண்டு\nபூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து\nவாழ்வது மனைக்கு மகிழ வந்துமே\nகற்றோர் புலவர் கணக்கரை அழைத்து\nதேன்பனை யோலை சிறக்கவே வாரி\nதிசைதிசை எங்கும் தென்னவர் அனுப்பி\nகலியாண நாளைக் கணித்து அறிவித்தார்\nவாழை கமுகு மகமே ருடன்\nமூத்தோர் வந்து மொழுகி வழித்துப்\nபார்க்குமிட மெங்கும் பால்தனைத் தெளித்து\nபெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைத்\nகொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி\nநேரிய சம்பா அரிசியை நிறைத்துப்\nபாரிய வெல்லம் பாக்கு வெற்றிலை\nசீருடன் நெய்யும் தேங்காய் பழமும்\nவாரியே வைத்து வரிசை குறையாமல்\nமுறைமை யதாக முக்காலிமேல் வைத்து\nமணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்\nகுணம் பொருந்திய குடிமகன் அழைத்து\nபோன மச்சம் முகமது துடைத்து\nஎழிலான கூந்தலுக்கு எண்ணை தனையிட்டு\nகுணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்துமே\nஏழு தீர்த்தம் இன்பமுடன் விட்டு\nசெந்நெற் சோற்றால் சீக்கடை கழித்து\nநெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி\nஅன்னமும் முப்பழம் ஆவின் பாலும்\nவாசல் கிளறி மதிப்புடன் கூட்டி\nசாணங் கொண்டு தரைதனை மெழுகி\nகணபதி உன்றைக் கருத்துடன் நாட்டி\nஅருகது சூட்டி அருள் பொருந்திடவே\nநிறமிய தாகவே நிறைநாழி வைத்து\nவெற்றிலை பழமும் விருப்பமுடன் வைத்து\nஅலைகடல் அமிழ்தம் அவணியில் நீரும்\nகுழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து\nகளரியோர் மெச்சிடக் காப்பது கட்டி\nகுப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்து\nசெப்பமுடன் மன்னவர்க்கு திருநீரு அணிந்து\nசாந்து சந்தனம் தான்பன் னீரும்\nசேர்த்துக் கலக்கிச் சிறக்கவே பூசி\nகொத்தரளி கொடியரளி கோத்திரத்து நல்லரளி\nமுல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூ\nநாருங் கொழுந்தும் நந்தியா வட்டமும்\nவேருங் கொழுந்தும் வில்வ பத்திரமும்\nமருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும்\nபுன்னை கொன்னை பூக்கள்எல்லாம் கொண்டுவந்து\nசுடர்மாலை ஆடை ஆபரணம் அலங்காரம்\nதிடமாய் மிகச்செய்து திட்டமுடன் பேழைதனில்\nசோறு நிறையுடன் நிறைநாழி வைத்து\nநட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைதனக்கு\nநன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே\nசெந்சோறு ஐந்துஇடை சிரமத்தைச் சுற்றி\nதிருஷ்டி கழித்துச் சிவசூரியனைக் கைதொழுது\nஅட்டியெங்கும் செய்யாமல் அழகு மனைக்குவந்து\nமணவறை அலங்கரித்து மன்னவரைத் தானர்த்தி\nஇணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்து\nசந்தனம் புணுகு சவ்வாது மிகப்பூசி\nமந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டு\nஆடை ஆபரணம் அழகுறத்தான் பூண்டு\nகூறை மடித்துவைத்துக் குணமுள்ள தங்கையரும்\nபேழைமூடி தான்சுமந்து பிறந்தவரை சுற்றிவந்து\nபேழையை இறக்கிவைத்து பிறந்தவளை அதில்நிறுத்தி\nகூறைசேலை ஒருதலைப்பை கொப்பனையாள் கைப்பிடித்து\nமாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனைதான் கொடுத்து\nஅருமைபெரியார் அழகு மாப்பிள்ளை கையை\nஅரிசியில் பதியவைத்து அங்கரன் பூசைசெய்து\nமங்கல வாழ்த்துகூற மணவறையில் குடிமகனுக்கு\nசெங்கையால் அரிசியள்ளி சிறக்கக் கொடுத்திடுவார்\nகுடிமகன் மங்கலவாழி கூறி முடித்தவுடன்\nவேழமுகத்து விநாயகரின் தாள் பணிந்து\nசந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய\nஇந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு\nஅடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்\nமுன்னர் ஒருமுறை விநாயகருக்கு இணைநோக்கி\nபின்னர் ஒருமுறை பிறந்தவர்க்கு இணைநோக்கி\nஇந்திரனார் தங்கைக்கு இணைநோக்கி நின்றபின்பு\nதேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்வ விநாயகனைப்\nபாங்காய் கைதொழுது பாரிகொள்ளப் போரோமென்று\nபோதவே பால்வார்த்துப் போசனமும் தானருந்தி\nதாயாருடன் பாதம் தலைகுனிந்து தெண்டனிடப்\nபோய்வாமகனே என்றாள் பூங்கொடிக்கு மாலையிடப்\nபயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்\nமதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவர\nதந்தை யானவர் தண்டிகை மேல்வர\nதமையன் ஆனவர் யானையின் மேல்வர\nநாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போலவர\nதேடியே வந்தவர்கள் தேரரசர் போலவர\nபேரணி முழங்க பெரிய நகாரடிக்க\nபூமிதான் அதிர புல்லாங்குழால் ஊத\nஎக்காளஞ் சின்னம் இடிமுரசு பெரியமேளம்\nகைத்தாளப் பம்பை கனகதப்பட்டைதான் முழங்க\nதுத்தாரி நாதசுரம் சோடிகொம்பு தானூத\nவலம்புரிச் சங்கு வகையாய் ஊதிவர\nஉருமேளம் பறைமேளம் உரம்பை திடும் அடிக்க\nபலபல விதமான பக்கவாத்தியம் முழங்க\nபல்லாக்கு முன்னடக்க பரிசுகள் பறந்துவர\nவெள்ளைக்குடை வெண்சாமரம் வீதியில் வீசிவர\nசுருட்டிய சூரியவாணம் தீவட்டி முன்னடக்க\nஇடக்கை வலக்கை இனத்தார் சூழ்ந்துவர\nகுதிரையின் மீதமர்ந்து குணமுள்ள மாப்பிள்ளைதான்\nசேனைகள் முன்னே சிறந்து முன்னடக்க\nகட்டியங்கள் கூறி கவிவாணர் பாடிவர\nநாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தெய்வடியாள்\nமேகவண்ணச் சேலை மின்னல்போல் மின்ன\nஅடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவர\nபெண் வீட்டார்கள் பிரியமுடன் எதிர்வந்து\nமன்னவ ர்தங்களை வாருங்கள் என்றழைத்து\nவெகு சனத்துடனே விடுதியில் விட்டு வந்தார்\nவாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்புவோம் என்று\nநாழியரிசிக் கூடை நன்றாகமுன் அனுப்பி\nபொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிற்கு\nநல்ல முகூர்த்தம் நலமமுடன் தான்பார்த்து\nபெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்\nபட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்\nசத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை\nமுத்துச் சரப்பணி மோகன மாலைகளும்\nதிட்டமுடன் மங்கையர்க்கு திருப்பூட்டப் போவோம் என்று\nஅட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை\nபொன் வளையல்கையால் பேழைமுடிதான் சுமந்து\nஇன்னும் சிலபெண்கள் இவர்களையே சூழ்ந்துவர\nசென்று உட்புகுந்தார் திருப்பெண்ணாள் மாளிகையில்\nநாட்டில் உள்ளசீர்சிறப்பு நாங்கள் கொண்டு வந்தோம்என்று\nகொண்டுவந்த அணிகலனைக் கோதையருக்கு முன்வைக்க\nகண்டு மகிழ்ந்தார்கள் கன்னயர்கள் எல்லேரும்\nபூட்டினார் தோடெடுத்து பொன்னாள் திருக்காதில்\nதங்கச் சங்கிலிதனை தான்கழுத்தில் இட்டார்கள்\nஅடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி\nஆனிப் பெண்ணவளை அலங்கரித்துக் குலம்கோதி\nசாந்துப் பொட்டிட்டு சவ்வாது மிகபூசி\nஊட்டுமென்றார் சாதம் உடுத்துமென்றார் பட்டாடை\nஅன்பாக வெற்றிலை அடைக்காயும்தான் கொடுத்தார்\nதாய்மாமன் தன்னை தன்மையுடனே அழைத்து\nசந்தனம் மிகபூசி சரிகைவேட்டிதான் கொடுத்து\nபொட்டிட்டுப் பொன் முடித்து பேடைமயிலிற்குப்\nஆரணங்குப் பெண்ணை அலங்காரம் மிகச்செய்து\nமாமன் குடைபிடித்து மாநாட்டார்சபைக்கு வந்து\nவலமதாய் வந்து நலமதாய் நின்று\nசெஞ்சோறு ஐந்து அடைசிரம்கால் தோளில்வைத்து\nநிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்து\nஅட்டியங்கள் செய்யாமல் அழகுமனைக்கு வந்து\nமங்களகல்யாணம் செய்ய மணவறை அலங்கரித்து\nஅத்தி எழுதப்பட்டு அனந்த நாராயணப்பட்டு\nபஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கி\nமாந்துளிர் சேர்பூங்கொத்து வண்ணமுள்ளப் பட்டாடை\nகட்டியே இருக்கும்கனப் பெரிய வாசலிலே\nஅருமையுள்ள வாசலிலே அனைவரும் வந்திறங்கிப்\nபெருமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்து\nசேரசோழ ராசாக்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே\nசெம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலே\nவிருதுகள் வழங்கிடும் வளமான வாசலிலே\nதரணியின் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலே\nநாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டு\nபேய்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும்தான் போட்டு\nசாலுங் கரகமும் சந்திர சூரியரும்\nஅம்மி வலமாக அரசாணி முன்பாக\nஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாக\nசுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்\nபத்தியுடன் இதனையும் பாரித்தார் மணவறையில்\nமணவறை அலங்கரித்து மணவாளனை இருத்தி\nஅழகுள்ள பெண்ணை அலங்காரம் மிகச்செய்து\nமாமன் எடுத்து மணவறையைச் சுற்றிவந்து\nகுலம் பெரியமன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க\nஇராமன் இவரோ இலக்குமணன் இவரோ\nகண்ணன் இந்திரன் காமன் இவரோ\nஅத்தை மகள்தனை அழகு செல்வியை\nகணபதி முன்பாககட்டும் மாங்கலியம் வைத்து\nஅருமை பெரியவர் அன்புடன் பூசைசெய்து\nமாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்தி\nகெட்டிமேளம் சங்கநாதம் கிடுகிடென்று சப்திக்க\nமாணிக்கம்போல் மாங்கல்யம் வைடுரியம்போல் திருப்பூட்டி\nமாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவென்று தானழைத்து\nகலம் பெரியஅரிசிதனில் கைகோர்வை தானுமிட்டு\nசிங்காரமான இந்த தெய்வச் சபைதனிலே\nகங்காகுலம் விளக்கக் கம்பர்சென்ன வாழ்த்துரையை\nமங்கலமும் கன்னி சொல்லவாத்தியம் எல்லாம்அடக்கி\nமறையோர் வேதம்சொல்ல மற்றவர் ஆசிகூற\nபிறைஆயிரம் தொழுது பிள்ளையாருக்குப் பூசைசெய்து\nஅருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்பு\nகைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்து\nதங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து\nஉரியதோர் பாட்டன் இருவருட கைதனிலே\nதண்ணிர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு\nபிரியமுள்ள மணவறையை பின்னும் சுற்றிவந்து\nமங்கலக் கல்யாணம் வகையாய் முடிந்ததென்று\nசாப்பாடு போசனம் சந்தோசமாய்ப் போட\nஉண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்\nகொண்டு வந்தபொன்முடிப்பைக் கொடுத்துச் செல்லுமென்றார்\nமண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் அமர்ந்து\nகல்யாணத்தார் தம்மை கருத்துடனே அழைத்து\nகண்ணாளர் தனையழத்து ப்பொன்னேட்டம் காணுமென்றார்\nபணமது பார்த்து குணமது கழித்து\nவெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்\nசம்மன் கட்டி சாத்தூர் தேவன்\nஉரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்\nஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு\nஒருமுழி முழிக்க ஒருமுழி பிதுங்க\nபலவகை நாணயமும் பாங்காய் தெரிந்து\nமுன்னூறு பொன்னு முடிப்பொன்றாய் முடிந்தவுடன்\nபாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்\nபந்தல் கௌரி பாக்கியம் உறைக்க\nமச்சினன்மார்கள் மகிழ்ந்து சூழ்ந்து நிற்க\nசிற்றடிப் பெண்கள் சிறுசீர்கள் சுமந்துவர\nசகாயமென்ற பேர்களுக்கு தனிப்பணம்தான் கொடுத்து\nவாழிப் புலவருக்கு வரிசைதனைக் கொடுத்து\nதிட்டமுள்ள பந்தலின் கீழ்வந்தநின்ற பேர்களுக்கு\nகரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கு\nபுடவைதனைக் கொடுத்துப் பின்னுந்தலை முழுகி\nசாதம் பரிமாறி சாப்பிட்டு ஆனவுடன்\nபண்ணையத்து மாதிகனைப் பண்பாக தானழைத்து\nவில்லை மிதியடிகள் மிக்கவே தொட்டபின்பு\nகாலும் வழங்கிக் கன்னிகையைத் தானழைத்து\nமஞ்சள் நீராடி மறுக்க இருஅழைப்பழைத்து\nமாமன்மார்களுக்கு மகத்தான விருந்து வைத்து\nமங்கள சோபனம் வகையாய் முடிந்தவுடன்\nமாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்\nதுப்பட்டு சால்வை சோமன் உருமாலை\nபஞ்சவர்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டுசேலை\nஅத்தியடி துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி\nமேலான வெள்ளைப்பட்டு மேகவர்ணக் கண்டாங்கி\nஇந்திர வர்ணப்பட்டு ஏகாந்த நீலவர்ணம்\nமுறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்\nபதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை\nகட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்\nவட்டில் செம்பும் வழங்கும் சாமான்களும்\nகாளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்\nகுதிரையுடன் பல்லாக்கு குறையாத பல்பண்டம்\nஆதி கணேசன் அன்புடன் வாழி\nவெற்றிவேல் கொண்ட வேலவர் வாழி\nவாணி சரஸ்வதி மகிழ்வுடன் வாழி\nஎம் பெருமானின் இணையடி வாழி\nபாரத தேசம் பண்புடன் வாழி\nமாது உமையவள் மகிழ்வுடன் வாழி\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் வாழி\nநாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும் வாழி\nமாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி\nவேதம் ஓதிடும் வேதியர் வாழி\nகொங்கு நாட்டுக் குடிகளும் வாழி\nவாழியே யானும் மகிழ்வுடன் வாழி\nஎன்குரு கம்பர் இணையடி வாழி\nவையத்து மக்கள் மற்றவரும் வாழி\nகாராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி\nவேளாளர் குலதிலகர் விவசாயரும் வாழி\nஇந்தபாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே\nஆல்போல் தழைதழைத்து அருகுபோல் வேறூன்றி\nமூங்கில்போல் கிளைகிளைத்து முசியாமல் வாழ்ந்திருக்க\n-மங்கல வாழ்த்து வாழி முற்றிற்று-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%0A/&id=40665", "date_download": "2018-05-27T03:10:45Z", "digest": "sha1:PVOW66QUQRB6ZJK3XTWP2XDJW6D4EYQF", "length": 12118, "nlines": 137, "source_domain": "tamilkurinji.co.in", "title": "அழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா டிரம்ப்- இவாங்கா டிரம்ப் ,Melania, Ivanka Trump featured in The Hill's '50 Most Beautiful' list ...news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் ,Melania, Ivanka Trump featured in The Hill's '50 Most Beautiful' list ...news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஅழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா டிரம்ப்- இவாங்கா டிரம்ப்\nஹில் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வாஷிங்டனில் உள்ள அழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா மற்றும் இவாங்கா இடம் பிடித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் பிரபல ஹில் பத்திரிக்கை வாஷிங்டனில் வசிக்கும் 2017-க்கான அழகான 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலானது தரவரிசை படி வெளியிடப்படாமல், அகவரிசை படி வெளியிடப்பட்டுள்ளது.\n50 அழகான பெண்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவியும், அந்நாட்டின் முதல் பெண்மணியுமான மெலேனியா டிரம்ப் இடம் பிடித்துள்ளார்.\nஅதே போல டிரம்பின் மகள் இவாங்காவின் பெயரும் பட்டியலில் உள்ளது. வெள்ளை மாளிகையின் உள்நாட்டு கொள்கை உறுப்பினர் ஜினா பாஸ் , வெள்ளை மாளிகையின் தொடர்பு துறை இணைப்பாளர் லேயா லெவெல் மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் ரெவீன் பிரீபஸ்க்கு உதவியாளராக இருக்கும் மல்லோரி ஹன்டே ஆகிய மூன்று பேரும் அழகான பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.\nகடந்த 2015ல் ஹில் பத்திரிக்கை வெளியிட்ட அழகான பெண்கள் பட்டியலில் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே\nலண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்\nவயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங்\nஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப்\nஎன் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்\nநேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு\nகணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக முகமது ஷமி மனைவி குற்றசாட்டு\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nசக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் கார்\nதனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர்\nகொலையாளியை காட்டிக்கொடுத்த ஃபேஸ்புக் செல்ஃபி தோழி கைது\n106 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்\nகணவன் மனைவி சண்டையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமானம்\nஇளம்பெண்கள் கடலில் இறந்து மிதந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம்.\nஉலகிலேயே மிக நீளமான கால்களை கொண்ட மாடல் அழகி யார் தெரியுமா\nபுளூவேல் கேம் பின்னணியில் செயல்பட்ட 17 வயது பெண் ரஷ்யாவில் கைது\nஹார்வி புயல் - 200 இந்திய மாணவர்கள் கழுத்து அளவு நீரில் சிக்கி தவிப்பு\nசவுதி மன்னரின் ஆடம்பர விடுமுறை கொண்டாட்டத்தின் செலவு ரூ 650 கோடி\nபவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம்\n”வெறுப்பதற்காக யாரும் பிறக்கவில்லை” சாதனை படைத்த ஒபாமாவின் டுவிட்டர் கருத்து\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t44244-topic", "date_download": "2018-05-27T03:26:17Z", "digest": "sha1:7NAQPU4L4ARPOUYDHQNIVIKWUWTXBSLG", "length": 12419, "nlines": 141, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சொர்க்கம்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநல்ல செயலை நாளை செய்வேன்\nஎன்று எண்ண வேண்டாம் – மனதில்\nநன்மை என்று தெரிந்த கணத்தில்\nகணத்தில் மாறும் உலக நடப்பு\nஎன்ப தெல்லாம் தெரிந்து – ஒவ்வொரு\nகணமும் வேண்டும் தெளிந்த முடிவு\nஉன்னை உயர்த்தும் நிலைகள் எல்லாம்\nஉனது உழைப்பில் உண்டு – அதை\nஉணர்ந்து உண்மை வழியில் சென்றால்\nநிறைய பொருளை சேர்த்துக் கொள்ளும்\nநிலையில் உயர்வு இல்லை – மனித\nநேயம் சேர்த்து கருணை கொள்வது\nநமக்குள் இருக்கும் நலிந்த மக்கள்\nநலத்தில் நாட்டம் கொண்டு – அவர்கள்\nசுமக்கும் சோகம் பகிர்ந்து கொண்டால்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/05/blog-post_18.html", "date_download": "2018-05-27T02:56:38Z", "digest": "sha1:6PVUGDOCXLSUH6T5KTSW6SWRF3HZJHXA", "length": 12723, "nlines": 250, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கேள்வி", "raw_content": "\nஉயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கேள்வி\nஉயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி 17 நாட்கள் ஆகியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வதால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது\nதேர்வெழுதிய 35 ஆயிரம் பேர் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஅரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 23-ல் எழுத்துத் தேர்வை நடத்தியது.\nஇத்தேர்வை 35,781 பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) கடந்த அக்டோபர் 10-ல் வெளியிடப்பட்டன. பொதுவாக, கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2017 வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளிடப் படவில்லை.\nசிறப்பாசிரியர் தேர்வில் உடற்கல்வி ஆசிரியர்பணிக்கான கல்வித்தகுதி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்வு முடிவு தடை இருந்து வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடையை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 27-ம் தேதியே நீக்கிவிட்டது. உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி 17 நாட்கள் ஆகியும் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது தேர்வெழுதியுள்ள 35 ஆயிரம் தேர்வர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.\nஇதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளின் முடிவுகள் இரண்டே மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு விடுகின்றன. இத்தனைக்கும் அத்தேர்வுகள் விரிவாக விடையளிக்கக்கூடிய தேர்வுகள். ஆனால், வெறும் 35 ஆயிரம்பேர் அப்ஜெக்டிவ் வடிவில் எழுதியுள்ள சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட 8 மாதங்களுக்கு மேல் ஆகியும்ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் காலதாமதம் செய்வது ஏன் எனத் தெரியவில்லை.\nதேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக கடந்த மாதம் ஈரோட்டில் பள்ளிக் கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அவர் 15 நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எங்களிடம் உறுதி அளித்தார். ஆனால், அவர் உறுதி அளித்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. குறைந்தபட்சம் இறுதி விடைகளையாவது (Final Key Answer) உடனடியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://anmikam4dumbme.blogspot.in/2013_09_01_archive.html", "date_download": "2018-05-27T03:13:41Z", "digest": "sha1:6AJ7IZXF54KMC44MMVJHLE5WYR7U4MJ2", "length": 51651, "nlines": 464, "source_domain": "anmikam4dumbme.blogspot.in", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: September 2013", "raw_content": "\n அங்கங்க ஏற்கெனெவே விசர்ஜன நிகழ்வுகளும் நடக்க ஆரம்பிச்சாச்சு.\nவருஷா வருஷம் இதை ஒட்டி சில கேள்விகள் எழும். சில விஷயங்கள் விவாதிக்கப்படும்.\nநீர்நிலை மாசு படுது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நீர்நிலைகள் மாசு படுவது பத்தி கவலைப்பட்டுத்தான் நீர்நிலைகளையே காணாமல் போகச்செய்கிறார்கள் என்று தோன்றுகிறது போரூர் ஏரி தனியார் உடமை என்று சொல்லி அதை ஒரு பகுதியில் மண் போட்டு தூர்க்கிறார்கள் என்று செய்தி படித்தேன்.\nமுன் காலத்தில் வீட்டுக்கு வீடு கிணறு ஊருக்கு ஊர் குளம் இருந்த காலத்தில் பூஜை முடிந்து பிள்ளையரை அதில் சேர்ப்பதில் கஷ்டமில்லை. இப்போதோ கிணறே கிடையாது. ஊருக்கு ஊர் குளமும் இல்லை. அப்படி இருந்தாலும் அதில் தண்ணீர் இல்லை.\nஎங்கிருந்து பிள்ளையார் செய்ய மண் வந்ததோ அங்கேயே அது திரும்பிவிடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் கலெக்ஷன் சென்டர் வைத்து அங்கே மண் பிள்ளையாரை பெற்று அவர் வந்த இடத்தில் சேர்க்க வழி செய்யலாம்.\nஇன்னொரு விஷயம் பிள்ளையாரை விசர்ஜனம் செய்கிறேன் பேர்வழி என்று விநாயகர் சிலைகளை காலால் உதைத்து ஒடித்து எல்லாம் செய்கிறார்கள் என்பது.\nஇதைத்தான் முக்கியமாக சொல்ல வந்தேன். இதில் நம் பேதமை கொஞ்சம் இருக்கிறது.\nஆன்மீகத்தில் ஒரு வழி அத்வைதம். இது மிக உயர்ந்த வழி எனப்படுகிறது. இதன் படி பார்த்தால் உதைப்பவனும் இல்லை உதை வாங்குகிற வஸ்துவும் இல்லை. ஆனால் இந்த நிலையில் சாதாரண மக்களாகிய நாம் இருக்க இயலவில்லை. இதை விட்டு விடலாம்.\nசாதாரண மனித மட்டத்தில் இருந்து சரியாக இருந்து யோசித்தால் சில விஷயங்கள் புரிய வரலாம்.\nகோவிலில் வைக்க ஒரு சிற்பி கல்லை செதுக்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க செதுக்க அது உருவம் பெறுகிறது. ஏறத்தாழ முழு உருவம் பெற்றுவிட்ட நிலையிலும் அவன் அதன் மீது ஏறி நின்று கூட வேலை செய்வான். அதில் அவன் தவறேதும் காண்பதில்லை. ஏன் என்றால் அது இன்னும் கல்தான். அது எப்போது ஸ்வாமி ஆகிறது எப்போது அதை நெல்லிலும் நீரிலும் இட்டு வாசம் செய்வித்து மந்திரங்கள் ஓதி கண் திறந்து சடங்குகளை பூர்த்தி செய்கிறார்களோ அப்போதுதான் அது ஸ்வாமித்வம் பெறுகிறது. இப்போது அந்த சிற்பியை கூப்பிட்டு காலால் மிதி பார்க்கலாம் என்றால் அபசாரம் அபசாரம் என்பான் எப்போது அதை நெல்லிலும் நீரிலும் இட்டு வாசம் செய்வித்து மந்திரங்கள் ஓதி கண் திறந்து சடங்குகளை பூர்த்தி செய்கிறார்களோ அப்போதுதான் அது ஸ்வாமித்வம் பெறுகிறது. இப்போது அந்த சிற்பியை கூப்பிட்டு காலால் மிதி பார்க்கலாம் என்றால் அபசாரம் அபசாரம் என்பான் விதிகள் படி பூஜைகள் நடக்க நடக்க அந்த இறைத்தன்மை அதிகரிக்கிறது. மாறாக பல வருஷங்களாக கும்பாபிஷேகம் செய்யாமலும் நித்திய பூசைகள் சரிவர இல்லாமலும் போனால் அப்போது அங்கே ஸ்வாமித்வம் குறைகிறது.\nபூஜையின் போதே எப்படி ஒரு மஞ்சள் பிள்ளையாருக்கோ, சரஸ்வதி படத்துக்கோ எப்படி ஸ்வாமித்வம் வருகிறது ப்ராணப்ரதிஷ்டை என்று செய்து பூஜை முடியும் வரை ப்ரீதி பாவத்துடன் இந்த சித்திரத்தில் / பிம்பத்தில் இரு என்று சொல்ல அந்த சித்திரத்தில்/ பிம்பத்தில் இறைத்துவாம் வருகிறது. இப்படி சங்கல்பம் செய்வதால் பூஜை முடிந்த பின் 'யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி' - உன் இடத்துக்கே அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல அந்த இறைத்துவம் பொது இறைத்துவத்துடன் கலந்து விடுகிறது. அதன் பின் மஞ்சள் பிள்ளையார் வெறும் மஞ்சள்தான். படம் வெறும் சித்திரம்தான்.\nபிள்ளையார் சதுர்த்தி சமாசாரமும் அப்படித்தான். பிள்ளையார் பிம்பத்தை மண்ணிலோ ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸீலோ காகிதத்திலோ செய்து பூஜை செய்ய சங்கல்பத்தால் அங்கே ஸ்வாமித்வம் வந்துவிடுகிறது. விசர்ஜன காலத்தில் கற்பூரம் காட்டி போய் வா என்று அனுப்பிவிட்டால் ஸ்வாமித்வம் போய் விடுகிறது மீதி இருப்பது வெறும் மண் / ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்/ காகிதம். இதை நடைமுறைக்கு தகுந்தபடி டிஸ்போஸ் செய்வதில் ஒரு ஆட்சேபனையும் இருக்க முடியாது.\nஆனால் நாம் என்ன செய்கிறோம் பல வருஷங்கள் உயிருடன் இருந்த ஆசாமியை இறந்தபின் கொஞ்சம் மரியாதையுடன் கொண்டு எரிப்பது / புதைப்பது போல இதையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடப்பதில்லை. அதனால் நமக்கு மனசு சமாதானம் ஆவதில்லை.இதுக்கு ரொம்ப துன்பம் வேண்டாம் என்கிறதே சொல்ல வந்தது.\nநாமும் சோம்பேறித்தனமாக வீட்டில் இருக்கிற மண் பிள்ளையாரை கொண்டு வந்து உற்சவம் நடக்குமிடத்தில் வைத்துவிட்டு ஒரு ரூபாயை உண்டியில் போட்டுவிட்டு பொறுப்பு முடிந்ததாக எஸ்கேப் ஆகிவிடுகிறோம் வண்டியில் இப்படி சேரும் ஆயிரக்கணக்கான பிள்ளையாரை என்ன செய்ய வண்டியில் இப்படி சேரும் ஆயிரக்கணக்கான பிள்ளையாரை என்ன செய்ய தூக்கித்தான் எறிவார்கள். இதற்கு புலம்பினால் என்ன செய்ய தூக்கித்தான் எறிவார்கள். இதற்கு புலம்பினால் என்ன செய்ய\nநம் வீட்டு பிள்ளையாரை நாமே டிஸ்போஸ் செய்வோம்\n\"ஆமாம், அது என்ன பெரியவா ஈஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றீர்கள்” என்று கேட்க அடுத்த கதை வந்தது” என்று கேட்க அடுத்த கதை வந்தது\nஇந்த கதையை சொல்லறத்துக்கு முன்னே மஹாபாரதக்கதை ஒண்ணை நினைவு படுத்தினா நல்லா இருக்கும்\nமஹா கோபியான துர்வாசர் தன் சிஷ்யர்கள் சிலருடன் திருதராஷ்ட்ரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார். திருதராஷ்ட்ரன் முறை படி அவரை வரவேற்றான். தன் மகன் துரியோதனை அழைத்து \"அப்பா, இவரை நன்றாக கவனித்துக்கொள். இவர் ஆசீர்வாதம் செய்துவிட்டால் எப்பவுமே உனக்குத்தான் வெற்றி” என்றான்.\nதுரியோதனுக்கு இது பிடிக்கவில்லை. இருந்தாலும் அவரை உபசரித்தான். ஆனால் துர்வாசர் மகிழ்ந்ததாக தோன்றவில்லை.\nதன் மாமா சகுனியிடம் இப்படி தெருவில் போகிறவர்களையும் காட்டுவாசிகளையும் உபசரிக்கும் நிலைக்கு வந்துவிட்டேனே என்று துரியோதன் புலம்பினான். சகுனி \"டேய் கவலைப்படாதே இதையே நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம். நான் சொல்கிறபடி செய். துர்வாசரை வழி அனுப்பும் போது நைச்சியமாக பேசி அவரை காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் அனுப்பிவிடு. அவருடைய ஆசீர்வாதங்கள் பலிக்குமோ என்னவோ, அவருடைய சாபம் ஒரு வழியாக்கிவிடும். இங்கேயே ராஜோபசாரங்களால் திருப்தி அடையாதவர் அங்கே காட்டில் பாண்டவர்கள் செய்யக்கூடிய சிறு உபசாரத்தால் எப்படி திருப்தி அடைவார் இதையே நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம். நான் சொல்கிறபடி செய். துர்வாசரை வழி அனுப்பும் போது நைச்சியமாக பேசி அவரை காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் அனுப்பிவிடு. அவருடைய ஆசீர்வாதங்கள் பலிக்குமோ என்னவோ, அவருடைய சாபம் ஒரு வழியாக்கிவிடும். இங்கேயே ராஜோபசாரங்களால் திருப்தி அடையாதவர் அங்கே காட்டில் பாண்டவர்கள் செய்யக்கூடிய சிறு உபசாரத்தால் எப்படி திருப்தி அடைவார் சாபம் கொடுப்பார். நமக்கு நல்லது சாபம் கொடுப்பார். நமக்கு நல்லது\nதுரியோதனன் அதே போல துர்வாசர் கிளம்பும் போது அவரை நமஸ்கரித்து, “ஸ்வாமி, எனக்கு கிடைத்த இதே பாக்கியம் என் சகோதரர்களுக்கும் கிடைக்க வேண்டும். காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் சென்று அவர்களது உபசாரத்தையும் தாங்கள் ஏற்க வேண்டும் ” என்று வேண்டிக்கொண்டான். துர்வாசருக்கும் பாண்டவர்களை காண வேண்டும் என்று தோன்றியதால் அவரும் பாண்டவர்களைத் தேடிக்கிளம்பினார். காட்டில் அவர்களை ஒரு நடுப்பகல் தாண்டிய நேரத்தில் கண்டுபிடித்தார். பாண்டவர்கள் அவரை வரவேற்று உபசரித்தனர். பக்கத்தில் நதியில் நீராடி வருகிறோம். உணவு தயாராகட்டும் என்று சொல்லி அனைவரும் நீராடச்சென்றனர். பாண்டவர்கள் திகைத்தனர். சூரியன் கொடுத்த பாத்திரத்தில் இருந்து தினசரி உணவு எடுத்து இருக்கும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு கழுவி வைத்துவிட்டால் அடுத்த நாள்தான் உணவு கிடைக்கும்\nஆபத்து வந்தால்தானே நாம் கடவுளை நினைக்கிறோம் த்ரௌபதி க்ருஷ்ணனை வேண்டினாள் கண்ணா, இது என்ன சோதனை எல்லாருக்கும் உணவிட்டுவிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே எல்லாருக்கும் உணவிட்டுவிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே இப்போது திடீரென்றூ உணவு தயாரிக்க என்ன செய்வேன் இப்போது திடீரென்றூ உணவு தயாரிக்க என்ன செய்வேன் எங்கே போவேன். முனிவர் வேறு மஹா கோபிஷ்ட்டராயிற்றே எங்கே போவேன். முனிவர் வேறு மஹா கோபிஷ்ட்டராயிற்றே\nஉடனே அங்கே க்ருஷ்ணன் வந்து சேர்ந்தான்.\nஇப்போதுதான் உன்னை நினைத்தேன். ஒரு விஷயம்\nஉன் விஷயம் எல்லாம் அப்புறம் ஆகட்டும். இப்போது எனக்கு மஹா பசி. உணவிடு\n கண்ணா நீயுமா என்னை சோதிப்பாய்\n அதெல்லாம் ஒன்றுமில்லை. சாப்பாடு போடு.\nஅதைத்தான் சொல்கிறேன். உணவு பாத்திரம் காலி.\nபரவாயில்லை அதை இங்கே கொண்டு வா\nபாத்திரத்தில் ஒரு மூலையில் ஒரே ஒரு பருக்கை சாதமும் கீரையும் ஒட்டிக்கொண்டு இருந்தது. த்ரௌபதி தலை குனிந்தாள்\nக்ருஷ்ணன் பருக்கையை எடுத்து உண்டான், தண்ணீர் குடித்தான். ஏதோ பெரிய விருந்து சாப்பிடது போல ஏப்பம் விட்டான். சரி சரி, நான் வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டான்\nநீராடி கடன் முடித்து கரையேறிய துர்வாசர் மற்றும் அவரது சிஷ்யர்களுக்கு திடீரென்று வயிறு நிரம்பிய உணர்வு இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை இப்போது பாண்டவர்கள் உணவிட்டால் அதை எப்படி சாப்பிடுவது இப்போது பாண்டவர்கள் உணவிட்டால் அதை எப்படி சாப்பிடுவது பேசாமல் அவர்கள் கிளம்பி வேறு திசையில் போய்விட்டனர்\nஆந்திராவில் மதனப்பள்ளி என்றொரு ஊர். அக்கம் பக்கம் எல்லாம் மலைவாசிகள், குறவர்கள் வசிக்கும் கிராமங்கள் ஏறத்தாழ 30-40 இருந்தன. அங்கே மஹா பெரியவா கேம்ப். உள்ளூர்வாசிகள் அன்னக்கொடி கட்டி அன்னதானம் செய்து கொண்டு இருந்தனர். அன்னக்கொடி கட்டிவிட்டால் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் செய்தே தீர வேண்டும். திடீரென்று ஒரு நாள் இந்த மலைவாசிகளிடம் ஒரு சலசலப்பு. டவுனில் அன்னதானம் செய்கிறார்களாமே நாமும் போய் விருந்து சாப்பிட்டு வரலாம். காலையில் கிளம்பி ஆங்காங்கே மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு மதனப்பள்ளியை நோக்கி நடக்கலாயினர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி சுமார் 200- 250 பேர் அன்னதான கூடத்தை நோக்கிப் போய் கொண்டு இருந்தனர். ஆனால் அங்கேயோ அன்றைய உணவுப்பறிமாறல் முடிந்துவிட்டது. வழக்கமாக இவ்வளவு பேர் என்று ஒரு கணக்கில்தானே சமைப்பார்கள் நாமும் போய் விருந்து சாப்பிட்டு வரலாம். காலையில் கிளம்பி ஆங்காங்கே மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு மதனப்பள்ளியை நோக்கி நடக்கலாயினர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி சுமார் 200- 250 பேர் அன்னதான கூடத்தை நோக்கிப் போய் கொண்டு இருந்தனர். ஆனால் அங்கேயோ அன்றைய உணவுப்பறிமாறல் முடிந்துவிட்டது. வழக்கமாக இவ்வளவு பேர் என்று ஒரு கணக்கில்தானே சமைப்பார்கள் இந்த நேரத்தில் இத்தனை மலைவாசிகள் உணவுக்கு வருவதாக தகவல் உணவு கூடத்துக்கு போயிற்று. அங்கே பொறுப்பில் இருந்தவர்கள் கையை பிசைந்தனர். துளிக்கூட மீதி இல்லையே இந்த நேரத்தில் இத்தனை மலைவாசிகள் உணவுக்கு வருவதாக தகவல் உணவு கூடத்துக்கு போயிற்று. அங்கே பொறுப்பில் இருந்தவர்கள் கையை பிசைந்தனர். துளிக்கூட மீதி இல்லையே பாத்திரங்களைக்கூட கழுவி கவிழ்த்தாயிற்று புதிதாக சமைக்கலாம் என்றால் முகாம் முடியும் தறுவாயாக இருந்ததால் ஸ்டோரும் காலி என்ன செய்வது மஹா பெரியவா திருவடிகளே சரணம்\nபிற்பகல் தரிசனம் கொடுத்துக்கொண்டு இருந்த பெரியவா திடீரென்று கார்யஸ்தரை அழைத்தார். “டேய், எனக்கு ரொம்ப பசிக்கறதேடா ஏதாவது செய்யேன் பெரியவா இப்பத்தானே பிக்ஷை பண்ணா அதுக்குள்ள பசிக்கிறதா\n எனக்கு இப்ப ரொம்ப பசிடா\n இருந்தது எல்லாத்தையும் பறிமாறியாச்சு. மீதி ஒண்ணுமே இல்லையே\n\"சரி சரி, நீ ஒண்ணும் பண்ண மாட்டே. கிடக்கட்டும்.\"\nதரிசனத்துக்கு வந்திருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டார். பெரும்பாலும் காலையே தரிசனம் செய்தவர்கள். அதனால் புதிதாக அவர்கள் கையில் ஒன்றுமில்லை. ஒருவர் மட்டும் கையில் சிறு பொட்டலம் வத்து இருந்தார். அவரை கிட்டே வரும்படி சைகை செய்தார். அவரும் கிட்டே வந்து தன்னிடமிருந்த பொட்டலத்தை மூங்கில் தட்டில் வைத்து நமஸ்கரித்தார். பெரியவா பொட்டலத்தை பிரிந்தார். உள்ளே கல்கண்டு இருந்தது. அதில் ஒன்றை எடுத்தார். அதையும் கீழே வைத்து கையால் தட்ட அது சுக்கு நூறாகியது. அதில் ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். கமண்டலத்தில் இருந்த நீரை ஒரு உத்தரணி அளவு வாயில் விட்டுக்கொண்டார். அடுத்து ஒரு பெரிய ஏப்பம் விட்டார்\n இப்பத்தான் பசி அடங்கித்து என்றார் கல்கண்டு கொண்டு வந்தவரைப்பார்த்து நீ இன்னிக்கு மகத்தான தொண்டு செஞ்சிருக்கே கல்கண்டு கொண்டு வந்தவரைப்பார்த்து நீ இன்னிக்கு மகத்தான தொண்டு செஞ்சிருக்கே ஒரு இருநூறு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டே ஒரு இருநூறு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டே\nஅன்னதான மண்டபத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது மலை வாசிகள் கூட்டம். ஆச்சு, இதோ இந்த மூலை திரும்பினால் மண்டபம் இருக்கு இடம் வந்துவிடும்.\nதிடீரென்று அவர்கள் எல்லாருக்கும் வயிறு நிரம்பிய உணர்வு இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இப்ப சாப்பிட முடியாது போலிருக்கே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இப்ப சாப்பிட முடியாது போலிருக்கே ஆமாம் இன்னொரு நாள் வந்து பார்த்துக்கொள்ளலாம். கூட்டம் அப்படியே ஊரை சுற்றி வேடிக்கை பார்த்துவிட்டு கிராமத்துக்கு திரும்ப கிளம்பிவிட்டது\nதிருவண்ணாமலை பெரியவரை அண்மையில் சந்தித்தேன். வழக்கம் போல மஹா பெரிவா கதை சொல்லுங்கன்னு கேட்டேன். அவர் சொன்ன கதை கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதன் கருவை தெய்வத்தின் குரலில் படித்து இருக்கிறேன். ஆனால் அதன் பின் இவ்வளவு கதை இருப்பது தெரியாது\nமஹா பெரியவாளின் யாத்திரை காசி நகரை நெருங்கியது. காசி ராஜா மதன் மோஹன் மாளவியா. ஆதித்ய நராயண சிங். அவர் பெரியவாளை பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார். சிலருக்கு இது பிடிக்கவில்லை அவர்கள் ராஜாவிடம் சென்று காஞ்சி மடம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் காஞ்சி மடாதிபதிகள் ஜகத் குரு என்று அழைத்துக்கொள்வது சரியில்லை என்றும் \"போட்டுக் கொடுத்தார்கள்.” இதை கேட்ட ராஜாவுக்கு மனசு சஞ்சலப்பட்டு விட்டது. வரவேற்புக்கு எல்லாம் ஏற்பாடு ஆகிவிட்டதே, என்ன செய்வது. யோசித்து யோசித்து குழம்பி, கடைசியில் பூர்ண கும்பம் சொடுப்பதை தவிர்த்துவிட நினைத்தார்.\nகாசி ஹிந்து சர்வ கலாசாலையின் சம்ஸ்க்ருத துறை பேராசிரியரை அழைத்து நாளை நீங்கள் சென்று பூர்ண கும்பம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அவர் அதிர்ச்சியுடன் \"ஏன் என்ன ஆயிற்று உங்களுக்கு உடல் நிலை சரியில்லையா, தீட்டு ஏதும் வந்துவிட்டதா” என்றூ வினவினார். ராஜா சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.\nபேராசிரியருக்கு ராஜாவின் மனசை யாரோ கலைத்து இருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது.\n\"பூர்ண கும்பத்தை நான் கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கிறேன். அது நான் செய்தா பாக்கியம் ஆனால் காசி பல்கலைக்கழகத்துக்கான என் கடைசி வேலை அதுவாகத்தான் இருக்கும். அவர் எப்பேர்பட்ட மஹான் ஆனால் காசி பல்கலைக்கழகத்துக்கான என் கடைசி வேலை அதுவாகத்தான் இருக்கும். அவர் எப்பேர்பட்ட மஹான் சாக்ஷாத் பரமேஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றே சொல்லலாம். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை தர நீங்கள் தயங்குவது சரியா சாக்ஷாத் பரமேஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றே சொல்லலாம். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை தர நீங்கள் தயங்குவது சரியா யாரோ அவரைப்பற்றி தவறாக சொன்னால் நீங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்வதா யாரோ அவரைப்பற்றி தவறாக சொன்னால் நீங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்வதா கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்று உங்களுக்குத் தெரியாதா கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்று உங்களுக்குத் தெரியாதா குறைந்தது சம்ஸ்க்ருத பேராசிரியராக உங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிற என்னையாவது கூப்பிட்டு கேட்கக்கூடாதா குறைந்தது சம்ஸ்க்ருத பேராசிரியராக உங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிற என்னையாவது கூப்பிட்டு கேட்கக்கூடாதா” என்று பொழிந்து தள்ளிவிட்டார்.\nதிக்குமுக்காடிப்போன ராஜா \"சரி சரி நானே நாளை பூர்ண கும்பம் கொடுக்கிறேன். நீங்கள் பக்கத்தில் இருங்கள்\nஊர் எல்லை. ஏராளமான ஜனங்கள் பெரியவாளை எதிர்கொண்டழைக்க கூடி இருக்கிறார்கள். ராஜாவும் ஆஜர்.\nபெரியவாளும் வந்து சேர்ந்தார். சூரியன் போல் பிரகாசித்துக்கொண்டு நிற்கும் பெரியவாளை கண்ட ராஜாவின் பூர்ண கும்பத்தை ஏந்திய கைகள் நடுங்குகின்றன. கீழே போட்டுவிடுவார் போல் இருந்தது. பேராசிரியர் அதை தானே வாங்கி வேத மந்திரம் கோஷித்து பெரியவாளிடம் நீட்டுகிறார். அவரும் அதை ஏற்கிறார்.\nபின் பேராசிரியரைப் பார்த்து \"ராஜாவுக்கு ஏதோ சந்தேகம் இருக்கு போலிருக்கே\nராஜா சம்ஸ்க்ருதத்திலேயே கேட்கிறார். “ஜகத் குரு என்பவர் யார் யாருக்கு அந்த பட்டம் பொருந்தும் யாருக்கு அந்த பட்டம் பொருந்தும்\nபெரியவா சிரித்துக்கொண்டே \"இந்த கேள்விக்கு பதில் கிடைக்க சாயந்திரம் வரை பொறுக்க முடியுமா நான் பார்த்த நோட்டீஸில் சாயந்திரம் வரவேற்பு கூட்டம் என்றும், என் அனுக்ரஹ பாஷ்யம் என்றும் போட்டு இருக்கிறதே நான் பார்த்த நோட்டீஸில் சாயந்திரம் வரவேற்பு கூட்டம் என்றும், என் அனுக்ரஹ பாஷ்யம் என்றும் போட்டு இருக்கிறதே\nகாசி நகர சார்பாக வரவேற்பு பத்திரம் வாசித்து அளிக்கப்பட்டது. பெரியவா ஏற்புரை நிகழ்த்தலானார்.\n\"இன்றைக்கு ஒருவர் என்னைப்பார்த்து கேட்டார், ஜகத் குருன்னா யாரு அந்த பட்டம் யாருக்குப்பொருந்தும்\nகேள்வியை கேட்ட பின் ஒரு முறை நிதானமாக கூட்டத்தினர் அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்தார்.\n\"நான் பார்க்கிற வரையில் என்னைத்தவிர அந்த பட்டத்துக்கு பொருந்தமானவரா யாரையும் பார்க்கலை\n தன்னைத்தானே இப்படி புகழ்ந்து கொள்வதா\nகுரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம் |\nநிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தையே நம: |\nஎன்று தக்ஷிணாமூர்த்தியை ஜகத் குருவாக சொல்லியிருக்கு.\nவசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்\nஎன்று க்ருஷ்ணனை ஜகத் குருவாக சொல்லி இருக்கு.\nஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்\nநமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்\nஎன்று ஆச்சார்யாளையும் சொல்லி இருக்கு.\nவேறு யாரையும் இப்படி சொன்னதாக தெரியவில்லை.\nஜகத் குரு என்பதை இரண்டு விதமா அர்த்தம் பண்ணலாம். ஜகதாம் குரு என்றால் ஜகத்துக்கே குரு என்பதாக முன்னே மூன்று பேரை சொன்னேன்.\nயாருக்கு 'ஜகத் ஏவ குரு' என்றும் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். யாருக்கு இந்த உலகமே குருவா இருக்கோ அவர் ஜகத்குரு என்றும் அர்த்தம் பண்ணலாம். அப்படிப்பார்த்தா சின்ன வயசில் இந்த மடத்துக்கு வந்ததில் இருந்து லோகத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டே இருக்கேன். இன்னமும் பாடம் கற்றுக்கொள்கிறேன். அதனால்தான் வேறு யாரையும் விட எனக்கே அதுக்கு அதிக அருகதை இருக்குன்னு சொன்னேன்\"\nராஜா இதை கேட்டதும் சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார் சபையில் 'ஓபனாக' \"நான்தான் அப்படி மடத்தனமான கேள்வியை கேட்டவன். இப்போது புரிந்து போயிற்று. நீங்களே ஜகத் குரு. ஜகத் ஏவ குரு இல்லை, ஜகதாம் குரு சபையில் 'ஓபனாக' \"நான்தான் அப்படி மடத்தனமான கேள்வியை கேட்டவன். இப்போது புரிந்து போயிற்று. நீங்களே ஜகத் குரு. ஜகத் ஏவ குரு இல்லை, ஜகதாம் குரு” என்று உணர்ச்சி பொங்க கூறினார். சபையோர் ஆரவாரித்தனர்\nஇந்த கதையின் இன்னும் ஆதென்டிக் வெர்சன் வேறு இருக்கிறது. சக்கையை விட்டு சாரத்தை மட்டும் கிரஹிக்க ப்ரார்த்திக்கிறேன்.\n\"ஆமாம், அது என்ன பெரியவா ஈஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றீர்கள்” என்று கேட்க அடுத்த கதை வந்தது” என்று கேட்க அடுத்த கதை வந்தது\nLabels: மஹா பெரியவா, ஜகத் குரு\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (308)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T03:05:07Z", "digest": "sha1:TTJQM3C4B26I2PLHADMGWRPIOMRLLALO", "length": 6579, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழர் உலோகத் தொழில்நுட்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇரும்பு, பொன், வெண்கலம், பித்தளை, வெள்ளி முதலிய உலோகங்களை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கும் தொழில் நுட்பத்தை உலோகத் தொழிநுட்பம் அல்லது உலோகக்கலை எனலாம். தமிழர்களால் இத்துறையில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களும் கருவிகளும் முறைவழிகளும் தமிழர் உலோகத் தொழில்நுட்பம் எனலாம். சங்ககாலம் முதற்கொண்டே தமிழர்கள் இத்துறையில் இயங்கி வருகின்றார்கள். \"தமிழகத்தில் கி.மு 700 - கி.பி 200 வரை இரம்புக்காலம் எனப்படுகின்றது.\"[1]\nஇத்துறைசார் வல்லுனர்கள் கொல்லர்கள் எனப்படுகின்றார்கள்.\nபழுக்கக் காய்ச்சிய உலோகத்தை நீரில் வைத்து இறுக்கல்\nகருமார் பயன்படுத்தும் பொதுவான கருவிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2012, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125154-300-years-old-diamond-sold-at-auction-in-geneva.html", "date_download": "2018-05-27T02:59:11Z", "digest": "sha1:4KMJ3MGVR7KI35ZX3OY5NP7OIODVOJVB", "length": 18693, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெனீவா ஏலத்தில் 300 ஆண்டுகள் பழைமையான இந்திய வைரம்! | 300 years old diamond sold at auction in Geneva", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஜெனீவா ஏலத்தில் 300 ஆண்டுகள் பழைமையான இந்திய வைரம்\nஐரோப்பா அரசக் குடும்பத்தினர் கையில் 300 ஆண்டுகளாக இருந்த பழைமையான வைரம் ஜெனீவாவில் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் 45 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் இருந்த கோல்கொண்டா வைரச் சுரங்கத்திலிருந்து, 17-ம் நூற்றாண்டில் 6.16 காரட் மதிப்புள்ள நீல நிற வைரம் ஒன்று 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது. இந்த வைரத்தை, அப்போதைய அரசக் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் பார்னீஸிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அந்த வைரத்தை 1715-ம் ஆண்டு நடந்த தன் மகள் பரிமா பிரபுவுக்குத் திருமண பரிசாக வழங்கினர்.\nஅதன்பிறகு, அவர்களின் குடும்பத்தினர் மற்ற ஐரோப்பிய வம்சாவழியைச் சேர்ந்த குடும்பங்களில் திருமணம் செய்துகொண்டனர். இதனால், இந்த வைரம் ஐரோப்பாவில் இருந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஎமிர் பைசல் தொடங்கி பஷர் அல் ஆஸாத் வரை...100 ஆண்டுகளாகப் போரின் பிடியில் சிரியா\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெறும் போரில் ஒரே வாரத்தில் 500 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 100 years of War in Syria\nஇந்த நிலையில், அரசக் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த நீல நிற வைரம் ஜெனீவாவில் நேற்று ஏலத்துக்கு வந்தது. இதை, இந்திய மதிப்பில் தோராயமாக 45 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. மேலும், அந்த ஏலத்தின்போது விலை மதிப்புள்ள இரண்டு நகைகள் விற்கப்பட்டது. இந்த இரண்டு நகைகளும் 54 கோடிக்கு விற்கப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nமூன்று பெண்களின் தாலிக்கொடிகளை அபகரித்த கொள்ளையர்கள்\nகனமழை எதிரொலி - சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்லத் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://brahma-kumaris-murli.blogspot.com/2016/06/bk-murli-12-june-2016-tamil.html", "date_download": "2018-05-27T03:39:41Z", "digest": "sha1:HE3VBDUBIIGVEBEP4IJHH4EKEOZLDJAA", "length": 38187, "nlines": 49, "source_domain": "brahma-kumaris-murli.blogspot.com", "title": "BK Murli Today - Today Brahma Kumaris Murli: BK Murli 12 June 2016 Tamil", "raw_content": "\n12.06.2016 காலை முரளி ஓம் சாந்தி ''அவ்யக்த பாப்தாதா'' ரிவைஸ் 04.10.1981 மதுபன்\n'' பிரம்மா பாபாவின் ஒரு நல்விருப்பம் ''\nஇன்று பாப்தாதா வெற்றி இரத்தினங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்று பக்தர்கள் விஜயதசமியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பக்தர்கள் செய்வது எரிப்பது மற்றும் குழந்தைகள் உங்களுடையது சந்திப்பைக் கொண்டாடுவது. எரித்த பிறகு சந்திப்பைக் கொண்டாட வேண்டும். பக்தி மார்க்கத்திலும் கூட இராவணனை எரித்த பிறகு அதாவது வெற்றி அடைந்த பிறகு, எந்த சந்திப்பை காண்பிக்கிறார்கள் பக்தியின் விஷயங்களையோ மிக நன்றாக தெரிந்திருக்கிறீர்கள். இராவணன் இறந்த பிறகு என்ன நிலை ஆகிவிடுகிறது பக்தியின் விஷயங்களையோ மிக நன்றாக தெரிந்திருக்கிறீர்கள். இராவணன் இறந்த பிறகு என்ன நிலை ஆகிவிடுகிறது அதற்கான அடையாளம் என்ன 'பரதனை சந்திப்பது'. இது சகோதரத்துவத்தின் நிலை. சகோதரன் சகோதரனின் திருஷ்டியின் (பார்வை) அடையாளம் - சேவை மற்றும் அன்பு. அன்பின் அடையாளமாக தீபமாலையைக் (தீபாவளியை) காண்பித்திருக்கிறார்கள். சேவையின் வெற்றிக்கான ஆதாரம் சகோதரத்துவத்தை காண்பித்திருக்கிறார்கள். இது இல்லாது தீபாவளியைக் கொண்டாட முடியாது. தீபாவளி இன்றி இராஜதிலகமும் இட முடியாது. எனவே இன்றைய நினைவாக விஜயதசமியைக் கொண்டாடுகின்றனர். இதற்கான ஆதாரம், முதலில் அஷ்டமியை கொண்டாடுவார்கள், அஷ்டமி இன்றி வெற்றி கிடையாது. ஆக நீங்கள் எதுவரை வந்து அடைந்துள்துள்ளீர்கள் அஷ்டமியை கொண்டாடினீர்களா நீங்கள் அனைவரும் நவதுர்கா ஆகிவிட்டீர்களா அஷ்ட சக்திகள் மற்றும் ஒரு சக்திவான் அஷ்ட சக்திகள் மற்றும் ஒரு சக்திவான். சர்வ சக்திவான் தந்தையுடன் அஷ்ட சக்தி சொரூபம், அந்த மாதிரி நவதுர்காவாக ஆகிவிட்டீர்களா. சர்வ சக்திவான் தந்தையுடன் அஷ்ட சக்தி சொரூபம், அந்த மாதிரி நவதுர்காவாக ஆகிவிட்டீர்களா துர்கை என்றால், துர்குணத்தை (தீயகுணத்தை) அழித்து, அனைத்து குணங்களும் நிரம்பியவராக ஆவது துர்கை என்றால், துர்குணத்தை (தீயகுணத்தை) அழித்து, அனைத்து குணங்களும் நிரம்பியவராக ஆவது அப்பொழுது தான் தசரா கொண்டாட முடியும். அப்படி குழந்தைகள் தசராவைக் கொண்டாடினார்களா என்று பார்ப்பதற்காக பாப்தாதா வந்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் நான் தசரா கொண்டாடினேனா அப்பொழுது தான் தசரா கொண்டாட முடியும். அப்படி குழந்தைகள் தசராவைக் கொண்டாடினார்களா என்று பார்ப்பதற்காக பாப்தாதா வந்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் நான் தசரா கொண்டாடினேனா அல்லது அஷ்டமியை கொண்டாடினேனா என்று நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள் மற்றும் ஏற்றுக் கொண்டும் இருக்கிறீர்கள். அழியாத பற்றவைக்கும் குச்சியை ஏற்றினீர்களா அல்லது சிறிது நேரம் எரியும் குச்சியை ஏற்றினீர்களா அல்லது அஷ்டமியை கொண்டாடினேனா என்று நல்ல முறையில் தெரிந்திருக்கிறீர்கள் மற்றும் ஏற்றுக் கொண்டும் இருக்கிறீர்கள். அழியாத பற்றவைக்கும் குச்சியை ஏற்றினீர்களா அல்லது சிறிது நேரம் எரியும் குச்சியை ஏற்றினீர்களா இராவணனை எரித்தீர்களா அல்லது அனைத்து வம்சத்தையும் எரித்தீர்களா இராவணனை எரித்தீர்களா அல்லது அனைத்து வம்சத்தையும் எரித்தீர்களா இராவணனை அழித்தீர்களா மற்றும் இராவணன் இராஜ்ஜியத்தையும் அழித்தீர்களா\nஇன்று சூட்சும வதனத்தில் பிரம்மா பாபாவின் ஆன்மீக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. எந்த நேரத்தில் (வகுப்பு நேரத்தில்). பாப்தாதாவும் குழந்தைகளின் ஆன்மீக உரையாடலைக் கேட்கிறார்கள். பெரும்பான்மையான அனைத்து குழந்தைகளும், தசராவை கொண்டாடினீர்களா என்ற கேள்வி எப்பொழுது கேட்கப்படுகிறதோ அப்பொழுது இல்லை என்பதிலும் கை உயர்த்துவதில்லை, ஆம் என்பதிலும் கை உயர்த்துவதில்லை. ஒருவேளை எழுதுகிறார்கள் என்றால் கூட பதில் தருவதிலும் மிகவும் சாதுர்யமானவர்கள். பொய்யும் எழுதுவதில்லை ஆனால் தெளிவாகவும் எழுதுவதில்லை. அனைவரிடமிருந்தும் மூன்று, நான்கு பதில்கள் வருகின்றன. மேலும் அந்த பதில்களிலிருந்தே ஏதாவது ஒரு பதிலைக் கொடுப்பார்கள். அப்படி பிரம்மா பாபாவின் ஆன்மீக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. பிரம்மா பாபாவோ வீட்டின் கதவுகளின் திறப்பு விழாவிற்காக குழந்தைகளை அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைய கேள்விக்கான அனைவரின் பதில் காகிதத்தின் மேல் எழுதப்படவில்லை, ஆனால் மனதின் எண்ணம் மூலம் தந்தையின் எதிரில் தெளிவாக இருக்கிறது. வகுப்பு நேரத்தில் குழந்தை (தாதி) கேள்வி கேட்டார்கள், மேலும் அனைவரின் பதிலை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். பதிலின் சாரத்தையோ கூறிவிட்டோம், கூறுவதற்கும் அவசியம் இல்லை, தந்தையை விட நீங்கள் அதிகம் தெரிந்திருக்கிறீர்கள். பதிலைப் பார்த்துக் கொண்டே பிரம்மா பாபா என்ன செய்தார் (வகுப்பு நேரத்தில்). பாப்தாதாவும் குழந்தைகளின் ஆன்மீக உரையாடலைக் கேட்கிறார்கள். பெரும்பான்மையான அனைத்து குழந்தைகளும், தசராவை கொண்டாடினீர்களா என்ற கேள்வி எப்பொழுது கேட்கப்படுகிறதோ அப்பொழுது இல்லை என்பதிலும் கை உயர்த்துவதில்லை, ஆம் என்பதிலும் கை உயர்த்துவதில்லை. ஒருவேளை எழுதுகிறார்கள் என்றால் கூட பதில் தருவதிலும் மிகவும் சாதுர்யமானவர்கள். பொய்யும் எழுதுவதில்லை ஆனால் தெளிவாகவும் எழுதுவதில்லை. அனைவரிடமிருந்தும் மூன்று, நான்கு பதில்கள் வருகின்றன. மேலும் அந்த பதில்களிலிருந்தே ஏதாவது ஒரு பதிலைக் கொடுப்பார்கள். அப்படி பிரம்மா பாபாவின் ஆன்மீக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. பிரம்மா பாபாவோ வீட்டின் கதவுகளின் திறப்பு விழாவிற்காக குழந்தைகளை அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைய கேள்விக்கான அனைவரின் பதில் காகிதத்தின் மேல் எழுதப்படவில்லை, ஆனால் மனதின் எண்ணம் மூலம் தந்தையின் எதிரில் தெளிவாக இருக்கிறது. வகுப்பு நேரத்தில் குழந்தை (தாதி) கேள்வி கேட்டார்கள், மேலும் அனைவரின் பதிலை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார். பதிலின் சாரத்தையோ கூறிவிட்டோம், கூறுவதற்கும் அவசியம் இல்லை, தந்தையை விட நீங்கள் அதிகம் தெரிந்திருக்கிறீர்கள். பதிலைப் பார்த்துக் கொண்டே பிரம்மா பாபா என்ன செய்தார் மிக நல்லதொரு விஷயத்தைக் கூறினார். பிரம்மா பாபாவின் விசேஷம் நிரம்பிய சம்ஸ்காரத்தை அறிவீர்கள். விசேஷத்தின் சம்ஸ்காரத்தின் பாகத்தைத் தான் நடித்து வந்தார். அது என்னவாக இருக்கும் மிக நல்லதொரு விஷயத்தைக் கூறினார். பிரம்மா பாபாவின் விசேஷம் நிரம்பிய சம்ஸ்காரத்தை அறிவீர்கள். விசேஷத்தின் சம்ஸ்காரத்தின் பாகத்தைத் தான் நடித்து வந்தார். அது என்னவாக இருக்கும் அந்த விஷயத்தின் சம்மந்தம் பிரம்மா பாபாவின் ஆரம்ப காலத்து பிரவேசத்தின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது. எப்பொழுது ரிசல்ட்டை பார்த்தாரோ உடன் ஒரு நொடிக்காக பிரம்மா பாபா மிகுந்த யோசனையில் ஆழ்ந்து விட்டார். இன்று எமது ஒரு விஷயத்தை நிறைவேற்ற வேண்டும் என்ன அது அந்த விஷயத்தின் சம்மந்தம் பிரம்மா பாபாவின் ஆரம்ப காலத்து பிரவேசத்தின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது. எப்பொழுது ரிசல்ட்டை பார்த்தாரோ உடன் ஒரு நொடிக்காக பிரம்மா பாபா மிகுந்த யோசனையில் ஆழ்ந்து விட்டார். இன்று எமது ஒரு விஷயத்தை நிறைவேற்ற வேண்டும் என்ன அது என்று கூறினார். பிரம்மா பாபா கூறினார். 'இன்று என்னிடம் சாவியைக் கொடுத்து விடுங்கள்'. எந்த சாவி என்று கூறினார். பிரம்மா பாபா கூறினார். 'இன்று என்னிடம் சாவியைக் கொடுத்து விடுங்கள்'. எந்த சாவி அனைவரின் புத்தியை மாற்றம் செய்வதற்கான, சம்பன்னம் (முழுமை) ஆக்குவதற்கான சாவி. எப்படி தொடக்கத்தில் கூட சாவியின் போதை இருந்தது, கஜானா இருக்கிறது, சாவியும் இருக்கிறது. திறக்க மட்டும் தான் செய்ய வேண்டும். அந்த மாதிரி பிரம்மா பாபா இன்றும் சம்பன்னமாக ஆக்கும் சாவியை தந்தையிடமிருந்து வேண்டும் என்று கேட்டார். அந்தக் காட்சியை இவ்வுலகில் கண்ணெதிரே அனுபவம் செய்யக் கூடியவர்கள் பிரம்மா பாபா மற்றும் தந்தையிடையே எந்த ஆன்மீக உரையாடல் நடந்தது என்று புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது பிரம்மா பாபாவிடம் சாவியை கொடுக்க முடியுமா அனைவரின் புத்தியை மாற்றம் செய்வதற்கான, சம்பன்னம் (முழுமை) ஆக்குவதற்கான சாவி. எப்படி தொடக்கத்தில் கூட சாவியின் போதை இருந்தது, கஜானா இருக்கிறது, சாவியும் இருக்கிறது. திறக்க மட்டும் தான் செய்ய வேண்டும். அந்த மாதிரி பிரம்மா பாபா இன்றும் சம்பன்னமாக ஆக்கும் சாவியை தந்தையிடமிருந்து வேண்டும் என்று கேட்டார். அந்தக் காட்சியை இவ்வுலகில் கண்ணெதிரே அனுபவம் செய்யக் கூடியவர்கள் பிரம்மா பாபா மற்றும் தந்தையிடையே எந்த ஆன்மீக உரையாடல் நடந்தது என்று புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது பிரம்மா பாபாவிடம் சாவியை கொடுக்க முடியுமா மேலும் பிரம்மாவிடம் தந்தை இல்லை, முடியாது என்று கூற முடியுமா மேலும் பிரம்மாவிடம் தந்தை இல்லை, முடியாது என்று கூற முடியுமா குழந்தைகளும் முடியாது என்று சொல்வதில்லை, ஆம் என்றும் சொல்வதில்லை.\nஆனால் பிரம்மா பாபாவிற்கு குழந்தைகளை எப்பொழுதும் சம்பன்னமானவர்களாக பார்ப்பதற்கான ஆவல் அதிகமாக உள்ளது என்பது உண்மை. ஆக வேண்டும் என்றில்லாமல், இப்பொழுதே ஆகி விட வேண்டும். எப்பொழுதெல்லாம் குழந்தைகளின் விஷயங்கள் பேசப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரம்மா பாபாவின் முகம் தீப மாலை மாதிரி ஆகிவிடுகிறது, அந்த மாதிரி தீவிரமான ஊக்கம் மற்றும் மாஸ்டர் கடலுக்கு சமமாக உயர்ந்த அலை உருவாகிறது. அந்த ஊக்கம் என்ற உயர்ந்த அலையில் அனைவரையும் சம்பன்னமாக ஆக்கி, தீப ஒளியில் ஏற்றி விட வேண்டும். பிரம்மா பாபாவின் சாகார சரித்திரத்திலும், பிரம்மா பாபாவிற்கு பிறந்ததிலிருந்தே ஒரு வார்த்தை பிடிக்காது என்ற இதையும் அனுபவம் செய்திருக்கிறீர்கள். அது எது தன்னுடைய காரியத்திலும் அது பிடிக்காது, குழந்தைகள் காரியத்திலும் அது பிடிக்காது. 'எப்பொழுதாவது செய்து விடுவோம்' என்ற இந்த வார்த்தை பிடிக்காது. ஒவ்வொரு விஷயத்திலும் அப்பொழுதே செய்தார் மற்றும் செய்வித்தார். சேவையின் திட்டத்தில் பாருங்கள், மாற்றத்தில் பாருங்கள், இப்பொழுதே செல்லுங்கள், இப்பொழுதே செய்யுங்கள், ரயில் புறப்படும் சிறிது நேரம் தான் உள்ளது என்றாலும், செல்லுங்கள், செல்லுங்கள், ரயிலுக்கு தாமதமாகி விடும் என்று கூறுவார். அப்படி எந்த சம்ஸ்காரமாக இருந்தது. இப்பொழுதே செய்ய வேண்டும், பிறகு என்பது இல்லாமல் இருந்தது. எப்படி 'இப்பொழுதே' என்ற விசேஷ வார்த்தைதான் கேட்டீர்கள். அதே போல் இன்று கூட சூட்சும வதனத்தில் இப்பொழுதே நடக்க வேண்டும் என்ற இந்த மொழி தான் இருந்தது. இன்னும் ஒரு சிரிப்பூட்டும் விஷயத்தைக் கூறுகிறோம், அது என்னவாக இருக்கும் தன்னுடைய காரியத்திலும் அது பிடிக்காது, குழந்தைகள் காரியத்திலும் அது பிடிக்காது. 'எப்பொழுதாவது செய்து விடுவோம்' என்ற இந்த வார்த்தை பிடிக்காது. ஒவ்வொரு விஷயத்திலும் அப்பொழுதே செய்தார் மற்றும் செய்வித்தார். சேவையின் திட்டத்தில் பாருங்கள், மாற்றத்தில் பாருங்கள், இப்பொழுதே செல்லுங்கள், இப்பொழுதே செய்யுங்கள், ரயில் புறப்படும் சிறிது நேரம் தான் உள்ளது என்றாலும், செல்லுங்கள், செல்லுங்கள், ரயிலுக்கு தாமதமாகி விடும் என்று கூறுவார். அப்படி எந்த சம்ஸ்காரமாக இருந்தது. இப்பொழுதே செய்ய வேண்டும், பிறகு என்பது இல்லாமல் இருந்தது. எப்படி 'இப்பொழுதே' என்ற விசேஷ வார்த்தைதான் கேட்டீர்கள். அதே போல் இன்று கூட சூட்சும வதனத்தில் இப்பொழுதே நடக்க வேண்டும் என்ற இந்த மொழி தான் இருந்தது. இன்னும் ஒரு சிரிப்பூட்டும் விஷயத்தைக் கூறுகிறோம், அது என்னவாக இருக்கும் பிரம்மா பாபா அவரே சம்பன்னமாக இருக்கும் காரணத்தினால் குழந்தைகள் 'எப்பொழுதாவது' என்று ஏன் கூறுகிறார்கள் என்று பார்க்க முடிவதில்லை. எனவே அடிக்கடி தந்தையிடம் இவர்கள் ஏன் மாறுவதில்லை, ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று கூறுகிறார். இதுவரையிலும் இதை ஏன் கூறுகிறார்கள் பிரம்மா பாபா அவரே சம்பன்னமாக இருக்கும் காரணத்தினால் குழந்தைகள் 'எப்பொழுதாவது' என்று ஏன் கூறுகிறார்கள் என்று பார்க்க முடிவதில்லை. எனவே அடிக்கடி தந்தையிடம் இவர்கள் ஏன் மாறுவதில்லை, ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று கூறுகிறார். இதுவரையிலும் இதை ஏன் கூறுகிறார்கள் அவருக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது. நாடகத்தின் விஷயம் வேறாக இருந்தது, இது ரமணீகரமான சிரிப்பூட்டும் விஷய மாகும். நாடகத்தை தெரிந்திருக்கவில்லை என்று அப்படியில்லை. ஆனால் பார்த்து பார்த்து, அன்பின் காரணமாக தந்தையுடன் சிரித்துக் கொள்கிறார். தந்தையுடன் சிரிப்பூட்டும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கோ அனுமதி இருக்கிறது தான் இல்லையா. தந்தையும் புன்முறுவலிட்டுக் கொள்கிறார். அப்படி இப்பொழுது பிரம்மா பாபா என்ன விரும்புகிறார் என்பதையோ தெரிந்து விட்டீர்கள் இல்லையா அவருக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது. நாடகத்தின் விஷயம் வேறாக இருந்தது, இது ரமணீகரமான சிரிப்பூட்டும் விஷய மாகும். நாடகத்தை தெரிந்திருக்கவில்லை என்று அப்படியில்லை. ஆனால் பார்த்து பார்த்து, அன்பின் காரணமாக தந்தையுடன் சிரித்துக் கொள்கிறார். தந்தையுடன் சிரிப்பூட்டும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கோ அனுமதி இருக்கிறது தான் இல்லையா. தந்தையும் புன்முறுவலிட்டுக் கொள்கிறார். அப்படி இப்பொழுது பிரம்மா பாபா என்ன விரும்புகிறார் என்பதையோ தெரிந்து விட்டீர்கள் இல்லையா இப்பொழுது விடுபட்டவராகி, முக்திதாமத்தின் வாசலைத் திறப்பதற்காகத் தந்தையுடன் துணைவர்களாக ஆகுங்கள். இது தான் குழந்தைகள் மேல் உள்ள பிரம்மா பாபாவின் நல் விருப்பம் ஆகும். முதலில் தந்தையின் நல் விருப்பம் என்ற தீபத்தை ஏற்றி தீபாவளி கொண்டாடுங்கள். இந்த ஒரு தீபத்தின் மூலமே தீபாவளி இயல்பாக ஆகிவிடும். புரிந்ததா இப்பொழுது விடுபட்டவராகி, முக்திதாமத்தின் வாசலைத் திறப்பதற்காகத் தந்தையுடன் துணைவர்களாக ஆகுங்கள். இது தான் குழந்தைகள் மேல் உள்ள பிரம்மா பாபாவின் நல் விருப்பம் ஆகும். முதலில் தந்தையின் நல் விருப்பம் என்ற தீபத்தை ஏற்றி தீபாவளி கொண்டாடுங்கள். இந்த ஒரு தீபத்தின் மூலமே தீபாவளி இயல்பாக ஆகிவிடும். புரிந்ததா நல்லது. பிறகு பரதனின் சந்திப்பின் இரகசியத்தைக் கூறுவோம். நல்லது.\nஅந்த மாதிரி பாப்தாதாவின் உயர்ந்த எண்ணத்தை நடைமுறையில் கொண்டு வரக்கூடிய, அழியாத திட எண்ணம் என்ற தீக்குச்சியை ஏற்றி அழியாத வெற்றி அடைபவராக ஆகக்கூடிய, சாகார தந்தைக்குச் சமமாக, எப்பொழுதும் 'இப்பொழுதே' என்ற பாஷையை காரியத்தில் கொண்டு வரக்கூடிய, பின்னர் எப்பொழுதாவது என்பதை அழித்து, அனைவருக்கும் சாகார தந்தையின் உருவம் மற்றும் முகத்தைக் காண்பிக்கக்கூடிய அந்த மாதிரி வெற்றி இரத்தினங்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.\nகுமாரிகளோ பறக்கும் பறவைகள். ஏனென்றால், குமாரிகள் எப்பொழுதும் இலேசாக இருப்பவர்கள். குமாரி என்றால், எந்த சுமையும் இல்லாதவர். இலேசான பொருள் மேலே பறக்கும் இல்லையா. எப்பொழுதும் மேலே செல்பவர் என்றால் உயர்ந்த நிலைக்குச் செல்பவர். நீங்கள் அப்படித் தான் இல்லையா எதுவரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். யார் தந்தையின் ஸ்ரீமத்தின் அனுசாரம், அதே கோட்டிற்கு உள்ளே எப்பொழுதுமே இருப்பவர்களோ அவர்கள் எப்பொழுதும் மேலே பறந்து கொண்டே இருப்பார்கள். அப்படி கோட்டிற்கு உள்ளே இருப்பவர்கள் யார் எதுவரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். யார் தந்தையின் ஸ்ரீமத்தின் அனுசாரம், அதே கோட்டிற்கு உள்ளே எப்பொழுதுமே இருப்பவர்களோ அவர்கள் எப்பொழுதும் மேலே பறந்து கொண்டே இருப்பார்கள். அப்படி கோட்டிற்கு உள்ளே இருப்பவர்கள் யார் உண்மையான சீதை. அப்படி நீங்கள் அனைவருமே உண்மையான சீதைகள் தான் இல்லையா உண்மையான சீதை. அப்படி நீங்கள் அனைவருமே உண்மையான சீதைகள் தான் இல்லையா உறுதியாகவா கோட்டிற்கு வெளியே கால் வந்தது என்றால், இராவணன் வந்து விடுவான். யாராவது காலை வெளியில் வைத்தார்கள் என்றால், நான் கடத்தி சென்று விட வேண்டும் என்று இராவணன் காத்துக் கொண்டிருக்கிறான். அப்படி குமாரிகள் என்றால் உண்மையான சீதைகள். இங்கிருந்து வெளியில் சென்ற பிறகு மாறி விடாதீர்கள். ஏனென்றால், மதுபன்னில் வாயுமண்டலத்தின் வரதானத்தின் பிரபாவம் இருக்கிறது, இங்கு அதிகப்படியான லிஃப்ட் கிடைக்கிறது. அங்கே கடின உழைப்பு செய்து நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கும். குமாரிகளைப் பார்த்து பாப்தாதாவிற்கு ஆயிரம் மடங்கு குஷி ஏற்படுகிறது. ஏனென்றால், கசாப் கடைகாரனிடமிருந்து தப்பித்து விட்டார்கள். எனவே குஷி இருக்கும் இல்லையா நல்லது. இப்பொழுது திடமான உறுதிமொழி எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.\nஅனைத்து பாண்டவர்களும் சக்தி சொரூபமாக இருக்கிறீர்கள் இல்லையா சக்தி மற்றும் பாண்டவர்கள் இணைந்திருக்கிறீர்களா சக்தி மற்றும் பாண்டவர்கள் இணைந்திருக்கிறீர்களா சர்வ சக்திவானின் எதிரில் சக்தி ஆகிவிடுகிறார்கள் மற்றும் தனது பங்கைச் செய்வதில் பாண்டவர்கள். சர்வ சக்திவானை சக்தியாகி, நினைவு செய்யவில்லை என்றால், மகிழ்ச்சி ஏற்படாது. ஆத்மா சீதை அவர் ராம் சர்வ சக்திவானின் எதிரில் சக்தி ஆகிவிடுகிறார்கள் மற்றும் தனது பங்கைச் செய்வதில் பாண்டவர்கள். சர்வ சக்திவானை சக்தியாகி, நினைவு செய்யவில்லை என்றால், மகிழ்ச்சி ஏற்படாது. ஆத்மா சீதை அவர் ராம் அப்படி இந்த பங்கை செய்வதிலும் மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது. இந்த பங்கு தான் சங்கமயுகத்தின் அனைத்தையும் விட அதிசயமான ஒன்றாகும், இதில் பாண்டவர்கள் சக்திகளாகிவிடுகிறார்கள் மற்றும் சக்திகள் சகோதரர் ஆகிவிடுகிறார்கள். இதிலிருந்து தேக உணர்வை மறந்து விட்டார்கள் என்பது நிரூபணமாகிறது. ஆத்மாவில் இரண்டு சம்ஸ்காரமும் இருக்கிறது ஏனென்றால், சில நேரம் ஆணின் பங்கையும், சில நேரம் பெண்ணின் பங்கையும் செய்திருக்கிறீர்கள் தான் இல்லையா அப்படி இந்த பங்கை செய்வதிலும் மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது. இந்த பங்கு தான் சங்கமயுகத்தின் அனைத்தையும் விட அதிசயமான ஒன்றாகும், இதில் பாண்டவர்கள் சக்திகளாகிவிடுகிறார்கள் மற்றும் சக்திகள் சகோதரர் ஆகிவிடுகிறார்கள். இதிலிருந்து தேக உணர்வை மறந்து விட்டார்கள் என்பது நிரூபணமாகிறது. ஆத்மாவில் இரண்டு சம்ஸ்காரமும் இருக்கிறது ஏனென்றால், சில நேரம் ஆணின் பங்கையும், சில நேரம் பெண்ணின் பங்கையும் செய்திருக்கிறீர்கள் தான் இல்லையா சங்கமயுகத்தில் காதலி ஆகி காதலனை நினைவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது. சக்தியாகி சர்வ சக்திவானை நினைவு செய்ய வேண்டும். சீதையாகி ராமை நினைவு செய்ய வேண்டும்.\nசக்தி சேனை எப்பொழுதும் ஆயுதங்கள் தரித்தவர்கள் தான் இல்லையா சக்திகளின் அலங்காரமே ஆயுதங்கள் தான் சக்திகளின் அலங்காரமே ஆயுதங்கள் தான் யார் எப்பொழுதுமே ஆயுதம் ஏந்தியவரோ அவர் தான் எப்பொழுதும் மகாதானி, வரதானியாக இருக்கிறார். அனைத்து ஆயுதங்களும் தன்னிடம் எப்பொழுதும் இருக்கின்றனவா யார் எப்பொழுதுமே ஆயுதம் ஏந்தியவரோ அவர் தான் எப்பொழுதும் மகாதானி, வரதானியாக இருக்கிறார். அனைத்து ஆயுதங்களும் தன்னிடம் எப்பொழுதும் இருக்கின்றனவா சில நேரம் மட்டுமல்ல, எப்பொழுதுமே சில நேரம் மட்டுமல்ல, எப்பொழுதுமே சக்திகளின் தபஸ்யா சர்வ சக்திவானை இங்கே கொண்டு வந்தது. இப்பொழுது சக்திகள் சர்வ சக்திவானை பிரத்யக்ஷம் (வெளிப்படுத்த) செய்ய வேண்டும். ஒவ்வொரு அடியிலும் வரதானங்கள் கொடுத்து கொண்டே செல்லுங்கள், சுபபாவனையுடன் அனைவருக்கும் வரதானம் கொடுக்க வேண்டும்.\nசுகக்கடலின் குழந்தைகள் எப்பொழுதும் சுகசொரூபத்தில் இருக்கிறீர்கள் தான் இல்லையா எப்பொழுதும் சந்திப்பு கொண்டாட்டத்தின் குஷியில் ஆடிக்கொண்டே இருக்கிறீர்கள் தான் இல்லையா எப்பொழுதும் சந்திப்பு கொண்டாட்டத்தின் குஷியில் ஆடிக்கொண்டே இருக்கிறீர்கள் தான் இல்லையா உணவு சாப்பிட்டுக்கொண்டும், அருந்திக் கொண்டும், சென்று கொண்டும் கூட எண்ண அளவில் கூட சோகம் மற்றும் துக்கத்தின் உணர்வு வர வேண்டாம். எப்பொழுதும் சுகசொரூபமானவர்கள். துக்கத்திற்கு விவாகரத்து கொடுப்பவர்கள். ஏனென்றால், துக்கமான உலகில் அரைக் கல்பம் இருந்தோம், இப்பொழுதோ சுகமாக இருப்பதற்கான வாய்ப்பு. சுகக்கடல் கிடைத்திருக்கிறார் என்றால், எதற்காகத் துக்கம் இருக்கும். எப்பொழுதுமே சுகமானவர் என்ற இந்த வரம் தான் தந்தையிடமிருந்து நிரந்தரமாக கிடைத்து விட்டது. நல்லது.\nஎப்பொழுது ஸ்தூல சாதனம் முடிவடைந்து விடுமோ அந்த நேரம் சேவை செய்வதற்காக இப்பொழுதிலிருந்தே எந்த விஷயத்தின் மேல் கவனம் வேண்டும்\nதன்னுடைய எண்ணங்களை சக்திசாலியாக ஆக்குவதில் கவனம் வேண்டும். அதன் மூலம் அதனுடைய பிரபாவம் வெகு தூரம் வரை சென்றடைய வேண்டும். எண்ணத்தில் அந்த அளவு சக்தி வந்து விட வேண்டும். அதன் மூலம் நீங்கள் இங்கே எண்ணத்தை உருவாக்கினீர்கள், மேலும் அங்கு பலன் கிடைத்தது. எப்படி தந்தை பக்தியின் பலனைக் கொடுக்கிறார், அதே போல் உயர்ந்த ஆத்மாக்கள் நீங்கள் ஈஸ்வரிய குடும்பத்தில் சகயோகத்தின் பலனைக் கொடுங்கள், மேலும் அந்த பலனின் விதவிதமான அனுபவம் செய்யுங்கள். தற்பொழுது இம்மாதிரி சேவையைத் தொடங்குங்கள்.\nபாப்தாதா மூலமாக எந்தெந்த அழியாத கஜானாக்கள் கிடைத்திருக்கின்றன அந்த கஜானாக்கள் மூலமாக என்ன பிராப்திகள் ஆகியது\nமுதலில் மிகப்பெரிய கஜானாவான ஞானச் செல்வம். அதன் மூலம் பழைய உடல் மற்றும் உலகத்திலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தி நிலையின் பிராப்தி கிடைக்கிறது. மேலும் முக்திதாமம் செல்கிறோம். 2) யோகாவின் கஜானா மூலம் அனைத்து சக்திகளும் பிராப்தி ஆகிறது. 3) தாரணை செய்யும் கஜானா மூலம் அனைத்து குணங்களின் பிராப்தி ஆகிறது. 4) சேவையின் கஜானா மூலம் ஆசீர்வாதங்களின் கஜானா, குஷியின் கஜானா பிராப்தி ஆகிறது. 5) சங்கமயுகத்து நேரத்தின் கஜானா அனைத்தையும் விட மிகப்பெரிய விலைமதிக்க முடியாத கஜானா, அதன் மூலம் அனைத்து கஜானாக்களையும் சேமிக்க முடிகிறது.\nசங்கமயுகத்தின் காலம் ஏன் விலைமதிக்க முடியாதது\nஏனென்றால், சங்கமயுக காலத்தில் தான் பரமாத்ம தந்தை மற்றும் பரமாத்ம குழந்தைகளின் இனிமையான சந்திப்பு நடக்கிறது, அது வேறு எந்த யுகத்திலேயும் கிடையாது. 2) சங்கமயுக காலத்தில் தான் பாப்தாதா மூலமாக அனைத்து கஜானாக்களும் பிராப்தி ஆகின்றன. மேலும் வேறு எந்த யுகத்திலும் சேமிப்பு கணக்கு, சேமிப்பு செய்வதற்கான வங்கியே இல்லை. 3) சங்கமயுக காலத்தில் ஒரு பிறவியில் அனேக பிறவிகளுக்கான கஜானாவை சேமிக்க முடியும்.\nகஜானாக்களை கொடுப்பவர் ஒருவர், அனைவருக்கும் ஒரே மாதிரி ஒரே நேரத்தில் கொடுக்கிறார், ஆனால் கஜானாவை தாரணை செய்வதில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறார்கள், ஏன்\nஏனென்றால், தாரணை செய்வதில் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கென்ற முயற்சி இருக்கிறது. ஒன்றோ தன்னுடைய முயற்சி மூலம் பிராப்தியை உருவாக்க முடியும், இரண்டாவது எப்பொழுதும் சுயம் தான் திருப்தியாக இருப்பது மற்றும் அனைவரையும் திருப்திளப்படுத்துவது. அப்படி திருப்தியின் விசேஷம் மூலம் கஜானாவை சேமிக்க முடியும். மேலும் மூன்றாவது, சேவை மூலமாக குஷியின் கஜானாவை பிராப்தி செய்ய முடியும்.\nஉறவு தொடர்பில் வந்து கொண்டே எந்த விஷயத்தின் கவனம் இருந்தால் சேவையில் புண்ணியம் மற்றும் ஆசீர்வாதங்களின் கணக்கை மிகச் சுலபமாக சேமிப்பு செய்ய முடியும்\nஎப்பொழுதும் தான் ஒரு கருவி என்ற உணர்வு, பணிவாக இருப்பது, சுயநலமற்று இருப்பது, ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் சுபபாவனை மற்றும் சுபவிருப்பங்கள் இருந்தது என்றால், சேவையில் அல்லது உறவு தொடர்பில் வந்து கொண்டே புண்ணியத்தின் கணக்கு மற்றும் ஆசீர்வாதங்களின் கணக்கை மிக சுலபமாக சேமிக்க முடியும். நல்லது.\nஒரு தந்தையில் முழு உலகத்தை அனுபவம் செய்யக்கூடிய எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர் ஆகுக \nயார் தந்தையை மட்டும் தன்னுடைய உலகம் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தான் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர்களாக ஆக முடியும். யாருக்கு தந்தை தான் உலகம் என்றிருக்கிறதோ, அவர் தன்னுடைய உலகத்தில் மட்டும் தான் இருப்பார், மற்றதில் செல்ல மாட்டார் என்றால் சுலபமாகவே விலகிவிடுகிறார்கள். உலகத்தில் நபர் மற்றும் பொருள்கள், சாதனங்கள் அனைத்தும் வந்து விடுகிறது. தந்தையின் செல்வமாக இருப்பது என்னுடைய செல்வம். இந்த நினைவில் இருப்பதினால் எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் உடையவராக ஆகிவிடுவார். யாரையும் பார்த்தும் பார்க்காமல் இருப்பார்கள். தென்படவே மாட்டார்கள்.\nசக்திசாலியான நிலையை அனுபவம் செய்வதற்காக ஏகாந்தம் மற்றும் ரமணீகரத்தின் சமநிலை வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2012/12/", "date_download": "2018-05-27T03:16:45Z", "digest": "sha1:KB23FNP5TQTEMFDFE32CWWJZKDF7X62U", "length": 44444, "nlines": 316, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: December 2012", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nகுடி போதையில் வாகனத்தை இயக்காதீர்\nகொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nமனித வாழ்வின் தேவைகளில் உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம்,அடுத்த நான்காவது இடத்தில் போக்குவரத்து என அத்தியாவசியத்தேவையாக உள்ளது.\nஅவ்வாறான போக்குவரத்தில் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் உலக வரலாற்றிலேயே மனித உயிர்களைப் பலி வாங்கும் அங்கீகாரம் பெறாத நிகழ்வாக,சமுதாயச் சீர்கேட்டின் ஒருபகுதியாக,நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது சாலை விபத்துதாங்க.தற்போது சாலைவிபத்துக்கள் மனித சமுதாயத்தையே கதிகலங்க வைக்கிறது.\nநோய்களால் இறப்பவர்களைவிட,இயற்கைச்சீற்றங்களால் இறப்பவர்களைவிட,தீவிரவாதம் போன்ற சமூகவிரோதச் செயல்களால் இறப்பவர்களைவிட சாலைவிபத்துகளால் இறப்பவர்களே மிக அதிகமாக உள்ளது..\nஅவ்வாறு ஏற்படும் சாலை விபத்துகளும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் குறிப்பாக இளைஞர்களால் ஏற்படுகிறது என்கிறது சாலைப்பாதுகாப்புக் குழுவின்ஆய்வறிக்கை.\nஅதன்படி மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் இந்த ஆண்டிற்கான விழிப்புணர்வு வாசகமாக ''உயிருடன் வாழ வேண்டுமெனில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதே'' என்னும் தலைப்பில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி மனித உயிர்களைக்காக்க,குறிப்பாக இளைஞர்களைக் காக்க உத்தரவிட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் தாளவாடி வட்டாரப்பகுதியில் சாலை விபத்து ஏற்படக்காரணங்கள், சாலை விபத்துக்களால் ஏற்படும் இழப்புகள்,பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணிகள்,பொதுக்கூட்டங்கள்,கருத்தரங்குகள்,விவாத மேடைகள்,கட்டுரைப்போட்டிகள்,பேச்சுப்போட்டிகள்,தெருமுனைப்பிரச்சாரங்கள்,\nசுவரோட்டிகள்,துண்டுப்பிரசுரங்கள்,விளம்பர ஒட்டிகள் என பல்வேறு நிகழ்வுகளில் வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை விழிப்புணர்வு கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.\n3)அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடிக்கிளை-ஈரோடு மண்டலம் , 4)மக்கள் பிரதிநிதிகள் தாளவாடி வட்டாரம்,\n10) வட்டார வளர்ச்சி மையம்,\n14) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் &\n(15)சமூக நல அமைப்புகளான (அ) ரோட்டரி கிளப்-தாளவாடி, (ஆ)ஒய்ஸ்மென் கிளப்-தாளவாடி, (இ)மைராடா-தாளவாடி, (ஈ)பாம்2-தாளவாடி, (உ)வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்,(ஊ)தொன்போஸ்கோ வழிகாட்டி மையம்-தாளவாடி,(எ) கிரிக்கெட் குழுக்கள்,(ஏ) கைப்பந்தாட்டக்குழுக்கள்,(ஐ) மகளிர் குழுக்கள்,(ஒ)சமூக ஆர்வலர்கள்,(ஓ)வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்-தாளவாடி,\nஎன அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -தாளவாடி மையம்-( ஈரோடு மாவட்டம்) சாலைப்பாதுகாப்பு பிரச்சாரங்களை செய்யத்திட்டமிட்டுள்ளது.அதன்படி திட்ட வேலைகள் பின்வருமாறு;-\n(1)01-ஜனவரி-2013 செவ்வாய்க்கிழமை-சாலைப்பாதுகாப்பு & மது,போதைகளின் தீங்குகள்.இளைஞர்களுக்கான விழிப்புணர்வுப்பிரச்சாரம்\n(2) 02 -ஜனவரி-2013 புதன்கிழமை -சாலைப்பாதுகாப்பு கட்டுரைப் போட்டிகள்,பேச்சுப்போட்டிகள் - அனைத்து பள்ளிகளின் மாணவ,மாணவியருக்காக.\n(3) 03-ஜனவரி-2013 வியாழக்கிழமை - மருத்துவப்பரிசோதனை & முதலுதவிப் பயிலரங்கு - ஈஷா யோகா மையம் மருத்துவக்குழுவினர்\nபயனாளிகள் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிலாளர்கள்.\nஇடம்=தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி-ஈரோடு மண்டலம்.\n(4) 04-ஜனவரி-2013 வெள்ளிக்கிழமை -சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு & விவாதக்களம்.\nஇடம் = J.S.S.தொழிற்பயிற்சி மையம்-தாளவாடி.\n(5) 05-01-2013 சனிக்கிழமை- ஆசனூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை,வனத்துறை இவர்களுடன் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை அனைத்து ஓட்டுனர்கள்.\nஇடம்= அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேனிலைப்பள்ளி -\n(6) 06-01-2013 ஞாயிற்றுக்கிழமை=மருத்துவர்கள் மற்றும் வாழும் கலைப்பயிற்சி குழுவினர்.\nயோகா, மனவளக் கலைப் பயிற்சி மற்றும் சுகாதாரம் மற்றும் உடல்நலப் பயிற்சி\nஇடம்=ஸ்ரீபண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகம்- தாளவாடி.\n(7) 07-01-2013 திங்கட்கிழமை - அனைத்துப்பள்ளிகளின் மாணவ,மாணவியர் வழங்கும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி.\nதாளவாடி காவல்நிலையத்திலிருந்து புறப்பட்டு தாளவாடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் தாளவாடி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடை வரை வந்து நிறைவு செய்தல்.\nசாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசு வழங்குதல்.கனரக வாகனங்களின் சிறந்த ஓட்டுனர்களுக்கு பாராட்டுகளும்,பரிசுகளும் வழங்குதல்\nஇடம் தாளவாடி பேருந்து நிலையம் .\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/28/2012 04:29:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/23/2012 04:24:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.\nஇந்தப்பதிவில் விடுதலைப்புலிகளின் தலைவர் மரியாதைக்குரிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது குறிப்புகள் பற்றி எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இங்கு காண்போம்.\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்..\nமனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...\nதம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்\n01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா\n02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்\n03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். \"போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்\" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, \"எடுத்தால் எங்கே வைப்பது\" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்\n04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்\n05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது\n06.\"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்\" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, \"யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.\"\n07.\"பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை\" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்\n08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை\n09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை\n10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்\n11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்\n12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்\n13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்\n14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்\n15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். \"தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்\" என்பார்\n16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்\n17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்\n18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்\n19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்\n20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்\n21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்\n22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், \"நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்\n23.\"ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்\" என்று அடக்கமாகச் சொல்வார்\n24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்\n25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/23/2012 12:17:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தப் பதிவில் விமானத்தில் பொருத்தப்படும் கறுப்புப்பெட்டி பற்றிய விபரம் காண்போம்.\nஉண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி:\n\"கறுப்புப் பெட்டி\" என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.\nவிமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும். அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம்.\nஇந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும். ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் \"பிளைட் டேட்டா ரெகார்டர்\". இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் \"வாய்ஸ் ரெகார்டர்\". இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.\nகறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுப்பிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார். ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆராய்சியில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார்.\nசில ஆச்சர்யமான தகவல்கள் :\nகறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கருப்பு அல்ல \"ஆரஞ்சு நிறம்\nஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.\nகறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான்.\nவிபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து \"பீப்\" சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.\nஇது 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/18/2012 05:27:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nகுடி போதையில் வாகனத்தை இயக்காதீர்\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://life-is-sciencee.blogspot.com/2011/07/", "date_download": "2018-05-27T03:31:54Z", "digest": "sha1:R4FT7Z6NUGX2ICHEXAIOBJAELFBUV6GR", "length": 31049, "nlines": 145, "source_domain": "life-is-sciencee.blogspot.com", "title": "அறிவியல் விந்தைகள்: July 2011", "raw_content": "\nசூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் ஆகும்,\nபூமியின் நிறை ஏறக்குறைய 5.98×1024 கி.கி. ஆகும். பூமி, இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீஷியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும்அலுமினியம் (1.4%); மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது.நிறை பிரிவினால் புவியின் உட்கரு பிரதானமாக இரும்பினாலும் (88.8%) சிறிதளவு நிக்கல் (5.8%) மற்றும் சல்பர் (4.5%) ஆகியவற்றாலும், மேலும் ஒரு விழுக்காடு அரிதான தனிமங்களாலும் ஆகியுள்ளது\nபூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது, இது பூமியின் விட்டத்தை (ஏறத்தாழ 12,600 கி.மீ.) ஏழு நிமிடங்களிலும், சந்திரனுக்கு செல்லும் தூரத்தை (384,000 கி.மீ.) நான்கு மணி நேரத்திலும் கடக்க ஏதுவான வேகமாகும்\nமனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது.\nஅறிவியல் அறிஞர்கள் புவியின் கடந்த கால வரலாற்றை பற்றி விரிவாக வரையறுத்துள்ளனர். சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகப் பழமையான பொருள் 4.5672 ± 0.0006 பில்லியன் வருடங்களுக்கு முந்தியது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது., ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் பூமி உயிர் கோளம் என அழைக்கபடுகிறது.\nபின்பு ஒசான் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டல்தொடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களை தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதர்க்கு வழி ஏற்பட்டது. இக்காலகட்டங்களில் புவியின் பௌதிக தன்மையினாலும் புவி சூரியனை சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. தற்போதுள்ள, உயிர்களுக்கு ஏதுவான சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுவியில் சுமார் 71% பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகர்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை.\nஎனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, அடர்ந்த திட பரப்பு , காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ வெளிமையம் மற்றும் திட உள்மையம் ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது\nபுவியின் அச்சு சுழற்சி அதன் கோள பாதையிலிருந்து, 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால ம்மருபாடுகள் ஏற்படுகின்றன.\nபுவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைகோள் நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமியை சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்ச்சியையும் சிறிது சிறிதாக குறைக்கிறது.\nவளிமண்டலத்தில் நீர் சேர ஆரம்பித்தவுடன் முதலில் உருகிய நிலையில் இருந்த புவியின் மேற்பரப்பு குளிர்ந்து இறுகத் தொடங்கியது. இதற்குப்பின் புவியின் இயற்கை துணைக்கோள் நிலா உருவானது. நிலா, செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஒத்த ஒரு விண் வெளி பொருள் (தீயா என்று சில சமயம் அழைக்கப்படும்), புவியின் பத்தின் ஒரு பங்கு திண்மத்தை கொண்டதுமாகிய அப்பொருள் புவியின் மீது கொண்ட தாக்கத்தால் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வேற்றுலக பொருளின் ஒரு பகுதி புவியுடன் கலந்திருக்கலாம் எனவும் மற்ற பகுதிகள் விண் வெளியில் சிதறியும், புவியின் காந்த விசையால் புவியை சுற்றும் பாதையை அடைந்திருக்கலாம் எனவும் எண்ணப்படுகிறது.\nஎரிமலை சீற்றம் மற்றும் வாயுக்களின் வெளிக்கொணர்வு ஆகியன ஆதிகால புவியின் வளிமண்டலத்தை உருவாக்கின. விண் பெருகற்கள், வால் நட்சத்திரம், பெரிய முன்கிரகங்கள் மற்றும் நெப்ட்டியூனைத் தாண்டி உள்ள சூரிய மண்டலத்திலுள்ள விண் வெளிப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட பனிக்கட்டி, நீர் ஆகியனவும் வளிமண்டலத்திலிருந்து சுருங்கும் neeraviyinaalum , சமுத்திரங்கள் உருவாகின.\nஇன்றைய நிலையில், புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆற்றல் மிகு வேதியியல் வினைகளால் சுயமாக உருவாகும் மூலக்கூறுகள் ஏற்பட்டன, பிறகு அரை பில்லியன் வருடங்களுக்குள் எல்லா உயிரினங்களின் பொது மூதாதையரான உயிரினம் உருவாகியது. தாவர உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைத் தன்மையினால் சூரிய ஆற்றலை உபயோகப்படுத்தின;\nஇந்த வேதி வினையினால் ஏற்பட்ட பிராணவாயு (ஆக்சிஜன்) வளிமண்டலத்தை நிரப்பியது. மேலும் ஓசோன் (ஆக்சிஜன் மூலக்கூறின் ஒருவடிவம் [O3]) படலம் மேல் வளி மண்டலத்தில் உருவாக உதவியது. பல சிறு செல்கள் பெரிய செல்களுடன் சேர்ந்ததினால் நுணுக்கமான செல்கள் யூகேர்யோட்டுகள் (eukaryotes) உருவாகின. இப்படிப்பட்ட காலனிகளில் அடங்கிய செல்கள் தனித்தன்மையுடன் செயல்படத் தொடங்கியபோது உண்மையான பல செல் படைத்த உயிரினங்கள் உருவாகின. மேலும் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் அமைந்த ஓசோன் மண்டலம் வெளியிலிருந்து புவிக்கு வரும், கேடு விளைவிக்கும்புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியதால் பூவுலகில் உயிர்கள் தழைத்தன.\n535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்க எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியைப் போன்ற ஷ்ரூ என்றழைக்கப்படும் பாலுண்ணிகளே. கடந்த 65 மில்லியன் வருடங்களில் பாலுண்ணிகள் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன,\nசில மில்லியன் வருடங்களுக்கு முன், ஆப்பிரிக்கா கண்டத்தில் மனிதக்குரங்கைப் போன்ற ஓர் மிருகம் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது. அவ்வாறு நின்றதால் கருவிகளை உபயோகிக்கவும் தகவல் பரிமாறவும் முடிந்தது, இதுவே மூளையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இவ்வாறு அதிவிரைவாக வளர்ந்த மனிதனே முதலில் புவியில் விவசாயம் மற்றும் நாகரீகத்தையும் அறிமுகப்படுத்தினான். இதனால் ஏற்பட்ட தாக்கம் மற்ற புவி வாழ் உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் போக்கு இவற்றை மாற்றியமைத்தது\nசூரியனின் உட்கருவில் சேர்ந்து வரும் ஹீலியம் வாயுவினால், அதன் மொத்த ஒளிர்வுத்தன்மை மெல்ல வளரும். சூரியனின் இந்த ஒளிர்திறன் அடுத்த 1.1கிகா ஆண்டுகளில் (1.1 நூறு கோடி வருடங்கள்) 10 சதவிகிதமும் அடுத்த 3.5 கிகா [43] ஆண்டுகளில் 40 சதவிகிதமும் அதிகரிக்கும். காலநிலை கணிப்பின்படி புவியை வந்தடையும் அதிக கதிர்வீச்சு, கடல் இழப்பு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nஅடுத்த 900 மில்லியன் வருடங்களில் தாவரங்களுக்கு அத்தியாவசியமான கரியமலவாயு (C4 ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம்) வளிமண்டலத்தில் குறையும். தாவரங்கள் அழிவதால் அது வெளியிடும் ஆக்சிஜன் தடைப்படும், அதனால் மற்ற உயிரினங்கள் சில மில்லியன் ஆண்டுகளிலேயே முழுவதுமாக அழிந்து விடும்.\nபுவியின் உட்புற குளிர்ச்சி பெரும்பான்மையான வளி மண்டலத்தையும் கடற் பரப்பையும் குறைத்திடும் அடுத்த நூறு கோடி வருடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும் மறைந்திருக்கும்.\nபூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் சார்ந்த தட்பவெப்பநிலை மாற்றங்களை, ஏற்படுத்துகின்றது, வடதுருவம் சூரியனை நோக்கி உள்ள போது வட கோளார்தத்தின் கோடை காலமும், அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர்காலமாகவும் ஏற்படுகின்றது.\nஆர்ட்டிக் வளையத்திற்கு மேல் ஓர் அதீதமான செயல் காணப்படுகின்றது, அங்கே வருடத்தின் ஒரு பகுதி காலத்தில் வெளிச்சமே இருப்பதில்லை - இது துருவ இரவு என்றழைக்கப்படுகின்றது. தென் துருவம் வடதுருவத்திற்கு எதிர்புறம் அமைந்திருப்பதால், தென் கோளார்த்த காலங்கள் வட கோளார்த்த காலங்களுக்கு எதிர்மறையாக அமைந்திருக்கிறது.\nபுவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள புவிஈர்ப்பு சக்திதான் புவியில் பேரலைகள் உண்டாகக் காரணமாக இருக்கிறது. இதுவே சந்திரனில் பேரலை நிறுத்தத்திற்கும் காரணமாகிறது: இதன் சுழற்சிக் காலமானது அது பூமியைச் சுற்றி வரும் காலத்திற்குச் சமமாகும். இதன் காரணமாகவே, இது பூமிக்கு எப்பொழுதும் ஒரே பகுதியைக் காட்டுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால், அதன் வெவ்வேறு பகுதிகள் சூரியனால் ஒளிரச் செய்யப் படுகின்றன.\nநன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் அடுத்த பதிவு நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திர தொக்குப்பு (பால் வழி அண்டம்)\nநம் சூரிய குடும்பத்தின் கதை\nநம் தலைவர் ஒரு சூப்பர் ஸ்டார்.\nவயது 500 கோடி ஆண்டுகள் இன்னும் 700 கோடி ஆண்டுகள் உயிருடன் இருக்கலாம்.\nநம் பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரியவர். 9.8 கோடி மைல் தூரத்தில் இருக்கிறார் .\nநம் தலைவரின் மேற் புற வெப்பம் 6000 டிகிரி கெல்வின். தினமும் நம் சூரியன் சாப்பிடும் உணவு 39,744 தன் ஹைட்ரோஜென் அணுக்கள். அவை இணைந்து ஹீலேயும் ஆகிறது.\nநம் சூரிய குடும்பத்திலேயே பெரியவர் ஒரு தராசில் ஒரு பக்கம் வியாழனையும் மறு பக்கம் மற்ற 8 கோள்களையும் வைத்தல் கூட அவை வியாழனின் எடைக்கு நிகர் ஆக முடியாது.\nநம் பூமியை விட 318 மடங்கு பெரியவர்.\nஆனாலும் தன்னை தானே சுற்றி கொள்ள 9.9 மணி நேரமும் , சூரியனை சுற்றி வர 11.86 வருடமும் எடுத்து கொள்கிறார்\nவியாழனுக்கு 16 துணை கோள்கள் உள்ளன . அவற்றில் 4 மிக பெரியது\nசூரியனுக்கு மிக அருகில் உள்ளவர் சூரியனை 87 .97 நாட்களில் சுற்றி வந்து விடுகிறார்\nஆனால் தன்னை தானே சுற்றி கொள்ள 5 நாட்கள் எடுத்துகொள்கிறார் பூமியை ய விட 3 மடங்கு சிறியவர்.\nஅடுத்து நாம் பார்க்க இருப்பது நம் அண்டை வீட்டார் வெள்ளி அவர்கள்.\nஇவர் தன்னை தானே 243 நாட்களில் சுற்றி கொள்கிறார் அனால் சூரியனை 227 .4 நாட்களில் சுற்றி விடுகிறார்.\nஅதாவது அவருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விட அதிகம்\nஅடுத்து நாம் காண இருப்பவர் செவ்வாய் அவர்கள்\nசிவப்பாக தோன்றுகிறார் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது மனிதன் போய் குடியேற வாய்ப்புகள் அதிகம்\nஇவர் தன்னை தானே சுற்றி கொள்ள 10 மணி நேரமும் சூரியனை சுற்றி வர 29 .5 ஆண்டுகளும் ஆகின்றன\nவியாழனுக்கு அடுத்து நம் குடும்பத்தில் பெரியவர் இவர் .\nவெப்ப நிலை -285 டிகிரி சனி கிரகத்தில் பருவ நிலை 7 .5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறது .\nதற்போது அறிந்த வரை இவருக்கு 23 துணை கோள்கள் உள்ளன\nஇவருடைய ஒரு துணை கோளான தைடனில் (titan) சில நுண் உயிரிகள் வாழ கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்\nஅடுத்த நம் சூரிய குடும்ப உறுப்பினர் நம் uranus அவர்கள்\n� பூமியை விட 15 மடங்கு பெரியவர்.\nஇவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 84 ஆண்டுகள். 6.81\nஇவருக்கு 20 துணை கோள்கள் உள்ளன\nஇவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 160 ஆண்டுகள் 5 .43 கி.மீ./விநாடி வேகம்\nஇவருக்கு 13 துணை கோள்கள் உள்ளன\nநேப்டியுனை உங்களிடம் தரமான பயினகுளர் இருந்து மெகா மூடம் இல்லாதிருந்து\nஉங்களுக்கு பொறுமையும் இருந்தால் உங்கள் வீடு மாடியில் இருந்தே பார்க்கலாம்\nஇவர் தன நம் சூரிய குடும்பத்திலேயே மிகவும் தூரத்தில் உள்ளவர் மற்றும் மிகவும் சிறியவர்\nஇவர் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 250 ஆண்டுகள் 4 .7கி.மீ./விநாடி வேகம்\n1930 இல் கண்டறிய பட்டது\nநேப்டியுனும், யுரனுசும் ஒழுங்கான நீள் வட்ட பாதையில் சுற்றுகின்றன என்பதே அடுத்து ஒரு கிரகமும் அதற்கு ஈர்ப்பு விசையும் உள்ளது என்பதற்கு சாட்சி.\nஅதே போல் இதுவும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதால்\nஅடுத்தும் ஒரு x கிரகம் இருக்கலாம் அனால் இன்னும் கண்டறிய படவில்லை\nஇருபினும் நிறைய பெரியதும் சிறியதுமான பொருட்கள் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன புளுடோ வுக்கு அப்பால்\nபூமி மற்றும் நிலா :\nபூமி மற்றும் நிலா வை பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்\n( இது என்னுடைய முதல் பதிவு திருத்தங்கள் இருந்தால் கமெண்ட் இல் சொல்லவும்\nதங்கள் வருகைக்கு நன்றி )\nநம் சூரிய குடும்பத்தின் கதை\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு\nஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்... இது எப்படி சாத்தியமானது \nவேற்று கிரக வாசிகள் நம்மை வேவு பார்க்கிறார்களா\nவேற்றுகிரக வாசிகள் பூமியை அடிக்கடி சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இருந்து உளவு பார்க்கிறார்கள் ( இதை பற்றி என்னுடைய 2012 இல் ...\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\n\"வர்மம்” ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று ...\nஉலகின் மிக உயரமான கட்டிடம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்ற கட்டிடம் துபாயில் உள்ளது. Burj Khalifa என்று அழைக்கப்படும் இதன் உயரம் 2,717 அடி (828 மீ...\nவிஞ்ஞானம்: ஜெனிவா, ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://multicastlabs.com/81751-malicious-pots-how-to-make-semi-tips-tips-tips-this-magazine-seat", "date_download": "2018-05-27T02:52:33Z", "digest": "sha1:TJ6KDHOXZCNYBIUHFSRALJ2M6LFIIVRD", "length": 8756, "nlines": 26, "source_domain": "multicastlabs.com", "title": "தீங்கிழைக்கும் போட்ஸ் - செமால்ட் டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் திஸ் இதழ் சீட் செய்ய எப்படி", "raw_content": "\nதீங்கிழைக்கும் போட்ஸ் - செமால்ட் டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் திஸ் இதழ் சீட் செய்ய எப்படி\nஅலெக்சாண்டர் Peresunko, தி செமால்ட் வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர், டிஜிட்டல் மாற்றம் திடீரென்று எங்கள் வணிகங்கள் இயக்க வழி மாறிவிட்டது என்று கூறுகிறது மற்றும் நம் வாழ்க்கை. ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி தொழில்நுட்பத்திற்கும் அதே போல் உலகளாவிய இணைய ஊடுருவலுக்கும் நன்றி 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிக்க இணையத்தை பயன்படுத்துகின்றனர். தவிர, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு நவீன வாழ்க்கை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது - high moisture corn storage.\nதானியங்கு இணைய நிரல்கள் பல காரணங்களுக்காக உருவாக்கப்பட்டன. அவர்களில் சிலர் நல்லவர்கள், மற்றவர்கள் கெட்டவர்கள். நல்லவை சமூக ஊடக போட்களை, தேடல் பொறி போட்களை, கூட்டாளர் போட்களை மற்றும் மற்றவர்கள் அடங்கும். தீங்கிழைக்கும் அல்லது மோசமான போட்களை உங்கள் தனிப்பட்ட தகவலை திருட மற்றும் உங்கள் கணினி சாதனங்களில் தானியங்கு பணிகளை செய்ய ஹேக்கர்கள் உருவாக்கப்பட்டது.\nஅவர்களது செயல்பாடுகளில் சில போலி பதிவுகளை உருவாக்குகின்றன, தனிப்பட்ட தகவலை சேகரித்து, உள்ளடக்கம், பொருட்கள் மற்றும் விலைகளை ஒட்டுதல், டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து விற்பனை செய்வது போன்றவற்றை உருவாக்குகிறது. இத்தகைய குறைகூறும் செயல்கள் முடிவில்லாதவை, எல்லா வகையிலும் தடுக்கப்பட வேண்டும்..உதாரணமாக, நீங்கள் ஒரு ஆன்லைன் வணிக இயங்கும் என்றால், நீங்கள் தொடர்ந்து கெட்ட போட்களால் தாக்கப்பட்டால் உங்கள் வலைத்தளத்தை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது. ஹேக்கர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் ஐபி முகவரிகள் தடுக்கப்படுவதன் மூலம் நிறுத்தப்படலாம்.\nApache, NGINX, மற்றும் ஐஎஸ்எஸ் சர்வர் பதிவுகள் கைமுறையாக தீங்கிழைக்கும் நடவடிக்கைகள் மற்றும் உங்கள் வலை பக்கங்களின் போட்களை கண்டுபிடிக்க பகுப்பாய்வு. ஒவ்வொரு முறையும், பதிவு ஒரு விரிதாளிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, நீங்கள் IP முகவரி மற்றும் பயனர் முகவரை அடையாளம் காண நெடுவரிசைகளை உருவாக்க வேண்டும். இருவரையும் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டபோது, ​​அவற்றை ஒருவரிடமிருந்து தடுக்க நீங்கள் எளிதானதாக இருக்கும். மாற்றாக, நீங்கள் அந்த IP ஐ தனிமைப்படுத்தலாம் மற்றும் உங்கள் இணைய உலாவிகளில் இருந்து குறிப்பாக ஃபயர்வாலை தடுக்கலாம். இது ஒரு உற்சாகமான செயலாகும், பல மணிநேரங்களை உட்கொள்ளலாம், ஆனால் முடிவுகள் நம்பமுடியாதவை மற்றும் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவை.\nஹேக்கர்கள் இருந்து உங்கள் இணைய பாதுகாக்க இரண்டு போட்களை மற்றும் உண்மையான மனிதர்கள் CAPTCHA காட்டு. உங்கள் தொடர்புடைய அனைத்து பக்கங்களிலும் மோசமான போட்களை மற்றும் ரோபோக்களைத் தடுக்க மிகவும் பொதுவான மற்றும் வியக்கத்தக்க நடைமுறைகளில் ஒன்றாகும். CAPTCHA உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும் அனைத்து மக்களுக்கும் அல்லது போட்களுக்கும் காட்டப்பட வேண்டும்.\nபல்வேறு வலைத்தளங்களை உருவாக்கும் முக்கிய தவறுகளில் ஒன்றாகும், robots.txt ஐ URL களை அனுமதிக்காது, கிராலர்கள் மற்றும் போட்களை, நல்லது அல்லது கெட்டது, தங்கள் வலைத்தளங்களின் மூலம் குறுக்கிட முடியாது என்று நம்புகிறது. இந்த முறை நிறைய நேரம் எடுக்கும் என்று தவறாக இருக்காது, ஆனால் முடிவு எப்போதும் பெரியது. உங்கள் உரைக் கோப்புகளில் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் போட்களை நீக்கிவிடலாம். சுருக்கமாக, உங்கள் வலை உள்ளடக்கம் மற்றும் கட்டுரைகளைத் திருடிய ஸ்கிராப்பர்களைத் தடுக்க நீங்கள் robots.txt கோப்பை மாற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/5177/thupparivalan-creates-more-expectation/", "date_download": "2018-05-27T03:23:25Z", "digest": "sha1:FYVQJUTBMR7AJW7T5V2OD77DH5SF6JYL", "length": 7528, "nlines": 133, "source_domain": "tamilcinema.com", "title": "எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’\nதமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ துப்பறியும் படங்கள் வெளிவந்துள்ளன. துப்பறியும் படங்களில் நடித்ததால் ஜெய்சங்கர் ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் இவையெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் ரக அதிரடி சாகசப் படங்களாகத்தான் அமைந்தன. முழுக்க முழுக்க மதிநுட்பம் துணைகொண்டு நுண்ணிய துப்புக்களை வைத்தே குற்றவாளிகளை நெருங்கும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் வகை படங்கள் தமிழில் வரவில்லை என்று அடித்துச் சொல்லலாம்.\nஇந்த குறையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையை தருகிறது ‘துப்பறிவாளன்’ படம். மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், அனு இமானுவேல், சிம்ரன், ஆண்ட்ரியா, பாக்யராஜ், ஜான் விஜய் என முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் தமிழில் ஒரு ஷெர்லாக் ஹோம்ல்ஸ் வகை அக்மார்க் துப்பறியும் படம் என்பதை பறைசாற்றுகின்றன. டிரெயிலரில் வரும் வசனங்களும், பின்னணி இசையும், சீனக் கலைஞர்களுடனான குங்ஃபூ சண்டைக் காட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.\nடிரெயிலரில் இருக்கும் பரசவ உணர்வை படத்திலும் இயக்குனர் மிஷ்கின் ஏற்படுத்தினால் நிச்சயம் ‘துப்பறிவாளன்’ தமிழ் சினிமாவின் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் இது இன்னொரு ‘முகமூடி’யாகவே அமையும் என்பதற்கும் மறுப்பில்லை. எது எப்படியோ இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.\nதெலுங்கிலும் குவியும் வாய்ப்புகள் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே.சூர்யா\n‘’அனைவரும் கல்வி பயின்று பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே சாதி ஒழியும்’’ – உ’றியடி’ விஜயகுமார்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tiaskk.blogspot.com/2017/09/blog-post_14.html", "date_download": "2018-05-27T03:28:21Z", "digest": "sha1:UOI6NT4MDXHHRZXK6CMGSAFULD3AQT4K", "length": 19017, "nlines": 276, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்\nதமிழகத்தில் 2003 முதல் புதிய பென்சன் திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், இவற்றுக்குரிய அகவிலைப்படி (டி.ஏ.) ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை அரசு தன் பங்கிற்கு செலுத்துகிறது. இவ்வாறு சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் வழங்கப்பட்டுவிடும்.\nஎஞ்சிய 40 சதவீத தொகை பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.\nபுதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.\nபழைய பென்சன் திட்டப்படி, அரசு ஊழியர் ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர் முழு ஓய்வூதியம் பெறலாம். முழு ஓய்வூதியம் என்பது அவர் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அதற்கு உரிய அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது. 30 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதிய தொகை நிர்ணயிக்கப்படும். இதற்கென தனி கணக்கீடு உள்ளது.\nபுதிய பென்சன் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியத்தொகை கிடைக்கும் என்று வரையறுக்க இயலாது. ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் பலனை பொருத்தது. பணிக்கொடை (கிராஜுவிட்டி), சிபிஎப் தொகையில் கடன் மற்றும் முன்பணம் பெறும் வசதி, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு இவை எதுவும் கிடையாது என்பதால்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nவெளியீடு: தஇஆச நேரம்: 3:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: கட்டுரைகள், நாளிதழ் செய்திகள், ஜாக்டோ-ஜியோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் இன்று நடைபெற்றது. மாநிலத்தலைவர் ஆ.மதலைமுத்து தலைமையில் நடைபெற்றது. ...\nதஇஆச தொடுத்த வீட்டு வாடகைப் படி வழக்கு - தீர்ப்பு முழு விவரம்\nதேர்வு நிலை/சிறப்புநிலை ஊதியம் தொடர்பான அரசாணை\nஅரசாணை எண்: 237 நிதித்(ஊதியப் பிரிவு)துறை நாள்: 22-07-2013 .\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - சமூக அறிவியல் 2\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 7\nSTFI மாநாடு - வரவேற்பு குழு தலைவரின் உரை\nதேர்வு பணியில் விலக்கு கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்\nபிளஸ் 2 தேர்வு பணியில் இருந்து விலக்கு கேட்டு சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...\nதுறைத் தேர்வுகள் - மே 2018: அறிவிக்கை\nTET வினா விடை - தமிழ் - பொது 3\n* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க) * பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க * 'நாமக்கல் கவிஞர்...\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (5)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (52)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (4)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nஜாக்டோ - ஜியோ இன்று ஆலோசனை\nஊதியக் குழு: ஐகோர்ட் கெடு; ஆஜரானார் தலைமை செயலர்\nஉயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து போராட்டம் தொடர்பாக...\nஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: உயர்நீதி மன்றம் கேள்வ...\nஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்ப...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்த...\nஅரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த ...\nJACTTO - GEO இன்றைய (09.09.17) கூட்ட முடிவுகள்\nசெப்டம்பர் 11 முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ...\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/09/10.html", "date_download": "2018-05-27T03:08:32Z", "digest": "sha1:VPE3NK7NZO2B5V3NN6JVT2KR34MJKC73", "length": 11590, "nlines": 252, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன", "raw_content": "\n10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன\nதமிழகம் முழுவதும் கிராமப்புறத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வி அறிவு பெற அரசு தொடக்க,\nஇவர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் கிராமப்புற பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nபெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்பது விதி, ஆனால் பல இடங்களில் ஆறு மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றன.\nஇவற்றால் செலவினங்கள் அதிகரித்து வருவதாக அரசு கருதி 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.\nமாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களை அருகில் இணைக்கப்படும் பள்ளிகளுக்கு அழைத்து செல்ல வேன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தாண்டு 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் அடுத்தாண்டு 20 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளும் மூடப்பட்டு அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன.\nதிருப்புவனம் ஒன்றியத்தில் 62 தொடக்கப்பள்ளிகள், 33 நடுநிலைப்பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100 பள்ளிகளில் 387 ஆசிரியர்,ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இதில் 6 ஆயிரத்து 414 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர்.\nஇந்தாண்டு திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள அழகுடையான் ( 6 மாணவ, மாணவியர்கள்) புளியங்குளம் (9 மாணவ, மாணவியர்கள்), மேலசொரிகுளம் ( 4மாணவ, மாணவியர்கள்) ஆகிய மூன்று பள்ளிகள் அருகில் உள்ள மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆசிரியர்களின் சம்பளம், சத்துணவு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்டவை மிச்சமாகும் என கருதப்படுகிறது.\nஇதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள் முடிந்து தமிழக அரசுக்கு முடிவு அனுப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும் இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/04/blog-post_2704.html", "date_download": "2018-05-27T03:10:29Z", "digest": "sha1:NNNWQNYVLZIAIF3YUES4MREXRJDTQROU", "length": 23735, "nlines": 401, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய வேண்டும்\nமுன்னாள் முதல்வரின் சித்திரைப் புதுவருட வாழ்த்துச் செய்தி*********\nமலர்ந்திருக்கும் இனிய தமிழ் சிங்களப் ஜயவருடமானது அனைத்து மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியையும், பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையும் ஏற்படுத்திக்கொள்வதாகவும் அமையவேண்டும்.2014 ஆம் ஆண்டு மலரும் இப்புதுவருடத்தில் இலங்கையில் வாழ்கின்ற அனைவரும் சகோதர மனப்பாங்குடன், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுடன், வேறுபாடுகளைக் கழைந்து ஒற்றுமையாக வாழவேண்டும்.\nஇலங்கைத் தீவில் மூன்றினங்களும் இலங்கையர் என்ற ஓருமை தோற்றம் பெற்றிருக்கின்ற வேளையில் அதனைக் குழப்பி அந்தக் குழப்பத்தின்மூலம் இலங்கையில் உருவாகின்ற வன்முறை மற்றும் நிம்மிதியின்மையில் குளிர்காய்வதற்கு பல தீய சக்திகள் முனைந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த காலங்களைப் போலல்லாது தற்போது கிழக்கு மாகாணத்தில் சமாதான காற்றை சுவாசிக்கின்ற நிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையினைக் கருத்திற்கொண்டு தமது பொருளாதாரத்தையும், கல்வியையும் கட்டியெழுப்புகின்ற செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்ற எமது தமிழ் மக்களை மீண்டும் நெருக்குதலுக்குள்ளாக்கக்கூடிய நிலையில் சில புலம்பெயர்ந்த சக்திகள் அதாவது கடந்தகாலங்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்ட குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.\nஇக் குழுவினர் தமது இருப்பிற்கும் சொகுசு வாழ்க்கைக்கும் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இலங்கையில் குறிப்பாக கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் மீண்டும் புலிப்பயங்கரவாதத்தினை கட்டியெழுப்புவது போன்ற செயற்hடுகளுக்கு புத்துயிர் அளிக்கின்ற செயற்hடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இச் செயற்hடுகள் முற்றுமுழுதாக எமது மக்களின் வாழ்க்கையை அஸ்த்தமனமாக்குகின்ற செயற்பாடாகும். கடந்தகாலங்களில் போராட்டத்தின் பயனால் எமது மக்கள் அடைந்த இன்னல்கள் போதும். இனிமேலும் அதுபோன்றதொரு கொடியநிலை எம்மக்களுக்கு இனிமேல் நேரக்கூடாது.\nஇலங்கையில் தொடர்ந்து பிரச்சினை இருப்பதாக காட்டிக்கொண்டு வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் வெளிநாட்டு பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவே தமிழ் மக்கள் விழிப்படைவதுடன், இதனையெல்லாம் கருத்திற்கொள்ளாது, தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குமுரிய வழிமுறைகள் பற்றியே சிந்திக்கவேண்டும். அதனை நாம் இன்று மலர்ந்திருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்வதுடன், மலர்ந்திருக்கின்ற புதுவருடத்தில் அனைவரினது மனதிலும் புத்துயிரளிக்கக்கூடிய ஆக்கபூர்வமான சிந்தனையும் செயற்பாடுகளும் நிலைப்பெற வேண்டும் என இந் நன்நாளிலே வாழ்த்தி புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n- சிவனேசதுரை – சந்திரகாந்தன் -\nஜாதிபதியின் ஆலோசகர், முன்னாள் முதல்வர்\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vanniexpressnews.com/2018/05/rakip.html", "date_download": "2018-05-27T03:21:52Z", "digest": "sha1:3BOVPHSUQYZEENWV6DJFOBM76YRJIPGR", "length": 38076, "nlines": 116, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் ஹபாயா அணிய தயாரா ? - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் ஹபாயா அணிய தயாரா \nமுஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் ஹபாயா அணிய தயாரா ஆனந்த சங்கரியிடம் கல்முனை முதல்வர் றகீப் கேள்வி..\nதமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் கேள்வியெழுப்பினார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.\nஇதன்போது புதிய முதல்வருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்து கொண்டதுடன் தனது கட்சிப் பிரதிநிதியான தமிழர் ஒருவரை கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக தெரிவு செய்தமைக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் தமிழ்- முஸ்லிம் நல்லுறவு தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியும் முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதன்போதே கல்முனை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nதிருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஹபாயா அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பிரஸ்தாபித்த முதல்வர் ஏ.எம்.றகீப், ஒரு காலத்தில் தமிழ்- முஸ்லிம் இன ஐக்கியத்திற்கு அச்சாணியாகத் திகழ்ந்த தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி போன்ற பழுத்த தமிழ் அரசியல் தலைமைகள் இது போன்ற விடயங்களில் நேர்மையுடன் செயற்பட முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇவ்வாறான செயற்பாடுகளானது நலிவடைந்த நிலையிலுள்ள தமிழ்- முஸ்லிம் உறவுக்கு மேலும் குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது எனவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.\nதமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளும் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிரப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்றும் ஆனந்த சங்கரியிடம் முதல்வர் ஏ.எம்.றகீப் கேள்வியெழுப்பினார்.\nஅல்லது முஸ்லிம் ஆசிரியைகளை தமிழ் பாடசாலைகளுக்கோ தமிழ் ஆசிரியைகளை முஸ்லிம் பாடசாலைகளுக்கோ நியமிப்பதை தடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழ்- முஸ்லிம் உறவு இன்னும் தூர விலகிச் செல்லுமே தவிர பலமடைய மாட்டாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.\nதமிழ்- முஸ்லிம் உறவை சீர்குலைப்பதனை நோக்காக கொண்ட சில சக்திகளே இப்படியான சம்பவங்களை தூண்டி விடுவதாக தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் இரு சமூகங்களும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\n\"தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இது தொடர்பில் தெரிவித்த கருத்து எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அவரது கருத்து குறித்து நான் கவலையடைகிறேன். முஸ்லிம் ஆசிரியைகளும் சாரி அணிவதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வு என்று சம்பந்தன் கூறியிருப்பதானது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கே இழுக்காகும். குறைந்தபட்சம் இப்பிரச்சினை தொடர்பில் இரு சமூகத்தினரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றே அவர் கூறியிருக்க வேண்டும்\" என்றும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டார்.\nஇச்சந்திப்பில் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.நிசார், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.\nமுஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் ஹபாயா அணிய தயாரா \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதடை நீக்கம் இல்லை - 7 பெண்கள் சவூதியில் கைது\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரி...\nவிமானப் பணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் கைது\nதுபாய் நாட்டில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுபோதையில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி...\nஇலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்\nஇலங்கை அணியின் வீரர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது. இதன்படி வீரர்களில் வேதன உயர்வு 30...\nவீரர்களின் கைகளில் கறுப்புப்பட்டி - காரணம் என்ன \nஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியி...\nஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 வது தொடர் கடந்த மாதம் 7 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சு...\nமுந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா\n-எஸ். ஹமீத் முந்தாநாள் (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்...\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF-20", "date_download": "2018-05-27T03:39:45Z", "digest": "sha1:JHVFXXYQNQVI3QZLVHXXRD3OXENQZN53", "length": 13052, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி-20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n20 நாடுகளின் நிதி அமைச்சர்களதும் மத்திய வங்கி ஆளுநர்களதும் அமைப்பு\nகடும் நீலத்தில் உள்ள பகுதிகள் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள்; இளநீலத்தில் உள்ள பகுதிகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்.\nஉலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி.\nடோனி அபோட் (ஆத்திரேலியா) (2014)\n20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.\nஅர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ பொருளிய‌ல் கூட்ட‌மைப்பு\nகூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.[1] ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.meetings 2017 jermany 2018 அர்ஜெண்டினா\n20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20யின் ஒன்பதாவது மாநாடு பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.\n2008 1 14–15 நவம்பர் அமெரிக்க ஐக்கிய நாடு வாசிங்டன் ஜார்ஜ் வாக்கர் புஷ் [2]\n2009 2 2 எப்ரல் ஐக்கிய இராச்சியம் லண்டன் கார்டன் பிரவுன் [2]\n3 24–25 செப்டம்பர் அமெரிக்க ஐக்கிய நாடு பிட்ஸ்பர்க் பராக் ஒபாமா [2]\n2010 4 26–27 ஜுன் கனடா டொரன்டொ சிடிபன் கார்பர் [3]\n5 11–12 நவம்பர் தென் கொரியா சியோல் லி முயுங்-பக் [4]\n2011 6 3–4 நவம்பர் பிரான்சு கேன்ஸ் நிக்கொலா சார்கோசி [5]\n2012 7 18–19 ஜுன் மெக்சிகொ லாஸ் கெபொஸ் பிலிப்பி கல்டிரொன் [6]\n2013 8 5–6 செப்டம்பர் உருசியா ஸ்ரீரில்னா, செய்ன்ட் பிட்டர்ஸ்பர்க் விளாதிமிர் பூட்டின் [7][8][9]\n2014 9 15–16 நவம்பர் ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் டோனி அபோட் [7][10]\n2015 10 நவம்பர் துருக்கி அன்டால்யா [7][11]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜி20 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2018, 17:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2012/06/create-free-website.html", "date_download": "2018-05-27T03:21:38Z", "digest": "sha1:XA4N3AD2PBKTCT3BKR53ODHDRN3J2YJ3", "length": 3190, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website) - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome DOMAIN FREE இணையத்தளம் உங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)\nஉங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website)\nஇணையத்தளங்களை உருவாக்க விரும்புபவர்கள் பணம் செலுத்தி இணையமுகவரியை பெற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் அதற்கான வடிவமைப்புக்களையும் செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் எமக்கான இணையத்தளங்களை எத்துவித செலவும் இல்லாமல் இலவசமாக இணையமுகவரி மற்றும் இணைய வார்ப்புருக்களுடன்(Web Templates) இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். அத்தகைய இணையத்தளங்களை உருவாக்குவதற்கு சில இணையசேவை வழங்குனர்கள் இந்த சேவைகளை சில வரையறைகளுடன் உங்களுக்கு தருகின்றார்கள்.\nஅத்தகைய சேவைகளை வழங்கும் இணையத்தளங்கள்.\nஉங்கள் பெயரிலே இலவசமாக இணையத்தளங்களை உருவாக்குங்கள் (Create Free Website) Reviewed by அன்பை தேடி அன்பு on 8:07 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://life-is-sciencee.blogspot.com/2012/07/", "date_download": "2018-05-27T03:32:50Z", "digest": "sha1:WKQOVTJ2AIVW4IXTCF66FO4LRQ246533", "length": 39039, "nlines": 196, "source_domain": "life-is-sciencee.blogspot.com", "title": "அறிவியல் விந்தைகள்: July 2012", "raw_content": "\nதமிழக கோவில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகலாகட்டும், தூண்களில் ஒரு நூல் இல்லை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்கள் ஆகட்டும், 1000 ஆண்டுகளாக இயற்க்கை சீற்றங்களால் கூட சிறு தேய்வுகள் இன்றி, எந்த வண்ண பூச்சும் இன்றி நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரம் ஆகட்டும். இன்னும் ஆதி தமிழர்கள் செய்த பற்பல அற்புதமான விஷயங்கள் பற்றி வியப்புடன் பேசும் நாம் இதை பற்றிய தேடலை மேற்கொண்டோமா அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விஷத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....\n1/2 - அரை கால்\n3/16 - மூன்று வீசம்\n3/20 - மூன்று மா\n1/16 - மாகாணி (வீசம்)\n3/64 - முக்கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\n1/102400 - கீழ் முந்திரி\nஅடேங்கப்பா எந்த மொழியிலும் இல்லாத decimal calculation \nnano particle தான் மிக சிறியது என்று உலகமே பேசிகொண்டிருக்கையில் நம் முன்னோர்கள் அதைவிட சிறிய துகளுக்கு கூட calculation போடிருக்கிரார்கள் என்றால் மிகவும் வியக்கத்தக்க ஒன்றே.\nஇவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது\nஇந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.\nஇன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்தே நம்மால் செய்ய இயலாத பல அற்புதங்களை அன்றே செய்து வைத்து விட்டனர்.\nகால்குலேடரையும், தொழில்நுட்ப வளர்ச்சி என்று இளைய தலை முறை கூறிக்கொண்டிருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம், தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்...\n(நான் இட்ட தலைப்புக்கும் உள்ளே இருந்த பொருளும் வேறுமாதிரியாக உள்ளதே என என்னலாம். வலைத்தளத்தில் பல தொடர் பதிவுகள் சென்றுகொண்டிருப்பதால் புது புது தலைப்புகள் இட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இவ்வாறு இட்டுள்ளேன்.)\nஇப்பதிவு பற்றிய தங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன...\nபெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முடியாது ஏன்\nபெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும்.\nஅடுத்து பெட்ரோல் இயந்திரத்தில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி ஆகும். மேலும், இவற்றில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் குறைவு. இந்நிலையில், பெட்ரோல் இயந்திரத்தில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது.\nஅடுத்து டீசல் இயந்திரத்தில், பெட்ரோல் இயந்திரத்தில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் இயந்திரங்களுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.\nதமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.\nகுமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,\nஇக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு பனை நாடு, ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.\nகுமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.\nநக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.\nஇதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.\nவெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்\nஇப்பதிவு பற்றிய உங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன....\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிஇல் பரவி இருந்தது, இக்கலை சிதமருதுவதை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.\nஇக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை).\"தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே\" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.\nஅகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்\n\"அகஸ்தியர் ஊசி முறை வர்மம்\"\n\"அகஸ்தியர் மெய் தீண்டா கலை\"\n\" ஜடாவர்மன் பாண்டியன்\" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.\nகாஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் \"The fighting techniques to train the body from India \" என்ற பொருளை தருகின்றது.\nஇக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என \"அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே\" என்ற வரிகள் விளக்குகின்றன\nஉலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.\nநமது வர்ம கலை பரவிய நாடுகள்:\nகிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.\n“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.\nதூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”\nஇதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).\nதொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.\nசீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.\nவர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:\nஇது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்\nஇது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்\nபார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்\nநான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்\nஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.\nஉடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:\nதலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்\nநெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்\nஉடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்\nமுதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்\nகைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்\nகைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்\nகால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்\nகால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்\nகீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்\nவேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்\nஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.\nவெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.\nஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.\nஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.\nநட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.\nமயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.\nமேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.\nஅறிவியல் பதிவுகளாய் எழுதி வந்த நான் முதன் முதலாக வரலாற்று சம்பந்தமான பதிவை எழுதுகிறேன், வார்த்தை நடை, வரிகளின் கோர்வையில் பிழைகள் இருந்தால் தங்களின் கருத்துகளை வரவேற்கிறேன் கமெண்ட் இல் சொல்லுங்கள்.\nபெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முட...\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு\nஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்... இது எப்படி சாத்தியமானது \nவேற்று கிரக வாசிகள் நம்மை வேவு பார்க்கிறார்களா\nவேற்றுகிரக வாசிகள் பூமியை அடிக்கடி சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இருந்து உளவு பார்க்கிறார்கள் ( இதை பற்றி என்னுடைய 2012 இல் ...\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\n\"வர்மம்” ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று ...\nஉலகின் மிக உயரமான கட்டிடம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்ற கட்டிடம் துபாயில் உள்ளது. Burj Khalifa என்று அழைக்கப்படும் இதன் உயரம் 2,717 அடி (828 மீ...\nவிஞ்ஞானம்: ஜெனிவா, ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/famous-journalist-cho-ramaswamy-died/", "date_download": "2018-05-27T03:20:35Z", "digest": "sha1:ASSPDHLKQ3VQW7KO56K53OYJN6SLLATB", "length": 15152, "nlines": 125, "source_domain": "makkalmurasu.com", "title": "பிரபல பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார்! - மக்கள்முரசு", "raw_content": "\nபிரபல பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார்\nபத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி (82) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலை 3.58 மணிக்கு காலமானார்.\nமூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோ-விற்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் சோ ராமசாமி. ஜெயலலிதா மறைந்த 2 நாட்களிலேயே சோ ராமசாமியும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.\nஎம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் சோ உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் சோ உடல் தகனம் செய்யப்படுகிறது. சோ-விற்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.\nசோ ராமசாமி பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். “சோ” என அழைக்கப்படுகிறார். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் ‘அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் பெற்று தந்தது.\nபிறப்பு: அக்டோபர் 5, 1934 அன்று சென்னையில் பிறந்தவர்.\nபெற்றோர்: தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள்.\nகல்வி: தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார்.\nவழக்குரைஞர்: 1957 – 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 -ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்.\nநாடகமும்-இதழும்: 1957-ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970-ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976-ஆம் ஆண்டில் பிக்விக் ((PickWick) என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.\nதிரையுலக வாழ்க்கை: 14 திரைப்படங்களுக்கு கதை எழுதிய சோ, 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.\nஇவரது முகமது பின் துக்ளக் என்னும் ‘அரசியல் நையாண்டி’ நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.\nவிருதுகள்: இவர் தனது ஏட்டுத்துறைச் (பத்திரிக்கைத்துறைச்) சேவைக்காக 1985-இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986-இல் வீரகேசரி விருதும், 1994-ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998-இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.\nஅரசியல்: முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயால் மாநிலங்களவை உறுப்பின‎ராக நியமனம் செய்யப்பட்டு 1999 – 2005 வரை பணியாற்றினார்.\nஇந்நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nநேற்று அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. மூச்சுத் திணறல் அதிகம் ஏற்பட்டு இன்று அதிகாலை 3.58 மணிக்கு சோ ராமசாமி காலமானார்.\nFiled under: சினிமா செய்திகள்\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970…\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\n← முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த கருணாஸ் →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/asia/03/120002?ref=category", "date_download": "2018-05-27T03:29:32Z", "digest": "sha1:B3J6JEORREAOBMWAF3K6E44AY34JJWPZ", "length": 7425, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "ஆசிட் வீச்சால் கருகிய முகம்: இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆசிட் வீச்சால் கருகிய முகம்: இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம் பெண் அறுவை சிகிச்சைக்கு பின்னரான தனது முகத்தை தைரியமாக வெளியுலகிற்கு காட்டியுள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் Kanwal Qayyum (26), இவருக்கு பள்ளி பருவத்திலிருந்தே விமான பணிப்பெண் ஆவதே விருப்பமாக இருந்தது.\nஅழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த Kanwal தனது 19 வயதில் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவர் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார்.\nமுகம் முழுவதும் கருகி போன நிலையில் கடந்த 10 வருடங்களாக அவர் பல விதமான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.\nபிரித்தானியா நாட்டை சேர்ந்த Asim Shahmalak என்னும் மருத்துவர் அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளித்தார்.\nAsimவின் மூக்கு முழுவதும் வெந்து போனதால், அவர் தொடை பகுதியில் தோலை வைத்து மூக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nமுழு சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு முகம் கிடைத்துள்ளது. என்ன தான் கோரமான முகமாக இருந்தாலும் அதை தைரியமாகவும், பெருமையாகவும் உலகிற்கு காட்டியுள்ளார் ஒரு குழந்தைக்கு தாயான Kanwal.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2012/02/blog-post_20.html", "date_download": "2018-05-27T03:29:54Z", "digest": "sha1:762DQOYEN65CLDWPUWUE6OJCG3I2R5QH", "length": 13455, "nlines": 148, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": என்னிடமிருந்து விருது வாங்கிய ஐந்து பேர்", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nஎன்னிடமிருந்து விருது வாங்கிய ஐந்து பேர்\nபதிவெழுத வந்த புதிதில் விருது வாங்கியது. அதுக்கப்பறம் நாமளும் எந்த விருதையும் தேடி போகல. எந்த விருதும் நம்ம தேடி வரல. இவ்ளோ நாள் கழிச்சு, நண்பர் வெங்கட் நாகராஜ் விருது வழங்கி இருக்கிறார். அவருடைய 'அன்பின் விருது ' அப்படிங்கற பதிவுல இந்த விருதை வழங்கி இருக்கறார். ஜோரா ஒரு தடவை கை தட்டுங்களேன் பிரெண்ட்ஸ்....\nரொம்ப நன்றி வெங்கட் நாகராஜ்.\nஇந்த விருதுல என்ன ஒரு விசேஷம் னா நாம பாட்டுக்கு வாங்கினோமா, நம்ம வேலைய பார்த்தோமான்னு இல்லாம, நம்மள அஞ்சு பேருக்கு குடுக்க சொல்றாங்க. அதுவும் யாருக்கு இருநூறுக்கும் குறைவா followers வெச்சிருக்கறவங்களுக்கு குடுக்கணுமாம். ஊக்குவிப்பதில் புதிய முறை. நல்லா இருக்குல்ல...\nஅஞ்சு பேருக்குதான் குடுக்கணுமா இல்ல எத்தனை பேருக்கு வேணும்னாலும் குடுக்கலாமான்னு தெரியல. அவங்க குறிப்பிட்டதால் இங்கே ஐவருக்கே விருது தரேன்.\nLiebster னா ஜெர்மன்ல Dearest ன்னு அர்த்தமாம். இந்த விருது குடுப்பதால் இவங்க மட்டும் தான் dearest ன்னு நீங்களும் நினைக்க மாட்டீங்க. அவங்களும் நினைக்க மாட்டாங்கன்னு தெரியும். இன்னும் ஒரு மாசத்துல இருநூறுக்கும் குறைவா followers வைச்சிருக்கற அத்தனை பேருக்குமே இந்த விருது reach ஆகிடும்னு நினைக்கறேன். MLM மெத்தட்ல எல்லாரும் எல்லாரையும் பாராட்டிக்கறோம். நல்லது தான..\nஅப்பறம், இந்த விருது வாங்கிக்கறதுல சில ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு. மறுபடியும் அதை சொல்லிடறேன்.\n1 இந்த விருதை வாங்கினதும் உங்க பதிவுல வெச்சுக்கோங்க.\n2 இந்த விருதை யார் உங்களுக்கு கொடுத்தாங்களோ அவங்க பதிவை இணைக்க வேண்டும் .\n3 நீங்களும் 5 பேருக்கு விருது குடுக்கணும்\n4 அந்த 5 பேருக்கும் 200 க்கும் குறைவான followers இருக்கணும்.\n5 இது சம்பந்தமா ஒரு பதிவை உங்க தளத்துல பதியனும்\nஇதை பெரிய மலைப்போட செய்யாம உங்க விருது புதியவர்களுக்கு ஊக்கம் தரும் அப்படிங்கற காரணத்துக்காகவே செய்யுங்க நண்பர்களே..\nவாழ்த்துகள்... உங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெற்றவர்களுக்கும்....\nவாழ்த்துக்கள் விருது பெற்றமைக்கும் , வழங்கியமைக்கும் ..\nஎனக்கெல்லாம் விருது கிருது கிடையாதா. பள்ளிக்கோடத்துல படிக்கும் போது தான் யாருமே தர மாட்டேனுட்டாங்க நீங்களுமா . பள்ளிக்கோடத்துல படிக்கும் போது தான் யாருமே தர மாட்டேனுட்டாங்க நீங்களுமா (உங்களுக்கு முட்ட கிட்ட மந்திருச்சு வச்சிடப் போறேன் ) :)\nஇந்த கேனக்கிருக்கன் பதிவு எழுதியதை மதித்து என்னுடைய பதிவுகளை வரவேற்று என்னை ஊக்கப்படுத்தி விருதுகள் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றி\nஇந்த விருது ரொம்ப நாளைக்கு முன்னாடியே குடுக்கனுமின்னு நினசிருப்பீங்க போலிருக்கே..\nஆமா கண்டிப்பா நானும் விருது குடுத்தே ஆகணுமா.\n@ வெங்கட் நாகராஜ், அரசன்\nஹஹஹா... உங்களுக்கு எத்தனை followers ன்னு தெரியலைங்க. அதனால தான் குடுக்கல.\nஉங்களுக்கு விருது கொடுத்தப்ப நீங்க சந்தோஷப்பட்டிருந்தீங்கன்னா அந்த சந்தோஷத்தை மத்தவங்களுக்கும் கொடுக்க விருது கொடுக்கலாம். இது நம்ம இஷ்டம். ஆனா எனக்கு குடுத்தவங்க, மத்தவங்களுக்கும் கொடுக்க சொல்லி தான் குடுத்தாங்க நண்பா\nஹெலோ மேடம்.... இன்னும் முழுசா 50 பதிவு கூட எழுதல அதுக்குள்ள நீங்க விருது குடுக்குறீங்களா.....\nசாமுக்கு நடிக்கதான் தெரியாதுன்னு நினைச்சேன், கணக்குமா தெரியாது\nஎன்னை குடுக்க சொல்லி எனக்கு குடுத்தாங்க சாம். அதனாலதான் குடுத்தேன். தப்புங்களா\nஅன்புடைய சகோதரி சாதரணமானவள் அவர்களுக்கு,சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை எனக்கு நீங்கள் அளித்ததை ஐந்து நண்பர்களுக்கு அளித்துள்ளேன் நீங்களும் வாழ்த்த வாருங்கள்\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nநான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 2 ( டைரி பதிவு)\nநான் ராமேஸ்வரத்துக்கு போனேனே... பார்ட் 1\nஎன்னிடமிருந்து விருது வாங்கிய ஐந்து பேர்\nகாதல் - ஒரு அலசல்\nNew post சம்பந்தமான டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://veeduthirumbal.blogspot.com/2010/03/", "date_download": "2018-05-27T03:27:18Z", "digest": "sha1:ZAWY7UAMFYY4RYEYGACH2OG4E2ZBGU7H", "length": 64178, "nlines": 420, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: March 2010", "raw_content": "\nஒரு தற்கொலை - மூன்று கோணங்கள்\nமீட்டிங்கில் இருந்தபோது மொபைல் மௌனமாய் அதிர்ந்தது. \" ஆட்டோ டேவிட்\" என்ற பெயர் பார்த்து உடன் வெளியே வந்து பேசினேன். குழந்தையின் ஆட்டோ காரர்.\n\" சார்...உங்க தெருவில ஒரு டெத் ஆயிடுச்சு\"\n\"உங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்காரே.. ரவி.. அவர் முதல் பொண்ணு தூக்கு மாட்டி செத்துடுச்சு சார் \"\nஅதிர்ந்தேன் \" யாரு கயலா எட்டாவது தான் படிக்கிறா அவளா எட்டாவது தான் படிக்கிறா அவளா\nகயல்.. பதிமூன்று வயது பெண்.. ஒல்லியாக கருப்பாக கண்ணாடி அணிந்திருப்பாள். அவளது தங்கை ஐந்தாவது படிப்பவள். எப்போதும் தெருவில் சைக்கிள் ஒட்டியவாறு இருப்பாள். அவளை அடிக்கடி நான் கிண்டல் செய்வேன். கயல் வயதுக்கு வந்த பெண் என சற்று தள்ளி இருப்பது வழக்கம்.\nசென்ற வருடம் கயல் பெரியவளான போது மண்டபத்தில் வைத்து பெரிய விழாவாக செய்தார்கள். பதிமூன்று வயது பெண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது\nஅதன் பின் மீட்டிங்கில் மனம் செல்ல வில்லை. எனது பாஸிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.\nவண்டி ஓட்டும் போது ஏதேதோ நினைவுகள். எனக்கும் பதினோரு வயது பெண் உள்ளதால், இந்த வலி, அதன் தாக்கம் அதிகமாய் உணர முடிகிறது.\nதெருவிற்குள் நுழையும் போது போலீஸ் ஏற்கனவே வந்திருந்தது. ஹாலில் கயல் கிடத்தபட்டிருந்தாள். பள்ளி யுனிபார்மில் தூங்குவது போல் தான் இருந்தாள்.\nபோலீஸ் கயலின் அம்மா அப்பா தவிர மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு வரிசையாய் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். நான் ஹாலுக்கு சற்று வெளியே உள்ள திண்ணையில் நின்றதால் அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது\n\" யார் முதலில் பார்த்தது\n\" நான் சாப்பிட வீட்டுக்கு வந்தேன்; ரொம்ப நேரம் தட்டி கதவு திறக்கலை; ஜன்னல் வழியா தூங்குராலோன்னு பார்த்தேன். பேனில் தொங்கிட்டுருந்தா சார் \" கயலின் அப்பா விம்மினார்.\n\" அவங்க அம்மா எங்க போய்ட்டாங்க\n\" சார் நான் மகளிர் சுய உதவி குழுல இருக்கேன்; அங்கே கூடை பின்ன கத்து தராங்க; அதுக்கு போயிருந்தேன்\"\nஅம்மா போனது எத்தனை மணி, அப்பா வந்தது எந்த நேரம் என கேள்விகள் நீண்டது.\n\" மேலிருந்து இறக்கினது யாரு\n\"பக்கத்துல கட்டிட வேலை நடக்குது; அங்கே வேலை செய்றவங்க தான் வந்து பூட்டை உடைச்சு அவளை இறக்கினாங்க\"\n\" இப்படி தொங்கினவளை இறக்கிருக்க கூடாது.. எப்படி நீங்களா இறக்கலாம் நாங்க செய்ற வேலையை நீங்களே செய்வீங்களா நாங்க செய்ற வேலையை நீங்களே செய்வீங்களா\n\" சார் உயிர் இருக்கும்னு நினைச்சேன். உடனே டாக்டர் கிட்டே தூக்கிட்டு ஓடினேன். பாத்துட்டு உயிர் போய்டுச்சுன்னு சொல்லிட்டார்\"\nஎனக்கு அருகிலிருந்தவரிடம் எப்படி போலீஸ் வந்தாங்க என நான் கேட்க, \" கயல் அப்பா தான் போய் போலீசில் சொன்னார். பிரச்சனை ஆகிட கூடாதுன்னு தான்\" என்றார்.\nகேள்விகள் வேறு திசையில் செல்ல ஆரம்பித்திருந்தன.\n\" ஆகிட்டா. போன வருஷம்..\"\n\" கடைசியா எப்ப மென்சஸ் வந்தது\nபதில் சொல்லாமல் கயல் அம்மா கதறினார். \" ஐயோ கயலு என்ன கேள்வி கேக்குறாங்க\"\n\" சொல்லும்மா\" அதட்டினார் எஸ். ஐ.\n\" போன வாரம் தாங்க வந்துது\"\n\"ரொம்ப சுமாரா தாங்க படிப்பா\"\n\" படி; டிவி பாக்காதேன்னு சொல்லுவேன்\" கயல் அம்மா விசும்பலோடு சொன்னார்.\n\" ஏன் இன்னிக்கு ஸ்கூலுக்கு போகலை\n\" பத்தாவது பரீட்சை நடக்குது; பாதி நாள் தான் ஸ்கூல்; மத்தியானமா போவா\"\n\" ஸ்கூலில் திட்டு வாங்குவாளா\n\"ஆமாங்க; ரொம்ப கண்டிப்பான ஸ்கூல் அது படிக்கலைன்னா அடிப்பாங்க; திட்டுவாங்க”.\nஅது கோ- எட் பள்ளியா என எஸ். ஐ. உறுதி செய்து கொண்டார்.\n\"கடைசியா எப்ப திட்டினதா சொன்னா \nநான் வெளியே வந்தேன். அவர்களுக்கு நேர் எதிர் வீட்டில் வித்யா என்ற பெண்ணிடம் தான் அவள் டியுஷன் படித்தாள். அவர்கள் வீட்டினுள் சென்று நின்றேன். தெருவில் உள்ள இன்னும் சில பேரும் அங்கு தான் நின்று கொண்டிருந்தனர். வித்யா அழுது ஓய்ந்திருந்தாள். \" என்ன வித்யா.. உன் கிட்டே தான சாயங்காலம் முழுக்க இருப்பா என்ன காரணமா இருக்கும்\n\" அவ ரொம்ப டிப்ரஷனில் இருந்தா அங்கிள்..எனக்கு வாழவே பிடிக்கலைன்னு அடிக்கடி சொல்லுவா\"\n அவங்க அம்மா கிட்டே சொல்ல வேண்டியது தானே\n\" சொல்லிருக்கேன்; அவங்க பெருசா எடுத்துக்கலை. சைகியாடரிஸ்ட் கிட்டே அப்பாயின்மன்ட் வாங்கி தந்தேன். அது எக்மோர் ரொம்ப தூரம்ன்னு போகலை; அப்புறம் பக்கத்தில் வேளச்சேரியில் கூட ஒரு டாக்டர் பேர் சொல்லி, போங்கன்னு சொன்னேன்; போகலை\"\nகயலின் பக்கத்துக்கு வீட்டு அம்மா பேச ஆரம்பித்தார். \" அவளுக்கு எங்கே பொண்ணு மேல அக்கறை சும்மா ஊர் சுத்திக்கிட்டே இருப்பா; புருஷன் தான் சம்பதிக்கிறாநேன்னு பேசாம இருக்க வேண்டியது தானே சும்மா ஊர் சுத்திக்கிட்டே இருப்பா; புருஷன் தான் சம்பதிக்கிறாநேன்னு பேசாம இருக்க வேண்டியது தானே இந்த கூடை பின்ன கத்துக்கிட்டு என்ன செய்ய போறா இந்த கூடை பின்ன கத்துக்கிட்டு என்ன செய்ய போறா\nவித்யாவின் அம்மா அதனை ஆமோதித்து பேசினார் \" பசங்க பள்ளி கூடத்தில் இருந்து வந்து பசியோட கிடக்கும்; இது எங்காவது போய்டும்; சும்மா அடி, உதை.. வயசுக்கு வந்த பொண்ணை எவ்ளோ திட்டுறது, அடிக்கிறது கொஞ்சம் கூட அவ மேல அக்கறை இல்லை \"\nபோலீஸ் கயல் வீட்டிலிருந்து வெளியே வர பேச்சை நிறுத்தினர்.\nஇதனிடையே ஒரு புகை பட காரர் வந்து கயலை போட்டோ எடுத்து கொண்டிருந்தார்.\nஎஸ். ஐ பக்கத்துக்கு வீடுகள், கயலின் தங்கை என ஒவ்வொருவராக விசாரித்து கொண்டிருந்தார்.\nஆம்புலன்ஸ் வந்து விட, கயல் போஸ்ட் மார்டம் செய்யபட எடுத்து செல்லபட்டாள்.\nகயலின் அம்மாவின் அழுகை மிக அதிகமானது. \" இன்னும் கொஞ்ச நேரம் பாத்துக்குரேங்க.. விடுங்க.. எல்லாத்துக்கும் ஆசை படுவாளே.. எல்லாம் வாங்கி தருவோமே; இப்ப இதுக்கும் ஆசை பட்டாளே.. காலையில் கூட ரப் நோட்டு கேட்டா.. வாங்கிட்டு வந்து குடுத்தேனே.. \"\nகயலின் தந்தை கம்பியை பிடித்தவாறு தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.. அழ வில்லை; அவர் அழுதால் நல்லாயிருக்குமே என தோன்றியது.\n\" ம்ம் இந்த பூமியில் அவளுக்கு உப்பும் தண்ணியும் அவ்ளோ தான். போய்ட்டா \" என்றா வித்யாவின் அம்மா. ஆம்புலன்ஸ் புறப்பட்டது. கயல் அம்மா, உறவினர்கள் அழுகையில் எனக்கும் அழுகை எட்டி பார்த்தது .\nஆம்புலன்சும் போலீஸ் வேணும் சென்ற பின் வீட்டினுள் சென்றேன். அந்த அறை ஓரிருவர் நின்றிருந்தனர். வித்யா அம்மா கையில் ஒரு காகிதம்.\n\" என்னமோ இங்கிலிசில் எழுதிருக்கு. என்னான்னு புரியலை\" என சொல்லி கொண்டிருக்க, \" குடுங்க\" என கேட்டு வாங்கினேன். அவள் உறவுக்கார பெண் ஒருத்தி அவள் ரப் நோட்டிலிருந்து அந்த கடிதத்தை எடுத்திருந்தாள். ஆங்கிலத்தில் தெளிவாக அடித்தல் திருத்தல் இன்றி எழுதி இருந்தாள். யாருக்கு எழுதப்பட்டது என்ற தகவலோ, என்று எழுதப்பட்டது என்ற விபரமோ இல்லை. அந்த கடிதம்….\n“நீ ஏன் நேற்று வர வில்லை நேற்று நீ வருவாய் என காத்திருந்து ஏமாந்தேன். உனக்கு நினைவிருக்கா உன்னை நான் எப்போது பார்த்தேன் என நேற்று நீ வருவாய் என காத்திருந்து ஏமாந்தேன். உனக்கு நினைவிருக்கா உன்னை நான் எப்போது பார்த்தேன் என அப்போது நாம் ஐந்தாவது படித்து கொண்டிருந்தோம். உன்னை தோழி வீட்டில் பார்த்தேன். என்ன பேர் என கேட்க \" ராஜ்... பிரின்ஸ் ராஜ்\" என உன் பள்ளி கூடம் பேர் சேர்த்து சொன்னாய். உன்னுடம் இருக்கும் நேரம் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா அப்போது நாம் ஐந்தாவது படித்து கொண்டிருந்தோம். உன்னை தோழி வீட்டில் பார்த்தேன். என்ன பேர் என கேட்க \" ராஜ்... பிரின்ஸ் ராஜ்\" என உன் பள்ளி கூடம் பேர் சேர்த்து சொன்னாய். உன்னுடம் இருக்கும் நேரம் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா என்னை சிரிக்க வைப்பது நீ மட்டும் தான். ஒரு முறை நீ என்னை தள்ளி விட நான் கீழே விழுந்து அழ ஆரம்பித்து விட்டேன். அப்போது நீ என்னை \" இதுக்கெல்லாமா அழுவாங்க என்னை சிரிக்க வைப்பது நீ மட்டும் தான். ஒரு முறை நீ என்னை தள்ளி விட நான் கீழே விழுந்து அழ ஆரம்பித்து விட்டேன். அப்போது நீ என்னை \" இதுக்கெல்லாமா அழுவாங்க \" (இது மட்டும் தமிழில் எழுத பட்டிருந்தது) என தேற்றினாய். நீ சொன்ன ஜோக்குகளை என்னால் மறக்க முடிய வில்லை. உன்னையும் தான். அனைத்துக்கும் நன்றி “.\n\" என்றார் வித்யா அம்மா. \" ஒண்ணுமில்லை. சும்மா எதோ எழுதிருக்கா\" .. கயல் அப்பாவை தேடி அவரிடம் அந்த கடிதத்தை தந்தேன். மிக சாதாரணமாய் வாங்கி உள்ளே வைத்து கொண்டார். ஏற்கனவே படித்திருக்கலாம்\nஇன்னும் சிறிது நேரத்தில் பள்ளியிலிருந்து ஆட்டோவில் வர போகும் எனது பெண்ணுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். மனம் அவளிடம் இதனை எப்படி சொல்வது என யோசிக்க ஆரம்பித்திருந்தது.\nவானவில் - சென்னை பதிவர் சந்திப்பு - திவ்யாவின் இட வேளை\nசூப்பர் சிங்கர் இட வேளை\nசூப்பர் சிங்கர் ஜூனியரில் கடைசி எட்டு contestants- க்கு வந்திருக்காங்க. திட்டிக்கிட்டேயாவது தொடர்ந்து பாத்துடுறோம். அநேகமாய் ரோஷன் அல்லது அல்கா தான் ஜெயிப்பாங்கன்னு தோணுது. அதென்னவோ, இப்படி Boys & Girls சேர்ந்து கலந்து நடந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளில் Boys-க்கு தான் முதல் பரிசு கிடைக்குது. இந்த முறை talent வச்சு பார்த்தால் அல்காவிற்கு தான் கிடைக்கணும். பார்ப்போம். நடுவராக வரும் சித்ரா ஒவ்வொரு முறையும் \" நல்லா பாடுனீங்க\" என ஆரம்பிச்சு \" எனக்கு ஒன்னே ஒன்னு தான்\" என சொல்லி விட்டு மளிகை கடை லிஸ்ட் மாதிரி குறைகளை அடுக்குவார். \" மத்த படி ரொம்ப நல்லா இருந்துச்சு\". அதை விட காமெடி இந்த வாரம் திவ்யா, \"விளம்பர இட வேளை \" என சொல்லிகொண்டிருந்தார் இடைவேளை இந்த சேச்சி கிட்டே மாட்டி இட வேளை ஆகிடுச்சு\nவாரம் ஒரு சட்ட சொல் Robbery & Dacoity - வித்யாசம்\nவீடு புகுந்தோ, வழியில் செல்வோரை மிரட்டியோ திருடுவது Robbery எனப்படும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆயுதங்களுடன் இதே வேலையை செய்தால் அது Dacoity எனப்படும். Dacoity-யில் வெட்டு, குத்து, ரத்தம் இதற்கான சாத்தியங்கள் அதிகம். பூலான் தேவி, வீரப்பன் போன்றோர் Dacoits என்ற வகையில் வருவார்கள். Needless to say, Robbereres-ஐ விட Dacoits-க்கு தண்டனை அதிகம்.\nஅய்யா சாமி சிக்னல் கிட்டே வரும் போது தான் சிக்னல் சரியா சிகப்புக்கோ, மஞ்சளுக்கோ வரும் அய்யா சாமி வர்றாரேனனு, ஒரு நாளாவது சரியா பச்சை சிக்னலை யாராவது வைக்க கூடாது அய்யா சாமி வர்றாரேனனு, ஒரு நாளாவது சரியா பச்சை சிக்னலை யாராவது வைக்க கூடாது\nகாலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்களும் சரி, ஜிம் போன்ற இடங்களுக்கு செல்பவர்களும் சரி ஒரு நகரத்தின் மொத்த population-ல் மிக மிக குறைவான சதவீதமே உள்ளனர். ஆனால் டாஸ்மார்க், பார், இவற்றில் பார்த்தால், வாக்கிங் செல்வோர், ஜிம் செல்வோரை விட பல மடங்கு கூட்டம் வீக் என்ட் மட்டுமல்லாது வார நாளிலும் நிரம்பி வழிகிறது. இது ஏன் தங்கள் உடலை சரியாக பார்த்து கொள்ளும் எண்ணம் ஏன் மக்களுக்கு இயல்பாகவே இல்லை தங்கள் உடலை சரியாக பார்த்து கொள்ளும் எண்ணம் ஏன் மக்களுக்கு இயல்பாகவே இல்லை இந்த உடல் ஒரு முறை தான் கிடைக்கும்; இதனை சரியாக அவரவர் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்பது ஏன் இயல்பாக வருவதில்லை இந்த உடல் ஒரு முறை தான் கிடைக்கும்; இதனை சரியாக அவரவர் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்பது ஏன் இயல்பாக வருவதில்லை ( கொஞ்சம் சீரியாசாகிட்டனோ\nசென்னை ஸ்பெஷல்: இணைய எழுத்தாளர்கள் குழுமம் துவக்கம்\nசென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் வரும் 27/03/10 சனிக்கிழமை துவங்க பட உள்ளது. அனைவரும் அவசியம் வாருங்கள். ஹவுஸ் பாஸ் அனுமதி தந்தால் நானும் வருவேன் :)) My application is still pending before \"Her lordship\".\nநேரம் : மாலை 6 மணி\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nசென்ற முறை எல்லாம் எந்த டீம்கள் semi finals வரும் என்பது சற்று சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது. ஆனால் இம்முறை மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகியோர் semi finals வருவார்கள் போல் தெரிகிறது. நிச்சயம் semi finals வர போகாதவர்கள் பட்டியலில் பஞ்சாப், ராஜஸ்தான், (சற்று வருத்தமாக இருந்தாலும்) சென்னை இருக்க கூடும். மூன்று அணிகளும் அவ்ளோ மோசமாக ஆடி வருகின்றன. ராஜஸ்தான் மட்டும் கொஞ்சம் விழிச்சது போல் தெரியுது.Semi Finals செல்லும் நான்காவது அணி டில்லி ஆக இருக்கலாம். எனது இந்த ஊகங்கள் தவறானால் முதலில் மகிழ்வது நானாக தான் இருப்பேன். அப்போ தான் matches சுவாரஸ்யமாக போகுதுன்னு அர்த்தம்.\nகில்க்ரிச்டுக்காகவே டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கணும் என நினைக்கிறேன்; சென்ற முறை ஜெயித்த அணி எனும் போது, இம்முறை ஜெயிக்க probability மிக குறைவே ; அடுத்து மும்பை அல்லது பெங்களூரு ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். இதில் பெங்களூர் மட்டும் ஜெயிக்காமல் இருக்க கடவது. (என்ன இருந்தாலும் நமக்கு தண்ணி தராத பசங்க தானே\nசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் என்ன நடந்தது\nநேற்று சென்னை சேப்பாக்கம் stadium-ல் நேரடியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் Vs பஞ்சாப் மேட்ச் பார்த்தேன். நான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தீவிர ரசிகன் கிடையாது. ஆனாலும் சென்னை மீது உள்ள பாசத்தில் கொஞ்சமேனும் அந்த டீம் மீதும் இருக்க தானே செய்யும். நேற்று நீங்கள் டிவி-யில் பார்க்காத சில விஷயங்கள் இதோ..\n* மாஜி கிரிக்கட் வீரர் & அம்பயர் வெங்கட் ராகவன் பிட்சுக்கு முதல் ஆளாய் வந்து விட்டார். ரொம்ப நேரம் அங்கேயே நின்று பலருடனும் பேசியவாறு இருந்தார். பின் ஸ்ரீ காந்தும் அவருடன் சேர்ந்தார்.\n* ஸ்டேடியதுக்கு ரெண்டு மணி நேரம் போல் முன்னே போனால் தான் நல்ல இடம் கிடைக்கும். நானும் அப்படி போய்ட்டேன். ரஞ்சித் மற்றும் இன்னொரு பாடகர் சரியான பாடல்கள் பாடி மக்களை மகிழ்வித்தனர். பலர் சீட்டிலேயே ஆட ஆரம்பித்து விட்டனர்.\n* பெண்களுக்கு அரசியலில் 33% இட ஒதுக்கீடு எப்போ வருமோ தெரியாது. ஆனால் நேற்று ஸ்டேடியத்தில் குறைந்தது 25% பெண்களே ஆன்டிகள், கணவனுடன் வந்த பெண்கள் தவிர மற்றவர்கள் மிக மிக டைட் ஆன பனியனும் ஜீன்சும் அணிந்து மக்களை மகிழ்வித்தனர். ஆண்களில் பலர் ஏதோ தாங்களே match ஆடுவது போல கேன்வாஸ் shoe-வுடன் தான் வந்திருந்தனர்.\n* ஒரு 35 வயது மதிக்க தக்க பஞ்சாபி தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வந்திருந்தார். ஒவ்வொருவரும் தலைக்கு டர்பன் கட்டி குட்டியாக இருந்தது செம அழகாக இருந்தது\n* ஸ்டேடியத்தில் சாப்பிட பிரட், சாக்லேட், cool drinks போன்ற சில பொருள்கள் தான் கிடைத்தது (அதுவம் செம விலை); இரவு சாப்பாடு எதுவும் கிடைக்காதது பலருக்கும் பெரிய பிரச்சனை தான்.\n* இது வரை எந்த மேட்சிலும் விளையாடாத எண்டினி (Ntini) ரொம்ப ஜாலியாக ரசிகர்களை பார்த்து கை அசைதவாரே சுற்றி வந்தார். (ஆடினால் என்ன ஆடா விட்டால் என்ன, available ஆக இருந்தாலே முழு பணம் கிடைக்குமே ) வாழ்க்கையை மகிழ்வாக வாழும் அந்த carribean attitude ரசிக்க முடிந்தது.\n* மேட்ச் ஆரம்பிக்கும் முன் ரெண்டு டீமும் பவுலிங் மற்றும் கேட்சிங் பயிற்சி செய்தனர். சும்மா சொல்ல கூடாது. இதுக்கு ரொம்ப நல்லா பயிற்சி தர்றாங்க. குறிப்பா பஞ்சாப் டீமில் டாம் மூடி சரியா டிரில் எடுத்தார். பவுண்டரியில் நிற்க வச்சிட்டு லைனை தாண்டாமல் கேட்ச் பிடிப்பது வரை பயிற்சி தந்தார்\n* சியர் கேள்ஸ் ஆடியதில் டிவியில் நாம் பார்ப்பது ரொம்ப குறைவு. ஒவ்வொரு ஓவருக்கும் முன் தமிழ் பாடல்களுக்கு இவங்க ஆட்டம் செம ஜாலியா இருந்தது. \" அப்படி போடு, போடு\". \" அம்மாடி, ஆத்தாடி\" மாதிரி பாட்டுகள் ஸ்பிகரில் ஒலிக்க, பீட்டை வச்சிக்கிட்டே சரியா ஆடுறாங்க \n* ஒரு நேரம் யுவராஜ் எங்கள் ஸ்டான்ட் அருகே fielding செய்த போது, எனது பின் வரிசையில் ஒரு குட்டி பையன் \" யுவி, யுவி\" என கத்தியாவரே இருந்தான். யுவராஜ் பார்க்கவே இல்லை.\n* சென்னை டீமில் இருவர் No 8 சட்டை அணிகின்றனர். இருவர் பெயரும் முரளி தான் ஒருவர் முரளிதரன். அடுத்தது முரளி விஜய் ஒருவர் முரளிதரன். அடுத்தது முரளி விஜய் (வேண்டுமானால் அடுத்த முறை கவனியுங்கள்)\n* மேட்ச் பற்றி ஒன்னுமே சொல்லலையே என்கிறீர்களா மோகன் லால் நடிச்ச கிலுக்கம், சித்திரம் மாதிரி மலையாள படம் பாத்துருக்கீங்களா மோகன் லால் நடிச்ச கிலுக்கம், சித்திரம் மாதிரி மலையாள படம் பாத்துருக்கீங்களா படம் முழுக்க சிரிக்க வச்சிட்டு கடைசியில் சோகமா முடிச்சு கனத்த மனதோட வெளியே அனுப்புவாங்க; அது போல சென்னை ஜெயிக்கும்னு கடைசி வரை நினைக்க வச்சி, கடைசியில் தோற்றது மக்களை நோக அடித்து விட்டது. Completely outplayed என்றால் கூட மக்கள் சாதரணமா எடுத்துப்பாங்க; இப்படி ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்சை தோத்தது பெரிய ஷாக் பல பேருக்கு. கோனி ( Gony ) மேல் தான் பலருக்கும் கோபம். பவுளிங்கில்லும் நிறைய ரன் தந்தார். கேட்ச் ஒன்று விட்டதோடு, முக்கிய நேரத்தில் நிறைய பந்துகள் வீணாக்கினார். பலரும் கடைசியில் Gony-யை திட்டி கொண்டிருந்தனர்.\nஎனக்கும் கூட இனி தொடர்ந்து IPL matches பார்க்க கூடாது அப்படிங்கற அளவு கோபம்.. எத்தனை தடவை இப்படி முடிவு பண்ணிருக்கோம்\nவானவில் - ஐ.பி.எல் & மரண வாக்குமூலம்\nசென்னை ஸ்பெஷல் : ஒரே நாளில் திருப்பதி தரிசனம்\nIRCTC ரயில் சேவை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். சனி, ஞாயிறுகள் தவிர மற்ற தினங்களில் சென்னையிலிருந்து திருப்பதி ரயிலில் சென்று ஒரே நாளில் தரிசனம் பார்த்து வரும் அருமையான வசதி உள்ளது. அதி காலை 6.25 கிளம்பும் திருப்பதி சப்தகிரி express-ல் சென்று விட்டு, அன்று இரவு 8.30--க்கு திரும்ப சென்னை வந்து விடுகிறார்கள். பத்மாவதி அம்மையாரும் கூட தரிசனம் செய்கிறார்கள் . காலை மற்றும் மதிய உணவு, தர்ஷன் டிக்கெட், டிரைன் செலவு எல்லாம் சேர்த்து பெரியவர்களுக்கு Rs. 1200ம், குழந்தைகளுக்கு Rs.960-ம் சார்ஜ் செய்கின்றனர். AC Chair car - எனில் ருபாய் 450 அதிகம்.\nஅடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது\nIPL மேட்ச்கள் ஆரம்பமாயடுச்சு. 8 டீம்கள் . ஒவ்வொரு டீமும் மற்ற டீமுடன் ரெண்டு முறை விளையாடுவது ரொம்பவே அதிகம். கொஞ்ச நாள் கழிச்சு யாருடன் யார் விளையாடியதில் யார் ஜெயித்தார் என ஞாபகம் வச்சிக்கவே முடியாது. சரியா பசங்களுக்கு பரீட்சை நேரத்தில் IPL வருது. தினம் கண் முழிச்சு பார்த்தா எல்லோரும் தூங்கிய பிறகு நாம தூக்கம் வராம முழிக்க வேண்டியிருக்கு. பார்க்கவும் முடியாம பார்க்காம இருக்கவும் முடியாம திரிசங்கு சொர்க்கமா இருக்கு\nஅய்யா சாமிக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகிடுச்சு; மனுஷன் இன்னும் ஒழுங்கா தோசை ஊத்த கத்துக்கலை. நிறைய தடவை தோசையை கருக்கிடுறார். அட அவருக்கு ஊத்தும் போது கருக்கினா பரவால்லைங்க. அவங்க வீட்டம்மாவுக்கு ஊத்தும் போது கருக்கிடுறார். அப்புறம்\nசெல் போன் பேசியவாறே டிரைவர் வண்டி ஓட்டி சமீபத்தில் பேராவூரணி பள்ளி குழந்தை இறந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று மாதத்தில், டிரைவர் செல் போன் பேசி மரணம் நிகழ்வது இது எட்டாவது முறையாம். எப்போது தான் வண்டி ஓட்டுபவர்களுக்கு இந்த தெளிவு வருமோ அரசாங்கமும் சற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மீண்டும் மீண்டும் இது போன்ற செய்தி கேள்வி படுகையில் மனது ரொம்பவும் சங்கட படுகிறது.\nவாரம் ஒரு சட்ட சொல்: மரண வாக்குமூலம்\nமரண படுக்கையில் இருக்கும் ஒருவர் தருகிற வாக்கு மூலம் மரண வாக்குமூலம் எனப்படுகிறது. சுய நினைவுடன் இருக்கும் போது அவர் வாக்கு மூலம் தந்திருக்க வேண்டும். டாக்டர் அல்லது நடு நிலையான மூன்றாம் நபரிடம் இதனை அவர் அளிக்கலாம். இதனை நீதிபதி முன் வழங்க முடிந்தால் அதன் weightage சற்று அதிகம். மரண படுக்கையில் இருக்கும் நபர் பொய் சொல்ல மாட்டார் என்பது சட்டத்தின் எதிர் பார்ப்பு. சினிமாக்களில் நாம் இந்த காட்சி அவ்வபோது பார்த்திருக்கலாம். சில நீதி மன்றங்கள் இந்த மரண வாக்கு மூலத்தை வைத்தே தீர்ப்பு தருவதும் உண்டு, சில நேரங்களில் இதை தவிர இன்னும் evidence தேவை என்று கூறுவதும் உண்டு.\n60 வயது-க்கு மேல் உள்ள ஆண்கள் பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலர், 30-40 வயதில் குண்டாக இருந்தவர்களும் உண்டு. ஆனால் 60 வயது -க்கு மேல் பெண்கள் பெரும்பாலும் குண்டாகவே உள்ளனர். இது ஏன் பெண்கள் விஷயத்திலாவது மெனோபாஸ், யூடரஸ் அகற்றுதல் போன்ற காரணங்களால் வெயிட் போடுது என சொல்லலாம். ஆண்கள் ஏன் வயதான பின் ஒல்லியாகிறார்கள் பெண்கள் விஷயத்திலாவது மெனோபாஸ், யூடரஸ் அகற்றுதல் போன்ற காரணங்களால் வெயிட் போடுது என சொல்லலாம். ஆண்கள் ஏன் வயதான பின் ஒல்லியாகிறார்கள் விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்.\nLabels: சட்ட சொல் விளக்கம், வானவில்\nமுதல் பிள்ளை.. நடு பிள்ளை .. கடைசி பிள்ளை\nஒரு குடும்பத்தில் ரெண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது சாதாரணமாய் இருந்தது ஒரு காலம். இப்போது பெரும்பாலும் குடும்பங்களில் ஒன்று அல்லது ரெண்டு குழந்தைகள் தான்.\nமுதல் பிள்ளை, நடு பிள்ளை, கடைசி பிள்ளை இவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உண்டு. அவற்றை இங்கு பட்டியலிட முயல்கிறேன். உங்களுக்கு நீங்கள் பொருத்தி பார்த்து கொள்ளலாம். ஒரே குழந்தை என்றால் அது \"முதல் குழந்தை\" category-ல் தான் பெரும்பாலும் வரும் என்கிறார்கள் அறிவியலறிஞர்கள்\n** குடும்ப கஷ்டம் உணர்ந்தர்வர்கள்.\n** எல்லாவற்றிலும் சிறந்ததை எடுத்து கொண்டு மற்றதை அடுத்த குழந்தைகளுக்கு தருவார்கள்.\n** வீட்டு வேலைகள் அதிகம் செய்ய மாட்டார்கள். தம்பி, தங்கைகளை பார்க்க விடுவார்கள்.\n** ரொம்ப balanced ஆன person ஆக இருப்பார்கள்.\n** நண்பர்கள் அதிகமாக இருக்கும்\n** Attention முழுதும் முதல் மற்றும் கடைசி பிள்ளைக்கு கிடைக்க, இவர்கள் ** அதிகம் importance இன்றி வளர்ந்தவர்களாக இருப்பார்கள். இது குறித்த வருத்தம் சற்று இருக்கும்\n** பல நேரங்களில் குடும்பத்திலும் பிற இடங்களிலும் வரும் சண்டைகளை தீர்த்து வைப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்.\n** முடிவெடுப்பதில் சற்று தடுமாற்றம் உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு.\n** இவர்கள் எல்லாவற்றுக்கும் முதல் குழந்தை உடன் போட்டி போட்டே, எதையும் பெற வேண்டி இருப்பதால் நல்ல போட்டியாளராக ( Competitive ) இருப்பார்கள்.\n** எல்லோராலும் பந்தாட படுவார்கள்\n** Creative person ஆக இருக்கும் வாய்ப்பு அதிகம்\n** ரிஸ்க் எடுக்க ஆசை படுபவர்களாக இருக்க கூடும்\n** மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பவர்களாக உள்ளதால் அலுவலகம் மற்றும் பொது இடங்களில் எளிதில் எல்லோரோடும் ஒத்து போய் விடுவார்கள்\n** சில குடும்பங்களில் கடைசி பிள்ளை மட்டும் நல்ல வேலைக்கு போகாமல் இருப்பது உண்டு. (என் அம்மா என்னிடம் கடைசி பிள்ளையா இருந்து நீ நல்லா படிச்சு வந்தது ஆச்சரியம் தாண்டா என்பார்).\n** அவர்கள் பல விஷயங்களில் மற்றவர்களை depend செய்பவர்களாக இருப்பார்கள்.\nஎன்ன உங்களோடு ஒப்பீடு செஞ்சாச்சா சரியா இருக்கா தப்பா இருக்கான்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க \nவானவில் - நித்யானந்தா- தில்லு துர- ஹோசானா\nநித்யானந்தா விஷயத்தை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறார்கள் என்பது சுவாரஸ்யமாக உள்ளது. முதலில் இதை வெளி படுத்திய சன் டிவி. இதனை பார்க்கும் audience -ல் சிறுவர்கள் இருப்பார்கள்; குடும்பத்தின் dining hall-ல் பார்க்க படும் என்பது பற்றி கவலை இன்றி திரும்ப திரும்ப ஒளி பரப்பியது. தின மலர் பத்திரிக்கை நித்யானந்தாவை விட ரஞ்சிதா மேலும், சினிமா உலகம் மீதும் தன் கோபத்தை தீர்த்து கொண்டது. இதற்கு முன் புவனேஸ்வரி விவகாரத்தில் சினிமா உலகம் தினமலரை எதிர்த்ததால் உள்ள கோபம். இதை விட குமுதம் நிலை தான் செம சுவாரஸ்யம். இந்த விஷயம் வெளி வந்த பின், வந்த குமுதத்தில் கூட, நித்யானந்தா தொடர் உள்ளது (கடைசி நிமிடம் என்பதால் எடுக்க முடியலை போலும்) . ஆனால் விஷயம் வெளி வந்த உடனே \" நித்யானந்தா லீலைகள் முழுதும் பார்க்க குமுதம் ஆன்லைனில் மெம்பர் ஆகுங்கள்\" என தெரிந்த, தெரியாத அனைவருக்கும் மெயில் அனுப்பியது...\nஇந்த மனிதர் பிரம்மச்சரியத்தை பற்றியும் துறவி ஆவதையும் பற்றி பேசி எத்தனை ஆண்களும் , பெண்களும் துறவி ஆகியுள்ளனர் அவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது .\nதில்லு துர பற்றிய விளம்பரங்கள் பின்னே ஒரு சிறு வரலாறு உள்ளது. கிட்டதட்ட 10 வருடங்களுக்கு முன் \" புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா \" என இதே பாணியில் விளம்பரம் செய்தது எயிட்ஸ் கட்டுபாடு இயக்கம். அதன் பின் எயிட்ஸ் பற்றிய பல தகவல்கள் விளம்பரங்களில் வர துவங்கின. ஆனால் இவை மக்களுக்கு விழுப்புணர்வு என்ற நிலை தாண்டி, பய உணர்வையே தந்தது. இதன் negative impact மிக அதிகமாக, எயிட்ஸ் கட்டுப்பாடு இயக்கம் அதிகம் பயப்படுத்தாத படி தன் அணுகுமுறையை மாற்றி கொண்டது. இந்த முறை கூட பாருங்கள். முதலில் தில்லு துர என்று மட்டும் விளம்பரம் செய்து ஒரு ஆர்வம் வர வைத்தனர். பின் தில்லு துரக்கே குழப்பமா என்றனர். கடைசியாக \" நம்பிக்கை மையம்\" வந்து சோதனை செய்த பின் தில்லு துரக்கு குழப்பம் போயிடுச்சு என பாசிடிவாக முடித்து விட்டனர்\nபிஜேபி தலைவர் பிரமோத் மகாஜனை அவரது சகோதரரே சுட்டு கொன்றது அனைவருக்கும் நினைவிருக்கும். சுடப்பட்ட பின், 40 நாளுக்கும் மேல் கோமாவில் இருந்து இறந்தார் பிரமோத். இப்போது அவரை சுட்டு கொன்ற பிரவீன் மகாஜன் அவரை போலவே 40 நாளுக்கும் மேல் கோமாவில் இருந்து இறந்துள்ளார். ஏதாவது சொல்ல தோணுதா\nவாரம் ஒரு சட்ட சொல் இந்த வாரம் - பரோல் (Parole)\nசிறை தண்டனை பெற்ற ஒருவர் தண்டனை முடியும் முன், குறிப்பிட்ட காலம் கோர்ட் அனுமதியுடன், வெளி உலகிற்கு வருவது பரோல் எனப்படும். கோர்ட் குறிப்பிட்ட காலம் முடிந்ததும், அவர் மீண்டும் சிறைக்கு சென்று விடுவார். (சமீபத்தில் மரணமடைந்த பிரவீன் மகாஜன் பரோலில் வெளியே இருந்த போது தான் இறந்தார்)\nஇந்தியர்களின் பொதுவான சில குணங்கள்:\n1. Bye சொன்ன பிறகும் பத்து நிமிஷம் பேசுவார்கள்.\n2. ஒரு நிகழ்ச்சிக்கு சரியான நேரத்துக்கு வர வேண்டுமென்றால், அதற்கு 45 நிமிடம் முன்பு நிகழ்ச்சி ஆரம்பிபதாக இந்தியர்களிடம் சொல்ல வேண்டும்.\n3. தங்களுக்கு வந்த Gift -டை பிறர் திருமணத்தில் பரிசாக கொடுப்பார்கள்.\n4. அவர்களுக்கு நாட்டு பற்று கிரிக்கட் மேட்ச் நடக்கும் போதோ, போர் வரும் சூழலிலோ தான் வரும்.\nம்ம்.. இதில் எத்தனை நமக்கு ஒத்து போகும்னு நான் Check பண்ணிட்டேன். நீங்க\nவிண்ணை தாண்டி வருவாயா படத்தில் \" ஹோசன்னா\" பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. அற்புதமான மெட்டு. விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் விதம் அருமை. தாமரையின் பாடல் வரிகளும் அசத்துகிறது. இந்த வருட Top 10 பாடல்களில் இந்த பாடலுக்கு அநேகமாய் இடம் உண்டு.\nஐந்து ருபாய் கடலை வாங்கி\nதவறி விழுந்த சில கடலை....\nLabels: சட்ட சொல் விளக்கம், வானவில்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஒரு தற்கொலை - மூன்று கோணங்கள்\nவானவில் - சென்னை பதிவர் சந்திப்பு - திவ்யாவின் இட ...\nசென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் என்ன நடந்தது\nவானவில் - ஐ.பி.எல் & மரண வாக்குமூலம்\nமுதல் பிள்ளை.. நடு பிள்ளை .. கடைசி பிள்ளை\nவானவில் - நித்யானந்தா- தில்லு துர- ஹோசானா\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nவேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு பார்வை\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/03/6.html", "date_download": "2018-05-27T03:24:58Z", "digest": "sha1:BXUW4G76C7KRVCZUWT37GQ5IJ34764MK", "length": 10066, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "தலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சை 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / தலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சை 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்\nதலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சை 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்\nதமிழ்நாடன் March 29, 2018 உலகம்\nபாகிஸ்தான் நாட்டில் கடந்த 2012ம் ஆண்டில் பள்ளி கூடத்தில் இருந்து பேருந்து ஒன்றில் மலாலா யூசுப்சை என்ற மாணவி வீடு திரும்பி\nகொண்டிருந்து உள்ளார். அந்த பேருந்து நடுவழியில் முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய தலீபான் தீவிரவாதிகள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nஅவர்கள் மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். பெண்களுக்கு கல்வி அவசியம் என்று வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.\nஇதில் உயிர் தப்பிய மலாலா பின்னர் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.\nபெண்களுக்கு கல்வியை வலியுறுத்தியதற்காக கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.\nஇங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் அவர் கடந்த வாரம் 23ந்தேதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நாளில் வீட்டின் மேற்பகுதியில் கிரிக்கெட் விளையாடியது மற்றும் பள்ளி கூடத்தில் தேசிய கீதம் பாடியது ஆகிய இனிமையான நினைவுகளால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.\nபனங்காட்டான் எழுதிய ''முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nமன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்\nஅனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வ...\n பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனப் போராட்டம்\nதூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலை சய்த தமிழ்நாட்டுக் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டனபப...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107048-18-years-of-mudhalvan-movie-special-article.html", "date_download": "2018-05-27T03:38:26Z", "digest": "sha1:FWCWOEK7AZXGNDCINLANBINEXIQKUYQH", "length": 27360, "nlines": 381, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி, விஜய் மிஸ் பண்ணாலும்... சொல்லியடிச்ச முதல்வன்! #18YearsOfMudhalvan | 18 Years of Mudhalvan movie special article", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரஜினி, விஜய் மிஸ் பண்ணாலும்... சொல்லியடிச்ச முதல்வன்\nசில திரைப்படங்களை எப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்ற பிரம்மிப்பையும் ஆச்சர்யத்தையும் நம்முள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அதற்கு காரணம் அத்திரைப்படத்தின் கதைக்களமாகவும் இருக்கலாம், அப்படத்தின் பிரமாண்டத்திற்காகவும் இருக்கலாம், படத்தின் தனித்தன்மை வாய்ந்த திரைக்கதைக்காகவும் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் ஒரே திரைப்படத்தில் சேர்த்து பார்க்க முடியுமானால் அது இயக்குநர் ஷங்கரின் முதல்வன் திரைப்படம்தான். திரைப்படம் வெளியாகி இன்றோடு பதினெட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எதற்காக முதல்வன் திரைப்படம் இன்றளவும் நமக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமாகவும் மனதிற்கு நெருக்கமான திரைப்படமாகவும் இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.\nமுதல்வன் திரைப்படத்தை இன்றளவும் நாம் அதிகமாக ரசிக்க காரணம் திரைப்படத்தின் கதை தான். “ஒரு நாள் முதல்வர்” என தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிதான கதையை கொடுத்ததன் மூலமாகவே திரைப்படத்தின் வெற்றியை முன்கூட்டியே பதிவு செய்து விட்டனர். அதற்கு பக்கபலமாக அமைந்தது எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n“அட ஒரு சி.எம்-னா இப்படி இருக்கணும்பா” என்று நம் அனைவரையும் அசத்திய அளவிற்கு புகழேந்தி கதாபாத்திரத்திற்கு அர்ஜூன் உயிரூட்டியிருப்பார். கலவரத்தை படம்பிடித்துக் காண்பிக்கும் போது ஒரு உண்மையான ஊடகவியலாளராகவும், அடிபட்டு தரையில் வீழ்ந்துகிடக்கும் மாணவனை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் போது மனிதாபிமானம் மிக்க மனிதரகாவும், மனிஷா கொய்ராலாவின் தந்தையாக வரும் விஜயகுமாரிடம் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்யும் காட்சிகளிலும், குண்டு வெடிப்பில் உயிரிழந்த தாய், தந்தையரின் உடலை பார்த்து “நீ வச்சிவிட்ட மருதாணியின் ஈரம் கூட இன்னும் இருக்குதம்மா” என கதறி அழும் காட்சியாகட்டும் அர்ஜூனின் நடிப்பு அற்புதம். இப்படி ஒரே திரைப்படத்தில் பல அவதாரங்களை காட்டியிருப்பார். பல திரைப்படங்களில் காக்கி உடையில் பார்த்து பழகிய action hero-வை ஒரு நாள் முதல்வராக பதவி உயர்வு கொடுத்து பார்த்ததில் சிறப்பாகவே இருந்தது. முதல்வன் படத்தில் நடிக்க வைக்க முதலில் ரஜினியையும் பிறகு விஜய்யையும் தொடர்பு கொண்டார் ஷங்கர். ரஜினி, விஜய் இந்தப் படத்தை மிஸ் செய்தாலும் முதல்வன் புகழேந்தி கதாபாத்திரத்திற்கு அர்ஜூன் பொருத்தமாக இருந்தார்.\n“சித்தார்த் அபிமன்யுவிற்கே சீனியர்டா நான்” என பஞ்ச டயலாக் பேசும் முழு தகுதியும் உரிமையும் தமிழ் சினிமாவில் அரங்கநாதனுக்கு மட்டுமே உண்டு. “தீக்குள்ள விரல் விட்டா சுடும்னு சொல்றேன், உனக்கு அது புரிய மாட்டிக்கிது” என நேரலை நேர்காணலிலேயே மிரட்டல் விடுக்கும் தொனியில் வில்லத்தனத்தை காட்டிய ரகுவரன், விட்டுவிட்டு சென்ற இடம் இன்னும் தமிழ் சினிமாவில் வெற்றிடமாகவே உள்ளது. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.\nதிரையில் நாம் பார்த்த நாயகன் அர்ஜூன் என்றால் திரைக்கு பின்னால் இருந்து பின்னணி இசையிலும், பாடலிலும் மெர்சல் காட்டிய நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். “ஷக்கலக்க பேபி” மேற்கத்திய இசையையும், “குறுக்கு சிறுத்தவளே” மெலடியையும் ஒருசேர நம்மை ரசிக்கவைக்க வைத்தார். ஷங்கருக்கே உரிய பிரமாண்டத்தை மேலும் பிரமாண்டமாக காட்டி தன் பங்குக்கு தானும் கெத்து காட்டியிருப்பார் K.V.ஆனந்த்.\nதிரைப்படத்தில் மிகப்பெரிய நட்ச்சத்திரப் பட்டாளத்தை கொண்டு காட்சி படுத்துவது மிகப்பெரிய சவால் என்றால் அவர்கள் அனைவருக்கும் திரையில் சமமான அளவுவில் தோன்ற வைப்பது அதைவிட மிகப்பெரிய சவால். அந்த வகையில் திரைப்படத்தில் நடித்த அனைவரையும் நாம் திரையில் அடிக்கடி காண முடிந்தது. அதுல என்னனா, படத்தோட ஹீரோ அர்ஜூனுடன் ஹீரோயின் மனிஷா கொய்ராலாவை விட அதிக காட்சிகள் இருந்தவர் மணிவண்ணன்தான். அதுவும் வடிவேலுவின் அந்த “ இடுப்பு சென்டிமென்ட்”... எங்க இருந்துப்பா இந்த கான்செப்டெல்லாம் புடிச்சீங்க...\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nடாக்டர் விஷால்... போலீஸ் மோகன் லால்... யார் வில்லன் - வில்லன் படம் எப்படி\nமோகன் லால் - உன்னிகிருஷ்ணன் கூட்டணியில் நான்காவதாக உருவாகியிருக்கும் சினிமா `வில்லன்'. `கிராண்ட் மாஸ்டர்' போன்ற வடிவமைப்பிலேயே இன்னொரு த்ரில்லர் கதை சொல்லியிருக Villain movie review\nமுதல்வன் திரைப்படத்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காண முடிவதைப் போல் தினம் தினம் முதல்வன் திரைப்படத்தின் காட்சிகளின் டெம்ப்ளட்களை மீம்ஸ்களாக பார்க்கலாம். அந்த அளவிற்கு மீம் கிரியேட்டர்களுக்கு பிடித்தமானவன் இந்த முதல்வன்.\nசில திரைப்படங்களை ஒன் டைம் மேஜிக் என்பார்கள். அது போலவேதான் முதல்வனும். இனி சுஜாதா, ரகுவரன், மணிவண்ணன் இல்லாத ஒரு முதல்வனை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயோகி பாபு, இதை நீங்கள் உணர்ந்தால் 'செம'..\n``கைல காசு இல்லாத நாள்கள்ல, கபாலி கோயில் அன்னதானம்தான் நம்ம மீல்ஸ்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\" 'அதெல்லாம் முடியாது'னு சொன்ன ஒரு ஹீரோயின்... ஆனா, நயன்தாராவுக்கு நன்றி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n``என்னை மாற்றி விடாதீர்கள்...''- முதல்வருக்கு தூதுவிட்ட உளவுத்துறை அதிகாரி #SterliteProtest\nநடுரோட்டில் டி.டி.வி தினகரனும் வைகோவும் திடீர் சந்திப்பு..\nகாடுவெட்டி குரு வளர்ந்த கதையும்... கடந்து வந்த பாதையும்\n’ - தோனி நெகிழ்ச்சி\n'நாளைக்கு நிறைய வேலை இருக்கு'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்\n' - இங்கிலாந்து எம்.பி,. போர்க்கொடி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nசீரியஸ் ஜாக்கி சான், வில்லத்தன பியர்ஸ் பிராஸ்னன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2013/12/blog-post_5559.html", "date_download": "2018-05-27T03:18:07Z", "digest": "sha1:XZXIWVFW4G2WE5NEGOWCS3LQAZVDAQ5L", "length": 7969, "nlines": 83, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து! தொடரும் சம்பவங்கள்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து\nகீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் ஆர்.எஸ்.மடையில் நேற்று தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் காயமடைந்த லாரி டிரைவர் ராமநாதபுரம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.\nஇது குறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் கூறியாதாவது,\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தினமும் இச்சாலையில் விபத்துக்கள் நடைபெற்றவாறு உள்ளது.இச்சாலையில் கண்காணிப்பு கேமரா அமைப்பது, போக்குவரத்து ரோந்து காவலர்கள் கண்காணிப்பு என்பதையெல்லாம் செயல்படுத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி விபத்துக்களை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்\nநேற்று முன் தினம் இச்சாலையில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை – திருமண அழைப்பு வெளியிட..\nகீழக்கரையில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடு...\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு வ...\n கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் க...\nகீழக்கரையில் 600 பழைய மின்கம்பங்களை மாற்ற விரைவில்...\nராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ...\nகீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து 3 பேர் பலி\nகீழக்கரைடைம்ஸ் இணையதளம் புது பொலிவுடன் 4ம் ஆண்டு த...\nகீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரி கவிழ்ந்து விப...\nகீழக்கரை உள்ளிட்ட சுற்றுபகுதிகளில் தொடர் மழை\nகீழக்கரை மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வெ...\nராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி ...\nகீழக்கரை - ராமநாதபுரம் சாலையில் லாரிகள் மோதி விபத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-05-27T03:18:38Z", "digest": "sha1:MRB2NY3SSXKW2XXEQZ3D2OMU5AMA6Q4D", "length": 38500, "nlines": 216, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: ஆற்றங்கரைப் பிள்ளையார் -புதுமைப்பித்தன்", "raw_content": "\n“கி.மு”க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கும் எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.\nஅப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது.\nஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும் மணற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப் படுத்திக்கொண்டிருந்தன.\nபிள்ளையாரின் கதியைக் கண்டு மனம் வருந்தினார். பிள்ளையாரைக் காப்பாற்ற அவருக்கு ஒரு வழி தோன்றிற்று.\n“சமூகம்” என்ற ஒரு மேடையைக் கட்டி, அதன் மேல் பிள்ளையாரைக் குடியேற்றினார். அவருக்கு நிழலுக்காகவும், அவரைப் பேய் பிடியாதிருக்கவும், ”சமய தர்மம்” என்ற அரச மரத்தையும், “ராஜ தர்மம்” என்ற வேப்ப மரத்தையும் நட்டுவைத்தார்.\nவெள்ளத்தின் அமோகமான வண்டல்களினால் இரண்டு மரங்களும் செழித்தோங்கி வளர்ந்தன.\nபிள்ளையாருக்கு இன்பம் என்பது என்னவென்று தெரிந்தது.\nதனக்கு உதவிசெய்த பெரியாரின் ஞாபகார்த்தமாக “மனிதன்” என்ற பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டார்.\nஇரண்டு மரங்களும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு மிகவும் செழிப்பாக நெருங்கி வளர்ந்து, பிள்ளையாருக்கு சூரிய வெளிச்சமே பட முடியாமல் கவிந்துகொண்டன. மழை காலத்தில் எப்பொழுதும் மரங்களிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டே இருந்ததினால் பிள்ளையாரக்கு நடுக்குவாதம் ஏற்பட்டுவிடும் போலிருந்தது. மேலும் கிளைகளில் பஷிகள் கூடுகட்டிக்கொண்டு, பிள்ளையாரின் மேல் எல்லாம் அசுத்தப்படுத்தின.\nபிள்ளையாரைப் பார்க்க வெகு பயங்கரமாக இருந்தது. அப்பொழுது இரு கிழவர்கள் வந்தனர்.\nகோர உருவத்துடன் விளங்கும் பிள்ளையாரைக் கண்டதும், இருவரும் ஆற்றுக்கு ஓடி ஜலம் எடுத்துவந்து முதலில் அவரைக் குளிப்பாட்டினார்கள்.\nஒரு கிழவருக்கு ஒரு யோசனை தோன்ற, கையில் மண்வெட்டியுடன், வெகு வேகமாக ஒரு பக்கமாகச் சென்று மறைந்தார்.\nமேலிருந்த அசுத்தங்கள் போனதினால் உண்டான ஒரு சந்தோஷத்தினால், பிள்ளையார் எதிரிலிருந்த கிழவருடன் பேசலானார், “என்னை முன்பின் அறியாத நீங்கள் செய்த உதவிக்கு, உங்கள் இருவருக்கும் எனதன்பைத் தவிர வேறு நான் என்ன கொடுக்க முடியும் உங்கள் பெயரென்ன, உங்கள் நண்பர் பெயர் என்ன” என்றார்.\nஅதற்கு அந்தக் கிழவர் பதில் சொல்லுகிறார், “பிள்ளையாரே கஷ்டத்திலிருப்பவருக்கு உதவி செய்பவருக்கு பிரதியுபகாரம் வேண்டுமான கஷ்டத்திலிருப்பவருக்கு உதவி செய்பவருக்கு பிரதியுபகாரம் வேண்டுமான அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. எனது பெயர் “புத்தன்” என்னுடன் வந்தவர் என் நண்பரல்ல. அவரை வழியில்தான் சந்தித்தேன். அவர் பெயர் “ஜீனன்” என்றார்.\nகிழவருக்கு பளிச்சென்று ஒரு யோசனை யுதித்தது. ஒரே பாய்ச்சலில் மரத்தின் மேல் ஏறி, பஷிகள் கூடு கட்டுவதற்கு வசதியாயிருந்த கிளைகளை எல்லாம் வெட்டவாரம்பித்தார்.\nஇத்தனை நாட்களாக இருளிலும் நிழலிலும் இருந்துவந்த பிள்ளையாருக்கு, திடீரென்று பட்ட சூரிய கிரணங்களைத் தாங்க முடியவில்லை. மேலெல்லாம் சுட்டுக் கொப்புளிக்கவாரம்பித்தது. கண்களைத் திறக்க முடியாமல் கூசுகிறது. ”நல்ல வேலை செய்கிறீர் போதும் உமது உதவி” என்று கோபித்து, “இந்தக் கிளைகளினால்தான் உமக்கு…” என்று கிழவர் பதில் சொல்லுமுன், தனது தும்பிக்கையினால் அவரைத் தூக்கி வீசினார். கிழவர், மேடைக்கு வடகிழக்கில், வெகுதூரத்தில் போய் விழுந்தார்.\nசற்று நேரத்தில் மண்வெட்டியுடன் சென்ற கிழவர், பிள்ளையாரை அணுகி, “நான் புதிதாக மேடை ஒன்று கட்டியிருக்கிறேன். அதில் அந்தக் கஷ்டம் ஒன்றும் இல்லை” என்று சொல்லி அவரைத் தூக்கிக் கொண்டுபோய், தான் தயாரித்த இடத்தில் உட்காரவைத்து, “இதோ பாரும் இதில் மரங்களே இல்லை. உமக்கு அங்கிருந்த கஷ்டம்…” என்று சொல்லி முடிக்குமுன் அவ்விடத்திலிருந்த உஷ்ணத்தைத் தாங்கமுடியாத பிள்ளையார், கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஒட்டமாகத் தனது பழைய மேடையில் வந்து உட்கார்ந்துகொண்டு, ”உங்கள் இருவருக்கும் உதவி செய்வது என்றால் பிறரைத் துன்பப் படுத்துவது என்ற நினைப்பா இதில் மரங்களே இல்லை. உமக்கு அங்கிருந்த கஷ்டம்…” என்று சொல்லி முடிக்குமுன் அவ்விடத்திலிருந்த உஷ்ணத்தைத் தாங்கமுடியாத பிள்ளையார், கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஒட்டமாகத் தனது பழைய மேடையில் வந்து உட்கார்ந்துகொண்டு, ”உங்கள் இருவருக்கும் உதவி செய்வது என்றால் பிறரைத் துன்பப் படுத்துவது என்ற நினைப்பா சற்று முன்புதான், உமது நண்பன். உம்முடன் வந்தவன், எனத அருமையான மரங்களை வெட்டி உடம்பெல்லாம் கொதிக்கும்படி செய்துவிட்டான். கண்ணை மூடிக்கொண்டு சிவனே என்றிருந்த என்னை, நீர் வெகு புத்திசாலித்தனமாக கட்டிவிட்ட உமது மொட்டை மேடையில் போட்டுப் பொசுக்கிவிட்டீரே. போதும் உதவி. நீர் சும்மா இருந்தால் போதும்” என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் கண்களை மூடிக்கொண்டு இருந்தார்.\nபிள்ளையாரின் மனநிலையைக் கண்ட கிழவர், பெரிதும் ஏமாற்றமடைந்து, தானே அந்த மேடையில் உட்கார்ந்து தனது உயிரை விட்டார்.\nவெட்டிவிட்டதனால் கிளைகள் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாக வளர்ந்தன. தாழ்ந்தும் கவிந்தும் வளர்ந்த அரச மரத்தின் இரண்டு கிளைகளுக்கிடையில் பிள்ளையாரின் தலையகப்பட்டுக் கொண்டது. வேப்ப மரத்தின் வேர் ஒன்று பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றி வளர்ந்தது. பிள்ளையாரின் கால்களில் அரச மரத்தின் இரண்டு வேர்கள் இறுக்கி பின்னிக்கொண்டன.\nபிள்ளையார் இரண்டு மரங்களுக்குள் சிறைபட்டார்.\nகாற்றடிக்கும் பொழுதெல்லாம் பிள்ளையாருக்குத் தலை போய்விடும் போல் இருந்தது. வயிற்றைச் சுற்றிய வேரோ, அதன் வேதனை சகிக்க முடியவில்லை. கால்களும் சிறைபட்டதினால் ஓடவோ முடியாது.\nபிள்ளையாருக்கு நரகம் எப்படியிருக்கும் என்று சற்று தெரிந்தது.\nபல காலம் சென்றது….. வடமேற்கு கணவாய்களில் பெய்த அமோகமான மழையினால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கணவாயில் ஒரு சிறு ரோஜாத் தோட்டம் போட்டு வசித்து வந்த கைலி கட்டிய ஒரு தாடிக் கிழவனையும் குடிசை-தோட்டத்துடன் அடித்துக்கொண்டு வந்தது.\nவெள்ளத்தின் வேகத்தினால் அரச மரம் சாய்ந்தது. வேப்ப மரம் அடியோடு விழுந்து வேர் மாத்திரம் பிடித்திருந்ததினால் தண்ணீரில் மிதந்து ஆடிக்கொண்டிருந்தது. பிள்ளையாருக்கு ஓடவும் முடியவில்லை. ஓடவும் பயம்.\nபிள்ளையாரின் துன்பத்திற்கு ஓர் எல்லையில்லை. நீக்க ஓர் வழியுமில்லை.\nவெள்ளத்தில் உருண்டுவந்த தாடிக் கிழவன் வேப்ப மரத்தின் கிளைகளை எட்டிப் பிடித்து மேடையில் தொத்திக்கொண்டான்.\nதாடிக் கிழவன் வேப்ப மரத்து நிழலுக்கு ஆசைப்பட்டு அதைத் தூக்கி நிறுத்தினான். வெள்ளத்தில் ஒதுங்கிய ஒர செத்த பசுமாட்டின் தோலையுரித்து, அதன் மாமிசத்தை வேப்ப மரத்திற்கு உரமாக இட்டான். தன்னுடன் வெள்ளத்தில் ஒதக்கப்பட்ட ஒரு ரோஜாச் செடியை எடுத்து மீதியிருந்த மாமிச எருவையிட்டு, வேப்ப மரத்திற்கும் அரச மரத்திற்கும் இடையில் நட்டுவைத்தான். மாட்டின் தோலை வைத்து வேப்ப மரத்தடியில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு தன் இடையில் சொருகி இருந்த உடைவாளை வேப்ப மரத்தில் மாட்டிவிட்டு சந்தோஷமாக இருக்கவாரம்பித்தான்.\nரோஜாச் செடி, உரத்தின் மகிமையால் நன்றாகச் செழித்து வளர்ந்தது. நல்ல வாசனையுள்ள புஷ்பங்களுடன் நீண்ட முட்களும் நிறைந்திருந்தன.\nபிள்ளையாரின் கஷ்டத்தைக் கவனிக்க யாருமில்லை.\nஅப்பொழுது மூவர் ஒருவர் பின் ஒருவராய் வந்தனர். அவர்களுக்கு சங்கரன், ராமானுஜன், மத்வன் என்று பெயர்.\nமுதலில் வந்தவர் பிள்ளையார் தலையை விடுவிக்க முயன்றார். வெகு கஷ்டப்பட்டு சிறிது விலக்க முடிந்தது. வயிற்றைச் சுற்றிய வேரை சிறிதும் அசைக்க முடியாது என்று கண்டு, தலையை விடுவித்த சந்தோஷத்தில் போய்விட்டார். அவர் பின் வந்த இரு கிழவர்களும் அரச மரத்தை முதலில் இருந்த மாதிரி் தூக்கி நிறுத்த யத்தனித்தார்கள். முடியவில்லை. பெரிய மரத்தைக் தூக்க இருவரால் முடியுமா அதலும் கிழவர்கள். அரச மரம் கோணிக்கொண்டுதான் நின்றது. முன்பும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டு சென்றுவிட்டார்கள்.\nவிலகியிருந்த அரச மரத்தின் கிளைகள் மறுபடியும் கவிந்து பிள்ளையாரின் கழுத்தை இறுக்கவாரம்பித்தன. அருமைத் தொந்தியைச் சுற்றிய, மாமிச உரம் பெற்ற வேப்ப மரத்தின் வேர்களோ விரைவில் பிள்ளையாரை அசையவிடாமல் நெருக்கின.\nரோஜா புஷ்பங்களின் வாசனையை நன்றாக அனுபவித்தாலும், முட்களை எப்படி விலக்குவது குத்திக்குத்தி அந்தப் பக்கம் பூராவாகவும் சீழ் வந்தது.\nபோதாதற்கு கைலிக் கிழவன், தனக்கு பொழுதுபோகாத நேரங்களில் தனது உடைவாளை எடுத்து பிள்ளையாரின் ஒற்றைக் கொம்பில் தீட்டவாரம்பித்து விடுவான்.\nமேடையின் மீது அரசங் கன்றுகளும் வேப்பங் கன்றுகளும், வேறு புல்பூண்டுகளும் முளைக்க ஆரம்பித்துவிட்டன.\nஒரு நாள் இரவு, மேற்கு சமுத்திரத்தின் அடிப்பாகத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டதினால் கடல் ஜலம் நதிக்குள் எதிர்த்துப் பாய்ந்தது. பிள்ளையார் இருந்த மேடையின் பக்கம் புயற்காற்றும் மழையம் சண்டமாருதமாக அடித்ததினால், ஆறும் பெருக்கெடுத்து கடல் ஜலத்தை எதிர்த்தது.\nபேய் போல ஆடிக்கொண்டிருந்த மரங்களும் மறுபடி விழுந்துவிட்டன. அரச மரம் பிள்ளையார் முதுகின்மேல் சாய்ந்துவிட்டது. வலுவற்ற வேப்ப மரம் முன்போல், பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றியிருந்த வேரின் உதவியால், மேடையிலிருந்துகொண்டு தண்ணீரில் ஆடிக்கொண்டு இருந்தது.\nகைலிக் கிழவனை குடிசையுடன் அடித்துக்கொண்ட போய்விட்டதால், காற்றுக்கு வளைந்துகொடுத்து மறுபடியும் தலை நிமிர்ந்த ரோஜாச் செடியைத் தவிர அவனுடைய ஞாபகார்த்தமாக வேறு ஒன்றுமில்லை.\nபிள்ளையாருக்கு நரகவேதனை பொறுக்க முடியவில்லை.\nஇந்த மூன்று பிணிகளும் பாசக்கயிறு போல் அவரைத் துன்புறுத்தின.\nசமுத்திரத்தின் நடுவில் ஒரு சிறு படகில் சென்றுகொண்டிருந்த ஒருவனைக் கடல் நீர் படகுடன் ஆற்றுக்குள் அடித்துக்கொண்டு வந்ததினால், அந்தப் படகும் இந்தப் பிள்ளையாரின் மேடையை அணுகிற்று. படகினுள் இருந்தவன் பிள்ளையாரின் காலைப் பிடித்துக்கொண்டு மேடையில் தொத்திக்கொண்டான். பிறகு படகையும் மேடையில் இழுத்துப் போட்டுக்கொண்டான்.\nவந்தவனுடைய உடம்பு மிகுந்த வெண்மையாகவும் தலைமயிர் உருக்கி வார்த்த தங்கக் கம்பிகள் மாதரி பொன்னிறமாக பிரகாசித்தது. அவனகு நீண்ட தாடி பொன்னிறமான ஆபரணம் போல் அவன் மார்பை அலங்கரித்தது. அவன் நீண்ட அங்கியும், கணுக்கால் வரை வரும் தோல் பாதரட்சையும் அணிந்திருந்தான். அவனது வலது கையில் கருப்புத்தோல் அட்டை போட்ட ஒர பெரிய புத்தகமும், ஒரு நீண்ட சிலுவையும் இருந்தன.\nஇவனுக்கும் வேப்ப மரத்தின் மகிமை நன்றாகத் தெரியுமாகையால் உடனே அதைத் தூக்கி நிறுத்தி, அதன் அடியில் தனது படகைக் கவிழ்த்துப்போட்டு அதனடியில் படுத்து உறங்கினான்.\nஅவன் தனக்கு உணவுக்காக வைத்திருந்த ரொட்டித் துண்டுகளை பிள்ளையார் முன் வைத்துவிட்டு உறங்கியதினால், பசியின் கொடுமை மிகுந்த அவர், அவைகளை எடுத்து காலி செய்யவாரம்பித்தார். கொழுக்கட்டை தின்று பழகிய பிள்ளையாருக்கு இது தேவாமிருதமாக இருந்தது. பசி நீங்கிய பிள்ளையார் வலியின் கொடுமையைத் தாங்க முடியாமல் அப்படியே உறங்கிவிட்டார்.\nபிள்ளையார் இருந்த மேடைப்பக்கம் அதிக உஷ்ணமான பூமியாகையால், புதிதாக வந்தவன் தனது நீண்ட அங்கியில் தனது புத்தகத்தையும் சிலுவையையும் கட்டி, வேப்ப மரத்தின் கிளைகளில் தொங்கவிட்டுவிட்டு, ஒரு சிறிய சல்லடத்தை மாத்திரம் அணிந்து கொண்டு கவிழ்ந்து கிடந்த படகின் மேல் உட்கார்ந்து, வேப்பங் காற்றை யனுபவித்துக்கொண்டு இருந்தான். பொழுது போக்குக்காக கையில் இருந்த உடைவாளைச் சுழற்றி விளையாடிக்கொண்டிருந்தான்.\nஅப்பொழுது பல கிழவர்கள் வந்தார்கள்.\nமேடையையும் பிள்ளையாரையும் அரச மரத்தையும் கண்டவுடன் பீதியடித்துப் போய்விட்டார்கள்.\nசிலர் அரச மரத்தைத் தூக்கி நிறுத்த முயன்றார்கள்.\nசிலர் பிள்ளையாரின் கழுத்தை விடுவிக்க முயன்றார்கள்.\nசிலர் பிள்ளையாரின் வயிற்றை விடுவிக்க முயன்றார்கள்.\nஒவ்வொருவர் செய்வதும் மற்றவருர்களுக்கு தடையாக இருந்தது.\nபிள்ளையாரின் வயிற்றைச் சுற்றிய வேப்ப மர வேரையறுக்கப் போனால், புதிதாக வந்தவன் வாளை ஓங்குகிறான்.\nஅரச மரத்தின் கிளைகளை வெட்டப் போனால், பிள்ளையாரின் உதவியால் மரம் நிற்கிறது. அதை வெட்டிவிட்டால் மரமே விழுந்துவிடும், இது ஆராய்ச்சி செய்யவேண்டிய விஷயம், சற்று பொறுத்துச் செய்யுங்கள் என்றார்கள்.\nசிலர் மரங்களயே எடுத்துவிட்டால் நல்லது என்று நெருங்கினார்கள்.\nமரத்திற்கு பிள்ளையாரா, பிள்ளையாருக்கு மரமா என்ற பெரிய தர்க்கம்.\nஆத்திரமுள்ளவர்கள் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் அழித்துவிட பதைத்து நெருங்கினார்கள்.\nஉறங்கிக் கொண்டிருந்து பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன்சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது.\nஅல்லது அவர் கனவு நனவாகி, விடுவித்துக்கொள்ளுவாரா\nபுதுமைப்பித்தன் கதைகள், காலச்சுவடு பதிப்பகம் இரண்டாம் பதிப்பு ஜீன் 2001, பக்கம் 55-60\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nஅப்பாவின் துப்பாக்கி -ஹினெர் சலீம்\nமுதலும் முடிவும் –சுந்தர ராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2014/12/", "date_download": "2018-05-27T03:23:20Z", "digest": "sha1:W3EJXTVUD7A5O25X3F4RSYYMNUB5C5DD", "length": 21953, "nlines": 278, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: December 2014", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nFacebookஇல் 2014ஆம் ஆண்டின் சிறந்த பதிவுகள்\nதாளவாடி மலைக்கிராமங்களில் அறுபத்திநான்கு கிராமங்களுக்கும் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆறாயிரம் நோட்டீஸ்கள் தமிழிலும் கன்னடத்திலும் விநியோகித்து இலவச கண் சிகிச்சை முகாம் குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் மருத்துவமனையுடன் இணைந்து\nதாளவாடி அஸிசி மருத்துவமனையில் நடத்தியது.பயனடைந்தோர் 94நபர்கள்..(2014மே31....)\nசத்தியமங்கலத்தில் காமதேனு கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பு இயக்கமான தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடத்தியது.\nஆகஸ்டு 15 ஆம் தேதி..ரங்கசமுத்திரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா ..\n2014 செப்டெம்பர்09 ஆம் தேதி..\nசத்தியமங்கலம் வாசிக்கிறது. வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..\n2014அக்டோபர்31 ஆம் தேதி..ஈரோடு மாவட்டத்தின் அரசு அதிகாரிகளின் கவனத்திற்காக..பெரியகுளம் உடைப்பிற்கான காரணமும் உடனடி நடவடிக்கையும்..\n2014நவம்பர் 28ஆம்தேதி இன்று கோபி கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,'குடிமக்கள் நுகர்வோர் மன்றம்'' துவக்க விழா\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/25/2014 04:38:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசத்தி & கோபி வட்டாரங்களில் இருநாள் எளிய இன்பச்சுற்றுலா\nவணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறேன்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் துவங்கி கோபி வட்டாரங்களில் இரண்டு நாட்களில் சுற்றிப்பார்க்க என்ன்றிவுக்கு எட்டிய விவரங்களை பதிவிட்டுள்ளேன். படியுங்க,ஆலோசனை கூறுங்க....\nதூரங்களும் பேருந்தில் பயண நேரங்களும்\nசத்தியமங்கலத்திலிருந்து - பண்ணாரி அம்மன் கோவில் 14கிலோமீட்டர் தூரம், பயண நேரம் அரை மணி நேரம்.\nபண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து பவானிசாகர் அணை 15 கிலோமீட்டர் தூரம்,பயண நேரம் அரை மணி.\nபவானிசாகரிலிருந்து சத்தியமங்கலம் 15கிலோமீட்டர் தூரம்,பயண நேரம் அரை மணி.\nசத்தியிலிருந்து கொடிவேரி அணை13 கிலோமீட்டர் தூரம்,பயண நேரம் அரை மணி..\nகொடிவேரி அணையிலிருந்து கோபி செட்டிபாளையம் 13கிலோ மீட்டர் தூரம், பயண நேரம் அரை மணி.\nகோபிசெட்டிபாளையத்திலிருந்து பாரியூர் அம்மன் கோவில் 3கிலோமீட்டர் தூரம், பயண நேரம் பத்து நிமிடம்.\nகோபிசெட்டிபாளையத்திலிருந்து பாரியூர் வழி அந்தியூர் 21கிலோமீட்டர் அந்தியூரிலிருந்து பவானி கூடுதுறை 20கிலோமீட்டர் தூரம், பயண நேரம் 1.30மணி.\nகோபிசெட்டிபாளையத்திலிருந்து சித்தோடு 26கிலோமீட்டர் தூரம், பயண நேரம் முக்கால் மணி.\nசித்தோட்டிலிருந்து பவானி 8கிலோமீட்டர் தூரம், பயண நேரம் 15நிமிடம்.\nபவானியிலிருந்து அந்தியூர் வழி மேட்டூர் அணை 60கிலோமீட்டர் தூரம்..\nமேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை 65கிலோமீட்டர் தூரம்.\nபவானியிலிருந்து ஈரோடு 16கிலோமீட்டர் தூரம்,\nஈரோட்டிலிருந்து சேலம் 66கிலோமீட்டர்,சேலத்திலிருந்து ஆத்தூர்58கிலோமீட்டர் தூரம்,ஆத்தூரிலிருந்து கள்ளக்குறிச்சி 48 கிலோமீட்டர் தூரம்,கள்ளக்குறிச்சியிலிருந்து மேல் மருவத்தூர் 142 கிலோமீட்டர் தூரம்,மேல் மருவத்தூரிலிருந்து சென்னை 93கிலோமீட்டர் தூரம்,\nஆக ஈரோட்டிலிருந்து சென்னை 407கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து திம்பம் 27கிலோமீட்டர் தூரம், பயண நேரம் ஒருமணி,\nதிம்பத்திலிருந்து ஆசனூர் 9கிலோமீட்டர் தூரம்,\nஆசனூரிலிருந்து தாளவாடி 27 கிலோமீட்டர் தூரம், பயண நேரம் 45நிமிடம்.,\nதிம்பத்திலிருந்து தலமலை வழி தாளவாடி 70 கிலோமீட்டர் தூரம், பயண நேரம் மூன்று மணி .\nதாளவாடியிலிருந்து சாம்ராஜ் நகர் 21 கிலோமீட்டர் தூரம்,\nசாம்ராஜ நகரிலிருந்து மைசூர் 58கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து பவானிசாகர் வழி தெங்குமரஹாடா 50கிலோமீட்டர் தூரம்.\nசத்தியிலிருந்து மேட்டுப்பாளையம் 53கிலோமீட்டர் தூரம்,\nமேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி 52 கிலோமீட்டர் தூரம்,\nமேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி 37 கிலோமீட்டர் தூரம்,\nகோத்தகிரியிலிருந்து ஊட்டி 28 கிலோமீட்டர் தூரம்,\nஊட்டியிலிருந்து கூடலூர் 50 கிலோமீட்டர் தூரம்,\nமேட்டுப்பாளையத்திலிருந்து காரமடை 8 கிலோமீட்டர் தூரம்,\nமேட்டுப்பாளையத்திலிருந்து பத்ரகாளியம்மன் கோவில் 6 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து கோயமுத்தூர் 69 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்துதிருப்பூர் 56 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து அந்தியூர் 40 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து மேட்டூர் 80 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து கொளேகாலம் 124 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து பெங்களூர் 269 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து மைசூர் 142 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து பொள்ளாச்சி 162 கிலோமீட்டர் தூரம்,\nகோபியிலிருந்து பொள்ளாச்சி 156 கிலோமீட்டர் தூரம்,\nசத்தியிலிருந்து கோபி வழி பொள்ளாச்சி 181 கிலோமீட்டர்,\nசத்தியிலிருந்து திருப்பூர் வழி பழனி 139 கிலோமீட்டர் தூரம்,\nபழனியிலிருந்து கொடைக்கானல் 64 கிலோமீட்டர் தூரம்,\nஈரோட்டிலிருந்து திருச்சி-147 கிலோமீட்டர் தூரம்,\nஈரோட்டிலிருந்து மதுரை - 209 கிலோமீட்டர் தூரம்,\nஈரோட்டிலிருந்து பழனி - 115 கிலோமீட்டர் தூரம்,\nஈரோட்டிலிருந்து அன்னூர் 80 கிலோமீட்டர் துரம்,\nஅன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் - 20 கிலோமீட்டர் தூரம்,\nஅன்னூரிலிருந்து அவினாசி - 20கிலோமீட்டர் தூரம்,\nஅவினாசியிலிருந்து ஈரோடு - 60கிலோமீட்டர் தூரம்,\nஅவினாசியிலிருந்து கோயமுத்தூர் - 40 கிலோமீட்டர் தூரம்,\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/22/2014 09:08:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nFacebookஇல் 2014ஆம் ஆண்டின் சிறந்த பதிவுகள்\nசத்தி & கோபி வட்டாரங்களில் இருநாள் எளிய இன்பச்சுற்...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=19ba43187965c9ad2dc13529f4aafc25", "date_download": "2018-05-27T03:20:52Z", "digest": "sha1:OQ7LOM2CLID67D3XQPOG6VWGVOBLRNKW", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sadharanamanaval.blogspot.com/2011/03/1.html", "date_download": "2018-05-27T03:19:38Z", "digest": "sha1:ODMFBIENJDJBEEMQPQPGEUB6ADOPX4OB", "length": 20739, "nlines": 154, "source_domain": "sadharanamanaval.blogspot.com", "title": "\"சாதாரணமானவள்\": நான் திருச்சி போனேனே... பார்ட் 1", "raw_content": "\n45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.\nநான் திருச்சி போனேனே... பார்ட் 1\nஎல்லோரும் வியப்புடன் ரசிக்கும் விஷயங்கள் மூன்று\nமூன்றாவதை ரசித்து அனுபவிக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. பொதுவாக நான் ஒரு Home Bird. வீட்டை விட்டு வெளியே போறதுனா நரக வேதனை. ஆனா நேற்று அம்மாவின் நெடுநாளைய விருப்பத்தை ஈடேற்ற அம்மாவும், நானும் ஸ்ரீரங்கம் போனோம். பொதுவா நான் பெருமாள் கோவிலுக்கு போகும்போதெல்லாம் எனக்கு தேவையான சவுகரியங்களை அவரே பார்த்துப்பார். எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி ஒரு understanding. இந்த முறை எப்படி இருக்கும்னு காத்துகிட்டு இருந்தேன்.\nரயிலில் ladies compartment தனியாக இருக்கும் என்பதே ஒரு வருடத்திற்கு முந்தைய என் முதல் திருப்பதி பயணத்தின் போது தான் அறிந்துகொண்டேன். அதற்கு அடுத்த பயணமாக இது அமைந்ததால் விழி விரிய ரயிலை பார்த்துக்கொண்டே ladies compartment சென்றால் செம கூட்டம். அம்மா, 'வா வேற கம்பார்ட்மென்ட் போலாம்' என்று இறங்கி விட்டார். நான் அம்மாவை சமாதான படுத்த இறங்கி ரெண்டு நிமிஷம் கூட ஆகல, உள்ளே இருந்த ஒரு சின்ன பையன் கதவை தாழ் போட்டுட்டான். வெளில வேற announcement . ட்ரெயின் கிளம்ப போகுதுன்னு. அவன திறக்க சொன்னா, அவனால மறுபடி திறக்க முடியாதபடி டைட்டா இருக்கு. வேறு வழியின்றி ஜெனரல்ல வேற கம்பார்ட்மென்ட்ல நுழைஞ்சா, எனக்கு முன்னாடி போன என் அம்மா சீட் புடிச்சு வைச்சிருக்காங்க. 'எப்படிமா' ன்னு கேட்டா, 'அதான் பாரேன்'ன்னு அம்மாவும் ஆச்சரியமா சிரிச்சாங்க. பெருமாளுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு, அங்க இருந்த ஆளுங்க, ரயில் பயணம், ஒவ்வொரு ஸ்டேஷன்ல மக்கள், எல்லாத்தையும் வழக்கம் போல கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். அதென்னமோ மக்களை கவனிக்கறது எனக்கு ரொம்ப புடிச்ச விஷயமா இருக்கு. அழகு, நிறம், நாகரிகத்தையும் தாண்டி ஒவ்வொரு முகத்திலும் அவர்கள் குணம் இருப்பதாக தோன்றும். வீட்லயே உக்காந்துகிட்டு அதிகமா படிக்கறதால வர வியாதின்னு நினைக்கறேன். (இது பரவாயில்ல. ஒரு காலத்துல, சுவர் விரிசல், மேகம் இதெல்லாம் பார்த்துகூட அது எந்த எழுத்து மாதிரி இருக்குன்னு உருவகப்படுத்த முயன்ற கூத்தெல்லாம் பண்ணியிருக்கேன்...)\nரயில் திருச்சி கோட்டை ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடிச்சு உறையூர் வெக்காளி அம்மன் கோவிலுக்கு முதலில் போனோம். போர்ட் போட்டிருந்த வழியில் போனால், பெருமாள் கோவில் தான் முதலில் வந்தது. அங்கிருந்த செருப்பு பாதுகாவலர், 'செருப்ப இங்க விட்டுட்டு போங்கம்மா' என்று கூற, என்ன ஏதென்று கேட்காமல் அம்மாவும் விட போனார். நான் அவசர அவசரமாக அம்மாவை பிடித்து நிறுத்தி, 'ஏங்க, வெக்காளி அம்மன் கோவிலுக்கு போகணுங்க' என்று சொல்ல அவர் 'right left right left' என்று கூறினார். நிறைய பேருக்கு சொல்லி இருப்பார் போல. அவ்வாறே செல்ல, கோவில் வந்தது.\nஎவ்வளவு புகழ் பெற்ற கோவில் அழகாக, நீட்டா, சிம்பிளா இருந்தது. அம்மன் அவ்வளவு அழகு... இதுவரை மற்ற கோவில்களில் இல்லாத அளவு லைட் செட்டிங் பிரமாதமாக இருந்தது. முழு உருவமும் பளிச்சென்று தெரிந்தது. lighting எப்படி செட் பண்ணியிருப்பார்கள் என்று யோசித்து பார்த்தும் பிடிபடவில்லை. அப்பறம் பிரகாரத்தை சுற்றும்போது தான் தெரிந்தது, அது நேரடி சூரிய ஒளி. அம்மனுக்கு மேலே வைக்கோல் போன்ற ஏதோ ஒன்றை வைத்து கூரைபோலும் அமைத்திருந்தார்களே தவிர, அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருந்தார். அம்மாவிடம் கேட்டபோது , 'சுற்றிலும் அடைத்திருந்ததால் அம்மனுக்கு அம்மை வந்ததாகவும், அவர் காற்றாட இருக்கவே விரும்புவதாகவும், அதனால் இந்த அமைப்பில் கோவில் கட்டினார்கள் என்றும்' சொன்னார்கள். இது குறித்த விரிவான கதை இருந்தால் நீங்களும் தெரியப்படுத்தலாம். திருப்தியாக கும்பிட்டு வெளியே வந்தோம்.\nதிரும்பி சத்திரம் பஸ் ஸ்டான்ட் போக வேண்டி இருந்ததால் வந்த வழியே 'right left right left' போட்டு வந்தோம். வரும் வழியில் சிறுவன் என்றும் ஆள் என்றும் கூற இயலாத ஒரு பதின்ம வயது பையன் அவ்வளவு பப்ளிக்காக தன் டிரவுசரையோ பேன்ட்டையோ கழற்றி விட்டு காலை கடன் கழிக்க உட்கார போகும் நிலையில் பார்த்தேன். அவனை நிர்வாணமாக நான் பார்க்காவிட்டாலும் அவன் இடுப்புக்கு கீழ் ஆடை அணிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டென்று என் மனம் துணுக்குற்றது.\nகங்கை கரையில் ஒரு சண்டாளன் போலும் தோற்றமுள்ளவன் அமர்ந்து அங்கு வருவோர் போவோரிடம் தன்னை கங்கையில் குளிக்க வைக்குமாறு தினமும் வேண்டுவானாம். அவனை தொட்டால் பாவம் ஒட்டிக்கொள்ளும் என்று மற்றவர்கள் கூறுவதால், யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லையாம். ஒருநாள் ஒருவர் மட்டும் (பேர் மறந்துடுச்சு) மற்றவர்களின் எச்சரிக்கையை புறம்தள்ளி அவனை தன் கைகளாலேயே தூக்கிச்சென்று குளிக்க வைத்தாராம். அப்போது அந்த சண்டாளன் \"என்னை தொட்டு உங்களுக்கு பாவம் பிடித்து விட்டதே, உங்கள் பாவத்தை எப்படி போக்கிக்கொள்வீர்கள்\" என்றுகேட்டானாம். அதற்கு அவர் \"பாவம் தீர்ப்பதற்க்காகதானே இந்த கங்கையே இங்கே இருக்கிறது. இந்த கங்கை நீரில் குளித்து போக்கிக்கொள்வேன், கங்கை பாவம் போக்கும் என்று அவர்கள் நம்பி இருந்தால் உன்னை எப்போதோ குளிக்க வைத்து உதவி செய்திருப்பார்கள். அவர்கள் கங்கையை நம்பாமல் கங்கையில் குளித்து என்ன பயன்\" என்றுகேட்டானாம். அதற்கு அவர் \"பாவம் தீர்ப்பதற்க்காகதானே இந்த கங்கையே இங்கே இருக்கிறது. இந்த கங்கை நீரில் குளித்து போக்கிக்கொள்வேன், கங்கை பாவம் போக்கும் என்று அவர்கள் நம்பி இருந்தால் உன்னை எப்போதோ குளிக்க வைத்து உதவி செய்திருப்பார்கள். அவர்கள் கங்கையை நம்பாமல் கங்கையில் குளித்து என்ன பயன்\" என்றாராம். அப்போது அந்த சண்டாளன் தன் தேவ உருவத்தை காட்டி அவருக்கு அருள் பாலித்ததாக ஒரு கதை படித்துள்ளேன். அது போல அம்மனிடம் அவ்வளவு அருளை வாங்கிக்கொண்டு வந்ததாக நம்பும் நான் அதில் கொஞ்சமேனும் இந்த பையனுக்கு கொடுப்பதில் என்ன தவறு என்று வர வரவே அந்த பையனுக்காக வேண்டிக்கொண்டு வந்தேன்.\nஸ்ரீ ரங்க பயணம் என் அடுத்த பதிவில்.\n\\\\மூன்றாவதை ரசித்து அனுபவிக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. பொதுவாக நான் ஒரு Home Bird.\\\\\n\\\\ (இது பரவாயில்ல. ஒரு காலத்துல, சுவர் விரிசல், மேகம் இதெல்லாம் பார்த்துகூட அது எந்த எழுத்து மாதிரி இருக்குன்னு உருவகப்படுத்த முயன்ற கூத்தெல்லாம் பண்ணியிருக்கேன்...) \\\\\nவேடந்தாங்கல் - கருன் said...\n>>அவர்கள் கங்கையை நம்பாமல் கங்கையில் குளித்து என்ன பயன்\nஇல்லைங்க.. ஓவர்னா 6 இருக்கனும். 2 அவார்டு தானே இருக்கு.. ஹி ஹி\nஅருமை .எளிமையான நடையில் உங்களின் பயணம் ....\nபயண அனுபவங்களை பிரமாதமாகச் சொல்லிப் போகிறீர்கள்\nபடங்களும் இடையில் கதைசொல்லிப் போதலும் அருமை\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nஅருமை .எளிமையான நடையில் உங்களின் பயணம் ....\nநான் கொஞ்சம் டீசண்டா சொன்னேன். நீங்க இமேஜ் அ டேமேஜ் பண்றீங்க. அவ்ளோ தான்.\nநன்றி வேடந்தாங்கல் கருண், லிவிங்க்ஸ்டன் பாபா, ஜெயகுமார், கோவை நேரம் மற்றும் ரமணி\nஆன்மிகம் நம்பிக்கையையே அடிப்படையாக கொண்டதுன்னு பலருக்கும் தெரிவதில்லை. இது பகுத்தறிவு னு சொல்லலாமா னு தெரியலையே...\n\\\\இல்லைங்க.. ஓவர்னா 6 இருக்கனும். 2 அவார்டு தானே இருக்கு.. ஹி ஹி\\\\\nபகவானே இந்த புள்ளைய காப்பது உன்கடமை\nபதிவை படிக்கும் எங்களை காப்பதும்\nமற்றவர்கள் உன்னை பற்றி எப்படி பேச வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்படியே அவர்களை பற்றி பேசு.\nஇதுவும் நம்ம சரக்கு தான்\nதமிழ்நாட்டோட ஏதோ ஒரு ஊர்ல இருந்து ஒரு சாதாரண ஆளா இந்த சமுதாயத்துல என்ன நடக்குதுங்கறத என் கண்ணோட்டத்துல பதிவு பண்ண விரும்பி இங்க வந்திருக்கேன். என் அறிவு எல்லாம் தெரிந்ததாகவும் இருக்காது, எதுவும் தெரியாததாகவும் இருக்காது. சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.\nநான் திருச்சி போனேனே... பார்ட் 3\nநான் திருச்சி போனேனே... பார்ட் 2\nநான் திருச்சி போனேனே... பார்ட் 1\nகலைமகள் கல்வி நிலையத்தில் பிரித்தாளும் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-05-27T03:07:27Z", "digest": "sha1:NENPUBDIQ4L5FMV6G7CYD5EOZIKFQOLA", "length": 6170, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நதியில் பஸ் கவிழ்ந்தது: 36 பேர் சாவு » Sri Lanka Muslim", "raw_content": "\nடிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நதியில் பஸ் கவிழ்ந்தது: 36 பேர் சாவு\nமேற்கு வங்காளத்தில் பரிதாபம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நதியில் பஸ் கவிழ்ந்தது 36 பேர் சாவு.\nமேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கரிம்பூரில் இருந்து மால்டாவுக்கு நேற்று அதிகாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 60 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் முர்சிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட தவுலத்தாபாத் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே சென்று கொண்டிருந்த நதியில் கவிழ்ந்தது.\nஇதில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியும், தண்ணீரில் மூழ்கியும் பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.\nஇதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்கு தாமதமானதாலும், நீண்ட காலமாக பாழடைந்து கிடக்கும் பாலத்தை சீரமைக்காததை கண்டித்தும் அப்பகுதியினர் போராட்டத்தில் இறங்கினர். இதில் சில போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.\nஇதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.பஸ் டிரைவர் செல்போன் பேசியவாறே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றை முந்த முயன்றதால் விபத்து நடந்ததாக தெரிகிறது. இது குறித்து விசாரணை நடந்து .\n70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: சிக்கினார் பிரபல ஆசாமி\nமலேசிய முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து கட்டு கட்டாக பணம், விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nசக ஊழியரை ஹேண்ட்சம் என்று அழைத்த தொகுப்பாளினி – பணியை விட்டு நீக்கிய நிறுவனம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/index.php?page=7", "date_download": "2018-05-27T03:31:51Z", "digest": "sha1:4I6OGK5YJGJYU4L3EXWOJ2JOHO7MTESH", "length": 3599, "nlines": 95, "source_domain": "tamilblogs.in", "title": "தமிழ் கணினி: Front end Languages மற்றும் Back end Languages என்றால் என்ன? « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nநம் வலைதளத்தின் பக்கங்களை பல வண்ணங்களில் மற்றும் பல வகையான கோணங்களில் வடிவமைப்பதற்க்காக பயன்படுத்துகிறோம். இவைகளை நாம் திரையில் நேரடியாக கண் முன்னே காண்கிறோம் அதனால் இதற்க்கு Front end Language என்று பெயர்.\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி\nதிருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்\nதிருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை\nதிருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\nதிருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/tag/kuttram-23/", "date_download": "2018-05-27T03:00:36Z", "digest": "sha1:IXUFIQ4U65IAPR5PCTNCBUYH5WSJKQVF", "length": 5893, "nlines": 123, "source_domain": "tamilcinema.com", "title": "KUTTRAM 23 Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nஅறிவழகன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா\n‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ என இயக்கும் படங்களிலெல்லாம் கவனம் ஈர்ப்பவர் இயக்குனர் அறிவழகன். கடைசியாக இவர் இயக்கிய ‘குற்றம் 23’ வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் அருண் விஜய்க்கு ஹீரோவாக…\nகௌதம் மேனனின் இயக்கத்தில் அருண் விஜய்யின் 25வது படம் ‘காக்க காக்க 2’\nநடிக்க வந்து பதினெட்டு வருடங்கள் கழித்து ‘தடையறத் தாக்க’ என்ற படத்தில்தான் அருண் விஜய்க்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனாலும் போதிய விளம்பரம் இல்லாததால் வெற்றி பெறவில்லை. பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த ‘என்னை…\nஅறிவழகனின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ்\nதனது குருநாதரான ஷங்கரின் S PICTURES தயாரிப்பில் ‘ஈரம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அறிவழகன். ஹாரர் த்ரில்லர் படமான ‘ஈரம்’ அறிவழகனின் விறுவிறுப்பான திரைக்கதையாலும், மேக்கிங்காலும் நல்ல ஹிட் படமானது. ஆனால் அடுத்தடுத்து…\nமஞ்சு வாரியரை தமிழில் அறிமுகப்படுத்தும் இயக்குனர் அறிவழகன்\nதமிழில் ‘ஈரம்’ என்ற திகில் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அறிவழகன். படம் வெற்றிப் பெற்றதுடன் இயக்குனராக நல்ல பெயரையும் எடுத்தார் அறிவழகன். ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ படங்களை இயக்கி முடித்த அறிவழகன் தற்போது புதிய படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2009/05/blog-post_29.html", "date_download": "2018-05-27T03:22:41Z", "digest": "sha1:AP5SGRUDMSE3HUX25ODANLUW4WP475IY", "length": 61918, "nlines": 699, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து இருக்கின்றீர்களா?", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து இருக்கின்றீர்களா\nநான் நேசித்து இருக்கிறேன், நீங்கள் இதுவரை எந்த வேலையெல்லாம் செய்து இருக்கின்றீர்கள். சிலருக்கு படித்து முடித்து குடும்ப நண்பர் சிபாரிசில் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போய் அந்த வேலையில் காலம் முழுவதும் உழல்வது ஒரு வகை...இன்னொன்று அரசாங்க வேலைக்கு போய் காலம் முழுவதும் உழல்வது ஒரு வகை. அல்லது அப்பா வாங்கி கொடுத்த அல்லது வைத்துக்கொடுத்த கடையில் மூளையை உபயோகித்து முன்னேறுவது ஒரு வகை.\nஅல்லது அப்பா வைத்து இருந்த தொழிலில் அளுங்காமல் குலுங்காமல் வந்து சீட்டில் உட்கார்ந்து முகேஷ் அம்பானி டைரக்டர் என்று போர்டு போட்டுக்கொள்வது ஒரு வகை.\nபடிப்பும் இல்லை, சொந்த பந்தங்கள் உதவ ஆள் இல்லை, கோபம் மூக்குமேல் வரும்,அப்பாவுடன் உள்ள பாசம் என்பது அக்னி நட்சத்திரம் கார்த்திக்,பிரபு போல் என்றால் எப்படி முன்னேறுவது...\nஒரு காலத்தில் நான் எப்படி முன்னேற போகிறேன் என்று யோசித்து மண்டை காய்ந்து இருக்கின்றேன். ஆனால் இந்த உலகில் தனிதன்மையாய் வாழ வேண்டும் பத்து பேர் இருக்கும் கூட்டத்தில் அதோ ஜாக்கி என்ற அடையாளப்பட வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது\nநான் இதுவரை வேலை செய்த இடங்கள்...\n1.நகை கடையில் கவுண்டர் சேல்ஸ்..\n2.நகை டிசைன் வெட்ட வைர ஊசி செய்யும் வேலை.\n3.வெல்டிங் கடையில் வெல்டர் வேலை\n7.கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை.\n8.ஒரு வருடம் கடலூரில் ஆட்டோ ஓட்டுநர்.\n9.பறக்கும் ரயில் பாதையில் கம்பி பிட்டிங்வேலை\n10. பறக்கும் ரயில் பைலிங் ஒர்க்.\n11.சென்னை கடற்கரை காந்தி சிலை பின் உள்ள சாகர் ஓட்டலில் சர்வர் வேலை\n12.எல்ஐசி எதிரில் செக்யூரிட்டி வேலை.\n13.மவுன்ட் ரோடு நிர்மலாதக்ஷன் ஓட்டல் அருகில் பீடா கடையில் வேலை.\n14,தேவி, அலங்கார் தீயேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்க்கும் வேலை.\n15.லூனா டிரைவராக ஒரு வருடம்.\n16.மாருதி காருக்கு டிரைவராக...சைடில் வால் பேப்பர் ஒட்டுவது..\n17. பாண்டி, கடலூர் பகுதிகளில் ஐந்து வீடியோக்கடையில் கேமரா மேனாக 4 வருடங்கள்..\n18.சென்னை வடபழனி கிரீன் லேண்ட் வாட்டர் சர் வீஸ் கடையில் சில நாட்கள்.\n19. சென்ளை சரவண வீடடியோ சென்டர் இரண்டு வருடங்கள்\n20கேமராமேன் டீஎஸ் விநாயகம் கேமாராவில் கேமரா அசிஸ்டென்டாக ஒன்றரை வருடம்\n21,சென்னை எஸ்எஸ் மீடியாவில் ஒரு வருடம்.\n22.கேமராமேன் பால முரளியிடம் அசிஸ்டென்ட் கேமராமேனாக இரண்டு வருடங்கள்...\n23.எப்டிடிவி எனும் நிறுவனத்தில் கேமரா மேனாக வேலை.\n24. சைடில் திருமணத்துக்கு போட்டோ எடுப்பது ,\n25.நான் ஒரு குறும்பட இயக்குநர் முதல்படம் துளிர் மாநில அளவில் நடந்த போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. என்று இப்படியாக நம் கதை ஓடியது விடுபட்டவை நிறைய......\nஇப்படியாகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது, எந்த இடத்திலும் மிக நீண்ட நாட்கள் நீடித்தது இல்லை.\nகாரணம் நான் செய்யும் வேலையை ரசித்து செய்வேன்,நான் வேலை செய்யும் நிறுவனத்தை நேசிக்க மாட்டேன் அது நம் வளர்ச்சியை தடை படுத்தும் என்ற எங்கோ படித்தஞாபகம். அப்படி இருந்த நான் நான்கு வருடம் ஒரு கல்லூரியை நேசித்த கதை இங்கே...\nநான் ஜீசஸ் கால்சில் பிரிலான்சராக கேமரமேன் வேலை செய்த போது சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் (கேளம்பாக்கம்) எலக்ட்ரானிக் மீடியா வீஷுவல் கம்யுனி்கேஷன் பசங்களுக்கு கேமரா பற்றி பிராக்டிக்கல் வகுப்பு எடுக்க ரெகுலராக வர வேண்டும், வர முடியுமா என்றார்கள்\nநான் கேமரா மேனாக இருந்ததால் நேற்று ஐதராபாத்தி்ல் இருந்தால் இன்று மதுரையில் இருப்பேன். அதற்க்கு அடுத்த நாள் பெங்களுர் என்ற ஊர் சுற்றி வாழ்க்கை வாழ்ந்தவனை காலை 9 மணி மாலை4 மணி என்ற வேலையில் முதலில் செட்டாக மிகவும் சிரமப்பட்டேன்.\nபத்தாவது படித்து விட்டு,காலேஜ் வாழ்க்கையை பற்றி சினிமாவில் மட்டுமே ரசித்த எனக்கு காலேஜ் வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது. எனக்கு அப்போதே எட்டாயிரம் சம்பளம் தந்தார்கள். இதற்க்கு முன் நான் செய்த வேலைகக்கும் கல்லூரி வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது.\nஇதுவரை கோத்தா கொம்மா என்று பேசி பழகிவிட்டு கல்லூரியில் சார் போட்டு ஆரம்பத்தில் பேச ரொம்ப சிரமமாக இருந்தது. என் இயற்பெயர் தனசேகரன்.\nநான் இருப்பது தெரியாமல் தனசேகரன் சார் எங்கே என்று கேட்க, தனசேகரன் சார் மீடியா டிப்பார்ட்மென்டில் இருப்பதாக சொல்ல எனக்கு மயக்கமே வந்து விட்டது. என்னை சார் என்று அழைத்த போது காலடியில் பூமி நழுவவது போல் ஒரு பிரமை.\nநான் வாத்தியாராக போய் கிளாஸ் எடுத்தது, மாணவர்கள் என் மேல் கொண்ட பாசம் , மாணவிகள் என்மேல்காட்டிய தனிப்பட்ட பாசங்கள், மதிக்கத்தக்க நபராகவும் கலகலகப்பான மனிதராக அந்த கல்லூரி வளாகத்தில அறியப்பட்டது, கம்யூட்டர் பற்றிய சிறிய அறிவு, கொஞ்சம் ஆங்கில அறிவு, என்னோடு பழகிய லெக்சரர்கள் என்று, நான் இந்துஸ்தான் கல்லூரியில் நிறைய கற்றக்கொண்டு இருக்கின்றேன்.நிறைய சோகங்கள், நிறைய மகிழ்ச்சிகள், நிறைய மாணவ மாணவர்களின் வெற்றி தோல்விக்ள், காதலில் விழுந்து எழுந்தவர்கள் என்ற அதை பற்றி எழுத ஒரு ஜென்மம் போதாது..\nபத்தாவது படித்து விட்டு இந்த கல்லூரிக்கு வேலைக்கு போனேன். எல்லோரும் படித்தவர்கள் என்பதால் நான் மட்டும் பத்தாவது . அதாவது பத்தாவது படித்து விட்டு எப்படி பத்தாயிரம் சம்பளம் வாங்கலாம் என்ற மனக்கேள்வி என்னை சுற்றி சிலரிடம் இருக்க செய்தது. அதனால் நான் அஞ்சல் வழியில் பிஏ சோசியாலஜீ படித்தேன்,அதன் பிறகு இப்போது எம்ஏ மாஸ்கம்யுனிக்கேஷன் ஜெர்னலிசம் முதல் வருடம் பாஸ் செய்து இரண்டாம் வருட தேர்வு எழுத காத்து இருக்கின்றேன், நான் செகன்ட் இயர் பசங்களுக்கு டியுட்டராக வேறு இருந்தேன்.\nகல்லூரி காலங்கள் வசந்தமானவை,பசங்களோடு பழகி என்னை இளமையானவனாக உற்சாகப்படுத்தியது. நான் பல விஷயங்களை என் மாணவ செல்வங்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கின்றேன், எனக்கு தெரிந்ததை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து இருக்கி்றேன். ஆட்டோ ஓட்டும் போது காதலித்த பெண்ணை பத்துவருடங்களுக்கு பிறகு வாத்தியாராக மாறி இந்த கல்லூரியில் வேலை செய்த போது தான் மணந்தேன். திருமணம் முடிந்து ஆறுமாதங்கள் ஆகின்றது.\nஎன் மேல் பாசம் கொண்ட மனிதர்கள் எத்தனை எத்தனை பேர். ஒருவர் பேர் எழுதினாலும் மற்றவர் வருத்தப்டுவர் அதனால் தவிர்க்கின்றேன். எவ்வளவோ இடத்தில் வேலை செய்தாலும் இந்த கல்லூரி வேலையை என்னால் மறக்க முடியாது...\nலாஸ்ட் பன்ச். இன்றிலிருந்து மிகச்ரியாக 23 நாளுக்கு முன் கல்லூரிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டேன். என் வேலையை ராஜீனாமா செய்து விட்டேன் .காரணம் ரொம்ப தூரம். பஸ் பயணத்தில் பாதி நேரம் போய்விடுகின்றது. இப்போது எதாவது சேனலில் கேமரா மேன் வேலை தேடிக்கொண்டு இருக்கன்றேன்.\nஎல்லோரும் சொன்னார்கள் எப்போதும் எதாவது வேலை தேடிக்கொண்டுதான் அந்த வேலையை விட வேண்டும் என்று நான் மேலே எவ்வளவு வேலை செய்து இருக்கின்றேன் என்று உங்களுக்கு தெரியும். நான் எப்போதும் ஒரு வேலை தேடி அது கிடைத்ததும் செய்த வேலைவிட்டது இல்லை.\nஏன் என்றால் நான் செய்யும் வேலையை நேசிக்கின்றேன் நிறுவனத்தை அல்ல..\nஉங்களுக்கு நான் எழுதியது பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஓட்டு போடவும் பின்னுட்டம் இடவும் மறவாதீர்\n//நான் செய்யும் வேலையை நேசிக்கின்றேன் நிறுவனத்தை அல்ல..//\nஇது அனைவருக்கும் பொருந்தும். நிறுவனத்தை நேசித்தால் முன்னேற்றம் என்பது குறைந்த அளவிலே இருக்கும்..\nநீங்கள் கூறுவது முற்றிலும் சரி\nஇந்த பதிவ படிச்சதுக்கு அப்புறம் உங்க மேல மரியாதை கூடீட்டே போகுதுங்க\nபூக்கடை, சித்தாள், ப்ளாக் டிக்கட் விக்கறதுனு இருந்த நீங்க, இந்த அளவிற்கு வந்திருக்கீங்கங்கறது ஒரு பெரிய விசயம்\nபத்தாவது தான் படிச்சிருக்கோம்னு நினைக்கறவங்களுக்கு எல்லம் நீங்க ஒரு எடுத்துக்காட்டு. என்ன பொருத்த வரை முயற்சி, விடாமுயற்சிக்கு இந்த பதிவை பரிந்துரை செய்யாலாம்னு இருக்கேன்\nஇன்னிலிருந்து உங்களுக்கு இன்னோரு விசிறி ( நான் தாங்க அது)\nநேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க :)\n/ஒருவர் பேர் எழுதினாலும் மற்றவர் வருத்தப்டுவர்/\nஇதுலயே உங்க பக்குவம் புரியுது\n/காதலித்த பெண்ணை பத்துவருடங்களுக்கு பிறகு மணந்தேன்/\nஇதுலயே உங்க தன்நம்பிக்கை தெரியுது\n//நான் இதுவரை வேலை செய்த இடங்கள்...1 - 25ல//\nஇதுலயே உங்க விடாமுயற்சி தெரியுது\n//எதாவது வேலை தேடிக்கொண்டுதான் அந்த வேலையை விட வேண்டும்//\nஇதுலயே உங்க நல்ல எதிர்காலம் என் கண்னுக்கு தெரியுது\nஎன் வாழ்கையை புரட்டி பார்த்த மாதிரி இருந்தது..\nநீங்க சொன்ன வேலையில பாதி வேலை நானும் செஞ்சிருக்கேன்\nஅத நான் சொன்னா ரிப்பீட்டாயிடும்\nதன்னம்பிகையின் மறு பெயர் ஜாக்கி. இது பழகியவர்க்ளுக்கு எப்போதே தெரியும். இப்போது அனைவருக்கும் தெரியும்.\nகடந்த இரண்டு வாரமா தொடர்ந்து பதிவா போட்டு தள்ள்ளும்போதே நினைத்தேன்.\nஅன்றே சொன்னது.. நடந்து விட்டது போல என்று.\nஇது அனைவருக்கும் பொருந்தும். நிறுவனத்தை நேசித்தால் முன்னேற்றம் என்பது குறைந்த அளவிலே இருக்கும்..\nநீங்கள் கூறுவது முற்றிலும் சரி--//\nநன்றி கிரி தொடர்ந்து என் பதிவை வாசிப்பதற்க்கு\nநன்றி செந்தில் மிக்க நன்றி கண்டிப்பாக வந்து படிக்கின்றேன்\n/ஒருவர் பேர் எழுதினாலும் மற்றவர் வருத்தப்டுவர்/\nஇதுலயே உங்க பக்குவம் புரியுது\n/காதலித்த பெண்ணை பத்துவருடங்களுக்கு பிறகு மணந்தேன்/\nஇதுலயே உங்க தன்நம்பிக்கை தெரியுது\n//நான் இதுவரை வேலை செய்த இடங்கள்...1 - 25ல//\nஇதுலயே உங்க விடாமுயற்சி தெரியுது\n//எதாவது வேலை தேடிக்கொண்டுதான் அந்த வேலையை விட வேண்டும்//\nஇதுலயே உங்க நல்ல எதிர்காலம் என் கண்னுக்கு தெரியுது\nநன்றி கலை என்னை ரசித்து பின்னுட்டம் இட்டதற்க்கு\nதன்னம்பிகையின் மறு பெயர் ஜாக்கி. இது பழகியவர்க்ளுக்கு எப்போதே தெரியும். இப்போது அனைவருக்கும் தெரியும்.\nகடந்த இரண்டு வாரமா தொடர்ந்து பதிவா போட்டு தள்ள்ளும்போதே நினைத்தேன்.\nஅன்றே சொன்னது.. நடந்து விட்டது போல என்று.\nநன்றி வண்ணத்து பூச்சி தங்கள் தொடர் ஆதரவுக்கு என் நன்றிகள்\nபதிவர் சந்திப்பின் போது நீங்கள் சொன்னதை நல்ல பதிவாகவும் தந்துவிட்டீர்கள். கடந்த காலம் பற்றிய துணிச்சலான,நேர்மையான வெளிப்பாடு.\nபதிவு அருமை ஜாக்கயே, உங்கள் வாழ்க்கையை, மேடு பள்ளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nசீக்கிரம் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை, நிறுவனம் இரண்டும் கிடைத்து மகிழ்வுடன் எப்போதும் இருக்க வாழ்கத்துக்கள்.\nஉண்மையில் மனதிற்கு பிடித்த உயர் அதிகாரி கிடைப்பதுதான் அரிது.\nபெரும்பாலும் ஊழியர்கள் நிறுவனத்தை பிடிக்காமல் வேலை மாறுவது இல்லை, தன உயர் அதிகாரி பிடிக்காமல் தான் வேலை மாறுவதே.\nஉங்களுக்கும் அடுத்து கிடைக்க இருக்கும் வேளையில் நல்ல உயர் அதிகாரியும், நல்ல சக ஊழியர்களும் கிடைக்க வாழ்த்துக்கள்.\nபதிவர் சந்திப்பின் போது நீங்கள் சொன்னதை நல்ல பதிவாகவும் தந்துவிட்டீர்கள். கடந்த காலம் பற்றிய துணிச்சலான,நேர்மையான வெளிப்பாடு.\nநன்றி ஸ்ரீ. மிக்க நன்றி தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு\nநன்றி லக்கி உங்கள் தொடர் வாசிப்புக்கு\nநன்றி கதிர் தங்கள் பாராட்டுக்கு\nபதிவு அருமை ஜாக்கயே, உங்கள் வாழ்க்கையை, மேடு பள்ளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nசீக்கிரம் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை, நிறுவனம் இரண்டும் கிடைத்து மகிழ்வுடன் எப்போதும் இருக்க வாழ்கத்துக்கள்.\nநன்றி குப்பன்_யாஹூ தங்கள் விரிவான பாராட்டுககு\nபதிவு அருமை ஜாக்கயே, உங்கள் வாழ்க்கையை, மேடு பள்ளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nசீக்கிரம் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை, நிறுவனம் இரண்டும் கிடைத்து மகிழ்வுடன் எப்போதும் இருக்க வாழ்கத்துக்கள்.//\nகுப்பன் நீங்கள் சொன்ன காரணம் உண்மைதான், பல வருத்தங்கள் இருந்தாலும் அதை வெளியே சொல்ல முடியாது . இருப்பினும் எல்லாம் கத்துக் கொடுத்த கல்லூரி அது.\nமொத்தத்திலே நீங்க ஒரு All rounder\nஎல்லாதுறையிலும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க :)))\n//ஒரு காலத்தில் நான் எப்படி முன்னேற போகிறேன் என்று யோசித்து மண்டை காய்ந்து இருக்கின்றேன். ஆனால் இந்த உலகில் தனித்ன்மையாய் வாழ வேண்டும் பத்து பேர் இருக்கும் கூட்டத்தில் அதோ ஜாக்கி என்ற அடையாளப்பட வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது\nபிடித்தவேலை விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்\nதான் யாருன்னு மனம் புரிஞ்சுகிட்டா வாழ்கை பயணம் இனிமையானதுன்னு ஜென் துறவி தத்துவம்.\nவழக்கம் போல் இந்த பதிவும் சிறப்பாக இருந்தது.\nகூடிய விரைவில் உங்களுக்கு நல்ல வேலை அமைய இறைவனை வேண்டுகிறேன்.\nமொத்தத்திலே நீங்க ஒரு All rounder ok va\nநன்றி அருனா தங்கள் பாராட்டுக்கு, அப்படி எல்லாம் ஆல்ரவுண்டர் என்று சொல்ல முடியாது. நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் அவ்வளவே\nஎல்லாதுறையிலும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க :)))\nநன்றி மங்களுர் சிவா என்ன செய்றது வயித்து பொழப்பு...\nபிடித்தவேலை விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்//\nநன்றி பித்தன் தங்கள் இதய பூர்வமான வாழ்த்துக்களுக்கு\nதான் யாருன்னு மனம் புரிஞ்சுகிட்டா வாழ்கை பயணம் இனிமையானதுன்னு ஜென் துறவி தத்துவம்.\nவழக்கம் போல் இந்த பதிவும் சிறப்பாக இருந்தது.//\nநன்றி சிவா தங்கள் தொடர் பின்னுட்டத்திற்க்கும், இதயம் கனிந்த வாழ்த்துக்கும்\nநன்றி அழகன் முகம் தெரியாத உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் செம்மை படுததும்\nசூப்பருங்க... எத்தனை வேலைகள்... நீங்க உண்மையிலேயே பெரிய ஆளுதான்... வாழ்த்துக்கள்...\nஅண்ணே என்னை பத்தி எழுதன மாதிரி இருக்கு\n//மாணவிகள் என்மேல்காட்டிய தனிப்பட்ட பாசங்கள்//\nபிடித்த பணி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்\nஉங்களின் பதிவை படித்தவுடன் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன. இன்று எனக்கு 58வயது. 1968 ல் காலில் செருப்புகூட இல்லாமல் வந்தது ஞாபகம் வருகின்றது.நானும் அந்தக்காலத்தில் கடையில் வேலை,லாட்டரி டிக்கட் விற்றது,ஓட்டல் சர்வர்,சாரயக்கடை, எல்.அய்.சி,தாலுகா அலுவலகத்தில் கிளார்க்(76 எமெர்ஜென்ஸியின்போது) பின்னர் நாடோடிமன்னன், மினிஸ்டார்,விசிறி,நாவலர் அவர்களின் மன்றம்,போன்ற, பத்திக்கைகளில் வேலை செய்தது.பின்னர் அரசு போக்குவரத்தில் நடத்துனர் பணி. அன்று முடிவு செய்தேன். நான் பட்ட துன்பங்களை என் பிள்ளைகள் படக்கூடாது என்று.இன்று எனது மகன்கள் இருவரும் கணீனி மென்பொருள் வல்லுநர்களாக உள்ளனர்.\nஎன்ன சொல்வதென்றே தெரியலை ஜாக்கி.\nஉங்கள் வாழ்க்கையும் அனுபவமும் தனித்துவமானது.\nதயங்காம அடிச்சி ஆடுங்க. நல்லா வாங்க.\nபத்தாவது மட்டும் படித்தால் என்ன அனுபவ பாடம் நிறையவே படித்திருக்கிறீர்கள்.உங்கள் காதல் கதையையும் கொஞ்சம் எழுதலாமே.\nஉங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் ...\nநீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஉங்கள் பெண் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பவில்ல...\nசென்னையில் யாரிடமும் வழி கேட்காதீர்கள்..\nஎன் முதல் சிறுகதை , ஒரு உண்மை காதல் கதை...\nஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும்...\n(பிரபாகரன்) புலிகள் தலமை என்ன செய்து இருக்க வேண்ட...\nகொல்லூர் முகாம்பிகையும் கூடஜாதிரி ஆபத்தான மலைபயணமு...\nதமிழ்மண வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றிக...\nஇலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந...\nதேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நல...\n( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உ...\nபிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடு...\nபிரபாகரன்(மறைவு)குறித்தான செய்தி ஒரு பார்வை...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி....\nஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு ...\nபசங்க படத்துக்கு விகடன் 50மார்க்கு போட்டது தப்பேயி...\nதேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது\nசென்னையில் ஏன் சத்தியம் தியேட்ட்ர் சிறந்தது...\nஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் ...\nபதிவர் சந்திப்பும், குட் டச் பேட் டச் பற்றிய கருத்...\nகாம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டு...\nஎச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....\nபுதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்...\nஅப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2017/", "date_download": "2018-05-27T03:39:20Z", "digest": "sha1:2CYO6GW3VPWFOHVN34C6H3SLVVVWYVKJ", "length": 7472, "nlines": 167, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: 2017", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என்றும் இனிமையே.\nLabels: உணவு பாதுகாப்பு, உரை, கல்லூரி, டெங்கு விழிப்புணர்வு, ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி\n”உணவுப்பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு” என்ற எங்கள் துறையின் தாரக மந்திரத்தை கல்வி கற்பிக்கும் கல்லூரிகளுக்கே சென்று, ஒவ்வொரு தலைப்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர் உரையாற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பணி, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.\nLabels: உணவு பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, எஃப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://nadappu.com/tnpsc-exam-other-state-participate-vaiko-admonish/", "date_download": "2018-05-27T02:56:12Z", "digest": "sha1:VGXRTYZPA5YM7IY2K3VAR55B4TKSMJVH", "length": 6167, "nlines": 81, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவர்: வைகோ கண்டனம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி..\nசிபிஎஸ்இ ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை…\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி..\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் ..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி…\n“செம” : திரை விமர்சனம்..\nடி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவர்: வைகோ கண்டனம்..\nதமிழக அரசு அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவரை அனுமதிப்பது தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nPrevious Postநாகை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு.. Next Postகருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் : மு.க. அழகிரி..\nதமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது : வைகோ..\nகாவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வராது : வைகோ..\nஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி.. https://t.co/q8HiCD0g86\nசிபிஎஸ்இ ப்ளஸ் 2 தேர்வுகள் முடிவுகள் வெளியீடு.. https://t.co/s6fEoUPhCM\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை… https://t.co/1iaWhckxE8\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி.. https://t.co/WBgnyWXLhT\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் .. https://t.co/9IVAzC6Kkv\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aathimanithan.blogspot.com/2011/11/blog-post_23.html", "date_download": "2018-05-27T03:11:42Z", "digest": "sha1:K5LGE3V3NQJ5ADNJH7TJGJVNT4F2OT4C", "length": 16787, "nlines": 167, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: ஜெயலலிதா \"பெயில்\"", "raw_content": "\nசெய்தி: பெங்களூரு நீதிமன்றத்தில் நான்கு நாட்களில் கேட்கப்பட்ட ஆயிரத்து முன்னூற்று முப்பத்தொன்பது கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு \"தெரியாது\", \"மறந்து போயிற்று\" என்று தமிழக முதல்வர் பதில்.\nஇப்ப சொல்லுங்க, ஜெயலலிதா மேடம் \"பெயில்\" தானே\nதெரியாது அல்லது மறந்துவிட்டது, மறந்து போயிற்று என்ற பதில்கள்\nபற்றி எனக்குத் தெரிந்த வரை,\nஇன்டியன் எவிடென்ஸ் ஆக்ட் படி ஒப்புக்கொள்ளப்பட்ட பதில்களே.\nதெரியாதனவற்றை தெரியாது என்று கூறுவது சரியே.\nதெரிந்தவற்றையும் தெரியாது எனக்கூறுகிறார் ஒருவர் என்றால் அதை நிதானிப்பதற்கு\nமற்ற கேள்விகளின் துணையோடு ஒப்பிட்டுச் சொல்ல இயலும்.\nஇதுபோன்றே, மறந்து போயிற்று என்ற பதிலும் ஆகும்.நினைவு இல்லாதவன வற்றை\nஒரு ஊகத்தின் அடிப்படையில் சொல்வது ஒப்புக்கொள்ளத்தக்கன அல்ல. ( உதாரணமாக,\nநீங்களோ நானோ 41 C பஸ்ஸில் செல்கிறோம். அதில் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்து\nமுணமுணத்துக்கொண்டே வந்தார். இது சில வாரங்களில் மறந்து போகும். அதே சமயம்,\nஅந்த பஸ்ஸில் உங்களது மணிபர்ஸ் கெட்டுப்போய் விட்டது. யாரோ பிக் பாக்கெட்\nஅடித்துவிட்டார்கள், என்றால் அது சில மாதங்கள் நினைவில் இருக்கும். இருப்பினும்,\nஅடிக்கடி நீங்கள் பல பொருட்களை, பேனாக்களை, மனி பர்ஸுகளைத் தொலைத்துவிடுகிறீர்கள்\nஎன்றால், இந்த குறிப்பிட்ட தொலைப்பும் மறந்து போகும். )\nஆகவே, கால ப்போக்கில் மறப்பது short term amnesia இயற்கை. selective amnesia என்பது வேறு.\nஒரு விஷயத்தை மறைப்பதற்காக, மறந்து போயிற்று என்று சொல்லப்படும்பொழுது,\nஅதை எவ்வாறு மறக்க இயலாது என்பதையும், உண்மையில் மறக்கவில்லை, மறந்து\nபோயிற்று என்று சொல்கிறார் ஒருவர் என்பதை நிரூபிப்பதற்கு இயலும்.\nஇந்த எனது கமென்ட்ஸ் பொதுவானவை. ஜூரிஸ்ப்ரூடன்ஸ் எனச்சொல்லப்படுவதில்\nbailஆ failஆ சரியாக சொல்லுங்கள்... நான் எதை எடுத்துக் கொள்வது\n// ஆயிரத்து முன்னூற்று முப்பத்தொன்பது //\nஅவங்க சுமார் பத்து பதினஞ்சு கேள்விய மட்டுமே படிச்சிட்டுப் போயிருப்பாங்க.. அதான் மத்த கேள்விகள சரியா ஆன்சர் (அட்டென்ட்) செய்ய முடியல..\nஅனானி. மிக நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.\nநீங்கள் கூறுவதும் ஒரு வகையில் சரிதான். ஆனால், விட்டால் வளர்ப்பு மகனுக்கு திருமணம் ஆகிவிட்டாதா என்றே எனக்கு ஞாபகம் இல்லை என கூறிவிடுவார் போலிருக்கே\nநான் \"Fail\" என்று தான் கூறினேன். \"Bail\" ஆ என்பது நீதிபதியின் கையில் இருக்கிறது.\nபேசாமல் நீங்கள் \"அம்மா\"வுக்கு வக்கீலாக போய்விடலாம்.\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nநூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்\nதமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெற...\nகோடை விடுமுறை கொண்டாட்டங்கள் - சாண்டியாகோ சபாரி பார்க்\nஇந்தியாவில், சென்னையில் இருக்கும் போது பக்கத்தில் உள்ள கிண்டி பார்க்கையோ வண்டலூர் மிருககாட்சி சலையையோ பார்க்க முடிவதில்லை. காரணம் பல. அதில்...\nஅமெரிக்காவின் உல்லாச நகரம் : லாஸ் வேகாஸ் போலாம் வாங்க...\nலாஸ் வேகாஸ். உல்லாச உலகின் தலை நகரம் என்றும் கூறலாம். அமெரிக்காவின் நவாடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்நகரம் முற்றிலும் பாலை வன பிரதேசம். அமெர...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...\nBlack Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்கள...\nரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை\nஅமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெ...\nஐயோ கொல்றாங்களே கொல்றாங்களே -\nஅனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்\nஅட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.\n\"டைனமிக்\" கல்யாணமும், கட்டிப்பிடி முத்தம் கொடு கலா...\nசான்டியாகோ ஏர் ஷோ - இரு வேறு அனுபவங்கள்\nகன்னடர்களுக்காக கவலை படும் ஜெயலலிதா\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/srilanka/04/161445", "date_download": "2018-05-27T02:57:49Z", "digest": "sha1:2TCW6ZG57IPV3LM6Z7QETOW2GVEY3VXD", "length": 5739, "nlines": 61, "source_domain": "canadamirror.com", "title": "இடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் – மஹிந்த ராஜபக்ஷ - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nஇடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் – மஹிந்த ராஜபக்ஷ\nவட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nவெற்றிக்காக இரவு பகல் பாராது படுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாது வெற்றியைக் கொண்டாடுங்கள், அவ்வாறு நடந்துகொள்வது எமது பொறுப்பாகும் ஏனைய கட்சிகள் எமகு இடையூறு செய்தாலும் நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.\nஅமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாட வேண்டும்.\nகால்டன் இல்லத்தில் இன்று இரவு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்று முடிந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு தெரிவித்துவந்த பொதுஜன பெரமுன உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/06/5-air-pollution-control-dispersion.html", "date_download": "2018-05-27T03:13:48Z", "digest": "sha1:H52USKJMLMEEXJMKBCJRWVUWWJLQADHH", "length": 15583, "nlines": 119, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: காற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொருள்)", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nகாற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொருள்)\nகாற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ISC 3 (Industrial Source Complex என்பதன் சுருக்கமாகும்).\nஎல்லா வகையான வழிகளுமே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்காவிலும் முன்னால் இந்த ISC3 மாடலை பயன்படுத்தினார்கள். தற்போது AERMOD என்ற் மாடலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.\nISC3 மாடல் வழி, ஒரு இடத்தில் மாசு வெளிவந்தால்,வேறு இடத்திற்கு பரவி எந்த அள்வில் செல்லும் என்பதை கணக்கிட தமிழில் ஒரு மென்பொருள் உருவாக்கி இருக்கிறேன். அதன் screenshot கீழே.\nநீங்கள் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதை பயன்படுத்த டாட் நெட் (.NET Framework version 2.0) என்ற மென்பொருள் தேவை. இது ஏற்கனவே உங்கள் கணினியில் இல்லாவிட்டால், மைக்ரோசாஃப்ட\nதளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் (.NET Framework version 2.0)செய்யலாம். அதன் அளவு, சுமார் 22 MB ஆகும்.\nஇந்த மென்பொருளை பயன்படுத்தினால் எனக்கு (அ) இந்த மென்பொருளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் உங்கள் கணினியில் சரியாகத் தெரிகிறதா என்பதையும் (ஆ) இந்த மென்பொருளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பதையும் தெரிவிக்கவும்.\nஇங்கு கவனிக்க வேண்டியவை சில.\nஇந்த மென்பொருளின் மூலம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாசு சேர்க்கும் பொழுது, வேறு இடத்தில் அது பரவும் விதத்தை கணிக்கலாம். இந்த மாசுக்கள் தொழிற்சாலையில் புகைபோக்கி வழியே வரும். இவை point source எனப்படும்.\nவாகனங்கள் புகை கக்கிக்கொண்டே செல்லும்பொழுது , மாசு பல இடங்களில் சேர்க்கப்படுகிறது. இவை line source எனப்படும். இவற்றால் விளையும் பாதிப்பை இந்த குறிப்பிட்ட மென்பொருளில் கணக்கிட முடியாது. (நான் இன்னமும் அதை தமிழில் எழுதவில்லை)\nஒரு பெரிய பரப்பில் இருந்து வரும் புகையானது area source எனப்படும். அதுவும் இந்த மென்பொருளில் கணக்கிட முடியாது\nஇதைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள்.\nபுகைபோக்கியின் உயரம்: இது அதிகமானால், மாசு தரையில் வரும்பொழுது நன்கு பரவி விடும். அதனால், அதன் அளவு எந்த ஒரு இடத்திலும் குறைவாக இருக்கும்.\nபுகைபோக்கியின் விட்டம்: இது காற்றின் போக்கை பாதிக்கும். (தரையில்) மாசின் அளவு இதனால் கொஞ்சம் பாதிக்கப்படும்\nபுகையின் வெப்பனிலை: இது அதிகமானால், புகையின் ‘அடர்த்தி' (density)குறையும். அதனால், புகை மேலே செல்லும். அப்பொழுது, தரையில் அதன் அளவு குறையும்\nபுகை வெளிவரும் வேகம்: புகை வேகமாக மேல்நோக்கி வந்தால் அதன் அளவு தரையில் குறையும்\nமாசு வெளிவரும் அளவு: இது தொழிற்சாலையிலிருந்து ஒரு நொடிக்கு எவ்வளவு கிராம் மாசு காற்றில் சேர்க்கப்படுகிறது என்ற அளவு.\nஉங்கள் வீட்டிலிருந்து புகைபோக்கி இருக்கும் தொலைவு: X மற்றும் Y (மீட்டரில்). இதில் X என்பது கிழக்கு-மேற்கு. புகைபோக்கி மேற்கில் இருந்தால் -1000 மீ என்று நெகடிவ் எண் கொடுக்க வேண்டும். கிழக்கில் அரை கிலோ மீட்டரில் இருந்தால், 500 மீட்டர் என்று கொடுக்க வேண்டும். Y என்பது வடக்கு-தெற்கு.\nபுகை போக்கி வடகிழக்கில் இருந்தால் X = 1000, Y = 800 என்று தகுந்த அளவில் கொடுக்க வேண்டும்\nதட்ப வெப்பம்: காற்றின் வேகம் மற்றும் திசை. காற்று வடக்கிருந்து தெற்காக வந்தால் (வாடைக்காற்று) 0 டிகிரி. கிழக்கிருந்து மேற்காக சென்றால், 90 டிகிரி\nகாற்றின் வேகம் அளக்கப்பட்ட உயரம். புகைபோக்கியானது 50 மீட்டர் உயரத்தில் இருக்கலாம். ஆனால் காற்றின் வேகம் 2 மீ. உயரத்தில் அளக்கப்பட்டு இருக்கலாம். இந்த விவரம் சொன்னால், மென்பொருளானது, ”புகைபோக்கியின் உயரத்தில் காற்றின் வேகம் என்ன” என்பதை கணித்து விடும்\nகாற்றின் வெப்ப நிலை: இதை மாற்றினால்,தரையில் மாசின் அளவு, நிறைய மாறாது.\nகலக்கும் உயரம். ஆங்கிலத்தில் mixing height எனப்படும். இதைப்பற்றி தனிப்பதிவுதான் எழுத வேண்டும். இப்போதைக்கு 1 கி.மீ என்று வைத்துக் கொள்வது போதும். பெரும்பாலும் இது சரியாக இருக்கும்.\nபகல்/இரவு: பகலில் சூரிய வெளிச்சத்தின் அளவைப்பொறுத்தும் , இரவில் மேக மூட்டத்தைப் பொறுத்தும் தரையில் மாசின் அளவு நிறைய மாறுபடும். இதற்கு காரணம், மாசு பரவும் விதத்தையும், காற்றோட்டத்தையும் இவை மிகவும் மாற்றுகின்றன.\nமாசு decay coefficient: சில மாசுக்கள் காற்றில் சிதைந்து விடும். பெரும்பாலான் மாசுக்கள் அப்படியே இருக்கும்.\nஉங்கள் வீட்டில் மாசின் அளவை கணிக்க, வீட்டின் உயரம் தேவை.\nசுற்று வட்டாரம்: கிராமமா அல்லது நகரமா என்பதைப் பொறுத்து தரையில் வரும் மாசு மிகவும் மாறுபடும். இதற்கு காரணம், காற்று செல்லும் விதம் இந்த இரண்டு இடங்களிலும் வேறுபடும்.\nபின்குறிப்பு. இந்த மென்பொருள், Visual Basic .NET 2005இல் எழுதப்பட்டது.\nLabels: Pollution Control, மாசு கட்டுப்படுத்தல்\nஇப்ப லினக்ஸில் இருக்கேன், வின்டோஸ் போய் பார்க்கிறேன்.\nஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n\"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\nசரியாக இயங்குகிறது.தமிழ் எழுத்துக்கள் சரியாக இருக்கு.\nநிறுவலை ஜிப்பில் இருந்து இருந்து இயக்கும் போது தேவையான .நெட்டை இறக்கிக்கொள்கிறது,பிறகு ஒரு பிழைச்செய்தி (ஏதோ டெம்பரரி கோப்பில் வைத்திருப்பதாக) அதை சொடுக்கி போக்கிவிட்டால் அழகாக தெரிகிறது.\nவடுவூர் குமார் அவர்களே, நேரம் செலவழித்து சரிபார்த்ததற்கு நன்றி. இது சரியாகத் தெரிகிறது என்று கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nமைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம் பகுதி-3\nமைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம். பகுதி 2\nமைக்ரோ வேவ் வேலை செய்யும் விதம்\nஇயற்பியல் பதிவு தொகுப்பு - 1\nகாற்றில் மாசு-7. பங்களிப்பை கணக்கிடுதல்\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் - அட்டவணை (Airp Po...\nகாற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொரு...\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2631&view=unread&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-05-27T03:35:18Z", "digest": "sha1:2H4LOWCJV5WCUPCWOXLR5VJ2P4RDLLF7", "length": 36324, "nlines": 577, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்)\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nதமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்)\n- தொகுப்பு : தமிழ்ப் பணி மன்றம் ஆட்சியர் வை.வேதரெத்தினம்\nஇப்பட்டியலைப் பகிர்வு (share) செய்யுங்கள். உங்கள் நண்பர்களும் பார்த்துப் பயனடையட்டும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/160047", "date_download": "2018-05-27T03:27:25Z", "digest": "sha1:VKCVQNNJTUHDWQRJRRDQB7LIDPQW724V", "length": 6685, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“ஆயர் ஹீத்தாமைத் தக்க வைப்பேன்” – வீ கா சியாங் நம்பிக்கை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “ஆயர் ஹீத்தாமைத் தக்க வைப்பேன்” – வீ கா சியாங் நம்பிக்கை\n“ஆயர் ஹீத்தாமைத் தக்க வைப்பேன்” – வீ கா சியாங் நம்பிக்கை\nகோலாலம்பூர் – எதிர்கட்சியைச் சேர்ந்த ஜசெகவோ, அமனாவோ எந்தக் கட்சிப் போட்டியிட்டாலும், கடந்த மூன்று தேர்தல்களாகத் தான் தொடர்ந்து வெற்றியடைந்து வரும் ஆயர் ஹீத்தாம் தொகுதியை யாராலும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என மசீச துணைத் தலைவர் வீ கா சியாங் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\n“நான் கவலைப்படவில்லை. அது ஜசெகவோ அல்லது அமனாவோ எந்த ஒரு சவாலாக இருந்தாலும் நான் சந்திக்கத் தயார். என்னுடைய சேவை மற்றும் தேசிய முன்னணியின் ஆதரவின் அடிப்படையில் நான் எனது தொகுதியைத் தக்க வைப்பேன்” என வீ கா சியாங் எஃப்எம்டியிடம் கூறியிருக்கிறார்.\nPrevious articleஆண்டாள் விவகாரத்தில் சாதிக் கலவரத்திற்கு வித்திடுகிறார்கள்: கி.வீரமணி\nNext articleஒபாமாவைக் குறை கூறி லண்டன் பயணத்தை இரத்து செய்த டிரம்ப்\nசெல்லியல் பார்வை: இந்தியர் கட்சி கிடையாது ஆனால் நாடாளுமன்றத்தில் 16 இந்தியர்கள்\nதேர்தல்-14: நாடாளுமன்றத்தின் 222 தொகுதிகளுக்கான இறுதி முடிவுகள்:\nதேர்தல்-14: அரசியல் எதிரணிகளில் சகோதரர்கள்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஹாங்காங் புறப்பட்டனர்\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\n1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்: குலசேகரன்\n“ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்\nமைபிபிபி இரண்டாகப் பிளவுபட்டது – 2 தேசியத் தலைவர்கள்\nஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)\nஅருள் கந்தா மீது கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizhkadalan.blogspot.com/2009/07/", "date_download": "2018-05-27T03:26:29Z", "digest": "sha1:GIX2636EL5KJC54GVPLFFTZSO7DBGSTL", "length": 7229, "nlines": 81, "source_domain": "tamizhkadalan.blogspot.com", "title": "வணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம். தமிழ் காதலன்: 07/01/2009 - 08/01/2009", "raw_content": "\nஆஸ்கர் விருதுக்கு சாம் ஆண்டர்சன் தேர்வு. \"விருதே விருது வாங்குகிறது\"\nஆஸ்கர் விருதுக்கு சாம் ஆண்டர்சன் தேர்வு. \"விருதே விருது வாங்குகிறது \" இது ஒரு \"கற்பனை\" டெலிபோன் உரையாடல் .\nகமல் : ஹலோ கமல் ஹியர் ..\nசாம் : ஹலோ கமல் நான் சாம் ஆண்டர்சன் பேசறேன்.\nகமல் : ஹலோ சார் வணக்கம் .நானே உங்கள பாக்கலாம்னு தான் கிளம்பிட்டு இருந்தேன் .. அதுக்குள்ள நீங்க .. என்ன சார் திடீர்னு .., உங்க பி.ஏ கிட்ட சொல்லி கூபிடுனு சொல்லியிருந்தாலே அடுத்த நிமிஷம் நான் அங்கிருந்திருப்பேன்.\nசாம் : பரவாயில்ல கமல் பி.ஏ க்கு ஒரு படத்துல டான்ஸ் மாஸ்டர் கேரக்டர் ஒன்னு வந்துச்சு . நான் தான் ,சான்ஸ் கிடைக்கறப்போ பயன்படுத்திக்கோனு சொல்லி அனுப்பிச்சேன்.\nகமல் :சந்தோசம் சார்.உங்களோட மனசு யாருக்கு வரும் .\nசாம் :அப்புறம் கமல் ஏதோ என்ன பார்க்க கிளம்புனதா சொன்னியே ,என்ன விஷயம் .\nகமல் :அய்யா எனக்கு கூட புதுசா ஒரு படம் கமிட் ஆகியிருக்கு ..அதான் உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கலாம்னு புறப்பட்ட அதுக்குள்ளே உங்களோட கால் .....\nசாம் :அப்புடியா ..சரி சரி ...அப்புறம் என்னோட ''யாருக்கு யாரோ'' படம் ஆஸ்கருக்கு பரிந்துரை பண்ணியிருக்காங்க .மொத்தம் அஞ்சு பிரிவுக்கு ,அதுல நாலு எனக்கு.\nகமல் :அப்படிங்கள யா ரொம்ப சந்தோசம் .\nசாம் :அப்புறம் கமல் அஞ்சு ஆஸ்கர் என்னோட படத்துக்கு உறுதியா கிடைக்கும்னு பேச்சு அடிபடுது அதனால., உலகத்துல உள்ள அத்தனை கலைஞர்களும் எனக்கு போன்ல வாழ்த்துக்கள் தெரிவிச்சபடி இருக்காங்க ..அது போக பேக்ஸ்,மெயில்னு எக்கச்சக்கமா வந்துட்டிருக்கு .. டெலிகிராம் கூட அனுப்பிட்டு இருக்காங்க ..\nகமல் : ஒரே படத்துல இப்படி கலக்கிட்டீங்களே சார் .\nசாம் :கமல் லயன்ல இரு ஏதோ சட்டம் கேட்குது என்னன்னு பார்த்துட்டு வந்துர்றேன் .\nகமல் :டேய் என்னடா கண்ணு கலங்கியிருக்கு\nடிரைவர் : சார் அது வந்து .............\nகமல் :மெதுவா சொல்லுடா தலைவர் லைன்ல இருக்கார் .\nடிரைவர் :சார் என்னோட பிரெண்ட்ஸ் யாருக்கு யாரோ படம் பாத்துட்டு இருக்கும் போது..\nகமல் :சொல்லுடா ....... அஞ்சு ஆஸ்கர் அவார்ட் கிடைக்கும்னு பேச்சாமே .,நீ பாத்தியா எப்படியிருக்கு..\nடிரைவர் : பிரெண்ட்ஸ் கூட படத்துக்கு போறதா இருந்தேன் .....\nகமல் :முதல்லயே தலைவரோட படத்துக்கு போகனும்னு சொல்லியிருந்தா அனுப்பியிருப்பனே..\nடிரைவர் :ஏன் நான் உயிரோட இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா .\nவணக்கம் எனது பிளாக்கிற்கு வருகை புரிந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வந்தே மாதரம்.\nஆஸ்கர் விருதுக்கு சாம் ஆண்டர்சன் தேர்வு. \"விருதே வ...\nஅதிகம் சொல்ல எதுவும் இல்லை, எழத வேண்டும் என்பதே எனது ஆசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://veeduthirumbal.blogspot.com/2012/03/", "date_download": "2018-05-27T03:19:14Z", "digest": "sha1:WSRR6MSHEPB3XUNNLRRSJ2GGW4H2L47B", "length": 96190, "nlines": 525, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: March 2012", "raw_content": "\nஏப்ரல் 1 : சட்டக்கல்லூரி நண்பர்களை ஏப்ரல் Fool ஆக்கியது எப்படி\n இன்னமும் அருகில் இருப்போரை முட்டாளாக்க பார்க்கும் பழக்கம் குறைய வில்லை. மனைவியையும் குழந்தையும் நாளை எப்படி ஏமாற்றுவது என டீப்பா யோசிச்சிட்டு இருக்கேன்\nசட்டக்கல்லூரி கோஷ்டி இன்று : இடமிருந்து வலம்: நித்தி, மோகன்குமார், நவீன் (பாலா- டெய்ஸி மகன்), ரவி, பிரேம், டெய்ஸி, பாலா\nபலரையும் பல விதமாய் ஏமாற்றினாலும், 18 வருடங்களுக்கு முன் கல்லூரி காலத்தில் நண்பர்கள் பிரேம் மற்றும் டெய்ஸியை April fool-ஆக்கியது பசுமையாக இன்னும் நினைவில் ....\nஅதனை சொல்லும் முன் எங்கள் கேங் பற்றி சுருக்கமாக. 20 வருடத்துக்கு முன் சட்டகல்லூரியில் படித்த போது, எங்கள் செட் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சேர்த்து 15 - 20 இருப்போம். ஒவ்வொருவர் பிறந்த நாளுக்கும் சினிமா மற்றும் ஹோட்டல் போவது வழக்கம். ஒரே கொட்டம் தான் \n20 நெருங்கிய நண்பர் குழுவில் இரு காதல் திருமணம் நடந்துள்ளது. மற்ற அனைவரும் நண்பர்கள்.. அவ்வளவு தான் \nஇந்த பகுதியில் நாம் பார்க்க போகும் நபர்கள் பாலா, பிரேம் மற்றும் டெய்சி.\nஇந்த முறை போலவே ஏப்ரல் 1: அந்த வருடம் ஒரு ஞாயிறில் வந்தது. அன்று கல்லூரி இல்லை.\nநண்பர்கள் பிரேம் மற்றும் டெய்சியை ஒரே நேரத்தில் ஏப்ரல் Fool -ஆக்க, பாலாவும் நானும் சேர்ந்து plan போட்டோம்.\nமுதலில் பிரேமுக்கு போன் செய்தோம்.\n\" டேய் விஷயம் தெரியுமா\n\" வெளியே போயிட்டு cycle-ல் வீட்டுக்கு வரும் போது, கார் மோதிடுச்சு\"\n\" டெய்ஸி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள BHEL Hospital தான் ; நீ டெய்ஸி வீட்டுக்கு வந்துடு. அங்கே கேட்டுகிட்டு ஆஸ்பிட்டல் போயிடலாம் \" என போனை வைத்தோம்.\nஅடுத்த அரை மணி நேரம் காத்திருந்து விட்டு, பின், டெய்ஸி வீட்டுக்கு போனோம்.. (பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிரேம், டெய்ஸி வீட்டுக்கு வர அரை மணி நேரம் ஆகும் \nடெய்ஸியீடம் இதே கதையை மாற்றி சொன்னோம்...\n\"பிரேமுக்கு accident ஆகிடுச்சு\" .\n\" ஐயையோ என்ன ஆச்சு\n\"அதெல்லாம் போகும் போது பேசிக்கலாம். கிளம்பு ; Hospital போய் பார்த்துட்டு வரலாம்\" என பேசிட்டு இருக்கும் போதே கதவு மீண்டும் தட்ட பட்டது.\nடெய்ஸி போய் கதவு திறக்க, எதிரே நின்றது பிரேம்.\n\"உனக்கு accident ஆகிடுச்சு -ன்னு சொன்னாங்களே\" என பிரேம் கேட்க டெய்ஸியும் அதையே பிரேமிடம் கேட்க...\nநானும் பாலாவும் \"ஏப்ரல் Fool ஏப்ரல் Fool \nஅப்புறம் பாலாவுக்கும் எனக்கும் அவர்கள் இருவரிடமிருந்து செம மாத்து விழுந்தது..\nஅடி, உதை சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த டெய்ஸி அம்மா \" ஏம்பா accident-ன்னு சொல்லியா ஏமாத்துவீங்க\" என எங்களை கேட்டாலும், அவரும் சிரித்து தீர்த்தார்.\nஅதன் பின் பிரேமை அருகிலிருந்த பாலா வீட்டுக்கு கூட்டிட்டு போய், அரை நாள் பேசிட்டு இருந்து பின் அனுப்பினோம்..\nஅப்போதெல்லாம் நண்பர்கள் மணி கணக்கில் பேசுவோம்.. அரசியல், சினிமா, college politics என எத்தனையோ விஷயங்கள்..\nஇப்போது பாலாவுக்கும் டெய்ஸிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ப்ரேமுக்கும் ரெண்டு குழந்தைகள் ..\nகல்லூரியில் 5 வருடம் ஒன்றாய் சுற்றிய நண்பர்களில் பலர் சென்னையில் தான், கல்யாணம் ஆகி settle-ஆகி விட்டனர்.\nஇப்போதும் 3 - 4 மாதங்களுக்கு ஒரு முறை குடும்ப சகிதமாய் எதாவது ஒருவர் வீடு அல்லது ஒரு ஹோட்டலில் 6 or 7 குடும்பங்கள் சந்திப்போம். ஹோட்டல் என்றால் அனைவரின் குட்டி பசங்களும் அங்கும் இங்கும் ஓடி எதையாவது கீழே தள்ளி விடுவர்.. Hotel bearer -தான் எதுவும் உடைய கூடாது என கவலையில் அவர்கள் பின்னால் ஓடுவர்..\n அனைத்தையும் மறந்து யாராவது ஒருவனை செமையாய் கிண்டல் செய்து சத்தமாய் சிரித்தவாறு இருப்போம்...\nநம்முள் இருக்கும் குழந்தையை எழுப்பி பார்க்கும் இத்தகைய (ஏப்ரல் Fool) குதூகலங்கள் தேவை தான்.\nநாளை யாரை ஏமாற்றலாம் என யோசியுங்கள். கூடவே நீங்கள் யாரிடமும் ஏமாறாமல் இருக்க முயலுங்கள் \nLabels: அனுபவம், கல்லூரி காலம்\nகேரள பயணக்கட்டுரை: பாகம்-4: 20ஆவது மாடியில் அற்புத சர்ச்டவர்\nதிருச்சூரில் நான் பார்த்த Zoo, மியூசியம் மற்றும் சர்ச் டவர் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்\nசென்னை வண்டலூர் / மைசூர் Zoo-க்களுக்கு சென்றிருந்தால், மற்ற Zoo சின்னதாய் தெரியும் தான். ஆனாலும் அவை செல்லாதோருக்கு இது பெரிய இடம் தான் சின்ன Zoo போல தெரிந்தாலும் பின் நடந்து நடந்து கால் வலி வந்து விட்டது \nநுழைந்த உடன் கிளிகள் உள்ளன. அவற்றை பார்த்ததும் எங்கள் கிளிகள் நினைவு வர சற்று Homesick ஆகி விட்டது. ஒருவழியாய் மீண்டு மற்ற இடங்கள் சென்றேன்\nஆந்தை முழின்னு சொல்றாங்களே; முழியை நேரில் பாத்தா நிஜமா பயமா தான் இருக்கு :))\nஆந்தைக்கு சாப்பிட இறந்த எலியை வைத்துள்ளனர்; கீழே பாருங்கள் தெரியும்\nஆர்ட் மியூசியம் Zoo-விற்கு நடுவில் உள்ளது. அதனை சுற்றி பல வண்ண மலர்கள், செடிகள் மனதை மயக்குகிறது இதில் பழங்கால கற்கள், மணல் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளன.\nமன்னர்கள் பயன் படுத்திய வாள், அம்பு முதலியவையும் உண்டு.\nசிங்கம், யானை, புலி போன்ற மிருகங்கள் பாடம் செய்யப்பட்ட நிலையில் இங்கு உள்ளது.\nயானை, சிங்கம் இவற்றின் எலும்பு கூடும் உண்டு\nஅங்கும் மின்சார பற்றாக்குறையோ என்னவோ எந்த மின்விசிறியும் ஆன் செய்ய வில்லை\nஇங்கு தமிழ் குரல் கேட்டது. சில கல்லூரி பெண்கள் அறிமுகம் செய்துகொண்டு எந்த ஊர் என கேட்டேன். கோபிசெட்டிபாளையம் குமுதா ஆசிரியர் கல்லூரியில் இருந்து வருவதாகவும், கல்லூரியிலிருந்து சேர்ந்து வந்துள்ளோம் என்றனர். வெளியூர் செல்லும் போது தமிழ் குரல் கேட்டால் நிறையவே மகிழ்ச்சி தான். (டேய் உண்மையை சொல்லு; எவ்வளவு நேரம் சேர்ந்து சுற்றி கடலை போட்டாய் அறிமுகம் செய்துகொண்டு எந்த ஊர் என கேட்டேன். கோபிசெட்டிபாளையம் குமுதா ஆசிரியர் கல்லூரியில் இருந்து வருவதாகவும், கல்லூரியிலிருந்து சேர்ந்து வந்துள்ளோம் என்றனர். வெளியூர் செல்லும் போது தமிழ் குரல் கேட்டால் நிறையவே மகிழ்ச்சி தான். (டேய் உண்மையை சொல்லு; எவ்வளவு நேரம் சேர்ந்து சுற்றி கடலை போட்டாய் என பின்னூட்டம் போட்டால், பதில் கிடைக்காது. )\nபுலியையும் அதனை ரசிக்கும் குட்டி பாப்பாவையும் இந்த வீடியோவில் காணலாம் கூடவே (பாப்பாவின் அம்மா ப்ளீஸ் டைகர் என கிட்டே வர சொல்லி கூப்பிடுவதையும் கேட்கலாம்)\nபெரிதான ஆலமரம் ; பலர் இங்கு படம் எடுத்தனர்\nபடம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்\nமாடு போல இருக்கும் வித்யாசமான இந்த மிருகம் பேர் மிதுனாம் \nவிழுந்து கிடக்கும் இந்த மரதோற்றம் வித்யாசமாய் இருந்தது. நான் சரியான கோணத்தில் எடுக்கலை. கலை அம்சம் உள்ளோர் எடுத்தால் நன்கு எடுத்திருப்பர்\nஅங்குள்ள சில மான்களுக்கு வயலட் நிற மருந்து போட்டு கொண்டிருந்தனர். விசாரித்ததில் மான்களுக்கு ஜூரம் என்றும் அதற்கு தான் மருந்து போடுவதாக கூறினர்.\nஇந்த வீடியோவில் சிங்கம் மற்றும் தண்ணீர் அருகே ஹாயாக படுத்திருக்கும் சிறுத்தை புலி பார்க்கலாம்:\nஇந்த கிராமத்திலிருந்து இருநூறு பேர் முதலாம் உலக போரில் கலந்து கொண்டதாக இந்த நினைவு தூண் சொல்கிறது. அதில் இறந்தவர், பிழைத்தவர் குறித்த எண்ணிக்கை இல்லை \nZoo மற்றும் மியூசியத்தில் வேலைக்கு இருப்பது அநேகமாய் பெண்கள் அவர்கள் அனேகமாய் பேப்பர் படித்து கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே அங்கு வரும் குழந்தைகளை, அவர்கள் பிறரை ரசிப்பதை பார்த்த வண்ணம் உள்ளனர்.\nஎன்ன மரம் என தெரியலை\nZoo-விலிருந்து சர்ச் டவர் செல்லும் வழியில் உள்ளது இந்த அரசு பில்டிங். நமது ராஜாஜி ஹால் மாதிரி இடம் போலும் இது. முன்னாள் முதல்வர் கருணாகரன் மறைந்த போது மக்கள் அஞ்சலி செய்ய இங்கு தான் வைத்திருந்தனராம்\nஇங்கு தற்போது ஒரு லைப்ரரி உள்ளது. போட்டோ எடுக்கும் போது சரியாக ஒரு நபர் நடுவே வந்து விட்டார்.\nதிருச்சூரின் புகழ் பெற்ற சர்ச் டவர் இந்த சர்ச்சை சார்ந்தது தான். இந்த பில்டிங்கிற்கு பின்னே தான் சர்ச் டவர் உள்ளது. இந்த சர்ச் 1921-ல் கட்டி முடிக்கப்பட்டது\nசர்ச் உள்ளே உள்ள கேரள பாணி கட்டிடம்\nசர்ச் டவர் கட்டப்பட்டது 2002-ல் துவங்கி 2006-ல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரீசன்ட்-ஆக கட்டப்பட்டது தான் \nசெல்லும் போது லிப்டில் சென்று விடலாம். இதற்கு டிக்கெட் முப்பது ரூபாய் வாங்குகின்றனர். (நடந்து சென்றால் இலவசம்). இருபத்தி மாடி என்பதால் மேலே ஏறும்போது லிப்டில் சென்று விட்டு இறங்கும் போது நடந்து வருவது நல்லது. ஏன் இறங்கும் போது நடக்க வேண்டும் என்கிறீர்களா\nமேலே சென்று அவ்வளவு உயரத்தில் திருச்சூர் அழகை ரசிக்கலாம். ஆனால் அதை விட இறங்கும் போது இருபது மாடிகளின் படிகளிலும் வரைந்த ஓவியங்களை, அதன் அழகை ரசிக்க தான் நீங்கள் நடந்து இறங்க வேண்டும்.\nஇயேசு குறித்து கதை (பிறந்தது முதல், சிலுவையில் அறையப்பட்டு உயிர்ப்பிப்பது வரை) . பிற மதத்தவரும் படங்கள் வரைந்த கலையை நிச்சயம் வியந்து ரசிப்பார். சுவற்றில் வரைந்தவை அழகு எனில், கண்ணாடியில் வரைந்தவை மிக அழகு.\nசர்ச் டவர் உள்ளேயும் ஓவியங்களையும் படம் எடுக்க அனுமதி இல்லை. செல்போன் கூட எடுத்து போக முடியாது. லாக்கரில் செல்போன் வச்சு பூட்டிட்டு தான் உள்ளே அனுமதிக்கிறார்கள்\nசர்ச் டவர் அருகேயுள்ள சிலைக்கு முன்பு\nஇந்த இருபது மாடி கட்டிடத்தின் பில்லர்கள் கூட சிலுவை போன்ற வடிவில் செய்திருப்பது பார்த்து அசந்து போனேன். சர்ச் டவர் மற்றும் படங்களை பராமரிக்க கத்தோலிக்கன் சிரியன் பேன்க் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உதவுகின்றன.\nZoo-விலிருந்து கிளம்பி ஆட்டோவில் தான் மேலே சொன்ன இடங்கள் ஒவ்வொன்றாக பார்த்தேன். உடன் வந்த ஆட்டோ டிரைவர் பெயர் ஜோமன். இவர் ஒரு கிறித்துவர்; ஆயினும் சர்ச் டவர் மேல் இது வரை ஏறி பார்த்ததில்லையாம். அவரையும் உடன் அழைத்து சென்றேன். என்னை விட மேலே வந்து பார்த்த போதும் சரி, இறங்கும் போது ஓவியங்களை பார்த்தபோதும் அவர் மிக மகிழ்ந்தார் \nதன்னை எடுத்த போட்டோவை வாங்கி பார்த்து விட்டு குழந்தை போல சிரித்தார். அவர் முகவரி வாங்கி வரவில்லை. இல்லாவிடில் போட்டோ பிரிண்ட் போட்டு அனுப்பியிருக்கலாம் \nஅடுத்த பதிவில்: மனதை மயக்கிய அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி\nLabels: அனுபவம், கேரளா, பயண கட்டுரை\nவானவில் 81 :ஆபிஸ் விளையாட்டு: கையை சுட்டு கொண்ட எழுத்தாளர்\nநம்மை பார்த்து கெட்டு போனவர்கள்\nநாம் ப்ளாக் எழுதுவது, நண்பர்கள் சிலருக்கு ப்ளாக் துவங்க உந்துதலாக உள்ளது. சமீபத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர் ப்ளாக் துவக்கிட்டாங்கன்னா பாத்துக்குங்க கண்ணன் என்ற பள்ளி நண்பன் ஒரு ப்ளாக் துவக்கி உள்ளான். அதன் லிங்க் பிறகு தருகிறேன் (பையன் முதல் பதிவிலேயே என்னை வில்லன் மாதிரி எழுதிட்டான். படிச்சா நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிடும்)\nராமசுப்ரமணியம் என்கிற கம்பனி செகரட்டரி \"வழித்துணை\" என்கிற ப்ளாக் ஆரம்பித்துள்ளார். , தமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ் உள்ளிட்ட பதிவுலக அவசியங்கள் அவருக்கு தெரியலை என்னுடன் சேர்ந்து நீங்களும் அவருக்கு கற்று தாருங்கள்: \"தொலை பேசி அழைப்புகளில் இருந்து தப்புவது எப்படி\" என ஒரு பதிவு எழுதி உள்ளார். நகைச்சுவை இயல்பா வருது. வாசித்து உங்கள் ஆதரவை தாருங்கள்\nஇந்தியா மட்டுமில்ல நாம் சப்போர்ட் பண்ற எல்லா டீமும் தோக்குது\nஇலங்கை Vs ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலிய முத்தரப்பு கிரிகெட்) : ஆஸ்திரேலியாவை சப்போர்ட் பண்ணோம். தோத்துடுச்சு\nஇலங்கை Vs பங்களாதேஷ். (ஆசிய கோப்பை லீக் ஆட்டம்) இலங்கையை சப்போர்ட் பண்ணோம். தோத்துடுச்சு\nபாகிஸ்தான் Vs பங்களாதேஷ் (ஆசிய கோப்பை பைனல்) .பங்களாதேஷ் சப்போர்ட் பண்ணோம். அதுவும் தோத்துடுச்சு\nஏதோ சதி திட்டம் நடக்குதுன்னு நினைக்கிறேன் :))\nபவர் கட் பற்றி எங்கோ வாசித்த ஒரு ஜோக்:\nபிறந்த குழந்தை கண்ணு முழிச்சு கேட்டுதாம்: கரண்டு இருக்கா\n மறுபடி தமிழ் நாட்டுலே வந்து பிறந்துட்டேனா\"\nசச்சின் அடிச்சது ஒன் டேயில் 49-ஆவது சென்சுரியாம் அப்போ அடுத்தது 50-ஆவதுக்கு மறுபடி காத்திருக்கணுமா\nஇன்னிக்கு நைட்டு நீயா நானா சுவாரஸ்யமான டாபிக்...\" மாமியார் Vs மருமகள்\". கல்யாணமான அனைவரும் பார்த்து மகிழலாம்.. பார்க்கும் போது நமட்டு சிரிப்புடன், மேலே வேறு ஏதும் கமெண்ட் அடிக்காமல் பார்ப்பது இல்லற வாழ்வுக்கு நல்லது\nஇளம் வயதிலேயே GV பிரகாஷின் திறமை வியக்க வைக்கிறது. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் \"கண்கள் நீயே\" என்கிற இந்த பாட்டை கேட்டுள்ளீர்களா டியூன் மற்றும் இசை \nபடத்தில் பார்க்கும் போது அந்த அளவு தாக்கம் இல்லை என்பதால் பாடலின் ஆடியோ மட்டும் தான் இங்கு ஷேர் செய்கிறேன்.கேட்டு பாருங்கள்\nஇது ஒரு அம்மா பாச பாட்டு தான். ஆனால் பாடல் பிடிப்பதற்கு காரணம் அம்மா செண்டிமெண்ட் அல்ல மிக அற்புதமான மெலடி, மனதை மயக்கும் பாடலின் டியூன் இவை தான் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.\n மலையாள பாடகியான இவரின் முதல் தமிழ் பாடல் இது என நினைக்கிறேன். என்ன ஒரு குரல் என்ன ஒரு திறமையான rendition என்ன ஒரு திறமையான rendition இவரின் அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறேன்.\nரேடியோ மிர்ச்சி பல நிறுவனங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு சில போட்டிகள் நடத்தி குஷிபடுத்தி வருகிறது. இந்த வாரம் எங்கள் அலுவலகம் வந்து டான்ஸ், பாட்டு மற்றும் நிறைய குட்டி போட்டிகள் வைத்து அசத்தியது. என் டீமில் பணி புரியும் ஒருவர் \"சாதுவாய் பூனை\" மாதிரி இருப்பார். ஆனால் அன்று டான்சில் வெளுத்து வாங்கி விட்டார். பார்த்த அனைவரும் அசந்து போய் விட்டனர். பார்க்காத நண்பர்களுக்கு மாலை கேண்டினில் வேறு ஆடி காட்டினார். ஒரு போட்டியில் அய்யாசாமியையும் மாட்டி விட்டனர்.\nவேலை சுமையை மறக்க, Employees -க்கு இதெல்லாம் தேவையாய் உள்ளது ஒவ்வொரு நிறுவனத்திலும் HR-ல் ஒரு டீமே இத்தகைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் செய்து வருகின்றன.\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வென்றது மகிழ்ச்சி. ஆனால் பெரும்பாலான ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன பாருங்கள் உலகம் முழுதும் அரசியல் வாதிகள் எந்த பிரச்சனையிலும் தனக்கு என்ன லாபம் என்பதை பொறுத்தே நிலைப்பாடு எடுப்பார்களே அன்றி நியாயம் பக்கம் இருக்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது.\nஇந்தியா மட்டும் என்னவாம். ஆதரித்து வாக்களித்தாலும், இலங்கை பாதிக்காத அளவு அந்த தீர்மானத்தை மாற்றியது நாங்கள் தான் என்கிறது. நல்லா இருக்குதுய்யா உங்க நியாயம் \nஇந்த தீர்மானத்துக்கு பிறகாவது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நல்லது நடக்கிறதா என பார்க்கலாம் \nதேர்வில் குறைந்த மதிப்பெண்: மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை\nமைசூரில் ஒரு தந்தை தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் பெண்ணை கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைத்துள்ளார். தாய் இல்லாத இந்த பெண் அழுது கொண்டே பிச்சை எடுத்துள்ளார். போலிசுக்கு தகவல் தெரிந்து கைதான தந்தை இப்போது அவளை தன்னுடன் சேர்த்து கொள்ள மறுக்கிறாராம் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என உணர்த்தவே இப்படி செய்ததாக சொல்கிறாராம் அவர். படிப்பின் பேரில் நம் குழந்தைகளை எவ்வளவு படுத்துகிறோம் பாருங்கள் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என உணர்த்தவே இப்படி செய்ததாக சொல்கிறாராம் அவர். படிப்பின் பேரில் நம் குழந்தைகளை எவ்வளவு படுத்துகிறோம் பாருங்கள் நம் கல்வி முறை மாற வேண்டியது எத்தனை அவசியம் என இன்னும் ஒரு முறை நமக்கு சொல்கிறது இந்த நிகழ்ச்சி. கூடவே நம் குழந்தைகள் மேல் நாம் செலுத்தும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தான் \nஇது குறித்த பத்திரிக்கை செய்தி இங்கே\nகையை சுட்டு கொண்ட எழுத்தாளர்\nசமீபத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர் செமையாக கையை சுட்டு கொண்டார். ஏதோ புத்தகம் போட்டு சரியாக விற்காமல் கையை சுட்டு கொண்டார் என நினைத்தீர்களா அது தான் இல்லை. அவர் வீட்டு அடுப்படியில் தான் இது நடந்தது அது தான் இல்லை. அவர் வீட்டு அடுப்படியில் தான் இது நடந்தது மனைவி வாணலியில் காய்கறி சமைத்து அடுப்பை ஆப் செய்திருக்க, இந்த எழுத்தாளர் பிடி துணி வைத்து தான் இறக்கினார். ஆனால் மெல்லிய துணி என்பதாலோ என்னவோ கை நன்றாக சுட்டு கொப்பளம் வந்து விட்டது. இதை காரணம் காட்டி அடுத்த இரு நாள் வீட்டில் வேலை செய்யாமல் ஓ. பி அடித்தார். அலுவலகத்தில் கையெழுத்து போட ஒரு பெரிய பண்டில் வர, \"இருநூறு முன்னூறு கையெழுத்தெல்லாம் ரெண்டு நாள் வரை போட முடியாது; கையில் கொப்பளம் வந்துடுச்சு\" என பந்தா காட்டினார். பொறுத்து பொறுத்து பார்த்த அவர் மனைவி, \" தினம் எத்தனையோ தடவை சூடு வாங்கிட்டு தான் சமைக்கிறேன். சீன் போடாம வேலையை பாருங்க\" என்றதும் \" நீ சொன்னா சரிதான் \" என்று பம்மியபடி மீண்டும் வேலையில் குதித்தார்.\nஇந்த புகழ் பெற்ற எழுத்தாளர் யார் என்பது சஸ்பென்ஸ். :)))\nடிஸ்கி: 1. கோடை விடுமுறையை முன்னிட்டு, வீடுதிரும்பல் வாசிப்போர் பயன்பெறும் வகையில் மே மாதம் முடியும் வரை அனைத்து வெள்ளிகிழமைகளும் வெவ்வேறு ஊர்களின் பயண கட்டுரை வெளியாகும் \nடிஸ்கி 2. நேற்றைய பதிவு: அஜூ என்கிற பியூட்டிபாய்\nஎங்கள் குடும்பத்தில் ஐக்கியமான புதிய நபர்: படம் & வீடியோக்களுடன்\nகுடும்பத்திற்கு வந்த புது நபர் என்றதும் என் பெண்ணுக்கு தம்பி அல்லது தங்கை என நினைத்து உள்ளே வந்திருந்தால் ஐ யாம் சாரி \nஎங்கள் வீட்டுக்கு ஒரு புது ஆண் கிளி வந்துள்ளது. அவன் பெயர் அஜூ. பியூட்டி பாய் என்றும் செல்லமாய் கூப்பிடுவோம் அவனை தான் உங்களுக்கு அறிமுக படுத்த போகிறேன். எங்களிடம் உள்ள நாட்டி என்கிற பெண் கிளி பற்றி ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.\nஅஜூ வீட்டுக்கு வந்ததிலிருந்து துவங்கலாம்\nநாட்டி தனியாக உள்ளது. துணை கிளி வேண்டும் என கொஞ்ச நாளாகவே பேசி வந்தோம். வாராவாரம் வெள்ளியன்று பல்லாவரம் சந்தை நடக்குமென்றும் அதில் கிளி கிடைக்குமென்றும் தெரிய வந்தது. ஒரு வெள்ளியன்று திடீரென முடிவெடுத்து பெண்ணை பள்ளியில் விட்டு விட்டு நேரே பல்லாவரம் சந்தைக்கு சென்றேன். கிளி விற்பவரை காண, அவர் அஜூவை காட்டினார். சின்ன துணி பையில் போட்டு வைத்திருந்தார். \"துணி பைக்குள் மூச்சு முட்டிடாதா\" என்றால் \"அதெல்லாம் ஆகாது\" என்றார். அஜூவை அப்படியே வண்டி பாக்ஸில் போட்டு விட்டு கிளம்பினேன். பைக்குள் வேறு இருக்கான்; பாக்ஸ் வேறு மூடி இருக்கு செத்து போயிட போறான் என மிக மிக வேகமாய் ஓட்டி வீடு வந்து சேர்ந்தேன்.\nபாக்சை திறந்து பார்த்தால் பையை விட்டு வெளியே வந்து கோழி போல ஒடுங்கி உட்கார்ந்துள்ளான். இப்போ அடுத்த பிரச்சனை. எப்படி வீட்டிற்கு உள்ளே கொண்டு போவது என்பது. கையில் தூக்கி கொண்டு நடந்தால் பறந்திட வாய்ப்புண்டு. மேலும் அறிமுகம் இல்லாததால் நன்கு கடிக்கவும் கூடும். வண்டியை எப்படியேனும் வீட்டினுள் கொண்டு போய் பாக்ஸ் திறக்க பார்த்தால் வண்டியை மேலே ஏற்ற முடியலை. பின் ஒரு வழியாய் கதவுக்கு அருகில் வண்டியை வைத்து விட்டு அவனை தூக்கி வீட்டினுள் விட்டு விட்டு கதவை சாத்தி விட்டேன்.\nஅப்போது வீட்டில் ஒரு பெரிய கூண்டும் ஒரு மிக சிறிய கூண்டும் இருந்தன. நாட்டி வெளியே வேண்டுமானாலும் இருக்கட்டும். இவன் பெரிய கூண்டில் இருக்கட்டும் என நாட்டியை வெளியே விட்டு விட்டு இவனை பெரிய கூண்டின் மேல் விட்டேன். நாட்டி இதனை பார்த்தது. மெதுவாக இறங்கி நடந்து வந்து, \" என் கூண்டிலா நீ உட்காருகிறே\" என அவனை கடி கடி என கடித்தது.\nஒரு வழியாய் நாட்டியை பிரித்து இருவரையும் வேறு வேறு ரூமில் போட்டு விட்டு ஆபிஸ் கிளம்பினேன். வீட்டில் ஆள் இல்லாததால் எப்படி இருப்பான் என அலுவலகம் சென்றும், முதல் நாள் யோசனையாகவே இருந்தது.\nமாலை வந்து பார்த்த பெண்ணுக்கும் மனைவிக்கும் செம Surprise + குஷி.\nமுதல் இருநாள் அஜூ ஒழுங்கா சாப்பிடாம, தூங்காம இருந்தான். அப்போது நாட்டியையும் இவனையும் ஒன்றாக விட மாட்டோம். புது கிளிகளை தன் இடத்தில் விட கூடாது என கொத்தி கொத்தி கொன்றும் விட கூடும் என தெரிந்தவர் ஒருவர் கூறியிருந்தார் .\nஅஜூவுக்கு புது கூண்டு வாங்கினோம். ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் இரு கிளிகளும் ஒன்றாய் இருக்கும். நாங்கள் இல்லாத போது தனி தனி ரூமில் போட்டு விடுவோம். பின் நன்கு பழகியதும் அருகருகே உள்ள கூண்டில் வைத்து விட்டு போய் விடுவோம்.\nகொஞ்சம் கொஞ்சமாய் இரண்டும் நன்கு பழகி இப்போது ஒரு நிமிடம் கூட ஒன்றை விட்டு அடுத்தது இருக்காது என்கிற நிலை வந்து விட்டது.\nமுன்பெல்லாம் நாட்டியை நாங்கள் தூக்கி கொஞ்சினால் பேசாமல் இருக்கும். சோபாவில் நம் அருகில் வைத்து விட்டு நாம் பாட்டுக்கு புத்தகம் படிக்கலாம். டிவி பார்க்கலாம். அது பேசாமல் உட்கார்ந்திருக்கும். சோபா மேல்புற முனையில் அமர்வது முன்பு நாட்டிக்கு மிக பிடித்தமான ஒன்று. இப்போது அங்கு வைத்தால் உடன் இறங்கி அஜூவிடம் ஓடுவேன் என நிற்கிறது \nமனிதர்களில் பெண்கள் அழகு. விலங்குககளில் பெண்ணினத்தை விட ஆண் அழகு தான். அஜூ-மீசை, தாடி எல்லாம் வைத்து கொண்டு என்ன ஸ்மார்ட் ஆக இருக்கான் பாருங்கள் \nமூக்குக்கு மேலே கோடு போகுது பாருங்க .. அது தான் மீசை. மூக்குக்கு கீழே தாடி தெரியுதா\nநாட்டி முகத்தில் நிறைய சுருக்கம் இருக்கும். இதனால் சில நேரம் \"கிழவி\" என சொல்லி கிண்டல் செய்வோம். ஆனால் இவன் முகத்தில் ஒரு சுருக்கம் கூட இல்லாமல் மொழு மொழு வென்று இருப்பான்.\nஅஜூ வந்த புத்தில் எடுத்த வீடியோ; அப்போது நாட்டியுடன் அதிகம் தோஸ்த் ஆகலை :\nஆரம்பத்தில் இப்படி தனித்தனி கூண்டில் இருந்தனர் நாட்டியும் அஜூவும்.....\nஇன்னும் நாட்டி மாதிரி எங்களிடம் மிக எளிதாய் வர மாட்டேன் என்பது தான் குறையாய் இருக்கு. அவன் அடிக்கும் லூட்டிகள் சில:\nகூண்டு திறந்து இருந்தால் நாட்டி நடந்து நடந்து வெளியே போகும். ஆனால் அஜூ ரெண்டு காலாலும் தாவி தாவி நடப்பான். இது பார்க்க செம அழகாய் வேடிக்கையாய் இருக்கும்.\nகொஞ்சம் நட்பானபின் ஒன்றாய் நடைபோடுகிறார்கள்\nசெம புத்திசாலி. நாம் பேசுவதை நன்கு கேட்பான். சிறு சத்தமும் தெரிந்து விடும். அலர்ட் ஆகிடுவான்.\nஇப்போது எல்லா நேரமும் ஒரே கூண்டினுள்\nவெயில் காலம் என்பதால் பெரும்பாலான நாள் இருவரையும் ஒன்றாய் குளிப்பாட்டுவோம். தண்ணீர் ஊற்றினால் அஜூ நன்கு காட்டுவான். நாட்டிக்கு இன்னும் குளிக்க பிடிப்பதில்லை.\nகுளிக்க போகும் போது மட்டும் இதில் போவார் அஜூ\nகூண்டை விட்டு வெளியே வந்ததும் டைனிங் டேபிள் மேல் ஏறுவார். அங்கு இருக்கும் நீல நிற பர்ஸ்சை கடிக்க அஜூவுக்கு ரொம்ப பிடிக்கும்.\nஇதனை ஒவ்வொரு படியாக புகைப்படம் எடுத்துள்ளோம் பாருங்கள்\nடைனிங் டேபிள் மேல் ஏறியாச்சு.\nஎன்னென்ன இருக்கு என பார்வையிடுறார்\nவந்ததே இந்த பர்சை கடிக்கத்தான் \nநாட்டி அஜூவை கொஞ்சும் வீடியோ, 2 or மூன்று நிமிஷம் ஓடும். சில நிமிடம் பார்த்து விட்டும் க்ளோஸ் செய்யலாம்\nகாலை எழுந்ததும்கூண்டை திறந்து விட்டால் முதலில் அஜூ தான் வெளியே வருவான். எதிரே இருக்கும் ஸ்க்ரீன் மேல் ஏறி அதன் மேலே உள்ள கம்பியில் சென்று அமர்ந்து கொள்வான். அவன் போனதும் நாட்டி கீ கீ என்று சற்று நேரம் கத்தி தீர்க்கும். பின் தானும் வெளியே வந்து அவனை போலவே கம்பிமேலே சென்று அமர்ந்து கொள்ளும்.\nநாங்கள் வீட்டில் உள்ள போது ஹாலில் உயரத்தில் உள்ள கம்பி மேல் தான் இருவரும் அமர்ந்திருப்பார்கள். கதவு பகல் நேரத்தில் திறந்திருந்தாலும் இருவருக்கும் பறக்கும் வெளியே பறந்து தப்பிக்கும் எண்ணம் வரவில்லை\nஸ்கிரீனுக்கு பின்னே ஜன்னல் இருக்கும். ஜன்னலை மூடியுள்ள நெட்லானை அஜூ கடித்து கடித்து ஒரு வழி ஆக்கிட்டான். விரைவில் அதை மாத்தணும் \nரொம்ப நேரம் மேலே இருந்து விட்டு பின் நிறைய பசி வந்ததும் தானாய் கூண்டுக்குள் போய் சாப்பிடுவார்கள். நெடு நேரம் கழித்து சாப்பிடுவதால் நன்றாக சாப்பிடுவர்.\nநாட்டி தான் அஜூவை நன்கு கொஞ்சும். அவன் கொஞ்ச வந்தால், திட்டி தள்ளி விடும். ஸ்க்ரீன் மேலே போனதும் அஜூ தன் தலையை காட்ட, நாட்டி அதனை நன்கு கடித்து கடித்து கொஞ்சும். இதில் அஜூ செம குஷி ஆகிடுவார்.\nஅஜூவிற்கு மிக பிடித்த உணவு வேர் கடலை. ஏனோ தரையில் அமர்ந்து சாப்பிட தான் இவனுக்கு அதிகம் பிடிக்கும்.\nஇரண்டு கால்களையும் விரித்து கொண்டு ஆளவந்தான் கமல் போல\nஅஜூ நிற்கும் காமெடி போஸ் கீழே உள்ள படத்தில்\nஆண் குழந்தை ஒன்று இல்லாத குறையை போக்க வந்த வாலு பயலாக இருக்கிறான் இவன். என்ன ஒன்று இன்னும் எங்களிடம் முழுசாய் பயம் போகலை. எங்கள் கைக்கு வர ஆரம்பிக்கலை. நாட்டி இப்போது சர்வ சாதாரணமாக எங்களிடம் வருவாள். (ஆனால் அஜூ அதே ரூமில் இருந்தால் சீக்கிரம் இறங்கி அவனிடம் போகணும் என துடிப்பாள். வேறு ரூம் என்றால் பேசாமல் எங்களுடன் இருப்பாள்)\nநாட்டி அவ்வப்போது கத்துவாள். அஜூ அநேகமாய் பேசுவதே இல்லை. வீடு பூட்டி விட்டு, நெடு நேரம் கழித்து வந்து திறக்கும் போது ஒரு வித சவுண்ட் கொடுப்பான். எங்கள் பெண் அதே சவுண்ட் திரும்ப தந்தால், தானும் அதே சவுண்ட் விடுவான்.\nநாட்டி ரொம்ப கடித்தால், தொந்தரவு செய்தால் மட்டும் அடி தொண்டையில் சின்னதாய் ஒரு சத்தம் போடுவான். மற்றபடி இவன் தான் அவளை நிறைய வம்பு வளர்ப்பான்.\nஒவ்வொரு நாளும் காலை எங்கள் மூவருக்கும் இவர்களை கொஞ்சிய படி தான் விடியும். Pets -இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறோம் \nஇப்போதைக்கு நாட்டி என் பெண்ணுடைய செல்லம். அஜூ என் செல்லம்.\nநீங்களும் ஏதேனும் ஒரு Pet animal வீட்டில் வளர்த்து பாருங்கள். வாழ்வில் சந்தோஷம் மிகுவதை உணர்வீர்கள் \nடிஸ்கி: நாட்டி பற்றி முன்பு எழுதிய பதிவில் ஹுசைனம்மா \" நாட்டி தனியாவே இருந்துடுமா\" என அக்கறையுடன் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். இதனால் அஜூ வந்து ஒரு மாதம் கழித்து ஹுசைனம்மவிற்கு அவன் எங்களிடம் வந்த தகவல் சொன்னேன். உடன் வந்த பதில்: \"வக்கீல் சார்; பொறுப்பான குடும்ப தலைவர் ஆகிட்டீங்க \" என அக்கறையுடன் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். இதனால் அஜூ வந்து ஒரு மாதம் கழித்து ஹுசைனம்மவிற்கு அவன் எங்களிடம் வந்த தகவல் சொன்னேன். உடன் வந்த பதில்: \"வக்கீல் சார்; பொறுப்பான குடும்ப தலைவர் ஆகிட்டீங்க பின்னே கிளிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடீங்களே :))\nஇறையன்பு எழுதிய \"ஓடும் நதியின் ஓசை\"\nஇறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது.\nஇறையன்பு எழுதிய \"ஓடும் நதியின் ஓசை\" கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்:\n\"சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு ஆசை இல்லை. நான் பகிர்ந்து கொள்ள விரும்புபவை என் அனுபவங்களை\"\nஆயினும் புத்தகம் நிச்சயம் நம்மை குறித்து நிறையவே சிந்திக்க வைக்கிறது.\nசின்ன சின்ன விஷயங்களை உடனுக்குடன் செய்து முடித்தால் நம் முன்னேற்றம் இன்னும் துரிதமாகும் என்பதை தன் அனுபவம் கொண்டே சொல்கிறார்.\nநடைபயிற்சி குறித்த பகுதியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி யாருடனும் சேர்ந்து நடப்பதை விரும்பவே மாட்டாராம். உடன் வருபவர் இயற்கையை உற்று நோக்குவதை, ரசிப்பதை தடை செய்து விடுவார் என்பதே காரணமாம் என்று சுவாரஸ்ய தகவல் கூறுகிறார்.\nஎதிர்காலம் பற்றி சொல்லும் போது \" கணினி எல்லாம் நிறைந்திருக்கும்.... காற்று மட்டும் குறைந்திருக்கும்\" என அவர் சொல்லும் போது நம்மால் பெருமூச்சு விடாமல் இருக்க முடிய வில்லை.\nபடிப்பு மட்டுமே வாழ்வல்ல என்பதற்கு இவர் கூறும் நண்பரின் வாழ்க்கை மாணவர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். எப்போதும் பாடத்தில் முதல் வகுப்பெடுக்கும், சினிமா கூட பார்க்காத, கதை புத்தகம் வாசிக்காத நண்பன் பின்னாளில் வாழ்க்கையில் சற்று குழம்பி, யாருடனும் படிப்பு தவிர வேறு எந்த விஷயமும் பேச முடியாமல் நின்ற நிலையை பகிரும் போது சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது.\nஒவ்வொரு மனிதனும் அங்கீகாரம் தேடவே செய்கிறான். அது கிடைக்கா விடில், என்னை யாரும் அங்கீகரிக்க வில்லை என மனதுக்குள்ளோ, வெளியிலோ புலம்புகிறான். இது பற்றி விரிவாய் பேசும் இறை அன்பு, \"நாம் யாரை அங்கீகரித்துள்ளோம் ..பிறர் நம்மை அங்கீகரிக்க\" என கேள்வி எழுப்புகிறார். பின் இவ்வாறு நெத்தியடியாக சொல்கிறார். \" உண்மையான அங்கீகாரம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொள்கின்ற அங்கீகாரம் மட்டும் தான்\"\n\"நிகழ் காலத்தில் வாழுங்கள்\" என்பது குறித்த அத்தியாயத்தில் அவர் மேற்கோள் காட்டும் \"நொடிக்கு நொடி வாழுங்கள்\" என்கிற ஜென் தத்துவ வரிகள் அருமை \nஎந்த வித மனச்சிக்கலும் இல்லாத நபரை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என ஒரு மன நல மருத்துவரை கேட்டார்கள். \" அப்படி யாரேனும் ஒரு நபர் இருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் குணப்படுத்திவிடுவோம்\" என்கிற வரிகளை வாசித்தவுடன் சிரிப்பு வந்தாலும், அது நமக்கு பெரும் ஆறுதல் தரும் வரிகளாக இருப்பது நிஜம் இந்த வரிகளில் உள்ள உண்மை புரிந்தால், நமக்கு அன்றாடம் வரும் மன குழப்பங்களுக்கு இனி பெரிதாக வருந்த மாட்டோம் \nஉழைப்பு, முயற்சி, பொறுமை குறித்த கீழ் காணும் வரிகள் அற்புதம் \nஒரு விதை ஜெயிப்பதற்கு மரம் எவ்வளவு முறை பூக்க வேண்டியிருக்கிறது எத்தனை முறை காய்களை சுமக்க வேண்டியிருக்கிறது\nதிருப்பதியில் சுவாமியை தரிசிக்கும் நேரம் சில நொடி. ஆனால் அதற்கு சென்று வருகிற கால அளவு எவ்வளவு மணி நேரம்\nதேர்வு எழுதுவது மூன்று மணி நேரம்.ஆனால் அதற்கு படிப்பு எத்தனை மாதங்கள் சில தேர்வுக்கு எத்தனை வருடங்கள் \nநாம் வெகு சாதாரணமாக ஒரு சில நொடிகளில் கடக்கிற பாலம் எத்தனை வருடங்கள் எத்தனை பேரின் உழைப்பில் உருவாகிறது\nஉலகத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்புகளை தந்தவர்கள் எல்லாரும் ஞாபக திறனில் அதிக கவனம் செலுத்தாதவர்களாக இருந்தார்கள். ஐன்ஸ்டீனில்இருந்து எடிசன் வரை, ஆர்க்கிமிடசில் இருந்து ராமானுஜர் வரை ஞாபக சக்திக்கு முக்கிய துவம் தரவில்லை. தந்திருந்தால் அவர்களும் சராசரி மனிதர்களாக இருந்திருப்பார்கள் சரித்திர புருஷர்கள் ஆகியிருக்க மாட்டார்கள் என சொல்லி \"அட\nஇறுதியாக புத்தகத்தில் சொன்ன ஒரு வரிகள் சொல்லியே இந்த விமர்சனத்தை நிறைவு செய்கிறேன். \" நாம் ரசித்து செய்யா விட்டால் ரொட்டி கூட புளித்து போகும் -கலீல் கிப்ரான்\" \nஇறையன்பு அவர்கள் ரசித்து செய்த இந்த புத்தகம் அவசியம் நாம் , ஜப்பானியர்கள் தேநீர் அருந்துவது போல் நிதானமாய் ரசித்து வாசிக்க வேண்டிய புத்தகம் \nநூலின் பெயர்: : \" ஓடும் நதியின் ஓசை\"\nவெளியீடு : நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ், சென்னை\nதிண்ணை மார்ச் 25,2012 இதழில் வெளியான கட்டுரை\nLabels: அனுபவம், திண்ணை, புத்தக விமர்சனம்\nகேரள பயணகட்டுரை: ஒரு டேமும் இரு கோயில்களும்\nதிருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பேச அழைப்பு. இது வரை செல்லாத ஊர் என்பதால் கூடுதலாய் ஒரு நாள் தங்கி சில இடங்கள் பார்த்து வர திட்டமிட்டேன்.\nசென்னையிலிருந்து குறைந்தது நான்கு ரயில்கள் தினம் திருச்சூர் செல்கின்றன. இரவு 9.15 -க்கு கிளம்பும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், மறு நாள் காலை ஏழு மணிக்கு திருச்சூர் செல்வதால் மிக வசதியாய் உள்ளது.\nதிருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் வெளியே ஒரு போலிஸ் பூத் உள்ளது. அங்கு ஆட்டோ எண்ணை குறித்து கொண்டு நம்மை ஒரு ஆட்டோவில் ஏற்றி விடுகிறார்கள் போலீசார். (ஜாக்கிரதைக்கு தான் ) நாங்கள் தங்கிய கேசினோ ஹோட்டல் ரயிலடியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆட்டோவிற்கு மீட்டர் போட்டு 12 ரூபாய் தான் கேட்டனர். இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது (நம்ம ஊராய் இருந்தால் நாற்பது ரூபாய் வாங்கியிருப்பர்). காலை ஏழு மணிக்கு கிளைமேட் சிலு சிலுவென்று இருந்தது. கடைகள் எட்டு மணி வரை திறப்பதே இல்லை. ஆங்காங்கு ஒரு சில டீ கடைகள் மட்டும் தெரிந்தன.\nஅறைக்கு சென்று குளித்து விட்டு விரைவில் கோயில் பார்க்க கிளம்பி விட்டோம்.\nதிருச்சூரில் உள்ள மிக பெரிய மற்றும் தவற விடாமல் அனைவரும் செல்லும் கோவில் வடக்கு நாதர் கோவில் தான். நகரின் மைய பகுதியில் இருக்கிறது இக்கோவில். மிக மிக பெரிய வளாகம்.36 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. சிவன் கோவிலான இங்கு ராமர், கிருஷ்ணர், ஐயப்பன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.\nவடக்கு நாதர் கோவிலின் உள்ளே படமெடுக்க அனுமதி இல்லை. வெளியிலிருந்து எடுத்த படங்கள் இதோ\nகேரளாவில் நிறைய கோவிலில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல கூடாது. சில கோவில்களிலோ வேட்டி அணிந்தால் தான் அனுமதி. இந்த கோவிலை பொறுத்த வரை பேன்ட் போட்டாலும் அனுமதிக்கிறார்கள். ஆனால் சட்டை நிச்சயம் போட கூடாது. ஒரு கையில் சட்டையை பிடித்து கொண்டு, மறு கையில் கடவுளை கும்பிடுவது கஷ்டமாக உள்ளதால் பலரும் சட்டையை முழுதும் கழற்றமால் இடது கையை மட்டும் சட்டைக்குள் விட்டு , ஒரு கையில் சட்டை தொங்கி கொண்டு இருக்குமாறு கோவில் வளாகம் முழுதும் சுற்றி வருகிறார்கள். இது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது\nவடக்கு நாதர் கோயிலில் நெய் உருகாமல் இருக்கும் என்று கூறுகிறார்கள்.\nஇங்கு வசிஷ்டர் மரம் என்று ஒன்று உள்ளது. ஏதேனும் வேண்டி கொண்டு, இங்கு உள்ள மணலில் நம் விரலால் எழுதினால் அது பலிக்கும் என்பது ஒரு நம்பிக்கை \nகோயில் வெளியில் பெயர் பலகை துவங்கி சாமி பெயர்கள் பலவும் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் எழுத பட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. (ஆனால் பஸ்களில் எல்லாம் மலையாளத்தில் மட்டும் தான் பெயர் பலகை உள்ளது )\nஎன்னுடன் செமினார் எடுக்க வந்த மற்ற இரு faculty-கள் பிரகாஷ் மற்றும் ஸ்ரீனிவாசன்.\nபடத்தில் கண்ணாடி அணிந்துள்ள பிரகாஷ் Airforce-ல் இருந்தவர். அதில் வேலை பார்த்தவாரே ACS படித்து முடித்தார். கோர்ஸ் முடித்த உடனே, ACS வகுப்புகளில் பாடம் எடுப்பது உள்ளிட்ட எங்கள் Institute-க்கு பயன் தரும் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். (இப்படி ஈடுபடுவோர் மிக குறைவே) சென்னையின் ஒரு முக்கிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தாலும், மறுபுறம் சென்னையில் கம்பனி சட்டம் குறித்த பாடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க ஆசிரியராக இருக்கிறார். மாணவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் போன் செய்து சந்தேகம் கேட்டு இவரை தொந்தரவு செய்தவாறே உள்ளனர். மனுஷன் பசங்களிடம் ரொம்ப பேமஸ் \nகோயிலை விட்டு வெளியே வந்ததும் இவரிடம் \" யோவ் நெஞ்சு முழுக்க முடி வச்சிக்கிட்டு சத்யராஜ் மாதிரி சீன் போடுறீரா சட்டையை போடுமையா\" என செல்ல சண்டை போட்டார் அய்யாசாமி.\nமற்றொருவர் சீனிவாசன். தன் நண்பர் அழகருடன் (Genicon அழகர்) தனியாக நிறுவனம் வைத்து பல கம்பனிகளுக்கு சேவை/ வேலை செய்து வருகிறார். வக்கீலுக்கும் படித்த இவர் தொழிலாளர் சட்டம் உள்ளிட்டவற்றில் மிகுந்த நாட்டம் உள்ளவர்.\nகூச்ச சுபாவம் உள்ளவராதலால் கோயில்களில் சட்டையை கழற்றினால் மேலே போட்டு கொள்ள துண்டு கொண்டு வந்திருந்தார். வெளியில் வந்த பின்னும் துண்டை விடாமல் பிடித்திருக்க, கிண்டல் செய்தவாரே இருந்தோம்.\nஅய்யாசாமியை பார்த்த சீனிவாசன் \"உங்களுக்குள் ஒரு ரிப்போர்டர் இருக்கார். உங்களால் சும்மாவே இருக்க முடியாது\" என்று சொன்னார் \nவீடு திரும்பல் ப்ளாக் பார்த்து விட்டு மிக மகிழ்ச்சியாகி நானும் ஒரு நாள் ப்ளாக் எழுதணும் என்று சொல்லி வருகிறார்\nசரி கேரளாவிற்கு மீண்டும் வருவோம்\nவடக்கு நாதர் கோவில் பரசுராமரால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் திருச்சூர் பூரம் பண்டிகை இந்த கோவிலில் கொண்டாடப்படும்.\nஉங்களுக்கு நினைவு கூற வேண்டுமெனில், நீங்கள் பார்த்த சினிமா அல்லது டிவியில் நிறைய யானைகள் நின்று வாத்தியங்கள் முழங்க ஒரு கேரளா விழா காண்பிப்பார்களே அது தான் பூரம் திருவிழா \nபடம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்\nதிருச்சூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் பாலக்காடு செல்லும் வழியில் உள்ளது பீச்சி டேம். ஏராளமான பேருந்துகள் இங்கு செல்கின்றன. பீச்சி என்பது ஊர் பெயர். அங்கு இருப்பதால் டேம் பெயரும் அதுவே ஆனது\nபேருந்தில் செல்லும் போது அருகில் அமர்ந்த வயதான பெரியவர் (மலையாளி) நான் தமிழன் என்றதும் பாச மழை பொழிந்தார். அவர் அரசு அலுவலகத்தில் Dr . ரத்னம் என்கிற தமிழரின் கீழே வேலை செய்ததாகவும், தற்போது இருவரும் ரிட்டையர் ஆகி விட்டதால் அவரை பார்க்க திருச்சி போக எண்ணியுள்ளதாகவும் சொல்லி கொண்டிருந்தார். Dr .சுந்தர்ராஜன், Dr .கைலாசம் என பல தமிழர்கள் தன்னுடன் வேலை பார்த்ததாக இவர் சொல்ல, நீங்கள் மருத்துவ துறையில் இருந்தீர்களா என கேட்டேன். \" இல்லை ஆராய்ச்சி துறையில் இருந்தேன். இங்கு Forest Research Department , Engineering Research Department , Banana Research Department நிறைய துறைகளும் அலுவலகங்களும் உண்டு\" என்றார். வழியெல்லாம் அந்த ரிசர்ச் சென்டர்களை எனக்கு காட்டி கொண்டே வந்தார் அவர்.\nதிருச்சூர் டு பீச்சி நடுவே இருந்த ஒரு ஊர் பெயர் : பட்டிக்காடு நாம் கிராமத்தை \"பட்டிக்காடு\" என்று கிண்டலாக சொல்வோம். அங்கு அந்த பெயரில் ஒரு ஊரே இருக்கு \nஇருபது நிமிட பிரயாணத்தில் பீச்சியை அடைந்தோம். துவக்கத்திலேயே டேம் கட்ட உதவிய இஞ்சிநியர்கள் பெயர்கள் போட்டு ஒரு கல்வெட்டு வைத்துள்ளனர். நமது டேம்களில் இவை இருக்குமா\nபீச்சி டேமில் வெளியிலிருந்து எடுத்த வீடியோ\nஇந்த இடத்தை காணும் போது திருச்சியில் கல்லணை மற்றும் முக்கொம்பு நினவுக்கு வந்தன. அவையும் இதே போல சிறு டேம்கள் தான். ஆனால் அவை மிக மோசமாக மெயின்டெயின் செய்யப்படும். காதலர்கள் என்று சொல்லி கொண்டு சில்மிஷம் செய்யும் நிறைய பேர் வந்து பதுங்கும் இடமாக அவை ஆகி போயின. ஆனால் இங்கு இந்த வளாகம் முழுதும் மிக அருமையாக கார்டனிங் செய்யப்பட்டு பார்க்கவே மிக அழகாக உள்ளது\nசற்று உயரத்திலிருந்து எடுத்த போட்டோ\nஇங்கே நீர் சுழித்து கொண்டு ஓடும் காட்சி பார்க்கவே செம அழகாய் உள்ளது.\nஏராளமான மரங்களுக்கிடையே மிக அழகான ஒரு இடம் இங்கு இருந்தது. இதற்கு நடுவில் ஒரு போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்பட்டு அங்கிருந்த ஒருவரிடம் காமிரா தர, இரண்டு படங்கள் எடுத்தார். இரண்டிலும் ஷேக் ஆகி படம் சரியாக வரலை. அதனால் என்ன.. நான் எடுத்த இந்த இடத்தை பாருங்கள் :\nபீச்சி டேமின் தண்ணீரையும், அழகான கார்டனையும் இந்த வீடியோவில் பார்க்கலாம் ( நடந்து கொண்டே எடுத்ததால் சற்று ஜெர்க் இருக்கும். பொறுத்தருள்க \nஇந்த கோவில் திருச்சூர் நகரின் முக்கிய இடத்தில் உள்ளது. இதற்கு சற்று தள்ளி ஒரு Circle உள்ளது. இங்கு நிறைய கடைகள் ஷாப்பிங் செய்ய வசதியாக உள்ளன\nஇந்த கோவிலுக்கு எதிரிலேயே மற்றொரு சிவன் கோவில் உள்ளது. இதுவும் சற்று விசேஷமான கோவில் தான் இரவில் விளக்குகள் பொருத்திய பின் சிவன் கோவிலை பார்த்தால் செம அழகாக உள்ளது\nபரமக்காவு அம்மன் கோவிலில் நான் சென்ற மாலை நேரம் பெண்கள் உள் பிரகாரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டிருந்தனர். சமையல் அறை சாமி இருக்கும் இடத்திற்கு மிக அருகே உள்ளது. அங்கு ஏதோ சரியான சமையல் நடந்து வாசனை தூக்கலாக இருந்தது.\nகோயில் பலரின் Contribution-ஆல் கட்டப்பட்டது போலும். ஒவ்வொரு தூணுக்கும் மேலே அதனை கட்ட யார் உதவினார் என்று இருக்கிறது. பலரும் தங்கள் தாயார் அல்லது தந்தை பெயர் போட்டு அவர் நினைவாக என்று குறிப்பிட்டுள்ளனர் \nவடக்குநாதர், பரமக்காவு மற்றும் திருவெம்பாடி ஆகிய மூன்று கோயில்களும் பூரம் festival-ல் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநண்பர்கள் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகள் \nமுதல்பகுதி : இங்கே: கேரள பயணகட்டுரை: டிரைலர்+எப்படி நடத்தினர் என்னை\n2-ம் பகுதி: கேரளாவில் பார்த்த புது மம்மூட்டி படம்: கேரள தியேட்டர்கள் எப்படி\nஆட்டோ காரர் போக விரும்பிய, இதுவரை செல்லாத இடத்துக்கு அவரை கூட்டி சென்ற அய்யா சாமி\nஇரண்டாம் உலக போரில் பங்கேற்ற கிராம மக்கள்\nஇருபது மாடி உயரத்திலிருக்கும் சர்ச் டவர்- அட்டகாச அனுபவம்\nLabels: அனுபவம், கேரளா, பயண கட்டுரை\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஏப்ரல் 1 : சட்டக்கல்லூரி நண்பர்களை ஏப்ரல் Fool ஆக்...\nகேரள பயணக்கட்டுரை: பாகம்-4: 20ஆவது மாடியில் அற்புத...\nவானவில் 81 :ஆபிஸ் விளையாட்டு: கையை சுட்டு கொண்ட எழ...\nஎங்கள் குடும்பத்தில் ஐக்கியமான புதிய நபர்: படம் & ...\nஇறையன்பு எழுதிய \"ஓடும் நதியின் ஓசை\"\nகேரள பயணகட்டுரை: ஒரு டேமும் இரு கோயில்களும்\nவானவில் 80: பள்ளிகள் இப்படி செய்யலாமா\nகலைஞரை எதிர்த்து கண்ணதாசன் எழுதிய வனவாசம்-விமர்சனம...\nஷிகாரி: மம்மூட்டியின் புது ரிலீஸ் சுடச்சுட விமர்சன...\nபட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கும் - நிபுணர்கள் அலசல...\nசச்சின் :100வது செஞ்சுரி ஸ்பெஷல்: அசத்திய ஆட்டங்கள...\nகல்விமுறை குறித்து தோனி படம் எழுப்பும் கேள்விகள்\nஎழுத்தாளர் சுஜாதாவின் பத்து செகன்ட் முத்தம்\nகேரள பயண கட்டுரை- புகைப்படங்களுடன் ஒரு டிரைலர்\nஆஸ்கர் விருதுகளை குவித்த Life Is Beautiful- விமர்ச...\nவானவில் 79: அம்புலி - தமிழ்மணம்- அண்ணா யூனிவர்சிட்...\nசென்னை ஆசிரியை கொலை குறித்து சக பள்ளி ஆசிரியை கவித...\nமின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல்...\nஅரவான் படத்தின் நிஜ ஹீரோக்கள்\nசூர்யாவின் \"ஒரு கோடி\" நிகழ்ச்சி- விரிவான அலசல்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nவேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு பார்வை\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2018/04/blog-post_18.html", "date_download": "2018-05-27T03:05:20Z", "digest": "sha1:Y42OBDPWLTDU3HEGOOSU6TRLAO6WD3U3", "length": 25146, "nlines": 445, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நித்தி மேட்டர் வேற...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநித்திக்கு வாழ்வுதான் என்று தன் மன வக்கிரத்தை வெளிப்படுத்தியவர்கள். கவர்னருக்கு மட்டும் பொங்குவதேன்.. என்று ஒரு கருத்தை இணையத்தில் பார்த்தேன்..\nநித்தி யார் கையையாவது பிடித்து இழுத்தான் என்றோ அல்லது அவனது ஆசிரமத்தில் இருந்து\nஎங்களை கொத்தடிமைகளாக நடத்துகின்றார்கள்.. பாலியல் வன்புணர்வுக்கு வற்புறுத்துகின்றார்கள் என்றோ யாராவது பிராது கொடுத்தாலோ.. அல்லது ஆடியோ வெளியிட்டு இருந்தாலோ..\nயாரும் அப்படி வாழ்வுதான் என்று நக்கல் பேசி இருக்க போவதில்லை... பிரித்து மேய்ந்து இருப்பார்கள்...\nஅதே நேரத்தில் நித்தி சைடில் இருந்து...\nயாராவது நிர்மலா போல ஆள்காட்டியின் ஆடியோ வெளியிட்டு இருந்தால் கூட கிழித்து தொங்க விட்டு இருப்பார்கள்...\nஒரு அழகான பெண் கல்லூரியில் படிக்கும் போது எல்லோரும் அவளை காதலிக்க துடித்துக்கொண்டு இருக்கும் போது... அவள் ஒரு மொக்கை பையனை விருப்பபட்டு எந்த நிபந்தனையும் மிரட்டல் இல்லாமல் அவள் அவனை காதலிக்கின்றாள் என்றால் பசங்க என்ன சொல்லுவாங்க...\nமச்சான் மொக்கை மோகனுக்கு வாழ்வுதான் என்று சொல்வார்கள்.\nஆனால் அதே மொக்கை மோகன் வலை விரித்து அந்த பெண்ணை ஏதோ ஒரு காரணத்தை முன் வைத்து மிரட்டி பணிய வைத்தால் அப்படி சொன்னவனே கிழித்து தொங்கவிடுவான்... இல்லையா அது போலத்தான்..\nஇங்க கவர்னருக்கு படையல் வைக்க ஆள் பிடிக்கும் பெண்ணின் ஆடியோ.. வந்த போது வாழ்வுதான் என்று யாரும் சொல்லமாட்டார்கள்... பிரித்து மேய்வார்கள்..\nஏம்பா நான் சரியாதான் பேசறேனா.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n79 வயதில் காமம் தவறில்லை.\nமரியா சொன்னாள்... நீங்கள் எனது சேவியர் என்று....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/04/2018)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_11_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2018-05-27T03:32:27Z", "digest": "sha1:BZI2QDT257LK6JDQGIETBUK24ILC2NC3", "length": 9061, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 11 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய நெடுஞ்சாலை 11 (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜேசல்மெர், பொக்ரான், பிகானேர், ஸ்ரீ துங்கர்கர், ரத்தன்கர், பத்தேபூர்\nதேசிய நெடுஞ்சாலை 11 (NH 11) ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். இந்த நெடுஞ்சாலை ஜெய்சல்மேர், பாட்பூர் போன்ற பகுதிகளை 495 கிமீ (308 மைல்) தொலைவில் இணைக்கிறது.\nதேசிய விரைவுசாலை 1 • தேசிய விரைவுசாலை 2\nமும்பை-பூனே • டெல்லி குர்கான் • டிஎன்டி • பெங்களூர் - மைசூர் • சென்னை எச்.எஸ்.சி.டி.சி • ஐதராபாத் உயர்வு விரைவுசாலைகள்\nபீகார் • அரியானா • இமாச்சலப் பிரதேசம் • கர்நாடகா • கேரளா • குஜராத் • மத்திய பிரதேசம் • மகாராஷ்டிரா • ராஜஸ்தான் • தமிழ்நாடு • உத்தரப் பிரதேசம் • மேற்கு வங்காளம்\nதேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் • தங்க நாற்கரச் சாலைத் திட்டம் • வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பெருவழிச் சாலை\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2018, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/my-sons-drawings.110251/", "date_download": "2018-05-27T03:42:38Z", "digest": "sha1:NS4YVA7526E5APG2KBXUFEUE42FMFAIO", "length": 9548, "nlines": 404, "source_domain": "www.penmai.com", "title": "My son's drawings .... | Penmai Community Forum", "raw_content": "\nஎங்கள் வீட்டு இரண்டாவது செல்லத்தின் பென்சில் சித்திரங்கள் .\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nமாஸ்டர் கலக்குறாரு.... அம்மா கதையில கலக்குனா, பையன் drawingல கலக்குவாரு போல.... சூப்பர்...\nஉங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nமாஸ்டர் கலக்குறாரு.... அம்மா கதையில கலக்குனா, பையன் drawingல கலக்குவாரு போல.... சூப்பர்...\nஉங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்...\nம்ம்ம்ம் ...வாசிக்கிற புத்தகத்தில் இருப்பதை எல்லாம் சின்ன வயதிலிருந்து கீறுவார் தேனு ...\nஅதேபோல கதையும் நன்றாகவே எழுதுவார்கள்; இளையவர்கள் இருவரும் .\nஎன்ன நெதர்லாந்தில் தான்; அதனால் இங்கு போட்டாலும் பிரயோசனம் இல்லை.\nநான் இங்கு போடுகிறேன் என்றதும் அவருக்கு ரொம்பவும் குஷி...சொல்லிவிடுகிறேன்மா .\nசூப்பர் சூப்பர் ரோசிக்கா. அழகா வரைந்திருக்கிறார் :thumbsup:thumbsup\nநெஞ்சில் உறைந்த தேடல் ...\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2016/12/", "date_download": "2018-05-27T03:14:32Z", "digest": "sha1:WN6ROOOG5OAQLKLCYUSFYITGY7X4Y6QX", "length": 112910, "nlines": 585, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: December 2016", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nமரியாதைக்குரியவர்களே,வணக்கம். ரகசியக்கேமரா பற்றிய விழிப்புணர்வு வீடியோ உங்களுக்காக...............\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/21/2016 08:29:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாகம் தீர இப்போது தேவைக்கான தண்ணீரை மறுநாள் குளிப்பாட்ட கிடைக்கும்\nஅவசரத்தேவை,அத்தியாவசியத் தேவை கூட புரிந்துகொள்ளாமல் இன்றைய அரசு நிலை உள்ளதைக்கண்டு வேதனைப்படுவதைத்தவிர\nவணக்கம்.ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டனைக்குள்ளாகக்கூடாது.என கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுபோல கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். என்பதில் என் போன்றோருக்கு முரண்பாடு ஏதுமில்லைங்க.ஆனால் துர்நாற்றம் வீசுகிறதே என்று மூக்கை அரை மணி நேரம் பிடித்துக்கொண்டிருக்க முடியுமாஆக்ஸிஜன் என்னும் உயிர்க்காற்றின் ஒரு நிமிட தாமதத்துக்கு கூட உயிர் பொறுக்காது.அதுபோல உழைப்பின் ஊதியத்தையும்,ஏற்கனவே வைத்திருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என்ற அறிவிப்பால் வங்கியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியதோடு உழைப்பின் கூலியையும் வங்கியிலேயே முடக்கிக்கொண்டு\nமாதந்தோறும் புழக்கத்திலிருக்கும் மாறாத செலவினங்களான ,பால் கணக்கு,மளிகைக்கணக்கு,கல்விக்கட்டணம்,காய்கறி செலவு,போக்குவரத்து செலவு,மருத்துவ செலவு,வீட்டு வாடகை செலவு,பெட்ரோல் மற்றும் டீசல் செலவு,விருந்தோம்பல் செலவு, பெறப்பட்ட கடனுக்கான வட்டி கட்டுதல்,திடீர் செலவினங்களான திருமணச்செலவு,ஈமச்சடங்கு செலவு,மின் கட்டணம்,போன் கட்டணம், குடிநீர் கட்டணம்,வீட்டு வரி,சொத்து வரி ,வாகனம்,மொபைல்,மிக்சி,கிரைண்டர்,போன்ற இயந்திரங்கள் பராமரிப்பு செலவு,பழுது நீக்கும் செலவு,இன்னும் எத்தனையோ செலவினங்களை நிர்வகிக்கும் நமக்கு நிதி ஆதாரம் மாதச்சம்பளம் ஒன்றே என்ற நிலையில் வாழ்ந்து வரும் நம்முடைய சம்பளத்தையும்,ஏற்கனவே வைத்திருந்த பணத்தையும் வங்கியில் செலுத்தவைத்துவிட்டு மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாறி ரொக்கமில்லா பயன்பாட்டுக்கு வாழ பழக்கப்படுத்திக்கொள்ளுங்க என்று விளம்பரப்படுத்தும் அதே நேரத்தில் ஸ்வைப் என்னும் உரசல் பரிமாற்றம் அரசுத்துறை நிறுவனங்கள் உட்பட நம்முடைய வழக்கமான பயன்பாட்டுத்தளங்கள் எங்கும் டிஜிட்டல் வசதியே இல்லாமல் நம்முடைய பணம் எங்கும் வீணாகாது.வங்கியில் பத்திரமாக அப்படியே இருக்கும் என்று ஆறுதல் சொல்லும் புண்ணியவான்களே,நாய் பெற்ற தெங்கம் போல (முழுத் தேங்காய் கிடைக்கப்பெற்ற நாய் உள்ளிருக்கும் தேங்காய்ப்பருப்புக்காக தேங்காயை உடைக்க முடியாமல் அங்கும் இங்கும் உருட்டி அலையும் நாய் போல)\nஇப்போது ஏ.டி.எம் கார்டை வைத்துள்ள எங்களை எந்த வங்கியின் ஏ.டி.எம்.மையத்தில் பணம் இருக்கும் என்று எ.டி.எம். மையங்களுக்காக தெருத்தெருவாக அலைய வைத்து வேதனைப்படுத்துவதை எப்படிங்க உங்களால் மட்டும் நியாயமாக பார்க்க முடிகிறது.\nபிழைக்க அவசரத்தேவைக்கு உயிர்த்தண்ணீர் கேட்டால் சற்று பொறு அடுத்த ஆண்டு புயல் மழையால் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பயன்படுத்திக்கொள் என்று சொல்வதைப்போல் அல்லவா உள்ளது.பின்னர் கிடைக்கும் பிரியாணியை விட தற்போது பசியை போக்கும் பழைய சோறு,கஞ்சி அல்லவா அமிர்தம் போன்றது.தேவைக்கான நேரமும் , கால இடைவெளியும் பொருந்த வேண்டாமா அடுத்த ஆண்டு புயல் மழையால் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பயன்படுத்திக்கொள் என்று சொல்வதைப்போல் அல்லவா உள்ளது.பின்னர் கிடைக்கும் பிரியாணியை விட தற்போது பசியை போக்கும் பழைய சோறு,கஞ்சி அல்லவா அமிர்தம் போன்றது.தேவைக்கான நேரமும் , கால இடைவெளியும் பொருந்த வேண்டாமா\nஎனது பணத்துக்காக அலையும் C. பரமேஸ்வரன் டிரைவர்,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/20/2016 06:13:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மொபைல் பண பரிவர்த்தனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மொபைல் போன் பண பரிவர்த்தனை செய்ய\nமொபைல் போனில் பின்வருமாறு டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக. ‘MBSREG <இடைவெளி> <மொபைலின் கம்பெனி பெயர்> <இடைவெளி> <மொபைல் மாடல்> ‘ எ.கா: MBSREG Nokia 6600\nஉங்கள் கைபேசி ஜாவா மென்பொருள் கொண்டு செயல்படுமெனில் உங்களுக்கான பயனாளர் ஐடியும், எம்பின் நம்பர் (MPIN) எனப்படும் தனிநபர் அடையாள எண்ணும்(ரகசிய எண்) மற்றும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோட் செய்யத் தேவையான இணையதள முகவரியையும் எஸ்எம்எஸ் மூலம் பெறுவீர்கள். இதற்கு ஜிபிஆர்எஸ் இணைப்பு இருக்க வேண்டும்.\nவிண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்தவுடன் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட பயனாளர் ஐடியுடன் இணையதளத்தினுள் நுழைக.\nபயனாளர் ஐடியை எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்டபடியே டைப் செய்க.\nமொபைல் பேங்கிங் செயலியைத் திறந்தவுடன் உங்களின் எம்பின்(MPIN) எண்ணை மாற்ற கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.\nஅவ்வாறு கேட்கப்படவில்லையெனில் “Settings\" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Change MPIN” என்பதைத் தேர்வு செய்க.\n“old MPIN” என்ற இடத்தில் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட 'எம்பின்'எண்ணையும், “new MPIN” என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் புது 'எம்பின்' எண்ணையும் குறிப்பிடுக. இந்த புது 'எம்பின்' எண்ணை “Confirm new MPIN” என்ற இடத்திலும் குறிப்பிட வேண்டும்.பின்னர் அவற்றை அனுப்புக.\nநீங்கள் புது 'எம்பின்' எண்ணை மாற்றியது எஸ்எம்எஸ் மூலம் உறுதி செய்யப்படும்.\n'எம்பின்' எண்ணை மாற்றியதற்கான உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் பெற்றவுடன் ஒரு ரகசிய கேள்வியைத் தேர்ந்தெடுத்து அதற்கான பதிலை அளிக்க வேண்டும். இதற்கு “Settings\" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Validate Account” என்பதைத் தேர்வு செய்க. இதில் ஏதேனும் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்து பதில் அளிக்கவும்.\nஇந்த ரகசிய கேள்வியையும் அதற்கான பதிலையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் 'எம்பின்' நம்பரை மறந்துவிட்டாலோ அல்லது இச்சேவையை ரத்து செய்ய விரும்பினாலோ இது உங்களை அடையாளம் காண தேவைப்படும்.\nபின்னர் அருகாமையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் வழியாக இதனை ஆக்ட்டிவேட் செய்யுங்கள்.\nஏடிஎம் கார்டை நுழைத்தபின் ‘Services’ என்ற மெனுவில் ‘Mobile Banking’என்பதை தேர்ந்தெடுங்கள்\n“Mobile Banking” என்பதன் கீழ் ‘Register’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் எண்ணைக் கொடுங்கள். பதிவினை உறுதிப்படுத்த மீண்டும் மொபைல் எண்ணைக் கொடுங்கள்.\nமேற்கண்ட செயல்முறைகளை முடித்தவுடன் உங்கள் மொபைல் பேங்கிங் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.\nஇதன் பின்னர் மொபைல் பேங்கிங் சேவையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெறலாம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/13/2016 06:57:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மொபைல் போன் பாதுகாப்புக்கு நீங்கதாங்க பொறுப்பு\nஸ்மார்ட்போன்கள் காலத்தில் இவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தைக் கையாள முடியவில்லை. செல்போன் பயன்படுத்துபவரின் தனிப்பட்ட தகவல்களும் சேர்ந்தே போய்விடுகிறது. குறிப்பாக பல்வேறு தேவைகளுக்கான செயலிகளை பயன்படுத்தும் இந்த நாட்களில் செல்போன் என்பது மிகவும் பாதுகாப்புக்குரிய முக்கிய பொருளாகவே மாறிவிட்டது.\nபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களை பெரும்பாலானோர் மொபைல் மூலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். தவிர இ-காமர்ஸ் நிறுவனங்கள் மொபைல் செயலி மூலமான விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றன.\nஇந்த வகையிலான பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக செயலி களில் நமது தனி விவரங்களை ஒரு முறை பதிவு செய்துவிட்டால் போதும். செல்போன் மூலமாக அந்த தளத்துக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுக்க தேவையில்லை.\nஇது போன்ற வசதிகள் காரணமாகத்தான் செல்போன் தொலைந்து போகாமல் இருக்க கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியிருக்கிறது.\nதவிர தற்போது நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பல செயலிகள் வந்துவிட்டன. பெரும்பாலானவர்கள் இதை பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். குறிப்பாக வங்கிகளின் நெட் பேங்கிங் வசதிகளிலிருந்து தற்போது மொபைல் பேங்கிங் சேவைகளுக்கு மாறி வருகின்றனர். மேலும் சில வங்கிகள் மற்றும் செயலிகள் செல்போன் மூலம் கிரெடிட் கார்டு தகவல்களை சேமித்து வைத்து, இதன் மூலம் பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட இதர வர்த்தகச் சேவைகளையும் வழங்கி வருகின்றன.\nஅதாவது சமீப காலமாக மொபைல் போன்கள் கிட்டத்தட்ட மணிபர்ஸ்களைப் போல உருமாற்றமும் அடைந்துள்ளன. மொபைல் வாலட்டுகள் இந்த வசதிகளை அளிக்கின்றன. நமது வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பதைப்போல மொபைல் வாலட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப செலவு செய்யலாம்.\nஇப்படி மொபைல் போன் மூலம் நிதியியல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் ளலாம் என்கிறபோது இன்னும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பயன்பாட்டு பொருளாக செல்போன் மாறியுள்ளது.\nசரி இது போன்ற சூழ்நிலைகளில் செல்போன் தொலைந்து விடுகிறது என்றால் என்ன செய்வது சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்பது அடுத்த கட்டம்தான். அது நமது தனிப்பட்ட விவரங்களை தவறாக கையாளப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால் மொபைல் போன் கிட்டத்தட்ட ஒரு பர்ஸ் போல இருப்பதால் இதில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்பது அடுத்த கட்டம்தான். அது நமது தனிப்பட்ட விவரங்களை தவறாக கையாளப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கும். ஆனால் மொபைல் போன் கிட்டத்தட்ட ஒரு பர்ஸ் போல இருப்பதால் இதில் இருக்கும் நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பணம் திருடப்பட்டால் என்ன செய்வது இதுதான் தற்போதைய நிலையில் மொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம்.\nஇது தொடர்பாக மொபைல் சர்வீஸ் மற்றும் செல்போன் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மொபைல் வாலட் பயனாளிகளிடமும் பேசினோம்.\nஸ்மார்ட்போன்களில் தற்போது கிடைக்கும் வசதிகளைப் போல பல மடங்கு வசதிகள் தினசரி அப்டேட் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் போன்களின் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க தனிநபர்களின் பாதுகாப்பு சார்ந்ததாகவே இருக்கிறது.\nபொதுவாக ஸ்மார்ட் போன்களை இயக்குவதற்கு ரகசிய குறியீடு உள்ளதுபோல அமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். என்றாலும் செல்போன் தொலைந்து போனால் ரகசிய குறியீடுகளை எடுக்க முடியாது என்றில்லை. மொபைல் சாப்ட்வேர் தெரிந்தவர்கள் அதை ஓப்பன் செய்துவிட முடியும். எனவே சிம்கார்டு மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டால் போது மானதல்ல என்பதை உணர வேண்டும்.\nமொபைல் பயனாளிகள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் செயலிகளின் பாஸ்வேர்டுகள்.\nபொதுவாக வங்கிச் செயலிகளில் பயன்பாடுகளை பொறுத்த வரை ஒவ்வொருமுறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய எண் கேட்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஆனால் என்னதான் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகள் கொடுத்தாலும் அதையும் உடைக்கும் ஆட்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதாவது வாலட்டில் வைக்கும் பணமோ, கிரெடிட் கார்டு தகவல்களோ 100 சதவீதம் பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றும் சொல்ல முடியாது என்கின்றனர்.\nமொபைல் வாலட்டுகளுக்கு நுழைய பாஸ்வேர்டு தனியாகத்தான் உள்ளிட வேண்டும். இதை அவ்வப்போதும் கொடுக்கலாம். அல்லது 24 மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை என்கிற வகையிலும் செட்டிங்குகள் இருக்கிறது. இந்த இரண்டாவது வகையில் செட்டிங் செய்திருப்பவர்களது மொபைல் போன் வாலட்டில் பணம் இருந்தால் எளிதாக எடுத்துவிட முடியும் என்கின்றனர்.\nசமீப காலத்தில் மொபைல் வாலட் முறையிலான டிஜிட்டல் பரிவர்த் தனை நடவடிக்கைகளை அரசாங்கமும் ஊக்குவித்து வருகிறது. இந்த வகை யிலான சேவைகளுக்கு அனுமதி வழங்குவதில் புதிய நிறுவனங் களும் இறங்குகின்றன. ஏனென் றால் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை நடவடிக்கைகள் தனிநபர் களது கணக்கில் முழுமையாக வந்துவிடு கிறது. இதில் சட்ட விரோத பண பரிவர்த் தனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்பதால் அரசு ஊக்குவிக்கிறது.\nஆனால் மொபைல் வாலட்டில் அதிகமான பணத்தை வைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப கிரெடிட்கார்டு அல்லது டெபிட் கார்டிலிருந்து பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டு வாலட் மூலம் பயன்படுத்தலாம். இதுவரை வாலட் பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவில்லை. ஆனால் இனி நடக்காது என்றும் சொல்ல முடியாது என்கின்றனர் இவர்கள்.\nஒவ்வொரு புதிய வசதியும் மனிதனை மேலும் சோம்பேறியாக்குவது என்கிற பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதை உறுதிபடுத்துவதுபோலத்தான் மொபைல் பயன்பாடு உருவாகி யுள்ளது. அதே சமயத்தில் நவீன கண்டுபிடிப்புகள் மனிதனை மேலும் நவீன மனிதனாக்குகிறது என்பதையும் மறுக்க முடியாது.\nநாம் நவீன மனிதனாக இருக்கும் அதே வேளையில் சோம்பேறியாகவும் மாறாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்போனுக்கு பாதுகாவலர் நீங்கள்தான்.\nதி இந்து நாளிதழுக்கு நன்றிங்க.\nமொபைல் பேங்கிங் - அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nஉங்கள் மொபைல்போன் மூலம், ஒரு நாளில் ரூ.5000 வரைப் பணப்பரிமாற்றமும், ரூ 10,000 வரை வர்த்தகப் பரிமாற்றங்களிலும் நீங்கள் ஈடுபடலாம்.\nஉரிமம் பெற்ற, நெறிபடுத்தப்பட்ட வங்கிகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் தங்கள் கிளைகள் மூலமாகவோ அல்லது வர்த்தக செயலர்கள் மூலமாகவோ மொபைல் பேங்கிங் சேவையை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.\nவங்கியில் கணக்கு வைத்திருப்போர், வங்கியின் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பெற்றவர்கள், இச்சேவைகளைப் பெறலாம்.\nதற்சமயம், மொபைல் பேங்கிங் சேவை உள்நாட்டு பணப்பரிமாற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\nமொபைல் பேங்கிங் சேவையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகள் வங்கிகளின் குறை தீர்ப்பாளர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.\nசேவையைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகள் மற்றும் இடர்பாடுகளைப் பற்றி வங்கிகள் உங்களுக்கு சொல்லவேண்டும்.\nஇச்சேவையைப் பெறும் முன், பணப்பரிமாற்றத்திற்கான கட்டணங்கள், மாதம்/ஆண்டு சந்தா விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.\nமொபைல் போன் கொண்டு நடைபெறும் பணபரிமாற்றங்கள் அனைத்துமே வங்கி அலுவலர் மூலமாகவே நிகழ்கிறது என்பதை உணருங்கள்.\nமொபைல் பேங்கிங் சேவையைப் பெற்றபின் உங்கள் மொபைல்போனை நண்பரிடமோ அல்லது பிறரிடமோ கொடுக்காதீர்.\nஉங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் வங்கிக்கு அதனைத் தெரியப்படுத்துங்கள்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/13/2016 06:51:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமொபைல் பேங்கிங் பற்றி தெரிந்துகொள்ளுங்க..எச்சரிக்கையாக பணம் பரிமாற்றம் செய்யுங்க..எச்சரிக்கையாக பணம் பரிமாற்றம் செய்யுங்க இந்த பதிவு https://senthilvayal.com/ அவர்களது பகிர்வு..\nஇது மொபைல் யுகம். உள்ளங்கையில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் இருந்தாலே போதும், அத்தனை விஷயங்களையும் இருந்த இடத்தில் இருந்தபடியே செய்துவிட முடியும் என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இந்த நிலையில், வங்கிச் சேவை மட்டும் மொபைலில் வராமல் போய்விடுமா என்ன பணம் எடுத்தாலோ அல்லது பணம் நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டாலோ அனைத்துக்கும் எஸ்எம்எஸ் வருவது தொடங்கி, மொபைல் பேங்கிங் ஆப்ஸ், இன்டர்நெட் பேங்கிங், இ-வேலட் வரை பல்வேறாக கிளைத்து வளர்ந்து வருகிறது வங்கித் துறை.\nஇன்றைய தேதியில் இந்தியாவில் 92 கோடி செல்போன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. மத்திய ரிசர்வ் வங்கியின் கணக்கின்படி, இந்தியாவில் தற்போது 57.08 கோடி டெபிட் கார்டுகளும், 2.14 கோடி கிரெடிட் கார்டுகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. பணத்தை கையில் வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லை. எனவே, வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து அதை கார்டு மூலம் எடுத்துக்கொள்வோம் என்கிற நிலை போய், தற்போது கார்டைவிட மொபைல் இ-வேலட்டில் பணத்தை வைத்துக்கொண்டால்தான் ஓ.கே என்கிற மனநிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்.\nஇதனால் மொபைல் பேங்கிங் அசுர வேகத்தில் காற்றைப்போல எங்கும் பரவி வருகிறது. இந்த மொபைல் பேங்கிங்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல இன்று சந்தையில் இ-வேலட்கள் நிறையவே வந்துவிட்டன. பேடிஎம் (Paytm), பேயூமணி (Payumoney), பாக்கெட் ஐசிஐசிஐ பேங்க் (Pocket ICICI Bank), ஆக்ஸிஜன் வேலட் (Oxygen wallet), மொபிவிக் வேலட்(Mobiwik wallet) போன்ற முன்னணி இ-வேலட்கள் வரிசை கட்டி நிற்கின்றன.\nதனியார் நிறுவனங்களே கோலேச்சி வந்த இந்தத் தறையில் தற்போது பொதுத் துறை வங்கிகளும் காலடி எடுத்து வைக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எஸ்பிஐ படி (SBI Buddy) என்கிற பெயரில் தன் இ-வேலட்டை தொடங்கி இருக்கிறது. இதன் தொடக்க விழாவில் பேசிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, “இனி மொபைல்தான் பணப் பரிமாற்றத்தின் மையமாக இருக்கும்’’ என்று சொல்லி இருக்கிறார்.\nஇந்திய அளவில் மட்டும் இல்லாமல், உலக அளவிலும் இனி மொபைல் பேங்கிங் வங்கிச் சேவைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதை கணித்திருக்கிறார்கள். உலக மொபைல் பேங்கிங் (World Mobile Banking) அறிக்கையின்படி, அடுத்த நான்கு ஆண்டுகளில் மொபைல் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 180 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 25 சதவிகிதத்துக்கும் மேல். மொபைல் பேங்கிங் சேவையை பயன்படுத்துவதில் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.\nஇந்த அசுர வளர்ச்சியால் எந்த அளவுக்கு நம் வேலை சுலபமாகிறதோ, அதே அளவுக்கு ஆழம் தெரியாத ரிஸ்க் இருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மை. பணத்தின் மறுபிம்பமாக இருக்கக்கூடிய வங்கிகளுக்கும், வங்கிச் சேவைகளை செல்போன் மற்றும் இணையம் மூலம் பயன்படுத்தும் வாடிக்கையாளர் களுக்கும் இன்று பெரும் பிரச்னையாக உருவெடுத்தி ருக்கிறது மொபைல் போன்கள்.\nஇன்றைய தேதியில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 70 சதவிகித வங்கிகளின் ஆப்ஸ்கள் வைரஸ்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக விஜிலென்ட் (Wegilant) ஐ.டி செக்யூரிட்டி ரிசர்ச் நிறுவனம் கண்டறிந்து சொல்லி இருக்கிறது. இந்த வங்கிகள் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் எஸ்எஸ்எல் (SSL – Secure Socket Layer) என்கிற சான்றிதழ்கள் பெறாமல் இருப்பதாகவும் அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. எஸ்எஸ்எல் சான்றிதழ் இல்லாத ஆப்ஸ்களை பயன்படுத்தும்போது விவரங்களை மிக எளிதாக ஹேக் செய்துவிடலாம். வங்கி வாடிக்கையாளருக்கும் இணையத்துக்கும் இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாப்பதுதான் எஸ்எஸ்எல்-ன் முதல் பணி.\nவிஜிலென்ட் நிறுவனம் சொல்லும் இன்னொரு முக்கியமான தகவல், இந்தியாவில் உள்ள 33 வங்கிகளின் ஆப்ஸ்களை பரிசோதித்ததில் 29 வங்கிகளின் ஆப்ஸ்கள் வைரஸ்களால் பாதிப்படையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்லி இருப்பதுதான். இதில் 5 வங்கிகளின் ஆப்ஸ்கள் மிக எளிதில் வைரஸ்களால் பாதிப்படையும் வகையில் இருக்கிறதாம்\nஇன்றைக்கும் பலரும் பொது இடத்தில் கிடைக்கும் வைஃபை வசதியைக் கொண்டு மொபைலிலிருந்து வங்கிச் சேவையைப் பயன்படுத்து கிறோம். அப்படி பயன்படுத்தும் போது நம் விவரங்கள் திருடப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம், வைஃபை மூலம் இணையத்தை வழங்குபவர் ஹேக்கராக இருந்தால், நம் லாக் ஃபைல்களை (log file) திருட வாய்ப்பு இருக்கிறது. இந்த லாக் ஃபைல்கள் இருந்தாலே, நம் போன் மூலம் என்ன செய்தோமோ, அதை நம் போன் இல்லாமலேயே ஹேக்கரால் செய்ய முடியும்.\nஇத்தனை நாளும் இணையத்தில்தான் வைரஸ்களின் அட்டாக் இருந்தது. ஆனால், இன்று நமது செல்போனில் இருக்கும் நிதி சார்ந்த விவரங்களை மட்டும் ஹேக் செய்வதற்கும், நம் பணத்தை நம் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை திருடவும் பல வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஃபிஸ்ஸிங் மற்றும் ஸ்பூஃபிங் (Phising, Spoofing) என்கிற முறையில், நம் போனுக்கோ அல்லது கம்ப்யூட்டருக்கோ வைரஸ்களை தாக்கவிட்டு, நம் விவரங்களை நமக்குத் தெரியாமலேயே எடுத்துக் கொள்கிறார்கள் ஹேக்கர்கள்.\nநாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் தெரிந்துகொண்டு நம் வங்கியிலிருந்து மெயில் அனுப்புவதுபோல ஹேக்கர்கள் ஒரு மெயிலை அனுப்புவார்கள். நாமும் அந்த மெயில் உண்மையாகவே வங்கியிடமி ருந்துதான் வந்தது என்று எண்ணி, அந்த மெயிலுக்குப் பதிலளிப்போம். அப்படி அளித்துவிட்டால் அதன்பிறகு வங்கிக்குப் பதிலாக எப்போதும் அந்த ஹேக்கரிடம்தான் நாம் தொடர்பு கொள்ளவேண்டி இருக்கும். இந்த வகையான பாதிப்புகளை ‘ரீப்ளே அட்டாக்’ (Replay attack) என்கிறார்கள்.\nஇந்த மெயிலுக்கு பதில் அளிக்கும்போது நம்முடைய முக்கிய வங்கிக் கணக்கு விவரங்களான டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், பாஸ்வேர்டுகள், நெட் பேங்கிங் செய்வதற்கான யூசர்நேம் பாஸ்வேர்டுகள் போன்றவை களை டைப் செய்யும்போது, வைரஸானது அந்த ரகசிய விவரங்களை ஹேக்கர்களுக்கு அனுப்பிவிடும். இதனால் நம் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை நாமே திருட வழி சொல்லியது போல் ஆகிவிடுகிறது. கிடைத்த விவரங்களை வைத்து நமக்கு பதில் ஹேக்கர் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வார். இதை ‘அன் ஆத்தரைஸ்டு ஆக்சஸ்’ (Unauthorised access) என்பார்கள்.\nஎஸ்எஸ்எல் சான்றிதழ் இல்லாத வலைதளங்கள் மற்றும் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது, வாடிக்கையாளருக்கும், இணையத்துக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது நமக்கே தெரியாமல் நம் ரகசிய தகவல்களைத் திருட முடியும். இந்த வகையான தாக்குதல்களை ‘மேன் இன் தி மிடில் அட்டாக்’ (Man in the middle attack) என்பார்கள். இந்த பாதிப்புதான் அதிக அளவில் நடைபெறுகிறது. எனவே, இதை தடுக்க எஸ்எஸ்எல் சான்றிதழ் உள்ள ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வது அவசியம். அதோடு வங்கியின் அதிகாரப்பூர்வமான வலைதளத்திலும், கூகுள் ப்ளேஸ்டோர், ஆப்பிள் ஐடியூன்ஸ் போன்ற நம்பகமான ஆப்ஸ் ஸ்டோர்களிலிருந்து டவுன்லோடு செய்தால் வைரஸ் தாக்குதல்களின் அளவை கணிசமாகக் குறைக்க முடியும்.\nசமீபத்தில் கான்ஃபிக்கர் (Confickr) என்று ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ்களால் ஒரு மொபைல் பாதிக்கப்பட்டால், அதன்பிறகு ஆண்டிவைரஸ்களை கூட அந்த போனில் அப்டேட் செய்ய முடியாது. ஆண்டி வைரஸ்களை அப்டேட் செய்ய முடியவில்லை என்றால், சாதாரண வைரஸ்கள்கூட மொபைல் போனுக்குள் நுழைந்து முக்கியத் தகவல்களை வேட்டையாடத் தொடங்கி விடும். ஏடிஎம் பின், கிரெடிட் கார்டு பின், நெட்பேங்கிங், யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு என்று அனைத்தையும் நாம் மொபைல் போனிலேயே வைத்திருப்பதால், சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்ட மாதிரி ஆகிவிடும். கான்ஃபிக்கர் மட்டும் அல்ல, ஐலவ்யூ (Iloveyou), பாட்நெட் (botnet), கோட்ரெட் (codered) என்று தினமும் பல புதிய வைரஸ்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.\nமொபைல் போனில் பணப் பரிமாற்றம் செய்யும்போது இத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அது இல்லாமல் இனி இருக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். இனி இணைய வெளியில் வங்கிப் பரிமாற்றங்களை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது என்பது முக்கியமான விஷயம். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்கிறது என்கிற கேள்வியை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payment Corporation of India – NPCI) அமைப்பின் இம்மீடியட் பேமென்ட் சர்வீஸ் துறையின் (IMPS – Immediate Payment service) தலைவர் ராம் ரஸ்தோகியிடம் கேட்டோம்.\n“நம் மொபைல் போன்கள் வைரஸ்களால் பாதிப்படைய பல காரணங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் செய்யும் தவறுகளை சரிசெய்து கொண்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடும்.\nஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் வரும் வைரஸ்கள்\nமால்வேர் வகையான வைரஸ்கள் நம் மொபைல் போன்களைத் தாக்கினால் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத வலை தளங்களில்தான் அதிக மால்வேர்கள் இருக்கும். எனவே, அங்கீகரிக்கப்படாத வலை தளங்களில் உலாவுவதை நிறுத்தினாலே ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலம் ஏற்படும் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஹார்டுவேர் மற்றும் அப்ளிகேஷன்கள் மூலம் வரும் வைரஸ்கள்\nபொதுவாக, நம்பகத்தன்மை இல்லாத எஸ்எஸ்எல் சான்றிதழ் அளிக்கப்படாத அப்ளிகேஷன்களைத் தவிர்ப்பது நல்லது.\nஅதேபோல, சிம் தொலைந்துவிட்டால் அதே எண்ணை வாங்குவதற்காக சிம் குளோனிங் செய்கிறார்கள் சிலர். இப்படி செய்யப்படும் சிம் கார்டை பயன்படுத்துவதால், வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, சிம் கார்டு தொலைந்துவிட்டால், வேறு ஒரு புதிய எண்ணை வாங்கிக் கொள்வது நல்லது.\nஅத்துடன் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்யும்போது அந்த ஆப்ஸ்களில் பிஐஇ (Position Independent Executable) எஸ்எஸ்பி (Stack Smashing Protection) போன்றவைகள் இருக்கிறதா என்பதை எல்லாம் உறுதி செய்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.\nசில மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்தவுடனேயே வாடிக்கையாளரிடம் வரவேற்பு கிடைக்காமல் ஃபெயிலியர் மாடலாகிவிடும். இப்படி ஃபெயிலியர் ஆகும் மாடல்களில் சில போன்களின் புரோட்டோகால்கள் (விதிகள்) தவறாக எழுதப்பட்டிருக்கும். இந்த போனில் தரப்பட்டுள்ள அல்காரிதம்களும் வலுவில்லாத தாகவே இருக்கும் (Weak Cryptographic algorithms).\nஎனவே, அந்த போனை பயன்படுத்தி இணையத்தில் உலவும்போது, நம் முக்கியமான ஃபைல்களை எல்லாம் லாக் செய்துவிடுவார்கள். இப்படி தவறாக புரோட்டோகால் எழுதப்பட்ட போன்களை வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.\nவாடிக்கையாளர்களின் பிரைவஸி மற்றும் நம்பகத் தன்மையை அதிகப்படுத்த ஒன்டைம் பாஸ்வேர்டு (OTP) போன்ற வசதிகள் எல்லாம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.\nஒருவேளை நீங்கள் வங்கிப் பரிமாற்றம் செய்யும்போது உங்களுக்கு ஓடிபி வரவில்லை என்றால் உடனே வங்கியுடன் தொடர்புகொண்டு ஏன் வரவில்லை என்று விசாரியுங்கள்.\nஇந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்கள் அதிகாரப்பூர்வமான அப்ளிகேஷன்களை வடிவமைக்கும் பணியை ஐபிஎம் (IBM), எஃப்எஸ்எஸ் (FSS), இன்ஃபோசிஸ் (Infosys) போன்ற நிறுவனங்களிடம் தந்திருக்கின்றன.\nசமீபத்தில் இதுபோன்ற ஆப்ஸ் வடிவமைப்பு பணிகளுக்கு புதிய ஸ்டார்ட் -அப்களான மொபிமி (Mobime), ஃபொனேபைஸா (Fonepaisa), ஜிஐகேஷ் (GI cash) போன்ற நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன.\nவங்கி தவிர மற்ற நிறுவனங்களும் ஆப்ஸ்களை வடிவமைப்பதுடன் வேறு நிறுவனங்களின் சர்வர்களையும் பயன்படுத்தி வருகின்றன. பல வங்கிகள் வெளிநாட்டு சர்வர்களையும் பயன்படுத்துகின்றன. இப்போது ஒருபடி மேலே போய் க்ளவுட் ஸ்டோரேஜ்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nவங்கிகளின் ஆப்ஸ்கள் அங்கீகரிக்கப்பட்ட செக்யூரிட்டி லேப்களில் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். அதோடு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வங்கி தரும் ஆப்ஸ்களையும் அதிகாரப்பூர்வ வலைதளத்தையும் சரிபார்க்க வேண்டும். இந்த நடவடிக்கை களை இந்தியாவில் உள்ள பல வங்கிகள் செய்துவருகின்றன.அதுமட்டுமல்லாமல், அரசு மொபைல் மற்றும் இணைய வங்கிப் பரிமாற்றங்களுக்கு என்றே பல வழிமுறைகளை சொல்லி இருக்கிறது. இந்த வழிமுறைகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டும் வருகிறது.\nவங்கிகளும் தங்கள் மொபைல் ஆப்ஸ்களை பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகுதான் இயக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு வங்கியிலும் தனியாக ஐ.டி செக்யூரிட்டி மற்றும் ரிஸ்க் துறைகள் இருக்கின்றன.\nஇவை இன்று சந்தையில் நிலவும் ஐ.டி சவால்களை எல்லாம் சந்தித்து வாடிக்கையாளரின் பணப் பரிமாற்றத்துக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது” என்று சொல்லி முடித்தார்.\n(ராம் ரஸ்தோகி கூறியுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்களே. இதற்கும் அவர் பணிபுரியும் நிறுவனத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.)\nமொபைல் பேங்கிங் தொழில்நுட்பத்தில் புதிது புதிதாக பிரச்னைகள் வந்துகொண்டிருந்தாலும், அதற்கான தீர்வுகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது.\nமேற்கூறிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மொபைல் போன் மூலம் நம் பணப் பரிமாற்றங்களை பாதுகாப்பாக மேற்கொள்வோமே\nஇந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் மொபைல் பேங்கிங் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவை ஸ்வ்பென்க் (Svpeng) என்கிற மால்வேர் தாக்கி இருக்கிறது என்கிற செய்தியை அமெரிக்கன் பேங்கர் (American Banker) என்கிற வலைதளம் வெளியிட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆண்ட்ராய்டு போன்களை குறிவைத்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த வைரஸ்களால் நம் போன் பாதிக்கப்பட்டால் போனின் மொத்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டுவிடும்.\nஇன்று உலகில் அதிக அளவிலான மக்கள் ஆண்ட்ராய்டு போன்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஜூலை 2015 கணக்கின்படி, இந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் 62.3 சதவிகித நபர்களின் மொபைல்கள் ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தை கொண்டது என்று ஸ்டாடிஸ்டா(Statista) என்கிற நிறுவனம் கணித்திருக்கிறது.\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்குவதுதான் மால்வேர் (Malware) வகை வைரஸ்களின் முதல் இலக்கு. இந்த மால்வேர் வகையில் பல வைரஸ்கள் இருக்கின்றன. இந்த மால்வேர் வகையான வைரஸ்கள் நம் போனை தாக்கினால் போன்தான் நம் கையில்தான் இருக்கும். ஆனால், நம் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கையில் இருக்கும் என்கிறார்கள். இதுபோன்ற வைரஸ் தாக்குதல்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிகளை அறிவது அவசியம்..\nதகவல் அளித்த செந்தில்வயல் அவர்களுக்கு நன்றிங்க..\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/13/2016 06:45:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக முதல்வர் இன்று காலமானார்.\nடாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் பற்றிய சிறு குறிப்பு...\nதமிழ்நாடு மாநிலத்தின் 11 வது,14 வது,16 வது,18 வது,19 வது முதலமைச்சராக பொறுப்பு வகித்தவரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள பாண்டவபுரா தாலூக்காவிற்குட்பட்ட மேல்கோட்டை கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ந் தேதி ஜெயராம் - வேதவள்ளி தம்பதியினருக்கு மகளாகப்பிறந்தார்.\nபெங்களூருவிலுள்ள பிஷப் காட்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,சென்னையிலுள்ள சர்ச் பார்க் பிரசென்டேசன் கான்வென்ட்டிலும் பள்ளிப்படிப்பை முடித்தவர்.சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படிக்க சேர்ந்தபோது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைத்த காரணத்தால் நடிப்புலகத்தில் கால் பதித்தவர்.\n1961 ஆம் ஆண்டில் கன்னட நடிகர் ராஜ்குமாருடன் ஸ்ரீசைல மகாத்மா கன்னட திரைப்படத்தில் நடிக்கத்தொடங்கியவர் ஆங்கில திரைபடங்களிலும்,இந்தி திரைப்படங்களிலும்,தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து திரைப்படங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.\n1965 ஆம் ஆண்டில் ,'வெண்ணிற ஆடை'திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடிகருடன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.புரட்சித்தலைவி அவர்களுக்கு 1980 ஆம் ஆண்டு சரத் பாபுவுடன் நடித்த, 'நதியைத்தேடி வந்த கடல்' என்ற தமிழ் திரைப்படம்தான் 127 வது மற்றும் கடைசித் திரைப்படமாகும்.\n1981 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க.வில் உறுப்பினராகி அரசியலில் நுழைந்தார்.\n1984 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்கவை உறுப்பினரானார்.\n1989ஆம் ஆண்டு அ.தி.மு.க. கட்சியின் தலைமைப்பொறுப்பேற்று அன்று முதல் பொதுச்செயலாளராகவும் அ.தி.மு.க. கட்சியை சிறப்பாக நிர்வகித்து வந்தார்.தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர் என்ற சிறப்பும் பெற்றார்.\nஇவர் பெற்ற விருதுகளில் கலைமாமணி விருது,சிறப்பு முனைவர் என்னும் டாக்டர் பட்டம்,தங்க மங்கை விருது குறிப்பிடத்தக்கவை.\nஉடல்நலக்குறைவால் 2016 செப்டெம்பர் 22 ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற நிலையில் லண்டன் மருத்துவர் உட்பட டெல்லி எய்ம்ஸ் சிறப்பு மருத்துவர்கள் குழு உட்பட உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டும் இயற்கைவிதியால் 2016 டிசம்பர் 5 ந் தேதி இரவு 11.30மணியளவில் மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/05/2016 04:20:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திய வங்கிகளில் கணினிமயமாக்கப்பட்டவைகளின் பட்டியல்..\nவணக்கம்.இந்தியாவிலுள்ள வங்கிகளில் கணினிமயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல் உங்களது தகவலுக்காக பதிவு செய்துள்ளேன்.விடுபட்ட வங்கிகளின் பெயர்கள் தங்களுக்கு தெரிந்தால் இத்துடன் இணைக்க வேண்டுகிறேன்.\n.நமது நாட்டில் உயர் மதிப்புக்கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்த பிறகு ஆங்காங்கே பலரிடமும் பல்வேறு ஆலோசனைகள் வந்துகொண்டே இருக்கின்றன.அவற்றில் ஒன்று இதோ.....\nDigital currency எங்கு எங்கெல்லாம் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்...\nஆனா நீங்க இங்கயெல்லாம் கொண்டு வர மாட்டிங்க.என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.அதாவது........\nஇன்றைக்கு , SBI அதிகாரிகள் சிலர் மயிலாப்பூரில் தெருவோர கடைக்காரர்களிடம் சென்று பிரசாரம் செய்தார்களாம் அந்த seen போடுற வேலையை எல்லாம் விட்டு விட்டு எங்கே அதை கட்டாயம் ஆக்க வேண்டும் \ndigital currency முதலில் அமல்படுத்த வேண்டிய இடம் , sub-register office ,RTO office,all govt offices including thasildhar office and collector office, மொத்தமாக-அனைத்து அரசு அலுவலகங்கள் இங்கே ரொக்க பரிவர்த்தனையே கிடையாது என்று ஆக்கட்டும் , அங்கே ரொக்க பணம் ஒரு ரூபாய் இருந்தாலும் , அவர்கள் கொண்டு வருபவர்கள் அல்லது பணியாற்றும் நபர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படட்டும் .\ndigital currency காட்டாயம் ஆக்க பட வேண்டிய இடம் , அனைத்து மத, சாதி , கலாச்சார அறக்கட்டளையின் வங்கி கணக்குகள், கோவில்களின் digital hundi's\nஅனைத்து தனியார் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அரசே இடங்களை நிரப்பும் என்று admission நிர்வாகத்தை மட்டும்அ ரசு கையில் எடுத்து கொண்டு அதை digital currency வழியே பணி செய்யும் என்றால் பாராட்டலாம்\ndigital currency கட்டாயம் ஆக்கப் பட வேண்டிய இடம் அனைத்து தனியார் மருத்துவமனைகளில்\ndigital currency கட்டாயம் ஆக்கப்படவேண்டிய முக்கிய இடம் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் self Air ticket booking system not through any agents\ndigital currency கட்டாயமாக்கப் பட வேண்டிய இடம் அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகள், அனைத்து அரசியல்வாதிகள், MLA,MP, அமைச்சர்கள் , அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் நிர்வகிக்கும் அவர்களின் சொந்த தொழில்களில் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகளை கண்காணித்து அதிலும் digital currency மூலம் மட்டுமே பரிவர்த்தனை வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் .\ndigital currency கட்டாயமக்கப் பட்டு , 50,000 க்கு மேல் யார் காசை கையில் வைத்திருந்தாலும் சிறை என்று சொல்லட்டும் வரவேற்போம் .\ndigital currency மிக கட்டாயம் என்று இருக்க வேண்டிய இடங்கள் அனைத்து சம்பள நடவடிக்கைகள் .\ndigital currency கட்டாயம் இருக்க வேண்டிய இடங்கள்\nஅனைத்து அரசு ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரை சார்ந்த அனைவரின் வங்கி கணக்குகள்.\nகலைத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும், மற்றும் அந்த பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் , ஒரு திட்டம் (ஒரு project ) இல் ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதில் இருந்து மட்டுமே digital currency மூலம் பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் . இதை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சிறை என்பதை கட்டாயம் ஆக்க வேண்டும்.\nதேர்தல் நடக்கும் தொகுதியில் , முழுவதும் தேர்தல் முடியும் வரை , ஐம்பது ரூபாய்க்கு மேல் கையில் யாரிடமும் , அது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி வாக்காளராக இருந்தாலும் சரி , காசு இருந்தாலும் சிறை தண்டனை , எந்த பரிவர்த்தனையும் digital currency மூலம் மட்டுமே என்பதை உறுதி செய்யட்டும் .\nநீதி துறையில் அனைத்து நடவடிக்கைகளும் , வக்கீல்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் digital currency முறை கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .என்று திரு.\nபெருமாள்சாமி சுப்புராஜ் அவர்கள் பதிவிட்டுள்ளார்.நல்ல விசயம்தானே\nகூடுதலாக மின்னணு பயன்பாடு பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள இணைய வழி தகவலை தங்களுக்காக பதிவிடுகிறேன்.படித்து பயனடையுங்க..\n( CALCULATER ):கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.\n( CREDIT CARD) :கிரெடிட் கார்டை விட வேகமாகவும், பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய டிஜிட்டல் வாலட் உதவுகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரெடரிக் பாம்பிளாட், `வாலட்` கருவியை வடிவமைத்தார். இது கடிகார வடிவிலான சிப். இதை கணினியுடன் இணைத்து யாருக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற விவரத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட இருவரது வாலட் கருவிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, கருவியின் மேல்புறம் உள்ள திரையில் கொடுப்பவரும், பெறுபவரும் கைரேகையைப் பதிவு செய்தால் இருவர் கணக்கிலும் பணப்பரிமாற்றம் பாதுகாப்பாக நடந்து விடும். ஏமாற்றத்துக்கு வழியே இல்லை.\n( CREDIT CARD ALARM:) கிரெடிட் கார்டின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் அது நிறைய சிக்கல்களையும் வரவழைக்கலாம். கார்டை தொலைத்துவிட்டால் எடுப்பவர் தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைத் தடுக்க `கிரெடிட்கார்டு அலாரம்` இருக்கிறது. கார்டை, பாதுகாப்பாக வைக்க உதவும் இந்த சிறு பெட்டி, கார்டை எடுத்த 20 விநாடிகளுக்குள் திரும்ப வைக்காவிட்டால் ஒலியெழுப்பும். இதனால் கார்டு பாக்கெட்டில் இல்லை என்பதை உணர்ந்து உஷாராகி விடலாம். அதேபோல கிரெடிட் கார்டு பயன்பாட்டின்போது ரகசியம் கசியாமல் பணப்பரிமாற்றம் நடக்க `ஸ்மார்ட் ஸ்வைப் மிஷின்` உதவுகிறது.\n(ATM :) ஏ.டி.எம். உண்டியல் ஒன்று இருக்கிறது. காயின் பாக்ஸ் டெலிபோன் போல இருக்கும் இவை வீட்டிலேயே பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை. இதில் பணம் மற்றும் சில்லறைகளை போடலாம். அதிகபட்சம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு செய்து பதிவு செய்து விடலாம். இதற்காக ஒரு ஏ.டி.எம். கார்டு தந்திருப்பார்கள். சேமிக்கும்போது திடீரென்று பணம் தேவைப்பட்டால் இந்த கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கலாம். எவ்வளவு எடுத்திருக்கிறோம், எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதும் தெரியும். குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், வங்கிப் பயிற்சியை எளிதாக கற்கவும் ஊக்குவிக்கிறது இந்த நவீன உண்டியல்\n( SECURITY: ) கிரெடிட் கார்டில் செக்யூரிட்டி நம்பர் பதிந்து வைத்திருப்பார்கள். பின் நம்பரை பயன்படுத்தி நாம் உபயோகப்படுத்துவோம். இது தவறான நபர்களின் கையில் கிடைக்கும்போது சிக்கலை உருவாக்கி விடும். இந்த பிரச்சினையை தவிர்க்க `டிஜிட்டல் டிஸ்பிளே கிரெடிட் கார்டு’ இருக்கிறது. இதில் செக்யூரிட்டி நம்பரையும், பின் நம்பரையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் அத்தனை கார்டுகளையும் ஒன்றிணைத்து பயன்படுத்தலாம். அனைத்து கார்டுகளின் தகவல்களையும் சேமித்து விட்டு, ஓரமாக இருக்கும் `நாப்’ மூலம் தேவையான கார்டை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.\n(DIGITAL COUNTING JAR:) ரூபாய் நோட்டுகள் அதிகமானால் கூட சிரமப்பட்டு எண்ணி விடலாம். ஆனால் சில்லறைகள் சேர்ந்து விட்டால் எண்ணும் முன்பாக தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். `டிஜிட்டல் கவுண்டிங் ஜார்` இந்த பிரச்சினையை தீர்க்கிறது. சாதாரண உண்டியலை விட கூடுதலாக இதன் மூடியில் ஒரு டிஜிட்டல் மீட்டர் இருக்கிறது. இது உண்டியல் துளை வழியே காசுபோடும்போது அது தானாகவே கணக்கிட்டு திரையில் இருப்புத் தொகையைக் காட்டி விடும். தேவைப்பட்டால் பணத்தை எடுத்துவிட்டு `ரீசெட்` செய்து சேமிக்கலாம். இது இயங்க இரண்டு சிறிய பேட்டரிகள் தேவை. இந்த ஜார், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாணயங்களை மட்டுமே கணக்கிடும்.\n(ROBO CALCULATER:) சிறிய அளவிலான ரோபோ கால்குலேட்டர்கள், அநேக வேலைகளை தானே கணக்குப் போட்டு செய்து முடிக்கிறது. `ரிசிப்ட் ஸ்கேனர் கால்குலேட்டர்` என்ற நவீன கால்குலேட்டர் கருவி, கையால் எழுதும் கணக்குகளை ஸ்கேன் செய்து கணக்குப் பார்க்க உதவுகிறது. வங்கிக் கணக்கு, மளிகைச்சரக்கு பில் என அனைத்தையும் ஸ்கேன் செய்து கணக்குப் போட பயன்படுத்தலாம். ஏ.டி.எம். மிஷின்போல தங்கக் காசுகளை வழங்கும் கோல்டு ஏ.டி.எம்.கள் இருக்கின்றன. தாமஸ் இஸ்லர் என்ற ஜெர்மானியர் அபுதாபி தங்க மார்க்கெட்டில், கோல்டு ஏ.டி.எம்.-ஐ வடிவமைத்து பயன்பாட்டில் வைத்தார். இது அன்றைய கரன்சி மதிப்பிற்கு ஏற்ப 1, 5, 10 கிராம் தங்க காசுகளை வழங்கும்.\n(COUNTING RING: )பணம் எண்ணும் இயந்திரத்தை வங்கிகளிலும், அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். அது அலுவலக உபயோகத்துக்கு வசதியானது தான். ஆனால் கைகளில் எப்போதாவது பணம் வந்துபோகும் தனிநபருக்கு அந்த எந்திரம் உபயோகப்படாது. தனிநபரும் வசதியாக பணம் எண்ணுவதற்காக உருவாக்கப்பட்டது தான் `கவுன்டிங் ரிங்`. மோதிரம் போல இருக்கும் இதை கட்டைவிரலில் மாட்டிக்கொண்டு, பணக்கட்டின் மீது வைத்து மெல்ல மேலிருந்து, கீழாக நகர்த்தினால் எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்று எண்ணிவிடும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது செயல்படுகிறது. ***\n(ATM STORY:) ஏ.டி.எம். மெஷின் கண்டுபிடிக்கப்பட்ட கதை கொஞ்சம் சுவாரசியமானது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பாரோன் தன் மனைவிக்கு பரிசு வழங்க நினைத்தார். அதற்காக பணம் எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். அவரது முறை வந்தபோது நேரம் முடிந்துவிட்டதாக கவுண்டரை மூடிவிட்டனர். வெறுங்கையோடு செல்ல விரும்பாத அவர் வென்டிங் மெஷின் மூலம் கொஞ்சம் சாக்லெட் வாங்கிக்கொண்டு மனைவியை சந்தித்தார். பரிசளிக்க முடியாத அதிருப்தியும், வென்டிங்மெஷினும் அவரது நினைவைக் குழப்ப, புதிய எண்ணம் உதயமானது. பிறகு ஜான், ஏ.டி.எம். மெஷினை உருவாக்கினார்.\nஇந்த ஜீடிபி, தங்க இருப்பு, எக்ஸ்சேஞ்ச் ரேட், சென்செக்ஸ்... இதெல்லாம் இந்தியாவில் முக்கால்வாசி மக்களுக்கு இன்னும் என்ன ஏதுன்னே தெரியாது.\nமக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை, என்ற நிலையில் இருக்கும் இந்தியாவில் இவ்வளவு அதிவேகமாக ரொக்கப் பரிவர்த்தனைக்கு எதிரான தீவிர பிரச்சாரங்களும் முனைப்புகளும் எதற்காக\nவிவசாயக்கூலி ஒருவர் , 100 அல்லது, 200 ரூபாய் பெறுகிற ஒருவர், அதை வங்கிவழியாகவே பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உள்ளுர் பெட்டிக்கடையில் அல்லது மளிகைக் கடையில் அரிசியும், மளிகை சாமான்களும் 60 ருபாய்க்கு அன்றைய தேவைக்கு வாங்குவார். எதிர்த்த வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் இருந்து 15 ருபாய்க்கு முருங்கைக்காய் வாங்குவார். தெருவில் மீன்காரரிடம் 30 ருபாய்க்கு மீன் வாங்குவார். பூக்காரரிடம் 10 ருவாய்க்கோ, 20 ருபாய்க்கோ பூ வாங்குவார். தள்ளுவண்டியில் வளையல், பொட்டு ஃபேன்சி பொருள்கள் கொண்டு வருபவரிடம் 30 ருபாய்க்கு ஸ்டிக்கர் பொட்டு, கம்மல் வாங்குவார்... இத்தனையையும் வாங்குபவர்களும் அதற்கு பணம் பெற்றுக் கொள்பவர்களும் ரொக்கமில்லாத பரிமாற்றம் செய்வதைப் பற்றி யோசித்து பாருங்கள்.\nவலுக்கட்டாயமாக இந்த டிஜிட்டல் புரட்சியை, செய்வதால் யாருக்கு லாபமும், லாப விகிதமும் அதிகமாக போய்ச்சேரும் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.\nகறுப்பு பணமும், கள்ள பணமும் வச்சிருக்கிறவங்களை பிடிக்கிறோம்னு பெயர் சொல்லிட்டு, இது இந்தியாவின் முதுகெலும்பு என்று காலம்காலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கும் கிராமங்களுக்கும் கிராம மக்களுக்கும் எதிரான செயல் தான். கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும் பிடிக்க ஆயிரம் வழிகளும், சட்ட திட்டங்களும் அமைப்பும் இருக்கும்போது, இந்த வழி எதற்கு என்பது முற்றிலும் புரியாத ஒன்று தான்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 12/03/2016 09:01:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மொபைல் பண பரிவர்த்தனை\nதமிழக முதல்வர் இன்று காலமானார்.\nஇந்திய வங்கிகளில் கணினிமயமாக்கப்பட்டவைகளின் பட்டிய...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD.%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%A1.%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD//%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%A1/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B7%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41051", "date_download": "2018-05-27T03:20:40Z", "digest": "sha1:R4XW5GJQ5TKOP4URWQYIZUYM5ORUWR75", "length": 19275, "nlines": 152, "source_domain": "tamilkurinji.co.in", "title": "ஆர்.கே.நகர் வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll. Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஆர்.கே.நகர் வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.\nஆர்.கே.நகர் வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்\nஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nபிரதான கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் நேற்று மனுதாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.\nஇந்நிலையில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.\nஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, இன்று பிற்பகல் வாக்கில் விஷாலின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் அவரது மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் இன்று மாலை இந்த அறிவிப்பு வெளியானதால் பெரும் பரபரப்பு உருவானது.\nஇதைதொடர்ந்து, ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை அவர் ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.\nஇதை தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து நடிகர் விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். விரைந்துவந்த போலீசார் விஷாலிடம் சமரசம் பேசி தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு தேர்தல் அதிகாரியிடன் விஷால் தற்போது பேசி வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றபட்ட மு.க.ஸ்டாலின் கூறினார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தன.இதன் பின்னர்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரத்தினை துண்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் நேற்று\nபலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - உயர் நீதி மன்றம்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.\nதமிழக வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை - ஸ்டாலின்\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும்,\nமனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை\nபலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - உயர் நீதி மன்றம்.\nதூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்\nசென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை\nஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்\nதுப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்\nதமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆளுநர்\nதமிழக வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை - ஸ்டாலின்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nநிபா வைரஸ் பாதிப்பு; தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்\nஇரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது\nநிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nபேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால்\nகலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி\nமாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலா தேவி கைது\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2011/12/", "date_download": "2018-05-27T03:27:00Z", "digest": "sha1:4LV6TUTK52Q7YFR72CKL42YUYIJBW7KZ", "length": 7267, "nlines": 154, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: December 2011", "raw_content": "செவ்வாய், 20 டிசம்பர், 2011\nபூமியின் விநோதங்கள்;விண்ணின் விளையாட்டுகள் முன்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 1:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகள்ள(ர்) சாராய தீ நாக்குகள் எரிய\nகம்யூனிஸ்ட் புத்ததேவ் ஆண்டாலும் மம்தா...\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 1:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும்\nஇரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 1:23 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 டிசம்பர், 2011\nகாணும் முன் முட்டையிட்டது வெளிவர\nஎல்லாமே கறுப்பு; குரல் தவிர\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 2:42 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ibctamil.com/srilanka/80/100615", "date_download": "2018-05-27T03:05:27Z", "digest": "sha1:S4NPP2LVA4PUCWHXSQQDJX2V63IELVJS", "length": 10239, "nlines": 100, "source_domain": "ibctamil.com", "title": "ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்! - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்\nஇராணுவத்தினாலும், வனவிலங்கு அதிகாரிகளினாலும் சுவீகரிக்கப்பட்ட அஸ்ரப் நகர் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் மக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,\nஅதிகாரிகளே எழை மக்களின் காணிகளை சுரண்டாதே, வாழ்வதற்கு எமது காணியை வழங்கு, நல்லாட்சி அரசே எமக்குச் செய்யும் நீதி இதுதானா, இதற்கு எத்தனைதான் ஆர்ப்பாட்டங்களைச் செய்வது, காணி தாரும் காணி தாரும் காணியைப்பெற நீதியைத் தாரும் நல்லாட்சி அரசே, என்ற சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக பிரதேச செயலகத்திற்குள் சென்று பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்ததுடன் இது தொடர்பான மேலதிக நடவடிக்கையினை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.\nகாணிகளை இழந்த நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அல்லல் துன்பங்கள் நீடித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் இந்நாட்டின் பிரஜைகள். ஒரு காணித்துண்டில் குடியிருப்பதற்கும் எங்களது வாழ்வாதாரமான பயிர்ச்செய்கையினை மேற்கொண்டு எமக்காவும் நாட்டுக்காகவும் உழைக்க உரித்துடையவர்கள். இருந்தபோதிலும் உரிமை மறுக்கப்பட்டு ஒரு தசாப்தம் முடியப்போகின்றது. இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்று மகஜரில் பிரதானமாகக் குறிப்பிட்டுள்ளதுடன், பிரதானமாக மேலும் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.\n1. 2016-ம் ஆண்டு 11-ம் மாதம், 02-ம் திகதி விடுத்த எமது கோரிக்கைக்கு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக எமக்கு அறியத்தர வேண்டும்.\n2. எமது காணிகளை மீளளிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி விரைவாகக் காணிகளை மீளளிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய பிரதான கோரிக்கைகளுடன் குறித்த மகஜர் பிரதேசசெயலாளரிடம் கையளிக்கப்பட்டது.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ethir.org/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-05-27T03:03:54Z", "digest": "sha1:GYEKU3WI5QNK6LPKB4MTGJP5Y6FUDPDB", "length": 18917, "nlines": 658, "source_domain": "ethir.org", "title": "கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01 – எதிர்", "raw_content": "\nநேரலை நிகழ்வில் உங்களின் கேள்விகள் கருத்துக்களுடன் நீங்களும் கலந்து கொள்ள முடியும். பின்வரும் முறைகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nHome > கட்டுரைகள் > கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு, ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிரதேசம் கற்றலோனிய ஆகும். கற்றலன் மொழி பேசும் மக்கள் Valencia , the Balearic Islands , Aragon மற்றும் Catalonia ஆகிய ஸ்பெயினின் பிராந்தியங்களிலும் பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகளின் சில இடங்களிலும் பரவி வாழ்கின்றனர்.\nஸ்பெய்னின் 17 தன்னாட்சி கொண்ட பிராந்தியங்களில் கற்றலோனியா 7.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஓர் பிராந்தியமாகும். ஸ்பெய்னின் மக்கள் தொகையில் 16 சதவீதம் கற்றலோனியர்கள் ஆகும். சுற்றுலா நகரான பார்சிலோனாவை தலைநகராக கொண்டதும் , 20சதவீத GDP யையும் , 30சதவீத ஏற்றுமதியையும் ஸ்பெய்ன் நாட்டிற்கு ஈட்டித்தரும் வளம் பொருந்திய பிராந்தியமாகும். 12ஆம் நூற்றாண்டு வரை தனியரசாக இருந்த கற்றலன் பிரதேசம் 16ஆம் நூற்றாண்டில் Nueva Planta Decrees 1716 எனும் ஆட்சி அதிகார சட்டத்தின் கீழ் நேரடியா ஸ்பானிய ஆட்சியின் கீழ் வந்தது.\n1931 ஆம் ஆண்டு ஸ்பெய்ன் குடிஅரசு ஆகிய போது கற்றலோனியாவிற்கு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் 1939 – 1975 வரையான பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியில் கற்றலோனிய மக்கள் பெரிதும் நசுக்கப்பட்டனர். கற்றலோன் மொழிக்கு தடை விதிக்கப்பட்டது. கற்றலோனியர்களின் கலாச்சார அடையாளமான மனித கோபுரம் ( Castells or Human Tower) அமைத்தல் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு ஸ்பானிஷ் பெயர்களை வைக்க வற்புறுத்த பட்டனர். சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடியவர்களும் , கற்றலோனியா விடுதலைக்கு போராடியவர்களையும் கொன்று குவித்தது பிராங்கோவின் ஆட்சி. முதலாளித்துவ ஆட்சியின் சர்வாதிகார தன்மையை கேள்விக்கு உட்படுத்தி மில்லியன் கணக்கான இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் கற்றலோனியா மக்கள் அணிதிரண்டனர்.\nஇந்நிலையில் 1978 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டம் கற்றலோனியாவிற்கு மீண்டும் தன்னாட்சி அதிகாரங்களை வழங்கியது.\nஇவ்விதத்தில் சமுதாயத்தின் சோசலிச மாற்றங்கள் தடுக்கப்பட்டு, முதலாளித்துவ வர்க்கம் ஒரு அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற ஆட்சி மூலம் பெரும் சர்வாதிகார கூறுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்ட மாற்றத்தின் மூலம் நிலைமையை கட்டுப்படுத்தியது. ஸ்பெயின் முதலாளித்துவமும் இடதுசாரி அமைப்புகளான PCE மற்றும் PSOE இதற்கு சம்மதித்து செயற்பட்டனர். இந்த அரசியலமைப்பு சட்டம் போலீஸ் அதிகாரம், கல்வி ,சுகாதாரம் ,பொதுத்துறை சேவைகள் என சில அதிகாரங்கள் உள்ளடங்கலாக தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் பிராந்தியமாகியது.\n2008 ஆம் ஆண்டின் பொருளாதர வீழ்ச்சியால் உழைக்கும் வர்க்கத்தினர் , மாணவர்கள் , இளைஞ்சர்கள் வெகுவாக பாதிப்படைந்தார்கள். வேலை இல்லா திண்டாட்டம் , மற்றும் குறைந்த ஊதியங்கள், இளைஞர்களுக்கான எதிர்காலம் இல்லாதது ஆகியவற்றின் விளைவு தேசிய விடுதலையை நோக்கி நகர்த்துகிறது. 9.89 பில்லியன் யூரோகளை வாரியாக செலுத்தும் பிரந்தியம் தமது நிர்வாக நிதியாக 9.5 சதவிகிததையே பெறுகிறது. தமது வளங்கள் சுரண்ட படுவதாகவும் , தமது கலாச்சாரம் , மொழி என்பன முடக்க படுவதாகவும் கற்றலோனிய மக்கள் தங்கள் சுதந்திரம் கோரி 1909, 1931, 1934, 1936, 1977 … என தொடர்ந்து போராடி வருகின்றனர். 2010 மற்றும் 2014 களில் ஸ்பெய்ன் நீதிமன்றம் கற்றலோனியா பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரங்களை குறைக்கும் சட்டங்களை அமுல்படுத்தியது. இதனால் 135 உறுப்பினர்களை தேர்வு செய்யும் கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் சுதந்திர கோரிக்கை வலுப்பெற்றது.\nதேசியமும் – சாதிய ஒழிப்பும்\nமியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 01)\nஅறிவிப்பு இந்தியா கட்டுரைகள் சத்யா ராஜன் பிரித்தானியா\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\n35 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி...\nசர்வதேசம் செய்திகள் செயற்பாடுகள் பிரித்தானியா\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n78 . Views .முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில்...\nஅறிவிப்பு இந்தியா ஈழம் - இலங்கை கஜமுகன் கட்டுரைகள்\nஅரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n227 . Views .ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம், மற்றும்...\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\n35 . Views .சத்யா ராஜன் தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூடக்...\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\n78 . Views .முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம்...\nஅரசியல் மயப்படுத்தப்படவேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் அடுத்த கட்ட போராட்டத்தின் உந்துதலாக இருக்க வேண்டும்\nஇலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்\nபுதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்\nநேரலை (சனி அல்லது ஞாயிறு) இங்கிலாந்து : மாலை 4pm - 5pm / ஐரோப்பிய நாடுகள் : 5pm - 6pm / இலங்கை/இந்தியா : 8.30pm - 9.30pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ilaiyaragam.blogspot.com/", "date_download": "2018-05-27T03:27:48Z", "digest": "sha1:6VIJOJR3AF4OGVJSBLHMKTA732VWSE4L", "length": 73504, "nlines": 242, "source_domain": "ilaiyaragam.blogspot.com", "title": "ilaiyaragam", "raw_content": "\nஇசைஞானியை பற்றி கேள்விக்கு திரு ஜெயமோகனின் பதில் கண்டிப்பாக படிக்கவும்\nஇளையராஜாவின் இசைப் பிரபலம் பற்றி ஒரு சந்தேகம் உண்டு. இளையராஜாவின் இசை ஆளுமைகளைப் ப‌ற்றிக் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல. இசை நுணுக்கங்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. இளையராஜாவிற்கு முன் கேவிமகாதேவன், எம்எஸ்வி போன்றோர்களின் இசை அந்த சமயத்தில் மிக மேம்பட்டே இருந்திருக்கிறது.\nஇளையராஜாவின் காலத்தில் விஎஸ் நரசிம்மன், தேவேந்திரன், டிராஜேந்தர்() போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏஆர் ரகுமான் வருகை வரை இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் குறையாமல் இருந்திருக்கிறது.. ஆனால் இளையராஜாவின் இசை பற்றியே பொதுவெளியில் அதிகம் பேசுகிறோம். இளையராஜாவின் இசைத் திறமைகளைப் பற்றி அதிகப் படுத்திக்கொள்கிறோமா என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.\nஇளையராஜாவின் இசை மட்டுமே நமக்குப் பிடித்தமானதாக எப்போதும் இருந்திருக்கிறது. ஏன் இது பிரமையா அல்லது நிஜமாலுமே அவரது இசை நம்மைக் கட்டிவைத்துவிட்டதா இது பிரமையா அல்லது நிஜமாலுமே அவரது இசை நம்மைக் கட்டிவைத்துவிட்டதா எம்ஜியார், ரஜினி போன்று பிரபல்யங்கள் மீதான ஈர்ப்பு போன்ற ஒன்றா இது எம்ஜியார், ரஜினி போன்று பிரபல்யங்கள் மீதான ஈர்ப்பு போன்ற ஒன்றா இது நரசிம்மன், தேவேந்திரன் போன்றோர்களின் இசையை வேண்டுமென்றே நாம் இருட்டடிப்பு செய்வதாகத் தோன்றுகிறது. சிலரை உதாசீனப்படுத்தி ஒருவரை வேண்டுமென்றே தூக்கிப்பிடிப்பது ஞாயமாகவும் படவில்லை. இந்த எண்ணம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.\nகேளிக்கைத்தளத்தில் எப்போதும் திறமைகள் வந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அது ஒரு தொழில். மிகப்பெரிய லாபம் உடையது. சமூகமுக்கியத்துவம் கிடைப்பது. ஆகவே அதனுள் நுழையப் பல்வேறு திறமைகள் முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன. வாய்ப்பு பெறுபவர்கள் நூற்றுக்கொருவர். வெற்றிபெறுபவர்கள் அவர்களில் நூற்றுக்கொருவர். ஆகவே கேளிக்கைக் கலைத்துறையில் உள்ள சாதனையாளர்களின் பட்டியல் எப்போதும் நீளமானதாகவே இருக்கும்.\nஅதிலும் தமிழ் சினிமாவில் உச்சகட்டக் கலைத்திறன் வெளிப்பட்டது இசையில்தான். ஆகவே அங்கே சாதனையாளர் பட்டியலும் மிக நீளமானது. காரணம் சினிமாவின் பிற துறைகளான இயக்கம், எழுத்து,ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு, நடிப்பு ஆகியவற்றில் நமக்கு முன்வரலாறு கிடையாது. ஆக்கத்தின் தளத்திலும், ரசனையின் தளத்திலும். ஆகவே அவற்றில் சென்ற காலத்தில் மிகப்பெரிய திறமைகள் வெளிப்படவுமில்லை.\nதமிழ்த் திரையிசை தனித்துவத்துடன் உருவான நாற்பதுகள் முதலே அதில் சாதனையாளர்கள் வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். எவரையும் குறைத்து மதிப்பிடமுடியாது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் என்னைப் பித்துப்பிடிக்கச் செய்யும் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஏன், அதிகம் பேசப்படாத சங்கர் கணேஷ் இசையிலேயே ‘முத்தாரமே உன் ஊடல் என்னவோ’ ‘செந்தாமரையே செந்தேனிதழே’ போன்ற பல பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.\nஆகவே தமிழ்த்திரையிசையை இளையராஜாவிலிருந்து ஆரம்பிப்பதும் சரி, இளையராஜா அன்றிப் பிறரை நிராகரிப்பதும் சரி, அபத்தம். இளையராஜா முன் ஒருவர் அப்படிச் சொன்னால் உடனே எழுந்து போகச் சொல்லிவிடுவார். அவரே தமிழ்த்திரையிசையின் முன்னோடி மேதைகளின் ரசிகர். அவர் முன் அமர்ந்து அவரது குரலில் ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றவர்கள் அமைத்த பாடல்களைப் பாடக்கேட்டிருக்கிறேன். அப்போது ராஜாவில் கூடும் பரவசம் ஒரு மறக்கமுடியாத மனச்சித்திரம்.\nஆனால் இந்த ஒளிமிக்க பால்வழியில் இளையராஜா கண்டிப்பாக ஒரு மகத்தான நட்சத்திரம். அவரது முக்கியத்துவம் ஒரு வெற்றிடத்தில் அவர் தோன்றினார் என்பதனால் அல்ல. மாறாக ஒரு மிகப்பெரிய மரபை வெற்றிகரமாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றார் என்பதனால்தான் அவர் மகத்தானவராக ஆகிறார்.\nநான் இசை விமர்சகன் அல்ல. இசைப்பயிற்சி கொண்டவனும் அல்ல. ஆகவே இசை பற்றி விரிவாக விவாதிக்கத் தயங்குகிறேன். ஆனால் நான் இளையராஜா மிகையாகப் புகழப்படுகிறார் என நினைக்கவில்லை, மாறாக சரியாக இன்னும் ரசிக்கப்படவில்லை, மதிப்பிடப்படவில்லை, கௌரவிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.\nஇளையராஜா தமிழ்த்திரையிசையில் உருவாக்கிய மகத்தான திருப்பம் என்ன மீண்டும் சொல்கிறேன், இதை ஒரு நிபுணராக சொல்லவில்லை. நான் சாதாரண ரசிகன். கடந்த ஏழாண்டுக்காலமாக சினிமாவுக்குள் இருக்கிறேன். இன்று சினிமா என்ற கலை எனக்குத்தெரியும். இந்த இரு தகுதியில் இதைச் சொல்கிறேன். ‘இளையராஜாவுக்கு முன்னால் இருந்த இசையமைப்பாளர்கள் சினிமாவில் பணியாற்றிய இசைநிபுணர்கள். இளையராஜா சினிமாவை உருவாக்குவதில் பங்கெடுத்த முதல் இசையமைப்பாளர்’\nஇந்த வேறுபாட்டைப் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய மூத்த இயக்குநர்கள் முதல் நவீன இயக்குநர்கள் வரை பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். முந்தைய இசையமைப்பாளர்களுக்கு சினிமாவின் ஒட்டுமொத்த கதையமைப்பு, காட்சிக்கட்டுமானம், கதைமாந்தர்களின் உணர்ச்சிகரம் பற்றிய ஆர்வமோ அறிதலோ இருந்ததில்லை. உண்மையில் மானசீகமாக அவர்கள் சினிமாவுக்குள் இல்லை. அவர்கள் இசையில் மட்டுமே இருந்தார்கள். அவர்களை சினிமாக்காரர்கள் அணுகி தங்களுக்குத் தேவையான இசையை பெற்றார்கள்\nஅன்றெல்லாம் சினிமா உருவாவதற்கு முன்னதாகவே, ஒரு கருகூட உருவாவதற்கு முன்னரே, அவர்கள் பாடல்களைப் போட்டுவிடுவார்கள். பெரும்பாலும் இயக்குநர் கோரும் தருணங்களை மட்டுமே அவர்கள் அறிந்திருப்பார்கள். அவற்றை மட்டுமே கருத்தில்கொண்டு இசையமைப்பார்கள். அந்தத் தருணங்கள்கூட பெரும்பாலும் எல்லா சினிமாவுக்கும் பொதுதான். காதல் பாடல்,தத்துவப்பாடல், கதாநாயகன் அல்லது கதாநாயகி அறிமுகப்பாடல் என்று.காலப்போக்கில் இன்ன நடிகருக்கு இப்படி, இன்ன இசையமைப்பாளருக்கு இப்படி என ஒரு மனச்சித்திரம் உருவாகிவிடுகிறது. அதைத் தொடர்ந்து செல்வார்கள்.\nஅபூர்வமான தருணங்கள் வரும்போது அந்தத் தருணத்தை அவர்களுக்கு நன்றாக எடுத்துச்சொல்லி அதற்கேற்ப தகுதியான இசையை அவர்களிடமிருந்து பெறக்கூடிய இயக்குநர்கள் மட்டுமே படத்துடன் சரியாக இயைந்து போகும் பாடல்களைப் பெற்றிருக்கிறார்கள்- மிகச்சிறந்த உதாரணம் ஸ்ரீதர். ஆகவே பல படங்களில் இசை படத்துக்குச் சம்பந்தமில்லாமல் இருக்கும். சிலசமயம் படத்தைவிடப் பலமடங்கு மேலே கூட இருக்கும்.\nஒருபடத்தைப்புரிந்துகொண்டு அதற்காக ஒரு இசைக்கட்டுமானத்தை உருவாக்குவதென்பது அவர்கள் அறியாதது. படத்துக்குள் செல்ல முடியாத காரணத்தால் அவர்கள் அமைத்த பின்னணி இசை என்பது பெரும்பாலும் காட்சிகளை நிரப்புவதாகவே இருந்தது. பெரும்பாலும் இன்னின்ன காட்சிகளுக்கு இவ்வாறு என்று ஒரு இலக்கணம், அல்லது டெம்ப்ளேட் இருந்திருப்பதை அக்காலப் படங்களைக் கண்டால் அறியலாம்.\nபெரும்பாலான சமயங்களில் அந்தப் படத்துக்காக அவர்கள் போட்ட ஒரு பாடலை இயக்குநர்கள் ‘தீம் மியூசிக்’ ஆகப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். அபூர்வமாக ஸ்ரீதர் போன்ற இயக்குநர்கள் ஒரு தீம் மியூசிக்கைக் கேட்டு வாங்குவதுண்டு.\nமுந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்குத் திரையிசை என்றால் பாடல்கள் மட்டுமே. ஆகவே பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் இடையே பிரம்மாண்டமான வேறுபாடு இருப்பதைக் காணலாம். தில்லானா மோகனாம்பாள் படத்தின் பாடல்கள் மற்றும் நாதஸ்வர இசை ஒரு தளத்தில் இருக்க, பின்னணி இசை சம்பந்தமே இல்லாமல் இருப்பதை உதாரணமாகச் சொல்லலாம்\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்கள் படத்தின் கலைபூர்வ கட்டுமானத்தையும் உணர்ச்சிகரத்தையும் உருவாக்குவதில் பங்குபெற்றதே இல்லை.\nமுதல்படம் முதலே இளையராஜா இதற்கு நேர்மாறானவராக இருந்திருக்கிறார். எப்போதுமே அவர் படத்தை உருவாக்குபவர்களில் ஒருவர். கதையையும், சூழலையும் ,கதாபாத்திரங்களையும் முழுமையாகவும் துல்லியமாகவும் உள்வாங்குவதில் அவருக்கிருக்கும் திறன் அபூர்வமான ஒன்று. ஓர் உதாரணம், சின்னத்தாயி என்ற அதிகம் அறியப்படாத படம். யதார்த்தமான இந்தப்படத்தில் அதன் நெல்லைச்சீமை வாசனையை, அதன் கருவை, உணர்ச்சிகரத்தை அற்புதமாக உள்வாங்கி இசையமைத்திருக்கிறார் ராஜா.\nகாரணம், பழைய இசைமையமைப்பாளர்கள் மனதளவில் மிக எளிமையான இசைவாணர்கள். வாழ்க்கையின் நுண்ணியதளங்கள் அவர்களுக்குத் தெரியாது. வாசிக்கும்பழக்கம் கொண்டவர்கள் அனேகமாக எவருமில்லை. ஆகவே அவர்களால் ஒருபடத்தின் கதைக்குள் நுழைந்து பங்காற்ற முடிவதில்லை.இளையராஜா மானுட உணர்ச்சிகளை அனுபவம் மூலம் இலக்கியம் மூலம் அணுக்கமாக அறிந்தவர்.\nபொதுவாக இசைசார்ந்த நுண்ணுணர்வு மிக்கவர்களுக்குக் காட்சிசார்ந்த நுண்ணுணர்வுகள் மிகக் குறைவாகவே இருக்கும். இளையராஜா அதற்கு அபூர்வமான விதிவிலக்கு என்கிறார்கள். அவரது காட்சியுணர்வும் மிகத்துல்லியமானது. அவரால் ஒரு படத்தை இயக்கவோ எடிட் செய்யவோ முடியும் என்று ஓர் இயக்குநர் ஒருமுறை சொன்னார். இந்த இயல்பு காரணமாக ஒரு படத்தின் கதையைக் கேட்டதுமே அவர் அதன் காட்சிகளைக் கற்பனைசெய்துவிட உதவுகிறது. அந்தக் காட்சியுலகுக்கேற்ற இசையை உடனே அவர் உருவாக்குகிறார்.\nஇளையராஜா வருகைக்குப்பின் திரைப்படங்களில் இசை ‘சேர்க்கப்படுவது’ இல்லாமலானது. இசையுடன் சேர்ந்தே திரைப்படம் உருவாக்கப்படுவது தொடங்கியது.அவரது பெரும்பாலும் அனைத்துப் படங்களுக்கும் ஓர் இசைத்திட்டத்தை [scheme] அவர் உருவாக்குகிறார். பாடல்களாகவும் தீம்இசையாகவும் அதை அவர் அளிக்கிறார். அது படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு அளிக்கிறது.\nதமிழில் எடுக்கப்பட்ட பல நல்ல படங்கள் அவரது இசையைப் படப்பிடிப்பில் போட்டுக்கேட்டுக்கேட்டு அதிலிருந்து ஊக்கம்பெற்று எடுக்கப்பட்டவை. உக்கிரமான காட்சிகளின்போது அவரது இசையைப் பின்னணியில் போட்டு நடிப்பை வாங்குவார்கள், இசைக்கு நடிப்பு பொருந்தினால் அது ஓக்கே என்பார்கள். ’நான்கடவுள்’ அப்படி உருவாவதை நான் அருகிருந்து கண்டிருக்கிறேன்.\nபடங்களின் பின்னணி இசைச்சேர்ப்பை இளையராஜாவுக்கு முன் பின் என்றே பிரிக்கலாம். தமிழின் பெரும்பாலான பெரிய இசையமைப்பாளர்களின் படங்களில் பின்னணி இசை அவர்களின் இசைநடத்துநர்களால் [ஜோசப் கிருஷ்ணா, புகழேந்தி ] அமைக்கப்பட்டதுதான் என்பதை இன்று அனேகமாக அனைவருமே அறிவார்கள்.ஆனால் இளையராஜா படத்தைப் போட்டுப்பார்த்து, அதன் ஒட்டுமொத்ததையும் உள்வாங்கி , ஒவ்வொரு காட்சித்துணுக்கையும் அவதானித்து முழுமையாக ஈடுபட்டுப் பின்னணி இசையமைத்த முதல் இசையமைப்பாளர்.\nதிரையில் ஓடும் படத்தின் முன் ஒரு இரண்டுவயதுக் குழந்தைபோல கண்பிரமித்து நிற்கும் இளையராஜாவை நான் என் மனதின் அழியா ஓவியமாக வைத்திருக்கிறேன். அவரது முகத்தில் ஒளி நடனமிடும். கண்கள் மின்னும். உணர்ச்சிகள் கொந்தளிக்கும். கண்கள் கலங்கி வழியும். சமயங்களில் படம் ஓடும்போதே சரசரவென இசையை எழுதிக்கொண்டிருப்பார். தமிழின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் அவரது நல்ல படம் ஒன்றைப்பற்றிச் சொல்லும்போது ‘இளையராஜா மட்டும்தான் அந்தப்படத்தை முழுமையாக உணர்ந்து ரசித்தவர்’ என்று சொன்னார்.\nபின்னணி இசை காட்சிகளைத் தொகுப்பதும் இடைவெளிகளை நிரப்புவதும் மட்டுமல்ல என்பதை ராஜாவின் இசையே காட்டியது. அது ஒரு அற்புதமான உணர்வுவெளியைப் படத்தின் அடியோட்டமாக எழுதி சேர்த்தது. சில சமயம் காட்சிகளுக்கு விளக்கம் அளித்தது. சிலசமயம் அடுத்தகாட்சிக்குக் கொண்டு சென்றது. சிலசமயம் காட்சிகள்மேல் இளையராஜாவின் மேலதிக அர்த்தத்தை ஏற்றிக்காட்டியது. இன்றும்கூட ராஜா பின்னணி இசையில் செய்ததென்ன என்பதை நம்மவர்களில் ஒரு ஆயிரம்பேர்கூட உணர்ந்ததில்லை என்பதே உண்மை.\nமலையாளத்திலும் தமிழிலும் எழுபதுகளில் ஒரேசமயம்தான் சினிமாவில் நவீனஅலை ஆரம்பித்தது. அதுவரை சினிமாவின் காட்சிமொழியில் இருந்துவந்த ஒரு சம்பிரதாயத்தன்மையை உதறி மேலே சென்ற இயக்குநர்கள் உருவானார்கள். அன்றுவரை சில விதிவிலக்கான இயக்குநர்களே காட்சியில் ஏதேனும் புதுமைசெய்திருக்கிறார்கள். மற்றவர்கள் நடிப்பை வாங்குவதே இயக்கம் என நினைத்தவர்கள்.\nகாரணம் காட்சிகளை இப்படி எடுத்து இப்படித் தொகுத்துக் காட்டினால்தான் ரசிகனுக்குப்புரியும் என்ற ‘இலக்கணம்’ அன்று இருந்தது. ஆகவே இயக்குநர்கள் காட்சியமைப்பை ஒளிப்பதிவாளருக்கும் படத்தொகுப்பாளருக்குமே விட்டுவிடுவார்கள். இயக்குநர்-நடிகர் சிங்கம்புலி ஒருமுறை பழைய எடிட்டர்கள் எப்படிக் காட்சிகளைக் கண்ணால்கூடப் பார்க்காமல் கைப்பழக்கமாக எடிட் செய்வார்கள் என அற்புதமாக நடித்துக்காட்டினார். கீழே விழுந்து சிரித்தோம்.\nபழைய படங்களைப்பார்ப்பவர்கள் அதை இன்று தெளிவாக அறிய முடியும். அந்த இலக்கணத்தின் மிகச்சரியான உதாரணங்கள் எம்.ஜி.ஆர் படங்கள், சின்னப்பாதேவர் எடுத்தபடங்கள். வசனங்களில் கூட அந்த இலக்கணம் உண்டு. ஐயம்திரிபறப் புரியவேண்டும் என்பதே குறிக்கோள். ரசிகனின் சராசரி வயது 12 என்ற ஒரு நம்பிக்கை அன்றிருந்தது. திரைக்கதையமைப்பிலும் அந்த இலக்கணம் இருந்தது. அதைமீறி பதினாறு வயதினிலே படம் வந்தபோது அது முடிவடையவில்லை என்று நினைத்து திரையரங்கில் சத்தம்போட்டார்கள்.\nஅந்த மாற்றம் நிகழ்ந்தபோது அதை ரசிகர்கள் ஏற்க மலையாளத்தில் காரணமாக அமைந்தது காமம். புதுஅலை இயக்குநர்களான பரதன், ஐ.வி.சசி போன்றவர்கள் காமத்தை அபாரத் துணிச்சலுடன் காட்டி இளம்ரசிகர்களைப் படம் பார்க்கவைத்து புதியவகை காட்சிமொழியை அவர்கள் ஏற்கச்செய்தார்கள். அதேசமயம் தமிழில் பாரதிராஜா, தேவராஜ் -மோகன் போன்றவர்கள் எடுத்த புதியவகைக் காட்சிமொழி கொண்ட படங்கள் முழுக்கமுழுக்க இளையராஜாவின் இசையாலேயே மக்களின் ரசனைக்குரியவையாக மாறின. இளையராஜா அந்தப்படங்களின் காட்சிமொழி விட்டுவிட்ட இடங்களை இசைமூலம் நிரப்பிக்காட்டினார்.\nஇன்றுகூட அதை அப்படங்களைக் காண்கையில் புரிந்துகொள்ளலாம். அதற்கு முந்தைய காலப் படங்களில் உணர்ச்சிகளை நடிப்பாலும் வசனத்தாலும் கொட்டுவார்கள். ஆனால் பதினாறுவயதினிலே அல்லது சிட்டுக்குருவி போன்ற படங்களில் மிகையுணர்ச்சிகள் இல்லை. வெறும் காட்சிகள்தான். அவற்றின் மேல் தவழ்ந்த இளையராஜாவின் இசையே உணர்ச்சிகளைத் தொடர்புறுத்தியது. மிகையுணர்ச்சி நேரடியாக வெளிப்படும் தியாகம் போன்ற படங்களில் ராஜாவின் இசை வேலை இல்லாமல் இருப்பதையும் காணலாம்.\nதமிழில் இன்றுவரை நீளும் யதார்த்தசினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் இளையராஜா என எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் சொல்லலாம். அவர் சிறிய, யதார்த்த சினிமாவுக்கான முதல் ஆதரவாளராக இருபது வருடம் திகழ்ந்திருக்கிறார். அவரிடம் சொல்லப்பட்டு அவரைக் கவர்ந்த காரணத்தாலேயே தமிழில் மிகமுக்கியமானவையாகக் கருதப்படும் பல படங்கள் எடுக்க வழி திறந்திருக்கிறது. பல இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள்.\nஇத்தனைக்கும்பின்னர்தான் அவரது பாடல்களின் மேன்மையைப்பற்றி பேசவேண்டும். அவரது மெட்டுக்களின் இனிமை பற்றி சொல்லவேண்டியதில்லை. அவர் என்ன புரட்சியைச்செய்தார் என்று மட்டும் பார்த்தால் போதும். நான் இன்றும் தொடர்ந்து அவருக்குமுன்னால் வந்த பாடல்களையே அதிகம் கேட்கிறேன். அவற்றின் முக்கியமான போதாமை என்பது பாடல்வரிகளின் மெட்டுக்கும் பாட்டுக்குள் ஒலிக்கும் இசைக்கோர்வைகளுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மைதான். நான் மிக விரும்பும் பாடலான ‘பூமாலையில் ஓர் மல்லிகை’- யில் தடதடவென நடுவே இசை அதிர ஆரம்பிக்கும்போது என்ன இது என ஒவ்வொரு முறையும் துணுக்குறுவேன்.\nஅது இயல்பே. நம் மரபில் பாடல் என்றால் அது மானுடக்குரலால் பாடப்படுவது மட்டும்தான். ஒரு பாடல் ஒரே உணர்ச்சியை சுழற்றிச்சுழற்றி மேலே கொண்டு செல்வதுதான் நம்முடைய இன்னிசை. இசைக்கோவைகளையும் பாடலுக்கு உள்ளே சேர்ப்பது திரையிசையின் காட்சித்தேவை காரணமாக உருவானது. அதைப் பெரும்பாலும் நம்முடைய இசையமைப்பாளர்கள் உள்வாங்கிக்கொள்ளவே இல்லை. அவர்கள் குரலுக்கான மெட்டை மட்டுமே உருவாக்கினார்கள். இசைநடத்துனர் நடுவே உள்ள இசைக்கோவைகளை உருவாக்கினார்.\nவிதிவிலக்கான பாடல்கள் உண்டுதான். மலையாள இசையில் தேவராஜன் ,எம்.கெ.அர்ஜுனன் இசையில் வந்த சிலபாடல்களைக் குறிப்பிட்டு அவற்றில் உள்ளே உள்ள இசைக்கோவை பாடல்களுடன் இயைந்து போவதைப்பற்றி நண்பர் ஷாஜியிடம் வியந்தேன். அவை ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையும் முக்கியமான இசையமைப்பாளருமான ஆ.கே.சேகரால் அமைக்கப்பட்டவை என்று அவர் சொன்னபோது மேலே பேசமுடியவில்லை.\nஇந்தப்பொதுவிதிக்கு விலக்கு என நான் நினைப்பது சலீல் சௌத்ரியைத்தான். சலீல்தாவின் பாடல்கள் ஒற்றைக்கல்சிற்பம் போன்றவை. முழுமையானவை. அவற்றில் உள்ள எப்பகுதியும் நீக்கப்படக்கூடியது அல்ல. பிறிதொன்றுக்கு இடமளிப்பதும் அல்ல. ஒற்றைப்புல்லாங்குழல் இசைக்கீற்று முதல் எங்கோ அதிரும் தனி கித்தார் வரை முழுமையாக இணைந்து ஒன்றாக இருக்கும். அவருக்குப்பின் அந்த முழுமை இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களிலேயே சாத்தியமாகியிருக்கிறது.\nஇளையராஜாவின் இசையை அனேகமாக தினமும் கேட்பவன் நான். ஒன்று சொல்கிறேன், ராஜாவின் மகத்தான பாடல்களில் நீங்கள் இதுவரை ஒருமுறையேனும் கேட்ட பாடல்கள் பாதிகூட இருக்காது. எவ்வளவோ வைரவைடூரியங்கள் இன்னும் தமிழர்களின் காதுகளில் விழாமலேயே கிடக்கின்றன.\nராஜா தமிழில் எந்த அளவுக்கு மெலடிகள் போட்டிருக்கிறாரோ அந்த அளவுக்கு மலையாளத்திலும் போட்டிருக்கிறார். தமிழைவிட நுட்பமாகக்கூடப் பலபாடல்களை அமைத்திருக்கிறார். அந்தப்பாடல்களில் நீங்கள் தமிழில் அறிந்த இளையராஜாவைக் காணமுடியாது. கேரள இசைக்கருவிகளை கேரள மரபிசையை அறிந்து கேரள மண்ணில் பிறந்து வளர்ந்த ஒருவர் போட்டபாடல்களைப்போலிருக்கின்றன அவை. ஒருவேளை தமிழ்ச்செவிகளுக்கு அவை பிடிக்காமல்கூட போகலாம். ஆனால் அவை கேரளப்பண்பாட்டின் செல்வங்களாக மதிக்கப்படுகின்றன.[உதாரணமாக சில பாடல்களை கீழே கொடுத்திருக்கிறேன்]\nஇன்னொருவிஷயமும் சொல்லவிரும்புகிறேன். ராஜாவின் பாடல்களை டிவியில் பார்க்காதீர்கள். அவர் அமைத்த பாடல்களின் நுணுக்கமான இசைப்பின்னல்களுக்குச் சம்பந்தமில்லாமல் அபத்தமான காட்சியமைப்புகள் அப்பாடல்களை மறைத்துவிடும். ராஜா இசையில் ஒருபடி முன்னால்சென்றுவிட்டபோதும்கூட தமிழின் பெரும்பாலான இயக்குநர்கள் பழையபாணியிலேயே பாடல்களைக் காட்சியாக்கியிருக்கிறார்கள். குறைந்தது ஒன்றை நீங்கள் கவனிக்கலாம், இளையராஜாவின் பாடலின் இசை கதிமாறி இன்னொரு கட்டத்துக்குச் செல்லும்போதும் அப்பாடலுக்கான காட்சி அப்படியேதான் நீளும். ராஜாவின் இசையை ஒலியாக மட்டுமே கேட்கவேண்டும்- சில முக்கியமான இயக்குநர்களின் படமாக்கல்களைத் தவிர.\nஉண்மைதான், இளையராஜாவுக்கு வெறிமிக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ராஜாவில் தொடங்கி ராஜாவில் முடிக்கிறார்கள். அது பிழை அல்ல. அது கலையின் இயல்பு. உலகமெங்கும் மகத்தான கலைஞர்களுக்கு அப்படிப்பட்ட ரசிகர்கள் உண்டு.\nநான் அவர்களில் ஒருவனல்ல. நான் மிக கறாராகவே எதையும் அணுகவேண்டுமென நினைப்பவன். ஆனால் ராஜாவை நாம் இன்னும் சரியாகக் கேட்கவில்லை, அவர் அளித்ததை முழுக்க பெற்றுக்கொள்ளவுமில்லை என்றே நினைக்கிறேன். அவருக்கு அளிக்கப்படவேண்டிய கௌரவங்களையும் மரியாதைகளையும் ஓரளவுக்குக்கூட தமிழ்ச்சமூகம் அளிக்கவில்லை. இந்நிலையில் அவரது குறைகளை அல்லது போதாமைகளைப்பேச நமக்கு தகுதி இல்லை. ஆகவே என் வரையில் நான் அவற்றுக்குச் செவிகொடுக்க விரும்பவுமில்லை\nநான் பார்த்த இளையராஜா (by Agilan of AGI MUSIC)\nநான் பார்த்த இளையராஜா (by Agilan of AGI MUSIC) அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மி...\nஇசைஞானியை பற்றி கேள்விக்கு திரு ஜெயமோகனின் பதில் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2013/07/blog-post_5.html", "date_download": "2018-05-27T02:58:41Z", "digest": "sha1:LXEKBACVQAEDIMVQLG6B6E5LVE37KXRN", "length": 15482, "nlines": 154, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: வடிகால் –வண்ணதாசன்", "raw_content": "\nவடிகால் வண்ணதாசனின் சிறந்த கதை என்று சொல்லலாம். தொடக்கம், நடு, முடிவு என்று கச்சிதமாக அமைந்த கதை. கதையின் ஆரம்பத்தில் சுந்தரத்திற்கு தன் அப்பாவின் மீது ஏன் கோபம் வருகிறது என்பதை பூடகமாகச் சொல்லியவாறு கதையை நகர்த்துகிறார். அதற்கான காரணத்தை எதிர்பார்த்து நாமும் கதையுடன் பயணிக்கிறோம். கதையின் நடுவில் சுந்தரம் இறந்து போகிறான். நாம் சற்றே பிடிபடாத தன்மையுடன் கதையை வாசிக்கிறோம். வாசிக்க வாசிக்க அதன் முடிவை நோக்கி நம் மனம் விரைந்து சென்றுவிடுகிறது. ஆனால் அது எப்படி வெளிப்படும் என்பதை நாம் உணர முடியாமல் கதையை மேற்கொண்டு வாசித்து, அட இப்படித்தான் என்று கண்டடைகிறோம்.\nஒவ்வொரு மனிதனின் துக்கமும் அவனளவில்தான். அடுத்தவன் துக்கம் நமக்கு வெறும் செய்திதானே தவிர, அதில் நம் மனம் பங்கு கொள்வதில்லை. ஒவ்வொரு துக்க வீட்டிலும் அழுகிறவர்கள் தங்கள் துக்கத்திற்காகத்தான் அழுகிறார்களே அல்லாமல் பிறரின் துக்கத்திற்காக அல்ல. தங்கள் துக்கத்தை ஆசுவாசப் படுத்தும் வடிகாலாகத்தான் அடுத்தவரின் துக்கம் நமக்குப் பயன்படுகிறது என்பதை வண்ணதாசன் கச்சிதமாகவும் சிறப்பாகவும் இந்தக் கதையில் சொல்லியிருக்கிறார்.\nவண்ணதாசனின் நடையால், அவர் சித்தரிக்கும் காட்சிகள், முப்பரிமாண உருவம் கொண்டு நம்முன் துலக்கம் பெறுகின்றன. அழகானதும் நுணக்கமானதுமான காட்சிகளின் சித்தரிப்பு நம் வாசிப்பை இயல்பானதாகவும் எளிதானதாகவும் ஆக்குகிறது. அவரின் பெரும்மான்மையான கதைகளில் ஓவியம் அல்லது அது பற்றிய செய்தி நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இந்தக் கதையில் அப்படி எதுவும் இல்லை எனலாம். அதற்கு மாற்றாக மொத்த கதையின் வடிவமும் ஓவியமாக நம்முன் விரிகிறது.\nகதையில் வர்ணணைகளின் கவித்துவமான இந்தப் பகுதி நம்முள் அபாரமான கற்பனையைத் தோற்றுவிக்கிறது. சிறுகதைகளில் வெறும் கதையையும், கதையின் போக்கையும் மட்டுமே படிக்க முடிகிற நிலையில் வண்ணதாசனின் எல்லாக் கதைகளிலும் இத்தகைய ரசனையுடன் கூடிய வர்ணணைகளை வாசிக்கமுடிவது ஓர் அலாதியான உணர்வுதான்.\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nதற்போது வாங்கிய புத்தகங்கள் பட்டியல்\nஎங்கள் டீச்சர் –சுந்தர ராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://multicastlabs.com/6579109", "date_download": "2018-05-27T03:11:34Z", "digest": "sha1:QWFBPBZCHIK7UZ6Y2L3M4BSJVTVBWR32", "length": 5733, "nlines": 19, "source_domain": "multicastlabs.com", "title": "க்ளவுட் பிராண்ட் பக்கங்களை அறிமுகப்படுத்துகிறது, நிறுவனங்களுக்கு செமால்ட் உதவும்", "raw_content": "\nக்ளவுட் பிராண்ட் பக்கங்களை அறிமுகப்படுத்துகிறது, நிறுவனங்களுக்கு செமால்ட் உதவும்\nபின்னணிக்கு, Klout சமூக நெட்வொர்க்குகள் தனிநபர்களின் செல்வாக்கை அளவிட சிக்கலான தரவரிசை வழிமுறைகள் மற்றும் உள்ளடக்கம் சொற்பொருள் பகுப்பாய்வுடன் பயனர்களின் நடத்தை மதிப்பீடு செய்கிறது. ஜனவரி 2011 இல் 100 மில்லியன் ஏபிஐ அழைப்புகளில் இருந்து 12 பில்லியன் ஏபிஐ அழைப்புகளை இந்த நிறுவனம் இப்போது முதலிடம் வகிக்கிறது. 2010 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சுமார் 10000 க்கும் அதிகமான ஏபிஐ பங்காளிகளுக்கு இந்த நிறுவனம் நிறுவனம் கொண்டுள்ளது - pirelli rehvide mã¼ã¼k. இது 100 மில்லியன் பொது சுயவிவரங்களை வடக்கே அடைந்துள்ளது. Klout கூட கிட்டத்தட்ட $ 30 மில்லியன் க்ளீனர் பெர்கின்ஸ் மற்றும் மற்றவர்களிடமிருந்து நிதியுதவி அளித்து, துவக்க குழுவில் இணைந்த சியு-ஹூவா செமால்ட் உடன் இணைந்தார்.\nKlout இன் டேவிட் கோவில் விவரிக்கையில், பிராண்ட் செமால்ட் \"க்ளொட்டின் வழிகாட்டிகள் அங்கீகரிக்கப்படக்கூடிய ஒரு இடமாக அங்கீகரிக்கப்படுவதற்கும், அவர்கள் அதிகம் கவலைப்படுவதும் பிராண்ட்களில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.\" முன்னதாக, பிராண்ட்கள் தங்கள் Klout ஸ்கோர் மூலம் மிக எளிய பக்கங்களைக் கொண்டிருந்தன. பிராண்ட் செமால்ட் பிராண்ட் பக்கங்களில் ஒரு வித்தியாசமான திருப்பமாக உள்ளது, அங்கு பிராண்டிற்கான சிறந்த பாதிப்புள்ளவர்கள் அடையாளம் காணக்கூடிய மற்றும் பிராண்ட் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.\nபிராண்ட்களுக்கான இந்த அர்ப்பணிப்பு பக்கங்களுடன், செமால்ட் பயனர்கள் ஒவ்வொரு பிராண்டிற்கும் சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்களின் ஒரு டைனமிக் பட்டியலைக் காணலாம், சமூக ஊடகங்கள் முழுவதும் உரையாடல்களைப் பார்வையிட, ஒரு பிராண்டின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை கண்காணிக்கவும், சிறப்பு சலுகைகளை அணுகவும். உங்கள் செம்பால் ஸ்கோர் விளைவாக கொடுக்கப்பட்ட சலுகைகள், அனுபவங்கள்.\nKlout ஒரு துவக்க பங்குதாரர் ரெட் புல் கொண்டு பிராண்ட் குழுக்கள் தொடங்குகிறது. ரெட் புல் 'பிராண்ட் அணியில் நீங்கள் பார்த்தால், அடுத்த சில வாரங்களில் ரெட் புல் தங்கள் அதிகமான செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்கியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். மிக உயர்ந்த செல்வாக்கு செலுத்துபவர்கள் சில பொருட்கள் அல்லது எக்ஸ்-விளையாட்டுகளில் பயணம் செய்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://neo-lemurian.blogspot.com/2006/03/blog-post_27.html", "date_download": "2018-05-27T03:12:59Z", "digest": "sha1:WRTUYVEGY7QZNJDWK5LDUKDE2O7BQ6ZX", "length": 31904, "nlines": 148, "source_domain": "neo-lemurian.blogspot.com", "title": "பஃறுளி முதல் கூவம் வரை: துரோகிகளுக்கு 'சுபவீ ' தரும் சாட்டையடி", "raw_content": "பஃறுளி முதல் கூவம் வரை\nவரலாறு என்பது பழைய கதை அன்று\nதுரோகிகளுக்கு 'சுபவீ ' தரும் சாட்டையடி\nவிடுதலைப்புலிகளையும், ஈழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்துச் செயல்பட்டதற்காக \"தடா\" மற்றும் \"பொடா\" வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற மாவீரர் 'அடலேறு' சுபவீரபாண்டியன் அவர்களின் கட்டுரையை இங்கே கண்டேன். அதை மறுபதிவு செய்கிறேன்.\nஎட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி\n\"பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்.\nதேர்தல் பாதை திருடர் பாதை\"\nஎன்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சிகளில் சிலவும் கூட இப்போது தங்கள் முடிவை மறு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ, சி.பி.எம்., தவிர கன்சன்யில் கே.என்.ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்லிபரேஷன்) கட்சி ஆகியவையும் கடந்த சில ஆண்டுகளாகத் தேர்தலில் பங்கேற்று வருவதை நாம் அறிவோம்.\nமிக அண்மையில் நேபாள மன்னருக்கு எதிராகக் கடும் புரட்சிகரப் போராட்டங்களை நடத்தி வருகிற நேபாள மாவோயிஸ்ட் கட்சியும் வரும் தேர்தலில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறது. அதே வேளையில், மக்கள் யுத்தக்குழு, எம்.சி.சி இணைந்த புதிய கட்சி, போல்ஷ்விக்குகள், எஸ்.ஓ.சி. முதலான பொதுவுடைமை இயக்கங்கள் சில, இன்று வரையில் தேர்தல் புறக்கணிப்பையே முன் மொழிகின்றன.\nபீகார் சிறை தகர்ப்பு போன்ற நிகழ்வை நடத்திக் காட்டியிருக்கிற மக்கள் யுத்தக்குழு எம்.சி.சி. ஆகியவை தேர்தல் புறக்கணிப்பு நிலையை முன்னெடுத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், புரட்சிகரப் படையோ அதற்கான திட்டங்களோ எதுவும் இல்லாமல் தேர்தலையும் புறக்கணிப்பது சரியான நிலைப்பாடுதானா என்ற கேள்வி என் போன்றோருக்குள் எழத் தொடங்கியிருக்கிறது.\nமிகப் பெரிய புரட்சிப் படையைக் கட்டியிருந்த சோவியத் நாட்டில், 1917ஆம் ஆண்டு புரட்சிக்கு சில வாரங்கள் முன்பு நடந்த தேர்தலில் கூட நாங்கள் பங்கேற்றோம் என்று லெனின் குறிப்பிடுகின்றார். அதனால் புரட்சி எந்த விதத்திலும் தள்ளிப் போய் விடவில்லை என்பதை நாம் அறிகின்றோம். அது ஒரு புறமிருக்க, புரட்சிகர மாற்றத்திற்கான திட்டமும், படை அணியும் இல்லாத சூழலில், நாம் தேர்தலில் பங்கேற்பதுதான் பொருளுடையது என்று தோன்றுகிறது. தேர்தல் களத்தில் நிற்கும் இரண்டு கூட்டணிகளுக்கும் மாற்றாக புதிய ஒரு கட்சியை அல்லது கூட்டணியை உருவாக்குகிற வலிமை நமக்கு வரும் வரையில் இருக்கிற கூட்டணிகளுக்குள் எந்த ஒன்றை ஆதரிப்பது என்கிற நிலை நமக்கு ஏற்படுகின்றது.\nஇரண்டும் ஒன்றுதான். எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்பது புரட்சிகரமான தொடரைப் போலத் தென்பட்டாலும், அது நடைமுறை உண்மைகளிலிருந்து முற்றிலும் விலகி நிற்பதை நாம் உணர வேண்டும். இரண்டும் ஒரே மாதிரித்தான் என்று சொல்வது, சமமற்றவைகளைச் சமமாகக் காட்டுகின்ற முயற்சி.\nசமமானவர்களைச் சமமற்று நடத்துதல் எப்படி முறையில்லையோ, அவ்வாறே சமமற்றவர்களைச் சமமாக நடத்துவதும் முறையற்றதே ஆகும். இப்படி இருவரையும் சமப்படுத்துகிற நிலை, இருவரில் யார் மிக மோசமானவர்களோ அவர்களுக்கே மறைமுகமான உதவியாக இருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது.\nதமிழகச் சூழலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மாதிரித்தான் என்று சொல்வது மறைமுகமாக, மிக மோசமான சக்தியாக இருக்கிற ஜெயலலிதாவுக்கு உதவுகிற செயல்தான். தி.மு.க மீதும், தி.மு.க கூட்டணியின் மீதும், குறிப்பாகத் தி.மு.க. தலைமையின் மீதும் நம்மில் பலருக்கு கடும் விமர்சனங்கள் இருக்கலாம். அந்த விமர்சனங்களில் நியாயங்களும் இருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவோடு இதனைச் சமப்படுத்திச் சொல்வதென்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.\nஇந்த ஒப்பீட்டு முறையே தவறானது என்று கருத வேண்டியதில்லை. தேர்தல் களத்தில் ஒப்பீட்டு முறை தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. நமக்கு வேறு மாற்று இல்லை என்கிற போது ஒப்பீட்டு முறையில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய நிலையும் உள்ளது. ஜனநாயகமின்மையும், சமத்துவமின்மையும், ஆதிக்கப்போக்கும், ஆணவ குணமும், பார்ப்பனியத்தின் அடிப்படைத் தன்மைகள் என்றால் அவற்றின் முழு உருவாக ஜெயலலிதா இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்.\nஇலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து, பல்லாயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்து, ஒரு மிகப் பெரிய சர்வாதிகாரி போல அவர் நடந்து கொண்டார். பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்தார். அவர்களையெல்லாம் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், அதை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.\nவெள்ள நிவாரண நிதி வழங்குவதில் ஏற்பட்ட ஒழுங்கின்மை, நிர்வாகக் குறைவு காரணமாக பல பேர் நெரிசலில் சிக்கி மாண்டு போனார்கள். வெள்ளத்தில் கூடத் தப்பிப் பிழைத்த அவர்களை வெள்ள நிவாரணம் அடித்துச் சென்று விட்டது. தன் குற்றத்தை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, தி.மு.க.வைச் சேர்ந்த தனசேகரன் எனும் ஒரு மாநகராட்சி உறுப்பினர்தான் அனைத்துக்கும் காரணம் என்று கூறி அவரைச் சிறையில் அடைத்தார். அவரைப் பிணையில் விடுமாறு உயர்நீதி மன்றம் ஆணையிட்டபோதும் அதை ஏற்க மறுத்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகும் தன் குற்றத்தை உணராமல் அவரைக் குண்டர் சட்டத்தில் அடைத்தார்.\nஇப்படி ஒவ்வொரு செயலிலும் தன் சர்வாதிகாரப் போக்கையே அவர் வெளிப்படுத்தினார். பார்ப்பனியத்தினுடைய நெடுநாள் ஆசையான மதமாற்றத் தடைச் சட்டத்தை அவரே நடைமுறைப்படுத்தினார். பொடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் வைகோ(), நெடுமாறன், நக்கீரன் கோபால், சாகுல்அமீது உள்ளிட்ட பலரை ஒன்றரை ஆண்டுக் காலம் சிறையில் அடைத்தார்.\nதங்கள் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை தன் பகைபோல் கருதி, அவர்கள் மீது எப்போதும் காழ்ப்பை உமிழ்ந்தார். ஆளுங்கட்சியாய் இருக்கும் போதும் சரி, எதிர்க்கட்சியாய் இருக்கும்போதும் சரி, தமிழ் வழிக் கல்வியை தொடர்ந்து எதிர்த்தார். இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான பார்ப்பனிய குணத்தை வெளிப்படுத்துகிறவராகவே அவர் என்றைக்கும் இருந்தார்.\nசட்டமன்றத்தில் அவர் பேசிய பேச்சும், பேசிய விதமும் ஆணவத்தின் உச்சத்திலேயே எப்போதும் இருந்தன. அவர் தன் ஆட்சியில் நல்லவை எவற்றையுமே செய்யவில்லையா நல்ல திட்டங்களே இல்லையா என்றால் இருந்தன என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். ஆனால் எப்போது\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிர்ச்சி தரத்தக்க மிகப் பெரும் படுதோல்வியை அவர் சந்தித்ததற்குப் பிறகு, தன் போக்கை அவர் மாற்றிக் கொண்டார். மதமாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெற்றார். அரசு ஊழியர்களுக்கு வேலை வழங்கினார். சாலைப் பணியாளர்களைப் பணியில் சேர்த்துக் கொண்டார். ஆடுகளை, கோழிகளை வெட்டலாம் என்று அறிவித்தார். வெள்ள நிவாரண நிதி என்று குடும்ப அட்டைக்கு 1000, 2000 என்று பணத்தை அள்ளி வழங்கினார்.\nஇன்றைக்கு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசினுடைய நிதியகம் முற்றிலுமாக காலியாகிற அளவுக்கு அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார். எல்லாம் தோல்விக்குப் பிறகு எனவே இந்த இடத்தில் நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.\nஅவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நாட்டுக்கு செய்தவை எல்லாம் தீங்குகள். தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவர் செய்தவை எல்லாம் நன்மைகள். எனவே, அவர் வெற்றி பெற்றால் நாட்டுக்கு கெடுதல் செய்வார் என்பதும், தோல்வி அடைந்தால் நன்மைகள் செய்வார் என்பதும் நமக்கு விளங்குகின்றது. இப்போது நம் முன்னால் இருக்கின்ற கேள்வி, நாட்டுக்கு நன்மை செய்கிறவராக அவரை ஆக்க வேண்டுமா தீமை செய்கிறவராக ஆக்க வேண்டுமா தீமை செய்கிறவராக ஆக்க வேண்டுமா என்பது தான். தேர்தலில் படுதோல்வி அடைந்தால் மட்டுமே அவர் நல்லவைகளை நினைத்துப் பார்க்கிறவராக இருக்கிறார். எனவே அதற்கான வழியை நாம் வகுக்க வேண்டும். இந்தக் கருணையில்லா ஆட்சி கருகி ஒழிய வேண்டும் என்பதே நம் அனைவருடைய விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும்.\nஇந்த இடத்தில் நான் இன்னொன்றையும் நினைவு கூற வேண்டும். பார்ப்பனியத்தின் குணம் என்ன என்பதை மறைந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் மிகச் சரியாகத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். ‘எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி' என்பதுதான் பார்ப்பனியம் என்றார் அவர். ஜெயலலிதாவோடு இதனை ஒப்பிட்டு பார்க்கையில் அந்த வரிகள் மிகப் பொருத்தமாக இருக்கின்றன. எட்டிய போதெல்லாம் நம் தலையைப் பிடித்தார். எட்டாத நிலையில் கால்களைப் பிடித்தார். இயல்பான அந்த இனத்தினுடைய குணம் வாய்ப்பிருந்தால் தலையிலே ஏறி அமர்வது, வாய்ப்பில்லை என்றால் காலில் விழுவதற்கும் கலங்காமல் இருப்பது.\nஇதைத்தான் அய்யா பெரியார் அவர்கள் கூட, ‘பலித்தவரை...' என்பதுதான் பார்ப்பனியம் என்றார். எவ்வளவு பலிக்குமோ அவ்வளவு பார்க்கலாம். பலிக்கவில்லை என்றால் விட்டு விடலாம். எனவே, தங்களை நிறம் மாற்றிக் கொள்ள, உருமாற்றிக் கொள்ள எப்போதும் பார்ப்பனர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக ஜெயலலிதா செய்து காட்டியிருக்கிறார்.\nஎனவே, வருகிற தேர்தலில் அவருக்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது, இந்தத் தேர்தலிலிருந்து அவரை அகற்றுவதாக இல்லாமல், அரசியல் அரங்கிலிருந்தே அவரை அகற்றுவதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு நல்லது.\nசுபவீ அவர்களின் இந்தக் கட்டுரை - எட்டப்பன், புரூட்டஸ், யூடாஸ்-தனமான துரோகிப்பயல்களுக்கு நல்ல செருப்படியாக இருக்கும் என நம்புவோம்.\nசுபவீ அவர்கள் கட்டுரைக்கு நன்றி\nவைகோவின் தற்போதைய நிலைப்பாட்டைப் பற்றி சுபவீ என்ன சொல்கிறார்\n//அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நாட்டுக்கு செய்தவை எல்லாம் தீங்குகள். தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவர் செய்தவை எல்லாம் நன்மைகள். எனவே, அவர் வெற்றி பெற்றால் நாட்டுக்கு கெடுதல் செய்வார் என்பதும், தோல்வி அடைந்தால் நன்மைகள் செய்வார் என்பதும் நமக்கு விளங்குகின்றது//\nசுபவீயின் மிக நல்ல கட்டுரையை இங்கு அளித்த உங்களுக்கு நன்றி நியோ.\n - உங்க பாரதியார் படம் அருமை\n - வருகைக்கு நன்றி :)\nதொடர்ந்து உங்கள் சிறப்பான பணியைச் செய்யுங்கள் கருப்பு\n>> எனவே, வருகிற தேர்தலில் அவருக்கு(ஜெ.வுக்கு) நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது, இந்தத் தேர்தலிலிருந்து அவரை அகற்றுவதாக இல்லாமல், அரசியல் அரங்கிலிருந்தே அவரை அகற்றுவதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு நல்லது. >>\nஎன்று சுபவீ எழுதும்போது - அத்தனை கேவலமான அந்த அம்மையாருடன் கூட்டு சேர்ந்திருக்கும் வைகோவின் நிலைப்பாடு பற்றிய - சுபவீயின் கருத்து என்னவாக இருக்கும் என்று உங்கட்குப் புரியவில்லையா\nசுபவீ அந்த இடத்தில் செய்வது 'வஞ்சப்புகழ்ச்சி்' மாதிரியான ஒரு நக்கல் படிக்கிற யாருக்கும் எளிதில் விளங்கக்கூடிய விஷயம். உங்களுக்கு 'சிறுபிள்ளைத்தனமாகத்' தோன்றியதற்கு உங்கள் 'பார்வை வேறுபாடு' காரணமாக இருக்கலாம்.\nதுரோகிகளுக்கு 'சுபவீ ' தரும் சாட்டையடி\nசிந்து சமவெளி திராவிட நாகரிகம் - வரலாற்று மீட்டெடுப்பு\nமயிலாடுதுறையில் கிடைத்த கல்வெட்டு குறித்த செய்தியை மே 1 -இலேயே ஹிந்துவில் படித்திருந்தாலும், அப்போது வலைப்பதிய இயலவில்லை. இருந்தாலும் - அத...\nஇனி எந்தத் தனி மனிதனும் தமிழினத்தின் தலைவனாக கருதிக் கொள்ள முடியாது; அந்த ஏமாற்று வேலை இனி நடக்காது. எவன் காரிருள் சூழும்போது , இனத்துக்காக...\nதூ தூ தூ தூ தூ தூ.....யவர்கள்\nதூ தூ தூ தூ தூ தூயவர்கள் சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள் சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள் போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது\nதமிழ்நதியின் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் புளுகு மூட்டைகள்\nதமிழ்நதி அவர்களின் வலைப்பக்கங்களில் படித்த மிக இன்றியமையா, காலத்துக்குத் தேவையான கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். முழுமையாக... இதைப் பதிவி...\nகைபர் போலன் ஏர்வேஸும், அபிஷ்டுகளும்\nஆகக்கூடி கைபர் கணவாய்ப் பயணம் என்கிற ஈராயிரம் வருடக் கனவு நனவாகப் போகிற மகிழ்ச்சியில் மாமாக்களும், மாமிகளும் ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள்...\nதாமரையின் அரசியல் ஆற்றுப்படுத்தும் மடல்\nசீமானுக்கு - தாமரை என்கிற அற்புதமான தமிழச்சி எழுதிய அரசியல் \"ஆற்றுப்படுத்தும்\" மடல் படித்தேன். என் மனையிலும் பதித்து வைக்க வேண்டும...\nகர்ணனை மயக்கும் பசப்புக்காரி பாஞ்சாலி\nகுழலியின் இந்த அருமையான காலத்திற்கேற்ற பதிவைப் படித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தினகரனில் இன்று காலை(பிப்.12 ஆம் நாள்) வெளிவந்திருக்கும் ...\n'அவாள்'களுக்கு 'டாட்டா' காட்டுகிறார் தயாநிதி மாறன்\nசும்மாவே 'இவாள்'களுக்கு திமுக என்றால் எட்டிக்காய்; இப்போது ஜெ. மாமியின் தமிழக (கொடுங்)'கோல்' ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற் ...\nதென்கடல் இரகசியங்களும், குரங்கு கட்டிய பாலங்களும்\nவணக்கம் :) 'குமரிக்கண்டம்' என்றும் 'லெமூரியா' என்றும் தமிழர்களால் அறியப்பட்டிருக்கும் - தமிழர்களின...\nஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம்\n( படம் நன்றி : \"தி ஃரண்ட்லைன்\" ) கிட்டத்தட்ட ஒரு வருடமாக 'ஆதிச்சநல்லூர்' அகழ்வாய்வுகள் குறித்த செய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T03:05:58Z", "digest": "sha1:VP424WE35JQE37JBUOMWS4FG5JSNW22L", "length": 7298, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "மில்லியனை கோடியாக்கி சம்மாந்துறை மக்களை மடையனாக்க மு.கா முயற்சிக்கின்றதா? » Sri Lanka Muslim", "raw_content": "\nமில்லியனை கோடியாக்கி சம்மாந்துறை மக்களை மடையனாக்க மு.கா முயற்சிக்கின்றதா\nதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்\nமு.காவானது கடந்த 17 வருட காலத்துக்கும் மேலாக அம்பாறை மாவட்ட ஆதிக்கத்தை, தன் கீழ் வைத்துள்ளது. இவர்கள் இக் காலப்பகுதியில் மக்களுக்கு பயன்படும் வகையில் பெரிதாக எதனையும் செய்யாது, தற்போது மக்களிடம் வந்து, அதனை செய்கிறோம், இதனை செய்கிறோமென கூறி வருகிறார்கள்.\nஅதில் சம்மாந்துறைக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் அபிவிருத்தியை செய்யப்போவதாக கூறி வருகிறார்கள். இதனை நேற்றைய நேத்ரா தொலைக்காட்சியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெளிவாக குறிப்பிடுகிறார். இவர்கள் இவ்வளவு நாளும், இவ்வாறான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தால், இப்போது சொல்வதையும் நம்பலாம். இவர்கள் வாயால் வடை சுடுபவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.\nமு.காவின் சம்மாந்துறை தேர்தல் நடவடிக்கை குழுவானது, நாளை இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு ஒரு துண்டும் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரம் மிக வேகமாக பகிரப்பட்டும் வருகிறது. அத் துண்டுப்பிரசுரத்தில் 1000 கோடி ரூபாய் செலவில் சம்மாந்துறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇது உண்மையில் ஆயிரம் மில்லியன் ரூபாயாகும். ஆயிரம் கோடிக்கும் ஆயிரம் மில்லியனுக்கும் இடையில் பத்து மடங்கு வேறுபாடுள்ளது. இவர்களுக்கு கோடிக்கும் மில்லியனுக்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா அல்லது சம்மாந்துறை மக்களை மடையனாக்கும் முயற்சியா ஒரு துண்டுப் பிரசுரத்தை பல தடவைகள் சரி பார்த்தே வெளியிடுவார்கள். அதன் போது, இதனை ஒருவராவது நிச்சயம் கண்டு பிடித்திருப்பார்கள். இவ்விதத்தில் சிந்திக்கும் போது, சம்மாந்துறை மக்களை கோடியென கூறி, வாய் பிளக்கச் செய்யும் செயற்பாடாகவே நோக்க முடிகிறது.\nஇப்போதெல்லாம் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். மு.காவின் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்யும் காலம் மலையேறிவிட்டது. இது தவறுதலாக போடப்பட்டுவிட்டதென கூறி, நியாயப்படுத்த முனையலாம். ஒரு துண்டுப் பிரச்சுரத்தை, சரியான பெறுமானத்தை இட்டு வெளியிட முடியாதவர்கள், பெறுமானம் தெரியாதவர்களிடம், எப்படி பிரதேச சபை ஆட்சியை வழங்க முடியும் குறித்த செயல் மூலம் மு.கா எவ்வளவு ரூபாய் பெறுமதியான சேவை செய்யவுள்ளது என்பது அங்குள்ளவர்களுக்கு தெரியாது என்பது புலனாகின்றது. இது தான், அவர்களது சேவையின் செப்பமாகும். சிந்திப்போம்.. வாக்களிப்போம்…\nகல்முனை பிரதேச நலனில் அக்கறையுள்ளவர்களின் ஆதங்கம்\nபாஜக எழுச்சியால், இலக்கு வைக்கப்படும் இந்திய முஸ்லிம்கள்’\nநுண்கடன் திட்டங்களால் அழிவடையவுள்ள சமூகம்\nஒரு தமிழரின் பார்வையில் மாட்டிறைச்சி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/joy-of-the-lord/", "date_download": "2018-05-27T03:07:17Z", "digest": "sha1:7G4UA4VRECM47NO2NGPXNF4OMKKJYQCS", "length": 7484, "nlines": 171, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவ மகிழ்ச்சி - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nடிசம்பர் 2 தேவ மகிழ்ச்சி ஆபகூக் 3 : 8 – 19\nநான் கர்த்தருக்குள் மகிழ்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்.’ (ஆபகூக் 3 : 18)\nகர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது ஒரு கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்பட்ட சிலாக்கியம். அவன் அவ்விதம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு அவனுக்கு அநேக காரணங்கள் உண்டு. இந்த இருண்ட உலகில் தேவன், அவனை தமது நித்திய அன்பிலே இந்த ஒளிக்குள் அழைத்திருக்கிறார். எத்தனையோ மக்களுக்குக் கிடைக்காத பாக்கியம் இது. தன்னை அழைத்த தேவன் தொடர்ந்து வழிநடத்துவதாக வாக்குக்கொடுத்திருக்கிறார். அவ்விதமாகவே ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வருகிறார். அவருடைய கிருபை அந்த நாளுக்குப் போதுமானதாக இருக்கிறது. எவ்வளவு பெரிய சோதனையாக இருந்தாலும், தேவன் கைவிடமாட்டார் எனற நிச்சயம் அவனுக்கு உண்டு. மேலும் முடிவுபரியந்தம் தன்னைக் காத்து வழிநடத்துவார் என்று நித்திய மகிமையுள்ள ராஜ்யத்தைத் தனக்கு அவர் கொடுப்பார் என்றும் அவன் அறிவான்.\nமேலே சொன்ன வசனத்தை ஆபகூக் எந்த சூழ்நிலையில் சொல்லுகிறார் எல்லாம் நன்றாய் இருக்கும்பொழுதா இல்லை அதற்கு முந்திய வசனத்தைப் பாருங்கள். ‘என் குடல் குழம்பிற்று; அந்த சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று, , என் நிலையிலே நடுங்கினேன், ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டு நாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.\n‘அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைசெடிகளில் பழம் உண்டாகமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுபோனாலும், வயல்கள் தனியத்தை விளவிக்காமற் போனாலும், கிடையில் மாடு இல்லாமற் போனாலும்’ (ஆபகூக் 3 : 17) என்கிறார். இந்த சூழ்நிலையில்தான், அவரால் கெம்பீரமாக ‘ நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்’ என்று சொல்லமுடிந்தது. நாம் அவ்விதம் சொல்லமுடியுமா ஆம் மெய்கிறிஸ்தவனால் கூடும். ஏனென்றால் அவனுடைய மகிழ்ச்சியும், கெம்பீரமும் அவனைச்சார்ந்தோ, உலகத்தைச் சார்ந்தோ அல்ல, அது கர்த்தரைச் சார்ந்தது.\nNext story நித்திய கன்மலை\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/tag/andrea/", "date_download": "2018-05-27T03:05:01Z", "digest": "sha1:L4BPREFA3CQHXJM66S7N5B3RX74U3SFE", "length": 10789, "nlines": 148, "source_domain": "tamilcinema.com", "title": "andrea Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘’முதல் படத்திலேயே ஏற்றுக் கொண்டதற்கு நன்றி’’ – ‘தரமணி’ வசந்த் ரவி\nசென்ற வருடம் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் படங்களே ஓடாத நிலையில் அறிமுக இயக்குனர்களும் அறிமுக நாயக, நாயகிகளும் ஜொலித்தனர். அப்படி ஜொலித்த ஹீரோக்களில் ஒருவர்தான் ‘தரமணி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்த வசந்த் ரவி. படம் வெற்றி பெற்றது…\nதெலுங்கிலும் ஹிட் – விரைவில் ‘துப்பறிவாளன் 2’ ஸ்டார்ட்\nநடிகர் சங்கத் தேர்தலில் செயலாளராக வெற்றி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக வெற்றி என அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றிப் பெற்ற விஷாலுக்கு ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பின் எந்தப் படமும் வெற்றியடையவில்லை. ஆனால் மிஷ்கின் இயக்கத்தில்…\nமீண்டும் ரிலீசாகி வசூலைக் குவிக்கப்போகும் ‘தரமணி’\nகற்றது தமிழாகட்டும், தங்க மீன்களாகட்டும் விமர்சகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் விநியோகஸ்தர்கள் வயிற்றில் புளியைத்தான் கரைத்தன. ஆனால் அந்த விதியை மாற்றி விமர்சகர்கள், தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என…\n‘’லிப் லாக் கிஸ் எல்லாம் எனக்கு சாதாரணம்’’ – ஆண்ட்ரியா ‘இச்’\n‘தரமணி’, ‘துப்பறிவாளன்’ என்று அடுத்தடுத்த ஆண்ட்ரியாவின் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் சித்தார்த்துடன் சேர்ந்து நடித்திருக்கும் ஹாரர் படம்தான் ‘அவள்’. இந்தப் படத்தில் கணவன், மனைவியாக இருவரும் நடித்திருப்பதால் படத்தில் ரொமான்ஸ்…\nசித்தார்த்துக்கு வெற்றியை ‘அவள்’ தருவாளா…\nபிரம்மாண்ட இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் முன்னணி ஹீரோவாக முடியாமல் அவதிப்படுபவர் சித்தார்த். மணிரத்னம் படத்தில் நடித்தும் கூட சோபிக்காமல் போனது இவரது துரதிர்ஷ்டமே. போன வருடம் ‘ஜில் ஜல் ஜங்’ என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தாலும்…\n”கோலிவுட்டை உற்று நோக்கும் பாலிவுட்” – அதுல் குல்கர்னி\nகமல்ஹாசன் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் அறிமுகமானவர் அதுல் குல்கர்னி. அந்தப் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். மேலும் ‘ரன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சித்தார்த், ஆண்ட்ரியா நடித்திருக்கும் ‘அவள்’…\nதொடர் வசூல் மழையில் ‘துப்பறிவாளன்’ மகிழ்ச்சியில் மிஷ்கின்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் பலதரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட ‘துப்பறிவாளன்’ படத்தைப் பார்த்து மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் பாராட்டுத்…\nவெற்றி பெற்ற ‘துப்பறிவாளன்’ விரைவில் இரண்டாம் பாகம்\nஇயக்குனர் மிஷ்கினும், விஷாலும் முதல் முறையாக இணைந்த ‘துப்பறிவாளன்’ நான்கு நாட்களுக்கு முன் ரிலீசானது. மிஷ்கினுக்கும் சரி, விஷாலுக்கும் சரி எப்படியாவது ஒரு வெற்றிப் படம் தந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதால் இருவருமே ‘துப்பறிவாளன்’…\nஇயக்குனர் மிஷ்கினும் விஷாலும் முதல் முறையாக இணைந்திருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தை இன்ஸ்பையர் செய்து விஷால் கதாபாத்திரத்தையும், கதையையும் அமைத்திருக்கிறார் மிஷ்கின். படத்தின் ஆரம்பக் காட்சியில்…\n‘’நான் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை’’ – விஷால் அதிரடி\nஇயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல், பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து நாளை வெளிவரவிருக்கும் படம்தான் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஷாலிடம் ‘’நீங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD//%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD//beauty/tips/for/younger/looking/skin/&id=40420", "date_download": "2018-05-27T03:16:08Z", "digest": "sha1:S6T4BQESZ5DSXZAKVPSBPVR5EJD4MPIG", "length": 14327, "nlines": 150, "source_domain": "tamilkurinji.co.in", "title": "முகம் என்றும் இளமையுடன் இருக்க| beauty tips for younger looking skin,beauty tips for younger looking skin Search Results Simple Tips To Get Younger Looking Skin Best Natural Tips For Smooth and glowing Skin ,beauty tips for younger looking skin Search Results Simple Tips To Get Younger Looking Skin Best Natural Tips For Smooth and glowing Skin Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று மின்னும்.\nகடலை மாவுடன் தக்காளியை கூழாக குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவது அதிக பொலிவு தரும்.\nசருமம் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தால் கடலை மாவுடன் தயிர், எலுமிச்சை சாறு கலந்து குழைத்து முகத்தில் பூச வேண்டும்.\nசிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் பொலிவு பெறும்.\nமுட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சோர்வு நீங்கும்.\nமுல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வர, முகம் புத்துணர்வு பெறும்.\nவெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇவ்வாறு செய்து வந்தால் முகம் என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும் இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள். அதுவும் சென்சிடிவ்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nதலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nவெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nமுகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil\nகுளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips\nஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga\nதலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam\nஉடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey\nமுடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall\nமுடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil\nஉங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes\nகுதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்| cure Cracked Feet in Tamil\nஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்\nதலைமுடி செழித்து வளர வெங்காய ஹேர் பேக் | Onion Juice Helps For Fast Hair Growth\nமேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2012/12/", "date_download": "2018-05-27T03:33:52Z", "digest": "sha1:KPNJB3N7KQRJ6HE3JK5FCM7QH67PRMBK", "length": 6251, "nlines": 148, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: December 2012", "raw_content": "புதன், 26 டிசம்பர், 2012\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 3:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 15 டிசம்பர், 2012\nஆடம் லன்சா தந்த கிறிஸ்மஸ் பரிசு\nஒபாமா அழுகை அமெரிக்கா தொழுகை\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 3:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 2 டிசம்பர், 2012\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 10:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://thurikaii.blogspot.com/2011/10/blog-post_8063.html", "date_download": "2018-05-27T03:08:30Z", "digest": "sha1:UALBFKJTGYDCOYWLDEVLM3VBVFOTUL2W", "length": 10117, "nlines": 85, "source_domain": "thurikaii.blogspot.com", "title": "உன் விழிகள் | தூரிகை ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nபிரேம லதா இருளில் நிலவொளி நேரம் விண்ணில் விண்மீன்கள் விசாலமாய் விரிந்திருக்க இதயமோ சுருங்கிய நிலையில் நெருஞ்சி முள்ளான படுக்கையில் நெருப...\nJohn Francis தேய்பிறை என்று தேம்பி அழுகின்ற கருப்பு நிலவு... இரு பக்கம் காட்டும் நாணயம் போல தேய்பிறையில் உ...\nஆனந்த் கெ.ம உன்னை யாரடி உதட்டு சாயத்தையெல்லாம் வானிற்கு கடனாய் கொடுக்க சொன்னது மாலை நேரத்தில் வானத்தை பார் உலகமே வியக்கும் அளவிற...\nஆனந்த் கெ.ம வரங்களே சாபங்கள் என்றால் இங்கு வரங்கள் எதற்கு தோல்விகளே தொடர்கள் என்றால் இங்கு வெற்றிகள் எதற்கு தோல்விகளே தொடர்கள் என்றால் இங்கு வெற்றிகள் எதற்கு\nஇளவரசி குணா உன் மாய விழிகளின் மந்திரத்தால் கட்டுண்டு கிடக்கும் சாமான்யன் நான் ... உன் மயக்கும் சிரிப்பில் ...\nஊசலாடும் கண்களுக்குள் - நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/hara-hara-mahadevaki-movie-audio-news/", "date_download": "2018-05-27T03:24:43Z", "digest": "sha1:I6GED3UQ7Q5ONVZUCJO44RYCODWQLEC2", "length": 15756, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” – கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படமாம்..!", "raw_content": "\n“இருட்டு அறையில் முரட்டுக் குத்து” – கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படமாம்..\nகௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி.’\nBlue Ghost Productions, தங்கம் சினிமாஸ் தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ் P.ஜெயகுமார் இயக்கியுள்ளார். இசை – பாலமுரளி பாலு, ஒளிப்பதிவு – செல்வகுமார்.\nவிழாவில் ஹீரோ கௌதம் கார்த்திக் பேசும்போது, “எல்லோரும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்த கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது.\nஇயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களைத்தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் மிகவும் ரசித்து, சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகுதான் என்னிடம் இந்தப் படத்தின் கதையை கூறினார் இயக்குநர்.\nஎனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன். அனைவரும் கடினமாக உழைத்தோம். செட்டில் எல்லோரும் சிரித்துக் கொண்டே வேலை செய்தது இனிமையாக இருந்தது.\nஎன்னுடைய கடினமான காலகட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் என்னை அழைத்து இந்தப் படத்தைக் கொடுத்து உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும். நான் இதே டீமோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைகிறேன். படத்தின் டைட்டிலை இயக்குநரே அறிவிப்பார்.\nநான் இன்று காலை என்னுடைய ரசிகர்களை சந்தித்தேன். என்னை மகிழ்விக்கும் வகையில் 25 கிலோ கேக்கோடு வந்து என்னுடைய பிறந்த நாளை இரண்டு நாட்களுக்கு முன்பாக இன்றே கொண்டாடினார்கள். என்னுடைய ரசிகர்கள் எல்லோரும்தான் என் குடும்பம்…” என்றார் கௌதம் கார்த்திக்.\nஹீரோயின் நிக்கி கல்ராணி பேசும்போது, “டார்லிங்’ படத்தின் மூலம் என்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இந்த படத்தின் கதையை கேட்கும்படி கூறினார்.\nஇயக்குநர் சந்தோஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து கதை சொன்னார். கதையை கேட்டு சிரித்து, சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. சந்தோஷ் என்னிடம் கதை சொன்னபோது என்னுடைய போர்ஷனில் வரும் விஷயங்களை மட்டும்தான் கூறினார்.\nஇப்போது இங்கே வந்த பிறகுதான் கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்தும் எனக்கு கொஞ்சம், கொஞ்சமாக தெரிகிறது. அனைத்தும் நன்றாகவே உள்ளது. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பன். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தமிழ் கற்று கொடுத்தார். இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் பாடல்கள் அனைத்தும் கேட்க அருமையாக உள்ளது…” என்றார்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளரான ஞானவேல் ராஜா பேசும்போது, “கௌதம் கார்த்திக்கை வைத்து எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. அந்த படத்தை இயக்குநர் சந்தோஷ்தான் இயக்கவுள்ளார்…” என்றார்.\nஇதைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவுள்ள அப்படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என அறிவித்தார் இயக்குநர் சந்தோஷ்.\nவிழாவில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் ஞானவேல் ராஜா , தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் கதிரேசன், 2D Entertainment ராஜசேகர் பாண்டியன், தயாரிப்பாளர் தங்கராஜ், இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார், ஒளிப்பதிவாளர் செல்வகுமார், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, நடிகர்கள் ரவி மரியா, சதீஷ், மயில்சாமி, R.K.சுரேஷ், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., அருள்பதி, Auraa Cinemas மகேஷ், இயக்குநர்கள் ஆர்.கண்ணன், கௌரவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nactor gowtham karthick actress nikki galrani director santhosh p.jayakumar hara hara mahadevaki movie slider இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் நடிகர் கெளதம் கார்த்திக் நடிகை நிக்கி கல்ராணி ஹர ஹர மகாதேவகி திரைப்படம்\nPrevious Postநடிகை ராதிகாவின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'அண்ணாதுரை' Next Postதமிழ்த் திரையுலகமே வாழ்த்தி வரவேற்ற மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' திரைப்படம்..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/iravukku-aayieram-kangal-movie-song-making-videos/", "date_download": "2018-05-27T03:33:49Z", "digest": "sha1:FT6V2DZWTIZZUORLELNCNMH7ZQH3PTF5", "length": 9276, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இசை உருவாக்கம்..!", "raw_content": "\n‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இசை உருவாக்கம்..\nactor arulnithi actress mahima nambiar director mu.maran iravukku aaiyeram kangal movie music director sam c.s. இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் இயக்குநர் மு.மாறன் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் நடிகர் அருள்நிதி நடிகர் அருள்நிதி தமிழரசு நடிகை மகிமா நம்பியார்\nPrevious Postதமன்குமார், அக்சயா நடிக்கும் 'யாளி' படத்தின் ஸ்டில்ஸ் Next Post\"நூலகம் இல்லாத ஊரில்கூட இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன...\" – நடிகர் சூர்யா பரபரப்பு பேச்சு\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் – சினிமா விமர்சனம்\nரசிகர்களை திகிலடைய வைக்கப் போகும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம்..\nமோகன்லாலின் ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-05-27T03:05:21Z", "digest": "sha1:PZXN5LS2PFXAPA4TWONZEZVRO7JERYLS", "length": 19762, "nlines": 94, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: திடப்பொருளின் வெப்ப நிலை (குவாண்டம் இயற்பியல் பார்வையில்)", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nதிடப்பொருளின் வெப்ப நிலை (குவாண்டம் இயற்பியல் பார்வையில்)\nஒரு திடப் பொருளின் வெப்பநிலை (temperature) என்பது எதைக் குறிக்கிறது நாம் சாதாரணமாக, ஒரு தெர்மாமீட்டர் (வெப்பமானி) என்ன சொல்கிறதோ அதுதான் வெப்ப நிலை என்று சொல்வோம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது மேலோட்டமான பதில் என்பது புரியும். நாம் பொதுவாக பயன்படுத்தும் வெப்பமானியில் பாதரசம் ஒரு சிறிய கண்ணாடிக் குழாயில் இருக்கும். நமக்கு காய்ச்சல் வந்தால் , உடல் வெப்ப நிலை எவ்வள்வு என்று தெரிந்து கொள்ள நாக்குக்கு அடியில் வைத்து ஒரு நிமிடம் கழித்து, பாதரசம் எவ்வளவு தூரம் கண்ணாடியில் வந்திருக்கிறது என்று பார்ப்போம்.\nநம் உடலில் தெர்மா மீட்டர் வைக்கும்போது கண்ணாடியும் நம் உடலின் வெப்பநிலைக்கே வருகிறது. அடுத்து உள்ளே இருக்கும் பாதரசமும் வருகிறது. பாதரசத்தின் வெப்பநிலை அதிகரிப்பதால் அதன் பருமன் (volume) அதிகரிக்கிறது. அதனால் அது கண்ணாடிக்கும் ஏறி வரும். எவ்வளவு தூரம் ஏறுகிறது என்பதை முன்கூட்டியே கணித்து கண்ணாடியில் கோடு போட்டு வைத்திருப்பார்கள்.\nமுதலில் வெப்ப நிலை என்றால் என்ன வெப்பநிலை ஏறினால் பாதரசம் ஏன் அதிக பருமன் அடைகிறது வெப்பநிலை ஏறினால் பாதரசம் ஏன் அதிக பருமன் அடைகிறது கண்ணாடிக்கு ஒன்றுமே ஆகாதா\nஒவ்வொரு அணுவும், மூலக்கூறும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது திடப்பொருள், திரவப் பொருள், வாயு என்று எல்லா நிலைகளிலும் அசைந்து கொண்டுதான் இருக்கிறது. அசைந்து என்று சொல்வதற்கு பதிலாக, ‘அதிர்ந்து' என்று சொல்லலாம். ஏனென்றால், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாக, இடம்-வலமாக அசைந்து கொண்டு இருக்கும்.\nஇந்த அதிர்வைத்தான் நாம் வெப்பநிலை என்று சொல்கிறோம். இது குவாண்டம் இயற்பியலின் கண்டுபிடிப்பு அல்லது கொள்கை. திடப்பொருளில் அணுக்கள் (அல்லது மூலக்கூறுகள்) ஓரளவு சீரான அமைப்புடன் இருக்கின்றன. இரு அணுக்களுக்கு இடையே இருக்கும் தொலைவு அவ்வளவு மாறாது. அவ்வளவு மாறாது என்றால் கொஞ்சம் மாறலாம் என்றுதான் பொருள். எடுத்துக்காட்டாக, இரு அணுக்களுக்கு இடையே இருக்கும் தொலைவு ”பொதுவாக” 0.5 நே.மீ (நேனோ மீட்டர்) (on the average 0.5 nano meter) என்று இருக்கலாம். அந்த அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருப்பதால், சில சமயங்களில் 0.4 நே.மீ ஆகவும் சில சமயங்களில் 0.6 நே.மீ. ஆகவும் இருக்கலாம்.\nஅதிர்வுகள் அதிகமானால், அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவு அதிகமாகும். எல்லா திசைகளிலும் இப்படி அதிகமாவதால், அந்தப் பொருளின் பருமன் அதிகமாகும். எவ்வளவு அதிகமாகும் என்பது அந்தப் பொருளின் தன்மையைப் பொறுத்தது. இதை expansion coefficient என்ற எண்ணால் குறிப்பிடலாம். பாதரசத்தை கொஞ்சம் சூடுபடுத்தினாலே போதும், அதன் பருமன் நிறைய அதிகரிக்கும். ஆனால், கண்ணாடி அவ்வளவாக மாறாது. சிறிய அளவில்தான் மாறும்.\nஅதிக வெப்பநிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது நாம் கை வைத்தால், உடனே சுடுகிறது. ஏன் என்றால், அந்தப் பொருளில் இருக்கும் அணுக்கள் நிறைய அதிர்ந்து கொண்டு இருக்கின்றன. அதனால், நாம் அந்தப் பொருளைத் தொடும் பொழுது, நம் உடலில் (கையில், தோலில்) இருக்கும் அணுக்களும், அந்த அணுக்களைப் போல அதிரும். அதனால், நரம்புகளில் ‘வலி' என்ற உணர்வை தூண்டும் மூலக்கூறுகள் இந்த செய்தியை அறிவிக்கும். இதே சமயம், அந்தப் பொருளின் வெப்ப நிலை குறையும். ஏனென்றால், அதில் இருக்கும் அதிர்வுகளில் கொஞ்சம் நாம் எடுத்துக்கொண்டு விட்டோம். வேறு விதமாக சொன்னால், அதிலிருந்து கொஞ்சம் வெப்பத்தை நாம் எடுத்துக் கொண்டு விட்டோம்.\nவெப்பம் கடத்துவது என்றால் என்ன ஒரு பெரிய பொருளில் ( எடுத்துக் காட்டாக 10 செ.மீ. நீளம், 5 செ.மீ. அகலம், 2 செ.மீ. உயரம் கொண்ட பொருளில்) ஒரு முனையில் அதிர்வுகள அதிகமாகவும், மற்றொரு முனையில் குறைவாகவும் இப்போது இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். இந்த அதிர்வுகள் எவ்வளவு விரைவில் அந்தப் பொருளில் பரவுகின்றன என்பதைத்தான் வெப்பம் கடத்தும் திறன் (thermal conductivity) என்று சொல்கிறோம். அடுத்தடுத்து இருக்கும் அணுக்களுக்கு இடையே மிகுந்த அளவில் தொடர்பு (interaction) இருந்தால் வெப்பம் எளிதில் கடத்தப் படலாம். ”பக்கத்தில் இருக்கும் அணு ஆடினால் ஆடிவிட்டுப் போகட்டும், நான் இருக்கிறபடிதான் இருப்பேன்” என்று சொல்லும் பொருள்களில் வெப்பம் அவ்வளவு சீக்கிரம் பரவாது.\nஒரு பொருளின் வெப்ப நிலையை குறைக்க வேண்டும் என்றால் அதில் இருக்கும் அதிர்வுகளை குறைக்க வேண்டும். நாம் ஏசி போட்டால், எப்படி குளிர் வருகிறது (விளக்கமான கதை இங்கு இல்லை, அதற்கு மெக்கானிகல் என்ஜினியர் யாராவது வந்து நல்லமுறையில் சொல்ல வேண்டும்). அதில் இருக்கும் Freon போன்ற ஒரு பொருள் குளிரூட்டப் படுகிறது. அதாவது, அதில் அதிர்வுகள் மிகக் குறைவாக இருக்கும். அதன் மேல் படும் காற்று குளிரூட்டப் படும். அதாவது அதில் இருக்கும் மூலக்கூறுகளின் அதிர்வுகள் குறையும். இந்த குளிர் காற்று ஒரு மின்விசிறி (fan) மூலம் நம் மேல் படும் பொழுது நம் உடலில் (தோலில்) இருக்கும் அணுக்களின் அதிர்வுகள் குறையும்.\nஇந்த சமயத்தில் ஒரு விஷயத்தை கவனிக்கவும். குளிர் காற்றை மின்விசிறி மூலம் செலுத்தும்பொழுது, அது நல்ல விசையுடன் நம் மேல் வந்து மோதுகிறது. வேகமாக வந்து மோதுவதால், அது அதிக வெப்பநிலையில் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. வெப்ப நிலை என்பது “அதிர்வுடன்” தொடர்பு கொண்டது. வேகத்துடன் தொடர்பு கொண்டது அல்ல.\nஅதிக வெப்பநிலையில் இருக்கும் பொருளுக்கு அதிக ஆற்றல் (energy) இருக்கும். இதை ஆங்கிலத்தில் internal energy என்று சொல்வார்கள். வேகமாக செல்லும் பொருளுக்கும் அதிக ஆற்றல் இருக்கும். ஆனால், அது kinetic energy (இயங்கு ஆற்றல் ) என்று சொல்லப்படும். இரண்டும் வெவ்வேறானவை.\nகுவாண்டம் இயற்பியல் படி, இந்த அதிர்வுகளை Phonon (ஃபோனான்) என்று சொல்வார்கள். ஃபோனான் என்றால் என்ன அதன் முக்கிய பண்புகள் மற்றும் விளைவுகள் என்ன\nகுவாண்டம் இயற்பியலின் ஒரு விசித்திரமான கண்டுபிடிப்பு Zero point motion என்பதாகும். அதாவது, 0 டிகிரி கெல்வினில் கூட அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருக்கும் என்று சொல்கிறது. அது எப்படி\nபொதுவாக, உலோகங்களில் வெப்பமும் மின்சாரமும் எளிதில் கடத்தப்படும். அது ஏன்\nஇவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nLabels: Physics, Quantum Physics, இயற்பியல், குவாண்டம் இயற்பியல்\nவெப்பம் என்பது அணுக்களின் அதிர்வு என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள். ஏன் இதுபோன்ற எளிமையான விளக்கங்களை பள்ளி பாடபுத்தகங்களில் கொடுப்பதில்லை வெப்பத்திற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வதற்காக பல முறை 12 ம் வகுப்பு இயற்பியல் பாடபுத்தகத்தை புரட்டி பார்த்துவிட்டேன். வெப்பம் ஒருவகை ஆற்றல் என்பது மட்டும் தான் புத்தகத்தில் உள்ள விளக்கம். அப்புறம் புரிந்து கொள்ளவே முடியாத கணக்குகள் வேறு. பள்ளி பாட புத்தகங்களில் இதுபோன்ற எளிமையான விளக்கங்களை சேர்க்க சம்மந்தப்பட்டவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். நன்றி.\nநன்றி அறிவகம் அவர்களே. இன்னும் சில வருடங்களில் அவை பள்ளி புத்தகங்களில் வரும் என்று நினைக்கிறேன். நான் பல வருடங்களுக்கு முன்னால் பள்ளியில் படித்ததையும், இப்பொழுது இருக்கும் பள்ளிப் புத்தகங்களையும் ஒப்பிட்டு பார்த்தாலே, பல புதிய விஷயங்கள் இப்போது சேர்த்திருப்பது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது.\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nஹைசன்பர்க் விதி, பகுதி-3. குவாண்டம் இயற்பியல்\nகுவாண்டம் இயற்பியல் - ஷ்ரோடிங்கர் வரலாறு\nஹைசன்பர்க் தத்துவம், பகுதி 2. குவாண்டம் இயற்பியல்...\nஹைசன்பர்க் தத்துவம்- குவாண்டம் இயற்பியல்\nதிடப்பொருளின் வெப்ப நிலை (குவாண்டம் இயற்பியல் பார்...\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -7\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -6\nகாலத்தின் வரலாறு - 5. இடமும், காலமும் (ஒலி வடிவில்...\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -4\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -3\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்)- 2\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -1\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=219&sid=4fc6a238c855a0b34cd92a69ac895c4a", "date_download": "2018-05-27T03:15:13Z", "digest": "sha1:I5L5G3QA7ASS3ER7J77KS2VLXTHL7LT4", "length": 42113, "nlines": 506, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nஇன்று தமிழ் கருத்து தளங்கள் பல இருந்தாலும் தரத்திலும் வசதியிலும் ஒரு சில தளங்கள் மட்டுமே முதன்மையில் உள்ளது. பூச்சரம் எனும் புதிய தளம் அனைத்து தளங்களையும் கணக்கில் கொண்டு அங்கு இருக்கும் வசதியையும், இல்லாத வசதிகளையும் இங்கு உறுப்பினர்களுக்காக வழங்குகிறது. வசதி, தரம் மட்டும் தான் என்று இல்லாமல் இணையத்தில் உலாவரும் நல்ல படைப்புகள் மற்றும் பதிவுகள் பூச்சர உறுப்பினர்களால் இங்கு பகிரப்படுகிறது.இவைகள் மட்டும் இன்றி பூச்சர உறுப்பினர்களால் சொந்தமாக எழுதப்படும் கட்டுரைகள், கவிதைகள், பிணிகைகள்(லிங்க்) போன்றவைகளும் அவப்போது பகிரப்படுகிறது. தங்களின் எவ்வித கருத்துக்களையும் எவ்வித தயக்கமும் இன்றி பூச்சரத்தில் பகிரலாம். உங்கள் திறமைகள் மதிக்கப்படும்.\nஉங்கள் எண்ணங்கள் இங்கு எழுதாகுக\nபூச்சரத்தில் தாங்கள் உறுப்பினராக விரும்பினால், இரண்டு வழிமுறைகளில் உறுப்பினராக பதிவு(Register) செய்யலாம்.\n1) தளத்தின் வழியேயான பதிவு (Regitration via Site)\nமுதலில் படம்-1 இல் உள்ளது போல் தளத்தின் மேல் வலது (Right) பக்கம் இருக்கும் Register என்ற பிணிகையை சுடக்கவும்\nஇங்கு உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பின்பு சமர்பிக்க வேண்டும்\nஅவ்வளவு தான் உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டு அது பற்றிய செய்தி எங்களுக்கு கிடைக்கும் போது இணையத்தில் இருக்கும் தள மேம்புனரால் (Site Developer) உங்கள் கணக்கு இயக்கி வைக்கப்படும். இயக்கப்பட்ட கணக்கு குறித்து பதிந்த மின்னஞ்சல் முகவரிக்கு செய்திவரும். பிறகு நீங்கள் தளத்தில் தளத்தில் பதிவுபெற்ற உறுப்பினராக செயல்படலாம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக பதிவு (Register) செய்யும் முறைகள்\nபதிவு செய்யும் முறையை மனதில் பதிவாகும் படியான பதிவு , அருமை .\nஇது இணைய போகும் உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக அமையும் ,\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 9th, 2014, 10:59 pm\nபடங்களுடன் எளிமையாக விளக்கியது அருமை அருமை.....\nபலர் எனக்கு முகநூலிலும் செய்திகளிலும் எவ்வாறு உறுப்பினராகுவது என கேட்டுக்கொண்டுள்ளனர்...........\nஇனி அவர்களுக்கு எளிதாக தெரிந்துவிடும்............\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக பதிவு (Register) செய்யும் முறைகள்\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2014, 9:56 pm\nபூவன் wrote: பதிவு செய்யும் முறையை மனதில் பதிவாகும் படியான பதிவு , அருமை .\nஇது இணைய போகும் உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக அமையும் ,\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக பதிவு (Register) செய்யும் முறைகள்\nபூவன் wrote: பதிவு செய்யும் முறையை மனதில் பதிவாகும் படியான பதிவு , அருமை .\nஇது இணைய போகும் உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக அமையும் ,\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 1st, 2014, 9:50 pm\nவளவன் wrote: படமாவே சொல்லிட்டீங்களா...............\nநீங்க கேட்குற அளவிற்கு மன தைரியம் இருந்தா அவர் பாட்டு கூட பாடுவாரு.......\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nby பிரபாகரன் » பிப்ரவரி 1st, 2014, 9:52 pm\nவளவன் wrote: படமாவே சொல்லிட்டீங்களா...............\nநீங்க கேட்குற அளவிற்கு மன தைரியம் இருந்தா அவர் பாட்டு கூட பாடுவாரு.......\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 1st, 2014, 9:57 pm\nஅண்ணே அண்ணே கொஞ்சம் பாடுன்கண்ணே...........\nமாப்பிளை மொக்க சாமி வந்திருக்காக (பூவன்)\nமற்றும் நம் உற்றார் உறவினர் வந்திருக்காங்க............\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 4th, 2014, 7:37 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.4-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/&id=41174", "date_download": "2018-05-27T03:17:54Z", "digest": "sha1:PRLEUDFPFSOQQYPPIMP6SB4N4MH2IDUZ", "length": 15652, "nlines": 145, "source_domain": "tamilkurinji.co.in", "title": "ஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்,Sasikala's brother Dhivakaran reveals Jaya died one day before official declaration,Sasikala's brother Dhivakaran reveals Jaya died one day before official declaration Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார் என்று சசிகலாவின் சகோதரர் தினகரன் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்.22 அன்று இரவு உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்றும், பலனின்றி டிச.5-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். இது அதிகாரபூர்வமாக அரசு சார்பிலும், மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் அறிவிக்கப்பட்டது.\nஜெயலலிதா மரணத்திலும் அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் மர்மம் இருக்கிறது என்று ஓபிஎஸ், தீபா உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டினர்.\nவிசாரணை கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். நாங்கள் யாரும் ஜெயலலிதாவை ஒருநாள் கூட பார்க்கவில்லை இட்லி சாப்பிட்டதாக சொன்னதெல்லாம் உண்மைக்கு புறம்பானது என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சால் சர்ச்சை வலுத்தது.\n75 நாட்கள் சிகிச்சையில் எங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அமைச்சர்களும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஇந்த ஆணையம் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து வருகிறது. தினகரன், கிருஷ்ணபிரியா, சசிகலா உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஅப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்நிலையில் கடந்த டிச.20 அன்று அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி ஒன்றை வெற்றிவேல் வெளியிட்டு அதை ஆணையத்திலும் ஒப்படைத்தார்.\nஇந்நிலையில் இன்று மன்னார்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் புது சர்ச்சையை தனது பேச்சின் மூலம் தொடங்க ிவைத்துள்ளார்.\nமன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய திவாகரன் கூறியதாவது:\n''முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிச.4-ம் தேதி மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது.\nஅப்போது நான் ஏன் அறிவிக்காமல் காலம் தாழ்த்துகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அப்போலோ குழுமத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளன.\nஅதற்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும் அதை கொடுக்கச் சொல்லுங்கள் என்றனர். இதுப்பற்றி ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பினால் தாம் தகவல் அளிக்கக்த் தயார்'' என்று தெரிவித்தார்.\nஜெயலலிதா மரண சர்ச்சையில் மேலும் ஒரு சர்ச்சையாக புதிதாக திவாகரன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர், தலைமைச் செயலர், மருத்துவமனை நிர்வாகம் என அனைவருக்கும் இந்தப் பேச்சால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது\nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு; தமிழக அரசு நடவடிக்கை\nபலியானவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட முடியாது - உயர் நீதி மன்றம்.\nதூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பு; 104 பேர் காயம்\nசென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை\nஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்\nதுப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்\nதமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆளுநர்\nதமிழக வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை - ஸ்டாலின்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nநிபா வைரஸ் பாதிப்பு; தமிழக மக்கள் பீதியடைய வேண்டாம்: சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்\nஇரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது\nநிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nபேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால்\nகலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி\nமாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலா தேவி கைது\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2013/12/", "date_download": "2018-05-27T03:27:53Z", "digest": "sha1:FPWFBBKDCRVLXEYHS4YN73S7HPDTSG2Z", "length": 6501, "nlines": 148, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: December 2013", "raw_content": "திங்கள், 30 டிசம்பர், 2013\nஊக்க மது கை விடேல்\nகாலிப்பெட்டிகள் நிறைய கண்ணில் பட்டன\nகாலிப் புட்டிகள் நிறைய காலில் பட்டன\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:09 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 டிசம்பர், 2013\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 2:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 டிசம்பர், 2013\nஅவர் எழுதியது அப்படி இவர் எழுதியது இப்படி\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஊக்க மது கை விடேல்\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2015/09/blog-post_30.html", "date_download": "2018-05-27T03:37:32Z", "digest": "sha1:XSZHKMXQERJY2BSNR2VX2ECMJBE6BKV6", "length": 12147, "nlines": 191, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: எச்சரிக்கையா இருங்க!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n சமையல் எண்ணெய் வாங்கும் போது\nஉங்கள் கண்ணே உங்களை ஏமாற்றும்......\nசமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் மேல் உள்ள\nபடத்தைக் கண்டு ஏமாற வேண்டாம்...\nசமையல் எண்ணெய்யில் 20% சதவிகித அளவிற்கு பிற உணவு எண்ணெய்களை சேர்த்து Blended vegetable Oil என்ற பெயரால் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமையல் எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய்களை அவ்வாறு சேர்க்கும்போது சேர்க்கப்பட்ட ஒரு எண்ணெயின் அளவு 20% அளவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.\nஇத்தகைய எண்ணெய் பாக்கெட்டுகள் “அக்மார்க்” தர குறியீட்டுடன்தான் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் எவ்வளவு சதவீத அளவிற்கு மற்ற எண்ணெய்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது லேபிளில் குறிப்பிடப்பட வேண்டும்.\nஎண்ணெய் பாக்கெட்டுகள் மேற்கூறியவாறு “கலக்கப்பட்ட வெஜிடேபிள் சமையல் எண்ணெய்” என்பதை லேபிளில் வெளிப்படையாக உறுதி செய்ய வேண்டும். லேபிளில் உண்மைக்கு மாறான குறியீடோ அல்லது படமோ இடம் பெறக்கூடாது.\nஎண்ணெய் பாக்கெட்டுகளில் கீழ்கண்ட குறியீடுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.\n உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி\n எண்ணெயின் எடை(Weight)/ கொள்ளளவு (Volume)\n உற்பத்தி செய்யப்பட்ட நாள்\n சிறந்த பயன்பாட்டு நாள்\n உணவுப்பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2011ன்- படி குறிப்பிடப்பட வேண்டிய சட்ட ரீதியான உறுதிமொழிகள்:\n“ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் இல்லை” என்ற சட்ட ரீதியான உறுதியினை லேபிளில் கொண்டிருக்க வேண்டும்.\nஉணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி உண்மைக்கு புறம்பாக லேபிள் அச்சிட்டு விற்பனை செய்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும்.\nஅண்மையில், CONSUMER ASSOCIATION OF INDIA என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விற்பனை ஆகும் உணவு எண்ணெய்கள் “கடலை எண்ணெய்” என்ற பெயரில் விலை குறைந்த பாமாயில், தவிட்டு எண்ணெய்கள், பருத்தி விதை எண்ணெய்கள் விற்கப்படுவதாக அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் மாவட்டங்களிலிருந்து “கடலை எண்ணெய்” என பெயரிடப்பட்ட மாதிரிகளை எடுத்து சோதனையில் ஈடுபட்டனர்.\nஒரு சூரிய காந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50% பருத்தி விதை எண்ணெயும்,\n50% பாமாயிலும் தான் காணப்பட்டது.\nஇது முற்றிலும் நுகர்வோரை ஏமாற்றும் செயலாகக் கருதப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சமையல் எண்ணெயை அதன் சுவைக்காகவும், மணத்திற்காகவும், தரத்திற்காகவும் உட்கொள்ளும் நுகர்வோர் அவர் கொடுத்த விலைக்கு முற்றிலுமாக ஏமாற்றப்படுகிறார். மேலும் அவர் குறிப்பிட்ட எண்ணெயின் சுவை மற்றும் மணத்தை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.\nLabels: Consumer Association of India, உணவு பாதுகாப்பு, எச்சரிக்கை, பகிர்வு\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது\nஇந்திய பிரதமருடன் உரையாடிய இளம்பெண்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13010722/2-workers-killed-in-trucks-near-Coimbatore.vpf", "date_download": "2018-05-27T03:13:34Z", "digest": "sha1:Y2R3IZM5CSTFPXPKB5CYRWIGTLYAQLB6", "length": 10072, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 workers killed in trucks near Coimbatore || கோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி + \"||\" + 2 workers killed in trucks near Coimbatore\nகோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி\nகோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.\nகோவை-ஆனைகட்டி சாலையில் பெரியதடாகம், வீரபாண்டிபிரிவு பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. நேற்று காலை இங்குள்ள செங்கல்சூளை ஒன்றில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி சென்றது.\nவீரபாண்டிபிரிவு சந்திப்பு பகுதியில் வந்த போது எதிரே வந்த மொபட் மீது லாரி வேகமாக மோதியது. இதில் மொபட்டில் வந்த தொழிலாளர்கள் 2 பேர் தூக்கி வீசப்பட்டு லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.\nஇதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் ராஜன்(வயது 31) லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான இருவரது உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். விசாரணையில் லாரி மோதி இறந்தவர்கள் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் (35), கணேசன்(36) என்று தெரிய வந்தது. மாங்கரை பகுதிக்கு தோட்ட வேலைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி இவர்கள் இறந்து விட்டனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் கோட்டைபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை யானை மிதித்து கொன்றது\n2. பெண்ணை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி இறந்த வாலிபர் உடல் மீட்பு\n3. மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் சாலை மறியல்\n4. குடிப்பழக்கத்தை தந்தை விடமறுத்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை\n5. உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கலெக்டர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/11174229/Crucial-SC-collegium-meet-to-discuss-Justice-KM-Joseph.vpf", "date_download": "2018-05-27T03:14:29Z", "digest": "sha1:P6PPO6CNGOP7FBRYOSRHRDMUHYELDQHO", "length": 11971, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crucial SC collegium meet to discuss Justice KM Joseph elevation || சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைக்க முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைக்க முடிவு + \"||\" + Crucial SC collegium meet to discuss Justice KM Joseph elevation\nசுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைக்க முடிவு\nசுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்து உள்ளது.\nஉத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், மூத்த பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா ஆகிய 2 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகளை கொண்ட குழு (‘கொலிஜியம்’) மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி பரிந்துரை செய்தது.\nஆனால் பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா மீதான பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, கே.எம். ஜோசப் மீதான பரிந்துரையை ஏற்காமல், சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியத்தின் மறுபரிசீலனைக்கு கடந்த 26-ந் தேதி திருப்பி அனுப்பியது.\nஇது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அகில இந்திய அளவில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலில் கே.எம். ஜோசப்பின் பெயர் 45-வது இடத்தில்தான் உள்ளது, தவிரவும் கேரளாவுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உயர்நீதித்துறையில் அளிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களை சொல்லி மத்திய அரசு நியாயப்படுத்தியது.\nஇந்த நிலையில், கே.எம். ஜோசப் மீது ஏற்கனவே செய்த பரிந்துரையை மறு ஆய்வு செய்வதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ‘கொலிஜியம்‘ மே 2 ந்தேதி கூடியது. இதில் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பங்கேற்றனர்.\nகே.எம். ஜோசப் பரிந்துரை கோப்பை மத்திய அரசு திருப்பி அனுப்பியது குறித்து, கொலிஜியத்தில் இடம் பெற்றிருந்தவர்கள் விவாதித்தனர். ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவை ‘கொலிஜியம்’ ஒத்திவைத்து விட்டது. இது சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் இன்று கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைக்க ஒரு மனதாக முடிவு செய்து உள்ளது.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. டியூசன் வந்த மாணவனுடன் காதல்; அவன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல்\n2. எடியூரப்பா எச்சரிக்கை; பா.ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது - காங்கிரஸ்\n3. 12 வயது சிறுமியை மிரட்டி 2 மாதம் பாலியல் பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் கைது\n4. பாம்பு கடித்தது தெரியாமல் தாய்ப்பால் கொடுத்த தாய் - குழந்தை பலி\n5. காதலன் கண்ணெதிரிலேயே காதலி பாலியல் பலாத்காரம் 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2016/10/blog-post_20.html", "date_download": "2018-05-27T03:22:33Z", "digest": "sha1:WHWIEUEEBLXYAVZYJVD7VJ2FAI7CJQGC", "length": 11988, "nlines": 203, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு", "raw_content": "\nமின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு\nமின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/Pettai.html", "date_download": "2018-05-27T03:05:47Z", "digest": "sha1:EGHEG2KT5ISTRTEERVB6GDJ55WRIOCNI", "length": 5281, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: பேட்டை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாதல் விதிகள் இறைத்தூதர் முஹம்மத் காகங்கள்\n தியானலிங்கம் - குரு தந்த குரு ஸ்ரீ சக்கர ரகசியங்கள்\nமேலாண்மை இயல், வியாபாரச் சின்னம் பைந்தமிழ் வளர்த்த பாவலர்கள் சாகாத இலக்கியங்களின் சரித்திரங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/canada/04/144995", "date_download": "2018-05-27T03:33:37Z", "digest": "sha1:ER3YCJ4RK56MQCSFZBCJICPZBADM322F", "length": 7676, "nlines": 62, "source_domain": "canadamirror.com", "title": "கனடிய தாய் ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக்கிய முதல் பிரசவம்! காரணம் யார்? - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nகனடிய தாய் ஒருவரின் வாழ்க்கையை தலைகீழாக்கிய முதல் பிரசவம்\nஹலிவக்சை சேர்ந்த லின்ட்சி ஹப்லி பிரசவத்திற்கு நான்கு நாட்களின் பின்னர் சதை-உண்ணும் நோயினால் பாதிக்கப்பட்ட துயர சம்வம் இடம்பெற்றுள்ளது.\nஉறுப்புக்களை இழந்து, மொத்தமாக கருப்பை அகற்றப்பட்டு அத்துடன் அவரது மகனின் முதல் ஏழு மாத காலத்தை வைத்தியசாலையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலைமைக்கு தன்னை ஆளாக்கிய ஹலிவக்ஸ் IWK Health Centre மற்றும் ஹலிவக்ஸ்-பகுதியை சேர்ந்த வைத்தியர்களை-பிரசவத்தின் போதும் அறுவை சிகிச்சையின் பின்னரான கவனத்தின் போதும் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி இவர்களிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇத்தகைய தவறுகள் நடந்தும் இவர் பிழைத்துள்ளது அதிஷ்டம் என இவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.\n33-வயது ஹப்லெ மார்ச் 2ல் இவரது மகனை பிரசவித்தார். வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒரு நாளின் பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டுள்ளார். நெக்ரோடைசிங் திசுப்படல அழற்சி எனப்படும் சதை-உண்ணும் நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிக்கப்பட்டது.கருப்பையில் இருந்து பிறப்புறுப்பிற்கு வரும் பாதை வாயில் தைக்கப்படாது விடப்பட்டதாலும், பிரசவத்தின் போது நச்சுக்கொடியின் ஒரு பகுதி அகற்றப்படாததாலும் சுகாதார சிக்கல்கள் ஏற்பட்டதென இவரது வழக்கறிஞர் றே வாக்னர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமார்ச் 5 வயிற்று வலி என இவர் வைத்தியசாலைக்கு சென்ற போதும் இவருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளதென கூறி வீட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார்.\nவைத்தியசாலையில் இருக்கும் போதே சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் சேதத்தின் கணிசமான பகுதி தடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nமீண்டும் இவர் வைத்தியசாலைக்கு சென்று போதுதான் இவருக்கு சதை-உண்ணும் நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன-முழங்கை முழங்கால்களிற்கு கீழே உள்ள பகுதிகள் அகற்றப்பட்டதுடன் மொத்த கருப்பையும் அகற்றப்பட்டது.\nஇது குறித்து வைத்தியசாலை எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-05-27T03:27:16Z", "digest": "sha1:B6R2KYCSVEK3VGY7TA5S4OWNEWHY56LT", "length": 11681, "nlines": 119, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: ராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் கீழக்கரை ஹசன் அலி", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் கீழக்கரை ஹசன் அலி\nராமநாதபுரம்.மார்ச்.26.ராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கீழக்கரையை சேர்ந்த ஹசன் அலி அறிவிக்கப்பட்டுள்ளார்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nஅரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த விஷமிகள் சதி\nகல்வி மட்டுமே பெண்களை விவாகரத்து செய்யாது\nகீழக்கரையில் தமுமுகவினர் ஆட்டோவில் தேர்தல் பிரச்ச...\nராமநாதபுரம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் மனு தள்...\nகீழக்கரை பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவேன்\nகீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை\nமாவட்ட‌ கல்வித்துறையினர் ஆலோசனைகள் வழங்கினர்\nகீழக்கரையில் 124 வருட பழமையான‌ வேப்பமரம் சாய்ந்தத...\nகீழக்கரையில் 2 வாகனங்கள் கவிழ்ந்து விபத்து\nவிடுதலை சிறுத்தை வேட்பாளர் முகம்மது யூசுப்புக்கு க...\nராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் வேட்பு மனு தாக...\nராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் உள்பட 510 பேர்...\nகீழக்கரை 45லட்சம் திருட்டு வழக்கில் சரணடைந்த லாட்ஜ...\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் கீழக்கரை ஹசன் அலி\nகீழக்கரையில் கட்சி கொடிகள் அகற்றம் \nகுடி போதையில் வாக்குசாவடிக்கு வராதீர்கள்\nராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் யார் \nகீழக்கரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தீவிர பி...\nசதக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் ஹூண்டாய் நிறுவன...\nராமநாதபுரத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜவாஹிரு...\nகீழக்கரையில் போலீசாரின் வாகன சோதனையில் ரூ2 லட்சம் ...\nகீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் நடைபெற்ற பட்டமள...\nதேர்தலையோட்டி கீழக்கரையில் துணை ராணுவத்தினர்\nகீழக்கரைக்கு புதிய காவல் து்றை அதிகாரிகள் \nநாளை கீழக்கரையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பில் வ...\nமாணவனை மிதித்ததாக கீழக்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மீ...\nதிமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீகிற்...\nதிமுக சார்பில் அமைச்சர் சுப.தங்கவேலன் திருவாடனையில...\nராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளத...\nஜமால் முகம்மது கல்லூரியில் மீலாது விழா\nமுதல் முறையாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருக்கு வாக...\nமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி \nகீழக்கரை அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட 20பேர் திமுகவ...\nதி.மு.க. கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேற வ...\nகீழக்கரை அருகே தொடரும் விபத்துகள்\nநலப்பணிகளில் ஈடுபட பதவி தேவையில்லை \nகீழக்கரை மகளிர் கல்லூரி விழாவி்ல் அமெரிக்க விஞ்ஞான...\nகீழக்கரையில் மின்சாரத்துறையை கண்டித்து தமிழ்நாடு த...\nவெளிநாட்டிலிருந்து வந்து கொலை செய்த கணவன் கோர்டில்...\nகீழக்கரையில் இருதலைமணியன் பாம்பு பிடிபட்டது\n15 வருட வெளிநாட்டு வாழ்க்கை \nகீழக்கரையில் விளம்பர போர்டுகள் அகற்றம்\nபகலில் எரியும் தெரு விளக்கு\nமுஹம்மது சதக் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ...\nகீழக்கரையில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் தளம் \nகீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்ட...\nகீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் வேலை வாய்ப்பு ம...\nகீழக்கரையில் சாலை பணிகளுக்கு நீதிமன்ற தடை ஏன் \nகீழக்கரை அருகே பயங்கரம் இளம்பெண் ஓட ஓட விரட்டி படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_09.html", "date_download": "2018-05-27T03:29:14Z", "digest": "sha1:HFPHB4Z7EI35TLRCDTCENGVNDEPYEE5W", "length": 18090, "nlines": 137, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கட்சி சார்பாக போட்டியிட மாட்டேன் ! சமுதாய புரவலர் சீனா தானா பேட்டி !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகட்சி சார்பாக போட்டியிட மாட்டேன் சமுதாய புரவலர் சீனா தானா பேட்டி \nகீழக்கரையை சேர்ந்த தொழில் அதிபரும் ,சமுதாய புரவலருமான சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் அவர்கள் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை அவரிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய போது,\nகேள்வி :-உங்களை கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராக அறிவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறதே \nபதில் :-பலரும் என்னிடம் தொலைபேசி மூலமும் நேரிலும் போட்டியிட சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்.நீங்கள்(சீனா தானா) போட்டியிட்டால் நாங்கள் போட்டியிலிருந்து விலகி கொள்கிறோம் என்று சிலர் கூறினார்கள். அவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, இந்த மரியாதையை எனக்கு அளித்த ஏக‌ இறைவனுக்கு எனது நன்றி , புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கு உரித்தானது\nகேள்வி : எந்த கட்சி சார்பாக போட்டியிட உள்ளீர்கள் \nபதில் :எந்த கட்சி சார்பாகவும் எந்த அமைப்பின் சார்பாகவும் நிற்க மாட்டேன் ,பொது வேட்பாளராக‌ மட்டுமே போட்டியிடுவேன் .கீழக்கரையின் அனைத்து ஜமாத், முக்கிய கட்சிகள் ,சமுதாய அமைப்புகள் மாற்று மத சகோதர அமைப்புகள் ஆகியவற்றின் பெருவாரியான ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிடுவேன் மேலும் நான் தான் போட்டியிட வேண்டும் என்ற அவசியமில்லை நல்ல உள்ளம் படைத்த வேறு ஒரு நபர் சேவை மனப்பான்மையுடன் சுயேச்சையாக ,பொது வேட்பாளராக போட்டியிட முன் வந்தால் அவரை ஆதரிக்க தயாராக உள்ளோம்.\nகேள்வி : நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சி தலைவரனால் என்னென்ன நல‌திட்டங்கள் வைத்துள்ளீர்கள் \nபதில் :கீழக்கரையின் இன்றைய முக்கிய பிரச்சினைகள் மூன்று அதில் முதலாவது பிரச்சினை குப்பை,இரண்டாவது பிரச்சினை குப்பைதான், மூன்றாவது பிரச்சினையும் குப்பைதான் .\nவேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குப்பை பிரச்சினையைதான் முதலில் தீர்க்க வேண்டும் . இதை எப்படி அணுகி தீர்வு காண வேண்டும் .அரசின் துணையோடு மட்டுமில்லாமல் தனிபட்ட முறையிலும் தீர்வு காண்பதற்கு என்று சில திட்டங்கள் வைத்துள்ளேன். தற்போது இது பற்றி எந்த வாக்குறுதியும் தர முடியாது பொது வேட்பாளராக போட்டியிடுவது என்பது முடிவான பின் இது பற்றி பேசுவோம்.\nஎன்னை சந்தித்து தகவல்களை சேகரித்த கீழக்கரை வலை தளத்தை சேர்ந்தவர்களுக்கு நன்றி என்றார்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை நகராட்சி தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செ...\nகீழக்கரை நகராட்சி தேர்தல் தடை கோரி வழக்கு\nகீழக்கரை நகராட்சியில் போட்டியிட மனுதாக்கல் செய்தவர...\nகீழக்கரையில் 139 நபர்கள் வேட்புமனு தாக்கல் \nஊராட்சி தலைவர் பதவிக்கு பெரியபட்டிணம் கபீர் வேட்பு...\n18வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட கரீம் மனு தா...\n17வது வார்டு கவுன்சிலருக்கு ஜமாத் சார்பில் வேட்பா...\nநகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் தாஜீனிசா ...\nகீழக்கரை குத்பா கமிட்டியின் முக்கிய அறிவிப்பு \nகீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி வழக்கு \nகீழக்கரையில் பொது வேட்பாளர் தேர்வுக்கு தேர்தல் பணி...\nகீழக்கரையில் இலங்கையை சேர்ந்தவர் கைது \nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விழா\nநகராட்சி தலைவருக்கான‌ பொது வேட்பாளர் தேர்வு சம்பந...\n6 பேர் மீது வரதட்சனை வழக்கு \nகீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் ...\nஅப்பாவிகள் என்று அறியபட்டால் வழக...\nகீழக்கரை நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்...\nகீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக...\nகீழக்கரையில் மீண்டும் செம்பி ராஜ்யம்..\n தெற்குதெரு ஜமாத் ஆதரவு யாருக்கு...\nகீழக்கரையில் மஹ்துமியா பள்ளி மாணவர்கள் சுற்று சூழல...\n கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூர...\nதெற்குதெரு 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட...\nவடக்குத்தெரு 19வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக செ...\nஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி \nஅதிமுக சார்பில் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் வேட...\nதொடக்கத்திலேயே க‌ளையிழ‌ந்த‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ...\nகீழக்கரை நகராட்சி தலைவர் ப‌த‌வி மகளிருக்கு ஒதுக்கீ...\nவெளிநாட்டில் பணிபுரிவோர் கீழக்கரையில் தொழில் செய்ய...\n17வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் \nநகராட்சி அலுவலகம் முன்பு காட்சி பொருளாக குப்பையுடன...\nதுபாய் ஈமான் ஆடிட்டர் திருவிடச்சேரி எஸ்.எம்.முகம்ம...\nகீழக்கரை நகராட்சி தேர்தலில் பொது வேட்பாளருக்கு தி...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்கப்பட்டுள்...\nகீழக்கரை மலேரியா மையத்தில் ரத்த பரிசோதனைக்கு மறுப்...\nகீழக்கரை அருகே ஏராளமான மயில்கள் இறந்ததாக வதந்தி \nகலவரத்தால் திண்டாடியவர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள்...\nஏர்வாடி தீ விபத்தில் கீழக்கரை சிறுவன் பலி \nபேருந்துகள் இயங்காததால் பயணிகள் வாகனமாக மாறிய‌ சரக...\nகீழக்கரை உள்ளாட்சித் தேர்தல் மங்காத்தா...\nகீழக்கரை மற்றும் சுற்றியுள்ள‌ பகுதியில் பெரும்பாலா...\nகால்பந்து போட்டியில் கீழக்கரை கல்லூரி அணி சாம்பியன...\nஅத்துமீறி செயல்பட்ட காவல்துறை மீது அரசு நடவடிக்கை...\nகீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ப்ப‌ட்டா...\nகீழக்கரை நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு...\nகட்சி சார்பாக போட்டியிட மாட்டேன் \nநகராட்சி தலைவர் வேட்பாளர் போட்டியில் மாசா அமைப்பின...\nகீழக்கரை நகராட்சி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த...\n அதிமுக சார்பில் போட்டியிட‌ MMK....\nதலைமை உத்தரவிட்டால் MMK.முகைதீன் இப்ராகிம் வெற்றிக...\nகீழக்கரை ஹமீதியா பள்ளி அருகே தோட்டத்தில் பெயிண்டர்...\nபெண்களை கேலி செய்தாக தகராறு வாலிபர் காயம் \nகீழக்கரையில் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம் ...\nவெளிமாநில பஸ் மோதி பெண் பலி \nகீழக்கரை தெற்குதெரு முஸ்லிம் பொதுநலசங்கம் புதிய கட...\nநகராட்சி தலைவர் வேட்பாளராக MMK.முகைதீன் இப்ராகிம் ...\nதெற்குதெரு முஸ்லீம் பொது நலசங்க புதிய கட்டிட திறப...\nமஹ்துமியா மற்றும் இஸ்லாமியா பள்ளிகளின் தலைமை ஆசிரி...\nகீழக்கரையில் தடையை மீறி செயல்படும் உள்ளூர் சேனல்கள...\nதுபாயில் ஒரே இடத்தில் நாளொன்றுக்கு 3000த்திற்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2014/12/blog-post_22.html", "date_download": "2018-05-27T03:17:05Z", "digest": "sha1:MD5PUKMBXGV2H2HOJDP6FETHHTX4WINY", "length": 20710, "nlines": 149, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: லாவோட்சுவும் கன்பூசியஸும் புத்தரும் மூன்று கோப்பை பானமும்", "raw_content": "\nலாவோட்சுவும் கன்பூசியஸும் புத்தரும் மூன்று கோப்பை பானமும்\nநான் ஒரு அழகான கதையைக் கேள்விப்பட்டேன் –அது எவ்வளவுதூரம் சரியானது என்பதை அறியவில்லை, அதைச் சரிபார்க்க முயலவும் இல்லை.\nசொர்க்க லோகத்தில் ஒரு மதிய வேளையில், பிரபலமான உணவகம் ஒன்றில் லாவோட்சு, கன்பூசியஸ், புத்தர் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பணியாளன், ஒரு தட்டில் ‘வாழ்க்கை’ என்ற பானத்தை மூன்று கோப்பைகளில் அவர்களுக்குக் கொடுத்தான். புத்தர் உடனடியாக கண்களை மூடியவராக மறுத்து, “வாழ்க்கை ஒரு துயரம்” என்று சொன்னார்.\nகன்பூசியஸ் தன் கண்களை பாதி மூடியவராக –அவர் ஒரு நடுநிலையாளர், அவர் தன் பொன்னான கொள்கையை போதிப்பவராக, பணியாளிடம் தனக்கொரு கோப்பையைத் தரும்படி சொன்னார். அவர் சற்றே சுவைத்துப் பார்க்க விரும்பினார் –முழுதுமல்ல ஒரு மிடறு, ஏனெனில் சுவைக்காமல் வாழ்க்கையை துன்பமானது என்றோ அல்லது இன்பமானது என்றோ எப்படிக் கூற முடியம் கன்பூசியஸின் மனம் அறிவியலைச் சார்ந்தது, அவர் மறைஞானி அல்ல, அவர் ஒரு நடைமுறையாளர், இந்த பூமியோடு கட்டப்பட்டவர். அவர் இந்த உலகில் அறியப்பட்ட முதல் நடைமுறையாளர், மிகவும் தர்க்கபூர்வமானவர். அது மிகச் சரியானதுதான் –அவர் சொன்னார், “முதலில் நான் குடித்துப் பார்க்கிறேன் பிறகு என்ன நினைக்கிறேனோ அதைச் சொல்கிறேன்” என்றார். அவர் ஒரு மிடறு குடித்துவிட்டு, “புத்தர் சொன்னது சரிதான், வாழ்க்கை துயரமானது” என்றார்.\nலாவோட்சு மூன்று கோப்பைகளையும் எடுத்துக்கொண்டு, “ஒருவர் மூன்றையும் குடித்துப் பார்க்காமல் எதைச் சொல்லமுடியும்” என்று எல்லா கோப்பைகளையும் குடித்துவிட்டு நடனமாடத் தொடங்கினார்\nபுத்தரும் கன்பூசியசும் அவரிடம், “ நீங்கள் எதையும் சொல்லப் போவதில்லையா” என்று கேட்க, “இதையே நான் சொல்ல விரும்புவது –எனது நடனமும் பாடலும் எனக்காகப் பேசுகின்றன” என்றார். ஒருபோதும் முழுமையாக ஒன்றைச் சுவைக்காமல் நீங்கள் எதையும் சொல்ல முடியாது. முழுமையாகச் சுவைத்த பிறகு நீங்கள் எதையும் சொல்ல முடியாது எனெனில் நீங்கள் அறிந்தவற்றை சொல்ல வார்த்தைகள் போதுமானவை அல்ல.\nபுத்தர் ஒரு முனை, கன்பூசியஸ் நடுவில். லாவோட்சுவோ புத்தரின் கோப்பை, கன்பூசியசின் கோப்பை, தனக்கான கோப்பை என மூன்றையும் குடித்துவிட்டு வாழ்வின் மூன்று பரிமாணங்களிலும் வாழ்பவராகிறார். என்னுடைய அணுகுமுறை லாவோட்சுவினுடையது. வாழ்க்கையை அதன் எல்லா பரிமாணங்களிலும் வாழுங்கள் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றைத் தேர்ந்த்தெடுக்காதீர்கள் மேலும் நடுவில் இருப்பதற்காகவும் முயலாதீர்கள். சமநிலையில் இருக்க முயற்சிக்க வேண்டாம் –சமநிலை என்பது பழகக்கூடிய ஒன்றல்ல. அது வாழ்க்கையை அதன் எல்லா பரிமாணங்களையும் அனுபவிக்கும்போது கிடைக்கக்கூடிய ஒன்று. அது இயல்பாக நிகழக்கூடியது; அது உங்களது முயற்சியால் கொண்டுவரக்கூடியது அல்ல. அப்படி உங்களின் முயற்சியால் கொண்டுவந்தால் அது திணிக்கப்பட்டதாக, பொய்யானதாக இருக்கும். அப்படிச் செய்யும்போது நீங்கள் உங்களைத் தளர்வாக வைத்திருக்க முடியாமல் பதட்டத்தில் இருப்பீர்கள் ஏனெனில் சமநிலையை வலிந்து கொண்டுவரும் போது எப்படித் தளர்வாக இருக்க முடியும்\nசட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்க்கையை வாழாதீர்கள். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். வாழ்வை முழுமையாகப் பருகுங்கள் ஆம், சில சமயம் கசப்பின் சுவை இருக்கவே செய்யும் -அதனாலென்ன ஆம், சில சமயம் கசப்பின் சுவை இருக்கவே செய்யும் -அதனாலென்ன அந்த கசப்பின் சுவை இனிப்பின் சுவையை உணரும் தகுதியை உங்களுக்குத் தரும். நீங்கள் இனிப்புச் சுவையைச் சிலாகிக்கும் தருணம், கசப்பின் சுவையை அறிந்தபோதே வரும். ஒருவன் எப்படி அழுவது என்பது தெரியாதபோது, எப்படி சிரிப்பது என்பதையும் அறியமுடியாது. ஒருவன் அழ்ந்த சிரிப்பை, வயிறு வலிக்கும் சிரிப்பை, அனுபவிக்காவிடில் அவனது அழுகை முதலைக் கண்ணீராகவே இருக்கும். அது உண்மையானதாக, நம்பகமானதாக இராது.\nநான் நடுவழியை போதிக்கவில்லை, நான் முழுவழியை போதிக்கிறேன். அதன்பிறகு சமநிலை தன்னால் கூடும், அந்தச் சமநிலை அளவுகடந்த நேர்த்தியுடனும், வசீகரத்துடனும் இருக்கும். நீங்கள் அதை நிர்பந்திக்காதீர்கள், அது இயல்பாக வரும். நேர்த்தியாக இடமாக, வலமாக, நடுவாக நகரும்போது, மெதுவாக சமநிலை வரும் ஏனெனில் அப்போது நீங்கள் ஒட்டுதல் இல்லாதவராகிறீர்கள். துன்பம் வரும்போது, அது விலகிவிடும் என்பதை அறிகிறீர்கள், மகிழ்ச்சி வரும்போது அதுவும் விலகிவிடும் என்று அறிகிறீர்கள். எதுவும் நிலைத்திருப்பதில்லை, அனைத்தும் கடந்து போகும். எப்போதும் மாறாது நிலைத்திருப்பது உங்களது சாட்சிபாவம் மட்டுமே. அந்த சாட்சிபாவம் சமநிலையைக் கொண்டு வரும். அந்த சாட்சிபாவமே சமநிலை.\nகுறிப்பு: சொற்பொழிவுக்கு இடையே ஓஷோ சொல்லும் கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றைத் தமிழாக்கும் என் முயற்சியில் இது ஏழாவது கதை.\nLabels: ஆன்மீகம், ஓஷோ, ஓஷோ கதைகள், கேசவமணி\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nஃபாரென்ஹீட் 451 -ரே பிராட்பரி\nலாவோட்சுவும் கன்பூசியஸும் புத்தரும் மூன்று கோப்பை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/tag/nenjil-thunivirundhaal/", "date_download": "2018-05-27T03:08:47Z", "digest": "sha1:4QJPQU2T4Z5YDQO4QFMUDJCPVSDLK5Y2", "length": 5918, "nlines": 123, "source_domain": "tamilcinema.com", "title": "nenjil thunivirundhaal Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nமீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’\nசுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், சாதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ ஸ்டைலில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை வரும் தீபாவளி…\nஇயக்குனர் சுசீந்திரனின் காதல் காவியம் ‘ஏஞ்சலினா’\n‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் ‘அறம் செய்து பழகு’ படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். போன மாதம் ‘அறம் செய்து பழகு’ என்ற அந்தப் படத்தின்…\nவிஜய் விக்ராந்த் மோதல் – சுசீந்திரன் விளக்கம்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளி அன்று ரிலீசாவது தெரிந்த விஷயம்தான். பெரிய ப்ராஜெக்ட் என்பதால் மெர்சலுக்குப் போட்டி இருக்காது என்று நினைத்தால் போட்டிப் போட்டுக்கொண்டு தீபாவளி அன்று தங்கள் படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் சில…\n‘’நெஞ்சில் துணிவிருந்தால் வசூலைக் குவிக்கும்’’ – சுசீந்திரன் உறுதி\nசுசீந்திரனின் தனது சினிமா வாழ்வில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற நான்கு ஹிட் படங்களையும், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ என்ற இரண்டு சுமார் ஹிட் படங்களையும், ‘ராஜபாட்டை’, ‘பாயும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2014/12/", "date_download": "2018-05-27T03:34:50Z", "digest": "sha1:YVWCVASY2A7BA6F246LRBURFW6NEB4AA", "length": 7483, "nlines": 168, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: December 2014", "raw_content": "புதன், 31 டிசம்பர், 2014\nகடல் அளவு ஆசை, காமம்\nகை அளவு உடல், நலம்\nபூனை மூடிக் கொண்ட கண்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 8:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 டிசம்பர், 2014\nஎல்லைக்குள் கடவுளை நீ வணங்கு\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 10:26 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 டிசம்பர், 2014\nநாய் வால் Dog's Tail\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 9:46 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 டிசம்பர், 2014\nஎதிர் துருவங்கள் OPPOSITE POLES\nபொருள் பலமும் சேவை குணமும்\nஒன்றை ஒன்று ஈர்த்தபடி எதிர்த்தபடி\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nநாய் வால் Dog's Tail\nஎதிர் துருவங்கள் OPPOSITE POLES\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/tag/web-series/", "date_download": "2018-05-27T03:12:36Z", "digest": "sha1:USDLGUFENZREC753IRI4FBP6DZ3KN5BO", "length": 5310, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Web Series Archives - Cinema Parvai", "raw_content": "\nரெஜினாவின் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா\nவிஜய்சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாட்டு\nஆவணப்படம் பார்த்து கதறி அழுத சன்னிலியோன்\nஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்\nகன்னட சினிமாவில் கால்பதிக்க இருக்கும் சிம்பு\nஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்\nஇந்த யுகத்துக்கான காதல் படம் பியார் பிரேமா காதல்\nபெண் இயக்குநரின் வெப் சீரிஸில் சுனைனா\nதமிழ் சினிமாவில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின்...\nஎத்தனையோ ஆந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா...\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nரெஜினாவின் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா\nவிஜய்சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாட்டு\nஆவணப்படம் பார்த்து கதறி அழுத சன்னிலியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2015/12/", "date_download": "2018-05-27T03:29:43Z", "digest": "sha1:4EJAKVQAB5HL4BZ7CT4IWDQI5DUJYBO6", "length": 7849, "nlines": 170, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: December 2015", "raw_content": "வியாழன், 31 டிசம்பர், 2015\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:25 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 டிசம்பர், 2015\nமலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் After Death What will happened\nஒரு சவம் கிடக்க பல சவம் குதிக்க\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 9:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 டிசம்பர், 2015\nமின்னோட்டமும் மின்னூட்டமும் ELECTRICITY CHARGES\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 10:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 டிசம்பர், 2015\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nமலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் After Death Wha...\nமின்னோட்டமும் மின்னூட்டமும் ELECTRICITY CHARGES\nகலாம் காலண்டர் மூழ்கிய சென்னை- 2015 செல் வராதே: Ti...\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2005/03/50.html", "date_download": "2018-05-27T03:31:09Z", "digest": "sha1:X4ED6ZM6HLMNXL6ORGPNMRRXG66X3I4U", "length": 12674, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nவைதீஸ்வரனின் வரவேற்புரை [wma, 0.99 MB, 8.16 min]\nபிரபஞ்சன் தலைமையுரை [wma, 1.04 MB, 8.42 min]\nசுந்தர ராமசாமி, அசோகமித்திரனின் சிறுகதைகள் பற்றி [wma, 3.89 MB, 32.27 min]. நடுவில் கேஸட் மாற்றப்படும்போது ரெகார்டிங் சிறிது தடைப்பட்டது.\nஆ.இரா.வெங்கடாசலபதி, அசோகமித்திரனின் எழுத்துகள் பற்றி [wma, 1.92 MB, 16.02 min]\nஞானக்கூத்தன், அசோகமித்திரனின் கட்டுரைகள் பற்றி [wma, 1.31 MB, 10.53 min]\nபால் சக்கரியா, மொழிபெயர்ப்பில் அசோகமித்திரன் அளிக்கும் வாசிப்பு அனுபவங்கள் பற்றி (ஆங்கிலத்தில்) [wma, 1.85 MB, 15.23 min] நடுவில் கேஸட் மாற்றப்படும்போது ரெகார்டிங் சிறிது தடைப்பட்டது.\nஅசோகமித்திரனின் ஏற்புரை [wma, 1.66 MB, 13.51 min]. சில விநாடிகள் கேஸட் மாற்றப்படும்போது தடைப்பட்டது. தொடக்கத்தில் ஜெமினி கேண்டீன் மணியன் பட்சணம் கொடுப்பது, அது தொடர்ந்த சில பகுதிகளை நீக்கியுள்ளேன்.\nபிரபஞ்சன் நன்றியுரை [wma, 137 KB, 1.04 min]\nவிருட்சம் அழகியசிங்கர் நன்றியுரை [wma, 333 KB, 2.40 min]\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2007/07/blog-post_09.html", "date_download": "2018-05-27T03:31:28Z", "digest": "sha1:H7C6AQ3JZWN5EA2ENJBG3SJ7ECRRX7QA", "length": 21103, "nlines": 322, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்\nஇன்று தமிழ் வலைப்பதிவுகளில் இயங்கும் நம் பலருக்கும் யூனிகோட் எழுத்துருக்கள் கொண்டு கணினியில் இந்திய மொழிகளைக் கையாளத் தெரிந்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த மொழி பேசும் மக்கள் இதனைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.\nசில செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துரு கிடைக்கிறது. அதைக்கொண்டு தமிழ், ஹிந்தி ஆகியவற்றில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடிகிறது.\nஆனால் இன்றும்கூட பல விஷயங்கள் ஒரு புது கணினி, செல்பேசி பயனருக்கு எளிமையானதாக இருப்பதில்லை.\nபொதுவாக ஓர் இந்திய மொழியைப் பயன்படுத்த விரும்பும் பயனருக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்று பட்டியலிடலாம்:\nமின்னஞ்சல், இணையப் பக்கம் ஆகியவற்றில் உள்ள செய்திகளை, தங்கு தடையின்றிப் படிக்கவேண்டும்.\nரோமன் கீபோர்டை வைத்துக்கொண்டு எந்த மொழியில் எழுத ஆசைப்படுகிறோமோ அந்த மொழியில் எழுதக்கூடிய திறன் வேண்டும்.\nஇந்தியர்கள் பலருக்கும் ஆங்கிலம் மற்றும் தம் மொழியைத் தவிர்த்து வேறு ஒரு (சில) இந்திய மொழி(கள்) புரியக்கூடும். ஆனால் அந்த மொழியின் வரி வடிவம் தெரியாமல் இருக்கும். பலருக்கு தமது தாய்மொழியின் வரிவடிவமே தெரியாமல் இருக்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வரிவடிவம் ஆங்கில (ரோமன்) எழுத்துகளாக இருக்கும். இதற்கு ஏற்ற வகையில் ஒரு வரிவடிவை இன்னொரு வரிவடிவாக, ஆனால் அதே ஒலிவடிவாக இருக்குமாறு மாற்றுதல் - அதாவது transliteration - வரிவடிவ மாற்றம் தேவைப்படுகிறது.\nபிழையின்றித் தம் மொழியில் எழுத ஒரு spellchecker (சொல் பிழைதிருத்தி) வேண்டும். தவறான சொற்களை அடிக்கோடிட்டு, சரியான பதங்களைக் காண்பித்து, நம்மைத் தேர்ந்தெடுக்க வைக்கும் செயலி.\nஇலக்கணத் திருத்தி (Grammar checking): சொற்களில் உள்ள பிழையைப் போலவே வாக்கியங்களில், வாக்கிய அமைப்பில் உள்ள பிழைகள், சந்திப்பிழை போன்றவற்றைத் திருத்தும் செயலி.\nஅகராதி: ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிக்கு, இந்திய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு, ஓர் இந்திய மொழியிலிருந்து மற்றோர் இந்திய மொழிக்கு முழுமையான ஆன்லைன் அகராதி(கள்), உச்சரிப்புக்கான உதவிகள், ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் (thesaurus), படங்கள்...\nஎழுத்திலிருந்து ஒலிக்கு... (Text-to-Speech): ஒலிப்பான்களை (Phonemes) துணையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்தை கணினியால் படித்துச் சொல்லுமாறு மாற்றுதல். ஆங்கிலத்துக்கும் வெறு சில மேற்கத்திய மொழிகளுக்கும் இந்த வசதி உண்டு. இந்திய மொழிகளுக்கு இதனைச் செய்வது எளிதான ஒரு காரியம்தான். ஆனால் அனைவரும் உபயோகிக்கக்கூடிய செயலிகள் இல்லை.\nஒலியிலிருந்து எழுத்துக்கு... (Speech recognition): IVR Systems (Interactive Voice Response Systems) போன்றவை நாம் பேசுவதைக் கொண்டு நமக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நமக்குத் தேவையானதைத் தரும். ஆங்கிலத்தில் இது செயல்முறையில் உள்ளது. இந்திய மொழிகளுக்கும் தேவைப்படுகிறது.\nUnderstanding diglossia: இந்திய மொழிகள் அனைத்துமே எழுத்து மொழி, பேச்சு மொழி என்று இரண்டாகப் பிரிகின்றன. பேச்சு மொழியிலும் பல வட்டார வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட வட்டார வழக்குச் சொற்களை இனங்கண்டு, அவற்றுக்குச் சமமான அகராதி வழக்கைக் கொண்டுவருதல். அதேபோல இலக்கண வழக்கில் எழுதப்பட்டதை வட்டார வழக்குக்கு மாற்றுதல்.\nமொழிமாற்றம்: ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாக்கியத்தை இந்திய மொழிகளுக்கு மாற்றுதல்; இந்திய மொழிகளில் எழுதப்பட்ட வாக்கியத்தை ஆங்கிலத்தில் மாற்றுதல்; ஓர் இந்திய மொழியிலிருந்து மற்றோர் இந்திய மொழிக்கு மாற்றுதல்.\nமேலே சொன்னவற்றில் பல சேவைகள் செல்பேசிகளிலும் தேவைப்படுகின்றன.\nதன்னார்வலர்கள், கணினித்துறை ஆராய்ச்சியாளர்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள் என அனைவரும் சேர்ந்து வேலை செய்தால்தான் மேலே குறிப்பிட்ட பல விஷயங்கள் நடைபெறும்.\nஉதாரணத்துக்கு இன்றும்கூட பலருக்கு கணினியில் 'உடையா எழுத்துகளில்' தமிழைப் படிப்பது எப்படி என்பது தெரியவில்லை. தமிழெல்லாம்கூடக் கணினிகளில் வருமா என்று கேட்பவர் பலர் இருக்கிறார்கள்.\nஅதேபோல 100 மில்லியனுக்கும் மேற்பட்ட செல்பேசிகளில் 1 மில்லியன் செல்பேசிகளில்கூட (1%) இந்திய மொழிகளில் எழுதமுடியாத நிலை. ஆனால் சீனாவிலோ சீன மொழி இடைமுகம் இல்லாவிட்டால் அந்த செல்பேசிகளை விற்கவே முடியாது.\nநம் நாட்டில் அதைப்போன்ற சட்டம் இயற்றப்படப்போவதில்லை. எனவே இருக்கும் செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துகளில் படிக்க, எழுத வகைசெய்யக்கூடிய மென்பொருளை எழுதவேண்டும்.\nஎன் நிறுவனம் வழியாக, லாப நோக்குள்ள வகையில், மேலே குறிப்பிட்ட சிலவற்றில் மென்பொருள் அல்லது இணையம் வழிச் சேவைகளை உருவாக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். இவைபற்றி மேற்கொண்டு தகவல் அறிய விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\n//இந்தியர்கள் பலருக்கும் ஆங்கிலம் மற்றும் தம் மொழியைத் தவிர்த்து வேறு ஒரு (சில) இந்திய மொழி(கள்) புரியக்கூடும். ஆனால் அந்த மொழியின் வரி வடிவம் தெரியாமல் இருக்கும். பலருக்கு தமது தாய்மொழியின் வரிவடிவமே தெரியாமல் இருக்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வரிவடிவம் ஆங்கில (ரோமன்) எழுத்துகளாக இருக்கும். இதற்கு ஏற்ற வகையில் ஒரு வரிவடிவை இன்னொரு வரிவடிவாக, ஆனால் அதே ஒலிவடிவாக இருக்குமாறு மாற்றுதல் - அதாவது transliteration - வரிவடிவ மாற்றம் தேவைப்படுகிறது.//\nwww.higopi.com தளத்தில் பல இந்திய மொழிகளுக்கு இந்த வசதி இருக்கிறது.\nஇன்னும் சில தமிழ்க் கணிமை தேவைகளுக்கு http://microblog.ravidreams.net/\nசிங்கையில் இது சம்பந்தமாக முரசு நெடுமாறன் சில செய்திருந்தார். வலையில் தேடினால் விபரம் கிடைக்கலாம். சிங்கை ஆசிரியர் ரெ.கலைமணி இத்துறையில் ஆர்வம் கொண்டவர்.\nஒரு நல்ல சொல் பிழைதிருத்தி தமிழுக்கு தேவை.\nஉங்கள் முயற்சிக்கு நல் வாழ்துக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா\nஒலிப்பதிவு: பிரதீபா பாடில் பற்றி அருன் ஷோரி, சோ\nகணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T03:37:51Z", "digest": "sha1:AKJDKICBRLJXK3EDRHOOID6CF3MGIDIG", "length": 10009, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சென்னை உயர்நீதிமன்றம்", "raw_content": "\nநடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது..\nசென்னை தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்க...\n“சிங்கம்-3’ படத்தை இணைய தளங்களில் வெளியிடக் கூடாது…” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..\nநடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்-3’ திரைப்படத்தை...\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை வேறு ஏதாவதொரு சாலையில்தான் வைக்க வேண்டும்…” – நடிகர் சங்கம் கோரிக்கை..\nசென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகில் நடிகர்...\n“சட்டப்படி சந்தி்ப்பேன்…” – நடிகர் சங்க நீக்கம் பற்றி சரத்குமார் அறிக்கை..\n“நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை...\nதமிழகத்தில் சினிமா திரையரங்குகளின் கட்டணம் உயரப் போகிறது..\nதிரையரங்குகளில் நுழைவு கட்டணத்தை நிர்ணயித்து...\n‘கபாலி’ படத்திற்காக கூடுதல் கட்டணம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..\nசமீபத்தில் வெளியான ‘கபாலி’ பட வெளியீட்டின்போது...\n“நமது பண்பாடு, கலாச்சாரத்தை திரைப்பட துறையினர் சீரழிக்கின்றனர்…” – சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..\nசென்னை மணலியைச் சேர்ந்த 19 வயதான பிரபுகுமார்...\n“கபாலி லாபத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்குப் பயன்படுத்த வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை..\n“முன்னணி நடிகர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” – உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை..\n“திரைப்பட துறை சமுதாயத்தில் மிகப் பெரிய...\n‘கபாலி’யை திருட்டுத்தனமாக வெளியிட்டால் இணையத்தளம் முடக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்தைக்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ibctamil.com/politics/80/100617?ref=bre-news", "date_download": "2018-05-27T03:05:04Z", "digest": "sha1:G77YPCOFCFCATISGQLEDN3V2APTSVZOS", "length": 13518, "nlines": 104, "source_domain": "ibctamil.com", "title": "பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீலங்காவிற்கு கடும் எச்சரிக்கை - IBCTamil", "raw_content": "\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nதலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்\nபேசி பயனில்லை; அரச படையின் அராஜகம்\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nபிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீலங்காவிற்கு கடும் எச்சரிக்கை\nதமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ந்தும் தவறிவரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழினப் படுகொலையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் பிரித்தானிய தொழிற் கட்சியின் தமிழர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.\nபிரித்தானிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபினுடன், நிழல் வெளிவிவகா அமைச்சர் உள்ளிட்ட தொழிற் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇவர்கள் முன்னிலையில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின்....\nஇலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.\nஅதேவேளை இராணுவம் உட்பட ஸ்ரீலங்கா அரச படையினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் தமிழ் தாயகத்தில் தொடரும் இராணுவ மயமாக்கல் முடிவுக்கு கொண்டவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nயுத்தத்தின் போது இடம்பெற்ற மிகவும் மோசமான படுகொலைகள், சித்திரவதைகள் உட்பட சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறிய சம்பவங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோபின் வலியுறுத்தினார்.\nபொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீலங்கா அரசை எச்சரித்தார்.\nஅதேவேளை மனித உரிமை மீறல்களுக்கான நீதியை வலியுறுத்துவதற்காக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்றது போல் இல்லாமல் தொழிற் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும் பிரித்தானிய இராஜதந்திரிகள் உட்பட அதிகாரிகளை ஒரு இடத்திற்கு மாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைத்து அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.\nதமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை விட மெலதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அதற்கும் தொழிற்கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜெரமி கோபின் தெரிவித்தார்.\nஅதுமாத்திரமன்றி தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கான உரிமைகளையும், நீதியையும் உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகளை உள்ளடக்குவதாகவும் தொழில்கட்சியின் தலைவர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வாக்குறுதி அளித்தார்.\nதமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது\nதமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nவெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://photo-sales.com/ta/images/aquatic/", "date_download": "2018-05-27T03:34:31Z", "digest": "sha1:D3TR2AF3VID52EEKEYNL5BE7ORPMWFQN", "length": 3163, "nlines": 106, "source_domain": "photo-sales.com", "title": "நீர்வாழ் படங்கள் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nWindsurfers மற்றும் அலைகள், கிரே கனாரியா நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nநீர் அல்லி நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nNymphaea நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nவெள்ளை Nenuphar நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nநீர் லில்லி நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nசதுப்பு தவளை நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nவெள்ளை நீர் அல்லிகள் நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nபிங்க் நீர் லில்லி நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nநீர் அல்லிகள் நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nநீர் லில்லிஸின் நீர்வாழ் $1.99–$24.99 படத்தை வாங்க\nதேடல் படங்கள் நீர்வாழ் மேலும்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11013035/2-tons-of-rice-rice-was-arrested.vpf", "date_download": "2018-05-27T03:25:33Z", "digest": "sha1:JGFVL2MSRQDP6OGQQ4CINETOGOYGLFF7", "length": 11358, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 tons of rice rice was arrested || 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் பதற்றத்தினை தணிக்க பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு முடிந்தது\n1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது + \"||\" + 2 tons of rice rice was arrested\n1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பெண் உள்பட 2 பேர் கைது\nவேலூர், பாணாவரம், காட்பாடி பகுதிகளில் இருந்து 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவேலூர் வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சைதாப்பேட்டை தோப்பாசாமி கோவில் தெருவில் காய்கறிகளுடன் ரேஷன் அரிசி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அங்கு காய்கறி விற்பனை செய்த பெண்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஅதற்கு அவர்கள் ரேஷன் அரிசியை வைத்து சென்றது யார் என்று தெரியாது எனக்கூறினர். இதையடுத்து அதிகாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.\nவேலூர் மாவட்ட உணவுப்பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் சென்ற வாலிபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டைகளில், ரேஷன் அரிசி இருந்தது.\nவிசாரணையில், அந்த வாலிபர் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 31) என்பதும், ரேஷன் அரிசியை சித்தூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதொடர்ந்து மாவட்ட உணவுப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் பாணாவரம் ரெயில் நிலையத்தில் சோதனை செய்தனர். அங்கு சிறு, சிறு மூட்டைகளில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் பாணாவரம் அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லட்சுமியை (36) கைது செய்தனர். அவரிடமிருந்து 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை யானை மிதித்து கொன்றது\n2. பெண்ணை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி இறந்த வாலிபர் உடல் மீட்பு\n3. மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் சாலை மறியல்\n4. குடிப்பழக்கத்தை தந்தை விடமறுத்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை\n5. உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கலெக்டர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/srilanka/04/164916", "date_download": "2018-05-27T03:34:21Z", "digest": "sha1:U7FINLOWISYD35GIR6C7OE5G76JYSN7S", "length": 5986, "nlines": 61, "source_domain": "canadamirror.com", "title": "வவுனியாவில் தற்கொலை செய்த கனேடிய பிரஜை - Canadamirror", "raw_content": "\nஇலங்கையில் கமராவில் சிக்கிய திகில் சம்பவம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் புட்டின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்\nவடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவிக்கு கணவன் செய்த செயல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅருட்சகோதரி மேரி நோபேர்ட் பஸ்தியாம்பிள்ளை\nவவுனியாவில் தற்கொலை செய்த கனேடிய பிரஜை\nவவுனியா - கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்\nகனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.\nவவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.\nநேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த வேளையில் தனிமையில் இருந்துள்ளார் குறித்த கனடிய பிரஜை.\nஇன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.\nஇதேவேளை சடலத்தின் அருகில் விச மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர். மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தூக்கில் தொங்கிய சடலத்தை கீழ் இறக்கி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://brahma-kumaris-murli.blogspot.com/2017/04/bk-murli-5-april-tamil.html", "date_download": "2018-05-27T03:33:44Z", "digest": "sha1:GHKLT6ZRKPHB2P7OVK2U2FO4CUSBS67A", "length": 42859, "nlines": 32, "source_domain": "brahma-kumaris-murli.blogspot.com", "title": "BK Murli Today - Today Brahma Kumaris Murli: BK Murli 5 April 2017 Tamil", "raw_content": "\n05.04.2017 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n யோகபலத்தினால் நஷ்டத்தின் கணக்கை முடித்து விட்டு சுகத்தின் கணக்கை சேமியுங்கள். வியாபாரி ஆகி தனது முழுக் கணக்கையும் வெளிப்படுத்துங்கள்.\nகுழந்தைகள் நீங்கள் தந்தையிடம் எந்த ஓர் உறுதிமொழி கொடுத்திருக்கிறீர்கள். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான சகஜ சாதனம் என்ன\nநீங்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறீர்கள் - எனக்கு ஒரு சிவபாபா மட்டுமே. வேறு யாரும் இல்லை. பக்தியிலும் கூட சொல்லி வந்தீர்கள் - பாபா, நீங்கள் எப்போது வருவீர்களோ, அப்போது மற்ற அனைத்து சங்கத்தையும் விட்டு உங்கள் ஒருவரோடு மட்டுமே இணைவோம். இப்போது பாபா சொல்கிறார், குழந்தைகளே, தேகத்தோடு கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் புத்தி மூலம் தியாகம் செய்து என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். இந்தப் பழைய சரீரத்தில் இருந்தும் கூட மனதை விலக்கி விடுங்கள். ஆனால் இதில் தீவிர முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக அதிகாலை எழுந்து தனக்குத் தானே ஆன்மிக உரையாடல் செய்யுங்கள். மற்றும் சிந்தனை செய்யுங்கள் - இப்போது இந்த நாடகம் முடிவடைகின்றது.\nஆகாச சிம்மாசனத்தை விட்டுக் கீழே இறங்கி வாருங்கள்......\nகுழந்தைகள் அழைக்கின்றனர் – பரந்தாமத்திலிருந்து வாருங்கள். தூய்மை இல்லாத மனிதர்களால் இந்தப் பாடல் பாடப் பட்டுள்ளது. அவர்கள் தாங்களே இதன் அர்த்தத்தை அறியாதிருக்கிறார்கள். அழைக்கவும் செய்கின்றனர், தூய்மையற்றவர்களைப் தூய்மை ஆக்குவதற்கு வாருங்கள் என்று. ஏனெனில் இச்சமயம் இராவண இராஜ்யம் நடக்கிறது. இதையும் குழந்தைகள் அறிந்துள்ளனர், அதாவது பாரதத்தில் தெய்விகமான உயர்ந்த இராஜ்யம் முன்பு இருந்தது. இப்போது நீங்கள் உயர்ந்தவர்களாக ஆவதற்குப் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பாபா சொல்கிறார், குழந்தைகளே, இப்போது நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பழைய பாவங்களின் கணக்கை முடித்துவிட வேண்டும். வியாபாரிகள் ஒவ்வொரு- 12 மாதங்களின் முழுக் கணக்கை முடித்து வைக்கின்றனர். இலாபம் அல்லது நஷ்டத்தின் கணக்கை வெளிப்படுத்துகின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாரதத்தில் நாம் முதல் அரைக்கல்பம் இலாபத்தில், அடுத்த அரைக்கல்பம் நஷ்டத்தில் இருக்கிறோம். அதாவது அரைக்கல்பம் சுகம், அரைக்கல்பம் துக்கம் அடைகிறோம். தமோபிரதான மனநிலை வரும் போது கலப்பட பக்தியில் சென்று விடுகின்றனர். பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் இலாபத்தில் செல்ல வேண்டும். நஷ்டத்தின் கணக்கை இப்போது யோக பலத்தின் மூலம் முடித்துவிட வேண்டும். உங்கள் பாவங்களின் கணக்கை இப்போது முடித்துவிட வேண்டும். பிறகு சுகத்தின் கணக்கை சேமிக்க வேண்டும். எந்தளவு நீங்கள் என்னை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவு உங்கள் பாவங்களின் கணக்கு பஸ்மமாகும். மேலும் தூய்மையாகி கீதையின் ஞானத்தை தாரணை செய்ய வேண்டும். இங்கே ஒன்றும் கீதை சாஸ்திரம் சொல்லவில்லை. இந்த கீதை ஞானத்தை பகவான் தந்துள்ளார். இச்சமயம் மனிதர்களின் புத்தி தமோபிரதானமாக இருக்கும் காரணத்தால் தந்தையை அறிந்து கொள்ளவில்லை. அதனால் இவர்கள் அனாதைகள் எனச் சொல்லப் படுகிறார்கள். நீங்கள் புரிய வைக்கிறீர்கள், பாரதம் புண்ணிய ஆத்மாக்களின், உயர்வான குணங்களை கடைபிடிப்பவர்களின் உலகமாக இருந்தது. அவர்களுடைய சித்திரங்களும் உள்ளன. பாரதம் சத்யுக ஆரம்பத்தில் மிகவும் செல்வம் நிறைந்ததாக இருந்தது. மேலும் இஸ்லாமிய, பௌத்த தர்மங்கள் ஆரம்பத்தில் இல்லை. தர்ம ஸ்தாபகர்கள் வந்தனர். பிறகு அந்த தர்மத்தின் ஆத்மாக்கள் அனைவரும் வந்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் ஒன்றும் இராஜ்யம் எதிலும் வருவதில்லை. தங்களின் தர்மத்தில் வருகின்றனர். எப்போது இலட்சம், கோடிக் கணக்கில் ஆகி விடுகின்றனரோ, அப்போது இராஜா-ராணி முதலானவராக ஆகின்றனர். இங்கே உங்களுக்கோ ஆரம்பத்தில் இருந்தே இராஜ்யம் நடைபெறுகின்றது. சத்யுக ஆரம்பத்தில் தான் லட்சுமி-நாராயணரின் ஆட்சி இருந்தது. பாரதம் சிரேஷ்டாச்சாரியாக இருந்த போது மிக உயர்ந்ததாக இருந்தது. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் என்று பாடப் பட்டுள்ளது. அவரைத் தான் சத்தியமானவர் எனச் சொல்கின்றனர். அவர் வந்து உண்மையான ஞானம் தருகிறார். மற்ற அனைவரும் தந்தை பற்றிப் பொய்யான ஞானத்தையே தருகின்றனர். ஓ காட் ஃபாதர் என்று அனைவருமே நினைவு செய்கின்றனர். ஆனால் தந்தையைப் பற்றி யாருக்குமே தெரியாது. எப்போதாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள் - லௌகிக் தந்தையை அறிவீர்கள் என்றால் அவரை சர்வவியாபி எனச் சொல்ல மாட்டார்கள். தந்தை என்றால் தந்தை தான். தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பாபா புரிய வைக்கிறார்-நான் எல்லையற்ற படைப்பாளர். என்னை நீங்கள் அழைப்பதே பழைய உலகத்தில் தான். பிரளயமோ நடைபெறுவதில்லை. இது முழுவதுமாக தூய்மையற்ற உலகம். குழந்தைகளாகிய உங்களுக்காகவே நான் வர வேண்டியுள்ளது. குழந்தைகள் உங்களுக்குத் தான் புரிய வைக்கிறேன். மனிதர்கள் குரு முதலானவர்களை அமர்த்திக் கொள்கின்றனர் - சாந்திக்காக. ஆனால் அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்காக, ஹடயோகம் முதலியவற்றைக் கற்பிக்கின்றனர். அவர்களிடம் எல்லையற்ற ஆஸ்தி எதுவும் கிடைக்காது. குருவை அமர்த்திக் கொள்கின்றனர் என்றால் அதனால் அல்ப காலத்திற்கான கொஞ்சம் சுகம் தான் கிடைக்கும். அவர்கள் அனைவரும் எல்லைக்குட் பட்ட சுகம் தருபவர்கள். எல்லையற்ற தந்தை தான் எல்லையற்ற சுகம் தருபவர். பாபா முக்தி-ஜீவன்முக்திக்கான பரிசைக் கொண்டு வருகிறார். சத்யுகத்தில் ஒரு தர்மம் மட்டுமே இருக்கும். இங்கோ எவ்வளவு அநேக தர்மங்கள் விரிவாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது மீண்டும் இவ்வளவு ஆத்மாக்களும் சாந்திதாமத்திற்குத் திரும்பிச் சென்று விடுவார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. பாபா இந்த மனித சிருஷ்டியின் விதை வடிவம். அவரிடம் ஞானம் முழுவதும் உள்ளது. சர்வவியாபி எனச் சொல்வதால் ஞானம் அல்லது பக்தியின் எந்த ஒரு விஷயமும் நிற்காது. பகவான் சர்வவியாபி என்றால் பிறகு பகவானுக்கு பக்தி செய்வதற்கு அவசியம் என்ன இருக்கிறது விரிவாகிக் கொண்டே இருக்கிறது. இப்போது மீண்டும் இவ்வளவு ஆத்மாக்களும் சாந்திதாமத்திற்குத் திரும்பிச் சென்று விடுவார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றிய ஞானம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. பாபா இந்த மனித சிருஷ்டியின் விதை வடிவம். அவரிடம் ஞானம் முழுவதும் உள்ளது. சர்வவியாபி எனச் சொல்வதால் ஞானம் அல்லது பக்தியின் எந்த ஒரு விஷயமும் நிற்காது. பகவான் சர்வவியாபி என்றால் பிறகு பகவானுக்கு பக்தி செய்வதற்கு அவசியம் என்ன இருக்கிறது பக்தி செய்கின்றனர். ஆனால் புரிந்து கொள்ளவில்லை. கல் மண் அனைத்துக்கும் பக்தி செய்து கொண்டே இருக்கின்றனர். கங்கையில் எவ்வளவு பேர் குளிப்பதற்காகச் செல்கின்றனர் பக்தி செய்கின்றனர். ஆனால் புரிந்து கொள்ளவில்லை. கல் மண் அனைத்துக்கும் பக்தி செய்து கொண்டே இருக்கின்றனர். கங்கையில் எவ்வளவு பேர் குளிப்பதற்காகச் செல்கின்றனர் அது தூய்மைபடுத்தக் கூடியது (பதீத-பாவனி) என்றால் பிறகு அனைவரும் தூய்மையாக அல்லவா இருக்க வேண்டும். முக்தி-ஜீவன்முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் யாரும் போவதில்லை. ஒரு குரு முக்திதாமத்திற்குத் திரும்பிச் செல்வாரானால் மற்ற சீடர்கள் அனைவரையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் தாங்களும் செல்வதில்லை, சீடர்களுக்கு எதுவும் சொல்லவும் முடிவதில்லை. தேக அபிமானத்தில் அநேகர் உள்ளனர். இது போல் யாரும் சொல்ல முடியாது நான் நிராகார் பரபிதா பரமாத்மா, குழந்தைகளாகிய உங்கள் தந்தை நான், உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். இதைச் சொல்வதற்கு பாபாவுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இப்போது பழைய உலகத்தை விட்டுவிட வேண்டும். அதனால் யோகபலம் அவசியம் வேண்டும். கவனக்குறைவாக இருப்பதால் பதவி கிடைக்காமல் போகும்.\nகுழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். தகுதியற்றவர்களாக ஆகும் குழந்தைகள் திவாலாகி விடுகின்றனர். கல்ப-கல்பமாக உங்களை நூற்றுக்கு நூறு செல்வம் நிறைந்தவர்களாக ஆக்குகிறேன். பிறகு இராவணன் உங்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கி விடுகிறான். சரியான விஷயம் தான் எனப் புரிந்து கொள்ளவும் செய்கின்றனர்-இப்போது கலியுகத்தின் கடைசி, சத்யுக ஆரம்பத்தின் சங்கமம். கட்டடத்தின் ஆயுள் 100 அண்டுகள் என வைத்துக் கொள்ளுங்கள். 25 ஆண்டுகள் கடந்து விட்டால் கால் பங்கு பழையதாகி விடுகிறது. 50 ஆண்டுகள் ஆகி விட்டால் பழையது எனப் பெயரிட்டுவிடுவார்கள். இதுவும் நான்கு பாகங்கள் வைக்கப் படுகிறது. சதோ ரஜோ தமோ, இப்போது மீண்டும் இது பழைய உலகில் இருந்து புதிய உலகமாக ஆகும். முழு உலகத்திற்குமே புதிய பிறவி கிடைத்தது போல் ஆகிறது. இது பழைய உலகம். பாபா சொல்கிறார், இப்போது நான் புதிய பிறவி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உலகம் பழையதில் இருந்து புதியதாக ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்திருப்பது இராஜயோகம் கற்றுக் கொள்வதற்காக. நீங்களும் அறிவீர்கள், இந்த டிராமாவில் நாம் நடிகர்கள். ஆத்மாக்கள் நாம் கூட சரீரத்தை எடுத்து இங்கே பாகத்தை நடிக்க வந்துள்ளோம். உலகத்தில் யாரும் இதை அறிந்து கொள்ளவில்லை. தங்களை நடிகர் எனப் புரிந்து கொண்டிருந்தால் படைப்பவர், இயக்குநர் பற்றியும் அறிந்திருப்பார்கள். இது கர்ம சேத்திரம் என்று ஒரு பேச்சுக்காக மட்டும் சொல்லி விடுகின்றனர். ஆனால் எப்போதிருந்து விளையாட்டு ஆரம்பமாயிற்று, அதைப் படைப்பவர் யார்-எதுவுமே தெரியாது. மனிதர்கள் தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா மற்றப்படி தங்களுக்குள் சண்டையிடுவதோ அனாதைகளின் வேலையாகும். தேவதைகளை அனாதை எனச் சொல்ல மாட்டார்கள். அங்கே சண்டை-சச்சரவுகள் நடப்பதில்லை. இங்கோ பாருங்கள், குழந்தைகள் தந்தையையே கொன்று விடுகின்றனர். அனைவரும் தூய்மையற்றவர்கள் கீழ்தரமானவர்கள். அதனால் துக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். அரைக்கல்பமாக சம்பூர்ண நிர்விகாரி தேவி-தேவதைளின் இராஜ்யம் இருந்தது. இப்போதோ சம்பூர்ண நிர்விகாரியாக ஒருவர் கூட இல்லை. இப்போது பாபா உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கிறார். இந்தப் பழைய உலகம் அழிந்துவிடப் போகிறது. நான் வந்துள்ளேன், புது உலகை ஸ்தாபனை செய்வதற்காக. நீங்கள் உறுதிமொழியும் செய்கிறீர்கள் - பாபா, நீங்கள் வருவீர்களானால் நாங்கள் மற்ற சேர்க்கைகளை விட்டு உங்கள் ஒருவருடைய சேர்க்கையில் இணைவோம். எனக்கோ ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. இப்போது பாபா வந்துள்ளார், சொல்கிறார், குழந்தைகளே, தேகத்துடன் கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் தியாகம் செய்து என்னை நினைவு செய்யுங்கள். இதில் தான் முயற்சி உள்ளது. சொல்கின்றனர் - பாபா, நாம் அறிவோம், இந்த உற்றார் உறவினர் யார்-யார் உள்ளனரோ, இவர்கள் அனைவரும் இறந்து விட்டுள்ளனர். இந்த சரீரமும் அழிந்து போகும், பழையதாக ஆகி விட்டுள்ளது. இப்போது நாம் பழைய சரீரத்தை விட்டுப் புதியதில் செல்வோம். பழைய சரீரத்திடம் இருந்து மனம் விடுபட்டு விடுகிறது. இப்போது நாம் போயே போய் விட்டோம். பழைய உலகம் சாம்பலாகி விடப் போகிறது. பாபா புரிய வைக்கிறார், அதிகாலையில் எழுந்து சிந்தனை செய்யுங்கள். இப்போது நாடகம் முடிவடைகிறது. நாம் திரும்பிச் செல்லவேண்டும். இப்போது ஒரு பாபாவின் ஸ்ரீமத் படி மட்டும் நடக்க வேண்டும். இப்போது புது உலகிற்குச் செல்ல வேண்டும். அதனால் உயிருடன் இருந்து கொண்டே அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி ஒருவரிடம் இணைக்க வேண்டும். இதில் அதிக பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்வதற்காகத் தான் பாபா சொல்கிறார், அதிகாலையில் எழுந்திருங்கள் என்று. பகலிலோ சரீர நிர்வாகத்திற்காகக் கர்மம் செய்ய வேண்டும். இரவில் செய்யப்படும் பயிற்சி மேலும் அதிகமாகு. எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, பாபாவை நினைவு செய்யுங்கள். பாபாவின் நினைவில் நீங்கள் எவ்வளவு தான் கால்நடையாக நடந்து சென்றாலும் ஒரு போதும் களைப்படைய மாட்டீர்கள். யோகபலத்தின் குஷி இருக்கும். நினைவின் மூலம் செய்யும் பயிற்சி இருக்குமானால் எங்கே அமர்ந்திருந்தாலும் பாபா நினைவு வந்து விடும். உணவு உண்ணும் போதும் கூட நினைவில் இருக்க வேண்டும். வீணான பேச்சுகள் நடைபெறக் கூடாது. பாபாவின் நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும். பிறகு அந்த் மதி ஸோ கதி ஆகி விடும் (கடைசி நேர நினைவின் அனுசாரம் எதிர்கால நிலை கிடைக்கும்). இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், அனைவரையும் உயர்ந்தவர்களாக ஆக்குபவர், சாந்தி தேசத்திற்கு அழைத்துச் செல்பவர் ஒரே ஒரு பாபா தான். ஜென்ம- ஜென்மாந்தரமாக உங்களுக்கு தந்தை ஆசிரியர், குரு கிடைத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சரீர சம்மந்தமானவர்கள். யாருமே ஆத்ம அபிமானி ஆவதற்குக் கற்றுத் தருவதில்லை. இவரோ எல்லையற்ற தந்தை, ஞானக்கடலாக இருப்பவர். ஆத்மாக்கள் அனைவருக்குள்ளும் சம்ஸ்காரங்கள் நிரம்பியுள்ளன. பிறகு சரீரத்தை தாரணை செய்வதால் அவை வெளிப்படுகின்றன. இப்போது உங்களுக்கு முழு டிராமாவின் ஞானம் உள்ளது. மற்ற மனிதர்கள் அனைவருமோ பயங்கர இருளில் உள்ளனர். ஞான மையை சத்குரு அளித்ததாகப் பாடவும் பட்டுள்ளது. ஆக, ஞான மை தருபவர் ஞானசூரியனாகிய பாபா. சத்யுகம் பகல் என்றும் கலியுகம் இரவென்றும் சொல்லப் படுகின்றது. ஆத்மாக்கள் அந்த நிராகாரி தந்தையை நினைவு செய்கின்றனர். பாபா புரிய வைக்கிறார், நான் குழந்தைகளாகிய உங்களுக்கு பிரம்மாவின் வாயின் மூலமாகக் கல்பத்திற்கு முன் போலவே அனைத்து பக்தி மார்க்க சாஸ்திரங்களின் இரகசியத்தைப் புரிய வைக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள், அவை அரைக்கல்பமாக நடைபெற்று வந்துள்ளன. மனிதர்களோ, இவை பரம்பரையாக நடந்து வருகின்றன எனச் சொல்லிவிடுகின்றனர். இராவணனையும் கூடப் பரம்பரையாக எரித்து வருகிறோம் எனச் சொல்கின்றனர். பண்டிகைகள் என்னென்ன கொண்டாடுகின்றனரோ, அவை அனைத்தும் பரம்பரையாக நடந்து வருவதாகச் சொல்கின்றனர். பரம்பரை என்றால் அர்த்தம் என்ன மற்றப்படி தங்களுக்குள் சண்டையிடுவதோ அனாதைகளின் வேலையாகும். தேவதைகளை அனாதை எனச் சொல்ல மாட்டார்கள். அங்கே சண்டை-சச்சரவுகள் நடப்பதில்லை. இங்கோ பாருங்கள், குழந்தைகள் தந்தையையே கொன்று விடுகின்றனர். அனைவரும் தூய்மையற்றவர்கள் கீழ்தரமானவர்கள். அதனால் துக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். அரைக்கல்பமாக சம்பூர்ண நிர்விகாரி தேவி-தேவதைளின் இராஜ்யம் இருந்தது. இப்போதோ சம்பூர்ண நிர்விகாரியாக ஒருவர் கூட இல்லை. இப்போது பாபா உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கிறார். இந்தப் பழைய உலகம் அழிந்துவிடப் போகிறது. நான் வந்துள்ளேன், புது உலகை ஸ்தாபனை செய்வதற்காக. நீங்கள் உறுதிமொழியும் செய்கிறீர்கள் - பாபா, நீங்கள் வருவீர்களானால் நாங்கள் மற்ற சேர்க்கைகளை விட்டு உங்கள் ஒருவருடைய சேர்க்கையில் இணைவோம். எனக்கோ ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. இப்போது பாபா வந்துள்ளார், சொல்கிறார், குழந்தைகளே, தேகத்துடன் கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் தியாகம் செய்து என்னை நினைவு செய்யுங்கள். இதில் தான் முயற்சி உள்ளது. சொல்கின்றனர் - பாபா, நாம் அறிவோம், இந்த உற்றார் உறவினர் யார்-யார் உள்ளனரோ, இவர்கள் அனைவரும் இறந்து விட்டுள்ளனர். இந்த சரீரமும் அழிந்து போகும், பழையதாக ஆகி விட்டுள்ளது. இப்போது நாம் பழைய சரீரத்தை விட்டுப் புதியதில் செல்வோம். பழைய சரீரத்திடம் இருந்து மனம் விடுபட்டு விடுகிறது. இப்போது நாம் போயே போய் விட்டோம். பழைய உலகம் சாம்பலாகி விடப் போகிறது. பாபா புரிய வைக்கிறார், அதிகாலையில் எழுந்து சிந்தனை செய்யுங்கள். இப்போது நாடகம் முடிவடைகிறது. நாம் திரும்பிச் செல்லவேண்டும். இப்போது ஒரு பாபாவின் ஸ்ரீமத் படி மட்டும் நடக்க வேண்டும். இப்போது புது உலகிற்குச் செல்ல வேண்டும். அதனால் உயிருடன் இருந்து கொண்டே அனைத்திலிருந்தும் புத்தியோகத்தை விலக்கி ஒருவரிடம் இணைக்க வேண்டும். இதில் அதிக பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி செய்வதற்காகத் தான் பாபா சொல்கிறார், அதிகாலையில் எழுந்திருங்கள் என்று. பகலிலோ சரீர நிர்வாகத்திற்காகக் கர்மம் செய்ய வேண்டும். இரவில் செய்யப்படும் பயிற்சி மேலும் அதிகமாகு. எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, பாபாவை நினைவு செய்யுங்கள். பாபாவின் நினைவில் நீங்கள் எவ்வளவு தான் கால்நடையாக நடந்து சென்றாலும் ஒரு போதும் களைப்படைய மாட்டீர்கள். யோகபலத்தின் குஷி இருக்கும். நினைவின் மூலம் செய்யும் பயிற்சி இருக்குமானால் எங்கே அமர்ந்திருந்தாலும் பாபா நினைவு வந்து விடும். உணவு உண்ணும் போதும் கூட நினைவில் இருக்க வேண்டும். வீணான பேச்சுகள் நடைபெறக் கூடாது. பாபாவின் நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும். பிறகு அந்த் மதி ஸோ கதி ஆகி விடும் (கடைசி நேர நினைவின் அனுசாரம் எதிர்கால நிலை கிடைக்கும்). இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், அனைவரையும் உயர்ந்தவர்களாக ஆக்குபவர், சாந்தி தேசத்திற்கு அழைத்துச் செல்பவர் ஒரே ஒரு பாபா தான். ஜென்ம- ஜென்மாந்தரமாக உங்களுக்கு தந்தை ஆசிரியர், குரு கிடைத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சரீர சம்மந்தமானவர்கள். யாருமே ஆத்ம அபிமானி ஆவதற்குக் கற்றுத் தருவதில்லை. இவரோ எல்லையற்ற தந்தை, ஞானக்கடலாக இருப்பவர். ஆத்மாக்கள் அனைவருக்குள்ளும் சம்ஸ்காரங்கள் நிரம்பியுள்ளன. பிறகு சரீரத்தை தாரணை செய்வதால் அவை வெளிப்படுகின்றன. இப்போது உங்களுக்கு முழு டிராமாவின் ஞானம் உள்ளது. மற்ற மனிதர்கள் அனைவருமோ பயங்கர இருளில் உள்ளனர். ஞான மையை சத்குரு அளித்ததாகப் பாடவும் பட்டுள்ளது. ஆக, ஞான மை தருபவர் ஞானசூரியனாகிய பாபா. சத்யுகம் பகல் என்றும் கலியுகம் இரவென்றும் சொல்லப் படுகின்றது. ஆத்மாக்கள் அந்த நிராகாரி தந்தையை நினைவு செய்கின்றனர். பாபா புரிய வைக்கிறார், நான் குழந்தைகளாகிய உங்களுக்கு பிரம்மாவின் வாயின் மூலமாகக் கல்பத்திற்கு முன் போலவே அனைத்து பக்தி மார்க்க சாஸ்திரங்களின் இரகசியத்தைப் புரிய வைக்கிறேன். இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள், அவை அரைக்கல்பமாக நடைபெற்று வந்துள்ளன. மனிதர்களோ, இவை பரம்பரையாக நடந்து வருகின்றன எனச் சொல்லிவிடுகின்றனர். இராவணனையும் கூடப் பரம்பரையாக எரித்து வருகிறோம் எனச் சொல்கின்றனர். பண்டிகைகள் என்னென்ன கொண்டாடுகின்றனரோ, அவை அனைத்தும் பரம்பரையாக நடந்து வருவதாகச் சொல்கின்றனர். பரம்பரை என்றால் அர்த்தம் என்ன அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சத்யுகத்தின் ஆயுள் இலட்சம் வருடங்கள் என எழுதி விட்டுள்ளனர். ஆக, மனிதர்கள் பயங்கர இருளில் உள்ளனர் இல்லையா அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சத்யுகத்தின் ஆயுள் இலட்சம் வருடங்கள் என எழுதி விட்டுள்ளனர். ஆக, மனிதர்கள் பயங்கர இருளில் உள்ளனர் இல்லையா பக்தி எப்போதிருந்து ஆரம்பமாயிற்று, தூய்மையாக எப்போது ஆனோம், எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. பகவான் தூய்மை இழந்தவர்களை தூய்மையாக்குவதற்காக எப்போது வந்தார் பக்தி எப்போதிருந்து ஆரம்பமாயிற்று, தூய்மையாக எப்போது ஆனோம், எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. பகவான் தூய்மை இழந்தவர்களை தூய்மையாக்குவதற்காக எப்போது வந்தார் சொல்லவும் செய்கின்றனர், கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் சொர்க்கம் இருந்தது என்று. ஆனால் பிறகும் அநேக வழிமுறைகள் உள்ளன இல்லையா சொல்லவும் செய்கின்றனர், கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் சொர்க்கம் இருந்தது என்று. ஆனால் பிறகும் அநேக வழிமுறைகள் உள்ளன இல்லையா எவ்வளவு வழிமுறைகள் உலகத்தில் காரியமாற்றிக் கொண்டிருக்கின்றன எவ்வளவு வழிமுறைகள் உலகத்தில் காரியமாற்றிக் கொண்டிருக்கின்றன பாபா வந்து சிரேஷ்ட வழிமுறை தருகிறார். ஸ்ரீமத் மூலம் நீங்கள் உயர்ந்தவர்களாக, தேவதைகளாக ஆகிறீர்கள். ருத்ர மாலையும் உள்ளது. ருத்ரனும் நிராகார் பகவான் தான். அவர் ஸ்ரீஸ்ரீ (மிகமிக சிரேஷ்டமானவர்-அனைவரிலும் உயர்ந்தவர்). தேவதைகளை ஸ்ரீ, அதாவது சிரேஷ்டமானவர்கள் எனச் சொல்வார்கள். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், ஸ்ரீஸ்ரீ மூலம் மிக உயர்வான மேன்மையான உலகம் உருவாகிறது. ஸ்ரீஸ்ரீயாகிய பாபா தான் ஸ்ரீயை (தேவதைகளை) உருவாக்குபவர். இந்த அனைத்து விஷயங்களையும் நினைவு வைக்க வேண்டும். கல்பத்திற்கு முன்பு புரிந்து கொண்டவர்களே இப்போதும் புரிந்து கொள்வார்கள். இந்த ஞானம் அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்காகவும் தான். அனைவருக்கும் பாபா சொல்கிறார் - தன்னை ஆத்மா என உணருங்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எவ்வளவு சுகம் கிடைத்துக் கொண்டிருக்கிறது பாபா வந்து சிரேஷ்ட வழிமுறை தருகிறார். ஸ்ரீமத் மூலம் நீங்கள் உயர்ந்தவர்களாக, தேவதைகளாக ஆகிறீர்கள். ருத்ர மாலையும் உள்ளது. ருத்ரனும் நிராகார் பகவான் தான். அவர் ஸ்ரீஸ்ரீ (மிகமிக சிரேஷ்டமானவர்-அனைவரிலும் உயர்ந்தவர்). தேவதைகளை ஸ்ரீ, அதாவது சிரேஷ்டமானவர்கள் எனச் சொல்வார்கள். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், ஸ்ரீஸ்ரீ மூலம் மிக உயர்வான மேன்மையான உலகம் உருவாகிறது. ஸ்ரீஸ்ரீயாகிய பாபா தான் ஸ்ரீயை (தேவதைகளை) உருவாக்குபவர். இந்த அனைத்து விஷயங்களையும் நினைவு வைக்க வேண்டும். கல்பத்திற்கு முன்பு புரிந்து கொண்டவர்களே இப்போதும் புரிந்து கொள்வார்கள். இந்த ஞானம் அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களுக்காகவும் தான். அனைவருக்கும் பாபா சொல்கிறார் - தன்னை ஆத்மா என உணருங்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எவ்வளவு சுகம் கிடைத்துக் கொண்டிருக்கிறது எல்லையற்ற தந்தை வந்து இவ்வளவு குழந்தைகளைத் தத்தெடுக்கிறார். இவர்கள் முகவம்சாவளி இல்லையா எல்லையற்ற தந்தை வந்து இவ்வளவு குழந்தைகளைத் தத்தெடுக்கிறார். இவர்கள் முகவம்சாவளி இல்லையா எவ்வளவு ஏராளமான பி.கே.க்கள் உள்ளனர் எவ்வளவு ஏராளமான பி.கே.க்கள் உள்ளனர் அவர்கள் பிறகு தேவதை ஆகப் போகிறவர்கள். இது ஈஸ்வரிய குலம். தாதா நிராகாராக உள்ளார். அவருடைய குழந்தையின் பெயர் பிரஜாபிதா பிரம்மா, இவர் மூலமாகத் தத்தெடுக்கிறார். பிராமணர்களாகிய நீங்கள் சிவபாபாவின் குடும்பத்தினர். பிறகு வளர்ச்சி அடைகிறது. இப்போது உங்களுடையது நம்பர் ஒன் வம்சாவளி. நீங்கள் சேவை செய்கிறீர்கள், அனைவருக்கும் நன்மை செய்கிறீர்கள். உங்களுடைய நினைவு சின்னமாகிய இந்த கோவில் (தில்வாடா) மிகச் சரியாகக் கட்டப் பட்டுள்ளது. இங்கே நீங்கள் சைதன்யமாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் மீண்டும் ஸ்தாபனை செய்கிறோம். பக்தியில் நமது நினைவு சின்னமாக கோவில்களைக் கட்டுவார்கள். சிவபாபா இல்லை என்றால் நீங்கள் எங்கே இருப்பீர்கள் அவர்கள் பிறகு தேவதை ஆகப் போகிறவர்கள். இது ஈஸ்வரிய குலம். தாதா நிராகாராக உள்ளார். அவருடைய குழந்தையின் பெயர் பிரஜாபிதா பிரம்மா, இவர் மூலமாகத் தத்தெடுக்கிறார். பிராமணர்களாகிய நீங்கள் சிவபாபாவின் குடும்பத்தினர். பிறகு வளர்ச்சி அடைகிறது. இப்போது உங்களுடையது நம்பர் ஒன் வம்சாவளி. நீங்கள் சேவை செய்கிறீர்கள், அனைவருக்கும் நன்மை செய்கிறீர்கள். உங்களுடைய நினைவு சின்னமாகிய இந்த கோவில் (தில்வாடா) மிகச் சரியாகக் கட்டப் பட்டுள்ளது. இங்கே நீங்கள் சைதன்யமாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் மீண்டும் ஸ்தாபனை செய்கிறோம். பக்தியில் நமது நினைவு சின்னமாக கோவில்களைக் கட்டுவார்கள். சிவபாபா இல்லை என்றால் நீங்கள் எங்கே இருப்பீர்கள் பிரம்மா விஷ்ணு சங்கர் எங்கே உள்ளனர் பிரம்மா விஷ்ணு சங்கர் எங்கே உள்ளனர் இப்போது சிவபாபா படைப்பைப் படைத்துக் கொண்டிருக்கிறார் இல்லையா இப்போது சிவபாபா படைப்பைப் படைத்துக் கொண்டிருக்கிறார் இல்லையா பிரஜாபிதா பிரம்மாவின் சித்திரம் தனியாக இருக்க வேண்டும். திரிமூர்த்தி பிரம்மா எனச் சொல்கின்றனர். ஆனால் அதற்கோ எந்த ஓர் அர்த்தமும் இல்லை.\nபரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். செய்பவர்-செய்விப்பவர் சிவபாபா. இந்த அனைத்து விஷயங்களும் தாரணை செய்வதற்கானவை. சிவபாபா தாமே இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதை தாரணை செய்ய வேண்டும். இதில் தூய்மை தான் முதலாவதாகும். தைரியத்தையும் காண்பிக்க வேண்டும். இல்லறத்தில் இருந்து கொண்டே தூய்மையாக இருந்து காட்ட வேண்டும். யாராவது பெண்குழந்தையைக் காப்பாற்றுவதற்காகவும் சுயம்வரம் செய்கின்றனர். அதை கந்தர்வ விவாகம் எனச் சொலல்கின்றனர். பிறகு அதிலும் கூடச் சிலர் ஃபெயிலாகி விடுகின்றனர். திருமணம் செய்து கொண்டு, பிறகு தூய்மையாகவும் இருக்கின்றனர். ஒரு சிலர் உள்ளனர் தூய்மையாக இருந்து பிறகு ஞானமும் பெற்றுக் கொள்ள வேண்டும். தாரணை செய்து மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக ஆக்கிக் காட்ட வேண்டும். அப்போது உயர்ந்த பதவி பெற முடியும். இந்த ஞான யக்ஞத்தில் தடைகளும் அதிகம் வருகின்றன. இவை அனைத்தும் நடக்கத் தான் செய்யும். டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. பெண்குழந்தைகள் சிலர் சொல்கின்றனர்-எங்களுக்கு செல்வம் எதற்கு, இதை விட பாத்திரம் தேய்த்து ரொட்டி சாப்பிடுவது நல்லது, தூய்மையாகவோ இருப்போம். ஆனால் அதிக தைரியம் வேண்டும். நல்லது.\nஇனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.\n1. உணவு சமைக்கும் போது பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். வீணான உரையாடல் கூடாது. நினைவின் மூலம் பாவக் கணக்கை முடித்துவிட வேண்டும்.\n2. பகலில் சரீர நிர்வாகத்திற்காகக் கர்மம் செய்து, இரவில் கண் விழித்துத் தனக்குத் தானே ஆன்மிக உரையாடல் செய்ய வேண்டும். இந்த நாடகம் முடிவடைந்தது, நாம் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் இதை சிந்தனை செய்ய வேண்டும் . அதனால் உயிருடன் இருந்து கொண்டே மோகத்தை நீக்கிவிட வேண்டும்.\nஒரு பாபாவிடம் முழு உலகத்தின் அனுபவம் செய்து கொண்டு ஒருவரின் நினைவில் இருக்கக் கூடிய சகஜ யோகி ஆகுக \nசகஜயோகி என்பதன் அர்த்தமே - ஒருவரை நினைவு செய்வதாகும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை. உடல்-மனம்-செல்வம் அனைத்தும் உன்னுடையது, என்னுடையதல்ல. அது போல் டிரஸ்டி ஆகி டபுள் லைட்டாக இருப்பவர் தான் சகஜயோகி ஆவார். சகஜயோகி ஆவதற்கான எளிதான விதிமுறை ஒருவரை மட்டுமே நினைவு செய்வது, அந்த ஒருவர் மூலமே எல்லா வித சம்மந்தங்களையும் அனுபவம் செய்வது. பாபா தான் உலகம் என்றால் நினைவு சகஜமாகி விடும். அரைக்கல்பமாக முயற்சி செய்தாயிற்று. இப்போது பாபா முயற்சியில் இருந்து விடுவிக்கிறார். ஆனால் பிறகும் கூட முயற்சி செய்ய வேண்டி உள்ளது என்றால் அதன் காரணம் தனது பலவீனமாகும்.\nதூய்மை சொரூபமான தர்மத்தை யார் வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றாரோ, அவர் தான் மகான் ஆத்மா ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-05-27T03:04:57Z", "digest": "sha1:A5WUUQTUVCSGTCI7XVFOJCCGI5AZCR3V", "length": 54143, "nlines": 753, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: தமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nதமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் \nநான் தை 1ஐ புத்தாண்டாக கொண்டாடுவதற்கு மாறிவிட்டேன். கடந்த இரு ஆண்டுகளாக பொங்கலையும் தமிழ் புத்தாண்டையும் சேர்த்தே கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. ஏப்ரல் 14 வழக்கம் போல் ஒரு நாளாக செல்கிறது.\nஇது பற்றி சென்ற ஆண்டுகளில் எழுதிய பதிவுகள்.\nபொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) (2009) \nவைப்பதற்கும் சிரைப்பதற்கும் அது என்ன மீசையா தேதியை மாற்றி மாற்றி வைக்க என்று வழக்கம் போல் தை 1 ஐ தமிழ் புத்தாண்டு என்று சொன்னால் சிலர் சினந்து எழுகிறார்கள்.\nநானும் 'தீபாவளி', 'மகர சங்கராந்தி', 'கிருஷ்ண ஜயந்தி', 'ஆவணி அவிட்டம்', 'அட்சய திருதியை', 'கோகுலாஷ்டமி', 'புரட்டாசி சனிக்கிழமை', 'பங்குனி உத்திரம்', 'மாசி மகம்', 'சித்திரா பவுர்ணமி', 'ஆடி அமாவாசை', 'ஆடி பூரம்', 'வைகாசி விசாகம்', 'வைகுண்ட ஏகாதேசி', 'சிவ ராத்திரி', 'மாளய அமாவாசை' 'சித்திரை விசு','ரஜினி பிறந்த நாள்', 'விஜய் பிறந்த நாள்' இவையெல்லாம் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருக்கிறதா இவை சங்கத்தமிழர்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவே இல்லை. இவை யெல்லாம் சத்தமில்லாமல் நுழைந்து அவற்றையும் ஏற்றுக் கொண்ட பிறகு ஒரே ஒரு நாள் தமிழறிஞர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றி அமைப்பதால் தமிழுக்கு எந்த குடியும், தமிழர் குடியும் முழுகிவிடாது என்று தெரிந்தது. நம்மைக் கேட்காமலேயே எவ்வளவோ மாற்றம் புகுத்தப்பட்டு புகுந்து நிகழ்ந்திருக்கிறது. தை 1 புத்தாண்டாக அறிவித்ததும் இருந்துவிடட்டுமே என்றே நினைக்கிறேன்.\nவழக்கமாக கொண்ட்டாடும் புத்தாண்டுக்கு பதிலாக இந்த ஆண்டு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகவும் பொங்கலாகவும் கொண்டாடும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள், அவர்களையும் வரும் காலம் மாற்றும்.\nதமிழ் புத்தாண்டும் சீனர்களின் சீனப் புத்தாண்டு போல் மதச் சார்பற்று அல்லது அவரவர் மத வழக்கப்படி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடுவது எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவோமாக.\nபதிவர்: கோவி.கண்ணன் at 1/13/2010 03:54:00 பிற்பகல் தொகுப்பு : தமிழர், புத்தாண்டு\nதமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:46:00 GMT+8\nதலைப்பில் இருக்கும் சந்திப் பிழைகளில் ஏதேனும் நுண்ணரசியலா\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:01:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஊரெல்லாம் சேர்ந்து கொண்டாடும்போது இருக்கும் சுகம் தனிதான்.\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:23:00 GMT+8\nஇனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:34:00 GMT+8\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும், அண்ணிக்கும், பாப்பாவுக்கும்...\nதமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:56:00 GMT+8\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். (குறிப்பு: தமிழ்ப்புத்தாண்டு சித்திரை ஒன்று அன்று தான் பிறக்கிறது)\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:14:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:18:00 GMT+8\nபொங்கலுக்கு சிங்கையில் விடுமுறை உண்டா இல்லையா\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:21:00 GMT+8\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:58:00 GMT+8\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே...\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:11:00 GMT+8\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 10:14:00 GMT+8\nபொங்கலுக்கு சிங்கையில் விடுமுறை உண்டா இல்லையா\nபிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம். நான் பொங்கலும் புத்தாண்டும் கொண்டாடுகிறேன். பொங்கலுக்கு மட்டும் தான் வாழ்த்துகளா \nபெரிய மனசு பண்ணுங்க வாத்தியாரே \nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:03:00 GMT+8\nகலைஞர் டிவி மற்றும் சன் டிவி ல April 14 சிறப்பு நிகழ்ச்சி எப்போ போடாம இருக்கறாங்களோ அன்னைக்கு தான் நம்புவேன் தை 1 தமிழ் புத்தாண்டு என்று :-)\nவிடுமுறை நாள் சிறப்பு நாள் (அம்பேத்கர் நாள்) என்று April 14 சிறப்பு நிகழ்ச்சிக்கு காரணம்\nசொன்னால் செல்லாது செல்லாது ;-)\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:05:00 GMT+8\nதமிழ் புத்தாண்டை தை திங்களில் கொண்டாடும்போது உவகை கொள்கிறேன்.\nபுதன், 13 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:38:00 GMT+8\nஇதற்கு சரியான விளக்கம் கொடுக்கவும்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:27:00 GMT+8\nஇனிய தைப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:04:00 GMT+8\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:18:00 GMT+8\nதமிழ் ஆண்டு 12 மாதங்கள். அது முடிவது பங்குனியில்தான்.உன்னை மாதிரி விசிலடிச்சான் குஞ்சிகள் எப்போது ஒழியுமோ அப்பதான் இந்த தமிழ்நாட்டுக்கும், இந்து மதத்துக்கும் விடிவுகாலம். நீ யில்லாம் ஒரு ஆளு மயிறுன்னு எழுத வந்துட்டே.இல்லையென்றால் உன்னை மாதிரு லூசுங்களை தாண்டி நாங்கள் 3000 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:06:00 GMT+8\nதித்திப்பான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தலைவரே.\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:43:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:18:00 GMT+8\nதலைப்பில் இருக்கும் சந்திப் பிழைகளில் ஏதேனும் நுண்ணரசியலா\nஒரு மண் அரசியலும் இல்லை. விடுபட்டுவிட்டது அம்புட்டு தான்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:19:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஊரெல்லாம் சேர்ந்து கொண்டாடும்போது இருக்கும் சுகம் தனிதான்.//\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:19:00 GMT+8\nஇனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்//\nஉங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள் திகழ்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:20:00 GMT+8\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும், அண்ணிக்கும், பாப்பாவுக்கும்...\nதமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே\nஉங்களுக்கும் தங்கச்சிக்கும், பாப்பாவுக்கும் நல்வாழ்த்துகள் யுவா\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:20:00 GMT+8\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். //\nஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\n//(குறிப்பு: தமிழ்ப்புத்தாண்டு சித்திரை ஒன்று அன்று தான் பிறக்கிறது)//\nநல்லா பிறக்கட்டும், ஏற்கனவே பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம் தவறு இல்லை :)\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:21:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.//\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:21:00 GMT+8\nஉங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் என் அன்பு கலந்த இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்\nதமிழ்ப்புத்தாண்டு தந்த தலைமகன் டாக்டர் கலைஞர் இன்னும் ஒரு நூறாண்டு வாழ்கவே\n- என்று தோழர் யுவகிருஷ்ணா அவர்கள் சொன்னதையும் இந்த நேரத்தில் வழிமொழிகிறேன்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:22:00 GMT+8\nவெண்பொங்கல் சர்கரைப் பொங்கல் வாழ்த்துகள்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:22:00 GMT+8\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே...\nநன்றி தம்பி. உங்களுக்கும் வாழ்த்துகள்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:23:00 GMT+8\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:24:00 GMT+8\nகலைஞர் டிவி மற்றும் சன் டிவி ல April 14 சிறப்பு நிகழ்ச்சி எப்போ போடாம இருக்கறாங்களோ அன்னைக்கு தான் நம்புவேன் தை 1 தமிழ் புத்தாண்டு என்று :-)\nவிடுமுறை நாள் சிறப்பு நாள் (அம்பேத்கர் நாள்) என்று April 14 சிறப்பு நிகழ்ச்சிக்கு காரணம்\nசொன்னால் செல்லாது செல்லாது ;-)//\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:25:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்\nதமிழர்க்கு மழை போல வந்த இடர்கள் பனி போல பறந்து போகட்டும்\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:44:00 GMT+8\nதமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்\nதமிழர்க்கு மழை போல வந்த இடர்கள் பனி போல பறந்து போகட்டும்\nமழை, தூவானம் அதுக்காக அதுக்காத்தான் மழைன்னு போட நேர்ந்தது இல்லன்னா மலை தான், அது தமிழர்களில் தோள்களாயிற்றே\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:51:00 GMT+8\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:31:00 GMT+8\nவியாழன், 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:27:00 GMT+8\n//தமிழ் புத்தாண்டும் சீனர்களின் சீனப் புத்தாண்டு போல் மதச் சார்பற்று அல்லது அவரவர் மத வழக்கப்படி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடுவது எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவோமாக.//\nவெள்ளி, 15 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:27:00 GMT+8\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nவெள்ளி, 15 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:28:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nநான் வித்யா - 'நான்' \nஇராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு \nபிள்ளையார் சுழி - பிஸ்மில்லா 786 \nபெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ...\nசிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு \nதம2009 - வாக்களித்தவர்களுக்கு நன்றி \nதமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் \nஇல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 3\nகண்ட கண்ட மின்னனு பொருள்களை வாங்குபவரா நீங்கள் \nகூகுள் - நீயூட்டன் ஆப்பிள் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nஇப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா...\nகாணாமல் போனவை - கோவணம் \nபண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை எ...\n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்...\nபைத்தியம் முற்றினால் பாயைச் பிராண்டும் என்று சொல்வது எத்தகைய உண்மை. ஜாதிவெறி என்ற பைத்தியம் முற்றினால் சக மனிதனின் உயிரைக் கூட மதிக்காது. இத...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஅனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA - *A1* இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால் அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanigaihaiku.blogspot.in/2016/12/", "date_download": "2018-05-27T03:33:43Z", "digest": "sha1:5O4GRC6ZXYVHSK2KNFJYTRX5BESYAHGE", "length": 11232, "nlines": 219, "source_domain": "thanigaihaiku.blogspot.in", "title": "ஹைக்கு: December 2016", "raw_content": "வெள்ளி, 30 டிசம்பர், 2016\nஎல்லை தாண்டி எட்டப் பார்க்கும்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 8:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரு விதை இலை தாவரம்...Two seeded plant\nதாமாக முளைத்த தப்புச் செடி\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 7:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 7:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n எப்படி முளைக்கிறது இப்படி எல்லாம்\nஅவள் தாயார்தான் அவன் தந்தைதான்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 6:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது விற்பனைக்கு அல்ல‌ It is not for sale\nஇரு வட்டத்திலிருந்து மீறல் புது வட்டம்\nமூன்றாம் வட்டம் மாய வட்டம்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 6:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 டிசம்பர், 2016\nதேடலும் தேடலின்றியும் search with out search\nஒரே கட்டில் இருக்கிறது இரு எதிர் துருவம்\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 10:34 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 13 டிசம்பர், 2016\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் முற்பகல் 12:07 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 டிசம்பர், 2016\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:11 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 2 டிசம்பர், 2016\nஏங்கும் ஏக்கம் எங்கும் very close to soul\nகாதலாகி கசிந்துருகி ஜீவன் ததும்ப\nஎல்லாம் நீயாக கண் கிறங்கி தடு(ட)மாற‌\nஇடுகையிட்டது Kavignar Thanigai நேரம் பிற்பகல் 11:45 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபகத்சிங்கின் வாழ்க்கையை படமாக பாருங்கள்The Legend Of Bhagat Singh (2002)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.நாளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nஆயிரம் ஆண்கள் சேர்ந்திருக்கலாம் பெண்களுடனும் இரு பெண்கள் சேர்ந்தேயிருக்க முடியாது இயற்கைக்கு எதிராக எங்கேயும் எப்போதும்\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஇரு விதை இலை தாவரம்...Two seeded plant\nஇது விற்பனைக்கு அல்ல‌ It is not for sale\nதேடலும் தேடலின்றியும் search with out search\nஏங்கும் ஏக்கம் எங்கும் very close to soul\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1502944414699?Atrocities-against-Dalits--Tamilnadu-leads-list", "date_download": "2018-05-27T03:04:17Z", "digest": "sha1:6ZMGXQPWOMQDQOVFY6EQTQQ63WXZTJDS", "length": 10329, "nlines": 87, "source_domain": "www.newstm.in", "title": "தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு", "raw_content": "\nதலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு\nதலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு\nஇந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் அதிக அளவு குற்றங்கள் தமிழகத்தில் தான் நடைபெறுகின்றன என தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.\n2014-ஆம் ஆண்டில் இருந்து தமிழ் நாட்டில் தலித்துகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளன. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 6-ல் ஒரு வழக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 32,000-க்கும் மேற்பட்ட வழக்குகளில் 5,300 வழக்குகள் தமிழகத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரில் சுமார் 2000 வழக்குகள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பந்தப்பட்டவையாகும்.\nகடந்த ஏழு மாத காலமாக இந்த ஆணையத்தின் தலைமை பொறுப்புக்கு யாரும் நியமனம் செய்யப்படாததால் வழக்கு விசாரணையில் தொய்வு காணப்பட்டது. தற்போது தலைமை ஆணையர் நியமிக்கப்பட்டு விட்டதால் நிலுவையில் உள்ள வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 4 வாரத்தில் 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவற்றில் பல வழக்குகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிலையங்களில் எஸ்.சி மாணவர்களுக்கு 18% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் தேசிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nபழங்குடியின மற்றும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் தலித்துகளிடம் இருந்து பறிக்கப்பட்ட 5000 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவி தொகையை விரைந்து வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.சி மக்களின் வங்கி கடனை ரத்து செய்வது குறித்து வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க மண்டல விசாரணை குழுக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஶ்ரீ திவ்யாவின் மார்டன் லுக் படங்கள்\nமணிரத்னம் பட நாயகியின் கிளாமர் படங்கள்\nஹீரோயின் ஆன இந்த குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரிகிறதா\nஶ்ரீ திவ்யாவின் மார்டன் லுக் படங்கள்\nமணிரத்னம் பட நாயகியின் கிளாமர் படங்கள்\nஹீரோயின் ஆன இந்த குழந்தை நட்சத்திரம் யாரென்று தெரிகிறதா\nஅபியும் அனுவும் - திரை விமர்சனம்\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்\nகாஷ்மீர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: ரிபோர்ட் கார்டு தயாரித்த ராகுல்\nகாஷ்மீர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஒரு நாளைக்கு 15 -18 மணி நேரம் வேலை செய்யும் பிரதமர் மோடி: அமித் ஷா புகழாரம்\nதமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்\nபீரங்கி சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறி ராணுவ வீரர் மரணம்\nஅனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த கமல்\nகேரளாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதி\nநீட் மசோதா ; மேலும் இரண்டு அமைச்சகங்கள் ஒப்புதல்\nதமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்\nபீரங்கி சிலிண்டரில் இருந்த வாயு வெளியேறி ராணுவ வீரர் மரணம்\nஅனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த கமல்\nகேரளாவில் உயிரிழந்த தமிழக இளைஞரின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதி\nநீட் மசோதா ; மேலும் இரண்டு அமைச்சகங்கள் ஒப்புதல்\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-05-27T03:03:11Z", "digest": "sha1:NGK5QVV6TRJ5MGHFF2VJYT7EGEMRUUMN", "length": 13756, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "எமது சமூகம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். » Sri Lanka Muslim", "raw_content": "\nஎமது சமூகம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.\nதேர்தல் காலம் என்றாலே கட்சிகளும் சுயட்ச்சைகளுக்கும் தங்களை அடை காத்தூக்கொள்வது வழமை ஆனாலும் தற்போது நம் நாடு ஓர் புதிய பாதையில் புதுயுகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை தற்க்கால சூழலில் ஓர் புதிய தேர்தல் முறையின் கீழ் எமது சமுகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ள தேவை உள்ளது .\nகுறிப்பாக இத் தேர்தலைப் பொறுத்த மட்டில் எமது முஸ்லிம் சமூகம் எப்படி கையாளப் போகின்றது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம் இவ் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மைக் கட்சிகள் வகுத்த வியூகங்களும் சிறுபான்மை கட்சிகள் வகுத்த வியூகங்களுக்கும் சற்று வித்தியாசமானவை தான் எது எப்படி இருந்தாலும் இதனை முஸ்லிம் சமூகம் இவ் விடயங்களை கையாண்டுள்ளது எதிர்கால நகர்வலைகள் என்ன என்பது பற்றி சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம் இதற்காக எம்மை ஆளும் பிரதிநிதிகளின் வகி நிலையானது ஏட்டிக்குப் போட்டியான நிலையில் எம் மத்தியில் நிலை நிறுத்தியுள்ளது. குறிப்பாக தற்கால சூழலில் ஒற்றுமை என்ற பலம் எம் சமுகத்தில் இதன் வகி நிலை குறைவாகத் தான் இன்றைய காலத்தில் காணப்படுகின்றது.\nசமகால அரசியல் சூழ் நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.எது எப்படி இருந்தாலும் தன் கொள்கை சரி என்பதை தூக்கிப் பிடித்துக்கொள்கிறார்கள் இதற்காக சம நிலை வகி பங்கு என்பது தொடர் கேள்விக் குறியாக மாறியுள்ளத்தைக் காணலாம். உரிமை என்பது அனைத்து இனமக்களுக்கும் பொதுவானதாகும் இது சரியாக கையாளப்படும் போதே எமக்கான சுதந்திரம் கிடைக்கின்றது .வாக்குரிமைப் பொறுத்த மட்டில் நாம் விரும்பியவர்க்கு அளிக்கலாம்\nவாக்குரிமையை பொருத்த மட்டில் எமது சமூகம் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றது என்பது இன்றுள்ள பாரிய சவாலாகவே உள்ளது. ஏனெனில் குறிப்பாக நம்மவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பது குறைவாக காணப்படுவதாகும். அது மட்டுமல்லாமல் எமக்கான அரசியல் ரீதியான எமது உரிமைத் தேவைப்பாடுகள் என்பது பற்றிய தெளிவின்மையும் பிரதான காரணமாகும். இதனை கடந்த கால பிழைகளாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கான தீர்வை முன்வைப்பது எம் அனைவரினதும் கடமையாகும்.\nஉரிமை என்பது ஓர் நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் பொதுவானதாகும். இது சரியாக கையாளப்படும் போதே எமக்கான சுதந்திரம் கிடைக்கின்றது. எமக்கான அடையாளத்தையும் இருப்பிடத்தையும் நமது வாக்கே தீர்மானிக்கின்றது. எமக்குள்ளே பல கட்சிகள் தோன்றுவதால் சிதறலடைகின்றன. இதனாலட அழிவடைவது எம் சமூகத்தின் தலைவிதியே. புரிந்துணர்வின் மூலம் ஓர் தலைமையின் கீழ் ஒற்றுமை என்ற சகோதரத்துவம் கட்டியெழுப்பப்படும் போதே எமக்கான அடையாளங்கள் சரியாக தீர்மானிக்கப்படுகின்றது. அதன் வெளிப்பாடாக வெற்றி அடைவதன் மூலம் எமது சமூக ஒற்றுமையை பறைசாற்றி உரிமைகளை வெல்லலாம். இதன் வெளிப்பாடு மாறிவிட்டால் கேள்விக்குறியில் எமது சமூகம் திசைமாறி பயணித்து விடும் மேலும் அதன் இருப்பையும் அழித்துவிடுk;.\nநாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் நமக்கான சரியான திட்டங்களை வகுக்கின்றார்களா வாக்குறுதிகள் சரியாக முறையில் பயன் படுத்த படுகின்றதா என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் கடந்த கால தவறுகளை திருத்தியுள்ளார்களா என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் கடந்த கால தவறுகளை திருத்தியுள்ளார்களா இவர்களின் எதிர்கால இலக்குகள் என்ன இவர்களின் எதிர்கால இலக்குகள் என்ன என்ற கேள்விக்கான விடைகளை நாம் தேட வேண்டும் இவர்களினால் தவறுகள் ஏற்படுமாயின் இவர்களை நாம் நிராகரிக்க வேண்டிய கடமை நம் ஒவ்வருவர்க்கும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாதது.\nபதவி என்பது அமானிதமாகும் இதனை சரியான முறையில் பயன்படுத்துவர்களின் கைகளில் நாம் கொடுக்க வேண்டும் அப்போது தான் இந்தச் சமூகம் ஓர் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் குறிப்பாக இவ் புதிய வடடார தேர்தல் முறையில் நாம் நேரடியாக ஓர் பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டியல் நிலையில் உள்ளோம் .ஓர் உறுதியான தன்னலமற்ற மக்கள் சேவகனாக இருக்கு போதே நம் பிரதேசமும் நாடும் வளர்ச்சி பெறும். குறிப்பாக எமது சமூகத்தில் பல பிரச்சினைகள் இன்று தலை விரித்தடுக்கின்றது இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மெட்கொள்ளப்பட வேண்டும் .இதனை சீர் செய்ய நம் அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும்.\nபொறுப்புமிக்க செயல் தலைவர்களுக்காக அவர்களின் உறுதிப்பாட்டை நாம் சமூகம் ஆதரிக்கும் போதே நமது உரிமைகள் சீர் செய்யபடும். கொள்கைகள் மற்றும் பிளவுக்கள் காணப்படுமாயில் இவ் பரந்த உலகில் பிரிந்த சமுகமாய் நாம் மாறி விடுவோம்..குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்செறிந்தது வாழ்கின்றனர் குறிப்பாக இங்கு எமது சமூக கட்சிகள் அரசியல் விடயங்களில் பிரிந்து செல்கின்றனர் இது எம் சமூக விடியலை துரமாக்கிவிடும் என்பது யதார்த்தமாகும் கிழக்கு மாகாண முஸ்லிங்களின் அரசியல் பலமானது மீள் எழுச்சி பெற வேண்டும் நமது அரசியல் பலத்தை நிருபிக்க வேண்டும்.\nஇதன் மூலம் நம் நாட்டில் வாழும் எமது முஸ்லிம் மக்களின் அனைத்தும் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் இத்ற்கு எமது வாக்கு பலம் சரியாக இருக்க வேண்டும் குறிப்பாக எமது நாட்டில் வாழ் கின்ற ஒட்டு மொத்த முஸ்லிங்களும் சரியான முடிவை எடுக்க வேண்டும் இது ஜனநாயகம் மட்டுமல்ல எமது சமூக விடிவும் கூட இதனை நாம் அனைவரும் சிந்தித்து செயற்படுகின்ற போதே எம் சமுகத்தின் தலை விதி சரியாக எழுதப்படும்\nகல்முனை பிரதேச நலனில் அக்கறையுள்ளவர்களின் ஆதங்கம்\nபாஜக எழுச்சியால், இலக்கு வைக்கப்படும் இந்திய முஸ்லிம்கள்’\nநுண்கடன் திட்டங்களால் அழிவடையவுள்ள சமூகம்\nஒரு தமிழரின் பார்வையில் மாட்டிறைச்சி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/index.php?page=10", "date_download": "2018-05-27T03:32:55Z", "digest": "sha1:NWG3FMU4II5PZR3IGEG5NYCYUT2ULXEK", "length": 3679, "nlines": 95, "source_domain": "tamilblogs.in", "title": "தமிழ் கணினி: Contact Me Page உருவாக்குவது எப்படி? « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nதமிழ் கணினி: Contact Me Page உருவாக்குவது எப்படி\nஇனைய தளம் நமக்கான Contact Me பக்கம் சுலபமாக உருவாக்க வழி செய்துள்ளது இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்காக இதை எழுதுகிறேன். இந்த வலைதளத்தில் நமக்கு Account இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை யார் வேண்டுமானாலும்\n2\tதமிழ் கணினி: ப்ளாக்கில் Page Number இணைப்பது எப்படி\n0\tரயில்வே எக்ஸாம் (RRB ALP EXAM) மாதிரி கேள்வி தாள்கள்\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி\nதிருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்\nதிருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை\nதிருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே\nதிருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://techislam.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A/", "date_download": "2018-05-27T03:38:29Z", "digest": "sha1:QG2Q7LPSXK35AKQ7L5CKGJ4QQOOKWV6Y", "length": 2877, "nlines": 55, "source_domain": "techislam.com", "title": "வீடியோ : குதிரையொன்ரை மோசமாக சுட்டுக் கொல்லும் வாலிபர்கள் ! - Tech Islam | இஸ்லாம் தொழில்நுட்பம் | ඉස්ලාම් තාක්ෂණය", "raw_content": "\nவீடியோ : குதிரையொன்ரை மோசமாக சுட்டுக் கொல்லும் வாலிபர்கள் \nவீடியோ : குதிரையொன்ரை மோசமாக சுட்டுக் கொல்லும் வாலிபர்கள் \nஇரு வாலிபர்கள் இணைந்து ஒரு குதிரையை மோசமாக தலையில் சுட்டுக் கொல்லும் காட்சியொன்று சமூகவாளையதலங்களில் அதிகம் பரிமாறப்படுகிறது. மேலும், இச்செயலைச் செய்தவர்களை கைது செய்து தண்டிக்கவேண்டும் என பலர் வேண்டிக்கொண்டுள்ளனர்.\nTwitter தனது பாவனையாளர்களிடம் அவசரமாக Paasword ஐ மாற்றுமாரு வேண்டுகிறது\nஅமெரிக்கா பெருவில் அமைந்துள்ள வானவில் மலை\nஇன்று முதல் Twitter இல் 280 எழுத்துக்களில் எழுதலாம்\nFacebook இல் நாமாக எவ்வாறு ஒரு Frame உருவாக்குவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://iyalisai.com/mystery-sea-creature-russia-sea/", "date_download": "2018-05-27T03:16:35Z", "digest": "sha1:RKYXEQCHGBCDXSLL7PQQGILK35ZV4RX4", "length": 3346, "nlines": 83, "source_domain": "iyalisai.com", "title": "அதிசய கடல் உயிரினம்", "raw_content": "\nஅதிசய கடல் வாழ் உயிரினம் ஓன்று இறந்த நிலையில் ரஷ்சிய கடல்கரையில் ஒதுங்கியுள்ளது.\nஇவ் ராட்சத உயிரினம் டால்பின் இனத்தை ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், அடர்ந்த மயிர்களினாலான வாலைக் கொண்டிருப்பது, ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஉணர்ச்சிவசப்பட்டு அழுத இந்திய பிரதமர்\nஎரிமலைக்கடியில் தங்கம் மற்றும் வெள்ளி\nஅம்பேத்கர் வீட்டை வாங்கியது இந்திய அரசு\nகிரிக்கட்டிலிருந்து சங்ககாரா ஓய்வு பெற்றார்\nஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஓதுங்கிய அதிசய கடல்வாழ் உயிரினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867995.55/wet/CC-MAIN-20180527024953-20180527044953-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}