{"url": "http://www.geevanathy.com/2008/08/91.html", "date_download": "2019-06-26T14:36:03Z", "digest": "sha1:GWUXMC6FYOMUZUCBG6KZNHYFAVFV5EOK", "length": 12229, "nlines": 206, "source_domain": "www.geevanathy.com", "title": "தம்பலகாமம்.க.வேலாயுதம்,திருகோணமலை,இலங்கை. | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.\nவீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.\n1917 இல் தம்பலகாமத்தில் பிறந்த இவர் சிறுவயதுமுதலே இசை, நாடகம்,கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5ம் வகுப்பபுக்கு மேல் தொடரமுடியாது போனது.\nஇருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்த தென்றால் அது மிகையாகாது.\nஅவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.\n91ம் அகவையிலும் தமிழ்ப்பணி செய்து வாழும் செம்மலே நீ ஆதிகோணநாயகர் அருள்கொண்டு நீடுவாழி.\nமுத்தும் சென்னெல்லும் தேனும் விளைகின்ற\nகத்தும் ஓசையிலும் கதைக்கின்ற ஒலிகளிலும்\nதித்திக்கும் சுவையூட்டும் 'செந்தமிழே' நீ வாழ்க.\nஅவரது நூலுருவாக்கம் பெற்ற படைப்புகள்.\nஇந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையேயான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீரமும் அவர்களுடைய ஆட்சித்திறனும் எவ்வாறு ஈழத்தில் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறது.\n‘தம்பலகாமம்’ நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது ‘தமிழர் பட்டணம்’ என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சு ஒரு கணம் நிமிர்கின்றன.\nஎந்த அளவிற்கு அவர் மூலம் அவர் பற்றிய, அவரது படைப்புகள் பற்றிய தகவல்களை அறியமுடியுமோ,அந்த அளவிற்கு அறிந்து இங்கு பதியவைத்துள்ளோம். ‘வாழும்போதே வாழ்த்துவோம்’\nவெளியீடு –பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம்,\nதம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் 30 கட்டுரைகள் ‘தமிழ் கேட்க ஆசை’ என்று நூலுரு பெற்று வெளிவந்திருப்பதையும்,நூலாசிரியர் கெளரவிக்கப்படுவதையும் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள. உம்மை நானறிவேன். நேரமுள்ள போது கீழேயுள்ள முகவரியில் பாருங்கள். உங்கள் ஊர், ஊர் மாந்தர் எல்லோரும் வந்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/112969", "date_download": "2019-06-26T14:58:00Z", "digest": "sha1:R7EFUKEFKBNXSKHX3ZMNXLUPQ2ZZHMZP", "length": 16606, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "கைநெசவும் தனிவழியும்", "raw_content": "\nபெரும் நன்றியோடு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சரியாக ஒரு வருடம் கடந்துவிட்டது உங்களை சந்தித்து. உண்மையிலேயே போன வருடம் இதே காலம் நானும் எம்மைபோன்ற நண்பர்களும் எடுத்துக்கொண்ட பணியில் கிடைத்த எதிர்மறையான சூழலின் காரணமாக தேங்கிக்கிடந்தோம். அன்றைய நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றத்தின் அந்த சமணதலத்தில் உங்களிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த ஜெகநாதன் அய்யாவின் வார்த்தைகளை அறிந்தேன். அதுதான் ஒவ்வொரு சோர்விலும், தேக்கத்திலும், சலிப்பில்லாமலும் தன்முனைப்பை அகமேற்றிக்கொள்ளாமல் என்னை செயலை நோக்கி நகர்த்திகொண்டிருக்கிறது.\nஇத்தகையான நகர்வு வெறும் பொருளீட்டுவதற்கானதாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சத்தியத்தின் சுயத்தை கண்டடைவதற்கான தேடலாகவே இருக்கிறது என்று உங்களுடனான இந்த சந்திப்பையும் உரையாடலையும் அடிப்படையாககொண்டு நம்புகிறேன்.\nசென்றவருடம் எனக்கிருந்த பயமும் குழப்பமும் இந்த வருடம் இல்லை. நிறைய தவறுகளும் செறிவின்மையும் இப்போதும் என் செயலில் இருக்கிறது. ஒவ்வொன்றாக சூழலுக்கு ஏற்றவாறு அனுகி தவறுகளை சிறுக சிறுக சரிசெய்துகொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் இயன்ற செயலை மிகுந்த நிறைவுடன் செயலை செய்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.\nஒவ்வொரு சிரமமான காலகட்டத்திலும் சிவராஜ் அண்ணனை தொடர்புகொள்ளும்போது அவர் சொல்லும் “தம்பி நாம் காலம் கடந்த கனவை சுமந்துகொண்டிருக்கிறோம். காந்தி எப்படி ஒரு நூற்றாண்டு தலைமுறைக்காக கனவு கண்டு வேலைசெய்ததில் நாம் அதில் பயணிக்கிறோமோ அது போல இன்னும் பிறக்காத சந்ததிக்காக நாம் கவலைப்படுவோம் அதற்கே வேலை செய்வோம். இந்த தலைமுறை புரிந்துகொள்வதற்கு சற்று காலதாமதம் ஆகும், நாம் சரியான உள்ளுணர்வு சொல்லும் பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்ற வார்த்தைகளை சொல்லிவிட்டு நீங்கள் எழுதிய கட்டூரையினையோ அல்லது காந்தியை குறித்தோ , யதியின் கட்டூரைகளை குறித்தோ இணைப்புகளை அனுப்புவார். அத்தருணங்களில் கிடைக்கப்பெற்ற அனுபவத்தின் சாரம்சமாக உங்களின் எறும்பு புற்று கதை உணரவைத்தது.\nநாரயண குரு, நடராஜகுரு, நித்திய சைத்தன்ய யதி என்ற குருபரம்பரையில் இருந்து கடத்தப்பட்ட ஆத்ம அறிவில் எங்களுக்கு கிடைத்த உள்ளுணர்வின் வெளிப்பாடக உங்களின் எழுத்துக்களை கரம்பிடித்தும் காந்தியத்தின் பாதையில் இயன்ற அளவிற்கு வாழ்வை நகர்த்திக்கொண்டும் இணையும் நண்பர்களை சேர்த்துக்கொண்டும் பயணப்படுகிறோம்.\nஏதோ ஒரு வகையில் இத்தருணத்தில் உங்களுடன் எங்களை இணையவைத்த காற்றில் கரைந்த அலெக்ஸ் அண்ணாவின் ஆன்மாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்றும் நன்றிகடன்பட்டிருக்கிறோம்.\nஇரண்டுநாட்கள் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் மனைவியிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்போது மகள் புவியாழ் புன்னகைத்தப்படியே இருந்தாள். அவளுக்கு என்ன புரிந்திருக்கும் என்று தெரியவில்லை ஆனால் காந்தி, வினோபா, நாராயண குரு, யதி என்ற பெயர்களின் தாக்கங்கள் கட்டாயம் பதிந்திருக்கும் என்று நம்பிக்கையோடு நூற்பின் தொழிற்கூடத்திற்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.\nதடம்பதிந்த பாதை எளியது, ஆனால் சலிப்பூட்டுவது. எளியமனிதர்களுக்கே அது உகந்தது. தனிப்பாதையால் மட்டுமே ஊக்கம் கொண்டவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவியலும். எமர்சனின் வரி. இம்முறை உங்களையெல்லாம் பார்க்கையில் மிகுந்த உற்சாகம் அடைந்தேன். நீங்கள் உங்கள் வழியில் நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் சென்றுகொண்டிருக்கிறீர்கள்.\nவரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விழா நிகழ்கிறது. நீங்களும் ஸ்டாலினும் கலந்துகொண்டு ஒரு ஸ்டால் போட்டாலென்ன அணுக்கமான, நிகரான உளநிலைகொண்ட ஏராளமான நண்பர்களைச் சந்திப்பீர்கள்\nஉன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம்\nசத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)\nகுக்கூ .இயல்வாகை – கடிதம்\n[…] கைநெசவும் தனிவழியும் […]\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 16\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilaruvi.news/can-not-overthrow-the-unp/", "date_download": "2019-06-26T14:24:29Z", "digest": "sha1:DCFQV2BTIF5X3W3Z72Z3MVTDJLG3VWYX", "length": 15499, "nlines": 67, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ஐ.தே.க.வை கவிழ்க்க முடியாது!", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஐ.தே.க.வை கவிழ்க்க முடியாது\nஅருள் 24th May 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஐ.தே.க.வை கவிழ்க்க முடியாது\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்ற வண்ணமே உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளதெரிவித்தார்.\nபலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் அதுகோரள மேலும் கூறியதாவது,\nஅரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் தகுந்த பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்காமையால் மக்களுக்கு தெரியப்படுத்த அந்த திட்டங்களின் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஆனால் வரலாற்றில் எந்த அரசாங்கமும் தொகுதியோன்றுக்கு 770 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்க முடியாது. 20 வருடங்களில் செய்யாத வேலைத்திட்டங்களை குறுகிய மூன்றரை வருடங்களில் நாம் செய்து முடித்துள்ளோம்.\nஎங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக எவரும் கவனம் கொள்ளவில்லை. ஆட்சியைப் பொறுப்பேற்றதில் இருந்து இயற்கை அனர்த்தம், அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சிகள், குண்டுத்தாக்குதல் என அனைத்து சவால்களையும் எதிர்கொண்டோம்.\nஇவற்றை காரணங்காட்டி எங்களால் எதையும் செய்யாமல் இருந்திருக்க முடியும். ஆனால் அபிவிருத்தி பணிகளை நாங்கள் ஒருபோதும் இடைநிறுத்த போவதில்லை.\nமகிந்த ராஜபக்ஷ காலத்தில் தற்போதுள்ள எந்த சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. கடந்த அரசாங்கம் அபிவிருத்தியின் பேரைக்கொண்டு மக்களின் பணத்தை சூறையாடினார்களோ என்று சந்தேகம் ஏற்படுகின்றது. ஆனால் நாங்கள் மக்களின் பணத்தை சூறையாடி பிரச்சினையை ஏற்படுத்த போவதில்லை.\n1977 தொடக்கம் 1994 ஆண்டு வரையில் செய்த வேலைத்திட்டங்களே 2015 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இன்று அனைவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் குறைக்கூறுகின்றனர்.\nஆனால் பிரதமரின் அலோசனைகளின் காரணமாகவே இந்த அபிவிருத்தி பணிகளுக்கான நிதி முறையாக கிடைக்கப்பெறுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரை இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. அதனை கடந்த வருடம் மூண்ட அரசியல் நெருக்கடியின்போது நிரூபித்து காட்டியிருந்தோம்.\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இடம்பெற்ற வண்ணமே உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளதெரிவித்தார்.\nபலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் அதுகோரள மேலும் கூறியதாவது,\nஅரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் தகுந்த பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்காமையால் மக்களுக்கு தெரியப்படுத்த அந்த திட்டங்களின் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.\nஆனால் வரலாற்றில் எந்த அரசாங்கமும் தொகுதியோன்றுக்கு 770 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்க முடியாது. 20 வருடங்களில் செய்யாத வேலைத்திட்டங்களை குறுகிய மூன்றரை வருடங்களில் நாம் செய்து முடித்துள்ளோம்.\nஎங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக எவரும் கவனம் கொள்ளவில்லை. ஆட்சியைப் பொறுப்பேற்றதில் இருந்து இயற்கை அனர்த்தம், அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சிகள், குண்டுத்தாக்குதல் என அனைத்து சவால்களையும் எதிர்கொண்டோம்.\nஇவற்றை காரணங்காட்டி எங்களால் எதையும் செய்யாமல் இருந்திருக்க முடியும். ஆனால் அபிவிருத்தி பணிகளை நாங்கள் ஒருபோதும் இடைநிறுத்த போவதில்லை.\nமகிந்த ராஜபக்ஷ காலத்தில் தற்போதுள்ள எந்த சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. கடந்த அரசாங்கம் அபிவிருத்தியின் பேரைக்கொண்டு மக்களின் பணத்தை சூறையாடினார்களோ என்று சந்தேகம் ஏற்படுகின்றது. ஆனால் நாங்கள் மக்களின் பணத்தை சூறையாடி பிரச்சினையை ஏற்படுத்த போவதில்லை.\n1977 தொடக்கம் 1994 ஆண்டு வரையில் செய்த வேலைத்திட்டங்களே 2015 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இன்று அனைவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் குறைக்கூறுகின்றனர்.\nஆனால் பிரதமரின் அலோசனைகளின் காரணமாகவே இந்த அபிவிருத்தி பணிகளுக்கான நிதி முறையாக கிடைக்கப்பெறுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரை இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. அதனை கடந்த வருடம் மூண்ட அரசியல் நெருக்கடியின்போது நிரூபித்து காட்டியிருந்தோம்.\nசமுர்த்தி கொடுப்பனவு ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. கடந்த அரசாங்கத்தால் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாவடிகள் தொடர்பான விசாரணைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nவெள்ளை வேன் கடத்தல் கலாச்சாரத்தை கொண்ட ஆட்சியில் மகிந்த சர்வாதிகார பிரிவினரின் செயற்பாடுகளின் காரணமாகவே சுதந்திரகட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அந்த கட்சியை விட்டு வெளியேறினார். ஆனால் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க போவதில்லை.\nPrevious விடுதலைப் புலிகளை புகழும் ஹக்கீம்\nNext வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம்\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/sports/107414-sourav-ganguly-the-bengal-tiger-retired-from-cricket-on-this-day.html", "date_download": "2019-06-26T14:22:39Z", "digest": "sha1:IVNZL6O5ZW3OO7IAQNISZPAR3TUIOFLY", "length": 35335, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "கேப்டன், லீடர், லெஜெண்ட்... தாதா கங்குலி! கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன தினம் #OnThisDay | Sourav Ganguly - the bengal tiger retired from cricket on this day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:03 (10/11/2017)\nகேப்டன், லீடர், லெஜெண்ட்... தாதா கங்குலி கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன தினம் #OnThisDay\nஅந்த சகாப்தம் முடிவுக்கு வந்து 10 வருடம் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் இந்தியாவின் கிழக்குப் பகுதி இவரைத்தான் தன் அடையாளமாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. வங்கத்தின் கிரிக்கெட் இன்னும் இவரை மையமாகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது. பி.சி.சி.ஐ தலைவர் முதல் சி.எஸ்.கே டீம் வரை அனைவரின் கண்ணிலும் விரலைவிட்டு ஆட்டிய லோதா கமிட்டிகூட இவர் பெயரைத்தான் பரிந்துரை செய்துகொண்டே இருக்கிறது. கோலியின் பேட்டிங்கில் சச்சினைக் கண்டு சிலாகித்தவர்கள், அவரது கேப்டன்சியில் இவரைக் கண்டு கர்வம் கொள்கின்றனர். அன்று இவரது ரசிகராக இருந்தவர்கள், இன்றும் என்றும் அவரது வெறியர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்று இன்றோடு 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால், ஒருநாள் கூட இந்திய கிரிக்கெட் அவரிடமிருந்து விலகவில்லை. காரணம், இந்திய கிரிக்கெட் பாதாளம் நோக்கிப் பயணித்துபோது, அதன் எதிர்காலத்தை மீட்டெடுத்தவர் அவர். இனியும்கூட அவரால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும். அவர்....சௌரவ் கங்குலி - கேப்டன்...லீடர்...லெஜண்ட்\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த, இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது, ‘ஸ்லெட்ஜிங்’ அடுத்த கட்டத்தை அடைந்திருந்தது. வார்த்தைச்சண்டைக்குப் பெயர்போன ஆஸி வீரர்களையே தங்கள் ஆக்ரோஷ குணத்தால் ஷாக் கொடுத்தது கோலி அண்ட் கோ. இந்த இளம் அணியின் அந்த ஆக்ரோஷ அப்ரோச்சை பலரும் வரவேற்கின்றனர். ஆனால், இந்த விதையை விதைத்தவர் 'தாதா'. \"இந்திய கிரிக்கெட்டின் மீதான பார்வையை மாற்றிய முதல் ஆள் கங்குலிதான். இன்று இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை\" என்று ஒருமுறை கூறினார் ஆஸி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ். \"கங்குலிதான் என் ஃபேவரைட் கேப்டன். ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியை கங்குலி வழிநடத்திய விதம் பிரம்மிப்பாக இருந்தது\" என்றார் ரிக்கி பாண்ட்டிங். இப்படி உலகம் போற்றிய கேப்டன்களே வியக்கும் வகையில் அணியை வழிநடத்தியவர் அவர்.\nவெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களில் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடந்த அணியை 'ஆங்ரி' மோடுக்கு மாற்றியவர். ஸ்டீவ் வாஹை டாஸுக்குக் காத்திருக்க வைத்ததிலிருந்து, லார்ட்ஸில் சட்டையைக் கழட்டிச் சுற்றியதுவரை, அவர் செய்ததெல்லாம் மாஸ். ஆனால், அந்தச் செயல்களில் தனி மனிதக் கோபத்தை வெளிக்காட்டியதில்லை. இந்தியா சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒரு மாபெரும் சக்தியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அறைகூவல் அது 'நீ என்னவேண்டுமானாலும் பேசு. நாங்கள் பேட்டால் பேசுவோம்' என்ற இந்திய வீரர்களின் டெம்ப்ளேட் மைண்ட்செட்டை உடைத்தெறிந்தார். 'அடிச்சா திருப்பி அடிக்கணும்’ என்று தன் அணியைச் சீண்டுபவர்களுக்கு களத்திலேயே பதில் தந்தார், வார்த்தையிலும், பேட்டிலும்...\n2002 சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில், இலங்கை வீரர் அர்னால்டுடன் பிரச்னை ஏற்பட, கங்குலி மைதானத்தில் சீறியதெல்லாம் வேற லெவல். இந்திய வீரர்களிலிருந்து, ஆனானப்பட்ட அம்பயர் டேவிட் ஷெப்பர்டு வரை எல்லோரும் அந்த வங்கப்புலியின் ஆக்ரோஷத்தை அடக்க முடியாமல் தவித்தனர். தன் போராட்ட குணத்தை வீரர்களுக்கும் விதைத்தார். அவர்களுக்குள்ளிருந்த போராளிகளை எழுப்பினார். ஹர்பஜன் சைமண்ட்ஸிடம் சீறியது, கம்பீர், வாட்சனுடன் வாக்குவாதம் செய்தது போன்ற விஷயங்கள்கூட இந்த மனிதன் இல்லாவிடில் நடந்திருக்க வாய்ப்பில்லை. அவற்றின் விளைவு, இன்று கோலி கொதித்தெழ, ஆஸ்திரேலியா அமைதியாகிறது.\nஆனால், ஒரு கேப்டனாக இவர் ஆக்ரோஷம் மட்டும் காட்டிக்கொண்டிருக்கவில்லை. தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகளுக்குத் தலையாட்டிவிடவில்லை. அப்படித் தலையாட்டியிருந்தால், சேவாக், ஹர்பஜன், ஜாஹிர், யுவராஜ் எல்லோரும் ரஞ்சிக்கோப்பை வீரர்களாகவே ஓய்வு பெற்றிருப்பர். உதாரணமாக, 2001-ம் ஆண்டு. ஹர்பஜனுக்கு வாய்ப்பு வழங்காமல், சரந்தீப் சிங் போன்ற பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. \"ஹர்பஜன்தான் வேண்டும்\" என்றார் கங்குலி. மறுக்கிறது தேர்வுக்குழு. பிடிவாதம் பிடிக்கிறார் கேப்டன். வேறு வழியின்றி அந்தத் தொடருக்கு ஹர்பஜனின் பெயர் டிக் அடிக்கப்படுகிறது. 3 போட்டிகளில், 32 விக்கெட்டுகள், ஹாட்ரிக், சரித்திர வெற்றிக்கு அழைத்துச் செல்கிறார் பாஜி. ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கங்குலி, அதுவும் தேர்வாளர்கள் விரும்பாத ஹர்பஜனை வைத்து. இதுதான் கங்குலி...தாதா\n“நான் தடுமாறியபோது கங்குலி எனக்குப் பக்கபலமாக இருந்தார். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என் நன்றியை வார்த்தைகளால் தெரிவித்துவிட முடியாது” என்று உருகினார் வீரேந்திர சேவாக். இன்று அவரும் ரிட்டையர்டு பிளேயர். ஆனால், இன்றுவரை கங்குலி தனக்கு உதவியதை நினைத்துக்கொண்டிருக்கிறார். மிடில் ஆர்டரில் தவித்தவருக்கு, தன் ஓப்பனிங் ஸ்லாட்டை விட்டுக்கொடுத்து கங்குலி மட்டும் சேவாக்கை ஓப்பனர் ஆக்காமலிருந்தால், 'சுல்தான் ஆஃப் முல்தானா'க ஓய்வு பெற்றவர் டெல்லி ரஞ்சி வீரராக என்றோ காணாமல் போயிருப்பார். யுவி, ஜாஹிர் என எல்லோரும் கங்குலி தேர்வுக்குழுவிடம் காட்டிய பிடிவாதத்தினால் கிடைத்த ஜாம்பவான்கள். \"கங்குலி போன்ற கேப்டனுக்காக நான் உயிரைக்கூட விடுவேன்\" என்று எமோஷனல் ஆனவர் யுவி\nஇன்று பலரும் தோனிக்கு எதிராக குரல் கொடுக்க, அவருக்குப் பக்கபலமாக கேப்டன் விராட் நிற்கிறார். இப்படி வீரர்கள் தேர்விலும், அக்ரெஸிவ் கேப்டன்ஷியிலும் விராட்டைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சம் சமாதானம் ஆகிக்கொண்டிருந்தாலும், தாதா வெறியர்கள் கங்குலி எனும் உலகத்தர பேட்ஸ்மேனை மிஸ் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். \"கங்குலியால் பௌண்டரி எல்லையை மட்டுமல்ல, மைதானத்தையே க்ளியர் செய்யும் சிக்ஸர்கள் அடிக்க முடியும்\" என்று கூறினார் வி.வி.எஸ் லட்சுமண். கங்குலியின் ஆஃப் சைட் ஷாட்கள் பற்றி டிராவிட் கூறிய அந்த வாசகம் அல்ட்டிமேட் \"on the offside, first there is God and there is Ganguly\". அப்படிப்பட்ட அந்த பேட்ஸ்மேனை இன்று யாருடைய ரூபத்திலும் காண்பது கடினம்.\nஇரண்டு ஸ்டெப் இறங்கிவந்து லாங் ஆஃப் பவுண்டரியை அவர் க்ளியர் செய்யும் அந்த ஷாட்...மூன்று ஸ்லிப் ஃபீல்டர்கள், கல்லி, பேக்வேர்ட் பாய்ன்ட், பாய்ன்ட் என ஃபீல்டர்கள் ஆஃப் சைடில் சூழ்ந்திருக்க, எட்ஜில் விக்கெட் வீழ்த்துவதற்காகவே வீசப்படும் அந்த அவுட் ஸ்விங் பாலை, ஃபீல்டர்கள் சுதாரிப்பதற்குள் அவர்களைக் கடந்து பௌண்டரி எல்லைக்கு 'லான்ச்' செய்யும் அந்த 'கட் ஷாட்'... லெக் ஸ்பின் பௌலராக இருந்தால், அது உலகையே கலங்கடிக்கும் வார்னேவாக இருந்தாலும் கூட, ஃப்ரன்ட் ஃபுட் எடுத்துவைத்து மிட் விக்கெட் திசையில், மைதானத்தையே தாண்டுமளவு அடிக்கும் அந்த 'ஸ்லாக் ஸ்வீப்'... இன்று யாரிடம் பார்த்து ரசிக்க முடியும் இன்னும் சிக்ஸரின் மீட்டர்களை அளந்துகொண்டிருக்கிறார்கள். மைதானத்துக்கு வெளியே அவர் அடித்த சிக்ஸர்களையெல்லாம் எதைக்கொண்டு அளக்க\nதாதாவின் கேப்டன்ஷிப் பெருமை பேசி, கங்குலி எனும் பேட்ஸ்மேனைக் கொண்டாட மறந்துவிட்டோம். அதிவேகமாக 9,000 ரன்களை கோலி கடந்தபோது, அவர் உடைத்தது 8 மாதங்களாக நின்றிருந்த ஏ.பி. டி வில்லியர்ஸின் சாதனையை. பிப்ரவரி மாதம் அந்தச் சாதனையை டிவில்லியர்ஸ் படைத்தபோது, அவர் உடைத்தது 13 ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்த கங்குலி எனும் தலைசிறந்த இடதுகை பேட்ஸ்மேனின் சாதனையை. கேப்டனாக அல்லாமல், பேட்ஸ்மேனாகவும் போட்டிகளை வென்றுதந்தவர். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன், 100 விக்கெட், 100 கேட்ச் என்ற மைல்கல்லை எட்டிய நான்கு வீரர்களுள் ஒருவர். ஒருநாள் போட்டி வீரர் என்று முத்திரை குத்தப்பட, பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் அடித்த 144 ரன்கள் போதும் அவர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை உணர்த்த...\n“எதிரணியினரைத் துவம்சம் செய்ய, அந்த வங்கச் சிங்கத்தின் வால் எப்போதும் நிமிர்ந்தே இருந்தது” என்றார் நவ்ஜோத் சிங் சித்து. இவரோடு மைதானத்தின் நடுவில் நின்று டாஸ் போட்ட, எந்த எதிரணி கேப்டனும் ஒத்துக்கொள்வார்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு அடையாளம் தந்தவர் கங்குலிதான் என்று. \"கங்குலியின் தலைமையில் இந்திய அணி ஆடுகிறதென்றால், அது யாருக்கும் மிகப்பெரிய சவால். அவரை நீங்கள் நேசிக்கவோ, வெறுக்கவோ வேண்டாம். ஆனால் அவருக்கு மரியாதை செலுத்தியே ஆகவேண்டும்\" என்றார் ஸ்டீவ் வாஹ். இதுதான் தன் 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கங்குலி சம்பாதித்தது.\nநவம்பர் 10, 2008 - அந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரோடு முடிந்தது அந்தத் தன்னிகரில்லா வீரனின் கிரிக்கெட் பயணம். இந்தியா - இன்று மாபெரும் கிரிக்கெட் சூப்பர்பவர். ஆனால் அதற்கிடப்பட்ட அந்த அஸ்திவாரக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் - சௌரவ் சாந்திதாஸ் கங்குலி. இனியும் இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை இந்தப் பெயர் நிர்ணயிக்கும்\n``கம்யூனிஸ்ட்கள் கரம் கோத்தால் மட்டும் புரட்சி வந்துவிடாது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவ\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3746:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2019-06-26T14:57:26Z", "digest": "sha1:N5X34G6V3CGMIIQSSVHNN5KE4PI4BA2Y", "length": 13904, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "சிந்தையை மயக்கும் ஊடகங்கள்", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது சிந்தையை மயக்கும் ஊடகங்கள்\nசிந்தையை மயக்கும் ஊடகங்கள் .\nபூ உலகின் பெரும்பான்மை மக்களை தன்னிடம் மயக்கி வைத்துள்ள இந்த ஊடகத்துறை தான். இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்லும் பணியை பெற்ற தாய் தந்தையர்களை விடவும் ஆசிரியர்களை விடவும் அதிகமான அக்கறையை எடுத்துக் கொண்டுள்ளது இன்றைய ஊடக துறை இன்றைய இளைஞர்களின் சரியான அல்லது தவறான செயல்பாடுகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஊடகத்துரையே பெரும் பொருப்பேர்கின்றது. காரணம் இன்றைய இளைய தலைமுறைகள் தன்னுடைய அறிவு தேடலுக்கு பொழுது போக்கிற்கு என்று ஊடகத்துறையில் சரணாகதி அடைந்து கிடக்கின்றது.\nஇப்படி இன்றைய சமூகம் தன்னிடம் சரணாகதி அடைந்துள்ளதை இந்த ஊடகத்துறை சரியான முறையிலே உணர்ந்து தனக்கான சமூகப் பொறுப்பை சரியான முறையில் செய்கின்றதா என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டிய நேரம் இது. காட்சி ஊடகம் இதன் பங்கு மிக முக்கியம். ஆபாசங்களும் வன்முறைகளும் இந்த காட்சி ஊடகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.\nஇதில் சிக்கிக் கிடக்கும் இந்த மனித சமூகத்தை மீட்டெடுப்பது எப்படி இந்த மயக்கத்தில் இருந்து இவர்களை விழித்தெழ செய்வது எப்படி இந்த மயக்கத்தில் இருந்து இவர்களை விழித்தெழ செய்வது எப்படி அப்படி வெளிவந்தவர்களை ஆரோக்கியமான சமூகச் சூழலுக்காக அமைதியாய் ஒரு சமுதாய புரட்சிக் குறித்து சிந்திக்கக் கூடியவர்களாக மாற்றியமைப்பது எப்படி... எப்படி... எப்படி...\nமுள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்று சொல்வார்களே அதை போல காட்சி ஊடகம் விதைத்த இந்த நச்சு விதையை இந்த ஊடகத்துரையே வேரறுக்க வேண்டும்.\nஅறிவுபூர்வமான விவாதங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகள் எழிச்சி மிக்க சொற்பொழிவுகள் ஆகியவை அதிகம் அதிகம் இடம் பெற வேண்டும். இந்த மனித சமூகத்தில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமூகநீதியையும் சரியாக விதைக்கின்ற சமத்துவ போராளிகளின் பங்களிப்பு இந்த ஊடகத்துறைக்கு மிக மிக அவசியம், இந்த ஊடகத்துறை உடனடியாக ஒரு சபதத்தை மேற்கொள்ளவேண்டும். இனிமேல் இந்த மனித சமூகத்தின் சிந்தையை சீர்கெடுக்க கூடிய வன்முறை ஆபாசங்கள் போன்றவற்றை எந்த ஒரு காரணத்துக்காகவும் இடம் பெற செய்ய மாட்டோம், நாளைய சமூதாயத்தின் எளிச்சியும் வளர்ச்சியும்தான் எங்களுக்கு முக்கியம் என்று சபதம் மேற்கொள்ள வேண்டும் செய்யுமா இந்த ஊடகத்துறை\nஇது மட்டுமா இன்றைய சூழலில் அதிகரித்து வரும் கள்ளக் காதல், கற்பழிப்பு, புது யுத்திகளை பயன் படுத்தி நடத்தப் படும் திருட்டு, இளம்பெண்கள் ரவுடிகளை கதாநாயகனாக நினைத்து அவர்களை அவர்கள் பின்னால் போவது கல்லூரிபருவத்தில் கல்வி கற்பதையும் நாளைய இலட்சியங்களையும் மறந்து காம கலியாட்டங்களின் ஈடுபடுவது போன்ற இந்த செயல்கள் அனைத்தையும் இந்த ஊடகங்களே தெள்ள தெளிவாக கற்று கொடுக்கின்றது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.\nஇதற்கு என்னதான் தீர்வு சமூகத்தில் நடைபெறும் இத்தனை தவறுகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இந்த ஊடகத்துறை செயல்படுகின்றது என்று கூறிவிட்டு அனைத்தையும் ஊடகத்துறையின் மீது சுமத்தி விட்டு ஒதின்கிக் கொள்வதும் நாகரீகம் அல்ல. வீட்டை விட்டு வெளியே செல்லும் நமது பிள்ளைகள் தங்களது பொழுது போக்கிற்காக அறிவு தேடலுக்காக தங்களது நேரத்தை எங்கே செலவு செய்கின்றார்கள். எந்த மாதிரியான ஊடகத்தின் துணையை தேடுகின்றார்கள் யார் யாரை நண்பர்களாக சேர்த்துக் கொண்டுள்ளார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.\nஇவர்களின் தேர்வு சரியில்லாத போது அதை அவர்களுக்கு பக்குவமாக எடுத்து சொல்லவேண்டும்,\nஎங்கே சரியான வழிகாட்டுதல் இல்லையோ அங்கு தவறுகள் நடைபெறுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். இதை உணர்ந்த சமூக நீதியை விரும்பும் சகோதரர்களே உங்கள் கண் முன்னே நிலை தடுமாறும் ஒரு இளைஞர் இருந்தால் இவர் என்ன நமது சகோதரரா அல்லது சகோதரியா அல்லது நமக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத இவருக்கு நாம் ஏன் வழிகாட்டவேண்டும் என்று எண்ணாதீர்கள். நீங்கள் கருதும் இந்த சொந்தங்களில் எதாவது ஒன்று இவர்களோடு பழகும் சந்தர்பம் ஏற்பட்டால் இந்த சீர்கேடு இவர்களுக்கும் வரக்கூடும்.\nஇவர்கள் வழியாக வீட்டிற்கு வீட்டின் வழியாக தெருவிற்கு தெருவின் வழியாக ஊருக்கு இந்த சமூகத்தை சீர் கெடுக்க ஒரு சின்ன தீபொறி போதும் எனவே உங்கள் கண் முன்னாள் நடக்கும் தவறுகள் அது சிறியதோ பெரியதோ தட்டி கேளுங்கள் தடுத்து நிறுத்துங்கள் இல்லையேல் நாளய நமது தலைமுறைகள் சீர்கேட்டில் சிக்கிதவிப்பது உறுதி........ சிந்திப்பீர்\nஇறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்\n''ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதரணமாக (அதன் பலனை பற்றி பெரிதாக யோசிக்காமல் ) பேசிகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்திவிடுகின்றான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதரணமாக (அதன் பலனை பற்றி யோசிக்காமல்) பேசுகிறார் அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகின்றார்.'' (நூல்: புகாரி - 6478)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4839:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88&catid=97:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=920", "date_download": "2019-06-26T14:58:27Z", "digest": "sha1:22LWOVWD7O7GYWUEJCA2O3GA5AUUCLIR", "length": 21705, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை!", "raw_content": "\nHome குடும்பம் ஆண்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை\nநல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை\nநல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை\n[ வயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும் சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோன்களில் சுரப்பு குறைந்து கொண்டே வரும். அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.\nவயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெருக்கம் போன்றவற்றாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.\nசிலர் உபயோகிக்கும் இரத்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.\nஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள், வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகியோருக்கு பெரிதும் இந்த ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை.]\nபாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம் ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலுப்பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்திருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக்கட்டத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்து பின்பு தானும் உச்சத்தை அடைந்து பின் விந்தை வெளியிட்டு வெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையும் செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணைப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோ தேவையில்லையோ சம்மதித்தால் மட்டுமே போதுமானது நடந்தேறிவிடும். நடத்தும் கடமை ஆணுடையது.\nவயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏதோதோ சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டு காரணங்களை கண்டுபிடித்துக் கொண்டு காலத்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற்கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்கரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்களும் பலர் இன்னும் இளமையுடனும் உற்சாகத்துடன் தங்கள் துணைவியரின் அன்போடு வாழத்தான் செய்கிறார்கள். இதற்கு வயது ஒரு பொருட்டேயல்ல. வயதானவர்களும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும் வலுவிழந்து நிற்கின்றனர். இதற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.\nபெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவது விறைப்பின்மையால் தான். இதனைத் தமிழில் நரம்புத் தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பலவாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்டனர். இதனை சரியான வகையில் புரிந்து கொள்வது அவசியம்.\nஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு காரணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு மற்றொன்று மனம் ரீதியான கோளாறு.\nஉடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய நுண்ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படாது போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக கைப்பழக்கம் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் அடி அல்லது கீழே விழுந்து காயப்படுவது போன்றவையாகும்.\nமன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியாது நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல் போவது அதே ஆண்களால் தனியாக இருக்கும் பொழுதும் இரவில் தூங்கும் பொழுதும் விறைப்பு அடைய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ்நிலையால் ஏற்படும் ஆண்மைக்குறைவு என்று கூறலாம்.\nவயதிற்கும் ஆண்மைக் குறைவிற்கும் சம்பந்தமுண்டா\nவயதிற்கும் ஆண்மைக்குறைவிற்கும் சம்பந்தமுண்டு என்றும் வயது ஏற ஏற ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோன்களில் சுரப்பு குறைந்து கொண்டே வரும். அதனால் சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படலாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெருக்கம் போன்றவற்றாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.\nசிலர் உபயோகிக்கும் இரத்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள், மன அழுத்த மருந்துகள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.\nஆரோக்கியமாக இருக்கும் ஆண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடைய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள், வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகியோருக்கு பெரிதும் இந்த ஆண்மைக்குறைவு ஏற்படுவதில்லை.\nஆங்கில மருத்துவத்தில் இதற்கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாளடைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம். அதே சமயம் தொடர்ந்து உபயோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆங்கில மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.\nஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மருத்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலிகைகளை அனுபவ ரீதியாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவாகவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற்றம் ஏற்படுகின்றது. பெண்களுக்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையும் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒரு விதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படுகின்றன.\nஎனவே நாற்பது வயதைக் கடந்த இருபாலரும் உற்சாகமளிக்கும் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவது நன்மையே தரும். இத்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கேப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக் கூடிய மூலிகைகள், அமுக்கிரா, பூனைக்காளி, சாலாமிசிறி, முருங்கை வித்து, முருங்கை பிசின், நிலைப்பனைக்கிழங்கு, குறுந்தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்குமப்பூ போன்றவை ஆகும். இவற்றை தனி மூலிகைகளாகவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். தேவைக்கேற்ப என ஒரிரு நாட்கள் மட்டும் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியையும் தேஜனையும் வழங்கிடும்.\nஅஸ்வகந்தா தனி மூலிகையாகவும் கூட்டு மூலிகை கேப்சூல் நியோமஸ்கின் எனவும் கிடைக்கின்றது. இவற்றை வாங்கி பயனடைவதற்கு கடைசிப்பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவத்தை பயன்படுத்திடலாம்.\nஅஸ்வகந்தா – அமுக்கிரா – பதனிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தனி மூலிகைப் பொடியாகக் கிடைக்கின்றது. இது பக்குவப்படுத்தப்பட்ட மூலிகைப் பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரிக்கப்படாமல் முறையாக தயாரிக்கப்பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடையவர்கள் தண்ணீரில் கலந்து பருகலாம்.\nநியோ மஸ்கின் கேப்சூல் கூட்டு மூலிகை கேப்சூல் ஆகும். இது சுமார் 32 ஆண்டுகளாக பல லட்சம் ஆண்கள் பயன்படுத்தி வந்த ஒரு உத்திரவாதம் அளிக்கும் மூலிகை கேப்சூல் ஆகும். நியோ மஸ்கினை தினசரி காலை – இரவு 1 – 2 கேப்சூல் வீதம் பாலில் உட்கொண்டு வர நல்ல பலனைத் தரும். ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கலாம். தினசரி பழக்கமாக ஆக்கிக் கொள்ள விரும்புபவர்கள் தினசரி காலை உணவிற்குப் பின்பு 1 – 2 கேப்சூல் உட்கொள்ளலாம். பக்க விளைவு இல்லை பாதுகாப்பானது. மூலிகை மட்டுமே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.behindframes.com/will-a-coffee-soundararaja-become-an-action-hero/", "date_download": "2019-06-26T13:47:52Z", "digest": "sha1:MNWDES4KI4EAQFOSRBPBQVKDQ4SEYWJO", "length": 8251, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "ஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..? - Behind Frames", "raw_content": "\n9:37 PM லிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n9:25 PM 50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\n9:13 PM லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\n8:56 PM பார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n8:47 PM ஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\nசுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெரி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சில்லுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சௌந்தரராஜா முதன் முறையாகமுழுநீள ஆக்சனில் களம் இறங்கியிருக்குறார்.\nகாபி என்னும் திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் சௌந்தரராஜா, சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார்.இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாரதி மற்றும் சதீஷ் இத்திரைப்படத்தை அதிகபொருள் செலவில் தயாரிக்கின்றனர்.\nமேலும் நடிகர் சௌந்தரராஜா AGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63யிலும், இளைய தளபதி விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது சிறப்பு செய்தி\nMay 24, 2019 12:02 PM Tags: அட்லீ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு, ஓம் சினி வெஞ்சர்ஸ், கடைக்குட்டி சிங்கம், சதீஷ், சாய் கிருஷ்ணா, சாரதி, சில்லுக்குவார்பட்டி சிங்கம், சுந்தரபாண்டியன், சௌந்தரராஜா, ஜிகர்தண்டா, தர்மதுரை, தளபதி 63, தெரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம்\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\nஇயக்குநர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ‘கற்றுக் கொடுக்கிறது மரம் ‘ என்ற நூல்வெளியீடு மதுரையில் சில தினங்களுக்கு...\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nஒரு சில படங்கள் மொத்த குழுவுக்கும் தற்செயலாக ‘முதன்முறையாக’ நிகழ்கின்றன. இறுதியில் அது மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதர்வா முரளி நடித்த...\nலக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nஇயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் கிட்டத்தட்ட எல்லா நல்ல காரணங்களுக்காகவும், அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது....\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\nதடயமே இல்லாமல் தப்பு செய்யும் ஜீவி\n‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது\n17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன்-சிம்ரன் ஜோடி\nலிங்குசாமியின் கவிதைகள் ‘கற்றுக் கொடுக்கிறது மரம்’ நூலாக வெளியீடு\n50 நாட்களை கடந்த அதர்வாவின் ‘100’\nலக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு\nபார்த்திபனின்’ ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\nஒ.எம்.ஆரில் சினேகா-பிரசன்னா திறந்து வைத்த PVR சினிமாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://publication.dailythanthi.com/idhayam-kavarntha-ilakiya-katchigal-2", "date_download": "2019-06-26T14:27:15Z", "digest": "sha1:C2ADZC6CQUP3NMRKAVBOAU6HBIYF62JK", "length": 6927, "nlines": 64, "source_domain": "publication.dailythanthi.com", "title": "Thanthi Publications. Product Reviews. இதயம் கவர்ந்த இலக்கியக் காட்சிகள். idhayam Kavarntha Ilakiya Katchigal", "raw_content": "\nஇதயம் கவர்ந்த இலக்கியக் காட்சிகள்\nதமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச் சிறப்புடன் திகழ்வது சங்க இலக்கியம். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் காதலையும், வீரத்தையும் பறைசாட்டும் காலப் பெட்டகம் ஆகும்.\nஇலக்கியங்கள் கற்பனையை மட்டும் சொல்லவில்லை. மனிதாபிமானங்களையும் வளர்த்து, மனித மனங்களை மென்மைப்படுத்தி மேன்மைப்படுத்துகின்றது.\nஇலக்கியம்தான் ஒரு மனிதனின் ஆளுமையை வளர்த்து, வாழும் வாழ்க்கையைத் கற்றுத் தருகிறது. இலக்கியம் இன்பம் தரும் ஓர் இனிய கலை.\nஅத்தகைய இன்பம், சங்க இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரை புதையலாய்ப் புதைந்து கிடக்கின்றது.\nஇலக்கியத்தில் இடம்பெற்ற இதயம் கவர்ந்த காட்சிகளை இந்த நூலில் பேராசிரியர் க. இராமச்சந்திரன் அழகுற படம் பிடித்துக் காட்டியுள்ளார்.\nதினத்தந்தி 'முத்துச்சரம்' பகுதியில் வெளிவந்தபோது, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், இப்போது நூலாக வெளிவந்துள்ளது. நூல் முழுவதும் காணப்படும் இதயத்தை ஈரமாக்கும் இலக்கிய காட்சிகள், சிந்தனைக்கு விருந்தளிக்கிறது.\nவகை: பழந்தமிழ் இலக்கியம் - தொல்லியல்\nபேராசிரியர் க.இராமச்சந்திரன் சங்க இலக்கியம் முதல் புதுக் கவிதை வரை பேசவும், எழுதவும் வல்லவர். 30 ஆண்டுகள் பேராசிரியர் பணி.\nபணியின்போதே கல்லூரி வகுப்பறையின் 4 சுவர்களுக்குள் முடங்கிப்போகாமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இலக்கியம் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அந்த எண்ணத்தின் வௌிப்பாடுதான் உங்கள் கைகளில் தவழும் இந்த இனிய புத்தகம்.\nதினத்தந்தி இதழில் இவர் எழுதிய “உனக்குள்ளே சக்தி இருக்கு” தன்னம் பிக்கை நூலை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.பெ.ஜெ.அப்துல்கலாம் படித்து பாராட்டியிருக்கிறார்.\nஉலகம் முழுக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்காக தமிழ்ப் பாடங்களை எழுதி வருகிறார். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று தமிழ்ப்பணியும், இலக்கியப்பணியும் ஆற்றி வருகின்றார். தமிழகத்தில், பல பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சி கல்லூரிகளிலும் இவரது புத்தகங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டும் பாடப்புத்தகங்களாக இடம்பெற்றுள்ளன.\nபாசாங்குகளற்ற இயல்பான எழுத்து நடை; கருத்தை வெளிப்படுத்தும் முறையில் தேர்ந்த கலை நேர்த்தி. இவை தான் பேராசிரியரின் முகவரி. இந்த முகவரிதான் இவரை “இளைஞர்களின் முகவரி” என்ற விருதினைப் பெற வைத்திருக்கிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tmpolitics.wordpress.com/category/tmmk-ramnad/", "date_download": "2019-06-26T14:36:05Z", "digest": "sha1:YL2E3ABZDSFZ5UGM6YHS5EHAZYIRMUW5", "length": 31341, "nlines": 763, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "TMMK Ramnad | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nமுகவை தமுமுக வின் கல்வி உதவி\nஇராமநாதபுரத்தில் தமுமுக வின் கல்வி உதவி\nஇராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்\n மனித உயிர் காக்க உதவிடுவீர்\n மஹர் கொடுத்து மணம் முடிப்போம்\nSachar Report ஐ அமல்படுத்த கோரி முகவையில் முஸ்லிம்கள் அணிவகுப்பு\nFiled under: இஸ்லாம், சச்சார் அறிக்கை, முகவை தமுமுக, முஸ்லிம், TMMK Ramnad — முஸ்லிம் @ 10:50 பிப\nசிறப்பாக அமைந்த தமுமுக தொண்டரணியினரின் இவ்வணிவகுப்பு புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.\nகடந்த மே 26, 2007 ஞாயிற்றுக்கிழமை முகவை தமுமுக சார்பில் நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமுல்படுத்தக் கோரி மாபெரும் வகையில் தமுமுக தொண்டரணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. முகவை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய சின்னக்கடை வீதியில் இருந்து துவங்கிய இந்த அணிவகுப்பை தமுமுக வின் மாநில பொதுச்செயலாளரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான ஜனாப். எஸ். ஹைதர் அலி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.\nஜனாப் எஸ் ஹைதர் அலி பேசுகையில் வலது ஓரம் சகோ. சலிமுல்லாஹ் கான் துன்டு போட்டு அமர்ந்திருப்பது ஜனாப் ஹசன் அலி எம்.எல்ஏ\nமுகவை தமுமுக தலைவர் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்கள் தலைமையில் சாரை சாரையாக அணிவகுத்துச் சென்ற முகவை தமுமுக வின் தொண்டரனியினரின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீதிகளெங்கும் ஆன்களும் பென்களுமாக மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று இவ்வணிவகுப்பை கண்டு மகிழ்ந்தனர்.\nஇவ்வணிவகுப்பானது மக்களுக்கு சச்சார் குழுவின் அறிக்கையைப் பற்றியும் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பிரான ஜனாப் ஹசன் அலி அவர்களும் தமுமுக வின் மாநிலச்செயலாளர்களான எம். தமீமுன் அன்சாரி, கோவை செய்யது, முகம்மது ரஃபீக், ஹாருன் ரஷீத் உட்பட பல மாநில நிர்வாகிகள் தமிழகமெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் பேசிய அனைவரும் வேதனைக்குறிய வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய முஸ்லிம்களின் சமுதாய அவலம் குறித்தும் அது குறித்து வெளியான நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமல்படுத்துவது குறித்தும் வலியுருத்தி பேசினார்கள்.\nதனது தலைமையின் கீழ் செம்மையாக வைத்திருக்கும் முகவை தமுமுக வின் தொண்டரணியினரை மாபெரும் அளவில் ஒருங்கிணைத்து சமுதாய நலனுக்காக போராடக்கூடிய வகையில் இந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதன் மூலம் தனது தனித்திறமையை மீண்டும் ஒருமுறை சகோதரர் சலிமுல்லாஹ் கான் நிறுபித்துள்ளார். சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் சமுதாய நன்மைக்காக இந்நிகழச்சி வெற்றிபெற அயராது களப்பணியாற்றிய முகவையின் அணைத்து சகோதரர்களையும், தமுமக வின் தொண்டரணியினரையும் வந்திருந்தவர்கள் பாராட்டினர்.\nஇங்கு மிக முக்கியமாக குறிப்படக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் தனது பல இயக்க அலுவல்கள் மற்றும் சொந்த வேலைகளுக்கிடையேயும் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்கள் பெயரையோ புகழையோ விரும்பாது இறைவனின் திருப்திக்காக வேண்டி முகவை மாவட்டமெங்கும் பல்வேறு சமூக நலப் பணிகளையும் அத்துடன் மிக சிறப்பான் வகையில் இஸ்லாமிய அழைப்புப் பணியினையும் தனது தலைமையில் ஒரு சிறந்த அழைப்பாளர் குழுவை வைத்து செய்து வருகின்றார். இவரது வளர்ச்சியை பொருக்காத இயக்கத்திற்குள்ளேயும் வெளியேயும் வெளிநாடு உள்நாடு வாழ் பலரின் பெரும் சதித்திட்டங்களுக்கு இடையேயும் தனது இந்தப் பணிகளை மிகச் சிறப்புற செய்து வருகின்றார். இவரது இந்தப் பணியால் முகவை மாவட்டம் மட்டுமல்லாது மானாமதுரை வரை பல கிராமங்களில் மக்கள் கிராமம் கிராமமாக இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்து வருகின்றார்கள்.\nஒரே ஒருவரை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்தாலே தமிழகமெங்கும் டிஜிட்டல் பேனர் வைத்தும், தங்கள் பத்திரிகைகளில் பல பக்கங்களுக்கு கட்டுரைகள் வெளியிட்டும், தாங்கள் நடத்தும் தாவா சென்டர்களுக்கும், அறிவகங்களுக்கும் வசூல் வேட்டையாடும் இந்த காலகட்டத்தில் எவ்வித ஆடம்பரமோ, பெருமையோ இன்றி கிராமம் கிராமமாக மக்களை இஸ்லாத்தின் பால் திருப்ப்க்கூடிய வகையில் அழைப்புப்பணியையும் ஒருங்கிணைத்து செய்து வரும் சகோதரர் சலிமுல்லாஹ் கான் அவர்களின் அழைப்புப் பணிகளை பற்றி மக்கள் அவசியம் அறிந்து கொள்ளவேண்டும் என்பதால் ஒரு தனி சிறப்புக் கட்டுரை நமது வலைப்பதிவில் விரைவில் வெளியிடப்படும்.\nசிறப்பாக அமைந்த தமுமுக தொண்டரணியினரின் இவ்வணிவகுப்பு புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.\nசெய்தி தொகுப்பு : முகவையில் இருந்து நமது செய்தியாளர்.\nஇஸ்லாம், முஸ்லிம், Islam, Muslim\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166953&cat=32", "date_download": "2019-06-26T15:13:32Z", "digest": "sha1:7I3X3UIVC45KBEVXKWKICVYC4SFSDSFN", "length": 41526, "nlines": 756, "source_domain": "www.dinamalar.com", "title": "விசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » விசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு மே 21,2019 00:00 IST\nபொது » விசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு மே 21,2019 00:00 IST\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ராஜா மற்றும் ரமேஷ். இவர்கள் திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக, வாடிக்கையாளர்கள் மக்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து விசிக மாநில நிர்வாகிகள் ராஜா, ரமேஷ் மற்றும் நிறுவன ஊழியர்கள் பாதுஷா, சாகுல் அமீது, பஷீல் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ஐந்துபேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் சரணடைந்தனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, பிப்ரவரி 2ம் தேதி நிறுவன காரில் எடுத்து செல்லப்பட்ட 2 கோடியே 10 லட்சம் ரூபாயை, பெரம்பலூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதன் அடிப்படையில் பிப்ரவரி 3ம் தேதி , எல்பின் நிதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதற்கிடையே, குளோபல் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் சமூக சேவைக்கான டாக்டர் பட்டம், எல்பின் நிறுவனர் ராஜாவிற்கு, கடந்தவாரம் வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழாவிற்கு பல கோடி ரூபாய் செலவளிக்கப்பட்டதாக, மீண்டும் புகார் எழுந்தது. இதையடுத்து, இரண்டாம் முறையாக, வருமான வரித்துறையினர் எல்பின் நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nஸ்டாலின் மீது வழக்கு பதிவு\nதினகரன் மீது கிருஷ்ணசாமி புகார்\nவிடுதிகளில் பறக்கும் படையினர் சோதனை\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nபறக்கும் படையினர் ரூ.8.40 லட்சம் பறிமுதல்\nஇந்தியாவில் 3,278 கோடி ரூபாய் பறிமுதல்\nமயில் சிலையை மாற்றியவர்கள் மீது வழக்கு\nமோடிக்காக தேர்தல் விதிமீறல்; விவசாயிகள் புகார்\nஇன்னொரு 10 கோடி கொடுங்க கார்த்தி\nசெந்தில் பாலாஜி மீது கடத்தல் புகார்\nகமல் மீது அரசு வழக்கறிஞர் புகார்\nசூலூரில் ரூ.1 கோடியே 98 லட்சம் பறிமுதல்\nசர்க்கரை ஆலை அதிபர் மீது விவசாயிகள் புகார்\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nலாரி மீது கார் மோதி 7 பேர் பலி\nஆவின் நிறுவனத்தில் ரூ.2 கோடி முறைகேடு; அமைச்சருக்கு தொடர்பா\nஜூன் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினாம் : உதயநிதி\nபழிக்கு பழியாக 2 பேரை வெட்டிய 4 பேர் கைது\nநிதி நிறுவனம் நடத்தியவர் தற்கொலை; போலீசே காரணம் என வீடியோ பதிவு\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nஆசியப்போட்டி: திருச்சி வீரருக்கு வெள்ளி\nகடற்கரை பகுதியில் தூய்மைப் பணி\nஒன்றரை டன் குட்கா பறிமுதல்\n3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nதிமுக கூட்டணியை மக்கள் ரசிக்கவில்லை\nஇரண்டாம் உலகப்போர் வீரர்களுக்கு அஞ்சலி\nகுடிநீருக்கு அல்லாடும் கிராம மக்கள்\nதேர்தல் ஆணையம் தெளிவா சொல்லிருச்சே\nகடல் மண் புழுக்கள் பறிமுதல்\nமாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்காது\nBJP-க்கு 1.1 கோடி ஃபாலோவர்ஸ்\nபயணியிடம் தங்க நெல்மணிகள் பறிமுதல்\nபாடகி சுசிலாவிற்கு பாராட்டு விழா\nஎதிர்கட்சியினர் மீது மோடி காட்டம்\nகாவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்\nபாட்டுக் குயிலுக்கு பாராட்டு விழா\nபெரம்பலூர் டேக்வாண்டோ வீரர்கள் தேர்வு\nதேர்தல் ஆணையத்தில் மோதல் வெடித்தது\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி\nவெடிகுண்டு மிரட்டல்: ரயில் நிலையங்களில் சோதனை\nகோமதிக்கு வேலம்மாள் 3 லட்சம் நிதி\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nடீக்கடைகாரர் டில்லி மேயர்: மோடி பாராட்டு\nவிவசாயிகள் மீது வழக்கு; பெப்சி வாபஸ்\n3 எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற திமுக வழக்கு\nஅரசு வீடுகளை உள்வாடகைக்கு விடும் ஊழியர்கள்\nமதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றம்\nஅழிவை நோக்கி 10 லட்சம் உயிரினங்கள்\nமக்கள் கொடுத்தால் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளட்டும்\nராகுல் குடியுரிமை சர்ச்சை; வழக்கு டிஸ்மிஸ்\n7 பேர் விடுதலை; கவர்னர் கையில்\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞருக்கு குண்டாஸ்\nமோடி மீண்டும் பிரதமரானால் ராகுல்தான் பொறுப்பு\nபாட்டுக் குயில் பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா\nஅதிகாலையில் தேர்தல் சாத்தியமில்லை; சுப்ரீம் கோர்ட்\nவிடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nசர்ச்சை பேச்சு; கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nகாரை கடத்திய 3 பேர் கைது\nமீண்டும் நடிக்கப் போங்க கமல் சார்\nதிருமண மோசடி : இன்ஜினியர் கைது\nமாநில வாலிபால்; கஸ்டம்ஸ், எஸ்.ஆர்.எம். வெற்றி\nகொலை செய்துவிட்டு காணவில்லை என புகார்\nகிணற்றில் மூழ்கி 3 பேர் பலி\nஅரசு மருத்துவமனைகளில் ஊழல்; அறப்போர் புகார்\nகாரில் வந்த ரூ.49 லட்சம் பறிமுதல்\nடெக்ஸ்மோ கோப்பை மாநில வாலிபால் போட்டி\n41.50 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nபல்கலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற ஐகோர்ட் உத்தரவு\nவாகனங்களில் கட்சிக் கொடி : வழக்கு ஒத்திவைப்பு\nபோனி புயல் : தேர்தல் நடத்தைவிதி விலக்கு\nபோதை விருந்தில் கும்மாளம்; 150 பேர் கைது\nபுதுச்சேரியில் மே 12ம் தேதி மறு வாக்குப்பதிவு\nபறக்கும் படை பெயரில் 20 லட்சம் கொள்ளை\n6ம் கட்ட தேர்தல் : ஜனாதிபதி ஓட்டளித்தார்\nடூவீலர் மீது வேன் மோதி இருவர் பலி\nகோபுரம் பகுதியில் மண்சரிவு : சிறுமி மீட்பு\nபஸ் ஆட்டோ மோதல் 3 பேர் பலி\nஅரசு துறைகள் ரூ.156 கோடி மின் பாக்கி\nமின் கசிவால் தீவிபத்து 3 பேர் பலி\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nமுதல் பேட்டி முழு நம்பிக்கை மீண்டும் ஆட்சி\n306 இடங்களில் பா.ஜ.,வெற்றி மீண்டும் பாஜ ஆட்சி\nமதுபான ஆலை முற்றுகை : 300 பேர் கைது\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழப்பு\nபைக் - கார் மோதல் 4 பேர் பலி\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\n2 தங்கம் வென்ற வீராங்கனை தபிதா சிறப்பு பேட்டி |Thabitha gold medals|100m hurdles and long jump\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகுழந்தையை மாத்திட்டாங்க... புலம்பவிட்ட ஆஸ்பிடல்\nநடுரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மக்கார்\nஐபோன் போலி பாகங்கள் விற்பனை ஜரூர்\n2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nதிருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் இன்ஜினியர்\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nநார் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்\n2.0 சீனா வெளியீடு 'கேன்சல்'\nகைவிட்ட காவிரி : கண்ணீரில் காவலர்கள்\nதிருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர்\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nஹவுஸ் ஓனர் ஜாதிய பின்னணி படமா \nஹவுஸ் ஓனர் Low budget படம் இல்லை லக்ஷ்மி ராமகிருஷ்னன் ஆவேசம்\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓபிஎஸ் முட்டுக்கட்டையா : த.த.செல்வன் | thanga tamilselvan\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nகுழந்தையை மாத்திட்டாங்க... புலம்பவிட்ட ஆஸ்பிடல்\nஐபோன் போலி பாகங்கள் விற்பனை ஜரூர்\nநடுரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மக்கார்\n2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nநார் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்\nதிருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் இன்ஜினியர்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nகைவிட்ட காவிரி : கண்ணீரில் காவலர்கள்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nதிருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\n2.0 சீனா வெளியீடு 'கேன்சல்'\nஹவுஸ் ஓனர் ஜாதிய பின்னணி படமா \nஹவுஸ் ஓனர் Low budget படம் இல்லை லக்ஷ்மி ராமகிருஷ்னன் ஆவேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/entertainment/04/210347?ref=right-popular-cineulagam", "date_download": "2019-06-26T15:12:01Z", "digest": "sha1:3ICWUE3I4X537FGYGKNJCDVBR6MBVQDE", "length": 10357, "nlines": 130, "source_domain": "www.manithan.com", "title": "கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெண் அரங்கேற்றும் அசிங்கம்... திருத்தவே முடியாது இவங்களை! - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nகூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெண் அரங்கேற்றும் அசிங்கம்... திருத்தவே முடியாது இவங்களை\nஇன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஅது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். என்னதான் குழந்தைகள் தனது கையில் இருந்தாலும் அது அணிந்திருக்கும் ஆபரணத்தில் ஒரு பார்வை கொண்டிருக்க வேண்டும்.\nஇங்கு பெண்கள் ஏதோ ஒரு கூட்டம் முடிந்து வந்துகொண்டிருக்கையில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவரும் வந்துகொண்டிருக்கிறார்.\nஅப்பொழுது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பின்னே வந்துகொண்டிருந்த பெண் மிகவும் லாவகமாக திருடிவிட்டுச் செல்லும் காட்சியே இதுவாகும்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/india/04/210403?ref=right-popular-cineulagam", "date_download": "2019-06-26T15:13:56Z", "digest": "sha1:DSLI2NX5MDKLWRVQI5W3GVI32IOMPXMS", "length": 12460, "nlines": 133, "source_domain": "www.manithan.com", "title": "பட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் காட்சி - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nபட்டப்பகலில் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி மாணவி... வெளிவந்த பதறவைக்கும் காட்சி\n20 வயதான கல்லூரி மாணவியை பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 18 வயது இளைஞன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் பகுதியில் மார்ச் 12ஆம் தேதி காலை 20 வயதான கவிதா விஜயகுமார் என்ற பெண் கல்லூரிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்றிருந்துள்ளார்.\nஅப்போது அங்கு வந்த 18 வயது இளைஞன் ஒருவன் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். அப்போது வாக்குவாதம் பெரிதாக, திடீரென அந்த இளைஞன் தனது கையில் கொண்டு வந்திருந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை அந்த பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளான்.\n80 சதவீத தீ காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவல்லாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த சம்பவத்தில் கும்பநாடு பகுதியை சேர்ந்த அஜின் ரெஜி மேத்யூ என்ற அந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வரும் அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.\nஇது தொடர்பாக கைது செய்யப்பட்டவனிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அந்த பெண்ணை அவன் காதலித்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவதாக அந்த பெண்ணின் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அவன் தெரிவித்துள்ளான்.\nமேலும் அந்த இளைஞனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொள்ளாச்சி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nhm.in/shop/1000000026261.html", "date_download": "2019-06-26T14:20:18Z", "digest": "sha1:NL6JR6BPZBWT62XI6XKKXSBKCQMUUSYT", "length": 5788, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: எழுத்தே வாழ்க்கை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎழுத்தே வாழ்க்கை , எஸ்.ராமகிருஷ்ணன் , தேசாந்திரி பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும் குடிஅரசு தொகுதி (31) - 1944 (1) காந்தி அண்ணல்\nஎது சரியான கல்வி யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும் ஊடகத் தேனீ ஸ்ரீதர்\nமதுரை குழந்தை பாக்கியம், குழந்தை வளர்ப்புக்கு எளிய சித்த வைத்தியம் வரப்புகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_827.html", "date_download": "2019-06-26T15:11:55Z", "digest": "sha1:IU7K7CLHHC6WGMLFHPR5GWUID64HSB3E", "length": 7316, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வடமாகாண அமைச்சு செயலாளர்கள் மாற்றம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமாகாண அமைச்சு செயலாளர்கள் மாற்றம்\nவடமாகாண அமைச்சு செயலாளர்கள் மாற்றம்\nவேந்தன் May 05, 2018 இலங்கை\nவடமாகாண கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் இன்றயதினம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகல்வி அமைச்சின் செயலாளராக விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சிவலிங்கம் சத்தியசீலன் நியமிக்கப்பட்டார். விவசாய அமைச்சின் செயலாளராக கந்தையா தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று வழங்கி வைத்தார். நிகழ்வு இன்று (05) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2019/05/Maithiri_20.html", "date_download": "2019-06-26T14:48:29Z", "digest": "sha1:GRDPMNUE3GIFBHVAFZYSTOGZ6KF54GHD", "length": 13465, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்திய இராணுவத்தால் கூட விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய முடியவில்லை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இந்திய இராணுவத்தால் கூட விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய முடியவில்லை\nஇந்திய இராணுவத்தால் கூட விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய முடியவில்லை\nஇந்திய இராணுவத்தால் கூட விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய முடியாமல் போனது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் பல்வேறு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்ட எமது இராணுவம் இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபோர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு துறையிடம் உள்ளது.\nஇலங்கையானது நீண்டகால யுத்தத்துக்கு பழகிய நாடாகும். 30 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் வெற்றிக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா தமது படையினரை அனுப்பி இருந்த போதும், அவர்களால் வெற்றிக் கொள்ள முடியவில்லை.\nஆனால் எமது நாட்டு இராணுவம் விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சமாதானமாக இருந்த போதும், கடந்த மாதம் 21ம் திகதி மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த பயங்கரவாதமானது, உள்நாட்டு பயங்கரவாதம் அன்றி, சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனை முறியடிப்பதற்கும் இலங்கையின் முப்படையினருக்கும், பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவுக்கும், சிவில் பாதுகாப்பு தரப்பினருக்கும் இயலுமை உண்டு.\nநாட்டில் யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்காக தங்களது உயிர்நீத்த படையினருக்கு தமது கௌரவத்தை செலுத்துவதாகவும்” ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/sarkar-row-chennai-high-court-ban-on-arrest-of-ar-murugadoss-313588", "date_download": "2019-06-26T13:54:17Z", "digest": "sha1:WIF335IF345DU4W4YN2RGH37LGTZDGER", "length": 14477, "nlines": 103, "source_domain": "zeenews.india.com", "title": "சர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஷை கைது செய்ய தடை: சென்னை உயர்நீதிமன்றம் | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nசர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஷை கைது செய்ய தடை: சென்னை உயர்நீதிமன்றம்\nவரும் 27 ஆம் தேதி வரை ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் பேனர்களை கிழித்தனர். இதனால் சில இடங்களில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டது.\nமேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனுதாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 27 ஆம் தேதி வரை 'சர்கார்' பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nபாலியல் புகாரில் சிக்கிய சென்னை சாமியார்-க்கு காவல்துறை வலைவீச்சு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
{"url": "https://senthilvayal.com/2018/08/04/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-06-26T15:13:04Z", "digest": "sha1:5QXEIH46QWEPOGOHMRKP6LUW62JW3AMZ", "length": 20981, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "ஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..\nஒவ்வொரு வரும் ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிமையாகி இருப்போம் அல்லவா.. ஒரு சிலர் மது அருந்துவதற்கும், ஒரு புகை பிடித்தால், இன்னும் சிலர் பாக்கு போடுதல் இது போன்ற பழக்க வழக்கத்திற்கு ஆளாகி உடல் நலத்தை கெடுத்துக் கொள்வார்கள்..\nஇது ஒருபக்கம் இருக்க, அதிகமாக டீ காபி குடிப்பதும் எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது பார்க்கலாம்.\nகுறிப்பாக அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்து உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மன நிலைக்கு கூட செல்கின்றனர்\nஎன்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..\nஅதிக அளவில் டீ எடுத்துக்கொள்வதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், நிலையில்லாத ஒரு தன்மை உருவாகி மனம் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும்.\nமேலும் டீ குடித்தால் அதில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கும் தன்மை கொண்டது.\nபுற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் கீமோ தெரபி நாம் கொடுக்கும் போது, சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், ஹீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாதவாறு தடுத்து நிறுத்தி விடுகிறது.\nஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sathyanandhan.com/2017/11/27/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-06-26T14:32:28Z", "digest": "sha1:BXPKDYXOJ3663FFMDENH2OAWXINM7WTZ", "length": 10232, "nlines": 200, "source_domain": "sathyanandhan.com", "title": "பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் →\nபத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை\nஇன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல.\nஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் அதை எந்த ஊடகத்தில் வழி அது தவறாகச் சித்தரிக்கப்பட்டது என்று கருதுகிறாரோ அதே ஊடகம் வழியே தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். வன்முறை வாயிலாக அல்ல.\nபத்மாவதியின் கதை மூன்று நூற்றாண்டுகள் பழமையானது மட்டுமல்ல, இப்போது உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்குவோர் சொல்வதே சரி என்பதற்கான எந்த சுவடியோ ஆதரமோ இல்லை. தமிழ் ஹிந்து கட்டுரையின் இந்தப் பகுதி மிக முக்கியமானது:\nசித்தூர் கோட்டை முற்றுகையிடப்பட்டபோது பத்மாவதி அங்கே வாழ்ந்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. பெண்ணாசை காரணமாகத்தான் சித்தூர் கோட்டையைக் கைப்பற்றச் சென்றார் கில்ஜி என்பதற்கும் ஆதாரம் இல்லை. பத்மாவதி என்பவர் தியாகத் திருவுருவாகவும் எழில் பொங்கும் பெண்ணாகவும் மக்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார். ஆனால் அப்படி ஒருவர் வாழ்ந்ததே இல்லை அது ஒரு கவிஞனின் மனதில் எழுந்த கற்பனைக் கதாபாத்திரம். வெவ்வேறு கலைஞர்கள் வெவ்வேறு வடிவங்களில் அவளை உருவாக்கிக்கொள்ளலாம்.\nதிவ்யா செரியனின் முழுக் கட்டுரைக்கான இணைப்பு————— இது.\nகருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் மதவெறி இனவெறிக்கு எதிராக எல்லோரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டிய கால கட்டம் இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged இனவெறி, கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கில்ஜி, சித்தவுட், தமிழ் ஹிந்து, பத்மாவதி திரைப்படம், மதவெறி, மேவார், ராஜபுத்திர வம்சம். Bookmark the permalink.\n← மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் →\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/28/notice.html", "date_download": "2019-06-26T14:58:39Z", "digest": "sha1:NTK6BE7I3HKWVDVSDM4NSKIZRZFN7DFW", "length": 13473, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்: காளிமுத்துவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் | Chennai HC issues notice against TN speaker - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n14 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n54 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்: காளிமுத்துவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nடாக்டர் குமாரதாஸ் உள்ளிட்ட 4 பேரை கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவியிலிருந்துநீக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவிளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் காளிமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் குமாரதாஸ், ஹக்கீம், தமிழரசன் உள்பட 4எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்து விட்டனர்.\nமேலும் தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி அதன் எம்.எல்.ஏக்களாகச்செயல்பட்டு வந்தனர். சமீபத்தில் கட்சியையே கூண்டோடு கலைத்து விட்டு அதிமுகவில்ஐக்கியமானயினர்.\nஇதையடுத்து அந்த 4 எம்.எல்.ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி காளிமுத்துவிடம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருடைய கோரிக்கையை காளிமுத்துநிராகரித்து விட்டார். அவர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களே என்று காளிமுத்து அறிவித்தார்.\nகாளிமுத்துவின் இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரியும் வேண்டும், 4 பேரின் பதவியையும்பறிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் பாலசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.\nஇம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், இது தொடர்பாக விளக்கம்அளிக்குமாறு காளிமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nகாளிமுத்து தவிர சட்டசபை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட 4 எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கும்நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கோவிந்தராஜ் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஜூன் 30ம் தேதிக்குஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-court-adjourns-plea-to-cancel-bail-of-woman-who-accusing-cji-347907.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-26T14:12:03Z", "digest": "sha1:72OTQF622R24W6R66NE7F7TYQAMFZGFR", "length": 17684, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க.. நீதிமன்றத்தில் போலீஸ் வாதம் | Delhi Court adjourns plea to cancel bail of woman who accusing CJI - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n21 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n48 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க.. நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்\nரஞ்சன் கோகாய் மீது புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க: நீதிமன்றத்தில் வாதம்- வீடியோ\nடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியரின் ஜாமீனை ரத்து செய்ய டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்தி வைக்கப்பட்டது.\nமே 23ம் தேதிக்கு நீதிபதி மனிஷ் குரானா வழக்கை ஒத்தி வைத்தார். நீதிபதி மீது புகார் கூறிய பெண் சார்பில் வழக்கறிஞர் வி.கே.ஓரி ஆஜராகியிருந்தார். அவர், அந்த பெண்மணியின் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் சிபியூக்களை டெல்லி போலீசிடமிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரினார். ஆனால், உரிய நேரத்தில் இந்த கோரிக்கையை முன் வைப்பதே சரியாக இருக்கும் என கூரிய ஓரி, இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டது கவனிக்கத்தக்கது.\nநவீன் குமார் என்ற இளைஞர், உச்சநீதிமன்ற ஊழியராக இருந்த இந்த பெண்ணிடம் (நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்) ரூ.50,000 கொடுத்து ஏமாற்றமடைந்தவராம். சுப்ரீம்கோர்ட்டில் கிளாஸ் 4 பிரிவில் வேலை வாங்கி தருவதாக அந்த பெண் கூறிய ஆசை வார்த்தையை நம்பி நவீன்குமார் ரூ.50,000 முன்பணம் கொடுத்துள்ளார். ஆனால், அப்பெண் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இதுதொடர்பாக நவீன்குமார், டெல்லி போலீசில் அளித்த புகாரையடுத்து, அப்பெண் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.\nஉங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி\nஇந்த நிலையில்தான், அவரது ஜாமீனை ரத்து செய்ய டெல்லி காவல்துறை, டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதேநேரம், வழக்கில் சம்மந்தப்பட்ட நவீன்குமாருக்கு சம்மன் அனுப்பவில்லையாம். எனவேதான் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nதமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா\nஇப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamei.com/20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50/", "date_download": "2019-06-26T14:28:08Z", "digest": "sha1:SK7RNU4UU24CUZG3IEVZ4MXAJB2FM7QB", "length": 5564, "nlines": 77, "source_domain": "www.dinamei.com", "title": "20 ஆண்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் - காற்றாலையில் மின் உற்பத்தி செய்வது எப்படி? - தினமெய்", "raw_content": "\n20 ஆண்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் – காற்றாலையில் மின் உற்பத்தி செய்வது எப்படி\nகடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை பாதுகாக்க உதவும் ஏசி ஹெல்மெட்.\nகடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை பாதுகாக்க உதவும் ஏசி ஹெல்மெட்.\n← 20 ஆண்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் – காற்றாலையில் மின் உற்பத்தி செய்வது எப்படி\nஒரு எரிகல்லை இவ்வளவு அருகாமையில் பார்த்திருக்க மாட்டீர்கள் | Meteoroids | BBC Click\nஒரு எரிகல்லை இவ்வளவு அருகாமையில் பார்த்திருக்க மாட்டீர்கள் | Meteoroids | BBC Click\n20 ஆண்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் – காற்றாலையில் மின் உற்பத்தி செய்வது எப்படி\n20 ஆண்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் – காற்றாலையில் மின் உற்பத்தி செய்வது எப்படி\n20 ஆண்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் – காற்றாலையில் மின் உற்பத்தி செய்வது எப்படி\n20 ஆண்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் – காற்றாலையில் மின் உற்பத்தி செய்வது எப்படி\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/Timeline/Kalasuvadugal/2019/06/11013119/1245680/lalu-prasad-yadav-birthday.vpf", "date_download": "2019-06-26T15:08:27Z", "digest": "sha1:3LU6OLDVNC5LIMFG4JR5LSNCTAM7JOHI", "length": 9468, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: lalu prasad yadav birthday", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம்: ஜுன் 11, 1947\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி பிறந்தார்.\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி பிறந்தார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்.\nஇந்தியாவின் 4-ஆம் மக்களவையில் மத்திய அரசின் ரயில்வே அமைச்சராகப் பணியாற்றினார். 14-ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 15-ஆம் மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவை தொகுதியில் வெற்றியும் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் தோல்வியும் அடைந்தார்.\n1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு லாலு குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கியது. இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது, இதனால் இவர் மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை இழந்தார்.\nலாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.\nமேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-\n1805 - மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.\n1837 - பொஸ்டனில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.\n1901 - நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.\n1937 - சோவியத் ஒன்றியத்தில் எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.\n1981 - ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.\n2002 - அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.\n2004 - நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக்கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.\n2007 - கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் 118 பேரும் தெற்கு சீனாவில் 66 பேரும் கொல்லப்பட்டனர்.\nசித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987\nம.பொ. சிவஞானம் பிறந்த தினம்: 1906\nமைக்கல் ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2009\nமவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்: ஜூன் 25- 1900\nஇசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்: ஜூன் 24- 1928\nபா.ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேற வேண்டும்- லாலு கட்சி அழைப்பு\nஉங்கள் ஆட்சியில் ஏழைகள் துன்பப்படுகிறார்கள்- நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் கண்டன கடிதம்\nநிதிஷ்குமாரை குரங்குடன் ஒப்பிட்டு லாலு விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/03/12170310/1231870/Pa-Ranjith-Says-About-Pollachi-Issue.vpf", "date_download": "2019-06-26T15:11:03Z", "digest": "sha1:JAFTA2IGGK5MN4L6OBHYFADZUU3STIEX", "length": 9184, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pa Ranjith Says About Pollachi Issue", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து\nபொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். #PollachiRapists\nபொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.\nமாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் ட்விட்டிலிருப்பதாவது,\n\"பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்... நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.\nபொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.\nஇல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.\nஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.\" என்று கூறியிருக்கிறார்.\nPollachi Rapists | Pa Ranjith | பா இரஞ்சித் | பொள்ளாச்சி பலாத்கார சம்பவம்\nபா.இரஞ்சித் பற்றிய செய்திகள் இதுவரை...\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்\nபா.ரஞ்சித்துக்கு எச்சரிக்கை விடுத்த கருணாஸ்\nமத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\nமக்களுக்கு விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம் - பா.இரஞ்சித்\nபாலிவுட் இயக்குநருடன் கைகோர்த்த பா.இரஞ்சித்\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nமக்களுக்கு விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம் - பா.இரஞ்சித்\nபா.இரஞ்சித்தை நெகிழ வைத்த அனுராக் காஷ்யப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/17/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-06-26T14:05:53Z", "digest": "sha1:RPAD2YBXK5GRITW6JPWNA2RG7WXOFG4R", "length": 10903, "nlines": 97, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள்: என்ன நடக்கிறது இந்தியாவில்?", "raw_content": "\nஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள்: என்ன நடக்கிறது இந்தியாவில்\nஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள்: என்ன நடக்கிறது இந்தியாவில்\nஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கும் முன்னரே இந்தியாவில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.\nஇந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது.\nதேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஒரு மணி நேரத்தில் இந்தியாவில் 4 பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2016 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 3,38,954 பாலியல் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.9 வீதமான அதிகரிப்பைக் காட்டுகின்றது.\nபாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரிந்தவர்களாலேயே அதிகக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பதுடன், மேற்கு வங்கம், மராட்டியம் ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nதமிழகம் 19 ஆவது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், சிறுமி ஆசிஃபாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதி கோரியும் திருவாரூரில் இன்று மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.\nதிருவாரூர் தலைமை தபால் அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.\nஇதேவேளை, சேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த கல்லூரி மாணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅருகிலிருந்த கடைக்கு சென்ற சிறுமியை பாலியல் கொடுமை செய்ததைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், மாணவிகளை தவறான பாதையில் நடத்துவதற்கு முயற்சித்த பேராசிரியையான நிர்மலா தேவியிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவிருதுநகர் – அருப்புக்கோட்டையில் இரண்டாவது நாளாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிர்மலாவிடம் இருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅந்த தொலைபேசிகளில் இருந்து பெருமளவிலான கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇது தவிர, உத்திர பிரதேசத்தின் ஈட்டா நகரில் திருமண விழாவிற்கு சென்றிருந்த 7 வயது சிறுமி ஒருவர், திருமணப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.\nநரேந்திர மோடி - மைக் பொம்பியோ சந்திப்பு\nதேனி மாணவிக்கு விஜய் சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி\nஆப்கானுடனான போட்டியில் இந்தியா வெற்றி\nஇந்தியாவில் கடும் வெப்பம்; 92 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க இறக்குமதிகளுக்கு தீர்வை விதிக்கும் இந்தியா\nரஷ்ய ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்தால் உறவில் விரிசல் ஏற்படும்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநரேந்திர மோடி - மைக் பொம்பியோ சந்திப்பு\nமாணவிக்கு விஜய் சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி\nஆப்கானுடனான போட்டியில் இந்தியா வெற்றி\nஇந்தியாவில் கடும் வெப்பம்; 92 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க இறக்குமதிகளுக்கு தீர்வைவிதிக்கும் இந்தியா\nமரணதண்டனை நிறைவேற்றுவதற்கான திகதி நிர்ணயம்\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி\nகிளிநொச்சி விபத்து:பாதுகாப்பு சமிக்ஞை செயற்பட்டதா\nஐவர் சுட்டுக்கொலை: 9 பிரதிவாதிகள் விடுதலை\nகிழக்கு வானில் மழை வருமா\nமலேசிய பாடசாலை மாணவர்களுக்கு திடீர் மூச்சுத்திணறல்\nமக்கள் வங்கியை தனியார்மயப்படுத்தும் திட்டம் இல்லை\nசிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ex-dmk-minister-joined-admk-pmk-alliance", "date_download": "2019-06-26T14:56:34Z", "digest": "sha1:FS2ROIFNW6YYYWYOPWPPDCE4NDJ6R74N", "length": 9491, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "திமுக முன்னாள் அமைச்சர் பா.ம.க.வில் இணைகிறாரா ? | ex dmk minister joined admk pmk alliance | nakkheeran", "raw_content": "\nதிமுக முன்னாள் அமைச்சர் பா.ம.க.வில் இணைகிறாரா \nதருமபுரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி நேற்றைய தினம் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை சந்தித்தார் . இந்த சந்திப்பின் பின்னணி என்னவென்று விசாரித்த போது சமீப காலமாக முல்லைவேந்தன் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளதால் தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமால் ஒதுங்கியிருந்தார் .\nஇதற்கிடையில் நேற்றைய தினம் அன்புமணி அவரை சந்தித்து ஆதரவுக் கேட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. இவர் முன்பு முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து ஒரு சில திட்டத்துக்கான கோரிக்கை மனு அளித்தது குறிப்படத்தக்கது . இது குறித்து அந்த தொகுதி மக்களிடம் கேட்டபோது அவர் திமுக கூட்டணியில் உள்ள உட்கட்சி பூசலால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nநீலாங்கரை அடாவடிப் பேர்வழி அமைச்சரின் மகனா.. அமைச்சரே புகார் கொடுக்க, அமமுக பிரமுகர் மீது வழக்கு..\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை\nசசிகலா புஷ்பா மூலம் அரசியல் செய்யும் பாஜக\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilcnn.lk/archives/840007.html", "date_download": "2019-06-26T14:48:45Z", "digest": "sha1:PH34DIF6QB25RYTRMVKFSPUZ2K2ONNYJ", "length": 8502, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் சிறீதரன் எம்.பி தலைமையில்!", "raw_content": "\nபூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் சிறீதரன் எம்.பி தலைமையில்\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தலைமையில் பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மு.ப 10.00 மணியளவில் ஆரம்பமானது.\nபாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது விசேட ஒதுக்கீட்டின் கீழ் கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் பூநகரி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமிய வீதிகள், ஆலயங்கள், பாடசாலைகள், மைதானங்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்யவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது\nகம்பரலிய ஊரெழுச்சி வேலைத்திட்டத்தின் மூலம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களூடாக 38 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nமேற்படி அபிவிருத்திக் கலந்துரையாடலில் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்ணேந்திரன் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம் பிள்ளை உதவி பிரதேச செயலாளர் உதவித்திட்டமில்ப்பணிப்பாளர் மற்றும் கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட்டார அமைப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஒப்பந்தகாரர்கள், பயனடைவோர் எனப்பலரும் கலந்துகொண்டனர்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்\nதலைநகர் பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் நேரில் ஆய்வு\nஉயிரிழந்தவர்களுக்கு இ.போ.சபை வவுனியா சாலையில் அஞ்சலி நிகழ்வு\nதாக்குதலில் பலியானவர்களுக்கு சாவகச்சேரியில் அஞ்சலி\nரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் கூட்டமைப்பு சம்பந்தன் அறிவிப்பு\nஅரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%A4%E0%AF%86&name-meaning=&gender=216", "date_download": "2019-06-26T14:11:40Z", "digest": "sha1:XSUBOYVFXFTNGK5F3NO7ZBMUU2PS776H", "length": 12567, "nlines": 324, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter தெ : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 04\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 03\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 02\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள்\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/14163-anna-university-exams-postponds.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T14:52:03Z", "digest": "sha1:TBBOVYZHNG4M6M7MU6H6XAJSRYHXVO2E", "length": 7965, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு | Anna University exams Postponds", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஅண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு\nவர்தா புயல் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சில தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசீரமைப்புப் பணிகளில் சென்னை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து செயல்படுங்கள்: ஸ்டாலின்\nவர்தா புயல் பாதிப்பு....பள்ளிகளுக்கு விடுமுறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nதமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி \nஉயர்கிறது பொறியியல் படிப்பு கட்டணம்: அண்ணா பல்கலை தகவல்\n“டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலையே நடத்தும்”- துணைவேந்தர்\nபொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nடான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்த பரிந்துரை\nவிடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு\n'அரியர்' தேர்வு எழுத புதிய நடைமுறை: அண்ணா பல்கலை., வெளியீடு..\nநிறுத்தி வைத்த தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீரமைப்புப் பணிகளில் சென்னை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து செயல்படுங்கள்: ஸ்டாலின்\nவர்தா புயல் பாதிப்பு....பள்ளிகளுக்கு விடுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64292-doctors-removed-8-spoons-2-screw-drivers-2-brushes-and-1knife-from-patients-stomach.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T14:08:33Z", "digest": "sha1:QYYC7UIY63XZO2NIWP6A6BO4HFGIT7OZ", "length": 9786, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வயிற்றுக்குள், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்! | Doctors removed 8 spoons, 2 screw drivers, 2 brushes and 1knife from Patients stomach", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nவயிற்றுக்குள், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்\nஇமாச்சலப்பிரேதசத்தில், நோயாளியின் வயிற்றில் இருந்து 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி ஆகியவற்றை மருத்துவர்கள் ஆபரேஷன் மூலம் எடுத்துள்ளனர்.\nஇமாச்சலப்பிரேதசத்தில் உள்ள மாண்டி நகரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு வயிற்று வலி என்று கூறி, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்று பகுதியை ஸ்கேன் செய்தனர். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. எனென்றால் அவர் வயிற்றுக்குள் இருந்தது, 8 ஸ்பூன்ஸ், 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி.\nஇது அவ்வளவும் வயிற்றுக்குள் எப்படி போனது என்று அவரிடம் கேட்டால், ஒன்றும் சொல்லாமல் விழித்திருக்கிறார். இதையடுத்து, உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த பொருட்களை அகற்றினர்.\nஇதுபற்றி அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நிகில் கூறும்போது, ‘’வயிற்றுக்குள் அந்த பொருட்கள் இருந்ததை அறிந்ததும் எங்கள் மருத்துவக் குழு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அவற்றை நீக்கியது. சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். சாதாரணமான மனிதர்கள் கத்தி, ஸ்குரூடிரைவர், ஸ்பூன்களை விழுங்க மாட்டார்கள். நோயாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இதை செய்திருக்கிறார். இது அரிதான ஒன்று’’ என்றார்.\nஆல் ரவுண்டர் விஜய் சங்கர் காயம்: இன்றைய போட்டியில் ஆடுவாரா\nபாஜகவின் அமோக வெற்றிக்கு பின்னால் பெரும் பங்காற்றியவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறுவைச் சிகிச்சை செய்த பெண் வயிற்றில் கத்தரிகோல் - உறவினர் பதட்டம்\n அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'\nடூத் பிரஷை விழுங்கிவிட்டு மருத்துவரிடம் மறைத்த இளைஞர்\nநோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nஃபேஸ்புக் காதல்; பெண் வீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்ட இளைஞன்\nமாட்டின் வயிற்றில் 80கிலோ பாலிதீன் கழிவுகள்\n3 மாத குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு குழந்தை: மருத்துவர்கள் அதிர்ச்சி\nமனிதனின் வயிற்றுக்குள் 263 ரூபாய் நாணயங்கள், பிளேடு, ஊசி: டாக்டர்கள் ஷாக்\nஇரைப்பை புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் 60% உயிர் பிழைக்க வாய்ப்பு\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆல் ரவுண்டர் விஜய் சங்கர் காயம்: இன்றைய போட்டியில் ஆடுவாரா\nபாஜகவின் அமோக வெற்றிக்கு பின்னால் பெரும் பங்காற்றியவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.smdsafa.net/2013/01/blog-post.html", "date_download": "2019-06-26T14:36:48Z", "digest": "sha1:FCJKVBWIQGC43IVUZFQGH27ODRZVTLHV", "length": 11451, "nlines": 197, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: மயக்க நிலையில் ஒருவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி", "raw_content": "\nமயக்க நிலையில் ஒருவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி\nஒரு நபர் மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.\n1. தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு\n3. வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு\n4. தோல் வெளுத்துக் காணப்படுதல்.\nமேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது அவரை முன்புறமாக சாய்க்க வேண்டும்\nதலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.\nபாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது\nபாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.\nஇறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.\nகுளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.\nமேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவைப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nநீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பி...\nநினைவாற்றலை மேம்படுத்தி மறதிப் பிரச்னைக்கு தீர்வு காண என்ன சாப்பிடலாம் சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. *குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக...\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nபிளாக் மற்றும் ஒரு வெப் சைட் இரண்டுக்கும் என்ன வேறுபாடு என என்பதை இந்த பதிவில் காணலாம்.. பிளாக் என்றால் என்ன நாம் நம்முடைய தினசரி டை...\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி\nவிண்டோவ்ஸ் 8 பயனுள்ள அப்ளிகேசன் டவுன்லோடு செய்ய\nவிண்டோஸ் 8 - ஓர் அறிமுகம் உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய பதிப்பு இயங்குதளம்தான் விண்டோஸ் 8. இப்புதிய பதிப்பில் மெட...\nஆண் - பெண் அழகு குறிப்புகள் சில\nஅ ழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வ...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nமயக்க நிலையில் ஒருவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி\nகழுத்துவலி வராமல் தடுக்க வழி\nகணினியில் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://news.lankasri.com/othercountries/03/199758?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:03:55Z", "digest": "sha1:4TAA6ZO3NUMZLBNSHPVP3LFN2FINYDHA", "length": 8392, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா\nஉலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நார்வே நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.\nசர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. குறிப்பாக இந்த ஆய்வு மிக மகிழ்ச்சியான நாடுகள் எவை என்பது குறித்து நடத்தப்பட்டதாகும்.\nஇந்த ஆய்வுப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து இரண்டாவது இடத்தையும், நார்வே 3வது இடத்தையும், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் 4,5ஆம் இடங்களையும் பிடித்துள்ளன.\nஇந்த நாடுகளில் எல்லாம் மக்களின் வாழ்க்கைத் தரம் அமோகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. புள்ளிகள் அடிப்படையில் 10க்கு தலா 7.5 புள்ளிகளை முதல் ஐந்து நாடுகள் பெற்றுள்ளன.\nஇதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்கா 6.9 புள்ளிகளையும், பிரித்தானியா 6.7 புள்ளிகளையும் பெற்றுள்ளன.\nமேலும் இந்த ஆய்வறிக்கையில், வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் மிக அதிகளவில் பணம் சம்பாதிக்கின்றனர். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர்.\nஅந்த நாடுகளின் அரசும் நல்ல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுக்கிறது. அதன் மூலமே, குறித்த நாடுகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://news.lankasri.com/uk/03/199712?ref=archive-feed", "date_download": "2019-06-26T15:07:36Z", "digest": "sha1:USOKY4K4YYBIIU33EAAWJLHSC5S6OPFZ", "length": 10512, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சிரியாவில் உயிரிழந்த ஷமீமாவின் குழந்தை! குவியும் கண்டனங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிரியாவில் உயிரிழந்த ஷமீமாவின் குழந்தை\nசிரியாவுக்கு தப்பியோடி தீவிரவாதியை மணந்த பிரித்தானிய மாணவியான ஷமீமா பேகத்தின் குழந்தை உயிரிழந்துள்ளதையடுத்து, அவரது பிரித்தானிய குடியுரிமையை பறித்த உள்துறைச் செயலர் மீது கண்டனங்கள் குவிகின்றன.\nசுவாசக் கோளாறு காரணமாக இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜரா என்னும் பெயருடைய ஷமீமாவின் மகன் நேற்று இரவு உயிரிழந்ததை சிரிய குடியரசு படைகள் உறுதி செய்துள்ளன.\nபிப்ரவரி மாதம் அகதிகள் முகாம் ஒன்றில் பிறந்த ஜரா, சில வாரங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக தெரிகிறது.\nஏற்கனவே இரண்டு குழந்தைகளை இழந்த ஷமீமா, தனது மகனை தனியாக பிரித்தானியாவுக்குள் விடமாட்டேன் என்று கூறியிருந்ததோடு, தன்னை அனுமதிக்குமாறும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஷமீமாவின் பிரித்தானிய குடியுரிமையை பறிக்கும் உள்துறை செயலர் சஜித் ஜாவித்தின் முடிவு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் ஷமீமாவின் குழந்தை இறந்ததையடுத்து நிழல் உள்துறை செயலரான Diane Abbott, ஜாவித்தின் முடிவு இரக்கமற்றதும் மனிதத்தன்மையற்றதும் என வர்ணித்துள்ளார்.\nஒருவரை நாடற்றவராக்குவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள அவர், ஒரு பிரித்தானிய பெண்ணின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் இப்போது ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் உயிர் பிரிந்திருக்கிறது என்றார்.\nஅதேபோல், குழந்தைகளுக்கான பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர்களில் ஒருவரான Kirsty McNeill, ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய எல்லா குழந்தைகளுமே போரால் பாதிக்கப்பட்டவர்கள்போல்தான் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஒவ்வொரு குழந்தையின் மரணமுமே ஏற்றுக்கொள்ள முடியாத துயரம்தான் என்று கூறியுள்ள அவர், பிரித்தானியாவும் மற்ற நாடுகளும் வடகிழக்கு சிரியாவில் இருக்கும் தங்கள் குடிமக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.\nகிழக்கு லண்டனைச் சேர்ந்த ஷமீமா, 15 வயதாக இருக்கும்போது, அவரும் இன்னும் இரண்டு பள்ளி மாணவிகளும் ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக வீட்டை விட்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் கடந்த மாதம் வட சிரியாவிலுள்ள அகதிகள் முகாம் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணியாக தலைகாட்டி பிரித்தானியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த ஷமீமா, சிரியாவில் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளின் தலைகளை வெட்டிக் கொன்றது தனக்கு தவறாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://senthilvayal.com/2018/05/02/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-11-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-18/", "date_download": "2019-06-26T14:31:29Z", "digest": "sha1:QTDLWG2AKE6R2CY2KXH7JF47FN5IWJCA", "length": 41095, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "தப்பிய 11… தப்புமா 18? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதப்பிய 11… தப்புமா 18\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையுடன் நீடிக்குமா, அல்லது கவிழ்ந்துபோகுமா’ என்பதை முடிவு செய்யும் இடமாக சென்னை உயர் நீதிமன்றம் மாறியிருக்கிறது. ஆட்சியின் அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் தீர்மா னிக்கப்படுவதைவிட, சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடத்துக் குள்தான் சமீபகாலங்களில்\nஅதிகம் தீர்மானிக்கப்படுகின்றன. தமிழக ஆட்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கியமான வழக்குகள் இங்கே நடந்தன; நடக்கின்றன. குட்கா விவகாரத்தில் அரசுக்கு எதிராக சட்டமன்றத்துக்குள் கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பி யதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, சட்டமன்றத்தில் நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கு, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு… போன்றவை இதற்கு உதாரணங்கள்.\nசட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவப்படம் வைத்தது தொடர்பான வழக்கு, ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கு என இரண்டு வழக்குகளில் ஏப்ரல் 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், ‘சபாநாயகரின் வேலையை நீதிமன்றம் எடுத்துச் செய்ய முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது அரசியல் பார்வையாளர்கள், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்துத் தரப்பிலும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், ‘இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பைப்போலவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கிலும் தீர்ப்பு வெளியாகுமா’ என்பது பரவலான கேள்வியாக உள்ளது.\nஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் தப்பினர்… தினகரன் பக்கம் போன 18 பேர் தப்புவார்களா இதுபற்றி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் பேசினோம்.\n‘‘ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் 11 பேரை தகுதிநீக்கம் செய்யக் கோரி தி.மு.க தாக்கல் செய்த வழக்கும், தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை எதிர்த்த வழக்கும் விசாரணைக்கே உகந்தவை அல்ல. இந்த இரு வழக்குகளையும் ஆரம்ப கட்டத்திலேயே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இப்போது இத்தனை விமர்சனங்கள் எழுந்தி ருக்காது. இந்த இரண்டு வழக்குகளும் விசார ணைக்கே உகந்தவை அல்ல என்பதற்குக் காரணம், இந்த இரு வழக்குகளிலும் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர் எந்த முடிவையும் எடுக்காத நிலையில், ‘நீங்கள் இப்படித்தான் ஒரு முடிவை எடுக்க வேண்டும்’ என நீதிபதிகளிடம் கேட்கவோ, நீதிபதிகள் உத்தரவிடவோ முடியாது. சபாநாயகர் ஒரு முடிவை எடுத்திருந்தால், அதைச் சீராய்வு செய்து ஓர் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது. சபாநாயகர் முடிவே எடுக்காதபோது, ‘ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க வேண்டும்’ என அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.\n‘‘கட்சித்தாவல் தடைச் சட்டம் பொருந்துமா\nஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் 11 பேரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கில் ‘கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டியதுதானே’ என்று சிலர் முகநூலிலும் டி.வி பேட்டிகளிலும் கேட்கின்றனர். உண்மையில், இது கட்சித்தாவல் தடைச் சட்டத்திலேயே விசித்திரமான வழக்கு. கட்சித்தாவல் தடைச் சட்டம் என்பது, ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவருக்கு, ஏதோ ஆசையைக் காட்டி வேறொரு கட்சி தன்பக்கம் இழுத்துக் கொள்வதைத் தடை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை என்பதுதான் கடந்த 30 வருட கால வரலாற்றின் படிப்பினை\nசட்டத்தை ஏமாற்றி ஏதோ ஒரு வகையில் இந்த விஷயம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஓ.பி.எஸ் வழக்கில் அப்படிக்கூட நாம் எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், ‘ஒரு கட்சி உடைந்து இரண்டு அணிகள் உருவானால், அது கட்சித்தாவலுக்குள் வருமா அதற்கான நடைமுறை என்ன’ என்பது கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் தெளிவாக இல்லை. பன்னீர்-பழனிசாமி விவகாரத்தில் அதுதான் நடந்தது. அதாவது ஒரு கட்சி இரண்டாக உடைந்து, இரு அணிகள் உருவாகின. அவர், ‘நான்தான் அ.தி.மு.க’ என்றார்; இவரும், ‘நான்தான் அ.தி.மு.க’ என்றார். கடைசியில் இருவரும் இணைந்து, ‘நாங்கள்தான் அ.தி.மு.க’ என்று சொல்லி விட்டார்கள். அவர் செய்த தவற்றை இவர் மறந்துவிட்டார்; இவர் செய்த தவற்றை அவர் மறந்துவிட்டார். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக இணைந்துவிட்டனர். இதில் மற்றொரு கட்சி தலையிட்டு, சபாநாயகரை ஒரு பார்ட்டியாகக் கொண்டுவந்து, ‘அந்த 11 பேர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று எப்படிக் கேட்க முடியும்\nதமிழகத்தில் சமீபகாலமாக ஒரு தவறான முன்னுதாரணம் உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாகத் தீர்க்கக்கூடிய எல்லாப் பிரச்னைகளையும் கொண்டு வந்து நீதிமன்றத்தின் தலையில் கட்டுகிறார்கள். இப்படி மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் மங்கி, அதிகாரம் பொருந்திய அமைப்பாக நீதித்துறை மாறுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.\nஜெயலலிதா உருவப்பட வழக்கு, 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு ஆகிய இரு வழக்குகளின் படிப்பினையை வைத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வரும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த வழக்கிலும் ‘சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்றுதான் தீர்ப்பு வர 99 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. அல்லது, சபாநாயகர் எடுத்த முடிவைச் சில கூறுகளின் அடிப்படையில் சீராய்வு செய்து, ‘18 எம்.எல்.ஏ-க்களிடம் மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்தி முடிவெடுங்கள்’ என நீதிமன்றம் சொல்லலாம்; ஆனால், இதற்குக் குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன. அந்த நேரத்தில், ‘இந்த 18 பேரும் எம்.எல்.ஏ-க்களாக இருக்கலாம், அல்லது இருக்கக்கூடாது’ என்றும் நீதிமன்றம் உத்தரவிட முடியும். மற்றொரு வாய்ப்பாக, ‘எம்.எல்.ஏ-க்களாக நீடிக்கலாம்; ஆனால், சட்டமன்றத்துக்குச் செல்ல முடியாது’ என்றும் தீர்ப்பளிக்கலாம். இந்த மூன்று வாய்ப்புக்களில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், மற்றொரு தரப்பு மேல் முறையீட்டுக்காகப் போகப் போகிறார்கள். அப்படிப் போகும்போது, இந்த வழக்குகள் அனைத்துமே நீளும் சட்டப் பிரச்னையாக இருக்கும்’’ என்கிறார் சந்துரு.\nதினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இதை வேறொரு கோணத்தில் அணுகுகிறார். அவரிடம் பேசினோம். ‘‘அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் 11 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைக் குறிப்பிட்டு நாங்கள் மேல்முறையீட்டுக்குச் செல்வோம்.\nஇந்த வழக்குகள் இங்கு தாக்கல் செய்யப் பட்டபோது, இதை எடுத்துக்கொண்டு ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ செம்மலை உச்ச நீதிமன்றம் போனார். அங்கு அவர், ‘சபாநாயகரின் அதிகாரம் என்ன என்பது பற்றி உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். அதை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து, இந்த வழக்கு களை சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்துத் தீர்ப்பளிக்க உத்தரவிட்டது. இதை சென்னை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல், சபாநாயகர் அதிகாரம் குறித்த இடத்திலேயே நின்றுகொண்டது. இந்த வழக்கு அப்படிப் பட்டதல்ல.\nஇந்த வழக்கு நடக்கும்போது, தலைமை நீதிபதி அமர்வுமுன் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் முக்கியமானது, ‘ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு, தி.மு.க உறுப்பினர்களுக்கு உரிமைமீறல் நோட்டீஸ் கொடுத்த வழக்கு போன்றவற்றுக்கு சபாநாயகரிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லை. ஆனால், ‘தினகரனுக்கு ஆதரவு தரும் 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது’ என்று அறிவிக்கக்கோரி வழக்குத் தாக்கல் செய்ததும், உடனடியாக சபாநாயகர் பதில் மனு போடுகிறார். ‘தங்களுக்குச் சாதகமான விஷயத்தில் அமைதியாக இருப்பதும், எதிரான விஷயத்தில் உடனடியாக எதிர்வினை யாற்றுவதுமாக சபாநாயகர் இருந்தால், அதில் நீதிமன்றம் தலையிட்டுத்தானே ஆக வேண்டும்’ என எழுப்பப்பட்ட கேள்வி முக்கியமானது. அதற்கு இந்தத் தீர்ப்பில் விளக்கமே இல்லை. மேலும், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ-க்கள், அடுத்த 15 நாள்களுக்குள் எந்த மன்னிப்பும் யாரிடமும் கேட்கவில்லை. அதைக் கட்சித் தலைமையோ, கொறடாவோ, அவைத் தலைவரோ மன்னிக்கவும் இல்லை. அப்படி யானால், அதற்கு கட்சித்தாவல் தடைச் சட்டம் பொருந்துகிறது. அதையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இவற்றை நாங்கள் மேல்முறையீட்டில் எடுத்து வைப்போம்.\nஎது எப்படியிருந்தாலும், இந்த வழக்கின் தீர்ப்பு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கைப் பாதிக்காது. ஏனென்றால், இந்த வழக்கின் தீர்ப்பில், ‘சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க வில்லை. அதனால், நாங்கள் அதில் எந்த சீராய்வும் செய்ய முடியாது. முடிவை உடனடியாக எடுக்கச் சொல்லி சபாநாயகருக்கு உத்தரவும் கொடுக்க முடியாது’ என்று தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது. ஆனால், 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் சபாநாயகர் ஒரு முடிவை எடுத்துள்ளார். எனவே, அதைச் சீராய்வு செய்வதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அப்படித்தான், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுத்ததைச் சீராய்வு செய்து, அந்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு. அதுபோல, தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கிலும் சபாநாயகர் உத்தரவில் என்னென்ன தவறுகள் நடந்துள்ளன என்று தலைமை நீதிபதி அமர்வு சீராய்வு செய்யும். சபாநாயகர் செய்துள்ள தவறுகளை நாங்கள் பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளோம். அதனால், அந்த வழக்கில் எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பு, 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை பாதிக்காது’’ என்கிறார் ராஜா செந்தூர்பாண்டியன்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://senthilvayal.com/2018/08/02/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2019-06-26T14:04:17Z", "digest": "sha1:7REKHLGFEJIWJDH24O4K43OWRGVV4SQ4", "length": 36173, "nlines": 205, "source_domain": "senthilvayal.com", "title": "இப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா?… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…\nமுகம் மனதின் கண்ணாடி, மற்றும் கண்கள் பேசமலேயே இதய இரகசியங்களை சொல்லும். – செயிண்ட் ஜெரோம். முகம் மனதின் படம், கண்கள் அதன் மொழிபெயர்ப்பாளர் – மார்கஸ் டூலியஸ் சிசரோ\nமேற்கூறிய இரண்டு வாக்கியங்களும் கண்களின் முக்கியத்துவத்தை கூறுகின்றன. சமீப காலங்களில், நாம் பார்க்கும் நபர் பற்றி ஏழு நொடிகளில் கணிக்கப்படும் போது, நமக்கு இளம் மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை பராமரிக்க வேண்டியது அவசியம் மற்றும் கட்டாயமாக மாறிவிட்டது.\nஉங்கள் கண்கள் கீழ், கரு வளையத்துடன் நீங்கள் ஒரு ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதை கற்பனை செய்து பாருங்கள். ஒன்று நீங்கள் ஒரு இனிமையான உரையாடலை செய்ய இயலாது அல்லது பலரும் உங்களை தவிர்க்கலாம் அல்லது நீங்கள் அதை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்பதற்கான குறிப்புகள் அனைவராலும் கூறப்படுவதை பார்க்க முடியும்.\nஇந்த கட்டுரையில் கண்கள் கீழ் உள்ள கரு வளையங்களில் இருந்து வீட்டு வைத்தியம் மூலம் நிவாரண பெற முடியும் மூலம் என்ற எளிய முறைகளை காணலாம்.\nஇந்த எளிய வியாதிக்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் (பெண்களில் மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் அல்லது கர்ப்பம்), தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை மரபணுக்கள் மற்றும் பல. இதை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உங்கள் முகத்தில் ஒரு மந்தமான தோற்றத்தை தோற்றுவிக்கும் மற்றும் இது “கண் பைகள்” போன்ற இரண்டாம் நிலை சுகாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇந்த கட்டுரையில், நம் வாசகர்களுக்கு கண்களுக்கு கீழ் கரு வளையங்கள் உருவாவதைத் தவிர்ப்பதற்கு நான்கு முக்கிய எளிய வழிகளை பட்டியலிடுகிறோம்.\nஆரம்ப கட்டங்களில், கண்கள் கீழே இருக்கும் தோல் சாம்பல் நிறமாக மாறும் மற்றும் நீங்கள் எரிச்சல் மற்றும் கண் வலி உண்டாகும்.\nபாரம்பரியம் காரணமாக, இந்த நோய் வயதானவுடன் மோசமடைகிறது. தோல் மெல்லியதாகிவிடும், கொழுப்பு (தோலழற்சி) இழக்கப்படும். காலப்போக்கில், தோல் கீழே இரத்த நாளங்கள் வெளிப்படும்.\nகண் பகுதியில் உள்ள கரு வளையங்கள் உருவாக்கும் முக்கிய காரணிகள் அதிகப்படியான குடி, புகை பிடித்தல், சுற்றுப்புற மாசுபாடு மற்றும் ஒவ்வாமை.\nஇது குளிரூட்டும் தன்மையை கொண்டது மற்றும் தோல் மென்மையாக்கும் மருத்துவ கூறுகளைக் கொண்டுள்ளது. கூடுதல் நன்மைகள் இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கண் வீக்கத்தை குறைக்கும்.\n1. ஒரு வெள்ளரி எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\n2. குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் துண்டுகளை வைக்கவும்.\n3. பத்து பதினைந்து நிமிடங்கள் கண்கலாய் சுற்றி துண்டுகளை வைக்கவும். பிறகு மிதமான சூடான நீரில் கழுவவும்.\nநீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளை கிடைக்கும் வரை செயல்முறையை தொடரவும்.\nஇதில் மிக அதிக அளவு வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள சிலிக்கா ஆரோக்கியமான தோல் மற்றும் கொலாஜன் உருவாக்க உதவும். வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்களில் நீர் தேக்கத்தை குறைக்கிறது. இது குக்குர்பிடிசின்கள் மற்றும் குக்குமேரின் போன்ற பைட்டோ- நியூட்ரின்களையும் கொண்டுள்ளது.\nதேயிலை மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டவை.\n1. இரண்டு பச்சை தேயிலை பைகள் எடுத்து அவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும்.\n2. தேநீர் பைகள் குளிர்ந்த உடன், முப்பது நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.\n3. திருப்திகரமான முடிவுகள் வரும் வரை கண்களின் மேல் தேநீர் பைகள் வைக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இரண்டு முறை நடைமுறையைத் தொடரலாம், காலையில் மற்றும் படுக்கைக்குப் போகும் முன்.\nபச்சை தேயிலை டானின்கள் (பாலிபினால்கள்) நிறைந்தவை இவை தொழில் உள்ள கெட்ட திசுக்களை குறைக்கும். இந்த மருத்துவ பொருள் தொழில் உள்ள கருமை தன்மை மற்றும் வீக்கத்தை குறைகின்றன. மற்றொரு முக்கியமான பொருளான Epicatechin (EC), அவை உடலில் உள்ள நச்சு தன்மையை குறைக்கும்.\nஇது கண்கள் கீழ் எளிதாக செய்ய கூடிய இயற்கை வைத்தியம். பாதாம் எண்ணெய் கண்களின் கீழே பூசி தோலை மென்மையாக ஆக்க முடியும்.\n1. நீங்கள் ஆட்காட்டி மற்றும் சுட்டிக்காட்டு விரல் இரண்டிலும் இரண்டு துளி பாதாம் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளவும்.\n2. படுக்கைக்குச் செல்லும் முன் மெதுவாக கண்கள் கீழ் பகுதிகளில் மசாஜ் செய்யவும்.\nபடுக்கைக்குச் செல்லும் முன் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.\nபாதாம் எண்ணெய் கனிமங்கள் மற்றும் வைட்டமின் நிறைந்த ஆதாரங்கள் உள்ளன. இது மென்மையான தோலை உண்டாக்கி மற்றும் புத்துணர்ச்சியடையா வைப்பதோடு தேவையான ஈரப்பதத்தை தருகிறது, இதனால் தோலுக்கு ஒளி சேர்கிறது. வெள்ளரிக்காயைப் போலவே, பாதாம் எண்ணெய், வைட்டமின் கே வளமான வளங்களை கொண்டுள்ளது.\nபாதாம் எண்ணெய் ஒவ்வாமை உண்டு என்றல் கண்களில் எண்ணெய் படுவதை தவிர்க்கவும்.\nஒவ்வொரு வீட்டு சமையலறையிலிருந்தும் பயனுள்ள வீட்டு வைத்தியம்.\n1. ஒரு தக்காளியை எடுத்து துண்டாக்கி பேஸ்ட் செய்து கொள்ளவும்\n2. அதில், எலுமிச்சை சாறு ஒரு அரை டீஸ்பூன், அதே அளவு மஞ்சள் பவுடர் மற்றும் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு சேர்க்க வேண்டும்.\n3. இந்த கலவையை கண்களை சுற்றி பூசவும் பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும்.\nஒரு மாதத்திற்கு நடைமுறை தொடரலாம், இது உங்கள் தோலை மென்மையாக்குவதுடன் கண்களை சுற்றி உள்ள வீக்கத்தை குறைக்கும்.\nஇந்த மருத்துவ கலவையில் உள்ள லிகோபீன் தோலை மிருதுவக்க உதவும். மற்ற சாதகமான சேர்மங்கள் சோலின், லுயூட்டீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகும். தக்காளி உள்ள வைட்டமின் சி பழைய தோல் புத்துயிர் மற்றும் ஒரு ஆரோக்கியமான பளபளப்பு போன்றவற்றை தருகிறது. சருமத்தின் அமில அளவு (பி.ஹெச்) பராமரிக்கப்பட்டு, தோல் மிருதுவாக ஆக்கப்படுகிறது. தோல் எண்ணெய் அளவு குறைந்து, லைகோபீன் சூரிய ஒளியில் பாதுகாக்க உதவுகிறது.\nகண்களின் கீழ் கருப்பு வட்டங்களின் உருவாக்கத்தை எவ்வாறு தடுப்பது\nவாழ்க்கை பாணியில் எளிய மாற்றங்கள் இந்த வியாதிகளை தடுக்கும். இந்த பிரச்சனை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறிய அல்லது தற்காலிகமாக இருக்கும்.\nஒவ்வொரு நாளும் அதிக அளவு தூக்கம் இருக்க வேண்டும். அதிகப் படியான குறைபாட்டைக் குறைப்பதற்காக, கண் கண்ணாடி அணியலாம் இது சூரியன் கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவும். மதுபானம் புகைத்தல் ஆகியவற்றை நிறுத்துங்கள். காய்ச்சல் போன்ற ஒவ்வாமைகள், குறிப்பிட்ட பகுதிகளில் தோல் நிறமிழப்புக்கான ஒரு காரணியாகும்.\nக்ளுட்டன் சகிப்புத்தன்மை இல்லாமை மற்றும் அடைந்த மூக்கு இவை கூட கரு வளையங்களை ஏற்படுத்தும். தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஒரு தொழில்முறை மருத்துவரின் வழிகாட்டுதலை நாடுங்கள்.\nவைட்டமின்கள் நிறைந்த ஒரு சீரான ஊட்டச்சத்து உணவு சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.\nவைட்டமின் கே மற்றும் பி 12 இன் குறைபாடு காரணமாக கண்களில் இந்த பாதிப்பு உண்டாகலாம். உணவில் அதிக உப்பு இருந்தால், கவனமாக இருங்கள். அதிக உப்பு மிகுந்த அசாதாரணமான இடங்களில் தண்ணீரைத் தக்க வைக்கும், இது கண்களுக்குக் கீழே உண்டாகிறது.\nஒரே ஒரு கண், வீக்கம் மற்றும் நிறமாற்றம் என்றால் நிலை மிகவும் மோசமாகிவிடும், ஒரு தோல் மருத்துவரை நடுவது நல்லது. பொதுவாக கரு வளையம் பெரிய உடல் பாதிப்புகளை உண்டாக்காது. இதை சாதாரண வீட்டு வைத்தியம் அல்லது மேல்-எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்படலாம்.\nஹைப்பர்-பிக்மென்டேஷன் என்பது கரு வளையத்தின் காரணமாக இருந்தால், உங்களுக்கு ட்ரி-லுமா (கூறு – ஹைட்ரோகினோன்) என்ற கிரீம்கள் பரிந்துரைக்கப்படலாம். இரத்த நாளங்கள் வெளியில் தெரியும் நிலை எனில், கடுமையான துடிப்பு ஒளி சிகிச்சை வேண்டும். சில கிரீம்கள் கருப்பு நிற வட்டங்களை மென்மையாக்கலாம் அவற்றில் சில பெயர்கள்: RevaleSkin Eye Replenishing Cream, Olay Definity Eye Illuminator மற்றும் SkinCeuticals கண் ஜெல்.\nதோல் மெல்லியதாகி விட்டால், ஹைலூரோனிக் அமிலத்துடன் கூடிய உட்செலுத்தக்கூடிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், விளைவுகள் தற்காலிகமாக இருக்கும். கொழுப்பு ஊசி அல்லது கொழுப்பு பரிமாற்றம் இந்த நிலையில் பரிந்துரைக்கப்படுகிறது. இது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட வேண்டும் என்றால், பின்னர் கண்ணிமை அறுவை சிகிச்சை (blepharoplasty) தேவைப்படுகிறது.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://senthilvayal.com/2018/09/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-06-26T14:29:49Z", "digest": "sha1:T7P3GOSYNFSHIYCEZ4OHBOB24X5OJQFS", "length": 28466, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "என்னை நிர்பந்தித்தால் இன்னொரு டி.டி.வி-தான்’ – விஜயபாஸ்கரின் பதிலால் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎன்னை நிர்பந்தித்தால் இன்னொரு டி.டி.வி-தான்’ – விஜயபாஸ்கரின் பதிலால் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி\nசி.பி.ஐ சோதனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னுடைய முடிவை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகுட்கா வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஜார்ஜ் , டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடந்த பிறகு நேற்றிரவு அமைச்சர் விஜயபாஸ்கர் ,டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், `சூழ்ச்சிகளை சட்டத்தின் மூலம் எதிர்கொண்டு மீண்டு வருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பின்போது, பதவி விலகுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதை இருதரப்பினரும் மறுத்துள்ளனர். முதல்வர் கூறியதை அமைச்சர் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஇது குறித்து அ.தி.மு.க-வினர் கூறுகையில், “அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கிவருகிறார். அவரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு வேண்டப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை, சி.பி.ஐ சோதனை நடத்தப்பட்டது. வருமானவரித்துறை சோதனையில் சிக்கியபோதே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். சி.பி.ஐ சோதனைக்குப் பிறகும் அதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன. இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். அப்போது, சோதனை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் உங்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தால் என்ற கேள்வியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். அதற்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், எந்தச் சோதனையும் எனக்கு சோதனையாக மாறாது. ஏனெனில், பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்துவந்துவிட்டேன். என்னை பதவி விலக நிர்பந்தித்தால் இன்னொரு டி.டி.வி.தினகரனாக நான் மாற வேண்டியதுவரும் என்று விஜயபாஸ்கர் சொல்லியிருக்கிறார். அதை நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, பதவி விலகுவது குறித்து முதல்வரும் எதுவும் பேசவில்லை” என்றனர். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டாேம். ஆனால், அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்குப் பிறகு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் முதல்வரைச் சந்தித்துள்ளார். அவரிடமும் சி.பி.ஐ சோதனை, குட்கா வழக்கு குறித்து முதல்வர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு, இந்த வழக்கை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவின் வாக்குமூலம், டைரி எல்லாம் உங்களுக்கும் ஜார்ஜுக்கும் எதிராகவே உள்ளது. தற்போது ஜார்ஜ், பதவியில் இல்லை. ஆனால், நீங்கள் உயர்பதவியில் இரண்டாண்டுகள் நீட்டிப்பில் இருக்கிறீர்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். சட்ட நிபுணர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், ஆலோசித்து பதில் சொல்கிறேன் என்றும் முதல்வர் சொல்லியிருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு, டி.கே.ராஜேந்திரன் கடும் அப்செட்டில் இருந்துவருகிறார். சி.பி.ஐ அதிகாரிகளின் பார்வை தன்மீது உள்ளதால் எந்தக் காரியத்தையும் யோசித்தே முடிவெடுப்பதாக அவருக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசி.பி.ஐ சோதனையின்போது, டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் வீட்டிலிருந்து எந்தவித முக்கிய ஆவணங்களும் சிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் ஓரளவு மனநிம்மதியாக இருந்தாலும், மாதவராவ், தரகர்கள், அதிகாரிகள் ஆகியோரின் வாக்குமூலம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடக்கூடாது என்ற கவலையில் காக்கிகள் உள்ளனர். குட்கா நிறுவனத்தின் குடோன் இருந்த பகுதியில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளில் சிலர் தப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர், துணை கமிஷனராக சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றுகிறார். அவர் தப்பியது எப்படி என்ற பேச்சு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக உள்ளது. அதே நேரத்தில் குட்கா வழக்கில் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சோதனைக்குப் பிறகு அடுத்தடுத்த சிக்கல்கள் வரவுள்ளது. சி.பி.ஐ நடவடிக்கைக்கு முன், அந்த அதிகாரிகள் மீது முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கலாமா என்ற ஆலோசனையில் காவல்துறை உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அரசின் சிக்னலுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.\nடி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனின் பதவி, குட்கா வழக்கால் ஆட்டம் கண்டுள்ளதால் அவரின் பதவியைக் குறி வைத்து டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள சீனியர்கள் போட்டிபோட தொடங்கியுள்ளனர். திரிபாதியும் மகேந்திரனும் ரேஸில் இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால், அமைதியாக ஜாங்கிட் காயை நகர்த்திவருகிறார். இவர்களில் திரிபாதிக்கே டி.ஜி.பி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://senthilvayal.com/2019/04/09/18-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-06-26T14:42:31Z", "digest": "sha1:B4AFOOEBPIGX6OVCVPOEA3SGJNY4LVMJ", "length": 47604, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள்! – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n18 சட்டசபை இடைத்தேர்தல் – சர்வே முடிவுகள் – முதல்வரை முடிவு செய்யும் ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்\nமீண்டும் மோடியா… ராகுல் காந்தியா’ என்பதைத் தீர்மானிக்கப்போகும் 17-வது நாடாளுமன்றத் தேர்தல், தேசம் முழுவதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இப்போது நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெறும் 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, இந்த இடைத்தேர்தலை ‘மினி’ சட்டமன்றத் தேர்தல் என்றே வர்ணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nஇடைத்தேர்தலில் குறைந்தது எட்டு தொகுதிகளில் வெற்றிபெற்றாகவேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு. அவர்கள் அந்த எட்டிலும் வெற்றிபெறக் கூடாது என்கிற முனைப்பில் இருக்கிறது தி.மு.க. இன்னொரு பக்கம் தினகரனின் அ.ம.மு.க தீவிரமாக வேலை பார்க்கிறது. இப்படியான தேர்தல் களத்தில், மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ளக் களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம்.\nஇடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். அடுத்து யார் முதல்வர், யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விகளை எழுப்பி, சின்னம் பொறித்த சர்வே படிவங்களை வாக்காளர்களிடம் அளித்துப் பூர்த்திசெய்யும் வழக்கமான சம்பிரதாயங்களை எல்லாம் உடைத்து, அறிவியல்பூர்வமான படிவத்தைத் தயார் செய்தோம். ஒன்பது கேள்விகளுடன் நுணுக்கமாக சர்வே படிவம் தயாரிக்கப்பட்டது.\nஒரு தொகுதிக்குச் சுமார் 600 நபர்களிடம் சர்வே எடுக்கத் தீர்மானித்தோம். இதற்காக விகடன் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள் என 90 பேர் தொகுதிகளில் சர்வே பணியை மேற்கொண்டார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். தொகுதியின் புவியியல் அமைப்பு, எல்லைகள், ஊர்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தொகுதியின் முக்கியமான ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயணித்தது சர்வே டீம்.\nஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், இளைஞர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் எனப் பல தரப்பினரும் பங்குபெறும் வகையில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. 18 தொகுதிகளில் மொத்தமாக 10,472 பேரைச் சந்தித்தது ஜூ.வி டீம். சர்வேயில் பங்கேற்றவர்களிடம் செல்போன் எண்கள் பெறப்பட்டன. சர்வே பணி முடிந்து, கணக்கிடும் பணியை மேற்கொண்டபோது, நூறு நபர்களுக்கு பத்து நபர்கள் வீதம் சர்வேயில் பங்கு பெற்ற வாக்காளர்களிடம் பேசி, அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்பினார்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. சர்வே படிவங்களை ஆய்வு செய்தபோது அவற்றில் 899 படிவங்கள் செல்லாதவை என்று கண்டறியப்பட்டன. அவற்றை ஒதுக்கிவிட்டு, 9,573 படிவங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டோம்.\nசில தொகுதிகளில் தினகரனின் அ.ம.மு.க., அ.தி.மு.க-வின் வெற்றியைப் பறிக்கிறது. தேனி எம்.பி தொகுதிக்குள் வரும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபைத் தொகுதிகளில் அ.ம.மு.க-வின் தாக்கம் அதிகம். அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும் தொகுதிகளில்கூட அ.ம.மு.க ஆதிக்கத்தால் தோல்வியைத் தழுவலாம். தி.மு.க வெற்றிபெற முடியாத தொகுதிகளில்கூட அக்கட்சி வெற்றிபெறுவதற்கு அ.ம.மு.க காரணமாக அமையலாம். பரமக்குடி தொகுதியில், கமல்ஹாசனுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.\nமார்ச் இறுதியில்தான் சர்வே பணியை மேற்கொண்டோம். அப்போதையசூழலில் மக்களின் மனநிலையை இந்தக் கருத்துக்கணிப்பு பிரதிபலிக்கிறது. நமது கருத்துக்கணிப்புக்குப் பிறகு, பிரசாரம் மிகத் தீவிரமாக நடக்க ஆரம்பித்திருக்கிறது. எட்டுத்திக்கிலும் பாயத் தொடங்கியிருக்கிறது பணம். கருத்துக்கணிப்புக்கும் வாக்குப்பதிவுக்கும் இடைப்பட்ட 15 நாள்களில் கள நிலவரத்தை இதுபோன்ற காரணிகள் தீர்மானிக்கலாம். அது கணிப்புகளையும் புரட்டிப்போடலாம்.\nஇதோ… 18 தொகுதிகளின் சர்வே ரிசல்ட் இங்கே அணிவகுக்கின்றன\nதி.மு.க-வில் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க-வில் வைத்தியநாதன், அ.ம.மு.க-வில் டி.ஏ.ஏழுமலை போட்டியிடுகிறார்கள். வைத்தியநாதன் ஏற்கெனவே பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றியதால், தொகுதியில் நன்கு அறிமுகம் உண்டு. மத்திய, மாநில அரசுகளின்மீதான அதிருப்தி மக்கள் மத்தியில் கடுமையாக உள்ளது. பிரசாரத்தில் தி.மு.க-வினர் தீயாக வேலைசெய்கிறார்கள். ஏற்கெனவே எம்.பி-யாக இருந்ததால், கிருஷ்ணசாமிக்கு தொகுதியில் அறிமுகம் தேவையில்லை. பூந்தமல்லியில் சூரியனுக்கே வெற்றி.\nஅ.தி.மு.க-வில் ஆர்.எஸ்.ராஜேஷ், தி.மு.க-வில் ஆர்.டி.சேகர், அ.ம.மு.க-வில் வெற்றிவேல், ம.நீ.ம-த்தில் பிரியதர்ஷினி போட்டியிடுகின்றனர். ஆர்.டி.சேகரின் வெற்றிக்காக சேகர்பாபு தீவிரமாக வேலை பார்க்கிறார். ரயில்வே யூனியன் கண்ணையா தரப்பினர் வாக்குசேகரிப்பும் தி.மு.க-வுக்கு ப்ளஸ். எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆர்.டி சேகர் ஒடிக்கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு இங்கு பரவலான செல்வாக்கு உண்டு. தி.மு.க ஓங்கியிருக்கிறது.\nதி.மு.க-வில் இதயவர்மன், அ.தி.மு.க-வில் எஸ்.ஆறுமுகம், அ.ம.மு.க-வில் கோதண்டபாணி போட்டியிடுகின்றனர். தொகுதியில் வன்னியர், பட்டியல் சமூகத்தினர் அதிகம். இதயவர்மன் செலவுகளில் தாராளம் காட்டுகிறார். சொந்தக் கட்சியில் நடக்கும் உள்ளடி வேலைகள் இவருக்கு மைனஸ். அ.தி.மு.க வேட்பாளர் ஆறுமுகத்துக்கு திருக்கழுக்குன்றம், திருப்போரூர் பகுதிகளில் உள்ள பா.ம.க வாக்குகள் பெரும் பலம். தி.மு.க முந்துகிறது.\nஅ.தி.மு.க-வில் வெங்குப்பட்டு சம்பத், தி.மு.க-வில் அசோகன், அ.ம.மு.க-வில் மணி போட்டியிடுகிறார்கள். வன்னியர், முதலியார் சமூக வாக்குகள்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும். சம்பத் வன்னியர் என்பதுவும், பா.ம.க கைகோத்திருப்பதுவும் ப்ளஸ். அசோகனும் மணியும் முதலியார் என்பதால், அந்தச் சமூக வாக்குகள் பிளவுபடலாம். அரக்கோணம் எம்.பி தொகுதியின் காஸ்ட்லி வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சோளிங்கரை ஸ்பெஷலாகக் கவனிக்கிறார். அ.தி.மு.க வாக்குகளை ஓரளவுக்குப் பிரித்து அ.ம.மு.க சவால் கொடுக்கும். இங்கே உதயசூரியனுக்கு ஆதரவு அதிகம்.\nஅ.தி.மு.க-வில் கஸ்பா மூர்த்தி, தி.மு.க-வில் காத்தவராயன், அ.ம.மு.க-வில் ஜெயந்தி பத்மநாபன் போட்டியிடுகிறார்கள். தனித்தொகுதி என்றாலும் இஸ்லாமியர், வன்னியர், முதலியார் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். கஸ்பா மூர்த்தி எளிமையானவர் என்பது ப்ளஸ். அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் குழிபறிப்பதும், பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்காததும் மைனஸ். ஜெயந்தி பத்மநாபன், ‘‘என் தோல்விபற்றிக் கவலை இல்லை. தி.மு.க வெற்றிக்கு, அ.ம.மு.க காரணமாக இருக்கும்’’ என்று சொல்லியிருப்பது, தி.மு.க-வுக்கு டபுள் ப்ளஸ்.\nஅ.தி.மு.க-வில் ஜோதிராமலிங்க ராஜா, தி.மு.க-வில் வில்வநாதன், அ.ம.மு.க-வில் பாலசுப்பிரமணி போட்டியிடுகிறார்கள். தலைமையிடத்தில் பிடிவாதம்பிடித்து ஜோதிராமலிங்க ராஜாவை, அமைச்சர் கே.சி.வீரமணி நிறுத்தியுள்ளார். சாதிரீதியான வாக்குகள் ஜோதிராமலிங்க ராஜாவுக்கு மைனஸ். வேலூர் எம்.பி தொகுதிக்குள்தான் ஆம்பூர் தொகுதி இருக்கிறது. மகனுக்காக துரைமுருகன் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார். கணிசமாக இருக்கும் இஸ்லாமியர் வாக்குகள் தி.மு.க-வுக்குச் செல்கிறது. தி.மு.க ஜெயிக்கும்.\nதி.மு.க-வில் ஆ.மணி, அ.தி.மு.க-வில் கோவிந்தசாமி, அ.ம.மு.க-வில் டி.கே.ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர். முல்லைவேந்தன் தேர்தல் பணியில் ஒதுங்கியிருப்பது ஆ.மணிக்கு மைனஸ். முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் தனிப்பட்ட செல்வாக்கு டி.கே.ராஜேந்திரனுக்கு ப்ளஸ். கருத்துக் கணிப்பின்படி, அ.தி.மு.க. இங்கே ஒரு அடி முந்துகிறது. கடைசி நேரத்தில் அ.ம.மு.க தீவிரமாக வேலைப் பார்க்கலாம். நிலைமை அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கிறது.\nதி.மு.க-வில் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க-வில் சம்பத்குமார், அ.ம.மு.க-வில் ஆர்.ஆர்.முருகன் போட்டியிடுகின்றனர். ஆளும்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, எட்டு வழிச்சாலை பாதிப்பு ஆகியவை கிருஷ்ணகுமாருக்கு ப்ளஸ். முல்லைவேந்தன் ஒதுங்கியிருப்பது மைனஸ். ஆர்.ஆர்.முருகன் கரன்ஸியை அள்ளிவிடுகிறார். முருகனின் பரிசுப் பெட்டி சின்னத்துக்கு அடுத்து, குக்கர் சின்னத்தில் இன்னொரு முருகன் போட்டியிடுவது அவருக்குப் பாதிப்பை உண்டாக்கலாம். இங்கு தி.மு.க-வுக்கே வெற்றி.\nஅ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ தேன்மொழி சேகர், தி.மு.க-வில் செளந்தரபாண்டியன், அ.ம.மு.க-வில் தங்கதுரை போட்டியிடுகின்றனர். தேன்மொழி சேகருக்குத் தொகுதியில் நல்ல அறிமுகம் உண்டு. கடந்த முறை இரட்டை இலையில் ஜெயித்தவர் தங்கதுரை. இவர் டி.டி.வி தினகரனின் செல்வாக்கை மட்டுமே நம்பியிருக்கிறார். செளந்தரபாண்டியன் வழக்கறிஞர். இதே பகுதியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் வாக்குகள் பலமாக இருக்கின்றன. அ.தி.மு.க-வில் வாக்குகள் பிரிவது இவருக்குக் கூடுதல் பலம். இங்கு தி.மு.க-வுக்கே வெற்றி.\nதி.மு.க-வில் டி.கே.ஜி நீலமேகம், அ.தி.மு.க-வில் காந்தி, அ.ம.மு.க-வில் ரெங்கசாமி போட்டியிடுகின்றனர். நீலமேகத்துக்குத் தொகுதியில் நல்ல அறிமுகம் உண்டு. ஸ்மார்ட் சிட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார் அவர். காந்திக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாதது மைனஸ். ரெங்கசாமி, அமைதியானவர், நல்லவர் எனப் பெயரெடுத்திருக்கிறார். கடைசி நேரத்தில் ‘காந்தி’, ‘நோட்டை’ இறக்கப்போவதாகவும் தகவல். அ.ம.மு.க பிரிக்கும் ஓட்டுகள் தி.மு.க-வுக்குக் கூடுதல் பலம்.\nஅ.தி.மு.க-வில் ஜோதி, தி.மு.க-வில் எஸ்.ஏ.சத்யா, அ.ம.மு.க-வில் பெங்களூரு புகழேந்தி, ம.நீ.ம-த்தில் ஜெயபால் போட்டியிடுகின்றனர். மக்களுக்கான போராட்டத்தில் தன் கணவர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிபோனதாகச் சொல்லி வாக்குக்கேட்கிறார் ஜோதி. சத்யா முன்பு நகராட்சித் தலைவராக இருந்து செய்த பணிகள் வெகுவாகப் பேசப்படுகிறது. தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அவருக்குக் கூடுதல் பலம். அ.ம.மு.க-வை விடவும் ம.நீ.ம-த்துக்கு செல்வாக்கு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலை, தி.மு.க-வை வெற்றிபெற வைக்கும்.\nஅ.தி.மு.க-வில் நாகராஜன், தி.மு.க-வில் இலக்கியதாசன், அ.ம.மு.க-வில் மாரியப்பன் கென்னடி போட்டியிடுகிறார்கள். நாகராஜன் இளையான்குடி யூனியனில் நன்கு அறிமுகமானவர். இங்கே முஸ்லிம் வாக்காளர்கள்தான் அதிகம். அ.தி.மு.க-வுக்கு அவர்களின் வாக்குகள் கிடைப்பது சந்தேகமே. தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை பலமாக இருக்கின்றன. மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என அதிருப்தி நிலவுகிறது. இங்கு உதயசூரியனுக்கே வெற்றி.\nதி.மு.க-வில் மகாராஜன், அ.தி.மு.க-வில் லோகிராஜன் அ.ம.மு.க-வில் வழக்கறிஞர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள். பட்டியல் சமூகத்தினர் மத்தியில் தினகரனுக்கு ஆதரவு இருக்கிறது. அ.தி.மு.க-வின் கோட்டை என்று சொல்லப்படும் ஆண்டிபட்டித் தொகுதியில் எம்.ஜி.ஆரின் வாக்குகள் பிரிவது உதயசூரியனுக்கு சாதகம். சர்வேயில் இரண்டாவது இடத்தில் அ.ம.மு.க இருக்கிறது. இங்கு எம்.ஜி.ஆரின் தொகுதி கருணாநிதியின் கட்சிக்குப் போகும்.\nஅ.தி.மு.க-வில் மயில்வேல், தி.மு.க-வில் சரவணக்குமார், அ.ம.மு.க-வில் முன்னாள் பெரியகுளம் எம்.எல்.ஏ-வான கதிர்காமு போட்டியிடுகிறார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் பெரியகுளம். ஆனால், அங்கு அவருக்கு அதிருப்தி அதிகம். தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் வேட்பாளருக்காகக் கடுமையாக வேலைசெய்கிறார்கள். அ.ம.மு.க-வுக்குப் பெரியகுளத்தில் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அ.தி.மு.க வாக்குகள் பிரிவதால் தி.மு.க-வுக்கே வெற்றி.\nதி.மு.க-வில் வி.சீனிவாசன், அ.தி.மு.க-வில் ராஜவர்மன், அ.ம.மு.க-வில் எஸ்.ஜி சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்கள். மாதக்கணக்கில் வேலையில்லாமல் தவித்த பட்டாசுத் தொழிலாளர்கள் அ.தி.மு.க மீது பட்டாசாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள். ஆளும்கட்சிமீது கடும் அதிருப்தி நிலவுகிறது. ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால், அந்த வாக்குகளுடன் பட்டாசுத் தொழிலாளர்களின் வாக்குகளையும் தி.மு.க பெறும். அ.தி.மு.க-வின் வாக்குகள் இரண்டாகப் பிரிந்துள்ளதால் சூரியனுக்கே வெற்றி.\nஅ.தி.மு.க-வில் சதன் பிரபாகர், தி.மு.க-வில் சம்பத்குமார், அ.ம.மு.க-வில் டாக்டர் முத்தையா, ம.நீ.ம-த்தில் சங்கர் போட்டியிடுகிறார்கள். கமல்ஹாசனின் சொந்த ஊரான இங்கு சங்கர் ஓரளவு வாக்குகளைப் பெறுவார். ஆளும்கட்சிமீதான அதிருப்தி, கம்யூனிஸ்ட் வாக்குவங்கி, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனின் பிரசாரம் ஆகியவை தி.மு.க-வுக்கு ப்ளஸ். முதலிடம் பிடிக்கிறது தி.மு.க.\nஅ.தி.மு.க-வில் சின்னப்பன், தி.மு.க-வில் ஜெயக்குமார், அ.ம.மு.க-வில் ஜோதிமணி போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காததால், போட்டி வேட்பாளராகக் குதித்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ-வான மார்கண்டேயன். ஆளும்கட்சிமீதான அதிருப்தியும் அ.தி.மு.க ஓட்டுகளின் பிளவும் ஜெயக்குமாருக்கு ப்ளஸ். கனிமொழி தூத்துக்குடி எம்.பி தொகுதியில் போட்டியிடுவதால் தி.மு.க-வினர் தீயாக வேலை பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வின் வாக்குகள் இங்கே மூன்றாகச் சிதறுவதால், தி.மு.க-வுக்கே வெற்றி.\nகடந்த பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றிபெற்றார். இப்போது தி.மு.க-வில் பூண்டி கலைவாணன், அ.தி.மு.க-வில் ஜீவானந்தம், அ.ம.மு.க-வில் எஸ்.காமராஜ் போட்டியிடுகிறார்கள். பூண்டி கலைவாணன் தொகுதி மக்களுக்குப் பரிச்சயமானவர். ‘ஜீவானந்தம் அமைச்சராக இருந்தபோது சொந்த ஊரான நாகப்பட்டினத்துக்கே எதுவும் செய்யாதவர், திருவாரூருக்கு வந்து என்ன செய்யப்போகிறார்’ என்கிற அதிருப்தி இவர்மீது இருக்கிறது. இங்கு தி.மு.க-வுக்கே வெற்றி.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/42.111.150.166", "date_download": "2019-06-26T14:22:10Z", "digest": "sha1:NFA5URXMGZKUKG235VXGQZAVRO5Q3WOV", "length": 5952, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "42.111.150.166 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 42.111.150.166 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n12:22, 25 மே 2019 வேறுபாடு வரலாறு +1 1972 →1972 நாட்காட்டி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:10:20Z", "digest": "sha1:S23VGTHMQRED3OJI7GPSRFKULYL7T4D3", "length": 6759, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரிய விளம்பர நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தென் கொரிய விளம்பர நடிகர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தென் கொரிய விளம்பர நடிகைகள் (1 பகு, 7 பக்.)\n\"தென் கொரிய விளம்பர நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.\nதென் கொரிய விளம்பர நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF)", "date_download": "2019-06-26T14:25:43Z", "digest": "sha1:VMOWNKJJ2RWGZVTNTL6JEH5AKTWV5HEE", "length": 6983, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாயுமானி (காற்றுத் தூய்மமானி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 வாயுமானி (காற்றுத் தூய்மமானி)\n1.1 வாயுமானி (காற்றுத் தூய்மமானி)(eudiometer)\nவாயுமானி (காற்றுத் தூய்மமானி என்றும் அழைக்கப்படும்)(eudiometer) என்பது இயற்பியல் அல்லது வேதியியல் மாற்றத்தின்[1] பின் வாயு கலவையின் கொள்ளளவில் ஏற்படும் மாற்றத்தை அளவிடும் ஒரு ஆய்வகச் சாதனம் ஆகும்.\nவிக்சனரியில் eudiometer என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/jun/14/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3171039.html", "date_download": "2019-06-26T14:19:01Z", "digest": "sha1:6O6IXQ5XBBHOPVVZFJV6SC6ZN7N4J5SW", "length": 8813, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளின் விவரத்தை வெளியிட வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஅங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளின் விவரத்தை வெளியிட வலியுறுத்தல்\nBy DIN | Published on : 14th June 2019 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவையில் அங்கீகாரம் பெற்று இயங்கும் தனியார் பள்ளிகள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு அனுப்பிய கடிதம்:\nபள்ளிக் கல்வி இயக்குநர் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையிலும், நாளேடுகளிலும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்த நிலையில், கோவையில் அங்கீகாரம் பெறாமல் போலியாகச் செயல்படும் இளம் மழலையர் பள்ளிகள் 113 எனவும், மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் 14, அங்கீகாரத்தை புதுப்பிக்கத் தவறிய பள்ளிகள் 14 என மொத்தமாக கோவை மாவட்டத்தில் 141 பள்ளிகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் விதிகளின்படி இயங்கவில்லை என்பது தெரியவந்தது.\nஇதில் குறிப்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் இளம் மழலையர் பள்ளிகள் 12 என வட்டாரக் கல்வி அலுவலர் முதலில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சில நாள்களில் வெளியிடப்பட்ட குறிப்பில் இளம் மழலையர் பள்ளிகள் 17 எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும் வகையில் அறிவிக்க வேண்டும். இதேபோல பள்ளிக் கட்டடத்தின் உறுதித் தன்மைச் சான்று, தீ தடுப்புச் சான்று, சுகாதாரச் சான்று என அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டும். இதை போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/jun/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3170851.html", "date_download": "2019-06-26T14:51:23Z", "digest": "sha1:NVZ262QT4QU7ZOGUYNR3SYANCQ2AWNJY", "length": 8172, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "கடியப்பட்டினத்தில் கடல் கொந்தளிப்பால் வீடுகள் இடியும் அபாயம்: எம்.எல்.ஏ. போராட்ட அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகடியப்பட்டினத்தில் கடல் கொந்தளிப்பால் வீடுகள் இடியும் அபாயம்: எம்.எல்.ஏ. போராட்ட அறிவிப்பு\nBy DIN | Published on : 14th June 2019 06:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடல் கொந்தளிப்பால் கடியப்பட்டினத்தில் வீடுகள் இடியும் அபாயம் உள்ளதாக கூறி, மணவாளக்குறிச்சியில் சனிக்கிழமை (ஜூன் 15) போராட்டம் நடைபெறுகிறது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால், ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி விழுகிறது. இரு நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் போது அந்தோணியார் தெருவில் தடுப்புச் சுவரை தாண்டி கடல் நீர் புகுந்ததால் தடுப்புச் சுவர் சேதமடைந்து கடலில் சரிந்தது. இதனால் அங்கு 400 வீடுகளை கடல் நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அப்பகுதியை வியாழக்கிழமை பார்வையிட்ட குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்களின் உடமைகள் பெரும் பாதிப்படைகின்றன.\nதற்போது கடல் கொந்தளிப்பு காரணமாக அந்தோணியார் தெருவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மணற்பரப்பு கடலில் மூழ்கியுள்ளது. 200 மீட்டர் அளவில் தடுப்புச் சுவர் சேதமடைந்து கடலில் விழுந்துள்ளது. இதனால் வீடுகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு காண அரசு முயலவில்லை.\nஎனவே, கடியப்பட்டினம் கிராம மக்களை திரட்டி சனிக்கிழமை (ஜூன் 15) காலை 11 மணிக்கு மணவாளக்குறிச்சி சந்திப்பில் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jun/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3170507.html", "date_download": "2019-06-26T13:48:24Z", "digest": "sha1:3RF3LEJBYUZ3DRE7FTSEU3ILZGIJPOXB", "length": 7071, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி\nBy DIN | Published on : 13th June 2019 09:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி ஜெயந்திரா மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.\nதீயணைப்புத்துறையின் திருச்சி மாவட்ட உதவிக் கோட்ட அலுவலர் சு.கருணாகரன் தலைமையில் நிலைய அலுவலர் செ.லியோ ஜோசப் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் திருச்சி ஜெயந்திரா மேல்நிலைப்பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகைப் பயிற்சியை செய்து காட்டினர்.\nஒத்திகையின் போது மாடிக் கட்டடத்தில் இருக்கும் பாதிக்கப்பட்டவரை பத்திரமாக மீட்பது, மாடிக் கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்தை மேலும் பரவாமல் தடுப்பது, பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பன போன்றவற்றை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். தீயணைப்புத்துறையினர் பயன்படுத்தும் அவசர கால ஆம்புலன்ஸ், நுரை மூலம் தீயை அணைக்கும் வாகனம், தீ தடுப்பு விழிப்புணர்வுப் பேருந்து ஆகியன குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு காண்பித்து அவற்றின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளித்தனர்.\nநிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/entertainment/04/210312?ref=right-popular-cineulagam", "date_download": "2019-06-26T15:07:25Z", "digest": "sha1:ER6R3QRDQLK7S2CXULADMIGVDMOC4YFA", "length": 10695, "nlines": 129, "source_domain": "www.manithan.com", "title": "டிக் டாக் மியூசிகலி என்ற பெயரில் இந்த பெண் செய்ததை பாருங்க.. இளைஞர்கள் மத்தியில் பரவி காட்சி..! - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nடிக் டாக் மியூசிகலி என்ற பெயரில் இந்த பெண் செய்ததை பாருங்க.. இளைஞர்கள் மத்தியில் பரவி காட்சி..\nஇன்றைய சமுதாயத்தில் டிக் டாக் மியூசிகலி செய்யாத எந்த ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை அனைவரும் டிக் டாக்கில் மூழ்கியே இருக்கிறார்கள். காரணம் தன்னை அழகாக மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள வேண்டும் என்பது தான்.\nஆனால் அதுவே இவர்கள் டிக் டாக்கில் ஒரு கட்டம் மேலே சென்று ஆபாசமாக பதிவிடுவதும், தேவையற்ற விமர்சனங்களை செய்துவதும் என அனைத்திற்க்குமே டிக் டாக் மியூசிகலியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்..\nமேலும் இப்படி பல வீடியோ காட்சிகளை நாம் அன்றாடம் பார்த்து வந்திருந்தாலும், அப்படி ஒரு காட்சியும் தான் இந்த காணொளியிலும் பார்க்க போகிறோம். ஆம் குறித்த காணொளியில் பெண் ஒருவர் புகைப்பிடிப்பது போல டிக் டாக் செய்து பலரையும் ஆச்சர்யபட வைப்பதும், மற்றொரு காட்சியில் காமெடியாக கல்யாண மாப்பிள்ளையை வைத்து கலாய்ப்பதும் பலரது பார்வைக்கு சிரிக்க வைத்துள்ளது..\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/world/04/219678?ref=view-thiraimix", "date_download": "2019-06-26T15:10:46Z", "digest": "sha1:UXB3A6I2PEHND3EIOJ4JS3TBWYIQVCIK", "length": 15106, "nlines": 133, "source_domain": "www.manithan.com", "title": "லக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா? - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nலக்கி மேனுக்கு கிடைத்த அதிஷ்டம்.. டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கட்டி.. இதன் விலை எவ்வளவு தெரியுமா\nஉலகம் முழுவதும் தங்கத்தை தேடும் மனிதர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அது ’மம்மி ரிடர்ன்ஸ்’ திரைப்படத்தில் காட்டப்படுவதைப் போல புதையலாகவோ அல்லது தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கிடைக்கும் சிறு தூசு துரும்புகள் கலந்த தங்கக் குப்பைகளாகவோ கூட இருக்கலாம்.\nஆப்ரிக்காவின் சில பகுதிகளில் ஓடும் ஆற்று நீரில் இருந்து கூட தங்கத் துகள்களைத் தேடிப் பிரித்தெடுக்கிறார்கள். விஷயம் ஒன்று தான் மனிதர்களின் தீராத தங்க தாகம்.\nஅப்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் தங்க வயல்பகுயில் தங்கம் தேடித்திரிபவர்கள் பலருண்டு. ஏனெனில் அங்கே 1809 ஆம் ஆண்டு முதலே தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பலரும் தங்கத்துகள்கள் தேடி அங்கு அலைந்து திரிவதுண்டு. கையில் மெட்டல் டிடெக்டர் சகிதமாக பலர் அங்கே இப்படித்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.\nஅங்கே உப்புப் புதர்களுக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நெடுங்காலமாக மக்கள் நம்புகின்றனர். அங்கே தங்கத் துகள்கள் கிடைப்பது சகஜம் தானென்றாலும் கூட இப்படித் தங்கக் கட்டி கிடைப்பது அரிதான விஷயமே அங்கு தங்கம் தேடி சுற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒருவருக்குத் தான் இப்போது இப்படியொரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. சுமார் 1.4 கிலோ கிராம் எடை கொண்ட பழங்காலப் பொற்கட்டி. பார்ப்பதற்கு கல் போல கெட்டியாக இருக்கிறது.\nஇந்தத் தங்கக் கட்டியைக் கண்டெடுத்த தங்க வேட்டை மனிதன், இதன் மதிப்பை அறிவதற்காக மேற்கு ஆஸ்திரேலியாவின், கல்கூர்லியில் இருக்கும் தங்கமதிப்பீட்டுக் கடை ஒன்றை அணுகியிருக்கிறார். அங்கே இந்தத் தங்கக்கட்டியின் எடை, இன்றைய மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன.\nசுமார் 1.4 கிலோகிராம் எடை கொண்ட இந்த தங்கக் கட்டியின் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு $99,000 AUD. யூரோப்பியன் டாலர் மதிப்பு $68,760. நம்மூர் ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக 48,00000 லட்சம் ரூபாய்கள். அந்த லக்கி மேனின் பெயர் இன்னும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. ஆயினும் அவர் கண்டெடுத்த தங்கக் கட்டியை மதிப்பிட்ட ஆஸ்திரேலிய தங்க மதிப்பீட்டுக் கடை, இப்படியொரு அதிசயத்தை மதிப்பிட முதன்முதலாக தங்களை அணுகியதற்காக நன்றி தெரிவித்து அத்தகவலை முகநூலிலும் தற்போது பகிர்ந்துள்ளது.\nமேற்கு ஆஸ்திரேலியாவின் தங்கவயல் பகுதியில் பரவியுள்ள உப்புப் புதர்களுக்கு அடியில் சுமார் 18 இஞ்ச் ஆழத்தில் மெட்டல் டிடெக்டர் கொண்டு இதன் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இங்கே இது சகஜம் என்ற போதும் இது போன்ற மான்ஸ்டர் சைஸ் தங்கம் கிடைப்பது அரிது தான். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு மற்றொரு தங்க வேட்டை மனிதருக்கு $80,000 மதிப்புள்ள தங்கக் கட்டி கிடைத்ததாகத் தகவல். முன்னதாக 2016 ஆம் ஆண்டிலும் கூட வேறொரு தங்க வேட்டைக்காரருக்கு $190,000 மதிப்பிலான தங்கக் கட்டி மெட்டல் டிடெக்டர் தேடுதல் வேட்டை மூலமாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_503.html", "date_download": "2019-06-26T14:33:33Z", "digest": "sha1:HU4E3UZPXNQRF4SUYDUFKCAXPRPDU6TG", "length": 16362, "nlines": 101, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மஹிந்த, கோத்தபாயவை கொலை செய்ய புலம்பெயர் அமைப்புகள் முயற்சி!! சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled மஹிந்த, கோத்தபாயவை கொலை செய்ய புலம்பெயர் அமைப்புகள் முயற்சி சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்\nமஹிந்த, கோத்தபாயவை கொலை செய்ய புலம்பெயர் அமைப்புகள் முயற்சி சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்\nமீண்டும் வன்முறையை ஏற்படுத்துவதற்காக பாதளஉலக குழுக்களின் ஆதரவை பெறுவதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மேற்கொண்டுள்ள முயற்சிகுறித்த தகவல்கள் புலனாய்வு அமைப்பினருக்கு கிடைத்துள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது\nபுளியங்குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளது என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பாதள உலகத்தவர்களுடன் எப்படி தொடர்பினை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறித்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தகவல் வெளியிட்டார் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட மிக முக்கிய பிரமுகர்களை இலக்கு வைப்பதற்காக புலம்பெயர் தமிழர்கள் பாதள உலகத்தவர்களிற்கு பணம் வழங்குகின்றனர் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_14.html", "date_download": "2019-06-26T15:15:35Z", "digest": "sha1:NLCAT3CZB4IANBAXNE4PEGF7MCBJR7PG", "length": 7359, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "காணிகள் விடுவிப்புக்கு காரணம் சர்வதேசம் தான்! - என்கிறார் முதலமைச்சர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காணிகள் விடுவிப்புக்கு காரணம் சர்வதேசம் தான்\nகாணிகள் விடுவிப்புக்கு காரணம் சர்வதேசம் தான்\nஜெ.டிஷாந்த் (காவியா) May 04, 2018 இலங்கை\nசர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் மாத்திரமே, வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “காணிகளை விடுவிக்க தமிழ் மக்களுக்காக யாரும் எதனையும் செய்யவில்லை. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2019/04/22_8.html", "date_download": "2019-06-26T15:04:59Z", "digest": "sha1:4B7TZGGN23GMESHXM5HKFNOKNVZECU3W", "length": 11782, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "தற்கொலைத் தாக்குதல்களுக்கும்!! புலிகளுக்கும் தொடர்பில்லை..!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தற்கொலைத் தாக்குதல்களுக்கும்\nஇலங்கையில் நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.\nஇறுதிப் போர் உட்பட ஒரு போதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தவில்லை என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியும் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா தெரிவிக்கையில், புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒருபோதும் அவர்கள் உத்தி கிடையாது.\nபிரான்ஸ் தெரிவிக்கையில், முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல. அது விடுதலைப் போராட்டம்.\nஇலங்கை அரசு தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yazhvenba.wordpress.com/2019/03/19/%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4-19/", "date_download": "2019-06-26T14:21:54Z", "digest": "sha1:23VYYZNBM4JA64GLG66PPM35DZOLSXID", "length": 4396, "nlines": 128, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 21 – யாழ்வெண்பா", "raw_content": "\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 21\nMarch 19, 2019 யாழ்வெண்பா\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 21\nPrevious postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 20\nNext postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 22\n7 thoughts on “ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 21”\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:26:51Z", "digest": "sha1:VGB4SJKPZA2NZTXKK2ABBRJL7KZEK5MU", "length": 5209, "nlines": 49, "source_domain": "thamizmanam.com", "title": "மக்கள் அதிகாரம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் ...\nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | ஓ.என்.ஜி.சி\nஜெயிலர் “சிறைக்கென்று மேனுவல் உண்டு” என்றார். எந்த மேனுவலாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டதுதான் என்று தோழர்கள் சொன்னதும் கடுப்பாகினார். The post ” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். ...\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமக்கள் அதிகாரம் | தமிழ்நாடு | தலைப்புச் செய்தி | அணுக்கழிவு\nதமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றி அம்பானி, அதானி, வேதாந்தா, என கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க பா.ஜ.க. மத்திய அரசு துணைநிற்கிறது. The post நாசகாரத் திட்டங்களை கைவிடு \nமழையில் கரையும் தார் சாலை | பாகலூர் பகுதி ...\nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | அடிப்படை வசதிகள் இன்றி போராட்டம்\nமக்கள் வரிப்பணம் ரூபாய் 40 லட்சம் செலவு செய்யப்பட்டு போடப்பட்ட சாலை, ஒரு நாள் மழைக்கே தாங்காமல் காணாமல் போயுள்ளது. ஊழல் அதிகாரிகள் - காண்ட்ராக்டர்களின் திருட்டு ...\nஇதே குறிச்சொல் : மக்கள் அதிகாரம்\nCinema News 360 Diversity & Inclusion Events General NEP National education policy New Features News Review TNPSC Group 4 Tamil Cinema Uncategorized WordPress.com home improvement national Education அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை குட்டிக்குட்டிச் சாரல்...... சினிமா தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பீஷ்மர் பொது பொதுவானவை பொருளாதாரம் வரைவு தேசியக் கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54566-g-v-prakash-kumar-requested-with-traders-to-buy-farmers-coconuts-in-decent-market-price.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T14:45:55Z", "digest": "sha1:ZZ4KQSP6NWG2F4YJ5SUEU3FRVRJJ7NDC", "length": 11117, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வீழ்ந்து கிடக்கும் விவசாயிகளிடம் பேரம் பேசாதீர்கள்” - ஜி.வி.பிரகாஷ் | g v prakash kumar requested with traders to buy farmers coconuts in decent market price", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“வீழ்ந்து கிடக்கும் விவசாயிகளிடம் பேரம் பேசாதீர்கள்” - ஜி.வி.பிரகாஷ்\nகஜா புயலால் காவிரி டெல்டாவில் வீழ்ந்து கிடக்கும் தென்னை, தேங்காய் விலையை பேரம் பேசி குறைக்க முயற்சிக்க வேண்டாம் என வியாபாரிகளிடம் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், “கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை பார்வையிட நாங்கள் குழுவாக வந்துள்ளோம். வெளியான தகவல்களை காட்டிலும் இங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.\nMost imp now : கஜா புயலால் காவிரி டெல்டாவில் வீழ்ந்து கிடக்கும் தென்னை,தேங்காய் விலையை வாத திறமையால் குறைக்க முயற்சிக்க இது சரியான தருணம் அல்ல.நியாயமான விலை கொடுப்போம் மனிதத்தில் உயர்ந்து நிற்போம் . உடனடியாக கொள்முதல் செய்ய கீழ் கண்ட எண்களில் Nimal: 6374484149 guna 8800391662 pic.twitter.com/5CC3p9aYVZ\nபல லட்சக் கணக்கான மரங்கள் இங்கு வீழ்ந்து கிடக்கின்றன. மின்சாரம் இங்கு வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று சொல்கிறார்கள். அரசு, தன்னார்வலர்கள் என பல தரப்பினரும் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இங்கு போதாத நிலைதான் உள்ளது. இந்த நிலையை மீட்டுக் கொண்டு வர பல மாதங்கள் ஆகும்.\nஇங்கு லட்சக்கணக்கான தேங்காய் மரங்களும், தேங்காய்களும் வீழ்ந்து கிடக்கின்றன. வீழ்ந்து கிடக்கும் தேங்காய்களை விவசாயிகள் விற்க முயன்றால் வியாபாரிகள் குறைவான விலைக்கு வாங்குகிறார்கள். இது மிகவும் தவறான விஷயம் என நினைக்கிறேன். விவசாயிகளுக்கு அவர்களிடம் தற்போது உள்ள தேங்காய் உள்ளிட்ட பொருட்களுக்கு மார்க்கெட் விலை கிடைக்க வழி செய்ய வேண்டும். இந்தப் பணியை யாராவது ஒருங்கிணைக்க வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் பரிசோதனை செய்து குறுகிய கால பயிர் விலைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.\nமுன்னதாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகளில் ஜி.வி.பிரகாஷ் நிவாரணப் பொருட்களை அனுப்பி இருந்தார். தற்போது, பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் சென்று உதவி வருகிறார்.\nநாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ\n“விதைப்புச் சான்றிதழ் இருந்தால் பயிர்க்காப்பீடு பெறலாம்” - ககன் தீப் சிங் பேடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தின் அடுத்த டிஜிபி ஆக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nசுகாதாரத் துறையில் தமிழகம் பின்னடைவு.... காரணம் இதுதான்..\n“இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nதமிழகத்தில் இன்றும் மழை - வானிலை ஆய்வு மையம்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ\n“விதைப்புச் சான்றிதழ் இருந்தால் பயிர்க்காப்பீடு பெறலாம்” - ககன் தீப் சிங் பேடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T14:45:39Z", "digest": "sha1:IEL5A5TAABZ7S4M76EQRJJ6LIFWQ53S5", "length": 8962, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சைக்கிள் சின்னம்", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nகையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கினார் தோனி..\nநாட்டுப் பற்றை வெளிப்படுத்திய தோனி- குவியும் பாராட்டுகள்\nபோர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை\n’ செல்போனை பறித்த சல்மான் கான் மீது புகார்\n“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு\n“தரகர்களை தேர்வு செய்யதான் தேர்தல் அமைப்பு இருக்கிறது” - சீமான் காட்டம்\n“அமமுக வேட்பாளர்கள் பெயருடையவர்களுக்கு குக்கர் சின்னம்” - தினகரன் தரப்பு புகார்\nசைக்கிள்களை திருடி விற்ற டியூசன் மாஸ்டர் கைது\nஅமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கீடு\n“எந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது வெற்றி சின்னம்தான்” - தினகரன் நம்பிக்கை\nஅமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகட்சியாக பதிவு செய்தாலும் குக்கர் சின்னத்தை உடனடியாக தர முடியாது- தேர்தல் ஆணையம்\nதினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா\n“அமமுகவுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nபொதுச் சின்னமாக சைக்கிளை ஒதுக்க நீதிமன்றத்தில் தமாகா மனுத்தாக்கல்\nகையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கினார் தோனி..\nநாட்டுப் பற்றை வெளிப்படுத்திய தோனி- குவியும் பாராட்டுகள்\nபோர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை\n’ செல்போனை பறித்த சல்மான் கான் மீது புகார்\n“கை சின்னத்தை தவிர்த்து மற்றதை தொட்டால் ஷாக் அடிக்கும்” - காங். அமைச்சர் சர்ச்சை பேச்சு\n“தரகர்களை தேர்வு செய்யதான் தேர்தல் அமைப்பு இருக்கிறது” - சீமான் காட்டம்\n“அமமுக வேட்பாளர்கள் பெயருடையவர்களுக்கு குக்கர் சின்னம்” - தினகரன் தரப்பு புகார்\nசைக்கிள்களை திருடி விற்ற டியூசன் மாஸ்டர் கைது\nஅமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் ஒதுக்கீடு\n“எந்தச் சின்னம் ஒதுக்கினாலும், அது வெற்றி சின்னம்தான்” - தினகரன் நம்பிக்கை\nஅமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகட்சியாக பதிவு செய்தாலும் குக்கர் சின்னத்தை உடனடியாக தர முடியாது- தேர்தல் ஆணையம்\nதினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா\n“அமமுகவுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nபொதுச் சின்னமாக சைக்கிளை ஒதுக்க நீதிமன்றத்தில் தமாகா மனுத்தாக்கல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bus+fare?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T13:48:02Z", "digest": "sha1:JZZNQK2P6WSHQ3BFO6IEMCL3D3E6KUF2", "length": 8616, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bus fare", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nநண்பராக பழகியவர் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nஹிமாச்சல் பேருந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக உயர்வு\nநடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட மாணவர்கள் - வீடியோ காட்சி\nசேலத்தில் அடுத்தடுத்து 2 தொழிலதிபர்கள் கடத்தல்\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“நீங்கள் தனியாக இல்லை; நாங்கள் உள்ளோம்” - ராணுவ வீரரின் நெகிழ்ச்சி கதை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nவிபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்\nசர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'\nவிண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nதன்பால் ஈர்ப்பாளர்களிடம் முத்தம் கேட்டு தாக்குதல் நடத்திய நால்வர் கைது\nதுபாயில் பேருந்து விபத்து: 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியத் தொழிலதிபர்\n“இயற்கையின் மீது தீராத காதல்”- 3 லட்சம் மரக்கன்றுகளை வளர்க்கும் அரசுப் பேருந்து நடத்துநர்..\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nநண்பராக பழகியவர் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nஹிமாச்சல் பேருந்து விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக உயர்வு\nநடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட மாணவர்கள் - வீடியோ காட்சி\nசேலத்தில் அடுத்தடுத்து 2 தொழிலதிபர்கள் கடத்தல்\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“நீங்கள் தனியாக இல்லை; நாங்கள் உள்ளோம்” - ராணுவ வீரரின் நெகிழ்ச்சி கதை\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nவிபத்தில் ஒருவர் பலி : நிற்காமல் சென்ற ஓட்டுநரை விரட்டிச்சென்ற காவலர்\nசர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'\nவிண்வெளி போர் ஆயுதங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்\nதன்பால் ஈர்ப்பாளர்களிடம் முத்தம் கேட்டு தாக்குதல் நடத்திய நால்வர் கைது\nதுபாயில் பேருந்து விபத்து: 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியத் தொழிலதிபர்\n“இயற்கையின் மீது தீராத காதல்”- 3 லட்சம் மரக்கன்றுகளை வளர்க்கும் அரசுப் பேருந்து நடத்துநர்..\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58304-after-amit-shah-and-yogi-adityanath-shivraj-s-chopper-denied-permission-to-land-in-west-bengal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T13:51:09Z", "digest": "sha1:VMS7EA5BDXXA46KBCOLNEGMOMYQTR2L2", "length": 9788, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை: மம்தா அதிரடி | After Amit Shah and Yogi Adityanath, Shivraj's chopper denied permission to land in West Bengal", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nசிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை: மம்தா அதிரடி\nஅமித்ஷா, யோகி ஆதித்யநாத் வரிசையில் சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்குவங்க அரசு அனுமதி மறுத்துள்ளது.\nமத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பாஜக தேசிய துணைத் தலைவருமான சிவராஜ் சிங் சவுக்கான், மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு இடங்களில் இன்று தேர்தல் பரப்புரை நடத்த திட்டமிட்டிருந்தார். முர்ஷிதாபாத், மித்னாப்பூர் மாவட்டங்களில் இந்தக் கூட்டம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், முர்ஷிதாபாத்தில் கூட்டம் நடைபெறவிருந்த பகுதியில் சிவராஜ் சிங் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.\nஇதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு கூறுகையில், “முர்ஷிதாபாத்தின் பஹரம்பூரில் சிவராஜ் சிங்கின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதிக் மறுக்கப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். காரக்பூரில் நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்” என்றார்.\nமுன்னதாக, உத்திரப் பிரதேச முதல்வர் யோகிக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கு மேற்குவங்க அரசு அனுமதி வழங்காததால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அவர், காரில் சென்றார். யோகியைப் போல் சிவராஜ் சிங் சவுகானும் இன்று காரில் சென்று ஒரு கூட்டத்தில் மட்டும் பேசுகிறார். மேற்குவங்கத்தில் பாஜகவை பார்த்து மம்தா அரசு பயப்படுகின்றது, அதனால்தான் மக்களை சந்திக்க அனுமதி மறுக்கிறது என்று சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.\nஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\n“கூகுளின் எதிர்காலம் யு டியூப்பில்தான் இருக்கும்” - சுந்தர் பிச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் யோகா தரை விரிப்புகள் திருட்டு\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nபாகிஸ்தான் மீதொரு மற்றொரு துல்லிய தாக்குதல் : உலகக் கோப்பை பற்றி அமித்ஷா\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nமாநில தேர்தல்கள் எதிரொலி : பாஜக தலைவராக தொடர்கிறார் அமித் ஷா\nவாயு புயல் முன்னெச்சரிக்கை: மூன்று லட்சம் பேர் இன்று பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்\n“ஆதித்யநாத் செயல்பாடு முட்டாள்தனமானது” - ராகுல்\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு\nஅமெரிக்காவில் 51 மாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\n“கூகுளின் எதிர்காலம் யு டியூப்பில்தான் இருக்கும்” - சுந்தர் பிச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=62805", "date_download": "2019-06-26T13:55:18Z", "digest": "sha1:YG6QYSE7Q47C7E5YOL2XLQX4MVKNBWYQ", "length": 18883, "nlines": 88, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதமிழர் போரில் தோற்றிருக்கலாம்| மனிதாபிமானத்தில் தோற்கக்கூடாது\nதமிழர் போரில் தோற்றிருக்கலாம்| மனிதாபிமானத்தில் தோற்கக்கூடாது\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில் கூடியிருந்தோம்.எனது அம்மாவும் இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்திருந்தனர். ஒருசகோதரி மட்டும் இந்தியாவிலேயே வாழ்க்கைப்பட்டிருந்தார். அவரது மூத்த மகள் ஜடாசலோமிதனது தாயாரின் மரணம் குறித்து கூறுகையில், எங்கம்மா கலியாணம் முடிச்சு ஒத்த ஆளாகாரைக்குடிக்கு வந்திருந்தாங்க.\nஅவங்க மரணம் நடந்தப்ப தொடந்து ரெலிபோன்அடிச்சுக்கிட்டே இருந்திச்சு. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா...என்னு மாறிமாறி கால் வந்திட்டே இருந்திச்சு. அப்பதான் இவங்க என்னமாதிரிவாழ்ந்திருக்காங்க| நம்ம உறவுங்க மனசில எப்பிடி இடம்பிடிச்சிருந்தாங்க என்னு புரிஞ்சுக்கமுடிஞ்சிசு; என்று குறிப்பிட்டார்.\nஇவர் சொல்லி முடிந்ததும் அருகிலிருந்த எனது சகோதரி\nஇனி பெல்ஜியத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கோ என்று சொன்னார். சலோமியக்கா சொன்னநாடுகளில் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்தவர்களின் வாரிசுகள். இவர்களில்ஆஸ்திரேலியாவில் இருப்பவர் மட்டும் வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பெற்று, வாழ்ந்துவருகிறார். ஏனைய அனைத்து நாடுகளிலும் இருப்பவர்கள் இலங்கையில் வாழ இயலாது என்றுஅரசியல் தஞ்சம் கோரியவர்கள். இந்த நாடுகளில் இங்கிலாந்து மட்டுமே இலங்கைத்தமிழர்களுக்கு தஞ்சம் அளிக்கவேண்டிய தார்மீகக் கடப்பாட்டைக் கொண்டுள்ளது.\nசிரித்திரன் ஆசிரியர் சுந்தர் ஒற்றைக் கண் சோல்பரிப் பிரபு அரசியல் அமைப்பைஉருவாக்கியதாலே அவருக்கு சிங்களவர்கள்தான் தெரிந்தனர். தமிழரின் நலன் - பாதுகாப்புபோன்ற விடயங்கள் அவரது பார்வைக்கு தென்படவில்லைஎன்று அடிக்கடி சொல்வார்.வெள்ளைக்காரர் வெளியேறும் போது, தமிழரையும் சிங்களவரிடம் ஒப்படைத்ததால்தான் இந்தநிலைமை என்பது அவரது கருத்து. அந்த வகையில் தஞ்சம் கோரும் இலங்கைத் தமிழருக்குஇங்கிலாந்து புகலிடம் அளிக்க வேண்டும்தான். ஆனால், ஏனைய நாடுகளுக்கு என்ன தேவைஉள்ளது மனிதாபிமான அடிப்படையிலேயே தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கின்றனர்|வழங் குகின்றனர். வேறு எந்தக் கடப்பாடும் அவர்களுக்கு இல்லை.\nமுன்னர் மணியோடர்பொருளாதாரம்| கொழும்பிலோ ஏனைய இடங்களிலோ பணியாற்றுபவர்கள் தபாற்கந்தோர்மூலமாக குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்பி வைத்தனர். இன்றோ தாம் தஞ்சமடைந்தநாட்டிலிருந்து அனுப்பியதாகச் சொல்லும் தொலைபேசி மணியோசைக்காக காத்திருக்கிறோம்எம்மில் பெருந்தொகையானோர். இந்நிலையில் ஏதிலிகளாக வந்தோரை வடக்கில் வாழவிடமாட்டோம் என்று அடம்பிடிக்கும் அரசியல்வாதிகளும், ஏதோ ஒரு வகையில் தன்னையும்தமிழ் விசுவாசியாகக் காட்ட முனையும் ஆளுநரும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எம்மைதலை குனிய வைத்துள்ளன.\nசிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வவுனியாவில் உள்ள கணிசமானஉள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் நெஞ்சில் கை வைத்துச் சொல்லட்டும்-\nதங்களது உறவுகள் ஆதரவாளர்கள் எவரும் எந்த நாட்டிலும் தஞ்சம் கோரவில்லை என்று.தமிழரின் விருந்தோம்பும் பண்பு, மனிதநேயம் எல்லாம் எங்கே போய்விட்டன இந்த ஏதிலிகளாதமிழரின் இனப்பரம்பலை மாற்றி அமைக்கப்போகின்றனர் இந்த ஏதிலிகளாதமிழரின் இனப்பரம்பலை மாற்றி அமைக்கப்போகின்றனர்இறுதி யுத்தத்தின் பின்னர்ஏற்கனவே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பலர் வவுனியாவிலிருந்தமுகாம்களுக்குச் சென்று தமக்கு ஏற்கனவே அறிமுகமான தமிழ் நண்பர்களுக்கு தங்களாலானஉதவிகளைச் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாம் அறிந்தவரை யாழ்ப்பாணத் தில் சிங்களவருக்குச் சொந்தமாக காணி இருந்ததில்லை.பேக்கரி தொழில் செய்ய வந்தவர்கள் வாடகைக்கு கடைகள், வீடுகள் பெற்றிருந்தினர். அரசஊழியர்கள் தமக்கான விடுதிகளில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு சிங்களப் பகுதிகளில்சொந்தமாகக் காணிகள், வீடுகள் இருந்தன. ஆனாலும், சட்ட விதிகளுக்கு மாறாகநாவற்குழிக்குள் இந்த அரச வீடமைப்புத் திட்ட வீடுகளைப் பிடித்து குடியமர முடிகிறது.\nகூடவேபுதிதாக விகாரைகளும் அமைக்க முடிகிறது. கொழும்பு உட் பட தென்னிலங்கையில்மலையகத்தில் இருந்து தமிழர் விரப்பட்டனரே இவர்களை சட்டத்துக்கு மாறாகவோ சட்டரீதியாகவோ கொண்டுபோய் குடியமர்த்தும் ஆற்றல்/துணிவு இந்த அரசியல் வாதிகளுக்குஉண்டா இவர்களை சட்டத்துக்கு மாறாகவோ சட்டரீதியாகவோ கொண்டுபோய் குடியமர்த்தும் ஆற்றல்/துணிவு இந்த அரசியல் வாதிகளுக்குஉண்டா பறந்தாலும் விடமாட்டேன்என்று பாடியபடி ஜனாதிபதி, நாடாளுமன் றத்தேர்தல்களில் மஹிந்தவை துரத்தித் துரத்திப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் முதலில்குருநாகலில் இப்பணியை முன்னெடுப்பாரா பறந்தாலும் விடமாட்டேன்என்று பாடியபடி ஜனாதிபதி, நாடாளுமன் றத்தேர்தல்களில் மஹிந்தவை துரத்தித் துரத்திப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் முதலில்குருநாகலில் இப்பணியை முன்னெடுப்பாரா அதிதீவிர தமிழ் விசுவாசம் முன்னர் ஒருகட்சிதான் காட்டியது. அது முள்ளிவாய்க்கால் உட்பட பல்வேறு விடயங்களிலும் தனித்து நின்றுதப்பாட்டம் ஆட முனைந்தது. அது முடிய இப்போது ஆளுநர் ஆட முனைந்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் தனியே போய் அஞ்சலி செலுத்துவது, தஞ்சம் என வந்தோரை அகற்றுவதுஎன்று தமிழன்டா என்று காட்ட முனைகிறார். இவர் நல்லூர் கந்தசுவாமி கோயிலின்பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. நல்லது.நல்லூ ரில் சாமி கும்பிடும் ஒவ்வொரு இந்துவும் முஸ்லிம்களுக்கு கடமைப்பட்டவன் என்றஉண்மை இவருக்கு தெரியாது தான். இப்போதுகூட கோயிலுக்கு முன்னால் கற்பூரம் விற்கும்மரபு ரீதியான உரிமை யாரிடம் உள்ளது என்று கோயில் தர்மகர்த்தாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. ஏதிலிகளை துரத்தியடிக்கும் வேலைகள் வேண்டாமே.\nஇந்த ஏதிலிகள் இனவிகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் அல்ல. நாவற்குழி,முல்லைத்தீவு முகத்துவாரம், மகாவலி எல்வலயம் போன்ற விடயங்களில் காட்ட வேண்டியஅக்கறையை விட்டுவிட்டு ஏதிலிகளை துரத்த முனையும் போக்கை அரசியல்வாதிகள் கைவிடவிடவேண்டும். இன்னொரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். அண்மையில்ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழ்க்குடும் பம் ஒன்று நாடுகடந்தப்படவிருந்தபோது, அதற்குஎதிராக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய மக்கள் கையெழுத்துப் போராட்டம்ஒன்றை நடத்தியிருந்தனர். ஏதிலிகளாக வந்தவர்கள் மீது வன்மம் பாராட்டாது அரவணைப்பதுஎன்பது மனிதத்தின் இயல்புகளில் ஒன்று.\nஅதை வந்தோரை வரவேற்கும் தமிழர் என்றுமார்தட்டிக் கொள்ளும் நாம் எட்டி உதைப்பது என்னவிதத்தில் நியாயம்சமாதான காலத்தில்தென்னிலங்கையில் வெள்ளம் ஏற்பட்ட போது நிவாரணப் பொருட்களோடு, பலரை அனுப்பிவைத்தவர் பிரபாகரன். அவர் அனர்த்த விடயங்களில் இனபேதம் பார்ப்பவரல்ல. சுனாமிஅனர்த்தத்தின் போதும், தமிழர், முஸ்லிம் எனப் பாகுபாடு காட்டாமல் இயன்றவரையில்உதவுங்கள் என்றே தன்னால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குப் பணிந்திருந்தார்.\nஅவரால் வழி நடத்தப்பட்ட தமிழினம் போரில் தோற்றிருக்கலாம். மனிதாபிமானத்தில்தோற்கக்கூடாது. யார் இதனை ஏற்காவிட்டாலும், பிரபாகரனின் பெயரைச் சொல்லி அரசியல்நடத்த முனைவோர் இந்த விடயங்களை கவனத் தில் கொள்ளவேண்டும்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://eluthu.com/kavithai/379181.html", "date_download": "2019-06-26T13:59:25Z", "digest": "sha1:BGNR2FS2GP4MEOTA7UQDPQWX6VGXIEYU", "length": 5724, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "இரவு - இயற்கை கவிதை", "raw_content": "\nபோர்வையிலிருந்து எட்டி எட்டி பார்த்து நட்சத்திரம் வானில் மின்ன,\nநிலவு அதற்கு துனண இருக்க,\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://patrikai.com/southern-railways-order-triggered-shock/", "date_download": "2019-06-26T14:37:36Z", "digest": "sha1:5CSIMS2DXFCPJL7VHCVKDDNF4BYL2NB4", "length": 12546, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "ரயில்வே அலுவல்மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே – சர்ச்சை உத்தரவு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ரயில்வே அலுவல்மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே – சர்ச்சை உத்தரவு\nரயில்வே அலுவல்மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே – சர்ச்சை உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் ரயில்வே அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழ் போன்ற பிராந்திய மொழிகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டுமெனவும், தெற்கு ரயில்வேயில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்று அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.\nசமீபத்தில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு ரயில்கள், நிலைய அதிகாரிகளின் மொழிப் பிரச்சினையால் ஒரே பாதையில் வந்தன. இதனால், ஏற்படவிருந்த பெரிய விபத்து எப்படியோ தவிர்க்கப்பட்டது. இந்த விஷயம் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.\nதமிழ்நாட்டில், ரயில்வே பணிகளில் பெருமளவில் வடநாட்டவர்கள் திட்டமிட்டு பணியமர்த்தப் படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு சமீப காலங்களாக தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால், பல சமயங்களில் மொழிப் பிரச்சினையும் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்தே, ரயில்வே அலுவல் மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தெற்கு ரயில்வே சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் ஒரு அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nஇத்தகைய உத்தரவும் ஒரு மறைமுக இந்தி திணிப்புதான் என்று பல நிலைகளிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபெங்களூருவைத் தொடர்ந்து சென்னை மெட்ரோவிலும் இந்தி அழிப்பு \nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழிலும் எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர்\n10 வருடங்களில் இந்தி பேசுவோர் எண்ணிக்கையில் 10 கோடிபேர் உயர்வு\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:17:04Z", "digest": "sha1:IODSAQQOBER27R6ASZCOBSC666L6OZRJ", "length": 13899, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிக் கிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிக் கிங் இடையீட்டு ரொட்டியின் வட அமெரிக்க வடிவம் (ஏப்ரல் 2016)\nஊட்ட மதிப்பீடு - 1 இடையீட்டு ரொட்டி (198 கி)\nபிக் கிங் (Big King) ஒரு பர்கர் வகை இடையீட்டு ரொட்டியாகும். பர்கர் கிங் என்ற புகழ் பெற்ற சர்வதேச தொடர் உணவகத்தால் விற்கப்படும் முதன்மையான பர்கர் வகை உணவுப் பொருளாகும். இந்த உணவகத்தின் உணவுப்பட்டியலட்டையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றிருக்கும் ஒரு அங்கமாகும். அக்டோபர், 2017 வரை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இது விற்பனைக்கு அனுமதிக்கப்படவில்லை.\n1996–1997 வரை இது டபுள் சுப்ரீம் என அழைக்கப்பட்டது. இது மெக்டொனால்ட்சு நிறுவனத்தின் பிக் மேக் (3 அடுக்கு ரொட்டி) போன்று வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது மீண்டும் வடிவமைக்கப்பட்டு இன்னும் தரம் வாய்ந்த இரட்டை பர்கராக மாற்றப்பட்டு 1997 இல் ஆண்டில் இதன் சோதனையின் போது தற்போதைய பெயர் சூட்டப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்தப் பெயருடன் வழக்கமான இரட்டை பாலாடை பர்கர் வடிவத்தில் நீடித்தது.\nஇவ்வாறு உருவான விளைபொருளுக்கு 2001 ஆம் ஆண்டில் கிங் சுப்ரீம் எனப் பெயரிடப்பட்து. கார்ப்பரேட்டுகளின் சரிவின் போது உணவு வகைப் பட்டியலில் மாற்றம் கொண்டுவரப்பட்ட போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் செய்யப்பட்ட சிறு வடிவ மாற்றம் கிங் சுப்ரீம் வகை பர்கரை வணிகப் போட்டியிலிருந்து நீக்கி விட்டு ”பிகே ஸ்டாக்கர்\" வகை இடையீட்டு ரொட்டிகளின் பக்கமாக மக்களின் பார்வையைத் திருப்பியதெனலாம். இஸ்டாக்கர் வரிசை உணவுகள் நவம்பர் 2013 இல் திரும்ப வந்த பிறகு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தொடர முடியவில்லை.\nபல ஆண்டு காலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உணவு வகைப்பட்டியலில் இடம் பெறாமல் இருந்தபோதிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தடைவிதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தில், பல்வேறு நாடுகளில், பல்வேறு வகைப் பெயர்களுடன் விற்பனையாகி வந்தது. இத்தகைய விற்பனைக்கான உதாரணமானது, பிகேயின் ஐரோப்பிய கிளை நிறுவனமானது வோப்பர் என்ற தனது இடையீட்டு ரொட்டியின் அடிப்படையில், இதன் பெரிய வடிவமான ”பிக் கிங் எக்சு எக்சு எல்” என்ற பெரிய அளவிலான இடையீட்டு ரொட்டியை அறிமுகப்படுத்தியதைக் கூறலாம். எக்சு எக்சு எல் (XXL) வரிசையானது இசுபெயினில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, உடல் நலம் சார்ந்த திட்ட அளவீடுகள் மற்றும் பல நடைமுறைகளில் முரண்களைக் கொண்டுள்ளது. இந்த இடையீட்டு ரொட்டியின் கோழி சேர்க்கப்பட்ட வகையானது அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த இடையீட்டு ரொட்டியின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, பர்கர் கிங் நிறுவனம் அவ்வப்போது குறிப்பிட்ட காலம் மட்டும் சந்தையில் கிடைக்கும் சிறப்பு வகை பிக் கிங் ரொட்டிகளை வெளியிடுவதும் உண்டு.\nபிக் கிங் தயாரிப்புக்குத் தூண்டுதலாக இருந்த மெக் டொனால்டு நிறுவனத்தின் பிக் மேக் இடையீட்டு ரொட்டி\nபிக் கிங் என்ற வகை இடையீட்டு ரொட்டிக்கு முன்னோடியாக இதே போன்ற வெண்ணெய் பர்கரான டபுள் சுப்ரீம் உள்ளது, [1] மெக் டெனால்டு நிறுவனம் அமெரிக்கச் சந்தையில் பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில், அந்நிறுவனத்தால் 1996 ஆம் ஆண்டில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டு புகழ் பெற்ற பிக் மேக் என்ற இடையீட்டு ரொட்டிக்குப் போட்டியாக, பர்கர் கிங் நிறுவனம் பிக் கிங்கைக் கொண்டு வந்தது, [1][2]மெக் டொனால்டின் சந்தை பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது விற்பனையை அதிகப்படுத்த எண்ணிய பிக் கி்ங் உணவகத் தொடர், டபுள் சுப்ரீம் என்ற பர்கர் வகையை அறிமுகப்படுத்தித் தனது போட்டியாளருக்கு எதிராக விளம்பரம் தேடிக்கொள்ள நம்பிக்கையுடன் முயன்றது, உண்மையில் டபுள் சுப்ரீம் பர்கரானது பிக் மேக்கை அதன் தோற்றத்திலும் இயல்பிலும் ஒத்திருந்தது,\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2018, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/review/04/190682?ref=right-popular-cineulagam", "date_download": "2019-06-26T15:09:33Z", "digest": "sha1:2UIKMJ5FFUMJ2ZOEM26UIHSWHENPO3ZA", "length": 10815, "nlines": 131, "source_domain": "www.manithan.com", "title": "வைரமுத்து பற்றி பேச என் கணவரிடம் விவாதித்தேன்... சின்மயி ஓபன் டாக்!... - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nவைரமுத்து பற்றி பேச என் கணவரிடம் விவாதித்தேன்... சின்மயி ஓபன் டாக்\nகவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் பற்றி ஏன் இவ்வளவு நாள் ஏன் கூறவில்லை என பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.\n13 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.\nஅவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மற்றும் சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் பேசுகிறீர்கள் அப்போதே ஏன் இதுபற்றி பேசவில்லை அப்போதே ஏன் இதுபற்றி பேசவில்லை என சமூக வலைத்தலங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇதற்கு பதில் கூறியுள்ள சின்மயி, அப்போது எனக்கு தைரியம் வரவில்லை. அதற்கான சூழல் இல்லை. இதுபற்றி என் கணவரிடம் விவாதித்தேன். அதன் பின்னரே எனக்கு தைரியம் வந்துள்ளது” என கூறியுள்ளார்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nhm.in/shop/1000000025955.html", "date_download": "2019-06-26T15:02:34Z", "digest": "sha1:IZ3BW2OD6FDZJTCVVIN4URQ2UD3DW2KW", "length": 5908, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம்\nஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம்\nநூலாசிரியர் திருமுருக கிருபானந்த வாரியார்\nபதிப்பகம் குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம், திருமுருக கிருபானந்த வாரியார், Guhashri Vaariyaar Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉயர்வு உங்கள் கையில் தான் தமிழ் இலக்கியக் கதைகள் மாணவர்களுக்கான பொது அறிவு வினா விடை\n100 வருடங்களுக்கு முந்தைய நூதன சமையல் குறிப்புகள் நன்னூல் உரைவளம் - தொகுதி 14 பொதுவியல் - 2 The Mahabharatha\nஇழக்காதே பூக்கூடை வேதம் கண்ட விஞ்ஞானம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/pressidium-hosting-review/", "date_download": "2019-06-26T15:12:00Z", "digest": "sha1:35T7WNDE4KCDGEJKOCBXWJJLBYYRGOZ4", "length": 43196, "nlines": 233, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "Pressidium Hosting = புதிய சிறந்த வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்? | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > Pressidium ஹோஸ்டிங் விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nபுதுப்பிப்பு புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 9, XX\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 07, 2019\nஇந்த ஆண்டு ஆரம்பத்தில் நாங்கள் பிரசிடிமியம் ஹோஸ்டிங் சோதனை மற்றும் கண்காணிப்பு தொடங்கியது; நாங்கள் அவர்களின் சேவைகளை மிகவும் ஈர்க்கிறோம். வலை ஹோஸ்ட் பிரீமியம் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் (மற்றும் ஒரு சிறிய கூடுதல் செலுத்தும் கவலைப்படாதே) தேடும் அந்த ஒரு இல்லை brainer உள்ளது. Pressidium பற்றி மேலும் அறிய, படிக்கவும்.\nஅது உங்கள் வேர்ட்பிரஸ் வலைத்தளத்தை நடத்த அங்கு வரும் போது, நீங்கள் உங்கள் தளத்தில் பின்தளத்தில் சீராக இயங்கும் வைத்து ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் தேர்வு உறுதியாக இருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் குழுவினரால் Pressidium ஹோஸ்டிங் தொடங்கப்பட்டது. ஒரு பெரிய தொலைத்தொடர்பு மற்றும் ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு சக ஊழியர்களால் அணி உருவாக்கப்பட்டது. குழு வல்லுநர்கள், மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் மூத்த டெவலப்பர்கள் அடங்குவர்.\nPressidium பார்வை பிரீமியம் வழங்க உள்ளது வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் அனைவருக்கும். உலகளாவிய கவனம், அவர்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா உள்ள சர்வர்கள் உள்ளன.\nPressidium அனைவருக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் வழங்குகிறது தொடக்க பிளாகர் க்கு தொழில்முறை வணிக உரிமையாளர். இந்த திட்டங்கள் அனைத்தும் மிகவும் மேம்பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதனிப்பட்ட திட்டம் $ 24.90 / மாதம் மூன்று வேர்ட்பிரஸ் நிறுவல்களுக்கு வழங்குகிறது. நீங்கள் வரம்பற்ற அலைவரிசையை பெறும் அதே வேளையில், நீங்கள் 30,000 வருகை / மாதம் வரையறுக்கப்படுவீர்கள். நீங்கள் 10GB SSD இடத்தைப் பெறுவீர்கள், மைக்ரோ திட்டத்திலிருந்து உங்கள் சேமிப்பகத்தை இரட்டிப்பாக்கலாம். கூடுதல் பயன்கள் ஒரு டிக்கெட் முறை வழியாக 24 / 7 ஆதரவு அடங்கும். மாதம் ஒன்றுக்கு $ 10 ஒவ்வொரு கூடுதல் கட்டணத்திற்காக CDN அல்லது SSL க்கான ஆதரவு சேர்க்கலாம்.\nநீங்கள் வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் நிறுவும் அல்லது உங்கள் போக்குவரத்து மேல் XIIXK விட வேண்டும் என்றால், தொழில்முறை திட்டம் வரை XXX வருகைகள் / மாதம் வரை வேர்ட்பிரஸ் நிறுவல்கள் மற்றும் வரம்பற்ற அலைவரிசையை வரை வழங்குகிறது. தொழில்முறை தொகுப்பு $ 3 / மாதம் இயங்கும் மற்றும் SSD இடம் 30GB அடங்கும். நீங்கள் 10 / XENX தொழில்நுட்ப ஆதரவு கிடைக்கும் மற்றும் $ 100,000 / மாதம் ஒவ்வொரு SSL மற்றும் CDN ஆதரவு திட்டங்களை சேர்க்க முடியும்.\nஉங்கள் தளம் பைத்தியம் போன்ற வளர்ந்து வருகிறது என்றால், $ 199.90 / மாதம் வணிக திட்டம் உங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த தொகுப்பு வரை வரவுள்ளது வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் நிறுவுகிறது, வரம்பற்ற அலைவரிசையை, XXX வருகைகள் / மாதம் மற்றும் ஜி.எஸ்.டி. ஜி.டி. SSD இடம். இந்த திட்டத்தின் மூலம், SSL மற்றும் CDN ஆதரவு மாதாந்த செலவில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் வேர்ட்பிரஸ் தொடங்குதல் மற்றும் நிறைய இடம் தேவையில்லை அல்லது போக்குவரத்து நிறைய கிடைக்கும் நுழைவு நிலை பயனர்கள் இலக்காக உள்ளது. மைக்ரோ திட்டத்தில் வேர்ட்பிரஸ் ஒரு நிறுவல் மற்றும் மாதத்திற்கு சுமார் 90 வருகைகள் வரை கொண்டுள்ளது. நீங்கள் 10,000GB o சேமிப்பு இடத்தை பெறுவீர்கள், ஒரு மாதத்திற்கு மட்டும் $ 26 ஒரு நிலையான ஆதரவு மற்றும் $ 5 / மாதம் CDN ஐ சேர்க்க விருப்பம். எந்த கூடுதல் மணிகள் அல்லது விசில் இல்லாமல் மைக்ரோ திட்டம் $ 17.90 / மாதம்.\nவேர்ட்பிரஸ் நிறுவுகிறது 1 3 10 25\nசேமிப்பு (SSD) 5 ஜிபி 10 ஜிபி 20 ஜிபி 30 ஜிபி\nஎன்க்ரிப்ட் + $ 10 / MO சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nCDN + HTTP / s + $ 10 / MO சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட சேர்க்கப்பட்ட\nநிறுவுதல் தளங்கள் ஆம் ஆம் ஆம் ஆம்\nஆட்டோ மேம்படுத்தல்கள் ஆம் ஆம் ஆம் ஆம்\nவிலை (வருடாந்திர சந்தா) $ 21 / மோ $ 42 / மோ $ 125 / மோ $ 250 / மோ\n* ஹோஸ்டிங் அம்சங்கள் மற்றும் பிரைசிடியம் வலைத்தளத்திலிருந்து (மார்ச் XX) இருந்து விலை விவரங்கள் - தயவுசெய்து மிகவும் துல்லியமான தகவலுக்கான அதிகாரிகளைப் பார்க்கவும்.\nPressidium ஹோஸ்டிங் திட்டங்கள் இதே மாதிரியில் இயங்கும் WP பொறி மற்றும் Kinsta.\nஇரண்டு ஹோஸ்டிங் நிறுவனங்கள் வருகை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் சார்ஜ். எடுத்துக்காட்டுக்கு, XXX வருகைகள் மற்றும் 30 GB சேமிப்பகத்தை சுமார் 25,000 வருகைகள் மூலம் தனிப்பட்ட தொகுப்புக்கு $ 10 / மாதம் அடுக்குகளில் வரும் WP இன்ஜினின் மிகச்சிறிய தொகுப்பு. இருப்பினும், WP பொறி, ஒரு சிறிய, மைக்ரோ அளவிலான தொகுப்பை ஆரம்பகளுக்காக வழங்கவில்லை. மாதந்தோறும் மில்லியன் கணக்கான வருகைகளைப் பெறும் அந்த தளங்களுக்கான பெரிய பொதிகளை WP பொறி வழங்குகிறது.\nநான் Pressidium ஹோஸ்டிங் பற்றி என்ன\nPressidium நிறுவனர் ஆண்ட்ரூ ஜோர்ஜ் கையாள்வதில் ஒரு நல்ல காரணி இருப்பதாக நான் சேர்க்க வேண்டும். உதாரணமாக, நான் முதல் சோதனை தளம் அமைக்கும் போது ஒரு சிறிய சதி அனுபவம். ஆண்ட்ரூ என் கேள்விகளுக்கு பதிலளிக்க மிகவும் அவசரமாக இருந்தார், மேலும் அவர்களது பிரச்சினைகள் மிகவும் வெளிப்படையானவை. ஒரு வலை ஹோஸ்டிங் நிறுவனத்தில் இருந்து நேர்மை நீங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு இடையே நல்ல தொடர்பு முக்கியம். உங்கள் தளத்தில் நீங்கள் எந்த அடிப்படை பிரச்சினையும் தீர்ப்பதற்கு நீண்ட தூரம் செல்கிறது.\nஇந்த மேல், Pressidium பற்றி நான் சுவாரஸ்யமான காணப்படும் விஷயங்கள் உள்ளன, உட்பட:\nமிக நம்பகமான மற்றும் வேகமாக சேவையகங்கள் இதுவரை எங்கள் சோதனை தளத்திற்கான சேவையகத்தின் நேரம்: SSD சேமிப்பகம் சோதனை தளம் ஏற்ற கூடுதல் வேகத்தை ஏற்படுத்தியது - எங்கள் சோதனை தளத்தில் மிகவும் குறைவான பதில் நேரம் (சராசரியாக 100ms).\nSLA மூலம் சேவையளிக்கப்பட்ட சேவை - 95% சேவை கிடைக்கும் SLA கடன்கள் வடிவத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் வாடிக்கையாளரின் மாதாந்திர கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாதக் கட்டணம் செலுத்தப்படும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். எனினும், சம்பவத்தின் 5 நாட்களுக்குள் எழுதும் வர்த்தமானங்களுக்கு உங்கள் கோரிக்கையை நீங்கள் செய்ய வேண்டும் மற்றும் வாடிக்கையாளர் கட்டணம் செலுத்துகின்ற கட்டணத்தைவிட அதிகமாக இருக்க முடியாது. என் அனுபவம் இது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று காட்டுகிறது.\nஉச்சம் மேடை Pressidium இன் கட்டப்பட்ட-இருந்து-தரையில் ஹோஸ்டிங் தளங்களில் மேம்பட்ட WP அம்சங்கள் அனைத்து வகையான வர - கார் மேம்படுத்தல்கள் உட்பட, WP அபிவிருத்தி தளங்கள் நடத்த, மற்றும் தானியங்கி காப்பு. மேலும், ஒரு தளத்தை சேமிக்கும் மற்றும் எளிதானது என அமைப்பதற்கும் - இதுவரை அவர்களின் தளம் மற்றும் ஒரு மென்மையான மாற்றம் பயன்படுத்த எளிதானது.\nநியாயமான விலை Pressidium இல் விலை அதே வேர்ட்பிரஸ் குறிப்பிட்ட சேவை வழங்கும் ஒத்துழைப்பு நிறுவனங்கள் விட சற்று மலிவாக உள்ளது. அனைத்து மற்ற விஷயங்களும் சமமாக இருப்பது, பணத்தை சேமிப்பது ஒரு நல்ல பெர்க்.\nஇன்சிடர்கள் 'பார்சிடிமியம் பயனர் டாஷ்போர்டு பார்வை\nஉங்கள் குறிப்பிற்காக, உள்ளே இருந்து ஒரு சில திரை தொப்பிகள் உள்ளன:\nPressidium எவ்வாறு செயல்படுகிறது - Pressidium கட்டமைப்பில் ஒரு விரைவு பார்வை.\nPressidium டாஷ்போர்டு - இதனை நீங்கள் Pressidium இல் வழங்கிய தளங்களை நிர்வகிக்கிறீர்கள். Pressidium ஒரு WP- ஹோஸ்டிங் ஹோஸ்டிங் என்பதை கவனிக்கவும், உங்கள் முதன்மை நிர்வாக பணிகள் WP டாஷ்போர்டில் செய்யப்படுகின்றன.\nநான் விரும்பவில்லை என்ன -\nநில். நான் இதுவரை Pressidium மிகவும் ஈர்க்கப்பட்டார் மற்றும் எனக்கு ஒரு சிவப்பு கொடி எறிந்து என்று எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇருப்பினும், இது WP Engine போன்ற பிற வேர்ட்பிரஸ் குறிப்பிட்ட ஹோஸ்டிங் நிறுவனங்கள் போலவே, தளத்திற்கு வருகைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட பயனாளிகளுக்கு Pressidium வசூலிக்கிறது. இங்கே பிரச்சனை வலை ஹோஸ்டிங் நிறுவனம் அந்த வருகைகள் கணக்கிடுகிறது எப்படி என்று வழி இல்லை. உதாரணமாக, விஜயம் ஒரு போட் மற்றும் ஒரு உண்மையான பார்வையாளரா இல்லையா என்றால் என்ன\nPressidium இணை நிறுவனர், ஆண்ட்ரூ ஜியோஜெஸ், அவர்கள் போட்களை எண்ண வேண்டாம் என்று ஒரு நேர்காணலில் எங்களுக்கு தெரிவித்தனர் மற்றும் அவர்களின் இலக்கு வணிகங்கள் வெற்றிகரமாக உதவ வேண்டும், எனவே நீங்கள் வருகைகள் கணக்கில் எப்படி கவலைகள் இருந்தால், நீங்கள் முதலில் அந்த பேட்டியில் படிக்க வேண்டும் . விஜயங்களைப் பற்றி உங்களிடம் இன்னும் கேள்விகள் இருந்தால், குறிப்பிட்ட கேள்விகளுடன் நேரடியாக ப்ரீடிடியம் தொடர்புகொள்க.\nஅதே கருவியைப் பயன்படுத்தும் WP பொறி, அவர்கள் அதிகப்படியான அதிகப்படியான பதிவர்களிடமிருந்து புகார் பெறும் முடிவுக்கு வந்துள்ளனர். அதே பிரச்சனை Pressidium உடன் பயிர் செய்யும் சொல்ல மிகவும் விரைவாக இருக்கிறது. கால்குலேட்டிங் செயல்முறை வலைத்தள உரிமையாளர்களுக்கு நியாயமானது என்றால் மட்டுமே நேரம் சொல்லும்.\nPressidium மின்னஞ்சல் ஹோஸ்டிங் வழங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க. உங்கள் டொமைன் பெயருடன் முடிவடையும் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் விரும்பினால் (ஏதோ [Email protected]), நீங்கள் உங்கள் சொந்த மின்னஞ்சல் கணக்குகளை நடத்த வேண்டும். அவர்களின் இலக்கு பார்வையாளர்கள் பெரும்பாலும் இணைய பயனர்கள் மற்றும் அழகற்றவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்ட - நான் ஒரு பிரச்சனையாக இருக்க கூடாது என்று நினைக்கிறேன்.\nஒரு விஷயத்தில் உங்களுக்கு உதவி தேவை - நான் கடந்த காலத்தில் ஒரு சில வித்தியாசமான மின்னஞ்சல் தீர்வுகளை முயற்சித்தேன் மற்றும் இந்த சிக்கலை எப்படி கடக்க எப்படி ஒரு நீண்ட கட்டுரை எழுதினார் - உங்கள் வலை ஹோஸ்ட் மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகளை வழங்காதபோது என்ன செய்ய வேண்டும் - எனவே ... எந்த பெரிய ஒப்பந்தம்.\nPressidium ஹோஸ்டிங் மணிநேர விமர்சனம்\nநாங்கள் ஆரம்பத்தில் ஒரு பிரமாதமான தளத்தை அமைத்துள்ளோம். பின்வரும் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு சேவையைப் பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட நேர மதிப்பீடு - உப்பு ரோபோ. நாம் எதிர்காலத்தில் அதிகமான நேர பதிவுகளை வெளியிடுவோம்.\nபிரீமியம் மார்ச் 2007 இடைக்கால சாதனை - 2016%\nமார்ச் மாதத்திற்கான இடைநிறுத்தம் ஹோஸ்டிங் செப்டம்பர், 2016 = 100%. கடந்த பதிவு செயல்திறன் எங்கள் சோதனை தளத்தில் ஒரு சுருக்கமான ஒரு நிமிடம் வெளியே சென்றது (டிசம்பர், டிசம்பர் 9) மாதம் முன்பு இருந்தது.\nபிப்ரவரி பதினைந்தாம் பதிவு நேரம் - 9%\nஜனவரி 29, பிப்ரவரி 9, XXIX = XX க்கு இடைநிறுத்தம் ஹோஸ்டிங் ஹோஸ்டிங். கடைசி செயல்திறன் டிசம்பர் மாதம் 9-ந்தேதி நடந்தது (டிசம்பர் 29, 2003), எங்கள் சோதனை தளம் எங்கள் பதிவின் படி ஒரு சுருக்கமான நிமிடத்திற்கு வெளியே சென்றது.\nபிரீமியம் மார்ச் 2007 இடைக்கால சாதனை - 2015%\nபிப்ரவரி செப்டம்பர் ஹோஸ்டிங் ஹோஸ்டிங் செப்டம்பர் - மார்ச், XX மற்றும் 13%.\nநாங்கள் பிப்ரவரி மாதம் ஒரு புதிய சேவையக சோதனை முறையைச் சேர்த்துள்ளோம், மேலும் எங்கள் சோதனை தளத்தின் பதில்களை 2016 வெவ்வேறு இடங்களிலிருந்து கண்காணித்தோம். பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி, அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை சேவையர்களிடமிருந்து (சுமார் ஒரு மோசமான விளைவாக) இருந்து பிரசிடிமியம் வெற்றிகரமாக நடைபெற்றது 8 மற்றும் 2016 மில்லிசெகண்ட்ஸ். ஒட்டுமொத்த தரவரிசை இணையத்தில் இணையத்தில் உள்ள மில்லியன் கணக்கான வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில், \"பி\" ஆகும்.\n8 வெவ்வேறு இடங்களிலிருந்து (பிப்ரவரி XX) இருந்து Pressidium சர்வர் வேக சோதனை முடிவுகள்.\nகீழே வரி - Pressidium முன்கூட்டியே WP பயனர்கள் ஒரு நல்ல வலை புரவலன்\nPressidium Newbies ஒரு மைக்ரோ தொகுப்பை வழங்குகிறது என்றாலும், மேடையில் உண்மையில் ஒரு புதிய தளம் இல்லை என்று உட்பட பல காரணங்களுக்காக newbies நல்லது அல்ல ஹோஸ்டிங் செலவுகளை கணக்கிடுகிறது ஏனெனில் பார்வையாளர்கள் ஒரு புதிய தளத்தின் ஆரம்ப நாட்களில் பரவலாக மாறலாம்.\nஎனினும், Pressidium போக்குவரத்து நிறைய கிடைக்கும் மற்றும் தீவிர வேகமாக ஏற்றுகிறது என்று ஒரு தளம் வேண்டும் என்று பெரிய வேர்ட்பிரஸ் தளங்கள் ஏற்றது. நீங்கள் இந்த வெப் ஹோஸ்டிங் நிறுவனத்தை முயற்சிக்க முயற்சித்தால், முன்கூட்டியே பணம் செலுத்துவதன் மூலம் நீங்கள் இரண்டு மாதங்கள் இலவசமாகப் பெறுவீர்கள். ஹோஸ்டிங் நிறுவனம் தனது நிலைப்பாட்டைக் கண்டறிந்து, உங்கள் தளத்தை வளர்த்துக்கொள்வதால் அந்த தள்ளுபடி எந்தவொரு சிறிய விக்கிகளிலும் உதவலாம்.\nகுறைந்த ஹோஸ்டிங் திறன் கொண்ட மலிவான தேர்வுகள் - InMotion ஹோஸ்டிங், hostgator, GreenGeeks.\nதள்ளுபடி முன் விலை $49.90 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி வருடாந்திர திட்டத்திற்கான இலவச XNUM மாதங்கள்\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் இல்லை\nசேமிப்பு கொள்ளளவு 10 ஜிபி\nகூடுதல் டொமைன் ரெகு. இல்லை\nதனியார் டொமைன் ரெகு. -\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி -\nவிருப்ப கிரான் வேலைகள் இல்லை\nதள காப்பு உடனடி காப்புப்பிரதிகள்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி + $ 25 / MO\nதள பில்டர் உள்ளமைந்த -\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை : N / A\nஇணைய அஞ்சல் ஆதரவு இல்லை\nஜென் வணிக வண்டி இல்லை\nசேவையக பயன்பாடு வரம்பு மாதம் 9 மாதங்கள். பார்வையாளர்களின் அடிப்படையிலான கட்டணத்தை செலுத்துதல் - உங்கள் சேவையகத்தை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தினால் நீங்கள் இன்னும் அதிகமாக செலுத்த வேண்டும்.\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிர்வகிக்கப்பட்ட தானியங்கு புதுப்பிப்புகள், தவறான-போட்களை வடிகட்டுதல் மற்றும் நிர்வகிக்கப்படும் வலை பயன்பாட்டு ஃபயர்வால் (டபிள்யுஎல்ஏ)\nதள காப்பு உடனடி காப்புப்பிரதிகள்\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் ஆம்\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nதொலைபேசி ஆதரவு + 44 20-3608-6912 (குறிப்பு: தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் மேலே கிடைக்கும் தொலைபேசி ஆதரவு மட்டுமே.)\nமுழு திருப்பிச் சோதனை 60 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் வேலை கண்டுபிடிப்பதற்கான XMS வளங்கள்\nவலைப்பதிவு போக்குவரத்து அதிகரிக்க மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கான இலவச வழிகள்\nவாரம் ஒரு பெரிய உள்ளடக்கத்தை எழுதுவது எப்படி (குறைந்தபட்சம்)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nadunadapu.com/?cat=80&paged=24", "date_download": "2019-06-26T15:18:56Z", "digest": "sha1:AP4MLUCACMONHJWSQTQQHRSE5OZIKGUR", "length": 28720, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "ஆன்மீகம் | Nadunadapu.com | Page 24", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nகிரக தோஷம் போக்கும் விநாயகர்\nவிநாயகரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, தா பேட்டை அருகே உள்ளது காருகுடி கிராமம். இங்கு கயிலாசநாதர் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவிலில் உள்ள கற்பக விநாயகரை...\n – கிருபானந்த வாரியார் நினைவு தினப் பகிர்வு \nஅழகு தமிழால் அழகன் முருகனின் புகழ் பாடியவர்; அமுதனைய தம்முடைய சொற்பொழிவுகளால் மக்களிடையே பக்திப் பயிர் வளர்த்தவர். தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர். மிகச் சிறந்த முருக பக்தர்; உலகத் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவர் திருமுருக கிருபானந்த...\nதிருமண தோஷம் நீக்கும் திருக்கண்டியூர் கோவில்\nதஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்டியூர். இந்த பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்ம சிரகண்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற தலமாக விளங்கும் இந்தக் கோவிலில்...\nகுறைஷிகளின் பலிக்காமல் போன தந்திரம்\nநபி முஹம்மது (ஸல்) தைரியமாகக் குறைஷியர்கள் முன்னிலையிலேயே அவர்களது வணக்க வழிபாடுகளையும், இஸ்லாமிய அழைப்புப் பணியையும் தொடர்ந்தார்கள். ஆனால் இஸ்லாமை ஏற்றவர்கள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரகசியமாகவே வழிபாடுகளைச் செய்து வந்தனர். வெளிப்படையாகச் செய்தால் அவர்களுக்கு...\nஇந்த வார ராசி பலன் 7.11.16 முதல் 13.11.16 வரை\nஜோதிட மாமணி' முருகப்ரியன் மேஷம்: பண வரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படாது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் -...\nசெல்வம் பெருகும் மகாலட்சுமிக்குரிய விரதங்கள்\nலட்சுமி அருள்பெற நாம் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர் பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், லட்சுமி விரத நாளாகும். ஆவணி வளர்பிறை...\nமுன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன்- பொருள்-ஆடைகள்...\nதிருப்பதி மூலவரின் திருநாமத்தில் மாற்றமா: கோவில் முதன்மை அர்ச்சகர் மறுப்பு\nதிருப்பதி ஏழுமலையான் மூலவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகம் நடத்தப்பட்டு திருநாமம் போடப்படும். மற்ற நாட்களில் அலங்காரம் மட்டுமே செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. திருப்பதி பெருமாளுக்கு பழங்காலத்தில் யூ வடிவிலும் ஒய் வடிவிலும் வடகலை மற்றும்...\nஇஸ்லாம் என்ற அழகிய மாளிகை இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் தூண்களின் ஆதிக்கத்தில் நிலை பெற்றுள்ளது. இருந்தாலும் அவை எல்லாம் அடிப்படை கடமைகளே தவிர, அவை மட்டுமே அந்த...\nதினமும் சொல்ல வேண்டிய மகாலட்சுமியின் மிக எளிய போற்றி\nலட்சுமி மனதில் இடம் பிடிக்க துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என வருந்த வேண்டாம். மிக எளிய போற்றி உள்ளது. கீழ்க்கண்ட அந்த போற்றியை 108, 1008 பூக்களை வைத்துக்...\nகோலட்சுமி என்று பசுக்களை அழைக்க காரணம்\nபசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) லட்சுமி இருக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிக்கின்றனர். கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன்...\nமச்சான் சாமி’ என்று முருகனை யார் அழைக்கிறார்கள் (கந்த சஷ்டி விழா சிறப்புப் பகிர்வு – 7)\nமீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர் காயத்ரி மந்திரத்தின் எழுத்துக்களே இங்கு 24 தீர்த்தங்களாக...\nதூய்மையான பக்தியை உணர்த்தும் கதை\nஅன்புள்ளம் கொண்டவர்களின் பக்திக்கே இறைவன் இரங்கி அருள்வான். அதே நேரம் பக்தியில் கொஞ்சம் அகங்காரம் இருந்தாலும், இறைவனின் அருளைப் பெறுவது அரிது. ஒரு விஷ்ணு ஆலயத்தில் திருமாலின் மகிமையைப் பற்றி சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்,...\nசெந்தேனாக இனிக்கும் செந்திலாண்டவர்… கந்த சஷ்டி சிறப்புப்பகிர்வு- (பகுதி-6)\nதிருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் கோயில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. இதன்...\nஅப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா \nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை. கும்பகோணம் - திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில்...\nகோவில்களில் கும்பாபிஷேகம் ஏன் நடத்தப்படுகிறது\nஇறைவன் தனது அகண்டா காரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்து கொண்டு அடியவர்களுக்கு அருள் பாலிக்கின்றான். எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச் சேர்த்து அனுப்புகிறது மூலஸ்தானத்தில் உள்ள...\n – கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு – 3\nமதுரைக்கு 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும். அங்கே மலைமீது பழமுதிர்சோலை மலைக்கிழவோனாக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். திருச்செந்தூரில் மருமகனாகிய முருகனின் தயவில் மாமனாகிய திருமாலின் கோயில் அமைந்துள்ளது. அதற்கு நேர்மாறாக, இங்கே...\nஉங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா\nஉடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும்...\nதுர்கா பூஜை – தோற்றமும் வரலாறும்\nஇந்தியாவின் மிகவும் முக்கிய இந்துப் பண்டிகைகளில் ஒன்று துர்கா பூஜை. இந்து பஞ்சாங்கப்படி புரட்டாசி மாதத்தில் வரும் இது 10 நாட்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் மகிஷாசுரனை வாதம் செய்த சக்தியின் வடிவமான...\nஎந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா\nஉலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும், யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே நாம் வணங்கும் தேவதைகள், தெய்வங்கள் – அவதாரங்கள், ஒரு...\nஜோதிடம் இதன்மேல் நம்பிக்கை இல்லாத மனிதர்களும் கூட சில நேரங்களில் தமக்குரிய கணிப்பை கேட்டவுடன் சில நேரங்களில் மனம் மாறிவிடுவர், அவ்வாறான ஓர் அதீத சக்தி இதற்கு காணப்படுவதில் ஐயமில்லை. ஜோதிடத்தின் கணிப்பு உண்மை...\nபாவ விமோசனம் தரும் பசு தானம்\nதானங்களில் பல்வேறு தானங்கள் இருந்தாலும் அதில் கோ எனப்படும் பசு தானம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பசு தானத்தை செய்வதன் மூலம், ஒருவர் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கிறது. பசு...\nதிருப்பதி பெருமாளை நினைத்தாலே பாவம் தீரும்\nகலியுகத்தில் நல்லவர்களைக் காக்க, வைகுண்டத்தில் வீற்றிருக்கும் விஷ்ணு, வெங்கடாஜல பதியாக, புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திர நன்னாளில் அவதரித்தார். தன்னை சரணடைந்தவர்களை கையால் அணைத்து ஆதரிப்பதை பெருமாளின் இடது தொடையில் இருக்கும் இடது கை...\nவிநாயகருக்கு மூஷிக வாகனம் வந்த கதை\nகோகுலத்துக் கண்ணன் போலவே கயிலை கணபதியும் பல தருணங்களில் பல இடங்களில் எண்ணற்ற அற்புத லீலைகளை நிகழ்த்தியிருக்கிறார். விநாயக சதுர்த்தி புண்ணிய தினத்தில் அந்த லீலைகளை- கணபதி குறித்த திருக்கதைகளைப் படிப்பதால், சகல சுபிட்சங்களும்...\nபிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி – கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு – 1\nமுருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புண்ணியம்பதி, பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி, நக்கீரர் வாழ்ந்த ஊர், முருகனுக்குப் பரிகாரம் அருளிய மீனாட்சிசுந்தரபுரம், அறுபடைவீடுகளில் ஒன்று, திருப்பரங்குன்றம் மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது...\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-06-26T13:57:15Z", "digest": "sha1:BGWTG33BHKB4KXPAWBW4BMA46KP7GBLR", "length": 12245, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது மிகக்கொடூரமான குற்றம் |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஅப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது மிகக்கொடூரமான குற்றம்\nஅப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது மிகக்கொடூரமான குற்றம், ஆனால் இதை வைத்து எதிர்கட்சிகள் அரசியல்செய்வது அவர்களது விபரீதமான சிந்தனையை காட்டுகிறது என பிரதமர் மோடி கூறினார்.\nபசுக்களை கடத்தி செல்வதாக கூறியும், குழந்தைகளை கடத்துவதாகவும் அப்பாவிகளை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துவருகின்றன. சமூக வலைதளங்களில் வரும் தகவல்ளை உண்மையென நம்பி இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தவிவகாரம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி இன்று பேட்டியளித்தார். அப்போது அப்பாவிகள்மீதான தாக்குதல் குறித்த அவர் விரிவாக பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:\nஎதிர்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பது இது முதன் முறையல்ல. அரசியில் நிர்பந்தம் காரணமாக அமையவிருக்கும் இக்கூட்டணி ஒவ்வொரு முறையும் தோல்வியைதான் தழுவியுள்ளன. வளர்ச்சி.. வேகமான வளர்ச்சி.. அனைத்திலும் வளர்ச்சி என்பதே எங்களது அடிப்படைகொள்கை.\nகடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளோம். வரும் பார்லிமென்ட் தேர்தலில் எங்களது சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவோம். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். எங்களுக்கு எந்த பயமும் இல்லை.\nகடந்த பார்லி., தேர்தலில் பெற்ற வெற்றியைவிட அதிக வெற்றியை வரும் பார்லி., தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெல்லும். அனைத்து சாதனைகளையும் தகர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\nபொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள புதியசட்டத்தின் மூலம், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களை கடுமையாக தண்டிக்க முடியும். ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றன\nகும்பலாக சேர்ந்து கொண்டு அப்பாவிகளை தாக்கி கொலை செய்யும் வன்முறை நடந்துவருவது வருந்ததக்கது. இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தாலும் அதனை ஏற்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபற்றி நானும், எங்கள் கட்சியினரும் தொடர்ந்து கண்டனம்தெரிவித்து வருகிறோம்.\nநாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதிசெய்வதில் எங்கள் அரசு எப்போதுமே கவனத்துடன் செயல்படுகிறது. ஆனால் எதிர் கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியாலாக்கப் பார்க்கின்றன. அவர்களது விபரீதமான சிந்தனையே இதற்குகாரணம்.\nவன்முறை மற்றும் குற்றச்செயல்களை அனைவரும் ஒன்றாகசேர்ந்து எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர் கட்சிகள் இதை வைத்த அரசில் செய்வது வேதனையானது இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nமாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்\nஎதிர்க் கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் எதிர்…\nஅமோக வெற்றியை பார்த்து எதிர் கட்சிகள் நடுங்கி போய் உள்ளன\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nஆட்கொல்லி புலியின் மீது சவாரிசெய்வது ஆபத்தாகத்தான் முடியும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோட� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்த� ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/125553", "date_download": "2019-06-26T14:04:30Z", "digest": "sha1:G7CRZQICUPNS7SV4PF72V3G53KR6J5YV", "length": 5669, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 18-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஇலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nவிஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு பிக்பாஸ் பிரபலம் தளபதி ரசிகர்களின் பலம் ஜெயிக்குமா\nஅஜித்தின் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\nஉறவு வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது பொங்கி எழுந்த ஸ்ரீரெட்டி - அதிரடி தண்டனை இது தான்\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nஎந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெரிக்கும் சூரியனும் அடங்கி போகும்\nநான் இதை செய்தால் என் ரசிகர்களும் செய்வார்கள், அஜித் எடுத்த முடிவு\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/profile/lovemyvijayanna?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-26T15:23:22Z", "digest": "sha1:Z27YCLNQQRJZW7ZO42GXFXXHBG6JSRAT", "length": 4385, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "🔥BIGIL Raj🔥 - Author on ShareChat - 🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹தாய் தந்தை தளபதிVIJAY FANS CLUB", "raw_content": "\n🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹 தாய் தந்தை தளபதி VIJAY FANS CLUB\n🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹 தாய் தந்தை தளபதி VIJAY FANS CLUB\n3 மணி நேரத்துக்கு முன்\n🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹 தாய் தந்தை தளபதி VIJAY FANS CLUB\n3 மணி நேரத்துக்கு முன்\n🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹 தாய் தந்தை தளபதி VIJAY FANS CLUB\nகியூட் ஸ்மைலி விஜய் அண்ணா #🤵விஜய்\n3 மணி நேரத்துக்கு முன்\n🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹 தாய் தந்தை தளபதி VIJAY FANS CLUB\n4 மணி நேரத்துக்கு முன்\n🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹 தாய் தந்தை தளபதி VIJAY FANS CLUB\n4 மணி நேரத்துக்கு முன்\n🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹 தாய் தந்தை தளபதி VIJAY FANS CLUB\n4 மணி நேரத்துக்கு முன்\n🌹🌹எங்கள் பாசத்தளபதியின் அன்பு ரசிகன் 🌹🌹 தாய் தந்தை தளபதி VIJAY FANS CLUB\n4 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://suransukumaran.blogspot.com/2019/06/blog-post_27.html", "date_download": "2019-06-26T13:49:43Z", "digest": "sha1:ZC54IAB33OXPMOY3QBJ3GSMU3SBN6MQG", "length": 18239, "nlines": 195, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': எதற்கு தனியே ஆலோசனை", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவெள்ளி, 14 ஜூன், 2019\nபாஜகவினர் ஆலோசனைக்கூட்டம் போட்டுகின்றனராம்.காரணம் தமிழ்நாட்டில் தேர்தலில் தோற்றதற்கு காரணம் தேடுகிறார்கள்.\nஒரு அதிகப்படிப்பறிவில்லாத கிராமவாசியைக் கேட்டாலே சொல்லிவிடுவாரே.\n\"பாஜக,மோடி,அமித்ஷா ஆகியோர் எதைச்செய்தாலும் அதனால் தமிழ் நாட்டுக்கு கண்டிப்பாக கெடுதல் உண்டாகுமா என்று பார்த்து செய்வதை நிறுத்தினாலே போதும்\" என்று.\nஸ்டெர்லைட் ஆதரவில் இருந்து,சாகர்மாலா,8 வழிக்சாலை ,ஹைட்ரோ கார்பன் ,தமிழக வேலைகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிப்பு.மத்திய அரச பணிகளில் வடமாநிலத்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் வேலை.தமிழ்நாட்டிலிருந்து வரவும் நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் மோடியால் விவசாயிகளுக்கு மனு வாங்க கூட நேரம் தர முடியாமை என பல இருக்கிறது.\nதென்னக ரெயில்வேயில் கட்டுப்பட்டு அறையில் இருப்பவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும்.தாய் மொழி,மாநில மொழி தமிழில் பேசக்கூடாது என்ற ஆணை சுற்றறிக்கையாக விடப்பட்டுள்ளது.இந்தி பேசும் மேலதிகாரிகளால்.\nசமீபத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. அதற்கு கரணம் புதிதாக வேலைக்கு வந்த இந்திக்காரரால்தான்.ஆண்மககிலமும் தெரியவில்லை,தமிழும் தெரியாததால் அவர் பேசியதை மற்றவர்களால் புரிய முடியவில்லை.\nஆனால் உரிய நேரத்தில் கேட் மூடுபவரால் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்தி மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.\nமொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க 'இந்தி அல்லது ஆங்கிலத்தில்' தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்தது.\nஇது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான,இந்தி வெறிபிடித்த ஆணை.தமிழ் நாட்டில் தமிழில் பேசினால் யாருக்கு தகவல் புரியாமல் போகும்.இதுவரை தமிழ்நாட்டில் ரெயில்கள் தமிழில் பேசியதால் மோதியுள்ளது,கவிழ்ந்துள்ளது\nஇந்தியில் பேசியதால்தான் மோதுகிற அளவு வந்தது ரெயில்கள்.அப்படியென்றால் எந்த மொழி இங்கு தேவை\nதமிழ்நாட்டில் தமிழில் பேசக்கூடாதாம் இந்தியில் பேச வேண்டுமாம்.\nகாரணம் அவர்கள் தற்போது ரெயில்வேயில் திணித்துவருகிற வட மாநிலத்தவர்களுக்கு தமிழ் மட்டுமல்ல ஆங்கிலமும் தெரியாததால் இந்த ஆணையாம்.\nதெற்கு ரயில்வேயின் இந்த ஆணை தமிழகத்தில் பெருங் கோபத்தைக் கிளப்பியது.\nஇதுவும் இந்தி திணிப்பே என திமுக கடுமையாக விமர்சித்து.அத்துடன் தென்னக ரெயில்வே தலையகத்தின் முன் திமுகவினர் கட்டம் வெயிலிலும் குவிந்தனர் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்,ஆர்.எஸ்.பாரதிபோன்றோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ரெயில்வே ஊழியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தைக்கண்ட தென்னக ரெயில்வே அதிகாரி உடனே டெல்லியில் பேசி அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக தயாநிதி மாறன்,ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் அறிவித்ததுடன் தொலைபேசியில் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் தெரிவித்தார்.\nதவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் பொதுமேலாளர் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.\nமுன்னதாக, புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்தது.\nஇதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது.\nஇப்படி இடையிடையே தமிழ்நாட்டிலுள்ளோருக்கு கடுப்பைக்கிளப்பி விட்டு தாமரையை மலரவிடாமல் பார்த்துக்கொள்வது பாஜக மேலிடம்தான்.\nஇதற்கு எதற்கு தனியே ஆலோசனைக்கூட்டம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு ...\nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\n“வெண்டைக்காய் உடலுக்கு நல்லது” தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிர...\nஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை. அமெரிக்க பிரதிநிதிதான். அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் மு...\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன் 17-வது மக்களவையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்...\nஇந்தியாவில் உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு \"மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியை...\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\nஇந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும் தனியார் ...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.\n.தனது கடமையை செய்யாத ஆட்சியாளர்கள்.\nஎட்டு வழிகளிலும் எழும் சிக்கல்கள்.\nஏன்பதவியேற்று 38 வது நாளிலேயே மாற்றம் \nநேசமணியை நீக்க மன்றாடிய இந்தியா\nஏன் வெற்றி பெற முடியவில்லை”\nஅநியாயம் இந்த ஆட்சியில் ரொம்ப அநியாயம்.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-06-26T14:06:27Z", "digest": "sha1:DJSDIRE2PB4JZWQUHWOME7ZT5T6DQ4PN", "length": 40919, "nlines": 759, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "தஞ்சை | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (முன்னுரை)index\nFiled under: தஞ்சை, பயங்கரவாதம், பாசிசம், மலர் மன்னன் — முஸ்லிம் @ 8:55 முப\nமக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும்.\nஅந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.\nஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.\nசுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த அனைத்து கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்தப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதனை நன்றாக உணர்ந்து வைத்துள்ளதாலேயே சங்க்பரிவார சக்திகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி துவேஷத்தை வளர்த்து வருகின்றன.\nஉலகின் அதிவேக வளர்ச்சியில் இன்று மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையில் உருவெடுத்துள்ளது இணையமாகும். இங்கு கருத்துக்களை வெளியிட எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் செய்திகளை வெளியிடத் தக்க விதத்தில் இணையம் அமைந்துள்ளது தான் இதன் காரணமாகும். இந்தியாவின் எல்லாத்துறையிலும் மற்றவர்கள் கண் உணரும் முன்பே நுழைந்து அவ்விடங்களை ஆக்ரமித்துக் கொண்ட சங்க்பரிவார சக்திகள் இன்றைய அதிசக்தி வாய்ந்த இந்த ஊடகத்தையும் தங்களின் லட்சியத்திற்காக மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.\nகடந்த இரு தினங்களில் பெங்களூரில் நடந்த தென்னிந்திய முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) நடத்திய எம்பவர் இந்தியா (Empower India) மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கோ. சென்ன பாஸப்பா கூறிய வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும். “இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இன்று ஃபாஸிஸம் பரவத் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்றவர்களை தங்களது வளர்ச்சிக்காக ஃபாஸிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட தேச துரோகியான சாவர்க்கரின் படத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவுக்கு இன்று நிலை மாறியுள்ளது”. நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு ஊடகங்களின் பொய் பிரச்சாரம் சிறப்பான பங்கு வகித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.\nஊடகத்திற்கு என்று ஒரு தர்மம் உண்டு. அந்த தர்மத்தை இன்று காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவதில் பெரும்பாலான ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது, அதற்கான மறுப்பு கொடுக்கப்பட்டாலோ, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலோ அவற்றை உடனடியாக பிரசுரிப்பது கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ஊடகங்களின் தலையாய கடமையாகும். இதனைப் பெரும்பாலான ஊடகங்கள் செய்து, கருத்துப் பரிமாற்ற நேர்மையைக் காக்கின்றன.\nஆனால் என்ன காரணத்தினாலோ நடுநிலையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சில ஊடகங்கள் கூட பல நேரங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவதற்கும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பம் விளைவித்து கலகங்களை உருவாக்கவும், அதன் மூலமாக இந்துத்துவ சங்பரிவார கூட்டங்களின் வளர்ச்சிக்கும் துணை போய் விடுகின்றன.\nஇணையத்தில் சங்பரிவார ஃபாஸிஸ கூட்டத்தின் வளர்ச்சிக்காக, பொதுமக்களிடையே பொய்களையும் அவதூறுகளையும் எழுதிப் பரப்புவதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் எழுத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களால் தோலுரித்து காட்டப்பட்டும் உள்ளது. அந்த வரிசையில் மலர்மன்னன் என்ற பெயரில் எழுதும் ஒரு இந்துத்துவ வெறியர் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.\nதனது எழுத்துக்களில் இந்துத்துவா தனது எதிரியாக வரையறுத்து வைத்துள்ள இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸத்தைக் குறித்து உணமைக்குப் புறம்பான தகவல்களை வரலாறுகளாகவும், நிகழ்வுகளாகவும் தருவது தான் இந்த கோயபல்ஸின் முக்கிய வேலையாகும்.\nகாந்திஜியைக் கொன்ற மாபாதகன் கோட்சேயின் கொலைவெறியை தனது நாற்றம் பிடித்த எழுத்துக்களால் நியாயப்படுத்தி எழுதிய தேசதுரோகி மலர்மன்னன், முஸ்லிம்களை குறித்தும் இஸ்லாத்தை குறித்தும் நேர்மையாக எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது தான். திண்ணை டாட் காம் என்ற இணைய தளத்தில் இந்திய வரலாறுகளில் பல நிகழ்வுகளைத் திரித்து மக்களிடையே குழப்பத்தையும் துவேஷத்தையும் வளர்க்கும் விதத்தில் உண்மைக்குப் புறம்பாக எழுதியபோது, தோழர் கற்பக விநாயகம் அவர்களால் தோலுரிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி வாழ்க்கை வெறுத்துப் போய் இனி எதைப்பற்றியும் எழுதப் போவதில்லை என்று வடக்கிருந்த தேசத்துரோகி மலர் மன்னன், இன்று சிஃபி டாட் காம் என்ற தளத்தின் தமிழ் பகுதியில் அவதூறுகளை ‘எழுத’ வேண்டப்பட்டுள்ளார்.\nஇதே சிஃபி டாட் காம் இணைய தளம் இஸ்லாத்திற்கு எதிராக இணையத்தில் காழ்ப்பைக் கக்கி எழுதும் கயமை நிறைந்த போலி நபரான நேசகுமார் என்ற மற்றொரு இந்துத்துவ பார்ப்பனருக்கு சிஃபியில் தனி இடம் ஒதுக்கியதும் நினைவு கூரத்தக்கதாகும். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமெனினும் தங்கள் மன அழுக்கைக் கொட்டிக் கொள்ளட்டும். அதற்கு இடம் கொடுப்பதும், பிரித்து விடுவதும் அவரவர் விருப்பம் தான். ஆனால் சாதாரண ஊடகங்களுக்குரிய தர்மத்தை இவர்கள் கடைபிடிக்க வேண்டும் இல்லையா\nசமீபத்தில் இந்துத்துவா ஊதுகுழல் மலர் மன்னன், “கலைகள் தந்த தஞ்சை, கவலை தருகிறது” என்று எதுகை மோனையாகத் தலைப்பிட்டு எழுதி இருந்ததை சிஃபி டாட் காம் தமிழ் பதிப்பில் வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த உணமைக்குப் புறம்பான விஷயங்களையும் தவறுகளையும், பல யதார்த்தமான நிலைமைகளையும் சுட்டி சிஃபிக்கு ஒரு மறுப்புரை எழுதி பிரசுரிக்கும் படி கோரியிருந்தேன். மேலும் அக்கட்டுரை சமூகத்தில் மதக் கலவரைத்தைத் தூண்டும் வகையில் கயமை நோக்குடன் அவதூறாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.\nமறுப்பு அனுப்பப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மிகுந்து நாட்கள் ஆகிவிட்டன. நினைவுறுத்தல் கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. இதுவரை சிஃபி தமிழ் தள நிர்வாகியிடமிருந்து மறுப்புரையை பிரசுரிப்பது பற்றியோ அல்லது பிரசுரிக்க முடியாது என்றோ எவ்வித பதிலும் இல்லை. இந்த அளவுக்கு இருக்கிறது சிஃபி தமிழ் தளத்தின் எழுத்து நேர்மையும் கருத்துச் சுதந்திரமும்.\nசங்பரிவாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் துணைபோகும் இது போன்ற ஊடகங்களின் உண்மை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வெளியிடப்படும் தகவல்களில் அடங்கியுள்ள உண்மைக்குப் புறம்பான விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில் பல தளங்களை தொடர்பு கொண்டு இறுதியில், தமிழ் முஸ்லிம்களின் இணைய குரலாக வளர்ந்து வரும் சத்தியமார்க்கம் டாட் காம் என்ற தளம் எனது மறுப்புரையை வெளியிட முன்வந்துள்ளது.\nநம்மைப் பொறுத்தவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; ஆனால் அதே சமயம் அந்த விமர்சனத்தில் இருக்கும் தவறுகளையும் உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுகளையும் சுட்டி தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டால் ஏற்கும் அல்லது சான்றுகளுடன் மறுத்துரைக்கும் நேர்மை மட்டுமாவது விமர்சிப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். சிஃபியிடம் இத்தகைய கருத்து நேர்மை இல்லையென்பது என்னுடைய மறுப்புரைக்கு அவர்கள் காட்டும் நீண்ட மவுனமும், தேசதுரோகி இந்துத்துவ ஊதுகுழல் மலர் மன்னனின் உணமைக்குப் புறம்பான நாற்றமெடுக்கும் அவதூறு எழுத்துக்களை தொடர்ந்து தங்களது தளத்தில் வெளியிடுவதும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.\nஎனவே சிஃபி வெளியிடும் தேசவிரோதி மலர் மன்னனின் துவேஷ எழுத்துக்களில் உள்ள அவதூறுகளைத் தோலுரிக்கவும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவும் வாய்ப்பு நல்கிய சத்தியமார்க்கம் டாட் காம் தளத்திற்கு நன்றி கூறி, இங்கு மலர் மன்னனின் அவதூறுகளை மூன்று கூறுகளாகப் பிரித்துத் தொடராக எழுதவிருக்கிறேன். இந்த மறுப்புரைகளை இனி வரும் பகுதிகளில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.\nபகுதி 1 இன்ஷா அல்லாஹ் விரைவில் >\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/jun/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3170994.html", "date_download": "2019-06-26T13:48:37Z", "digest": "sha1:7XY3EZHTAXVOS4HLBOYW44NIACBDJORL", "length": 6698, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாடானை அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்: 10 பேர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதிருவாடானை அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்: 10 பேர் மீது வழக்கு\nBy DIN | Published on : 14th June 2019 07:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானை அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 10 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதிருவாடானை அருகே உள்ள நல்கிராம வயலைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (23). இவர் வெள்ளையபுரத்தில் உள்ள கோழிக்கறிக் கடையில் புதன்கிழமை மாலை கறி வாங்க வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் தனது காரை கறிக் கடைக்கு முன்பாகவும், சதீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்தும் நிறுத்தியுள்ளார். இதனை சதீஷ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து வியாழக்கிழமை மகேஷ் 10 பேர் கொண்ட கும்பலுடன் வந்து சதீஷ்குமாரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளையபுரத்தை சேர்ந்த மகேஷ், மதி, அடையாளம் தெரியாத 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/06/03165101/1244608/Pa-Ranjith-says-aim-of-people-is-to-make-awareness.vpf", "date_download": "2019-06-26T15:13:50Z", "digest": "sha1:GGVGFQEV7C2IQVZB43KWEQTR7MGZMXWP", "length": 8118, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pa Ranjith says aim of people is to make awareness", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமக்களுக்கு விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம் - பா.இரஞ்சித்\nபிரபல இயக்குநரான பா.இரஞ்சித், மக்களை அரசியல் மற்றும் சட்டரீதியாக விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம் என்று கூறியிருக்கிறார்.\nகலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார்.\nஅந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய \"நீலம் பண்பாட்டு மையம்\" இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.\nவேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் \"டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி\" என்ற இரவு பாடசாலையினை தொடங்கி வைத்திருக்கிறார்.\n\"இந்த இரவு பாட சாலையின் மூலம், அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அறிவார்ந்தவர்களாக நெறிப்படுத்துவதே நோக்கம். இதைப்போலவே தமிழகம் முழுக்க இருக்கிற கிராமங்களிலும் இதனை செயல்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க ஒத்துழைத்த ஜெய்பீம் பேரவை மற்றும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியோருக்கு நன்றிகள்\" என்றார் இயக்குநர் பா.இரஞ்சித்.\nபா இரஞ்சித் | Pa Ranjith\nபா.இரஞ்சித் பற்றிய செய்திகள் இதுவரை...\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்\nபா.ரஞ்சித்துக்கு எச்சரிக்கை விடுத்த கருணாஸ்\nமத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து\nபாலிவுட் இயக்குநருடன் கைகோர்த்த பா.இரஞ்சித்\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nபா.இரஞ்சித்தை நெகிழ வைத்த அனுராக் காஷ்யப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.loudoli.com/2019/01/circuit-launcher-2018-next-generation.html", "date_download": "2019-06-26T13:56:44Z", "digest": "sha1:VXC2Q3X5OBT35HHPQJH2LPZEA4E5CEKQ", "length": 6497, "nlines": 40, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Circuit Launcher 2018 - Next Generation theme,fast", "raw_content": "\nஇப்போதே 2018 சுற்று தொடரை முயற்சிக்கவும். அண்ட்ராய்டு சிறந்த 2018 பயன்பாட்டு தொடக்கம். எதிர்காலத்திற்கான UI உடன் மொபைல் தீம் சேஞ்சர்\nபுதிய 2018 கருப்பொருளில் இது ஒன்றாகும் . சிறந்த கருப்பொருள்களில் ஒன்றை முயற்சிக்கவும் 2018: சர்க்யூட் லாஞ்சர் 2018 2018 ஹாலோகிராபிக் UI ஆனது 2018 சிறந்த கருப்பொருளுடன் உங்கள் தொலைபேசியை முற்றிலும் புதிய வடிவமைப்பிற்கு கொடுங்கள். சர்க்யூட் தொடக்கம் பயன்படுத்த எளிதான, ஸ்டைலான மற்றும் அதிக செயல்திறன் வழங்குகிறது. உங்கள் தொலைபேசியின் வீட்டுத் திரையில் பாணியில் மின்சாரம் அல்லது எதிர்காலத்திற்கான பயனர் இடைமுகத்தில் பாணியிலானது, இது உங்கள் Android தொலைபேசியில் அடுத்த தலைமுறை தொடக்கம் அல்லது மெய்நிகர் கருத்தை வழங்குகிறது.\nஎளிதான மற்றும் சிறந்த ஊடாடும் கட்டுப்பாட்டு அனுபவத்திற்கு பயனர் வழங்கும் புதிய சுத்தமான மற்றும் சரியான பயனர் இடைமுக வடிவமைப்பு. இது பல்வேறு பாணிகளை உங்கள் தொலைபேசி அதிகரிக்க இது மிகவும் அற்புதமான மற்றும் பயனுள்ள அம்சங்கள் மற்றும் பல்வேறு வண்ண கருப்பொருள்கள் வழங்குகிறது.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCircuit Launcher 2018 - Next Generation theme,fast இப்போதே 2018 சுற்று தொடரை முயற்சிக்கவும். அண்ட்ராய்டு சிறந்த 2018 பயன்பாட்டு தொட...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/03/blog-post_78.html", "date_download": "2019-06-26T13:59:23Z", "digest": "sha1:RG32LZLT2ARVYPGNVAIKFC5AENLC4SVC", "length": 8370, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "மௌன வலிகளின் வாக்குமூலம் சென்னையில் வெளியீட்டு வைப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மௌன வலிகளின் வாக்குமூலம் சென்னையில் வெளியீட்டு வைப்பு\nமௌன வலிகளின் வாக்குமூலம் சென்னையில் வெளியீட்டு வைப்பு\nசமூக சிற்பிகள் நிறுவனத்தின் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட படைப்பாளிகளின் அனுபவ கதைகளை \"மௌன வலிகளின் வாக்குமூலம்\" என்ற நூலாக நக்கீரனின் வார இதழ் வெளியிட்டுள்ளது. சமூக சிற்பிகள் நிறுவனத்தின் மூத்த சிற்பி ஷெரின் சேவியர் தலைமையில் இவ் நூலானது சென்னை கவிக்கோ அரங்கில் வெளியிடப்பட்டது\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/topics/bigg-boss-vote", "date_download": "2019-06-26T13:51:15Z", "digest": "sha1:EE5KXEKUWM7UO7JU2F4NRLD2ZY4PBME3", "length": 14976, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\nவாழ்த்துகள் ரித்விகா... 106 வது நாள் பிக்பாஸின் 16 ஹைலைட்ஸ்\nகமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்\nஆப்சென்ட் ரெண்டு... செம்ம குஷி மஹத்... டேனிக்கு என்ன கடுப்போ #BiggBossTamil2\n`ஐஸ்வர்யாதான் விஜய்... ரித்விகாதான் அஜித்... ஓ.கே-வா பாஸ்\nடீனேஜ், பேச்சுலர்ஸ், அங்கிள்ஸ்... ஐஸ்வர்யா, ஜனனி, யாஷிகா... யாருக்கு யாரைப் பிடிக்கும்\n\" - இவ்ளோ நல்ல பொண்ணா ஐஸ்வர்யா\nஐஸ்வர்யாவைவிட யாஷிகாவை நாமதான் ரொம்ப மிஸ் பண்ணுவோம்... ஏன்னா\nஜனனி, ஐஸ், ரித்து, விஜி... பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்..\nகமலுக்கு ஒரு க்ளாப்... ஒரு ரெக்வஸ்ட்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.virakesari.lk/article/58060", "date_download": "2019-06-26T14:20:36Z", "digest": "sha1:G4IFNZSH25CXL3BMYR5Z5A7I322PRD75", "length": 17845, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் - மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க | Virakesari.lk", "raw_content": "\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\n30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் - மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க\n30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் - மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க\nஉங்களோடு 30 வருடமாக யுத்தம் செய்திருக்கிறோம். உங்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகப் பொறுப்பேற்றதன் பின்னர் உங்களிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள், எப்பிரதேசத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் கேட்டதில்லை. நீங்கள் யார் என்பதனையெல்லாம் மறந்துவிட்டு நண்பர்களாக, சகோதரர்களாகவே பழகினோம் என்று மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு தொழில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.\n2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுபெற்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆயத்தப்பட்டோம். யாழ்ப்பாணத்தில் துரையப்பா கொல்லப்பட்டதிலிருந்து தொடங்கிய யுத்தம் 30 வருடங்கள் நடைபெற்றது. இந்த பத்து வருடத்தில் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அந்தவகையில் இங்கிருப்பவர்களோடு நேருக்கு நேராக சண்டையிட்டிருக்கிறேன். உங்களோடு 30 வருடமாக யுத்தம் செய்திருக்கிறோம். உங்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகப் பொறுப்பேற்றதன் பின்னர் உங்களிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள், எப்பிரதேசத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் கேட்டதில்லை. நீங்கள் யார் என்பதனையெல்லாம் மறந்துவிட்டு நண்பர்களாக, சகோதரர்களாகவே பழகினோம்.\nநாட்டில் ஜே.வி.பி. யினுடைய பிரச்சினை இருந்த காலத்தில் அவர்களோடு சண்டையிட்டிருக்கிறோம். பிடித்தோம், அழித்தோம். அதன்பின்னர் நாட்டுக்காக அவர்களைச் செயற்படுத்தினோம். அவர்களோடு நன்றாகவே பழகுகின்றோம். நாட்டின் சமாதானத்துக்காகவே முப்படையினரும் பாடுபட்டோம். அதற்காகவே எல்லோரும் உழைத்தார்கள்.\nதமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து வாழக்கூடிய மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் புனர்வாழ்வளிப்பின் பின்னர் பல்வேறு உதவிகளை எமது பணியகத்தின் ஊடாக மேற்கொண்டு வருகிறோம்.\nசிறுவயதில் யுத்தத்திற்குச் சென்றபோது, பெற்றோரை, தாய், தந்தையரை இழந்தீர்கள், கல்வியை இழந்தீர்கள், இப்போது படிப்பு இல்லாமல் போயிருக்கிறது, வீடு வாசல் இல்லாமல் போயிருக்கிறது. அவற்றையெல்லாம் மீண்டும் ஏற்படுத்தித் தருவதற்காக ஆயத்தமாகியிருக்கிறோம்.\nயுத்தம் முடிந்து பத்து வருடங்களாகிவிட்டன. நாம் எல்லோரும் இந்தப்பிரதேசத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். நாங்கள் முன்னர் எப்படியிருந்தோம், பின்னர் என்ன நடந்தது. இனிவரும் காலத்தில் என்ன தேவை என்பது பற்றி நாம் எல்லோரும் மன ஒருமைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.\n2014 -17ஆம் ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறோம். திருகோணமலை மாவட்டத்திலுள்ள 550 புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்பங்களும் பயன்பெறும் வகையில் 16 லட்சம் ரூபாவை இந்த வருடத்தில் செலவிட்டுள்ளோம். அத்தோடு அரசாங்க அதிபரூடாகவும் 3 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்குவதற்காக கையளித்துள்ளோம். அதன் ஊடாகவும் பல்வேறு உதவிகள் வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்தும் உங்களது மேம்பாட்டுக்காக உதவிகளைப் புரிவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றார்.\n30 வருட யுத்தம் நண்பர்களாகவே பழகுகிறோம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nகடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன\n2019-06-26 19:40:59 கடுவலை இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.\n2019-06-26 19:07:26 மரணதண்டனை மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஎம்மில் பலருக்கும் இன்றைய திகதியில் நீரிழிவு நோய் இருக்கிறது. இதற்காக மருத்துவர்கள் இரவு அல்லது மாலை நேர உணவாக கோதுமையில் தயாரான சப்பாத்தியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்நிலையில் சிலருக்கு கோதுமையில் தயாரான உணவு பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி செலியாக் நோயை உண்டாக்கிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2019-06-26 19:08:59 செலியாக் நோயிற்கான நிவாரணம்\nரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு ஒத்திவைத்துள்ளது.\n2019-06-26 18:52:33 தெரிவுக்குழு ரிஷாத் பதியூதீன் parliament\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\nகழிவுநீர் வடிகானால் தெமட்டகொடையிலுள்ள பாடசாலை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nadunadapu.com/?p=153769", "date_download": "2019-06-26T15:14:08Z", "digest": "sha1:6B54NJIURYSAFVWB5D7Z4HJ2NHUGOOGV", "length": 18879, "nlines": 196, "source_domain": "nadunadapu.com", "title": "இந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு 800க்கும் மேற்பட்டோர் பலி | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nஇந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு 800க்கும் மேற்பட்டோர் பலி\nஇந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகினர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவித்துள்ளது.\nமுதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அம்முகமை தெரிவித்துள்ளது.\nவெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nமேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் வெறும் கைகளால் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.\nடாங்காலா என்னும் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை எனவே அந்நகரின் சேதங்கள் குறித்து அதிக கவலைகள் உள்ளன என அவர் தெரிவித்தார்.\nசாலைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், பாலங்கள் இடிந்துவிட்டமையாலும் தேடுதல் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.\nநிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1.6மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.\n“இது ஒரு பேரழிவு ஆனால் இது மேலும் மோசமானதாகவும் இருக்கலாம்” என செஞ்சிலுவை சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nடோங்கலா தீவில் வெள்ளியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்பு சிறு சிறு அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன.\nபாலு தீவின் தற்போதைய நிலை என்ன\nபாலு நகரில் ரோ ரோ என்ற விடுதி ஒன்றில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த 24 பேரை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளை கொண்டு மீட்டுள்ளனர்.\nஉதவிகள் கோரி மக்கள் கதறும் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே உள்ளது ஆனால் மீட்புப் பணியில் ஈடுபடுத்த பெரிய இயந்திரங்கள் ஏதும் இல்லை என அந்த விடுதியின் உரிமையாளர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.\n335,000 மக்கள் தொகை கொண்ட அந்நகரில் இன்னும் பலரை காணவில்லை, மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநகரின் சாலைகளில் பலியானவர்களின் உடல்கள் கிடக்கின்றன மேலும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதால் காயமடைந்தவர்களுக்கு தற்காலிக கூடாரங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்தோனீசியாவின் சுலவேசி தீவில் மாலை 6.03க்கு 7.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் சுனாமியும் ஏற்பட்டது என அமெரிக்க கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாலு தீவில் திருவிழா ஒன்றுக்கு தயார் செய்து கொண்டிருந்த மக்கள் 3 மீட்டர் உயரத்துக்கு வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.\nமக்கள் பயத்தில் அங்கும் இங்குமாக ஓடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.\n“நிலநடுக்கம் ஏற்பட்ட போது நாங்கள் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம் இங்குள்ள மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.\nஉணவு, குடிநீர் மற்றும் சுத்தமான நீர் தேவைப்படுகிறது; அடுத்த வேளை சாப்பிடுவதற்கும் எங்களுக்கு உணவில்லை” என நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 39 வயது அன்சர் பாச்மிட் தெரிவித்தார்.\n“எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு போதிய நேரம் இல்லை நான் சுவர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டேன்..எனது மனைவியும், குழந்தையும் உதவிக்கேட்டு அழுது கொண்டிருந்தனர் அவர்களுக்கு என்வாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என நிலநடுக்கத்தில் சிக்கிய நபர் ஒருவர் செய்தி முகமை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவிக்னேஸ்வரனும் குழப்பங்களும் – கபில்\nNext article`இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா’ – அமைச்சர் ஜெயக்குமார்\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்\nபிக்பாஸ்-3, வனிதா – சாக்ஷி மோதல் – அதிரடி வீடியோ\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59369-sneha-who-appearing-in-period-end-of-sentence-celebrates-her-village.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T14:55:12Z", "digest": "sha1:24PATCBOQT4K56UZ4FWDE7UPO7K2YAQ4", "length": 8912, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’பீரியட்’ படத்துக்கு ஆஸ்கர் விருது: இனிப்பு வழங்கி கொண்டாடிய உ.பி.பெண்! | Sneha, who appearing in 'Period. End of Sentence’, celebrates her village", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n’பீரியட்’ படத்துக்கு ஆஸ்கர் விருது: இனிப்பு வழங்கி கொண்டாடிய உ.பி.பெண்\nஆவணக் குறும்படமான, ’Period. End of Sentence’ ஆஸ்கர் விருது வென்றதை அடுத்து, அந்தப் படத்தில் நடித்துள்ள இந்திய பெண் சினேகா இனிப்பு வழங்கி கொண்டாடினார்.\n91 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி ஸ்டூடியோவில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில், ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது ‘பீரியட். எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற படத்துக்கு வழங்கப்பட்டது.\nமாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை இப்படம் பதிவு செய்துள்ளது. கோவை யை சேர்ந்த அருணாச் சலம் முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், கோவை, உத்தரபிரதேச கிராமங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டது.\nஇந்தப் படத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் அருகே உள்ள கதிகெரா கிராமத்தைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணும் நடித்திருந் தார். இந்நிலையில் இந்த ஆவணக்குறும்படம் ஆஸ்கர் விருது பெற்றதை அடுத்து, தனது கிராமத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டினார் சினேகா.\n“மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை இந்த விருது அதிகரிக்கும்” - முருகானந்தம் மகிழ்ச்சி\nலயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிநேகா\nஇரட்டை வேடத்தில் தனுஷ்.. மீண்டும் ஜோடியாகிறார் சிநேகா\nபுதுப்பேட்டைக்கு பின்பு தனுஷுடன் இணையும் சிநேகா\nகளைகட்டிய ஆஸ்கர் விழா: அதிக பெண்களுக்கு இம்முறை விருது\nகோவையில் படமான ’பீரியட்’ ஆவணக்குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது\nஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாகத் தொடங்கியது\nஆஸ்கர் விருது விழா, பிரமாண்டமாக நாளை நடக்கிறது\nபிரபல ஹாலிவுட் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி காலமானார்\nதொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது விழா: இது 2-வது முறை\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை இந்த விருது அதிகரிக்கும்” - முருகானந்தம் மகிழ்ச்சி\nலயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/profile/prabin7924?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-26T15:23:46Z", "digest": "sha1:V2CKQYNZLULAZJZ3NB4USKJ4PNM7WCVH", "length": 3782, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "💗💞prabin💟💝 - Author on ShareChat - Iam young boy", "raw_content": "\nIcc world cup #🌷 வாழ்த்து #💪 தன்னம்பிக்கை #🏆 2019 WC கிரிக்கெட் #cricket\nEn viral idukula song status #🎵 இசை மழை #💕 காதல் ஸ்டேட்டஸ் #✍ டிஜிட்டல் கலை\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/04/land-labour-privatisation-will-sonn-big-bang-reforms-soon-014794.html", "date_download": "2019-06-26T13:46:40Z", "digest": "sha1:JBUOIZ2XX5TJEWKXOFEEOBZRSTQYACS4", "length": 36066, "nlines": 235, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடியின் முதல் 100 நாள் அதிரடி திட்டங்கள் .. உலக வரைபடத்தில் டாப்புக்குப் போகுமா இந்தியா? | Land, labour, privatisation will sonn Big bang reforms soon - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடியின் முதல் 100 நாள் அதிரடி திட்டங்கள் .. உலக வரைபடத்தில் டாப்புக்குப் போகுமா இந்தியா\nமோடியின் முதல் 100 நாள் அதிரடி திட்டங்கள் .. உலக வரைபடத்தில் டாப்புக்குப் போகுமா இந்தியா\nCognizant ரூ.2912 கோடி வரிய கட்டு\n46 min ago cognizant ஜி... இது அமெரிக்கா இல்லை.. இந்தியா.. ரூ.2912 கோடி வரியை கட்டு.. இல்லை நடையைக் கட்டு\n1 hr ago முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\n1 hr ago இங்கே வாங்க எல்லா சலுகையும் தறோம்... சீனாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு இந்தியா தூண்டில்\n14 hrs ago கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nMovies கட்டிப்பிடிக்க சென்ற மீரா.. மிரண்டு போன சேரன்.. சந்தில் சினேகனுக்கும் லந்து\nSports சர்ப்ரைஸ்.. இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு யார் வந்திருக்கா பாருங்க.. சந்தோஷத்தில் வீரர்கள்\nNews இயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nTechnology மீண்டும் விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.\nLifestyle திடீர் யோகத்தால் சந்தோஷ கடலில் மிதக்கப்போற ராசி இதுதாங்க... உங்களோடதானு செக் பண்ணுங்க...\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இரண்டாம் முறையாக பதவியேற்ற பின் 100 நாட்களுக்குள் பல அதிரடியான செயல் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாம், இது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே என்றாலும், இந்த அதிரடியான திட்டங்கள் மக்களுக்கு உபயோகமாக இருக்குமா என்பது தான் தற்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஆமாப்பு தற்போது இருக்கும் பொருளாதார நிலையை யோசித்து செயல்படுவதற்காக ஒரு சிந்தனை குழுவை நியமித்துள்ளராம் மோடி. அவர்களின் கூற்றுப்படி அரசு விரைவில் பெரிய பெரிய முதலீடுகளை பெற வேண்டும் என்பதே அரசின் முதல் நோக்கமாம்.\nஅவ்வாறு அரசு தேவைக்கேற்ப முதலீடு வேண்டும் எனில், பெரிய அளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமாம். அவ்வாறு அன்னிய முதலீடுகளை பெருமளவுக்கு நமது பொருளாதார கொள்கையோ தற்போது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதே இந்த குழுவின் கருத்து.\nஆக அதிகளவிலான அன்னிய முதலீடுகளை பெற வேண்டுமெனில் முதலில் பொருளாதார கொள்கையை சீர்திருத்த வேண்டும் என்று பல தரப்பிலும் மோடிக்கு இடி விழுந்து கொண்டே இருக்கிறதாம். ஆமாப்பு இது குறித்து NITI aayog அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், குறிப்பாக தொழிலாளர் குறித்த சட்டங்களில் சீர்திருத்தங்கள், புதிய தொழில்துறை வளர்ச்சிக்கான நிலச்சீர்த்திருத்தங்கள், தனியார் மயமாக்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பலவற்றினை பற்றிய அறிக்கைகள் மோடி தலைமையிலான அரசுக்கு தரப்பட்டுள்ளதாம்.\nஇது குறித்து ராஜீவ் குமார் கூறுகையில், அதிக அளவிலான அன்னிய முதலீடுகளை பெறவும், அன்னிய முதலீட்டாளர்கள் சந்தோஷப்படும் வகையில் நில சீர்திருத்தங்களை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் முதலீடுகள் அதிகரிக்கும். இதற்காக நான் உறுதியளிக்கிறேன். நிச்சயம் இது மிகுந்த பயனளிக்கும் எனவும் செய்திக் குறிப்பில் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.\nசோவியத் பாணியிலான அதிகாரத்துவத்துடன் இந்தியா முடங்கிவிட்டதாகக் கூறி, கடந்த 65 ஆண்டுகால திட்டக் கமிசனைக் கலைத்தது மோடி தலைமையிலான அரசு. அதற்குப் பதிலாகத் தான் கடந்த நான்கு ஆண்டுக்களுக்கு முன்பு நிதி ஆயோக் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது அரசின் கொள்கை முடிவுகளின் மையமாகவும் அரசுக்கு புதிய யோசனைகளைத் தரும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.\nஜூலையில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவின் பிரச்சினைக்குரிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு ஒரு முக்கிய முடிவு கட்டப்படும் என்றும், முன்னதாக கீழ் அவையில் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.\nகுறிப்பாக இந்த சட்ட சீர்திருத்தங்கள் நான்கு குறியீடுகள் அடிப்படையில் 44 சட்டங்களை நிறைவேற்றப்படுமாம். ஆமாப்பு குறிப்பா சம்பளம், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு, நலன் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் அடங்கிய சட்டங்களைக் குறிவைத்து இது நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாம்.\nபொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிப்பது குறித்த முக்கியமான முடிவை அரசு எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு அரசு வசம் உள்ள நிலத்தில் சரக்கு முனையத்தை உருவாக்கி அதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்கிறார். இத்தகைய நிலம் வழங்கும் திட்டத்தை முதலீட்டாளர் அல்லது தொழில்துறைக்கு ஏற்றபடி உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இதனால் அன்னிய முதலீடுகளை ஈர்க்க இது ஏதுவாக அமையும் என்கிறார் ராஜீவ்.\nஅரசின் நிலம் வழங்கும் திட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய உரிமை தொடர்பான சட்ட பிரச்சினைகளுக்கு ஒரு முடிவாக இருக்கும். அதோடு அது போன்ற பிரச்சனைகளில் இருந்து அவர்களை அது காப்பாற்ற உதவும். ஏனெனில் விவசாய நிலங்களை வழங்குவதால் போராட்டம், வழக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது. ஏற்கனவே இவ்வாறு வழங்கப்பட்டதால் பல பிரச்சனைகளை அரசு சந்தித்தது. அதோடு மக்கள் போராட்டம், சுற்றுச்சூழல் பிரச்சனை பல வகையிலும் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால் அரசுக்கு சொந்தமான நிலங்களை வழங்குவதால் இந்த பிரச்சனைகள் அதிகளவில் இருக்காது என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமோடி அரசு மேற்கொள்ள உள்ள மற்றொரு முக்கியமான சீர்திருத்தம், என்னவெனில் அதிக பிரச்சனைகளில் உள்ள 42-க்கும் அதிகமான அரசு நிறுவனங்களை முழுவதுமாக தனியார் மயமாக்குவது அல்லது இழுத்து மூடிவிடலாமா என்பது குறித்து மோடி அரசு கவனம் செலுத்த உள்ளதாம். என்ன கொடுமை சாமி இது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கவோ அல்லது அன்னிய நேரடி முதலீட்டில் உள்ள சில நிபந்தனைகளைக்கூட தளர்த்திக்கொள்ள திட்டமிடுவதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து நிறுவனங்களையும் நிர்வகிக்க நிறுவனம்\nவெவ்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களையும் நிர்வகிக்க தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம், அந்த நிறுவனங்கள் வசம் உள்ள சொத்துக்களை எளிதில் விற்க முடியும் எனவும், இதற்காக பல்வேறு மந்திரிகளுக்கு பதில் கூற இயலாது எனவும், இதற்கான நேரமும் தற்போது இல்லை எனவும், இவ்வாறு செய்வதன் மூலம் அரசின் நிர்வாக பொறுப்புகள் குறையும் எனவும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.\nவேலை வாய்ப்பும் உருவாக்கப்பட வேண்டும்\nநரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுக்கு காத்திருக்கும் பெரிய சவாலே, இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் தான். ஆமாப்பு கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் 6.6% சரிவடைந்தது கவனிக்கதக்கது. அதிலும் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்த விகிதம் இன்னும் குறையலாம் என்றும், அது மிக கவலை கொள்ளும் விதமாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதோடு மில்லியன் கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு பணி வழங்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியை விரைவில் அதிகரிக்க வேண்டுமாம்.\nவங்கிகளின் கவலைக்குரிய இருப்பு நிலையும், கடன் அளிக்கும் துறையில் இருக்கும் இந்த பெரிய நெருக்கடியும் இந்த நிலைக்குக் ஒரு காரணம் என்றே கூறலாம். ஆக அரசு வங்கிகளை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என யோசனை தெரிவிக்கும் ராஜீவ் குமார், கட்டுமான மற்றும் புதிய பொது வீடுகளுக்கு செலவழிக்கும் வகையில் அதிகத் தொகையை உருவாக்க வேண்டும் என்கிறார். புதிய பொது வீடுகள் மூலம் தனியார் மயமாக்கத்தை விரைவாக்க முடியும் என்றும், அதன் மூலம் அதிக வரி வசூலும் கிடைக்கும் என்கிறார் ராஜீவ்.\nஇந்த தொடக்கத்தை முதலில் நாம் வங்கிகளிலிருந்து தொடங்கலாம். அதோடு அடுத்த நூறு நாட்களில் பெரிய விசயங்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான ஆயத்தத்தில் தான் இருக்கிறோம். இந்த நிதிக் கொள்கையானது எதிர் சுழற்சிக்கானதாக இருக்கும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசார், உங்க பேங்கோட சொத்த வித்து கிராமத்தோட வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிங்க\nமோடிஜி ஒயின்ஷாப்புடன் ஆதார் எண்னை இணையுங்கள்.. மானியமும் கொடுங்கள்.. கேரள பெண் பலே கோரிக்கை\nசௌக்கிதார் மோடியுடன் டீ குடிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்.. எதிர்பார்ப்பில் மக்கள்\nமோடியின் சமாதான புறா.. டிரம்பிடம் பலிக்குமா.. favourable trade package சலுகை அளிக்கும் இந்தியா\nசூப்பர் மோடிஜி.. அசத்தும் பென்சன் திட்டங்கள்.. அதிரடியாக களத்தில்.. பலே பலே தான்\nGST வருவதால் இனி பெட்ரோல் விலை குறையும்.. ஆனா நமக்கு இல்லங்க..\nஅடுக்கடுக்கான சவால்களை சந்திக்கும் மோடிஜி.. சவால்களை எதிர்கொள்ளும் நிதியமைச்சர் வேண்டும்..FICCI\nநரேந்திர மோடி பிரதமரானது இந்தியா மக்களின் அதிர்ஷ்டம் என்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nமறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன\nமோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு\nவாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்\nமோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா\nBike Bot - மூலம் ரூ.1500 கோடி அபேஸ்.. 2.25 லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடிகள்.. கதறும் மக்கள்\nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nகமிஷனுக்கு நோயாளியை விற்ற ஈரோடு சம்பவம் விஜயண்ணா பிறந்த நாளில் நடந்த லைவ் மெர்சல் காட்சிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-26T14:10:10Z", "digest": "sha1:23NQXWVK627253ZS2MMEV4PP6YQB2YZ5", "length": 111277, "nlines": 907, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "இட ஒதுக்கீடு | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஇட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்\nகருணாநிதி (அன்கோ) வின் இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்\n30.05.2008 அன்று மீண்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். முன்பு அறிவித்த இட ஒதுக்கீட்டின் அர்த்தம் என்ன முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆய்வு செய்ய 9 பேர் அடங்கிய ஜனார்த்தன கமிட்டியில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லாதது கருணாநிதியின் சாதனை. கமிட்டியில் கூட இட ஒதுக்கீடு வழங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கலைஞர் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திர கமிட்டி அறிக்கையை தூசு தட்டி முஸ்லிம்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது தான் சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு.\n6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கமிட்டியை தள்ளுபடி செய்து, இன்றைய முஸ்லிம்களின் மக்கள் தொகை, கல்வி, பொருளாதாரம், இட ஒதுக்கீடு நிலையை ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 4 சதவீதம் முறையாக அங்கு கொடுக்கப்பட்டது. (கவனத்தில் கொள்க) 2 லட்சத்து 81 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்பட்டதாக டாக்டர் கலைஞரின் அரசு விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. அதில் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் என்றால் தலா கிருஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் 10,500 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். கிடைத்திருப்பதோ 0.5 சதவீதம் கூட இல்லை. மேலும் சில உயர் பணியிடங்களுக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிப்பதற்கு கூட தகுதி இல்லாத நிலை உருவாகி விட்டது.\nசிறுபான்மையினர் பாதுகாவலர், சமூக நீதி காத்தவர் என்று ஏற்றி போற்றி பாடப்படும் கருணாநிதியோ அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு என்று சாக்கு போக்கு சொல்கிறார். சட்ட மன்றத்தில் சிறுபான்மை சமூகத்தினர் இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருக்கிறது என்று இரட்டை நாக்கை சுழற்றினார். அரசு அதிகாரிகளோ கிருஸ்துவர்கள் 14வது இடத்திலும், முஸ்லிம்கள் 28வது இடத்திலும் (ரோஸ்ட்டர்) சுழற்சி முறையில் இருக்கிறார்கள், அரசு ஆணைப்படி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைக்க வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகள் நீங்கள் பொருத்து இருக்க வேண்டும் என்கின்றனர். அப்படி பொறுத்திருந்தால் வயது வரம்பு கடந்து பணிக்கு சேரும் தகுதியை நம் சமுதாய இளைஞர்கள் இழந்து விடுவார்கள். இந்த இட ஒதுக்கீட்டால் எந்த நம்மையும் இல்லாமல் போய்விட்டது. முன்பு 3.2 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடிம், சட்ட சிக்கலும் இல்லாமல் முஸ்லிம்கள் சில இடங்களைப் பெற்றார்கள். அந்த நிலை இன்று கருணாநிதி அரசால் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது.\nஅமைச்சர் ஆற்காடு வீராச்சாமியும், அன்பழகனும், நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இட ஒதுக்கீடு குளறுபடிகள் சரி செய்யப்படும் என்றனர். சரி செய்யப்படாத நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தது. ஒரு தலைமுறையே பாதிக்கின்ற மிகப் பெரும் கொடுமை 3.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. எங்களின் விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், சட்ட சிக்கல்கள், குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கிருஸ்த்துவ, இஸ்லாமிய அமைப்புகளும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் 30.05.2008 அன்று சென்னையில் மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nஅவசர அவசரமாக கருணாநிதி (அன்கோ) கூடி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முறையாக மீண்டும் அமல்படுத்தப்படும் என்றனர். இன்று 3 லட்சம் பணி இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. முஸ்லிம்களுக்கு அதில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. இனி முறையாக அமல்படுத்த கலைஞர் அன்கோ ஆணை பிறப்பித்து இருக்கிறது. குதிரை போன பிறகு லாடத்தை தேடும் நிலையில் அரசு ஈடுபட்டு இருக்கிறது. நன்றி பாராட்டி விழா நடத்தியவர்கள், ரகசியமாகச் சென்று துண்டு போட்டு சிறை நிரப்பு போராட்டத்தின் வெற்றி என வெற்று அறிக்கை விட்டவர்கள் இட ஒதுக்கீட்டு துரோகத்தை வரலாற்று சாதனை என்று கூனி குறுகி கூன்பிறையாய் கொக்கரித்தவர்கள், சுனாமியை விட பயங்கரமான ஒரு தலைமுறையையே பாதிக்கும் துரோகத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இதயத்தை இரும்பாகப் பெற்றவர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். இளைஞர்களே சிந்தியுங்கள்\nதவிட்டைத் தங்கம் என்று சொன்னால் பாராட்டுவதா குப்பையை குண்டு மல்லி என்று சொன்னால் குதித்து ஆடுவதா குப்பையை குண்டு மல்லி என்று சொன்னால் குதித்து ஆடுவதா அறிவைத் தொலைத்து விட்டு அறுப்பதற்கு ஆடுகள் என்று தலையை நீட்டுவதா அறிவைத் தொலைத்து விட்டு அறுப்பதற்கு ஆடுகள் என்று தலையை நீட்டுவதா மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி சுயநலத்திற்கு சமுதாயத்தை அடகு வைக்கும் தலைவர்களை (மன்னிக்கவும்) தலைவலிகளை, ஆம் மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி சுயநலத்திற்கு சமுதாயத்தை அடகு வைக்கும் தலைவர்களை (மன்னிக்கவும்) தலைவலிகளை, ஆம் சமுதாய ஏஜென்டுகளை, கடல் செத்த மீன்களை ஒதுக்கி விடுவது போன்று அவர்களை ஒதுக்கி விட்டு அரசியலில் இந்திய தேசிய மக்கள் கட்சியில் ஒற்றுமையை உறுதிப்படுத்தி நம் இட ஒதுக்கீட்டை நாமே தீர்மானிக்க இணைவீர், இன்றே தொடர்பு கொள்வீர்.\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழக பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு\nஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம்\nபுதுடில்லி: இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13 சதவீதம் இருந்தும், ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 9.39 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம்கள் வெறும் 7.52 சதவீதம் பேர் மட்டுமே. பள்ளிகளில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவது குறித்து தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைகழகம், முதல் முறையாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பி., பீகார், மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்களில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இம்மாநிலங்களில், முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் பள்ளிகளில் அவர்களின் சேர்க்கைக்கும், பெரியளவில் வித்தியாசம் உள்ளது. அசாம், காஷ்மீர், ஆந்திராவில் நிலைமை சற்று தேவலை.\nசில மாநிலங்களில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவரில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்த புள்ளி விவரங்களில், சற்று தவறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில பள்ளிகளில் முஸ்லிம்கள் இனம் பிரித்து சேர்க்கப்படுவது இல்லை. அடுத்த ஆண்டு ஆய்வின் போது, இது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆய்வின் படி, காஷ்மீரில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 66.97 சதவீதம். நடுநிலை வகுப்புகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 60.50 சதவீதம். அசாமில், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிப்பதால், அங்கும் மாணவர் சேர்க்கை 30.92 சதவீதமாக உள்ளது. ஆந்திராவில் ஆரம்பப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 9.17 சதவீதம். நடுநிலைப் பள்ளிகளில் இது 9.11 சதவீதமாக உள்ளது.\nமேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 25 சதவீதமாக இருந்த போதிலும், ஆரம்பப்பள்ளிகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 27.92 சதவீதமாக உள்ளது. கேரளாவில், முஸ்லிம் மக்கள் தொகை 24.7 சதவீதம், ஆனால், முஸ்லிம் மாணவர் சேர்க்கையில் ஆரம்பப்பள்ளியில் 10.13 சதவீதமும், நடுநிலைப்பள்ளிகளில் 9.59 சதவீதமாகவும் உள்ளது. இந்த ஆய்வில், முந்தைய ஆண்டுகளை விட ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர்களின் மாணவர் சேர்க்கை பெரியளவில் வித்தியாசப்படவில்லை. பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி வகுப்புகளில், தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், கல்வி மேம்பாட்டு புள்ளி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கேரளாவே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் இரண்டு புள்ளிகள் பின்தங்கினாலும், இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த டில்லி, மேலும் ஓரிடம் தாண்டி, மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது.\nகடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆந்திரா நான்கு இடங்கள் பின்தங்கி, எட்டாவது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவும் கூட ஆறாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்துக்கு பின்தங்கி உள்ளது.\nதமிழக முஸ்லிம் இயக்கங்கள் உடனடி கள நடவடிக்கையில் இரங்கி, ஊர் தோறும் முஸ்லிம் மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசத்தமின்றி படைக்கப்பட்ட வரலாறு – TMMK நன்றி அறிவிப்பு மாநாடு\nFiled under: இட ஒதுக்கீடு, தமுமுக, நன்றி அறிவிப்பு — முஸ்லிம் @ 9:32 பிப\nமேடையில் கலைஞருடன் தமிழ் முஸ்லிம் தலைவர்கள்\n(இதைப் பார்த்து விட்டு சிவப்பு விளக்கு கணவில் இருக்கும் சிலருக்கு துர்க்கம் வரவில்லையாம்)\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்காக எடுக்கப்பட்ட சிறப்பு புகைப்படங்கள்\nமாநட்டு புகைப்படத் தொகுப்பு (பகுதி-01)\nமாநட்டு புகைப்படத் தொகுப்பு (பகுதி-02)\nகடந்த 24.11.2007 அன்று இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியமைக்காக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தமிழக இஸ்லாமிய மக்களின் சார்பாக நன்றி அறிவிப்பு மாநாட்டை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடத்தி காட்டியது.\nசகோ. சஃபியுல்லா மற்றும் அப்பாஸ் அலி\nதமிழகத்தில் பலர் சிந்திகக் திறனற்றவர்களாக பத்து லட்சம் கூடியது என்று கூறி சமுதாயத்தை அடகு வைத்ததோடு மட்டுமல்லாமல் அன்று கலைஞர் வெளியிட்ட அரசானையையும் கின்டல் செய்து இட ஒதுக்கீடு எல்லாம் கிடைக்காது என்று கேலி பேசினார்கள், ஆனால் இட ஒதுக்கீடு கிடைத்தவுடன் இன்று அது தன்னால் தான் கிடைத்தது என்று சின்னப் பிள்ளையாட்டம் கைப்பிள்ளை விளையாட்டு விளையான்டு கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் பேரதிகமான தமிழ் முஸ்லிம் மக்களை அழைத்து வந்து சென்னை மாநகரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தார்கள் த.மு.மு.க வினர்.\nசவுதி அரேபியா கிழக்கு மன்டல நிர்வாகி பொறியாளர் சஃபியுல்லா கலைஞருக்கு பரிசளிக்கிறார்\nவின் டி.வி யில் கிசுபுள்ளாவின் பேச்சை நேற்று இரவு கேட்டபோது ஒரே சிரிப்பானி சிரிப்பானியா வந்தது. இட ஒதுக்கீடு தங்களால் தான் வந்தது என்றெல்லாம் கிச்சு கிச்சு மூட்டினார். இந்த அண்டப் புழுகையும் பார்த்து மூழை கழுவிடப்பட்டு வின் டி.வி பார்த்து இஸ்லாத்து வந்து கொண்டிருக்கும் கூட்டம் புல்லரித்து போனது தனிக் கதை.\nத.மு.மு.க வெற்றிகரமாக நடத்திய இந்த கூட்டத்திற்கு தமிழகமெங்கும் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். கோவையில் இருந்து ஒரு ரயிலை 7 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகைக்கு பிடித்து ஆயிரக்கணக்கில் வந்து வரலாறு படைத்தனர் கோவை மாவட்ட த.மு.மு.க வினர்.\nகோவையில் இருந்து தனி ரயிலில் வந்து வரலாறு படைத்த கூட்டம்\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் கேள்விக்குறியே – கலைஞர்\nசிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் முழுமையான கட்டத்தை தாண்டிவிடவில்லை :சொல்கிறார் முதல்வர்\nசென்னை : “சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சட்டம் இன்னும் முழுமையான கட்டத்தை தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்துவிட முடியாது’ என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nசிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியனார்.\nமுதல்வர் பேசியதாவது: நெடுநாள் எதிர்பார்ப்பில் இருந்து பெரிய பரிசை பெற்ற மகிழ்ச்சியில் கட்சித் தலைவர்கள் இங்கு பேசினர். நன்றியை எதிர்பார்த்து இந்த நிலையை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிக்கு ஜனநாயக ஒப்புதலை தற்போது பெற்றுள்ளோம். எதிர்ப்பில்லாமல் எந்த நல்ல காரியமும் நடைபெறவில்லை என்பது வரலாறு. 50, 60 ஆண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த போது இந்த சமூக நீதிக்கான வித்து ஊன்றப்பட்டது. புறக்கணிக்கப்பட்ட மக்கள், படிப்பறிவு தேவையில்லை என்று மிரட்டப்பட்ட மக்கள் சார்பாக எழுந்த குரல் வலுவாகி, நடேசனார், நாயர் போன்றவர்களின் போர் முழக்கங்கள் காரணமாக எழுந்த உணர்ச்சிகளின் விளைவு தான் தற்போது சட்டசபையில் பூத்துக் குலுங்கி பூரிப்பு கொள்ளச் செய்துள்ளது. இடையில் எத்தனையோ சோதனைகள், வேதனைகளை சந்திக்க நேரிட்டது. இன்னும் அந்த கட்டத்தில் இருந்து முழுமையாக தாண்டி விடவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை நமது உரிமை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருப்பதை மறந்து விட முடியாது. எனவே, இந்த சட்டம் இன்னும் முழுமை பெற்று விடவில்லை. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறி விடவில்லை. இன்னும் நிறைவேற்ற முன்வரவில்லை என்ற சலிப்புகள் நாட்டில் உள்ளன. நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதற்காக துணிந்து இந்த அரசு, சட்டமசோதாவை தற்போது கொண்டு வந்துள்ளது.\nசட்டசபையின் வரலாற்றில் இது ஒரு பொன் நாள்: சமூக நீதிக்கான வரலாற்றில் புரட்சிகரமான நாள். இந்த சமுதாயம் எழுந்து நடமாட முடியுமா, அப்படியே முயற்சித்து அடியெடுத்து வைத்தாலும் ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து இந்த சமூகம் அடிமைப்பட்டு கிடந்தது. அவர்களது உணர்வுகளை தட்டி எழுப்பிய தலைவர்கள் தற்போது கல்லறைகளில் உள்ளனர். அந்த தலைவர்களின் கல்லறை உள்ள திக்கு நோக்கி நன்றி தெரிவிப்போம். இந்த பயனை அடைய நீந்தி வந்த காட்டாறுகள் எவ்வளவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். விளைந்த நெல்லை களத்தில் காண உழுதவனுக்கு உழைத்தவனுக்கு ஆசை இருக்கும். அவர்களது பிரதிநிதிகளாக நாம் இருப்பதால் தான் கஷ்டம் தெரிகிறது. இதற்காக சிந்திய வியர்வை, கொட்டிய ரத்தம் சாதாரணமானதல்ல. இந்த வெற்றியை நீதிமன்றங்கள், வீதிமன்றங்களில் எடுத்துச் சொன்னதால் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வருங்காலத்தில் வருவோர் எதுவும் செய்வதற்கு விட்டு வைக்காமல் நானே செய்து வருவதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இன்னும் செய்வதற்கு ஏராளமாக உள்ளது. சிலையை செதுக்கி, தயாரித்து, அதை பீடத்தில் வைத்து விட்டாலும் சிற்பி கடைசியாக அந்த சிலையின் கண்ணை திறப்பது தான் முக்கியமானது. இன்னும் தமிழகத்தில் அந்த கண் திறக்கப்படவில்லை. சிலை முழுமை பெற நாம் அனைவரும் பாடுபட்டு உழைப்போம். சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட சபதம் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.\nமுஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிடு\nFiled under: இட ஒதுக்கீடு — முஸ்லிம் @ 7:38 பிப\nமுஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு ஆணை வெளியிடு\nபேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு தமிழக அரசு அவசரச் சட்டம் முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என்பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்ததாகும்.\n2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவுடனேயே, 24.5.2006 அன்று ஆளுநர் அவர்களின் முதல் உரையில், ” சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும்\nகிறித்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு\nஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் ” என்றும்; 2006-2007ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ” சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன்; தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் ” என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல்கட்டமாக – நீதியரசர் திரு.ஜனார்த்தனம் அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் – இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. திரு ஜெ.அ. அம்பாசங்கர் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; கிறித்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\nஇந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம்\nஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான\n30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறித்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதலமைச்சர் கலைஞர் அறிவித்துள்ளார்.\nவெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.\nதமிழக முதல்வருக்கு இதயம் கனிந்த நன்றி\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெயிடும் அறிக்கை\nதமிழகச் சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை அக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எங்கள் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புனித ரமலான் நோன்பு தொடங்கும் தருவாயில் இந்தத் தித்திப்பான அறிவிப்பை வெüயிட்ட முதல்வர் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் முன்னேற நல்லாட்சி தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட\n1995 முதல் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி வந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 1999ம் ஆண்டு ஜுலை 4 அன்று சென்னை கடற்கரையில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தியது.\n2004 மார்ச் 4 அன்று தஞ்சாவூரில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி சாதனைப் படைத்த மாபெரும் பேரணியை நடத்தியது.\n2006ல் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. கலைஞர் தலைமையிலான அரசு தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்து திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்துத் தமுமுக தொண்டர்கள் கடுமையான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.\nதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கலைஞர் தலைமையிலான அரசு நாட்டிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு அத்த வாக்குறுதியையும் நிறைவேற்றிக் கலைஞர் இந்தியா அரசியல் வரலாற்றில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்தியாவிற்கே முதல்வர் என்பதை பறைசாற்றியுள்ளார்.\nசுதந்திரப் பெற்ற இந்தியாவின் கனிகள் முஸ்லிம் சமுதாயத்தை சென்றடையவில்லை என்று சச்சார் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வரின் தனி இடஒதுக்கீடு அறிவிப்புத் தமிழக முஸ்லிம்கள் அந்தக்கனிகளைச் சுவைக்கும் வாய்ப்பைத் தந்துள்ளது. எங்கள் நீண்ட காலக் கனவை நனவாக்கிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் உள்üட்ட திமுக முன்னோடிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுத்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகன் தலைவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமுஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்குக் கொண்ட அனைத்து சமுதாய நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமுஸ்லிம்-கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம்\nFiled under: இட ஒதுக்கீடு — முஸ்லிம் @ 10:24 முப\nமுஸ்லிம்-கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம்- கருணாநிதி அறிவிப்பு\nதமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப்பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என் பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்த தாகும்.\n2006 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த வர்களுக்கு தனி இட ஒதுக் கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவு டனேயே, 24.5.2006 அன்று கவர்னரின் முதல் உரையில், “சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இட ஒதுக்கீடு ஏற்படுத்து வதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்” என்றும்.\n2006-2007 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், “சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன், தமிழகத்திலும் அவர்களுக்கு இட ஒதுக் கீட்டுக்கு வழி வகுத்திட தேவைப்படும் உறுதியான நட வடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்” என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக-நீதியரசர் ஜனார்த் தனனை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திடம்-இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nஅம்பாசங்கரை தலைவ ராகக் கொண்டு அமைக்கப் பட்ட தமிழ்நாடு 2-வது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப் படையாகக் கொண்டு முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க லாம் என்று தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப்பரிந்துரை செய்துள்ளது.\nஇந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா வின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர் களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nஇவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு விரைவில் – முதல்வர் முடிவு\nFiled under: இட ஒதுக்கீடு, முஸ்லிம்கள் — முஸ்லிம் @ 4:08 பிப\nதமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித தனி இடஒதுக்கீட்டை விரைவில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தேர்தலில் வாக்கüத்தது போல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அüக்க வேண்டும். இல்லையெனில் இடஒதுக்கீடு பெறும்வரை தொடர்ச்சியான தடையை மீறும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியின் நீதியின் குரல் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சி.ஆர்.பாஸ்கரன் தேர்தலில் வாக்கüக்கப்பட்ட இடஒதுக்கீடு வழங்க தாமதமாவதற்கு என்ன காரணம் என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் கேட்க,\n”இந்தப் பிரச்சனையில் தமிழக அரசிடம் மனஉறுதி இல்லை. ஆனால் எங்களை இளிச்சவாயர்கள் என்று அரசு நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள்” என்று எச்சரித்துவிட்டு ”பாபநாசம் பொதுக் குழு தீர்மானத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்தப் போகிறோம்” என்றும் கூறினார்.\nகுமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும் தமுமுக தலைவர் இதனை உறுதியாக எடுத்துரைத்தார். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தமுமுக தயார் என்பதை இந்த நிகழ்வுகள் அரசுக்கு உணர்த்தின.\nஇதன் விளைவாக கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் துரைமுருகன், அரசு தலைமை வழக்குறைஞர் விடுதலை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம், பிற்படுத்தப்பட்டோர் துறைச் செயலளார் வாசுதேவன், சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன், உள்துறைச் செயலாளர் மாலதி ஆகியோர் பங்குகொண்டனர். இக்கூட்டத்தில் மேலும் தாமதப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணையைத் தயாரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாகத் தெரிய வருகின்றது.\nநன்றி : தமுமுக இணையத்தளம்\nபின் குறிப்பு : ஏற்கனவே மக்கள் டிவியில் தறுதலையின் நிர்வாகி ஒரு வர் போன்பூட்டு செருப்படி வாங்கிய மாதிரி விரைவில் ததஜவின் தன்மானத்தலைவன் கிரிமினல் பி.ஜே என்னை மலேசியாவில் கைது செய்ததால்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்றோ அல்லது 1 கோடி ரூபாய் கொடுத்து தமிம்அன்சாரி இட ஒதுக்கீட்டை வாங்கி விட்டார் என்றோ அறிக்கை விடலாம் அதை விளக்கி விளக்க பொதுக்கூட்டங்களும் நடத்தலாம்.கேக்குறவன் கேனயனா இருந்தா கேப்பையில நெய் என்ன தேனே வடியுதுன்னு கத வடுவாய்ங்கடோய்…..\nகேள்விப்பட்டது : தமிழகத்திலோ இந்தியாவிலோ பெருகி வரும் கூலிப்படையினரால் வண்முறை மழிந்து விட்டனவாம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளிருவான்களாம் அந்த அளவிற்கு நமது நாட்டில் மனிதநேயம் சிதைந்துவிட்டதாக பத்திரிகைகளில் பேச்சு. இந்த நிலையில் முதலமைச்சர் கணவில் உலாவரும் தமிழகத்தின் தலைசிறந்த தறுதலை ஒன்ற தன்னை மலேசியாவில் கைது செய்வதற்கு ஒரு கோடி லஞ்சம் கொடுத்தார்கள் என்று தனது மூலை கழுவி விடப்பட்ட தொண்டர்களிடம் புலம்புவதாக கேள்வி.தறுதலைக்கும் தறுதலையின் தொண்டர்களுக்கம், ஒரு லட்சம் கொடுத்தால் உள்ளுரிலேயே சோழிய முடிப்பதற்கு ஆள் இருக்கும்போது எந்த கிறுக்கனாவது 2 நாளைக்கு ஒருத்தன கைது செய்வதற்கு ஒரு கோடி செலவு செய்வானுங்களா மூலை உள்ளவனுக்கு விளங்கும் இல்லாதவன்லாம் விரைவில் தறுதலைக்காக தீக்குழிச்சாலும் குழிப்பாய்ங்க…\nFiled under: இட ஒதுக்கீடு, இந்திய தேசிய மக்கள் �, IDMK — முஸ்லிம் @ 8:36 முப\nமுத்தமிழ் அறிஞர், தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு\nதாங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் நிறைவு உரையின் போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேரளாவிலும், ஆந்திராவிலும் தருவார்களேயானால் நாமும் தரத் தயார் என்று பேசியது எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கும், எல்லோருக்கும் எல்லாம் இருக்கும் இடம் நோக்கிச் செல்ல என்ற புரட்சிக்கவியின் பாடலுக்கும் எதிரான கருத்து.\nதமிழக முஸ்லிம்கள் தங்களை முதல்வராக்க வாக்குகளை அளித்திருக்கிறார்கள். தமிழக முஸ்லிம்கள் கேரள முதல்வருக்கோ, ஆந்திர முதல்வருக்கோ வாக்களிக்க வில்லை.\nபெரியார் பாசறையில் படைக்கலனாய் மிளிர்ந்த நீங்கள் பொறுப்பான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பொறுப்பை தட்டிக் கழிப்பது முஸ்லிம்களாகிய எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இரண்டு முகம் என்கிற கூற்று நினைவுக்கு வருகிறது.\nநாங்கள் இந்தியக் குடிமக்கள், இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், வழியால் முஸ்லிம்கள், நாங்கள் தமிழக அரசுக்கு வரி கொடுக்கிறோம், உலக அளவில் அண்ணியச் செலாவணியை ஈட்டித் தருகிறோம், தேர்தல் வாக்குறுதிகள் மீறப்படுவதற்கு மட்டுமே என்ற தங்களின் நிலையை மாற்றி முஸ்லிம் தலைவர்கள் ஏமாறலாம், முஸ்லிம்கள் ஏமாறத் தயாராக இல்லை, காரணம் நெருக்கடிகள் எங்களை நெறிபட வைத்திருக்கிறது.\n தமிழக அரசின் வாய்மை வென்றிட, வாக்களித்த எங்களுக்கு மரபுகளை மீறாமல் உரிய சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு – நீதிபதிகளுடன் முதல்வர் ஆலோசனை\nFiled under: இட ஒதுக்கீடு, தமிழக அரசு, முஸ்லிம்கள் — முஸ்லிம் @ 12:40 பிப\nமுஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு: முதல்வர் ஆலோசனை\nபுதுதில்லி, ஜூன் 9: தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் மு.கருணாநிதி.\nமூன்று தினங்களுக்கு முன்பு முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், இடையூறுகள் இல்லாமல் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவது குறித்த பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.\nசில தினங்களுக்கு முன்பு, சிறுபான்மையினர் விழா ஒன்றில் பேசிய முதல்வர், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையானால், தமிழகத்திலும் அவசர சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டுவரலாம் என்று தெரிவித்தார்.\n அதன்படி, அவசரச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பல புள்ளி விவரங்களைச் சேகரித்து, சட்டத்தை வடிவமைப்பதற்கான ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்கு எந்த நேரத்திலும், இறுதி வடிவம் கொடுத்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், ராஜஸ்தான் மற்றும் அண்டை மாநிலங்களில் குஜ்ஜர் இனத்தவர் தங்களை பழங்குடியினராக அறிவிக்குமாறு போராட்டம் நடத்தியதால், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டு விஷயத்தில் தமிழக அரசு அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே இறுதி முடிவு எடுக்க உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.\nதற்போது, தமிழகத்தில் 69 சத இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது. அதில், மிகவும் பிற்பட்ட சமூகத்தினருக்கு 30 சதம், பிற்பட்ட சமூகத்தினருக்கு 20 சதம் வழங்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு, மிகவும் பிற்பட்ட சமூகத்தினரின் 30 சதவீதத்தில் இருந்து 6 சதமும், கிறிஸ்தவர் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு, பிற்பட்ட வகுப்பினரின் 20 சதவீதத்தில் இருந்து 2 சதமும் எடுத்து, தனி இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.\nஇதுதொடர்பாக, பல்வேறு சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசித்திருப்பதாகத் தெரிகிறது.\nஆனால், மிகவும் பிற்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டில் 6 சதத்தை தியாகம் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி ஒப்புக்கொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.\nஎனவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இப் பிரச்னை குறித்து விவாதிக்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தனி இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றலாமா என்றும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது\nஇதற்கிடையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய வரும் தமிழக முதல்வர், அடுத்த வாரம் தில்லியில் மூன்று நாள் தங்கியிருப்பார். அப்போது இந்த தனி இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.\nமுதல்வரின் தில்லிப் பயணத்துக்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பு : நேற்று கூட தமுமுக வின் மாநில பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் நெல்லையில் இட ஒதுக்கீட்டை வலியுருத்தி முஸ்லிம்களுக்கு உடணடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பேட்டியளித்தார்கள்.\nஎப்படியாவது கலைஞரின் இந்த ஆட்சிக் காலத்தக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்களின் கனவை மெய்ப்பிப்பாரா பார்ப்போம்.\nசமயத்திற்கு பொருந்தி போவது போல் அருளடியான் என்பவர் ஒரு கட்டுரைக்கான தொடுப்பினை இன்று காலை எமக்கு அனுப்பியிருந்தார் அதையும் இங்கு பதிகின்றேன். வேறு வழியில்லையென்றால் முஸ்லிம்கள் இவரின் இந்த கருத்தையும் பரிசீலிக்கலாம். விடுதலை சிறுத்தை அண்ணன் திருமா வளவன் கூட முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளார்.ஏன் தலித்துகளும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து ஒரு அணி அமைத்தால் என்ன\nஇந்த ஆட்சிக்குள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லையென்றால் ஒவ்வொரு முறையும் முஸ்லிம் வாக்கு வங்கிகளை துரோகிகளுக்கு எந்த நன்மையுமின்றி திசை மாற்றுவதை விட்டு தமுமுக போன்ற அமைப்பகள் நேரடி அரசியலில் இரங்கி முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகுதிகளை பெறுவதும்தான் ஒரே வழி அதற்கு எடுத்துக் காட்டு உ.பி அரசியல். – முகவைத்தமிழன்\nவரும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் புதிய தமிழகம் வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தி.மு.க தன் வாக்குறுதிப்படி முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் நாள் தோறும் வாக்குறுதி கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். பா.ஜ.கவுக்கு எதிரணி என்ற அடிப்படையில் தான் நாம் தி.மு.கவுக்கு அதரவளித்தோமே தவிர தி.மு.கவுக்கான நம் ஆதரவு நிரந்தரமானதல்ல. மதுரையிலும், கரூரிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட திமுகவினருக்கு உரிய பாடம் கற்பிப்போம். இத்தேர்தலில், தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்வோம். மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகே ஜெயலலிதா தன் மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற்றார் என்பதை நினைவில் வையுங்கள். சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்கட்சியாகச் செயல்படவில்லை. மாறாக ஆளுங்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் காங்கிரஸுக்கு வாக்களிக்க கூடாது.\nகோவை சிறைவாசிகளின் விடுதலையிலும் முதலமைச்சர் அக்கறை காட்டவில்லை. எதிர் கட்சித் தலைவியான, ஜெயலலிதா முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. கோவை சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராக உள்ளார்.\nபா.ஜ.கவைப் பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் நாம் இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டியது தான். விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுக்கு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பற்றியும், கோவை சிறைவாசிகள் விடுதலை பற்றியும் என்ன நிலைப்பாடு என்பது நமக்குத் தெரியவில்லை. எனவே, நாம் 1. காங்கிரஸ் (தி.மு.க) 2. அ.இ.அ.தி.மு.க 3. பா.ஜ.க 4. தே.மு.தி.க ஆகிய கட்சிகளூக்கு வாக்களிக்க முடியாது.\nமுஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், கோவை சிறைவாசிகள் விடுதலைக்கும் ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்புகள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.\nஇட ஒதுக்கீடு – 1 வாரத்தில் அவசர சட்டம் – கலைஞர்\nFiled under: அவரச சட்டம், இட ஒதுக்கீடு, இஸ்லாம், தமிழ் முஸ்லிம்கள், முஸ்லிம் — முஸ்லிம் @ 8:03 முப\n//சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7-வது மாநாடு நிறைவு விழாவில் அவர், தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக இது வழங்கப்படும் என்றார். (www.msn.com) // (இங்குதான் இடிக்கின்றது இது சாத்தியமா 69 சதவிகித இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் அதில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மற்ற மாநிலங்களில் இவ்வாறு வழங்கப்பட்டால் அன்றிலிருந்து ஒரு வாரத்தில்தான் சட்டமா சந்தேகங்களை யாராவது நிவர்த்தி செய்வார்களா சந்தேகங்களை யாராவது நிவர்த்தி செய்வார்களா\nசென்னை:””கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுவழங்க ஒரு வாரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்,” என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nஇஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாவது மாநாடு நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் அப்துல்ரகுமான் தலைமையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விருதினை வழங்கினார். ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் ஒரு லட்சம் ரூபாய் பரிசினை கருணாநிதியிடம் வழங்கினார். சாகித்ய அகடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான், அப்துல் ரகுமான், மு.மேத்தா ஆகியோரையும், இஸ்லாமிய எழுத்தாளர்களையும் முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.\nவிழாவில் கலைஞருக்கு பட்டயம் வழங்கியபோது\nவிழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எனக்கு வழங்கப்படும் பரிசை பொதுநல நோக்கோடு செலவிடுவது தான் நான் கடைபிடிக்கும் முறை. இங்கு எனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசை ஐந்தாக பிரிக்கப்பட்டு பொறியியல் கல்லுõரிகளில் படிக்கும் ஐந்து இஸ்லாமிய மாணவர்களுக்கு அவர்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப வழங்கப்படும்.\nகர்நாடகாவிலும், கேரளாவிலும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என\nகோரிக்கை விடப்பட்டது. கர்நாடகாவிலும், கேரளாவிலும் இடஒதுக்கீடு இன்னமும் நடைமுறைக்கு வரமுடியாமல் சட்ட சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. குறுக்குப் பாதையில் செல்லும் சிலர் தடுத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன்.கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். அதற்கான ஆணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். ஆளுநரும் அதில் கையெழுத்திடுவார்.\nசதாவதானி செங்குதம்பி பாவலர் பெயரில் தபால்தலை விரைவில் வெளியிடப்படும்.ஈராக்கில் உயிர்கொல்லி ஆயுதங்கள் இல்லை என நிரூபித்தால் தாக்குதல் நடத்தப்படாது என புஷ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததால் அங்கு பெரும் படுகொலை நடந்தது. சதாமை இழந்தோம். இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்றும் நாங்கள் தோழர்கள் தான்.\nஇவ்வாறு கருணாநிதி பேசினார்.ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் பேசுகையில், “”இந்தியாவில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பொருளாதார அடிப்படையில், கல்வியில், சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். இஸ்லாமியம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு சமூக அமைப்பு. மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முஸ்லிம்களுக்கு குறிப்பாக கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என்றார். இஸ்லாம், முஸ்லிம்\nகுறிப்பு : பேச்சோடு நின்றுவிடாமல் இதை செயல் வடிவாக்க தமிழக முஸ்லிம் அமைப்புக்களும் திமுக வோடு கூட்டணியில் உள்ள தமுமுக வும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளது என்பதை நிறுபித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து கலைஞர் கூறியதுபோல் ஒருவாரம் அல்ல ஒரு வருடத்திற்குள்ளாவது இந்த அவசர சட்டத்தை கொண்டு வர முயல்வார்களா\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/05/31203217/1244243/Raatchasi-Trailer-Released.vpf", "date_download": "2019-06-26T15:12:38Z", "digest": "sha1:6HB5P7KTOZEEDARO7FPKJQZCVRJ2LSHU", "length": 6151, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Raatchasi Trailer Released", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகீதா ராணி ரொம்ப திமிர்ல - ராட்சசி டிரைலர்\nஅறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராட்சசி’ டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.\nஅறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள்.\nஅதன்படி வெளியான ‘ராட்சசி’ டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும் இதில் ஜோதிகா, கீதா ராணி என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த டிரைலரில் ஜோதிகா பாட்டில் உடைப்பது, கம்பீரமாக பேசுவது என நடிப்பில் அசத்தி இருக்கிறார். கீதா ராணி ரொம்ப திமிர்ல என்ற வசனம் ரசிக்க வைத்திருக்கிறது.\nஇந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\nராட்சசி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை - ஜோதிகா\nஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி - அறிமுக இயக்குனர்\nசூர்யா படத்தில் ஜோதிகாவின் விருந்து\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nஅதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை - ஜோதிகா\nசூர்யா படத்தில் ஜோதிகாவின் விருந்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/03/blog-post_88.html", "date_download": "2019-06-26T14:35:46Z", "digest": "sha1:F2I4NLZXY6WKV7265MIS3MUJ3IXYRY6P", "length": 9072, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "உள்ளாட்சி மன்ற தேர்தலின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / உள்ளாட்சி மன்ற தேர்தலின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை\nஉள்ளாட்சி மன்ற தேர்தலின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை\nஉள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகுறித்த திருத்தங்களை மேற்கொள்ளும்போது உரிய கால எல்லைக்கு அமைய செயற்படாவிட்டால், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் திகதி நிர்ணயம் இன்றி பிற்போடப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஎனவே, கால எல்லை தொடர்பில் கொள்கை பகுப்பாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_89.html", "date_download": "2019-06-26T14:55:53Z", "digest": "sha1:TMZIXKMRAJXADSW2V6KSAXYJNZ7KSOI6", "length": 8981, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "ஐந்தாவது நாளாகவும் தொடரும் இரணைத்தீவு போராட்டம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐந்தாவது நாளாகவும் தொடரும் இரணைத்தீவு போராட்டம்\nஐந்தாவது நாளாகவும் தொடரும் இரணைத்தீவு போராட்டம்\nஇரணைத்தீவில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி, பொதுமக்கள் அந்த தீவில் ஐந்தாம் நாளாகவும் தங்கி இருந்து போராட்டம் நடத்தி வருவதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅவர்களது பூர்வீகக்காணியை விடுவிக்க கோரி 362 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரணைத்தீவுக்கு சென்று அங்கிருந்து தங்களது போராட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பலர் சந்தித்திருந்தனர்\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/13868-2019-02-17-03-56-34", "date_download": "2019-06-26T13:48:30Z", "digest": "sha1:TC3CZRR4OHCJ2WWOZZLC6355C4JOI77A", "length": 9325, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "போர்க்குற்ற விசாரணையை முதலில் நடத்த வேண்டும்; பின்னர் மன்னிப்புப் பற்றி பேசலாம்: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணையை முதலில் நடத்த வேண்டும்; பின்னர் மன்னிப்புப் பற்றி பேசலாம்: சி.வி.விக்னேஸ்வரன்\nPrevious Article எங்களுக்கு உரித்தில்லாத எதையும் நாங்கள் கேட்டதில்லை; எமக்குரியதையே கேட்கிறோம்: எம்.ஏ.சுமந்திரன்\nNext Article புலிகள் காலத்தில் காணப்பட்ட சமத்துவம் காணாமல் போய்விட்டது: மனோ கணேசன்\n“சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை, இனப்படுகொலையா இல்லையா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே மன்னிப்புப் பற்றி பேச முடியும்.” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.நல்லூரில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nவிக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது கடந்தகாலத் தவறுகளை மறந்து செயற்படுவோம் எனக் கூறியிருந்தார். அத்துடன், கடந்தகாலத் தவறுகளை மன்னித்து மறந்து விடுங்கள். பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஅதாவது அபிவிருத்திகள் எனும் போர்வையில், உங்களுக்குப் பணம் தருகின்றோம், உங்கள் உறுப்பினர்களுக்கு சலுகைகள் தருகின்றோம். உங்கள் பொருளாதார விருத்திக்கு அடி சமைக்கின்றோம். நடந்து போனதை மறந்து விடுங்கள் – மன்னித்து விடுங்கள் என்று தான் கூறுகின்றார்.\n ஜெனிவாவில் கேள்வி கேட்கப் போகின்றார்கள். நாம் செய்வதாகக் கூறியவற்றை இதுவரை செய்யவில்லை. இப்போது உங்களுக்கு சலுகைகளைக் கொடுக்க எண்ணியுள்ளோம். கட்சி ரீதியாக அதைச் செய்ய எண்ணியுள்ளோம்.\nஎனவே ஜெனீவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள் என்று பிரதமர் கூறிச் சென்றுள்ளார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால், அதற்கு அவர்கள் தயாராகி விட்டதாகவே தெரிகின்றது.\nஆனால் முதலில் சர்வதேச உதவியுடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணையை நடத்தி, இங்கு இடம்பெற்றது இனப்படுகொலை ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே மன்னிப்புத் தொடர்பாக நாம் ஆராய முடியும்.”என்றுள்ளார்.\nPrevious Article எங்களுக்கு உரித்தில்லாத எதையும் நாங்கள் கேட்டதில்லை; எமக்குரியதையே கேட்கிறோம்: எம்.ஏ.சுமந்திரன்\nNext Article புலிகள் காலத்தில் காணப்பட்ட சமத்துவம் காணாமல் போய்விட்டது: மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.geevanathy.com/2009/03/blog-post.html", "date_download": "2019-06-26T14:34:18Z", "digest": "sha1:U7CONXZPKUBDIMSYMGJ2MBAYFZYMMKTD", "length": 24160, "nlines": 313, "source_domain": "www.geevanathy.com", "title": "புலவரின் மனஅங்கலாய்ப்பு | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஉலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொகையான மக்கள் தொழில் செய்து ஊதியம் பெற்று உயிர் வாழவும் உலகில் பல விதமான தொழில்கள் இருக்கின்றன் ஆயினும் சிலர் உலகில் உள்ள எல்லாவற்றிலும் கல்வியே சிறந்த தென்று ஆராய்ந்து அறிந்து கல்வியை கசடறத் துறைபோகக் கற்று பாண்டித்தியம் எய்தி ஆற்றல் மிக்க கவிவாணர்களாக அழகும் அறிவுமிக்க கவிதைகள் புனைந்து மனித குலத்தை நெறிப்படுத்தும் பெரும்தொண்டு புரிந்து வருகின்றனர். மானிட சமூதாயத்தின் சீலமான நல்வாழ்வுக்காக தங்கள் முழுக்காலத்தையும் செலவிட்டு வரும் படித்த மேதைகளான புலவர் பெருமக்கள் தங்கள் வாழ்வைக் கழிக்கும் நோக்கில் பொருள் தேடுவதென்பது இயலாத காரியம்.\nஅப்படி புலவர்கள் உழைக்கும் நிர்ப்பந்தம் நேர்ந்தால் சமூதாயத்தின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சிந்தித்து நல்ல பொருள் சேர்ந்த பாடல்களை எழுதவும் முடியாது. புலவர் பெருமக்களும் பொது சனங்களை மகிழ்விக்கும் நாடக நாட்டிய நடிகர்களைப் போன்ற கலைஞர்களேயாகும். புலவர் பெருமக்கள் மனித குலத்தின் மேம்பாட்டுக்காக ஆற்றிவரும் தொண்டுகளை நன்கறிந்த பழம் தமிழ் வேந்தர்கள் இந்த நன் மக்களை தம்மைப் போல் சரிசமமாக மதித்துப் போற்றியதுடன் அவர்களது சிறப்பு மிக்க கவிதைகளுக்கு பொற்காசுகளை வாரி, வாரி வழங்கி பொருளாதார\nகஷ்டம் ஏற்படாமல் மகிழ்ச்சியாக வாழ வழிசெய்து வந்தனர்.\nமன்னர் ஆட்சியின் மறைவுக்குப் பின் சமூதாயத்தில் கற்றறிவும், கருணையும் மிகுந்த பெரும் செல்வந்தர்கள் இப் புலவர் பெருமக்களை மன்னன் மதித்தது போல் கௌரவித்துச் சன்மானங்கள் வழங்கி போஷித்து வந்தனர். காலப்போக்கில் பொருள் குவிக்கும் பேராசையால் மனித சமூதாயத்தில் இருந்து வந்து வள்ளல் தன்மை என்னும் நல்ல பண்பு குறைந்து போனது. இதன் காரணமாக மன்னர்களாலும் வள்ளல்களாலும் பாராட்டி உற்சாகமூட்டி வளர்க்கப்பட்ட கற்றறிந்த புலவர்கள் பசி, பட்டினியால் வாடி நலிந்தனர்.\nஇந்த வகையில் கல்வியே சிறந்ததென்று எண்ணித் தங்கள் வாழ்வைக் கழிப்பதற்கென வேறு எந்தத் தொழிலையும் கற்காமல் கல்வியை கசடறக்கற்ற பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்னும் புலவர் பெருந்தகை ஆதரிப்பார் அற்று வறுமை அரக்கனின் கோரப் பற்களுள் சிக்கி மனம் வருந்தி பின்வருமாறு கூறுகின்றார்.\nகளைக்கூத்தாடுதல், செப்பிடு வித்தை செய்தல், மோகவித்தை செய்தல் போன்று உலகில் எத்தனையோ தொழில்கள் இருக்கும் போது அவைகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளி விட்டுக் கல்விதான் மேன்மை உடையது என்று எண்ணிய மூடமனமே இந்த தமிழில் ஆசை வைத்துக் கற்றாயே. இந்த தமிழ்க் கவிதைச் சுவையில் உனக்கு யார் பொருள் தந்து ஆதரிக்கப் போகிறார்கள் நீயும் உன்னைப் போன்ற புலவர் கூட்டமும் பட்டினி கிடந்து சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. இனியேனும் தமிழ் மொழியை அமிர்தம் என்றெண்ணும் வரட்டுத் தனத்தைக் கைவிட்டு விபசாரம் செய்யும் மாதருக்கு தூது சென்றாவது உன் வறுமைப் பேயை ஓட்ட வழி பார் என்று தமிழ் மொழியை உயிராக மதித்துப் போற்றி கற்ற அப்பெரியார் ஆதரிப்பாரற்று வறுமை சூழ்ந்து வருவதால் அமிர்தம் எனச் சுவைத்துக் கற்ற தனது தாய் மொழியான தமிழைச் சனியன் என்று எண்ணும் அளவுக்கு விரக்தி தோன்றியுள்ளதை எண்ணும் போது வேதனை தருவதாக உள்ளது.\nஎன்று அப்புலவர் பெருந்தகை இரங்குதலைக் காணும் போது நம் இதயம் வேதனையில் ஆழ்கின்றது. நம் தமிழ் சமூதாயத்தில் கற்றவர்கள் பெருக வேண்டும். கவிவாணவர்களுக்கு வாரி வழங்கும் தானவான்கள் தொகை அதிகரிக்க வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுவோமாக. புலவர் இராமச்சந்திரக் கவிராயர் கூறுகின்றார் கல்லாத மூடனைக் கல்விமான் என்று பாராட்டினேன். காட்டுமிராண்டியை நாட்டை ஆளும் அரசனாவாய் என்று புகழ்ந்து போற்றினேன். பொல்லாத கெடுமதியுடைய ஒருவனை நான் நல்லாய் என்றேன். போர்முனையை என்றும் அறியாத ஒரு கோழையை ஆண்புலி போன்ற வீரபராக்கிரமன் என்று பாராட்டினேன். சூம்பிய புயமுடைய ஒருவனை மற்போரில் வல்லவன் என்றேன். ஈயாத லோபியை நான் வாய் கூசாமல் வள்ளல் என்று போற்றினேன். இப்படி ஒருவனிடம் இல்லாத பெருமைகளைச் சொன்னதால் உனக்கு ஒன்றும் தரமாட்டேன் போ என்று என்னை விரட்டினான். நான் செய்த தவறுகளை எண்ணி இப்போது வருந்துகிறேன் என்று பல கொடாக் கண்டர்களிடம் போய் பாட்டிசைத்து வெறுங்கையுடன் திரும்பிய இராமச்சந்திர கவிராயர் பின்வரும் பாடல் மூலம் தன் கசப்பான அனுபவத்தைக் கூறுகிறார்.\nபுலவர் இரட்டையர் தம் அனுபவத்தைக் கூறுகின்றபோது ஆடும் தெய்வமான இறைவனை மத்திஸ்தத்துக்கு அழைக்கிறார். அவர் சொல்கிறார் தென்புலியூரில் அமர்ந்து அருள் பாலிக்கும் இறைவா மகாலட்சுமி போன்ற அழகுவாய்ந்த பெண்ணை சிங்காரித்து மேலும் அழகுறச் செய்தாலும் அவள் கணவன் இரண்டு கண்களும் பார்வை இழந்த குருடனாக இருந்தால் அந்தப் பெண்ணின் வனப்பால் யாது பயன்-அதுபோல் கல்லாத மூடரிடம் சொற்சுவை, பொருட்சுவை மிகுந்த பாடல்களைப் பாடுவதில் யாது பயன் என்று எண்ணி மனம் நொந்த புலவர்களில் பெரும்பாலர் இனி அற்ப மனிதர்களை ஏற்றிப் பாடுவதில்லை. மகா தேவனான இறைவனைப் பாடுவதில் தான் ஆன்ம திருப்தியுண்டு என்று எண்ணி மனம் தேறி அந்தப்பரம் பொருளைப் போற்றிப் பாக்களைச் சொரியலானார்கள்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nபுலவர் பெருமக்கல் (Great People of Poet)\n(1) குரிஞ்சி மகலார் இலவெயினியார்\n(2) குரிஞ்சி மகலார் குரிப்பெயினியார்\n(3) பேய்ப் பாடினியார் இலவெயினியார்\n(2) பொதும்பில் புல்லாலங் கன்னகய்யார்\n(1) அஞ்சி அத்தய் மகலார் னாகய்யார்\n(1) மதுரய் மேலய்க்கடய்யத்தார் னல்வெல்லய்யார்\n[6] இலக்கியக் காட்சி (Literary Scene)\n[9] என விரும்பினோம் (Desired As)\nபண்புள்ள ஆடவர் பழக்கத்தால் மாதர்க்கு பழுதொன்றுமில்...\nஅத்தான் என்றழைத்தால் என்ன குறைந்துவிடும்....\nநீதி காத்த பாண்டிய மன்னர்கள்\nகூந்தலில் மலர் சூடும் பழக்கம்\nரங்கநாயகியின் காதலன் - வெளியீட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.visarnews.com/2018/07/199.html", "date_download": "2019-06-26T13:50:10Z", "digest": "sha1:CM4USZWLGIQH5CUWLN7ZWLZKZZRJITND", "length": 27291, "nlines": 291, "source_domain": "www.visarnews.com", "title": "பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 199 வாக்குகளினால் தோல்வி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 199 வாக்குகளினால் தோல்வி\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 199 வாக்குகளினால் தோல்வி\nமத்தியை ஆளும் பா.ஜ.க. அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் 199 வாக்குகளினால் தோல்வி அடைந்தது.\nஅரசுக்கு ஆதரவாக 325 உறுப்பினர்களும், எதிராக 126 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பிஜு ஜனதா தளம், சிவசேனா கட்சிகள் வெளிநடப்பு செய்தன.\nவிவாதத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையில் அனல் பறந்தது. அவருடைய பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அறிக்கை கொடுத்தது. இதேபோல், பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களும் இந்த தீர்மான அறிக்கையை அளித்தனர்.\nகடந்த நாடாளுமன்ற தொடரிலும் தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால், அவையில் அப்போது தொடர்ந்து அமளி நடந்ததால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இத்தீர்மானத்தை விவாதத்துக்கு கொண்டு வரவில்லை. அதோடு, அந்த தொடரும் முடிந்தது.\nஇந்த தொடரில் கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடனடியாக விவாதத்துக்கு ஏற்றார். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தனர். இந்த தீர்மானத்தின் மீது 20ஆம் தேதி நண்பகல் 11 மணிக்கு விவாதம் தொடங்கும் என்றும், அன்று மாலையே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் நேற்று முன்தினம் சபாநாயகர் அறிவித்தார்.\nஅதன்படி, நேற்று நண்பகல் 11 மணிக்கு தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்த தெலுங்கு தேசம் கட்சி எம்பி.யான சீனிவாஸ் கேசினேனி, தீர்மானத்தின் மீதான விவாதத்தை தங்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஜெயதேவ் காலா தொடங்கி வைக்க அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதை சபாநாயகர் ஏற்றதை தொடர்ந்து, காலா பேசினார். இதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். விவாதம் தொடங்குவதற்கு முன்பாக சிவசேனாவும், பிஜு ஜனதா தளமும் வெளிநடப்பு செய்தன.\nபின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியபோது அவையில் அனல் பறந்தது. பிரான்ஸ் நாட்டுடன் செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம், வேலைவாய்ப்பின்மை, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது உட்பட பல்வேறு பிரச்னைகளை தனது பேச்சில் ராகுல் குறிப்பிட்டார். அப்போது, பாஜ.வையும் பிரதமர் மோடியையும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவருடைய பேச்சுக்கு பாஜ தலைவர்கள், எம்பி.க்கள் அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக, அடிக்கடி குறுக்கீடுகள் ஏற்பட்டு 15 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது. தனது பேச்சின் உச்சக்கட்டமாக, உரையை முடிக்கும் முன்பாக பிரதமர் மோடியை ராகுல் திடீரென சென்று கட்டிப்பிடித்தார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவருடைய செயலை சபாநாயகர் கடுமையாக கண்டித்தார். ராகுல் கட்டிப்பிடித்த போது சிறிது நேரம் திகைத்த மோடியும், பின்னர் சுதாரித்துக் கொண்டார். ராகுலை மீண்டும் அழைத்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பகல் 11 மணி முதல் மாலை வரை நீடித்தது. பின்னர், விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பதற்காக மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மோடி தனது உரையில் ஆவேசமாக பதிலளித்தார். ரேபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய ராகுலை பார்த்து, ‘நாங்களா நாட்டின் பாதுகாப்பில் விளையாடுகிறோம்’ என்று ஆவேசமாக கேட்டார். மோடியின் பதிலுரைக்கு பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து நடந்த எலக்ட்ரானிக் ஓட்டெடுப்பில் தீர்மானத் துக்கு ஆதரவாக 126 உறுப்பினர்களும் எதிராக 325 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து மோடி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக மக்களவை சபா நாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:00:25Z", "digest": "sha1:CDTSX364JUYFCTAORWYHIN5YSIC3RLJW", "length": 25235, "nlines": 754, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "அமீரக செய்திகள் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nFiled under: அமீரக செய்திகள் — முஸ்லிம் @ 6:03 பிப\nஅபுதாபியில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி\nஅபுதாபி கேரள சோஷியல் செண்டரில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் எனும் தலைப்பில் 04.04.2008 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 வணி வரை நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியினை ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.\nமுன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலதிக விபரம் பெற 050 6142633 / 050 4567487 / 050 315 6141 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nதகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம் என் ஏ )\nமுதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா\nஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆதரவுடன் முதுகுளத்தூரில் நடத்தப்பட்டு வரும் இஸ்லாமிய பயிற்சி மையத்தின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 22.03.2008 சனிக்கிழமை மாலை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.\nவிழாவிற்கு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் தலைமை தாங்கினார். அமீரகப் பிரதிநிதி எம். பக்ருதீன் பாதுஷா முன்னிலை வகித்தார். திடல் பள்ளிவாசல் இமாம் எஸ். முஹம்மது ரபியுத்தீன் ஃபைஜி பாஜில் மன்பஈ இறைவசனங்களை ஓதினார்.\nஇஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச்.ஏ. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nமாணாக்கர்கள் பி. பாவா பக்ருதீன், என். நஜிமா கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nமார்க்க போதனைத் தேர்வில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.\nகுர் ஆன் ஓதும் போட்டியில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் வாழ்த்துரை வழங்கினார்.\nபத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்க்கு பரிசுகளை அரசு மருத்துவர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது மைதீன் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.\nஒன்பதாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை பெரிய பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.எம்.கே.எம். காதர் முகையதீன், பெரிய பள்ளிவாசல் உதவி இமாம் மௌலவி எஸ்.டி.ஷேக் முகைஅதீன் மன்பஈ, திடல் பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.ஜஹ்பர் சாதிக் அலி, ஆசிரியர் ஏ. ஹபிப் முஹம்மது உள்ளிட்டோர் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.\nஉதவித் தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுதீன் குறைசி நன்றியுரை நிகழ்த்தினார்.\nதகவல் : முதுவை ஹிதாயத்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Christianity/2019/06/10091826/1245553/st-anthony-church-festival.vpf", "date_download": "2019-06-26T15:11:13Z", "digest": "sha1:QYDAKKW74J4FHA5IZQNU4P7J4BID7FI6", "length": 8406, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: st anthony church festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோவை புனித அந்தோணியார் ஆலய திருவிழா\nகோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.\nகோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.\nகோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு ஆடம்பர தேர்பவனி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.\nஇதையொட்டி நேற்று காலையில் புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமை யில் காலை சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.\nபின்னர் அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் மந்திரித்தார். இதையடுத்து கொடி ஆலயத்தை சுற்றிலும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது பொதுமக்கள் கொடிமீது பூக்களை தூவி வழிபட்டனர்.\nபின்னர் ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆலய பங்கு குரு ராயப்பன் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மாலை 5.30 மணிக்கு போத்தனூர் பங்கு குரு ஜோசப் டேவிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nஇன்று (திங்கட்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி காலை 8 மணிக்கு புதுநன்மை நிகழ்ச்சி கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடக்கிறது.\n16-ந் தேதி காலை 8 மணிக்கு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அதைத்தொடர்ந்து மறை மாவட்ட பொருளாளர் ஜோ பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி நடைபெறும். அன்று மாலை ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.\nநாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nபைபிள் கூறும் வரலாறு: எசேக்கியேல்\nமரியன்னை பேராலய திவ்ய நற்கருணை பவனி\nஉங்களைக் காயப்படுத்துகிறவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்\nசரல் புனித பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது\nரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி\nகோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி\nசுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி\nமேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி\nகடலூர் சொரக்கல்பட்டு அந்தோணியார் ஆலய தேர்பவனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/indian-cricket-player-father-congress-and-wife-joined-bjp", "date_download": "2019-06-26T15:01:03Z", "digest": "sha1:CG7N6WASX5BK2RQNOBOKX2TRVXXFDWWW", "length": 11535, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரின் தந்தை காங்கிரஸ், மனைவி பா.ஜ.க! | indian cricket player father in congress and wife joined in bjp | nakkheeran", "raw_content": "\nபிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரின் தந்தை காங்கிரஸ், மனைவி பா.ஜ.க\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், சென்னை சூப்பர் கிங் அணியின் ஆல் ரவுண்டருமான ரவீந்தர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஏற்கெனவே பாரதிய ஜனதா கட்சியில் ஏற்கெனவே இணைந்துள்ளார். இந்நிலையில் ஜடேஜாவின் தந்தை அனிருத்ஷின் மற்றும் ஜடேஜாவின் தங்கை நயனாபா ஆகியோர் குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் கலவட் நகரில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின் போது இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஹர்திக் பட்டேல் உள்ளிட்டோர் முன்னிலையில் இணைந்துள்ளனர்.\nஇதனால் ஒரே குடும்பத்தில் இரண்டு கட்சியினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் பட்டேல் சமூக இட ஒதுக்கீட்டிற்காக போராடிய ஹர்திக் பட்டேல் குஜராத்தில் ஜாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய நிலையில் குஜராத்தில் பட்டேல் இனத்தினர் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். இதற்கு ஹர்திக் பட்டேலே முழு பொறுப்பு என குஜராத் உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் மனு செய்திருந்தார்.\nஅந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹர்திக் பட்டேலுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஏப்ரல் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜாம்நகர் மக்களவை தொகுதியில் ஹர்திக் பட்டேலுக்கு பதிலாக முலு கந்தோரியாவிற்கு சீட் வழங்கியது காங்கிரஸ் கட்சி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசசிகலா புஷ்பா மூலம் அரசியல் செய்யும் பாஜக\nஅதிமுகவை கழட்டி விட்டு திமுக பக்கம் போகும் பாஜக\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\nராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்... டெல்லியில் பரபரப்பு...\nதந்தை சிலையை அகற்ற தயாராமுதல்வர் ஜெகனுக்கு நாயுடு சவால்\nதமிழகத்தில் அணுக்கழிவு மையம்: கேள்வி கேட்ட தயாநிதி மாறன்.. உதவிக்கு அழைத்த மத்திய அமைச்சர்...\nசிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனையை அறிவித்த மத்திய அரசு\nநாடு முழுவதும் 123 கோடி மக்களுக்கு 'ஆதார் அட்டை' வழங்கப்பட்டுள்ளது- மத்திய அரசு தகவல்\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_99.html", "date_download": "2019-06-26T14:19:19Z", "digest": "sha1:I2HN4ZOHKXE5OQXYU6VWTSJFXL7KBHJB", "length": 9553, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "சிறீதர் திரையரங்கை விடுவிக்க போராடும் சயந்தன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறீதர் திரையரங்கை விடுவிக்க போராடும் சயந்தன்\nசிறீதர் திரையரங்கை விடுவிக்க போராடும் சயந்தன்\nசாவகச்சேரி நகரசபையினை கைப்பற்ற சிறீதரர் திரையரங்கிடம் சரணாகதி அடைந்த வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தற்போது அதே சிறீதர் திரையரங்கை மீட்க நீதிமன்ற படியேறியுள்ளார்.\n1995ம் ஆண்டு முதல் ஈபிடிபியால் பலாத்காரமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறீதர் திரையரங்கை விடுவிக்க கோரி அதன் உரிமையாளர்கள் போராடிவருகின்றனர்.அவர்களுள் ஒருவரான இரட்ணசபாபதி சிறீதரர் உள்ளிட்ட அறுவர் சார்பில் மனுவை யாழ்.மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி கேசவன் சயந்தன் 10 கோடி நட்டஈடும் கோரியுள்ளார்.\nதற்போது ஈபிடிபி வசமிருக்கின்ற சிறீதர் திரையரங்கை விடுவிக்க கோரி அதன் உரிமையாளர்கள் போராடிவருகின்றனர்.எனினும் ஈபிடிபி கட்சியோ அதனை தனது தலைமைக்காரியாலயமாக பயன்படுத்திவருவதுடன் டக்ளஸ் தேவானந்தா அங்கேயே தங்கியுமிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_984.html", "date_download": "2019-06-26T14:22:26Z", "digest": "sha1:IRJFLJDLTM2ZTYVWZZIODJMR4D44WOGY", "length": 14158, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "வடக்கு மாகாணசபையை கைப்பற்றி சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்! - டக்ளஸ் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு மாகாணசபையை கைப்பற்றி சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்\nவடக்கு மாகாணசபையை கைப்பற்றி சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்\nவடக்கு மாகாணசபையை பொறுப்பெடுத்து அதை அர்த்தமுள்ள நிர்வாகமாக செயற்படுத்த விரும்புகின்றேன் என ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். “ஆரம்பகாலங்களில் புலிகள் இந்த சபை முறைமையை நிராகரித்திருந்தார்கள். இது அவர்களுடைய அரசியல் நிலைப்பாடாகும். அதன்பின்னர் நெருக்கடிகள் நிறைந்த சந்தர்ப்பத்திலும் அதைப் பொறுப்பேற்று நிர்வாகம் செய்தவர்கள் அதனை சரியாக நிர்வகிக்காததன் விளைவாக அது செயலற்றுக்கிடந்தது. இக்காரணங்களால் தமிழ் மக்களது பெரும் தியாகங்களுக்கு மத்தியில் கிடைக்கப்பெற்ற இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பலாபலன்களையும் மாகாணசபையின் நன்மைகளையும் இறுதி இலக்கை நோக்கி பயணிக்கும் வாய்ப்பினை தமிழ் மக்கள் இழந்திருந்தனர். நெருக்கடியற்ற ஒரு சூழ்நிலையில் அந்தவாய்ப்பு மீண்டும் தமிழ் மக்களை நோக்கி வந்தபோது சந்திரனை கொண்டு வந்து அருகில் தருவோம், நட்சத்திரங்களை உடைத்து தருவோம் என உணர்ச்சிப் பேச்சுக்களை பேசி அதிகாரங்களை பெற்றவர்கள் கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பையும் சரியாக நிர்வகிக்கவில்லை. அவர்கள் குற்றச்சாட்டுக்களையும் குறைகளையும் முன்வைப்பதனூடாக தமது இயலாமையை வெளிப்படுத்துகிறார்களே தவிர மாகாணசபையின் உச்ச பலாபலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதற்காக அர்த்தமுள்ள முயற்சிகளையோ அல்லது விருப்பமுடனோ அவர்கள் செயற்படவில்லை. இவ்வாறு முடங்கிக் கிடக்கும் மாகாணசபை முறைமையை மீண்டும் திறம்பட செயற்படுவதற்கு மீண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு வாய்ப்பு வெகு விரைவில் வரவுள்ளது. அதை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்களோடு வாழ்ந்து மக்களுக்கான சேவைகளை செய்தவர்கள் என்ற அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரங்களுக்கு வடக்கு மாகாணசபை கிடைக்கப்பெறுமாக இருந்தால் நான் ஏற்கனவே கூறியதுபோல எமது தாயக பிரதேசத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியமைப்பதுடன் எமது மக்களது பொருளாதார வறுமைகளை இல்லாதொழித்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை அடையும் திசை நோக்கி வழிநடத்துவேன் என்ற நம்பிக்கையும் அதற்கான உழைப்பும் உள்ளார்ந்த விருப்பும் எம்மிடம் உள்ளது. இந்த அடிப்படையிலேயே நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் மக்களை விட்டு ஓடியதும் இல்லை. ஓடப் போவதும் இல்லை. குறைகூறிக்கொண்டு இருக்கவும் போவதில்லை. மாகாணத்தில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கும்போது மத்திய அரசுகளை எவ்வாறு கையாளவேண்டும் என்ற நீண்டநாள் அனுபவம் எனக்குண்டு. இதற்கிணங்கவே ஈ.பி.டி.பியின் வெற்றி மக்களின் வெற்றி மக்களின் வெற்றி ஈ.பி.டி.பியின் வெற்றி என்று கடந்த தேர்தலில் நான் கூறியிருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-06-26T14:25:07Z", "digest": "sha1:YPMO2AVSW5LRTKZAVW34OMVYKROOGQNM", "length": 12275, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "வீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள் |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nதிரிபுராவில் கடந்த 25 ந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2018 சட்ட சபை தேர்தலில் தோல்வியைத் தழுவி 4 முறை முதல்வராக இருந்துவரும் மாணிக் சர்கார் பதவியை இழக்கிறார்.\nநாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகபலத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மாநிலத்தின் தோல்வியின் மூலம் நாட்டில் கேரளாவில் மட்டும் ஆட்சி செலுத்தும் மோசமான நிலைக்கு இடதுசாரி முன்னணி தள்ளப்பட்டுள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாக இடதுசாரி முன்னணி பெரியளவில் சரிவை சந்தித்து வந்துள்ளது. 1996ஆம் ஆண்டில் பிரதமராகும் வாய்ப்பு அப்போதைய மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிபிஐ-எம் இதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது.\n* கடந்த 1996-2004 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நாட்டில் இடதுசாரிமுன்னணி வலுவாக காணப்பட்டது. அப்போது மக்களவையில் இடதுசாரி முன்னணிக்கு மொத்தம் 62 எம்.பி.,க்கள் இருந்தனர். மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு இடதுசாரி முன்னணி ஆதரவு அளித்து வந்தது. இதன்பின்னர் சரிவை இடதுசாரி முன்னணி சந்தித்தது.\n* கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரி முன்னணி 24 இடங்களில் வெற்றிபெற்று இருந்தது. இதற்குப் பின்னர் எழுந்த மோடி அலையில் இடதுசாரிக்கான ஆதரவு குறைந்தது. 2014 மக்களவை தேர்தலில் வெறும் 12 இடங்களில் மட்டுமே இடதுசாரி முன்னணி வெற்றி பெற்றது. 4.8 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தது.\n* 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 38.5 சதவீத வாக்குகள் பெற்று 335 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 60 இடங்களில் வெற்றி பெற்று 24 இடங்களை மட்டுமே பெற்று இருந்தது.\n* 2011ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்து வந்த மேற்குவங்க மாநிலத்தை திரிணமூல் கட்சிக்கு இடதுசாரி முன்னணி இழந்தது. இதற்குப் பின்னர் 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் மொத்தமுள்ள 294 இடங்களில் 211 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ், இடதுசாரி முன்னணி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் 44 இடங்களிலும், இடதுசாரி முன்னணி 32 இடங்களிலும் வெற்றி பெற்றன.\n* 2016ல் கேரளாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் இடது ஜனநாயக முன்னணி 91 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தில் இதுவரை காங்கிரஸ் அல்லது இடதுசாரி முன்னணிதான் ஆட்சி செலுத்தி வந்துள்ளன.\nகேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் போட்டி\nமேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வெற்றி…\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது\nமேகாலயா.,வில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nதிரிபுரா, மாணிக் சர்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் அனைத்து வா� ...\nஉங்கள் அனுபவத்தின் மூலம் இந்த ஆட்சியை � ...\nதொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்\nதிரிபுரா முதல்வராகிறார் விப்லவ் குமார ...\nதிரிபுரா, நாகாலாந்து, மேகாலயா பாஜக வியூ ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1276327.html", "date_download": "2019-06-26T14:48:04Z", "digest": "sha1:I2SQIJV4EXJTHNOBDKDM6UZJUELL2UWH", "length": 12316, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இந்திரா காந்தியை போல மோடி தோற்க வேண்டும் – மாயாவதி..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திரா காந்தியை போல மோடி தோற்க வேண்டும் – மாயாவதி..\nஇந்திரா காந்தியை போல மோடி தோற்க வேண்டும் – மாயாவதி..\nஉத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.\nஇந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நடந்தது போல இப்போது வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-\nஉத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றி விட்டனர். கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர்.\nபிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது இப்போது வாரணாசிதொகுதியில் மீண்டும் நிகழுமா\nகுஜராத்தின் வளர்ச்சியை போல கிழக்கு உத்தரபிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nதனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை\nயாழ் – தீவகம் பண்ணை வீதியில் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய…\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..\nபயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை\nபிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்..\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905592", "date_download": "2019-06-26T14:50:49Z", "digest": "sha1:426ZK4OACOE7TYQ6QI5Z32ZTWR75AQI3", "length": 6803, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "பொங்கல் பரிசு வழங்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டிவனம், ஜன. 10: திண்டிவனம் 16வது வார்டு உதயநகர் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 16வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாலசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான வெங்கடேசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ. 1000 வழங்கி துவக்கி வைத்தார். இதில், 16வது வார்டு அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகம், சரவணன், தீர்த்தகுளம் குமரன், உதயநகர் கனகராஜ், புஷ்பநாதன், வேலுநாதன், சசிகுமார், விற்பனையாளர் சற்குணம் உட்பட கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED விழுப்புரம் அருகே வேடம்பட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-26T14:08:57Z", "digest": "sha1:UK4S2ODD3TP4F3HC5KTN6KT6OOSQOUYJ", "length": 6960, "nlines": 168, "source_domain": "sathyanandhan.com", "title": "சாகித்ய அகாதமி விருது | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: சாகித்ய அகாதமி விருது\nஎஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது\nPosted on December 6, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது எஸ் ராமகிருஷ்ணன் நவீன தமிழ் இலக்கிய காலத்தில் உலக இலக்கியம் முதல் பல தமிழ்ப் புனைவுகளைக் கவனப் படுத்தியவர். தமது புனைவுகளில் யதார்த்தம் நவீனத்துவம் இரண்டிலும் நல்ல படைப்புக்களைத் தந்தவர். அவருக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்தது . வாழ்த்துக்கள். தினமணியில் விரிவான … Continue reading →\nPosted in நாலடியார்\t| Tagged எஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் நாவல், சாகித்ய அகாதமி விருது\t| Leave a comment\nவண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது\nPosted on December 22, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கல்யாண்ஜி கவிதைகள் அல்லது வண்ணதாசன் கதைகள் என ஆளுமை அடிப்படையில் நான் வாசித்து உள்வாங்கியது இல்லை. படைப்பாளிகள் எந்த அளவு தாம் எடுத்துக்கொண்ட வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே புதுமைப்பித்தனின் காலத்துக்குப் பிறகு நமது அளவுகோலை இருக்கிறது. ஒரு படைப்பு கவிதை அல்லது கதை என வடிவம் பெரும் போது அந்த … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கல்யாண்ஜி, சாகித்ய அகாதமி விருது, சிறுகதை, நவீன தமிழ் இலக்கியம், வண்ணதாசன், விமர்சனம்\t| Leave a comment\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:56:31Z", "digest": "sha1:NG6SAVDJTD4JUKVQE3T2DONQZUXGPBH5", "length": 13183, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரகாசம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n17,626 சதுர கிலோமீட்டர்கள் (6,805 sq mi)\n• 100 மீட்டர்கள் (330 ft)\nபிரகாசம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஒங்கோல் இதன் தலைநகரம் ஆகும். இம்மாநிலம் 17,626 சதுர கி.மீ பரப்பளவுடையது. 2001 இல் 3,059,423 பேர் இம்மாநிலத்தில் வசித்தனர். குண்டூர், நெல்லூர், கர்னூல் ஆகிய மாநிலங்களிலிருந்து பெப்ரவரி 2, 1970 இல் இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான த. பிரகாசம் என்பவரது நினைவாகவே இம்மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டது.\nவருவாய்க் கோட்டங்கள் (3): கந்துகூர், ஒங்கோல், மார்காபுரம்.\nநகராட்சிகள் (3): ஒங்கோல், சீராலா, மார்காபுரம் அத்தங்கி\nஇந்த மண்டலத்தை 56 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.\n1.யர்ரகொண்டபாலம் 2.புல்லலசெருவு 3.திரிபுராந்தகம் 4.குரிச்சேடு 5.தொனகொண்டா 6.பெத்தாரவீடு 7.தோர்னாலா 8.அர்தவீடு 9.மார்காபுரம் 10.தர்லபாடு 11.கொங்கணமிட்லா 12.பொதிலி 13.தர்சி 14.முண்ட்லமூர் 15.தாள்ளூர்\n16.அத்தங்கி 17.பல்லிகுரவா 18.சந்தமாகுலூர் 19.யத்தனபூடி 20.மார்டூர் 21.பருச்சூர் 22.காரஞ்சேடு 23.சீராலா 24.வேட்டபாலம் 25.இங்கொல்லு 26.ஜே. பங்குலூர் 27.கொரிசபாடு 28.மத்திபாடு 29.சீமகுர்த்தி 30.மர்ரிபூடி\n31.கனிகிரி 32.ஹனுமந்துனிபாடு 33.பேஸ்தவாரிபேட்டை 34.கம்பம் 35.ராசர்ல 36.கித்தலூர் 37.கொமரோலு 38.சந்திரசேகரபுரம் 39.வெலிகண்ட்லா 40.பெதசெர்லோபள்ளி 41.பொன்னலூர் 42.கொண்டபி 43.சந்தனூதலபாடு 44.ஒங்கோலு 45.நாகுலுப்பலபாடு\n46.சினகஞ்சாம் 47.கொத்தபட்டினம் 48.டங்குடூர் 49.ஜருகுமில்லி 50.கந்துகூர் 51.வோலேட்டிவாரிபாலம் 52.பாமூர் 53.லிங்கசமுத்திரம் 54.குட்லூர் 55.உலவபாடு 56.சிங்கராயகொண்டா\nமக்களவைத் தொகுதிகள்: ஒங்கோல் மக்களவைத் தொகுதி, பாபட்ல மக்களவைத் தொகுதி(பகுதி), நெல்லூர் மக்களவைத் தொகுதி (பகுதி)\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்: (12):\nஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்\nஆந்திரப் பிரதேசத் தலைப்புக்கள் · வரலாறு · அரசியல் · தெலுங்கு மக்கள்\nஅனந்தபூர் · சித்தூர் · கிழக்கு கோதாவரி · குண்டூர் · கடப்பா · கிருட்டினா · கர்நூல் · நெல்லூர் · பிரகாசம் · சிறீகாகுளம் · விசாகப்பட்டினம் · விசயநகரம் · · மேற்கு கோதாவரி\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:10:57Z", "digest": "sha1:TYIDEA64J3SQSDVUTHTOLDBBP6GRNLO2", "length": 6416, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்கல். ஜே. சிமித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி - 14.00\nஅதியுயர் புள்ளி - 31\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு - -\nபிப்ரவரி 12, 2006 தரவுப்படி மூலம்: [1]\nமைக்கல். ஜே. சிமித் (Michael J. Smith ), பிறப்பு: சனவரி 4 1942, இறப்பு: நவம்பர் 12 2004), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 5ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1973 - 1974 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 23:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.seylan.lk/ta/contact-us.html", "date_download": "2019-06-26T13:53:48Z", "digest": "sha1:OEW5CQ44FK4O27J56BQDO2E57QB6D5WN", "length": 9979, "nlines": 173, "source_domain": "www.seylan.lk", "title": "Contact Us | Seylan Bank PLC", "raw_content": "\nவழமையான சேமிப்புகள் சிறுவர் சேமிப்பு Seylfie Youth சேமிப்புக் கணக்கு Income Saver Account\nதனிநபர் / கூட்டு கணக்கு வர்த்தக கணக்கு கழகங்கள் மற்றும் சங்கங்கள் “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு\nPFCA SFIDA முதலீட்டு கணக்கு\nசெலான் ஷுவர் செலான் ஹரசர செலான் திலின சயுர\nநிலையான கணக்கு தனிநபர் / கூட்டு நிலையான கணக்கு வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு கேள்வி வைப்புக்கள்\nநிபுணர்கள் மருத்துவர்கள் வேலைவாய்ப்பு முகவர்கள் Special Category\nடிக்கிரி பரிசு வவுச்சர் பாதுகாப்பு பெட்டக சேவை கடன் மற்றும் முற்பணம் பணம் அனுப்புதல்\nகூட்டு நிறுவன சேவைகள் x\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nகூட்டு நிறுவன வங்கிச் சேவை\nகூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை\nஇணைய கொடுப்பனவு கேட்வே சம்பளப் பட்டியல் இணைய வங்கியியல்\nவிஸா பிளாட்டினம் கடனட்டைகள் ப்ரீடம் கடன் அட்டை விஸா கோல்ட் கடனட்டை விஸா கிளாசிக் கடனட்டை\nபற்று அட்டைகள் (Debit Cards)\nபிளாட்டினம் பற்று அட்டைகள் கோல்ட் பற்று அட்டை கிளாசிக் பற்று அட்டை\nவிஸா பன்முக நாணய பயண அட்டை\nமுற்கொடுப்பனவு விஸா ரூபாய் அட்டை\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nஉயர் கல்வி கடன் வசதிகள்\nதனிநபர் கடன் வாகனக் கடன்கள்\nதவணை கடன்கள் மேலதிகப் பற்று வசதி Factoring\nசிறு நடுத்தர கைத்தொழில் / மைக்ரோ கடன்\nபுதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயக் கடன் SME கடன் மைக்ரோ கடன்\nஅழைப்பு நிலையம் கிளை வலையமைப்பு SLIPS- வங்கிகளுக்கு இடையேயான செலுத்தும் முறை\nசர்வதேச நாணய வங்கிச் சேவை\nகரை கடந்த வங்கிச்சேவை (FCBU)\nபரிமாற்ற நிலையம் வெளிநாட்டு பிரதிநிதி\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nஇணையம் ஊடான பணம் அனுப்புதல்\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nசெலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு\nஎங்களைத் தொடர்பு கொள்ள எமது வங்கி கிளையமைப்பு வட்டி வீதங்கள சேவைக் கட்டணங்கள் இணைய வழி விண்ணப்பம வலைப்பதிவு கணிப்பான்கள் நாணய மாற்று வீதங்கள வாடிக்கையாளர் பட்டயம் வங்கி விடுமுறை\nதள வரைபடம் வாடிக்கையாளர் பட்டயம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எங்களைத் தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://mynose.blogspot.com/2004/08/blog-post_09.html", "date_download": "2019-06-26T14:22:28Z", "digest": "sha1:NCA3ZNXWWL7AGAFM4ZNZRGSTYH7CG6A2", "length": 15065, "nlines": 189, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5", "raw_content": "\nநண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம்\nதனியே எழுதாமல், அப்படி என்ன பொதுக்கடிதம் வேண்டி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கும், உங்களையொத்த எண்ணங்கள் கொண்ட எமது சக ஈழத்து சகோதரர்களுக்கும் என் நிலையை சொல்ல வேணுமென்று தோன்றியதால் எழுதுகிறேன்.\nவல்வை படுகொலையைப் பற்றி தம்பி கரிகாலன், மற்றும் ஈழநாதன் ஆகியோரது பதிவுகளுக்கு தொடர்ச்சியாக உங்கள் பதிவையும் கண்டேன். ஈழத்தமிழர்களின் சோகமும், சிங்களக் காடையர்கள் அவர்கள் மீது நடத்தி வரும் அரக்கத்தனமான ஒடுக்குமுறையும், அதன் விளைவாக உலகெங்கும் சிதறிக்கிடக்கும் இலங்கை மக்களும் எங்கள் பரிவுக்கும், அனுதாபத்துக்கும் உரியவர்கள். அதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் எது நடந்தாலும், இந்தியா எது செய்தாலும், அதில் குற்றங்கண்டுபிடித்து, இந்தியாவை இகழவும் தூற்றவும் செய்யும் உங்கள் அனைவரின் செயல்களும், எழுத்துக்களும் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது.\nஉங்கள் அனைவரைப் போல எனக்கு இந்திய இலங்கை ஒப்பந்தமும், திகதிகளும், புள்ளி விவரங்களும் விரல் நுனியில் தெரியாது. ஆயினும், இலங்கை தமிழ்ப் போராளிகளுக்காக இந்திரா தொடங்கி, எம்.ஜி.ஆர் அளித்து வந்த ஆதரவும், ஈழத் தமிழினத்துக்காக தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு விஷயங்களும் என் மனதில் நிழலாடுகிறது. இவை அத்த்னையும் மாறியதற்கு முக்கிய காரணம் ராஜீவ் காந்தியின் படுகொலை. ஜெயவர்த்தனேயின் வஞ்சகத்துக்கு பலியாகி, புலிகளையும் பகைத்துக் கொண்டு, கடைசியில் சொந்த மண்ணிலேயே விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார் அவர் என்பதுதான் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பொது அபிப்ராயம்.\nஅவர் எதற்காக கொல்லப்பட்டார்..புலிகளிடம் கொடுத்த வாக்குறுதிகளின்படி நடந்துகொண்டாரா போன்ற விவாதங்கள் எல்லாம் நெடுந்தூரம். ஆனால் சித்தாங்களின் அடிப்படையில் மாறுபாடு கொண்டவர்களை எல்லாம் போட்டுத்தள்ளுவதுதான் புலிகளின் வேலை என்றால் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீண்ட நெடுங்காலத்துக்கு தீர்வே இல்லை. இப்படி இருக்கையில், இத்தனை அணுகுமுறைக் குறைபாடுகளையும், வன்முறையும், ரத்த வெறியையும் கொண்டுள்ள ஒரு கூட்டத்திடம் பரிவும், அனுசரணையும் காட்டும் நீங்கள், ஒரு அரசு கொடுத்த வேலையை செய்வதற்காக, நண்பன் யார்..பகைவன் யார்..இவர்கள் என்ன தந்திரம் செய்கிறார்கள் எனு எதுவும் தெரியாத சூழ்நிலையில், இலங்கை வந்து இறங்கிய இந்தியப் படையை, அதன் பொறுப்புகளை, நாம் பிறந்த நாடு இந்தியா என்பதையும் மறந்து புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.\nஅபத்தத்தின் உச்சமாக, ஒரு அவில்தாரின், தனி மனித பாலியல் வாழ்வு சார்ந்த விடயத்தை, இந்திய அமைதிப் படையின் கூட்டுப் பொறுப்பில் ஏற்றி, ஒரு மூன்றாம் தர ஏடு செய்யும் விஷயத்தை, விஷமத்தனமாக செய்து இருக்கிறீர்கள். ஒரு நல்ல எழுத்தாளராகக் கூட இல்லை, ஒரு ந்ல்ல மனிதனாக இரண்டு பக்கமும் பாராமல், யோசியாமல், இப்படி ஒரு தலைப்பட்சமாக கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஇந்தியா உங்கள் பிரச்சினையில் நுழைந்தாலும் குற்றம் , நுழையாமல் இருந்தாலும் குற்றம் என்ற உங்கள் நிலையினை நீங்கள் மறுபரிசீலனை செய்கிறவரை, உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுகே தெரியாதவரை, இந்த சோகம் தொடரத்தான் போகிறது. இன்னமும் இம்மாதிரியான சோகங்களும், வேதனைகளும் தொடரக்கூடாதெனில், வன்முறைக்கெதிராக உயர்த்திப் பிடிக்கும் உங்கள் கொடியினை, உங்கள் பிரியத்துக்குரிய புலிகளின் பக்கமும் திருப்புங்களேன். வன்முறை விடுத்து அவர்களை சனநாயகப் பாதையில் திரும்பச் செய்ய உமக்கும், உம்மையொத்த எமது சக ஈழ சோதரர்களுக்கும் தெம்பிருக்கிறதா..\nஇல்லையெனில், இதோடு பிறர் வன்முறையை மட்டும் கண்டிக்கும் இரட்டை வேட நிலையை விட்டு விடுங்கள்.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nதமிழ்வானின் விண்மீன் - முக - 95\n“ஆகாரத்திற்காக தடாகத்தில் உள்ள அழுக்கைச் சாப்பிட்டு சுத்தப்படுத்துகிறதே மீன். அதுபோலத்தான் நான். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்து இருக...\nமரத்தடி மண்டகப்படி - 7\nமரத்தடி மண்டகப்படி - 6\nமரத்தடி மண்டகப்படி - 5\nமரத்தடி மண்டகப்படி - 3\nமரத்தடி மண்டகப்படி - 2\nமரத்தடி மண்டகப்படி - I\nமனசும் புத்தியும் =============== திருவாவட...\nகாணாமல் போனவர்கள் - தேன்சிட்டு ==================...\nகுறும்பட வரிசை =============== வெ.சா வின் கனடா...\nயாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அரு...\nசுட்ட பட(ழ)ம் ============= சுட்ட ...\nசாத்தான்குளத்திலிருந்து தேவனின் குரல் போல... ====...\nதமிழ் க்ளாஸ் ============ குழந்தைகளின் ப...\nஇந்த வா.....ரம் ============= நண்பரொருவர் வீடு...\nசுதந்திர தின சோக்குகள் ===================== ...\nஎன் நியாயமான சந்தேகங்களுக்கு பரிசு..\nநண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம் =====...\nமரபு - புதுசு - கவிதை..\nவாழும் முறை - கற்றுக் கொடுக்கப் படும் விஷயமா..\nsa(a)da சிவம் அல்ல ...ஸ்பெஷல் சிவம் =============...\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு ===================...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=46&t=13847&start=30", "date_download": "2019-06-26T13:48:27Z", "digest": "sha1:H7TDWRCUDI4V4EE76QGAIUW63DPJDNQL", "length": 7073, "nlines": 188, "source_domain": "padugai.com", "title": "bitcoin, perfect money exchange - Page 4 - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nசார், Neteller க்கு $5 தேவை . உங்களிடம் இருக்கிறதா\nmarmayogi wrote: சார், Neteller க்கு $5 தேவை . உங்களிடம் இருக்கிறதா\n360 INR பணம் அனுப்பி விட்டேன். எனது Neteller address உங்களுக்கு private message செய்துஇருக்கிறேன்\nபணம் பெற்றுகொண்டேன் . மிக்க நன்றி சார்\nneteller ல் 654 INR ஐ உங்களுடைய neteller account க்கு அனுப்புகிறேன். என்னுடைய Bank account க்கு INR ஆக மாற்றிதர முடியுமா \nneteller ல் 654 INR ஐ உங்களுடைய neteller account க்கு அனுப்புகிறேன். என்னுடைய Bank account க்கு INR ஆக மாற்றிதர முடியுமா \nஎன் அக்கவுண்ட், டாலர் அக்கவுண்ட் .... ஆகையால்.... அனுப்பும் தொகை... நெட்டல்லரும் ரூ டூ டாலர் என ஒரு எக்சேஞ்ச் சார்ச் பிடிப்பார்கள்.\nஅனுப்பிவிட்டால், பேங்க் அக்கவுண்ட் எண் கொடுக்கவும் ...\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-26T14:47:29Z", "digest": "sha1:JW6LGMSREWPLPAAJ7FLMVE7KVDJO6235", "length": 11442, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "இதுதான் மோடி |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nBullet Train அகமதாபாத்தில் துவக்கப்பட்டிருக்கிறது, ஜப்பான் பிரதமரைக் கட்டித் தழுவி வரவேற்கிறார் நம் பிரதமர். வெளிநாட்டு பயணம் செல்கிறார் என கிண்டலடிக்கும் எதிர்க்கட்சிகள் அப்படி சென்று வந்த ஜப்பான் நாட்டினால் இந்தியா அடையும் பயனைப்பாருங்கள்.\nBullet Train மொத்த மதிப்பீடு 1 லட்சத்தி 8 ஆயிரம் கோடி (1,08,000 கோடி) இதில் 88,000 கோடி முதல் இதற்கு வட்டி (0.1%) மிகமிகக் குறைந்த வட்டி (இதே உலக வங்கியில் வாங்கியிருந்தா 5-7 % வட்டி) கடனை திருப்பி கொடுக்க வேண்டிய காலம் – 50 ஆண்டுகள் (உலக வாங்கி – 25 ஆண்டுகள்) கடனை திருப்பி அளிக்க 15 ஆண்டுகள் கழித்து ஆரம்பித்தால் போதும்.\nஇதில் ஈடுபட்டிருக்கும் தொழில் வல்லுநர்கள் 300 இந்திய பொறியாளர்கள் ஜப்பானில் சென்று பயிற்சி முடித்து இங்கு செயலாற்ற தயாராக இருக்கிறார்கள். ஜப்பானில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 4000 பொறியாளர்களை புல்லட் ரயில் தொழில்நுட்பத்திற்காக பயிற்சி எடுக்கப் போகிறார்கள்.\nஆக எந்த விதத்திலும் தொழில் நுட்பத்திற்கு வெளிநாட்டுக்காரர்களை நம்ப தேவையில்லை. ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முழு நிதி உதவியோடு இந்த தொழில் நுட்பத்தில் 30 இந்தியர்களுக்கு உயர் தொழில்நுட்ப படிப்புக்கு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. உடனடியாக 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nவருங்காலத்தில் இத்தகைய ரயில் எல்லா மாநிலங்களுக்கும் வர வேண்டும் ஜப்பானைப் போன்ற \" High Speed Train Training Institute\". 2020 ல் அமைக்கப்பட்டு அதில் 4000 மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதன்முலம் நம் நாட்டிற்கான புல்லட் ரயில்கள் மட்டுமல்ல நம் நாட்டில் இருந்து தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.\nஇந்த புல்லட் ரயில் அகமதாபாத்திலிருந்து மும்பை செல்வதற்கு 2 மணி நேரம் மட்டுமே ஆகும்.( இப்போது 8 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விரைவாக வரும்போது பிற மாநிலங்களுக்கு இடையான சுற்றுலாவும் மேம்படும்.\nஇந்தியாவிலேயே புல்லட் ரயில் தொழில் நுட்பம் வந்தடைய தொலைநோக்குடன் செயல்படும் பாரத பிரதமரை போற்றும். அடுத்த தேர்தலை பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் சாதாரண அரசியல் வாதிகள் மத்தியில் அடுத்த தலைமுறைக்காக தொழில் நுட்ப வளர்ச்சியினை ஜப்பானில் இருந்து கொண்டு வந்த மோடி அவர்களின் அரசை பாராட்டுவோம்.\nநாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை, ஜப்பான்…\nமோடி டீ விற்ற வத்நகர் ரயில் நிலையத்தின் வளர்ச்சி…\nபுல்லட் ரயில்திட்டத்தை எதிர்ப்பவர்கள், மாட்டு…\nமேக் இன் இந்தியா சர்வதேச பிராண்டாகிவிட்டது\nமத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினாங்கு கோடியை தாண்டியது\nBullet Train, ஜப்பான், புல்லட் ரயில்\nமேக் இன் இந்தியா சர்வதேச பிராண்டாகிவி� ...\nஎனது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பா� ...\nஇந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையி� ...\nநாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்த� ...\nசீனா படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்ச� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-6-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-06-26T14:18:43Z", "digest": "sha1:QZ2T2BTB7NUDXM37BFL6T7YGQYMCMCJB", "length": 7295, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்று மாலை 6 மணிக்கு நேர் கொண்ட பார்வை டிரைலர்: | Chennai Today News", "raw_content": "\nஇன்று மாலை 6 மணிக்கு நேர் கொண்ட பார்வை டிரைலர்:\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஇன்று மாலை 6 மணிக்கு நேர் கொண்ட பார்வை டிரைலர்:\nதல அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூரில் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்\nஇந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபர்ஸ்ட்லுக்கை அடுத்து நேராக டிரைலர் ரிலீஸ் ஆகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது\nதவான் இடத்தை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்வார்: அஸ்வின்\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கான செலவை வசந்த குமாரிடம் வசூலிக்கக்கோரி வழக்கு\nஅஜித்தை நூலிழையில் முந்திய ஜோதிகா\nஅஜித் பட பணியை ஸ்டார்ட் செய்த யுவன்ஷங்கர் ராஜா\nமுன்கூட்டியே ரிலீஸ் ஆகும் ‘நேர் கொண்ட பார்வை’\nஅஜித் படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறிய கருத்து\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.ilaignan.com/2302", "date_download": "2019-06-26T14:02:21Z", "digest": "sha1:CDKTNJSVV33PURXBGVRDAL52RCE5W6KM", "length": 3212, "nlines": 49, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nHome » குட்டிக்கதைகள் » கோடு\nஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர். அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான்.\nஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார், ”இதோ பாருங்கள், இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான்.\nபெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்”.\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என்ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-06-26T13:54:12Z", "digest": "sha1:24JURWMU4HBOQZOWJHXKPRSNCYQIQU2C", "length": 11081, "nlines": 74, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில் | பசுமைகுடில்", "raw_content": "\nபழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ளவிருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி ஆவர். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டுசிவதலங்களில் முக்கியமானதாகும்.\nபிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன்பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).\nஇந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.\nஇத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.\nநான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.\nமுதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.\nசைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.\nஇந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.\nஇந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.\nகாசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.\nஇக்கோயிலிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியு சவுத் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது [1] [2] . பல கட்ட விசாரணைகள் மற்றும் முயற்சிகளுக்குப்பின் ஆஸ்த்திரேலிய பிரதமர் டோனி அபாட்(Tony Abbot) அவர்களின் 2014 இந்திய வருகையின் போது இச்சிலை இந்தியாவிடம் ஓப்படைக்கப்பட்டது.\nPrevious Post:பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில்\nNext Post: 11 வயது சிறுவனின் தலையை துண்டித்த ஐ.எஸ்\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T13:55:49Z", "digest": "sha1:7OUJQEEBBF3LL4SI53DYEZ2QVKOE2C4N", "length": 11780, "nlines": 93, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஜனாதிபதி உமர் | பசுமைகுடில்", "raw_content": "\nAR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி \nஉங்கள் நாட்டீல் பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியில் எதை விரும்புவீர்கள் \nஇல்லை இவையில்லாம் வேற யார் ஆட்சி அமைத்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்க்கப்பட்டதற்க்கு \nA.R ரஹ்மான் கூறிய பதில்:-\nஇந்தியாவில் யார் ஆட்சி சிறப்பானது என்று நான் கூறுவதை விட பண்டைய அரேபியாவில் கலிபா எனப்படும் உமர் அவர்களின் ஆட்சி போல் இருந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறேன் \nசுதந்திரத்தை எழுதி கொடுத்த பின்ஆங்கிலேய அதிகாரிசுதந்திர இந்தியாவின் ஆட்சி எவ்வாறு இரூக்க ஆசைபடுகிறீர்கள் என கேட்ட போது,\nகாந்தி அவர்கள் உடனே அழித்த பதில் : –\nஅரேபி தேசத்தில் ஜனாதிபதி உமர் என்பவரின் ஆட்சி போல் இருக்க விரும்புகிறேன்.\nகெஜிர்வால் டெல்லியை வெற்றி பெற்ற கையுடன் அவரிடம் நீங்கள் எவ்வாறு ஆட்சி அமைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது,\nகெஜிர்வால் அழித்த பதில் : –\nஉமர் அவர்களுடைய ஆட்சியை போல் செயல்பட விரும்புகிறேன்.\nஇதை படித்தவுடன் உங்களில் எழும் கேள்வி யார் அந்த உமர் \nஉமர் வாழ்வில் நடந்த ஓரு சம்பவத்தை இங்கு சொல்கின்றேன் ,\nஅதன் பின் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nஉமர் அவர்கள் ஆட்சிகாலத்தில் பாலஸ்தின் யுதர்களிடம் இருந்து வெற்றி பெற்று மீன்டும் இஸ்லாமியர் கைவசம் வந்து விட்டது அதன் ஜனாதிபதியாக உமர் அவர்களானார். தான் செல்லாமல் தன் படைவீரர்களை வைத்து மீட்டார், அப்பொழுதைய பாலஸ்தீன வாசிகள் தங்களின் ஆட்சியாளர் உமர் அவர்களின் முகத்தை பார்க்க ஆசைபட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர்.\nஇதையறிந்த உமர் அவர்கள் தனக்கு துனையாக ஆட்சியின் பனியாளர் ஓருவரை அழைத்து கொண்டு பாலஸ்தினம் புறப்பட்டு சென்றார்.\nசவுதி அரேபியா தேசத்தில் இருந்து தற்போதைய இஸ்ரேலுக்கு ஒரு ஒட்டகத்தில் உமர் அவர்களும் அவரின் வேலையாளில் ஓருவரையும் அழைத்து சென்றார் என்றால் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் \nஉமர் அவர்கள் செல்லும் வழியில் தன் பனியாளிடம் ஓரு குறிபிட்ட அளவை சொல்லி\nஅதாவது இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஓட்டகத்தில் நான் அமர்வேன்,\nபின் நீ இரண்டு கிலோமீட்டர் நீ அமர்ந்து வா என்று ஓப்பந்தம் செய்து கொண்டார்கள்.\nஉமர் அவர்களே ஒட்டகத்தில் முழவதுமாக அமர்ந்து வந்தாலும் யாரும் கேட்க முடியாது\nஇருந்தும் சம உரீமையை பேணினார்.\nஅவ்வாறே மாறி மாறி சுழற்சி முறையில் பயனித்து பாலஸ்தின எல்லையை நெருங்கிவிட்டார்கள்.\nபாலஸ்தின எல்லைக்குள் மக்கள் இரு வழி யிலும் பெருங்கூட்டமாக காத்து நின்றார்கள்.\nஅவர்களை முஸ்ஸீம் தளபதி ஓருவர் கட்டு படுத்தி உமர் வரவை எதிர் நோக்கியிருந்தார்,\nஉமர் அவர்கள் பாலஸ்தின எல்லைக்குள் நுழையும் நிலையில் உமர் அவர்களின் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது,\nஉமர் அவர்கள் ஒட்டகத்தை பனியாளிடம் தந்தார்.\nபனியாளோ தற்போது எல்லைக்குள் நுழைய இருக்கிறோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார்.\nமேலும் மக்கள் கானும் போது நீங்கள் ஓட்டகத்தில் அமர்வதே சரியென்றார்.\nஆனால் உமர் அவர்களோ நான் இங்கு ஓட்டகத்தில் மன்னனாக அமர்வதைவிட\nநான் ஓப்பந்தத்தை மீறாத அடியானாக இறைவன் முன் நிற்க ஆசைபடுகிறேன்.\nஅதனால் மிகவும் களைப்பாக இருக்கும் நீ அமர்ந்து கொல் என்று பனியாள் அமர்ந்திருக்க ஓட்டகத்தை பிடித்து கொண்டுபாலஸ்தினத்தில் புகுந்தார்.\nமக்கள் அனைவரும் பனியாளரை மன்னரென நினைத்து மகிழ்ச்சியி ஓட்டகத்தில்இருப்பவரை பார்த்து மகிழ்ச்சி கொணடார்கள்.\nமக்கள் பனியாளரே மன்னன் என நினைக்க மற்றொரு காரணம், பனியாளின் சட்டையில் மூன்று கிளிச்சல்கள் ஒட்டகத்தை பிடித்து வந்த உமரின் ஆடையிலோ 16 கிளிச்சல்கள்,\nஅங்கே இருந்த மக்கள் யாரும் இதற்கு முன் உமர் அவர்களை பாத்ததில்லை என்பதால் பனியாளை மன்னனாக உறுதியாக்கி பார்த்தார்கள்.\nஅங்கே முஸ்ஸீம் தளபதி காலித் பின் வாலித் அவர்கள் ஒட்டகத்தில் பனியாள் அமர்ந்து உமர் நடந்து வருவதை கண்டதும் தன் உடைவாளை உருவிக் கொண்டு பனியாளை வெட்டு வதற்காக விரைந்து வந்தார்.\nஅதை கண்ட உமர் காலித் அவர்களை தடுத்து நீங்கள் வரம்பு மீற வேண்டாம்.\nமேலும் ஒப்பந்தபடியே அவர் அமர்ந்து வருகீறார் எனக் கூறினார்.\nஅப்போது அங்கிருந்த மக்கள் உமரின் நேர்மை, தன்னடக்கம் அனைத்தையும் கண்டு இப்படி ஓருவர் ஆட்சியில் தாங்கள் குடிமக்கள் என்பதை நினைத்து பெருமைபடுகிறோம் என்றனர்.\nதற்போதைய உலகத்தில் காரின் கதவை விரைவாக திறந்து விடவில்லை என்பதற்காக பனி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.\nதான் ஓரு ஜனாதிபதி என்பதை நினைத்து கர்வம் கொள்ளாதவர் உமர் ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள்.\nNext Post:விபூதி குங்குமம் வைத்துக்கொண்டால் என்ன பலன்\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://educationtn.com/2019/01/23/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-06-26T14:00:37Z", "digest": "sha1:RK6BXKS2LJWOZ2CVHGC7PTPG67A67HR4", "length": 13430, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "வேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo வேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\nவேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\nவேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை\nபள்ளிக்கல்வி துறை நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதேபோல், அந்த பகுதி அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதற்போது நடைபெற்று வரும் ஆசிரியர் சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டங்களால் பள்ளி செயல்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடராமல் 23-ந் தேதி (இன்று) முதல் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அருகாமையில் உள்ள தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் மெட்ரிக், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை தற்காலிகமாக ஈடுபடுத்தி பள்ளியினை நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஆசிரியரை கேலி செய்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட 6 மாணவர்கள் இடை நீக்கம்\nNext articleஅரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்திப்பு.\nஅரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகளை சரி செய்யக் கோரி, விரைவில் போராட்டம் நடத்தப்படும்,” என, ‘ஜாக்டோ – ஜியோ’ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார்.\nதமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஉங்கள் உள்ளங்கையில் Mini Printer – இதோ வந்துவிட்டது \nஉங்கள் உள்ளங்கையில் Mini Printer - இதோ வந்துவிட்டது பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நிறுவனம் HP. பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1140/amp", "date_download": "2019-06-26T14:27:43Z", "digest": "sha1:X6NQWV7OC7XLXGSK3ZI5CL7DLRUR4ZDE", "length": 9071, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "நீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் | Dinakaran", "raw_content": "\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பைக்காரா நீர்வீழ்ச்சியை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர். ஊட்டியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவை உள்ளது. பைக்காரா அணை மின் உற்பத்திக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணையில் இருந்து, மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடும் போது, அணையில் இருந்து வெளியேறும் நீர் பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். சுற்றுலா பயணிகள் கட்டாயம் வருகை தரும் இடம் கூடலூர் சாலையில் அமைந்துள்ளது.\nஇந்தாண்டு தென்ேமற்கு பருவமழை சுமார் 3 மாதங்களுக்கும் மேல் பெய்த நிலையில், பைக்காரா அணையில் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீர் பைக்காரா நீர் வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டுகிறது. தற்போது பனியின் காரணமாக குளு குளு காலநிலை நிலவி வரும் நிலையில் நீர்வீழ்ச்சி பகுதியில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டியில் அதிகம் பேர் முகாமிட்டுள்ளனர். விடுமுறை நாளான நேற்று பைக்காரா நீர்வீழ்ச்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பைக்காரா அணையில் இருந்து ஸ்பீட் படகில் பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nபவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை சீசன் களைகட்டியது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்\nவிடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nவிடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது\n12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905593", "date_download": "2019-06-26T14:44:08Z", "digest": "sha1:BUPGFRI43W37IRPDLQISHXA5CFK7XP5T", "length": 8321, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்கிரவாண்டி, ஜன. 10: விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி, காணை இடைக்குழு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முண்டியம்பாக்கம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் வட்ட செயலாளர் நிதானம், காணை ஒன்றிய செயலாளர் ராமநாதன், வட்டக்குழு ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விக்கிரவாண்டி நகர செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வருகிற சாலை குண்டும் குழியுமாக உள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்த டாக்டர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் கலியமூர்த்தி, நிர்வாக குழு சகாபுதீன், வளர்மதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் மாசிலாமணி, துணை செயலாளர் மூர்த்தி, காணை ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED விழுப்புரம் அருகே வேடம்பட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://news.lankasri.com/othercountries/03/200687?ref=archive-feed", "date_download": "2019-06-26T15:11:27Z", "digest": "sha1:ATJJC6RTODNTCRSCATMS7J5DXWRXFKKJ", "length": 8556, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி\nகடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இறந்துபோன 3 வயது சிறுவனின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது குடும்பத்தார் கவலையோடு பகிர்ந்துள்ளனர்.\nAl Noor மசூதியில் சம்பவம் நடைபெற்ற போது 3 வயது சிறுவன் Mucaad தனது தந்தையின் மடியில் அமர்ந்திருந்துள்ளான். துப்பாக்கியால் தீவிரவாதி Brenton Tarrant சுடுவதற்கு முன்னர் தான் , தனது தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.\nமுத்தமிட்ட சிறிது நேரத்தில் தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், Mucaad தனது மடியில் சரிந்துள்ளான். தனது மகன் இறந்துவிட்டான் என தந்தை நினைத்த நேரத்தில், திடீரென அப்பா அப்பா என Mucaad அழைத்துள்ளான்.\nஅதுவே, அவனது கடைசி அழைப்பாக இருந்துள்ளது. இச்சிறுவனின் சத்தத்தை கேட்ட தீவிரவாதி மீண்டும் தலையில் சுட்டதில் தனது தந்தையின் கையில் உயிரை விட்டுள்ளான்.\nசகோதரி Luul Ibrahim கூறியதாவது, முதல் முறை துப்பாக்கியால் சுட்டபோது எனது தம்பி உயிருடன் இருந்தான், ஆனால் தீவிரவாதி மீண்டும் எனது தம்பியின் தலையில் சுட்டுள்ளான். எனது தந்தைக்கு முத்தமிட்டது, அவரது கையில் எனது தம்பி உயிரை விட்டதை மறக்கமுடியவில்லை, கையில் எனது தம்பியை சுமந்துவருகையில் மீண்டும் அவன் எழுந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் வந்தார், ஆனால் அது பொய்த்துவிட்டது என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/nayanthara-and-keerthy-suresh-a-part-of-super-star-rajinikanth-official-statement-on-thalaivar-166-heroine.html", "date_download": "2019-06-26T14:39:28Z", "digest": "sha1:54HEZF6WVFJ6YLGSBV4DSHU2DQFI7OQT", "length": 6531, "nlines": 123, "source_domain": "www.behindwoods.com", "title": "Nayanthara and Keerthy Suresh a part of Super Star Rajinikanth? Official statement on Thalaivar 166 heroine", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்\n‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தின் ஹீரோயின்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\n‘சர்கார்’ படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 166’ திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.\nஇப்படத்தின் இதர கதாபாத்திரங்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்கவில்லை என தெரிகிறது. எனினும், இது குறித்து ரஜினியின் பிஆர்ஓ-விடம் கேட்டபோது, நயன்தாரா, கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாமா என இயக்குநர் ஆலோசித்து வருவதாகவும், எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்த Vijay படத்த நான் பண்ணணும்னு கேட்டேன் - Udhayanidhi Opens Up\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
{"url": "http://nadunadapu.com/?p=153493", "date_download": "2019-06-26T15:15:03Z", "digest": "sha1:25DFU676XWQNMULT3I7SBQU6NEGHO67Y", "length": 38182, "nlines": 232, "source_domain": "nadunadapu.com", "title": "ராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்!! : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம் | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்\nகடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளாலும், தந்திரங்களாலும் மக்கள் வாழ்வு மட்டுமல்ல, இலங்கை – இந்திய உறவும் மிகவும் கீழ் நிலைக்குச் சென்றது.\nஇவ் விபரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.\nஇந்திய சமாதானப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நன்கு உணர்த்தியது.\nஒரு புறத்தில் மரணங்கள் அதிகரித்துச் செல்ல, நாட்டு மக்கள் மத்தியிலே அதிருப்தியும் வளர்ந்தது. இதனால் அடுத்த கட்ட நகர்வு எதுவெனத் தீர்மானிக்க முடியாத நிலை காணப்பட்டது.\nவிடுதலைப்புலிகளின் செயற்பாடுகள், தமிழ்நாட்டின் ஆர்ப்பாட்டங்கள் போன்றன இந்தியாவின் பெருமை மிக்க ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உணரப்பட்டது.\nஇத் தருணத்தில் இந்திய ராணுவத்திற்கு எதிராக ஜனாதிபதி பிரேமதாஸவின் போக்கும், ஜே வி பி இனரின் தாக்குதல் அதிகரிப்பும் நிலமைகளை மேலும் மோசமடையச் செய்தன.\nஇவ் வேளையில் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது இந்திய தரப்பினர் மத்தியிலே பெரும் கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.\nஇதனால் இந்திய சமாதானப் படையினருக்கும், ஜனாதிபதிக்குமிடையேயான உறவு தினமும் மோசமான நிலையை நோக்கிச் சென்றது.\nசிங்கள மற்றும் முஸ்லீம் கிராமங்களுக்குச் சமாதானப் படையினர் பாதுகாப்பினை வழங்காமையால் அப் பகுதி மக்கள் புலிகளின் தாக்குதல்களால் அவதிப்பட்டனர். ஓப்பந்தம் காரணமாக எம்மால் அம் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியவில்லை.\nஇந் நிலையில் எமது உள்நாட்டுப் பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்கிறோம். நீங்கள் இந்தியா திரும்புங்கள் என ஜனாதிபதி மிகவும் கடும் தொனியில் பேசினார்.\nஆனால் இந்திய தரப்பினர் அவற்றை அசட்டை செய்தனர். இருப்பினும் மாற்று ஏற்பாடுகளை அவர்களும் ஆரம்பித்தனர். ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற பெயரில் இலங்கையின் இரண்டாவது ராணுவத்தைத் தோற்றுவித்தார்கள்.\nஇந்த ராணுவம் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் தலைமையில் செயற்படும் வகையில் தமிழ் இளைஞர்கள், முதலமைச்சரின் கட்சி உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு சீருடை, பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.\nஇவ் ஏற்பாடுகள் இலங்கையின் சட்ட வரையறைகளுக்கு முரணானது எனவும், இலங்கையின் இறைமையை மீறுவதாகும் எனவும் பிரேமதாஸ தெரிவித்த போதிலும் இந்தியா செவிசாய்க்கவில்லை.\nமிகக் குறுகிய காலத்தில் தமிழ்த் தேசிய ராணுவத்தின் தொகையும் அதிகரித்தது. இந்த இரண்டாவது ராணுவமும், இந்திய சமாதானப் படையினரும் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தங்களைப் போடுவதாக அமைந்தது.\nஇச் செயல்கள் இலங்கை அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான உறவை ‘எதிரிக்கு, எதிரி நண்பன்’ என்பது போல பொது எதிரியான சமாதானப் படையினருக்கு எதிராக இரு பிரிவினரும் இணைந்தனர்.\nஅதன் பிரகாரம் இந்திய ராணுவத்தை அகற்றுவது எனவும், அதில் இலங்கை ராணுவத்தையும் ஈடுபடுத்துவது என்ற குழப்பமான முடிவையும் எடுத்தனர்.\nபிரேமதாஸ அரசிற்கும், புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போது புலிகள் மிகவும் தான்தோன்றித்தனமாக, தன்னிச்சையாக இலங்கை ராணுவத்தை அவமதிக்கும் விதத்திலும் செயற்படத் தொடங்கினர்.\nஉதாரணமாக எமது ராணுவ முகாம்களை அவர்கள் கடந்து செல்லும் வேளையில் தமது சாரங்களை உயர்த்தி அம்மணமாகக் காட்டி ஏளனம் செய்து செல்வார்கள்.\nநாம் எம்மால் முடிந்த அளவிற்கு அமைதி காத்தோம். ஆனால் இவை மிகவும் சகிக்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை.\n‘நான் ஏன் ராணுவத்தில் இவ்வாறு அவமானப்பட வேண்டும் இதற்காகவா நான் ராணுவத்தில் இணைந்தேன் இதற்காகவா நான் ராணுவத்தில் இணைந்தேன்’ என எனக்குள் எண்ணியதுண்டு.\nஎனது சக அதிகாரிகளும், ராணுவத்தினரும் அவ்வாறான உணர்வைப் பெற்றிருப்பார்கள். நாளைய பொழுது நல்லதாக மலரும் என நம்பி அவற்றைப் பொறுத்துக்கொண்டோம்.\nதமிழ்த் தேசிய ராணுவம் படிப்படியாகப் பலமடைந்ததால் வரதராஜப்பெருமாளும் அரச எதிர்ப்பு, ராணுவ எதிர்ப்பு உரைகளை அதிகரித்தார்.\nமாகாணசபை அதிகாரிகள் எம்மை ஏளனப்படுத்தும் செய்கைகளுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஜே வி பி இனரின் தொடர்ந்த தாக்குதல்களால் நாம் விடுமுறையில்கூட வீடு செல்ல முடியவில்லை.\nமக்கள் அகதி முகாம்களுக்குள்ளும், நாம் ராணுவ முகாம்களுக்குள்ளும் முடங்கினோம். எமது மக்களின் அவதூறுகளை நாம் பொறுத்துக்கொண்டாலும், இந்திய ஜவான்களின் அவமதிப்புகள் எம்மை மிகவும் பாதித்தன.\nபிரேமதாஸ அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான இணக்கம் பலமடைந்தது. எனது எண்ணப்படி இந்திய சமாதானப் படையினர் தமது பொது எதிரி என்ற நிலைப்பாட்டிற்கு அவர்கள் சென்றிருந்தனர்.\nஇதன் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விவாதித்தனர். இத் தருணத்தில் பிரேமதாஸ மிக ஆபத்தான முடிவை மேற்கொண்டார்.\nஅதாவது இந்திய சமாதானப் படையினர் தாமாக விலகிச் செல்லவில்லை எனில் நாம் ஒருமித்துச் செயற்பட்டுத் துரத்துவது என்பதாகும். இதுவே அரசு – புலிகளின் வேலைத் திட்டமாக அமைந்தது.\nஇத் திட்டத்தின் பிரகாரம் பொது எதிரியை விரட்டும் நோக்கில் ஆயுதங்களைப் புலிகளுக்கு வழங்கச் சம்மதித்தார். அந்த ஆயுதங்கள் வழங்கும் ‘ஊத்தை’ வேலையைச் செய்யும் பணி ராணுவத்திடம் வழங்கப்பட்டது.\nஇவ் ஆயுத பரிமாற்றம் வன்னியிலும், கிழக்கிலுமுள்ள காட்டுப் பிரதேசங்களுக்குள் நடைபெற்றது. இக் கொடுமையான தேச விரோத குற்றத்தில் ராணுவமும் இணைந்தது.\nஇந்திய ராணுவம் வெளியேறியதும், இந்த ஆயுதங்கள் எமக்கு எதிராகத் திரும்பும் என்பதை நாம் உணர்ந்திருந்தோம். எதிர் பார்த்தது போலவே இந்திய ராணுவம் வெளியேறியதும் முதலில் தமிழ் தேசிய ராணுவம் இலக்கு வைக்கப்பட்டது.\nஇவ்வாறு புலிகளிடம் ஆயுதங்களை ராணுவத்தினர் வழங்கிய வேளையில் சில ராணுவ அதிகாரிகள் அவற்றில் சிலவற்றைத் திருடினார்கள். ஆனாலும் நேர்மையான அதிகாரிகளின் முயற்சியால் அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.\nஇந்த ஆயுத வழங்கலில் நான் சம்பந்தப்படவில்லை. அங்கு சென்றவர்களில் பலர் புலிகளால் மிகவும் கட்டி அணைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள்.\nஆயுதங்களைப் பெற்ற புலிகளின் இறுமாப்பும், விகாரமான செய்கைகளும் ஒருநாள் இந்த ஆயுதங்கள் உங்களை நோக்கி ஏவப்படும் என்பதை எமக்கு உணர்த்துவது போலிருந்தது.\nபுலிகளின் பிரதித் தலைவரான ‘மாத்தையா’ எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா இப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.\nபல சிங்கள மக்களையும், ராணுவத்தினரையும் கொலை செய்த அவர் வெள்ளை நிற அங்கி அணிந்தே ஓர் உத்தம அரசியல்வாதி போலத் தோற்றமளித்தார்.\nஅவரது போலிச் சிரிப்புகளுக்கு நாம் மயங்காத போதிலும், பிரேமதாஸ மயங்கினார். நரிகள் வெள்ளாட்டின் போர்வையில் வந்ததை அவரால் காண முடியவில்லை. அவர் அவர்களை நூறு வீதம் நம்பினார். ஆனால் அதே அளவு நம்பிக்கையை மாத்தையா வழங்கினாரா\nஇப் பேச்சுவார்த்தைகளில் ‘மாத்தையா’ கலந்துகொண்ட போதிலும் இவர் மேல் பிரபாகரன் வைத்திருந்த நம்பிக்கை குறைந்தே சென்றது.\nஇதற்குப் பிரதான காரணம் ஜனாதிபதி பிரேமதாஸவுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட நெருங்கிய உறவும், அதன் காரணமாக இயக்கத்திற்குள் வளர்ந்திருந்த மதிப்புமாகும்.\nதமது தலைமைக்குச் சவாலாக அவர் மாறலாம் என பிபாகரன் எண்ணினார். இதன் காரணமாக இந்திய உளவுப் பிரிவுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் புலிகளின் உளவுத்துறைப் பொறுப்பாளர் ‘பொட்டு அம்மான்’ இனால் விசாரிக்கப்பட்டு நீண்ட சிறையும், சித்திரவதைகளும் அனுபவித்த அவர் இறுதியில் கொல்லப்பட்டார்.\nஇவ் அனுபவம் காரணமாக புலிகளின் பிரதித் தலைவர் பதவிக்குப் போட்டியிட எவரும் முன்வருவதில்லை. வட பகுதித் தலைவர்கள் இவரது மரணம் குறித்துக் கவலை அடைந்த போதிலும் குற்றத்தை மறுதலித்துப் பேச எவரும் முன்வரவில்லை.\nபிரேமதாஸ அரசு வழங்கிய ஆயுதங்கள் இந்திய தரப்பில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியதால் மரணங்களின் தொகையும் அதிகரித்துச் சென்றது.\nஇதனால் இந்திய அரசு உள்நாட்டிலும் பலத்த அழுத்தங்களை எதிர்நோக்கியது. அந்த வேளையில் இந்தியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் வி. பி. சிங் தலைமையிலான கட்சி பிரதமர் ராஜிவ் காந்தி அரசைத் தோற்கடித்துப் பதவிக்கு வந்ததால் இலங்கைப் பிரச்சனை புதிய அரசின் கவனத்திற்கு வந்தது.\nபிரேமதாஸ அரசின் இந்திய எதிர்ப்பின் விளைவாக அவருக்கு எதிரான உணர்வு அதிகரித்திருந்ததை நான் பின்னர் காலங்களில் அங்கு ராணுவப் பயிற்சிக்குச் சென்ற போது அவதானிக்க முடிந்தது. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் குறித்து இந்திய ராணுவம் மத்தியிலே நல்ல மதிப்புக் காணப்பட்டது.\nபிரதமர் வி. பி. சிங் தனது ராணுவத்தை வெளியேறும்படி பணித்த வேளை தமிழ்த் தேசிய ராணுவம் சமாதானப் படையின் இடத்தை நிரப்பும் என இந்திய அதிகாரிகள் கருதினர்.\nஇந்திய ராணுவம் வெளியேறியதும், எமது ராணுவம் எதிர் நோக்கக்கூடிய இடர்களை நாம் உணர்ந்திருந்தோம். சமாதானப்படை வெளியேறியதும் அந்த இடைவெளியைப் புலிகள் நிரப்ப எண்ணுவார்கள்.\nஎனவே முதலில் தமிழ்த் தேசிய ராணுவம் இலக்காவார்கள். அதன் பின்னர் நாம் என்பதையும் புரிந்திருந்தோம். ஆனால் இந்த ஆபத்தினை ஜனாதிபதி பிரேமதாஸவும், அவரது அரசும், இந்திய அரசும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நாம் அறிந்திருந்தோம்.\nஇந்திய ராணுவம் வெளியேறுவதை இந்திய மக்களும், பிரேமதாஸ அரசும், புலிகளும், இலங்கை மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nஆனால் தமிழ்த் தேசிய ராணுவம், வரதராஜப் பெருமாளின் மாகாண அரசு என்பவற்றின் முடிவின் தொடக்கமாக அவை அமைந்தன. ஈற்றில் 1990ம் ஆண்டு மார்ச் 24 ம் திகதி திருகோணமலையிலிருந்து இறுதிச் சமாதானப் படைப் பிரிவும் வெளியேறியது.\nஇத் தினம் வரையிலான 3 வருடகாலத்தில் சுமார் 1500 படை வீரர்கள் மரணித்து, பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இலங்கை விவகாரத்தில் இவ்வளவு பெருந்தொகையான ராணுவ இழப்பை தாம் சந்திப்போம் என இந்திய அதிகாரிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nசமாதானப் படையினர் இலங்கையிலிருந்த வேளையில் ராணுவபயிற்சிக்காக சுமார் 4 மாதங்கள் பாகிஸ்தான் சென்றிருந்தேன். என்னுடன் மேலும் மூவர் வந்திருந்தனர்.\nபயிற்சி முடிந்து எமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட வேளையில் இந்திய சமாதானப் படையினர் குறித்து என்னிடம் வினவியபோது ‘இந்திய சமாதானப் படையினர் எனது நாட்டின் மேல் ஆக்கிரமிப்பிற்காக வரவில்லை.\nபதிலாக இலங்கை அரசின் அழைப்பின் நிமித்தம் வந்தார்கள்’ எனப் பதிலளித்தேன். உண்மையில் இப் பதில் எனது இதயத்திலிருந்து வரவில்லை. எனது நாட்டில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசின் கௌரவத்தைக் காப்பாற்றவே அவ்வாறு கூறினேன்.\nசில வருடங்களின் பின்னர் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரிக்குப் பயிற்சிக்காகச் சென்றிருந்தேன். அப்போது சமாதானப் படையில் செயலாற்றிய அதிகாரிகள் பலரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.\nஅவர்களின் அனுபவங்களில் கவலைகளே தொக்கி நின்றன. தம்மை மலர்மாலை போட்டு வரவேற்ற மக்கள் தமக்கு எதிராக திரும்பிய நிலமைகளையும், ஆரம்பத்தில் நட்பு பாராட்டிய புலிகள் பின்னர் பரம எதிரியாக மாறிய நிகழ்வுகளையும் பகிர்ந்தனர்.\nபுலிகளின் தலைவராக பிரபாகரன் இருக்கும் வரை தோற்கடிக்க முடியாது என அவர்களும் உறுதியாக நம்பியிருந்தார்கள். இலங்கை உள் விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் தலையிடாது என்றார்கள். அதுவே எனது பிரார்த்தனையாகவும் அமைந்தது.\nசமாதானப் படையின் இறுதிப் பிரிவினர் தமிழ்நாட்டிற்குச் சென்ற போது அவர்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி வரவேற்க வேண்டுமென மத்திய அரசு கேட்ட போதிலும் அவர் தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பினை உணர்த்தும் பொருட்டு அதில் கலந்து கொள்ள மறுத்திருந்தார்.\nமேஜர் ஜெனரல் கமல் குணரத்ன\nதொகுப்பு : வி. சிவலிங்கம்\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்\nPrevious articleஐ.நா.பொதுச் சபையில் ஜனாதிபதி நாளை உரை இராணுவத்தினரை யுத்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு கோருவார்\nNext articleவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் விபரீதம் – சிலையை கரைச் சென்ற 18 பேர் நீரில் மூழ்கி பலி\nசி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்: இந்திரா இந்தியாவுக்கு ‘எமெர்ஜென்சி’ அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/india/17438-praveen-togadia-ban-to-enter-gauhati.html", "date_download": "2019-06-26T14:27:42Z", "digest": "sha1:HJIBGINB5WW4N3GTTKZIJA25ZADP6MD4", "length": 9458, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "விஸ்வ ஹிந்த் பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுக்கு தடை!", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nவிஸ்வ ஹிந்த் பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுக்கு தடை\nகவுஹாத்தி (18 ஜூலை 2018): விஸ்வ ஹிந்த் பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கவுஹாத்தியில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.\nஅஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரவீண் தொகாடியா திட்டமிட்டிருந்தார் இதற்காக வி.ஹெச்.பி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇந்நிலையில் கவுஹாத்தி நகர காவல்துறை ஆணையர் ஹிரண் சந்திரா நாத், பொதுமக்கள் மத்தியில் வெறுப்பூட்டும் வகையில் பேசுவதாக கூறி, குவஹாட்டி நகருக்கு பிரவீண் தொகாடியா வர தடை விதித்துள்ளார்.\nபிரவீண் தொகாடியா சிறுபான்மையினர் மனது புண்படும்படி பேசுவதால் அவருக்கு இரண்டு மாதம் கவுஹாத்தியில் நுழைய தடை விதித்துள்ளதாக காவல்துறை ஆணையர் ஹிரண் சந்திரா நாத், தெரிவித்துள்ளார். மேலும், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கவும் அவருக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\n« BREAKING NEWS: இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொருங்கியது பாஜக வின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகல் பாஜக வின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகல்\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nபிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் ஐந்து லட்சம் அபராதம்\nபொது இடங்களில் உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதம் சிறை\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அன…\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=5", "date_download": "2019-06-26T13:49:17Z", "digest": "sha1:XLLOMSQAOS5RZUWCVZ2L5RJQDHEZXNE6", "length": 8641, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nசென்னை (14 ஜூன் 2019): திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் .\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்\nவிழுப்புரம் (14 ஜுன் 2019): விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். அவருக்கு வயது 67.\nநடிகரும் கதாசிரியருமான கிரேஸி மோகன் திடீர் மரணம்\nசென்னை (10 ஜூன் 2019): தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணாக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது அவர் காலமானார்.\nபிரபல நடிகர் கிரிஸ் கர்னாட் மரணம்\nபெங்களூரு (10 ஜூன் 2019): பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரிஸ் கர்னாட் உடல் நலக்குறைவால் காலமானார்.\nமுன்னாள் திமுக முதல்வர் மரணம்\nபுதுச்சேரி (10 ஜூன் 2019): புதுவை முன்னாள் திமுக முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் காலமானார்.\nபக்கம் 2 / 36\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/world/srilanka/content/8-headlines.html?start=300", "date_download": "2019-06-26T14:21:38Z", "digest": "sha1:VFY6BV6QP37GQM3FWWM66QEBEY4QR3RI", "length": 6090, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T14:23:49Z", "digest": "sha1:QD4UFHFTS23P7IDPCJPM2K4W46GWVSMF", "length": 8615, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பிரதமர்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபுதுடெல்லி (30 மே 2019): இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.\nபாஜக ஆட்சி அமைந்தால் அடுத்து யார் பிரதமர் - நிதின் கட்காரி பதில்\nநாக்பூர் (21 மே 2019): மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அடுத்து யார் பிரதமராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார்.\nஎனக்கு தெரியும் அதனால்தான் சொன்னேன் - ஸ்டாலின்\nநாகர்கோவில் (13 மார்ச் 2019): ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பது எனக்கு தெரியும் அதனால் தான் முதன் முதலாக ராகுலை பிரதமராக முன்மொழிந்தேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசேக் ஹசீனா மீண்டும் வங்க தேச பிரதமராகிறார் \nடாக்கா (31 டிச 2018): வங்க தேசத்தில் நடைபெற்றப் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nகொழும்பு (15 டிச 2018): இலங்கையில் பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.\nபக்கம் 1 / 4\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=61992", "date_download": "2019-06-26T14:59:21Z", "digest": "sha1:QSC2YPJIDZELHTQW6APZI5Y4DMQQVMMG", "length": 4710, "nlines": 77, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஇனக் கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி\nஇனக் கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி\nநாட்டுக்குள் இனக் கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி செய்து வருவதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nநேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் உரையாற்றும் போதே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.\nகுறுகிய அரசியல் நலன்களுக்காக ஆளும் அரசாங்கத்தை மாற்றுவதற்கு முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்தி வருவததாக் கூறியுள்ளார்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilsin.net/odisha-chandra-sarangi-bjp-mp-tamil-news-26may19/", "date_download": "2019-06-26T15:00:03Z", "digest": "sha1:HKUQEQ6XDDVZ4XM4NFKKXIH3OZ5CO3FA", "length": 2916, "nlines": 42, "source_domain": "www.tamilsin.net", "title": "பட்னாயக்கின் கோட்டையை வீழ்த்திய பாமரன் கதை | Odisha | Chandra Sarangi | BJP MP", "raw_content": "\nபட்னாயக்கின் கோட்டையை வீழ்த்திய பாமரன் கதை | Odisha | Chandra Sarangi | BJP MP\nபட்னாயக்கின் கோட்டையை வீழ்த்திய பாமரன் கதை | Odisha | Chandra Sarangi | BJP MP | Tamil News\nKelvi Neram பாஜகவை வீழ்த்திய தமிழகத்தின் கோரிக்கைகளை…\nதெலுங்கு விஷாலை வீழ்த்திய தமிழன் ஐசரி கணேஷ் | Vishal…\nஉலகக் கோப்பை - விஜய்ஷங்கர் வீழ்த்திய விக்கெட்\nPrevious Post:தேர்தல் ஆணையம் மீது புகார் கொடுக்க முடியுமா\nவிக்ரம் போட்ட வெடிகுண்டு | Valai Pechu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
{"url": "https://isha.sadhguru.org/global/ta/wisdom/article/vazhkayil-adhristam-evvalavu-mukiyamanathu", "date_download": "2019-06-26T14:29:49Z", "digest": "sha1:UPSE7L6XJFXXXRQLMAEL5E45OKVDYSZA", "length": 24731, "nlines": 266, "source_domain": "isha.sadhguru.org", "title": "வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வளவு முக்கியமானது?", "raw_content": "\nவாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வளவு முக்கியமானது\nவாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வளவு முக்கியமானது\nவாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வளவு பங்காற்றுகிறது தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களுக்குத்தான் “அதிர்ஷ்டம்” பங்காற்றுகிறது என்பதை சத்குரு எடுத்துரைக்கிறார்.\nசத்குரு: அதிர்ஷ்டத்தைச் சார்ந்து இருப்பவர்கள் எப்போதும் நட்சத்திரங்கள், கோள்கள், இடங்கள், அதிர்ஷ்ட காலணிகள், அதிர்ஷ்ட உடைகள், அதிர்ஷ்ட எண்கள் போன்ற எல்லாவிதமானவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வழிகளில் அதிர்ஷ்டத்தைத் தேடுவதிலும், வாழ்வின் நடப்புகளை நிகழ்த்துவதற்குக் காத்துக்கிடப்பதிலும், அவர்களாகவே எளிதாக உருவாக்கியிருக்கக்கூடிய விஷயங்கள் முற்றிலும் கைநழுவிப் போகின்றன. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நிகழச் செய்வது நீங்களாக தான் இருக்கவேண்டும். உங்களுடைய அமைதிக்கும், குழப்பத்துக்கும் உங்கள் செயல்பாடுதான் காரணம். உங்களது தெளிவான தன்மையும், தெளிவில்லாத தன்மையும் உங்களால் ஏற்படுகிறது. உங்களது ஆனந்தமும், அலைக்கழிப்பும் உங்களால் உருவாகிறது. உங்களுக்குள் இருக்கும் பிசாசுக்கும், இறைவனுக்கும் நீங்கள்தான் காரணம்.\nதற்செயலாக ஒரு சில விஷயங்கள் நிகழ்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்புக்காக நீங்கள் காத்திருந்தால், நீங்கள் உங்களுடைய கல்லறையில் இருக்கும்போதுதான் நல்ல விஷயங்கள் உங்களுக்கு நிகழலாம். ஏனென்றால், அதற்கு அவ்வளவு காலம் தேவைப்படலாம்.\nஉங்களுடைய சக்தி நிலைகள் அவற்றின் முழுத்திறனுக்குத் தாமாகவே வெளிப்படுவதை அனுமதிப்பதற்குப் பதில், சரியான சூழ்நிலை நிகழக்கூடிய விதத்தில் நம்மைச் சுற்றித் தேவையான உள்சூழல் மற்றும் வெளிச்சூழலை உருவாக்குவதற்குப் பதில், நமக்காக நிகழ்த்தி வைப்பதற்காக வேறு எதனையோ நாம் துரதிருஷ்டவசமாக எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nகாலை முதல் மாலை வரை, நிச்சயமாக உங்களுடைய இந்த நாளை, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பது முழுவதும் உங்களுடையது. உங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் உங்களுக்கு எவ்வளவு உரசல் இருந்தது என்பது, சூழ்நிலைகளையும், உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் – அவர்களுக்குள் இருக்கும் வரையறைகள் மற்றும் சாத்தியங்கள் – புரிந்துகொள்வதில் எவ்வளவு தூரம் உணர்வில்லாமல் இருந்துள்ளீர்கள் என்பதைச் சார்ந்திருக்கிறது. நீங்கள் என்ன அதிர்ஷ்டக்கல் அணிந்திருந்தபோதும், அதனால் அது முடிவு செய்யப்படுவதில்லை. நீங்கள் எவ்வளவு உணர்வுடன், புத்திசாலித்தனத்துடன் மற்றும் எவ்வளவு விழிப்புணர்வுடன், உங்களைச் சுற்றியுள்ள உயிர்களைப் பார்க்கிறீர்கள் என்பதையே அது சார்ந்துள்ளது.\nஉங்களுக்கு மகத்தான விஷயங்கள் நிகழ்கின்றன, ஆனால் அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியவில்லையென்றால், நீங்கள் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுகிறீர்கள் என்கிறேன் நான்.\nஒரு நாள், விமான நிலையத்தில் இரண்டு பேர் சந்தித்துக்கொண்டனர். ஒருவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். ஆகவே மற்றொருவர், “ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது\nமுதலாமவர் கூறினார், “நான் என்னவென்று உங்களிடம் கூறுவது எனது முதல் மனைவி புற்று நோயால் இறந்துவிட்டார். எனது இரண்டாவது மனைவி என் பக்கத்து வீட்டுக்காரருடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். என்னைக் கொல்வதற்கு முயற்சி செய்த காரணத்தால் என் மகன் சிறையில் இருக்கிறான். எனது 14 வயது மகள் கர்ப்பமாக இருக்கிறாள். என் வீட்டை மின்னல் தாக்கிவிட்டது. என்னுடைய பங்குகள் அனைத்தும் இன்றைக்கு பங்கு வர்த்தகத்தில் கீழே சென்றுவிட்டன. இது போதாதென்று எனக்கு எயிட்ஸ் இருப்பதாக எனது மருத்துவ அறிக்கை கூறுகிறது.”\n அதுசரி, நீங்கள் என்ன செய்கிறீர்கள் உங்களுக்கு என்ன தொழில்” என்று கேட்டார் இரண்டாமவர்.\nமுதலாமவர், “நான் அதிர்ஷ்டக் கற்கள் விற்கிறேன்.”\nஅது என்னவென்றால், நீங்கள் ஒரு விதமாக இருந்தால், சில விஷயங்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படும். நீங்கள் வேறொரு விதமாக இருந்தால், வேறு சில விஷயங்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படும். பூக்கள் நிறைந்த ஒரு புதர் மற்றும் வறண்ட, முட்கள் நிறைந்த புதர் இருந்தால், எல்லா தேனீக்களும் பூத்துக் குலுங்கும் புதரை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. பூத்திருக்கும் புதர் அதிர்ஷ்டசாலியல்ல, அது தன்னிடம் இனிய மணத்தைக் கொண்டிருக்கிறது - அதுதான் எல்லாவற்றையும் அதனிடம் ஈர்க்கிறது. முட்புதர் வேறொரு விதமான சூழ்நிலையை உருவாக்குகின்ற காரணத்தால், மக்கள் அதனிடமிருந்து விலகி நடக்கின்றனர். இரண்டுமே தாங்கள் உருவாக்கும் தன்மை பற்றி விழிப்புணர்வுடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவைகள் எந்த விதமாக நிகழத் தேவைப்படுகிறதோ அந்த விதமாக நிகழ்கின்றன.\nஆகவே, உங்களுக்கு மகத்தான விஷயங்கள் நிகழ்கின்றன, ஆனால் அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியவில்லையென்றால், நீங்கள் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுகிறீர்கள் என்கிறேன் நான். ஆனால் இருந்தாலும், உங்களுக்கு வாழ்க்கை நல்லவிதமாக நிகழ்வதோடு, அதன் காரணம் உங்களுக்குத் தெரியும் என்றால், அதன் பொருள் நீங்கள் இன்று உங்களுடைய உணவை விழிப்புணர்வுடன் சமைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே மோசமான விஷயங்கள் நடக்கும் நிலையில், அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் அழுகிவிட்ட உணவை மறுபடியும் சாப்பிடுகிறீர்கள்.\nஅதிர்ஷ்டம் – உங்களால் பார்க்கமுடியாதபோது\n“திருஷ்டி” என்றால் “பார்ப்பது”, “அத்ரிஷ்ட்” என்றால் “பாராதிருத்தல்”. உங்களது பார்க்கும் சக்தியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். உங்களால் பார்க்க முடிந்தால், ஏதோ ஒன்று ஏன் நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்களால் பார்க்கமுடியாதபோது, விஷயங்கள் அதன்போக்கில் அல்லது தற்செயலாக நிகழ்வதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். அதனை அதிர்ஷ்டம் என்றோ அல்லது துரதிருஷ்டம் என்றோ நினைக்கிறீர்கள்.\nஆன்மீகத் தன்மையுடன் இருப்பதன் பொருள், நீங்கள் உங்கள் வாழ்க்கையை 100% உங்கள் கைகளில் எடுத்துள்ளீர்கள்.\nஆன்மீகத் தன்மையுடன் இருப்பதன் பொருள், நீங்கள் உங்கள் வாழ்க்கையை 100% உங்கள் கைகளில் எடுத்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையை 100% உங்கள் கைகளில் நீங்கள் எடுத்தால்தான், நீங்கள் 100% விழிப்பான உயிராகிறீர்கள் என்பதுடன் தெய்வீகத்திற்கான சாத்தியம் உங்கள் வாழ்வில் எழுகிறது.\nஉங்கள் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் உருவாக்குவதற்கான நேரம் இது. அதிர்ஷ்டம், நட்சத்திரங்கள், கிரகங்களைச் சார்ந்திருக்காதீர்கள். இவைகள் ஜடப்பொருள்கள். ஜடப்பொருள்களின் தலைவிதியை மனித இயல்பு முடிவு செய்யவேண்டுமா அல்லது ஜடப்பொருள்கள் மனித இயல்பை முடிவு செய்யவேண்டுமா எந்த விதமாக இருக்கவேண்டும் ஜடப்பொருள்களுக்கு என்ன நிகழவேண்டும் என்பதை மனித இயல்பு முடிவு செய்யவேண்டும். ஆனால் ஒரு நட்சத்திரம் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு செய்தால், அப்போது ஜடப்பொருள்கள் உங்களது தலைவிதியை முடிவு செய்கின்றன.\nஅப்படிப்பட்ட விஷயங்கள் உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்துவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனெனில் அதற்குள் ஒருமுறை நீங்கள் சென்றுவிட்டால், ஒரு விதமான பழக்கப்பட்ட பாதைக்குள் நீங்கள் செல்ல நேர்வதுடன், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டதாகிவிடும். அதைக் கடந்து உங்களால் செல்லமுடியாது. உங்களது வளர்ச்சியையும், சாத்தியங்களையும் அது குறைத்துவிடும்.\nஉங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் உங்களுக்கு எவ்வளவு உரசல் இருந்தது என்பது, சூழ்நிலைகளையும், உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் – அவர்களுக்குள் இருக்கும் வரையறைகள் மற்றும் சாத்தியங்கள் – புரிந்துகொள்வதில் எவ்வளவு தூரம் உணர்வில்லாமல் இருந்துள்ளீர்கள் என்பதைச் சார்ந்திருக்கிறது.\nதற்செயலாக ஒரு சில விஷயங்கள் நிகழ்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்புக்காக நீங்கள் காத்திருந்தால், நீங்கள் உங்களுடைய கல்லறையில் இருக்கும்போதுதான் நல்ல விஷயங்கள் உங்களுக்கு நிகழலாம். ஏனென்றால், அதற்கு அவ்வளவு காலம் தேவைப்படலாம்.\nநீங்கள் தற்செயலாக வாழும்போது, பயத்திலும், பதற்றத்திலும் நீங்கள் வாழ்கிறீர்கள். ஒரு நோக்கம் மற்றும் திறனுடன் நீங்கள் வாழும்போது, என்ன நிகழுகிறது அல்லது நிகழவில்லை என்பது ஒரு பொருட்டல்ல; உங்களுக்கு என்ன நிகழுகிறது என்பதாவது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதுவே மிகுந்த சமநிலையான வாழ்வு.\nபொறாமை தரும் உத்வேகம்... தவறா\nமற்றவர்கள் மீதான பொறாமையால் உந்தப்படுவதைக் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு இந்த மனநிலையால் இயக்கப்படுவதன் பின்விளைவுகளையும் எடுத்துரைக்கிற…\nதலைமைத்துவம், வணிகம், வெற்றி 25 சத்குரு வாசகங்கள்\nஇன்று துவங்கியிருக்கும் இன்சைட் 2018 நிகழ்ச்சியை முன்னிட்டு, ஒரு தலைவராக இருத்தல், வெற்றியின் அர்த்தம், வணிகத்தின் சாரம் ஆகியவற்றைப் பற்றிய சத்குருவின…\nநீங்கள் பின்னாட்களில் வருந்த நேரிடாத பெரிய தீர்மானங்களை எடுப்பது எப்படி\nநம் காலத்தையும், சக்திகளையும் எந்த நோக்கத்திற்காக முதலீடு செய்யவேண்டும் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6674/amp", "date_download": "2019-06-26T14:19:38Z", "digest": "sha1:QQP3VO76YQ33VIOCJBFEGAMSBQEDGXET", "length": 13633, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊனப்பட்டதால் உதாசீனப்படுத்தினார்கள் | Dinakaran", "raw_content": "\nஓடி ஆடி விளையாண்ட குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டு கால் ஊனமானாள். பெத்தவளே பிறந்தது வீணா போனது என்றெண்ணிய போது உடன் பிறந்த தங்கை உத்தரவாதம் அளித்தாள். ‘‘நீ என்ன நினைக்கிறாயோ அதுவாக ஆக முயற்சி செய். நான் துணை இருக்கிறேன். என் படிப்பை தியாகம் செய்து வேலைக்குச் சென்று உன்னை படிக்க வைக்கிறேன். நீ படி லதா’’ என்றாள். அக்காவும், தங்கையும் உடன்பிறப்புகளாக இருந்தாலும், உன்னத தோழியாகவே இருந்தாள் உமா. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்டது சின்னிவாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜி, இவரின் மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.\nமுதலாவதாக பிறந்தவர் லதா, இரண்டாவது மகள் உமா. சிறுவயது குழந்தையாக இருக்கும் போதே லதா அமைதியாக இருந்தாள். 5 வயதாக ஆன போது மற்ற குழந்தைகள் போல் தானும் ஓடி ஆடி விளையாட எண்ணினாள். நன்றாக ஓடி விளையாடினாள். ஆனால் ஒரு மாதம் மட்டுமே. மறுமாதம் போலியோ தாக்கியது. எழுந்து நடக்க முடியவில்லை. தொடர் சிகிச்சையில் தெரிய வந்தது, வலது கால் ஊனம் என்று. வருந்தினாள் லதா. வாழ்வே இனி இல்லை. எதிர்காலம் முடிந்து போனது என கருதினாள். ஒன்றாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு முடிந்த கையோடு இனி எப்படி தொடர்ந்து படிப்பது...\nமற்றவர் துணையின்றி எவ்விதம் பள்ளி செல்வது என பரிதவித்தாள். தந்தையும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார். ஐந்தாம் வகுப்பு முடித்த கையோடு படித்தது போதும் என்றாள் தாயார். ‘‘நல்லா கையும், காலும் வச்சிருக்க பொம்பள புள்ளங்க படிச்சே ஒண்ணும் செய்ய முடியல, கால் ஊனமான நீ என்னத்த கிழிக்கப்போற’’ என்று உதாசீனப்படுத்த, உடனிருந்த தங்கை, ‘‘அக்கா நீ படி, நான் உன்னை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப் போறேன்’’ என்றாள். ‘‘நோட்டு, பேப்பர், பென்சிலுன்னு செலவு பண்ண பணம் எங்கிருக்கு’’ என்ற அம்மாவின் வாயை அடைத்தாள் தமக்கை.\nஅக்காவை படிக்க வைக்க உமா தனியார் நிறுவனம் ஒன்றில் 12 வயதில் வேலைக்குச் சேர்ந்தாள். லதாவும் நல்ல முறையில் படித்து வந்தாள். உமாவுக்கு ஆரம்பத்தில் மாதம் ரூ.600 மட்டுமே சம்பளம் கிடைத்தது. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றார். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான நடந்த ஊனமுற்றோர்களுக்கான தடகளப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். அதைக்கண்டு தங்கையும், தாயும் லதாவை பாராட்டினார்கள். தொடர்ந்து படி எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம் என்றனர் இருவரும்.\nஉற்சாகம் கொண்ட லதா பத்தாம் வகுப்பை முடித்தார். மேல்நிலைப் படிப்புக்காக வாலாஜாபாத் அரசுப் பள்ளியில் சேர்ந்தார். லதா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, மாதம் ரூ.2000 ஆயிரம் சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தார் உமா. உமாவை உறவினர் பெண் கேட்டு வந்தனர். ‘‘மூத்தவள வச்சிக்கிட்டு எப்படி இளையவளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும்’’ என்று கூறிய தாயிடம், தன் படிப்புக்கு முழுக்கு போட்டு தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்தாள் லதா. உமாவுக்கு திருமணம் முடிந்தது. லதாவும் படித்து முடித்தாள். தொடர்ந்து படிக்க உதவிக்கு ஆள் இல்லை என்று வருந்திய லதாவுக்கு இறைவன் அருளினான்.\nடைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் டைப்பிங் பயிற்சிகளை வண்டலூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் வழங்கி வந்தது. அவர்களின் உதவியுடன் லதா படித்து முடித்தாள். பின்னர் சென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் டைம் கீப்பராக வேலைக்கு சேர்ந்தார். தன் வருமானத்தில் ஒரு தொகையை தன் தங்கை குடும்பத்துக்கு கொடுத்தார். நன்றிக் கடனா, செஞ்சோற்று கடனா என்று கேட்டால் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது லதாவிடமிருந்து. டைம் கீப்பராக வேலைப்பார்த்த லதாவை, அதே கம்பெனியில் வேலைப்பார்த்த ஒருவர் மணமுடிக்க முன்வந்தார்.\nகணவரின் உதவியுடன் அரசு வேலைக்கு பல வகைகளில் முயற்சித்த லதாவுக்கு அங்கன்வாடியில் பணியாளர் பணி கிடைத்தது. தற்போது சென்னை, பல்லாவரம், கண்ணபிரான் தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வருகிறார். ‘‘என்னைப் போன்றோர் இனி உருவாகாமல் இருக்க, போலியோ சொட்டு மருந்து வழங்குவதை, சுகாதாரத்துறையை அடுத்து நான் வேலைப் பார்க்கும் துறைதான் திறம்பட செய்கிறது. அதில் எனக்கு ஒரு மனநிறைவு இருக்கிறது. போலியோ பாதிப்புகளை முற்றிலும் முறியடிக்கும் முயற்சியில் அரசுடன் நானும் இருக்கிறேன். என்னை அந்த வேலையில் அர்ப்பணித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது’’ என்றார் லதா.\nபெண்ணே... உன்னை நீ நேசிக்க கற்றுக்கொள்\nதி மோஸ்ட் வான்டட் லீடர்...\nபெண்களுக்கு சுய முன்னேற்றம் வேண்டும்\nஅன்னையர் தினத்தில் ஓர் அரிய ஆரம்பம்...\nமூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க\nஎங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும்\nகலப்பட உணவினை எளிதாக கண்டறியலாம்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்யும் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905594", "date_download": "2019-06-26T14:37:40Z", "digest": "sha1:EQBBHEKGID3ZJD2SUCEXM5GZ7552IZ6I", "length": 6872, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "ரேஷன் கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரேஷன் கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு\nதிண்டிவனம், ஜன. 10: திண்டிவனத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கிடங்கல்-1 பகுதியில் 24வது வார்டில் உள்ள நியாய விலைக்கடையில் வட்டாட்சியர் பிரபு வெங்கடேஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 பொதுமக்களுக்கு சரியாக சென்று சேர்கிறதா என கேட்டறிந்தார். அப்போது முன்னாள் நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார், கிடங்கல் பகுதி கிராம நிர்வாக அலுவலர் உமாசங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-06-26T14:14:14Z", "digest": "sha1:AZTCI4CV2CUTDMQYD7BIKSFI4DU4MW52", "length": 13945, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பினாகபாணி (கதைமாந்தர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபொன்னியின் செல்வனின் கதை மாந்தர்\nபினாகபாணி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பழையாறை மருத்துவரின் மகன் ஆவார்.\nபினாகபாணி பண்டிதன் பழையாறை மருத்துவமனையில் தன்னுடைய தந்தையிடம் மருத்துவத்தினைக் கற்றுக் கொண்டிருந்தான். இளைய பிராட்டி குந்தவைக்கு ஆதித்த கரிகாலனின் ஓலையைக் கொண்டு வந்த வந்தியத் தேவனுக்கு, குந்தவை மீண்டும் ஒரு ஓலை தந்து ஈழத்தில் உள்ள அருள்மொழி வர்மனை பழையாறைக்கு அழைத்துவரச் சொன்னார். ஈழத்திற்குச் செல்வதற்குக் கோடிக்கரை வழியாக செல்லவேண்டும் என்பதால், வழிகாட்ட பினாகபாணியையும் உடன் அனுப்பினார். குந்தவை மீது தான் காதல் கொண்டதை வர்ணித்தப்படியே வந்தியத்தேவனும் பினாகபாணியுடன் பயணித்தான். உலக வாழ்க்கை முறையை அறியாமல் மருத்துவத்திலேயே மூழ்கியிருந்த பினாகபாணிக்கு வந்தியத்தேவன் மீது எரிச்சல் உண்டானது.\nகோடிக்கரைக்கு வந்த போது பூங்குழலி பினாகபாணியைப் பரிகாசம் செய்தமையினால் மிகவும் கோபம் கொண்டான். வந்தியத் தேவனைப் பழுவூர் காவலர்களிடம் பிடித்துத்தர திட்டமிட்டான். ஆனால் வந்தியத்தேவனும், பூங்குழலியும் ஈழத்திற்குப் படகில் சென்றுவிட்டார்கள். பழுவூர் வீரர்கள் பினாகபாணியைச் சிறைபிடித்து அழைத்துச் சென்றனர். சிறைக்கு அவனைக் கொண்டு செல்கையில் குந்தவையும், நந்தினி தேவியும் அரண்மனையின் மேலிருந்து பார்த்தார்கள். குந்தவை சென்று பினாகபாணியை விடுவிக்கும் முன்பே, நந்தினி அவனை விடுவித்து அழைத்து சென்றாள். பழையாறைக்குக் குந்தவையைச் சந்திக்க வந்தியத் தேவன் வந்தால் தனக்குத் தகவல் தெரிவிக்கும் படி பினாகபாணியிடம் கூறினாள் நந்தினி. மேலும் ஒற்றர் படையில் சேர்த்துக் கொள்வதாகவும், பெரும் பரிசுகளைத் தருவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறினாள்.\nவந்தியத்தேவனும் நந்தியின் யூகத்தினைச் சரியாக்கும் வகையில் மீண்டும் பழையாறையை அடைந்தான். ஆனால் மதுராந்தகத் தேவனின் நிமித்தக்காரனாக பழையாறைக்குள் வந்ததால், எளிதில் கண்டறிய இயலவில்லை. இருந்தும் பினாகபாணிக்குச் சற்றுச் சந்தேகம் ஏற்பட்டு வந்தியத்தேவனை ஒற்றன் எனக் கூறி பழுவூர் வீரர்களிடம் பிடித்துக் கொடுக்க முயன்றான். அப்போது திருமலை வந்து வந்தியத்தேவனைக் காப்பாற்றிவிட்டான்.\nபினாகபாணியைக் கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.\nபொன்னியின் செல்வன் - கல்கி\nபராந்தகச் சக்கரவர்த்தி · இராஜாதித்தர் · கண்டராதித்தர் · அரிஞ்சய சோழர் · சுந்தர சோழர் · ஆதித்த கரிகாலன் · அருள்மொழிவர்மன் · மதுராந்தகன் ·\nசெம்பியன் மாதேவி · குந்தவை பிராட்டி · வானதி தேவி · வானமா தேவியார் ·\nதியாகவிடங்கர் · முருகய்யன் · ராக்கம்மாள் · பூங்குழலி · மந்தாகினி · வாணி அம்மை · சேந்தன் அமுதன் ·\nஅநிருத்தப் பிரம்மராயர் · ஆழ்வார்க்கடியான் நம்பி · ஈசான சிவபட்டர் ·\nரவிதாசன் · சோமன் சாம்பவன் · இடும்பன்காரி · தேவராளன் · கிரமவித்தன் · நந்தினி ·\nவந்தியத் தேவன் · பெரிய பழுவேட்டரையர் · சின்னப் பழுவேட்டரையர் · கொடும்பாளூர் பெரிய வேளார் · பார்த்திபேந்திர பல்லவன் · கந்த மாறன் · செங்கண்ணர் சம்புவரையர் · மலையமான் ·\nமணிமேகலை · சந்திரமதி ·\nவீரபாண்டியர் · கருத்திருமன் · பினாகபாணி · குடந்தை சோதிடர் ·\nபழையாறை · தஞ்சை · குடந்தை · பழுவூர் · மாதோட்டம் · நாகப்பட்டினம் · பூதத்தீவு ·\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nபொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2015, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:32:52Z", "digest": "sha1:JTQHSCGJO5ZAJOALF72OMD22R5KBJREX", "length": 5494, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபர்ட் ஆன்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரூபர்ட் ஆன்சன் (Rupert Anson, பிறப்பு: நவம்பர் 7 1889, இறப்பு: திசம்பர் 20 1966), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1910-1919 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nரூபர்ட் ஆன்சன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 28 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/03/09113218/1231333/ban-vadivelu-new-movie.vpf", "date_download": "2019-06-26T15:05:35Z", "digest": "sha1:2HBZAL7CX5255PU4IEHNZCYAOM2PHT6O", "length": 8416, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ban vadivelu new movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவடிவேலுவின் புதிய படத்துக்கு தடை\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் பிரச்சனையில் இருக்கும் போது வடிவேலு புதிய படத்தில் நடிப்பதால், அந்த படத்திற்கு தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Vadivelu\nசிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து 2006-ல் திரைக்கு வந்து வசூல் குவித்த இம்சை அரசன் 23-ம் புலிகேலி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். அந்த படத்திலும் வடிவேலுவையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயர் வைத்து அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பையும் துவக்கினர்.\nஇதில் சில நாட்கள் நடித்த வடிவேலு, ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்ளிட்ட சில பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.\nபடம் நின்றுபோனதால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஷங்கர் கூறினார். இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் வடிவேலு ‘பேய் மாமா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தில் வடிவேலுவின் தோற்றத்தையும் வெளியிட்டனர்.\nதற்போது இந்த படத்துக்கும் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பதாகவும், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை முடிக்காமல் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று வற்புறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nPei Mama | Vadivelu | வடிவேலு | இம்சை அரசன் 24ம் புலிகேசி | பேய் மாமா\nவடிவேலு பற்றிய செய்திகள் இதுவரை...\nவடிவேலுக்கு எச்சரிக்கை விடுத்த சமுத்திரகனி\nதயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை அழிக்க பார்க்கிறார்கள் - நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி\nபேய் மாமாவாக களமிறங்கும் வடிவேலு\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nவடிவேலுக்கு எச்சரிக்கை விடுத்த சமுத்திரகனி\nகாண்டிராக்டர் நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தியை கண்டித்து மதுரையில் வேடிக்கை போஸ்டர்\nதயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை அழிக்க பார்க்கிறார்கள் - நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி\nபிரே பார் நேசமணி டி-சர்ட்டுகளுக்கு குவியும் வெளிநாட்டு ஆர்டர்கள்\nவடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது- காயத்ரி ரகுராம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/pregnant-lady-delivered-baby-heap-garbage", "date_download": "2019-06-26T14:56:29Z", "digest": "sha1:PKPBO3Y6FJRGRPH7WMIK2VJHC6KGSUJ4", "length": 10143, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "குப்பைகளுக்கு நடுவே குழந்தை பெற்ற பெண்; அரசு மருத்துவமனையில் அவலம்... | pregnant lady delivered baby in heap of garbage | nakkheeran", "raw_content": "\nகுப்பைகளுக்கு நடுவே குழந்தை பெற்ற பெண்; அரசு மருத்துவமனையில் அவலம்...\nஅரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் மருத்துவ குப்பை குவியலுக்கு மத்தியில் பெண்ணுக்கு பிரசவம் நடந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. உதிர்ப்பிரதேசத்தின் கொன்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு திடீரென அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இந்நிலையில், பிரசவம் பார்க்க மருத்துவர்கள் யாரும் அங்கு இல்லாததால், அவருடன் இருந்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர். தனியறை ஒதுக்கப்படாமல் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, மருத்துவர் இல்லாததால், அந்த இடத்திலேயே சுற்றியிருந்த பெண்கள் பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறிய அம்மாநில மருத்துவ துறை செயலாளர், ' இதுகுறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரும் கட்டாயம் தண்டிக்கப்படுவர்' என கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டி மாயாவதி அதிரடி அறிவிப்பு\nகுடும்ப அரசியலை முன்னெடுக்கும் தேசிய கட்சி\nஅமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட அரசு அதிகாரி... வைரலாகும் வீடியோ...\nஉளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து அயோத்தியில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nதந்தை சிலையை அகற்ற தயாராமுதல்வர் ஜெகனுக்கு நாயுடு சவால்\nதமிழகத்தில் அணுக்கழிவு மையம்: கேள்வி கேட்ட தயாநிதி மாறன்.. உதவிக்கு அழைத்த மத்திய அமைச்சர்...\nசிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனையை அறிவித்த மத்திய அரசு\nநாடு முழுவதும் 123 கோடி மக்களுக்கு 'ஆதார் அட்டை' வழங்கப்பட்டுள்ளது- மத்திய அரசு தகவல்\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/cartoon/81570-stop-child-molestation-oneminutesketch.html", "date_download": "2019-06-26T13:51:52Z", "digest": "sha1:VIFKFX642OZ27XCZGWOLYNILXPI3Q5G5", "length": 14249, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "நேற்று ஹாசினி... இன்று ரித்திகா #OneMinuteSketch | Stop child molestation #OneMinuteSketch", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:32 (21/02/2017)\nநேற்று ஹாசினி... இன்று ரித்திகா #OneMinuteSketch\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.weportal.in/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-06-26T14:23:54Z", "digest": "sha1:CND7JUY6L2TYTQ7CH2FHA26VEF4RUSQQ", "length": 15255, "nlines": 72, "source_domain": "www.weportal.in", "title": "கனா – We Magazine – Simple and Sensible", "raw_content": "\nவிவசாயம், கிரிக்கெட் இரண்டையும் உயிராக நினைக்கும் ஒரு டெல்டா விவசாயின் வாழ்க்கையில் விவசாயம் பொய்த்து போக, வாழ்க்கை நொடித்துப் போக, மிச்சமிருக்கும் கிரிக்கெட்டின் மூலம் அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் மகளின் அசத்தல் ஆட்டம் ‘கனா’.\nவிளையாட்டைப்பற்றிய படங்கள் அவ்வப்போது வந்தாலும், அதில் போட்டி இருக்கும், காதல் இருக்கும். இல்லையென்றால் குடும்ப பகை இருக்கும். ஆனால் ‘கனா’வில் நம்முடைய பாரம்பரிய விவசாயமும், விவசாயியும் இருக்கிறார்கள் கூடவே அவர்களின் வலியையும் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் இப்படியொரு படத்தை தயாரித்து இருப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹேண்ட் ஷேக். இயக்குநர் அருண்ராஜா காமராஜூக்கு பாராட்டுக்கள்.\nதந்தையின் இறுதிச்சடங்கிலும் கிரிக்கெட்டை பார்த்து ரசிக்கும், இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடையும் தருணத்தில் கண்ணீர் விடும் தீவிர கிரிக்கெட் ரசிகர் மற்றும் விவசாயியாக சத்யராஜ். அவரைப் பார்த்ததும் உருகிப்போகும் மனைவியாக, பெண் பிள்ளை இப்படிதான் இருக்கவேண்டுமென வாரியலைச் சுழற்றும் வழக்கமான பாசக்கார அம்மாவாக ரமா. குத்தலாக பேசினாலும், யதார்த்தமான நண்பராக இளவரசு. காதலுக்கு கொடிப்பிடிக்கும் நல்ல பையனாக தர்ஷன். காமெடிக்கு காவலாக முனீஷ்காந்த் மற்றும் தர்ஷன் கூட்டாளிகள் இருவர். க்ளைமாக்ஸூக்கான கமர்ஷியல் கதாபாத்திரமாக சிவகார்த்திகேயன் இவர்களோடு கதையின் நாயகியாக நடிப்பில் ‘விமன் ஆஃப் த ஷோ’வாக வெளுத்துக் கட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்கள்தான் கனாவின் முக்கிய கதாபாத்திரங்கள்.\nஊருக்குள் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டி, அதன் நடுவே ஆரம்பிக்கும் ரகளை, அதன் தொடர்ச்சியாக போலீஸ் விசாரணையில், நடந்த பஞ்சாயத்தைப் பற்றி இருவர் விவரிக்க கதை ஆரம்பிக்கிறது. ஃப்ளாஷ்பேக் முடிகையில் கதையின் களம் ஜிவ்வென்று கிரிக்கெட்டுக்குள் நுழைகிறது.\nபள்ளிச்சீருடையில், இளம் வயது ஐஸ்வர்யா ராஜேஷ் ஆக நடித்திருக்கும் அந்த கருப்பழகி யார் புரொபஷனல் நட்சத்திரங்களை விட இந்த கருப்பழகி போன்ற யதார்த்த திடீர் நட்சத்திரங்கள் சமீப காலமாக தமிழ்சினிமாவை அலங்கரிப்பது வரவேற்புக்குரியது.\nஅருமையான முகப்பாவங்கள். வழக்கமாக இருக்கிறதா இல்லையா எனத்தெரியாத உடைகளில் நரம்பை சில்லிட வைக்கும் பனிமலையில் ஆடிப்பாடும் கமர்ஷியல் கதாநாயகிகளுக்கு மத்தியில்….. அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது நடிப்பினால் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். உங்கள் ஆக்டிங் இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் வியர்வை வழிய, விரல் மடக்கி பந்துவீசும் போது, ஒரு கிரிக்கெட் வீராங்கனைக்கான அதே உடல்மொழி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை நிச்சயம் கதைக்குள் ஈர்க்கும். சத்யராஜ் இதுவரை வில்லனாக, ஹீரோவாக நடித்தது எல்லாமே தில்லாலங்கடிதான். ஆனால் சமீபகாலமாக வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ்…. அசத்தல். அம்மா ரமா…\nஅறிமுக இயக்குநராக களமிறங்கி இருக்கும் அருண்ராஜா காமராஜ் முடிந்தவரை ஒவ்வொரு காட்சிகளிலும், அதிகப்பட்ச ஷாட்களை பயன்படுத்தி இருக்கிறார். கதை கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழையும் வரை இரண்டு வீடு, ஒரு மைதானத்தை வைத்தே கதையை நகர்த்தியவர், பிறகு கிரிக்கெட் க்ரவுண்ட்டிற்குள் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். ஒரு விளையாட்டை அதன் யதார்த்தம் கெடாமல் படம்பிடிப்பதில் அதிகம் மெனக்கெட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் பின்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஒருவர் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். கனாவின் கடைசி 20 நிமிடங்களில் தினேஷ் கிருஷ்ணனின் ராஜ்ஜியம்தான்.\nபடத்திற்கு பின்னணி இசை கச்சிதம். திபு நைநன் தாமஸின் அந்த ‘வாயாடி பெத்த புள்ள’ வசீகரிக்கிறது.\nசத்யராஜின் வீட்டை கடனுக்காக ஜப்தி செய்து விட்ட அதே நேரத்தில் நடைப்பெறும் கிரிக்கெட் போட்டியில், ஐஸ்வர்யா ராஜேஷின் ஆட்டத்தைப் பார்த்து அப்பா கண்ண்ணீர் விட்டு சந்தோஷப்படும் காட்சியில், அம்மா ரமா மகளின் விளையாட்டைப் பார்க்காமல், கண்ணீரில் உற்சாகமாகும் தன் கணவரையே பார்த்துகொண்டிருக்கும் காட்சி மிக அழகான ’காட்சி ஹைக்கூ’.\nஅரையிறுதிப்போட்டியில் இரு அணிக்கும் இடையில் யார் வெற்றி என்பதை தீர்மானிக்கும் சூப்பர் ஒவரின் போது, பயிற்சியாளராக சிவகார்த்திகேயன், ‘’தோல்வியோட வலி என்னன்னு இந்த ஒரு நிமிஷத்துல புரிஞ்சிருப்பீங்க. இதுக்கு மேல சொல்ல ஒண்ணுமில்ல’’ என்று சொல்கிற வசனத்தில் இருக்கிற அழுத்தம் யதார்த்தம். ‘விளையாட்ட சீரியஸா எடுத்துகுற இந்தியா, விவசாயத்த விளையாட்டா கூட எடுத்துகுறது இல்ல’ என்பது போல் படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் விவசாயம் பத்தின கருத்துகள், ஐஸ்வர்யா ராஜேஷின் க்ளைமாக்ஸ் பேச்சு என விவசாயிகளின் இன்றைய சூழலை, ’ஊருக்கே சோறுப் போடுறவங்களுக்கு இப்ப சாப்பிட சோறு இல்ல’ என்கிற வலியை உணர்த்துகிறது.\nநல்ல கதைதான்..ஆனால் பயிற்சியாளராக வரும் சிவகார்த்திகேயன் ஒரு மேட்சில் பட்டையைக் கிளப்பினார். அதன்பிறகு சூழ்நிலையால் அவரால் இந்திய அணியில் இடம்பெறமுடியவில்லை என்று கொடுக்கப்படும் கமர்ஷியல் பில்டப்பிற்கு ஏற்றபடி அவர் அணியில் எந்தவொரு மேஜிக்கையும் உருவாக்கவில்லை என்பதால் அவரது கதாபாத்திரம் அந்தளவுக்கு ஈர்க்கவில்லை. அதேபோல், வழக்கமாக படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு இழுந்து வந்து உட்கார வைத்த நகம் கடிக்க வைக்கும் அம்சத்தில் என்றைக்குமே இறுதிப்போட்டிக்கு சைக்காலஜிக்கலாகவே அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியுடன் படம் முடிகிறது. இந்திய அணிக்காக விளையாடி ஜெயித்தால் போதுமென்ற அந்த ஒரே லைனுக்கு அரையிறுதிப் போட்டியே போதும்..இறுதிப் போட்டி வேண்டாமென்றும் முடிவு கட்டிவிட்டார்கள் போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=107&Title=", "date_download": "2019-06-26T14:53:39Z", "digest": "sha1:ITJM3JF5FQ5TURG7SFBRF2D4ZCRJLLJL", "length": 16673, "nlines": 90, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]\nமுப்பெரும் விழா நிகழ்வுகள் - 1\nமத்தவிலாசப் பிரகசனம் - 5\nநாளிதழ்களில் வரலாறு டாட் காம்\nகட்டடக்கலைத் தொடர் - 7\nயாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை\nஅழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்\nஇதழ் எண். 8 > பயணப்பட்டோம்\nஅழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்\nகல்வெட்டுகள் கோயிலின் எந்த பகுதியில் இருக்கும் என்று யாரேனும் கேட்டால், விமானத்தின் அதிஷ்டானப்பகுதியிலும், சுவர் பகுதியிலும் கோபுரங்களிலும் இருக்கும் என்பது இன்றைய பதிலாகும். பழங்காலச் சிற்பங்களை எங்கு காண முடுயும் என்பது கேள்வியாகின் அதற்கான பதில், கோயில் கருவறைகள் என்று குழந்தை கூட கூறிவிடும். இதே கேள்விகளை அடுத்த நூற்றாண்டில் கேட்டால் அதற்கான பதில்கள், \"கல்வெட்டுகள் நடைபாதையில் தளமாக சிதைந்த நிலையில் காணப்படும்\" என்றும் \"பண்டைக்காலச் சிற்பங்கள் ஒரு வேளை அருங்காட்சியகங்களில் காணக்கிடைக்கலாம்\" என்றுதான் இருக்கும்.\nசென்ற மாதத்தில் நாங்கள் சுமார் 10 கோயில்களுக்குச் சென்றிருப்போம். அவற்றுள் மத்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களைத் தவிர மற்ற இடங்களில் நிகழ்ந்திருக்கும் சிதைவுகள் எங்களை உறுத்திய வண்ணம் இருந்தன. திருவெள்ளறை புண்டரீகாக்ஷ்ப் பெருமாள் கோயிலிலும், மணிமங்கலத்திலிருக்கும் சிவன் கோயிலிலும், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் கல்வெட்டுகள் நடைபாதையாகப் போடப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கானவர்களிடம் மிதி வாங்கும் அவல நிலையில் இருக்கின்றன. திருவெள்ளறையில் இருக்கும் குடைவரைக் கோயிலில் தண்ணீர் போக வழி செய்ய வேண்டி பராந்தக சோழரின் கல்வெட்டைப் பதம் பார்த்திருப்பதும், மணிமங்கலத்தில் இருக்கும் பெருமாள் கோயிலில் இராஜராஜன் காலக் கல்வெட்டின் மேல் இரும்புக் கதவைப் பொருத்த வேண்டி ஓட்டை போட்டிருப்பதும் எம் கண்களில் இரத்தக் கண்ணீரை வரவழைத்தன. இந்த கொடுமைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போன்ற ஒரு அநியாயம், திருவலஞ்சுழி கோயிலில் நடந்துள்ளது.\nதிருவலஞ்சுழி ஷேத்திர பாலர் திருக்கோயில் (சிதைவுற்ற முந்தைய நிலையில்) - அமரர் சில்பியின் ஓவியம்\nகாவிரி ஆறு வலப்பக்கமாய் சுழன்று திரும்புவதால் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்ற ஊரில், இன்று பிரபலமாக இருக்கும் ஸ்வேத விநாயகருக்குத் தெற்கே, க்ஷேத்ரபாலர் கோயில் அமைந்திருந்தது. 'அமைந்திருந்தது' என்னும் இறந்த காலப் பிரயோகம் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். இது ஆசிரியரின் தட்டச்சுப் பிழையோ கவனக் குறைவோ அல்ல. சில மாதங்களுக்கு முன் முள்ளும் புதரும் சூழத் தனது கருவறையில் குடியிருந்த க்ஷேத்ரபாலர் இன்று தஞ்சையில் யாருமே சீந்தாத அருங்காட்சியகமான, இராஜராஜன் மணிமண்டபத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் அனாதையாகக் கிடக்கிறார். அவர் இருந்த கோயிலின் கற்கள், திருப்பணி எங்கிற பெயரில், அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. பிரித்தவர்கள் மீண்டும் இக்கற்களை அடுக்கும் எண்ணத்தில் செய்யாததால் வரிசையைக் குறித்துக் கொள்ளாமல் விட்டிருக்கின்றனர். இதே இடத்தில் வேறொரு கட்டிடம் செங்கல்லும் சிமெண்டும் கொண்டு கட்டப்படுமெனின், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சோழர் கால நிகழ்வுகளைத் தாங்கி நின்ற கற்களை நடைபாதையில் தரையாக வேயும் அபாயம் நமக்கு வெகு அருகில் இருக்கிறது.\nஇவ்வபாயம் நிகழ்வதன் மூலம் பல இராஜராஜர் காலத்து கல்வெட்டுகளையும் இராஜேந்திரரின் கல்வெட்டுகளையும் இழந்துவிடுவோம். முன்பே படியெடுக்கப்பட்டிருக்கும் இக்கல்வெட்டுகளில் பல அரிய தகவல்கள் பொதிந்திருக்கிறது. இராஜராஜரின் குடும்பத்தைப் பற்றிய தகவல்களும், இராஜேந்திரரும் தந்திசக்திவிடங்கியும் இராஜராஜன் மறைந்த ஒரு வருடம் கழித்து நிகழ்த்திய கிரியைகளைப் பற்றிய கல்வெட்டும், மாமன்னர் இராஜராஜரின் நினைவாய் அவரது மகன் இங்கிருந்த க்ஷேத்ரபாலருக்கு பொற் பூக்களை அளித்த தகவலைப் பகரும் கல்வெட்டும் இங்கிருப்பதாக வரலாற்றாய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் கூறுகிறார். சில மாதங்கள் முன்பு, இக்கோயிலுக்கு முனைவர் கலைக்கோவனுடன் சென்றிருந்தோம். ஏற்கெனவே பதிவாகியிருக்கும் கல்வெட்டுகளைத் தவிர பல புதிய கல்வெட்டுகள் இக்கோயிலில் கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார்.\nசென்ற வாரம் திருவலஞ்சுழிக்குச் சென்றிருந்த நம் நண்பர் ஒருவர் அந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறினார். கங்கைகொண்ட சோழபுரத்தைச் சீரமைத்த அதே கட்டுமானப் பணியாளர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்திருப்பதாகவும் கூறினார். எத்தனையோ இழந்த செல்வங்கள் போல் இத்திருமுன்னின் கதியும் ஆகாமல் இருக்கும் என்ற நம்பிக்கை இதன் மூலம் பிறக்கிறது.\nஇந்த ஒரு கோயிலைப் பாதுகாக்கும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்று விட்டது. இதைப்போல இன்னும் எத்தனையோ தளிகள் இதைவிடச் சிதிலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனவே உலகம் முழுவதையும் இணைக்கும் இணையத்தில் இச்செய்தியைப் பகிர்தலின் மூலம், உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலை இவ்வநியாயத்துக்கெதிராய் ஒலிக்க வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இந்திய சரித்திரத்தின் முக்கியமான நிகழ்வுகளைத் தாங்கி நிற்கும் நம் பழங்கோயில்களைத் தொல்பொருள் ஆய்வுத்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருதல் அவசியம். அப்படிச் செய்வது முடியாத பட்சத்தில், பல இடிந்த கோயில்களைச் சிறப்பாக சீரமைத்திருக்கும் தொல்பொருள் ஆய்வுத்துறை இக்கோயில்களை முன்பிருந்தபடி மீட்கும் பணியையாவது செய்ய வேண்டும்.\nநமது இந்த முயற்சிக்குச் செவிசாய்க்க இந்து அறநிலையத் துறையையும், தமிழ்நாடு மாநில அரசையும், தொல்பொருள் ஆய்வுத் துறையையும் கேட்டுக் கொள்வோம்.\nவரலாற்றைக் காக்க குரல் கொடுத்து கீழுள்ள முகவரிகளுக்கு கடிதம் எழுத வேண்டி இணையத் தமிழர் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://educationtn.com/2018/12/17/school-morning-prayer-activities-18-12-2018-daily-updates/", "date_download": "2019-06-26T14:21:00Z", "digest": "sha1:5JZC53OKASGJE7YXE4ODG555UNP3NGNY", "length": 17182, "nlines": 375, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 18.12.2018 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nகுற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.\nஏழையின் சொல் சபை ஏறாது\n இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது\n2) பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது\nவிட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது\nஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.\nஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.\nஅதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.\nகுரங்கிடம் அப்பத்தை கொடுத்து அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.\nஅப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது கடித்து விட்டு மீண்டூம் போட்டது.\nஇப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.\nஅப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.\nஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.\nபூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.\nநாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.இந்தியாவிலேயே தமிழக பள்ளி மாணவர்களுக்கு தான் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்\n2.வட மாவட்ட அரசுப் பள்ளிகளில் 5472 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளது\n3.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n4.ஆந்திராவின் காக்கிநாடா – ஏனாம் இடையே பெய்ட்டி புயல் கரையை கடந்தது\n5.2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.\nPrevious articleதமிழக அரசு பள்ளிகளில் முதல் முறையாக வான் அறிவியல் ஆய்வகம்\nNext article2,150 ஆசிரியர்களுக்கு 2021 வரை பணி நீட்டிப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nசித்தா படிப்பு தரவரிசை வெளியீடு\nசித்தா படிப்பு தரவரிசை வெளியீடு சித்தா மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும், 20 முதல், கவுன்சிலிங் துவங்க உள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா போன்ற, இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://patrikai.com/first-look-of-ratchasi/", "date_download": "2019-06-26T14:42:33Z", "digest": "sha1:UKPSYV5UHHU3FGPH25DE7OPWRNFMMG4T", "length": 10325, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "'ராட்சசி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»‘ராட்சசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….\n‘ராட்சசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….\nஇயக்குனர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘ராட்சசி’.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா.\nஇறுதிக்கட்டப் பணிகளில் முடிக்கும் தருவாயில் இருக்கும் படக்குழு, தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், இன்று (மே 31) மாலை வெளியிடப்படவுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘ராட்சசி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு….\n‘ஜாக்பாட்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…\nஜோதிகா நடித்துள்ள ‘ராட்சசி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்…\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-06-26T14:08:50Z", "digest": "sha1:JVPVPKJW5LAFM2ORCXUCEROVAG32G2E5", "length": 6133, "nlines": 164, "source_domain": "sathyanandhan.com", "title": "தாடங்கம் சிறுகதைத் தொகுதி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: தாடங்கம் சிறுகதைத் தொகுதி\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி\nPosted on February 2, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி யூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய ஒரு அறிமுகம் தந்துள்ளேன். சென்ற வருடம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட விக்கிரகம், முள்வெளி மற்றும் போதி மரம் நாவல்கள் மற்றும் தோல் பை சிறுகதைத் தொகுதி , இவ்வருடம் காலச்சுவடு வெளியிட்ட தாடங்கம் சிறுகதைத் தொகுதி ஆகிய ஐந்து … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஓரினச் சேர்க்கை சிறுகதை, காணொளி, காத்யாயனி, காலச்சுவடு பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், சத்யானந்தன், சத்யானந்தன் உரை காணொளி, சரித்திர நாவல் போதி மரம், தாடங்கம் சிறுகதைத் தொகுதி, தீரா நதி, தோல் பை சிறுகதைத் தொகுதி, நவீன தமிழ்ச் சிறுகதை, நூல் அறிமுகம், பாலியல் வன்முறை சிறுகதை, புத்தகக் கண்காட்சி, முள்வெளி நாவல், யூ ட்யூப், வாசிப்பு, விக்கிரகம் நாவல்\t| Leave a comment\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:49:55Z", "digest": "sha1:BC67U54D73NSEDVVKVFW342VY7E56ATN", "length": 31698, "nlines": 750, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "சவால் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..\nFiled under: அபூ ஆஃப்ரின், அமெரிக்கா, ஈரான், சவால் — முஸ்லிம் @ 9:55 பிப\nஅமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் தொடுக்கும் சவால்கள்..\nசுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு, பின் பல நாடுகளில் தன்னுடைய ஆதிக்கசக்திகளின் கோர தாண்டவத்தினை அமெரிக்கா செய்துக்கொண்டு இருக்கிறது. இதனால் பல பாதிப்புசேதங்களை பல நாடுகள் அடைந்துக்கொண்டு வருகின்றன. அத்துடன் உலக நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாவற்றிகும் காரண காரிய இருப்பது அமெரிக்கா தான் என்பது உலகவியலாளர்களின் கருத்தாகும்.\nமேற்கு ஆப்ரிக்காவில் மட்டுமின்றி பசி பட்டினி அதனால் ஏற்படும் துயர சம்பங்கள் அதிகம் பல நாடுகளில். குறிப்பாக பல தேசங்களில் அரிசி தட்டுப்பாடுக்கள் அதிகரித்து வி்ட்டன. வளைகுடா நாட்டிற்கு, இந்தியாவிலிந்து ஏற்றுமதியாகும் அரிசியினை இந்தியா அரசாங்கம் நிறுத்தி விட்டது. இதனால் வளைகுடா பகுதியில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விலைவாசிகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஏறிவி்ட்டது. அத்தியாவசிய விலைகள் ஒரு பக்கம் ஏறிக்கொண்டே வருகிறது. மற்றொரு பக்கம் உலக சந்தைகளில் எரிபொருட்களின் விலைகளும் ஏறிவிட்டது.\nஇரட்டை கோபுர தாக்குதலில் 3,000 த்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. ஆனால் அந்த தாக்குதல்களில் இறந்து போனவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள், எந்த இனத்தை சார்ந்தவர்கள், எந்த மொழியினை சார்ந்தவர்கள், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி அமெரிக்காவினால் வெளியிட முடியுமா.. சென்ற 23.9.2007 அன்று, நான் அமெரிக்கா வந்த போது தாக்குதலுக்குள்ளான இரட்டை கோபுரம் இருந்த பகுதியினை பார்வையிட ஏன்.. சென்ற 23.9.2007 அன்று, நான் அமெரிக்கா வந்த போது தாக்குதலுக்குள்ளான இரட்டை கோபுரம் இருந்த பகுதியினை பார்வையிட ஏன்.. அமெரிக்கா அரசாங்கம் எனக்கு அனுமதி தரவில்லை. இருந்தாலும். அமெரிக்கா அதிபருக்கும் ஒரு அழைப்பினை ஈரான் அதிபர் விடுத்து இருந்தார். ஈரானின் உள்ள ஃபிர்தௌஸியா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள விழா ஒன்றில் உரை நிகழ்த்த தாங்கள் ஈரான் நாட்டிற்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினை முன்பு விடுத்து இருந்தார். ஆனால் இது நாள் அமெரிக்க அதிபர் ஈரான் நாட்டிற்கு செல்லவில்லை.\nஉலக நாடுகளில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் அமெரிக்கா மட்டும் தான் காரணம் என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். தற்போது ஈரான் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்துறை, அரசியல் துறை, வாணிபத்துறை, இராணுவத்துறை என்று பல துறைகளிலும் நாங்கள் முன்னெறிக்கொண்டு வருகிறோம். ஆதிக்கசக்த்திகளை எதிர்த்து பேராடக்கூடிய மனப்பக்குவதில் ஈரான் நாடானது தயாராகி விட்டது என்று ஈரான் அதிபர் தைரியமாக கூறியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்..\nஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட தோல்வியால் நாடு திரும்பிய 300,000 அமெரிக்க போர் வீரர்கள், அவர்களின் குடும்பத்தினரோடு நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆம்.. அவர்கள் மனக்கஷ்டம், மன அழுத்தம், மன வேதனை, மன பாரம் போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். நாடு திரும்பிய போர் வீரர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, அவர்களின் மூளையானது பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் 320,000 போர் வீரர்களுக்கு Traumatic Brain என்ற மூளை நோயானது பரவி விட்டது. 18.5 சதவீத போர் வீரர்களுக்கு மன அழுத்தம் (Stress Disorder) போன்ற நோய்கள் இருப்பதாக கண்டு பிடிக்கபட்டுள்ளது. ஐந்தில் ஒரு போர் வீரர் என்ற விகிதாரம் படி நோய் வாய்ப்பட்டுள்ளனர் என்று அந்த ஆய்வானது கூறுகிறது. இதற்கு காரணம் யார்..\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஸா பகுதி, பாலஸ்தீனம், ஈராக் போன்ற நாடுகளில் ஒன்றும் தெரியாத அப்பாவி பொது மக்கள், சிறு குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம்.. கணவனை இழந்த மனைவிமார்கள் எத்தனை பேர்.. மனைவியினை இழந்த கணவன் எத்தனை பேர்கள், குழந்தையினை இழந்த தாய்மார்கள். தாயினை இழந்த குழந்தைகள் எத்தனை பேர்கள்.. மனைவியினை இழந்த கணவன் எத்தனை பேர்கள், குழந்தையினை இழந்த தாய்மார்கள். தாயினை இழந்த குழந்தைகள் எத்தனை பேர்கள்.. இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.. இவைகள் அனைத்திற்கும் யார் காரணம்..\nபோர் மூலம் ஒரு பக்கம் ஆபத்துக்கள் தினமும் வந்த கொண்டு இருக்கின்றன. ஆனால் இன்னொரு பக்கம் ஊடகத்துறைகளும் ஆதிக்கசக்திகளுக்கு அடிமையாகி விட்டது. டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் ஊடகத்துறைகளை தூண்டி விட்டு அதன் மூலம் வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா. இஸ்லாம் ஒரு தீவிரவாதம் என்று மக்களிடம் சொல்லும் பொய் பிரச்சாரங்கள் எடுபட வில்லை. இஸ்லாம் ஒரு புனித மார்க்கம்.. ஒரு எளிய மார்க்கம் ..இனிய மார்க்கம் என்பது மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிகிறது. அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இஸ்லாம் ஆழமாக பதிந்து விட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் மக்களை சிந்திக்கக்கூடிய அளவிற்கு மாற்றி விட்டது. இஸ்லாம் அதி வேகமாக மக்களிடம் பரவுவதற்கு காரணமாக அமைந்து விட்டது அமெரிக்கா.\nஒரு மனிதன் இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தம் கூட வெளியரங்கத்தில் செழிப்பும் அமைதியும் அவனை ஆரத்தழுவிக் கொள்கின்றன. ஆனால் உண்மையில் இது அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு அளிக்கப்படும் அவகாசம் ஆகும். அதன் பிறகு இறைத்தண்டனையின் கசையடிகள் விழக்கூடும். இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதில் கிடைக்கும் மகிழ்வும் அமைதியும் தான் உண்மையானவை ஆகும்..\nதகவல் தொகுப்பு : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-29/cartoon/124780-cartoon.html", "date_download": "2019-06-26T14:23:01Z", "digest": "sha1:MKEPHW27T2CFXDKJGMLWG23UY4HSDU2D", "length": 19400, "nlines": 481, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன் - 2 | Cartoon - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஎனக்கு மட்டும் ஏன் இப்பிடி\n“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்\n“சினிமா வாய்ப்பு நிறைய வருது\n“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்\nகால்மேல கால்போடுவேன் ஸ்டைலா... கெத்தா\n”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்\n`காவிரி பிரச்னை' தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதத்தில்...\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2016)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவ\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n'ஜெய் ஶ்ரீராம்' மந்திரமும் மூன்று சம்பவங்களும்... கடவுளின் பெயரால் நிகழும்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.virakesari.lk/article/58066", "date_download": "2019-06-26T14:23:18Z", "digest": "sha1:7JGVRANZSU5BGWROHP2JYMRY5FA3QI2M", "length": 11229, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "நான் ஏன் கண்டிப்பானவனாக நடந்துகொண்டேன்- யுவராஜின் தந்தை கருத்து | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nநான் ஏன் கண்டிப்பானவனாக நடந்துகொண்டேன்- யுவராஜின் தந்தை கருத்து\nநான் ஏன் கண்டிப்பானவனாக நடந்துகொண்டேன்- யுவராஜின் தந்தை கருத்து\nவாழ்க்கையில் எனது மகனிற்கு சில விடயங்களை உணர்த்தவேண்டும் என விரும்பியதால் நான் கண்டிப்பான தந்தையாக விளங்கினேன் என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nஎனினும் எனது மகன் குறித்து நான் பெருமைப்படுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nயுவராஜ் போன்ற ஒரு மகனிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ள யோக்ராஜ் சிங் நான் எனது மகனிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nநான் மிகவும் கடுமையாக நடந்துகொண்டேன் என யுவி நினைத்தால் அதற்கு காரணம் உள்ளது நான் அவர் சில விடயங்களை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நடந்துகொண்டேன் என 61 வயது ஜோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nயோக்ராஜ் சிங் இந்தியாவிற்காக ஒரு டெஸ்ட் ஆறு ஒரு ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓய்வை அறிவித்தவேளை யுவராஜ் சிங் எனது அப்பா ஒரு டிராகன் போன்றவர் டிராகனை சந்திப்பது எனக்கு மிகவும் கடினமான விடயம் என குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் ஓய்விற்கு முன்னர் எனது அப்பாவுடன் சிறந்த உறவை ஏற்படுத்தியுள்ளேன் மனது நிம்மதியாக உள்ளது என யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார்.\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகிரேண்ட்ஹோம் - ஜேம்ஸ் நீஷமின் இணைப்பாட்டம் காரணமாக சரிவிலிருந்து மீண்ட நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 237 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-06-26 19:58:42 நியூஸிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட் icc world cup\nமும்பையில் லாராவுக்கு எஞ்சியோ சிகிச்சை\nமேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜம்பவானும், தற்பேதைய கிரிக்கெட் வருணனையாளருமான பிரையன் லாராவுக்கு மும்பையில் எஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-06-26 16:47:45 பிரையன் லாரா உலகக் கிண்ணம் எஞ்சியோ\nஓய்ந்து விட்டதா இங்கிலாந்தின் வேகம்\nமீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் நிச்சயம் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுத் தகுதி பெறுவோம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவத்துள்ளார்.\n2019-06-26 16:19:04 ஐ.சி.சி. இயன் மோர்கன் இங்கிலாந்து\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து\nஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.\n2019-06-26 15:42:26 நியூஸிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட் icc world cup\nபாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா நியூஸிலாந்து\nஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.\n2019-06-26 11:17:35 நியூஸிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=46&t=13841&start=60", "date_download": "2019-06-26T14:48:42Z", "digest": "sha1:NIDDIUIVWFPWHDBLSZWIHHALZUKU3DDM", "length": 7225, "nlines": 199, "source_domain": "padugai.com", "title": "Forex MerchantShares -150% Profit - Instant Withdraw - Page 7 - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nசரவணா wrote: 50 $ INvestment என்றால் தினமும் ஒரு டாலர் அப்படி என்றால் 75 நாட்கள் ஆகுமா சார் Profit + deposit Return ஆகா\nநான் 5000 இன்வஸ்ட் செய்யட்டுமா சார்\nநான் 5000 இன்வஸ்ட் செய்யட்டுமா சார்\nநான் $50 மூதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன்.\nஎந்த வெப்சைட் ல் மூதலீடு செய்வது சிறந்தது.\nMerchant Share ல் மூதலீடு செய்யலாமா அல்லது Marlive.com மூதலீடு செய்யலாமா \nசரவணா wrote: நான் $50 மூதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன்.\nஎந்த வெப்சைட் ல் மூதலீடு செய்வது சிறந்தது.\nMerchant Share ல் மூதலீடு செய்யலாமா அல்லது Marlive.com மூதலீடு செய்யலாமா \n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
{"url": "http://www.iatrnew.org/publications.html", "date_download": "2019-06-26T14:24:19Z", "digest": "sha1:FIF7ZBBGIIGZMCGL7FQZ6XHDCRS6YKGX", "length": 2812, "nlines": 23, "source_domain": "www.iatrnew.org", "title": "உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்", "raw_content": "\nTamil Culture – காலாண்டு இதழ் ; 1951 – 1966, தனி நாயகம் அடிகளால் நடத்தப்பட்டது.\nJournal of Tamil Studies - அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research) நடத்தி வந்தது. பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளார் இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர்.\nJournal of Tamil Studies - உலகத் தமிழாராய்ச்சி மன்றம்(IATR) இந்த ஆய்விதழை அதே பெயரில் (Journal of Tamil Studies), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதன் அடிப்படையில், 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.\n© 2016 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4619:2008-12-14-16-38-39&catid=68:2008&Itemid=0", "date_download": "2019-06-26T14:14:51Z", "digest": "sha1:3MS3BDA2I2D7TXL6S6HBZGFPKWNPBWX5", "length": 6499, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "வர்க்க உணர்வை வளர்த்தெடுப்போம்! முதலாளிகளின் கருணையைப் புறக்கணிப்போம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\nபுதுச்சேரி மாநிலம் வடமங்கலம் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தமது தொழிலாளர்களின் குடும்பத்தினரை அழைத்து ஒருவேளை உணவும் பரிசுப் பொருளும் வழங்கும் \"குடும்பத் தினவிழா()'வை கடந்த 16.11.08 அன்று நடத்தியது.\nதொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தி வருவது மட்டுமல்ல, தொழிற்சங்கம் அமைத்தக் \"குற்றத்திற்காக'வே தொழிலாளிகள் பலரை பழிவாங்கி வருகிற நிறுவனத்திற்கு \"குடும்ப விழா' நடத்த என்ன அருகதை இருக்கிறது\nஇதே நிறுவனத்தால் பழிவாங்கப்பட்ட பாண்ட்ஸ் ஷூ டிவிசன், எச்.யு.எல். டீ டிவிசன், மற்றும் கோத்ரெஜ் சாரலி தொழிலாளர்களிடம், இச்\"சன்மானத்தை'ப் புறக்கணித்து, தன்மானத்தோடு தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்க அறைகூவி, \"\"ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை'' அறிவித்தது, பு.ஜ.தொ.மு. இணைப்புச் சங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்.\nநிர்வாகத்தின் தடையுத்தரவையும் போலீசின் மிரட்டலையும் முறியடித்து, \"குடும்ப தினவிழா' நடந்த மண்டபத்தின் அருகாமையிலேயே அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தபடியே நடத்தி, நிறுவனத்தின் முகத்தில் கரியைப் பூசியது,< இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்.\nவழக்கத்திற்கு மாறாக, இம்முறை கூடுதல் பரிசுப் பொருள்களை நிர்வாகம் வழங்கியிருப்பதும்; அப்பரிசுப் பொருளை பெற்றுக்கொண்டு திரும்பிய தொழிலாளர்கள் இப்போராட்டப் பந்தலைக் கடந்தபோது குற்றவுணர்வில் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதும் இப்போராட்டத்திற்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி என்றால், அது மிகையல்ல\n— இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்,\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilvaasi.com/2011/08/cnc-programming-operations-part-2.html?showComment=1313129443549", "date_download": "2019-06-26T13:50:43Z", "digest": "sha1:LHK6MYQVVQ2QXREVTPVROCS3BUEHX2VY", "length": 27592, "nlines": 407, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 2 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: CNC, MECHANICAL, அனுபவம், தொடர், தொடர் பதிவு\nடிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி\nஎந்த ஒரு துறையாய் இருந்தாலும் அதன் அடிப்படை விதிகளையும், formet method-களையும் புரிந்து கொண்டோமானால் அந்த துறையில் சும்மா புகுந்து விளையாடலாம். CNC field-ல் அடிப்படை விஷயங்கள் மிக எளிமையானவையே. அந்த அடிப்படையை உங்களுக்கு புரிய வைப்பதே இந்த கட்டுரை தொடரின் நோக்கம் ஆகும். இன்றைய தேதியில் CNC கற்றுத் தருவதற்கான institutes ஒவொரு ஊரிலும் மிகுதியாகி விட்டது. அங்கே பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் அனுபவம் இல்லாதவர்களே. என்னடா, இது அனுபவம் இல்லாதவர்கள் எப்படி CNC பற்றி சொல்லித் தர ஆசிரியராக முடியும் என நினைக்கிறீர்களா\nCNC basic formet களை அவர்கள் புரிந்து கொண்டதாலையே அவர்களால் ஆசிரியராக இருக்க முடிகிறது. அவர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டுப் பாருங்களேன். நாம ப்ளாக்-ல் template கமெண்ட் போடுவோமே, அதே போல அவர்கள் சில template விளக்கங்கள் வைத்திருப்பார்கள். எப்பிடி சந்தேகம் கேட்டாலும் அவர்களிடமிருந்து அந்த template பதிலை தவிர வேற விளக்கங்களை எதிர் பார்க்க முடியாது. Template விளக்கம் வைத்திருப்பதும் நல்ல விஷயம் தான். அந்த விளக்கத்தை பலமுறை சொல்லிக் கொடுத்து நன்கு பழகி இருப்பார்கள் . ஆனால் கற்றலில் ஆர்வம் இருக்கிற மாணவனுக்கு அந்த விளக்கம் போதாது. அனுபவம் சார்ந்த விளக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவன் தேடலுக்கான விளக்கம் அவனுக்கு கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அந்த துறையில் ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nஎனக்கும் சில காலம் ஒரு institute இல் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் எவ்வாறு விளக்கம் சொன்னால் உங்களுக்கு புரியும் என்பதை நன்றாக அறிவேன். இன்னும் CNC-யை பற்றி சொல்லாமல் சும்மா கதை பேசிக்கொண்டு இருக்கிறேன் என நினைகிறீர்களா\nசரி நண்பர்களே, CNC-யை பற்றி ஒரு வீடியோ பகிர்வு மூலம் ஆரம்பிக்கிறேன். CNC Machine மூலம் என்னென்ன செய்யலாம் என பாருங்கள்.\nஇத்தொடர் இன்னும் வாராவாரம் வர இருக்கிறது. CNC BASIC பற்றிய உங்கள் சந்தேகங்களை thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்கவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: CNC, MECHANICAL, அனுபவம், தொடர், தொடர் பதிவு\nஇதுக்கும் நம்மளுக்கும் சம்மந்தம் இல்லயே,,,, சோ மீ எஸ்கேப்\nதிரட்டிகள்ள இணையுங்கப்பா... ஓட்டு போடணுமில்ல\nஉங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்\nவீடியோ நல்லாருக்கு ..நிறைய சந்தேகங்கள் இருக்கு.. நீங்கள் தொடரும் பாகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி\nவழிகாட்டல் பதிவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..\nஇப்ப தாம்பா இதைப் பற்றி கொஞ்சம் கொஞ்சம் விளங்குது...\nஎன்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று\n* வேடந்தாங்கல் - கருன் *\nமச்சி அந்த மேசின்ல வேலை செய்யறது யாரு\nநான் இந்த துறையில் இல்லாத காரணத்தால் படிக்கவில்லை. என் நண்பர்களிடம் இதை பகிர்கிறேன்.\nபலருக்கு பயன்படும் இத்தொடர் ...பண்புடன் தொடருங்கள் ...\nஇதைத் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.\nநல்ல பதிவுகளாக தொடர்ந்து எழுதுங்கள்.\nயோவ், இப்பத் தான்யா பாக்குறேன்..நேத்தே போட்டாச்சா..\nCNC-ன்னா என்ன வாத்யாரே..அதைச் சொல்லும் முதல்ல..\nஆசிரியர்கள் பற்றிய உங்க்ள் கருத்து உண்மை தான்..\nவீடியோ நல்லாப் புரிய வைக்குது..தமிழ்வாசி படங்காட்டுதாரே...\nதமிழ்10 ஒர்க் ஆகலை..மெஷின்ல கோளாறு..\nதங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா\nuseful பயனுள்ள உபயோகமான பதிவு\nபலே பிரபு said... 12\nநான் இந்த துறையில் இல்லாத காரணத்தால் படிக்கவில்லை. என் நண்பர்களிடம் இதை பகிர்கிறேன்./////\nபயனுள்ள பகிர்விற்கு வாழ்த்துக்கள், பிரகாஷ்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடிந்தால் அந்த தம்பதிகளின் 20ஆவது திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nபிக்பாஸ்: காதல் வரும் வேகம் (2)\nதல வரலாறு தெரியாத காளிகேசம், காளிகோவில் - புண்ணியம் தேடி\nகோவா – மிதக்கும் கஸினோ\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/14/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-3170734.html", "date_download": "2019-06-26T14:36:52Z", "digest": "sha1:F4HBCLLMUM6LGT6MGDZNNDDQTHFENKUP", "length": 7084, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தேமுதிக தலையிடாது: பிரேமலதா விஜயகாந்த்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் தேமுதிக தலையிடாது: பிரேமலதா விஜயகாந்த்\nBy DIN | Published on : 14th June 2019 01:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் தேமுதிக தலையிடாது என தேமுதிக பொருளர் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தபின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதற்கு பருவமழை பொய்த்துப் போனதே முக்கிய காரணமாகும்.\nஇனிவரும் காலங்களில் மழைநீரை சேமிப்பது மிக அவசியம். தேமுதிக சார்பில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்.\nஅதிமுகவில் இரட்டைத் தலைமை குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் கருத்து கூறுவது ஏற்புடையதல்ல. தேமுதிகவும் அதில் தலையிடாது. விஜயகாந்தின் உடல் நிலை நலமாக உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்களைச் சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/living/04/187173?ref=rightsidebar-manithan", "date_download": "2019-06-26T15:07:20Z", "digest": "sha1:MWM7FJA7GFLA43KX6OLOTYTZBLGNDRRZ", "length": 11329, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "விவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த அழகான கோரிக்கை...! வீடியோ - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nவிவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த அழகான கோரிக்கை...\nகணவன் மனைவிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதற்கு காரணம் அவர்களுக்குள் புரிதல் என்பது இல்லாமல் இருப்பதால் மட்டுமே.\nஇந்தக் குறும்படத்தில், கணவன் இன்னொரு பெண்ணின் மீது ஆசைப்படுகிறார். அதனால், தனது மனைவியை விவாகரத்து செய்ய நினைத்து அதை மனைவியிடம் கூறுகிறார்.\nஅதற்கு மனைவி கணவனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்.\nஅந்த கோரிக்கையானது, ஒரு மாத காலத்திற்கு தன்னை திருமணம் செய்த தருணத்தில் தன் மீது எப்படி பாசமாக இருந்தீர்களோ அதே போல் இருக்க வேண்டும் என்பதாகும்.\nஅதற்கு கணவனும் சம்மதம் தெரிவித்து ஒரு மாத காலத்திற்கு மிகுந்த அன்புடனும், அக்கறையுடன் மனைவியை கவனித்து வருகிறார்.\nஇதனால், கணவனின் மனம் மாறுகிறது, விவாகரத்து வேண்டாம் என்று நினைத்து மனைவியடம் மகிழ்ச்சியாக பேச வருகிறார்.\nஆனால், அவர் மனைவியோ புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.\nஒருவரை புரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் தான். ஆனால், அதற்கான காலாமும் முக்கியமல்லவா\nஒருவர் பிரிந்து சென்ற பின், அவரை புரிந்து கொண்டு என்ன பயன் உணருங்கள், தேவையற்று எவரையும் வெறுக்க கூடாது என்பதை எடுத்துக் காட்டும் அருமையான குறும்படம்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/06/10163253/1245636/kp-munusamy-says-condemnable-to-comment-on-the-MLAs.vpf", "date_download": "2019-06-26T15:16:46Z", "digest": "sha1:2EGV3VCG43QWQIIKR6BUHGWYMYLADQHO", "length": 9757, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kp munusamy says condemnable to comment on the MLAs", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎம்.எல்.ஏ.க்கள் கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது- கேபி முனுசாமி பேட்டி\nஎம்.எல்.ஏ.க் களின் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.\nஅ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம் பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமுன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு கூறுகளாக இருந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்து பொதுக்குழுவை கூட்டி இரட்டை தலைமை என்று முடிவு செய்யப்பட்டு இன்று ஆட்சியும், கட்சியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஅ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரது கருத்தை வரவேற்று குன்னம் ராமசந்திரன் எம்.எல்.ஏ. ஊடகங்களிடம் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். எம்.எல்.ஏ.க் களின் கருத்துக்களால் அ.தி.மு.க. தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் இருவரும் வெளியில் கருத்துக்களை கூறியது கண்டிக்கத் தக்கது.\nபாராளு மன்ற தேர்தலில் தோற்று, அ.தி.மு.க. வுக்கு தற்போது பல்வேறு சோதனைகள் வந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.\nசட்டமன்ற உறுப்பினர்களின் இதுபோன்ற கருத்துக்களால் எதிரிகளுக்கு, துரோகிகளுக்கு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமைந்துவிடும்.\nஇவர்களுடைய கருத்துக்களால் துரோகிகள் இன்று சசிகலா தான் அ.தி.மு.க.வுக்கு தலைவராக வரவேண்டும் என்று பேசி வருகிறார்கள். எனவே இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.\nபா.ஜனதா கூட்டணி மந்திரி சபையில் அ.தி.மு.க. சேருவது குறித்து அ.தி.மு.க. தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.\nராஜன் செல்லப்பா | கேபி முனுசாமி | இரட்டை தலைவர் பதவி | எடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர் செல்வம்\nஎந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி\nதி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்\nஅதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு\nதேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை\nதி.மு.க. நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரசின் முடிவு இருக்கும்- கே.எஸ். அழகிரி பேட்டி\nஅதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்- ராஜன்செல்லப்பா மீண்டும் பேச்சு\nஇ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தலைமையில் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம்- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி\nஅதிமுகவில் இரட்டை தலைவர் பதவி- மேலும் ஒரு எம்எல்ஏ எதிர்ப்பு\nஜெயலலிதா இல்லாததால் இப்படி பேசுகிறார்- ராஜன் செல்லப்பாவுக்கு கோகுல இந்திரா கடும் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_31.html", "date_download": "2019-06-26T13:52:55Z", "digest": "sha1:FNMCFEB6HGPSSBUNGN3MTIPPXA5VD5S5", "length": 19379, "nlines": 101, "source_domain": "www.onlinejaffna.com", "title": "லண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார் மயக்கம் ! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled லண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார் மயக்கம் \nலண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார் மயக்கம் \nலண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது. இன் நிலையில் அவர்கள் ஒரு வீட்டை குறி வைத்து அதனை நோட்டமிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nபொலிசார் வீட்டினுள் சென்று தேடிய வேளை அங்கே கஞ்சா இருக்கவில்லை. அதிர்சியடைந்த பொலிசார் வீட்டின் மேல் மாடியில் உள்ள லொஃப்ட்(பரன்) உள்ள இடத்தை பார்வையிட முற்பட்டுள்ளார்கள். சிறிய கதவை மேலே தள்ளி உள்ளே சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அழகாக லைட் எல்லாம் பூட்டி, மிக நேர்த்தியாக மின்சார விளக்குகள், வெப்பத்தை தரும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா செடிகள் கொழு கொழுவென்று வளர்ந்து காட்சி தந்துள்ளது.\nஎதேட்சையாக இவர்கள் எதன் மேலோ காலை வைத்து, வயர் நசுங்கியதால் என்னமோ, சிறியதாக நெருப்பு பிடித்த காரணத்தால். ஏற்கனவே காய வைக்கப்பட்டிருந்த சில கஞ்சா தீ யில் கருகி புகை கிளம்பியுள்ளதாகவும். இதனை தற்செயலாக சுவாசித்த 2 பொலிசார்(ஒரு பெண் மணி உட்பட) சற்று தள்ளாடியவாறு வெளியேறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது போக அங்கே சித்தப்பா மற்றும் சித்திக்கு தெரியாமல் தமிழ் இளைஞர் ஒருவர் கஞ்சா வளர்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவே சில மணி நேரம் ஆகியுள்ளதாம். மருமகனா இப்படிச் செய்துள்ளான் என அறிந்து அவர்கள் திகைத்துப் போனார்கள் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். உரும்பிராயில் இருந்து வந்து இப்படி செய்வான் என நான் நினைக்கவில்லை என்று அவர்கள் கடிந்துள்ளார்கள்.\nஇன்றைய கால கட்டத்தில், குறுக்கு வழியில் இலகுவாக பணம் சம்பாதிக்கவே சில தமிழ் இளைஞர்கள் முயற்ச்சி செய்து வருகிறார்கள். லண்டன் வந்து 20 ஆண்டுகள் ஆகியும் நேர்மையாக உழைத்து வாழ்க்கை நடத்தும் பல தமிழர்கள் உள்ளார்கள். ஆனால் நேற்று வந்த இளைஞர்கள் எல்லாம் அவுடி காரில் செல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் காசை சம்பாதிக்க தேர்வு செய்யும் வழி தான் பிழையாக உள்ளது என்று தமிழ் ஆர்வலர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/topics/-Eelam", "date_download": "2019-06-26T13:54:00Z", "digest": "sha1:V74VSR5HUR6WNXBRXKDTT2XSNINI6CVJ", "length": 15402, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\n' - திருமுருகன் காந்தி மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு\n``விடுதலைப் புலிகளுக்கு தோள்கொடுத்தது திராவிட இயக்கமும் பெரியாரிஸ்ட்களும்தான் \" - திருமுருகன் காந்தி\n\"முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பிரபாகரன் படம் இல்லை... ஏன் தெரியுமா\n``பாரதிராஜா, சீமானால் எங்கள் சினிமாவை உருவாக்க முடியாது'' - ஈழ இயக்குநர் ரஞ்சித்\nஈழப்பெண்களின் குறியீடுதான் ஊடகப்போராளி இசைப்பிரியா - கவிஞர் தீபச்செல்வன் #IsaipriyaMemories\n``முன்னெச்சரிக்கை அளித்தும் இலங்கை அரசு தடுக்காதது ஏன்'' - இலங்கையிலிருந்து கவிஞர் தீபச்செல்வன்\n’’ இலங்கையை பரபரப்பாக்கும் தமிழ் மன்னன்\n``ஆவணங்கள் என்கிட்ட இல்லாமப் போனாலும், உங்ககிட்ட இருக்கும்\" - `கீழடி' அமர்நாத்\n\"போரை வழிநடத்தி கொலை செய்தவரே ராஜபக்ஷேதான்\" - இலங்கை முன்னாள் எம்.பி.\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://chennaipatrika.com/post/News7tamil-program-Cinemax", "date_download": "2019-06-26T14:39:20Z", "digest": "sha1:44ZEAHYUWLMY4A2RZV5LOJNRQ7UMVEAW", "length": 7043, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "“சினிமேக்ஸ்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில், சினிமா உலகைப் பற்றின பல விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லும் சினிமேக்ஸ் நிகழ்ச்சி ஓளிபரப்பு ஆகி வருகின்றது.\nதமிழ் சினிமாவுலக செய்திகளை சுவாரஸ்யம் கலந்து சொல்லும் “பாப்கார்ன்”, பிறமொழி சினிமா உலக செய்திகளை எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொல்லும் “BTM\", ஒரு ஸ்டாருக்கும் காருக்கும் இடையே இருக்கும் உறவை பேசும் “ஸ்டாரும் காரும்”, தன் சினிமா பயணத்தின் அழகான நிகழ்வுகளை சினிமா பிரபலங்கள் பகிரும் “கிளாசிக் தருணங்கள்”, கோலிவுட் வட்டார விழாக்களுக்கு கூட்டி செல்லும் “போஸ்டர் ”, படமோ பாடலோ கருவாகி உருவானதைப் பற்றி உருவாக்கினவர்களே விளக்கும் “கருவும் உருவும்”, வெளியாகும் புதிய படங்களை நேர்மையோடும் நடுநிலையோடும் விமர்சனம் செய்யும் “சினிமா ஃபோகஸ்” என ஓவ்வொரு நாளும் வித்தியாச வித்தியாசமான பகுதிகளோடு சினிமாவை பற்றிய மேக்ஸிமம் விஷயங்களைச் சொல்லும் சினிமேக்ஸ் நிகழ்ச்சியை நிவேதிதா மற்றும் சுதர்சனா தொகுத்து வழங்குகின்றனர்.\nஇந்நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 11:00 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கண்டு களிக்களாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
{"url": "http://srilanka24x7.com/2019/04/14/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:56:09Z", "digest": "sha1:2CMIQJPXCSRBJJWZQSQJAIWJRN5SHA6B", "length": 8092, "nlines": 28, "source_domain": "srilanka24x7.com", "title": "டிசிஎஸ் – டெக்கான் ஹெரால்ட்: கையகப்படுத்துவதற்கு 'பசி' – Srilanka 24×7", "raw_content": "\nடிசிஎஸ் – டெக்கான் ஹெரால்ட்: கையகப்படுத்துவதற்கு 'பசி'\nஇந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) கையகப்படுத்துவதற்கு “பசி” மற்றும் அறிவுசார் சொத்துக்களில் கொண்டு வரக்கூடிய சொத்துக்கள் மற்றும் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்துவதற்கு சந்தையை விரிவுபடுத்துவதற்கான சொத்துக்களைப் பெறுதல் ஆகியவை ஆகும்.\nகடந்த 12 ஆண்டுகளில், டி.வி.எஸ் நிறுவனம், இரு நிறுவனங்களுக்கிடையிலான பங்குகளை வாங்கியதாக தலைமை செயல் அதிகாரி என் கணபதி சுப்பிரமணியம் தெரிவித்தார்.\n“நாங்கள் தொடர்ந்து கையகப்படுத்துவதற்குத் திறந்த மற்றும் பசியுடன் இருக்கிறோம்.இலங்கைகளை வாங்குவதற்கும் அவற்றை ஒருங்கிணைப்பதற்கும் சிறந்த பாதையில் பதிவுகளை நாங்கள் கொண்டுள்ளோம் … அணுகுமுறை என்பது தெளிவாக உள்ளது, சரியான சந்தையைத் தேடிக்கொண்டிருக்கும் சந்தையில் நாம் சிலவற்றை சேர்க்கும் ஐபி (அறிவார்ந்த சொத்து), சந்தை அடைய அல்லது வாடிக்கையாளர் கூடுதலாக, “என்று அவர் கூறினார்.\nபிரான்சின் SAP சேவை வழங்குனரான அல்டி எஸ்ஏவை 2013 இல் 75 மில்லியன் யூரோக்கள் (சுமார் 533 கோடி ரூபா) பெற்றுக்கொண்ட டிசிஎஸ், அதன் உலகளாவிய மற்றும் உள்நாட்டு போட்டியாளர்களால் கையகப்படுத்தப்பட்டது போலவே கரிம வளர்ச்சியை மையமாகக் கொண்டது.\nஇன்போசிஸ் நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனமான WongDoody கடந்த ஆண்டு 75 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியது. விப்ரோவின் டிஜிட்டல் ஸ்பேஸ் முதலீடு டிசைட் மற்றும் கூப்பர் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கியது.\nகடந்த ஆண்டு நவம்பரில் TCS, W12 ஸ்டுடியோஸ் கையகப்படுத்தப்பட்டது (அறிவிக்கப்படாத தொகைக்கு). லண்டனில் உள்ள ஒரு டிஜிட்டல் டிசைன் ஸ்டூடியோ, W12 இன் கையகப்படுத்தல் டி.சி.எஸ்ஸின் டிஜிட்டல் மற்றும் கிரியேட்டிவ் டிசைன் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.\nஅதே மாதத்தில், டி.சி.எஸ்., பிரிட்ஃபீய்ட் க்ரூம், எல்.எல்.சி., ஒரு அமெரிக்க நிர்வாக ஆலோசனை நிறுவனம் (ஒரு தொகைக்கு மீறிய தொகையை) எடுத்தது.\nசந்தையில் வாய்ப்புகள் பற்றி கேட்டபோது, சுப்பிரமணியம் விருப்பங்களைத் தெரிவித்தார், குறிப்பாக தொடக்கங்களில்.\n“சில துவக்கங்கள் மிக நன்றாக செய்கின்றன, தொகுதிகளில் நிறைய நிறுவனங்கள் வந்துள்ள இடமாக உள்ளது. நிதி சேவைகள், எதிர்கால பணிகள், வருங்கால எதிர்காலம் ஆகியவற்றில் பணியாற்றும் பலர் இருக்கிறார்கள் … எனவே நாம் நெருக்கமாக அந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் சில, எப்படி தங்கள் வணிக மாதிரிகள் வெளிப்படும், “என்று அவர் கூறினார்.\nடிசிஎஸ் சரியான கட்டமைப்பைக் கண்டால், அது ஒரு வாய்ப்பை உருவாக்க “தயங்காது” என்று சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.\n“இரண்டு மதிப்பு மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் கூட்டு மதிப்பு மற்றும் நாம் பெறும் சொத்துகள் ஆகியவை உண்மையிலேயே பெரியதாக இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.\nமும்பை நிறுவனம், கடந்த நிதியாண்டில், லாபம் ரூ. 8,162 கோடியாக உயர்ந்து, லாபம் ரூ. 8,162 கோடியாக உயர்ந்துள்ளது. இது, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 18.5 சதவீதம் அதிகரித்து, 38,010 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nடிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் வெள்ளியன்று “படம் முழுமையான ஆண்டு” என்று விவரிக்கப்பட்டு, மேக்ரோ நிச்சயமற்ற நிலைக்கு முன்னதாக, வலுவான வெளியேறினால் (FY19 நிறுவனம் புதிய நிதியாண்டுக்கு மிகவும் நல்ல நிலையில் உள்ளது என்று கூறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-06-26T14:29:35Z", "digest": "sha1:IWAXA7G4NKARRCNWAHU5L72E36X5OU7N", "length": 4861, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "வாய் வாடை |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . இருப்பினும் நமது வாய் நாறுகிறதா என நம்மால் அறிந்து கொள்ள முடியாது. வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளா விட்டால் வாய் துர்நாற்றம் ......[Read More…]\nJanuary,6,12, —\t—\tவாய் துர்நாற்றம், வாய் துர்நாற்றம் நீங்க, வாய் நாற்றம், வாய் வாடை\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1284121.html", "date_download": "2019-06-26T13:52:46Z", "digest": "sha1:RYAONIP6TXEOZRR3FOJXWJI5CGJZDP4F", "length": 13249, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பொசொன் வைபவத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்!! – Athirady News ;", "raw_content": "\nபொசொன் வைபவத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்\nபொசொன் வைபவத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்\nஎதிர்வரும் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கண்காணிப்பின் கீழ் இலங்கை போக்குவரத்து சபை ரயில்வே திணைக்களம் பொது மக்கள் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் பங்களிப்புடன் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஎதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி அதிகாலை வரையில் ஒன்றிணைந்த சேவையாக இது நடைமுறைப்படுத்தவுள்ளது.இதற்கமைவாக இலங்கை போக்குவரத்து சபை அன்றைய தினத்தில் ரஜரட்ட, கொழும்பு, கண்டி, கம்பஹா, வடமேல் மாகாணம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 600 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.\nஇந்த பஸ்களுக்கு மேலதிகமாக எந்த சந்தர்ப்பத்திலும் சேவையில் ஈடுபடுத்தக் கூடிய வகையில் மேலதிக பஸ்களையும் இலங்கை போக்குவரத்து சபை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nகந்தளை டிப்போ கந்தளையில் இருந்து சேருவாவில வரையிலும், தம்புள்ளை டிப்போ எல்ல ஊடாக மையங்கணை தொடக்கம் அநுராதபுரம் வரையிலும், அநுராதபுரம் டிப்போவின் மூலம் அநுராதபுரம் மிஹிந்தலை வரையிலும், அநுராதபுரத்தில் இருந்து தந்திரிமலை வரையிலும் புதிய போக்குவரத்து சேவைகள் இதன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஅநுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மிஹிந்தலை பியகெட்டபொல வரையிலும் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பான முழுமையான விபரத்தை போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.\nஇதே வேளை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 14,15, 16,17,18 ஆம் திகதி வரையிலும் விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. இதே போன்று எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் அநுராதபுரத்தில் இருந்து 18 ஆம் திகதி வரையில் விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.\nபயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு \nஜூலியன் அசாஞ்சேவை ஒப்படைக்க பிரிட்டனுக்கு அமெரிக்கா வேண்டுகொள்..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய…\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..\nபயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை\nபிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்..\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அவசரகால சட்டம்…\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/india/tag/Bihar.html?start=0", "date_download": "2019-06-26T13:49:09Z", "digest": "sha1:IYA7UBF2OKQ2BZKJKEDSHEUJWFBTM3P5", "length": 8699, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Bihar", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவிப்பு\nபாட்னா (23 ஜூன் 2019): பாஜக எம்.எல்.ஏ மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 15,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என பீகார் மக்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nகோவை (20 ஜூன் 2019): கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு\nபாட்னா (15 ஜூன் 2019): பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.\nநான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு\nபாட்னா (13 ஜூன் 2019): பீகாரில் சர்க்கரை அளவு குறைந்ததால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.\nபாஜக மீது அதிருப்தியில் நிதிஷ் குமார்\nபாட்னா (02 ஜூன் 2019): பாஜக மீது அதிருப்தியில் உள்ளா பிகார் முதல்வர் நிதிஷ்குமார்.\nபக்கம் 1 / 6\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=33428", "date_download": "2019-06-26T14:18:10Z", "digest": "sha1:PFQYKP6KHNTVD6KUPRSL4YDRBWOHS5NC", "length": 3804, "nlines": 74, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_61.html", "date_download": "2019-06-26T14:06:44Z", "digest": "sha1:MK2S37ZGTO55NWKNIPNY5LVDQR5KYSWM", "length": 20065, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "முள்ளிவாய்க்கால் கடலில் மோதல்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » முள்ளிவாய்க்கால் கடலில் மோதல்\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமுள்ளிவாயக்கால் கிழக்கு கடலில் சிறு தொழிலில் ஈடுபட்ட மீனவர் படகு ஒன்று யோர்தான் நாட்டு கப்பலில் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.ஆழ்கடலில் நேற்று இரவு வீசப்பட்ட பெறுமதியான மீன்பிடி வலை ஒன்று கடலில் ஏற்பட்ட நீரோட்ட மாற்றத்தின் காரணத்தினால் கரை ஒதுங்கியுள்ளது.\nஇதன்போது முள்ளிவாய்க்கால் கடலில் உள்ள யோர்தான் நாட்டு கப்பலின் அடித்தளத்தில் குறித்த வலை சிக்கியுள்ளது.இந்த நிலையில் வலையை மீட்பதற்காக தெப்பப் படகில் சென்ற மீனவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.எனினும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீனவர்கள் கரை ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி யோர்தான் நாட்டுக்கு சொந்தமான பரா3 கப்பல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.குறித்த கப்பலின் மேற்பாகங்களை இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அதன் அடித்தளம் தற்பொழுது வரை அந்த இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://educationtn.com/2018/12/09/rti%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:45:15Z", "digest": "sha1:HD4A6GDDGBIVSGYYJVSY6WM2I4QFXAWE", "length": 11098, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "Rti:மருத்துவ கல்லூரி சேர்க்கை விபரம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome RTI Rti:மருத்துவ கல்லூரி சேர்க்கை விபரம்\nRti:மருத்துவ கல்லூரி சேர்க்கை விபரம்\nPrevious articleமாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோர்க்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்திய சமூக ஆர்வலர் திருமலைக்குமரன்.\nRTI news-தற்செயல் விடுப்பானது எந்தெந்த சூழ்நிலையில் எடுக்க வேண்டும் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்.\nRTI- ஒரு அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டில் உள்ள அந்தரங்க விவரங்கள் தவிர்த்து பதவி உயர்வு, பணியிட மாறுதல், ஊதியம் முதலிய விவரங்களை மனுதாரருக்கு எழுத்து பூர்வமாக பதிலாக அளிக்கலாம் – தமிழ்நாடு தகவல்...\nRTI – 2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: தொடக்கக் கல்வி துணை...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஅறிவோம் பழமொழி:நடப்பது எல்லாம் நன்மைக்கே\nநடப்பது எல்லாம் நன்மைக்கே நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கேட்டது. ‘பழமொழிக்கான விளக்கம் ஏதேனும் கிடைக்கிறதா’ என்று ஆர்வ மிகுதியால் பெரியவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கூர்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kushboos-opinion-about-katpadi-raid-345579.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T14:19:40Z", "digest": "sha1:OJ6N6ELUFSXORCKO2VXBV5LPUUBMYNGR", "length": 16562, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்குன்னா தக்காளி சட்னியா.. குஷ்பு கோபக் கேள்வி | Kushboos opinion about Katpadi raid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n15 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n28 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n55 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்குன்னா தக்காளி சட்னியா.. குஷ்பு கோபக் கேள்வி\nசென்னை: \"2 வருஷத்துக்கு முன்னாடி லாரியில் 560 கோடி பிடிச்சாங்களே.. அது என்னாச்சுன்னு, யார் பணம்னு சொன்னாங்களா உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\" என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.\nகாட்பாடியில் நடந்த சோதனையில் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது என்றும், அந்த பணம் எல்லாம் திமுக பிரமுகர் சீனிவாசன் வீடு, குடோன்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி காலையில் இருந்து பரபரப்பை கிளப்பி வருகிறது.\nஇன்னும் சோதனையும் தீவிரமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இது சம்பந்தமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தன் கருத்தை சொல்லி உள்ளார்.\nஅப்போது அவர் சொன்னதாவது: அதிகாரிகள் நடத்தட்டும்.. வேணாம்னு சொல்லலை. கைப்பற்றின பணம் கண்டுபிடிச்சு சொல்லட்டும்.. தப்பில்லை\nஆனா 2 வருஷத்துக்கு முன்பு லாரியில் 560 கோடி ரூபாய் பிடிச்சாங்களே அது என்ன ஆச்சு இது எதுவுமே இதுவரைக்கும் சொல்லவே இல்லையே.\nவீட்டில் சிபிஐ சோதனை நடத்தியபோது ஒரு அமைச்சர் எல்லா டாக்குமென்டையும் தூக்கிக்கொண்டு எல்லார் கண் முன்னாடியும் ஓடினாரே.. அந்த ஆவணம் என்ன ஆவணம் அது யாராவது இதுவரைக்கும் கண்டுபிடிச்சாங்களா\nகட்டுக்கட்டாக பணம் சிக்கிய வேலூர் சிமென்ட் ஆலை யாருடையது\nஏன் அதை மட்டும் மறைக்கணும் உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா இந்த விஷயத்தில் எல்லாம் தேர்தல் கமிஷன் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:51:35Z", "digest": "sha1:VEIFELH67ESG7FRXAXKYNHXG35HJE7ZG", "length": 13899, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிப்காட் News in Tamil - சிப்காட் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரியும் தீயால் புகைமண்டலம்\nசென்னை: சென்னை அருகே சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக...\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட்டுக்கு நோட்டீஸ்\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற விளக்கம் அளிக்குமாறு...\nபெருந்துறை சிப்காட்டில் இனிமேல் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கருப்பணன்\nஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கி வரும் சிப்காட் வளாகத்தில் இனிமேல் புதிய நிறுவன...\nபெருந்துறை சிப்காட்: பூமியில் புதைக்கப்பட்ட திடக்கழிவுகள்.. 10 கிமீ சுற்றளவு நிலத்தடி நீர் பாதிப்பு\nஈரோடு: பெருந்துறையில் இயங்கி வரும் சிப்காட் ஆலையினால், பல ஆயிரம் டன் ரசாயன கழிவுகள் மண்ணில் ...\nபெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு எதிராக தொடர் போராட்டம்.. கிராம மக்கள் அதிரடி\nஈரோடு: வரும் 26-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக ஆர்...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம்\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும...\nஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. சாய கழிவுநீர் பாட்டிலுடன் நுழைந்த பொதுமக்கள்\nஈரோடு: சாய கழிவு நீர் கலந்த தண்ணீர் பாட்டிலுடன் புகாரளிக்க பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல...\nஈரோடு மக்களின் உயிரை காவு வாங்கும் சிப்காட் தொழிற்சாலைகள்.. பீதியில் உறையும் மக்கள்\nஈரோடு: சிப்காட் தொழிற்சாலையின் புகை மற்றும் கழிவுகளால் பொதுமக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வ...\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு... சிப்காட்டுக்கு நோட்டீஸ்\nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்...\nஷிப்ட் முடிஞ்சா போற கூட்டம்ன்னு நினைச்சியா.. நின்ன இடத்தை விட்டு நகராமல் போராடும் ஐடி ஊழியர்கள்\nசென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் வ...\nஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலி\nபெருந்துறை: ஈரோடு அருகே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய ...\nஉமா மகேஸ்வரிக்கு டிசிஎஸ் நிறுவனம் வாகனம் தராதது ஏன்\nசென்னை: வழக்கமாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பாதைதான்... அந்த தைரியத்தில்தான் நள்ளிரவு நேர...\nடிசிஎஸ் பெண் ஊழியர் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஐடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை: சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்குள் டிசிஎஸ் ஊழியர் உமா மகேஸ்வரி படுகொலை ...\nசிப்காட் அமைக்க 1,700 ஏக்கர் விளை நிலத்தை தரிசாக காட்ட முயற்சி\nசென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 1,700 ஏக்கர் விளை நிலத்...\nவிவசாயிகளை விடாத கருப்பு-இல.கணேசன் பாய்ச்சல்\nசென்னை: சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்துகிறேன் என்ற பெயரில் தமிழக அரசு பெருந...\nசேலம் சிப்காட்டில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி\nசேலம்: பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சாய தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 வாலிபர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T13:47:21Z", "digest": "sha1:SZITKXM2KQ76WACDGTRLTF2ITFLKKTPN", "length": 5722, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்கள் |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை பயிற்சி செய்யலாம். ...[Read More…]\nFebruary,12,15, —\t—\tஓசோன் படல அதிர்வுகள், காலம், தியானம் கற்பவர்கள், நாட்கள், நேரம், பயிற்சி, பிரம்ம முகூர்த்தம்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ� ...\nகுடும்பத்தில் ஒருவரது இறப்பிற்கு பின� ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nகனி காணும் நேரம் (Malayalam )\nபாகிஸ்தான் ராணுவ பயிற்சி மையத்தில் கு� ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/06/blog-post_19.html", "date_download": "2019-06-26T14:54:07Z", "digest": "sha1:2XH3OVIMJFHLOCXRKHEXVPN3YD4Y4W7E", "length": 37360, "nlines": 467, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: டிப்ஸ் வாங்கலையா......டிப்ஸு", "raw_content": "\nசமையல் மட்டும் செஞ்சுகாமிச்சாப் போதாதாமே. இப்படிச் சமையல் வகுப்பு நடத்தறவங்க அப்பப்ப நேரம்/பணம் சேமிக்கும் டிப்ஸ்களையும் கொடுக்கணுமாம். இந்தக் கணக்கில் ஃப்ரீஸர் டிப்ஸ் இன்னிக்குப் பார்க்கலாம்:-)\nரங்கி பி ரங்கியா ( கலர்க்கலரான்னு தமிழில்() அர்த்தம்) கிடைக்கும் (சீஸனில் மலிவாக் கிடைக்குமே அப்ப) குடமிளகாய்களைக் கொஞ்சம் வாங்கிக்குங்க. தண்ணீரில் கழுவிட்டு அதைச் சின்னத்துண்டுகளா வெட்டுங்க.\nரொம்பச் சின்னதா வேணாம். ஒரு ரெண்டு ச.செ.மீ அளவுக்கு இருக்கட்டும்.\nஇப்ப எல்லா நிறத்துலேயும் இருப்பதை வகைக்குக் கொஞ்சம்,உங்க குடும்பத்துக்கு ஒரு வேளைக்கு எவ்வளவு வேணுமோ அந்த அளவு எடுத்து ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு வச்சுக்குங்க. அதை அப்படியே நேரடியா ஃப்ரீஸர்லே வச்சுக்கலாம். இந்த ziplock பைகள் இப்பெல்லாம் நிறையக் கிடைக்குது.\nஉருளைக்கிழங்கு கறி, குருமா, வேற காரம்போட்டப் பொரியல், உப்புமா, கிச்சடி வகைகளுக்கு இந்த உறைஞ்ச குடமிளகாய் பொதியில் ஒன்னு வெளியே எடுத்து சமைக்கும்போது கூடவே சேர்த்துருங்க. இதை டீ ஃப்ராஸ்ட் எல்லாம் பண்ண வேணாம். சட்னு வெந்துரும்.இப்பப் பார்க்கறதுக்கு அழகா இருக்கும். குழந்தைகளும் (ஒருவேளை)விரும்பிச் சாப்பிடலாம். முக்கியமா ரங்கூஸ்களுக்கு 'கலர்' பார்த்தமாதிரியும் இருக்கும்:-)\nஇது ஃப்ரீஸர்லே இருந்து எடுத்து வெளியே வச்சது:-)\nகிச்சன் காட்ஜெட்ஸ் பைத்தியம் நான். புதுசா எதையாவது பார்த்தால்போதும். 'இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'ன்னு முழுசா நம்பிருவேன். வாங்கி ஒரு நாள் மட்டுமேப் பயன் படுத்திட்டு இது வேலைக்காகாதுன்னு எடுத்துவச்சதும் நிறைய இருக்கு.\nஆனா ...... வாங்குனதுலே உண்மையாவே நல்லவிதமா இருக்கும் ஒன்னு இந்த ஹாட் ஏர் அவன்.\nஎண்ணெய் இல்லாம இதுலே குழந்தைகளுக்கு ஆஃப்டர் ஸ்கூல் ஸ்நாக்ஸ் செஞ்சுகொடுக்கலாம். உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், சிக்கன் நக்கெட்ஸ், இப்படி பலதுக்கும் தோதா இருக்கு. அதுதான் அடுப்புலே இருக்கற அவன் போதாதான்னா....... இது சின்னதா இருக்கறதாலே அவனுக்கு ப்ரீ ஹீட் செய்யறதுபோல ஒண்ணும் முன்னேற்பாடு செஞ்சுக்க வேண்டாம். சமோசா, பீட்ஸா இப்படியானதுகளையும் மறுபடி சூடாக்க இது உத்தமம்.\nமைக்ரோவேவில் வச்சா அந்த க்றிஸ்ப்னெஸ் வர்றதில்லை. ரெண்டு சமோசாவுக்கும், ரெண்டு ஸ்லைஸ் பீட்ஸாவுக்கும் மெனெக்கெட்டு அவனை எவன் ஆன் பண்ணுவான்\nஉ. சிப்ஸ் சூப்பர்மார்கெட்டில் ஃப்ரீஸர் செக்ஷனில் கிடைக்கும். வாங்கும்போது விலையை மட்டும் பார்க்காம, ஹார்ட் ஃபவுண்டேஷனின் 'டிக்' இருக்கான்னு கவனிங்க. மலிவு வகை சிப்ஸ்களில் beef fat கலந்துருக்கும். பேக்கெட்டின் பின்னால் இருக்கும் விவரப்பட்டியலில் கெனோலா, சூரியகாந்தி எண்ணெய் இருக்கறதாப் பார்த்து வாங்குனா உடம்புக்கு நல்லது. நம்மூட்டுக்குன்னா ஜாக்கெட்டோடத்தான் வாங்குவேன்:-) கோபால், ஷ்ரேயா ரசிகர் இல்லையாம். சொன்னார். நானும் நம்பிட்டேன்:-)\nநம்ம வீட்டில் தயிர் தோய்க்க, இட்லி தோசை மாவு புளிக்க வைக்க, நமுத்துப்போன பொரியை முறுமுறுன்னு ஆக்க, பூண்டு உரிக்க, மஃஃபின் கேக் போன்ற அயிட்டங்கள் செய்யன்னு இதைப் பயன்படுத்தறேன்.\nவந்த புதுசுலே நிறைய விலையா இருந்தது. இப்பவும் 'ஈஸிகுக் ப்ராண்ட்' விலை கூடுதல்தான். நமக்காகன்னேச் சீனர்கள் செஞ்சு அனுப்புனது 99 டாலர் விலையில் வந்தப்ப ஒன்னு வாங்குனேன். அஞ்சு வருசம் கழிச்சு அது மண்டையைப் போட்டுருச்சு. (அந்தக் கண்ணாடிப் பாத்திரம் இப்ப வாட்டர் ஃபவுண்டென் வைக்கும் கண்டெயினரா இருக்கு) இப்ப வீட்டில் இருப்பது சூப்பர் மார்கெட்டில் 60க்கு கிடைச்சது. போனவாரம் பார்த்தால் இது சேலில் வந்து 40க்குச் சீப்படுது..\nஇப்ப இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவுதான்னு பார்த்துட்டுச் சொன்னீங்கன்னா.... அடுத்த பகுதி வந்தாலும் வரும்:-))))\nடிப்ஸெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு:))\nbellpepper colourful ஆ பார்க்க சூப்பரா இருக்க்கு, freezer ல போட்டா....சுருங்கி போய்டாதா\nஹாட் ஏர் அவன்...பார்க்க fancy ஆவும் இருக்கு,ரொம்ப useful ஆவும் இருக்கும் போலிருக்குதே நீங்க சொல்றத பார்த்தா:)))\nஇந்தக் கண்ணாடிப் பாத்திரம் கார்னிங் க்ளாஸ்தான். பல விஷயங்களுக்கு இதைப் பயன்படுத்திக்கலாம். இட்லி மாவுகூடக் கரைச்சு வச்சுக்கலாம்:-)\nஇது உங்க பதிவு பற்றி:\nகுமுதத்தில் அப்ப நானும் படிச்சேன். நீங்க எழுதுனதுன்னு தெரியாமப்போச்சே(-:\nதுளசி மேடம் வண்ண மயமா ரொம்ப அழகாக இருக்கு. பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு ..இத்தனை நாள் பார்த்த பதிவிலேயே இது தான் என்னை ரொம்ப கவர்ந்தது. சுவை எப்படி இருக்கும் என்று தெரியலை.\nஇது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'\nகலர்ஃபுலா இருக்கு துளசி மேடம். எனக்கு வெஜிஸ்(அதுவும் பெல்பெப்பர்ஸ்) சாப்பிட பிடிக்காது என்றாலும் இதை பார்த்தால் சாப்பிட ஆவல் வருகிறது.\n//ரங்கி பி ரங்கியா ( கலர்க்கலரான்னு தமிழில்(\nவண்ண வண்ண பூக்கள் கேள்விப்பட்டதில்லையா \n ஒன்லி சூடு படுத்துறதுக்கு தான இந்த ஓவன்..மைக்ரோ வேவ் வே செய்யுமே இந்த வேலைய \nபாக்க ஆர்வமா இருக்கு..வாங்கணும்னு பாக்கறேன்..இது பத்தி கொஞ்சம் விளக்கமா இந்த விளக்கெண்ணைக்கு சொன்னீங்கன்ன நல்லா இருக்கும்..\n//இந்தக் கண்ணாடிப் பாத்திரம் கார்னிங் க்ளாஸ்தான். //\nஇந்த கார்னிங் க்ளாஸ் என்பது நியூயார்க் மாநிலத்தில் கார்னிங் என்ற இடத்தில் செய்யப்படும் கண்ணாடி. நயாகரா நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்திற்கு அருகேதான் கார்னிங் இருக்கிறது. அங்குள்ள கண்ணாடி கண்காட்சி சாலை நன்றாக இருக்கும்.\nஅங்கு கண்ணாடிப் பாத்திரங்கள் செய்வது எப்படி என்று செய்தும் காண்பிப்பார்கள். கார்னிங்கில் இருக்கும் பல்கலைக்கழகமும் பெயர் பெற்றது. (அப்பாடா வீட்டுப் பாடம் ஓவர்)\nரீச்சர் கிச்சனை விட்டு வெளிய வர ஐடியாவே இல்லையா\nஅந்த ஹாட் ஏர் அவன் ஒண்ணு பார்சேல்ல்ல்ல்ல்\n//எனக்கு வெஜிஸ்(அதுவும் பெல்பெப்பர்ஸ்) சாப்பிட பிடிக்காது //\n//இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'\nகுமார், நல்லா நுண்ணரசியல் பண்ணக் கத்துக்கிட்டீங்க\nசமையல் எப்பவுமே ஆம்புளைங்க விஷயம்தான். (எ.கா: நளன்)அதான் உங்களுக்கு இதெல்லாம் இல்லாமலேயே நல்லா வருது:-)\nகண்ணு நிறைஞ்சா வயிறு நிறையாதா என்ற நப்பாசைதான்:-)\nஉங்களுக்கு ஒரு பேர் வச்சாகணுமே.....(ஏற்கெனவே இன்னுமொரு கயல் இருக்காங்க)\nபேசாம கயல்2 ன்னுதான் சொல்லணும்போல:-)))\nநம்மூர்தான் கர்டன் சிடி ஆஃப் நியூஸி:-)\nஆமாம். கலர் என்பது இன்னுமா தமிழ்ச்சொல் ஆகலை\nஇது சூடுபடுத்தமட்டும் இல்லை. இதுலேயே சமைக்கலாம். சாதம்கூட ஆக்கலாமாம். அவன்லே வச்சுச் சமைக்கும் எல்லாத்தையும் இதுலே வச்சுச் சமைக்கலாம்.\nஎன்ன ஒரு வசதின்னா....நம்ம எவர்சில்வர் பாத்திரங்களைக்கூட சமைக்க வச்சுக்கலாம்.\nஇங்கே நம்மூரில் குளிர் காலத்திலே தயிர் செஞ்சுக்கவும் இது வசதிதான்.\n50 டிகிரியில் ஒரு மணி நேரம் வச்சுறலாம். அப்புறம் சில மணி நேரம் கழிச்சு இன்னொரு தடவை ரிபீட். தயிர் தோய்ஞ்சுருது.\nநான்வெஜ் சாப்புடறவங்களுக்கு சாஸேஜ், தண்டூரி வகை எல்லாம் கூட இதுலே செஞ்சுக்கலாம்.\nமுழுச் சிக்கன் ரோஸ்ட் & அதுலேயே டீ ஃப்ராஸ்ட்ம் செஞ்சுக்கலாம்.\nவீட்டுப்பாடம் சொல்லாமலேயே செஞ்சதுக்கு ஒரு பத்து மார்க் கூடப் போடலாமுன்னு எண்ணம்.\nகிச்சனைவிட்டு வெளியே எப்படி வர்றது அங்கேதானே லேப்டாப்பே இருக்கு:-)))) இப்பெல்லாம் ஆஃபீஸ் ரூம் கணினியைப் பயன்படுத்துவதே இல்லை. இங்கேதான் 23 டிகிரியில் ஹீட் பம்ப் நாளெல்லாம் ஓடுது.\nஆக மொத்தத்துலே உங்களுக்குக் கலர்ஸ் பிடிச்சுப்போச்சு:-)))\nசுவை நல்லாத்தான் இருக்கு. கோபால் வாயைத் திறக்கலை:-))))\nteacher வீட்டுக்காரர நீங்க கொடுமைப்படுத்தினமாதிரி மத்தவங்களும் கொடுமை படுத்தனும் எங்குற உங்க நல்லெண்ணத்துக்கு வாழ்த்துக்கள்... :p யப்பா பசங்களா கொஞ்சம் உஷாரா இருந்துக்குங்க\n//இப்ப இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவுதான்னு பார்த்துட்டுச் சொன்னீங்கன்னா.... அடுத்த பகுதி வந்தாலும் வரும்:-)))) //\nஸாரிங்க.. வூட்டம்மாகிட்ட காட்டித்தான் கமெண்ட் போடணும்..\nஇந்த 34 வருசத்துலே கொடுமை பழகிப் போயிருக்காதுங்கறீங்க\nஇந்த 34 வருசத்துலே கொடுமை பழகிப் போயிருக்காதுங்கறீங்க// உங்க வீட்டுக்காரருக்கு பழகி இருக்கும் ஆனா மத்தவங்க வீட்டுக்காரர் சோதனை எலியாவங்களே அத யோசிங்க.... அது சரி ஒண்ணு கேக்கனும் என்னு இருந்தேன்... மறந்துட்டேன்... ஆங் வெந்நீர் வைப்பது எப்படி என்னு ஒரு பதிவு எழுதலாம் என்னு இருக்குறேன்... உங்க உதவி கிடைக்குமா\nஅந்த ஓவன் மேட்டருக்கும் நமக்கும் தொடர்பு கிடையாது. குடை மிளகாய் வேணா டிரை பண்ணி பார்க்கலாம்.... :)\ntips ரொம்ப அவசியம் தரவேண்டியது தான்.. நல்லா இருக்கு படங்கள் எல்லாம்.. ஓவன் வீட்டில் இல்லாததால் சாதரணமா தண்ணீர் கூட சுடவைக்க வரலைனு சொல்லி தான் நானும் ஓவன் வாங்கி வச்சிருக்கேன்.. பிசா செய்யறத விட்டு வேற ஒன்னுமே செய்யறதில்ல.. நீங்க கொஞ்சம் ஓவன் ல செய்யற ஐயிட்டங்களையும் அப்பப்ப ரெசிப்பில போடுங்க.. குக்கரில் செய்ய முடியாத அயிட்டங்களை சொல்லவும்..\nநம்ம வீட்டம்மா மலேஷியாவுல. மூத்த மகளுக்கு குழந்தை பிறந்திருக்கு. அதனால இன்னும் ஒரு மூனு மாசத்துக்கு சமையல் நம்மளதுதான். இந்த ஓவன் வாங்கி அனுப்பனீங்கன்னா வசதியாருக்கும். இங்க கிடைக்காதுல்லையா அதனால கேக்கேன். எப்படி வசதி\n//இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை//\nஹி..ஹி..ஹு..ஹு..ஹா..ஹா...இப்படி ஒரு ஐடியாக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி தேவைக்கு ஏத்த மாதிரி, இந்த டெம்ப்ளேட்டை மாத்திக்குறோம். :D :D\nடீச்சர், நான் (ரொம்ப அவசியமா\n:-0), ஜிலேபி சுத்தியிருக்கேன்.என் கூட்டுக்கும் வாங்களேன்.\n உங்க பதிவெல்லாம் சூப்பரோ சூப்பர் நான் உங்க பரம ரசிகை நான் உங்க பரம ரசிகை\nகண்ணு நிறைஞ்சா வயிறு நிறையாதா என்ற நப்பாசைதான்:-)\nஉங்களுக்கு ஒரு பேர் வச்சாகணுமே.....(ஏற்கெனவே இன்னுமொரு கயல் இருக்காங்க)\nபேசாம கயல்2 ன்னுதான் சொல்லணும்போல:-)))//\nவேண்டுமானால் கயல் ஜூனியர் என்று எழுதுங்கள் துளசி மேடம் :)\n எனக்கு இந்த \"சுடு காற்று அடுப்பான்\" பத்தி தெரியாம போச்சே. தேடி வாங்கறேன்.\nகுடமிளகாய் செஞ்சு பாருங்க. குடைமிளகாய் சேர்த்தச் சமையல் குறிப்புகளை ஒரு நாள் போடறேன்:-))\nஎன்ன மாதிரி அவன் வாங்கி இருக்கீங்கமைக்ரோவேவ் தானே இல்லை டேபிள் டாப் ரெகுலர் அவனா\nவாங்கி அனுப்புனா ஆச்சு. இது ஒரு பிரமாதமா\nஉங்களை வாழ்த்திக்கிட்டு ஒரு கூட்டமா இங்கே நின்னுக்கிட்டு இருக்கோமே. பார்க்கலையா\nஇனிப்பு ரொம்ப ஆகிருச்சே....உடம்புக்கு ஒத்துக்குமான்னு தெரியலையேப்பா.\nவந்து கண்டுக்கறேன். நோ ஒர்ரீஸ்:-)))\n பேஷ் பேஷ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.\nநம்ம வகுப்புக்கு ஆதரவு தரும் உங்களுக்கு ஒரு 'ஓ':-)\nஏற்கெனவே இங்கே ஒருத்தரை சீனியரா ஆக்கி வச்சுருக்கேன்.\nஅவரைத்தான் ரொம்ப நாளாக் காணோம்.\nநல்லாத் தமிழ்ப் படுத்தி இருக்கீங்க:-)))\nரொம்ப விலை கூடியது அவசியம் இல்லை. அங்கேயும் சூப்பர்மார்கெட்டில் அநேகமா இருக்கும்.\n//கிச்சன் காட்ஜெட்ஸ் பைத்தியம் நான். புதுசா எதையாவது பார்த்தால்போதும். 'இது இல்லே நம்மகிட்டே. அதனால்தான் சரியாச் சமைக்கவே வர்றதில்லை'ன்னு முழுசா நம்பிருவேன். வாங்கி ஒரு நாள் மட்டுமேப் பயன் படுத்திட்டு இது வேலைக்காகாதுன்னு எடுத்துவச்சதும் நிறைய இருக்கு.//\nஎன்னிடம் கூட வெஜிடெபிள் கட்டர் இரண்டு இருக்கு. ஆனால் இரண்டையுமே உபயோகிக்காமல் கடைசியில் ட்ரெடிஷனலாக கட் பண்ணி செய்யும் முறை தான் சரியா வருது. :(\nமுக்கியமா அனியன்ஸ் எல்லாம் சாப்பரில் போட்டு கட் பண்ணினால் தண்ணீர் விட்டு கொஞ்சம் அசந்தாலும் கூழ் ஆகி விடுகிறது(ஆனால் வெங்காயம் கட் பண்ண தான் முக்கியமா வெஜ்ஜி சாப்பர் வாங்கினேன்)\nசட்னு சமையல் ஆகிரும். மீதி நேரம்\nஆஸ்தராலியாவில் இருந்து ஒரு வெங்காயம் வெட்டும் சாமான் வாங்கினேன்.\nவெங்காயம் வச்சுட்டு மேல்மூடிய அமுத்துனா ச்சின்னச் சின்னதா சதுரமா தூள் வெங்காயம் வரும்( அப்படித்தான் படம் போட்டுருக்கு)\nஅதை அமுக்கறதுக்குள்ளே நம்ம தாவு தீர்ந்துரும்:-))))\nteacher நானும் ஒரு சமையல் குறிப்பு போட்டிருக்கிறேன்... சரியா இருக்கா என்னு வந்து பாருங்க\nபடங்களா பதிவுகள் போடறீங்க.சி.வி.ஆரின் படங்களுக்கு நீங்கள்தான் போட்டி போல இருக்குது.தக்காளி கலரச் சொல்லவாகுண்டு மிளகாய் நிறத்தை சொல்லவாகுண்டு மிளகாய் நிறத்தை சொல்லவாபடம் அசலாஇல்லை பிற்தயாரிப்புன்னு என்னமோ சொல்றாங்களே அந்த நுட்பங்களா\nஐயோ இதென்ன சி வி ஆர் க்குப் பக்கத்துலேகூட நிக்க முடியாது நான்.\nஅவர் புகைப்படக் கலையில் மன்னன்.\nநான், மன்னர் யாரங்கேன்னு கூப்பிட்டால் ஓடிவரும் கூட்டத்தில் ஒன்னு:-)\nபிற்சேர்க்கை ஒன்னும் செய்யத் தெரியாது. அது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா இப்படியா இருப்பேன்\nஅந்தந்தக் காய்கறிகளின் அழகு அப்படியே எய்ம் & ஷூட்டில் வந்த்து:-)\nடீச்சர், இந்த அடுப்படி உபகரணத்தின் சரியான பெயர் என்ன ஏதாவது ப்ராண்ட் பெயர் உண்டா ஏதாவது ப்ராண்ட் பெயர் உண்டா 'ஹாட் ஏர் அவன்' என கூகிளை கேட்டால் பெரிய பெரிய அவன காட்டுது..\nசமையலில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு முதலில் ஒரு சபாஷ்\nஅதே கூகுளில் தேடி எடுத்தவைகள் கீழே இருக்கு பாருங்க.\nஒளிரும் புழுக்கள் ( தொடரின் நிறைவுப் பகுதி)\nசந்தேகம் என்னும் ஒரு சரக்கு..... (தொடர் பகுதி 4)\nபதிவர்களில் ஒரு புதுத் தாத்தா:-))))\nகமல் படத்தை நானும் பார்த்துட்டேன்.\nஆழிசூழ் அறை ( தொடர் பகுதி 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thulasidhalam.blogspot.com/2010/11/", "date_download": "2019-06-26T13:45:03Z", "digest": "sha1:SEVUUEOOLWQCDL5624APILV3QXM2VOYG", "length": 134722, "nlines": 431, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: November 2010", "raw_content": "\nநேத்து நடந்த சம்பவத்தினால் எனக்கு மனசே ஆறலை. எல்லாம் அந்தக் கைடுகள் விஷயம்தான். யார் எங்கே எப்படின்னு ஒரே குழப்பம். இவர்கிட்டே சொன்னால்..... வேற யாராவது கைடு வேணுமுன்னு வந்துருப்பாங்க. அவுங்களொடு போயிருப்பாங்கன்றார். நெருங்கிய தோழிகளில் ஒருத்தருக்குச் சம்பவத்தை எழுதி அனுப்பிட்டுத்தான் தூங்கப் போனேன். மறுநாள் காலை எட்டேமுக்காலுக்குக் கிளம்பி மதுரா நகருக்குள் போறோம். எங்கியாவது கண்ணில் படமாட்டாரா இந்த ராஜேஷ்ன்னு கண் தேடுனதென்னவோ நிஜம்.\nபார்க்கிங் னு போட்ட குறுகலான வாசலில் நுழைஞ்சால்.....சின்னதா ஒரு இடம். நாலைஞ்சு கார்களை நிறுத்தலாம். ப்ரைவேட் பார்க்கிங். நாலைஞ்சு மரமும் கற்குவியலுமா இருக்கு. கற்குவியல்மேல் வச்ச ஒரு சாமியை அணில் கும்பிட்டுக்கிட்டு இருந்துச்சு. நெச அணில்தான் வண்டியை விட்டுட்டுக் கோவிலை நோக்கிப் போனோம்.\nநடுவில் கம்பி கிராதி வச்ச தெரு. வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. ரெண்டு பக்கமும் கடைகள் ரொம்பி வழியுது. சாமி சமாச்சாரம், பால், இனிப்பு வகைகள், அலங்காரப்பொருட்கள், வளையல்கள் இப்படி....\nகோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். அலங்கார நுழைவு வாசலில் இருபுறமும் ஈட்டி பிடிச்சு நிற்கும் காவலர் இருவரின் ரெண்டாளுயரச் சிலை. என்னென்ன கொண்டு வரக்கூடாதுன்னு விஸ்தாரமான அறிவிப்புகள். 'ஸாமான் கர்' ன்னு க்ளோக்ரூம்கள் ரெண்டு மூணு இடத்துலே இருக்கு. கோவிலையொட்டியே இருக்கும் பெரிய கட்டிட வளாகத்தில் பக்தர்கள் கூட்டம். ஈரப் புடவைகளை ஒரு பக்கம் கம்பித்தடுப்பில் கட்டிவிட்டு மறுமுனையைப் பிடிச்சுக்கிட்டுக் காயவைக்கும் பலர், தரையில் கூட்டமா உக்கார்ந்து குடும்பத்தோடு கதை பேசும் பலர்ன்னு அந்த இடமே ரொம்பக் கலர்ஃபுல்லா இருக்கு.\nசெல்ஃபோன்கள், கேமெரா எல்லாத்தையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்துட்டு அடுத்த ஸ்டாலில் செருப்புகளை ஒப்படைச்சுட்டுக் கோவில் வாசலுக்குப் போனால் செக்யூரிட்டி பலமா இருக்கு. ஆண்கள் பெண்கள்ன்னு தனித்தனியா எலெக்ட்ரானிக் கேட். பெண்கள் மட்டும் பக்கத்துலே ஒரு அறை போல கட்டியிருக்கும் பகுதிக்குள் போய் வரணும். தொட்டுத்தடவுதலை விஸ்தாரமாச் செய்யறாங்க. தடவுதல் என்பது தழுவுதலா ஆகி இருக்கு. யக்.....அருவருப்பா உணர்ந்தேன்:(\nகாவல் பெண்டிர் லெஸ்பியனா இருப்பாங்களோன்னு சம்சயம். மற்றவர் படும் அவஸ்தையை அனுபவிப்பதுபோல் அவுங்க முகம் இருந்துச்சு. கோவிலுக்கு வந்துட்டு இப்படியெல்லாம் சொல்லக்கூடாதுதான்....ஆனா..... சொல்ல வைக்கறாங்களே:(\nகோவில் பாதுகாப்புன்னு சொன்னாலும் இப்படி ஒரு வன்முறைகளால் நல்லா இருந்த சமூகத்தைக் கெடுத்துவச்ச அந்த ஆரம்ப கர்த்தாக்களை (அவுங்க யாரா இருந்தாலும்)மனம் சபிச்சதென்னவோ உண்மை.\nமுன்வாசல் கடந்துவளாகத்துக்குள்ளே போனால் இவர் மட்டும் நிக்கறார். ப்ரதீபைக் காணோம். அஞ்சு நிமிசம் ஆச்சு அவர் வந்து சேர்ந்துக்க. வண்டி சாவி அவர் பையில் இருந்துச்சாம். அதைக்கூடக் கொண்டுபோகக் கூடாதுன்னுட்டாங்களாம். அதை நம்ம செல்ஃபோன் பையிலே வச்சுட்டு வந்தாராம். சின்ன பர்ஸ் மட்டும் காசோடு உள்ளே கொண்டு போகலாம்.\nநல்ல பெரிய வளாகம். கொஞ்சதூரத்துலே இடதுபக்கத்துலே ஒரு செயற்கைக் குன்று. ஆடுமாடுகள் மேய்ஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. குன்றுக்குள்ளே போய்ப் பார்க்கலாம். அதுக்கு தனி டிக்கெட்டு. (இப்பப் புரிஞ்சுருக்கும் பர்சை மட்டும் கொண்டுபோக அனுமதிச்ச காரணம்\nஅப்புறமா இங்கே வரலாமுன்னு முதலில் கண்ணன் பிறந்த இடத்தை நோக்கிப் போனோம். போகும் வழியிலே வெட்டவெளியான ஒரு முற்றத்தில் துளசிச்செடிகளும் யாகம் செய்ய யாககுண்டமுமான ஒரு அமைப்பு.\nபடிகள் ஏறிப்போனால் பக்கச்சுவர்களில் டெர்ரகோட்டா புடைப்புச் சிற்பமா சில. பெரிய ரதம் நிக்குது. தேவகியும் வசுதேவரும் பயந்த முகங்களோடு ஒரு பக்கம். கையில் வீசிப்பிடிச்ச வாளொடு கோபாவேசமா நிக்கும் கம்ஸன் ஒரு பக்கம். இன்னொன்னில் வசுதேவரும் தேவகியும் கைகளில் பூட்டிய விலங்கோடு உக்கார்ந்துருக்காங்க. இன்னொன்னில் ஆண் குழந்தையொன்னை தலைகீழா ஒரு காலைப்பிடிச்சுத் தூக்கிக்கிட்டு நிற்கும் கம்ஸன். அடுத்த கையில் ஓங்கிய வாள். கட்ரா கேஷவ்தேவ் ன்னு பெயராம் இந்தப் பகுதிக்கு.\nதங்கையின் எட்டாவது குழந்தையால் மரணம் ன்னு அசரீரி கேட்டதும், புதுமணத் தம்பதிகளை அப்படியே சிறையில் அடைச்சு வச்சுட்டான் கம்ஸன். நான் மட்டும் கம்ஸனா இருந்தால் தனித்தனி அறைகளில் அடைச்சு வச்சுருப்பேன். ஒவ்வொரு குழந்தையாப் பிறக்கப்பிறக்க அதைக் கொலை செஞ்சுக்கிட்டே இருக்கான். எட்டாவது குழந்தை பிறந்ததும் தாய்தகப்பனுக்கு நெஞ்சம் பதறுது. பிறந்தவன் விஷ்ணு. பயப்படாதீங்க. எனக்கு ஒன்னும் ஆகாது. என்னைக்கொண்டுபோய் கோகுலத்தில் யஷோதாவிடம் விட்டுட்டு அங்கே இப்போதான் பிறந்த குழந்தையை இங்கே தூக்கிவந்துருங்கன்னு குழந்தையை மாற்றச் சொல்லி ஐடியா கொடுக்கறார். இந்தச்சிறையில் இருந்து எப்படி அங்கே போவதுன்னு கேட்ட தந்தையிடம் எல்லோரையும் மயங்கிக்கிடக்கச் செஞ்சுட்டேன். சிறைக்கதவு எல்லாம் திறந்து வச்சாச்சு. சீக்கிரம் கிளம்புங்க'ன்னார். பொறந்தவுடன் என்னாப் பேச்சு பேசுது பாருங்களேன்\nவசுதேவர், குழந்தையைக் கூடையில் வச்சுத் தலையில் தாங்கிக் கொண்டு போறார். ஜெயில் கதவுகள் கோட்டைக்கதவுகள் எல்லாம் பாம் ன்னு திறந்துகிடக்கு. ஆனால் மழையான மழை. பேய்மழையில் குழந்தை நனையாமல் வருது. எப்படி ஆதிசேஷன் குடை பிடிச்சுக்கிட்டு வர்றார் கூடவே. யமுனை நதிக்கரைக்கு வந்துட்டாங்க. வெள்ளம் அடிச்சுக்கிட்டு போகுது. தயங்குன வசுதேவருக்கு யமுனை ரெண்டாகப்பிரிஞ்சு வழிவிடுது.\nமறுகரையில் கோகுலம். அங்கே போனால் நந்தகோபர் வீட்டுலேயும் எல்லோரும் மயங்கிக் கிடக்கறாங்க. யஷோதாவின் அருகில் அப்போதான் பிறந்த பெண் குழந்தை ஒன்னு. சட்னு இந்தக் குழந்தையை அங்கே வச்சுட்டு அந்தக் குழந்தையைத் தூக்கிக் கூடையில் வச்சுக்கிட்டுப் போனவழியே திரும்பிடறார் வசுதேவர்.\nதிரும்ப சிறைக்கு வந்து சேர்ந்ததும் கதவுகள் எல்லாம் முன்னைப் போலவே அடைபட்டது. மயக்கம் தெளிஞ்சு எல்லோரும் விழித்தெழுந்தாங்க. தேவகி வசுதேவர் இருந்த அறையில் குழந்தை அழும் சத்தம். ஆஹா....குழந்தை பிறந்துருச்சுன்னு ஓடிப்போய் ராஜா கம்ஸனிடம் சொன்னாங்க. ஓடோடி வந்தான் குழந்தையைக் கொல்ல.\nஇங்கே வந்து பார்த்தால் பொண் குழந்தை பிறந்துருக்கு. பையனால்தானே உன் உயிருக்கு ஆபத்து.. இதுதான் பொண்ணாச்சே. விட்டுருன்னு தேவகி கெஞ்சறாள். யாரு கண்டா இதுவே என்னைக் கொன்னாலும் கொன்னுருமுன்னு குழந்தையைத் தூக்கி மேலே வீசி அது கீழே விழும்போது சாவட்டுமுன்னு கத்தியை அதுக்கு நேரே பிடிச்சுக்கிட்டு நிக்கறான் மாமன்.\nஅதிசயத்திலும் அதிசயமா மேலே போன குழந்தை கீழே வராம, இன்னும் மேலேமேலே போய்க்கிட்டு இருக்கு. எப்படி இது காளியின் சொரூபம். டேய் முட்டாள். நான் மகாகாளி. உன்னைக் கொல்லப்பிறந்தவன் வேற இடத்தில் இருக்கான்னு சொல்லிட்டு மறைஞ்சு போச்சு அந்தக் குழந்தை. அதுதான் யோகமாயா.\nநடுங்கிப்போன கம்ஸன் அந்த ஏரியாவில் இருக்கும் 'புதுக் குழந்தைகளை'யெல்லாம் பிடிச்சுக் கொன்னு இன்னும் தன் பாவத்தை கூடுதலா ஆக்கிக்கிட்டான். இப்படிப்போகுது கதை.......\nநேரா ஒரு சந்நிதி, யோகமாயாவுக்கு. வலப்பக்கம் இருந்த சின்ன சந்துபோல ஒரு ஆள் மட்டுமே போகமுடியும் என்ற அளவில் இருந்த வாசலில் நுழைஞ்சால் பெரிய பெரிய கற்களால் கட்டுன கோட்டைப்பகுதி மாதிரி இருக்கு. நமக்கு வலப்பக்கம் பெரிய கதவுகளோடு ஒரு அறை. உள்ளே போனால் நமக்கு நேராக இதே போல் ஒரு வாசல். வலப்பக்கம் ஒரு மேடை. இந்த மேடைதான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இடம். மேடைக்கு நேரெதிரே ஒரு வாசல் இருந்து இப்போ அதை அடைச்சு வச்சுருக்காங்க. சிறைச்சாலைன்னு தமிழ்சினிமா சரித்திரப்படங்களில் பார்த்ததுபோல் பெரியபெரிய ப்ளாக் கற்கள். ஒவ்வொரு கல்லுக்கும் நடுவில் ஒரு வட்டம் இப்படி டிஸைன் இருக்கு. காராக்ரஹம்தான். மேற்கூரை நல்ல உசரமா இருக்கு. மேடையின் மேல் ஒரு சின்ன விக்கிரஹம். கொஞ்சம் பூ. மேடைக்குப்பின் சுவரில் சில படங்கள்.அவ்ளோதான். மேடைக்குப் பக்கத்தில் ஸ்டூல் போட்டு ஒரு பண்டிட் உக்கார்ந்துருக்கார் இந்த இடத்தில்தான் 'யஹிபர் ஸ்ரீகிஷன்கா ஜனம் ஹுவா'ன்னார்.\nஇதுதான் கருவறை( வெளியே கிடைச்ச படம்)\nஒரு அஞ்சு நிமிசம் மேடைக்கு எதிரா உக்கார்ந்துட்டு வந்தேன். தியானம் செய்ய மனசு ஒருங்கலை. மக்கள் இந்தக் கதவுலே நுழைஞ்சு மேடையைப் பார்த்துட்டுத் தொட்டு வணங்கிட்டு எதிர்க்கதவுலே கடந்து போய்க்கிட்டே இருக்காங்க.\nஅசப்புலே பார்த்தால் சீக்கியர்கள் கோவிலைப்போல வெங்காயக்கூம்பு, மொத்தம் மூணு கூம்பு. நடுவில் இருக்கும் பெரிய வெங்காயம்தான் கிருஷ்ணருக்கு.(படம் போன பதிவில் இருக்கு)\nசரியாச் சொன்னா இந்த வெங்காயக் கூம்புன்றது மசூதிகளுக்கு மட்டுமே. இந்துக் கோவில்களுக்கும் சீக்கிய கோவில்களான குருத்வாராக்களுக்கும் பூண்டு கூம்புன்னு சொல்லணும். பூசணிக்காய் கீற்றுப்போல வரிவரியாய் அசல் பூண்டுப்பற்கள் போல இருக்குன்றதைக் கவனிச்சேன்.\nகும்பிட்டு வெளியே வந்து இந்தக் கட்டிடத்தின் கூடவே ஒட்டி வளர்ந்துருக்கும் கட்டிடத்தின் படிகளில் ஏறி இன்னும் மேலே போனால்...... பிரமாண்டமான ஒரு பெரிய ஹால். ஏகப்பட்ட தூண்கள். சதுரவடிவான தூண்கள் எல்லாமே. ஒவ்வொரு தூணிலும் ராமாயண, மகாபாரதக் காட்சிகள். ஒரு புறமா இருக்கும் சந்நிதிமேடையில் பளிங்குச்சிலைகளா கடவுளர்கள். ரொம்ப அழகான முகங்கள். பார்க்கப்பார்க்கக் கண் நிறைஞ்சு போகுது. விஷ்ணுவின் தசாவதாரங்களைக் கோட்டுச்சித்திரமா வரைஞ்சு (எல்லாமே பெரிய சைஸ்) சந்நிதிக்கு வெளிப்புறப் பகுதியில் சுற்றிவர மாட்டி இருக்காங்க. எல்லா ஓவியங்களும் கண்ணாடிக்குப் பின்புறம். நல்லவேலை/வேளை . நம்மாட்கள் தொட்டுத்தொட்டே சீக்கிரம் பாழ் பண்ணி இருப்பாங்க.\nஅங்கங்கே சில சந்நிதிகள். ஆஞ்சநேயர் ஒருத்தர் கம்பீரமா நிக்கறார்.\nஉட்புறக்கூரை நல்ல உயரம். சர்ச்சுலே இருப்பதுபோல் இருக்கு. விதானங்களில் வண்ணச்சித்திரங்கள். முக்காலும் கண்ணனின் ராசலீலைகளே\nஹாலின் கடைசியில் இந்தக் கோவில் கட்டியக் கைங்கரியத்தைச் செய்த மூவர் சிலைகள். பிர்லா, டால்மியா, இன்னொரு சாமியார்.\nசுற்றிவர இருக்கும் மொட்டைமாடிகள், மாடங்கள், மூலைகள் பூராவும் ஆயுதமேந்திய ராணுவம். கம்ஸன்கூட காவலுக்கு இத்தனை பேரை வச்சுருந்துருப்பானான்றது சந்தேகம். இந்தக் கோவிலைப்பொறுத்தவரை வயசையே நிர்ணயிக்க முடியாது. பலமுறை செத்துச் செத்து மறுஜென்மம் எடுத்துருக்கே. இப்போதைய வயசு இருபத்தியெட்டு.\nபடி இறங்கிக்கீழே வந்தால் கோவிலுக்குள்ளேயே ஏகப்பட்டக் கோவில்கடைகள். பத்து ரூபாய்க்கெல்லாம் ஒரிஜனல் () சாளக்ராம் முட்டைவடிவில் கிடைக்குது. நர்மதை நதியில் எடுத்தவையாம். ரெண்டு கட்டைவிரல் நகங்களுக்கிடையில் வச்சு அது சுத்துவதைக் காமிச்சு இது ஒரிஜனல்ன்னு சாதிக்கிறார் கடைக்காரர். கோவிலைவிட்டு வெளிவருமுன் பத்துரூபாய் டிக்கெட் எடுத்து குன்றினடியில் போய்ப் பார்த்தோம். சின்னச்சின்ன மாடங்களில் சாமிச் சிலைகளும், ஆதிசேஷனுமா இருந்தாங்க.\nகோவிலைச்சுத்தி வெளிப்புறம் பரிக்கிரமா போயிருந்தால் தீர்த்தக்குளங்களைப் பார்த்திருக்கலாம். போகலை:(\nஇந்தக்கோவில் அந்த நூற்றியெட்டில் ஒன்னு.\nவாங்க. ஜென்மபூமி கோவிலுக்குப் போகலாம். போய்ச்சேருமுன் தலவரலாற்றைப் பார்க்கலாம். கொஞ்சமாவது ஹோம் ஒர்க் செஞ்சுக்கிட்டுத்தான் சரித்திர டூர் போகணும்,ஆமாம்.\nஸ்ரீகிருஷ்ணரின் மறைவுக்குப்பின் அவர் மகன் ப்ரத்யும்னன், அவருக்குப்பிறகு பேரன் அநிருத்தன், அவருக்கும்பின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபன்ன்னு வரிசையா நடந்த ஆட்சியில் இந்த கொள்ளுப்பேரந்தான் கொள்ளுத் தாத்தாவுக்காக அவர் பிறந்த இடத்தில் ஒரு கோவிலை நிர்மாணிச்சார். இதுதான் முதல் கோவில். அப்படி ஒரு ப்ரமாண்டமான கோவிலாக இருந்துச்சாம்.\nகாலப்போக்கில் அது அழிஞ்சுபோயிருக்குபோல. அதானே துவாபரயுகத்தில் கட்டுனது இன்னுமா உக்கார்ந்துருக்கும் குப்தர்கள் சாம்ராஜ்ய காலத்தில் சந்திரகுப்த விக்ரமாதித்யர் இடிந்தகோவிலை கிபி 400வது ஆண்டு புதுப்பித்து வழிபாடுகள் நடத்தி இருக்கார். 600 வருஷங்கள் கோவில் ரொம்ப நல்லா கொண்டாடப்பட்டு ஓஹோன்னு இருந்துருக்கு. 1017 இல் முகலாயர்கள் படையெடுப்பு காலத்தில் (Mahmud Ghaznavi) மஹமத் கஸ்நாவி என்றவரால் கோவில் இடிக்கப்பட்டது.\nமனிதன் கட்டுன கோவிலாக இது இருக்கமுடியாது. தேவர்கள் கட்டிய கோவிலாக இருக்கணுமுன்னு அந்தக் காலக்கட்டத்தில் Mir Munshi Al Utvi, என்றவர் எழுதிவச்ச குறிப்புகள் சொல்லுது . இதைக்கேள்விப்பட்ட அப்போ இருந்த சுல்தான் மஹமத் வந்து இந்தக் கோவிலைப் பார்த்துட்டு, இது போல ஒரு கோவிலை யாராவது கட்டணுமுன்னு நினைச்சாலே,அது முடியாத காரியம். பத்துகோடி தினார் காசும், சிறப்பா வேலை செய்யும் கட்டிடக் கலைஞர்கள் பலநூறு பேர் சேர்ந்து செய்தாலும் கட்டி முடிக்க இருநூறு வருஷங்கள் ஆகுமுன்னு சொன்னாராம்.\n(அடப்பாவி....தெரியுதுல்லே எம்மாம் கஷ்டமுன்னு..... அப்ப எப்படி இடிக்க மனசு வந்துச்சு\n1150 ஆண்டு மதுராவை ஆண்டுவந்த மகாராஜா விஜயபால் தேவா இந்த இடத்துலே ஒரு கோவில் கட்டி இருக்கார். இது மூணாம்தடவை அந்தக் காலக்கட்டத்துலேதான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு இங்கே வந்து கண்ணனை வழிபட்டுக் கொண்டாடி இருக்கார்.\n16 ஆம் நூற்றாண்டில் சிக்கந்தர் லோடியால் இந்தக் கோவில் மீண்டும் தரைமட்டமாச்சு:(\nஜஹாங்கீர் ஆட்சிகாலத்தில் மதுராவை ஆண்ட ராஜா வீர்சிங் தேவா 33 லட்சரூபாய் செலவில் 250 அடி கோபுரத்துடன் மீண்டும் கோவிலைக் கட்டி எழுப்பி இருக்கார். இது நாலாவது முறையாக அந்த இடத்துலே கட்டப்பட்ட கோவில். கோபுரத்துக்குத் தங்கக்கவசம் போட்டுருந்தாங்களாம்.\nஷாஜஹான் ஆட்சி நடக்கும்போது (1649) மதுராவுக்கு வந்த ப்ரெஞ்சுக்காரர் Tavernier (இவர்தான் இந்தியாவோடு வியாபாரத் தொடர்பு வச்சுக்க வந்த ஐரோப்பியர்களின் முன்னோடி. விலை உயர்ந்த வைரம் வைடூரியம் பிசினஸ்) இந்தக் கோவிலை வந்து பார்த்துருக்கார், தன் பயணக்குறிப்பில் வியந்து எழுதி இருக்கார்.\nஇத்தாலி நாட்டுலே இருந்தவந்த இன்னொரு பயணப்பதிவர் மனூச்சி(Manuchi)\nஆக்ரா நகரில் இருந்து பார்த்தாலே இந்தத் தங்கக்கோபுரம் மின்னுவது தெரியும். தீபாவளி சமயத்துலே விளக்குகளால் ஜொலிக்கும் இந்தக் கோபுரத்தைப் பார்த்தேன்'னு எழுதி இருக்கார். ரொம்பநாள் இந்தியாவிலே தங்கி இருந்தாராம். கோவிலுக்குப் பலமுறை போய் வந்ததா எழுதி வச்சுருக்கார்.\nஅப்போ பொல்யூஷன் இல்லாத காலம். சுத்தமான வெளியில் தொலைதூரக் காட்சிகள் அருமையாத் தெரிஞ்சுதான் இருக்கணும்.\nஅவுரங்கஸேப் ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கோவிலின் பெருமையைப் பொறுக்க முடியாமல் அதை (1669 வது வருசம்)இடிச்சுத் தள்ளினார். இங்கே இருந்த பளிங்குக்கற்களையெல்லாம் கொண்டுபோய் கோவில் இருந்த நிலப்பகுதியிலேயே ஒரு Idgah ( இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கூடம்) ஒன்னு கட்டிவிட்டாராம். . இந்த வழிபாட்டுக்கூடத்தின் சுவர்கள் இன்னும் அப்படியே இருக்குன்னு சொன்னாங்க) கோவிலை இடிச்சதும் பக்தர்கள் மனம் நொந்து போயிட்டாங்க. ஆனாலும் அரசனை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியலை:(\n1803 வருசம் மதுரா நகர், ப்ரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்தது. 1815 வது வருசம் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தக் கோவில் இருந்த இடத்தை ஏலத்துக்கு விட்டுச்சு. காசிப் பட்டண ராஜா பட்னிமல் இந்த இடத்தை ஏலத்தில் வாங்கினார். மீண்டும் கோவிலை இங்கே கட்டிடணுமுன்னு அவருக்கு மனதில் இருந்த ஆசை...அவர் வாழ்நாளில் நிறைவேறலை:( ஆனால் இந்த இடம் மட்டும் அவுங்க வாரிசுகளின் பொறுப்பிலேயே இருந்துவந்துச்சு.\nமதுராவில் இருந்த இஸ்லாமியர்கள் இந்த இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குப் போட்டாங்க. ராஜா கிருஷ்ணதாஸ் தான் (காசிப்பட்டண ராஜா) உண்மையான உரிமையாளர்ன்னு அலஹாபாத் நீதி மன்றம் தீர்ப்பு சொல்லுச்சு. ரெண்டாம் முறையும் அப்பீல் செஞ்சாங்க. அதிலும் இதே தீர்ப்புதான்.\n1944 வது வருசம் நம்ம பண்டிட் மதன்மோகன் மாளவியா அவர்கள் முயற்சியைத் தொடங்குனார். எல்லாத்துக்கும் முதலில் பணம் வேணுமே அப்போ ஜீவிச்சு இருந்த சேட் ஜுகல் கிஷோர்ஜி பிர்லா உதவிக்கரம் நீட்டினார். வெறும் பதிமூணாயிரம் ரூபாய்க்கு கோவில் இருந்த இடத்தை, ராஜா க்ருஷ்ணதாஸ் அவர்களிடம் இருந்து வாங்குனாங்க. இந்த இடத்துக்கு விலை மதிப்பே இல்லைன்னாலும் கோவில் வரட்டுமே என்ற ஆதங்கத்தில் ஒரு பெயருக்கு இந்தத் தொகையை வாங்கிக்கிட்டு இடத்தை ஒப்படைச்சார் ராஜா. இது நடந்தது ஃபிப்ரவரி 7, 1944.\nமதுராவைச்சேர்ந்த மதன்மோகன் சதுர்வேதி கோவிலை மீண்டும் உருவாக்க முழுமுயற்சியோடு பாடுபட்டார். இதுக்கிடையில் தன் கனவு நிறைவேறாமலே மாளவியா காலமாயிட்டார். அவருடைய கடைசி ஆசையும்கூட கோவிலைப் பற்றித் தானாம்.\n1951 வது வருசம் ஃபிப்ரவரி 21 ஆம் தேதி பிர்லா அவர்கள் 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி ட்ரஸ்ட்'ன்னு ஒரு அமைப்பை உருவாக்கினார். கொஞ்சநாளில் 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான்' என்ற பெயரில் சொஸைட்டியாப் பதிவு செஞ்சாங்க.\nஇந்த ட்ரஸ்ட்டின் முதல் சேர்மனா பாராளுமன்ற அங்கத்தினர்(லோக் சபா) ஸ்ரீ கணேஷ் வாசுதேவ் மாவலங்கார் பொறுப்பேற்று நடத்துனார். இவருடைய மறைவுக்குப்பின் பாராளுமன்ற அங்கத்தினரும், பீஹாரின் கவர்னருமா இருந்த அனந்தசயனம் ஐயங்கார் சேர்மனா பொறுப்பு ஏற்று கோவில் வேலைகளைக் கவனிச்சுவந்துருக்கார்.\nஇவருக்குப்பிறகு ஸ்வாமி அகந்தானந்தா சரஸ்வதி, ஷிரோன்மணி பரமஹன்ஸ ஸ்வாமி வாம்தேஜி மஹராஜ்ன்னு பொறுப்புகள் கை மாறி இப்போதைக்கு மஹான் நித்ய கோபால் தாஸ்ஜி மஹராஜ், இந்த சொசைட்டிக்குத் தலைமையா இருக்கார்.\nகோவிலைப்பற்றிய கனவுகளுடன் இருந்த டால்மியா குடும்பத்தைச்சேர்ந்த ஜெய்தயாள்ஜி டால்மியா வசம் பொறுப்பை ஒப்படைத்தார் பிர்லா.\nமுழுமூச்சா இந்த வேலையில் இறங்கினார் ஜெய்தயாள்ஜி டால்மியா. இவுங்க கம்பெனி நல்லா வளர்ந்து சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருந்துச்சு அப்ப. தாரள மனசோடு செலவளிச்சுக் கோட்டை கொத்தளம் ஸ்டைலில் கோவில், கருவறை, பகவத் பவன் என்னும் முன்புறக் கட்டிடம் எல்லாம் விஸ்தாரமா உருவாக்கத் திட்டம் தயாரானது..\nஸ்வாமி ஸ்ரீ அகந்தானந்த சரஸ்வதி என்ற சாமியார் இந்த ஜென்மபூமி ட்ரஸ்டில் வைஸ் பிரசிடண்ட்டா இருந்தார். அவருடையை வைஸான ஐடியாவா தன்னார்வலர்களைக் கொண்டு 'சிரமதான்' என்ற திட்டத்தில் உடலுழைப்பை தானமாக் கொடுக்க ஆர்வம் மிக்க இளைஞர்கள் முன்வந்து அக்டோபர் 15, 1953 இல் பரபரன்னு வேலையை ஆரம்பிச்சு முதல் காரியமா இடிபாடுகளை அகற்றி, இடிஞ்ச பள்ளங்களைத் தூர்த்துச் சுத்தம் செஞ்சு இடத்தை சமன்படுத்தினாங்க. பலவருசங்களாத் தொடர்ந்து வேலை நடந்துக்கிட்டே இருந்துச்சு. இந்தக் காலக்கட்டத்தில் பாபுலால் பஜாஜ், பூல்சந்த் கண்டேல்வால் பொறுப்பேத்து, இவர்களுடைய மேற்பார்வையில் சேவைகள் தொடர்ந்துச்சு.\nஜெய்தயாள்ஜி டால்மியாவுக்குப்பிறகு அவர் மகர் விஷ்ணுஹரி டால்மியா பொறுப்பேற்றுத் திட்டத்தைத் தொடர்ந்தார். இப்போ அவர்கள் வம்சத்துலே அனுராக்ஜி டால்மியா இந்த ஜென்மஸ்தான் சேவா ட்ரஸ்ட்டுக்கு ஜாய்ண்ட் மேனேஜிங் டைரக்ட்டராப் பொறுப்பேத்து கோவில் நிர்வாகம் நல்லபடியா நடக்க தன் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருக்கார்.\n1982 ஃபிப்ரவரி மாசம் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த ஜெயில் கட்டிடம், ஸ்ரீகிருஷ்ணா ஜென்மஸ்தான் காம்ப்ளெக்ஸ் வேலைகள் எல்லாம் உருவாகி முடிஞ்சது. இன்றையக் கணக்குக்கு 28 வருசம். இந்தக் கோவிலைத்தான் இப்போ பார்க்கப்போறோம். வாங்க...வண்டியை நிறுத்திட்டுக் கோவிலுக்குள்ளே போகலாம்.\nPINகுறிப்பு: அந்தக் காலப்படங்கள் ஒன்னும் கிடைக்கலை. அடுத்த பகுதிக்கான படங்கள் சிலதை இங்கே போட்டுருக்கேன். பார்த்து வச்சுக்குங்க:-)\nLabels: அனுபவம் மதுரா ஜென்மஸ்தான் Janmasthan Mathura\nஇழப்பு 29 உயிர்கள் :(\nஎனக்கு மனசே சரியில்லை. நியூஸியின் தெற்குத்தீவுலே இருக்கும் க்ரேமௌத் என்னும் ஊரின் அருகே இருக்கும் நிலக்கரி சுரங்க விபத்தில் அநியாயமா 29 உயிரிழப்பு நடந்து போச்சு:(\nஆறு நாளைக்கு முன்னே சுரங்கத்தில் வேலைக்கு ஆட்கள் உள்ளே போன கொஞ்ச நேரத்தில் உள்ளே ஏற்பட்ட வாயு அழுத்தத்தால் உட்புறச்சுவர்கள் வெடித்துச்சிதறி வெளியே வரும் வழி முழுசுமாய் அடைபட்டுப்போச்சு. எப்படியாவது எதாவது செஞ்சு ஆட்களை வெளியே கொண்டுவந்துருவாங்கன்னு தினம் தினம் பதைபதைப்போடு காத்துருந்தோம்.\nஎடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாச்சு. நேற்று காலை இன்னொரு முறை ஏற்பட்ட முந்தியதைவிடப் பெரிய second explosion காரணம் இனி அவர்கள் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்துருக்கு அரசு. ரெண்டுமுறை ரோபோக்களை அனுப்பிப் பரிசோதிச்சதில் உள்ளே இருக்கும் காற்று அபாயகரமான நிலை. அதை சுவாசிச்ச மனுஷர் உயிரோடு இருக்கவே முடியாது என்ற அளவுக்கு மாசு நிறைஞ்சதாம்.\nவிபத்தில் உயிரிழந்த 29 பேரில் மிக இளைய வயதுடைய பதினேழே வயதான பாலகனுக்கு வேலை கிடைச்ச முதல்நாள், அந்த விபத்து நேரிட்ட நாள்.\nமற்றவர்களில் மூத்தவர் 62 வயதானவர். இத்தனை சிறிய நாடான நியூஸியில் 29 பேர் ஒரே விபத்தில் உயிரிழந்தது ஒரு கொடுமையான சம்பவம். அரசு இன்று துக்கநாளாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த துக்கத்தில் பங்கேற்கின்றோம். எல்லா இடங்களிலும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்.\nசொந்தங்களை இழந்து தவிக்கும் அந்த 29 குடும்பத்தினருக்கும் நம் அன்பையும் பரிவையும் தரும் இந்நேரத்தில் உயிரிழந்த மக்களுக்குக்காக நம் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கின்றோம்.\nஇப்பக்கூட எதாவது அதிசயம் நடந்து ஒரு சிலராவது உயிர்பிழைத்து வெளியே வரமாட்டாங்களான்னு மனசு தவிக்குது.\nசந்தின் குறுக்கே இடதுபக்கம் ஒரு நுழைவு வாசல். உள்ளே நுழைஞ்சால் திண்ணைகள் வச்ச வளாகம். நடுவில் ஒரு திறந்தவெளியா முற்றம். கடந்தால் நந்தனின் மாளிகை. முற்றத்தின் இடதுபுறம் சதுரமா ஒரு சேண்ட் பிட். நடுவில் ஒரு ஆரஞ்சு நிற மரத்தண்டு நம் இடுப்பளவு உசரத்தில் நிக்குது, ஒரு பக்கமா தண்ணீர் டேங்க் ஒன்னு குழாய் வச்சது. சுவத்தில் 'நந்தன் யசோதா கஉ ஷாலா' ன்னு எழுதி வச்சுருக்கு. நம்ம பார்வை போன இடத்தைப் பார்த்ததும் பசுக்களை க உ என்றுதான் சொல்லணும். ஆனா அது பேச்சுவழக்கிலே Gகாய்ன்னு ஆகிப்போயிருச்சுன்னார்.\nமுற்றத்தில் நின்னு முக்கியக் குறிப்புகளைச் சொன்னார் திவ்ய ஷர்மா. 'கருவறை மண்டபத்துக்குள்ளே நாம் நிக்கக்கூடாது. உக்கார்ந்தே சேவிக்கணும். காரணம் இங்கே எல்லா இடத்திலும் கண்ணன் பரிபூரணமா நிரம்பி இருக்கறான்னு ஒரு ஐதீகம். ரெண்டாவதா....... கும்பிட்டும்போது கைகளைத்தட்டி ஆஹா ஆஹான்னு கோஷமிட்டு வணங்கணும். மகிழ்வோடு அவன் முன்னே நிக்கிறோமுன்னு அவனுக்குத் தெரியணும். (டிவி நிகழ்ச்சிகளில் காட்டுவதைப்போல Clap ன்னு எழுதித் தூக்கிப்பிடிச்சால் ஆச்சு)மூணாவதா.....பிரசாதம் எல்லோருக்கும் கொடுப்பாங்க. அதை பக்தியோடு வாங்கிக்கணும்'. இவை முக்கியமான மூன்று.\nஅப்புறம் சொன்னார் பத்தாயிரம் பசுக்களை இங்கே வளர்க்கறாங்க. எல்லாமே கறவை நின்னுபோனவைகள். அவைகளை வேறெங்கும் அனுப்பாமல் கடைசிவரை வச்சுக் காப்பாத்தறாங்க. இந்த ஊர் மாடுகளை வெளியூருக்கு விற்பதில்லை. இங்கேயே பிறந்து வாழ்ந்து இங்கேயே மடிஞ்சு போகுது.\nகோவில் வகையில் ரெண்டாயிரம் விதவைப்பெண்களுக்கு உணவு உடை கொடுத்துத் தங்கவச்சுருக்காங்க. இவுங்களுக்கு உற்றார் உறவினர் யாருமே இல்லை. மரணம்வரை அவுங்களைக் காப்பாற்றும் பொறுப்பு கோவிலுக்கு இருக்கு.\nநீங்க பாக்யசாலிகள். இன்னிக்குத்தான் தங்கத்தொட்டில் கடைசிநாள். இந்தக் கோவிலில் வருசத்துக்கு மூணு முறை இப்படித் தொட்டில் வைபவம் நடக்கும். தீபாவளிக்குத் தங்கத்தொட்டில். 51 கிலோ தங்கம். ஹோலிப் பண்டிகை சமயம் வெள்ளித் தொட்டில். கோகுலாஷ்டமி சமயம் வைரமும் முத்தும் பதிச்ச தொட்டில். மற்ற நாட்களில் சாதாரண மரத்தொட்டில் இருக்குமாம்.\nமுதலில் அந்த மணல் நிறைச்சுருக்கும் இடத்துக்குள்ளே போய். அந்தக் குழாயில் கைகளை அலம்பிக்கிட்டுக் கொஞ்சம் தண்ணீரைத் தலையில் தெளிச்சக்கணுமாம். சொன்னதைச் செஞ்சோம்.\nஇந்த மணல்தான் கண்ணன் விளையாடிய இடம். ஆஹா....சேண்ட் பிட்ன்னு நினைச்சது கரெக்ட்:-) இந்த மரத்தண்டுதான் கண்ணனை உரலோடு சேர்த்து முடிஞ்சு மரத்தில் கட்டிப்போட்டு வச்ச இடம்.\n அது ரெட்டை மரமால்லே இருந்துச்சு. கடம்ப மரமோ இல்லை மருதமரமோன்னு நினைப்பு இருக்கே.\nஅந்த ரெட்டை மரத்தின் அடிப்பகுதிதானாம் இது. காலப்போக்கில் இத்தனூண்டு அடிமரம்தான் 'தண்டா' நிக்குதாம்.\nமனசே...அடங்கு. நம்புனால்தான் தெய்வம். மனத்தின் உள்ளே ஒலிக்கும் அசரீரி\nரெண்டு பக்கமும் திண்ணை வச்ச ஒரு வீட்டுக்குள்ளே நுழையறோம். நிலைவாசல் மேலே ஸ்ரீநந்த யஷோதா பவன், ஸ்ரீ பல்ராம், யோகமாயா ஜன்மஸ்தான், கோக்குல் மதுரான்னு ஒரு போர்டு. ரொம்பச்சரி. பலராமன் பிறந்த இடமும் யோகமாயா பிறந்த இடமும் இதுதான்., கண்ணன் வேறொரு இடத்தில் பிறந்து, தந்தை வசுதேவர் தன் தலையில் தூக்கிவந்து இங்கே விட்டுட்டு, யோகமாயயைத் தூக்கிட்டுப்போன கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே\nதெரியாதவங்க கொஞ்சம் பொறுத்துக்குங்க. ஜன்மபூமி கோவிலுக்குக் கூட்டிப்போகும்போது சொல்றேன்.\nவாசலைக் கடந்து உள்ளெ போனால்.....சுத்திவர தாழ்வாரம் ஓடும் பெரிய முற்றம். நாம் நிற்கும் தரையில் வெள்ளைப்பளிங்குக் கற்கள் பாவி இருக்காங்க. எல்லாக் கல்லிலும் அந்தந்தக் கல்லுக்குக் காசு கொடுத்து உபயம் செஞ்சவங்க பெயர்.\nஇடதுபக்கம் சுவற்றில் சிவன் தவம் செய்யறார். வலப்பக்கம் சுவற்றில் யஷோதா இடுப்பில் குழந்தைக் கண்ணனுடன். நம் முதுகுப்பக்கம் இருக்கும் சுவரில் கோவர்தனமலையைத் தன் விரலால் தாங்கி நிற்கும் கண்ணன்.\nவலப்பக்கமாப் போகணும். ஒரு மாடிப்படி தெரியுது. அது நமக்கல்ல. படிக்கு இந்தப் பக்கம் ஒரு வாசல். உள்ளே போனால் நமக்கு நேரெதிரே சுவரில் இன்னொரு ஓவியம். நந்தன், யஷோதா இருக்காங்க. ஒரு பக்கம் சின்ன ஆசனத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தையாய்\nஇன்னவரிக்கும் ஊரில் பிறக்கும் புதுக் குழந்தையைத் தூக்கிவந்து இங்கே வச்சுப் பூஜை செய்து எடுத்துப் போவாங்களாம். .அப்படி ஒரு பழக்கம் காலங்காலமாய்த் தொடருதுன்னார் திவ்யஷர்மா.\nநமக்கிடது பக்கம் இருக்கும் வாசலுக்குள் நுழைஞ்சோம். கருவறை கூடம். இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை. நுழைஞ்சதும் சட்னு உக்கார்ந்துடணும். அதான் நிக்கக்கூடாதே சுற்றிக் கண்ணையோட்டினால்..... இது முற்றத்தை அடுத்து இருக்கும் நீளமான ஹால். கடைசியில் சுவரை ஒட்டி ஒரு மேடை. மேடையில் ஒரு பக்கம் நந்தன், மறு பக்கம் யஷோதா. நடுவில் ஏழுதலை நாகம் தலைக்குப் பின் குடை பிடிக்க பலராமனின் திரு உருவச்சிலை. இது மூணும் பெரிய லைஃப் சைஸ் சிலைகள். இவுங்களுக்கு முன்னே கொஞ்சம் சின்ன அளவில் (அரை ஆள்) கண்ணன், யோகமாயா, ரோஹிணி, சிலைகள் அதே மேடையில் இருக்கு.\nமேடைக்குக் கீழ்ப்பக்கம் தரையில் ஒரு தொட்டில். ஃப்ரீ ஸ்டேண்டு டிஸைனில் இருக்கு. அதுக்கு முன்னே சின்னதா ஒரு பக்தர்கள் கூட்டம். வலப்பக்க ஓரத்தில் சின்ன ஆசனத்தில் ஒரு பண்டிட் உக்கார்ந்துருக்கார். மெதுவான குரலில் பக்தர்களிடம் என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கார்.இடப்பக்கம் ஒரு பெரிய வாசல். அவர் சொன்னதைக்கேட்டுமுடிச்ச பக்தர்கள் அவர் அருகில் இருக்கும் ஒரு அண்டாவில் இருந்து எடுத்துக் கொடுத்ததை வாங்கிக்கிட்டு எழுந்து இடப்பக்க வாசலில் வெளியேறுனாங்க.\nநம் முறை வரும்வரை நாம் காத்துக்கிட்டு இருக்கோம். வரிசை வரிசையா பக்தர்கள் வெளியேற நாமும் உக்கார்ந்த வாக்கிலேயே நகர்ந்து நகர்ந்து முன்னேறணும் பிஞ்சுக் குழந்தையா இருந்தப்ப இப்படி அசஞ்சஞ்சு அரக்கியரக்கி நகர்ந்துருப்போம். அதெல்லாம் யாருக்கு நினைவிருக்கு பிஞ்சுக் குழந்தையா இருந்தப்ப இப்படி அசஞ்சஞ்சு அரக்கியரக்கி நகர்ந்துருப்போம். அதெல்லாம் யாருக்கு நினைவிருக்கு இப்படி நகரும்போது எனக்கு சிரிப்பா வருது ஒருபக்கம். பரவாயில்லை.அதான் சந்தோஷமாச் சிரிச்சு 'ஆஹா' சொல்லச்சொல்லி இருக்காங்களே இப்படி நகரும்போது எனக்கு சிரிப்பா வருது ஒருபக்கம். பரவாயில்லை.அதான் சந்தோஷமாச் சிரிச்சு 'ஆஹா' சொல்லச்சொல்லி இருக்காங்களே கோபால் சுலபமா நகர்ந்து போறார். எனக்குத்தான் ப்ராப்லம் கோபால் சுலபமா நகர்ந்து போறார். எனக்குத்தான் ப்ராப்லம்\nபல்ராம் இதே மாதிரி ஒரு திருவுருவம் கருவறை மேடையின் நட்டநடுவில் இருக்கு\nஒருவழியா நம் முறை வந்தது. தொட்டிலுக்கு முன்னால் இருக்கும் இடத்தில் ரெண்டு மார்பிள் ஸ்லாப் மிஸ்ஸிங். அங்கே மட்டும் வெறும் மண்தரையா இருக்கு. அதுதான் கண்ணன் மண்ணை உண்ட இடமாம். மண்ணைத் தின்ற வாயைத் திறந்து காமிச்சப்ப அம்மாவுக்கு ஈரேழுலகமும் தெரிஞ்சதுன்னு ஒரு கதை இருக்குல்லே அந்த 'சம்பவம்' நடந்த இடம் அந்த 'சம்பவம்' நடந்த இடம் அந்த மண்தரையில் நம்மை நகர்ந்து உக்காரச் சொன்னார் பண்டிட்.\nகோபால் பண்டிட்டுக்கு சமீபம். நம்ம பேரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட பண்டிட் நம்ம பிள்ளைகுட்டி விவரங்களைக் கேட்டார். அப்புறமும் குடும்பநலன், இங்கே இவ்வளவு ரூபாய்கள் செலுத்தினால் அதுக்கு இன்னின்ன பலம், புண்ணியம் வகைகளை விஸ்தாரமா எடுத்துச் சொல்றார். சுவரில் பெரிய பட்டியல் ஒன்னு எழுதிவச்சுருக்காங்க. எனக்கோ...கண்முன்னே இருக்கும் சாமிச்சிலைகளைக் கூர்ந்து பார்த்து மனசில் வச்சுக்கணும். அதுலே கவனம் செலுத்தவிடாமல் பண்டிட் என்னென்னவோ சொல்லிக்கிட்டே இருக்கார். நான் க்ரஹலக்ஷ்மி என்பது (மட்டும்) நல்லாவே காதுலே விழுந்தது:-)\n' எவ்வளவு பணம், லிஸ்ட்டுலே எந்த ஐட்டம் கொடுக்கப்போறே'ன்னு கோபாலைக் கேக்கறார். கோபாலுக்கும் எனக்கும் கொடுக்கப்பிடிக்கும். ஆனா அது நம்ம மனசுலே தோணுன தொகையாவும். நம்ம மனசுலே தோணும் காரணங்களுக்காகவும் இருக்கணும். தானம் என்பது நாமாக விரும்பிக் கொடுப்பதுன்னு ஒரு கொள்கை. நிர்பந்தம் பிடிச்சு, 'தா, தா'ன்னா இவருக்குக் கொஞ்சம் எரிச்சல் வரும்.\nகொஞ்சம் டொனேஷன் கொடுக்கலாமுன்னு இருக்கேன்னார். எவ்வளவு எவ்வளவுன்னு அரிக்க ஆரம்பிச்சார் பண்டிட். பாவம் ஒவ்வொரு முறை அவர் அரிக்கும்போதும் நினைச்ச தொகை கொஞ்சம் கொஞ்சமா கீழே போகுதுன்ற விவரம் அவருக்குத் தெரியாதுல்லை\nஇவர் ஒரு தொகை சொன்னதும்......ஒரு மாதிரி தலையை ஆட்டிட்டு எங்களை தங்கத்தொட்டில் கண்ணனை ஆட்டிவிடச்சொன்னார். அதுக்குன்னு ஒரு நீளத் தங்கச்சங்கிலி வாசலைக் கடந்து நீண்டு வெளியே வந்துருக்கே\nஅப்புறம் பிரசாதமா அண்டாவில் இருந்து காகிதப்பொட்டலம் எடுத்துக் கொடுத்தார்.\n இல்லை உக்கார்ந்தே சறுக்கி வாசலுக்குப் போணுமான்னு யோசிக்கிறேன். அதுக்குள்ளே கோபால் எழுந்து நின்னு 'நடந்து' வாசலை நோக்கிப்போனார். நானும் எழுந்து நின்னுட்டேன். மேடையில் இருக்கும் கடவுளர் சிலைகளுக்கு கும்பிடு போட்டுட்டு வெளியே வந்தேன். இந்த வாசல் முற்றத்தின் ஒரு பக்கத்துக்கு நம்மைக் கொண்டுவந்துருது. அங்கே வலப்புறம் கை காமிச்சார் திவ்யஷர்மா. அங்கே ஒருத்தர் தீர்த்தம் தர்றார். தட்டுலே காசு போட்டுட்டுத் தீர்த்தம் (பால்) வாங்கிக்கிட்டோம். இடதுபக்கம் இருந்த கவுண்ட்டரில் கோபால் அந்தத் தொகையைக் கொடுக்கும்போது இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் ரசீது தருவோமுன்னு சொன்னாங்களாம். ரசீதுக்குன்னு ஒரு மினிமம் அமௌண்டு இருக்காம். இவர் ஒன்னும் சொல்லாமக் கொடுத்துட்டு ரசீதுடன் வந்தார். இப்போ முற்றத்தின் அடுத்த தாழ்வாரம் போறோம். சின்னதா சந்நிதிகள். கம்பி அழிக்குள் பார்க்கலாம்.\nஇங்கே படம் எடுத்துக்கலாமான்னு திவ்யஷர்மாவைக் கேட்டால் தாராளமா எடுத்துக்கோங்கன்னார். பலராம், வசுதேவர் குழந்தையுள்ள கூடையைத் தலையில் சுமந்து வருவது, நந்தன் யஷோதா கண்ணன், பலராமன். கண்ணன் தன் நண்பர் கூட்டத்தோடு உறியில் இருந்து வெண்ணை திருடும் ஸீன் இப்படி சில.\n\"கருவறையில் எலிகள் நடமாட்டம் பார்த்தியா சுத்தமா வைக்கக்கூடாதா\n\" அடடா.... நான் கவனிக்கலையே:( சாமிகள் முகத்தையே உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன். புண்ணியம் உங்களுக்குத்தான். காலடி சேவிக்கணும். நெய்யும் பாலுமா இருக்குமிடத்தில் எலிகள் வருவது சகஜம்தானே அதுவுமில்லாம சாமி அறையில் எலி மருந்தெல்லாம் வைச்சால் நல்லாவா இருக்கும் அதுவுமில்லாம சாமி அறையில் எலி மருந்தெல்லாம் வைச்சால் நல்லாவா இருக்கும்\nமாளிகையை விட்டு வெளியே வந்தோம். வந்தவழியாகத் திரும்பிப் போகும்போது இடப்பக்கம் பிரிந்த ஒரு சந்தருகே வந்ததும், 'தரிசனம் நல்லாக் கிடைச்சதா உங்களுக்குத் திருப்திதானே'ன்னு திவ்யஷர்மா கேட்ட கேள்விக்கு 'எல்லாம் சரியா இருந்துச்சு'ன்னோம். 'திருப்திதானே'ன்னார். ஆமாம்னு சொன்னோம். 'நேராப்போங்க. உங்க வண்டி வந்துருமு'ன்னு சொல்லிட்டு, சட்னு அந்த சந்தில் நுழைஞ்சு போயிட்டார்.\nநாங்களும் வண்டிக்கு வந்து சேர்ந்தோம். நம்மைக் கூட்டிவந்த ராஜேஷ் ஷர்மாவுக்காகக் காத்திருந்தோம். பத்து நிமிசமாச்சு.யாரும் வரலை. அப்பக் கோபால் சொல்றார், ' நாம் வெளி வரும்போது அங்கே யாரிடமோ ராஜேஷ் பேசிக்கிட்டு நின்னதைப் பார்த்தேன்'. நான் பார்க்கலையேன்னு நம்ம ப்ரதீப்பை (டிரைவர்) அனுப்பிக் கூட்டி வரச்சொன்னோம். அவரும் பத்துப்பதினைஞ்சு நிமிசம் ரெண்டு பேரில் யாராவது ஒருத்தராவது கிடைப்பாரான்னு தேடிப்பார்த்துட்டுக் கிடைக்கலைன்னு திரும்பி வந்துட்டார். எதுக்கும் இருக்கட்டுமுன்னு இன்னும் கொஞ்சநேரம் காத்திருந்தோம்.\nஇனி காத்திருப்பது வீண்வேலைன்னு நாங்க வந்தவழியே 12 கிமீ திரும்பி வந்து, ஜென்மபூமி கோவிலுக்கு நாளைக் காலை வந்தால் ஆச்சுன்னு அறைக்கே போயிட்டோம்.\nஅம்பத்தியொன்னு கொடுக்காமப் போயிட்டோமேன்னு எனக்கு மனக்கஷ்டமாப் போயிருச்சு.\nரெண்டு பேரும் எங்கே இருந்து வந்தாங்க\nஇந்தக்கோவில் அந்த 108 இல் ஒன்னு\nLabels: அனுபவம் கோகுலம் Gokulam\nகூகுள் மேப் தரும் டைரக்ஷனையோ இல்லை பயண நேரத்தையோ நம்பாதீங்க.\n148 கிலோ மீட்டர் ரெண்டுமணி பதினோரு நிமிசத்தில் போயிடலாமாம். எப்படி சாலைகள் நல்ல தரத்திலும் போக்குவரத்து நெரிசல் எதுவுமே இல்லாமல் நாம் மட்டுமே அந்தச் சாலையில் பயணிக்கும் பயணிகளா இருந்தால் மட்டுமே சாலைகள் நல்ல தரத்திலும் போக்குவரத்து நெரிசல் எதுவுமே இல்லாமல் நாம் மட்டுமே அந்தச் சாலையில் பயணிக்கும் பயணிகளா இருந்தால் மட்டுமே இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா திடுக் திடுக்குன்னு ரோடுலே தடுப்பு வச்சு வேற வழியாப்போன்னு சொல்லும் போலீஸ் வேற\nநமக்கு நாலுமணி நேரம் ஆச்சு. அஞ்சேகாலுக்கு ஹொட்டேலில் செக்கின்பண்ணிப் பத்து நிமிசத்துலே ஃப்ரெஷப் செஞ்சு வரவேற்பில் ஊர் நிலவரம் தெரிஞ்சுக்கப் போனோம். மதுரா நகர். என் பல வருசக் கனவு. இப்போ குளிர்காலம் என்பதால் சீக்கிரம் இருட்ட ஆரம்பிச்சது. ரொம்பப் பக்கத்துலே இருக்கும் கோவில்கள் எவைன்னு கேட்டதுக்கு, கிருஷ்ணரின் ஜென்மபூமி ரெண்டு கிலோமீட்டரில் இருக்கு. அதைப் பார்த்துட்டு வாங்கன்னார் ஷைலேந்தர். ரொம்ப நல்ல அறையா நமக்குன்னு ஒதுக்கிட்டாராம். 'அறை எண் 108 இல் கோபால்ஸ்'. நம்ம ட்ரைவர் ப்ரதீப்பிடம் போகும் வழியையும் விளக்கினார்.\nஇந்தப் பக்கம் பழங்காலத்தில் வ்ரஜபூமி ன்னு அழைக்கப்பட்டதாம். விருந்தாவன், கோகுலம், கோவர்தன், மதுரா எல்லாம் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு. கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பல இடங்கள் இங்கேதான் இருக்கு.\nமதுராவுக்கு வடக்கே அம்பது கிலோமீட்டரில் இருக்கும் ஹொடெல் என்ற ஊரில் ஆரம்பிச்சு தெற்கே ருனாகுடா என்ற ஊர்வரை உள்ள இடம். இந்த ருனாகுடாதான் சூர்தாஸ் அவர்கள் பிறந்த ஊர். 15ஆம் நூற்றாண்டு இவருடைய காலம். கண்ணன்மேல் அளவில்லாத பக்தியோடு நிறைய பாடல்களை இயற்றிப் பாடி இருக்கார். ஒரு லட்சம் பாடல்களில் இப்போ கிடைச்சுருப்பது வெறும் எட்டாயிரம்தானாம். புஷ்டி மார்க்கத்தை போதிச்ச ஸ்ரீ வல்லப் ஆச்சார்யா அவர்களைத் தன்னுடைய பதினெட்டாவது வயசில் யமுனை நதிக்கரையில் சந்திச்சுருக்கார். அவர் சொன்னபடிதான் பகவத் லீலான்னு கிருஷ்ணனின் பால்யகாலத்து லீலைகளைப் பாட ஆரம்பிச்சாராம். இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர். ஒருவேளை ஞானக்கண்ணால் கண்ணனைப் பார்த்திருக்கலாம்.\nலோகத்திலே உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் மதுராவும் ஒன்னு. மற்ற ஆறும் என்ன அயோத்யா, காசி, மாயாபூர், காஞ்சீபுரம், அவந்திகா & த்வார்க்கா. நமக்கு மூணு டௌன். ஃபோர் டு கோ\nஇந்த ஊருக்குப் பெயர்க்காரணம் கதை ஒன்னு இருக்கு. திரேதாயுகத்துலே, அதாங்க ராமர் காலத்துலே இந்தப் பகுதியை ஒரு அரக்கன் ஆண்டுக்கிட்டு இருந்தான். அவன் பெயர் லவணாசுரன். (அப்பெல்லாம் கெட்டவங்களை அரக்கன்ன்னு சொல்லுவாங்க போல. இப்போ அவுங்கெல்லாம், மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரைச் சூட்டிக்கிட்டாங்க) அரக்கனின் குலதர்மம் அனுசரிச்சு நல்லவங்களையும் மகரிஷி, முனிவர்களையும் தொல்லைப் படுத்திக்கிட்டு இருந்தான். எல்லோரும் ராமரிடம் போய் முறையிட்டாங்க. அவர் தன் தம்பி சத்ருகனிடம் ஒரு பாணத்தைக் கொடுத்து அனுப்புனார். அந்த பாணத்தால்தான் மது, கைடபர் என்ற அரக்கர்களை ராமர் அழித்தாராம்.\nஇந்த லவணாசுரனுடைய தந்தை மது என்றவர். அவர் காலத்துலே நீதிநெறியோடு ஆட்சி செய்து இந்தப் பகுதியை செழிப்பாக்கி நகரங்களை நிர்மாணிச்சு நல்லவரா இருந்துருக்கார். அவருக்கு இப்படி ஒரு அரக்கப் பிள்ளை. சத்ருகன் வந்து அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செஞ்சபிறகு, பாழாகிக்கிடந்த நகரை புனரமைச்சுக் கொடுத்து, லவணனின் தந்தை பெயரையே நகரத்துக்கு வச்சுருக்கார். மதுராபுரி.\nஅவருடைய ஆட்சிக்குப்பின் பலவருசங்கள் கழிச்சு த்வாபரயுகத்தில் போஜராஜ வம்சம் அங்கே ஆட்சி செஞ்சது.\nசாக்கடை பெருகி ஓடும் மதுராவின் முக்கியவீதியான கடைத்தெருவில் போய்க்கிட்டு இருக்கோம். வலது பக்கம் திரும்பினால் ஜன்மஸ்தானுக்கு போகலாம். அதுக்குள்ளே 'ஹேய் வண்டியை நிறுத்து'ன்னு சொல்லிக்கிட்டே ஒரு இளைஞர் தாவிக்குதிச்சு வண்டிமுன்னால் நின்றார். அவரை ஒதுக்கிட்டு வண்டி எடுக்க முடியாமல் கார் கண்ணாடியில் பல்லி மாதிரி அப்படியே ஒட்டிக்கிட்டார். என்னவாம் தரிசனம் பண்ணி வைப்பாராம். வெறும் அம்பத்தியொரு ரூபாய் கொடுத்தால் போதுமாம். 'அதெல்லாம் வேணாம் நாங்க பார்த்துக்குறோம்' ன்னு சொன்ன கோபாலை கண்ணால் மிரட்டினேன். புது இடம். ஒரு கைடு இருந்தா தேவலைதான். இன்னும் கொஞ்சம் விசாரிச்சப்ப மாணவர்ன்னு தெரிஞ்சது. வண்டிக்குள்ளே ஏத்திக்கிட்டோம். ஜென்மபூமி கோவிலையும் கோகுலத்தையும் காட்டறேன். இந்த ஜென்மபூமி ராத்திரி 9 வரை திறந்துருக்கும். கோகுலம் சீக்கிரம் அடைச்சுருவாங்க.முதலில் அங்கே போகலாமான்னார்.\nமதுராவில் இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தூரம் போகணும். போற போக்கில் பலவிஷயங்கள் கிடைச்சது., இளைஞர் பெயர் ராஜேஷ் ஷர்மா. வயசு 20. விருந்தாவனத்தில் (பக்கத்து ஊர்) படிக்கிறார். பூஜை புனஸ்காரங்கள் செய்யத் தேவையான படிப்பு. காலை 6 முதல் பத்துவரை வேதப் பள்ளிக்கூடம். அதுக்குப்பிறகு ரெகுலர் பள்ளிக்கூடத்தில் ப்ளஸ் 2. சாயங்காலங்களில் இப்படி கைடு வேலை.\n'உங்களுக்குக் கண்ணன் கதை தெரியுமா'ன்னு கேட்டதும்.....நான் 'தெரியவே தெரியாது. நீயே சொல்லுப்பா'ன்னேன். \"இந்த மதுரா ஒரு பெரிய நகரம்.\"\n(அழுக்கும்புழுக்குமா நரகமாக் கிடக்கே..... தப்பான ஸ்பெல்லிங் சொல்றாரோ\n\"நாம் போகும் கோகுலம் ஒரு சின்ன கிராமம். யமுனை நதிக்கரையில் இருக்கு. இங்கேதான் நந்தகோபர் வசித்தார்.\"\n\"அப்போ நந்த்காவ்(ன்)ன்னு ஒரு ஊர் இருக்கே அது\n\"முதல்லே அங்கேதான் இருந்தார். அப்போ ஒரு சமயம் அவருடைய பசுக்கள் யமுனை ஆற்றுலே தண்ணீர் குடிச்சுட்டு மயங்கிச் செத்து விழ ஆரம்பிச்சது.\"\n\"அந்த நதியில் ஒரு கொடூர விஷமுள்ள நாகம், காளிங்கன்னு பேரு இருந்துச்சு. அதோட விஷ மூச்சுக் காத்தால் தண்ணீரெல்லாம் விஷமாகிப்போச்சு.\"\n\"அதுக்குப்பிறகு அவர் தன்னுடைய ஊர் மக்களோடும் மாடுகளோடும் கிளம்பி இங்கே கோகுலம் வந்துட்டார்.\"\n\"இப்போ நீங்க பார்க்கப்போற கோகுலத்தில் பத்தாயிரம் மாடுகள் இருக்கு. ரெண்டாயிரம் விதவைப்பெண்கள் இருக்காங்க.\"\nகொஞ்சநேரத்துக்கு வண்டிக்குள்ளே நிசப்தம். தாங்கமுடியாமல் 'கிருஷ்ணரின் வேறு கதைகளைச் சொல்லுப்பா'ன்னேன்.\n\"அதான் இன்னும் சில நிமிசங்களில் நேரில் பார்க்கப்போறீங்களே நீங்க ரொம்பவே அதிர்ஷ்டம் செஞ்சவங்களா இருக்கணும். கோகுலத்தில் தீபாவளி சமயம் சிலநாட்கள் ஸ்ரீக்ருஷ்ணனைத் தங்கத்தொட்டிலில் போட்டு சீராட்டுவாங்க. இன்னிக்குத்தான் கடைசிநாள். நாளைக்கு வந்துருந்தா அதைப் பார்க்கமுடியாது.\"\nகடைத்தெருவின் நெரிசலையும் பஸ் ஸ்டாண்டின் கூட்டத்தையும் கடந்து போறோம். மீனை வண்டிகளில் வச்சு அப்படியே வறுத்து வித்துக்கிட்டு இருக்காங்க. நல்லவேளை நல்லா இருட்டிப்போச்சு. சாலைக்குப்பைகள் கண்ணில் படலை. கண்டோன்மெண்ட் பகுதி மட்டும் பளிச்ன்னு விளக்குகளோடு வாசலில் ரெண்டு பக்கமும் டாங்க் அலங்காரத்தில் இருக்கு. சட்னு இடதுபக்கம் திரும்பும் சாலையில் ராஜேஷ் போகச்சொன்னதும் கொஞ்சதூரத்தில் பாலத்தைக் கடக்கும் சப்தம். யமுனாவாம். இருட்டில் ஒன்னும் தெரியலை பாலத்தின் கைப்பிடி தவிர.\nஇதுக்கிடையில் ராஜேஷ் ஷர்மாவுக்கு நாலைஞ்சு 'கால்கள்'. சின்னதாப் பேச்சு.\nகொஞ்சதூரத்தில் ஒரு தெரு வளைவில் பொட்டிக்கடை அருகே வண்டியை ஓரங்கட்டச் சொன்னபடி செஞ்சோம். நாம் இறங்கும்போதே இன்னொரு இளைஞர் வண்டியை நோக்கி வந்தார்.\nஇவர் என்னுடைய சகோதரர். இவர்கூடப் போங்க. தரிசனம் செஞ்சுவைப்பார். ஆனால் காசு எதுவும் அவரிடம் கொடுக்காதீங்க. அந்த அம்பத்தியொன்னை அப்புறம் என்னிடம் கொடுக்கலாம். போயிட்டு தரிசனம் முடிச்சுட்டு வாங்க.\nபுது இளைஞர் பெயர் திவ்ய ஷர்மா. சின்னச் சந்தில் எங்களைக் கூட்டிக்கிட்டுப் போறார். ரெண்டு பக்கமும் இருக்கும் கடைகளில் இருந்து மெலிசா வெளிச்சம் சந்துலே பரவி இருக்கு. எங்கே பார்த்தாலும் அழுக்கு, ப்ளாஸ்டிக் பை, தண்ணீர் பாட்டில். தின்னுபோட்ட தொன்னை................ அடக்கடவுளே:(\nLabels: அனுபவம் மதுரா Mathura\nஒபாமா வருகையும், ஒரு டும்டும் டும்மும்.\nதோழியின் ரெண்டாவது மகருக்குத் திருமணம். முகூர்த்தம் காலை 6 மணிக்கு. மூத்தவருக்கும் போன மார்ச் மாதம் திருமணம் நடந்துச்சு சென்னையில். அதுவும் இப்படிக் காலை 6 மணிக்கு காலையில் வண்டியை வரச்சொல்லிட்டு ஆறுமணிக்கு ட்ரைவர் வந்து எழுப்புனதும் மணியைப் பார்த்தால் ........ இனி அலறிக் காரியமில்லைன்னு சாயந்திரம் வரவேற்புக்குப் போனோம். இந்த முறை அப்படி ஆகிடக்கூடாதுன்னு ரொம்ப கவனம் எடுத்துக்கிட்டேன்.\nஅதென்னப்பா எல்லாக் கல்யாணமும் இப்படி விடிஞ்சும் விடியாமலும் ரெண்டு வீட்டு புரோகிதர்களும் சேர்ந்து பார்த்துக்கொடுத்த முகூர்த்த நேரமாம். நம்ம ட்ரைவருக்கு தில்லி சரியாத் தெரியாதுன்றதால் வேற ஒரு உள்ளூர் வண்டியைக் காலை அஞ்சுமணிக்கு வரச்சொல்லி ஏற்பாடு. காலை நாலு மணிக்கு எழுந்து அரக்கப்பரக்க ரெடியானோம். எழுந்தவுடன் உள்ளூர் கார்க்காரருக்கு செல் அடியுங்கன்னா..... பாவம் அந்தாளு தூங்கட்டும். நாலரைக்கு எழுப்புனால் ஆச்சுன்னார். நாலரை மணிமுதல் நாலைஞ்சுமுறை கூப்பிட்டாலும் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்காருன்னு சேதி வருது.\nஅஞ்சு மணியாகியும் ஆள் கிடைக்கலை. மூத்தவர் கல்யாணம் போல தாலிகட்டும் நிகழ்ச்சியை மிஸ் பண்ணப்போறோமுன்னு மெள்ள ஆரம்பிச்சேன். கீழே போய் ஒரு காஃபியைக் குடிச்சுட்டு வரவேற்பில் இருந்தவரிடம் ஒரு டாக்ஸிக்கு சொன்ன மூணாவது நிமிஷம் வண்டி வந்துருச்சு.\nகிளம்பி பத்து மீட்டர் போனதும் தடக்னு வண்டி நின்னுபோச்சு. போச்சுடா......டிரைவர் கீழே இறங்கிப்போய் பானெட்டைத் திறந்து கொஞ்சநேரம் தப்லா வாசிச்சார். சின்னக் கனைப்போடு இஞ்சின் ஸ்டார்ட் ஆச்சு. அப்புறம் பத்து மீட்டருக்குப் பத்து மீட்டர் வண்டி நிக்கரதும் தப்லா வாசிப்பு தொடருவதுமா இருக்கு. ஒருவேளை தில்லி கார்ப்பரேஷன் குப்பைவண்டி இப்படி டாக்ஸியா மாறுவேஷம் போட்டு வந்துருக்கோ\nஇந்தக் கணக்குலே போனால் அஞ்சாறு வருசம் ஆகிரும் கல்யாணக் கிளப்புக்கு போக பார்லிமெண்ட் இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலே இருக்கும் 'கான்ஸ்டிட்யூஷன் க்ளப் ஆஃப் இண்டியா'வில்தான் கல்யாணம் நடக்குது. இன்னிக்கு ஒபாமா வேற பாராளுமன்றத்தில் பேசப்போறார். அந்தத் தெருப்பக்கமே போகமுடியாமப் போகப்போகுது..........\nநாலுமுறை நின்னு தட்டிக்கொடுத்துன்னு ஆனதும் 'குளிர் கூடுதலா இருக்குன்னு இஞ்சின் வேலை செய்யலை'ன்றார் நம்மாள். குளிரா பதற்றத்தில் எனக்கு வேர்த்துக் கொட்டுது. வண்டிக்கு கேஸ் ப்ராப்லமா பதற்றத்தில் எனக்கு வேர்த்துக் கொட்டுது. வண்டிக்கு கேஸ் ப்ராப்லமா கண்ணில் பட்ட ஒரு பெட்ரோல் பங்குக்குப் போய் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதும் வண்டி ஓட ஆரம்பிச்சது. \"அடப்பாவி , சொட்டு எரிபொருள் இல்லாமலா வண்டியைக் கொண்டுவந்தே கண்ணில் பட்ட ஒரு பெட்ரோல் பங்குக்குப் போய் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதும் வண்டி ஓட ஆரம்பிச்சது. \"அடப்பாவி , சொட்டு எரிபொருள் இல்லாமலா வண்டியைக் கொண்டுவந்தே\nஅதே கூர்காவ் டோல் கடக்கணும். 55 ரூபாய் கட்டணம். நேத்தி ராத்திரி 20தானே கட்டுனோம் அதுக்குள்ளே விலைவாசி ஏறிப்போச்சா கூர்'காவ்'க்கு வர்றதுக்கு இருவது. தில்லிப் 'பட்டணம்' போகணுமுன்னா அம்பத்தியஞ்சு. கிராமத்துக்கு நகரத்துக்கும் உள்ள வேறுபாடு இங்கிருந்தே ஆரம்பிக்குது\nஇன்னும் பொழுது விடியலை. ட்ராஃபிக் இல்லை. முக்காமணியாப் போய்க்கிட்டே இருக்கோம்..\nஅடுத்த பிரச்சனை ஆரம்பமாச்சு. பார்லிமெண்ட் தெரு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஏகப்பட்ட போலீஸ் குவிஞ்சுகிடக்கு. ஒபாமா வருகையால் எட்டுமணிக்குப் பிறகு இந்த ஏரியாவில் நுழையத் தடை. அட்ரஸ் சொல்லி வழிகேட்டோம். அதிகாரி காமிச்ச வழியில் போனால் C.P. வருது. போச்சுறா...... கடையெல்லாம் மூடிக்கிடக்கு. இல்லைன்னா கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுருக்கலாம். போலீஸுக்கு ஏரியா விவரம் தெரியலை:( அப்படி ஒரு GK. ஹூம்.....\nஇன்னொரு தெருவில் காலை வாக் போய்க்கிட்டு இருந்தவரை நிறுத்திக் கேட்டுட்டு, க்ளப்புக்குப் போய்ச் சேர்ந்தோம். ரிஸர்வ்பேங்க் கட்டிடத்துக்கு நேரா முன்னாலே இருக்கு இது. வாசல் விரிச்சோன்னு கிடக்கு. கண்ணாடி வழியா தென்பட்டார் வேஷ்டி கட்டுன ஒருத்தர். யஹி ஹை ரைட் ப்ளேஸ்.\nவாசலில் இருந்த செக்யூரிட்டி ஹால் பக்கம் கை நீட்டினார். உள்ளே போனா யாருமில்லை அட நாம்தான் முதல்லே வந்துருக்கோமா அட நாம்தான் முதல்லே வந்துருக்கோமா ஆறு பத்தாச்சேன்னும்போது, இன்னொரு கதவைக் காமிச்சு அங்கேதான் சடங்குகள் நடக்குதுன்னு நம்மைக் கூட்டிப்போனார் ஒருத்தர். வெளியே தோட்டத்தில் பந்தல் போட்டு மணவரை அமைச்சுருக்காங்க. ஹவன் புகை வெளியில் போயிரும். கால்மணிதான் மிஸ்ஸிங். மணிரத்தினம் படம் போல ஒரு செட்டிங்ஸ். முக்கால் இருட்டில் படமெடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்கேன். நேரமாக ஆகப் பலபலன்னு பொழுது விடியவும் தில்லிக் குரங்குகள் மணவரை உள்ள பந்தலின் மேல் குதிச்சு விளையாட வந்ததுகள். ஆஞ்சநேயரே கல்யாணத்துக்கு சாட்சி\nசுடச்சுட காஃபி, ஸ்நாக்ஸ்ன்னு சுத்திவந்து விளம்பிக்கிட்டு இருந்தாங்க பணியாட்கள்.\nஅரக்கு பார்டரில் கீதோபதேசம் படம் நெய்த புடவை கண்ணை அப்படியே இழுத்துச்சு. நேத்துதானே அங்கே போயிட்டு வந்துருக்கேன். 'கீதா' என்றேன். 'கல்யாணி' ன்னாங்க அவுங்க.' என்றேன். 'கல்யாணி' ன்னாங்க அவுங்க. அப்படியே பரிச்சயமாகிப் பேசிக்கிட்டு இருந்தோம். ராஜஸ்தானில் ஒரு பள்ளிக்கூடத்துப் ப்ரின்ஸி.\nதாலிகட்டும் வைபவம் எல்லாம் நல்லபடி நடந்து முடிஞ்சதும் முதலில் பார்த்த ஹாலில் போய் உக்கார்ந்தோம். கலை நிகழ்ச்சியாப் பாட்டுப் பாடினாங்க சிலர். வட இந்திய ஸ்டைலில் அந்தாக்ஷரி விளையாடலாமுன்னா எனக்குத் தொண்டை சரி இல்லை:-)))))\nகல்யாணக்கூட்டத்தில் அநேகருக்கு என்னைத் தெரிஞ்சுருந்தது எழுத்து மூலமாவா\nமுதல்மகர் கல்யாணத்தில், ரெண்டு ஆண் சம்பந்திகளும் அசப்பில் ஒன்னுபோல இருக்காங்களேன்னு அவுங்களை ஒன்னா நிக்கவச்சு ஒரு படம் எடுத்து 'ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிங்க'ன்னு தோழிக்கு அனுப்புன படத்தை அவுங்க தன் உற்றார் உறவினர் நட்புகளுக்கு சர்குலேட் செஞ்சுருந்தாங்க என்ற ரகசியம் வெளிவந்துச்சு.\nஅறிமுகப்படலத்தில்....'இவுங்கதான் துளசி. அந்த ஆறு வித்தியாச......'\n நல்ல ஜோக் நீங்க அனுப்புனது:-))))'\nநம்ம தோழி ஒரு பத்திரிகையாளர். அவுங்களுடன் ஜர்னலிஸம் படிச்சக் கல்லூரித் தோழிகள் பலரும் வந்துருந்தாங்க. பத்திரிகையாளரா ஜமாய்ச்சுக்கிட்டு இருக்காங்க. அந்த வகையில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அறுபதுகளில் கணையாழி ஆரம்பிச்சு அதை வளர்த்தெடுத்த முக்கியமானவர்களில் ஒருவர். சாந்தா ராமஸ்வாமி. இந்திரா பார்த்தசாரதி, திஜர, அசோகமித்திரன், சுஜாதா இப்படி அவுங்க வட்டம் ரொம்பப்பெருசு இப்பெல்லாம் எழுதறதில்லை. வெறும் வாசிப்பு மட்டும்தானாம். நம்ம 'சோ' இவுங்க க்ளாஸ்மேட் என்பது ஒரு கொசுறுத்தகவல்.\nவெளியே தோட்டத்தில் பத்துமணிக்கு சாப்பாடு தயார். பஃபே சிஸ்டம். அவ்வளவு சீக்கிரமா சாப்பிட முடியாதுன்னாலும்......... கண்ணால் பலவகைகளை சாப்பிட்டேன். நம்ம தோசை இட்டிலி வடையும் ஓக்கே எல்லாம் 'ஸப் ஸப்ஜி'ன்னு பாவைக்காய், கத்தரிக்காய், குடமிளகாய், வெண்டைக்காய்ன்னு முழுசுமுழுசா பலவகைக் காய்கறிகளை மசாலாவுடன் சமைச்சு அடுக்கி வச்ச விதம் புதுசா இருந்துச்சு. கிளிக்கோ க்ளிக். தோட்டம் பராமரிப்பு நறுவிசா இருக்கு.\nபத்தே முக்காலுக்கெல்லாம் கிளம்பிட்டோம். டாக்சி ஸ்டேண்டில் வந்து ஒரு டாக்ஸி பிடிச்சுப் போகும்போது தில்லியின் ரவுண்ட் அபௌட்களில் எல்லாம் அமெரிக்கக் கொடிகளும் இந்தியக் கொடிகளுமாய் 'ஹம் தோனோ பாய் பாய்'னு படபடன்னு பறந்துக்கிட்டே இருந்தன.\nஷாந்தி பாத், சாணக்யபுரி எல்லாம் துடைச்சு வச்சதுபோல் அப்பழுக்கு இல்லாம பளீர்ன்னு சிரிக்குது. ராஜ்பாத் எல்லாம் சோப் போட்டுக் கழுவியே வச்சுருக்காங்க. இதேமாதிரி நகரம் பூராவும் சுத்தமா இருக்கும் காலமும் வராதா ஒரு ஏக்கம்தான். மத்தபடி அண்ணன் ஒபாமாவுக்கு ஒரு ஃப்ளெக்ஸ் பேனர் உண்டா ஒரு ஏக்கம்தான். மத்தபடி அண்ணன் ஒபாமாவுக்கு ஒரு ஃப்ளெக்ஸ் பேனர் உண்டா ஒரு தோரண வாயில் உண்டா ஒரு தோரண வாயில் உண்டா விமான நிலையத்தில் இருந்து புது சட்டசபைவரை பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகளால் ஆன தோரணம்.உண்டா விமான நிலையத்தில் இருந்து புது சட்டசபைவரை பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகளால் ஆன தோரணம்.உண்டா வட்டப்பூவுக்குள் சிரிக்கும் 'தலை' உண்டா வட்டப்பூவுக்குள் சிரிக்கும் 'தலை' உண்டா இதுக்குத்தான் சென்னைவழியா வரணுங்கறது. அட்டகாசமான வரவேற்பு எங்கே கிடைக்குமுன்னு கவனிக்கத்தெரியலை, என்ன ஸிஐஏவோ இதுக்குத்தான் சென்னைவழியா வரணுங்கறது. அட்டகாசமான வரவேற்பு எங்கே கிடைக்குமுன்னு கவனிக்கத்தெரியலை, என்ன ஸிஐஏவோ\nஒபாமா பேசி முடிச்சுட்டு நிதானமா வரட்டும். நாம் முன்னால் போகலாமுன்னு கூர்காவ் போய்ச் சேர்ந்தோம். இந்த ஹொட்டேலை இப்ப நிர்வகிப்பது நம் நியூஸித் தோழியின் மகர். அவரையும் சந்திச்சுக் கொஞ்சம் குடும்ப விஷயங்களைப்பேசித் தீர்த்து, அரைமணி நேரத்தில் வேஷம் மாறி தெற்கே பயணப்பட்டோம்.\nஇந்தக் கல்யாணத்துக்காக நம் சென்னைத் தோழிகள் சிலர் குடும்பத்துடன் வருவதா ஒரு திட்டம் இருந்துச்சு. அவுங்களையெல்லாம் அப்படியே அலாக்கா இங்கே சண்டிகருக்குக் கொண்டுவந்து நாலைஞ்சுநாள் ஆட்டம்போடவச்சு அனுப்பலாமேன்னு நினைச்சு கோபாலைப் பிச்சு எடுத்து ஒரு வாரம் லீவு எடுக்க வச்சேன். கடைசியில் பார்த்தால் எல்லாரும் அப்பீட் ஆகிட்டாங்க. கிடைச்ச லீவை விடவேண்டாமேன்னு சின்னதா ஒரு பயணம்.\nநாங்க இந்தியாவில் இருக்கும் சமயத்தில் மகர்களின் கல்யாணம் வச்சுக்கறதா தோழிக்கு ஒரு நேர்த்திக்கடன் இருந்துருக்கு:-)))) அதை நிறைவேற்றுன மகிழ்ச்சி அவுங்க முகத்தில்\nமணமக்கள் நல்லா இருக்கணும். ஆசிகளை அள்ளி வழங்குவோம்\nLabels: அனுபவம் டில்லி தில்லி Delhi\nவீட்டிலிருந்து காலை ஒன்பதரைக்குக் கிளம்பி, ஏறக்கொறைய ரெண்டு மணி நேரமா தில்லி போகும் ஹைவேயில் போய்க்கிட்டு இருக்கோம். மாலையில் வேற எதுவும் முக்கிய நிகழ்ச்சியா வச்சுக்கலை. தில்லி போக்குவரத்து நெரிசலில், சொன்னா சொன்ன நேரத்துக்குப் போய்ச்சேர முடியாது. நமக்காக எல்லோரும் காத்திருப்பதில் எனக்கு சம்மதமில்லை. இங்கே வந்த நாள் முதலாய் நேரத்துக்கு ஒரு மதிப்பும் இல்லைன்றது நல்லாவே புரிஞ்சு போச்சு.\nசட்னு மனசுலே தோணியதைச் சொல்லலாமேன்னு இவரைப் பார்த்தால்.....'ஏம்மா.....குருக்ஷேத்ரத்தில் என்னவோ ஒரு இடம் பார்க்கணுமுன்னு சொன்னியே. அங்கே போயிட்டுப் போகலாமா\nமற்ற இடங்கள் பற்றிய விவரங்கள் இங்கே. அப்படியே நூல் பிடிச்சுப்போங்க ஒரு நாலு பதிவுகளுக்கு:-)))))\nஇந்த முப்பத்து ஆறரை வருசத்தில் ' நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்' நாடகம் பலமுறை அரங்கேறி இருக்கு (அப்படி ஒரு ட்ரெய்னிங்\nஎடு ரைட் டர்ன். ப்ரம்ம ஸரோவர் வேண்டாம், நேரா ஜ்யோதீஸர் தீர்த்தம் போயிடலாமுன்னு எங்கேயும் திரும்பாம ஸ்டேட் ஹைவே 6 இல் நேராப் போறோம். ஒரு பத்துப்பனிரெண்டு கிலோமீட்டர்தான் போகணும். ஆனால் பதினைஞ்சு நிமிசமாப் போறோம்.... தகவல் பலகை ஒன்னும் காணோம். கண்ணில்பட்ட பெட்ரோல் பங்குலே விசாரிச்சால்..... வழியைத் தவறவிட்டுட்டோமாம். ஒன்னரைக்கிலோமீட்டர் வந்தவழியே போய் இடதுபக்கம் திரும்பணுமாம். (சரியாப் பனிரெண்டு கிலோ மீட்டர் தூரம்)\nஅதே போலத் திரும்பி வரும்போது தகவல் பலகை கண்ணுலே பட்டது. ஏம்ப்பா..... அந்த ரோடிலேயும் ஒன்னு வச்சுருக்கலாமுல்லே உள்ளே திரும்பி ஒரு 300 மீட்டர் போனால் ஜ்யோதீஸர் வந்துருது. ஆரவாரமே இல்லாத அடக்கமான இடம். கணக்கிலடங்காத எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பா வந்துருக்கும் 'கீதை' பிறந்த இடம். முதல் முதலில் 1785லே சார்லஸ் வில்ஸன் என்றவர் ஆங்கிலத்துலே மொழி பெயர்த்துருக்கார். அப்புறம் ஜெர்மன், க்ரீக்ன்னு .....உலக மொழிகளிலும், உள்நாட்டு மொழிகளிலும் எக்கச்சக்கமா போயிருக்கு.\nஉற்றார் உறவினர், எதிரிகளா ஒரு பக்கம் நிற்கும்போது அவர்களுடன் போர் செய்யப் பார்த்தன் தயங்குன இடம். 'சண்டைன்னு வந்தபிறகு சாக்குபோக்கெல்லாம் சொல்லப்பிடாது. தர்மம் எதுன்னு சொல்றேன் கேட்டுக்கோ'ன்னு அவன் சாரதி ஒன் டு ஒன் பேஸிஸ்ஸா பகவத் கீதையைச் சொல்ல..... ஸைலண்ட்டா கொடியில் நின்ன நேயுடு கவனிச்சுக் கேட்டுருக்கார். ஒரே ஒரு விட்னஸ் நடந்ததாகச் சொல்லப்பட்டக் காலம் கி.மு. 3137 நடந்ததாகச் சொல்லப்பட்டக் காலம் கி.மு. 3137 'எண்ணி'ச் சொன்ன மாதிரி சரியா பதினெட்டு அத்தியாயம். 700 ஸ்லோகம். யுத்தபூமியில் நின்னுகிட்டு இவ்வளவும் சொல்ல நேரம் இருந்துச்சா 'எண்ணி'ச் சொன்ன மாதிரி சரியா பதினெட்டு அத்தியாயம். 700 ஸ்லோகம். யுத்தபூமியில் நின்னுகிட்டு இவ்வளவும் சொல்ல நேரம் இருந்துச்சா (நிறைய இடைச்செருகல்கள் வந்துருச்சுன்னு சிலர் சொல்றாங்க)\nஇரும்புக் கம்பிகள் வேலி போட்ட முற்றத்தில் சின்னதா ஒரு பளிங்கு முன்மண்டபம். அஞ்சாறு படிகள் ஏறிப்போனால் ரெண்டு பக்கமும் குடைபோல் விரிஞ்சு நிழல்தரும் ஆலமரங்கள் பக்கத்துக்கு ஒன்னு. கண்ணுக்கு எதிரில் பளிங்குப்படிகள் வச்ச திருக்குளம். ஜ்யோதீஸர் தீர்த்தம். விசாலமான உள் முற்றம். வலதுபக்கம் கட்டிடத்தில் சின்னச்சின்னதா கண்ணாடி போட்டச் சந்நிதிகள். கண்ணாடியில் மேல்புறமா கண் வச்சுப் பார்க்கும் அளவில் சின்னதா அரைவட்டமா வெட்டி() வச்சுருக்காங்க. கேமெராக் கண்ணுக்கு அது போதும்தான்.\nத்ருதராஷ்ட்ரர் & சஞ்சயன், த்ரோணர் & துரியோதனன் ( முதல்முறையா துரியோதனன் சிலையைப் பார்த்தேன்) சூரியபகவான், கிருஷ்ணன் இருவரையும் வணங்கும் அர்ஜுனன், பீஷ்மரும் பீமனும், அம்புப் படுக்கையில் பீஷ்மர்,அருகிலே அர்ஜுனன், கிருஷ்ணன் & நாரதர்,\nகிருஷ்ணனும் அர்ஜுனனும், விஸ்வரூபதரிசனம், வெண்ணெய்த் தாழியுடன் பாலகிருஷ்ணன், ஆஞ்சநேயர் இப்படி இருக்கும் வரிசைகளில் 'சட்'ன்னு ஒரு நடராசர்\nமுற்றத்தில் இருந்து இன்னும் ஒரு ஆறேழு படிகள் ஏறினால் அஞ்சாயிர வருசப் பழசான சிரஞ்சீவியா நிற்கும் ஆலமரம். ஆலமரத்தைச் சுற்றி பளிங்கு மேடை. இதுதான் கீதை உபதேசம் நடந்த இடம். மரமே சாட்சின்னு போர்டு போட்டு வச்சுருக்காங்க. மேடையில் சின்னதா ஒரு பளிங்குக்கல் மாடம்.\nஅதுலேயும் கண்ணாடி போட்டு வச்சுருக்கு. உள்ளே ரெண்டு படம், சின்னதா ரெண்டு 'பொம்மை' (க்ருஷ் & அர்ஜ்) பக்கத்துலே ரெண்டு பளிங்குப் பாதங்கள். இடதுபக்கம் பசுமை மாறாத 'நான்' வயசு மரத்தின் வயசாக இருக்க முடியாது. இந்தப் பக்கங்களில் பூஜை சாமான்களோடு மெலிசா ஒரு கயிறு சிகப்பு, வெள்ளை இல்லை ஆரஞ்சு வண்ணங்களில் கொடுக்கறாங்க. அதை அந்த மரத்தின் விழுதில் கட்டிவிட்டுருக்காங்க பக்தர்கள். யாரு தொடங்கிவச்சதோ நல்லா யானைத் துதிக்கை கனத்துலே இருக்கு. ஒரு நூலோட பருமனை வச்சுப் பார்த்தா.... அங்கே கட்டி இருப்பது ஒரு பத்துகோடி வரும்.\nநம்ம மக்கள்ஸ்க்கு பிரார்த்தனைகள், கோரிக்கைகள் எல்லாம் பெருகி வழியுது என்பதற்கு சான்று. (பீலி பெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம்.......நினைவுக்கு வருதே மரத்துக்குப் 'பெயின்' இல்லாம இருந்தால் சரி) துளசிக்கு நேரே கீதோபதேசம் சிற்பம் ஒன்னு தனியா ஷெட் மாதிரி உள்ள ஒரு மண்டபத்துலே கண்ணாடிப்பெட்டியில் வச்சுருக்காங்க.பூஜை செய்யவோ, இல்லை தட்சிணை வாங்கிக்கவோ அங்கே யாரும் இல்லை என்பது ஒரு ஆஸ்வாசம். ஒரு உண்டியல் மட்டும் இருக்கு,.\nஅந்தக் காலத்துலே இங்கே ஏராளமா ஆலமரங்கள் மட்டுமே இருந்துருக்கும்போல. இப்ப கட்டிடம் தரையெல்லாம் போட்ட பிறகும் கூட அங்கங்கே ஆலமரங்கள் நிக்குது. எல்லாம் வயசானதுகள் பழுத்த இலைகள் விழுந்து குப்பையாகாமல் இருக்க வலை கட்டி விட்டுருக்காங்க. (வெரி குட் ஐடியா)\nவெவ்வேற காலக்கட்டத்தில் மனசுக்குத் தோணியவிதம் சந்நிதிகளைக் கட்டி இருக்காங்க போல. சரஸ்வதி, கிருஷ்ணர், ஆதிசங்கரர், காளி, விஷ்ணு, துர்கா, ஹனுமான், புள்ளையார், வியாஸர் இப்படி அங்கங்கே முளைச்சு நிற்கும் சந்நிதிகள். எங்கேயும் பூஜை நடந்ததுக்கான அறிகுறிகள் இல்லை:(\nவெளியில் வந்து முன்வாசல் முற்றத்தில் இறங்குனா கம்பி வேலிக்கு அப்புறம் கடைகள். எல்லாமே சாமி சம்பந்தமுள்ள புத்தகம்தான். கோவிலைப் பார்த்து உக்கார்ந்துருக்காங்க வியாபாரிகள் எல்லாம். கம்பி வழியா வேடிக்கைப் பார்த்த கோபாலை, மத்ராஸின்னு கண்டு பிடிச்சுட்டார் வயசான கடைக்காரர். இவருக்கோ பெருமை தாங்கலை:-) தமில் மே ஹை ன்னதும் இதோன்னு மூணு புத்தகம் எடுத்துக் கொடுத்தார்.\nகுருக்ஷேத்ரத்தின் சரித்திரம், குருக்ஷேத்ரம் ஆல்பம், நான்கு புண்ணியத் தலயாத்திரை. எல்லாமே ஒரு நாப்பது அம்பது வருசப் பழசு. யாரும் பிரிச்சுக்கூடப் பார்க்கலைபோல. பழுப்பேறித் தாள்கள் ஒட்டிக் கிடக்கு. சாணித்தாளில் அச்சடிச்சது. கடைக்காரத் தாத்தாவை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்த கோபால் மூணையும் வாங்கி வண்டியில் போட்டார். கழிச்சுக் கட்டுன மகிழ்ச்சி தாத்தாவின் முகத்தில்.\nபனிரெண்டு கிலோமீட்டர் திரும்ப வந்து மெயின் ரோடில் சேர்ந்துக்கிட்டோம். வழியெல்லாம் பயங்கரக்கூட்டம். யாத்ரக்காரருக்கு புத்திமூட்டு. இதுக்கே 25 நிமிசமாச்சு:( இன்னும் ஒரு மணி நேரம் பயணிச்சு ஹவேலியில் மதியச் சாப்பாட்டுக்கு ஒரு ஸ்டாப். இது மாடர்ன் ஹவேலி. 'எல்லாம்' படு நீட். வாசலில் யானை நமக்காக மண்டிபோட்டுக் காத்திருக்கு சாப்பாடானதும் கிளம்பி தில்லி பார்டர் போய்ச்சேர வெறும் நாப்பது நிமிஷம்தான் ஆச்சு. 'காமன்வெல்த் கேமுக்கு நாங்க தயார்' ன்னு மூணுமாசம் முன்னால் வச்ச விளம்பரங்கள் பார்த்துட்டு......கல்மாடியை நினைச்சுக்கிட்டேன்.\nஇந்நேரம் ஒபாமா தில்லி வந்து சேர்ந்துட்டார். இதுவரை அடைச்சுவச்ச போக்குவரத்தெல்லாம் பீறிட்டு வெளியே வழியுது. அங்குலம் அங்குலமா நகர்ந்து கூர்காவ் போறோம். கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் டுவீலர்ஸ் எல்லாம் ப்ளாட்ஃபார்மில் ஏறிப்போகுது\nஒன்னரைமணி நேரமா ஊர்ந்து ஊர்ந்து, சகிக்கமுடியாத ஒரு தருணத்தில் ரிங் ரோடைவிட்டு இடதுபுறம் திரும்பினால்..... தென்னிந்தியர் வசிக்கும் பகுதிபோல இருக்கு. வழக்கமா குப்பை கூளங்கள் இருக்கும் தெருவை முக்கால் பாகம் அடைச்சு நிற்கும் காய்கறி இன்னபிற வண்டிகள், இதுக்கு நடுவில் ரெண்டு தென்னிந்தியக் கோவில்களின் கோபுரங்கள். எந்த ஏரியான்னே தெரியலை(: இன்னும் கொஞ்சம் அங்கே இங்கேன்னு சுத்தி கூர்காவ் சாலையைப் பிடிச்சு ஏர்போர்ட்டைக் கடந்து 20 ரூபாய் டோல் கட்டி, ஹோட்டேலைத் தேடி அறைக்குப் போனப்ப மணி எட்டு.\nகாலையில் நாலு மணிக்கு எழுப்பச் சொல்லிட்டுப் படுக்கையில் விழுந்தோம்.\nLabels: அனுபவம் குருக்ஷேத்ரா குருச்சேத்திரம் Kurushetra\nஇழப்பு 29 உயிர்கள் :(\nகூகுள் மேப் தரும் டைரக்ஷனையோ இல்லை பயண நேரத்தையோ ந...\nஒபாமா வருகையும், ஒரு டும்டும் டும்மும்.\nதிறந்த கைகளால் ஓர் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.muthukamalam.com/medicine/generalmessage/p2.html", "date_download": "2019-06-26T13:57:11Z", "digest": "sha1:P3EEF3HW552H5KNLDVW6FUTC3TB7BU25", "length": 24885, "nlines": 264, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Medicine General Message - மருத்துவத் தகவல்கள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருப்பது மாறுகண் எனப்படும்.\nசிலருக்கு மாறுகண் எப்போதும் இருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.\nமாறுகண் உடைய குழந்தைகள் பார்க்கும் போது, ஒரு கண் நேராகவும், மறு கண் உட்புறமோ, வெளிப்புறமோ, மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருக்கலாம்.\nஉரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பலுற்ற கண் என்ற நிலை உருவாகி நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும்.\n3. கண் தசைகளுக்கான நரம்பில் கோளாறு ஏற்படுதல்\n4. கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் விழித்திரை கோளாறு, கண் நரம்பு கோளாறு, புற்று நோய்க் கட்டிகள், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவற்றால் ஏற்படும் குறைவான பார்வை காயம்படுதல்\nஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருக்கலாம்.\nபிரகாசமான வெளிச்சத்தில் ஒரு கண்ணை மட்டும் மூடிப் பார்க்கக் கூடும்.\nஇரண்டு கண்களையும் இணைத்துப் பார்க்க முயற்சிக்கும் போது தலையைச் சாய்த்தோ அல்லது திருப்பியோ பார்ப்பது போன்ற அறிகுறிகளும் சில சமயங்களில் தென்படலாம்.\nசில சமயங்களில் பார்க்கும் பொருள் இரண்டாகத் தெரியலாம்.\nநிரந்தர பார்வையிழப்பைத் தவிர்க்க சிகிச்சை முறைகள்\n1. தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் ஏற்படும் மாறுகண் உள்ளவர்களுக்கு தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.\n2. கண்களுக்கு பயிற்சி: மாறுகண் இல்லாத நல்ல பார்வையுடைய கண்ணை மறைத்து, மாறுகண் உடைய கண்ணால் பார்க்க வைப்பதன் மூலம், அந்த கண்ணின் பார்வையை மேம்படுத்தலாம்.\n3. அறுவை சிகிச்சை: நல்ல கண்ணை மூடி, மாறுகண்ணால் பார்க்க வைக்கும் பயிற்சி மற்றும் தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம், பார்வை மேம்பட்ட பிறகு மாறுகண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் .\nமயக்க மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, அந்த சமயத்தில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கக் கூடாது.\nஒரே சமயத்தில் இரண்டு கண்களிலுமோ அல்லது ஒரு கண்ணில் மட்டுமோ அறுவை சிகிச்சை செய்யலாம்.\nவிழி வெண்படலத்தில், அதாவது விழிக்கோளத்தின் வெள்ளைப் பகுதியில்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும்.\nஅறுவை சிகிச்சை முடிந்த பின் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.\nஇந்த அறுவை சிகிச்சை செய்வதோடு சிகிச்சை முடிந்து விடுவதில்லை. தெளிவான பார்வையைப் பெறத் தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டியிருக்கலாம். நல்ல நிலையில் உள்ள கண்ணை மறைத்து, மாறு கண்ணால் மட்டும் பார்க்க வைக்கும் பயிற்சியை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் நீடிக்க வேண்டியிருக்கலாம்.\nமாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியல்ல. அது உங்கள் குழந்தையின் பார்வையையும் தோற்றத்தையும் பாதிக்கும்.\nசிறு குழந்தைகளுக்கு மாறுகண் இருந்தால் இரண்டு வயதிற்குள்ளேயே உரிய சிகிச்சை அளித்தால் நிரந்தரமான பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.\nகுழந்தை வளர்ந்த பிறகு, சிகிச்சை மூலம் வெளித்தோற்றத்தை மட்டுமே சரி செய்யலாம். இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியாது.\nநன்றி :- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட சிறு கைப்பிரதி\nமருத்துவம் - பொதுத் தகவல்கள் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=61996", "date_download": "2019-06-26T14:17:59Z", "digest": "sha1:QKOQJSILSXVBVXOW2OA5PJOGGFFFKPFD", "length": 12419, "nlines": 86, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nயுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி\nஇராணுவ வீரர்களின் போர்த்திறமை தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅதனை வாசிப்பதனூடாக நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுடைய எதிர்கால தலைமுறையொன்று உருவாக்கப்படுவதுடன், 30 வருட கால யுத்தத்தின் உண்மைக் தன்மை, பின்னணி மற்றும் அதற்கான காரணங்களைப் போன்ற உண்மையான விபரங்களை உலகத்தினருக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “உத்தமாச்சாரய” (வணக்கம்) நூல் வெளியீட்டு விழாவின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nமேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி போர்க் களத்தில் போராடிய இராணுவ வீரன் முதல் கட்டளை அதிகாரி, கட்டளைத் தளபதி வரையிலான அனைவரினதும் அனுபவங்கள், வாழ்க்கை முறை மற்றும் போர்த்திறமை ஆகியன பாராட்டுக்குரியவை என்றும் இன்றும் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் அவர்களது கடந்தகால அனுபவங்களை கௌரவத்தோடு நினைவுகூர்ந்து வருவதுடன். தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய விபரங்களை அவர்களோடு அழிவதற்கு உரிய தரப்பினர் இடமளிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.\nஅத்தகைய நூலொன்றினை வெளியிடுவதன் ஊடாக 30 ஆண்டு கால யுத்தத்தில் உயிர்தியாகம் செய்த சகல இராணுவ வீரர்களுக்கும் செலுத்தப்படும் மரியாதையாகும் எனத் தெரிவித்தார்.\nபரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் வாழ்க்கை வரலாறாக “உத்தமாச்சாரய” எனும் நூல் எழுதப்பட்டுள்ளது. தனது உயிரை துச்சமாக மதித்து தனது சக வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும் படையணியின் குறிக்கோளினை வெற்றிகொள்வதற்காகவும் தன்னிச்சையாக முன்வந்து, எதிரிகளுடன் போராடி வீர தீர செயல்களைப் புரிந்த இராணுவ வீரர்கள் பரமவீர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.\nஆயுதம் தாங்கிய படையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமிக்க பதக்கம் இதுவாகும் என்பதுடன்இ இதுவரையில் இலங்கையின் 11 இராணுவ அதிகாரிகளுக்கும் ஏனைய பதவி நிலைகளிலுள்ள 19 பேருக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வருடம் நினைவுகூரப்படும் சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்ததாக இலங்கை இராணுவத்தினரின் பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் வீர தீர செயல்களை எதிர்கால தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் “உத்தமாச்சாரய” (வணக்கம்) என்ற நூல் தொகுக்கப்பட்டுள்ளது.\nபரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஜனாதிபதி நூல்களை வழங்கி வைத்தார்.\nசமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சல் உறையும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.\nஇலங்கை இராணுவத்தினரால் மஹரகம அபேட்சா மருத்துவமனைக்கு வழங்கப்படும் 70 மில்லியன் ரூபாவுக்கான காசோலையினை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.\nபாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொடஇ பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள்இ முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள்இ ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள்இ இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதனிடையே சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியுடன் இணைந்தாக தாய்நாட்டுக்கு சிறப்பான சேவை ஆற்றிய பிரிகேடியர் பதவிகளை வகித்த 10 அதிகாரிகளை மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்துவதற்கும் முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_71.html", "date_download": "2019-06-26T13:51:27Z", "digest": "sha1:ISTRNCHTTP7SCETUUI7WFCCDL2FTVJIT", "length": 18702, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்வரனே காரணம்: எம்.ஏ.சுமந்திரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்வரனே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்வரனே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்\nவடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n“வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அழுல்படுத்தினாலே போதும். பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஆனால், முதலமைச்சர் விளக்கமில்லாததுபோல பாசாங்கு செய்கின்றார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905598", "date_download": "2019-06-26T14:14:35Z", "digest": "sha1:4TQLQBVV32PT4KFPGE32DKQ7L36ECZRZ", "length": 7786, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கோயிலில் இருந்த கேமராக்கள் திருட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோயிலில் இருந்த கேமராக்கள் திருட்டு\nஉளுந்தூர்பேட்டை, ஜன. 10: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கிளியூர் கிராமம். இந்த கிராமத்தில் மிகவும் பழமையான சுந்தரமகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பூஜைகள் முடித்துவிட்டு கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கோயில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது ரூ. 1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் திருடு போனது தெரியவந்தது. மேலும் கோயிலுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்களும் திருடு போனதாக தெரிகிறது.இது குறித்து கிராமத்தை சேர்ந்தவர்கள் திருநாவலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோயிலில் அடிக்கடி திருடு சம்பவங்கள் நடைபெற்று வருவது கிராமத்தில் உள்ள பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED குமரி அருகே 4 துறைமுகங்களில் தொடர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://patrikai.com/hindu-n-ram-in-nakeern-gopal-case-is-it-correct-judge-k-chandru-retirement-opinion/", "date_download": "2019-06-26T13:56:44Z", "digest": "sha1:PKV6244X7OVJRI7E54KZYNBIJPHQDXWE", "length": 22156, "nlines": 197, "source_domain": "patrikai.com", "title": "நக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா?:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»நக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nநக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nநக்கீரன் கோபால் மீதான வழக்கில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தனது கருத்துக்களை நீதிமன்றத்தில் வைத்தார்.\nசில ஊடகங்களில் ராம் வாதாடியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. பிரபல தொலைக்காட்சி நெறியாளரும், நக்கீரன் கோபாலிடம், “வழக்கு தொடுத்தவர் அல்லது குற்றச்சாட்டுக்கு ஆளானவரோ அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்பது சட்டம். தொடர்பே இல்லாத என்.ராம் நீதிமன்றத்தில் வாதாடலாமா. அவர் வழக்கறிஞரும் இல்லையே” என்று கேட்டார்.\nஇது குறித்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களிடம் கேட்டோம்.\n“நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒருவர் அவர்களிடையே புகுந்து பேச ஆரம்பித்தால் ”சம்மன் இல்லாமல் ஆஜராகிராயே” என்று கூறுவதுண்டு. நீதிமன்ற வழக்கில் யாரையேனும் விசாரிக்க வேண்டுமென்றால் அதற்காக உரிய அறிவிக்கை (ஆங்கிலத்தில் – சம்மன்) சார்வு செய்து வரவழைப்பார்கள்.\nஇதைத்தான் மனோகரா திரைப்படத்தில் சிவாஜியை மன்னர் ”நீ ஏன் அழைத்துவரப்பட்டிருக்கிறாய் என்று தெரியுமா” என்ற கேள்விக்கு சிவாஜியின் பதில் இதுவாக இருந்தது. ” நான் அழைத்துவரப்படவில்லை. இழுத்துவரப்பட்டிருக்கிறேன்”. இந்த வசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.\nநீதிமன்ற அழைப்பாணைக்குப் பிறகும் மன்றத்தில் வருகை தரவில்லையென்றால் சாட்சிகளையோ, வழக்காடிகளையோ கட்டாயமாக வரவழைப்பதற்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பார்கள்.\nநீதிமன்றத்தில் வழக்காடிகளையும், அவர்கள் தரப்பு சாட்சிகளையும் மூன்றாம் தரப்பு சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னரும் நீதிமன்றம் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் நீதிமன்றத்தின் முன்னால் வருகை தர உத்திரவிடலாம். அதேபோல் துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துக்களை நேரில் வரவழைத்து கோரி பெறலாம்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமன்றங்களிலும் உறுப்பினரில்லாத எவரும் நுழைந்து பேச முடியாது. இதற்கு விதிவிலக்காக நாடாளுமன்ற அவைகளில் அட்டர்னி ஜெனரலையும், சட்டமன்றங்களில் மாநில அட்வகேட் ஜெனரலையும் வரவழைத்து கருத்து கேட்கலாம்.\nநக்கீரன் கோபாலை விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க காவலர்கள் அல்லிக்குளம் குற்றவியல் நடுவர்மன்ற நடுவரை அணுகியபோது அந்த செய்தியைக் கேட்டறிந்த இந்து குழும தலைவர் திரு.என்.ராம் அங்கு நேரில் சென்றார். கோபால் மீது 124 பிரிவின் (இந்திய தண்டனைச் சட்டம்) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பிராசிக்யூஷன் தரப்பில் கூறப்பட்ட போது திரு.என்.ராம் தாமாகவே முன்வந்து தனது கருத்தை கேட்குமாறு கோரிக்கை விடுத்தார். திரு.என்.ராம் அவர்களின் பத்திரிகை பின்புலத்தை கேட்டுத் தெரிந்து கொண்ட குற்றவியல் நடுவர் அவரது கருத்தை கேட்டுக்கொண்டார்.\nஇவ்வழக்கில் பிரிவு 124 (இந்திய தண்டனைச் சட்டம்) பொருந்தாது என்றும் அப்படி பதிவு செய்தால் அது பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்குமென்றும் தனது கருத்தைக் கூறினார். இப்படி வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரின் கருத்தை கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறேதுமில்லை. ஒரு நீதிபதி எல்லா துறைகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எனவே தனது சந்தேகங்களை நீதிமன்றத்தின் முன்னுள்ள எவரையேனும் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், இல்லையெனில் அப்படிப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்துத் தெரிந்து கொள்வதிலும் தவறேதுமில்லை.\nநான் ஆஜராக வேண்டிய வழக்காக இல்லாவிட்டாலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்ற அடிப்படையில் நீதிபதிகள் எனது கருத்தை பல சந்தர்ப்பங்களில் கேட்டறிந்ததுண்டு. திரு.என்.ராம் பத்திரிகை துறையில் சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு என்பதாலும் தென்னிந்தியாவில் மிக முக்கியமான பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்ற முறையிலும் அவரது விருப்பத்தின் பேரில் குற்றவியல் நடுவர் கேட்டறிந்ததில் தவறேதுமில்லை. இதேபோல் நீதிமன்றங்கள் பல முறை நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு அதன் மூலம் பயனடைந்துள்ளது.\nவழக்காடிகள் உரிய வழக்கறிஞரை அமர்த்த இயலாத போதும் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றாத் தரப்பினராக இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களிலும் சிக்கலான சட்டப்பிரச்சினைகள் எழக்கூடிய வழக்குகளிலும் நீதிமன்றமே ”அமிகஸ் க்யூரி” (நீதிமன்றத்தின் நண்பர்) என்ற முறையில் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தி நீதிமன்றத்திற்கு உதவி செய்ய கேட்டுக் கொள்வதுண்டு.\nமும்பை தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப் என்ற குற்றவாளிக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கை நடத்துவதற்கு வழக்குரைஞர்கள் எவரும் முன்வராதபோது உச்சநீதிமன்றமே திரு.ராஜு ராமச்சந்திரன் என்ற மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து வாதாடும்படி கேட்டுக் கொண்டது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு வசதியில்லையென்றாலும் அவரது வழக்கை வாதாடுவதற்கு அவரது தரப்பில் இலவசமாக வழக்குரைஞரை அமைத்துக் கொடுப்பது நீதிமன்றத்தின் கடமை.\nமற்றபடி நக்கீரன் கோபால் மீதான வழக்கைப் பொறுத்தவரை இந்து என்.ராம் வாதாடவில்லை. துறைசார் அறிஞர் என்ற முறையில் அவரது கருத்தை நீதிமன்றம் கேட்டது. அது மிகச் சரியே. அதே நேரம் அவர் வாதாடினார் என்று குறிப்பிடுவது சரியல்ல” என்று விரிவாகச் சொல்லி முடித்தார் சந்துரு.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநக்கீரன் கோபால் கைதின் போது, நீதிமன்றத்தில் இந்து ராம் பேச நீதிபதி அனுமதித்தது ஏன்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நக்கீரன் கோபால் முன்ஜாமின் மனு முடித்து வைப்பு\nநக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குக்கு தடை\n : Judge K. chandru retirement) opinion, நக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து\nMore from Category : சிறப்பு செய்திகள், தமிழ் நாடு, பேட்டிகள்\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sathyanandhan.com/2018/02/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-06-26T14:53:50Z", "digest": "sha1:NCBZDWQGVVUP5LUO4W6RFO5UE7OLIKCI", "length": 7995, "nlines": 194, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா\nகலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை →\nகலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள்\nPosted on February 4, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள்\nதெருவின் ஓரத்தில், ஆனால் முறையான வாகன நிறுத்துமிடத்தில், வெளியே நாற்காலிகள் போட்டு அல்லது கையேந்தி பவன் போல சாப்பிடக் கூடிய இரண்டு உணவகங்களை நான் ஒரே நாளில் பார்த்தேன். முதல் புகைப் படத்தில் இருப்பது இந்திய ‘சாட் உணவு’ வண்டி. இரண்டாவது மெக்சிகோ வகை உணவு வண்டி. மூன்றாவதாக உள்ள புகைப்படத்தில் உள்ளதே அதிக பட்சம் நாம் அமெரிக்காவில் காண்பது. வெய்யிலுக்காக ‘ஸ்டார் பக்ஸ் ‘ போன்ற காபி விற்கும் கடைகளின் வெளியே நாம் நாற்காலிகளைக் காணலாம். அமெரிக்காவில் தெருவோர உணவுக் கடைகளுக்கு அனுமதி உண்டு என்பது எனக்கு இன்னும் வியப்பானதே.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி, பயணக் கட்டுரை and tagged அமெரிக்காவின் சாலையோர உணவுக் கடைகள், கலிபோர்னியா, கலிபோர்னியா புகைப்படங்கள், சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம், சன்னிவேல். Bookmark the permalink.\n← ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா\nகலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை →\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:49:36Z", "digest": "sha1:4HIUP5LLFZMCMLITNXGWYXBUDDHFX3XO", "length": 6927, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில் இலங்கையில் இரத்தினபுரி வரக்காகோட்ட வீதியில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் சபேஸ்வரர் என்றும், அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும்.\nஇவ்வாலயம் இரத்தினபுரி சைவபரிபாலன மகா சபையினரால் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயம் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான காலஞ்சென்ற பிரதம குருக்கள் சிவஸ்ரீ குஞ்சிபாதக் குருக்கள் தலைமையில் பாலபஸ்தானம் செய்து வைக்கப்பட்டு புனருத்தாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன். 15 ஆண்டுகளிற்குப் பின் இப்பணிகள் பூர்த்தியடைந்தன.\nஇன்று இவ்வாலயம் விநாயகர், சுப்பிரமணியர் , நடராஜர், வைரவர், நவக்கிரக 58 பரிவாரங்களுடன் உள்ள ஓர் ஆலயமாகவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்றபின்னர் முதன்முறையாக 4 ஏப்பர் 2006ஆம் அன்று சுவாமி வெளிவீதி வலம் வந்து அடியார்களிற்கு அருள்பாலித்தார்.\nஇவ்வாயத்தில் முக்கிய தினங்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.\nஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்\nஇலங்கையில் உள்ள இந்துக் கோவில்கள்\nஇலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 02:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:25:16Z", "digest": "sha1:HRW4QLATBBUMMDWHWBN34TZTC5YNKEFH", "length": 48235, "nlines": 420, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழீழ விடுதலைப் புலிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழீழ விடுதலைப் புலிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தமிழீழ விடுதலைப் புலிகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழீழ விடுதலைப் புலிகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழர் (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணக் கோட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nஈழம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவைகோ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கர் (← இணைப்புக்கள் | தொகு)\nபுலி (← இணைப்புக்கள் | தொகு)\nசு. வில்வரத்தினம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப் புலிகள் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா காந்தி (← இணைப்புக்கள் | தொகு)\nம. கோ. இராமச்சந்திரன் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nலக்சுமன் கதிர்காமர் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழம் (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ இயக்கங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வரலாற்றுக் காலக்கோடு (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2005 (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டெம்பர் 2005 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2005 (← இணைப்புக்கள் | தொகு)\nயோசப் பரராஜசிங்கம் படுகொலை (← இணைப்புக்கள் | தொகு)\nநோர்வே (← இணைப்புக்கள் | தொகு)\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nசூழ்ச்சிப் பொறி (← இணைப்புக்கள் | தொகு)\nஓமந்தை (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 1 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 5 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 11 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 19 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 25 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 4 (← இணைப்புக்கள் | தொகு)\nபொன். கணேசமூர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 9 (← இணைப்புக்கள் | தொகு)\n2002 (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 18 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 29 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 30 (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 6 (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்டு 2006 (← இணைப்புக்கள் | தொகு)\nவட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 16 (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 25 (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 23 (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 19 (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 25 (← இணைப்புக்கள் | தொகு)\nமாதங்கி அருள்பிரகாசம் (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 16 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 1 (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கயற்கண்ணி (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டு அம்மான் (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 5 (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 1 (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப்போராட்டத்தில் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 8 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமைதி காக்கும் படை (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 11 (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 7 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 12 (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 2 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 17 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 22 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 23 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 25 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 27 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று (← இணைப்புக்கள் | தொகு)\nராஜீவ் காந்தி படுகொலை (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 30 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 1 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2 (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிதா பிரதாப் (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 5 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 13 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 18 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 24 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக் கடற்படை (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டக்களப்பு ஈழநாதம் (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2 (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 5 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 14 (← இணைப்புக்கள் | தொகு)\nதுணுக்காய் (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்ரன் பாலசிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2 (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயசிக்குறு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி (← இணைப்புக்கள் | தொகு)\n2007 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 1 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 16 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 9 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கள சமரவீர (← இணைப்புக்கள் | தொகு)\nவடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பிமலைச் சண்டை (← இணைப்புக்கள் | தொகு)\nபேசாலை (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 19 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 22 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 18 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 19 (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை பூபதி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 22 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 27 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 29 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 30 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 13 (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலை 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 18 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 19 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 20 (← இணைப்புக்கள் | தொகு)\nஈழப் போர் (← இணைப்புக்கள் | தொகு)\nமே 27 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 29 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் (← இணைப்புக்கள் | தொகு)\nகொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 14 (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 15 (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 17 (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 18 (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 21 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 21 (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 24 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 24 (← இணைப்புக்கள் | தொகு)\nஜி. எல். பீரிஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 28 (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டைதீவு படைத்தளத் தாக்குதல் (← இணைப்புக்கள் | தொகு)\nஓயாத அலைகள் நடவடிக்கை 1996 (← இணைப்புக்கள் | தொகு)\nஓயாத அலைகள் இரண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 5 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 18 (← இணைப்புக்கள் | தொகு)\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 6 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 16 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 5 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 10 (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 11 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 17 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 22 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் அக்டோபர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் செப்டம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஆகஸ்ட் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூலை 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூன் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மே 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஏப்ரல் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/Intro (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 27 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 2 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் நவம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் டிசம்பர் 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ப. தமிழ்ச்செல்வன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 05, 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை இனப்பிரச்சினை (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப் புலிகளின் வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nஜனவரி 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜனவரி 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2008 (← இணைப்புக்கள் | தொகு)\n2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை இனக்கலவரங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 5 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2008 (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் பெப்ரவரி 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஆனையிறவு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மார்ச் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஏப்ரல் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மே 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலை 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல் காதர் சாகுல் அமீட் (← இணைப்புக்கள் | தொகு)\nரஞ்சன் விஜேரத்ன (← இணைப்புக்கள் | தொகு)\nகாமினி திசாநாயக்கா (← இணைப்புக்கள் | தொகு)\nலலித் அத்துலத்முதலி (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூன் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nமணிவண்ணன் (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூலை 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசா பரதராசன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2007 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஆகஸ்ட் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிமலை (சஞ்சிகை) (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் செப்டெம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசா பாலசபாபதி (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் அக்டோபர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nஜானக பெரேரா (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுராதபுரம் குண்டுவெடிப்பு, அக்டோபர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nசூரியக் கதிர் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nசெக்மேட் நடவடிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nவிடத்தல்தீவு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் நவம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழத் தேசியக்கொடி (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் டிசம்பர் 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜனவரி 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிநொச்சிப் போர் (2008–2009) (← இணைப்புக்கள் | தொகு)\nக. வே. பாலகுமாரன் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் பெப்ரவரி 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nகனடிய ஜனநாயக தமிழ்ப் பண்பாட்டு ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nபுண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மிதிவெடி (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மார்ச் 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2009 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஏப்ரல் 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மே 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை சீர் நேரம் (← இணைப்புக்கள் | தொகு)\n2010 (← இணைப்புக்கள் | தொகு)\nபழ. கோமதிநாயகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2010 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2010 (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/5 (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/அக்டோபர் (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/நவம்பர் (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஏப்ரல் (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஜூலை (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1991 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்காச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் கொலைக்களம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்) (← இணைப்புக்கள் | தொகு)\nகலா (இசைத்தொகுப்பு) (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலந்தனைப் படுகொலைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990 (← இணைப்புக்கள் | தொகு)\nபொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவராசன் (← இணைப்புக்கள் | தொகு)\nஜொனி 95 (← இணைப்புக்கள் | தொகு)\nரங்கன் 99 (← இணைப்புக்கள் | தொகு)\nநிலவன் (← இணைப்புக்கள் | தொகு)\nஈடீஎம் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் வரலாற்றுக் காலக்கோடு (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மான் 2000 (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994 (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தி ரமேஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nபிளையிங் பிஷ் (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண வானூர்தி நிலையம் (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மே 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nசி. சிவமகராஜா (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nசில்வியா கார்ட்ரைட் (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்மா ஜெகாங்கீர் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகத்து 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் செப்டம்பர் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nசுடர் ஒளி (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2015 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2015 (← இணைப்புக்கள் | தொகு)\nமாவீரர் நாள் உரை (← இணைப்புக்கள் | தொகு)\nகோபாலசாமி மகேந்திரராஜா (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் மனித உரிமைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்டிமணி (← இணைப்புக்கள் | தொகு)\nநான்காம் ஈழப்போர் (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் சயனைடு (← இணைப்புக்கள் | தொகு)\nசகாயசீலி பேதிருப்பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழம் (← இணைப்புக்கள் | தொகு)\nபருத்தித்துறை (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ இயக்கங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைச் சோனகர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Tamilpolice.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழீழம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று (← இணைப்புக்கள் | தொகு)\nயோசப் பரராஜசிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nவேலுப்பிள்ளை பிரபாகரன் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nகிளிநொச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபுலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர் (← இணைப்புக்கள் | தொகு)\nஓமந்தை (← இணைப்புக்கள் | தொகு)\nசாவகச்சேரி (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ காவல்துறை (← இணைப்புக்கள் | தொகு)\nச. பொன்னுத்துரை (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ தேசிய தொலைக்காட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இலங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இலங்கை/Intro (← இணைப்புக்கள் | தொகு)\nகிளைமோர் (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிக் சொல்ஹெய்ம் (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் விடுதலை முன்னணி (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 2006 (← இணைப்புக்கள் | தொகு)\nமாலதி படையணி (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nடக்ளஸ் தேவானந்தா (← இணைப்புக்கள் | தொகு)\nகுமுதினி படகுப் படுகொலைகள், 1985 (← இணைப்புக்கள் | தொகு)\nகறுப்பு யூலை (← இணைப்புக்கள் | தொகு)\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழ்த் திரைப்பட வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\n2001 (← இணைப்புக்கள் | தொகு)\nவான்புலிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nகேதீஸ் லோகநாதன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-26T14:30:12Z", "digest": "sha1:FHXKOVHLWZYODDETWNOMJORSYGMZXE6G", "length": 10863, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டிவீரன்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்டிவீரன்பட்டி (ஆங்கிலம்:Pattiveeranpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇந்த பேருராட்சி பட்டிவீரன்பட்டி, அழகாபுரி, எம்.ஜி.ஆர்.நகர், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியின் முக்கிய தொழில்கள் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8602 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.59 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,290 வீடுகளும், 8,602 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,059 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,064 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,060 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[2]\n↑ பட்டிவீரன்பட்டி பேரூராட்சியின் இணையதளம்\nதிண்டுக்கல் கிழக்கு வட்டம் · திண்டுக்கல் மேற்கு வட்டம் · பழனி வட்டம் · கோடைக்கானல் வட்டம் · ஒட்டன்சத்திரம் வட்டம் · வேடசந்தூர் வட்டம் · நத்தம் வட்டம் · நிலக்கோட்டை வட்டம் · ஆத்தூர் வட்டம் ·\nதிண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை ·\nஅகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு ·\nபழனி முருகன் கோவில் · பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் · வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் · அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை · ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில் · குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் · தேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில் · நத்தம் மாரியம்மன் திருக்கோயில் ·\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nகொடைக்கானல் · பேரிஜம் ஏரி · கொடைக்கானல் ஏரி · சிறுமலை · திண்டுக்கல் கோட்டை · வெள்ளி அருவி ·\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/13035941/1245997/Indian-man-Arrested-For-Assaulting-Police-Officer.vpf", "date_download": "2019-06-26T15:17:24Z", "digest": "sha1:PFU5UWJA7ECHW2JOI4QWGT4APLUH2WHM", "length": 7538, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Indian man Arrested For Assaulting Police Officer in Singapore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிங்கப்பூரில் குடிபோதையில் போலீஸ் அதிகாரியை தாக்கிய தமிழர் கைது\nசிங்கப்பூரில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, போலீஸ் அதிகாரியை தாக்கியது தொடர்பாக தமிழர் முருகேசன் ரகுபதி ராஜாவை போலீசார் கைது செய்தனர்.\nசிங்கப்பூரின் மத்திய பிராந்தியத்தில் உள்ள எவர்ஸ்டோன் நகரில் வசித்து வருபவர் முருகேசன் ரகுபதி ராஜா (வயது 25). தமிழர்.\nஇவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்றார். மதுபோதையில் இருந்த முருகேசன் ரகுபதி ராஜா, அங்கிருந்தவர்களுக்கு தொந்தரவு அளித்ததோடு மர இருக்கைகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினார்.\nஇதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், முருகேசன் ரகுபதி ராஜாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர்.\nஅப்போது அவர் ஒரு போலீஸ் அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பியதோடு, அவரது இரு கன்னத்திலும் மாறி, மாறி அறைந்தார். இதையடுத்து போலீசார் மின்சார துப்பாக்கியால் சுட்டு, மடக்கி பிடித்து கைது செய்தனர்.\nஅவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே, ஒருவரது முகத்தில் மிளகாய்பொடியை தூவி பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, போலீஸ் அதிகாரியை தாக்கியது உள்பட 10 குற்றச்சாட்டுகள் முருகேசன் ரகுபதி ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅவர் அடுத்த மாதம் 9-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் வழங்கப்படும் தெரிகிறது.\nசிங்கப்பூர் | குடிபோதை | போலீஸ் அதிகாரி தாக்குதல் | தமிழர் கைது\nரஷியாவிடம் ஆயுத கொள்முதல்: எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் - அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி\nகேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nநகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் - பாஜக எம்எல்ஏ கைது\nஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம் அளிக்க பாகிஸ்தான் திடீர் ஆதரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-16042019", "date_download": "2019-06-26T15:01:33Z", "digest": "sha1:ZOEGEBTZZEP5IFHTQTLQ6T2A6T6XYAHT", "length": 16814, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 16.04.2019 | Today rasi palan - 16.04.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 16.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n16-04-2019, சித்திரை 03, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.26 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.50 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 01.50 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். அலுவலகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்களை தவிர்க்கலாம். வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபம் தடைப்படாது. மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.\nஇன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும்.\nஇன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினை தீரும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 25.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 26.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.06.2019\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2019/05/police-launch-anti-terrorism.html", "date_download": "2019-06-26T14:52:37Z", "digest": "sha1:SPBBEUNAXMRUP3WROOI4A43QUSFJQEDY", "length": 12229, "nlines": 107, "source_domain": "www.tamilarul.net", "title": "Police launch anti-terrorism investigation after seven people injured in Lyon blast.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "https://www.tamilcnn.lk/archives/824177.html", "date_download": "2019-06-26T14:24:37Z", "digest": "sha1:GHSNZC5YJVVUEPJJ6MOHWM62AIOXRMAV", "length": 8102, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழருக்கு மஹிந்தவை ரொம்பப் பிடிக்கும்! இந்தியாவில் கூறியுள்ளார் நாமல்", "raw_content": "\nதமிழருக்கு மஹிந்தவை ரொம்பப் பிடிக்கும்\nFebruary 13th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமஹிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும், அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமஹிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் எம்.பி.அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n“ராஜபக்ச குடும்பத்துக்கு வடக்கு, கிழக்கில் தனி மரியாதை உண்டு. தமிழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த விடுதலைப்புலிகளை நாம் தோற்கடித்தோம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை மீட்டெடுத்தோம். இதனை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.\nவடக்கில் புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தில் எமக்கான ஆதரவு பெருமளவில் இருக்கின்றது.\nபோரால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ராஜபக்சவின் ஆட்சியில் அபிவிருத்தி செய்யப்பட்டது.\nஆனால், தற்போதைய ஆட்சியின்போது அந்த மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.\nஅண்மையில் கிளிநொச்சிக்கு நான் சென்றபோது அங்குள்ள மக்கள் வேதனையுடன் இதனைத் தெரிவித்தார்கள்.\nவெள்ள அனர்த்தத்தால் அண்மையில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை நாம் வழங்கினோம்.\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஒரு போரை விரும்பவில்லை. அவர்களின் மனதில் நாம் என்றும் உத்தம புருஷர்களாக இருக்கின்றோம்.\nஆனால், தமிழகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் உயிர் தப்பி சுகபோக வாழ்க்கை வாழும் புலிகள் அமைப்பினருக்கு நாம் போர்க்குற்றவாளிகளாகத் தெரிகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.\nமோடி பதவிப்பிரமாணம்; மைத்திரி நேரில் வாழ்த்து\nஏப்ரல் 21 தாக்குதல்: 1800-க்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விசாரணை\nகம்பளை ஆலயத்துக்கு சரா எம்.பி. நிதி ஒதுக்கீடு\nதீவக உதைபந்தாட்ட நிகழ்வில் சிறிதரன்\nஅரச சார்பற்ற நிறுவனத்திற்குள் படையினர் புகுந்து திடீர் சோதனை\nஅமைச்சர் ரவிக்கு எதிராக வழக்கு\n‘சுற்றுலாத்துறை சார்ந்து இயங்கும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை நிவாரணம்’\nமுஸ்லிம் தலைவர்கள் அன்று செய்த தவறை நாங்களும் செய்ய முடியாது – சிறிதரன்\nவைத்தியர் ஷாபிக்கு காலம் தாழ்த்தாத மரண தண்டனை வழங்கவேண்டும் – ஹர்ஷனி குணவர்தன\n‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு\nகம்பளை ஆலயத்துக்கு சரா எம்.பி. நிதி ஒதுக்கீடு\nதீவக உதைபந்தாட்ட நிகழ்வில் சிறிதரன்\nஅரச சார்பற்ற நிறுவனத்திற்குள் படையினர் புகுந்து திடீர் சோதனை\nஅமைச்சர் ரவிக்கு எதிராக வழக்கு\n‘சுற்றுலாத்துறை சார்ந்து இயங்கும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை நிவாரணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/coverstory/116190-does-the-picture-of-jayalalithaa-in-assembly-comes-under-violation-of-law.html", "date_download": "2019-06-26T14:12:34Z", "digest": "sha1:CDKRLJE76BXFL3DJQ7W2NCBHB3P4YQVL", "length": 25806, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "”ஜெயலலிதா படத்திறப்பு: சட்ட மன்றமா சட்ட மீறல் மன்றமா” - கேள்வி எழுப்பும் இயக்கங்கள் | Does the picture of Jayalalithaa in assembly, comes under violation of law", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:05 (12/02/2018)\n”ஜெயலலிதா படத்திறப்பு: சட்ட மன்றமா சட்ட மீறல் மன்றமா” - கேள்வி எழுப்பும் இயக்கங்கள்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், \"பீனிக்ஸ் பறவை போல் மீண்டு உயிர்த்தெழுந்தவர் ஜெயலலிதா\" எனப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவைக்கு வராமல் புறக்கணிப்பு செய்துள்ளன. ஜெயலலிதாவின் புகைப்படத் திறப்பு விழா அரசியல் களத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தால் குற்றவாளி என்று கூறப்பட்டவருடைய புகைப்படத்தை திறந்துவைத்திருப்பதா எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் 'சட்டப் பேரவை கரும்புள்ளிப் பிரசாரம்' என்ற எதிர்ப்பு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ''சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியின் புகைப்படத்தை திறந்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். தமிழக அரசின் இந்தச் செயல்பாடு எதிர்காலத்துக்குத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதன் காரணமாகவே இந்த எதிர்ப்புப் பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். குறிப்பாக\nசொத்துக்குவிப்பு வழக்கில் நான்குபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுவும் கூட்டுச்சதி செய்து இந்தக் குற்றத்தை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இதில் ஜெயலலிதா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் அவரும் குற்றவாளிதான். இந்த விவரங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்கும்போது அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, பொதுமக்களுக்கு எதுவும் தெரியாது போன்று அவருடைய புகைப்படத்தை திறந்துவைத்துள்ளது.\nவைரவிழா கண்ட பாரம்பர்யமிக்க தமிழகச் சட்டசபையில் குற்றவாளியின் புகைப்படத்தை திறந்துவைத்திருப்பது சட்டப்பேரவைக்குக் கரும்புள்ளி. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தக் கரும்புள்ளி பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், லஞ்ச-ஊழல் எதிர்ப்புப் போராளிகள் உள்ளிட்ட பலரையும் ஒருங்கிணைத்து, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் பதிவையும் வெளியிட்டு வருகிறோம். வெள்ளைப் பின்புலம் கொண்ட பக்கத்தில் கருப்புப்புள்ளி இருப்பது போன்ற படத்தை கவர் பிக்சராகவும், புரொஃபைல் பிக்சராகவும் வைக்க அறிவுறுத்தியுள்ளோம்.\nஆளுங்கட்சிக்கு எங்களுடைய இயக்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கை. இப்படித்தான் முதலமைச்சர்கள் இருக்கவேண்டும் என நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்த ஓமந்தூரார், காமராஜர் போன்றவர்களின் படத்தை ஒருபக்கம் வைத்துவிட்டு, மற்றொருபக்கம் இவரைப் போன்று பொதுச்சொத்தை கொள்ளையடித்து, சர்வாதிகார ஆட்சி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக ஜெயலலிதா படத்தையும் மாட்டிவையுங்கள் என்பதே அந்தக் கோரிக்கையாகும். பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மாட்டி வைக்கும் புகைப்படத்தில் இருப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள் அல்ல... எனவே சட்டமன்றத்தில் தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மாட்டிவைக்கும் புகைப்படமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்'' என்றார் .\nஇது குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த சுபத்ரா பேசுகையில், \" ஊழல் செய்து விட்டு சிறை சென்ற குற்றவாளியின் புகைப்படத்தைத் திறந்துவைத்துள்ள தமிழக அரசின் செயல்பாடு எத்தகையது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பாரம்பர்ய மதிப்புமிக்க சட்டமன்றத்துக்கு நாம் அனுப்பிய பிரதிநிதிகள் எப்படிப்பட்டவர்கள் அவர்களுடைய தர்மம் என்ன... என்பதை இன்றைய நிகழ்வு உணர வைத்துள்ளது. ஜெயலலிதாவின் புகைப்படத்தைத் திறந்துவைத்து சட்டமன்றத்தில் குற்றவாளியின் புகழ்பாடத் தொடங்கியுள்ளதால், இனி சட்டமன்றம் என்று அழைப்பதைவிட குற்றமன்றம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் திருடர்கள், கொலைகாரர்கள் படங்கள் இருப்பதுபோன்று தற்போது சட்டசபையில் ஊழல்வாதியின் படத்தை வைத்துள்ளனர். அந்தப் படத்துக்குக் கீழே திருடர்கள் ஜாக்கிரதை எனப் போட்டுவிட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும்'' என்றார் கோபமாக.\n\" மீனாட்சி கோயில் நிர்வாகம் சரியில்லை..நாங்கள் என்ன செய்வோம்'' - வியாபாரிகள் சங்கம் கேள்வி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவ\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/topics/forest", "date_download": "2019-06-26T13:53:29Z", "digest": "sha1:CDMDC4MKWZUNLRI47UUESOKSL6OJB723", "length": 15256, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`நம்ம விருதுநகரை நல்லா தெரிஞ்சுப்போம்' - பள்ளி மாணவர்களுக்கு சுட்டி விகடன் நடத்தும் தேர்வு\n`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆவேசம்\n’ - அதிகாரியை அடிவெளுத்த பி.ஜே.பி எம்.எல்.ஏ\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்\nஆக்ரோஷமாக ஓடிவந்த ஒற்றைக் காட்டு யானை - நொடிப்பொழுதில் தப்பிய ஊட்டி முதியவர் #ViralVideo\nஉயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய யானை\n``புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை” - சுருக்குக் கம்பி காயத்துடன் சுற்றிவரும் காட்டுமாடு\nஅட்டை நம்மை கடிக்கும்போது அப்படியே பிடுங்கக்கூடாது... ஏன்\nசத்தியமங்கலம் காட்டுக்குள்ள இனி `ஃப்ரீயாக’ போக முடியாது - வனத்துறையினரின் புதுத் திட்டம்\nநிபா வைரஸுக்குப் பழந்தின்னி வௌவால்களை பழி சொல்வது சரியா\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n'பழைய திருப்பூரை இப்படித்தான் மீட்கப்போகிறோம்' 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்\n - முதுமலையில் பெண் யானை இறப்பில் மர்மம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:24:03Z", "digest": "sha1:GQTBYXRKGKEMXVLXIUSUYRXI24V5A3F7", "length": 4879, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மர்மமாக மாயம் | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மர்மமாக மாயம்\nபெண்ணொருவர் மர்மமாக மாயம் - பொலிசாரும் குடுபத்தினரும் தேடி வலைவீச்சு\nஅம்பாறை திருக்கோவில் பொலிஸ்பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான மு...\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1284141.html", "date_download": "2019-06-26T14:32:15Z", "digest": "sha1:LE4B4VN4745J4PEFIVSCKQE527ERDQIE", "length": 16238, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "நாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு இடமளிக்க முடியாது!! – Athirady News ;", "raw_content": "\nநாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு இடமளிக்க முடியாது\nநாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு இடமளிக்க முடியாது\nநாட்டை கட்டியெழுப்பும் வாவி, விவசாய, கல்வி மற்றும் கைத்தொழில் புரட்சியை முடக்கி மேலெழுந்துள்ள குரோத மற்றும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான புரட்சியின் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்னடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇந்த தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியையும் மக்களின் தேவைகளையும் முடக்குவதற்கு இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். “வளமான தேசத்தின் வாவி புரட்சி” எல்லங்கா குளக்கட்டமைப்பின் புனர்நிர்மாண செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு (12) பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\n3000 ஏக்கர் வயல் காணிகளில் அறுவடையை மேற்கொள்வதுடன், ஆயிரக் கணக்கான குடும்பங்களின் விவசாய பொருளாதாரத்தை வலுவூட்டுவதுடன் இணைந்ததாக 21 வாவிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் குருணாகல் மேற்கு பண்டுவஸ்நுவர கொட்ட கிம்புலாகட அணைக்கட்டிற்கு அருகில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதியினால் வாவி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சுற்றாடலையும் வன வளத்தையும் பாதுகாப்பதற்கு தான் பல தீர்மானங்களை மேற்கொண்டது நாட்டு மக்களின் சுவாசிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகும் எனக் குறிப்பிட்டார். அந்த தீர்மானங்கள் குறித்து தன்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், வன வளத்தை பாதுகாக்கும் பொறுப்பு எவரும் தட்டிக்கழிக்க முடியாத ஒரு பொறுப்பாக இன்று மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nநாடு என்ற வகையில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் விவசாயத்துறையை கட்டியெழுப்பி விவசாயிகளை வலுவூட்ட வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வாவிகள் மற்றும் விவசாயத்துறைக்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றி கடந்தகால கீர்த்தியை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nவிவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணக்கடன் பெற்றுக்கொடுத்தல், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய குளப் பிரதேசங்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் 200 கருங்காலி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்குதல். உணவுற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சில நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஆர்.டி.ஜனித் மதுசங்க என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படமும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, சாந்த பண்டார, தர்மசிறி தசநாயக்க, அத்துல விஜேசிங்க, எஸ்பி.நாவின்ன உள்ளிட்ட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nசிங்கப்பூரில் குடிபோதையில் போலீஸ் அதிகாரியை தாக்கிய தமிழர் கைது..\nகொழும்பு – கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய…\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..\nபயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை\nபிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்..\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sinthikkavum.com/2011/09/blog-post_8330.html", "date_download": "2019-06-26T14:41:15Z", "digest": "sha1:THU3RRX5XWUJ6XORMMVELWJDBVTSR46H", "length": 39500, "nlines": 164, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: உண்மையை உணர்வோம்!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nSEP 08, டெல்லி: மீண்டும் டெல்லி கோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு அநியாமாக அப்பாவிகள் பலி. சிறிதுகாலம் அடங்கி இருந்த குண்டு வெடிப்பு தொடர்கிறது. காரணம் என்ன\nஇதுவரை நடந்த எல்லா குண்டு வெடிப்புகளும் நடத்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களை இதுவரை கைது செய்யாமல் ஹசறேவுக்கு பின்னால் போனதன் விளைவு அப்பாவிகள் மீண்டும் பலி.\nகுண்டு வெடித்தவுடன் ஒரு மதத்துடன் அதை உடனே இணைக்கும் நமது உளவுத்துறை, ஏன் குற்றவாளிகளின் பக்கம் திரும்ப மறுக்கிறார்கள் திரும்பியால் மாவீரன் கர்கறேயின் கதி வந்துவிடும் என்ற பயத்தினால் என்றால் இவர்கள் ஏன் திரும்பியால் மாவீரன் கர்கறேயின் கதி வந்துவிடும் என்ற பயத்தினால் என்றால் இவர்கள் ஏன் இந்த வேலைக்கு வந்தார்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு சாதகமாக நடந்து நாட்டை சுடுகாடு ஆக்குவதற்காகவா\nதைரியம் இல்லாத காங்கிரஸ் அரசே இவர்களை பற்றி சரியாக சரியாக தெரிந்த திக் விஜய் சிங்கிடம் உள்துறையை கொடு இவர்களை பற்றி சரியாக சரியாக தெரிந்த திக் விஜய் சிங்கிடம் உள்துறையை கொடு அப்போது தெரியும் இந்தியாவை அழிக்க நினைப்பவர்கள் யார் என்று அப்போது தெரியும் இந்தியாவை அழிக்க நினைப்பவர்கள் யார் என்று குண்டு வெடித்தால் முஸ்லிம் இயக்கம் தான் என்று ஒரு வரியில் பொய் சொல்வதற்கு எதற்கு உளவுத்துறை குண்டு வெடித்தால் முஸ்லிம் இயக்கம் தான் என்று ஒரு வரியில் பொய் சொல்வதற்கு எதற்கு உளவுத்துறை\n நம் நாட்டில் தான் உண்மையே பொய்யாக்குவதற்கும் பொய்யே உண்மை ஆக்குவதற்கும் பணம் வாங்கிகொண்டு வார்த்தை விபச்சாரம் செய்வதற்கு பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் நிறையவே உள்ளபோது தனியாக பொய்சொல்ல மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு பொய் சொல்லுவதற்கு என்று தனியாக ஒரு துறை தேவையா\nமுடிந்தால் ராமகோபாலனையும் டில்லிக்கு போய் குண்டுவைத்துவிட்டு வந்தான் என்று இழுத்துவிட முடிந்தால் நல்லது. நமது தோழமை திராவிட கழகத்தினரும் இந்துத்துவா மீது பழி போட்டு கட்டுரை எழுதியுள்ளார்கள்.\nராஜபக்ஷேவுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்று இழுத்துவிட்டால் ஈழத்தமிழர்களின் ஆதரவையும் பெற்றுவிடலாம்.\nஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட மீண்டும் டில்லி குண்டு.\nநாம் சந்தேகப்பட்டது \"பாதி\" சரி என்பதுபோல, \"நிகழ்வுகள்\" நடந்துகொண்டு இருக்கின்றன. இப்போது \"ஹுஜி\" என்ற அமைப்பு \"தான்தான்\" வெடிகுண்டு வைத்ததாக ஒரு \"இணைய அஞ்சல் \" அனுப்பியுள்ளது என்பது ஒரு செய்தி.\nஇந்த \"ஹுஜி\" அமைப்பு பற்றி நாம் சொல்லியாக வேண்டும்.\nசமீப காலமாக இந்தியாவிற்குள் நடந்த ஒவ்வொரு வெடிகுண்டு விபத்திலும், \"கண்டுபிடிக்க முடியவில்லை\" என்ற நிலையில் இந்திய உளவுத்துறைகள் கடைசியாக அது \"ஹுஜி\" அமைப்பின் \"கைவரிசை\" என்று குற்றம் சாட்டியுள்ளனர்.\nஅந்த \"ஹுஜி\" அமைப்பு என்பது, \"ஹர்கத் -உள்-ஜிஹாத் இஸ்லாமி\"என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த அமைப்பு \"வந்காலதேசதிளிருந்து\" இயங்குகிறது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.\nஇப்போது வங்காள தேசம் சென்ற தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், \"கைதிகள் பரிமாற்றம்\" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதால் \"பதிக்கப்படும்: இயக்கங்கள் இந்த வெடிகுண்டை வைத்திருப்பார்களா என்ற கேள்வியை நாம் சென்ற \"கட்டுரையில்\" கேட்டிருந்தோம்.\nஅதையொட்டியே அந்த \"இணைய அஞ்சல்\" அனுப்பியவர்களும் சிந்தித்ததால் அப்படி கூறிவிட்டனரா\nஅடுத்து \"அப்சல்குரு\"வின் மரண தண்டனையை \"ஆயுள் தண்டனையாக \" குறைக்க \"காஷ்மீர்\" சட்டமன்றம் \"தயார்\" ஆகிவரும் நேரத்தில் இந்த \"குண்டு\" வெடித்துள்ளதால், மரண தண்டனையை \"அப்சல் குருவிற்கு\" கொடுக்க விரும்பும் \"சக்திகள்\" இதை செய்திருக்கலாம் என்று நாம் சந்தேகப்பட்டோம்.\nஇப்போது அந்த \"இணைய அஞ்சல்\" உண்மையானதுதானா என்று சோதிப்பதாக இந்தியாவின் \"தேசிய ஆய்வு அஜென்சி \" தலைவர் கூறியுள்ளார்.\nஆர்.எஸ்.எஸ். இந்த \"குண்டை\" வைத்திருந்தால் அதை \" ஒரு பயங்கரவாதி\" அமைப்பு மேல் போடும் தந்திரத்தை \"காங்கிரஸ் சார்பு தேசிய ஆய்வு அஜென்சி\" ஏற்றுக் கொள்ளாது.\nஅதுமட்டுமின்றி, எல்லோருக்கும் தெரிந்த பகுத்தறிவு என்ன என்றால், \"அப்சல்குரு\" வை \"தூக்கில் போட\" விரும்பும் சக்திகதான் இந்த \"குண்டை\" வைத்திருக்க முடியும்.\nஅதுவும் வந்த \"இணைய அஞ்சல்\" அப்சல் குருவை தூகிலட்க் கூடாது என்று எழுதியுள்ளதாம்.\nஇந்த \"கதையை\" நம்ப இதியாவில் மட்டுமல்ல உலகிலேயே எந்த \"முட்டாளும்\" இன்று இல்லை.\nஏன் என்றால் அப்சல்குருவிற்கு \"தூக்கு\" போடுவதை எதிர்த்து, சட்ட ரீதியாக, ஜனநாயக ரீதியாக ஒரு \"சட்டமன்றமே\" தயார் ஆகும்போது, யாராவது \"மடையன்\" ஒரு குண்டை போட்டு அதை கெடுப்பானா\nஅதனால் \"ஹுஜி\" ஒன்று இயங்குவது உண்மையாக் ஐருந்தாலும் அவர்கள் இந்த \"நேரத்தில்\" இந்த குண்டை போட மாட்டார்கள்.\nஅடுத்து மாட்டுபவர் \"சிதம்பரம்\"தான். அவர்தான் \"உள்துறை\". அவரது உளவுத்துறை என்ன வேலை செய்கிறது என்று கேள்வி எழுந்துள்ளது.\nஅவர் தனது \"உள்துறை டில்லி காவலருக்கு: ஜூலையிலேயே இப்படி ஒன்று நடக்கும் என்று கூறிவிட்டோம் என்கிறது.\nஅப்படியானால் இவர்களுக்கு தெரிந்துதான் இது நடந்துள்ளது.\nஅப்புறமும் ஏன் 'டில்லி இயற்நீதிமன்றத்தில்\" கேமராக்கள் பொருத்தவில்லை என்று அடுத்த் அக்கேள்வி எழுந்துள்ளது.\nஅதற்கு பொறுத்த திட்டம் உள்ளது என்கிறார்கள்.\nஅப்படியானால் \"இந்த குண்டை\" முதலில் வைத்துவிட்டு, பிறகு \"கெமர\" பொருத்தலாம் என்று இருந்தார்களா\nஅப்படியானால் \"குண்டு\" வைத்தவர்களும், \"கேமரா\" போருத்தவேண்டியவர்களும் ஒரே இடதிளிருந்துய் \"இயங்குபவர்களா\nஅப்பப்பா, இந்தியாவினின் \"தலைநகரில்\" உள்ள \"பார்ப்பனீய சக்திகளின்\" கைவண்ணங்கள் \"தலையை\" சுற்றுகின்றன.\nபயங்கரவாதத்தின் ஆணிவேரான வேலை வாய்ப்பின்மை, பணப் புழக்கம் இல்லாமை, விலை வாசி உயர்வு, சமுதாய இடைவெளி.. ஆகியவை ஒழியும் வரை ஆங்காங்கே வெடித்து கொண்டு தான் இருக்கும்.. அது வரை ஆட்சி செய்பவர்களும் ஒற்றுமையை பிளவு செய்ய இது போல் ஏதாவது கூறி கொண்டே தான் இருப்பார்கள்.. செத்தவர்கள் இந்துக்களா முஸ்லிம்களா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் செத்தது மனிதர்கள் சாகடித்தது மிருகங்கள் என்று தான் விடை வரும் என்று கூறிக் கொள்கிறேன்..\nசரியா சொன்னீங்கள் எந்த குற்றம் நடந்தாலும் உடனே அதை முஸ்லிம்கள் தலையில் போடுவதிலேயே இருகிறார்கள் உளவுத்துறையும், மற்றும் உள்ள துறையினரும் இந்த நிலை மாறவேண்டும். இந்தியா, பாகிஸ்தான், சீன இவர்களுக்கிடையே ஒரு பனி போர் நிலவுகிறது. இந்தியாவும் தேவையில்லாமல் அந்நிய நாட்டு விசயங்களில் தலையை நுழைத்து தன்னை தாதாவாக காட்டி கொள்கிறது. அதற்க்கு அவர்களும் பதிலுக்கு சில நடவடிக்கைகளை பண்ணுகிறார்கள். இதில் இந்திய முஸ்லிம்களின் தலை உருளுகிறது. இந்தியாவில் இருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தும் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் இளஞ்சர்கள் செய்யும் பதில் நடவடிக்கைகளை மட்டும் ஹிந்துத்துவா நாளேடுகள் ஊதி பெரிதாக்குகின்றன. இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு பங்களாதேஷ் என்று ஒரு நாடு பிரிய காரணமாக அமைந்தது அதனால் அவர்களும் பதில் நடவடிக்கைகளை இந்தியா மீது செய்கிறார்கள். இது போல் இலங்கை விசயத்தில் தலையை நுழைத்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கெடுத்து, தமிழர்களை கொன்று குவித்தார்கள். ஆப்கானிதானில் இருக்கும் ஆயுததாரிகளுக்கு ஆயுதம் கொடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக கலகம் பண்ண தூண்டியது இந்தியா, இப்படி ஒரு குழப்பத்தின் அழிவின் பயன் அடுத்து நாம் சந்திக்கும் அழிவுகளும், குழப்பங்களும். நன்றி - தமிழன்.\nசரியா சொன்னீங்கள் சூரிய ஜீவா மதத்தை வைத்து மனிதர்களை பிரித்து மனித நேயத்தை கொன்று விட்டார்கள்.\nசரியா சொன்னீங்கள் சூரிய ஜீவா மொத்தத்தில் சாவது மனிதர்கள் அத்தோடு மனித நேயமும்தான். எல்லோரும் ஓர்தாய் மக்கள். எல்லோர் உடம்பிலும் ஓடுவது ஒரே ரேத்தம்தான். நல்ல கருத்தை பதிந்த தோழரே நன்றி மொத்தத்தில் சாவது மனிதர்கள் அத்தோடு மனித நேயமும்தான். எல்லோரும் ஓர்தாய் மக்கள். எல்லோர் உடம்பிலும் ஓடுவது ஒரே ரேத்தம்தான். நல்ல கருத்தை பதிந்த தோழரே நன்றி\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nஇந்தியாவின் சொர்க்கபுரியாக மாறும் கூடங்குளம்\nமாட்டுக்கறி சாப்பிட்ட தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்\nமூலிகை மருந்து தயாரிப்பில் மோசடி\nதமிழர்களின் வாழ்வியல் மேற்கு தொடர்ச்சி மலை\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
{"url": "http://www.visarnews.com/2018/12/blog-post_3.html", "date_download": "2019-06-26T14:06:57Z", "digest": "sha1:R726WPJRJYPBNIC3YVT4JBWK3RVGZQS7", "length": 5472, "nlines": 187, "source_domain": "www.visarnews.com", "title": "லைகா பார்ட்டி, வராத ரஜினி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » லைகா பார்ட்டி, வராத ரஜினி\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n2.0 ரிலீஸ் தினத்தன்றுதான் லைகா நிறுவனரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் மனைவியின் பிறந்த நாள்.\nஇதற்கான பிரமாண்ட பார்ட்டி ஒன்றை சென்னையிலிருக்கும் நட்சத்திர ஓட்டலில் வைத்திருந்தார் அவர். 2.0 விஷயத்தில் இயக்குனர் ஷங்கர் மீது சுபாஷ்கரன் வருத்தத்தில் இருப்பதாக கேள்வி. ஆனால் இந்த நிகழ்வில் முதலில் மதிக்கப்பட்டவர் ஷங்கர்தானாம். இந்த ஒரு நல்ல பார்ட்டியில் 2.0 நாயகன் ரஜினி கலந்து கொள்ளவில்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவற்றப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905599", "date_download": "2019-06-26T14:08:57Z", "digest": "sha1:HSIJW465ZR4VTGS3G3CUHWZ4PFYCPOE6", "length": 6604, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nசங்கராபுரம், ஜன. 10: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மின் வாரிய ஊழியர்கள் வேலை 2நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சங்கராபுரம் துணை மின்நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் திட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு, தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் அந்த பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.\nவிழுப்புரம் அருகே வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு: இளைஞர்கள் போராட்டம்\nமணல் கடத்திய 2 பேர் கைது\nமின்மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்\nவிழுப்புரத்தில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம்\nபிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்\nமதுபாட்டில் விற்ற வாலிபர் கைது\nகுடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது\nவானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த கோரிக்கை\nஅரசு கலைக்கல்லூரியில் கூடுதல் வகுப்பறை திறப்பு\n× RELATED விழுப்புரம் அருகே வேடம்பட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://news.lankasri.com/swiss/03/106241?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:10:11Z", "digest": "sha1:HYTMITTFMASQF4YXUIS6COZ422JWO75I", "length": 8149, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரு கோடி ரூபாய் பொருட்களை அள்ளிச்சென்ற திருடர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு கோடி ரூபாய் பொருட்களை அள்ளிச்சென்ற திருடர்கள்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் நுழைந்த இரண்டு திருடர்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸின் Zug நகருக்கு அருகில் உள்ள Neustadt என்ற பகுதியில் தான் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nநேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் கதவை உடைத்துக்கொண்டு இரண்டு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.\nஉள்ளே நுழைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கண் கண்ணாடிகளை அள்ளி பெட்டியில் வைத்துள்ளனர்.\nஇந்த காட்சிகள் அனைந்தும் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. பொருட்களை திருடிய அவர்கள் எவ்வித இடையூறும் இன்றி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.\nஇக்கொள்ளை சம்பவம் தொடர்பாக கடை நிறுவனர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nமேலும், கொள்ளையர்கள் திருடிச்சென்ற கண்ணாடிகளின் மதிப்பு 70,000 பிராங்க்(1,03,84,635 இலங்கை ரூபாய்) இருக்கும் என்றும், இது தவிர்த்து கடை கண்ணாடிகளை உடைத்ததன் மூலம் கூடுதல் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.\nமுகமூடி அணிந்திருந்த இரு கொள்ளையர்கள் தொடர்பாக அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/55388", "date_download": "2019-06-26T14:17:20Z", "digest": "sha1:JZV6IZW2CIZS6AEFLIPZLRBHW2OQ6DGT", "length": 40003, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘சத்ரு’ – பவா செல்லதுரை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85\n – சிறில் அலெக்ஸ் »\n‘சத்ரு’ – பவா செல்லதுரை\nஅவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள். அவன் பிடிவாதமாய் கண் திறக்காமல் கிடந்தான். ரங்கநாயகி கிழவி தனி பொம்பளையாகப் பதட்டமின்றி, அவன் தலைமாட்டில் குந்தி இருந்தாள். அவள் நிதானத்தில் அனுபவம் குழைந்திருந்தது. மௌனம் எல்லோருக்கும் பொதுவாய் பரவி இருந்தது. அந்தச் சின்னக் குடிசை,தன் உள்புறம் இதற்குமேல் ஒரு ஆளையும் அனுமதிக்காத பிடிவாதத்தில் இருந்தது.\nவீட்டின் வெளி, புதுசாய் பார்க்கிற எவரையும் பயமுறுத்தும். நீண்டு, அகன்று பரவியிருந்த பாறைகளின் நடுவில் ஒதுங்கியிருந்த மண்திட்டில், கட்டியிருந்த கூரையின் வெளியில் நின்று பார்த்தால்,கருங்கோடுகளாய் நீண்டு கொண்டே போகும் பனைமரக்கறுப்பும், பீவேலி மரங்களும்,கோடையின் உக்கிரத்தை அநாவசியமாக்கும் எட்டிமர இலைகளும்,இந்த அத்துவான வெளியில் வீடு கட்டின பாண்டு ஒட்டனின் தைர்யத்திற்குத் துணைநின்றன.\nஅவன் உளியின் நுனிகளால் பாறைகளைத் தின்று குழிகளாக்கினான். விழுந்த குழிகளில் கறுப்பு மருந்தேற்றி, திரி பற்ற வைக்கும் லாவகம் வேறெங்கும் காணமுடியாதது. வெடித்துச் சிதறிய கற்பாறைகளின் கங்குகளுக்கும், எழும் கரும்புகைக்கும் நடுவில் ஒவ்வொரு முறையும் வெற்றியோடு வெளிப்படுவான். பெரும் சத்தங்களையும், கலவரத்தையும், குழப்பத்தையும், ஆபத்துகளையும் சதா சந்தித்த அவன் விநாடிகள், நேர் எதிராக நிரந்தர அமைதி தேங்கி நின்ற இந்தப் பாறையின் நடுவில் நிலைத்திருந்தது கூரையாய்.\nகண்டாச்சிபுரம், மேவாலைப்பக்கம் என கல் உடைக்கப் போனவன் இன்னமும் திரும்பவில்லை. காலம் அவனை மீட்டுத்தரும் நம்பிக்கையை இழந்து, அவன் பாறைகளுக்கு நடுவில் மறைந்தது குறித்து அவ்வப்போது எழுந்த கதைகளையும் ஈவிரக்கமின்றி அழித்து, அவன் பாறை வீட்டை ஊராருக்குப் பொதுவாக்கி தந்திருந்தது.\nதேங்கிநின்ற மௌனத்தின் மீது, சிறு கல்லெறிந்து பார்க்கவும், அவர்களுக்குள் தயக்கம் இருந்தது. அவனுக்கு எதிரான உரையாடல் மொழி இழந்து, நடுக்கத்திலிருந்தது. இத்தனைக்கும் அவன் கண் திறக்காமலேதான் கிடந்தான். பின்கதவு சத்தமின்றித் திறக்கப்பட்டு, அவர்களைப் பின்புறப் பாறையில் உட்கார்த்தி வைத்தது.\nசைகை மூலம் ரெங்கநாயகி கிழவி அழைக்கப்பட்டாள்.\nஅவர்களின் பேச்சு அவர்களுக்கே கேட்காதவாறு இரகசியமாக்கப்பட்டது. அவன் பிடிபட்டதின் அதிகபட்ச கஷ்டங்களும், அவன் மரணத்தின் அவசியமும் ஓரிரு வார்த்தைகளால் ரெங்கநாயகிக்கு சுருக்கப்பட்டது. விடிகிற பொழுதின் முதல் நாழிகை, அவன் பிணம் எரியூண்டப்பட வசதியாக அவன் மரணம் சௌகரியப்படுத்தப்பட்டது.\nபதட்டமற்று இருந்த கிழவியின் முகம் இருளத் துவங்கியது. புள்ளதாச்சி பொம்பளைகளுக்கு குச்சி வைத்து, ரத்தப் பெருக்கில் புரளும் சதைப் பிண்டங்களை வாரி வீசிய கைகள்தான் எனினும் ஒரு முழுமனிதனின் மரணத்தின் எதிர்கொள்ளல் அவளுக்கு நடுக்க மேற்படுத்தியது. சமாளித்துப் பேசினாள்.\n“ஊராருக்கு நான் கட்டுப்படுறேன். ஆனா அவனை நேருக்கு நேரா மொகமெடுக்க முடியலை. வண்டி கட்டி என் வூட்டுக்கு ஆளனுப்பின நம்பிக்கையை நான் கெடுக்கலை சாமிகளா. இந்த பகலுக்கும்,மலைகாட்டுல சுத்தி வெஷத் தழ பறிச்சாறேன். என்கூட ஒரு ஆளு இருந்து, இருட்டனப்புறம் பாறையில கொட்டி, ஒட்ட, ஒட்ட அரைக்கணும், ரெண்டு வெண்கலச் சருவச் சட்டி வேணும். சீரா தண்ணி ஊத்தி, தழையை அரைச்சுட்டா போதும். விடியற நேரம் அவன் திமிராம கொள்ளாம நாலு பேரு புடிச்சிக்குங்க, ரெண்டு கையையும் ரெண்டுபக்க சருவ சட்டில தொவைச்சி புடிச்சிக்குங்க. ஒரே ஒரு மணி நேரம் தான். ஆளு வெரைச்சிடுவான்.\nநான் ஒத்தை வீட்டு பொம்பளை. அவன் கை கால ஒதைச்சிகிறத பாக்க முடியாது, தழை அரைச்சி கொடுத்ததும் எனக்கு வெடை குடுங்க சாமிங்களா.\nயோசனையின் கச்சிதம் எல்லோருக்குமே பிடித்திருந்தது. தலையில் முடி பொசுங்கும் அந்த மத்தியான அனலில், அவளும் சின்னாப்புவும் அனுக்குமலை காட்டுக்குள் நுழைந்து மலை ஏறினார்கள்.\nகண் திறக்காமல் கட்டிலில் கிடக்கும் பொட்டு இருளனின் திருட்டுச் சாகசங்கள், அந்த மலைக்காட்டு மத்தியானத்தில் ரங்கநாயகி கிழவிக்குக் கதையாக்கப்பட்டு, பகல் நகர்ந்தது.\nஅந்தப் பஞ்சத்தின் உக்கிரத்தை சொல்லவாவது சில குழந்தைகளை நெட்டித்தள்ளி ஒதுக்க மிச்சமின்றி, பொசுக்கியது காலம். அந்த ஈரமற்ற நாட்களில் மனிதர்கள் உலர்ந்து, காய்ந்து கருகினார்கள். பிள்ளைப்பெற்ற பொம்பளைகளின் முலைக்காம்புகள், பச்சை குழந்தைகளுக்குச் சொரிவதற்கு ஒரு சொட்டுப் பாலின்றி வெடித்திருந்தன. வளர்ந்த குழந்தைகள், ஈரம் தேடி மலைக் காடுகளின் பாறை நிழலுக்குள் சதா அலைந்து திரிந்தன. வற்றி வெடித்த பூமியின் முகம் கோரமேறி மனிதர்களை விழுங்கிவிடத் தயாராய் இருந்தன. வைத்த ஒவ்வொரு அடியும், பூமியின் வெடிப்பில் விழுந்துவிடாதவாறு எச்சரிக்கை அடைய வேண்டியிருந்தது.\nஎட்டி மரங்களின் பச்சையும், காய்களின் சிவப்பும் பார்க்கிற எவரையும் ஏமாற்றி, சிரித்து ஏளனப்படுத்தியது. தண்ணி முட்லான் செடிகளின் காய்ந்து போகாத பசுமை, பள்ளிக்கூடம் விட்டகன்ற பிள்ளைகளுக்கு நம்பிக்கையின் மரணத்தைத் தள்ளிப்போட்டு வேடிக்கை காட்டியது.\nஅவர்கள் காய்ந்த பூமியில் கால் பதித்து, வெறி கொண்டு கிழங்கு தோண்டினார்கள். பூமி தன் இரகசிய மார்பில், தான் தேக்கி வைத்திருந்த தண்ணி முட்லான் கிழங்குகளின் ஈரத்தைத் தன் குழந்தைகளின் நாக்கில் நனைத்து, தன் ஈகையில் நிலைத்தது.\nஅந்தப் பஞ்சத்தை வகைப்படுத்த முடியாது. தலைமுறைகளில் தப்பிப் பிழைத்திருந்த கிழவன்களும், கிழவிகளுமே பார்த்திருந்திராத பஞ்சமது. அரசாங்கப் புள்ளி விவரங்களுக்குள் வர மறுத்து, ஊர் பொதுத்திட்டில் வைத்து, அளக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு அடங்க மறுத்த பசித்த மனிதர்களைப் போல.\nதானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வலைதோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.\nபிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டிஇருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில்,உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபகத்தில் மீந்தது.\nமலைக்காட்டுப் பாறை பொந்துகள் வெப்பத்தால் வெளியேற்றிய, காட்டுப் பன்னிகளும்,குள்ளநரிகளும், பெரும் கூச்சல்போட்டு பஞ்சம் நெருக்கியிருந்த குரல்வலைகளைத் தங்கள் அகோர சப்தத்தால் நிறுத்தின.\nஆடுகளும், மாடுகளும் வந்த விலைக்கு, கிடைத்த சோளத்திற்கு, கம்பந்தட்டைகளுக்கென்று கைமாறின. பூர்சமரக்கிளைகளில் உரிக்கப்பட்ட ஆடுகளின் வரிசை தெரிந்தது. மக்கள் உப்பு போட்டு அவித்து இறைச்சி தின்றார்கள். ஊராகாலி மாடுகள் யாருமற்ற அனாதைகளாயின. யாரும் யாரையும் தின்றுவிடக்கூடிய கொலை வெறியைப் பஞ்சம் மனித மனங்களில் ஏற்றியிருந்தது. மனிதர்கள் அவர்கள் வீட்டு ஆடுகள், மாடுகள் போல், அவர்கள் மலைகளின் பெருநரிகள் போல் சிரிப்பற்றுப் போன முகத்தோடு திரிந்தார்கள். அவர்களின் ஒட்டுமொத்தத் தேடலும், ஒருசொட்டு ஈரத்தை நோக்கியதாய் மட்டுமே இருந்தது.\nஅந்தத் துளியூண்டு ஈரம் மாரியம்மனின் கண்களுக்குள் இருப்பதாக உறுதியாய் நம்பினார்கள். அதைத் தொட்டு உணர்ந்துவிடக் குதிர்களைத்துடைத்து, பானைகளை அலசி, கதிர் அறுத்து நாள் கடந்த வயல்களைப் பெருக்கிச் சேர்த்த எட்டு மரக்கா கேவுறும், அஞ்சி படி கம்பும் தான் மாரியம்மனின் கருணை நிறைந்த கண்களுக்குப் படைக்கப்படப் போகும் கூழ் ஊற்றல். நம்பிக்கையின் கடைசிப்படியில் ஒட்டியிருந்த இரவில்தான் பொட்டு இருளன் அதில் கை வைத்து,கையும் களவுமாய்ப் பிடிபட்டது.\nஅந்த ஊரே விசித்திரங்களால் அடுக்கப்பட்டிருந்தது. கல் மலைகளும், தரையில் படர்ந்திருந்த பாறைகளும், பாறைகளுக்குள் அடங்கி இருந்த குகைகளும், அங்கங்கே தெரிந்த மண் திட்டுகளில் கட்டியிருந்த வீடுகள், தெருக்கள் என்ற ஒழுங்குக்குள் வர மறுத்தன. பாறைகளுக்குள் மறைந்து கொண்ட வெப்பால மரத்து வேர்கள் இக்காய்ச்சலுக்கும் தாக்கு பிடித்தன.\nதுவரம் மிளாறுகளிலான பட்டிகளில், ஒலித்த ஆடுகளின் குரல்கள், இரவுகளில் படிந்து, அந்த ஊரின் விசித்திரத்திற்கு சப்தமேற்படுத்தி தந்திருந்தது.\nபாறையைத் துளைத்து உரல் குடையப்பட்டிருந்தது. எட்டு பங்காளிகளின் வீடேறி, கொண்டு வந்த கம்பு அடிபட்டு மாவாகிக் கொண்டிருந்தது. இடிப்பவளின் முகமே இருண்டிருந்தது. உலக்கையின் நிழலோடு இன்னொரு நிழல் விழுவதைக் கவனித்தாள். கை தானாக நின்று முகம் திருப்பினாள்.\nமூன்று பொம்பளை புள்ளையோடு ஒருத்தி. முகம் வேற்றுமுகம். சாயல் அவளூர் சாயல் இல்லை. கெழக்கத்தி கூட்டமா\nபார்வையால் அவர்கள் நால்வரும் பாறையில் திரண்ட, பச்சை மாவைத் தின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வைகள் மீறி, மாவிடித்தலுக்குக் கைகள் வலுவற்று இருந்தன.\n’ பதிலற்ற கேள்விகள் தொடர்ந்தன.\n‘கழுத்துல ஒண்ணேயும் காணோம். புருஷன் செத்துட்டானா இந்தப் பஞ்சத்துல எவன் பொழைச்சான் இந்தப் பஞ்சத்துல எவன் பொழைச்சான்\nஅவளின் தொடர்ந்த கேள்விகள் எதிர் நிற்பவளின் கறுத்த முகத்தில் மோதி, பாறைகளில் விழுந்தன.பசியின் பார்வைகள் பச்சை மாவைக் கேட்பது போல் அவள் உணர்ந்து,\n“ஆமா என் புள்ளைங்களுக்கு, கூழுக்கு, மாவுகரைக்க மாவு தர்றீயா\n“அதெப்படி நாளைக்கே திருப்பி தருவெ இங்க என்ன மழை ஊத்தி, வெள்ளம் பொத்து,வெள்ளாமையை அறுக்க முடியாம அருவா ஒடிஞ்சி ஒலக்கடத்துக்கா நடக்கறோம்.’’\nஅவள் குரலில் தெறித்த உறுதி இவளை நிலை குலைய வைத்தது.\n“நாளைக்கு சத்திமா திருப்பி தந்துடுவேன். என் புள்ளைங்க வயிறு குளிரணும் தாயி..’’\nஅவள் குரலில் குழைந்திருந்த கனிவும் அதுவரை அவள் கேட்டிராதது.\nநிமிடத்துக்கு நிமிடம் வேறுபட்ட அவள் வார்த்தைகளுக்கு இவள் ஆச்சரியப்பட்டாள்.\nஅந்த வார்த்தையில், காய்ந்து வெடித்திருந்த அவள் முலைக் காம்புகள் பால் சொரிந்தது மாதிரி உணர்ந்தாள்.\nஅவள் மூத்த மகள் கருஞ்சட்டியை நீட்டினாள். கம்பம்மாவு சட்டியில் நிரம்பியது.. போட.. போட.. நிரம்புகிறது.. இன்னும்.. இன்னும்.. பாறையின் குழி அவள் மார்மாதிரி சுரந்து, நிரம்பிக் கொண்டே இருக்கிறது.. அவள் இடக்கண் முந்திக் கொண்டு ஒரு சொட்டை உதிர்க்கிறது.\nகாலம் கருணையில் நிரம்பி வழிந்தது.\nஉச்சி மத்தியானத்தில், மாரியம்மன் சிலையின் இடக் கண்ணிலிருந்து ஒரு சொட்டு விழுந்ததை கூட்டாத்தான் பார்த்ததைத் திருப்பி, திருப்பி சொல்லிக் கொண்டிருக்க, தலைமுடி பொசுங்க, மலைக் காட்டில் விஷத்தழைபறிக்க அலைந்த ரங்கநாயகியின் நெற்றிப் பொட்டில் அத்துளி விழுந்தது.\nபூமியை இருளின் நாக்கு ஒரே நொடியில் கவ்விக் கொண்டது. வானம் கிழித்து ஊற்றுகிறது. எதன் பொருட்டும் அதன் உக்கிரம் குறைய வழி இல்லை. மரங்கள் முறிய, பாறைகள் கரைய, நீரின் வன்மம், விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே போகிறது. மலர்தலுக்குப் பதிலாக மனித முகங்களில் பீதி பற்றிக் கொண்டது.\nஇனி விடிதலுக்கான, சாத்தியமற்ற இருள் அது. மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது.\nமடியில் பறித்த விஷத்தழைகளோடு, பாறைச்சுனையில் ரெங்கநாயகி கிழவி மல்லாந்திருந்தாள். விஷத்தழை ஊறின உடல், யானையளவிற்குப் பெருத்து மிதந்தது.\nசின்னாப்பூ அனுக்குமலைக் காட்டில் ஏதாவதொரு பாறையிடுக்கில் குரல்வலை அறுபட்டுக் கிடக்கக் கூடும்.\nநீரின் வன்மம் பெருகிக் கொண்டே போகிறது. இத்தனை வருடத்து பூமியின் வெடிப்பை, ஒரே நொடியில் இட்டு நிரப்பிச் செல்கிற காலத்தின் விசித்திரத்தில் ஊர் கிடந்தது.\nகதவிடுக்குகளின் இடைவெளிகளில் பார்த்த கண்களுக்கு நீரின் மட்டம் பாறைகளில் தெரிந்தது.\nஒரு நீண்ட ராத்திரியின் மிச்சத்தில் மாட்டி, ஒரு பகல் முழுக்க கண் திறக்காத பிடிவாதத்தில் கிடந்த பொட்டு இருளனை, மழை தான் எழுப்பியது. சுற்றிலும் ஆட்களற்ற பாண்டு ஒட்டனின் வீடு,அவனை பெரிதும் பயமுறுத்தியது. மரணவெறி கொண்ட சில மனிதர்கள் கூடப் பக்கத்தில் இருந்தால் தேவலாம் போல் உணர்ந்தான். இந்தப் பிரளயத்தை மூழ்கடிக்கும் வல்லமையோடு மல்லுக்கட்டும் மழை கொடுத்த தனிமை அவனால் தாங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது. விசித்திரமான ஒலிகளை மாற்றி மாற்றி எழுப்பித் தன் தனிமையை வென்றுவிட முயன்றான்.\nதலை விரித்தாடிய தாண்டவம் முடிய ஒரு முழு இரவு தேவைப்பட்டது. வானத்திலிருந்து சொட்ட இனி ஒரு துளியும் மீதியில்லை என்ற உறுதியில் அது தன் கோர ஆட்டத்தை நிறுத்தினபோது,விடிந்தது. இரவில் நீடித்த வன்முறையில் நிலவும், நட்சத்திரங்களும் எங்காவது தெரித்து விழுந்திருக்கலாம்.\nஅவர்கள் பத்திருபது பேர், ஈரப் பாறைகளில் கால் மாற்றி, கால் மாற்றி வைத்து, பாண்டு ஒட்டனின் வீட்டை அடைவதற்குப் பல மணி நேரம் தேவைப்பட்டிருந்தது.\nராக்கண் விழித்து, பெரும் கலக்கத்திலிருந்த அவனுக்கு அவர்களைப் பார்த்த விநாடி, மீண்டும் தான் மரணத்தின் பற்களில் நசுங்கப்போகும் கனம் நினைவு வந்துவிட்டது. ஆனால் தெப்பலாக நனைந்திருந்த அவர்களின் முகங்களில் தெரிந்த கருணை, ஒரே கணத்தில் அந்த நினைப்பைப் புரட்டிப் போட்டது.\nஒரு குழந்தை மாதிரி மலங்க மலங்க அவன் அவர்களைப் பார்த்தான்.\nகாசிரிக்கா நாரின் இறுக்கம் தளர்த்தப்பட்டு, கட்டு அவிழ்க்கப்பட்டது. புஜத்தில் கசிந்த ரத்தம் கண்டு அவர்களில் பலர் “இச்’’ கொட்டினார்கள். நடப்பது குறித்த பிரக்ஞையற்று இருந்தான்.\nஅவர்கள் முகங்கள் வன்மமற்று, குழந்தை முகங்களாகி, புன்னகை புனைந்திருந்தது.\n“இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா. போ போய் பொழைச்சிக்க’ எல்லோர் குரலும் நனைந்திருந்தது.\nஅலைகள் மாதிரி, நீர் தளும்பிய சத்தம் கேட்டுக் கொண்டே ஏரிக்கரையின் முடிவிலிருந்த தேவதானப்பேட்டை மலை மீது கால் வைத்து நிமிர்ந்தான்.\nவெள்ளம் மலை முழுக்க, சிறு அருவிகளாகி இறங்கிக் கொண்டிருக்கும் பேரழகை எதிர்கொண்டு ஏறுகிறான். நீர்த்துளிகள் முகத்தில் மோதி, சிதறி மலையில் தெறிக்க, தெறிக்க… ஏறித் திரும்பினான்.\n[16-5-2014 முதல் 18-5-2014 வரை ஊட்டியில் நிகழ்ந்த குரு நித்யா நினைவு இலக்கியச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட கதை]\nஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nஇலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nஊட்டி சந்திப்பு – 2014 [2]\nஉளி படு கல் – ராஜகோபாலன்\nஊட்டி சந்திப்பு – 2014\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nஊட்டி முகாம் 2012 – பகுதி 2\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42\nவிஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி...\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/03/06125321/1230911/Pa-Ranjith-team-up-with-Jyotinisha-for-BR-Ambedkar.vpf", "date_download": "2019-06-26T15:12:09Z", "digest": "sha1:WE5O6V5IFF5NIAX3NCDIH7PZAP7V7ILP", "length": 7107, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pa Ranjith team up with Jyotinisha for BR Ambedkar Now and Then", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாலிவுட் இயக்குநருடன் கைகோர்த்த பா.இரஞ்சித்\nகாலா படத்தை தொடர்ந்து இயக்கம், தயாரிப்பு என இரண்டையும் கவனித்து வரும் பா.இரஞ்சித், அடுத்ததாக பாலிவுட் இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்திருக்கிறார். #BRAmbedkarNowandThen #PaRanjith\nஅடுத்த படம் பற்றிய அறிவிப்பை பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஜோதிநிஷாவுடன் ரஞ்சித் கூட்டணி அமைத்துள்ளார். கிரவுட் பண்டிங் மூலம் நிதி திரட்டி இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்காக 60 நாட்களில் சுமார் ரூ.60 லட்சத்தை திரட்ட இரு இயக்குநர்களும் முயற்சித்து வருகின்றனர். இப்படம் வரலாறு படைக்கும் எனவும், இப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த கூட்டணியை அறிவிக்கிறோம் ஜோதிநிஷாவின் முதல் படமான ‘பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென்’ இப்படம் வரலாறு படைக்கும். இப்படத்தில் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். #BRAmbedkarNowandThen #PaRanjith\nBR Ambedkar Now and Then | Pa Ranjith | பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென் | பா.இரஞ்சித் | ஜோதிநிஷா\nபா.இரஞ்சித் பற்றிய செய்திகள் இதுவரை...\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்\nபா.ரஞ்சித்துக்கு எச்சரிக்கை விடுத்த கருணாஸ்\nமத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\nமக்களுக்கு விழிப்புணர்வு அடையச் செய்வதே நோக்கம் - பா.இரஞ்சித்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilan24.com/news/1444", "date_download": "2019-06-26T15:02:11Z", "digest": "sha1:NLFQNHP7ICWNPP5IHEYNV2FOGNLWGLHH", "length": 11432, "nlines": 112, "source_domain": "www.tamilan24.com", "title": "வரலாற்றில் இன்று : 23.05.2018 | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவரலாற்றில் இன்று : 23.05.2018\nமே 23 கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.\n1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.\n1568 – நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1805 – நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.\n1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத தன்னை அறிவித்தார்.\n1846 – மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.\n1865 – வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.\n1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.\n1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் “கார்னிவல் கிட்” வெளி வந்தது.\n1949 – ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.\n1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.\n1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.\n1998 – புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.\n1707 – கரோலஸ் லின்னேயஸ், தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778)\n1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)\n1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)\n1951 – அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர்.\n1906 – ஹென்ரிக் இப்சன், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828)\n1997 – அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)\n1981 – உடுமலை நாராயணகவி தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் (பி. 1899)\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/kalyana-veedu/131115", "date_download": "2019-06-26T14:03:00Z", "digest": "sha1:UQSAP6QRI7673LZXVJ4HVVYB3FPBJYXQ", "length": 5583, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalyana veedu - 20-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஇலங்கையில் 43ஆண்டுகளுக்கு பின் 4பேருக்கு தூக்கு தண்டனை\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nவிஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு பிக்பாஸ் பிரபலம் தளபதி ரசிகர்களின் பலம் ஜெயிக்குமா\nஉறவு வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது பொங்கி எழுந்த ஸ்ரீரெட்டி - அதிரடி தண்டனை இது தான்\nரஜினிகாந்தை வைத்து பேய்படம், இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nசனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிய மேஷ ராசிக்கு குருவால் நடக்க போகும் அதிரடி மாற்றம் 2019 ஜூலை மாதம் முழுவதும் இது பழிக்கும்\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nபிக்பாஸ்-3 லொஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் இவர்கள் தான் பேவரட்ஸாம், அதிலும் இந்த நடிகர் தான் மிக பிடிக்குமாம்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nவிஜய் எழுந்து கூட நிற்க முடியாது இனி என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1118:2008-05-01-17-26-10&catid=36:2007&Itemid=0", "date_download": "2019-06-26T14:12:06Z", "digest": "sha1:BGAIA62TYTXNOKGGTX2IICMMNTD35F2G", "length": 31974, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "சிங்கூர்: சி.பி.எம் - இன் கிரிமினல் அரசியல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசிங்கூர்: சி.பி.எம் - இன் கிரிமினல் அரசியல்\nSection: புதிய ஜனநாயகம் -\nதேசாபிமானி. கேரள சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு. இடதுவலது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு, அது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டில் தேசாபிமானி நாளேட்டுக்காக கம்யூனிஸ்டுகள் நிதி திரட்டியபோது, கோழிக்கோடு மாவட்டம் சொம்பாலா கிராமத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரும் எழுதப் படிக்கத் தெரியாத\nவிவசாயப் பெண் தோழருமான பாலோரமாதா, தனது கன்றுக்குட்டியை நன்கொடையாக அளித்தார். கூலிஏழை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் வர்க்க அடித்தளமாகக் கொண்டு இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் தேசாபிமானி நாளேடும், இன்று சாராய வியாபாரிகள், லாட்டரி சீட்டு முதலாளிகள், சீட்டுக் கம்பெனி முதலாளிகள் முதலானோரைத் தமது வர்க்க அடித்தளமாகக் கொண்டு சீரழிந்து நிற்கிறது.\nசந்தியாகு மார்ட்டின்; தென்னிந்தியாவின் மிகப் பெரிய லாட்டரி சூதாட்ட முதலாளி. சிக்கிம்பூடான் லாட்டரி சீட்டு ஏஜெண்டான இவனது சொத்து மதிப்பு, ஏறத்தாழ ரூ.4000 கோடிக்கு மேலிருக்கும் என்று பத்திரிகைகள் சித்தரிக்கின்றன. ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் லாட்டரி சூதாட்டத்தின் மூலம் கோடி கோடியாய்க் குவித்துள்ள சமூக விரோதியான மார்ட்டின், இப்போது சி.பி.எம். கட்சியின் \"தோழராகி' விட்டான். கேரள சி.பி.எம். கட்சித் தலைவர்களுடன் கூடிக் குலாவும் அவன், தேசாபிமானி நாளேட்டுக்கு ரூ.2 கோடியை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளான்.\nகேரளத்தை ஆளும் சி.பி.எம். முதல்வரான அச்சுதானந்தன் கோஷ்டிக்கும், கட்சியின் மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் கோஷ்டிக்குமிடையே நடக்கும் நாய்ச் சண்டை, கட்சி சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகாரச் சண்டையாக முற்றிவிட்ட நிலையில், இக்கோஷ்டிச் சண்டையின் ஊடாக இந்த விவகாரம் மெதுவாகக் கசிந்து இப்போது கேரள மாநிலமெங்கும் நாறுகிறது.\nஇதனால் சி.பி.எம். கட்சியின் யோக்கியதை சந்தி சிரிக்கத் தொடங்கியதும், \"\"தேசாபிமானி நாளேடு வெளியிட்ட கடன் பத்திரங்களைத்தான் மார்ட்டின் ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளார்; கடன் பத்திரம் முதிர்ச்சியுறும்போது வட்டியோடு அத்தொகையைச் செலுத்துவோம்'' என்று கேரள சி.பி.எம். தலைவர்கள் பசப்பினர். இப்படி கடன் பத்திரங்களை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்; அப்படி எதுவும் நடக்கவில்லையே என்று பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதும், இதனால் சட்டச் சிக்கல் ஏதும் வருமோ என்று சி.பி.எம். தலைவர்கள் பீதியடைந்தனர். \"\"தேசாபிமானி சார்பில் கடன் பத்திரங்கள் எதுவும் வெளியிடவில்லை; தேசாபிமானி நாளேட்டில் லாட்டரிச் சீட்டு விளம்பரம் வெளியிட மார்ட்டின் அட்வான்சாக ரூ. 2 கோடி கொடுத்துள்ளார்'' என்று புதிய விளக்கமளித்தனர். பின்னர் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் முன்னிலையில் \"விசாரணை' நடத்தி, இந்தப் பணத்தை மார்ட்டினிடம் திரும்ப ஒப்படைப்பது என்று முடிவாகியுள்ளது.\nஇப்படி நன்கொடைகள், பங்குகள் விற்பனை, கடன் பத்திரம் முதலானவை தேசாபிமானியோடு நின்று விடவில்லை. சி.பி.எம். கட்சியின் \"\"கைரளி டி.வி.''இன் 25 லட்ச ரூபாய் பங்குகளை சென்னையைச் சேர்ந்த கள்ளச் சாராய வியாபாரியான \"தோழர்' புருசோத்தமன் வாங்கியுள்ளார். கேரளத்தில் 36 பேரின் சாவுக்குக் காரணமான கள்ளச் சாராயத் \"தோழர்' மணியச்சன் பல லட்ச ரூபாய்க்கான பங்குகளை வாங்கியுள்ளார். இப்படி சமூக விரோதிகள் சி.பி.எம். கட்சியின் \"தோழர்' களாகி விடும்போது, அவர்கள் தமது சமூக விரோத மக்கள் விரோதச் செயல்களுக்கு சி.பி.எம். கட்சியிடம் ஆதரவும் அங்கீகாரமும் கோர மாட்டார்களா தேசாபிமானி விவகாரத்தில் நடந்துள்ள இன்னுமொரு பேரம் இதை மெய்ப்பித்துக் காட்டுகிறது.\nஎல்.ஐ.எஸ். என்ற சீட்டுக் கம்பெனி, கேரளத்தில் தனது முதலீட்டாளர்களை ஏய்த்து கோடி கோடியாய்ச் சுருட்டிய மோசடி நிறுவனமாகும். இம்மோசடி நிறுவனத்தின் மீதான வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி.யான சென்குமார், சி.பி.எம். கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். விசாரணை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்போதே இம்மோசடி நிறுவனம், \"\"ஜோதிஸ்'' என்ற பெயரில் புதிய சீட்டுக் கம்பெனியைத் தொடங்கி நடத்தி வருகிறது.\nஇந்த மோசடி சீட்டுக் கம்பெனி, வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக தேசாபிமானி நாளேட்டின் பொது மேலாளரான வேணுகோபாலிடம் ஒரு கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து பேரம் பேசியது. வேணுகோபாலும் காரியத்தைக் கச்சிதமாக முடித்துத் தருவதாக உறுதியளித்து லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டார். ஆனால், அவர் வாக்களித்தபடி வழக்குகளிலிருந்து இம்மோசடி நிறுவனத்தைத் தப்புவிக்க முடியவில்லை. காலம் கடந்து கொண்டிருந்தது. லஞ்சம் கொடுத்தும் கூட இம்மோசடிக் கம்பெனிக்கே \"\"அல்வா'' கொடுத்துவிட்டார் \"தோழர்' வேணுகோபால்.\nஆத்திரமடைந்த இம்மோசடிக் கம்பெனி முதலாளிகள், சி.பி.எம். கட்சியின் இதர பிரமுகர்களிடம் புலம்ப, அவர்கள் தங்களுக்கு உரிய பங்கு தரப்படாமல் ஏய்த்ததால் கோபமடைந்து, இந்த விவகாரத்தை வெளியே கசிய விட்டனர். அதைத் தொடர்ந்து, தேசாபிமானி நாளேட்டின் பொதுமேலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் வேணுகோபால் நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சி.பி.எம். தலைவர்கள்அமைச்சர்களின் பெயர்கள் வெளிவராமல் மூடிமறைத்து, கட்சித் தலைமை இந்த லஞ்ச பேர விவகாரத்தை அமுக்கிவிட்டது.\nகேரள சி.பி.எம். கட்சியின் யோக்கியதை இப்படியிருக்க, மே.வங்க சி.பி.எம். கட்சியோ இன்னுமொரு படி முன்னேறி, பாசிசப் பயங்கரவாதக் கட்சியாகப் பரிணமித்துள்ளது.\nமே.வங்கத்தின் ஹுக்ளி மாவட்டத்திலுள்ள சிங்கூரில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை தொடங்குவதற்காக, இடது முன்னணி அரசு விளைநிலங்களை ஆக்கிரமிப்பதை எதிர்த்து அக்கிராம விவசாயிகள் உறுதியுடன் போராடி வந்த நிலையில், கடந்த டிசம்பர் 18ஆம் நாளன்று தபாசி மாலிக் என்ற 18 வயதான இளம்பெண் மீது பாலியல் வன்முறை ஏவப்பட்டு, டாடா கார் திட்ட நிலத்தில் எரித்துக் கொல்லப்பட்டார். மே.வங்கத்தையே உலுக்கிய இப்படுகொலையைச் செய்தது திரிணாமுல் காங்கிரசு நக்சல்பாரிகள் ஆகிய எதிர்த்தரப்பினர்தான் என்று சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ வார ஏடான \"\"பீப்பிள்ஸ் டெமாக்கரசி'' வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது. சிங்கூர் விவசாயிகள் டாடா கார் ஆலைத் திட்டத்துக்கு ஆதரவாக நிற்பதாகவும், போராட்டத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த எதிர்க்கட்சிகளின் எத்தணிப்புகள் தோல்வியடைந்ததாலும், இப்படுகொலையைச் செய்து பயங்கரவாத பீதியூட்டி வருவதாக மே.வங்க சி.பி.எம். கட்சியினர் கதை கட்டினர்.\nஆனால், இவையனைத்தும் பொய் என்றும், இக்காமவெறிப் படுகொலைச் செய்தது சி.பி.எம். கட்சிக் குண்டர்கள்தான் என்றும் இப்போது மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) நடத்திவரும் விசாரணையில் அம்பமலாகியுள்ளது. தேபு மாலிக் என்ற குண்டர்படைத் தலைவனும், அவனது கூட்டாளிகள் நால்வரும், அவனை வழிநடத்திய சிங்கூர் வட்டாரக் கமிட்டிச் செயலாளர் சுஹ்ரித் தத்தாவும் மையப் புலனாய்வுத் துறையால் கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக, ஹூக்ளி மாவட்டக் கமிட்டி உறுப்பினரான திபாகர்தாஸ் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிங்கூர் வட்டாரக் கமிட்டிச் செயலாளரான சுஹ்ரித் தத்தா, சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலை நிறுவுவதற்கும், விளை நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் முன்னின்றவர். விவசாயிகளின் போராட்டம் வலுக்கத் தொடங்கியதும், டாடா ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி வேலியும் தடுப்புச் சுவரும் கட்ட சி.பி.எம். குண்டர்களைத் திரட்டி அந்த வேலையை மேற்பார்வையிட்டவர்.\nசி.பி.எம். குண்டர் படைத் தலைவனாகிய தேபு மாலிக், இப்பகுதியில் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்ததோடு சுஹ்ரித் தத்தா, திபாகர்தாஸ் ஆகியோரின் விசுவாச அடியாளாகவும் செயல்பட்டு வந்தான். இத்தலைவர்களோடு சேர்ந்து அவன் வலம் வருவதைக் கண்டு சி.பி.எம். ஊழியர்களே அவனிடம் பயம் கலந்த மரியாதை காட்டினர். டாடா ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி வேலியும் தடுப்புச் சுவரும் அமைத்தவனும் இவன்தான். போராடும் விவசாயிகள் இந்த வேலிக்குச் சேதம் விளைவித்து விடாதபடி இவன் தலைமையிலான குண்டர் படை, சி.பி.எம். கட்சியின் உத்தரவுப்படி இரவு நேர காவல் பணியை மேற்கொண்டு வந்தது.\nதபாசி மாலிக், குத்தகை விவசாயியும் மீன் வியாபாரியுமான மனோரஞ்சன் மாலிக்கின் ஒரே மகள். சிங்கூர் விளைநிலப் பாதுகாப்புக் குழுவில் ஊக்கமுடன் செயல்பட்டு வந்த அவர், விரைவிலேயே அப்பகுதியில் பிரபலமானார். சிங்கூர் விவசாயிகளின் போராட்டத்தை மிருகத்தனமாக ஒடுக்கிய போதிலும் மீண்டும் அங்கு போராட்டம் மூண்டெழுவதைக் கண்டு பீதியடைந்த சி.பி.எம். தலைவர்கள், போராட்டத்தில் முன்னணியில் நிற்போரின் பட்டியலை குண்டர் படையிடம் கொடுத்து, அவர்களை உரிய முறையில் கவனிக்குமாறு உசுப்பேற்றி விட்டனர்.\nடாடா கார் ஆலை அமையவுள்ள நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முள்வேலிக்கு அருகில்தான் தபாசி மாலிக்கின் வீடு உள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் நாளன்று நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வெளியே வந்த தபாசி மாலிக்கை இக்குண்டர் படை வாயில் துணியை வைத்து அடைத்து இழுத்துச் சென்று பாலியல் வன்முறையை ஏவி, அந்நிலத்தில் வெட்டப்பட்டிருந்த குழியில் தள்ளிக் கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளது. இப்போது, மையப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தேபு மாலிக், தனது கூட்டாளிகளையும் எஜமானர்களையும் காட்டிக் கொடுத்து விட்டான்.\nபீதியடைந்த சி.பி.எம். கட்சித் தலைமை, \"\"தேபு மாலிக் சி.பி.எம். ஆதரவாளன் அல்ல; சி.பி.எம். தலைவர்களுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்புமில்லை'' என்று கூசாமல் புளுகியது. கட்சியோடு தொடர்பில்லாத ஒருவன் எதற்காக டாடா கார் அமையவுள்ள நிலத்தில் இரவுக் காவல் வேலையை செய்ய வேண்டும் அவனை அப்பணிக்கு அமர்த்தியது யார் அவனை அப்பணிக்கு அமர்த்தியது யார் என்ற கேள்விகளுக்கு இன்றுவரை சி.பி.எம். கட்சித் தலைமை பதிலளிக்கவில்லை. இதுவொருபுறமிருக்க, தபாசி மாலிக் கொல்லப்பட்ட நாளிலும் அதன் பின்னரும் குண்டர்படைத் தலைவன் தேபுமாலிக்குடன் சி.பி.எம். தலைவர் சுஹ்ரித் தத்தா தொலைபேசியில் உரையாடியுள்ளதை ஆதாரங்களுடன் மையப் புலனாய்வுத் துறை வெளிக் கொணர்ந்துள்ளது.\nகடந்த ஜூன் 29ஆம் தேதியன்று சுந்தர்நகர் வழக்கு மன்றத்துக்கு தேபு மாலிக்கும் சுஹ்ரித் தத்தாவும் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சியினரும் உழைக்கும் மக்களும் திரண்டு இக்கொலைக்காரர்களை துடப்பக்கட்டை செருப்பு மாலையுடன் வரவேற்று, அவர்களைத் தூக்கில் போடக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். சி.பி.எம். கட்சியின் கொலைகார கோரமுகம் மாநிலமெங்கும் அம்பலமானதும், \"\"இது மைய அரசின் அரசியல் சதி; பொய்க் குற்றம் சாட்டி சி.பி.எம்.மின் கௌரவத்தைக் குலைக்க நடக்கும் சதி'' என்று ஒப்பாரி வைத்த சி.பி.எம். தலைமை, தமது கட்சிக்குள்ளேயே ஒரு விசாரணை நாடகத்தை நடத்தி சுஹ்ரித் தத்தா நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. சங்கரராமனைக் கொல்ல கூலிப்படையை ஏவிவிட்ட காஞ்சி காமகே(õ)டி ஜெயேந்திரன் கைது செய்யப்பட்ட போது, \"\"பெரிவாள் இப்படியெல்லாம் செய்திருக்கவே மாட்டார்'' என்று பார்ப்பன கும்பல் தாமே தீர்ப்பளித்துத் திருப்திபட்டுக் கொண்டதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்பதை அக்கட்சியினர்தான் விளக்க வேண்டும்.\nகொலைகாரர்களையும் பயங்கரவாதிகளையும் பயிற்றுவித்துப் பாதுகாக்கும் பாசறையாக சி.பி.எம். கட்சி மாறிவிட்டது என்று குற்றம் சாட்டிய திரிணாமுல் காங்கிரசு கட்சித் தலைவியான மம்தா பானர்ஜி, கடந்த ஜூன் 2ஆம் நாளன்று படுகொலை செய்யப்பட்ட தபாசியின் தந்தை மற்றும் சிங்கூர் நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களாலும் போலீசாலும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களோடு பிரதமர் மற்றும் அரசுத் தலைவரைச் சந்தித்து மைய அரசின் தலையீட்டைக் கோரி மனு கொடுத்ததோடு, பாதிக்கப்பட்டோரை பத்திரிகையாளர்கள்முன் நிறுத்தி, சி.பி.எம்.மின் பாசிச பயங்கரவாதத்தை நாடெங்கும் அம்பலப்படுத்தியுள்ளார்.\nஅதேநாளில், சிங்கூரில் விளைநிலங்கள் டாடாவுக்காக ஆக்கிரமிக்கப்பட்டதால், வேலையிழந்து, வாழ்விழந்து பட்டினியில் பரிதவித்த கூலி விவசாயி சங்கர்தாஸ் மாண்டு போனார். தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் 78 மாதங்களாக அவர் பட்டினியால் பரிதவித்ததையும், சங்கர்தாசைப் போல 100க்கும் மேற்பட்ட கூலி விவசாயக் குடும்பங்கள் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருப்பதையும், நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தருவதாக வாக்களித்துவிட்டு ஏய்க்கும் சி.பி.எம். கூட்டணி அரசின் யோக்கியதையையும் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின. சி.பி.எம். கட்சியோ சங்கர்தாஸ் பட்டினியால் சாகவில்லை என்று கோயபல்சு பாணியில் புளுகிக் கொண்டிருக்கிறது.\nபுரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தனது வர்க்க அடித்தளத்தை மாற்றிக் கொண்டு முதலாளித்துவ கட்சியாக பாசிச பயங்கரவாதக் கட்சியாகச் சீரழிந்து விட்டது. சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் உழைக்கும் மக்களின் நலனுக்கானது என்று இன்னமும் யாராவது நம்பிக் கொண்டிருந்தால், கேரளத்திலும் மே.வங்கத்திலும் நடந்துள்ள அண்மைக்கால நிகழ்வுகளே அவர்களது மூட நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://educationtn.com/2018/12/14/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:18:29Z", "digest": "sha1:QR2YQOPV7GULIG4FUSCLLPJ5RL45RZT6", "length": 19066, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்: பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தகவல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்:...\nபதிவு செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்: பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தகவல்\nபதிவு செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்: பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தகவல்\nபத்திரங்களை பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் திரும்பவழங்கும் திட்டம் வரும் 17-ம் தேதி தொடங்கப்படுவதாக பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.தமிழக பதிவுத் துறையில் இணைய அடிப்படையில் பத் திரப் பதிவுக்கான ‘ஸ்டார் 2.0’ திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த பிப்ரவரியில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு புதிய வசதிகள் பத்திரப்பதிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.பத்திரப் பதிவின் ஒவ்வொரு நிலையையும் குறுஞ்செய்தி மூலம் அறிதல், வில்லங்க சான்று, பத்திர நகல் போன்றவற்றை இணைய தளம் மூலம் பெறும் வசதி, முன் பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் வரிசைப்படி பதிவு செய்தல் என பல்வேறு வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளன.\nபத்திரப் பதிவின்போது கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தும் வசதி, திருமணப் பதிவு, சங்கப் பதிவு போன்றவற்றை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளுதல் போன்ற வசதிகளும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.தற்போதைய நிலையில், பத்திரப் பதிவு முடிந்து ஒரு சில நாட்களில் அந்த பத்திரம் ஸ்கேன் செய்யப்பட்டு, உரியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பதிவு செய்த அன்றே, குறிப்பாக ஒரு மணி நேரத்துக்குள் வழங்கும் புதிய முறையை பதிவுத் துறை கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:\nஅலையவிடக் கூடாதுபத்திரப் பதிவுக்காக வரும் மக்களை அடுத்த நாளும் அலைய விடக் கூடாது என்ற நோக்கத் தில் இந்த திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. பதிவுத் துறையில், வரிசையாக பெறப்படும் பத்திரத் துடன் மூல ஆவணங்களை சரி பார்த்து, வாங்குபவர், விற்பவரின் அடையாள ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பின் அவர்களை புகைப்படம் எடுத்து, கைரேகை பதிவு பெற்று, பத்திரத்தை ஸ்கேன் செய்து, அதற்கான எண்ணை எழுதி, சீல் வைப்பது உள்ளிட்ட பணிகள் உள்ளன. இப்பணிகளை முடிக்க அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். எனவே, ஒரு மணிநேரத்தில், பதிவு செய்யப்பட்ட பத்திரம் திரும்ப வழங்கப்படும்\nஇதற்காக சார்பதிவாளர் அலு வலகங்களில் பதிவு செய்யப் படும் ஆவணங்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப, 735 தகவல் தொகுப்பு பணியாளர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர்.\nதவிர, பதிவு அலுவலகங் களுக்கு விரல்ரேகை பதிவு கருவி, 2 வெப்கேமராக்கள், அதிக பணிச் சுமை உள்ள அலுவலகங்களுக்கு கூடுதலாக ஒரு அச்சு இயந்திரம், ஸ்கேனர் வழங்கவும் எல்காட் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. கூடுதல் பணிச்சுமை அதாவது, தினமும் அதிக அளவில் பத் திரப் பதிவு நடக்கும் அலுவல கங்களில் புதிய ஸ்கேனர் இயந் திரம் வழங்கவும் மாவட்ட பதிவா ளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nஅதேபோல, புதிதாக நியமிக்கப் பட்டுள்ள தகவல் தொகுப்பாளர் கள், சார்பதிவாளர்களிடம் பக்கச் சான்றில் கையொப்பம் பெற்று ஆவணங்களை வரிசையாக ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட அசல் ஆவணங்களை திரும்பப்பெற அதிகாரம் பெற்ற நபரிடம் விரல் ரேகை பெற்று உடனுக்குடன் திரும்ப அளிக்கப் படும். பதிவு செய்த அன்றே பத்திரத்தை திரும்ப வழங்கும் திட்டம் வரும் 17-ம் தேதி அமலுக்கு வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வரு கின்றன.\nதமிழகத்தில் ஸ்டார் 2.0 திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 12-ம் தேதிவரை, 20 லட்சத்து 95 ஆயிரத்து 417 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்ச மாக சென்னையில் உள்ள 63 சார்பதிவாளர் அலுவலகங்களில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 675 பத்திரங்கள் பதிவாகியுள்ளன.\nPrevious articleஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு \nNext articleநிவாரணநிதி – இயற்கைசீற்றம்“கஜா புயல்” நிவாரண நிதி – ஒரு நாள் ஊதியம் வழங்க விருப்பம் தெரிவித்தோர் விவரம் கோருதல் Ceo செயல்முறைகள்\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது. \nகல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி.\nசிறப்பு தேர்வுக்கான பதிவு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியத்தை, தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால், பதிவு பணிகளை மேற்கொள்ளும், சேவை மையங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிறப்பு தேர்வுபத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://educationtn.com/2018/12/14/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:30:25Z", "digest": "sha1:HMEZIN5YDOAS3DDL57IEFMVU2E4WGDP2", "length": 13627, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்\nபள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்\nபள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்\nபள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nமத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ. ஆர்.டி., சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி பாடத் திட்டம் அமலில் உள்ளது.\nஇதன் அடிப்படையில், மாநிலங்கள், தங்கள் பாடத் திட்டங்களை உருவாக்குகின்றன. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., பாட புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில், மாணவர்களுக்கு அதிக சுமை தரும் பாடங்கள் உள்ளதாக, பல்வேறு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, என்.சி.இ. ஆர்.டி.,யின் பாடத் திட்டத்தை பாதியாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமாணவ – மாணவியர், வெறும் பாட புத்தக படிப்பு மட்டுமின்றி, திறன் வளர்க்கும் முயற்சிகளி லும் ஈடுபடுவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.\nNext article100 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி\nகுடிநீர் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது மீறினால் நடவடிக்கை என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nதமிழகத்தில் அனைத்து அரசு, அரசு பள்ளிகளின் சுவர்களில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nடெங்கு பன்றிக்காய்ச்சல் எதிரொலி: தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு\nடெங்கு பன்றிக்காய்ச்சல் எதிரொலி: தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு பொதுமக்கள் அதிகம் கூடும் திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிகவளாகங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
{"url": "https://pirapalam.com/category/trailer", "date_download": "2019-06-26T14:54:38Z", "digest": "sha1:2AC2YNM5EWWJ7QQ4LINNZVPNDKFHSSGC", "length": 20299, "nlines": 318, "source_domain": "pirapalam.com", "title": "Trailer - Pirapalam.Com", "raw_content": "\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபலமான திருநங்கை\nபிகில் வெளிநாட்டு உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்\nலிப்கிஸ் ரொம்ப நல்லது - நடிகை ஐஸ்வர்யா தத்தா\nஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட்...\nஎம்.ஜி.ஆர் டைட்டிலில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\nதளபதி 63 படத்தில் நயன்தாராவுக்கு இப்படியொரு பேரா\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த...\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக்...\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய்...\nகல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு.....\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப்...\nஇதயத்தை திருடியது இவர்தான் : நடிகை அதிதி ராவ்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை...\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும்...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய...\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட...\nரியா சென் வெளியிட்ட ஹாட்டான நீச்சல் புகைப்படம்\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர்...\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர் இதோ\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க வெட்கப்படனும்...\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டா சுத்தி இருக்குற ஆம்பளைங்க வெட்கப்படனும் - துப்பாக்கிமுனை டிரைலர்\nநான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா- மாரி 2 பட மாஸ் டிரைலர்\nமாரி 2 பட மாஸ் டிரைலர்\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின்...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nபிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கும் ஜானி டிரைலர்\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி...\nஉங்களது அந்தரங்க விஷயங்களை கொட்டி தீர்க்க- காற்றின் மொழி டிரைலர்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் \nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் நாடே விரும்புகிறது: முன்னணி...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nபீச்சில் படு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த்...\nபட வாய்ப்புக்காக ஒரு இரவு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் நடிகை...\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nநடிகைகள் என்றால் எப்போதும் ஒருவித சலனம் இணையதளத்தில் இருந்துகொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம்,...\nவிஸ்வாசம் கதை என புதிதாக உலா வரும் ஒரு செய்தி\nஅஜித்-சிவா கூட்டணியில் 4வது முறையாக வெற்றிகரமாக வெளியாக போகும் படம் விஸ்வாசம். தலயின்...\nசிவா, விஜய் கூட்டணி உறுதியானதா- இப்படிபட்ட ஒரு கதையா- இப்படிபட்ட ஒரு கதையா\nஇயக்குனர் சிவா, அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கிவிட்டார். இவர்கள் கூட்டணியில் வந்த...\nபாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கீர்த்தி...\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஒரு பெயர் போதும். 69 வயதிலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு...\nபரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிரின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள்...\n96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானுவா இது\n96 படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்திருந்தனர் நடிகை கெளரி கிஷன். அதன்மூலம் அவர்...\nதனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதனுஷ்க்கு கடைசியாக வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த வடசென்னை சில சர்ச்சைகளை சந்தித்தாலும்...\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nஅமலா பால் அடிச்சா மொட்டை, வச்சா குடுமியா இருக்கே\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:39:18Z", "digest": "sha1:HV34F2WL55BBE4RD2K7JIDGRKSN747AW", "length": 8242, "nlines": 174, "source_domain": "sathyanandhan.com", "title": "கூடங்குளம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி\nPosted on March 13, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மிகவும் தைரியத்துடன் உள்நாட்டில் எரிவாயு உற்பத்தி தேவை என ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது அறிக்கை பற்றிய தமிழ் ஊடகங்கள் இப்படிப் பதிவு செய்தன : இந்திய அரசு பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுகளை சொந்த மண்ணில் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அணுமின்சாரம், கூடங்குளம், நெடுவாசல், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டம்\t| Leave a comment\nPosted on August 11, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜெயமோகன்- சுப.உதயகுமார் கவனிக்க கூடங்குளம் அணு உலையை எதிர்த்து உதயகுமார் போராட்டம் நடத் திய போது அப்துல் கலாம் அறிவியலில் மேதையென்றாலும் அணு உலை பற்றி அறியவில்லை அதனாலேயே அதைப் போய் ஆதரித்தார் என்று நாம் புரிந்து கொண்டோம். ஜெயமோகனே முன்நின்று ஆதரித்த போது நமக்கு மேலும் அந்தப் புரிதல் உறுதிப் பட்டது. இப்போது செண் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அணு உலை, அப்துல் கலாம், கூடங்குளம், சுப.உதயகுமார், ஜெயமோகன்\t| Leave a comment\nகூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால்\nPosted on May 9, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால் கூடங்குளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எழுப்பப் பட்ட அச்சங்களை விசாரித்து இனி மேலும் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் இல்லை என்று குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் கூடங்குளம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது. முந்தைய பதிவுகளில் நான் சில விஷயங்களைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டிருந்தேன். 1.முதலாவது வளர்ந்த நாடுகளை … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged உதயகுமார், கூடங்குளம்\t| Leave a comment\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/26/kanchee.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T14:25:47Z", "digest": "sha1:JSD7DZUULGHBVBYCEK54KUXZBPO2KGLW", "length": 15224, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சி சங்கராச்சாரியாரின் 68வது ஜெயந்தி விழா | Kanchi seers 68th jayanthi celebrations begin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n21 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n34 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சி சங்கராச்சாரியாரின் 68வது ஜெயந்தி விழா\nகாஞ்சி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளின் 68வது ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள் இன்று தொடங்கின.\nஇதையொட்டி ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகளும் இன்று காலை காஞ்சிபுரத்திலுள்ளபுகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு 130 தங்க நாணயங்களுடன் \"கனகாபிஷேகம்\"செய்தனர்.\nபின்னர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்வதற்குப் பயன்படுவதற்காக 660 கிராம் எடை கொண்ட ஒரு தங்கக்குடத்தையும் அந்தக் கோவிலுக்கு ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் பரிசாக அளித்தார்.\nஅந்தக் கோவிலில் உள்ள லட்சுமி மற்றும் சரஸ்வதி சிலைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளியிலான கிரீடம்சூட்டப்பட்டது. பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற காஞ்சி சுவாமிகள் அங்கு கடவுளை வழிபட்டார்.\nகாஞ்சி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கர பக்த ஜனசபா சார்பில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தஹோம நிகழ்ச்சிகளும் \"சகஸ்ரகலச அபிஷேக\" நிகழ்ச்சிகளும் இன்று காலை முடிவடைந்தன.\nஜெயலலிதா நாளை காஞ்சி வருகை:\nஇதற்கிடையே நாளை காஞ்சிபுரம் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் காஞ்சி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெறவுள்ளார் என்று காஞ்சிபுரம் மடத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுவை கடற்கரை சாலையில் சர்வதேச யோகா தின விழா பிரமாண்ட கொண்டாட்டம்.. 4,000 பேர் பங்கேற்பு\nதாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஇது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்\nவிடுபட்டவர்களுக்கு பொங்கலுக்கு பிறகும் ரூ. 1000 வழங்கப்படுமாம்- அமைச்சர் தகவல்\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்.... உற்சாகத்தில் திளைத்த இளைஞர்கள்\nபிறந்தது 2019.. முதல் ஆளாக கொண்டாடி மகிழ்ந்த நியூசி, ஆஸ்திரேலியா\n1000 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. கதவை திறந்து தப்பிய 4 பேர்.. நடந்தது என்ன\n .. உற்சாக விஜயகாந்த் .. வைரலாகும் அமெரிக்க படங்கள்\nபுத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம்...போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர்\nநள்ளிரவு 1 மணியுடன் முடிக்கனும்...நியூ இயர் கொண்டாட்டத்துக்கு போலீஸ் கட்டுப்பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/at-the-time-of-the-special-yagam-instead-ten-saplings-can-be-planted-says-seeman-350819.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T15:05:59Z", "digest": "sha1:4M65QND6IY4KA2BVNAAAFQXDFY67JMDL", "length": 16853, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழைக்காக யாகம் நடத்தும் நேரத்தில் 10 மரக்கன்றுகளை நடலாம்... சீமான் | At the time of the Special yagam, instead ten saplings can be planted Says Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n21 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n1 hr ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nSports நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழைக்காக யாகம் நடத்தும் நேரத்தில் 10 மரக்கன்றுகளை நடலாம்... சீமான்\nசென்னை: மழைகாக யாகம் நடத்தும் நேரத்தில் பத்து மரக்கன்றுகளை நடலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.\nதமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.\nஇதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை விமர்சிக்கும் விதமாக பேசியுள்ள சீமான், மழைகாக யாகம் நடத்தும் நேரத்தில் பத்து மரக்கன்றுகளை நடலாம் என தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவையொட்டி, சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடந்த வீரவணக்கம் நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனின் கருத்தை வைத்து சுயலாபதிற்காக அரசியல் செய்கின்றனர் என கூறினார்.\nதனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியது, வரலாற்று ரீதியாக உண்மை தான் என்றும் சீமான் தெரிவித்தார். நமது கவனத்தை திசை திருப்பி 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை பேச யாரும் இல்லை என்றும் கூறியுனார்.\nமுன்னதாக, எங்களை விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டு தான். நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம் விமர்சனம் இல்லாமல் வளர முடியாது என்பது தான் என்று பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman kamal haasan election சீமான் கமல்ஹாசன் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-exit-poll-results-2019-dmk-will-get-the-highest-majority-says-times-now-axis-350945.html", "date_download": "2019-06-26T14:44:40Z", "digest": "sha1:4J6JHPXG2GXXPQIO6JGI4MBO6FXKJT7M", "length": 15737, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் திமுக விஸ்வரூபம்.. 38 இடங்களை வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்ஸிட் போல்! | Lok Sabha Exit Poll Results 2019: DMK will get the highest majority says Times Now - Axis - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n40 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n53 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் திமுக விஸ்வரூபம்.. 38 இடங்களை வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்ஸிட் போல்\nExit poll 2019 | 38 இடங்களை திமுக வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு\nசென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 34-38 இடங்களைக் கைப்பற்றும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.\nதேர்தல் முடிந்ததை அடுத்து வரிசையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நாடு முழுக்க பாஜக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது.\nதமிழகத்தில் திமுக கூட்டணிக்கே வெற்றி.. அதிமுக 2ம் இடம்.. நியூஸ் 18 தமிழ்நாடு கருத்து கணிப்பு\nதமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்திய டுடே - ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பில் திமுக அணி 34 முதல் 38 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.\nஅதிமுக கூட்டணி 0-4 இடங்களை பெறும் என்று கணித்து இருக்கிறது. மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காது என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aadi-perukku-hogenakkal-326501.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T14:14:45Z", "digest": "sha1:N3LOL5KJYS6BHDBVCWFQVKTLIV5KVNXF", "length": 19377, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வந்தது ஆடிப்பெருக்கு.. நீங்கியது தடை.. புன்னகை நாயகர்களாக மாறிய ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்! | Aadi Perukku in Hogenakkal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n10 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n23 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n50 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவந்தது ஆடிப்பெருக்கு.. நீங்கியது தடை.. புன்னகை நாயகர்களாக மாறிய ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்\nதருமபுரி: 25 நாட்களுக்கு பிறகு இன்றுதான் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் முகத்தில் சிரிப்பே தென்பட்டது. இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒகேனக்கலில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டதையடுத்து உற்சாகத்துடன் பரிசலை இயக்கினர்.\nகர்நாடகத்திலிருந்து அபரிமிதமான அளவில் காவிரியில் தண்ணீர் வந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணமாக பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை போட்டது. சுற்றுலா பயணிகளையும் அங்கு குளிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது. இதனால் ஒகேனக்கல் களை இழந்து காணப்பட்டதுடன், சுற்றுலா பயணிகளும் உற்சாகமின்றி வந்து சென்றனர். பரிசல் ஓட்டிகளோ தங்கள் வாழ்வாதாரம் இதுதான் என்றும் பரிசல் ஓட்ட அனுமதியுங்கள் என்று மாவட்ட நிர்வாகத்திடமும் பரிதாபத்துடன் கேட்டுக் கொண்டே வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து படிப்படியாக நீர்வரத்து குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று ஒகேனக்கல்லில் பரிசலில் ஆய்வு நடத்தினார். இதனையடுத்து பரிசலை இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி அளித்தார். மெயினருவியில் பாதுகாப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதால், அங்கு மட்டும் இன்னும் அனுமதி தரவில்லை.\nஎனினும் பரிசல் இயக்கும் அறிவிப்பின் மகிழ்ச்சியுடன் இன்று ஆடிப்பெருக்கு விழாவும் சேர்ந்து கொண்டதால் ஒகேனக்கல் பகுதியே களை கட்டியது. 25 நாட்களுக்கு பிறகு சுறுசுறுப்பாகவும், முகமலர்ச்சியுடனும் பரிசலை இயக்க தொடங்கினர் தொழிலாளர்கள். இன்று முதல் 3 நாட்கள் ஆடிப்பெருக்கு விழா நடைபெற போவதால், அவர்கள் வரப்போகும் இந்த 3 நாளும் செம பிசியாக இருக்க போகிறார்கள்.\nதண்ணீர் வரத்து இப்போது சற்று அதிகமாக உள்ளது. ஒருவேளை இதுவே இன்னும் அதிகமாவிட்டால், மீண்டும் பரிசல் இயக்க தடா தான் ஒகேனக்கல்லுக்கு இன்று வந்தவர்களில் பெரும்பாலானோர் புதுமண தம்பதிகள்தான். பட்டுசேலை, பூ, வளையல், புதுத்தாலியுடன் புதுமணப்பெண்கள் ஜொலி ஜொலித்தனர். இதேபோல ஏராளமானோர் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்திருந்தனர்.\nஅனுமதி வழங்கிவிட்டாலும், சுற்றுலா பயணிகள் மீது மாவட்ட நிர்வாகம் ஒரு கண் வைத்துக்கொண்டேதான் உள்ளது. மெயினருவி செல்லும் பாதையின் அருகே சுற்றிலும் தடுப்புகள் அமைத்து குளிக்க அனுமதித்தனர். அதேபோல, தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் கயிறு, ரிங் மற்றும் லைப்ஜாக்கெட்டுகளுடன் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து நீர்வரத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எப்படியோ 25 நாட்களாக ஒகேனக்கல்லில் குளிக்க முடியாமல் தவித்து வந்த சுற்றுலா பயணிகள் இன்று ஜாலியாக குளித்து மகிழ்ந்து ஆடிப்பெருக்கை இனிதே கொண்டாடினார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts hogenakkal மாவட்டங்கள் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-06-26T13:57:31Z", "digest": "sha1:YT7TPUBJNQ3ZIRIN5RPG3LI6JPSSNRAM", "length": 5204, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜீரண சக்தி பெற |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் மற்றும் நீர் பருகுவதை தவிர்த்து சுடு் நீர் அருந்தவும் . வயிறுமுட்ட உண்ணுவதை தவிர்த்து விட வேண்டும் . உணவை ......[Read More…]\nJuly,27,11, —\t—\tஎளிதில், செரிமான முறைமை, செரிமானத்திற்கு, செரிமானம், ஜீரண சக்தி பெற, ஜீரணம், ஜீரணம் ஜீரணிக்க\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2019-06-26T14:01:23Z", "digest": "sha1:Y6RQ2T22CQY5MYSG2ZUN7A6ZURPQBQ6G", "length": 7425, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தவான் இடத்தை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்வார்: அஸ்வின் | Chennai Today News", "raw_content": "\nதவான் இடத்தை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்வார்: அஸ்வின்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nதவான் இடத்தை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்வார்: அஸ்வின்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்ப என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் கே.எல்.ராகுல் அவர் இடத்தை பூர்த்தி செய்வார் என்பதில் சந்தேகமில்லை என்றும் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்றும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nமுன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது கைவிரலில் காயம் ஏற்பட்டதால் தவான் தற்காலிகமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும் அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது\n நடிகர் சங்க தேர்தல் என்ன ஆகும்\nஇன்று மாலை 6 மணிக்கு நேர் கொண்ட பார்வை டிரைலர்:\nஇங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nடாஸ் வெற்றி பெற்ற பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து\n20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/author/inandoutcontent/page/110/", "date_download": "2019-06-26T14:43:13Z", "digest": "sha1:25Q3EKT4FQW7A77WR2MIQ7OX5GJHWRSJ", "length": 12202, "nlines": 113, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inanout Cinema, Author at Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema - Page 110 of 335", "raw_content": "\nஸ்ரீ ரெட்டிக்கு அடிச்சான்பார் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்\nஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் உல்ள நடிகர், டெக்னிஷியன்கள் மீது பாலியல் புகார் கூறி பிரபலமானவர். அவர் லிஸ்டில் தமிழ் சினிமா பிரபலங்களும் உள்ளனர். இப்பொழுது தன் வாழ்க்கையை படமாக்க போவதாக அறிக்கை விடுத்தார். அதற்கு முக்கிய கேரக்டர் கொரட்லா சிவா என்றார். பின் அவர் திரிஷா ராணா சேர்ந்து இருந்த போட்டோவை போட்டு தம்பி எனக்கு, அண்ணை திரிஷாவிற்கு என்று பதிவிட்டு இருந்தார். இவர் இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று எண்ணி இப்பொழுது அவரை […]\nநான் டெல்லிக்கு போறேன் – சின்மயி\nசின்மயி, வைரமுத்து விவகாரம் நாம் அறிந்த ஒன்று. அது இன்னும் முடிந்த பாடில்லை. சின்மயியின் தொடர் புகார்களால் அவர் மீது தமிழ் சினிமா சங்கங்கள் நடவடிக்கை எடுத்தது. டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி. இதனால் பாதிக்கப்பட்ட சின்மயி தேசிய மகளிர் சங்கத்தில் தனது புகாரினை அளித்துள்ளதாகவும், அங்கு கண்டிப்பாக தனக்கு நீதி கிடைக்கும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஆர்யாவிற்கு மாப்பிள்ளை தோழன் ரெடி – மகிழ்ச்சி\nஆர்யா நீண்ட நாட்களாக திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசையில் இருந்தவர். ஆனால் அவருக்கு சரியான பெண் அமையவில்லை. கலர்ஸ் சேனல் கூட முயற்சித்து தோற்றது. இந்நிலையில் ஆர்யா, சாயிஷாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் அதை உண்மை என்று போட்டு உடைத்தனர் இருவரும். இவர்களின் திருமணம் வரும் மார்ச் 10 அன்று ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் தனது பத்திரிக்கையை தனது நெருங்கிய நண்பரான விஷாலுக்கு வைத்துள்ளார் ஆர்யா. […]\nஎப்பொழுதும் நட்பே துணை – டிரைலர்\nதல மங்காத்தா-2 ரெடி – வெங்கட் பிரபு\nதல அஜித்குமார் நடித்து வெற்றிகரமாக 50-வது நாளை கடந்துவிட்டது விஸ்வாசம். அடுத்து தல பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் வெங்கட் பிரபு மங்காத்தா-2 ரெடி என்று கூறியிருந்தார் அது தல ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதை உறுதி படுத்தும் வகையில் வெங்கட் பிரபு அஜித்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதற்கு ஆதாரமாக இருவரும் எடுத்து கொண்ட புகைபடத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு உறுதி செய்துள்ளார். தல ரசிகர்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு […]\nயோகிபாபு தமிழில் இப்பொழுது கால்ஷீட் பெற முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார். கோலமாவு கோகிலாவிற்கு அப்பறம் கதாநாயகனாக அவர் கைகளில் நான்கு படங்கள். அதில் ஒன்று நாயுடன் கூர்கா என்ற தலைப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது பன்றியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பன்னிக்குட்டி என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் கருணாகரனும் யோகிபாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் அனுசரன் முருகையா.\nதடம் – தடயம் தேடி அலைய விடும் கொலைகாரன்\nதடம் – identical twins அதில் ஒருவர் செய்யும் கொலை. இருவரும் மாட்டிக் கொள்வது. கொலையை இருவரும் மறுப்பது. யார் கொலைகாரன் எதற்காக கொன்றான் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் திணறுவது. உண்மையான கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா என்பது திரைக்கதை. தடையற தாக்க படத்தை அடுத்து மகிழ்திருமேனி மற்றும் அருண் விஜய் இணையும் படம். திரைக்கதையில் ஒரு தெளிவு. அடுத்தது என்ன நடக்கும், கொலைகாரன் யார் என்று படம் பார்க்கும் நம்மை சீட்டின் முன் இருக்கைக்கு வரவழைக்கிறார்கள். […]\nதாடி பாலாஜி, மனைவி நித்யாவின் பிரிவிற்கு காரணம் இதுதான்\nவிஜய் டிவியில் நடுவராக பல நிகழ்ச்சிகளில் வந்தவர் பாலாஜி. இவரது மனைவி நித்யா. பாலாஜி குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார் நித்யா. ஆனால் இருவரும் பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக இருந்தனர். பின்னர் இருவருக்குள்ளும் சண்டை முடிந்துவிட்டதாக அனைவரும் நம்பினார்கள். ஆனால் அது மீண்டும் பூதாகரமாக வந்து நிற்கிறது. அதற்கு காரணம் பாலாஜி வெளியிட்ட தகவல்தான். தனது மனைவி நித்யாவிற்கும், அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அதனால்தான் மனைவி என்மீது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/59018-rajinikanth-to-play-dual-role-in-murugadoss-film.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T14:24:59Z", "digest": "sha1:EV56SFYXWJU6EUCWTTS76XLLYMV7VCIW", "length": 9250, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலீஸ் மற்றும் சமூக சீர்திருத்தவாதி - இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்? | Rajinikanth to play dual role in Murugadoss film", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபோலீஸ் மற்றும் சமூக சீர்திருத்தவாதி - இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு ‘நாற்காலி’ என தகவல்கள் பரவியது. ஆனால் அதற்கு முருகதாஸ் மறுப்பு தெரிவித்தார்.\nஇதற்கிடையே படத்துக்கான முதற்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் 166 படமான இந்த திரைப்படத்தில் காவல் அதிகாரியாகவும், இன்னொரு கதாபாத்திரத்தில் சமூக சீர்த்திருத்தவாதியாகவும் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ அரசியல் சார்ந்த வசனங்களையும் கதைக்கருவையும் உள்ளடக்கி இருந்தது. இந்நிலையில் ரஜினி உடனான படத்திலும் அவரின் அரசியல் பயணத்துக்கு ஏற்ப கதைக்கருவை முருகதாஸ் அமைத்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 12 ஆவதாக புதிய தாலுகா உதயம்\nஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியென அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேரனுடன் ரஜினி : சந்தோஷ்சிவன் எடுத்த புகைப்படம்\nகாட்சி மொழி பேசிய மணிரத்னம்: இசை மொழி பேசிய இளையராஜா\nமோடி மக்களை ஈர்க்கும் தலைவர்: ரஜினிகாந்த்\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி\n‘தர்பார்’ ரஜினியுடன் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் யோகிபாபு\nரஜினியின் தர்பாரில் இன்று இணைந்தார் நடிகை நயன்தாரா\nரஜினிக்கு வலது கை விரலில் மை - அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி\n“எப்போது வந்தாலும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயார்”- ரஜினி\n\"அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்\"- நடிகர் ரஜினிகாந்த்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 12 ஆவதாக புதிய தாலுகா உதயம்\nஓசூர் சட்டப்பேரவை தொகுதி காலியென அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/profile/decent4992?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-26T15:24:40Z", "digest": "sha1:VIAZOAXW5TUC6GMW36NSWO35VW2OVDSY", "length": 3380, "nlines": 101, "source_domain": "sharechat.com", "title": "Decent boy - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💑 கணவன் - மனைவி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💑 கணவன் - மனைவி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💑 கணவன் - மனைவி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💑 கணவன் - மனைவி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💑 கணவன் - மனைவி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💑 கணவன் - மனைவி\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/22/india-tomorrow.html", "date_download": "2019-06-26T13:58:58Z", "digest": "sha1:U73QZLP4WIWDTEYQK4JRGJEE3SSAFVVS", "length": 15098, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒலிம்பிக்கில் இந்தியா | schedule for india at olympic tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n35 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n1 hr ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பியுள்ளது. மொத்தம் 117 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.\nமொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 14 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்படும் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கால்பந்து, ஜூடோ, படகுப் போட்டி, பாய்மரப் படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியா போட்டியிடுகிறது.\nசெப்டம்பர் 23-ல் இந்தியா கலந்து கொள்ள உள்ள போட்டிப் பிரிவுகள் விவரம் :\nபெண்களுக்கான ஹெப்டதலான் (100 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல்)- ஜி. பரிமளா, சோமா பிஸ்வாஸ் பங்கேற்பு - காலை 4 மணி முதல்.\nபெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் (இரண்டாவது சுற்று) - கே.எம். பீனா மோல் பங்கேற்பு - பிற்பகல் 2.15.\nஆண்களுக்கான பி பிரிவு ஆட்டம் - ஸ்பெயினுடன் இந்தியா மோதல் - காலை 10.00.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\nபெட்ரோலிய துறையில் ஊடுருவிய அமெரிக்க உளவாளிகள்.. கொத்தாக அள்ளியது ஈரான்\nஉங்ககிட்ட சர்டிபிகேட் கேட்கல.. தேவையில்லாம தலையிடாதீங்க... அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த இந்தியா\nஒரு குண்டு வந்தாலும், அமெரிக்கா, நட்பு நாடுகள் நலன்கள் தீக்கிரையாகும்.. ஈரான் பகிரங்க எச்சரிக்கை\nபதற்றம் அதிகரிப்பு.. சுட்டுத் தள்ள வாய்ப்பு.. ஈரான் வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் போகாது\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/13/website.html", "date_download": "2019-06-26T14:12:51Z", "digest": "sha1:AKGNA3LVJ5KOVIRKVLGHPDIZYUHQ5LIT", "length": 18195, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செய்யலாம்! | labour law will be put on website - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n22 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n48 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செய்யலாம்\nஇன்டர்நெட் மூலம் கம்பெனிகளை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகமத்திய சட்டம் மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் அருண் ஜெட்லிகூறியுள்ளார்.\nகோவையில் கம்பெனிகளின் பதிவு அலுவலகத்தை பங்குச் சந்தைக் கட்டடவளாகத்தில் திறந்து வைத்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது:\nதொழில் போட்டி தொடர்பான சட்ட விதிறைகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம்இன்டர்நெட் மூலம் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் யோசனைகளுக்குவைக்கப்படும்.\nதொழில் போட்டி தொடர்பான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இறுதி நிலையில்உள்ளது. இந்த சட்ட விதிமுறைகள் முதலில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களின்பார்வைக்கு வைக்கப்படும்.\nஇன்டர்நெட் தளத்தில் வைக்கப்படும் இந்த விதிமுறைகளில் செய்ய வேண்டியமாற்றங்கள், விதிமுறை தொடர்பான சந்தேகங்கள், கருத்துக்களை இந்த வெப்சைட்மூலம் தெரிவிக்கலாம். இந்த கருத்துக்களையும் அமைச்சகம் பரிசீலனை செய்யும்.இதன் பின்னரே பார்லிமென்டில் ஒப்புதலுக்கு வைக்கப்படும். ஒப்புதலுக்குவைக்கப்படும்போது பொதுமக்களின் கருத்துக்களும் தெரிவிக்கப்படும்.\nஇந்தியாவில் 7 கம்பெனிகளின் பதிவு அலுவலகங்கள் உள்ளன. அனைத்துகம்பெனிகளின் பதிவு அலுவலகங்களையும் \"காகிதம் இல்லாத (பேப்பர்லஸ்)அலுவலகங்களாக மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்குமுன்னோடியாக கோவை அலுவலகம் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது.\nஒரே இடத்தில் இருந்து கொண்டு, கம்பெனிகளை பதிவு செய்து கொள்ளும்வழிமுறைகள் விரைவில் ஏற்படும். இன்டர்நெட் மூலம் கம்பெனிகளைப் பதிவு செய்யஇயலும்.\nவறுமையை ஒழிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.சர்வதேச நாடுகளில் மிகவேகமான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடாக இந்தியாஇருந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 6 சதவீதமாக இருந்துவருகிறது. இதனை 8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.\nநாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் ஆண்டுக்கு ஆண்டு நஷ்டத்தில் இயங்குவதையாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த நிறுவனங்களை நடத்தபொதுமக்களின் வரிப் பணம் பயன்படுத்தப்படுகிறது. நஷ்டத்தை சரிக்கட்ட மேலும்மேலும் பொதுமக்களின் மீது வரிச் சுமையை ஏற்றுவது மிகவும் தவறானமுன்னுதாரணம்.\nநாட்டின் ஒட்டுமொத்த வருவாயில் பாதியளவு கடன், வட்டிச் சுமைக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 50 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகக் கொடுக்கப்பட்டுவிடும். மீதமுள்ள சிறிய அளவு நிதியை வைத்து பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்குஎவ்விதத்திலும் உதவ முடியாது.\nமிகப் பெரும் மக்கள் தொகையைக் கொண்டுள்ள அரசு, எவ்வளவு வரிகளைவிதித்தாலும், நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. மக்களின் அதிகரித்து வரும்தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.\nபோதுமான தகவல் தொடர்பு, ரோடு வசதி, போக்குவரத்து, மின்சாரம் என அனைத்துவசதிகளையும் மேம்படுத்துவது அரசினால் இனி வரும் காலங்களில் இயலாத காரியம்.\nதொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்கி, வியாபாரத்தைப்பெருக்குவது அரசின் வேலை அல்ல. அரசு வியாபார நிறுவனமாக இருக்கக் கூடாது.தொழிற்சாலைகளுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாகச்செயல்படுபவையாகவும், அதற்கு ஏற்ப விதிமுறைகளைத் தளர்த்தி, உதவ வேண்டியதுஅரசின் கடமை.\nதொழிற்சாலைகள் வளர தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம்வேலை வாய்ப்பு பெருகும். இதன் மூலம் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம்மேம்படும். அப்போது வறுமை ஒழியும் என்றார்.\nபின்னர் பேட்டியின்போது, ராவ், பூட்டாசிங் ஆகியோருக்கு அளித்த தண்டனைகுறித்து நிருபர்கள் கேட்டபோது, \"சட்டப்படி அவர்களுக்குத் தண்டனைகிடைத்துள்ளது. இது பற்றி விமர்சிக்கத் தேவையில்லை. சட்டத்தின் முன்பு யாராகஇருந்தாலும் தண்டனை பெற்றுத் தான் ஆக வேண்டும். நீதி நிலைப்பதற்கான நல்லஅறிகுறிதான் இது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-officials-review-rajaji-hall-326807.html", "date_download": "2019-06-26T15:08:43Z", "digest": "sha1:3B3YCGVUOM6XCAQTOSIBFQFUNXZ4VESE", "length": 13485, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜாஜி அரங்கில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு | Police officials review in Rajaji Hall - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n24 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n1 hr ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nSports நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜாஜி அரங்கில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு\nசென்னை: ராஜாஜி அரங்கில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nகருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸாரும் பணியில் இருக்க வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் ராஜாஜி அரங்கில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nபோராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்\nஇதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு\nஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்\nதமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து\n96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்\nஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi கருணாநிதி கருணாநிதி உடல் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:20:17Z", "digest": "sha1:NO24IZJNOZWRVCT6LO6QB2EOOVSPENW5", "length": 20870, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டீவ் சிமித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் ஸ்டீவன் பீட்டர் சிமித்\nபந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்\nமுதற்தேர்வு சூலை 13, 2010: எ பாக்கிஸ்தான்\nகடைசித் தேர்வு சனவரி 3, 2011: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 182) பிப்ரவரி 19, 2010: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 2, 2011: எ இங்கிலாந்து\n2007– நிவ் சவ்த் வேல்ஸ் புளு (squad no. 19)\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nஆட்டங்கள் 5 15 23 35\nதுடுப்பாட்ட சராசரி 28.77 26.66 42.11 35.69\nஅதிக ஓட்டங்கள் 77 46* 177 92\nபந்து வீச்சுகள் 372 503 2,988 1,271\nஇலக்குகள் 3 17 41 33\nபந்துவீச்சு சராசரி 73.33 25.82 48.17 33.75\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 1 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0\nசிறந்த பந்துவீச்சு 3/51 3/33 7/64 3/33\nபிடிகள்/ஸ்டம்புகள் 1/– 6/– 28/– 16/–\nபிப்ரவரி 7, 2011 தரவுப்படி மூலம்: [1]\nஸ்டீவன் பீட்டர் சிமித்: (Steven Peter \"Steve\" Smith, பிறப்பு: சூன் 2 1989) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் ஆவார்.[1][2]ஏப்ரல், 2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்[3][4]. டிசம்பர் 30, 2017 இல் தேர்வுத் துடுப்பாட்ட தரவரிசையில் 947 புள்ளிகள் பெற்றார். இது துடுப்பாட்ட வரலாற்றில் வீரர் ஒருவர் பெறும் இரண்டாவது அதிகபட்ச புள்ளியாகும்.டான் பிராட்மன் 961 புள்ளிகளோடு முதல் இடத்தில் நீடிக்கிறார்.[5] சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[6][7] உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[8][9]\nவலது கை சுழற்பந்துவீச்சாளராக முதலில் அணிக்குத் தேர்வானார்[10] தற்போது மட்டையாளராகவிளையாடி வருகிறார்.[11] 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சில தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதன் பின் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில் மைக்கேல் கிளார்க்கிடம் இருந்த அணித்தலைவர் பொறுப்பு இவரிடம் வந்தது. அதன் பின்பு நான்காவது வீரராக விளையாடி வருகிறார்.[12]\nஇவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதைப் பெற்றார்.[13] மேலும் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதையும், 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான ஆலன்பார்டர் பதக்கத்தையும் , 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருது,[14] 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆத்திரேலிய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில் விசுடன்[15] துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை சிறந்த வீரராக அறிவித்தது.[16] 2014 ஆம் ஆண்டில் மார்ட்டின் குரோவ் என்பவர் ஜோ ரூட், விராட் கோலி, கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய நான்கு இளம் வீரர்கள் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்கள் எனத் தெரிவித்தார்.[17][18]\nமார்ச், 2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக விமர்சனத்திற்கு உள்ளானார்.[19][20] பின் ஆத்திரேலியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விசாரணைக்குப் பின் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட இவருக்கு ஓராண்டு தடைவிதித்தது.[21]\nஸ்டீவ் சுமித் சூன் 2 1989 இல் சிட்னி, ஆத்திரேலியாவில் பிறந்தார். இவரின் தந்தை பீட்டர் ஆத்திரேலியாவைச் சார்ந்தவர், இவர் வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர் ஆவார்[22]. தாய் கிலியன்,[23]இலண்டன் நாட்டைச் சேர்ந்தவர். சுமித் மேனாய் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். 17 ஆவது வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு இங்கிலாந்தில் துடுப்பாட்டம் விளையாடச் சென்றார்.[24][25]\nஇவரின் தாய் இலண்டன் நாட்டைச் சார்ந்தவர் என்பதனால் இவருக்கு ஆத்திரேலியா மற்றும் இலண்டன் ஆகிய இருநாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.[26] இவர் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் சட்டம் பயின்ற டேனி வில்லிஸ் என்பவருடன் பொருத்தம் வலுப்படுத்தலில் (டேட்டிங்) இருந்து வந்தார்.[27] சூன், 2017 இல் இவர்களின் உறுதிபார்த்தல் அறிவிப்பு வெளியானது[28]. தெ ஜர்னி (பயணம்) எனும் இவரின் சுயசரிதை நூல் அக்டோபர் 25, 2017 இல் வெளியானது.[29][30]\n↑ கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: Steven Smith\nஆஸ்திரேலியா அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஆஸ்திரேலியா அணி – 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-06-26T14:40:43Z", "digest": "sha1:CGLUL3ZYP3KRUY5A2MRTL2GL6M3DHEQI", "length": 47051, "nlines": 792, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "முபாஹலா கூடுமா | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஇஸ்லாமும் முபாஹலாவும் – சுதர்சனுக்கு விளக்கம்\nFiled under: முபாஹலா, முபாஹலா கூடுமா, mubahala — முஸ்லிம் @ 8:58 பிப\nஅன்பின் சகோதரர் சுதர்சன் அவர்களுக்கு,\nஇஸ்லாத்தைக் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போன்று அமைந்த தங்களின் கீழ்க்காணும் கேள்விகளுக்கும் இதற்கு முன்னர் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் மிக்க நன்றி\nபல்வேறு தளங்களில் இக்கேள்வியை கேட்டதில் இங்கு மட்டுமே என் கேள்வி எவ்வித எடிட்டிங்கும் இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக முதலில் தோழர் முகவைத்தமிழன் அவர்களுக்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎன் கேள்விக்கு பதிலளிக்க “முயன்றுள்ள” தோழர் அஸ்மின் அவர்களுக்கும் என் நன்றி.\nஆனால் உங்களின் பதில் என் கேள்விக்கு போதுமான பதிலாக இல்லை.\n1. “ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்கமாட்டார்” எனில், ஆண்கள் தங்களுக்குள் நடத்திய கொடுக்கல், வாங்கல் போன்ற மற்று விஷயங்களில் செய்த தவறுகளுக்கு எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளையும் பொதுவில் குற்றவாளி போன்று நிறுத்தி, அவர்கள் மீதும் சாபம் இறங்கட்டுமாக எனக் கூறுவது எவ்வகையில் சரியானது\n2. அறிவுப்பூர்வமான இஸ்லாம் இவ்விஷயத்திற்கு கூறும் அறிவுப்பூர்வமான விளக்கம் என்ன\nஇதனை நான் மாற்று வார்த்தையில் கேட்பதானால்,\n), கட்டிய மனைவி திரௌபதியை மக்கள் மத்தியில் தன் சுயகவுரவத்தை காக்க பந்தயப்பொருளாக வைத்து சூதாடுகிறானே யுதிஷ்டிரன் – இந்து சனாதன தர்மம் அவதார புருஷனாக எடுத்துக்காட்டும் இவனின் செய்கைக்கும், அறிவுப்பூர்வமான மார்க்கமான இஸ்லாத்தை தூக்கி நிறுத்த அறிவுப்பூர்வமான விளக்கங்கள் அளித்து மற்றவர்களை மதம்மாற்ற முயலும் உங்களின் அறிஞர் பி.ஜெய்னுலாபித்தீன் மற்றும் அவரின் எதிரிகளாக இருந்த அந்த 8 பேர்களின் செய்கைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது இதனை அறிவுப்பூர்வமாக விளக்க இயலுமா\nதாங்கள் என்ன நோக்கத்தில் இக்கேள்வியை கேட்கின்றீர்கள் என்பது புரியவில்லை. இஸ்லாத்தைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு வேட்கையின் காரணமாக கேட்கின்றீர்கள் எனில் தங்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் இஸ்லாம் கூறும் “முபாஹலா” குறித்தும் தங்களின் கேள்விக்கு பதில் அளிக்க கோரியும் நாம் விடுத்த வேண்டுகோளை அடுத்து எம் இஸ்லாமிய சகோதரர்களிடம் இருந்து ஏறாளமான மடல்கள் தங்களது கேள்விகளுக்கு விளக்கமாக எம்மிடம் கடந்த தினங்களில் வந்து மலை போல் குவிந்துள்ளன.\nமற்றபடி தாங்கள் இங்கே கேட்டுள்ள பெரியவர் பி.ஜே நடத்திய முபாஹலா நிகழ்ச்சிக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இஸ்லாமிய வழிகாட்டல்களை தவறாக விளங்கியுள்ள பல முஸ்லிம்களைப் போன்று இவர்களும் “முபாஹலாவை” தவறாக விளங்கிய காரணத்தினாலேயே, தங்களை மக்கள் மத்தியில் நியாயவான்களாக சித்தரிக்க வேண்டி இப்படிப்பட்ட காரியங்களை செய்கின்றனர். இன்னும் தங்களின் கேள்விக்கு பதில் அளிப்பதாக கூறிக் எமக்கு நீங்கள் கூறிய பெரியவர் பி.ஜே அவர்களின் இயக்கத்தினரும் ஒரு மடல் அனுப்பியிருந்தனர் அம்மடலில் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக எம்மை ஒரு முபாஹலாவிற்கு அழைத்திருந்தனர் இதுதான இவர்களின் நிலை.\nஎனவே தாங்கள் இவர்களின் இச்செயல்களை இஸ்லாத்தோடு தயவுசெய்து தொடர்பு படுத்த வேண்டாம். “ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க இயலாது” என அறிவுறுத்தும் இஸ்லாத்தின் கொள்கைகளை தெளிவாக அறிந்துள்ள இத்தகையோர், “எவ்வகையில் தாய், தந்தையர்கள் செய்த தவறுக்கான தண்டனையை குழந்தைகளும் பெறும் விதத்தில் சாபம் கோர இஸ்லாம் கூறும்” என்ற சாதாரண கேள்வி மனதில் எழும் அளவிற்கு கூட சிந்தனை செய்யும் மனநிலையில் இவர்கள் இல்லை என்பதை தான் இச்சம்பவங்கள் காட்டுகின்றன.\nஎப்பொழுதும் எல்லா இடத்தும் கூறப்படுவது போல், முஸ்லிம் அல்லாத மாற்று சகோதரர்களிடம் ஒரு வேண்டுகோள்:\n“இஸ்லாத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடுங்கள். இஸ்லாமியர்களின் செய்கைகளில் தயவு செய்து தேடாதீர்கள்.”\nஅவ்வாறு நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடும் பொழுது, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் தான் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி அறிந்து கொள்வீர்கள்.\nஆர்வத்துடன் இஸ்லாத்தைக் குறித்து சந்தேகம் எழுப்பிய சகோதரர் சுதர்சனுக்கு நன்றிகள். தங்கள் சந்தேகங்களை தாராளமாக மேலும் கேளுங்கள். இயன்றவரை அறிந்த வகையில் விளக்க முற்படுகின்றோம்.\nஇக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்களும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் முபாஹலாவிற்கு விளக்கம் அளித்து கட்டுரை அனுப்பக்கூடியவாக்ள் இனிமேல் கட்டுரைகள் அனுப்ப வேண்டாம் எதிர்பார்த்த அளவை விட அதிகமான கட்டுரைகள் வந்துள்ளதால் அவையே போதுமான பதிலாக அமைந்துள்ளன. தங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பித்தந்து தனி மனித செயலை இஸ்லாத்தோடு ஒப்பிட்டு நடத்திய குற்ச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. ஜஸாக்கல்லாஹ் ஹைர்.\nசகோதரர் சுதர்சனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலும் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு விளக்கமாகவும், தெளிவான பதிலாகவும் வந்து குவிந்த கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் மட்டும்.\n1) இஸ்லாமிய இணையப் பேரவை (IIP) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் இணையத்தளங்கள்,எழுத்தாளர்கள் மற்றும் முஸ்லிம் வலைப்பதிவாளர்களின் கூட்டமைப்பு அனுப்பியிருந்த கட்டுரை :\nதாங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று துவங்கி முபாஹலா பற்றிய ஒரு தகவலைத் தெரிவித்து அதனோடு கிருத்துவ நம்பிக்கையையும் பொருத்தி முபாஹலாவுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது எனில் இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வான மார்க்கம் என விளக்கம் கேட்டுள்ளீர்கள்.\nமுஸ்லீம்களாகிய நாங்கள் வணங்கத் தகுதியான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம், வணங்கக் கூடாது. இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களில் அவரவர் கொள்கைப்படி தாங்கள் கடவுள் என்று எவைகளை எல்லாம் நம்பியுள்ளார்களோ அவைகளை வணங்குவார்கள். மேலும் படிக்க……..\n2) தமிழகத்தின் பிரபல அறிஞரும் பி.ஜே என்பவருடன் பல காலம் ஒன்றாக இருந்து பின்னர் பி.ஜே யின் தவறான கொள்கை பிடிக்காமல் வெளியேறியவருமான திரு.பஸ்லுல் இலாஹி என்பவர் தமிழகத்தின் வரலாற்றில் முபாஹலா என்ற இந்த வழக்கத்தை முதலில் தோற்றுவித்தது யார் என்பதில் இருந்து இந்த முபாஹலா வின் சரித்திரப் பின்னணியை ஆராய்ந்துள்ள அருமையான கட்டுரை.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலம் சகோதரர் சுதர்சன் அவர்கள் முபாஹலா சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது இவ்வாறு சாபம் கோர இஸ்லாம்தான் வழி காட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப் பூர்வமான மார்க்கமாகிறது இவ்வாறு சாபம் கோர இஸ்லாம்தான் வழி காட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப் பூர்வமான மார்க்கமாகிறது இதுதான் சுதர்சன் அவர்கள் முஸ்லிம்களிடம் நேரடியாக வைத்துள்ள கேள்வி. இதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களே விளக்கம் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். மேலும் படிக்க……..\n3) துபையை வசிக்கும் தமிழக சகோதரார் திரு அஹமத் இமாம் அவர்கள் தங்களுக்கு முபாஹலா பற்றிய விளக்கத்தை குர்ஆனின் ஒளியில் விளக்கியுள்ளார்.\nநீங்கள் எழுப்பிய கேள்வி அர்த்தம் நிரம்பியது.முஹாபலா(முக்காபுலா அல்ல) என்ற பெயரில் ஒன்றும் அறியாத குடும்பத்தினர் மீது சாபம் இடுதல் இஸ்லாத்தில் இல்லாதது.மேலும் படிக்க……..\n4) அத்துடன் தங்களுக்கு வலைகுடாவில் வாழும் எமது சகோதரர் திரு. அபு ஃபாத்திமா அவர்கள் ஒரு கேள்வி ஒன்றையும் வைத்துள்ளார்கள் அதையும் இங்கு தங்களுக்கு அறியத் தருகின்றோம்.\nதன்னை மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக கூறி இஸ்லாமிய மார்க்கத்தின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பிய சகோதரர் சுதர்சன் அவர்களிடம் ஒரு சிறு கேள்வி.\nதாங்கள் கேள்வி எழுப்பும் பொழுது, மதங்கள் மக்களிடையே பகைமையை வளர்க்கின்றன எனவும், மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனவும் கூறினீர்கள்.\nதங்களின் இக்குற்றச்சாட்டுகளுக்கு இஸ்லாம் எவ்வகையிலும் உகந்ததல்ல என்பதை மிக உறுதியுடன் கூற இயலும்.\nஇஸ்லாம் வளர்க்கும் பகைமை, மூடநம்பிக்கைகளை தாங்கள் பட்டியல் போட்டு காட்ட இயலுமா பொத்தாம் பொதுவாக அனைத்து மதங்களுமே அப்படித்தான் எனக் கூறுவதை விடுத்து எந்த மதங்கள் எந்தெந்த வகையில் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனப் பட்டியல் போடுங்கள். அதில் தாங்கள் இஸ்லாத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கமளிக்க நாம் மிக்க ஆவலுடன் உள்ளோம்.\nஆனால் அதே சமயம், கடவுள் என்ற ஓர் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் நாத்திகம் பேசுபவர்களால் பகைமையே உருவாவதில்லை என்பது போலவும், அவர்களிடம் மூட நம்பிக்கைகள் இல்லை என்பது போலவும் தாங்கள் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.\nதமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் கூட, நாத்திகம் பேசுபவர்களுக்கு இடையில் ஒருமித்த சிந்தனை இல்லாததும், அவர்களுக்கென குறிப்பிட கொள்கையில் ஒத்த கருத்து இல்லாததும் அனைவரும் அறிவர். ஏன் கடவுள் இல்லை எனக் கூறிய பெரியாருக்கே சிலை வைத்து இன்று மாலை மரியாதைகளுடன் பூஜிக்கும் நிலையில் தான் நாத்திகர்கள் இன்று உள்ளனர்.\nமற்றவர்களுடன் இவர்கள் வைத்து வளர்க்கும் பகைமையை விட, இவர்களுக்கிடையே இருக்கும் பகைமை தான் மிக அதிகம் உள்ளது. எனவே பகைமை வளர மதக்கோட்பாடுகள் தான் காரணம் எனப் பொதுவாக குற்றம் சுமத்துவது எவ்வகையிலும் நியாயமில்லை.\nஅதே போன்றே மூடநம்பிக்கைகளும். இன்று மூடநம்பிக்கைக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக மெச்சிக் கொள்ளும் பகுத்தறிவுவாதிகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதற்கு பெரியார் சிலை விவகாரமே மிகச் சிறந்த உதாரணமாகும்.\nஏன் அங்கு வரை செல்ல வேண்டும். இங்கு கேள்வியை எழுப்பிய நாத்திகவாதியான தங்கள் கேள்வியின் கருத்தில் அடங்கியுள்ள வாசகம் ஒன்றே நாத்திகவாதிகளின் அறியாமையை தோலுரிக்கின்றதே.\nதாங்கள் கேள்வியை ஆரம்பிக்கும் பொழுது, “அனைவருக்கும் வணக்கம்” என்று கூறி ஆரம்பித்துள்ளீர்கள்.\n“வணக்கம்” என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து தான் தங்களைப் போன்றவர்கள் அவ்வாறு கூறுகின்றார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.\nஏனெனில், வணக்கம் என்ற பெயர்சொல் ஒருவரை நோக்கிக் கூறப்படும் பொழுது, “அன்னாரை வணங்குகிறேன்” என்ற பொருளிலேயே கொள்ளப்படுகின்றது.\nஇவ்வுலகில் “வணங்குவதற்கு தகுதியானவர் யார்” என்ற ஓர் கேள்வியை நாத்திகம் பேசும் தங்களைப் போன்றவர்கள் இதுவரை எழுப்பியுள்ளீர்களா” என்ற ஓர் கேள்வியை நாத்திகம் பேசும் தங்களைப் போன்றவர்கள் இதுவரை எழுப்பியுள்ளீர்களா. மரியாதை கொடுக்கின்றோம் என்ற பெயரில், “வணங்குதல்” என்ற வார்த்தைக்கு எவ்வித தகுதியும் பெறாத சக மனிதர்களை நாத்திகம் பேசுபவர்கள் “வணங்கிக்” கொண்டிருக்கின்றீர்களே. இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை விளக்க முடியுமா\nஇவ்வுலகில் வணங்குதலுக்கு தகுதியானவர், “யார் இவ்வுலகு அனைத்தையும் படைத்து காத்து, பராமரித்து வருகிறாரோ அவர் மட்டுமே” என இஸ்லாம் கூறுகின்றது. “ஒருவரை வணங்க வேண்டும் எனில், யார் என்றே தெரியாத அந்த சக்தியை மட்டுமே வணங்க வேண்டும்” எனவும், எவ்வகையிலும் சக மனிதனை வணங்குதல் கூடாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது.\nமற்ற அனேக மதங்கள் கண்டவை அனைத்தையும் வணங்கக் கூறுகின்றது. அல்லது மற்ற மதத்தினர் அவ்வாறு வணங்குகின்றனர். அதே போன்றே கடவுள் இல்லை எனக் கூறும் நாத்திகவாதிகளான தங்களைப் போன்றவர்களும் மனிதர்களை வணங்குகின்றனர். இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை சற்றி விளக்க முடியுமா\nஅறிவு ரீதியாக தங்களைப் போன்றவர்கள் சிந்திப்பர் என்பதனாலேயே தங்களிடம் பதிலாக இக்கேள்வி வைக்கப்பட்டது. அல்லாமல் தங்களின் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது தங்களை வருத்தப்படுத்தும் நோக்கிலோ அல்ல. ஒரு தவறு கண்ட பொழுது எவ்வாறு தாங்கள் இங்கு “முபாஹலா” குறித்த கேள்வியை எழுப்பினீர்களோ, அதே போன்றே சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கேள்வியை தங்கள் முன் வைக்கின்றேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamei.com/england-team-for-worldcup-2019-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-23/", "date_download": "2019-06-26T15:05:10Z", "digest": "sha1:HXUIMMQ2KUVWO44CA7WBI36BZYPT5EV6", "length": 9220, "nlines": 109, "source_domain": "www.dinamei.com", "title": "England Team for Worldcup 2019 : இப்பவாது கப் ஜெயிப்பாங்களா ...இங்கிலாந்து? | WorldCup | Cricket - தினமெய்", "raw_content": "\nEngland Team for Worldcup 2019 : இப்பவாது கப் ஜெயிப்பாங்களா …இங்கிலாந்து\nEngland team squad for world cup 2019 : இப்பவாது கப் ஜெயிப்பாங்களா …இங்கிலாந்து\n← இந்தியா Vs பாகிஸ்தான் உலகக் கோப்பை மோதல் – இதை கவனித்தீர்களா..\nஉலகக் கோப்பை இந்திய அணி தேர்வும்… நெட்டிசன்களின் நக்கல்களும்… #PTDigital #IndiaTeam #Cricket #WC →\nMani Ratnam: இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nOctober 2, 2018 admin Comments Off on Mani Ratnam: இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n2019 IPL: இந்த வருஷம் இந்தியாவில் நடக்குமா ஐபிஎல்., தொடர்\nJanuary 7, 2019 admin Comments Off on 2019 IPL: இந்த வருஷம் இந்தியாவில் நடக்குமா ஐபிஎல்., தொடர்\nஉலகக் கோப்பை இந்திய அணி தேர்வும்… நெட்டிசன்களின் நக்கல்களும்… #PTDigital #IndiaTeam #Cricket #WC\nEngland Team for Worldcup 2019 : இப்பவாது கப் ஜெயிப்பாங்களா …இங்கிலாந்து\nஇந்தியா Vs பாகிஸ்தான் உலகக் கோப்பை மோதல் – இதை கவனித்தீர்களா..\nநீங்க விளையாடினது போதும் : மும்பை வீரர்களுக்கு தடை போட்ட நிர்வாகம் | IPL 2019 | Mumbai Indians | CSK\nவாய்மையே வெல்லும் - இவ்வுலகில் எத்தனை துயர்களை நேர்மையாக வாழ்பவர்கள் சந்தித்தாலும், தர்மத்தின் வழி நடப்பவர்க்கே நற்புகழ் மற்றும் கீர்த்தி கிட்டும்.தமிழரின் உயர்ந்த பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை உலகறிய செய்திட, மீண்டும் நம்மை நாமே திருத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vishal-clarifies-about-marriage", "date_download": "2019-06-26T14:59:25Z", "digest": "sha1:27VV5ZEAUJOANBVKJCU2ROZ3YE3OEIRS", "length": 10878, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "'புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளிவந்த தகவல் தவறு..' - விஷால் அதிரடி அறிவிப்பு ! | vishal clarifies about marriage | nakkheeran", "raw_content": "\n'புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளிவந்த தகவல் தவறு..' - விஷால் அதிரடி அறிவிப்பு \nவிஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார் என்றும் சமீபத்தில் செய்திகள் பரவின. மேலும் அவரது புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து விஷால் தரப்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்...\n\"நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்த படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளிவந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும். முறைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்\" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nஎல்லாரையும் குஷிப்படுத்தனும்னா ஐஸ்க்ரீம்தான் விக்கணும்-விஷால் பேட்டி\nபள்ளி மாணவியுடன் நடிகர் விஷாலை தொடர்புபடுத்தி அவதூறு பரப்பிய பெண்மணி சிறையிலடைப்பு\nசரத்குமார், ராதாரவி மீதான வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க உத்தரவு\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\nஆசிரியர் ஒருவர் பற்றி ஜோதிகா பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய தகவல்..\n‘அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும்’- ஜோதிகா கேள்வி\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nசென்னை மக்களின் நிலை குறித்து வருந்தும் டைட்டானிக் ஹீரோ...\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilcnn.lk/archives/844590.html", "date_download": "2019-06-26T13:59:50Z", "digest": "sha1:ZO6IGXV2JRPURESCC4IKOB5YURIK544X", "length": 14583, "nlines": 64, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மகிந்தவின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமெரிக்கத் தூதுவர்!", "raw_content": "\nமகிந்தவின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமெரிக்கத் தூதுவர்\nMay 23rd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅண்மைய நாட்களாக சிறிலங்காவுக்குள் அமெரிக்கா பாரிய கடற்படைத் தளமொன்றை அமைத்து வருவதாகவும் அமெரிக்க படையினர் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பாரிய ஆயுதங்களுடன் வந்து செல்வதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் இலங்கைக்கான அமெரிகத் தூதுவர் அலைனா பி டெப்ளிஸ்.\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்துக்கு சென்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட சிறி ஞானரத்ன தேரரை சந்தித்திருந்தார்.இந்த நிலையில்\nமகிந்த உட்பட்ட அவரின் கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அஸ்கிரிய பீட மகாநாயக்கருக்கு தூதுவர் தெளிவுபடுத்தினார்.\nஅதேவேளை அமெரிக்கா எப்போதும் சிறிலங்காவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அடித்துக்கூறினார்.\nஇதனையடுத்து மற்றுமொரு பௌத்த தலைமைப் பீடமான மல்வது பீடத்துக்கும் சென்று சிறிலங்காவுக்குள் அமெரிக்க இராணுவத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரங்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று விளக்கமளித்தார்.\nஇதனையடுத்து வெளியில் வந்த கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்ளிஸ், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியினரும் அவருக்கு விசுவாசமான சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்களும் குற்றம்சாட்டும் பாதுகாப்பு ஒப்பந்தம் மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலேயே கைச்சாத்திடப்பட்டதாக குறிப்பிட்டார்.\n‘ கைப்பற்றுதல் மற்றும் இடைநிலை சேவை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆட்சியின் போது இணக்கம் காணப்பட்டு முதலில் கைச்சாத்திடப்பட்டது. இது ஒரு விநியோகத்துக்கான ஒப்பந்தமாகும். அதாவது எமது கப்பல்களை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு தேவையான விநியோகத்தை வழங்குவதற்காகவும் சிறிலங்காவின் தேவைகளுக்காகவும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளுக்காக இவ்வாறான ஒப்பந்தங்கள் நாடுகளுக்கிடையே கைச்சாத்திடுவது வழமையான நடவடிக்கையாகும். ஏனெனில் எமது படையினர் பிரவேசிக்க வேண்டிய தேவை ஏற்படும் ஒவ்வொரு தடவையும் பேசி இணக்கம் காண்பதற்கு செலவாகும் நேரத்தை கருத்திற்கொண்டு முன்கூட்டியே இவ்வாறான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன. அதேவேளை சிறிலங்காவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்துக்கு அமைய நாம் தொடர்ந்தும் கூட்டுப் படைப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். சிறிலங்காவின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிடடாக வேண்டும். அதேவேளை பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் பிராந்தியத்தின் ஸ்திரத்திற்காகவும் கடற்பிராந்தியங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதியும் இருக்கின்றது’\nஇதேலேவளை சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம் செய்திருந்த அதே காலப்பகுதியில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன்ன அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nசிறிலங்கா ஜனாதிபதியின் சீன விஜயத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தவா சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை அவசரமாக வொஷிங்டனுக்கு அழைத்தீர்கள் என்று ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்கத் தூதுவர் டெப்ளிசிடம் வினவினார்.\n‘வொஷிங்டன் சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் எமது வெளிவிவகார செயலாளரான பொம்பேயோ மிகவும் பயனுள்ளதான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததை நாம் வரவேற்கின்றோம். இது வழமையான இருதரப்பு பேச்சுவார்த்தைகளாகவே அமைந்திருந்தன. சில மாதங்களுக்கு முன்னரே இந்த விஜயம் திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்கமைய இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் இரு நாட்டுக்கும் முக்கியமான பல விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். அதேவேளை சிறிலங்கா என்பது இறைமையுள்ள ஒரு நாடு. அந்த நாட்டின் இறையாண்மைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் அதேவேளை அபிவிருத்திக்கும் பல நாடுகளின் உதவிகள் தேவைப்படும். அதனை சிறிலங்காவே தீர்மானிக்கும்’ என்றார்.\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nயாழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு நிகழ்வு\nயாழ் மாநகர முதல்வருக்கும் – சுவிஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nபிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்\nஅனைவருக்கும் இறுதியாகக் கூறிக் கொள்கிறேன் சிறையிலிருந்து விடுதலையான ஞானசார தேரர் ஆதங்கம்\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் சஹ்ரானின் மற்றொரு தோழர்\n8ஆம் திகதி முல்லைத்தீவு செல்கிறார் மைத்திரிபால\nஅமைச்சர் ரிஷாத் குற்றவாளியெனில் சிறைக்கு அனுப்பவும் நாம் தயங்கோம்\nவெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதிநிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்\nஇந்தியத் தேர்தலில் மோடியின் கூட்டணி மாபெரும் வெற்றி மீண்டும் தோற்றது காங்கிரஸ்; தமிழகத்தில் தி.மு.கவின் அலை\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் சஹ்ரானின் மற்றொரு தோழர்\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\nவாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/topics/business", "date_download": "2019-06-26T14:06:30Z", "digest": "sha1:3GH7QO5Q2YSN45H5QG3B6CT2NHTZ2C4A", "length": 15189, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`கனடா நாட்டின் யங் ஆந்த்ரபிரனார் விருது’ - சென்னைச் சிறுமிகள் சாதனை\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n``படிப்பு அறிவுக்கு... கோழி ஆசைக்கு'' - கோழி வளர்ப்பில் அசத்தும் ஒன்பதாம் வகுப்பு வெங்கடாஜலபதி\nஉங்க ஜாதகம் எப்படி... சொந்தத் தொழிலுக்குச் சாதகமா - எளிய விளக்கம்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் யோகம் யாருக்கெல்லாம் அமையும்\n'வெற்றிக்குத் தேவை உழைப்பு மட்டுமல்ல... பொறுமையும்தான்' - அனுபவம் சொல்லும் கதை\n' - மனைவியைத் தீர்த்துக்கட்டிய ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்\nஇந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்த சோனி... என்ன காரணம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yazhvenba.wordpress.com/2018/04/12/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-19/", "date_download": "2019-06-26T14:20:36Z", "digest": "sha1:DUHTMMUMYOTTOFE7IZUKSR2GUVG4FEXA", "length": 4294, "nlines": 122, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "வேந்தர் மரபு – 19 – யாழ்வெண்பா", "raw_content": "\nவேந்தர் மரபு – 19\nApril 12, 2018 யாழ்வெண்பா\nஇன்றைய அத்தியாயம் நான் இந்த கதையை சிந்தித்தவுடன் முதன் முதலில் யோசித்தது. சமுத்திராவின் புத்திக்கூர்மை உங்களை கவர்ந்ததா என்று கூறுங்கள்…\nவேந்தர் மரபு – 19\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nNext postவேந்தர் மரபு – 20\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
{"url": "http://thulasidhalam.blogspot.com/2015/01/", "date_download": "2019-06-26T14:20:59Z", "digest": "sha1:FGGUI2UWEECIYXVQ46POGMTOW4XVKOSP", "length": 53919, "nlines": 303, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: January 2015", "raw_content": "\nபட்டத் திருவிழா நடக்கப்போகுதுன்னு எங்கூர் சம்மர் டைம்ஸ் ஈவன்ட் புக்கில் போட்டுருந்தாங்க. சிட்டிக் கவுன்ஸில் ஸ்பான்ஸர் செய்யும் ஐட்டங்களில் இதுவும் ஒன்னு. வருசாவருசம் நம்ம சிட்டி கவுன்ஸில், சம்மர் டைம்ஸ் கேலண்டர் புத்தகம் ஒன்னு போட்டு வீட்டுவீட்டுக்கு (நம்ம தபால் பெட்டிக்கு) அனுப்பிருவாங்க.\nபலசமயம், இந்தப் புத்தகமும் குப்பைப் பேப்பரோடு பேப்பராக் காணாமப் போயிரும். அப்புறம் ஒரு நாள் முழிச்சுக்கிட்டுத் தேடோ தேடுன்னு தேடியும் கிடைக்கலைன்னா.....பேசாம பக்கத்துலே இருக்கும் எதாவது சிட்டிக்கவுன்ஸில் லைப்ரரிக்குப்போய் எடுத்தாறலாம். இதுக்குள்ளே இதை மறந்து போய் பல நிகழ்ச்சிகளைக் கோட்டை விட்டுருப்பேன்:(\nஇந்த முறை கொஞ்சம் கவனமா இருந்து புத்தகத்தை எடுத்து நம்ம வீட்டு லைப்ரரியில்(\nஎங்க கோடைகாலம் டிசம்பர் முதல் தேதி முதல் ஃபிப்ரவரி கடைசி நாள் வரை என்பது ஒரு கணக்கு. கூடக் கொஞ்சம் கொசுறு போட்டுத்தான் தரும் சூரியன் என்பதால் மார்ச் பாதிவரையும் (கிடைக்கும்வார இறுதிகளைப் பொறுத்து) நிகழ்ச்சிகள் நடத்திருவாங்க. இதுலே டிசம்பர் பிறந்ததும் வரப்போகும் க்றிஸ்மஸ் பண்டிகைக்குஏற்பாடு செய்யணுமுன்னு சனம் ஆலாப் பறந்து பறந்து ஷாப்பிங் செஞ்சுகிட்டு இருப்பதால் கோடை முதல் மாசக் கொண்டாட்டத்தை அவ்வளவாக் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம்.\nஆனால் எப்படியும் ஃபயர் ஒர்க்ஸ் மட்டும் கூடியவரை தவறவிடுவதில்லை. வானவேடிக்கை நாட்களில் மாலை 6 மணிக்கே இசை நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கும். நியூஸி வந்த புதிதில் போய்வந்துக்கிட்டுத்தான் இருந்தோம்.அப்புறம் வரவர 'போயிட்டுப்போகுது, இளையராஜா நிகழ்ச்சியா பாழாப்போகுது'ன்னு ஒரு மெத்தனம் வந்துருச்சு. அதனால் ஒரு ஒன்பதரை மணி வாக்கில் கிளம்பிப்போய் சரியாப் பத்துமணிக்கு பட்டாஸ் விடும் நேரத்தில் அங்கே மைதானத்தின் பக்கம் சாலை ஓரம் வண்டியை நிறுத்திட்டு, காரில் இருந்தே வானவேடிக்கையைப் பார்த்துவிட்டு வீடு வருவது வழக்கம். இந்த வருச நியூ இயர் ஈவ் நிகழ்ச்சிக்கு இப்படிப் போனால் நம்மைப்போலவே நினைக்கும் சனம் ஏகப்பட்டது இருக்குன்னு தெரிஞ்சது:-))))\nகுடும்பத்தோடு கலந்துகொள்ளும் வகையில் இருக்கும் நிகழ்வுகள் எல்லாம் வார இறுதிகளுக்கே நேர்ந்துவிட்டுருக்கும் என்பது நமக்கு(ம்) ஜாலி.\nஇந்த வருசம் உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டி நம்மூரில் நடப்பதால் ஃபிஃப்ரவரி 12 தேதி மாலை ஓப்பனிங் ஸெரிமனியும் வா(ண)ன வேடிக்கையும் கூடுதல் கவர்ச்சி.\nபோன சனிக்கிழமை (ஜனவரி 24) பகல் ஒன்னரைவரை வீட்டுவேலையே சரியாக இருந்துச்சு. சாப்பாடு ஆனதும், இன்றைய நிகழ்ச்சி எதேனும் உண்டான்னு சம்மர்டைம்ஸ் பார்த்தால் (kite day) கைட் டேன்னு போட்டுருக்கு பகல் ஒன்னு முதல் நாலு மணி வரை.\nநம்ம வீட்டில் இருந்து நியூ ப்ரைட்டன் கடற்கரை சுமார் 19 கிமீ தூரம்தான். சிட்டிக்குள்ளே போகும் பாதை என்பதால் அரைமணியாவது ஆகும். கிளம்பினோம். எங்கூரில் நிலநடுக்கம்வந்து ஊரில் பாதி அழிஞ்சுபோன கதை தெரியுமோ அப்படியா தெரியாதே என்பவர்கள் இங்கே பார்க்கலாம், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நியூ ப்ரைட்டன்னும் உண்டு.\nகிழித்தெறியப்பட்ட சாலைகளை அப்போது பழுது பார்த்து ஓரளவு சரி செஞ்சுருந்தாங்கன்னாலும், ( இந்த தாற்காலிக பழுது பார்த்ததே நாலுவருசம் ஆச்சு. இன்னும் நல்லாத்தான் இருக்கு ) இன்னும் நல்ல சாலையாக இருக்கணுமேன்னு தொடர்ச்சியா ஊர்முழுக்க சாலை மேம்பாடு நடந்துக்கிட்டு இருக்கு இந்த நாலு வருசங்களாக. அதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேலை நடப்பதால் மாற்றுவழியில் போகணுமுன்னு அம்புக்குறியோடு அறிவிப்பு பார்த்து அந்த வழியில் போய்க்கிட்டு இருக்கோம். நகரின் அத்தனை வண்டிகளும் ஊர்வலம் போற தினுசில் மெதுவான நகர்தலில். நாமும் அங்குலம் அங்குலமா முன்னேறிக்கிட்டு இருக்கோம். சாலை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றும் மக்கள் என்பதால் எல்லாமே ஒரு ஒரு ஒழுங்கோடு முன்னேறுது.\n'இங்கே இருக்கு பாரு, நாம்ம தேடிக்கிட்டு இருந்த நர்ஸரி'ன்னார் கோபால். அட ஆமாம். நாம் இந்தியாவில் கொஞ்சநாள் இருந்துட்டு நியூஸி திரும்பி வந்தப்ப, நம்ம தோட்டத்துச் செடிகளெல்லாம் போச்சுன்னு ஒப்பாரி வச்சேன். மீண்டும் தோட்டம் போட மலிவுவிலை நர்ஸரிகளைத் தேடுனபோது உள்ளுர் பத்திரிகை சொன்ன இதுக்கு வந்து நல்ல நல்ல பூச்செடிகளை வாங்கினோம். அப்புறம் காலப்போக்கில் இந்த நர்ஸரி விலாசம் மனசில் தங்காமல் போச்சு:(\nஇப்போ தேடிப்போன மூலிகை காலில் ஆப்ட்டது போல்:-) பெயர், விலாசம் எல்லாம் சரியாப்பார்த்து வச்சுக்கிட்டோம்.\nகடற்கரை டவுனுக்குப்போய் சேரும்போதே மூணு மணிக்கு சமீபம். பார்க்கிங் கிடைக்காமல் சுத்தோ சுத்துன்னு சுத்த வேண்டியதாப் போச்சு. வந்தவர் எல்லாம் தங்கிவிட்டதால் அந்த மண்ணில் நமக்கு இடமில்லை எந்த வண்டியாவது கிளம்பும் நிலையில் இருந்தால் அதுக்குப் பத்துப்பேர் காத்திருக்காங்க. ஒருவழியா பார்க்கிங் கிடைச்சு வண்டியை நிறுத்திட்டு சாலையைக் கடந்து எதிர்ப்புறமிருக்கும் மணல்மேட்டில் ஏறிப்போனோம்.\nதலைக்குமேல் காற்றாடிகள் . முதலில் தூரத்தில் இருந்து பார்த்தப்பவே அசையாமல் வானத்தில் மிதக்கும் உருவங்களைப் பார்த்திருந்தோம். காற்றே இல்லையோ.... எல்லாம் ஒரே இடத்தில் அப்படியே நிக்குதே\nஏகப்பட்ட கூட்டம். நம்மூர் க்றிஸ்மஸ் பரேடுக்கு அடுத்து இவ்ளோ மக்கள்ஸ் பார்ப்பது எனக்கு முதல்முறை அறுபதினாயிரம் பேர் வந்தாங்கன்னு மறுநாள் உள்ளூர் பத்திரிகைத் தகவல்\nகுன்றின் அடுத்த பக்கத்தில் இறங்கி தண்ணீருக்குப் பக்கம் போனால் காற்றாடிகள் அசையாமல் இருக்கும் மர்மம் விடுபட்டது:-) காரோடு கட்டிப்போட்டு வச்சுருக்காங்க. கூடுதல் சப்போர்ட்டுக்கு ஈரமணல் குவிச்ச சாக்குப்பைகள்\nபடங்கள் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தேன். கெமெரா ஸ்க்ரீனில் ஒன்னுமே தெரியாத அளவுக்கு வெய்யிலின் வெளிச்சம். ஈஸ்வரோ ரக்ஷிது....க்ளிக் க்ளிக் க்ளிக்...... (ஜஸ்ட் 415தான் எடுத்தேன்)\nசின்னதும் பெருசுமா காற்றாடிகள் வானத்தில். பட்டம் மட்டும் இருந்தால் நாமும் பறக்கவிடலாமேன்னு நினைக்கும்போதே.... பட்டக் கடை ஒன்னு பதினைஞ்சில் தொடங்கி 120 டாலர் வரை விதவிதமாய். 'கையில் காசில்லை, ஐ மீன் கேஷாக இல்லையே'ன்னு ஆசையை நிறைவேத்திக்காமப் போகும் மனுசர்களைக் கரையேத்த எஃபோஸ் EFOS மிஷின் வச்சுருக்காங்க கடைக்காரம்மா.\nஒரு பட்டம் வாங்கிக்கலாமுன்னா..... கடை(சி)யில் என்னை பட்டம் வாங்க விடலைங்க, நம்ம கோபால்:-(\n துப்பட்டா இருக்க பயம் ஏன்\nஎங்கூர்லே நியூப்ரைட்டன், சம்னர் என்ற பெயரில் ரெண்டு பீச் இருக்கு. இதுலே சம்னர்தான் எனக்குப் பிடிக்கும். இயற்கை அழகில் இருக்கும். கண்களை உறுத்தும் கட்டிடங்கள் இல்லாத கடற்கரை. அடிக்கடி போகுமிடம்.\nபோனமாசம் ஒருநாள் சம்னர் பீச்சுக்குப் போனபோது ஒரு பாட்டி() காத்தாடியைப் பறக்கவிட முயற்சி செஞ்சுக்கிட்டே இருக்காங்க. அது பறப்பேனான்னு இழுக்குது. பாட்டியுடன் வந்த மகள், பேரன், பேத்தி, செல்லம் (அல்சேஷன்) எல்லோரும் உதவி செஞ்சாலும் வானத்தின் மீது ஏறாமல் பழி வாங்கிக்கிட்டு இருந்துச்சு அந்தக் காத்தாடி. 'ஒரு பக்கம் மட்டும் கயிறு இருக்கு அதான் மேலெழும்பலை'ன்னு என் கண்டுபிடிப்பைச் சொல்லிக்கிட்டு இருந்தேன். அன்றைக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எனக்கு இதுதான் வேடிக்கை. பாட்டி ஒரு பசுப்ரேமி போல \nஇன்றைக்குப் பார்த்தால் பாட்டி ஜெயிச்சுட்டாங்க. மணல் மூட்டை ஆதாரத்தில் கொடிகட்டிப் பறக்குது கன்னுக்குட்டிகள் காத்தாடி.\nவெள்ளைக் குதிரை யொன்னு மனத்தைக் கொள்ளை கொண்டுட்டுப் போகுது இதுதான் இருப்பதில் டாப்ன்னு என் நினைப்பு.\nபெரிய பெரிய பலூன் காத்தாடிகளா இருக்கே. ஒருவேளை ஹீலியம் நிறைச்சுட்டு காத்துலே பறக்கவிடறாங்களோன்னு ஒரு சம்ஸயம். அப்பதான் ஒரு வானவெளிவீரரை மேலே ஏத்திக்கிட்டு இருந்தவரிடம்போய் மேட்டர் என்னன்னு விசாரிச்சார் கோபால்.\nஹீலியம் நிரப்பும் வேலை எல்லாம் இல்லையாம். ஜஸ்ட் ப்ளெயின் உருவம். நெற்றியில் ஒரு துளை. அதன்வழியா இயற்கைக் காற்று உள்ளே போனதும் மேலெழ ஆரம்பிச்சுருது. ஒரு விசேஷத் துணி பயன்படுத்தறாங்க, உருவங்களுக்கு என்று சொன்னார். tapa cloth . ஃபிஜியில் தாபா துணிகள் என்றால் மரப்பட்டையில் செய்யப்பட்டவைகள். இங்கே.... எப்படின்னு தெரியலை. விண்ட் சீட்டர் துணி போல இருக்கு இது.\nஅப்புறம் கவனிச்சுப்பார்த்தால் குறி பார்த்துச் சுட்டாப்லெ எல்லா உருவங்களின் நெற்றியிலும் துளை நம்ம கப்புகூட பறந்துக்கிட்டு இருந்தான்.\nசின்னதா ஒரு பாய்மரப் படகு. ஹாங்காங் ஸ்டைலில் . வட்டவட்டமா சுத்தும்வகைகள் சில நல்லாவே இருந்தன\nசம்மர் டைம் கொண்டாட்டத்தில் ஒரு நிகழ்வா 'பஸ்க்கர்' திருவிழா நடக்கப்போகுது. அதுக்கான கலைஞர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து குவிய ஆரம்பிச்சுட்டாங்க. அதுலே ஒருத்தர் கடற்கரை வார் மெமோரியலை அடுத்து இருக்கும் ஹாஃப் பாஸ்கெட்பால் கோர்ட்டில் 'வித்தை' காமிச்சுக்கிட்டு ஒத்தை ஏணிமேல் நின்னுக்கிட்டு கத்திகளோடு ஜக்கிள் பண்ணிக்கிட்டு இருந்தார்.\nவார் மெமோரியலுக்கு ஏறும் படிக்கட்டுகளால் இந்த இடத்துக்கு ஒரு ஆம்ஃபி தியேட்டர் எஃபெக்ட் இருக்கும். இங்கேயும் நல்ல கூட்டம்\nமகள் செல்லில் கூப்பிட்டு 'எங்கே இருக்கீங்க'ன்னாள். 'கடல் குதிரைக்குக் ' கிட்டேன்னேன். அவள் 'நீலத்திமிங்கிலத்தின்' பக்கமாம். சுட்டு முடிச்சு கடற்கரைக்கு எதிரே இருக்கும் நியூப்ரைட்டன் மாலுக்குப் போனோம்.\nஅன்றைக்கு அங்கே மார்கெட் டே இது அடுக்கு மாடிகள் இல்லாத ஒற்றைக்கட்டிடங்களால் ஆன திறந்த வெளி மால்.\nஎங்கூர்லே பீச்சில் ஒரு நூலகம் இருக்கு தெரியுமோ\nகோபாலின் பின்புலம் நூலகத்தின் புழக்கடைக் கதவு:-) இந்தப்பக்கம் நேரா நடந்தால் Pier முனைக்குப் போயிடலாம்.\nமார்கெட் தினம் முடிஞ்சு கடைகளை ஏறக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. நமக்கு ஒன்னும் தேறலை. கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு நடந்து போகும்போதும் திமிங்கிலங்களையும், காதல் பாம்பையும், ஆக்டபுஸ்ஸையும் பார்த்துக்கிட்டே நடந்ததில் களைப்பு தெரியலை.\nஇதையெல்லாம் நீ வீடியோவா எடுத்துருக்கணும் என்றார் கோபால். அப்பத் தோணாமப் போச்சே:(\nவீட்டுக்கு வந்ததும் நம்மூரில் இந்தக் காத்தாடித் திருவிழா எப்போலே இருந்து ஆரம்பிச்சு இருக்காங்கன்னு 'ஆராய்ஞ்சால்' பெரிய அளவில் நடப்பது இப்போ சில வருசங்களாத்தானாம். போன வருச விழாவை புண்ணியவான் ஒருவர் வீடியோ எடுத்து யூட்யூபில் ஏத்தி இருக்கார். அட்டகாசம்\nஅவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டுப் பாராட்டினேன். அப்பப்ப பட்டம் விடுவது உண்டாம். 'ஒரு நாள் பீச்சுக்கு வந்து, ஹலோ சொல்லேன்' என்றார். சொன்னால் ஆச்சு:-)\nPINகுறிப்பு: முப்பதுசொச்சம் படங்களை மாய்ஞ்சு மாய்ஞ்சு வலை ஏத்தினபிறகுதான் இந்த வீடியோ கிடைச்சது. முதலிலேயே பார்த்து வச்சுருந்தால்..... மெனெக்கெட்டிருக்க வேணாம்:(\n அது போன வருசம். இது நாம் போன, இந்த வருசம் இல்லையோ:-))))\nஅடேயப்பா....நாப்பது லட்சம் பிரதிகள் வித்துப் போச்சாம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 17)\nபயணக்கதை நகரவே இல்லை. நீ முடிக்கறதுக்குள்ளே அடுத்த 'பயணம்' வந்துரும் என்கிறார் நம்ம கோபால். அதுக்காக தினமும் எழுதமுடியுதா நானென்ன ஜெமோவா சரி. நம்ம கதையை ஆரம்பிக்கலாம். நேற்று தீபாவளி ஒருவழியா முடிஞ்சது.\nஇன்றைக்குப் பெரிய மனிதர்களின் சந்திப்பு நாள் என்று(ம்) வச்சுக்கலாம். காலையில் வழக்கம்போல்() வல்லியம்மாவுடன் சந்திப்பு. வீட்டுலே எல்லாம் ஒரு மாதிரி சரியாச்சுன்னு அங்கேயே இடம் மாறிப் போறாங்க இன்றைக்கு. காலையில் சீக்கிரம் அவுங்க கிளம்புவதால் ப்ரேக்ஃபாஸ்ட் சேர்ந்து சாப்பிட நேரமில்லை:( அவுங்களுக்கு டாட்டா சொல்லிட்டு கொஞ்சம் துக்கத்தோடு போய் ரெண்டு மசால்வடையும் கொஞ்சம் வெண்பொங்கலுமா காலை உணவை முடிச்சேன்:-)\nதினமும் காலங்கார்த்தாலை எதுக்கு ஓடணுமுன்னு சீனிவாசனை பத்து மணிக்கு வந்தாப்போதுமுன்னு சொல்லி இருந்தோம். அவர் வந்ததும் போனது நம்ம காற்றுவெளிப்பதிவர் கவிதாயினி மதுமிதா அவர்கள் வீட்டுக்கு. சென்னைப் பயணங்களில் இது வழக்கமான ரவுண்டு என்பதால் தெருப்பெயரை மட்டும் சொன்னால் நம்ம சீனிவாசன் 'டான்'னு கொண்டு போய் வீட்டுவாசலில் நிறுத்திருவார்:-)\nகவிதாயினியைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இலக்கிய வட்டாரத்தில் பெரும்புள்ளி. மொழிபெயர்ப்பதில் முக்கிய புள்ளி. இதுவரை ஏராளமான கவிதை, கட்டுரை, முழிபெயர்ப்புப் புத்தகம் என்று வெளி வந்துள்ளன. வாங்கின பரிசுகளை எண்ணி மாளாது ஆனாலும் துளிகூட கர்வமே இல்லாத எளிமையான பாங்கு ஆனாலும் துளிகூட கர்வமே இல்லாத எளிமையான பாங்கு என் மரத்தடி காலத் தோழியும் கூட என் மரத்தடி காலத் தோழியும் கூட\nதீபாவளி இனிப்புகளும் மற்றவைகளுமா கொஞ்சம் அரட்டை. மகள் வேலைக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தாங்க. வேலை டென்ஷனில் இருந்து விடுபட மகளின் இப்போதைய பொழுது போக்கு காதணிகள் செய்வது. ஏற்கெனவே செஞ்சு வச்சுருந்தவைகளைப் பார்த்தேன். அழகோ அழகு.\nபாராட்டுகளுக்குப் பதிலா'உங்களுக்கு எதெது பிடிச்சிருக்கோ அதையெல்லாம் எடுத்துக்குங்க ஆண்ட்டி'ன்னாங்க மகள். மதுவுக்குக் கொண்டு போய்க் கொடுங்கன்னாங்க. இந்த மது என் மகள் மதுமிதா. அவள் நீலக்கலர் ஆள் என்பதால் நீலத்தில் செஞ்சு வைக்க 'ஆர்டர்' (\nசொந்த ஷாப்பிங் கொஞ்சம் செஞ்சுக்க சென்னை சில்க்ஸ் போனோம். கடைக்குப் பின்பக்கம் கார் பார்க்கிங் வசதி அட்டகாசமா இருக்கு எதிர்பார்க்கவே இல்லை காத்திருக்கும் நேரத்தில் காஃபி குடிச்சுக்கலாம். இருக்கைகள் போட்டு வச்சுருக்கு. இங்கே ரெஸ்ட் ரூம்கூட இருக்குன்னு பார்த்ததும் 'அட\nஸால்வார் கமீஸுக்கான சில துணிகளை வாங்கிக்கிட்டு மகளுக்கு எதாவது தேறுமான்னு பார்த்தால் ஒரு நீலக்கலர் கண்ணில்பட்டது. என்னதான் அவளுக்குப் பிடிச்ச நீலம் என்றாலும் சட்னு அனுமதி இல்லாமல் வாங்கிறமுடியாது. ஷோவாக மாட்டியிருந்த உடுப்பை செல்லில் படம் எடுத்து மகளுக்கு அனுப்பினார் கோபால். பதில் வரும்வரை காத்திருக்கணும்.\nஅப்படியே பொடி நடையில் அடுத்த கடை போத்தீஸ்க்குப் போனோம். அங்கேயும் ரெண்டு செட் எனக்கு. என் விருப்பத்திற்கேற்ற வகை கிடைப்பது ரொம்பக் கஷ்டமா இருக்கு. அப்படி இருந்தாலும் கலர் சாய்ஸே இல்லை:( எதைப் பார்த்தாலும் உன்னிடம் இருக்கேங்கறார் கோபால். உண்மைதான். ஏற்கெனவே ஒரே காம்பினேஷனில் ரெண்டு மூணு (வெவ்வேற பயணங்களில் தான்) எடுத்துக்கொண்டு போய் ஊர் திரும்பியதும்தான் 'ஐயோ' என்றிருக்கும். போயிட்டுப்போகுது. ஒன்னு பழசானால் ரீப்ளேஸ்மெண்ட் கைவசம்:-)\nமகளின் பதில் வந்தது எஸ்ஸு. மறுபடி சென்னை சில்க்ஸ். போதீஸில் இருந்து பரிசுப்பொருளாக துளசி கிடைத்தது. துளசிக்கே துளசி பாருங்க:-)\nமகளுக்கான துணிகளை வாங்கிக்கிட்டு நேரா நம்ம முஸ்தாஃபா டெய்லர் கடை. எங்கள் அளவுகளை ஏற்கெனவே குறிச்ச அட்டைகள் கைவசம் இருப்பதால் அதைக் காமிச்சாலே அவர் எழுதிக்குவார். மகளுடையதை மட்டும் வெட்ட வேணாம்.அவளிடம் இன்னொருமுறை கேட்டுட்டுச் சொல்றேன் என்றேன்.\nஅப்படி இப்படின்னு கடிகாரம் ரொம்ப வேகமா ஓடுதோ மணி ஒன்னரை தாண்டியாச்சு. வெங்கடநாராயணா சாலை சரவணபவன் அடுத்த ஸ்டாப். என்னென்னவோ காம்போக்கள். சப்பாத்தியும், மினிமீலுமா சாப்பாடு ஆச்சு. லேசா மழை வேற நச் நச்சுன்னு......\nஅறைக்குத் திரும்பி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த பிறகு நம்ம லோட்டஸுக்கு அடுத்து ரெண்டாவது கட்டிடத்துக்குள் நுழைஞ்சோம். மூணு மணி அப்பாய்ண்ட்மெண்ட். மழை நிக்கவேஇல்லை. காருக்குள் சீனிவாசன் நல்ல தூக்கத்தில் அடுத்த பில்டிங் போக அவரை ஏன் எழுப்புவானேன் அடுத்த பில்டிங் போக அவரை ஏன் எழுப்புவானேன்\nநம்ம பதிவர் முத்துச்சிதறல் மனோ சாமிநாதன் ஒரு சமயம் மாற்று மருத்துவம் பற்றி எழுதி இருந்த பதிவைப் படிச்சுட்டு, என் கை (தோள்)வலி தீர உபாயம் இருக்கான்னு கேட்ட போது, 'தஞ்சையில் ஒரு மருத்துவர் இருக்கார், வாங்க நான் கூட்டிட்டுப்போறேன்' என்றாங்க. தஞ்சைக்கு இப்போ வரும் சான்ஸ் இல்லை. சென்னைதான் என்றதும், ஒரு விலாசம் கொடுத்தாங்க. பழம் நழுவி பாலில் விழுந்தது. நம்ம லோடஸ் இருக்கும் அதே வெங்கட்ராமன் தெரு. டாக்டர் ஜெயலக்ஷ்மி, 19 வுட் ப்ரிட்ஜ் அபார்ட்மெண்ட்ஸ்.\nவீடுதான். இங்கேயே ஒரு அறையில் சிகிச்சை சொல்லிக்கொடுக்கறாங்க. அகுப்ரெஷர். நம்மைப் பற்றிய உடல் நல விவரம் எல்லாம் எழுதிக்கொடுத்தோம். நம் பாதங்களில் இருக்கும் பல்வேறு நரம்பு உள்ள இடங்களில் அழுத்தம் கொடுத்து குறித்துக்கொண்டார் உதவியாளர்.\nடாக்டரம்மா அறைக்குள் கூப்பிட்டாங்க. உள்ளே போய் உட்கார்ந்தோம். 'எத்தனை நாள் இருப்பீங்க இன்றைக்கும் நாளைக்கும்தான். அப்ப ரெண்டு நாளைக்குள் உங்களை சரியாக்கணும். ஆக்கிடலாம் 'புன்முறுவலுடன் சொன்னபோதே காவாசி வலி குறைஞ்ச ஃபீலிங்:-)\nஹாலில் ஒரு இளம்தம்பதியின் ஃபோட்டோ பார்த்தேன். ரொம்ப அழகான அமைதியுடன் இருக்காங்க அந்தப்பெண். இப்போ வயசாச்சுன்னாலும் அதே அமைதியான அழகு டாக்டரின் முகத்தில் இருக்கு\nஎங்கெங்கே தொட்டு, எத்தனை முறை அழுத்தம் கொடுக்கணுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. கவனிக்கிறாரான்னு நான் இவரைத் திரும்பிப் பார்த்தால் இவர் காலை சின்ன ஸ்டூலில் வச்சு உட்கார்ந்திருக்க, உதவியாளர் இவருக்கு இங்கே வலி இருக்கா, இப்ப வலிக்குதான்னு கேட்டுக்கிட்டு குறிப்பெடுத்துக்கிட்டு இருக்கார். நியூஸியில் 'பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ' நினைவுக்கு வந்துச்சு:-)\nதோள்வலிக்குக் காது மடலை அமுக்கணும். பதினாலு முறை ஒவ்வொரு காதுக்கும். தோப்புகரணம் டைப். ஆனால் உக்கார்ந்து எழுந்திரிப்பது போல் பாவ்லா காட்ட வேணாம். அது என்ன பதினாலு முறை\nஅப்புறம் பாதத்தில் பெருவிரல் சைடில் மூணு இடம், குதிகால் சைடில், காலில் , உள்ளங்கையில் இப்படி பதினாலு பதினாலு முறை. பாதத்தின் மேற்பகுதியில் மட்டும் அதில் பாதி. ஏழுஇது மட்டும் நாளுக்கு ஒரே ஒரு முறை\nஅழுத்தம் கொடுக்கவேண்டிய இடங்களை பால்பாய்ண்ட் பேனாவால் வட்டம் போட்டுக் குறிச்சுக் கொடுத்தது சூப்பர் (என்ன ஒன்னு.... வருங்காலத்தில் குளிக்காம இருக்கணுமோ (என்ன ஒன்னு.... வருங்காலத்தில் குளிக்காம இருக்கணுமோ\nகவனமா இன்றைக்கு இருமுறை இதையெல்லாம் செஞ்சு பார்த்துட்டு மறுநாள் வரச்சொன்னாங்க.\nஅறைக்குத் திரும்பியதும் சிகிச்சையை ஆரம்பிச்சோம். கஷ்டமா ஒன்னும் இல்லை. ஏறக்குறைய ரெண்டுபேருக்கும் ஒரே சிகிச்சை என்பதால் நோக்கும் நேக்கும் சரியாப்போச்சு:-)\nமழை கொஞ்சம் ஓயட்டுமேன்னு காத்திருந்து, சந்தியா பதிப்பகம் போனோம். அசோக் நகர் என்றால் போதும். சீனிவாசன் நேராக் கொண்டுபோய் பதிப்பகத்தின் வாசலில் நிறுத்திருவார்:-) 'அக்கா' வெளிவரும் ஏற்பாடுகள் எந்த நிலையில் இருக்குன்னு பார்க்கணும். 'எல்லா வேலைகளும் முடிஞ்சது. அட்டைப்படம் இன்னும் வரலை. அநேகமா நீங்க ஊர் திரும்புமுன் வந்துரும்' என்றார் பதிப்பக உரிமையாளர் திரு சௌந்தரராஜன்.\nகொஞ்ச நேரம் ஊர் உளவாரம் பேசிக்கிட்டு எனக்குத் தேவையான புதுப்புத்தகங்களை தெரிவு செஞ்சுக்கிட்டு இருந்தப்ப உள்ளே இருந்து ஒருத்தர் வந்தார். மெய்ப்பு பார்த்துக்கிட்டு இருந்தாராம். 'நீங்க கையிலே வச்சுக்கிட்டுஇருக்கும் புத்தகம் இவர் எழுதுனது' என்றார் பதிப்பாளர் என் கையில் விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் . சிறந்த நாவல் 2014, சுஜாதா விருது பெற்ற நூல். ஆசிரியர் சி. மோகன்.\nஇவர் ஒரு சீன நாவலை மொழிபெயர்த்துள்ளாராம். உடனே அதையும் வாங்கிக்கிட்டேன்.\nமூலம்: சீன மொழியில் .நாவல் பெயர் Lang Tuteng by jiang Rong\n2004 ஆம் வருசம் வெளியான இந்த சீன நாவல், சீனாவில் ரெண்டே வருசத்தில் நாப்பது லட்சம் பிரதிகள் வித்துப்போச்சாம். சீனர்கள் ரொம்ப வாசிக்கிறாங்க போல\nஇந்த முழி பெயர்ப்பு சமாச்சாரம் இருக்கு பாருங்க...... நம்ம இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு முழி பெயர்த்தால் குறைஞ்சபட்சம் சூழல், முக்கியமா கதாபாத்திரங்கள், இடங்கள் ஆகியவற்றின் பெயர்களைச் சுலபமா எழுதலாம். நமக்கும் அவ்வளவா கஷ்டம் இருக்காது.\nஆனால்...மற்ற நாடுகளின் மொழிகளில் இருந்து அவற்றை தமிழாக்கும்போது ..... ஐயோ போதுண்டா சாமின்னு ஆகிரும். நான் ஒரு பத்துப்பனிரெண்டு மவோரி கதைகளை மொழி பெயர்த்து முழி பிதுங்கி இருக்கேன். அந்த அனுபவம்தான் பேசுது:-)\nஅப்புறம் உள்ளே கணினியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர்களோடு கொஞ்சம் பேசிட்டு, 'அக்காவை நல்லபடியாக் கரை ஏத்துங்கோ'ன்னு சொன்னேன். சின்னவயசுப் பெண்கள்தான். தினம் கதைகதையா வாசிக்கிறாங்க. நாம் ப்ரூஃப் பார்த்துச் செய்து கொடுக்கும் திருத்தங்களை கணினியில் உள்ள நம்ம புத்தகப் பக்கங்களில் திருத்தி எழுதும் வேலை ரொம்பவே சிரமமானதுதான். போதாக்குறைக்குப் புத்தகம் அச்சுக்குப்போகும்வரை திருத்தங்கள் சொல்வது, கூடுதல் பத்திகளை எழுதி, இதை இந்தப் பக்கத்தில் செருகிருங்கோ. அதை அந்தப் பக்கத்தில் இந்த வரிக்குப் பின்னே சேர்த்துருங்கோன்னு இம்சைஅரசிகளாக இருக்கோமே\nஅக்கா நல்லா வந்துருக்கு மேடம் என்று சொல்லி என் வயிற்றில் ஐஸ்க்ரீம் வார்த்ததும் இவுங்கதான். சொன்ன வாக்கு தவறாமல் நான் சென்னையில் இருந்து கிளம்புமுன் அக்கா அட்டையையும் அனுப்பி வச்சாங்க. என்னுடைய விசேஷ நன்றிகளை இங்கேயும் பதிவு செஞ்சுக்கறேன். தேங்க்ஸ் லேடீஸ்/\\\nஅதுக்குப்பிறகு அறைக்கு வந்துட்டு வேறெங்கேயும் போகலை. லாங் ஸ்லீவ் உடுப்பு என்பதால் மகள் கை அளவு அனுப்பி இருந்தாள். அவளுக்குக் கை கொஞ்சம் நீளம்:-)\nநாளைக் கதை நாளைக்குன்னுட்டு, கீழே ரெஸ்ட்டாரண்டில் எனக்கு ஒரு தோசையும் கோபாலுக்கு ஒரு ஊத்தப்பமும் ரெண்டு லஸ்ஸியும் வாங்கி முழுங்கிட்டு(ஒவ்வொரு முறைஉணவு ஆர்டர் செய்யும்போதும் 'தோ ப்ளேட் லேகி ஆவ் ' சொல்லணும், இங்கே) உறக்கம் வரும்வரை அவரவர் வேலையான கணினி மேய்தல்,டிவி பார்த்தலென்று இருந்தோம்.\nPINகுறிப்பு: டாக்டரம்மா வீட்டில் அவுங்க வெப்சைட்டில் எல்லாம் இருக்கு . பார்த்துக்கோன்னு ஒரு போர்டில் எழுதிப்போட்டுருந்தாங்க. அதான் பார்த்து அதில் இருந்து சில படங்களைச் சுட்டுக்கிட்டேன். டாக்டர் வீட்டுக்கும் அதுவும் முதல்முறையா நோயாளியாகப் போகும்போது கேமெராவும் கையுமாப்போனா நல்லாவா இருக்கும்\nஅடேயப்பா....நாப்பது லட்சம் பிரதிகள் வித்துப் போச்ச...\nபுத்தகத் திருவிழாவில் வாங்** புத்தகங்கள் \nஒரு அர்பன் விவசாயியின் அனுபவங்கள் நன்றி தோழியே\nஇருக்கு.... ஆனா இல்லை ( மூன்று மாநிலப் பயணம்- தொ...\n ( மூன்று மாநிலப் ...\n99 ரூபாய்க்கு 99 வகைத் தோசைகள் \nஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 1\nகுரங்குப் பிடி ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=58101", "date_download": "2019-06-26T14:27:19Z", "digest": "sha1:DOXJZK6LJKCOTERNBUIZRS6Y2OQER2FW", "length": 7034, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nகொடூர செயலில் ஈடுப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - மனோ கணேசன்\nகொடூர செயலில் ஈடுப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - மனோ கணேசன்\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். தமது அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்து தமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இரண்டு தற்கொலைதாரிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தமக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசுயநலத்துக்காக அப்பாவிகளை கொல்லும் அரசியல் அமைச்சர் மனோ கணேசன் காட்டம்வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,மீண்டும் மீண்டும் நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்த ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=63925", "date_download": "2019-06-26T14:20:19Z", "digest": "sha1:PWRSGUBPRIW7QTLJWOWFROW7DBYFXMQI", "length": 12000, "nlines": 96, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி , மேஜர் நிதன் , கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள்\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி , மேஜர் நிதன் , கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள்\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி , மேஜர் நிதன் , கப்டன் சாதுரியன் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் – 10.06.2019\n10-06-1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.\nஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 22ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி மற்றும் கரும்புலி மேஜர் நிதன் , கரும்புலி கப்டன் சாதுரியன்\nதாண்டிக்குளம் – நொச்சிமோட்டை தாக்குதல்…\nபுளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர்.\nஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது.\nதிருவுடலில் வெடி சுமந்து …\nஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்தது. சண்டைகளுக்குத் தேவையான வெடிபொருட்களும் – மருத்துவ சாமான்களும் இந்தப்பகுதியிலேயே களஞ்சியப்படுத்தபப்ட்டிருந்த ஆட்லறி குண்டுகள் – மோட்டார் எறிகணைகள் – யுத்த ராங்கி குண்டுகள் என்பன ஐயசிக்குறுய் பூதத்தின் பிரதான உணவுகளாக இருந்தன. பூதத்தை பட்டனை போட்டு அதன் இயக்கத்தை மந்தப்படுத்தும் தந்திரத்தை புலிகள் கடைப்ப்பிடித்தனர்.\nஇத் தாக்குதலில் பலாயிரம் எறிகணைகளும் , பல நூறு யுத்த ராங்கி குண்டுகளும் தீயில் அழிந்தன. பல இராணுவ வாகனங்கள் அழிக்கபப்ட்டன. சில கைப்பர்ரபப்ட்டன. இதேசமயம் குறைந்த 400 படையினர் கொல்லப்பட்டு , 570 ற்கு அதிகமானோர் காயமடைந்திருந்தனர். தாக்குதல் வலையத்திற்க்குள் சிக்குப்பட்ட படையினருக்கு உதவ உலங்கு வானூர்த்திகளில் வந்திறங்க சிங்களக் கொமாண்டோக்கள் முயன்றனர்.\nதம்பி நிதனோடு தங்கை யாழினி எங்கள் சாதுரியன்\nஇந்த முயசியில் ஒரு ” எம் . ஐ . 24 ” உலங்கு வானூர்த்தி கடும் சேதத்திற்கு உள்ளானது. ஓமந்தைப் பகுதிகளில் இருந்து உதவிக்கென நொச்சிமோட்டைப் பகுதிக்குள் நூலைய முயன்ற படையினர் மீது தாக்குதல் நடத்தபப்ட்டது. இதில் இரண்டு ராங்குகள் அழிக்கப்பட்டன. குறைந்தது 24 மணிநேரமாக தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன.\nஐயசிக்குறுய் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது. ” புலிகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ” என்ற அரசின் பிரச்சாரத்தின் மத்தியில் , தப்பிப்பிழைத்த தாண்டிக்குளம் படையினர் சிலர் தங்களை உருமாற்றி – சிவிலியன் உடையணிந்து – வவுனியாவுக்குள் ஓடினர் என்று செய்திகள் வெளிவந்தன. இப்பெரும் தாக்குதலின் போது மூன்று கரும்புலிகள் உட்பட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamildi.com/astro/rasi-palan/libra", "date_download": "2019-06-26T14:47:22Z", "digest": "sha1:MTVL6GYNLXI4XVEAPG3JWRO5FW4BDDUC", "length": 11510, "nlines": 62, "source_domain": "www.tamildi.com", "title": "♎ Libra ( இராசி பலன் - துலாம்) | Rasi Palan 2019", "raw_content": "\nராசிநாதன் சுக்கிரனின் ஆட்சி பலம் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறத் துணை நிற்கும். எடுத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி பெறும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களில் உறுதியாக நிற்பீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலவி வரும். அக்டோபர் 2ம் தேதி முதல் ராசியில் இணைவு பெறும் புதன் விவேகமான சிந்தனைகளைத் தருவார். உங்கள் மனதில் இருந்து வரும் நெடுநாளைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். ஆடம்பரச் செலவுகள் அதிகமானாலும் அதைப் பற்றிக் கவலைப்படாது குடும்பத்தினரின் சந்தோஷம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவீர்கள். செலவிற்கேற்ற வகையில் வரவு நிலை தொடர்வதால் சிரமம் ஏதும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nபேசும் வார்த்தைகளில் பிடிவாதம் கலந்த சொற்கள் அதிகமாக வெளிப்படலாம். நமக்கு சரி என்று தோன்றும் கருத்துக்கள் அடுத்தவர்களுக்கு தவறாகப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும்.வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் உயர்வு பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உறவினர்களின் வருகையால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாவீர்கள்.\nபிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் அவர்களோடு கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிக்கும். அவர்களது எதிர்காலம் பற்றிய சிந்தனை மனதை அதிகம் ஆக்கிரமிக்கும்.வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பீர்கள். ஆன்மிகத்தின் பெயரால் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு உண்டென்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தொழில் முறையில் உங்களின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் எதிர்பார்க்கும் வெற்றியைப் பெற்றுத் தரும். புதிதாக தொழில் ஆரம்பிக்க உள்ளவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது. உத்யோகஸ்தர்கள் மாதத்தின் கடைசி வாரத்தில் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். கலைத்துறையினரின் மனதில் வெற்றிக்கான நம்பிக்கை துளிர்விடும். நற்பலன்களைக் காணும் மாதம் இது.\nபரிகாரம்: வெள்ளிதோறும் அன்னை உமையபார்வதியை வழிபட்டு வாருங்கள்.\nஇத்தனை நாள் பாத சனியில் இருந்து படாதபாடுபட்ட நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். சனிபகவான் 3-ம் இடத்திற்கு வந்துவிட்டார். பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும். வாடகை வீட்டில் வசதியில்லாமல் இருந்த நீங்கள், இனி சொந்த வீட்டில் குடிபோக போகிறீர்கள். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது. குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கி உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதான பேச்சே வெற்றி தரும். பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். 12-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும். வெளிநாட்டில் வேலை செய்து வருபவர்கள் சற்று சிரமமாகத்தான் இருப்பார்கள். சரி, சிரமம் இல்லாமல் சிகரம் ஏற முடியுமா பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், திக்கு தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள். இனி யோக வாழ்க்கைதான்.\nஉங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம் ஆனைமுகனை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்\nதுலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம். துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், மகரம் மற்றும் மீனம்.\nதுலாம் ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள். மக்களை டீல் செய்வதில் வல்லவர்கள். வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.\nதுலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.\nஎழுதப்பட்ட நாள் 07 Oct 2018 .\nRasi Palan 2018 (இன்றைய ராசி பலன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/105035", "date_download": "2019-06-26T14:21:14Z", "digest": "sha1:PHCN4EF5PLMEWDFLG7HVD447CWIJ5SES", "length": 5388, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 28-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\nநான் இதை செய்தால் என் ரசிகர்களும் செய்வார்கள், அஜித் எடுத்த முடிவு\nரஜினிகாந்தை வைத்து பேய்படம், இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\nதர்பார் படத்தின் மாஸ் புகைப்படம் லீக் ஆனது, படக்குழுவினர்கள் அப்செட்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த முதல் சர்ச்சை வில்லியின் அதிரடி ஆட்டம் இன்று ஆரம்பம்... ஆவேசமாக கத்தும் காட்சி\nஉறவு வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது பொங்கி எழுந்த ஸ்ரீரெட்டி - அதிரடி தண்டனை இது தான்\nஎந்த வயதில் உங்களை அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடிவரும் தெரியுமா ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்.. சுட்டெரிக்கும் சூரியனும் அடங்கி போகும்\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nபிக்பாஸ் சீசன் 3 ல் முக்கிய டிவி சானல் பிரபலம் அழகான இளம் நடிகையின் ஷாக்கிங் பதில்\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://senthilvayal.com/2017/09/30/", "date_download": "2019-06-26T14:05:23Z", "digest": "sha1:F6VFLW6C5V3HZ3JOYINSWXOASXOXNW65", "length": 24914, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "30 | செப்ரெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசெல்ஃபியிலிருந்து குறும்படங்கள் வரை தற்போது மொபைலிலேயே எடுக்க முடியும். அந்தளவிற்கு மொபைல் போட்டோகிராஃபியும் மொபைல் கேமராக்களின் தரமும் வளர்ந்துவிட்டன. ஆனாலும்கூட மொபைலில் இருக்கும் கேமராக்களை, நாம் நினைத்தது போல கன்ட்ரோல் செய்ய முடியாது. இந்தப் பிரச்னைக்குக் கைகொடுக்கின்றன சில ஆப்கள். அப்படி டி.எஸ்.எல்.ஆர் போலவே மொபைல் கேமராவை கன்ட்ரோல் செய்யவும், தரமான போட்டோக்கள் எடுக்கவும் உதவும் ஆப்ஸ் இங்கே…\nPosted in: மொபைல் செய்திகள்\n பழனிசாமிக்கு பிரதமர் மோடி, ‘செக்’ டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்\nதமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.\nஅதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்… ஓர் அலசல்\nதீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nமாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்.. யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..\nதமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nமுதல்வர் மீது கவர்னர் கோபம்\nவாட்ஸ்அப்பில் வந்து விழுந்த செய்திகளை ‘கிராஸ் செக்’ செய்வதற்காக கழுகாரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். செல்போனைக் காதிலிருந்து எடுக்காமல், தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த அழைப்புகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார் கழுகார். பிறகு நம்மிடம் பேசியவர், “முதலில் சரியான செய்தி எது என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், இந்த வாட்ஸ்அப் வதந்திகளால், ‘தவறான\nPosted in: அரசியல் செய்திகள்\nபெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்சினைகள்\nநாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன. பெண்களுக்கு வரக்கூடிய பொதுவான சில மனநலப் பிரச்சனைகள் பின்வருமாறு:\nPosted in: உடல்நலம், மகளிர்\nகுழந்தைகள் சீராக இருக்கவும், மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக இருக்கவும், தேவையான நேரத்தில், தடையற்ற உறக்கம் அவசியம். பிறந்த குழந்தைக்கு, ஒரு நாளில், குறைந்தபட்சம், 12 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை உறக்கம் அவசியம். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம், சிறப்பாக இருக்கும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/12033817/Larry-Driver-who-was-pregnant-with-the-girl-was-detained.vpf", "date_download": "2019-06-26T15:02:00Z", "digest": "sha1:IU5MOEDRD5OE5V2FA2TOJSIOVPWSQVXN", "length": 5760, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது||Larry Driver, who was pregnant with the girl, was detained in the 'Pokso' Act -DailyThanthi", "raw_content": "\nசிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது\nசெய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nசெப்டம்பர் 12, 04:30 AM\nலாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 35), லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டில் தனிமையில் இருந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதனால் பயந்து போன சிறுமி நடந்தவற்றை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட விநாயகம் தொடர்ந்து பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.\nஇதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மகளிடம் கேட்டபோது அவர் நடந்தவற்றை கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் விநாயகத்திடம் சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். அதற்கு விநாயகம், திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.\nஇதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.loudoli.com/2019/05/actiondash-digital-wellbeing-screen.html", "date_download": "2019-06-26T13:56:14Z", "digest": "sha1:KAQCCSXTSSPC26NRUKZRS74YMVYSKJUT", "length": 9107, "nlines": 52, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: ActionDash: Digital Wellbeing & Screen Time helper in Tamil", "raw_content": "\nActionDash ஒரு தொடக்க புள்ளியாக டிஜிட்டல் நலன் பயன்பாட்டை எடுத்து, அனைத்து அண்ட்ராய்டு பயனர்கள் அதை கிடைக்கும், பின்னர் மேம்பட்ட நுண்ணறிவு மற்றும் சக்திவாய்ந்த விருப்பங்களை ஒரு ஆழமான அனுபவம் வழங்குகிறது.\nஅதிரடி டேஷ் அதன் பயன்பாட்டுத் தரவை Android இலிருந்து நேரடியாக பெறுகிறது, இதனால் உங்கள் பேட்டரி மீது எந்த தாக்கமும் இல்லை.\nஆப்பரேட்டிங் டேஷின் தோற்றங்கள் Android இலிருந்து நேரடியாக வந்துவிட்டதால், பயன்பாட்டை முதலில் நிறுவிய பின், நீங்கள் ஏற்கனவே பார்க்கும் ஒரு வாரம் மதிப்புள்ள பயன்பாட்டு வரலாற்றைக் காட்டிலும் அதிகமாக உள்ளீர்கள்\nActionDash அனைவருக்கும் உதவியாக இருக்கும், உங்கள் சாதனத்தின் பயன்பாட்டை குறைக்க அல்லது தீவிரமாக பார்க்கிறீர்களா. அதன் அழகான அனிமேஷன்கள் மற்றும் தோற்றங்கள் உங்கள் தொலைபேசியை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள், எத்தனை வழிகளில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்.\nActionDash இன் சக்தி பயனர் மேம்பாடுகள் மற்றும் தனிப்பயனாக்கங்களில் சில:\n• அனைத்து Android சாதனங்களிலும் லாலிபாப் மற்றும் பின்னர் இயங்கும்\n• தினசரி பயன்பாட்டு அறிக்கை அறிவிப்பு\n• விரிவான சாதனம் திறக்க மற்றும் அமர்வு நீளம் புள்ளிவிவரங்கள்\n• 3 மணிவரை ('தாமதமாக படுக்கைக்குப் போகும் மக்களுக்கு எளிது)' நாள் ஆரம்பம் '\n• Daydream, Google Play சேவைகள், பிக்சல் துவக்கி மற்றும் டிஜிட்டல் நன்மை பயன்பாடு பயன்பாடு புள்ளிவிவரங்கள் போன்ற பயன்பாடுகள் (டிஜிட்டல் நலன் தன்னை மறைக்கிறது)\n2012 இல் நாங்கள் முதன்முதலில் பயன்பாடுகளை விற்பனை செய்வதிலிருந்து நாங்கள் உண்மையாக இருந்ததால், எங்கள் வணிக மாதிரி எளிதானது: மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுக்கு மென்பொருளை நாங்கள் விற்கிறோம், உங்கள் தரவரிசையில் எவ்வளவு அதிகமாக இருக்கிறோம் என்பதைச் சிறந்ததே.\nActionDash வேறு இல்லை. உங்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டுத் தரவு ஒருபோதும் உங்கள் சாதனத்தை விட்டு விடாமல், உங்களை அல்லது 3 வது கட்சிகளுக்கு ஒருபோதும் கைகொடுக்கும்.\nநீங்கள் ActionDash (\"அதிரடி டாஷ்போர்டு\" மற்றும் \"அதிரடி டாஷ்\" க்கான சிறுகதை) அனுபவிக்கிறீர்கள் என்று நம்புகிறோம், மேலும் இது உங்கள் சாதனப் பயன்பாடு பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCircuit Launcher 2018 - Next Generation theme,fast இப்போதே 2018 சுற்று தொடரை முயற்சிக்கவும். அண்ட்ராய்டு சிறந்த 2018 பயன்பாட்டு தொட...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.loudoli.com/2019/05/wallpapers-for-gamers-hd-in-tamil.html", "date_download": "2019-06-26T13:55:58Z", "digest": "sha1:GRKWZ25DWG5XKYB2WO73WQIGYZ3WQPV2", "length": 6423, "nlines": 52, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: wallpapers for GAMERS HD in Tamil", "raw_content": "\nFortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அனைத்து அப்சஸ் லெஜெண்ட்ஸ்\nபின்னணியில் 4K உள்ளன, நாம் தினசரி போர் நிலத்தடி 4K சேர்க்க\nவிளையாட்டுகள் பட்டியல்: Minecraft, பப், வலுவான, சிஎஸ் மற்றும் பல கேமிங் வால்பேப்பர்கள்\nவலப்புற தோல்கள் விளையாட்டு வால்பேப்பர் அம்சங்கள்:\nஅப்செஸ் லெஜண்ட்ஸ் விளையாட்டு வால்பேப்பரின் அம்சங்கள்:\n- வலுவான வால்பேப்பர்கள் மற்றும் பின்னணியில் தினசரி படங்கள்\n🔥 ஆட்டோ வால்பேப்பர் சேஞ்சர்:\n- இந்த அம்சங்கள் தானாகவே மொபைல் பின்னணி மாறும். பயனர் தானாகவே வால்பேப்பர்களை மாற்ற நேரம் அதிர்வெண் தேர்வு செய்யலாம்.\n🔥 எளிய, வேகமான மற்றும் ஒளி:\n- நாங்கள் சிறந்த செயல்திறன் வழங்கும் பயன்பாட்டின் எளிமை, கவனம் செலுத்துகிறது. இது பேட்டரி திறமையானது.\n• வால்பேப்பராக பின்னணி அமைத்தல்:\n- வால்பேப்பரை ஒரு கிளிக்கில் வீட்டில் அல்லது பூட்டுத் திரையை அமைக்கலாம். சில நேரங்களில் சேமிக்க\n- உங்களுக்கு பிடித்த பின்னணியில் ஒரு தாவலில் வைக்கப்படும்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nCircuit Launcher 2018 - Next Generation theme,fast இப்போதே 2018 சுற்று தொடரை முயற்சிக்கவும். அண்ட்ராய்டு சிறந்த 2018 பயன்பாட்டு தொட...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nadunadapu.com/?p=151115", "date_download": "2019-06-26T15:33:02Z", "digest": "sha1:NSJDK2B73NPKFURQSU5TYNTTXRKTQAZP", "length": 14320, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "யாழில் பதற்றம்; குள்ளர்களின் அட்டகாசத்தால் அச்சத்தில் உரைந்துள்ள அராலி மக்கள் | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nயாழில் பதற்றம்; குள்ளர்களின் அட்டகாசத்தால் அச்சத்தில் உரைந்துள்ள அராலி மக்கள்\nயாழ் அராலி பகுதியில் மரத்திற்கு மரம் தாவி திரியும் குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.\nகுறித்த குள்ளர்கள் மரத்திற்கு மரம் தாவி திரிந்து பெண்கள் , குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்துவதுடன் , வீடுகள் மீதும் கல் வீச்சிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅராலி ஐயனார் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இந்த குள்ளர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் , குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் இந்த குள்ளர்கள் பகுதிகளில் உள்ள வீட்டு கூரைகள் மீது தாவி திரிவதாகவும் , அதன் போது மக்கள் அவல குரல் எழுப்பும் போது கூரையில் இருந்து மதிலுக்கு பாய்ந்து மரங்களுக்கு மரங்கள் தாவி பாய்ந்து ஓடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nசிலர் அவர்களை துரத்தி சென்ற போது அவர்கள் அராலித்துறை நோக்கி ஓடித்தப்பியதாகவும், அவர்கள் கைகளில் கைக் கோடரி காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.\nஅதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடல் தொழிலுக்கு சென்ற ஒருவரை வீதியில் மறித்த மிக குள்ளமான தோற்ற முடைய இருவர் அவரை விசாரித்துள்ளனர்.\nகுறித்த சம்பவங்கள் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nகடந்த ஆட்சி காலத்தில் கிறீஸ் பூதம் , கிறீஸ் யக்காவின் நடமாட்டங்கள் இலங்கை பூராகவும் உள்ள மக்களை அச்சத்தில் உறைய வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article“இவள் மனித இனம்தான்… தேவதையும்கூட”\nNext articleசிறுவர் காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் : 10 பேர் கைது\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதல்- விரைவில் தீர்ப்பு\nஇலங்கையில் 43 வருடங்களுக்குப் பிறகு 4 பேருக்கு மரண தண்டனை – குற்றம் என்ன\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம்\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nadunadapu.com/?p=151269", "date_download": "2019-06-26T15:21:54Z", "digest": "sha1:NIG7ACLQ7DWNZXF3ZTOCQ2AHE34WI6AY", "length": 16179, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "காதல் ஜோடிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் நடந்தது அடடா திருமணம்! | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nகாதல் ஜோடிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் நடந்தது அடடா திருமணம்\nகாதலித்து தற்கொலைக்கு முயன்ற இளம் ஜோடிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பீரன்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் குர்முக் சிங் (23). ஹிசாரில் உள்ள வித்யூத் நகரைச் சேர்ந்தவர் குசம் (22). இருவரும் ஹிசாரில் உள்ள டிஎன் கல்லூரியில் படித்துவந்தனர்.\nஅப்போது நட்பாகப் பழகினர். நட்பு காதலானது. கல்லூரி முடித்த பின்னும் தொடர்ந்தது காதல். குடும்பத்தினருக்குத் தெரியாமல் காதலித்து வந்தனர்.\nஇந்தக் காதல் முதலில் குசம் வீட்டுக்குத் தெரிய வந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிங்கை மறந்து விடும்படியும் அவரை சந்தித்தால் கடும் விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டியுள்ளனர்.\nகுருமுக் சிங் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் மனமுடைந்தனர்.\nஇதையடுத்து ஹிசாரில் தேவிபவன் கோயிலுக்கு அருகில் உள்ள சைபர்ஃகேபில் கடந்த 25-ம் தேதி சந்தித்தனர். ’இனி உயிரோடு வாழ வேண்டாம்’ என்று முடிவு செய்தனர்.\nஇதற்காகவே, முன்கூட்டியே கையோடு கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தனர். பின்னர் குசன் தனது அண்ணனுக்கு போன் செய்து, நாங்கள் விஷம் குடித்துவிட்டோம். நீங்கள் நன்றாக இருங்கள்’ என்று கூறிவிட்டு துண்டித்தார்.\nஇதையடுத்து அவரது அண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருகிலுள்ள மருத்துவமனையில் இருவரையும் சேர்த்தார். அவசர சிகிச் சைப் பிரிவில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\nஇரண்டு பேரின் குடும்பத்தினரும் மருத்துவமனையில் சந்தித்துக்கொண்டதும் சண்டையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபிறகு டாக்டர்கள் அவர்கள் சண்டையை நிறுத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.\nஇரண்டு குடும்பத் தினரும் மனம் மாறினர். உடனடியாக இரண்டு பேருக்கும் திருமணத்தை நடத்தி வைத்துவிடலாம் என முடிவு செய்தனர்.\nமாலையும் தாலியும் வாங்கி வரப்பட்டது. டாக்டர்கள், நர்ஸ்கள் முன்னிலையில் ஐசியூவிலேயே மாலை மாற்றியது ஜோடி. உடல் நடுங்கியபடியே தாலியை கட்டி னார் மாப்பிள்ளை.\nஇதுபற்றி மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘குசம் உடல்நிலை முன்னேறிவிட்டது.\nஅவர் சில நாட்களில் குணமடைந்துவிடுவார். குர்முக் சிங் உடல்நிலை இன்னும் முன்னேற வேண்டியுள்ளது’ என்றார்.\nPrevious articleஇந்த வார ராசிபலன் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை 12 ராசிகளுக்கும்\nNext articleவவுனியாவில் விபத்து ஒன்பது மாணவர்கள் படுகாயம் ஒருவர் உயிரிழப்பு\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்- இந்தியா-பாகிஸ்தான் மோதல்- விரைவில் தீர்ப்பு\n‘எங்களுக்கு ஆர்டர் வந்துது’.. நெஞ்சைப் பிழியும் குரூரமான காரியம்.. வீடியோ\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/College%20girl.html", "date_download": "2019-06-26T14:39:58Z", "digest": "sha1:RE7WQRTVMJ6ZW6HWEJNNNESE3I7HWK7Q", "length": 7050, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: College girl", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nவினையில் முடிந்த ஃபேஸ்புக் நட்பு\nஐதராபாத் (21 அக் 2018): ஃபேஸ்புக் நட்பால் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.\nதலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீசில் சரண்\nதிருச்சி (14 ஆக 2018): தலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-06-26T14:23:13Z", "digest": "sha1:2IZ5K4WQZURYWI36XGQQGL3AIDNM7YN2", "length": 12503, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதங்க சூளாமணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதங்க சூளாமணி என்பது முத்தமிழில் ஒன்றாகிய நாடகத் தமிழுக்கு என எழுந்த ஒரு நூலாகும். தமிழ்க் காப்பியங்களுள் முன்னணியில் வைத்து எண்ணத்தக்க சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட தகவல்களையும், சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் காணும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு 1926 ஆம் ஆண்டில், இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த சுவாமி விபுலானந்தர் இந்நூலினை எழுதினார்.\n1924 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 23வது ஆண்டு விழா பாண்டித்துரைத் தேவரின் மாளிகையில் இடம்பெற்ற போது, விபுலாநந்தர் நிகழ்த்திய உரையே விரிவாக செந்தமிழ் இதழில் 1924 சூலை முதல் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டு வந்தது. அச்சங்கத்தினராலேயே மதங்க சூளாமணி என்ற இந்நூல் 1926 ஆம் ஆண்டில் அச்சில் வெளியிடப்பட்டது.[1]\nசேக்சுப்பியரின் அடியொற்றி, நாடகப் பாத்திரங்கள், உரையாடல்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதையெல்லாம் மிக நுணுக்கமாக ஆராய்ந்து விபுலாநந்தர் இந்நூலில் தந்திருக்கிறார்.\nமதங்க சூளாமணி 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n1. உறுப்பியல் 2. எடுத்துக்காட்டியல். 3. ஒழிபியல்\nஉறுப்பியலில் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையினால் பெறப்பட்ட அழிந்து போன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை உரைக்கின்றார்.\nஇவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்திற்குரிய கட்டுக்கோப்பு என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவை என்பன பற்றி இந்திய ரசக்கோட்பாட்டினடியாக எடுத்துக் கூறப்படுகிறது[2].\nஇரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் 12 நாடகங்கள் உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கமைய விளக்கப்படுகின்றன. நாடகத்தின் அமைப்பை மகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விளக்கி அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு காணப்படுகிறது என்பதனையும் அத்தோடு நாடகம் தரும் வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, உருத்திரம், நடுவு நிலையாகிய ஒன்பது சுவைகளையும் தந்து அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார்[2].\nஇந்தப் 12 நாடகங்களிற் சிலவற்றின் அமைப்பை விபரமாகக் காட்டிச் செல்லும் அவர் சிலவற்றின் கதைகளை மாத்திரமே கூறிச் செல்கிறார்.\nஒழிபியல், தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது. தனஞ்சயனார் பரத நூல், நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகம். இதனைவிட தொல்காப்பியச் சூத்திர உரையினின்று எடுக்கப்பட்ட நாடகத்திற்குரிய அபிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல், அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன[2].\nமுதல் பதிப்பு: மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலையிற் பதிப்பிக்கப்பட்டு 1926 ஆம் ஆண்டில் செந்தமிழ்ப்பிரசுரத்தினரால் வெளியிடப்பட்டது.\nஇரண்டாம் பதிப்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் பதிப்பிக்கப்பட்டு இலங்கை, பிரதேச அபிவிருத்தி அமைச்சினால் ஜூலை 19, 1987 இல் வெளியிடப்பட்டது.\n↑ இரகுபரன், க. இ. (பெப்ரவரி 2011). \"மதங்க சூளாமணி\". இந்துக்கலைக்களஞ்சியம் XI. இலங்கை: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். 84-85.\n↑ 2.0 2.1 2.2 சுவாமி விபுலாநந்தர் - காலமும் கருத்தும், சி. மௌனகுரு, 1993, மட்டக்களப்பு\nமதங்க சூளாமணி, நூலகத் திட்டத்தில், பதிப்பு:1987\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/health/04/219993?ref=view-thiraimix", "date_download": "2019-06-26T15:16:03Z", "digest": "sha1:NTKCINQC7N66Z2RFI4KNZOVOBME4OU4Q", "length": 19034, "nlines": 138, "source_domain": "www.manithan.com", "title": "மாதவிடாயில் இத்தனை பிரச்சனைகள் உள்ளதா? தவிர்ப்பது எப்படி.! - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nமாதவிடாயில் இத்தனை பிரச்சனைகள் உள்ளதா\nஇன்றுள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் சரியான வயதை விட முன் வயதிலேயே தங்களின் பருவத்தை அடைகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மாதவிடாய் விலக்கும் சுமார் 40 வயதுகளிலேயே ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க சில பெண்கள் மாதவிடாய் நேரங்களில் பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.\nமாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு பல வழிமுறைகள் உள்ள நிலையில், சுமார் 100-ல் 80 பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனையானது இன்றுள்ள காலத்தில் இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு கர்ப்பப்பை அல்லது சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்சனை, ஹார்மோன்களின் சமநிலை பிரச்சனை என்று பல காரணங்கள் உள்ளது.\nஇதன் காரணமாக பின்னாள்களில் தைராய்டு பிரச்சனையும், குழந்தையின்மை பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. நமது உணவு முறை பழக்க வழக்கம் மற்றும் மன அழுத்தம், ஆடைகளின் தேர்ந்தெடுத்தல் என்று பல காரணங்கள் உள்ள நிலையில், உடலுக்கு தேவையான மற்றும் சத்தான காய்கறிகளை எடுத்து கொள்ளாமல் இருத்தல் மற்றும் பழ வகைகளை சாப்பிட்டால் இருத்தல் போன்ற காரணங்களும் உள்ளது.\nமாதவிடாயை பொறுத்த அளவு மாதவிடாய்க்கு ஈஸ்டிரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் வேதி பொருட்கள் முக்கிய பங்கை எடுத்து கொள்கிறது. இந்த சம்யத்தில் இதன் இரு அளவும் சமமாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. இதற்கு அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். ஹார்மோன்கள் சுரப்பதை சீர் செய்வதற்கு ஆளிவிதைகள் மற்றும் சோம்பினை சரியான அளவில் எடுத்து கொண்டு சிறிதளவு ஓம நீரை சேர்ந்து பருக வேண்டும்.\nஒரு தே.கரண்டியளவு கருஞ்சிரகம் எடுத்து கொண்டு அதனை நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில் இருக்கும் ஆண்டி-இனபிலமோன்ட்ரி மற்றும் ஆண்டி-டைபீடிக், ஈஸ்டிரோஜன் காரணமாக நமது உடல் மற்றும் கருப்பையில் இருக்கும் அழுக்குகள் நீக்கப்பட்டு, மாதவிடாய் நிகழ்வானது சரியாக நிகழும்.\nதினமும் எள்ளுருண்டை மற்றும் கருப்பு எள்ளுருண்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவற்றின் காரணமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைந்து, எலும்புகள் உறுதியாகும். உடல் எடையானது சீராக இருக்கும். கற்றாழை செடியின் கூழ், தேங்காய் பால் மற்றும் ஏலக்காய், பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பின் அளவானது குறையும்.\nதினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் வைட்டமின் சி காரணமாக உடலின் இரும்பு சத்தானது அதிகரிக்கும். நெல்லிக்காயை முதல் நாள் இரவில் தேனில் ஊறவைத்து, பின்னர் காலையில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. தேன் கிடைக்காத பட்சத்தில் நெல்லிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி நீரில் போட்டு, சுமார் ஒரு நாள் கழித்த பின்னர் அந்த நீரை பருகலாம்.\nஇந்த முறையில் அந்த நீரை ஒரு நாள் மட்டுமே உபயோகம் செய்ய வேண்டும். பின்னர் புதிய நெல்லிக்காயை எடுத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் குளுகோஸின் காரணமாக நார்சத்து உடலில் அதிகரிக்கும். இதுமட்டுமல்லாது ஹார்மோன்களின் அளவானது சீராக இருக்கும்.\nமாதவிடாய் சரியாக வரவில்லை என்ற பட்சத்தில் ஆண்டிரோஜன் ஹார்மோன்களின் அளவானது அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே உடலில் தேவையற்று அதாவது, முகத்தில் உரோமங்கள் வளரும். இதனை தவிர்ப்பதற்கு ஆளி மற்றும் சோம்பு விதைகளை சாப்பிட்டு வந்தால் ஆண்டிரோஜனின் அளவானது சரிசெய்யப்பட்டு உரோமங்கள் வளர்வது சரி செய்யப்படும்.\nமாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய மாதுளை பழம், பீட்ருட் மற்றும் கேரட் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். சில நபர்களுக்கு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு பின்னர் மாதவிடாயானது ஏற்படும். இவ்வாறு இருக்கும் நபர்களுக்கு சுமார் ஏழு நாட்கள் தொடர்ந்து மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த சமயத்தில் வெளியேறும் இரத்தமானது கட்டி கட்டியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஇந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். பொட்டு கடலையை நெய்யில் வறுத்து, உளர் திராட்சையை எடுத்து கொண்டால் உடலுக்கு நல்லது. இதன் மூலமாக அதிகளவு வெளியேறும் இரத்ததை தவிர்க்கலாம். சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கும் நபர்கள் சிறிதளவு கருஞ்சீரகத்தை சாப்பிடலாம்.\nசில நபருக்கு மாதவிடாய் ஏற்படும் காலத்தில் இரத்தம் சரிவர வெளியேறவில்லை என்ற பட்சத்தில், இரும்பு சத்துள்ள பேரிட்சை பழம், உளர் திராட்சை, அத்தி பழம், மாதுளை பழம், கறிவேப்பில்லை, அகத்திக்கீரை மற்றும் சுண்டைக்காய் சார்ந்த உணவுகளை சாறாகவோ அல்லது உணவு போல் சமைத்து சப்பிடலாம்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/topics/local-body-election", "date_download": "2019-06-26T14:25:34Z", "digest": "sha1:PTXAYL235XYU63Y6FZOJSOFUVQK5OWC2", "length": 15614, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n``கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்” - கிராமச் சபைக் கூட்டம் தொடர்பாக கமல் வேண்டுகோள்\n'- உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா\n`எல்லாவற்றுக்கும் அரசைக் குறைகூறக் கூடாது; உள்ளாட்சித் தேர்தல் ஜூன் மாதம் நடக்கும்\n``இந்தத் தேர்தல் முடிந்ததும், அதற்கும் ஒரு கச்சேரி இருக்கிறது” - கொதிக்கும் ஆர்.எஸ்.பாரதி\nகூலித் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை - சுயேச்சை வேட்பாளரின் கோரிக்கை விசாரணைக்கு ஏற்பு\n`எங்க தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பதேயில்லை' - சேலம் அருகே நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் மக்கள்\nஏழை மக்கள் போட்டியிடவே முடியாதா - ஒரு ரூபாயுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்\n`ஓட்டுக் கேட்டு வந்தா.. வேட்டு வச்சு துரத்துவோம்' - தண்ணீர்ப் பிரச்னையால் தவிக்கும் சங்ககிரி மக்கள்\nஅ.தி.மு.க டூ அ.ம.மு.க - சேலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.கே.செல்வம் யார்\n`தேர்தல் நடத்தை விதிகள் அமல்’ - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\nஅப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:30:34Z", "digest": "sha1:ZQRWY6I3RKX24V4EI6BVNBCA4XZ3WUU3", "length": 3467, "nlines": 45, "source_domain": "thamizmanam.com", "title": "இலக்கியம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஉதய சங்கர் | இலக்கியம் | உதயசங்கர் | சிறார் இலக்கியம்\nசொ.ஞானசம்பந்தன் | இராமலிங்க அடிகள் | இலக்கியம் | கம்பராமாயணம்\nவடமொழி யிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள திருதராட்டிரன், அரிச்சந்திரன் முதலியோர் அல்லாமல் வேறு சில மன்னர்களைப் ...\nஇதே குறிச்சொல் : இலக்கியம்\nCinema News 360 Diversity & Inclusion Events General NEP National education policy New Features News Review Tamil Cinema Uncategorized WordPress.com home improvement national Education அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை குட்டிக்குட்டிச் சாரல்...... சினிமா தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிருஹஸ்பதி பீஷ்மர் பொது பொதுவானவை பொருளாதாரம் வரைவு தேசியக் கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:47:48Z", "digest": "sha1:3JDJBQL6CDUE35RORBYW3GU743ICKFMO", "length": 4115, "nlines": 70, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பாட்டி வைத்தியம் | பசுமைகுடில்", "raw_content": "\n101 PICTURES : பாட்டி வைத்தியம்- இயற்கை மருத்துவம்-Herbal\nநோய் பல தீர்க்கும் திரிபலா – இயற்கை மருத்துவம்\nதிரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று பழங்கள் சேர்ந்த கூட்டுப்பொருள்தான் திரிபலா. அந்த மூன்று மூலிகைகள்: கடுக்காய்[…]\nஎருக்கன், எருக்கு வேறு பெயர்கள் -:அருக்கன்.ஆள்மிரட்டி என்பன. எருக்கன் செடி வகையைச் சேர்ந்தது. வறண்ட பிரதேசத்திலும் வளரும்.ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும்.[…]\n1) என்றும் 16 வயது வாழ ஓர் “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் “”முடக்கத்தான் கீரை.””[…]\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள்[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=63927", "date_download": "2019-06-26T14:49:30Z", "digest": "sha1:LPWVTONWMEHUVUJGU45MUVGE4V26ETKM", "length": 6911, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nலெப்கேணல்_மகேந்தி, லெப்-கலைமாறன், லெப்.இளங்கோ, லெப்.குட்டிமணி ஆகிய மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள்-\nலெப்கேணல்_மகேந்தி, லெப்-கலைமாறன், லெப்.இளங்கோ, லெப்.குட்டிமணி ஆகிய மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள்-\nமன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் 10.06.2006 அன்று மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப். கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி ஆகிய மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்……….\nலெப். கேணல் மகேந்தி 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் வீரச்சாவை தழுவிய லெப். கேணல் சூட்டி இவரது சகோதரன் ஆவார். 1996 இல் யாழ்ப்பாணம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது ஊடுருவல் தாக்குதலை நடத்தியிருந்தார்.\nயாழ். செல்லும் படையணியின் தளபதியாக விளங்கிய இவர், அக்கால கட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிம்ம செர்ப்பனமாக விளங்கினார். ஓயாத அலைகள் 03 இராணுவ நடவடிக்கையின் போது யாழ். பகுதிகளை கைப்பற்றும் சமரில் முக்கிய பங்காற்றியிருந்தார்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/17/busarrest.html", "date_download": "2019-06-26T14:30:31Z", "digest": "sha1:TSA23FDMH5XM32TFQGMI3RNNZHMQYHU6", "length": 13926, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊருக்குள் வராத பஸ் .. நாகர்கோவில் மக்கள் கொதிப்பு | nagarkovil people captured buses demanding transport facility - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n26 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n39 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊருக்குள் வராத பஸ் .. நாகர்கோவில் மக்கள் கொதிப்பு\nபல ஆண்டுகளாக பஸ் வசதி கேட்டு வந்த மக்கள் பஸ் வசதி கிடைக்காததால் பஸ்களைசிறை பிடித்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகில் இருப்பது இறைவன்துறை. இந்தஊர் மக்கள் பஸ் வசதி கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்கள் கோரிக்கைகள் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் கவனிக்கப்படாமல்இருந்து வந்தது.\nஇதனால் கோபமடைந்த இந்த ஊர் மக்கள் செவ்வாய்க்கிழமை அந்த பகுதிநெடுஞ்சாலையில் வந்த 6 பஸ்களை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து வந்தஅதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதன் பின் மக்கள் சிறை பிடித்த பஸ்களை விடுவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடிதடி வழக்கில் சிக்கினார் பொள்ளாச்சி \\\"பார்\\\" நாகராஜன்.. கைது செய்து தூக்கியது போலீஸ்\nமுன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் \\\"டாக்டர்\\\" கவிதா\nநடுவானில் சிகரெட் பிடித்த பயணி... தடுத்த பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அசிங்கம்\nபோலீஸ் முகத்தில் குத்து விட்டாரே அந்த ரவுடி.. ஞாபகம் இருக்கா.. மடக்கிப் பிடித்து கைது பண்ணிட்டாங்க\nமுத்து விலாஸ் மிட்டாய்க்கடையில் வேலை.. 35 லட்சம் மோசடி.. ஓனர் கைது\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nதமிழக வேலை தமிழருக்கே.. தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம்.. பெண்கள் உள்பட 400 பேர் கைது\nஅத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்\nசேலத்தில் மீண்டும் தலைதூக்கும் வெளிமாநில விபசார அழகிகள்.. ரெய்டில் 2 அழகிகள் கைது\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-06-26T13:53:46Z", "digest": "sha1:A5NS22HMH5OIBKEKIMWDW3MRF54NCAWD", "length": 17175, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேமரா News in Tamil - கேமரா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநர்ஸ் உடை மாற்றியதைப் பார்த்து சபலமடைந்தேன்.. கைதான மருத்துவமனை ஊழியர் பரபர வாக்குமூலம்\nசென்னை: உடைகள் மாற்றும் அறையில் எத்தேச்சையாக சென்ற போது ஒரு செவிலியர் உடை மாற்றுவதை கண்டதிலிருந்து தனக்கு சபல...\nசென்னையில் மருத்துவமனை கழிவறையிலும் கேமரா-வீடியோ\nசென்னையில் தனியார் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை...\nஆதம்பாக்கம் சஞ்சீவியை ஃபாலோ செய்த சைதாப்பேட்டை பிரகாஷ்.. கேமரா வைத்தது எப்படி\nசென்னை: சென்னை தனியார் மருத்துவமனை கழிவறையில் கேமரா வைத்த பிரகாஷ் ஆதம்பாக்கம் சஞ்சீவி ஸ்டை...\nOPPO F7 : ரூ.21,990 விலையில் புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் போன்\nஓப்போ எப்7 போனை 20018, மார்ச் 26ம் தேதி அறிமுகம் செய்துவிட்டது ஓப்போ. ஓப்போ எப் 7ல் இருக்கும் 25எம்பி...\n.. கடைசியில் தனியார் மருத்துவமனை கழிவறையிலும் கேமரா.. சென்னையில் அதிர்ச்சி\nசென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ள ச...\nரகசிய கேமராவில் நிர்வாண வீடியோ.. மிரட்டியே பெண்களுடன் உல்லாசம்.. ஹாஸ்டல் வழக்கில் போலீஸ் ஷாக்\nசென்னை: சென்னை பெண்கள் ஹாஸ்டலில், ரகசிய கேமரா கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பல திருப்பங்களை ஏற்...\nபெண்கள் ஹாஸ்டலுக்குள் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி சம்பத்ராஜ் சிக்கிய பரபர பின்னணி\nசென்னை: சென்னையில் பெண்கள் விடுதிக்குள் பல்வேறு ரகசிய கேமராக்களை வைத்து படம் பிடித்த விடுத...\nவேகமான சார்ஜ்.. ஏஐ கேமரா.. அசாத்திய அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nசென்னை: புதிய தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள ஓப்போ எஃப்9 புரோ மொபைல் இந்த மாதம் 31ம் தேதியில் ...\nசெல்பிக்களின் உலகில் புதிய புரட்சி.. அல்டிமேட் அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nசென்னை: செல்பி எடுப்பவர்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் சில நாட்...\nபிக்பாஸ் 2 : ’அதைக் காட்டித் தான் டிஆர்பி-யை ஏத்தணும்னு அவசியம் இல்லை’... மேடையில் கமல் கோபம்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த கமல், திடீரென தனது குரலை உயர...\n‘கேமிராவே என் ஆயுதம்’ - குப்பை சேகரிக்கும் பெண்மணியின் வெற்றிக் கதை\n\"ஒரு நாள் போலீஸ்காரர் என் கையில் விலை உயர்ந்த கேமிரா இருப்பதை கண்டார். என்னிடம் எதுவும் கேட்...\nஓப்போ எப் 7: புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் போன், ரூ.21,990 விலையில்\nஓப்போ எப்7 போனை 20018, மார்ச் 26ம் தேதி அறிமுகம் செய்துவிட்டது ஓப்போ. ஓப்போ எப் 7ல் இருக்கும் 25எம்பி ...\nவாவ்.. செல்பி கேமரா போன் உலகில் புரட்சி ஏற்படுத்தும் ஓப்போ\nசென்னை: கடந்த ஐந்து வருடங்களில் செல்பி எடுக்க உதவும் ஸ்மார்ட் போன்கள்தான் வைரலாக இருக்கிறத...\nபணத்தை விழுங்கி எஸ்கேப் ஆக முயற்சி.. 300 ரூபாய் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டிய பெண் போலீஸ்\nமும்பை: மும்பையில் பெண் போலீஸ் ஒருவர் 300 ரூபாய் பணம் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி இரு...\nமூக்குக்கண்ணாடியில் சர்வைலன்ஸ் கேமரா... பார்த்த உடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சீன போலீஸ்\nபெய்ஜிங்: உலகிலேயே சீனாவில்தான் அதிக கேமராக்கள் இருக்கிறது. சீனாவில் நீங்கள் திரும்பி பார்...\nஉலகத்தை கண்காணிக்க போகும் புதிய தொலைநோக்கி... நாசாவின் வேற லெவல் விண்வெளி திட்டம்\nநியூயார்க்: உலகத்திலேயே பெரிய தொலைநோக்கி ஒன்றை நாசா விண்ணுக்கு அனுப்ப இருக்கிறது. இந்த திட்...\nஅப்துல் கலாம் மணி மண்டபத்தில் செல்போன், கேமராவிற்கு தடை கடும் கெடுபிடியால் மக்கள் அதிருப்தி\nராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்லத் தடை விதிக்...\nபுலியை நேருக்கு நேர் சந்தித்து போட்டோ எடுத்த பிரதமர் மோடி \nராய்ப்பூர்: ராய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் புலியை பிரதமர் மோடி எடுப்பது போன்ற புகைப்படம்...\nகர்நாடகாவில் 50 வயது பெண்மணியை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டும் இளைஞன்.. வைரலான சிசிடிவி காட்சி\nபெங்களூர்: 50 வயது பெண்மணி ஒருவரை 25 வயது இளைஞர் பெரும் வீச்சரிவாள் கொண்டு வெட்டி கொல்ல முயலும் ...\nபிரபல ஐரோப்பிய யூனியன் வங்கியின் பெண்கள் உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள்\nலக்சம்பர்க்: லக்சம்பர்க்கில் உள்ள யூரோப்பியன் இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் இருக்கும் பெண்கள...\nரன் அடிப்பதைக் காட்டிலும் நடிப்பது ரொம்ப கஷ்டம் பாஸ்... இப்படிச் சொல்வது \"காட்\" சச்சின்\nமும்பை: கிரிக்கெட் விளையாடுவதைவிட, திரைப்படங்களில் நடிப்பது மிகவும் கடினமான செயலாக இருப்பத...\nபெங்களூரில் 6 வாகனங்களை மோதி தூக்கி வீசிய பென்ஸ்.. சினிமா பாணி விபத்தில் ஒருவர் சாவு\nபெங்களூர்: பெங்களூரில், நடந்த சங்கிலி தொடர் விபத்தில் தையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jun/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%825-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3171177.html", "date_download": "2019-06-26T14:21:20Z", "digest": "sha1:T6DEQ4QGYHK4J3QEJZ6CAUQW6SKAFD56", "length": 10507, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சார்பு-ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nசார்பு-ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 14th June 2019 09:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சார்பு ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமாரவேல். இவர் கடந்த 1996-இல் காவல் துறையில் சார்பு ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். அடுத்தடுத்து சில மாதங்களிலேயே 4 காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக சூலக்கரை காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, 1.8.2000-இல் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்கச் சென்றுள்ளார். ஆனால், அவரை காவல் கண்காணிப்பாளர் சந்திக்க மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில், காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குமாரவேல் மீது புகார் செய்யப்பட்டது. இதன்பேரில், சூலக்கரை போலீஸார் அவரைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nஇந்த நடவடிக்கை தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.\nதன்மீதான பொய் புகாரில் வழக்குப்பதிவு செய்து, சீருடையில் இருந்தபோது கைது செய்து காவலில் வைத்தனர். இது மனித உரிமையை மீறிய செயல். என் மீதான நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆகவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் இழப்பீடு கோரி இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் குமாரவேல் மேல்முறையீடு செய்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதன் விவரம்: மனுதாரர் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுவிட்டதாகப் போலீஸார் கூறியுள்ளது ஏற்புடையதாக இல்லை. சீருடையில் இருந்த மனுதாரர், கைது செய்யப்பட்டு அரை மணி நேரம் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல் துறையினர் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளனர். அதேநேரம், பாதிக்கப்பட்ட மனுதாரர் ரூ.1 கோடி இழப்பீடு கேட்பதையும் ஏற்க முடியாது. இருந்தபோதும் இந்த வழக்கின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/News/World/2019/06/11131648/1245758/Tariff-on-US-motorcycles-by-India-unacceptable-says.vpf", "date_download": "2019-06-26T15:09:09Z", "digest": "sha1:J5OVEZBYBLV2BVHCB5AA3N7JX7PIKXRV", "length": 9245, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tariff on US motorcycles by India unacceptable says Donald Trump", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான 50 சதவீத வரியை ஏற்க முடியாது- டிரம்ப்\nஅமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரியை 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இந்தியா குறைத்த நிலையில், இதையும் ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஎனது தலைமையிலான அமெரிக்க நாட்டினை பிற நாட்டினர் இனியும் ஏமாற்ற விடமாட்டேன். மோடி தலைமையிலான இந்திய அரசு நமது நட்பு நாடுகளில் ஒன்று. ஆனால் அவர்கள் நமது பொருட்களை இறக்குமதி செய்யும் போது நம்மிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள். உதாரணத்துக்கு நாம் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பினால் 100 சதவீதம் வரி விதித்தார்கள். ஆனால் இந்தியா ஒரு மோட்டார் சைக்கிளை அமெரிக்காவுக்கு அனுப்பினால், நாம் அவர்களிடம் வரி எதுவும் வசூலிப்பதில்லை.\nஇதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிதிப்பது நியாயம் அற்றது என கூறினேன். அதன் காரணமாக பிரதமர் மோடி 100 சதவீத இறக்குமதி வரியிலிருந்து 50 சதவீதமாக குறைத்தார். இதுவும் அதிகம் தான், ஏற்றுக்கொள்ள முடியாதது.\nநாங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு வரி விதிப்பதில்லை. அதே போல் அமெரிக்க மோட்டார் வாகனங்களுக்கு இந்தியா வரி விதிக்கக்கூடாது என மோடியிடம் தெரிவித்தேன். இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஇந்திய பிரதமர் மோடியுடன் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தொலைபேசியில் பேசினேன். அதில் 50 சதவீதம் அளவிற்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. ஏனென்றால் அமெரிக்கா அத்தகைய பொருளாதார ரீதியாக அதிக வலிமை பெற்ற நாடாக திகழ்கிறது. ஒரு வேளை நாம் இத்தகைய வலிமை பெற்ற நாடாக இல்லாவிட்டால் எந்த நாடும் நம்முடைய கருத்துக்களை கேட்க கூடமாட்டார்கள்.\nடிரம்ப் | ஹார்ட்லி டேவிட்சன் | இறக்குமதி வரி\nஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம் அளிக்க பாகிஸ்தான் திடீர் ஆதரவு\nபாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி கல்லூரி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 4 பேர் பலி\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தூக்கில் போட இலங்கை அதிபர் உத்தரவு\nஅமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை - ஈரான் அதிபர் திட்டவட்டம்\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்\nஈரான் மீது தாக்குதல்: கடைசி நிமிடத்தில் மனம் மாறிய டிரம்ப்\nஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது: டிரம்ப் டுவிட்\nஅமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு அன்பு கடிதம் எழுதிய வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன்\n‘ஜி 20’ மாநாட்டின் போது சீன அதிபரை சந்திக்கிறார் டொனால்டு டிரம்ப்\nபருவநிலை மாறுதல்களுக்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம்: டிரம்ப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilan24.com/news/1449", "date_download": "2019-06-26T15:02:14Z", "digest": "sha1:H6M7GV4X3HQZU47BNBSQIRSGG4JBKSB3", "length": 10781, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் தீவிரவாத அமைப்பினர் ஊடுருவலா? | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் தீவிரவாத அமைப்பினர் ஊடுருவலா\nதுாத்துக்குடி முற்றுகை போராட்டக்காரர்களுடன், மாவோயிஸ்ட் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் ஊடுருவியிருப்பதை பொலிசார் கண்காணிக்க தவறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள்.\nபோராட்டமானது குமரெட்டியாபுரம், மீளவிட்டான் என, 17க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது குறிப்பாக, புற்றுநோயால் குடும்ப தலைவர்களை இழந்த குடும்பங்களை ஒன்றிணைத்தனர்.\nகடந்த, 100 நாட்களாக நடந்த போராட்டம் இதுவரை போராட்டத்தையே பார்த்திராதவர்களிடம் புதிய போக்கை ஏற்படுத்தியது.\nமேலும், தி.மு.க., - அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்திராமல் மக்கள் அதிகாரம், புரட்சிகர மக்கள் முன்னணி போன்ற தீவிர இடதுசாரி இயக்கங்கள், போராட்ட களத்தில் இறங்கின.\nநேற்றைய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில், ஜெயராமன் மக்கள் அதிகாரம் அமைப்பையும், தமிழரசன் புரட்சிகர மக்கள் முன்னணி அமைப்பையும் சேர்ந்தவர்கள்.\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், இளைஞர்களிடம் தீவிர இடதுசாரி அமைப்புகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது.\nநேற்றைய சம்பவத்திலும், இத்தகைய அமைப்பினர் ஊடுருவியதை கண்காணிக்க பொலிசார் தவறிவிட்டதாக கூறப்படுகிறது.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilcnn.lk/archives/522721.html", "date_download": "2019-06-26T14:46:15Z", "digest": "sha1:54TELXTFWVADVZFOH4H2OL55W4X2RWWD", "length": 7009, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தாய் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாது: மருத்துவ உலகின் சாதனை", "raw_content": "\nதாய் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாது: மருத்துவ உலகின் சாதனை\nJune 8th, 2016 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் HIV வைரஸ் தொற்றினை தடுக்கும் முயற்சியில் தாய்லாந்து வெற்றிகண்டுள்ளது.\nஉலகிலேயே கொடிய நோய்களில் ஒன்று HIV, பாதுகாப்பற்ற உறவு, அசுத்தமான ஊசிகள் உட்பட பல்வேறு காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது.\nகர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு HIV இருந்தால் அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பரவக்கூடும்.\nஇதனை சிகிச்சைகளின் மூலம் சரி செய்து ஆசிய நாடான தாய்லாந்து வெற்றி கண்டுள்ளது.\nஎய்ட்ஸ் நோயற்ற தலைமுறையை உருவாக்குவதே தாய்லாந்து, தன்னுடைய நோக்கமாக கொண்டு செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.\nகர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமருத்துவ கண்காணிப்பில் இருக்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் பரவும் ஆபத்து ஒரு சதவீதமாக குறைகிறது.\nஒருவேளை மருந்துகள் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவ 45 சதவீதம் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரிய வலதுசாரி சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ\nடப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilcnn.lk/archives/840038.html", "date_download": "2019-06-26T14:41:15Z", "digest": "sha1:CY4MAAMWLI4JM3JOD6CP5RCUIZULOKDN", "length": 6057, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "போதைப்பொருள் வர்த்தகர் மீதே துப்பாக்கிச்சூடு – புத்தளத்தில் தீவிர பாதுகாப்பு", "raw_content": "\nபோதைப்பொருள் வர்த்தகர் மீதே துப்பாக்கிச்சூடு – புத்தளத்தில் தீவிர பாதுகாப்பு\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபுத்தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து குறித்த சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் முற்பட்டபோது, அவர் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதன்போதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசாதிப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட திருவிழா-பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nதீவிரவாதி சஹ்ரான் இறந்தது உறுதி: வெளியானது மரபணுப் பரிசோதனை அறிக்கை\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு\nபிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/02/", "date_download": "2019-06-26T13:55:20Z", "digest": "sha1:IQUGKXHCXMEQUVNI7ZP54BZFEEJU67VY", "length": 108614, "nlines": 455, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: February 2008", "raw_content": "\nஎங்கள் வீட்டில் எதாவது ஒரு விஷயம் கருத்து வேற்றுமை இல்லாம எல்லாருக்குமேப் பிடிச்சிருக்குன்னா\nஅது 'சுஜாதா'வின் கதைகள்தான். எழுபதுகளில் வெளிவந்த எல்லாக் கதைகளையுமே அனுபவித்துப் படித்திருக்கிறோம். அவருடைய ஒரு கதையின் நாயகி என் வீட்டில் இருக்கிறாள்.\n'சட்'என்று மனதில் வந்த பெயர்தான் மதுமிதா.\n என்றாவது ஒரு நாள் மேலுலகில் மீண்டும் சந்திப்போம் சுஜாதா.\nஉங்கள் எழுத்துக்கள் எங்கள் மனதில் வாழ்கின்றன.\nஆரம்பப்பள்ளிக்கூடக் குழந்தைகளின் பிக்னிக் டே. குழந்தைகளைக் கட்டி மேய்க்கறது லேசுப்பட்டக் காரியமா அதனால் 'பேரண்ட் ஹெல்பர்ஸ்' என்ற பெயரில் ஆறு குழந்தைக்கு ஒரு அம்மாவோ இல்லை அப்பாவோன்னு கூடவே போறது இங்கே வழக்கம். நம்ம வீட்டுலேதான் அப்பாவுக்கு ஆஃபீஸே கதியாச்சே. ஆன்னா ஊன்னா, இல்லே வேற எதுன்னாலும் அம்மாதான் பள்ளிக்கூடத்துலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழிச்சுக்கிட்டு இருந்தேனே......\nஅருகாமையில் இருக்கும் ஒரு தோட்டத்திற்குப் போயிருந்தோம். ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிஞ்சு மதியச் சாப்பாடும் ஆச்சு. அந்தத் தோட்டம் பூராவும் (Rhododendron) ரோடோடெண்ட்ரன் செடிகள் நிறைஞ்சுருக்கு. பூக்கும் சீஸன் வேற.சொல்லணுமா இந்தப்பூ நம்ம நேபாள நாட்டின் தேசிய மலராம்.\nபலவித நிறங்களில் கீழே உதிர்ந்துகிடந்த பூக்களுடன், புதரின் அருகே உட்கார்ந்திருந்தோம்.\nபக்கத்தில் எதோ நார் போல ஒண்ணு கைக்கு அகப்பட்டது. ச்சும்மா இல்லாமல் அந்தப் பூக்களைத் தொடுக்க ஆரம்பிச்சேன். அது நீளமா சரமாகிறதைப் பார்த்த குழந்தைகளுக்குக் குஷி தாங்கலை. எனக்கு எனக்குன்னு கேட்டுக்கிட்டு இருந்துச்சுங்க. அக்கம்பக்கத்துச் செடிகளில் இருந்து உதிர்ந்து கிடந்த குவியலைப் பொறுக்கிட்டு வந்தாங்க. நானும் விடாமத் தொடுத்து ஆளுக்கு ஒரு மாலையாக் கழுத்தில் போட்டுக் கொடுத்தேன். ஊசி இல்லாம எப்படி அந்தப் பூவைக் கோர்க்கிறேன்னு அங்கே இருந்த எல்லாருக்கும் (பெரியவர்களுக்குத்தான்)ஒரே ஆச்சரியம். கிடைச்ச சான்ஸை விட்டுறாம, நம்மூரில் எப்படி பூக்களைக் கட்டி அதை ஒரு வியாபாரமாச் செய்யறாங்க, பெண்கள் எப்படி பூக்களைத் தலையில் சூட்டிக்கொள்ள விரும்புறாங்க, கோயில்களுக்கருகில் பூக்கடைகள் இல்லாமலே இருக்காதுன்னு ஒரு லெக்சர் அடிச்சுவிட்டேன்.\nஇது நடந்ததுக்கு ரெண்டு வாரம் கழிச்சு, நம்மூர் சிட்டிக் கவுன்ஸிலில் இருந்து ஒரு கடிதம் வந்துச்சு. அடுத்து வரப்போகும் ப்ளவர் ஷோவுக்கு உதவி செய்ய முடியுமான்னு........கேட்டுருந்தாங்க. செஞ்சாப்போச்சு......... இது என்ன பிரமாதமுன்னு அவுங்க சொன்ன எண்ணில் கூப்பிட்டுப் பேசினேன். இந்த வருஷம் உலகநாடுகளின் திருமண அலங்காரங்கள் என்று அலங்கரிக்கப் போறோம். உங்க நாட்டு அலங்காரங்களைச் செய்ய உதவணும்னு சொன்னாங்க. நம்மூர்லே ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரியான அலங்காரம், சாஸ்த்திரம் சம்பிரதாயம் எல்லாம் இருக்குன்னு ஒரு லெக்சர் கொடுத்துட்டு, பொதுவாத் தமிழ்நாட்டுலே மணமகள் அலங்காரத்துக்கு உதவி செய்யறேன்னு சொல்லி செஞ்சு கொடுத்தேன். அட்டையில் ஜடை அலங்காரம் காகிதப்பூக்களால் செஞ்சு இன்னும் தேவையான ஆக்ஸெஸரீஸ் எல்லாம் கொண்டுபோய் ஜமாய்ச்சாச்சு. இங்கத்து டவுன் ஹாலில் இது நடந்து ஒரு 18 வருசமாச்சு.\nஇங்கே சம்மர் சீஸன் ஃபிப்ரவரி மாசம் இறுதிவரைதான். நம்மூரோ நியூஸியின் கார்டன் சிட்டிவேற. அதனால் ஃபிப்ரவரி மாசம் வரும் காதலர் தினத்தையொட்டியே இந்த பூக்கள் கண்காட்சி நடந்துக்கிட்டு இருந்துச்சு. வருசாவருசம் எதாவது ஒரு 'தீம்' சொல்லிருவாங்க. போன வருசம் பட்டாம்பூச்சி, அதுக்கு முந்தினவருசம் வண்டு இப்படி. ஒரு வருசம் டெடிபேர் கூட இருந்துச்சு. அதுக்கேத்தபடி கார்டன் செண்டர், ஸ்கவுட் டீம், கேர்ள் கைட்ஸ், இன்னும் சிலபல வியாபார நிறுவனங்கள்ன்னு ஒவ்வொரு குழுவும் அதை அனுசரிச்சு, ஊருக்குள்ளே போகும் ஏவான் நதிக்கரையில் அலங்காரம் செஞ்சு வைப்பாங்க. சிலபேர் ஆத்துத்தண்ணியிலே சின்னப் படகுகளை வச்சு அதை அலங்கரிச்சு இருப்பாங்க. இந்த ஆத்தை ஒட்டியே இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில் மலர் அலங்காரமுன்னு நகரசபை விதவிதமாப் பூத்துக்குலுங்கும் பூச்செடிகளை நட்டு வச்சிருக்கும்.\nபொதுவா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறுவரைன்னு வீகெண்டையும் சேர்த்தே இருக்கும். மக்களுக்கும் ஓய்வா அதைப்போய்ப் பார்க்க நேரம் கிடைக்கும். இதுலே ஹைலைட் என்னன்னா நம்ம, நகரத்துக்கு மத்தியில் கதீட்ரல் இருக்கு பாருங்க ,அங்கே ரெண்டு வரிசை இருக்கைகளுக்கு நடுவில் இருக்கும் நடைபாதையில் மலர் அலங்காரம் செய்வாங்க. மலர்க்கம்பளம் விரிச்சிருக்கும். மொத்தம் 20 மீட்டர் நீளம். ரெண்டு மீட்டர் அகலம் வரும்.\nஇது இல்லாம அங்கே இருக்கும் தூண்களில் எல்லாம் மலர்க்கொத்து அலங்காரம் இருக்கும். இந்தத் திருவிழா (இப்படித்தான் சொல்ராங்க Floral Festival) நடக்கும் வாரமெல்லாம் அங்கங்கே வெவ்வேறு பூக்களுக்கான சொசைட்டிகளில் மலர் அலங்காரம், அந்தக் குறிப்பிட்டச் செடிகளை வளர்க்கும் முறைக்கான பயிற்சி வகுப்புகள், நம்ம பொட்டானிக்கல் கார்டனில் சில விரிவுரைகள்னு எதாவது இருக்கும்.\nஇந்த வருசம் கொஞ்சம் தாமதமாத்தான் திருவிழா ஆரம்பிச்சது, பிப்ரவரி 22 முதல் 24 வரைன்னு. நாங்களும் வழக்கம்போல் சனிக்கிழமை பகலுக்கு விக்டோரியா சதுக்கத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். வழக்கமான இடத்துலே போய்ப் பார்த்தா.......................\nஅங்கே ஒண்ணுமே இல்லை. எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கு. ஃபெரியர் ஃபவுண்டென்லே கொட்டும் தண்ணி கூட இல்லாம நீரூற்று மொட்டையா நிக்குது. இந்த மாதிரி தண்ணீர் இல்லாம ஒரு நாளும் பார்த்ததில்லை இந்த 20 வருசத்துலே. இது என்னடா நம்ம நகரத்துக்கு வந்த சோதனைன்னு அவசரஅவசரமா கேமெராவை எடுக்கறதுக்குள்ளே............ பக்ன்னு தண்ணீர் பீய்ச்சியடிக்க ஆரம்பிச்சது.\nநதிக்கரையில் பார்வையிட ஒரு அலங்காரமமும் இல்லாததால் கூட்டமும் இல்லை. ஒரு வாத்து மட்டும் 'என்னாத்துக்கு நீ இங்கே வந்தே\nகேக்கறது போல ஒரு பார்வை பார்த்துச்சு. நம்மைக்கடந்து போன ஒரு ட்ராம் வண்டியில் பக்கவாட்டு ஜன்னலில் . திருவிழா இந்த வாரம்தான்ன்னு உறுதி சொல்லி நாலு பூவைக்குத்தி வச்சிருந்தாங்க.\nஅப்படியே காலார நடந்து சதுக்கத்துக்கு வந்தோம். சதுக்கத்திலே கொட்டாய் போட்டு கொஞ்சம் பூக்கள், ஓவியங்கள், செப்புத்தகடு, கம்பிகளால் செஞ்ச மெட்டல் ஆர்ட்ஸ்னு விற்பனைக்கு இருந்துச்சு.\nகதீட்ரல் உள்ளே மலர்க்கம்பளம் விரிச்சிருக்காம். வழக்கமா அங்கே ரெண்டு டாலர் வசூலிப்பாங்க தலைக்கு. அதுவும் எதோ தருமக் கைங்கர்யங்களுக்குப் போகும்.உள்ளே நுழைஞ்சதும் முன் வெராந்தாவுலே ஒரு மேசை போட்டு, நுழைவுச்சீட்டு விப்பாங்க.\nஇன்னிக்கு என்னன்னா..... விற்பனைச்சீட்டுக்குன்னு வெளியே சின்ன கூடாரம், கதீட்ரல் வாசலுக்கு முன்னாலே ரெண்டு பக்கமும் நாலு தொட்டியில் செடிகொடிகளைவச்சு அலங்காரம். காசேதான் கடவுளடான்னு பக்காவா வியாபாரமாக்கி வச்சுருக்காங்க. பெரியவங்களுக்கு 10 டாலர். முதியோர் இல்லத்துலே இருந்து வந்தவங்கன்னா 5 டாலர்களாம். விலைவாசி இப்படி 400 சதமானம் ஏறிடுச்சா நாலுபேர் இருக்கும் குடும்பம் கோயிலுக்குள்ளே போய்ப் பார்க்க நாற்பது வெள்ளின்னா.................... எப்படிங்க\nபோன வருசக்கடைசியில் இருந்து எங்களுக்கு புது நகரத் தந்தை வந்திருக்கார். இங்கே நகரத்தில் இருக்கும் மக்களைப் பிழிஞ்சு வரிகளை ஏறக்குறைய 25 சதமானம் ஏத்துனதோட நிக்காம, இந்த வருசம் மலர்களின் திருவிழாவை வழக்கம்போல உள்ளூர் மக்களை அனுபவிக்க விடாமல் செஞ்ச புண்ணியவான்.\nகொஞ்சம்கூட இதயமில்லாமல் இப்படித் திருவிழாவில் கைவச்சுட்டாரேன்னு, இவுங்க எல்லாம் சிந்திக்கவே மாட்டாங்களான்னு நினைச்சப்பத்தான் இந்த வருசத் திருவிழாவுக்கான 'தீம்' தெரியவந்தது.\nநல்லா இருங்கப்பா. நல்லா இருங்க.\nநரகமுன்னு ஒண்ணு இல்லைன்னு நாலுபேருக்குச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். உங்களை ஒரு படம் எடுத்துக்கவான்னு கேட்டப்ப, ச்சும்மாத் தோளைக் குலுக்கிட்டு போஸ் கொடுத்தார்.\nவரவர நம்முலகே நரகமா ஆகப்போது..., அப்புறம் தனியா ஒண்ணு எதுக்குன்னு இருக்கோ என்னமோ\n வெறும் இருபத்தியாறுதான். இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு. போனவருசம் ஷாங்காயில் நடந்த ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்லே இந்த நாட்டின் பிரதிநிதிகளாய்ப் போன டீம் மெம்பரில் ஒருத்தர் ஸேரா ஜேன். பவர் லிஃப்டிங்லே நியூஸியில் நாலாவது ரேங்க். போனவருஷமுன்னு நீட்டி முழக்கறேனே, இது ஒரு நாலு மாசம் முந்திதான்.\nதெற்குத்தீவின் கடைசிப்பகுதியில் இருக்கும் விசேஷ கவனிப்பு வேண்டியுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் படிப்பு. கற்பதில் கொஞ்சம் தாமதம். மூளை வளர்ச்சிக் கொஞ்சம் குறைவாம். தனியாக விடமுடியாது. எப்போதும் யாராவது கூடவே இருக்கணும். மிருகங்கள் மேல் அளவில்லாத பாசம். அனிமல் ஷெல்ட்டர்க்குப் போய் வாரம் ஒரு நாள் வாலண்டியர் வேலை செய்வது வழக்கம். உள்ளூரில் ஒரு சிகை அலங்கார நிறுவனத்தில் உதவியாளரா வேலை செய்ய ஆரம்பிச்சுச் சில வருசங்கள் ஆகுது. தனக்கே தனக்குன்னு ஒரு செல்ல நாயும் இருக்கு.\nஅழகான அருமையான குடும்பம். ரெண்டு அண்ணன்மார். நல்லாப் படிச்சுப் பெரிய வேலையில் இருக்காங்க. ஒரு அண்ணன் உள்நாட்டில், ஒரு முப்பது நிமிஷ கார்ப் பயணத்தூரத்தில். மூத்த அண்ணன் இங்கிலாந்தில் இஞ்சிநீயர்.\nஅம்மா மருத்துவத் துறையில் உள்ளூர் மருத்துவரின் கன்ஸல்டிங்கில் க்ளினிக்கல் நர்ஸ். சவுத் ஐலண்ட் ஸ்பெஷல் ஒலிம்பிக் கமிட்டீயின் தற்போதைய சேர் பர்ஸன்.\nஅப்பா...........பண்ணை அதிபர். பண்ணையில் ஐந்தாயிரம் ஆடுகள். இவரோட கட்டளைக்குக் காத்திருக்கும் மூன்று ஷீப் டாக்ஸ்( sheep dogs). இது தவிரக் குறைந்த எண்ணிக்கையில் பசுக்கள் கூட்டம் ஒண்ணு. இது தவிர வழக்கமான பண்ணையில் உள்ள பறவைகளாகக் கோழிகள் முதலானவை. பவுலிங் விளையாடுவதில் ஆர்வம். மகள் படிக்கும்/படித்த பள்ளியில் பேரண்ட் & டீச்சர்ஸ் அசோஸியேஷன் தலவரா பல ஆண்டுகள் இருந்துருக்கார். பவுலிங் க்ளப்பின் தற்போதைய ப்ரெஸிடெண்ட்.\nஅக்கம்பக்கம் பதினெட்டுப் பட்டியிலும் பேர் கேட்ட குடும்பம். நாற்பத்தி அஞ்சு வருசம் இங்கேயே இதே இடத்தில் இருக்குறாங்க.\nஒன்பதுநாள் நிகழ்வாக அப்பாவும் அம்மாவும் ஷாங்காய் போனார்கள். அப்பா, தன் மகளுக்கு மட்டுமில்லாமல் அந்தக் குழுவில் இருக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருந்துருக்கார். எல்லாருக்கும்தான் எதாவது உதவி வேண்டித்தானே இருக்கு. நிகழ்வுகள் முடியும் நாளில் அவருக்கு நெஞ்சுவலி. மருத்துவமனையில் சேர்த்து, முதல் சிகிச்சைக்குப்பின் அவரை ஹாங்காங் மருத்துவ மனைக்கு மாற்றி இருக்கிறார்கள். சேதியறிஞ்ச மூத்த மகன் லண்டனில் இருந்து ஹாங்காங் வந்து மருத்துவ மனையிலிருந்து அவர் வெளிவரும்வரை துணையாக இருந்து உதவி செஞ்சுட்டு, அப்பா அம்மாவை நியூஸிக்கு விமானத்தில் அனுப்பிவிட்டு, அவர் திரும்பிப் போனார்.\nஅம்மாவுக்கு ஒரே யோசனை. மகன்கள் இருவரும் வெவ்வேறு தொழிலில் வேறு இடங்களில். கணவருக்கோ உடல்நிலை சரியில்லை. மகள் ஒரு பாவம். பண்ணை வேலைகளோ அதிகம். பேசாமல் பண்ணையை விற்றுவிட்டு நகரத்தில் குடியேறிவிடலாம். ஏற்கெனவே இதைப் பற்றிச் சிலவருடங்களாகவே சிந்தித்துக் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தவர்தான். இப்போது பண்ணையைப் பற்றி ஒரு முடிவு செய்யவேண்டிய தருணம். அப்பாவுக்கு ஒரு தயக்கம். பண்ணையை விட்டுப்போவதா\nமனதின் ஒரு பகுதி இதைச் சரி என்று சொன்னாலும் அடுத்த பகுதி கேட்டால்தானே உடல்நலக் குறைவு கொஞ்சம்கொஞ்சமாகக் கூடிவருகிறது.\nஉள்ளூர் மருத்துவமனையில் அவ்வப்போது தங்கும் நிலமை. மன அழுத்தம் கூடுகிறது. இதற்கும் மருந்து கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை மருத்துவ மனையில் தங்க நேரிடும்போதெல்லாம் பிழைப்பாரோ மாட்டாரோ என்ற பெருங்கவலை மனைவிக்கு.\nஅப்பா அம்மா இருவரும் சேர்ந்துதான் மகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முன்பே தீர்மானித்துக் கொண்டதுதான். அப்பாவுக்கு மகள் ரொம்பவே செல்லம். அவருடைய அருகாமையில் மகள் இருக்கும்போது மேனேஜ் செய்வது சுலபம். அம்மாவுக்குத் தன் ஒருத்தியால் மட்டும் மகளைப் பார்த்துக்கொள்வது சிரமம் என்று அவ்வப்போது பேச்சு வருமாம். இந்த சமயத்தில் இளைய மகனுக்குக் கல்யாணம் கூடிவந்தது. நல்லவேளையாகப் பெண் வீட்டுக்கார்களே எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டதால் அம்மாவுக்கு நேரம் கிடைத்தது கணவரையும் மகளையும் பார்த்துக்கொள்ள.\nஅடிக்கடி மருத்துவமனையில் இருப்பதால் மகனின் திருமணத்தில் அவரால் கலந்துகொள்ள முடியுமா என்பதும் ஒரு கூடுதல் கவலையாக இருந்ததாம்.\nநல்லவேளையாக கூடுதலாக ஒன்றும் சம்பவிக்காமல் எல்லாம் நல்லமுறையிலேயே நடந்தது. அனைவரும் கலந்துகொண்ட மிகமகிழ்வான நிகழ்வு. மூத்த அண்ணனும் வந்து கலந்துகொண்டு சில நாட்கள் இருந்துவிட்டுப் போனார்.\nமகனின் திருமணம் முடிந்து பனிரெண்டு நாட்களில் வந்தது காதலர் தினம். . வேலைநாளாக இருந்ததினால், அம்மா காலை 7 மணிக்கே வேலைக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். அதற்கு மறுநாள் மகளின் பிறந்தநாள். நல்ல பரிசாக ஒரு உடுப்பு வாங்கிக்கொண்டு வரணும் என்று மனதில் ஒரு திட்டம்.\nஅன்று மாலை ஐந்துமணி அளவில் வீடு திரும்பிய அம்மா கண்டது உயிரில்லாத கணவனையும், மகளையும். அவசர உதவியைக் கூப்பிட்டுவிட்டு,\nஇளைய மகனுக்கும் தொலைபேசினார். போலீஸ் உடனே பதறியடித்து வந்தது.\nகட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த மகளைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டிருக்கிறார் அப்பா. எல்லாம் அம்மா, பணிக்குப் போனதும் நடந்து முடிந்திருக்கிறது. பண்ணை வீடானதால் அருகில் மற்ற வீடுகள் இல்லை.\nயாருக்கும் எந்த சப்தமும் கேட்கவில்லையாம்.\nஅங்கங்கே இதுபோன்ற மரணச்செய்திகளை அவ்வப்போது வாசிக்க நேர்ந்தாலோ, இல்லை தொலைக்காட்சிகளில் பார்த்தாலோ ஏற்படும் உணர்வை விட, மரணித்தவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள் என்றால் பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டு விடுகிறதல்லவா\nமூன்று வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு திருமணப்பதிவு நினைவிருக்கின்றதா அந்த மணமகனின் தந்தையும் சகோதரியும்தான் இந்த அப்பாவும் மகளும்.\nபிரேதப் பரிசோதனைக்குப் பின் இந்த வியாழந்தான் அவர்களது சவ அடக்கம் நடந்தது.\nசவுத் ஐலண்ட் ஸ்பெஷல் ஒலிம்பிக் குழுவினரின் சிறப்பு மரியாதையோடு ஸேராவின் இறுதிச்சடங்கும், பவுலிங் க்ளப் அங்கத்தினர்களின் சிறப்பு மரியாதையோடு அப்பாவின் இறுதிச் சடங்குகளும் நடைபெற்றன.\nஇந்த நான்கு மாதங்களாக அவருக்கு மன அழுத்தம் கூடி இருந்ததாக மனைவி குறிப்பிட்டார். சரி.அப்பாவுக்குத்தான் வாழப்பிடிக்கவில்லை. மகளையாவது விட்டுவிட்டுப் போயிருக்கக்கூடாதா\nகணவரையும் மகளையும் இழந்து வாடும் அந்த அன்னைக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கவும், இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு அஞ்சலியாகவும் இதை இங்கே பதிவு செய்கின்றேன்.\nஅக்பருக்கு இந்து மனைவி உண்டா, இல்லையா அப்படி இருந்துருந்தா அவுங்க பெயர் என்ன அப்படி இருந்துருந்தா அவுங்க பெயர் என்ன ஜஹாங்கீரின் மனைவி பெயர்தான் அக்பரின் இந்து மனைவி பெயரா ஜஹாங்கீரின் மனைவி பெயர்தான் அக்பரின் இந்து மனைவி பெயரா இப்படியெல்லாம் சரித்திரக் குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்க.......\nஜோதா அக்பருக்கு ப்ரிவ்யூக்குப் போகும்படியா ஆச்சு எங்களுக்கு. சரித்திர டீச்சருக்குச் சரித்திரப்படத்தைப் போட்டுக் காமிக்கணுமா இல்லையாசரி. நம்ம பார்வையில் படம் எப்படி\nபிரமாண்டமான போரில் ஆரம்பிக்குது படம். சின்னப்பையன் ஜலாலுதீனுக்குப் பட்டம் கட்டி போரில் தோற்ற மன்னரின் தலையை வெட்டச் சொல்றார் அவரோட கார்டியன் கம் சேனாபதி பைரம் கான்.\nஇளகிய மனமுள்ள ஜலாலுதீன் வேணாமுன்னு மறுக்கவும், அந்தக் கத்தியை எடுத்தே, எதிரித் தலையைத் துண்டாடுறார்.\nஜலாலுதீன் மொஹம்மத் தன் ராஜ்ஜியத்தை விரிவாக்கிப் போகும்போது அவர் ஆட்சிக்கு உட்பட மறுத்தாங்க சில ராஜபுத்திர அரசர்கள். சிலர் சரின்னு சம்மதிக்கிறாங்க. இதன் காரணமா, ஜோதாபாய்க்கு சின்னவயசில் நிச்சயம் செய்த திருமணம் நின்னு போச்சு. மாப்பிள்ளைவீட்டார் வேணாமுன்னு போயிட்டாங்க.\nஜோதாவின் அப்பா, ஜலாலுதீனின் உதவி கேட்டு வர்றார். உதவிக்குப் பதில் உதவியா தன் பொண்ணைக் கட்டிக் கொடுக்கறேன்னு சொல்றார். இங்கதான் கொஞ்சம் உதைக்குது. ராஜபுத்திரர்களைப்பற்றி முந்தி எங்கியோ கொஞ்சம் படிச்சதில் அவுங்க வீரம், நேர்மை, மத சம்பிரதாயங்களில் அவுங்களோட பற்றுன்னு மனசுலே ஒரு 'படம்' இருந்துச்சு. இப்ப என்னன்னா.....ஒரு தகப்பனே வேற்றுமதக்காரருக்குத் தன்மகளை மணமுடிக்கத் தரேன்னு சொல்றாரே.......\nராஜ்ஜியமுன்னு வரும்போது நீதி நியாயங்கள் மாறிப்போகுதோ என்னவோ அது இருக்கட்டும். இப்ப 'கதை'க்கு வருவோம்.....\nகல்யாணமுன்னு சொல்லி ரெண்டு பகுதியையும் சேராத ஒரு பொது இடத்துக்கு(அப்படித்தான் இருந்துச்சு) வந்து சேர்ந்தாங்க. பொண்ணு ஒரு கூடாரத்தில் இருக்கு. அப்பாகிட்டே சொல்லுது நான் மணமகனை 'ரெண்டு கேள்வி'கேக்கணும். அதுக்கப்புறம்தான் கட்டிக்கச் சம்மதமா இல்லையான்னு சொல்வேன்னு.\nஜலாலுத்தீன் செய்தி கேட்டுப் பொண்ணைப்பார்க்க வர்றார். பொண்ணு கேட்கும் ரெண்டு நிபந்தனை, ஒண்ணு, கல்யாணம் கட்டுனாலும் மதம் மாறாம இப்படியே இருப்பேன். ரெண்டு, என்கூடவே என் சாமியையும் கொண்டு வருவேன். அதுக்கு ஒரு பூஜை ரூம் ( கோயில்னு சொல்லுது) கட்டிக்க அனுமதி வேணும்.\nபொண்ணோட தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டுன ஜலால் ( செல்லமா இப்படிச் சொல்லிக்கறேன். முழுப்பெயரும் நீளமா இருக்கு) சரின்னதும் அங்கேயே 'அக்னி வளர்த்துச் சம்பிரதாயமா அக்னியை வலம்வந்து (ஸாத்ஃபேரே) கல்யாணம் முடிஞ்சுருது. முதலிரவு....பாட்டு வருமுன்னு பார்த்தா...ஊஹும்...... பொண்ணுக்கு இஷ்டமில்லாம அவளைத் தொட மாட்டேன்னு ஜலால் சொல்றார். மறுநாள் அதிகாலையில் அவர் அவசர அரசாங்க அலுவல்னு தில்லிக்குப் போயிடறார்.\nபொண்ணு மாமியார் வூட்டுக்குப்போகுது. ஆக்ரா கோட்டை. பொண்ணோட கூடவே சில தோழியர் சேடிப்பெண்கள் போறாங்க. அங்கே மாமியார் எல்லோரையும் அறிமுகப்படுத்தும்போது ஒரு பெரியம்மாவையும் அறிமுகம் செய்யறாங்க. ஜலாலின் செவிலித்தாய். அந்தம்மா முகமே வில்லத்தனமா இருக்கு. இந்தம்மா என்னவோ குருத்தக்கேடு காமிக்கப்போகுதுன்னு என் மனம் சொன்னது சரியாப்போச்சு. எத்தனை சினிமாப் பார்த்துருக்கோம். இதைக் கணிக்கத்தெரியாதா\nமுழுக்கதையையும் சொல்லப்போறதில்லை. எப்படியும் நீங்க பார்க்கத்தான் போறீங்க. அப்ப நீங்களே புரிஞ்சுக்கலாம்.\nபேரரசர் ஜலாலுத்தீன் மொகம்மத் தன்னுடைய கருணையின் காரணம் மக்களால் மிகப்பெரியவர் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். அக்பர் என்ற பட்டப்பெயர் கிடைக்குது ( இனிமேப்பட்டு அக்பர்னு சொல்றேனே)\nஅக்பரா வரும் ஹ்ரித்திக் ரோஷன் நல்லாவே அவர் பாகத்தைச் செய்யறார். அந்த உடையலங்காரத்தில் நெடுநெடுன்னு ஒரு 'பீன்போல்' போல குச்சியா இருக்கார். காலை மடிச்சு அரியாசனத்தில் (தொழுகைக்கு உட்காரும் விதத்தில்) உட்காருவது அருமை. திருமணம் முடிஞ்சு முதல்முறை மனைவியைச் சந்திக்கும்போது ஒரு மாகாணி விநாடி முகத்தில் வரும் புன்னகை சூப்பர்.\nசின்னவயசுப் பாடப்புத்தகத்தில் குண்டு முகத்துடன் கையிலொரு பூவை வச்சிருக்கும் அக்பர் படம் மனசில் பதிஞ்சதால் இந்த ஒல்லி அக்பரை மனசு ஏத்துக்கலை. சரி. வயசானதும் கொஞ்சம் சதை போட்டுருப்பார்னு சமாதானப் படுத்திக்கிட்டேன். (இவரோட கைகளைக் குளோஸ் அப் காமிக்கும்போதெல்லாம் அந்த ஆறாவது விரல் தெரியுதான்னு பார்ப்பது ஒரு பழக்கமாப் போச்சு) அக்பருக்கு ஜோதி பாய்னு ஒரு இந்து மனைவி இருந்தாங்க. தீன் இலாஹின்னு ஒரு புது மதத்தை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக ஏற்படுத்தினார்ன்னும் அந்தப் பாடப்புத்தகத்தில் இருந்துச்சே.\nஜோதாவா வரும் ஐஸ்வர்யா (ராய்)பச்சன் அவுங்களுக்குத் தந்த பகுதியை நல்லாத்தான் செஞ்சாலும் என்னவோ மிஸ்ஸிங். வயசு தெரிய ஆரம்பிச்சுருக்கோ இல்லை அந்தக் கால மேக்கப்னு என்னவோ செஞ்சுருக்காங்களோ இல்லை அந்தக் கால மேக்கப்னு என்னவோ செஞ்சுருக்காங்களோ பழைய ஐஸ்வர்யாவின் பளிங்கு போன்ற ஜொலிக்கும் (எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. 'ஹம் தில் தேச்சுகே சனம்' படத்தில் இருப்பாங்க பாருங்க அப்படி) அழகு காணாமப் போயிருக்கு. நளினம் நாசூக்கு எல்லாம் அப்படியே இருக்கு. ஆனாலும்....................\nஇன்னொரு ராஜ்புத் இளவரசனா வரும் (இவர்தான் ஜோதாவுக்குக் கத்திச்சண்டையெல்லாம் சொல்லிக்கொடுக்கும் பாய்சா(ப்) முகம் மட்டும் எங்கியோ பார்த்த நினைவு. ராஜ் பப்பரின் முகச்சாயல் இருந்துச்சோ. அப்புறம் தெரிஞ்சது அவர் பெயர் 'சோனு சூட்'னு.\nமத்தபடி ஏகப்பட்ட பாத்திரங்கள். ரொம்ப நாளா இந்தி சினிமா உலகில் கவனம் வைக்காததால் யார் என்னன்னே தெரியலை. கூட்டமான கூட்டம்.\nகோட்டை கொத்தளங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு. எல்லாம் சரித்திர சம்பந்தமுள்ள இடங்கள். இவ்வளவையும் கட்டிக்காப்பாத்திப் பழுதில்லாமப் இளைய தலைமுறைக்கு வச்சுட்டுப்போக வேண்டியது நம்ம மக்களுடைய கடமை. இதுபோல ஒண்ணைக் கனவிலாவது கட்ட முடியுமா அந்த சமையலறையும், அடுப்பும், பாத்திரமும் பிரமாண்டம்.....ஹைய்யோ..........\nபோர்க்காட்சிகள் அருமையா எடுத்துருக்காங்க. பானிப்பட் யுத்தம் எப்படி இருந்துருக்குமுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆக்ரா கோட்டையில் ராணியின் படுக்கையறைன்னு ஒண்ணு காமிக்கிறாங்க. அட்டகாசம்.\nபோர்ன்னு சொன்னதும் யானைப்படையைச் சொல்லலைன்னா நான் என்ன துளசி ஏராளமான யானைகள். ஆங்..... மறக்கறதுக்கு முந்தி சொல்றது. நம்ம ஜலாலுக்குக் 'டைம் பாஸ்' என்னன்னா முரட்டு யானைகளை அடக்கிப் பழக்குவதாம்\nஅக்பர் காலத்து நகைநட்டெல்லாம் மனசுலே அப்படியே பதிஞ்சதுன்னு நான் சொன்னா அது ஒரு பெரிய பொய். என்னவோ இருக்கு.\nவசனங்களில், இந்து முஸ்லீம் ஒற்றுமையை முக்கியமா மனசில் வச்சு எழுதுனமாதிரி இருக்கு. அதுவும் இந்தியாவில் பிறந்த முஸ்லீம்கள் இதைத் தங்கள் சொந்தநாடாத்தான் நினைக்கிறாங்கன்னு (வலியுறுத்திச்)சொல்றாங்க. இது என்னவோ நிஜம்தான். பலர் இப்படித்தானே இருக்காங்க.\nஇன்னொண்ணு, மதிப்புக்கு உரியவர்கள் குற்றம் செஞ்சா, அவுங்களைத் தண்டிக்கறது எப்படின்னா...... 'மெக்காவுக்குப் போ'ன்னு அனுப்புவது. ஒருவேளை இறைவன் சன்னிதியில் தங்கள் குற்றங்களை மனமாற ஒப்புக்கொண்டுக் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கறதுக்குன்னு நினைக்கிறேன்.\nஇவ்வளோ சொல்லி நம்ம ரெஹ்மானைச் சொல்லைன்னா எப்படி ராஜ்புத் நாட்டுப்பாடல் ரெண்டு மூணு இருக்கு. ஒரு சூஃபி பாட்டு நல்லாவே இருக்கு. முதல் முறை கேட்கும்போதே மனசில் பதிவதுபோல ஒண்ணும் இல்லை. ஆனா ரெஹ்மானோட பாட்டெல்லாம் ஒயின் மாதிரி கொஞ்சம் ஊறணும் இல்லை\nஉண்மையான சரித்திரம் அடங்கிய படமுன்னு சொல்லாம, சரித்திர நாயகனை வச்சுப் பின்னப்பட்டக் கற்பனைக் கதைன்னு சொல்லி இருக்கலாம்.\nப்ரீவியூலே படம் முடிஞ்சதும், கையைப் பிசைந்துகொண்டு நிக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன், மெயின் டிஸ்ட்ரிப்யூட்டர் எல்லார்கிட்டேயும் 'படம் ரொம்ப நல்லா இருக்கு'ன்னு ஆறுதலாச் சொல்லலாமுன்னா அங்கே யாரையும் காணோம்.\nமூணுமணிக்கு ஆரம்பிச்ச படம் (நடுவில் ஒரு 10 நிமிச இடைவெளி) முடியும்போது சரியா ஏழடிக்க ஏழு நிமிசம். படத்தோட நீளத்துக்குச் சற்றும் குறைவில்லாம கடைசியில் ஓடும் டைட்டில். ஒருத்தரையும் விடாம படப்பிடிப்பு நடந்த இடம் ஒண்ணு விடாம, க்ரெடிட் போய்க்கிட்டே இருக்கு. இவர் என்னடான்னா 'போதும் பார்த்தது எழுந்து வா'ன்னு கத்திக்கிட்டு இருக்கார். நானா ஊஹும்..... சுபம் போட்டாத்தான் எந்திரிப்பேன்னு கண்டிஷனாச் சொல்லிட்டேன். இவர்தான் குறுக்கு நெடுக்குமா பூராத் தியேட்டர் ஹாலையும் அளந்துக்கிட்டு இருந்தாரா...... ஒரு வேலை கொடுக்கலாமுன்னு மொத்தம் எத்தனை இருக்கைன்னு எண்ணி வையுங்கன்னேன்:-)\nமொத்தம் 106 இருக்கை இருக்கும் தியேட்டரில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான். படம் போட்டவருக்கு வெறும் முப்பது டாலர்தான் முதல் ஷோவுக்கான வரவு. ஹூம்...பாவம் அந்தப் பையன். இதுதான் பகல் மூணுமணிக் காட்சி. இப்ப ஏழுமணிக்கு இன்னொரு காட்சி இருக்கே.\nவெளியே நிற்கும் கூட்டத்துக்கு படம் நல்லா இருக்குன்னு சொல்லி மனசை ஆத்திக்கணும்.\nசுபம். வெளியே வந்து பார்த்தா ஈ, காக்கை இருக்கணுமே........ நொந்து போயிட்டோம். இந்த காம்ப்ளெக்ஸில் எட்டு தியேட்டர் இருக்கு. ஒரு வேளை வேற எண் தியேட்டரில் அடுத்த ஷோ இருக்கோ என்னவோ கார்ப் பார்க்கில் வண்டியை எடுக்கும்போது, கொஞ்ச தூரத்தில் ஒரு இந்திய இளம் ஜோடிகள் கையில் ஒரு குழந்தையோடு கட்டிடம் நோக்கிப்போறாங்க. குழந்தை ஓடியாட நிறைய இடம் இருக்கு. போங்கன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே வீடு வந்தோம்.\nஇது எங்கூரு தியேட்டருக்குள்ளே வச்ச விளம்பரம்.\nLabels: Jotha akbar, சினிமா, ஜோதா அக்பர்\nசூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரெஸ் வண்டி, புல்லட் ட்ரைன் வரப்போகுதுன்னு சொன்னதும் எவ்வளவு ஆனந்தமா இருக்கு. இதே ஆனந்தம் எல்லாருக்கும் வரட்டுமுன்னு கொஞ்சநாளா பூஜை பார்த்துக்கிட்டு இருக்கோம்.\nஎந்த ராஜா எப்படிப்போனாலும் 'டாண்'னு 7 மணிக்குப் பூஜை ஸ்டார்ட் ஆகிரும். அதிலும் நாம் சனிக்கிழமையாப் பார்த்துக் கோவிலுக்குப் போறோம் இல்லையா அங்கே அநேகமா ஏகாந்த சேவைதான் நமக்கு.\nவழக்கமா 'சங்கு'ஊதி (பூஊம், பூஊஊம் ,பூஊஊஊஊஊஊம் மூணுவாட்டி) பூஜை ஆரம்பிக்கும். நாலைஞ்சு ஊதுபத்தியைக் கத்தையா வச்சுக்கிட்டு ஏத்தி,அதை கையை ஒரு வீசு வீசி அணைச்சுட்டுத் தீயில்லாமப் புகைய ஆரம்பிச்சதும், இடது கையில் சின்ன பூஜை மணி( வெங்கலம்/பித்தளை) ஆட்டிக்கிட்டே ஒரு மூணு நாலு நிமிஷம்.\nஅடுத்து அஞ்சு திரி போட்ட தீப ஆராதனை.அது ஒரு அஞ்சு நிமிஷம். அது முடிஞ்சதும் அந்த விளக்கை ஒரு சின்ன பளிங்கு ஸ்டூலில் வைப்பாங்க. அதை யாராவது பக்தர்கள் எடுத்துக்கிட்டுப்போய், சாமிக்கு நேர் எதிரா இருக்கும் ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா சிலைக்குக் காமிச்சுட்டு, கூடி இருக்கும் பக்த ஜனங்களுக்கு வரும்.கையில் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கலாம்.\nமூணாவதா, தீர்த்தம். சின்ன வலம்புரி சங்கில் எடுத்து விக்கிரஹங்களுக்கு ஆராதனை செஞ்சுக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா ஒரு சின்ன அழகான பளபளன்னு தேய்ச்சு மினுக்கப்பட்ட குட்டியூண்டு குடத்தில் ஊத்தி, பளிங்கு ஸ்டூலுக்கு வரும். பக்தர் ஒருத்தர் அதை எடுத்துக்கிட்டுப்போய் ஸ்ரீலஸ்ரீக்குக் காமிச்சு அவருக்கு துளியெடுத்துத் தெளிச்சுட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் கொஞ்சமா ஊத்திப் பக்த ஜனங்களுக்கு சிரசில் தெளிக்கறொமுன்னு மழைத்துளியா வீசுவார்......\nஇதுக்குப்பிறகு ஒரு கைகுட்டை. கட்டைவிரல் & நடுவிரலால் பிடிச்சு ஒரு ரெண்டு நிமிஷம் சுத்து. ஆச்சா\nஅஞ்சவது ஒரு சின்னத் தட்டுலே கொஞ்சம் பூக்கள். தட்டோடு எடுத்து மூணு நிமிஷம் சுற்றல். அது முடிச்சுட்டு தட்டிலே இருக்கும் பூக்களை விக்கிரகங்களுக்குக் காலடியில் அங்கங்கே படைச்சுட்டு, ஏற்கெனவே அங்கே இருக்கும் பூக்களை எக்ஸ்சேஞ்ச் செஞ்சு பளிங்கு ஸ்டூலுக்கு வரும். பக்தர் அவைகளை ஸ்ரீலஸ்ரீக்குக் காமிச்சுட்டு, அங்கே ஒரு பூவை அவருக்குப் படைச்சுட்டு மீதி இருப்பதில் ஒண்ணோ ரெண்டோ அங்கே அருகில் இருக்கும் பக்த மகா ஜனங்களில் ஒருவருக்குத் தருவார். அவர் கையில் வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டோ, இல்லை முகர்ந்து விட்டோ அடுத்து நிற்பவர் ( ஆங்.... சொல்ல மறந்துட்டேனே. சங்கு ஊதியவுடன் எல்லோரும் எழுந்து நிற்கணும். ஆரத்தி முடியும்வரை நின்னபடிதான் எல்லாம்) கைகளில் தருவார். இப்படி எல்லார் கையும் மாறிக் கடைசி நபர்வரை பயணம் செய்யும் அந்தப் பூக்கள்.\nபூக்கள் பயணிக்கும் சமயம் விக்கிரகங்களுக்கு விசிறி கொண்டு காற்றுவீசும் சேவை நடந்து கொண்டிருக்கும். வெய்யில் காலமாக இருந்தால் மயிலிறகு விசிறியும், குளிர்காலமாக இருந்தால் வெள்ளிப்பூண் போட்ட வெள்ளை ரோமம் உள்ளதும் சேவையில் இருக்கும்.\nகடைசிக் கட்டத்துக்கு வந்தாச்சு. மறுபடி சங்கு 3 முறை.\nஎல்லோரும் கீழே விழுந்து கும்பிடணும்.\nஇதுதான் வழக்கமான ஆரத்தி முறைகள் இங்கே. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு 25 அல்லது முப்பது நிமிசம் பிடிக்கும்.\nஒரு மூணுநாலு மாசமா வேகம்பிடிக்க ஆரம்பிச்சிருக்கு இந்தியாவில் இருந்து புதுசா இங்கே வந்திருக்கும் ஒரு பூஜாரியால். இளவயது ஆள். வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆட்கள் வரிசை முறையில் பூஜை செய்யறாங்க. அதில் இவர் சனிக்கிழமை மாலையில் பொருந்தியிருக்கார்.\nகடவுள் முன்னாலே நிக்கறோமே, கொஞ்சம் பதவிசா எல்லாத்தையும் செய்யலாம்ன்னு இல்லாம தடால்தடால்ன்னு ஆரத்தி எடுப்பார். முப்பது நிமிசம் எடுக்கும் பூஜை இவர் வந்தால் ஒரு இருபது நிமிசத்துலே முடிஞ்சுரும்.பாசஞ்சருக்கும் எக்ஸ்ப்ரெஸ்க்கும் உள்ள வித்தியாசம். அது பரவாயில்லைன்னு இருந்தாலும், பூக்கள் உள்ள தட்டைச் சுத்தும் வேகத்தில் அதில் இருக்கும் பூக்கள் பறந்து தரையில் விழும். கையில் இருக்கும் வெங்கலமணியின் மெல்லிய இனிய நாதம் எங்கோ தொலைஞ்சு போய், தீயணைப்பு வண்டி வரும் சத்தம் போல அடிச்சு எழுப்பும் வேகத்தில் வரும் சத்தம் இருக்கே............\nஅப்பப்பா...... சாமிக்கும் இதெல்லாம் வேண்டி இருக்கு என்றதைப்போல முகத்தில் எப்பவும்போல் ஒரு சின்னச் சிரிப்பு.\nஇதைப்பற்றி மற்ற மக்கள்ஸ் என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கமுடியலை. ஏன்னா,அநேகமா நாங்க ரெண்டுபேர் மட்டுமேதான் பூஜையில் கலந்துக்கறோம்.\nஇதை எதுக்கு இப்பச் சொல்ல வரேன்னா......... இந்த சனிக்கிழமை எக்ஸ்ப்ரெஸ், ஒரு புல்லட் ட்ரெயினா மாறிப்போச்சு. பதிமூணு நிமிசத்துலே மொத்த ஆரத்தியும் முடிஞ்சிருச்சு. தட தடா, தட தடா.....தட் தட்........\nநாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முழிச்சோம். அப்ப இவர்,\n\" ட்ரைவ் இன் கோயில் வச்சா எப்படி இருக்கும்\n\"பழனி கோயிலில் நூறு ரூபாய் கொடுத்தால் சாமியை காருக்கே கொண்டுவந்து காமிக்கிறாங்களாம்\"\n\"அப்படித்தான் நம்ம ரஷ்யா ராமனாதன் ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்\"\n\"ஓஹோ..... இப்ப நான் சொல்ரதும் இப்படித்தான்னு வச்சுக்க. கார்லே எல்லாம் வரிசையா மெக்டோனால்ட், கெண்டக்கிக்கு போறமாதிரி ட்ரைவ் த்ரூ போய் சாமியைக் கும்பிட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும்.\"\n\"ஓஓஓஓ அது ஒண்ணு இருக்கா இதைப்பாரு. கார் போய் நிக்குது. அங்கே இருக்கும் ஸ்லாட்லே காசு போட்டதும் ஒரு எலெக்ட்ரானிக் கர்ட்டன் உயரும். உள்ளே சாமி. நாம கும்பிட்டுக் கன்னத்துலே போட்டுக்கிட்டதும் கர்ட்டன் கீழே இறங்கிரும். நாம அப்படியே வெளியே வண்டியை ஓட்டிக்கிட்டு வந்துறலாம்.\"\n\"ஒரு 20 நொடிகள். இதுவே தாராளம்\"\n\"அதுக்கு ஸ்பெஷல்லா ரெண்டாவது ஒரு ஸ்லாட். அதுக்கு டபுள் த ரேட். எலெக்ட்ரானிக் உதவியால் பளிச்சுன்னு ஒரு தீபாராதனை நடக்கும். மொத்தம் 30 விநாடி.\"\n அதுக்கு வேற இடத்தில் தனிக் கவுண்ட்டர் வைக்க வேண்டியதுதானே\n\"ஊஊஹுஊஊஊஊஊஉம்..........இந்தக் கோயிலில் எல்லாம் சமத்துவம்தான்.\nஒரு கார் மட்டுமே நுழையும் வசதி உள்ள ட்ரைவ் வேதான் வைக்கணும். அகலமா வச்சா ஓவர் டேக் பண்ணுவாங்க\"\n இப்பத்தான் ஒரு லட்ச ரூபாக் கார் வந்துருச்சே\n ஐடியா நல்லாதான் இருக்கு. நம்மூர்லே இது ஹிட் ஆனாலும் ஆயிரும். பேசாம ஃப்ரான்சைஸிஸ் போட்டுக்கலாம். \"\nகார் போய் நிக்கும்போதே ரெண்டு பக்கமும் கைக்கு எட்டும் தூரத்தில் ஆட்டொமேடிக்கா ரெண்டு கிண்ணத்தில் குங்குமம், சந்தனம், விபூதி இத்தியாதிகள் ஒரு ட்ரேயில் வச்ச இயந்திரக் கை நீளனும். அதுலே இருந்து எடுத்து நெத்திக்கு வச்சுக்கலாம்.\nஅந்தக் கிண்ணங்களை நல்லா ஸ்க்ரூ போட்டு இணைச்சிருக்கணும்.\nஅம்பது ரூபாய்ன்னு ரேட் வச்சுக்கலாம். வருமானம் எல்லாம், கோயிலுக்கு டைரக்டாப் போய்ச் சேர்ந்துரும்.\nஇன்னும் இதை எப்படியெப்படி இம்ப்ரூவ் செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகளும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.\nநானே முதல் கல்லைப்போட்டு ஆரம்பிச்சு வைக்கறேன்:\nஇஷ்ட தெய்வமுன்னு ஒண்ணு இருக்கே. அதுனாலே எந்த சாமின்னு ஒரு பட்டியல் வச்சுக் காசு போட்டுட்டு அந்த நம்பரை அழுத்தணும். எல்லா மதக்காரர்களுக்கும் இங்கே இடம் உண்டு. சமத்துவம் இப்படியாவது வரட்டுமே.\nபதிவின் கருத்து தானம்: கோபால்.\nகூடத்துக்குள்ளே போகும் கூட்டத்தில் ஏறக்குறைய கடைசியா நின்னுக்கிட்டு இருந்தோம், மலேசியாவிலிருந்து வந்த ஒரு பத்திரிக்கையாளருடன் பேசியபடிக் கையில் ஒரு ஆரஞ்சுப் பழச்சாறு உள்ள கோப்பையுடன். முன் வரிசையில் நிற தோழி , 'நீங்க டக்ளஸ்' என்றார். 'டக்ளஸா\nடக்ளஸ் ரொம்பக் குறும்புக்காரன், அது இப்போ. பிறந்தப்ப ரொம்ப மெலிஞ்சு, பிழைக்கமாட்டான் என்ற நிலையில் இருந்த அவனை வேணாமுன்னு அவுங்க அம்மா தள்ளிட்டாங்க. வச்சுக் காப்பாத்தமுடியாதுன்னு அந்தம்மா கொண்டுவந்து சுனிதாகிட்டேக் கொடுத்துருக்காங்க. ஒரே ஒரு ஊசி போட்டாப் போதும். சரியான ஆள்கிட்டே பொறுப்பை ஒப்படைக்கணுமுன்னு தெரியாதவங்க அந்த அம்மா.\nஅதோ....அந்தக் கர்ட்டன்மேலே ஏறி ஒளிஞ்சு விளையாடுறவனைப் பாருங்க.\n'கடமை தவறிய சுனிதா' வீட்டுலேதான் இந்த ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கான். மீ(க்)காவைப் பார்த்தும் பயமே இல்லை. இந்த மீகாவையும்தான் பாருங்களேன்....\nபார்வை நமக்குத்தான் கொஞ்சமாக் குலை நடுங்க வைக்கும்.ஆனால் அந்தப் பொடியன்கிட்டே மட்டும் என்ன பொறுமை,என்ன விளையாட்டு. வாலைச் சுருட்டிக்கிட்டு இருக்குது போல\nஒரு மனுசனுக்கும், மிருகத்துக்கும் ஒரே இடத்துலே ஒரே சமயம் அடிபட்டா, சுனிதா ஓடி உதவுவது மனிதனுக்கல்ல.\nதனிவீட்டுக்குப் போனதும் ரூபிதான் முதல்லே வந்தது. அக்கம்பக்கம் நடக்கும் போட்டிகளில் பங்கெடுத்து சிலபல பரிசுகளை வென்றவள். அதுக்கப்புறம் வந்த கரிஷ்மாவுக்கு நீலக்கண்ணு.\nபங்கெடுக்கும் போட்டிகளில் வெற்றிதேவதை இப்ப இவள் பக்கம்தான். பாருங்களேன், இந்த தேவதை எப்படி கட்சித் தாவல் செஞ்சுட்டாளுன்னு.\nமூணு மாசத்துமுன்னே வீட்டுலே ஒரே டென்ஷன். கரிஷ்மா பிள்ளையாண்டிருக்காள். குழந்தை பிறக்கும் சரியான நேரம் ஆனானப்பட்ட மகாதேவனுக்கே ( கடவுள்) தெரியாதாம். அப்படி இருக்க சாதாரண மனுசங்களுக்கு\nக்ளோஸ்ட் சர்க்ய்யுட் கேமெரா, பிரசவ வலி கண்டு துடிக்க ஆரம்பிச்சவுடன் அலறும் அலாரம் இப்படி ஏகப்பட்ட நவீன சமாச்சாரங்களை வாங்கி எல்லா ஏற்பாடும் கச்சிதமாச் செஞ்சு வச்சது சுனிதாதான். ராத்தூக்கம் சரியா இல்லாம நடுநடுவில் ரெண்டொருமுறை கரிஷ்மா அறைக்குப்போய்ப் பார்த்துவரும் வழக்கமும் சேர்ந்துக்கிச்சு.\nஒரு சுபயோக சுபதினத்தில் 'என் குழந்தை பிறந்தாச்சு'ன்னு இ-மெயில் வந்துச்சு. எனக்கும் மன நிம்மதியாச்சு.\nசுனிதாவும், நண்பர் ஹெய்டனும் நம்ம வீட்டுக்கு வந்தவுடனே, நம்ம கோபாலகிருஷ்ணன் பயந்து பதுங்கி ஒளிஞ்சுக்குவான்.\nஇப்ப என்ன திடீர்ன்னு சுனிதா புராணம் அது ஒன்னுமில்லை. சுனிதாவுக்குக் கல்யாணம். இது 'நிச்சயமாயி' ஒன்னரை வருசம் ஆச்சு. இவ்வளவு நாள் ஏன்னு கேட்டால்.............. கோயில் கிடைக்கலை\nஇது என்னடா கோவிலுக்கு வந்த கிராக்கி\nவசந்தம் & கோடையில் மட்டுமே கல்யாண சீஸனாம். அது ஒரு ஆறுமாசம்தானே\nசனிக்கிழமையா வேற இருக்கணுமாம் கல்யாணம் நடத்த. அப்படிப் பார்த்தா ஒரு 26 சனிக்கிழமை. இங்கே பலபிரிவுகளில் சர்ச்சுகள் ஏகப்பட்டது இருந்தாலும் 'ஆகி வந்தவை'கள் என்ற வகையில் அதிகமாத் தேறாதாம்.\nசுனிதாவின் அம்மாதான் எல்லா ஏற்பாடுகளையும் கவனிச்சுச் செஞ்சாங்க. எந்த விழாவையும் நினைவில் இருக்கும்படியாச் செய்ய சில சின்ன நுணுக்கங்களைப் பார்த்துக் கவனிச்சா 200 மடங்கு வெற்றிதான். இதை அனுபவிக்க எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைச்சது.\nகல்யாணப்பொண்ணுக்குப் பிடிச்ச கலர் பிங்க் என்பதால் பத்திரிக்கை முதல், விருந்து மேசையின் நடுவில் வைக்கும் அலங்காரப்பூத்தொட்டி வரை பிங்க்கோ பிங்க்\nஒரு எட்டுவருசத்துக்கு முன்னே, என்னிடம் தமிழ் கற்றுக்கொள்ள வந்த இரண்டு மலேசியப் பெண்களில் ஒருத்தர்தான் சுனிதாவின் அம்மா. எழுத்துக்கூட்டிப் படிக்கவும், எழுதவும், இன்னும் சொன்னா நல்லாப் பேசவும்() சொல்லித் தந்தாச்சு. பாடங்கள் முதல் ரெண்டு வருசம்தான். அப்புறம் எல்லாமே ப்ராக்டிக்கல் க்ளாஸ்:-))))\nஅழைப்பிதழிலேயே தெரிஞ்சுரும் பொண்ணும் மாப்பிள்ளையும் என்ன தொழில்ன்னு.\nஅதான் paw prints அங்கங்கே போட்டுருந்ததே. ரெண்டு பேரும் 'வெட் நரி'கள்:-))))\nபடிப்பு வெற்றிகரமா அருமையான ரேங்க்கோட முடிஞ்சதும், தெற்குத்தீவின் தென்கோடியில் உடனே வேலை கிடைச்சது. கிராமப்புறங்களில் வேலை செய்ய ஆரம்பிச்சால்தான் நல்ல அனுபவம் கிடைக்குமாம். சுனிதா, விசேஷப் படிப்பா மாடுகளை எடுத்துருக்காங்க. ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலேயே கன்னுக்குட்டிகளுக்கான சீஸன் தொடங்கிருமாம். ஆள் பயங்கர பிஸி. வேலை பார்க்கும் வட்டாரத்தில் ரொம்ப நல்ல பேர் கிடைச்சிருக்கு. வைத்தியம் பார்த்துக்க வந்த ஒருத்தர் ஒரு yak கன்னுக்குட்டியைப் பரிசாக் கொடுத்துருக்கார். அதோட பெயர்தான் பேட்ஸ்மேன்:-)))) ( இங்கே பரிசோதனை வளர்ப்புக்காக அவர் நேபாளத்தில் இருந்து இந்த வகையை இறக்குமதி செஞ்சாராம் பலவருசங்களுக்கு முன்னே)\nநாங்களும் சுனிதா ஹெய்டன் வீட்டுக்கு ஒரு நாள் போகணும். காரில் ஒரு ஏழரை மணி நேரப்பயணம். mini zoo மாதிரி இருக்காம் வீடு:-))))\nபோன சனிக்கிழமை மத்தியானம் மூணரைக்குக் கல்யாணம். ரொம்ப அழகான அளவான சர்ச். முதல்முறையா அங்கே போனோம். கத்தோலிக் பிரிவைச் சேர்ந்தது. கோபால் பல்பொடி விளம்பரம் தான் சட்ன்னு நினைவுக்கு வந்தது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்ட்ராலியா, இங்கிலாந்து ,அமெரிக்கான்னு உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்துருக்காங்க மக்கள்ஸ். எல்லாம் பொண்ணின் அம்மா பக்கத்து உறவினர்கள். இதுலே விசேஷம் என்னன்னா புடவைகள்தான். மலேசியத்தமிழர்கள் ஆச்சே. கலர் ஃபுல் மலேசியா பொண்ணோட அப்பா இங்கத்துக்காரர். அவர் பக்கத்து உறவினர்களுக்கு வெள்ளைக்கார உடைகள். அந்தப் பக்கமா என் பார்வையைப் பிடிச்சுத் தள்ளவேண்டியதா ஆச்சு.\nதிருமண விழா நிகழ்ச்சி நிரல்கள் இளம் ரோஜா வண்ணத்தில் அச்சடிச்சு இருந்துச்சு. முகப்பில் ரெண்டு பெங்குவின்கள் வெள்ளைக்கார பாரம்பரிய கல்யாண உடைகளில். கடைசிப் பக்கம் ஜிகேவின் சொந்தங்களின் காலடிகள்.\nஅளவான நிகழ்ச்சி. ஒரு மணி நேரத்தில் 'ஐ வில், ஐ டூ' எல்லாம் சொல்லி\nவெளியே சர்ச்சின் முன் வாசலில் ஒரு முக்கால்மணிநேரம் வாழ்த்துச் சொல்றதும், விருந்தினர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆகறதுமுன்னு இருந்தபின், விருந்து நடக்கும் இடத்துக்கு புறப்பாடு.\nசிலசமயம் சனிக்கிழமைப் பகல் பொழுதுகளில் சில சர்ச்களின் வாசலில் இப்படிக் கல்யாணக் கூட்டத்தைப் பார்த்திருக்கோம். ஒரு பத்து இருபது பேர் இருந்தாவே பெரிய கல்யாணமுன்னு சொல்வாங்க. அதிலும் ஒரு புடவையைக்கூட மருந்துக்கும்() கண்டதில்லை. (இதுக்குத்தான் நம்மளைக் கூப்புடணும் என்றது.)\nகேக் ஷாப் நடத்தும் ஒரு இந்தியத் தோழி செய்த கேக்\nவிருந்து இங்கே ஒரு ஹோட்டலில் ஏற்பாடு. இது நம்ம வீட்டருகில் என்றதால் நாங்க நேரா வீட்டுக்கு வந்துட்டு, நம்ம ஜிகே சாருக்குச் சாப்பாடு கொடுத்துட்டு, உடுப்பு மாத்திக்கிட்டு கொஞ்சம் மெதுவாத்தான் விருந்துக்குப் போனோம். சாப்பாட்டுக்கு முந்தி தீர்த்தாடனம் நடக்குது. கோபாலும் இந்த புது வருசம் எடுத்த முடிவின்படி நோ குடி:-)\nஉட்புறத் தோட்டத்தில் எல்லாரும் ஊத்திக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் ஒரு க்ளாஸ் ஆரஞ்சுப்பழ ரசம் எடுத்துக்கிட்டோம். உறவுகளையெல்லாம் அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது, நிறையப்பேருக்கு என்னை 'டீச்சர்' என்று தெரிஞ்சிருக்கு:-))))\nசாப்பாட்டுக்குக் கூடத்துக்குள்ளே போறப்பதான் 'நீங்க டக்ளஸ்' ன்னு தோழி சொன்னாங்க. ஹாலின் கதவுக்கருகில் யார்யார் எந்த மேசைன்னு ஸீட்டிங் லிஸ்ட் வச்சிருந்தாங்க. மீகா, மிலி, டக்ளஸ், கரிஷ்மா, ரூபி, பேட்மேன், கீரு இப்படி 18 பெயர்களோடு 18 வட்ட மேசைகள். ஒரு மேசைக்குப் பத்து ஆட்கள்.\nநான் குறிப்பிட்டச் சின்னச்சின்ன கவனங்கள் இங்கேதான் வருது.அந்தந்த செல்லங்களின் படங்களோடு கூடிய மேசை ஸ்டேண்ட்.\nநாப்கின் சுருட்டிவச்சு அதில் அந்த இடத்துக்கு வரும் ஆட்களின் பெயரை பிங்க் ரிப்பன்லே, குட்டி இதயத்தோடு க்ளிப் செஞ்சு வச்சுருந்தாங்க. மேசையில் பிங்க் நிறப் பூக்கள் பிங்க் நிற வாளிவடிவத் தொட்டிகளில். இதய வடிவில் பிங்க் நிறத்தாளில் இருக்கும் சாக்லேட், இள ரோஜா நிற கப் கேக் ன்னு எல்லாத்திலும் சூப்பர் கவனம்.\nஒருத்தர் பை நிறைய டிஸ்போஸபிள் கேமெரா கொண்டுவந்து ஒவ்வொரு மேசைக்கும் ஒண்ணு கொடுத்துட்டுப் போனார். போட்டோகிராஃபர் ரெண்டுபேர் இருந்தாலும், மக்கள் பார்வையில் நிகழ்ச்சி எப்படி இருக்குன்னு நாம் எடுக்கற படங்கள் சொல்லிருமாம். கேமெராவை வச்சு, எதிரில் இருப்பவர்களை ஆளாளுக்கு கிளிக் செஞ்சுக்கிட்டு இருந்தோம்.\nசர்ச்சிலும் ஒரு வயசான( என்னைவிடவும்) வெ.பெண்மணி இதுபோல ஒரு கேமெரா வச்சுக்கிட்டு, 'ஐ வாஸ் டோல்ட் டு டேக் பிக்சர்ஸ் ஆஃப் ஹேப்பனிங்க்ஸ்' னு சொல்லிக்கிட்டு இருந்தது இதுக்குத்தானா) வெ.பெண்மணி இதுபோல ஒரு கேமெரா வச்சுக்கிட்டு, 'ஐ வாஸ் டோல்ட் டு டேக் பிக்சர்ஸ் ஆஃப் ஹேப்பனிங்க்ஸ்' னு சொல்லிக்கிட்டு இருந்தது இதுக்குத்தானா எனக்கு இப்பத்தான் புரியுது. அந்தம்மாதான் இந்தக் கல்யாணப்பொண்ணு உலகில் 'தலைகாட்டுனப்ப, முதல்முதலில் தாங்கிப்பிடிச்ச மருத்துவத்தாதி'யாம். ஆஸ்ட்ராலியாவில் இருந்து வந்துருக்காங்க.\nவிவரம் தெரிஞ்சதும் எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு. தோழிக்கு நண்பர்கள் வட்டம் பெருசு. அதை மதிக்கவும் தெரிஞ்சிருக்கு. நாமும்தான் எத்தனையோ பேரை வாழ்க்கையில் சந்திக்கறோம். எல்லாரோடும் தொடர்பை விடாம வச்சுக்கிட்டு இருக்கோமா\nசர்ச்சிலே ஒவ்வொரு இருக்கைவரிசையில் நடுப்பாதையை நோக்கும் பலகையில் க்ரீம் கலர் சாட்டின் ரிப்பனில் ரெவ்வெண்டு பிங்க் ரோஸ் வச்சது முதல், கல்யாணப்பெண்ணின் கையிலுள்ள பூச்செண்டுவரை தயாரிப்பு தோழியேதான்.\nமூணு கோர்ஸ் டின்னர். சிக்கன், லேம்ப்ன்னு இருந்துச்சு. நம் 'ராமனாதன் சொல்படி' (டாக்குட்டர் சொன்னாக் கேட்டுக்கணும்) சைவத்தைப் புறக்கணிக்க முடியுதா\nடரின்னு உள்ளே மரக்கறிகள் வச்சது நமக்கு.\nவிருந்து முடிஞ்சதும் நடனம் ஆரம்பமாச்சு. அன்னிக்குப் பகல் 12 மணியளவில்தான் கோபால் ஸ்பெயினில் இருந்து வந்தார். பயணக்களைப்பு.\nகண் இமைகள் அப்படியே ஒட்டிக்கிட்டு வருது. தள்ளாட்டம். இனிமேத் தாங்காதுன்னு கிளம்பிட்டோம். ( எனக்கு வேற அந்த வகை நடனம் ஆடத்தெரியாது. தவறிப்போய் அங்கே நின்னு பரதநாட்டியம் ஆடிட்டேன்னா\nவரவேற்பில் மணமகன் ஹெய்டனோட பேச்சு சூப்பர். டச்சிங் டச்சிங்.\nசுனிதாவோடு இருந்த எட்டு வருச நட்பை முடிச்சுக்கிட்டு மனைவியா ஆக்கிக்கிட்டேன்னு சொன்னார்:-)))))\nசம்பந்தி வீட்டுலே கேட்டுருக்காங்க, நாங்களும் கல்யாணச்செலவைப் பங்கு போட்டுக்கறோமுன்னு. பொழைக்கத்தெரியாத ஆளுங்கப்பா:-)))))\nஅதெல்லாம் வேணாம். எங்க பொண்ணு கல்யாணத்துக்கு நாங்களே நடத்திக்கொடுக்கறதுதான் முறைன்னு தோழி 'அடிச்சு'ச் சொல்லிட்டாங்க.\nபர்ஃபெக்ட் வெட்டிங் நடத்திய தோழியை, இனி வரும் கல்யாணங்களுக்கு வெட்டிங் ப்ளானரா ஆக்கிரணும். கைவசம் தொழில் இருக்கு. ஒன்னரை வருச உழைப்பு வீண்போகலை. உள்ளூர் நிலவரம் பார்த்தா.....இது ஒரு பிரமாண்டமான கல்யாணம்.\nமணமகனின் மாமியார் & கட்டுரை ஆசிரியர்:-)\nமணமக்கள் நீடூழி வாழ்ந்து அருமையான இல்லறம் என்ற நல்லறம் காண பதிவர்கள் சார்பில் அன்போடு வாழ்த்துகின்றோம்.\nகுணால் ன்னு ஒரு நடிகர் நினைவு இருக்கா அவர் தற்கொலை செஞ்சுக்கிட்டாராம். இன்னிக்குத் தினமலர்லே இருக்கு.\nகாரணம் எதுவா இருந்தாலும், அவர் விட்டுட்டுப்போன மனைவி மக்களுக்கு\nரெண்டாம்பேருக்குத் தெரியாமக் கொண்டாட ஆரம்பிச்சுப் பல வருசங்களாச்சு. முப்பது தாண்டுனவுடன் ஒரு அதிர்ச்சி வந்துருதுல்லே\nஇந்த முறை என்ன ஆச்சுன்னா......\nநாச்சியார் துளசிதளமுன்னு ஆரம்பிச்சு வைக்க, நம்ம கேயாரெஸ் சுவரொட்டி தயாரிச்சு ஒட்டி, நம்ம செந்தழல் ரவி வாழ்த்துகள் அறிவிப்பு சொல்ல, நம்ம நானானி திக்கெட்டும் முழங்கன்னு நாலாபக்கமும் சேதி பரவி,\nவலை நண்பர்களின் வாழ்த்துகளும் பின்னூட்டங்களா நிறைய வந்துருக்கு மேற்படிப் பதிவுகளில். இத்தனை அன்பு கிடைக்க நான் என்ன செய்தேன்னு தெரியலை.\nஎல்லோரையும் தனித்தனியா அன்போடு விசாரிக்கணும்ன்னு ஒரு மலைஉச்சிக்குப் போனேன். சுத்திமுத்தி 360 டிகிரி கண்ணுக்கெட்டிய தூரம்வரைப் பார்த்து டெலிபதியில் உங்களுக்கெல்லாம் நன்றி அறிவிப்பை அனுப்பி இருக்கேன்.\nடீச்சருக்குப் பிறந்தநாளுன்னு லீவெல்லாம் விடமுடியாது. உங்களுக்காக நகரின் சரித்திரத்தில் ஒரு பகுதி இங்கே.\nபோர்ட் ஹில்ஸ் (Port Hills)மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1500 அடி உயரத்தில் இருக்குது, மவுண்ட் கேவண்டிஷ் (Mount Cavendish ) சிகரம். இங்கேயிருந்து பார்த்தால் முழு நகரமும் உங்கள் கண்முன்னே.\nகிழக்குப்பக்கம் துறைமுகம், வடக்கே பசிபிக் கடலும் அதன் வளைந்துபோகும் கடற்கரையும், மேற்கே கிறைஸ்ட்சர்ச் மாநகரம், அதன் பின்புலமாக தெற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடர்களும் , தெற்கே போர்ட் ஹில்ஸ் மலத்தொடர்கள். பேங்க்ஸ் பெனின்சுலா, எல்லஸ்மியர் ஏரி என்று வானத்தின் அடிவரை\nதுறைமுகம் அமைந்துள்ளது , ஒரு காலத்தில் எரிமலையாக இருந்து, இப்போது அணைந்து, குளிர்ந்து போன அதன் க்ரேட்டர் பகுதி. கைக்கு அடக்கமாச் சின்னதா இருக்கு. துறைமுகத்தின் பெயர் லிட்டில்டன்.\nமேலே போக கோண்டோலா என்னும் ரோப்கார் வசதி இருக்கு. 945 மீட்டர் நீளமான இரும்புக்கயிறு. ஒரு பெட்டியில் நாலுபேர் வரை போக முடியும்.\n11 மில்லியன் டாலர்களும், ஏழு வருச உழைப்பும் செலவானதாம். 1992 முதல்\nபொதுமக்கள் பயனுக்கு வந்துருக்கு. ஆரம்பிச்ச காலத்தில் ஒரு முறை போனதோடு சரி. இப்ப உங்களுக்காக 15 வருசம் கழிச்சு நேத்துப்போய் வந்தோம்.\n( இது என் பங்கா இருக்கும் 14 ஆடுகளோ\nஅங்கேயுள்ள கட்டிடத்தில் டைம் டன்னல் என்று ஒரு ஆறு நிமிஷ வீடியோ காட்சி ஓடிக்கிட்டே இருக்கு. சுவர் முழுசும் டைனோசார்களின் பிரமாண்டமான படங்கள். அருமையான ஒரு உணவுவிடுதி இருக்கு. சாப்பாட்டின் தரம் 1 0 சதமானம், கண்முன் விரிந்து நிற்கும் காட்சிகளுக்கு 90 சதமானமுன்னு விலை நிர்ணயம்:-))))\nஎல்லா இடத்திலும் இருக்கறது போலவே நினைவுப்பொருட்கள் விற்கும் கடைன்னு ஜகஜ்ஜோதியா இருக்கு.\nகுழந்தைகளுக்கு விளையாட ஒரு பகுதி\nமேலே ஏறிவர நல்ல சாலைவசதியும் இருக்கு. பலசாலிகள் சைக்கிள் சவாரி செய்வாங்க போல\nஅதிவேகமான காற்று வீசும் சமயம் போக்குவரத்தை நிறுத்திருவாங்க. நல்லவேளையா நேத்து அருமையான காலநிலை. கோடையானதால் இரவு ஒன்பதரைவரை நல்ல வெளிச்சமாக இருந்துச்சு. எல்லாம் உங்க அன்புதான் காரணம்.\nவாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியோ நன்றி.\nதனிமடலிலும், நம்ம பதிவிலும் வாழ்த்தியவர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன்\nபிகு: ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசை இருந்தாலும், மு.சொ. என்று சொல் விழுந்திருமோன்ற பயம் ஆசையைத் தடுத்து நிறுத்தியிருக்கு. சரிசரி. கோண்டோலா குறிப்பு பரிட்சைக்கு வரும்.கவனமாப் படிச்சு வச்சுக்குங்க:-))))\nமகள் அளித்த யானை வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thamizmanam.com/tamil/blogger/Kannan", "date_download": "2019-06-26T14:13:05Z", "digest": "sha1:SE7BTRMDNYP2FEFCFBQQFCONTCILSMI2", "length": 3625, "nlines": 49, "source_domain": "thamizmanam.com", "title": "Kannan", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nநாட்குறிப்பு எழுதிப் பல நாட்கள் ஆகின்றன. அலுவலகத்தில் கட்டுப்பாடுகளுடன் செய்த ...\nசாருமதி, அழகிய உள்ளம் படைத்தவளே...\nKannan | இசை | மொழிபெயர்ப்பு\nஇவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ...\nKannan | கவிதை | மொழிபெயர்ப்பு\nநகுலன் வாலஸ் ஸ்டீவன்ஸைத் \"தன்னை பாதித்த கவிஞர்\" என்று குறிப்பிட்டிருக்கிறார் . ஸ்டீவன்ஸின் இந்தக் கவிதை எனக்குப் பிடித்தமானது. பதிமூன்று பகுதிகளைக் கொண்ட ...\n101 கனவுகள் - 6. இராமநாதம்\nKannan | இசை | கனவு | திகதிகளற்ற குறிப்புகள்\nMD இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50050-hanan-to-play-lead-role-in-singer-vijayalakshmi-s-biopic.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T13:46:22Z", "digest": "sha1:QRSQKICXL24CQHYXNNZ7KYOMWQZTETJX", "length": 11152, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’! | Hanan to play lead role in singer Vijayalakshmi's biopic", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nவைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கைக் கதையில் ’கேரள அரசின் மகள்’\nபார்வையற்ற பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் மீன் விற்று கல்லூரியில் படிக்கும் ஹனன் ஹமீது நடிக்கிறார்.\nபிருத்விராஜ் நடித்த ’ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானவர் வைக் கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான விஜயலட்சுமி இந்த பாடல் மூலம் பிரபலமானார். இதையடுத்து ’வீர சிவாஜி’ படத்தில் ’சொப்பன சுந்தரி நான் தானே’, ’என்னமோ ஏதோ’ படத்தில் ’புதிய உலகை புதிய உலகை’ உட்பட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளத்தில் தனது வித்தியாசமான குரல் மூலம் பிரபலமான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்றது. இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. இதை விஜயகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜயகுமாரியாக, ஹனன் நடிக்கிறார்.\nAlso Read -> ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹீரோயின்கள் போட்டி\nஇந்த ஹனன், கல்லூரி சென்றுவிட்டு மாலை நேரத்தில் மீன் விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றும் மாணவி. இவர் தொடர்பான கட்டுரை மாத்ருபூமி நாளிதமிழில் வெளியானது. இதையடுத்து இவருக்கு பாராட்டுகள் குவிந்தன. சில சினிமா இயக்குனர்கள் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் ஹனன் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று அவரை கடுமையாக சிலர் விமர்சித்தனர். இந்த விவகாரம் கேரள முதல்வர் வரை சென்றது. அவர், ஹனனை பாராட்டி ’ஹனன் கேரள அரசின் மகள்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து ஹனனை மோசமாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nAlso Read -> கேரளாவுக்கு நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி\nஇந்நிலையில் அவர், வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கை கதையில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி ஹனன் கூறும்போது, ‘அது உண்மைதான். இந்தப் படத்தில்எனக்கு சவாலான கேரக்டர். படம் பற்றி இப்போது எதுவும் என்னால் சொல்ல முடியாது’ என்றார்.\nஇந்தப் படத்துடன், ’அரை கள்ளன் முக்கால் கள்ளன்’, ’மிட்டாயி தெரிவு’, ’விரல் 2019’ ஆகிய படங்களிலும் ஹனன் நடிக்கிறார்.\nசெவிலியர் லினியை ஞாபகம் இருக்கா..\n9 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதடைகளை தாண்டி இன்று ரிலீஸ் ஆகிறது பிரதமர் மோடி திரைப்படம்\n“துரியோதனன் போல் மோடி ஆணவத்தில் இருக்கிறார்” - பிரியங்கா தாக்கு\nமே 24 -ல் ரிலீஸ் ஆகிறது, ’பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம்\nவிஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்\nபிரதமர் மோடி படத்துக்கான தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு\n'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை\nநரேந்திர மோடி சுய சரிதைப் படம் இன்று ரிலீஸ் இல்லை \nமோடி ‘பயோபிக்’ படம் வெளியாக எதிர்ப்பு - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெவிலியர் லினியை ஞாபகம் இருக்கா..\n9 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40076-allow-the-devotees-in-madurai-meenakshi-amman-temple.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T13:47:54Z", "digest": "sha1:IUR66Z6XFWGV2NYJEFUGWLIFGPTLTNAD", "length": 8571, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி | Allow the devotees in Madurai Meenakshi Amman Temple", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம் போல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் புத்தகம், அலங்கார பொருட்கள் கடை உட்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஉடனடியாக தல்லாக்குளம், பெரியார் நிலையங்களில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.தீ விபத்து நிகழ்ந்த வாசலை தவிர்த்து பிற வாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉழைப்பால் மட்டுமே சாதிகளை வென்றெடுக்க முடியும்: தலைமை நீதிபதி\nதண்ணீர் பஞ்சத்தால் கேன்சல் ஆன கிரிக்கெட் போட்டிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nதமிழகத்தின் அடுத்த டிஜிபி ஆக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nசுகாதாரத் துறையில் தமிழகம் பின்னடைவு.... காரணம் இதுதான்..\n“இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபள்ளியின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து : 3 மாணவர்கள் காயம்\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉழைப்பால் மட்டுமே சாதிகளை வென்றெடுக்க முடியும்: தலைமை நீதிபதி\nதண்ணீர் பஞ்சத்தால் கேன்சல் ஆன கிரிக்கெட் போட்டிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/37", "date_download": "2019-06-26T14:52:07Z", "digest": "sha1:VHQBTQ6P7P46ZYK3MBO3AVBOR4T7NBCZ", "length": 8733, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மாணவர்கள்", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇராணுவப் பள்ளி மாணவர்கள் 14 பேருக்கு தொடர் சிகிச்சை\nமெரினா கடலில் மூழ்கி காணாமல் போன மாணவர்கள்\nசுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாததைக் கண்டித்து பள்ளியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்\nநாயைத் தூக்கி எறிந்த விவகாரம்: மருத்துவ மாணவர்கள் ஜாமீனில் விடுவிப்பு\nகரூரில் பள்ளி மாணவிக்கு ஈவ் டீசிங்: கல்லூரி மாணவர்கள் கைது\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் 6 பேர் திடீர் தகுதி நீக்கம்\nஓடும் பேருந்தில் பாய்ந்த மின்சாரம்: 2 மாணவர்கள் பலி; பலர் காயம்\nமாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\n+2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nபேராசிரியர்களை மதிப்பிடும் மாணவர்கள்: மத்திய அரசின் புதிய திட்டம்\nபாகிஸ்தானில் ஆண், பெண் மாணவர்கள் பேச தடை\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள் தேவை: ராமதாஸ்\nதாவர எண்ணெயில் மின்சாரம்: திருச்சி பொறியியல் மாணவர்கள் கண்டுபிடிப்பு\nஎன்.ஐ.டி, ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு: 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு\nநகர, கிராமப் பள்ளிகளில் மாணவர்கள் பரிமாற்றம்: மத்திய அரசு திட்டம்\nஇராணுவப் பள்ளி மாணவர்கள் 14 பேருக்கு தொடர் சிகிச்சை\nமெரினா கடலில் மூழ்கி காணாமல் போன மாணவர்கள்\nசுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாததைக் கண்டித்து பள்ளியை அடித்து நொறுக்கிய மாணவர்கள்\nநாயைத் தூக்கி எறிந்த விவகாரம்: மருத்துவ மாணவர்கள் ஜாமீனில் விடுவிப்பு\nகரூரில் பள்ளி மாணவிக்கு ஈவ் டீசிங்: கல்லூரி மாணவர்கள் கைது\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்கள் 6 பேர் திடீர் தகுதி நீக்கம்\nஓடும் பேருந்தில் பாய்ந்த மின்சாரம்: 2 மாணவர்கள் பலி; பலர் காயம்\nமாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\n+2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nபேராசிரியர்களை மதிப்பிடும் மாணவர்கள்: மத்திய அரசின் புதிய திட்டம்\nபாகிஸ்தானில் ஆண், பெண் மாணவர்கள் பேச தடை\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள் தேவை: ராமதாஸ்\nதாவர எண்ணெயில் மின்சாரம்: திருச்சி பொறியியல் மாணவர்கள் கண்டுபிடிப்பு\nஎன்.ஐ.டி, ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு: 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு\nநகர, கிராமப் பள்ளிகளில் மாணவர்கள் பரிமாற்றம்: மத்திய அரசு திட்டம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://educationtn.com/2019/01/29/today-rasipalan-29-01-2019/", "date_download": "2019-06-26T14:03:59Z", "digest": "sha1:XRSHHK6A7U542XRXTAJHE76QGTFBWEYF", "length": 18697, "nlines": 361, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 29.01.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில்ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதி காரி வியப்பார். அமோகமான நாள்.\nமிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். அழகு,இளமைக் கூடும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.பழுதான மின்னணு சாதனங்களை மாற்று வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: பிற்பகல் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். மாலைப்பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். பிற்பகல் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன்நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப் படும் நாள்.\nதனுசு: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வேற்றுமதத்தவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nமகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில்மதிக்கப்படுவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். இனிமையான நாள்.\nமீனம்: பிற்பகல் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வியாபாரத்தில்பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.\nPrevious articleவேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு விரைவில் அமல்: அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nஇடைநிலை ஆசிரியர்கள் பணியேற்கவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள 102 Anganwadi Control Centers List.\nஇடைநிலை ஆசிரியர்கள் personal pay 2000 EL surrender யில் சேர்த்து வழங்கப்படுகிறது CM...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி:...\nபொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு\nபொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க உத்தரவு சென்னை : மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://news.lankasri.com/fashion/03/193505?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:04:54Z", "digest": "sha1:AK4Q2UUWXJNLDU34WA6EWUE7L4OT57JC", "length": 8380, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "முடி உதிர்வு பிரச்சனையே இனி இல்லை! இதை ட்ரை பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுடி உதிர்வு பிரச்சனையே இனி இல்லை\nமுடி உதிர்வு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனை, இதற்கான காரணிகள் பல இருப்பினும் அதிகமான முடி உதிர்வு இரும்புச்சத்து குறைவினால், மாசினாலும் ஏற்படுகின்றன. முடி உதிர்வை வீட்டிலிருந்தே சரி செய்ய சில டிப்ஸ்.\nதேங்காய் பாலை ஸ்கால்ப்பில் படுமாறு தேய்த்து ஒரு டவலால் கட்டவும். 20 நிமிடம் கழித்து தலையை அலசி, பிறகு வழக்கம் போல் உங்களின் விருப்பமான ஷாம்பூ உபயோகிக்கவும்.\nஇவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தேங்காய் பாலில் உள்ள விட்டமின் ஈ, முடி உதிர்வை குறைத்து, முடி வளர்வதை அதிகரிக்கும்.\nதலைக்கு குளித்த பிறகு, கற்றாழையின் ஜெல்லை தலையில் தடவி வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.\nஇந்த முறையை வாரத்திற்கு 3 முறை காலை வேளையில் செய்து வந்தால், முடி வளர்ச்சி அதிகமாகும்.\nஒரு கைப்பிடி வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் அதனை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்டை முடியின் வேரிலிருந்து நுனி வரை தடவி, 40 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் அலசவும்.\nஇந்த முறையை மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.\nநீரில் வேப்பிலைகளை போட்டு தண்ணீரின் அளவு பாதியாகும் வரை கொதிக்கவிடவும். இந்த கலவை ஆறிய பின், தலை முடியை இந்த நீரினால் அலசவும்.\nவாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகு தொல்லை குறைந்து முடி போஷாக்கு பெறும்.\nமேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://news.lankasri.com/othercountries/03/106927?ref=archive-feed", "date_download": "2019-06-26T14:51:18Z", "digest": "sha1:YGK5EWVAYCJZFLVDM3F63XJT5SDRKRDF", "length": 8214, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பெண் சூட்கேசிலிருந்த 11 வயது சிறுவன்: விசாரணையில் வெளிவந்த உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண் சூட்கேசிலிருந்த 11 வயது சிறுவன்: விசாரணையில் வெளிவந்த உண்மை\nபிரேசில் நாட்டில் பெண் ஒருவர் 11 வயது சிறுவனை தனது சூட்கேசில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட சம்பவம் பொலிசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n23 வயதான Natasha Vitoriano Souto என்ற பெண், தனது உடைமைகளுடன் ரியோ டி ஜெனிரோவில் இருந்து தெற்கு பிரேசிலில் உள்ள தன் வீட்டுக்கு பேருந்தில் பயணித்து சென்றுள்ளார்.\nபயணத்தின் போது Natasha Vitoriano Soutoவின் சூட்கேசிலிருந்து கை வெளியே தெரிந்துள்ளது, இதை கண்ட சக பயணிகள் பேருந்தை நிறுத்தியுள்ளனர்.\nபின்னர் பொலிசார் நடத்திய சோதனையில் அவரது சூட்கேசில் 11 வயது சிறுவன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது, இதை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇது குறித்து Natasha Vitoriano Souto கூறியதாவது, தனது தாய் போதைக்கு அடிமையாகி தன்னை அடித்து துன்புறுத்துவதாக சிறுவன் தன்னிடம் கூறி கதறியதாகவும், பின்னர் கருணையுடன் தன்னை தத்தெடுத்துக் கொள்ளும் படி சிறுவன் கெஞ்சியதாகவும் கூறியுள்ளார்.\nஇதனால் அவரை தெற்கு பிரேசிலில் உள்ள தனது வீட்டிறகு கொண்டு சென்று வளர்க்க முற்பட்டதாக Natasha Vitoriano கூறியுள்ளார்.\nபொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை Natasha Vitoriano Souto மீது எந்த வழக்கும் பதியவில்லை, ஆனால் அவர் சிறுவனை கடத்த முற்பட்டதாக நிரூபணமானால், அவருக்கு இரண்டு முதல் ஆறு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்ககூடும் என தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://nutpham.com/category/news/page/12/", "date_download": "2019-06-26T14:37:03Z", "digest": "sha1:V4TA2MQW2AUPW5TBUO7FWUN3ULC3TSLL", "length": 12054, "nlines": 68, "source_domain": "nutpham.com", "title": "News – Page 12 – Nutpham", "raw_content": "\nசியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, […]\nஅரசு சேவைகளை மொபைலில் இணைக்க புதிய செயலிகள் அறிமுகம்\nமத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது டி.என்.டி. 2.0 (DND 2.0) மற்றும் மைகால் (MyCall) செயலிகளை மத்திய அரசின் இ-சேவை தளமான உமாங் (UMANG) உடன் இணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் பல்வேறு அரசு சேவைகளை மிக எளிமையாக இயக்க முடியும். புதிய தலைமுறை […]\nஆகஸ்டு 21-இல் இந்தியா வரும் புதிய நோக்கியா போன்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஆகஸ்டு 21-ம் தேதி இந்தியாவில் புதிய சாதனத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் நோக்கியா 6.1 பிளஸ் (நோக்கியா எக்ஸ்6) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது […]\nஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா\nஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் […]\nவாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்\nஇந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து இருப்பதை போன்று, இதன் மூலம் ஏற்படும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து இருக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் நாம் கற்பனை செய்ய முடியாதவற்றை, பலர் பகிரங்கமாக செய்து நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தையும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்த காரணமாக உள்ளனர். இதற்கிடையே ஆன்லைன் உளவு நடவடிக்கை […]\nவிண்டோஸ் 10 கணினிகளில் தமிழ் 99 விர்ச்சுவல் கீபோர்டு அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 கணினிகளில் தமிழ்99 பிரபல தமிழ் மொழிக்கான விர்ச்சுவல் கீபோர்டினை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2018 விண்டோஸ் அப்டேட் மூலம் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதி வழக்கமான கீபோர்டுகளிலும், டச் கீபோர்டுகளிலும் சீராக வேலை செய்யும் என்பதால், மிக எளிமையாக தமிழில் […]\nஇனி வாட்ஸ்அப்பில் அடிக்கடி மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய முடியாது\nஃபேஸ்புக் நிறுவனம் வைத்திருக்கும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மென்பொருள் அப்டேட் ஐபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் பலருக்கும் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக[…]\nஜெ.பி.எல். ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிரறுவனத்தின் அங்கமான ஹார்மன் இன்டர்நேஷனல் இந்தியாவில் ஜெ.பி.எல். இன் புதிய ஆன்லைன் தளத்தை துவங்கியுள்ளது. இந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் அறிமுகம்[…]\nஎல்ஜி ஜி7+ தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி ஜி7+ தின்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. […]\nஇந்தியாவில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. ஹானர் பிளே என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் செய்ய சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பிளே மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 970 பிராசஸர், சிறப்பான டர்போ கிராஃபிக்ஸ் […]\nவிரைவில் இந்தியா வரும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர், கேலக்ஸி ஏ8 ஸ்டார்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இநிலையில் சாம்சங்கின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. அதன் படி கேலக்ஸி ஜெ2 கோர் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் ஒரே சமயத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]\nஃபேஸ்புக் டேட்டிங் சேவை துவக்கம்\nஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுப்படையான வெளியீட்டுக்கு முன் ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் டேட்டிங் சேவை முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://senthilvayal.com/2017/11/12/", "date_download": "2019-06-26T14:06:45Z", "digest": "sha1:VJ6DEZHH45TJJFYZCH3HN4EPUPOQ63DP", "length": 24066, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "12 | நவம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவளைந்த நகங்கள்… ஐஸ் சாப்பிடும் ஆசை…\nவீட்டுல எவ்வளவோ ஸ்நாக்ஸ் இருக்கு. ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு வெளியில போய் எதை எதையோ திங்கிறான், மண்ணைக்கூட திங்கிறான்’’, “என் மகன் ஸ்கூலுக்குப் போனா சாக்பீஸ், குச்சியையெல்லாம் திங்கிறான், எவ்வளவு அடிச்சாலும் கேட்க மாட்டேங்கிறான்’’ என்று புலம்பும் தாய்மார்கள் இங்கே அதிகம்.\n“மழைக்காலமா இருந்தாக்கூட பரவாயில்லை. சம்மர்லகூட உதடு வெடிக்குது. எந்த கிரீம் போட்டாலும் போக மாட்டேங்குது’’ – இப்படிப் புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.\nஇந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்ன\nகடலைமிட்டாய், கருவாடுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை – நவ.15 முதல் விலை குறையும் பொருட்கள்\nஜிஎஸ்டி 28% வரிவிதிப்பில் இருந்து 173 பொருட்களுக்கு விலக்கு- அதிரடி முடிவு- வீடியோ\nடெல்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கடலை மிட்டாய், கல்கண்டு, கருவாடு உள்ளிட்ட 10 பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஆடம்பர பொருட்கள் என்று கருதப்படும் 50 பொருட்கள் மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி விகிதத்திற்குள் கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.\nகுவஹாத்தியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி முதல் பல பொருட்களுக்கு விலை குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய சுமார் 50 பொருட்கள் அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன்படி, பான் மசாலா, காற்றடைக்கப்பட்ட நீர் மற்றும் பானங்கள், சுருட்டு மற்றும் சிகரெட்டுகள், புகையிலை பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.\nசிமெண்ட், பெயிண்ட், வாசனை பொருட்கள், ஏசி, டிஸ் சலவை எந்திரம், வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டிகள், வாக்யூம் கிளீனர்ஸ், கார்கள், இருசக்கர வாகனங்கள், விமானம் மற்றும் படகு உள்ளிட்ட 50 பொருட்கள் அதிகபட்ச வரி விதிப்பு பொருட்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இனி எல்லோருக்கும் சொந்த வீடு..\n7வது சம்பள கமிஷன் அமலாக்கப்பட்டு ஒரு வருடம் ஆனா நிலையில் இதன் பிரிந்துரைகள் ஒவ்வொன்றாகக் கணக்கில் எடுக்கப்பட்டு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலாக்கம் செய்து வருகிறது.\nஇதன் படி ரயில்வே துறை, வங்கி துறை என அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் சொந்தமாக வீடு வாங்கவோ அல்லது கட்டவோ குறைவான வட்டியில் அளிக்கப்படும் கடன் அளவை மத்திய அரசு 3 மடங்காக அதிகரித்துள்ளது.\nநரை முடி வர நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் தான் காரணம்\nநரைமுடி பிரச்சனை என்பது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான். நரை முடி வந்து விட்டாலே நமக்கு வயதாகி விட்டதோ.. என்ற கவலை மனதில் உண்டாகும். நீங்கள் இதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். முடி நரைத்தால் வயதாகி விட்டது என்று இல்லை.. உங்களது மனதை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ளுங்கள் அதுவே போதுமானது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nகொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nபிரிஞ்சி இலை – அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\nதொடங்கியது ராஜ்யசபா ரேஸ்’ – அ.தி.மு.க, தி.மு.க-வில் யாருக்கெல்லாம் பதவி\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/profile/nanumrowdytha?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-26T15:26:55Z", "digest": "sha1:7DZKVJH4ER5LK6AXF3SQVRBR3A4JJ7HB", "length": 3351, "nlines": 107, "source_domain": "sharechat.com", "title": "👉lovely🌷Friend👈 - Author on ShareChat - ஹேமாநந்தினி", "raw_content": "\nரம்ஜான் முபாரக் வாழ்த்துகள் ப்ரண்ஸ் #🌷 வாழ்த்து\ngood night #🌙இரவு வணக்கம்\n😍😍😘 #💞 காதல் கலாட்டா #💕 காதல் ஸ்டேட்டஸ்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu.com/2019/04/blog-post_54.html", "date_download": "2019-06-26T15:11:27Z", "digest": "sha1:PIUQ5M4JUDZJIEBGT5TC6YIYTFSUHG3I", "length": 7335, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "உலகில் அதிக இழப்பீடு கிடைத்த மணமுறிவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / உலகில் அதிக இழப்பீடு கிடைத்த மணமுறிவு\nஉலகில் அதிக இழப்பீடு கிடைத்த மணமுறிவு\nமுகிலினி April 05, 2019 உலகம்\nஉலகின் மாபெரும் கோடிஸ்வரரும் Amazon நிறுவனத்தின் தலைவருமான ஜெஃப் பெஸோஸ் தமது மனைவி மெக்கென்சியிடமிருந்து மணமுறிவை பெற்றுக்கொள்கிறார்.\nஅதற்கான ஒப்பந்தத் தொகையாகக் கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மெக்கென்சியிடம் கொடுக்கிறார் ஜெஃப்.\nஇதுவே மணமுறிவுக்காக உலகில் கொடுக்கப்படும் அதிகூடிய மணமுறிவு இழப்பீடாகும்.\nஅத்தோடு Amazon நிறுவனத்தின் பங்குகளில் 25 % பங்குகளும் மெக்கென்சிக்கு சொந்தமாகிறது.\nஎன்னதான் ஜெஃப் பெஸோஸ் மனைவியிடம் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்தாலும் அவரே இன்னமும் உலகின் பெரிய பணக்காரராக திகழ்கிறார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.tamilsin.net/world-cup-2019-cwc-2019-news-tamil-news-26may19-3/", "date_download": "2019-06-26T15:03:26Z", "digest": "sha1:ZYIEAZ475PA3UEEZUITWYEBUYY2KFC3Z", "length": 3640, "nlines": 41, "source_domain": "www.tamilsin.net", "title": "Sumanth C Raman Interview உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் படுதோல்வி! காரணம் என்ன? - Sumanth C Raman விளக்கம் | World Cup 2019 | CWC 2019 News", "raw_content": "\nSumanth C Raman Interview உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் படுதோல்வி காரணம் என்ன\nSumanth C Raman Interview உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் படுதோல்வி காரணம் என்ன\nSumanth C Raman Interview உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் படுதோல்வி காரணம் என்ன\nDhoni ICC விதியை மீறினாரா \nபிரியுமா திமுக - காங்கிரஸ் கூட்டணி \nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் மழை பெய்தால் என்ன…\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மோதும் அணிகள் | World…\nஉலகக்கோப்பை தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல் -…\nஉலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி சாதனை : 7-வது…\nகடுப்பான தனுஷ்.., காரணம் என்ன\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மோதும் அணிகள் |…\nNext Post:மோடி அமைச்சரவை – யாருக்கு வாய்ப்பு\nவிக்ரம் போட்ட வெடிகுண்டு | Valai Pechu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/garpha-kalam-ini-vasantha-kaalam", "date_download": "2019-06-26T14:18:14Z", "digest": "sha1:FNICYKUMRPGHJJORMCJ357XGGMUB3TAK", "length": 15987, "nlines": 267, "source_domain": "isha.sadhguru.org", "title": "கர்ப்பகாலம் இனி வசந்த காலம் | Isha Sadhguru", "raw_content": "\nகர்ப்பகாலம் இனி வசந்த காலம்\nகர்ப்பகாலம் இனி வசந்த காலம்\nகர்ப்பகாலத்தில் தவறாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றாலும், தவறாமல் உடற்பயிற்சி செய்தாலும், தாயாகத் தயாராகும் பெண்மணிக்கு இது மட்டுமே போதுமா\nகர்ப்பகாலத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது, என்ன சாப்பிடவேண்டும் என்ன சாப்பிடக்கூடாது, எப்படிப்பட்ட உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதையெல்லாம் எல்லா மருத்துவர்களும் சொல்வார்கள். கூகிளில் 'கர்ப்பகாலம்' என்று டைப் செய்து ஒரு கிளிக் செய்தாலேபோதும், எல்லா குறிப்புகளும் புள்ளி விவரங்களொடு உங்கள் கண்முன் வந்துவிடும். \"பிறகு தாயாகப்போகும் பெண்மணிகளுக்குத் தனியாக ஒரு வகுப்பெதற்கு அதில் அப்படி என்ன விசேஷம் அதில் அப்படி என்ன விசேஷம்\nஅறிவியலும் விஞ்ஞானமும் எவ்வளவோ வளர்ந்து கர்ப்பகாலத்தில் பலவிதங்களில் ஒரு பெண்ணிற்குத் துணை நின்றாலும், நவீன விஞ்ஞானம் கோட்டை விட்டிருக்கும் ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது, அதுதான் மெய்ஞானம். வெளிநிலையில் எவ்வளவுதான் செய்தாலும், உள்நிலையில் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் வரப்போகும் உயிரின் தன்மையையும், அந்த உயிரைக் கொண்டுவருவதில் தாயின் பெருமையையும் தீர்மானிக்கிறது.\nகர்ப்பகாலம் பற்றி சத்குரு சொன்னதிலிருந்து...\nஇது இனப்பெருக்கத்தைப் பற்றி மட்டும் அல்ல. ஒரு தாயாக இருந்தால், அடுத்த தலைமுறையை எப்படி உருவாக்கப்போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.\n\"இந்தியாவில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை எப்படி இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. எப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கவேண்டும் எப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கக்கூடாது, எதைப் படிக்கவேண்டும் எதைப் படிக்கக்கூடாது, எப்படிப்பட்ட வாசனைகளை நுகரவேண்டும் என்பது முதற்கொண்டு முழுவதும் கண்காணிக்கப்பட்டது. இது முற்றிலும் மறைந்து, கர்ப்பிணிப் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், சினிமா பார்க்கிறார்கள், மது அருந்தகத்திற்குப் போகிறார்கள், இப்படி இன்றையநிலை வேறுவிதமாக மாறிப் போயுள்ளது.\nஒரு பெண் கருத்தரித்தவுடன், அவளை மிகவும் இனிமையான உணர்வுகளுடன் வைத்துக்கொள்வதுதான் நோக்கம். ஒருக்கணம் கூட அவளுக்குள் கோபமோ, எரிச்சலோ, வருத்தமோ ஏற்பட்டுவிடாதவாறு பார்த்துக்கொண்டார்கள். அவள் விலைமதிப்பில்லா பொக்கிஷத்தைப்போல் பாதுகாக்கப்பட்டாள். அவள் கருவிற்குள் என்னென்ன பதிவாகின்றன என்பதில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவள் தனக்குள் எப்படிப்பட்ட பதிவுகளை எடுத்துக்கொள்கிறாளோ, அதேதான் பிறக்கப்போகும் கருவிற்குள்ளும் செல்கிறது.\nஅதுமட்டுமல்ல, கணவன் மனைவி இருவருக்கும் அவர்களைப் போலவே ஒரு உயிரை உருவாக்குவதில் விருப்பமில்லை. அவர்களை விடவும் பரிணாமவளர்ச்சியில் கொஞ்சம் மேலான உயிரை ஈர்க்க விரும்பினார்கள். உயிர் மிகச்சிறப்பான முறையில் நிகழ்வதற்காக, முதல் நாளிலிருந்தே, கூடிக் கருத்தரிப்பதிலிருந்து எல்லாவற்றையும், எல்லா நிலைகளிலும் அக்கறையுடன் பார்த்துக்கொண்டார்கள்.\"\n'ஈஷா தாய்மை' வகுப்பு கர்ப்பிணிப்பெண்களுக்காக பிரத்யேகமாக சத்குரு வழிகாட்டுதலுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு வகுப்பு. இவ்வகுப்பு கர்ப்பகாலத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி, ஆனந்தமான கர்ப்பகாலத்திற்கு உடல், மனம் மற்றும் உணர்வுகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதற்கும், குழந்தையை சிறப்பாக வளர்ப்பதற்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறது.\n\"ஈஷா கிரியாவைத் தொடர்ந்து செய்வதால் எனக்குள் அதிசயங்கள் நிகழத் துவங்கிவிட்டன. பெரியவர்கள் பல யோசனைகள் சொல்வார்கள், ஆனால் அதை ஏன் பின்பற்ற வேண்டும் என்று புரிந்ததே இல்லை. இந்த வகுப்புகள் எனக்குப் பெரிதும் உதவியுள்ளன. என்னுடைய பல கேள்விகளுக்கு இங்கே பதில் கிடைத்திருக்கிறது.\"\n\"ஒருமுறை சத்குரு ஆங்கிலத்தில் ஒரு தியானத்திற்குக் குறிப்புகள் கொடுத்துக்கொண்டிருந்தார், எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. ஆனால் நானே ஆச்சரியப்படும் விதமாக, அப்போது நடந்துகொண்டிருந்தது புலப்பட்டது. கண்மூடி உட்கார்ந்தபோது என் தாய்மையை உணர்ந்தேன். சத்குரு பேசிக்கொண்டிருந்தபோது என் குழந்தையின் அசைவுகளை என்னால் தெளிவாக உணர முடிந்தது.\"\nமேலும் விவரங்களுக்கு: ஈஷா தாய்மை\n6 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்\n6 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்\nநிலக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்\nடிவி பார்த்துக்கொண்டோ அல்லது கடற்கரையில் அமர்ந்து அரட்டை அடித்தபடியோ கொரிக்கப்படும் நிலக்கடலையை தினசரி உணவாக ஆக்க முடியுமா தினசரி கடலை சாப்பிட்டால் க…\nதன்னம்பிக்கையின் இளவரசன் - யுவராஜ் சிங்\nசென்ற வருடம் இதே ஜனவரி மாதத்தில் 'பாவம்ப்பா சின்ன பையன்', 'யுவராஜ் சிங் அவ்வளவுதான்... ஆட்டம் முடிஞ்சது' என ஊரெங்கும் பரிதாபப் பேச்சுக்கள். இன்றோ கு…\n'அரத்தை' பற்றி பாட்டி சொல்கிறாள் \nஅத்தி மற்றும் ஆவாரையைத் தொடர்ந்து அரத்தையைப் பற்றி சொல்ல வந்துவிட்டாள் உமையாள் பாட்டி. இக்கால இளைஞர்கள் பலரும் என்னவென்றே அறிந்திராத இந்த அரத்தையின் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/velan-kadugal-veettirkum-nattirkum-yen-avasiyam", "date_download": "2019-06-26T14:30:45Z", "digest": "sha1:MI7Y4VAN5QKXXZVZPUGTJAEJJ4M3IQFP", "length": 18615, "nlines": 262, "source_domain": "isha.sadhguru.org", "title": "வேளாண் காடுகள்... வீட்டிற்கும் நாட்டிற்கும் ஏன் அவசியம்! | Isha Sadhguru", "raw_content": "\nவேளாண் காடுகள்... வீட்டிற்கும் நாட்டிற்கும் ஏன் அவசியம்\nவேளாண் காடுகள்... வீட்டிற்கும் நாட்டிற்கும் ஏன் அவசியம்\nவிவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கிறார்கள். இந்நிலைக்கு ஒரு நல்ல தீர்வாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது.\nபுரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு நவராத்திரி திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் நாம் மழையையும் வேண்டியே தேவிக்கு பூஜை செய்வோம். புரட்டாசி மாதம் ஆன்மீக ரீதியான பலவித சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையின் துவக்கமாக அமைவது விவசாயிகளிடத்தில் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது.\nவிவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கிறார்கள். இந்நிலைக்கு ஒரு நல்ல தீர்வாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது.\n“புரட்டாசி நாலாம் சனியையும் தாண்டிருச்சு... என்னப்பா இன்னும் மழைக்கான அறிகுறியே இல்லயே” எனப் புலம்பிக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் விதத்தில், கடந்த வியாழக்கிழமையில் (அக்.13) தமிழகம் முழுக்க பரவலான மழையை உதிர்த்து சென்றது வான்மழை\n“என்ன இருந்தாலும் தொடர்ந்து மழை பெய்தா தானே விவசாயம் நல்லா நடக்கும். மழை நம்ம ஆசைகாட்டி மோசம் செஞ்சா என்ன செய்யுறது” என்ற நம்பிக்கையின்மையும் சிலருக்கு உண்டு. இன்று பல்வேறு காரணங்களால் பருவநிலை வெகுவாக மாற்றமடைந்துள்ளதோடு, அதன் காரணமாக பருவ மழையும் பல நேரங்களில் பொய்த்துப்போவதும் நிதர்சனம்தான். அல்லது ஒரிரு நாட்களிலேயே அதிக அளவிலான மழையளவு பதிவாகி, மண் அரிப்பு போன்ற விவசாயத்திற்கு எதிர்மறையான விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.\nவிவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கிறார்கள். இந்நிலைக்கு ஒரு நல்ல தீர்வாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது. மரங்களை வீட்டின் முன் நடுவது, கொல்லைப் புறங்களில் நடுவது சாலையோரங்களில் நடுவது என்று நம்மில் பலர் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டினாலும், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் மரங்களை அதிக அளவில் நடும்போது அது அவர்களின் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், மாறிவரும் பருவநிலைக்கு நல்லதொரு தீர்வாகவும் அமையும்.\nஅதிலும், வடகிழக்குப் பருவமழை துவங்கவிருக்கும் இவ்வேளையில் வேளாண்காடுகள் குறித்து விவசாயிகள் சிந்திப்பது மிகவும் அவசியமானதாக இருக்கும்.\nவேளாண்காடு வளர்ப்பு என்பது விவசாய பயிர்களோடு இணைந்து வேளாண் நிலங்களின் ஓரங்களிலோ அல்லது விவசாய நிலம் முழுவதிலுமோ மரங்களை நடும் திட்டம் ஆகும். மிகக் குறைவான இடுபொருட்கள் செலவு மற்றும் வறட்சியைத் தாங்கக் கூடிய, நிழல் அதிகம் விழாத மரங்களைத் தேர்வு செய்து நடுதல் போன்ற செயல்பாடுகளால் நல்ல லாபம் தரும் தொழிலாக வேளாண் காடு வளர்ப்பு மாறி வருகிறது.\nவேளாண்காடுகளை உருவாக்க உதவும் பசுமைக்கரங்கள்\nஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திலுள்ள வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிக்கிறார்கள்.\nமுதலில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற மரங்களை வழங்கும் பசுமைக்கரங்களின் தன்னார்வத்தொண்டர்கள், ஊடுபயிர் நடுவதிலும் தங்கள் ஆலோசனையை வழங்கி ஒத்துழைப்பு தருகின்றனர். லாபம் தரும் ஊடுபயிர்கள் என்னென்ன என்பதை கூறி வழிநடத்துவதோடு, சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கும் தங்கள் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.\nபெரிய பெரிய விவசாயக் குடும்பங்கள் பல, தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று விட்டு நகரத்திற்கு போய்விட்டதால் இன்று பல ஹெக்டேர் விளைநிலங்கள் சும்மா கிடக்கின்றன. 10 வருடங்கள் கழித்து வீடுகட்டலாம்; பிள்ளைகள் காலத்தில் அவர்களுக்கு உதவும்; சும்மா கிடக்கட்டும் பிறகாலத்தில் நல்ல விலைபோகும், இப்படி காரணங்களைச் சொல்லிக் கொண்டு உங்கள் நிலங்களை சும்மா போட்டிருப்பதற்குப் பதிலாக, அந்த 10 வருடத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான வருடத்திற்குள்ளோ கூட, பல லட்சங்களில் நீங்கள் வருமானம் பெற்று விடமுடியும்.\nவிவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்புள்ள, அதிக நிழல் விழாத மரங்களை நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கணிசமான வருவாயை ஈட்டித்தரும். 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 10 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். 10 வருடங்களில் ஒரு மரம் ரூ.5,000/- என்று மதிப்பு வைத்தால் கூட, ரூ. 4 லட்சம் வருவாயாக கிடைக்கும். அனைவரும் வரப்பு ஓரங்களில் மரங்கள் நட்டால் நமக்கு வருவாயும் நாட்டிற்கு பசுமைப்பரப்பும் அதிகரிக்கும்.\nஈஷா பசுமைக் கங்கள் திட்டம்\nதமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.7.00) வழங்கி வருகிறது.\nஉங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ.பே. 94425 90062\nஐ.டி. இளைஞரின் பசுமை தாகம் \nகைநிறைய சம்பளம், சொகுசான வாழ்க்கை, சனிக்கிழமை இரவு பார்ட்டிகள் என காலத்தைப் போக்காமல், இந்த ஐ.டி. இளைஞருக்கு மரங்களின் மேல் எப்படி வந்தது ஆர்வம். தொடர…\nபொட்டல் காட்டுக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை - ஒரு பண்ணை விசிட்\nஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்களத்தில், இயற்கை விவசாயி திரு.சோமசுந்தரம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கூடவே க…\nஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்... ஏன், எப்படி\nஎந்தப் பயிராக இருந்தாலும், இயற்கை அல்லது ரசாயன விவசாயமாக இருந்தாலும் பயிர்கள் உணவு தயாரிக்க, வளர, விளைச்சல் கொடுக்க 98.5 சதவிகிதம் சூரியஒளியும் காற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://nutpham.com/author/nutpham/page/3/", "date_download": "2019-06-26T14:01:21Z", "digest": "sha1:S5F4QHFZS5OILF6SKX64YERAMHBASYNW", "length": 12446, "nlines": 67, "source_domain": "nutpham.com", "title": "Staff – Page 3 – Nutpham", "raw_content": "\nஇன்னும் நான்கு வாரங்களில் இந்தியா வரும் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் இன்னும் நான்கு வாரங்களில் அறிமுகமாகும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். ரெட்மியின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் அறிமுகமானது முதல் இதன் […]\nபிளாக் செய்யப்பட்ட வலைதளங்களை இயக்குவது எப்படி\nஉலக நாடுகள் பெரும்பாலும் அதன் எல்லைக்குள் இண்டர்நெட் உலகம் சார்ந்த தரவுகளை தங்களது எல்லைக்குள் முடக்கும் வழக்கம் சமீப ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சில இடங்களில் நெட்வொர்க் அட்மின்களும் சில வலைதளங்களை பயன்படுத்த முடியாத அளவு முடக்கி வைக்கின்றனர், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் இது அதிகமாக […]\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 புதிய விவரங்கள்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் புதிய விவரங்களில் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. இம்முறை ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ப்ரோடெக்டர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் […]\nஃபேஸ்புக்கின் லிப்ரா க்ரிப்டோகரென்சி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது\nஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரென்சியை வெளியிடுவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வெறும் சமூக வலைதள பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச[…]\nஇந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டு – முன்னணி இடத்தில் ஒப்போ\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (Trust Research[…]\nஇனி ட்ரூகாலர் கொண்டு போன் பேசலாம்\nட்ரூகாலரில் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோடோகால் சேவை சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மொபைல் டேட்டா அல்லது வைபை நெட்வொர்க் மூலம் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதியை ட்ரூகாலர் அனைவருக்கும் வழங்குகிறது. வாய்ஸ் கால் சேவையை அதிகாரப்பூர்வமாக வழங்குவதாக ட்ரூகாலர் அறிவித்துள்ளது. இந்த சேவையை ட்ரூகாலர் வாய்ஸ் என […]\nஅந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வராதா\nசாம்சங் நிறுவன அதிகாரியின் சமீபத்திய பேட்டி அதன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. கொரியன் ஹெரால்டு பத்திரிகைக்கு பேட்டியளித்த சாம்சங் அதிகாரி ஒருவர், கேலக்ஸி ஃபோல்டு[…]\nஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி இந்த பெயரில் தான் வெளியாகும்\nஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சிக்கான அனுமதியை பெற அந்நிறுவனம் அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி லிப்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி […]\nமைக்ரோசாஃப்ட் புதிய அப்டேட்டில் தமிழ் உள்பட பத்து இந்திய மொழி வசதி அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் மே 2019 அப்டேட்டை கடந்த மாதம் வழங்கியது. இதில் லைட் தீம், கௌமோஜி சப்போர்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டன. இந்த அப்டேட்டின் மற்றொரு அங்கமாக ஸ்மார்ட் ஃபொனடிக் கீபோர்டுகளை மைக்ரோசாப்ட் பத்து இந்திய மொழிகளில் வழங்கி இருக்கிறது. இவை […]\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் நுபியா ரெட் மேஜிக் 3 இந்தியாவில் அறிமுகம்\nஇசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிராண்டு இந்தியாவில் ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் […]\nரூ.8,999 விலையில் விற்பனைக்கு வரும் 6 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன்\nஇன்ஃபினிக்ஸ் பிராண்டை வைத்திருக்கும் டிரான்சிஷன் ஹோல்டிங் நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.8,999 விலையில் விற்பனைக்கு செய்கிறது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி துவங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரே […]\nரூ.168 விலையில் சர்வதேச ரோமிங் வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\nபி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங் சேவைகளை ஆக்டிவேட் செய்ய விரும்பினாலோ அல்லது சர்வதேச ரோமிங்கின் வேலிடிட்டியை நீட்டிக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், பி.எஸ்.என்.எல். ரூ.168 சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்களும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/tag/QrZAx/fresh", "date_download": "2019-06-26T15:29:47Z", "digest": "sha1:BLYLWSJDMT4Z432UFZPEPAJ7PUDQ7EA7", "length": 4200, "nlines": 117, "source_domain": "sharechat.com", "title": "Download இதுவும் கடந்து போகும் அன்பு Whatsapp Status Tamil - ShareChat", "raw_content": "\n#இதுவும் கடந்து போகும் #இதுவும் கடந்து போகும்.\nஎனக்கு பிடித்ததை செய்வேன் 🌹😂🕺❤️💯\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதீர்க்கவே முடியாத அத்தனை *பிரச்சினைகளுக்கும்* *தீர்வைதேடி பிறரிடம்* செல்லும்முன், *தனிமையில்* சென்று *ஒருமுறையாவது தன்னிடம்* *மனம்விட்டு பேசிபாருங்கள்...\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/astrology/news/may-day-or-labor-day-is-a-public-holiday-in-many-countries-worldwide-it-usually-occurs-around-may-1-318558.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T13:59:28Z", "digest": "sha1:BFMT2RC6DUVQJF3DB3SDQ77LIFCCYVIX", "length": 27234, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "உழைப்பின் சிறப்பையும் சனைச்சரனின் பெருமைகளையும் போற்றும் மே தினம்! | may day or labor day is a public holiday in many countries worldwide it usually occurs around may 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n35 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n1 hr ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉழைப்பின் சிறப்பையும் சனைச்சரனின் பெருமைகளையும் போற்றும் மே தினம்\nசென்னை: மே மாதம் முதல்நாளான இன்று (செவ்வாய்க்கிழமை)தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், பல தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து கூறிய வண்ணம் இருக்கின்றனர். உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் உடல் உழைப்பை மூலதனமாகக்கொண்டு உலகை வாழ வைக்கும் உழைப்பாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் மே தின திருநாள் கொண்டாடப்படுகிறது.\nஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களில் எட்டாம் எண்ணை குறிக்கும் கிரகமாக சனி பகவான் திகழ்கிறார். பொதுவாக இந்த எட்டாம் எண் பெயரில் வந்தால் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகவே கருதப்படுகிறது. எட்டாம் எண்ணை கண்டால் கெட்டது சனி என்று பயப்படுகிறார்கள்\nதசாவதாரங்களில் ஸ்ரீ க்ருஷ்ணன் பிறந்த தினம் எட்டு. திருமாலின் திருநாமம் (ஓம் நமோ நாராயணாய) என்பது எட்டெழுத்து. செல்வத்தை குறிக்கும் லக்ஷமி அஷ்ட லக்ஷமிகளாக விளங்குகின்றனர். திக்குகள் எட்டு. அஷ்ட திக் பாலகர்கள் அஷ்ட வசுக்கள், சிவஸ்வரூபங்கள் எட்டு என இப்படி எட்டுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன.\nஆனால் அந்த எட்டிற்க்காக உலகெங்கும் பல போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி பெற்றதை கொண்டாடும் தினமாக அமைந்தது தான் இன்று கொண்டாடும் \"உழைப்பாளர் தினம்\" ஆகும்.\nஅது என்னங்க எட்டிற்கான போராட்டம் \"எட்டு மணி நேர வேலை - எட்டு மணி நேர ஓய்வு - எட்டு மணி நேர தூக்கம்\"\nஒருவருக்கு எட்டு மணி நேரம் தூக்கம் இல்லை என்றால் அவருக்கு பைத்தியமே பிடித்துவிடும். எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆக ஒருவரின் உழைப்பையும் ஓய்வையும் தீர்மானிப்பவர் உழைப்பின் நாயகனான. சனீஸ்வர பகவான் ஆவார்.\nசிறு தொழிலோ அல்லது பெருந்தொழிலோ உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ அனைத்து வேலைகளுக்கும் காரகர் சனைஸ்வர பகவான் ஆவார். எனவேதான் அவரை 'கர்மகாரகன்' என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. காலபுருஷ ராசியில் கர்ம காரகணாக விளங்கும் சனைச்சர பகவானே சகலவிதமான கர்மங்களுக்கும் காரகராகிறார். முக்கியமாக உலக இயக்கமே சனைச்சர பகவானின் அருளால்தான் நடைபெறுகிறது என்றால் மிகையாகாது. பொதுவாக கர்மாவை மூன்று விதமாக பிரிக்கலாம்:\nஒருவர் தனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்று குருவிடம் வேண்டினால் அவர் சனியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார். சனி தனது ஆதிக்க காலமான இரண்டரை ஆண்டு காலத்தில் அவரை எவ்வளவு கடினமான உழைப்பை கொடுக்கமுடியுமோ கொடுத்து விடுவார். உழைப்பின் மறுபக்கம் வெற்றிதானே. இரண்டரை ஆண்டு உழைப்புக்கு பிறகு குரு பகவான் அவருக்கு தேவையான வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தந்து புகழின் உச்சத்தை எட்ட வைத்துவிடுவார். ஆக கஷ்டப்பட்டு தேன் எடுக்கிறவன் (சனி) ஒருவன்; நோகாமல் புறங்கையை நக்கரவன் (குரு) மற்றொருவன். சனீஸ்வர பகவான் பேர் புகழுக்கெல்லாம் ஆசை படுவதில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் \"உழைப்பு, உழைப்பு, உழைப்பு\" என்பதுதான். உழைப்பவர்கள் எல்லாம் சனி ஆதிக்கம் நிறைந்தவர்கள். உழைப்பவர்களைதான் சனீஸ்வரபகவானுக்கும் பிடிக்கும்.\nகடின உழைப்பாளிகள் எல்லோரும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்றவை பாதிப்பதில்லை. சனி உழைப்பின் பிரியர் என்பதால் அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் உண்மை.\nஜோதிடத்தில் கடின உழைப்பாளிகள் யார்\n1. கால புருஷ ராசியான மேஷத்திற்க்கு சனீஸ்வர பகவான் கர்மஸ்தானாதிபதியாகிறார். எனவே மேஷ ராசி/லக்ன காரர்கள் பொதுவாகவே கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவர்.\n2. துலா லக்னத்தில் சனி உச்சம் பெறுவதால் துலா ராசி/லக்ன காரர்கள் எப்போதும் ஓடி ஓடி அடுத்தவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாகும் ராசிகாரர்கள் ஆவர்.\n3. மகர கும்ப ராசிகளுக்கு சனீஸ்வர பகவான் அதிபதி ஆவதால் மகர கும்ப ராசி லக்ன காரர்கள் கடும் உழைப்பாளிகள் ஆவார்கள்.\n4. ஒருவர் ஜாதகத்தில் 10ல் சனி நின்றுவிட்டால் அவர்கள் உழைப்பால் முன்னேறிய உத்தமர்களாக இருப்பார்கள்.\n5. ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் சனி நின்றுவிட்டால் அவர்கள் \"கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே\" என உழைக்கும் வர்கமாகும்.\n6. இந்த உலகத்தில் பேரும் புகழும் அடைந்த அத்தனை பேரின் ஜாதகத்திலும் சனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்.\n7. இயக்கம் என கூறினாலே அது சனீஸ்வர பகவானையே குறிக்கும். எனவே அண்டம் முதல் பிண்டம் வரை அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து பொருட்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பவர் சனீஸ்வர பகவான் ஆகும்.\n8. ஜாதகத்தில் எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் சனீஸ்வரரை தவிர எந்த கிரகம் நின்றாலும் அந்த கிரகமும் பாதிப்புக்குண்டாகி ஆயுளுக்கும் பிரச்சனை ஏற்படுத்திவிடுவர். ஆனால் சனீஸ்வர பகவான் எட்டில் நின்றால் ஆயுளை கூட்டுவதோடு காரகோ பாவநாஸ்தி எனும் தோஷத்திருந்தும் விதிவிலக்கு பெருகிறார்.\n9. சனீஸ்வர பகவான் கர்ம ஸ்தானாதிபதி என்றாலும் பாவாத்பாவத்தில் பத்துக்கு பத்தான ஏழாம் பாவத்தில் திக்பலம் பெருகிறார். சனீஸ்வரபகவான் அல்ப விஷயங்களை சுருக்கி அற்புத விஷயங்களை பெருக்குபவர் ஆவார். எனவே எட்டாம் வீட்டின் 12ம் வீடான ஏழாம் வீட்டின் காரகங்களை குறைத்தால் எட்டாம் வீட்டின் மூலமாக ஆயுள் கூடும். பத்தாம் வீட்டிற்க்கு ஏழாம் வீடான சுகஸ்தானத்தின் காரகங்களை குறைத்தால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். மொத்தத்தில் கேந்திர வீடுகளான 1-4-7-10ல் சனி நின்றுவிட்டால் அவர்களுக்கு திரிகோண வீடுகளான 1-5-9 சிறப்பாக அமைந்துவிடும்.\nஉழைப்பாளர்களின் வயிற்றில் அடிப்பவர்கள் எல்லாம் ஆரம்பத்தில் சந்தோஷமாக இருப்பது போல் தான் தோன்றும். ஆனால் அவர்கள் சனைச்சர பகவானின் சாபத்திற்க்கு ஆளாகி வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதே சத்தியம்.\nஅனைத்து விதமான உடல் உழைப்பு மற்றும் அதனால் ஏற்படும் வலிகளின் காரகர் செவ்வாய் மற்றும் சனைச்சரன் ஆகும். நமக்காக லேபர் வார்டு சென்று ப்ரசவ வலியை அனுபவித்த அன்னையரையும் இன்னாளில் போற்றுவது சிறப்பாகும். என்றோ ஒரு நாள் அன்னையர் தினமாக கொண்டாடுவதை விட உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவதே சிறப்பாகும்.\nஇப்ப சொல்லுங்க. சனீஸ்வரர் நல்லவரா இல்லை கெட்டவலா நல்லவருக்கு நல்லவர் என்பதுதான் உண்மை.\nஇந்த உழைப்பாளர் தினத்தில் உழைப்பின் நாயகனாகிய சனீஸ்வர பகவானை வணங்கி \"எட்டு\nமணிநேர வேலை- எட்டு மணிநேர ஓய்வு - எட்டு மணிநேர உறக்கம்\" என்ற ஆரோக்கிய வாழ்வை பெறுவோமாக\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் may day செய்திகள்\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nதிமுக ஆட்சியில் மட்டும் சபாநாயகர் நடுநிலையோடதான் இருந்தாரா.. பிரேமலதா பொளேர் கேள்வி\nபளிச் விஜயகாந்த்.. கட்சி கொடிக்கு ரெட் சல்யூட்.. வந்தோருக்கு ஆளுக்கு ஒரு தர்பூஸ்\nமே தினம்.. சிவப்பு சட்டையில் தூத்துக்குடியை கலக்கிய ஸ்டாலின்.. செஞ்சட்டை உணர்த்துவது என்ன\nமே 23 ஆம் தேதிக்கு பிறகு விடிவுகாலம் பிறக்கும்... மு.க.ஸ்டாலின் பேச்சு\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nBreaking News: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை\nஉழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக விஜயகாந்த் வாழ்த்து\nமே தினம்.... எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சிக்கோ\nதொழிலாளர் தினம்.. தமிழகம் முழுவதும் கொடியேற்றி கோலாகல கொண்டாட்டம்: வீடியோ\nதனித்தனியாக மே தின கூட்டம்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவா\nதொழிலாளர் நலனில் அக்கறை இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.. மே தின விழாவில் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmay day saturn உழைப்பாளர் தினம் மே தினம் தூக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/4-years-old-child-was-killed-one-his-parents-not-repaying-debt-344315.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T14:56:24Z", "digest": "sha1:D2KOXIEXYZZNTUYKKI35CS23THEVPNUG", "length": 15985, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியாகுமரியில் பயங்கரம்.. பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை | 4 years old child was killed by one for his parents not repaying debt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\n12 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n51 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னியாகுமரியில் பயங்கரம்.. பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெற்றோர் கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் அவர்களது 4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ். இவரது மனைவி சகாய சிந்துஜா. இவரது மகன் ரெய்னா (4). அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் வட்டிக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சிந்துஜா, அந்தோணிச்சாமியிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.\nஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம்\nஇதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. கடத்தி சென்ற 4 வயது சிறுவன் ரெய்னாவை தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரை குளம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தோணிசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி... பித்தளை குடத்தை கொடுத்து பணம் அபேஸ்\nஓமனில் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை\nபுளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்\n125 அடியில்.. செம உயரத்தில்.. புத்தம் புது தேசியக் கொடிக் கம்பம்.. குமரியில் அடிக்கல்\nகுமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. ஒருவர் பலி.. இருவர் மாயம்\nஎன்னைத் தாக்கிய மளிகை கடைக்காரர் போதையில் இருந்தார்.. அவர் ஒரு கிரிமினல்.. ஜெயமோகன் ஆவேசம்\nதோசை மாவு ஏன் இப்படி புளிக்குது திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்\nபள்ளி மாணவியை ஆறு மாதங்களாக சீரழித்து கர்ப்பமாக்கிய அக்காள் கணவன் - போக்சோவில் கைது\nகன்னியாகுமரியில் இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\nபொங்குகிறது குமரி கடல்.. விடிய விடிய மிரட்டிய மழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. பீதியில் மீனவர்கள்\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதன் எதிரொலி... தமிழகத்தில் பரவலாக மழை\nமின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடு ரோட்டில் பலியான மூதாட்டி.. நாகர்கோவிலில் பரபரப்பு சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanyakumari murder child கன்னியாகுமரி கொலை குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu.com/2019/03/panankattan-23.html", "date_download": "2019-06-26T15:16:19Z", "digest": "sha1:CI67ORONOKMICON4HVFJWKT4V5IKG5IA", "length": 25463, "nlines": 92, "source_domain": "www.pathivu.com", "title": "காலத்தை நீடிக்கிறது ஜெனிவா! காலத்தை இழுத்தடிக்கிறது இலங்கை! பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / காலத்தை நீடிக்கிறது ஜெனிவா காலத்தை இழுத்தடிக்கிறது இலங்கை\nஅகராதி March 23, 2019 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\nகுற்றம் புரிந்த அரசாங்கத்தின் உள்ளக நீதி விசாரணைக் கட்டமைப்பின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையான நீதி நிவாரணம் கிடைக்குமா என்ற சந்தேகமே 2015ஆம் ஆண்டு\nதீர்மானத்தில் கலப்பு நீதிப் பொறிமுறையை வலியுறுத்தியது என்பதைத் தெரிந்தும் இப்போது அதனை மறுத்துரைப்பது நீதி விசாரணைக்கு இலங்கையில் இடமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nஜெனிவாவில் இலங்கையர்களின் இவ்வருட மார்ச் மாதத் திருவிழா முடிவடைந்துவிட்டது.\nநம்பகத்தன்மையையும், பொறுப்புக்கூறலையும் தேவைக்கேற்ப வாலாயம் பண்ணும் உலகநாடுகள், ஜனநாயக விழுமியம் என்னும் பெயரில் வலி சுமக்கும் ஈழத்தமிழ் மக்களின் நெற்றியில் வழக்கம்போல பெரிய நாமம் போட்டு திருவிழாவை நிறைவு செய்துள்ளன.\nபோர்க்கால குற்றங்களை மறைக்கவும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்குத் திரையிடவும் தொடர்ந்து முயன்று வரும் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை எந்த நாட்டினதும் எதிர்ப்பின்றி ஏகமனதாக ஜெனிவா நிறைவேற்றியுள்ளது.\nஜெனிவாவின் நாற்பதாவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்ட இந்த முடிவு பிரேரணை மூலம் அதிகாரபூர்வமாக நிறைவு கண்டுள்ளது.\nஇலங்கையின் ஆறு தமிழ்க் கட்சிகள் எழுத்து மூலம் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாதெனக் கேட்க, தமிழ் மக்களின் தலைமை என்று தம்மை அழைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பூரண ஆசிர்வாதத்துடன் இரண்டு வருட கால நீடிப்பை இலங்கை பெற்றுள்ளது.\nஜெனிவா விவகாரத்தில் மைத்திரி அணி, மகிந்த அணி, ரணில் அணி என மூன்றும் முரண்பட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்க, இலங்கைக்கு அனுசரணையாக ஜெனிவாவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமுற்றுமுழுதாக கடைந்தெடுத்த பொய்யையும் புரட்டையும் ஜெனிவா அமர்வில் எடுத்துக்கூறியவர் ரணிலின் நம்பிக்கைக்குரிய குழுவுக்குத் தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன. ஐக்கிய தேசிய கட்சியில் எப்போதும் தேசியப் பட்டியல் வழியாக பின்கதவால் அமைச்சர் பதவியைப் பெற்று வருபவர் இவர்.\nபொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை அரசு அமுல்படுத்துவதில் மந்தகதியாக தொழிற்படுவதாக சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்சலற், ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை நேர்மையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.\nஅடிப்படைத் தீர்மானங்களில் ஒன்றான சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிப் பொறிமுறை கட்டாயம் என்பதையும் ஆணையாளர் சுட்டத்தவறவில்லை.\nஇதற்குப் பதிலளித்த திலக் மாரப்பன கலப்பு நீதிப் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென நேரடியாகத் தெரிவித்தார். இதற்கு இவர் எடுத்துக்கூறிய காரணம் அரசியல் பாதையில் சிறுபிள்ளைத்தனமானது.\nசர்வதேச நீதிபதிகளை ஏற்பதாயின் இலங்கையின் அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும், அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் வேண்டுமெனவும், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் இது வெற்றிபெற வேண்டுமெனவும் மாரப்பன தெரிவித்தது விசித்திரமான பொய்யுரை.\n2015இல் அமெரிக்க சமர்ப்பித்த ஜெனிவா பிரேரணையில் கலப்பு நீதி விசாரணைப் பொறிமுறை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பிரேரணையின் இணை அனுசரணையாளராக இலங்கை அரசு செயற்பட்டதை திலக் மாரப்பன மறந்திருக்க முடியாது.\nஅவ்வேளையில் மைத்திரி - ரணில் அரசின் சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சராக பதவி வகித்த இவர், அப்போது கலப்பு நீதிப் பொறிமுறை அரசியலமைப்புக்கு முரணானதென மறந்தும் வாய்திறக்கவில்லை. நான்காண்டு கடந்த பின்னர் இப்போதுதான் இது தெரிய வருகிறதா\nஅரசியலில் கால் வைப்பதற்கு முன்னர் அரசாங்க தரப்பு சட்டத்தரணியாகவும் பின்னர் சொலிஸிட்டர் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் ஆகிய பொறுப்பு வாய்ந்த நீதித்துறை உயர்பதவிகளை வகித்தவருமான மாரப்பன, இப்போது நேர்மையான நீதி விசாரணைக்கென தீர்மானிக்கப்பட்ட கலப்பு விசாரணை நீதிப்பொறிமுறையை, அதுவும் - காலநீடிப்புப் பெறும் வேளையில் மறுத்துரைப்பது இவரதும் இவர் சார்ந்த அரசினதும் நேர்மையின்மையை எடுத்துக்காட்டுகிறது.\nமகிந்த அரசாங்கத்தில் 2011ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சராகவும் திலக் மாரப்பன இருந்தது கவனிக்கப்பட வேண்டியது.\nகுற்றம் புரிந்த அரசாங்கத்தின் உள்ளக நீதி விசாரணைக் கட்டமைப்பின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையான நீதி நிவாரணம் கிடைக்குமா என்ற சந்தேகமே 2015ஆம் ஆண்டு தீர்மானத்தில் கலப்பு நீதிப் பொறிமுறையை வலியுறுத்தியது என்பதைத் தெரிந்தும் இப்போது அதனை மறுத்துரைப்பது நீதி விசாரணைக்கு இலங்கையில் இடமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nமனித உரிமைகள் ஆணையாளர் தமதுரையில் முக்கியமாகச் சுட்டிக்காட்டிய சில:\n- வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை தண்டனையிலிருந்து தப்ப வைப்பது சிறுபான்மை மக்களின் எதிர்கால பாதிப்புக்கு இடமளிப்பதாகும்.\n- போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களை புதிதாக உயர் பதவிக்கு நியமிப்பது பொருத்தமற்றது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை படைத்துறை பிரதானியாக நியமித்தது கவலை தருவது.\n- போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுள்ள விசாரணை அவசியம்.\n- இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன. ஐ.நா.வின் சித்திரவதைக்கெதிரான பிரகடனத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇவைகள் எதற்கும் பதிலளிக்காத அல்லது பதிலளிக்க முடியாத நிலையில் இலங்கைக் குழுவின் தலைவரான திலக் மாரப்பன அடுத்தடுத்து பல பொய்களை எடுத்துரைத்தார்.\n- காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. (காலவரையற்ற இழுத்தடிப்புக்கான ஓர் அலவலகம்)\n- இழப்பீடு வழங்கும் பணியகம் நிறுவப்பட்டுள்ளது. (ஜெனிவாவில் தெரிவிப்பதற்கென சில மாதங்களுக்கு முன்னர் அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்ட ஒரு பணியகம்)\n- உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையாளர் செயற்பாடு இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளது. (பெயரளவில் அமைச்சரவைக்கு சில வாரங்களுக்கு முன்னர் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது)\n- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளை துரிதமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (பத்தாண்டுகளுக்கு மேலாக சொல்லப்படும் கதை இது)\n- பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச முறையிலான புதிய சட்டத்தை உருவாக்கும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (மைத்திரி அரசு பல மாதங்களாக அறிவித்துவரும் ஒரு பம்மாத்து இது)\nசில ஊடகங்கள் சில செய்திகளை வெளியிடும்போது இறுதியில் எனத் தெரியவந்துள்ளது, என அறியவந்துள்ளது| என்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது வழக்கம். இதன் அர்த்தமானது இச்செய்தி உறுதி செய்யப்படாதது, நம்பகத்தன்மையற்றது என்பதாகும்.\nஅமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்த அனைத்தும் எந்தளவுக்கும் நம்பிக்கையற்றவை என்பதை அவரது வார்த்தைப் பிரயோகங்கள் தெரிவிக்கின்றன.\nமகிந்தவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் ஆணைக்குழு இப்போது பெயர் மாற்றப்பட்டு புதிய உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டு ஏதோ புதிதாக உருவாக்கப்பட்டது போன்ற தோற்றப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பழைய பானம் புதிய பாத்திரத்தில் என்பது மட்டுமே.\nமறுபுறத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் போராட்டம் ஆண்டுக்கணக்கில் நீண்டு செல்கிறது.\nஎல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு சொல்லாக ஷநடவடிக்கை எடுக்கப்படுகிறது| என்பது அமைந்துள்ளது.\nஇதனை நம்பியே மீண்டும் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் புதிய தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅடுத்த இரண்டாண்டுகளில், காலங்கள் குறிப்பிடப்பட்டு, காலவரையறையில் இத்தீர்மானத்தின் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.\n அடுத்த இரண்டாண்டுகள் இலங்கை அரசுக்குப் பொற்காலம். இக்காலத்தில் பல தேர்தல்கள் அங்கு நடைபெறும். கட்சிகள் கட்டில்களில் மாறி ஏறும். சில புது முகங்கள் அங்குமிங்கும் காட்சி தரும். ஜெனிவாத் தீர்மானமும் அவ்வப்போது புது வடிவங்கள் பெறும்.\nஇம்மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்படலாம். அவைகளை ஏற்க முடியாதென புதிய சிங்களத் தலைமைகள் நிச்சயம் சொல்லும்.\nதமிழர் தலைமை சிங்கள தேசத்துக்கு உடன்பாடுள்ளதாகத் தொடரும்வரை, ஜெனிவா என்பது தமிழருக்கு ஒரு தொடர்கதைதான்.\nகாலத்தை நீடிக்கிறது ஜெனிவா. காலத்தை இழுத்தடிக்கிறது இலங்கை.\nமுள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிறைவுக்காலம் முன்வாசலில் வந்து நிற்கிறது ஞாபகமிருக்கட்டும்\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_13.html", "date_download": "2019-06-26T14:01:30Z", "digest": "sha1:W4GYE4ZCUCKUZZ3IGZVAVWE2VVBZGK7T", "length": 9887, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து பிரித்தானியா அவதானம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து பிரித்தானியா அவதானம்\nஇலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து பிரித்தானியா அவதானம்\nஜெ.டிஷாந்த் (காவியா) June 06, 2019 இலங்கை\nஇலங்கையின் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு, இந்த வருடமும் உரிய அழுத்தத்தை தமது அரசு பிரயோகிக்குமென பிரித்தானியா தெரிவித்துள்ளது.\n2018 வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய செயலக மனித உரிமைகள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ஊடக சுதந்திரம், ஆண், பெண் சமத்துவம், சட்டத் திருத்தங்களை மேம்படுத்துவதற்கான உத்வேகமளிப்பது என்பன தொடர்பில் தாம் அழுத்தம் வழங்கவுள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.\nநல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகள் தாமதமாக நடைபெறுவதாகவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.virakesari.lk/article/57923", "date_download": "2019-06-26T14:27:01Z", "digest": "sha1:YLJNZVVWCJCF3IMCZ3EKWP7NNMJ6UDDR", "length": 17185, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "அச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை | Virakesari.lk", "raw_content": "\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nநீரில் மூழ்கிய தந்தையும் மகளும்: மனதை உருக்கும் சம்பவம்\nஇணையத்தில் வைரலான காகத்தின் விநோத காணொளி\nசஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகிளிநொச்சி கோர விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர்களை பயிரிட்ட மாணவி..\nஅச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை\nஅச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை\nஇலங்கையின் சுற்றுலாத்துறையை மீள்புதுப்பிக்கும் வகையில் எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற ஆடம்பரக் கப்பலின் வருகை அமைந்திருந்த்து.\nசுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உலகின் மிகவும் விசாலமான ஆடம்பர கப்பலான எம்.எஸ். யுரோப்பா -2 கடந்த புதன்கிழமை (05.06.2019) இலங்கைக்கு வருகை தந்திருந்தது.\nகடந்த புதன்கிழமை இலங்கைக்கு வருகைதந்த எம்.எஸ். யுரோப்பா - 2 கப்பலில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுமார் 900 பயணிகள் வருகை தந்திருந்தனர்.\nஇந்நிலையில் , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்ட நிலையில், அங்கிருந்து கடந்த 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதலுக்கு பின்னர் வருகை தந்துள்ள முதலாவது பயணிகள் கப்பலென்பதுடன் குறித்த கப்பலின் வருகையானது இலங்கையில் மீள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.\nஇலங்கையின் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற கப்பலுக்கு இலங்கை உல்லாசப்பயண ஊக்குவிப்பு சபையினரால் வரவேற்கப்பட்ட நிலையில் ஜேர்மன் உல்லாசப்பயணிகள் கலாசார நிகழ்வுகளைக் கண்டு கழித்தனர்.\nஇலங்கை வருகை தந்த ஜேர்மன் உல்லாசப்பயணிகள் கலபொட தேயிலை நிறுவனம் , அக்குரெஸ்ஸ பந்த தேசிய பூங்கா , கதிர்காமம் , எல்ல , சீகிரியா மற்றும் கண்டி உற்பட கொழும்பின் பிரபல வர்தக சந்தைக்கும் விஜயம் செய்தனர்.\nகப்பல் தரித்துநின்ற நாட்களில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து யால, பண்டாரகம, கொக்கல ஏரி ஆகியவற்றை பார்வையிட்டதுடன் கலபொட தேயிலை நிறுவனம் , அக்குரெஸ்ஸ பந்த தேசிய பூங்கா, கதிர்காமம், எல்ல, சீகிரியா மற்றும் கண்டி உட்பட கொழும்பின் பிரபல வர்தக சந்தைக்கும் விஜயம் செய்தனர்.\nஉலகிலேயே அதிக இடவசதி கொண்ட அதிசொகுசு உல்லாசப்பயணக்கப்பல் எம்.எஸ்.யுரோப்பா - 2 இலங்கைக்கு வந்துள்ளமை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது என்பதற்கு சான்று பகர்கின்றது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.\nஎம்.எஸ்.யுரோப்பா எனும் இந்த அதிசொகுசு உல்லாசக்கப்பலின் வருகை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கையில் இடம்பெற்ற அண்மைய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் வருகை தந்த முதலாவது வெளிநாட்டு உல்லாசப்பயணக்கப்பல் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.\nஅழகிய இலங்கை தீவிற்கு வருகை தர தீர்மானித்ததற்காக உல்லாசப்பயணிகள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.\nஉங்கள் வருகை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது என்பதற்கு சான்று பகர்கின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த உல்லாசப் பயணக்கப்பலுக்கு இலங்கையில் ஏட்கன் ஸ்பென்ஸ் தனியார் நிறுவனம் உபசரிப்பு முகவராகச் செயற்பட்டது. எம்.எஸ்.யுரோப்பா உல்லாசக் கப்பல் கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச்சென்றது.\nசுற்றுலாத்துறை கப்பல் தற்கொலைத் தாக்குதல் ms Europa cruise colombo harbour\nவிளையாட்டு மைதானத்தில் தகனக்கிரியைகளை நடத்தலாமா\nஹட்டன் நகரின் மத்தியில் அமைந்துள்ள டன்பார் விளையாட்டு மைதானத்திற்கு அப்பெயர் வரக்காரணம் அது டன்பார் தோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தமையாகும்.\n2019-06-26 15:03:32 விளையாட்டு மைதானத்தில் தகனக்கிரியைகளை நடத்தலாமா\nதேசிய அளவில் பரிணமித்த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டமும், அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு மோசமடைந்து செல்வதைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.\n2019-06-25 12:35:01 கல்முனை போராட்டம் இனம்\nமாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடையை வெளிப்படுத்தினார் சிவசக்தி ஆனந்தன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும்\n2019-06-25 10:52:40 மாற்று கூட்டணி அமைப்பது உள்ள பிரதான தடை\nஅதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்\nசர்வசன வாக்கெடுப்பின் போது படுமோசமான வன்முறைகளும், அச்சுறுத்தல்களும், மோசடிகளும் இடம்பெற்றன. ஆனால் ஜெயவர்தன கூடுதல் அதிகாரத்தை அபகரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் அவரைப் போலன்றி அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள் தங்களது அதிகாரங்களையும், சிறப்புரிமைகளையும் விஸ்தரித்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளில் பரிதாபகரமாகத் தோல்விகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019-06-24 17:18:49 சந்திரிகா மஹிந்த ராஜபக்ஷ மைத்திரபால சிறிசேன\nகடந்த வாரம் இரு தலைவர்கள் நமது அரசியல்வாதிகளைப் பற்றி படுகேவலமாகப் பேசியிருந்தார்கள். ஒருவர் நாட்டின் தலைவர். மற்றவர் வேடுவர் தலைவர்.\n2019-06-24 16:32:29 வேடுவர் தலைவர் அரசியல்வாதிகள் ஊழல்இ politicians\nதடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்\nகடுவலையில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nநால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் : மன்னிப்புச்சபை\nஈஸ்டர் தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி சந்தேகம்\nஇனவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் - பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://babynames.tamilgod.org/tamil-baby-names/baby-boy-gadhar", "date_download": "2019-06-26T14:00:34Z", "digest": "sha1:AGCGX33QIENT5CNXKHRYHKEA35GHBHPB", "length": 12580, "nlines": 312, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Gadhar Baby Boy. குழந்தை பெயர்கள் Baby names list - Tamil Baby Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 04\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 03\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 02\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள்\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9143:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-06-26T15:03:40Z", "digest": "sha1:SVMJKTOLDSDTS64TKCW5FNPQRGQIAI5A", "length": 44063, "nlines": 194, "source_domain": "nidur.info", "title": "சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்\nஒரு விசுவாசின் இறுதிமுடிவில் ,அவர் இறையச்சத்துக்கும் ஆதரவுக்கும் மத்தியில் இருப்பார். இதுதான் ஒரு விசுவாசின் நிலையாக இருக்கவேண்டும்.\nமறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சொர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை.\nசொர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு அதில் நுழைவதற்கான தகுதிகள், மட்டும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.\nஎனவே சொர்க்கம் பற்றிய குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் முக்கிய தகவல்களை சுருக்கமாக...\nசொர்க்கத்தில் நுழைய யார் தகுதி பெறுவார்கள் என்பதை குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு தகுதிகளை அது குறிப்பிடுகிறது. முதலாவதாக இணை வைப்பு இல்லாத, நல்லறங்களுடன் கூடிய இறைநம்பிக்கை கொண்டவரே சொர்க்கம் செல்ல தகுதியானவர் என்பதைப் பல வசனங்களில் இறைவன் அழுத்தமாகக் கூறியுள்ளான்.\nஅல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத ஏகத்துவவாதிகள் மட்டுமே சொர்க்கம் செல்லத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டாரோ அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நம்ப மறுத்து விட்டாரோ அவர் சொர்க்கம் செல்லும் தகுதியை இழந்து விடுகிறார்.\nகுர்ஆன் சொர்க்கவாசிகளைப் பற்றி பேசும் அநேக இடங்களில் நல்லறங்களைப் புரியும் முஃமின்களே சொர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது.\nஇணை கற்பிக்காதவரே குர்ஆன் கூறும் முஃமின்கள் பட்டியலில் இடம் பெறுவார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\n“நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன” என்று நற்செய்தி கூறுவீராகஅவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் “இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது” எனக் கூறுவார்கள்.ஹஇதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:25)\nநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம்.ஹஅவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம். (அல்குர்ஆன் 4:57)\nநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சொர்க்கவாசிகள்.அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை. (அல்குர்ஆன் 7:42)\nநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது.இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)\nநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக இன்பம்ஹநிறைந்த சொர்க்கச் சோலைகளில் அவர்களின் இறைவன் அவர்களைச் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (அல்குர்ஆன் 10:9)\nநல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள் உள்ளன. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி. (அல்குர்ஆன் 20:75,76)\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் “அய்யாமுத் தஷ்ரீக்’ நாட்களில் அனுப்பி, “இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்; “மினா’வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். (அறிவிப்பவர் கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 2100)\nநம்பிக்கை கொண்டால் மாத்திரம் போதாது. கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருப்பதும் மிக முக்கியமானதாகும்.\nஎங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும். (அல்குர்ஆன் 46:13,14)\nசில இடங்களில் சொர்க்கம் நுழைய அல்லாஹ்விடம் இறைஞ்சுதல், தர்மம் செய்தல் போன்ற தகுதியும் வேண்டும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.\nஅச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார். (அல்குர்ஆன் 32 16, 17)\nசொர்க்கம் செல்ல பொறுமை எனும் தகுதியும் மிக அவசியம். இதையும் சொர்க்கவாசிகளின் பண்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.\nநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.ஹஉழைத்தோரின் கூலி அழகானது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்.தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (அல்குர்ஆன் 29:58, 59)\nபின்வரும் செய்தியிலிருந்தும் பொறுமை சொர்க்கவாசிகளுக்குரிய தகுதி என்பதை அறியலாம்.\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்சாரிப் பெண்களிடம், “உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்) இறந்தும் அப்பெண் நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால், அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.\nஅப்போது அப்பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே இரு பிள்ளைகள் இறந்தாலுமா” என்று கேட்டார். “இரு பிள்ளைகள் இறந்தாலும்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடையளித்தார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 5129)\nஎந்தத் துன்பம் ஏற்பட்டாலும் இறைவனிடமே திரும்பும் குணம் சொர்க்கவாசிகளின் குணம் என அல்லாஹ் கூறுகிறான்.பிறகு எப்படி அதைக் குறிப்பிடாமல் இருக்க இயலும்\nநம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 11 23)\nமறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்ற இறை பயம் சொர்க்கம் செல்வோரின் முக்கியத் தகுதியாக அங்கம் வகிக்கின்றது.\nதமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன. (அல்குர்ஆன் 55:46)\nஉங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள் (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133)\n(இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். (அல்குர்ஆன் 15:45)\nஅல்லாஹ் ரசூலுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள், அவர்கள் பெற்றோராக இருப்பினும் அல்லாஹ் ரசூலுக்கே முன்னுரிமை வழங்குவார்கள் என்று அல்லாஹ் சொர்க்கவாசிகளை பற்றி தெரிவிக்கிறான்.\nஅல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர்.அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியேஅவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான்.ஹதனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.ஹஅவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்.அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்கஅவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான்.ஹதனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.ஹஅவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்.அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 58:22)\nதிருக்குர்ஆனின் மேலும் சில இடங்களில் அல்லாஹ் சொர்க்கவாசிகளின் பண்புகளை, சொர்க்கம் செல்ல தகுதியானவர்களை மிக விரிவாகவே விளக்குகிறான்.பல்வேறு குணங்களை குறிப்பிட்டு அவை யாவும் சொர்க்கம் செல்ல விரும்புவோரிடம் குடிகொண்டிருக்கும் என்பதாக அல்லாஹ் தெரிவிக்கிறான்.\n''அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள்.\nஇணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை இட்டவற்றை (உறவினரை) இணைத்துக் கொள்வார்கள்; தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்;\nஅவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள்.\nநாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள்.\nநன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள்.\nஅவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.\nஅவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள்.\nவானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள்.\nநீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்). (அல்குர்ஆன் 13: 20-24)\nஅல்முஃமினூன் எனும் 23வது அத்தியாயத்தின் துவக்கத்தில் முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லிவிட்டு அந்த வெற்றிக்கு வித்திட்ட குணங்கள் யாவை என்பதை அல்லாஹ் பட்டியலிட்டு கூறுகிறான். இவைகள் தான் முஃமின்களை வெற்றி பெறச் செய்து சொர்க்கம் நுழைய தகுதியாக்கியது என்று பின்வரும் வசனங்கள் சான்றளிக்கின்றன.\nநம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.\n(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23: 1-11)\nஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் சொர்க்கவாசிகளின் தகுதிகளை அதிகம் காண்கிறோம். நபிகள்ஹநாயகம் ஸல் அவர்களும் சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் பண்புகள் யாவை என்பதை விலாவரியாக விளக்கிக் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்தியில் சொர்க்கம் செல்லும் மூன்று நபர்களை பற்றி விளக்கி இம்மூன்று குணங்கள் முக்கியத் தகுதி என்பதை வலியுறுத்துகிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:\nமேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர்.ஒருவர், நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர்.இரண்டாமவர், உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர். மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும் (தவறான வழியில் பொருளீட்டிவிடாமல்) தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர். (அறிவிப்பவர் இயாள் பின் ஹிமார் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 5498) (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)\nஅல்லாஹ் ரசூலுக்குக் கட்டுப்படும்போதுதான் ஒருவன் உண்மை முஸ்லிமாக இருக்கிறான். சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் குணங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்படுதல் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.\nஇதை பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் வலியுறுத்துகின்றன.\nஅல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான். (அல்குர்ஆன் 48:17)\nஇவை அல்லாஹ்வின் வரம்புகள்.அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)\n(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள்.மக்கள், “அல்லாஹ்வின் தூதரேஏற்க மறுத்தவர் யார்” என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7280)\nஅல்லாஹ் மட்டுமே வணங்கப்படவும், துதிக்கப்படவும் பள்ளிவாசலை கட்டிட பொருளாதார உதவியை செய்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை பரிசாக அளிப்பதிலிருந்து சொர்க்கவாசிகளின் தகுதிகளில் இதுவும் அடங்கும் என்பதை புரியலாம்.\nஉஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (நபியவர்களின் காலத்திலிருந்த அமைப்பை மாற்றி விரிவுபடுத்திக்) கட்டத் திட்டமிட்டபோது அது குறித்து மக்கள் (ஆட்சேபனை) கூறினர். அப்போது உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (மக்களிடம்) “நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கி விட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல்கவ்லானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, புகாரி 450)\nசொரக்கம் செல்லும் தகுதி பெற்றவர் பள்ளிவாசலுடன் அதிகத் தொடர்பில் இருப்பார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: \"ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.\" (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 662)\nநோய்வாய்ப்பட்டவர்களை நலம் விசாரிப்பது சொர்க்கவாசிகளின் குணமாகும்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார். (அறிவிப்பவர் : ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 5017)\nஒரு அடியார் நல்லறங்கள் சங்கமிக்கும் சங்கமமாக இருப்பார் எனில் அவர் சொல்லும் தகுதியைச் சந்தேகமறப் பெறுகிறார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.\nஅபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொடர்புடைய நிகழ்வில் நபிகள் நாயகம் கூறிய இத்தகவலை பின்வரும் நிகழ்வில் அறிந்து கொள்கிறோம்.\n(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்” என்று கேட்டார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்” என்று கேட்டார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்” என்று கேட்டார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்” என்று கேட்டார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 1865)\nகடமையல்லாத நாமாக விரும்பித் தொழும் உபரியான தொழுகைகளும் சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும் ஓர் தகுதியாகும். இதைத் தெரிவிக்கும் சான்றுகள் கணக்கற்ற வகையில் இருந்தாலும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நிகழ்விலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\n(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “பிலாலே இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.\nஅதற்கு பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளு செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகை யை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 4854)\nசொர்க்கம் செல்பவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், எதையெல்லாம் சொர்க்கவாசிகளுக்குரிய தகுதிகளாக அல்லாஹ், ரசூல் குறிப்பிடுகிறார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அறிந்து கொண்டோம். இந்த அடிப்படையில் நன்மைகளைச் செய்து, நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்து அருள்புரிவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-26T14:07:03Z", "digest": "sha1:7JNNCZWH5LETB7FSZKOUQTRR4GMYLJ7C", "length": 12231, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "தினத்தந்தி அச்சு ஊடகத்தின் முன்னோடி |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nதினத்தந்தி அச்சு ஊடகத்தின் முன்னோடி\nபவள விழா கொண்டாடும் ‘தினத் தந்தி’க்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அச்சு ஊடகத்தின் முன்னோடி என அவர் புகழாரம் சூட்டி உள்ளார்.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், 1942-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மதுரையில் ‘தந்தி’ என்ற பெயரில் தொடங்கிய ‘தினத் தந்தி’ நாளிதழ், இன்று 17 பதிப்புகள் கண்டு, மாபெரும் வளர்ச்சி அடைந்து, 75 ஆண்டுகளை கடந்து தனது வெற்றிபயணத்தை தொடர்கிறது.\nஉலகமெங்கும் வாழ்கிற தமிழ்மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்ட ‘தினத்தந்தி’யின், பவள விழா, சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கலையரங்கத்தில் 6-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.\nஇந்தவிழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி, பவளவிழா மலரை வெளியிட்டு, விருதுகள் வழங்கி வாழ்த்திபேசுகிறார்.\nஇதையொட்டி ‘தினத்தந்தி’யின் இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துசெய்தி அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-\nதிரு எஸ்.பாலசுப்பிர மணியன் ஆதித்தன் அவர்களுக்கு,\nநாட்டின் முன்னணி தமிழ்நாளிதழ்களில் ஒன்றான ‘தினத்தந்தி’யின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில், நான் தலைமைவிருந்தினராக பங்கேற்க விடுத்துள்ள உங்களின் அழைப்பு கிடைத்தது. அதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.\nஉங்களது செய்தித்தாள், பல்லாண்டு கால கடின உழைப்பாலும், சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் குரல்களை முன்னுக்கு கொண்டுவருவதில் காட்டிய விடாமுயற்சியாலும் கட்டமைக்கப் பட்டுள்ளது.\nஜனநாயகத்தின் 4-வது தூணாக ஊடகம் விளங்குகிறது. ஜனநாயகத்தில் ஊடகத்துக்கு மிகமுக்கிய பங்களிப்பு உண்டு. செய்திகளை சேகரித்து அளிப்பதின் மூலம், சமுதாயமாற்றத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பினை ஊடகம், தனதுதோள்களில் சுமக்கிறது.\n4-வது தூணின் அங்கம் என்ற வகையில், நமதுசமூகத்தின் எண்ணற்ற பிரச்சினைகள் குறித்து உங்களின் ஊடகம், விழிப் புணர்வை ஏற்படுத்தி உள்ளது.புதிய இந்தியாவை காண வேண்டும் என்ற நமது ஒன்றுபட்ட பார்வை நிறைவேறுவதற்கு, உங்களின் இந்ததொடர் முயற்சிகள் உதவி, பங்களிப்புசெய்யும் என்று நான் நம்புகிறேன்.\nஅச்சு ஊடகத்தின் முன்னோடியாக இருந்து பங்களிப்பு செய்துவருவதற்காக ‘தினத்தந்தி’ குழுவுக்கு எனது பாராட்டுகள்.\nபத்திரிகை துறையில் உங்கள் புகழ்மிக்செய்தித்தாள், இன்னும் பல்லாண்டு கலம் சீரியபணியாற்றி சாதனைகள் பல படைத்திட நான் வாழ்த்துகிறேன். இனி வருங் காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைவதற்கு எனது வாழ்த்துகள்.\nஇவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nஇந்திய நாட்டை உலகின் முதன்மை நாடாக உயர்த்திய…\nஅமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி…\n‘ஜோக்’ அடித்தால் திரித்துக் கூறி குழப்பத்தை…\nஎனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும்\n‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டையொட்டி உயர் பாதுகாப்பு…\nதினத் தந்தி, நரேந்திர மோடி\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோட� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்த� ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nமோடிஜியின் .. அசத்தும் பென்சன் திட்டங்க ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thulasidhalam.blogspot.com/2012/09/", "date_download": "2019-06-26T14:43:50Z", "digest": "sha1:ORSGEIY6QH5CYAV2DTL3ECA6EULWPL7N", "length": 27865, "nlines": 269, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: September 2012", "raw_content": "\n) குளிர்காலத்தில் செய்த பரிசோதனைகளும் முடிவுகளும் என்னன்னு பார்க்கலாமா\nதோட்டம்தான் பாடாய்ப் படுத்திருது. நம்ம ஊர்வேற பெண்களூருக்கு தங்கை என்ற உறவுமுறையில் இருப்பதால் தோட்டநகரம் என்ற பெயரைக் காப்பாத்த வீட்டுவீட்டுக்குக் கொஞ்சமாவது தோட்டப் பராமரிப்பு தேவைப்படுதே\nமுதலில் நம்ம தாமரைக்குளம். குளிர் காலம் வரும்போது டிவியில் வரும் வெதர் ரிப்போர்ட் பார்த்துட்டு ( இங்கே இதை 99% நம்பலாம்) பத்து டிகிரிக்குக் கீழே என்றால் ஒரு தெர்மாக்கோல் பலகை() போட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு மூடி வைக்கணும். காத்தில் பறந்து போகாமல் இருக்க நாலு மூலையிலும் ரொம்பகனமான ஒரு செங்கல்.(நைட் ஸ்டோரேஜ் யூனிட்டில் இருந்து எடுத்தது) வைக்கணும். காலையில் மறக்காமல் இதை அகற்றிடணும். திரும்ப மாலையில் இதுபோல......\nதண்ணீர் உறையும் குளிர்காலம் வந்துட்டால் புழக்கடைப்பக்கம் போகவே படு சோம்பல். ஆனாலும் தாமரையைக் காப்பாத்த அஞ்சு வருசமாப் படாத பாடு பட்டுட்டு, வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இந்தியா வந்தப்பக், குடித்தனக்காரர்கள் நமக்கு இனி தோட்ட வேலையே வேணாமுன்னு சுத்தமா எல்லாத்தையும் சாகடிச்சுட்டுப் போயிருந்தாங்க.\nஎதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்குச்சு. வாட்டர்கார்டன் கடையில் சொல்லி வச்சு திரும்பத் தாமரைக்கிழங்கு வாங்கி சேவைகள் செய்து அதுலே மொட்டு வந்து மலர்ந்ததும்தான் மஹாலக்ஷ்மி வந்துட்டாடான்னு நிம்மதி.\nஇந்த வருசக்குளிர் ஆரம்பிக்குமுன் பரிசோதனையா இருக்கட்டுமுன்னு ரெண்டு செடிகளையும் பக்கெட்களுக்கு இடம் மாற்றி கன்ஸர்வேட்டரியில் வச்சேன். மூணு மாசம் கப்சுன்னு இருந்தவை ஆகஸ்ட் கடைசியில் புது இலைகளை வெளியே கொண்டுவந்து காமிச்சது.\nஎங்கூரில் செப்டம்பர் ஒன்று முதல் வசந்தம் என்பதால் (நம்பிக்கைதான் வாழ்க்கை) தாமரைகளை குளத்திற்கு மாத்துனேன். குட்டியா மூணு மொட்டுகள் அடிப்பாகத்துலே தலை நீட்டுது:-)\n) காக்டெஸ் கன்ஸர்வேட்டரியில் (ரெண்டு கன்ஸர்வேட்டரி இருப்பதால் வேறு படுத்திக்காட்ட இப்படி ஒரு அடையாளப்பெயர் கேட்டோ\nகுளிர்கால இடமாற்றமுன்னு வச்சதால் அவை இரண்டும் தப்பிச்சது மட்டுமில்லாமல் காகிதப்பூ பூக்கத்தொடங்கி குளிர்காலமுழுசும் கலர் காமிச்சுக்கிட்டே இருந்துச்சு. கொய்யாவும் ஏற்கெனவே இருந்த பிஞ்சுகளையெல்லாம் கொட்டித் தீர்க்காம நிதானமா தினம் ஒன்னு என்று மூத்துப் பழுத்த பழத்தை சப்ளை செஞ்சது. ( தினம் ஃப்ரெஷ் ஃப்ரூட் சாப்பிடணுமுன்னு டாக்குட்டர் சொல்றாங்க)\nபாலியந்தஸ் என்று சொல்லப்படும் ப்ரிம்ரோஸ் செடிகள் வெளியில் தோட்டத்தில் போன சம்மருக்கு நட்டவைகள் குளிர் ஃப்ராஸ்ட் எல்லாத்தையும்தாக்குப்பிடிச்சு நின்னது இதுவரை நான் கவனிக்காத ஒரு விஷயம். குளிர்கால டிப்ரெஷனைப் போக்கவும் கலர் பார்க்கவும்() சில செடிகளை வாங்கியாந்து கன்ஸர்வேட்டரியில் வச்சுருந்தேன்.\nமருக்கொழுந்துச்செடி ( இங்கே இதுக்கு மார்ஜோரம் என்னும் பெயர்) கொஞ்சம் காய்ஞ்சமாதிரி இருந்தாலும் தப்பிப் பிழைச்சுருச்சு. லாவண்டரும் அப்படியே\nநம்ம வீட்டுலே ஒரு ஆறுமாசமா புதுவரவு வெத்திலைச்செடி எட்டு இலை வந்தாச்சு. இனி வெத்தலைபாக்கு வச்சு(ம்) அழைக்கலாம்.\nஇம்பேஷின்ஸ் என்று ஒரு வகைச்செடி. இதுவும் பெயர் தெரியாத இன்னொரு செடியும் கன்ஸர்வேட்டரியிலே வச்சுருந்ததால் இன்னும் உயிரோடும் மலரோடும் இருக்கு:-)\nஏதோ மீலி பக்ஸ் பீடிக்கும் நோய் வந்து சாகத்தெரிஞ்ச வாழையை மனசைக் கல்லாக்கிக்கிட்டு இலைகளைத் தரிச்சதால் ப்ளேகேர்ள் மாதிரி நின்னது இப்போ இன்னும் நாலு இலைகளோடு\nகாஃபிச் செடியும் இதே மீலிபக்கால் மண்டையைப்போட்டதால் சொந்தக்காஃபிக்கொட்டையில் காஃபி குடிக்கும் அதிர்ஷ்டம் கைநழுவிப்போயிருச்சு:( மொட்டை அடிச்சு வச்சுருக்கேன். வேரிலும் தண்டிலும் உயிர் உள்ள அடையாளம் தெரியுது. பார்க்கலாம்.\nகருவேப்பிலையும் நோயில் அடிபட்டு மீண்டு வந்துருக்கு.(டச் வுட்)\nஏர்லி சியர்ஸ் என்று பெயர் உள்ள ஒரு வசந்தகாலப்பூக்கள் பல்பு நட்டதால் முளைச்சுவந்து மலர்களோடு நிக்குது. டாஃபோடில் குடும்பமுன்னு சொல்லிக்கலாம். ஒரு கொத்தில் நாலைஞ்சு வெள்ளைப்பூக்கள். பார்க்க நம்மூர் குண்டு மல்லிபோல இருக்கு. நல்ல மனசை மயக்கும் நல்ல நறுமணம்.\nஹையஸிந்த Hyacinths மலர்கள் தானாகவே பூக்கத்தொடங்கியாச்சு. அஞ்சாறு வருசமாக் கடமை தவறாமல் செயல்படும் வகை\nஎல்லோரும் அவரவர் கடமையை மறக்கூடாதுன்னு செடிகள் நமக்குக் கற்பிக்கின்றனவே கடமை கடமைன்னதும் இன்னொரு முக்கிய விஷயம் நினைவுக்கு வருது. நமக்கு எழுத்து மட்டுமா கடமை கடமை கடமைன்னதும் இன்னொரு முக்கிய விஷயம் நினைவுக்கு வருது. நமக்கு எழுத்து மட்டுமா கடமை\nசனிக்கிழமை பயணம் போகணும். சிங்காரச்சென்னை அழைத்துவிட்டது. துளசிதளம் மாணவக் கண்மணிகளுக்கு லீவு விட்டாச்சு. இனி அடுத்த மாசம்தான் வகுப்புக்கு வரணும்,கேட்டோ\nஆங்............... டீச்சர்ஸ் டே வேற இன்னிக்கு. யாருக்காவது நினைவிருக்கோ அனுபவப்பாடம் சொல்லித்தரும் இயற்கையை விட மேலான ஆசிரியர்கள் உண்டோ\nஅகில உலக ஆசிரியர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.\nLabels: அனுபவம், வீட்டுத் தோட்டம்\nநோகாமல் வடை 'சுடுவது' எப்படி\nஎன் சொல்பேச்சு கேக்காத பலகாரங்களில் எப்பவும் முன்னுக்கு வந்து நிற்பது இந்த வடைதாங்க. அதிலும் உளுந்துவடைதான் சரியான தகராறு பிடிச்சது.\nநமக்கு ஃபேவரிட் சமாச்சாரம் மசால்வடைதான். போன ஜென்மத்தில் எலியாக இருந்ததன் விளைவு. அதுக்காக மத்த வடைகளைப் புறம் தள்ளக் கூடுமா\nஉளுந்தை ஊறப்போட்டு எவ்வளவுதான் பக்குவமா அரைச்சாலும் சுடும்போது அது போண்டா சரி...பதிவர் சந்திப்புக்கு ஆச்சுன்னு வச்சுக்கலாம்தான். ஆனால் சக பதிவருக்கு எங்கே போறது\nநேயடுவுக்கு வடை மாலை போடணுமுன்னா கடைசியில் அது போண்டா மாலையாத்தான் முடியும் அவர் கொடுத்து வச்சது அவ்ளோதான். அதுக்கு யார் என்ன செய்ய முடியும், சொல்லுங்க\nவடைவரலைன்னு புலம்புனதைக்கேட்ட தோழி (இலங்கைத்தமிழர்) ஓசைப்படாம ஒரு நாள் வடைமாலை கொண்டுவந்து நம்ம அனுமனுக்குப் போட்டார். வடிவம் அளவு, நடுவில் உள்ள ஓட்டை எல்லாம் சரியாவே இருந்துச்சு. ஆனால் இது வடைமாலைக்கான (அப்ரூவ்டு )வடை அல்ல. ருசி அருமை. இதுக்குத்தான் நேயடு வீட்டில் இருக்கணும். அவர்தயவில் நமக்கு வடை கிடைச்சுருது பாருங்க;-)\nதோழியும் வடை ரகசியங்கள் பலதையும் சொல்லிக் கொடுத்தாங்க. மாவு அரைச்சு அதை ஃப்ரிஜ்ஜுலே ஒரு மணி நேரம் போல வச்சுட்டா கெட்டிப்பட்டுரும். வடை தட்ட எளிது.\nஇன்னொரு சமையல் குறிப்பில் இருந்துச்சு, அரைமணி நேரம் மட்டுமே உளுந்தை ஊறவைக்கணும். இப்படி வடைக்குறிப்பை எங்கே பார்த்தாலும் ஆவலோடு படிச்சுருவேன். அப்படியாவது வடைகலை கைக்கு வருதான்னு.\nஒரு சமயம் இங்கே புதுசா ஒரு இண்டியன் கடையில்( வந்து ரெண்டரை வருசமாச்சுதாம். ஆனால் அப்போ நான் நாட்டில் இல்லை) ஃப்ரீஸர் செக்ஷனில் காய்களைத் தேடும்போது பளிச்ன்னு கண்ணில் ஆப்ட்டது ரெடி டு ஈட் உளுந்துவடை. ஆஹா...... இப்படியெல்லாம் வர ஆரம்பிச்சுருச்சா என்ன\nஅந்தப்பகுதியை நிதானமா ஆராய்ஞ்சதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் எனக்காகவே இருக்கு பருப்பு வடை, உளுந்துவடைன்னு வடைகளில் ரெண்டு பிரிவு. கேரளாவில் இருந்து வரும் ஐட்டம்ஸ். சாம்பிள் பார்க்க ரெண்டும் வாங்கியாந்தேன்.\nஉளுந்துவடையுடன் தேங்காய்ச் சட்டினி. பேஷ் பேஷ் பேக்கெட்டில் ஆறு வடைகள். ஒவ்வொன்னும் குண்டு குண்டாய் பெரூசு பேக்கெட்டில் ஆறு வடைகள். ஒவ்வொன்னும் குண்டு குண்டாய் பெரூசு உறைஞ்சு போய் கிடக்கு. ஒரு மணி நேரம் வெளியில் எடுத்துவச்சு ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்ததும் கொஞ்சம் எண்ணெயில் இன்னொருக்கா ஒரு ரெண்டு நிமிசம் பொரிச்செடுக்கணும். லேசா ஒரு கரகரப்போட வரும். இல்லைன்னா மைக்ரோவேவில் சூடாக்கலாம். க்றிஸ்ப்பா இருக்காது. வடிவம் எல்லாம் பொதிக்குள்ளே அமுங்கி கொஞ்சம் இப்படி அப்படின்னுதான் இருக்கு. ஆனால் ருசி ஓகே உறைஞ்சு போய் கிடக்கு. ஒரு மணி நேரம் வெளியில் எடுத்துவச்சு ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்ததும் கொஞ்சம் எண்ணெயில் இன்னொருக்கா ஒரு ரெண்டு நிமிசம் பொரிச்செடுக்கணும். லேசா ஒரு கரகரப்போட வரும். இல்லைன்னா மைக்ரோவேவில் சூடாக்கலாம். க்றிஸ்ப்பா இருக்காது. வடிவம் எல்லாம் பொதிக்குள்ளே அமுங்கி கொஞ்சம் இப்படி அப்படின்னுதான் இருக்கு. ஆனால் ருசி ஓகே கையால் கொஞ்சம் அமுக்கினால் எண்ணெய் கூடுதலா இருப்பது தெரியுது. இவ்ளோ எண்ணெய் எதுக்கு கையால் கொஞ்சம் அமுக்கினால் எண்ணெய் கூடுதலா இருப்பது தெரியுது. இவ்ளோ எண்ணெய் எதுக்கு உடம்புக்கு நல்லதில்லையே:( அடங்கு மனசே..... தினமுமா தின்னப்போறே உடம்புக்கு நல்லதில்லையே:( அடங்கு மனசே..... தினமுமா தின்னப்போறே என்றைக்காவது ஒரு நாள்தானே வடை ஆசையையும் ருசியையும் மறக்காமல் இருக்க ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா போதுமே\nபருப்புவடை என்னவோ கொஞ்சம் மென்னியைப் பிடிக்குது. ஊஹூம்..... சும்மாத்தின்ன கஷ்டம். பேசாம மோர்க் குழம்புலே தூக்கிப்போட்டேன். அருமை\nமற்ற அவைலபிள் ஐட்டம்ஸ் பற்றி அப்பப்பச் சொல்வேன் கேட்டோ\nநிலநடுக்கம் வந்து ஊர் அழிஞ்சபின் சிட்டியில் இருந்த வீட்டு உபயோகத்துக்கான மின்சார சாதனங்கள் கடைகள் எல்லாம் போயே போச். அதுக்காக வியாபாரத்தை மூட முடியுமா தாற்காலிகமா ஒரு இடத்தில் கடை போட்டு இருக்கும் பொருட்களையெல்லாம் ஸேலில் வித்துக்கிட்டு இருக்கு ஒரு நிறுவனம். நாப்பது டாலர் சமாச்சாரங்கள் எல்லாம் பதினாலுக்குப் போட்டுருக்கு. இப்படியே மற்ற எல்லா பொருட்களும் நல்ல தள்ளுபடியில் 65 இஞ்சு டிவி ஒன்னு நல்ல மலிவு. அதுக்கு ஏற்ற சுவர் நம்மிடம் இல்லை:(\nடோனட் மேக்கர் ஒன்னு பார்த்தேன். நான் அதைக் கையில் எடுத்ததும் 'வடையா' என்றார் கோபால். அப்பாடா..... வாங்கும் பொருளை நியாயப்படுத்த வியாக்கியானம் கொடுக்கும் வேலை மிச்சம்:-)\nமுதலில் நோகாம ஒரு சொந்த சாஹித்த்யத்தில் செஞ்சு பார்த்துட்டு அப்புறமா பாரம்பரிய சமையலுக்குப் போகலாமேன்னு..........\nமுயற்சி திருவினை ஆக்குமுன்னு சும்மாவாச் சொல்லி இருக்காங்க\nமகள் வந்ததும் ஓசைப்படாம எடுத்து நீட்டுனேன். மனசுக்குள்ளே மட்டும் திக் திக். கினிபிக்கை சமாளிச்சுடலாம். ஆனால் ஃபுட் க்ரிட்டிக்கை ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு முடிச்சாள்.\nவாட் ஸ்பெஷல் அபௌட் இட்\nஇன்னும் கொஞ்சம் dos and don'ts தெரிஞ்சுக்கணும் அனுபவம் பெரிய பாடம்:-)\nஒரு கப் ரெடிமேட் உளு(த்தம்)ந்து மாவு.\nபெரிய வெங்காயம் 1 (பொடியா நறுக்கிக்கணும்)\nபச்சை மிளகாய் 4 ( பொடிசா அரிஞ்சது)\nகருவேப்பிலை 1 இணுக்கு ( இதயும் பொடியாவே அரிஞ்சுகுங்க)\nமேலே சொன்ன பொருட்கள் எல்லாத்தையும் ஒன்னாச்சேர்த்து தண்ணீர் விட்டு வடை மாவு பதத்துக்குக் கலக்கி வச்சுக்குங்க.\nநம்ம வடை மேக்கரை () ப்ளக்கில் பொருத்தி ஆன் செஞ்சுருங்க. டேஞ்சருன்னு சிகப்பு விளக்கு ஒளிரும்:-) அஞ்சு நிமிசத்தில் சூடாயிருச்சுன்னு விளக்கு அணைஞ்சுரும்.\nகலக்கி வச்சுருக்கும் வடை மாவை ஒர் ஸ்பூனால் கோரி வடைக்குழியில் ஊத்திட்டு மூடியை கவுத்துடலாம்.. அஞ்சாறு நிமிசங்களில் திறந்து பார்த்தால் டடா............ முக்கால்வாசி வெந்து மேற்புறத்தில் வெள்ளை மாவு தெரியும். லேசா திருப்பிப்போட்டு மூடியைக் கவுத்தால் போதும். நாலு நிமிசத்தில் இப்படி இருக்கும்.\nமேற்படி அளவு மாவுக்கு, பாந்தமா பனிரெண்டு வடைகள் வந்துச்சு. சுட்ட எண்ணெய் மீதியாகும் சங்கடம் ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ:-)\nநோகாமல் வடை 'சுடுவது' எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/BJP+Meeting?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T14:04:49Z", "digest": "sha1:BN45XH2ASSUNHKGWG3W74ARUSIPRAIWE", "length": 7953, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BJP Meeting", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nநகராட்சி அலுவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது\nநகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்எல்ஏ\n“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு\nவரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்\nதொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nநாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nமேற்குவங்கம்: இருவர் உயிரிழப்பை அடுத்து மீண்டும் இருதரப்பினரிடையே மோதல்\nஜிஎஸ்டி பலன்களை மக்களுக்கு வழங்காத நிறுவனங்களுக்கு அபராதம்\nநகராட்சி அலுவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ கைது\nநகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்எல்ஏ\n“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு\nவரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்\nதொடங்கியது காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nநாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nமேற்குவங்கம்: இருவர் உயிரிழப்பை அடுத்து மீண்டும் இருதரப்பினரிடையே மோதல்\nஜிஎஸ்டி பலன்களை மக்களுக்கு வழங்காத நிறுவனங்களுக்கு அபராதம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/isha-vidhya-asiriyargalai-manavargalukku-pidikka-karanam", "date_download": "2019-06-26T14:46:34Z", "digest": "sha1:YG5OCUMGK6QJODPWSW2XBOFOQ3ALBGTK", "length": 26478, "nlines": 275, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷா வித்யா ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிக்க காரணம்... | Isha Sadhguru", "raw_content": "\nஈஷா வித்யா ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிக்க காரணம்...\nஈஷா வித்யா ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிக்க காரணம்...\nஈஷா வித்யாவின் இத்தகையதொரு மாபெரும் வளர்ச்சிக்கு மூலமாகவும் ஈஷா வித்யாவின் தூண்களாகவும் விளங்கும் ஆசிரியர்கள், மற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து எந்தவிதத்தில் வேறுபடுகிறார்கள் என்பதை புரியவைப்பதாய் அமைகிறது இந்த பதிவு\nபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 6\nஈஷா வித்யாவின் இத்தகையதொரு மாபெரும் வளர்ச்சிக்கு மூலமாகவும் ஈஷா வித்யாவின் தூண்களாகவும் விளங்கும் ஆசிரியர்கள், மற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து எந்தவிதத்தில் வேறுபடுகிறார்கள் என்பதை புரியவைப்பதாய் அமைகிறது இந்த பதிவு\nகல்வியின் நோக்கம் தகவல்களை வலுக்கட்டாயமாக திணிப்பதாக இருக்க கூடாது, மாறாக அறிவுத் தாகத்தை தூண்டுவதாய் இருக்க வேண்டும். -சத்குரு\n1. ஈடுபாடுமிக்க ஈஷா வித்யா ஆசிரியர்கள்\nமாணவர்களிடம் கேட்டோம், (சில மேல்நிலை வகுப்பு மாணவர்களிடமும்) “ஈஷா வித்யாவில் நீங்கள் அதிகம் விரும்புவது எதை” “ஆசிரியர்கள்” என்ற பதிலைத்தான் பெரும்பாலான மாணவர்கள் உற்சாகத்துடன் உச்சரித்தார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்கள் சொன்னார்கள், “ஆசிரியர்களை நாங்கள் விரும்புவது ஏனென்றால், அவர்கள் எங்களிடம் மென்மையாக நடந்துகொள்வதோடு, மற்ற பள்ளிகளில் உள்ளதுபோல் எங்களுக்கு அவர்கள் தண்டனை ஏதும் வழங்குவதில்லை” “ஆசிரியர்கள்” என்ற பதிலைத்தான் பெரும்பாலான மாணவர்கள் உற்சாகத்துடன் உச்சரித்தார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்கள் சொன்னார்கள், “ஆசிரியர்களை நாங்கள் விரும்புவது ஏனென்றால், அவர்கள் எங்களிடம் மென்மையாக நடந்துகொள்வதோடு, மற்ற பள்ளிகளில் உள்ளதுபோல் எங்களுக்கு அவர்கள் தண்டனை ஏதும் வழங்குவதில்லை\n70% ஆசிரியர்கள் இங்கு அதிகப்படியான சம்பளம் பெறப்படாதபோதிலும் பள்ளியை விட்டு போகாமல் பணியாற்றுகின்றனர்.\n“எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைப்பதாய் இருந்தாலும், வேறு பள்ளிக்கு செல்வதை என்னால் கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை.” பள்ளி துவங்கிய காலம்முதல் ஆங்கில ஆசிரியராக உள்ள ஸ்ரீதேவி அக்கா இப்படி சொல்கிறார்.\nபள்ளி முதல்வர் S. திலகவதி, M.Sc., மைக்ரோபயாலஜி, ஈரோடு ஆசிரியர்கள் சமூகத்தில் நன்கறிந்தவர். பிற பள்ளிகளிடமிருந்து இவருக்கு நல்ல சம்பளத்திற்கு பணிபுரிய வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. சில வருடங்கள் முன்பு, தனது ஆசிரியர் கேட்டுக்கொண்டதனால் அவருக்கு நன்றி வெளிப்படுத்தும் விதத்தில் முன்பிருந்த பள்ளிக்கு சென்று 6 மாதங்கள் பணிபுரிந்தார். ஆனால், ஈஷா வித்யாவை விட்டு போக இயலாதவராய் மீண்டும் அவர் ஈஷா வித்யாவிற்கே வந்துவிட்டார். ஓய்வின்றி ஈஷா வித்யாவிற்காக பணியாற்றும் இவர், பள்ளியின் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாய் இருக்கும் ஆசிரியர்களுள் ஒருவர். இவரது இரண்டு குழந்தைகளும் இதே பள்ளியில்தான் பயில்கிறார்கள்.\n“பள்ளியில் நுழைந்தவுடன் என்னுடைய பிள்ளைகள் இருப்பதை நான் கவனிப்பதே இல்லை. நான் வேலைநிமித்தமாக வீட்டிற்கு தாமதமாக வந்தாலும், குழந்தைகள் வீட்டிற்கு சென்று தங்கள் பணிகளைச் செய்யத் துவகிவிடுவார்கள்.” -S. திலகவதி, பள்ளி முதல்வர் -ஈரோடு ஈஷா வித்யா.\n“நாங்கள் ஈஷா வித்யாவிற்கு தினமும் வந்துசெல்லும் தொலைவில் மாப்பிள்ளை வீட்டார் இருக்கும்படியாக பெற்றோர்களிடம் எங்களுக்கு வரண் பார்க்க சொல்லியிருக்கிறோம்.” இரண்டு இளம் ஆசிரியைகள் (அவர்களும் மாணவிகளைப் போலவே உள்ளனர்) -துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் நந்தினி & கோகிலா.\n2. ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதில்லை வழிகாட்டுகிறார்கள்\n“எங்கள் ஆசிரியர்கள் தாங்களே குப்பைகளை எடுத்துப் போடுவதையும், செருப்புகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் அவற்றை முறைப்படுத்துவதையும் நாங்கள் பார்த்தோம். வகுப்புகளில் சிலவற்றை எங்களிடம் செய்யச்சொல்லி சொல்லாமல், அவர்களாகவே செய்வதை கவனித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இவற்றை செய்யத் துவங்கினோம். இப்போது என்னுடைய பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலோ அல்லது தெருவிலோ ஏதேனும் குப்பைகள் கிடந்தால் உடனே நானாகவே அவற்றை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுகிறேன். -கோகுலன்.EA, 11ஆம் வகுப்பு மாணவன்\n“ஏதேனும் ஒரு குழந்தை கீழே விழுந்து அடிபட்டுவிட்டால், உடனே வினிதா மேடம் அல்லது ஜெகதீஷ் அண்ணா போன்ற ஆசிரியர்கள் முதலுதவி பெட்டியுடன் ஓடிவந்து அந்த குழந்தைக்கு அன்புடன் சிகிச்சை செய்வார்கள். அவர்களின் அன்பும் அக்கறையும் என்னை வெகுவாக தொட்டுள்ளது.” -ப்ரியதர்ஷினி.P, 11ஆம் வகுப்பு மாணவி.\n“நான் கால் வலிக்கிறதென்று சொன்னதும் ஆசிரியர் என்னுடைய காலை அவருடைய கைகளால் பிடித்து மெதுவாக அழுத்திக்கொடுப்பார். மற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் கால்களைத் தொடமாட்டார்கள்” -தமிழ்ச்செல்வன்.S, 7ஆம் வகுப்பு மாணவன்.\n“கடந்த ஆண்டு, ஆறுமாத காலத்திற்கு பள்ளியில் ‘படிக்கும் நேரம்’ நீட்டிக்கப்பட்டிருந்த சமயத்தில் எனக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமான்து. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான் அழத்துவங்கினேன். ஜெகதீஷ் அண்ணா மற்றும் இரண்டு உதவியாளர்கள் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு, நான் தூங்கும்வரை இரவு சுமார் 1 மணி வரைக்கும் என்னுடனேயே இருந்தனர். என்னை விட்டு அவர்கள் போகாமல் இருக்கவேண்டுமென நான் நினைத்ததால் அவர்கள் அன்று இரவு உணவு கூட உட்கொள்ளவில்லை என்பதை அறிந்தேன். நான் குணமான உடனே எனது ஆசிரியர் அங்கே வந்து கூட்டிச்சென்றார். அவர்களது அன்பும் அக்கறையும் என்னை திக்குமுக்காடச் செய்கிறது, நான் அதனை ஒவ்வொரு தருணத்திலும் நினைத்துக்கொள்கிறேன்.” -ப்ரிய தர்ஷினி, 11ஆம் வகுப்பு.\n“கடந்த ஆண்டு, ஆறுமாத காலத்திற்கு பள்ளியில் தங்கி படித்த சமயத்தில் ஒரு மாணவனுக்கு போட்டுக்கொள்வதற்கு சுத்தமான ஆடைகள் இல்லை. அவன் வைத்திருந்த இரண்டு சட்டைகளில் ஒன்று துவைத்து ஈரமாக காய்ந்துகொண்டிருந்தது, மற்றொன்றும் எதிர்பாராத விதமாக ஈரமாகிப்போனது. அருகிலுள்ள தனது வீட்டிற்குச் சென்ற ஜோதிலிங்கம் சார் புதிய சட்டை ஒன்றை அந்த குழந்தைக்கு கொண்டுவந்து கொடுத்தார். அந்த குழந்தை தன்னுடைய பெற்றோரிடமிருந்து இதற்கான தொகையை பெற்றுத் தருவதாக சொன்னபோது அவர் அன்பாக கோபித்துக்கொண்டார்.” -சரவணன், 11ஆம் வகுப்பு.\n“இங்கிருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் நானும் இந்த பள்ளியில் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். எந்தவொரு பாடத்திலும், தலைப்பிலும் அல்லது செயல்பாட்டிலும் மாணவர்களுக்கு கேள்விகேட்கும் சுதந்திரம் உள்ளது. இது மாணவர்களுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் வளர்ச்சிபெறும் வாய்ப்பை வழங்குகிறது. நான் மாணவனாக இருந்தபோது எங்களுக்கு கேள்விகேட்கும் சுதந்திரம் இல்லை. தண்டனை கிடைக்குமே என்ற அச்ச உணர்வு எங்கள் தலைக்குள் எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். இங்குள்ள இந்த வழிமுறை மாணவர்கள் முன் நான் நிற்கும்போது எப்போதும் சிறந்த ஆசிரியராக என்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதற்கு என்னை உந்துகிறது. இன்னும் தெரிந்துகொள்வதற்கும் சிறப்பாக நடந்துகொள்வதற்கும் என்னை உற்சாகப்படுத்துகிறது. சில சமயங்களில் எனக்கு இப்படித் தோன்றும் “அங்கு 900 ஆசிரியர்கள் இருப்பதாக\nஎன் மாணவர்களில் ஒருவரான ‘பூமிகா’ கடந்த ஆண்டு எனக்கு கடினமான சூழநிலைகளில் எப்படி ஆனந்தமாக இருப்பதென்று கற்றுத்தந்தாள்.” அவள் சோர்வாக இருந்து நான் பார்த்ததே இல்லை. நான் எப்போதாவது அமைதியின்றி கோபம் அல்லது பதற்றமடையும்போது அவள் என்னை சரிசெய்வாள்” - ஜோதிலிங்கம், சமூக அறிவியல் ஆசிரியர்.\n4. ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகளுக்கான நேரம்\nபள்ளியின் நெறிமுறைப்படி, ஒவ்வொரு வகுப்பு நேரத்தின் முடிவிலும் கடைசி 10 நிமிடங்கள் மாணவர்கள் கேள்வி கேட்பதற்காக வழங்கப்படும். அவர்கள் அந்த வகுப்பை பற்றி அல்லது அது தொடர்பானவை பற்றி (வகுப்புநேரத்தில் அவர்களுக்கு எழுந்த கேள்விகளும் சேர்த்து) கேள்விகேட்பார்கள்.\nமேலும், ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் ஏதேனும் ஒரு தலைப்பில் வகுப்பு ஆசிரியருடன் குழந்தைகள் “Home-Room” (ஈரோடு ஈஷா வித்யா பள்ளியில் பிரத்யேகமான ஒரு செயல்முறை) எனப்படும் கலந்துரையாடலில் ஈடுபடுவார்கள்.\n5. குழந்தைகள் கேள்விகேட்கும் விதம்\n“இடைவிடாமல் கேள்விகளைத் தொடுக்கும் மாணவன் ஜனார்தன், என்னை எந்நேரமும் விழிப்புடன் வைத்திருக்கச் செய்வதோடு, ஒரு சிறந்த ஆசிரியராக இருக்கவும் காரணமாகிறான்” -ஸ்ரீதேவி அக்கா\n“நீங்கள் சொல்லித் தருவதை நாங்கள் கூகுள் மூலமாகவே கற்றுக்கொள்ளமுடியும், நீங்கள் எங்களுக்கு தரும் பிரத்யேக வழிமுறை என்ன” இப்படி ஒரு மாணவன் கேட்கிறான். அவன் ‘டைம் மெஷின்’ எனும் இயந்திரத்தை உருவாக்கும் தன் விருப்பத்தைக் கூறுகிறான். இதுபோன்று நமது கல்விமுறையை தைரியமாக கேள்விகேட்கும் குழந்தைகளைப் பெற்றுள்ளதில் நான் மிகவும் பெருமைகொள்கிறேன். -ஜோதிலிங்கம்\n6. தண்டனை கிடையாது; திருத்தம் உண்டு\nஒரு குழந்தையின் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்கள் கடினமான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. மாறாக, குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் புதுமையான விதத்தில் அவர்களுக்கு ஒழுக்கநெறிகள் புரியவைக்கப்படுகின்றன.”\n“நான் 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் குறைவான மதிப்பெண் எடுத்ததற்காக மிகவும் மோசமாக திட்டியதோடு, அடிக்கவும் செய்தார்கள். ஆனால், இங்கே ஒரு குழந்தை குறைவான மதிப்பெண் பெற்றால், அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதற்கு பதிலாக ஆசிரியர்கள் கூடுதல் அக்கறைகொள்கிறார்கள்.” அபிநிதி\nEducation General Relationship ஈஷா வித்யா புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்\nHappy Streetsல் ஈஷா ஹோம் ஸ்கூல் இசைக்குழு\nஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் இசை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. பலதரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்ற இவர்களின் இசைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்...\nமாணவர்களுக்காக மாரத்தான் ஓடலாம், வாருங்கள்\nசென்னையில் நடக்கவிருக்கும் மாரத்தானில் நீங்களும் ஈஷா வித்யாவிற்காக ஓடலாம். அதைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள் இங்கே...\nசமஸ்கிருத மஹா சம்மேளனத்தில் ஈஷா சம்ஸ்க்ருதி\nகோவையில், சமஸ்கிருத மஹா சம்மேளன நிகழ்ச்சியில் ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் பங்கேற்றனர். அதன் தொகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/460519", "date_download": "2019-06-26T14:13:36Z", "digest": "sha1:2TOOMK3DLHQUCMWRNRT3BOXW6TWFE5UJ", "length": 8970, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Increasing 'Q' Weddings: | அதிகரிக்கும் ‘கே’ திருமணங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒரே இடத்தில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் ‘மெகா திருமண’ நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடப்பது வழக்கமானது. ஆனால் பிரேசிலின் சா பாலோ நகரில் ஓரினச் சேர்க்கை ஜோடிகள் நடத்திய மெகா திருமண விழா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இடத்தில் பல ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். இது அந்நாட்டு அரசுக்கும் கவலை அளித்துள்ளது. திருமணம் செய்து கொண்ட ஒரு ஓரினச்சேர்க்கை ஜோடியை நண்பர்கள் பூ தூவி வரவேற்கின்றனர்.\nகாய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக ஆளில்லா வாகன வசதி அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஆர்1’ என்ற டிரைவர் இல்லாத தானியங்கி வாகனம் கடந்த ஆகஸ்டில் சோதனையை தொடங்கியது. சோதனை வெற்றிகரமாக நடந்ததால் தற்போது மளிகை பொருட்களை ‘ஆர்1’ வெற்றிகரமாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறது.\nகாங்கோவின் மடாடி நகரில், மினி லாரியில் ஏற்ற வேண்டிய அளவுக்கான சரக்குகளை, தனது ஓட்டை காரில் ஏற்றிச் செல்ல ஆயத்தமாகிறார் ஒருவர்.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கிரீம்லின் நகர வீதிகள் அலங்கார மின்விளக்குளால் ஜொலிக்கிறது.\nசீனாவின் லியோன்னிங்க் மாகாணம், சென்யாங்க் பகுதியில் குளிர்கால பனி கொட்டி வருகிறது. -20 டிகிரி கடும் குளிரில் அனைத்து பகுதிகளிலும் பனி போர்த்தியிருக்கிறது. கிட்டத்தட்ட முழுவதும் உறைந்த நதியின் சிறு பகுதியில், கடும் குளிர் நீரில் ‘தில்லாக’ ஒருவர் நீச்சல் அடித்து மகிழ்கிறார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஈர்ப்புவிசை இல்லாமல்போனால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்\nநீரை சேமிப்பது மிகவும் அவசியம்... அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் தான் ‘அருமருந்து’\nபஜாஜ் பல்சர் என்எஸ்200 புதிய வேரியண்ட்\nபுதிய மைல்கல்லை எட்டிப்பிடித்த ரெனால்ட் கிவிட்\nபுதிய இன்ஜினுடன் ஹோண்டா ஆக்டிவா 125\nஉலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்...\n× RELATED ஈர்ப்புவிசை இல்லாமல்போனால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-26T14:17:38Z", "digest": "sha1:E3CU74M75XNCW2DT43NIJVSIDJYWBISC", "length": 8103, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய விளையாட்டரங்குகள் (2 பகு, 16 பக்.)\n► இந்திய விளையாட்டு நிர்வாகிகள் (1 பகு, 1 பக்.)\n► இந்திய விளையாட்டு வீரர்கள் (25 பகு, 8 பக்.)\n► இந்திய விளையாட்டுக்கள் (1 பகு, 7 பக்.)\n► இந்தியக் காற்பந்து அணிகள் (1 பக்.)\n► இந்தியக் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் (1 பக்.)\n► இந்தியாவில் கால்பந்துப் போட்டிகள் (1 பகு, 16 பக்.)\n► இந்தியாவில் துடுப்பாட்டம் (5 பகு, 30 பக்.)\n► இந்தியாவில் மாநிலங்கள்/ ஒன்றியங்கள் வாரியாக விளையாட்டு (4 பகு)\n► இந்தியாவின் விளையாட்டு ஆளுமைக் குழுக்கள் (3 பக்.)\n► ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா (1 பகு, 8 பக்.)\n► விளையாட்டுகளில் இந்திய தேசிய அணிகள் (3 பக்.)\n\"இந்தியாவில் விளையாட்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\n1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\n1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nஇந்திய தேசிய காற்பந்து அணி\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்\nவளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2010, 22:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cbi-raids-aiadmk-mp-anwar-raja-home-wakf-board-case-344725.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T13:54:26Z", "digest": "sha1:SYVWETZZGWY4FNDVFQEBCY3UAUNQ3Q77", "length": 16492, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "வக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு! | CBI raids AIADMK MP Anwar Raja home in Wakf Board Case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n30 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n58 min ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு\nஅதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு\nசென்னை: அதிமுக லோக்சபா எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. அதேபோல் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடந்து வருகிறது.\nதமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு பல்வேறு சொத்துக்கள், நிலங்கள் இருக்கிறது. அதேபோல் சில இடங்களில் இவர்கள் சார்பாக கல்லூரிகளும், பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் ஊழல் நடந்துள்ளதாக மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு நடந்து வருகிறது.\nமதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்தில் பல கோடி முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதை முறைப்படி விசாரிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.\nதற்போது இதன் காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடந்து வருகிறது. வக்ஃபு வாரிய தலைவராக அதிமுக லோக்சபா எம்.பி. அன்வர் ராஜா இருக்கிறார். இதானால் எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது.\nமாணிக்க தாகூரை வைத்து கேம் ஆடி வரும் காங்... கிடைக்கப் போவது விருதுநகரா, சிவகங்கையா, அல்வாவா\nநேற்றே அன்வர் ராஜாவிடம் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தற்போது அவரின் வீட்டிலும் சோதனை நடக்கிறது. அன்வர் ராஜா ராமநாதபுரம் தொகுதி எம்.பி ஆவார்.\nஇவருக்கு இந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜக கட்சிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanwar raja cbi raid அன்வர் ராஜா சிபிஐ ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/here-is-the-biodata-communist-party-india-candidates-344092.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T14:26:55Z", "digest": "sha1:TPQIUNLVYHHJ7YMZU7RYHZVAZ76GBO4W", "length": 17335, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எல்ஏ, எம்பி பதவியை வகித்த அனுபவம் கொண்டவர்கள் இந்திய கம்யூ. வேட்பாளர்கள் | Here is the biodata of Communist Party of India candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n22 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n36 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்எல்ஏ, எம்பி பதவியை வகித்த அனுபவம் கொண்டவர்கள் இந்திய கம்யூ. வேட்பாளர்கள்\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட இரு வேட்பாளர்களும் எம்எல்ஏ, எம்பியாக இருந்த அனுபவம் பெற்றவர்கள்.\nலோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி, இந்தசிய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.\nஇந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த விவரங்களை நேற்றைய தினம் அறிவித்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nஎல்லாம் 7+1 செய்த மாயம்.. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரிக்கும்.. பாமக விளக்கம்\nநாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன் குறித்த சுயவிவரங்களை பார்ப்போம். 77 வயதாகும் சுப்பராயனின் சொந்த ஊர் திருப்பூர். இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.\nமுழு நேர அரசியல் மற்றும் தொழிற்சங்க பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 1985-88, 1996-2001 வரை எம்எல்ஏவாகவும், 2004-09 வரை எம்பியாகவும் இருந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், ஏஐடியூசி மாநில தலைவர் பதவிகளை வகித்துள்ளார்.\nஇவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அது போல் நாகைக்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வராஜ் அத்தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 72 வயதாகும் இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி கிராமம்.\n1989- 91, 1996-1998, 1998- 1999 வரை 3 முறை எம்பியாக இருந்தவர். இந்திய கம்யூனிஸ்ட், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் நாகை மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 cpi லோக்சபா தேர்தல் 2019 சிபிஐ வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/international/first-monkey-clones-created-chinese-laboratory-309507.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T14:52:57Z", "digest": "sha1:EHMA45PJRW3I52TDATOTIKV5U5LTEKOE", "length": 20878, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன ஆய்வகத்தில் பிறந்த குளோனிங் குரங்குகள் | First monkey clones created in Chinese laboratory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n48 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன ஆய்வகத்தில் பிறந்த குளோனிங் குரங்குகள்\nஉலகின் முதல் குளோனிங் மறிஆடு உருவாக்கப்பட்ட அதே தொழிற்நுட்பத்தில் சீனா ஆய்வகத்தில் இரண்டு குரங்குகள் பிறந்துள்ளன.\nசில வாரங்களுக்கு முன் சீன ஆய்வகத்தில், சோங் சோங் மற்றும் ஹுவா ஹூவா என்று பெயரிடப்பட்ட இரண்டு நீண்ட வாள் குரங்குகள் பிறந்தன.\nமரபணு மாற்றப்பட்ட குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, மனித நோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை.\n''குத்துப்பாட்டு ஆடுவதோ, பத்துப் பேரை அடிப்பதோ ஹீரோயிசம் இல்லை''\nஇந்தியாவின் பிரபல \"ஹெப்பர்ஸ் கிட்சன்\" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண்\nஇது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது மனிதர்களை குளோனிங் செய்வதில் கொண்டு போய் நிறுத்தும் என்கிறார்கள் விமர்சகர்கள்.\nசீன நரம்பியல் கல்வி நிறுவனத்தை சேர்ந்த குயிங் சன், குளோனிங் செய்யப்பட்ட இந்த குரங்குகள் மரபணுவினால் ஏற்படும் ,புற்று நோய், வளர் சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு கோளாறுகள் குறித்து ஆய்வு செய்ய உதவும் என்கிறார்.\nசோங் சோங் என்ற குரங்கு எட்டு வாரங்களுக்கு முன் பிறந்திருக்கிறது. ஹுவா ஹூவா ஆறு வாரங்களுக்கு முன் பிறந்திருக்கிறது.\nகுரங்குகளுக்கு நன்றாக வளர்கின்றன. அதற்கு புட்டி பால் தரப்படுகிறது என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.\nவரும் மாதங்களில் குளோனிங் முறையில் அதிகமான குரங்குகளுக்கு பிறப்பு கொடுக்கப்படும் என்கிறார்கள் அவர்கள்.\nலண்டன் ஃபிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் ராபின், இந்த இரண்டு குரங்குகளையும் குளோனிங் செய்ய பயன்படுத்தப்பட்ட தொழிற்நுட்பம் மிகவும் அபாயகரமானது மற்றும் திறனற்றது என்கிறார்.\nகெண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டர்ரென் கிரிஃப்பின், இந்த குளோனிங் மனித நோய்கள் குறித்து புரிந்துக் கொள்ள பயன்படும் என்கிறார். அதே வேளை, நெறிமுறை சார்ந்த கவலைகளையும் பகிர்கிறார். குளோனிங் குறித்த நெறிமுறைகளை வடிவமைப்பதில் அதிக அக்கறை தேவைப்படுகிறது.\nஇது போன்ற ஆய்வுகள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும், எப்படி செயல்படுத்தப்படவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.\nஎடின்பெர்க்கில் உள்ள ரோஸ்லின் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு டோலி என்று அழைக்கப்படும் முதல் மறிஆடு குளோனிங் செய்யப்பட்டது. மடியிலிருந்து எடுக்கப்பட்ட உயிரணுவை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி டோலி தான்.\nசென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல முடியும்\nபுற்றுநோயைக் கண்டறிய ஒரு ரத்தப்பரிசோதனை போதுமா\nஉயிரணு மாற்று தொழிற்நுட்பம் மூலம், பன்றிகள், நாய்கள், பூனைகள், எலிகள் உட்பட பல உயிரினங்கள் குளோன் செய்யப்பட்டு இருக்கின்றன.\nசரியாக 79 தோல்விகளுக்குப் பின் இந்த இரு குரங்குகளும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன், வெவ்வேறு உயிரணுக்களிலிருந்து இரண்டு குரங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை விரைவில் இறந்துவிட்டன.\nஆய்வாளர் சன் , \"நாங்கள் பல்வேறு தொழிற்நுட்பங்களை முயற்சித்து பார்த்தோம். ஆனால், இது மட்டும்தான் வெற்றி பெற்றது. பல தடைகளை கடந்துதான் இந்த குரங்குகளை உருவாக்கி இருக்கிறோம்\" என்கிறார்.\nஅமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பு வகுத்த நெறிமுறைகளை பின்பற்றியே இந்த குளோனிங் முறை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nதென்கொரியா: மருத்துவமனையில் தீ விபத்து, 41 நோயாளிகள் பலி\n18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்\nதிருநங்கைகளுக்கு அரசுத் திட்டங்களைக் கொண்டு செல்ல பிரத்யேக முயற்சி\nஒரு பெண்ணின் பார்வையில் 'பத்மாவத்' திரைப்படம்\nதிருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்\nமக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா... ஐ.நா தகவல்\nசீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nஇந்தியாவுக்கு வாங்க.. அழைத்தார் மோடி.. உடனே ஓகே சொன்ன சீன அதிபர் ஜி ஜின்பிங்\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஹாங்காங்கில் அரசுக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்... இன்னொரு 'தியான்மென்' ஆக விஸ்வரூபம்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nடேக் டைவர்ஷன்.. அமெரிக்கா செல்வதை தவிர்க்குமாறு சீன மக்களுக்கு பயண எச்சரிக்கை\nஅமெரிக்காவுக்கு போர் வார்னிங் கொடுத்த சீனா.. அது உலகத்துக்கே பேரழிவு என்றும் எச்சரிக்கை\nஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் ஏற்பட போகும் போர்.. சீனா அமெரிக்கா இடையே வெடித்த மோதல்\nதொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina monkey சீனா குரங்குகள்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nதிருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/international/india-s-bharat-vatwani-sonam-wangchuk-among-magsaysay-award-winners-325841.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T14:37:05Z", "digest": "sha1:ITNDBZJRFJPENZEHYQL7IEDULUXXJ2QF", "length": 19144, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசசே விருது அறிவிப்பு.. 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் தேர்வு | India's Bharat Vatwani, Sonam Wangchuk among Magsaysay award winners - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n32 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n46 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசசே விருது அறிவிப்பு.. 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் தேர்வு\nமணிலா: இந்த வருடத்திற்கான மகசசே விருதுக்கு, இரு இந்தியர்கள் உட்பட ஆறு பேர் தேர்வாகியுள்ளனர்.\nஆசியாவின் நோபல் பரிசு என்று புகழப்படுவது ரமோன் மகசசே விருது. பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசசே நினைவாக வருடந்தோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.\nஅரசுப்பணி, பொது சேவை, கலை, சமூகம் என பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு ரமோன் மகசேசே விருதுபெற ஜப்பான், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதற்கு முந்தைய 2016ம் ஆண்டு, டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகிய இந்தியர்கள் உட்பட 6 பேருக்கு விருதுகள் கிடைத்தன.\nஇவ்வாண்டுக்கான மகசாசே விருதிற்கு, இந்தியர்களான பரத் வத்வானி, மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nதெருக்களில் அனாதையாக சுற்றித் திரிந்த பல ஆயிரம் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி சிகிச்சையளித்து, அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைத்தவர் பாரத் வத்வானி. கலாசாரம், கல்வி போன்றவற்றில் அளித்த பங்களிப்புக்காக சோனம் வான்க்சக்கிற்கு இந்த விருது கிடைத்துள்ளது.\nயார் இந்த பரத் வத்வானி: பாரத் வத்வானியும் அவர் மனைவியும், தெருவில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர். பின்னர் இப்பணிக்காக சாரதா மறுவாழ்வு பவுண்டேசன் என்ற அமைப்பை 1988ல் துவக்கினர். தெருக்களில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு இலவச தங்குமிடம், உணவு, மனநல சிகிச்சைகள் அளித்து குடும்பத்தாரோடு சேர்த்து வைத்தனர். இவர்களுக்கு காவல்துறை, சமூக சேவகர்கள் உதவியாக இருந்தனர்.\nயார் இந்த சோனம் வாங்சுக்: 1988ல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த சோனம் Students' Education and Cultural Movement of Ladakh என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் லடாகி இன மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் பணி நடைபெறுகிறது. பொது தேர்வுகளில் இந்த இன மாணாக்கர்கள் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாத சூழலில் ஆரம்பி்கப்பட்ட, இந்த அமைப்பின் சேவை முக்கியத்துவம் பெற்றது.\n1994ல் ONH என்ற அமைப்பு நிறுவப்பட்டு, கல்வி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 700 ஆசிரியர்கள் உட்பட பலருக்கும் பயிற்சி வழங்கப்பட்டதால், 1996ல் 5 சதவீதமாக இருந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 2015ல் 75 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஇவர்கள் தவிர, கம்போடியாவின் யூக் ச்சாங், கிழக்கு தைமூரின் லூர்டெஸ் மார்டீன்ஸ் குரூஸ், பிலிப்பைன்சின் ஹோவர்ட் டே மற்றும் வியாட்நாமின் தி ஹோவாங் யென் ரோம் ஆகியோரும் ரமன் மகாசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு\nலண்டன் குமுதாவுக்கு துரத்தி துரத்தி லவ் டார்ச்சர்... ரோகித் சர்மாவுக்கு 29 மாசம் ஜெயில்\nவிமானத்தில் பக்கத்து சீட் பெண் பயணிக்கு முத்தம்.. இந்தியருக்கு ஓராண்டு சிறை\nஅமெரிக்காவில் ரெடியான அதிநவீன அப்பாச்சி கார்டியன்.. இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு பயங்கரத்தில் சிக்கிய 9 இந்தியர்கள் மாயம்.. திடுக் தகவல்கள்\nபிளாக் லிஸ்டில் இருந்து எஸ்கேப்பான பாக்... பாரீஸ் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு\n2018ல்தான் இந்தியாவில் மத வன்முறைகள் அதிகம்.. புத்தாண்டிலாவது புது வசந்தம் பிறக்குமா\nபிரபஞ்ச அழகி பட்டம்.. டாப் 20-இல் தேர்வாகாததால் வாய்ப்பை நழுவ விட்ட இந்திய அழகி\nஆபாச வெப்சைட்டில் இந்தியர்கள் அதிகம் தேடிய வீடியோ எது பெண்களும் பார்க்கிறார்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian award விருது இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-12012019", "date_download": "2019-06-26T14:54:14Z", "digest": "sha1:OZDTJBJHBDTPPRDN3VX25AKPBPGUUVS6", "length": 16633, "nlines": 189, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 12.01.2019 | Today rasi palan - 12.01.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 12.01.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n12-01-2019, மார்கழி 28, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 10.05 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 08.43 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் காலை 08.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.\n.இன்று தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஇன்று வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலனே ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வண்டி வாகன பராமரிப்பிற்காக செலவு செய்ய நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை மாறி ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 25.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 26.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.06.2019\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/spiritual/04/214558?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2019-06-26T15:09:38Z", "digest": "sha1:DMPZV7UFN7AERCDVD4CBIWHGXDOJYTLN", "length": 14439, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "இந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான்! அதிர்ஷ்டம் தேடி வர இப்படி வழிபடுங்கள் - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nஇந்த இடத்தில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடாதீர்கள்.. மீறி வழிபட்டால் பிரச்சினைதான் அதிர்ஷ்டம் தேடி வர இப்படி வழிபடுங்கள்\nமக்களுக்கு மிகவும் பிடித்த நெருக்கமான கடவுள்கள் என்றால் அது ஆஞ்சநேயரும், விநாயகரும்தான். சக்திவாய்ந்த கடவுள்களில் ஒருவரான ஆஞ்சநேயரை தினமும் வழிபடுவது உங்கள் வாழையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அதிஷ்டத்தை கொடுக்கும்.\nபெரும்பாலும் ஆஞ்சநேயர் தனியாக இருக்கும் சிலையைத்தான் நாம் வணங்குகிறோம்.\nஆஞ்சநேயரின் ஒவ்வொரு உருவத்திற்கு பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆஞ்சநேய வழிபாடும் வெவ்வேறு பலன்களை வழங்கக்கூடும்.\nஉங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஆஞ்சநேய வழிபாடு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nஇந்த உருவத்தை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆஞ்சநேயர் இராமரையும், சீதையையும் தலைவணங்கி வழிபடும் உருவம் மிகவும் புகழ்பெற்றதாகும். வீட்டில் இந்த உருவத்தை வைத்து தினமும் வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துரதிர்ஷ்டத்தையும் விரட்டும்.\nபின்புறம் வெள்ளையாக இருக்கும் ஆஞ்சநேயர் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பவராக இருக்கிறார். நல்ல வேலை, பதவி உயர்வு, அதிக சம்பளம் வேண்டுபவர்கள் இந்த ஆஞ்சநேயரை வழிபடலாம். இந்த உருவத்தில் ஆஞ்சநேயர் ஆடைகள் கூட அணிந்திருப்பார்.\nஆஞ்சநேயர் இராமரின் மீது அளவற்ற பக்தி கொண்டவர் என நாம் நன்கு அறிவோம். அதன்படி ஆஞ்சநேயர் இராமரை பக்தியோடு வழிபடும் உருவத்தை வீட்டில் வைத்து நாம் வழிபடுவது நம் வாழ்வில் அமைதியை ஏற்படுத்தும். மேலும் வாழ்க்கையில் சரியான முடிவெடுக்கும் ஆற்றலையும் நமக்கு வழங்கும்.\nவடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானம் செய்வது போன்ற உருவத்தை வழிபடுவது உங்களுக்கு அனைத்து கடவுள்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும் என்று புராணங்கள் கூறுகறது. அதேபோல் தெற்கு திசையில் இருக்கும் அனுமனை வழிபடுவது மரணம் பற்றிய உங்களின் பயத்தை போக்கும்.\nஎள் என்பது ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த பொருளாகும். எனவே சனிக்கிழமையன்று நீங்கள் குளிக்கும் நீரில் சிறிது எள்ளை கலந்து சேர்த்து குளிக்கவும். அதேபோல கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு எள் விளக்கு ஏற்றி வழிபடவும். இது உங்கள் வேண்டுதல்களின் நிறைவேறும் வாய்ப்பை அதிகரிக்கும்.\nஅனுமான் ஒரு பிரம்மச்சாரி கடவுள் ஆவார். எனவே அவரை படுக்கையறையில் வைத்து வழிபடுதல் கூடாது. அவ்வாறு வைத்து வழிபடுவது குடும்பத்தில் பல பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே ஆஞ்சநேயரை எப்பொழுதும் பூஜையறையில் வைத்து மட்டுமே வழிபட வேண்டும்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yazhvenba.wordpress.com/2018/02/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-10/", "date_download": "2019-06-26T14:39:36Z", "digest": "sha1:WOQB22A3SM6YYVG73SC7PX6US35D3WGN", "length": 4824, "nlines": 123, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "வேந்தர் மரபு – 10 – யாழ்வெண்பா", "raw_content": "\nவேந்தர் மரபு – 10\nசென்ற அத்தியாயத்தைப் படித்த, விருப்பம் தெரிவித்த மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nவேந்தர் மரபு – 10\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nNext postவேந்தர் மரபு – 11\nஅந்த சூழ்நிலை அப்படியே படிக்கும் போதே நம்ம கண்முன்னே தோண்றுவது தான் உங்க எழுத்தின் பலம்😍👏👏👏🙌🙌\nநன்றி குணா… உங்கள் கருத்து மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது.\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
{"url": "https://zeenews.india.com/tamil/social/sunny-leone-makes-torans-for-daughter-nishas-diwali-party-at-school-check-pic-inside-313461", "date_download": "2019-06-26T14:00:22Z", "digest": "sha1:HWIARFXOORIEUJCOGJ7ZSGPJSDEJ6AVS", "length": 14966, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "மகளின் பள்ளியில் தீபாவளி பார்டி கொண்டாடிய சன்னிலியோன்: seepic | Social News in Tamil", "raw_content": "\nமகளின் பள்ளியில் தீபாவளி பார்டி கொண்டாடிய சன்னிலியோன்: seepic\nமகள் நிஷாவின் பள்ளிக்கு சென்று தீபாவளி கொண்டாடிய சன்னிலியோன்....\nமகள் நிஷாவின் பள்ளிக்கு சென்று தீபாவளி கொண்டாடிய சன்னிலியோன்....\nபாலிவுட்டின் \"பேபி டால்\" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.\nமேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்த பிஸி செட்யூலுக்கு மத்தியில் சன்னி லியோன் தனது குடும்பத்தாருடன் நேரங்களை செலவிடவும் மறப்பதில்லை. அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டும் வகையில், சன்னி லியோனின் வளர்ப்பு மகளான நிஷாவின் பள்ளிக்கு சென்று தீபாவளி பார்டி கொண்டாடிய புகைப்படத்தை தனது இண்டஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nதனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலம்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-26T14:07:49Z", "digest": "sha1:275OFSJC5DFFAGOB5J6BGFCNJEE4SKJT", "length": 7191, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே படத்தில் நடித்தவர்கள் ஒரே நாளில் மறைந்துவிட்டார்களே! என்ன ஒரு ஒற்றுமை | Chennai Today News", "raw_content": "\nஒரே படத்தில் நடித்தவர்கள் ஒரே நாளில் மறைந்துவிட்டார்களே\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஒரே படத்தில் நடித்தவர்கள் ஒரே நாளில் மறைந்துவிட்டார்களே\nநேற்று ஒரே நாளில் திரையுலக மேதைகளான கிரிஷ் கர்னாட், கிரேஸி மோகன் ஆகிய இருவரும் மறைந்தது ஒட்டுமொத்த திரையுலகினர்களை கண்ணீர்கடலில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த நிலையில் கிரிஷ் கர்னாட், கிரேஸி மோகன் ஆகிய இருவரும் ‘ரட்சகன்’ என்ற படத்தில் பணிபுரிந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது\nஆம் இந்த கிரிஷ் கர்னாட் நாயகி சுஷ்மிதா சென் தந்தையாக நடித்திருக்க, இதே படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார். ஒரே படத்தில் பணிபுரிந்து ஒரே நாளில் மறைந்த இவர்கள் குறித்து தான் நேற்று திரையுலகினர் பேசி வருகின்றனர்.\nரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவான தமிழ்ப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇந்திய அணியின் வெற்றியை இப்படியா கொண்டாடுவது அரைநிர்வாண நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\nபிரபல நடிகர் கிரிஷ்கர்னாட் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.muthukamalam.com/medicine/physiotheraphy/p13.html", "date_download": "2019-06-26T14:02:39Z", "digest": "sha1:VKXZ7SE5X3T3VACIHCUJBVQ6KLWVBW2R", "length": 25977, "nlines": 244, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Medicine Physiotheraphy - இயன்முறை மருத்துவம் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nமனித உடல் கட்டமைப்பிற்கும், மிடுக்கான தோற்றத்திற்கும், உறுதிக்கும் அடிப்படையாக அமையும் எலும்புகள் மனித உடலில் மொத்தம் 206 உள்ளன. இப்படிப்பட்ட எலும்பில் குறைபாடுகளோ அல்லது நோய்த்தாக்கமோ ஏற்பட்டால், உடலின் தன்மையும் ,தோற்றமும் மாறிவிடும். அந்த வகையில் எலும்புகளைப் பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக எலும்புச்சிதைவு நோய் (Oestioporosis) உலகம் முழுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது.\nஎலும்புச்சிதைவுக் குறைபாடு முக்கியமாக வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படுகிறது. கால்சியம் சத்தினை உடல் ஏற்றுக்கொள்வதற்கு வைட்டமின் டி பயன்படுகிறது. போதுமான அளவு கால்சியம் உடலுக்குக் கிடைக்காத போது, கால்சியம் மிகுதியாக அடங்கியுள்ள எலும்புகளிலிருந்து உடலானது கால்சியத்தைப் பெற்றுக் கொள்கிறது. இதனால் எலும்பானது வலுவிழக்கிறது. ஆண்களுக்கு டெஸ்ட்ரோஸ்ட்ரான், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஆகிய பாலினச் சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடுகளினால் எலும்புச்சிதைவு ஏற்படுகிறது.\nஎலும்புச்சிதைவினால் எலும்பின் கட்டுறுதியும், அடர்த்தி மற்றும் பருமனும் குறையும். எளிதில் நொறுங்கக்கூடிய அல்லது முறிவு ஏற்படக்கூடிய நிலையில், எலும்புகளில் மாற்றம் ஏற்படும். இந்நோய் ஆண்களை விடப் பெண்களையே அதிகம் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முப்பத்தைந்து வயதுக்கு அதிமான பெண்களுக்கும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் எலும்புச்சிதைவு நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. தைராய்டு மற்றும் பாரா தைராய்டு குறைபாடும் ஒரு காரணமாக அமையலாம். புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ள ஆண்களும் இந்நோயின் பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகம். வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் எலும்பின் அடர்த்தியை அறியும் சோதனையான டெக்ஸா (DEXA ) செய்து கொள்வது அவசியமானது.\nபாதிப்பின் நிலையைப்பொறுத்து, இந்நோயானது இரண்டு வகைகளாக அறியப்படுகிறது.\nநிலை 1 - ஆஸ்டியோ பீனியா (மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர் சிகிச்சை, மருந்துகளால் குணப்படுத்தலாம் )\nநிலை 2 - ஆஸ்டியோ போரோசிஸ் (மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை, இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி மென்மையான உடற்பயிற்சிகள் கொண்ட சிகிச்சை)\nஇந்நோய்த் தாக்கத்திற்கு முதலில் ஆட்படுவது தண்டுவட எலும்புகள்தான். பின்னர், இடுப்பு மற்றும் மூட்டு எலும்புகள் படிப்படியாக பாதிப்பிற்கு உள்ளாகும். பாதிப்பின் அறிகுறிகளாக உடற்சோர்வு, களைப்பு, எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி, தசைவலி, உடல்தோரணையில் மாற்றம் ஆகியன உண்டாகும்.\nஇந்நோய் பாதித்தவர்கள் அதிகக் கடுமையான உடல் இயக்கம் சார்ந்த பணிகள், அதிக எடை தூக்குதல், குதித்தல், துள்ளுதல், வேகமாக ஓடுதல் ஆகிய செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கால்சியம் அதிக அளவில் அடங்கிய உணவுப்பொருட்களான கேழ்வரகு, பால், ஓட்ஸ், காலிபிளவர், பீன்ஸ், தயிர், பாதாம், கீரைவகைகள், முள்ளங்கி, மக்காச்சோளம் போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சூரிய ஒளியில் வைட்டமின் டி மிகுதியாக இருப்பதால் குறைந்தது ஒரு நாளைக்குப் பதினைந்து நிமிடங்களாவது உடலில் சூரிய ஒளி படும்படி பார்த்துக் கொள்வது சிறந்த பலனைத்தரும்.\nஅதிக நோய்ப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு இயன்மருத்துவத்தில் செய்யப்படும் சிகிச்சை மிகுந்த பலன் தரும். தண்டுவடப் பாதிப்பு மற்றும் வளைந்து கூன் விழுவதைத் தடுக்கவும், உடல் தோரணையை மேம்படுத்தவும், எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறவும் சில எளிய உடற்பயிற்சிகளையும், வலிபோக்கும் சிகிச்சைகளையும் இயன்முறை மருத்துவர் அளிப்பார்.\nபோதிய நோய் பற்றிய விழிப்புணர்வும், சத்தான உணவுவகைகளும், முழுமையான தொடர் மருத்துவ, இயன்முறைச் சிகிச்சைகளையும் மேற்கொண்டால் இந்நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழலாம்.\nமருத்துவம் - இயன்முறை மருத்துவம் | டாக்டர் க. கார்த்திகேயன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=62265", "date_download": "2019-06-26T14:00:12Z", "digest": "sha1:D5D5VV2GVR5NYZI5VYLVMM6R33L3ZXON", "length": 5806, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடியவர்கள் – முஸ்லீம் அமைச்சர்..\nதமிழீழ விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடியவர்கள் – முஸ்லீம் அமைச்சர்..\nதமிழீழ விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் எனவும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .\nதமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்க மாட்டார்கள் என்றும், குறித்த தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sathyanandhan.com/2016/08/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E2%80%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:15:37Z", "digest": "sha1:P6GXJUPLXOEVXUC5ZBWX3SZGJSDHFHI6", "length": 10025, "nlines": 207, "source_domain": "sathyanandhan.com", "title": "யாவள பெருவலி – சுகுமாரன் கவிதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ரசித்த கருத்துச் சித்திரம் – தமிழ் ஹிந்துவில்\nஜலதரங்கத்தில் தேசிய கீதம் →\nயாவள பெருவலி – சுகுமாரன் கவிதை\nPosted on August 17, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயாவள பெருவலி – சுகுமாரன் கவிதை\nகாலச்சுவடு ஆகஸ்ட் 2016 இதழில் சுகுமாரனின் கவிதை வலியை – வலிகளை மையமாகக் கொண்டது. வலிகள் பற்றிய பல கூர்மையான அவதானிப்புக்கள், பகிர்தல்கள், தரிசனங்கள் வெளிப்படும் கவிதை. நல்ல முயற்சி. முத்தாய்ப்பான பகுதி இது:\nஎனவே வலிகளை உணர ஒரே வழி\nஉண்மையில் இந்தக் கவிதைக்கு திசையில்லாமல் போன பின்பும், வலியின் பின்னணி அல்லது வலிமூலமான வன்முறையை நழுவ விட்ட பின்பும் இந்தப் பத்தி ஒரு ஆழ்ந்த தரிசனம் காட்டுகிறது.\nஒரு துளி நீரை நீரிலிருந்து பிரித் து வைப்பது என்றால் பௌதீக விதிகளின் படியோ, நடைமுறை சாத்தியமாகவோ ஒரு துளியை நீரினின்றும் பிரித்து எடுத்து வித்தியாசப் படுத்துதல் சாத்தியமற்றதே. எனவே கவிஞர் குறிப்பிட்டது மனோரீதியான ஆன்மீக ரீதியான ஒரு பிரித்தல்.\nவாழ்க்கையின் அனுபவங்கள் நம்மால் வலிகளாகவோ அல்லது மகிழ்ச்சிக்குரியவையாகவோ அல்லது சாதாரணமானதே என்றோ மூன்றாய்க் காணப் படுகின்றன. ஆனால் வாழ்க்கை என்பதை நீர் என்று உருவகம் கொண்டோம் என்றால் அதன் ஒரு துளி மட்டுமே ஒரு இனிய அல்லது கசப்பான அனுபவம். வாழ்க்கை மிகவும் சிக்கலான பலவற்றை ஒன்றாய்க் கொண்டது. புதிர்களும் மனித உறவுகளும் மண்டிக் கிடப்பது. இதில் ஒரு துளியாக ‘என் வலி’ என்னும் குறுகிய நோக்கைத் தனித்து வைத் து விட்டுக் கண்களை அகல விரித் து வாழ்க்கையை வியந்து நோக்கி அதன் விரிவுகளின் வழி மானுடம் பிரபஞ்சம் பல் லுயிர் பசுமை என விரியவே நாம் வாழ்கிறோம். கவித் துவமும் ஆன்மீகமும் ஒன்று படும் பதிவு இது.\nஇருந்தாலும் வலி இன்னும் செறிவுள்ள கவிதையை த் தரும் கரு.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ரசித்த கருத்துச் சித்திரம் – தமிழ் ஹிந்துவில்\nஜலதரங்கத்தில் தேசிய கீதம் →\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:52:28Z", "digest": "sha1:I4VEWIUMTI5AENYPNKXIRDTDJRMV7UZ6", "length": 6241, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறப் போராட்டம் (3 பகு, 3 பக்.)\n► உண்ணாநிலைப் போராட்டங்கள் (9 பக்.)\n► காந்தியம் (2 பகு, 32 பக்.)\n► குடியியற் சட்டமறுப்பு (1 பகு, 2 பக்.)\n► கையெழுத்து போராட்டம் (2 பக்.)\n► புரட்சிகள் (4 பகு, 17 பக்.)\n► பொருள் புறக்கணிப்பு (2 பக்.)\n► மறியல் போராட்டங்கள் (5 பக்.)\n► மனிதச் சங்கிலி போராட்டங்கள் (1 பக்.)\n\"எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2011, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:29:40Z", "digest": "sha1:XIC5YZHVR7ZXDXBZLK4KZA22LMICNYQF", "length": 48524, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீரா நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (September 2008)\nமுகமது மன்டானி (1988–தற்போது வரை)\nமீரா நாயர் (அக்டோபர் 15, 1957 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரிசா மாநில ரூர்கெலாவில் பிறந்தார்) நியூ யார்க்கில் இருக்கும் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.[1] மீராபாய் ஃபிலிம்ஸ் அவருடைய தயாரிப்பு நிறுவனமாகும்.\nஅவர் தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி பெற்றார். அவருடைய முதல் சலனப்படமான சலாம் பாம்பே (1988), கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருதினைப் பெற்றது மேலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான அகாடெமி விருது நியமனத்தையும் பெற்றுத் தந்தது. அந்தத் திரைப்படத்தின் மூலம் பெற்ற வருமானத்தை அவர், இந்தியாவில் சலாம் பாலக் டிரஸ்ட் என்ற பெயரில், தெருவோரக் குழந்தைகளுக்கான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தினார்.[2] அவர் அவ்வப்போது தன்னுடைய நீண்டகால படைப்பாற்றல் திறன்கொண்ட உடனுழைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபோரெவாலாவுடன் பணியாற்றுகிறார், இவரை அவர் ஹார்வர்ட்டில் சந்தித்தார்.\nதேசிய திரைப்பட விருது மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழா விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார், மேலும் அகாடெமி விருதுகள், கோல்டன் குளோப்ஸ், BAFTA விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு வாழ் இந்தியருக்கான 2007 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருதினையும் பெற்றுள்ளார், இந்த விருதினை வழங்கியவர் இந்திரா நூயி, தலைவர் மற்றும் முக்கிய செயல் அதிகாரி, பெப்சிகோ இன்க், மற்றும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான 2006 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்.[3]\nஅவருடைய மிகச் சமீபத்திய திரைப்படங்களில் அடங்குபவை, ரீஸெ வித்தெர்ஸ்பூன் உடன் இணைந்து எடுத்த வானிடி ஃபேர் , தி நேம்சேக், மற்றும் அமெலியா .[1]\n1 ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்\nமீரா நாயர் ஒரிசா மாநிலத்தின் ரூர்கெலாவில் பிறந்தார்,[4] அங்கு அவருடைய தந்தை வேலையில் இருந்தார். ஒரு மத்தியதர குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் அவர் தான் இளையவர். அவருடைய தந்தை ஒரு ஆட்சி அலுவலர், தாய் ஒரு சமூக சேவகர்.\nமீரா தன்னுடைய ஆரம்பகால பள்ளிப்படிப்பை ஹிமாச்சல பிரதேச ஷிம்லாவின் போர்டிங் பள்ளியான லோரெடோ கான்வெண்ட் தாரா ஹாலில் மேற்கொண்டார். அவர் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் சமூகவியலைப் படித்தார், அங்கு அவர் அரசியல் வீதி நாடகத்துடன் ஈடுபட்டு ஒரு அமெச்சூர் நாடகக் கம்பெனியில் மூன்றாண்டுகள் செயல்பட்டு வந்தார். 1976 ஆம் ஆண்டில், 19 வயதாகும்போது ஹார்வர்ட்டில் ஸ்காலர்ஷிப் பெற்று யு.எஸ்ஸுக்குச் சென்றார்[5], அங்கு அவர் தன் படிப்பை சமூகவியலில் தொடர்ந்தார்.[6] ஹார்வர்டில் இருக்கும்போது அவர் தன்னுடைய கணவர், புகைப்படக்காரர் மிட்ச் எப்ஸ்டீன் மற்றும் தன்னுடைய திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபோரேவாலா ஆகியோரைச் சந்தித்தார் பின்னர் படிப்படியாக ஆவணப் படங்களை எடுப்பதில் ஈடுபட்டார்.\nஒரு திரைப்படக் கலைஞராக அவர் தன்னுடைய தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், நாயர் நான்கு தொலைக்காட்சி ஆவணப்படங்களை இயக்கினார். மும்பை இரவுவிடுதி ஒன்றில் இருக்கும் ஆடை கலைபவர்களின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படமான இண்டியா கேப்ரே , 1986 ஆம் ஆண்டின் அமெரிக்கத் திரைப்பட விழாவில் ப்ளூ ரிப்பன் விருதினைப் பெற்றது. ஸலாம் பாம்பே (1988), சூனி தாராபொரேவாலாவின் திரைக்கதையுடன் அது, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்காக அகாடெமி விருதுக்கு நியமனம் செய்யப்பட்டதுடன் இதர விருதுகள் பலவற்றைப் பெற்றது. இன்று அது ஒரு முன்மாதிரி திரைப்பட கிளாசிக்காக கருதப்படுகிறது, மேலும் திரைப்பட மாணவர்களுக்கு அது ஒரு தரநிர்ணயமாக இருக்கிறது.\n1991 ஆம் ஆண்டு திரைப்படமான மிஸ்ஸிஸிப்பி மசாலாவில் டென்சில் வாஷிங்க்டன் மற்றும் சரிதா சௌத்ரி நடித்திருந்தார்கள், அந்தத் திரைப்படம் மிஸ்ஸிஸிப்பியில் வாழ்ந்துகொண்டு வேலைசெய்யும், நாடிழந்த ஒரு உகாண்டா நாட்டு-இந்தியக் குடும்பத்தின் வாழ்க்கைக் குறிப்பினைக் கொண்டிருந்தது. திரைக்கதை மீண்டும் சூனி தாராபோரேவாலா அவர்களால் இயற்றப்பட்டு, மைக்கெல் நோசிக் அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. 1995 ஆம் ஆண்டில், கிறிஸ்டைன் பெல் அவர்களின் புத்தகமான தி பெரெஸ் ஃபேமலி யின் திரைப்படத் தழுவல் வெளியானது. அந்தத் திரைப்படத்தில் மாரிசா டோமீய், ஆல்ஃப்ரெட் மோலினா, மற்றும் ஆஞ்சலிகா ஹஸ்டன் ஆகியோர் நடித்திருந்தனர், இந்தத் திரைப்படமும் மைக்கேல் நோஸிக் அவர்களால் தயாரிக்கப்பட்டது.\n16 ஆம் நூற்றாண்டு இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தூண்டுதல் திரைப்படம் Kama Sutra: A Tale of Love அதற்கும் கூட அவர் இயக்குநராக இருந்தார். நவீன் ஆண்ட்ரூஸ் நடித்த மை ஓன் கண்ட்ரி , ஹெச்பிஓ பிலிம்ஸ்க்காக தயாரிக்கப்பட்டது, சூனி தாராபோரேவாலாவின் ஆப்ரஹம் வர்கீஸின் நினைவுகளிலிருந்து தழுவப்பட்டது.\nஇன்றைய தேதி வரையில் நாயரின் மிகப் பிரபலத் திரைப்படமான மான்சூன் வெட்டிங் (2001), ஒரு தாறுமாறான பஞ்சாபி இந்தியத் திருமணம் பற்றியது, இதற்குத் திரைக்கதை அமைத்தவர் சபரினா தவான், இந்தத் திரைப்படத்திற்கு, வெனீஸ் திரைப்பட விழாவில் மிகவும் கௌரவமான தங்க சிங்கம் விருது வழங்கப்பட்டது. நாயர்தான் இந்த விருதினைப் பெறும் முதல் பெண்மணி.[7] தாக்கரேவின் வேனிடி ஃபேர் நாவலுக்கான நாயரின் 2004 ஆம் ஆண்டு பதிப்பில் ரியெஸ்ஸெ வித்தெர்ஸ்பூன் நடித்திருந்தார்.\nஅவருடைய திரைப்படம் தி நேம்சேக் , 2006 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் டார்ட்மௌத் கல்லூரியில் முதல்முறையாக திரையிடப்பட்டது, அங்கு நாயருக்கு டார்ட்மௌத் திரைப்பட விருது வழங்கப்பட்டது. மற்றொரு வெளியீடு 2006 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் நியூ யார்க்கில் இண்டோ-அமெரிக்கன் கல்ச்சரல் கௌன்சிலில் நடைபெற்றது. புலிட்ஸெர் பரிசு பெற்ற ஜும்பா லஹிரியின் நாவலிலிருந்து சூனி தாராபோரேவாலாவால் தழுவப்பட்ட தி நேம்சேக் மார்ச் 2007 இல் வெளியானது.\nஅவருடைய சமீபத்திய திட்டமானது மாயிஷா, இது கிழக்கு ஆப்பிரிக்கர்கள் மற்றும் தெற்கு ஆசியர்கள், திரைப்படங்கள் தயாரிப்பைப் பற்றி கற்றுக்கொள்வதற்கான ஒரு திரைப்பட பரிசோதனைக் கூடம்.[8] உகாண்டாவின் கம்பாலாவிலுள்ள நாயரின் வீட்டில் மாய்ஷா தலைமையிடமாகக் கொண்டிருக்கிறது.\nநியூ யார்க்கில் அமைந்த காதல் கதைத் தொகுப்பின் ரோமாண்டிக் டிராமாவான நியூயார்க், ஐ லவ் யூ என்னும் குறும்படத்தையும், மைக்ரேஷன் என்று பெயரிடப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு (இது கேட்ஸ் ஃபௌண்டேஷனால் நிதியளிக்கப்பட்டிருந்தது) பற்றிய ஒரு 12 நிமிட திரைப்படத்தையும் அவர் இயக்கினார்.[9][10]\n2007 ஆம் ஆண்டில், திரைப்படத் துறைக்கு நாயர் புரிந்த சேவையைப் பாராட்டி, ஒன்பதாவது பாலிவுட் திரைப்பட விருதுகளின்போது ப்ரைட் ஆஃப் இண்டியா விருதினை வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.[11][12]\nஅவருடைய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான அமெலியா அக்டோபர் 2009 இல் வெளியிடப்பட்டு பெரும்பாலும் எதிர்மாறான விமர்சனங்களையே கொண்டிருந்தது.[13][14]\nஜான்னி டெப்-நடிக்கும் பெரிய பட்ஜெட் திரைப்படமான சாந்தாராம் உட்பட இந்தியா, யு.கே மற்றும் ஒருவேளை ஆஸ்திரேலியாவிலும் நாயர் பல முடிக்கப்படாத திட்டங்களை வைத்திருக்கிறார். ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா, கிழக்கின் நவம்பர் 2007 ஆம் ஆண்டு முதல் ஃபிப்ரவரி 2008 ஆம் ஆண்டுவரை வரை நீடித்த வேலைநிறுத்தம் காரணமாக தயாரிப்பு தாமதப்பட்டது. சாந்தாராம் முடிவுக்கு வந்துவிடவில்லையென்றும் 2010 ஆம் ஆண்டில் அதன் தயாரிப்பு தொடங்கப்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக நாயர் தெரிவித்துள்ளார். அவருடைய எதிர்கால திரைப்படமான இம்ப்ரஷனிஸ்ட் 1920 ஆம் ஆண்டுகளின் அரசு புலத்தில் உருவாகும் கதையாக இருக்கும். மோஹ்சின் ஹமித்தின் 2007 ஆம் ஆண்டு நாவலான தி ரிலக்டண்ட் ஃப்ண்டமென்டலிஸ்ட் டுக்கான உரிமையையும நாயர் வாங்கிவைத்திருக்கிறார், அதனுடைய திரைப்பட தழுவல் 2009 ஆம் ஆண்டு வேனிற்காலத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.[15]\nநாயர், நியூ யார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அருகில் வசித்து வருகிறார், அங்கு அவர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் திரைப்பட பிரிவில் இணை பேராசிரியராக இருக்கிறார், அவருடைய கணவரான, பேராசிரியர் மஹ்மூத் மம்தானியும் அங்கு பாடம் எடுக்கிறார்.[16][17] நாயர் மற்றும் அவருடைய கணவர் 1988 ஆம் ஆண்டில் முதலில் சந்தித்தனர், அப்போது அவர் மிஸ்ஸிஸிப்பி மசாலா திரைப்படத்திற்கான ஆராய்ச்சிக்காக முதன் முறையாக உகாண்டா சென்றிருந்தார்.[5] நாயர் பத்தாண்டு காலமாக ஒரு ஆர்வம்மிக்க யோகா பழகுனராக இருந்துவருகிறார்; திரைப்படத்தைத் தயாரிக்கும்போது அவர் தன்னுடைய நடிகர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களை யோகா அமர்வுடன் அன்றைய நாளைத் தொடங்குமாறு செய்வார்.[18] நாயருக்கு ஸோஹ்ரான் மம்தானி என்னும் ஒரு மகன் இருக்கிறான்[19] 1991 ஆம் ஆண்டில் பிறந்த இவன், தற்போது ப்ராங்க்ஸ் ஹை ஸ்கூல் ஆஃப் சைன்ஸில் படித்து வருகிறான்.\nஜமா ஸ்ட்ரீட் மஸ்ஜித் ஜர்னல் (1979)\nசோ ஃபார் ஃப்ரம் இண்டியா (1982)\nசில்ட்ரன் ஆஃப் எ டிஸைர்ட் செக்ஸ் (1987)\nதி டே தி மெர்சிடெஸ் பிகேம் எ ஹாட் (1993)\nதி பெரெஸ் ஃபாமிலி (1995)[1]\nமை ஓன் கண்ட்ரி (1998) (ஷோடைம் டிவி)\n11'9\"01 செப்டம்பர் 11 (பிரிவு - \"இண்டியா\") (2002)[1]\nஸ்டில், தி சில்ட்ரன் ஆர் ஹியர் (2003)\nமைக்ரேஷன் (எய்ட்ஸ் ஜாகோ) (2007)[1]\nநியூயார்க், ஐ லவ் யூ (பிரிவு - \"கோஷெர் வெஜிடேரியன்\") (2008)[1]\n8 (பிரிவு - \"ஹௌ கான் இட் பி\n1985: சிறந்த ஆவணப் படம், குளோபல் வில்லேஜ் திரைப்பட விழா: இண்டியா கேபரே\n1986: கோல்டன் ஏதனா, ஏதன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: இண்டியா கேபரே\n1986: ப்ளூ ரிப்பன், அமெரிக்கத் திரைப்பட விழா: இண்டியா கேபரே\n1988: பார்வையாளர் விருது, கேன்ஸ் திரைப்பட விழா: சலாம் பாம்பே\n1988: கோல்டன் கேமரா (சிறந்த முதல் படம்), கேன்ஸ் திரைப்பட விழா: சலாம் பாம்பே\n1988: இந்தியில் சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருது]]: சலாம் பாம்பே\n1988: முதல் இடத்து வெளிநாட்டு திரைப்படங்களுக்கான நேஷனல் போர்ட் ஆஃப் ரிவியூ அவார்ட் சலாம் பாம்பே\n1988: மான்ட்ரியல் உலகத் திரைப்பட விழாவில் \"ஜூரி விருது\", \"மிகப் பிரபலத் திரைப்படம்\" மற்றும் \"ஈகுமெனிகல் ஜூரியின் விருது\": சலாம் பாம்பே\n1988: புதிய தலைமுறை விருது லாஸ் ஏஞ்செல்ஸ் திரைப்பட விமர்சகர்கள் அமைப்பு விருதுகள்\n1988: லிலியன் கிஷ் விருது (முழு நீளத் திரைப்படத்தில் சிறப்புடைமை), திரைப்பட விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பெண்மணி: சலாம் பாம்பே\n1991: கோல்டன் ஓசெல்லா (சிறந்த அசல் திரைக்கதை), வென்னிஸ் திரைப்பட விழா: மிஸ்ஸிஸிப்பி மசாலா (சூனி தாராபோரேவாலாவுடன்)[21]\n1991: விமர்சகர்கள் சிறப்பு விருது, சாவோ பௌலோ சர்வதேச திரைப்பட விழா: மிஸ்ஸிஸிப்பி மசாலா\n1992: சிறந்த இயக்குநர் (வெளிநாட்டுத் திரைப்படம்), இடாலியன் நேஷனல் சிண்டிகேட் ஆஃப் ஃபிலிம் ஜர்னலிஸ்ட்ஸ்]: மிஸ்ஸிஸிப்பி மசாலா\n1992: ஆசிய ஊடக விருது, ஆசிய அமெரிக்க சர்வதேச திரைப்பட விழா\n1993: சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான இன்டிபெண்டெண்ட் ஸ்பிரிட் அவார்ட் : மிஸ்ஸிஸிப்பி மசாலா\n2000: சிறப்புக் குறிப்பு (ஆவணப்படம் மற்றும் கட்டுரை), பையார்ரிட்ஸ் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆஃப் ஆடியோவிஷுவல் புரோகிராமிங்: தி லாஃபிங் கிளப் ஆஃப் இண்டியா\n2001: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்\n2001: லாடெர்னா மாஜிகா ப்ரைஸ் வெனிஸ் திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்\n2002: பார்வையாளர் விருது, கான்பெர்ரா சர்வதேச திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்\n2002: சர்வதேச திரைப்படத்திற்கான சிறப்பு விருது, ஜீ சினி அவார்ட்ஸ்: மான்சூன் வெட்டிங்\n2002: யுனெஸ்கோ விருது, வெனிஸ் திரைப்பட விழா: 11'9\"01 செப்டம்பர் 11\n2004: ஃபெய்த் ஹப்லீ வெப் ஆஃப் லைஃப் அவார்ட், ரோசெஸ்டர்-ஹை ஃபால்ஸ் சர்வதேச திரைப்பட விழா\n2007: \"கோல்டன் அப்ரோடைட்\", லவ் ஈஸ் ஃபோல்லி சர்வதேச திரைப்பட விழா (பல்கேரியா): தி நேம்சேக்\n1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாதெமி விருது: சலாம் பாம்பே\n1989: சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சீஸர் விருது (Meilleur film étranger ): சலாம் பாம்பே\n1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது]]: சலாம் பாம்பே\n1990: BAFTA திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்]]: சலாம் பாம்பே\n1990: ஃபிலிம்ஃபேர் சிறந்த இயக்குநர் விருது: சலாம் பாம்பே\n1990: ஃபிலிம்ஃபேர் சிறந்த திரைப்பட விருது: சலாம் பாம்பே\n1991: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விருது: மிஸ்ஸிஸிப்பி மசாலா\n1996: கோல்டன் சீஷெல், சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழா: Kama Sutra: A Tale of Love\n1999: சிறந்த திரைப்படம், வெர்ஸௌபெர்ட் இண்டர்நேஷனல் கே & லெஸ்பியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்: மை ஓன் கண்ட்ரி\n2001: ஸ்க்ரீன் இண்டர்நேஷனல் அவார்ட் (சிறந்த ஐரோப்பியமல்லாத திரைப்படம்), ஐரோப்பிய திரைப்பட விருதுகள்: மான்சூன் வெட்டிங்\n2001: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது: மான்சூன் வெட்டிங்\n2002: BAFTA திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்: மான்சூன் வெட்டிங்\n2003: சிறந்த இயக்குநருக்கான க்ளோட்ருடிஸ் விருது: மான்சூன் வெட்டிங்\n2003: கோல்டன் ஸ்டார், இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மார்ராகெச்: ஹிஸ்டரிகல் பிளைண்ட்னெஸ்\n2003: ஐரோப்பிய ஐக்கியத்திலிருந்து வந்த சிறந்த திரைப்படத்திற்கான சீஸர் விருது: 11'9\"01 செப்டம்பர் 11\n2004: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: வேனிடி ஃபேர்\n2007: சிறந்த திரைப்படத்திற்கான கோதம் விருது: தி நேம்சேக்\nஜிக்னா தேசாய்: பியாண்ட் பாலிவுட்: தி கல்சுரல் பாலிடிக்ஸ் ஆஃப் சௌத் ஏஷியன் டையாஸ்போரிக் ஃபிலிம் . நியூ யார்க்: ரௌட்லெட்ஜ், 2004, 280 பக். இல். ஐஎஸ்பிஎன் 0-415-96684-1 (இன்ப்.) / ஐஎஸ்பிஎன் 0-415-96685-X (hft.)\nகீதா ராஜன்: பிளையண்ட் அண்ட் கம்ப்ளெய்ண்ட்: கோலோனியல் இண்டியன் ஆர்ட் அண்ட் போஸ்ட்காலோனியல் சினிமா . வுமன் . ஆக்ஸ்ஃபோர்ட் (அச்சு), ஐஎஸ்பிஎன் 0957-4042 ; 13(2002):1, பக். 48–69.\nஅல்பனா ஷர்மா: பாடி மாட்டர்ஸ்: தி பாலிடிக்ஸ் ஆஃப் ப்ரோவோகேஷன் இன் மீரா நாயர்ஸ் ஃபிலிம்ஸ் . QRFV : குவார்டர்லி ரிவியூ ஆஃப் ஃபிலிம் அண்ட் வீடியோ , ஐஎஸ்பிஎன் 1050-9208 ; 18(2001):1, பக். 91–103.\nபிரதிபா பார்மார்: மீரா நாயர்: ஃபிலிம்மேகிங் இன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் பாம்பே . ஸ்பேர் ரிப் , ஐஎஸ்பிஎன் 0306-7971; 198, 1989, பக். 28–29.\nக்வாண்டோலின் அவுட்ரே ஃபோஸ்டர்: வுமன் ஃபிலிம்மேக்கர்ஸ் ஆஃப் தி ஆஃப்ரிகன் அண்ட் ஏஷியன் டையாஸ்போரா: டீகாலோனைசிங் தி கேஸ், லொகேடிங் சப்ஜக்டிவிடி . கார்போண்டேல், இல்.: சதர்ன் இல்லிநாய்ஸ் யூனிவர்சிடி பிரஸ், 1997. ஐஎஸ்பிஎன் 0-8093-2120-3.\nஜான் கென்னெத் முய்ர்: மெர்சி இன் ஹெர் ஐஸ்: தி ஃபிலிம்ஸ் ஆஃப் மீரா நாயர் . ஹால் லியானார்ட், 2006. ஐஎஸ்பிஎன் 1557836493, 9781557836496.\n↑ மீரா நாயர் ஈஸ் இண்டியா அப்ரோட் பெர்சன் ஆஃப் தி இயர் 2007 நியூஸ், ரீடிஃப்.காம் , மார்ச் 29, 2008.\n↑ 'நேம்சேக், ரித்விக் கடக்கிற்கான ஒரு காணிக்கை', என்கிறார் மீரா நாயர் - மீரா நாயர் பேட்டி இண்டியன் எக்ஸ்பிரஸ் , மே 22, 2005.\n↑ 5.0 5.1 நேம்சேக் பேட்டி நியூஸ் , ரீடிஃப்.காம் , மார்ச் 21, 2007.\n↑ மாய்ஷா ஃபிலிம் லாப்\n↑ மீரா நாயரின் சமீபத்திய திரைப்பட திட்டம் இந்திய சினிமா கூடங்களுக்கான செய்தியைக் கொண்டு செல்கிறது\n↑ 'ப்ரைட் ஆஃப் இண்டியா' விருதினை வழங்கி பாலிவுட் மீரா நாயரை கௌரவிக்கவுள்ளது ஹிந்துஸ்தான் டைம்ஸ் , ஏப்ரல் 23, 2007.\n↑ \" 'அமெலியா' (2009): விமர்சனங்கள்.\" மெடாகிரிடிக் .\n↑ \" 'அமெலியா' விமர்சனங்கள், திரைப்படங்கள்.\" ராட்டன் டொமேடோஸ், ஐஜிஎன் எண்டர்டெய்ன்மெண்ட் .\n↑ ஃபாகல்டி கொலம்பியா யூனிவர்சிடி ஸ்கூல் ஆஃப் தி ஆர்ட்ஸ்\n↑ இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரைபூனுடன் மீரா நாயரின் பேட்டி\n↑ விருதுகள் இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் .\n↑ மிஸ்ஸிஸிப்பி மசாலா - விருதுகள் இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் .\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மீரா நாயர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமீரா நாயர் புத்தகவிவரத் தொகுப்பு (யூசி மீடியா ரிசோர்சஸ் சென்டர் பெர்கெலி வழியாக)\n இண்டியா மூவீஸில் மீரா நாயரின் பேட்டி (மே 12, 2008 ஆம் நாளின்படி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது)\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் மீரா நாயர்\nமாயிஷா ஃபிலிம் லாப் உகாண்டாவின் கம்பாலாவில்\nமீரா நாயருடன் ஒரு கலந்துரையாடல் - ஹார்வர்ட் @ ஹோம் புரோகிராம்\nமீரா நாயர் பற்றிய முழுநீளத் குறிப்பு - மீராபாய்ஃபிலிம்ஸ்.காம் இல்\nசைட்வாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் டில் தி நேம்சேக் இயக்குநருடன் வீடியோ பேட்டி\nவீடியோ: ஏஷியா சொசைடியில் மீரா நாயர், டிசம்பர் 10, 2009\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2018, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/22/export.html", "date_download": "2019-06-26T13:52:46Z", "digest": "sha1:DLCMKYGQVV7RC7R7TTZHI75T72OEBRZI", "length": 16560, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்றுமதி மண்டலத்தின் லாபம் அதிகரிக்கும் | export profit will increase within next financial year in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n28 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n56 min ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\n1 hr ago தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏற்றுமதி மண்டலத்தின் லாபம் அதிகரிக்கும்\nஅடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் சென்னை ஏற்றுமதி மண்டலம் ரூ. 650 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் எனசென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல இணைச் செயலர் மாலினி சங்கர் தெரிவித்தார்.\nகோவை ஜி.ஆர்.டி.,அறிவியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் சென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல இணைச்செயலர் மாலினி சங்கர் கலந்து கொண்டார். இங்கு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nசென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலம், ஏற்றுமதியில் முன்னணி வகித்து வருகிறது. விசாகபட்டிணம், மும்பை,கொச்சி துறைமுகங்கள் தற்போது ஏற்றுமதி மண்டலமாக செயல்பட்டு வருகிறது. சென்னைத் துறைமுகத்தில்இதுவரை ரூ. 270 கோடி ஏற்றுமதி மூலம் வருமானம் கிடைத்துள்ளது. அடுத்த நி தி யாண்டிற்குள் ரூ. 650 கோடிவருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதம் (அக்டோபர்) முதல் ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தரூ. 650 கோடி ரூபாய் இலக்கை எளிதாக அடைய முடியும். இந்த ஏற்றுமதி மண்டலத்தின் வருவாயை அதிகரிக்க,வர்த்தகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.\nசென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டலத்திலிருந்து 15 முதல்20 சதவீதம் வரை சாஃப்ட்வேர், ஹார்ட்வேர்,எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 10 சதவீதம் வாசனை திரவியங்கள் ஏற்றுமதிசெய்யப்படுகின்றன. உணவுப் பொருட்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி சுகாதாரமிக்க மண்டலமாக செயல்படும்.இங்குள்ள வசதிகளைப் பற்றி அறிய எம்பிஇஇசட்.காம் என்ற வெப்சைட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இதன் மூலம் வர்த்தக விசாரணைகள் வருகின்றன.\nதடையற்ற இன்டர்நெட் இணைப்பு வசதிக்காக தொலைத் தொடர்புத் துறை இந்த ஏற்றுமதி மண்டலத்தில் 3 ஆயிரம்கோடி ரூபாயில் ஆப்டிக்கல் பைபர் மூலம் தொலைத் தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது என்றார்மாலினி சங்கர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-worried-over-exit-polls-predictions-351151.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T14:00:23Z", "digest": "sha1:XLTI4LIELJCIWSZYTHAPSVL6QQOZ4CTZ", "length": 19422, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்! | DMDK worried over Exit polls predictions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n36 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\n1 hr ago பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் மனதில் மட்டும் கவலை கலவரம்\nExit Polls Results 2019: ஊரெல்லாம் ஒரு மாதிரியான நிலவரம்.. தேமுதிகவினரின் கவலை- வீடியோ\nசென்னை: தேமுதிகவினர் அத்தனை பேரும் பெரும் கவலையில் உள்ளனராம். இது எதிர்பார்த்த கவலைதான்.. ஆனால் அவர்களால் இந்த கவலையைத் தாங்க முடியவில்லையாம்.\nகிட்டத்தட்ட அத்தனை எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளிலும் தேமுதிகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்றே கூறப்பட்டுள்ளது. இதற்கு கருத்துக் கணிப்பெல்லாம் உண்மையில் தேவையே இல்லை. கட்சித் தலைமை நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து தேர்தலுக்கு முன்பே தேமுதிக வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றே பலரும் கூறி வந்தனர்.\nஅதிமுகவுடன் ஒரு பக்கம் பேச்சு, திமுகவுடன் ரகசிய பேரம் என எந்தவிதமான தர்மமும் இல்லாமல் அதிரடி காட்டிய கட்சி தேமுதிக. தன்னைத் தேடி அத்தனை பேரையும் வர வைத்த கட்சி தேமுதிக. ஸ்டாலினே வீடு தேடிப் போக வேண்டிய நிலை வந்தது. கமல்ஹாசனும், சீமானும் மட்டும்தான் விஜயகாந்த் வீட்டுக்குப் போகவில்லை.\nடெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு\nஅதிமுகவை கிட்டத்தட்ட அனத்தி அனத்தியே 4 சீட்களை வாங்கியது. இன்ன பிற சலுகைகளையும் அது வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் வேட்பாளர்களை அந்த அளவுக்கு கட்சித் தலைமை அரவணைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிரச்சார செலவுக்குக் கூட காசு தரவில்லை என்ற புகார்களும் உள்ளன.\nதிண்டுக்கல் வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு போட்டுக்க நல்ல சட்டை கூட இல்லை. திண்டுக்கல் சீனிவாசன் சில செட் நல்ல சட்டை வாங்கிக் கொடுத்து கம்பீரமாக வலம் வர வைத்தார். திருச்சி வேட்பாளருக்கு செலவுக்குக் காசு இல்லாமல் கட்சித் தலைமையுடன் மோதிய விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதேமுதிகவின் மொத்த உழைப்பும், கவனமும், கள்ளக்குறிச்சி மீது திருப்பப்பட்டது. சுதீஷ் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று அங்கு குறி வைத்து செலவு செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தனர். இதனால் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின்போதே கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.\nமறுபக்கம் விஜயகாந்த் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை. சென்னையில் மட்டும் அவர் ஒரு சுற்று சுற்றி வந்தார். அவ்வளவுதான். அத்தோடு சரி. மொத்தத்தில் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் நிலையில்தான் தேமுதிக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் கட்சியினரை கலவரத்தில் ஆழ்த்தியுள்ளனவாம்.\nஒரு சீட் கூட கிடைக்காமல் போனால் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி விடும் என்று தேமுதிகவினர் அச்சத்தில் உள்ளனர். மறுபக்கம் சீமான், கமல் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ரஜினி வேறு வரப் போகிறார். எனவே தேமுதிகவின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியில் உள்ளதாக அவர்கள் கவலையுடன் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-leader-writes-letter-his-party-cadres-alliance-party-leaders-305995.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T15:03:05Z", "digest": "sha1:XQ2HITXPMLOZ3RIX3XGI2F22PNSYFNY2", "length": 29368, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "கழகத்தை அழிக்க கற்பனை குதிரையில் சவாரி செய்தவர்களின் தோல்வி.. உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம் | DMK Leader Writes Letter to His party Cadres and Alliance Party Leaders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n18 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n58 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகழகத்தை அழிக்க கற்பனை குதிரையில் சவாரி செய்தவர்களின் தோல்வி.. உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னை : கற்பனை குதிரையில் சவாரி செய்து, கழகத்தை வீழ்த்தி விடலாம் என நினைத்த அரசியல் எதிரிகளுக்கும் இனப் பகைவர்களுக்கும் இந்த தீர்ப்பு தோல்வியை கொடுத்து உள்ளதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.\n2ஜி ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தி.மு.க.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோரை நேற்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக தமிழகமெங்கும் கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாகவும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி வகையிலும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் இனி மீண்டும் தி.மு.க வீறு கொண்டு எழும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில்,\nஅப்பப்பா.. எத்தனை அவதூறுகள், எத்தகைய அவமானங்கள்.. என்னென்ன பழிச்சொற்கள் அத்தனையையும் சட்டரீதியான போராட்டத்தின் மூலம் வென்றுகாட்டி, நீதியின் முன் தன்னை நிரூபித்துள்ளது நம் உயிரணைய இயக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகம்.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அவர்கள் வழங்கியுள்ள வரலாற்று தீர்ப்பு, தி.மு.க மீது நிரந்தரமான ஒரு கறையை படிய வைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு எல்லாம் சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஆ.ராசா 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்குவதில், இந்திய மக்களின் நலன்கருதி பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாக, இந்தியா முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியது. அதே நேரத்தில் செல்போன் பயன்பாட்டுக்கான கட்டணம் வெகுவாக குறைந்தது. தொலைத் தொடர்புத்துறையில் ஓர் அமைதிப்புரட்சியாக இவை நிறைவேறிய நிலையில், மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் அளித்த அறிக்கையில், 2ஜி ஒதுக்கீட்டினால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்ற அனுமானக் கணக்கை வெளியிட்டார்.\nதி.மு.க.,விற்கு எதிரான சதி வலை\nநடைமுறைக்கும்- அனுமானத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதவர்கள் மட்டுமல்ல, தெரிந்தவர்களும் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக 2ஜி ஊழல் என அதை ஊதிப் பெரிதாக்கினர். தலைவர் கருணாநிதியின் ஆலோசனையுடன் செயல்பட்ட மத்திய அரசில் அங்கம் வகித்தவரான ஆ.ராசா மீது இதனால் பெரும்பழி சுமத்தப்பட்டது. அதுபோலவே, கழக மாநிலங்களவைக் குழுத் தலைவராக உள்ள சகோதரி கனிமொழி எம்.பி. மீதும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோரும், பரபரப்பை வித்திடுவதில் பெயர் பெற்ற ஊடகங்களும் நாள்தோறும் 2ஜி விவகாரத்தை பூதாகர மாக்கி, தேர்தல் களத்தில் தி.மு.கழகத்திற்கு எதிரான சதிவலைகளைப் பின்னத் தொடங்கினர்.\nஅரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பரப்புரைகளும், வழக்குகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. எந்த நெருக்கடியையும், எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளும் வலிமை மிகுந்த இயக்கமான தி.மு.க., 2ஜி வழக்கையும் துணிவோடு சட்டரீதியில் எதிர் கொண்டது.\nஆ.ராசாவும், கனிமொழியும் மாதக்கணக்கில் சிறைப்பட நேர்ந்தபோதும், ஊடகங்களில் உண்மை மறைக்கப்பட்டு, அவதூறுகள் பரப்பப்பட்ட நிலையிலும், அதன் காரணமாக தேர்தல் களங்களில் தி.மு.க. பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போதும், 2ஜி வழக்கை உறுதியுடன் எதிர்கொண்டது தி.மு.கழகம். முக்கியமாக, ஆ.ராசா அவர்களின் மீது தலைவர் கலைஞர் அவர்கள் முழு நம்பிக்கை வைத்து, அதனை பொதுக்கூட்ட மேடையிலேயே வெளிப்படுத்தி, \"அநீதி வீழும்.. அறம் வெல்லும்\", என்று உறுதிபட தெரிவித்தார்.\n‘மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும்' வழக்கு என்றாலே, வாய்தாமேல் வாய்தா வாங்கும் வாய்ச்சொல் வீராங்கனைகளை பார்த்த மண்ணில், ஒருமுறைகூட வாய்தா வாங்காமல் 2ஜி வழக்கை தி.மு.க. எதிர் கொண்டது. ஏறத்தாழ 7 ஆண்டுகள் நடை பெற்ற இந்த வழக்கில் 2017 டிசம்பர் 21 ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி, இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆதாரமற்றவை - கற்பனையானவை என்ற அடிப்படையில் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தபோது, இந்திய அளவில் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட பெரும்பழி நீங்கிய மகிழ்ச்சியை கழகத்தின் ஒவ்வொரு தொண்டரின் முகத்திலும், அகத்திலும் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.\n1200 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக சி.பி.ஐ. சுமத்திய குற்றச்சாட்டுகளை அலசி, ஆராய்ந்து தீர்ப்பை எழுதியிருக்கும் நீதிபதி ஓ.பி.ஷைனி குறிப்பிட்டிருக்கும் சில வாசகங்கள், இந்த வழக்கின் அரசியல் பின்னணியையும், சதிச்செயல்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. தலைவர் கலைஞரிடம் தீர்ப்பின் விவரங்களை தெரிவித்தபோது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கழக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nகழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் உயிரணைய இயக்கத்தின் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி, உதயசூரியன் ஒளிபட்ட பனிபோல் விலகியதைக் கண்டு ஆர்ப்பரித்து, அக மகிழ்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.\nநெடிய சட்டப்போராட்டத்தில் தி.மு.கழகத்தின் பக்கம் நின்றவர்களை எல்லாம் என்றைக்கும் மறக்க முடியாது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தோழமைக் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் அமைச்சரும மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் உள்ளிட்ட பலரும் இந்த நியாயமான தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அவர்களுக்கும் என நெஞ்சார்ந்த நன்றி.\nவீறு நடை போடும் தி.மு.க\nகற்பனை குதிரையில் சவாரி செய்து, கழகத்தை வீழ்த்தி விடலாம் என நினைத்த அரசியல் எதிரிகளுக்கும் இனப் பகைவர்களுக்கும், நீதியின் துணையுடன் பதிலடி தந்துள்ளது கழகம்.வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை வெற்றிக் கொண்டாட்டமாக கழகம் முன்னெடுக்கும். தலைவர் கலைஞர் சொன்னது போல, அநீதி வீழ்ந்து, அறம் வென்றுள்ளது. அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும் வகையில் கழகம் எழுச்சி யுடன் வீறுநடை போடும். எதிரிகளின் எண்ணங்கள் தவிடுபொடியாகும் என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nதமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா\nஇப்படி பண்ணாதீங்க.. தள்ளிப்போங்க சார்.. நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/videos/ayodhya-case-enquiry-386016.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-26T13:55:54Z", "digest": "sha1:6T3PBUBQXEJFI4IPINOMHNOJHQYTX6Q6", "length": 10997, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி வழக்கு: இன்றில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅயோத்தி வழக்கு: இன்றில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nஅயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று முதல் விசாரிக்க உள்ளது.\nஅயோத்தி வழக்கு: இன்றில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nKallada Travels issue: கல்லடா நிறுவனத்துக்கு ஓராண்டு தடை\nRAHUL GANDHI: பின் வாங்கும் ராகுல் காந்தி இது தலைவருக்கு அழகில்லை- வீடியோ\nNusrat jahan & mimi: நிருபர்களை பார்த்து கத்திய பெண் எம்.பி.க்கள்- வீடியோ\nகல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை- வீடியோ\nரோஜாவுக்கு நடந்தது அராஜகம்.. நடிகை விஜயசாந்தி வேதனை-வீடியோ\nBalakot Mission பாலகோட் தாக்குதல் குறித்து இந்திய விமானிகள் பேட்டி- வீடியோ\nதேனி : அரசு வேலைக்காக வகுப்புகள் துவக்கம்.. மாணவ, மாணவிகள் பங்கேற்பு..\nதேனி : மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி.. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு..\nJharkhand men: இரவு முழுவதும் இளைஞருக்கு அடி, ஜார்க்கண்டில் கொலை- வீடியோ\nமாமாவைக் கூப்பிட்டு திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவராக்கிய ஜெகன்- வீடியோ\nKarnataka CM HD Kumarasamy: போர்வை கூட போர்த்திக்காமல்.. கட்டாந்தரையில் தூங்கும் குமாரசாமி- வீடியோ\nஇளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி- வீடியோ\nBigg Boss 3 Tamil: Meera Mitun Entry: சாக்க்ஷியின் கோவத்திற்கு இது தான் காரணமா\nபூவே பூச்சூடவா சீரியல் : சுபத்ரா பற்றிய ஆதாரங்களை பார்த்த சிவா-வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல் : முத்தரசு கட்டிய தாலியை கழட்டிய வெண்ணிலா- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/world/2019/jun/14/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-3171336.html", "date_download": "2019-06-26T15:00:06Z", "digest": "sha1:A4EIWPJ6S77YDHWSPHHC3XFU72QHBXOX", "length": 7596, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "மீண்டும் நெறிமுறைகளை தவறிய இம்ரான் கான்: வைரலாகும் விடியோ- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமீண்டும் நெறிமுறைகளை தவறிய இம்ரான் கான்: வைரலாகும் விடியோ\nBy DIN | Published on : 14th June 2019 04:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். அப்போது அவர் அந்த மாநாட்டின் நெறிமுறைகளை மீறி நடந்துகொண்ட விடியோ வைரலாகி வருகிறது.\nமாநாட்டின் போது அங்கு வருகை தந்த இம்ரான் கான் நேரடியாக சென்று தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். இதனிடையே அம்மாநாட்டின் தலைவர் அங்கு வருகை தந்தார். அப்போது மீண்டும் எழுந்து மறுபடி அமர்ந்துகொண்டார்.\nஎஸ்சிஓ மாநாட்டில் இம்ரான் கான் கலந்துகொண்ட விடியோப் பதிவை அவரது பிடிஐ கட்சி வெளியிட்டுள்ளது. இதில் இக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த மாநாட்டில் அனைத்து தலைவர்களும் நின்றுகொண்டிருந்த சூழலில் இம்ரானின் நெறிமுறைகளை மீறிய இந்த செயல் அம்மாநாட்டு தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக, சவூதி அரேபியாவில் நடைபெற்ற இதே மாநாட்டின்போது சவூதி அரசர் தன்னிடம் பேச வந்தபோதும், இதேபோன்று இம்ரான் சென்று அமர்ந்துகொண்டார். இந்நிலையில், இம்ரான் கான் இதுபோன்று 2-ஆவது முறையாக நெறிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-13012019", "date_download": "2019-06-26T15:04:08Z", "digest": "sha1:A5EV3GESCKZTAJYVB353MQJ3YAIMBIB7", "length": 16692, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 13.01.2019 | Today rasi palan - 13.01.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 13.01.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n13-01-2019, மார்கழி 29, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 11.42 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 11.05 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\n.இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத இனிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.\nஇன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 26.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 26.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.05.2019\nஇன்றைய ராசிப்பலன் - 26.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.06.2019\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilcnn.lk/archives/839957.html", "date_download": "2019-06-26T14:01:24Z", "digest": "sha1:6APLIDJU6HWHHUFKG4EVVIZJK5PHCQTO", "length": 7628, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "41 பேர் பலி..... வெடித்து சிதறிய விமான இன்ஜின்: திக் திக் நிமிடத்தின் வீடியோவை வெளியிட்ட பயணி", "raw_content": "\n41 பேர் பலி….. வெடித்து சிதறிய விமான இன்ஜின்: திக் திக் நிமிடத்தின் வீடியோவை வெளியிட்ட பயணி\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யவோ விமான நிலையத்தின் ஓடு பாதையில் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்து எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.\nAeroflot Superjet வகை விமானம் புறப்பட்டவுனயே தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் உடனடியாக தரையிறங்குமாறு எச்சரிக்கை விடப்பட்டது.\nவிமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியதும், ஓடுபாதையில் அதன் இஞ்சின் தீப்பிடித்து எரிந்ததில், 41 பேர் உயிரிழந்துள்ளனர் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\n78 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் அந்த விமானத்தில் இருந்தனர்.\nவிமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் விமானம் தீப்பிடித்து எரிந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.\nபயணி ஒருவர் கூறியதாவது, நான் விமானத்தில் இன்ஜின் முன்னால் உட்காந்திருந்தேன், திடீரென எல்லாம் உருக்கிப்போனது. இதனால் கார்பன் டை ஆக்ஸைடு விமானத்தில் உள்ளே உள்ளிழுக்கப்பட்டதால் அவரச கால கதவினை திறந்து தப்பிக்க முயன்றேன்.\nஆனால், முடியாத காரணத்தால் விமானத்தில் இருந்து குதித்து கீழே தப்பித்தேன் என கூறியுள்ளார்.\nபயணிகள் 55 நொடிகளில் பயணிகளை வெளியேற்றினாலும், தங்களது உடமைகளை எடுப்பதற்கு பயணிகள் தாமதப்படுத்தியதால் சிரமம் ஏற்பட்டது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆஸ்திரிய வலதுசாரி சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா\nதாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது\nமுகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு\nவட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு\nஇங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை\nநியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி\nவங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்\nஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ\nடப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி\nஇலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று\nரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு\nகல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள் சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilcnn.lk/archives/840221.html", "date_download": "2019-06-26T14:00:42Z", "digest": "sha1:VYCMYLPMZUD6FHEQR5BNBHRBTMXAGOD3", "length": 5555, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் வெறிச்சோடி காணப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!", "raw_content": "\nஇலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் வெறிச்சோடி காணப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்\nMay 6th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின தற்கொலை தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த தாக்குதலால் இலங்கை சுற்றுலாத்துறை முழுமையா பாதிக்கப்பட்டுள்ளது, இதை உணர்த்தும் விதமாக வெறிச்சோடி காணப்படுகிறது இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம்.\nஞானசாரரின் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nமுதலில் நாடு என்ற ஒன்று இருக்க வேண்டும் பின்னரே உயிரை கொடுக்க வேண்டும் பின்னரே உயிரை கொடுக்க வேண்டும்\nகாத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீச்சம் பழங்கள்…\nமகிந்தவின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமெரிக்கத் தூதுவர்\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nயாழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு நிகழ்வு\nயாழ் மாநகர முதல்வருக்கும் – சுவிஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nபிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்\nஅனைவருக்கும் இறுதியாகக் கூறிக் கொள்கிறேன் சிறையிலிருந்து விடுதலையான ஞானசார தேரர் ஆதங்கம்\nஇடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை\nஇந்தியத் தேர்தலில் மோடியின் கூட்டணி மாபெரும் வெற்றி மீண்டும் தோற்றது காங்கிரஸ்; தமிழகத்தில் தி.மு.கவின் அலை\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் சஹ்ரானின் மற்றொரு தோழர்\n’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு\nசமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்\nவாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/television/tag/Sharik%20Hassan.html", "date_download": "2019-06-26T14:58:07Z", "digest": "sha1:PZ57BKTX7UU25WXL5ZQSYE3F5NZRTSVR", "length": 6691, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Sharik Hassan", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபிக் பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக ஷாரிக் பலிகடா\nசென்னை (05 ஆக 2018): விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து சாரிக் ஹசன் வெளியேற்றப்பட்டார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://patrikai.com/i-am-not-satisfied-with-dmk-actor-radha-ravi-again-joined-admk/", "date_download": "2019-06-26T13:44:56Z", "digest": "sha1:VMNKCQ6SS7IVVV4LIYGDR3WXDGY7AYLV", "length": 14197, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "திமுகவில் எனக்கு திருப்தி இல்லை: அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ராதாரவி! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»திமுகவில் திருப்தி இல்லை: அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ராதாரவி\nதிமுகவில் திருப்தி இல்லை: அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ராதாரவி\nநயன்தாரா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்று கூறினார்.\nநடிகர் ராதாரவி ஆரம்பகால கட்டத்தில் திமுகவில் இருந்து பின்னர் அதிமுகவுக்கு தாவினார். அதைத்தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் பதவி வகித்தார். பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.\nஇந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என நயன்தாரா குறித்து கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தது.\nஆனால், ராதாரவி, நீங்கள் என்ன என்னை நீக்குவது நானே கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு திமுகவிலிருந்து விலகினார் ராதாரவி. இதையடுத்து கடந்த 2 மாத காலமாக அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகியிருந்த ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.\nஅதிமுகவில் இணைந்துள்ளது குறித்து பேசிய ராதாரவி, அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்று தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ராதாரவி அவர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து இன்று தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமீண்டும் திமுகவில் ஐக்கியமானார் ராதாரவி\nநடிகர் ராதாரவி வீட்டு முன் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிப்பு\n18ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘தாய்’ கழகத்தில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nMore from Category : சினி பிட்ஸ், தமிழ் நாடு\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sharechat.com/profile/103975514?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-26T15:25:19Z", "digest": "sha1:HQMGPWHGBW5JISRKJ5TJ77SH2LV36U5N", "length": 4308, "nlines": 112, "source_domain": "sharechat.com", "title": "vijay - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#👨 ஆண்களின் பெருமை my life la fullllla #👨 ஆண்களின் பெருமை\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#👨 ஆண்களின் பெருமை 😂😂😂Don't Believe Girls #👨 ஆண்களின் பெருமை\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#💑 காதல் ஜோடி #💑 காதல் ஜோடி\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#💇 அழகு குறிப்பு 👉 🙏 👫💟💟💟 நீங்கள் கண்டிடாத புது வீடியோ 👁🗨 காட்சிகள் இன்று ( 24.06.2019 ) உங்களுக்காக 💟💟💟👬🙏 #💇 அழகு குறிப்பு\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#👱♂STR விண்னைத் தான்டி வருவாயா #👱♂STR\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#👩 பெண்களின் பெருமை #👩 பெண்களின் பெருமை\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/jun/13/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3170420.html", "date_download": "2019-06-26T14:05:48Z", "digest": "sha1:FLE4QSKTCNK26UOX2ABBJ7E546VGO3JK", "length": 7244, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்\nBy DIN | Published on : 13th June 2019 09:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் மற்றும் புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 15 ஆம் தேதி தொடங்குகிறது.\nஇந்த இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னர் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும். கடந்த டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வில் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 33 பேர் வெற்றி பெற்று பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல தொகுதி-2 தேர்வில் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.15 பேர் தொகுதி 1-இல் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுத உள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசம் என்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத விண்ணப்பித்துள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் ஜெ. சுகந்தி தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 97864 41417, 94459 55451 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/world/2019/jun/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-3170816.html", "date_download": "2019-06-26T14:56:06Z", "digest": "sha1:JK4RMHBBW4HZXUP35KPTSAJVFS73S35D", "length": 8256, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டி:முதல் சுற்றில் போரிஸ் ஜான்சன் முன்னிலை- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nபிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டி: முதல் சுற்றில் போரிஸ் ஜான்சன் முன்னிலை\nBy DIN | Published on : 14th June 2019 04:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்சன் அதிக வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாக்கெடுப்புக்கு முன்னேறியுள்ளார்.\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யவதாக பிரதமர் தெரசா மே அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இறுதியாக அக்கட்சியின் 10 எம்.பி.க்கள், பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினர்.\nஇதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான முதல் கட்ட ரகசிய வாக்கெடுப்பு பிரிட்டன் மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில், போரிஸ் ஜான்சன் அதிபட்சமாக 114 வாக்குகள் பெற்றார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெர்மி ஹன்ட் 43 வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மிஷெல் கோவ் 37 வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.\nஅடுத்த சுற்றுக்கு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள குறைந்தது 17 வாக்குகளாவது பெற வேண்டும் என்ற நிலையில் மார்க் ஹார்பர், ஆண்ட்ரியா லெட்ஸம், எஸ்தர் மெக்வீ ஆகியோர் அதைவிடக் குறைவான வாக்குகள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினர். இதனால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 7 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/keerthy-act-new-movie", "date_download": "2019-06-26T15:02:25Z", "digest": "sha1:P4LJQ7TD5PTNRBCCWMDSR3PMZ7WH3WJF", "length": 9429, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "மீண்டும் நடிகையர் திலகம் பாணியில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் | keerthy to act in new movie | nakkheeran", "raw_content": "\nமீண்டும் நடிகையர் திலகம் பாணியில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ்\nசர்கார் படத்திற்கு பிறகு சில நாட்கள் ஓய்வில் இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் 'நடிகையர் திலகம்' படம் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இருக்கிறது படக்குழு. தற்சமயம் 'கீர்த்தி 20' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது...\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\nஆசிரியர் ஒருவர் பற்றி ஜோதிகா பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய தகவல்..\n‘அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும்’- ஜோதிகா கேள்வி\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nசென்னை மக்களின் நிலை குறித்து வருந்தும் டைட்டானிக் ஹீரோ...\n90ஸ் கிட்ஸை ஏமாற்றலாம், 2K கிட்ஸ்க்கு இது போதுமா\n‘நானே என்னை வைத்து படம் எடுங்கள் என்று கேட்டேன்’- ஜோதிகா கலகல பேச்சு\nஸ்கிரிப்ட் ரெடி... சிவகார்த்திகேயன் ரெடியா\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் செய்யும் சித்தார்த்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nஅந்த தகுதி OPS, EPS, சசிகலா, தினகரனுக்கு இல்லை... கே.சி.பழனிசாமி\nதிமுக, அதிமுக இரண்டும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nதங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி\nகடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_65.html", "date_download": "2019-06-26T14:01:00Z", "digest": "sha1:D4REAQ7TXWN4QBLWR3UJS5YIXEVEJDEX", "length": 8979, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாம்! - பசில் கூறுகிறார். - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாம்\nமுஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்கவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_177.html", "date_download": "2019-06-26T14:04:21Z", "digest": "sha1:DVKLV6THDO2FZYJETAD6XHEVWIXCYULH", "length": 12907, "nlines": 68, "source_domain": "www.pathivu24.com", "title": "கோட்டையை காதலர்களிடமிருந்து காப்பாற்ற இராணுவமாம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கோட்டையை காதலர்களிடமிருந்து காப்பாற்ற இராணுவமாம்\nகோட்டையை காதலர்களிடமிருந்து காப்பாற்ற இராணுவமாம்\nயாழ்.கோட்டையிலுள்ள தொல்லியல் பொருட்களை காதலர்களிடமிருந்து பாதுகாக்கவே இராணுவம் வந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் பிரிவு மற்றும் தொல்லியல் திணைக்களமென்பவை காவல்துறையின் காவலரண் ஒன்றினை கோரியிருந்தன.குறித்த காவல்துறையின் பாதுகாப்பிற்கென தெரிவித்தே பின்னர் படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளதாக தெரியவருகின்றது.\nஇந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் பிரிவு தற்போது குறித்த விடயம் தொடர்பில் மௌனம் காத்துவருகின்றது.\nஇதனிடையே யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த மினி முகாமை தான் இராணுவத்தினர் புதிதாக மாற்றி அமைத்து வருகின்றனர் என தொல்லியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ்.கோட்டை பகுதியினை இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு தருமாறு கோரிக்கை விடுத்து இருக்கின்றமை உண்மையே. ஆனால் அதற்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இதுவரையில் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை.\nகோட்டை பகுதி யுத்த காலத்தின் போது இராணுவ வசம் இருந்த போதிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கோட்டையை விட்டு பெருமளவான இராணுவத்தினர் வெளியேறி இருந்தனர்.\nஇருந்த போதிலும் அதற்குள் மினி முகாம் ஒன்றினை அமைத்து அதனுள் சுமார் பத்து தொடக்கம் பதினைந்து வரையிலான இராணுவத்தினர் கோட்டைப்பகுதிக்குள் நிலை கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது இராணுவத்தினர் கோட்டைக்குள் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.\nகோட்டைக்குள் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினர் அனுமதி கோரி இருந்தனர். அதற்கான எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை.\nதற்போது இராணுவத்தினர் முகாம் அமைப்பதாக கூறப்படும் செய்தி , இராணுவத்தினர் தாம் இருந்த மினி முகாமை மாற்றி வேறு இடத்தில் அமைக்கின்றனர்.\nகோட்டைக்குள் இராணுவத்தினர் மினி முகாம் அமைத்திருந்த கட்டடத்தை கையளிக்க கோரி இருந்தோம். அதானால் அந்த கட்டடத்தை எம்மிடம் கையளித்து விட்டு அருகில் தற்காலிக கட்டடங்களை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.\nஏற்கனவே இராணுவ தரப்பினருக்கு சொல்லப்பட்டு உள்ளது. மிக குறைந்த அளவிலான இராணுவத்தினர் தங்கும் மினி முகாம் ஒன்றே கோட்டைக்குள் இருக்கலாம் என அதனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாம் ஒரு மினி முகாமே என தெரிவித்துள்ளனர்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilan24.com/news/4919", "date_download": "2019-06-26T15:04:59Z", "digest": "sha1:O7LBKO5RNBSA6MOY4XPA3IDQMLRKTXRH", "length": 9834, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி உய்லி மவுரர் தேர்வு | Tamilan24.com", "raw_content": "\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nசுவிஸ் நாட்டில் அதிபராக நிதி மந்திரி உய்லி மவுரர் தேர்வு\nசுவிஸ் நாட்டின் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் அதிபரை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும். இந்த நிலையில் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇவர் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.\nஇவர் 7 உறுப்பினர்களைக் கொண்ட பெடரல் கவுன்சிலுக்கு (மந்திரிசபை) தலைமை தாங்குவார். அதே நேரத்தில் அவருக்கென்று சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது. மந்திரிகளுக்கு உள்ள அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படுகிறது.\nமேலும் அந்த நாட்டின் எரிசக்தி துறை மந்திரியாக வயோலா அம்ஹெர்டும், பொருளாதார துறை மந்திரியாக கரின் கெல்லரர் சுட்டரும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் \nகிளிநொச்சி மாவட்டத்தில் 3450 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்\nமுல்லைத்தீவு- முறிப்பு கிராமத்தில் சுமாா் 35 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்தனா்..(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3794 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு- குமுழமுனை வீதி வெள்ளத்தில் மூழ்கியது\nவெள்ளத்திற்குள் சிக்கிய கண்டாவளை பிரதேச செயலக அரச ஊழியா்கள்.. தீவிரமாக போராடி மீட்ட கடற்படை மற்றும் இராணுவம்(video)\n எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்.. மஹிந்த சீற்றம்.\nநாடாளுமன்றுக்குள் சிவில் உடையில் நடமாடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்..\nநாடாளுமன்றுக்குள் சபை நாகரிகத்தை மீறிய ஹிருணிகா.. எழும் விமர்சனங்கள்.\nஎதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக இழுபறி, விரைவில் பதிலளிப்பதாக கூறும் சபாநாயகர்.\nகண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் நெல்சிப் ஊழல்வாதிகள்..\nதேர்தல் தலையீடு- 18 ரஷ்ய தனிநபர்கள், 4 நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-06-26T15:02:52Z", "digest": "sha1:CY7OH32VOKQZ4BM6CBKUQDMYQHB7RCSN", "length": 3931, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மூடப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம் Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nHome / Tag Archives: மூடப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம்\nTag Archives: மூடப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம்\nவைரஸ் அச்சுறுத்தலால் மூடப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம்\n3rd April 2017 இலங்கை செய்திகள் Comments Off on வைரஸ் அச்சுறுத்தலால் மூடப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம்\nகண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி இன்று திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க அறிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் ஒரு வகை காய்ச்சல் பரவுவதாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சுமார் 500 மாணவர்கள் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தை நாடியுள்ளனர் என்று துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilcnn.lk/archives/824248.html", "date_download": "2019-06-26T14:03:17Z", "digest": "sha1:5W6343TPOPUWJ6TUPGHILIIZOFT5N3RW", "length": 5622, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அச்சுவேலி பொலிஸ் நிலைய வருடாந்த அணிவகுப்பு மாியாதை", "raw_content": "\nஅச்சுவேலி பொலிஸ் நிலைய வருடாந்த அணிவகுப்பு மாியாதை\nFebruary 13th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த மாியாதை அணிவகுப்பு மற்றும் வாகன பரிசோதனை கடந்த திங்கட்கிழமை(11) நடைபெற்றது.\nஅச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம் .டபிள்யூ ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் டீ.யூ.உடுகம சூரிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பரிசாதனைகளை மேற்கொண்டார்.\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\nபாதுகாப்பு என்ற போர்வையில் மக்களைத் துன்புறுத்தாதீர்கள் – ஜனாதிபதி, முப்படைத் தளபதிகளிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து\nஆளுநர் பதவியிலிருந்து நாம் விலகவேமாட்டோம் – ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விடாப்பிடி\nவெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nஅட்டன் – கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் நிர்க்கதி\nலொறியில் சிக்கி வயோதிபப் பெண் நசியுண்டு மரணம்\nமூன்று வாகனங்கள் மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\nஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nசுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள் – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்\nஅவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…\nபாதுகாப்பு என்ற போர்வையில் மக்களைத் துன்புறுத்தாதீர்கள் – ஜனாதிபதி, முப்படைத் தளபதிகளிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து\nஆளுநர் பதவியிலிருந்து நாம் விலகவேமாட்டோம் – ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விடாப்பிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://zeenews.india.com/tamil/health/a-study-says-at-least-one-years-gap-is-essential-between-maternity-313599", "date_download": "2019-06-26T14:08:31Z", "digest": "sha1:JGDZUMU23VPFDEYCHVCJ4LHAEZYGQGAQ", "length": 16023, "nlines": 106, "source_domain": "zeenews.india.com", "title": "கர்ப்ப காலங்களுக்கு இடையில் குறைந்தது ஒரு வருட இடைவெளி அவசியம்! | Health News in Tamil", "raw_content": "\nகர்ப்ப காலங்களுக்கு இடையில் குறைந்தது ஒரு வருட இடைவெளி அவசியம்\nபெண்களின் கர்ப்ப காலங்களுக்கு இடையே குறைந்தது ஒரு வருட இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது\nபெண்களின் கர்ப்ப காலங்களுக்கு இடையே குறைந்தது ஒரு வருட இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது\nபிரிட்டிஷ் கொளம்பியா பல்கலை கழகம் மற்றும் ஹாட்வர்ட் பல்கலைகழகம் இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில், பெண்களின் கர்ப்ப காலங்களுக்கு இடையே குறைந்தது ஒருவருட இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம் என தெரிவித்துள்ளது. சுமார் 150000 குழந்தைகளின் பிறப்புக்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஆரோக்கியமான குழந்தைகளை பெற தாய்மார்கள் குறைந்தது ஒரு வருடத்தில் இருந்து 18 மாதங்கள் வரையில் இடைவெளி விடுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக இந்த ஆய்வின் தலைமை மருத்துவர் Dr. வெட்னி நார்மன் தெரிவிக்கையில்... இந்த ஆய்வானது மூத்த பெண்மணிகளுக்கானது. மூத்த பெண்மனிகள் நெடுநாள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகையில், அடுத்தடுத்து மகப்பேறு அடைகின்றனர். இவ்வாறான செயல்பாடானது குழந்தையின் வளர்ச்சியினை பெருமளவில் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.\nஅதே வேலையில் இந்த இடைவெளியானது சிறிய வயது தாய்மார்களுக்கு பொருந்தும். தங்களுடைய ஆய்வில் பெரும்பாண்மை தகவல்கள் நடுத்தர வயது தாயினரிடம் இருந்த பெரப்பட்டது. இந்த தகவல்களின் படி குறைந்தது ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை தாய்மார்கள்கள் இடைவெளி பெருதல் வேண்டும். குறிப்பாக 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த இடைவெளியினை நிச்சையம் கடைபிடித்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் இந்த ஆய்வானது கனடாவில் உள்ள தாய்மார்களை மட்டும் கொண்டு நடத்தப்பட்டுள்ளதால், உலக ஆளவில் உள்ள தாய்மார்களுக்கு இந்த ஆய்வின் முடிவு பொருந்துமா என்பது கேள்விகுறி தான்...\nமேலைநாட்டில் பிரபலமாகும் தமிழரின் தொப்புள்கொடி தாயத்து முறை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
{"url": "http://nadunadapu.com/?cat=67&filter_by=popular", "date_download": "2019-06-26T15:25:58Z", "digest": "sha1:MPXQ777FBFBMSLTWTY7RUZZN7TJYIBEE", "length": 31459, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "தற்போதைய செய்திகள் | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\nதாயின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரி பூஜை\nகுழந்தை இல்லாத விரக்தியில் அப்படி பண்ணிட்டோம் – திருப்பூரில் கைதான வடமாநிலத் தம்பதி வாக்குமூலம்\nஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..\nஐபோன் 7 கருவியில் ஹெட்போன் ஜாக் எடுக்கப்பட்டதற்கான உண்மை காரணம் இது தான்.\nபெண்களை சீக்கிரம் உச்சமடைய வைக்க என்ன செய்ய வேண்டும்\nஉடலுறவில் ஆண் உச்சமடைய பல வழிகள் உண்டு. ஆனால் ஒரு பெண்ணை உச்சமடையச் செய்வதில் தான் ஆணின் வெற்றி இருக்கிறது என்று கூறுவார்கள். ஏனெனில் பெண்களை உச்சமடையச் செய்வது ஆண்களின் வேலை மட்டுமே அல்ல....\nபிரபாகரனின் மகனைக் கொன்ற சிறிது நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியீடு\nசமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா. தான் போர் நடைபெற்றவேளையில் வன்னி கூட்டுபடைத் தளத்தில் இருந்ததாகவும். தான் முள்ளிவாய்க்காலில் இருக்கவில்லை என்றும் நேரடியாக TV...\nடுவிட்டரில் லைவ் வீடியோ அறிமுகம்.\nடுவிட்டர் வலைத்தளம் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் வாயிலாக லைவ் வீடியோ ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான ட்விட்டர் செயலியில் லைவ் வீடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்றே,...\nகீழே தள்ளிவிடாமல், நாய்குட்டி போல் பின்னால் தொடர்ந்து வரும் பைக் ஓட்ட ஆசையா\nபோகிற வேகத்தில் ஓட்டுபவர்களை குப்புற தள்ளிவிடாமல், தேவைப்பட்டால் உரிமையாளரின் பின்னால் நாய்குட்டி போல் தானாகவே பின்தொடர்ந்து வரும் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை ‘ஹோண்டா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. சக்திவாய்ந்த என்ஜின் மற்றும்...\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n மாதவிடாயின் நிறத்தினை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளலாம்: அது உங்களுக்குத் தெரியுமா\nபெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா அந்நிறத்தினை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை குறிப்பிடலாம். அது உங்களுக்குத்...\n18.9 அங்குல நீளமான ஆணுறுப்பு கொண்ட நபர்: பார்த்தால் பயந்துவிடுவீர்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் -அதிர்ச்சி படங்கள்,வீடியோ)\nசத்திரசிகிச்சை மூலம் சிறிதாக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை மெக்ஸிகோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உலகிலேயே மிகப் பெரிய ஆணுறுப்பு கொண்ட நபராக விளங்குகிறார். இவரின் ஆணுறுப்பு 18.9 அங்குலங்கள் (48 சென்ரி மீற்றர்) நீளமானது என...\nநான் தலை கீழாத்தான் போடுவேன்… இலங்கை அணியில் வித்தியாசமாக பந்து வீசும் இளம் பவுலர்\nகோலாலம்பூர்: இலங்கை அண்டர் 19 அணியை சேர்ந்த கெவின் கொத்திக்கொடா என்ற பவுலர் மிகவும் வித்தியாசமாக பந்து வீசுவதால் வைரல் ஆகி இருக்கிறார். இவர் பந்து வீசும் போது மொத்த உடலையும் தலைகீழாக திருப்பி...\nமங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க\nமஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம். மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை...\nசாக்லெட் சாப்பிட்டால் முகப்பரு அதிகரிக்குமா\nபருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 வரை உங்களுக்கு எப்படி \nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்அ தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த எந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சி சாதகம் யாருக்கு பாதகம்… எத்தனை ஆண்டுகள்...\n12 வருஷத்துக்குப் பிறகு ஒரு திருநங்கையா அம்மா முன்னாடி நிக்கப்போறேன்” – திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்\n“ 'தர்மதுரை' படத்துக்குப் பிறகு சில சீரியல்களில் நடிச்சுட்டிருந்தேன். சினிமாவில் கொஞ்சம் இடைவெளி ஆரம்பித்ததும், நாம ஃபீல்டு அவுட் ஆகிடுவோமோனு பயம் வந்துடுச்சு. வாய்ப்பு தேடி ஒவ்வொரு ஸ்டூடியோவுக்கும் போனேன். ஓர் இடத்துல ரொம்ப...\nமனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார்கள். ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த...\nபெண்ணின் உடலில் ஆண் ஹார்மோன் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள்\nசில பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால், அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவர்களின் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களில் பல்வேறு...\nகட்டிலில் தாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை ஆண்களிடம் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆண்களாகவே அதைப்புரிந்து கொண்டு, தாங்கள் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். செய்யும் ஒவ்வொன்றையும் வாயால் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். அதையே...\nசர்க்கரை நோயால் உங்கள் இல்லற வாழ்க்கை சாத்தியமாகுமா\nசர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையால் தாம்பத்திய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்துவருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல்...\nபெண்ணுக்கும் பெண்ணுக்கும் லவ். காரணம் என்ன\nஇயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர்...\nமுட்டையை ஏன் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது தெரியுமா\nமுட்டையை பிரிட்ஜில் வைத்து உபயோகிப்படுத்தக்கூடாது. அதற்கான காரணங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம். வீட்டில் ப்ரிட்ஜ் இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் அனைத்தையும் வைத்து,...\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nநம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது. நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும்...\nஇரவு நேர ஸ்லீப்பர் பஸ்களில் அமோகமாக நடக்கும் விபச்சாரம்..\nபெண்கள் நிறைந்த பஸ்களில் 8 மணி நேர பயணத்தில் இந்த விபச்சாரம் அமோகமாக நடைபெறுகிறது. குறிப்பாக பணக்கார ஆண்களை ஸ்லீப்பர் பஸ்களில் குறிவைத்து ஈடுபடுவது தான் இந்த பெண் புரோக்கர்களின் டார்கெட். இதற்காக ஆண்லைனில் பல...\n10 நாட்களில் தலையில் இருந்து கொட்டிய முடியை மீண்டும் வளரச் செய்யும் சில வழிகள்\nதற்போது நிறைய பேர் தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுகின்றனர். தலைமுடி உதிர்வதை நினைத்து தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர். ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு மருத்துவ காரணங்கள் மற்றும் மரபணுக்கள் கூட காரணங்களாக இருக்கும். தலைமுடி உதிர்ந்தால், அதற்கான...\nபெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சொல்லும் மாதவிடாய்\nபெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். உங்கள் மாதவிடாய் நார்மலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம். பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள்...\nதுணி நாப்கின்களை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா\nஇன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி நாப்கின்களை பெண்கள் ஏனோ விரும்புவதில்லை. அதிகப்படியான பெண்கள் இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் மீண்டும்...\n1972 இல் யாழ்பாண மக்களின் வாழ்க்கை..\nகுத்துவிளக்கு திரைப்படம் 1972ஆம் ஆண்டு திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமானதாகும். இதன் பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் யாழ்ப்பாணம் வடமராட்சிப்பகுதியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. கட்டிடக்கலை நிபுணரான வி. எஸ். துரைராஜா தயாரித்த இத்திரைப்படத்தில் இரு...\nஉங்களுக்கு சர்க்கரைவியாதி உள்ளது என சுட்டிக்காட்டும் நீங்கள் அறிந்திராத 5 அறிகுறிகள்\nபொதுவாக ஆண்கள் 40 வயதுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி, இதய நோய்கள் மன அழுத்தம் என பல நோய்கள் தாக்குகின்றன. இதற்கு 30 களிலேயே நீங்கள் ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைபிடித்தால்...\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2019-06-26T13:46:55Z", "digest": "sha1:2WPVEA62BGAT2RCSNC6AXV223HJOUILG", "length": 9447, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "சுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nசுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம்\nசுதந்திர தின விழாவையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n* 14-ந்தேதி- இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் சுதந்திர ஜோதி ஓட்டம் நடக்கிறது.\n* 15-ந்தேதி- தேசிய கொடியேற்றத்துடன், பாரதமாதா வணக்க நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.\n* 16-ந்தேதி- பாரதியார் இல்லத்தில் இருந்து இரு சக்கர வாகன பேரணியை மத்திய மந்திரி மேனகாகாந்தி தொடங்கி வைக்கிறார்.\n* 18-ந்தேதி- விருதுநகரில் காமராஜர் நினைவிடத்தில் மத்திய மந்திரி சதனாந்த கவுடா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.\n* 18-ந்தேதி- மகளிரணி சார்பில் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், தியாகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.\n* 20-ந்தேதி- தூத்துக்குடியில் வ.உ.சி. சிதம்பரனார் நினைவிடத்தில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மலர் அஞ்சலி செலுத்துகிறார். மற்ற தியாகிகளின் நினைவிடத்துக்கு பல மத்திய மந்திரிகள் வருகை தர உள்ளனர்.\nசுதந்திர தினத்தன்று அனைவரும் காதி அல்லது கைத்தறி அணிவோம் என்று உறுதி எடுத்து கொண்டு அனைவரும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டால் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றியதாகும்.\n2 ஆண்டுகளில் ஊழல், பெண் பாதுகாப்பின்மை குறைந்துள்ளது\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nபோராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும்\nஆர்.எஸ்.எஸ். தேசிய பொதுக் குழு கோவையில் 19-ந்தேதி…\nமனுதாக்கல் செய்தார் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆர� ...\nநடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் கிடை� ...\nகாங்கிரசால் கோஷ்டி பூசல் இன்றி இருக்க ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-06-26T14:06:58Z", "digest": "sha1:2S5HRI3A3OEFJCCAZXOYSD26JXU6I4EW", "length": 8583, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன் |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nவடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன்\nஉ.பி.,யில் ராகுல்காந்தி படுதோல்வி, அகிலேஷ் மனைவி டிம்பிள் தோல்வி அதேபோல தெலுங்கானா முதல்வர் ராவின் மகள் கவிதா தோல்வி, கர்நாடகாவுல குமாரசாமி மகன் தோல்வி.\nஇப்படி இந்தியா முழுக்க ஊழலுக்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு எதிராகவும் வாக்களிக்கிறார்கள் மக்கள்.\nஆனால் இங்க,வருடத்தின் பலநாட்களை தலைமறைவாய் கழித்து, 11 வழக்குகளில் பினை வாங்கித் திரியும் கார்த்திக் சிதம்பரத்தையும்,\n75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட்கட்டி பினையில் வந்திருக்கும் பாரி வேந்தரையும்,\nஃபைபர் கேபிள் திருட்டில் பல கோடி மோசடி செய்த கார்ப்ரேட் தயாநிதி மாறனையும்,\n26000 கோடி ஒழச்சி சம்பாதிச்சு இலங்கைல முதலீடு பண்ண ஜகத் ரட்சகன், டிஆர் பாலு போன்ற சாராய ஆலை அதிபர் களை யும்,\n2G கேஸில் திகாரில் இருந்த கனிமொழியையும், ராசாவையும்,\nஇலங்கையில் தமிழ் இனம் அழிந்ததற்கு காங்கிரஸே காரணன்னு சொன்ன திமுக, ரெண்டுபேரும் சேந்து ஓட்டு கேட்டவங்களை தேர்ந்தெடுத்து விட்டு,\nவெட்கமே இல்லாமல் வடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மானத் தமிழன்.இதுல இவிங்கதான் அதிகம் படிச்சிட்டாங்களாம் \nஇந்த சம்பவத்த பண்ணிட்டு, தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டுனு சொல்வது பெருமையல்ல, வெட்கம்…..\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு…\nமோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமே கொண்டுவந்த திட்டங்கள் -\nஅரக்கோணம் அம்பானி - ஜெகத்ரட்சகன் குறித்து திமுக மவுனம் ஏன்\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/13938-this-adorable-pixar-short-about-a-stray-kitten-and-pit-bull?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-06-26T14:18:16Z", "digest": "sha1:SITDKBAH2RNHK5E4OONBNK5GCRAT7GNR", "length": 1531, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கிட்புல் : பயங்கரப் பூனை", "raw_content": "கிட்புல் : பயங்கரப் பூனை\n1984 ஆம் ஆண்டிலிருந்து பிக்சர் நிறுவனம் மிகச் சிறந்த குறும்படங்களின் மூலம் தன்னை நிருபித்துவருகிறது.\nஅதன்வகையில் \"Shorts\" எனும் தொடர்ச்சியான அவர்களின் தொடர்கள் மூலம் சொல்லவரும் விடயம் மிகச்சிறிது ஆனால் அதன் தயாரிப்பும் அமைப்பும் இனிமையாக மனதை வருடிவிடும் வல்லமை படைத்தவை. இதோ அண்மையில் \"kitbull\" எனும் ஒரு பயங்கர பூனைக்குட்டியின் கதையை அனிமெஷன் குறும்படமாக வெளியிட்டுள்ளது. இது நிச்சயம் இதயம் தொட்டு கண்ணீரை வரவழைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-06-26T14:20:14Z", "digest": "sha1:COYPHCBREWFZYHXV4ACHVIMMDJSYBKVU", "length": 8200, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பொய் வழக்கு", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபொய் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு\nமும்பை (29 மார்ச் 2019): பொய் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முஸ்லிம்களுக்கு ரூ 2லட்சம் நஷ்ட ஈடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தல்\nநாகூர் (22 ஜன 2019): தாமி என்கிற தமிம் அன்சாரி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.\nலஞ்சம் கிடைக்காததால் கோபம் - காய்கறி கடைக்கரர் மீது போலீஸ் பொய் வழக்கு\nபாட்னா (27 ஜூன் 2018): லஞ்சமாக காய்காறி கொடுக்காததால் கோபமடைந்த பீகார் போலீஸ் காய்கறி கடைக்கார சிறுவன் மீது பொய் வழக்கு போட்டு மூன்று மாதம் சிறையில் அடைத்துள்ளனர்.\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://patrikai.com/vivekh-pays-a-tribute-to-poet-kannadasan/", "date_download": "2019-06-26T13:57:10Z", "digest": "sha1:5PLNJPV5KVSXNP43VSTNMLHZ36S2FOF7", "length": 10840, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "\"தாராள பிரபு \" படத்தில் கண்ணதாசனாக நடிக்கும் விவேக் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»“தாராள பிரபு ” படத்தில் கண்ணதாசனாக நடிக்கும் விவேக்….\n“தாராள பிரபு ” படத்தில் கண்ணதாசனாக நடிக்கும் விவேக்….\nவெள்ளிப்பூக்கள் படத்தை தொடர்ந்து நடிகர் விவேக் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார்.\nஅதை தொடர்ந்து அடுத்து அவர் மற்றொரு பெரிய படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாலிவுட்டில் ஹிட் ஆன “விக்கி டோனர்” படத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் தமிழாக்க பெயர் “தாராள பிரபு ” இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்,\nஅந்த படத்தில் தான் விவேக் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். Annu Kapoor நடித்த ரோலில் விவேக் தமிழில் நடிக்கிறார். அதில் அவர் பெயர் கண்ணதாசன் . இது கண்ணதாசனுக்கு நான் சமர்ப்பிக்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார் விவேக்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபிரபு தேவா நடிக்கும் குலேபகாவலி ஸ்டில்ஸ்\nஇரு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் த்ரில்லர்\nமனம் புண்படாதபடி திரைப்படங்களை விமர்சியுங்கள்\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.loudoli.com/", "date_download": "2019-06-26T14:00:40Z", "digest": "sha1:PV3B7QM2C725W42HI6TR4QUC46BJ2Q73", "length": 42420, "nlines": 203, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech", "raw_content": "\nPUNG தன்னுடைய Lite Version ஆகிய Pubg Lite Pc இந்தியாவில் launch செய்ய உள்ளது. இதன் சிறப்பம்சமாக முன்பதிவு ஆரம்பித்துள்ளது (Free registration) . முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இலவச ஸ்கின்(Skin) போன்ற இலவச பொருட்களை PUBG தரப்பிலிருந்து தரப்படும் இவை அனைத்துமே Pre registration செய்தவர்களுக்கு மட்டுமே. முன்பதிவு 20-06-2019 முதல் 03-07-2019 வரை நடைபெறும் அதற்குள்ளாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் அப்படி செய்தவர்களுக்கு 11-07-2019அன்று இமெயில் மூலம் Promo code தரப்படும் . அதை பயன்படுத்தி இலவச ஸ்கின் மற்றும் இலவச பொருட்களை பெறலாம் Pre registration செய்ய Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலமாக சுலபமாக Pre registration செய்து கொள்ளலாம் . Pre registration செய்ய உங்களுக்கு Pubg Account தேவை இல்லையெனில் Create செய்து கொள்ளவும்.\nபகிர்வு அதன் இயல்பான செயல்பாடு விரிவாக்க மற்றும் மேல் சில செர்ரிகளை சேர்த்து அண்ட்ராய்டு பகிர்வு அதிகரிக்கிறது.\nமுக்கியமானது: கணினி கட்டுப்பாடு போல் இருப்பதால், படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற கோப்புகளைப் பகிர்வது வேலை செய்யாது நான் Android Bug Tracker (https://goo.gl/LVRuFT) இல் டிக்கெட் ஒன்றைத் திறந்து விட்டேன், சீக்கிரம் சிக்கலைத் தீர்க்க முடியுமென்று நம்புகிறேன். தயவுசெய்து காத்திருங்கள்.\n• அண்ட்ராய்டின் சொந்த பங்கு உரையாடலை மாற்றவும் [1]\nChrome Chrome இலிருந்து Android இன் சொந்த பகிர்வு உரையாடலைத் தொடங்கவும் [2]\nAdded சில கூடுதல் ஸ்மார்ட்ஸுடன் URL குறுக்குவழி\nSimple இது எளிமையானது மற்றும் விரைவானது.\nDirect நேரடி பகிர்வு இல்லை. பதிலளிக்காத உரையாடலை வினாடிகள் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.\nItems உருப்படிகளை பட்டியலின் மேற்புறத்தில் பின் / நீக்க, அவற்றை மறைக்க அல்லது மறுபெயரிட நீண்ட நேரம் அழுத்தவும்.\nLight ஒளி, இருண்ட மற்றும் கருப்பு தீம் இடையே தேர்வு செய்யவும்.\nList பட்டியல் மற்றும் கட்டம் தளவமைப்புக்கு இடையில் மாறுவதற்கான விருப்பம்.\nஉங்களுக்கு பிடித்த பயன்பாடுகளிலிருந்து உங்களுக்கு பிடித்த இசையை நீங்கள் கேட்கும்போது, உங்கள் தொலைபேசியின் வழிசெலுத்தல் பட்டியில் அல்லது நிலைப் பட்டியில் மியூசிக் விஷுவலைசரைக் காண்பிக்கும் முதல் வகையான பயன்பாடு முவிஸ் ஆகும். ரூட் தேவையில்லை.\nதிரையில் நவ்பார் இல்லாத சாதனங்களில் வேலை செய்கிறது\nஉங்கள் தொலைபேசியில் திரையில் நவ்பார் இல்லையா எந்த கவலையும் இல்லை, நீங்கள் இன்னும் உங்கள் வன்பொருள் Navbar மேலே பயன்பாட்டு நிகழ்ச்சி Visualizer செய்ய முடியும்.\nவீடியோக்கள் மீது பார்வையாளர் காட்சிப்படுத்துகிறது\nமூவிஸ் உங்கள் மியூசிக் பிளேயை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு பிடித்த வீடியோ பயன்பாடுகளில் காட்சிப்படுத்தலைக் காண்பிப்பதன் மூலம் உங்கள் வீடியோ அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.\nஎல்லையற்ற வடிவமைப்பு பட்டியல் - தினசரி புதுப்பிக்கப்பட்டது\nதினசரி புதுப்பிக்கப்படும் எல்லையற்ற விஷுவலைசர் வடிவமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது, அது அங்கு முடிவடையாது. உங்களுக்கு பிடித்த பட்டியலில் அவற்றை சேர்க்கலாம் மற்றும் உங்கள் தேவைகளை பொருத்து அவற்றை திருத்தலாம்.\nஇப்போது புதிய 'துகள்கள்' மற்றும் 'ஸ்ரீ வைவ்' வடிவங்கள் கடையில் சேர்க்கப்பட்டுள்ளன.\n பின்னர், உங்கள் சொந்த காட்சிப்படுத்தல்களை உருவாக்க உங்கள் வடிவமைப்பு மனதை கட்டவிழ்த்து விடுங்கள் அல்லது எங்கள் உள்ளடிக்கிய கிரியேட்டர் கருவியைப் பயன்படுத்தி ஏற்கனவே உள்ள வடிவமைப்புகளை மாற்றலாம்.\nஉங்கள் படைப்புகளை மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் உங்கள் வடிவமைப்பிற்கான அவர்களின் அன்பைக் கண்டறியலாம்.\nசாதனங்கள் முழுவதும் பயன்படுத்த உங்களுக்கு பிடித்த வடிவமைப்புகள் மற்றும் படைப்புகள் அனைத்தையும் ஒத்திசைக்கலாம்.\nFirefox Send முடிவடையும் குறியாக்கம் மற்றும் தானாக காலாவதியாகும் ஒரு இணைப்பு ஆகியவற்றை நீங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். எனவே, நீங்கள் தனிப்பட்டவற்றைப் பகிர்கிறீர்கள், உங்கள் பொருள் எப்போதும் ஆன்லைனில் இருக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nFirefox Send பெரிய கோப்பு அளவைப் பகிர்ந்து கொள்வது எளிது - தொழில்முறை வடிவமைப்பு கோப்புகளைப் பகிர்ந்துகொள்வது அல்லது கூட்டுப்பணியாளர்களுடன் ஒரு விளக்கக்காட்சியில் ஒத்துழைப்பது சரியானது. அனுப்பவும் நீங்கள் விரைவாக 1 ஜி.பை. கோப்பு அளவுகள் பகிர்ந்து கொள்ளலாம். 2.5 ஜி.பை. வரை கோப்புகளை அனுப்புவதற்கு இலவச ஃபயர்பாக்ஸ் கணக்கிற்காக பதிவு செய்யவும்.\nஇந்த அப்ளிகேஷன் காண லிங்கை கீழே கொடுத்துள்ளோம் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும்\nGoogle பயணிகள் உங்கள் அத்தியாவசிய தகவலை ஒரே இடத்திலேயே ஒழுங்கமைத்து, ஆஃப்லைனில் கூட கிடைக்கச் செய்வதன் மூலம் உலகத்தை எளிதாக ஆராய்கின்றனர். Gmail இல் இருந்து அருகிலுள்ளவற்றை, தனிப்பயனாக்கக்கூடிய நாள் திட்டங்கள் மற்றும் உங்கள் பயண முன்பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்பாட்டு பரிந்துரைகள் கிடைக்கும்.\nஉங்கள் பயண முன்பதிவுகள் தானாகவே Gmail இலிருந்து சேகரிக்கப்பட்டு தனிப்பட்ட பயணங்களாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பயணத்திலும் நாள் திட்டங்கள், செய்ய வேண்டியவை, உணவு மற்றும் பான பரிந்துரைகள் மற்றும் பல உள்ளன.\nஉங்கள் விமானம், ஹோட்டல், வாடகை கார் மற்றும் உணவு விடுதி முன்பதிவுகளை தனித்தனியாக தேடாமல் ஒரு இடத்தில் பார்க்கலாம்.\nஉலகின் சிறந்த இடங்களில் பல நூற்றுக்கணக்கான, உங்கள் நலன்களை மற்றும் கிடைக்கக்கூடிய நேரம் அடிப்படையில் நீங்கள் தனிப்பயனாக்கலாம் என்று ஒரு வரைபடத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரபலமான நாள் திட்டங்களைக் கண்டறியவும்.\nநீங்கள் பிரபலமான இடங்கள் அருகில் இருக்கும்போது (மற்றும் அவை திறந்திருந்தாலும்) அத்துடன் மற்ற பயணிகளிடமிருந்து மதிப்பாய்வுகளையும் தரவரிசைகளையும் காணும்போது கண்டுபிடிக்கவும்.\nஒவ்வொரு பயணமும், சிறந்த இடங்கள் மற்றும் உட்புறங்கள் அல்லது வெளிப்புறங்கள் போன்ற பயனுள்ள வகைகளாக தானாக ஒழுங்கமைக்கப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றிய கருத்துகளை கொண்டுள்ளது. உலகின் பல இடங்களுக்கு, நீங்கள் உள்ளூர் பரிந்துரைகளையும் பயண உதவிக்குறிப்புகளையும் சாப்பிடுவீர்கள்.\nதனியுரிமைக்கு சமரசம் செய்யாமல் உங்கள் புகைப்படங்களை உள்ளுணர்வுடனும் வேகமாகவும் தேடுவதற்கு செயற்கை நுண்ணறிவை முற்றிலும் ஆஃப்லைனில் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை ஒழுங்கமைக்கும் முதல் கேலரி கியூரேட்டர் ஆகும்.\nதேட மற்றும் கியூரேட்டர் your உங்கள் புகைப்படங்களைக் கண்டுபிடிக்கும்.\nமற்ற கேலரிகளைப் போல தேவையற்ற அடுக்குகள் இல்லாமல், உங்கள் புகைப்படங்களுடன் செல்லவும் தொடர்பு கொள்ளவும் வசதியான சைகைகளையும் கியூரேட்டர் includes கொண்டுள்ளது.\nதனியார் மற்றும் குப்பை கோப்புறைகள்\nமேம்படுத்தப்பட்ட தேடல் மற்றும் செயற்கை நுண்ணறிவு\nமேலும் வழி. (குறிப்பு: Google Photos, மக்கள் அங்கீகாரம்)\nஆல்பங்கள் - மறுபெயரிட, நீக்க மற்றும் பிடித்ததாக சேர்க்க நீண்ட நேரம் அழுத்தவும்.\nபுகைப்படங்கள் - புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்க நீண்ட நேரம் அழுத்தி இழுக்கவும், பின்னர் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, ஒரு ஆல்பத்தை கிளிக் செய்து அதில் புகைப்படங்களை நகர்த்தவும்.\nபுகைப்பட பார்வையாளர் - மூடுவதற்கு கீழே ஸ்வைப் செய்க. விரைவான உருட்டுக்கு சின்னங்கள் மேலே இடதுபுறமாக வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.\nஎந்த ஆப்ஸ் லிங்க்-யை கீழே கொடுத்துள்ளோம் . அதன் பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும்\nடச் லாக் என்பது ஒரு பிரபலமான பயன்பாடாகும் 3 மில்லியன் முறை. பயணிகள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் வயதானவர்கள் அல்லது விரல் நுனியில் விரல் நுனியைக் கொண்டிருக்கும் எந்தவொரு நபரும் அது பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவை தொடுதிரை மற்றும் பொத்தான்களில் திட்டமிடப்படாத செயல்களைத் தடுக்கும் வகையில் தடையின்றி தங்கள் சாதனத்தின் காட்சி அனுபவிக்க அனுமதிக்கின்றன.\nதேர்வு செய்ய மரம் திறத்தல் முறை, அத்தகைய எங்களுக்கு விரைவு தட்டு, கைரேகை மற்றும் PIN (கடவுச்சொல்)\n• திரை காட்சி பூட்டு\n• முகப்பு பக்க விசைகள், திரும்பும் விசைகள், தொகுதி விசைகள் மற்றும் மிக சமீபத்தில் பயன்படுத்தப்படும் பயன்பாட்டு விசைகள் உள்ளிட்ட மெய்நிகர் அல்லது உடல் விசைகளை பூட்டு\n• அழைப்பு பாதுகாக்கவும் - தற்செயலாக தொடுவதன் மூலம் தற்செயலான அழைப்புகளைத் தடுக்கலாம். பாக்கெட் பதில் மற்றும் அழைப்பு அழைப்புகளைத் தடுக்கவும்\n• மேலோட்டமான ஐகானைத் தட்டுவதன் மூலம் திரையைத் திறக்கவும்\n• சாதன கைரேகை வாசகருடன் திரையைத் திறக்க\n• அழைப்புகள் போது முகம் தொடுதல் தடுக்க\n• பாக்கெட் பதில் அல்லது அழைப்புகளை புறக்கணிப்பது தடுக்கிறது\nதற்செயலான துண்டிப்புகளைத் தடுக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான அழைப்பு.\nQR குறியீட்டின் வலுவான உதவி கருவி: நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினாலும் அல்லது சுரங்கப்பாதையை எடுத்துக்கொண்டாலும் உங்கள் மின்னணு டிக்கெட் ஸ்கேன் செய்வதற்கு இரண்டாவது முறை மட்டுமே எடுக்கப்படும்.\n★ சமையல் ஒரு நல்ல உதவி. பயன்பாட்டை திரையில் வைத்துக்கொள்வதால் நீங்கள் செய்முறையை படிக்கலாம்\n★ பெரிய நீருக்கடியில் வீடியோ எடுக்க. இந்தத் திரையில் நீர் தொடுவதைத் தடுக்க குறுக்கீடு தடுக்கிறது\n★ உங்கள் வழிசெலுத்தல் எந்த குறுக்கீடு: நீங்கள் ஒரு வரைபடத்தை திறந்து உங்கள் பாக்கெட்டில் வைக்க முடியும்\nஉங்களுடைய திரையில் உரைகளை நகலெடுக்கையில் அல்லது உங்கள் தொலைபேசியில் உள்ளடக்கத்தை காண்பிக்கும் போது உங்கள் திரை தானாகவே தூங்கப் போவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை\n★ மொபைல் கேம்களை ஒரு அற்புதமான கேஜெட் திரை உறைவிப்பான்: திரைகளில் மற்றும் பொத்தான்கள் தொடுதல் காரணமாக இன்னும் தற்செயலான நிறுத்துதல் அல்லது வெளியேறும்\n★ உடல் அல்லது மெய்நிகர் விசைகள் தனிமைப்படுத்தப்பட்ட பூட்டு- up: நீங்கள் உங்கள் புகைப்பட ஆல்பம் மூலம் பார்த்து அல்லது ஒரு விளையாட்டு விளையாடி, நீங்கள் எளிதாக கட்டுப்பாட்டை தக்க வைத்து கொள்ள முடியும்\nஒரு கையில் சினிமாவை அனுபவிக்கவும்: உங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி தொடரை குறுக்கிடாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்\nஇது ஒரு வரைதல் குழுவாக மாற்றுவதற்கு ஒரு வினாடி நேரத்தை எடுக்கிறது: உங்கள் வரைபட திறமையை வளர்த்துக் கொள்ள உதவுவதற்கு ஒரு நல்ல கருவி\nஎப்போது வேண்டுமானாலும் ஒரு பாக்கெட் மியூசிக் பிளேயராக உங்கள் MV ஐ திருப்புங்கள்\n★ திரையில் பூட்டவும் மற்றும் ஒரு இசை நிகழ்ச்சியில் ஒரு மார்க்கீ அல்லது ஒளிரும் குச்சியை உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தவும்\n★ வரைபடங்கள் செய்ய நல்லது\n★ பூட்டப்பட்ட திரையில் இயக்கவும் மற்றும் உங்கள் ஓட்டுநர் பாதுகாப்பானதாக ஆக்கவும்\n> மழை நான் சரியான திரை காட்டப்படும் போது நான் உறுதியாக இருக்க முடியும் காட்டப்பட்டுள்ளது என் சவாரி உள்நுழைவு வருகிறது\nஇந்த பயன்பாடு அணுகல் சேவைகளைப் பயன்படுத்துகிறது\nமென்மையான விசைகள் மற்றும் உடல் பொத்தான்கள் மீது திட்டமிடப்படாத செயல்பாடுகளைத் தடுக்க, டச் லாக் அணுகல்தன்மை சேவையைப் பயன்படுத்துகிறது, இது ஸ்மார்ட்போன் உறுதியாகக் கைப்பற்றுவதற்கு விரல் ஊடுருவும் திறன் அல்லது ஒத்த அறிகுறிகளுடன் உதவுகிறது.\n- மென்மையான முக்கிய பூட்டு (முகப்பு, மீண்டும், சமீபத்திய பயன்பாட்டு பொத்தான்கள்)\n- தொகுதி விசைகளை பூட்டு\n- கைரேகை சென்சார் பூட்டு / திறத்தல்\n- முழு திரையில் முறையில்\nநீங்கள் ஒரு தனியுரிமை எச்சரிக்கை பெறலாம் என்றாலும், தொடு லாக் எப்போதும் கண்காணிக்கவோ, சேகரிக்கவோ அல்லது பயனரின் தனியுரிமை தரவைப் பயன்படுத்தவோ கூடாது.\nAbstruct அதிகாரப்பூர்வ வால்பேப்பர் பயன்பாடானது, விருது பெற்ற OnePlus வால்பேப்பர் கலைஞர் ஹம்பஸ் ஓல்ஸன் தயாரிக்கப்பட்டது. பயன்பாட்டின் மூலம் மட்டுமே 300 க்கும் மேற்பட்ட பிரத்யேக வால்பேப்பர்களைப் பெறுங்கள்\nஉங்கள் வீட்டில் திரையில் சில இனிப்பு தேவதை தூசி தட்டவும்\n• அனைத்து வால்பேப்பர்கள் 4K தீர்மானம் கிடைக்கிறது, இந்த பயன்பாட்டை எதிர்கால ஆதாரம் உள்ளது கவலைப்பட வேண்டாம், உங்கள் தரவு செலவில் சேமிக்க உங்கள் தரவின் சரியான அளவை தானாக வழங்குவோம்.\n• OnePlus 2 ஹம்பஸ் Olsson மூலம் அனைத்து உத்தியோகபூர்வ OnePlus வால்பேப்பர்கள் கிடைக்கும் சமீபத்திய OnePlus 7 ஒரே இடத்தில் அனைத்து, விரைவில் அது அங்கு கிடைக்கும்\n• ஹாம்பஸ் ஓல்ஸன் நேரடியாக பயன்பாட்டில் உள்ள அனைத்து உத்தியோகபூர்வ பரனோய்டு அண்ட்ராய்டு வால்பேப்பர்களையும் பெறவும்.\n• சுவாரஸ்யமான சில சுவாரஸ்யமான கனவுத் தோற்றங்களைக் கொண்ட வண்ணமயமான பல்வேறு பாணிகளில் இருந்து உங்கள் அருமை இயந்திரங்கள் சில குறைந்தபட்ச துடிப்பான தோற்றத்தை கொடுங்கள்\n• அனைத்து வால்பேப்பர்களையும் விருது பெற்ற OnePlus கலைஞர் ஹம்பஸ் ஓல்ஸன் தயாரிக்கிறார். உங்கள் சொந்த சாதனங்களில் பயன்படுத்த நீங்கள் விரும்பும் எல்லா படங்களும் முடிவடையும் பயன்பாடாகும்.\n• பயன்பாட்டை உங்கள் பிடித்த வால்பேப்பர்கள் மாற்ற எளிதாக செய்ய உங்களுக்கு பிடித்த வால்பேப்பர்கள் சேமிப்பு போன்ற அம்சங்கள் ஒரு இனிமையான நவீன வடிவமைப்பு கொண்டுள்ளது.\nபயன்பாட்டில் இடம்பெற்ற வால்பேப்பர் பாணியை அடையாளப்படுத்துவதற்காக, இன்கிரைட்: அப்ஸ்ட்ராக்ட் அண்ட் டெஸ்ட்ரக்ட் என்ற இரண்டு வார்த்தைகளே Abststruct என்ற பெயர்.\nஎன் ரசிகர்கள், உங்களிடமிருந்து நான் பெற்ற மிகப்பெரிய ஆதரவிற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மைய அடிப்படைக்கான என் எதிர்கால வால்பேப்பர் படைப்புகள் நான் பயன்படுத்தும், அதனால் அவ்வப்போது புதிய வால்பேப்பர்கள் பயன்பாட்டை சரிபார்க்கவும்\nபல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி உங்களிடம் ஒரு நேரம் கிடைத்தால், உங்கள் நண்பர்களிடமிருந்து முறித்துக் கொள்ளுங்கள். மிகவும் அன்பு <3\nகீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-யை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nதானியங்கி சொடுக்கர் நம்பகமான முறையில் நீங்கள் தேர்வு செய்த இடைவெளியில் உங்கள் திரையில் இலக்கு வைக்கப்படும் எந்த இடத்தையும் சொடுக்கி அல்லது தேய்க்கும்.\nதானியங்கி கிளிக் செய்தியை வேர் மற்றும் முழுத்திரை பயன்பாடுகளில் வேலை செய்யாது\nநீங்கள் எப்போதாவது ஒரு விளையாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியிருந்தால், ஒரே பொத்தானை மீண்டும் மீண்டும் தட்டவும் அல்லது முடிந்தவரை விரைவாக தட்டவும் ... நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம்.\nSimpleHat இல் எங்கள் குழு அனைத்து அம்சங்களையும் இலவசமாக வைத்திருப்பதாக உறுதிப்படுத்துகிறது. மிதமான விலையில் விளம்பரங்களைத் தவிர்ப்பதற்கான திறனை நாங்கள் எப்போதும் வழங்குகிறோம், மேலும் எங்கள் விளம்பரங்களை மற்ற அனைவருக்கும் முடிந்தவரை கட்டுப்பாடற்றதாக மாற்றுவோம்.\nஇந்த அப்ப்ளிகாடின் Linkயை கீழே கொடுத்துள்ளோம் அதை பயன்படுத்தி டவுன்லோட் சேந்து கொள்ளவும்.\nஉங்களின் வீடியோ மிகவும் அதிக அளவில் இருந்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எளிதாக மாற்றிக் கொள்ளலாம் இது உங்களுடைய Phone Memory சேமிக்கும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும்\nஇந்த கருவி வீடியோ கோப்புகளை சுருக்கியது மற்றும் உங்கள் தொலைபேசியில் அவற்றை சேமிக்கிறது.\nதரவுப் பயன்பாட்டைக் குறைக்க அதைப் பயன்படுத்தவும். ஒரு வீடியோவைக் கட்டுப்படுத்துவது facebook, google +, whatsapp போன்ற சமூக நெட்வொர்க்குகளில் பகிர்ந்து கொள்வது மிகவும் எளிது.\n- உயர்ந்த, சாதாரண, குறைந்த வீடியோ தரத்துடன் சுருக்கப்பட்ட வீடியோக்களை உருவாக்குகிறது\n- நட்பு இடைமுகம், பயன்படுத்த எளிதானது மற்றும் மிக வேகமாக\n- கிட்டத்தட்ட அனைத்து வீடியோ வடிவங்களையும் ஆதரிக்கிறது\n- நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட; வீடியோக்களைக் கொண்ட உங்கள் கேலரியில் உள்ள ஆல்பங்களைக் காண்பிக்கும்\n- மூலத்தை பராமரிக்கும் போது வீடியோவின் நகலை உருவாக்குகிறது\n- உருவாக்கப்பட்ட அனைத்து வீடியோக்களும் வீடியோ கேலரியில் ஒரு ஆல்பத்தில் கிடைக்கின்றன\n- வீடியோவின் சுருக்கத்தை அதிகரிக்க ஆடியோ அகற்றுதலை அனுமதிக்கிறது\n- நீண்ட வீடியோ, சுருக்க விகிதம் அதிகமாகும்\n- எம்பி 3 ஆடியோ கோப்புகளை வீடியோ கோப்புகளை மாற்றுகிறது\n- வீடியோக்களில் இருந்து வசனங்களை நீக்குகிறது\n- வீடியோ கிளிப்களைப் பகிர்ந்து கொள்கிறது. (மின்னஞ்சல் அனுப்புகிறது, YouTube இல் பதிவேற்றங்கள், முதலியன)\n- ARM மற்றும் X86 CPU களை ஆதரிக்கிறது (அத்தகைய இன்டெல் ஜென்ஃபோன் போன்றது)\n- ARMv7 NEON CPU மேம்படுத்தல்கள்\n- தரம் இழப்பு இல்லாமல் வீடியோ அமுக்கி, அதை முயற்சி\nஇந்த அப்ளிகேஷன் காண Linkகை கீழே கொடுத்துள்ளோம் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nHow To Install PUBG Mobile LITE using vpn in Tamil நீங்கள் Pubg Mobile LITE விளையாட வேண்டும் என்றால் மிக எளிதாக கொடுக்கப்பட்டுள்ள ...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nNEOLINE LiveWallpaper FREE NEOLINE என்பது 3D லைவ் வால்பேப்பர் ஆகும். CPU உள்ளே சிக்கலான உலகத்தைக் காண்க :) வேகமாக தரவு போக்குவரத்த...\nSuper Ear Tool: Aid in Super Clear Audible Hearing சூப்பர் காது கருவி உங்கள் காதுகளில் நேரடியாக தெளிவாக கேட்கக்கூடிய மற்றும் உரத்த ...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nCircuit Launcher 2018 - Next Generation theme,fast இப்போதே 2018 சுற்று தொடரை முயற்சிக்கவும். அண்ட்ராய்டு சிறந்த 2018 பயன்பாட்டு தொட...\nReachability Cursor: one-handed mode mouse pointer ஒரு கையில் சிரமமின்றி குறிப்பு தொடர் போன்ற பெரிய ஸ்மார்ட்போன்கள் கட்டுப்படுத்த கணின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/06/02121825/1244436/OIC-backs-legitimate-rights-of-people-of-Jammu-and.vpf", "date_download": "2019-06-26T15:17:52Z", "digest": "sha1:4SFQLP5PICAOVKHGYVYAZCL7OJEFBVAU", "length": 8245, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OIC backs legitimate rights of people of Jammu and Kashmir", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் - இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு வலியுறுத்தல்\nஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என மெக்காவில் நடந்த இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் உச்சி மாநாடு வலியுறுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ளன.\nகடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் 14-வது உச்சி மாநாடு சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. நேற்றுவரை நடைபெற்ற இந்த மாநாட்டில் தங்களுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர்.\nஇந்த மாநாட்டின்போது ‘ஐக்கிய நாடுகள் சபை முன்னர் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஜம்மு-காஷ்மீரில் வாழும் மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்' என வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.\nமேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் அரசியல் மற்றும் சமூக நிலவரங்களை கண்காணிக்க சவுதி அரேபியாவை சேர்ந்த யூசுப் அல்டோபே என்பவரை இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு நியமித்துள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபரின் சமரசத்தை ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கும் நிலையில் இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் கருத்தும் சிறப்பு தூதர் நியமனமும் இந்திய மக்களால் சற்று அத்துமீறலாகவே பார்க்கப்படுகிறது.\nகாஷ்மீர் பிரச்சனை | இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு\nஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம் அளிக்க பாகிஸ்தான் திடீர் ஆதரவு\nபாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி கல்லூரி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 4 பேர் பலி\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தூக்கில் போட இலங்கை அதிபர் உத்தரவு\nஅமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை - ஈரான் அதிபர் திட்டவட்டம்\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_661.html", "date_download": "2019-06-26T14:08:49Z", "digest": "sha1:XPHYO5VSJ4RPA3XWCLVUMHA2TGYPQLR7", "length": 14609, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "மாகாணசபை அனுமதியின்றி காணி பிடிப்பு? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மாகாணசபை அனுமதியின்றி காணி பிடிப்பு\nமாகாணசபை அனுமதியின்றி காணி பிடிப்பு\nயாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிப்பதானால் நேரடியாக அரசாங்க அதிபர் மற்றும் நேரடியாக பிரதேச செயலாளர்களுக்கு மத்திய காணி அமைச்சு உத்தரவிடமுடியாது. மாகாண காணி அமைச்சின் ஊடாக செயற்படுத்த வேண்டும். மாகாண காணி அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும். இனி வரும் காலங்களில் காணி அமைச்சு எந்த தேவைக்குரிய காணிகளாக இருந்தாலும் சுவீகரிப்பு அறிவித்தலை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுப்பதற்கு முன்னர் மாகாண காணி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டுமென்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சுவீகரிப்பினைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இன்று (04) நடைபெற்றது.\nஇதன்போது, யாழ். மாவட்டத்தில் மண்டைதீவுப் பகுதியில் கடற்படையினரால் பொது மக்களின் 15 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கான விளம்பர அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போது வலி.வடக்குப் பகுதிகளில் காணி விடுவிப்பது போன்று பாசாங்கு செய்துகொண்டு மறுபுறத்தில் மண்டைதீவில் கடற்படையினர் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து வேலணை பிரதேச செயலர், மத்திய காணி அமைச்சின் செயலாளரினால் தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிற்கு தெரியப்படுத்தி அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொது மக்களின் ஆட்சேபனைகளையும் காணி அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 25 குடும்பங்களின் பதினைந்து ஏக்கர் காணிகள் சுவீகரிப்பதற்கான நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுவீகரிப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கோ மாகாண சபைக்கோ தெரியப்படுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பியதுடன் கடற்படையினரால் பொது நோக்கத்திற்காக காணிகளை சுவீகரிக்க முடியாது. காணி சுவீகரிப்பிற்கு எதிராக நீதிமன்றங்களிற்குச் செல்ல வேண்டுமாயின் நீதிமன்றத்திற்குச் செல்வோம். காணி சுவீகரிப்புக்கெதிராக உரிய தீர்மானத்தினை எடுக்க வேண்டும். 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபையின் அங்கிகாரத்தினைப் பெறாமல் எவ்வாறு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்” என பிரதேச செயலாளரிடம் கேள்வி எழுப்பினார்.\n”மாகாண சபைக்கு காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரியப்படுத்தினீர்களா படையினருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பாதுகாப்பின் நிமித்தம் எனின் மாகாண சபைக்கு தெரியப்படுத்த வேண்டும்” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nadunadapu.com/?p=152383", "date_download": "2019-06-26T15:12:59Z", "digest": "sha1:Y4C532Z5ACRW4OHVJWIB3Y3JICGXDCME", "length": 45805, "nlines": 275, "source_domain": "nadunadapu.com", "title": "12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23) பலன்கள்!! – ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் | Nadunadapu.com", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம்\nமீண்டும் ஒரு பிளவை சந்திக்கப்போகின்றதா அ.தி.மு.க -நல்ல தம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n – என்.கே. அஷோக்பரன் (பகுதி – 2)\nதீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி கவிழும் அச்சத்தில் அ.தி.மு.க- நல்லதம்பி நெடுஞ்செழியன் (கட்டுரை)\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23) பலன்கள் – ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர்\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23) பலன்களைத் ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nகுடும்பத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தினரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் நடந்து சொத்துகள் உங்கள் கைவந்து சேரும். நண்பர்கள் உங்களை அலட்சியப் படுத்துவார்கள். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் அவற்றை நேர்த்தியாக முடிக்கும் ஆற்றலும் உண்டாகும். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். காலநடைகளால் லாபம் உண்டாகும்.\nஅரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சில தடைகள் ஏற்படும்.\nமுழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு இந்த வாரம் பொதுவானப் பலன்கள் கலந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவமணிகள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று முத்திரை பதிப்பீர்கள்.\nபரிகாரம்: செவ்வாய், வெள்ளி ராகு கால நேரங்களில் துர்க்கையம்மனை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 17, 21.\nரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)\nபுதிய முதலீடுகள் செய்வது, செய்தொழிலில் சிறு மாற்றங்களைச் செய்வது ஆகியவை திட்டமிட்டபடி இனிதே நடக்கும். எதிர்ப்புகள் அகலும். தொழிலில் அவ்வப்போது தலைதூக்கும் பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.\nபொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நட்புடன் பழகி உரிய காரியங்களை சாதித்துக் கொள்ளவும்.\nவேலைப்பளு குறைவாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும்.\nஅதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகளுக்கு கொள்\nமுதல் லாபம் சிறப்பாக இருக்கும்.\nஅரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரமிது. கட்சி மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு இந்த நேரம் வரவேற்புகள் குறைவாக இருந்தாலும் திறமைகள் குறையாது. பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். சில்லறை செலவுகள் கூடும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.\nபரிகாரம்: “ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய ஜெய ராம்’ என்று ஜபித்தபடியே அனுமனை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 18, 20.\nமிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nநண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடத் திட்டமிடுவீர்கள். உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். உற்சாகமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வீர்கள். நல்ல பல செயல்களை செய்து வெற்றியடைவீர்கள். உங்களின் நடையில் மிடுக்கு ஏற்படும்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடியிலிருந்து விடுபட்டு பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவுடன் உயர் பதவிகள் தேடிவரும்.\nவியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலன்களை அனுபவிப்பீர்கள். விவசாயப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.\nஅரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். இதனால் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைத்துறையினர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.\nபெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் குளறுபடியான சூழ்நிலை நிலவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவும்.\nபரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும்.\nகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nவருமானம் தேவைக்கேற்ப இருக்கும். செயல்களில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயமே கிடைக்கும். தேவையான நேரத்தில் நண்பர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். தாயின் வழியிலிருந்து சில நன்மைகள் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படலாம்.\nஉத்தியோகஸ்தர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். விவசாயிகளின் அமோகமான விளைச்சலால் லாபத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தவும்.\nஅரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். அனைவரையும் அனுசரித்து நடந்துகொண்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் ஆடை அணிகலன்கள் வாங்குவர். குழந்தைகளால் பெருமை உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.\nபரிகாரம்: புதன்கிழமைகளில் மஹாவிஷ்ணுவை வணங்கி வரவும்.\nசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)\nஉங்களின் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். உங்களிடம் அனைவரும் அன்பாகவும் அனுசரணையாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். தன்னம்பிக்கை பலப்படும்.\nகுடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் மகிழ்ச்சியாக முடியும்.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.\nகூட்டாளிகளுடன் எச்சரிக்கையாக பழகவும். விவசாயிகள் கொள்முதலில் ஏற்றத்தைக் காண்பீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.\nஅரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். மேலிடத்தில் பாராட்டும் கிடைக்கும். கலைத்துறையினர் பணிகளை நேர்த்தியாக முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.\nபரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\nஉங்கள் ஆசைகள் பூர்த்தியாகும். நம்பிக்கை பலப்படும். குறுகிய கண்ணோட்டத்தை விட்டுவிட்டு நிலைமைகளை புரிந்து கொண்டு செய்படுவீர்கள். பொருளாதார வளம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.\nஅலுவலகப் பயணங்களைத் தள்ளிப்போடவும். வியாபாரிகள் முயற்சிகளில் பின் வாங்காமல் வெற்றி பெறுவீர்கள். விற்பனை பிரதிநிதிகள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டும் நலன் பெறலாம்.\nஅரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இருப்பினும் மக்களுக்கான போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல்நலத்தில் கவனம் தேவை. மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும்.\nபரிகாரம்: துர்க்கை வழிபாடு, புதனன்று பெருமாள் வழிபாடு உகந்தது.\nதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nபேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வீர்கள். இல்லத்திற்கு புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாகவே இருக்கும். செய்தொழிலில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். புதிய உற்சாகத்துடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராகவே முடியும்.\nஆகவே புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்க முயற்சிக்கவும். விவசாயிகள் கொள்முதலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.\nஅரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். அவற்றை நேர்த்தியாக முடித்துக்கொடுத்து பதவி உயர்வையும் பாராட்டையும் பெறுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். ஆகையால் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் அறிவியல் கல்வியில் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.\nபரிகாரம்: திங்கள்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 17, 21.\nவிருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nதேவைகள்பூர்த்தியாகும் நேரமிது. உங்கள் செயல்களை சரியாக செய்து முடிப்பீர்கள். சமயோசித பேச்சுத் திறமையால் உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களின் ஆற்றலை ஊக்குவிப்பீர்கள். வருமானம் எதிர்பார்த்தபடியே இருக்கும். மற்றவர்களுக்காக சிறு தியாகங்களையும் செய்வீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனமாக இருக்கவும். பிறரிடம் உங்கள் பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு இது முன்னேற்றகரமான காலம்.\nபுதிய வருமானத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் காண்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடை, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக செலவு செய்வீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மக்களுக்காக நீங்கள் செய்யும் போராட்டங்களைக் கட்சி மேலிடம் சந்தேகக் கண்ணோடு பார்க்கும்.\nகலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகளைத் தேடி இனிமையான செய்திகள் வரும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி தேவிக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 18, 20.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nஎதிர்பாராத நேரத்தில் இனிமையான செய்திகள் உங்களைத் தேடிவரும். குதூகலமான நேரமிது. செய்தொழிலில் புதிய யுக்திகளை அறிந்து கொள்வீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் தென்படும். எதிர்ப்புகள் மறையும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள்.\nவியாபாரிகள் பெரிய சந்தைகளை நாடிச்சென்று வியாபாரத்தை விரிவுபடுத்தவும். புதிய முதலீடுகளை செய்வதற்கு இது உகந்த வாரமல்ல. விவசாயிகளுக்கு குத்தகைகளால் ஏமாற்றமும் இழப்பும் உண்டாகும்.\nஅரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளிலும் வெற்றி அடைவீர்கள்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் செந்திலாண்டவரை தரிசிக்கவும்.\nஅனுகூலமான தினங்கள்: 20, 21.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nவெற்றிகள் சூழும். எந்த விஷயத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். சிறிய விஷயத்தையும் நுணுக்கத்துடன் செய்ய முற்படுவீர்கள். செய்ய முடியாமல் தள்ளிப்போயிருந்த காரியமொன்று தற்போது செயல்படத் தொடங்கும். வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வரும்.\nஉத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அமைதியாக அலுவலக வேலைகளைச் செய்வீர்கள். பொருளாதார வசதியில் எந்தக்குறைவும் ஏற்படாது.\nவியாபாரிகளைத் தேடிப் பலவகையிலும் லாபம் வரும். வாடிக்கையாளர்களை சந்தோஷப் படுத்துவீர்கள். விவசாயிகள் தானிய விற்பனையை லாபகரமாகச் செய்து முடிப்பீர்கள். போட்டிக்குத் தகுந்தவாறு நடவடிக்கை எடுப்பீர்கள்.\nஅரசியல்வாதிகள் பெரும் சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ரகசியத் திட்டங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் உற்றார் உறவினர்களை சந்தித்து உற்சாகமடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும்.\nபரிகாரம்: சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 20, 22.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nசெய்தொழிலில் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உடல் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். உடலாரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் அதற்கேற்றவாறு உழைக்க நேரிடும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். அதிக செலவழித்து எந்த செயலையும் செய்ய வேண்டாம்.\nஅரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் முழுமையாகக் கிடைக்காது. சக கலைஞர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் கணவரிடம் அன்போடு நடந்து கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.\nபரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 22, 23.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nசமுதாயத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்களால் பாராட்டப்படுவீர்கள். உற்சாகத்துடன் பொது நலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி பூத்துக்குலுங்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நெருங்கிப் பழகுவீர்கள். செய்தொழிலில் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற பலனை அடைவீர்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரிகள் துணிந்து முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் இரு மடங்கு லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளால் பலன் அடைவீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு யோசித்து முடிவு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும். இருப்பினும் யாரிடமும் வெளிப்படையாகப் பேசி பழக வேண்டாம். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் திட்டமிட்ட வேலைகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் பெற்றோரின் ஆதரவுடன் புதிய முயற்சிகளில்ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: நந்தீஸ்வரரை பிரதோஷ காலங்களில் வணங்கி வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 18, 23.\nPrevious articleராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nNext articleநயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்\nசி.ஐ.ஏவின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற இந்திரா காந்தியின் பெயர்: இந்திரா இந்தியாவுக்கு ‘எமெர்ஜென்சி’ அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nவிஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’: முதல் நாள் நிகழ்வு- (வீடியோ)\nஇறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி – இறந்தது எப்படி\nஅறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட மணிமேகலை\n‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ...\nசாலையோரம் நடந்து சென்ற பெண் மீது லாரி மோதி விபத்து: மகள் கண்முன்னே தாய்...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nமனதை ஆட்சி செய்யும் சந்திரன்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 24 முதல் 30 வரை\nகருணை தெய்வம் எங்கள் சாய்பாபா\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://ravisrinivas.blogspot.com/2009/07/32.html", "date_download": "2019-06-26T14:56:27Z", "digest": "sha1:JD77BOF4U57BFA27L5B52SJNVPMY7YTZ", "length": 38194, "nlines": 119, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: சுயபுராணம் அல்லது 32 கேள்வி பதில்", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nசுயபுராணம் அல்லது 32 கேள்வி பதில்\nசுய புராணம்-புலம்பல்-அலம்பல் அல்லது 32 கேள்வி பதில்\nபழி: பாஸ்டன் பாலா(ஜி) பாவம்: படிக்கும் உங்களுக்கு புண்ணியம்: எனக்குத்தான், அதை அடகு வைத்துவிட்டேன் :)\nநீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\n1.மதி கந்தசாமி நிறைய வாசிப்பவர்,\n2.சன்னாசி – படிக்க வேண்டிய பதிவர். புதிராக இருக்கும் இவர் என்ன பதில்கள் சொல்கிறார் என்பதை அறியும் ஆவல்\n3. கனடா வெங்கட்- பல்துறை அறிவு,ஆர்வம், . இப்படியாவது அவரை எழுத வைக்கலாம் என்ற எண்ணம் :)\n4. அருள் செல்வன் -அதிகம் வலைப்பதிவில் எழுதாத, அதிகம் படிக்கும் பதிவர். அவர் தன்னைப் பற்றி என்னதான் சொல்கிறார் என்பதை அறியும் ஆவல்\n5.பெயரிலி பெயரிலியைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன\n32 கேள்வி - பதில்\n1 உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nதூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் கடவுள் மாதிரி பாபா இணையத்தில் எங்கெல்லாம் பதிவு வைத்திருக்கிறார், என்ன எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் :).Snap Judgment ல் பதிவுகளுடன் தகவல்கள்,இணைய முகவரிகள் இருக்கும்.\nவாரத்திற்கு ஒரிரு முறை பார்த்துவிடுவேன். பிடித்த பதிவு என்று எதைத் சொல்வது :).\n2 நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா\nமாட்டேன், நட்பாகத்தான் இருப்பேன் :). முன்பு இணையம் மூலம் பல நண்பர்கள்/நண்பிகள் கிடைத்தார்கள்.பல நன்மைகள்,சில பிரச்சினைகள் ஏற்பட்டன.. VSNLல் பலரின் அக்கவுண்ட் ஹாக் செய்யப்படதில் நானும் பாதிக்கப்பட்டேன். இப்போது பேஸ்புக், ஹய்5 போன்றவற்றில் சேருமாறு நண்பர்கள் வற்புறுத்தினாலும் சேர்வதில்லை. நேரமின்மை முக்கிய காரணம்.\n3 ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\nமுகத்தை, தெரிந்தவர் என்றால் கை குலுக்க முயல்வேன். சிலவற்றை கவனித்தாலும் வெளியே சொல்வதில்லை :).\n4 உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\nதன்னம்பிக்கை, அதற்குப்பின் உள்ள (நான் இருப்பதாக நினைக்கும்) அறிவாற்றல்.பிடிக்காது சிறிது சோம்பேறியாய் இருப்பது,இன்னும் படித்தபின் எழுதலாம் என்று தள்ளிப்போடுவது. தன்னம்பிக்கை காரணமாக துணிந்து எடுத்த முடிவுகள் சரியா,தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.\n5 உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது\nசரி பாதி பற்றி எதுவும் சொல்வதாக இல்லை.\n6 மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்\n7 இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\nமுந்தைய தலைமுறையில், அதற்கு முந்தைய தலைமுறையில் பல உறவினர்களை, நண்பர்களை இழந்திருக்கிறேன்.அவர்கள் பக்கத்தில் இல்லாவிட்டாலும் உலகில் இருந்திருந்தால் போதும்.\n8 என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nகணினியின் திரையைப் பார்த்துக் கொண்டு என் அறையில் இருக்கிறேன். எதையும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.\nசந்தனம், நெய், மல்லிகை,காபி.. நெய்யை உருக்கும் போது வரும் மணம் பிடிக்கும்.சிறுவயதில் நாங்கள் இருந்த ஊரில் பக்கத்து கிராமங்களிலிருந்து வெண்ணை கொண்டுவந்து காய்ச்சித் தருவார்கள். அதற்கென்று பாத்திரம் இருக்கும்.\nவெண்ணையை காய்ச்சும் போது எழும் மணம், காய்ச்சிய வெண்ணை நெய்யாக உருகி வரும் மணம், அது பின்னர் கெட்டியான பின் தரும் மணம்- மூன்றும் பிடிக்கும். காய்ச்சும் போது அதில் கறிவேப்பில்லை கிள்ளிப் போடுவார்கள். பின்னர் நெய்யை ஒரு பாத்திரத்தில் விடுவார்கள். காய்ச்சிய பாத்திரத்தில் அடியில் தங்கும் கசண்டை வழிப்பார்கள்.\n. அந்தக் காலமெல்லாம் நினைவில்தான் இனி :(.\nபுது புத்தகத்திலிருந்து வரும் மணமும் பிடிக்கும். இந்தியாவில் இருந்த போது வான் அஞ்சல்/தரைவழி அஞ்சல் மூலம் வெளிநாட்டிலிருந்து நூல்கள் வரும் -மதிப்புரைக்கு, அன்பளிப்பாக என்று. அந்தப் புத்தம் புதிய நூல்களிலிருந்து, (அவை பல சமயங்களில் hot off the press ஆக எனக்கு வரும்) வரும் மணம் மிகவும் பிடிக்கும்.\nமுன்பு சில விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது. இப்போது இல்லை. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து பார்க்கும் பொறுமை இல்லை. இணையம்/செய்தித்தாட்கள் மூலம் தெரிந்து கொள்வேன்.\nசில படங்களை ஜாலியாகப் பார்ப்பேன், சிலவற்றை சில காட்சிகளுக்கு, பாடல்களுக்கென்று. பலவகைத் திரைப்படமும் பிடிக்கும். 'உலக சினிமா'வும் பார்ப்பேன், எம்ஜிஆர் படமும் பார்ப்பேன், திரையரங்கில் பார்த்து பாதியில் ஒடி வந்த படங்களும் உண்டு.\n12 என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nஇந்தக் கேள்விக்கு பதில் தரக்கூடாது என்று பாஸ்டன் அருகே உள்ள ஊரிலிருந்து ஒருவர் கூறியிருக்கிறார் :). என் சரிபாதி நூற்களாக வாங்கிக் தள்ளுகிறார், கவுண்டி (county) நூலகத்தில் பாதியை வீட்டில் வைத்திருக்கிறார், இதைப் படிக்கிறேன் என்றால் அதையும் வாங்கிவிடுவார் அல்லது நூலகத்தில் தூழவுவார், அதற்கு நானும் உடந்தையாகக் கூடாது என்று சொல்லிவிட்டார் :). எனவே இந்தக் கேள்விக்கு பதில் பொதுவில் தரப்படமாட்டாது :)\n13 உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nமாற்றுவதேயில்லை. மடிக்கணினி, அலுவலகக் கணினி, வீட்டுக் கணினி என மூன்றில் ஒரே படம்தான். ஆனால் அந்த படத்தில் இருப்பவரின் கணினிகளில் டெஸ்க்டாப்பில் படமே இருக்காது.\nகாதிற்கு எரிச்சலுட்டாத எந்த சத்தமும் பிடிக்கும். ஒலிகளில் உள்ள பன்வகைத்தன்மையை ரசிப்பேன் நான்.\n15 வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nஉலகமே வீடு என்றாகிவிட்ட நாடோடி நான். சந்திரனுக்கோ, சனிக்கோ, செவ்வாய்க்கோ போக வாய்ப்பில்லை.முதன் முதலில் தனியே பயணம் செய்தது 8/9 வயதில் கிட்டதட்ட 2.5 மணி நேர பேருந்துப் பயணம். இந்த ஊரில் ஏற்றிவிடுவார்கள். ஒரு பையில் கொறிக்க\nஏதாவது, புத்தகம்/புத்தகங்கள், மற்றும் பணம். ஒட்டுனர், நடத்துனரிடம் எங்கே இறக்கி விட வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள். ஒட்டுனர் மறந்தாலும் நான் சரியான நிறுத்ததில் நிறுத்தச் சொல்லி இறங்கி தனியே நடந்து போய்விடுவேன். அப்போது பயம் இல்லாமல் நான் வசித்த ஊர்களில் தனியாக நிறைய சுற்றியிருக்கிறேன். கால்களுக்கு தெரியும் அவ்வூர்களின் சந்து பொந்துகளை.இந்தியா வீடு என்றால் தைபி, பீஜிங், ஆஸ்தேரலியா, கனடா என்பவற்றை அதிக பட்சத் தொலைவுகளாகக் கொள்ளலாம்.\n16 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nநான் ஜீனியஸ் -cum- பைத்தியக்காரன் என்றால் உலகம் நான் பைத்தியக்காரன் என்று நிரூபித்துவிடும் ; பைத்தியக்காரன் என்றால் அதுதான் தெரியுமே என்று சொல்லிவிடும்; ஜீனியஸ் நான் என்றால் கண்டு கொள்ளாது :). தனித்திறமை இருக்கிறது\nஎன்பதை உலகம் ஒப்புக் கொள்வதில்தான் பிரச்சினை :). சில சம்பவங்களை இங்கே பகிர்கிறேன்.\n1)நெருங்கிய உறவினர் ஒருவருக்கு திருமணத்திற்காக பெண் தேடினார்கள். நான் அப்போது அரை டிராயர் போடுகிற பையன். ஒரு நாள் இரவு சாப்பிட்ட பின் அவர் பெற்றோர், தங்கை, அவர், நான் அனைவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். எந்தப் பெண்ணை தெரிவு செய்வது என்று பேசி முடிவு செய்ய வேண்டும். என் உறவினர் தன் தெரிவினை, நீண்ட விளக்கத்துடன் கூறினார். அப்போது மணி கிட்டதட்ட 12. அவர் சொல்லி முடித்த அடுத்த வினாடி நான் சொன்னேன் - Freedom lost at midnight. அவர் என்னை விட கிட்டதட்ட 20 வயது பெரியவர். வயது வித்தியாசம் பாராமல் கிண்டல் செய்வது, வாதிடுவது\nஎன்று வளர்ந்த காலம் அது. அந்த நேரத்தில் Freedom lost at midnight என்று சட்டென்று சொல்ல எத்தனை பேருக்குத் தோன்றும்.\nஅவர் திருமணம் முடிந்த பின் அன்று இரவு அவரை யாரோ தேடினார்கள், நானும் சில நண்பர்கள், உறவினர்கள் உட்கார்ந்திருந்தோம். எங்களிடம் வந்து கேட்டார்கள். அவர், மனைவி கூப்பிட்டார் என்பதற்காக அவரிடன் பேசப் போயிருந்தார். நான் சட்டென்று கேட்டவரிடம் He is entertaining the Dragon என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொன்னேன். ஒரு கணம் அவருக்கும், பிறருக்கும் புரியவில்லை. புரிந்த பின் ஒரே சிரிப்பலைதான். அதை அவரிடமும் பின் சொல்லிச் சிரித்தார்கள். (அப்போது Enter the Dragon ஒடிக் கொண்டிருந்தது).அரை டிராயர் போடுகிற வயசில் இது போல் நிறையக் கிண்டல், கேலி செய்திருக்கிறேன், கேலி செய்யப்பட்டாலும் பதிலுக்கு கிண்டல் செய்திருக்கிறேன்.\n2) அவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், சட்ட நிபுணர், நிறைய எழுதியிருக்கிறார். நானும் அவரும் ஒரு குழுவில் உறுப்பினர்களாக இருந்தோம். அது விஷயமாக அவரை வீடு-cum-அலுவலகத்தில் சந்த்திதேன். போன உடன், ரவி, இப்போது இந்த மாநிலத்திலிருந்து\nஇன்னார் பேசினார், அவர்கள் இது விஷயமாக சட்டம் கொண்டு வர விரும்புகிறார்கள், என் உதவியைக் கேட்கிறார்கள் என்றார். சொல்லி முடித்தவுடன் அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றேன். ஏன் என்றார், அரசியல் சட்ட விதிகளைக் கொண்டு விளக்கினேன். உதவியார் ஒருவரை அரசியல் சாசன நூலைக் கொண்டுவரச் சொன்னார். புரட்டிப் படித்தார். கிட்டதட்ட 30 நிமிடம் விவாதம். நான் விரிவாக அரசியல் சட்ட பிரிவுகள், நீதிமன்ற தீர்ப்புகள், அதிகார பகிர்வு என்று பலவற்றை ஆதாரம் காட்டிப் பேசினேன். இறுதியில் நான் சொன்னது சரியான வாதம் என்று ஒப்புக் கொண்டார். அவர் அப்படி ஒரு\nகேள்வியை எழுப்புவார் என்று எனக்குத் தெரியாது, அந்தக் கேள்வி பற்றி முன்பு யோசித்ததும் இல்லை. அவர் சொல்லி முடித்து வாய் மூடியவுடன் நான் என் வாதத்தினை துவக்கி விட்டேன். மூத்த வழக்கறிஞர் உங்களுக்குத் தெரியாததா என்று மழுப்பல் பதில் தரவில்லை. அந்த மூத்த வழக்கறிஞர் பின்னர் சிலவற்றில் நீ எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று சொல்லு, என் அறிவை update செய்து கொள்கிறேன் என்றார். நானும் படிக்க பலவற்றை பரிந்துரைத்து சிலவற்றை அனுப்பியும் வைத்தேன்.\n3)என்னுடன் பணியாற்றிய பெண் என்னை கன்புஷியஸ் என்பார் விளையாட்டாக. நாங்கள் நல்ல நண்பர்கள்.ஏன் கன்பூஷியஸ் என்றால் நீ நினைத்தால் பிறரை பேசியே குழப்பிவிடுவாய் என்பார். நீ ஒன்று சொன்னால் பல சமயங்களில் அதற்கு மூன்று/நான்கு அர்த்தம் இருக்கும் அது பிறருக்கு சட்டென்று பிடிபடாது என்பார். அது உண்மைதான். ஏனென்றால் சாமர்த்தியமாக கிண்டல் செய்வது, வார்த்தைகளை வைத்து விளையாடுவது போன்றவற்றில் நான் ஈடுபடுவதுண்டு. சிலருக்கு நுண்ணிய நகைச்சுவை புரியாது, அதனால் நான் கிண்டல் செய்கிறேன் என்பதே புரியாது, ஆனால் வேறு சிலருக்கு புரியும், அவர்கள் என் பேச்சில் உள்ள விஷமத்தை புரிந்து கொண்டு விடுவார்கள்.\nபல தருணங்களில் முன் தயாரிப்பின்றி, குறிப்பு இன்றி பேசியிருக்கிறேன், திட்டிருக்கிறேன். எதையாவது கேட்டால், அதைப் பற்றி முன்பு யோசித்திருக்க மாட்டேன், ஆனால் கேட்ட மாத்திரத்தில் பதில் உடனே வந்துவிடும். கிண்டல் என்றால் பதில் கிண்டலும் உடனே வந்துவிடும்.\n17 உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nநிறம்,பிறப்பு, பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது, நடத்துவது, அதை நியாயப்படுத்துவது.\n18 உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nஸ்விட்சர்லாந்து. பொதுவாக மலையும், மலைசார்ந்த இடங்கள், காடுகள்.\n19 எப்படி இருக்கணும்னு ஆசை\nஇன்னும் productive ஆக. பணம் உட்பட பிற வசதிகள் இன்னும் அதிகமாக இருந்தால் சிலவற்றைச் செய்ய முடியும். அதற்காக அவற்றை எப்படியும் அடைய விரும்பும் ஆசை இல்லை.\n20 வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\n21) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது\nநான் பிறந்ததால் எனக்கு இந்த பெயர் வைத்தார்கள், அதனால் பெயர் வந்தது :). பதில் இட்லிவடைத்தனமாக இருக்கிறதா :).ஞாயிற்றுக் கிழமை பிறந்ததால் ரவி என்பது பெயரில் இடம் பெற்றது ஒரு காரணம். இன்னொரு காரணத்தினை அறிய என் சுய வரலாறு என்கிற ஒப்புதல் வாக்குமூலங்கள் அல்லது நான் அங்கீகரித்து, பிறர் எழுதிய என் வாழ்க்கை வரலாறு(கள்) வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் :). ரவி ஸ்ரீநிவாசன் என்று வைத்து அது ரவி ஸ்ரீநிவாஸ் ஆக சுருங்கவில்லை. முதலில் வைத்த பெயரே ரவி ஸ்ரீநிவாஸ் என்பதுதான்.\nபெயர் அப்படியே இருக்கட்டும், ஆங்கிலத்தில் எழுதும் போது சிறு மாறுதால் செய்து எழுதுங்கள் என்று பெயரை எழுதுவதில் மாற்றம் செய்ய பரிந்துரைத்தார் பிரமிள் (எ) தருமு சிவராம். அதற்காக பணம் கேட்கவில்லை அவர். நான் அதை ஏற்கவில்லை. அப்படி மாற்றியிருந்தால் பெயர் பெயரை படிக்கும் போது பலர் ஸ்ரீநிவாஸ்ஸ்ஸ் என்று பெரு மூச்சிரைத்திருப்பார்கள் அல்லது கூவிவியிருப்பார்கள் :).\n22,உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nபிடிக்கும். கொஞ்சம் வித்தியாசமான, தனித்துவமான பெயர். ஏகப்பட்ட ஸ்ரீநி/னிவாசன்கள்/சீனிவாசன்கள் உள்ள இடங்களில் வித்தியாசப்படுத்தும் பெயர்.\nவட இந்தியர்கள் சிலர் ரவி ஸ்ரீநிவாஸ் என்பதை ரவி ஸ்ரீவாஸ்தவா என்று நினைத்துக் கூப்பிட்டதும் உண்டு.அமெரிக்கப் பெண் ஒருவர் என்னை எப்போதும் ரவி சங்கர் என்றுதான் அழைப்பார், அதுதான் அவருக்கு பரிச்சயமான இந்தியப் பெயர் என்பதால். என்னை ரவி என்று அழைப்பவர்களும் உண்டு, ஸ்ரீநிவாஸ் என்று அழைப்பவர்களும் உண்டு, ரவி ஸ்ரீநிவாஸ் என்றும் சிலர் விளிக்கிறார்கள். ஆனால் இந்தியரல்லதோர், பெரும்பான்மையும் என்னை என் தந்தையின் பெயரில், அதாவது பெயரின் முதல் எழுத்தை விரித்து அழைக்கிறார்கள்/எழுதும் போது அவ்வாறு எழுதுகிறார்கள். அதை நான் ஆட்சேபிப்பதில்லை.\nஎன் நண்பி ஒருவர் அவர் உறவினர் ஒருவரின் பெயர் என் பெயர் என்றும், அவர் மனைவியின் பெயரும், என் மனைவியின் பெயரும் ஒன்று என்றும் சொன்னார். விசாரித்ததில் பின்னது சரி என்றும், ஆனால் அவர் உறவினர் பெயர் ரவி ஸ்ரீநிவாசன் என்றும் அறிந்த பின் மனம் திருப்தியடைந்தது :).\nஅதற்காக ரவி ஸ்ரீநிவாஸ் (TM)/ ((R)) என்று பெயரை டிரேட் மார்க்/ரிஜிஸ்ட்ர்ட் மார்க் ஆக பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை :).\nஅடிக்கடி/தினசரி அழ வேண்டிய சீரியல்களில் நடிக்கும் தொழில் செய்வதில்லை என்பதால் பதிலை யோசிக்க வேண்டும்:). அதிக நேரம் சிரிக்கும் போது கண்ணில் நீர் தளும்பும், விழுந்து விழுந்து சிரித்தால் கண்ணில் நீர் வரும். அது அழுகையில் சேருமா. பிரச்சினை எழுந்தால் அதை சமாளிக்கத்தான் தோன்றும், அழத்தோன்றாது. துக்கமோ அல்லது துயர உணர்வு மேலோங்கினாலும் அது கண்ணீராக கொட்டாது, நெருங்கிய உறவினர் மரணத்தின் போதும் கூட கண்ணீர் விட்டு அழுதத்தில்லை. அதற்காக இயல்பில் கல் நெஞ்சக்காரன் என்று அர்த்தமில்லைமற்றப்படி கடைசியாக அழுதது எப்போது என்பதெல்லாம் அந்தரங்கமான ஒன்று, பகிர விரும்பவில்லை..\n24,உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\nஎனக்குப் பிடிக்குமா என்பதை விட பிறருக்கு புரியுமா என்பதுதான் கேள்வி :(,. பின் - நவீனத்துவ பிரதி போல் பல்-அர்த்த வாசிப்பை சாத்தியப்படுத்தும் கையெழுத்து :). கணினி இருப்பதால் பிழைத்தேன். இல்லாவிட்டால் என் கதி . தமிழில் நான் கையெழுத்தில் ‘மரபு வழிக் கதைகள்' என்று எழுதினால், அது ‘இரவு வழிக் கதைகள்' என்றும், ‘அஷிஸ் நந்தி' என்பது 'ஆசிய நந்தி' என்பதாகவும் உள்ளீடு செய்யப்படும் என்றால் எத்தனை அழகிய\nகையெழுத்து என்னுடையது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்..\n25, பிடித்த மதிய உணவு\nநான் சாப்பிடும் உணவு வகையில் எதுவாக இருந்தாலும் சரிதான். வெறும் மோர் சாதம் கிடைத்தாலும் சரிதான். அலுவல் நாட்களில் 4/5 சப்பாத்தி, காய்கறி salad, ஒரு கூட்டு/குழம்பு என்று சாப்பிடுகிறேன். இதைப் பரிந்துரைத்தது கரீனா கபூர் :).\n27, இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nபழுப்பு முழுக்கால் சராய், ஒருவித பச்சை அரைக்கை சட்டை.\n28, வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\n80% பார்த்தது - Fashion, 100% பார்த்தது - திரைக்கதா (மலையாளம்).\n30,பிடித்த பருவ காலம் எது\nஇடத்தையும், வசதியையும் பொறுத்தது. பொதுவாக குளிர் காலம் பிடிக்கும். அதிகம் வேர்க்காத இடங்களில் கோடையும் பிடிக்கும்.\n31, உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nசாத்தான் இருக்கும் அளவிற்கு மனம் முதிர்ச்சி அடையவில்லை :). அதாவது சாத்தான் (கூட) இரா அளவிற்க்கு‘முதிரா மனம்' கொண்டவன் :). பிற பேய்/பிசாசுகளைப் பற்றி கேட்காததால், சொல்லுவதாக இல்லை :). லேட்டஸ்ட் பாஷன் இடாகினி பேய்(கள்) தனக்குள் இருக்கிறது என்று சொல்லிக் கொள்வது என்கிறார்கள் :). ரவி ஸ்ரீநிவாஸாகிய எனக்குள் இடாகினிப் பேய் இருக்கிறதா என்று இடாகினிப் பேயைக் கேட்டுச் சொல்லுங்கள் :).\nLabels: 32 கேள்விகள், கேள்வி-பதில்.சுய புராணம்\nஜனதாக் கட்சியில் பாஸ்டன் பாலா(ஜி),பிரபல எழுத்தாளர்...\n12 / 32 : கேள்வி -பதில்\nபதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள...\nஒபாமா, ஈழத் தமிழர், இடதுசாரிகள்\nகணிதமயமாகும் உலகம் குறித்து சில பார்வைகள்\nவிட்ட குறை தொட்ட குறை:கணிதம், Reuben Hersh", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1276335.html", "date_download": "2019-06-26T14:26:25Z", "digest": "sha1:5A2Z2KSOHVFS7L2WDQYZJYHWSTFITKNC", "length": 10487, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களித்த 103 வயது மூதாட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nசூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களித்த 103 வயது மூதாட்டி..\nசூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களித்த 103 வயது மூதாட்டி..\nதமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.\nஇன்றைய தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதியில் துளசியம்மாள் என்ற 103 வயதான மூதாட்டி தனது ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றினார். உறவினர்கள் துணையுடன் வந்த துளசியம்மாள் பாப்பம்பட்டி அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.\nயாழில் ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் பலி\nநாடாளுமன்ற உரைபெயர்ப்பாளர் ஒருவர் கைது\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய…\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..\nபயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை\nபிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்..\nபாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1450/amp", "date_download": "2019-06-26T13:52:00Z", "digest": "sha1:3WSC66MYNWZCARFDLXZI3SG5NYP5O5OF", "length": 7410, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "துபாயில் உலகின் உயரமான கட்டிடத்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம் | Dinakaran", "raw_content": "\nதுபாயில் உலகின் உயரமான கட்டிடத்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாய்: அமீரகத்தில் தமிழில் ஒலிபரப்பு செய்து வரும் 106.5 கில்லி பன்பலை, நிலையம் தொடங்கி 500 நாள் கடந்ததை கொண்டாடும் வகையில் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் 148வது மாடியிலிருந்து ஒருநாள் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்து சாதனை படைத்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் கில்லியின் நேயர்களும் கட்டணமின்றி அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில் கில்லி எப்.எம் குழுவினர், நிகழ்ச்சி தயாரிப்பின் தலைமை நிர்வாகி ஆர்.ஜே நிவி, ஆர்.ஜே அருண், ஆர்.ஜே அஞ்சனா, ஆர்.ஜே பிரதீப், ஆர்.ஜே கிரிஷ் மற்றும் சி.இ.ஒ அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதுபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா\nவெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது\nசவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி\nஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019\nதுபாயில் தனி திறன் போட்டி... இந்திய தொழிலாளர்கள் பரிசு வென்றனர்\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D8_%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_5296", "date_download": "2019-06-26T14:34:54Z", "digest": "sha1:EN7W7FU7KLO64ZOWMSTYCKHBHDPB4WNJ", "length": 6308, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசட்8_ஜிஎன்டி_5296 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nஇசட்8_ஜிஎன்டி_5296 (Z8_GND_5296), 2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட, ஏற்றுயர் தொலைவிலுள்ள, ஆரம்பகால விண்மீன் பேரடையாகும். இதன் தூரம் நிறமாலையியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.[2]\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:43:48Z", "digest": "sha1:62YBLEDZR44MCX6VTMSUS22CNRQ2Y24V", "length": 5722, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீல் கார்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீல் கார்டர் (Neil Carter, பிறப்பு: சனவரி 29 1975), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 109 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 173 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 97 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999/00 - 2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nநீல் கார்டர் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/13669-2019-01-24-06-12-26?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-06-26T14:13:47Z", "digest": "sha1:7D7A7MHTMHPYWLPFPD6XAL56EFQSHT2R", "length": 2513, "nlines": 16, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வரலாற்றுப் புகழ்பெற்ற இந்து ஆலயங்களை புனித ஸ்தலங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை: மனோ கணேசன்", "raw_content": "வரலாற்றுப் புகழ்பெற்ற இந்து ஆலயங்களை புனித ஸ்தலங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை: மனோ கணேசன்\nஇலங்கை முழுவதிலுமுள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுப் பழமைவாய்ந்த இந்துக் கோயில்களை, புனித ஸ்தலங்களாகப் பிரகடனப்படுத்துவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் இந்து விவகாரத்துறை அமைச்சரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமன்னார் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு, நேற்றைய தினம் (புதன்கிழமை) விஜயம் செய்திருந்த அமைச்சர், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், “திருக்கேதீஸ்வரத்துக்குச் சொந்தமான, ஆனாலும் இன்னும் வழங்கப்படாத காணிகள் அனைத்தையும், மக்களின் பாவனைக்கும் கோயிலின் பாவனைக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/tamilnadu/16200-pregnant-woman-killed-attack-by-police.html", "date_download": "2019-06-26T13:53:20Z", "digest": "sha1:AEMOUJ7AVAA3U5DQEYVNLFL6TGQL37NY", "length": 10118, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பரிதாப மரணம்!", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nதிருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பரிதாப மரணம்\nதிருச்சி (08 மார்ச் 2018): திருச்சியில் போலீஸ் தாக்கியதில் 3 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியானார்.\nதிருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் இன்று இரவு ஈடுபட்டனர். சரியாக மணி 07:30 க்கு தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.\nஅவர்களின் வாகனத்தை சோதனையிட. போலீஸார் கைகாட்டியதில் தர்மராஜ் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டியுள்ளார், அபோது ஏட்டு காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார்.\nஇதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனத்தை எட்டி உதைத்த ஏட்டு காமராஜ் தப்பியோடிவிட்டார். இச்சம்பவத்தால் திருச்சி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.\n« ஹெச்.ராஜா பா.ஜ.க விலிருந்து நீக்கம் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் குறித்து ரஜினி கருத்து பெரியார் சிலை உடைப்பு விவகாரம் குறித்து ரஜினி கருத்து\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=62269", "date_download": "2019-06-26T14:57:55Z", "digest": "sha1:NB5ZISYMCVQN7NO2TLERKICCHBUMGZ34", "length": 5313, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nநிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.\nநிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.\nநிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://patrikai.com/subavees-article9-pain/", "date_download": "2019-06-26T13:54:15Z", "digest": "sha1:AKV2LBMQDE3JAL7DA5EINB65TSQX6PJW", "length": 27320, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "வலி – ஒற்றைப் பெற்றோர் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தொடர்கள்»சுபவீ எழுதும் வலி»வலி – ஒற்றைப் பெற்றோர்\nவலி – ஒற்றைப் பெற்றோர்\nஎங்கள் குடும்பத்தில் ஒரு மணிவிழா என் அக்காவின் மகன் நாச்சியப்பன் 60 ஆம் அகவையை நிறைவு செய்தபோது, குடும்ப அளவில் அதனை ஒரு சிறிய விழாவாக அனைவரும் கொண்டாடினோம். அவர் என் அண்ணண் மகளைத்தான் மணந்திருந்தார். எனவே இருவழியிலும் உறவு என் அக்காவின் மகன் நாச்சியப்பன் 60 ஆம் அகவையை நிறைவு செய்தபோது, குடும்ப அளவில் அதனை ஒரு சிறிய விழாவாக அனைவரும் கொண்டாடினோம். அவர் என் அண்ணண் மகளைத்தான் மணந்திருந்தார். எனவே இருவழியிலும் உறவு அந்த விழாவில் அவர்கள் இருவரையும் பாராட்டியும், வாழ்த்தியும் பலரும் பேசினோம்.அவர்களுக்கு மாதவி, கனகா என்று இரண்டு மகள்கள். அவர்களுள் மூத்த மகளான மாதவி பேசும்போது ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். தங்களின் பெற்றோர் தாங்கள் இருவருக்கும் கொடுத்த பெரிய பரிசு என்ன என்பது குறித்து ஒரு செய்தியைக் கூறினார்.\nபொதுவாக எந்தப் பெற்றோரும் தம் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுத்து மகிழ்வது இயல்புதான். சின்ன வயதில் பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், கொஞ்சம் வளர்ந்தபின் உடைகள், புத்தகங்கள் என்று பரிசுகள் மாறும். அவற்றில் பொதிந்திருக்கும் அன்பு ஒன்றுதான். ஆனாலும் மாதவி குறிப்பிட்ட பரிசு அனைவரையும் வியக்க வைத்தது. “எங்களுக்கு எவ்வளவோ பரிசுகளை எங்கள் பெற்றோர் கொடுத்துள்ளனர். எனினும் அவர்கள் எங்களுக்குத் தந்த பரிசுகளிலேயே மிகப் பெரியது ஒன்று உண்டு. நானும், என் தங்கையும் இருக்கும்போது அவர்கள் இருவரும் ஒருநாளும் எங்கள் முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. அதுதான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த விலைமதிக்க முடியாத ஒரு பரிசு” என்று சொன்னபோது அனைவரும் தங்களை மறந்து கைதட்டி மகிழ்ந்தோம்\nஅத்தகைய பரிசு நம் நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூற்றி ஒன்பது பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை என்றே கூற வேண்டும். பெற்றோர்கள் பலர் பிள்ளைகளின் முன்னால்தான் கடுமையாகச் சண்டை போட்டுக் கொள்கின்றனர். ஏன் அப்படி என்று கேட்டபோது, ஒரு நண்பர் சொன்னார், “கோபம் வரும்போதுதானே சண்டை போட முடியும். அப்புறம் போடலாம் என்று ஒத்தி வைப்பதற்கு இதென்ன நாடக ஒத்திகையா\nசண்டைகள் முற்றி இருவரும் பிரிந்து விடும் காட்சிகள் இன்று நாட்டில் கூடுதலாக அரங்கேறி வருகின்றன. நீதிமன்றத்திற்குப் போனால், குடும்ப நீதிமன்றத்தில்தான் கூட்டம் மிகுதியாக உள்ளது. ,மணமுறிவு என்பது தேவையான உரிமைகளில் ஒன்றுதான்.’கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன்’ என்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கூறுகின்றவர்களை இன்றைய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆண், பெண் சம உரிமை என்னும் நியாயமான கோட்பாடு இன்று வளர்ந்து நிற்கிறது. இருப்பினும், தொட்டதற்கெல்லாம் மணமுறிவு என்பதும் ஏற்கத்தக்கதன்று. புரிதலும், சகிப்புத் தன்மையும் கணவன், மனைவியிடையே குறைந்து கொண்டே போகிறது என்னும் கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியுள்ளது.\nகணவன் மனைவி பிரிவு காரணமாகவோ, இருவரில் ஒருவர் மரணம் அடைவதனாலோ ஒற்றைப் பெற்றோரிடம் (single parent) வளரும் குழந்தைகளின் மனங்களில் ஏற்படும் வலி கொடுமையானது. மேலை நாடுகளில் ஒற்றைப் பெற்றோர் என்பது இயல்பான நிலைகளில் ஒன்றாகவே உள்ளது. ஆனால் நம் நாட்டிற்கு அது புதியது. அதனால் இங்கு பெற்றோர்களும் – குறிப்பாகப் பெண்கள் – பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். பிள்ளைகளின் மனநிலையில் ஒரு ஏக்கமும், வெறுப்பும் காணப்படுகின்றது.\nஇவ்வாறு துயரத்திற்குள்ளாகியிருக்கும் ஏழு பெற்றோரோடும், அவர்களின் குழந்தைகளோடும் உரையாடினேன். ஓரே ஒருவர் மட்டுமே ஆண். மற்றவர்கள் பெண்கள். எனவே பிரிவுக்குப் பிறகு, பிள்ளைகள் தம் அம்மாவோடுதான் வாழ்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குழந்தைகளிலும் இருவர் ஆண்கள், மற்றவர்கள் பெண்கள்.\nகணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்கள், நம் சமூகத்தில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. முதலில் தனியாக உள்ள பெண்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை. தனியாக வாழும் பெண்கள் எல்லோரும் தவறானவர்கள் என்ற பிழையான சமூகப் பார்வை இங்கு பரவிக்கிடக்கிறது. உறவினர்களிடமும் சரியான பார்வை அமைவதில்லை. என்ன நடந்தது என்பதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமலே, ‘இந்தப் பொண்ணு அடங்காது’ என்று எளிதில் பேசிவிடுகின்றனர்.\nஊடகத்துறையில், கல்வித்துறையில், நீதித்துறையில் என்று பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் அவர்கள் அனைவரும் தங்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. இயல்பாக, உங்கள் கணவர் எங்கே வேலை பார்க்கிறார் என்பது போன்ற வினாக்கள் நம் அமைப்பில் இயல்பானவை. அப்போது, புகழ் பெற்றவர்களாக இருந்தாலன்றி, மற்ற பெண்கள் பலர் உண்மை கூறுவதில்லை. அல்லது, அது குறித்து விரிவாகப் பேசுவதில்லை. எனினும் மெல்ல மெல்ல உண்மை தெரிய வந்து விடுகின்றது. உண்மை தெரிந்தபின், நாகரிகமாகத் தோற்றமளிக்கும் ஆண்களே கூட தங்களுக்குள் ஒளிந்திருக்கும் அநாகரிக முகத்தைக் காட்டத் தொடங்கி விடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க, சற்றுக் கடுமையாகவே நடந்து கொள்ள வேண்டியுள்ளது.யாரிடமும் சிரித்துப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிடுசிடுப்பே அவர்களின் பாதுகாப்பு வளையமாக உள்ளது.\nஇன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் , ஒற்றைப் பெற்றோராக உள்ள பெண்களுக்கு எதிரியாகத்தான் உள்ளது. கட்செவி ஊடகங்களின் வழி, தரக்குறைவான செய்திகள், படங்கள் வந்து சேர்கின்றன. அனைத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. வேலை வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட முடியாது. பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது.\nஒற்றைப் பெற்றோரிடம் வளரும் பிள்ளைகளின் வலி அதனினும் துன்பம் நிறைந்ததாகவே உள்ளது. நீதிமன்ற ஆணைப்படி பிரிந்தவர்களின் குழந்தைகள், வார இறுதி விடுமுறை நாள்களில் தங்களின் இன்னொரு பெற்றோரைப் பார்க்கச் செல்கின்றனர். ‘நான் அப்பா செல்லம்தான். இருந்தாலும், அப்பாவைப் பார்க்க சனி, ஞாயிறுகளில் போகும்போது, அப்பாவின் உறவினர்கள் என் அம்மாவைத் தவறாகப் பேசும்போது எனக்கு கோபம் வரும். இனி இங்கு வரக்கூடாது என்று நினைப்பேன்” என்று ஒரு பெண் குழந்தை சொல்கிறது.\nதன் தோழிகள் எல்லாம் அப்பா, அம்மாவோடு இருக்கும்போது தனக்கு மட்டும் அந்த மகிழ்ச்சி வாய்க்க வில்லையே என்ற ஏக்கம் பிள்ளைகளிடம் வெகுவாக உள்ளது. இருப்பினும், ஒற்றை ஆளாக இருந்து தன்னை வளர்க்கும் அம்மாவின் மீது இந்தப் பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரு பெரிய மதிப்பும், பாசமும் உள்ளது.\n‘பள்ளிக்கூடம், கல்லூரி எங்கு சென்றாலும், அப்பாவைப் பற்றித்தான் முதல் கேள்வி, எங்களை சங்கடப்படுத்தும் கேள்வி முன்னே வந்து நிற்கிறது’ என்று கூறும் ஒரு பெண், எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் சொல்லிக்கொண்டே இருக்க முடியுமா என்று கேட்கிறார். பல நேரங்களில் அந்தப் பேச்சைத் தவிர்த்து விடுவோம், அல்லது வெளி நாட்டில் இருக்கிறார் என்பது போலச் சொல்லி விடுவோம் என்கிறார்கள். நெருக்கமானவர்கள் கேட்கும்போது, “அப்பா எங்க கூட இல்லை” என்று சொல்லி ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் என்கின்றனர்.\nபெரும்பாலான பிள்ளைகளிடம் ஓர் ஏக்கம் இருக்கவே செய்கிறது. இப்போதும் இருக்கிறது என்று ஒரு பெண்ணும், வேறு வழியில்லை, கடந்து வந்து விட்டேன் என்று இன்னொரு பெண்ணும் கூறினர்.\nஒரு பெண் குழந்தையிடம் மட்டும் ஏக்கத்திற்குப் பதிலாக, ஒரு விதமான கோபத்தையும், வெறுப்பையும் பார்க்க முடிந்தது. கல்லூரியில் படிக்கும் நிலையில் பெற்றோரிடம் பிரிவு ஏற்பட்டதால், அந்தப் பெண்ணுக்கு எல்லா விவரமும் தெரிந்துள்ளது. அம்மாவை அவர் ஏமாற்றி விட்டார் என்னும் கோபம் இருக்கிறது. தன் முன்னெழுத்தில் (initial) அப்பா பெயரும் சேர்ந்துள்ளது, இனி அது வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று கூறும் அளவு வெறுப்பு உள்ளது. தன் தோழிகள் சிலர் அது பற்றிப் பேசுவதால், சமூக வலைத் தளங்களை விட்டே வெளியேறிவிட்டதாகவும் கூறுகிறார்.\nகுழந்தைகளின் துன்பங்களைக் கிளறி அவர்களிடம் கேள்வி கேட்டபோது வருத்தமாகத்தான் இருந்தது. மற்ற குழந்தைகளுக்கும் அந்நிலை வரவேண்டாம் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த முயற்சி என்று எண்ணியே ஆறுதல் கொள்ள வேண்டியிருந்தது.\nஅன்பு நண்பர்களே, உங்கள் குழந்தைகளின் வலியை உணர்ந்தேனும், உங்கள் சண்டைகளைத் தள்ளி வையுங்கள் என்று பிரிய நினைக்கும் இணையர்களை வேண்டிக்கொள்வோம்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது – ஸ்ரீரெட்டி\n63 ஆண்டுகளுக்கு பிறகு விபத்து பற்றி கருணாநிதி விளக்கம் \n: தனது “நெஞ்சுவலி கணத்தை” எழுதுகிறார் மனுஷ்யபுத்திரன்\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-11/", "date_download": "2019-06-26T14:19:54Z", "digest": "sha1:DHAQXGTAYM5KZR2FFLODNXVTVIJVM44D", "length": 27557, "nlines": 765, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "மார்ச்-11 | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nசெய்திகள் – நீதியைத்தேடி கருத்தரங்கம்\nFiled under: கோவை நீதியைத்தேடி �, சிறைவாசிகள், மார்ச்-11 — முஸ்லிம் @ 8:56 முப\nகோவை குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்: முன்னாள் நீதிபதி\nகோவை மார்ச்-11 “நீதியைத் தேடி” கருத்தரங்கின் புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கு சொடக்கவும் :\nபுகைப்படத் தொகுப்பு – 1\nபுகைப்படத் தொகுப்பு – 2\nமுகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு\nகோவை, மார்ச் 12: இந்திய தண்டனைச் சட்டத்தில் விசாரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு 9 ஆண்டுகளாக ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தெரிவித்தார்.\nசிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பில், 9 ஆண்டுகளாக தமிழக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் நீதியைத் தேடி கருத்தரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.\nகூடிய கூட்டத்தின் ஒரு பகுதி\nகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.\nஆனால், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீவிரவாதச் சட்டத்தில் கைதானவரர்களுக்கு விசாரணையின்போதே ஜாமீன் வழங்கப்பட்டது.\nகோவை தொடர் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்.\nஅரங்கினுல் கூடிய பென்கள் கூட்டம்\nமும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தவணை முறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர் என்றார்.\nமக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலர் கே.ஜி.கண்ணபிரான்: சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தை பாரபட்சமாகச் செயல்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.\nகேரள மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.பலராமன்: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி கேரளம் வருவதற்கு தமிழக அரசு 2003-ல் விதித்த தடையை நீக்க வேண்டும்.\nஅவரது உடல் நிலையை கருதி அவருக்கு சிகிச்சை அளிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.\nஅவர் மீதுள்ள பிற வழக்குகளை விரைந்து முடிக்க கேரள நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.\nஆனால், அவரை கோவையிலிருந்து கேரளம் அழைத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.\nசிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ப.பா.மோகன் வரவேற்றார். முஸ்லிம் சிறைவாசியின் குடும்ப நிலையைச் சித்தரிக்கும் குறுந்தகட்டை தமிழக, புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.திருமலைராஜன் வெளியிட்டார்.\nதமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, பியுசிஎல் மாவட்டச் செயலர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்குக் கூட தண்டனைக் குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்குவதில்லை. எனவே, 9 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.\nநோய்வாய்ப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசெய்திகள் : நன்றி தினமனி\nகாரைக்குடி, இஸ்லாம் , முஸ்லிம்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-48319313", "date_download": "2019-06-26T14:29:53Z", "digest": "sha1:5DRSM7BCW2K6KKOZB6BADAHXDXKOKX26", "length": 9219, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை உள்நாட்டுப் போர்: வட்டுவாகல் பாலத்தின் இன்றைய நிலை என்ன? - பிபிசியின் பிரத்யேக காணொளி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇலங்கை உள்நாட்டுப் போர்: வட்டுவாகல் பாலத்தின் இன்றைய நிலை என்ன - பிபிசியின் பிரத்யேக காணொளி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கை போரின் முடிவில், தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்த மக்கள் வட்டுவாகல் பாலத்தில் இலங்கை படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nதமிழீழ விடுதலை புலிகள் இந்த பாலத்தின் ஒரு பக்கத்திலும், இலங்கை படையினர் இன்னொரு பக்கமும் நின்றிருக்க, தமிழ் மக்கள் குழந்தைகளோடு தண்ணீரில் நீந்தி பாலத்தை கடந்து வந்த இடம்தான் வட்டுவாகல்.\nஅப்போது பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்தகைய போர் முக்கியத்துவம் வாய்ந்த வட்டுவாகல் பாலத்தில் இருந்து பிபிசி தமிழ் வழங்கும் பிரத்யேக காணொளி.\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்\nயார் இந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்\nமுள்ளிவாய்க்கால்: இலங்கைப் போரின் இறுதி சாட்சி\n\"சென்னை அருகே பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அமெரிக்கா - இரான் பதற்றம்: ஹோர்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியம்\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: ஹோர்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியம்\nவீடியோ இலங்கை உள்நாட்டு போரிலிருந்து மீண்ட பெண்ணின் வெற்றி கதை\nஇலங்கை உள்நாட்டு போரிலிருந்து மீண்ட பெண்ணின் வெற்றி கதை\nவீடியோ அழுதால் வாழ்க்கை நன்றாக இருக்கும் - ஏன் தெரியுமா\nஅழுதால் வாழ்க்கை நன்றாக இருக்கும் - ஏன் தெரியுமா\nவீடியோ 'கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் உயிரிகள் செத்து மடியும்'\n'கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் உயிரிகள் செத்து மடியும்'\nவீடியோ 'நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை'\n'நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 தமிழர்களை ஆறு மாதங்களாக காணவில்லை'\nவீடியோ தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு என்ன செய்ய வேண்டும்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.internetpolyglot.com/russian/lessons-sv-ta", "date_download": "2019-06-26T14:28:03Z", "digest": "sha1:XG6J7YGRJYSTMWD3X2HPYX5YNSYZSVWZ", "length": 14858, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Уроки: Шведский - Тамильский. Learn Swedish - Free Online Language Courses - Интернет Полиглот", "raw_content": "\nAtt hälsa, Förfrågningar, Välkomster, Farväl - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nTa reda på hur man ska socialisera med människor. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n Du måste veta vilken sida ratten är på. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nByggnader, Organisationer - கட்டிடங்கள், அமைப்புகள்\nKyrkor, teatrar, tågstationer, affärer. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nKatter och hundar. Fåglar och fiskar. Allt om djur. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nMor, far, familjemedlemmar. Familjen är det viktigaste i livet.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nAllt om rött, vitt och blått. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nGeografi: Länder, Städer… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nLär känna världen du lever i. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nHälsa, Medicin, Hygien - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nHur du kan prata med din läkare om din huvudvärk. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHus, Möbler och Hushållsobjekt - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nJobb, Affärer, Kontor - வேலை, வியாபாரம், அலுவலகம்\nJobba inte för hårt. Vila, lär dig ord om jobb. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nKänslor, Sinnen - உணர்வுகள், புலன்கள்\nAllt om kärlek, hat, lukt och beröring. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nAllt om vad du ska ta på dig för att se bra ut och förbli varm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nKroppsdelar - மனித உடல் பாகங்கள்\nKroppen innehåller själen. Lär dig om ben, armar och öron. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nLivet, Ålder - வாழ்க்கை, வயது\nLivet är kort. Lär dig allt om dess stadier från födelse till döden.. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nHur man ska beskriva människor omkring sig. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nDel två av vår mumslektionen. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nMumsig lektion. Allt om dina goda små favoritbegär. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nMaterial, Substanser, Objekt, Verktyg - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMätningar - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nOlika adjektiv - பல்வேறு பெயரடைகள்\nOlika adverb 1 - பல்வேறு வினையடைகள் 1\nOlika adverb 2 - பல்வேறு வினையடைகள் 2\nOlika Verb 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nOlika Verb 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nMissa inte denna lektion. Lär dig att räkna pengar.. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nPronomen, konjunktion, prepositioner - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nRöd dig sakta, kör säkert. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nSport, Spel, Hobby - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHa lite roligt. Allt om fotboll, schack och tändstickssamling. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nStad, Vägar, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nGå inte vilse i en stor stad. Fråga hur du kan komma till operahuset.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Lär dig nya ord. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n Ett tomt skal. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nAllt om skolan, högskolan, universitet. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nDel 2 av vår kända lektion om utbildningsprocesser. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nDet finns inget dåligt väder, bara dåliga kläder. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nLär dig om naturens mirakel som omger oss. Allt om växter: träd, blommor, buskar. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nLär dig vad du måste använda för städning, reparationer, trädgårdsarbete. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "https://www.nhm.in/shop/1000000024550.html", "date_download": "2019-06-26T14:40:04Z", "digest": "sha1:CSCWIBP2CEHIEFHAHHDXQMMBVA7UBVAD", "length": 5544, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: கோட்சேயின் குழந்தைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருக்குறள் எளிய தெளிவுரை வடிவுடை மாணிக்க மாலை சிந்தனையாளர் இராஜாஜி\nதாஸ்தாயெவ்ஸ்கி வாழ்வும் கலையும் இதோ வெற்றி பெற சக்தி\nஎனது பார்வையில் பாவேந்தர் வெற்றிமீது வெற்றி வந்து நம்மைச் சேரும் நன்னூல் எழுத்ததிகாரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-06-2019/", "date_download": "2019-06-26T13:52:06Z", "digest": "sha1:DCZZDI7IPDQSGSY7IHSYCB4UIGZ7PRGZ", "length": 12233, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 13.06.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஇன்று வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று . குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று உறவினரிடையே பேசுவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பண வரவில் தடை இருக்காது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் சீராகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று எதிலும் எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கும். சிலரது செயல் பாடுகள் உங்களுக்கு நன்மையை அளிக்கும். வெற்றியின் அறிகுறிகள் தெரியும். மனம் மகிழ்ச்சியில் இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை அகலும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று இல்லத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சிலரின் பிரச்சினைகளை நீங்கள் முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சினை அகலும். சிலர் உங்களை பார்த்து பொறாமையில் இருப்பர். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை வந்து போகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று உற்சாகமாக இருக்க வேண்டிய நாள். அவ்வப்போது அலுப்பு தோன்றும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழி தெரியும் நாள். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிடைப்பதற்கான நாள். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-06-26T13:55:53Z", "digest": "sha1:ORYZNGL2XRH2VOPQMWUFFLQW4DBSDV5K", "length": 7731, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிரதமர் பதவியேற்றதும் மீண்டும் உலக சுற்றுப்பயணம் செய்யும் மோடி! | Chennai Today News", "raw_content": "\nபிரதமர் பதவியேற்றதும் மீண்டும் உலக சுற்றுப்பயணம் செய்யும் மோடி\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nபிரதமர் பதவியேற்றதும் மீண்டும் உலக சுற்றுப்பயணம் செய்யும் மோடி\nபிரதமர் மோடி தலைமையில் பாஜக மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து இன்று குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அவர் வரும் 26ஆம் தேதி புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் பிரதமர் மோடி செல்லவிருக்கும், இந்த ஆண்டுக்கான வெளிநாட்டு பயணத்திட்டத்தை வெளியிட்டது வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த ஆண்டில் பிரதமர் மோடி கிர்கிஸ்தான், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அவர் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nகொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவேன்: கரூர் எம்பி ஜோதிமணி\nநடிகர் சங்க தேர்தலை நடத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு\nசர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி\nதமிழக சட்டமன்றம் கூடும் தேதி அறிவிப்பு\nமக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=38139a3e832b4de95bfb67eb75089d47&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T15:07:51Z", "digest": "sha1:7DXPH4NVBP2TQSIBZBMTZCTPOVWVNUU3", "length": 8725, "nlines": 83, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மாமியார்-மருமகன் காமம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with மாமியார்-மருமகன் காமம்\n வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2018 : வாக்கெடுப்பு நடைபெறுகிறது, படைப்பாளிகளை உற்சாகமூட்ட தவறாமல் --> இங்கே வாக்களித்து சிறப்பிக்கவும்.\nThreads Tagged with மாமியார்-மருமகன் காமம்\n[முடிவுற்றது] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 3 ( 1 2 3 4 5 ... Last Page)\n87 2,542 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n[முடிவுற்றது] 0062 - மாமியார் மடியில் மஞ்சம் விரித்த மாப்பிள்ளை ( 1 2 3 4 5 ... Last Page)\n53 835 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] மகளும், மாமியாரும் ( 1 2 )\n17 660 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0010 - மாமியாரின் அந்தரங்கம் ( 1 2 3 4 5 ... Last Page)\n54 2,168 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 2 ( 1 2 3 4 5 ... Last Page)\n89 1,907 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n[தொடரும்] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 1 ( 1 2 3 4 5 ... Last Page)\n95 2,379 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n105 4,348 மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள்\n[முடிவுற்றது] 0010 - மாமியாரின் அந்தரங்கம் - காமாசாமா ( 1 2 )\n18 828 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] 0010 - மாமியாரின் அந்தரங்கம் ( 1 2 3 4 5 ... Last Page)\n59 1,571 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] நான் சூத்தடிச்ச என் மாமியார் 2 - பில்லா கதை தொடர்ச்சி ( 1 2 3 4 )\n39 968 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n[முடிவுற்றது] நான் சூத்தடிச்ச என் மாமியார் - 4 (பில்லா கதை தொடர்ச்சி) ( 1 2 3 4 )\n32 838 சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://sathyanandhan.com/2013/06/27/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2019-06-26T14:20:22Z", "digest": "sha1:EIKTUMZP4IVZKNNAGCCLLCC5NGSSUYOJ", "length": 11386, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← மன நோயை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் – ஆரோகணம்\nநீ உன் காத்தாடி பற்றியா பேசினாய்\nஉணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன\nPosted on June 27, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன\nஉடனடி உணவுகள் விற்கும் போது அவற்றை அடைக்கும் பொட்டலங்கள் மீது எச்சரிக்கை இத்தனை காலமாக துண்டுச் சீட்டுக்களாக ஒட்டப் பட்டு வந்தன. இப்போது இதில் மாற்றம் கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் ஐரோப்பியக் கூட்டமைப்பும். உடலுக்கு அதிக எடை தரக்கூடிய அல்லது அதிக மாவுச்சத்து உடைய உணவுகள் “சிவப்பு” என்னும் வகைப்படுத்துதலின் கீழ் அந்த நிற முத்திரையுடன் இருக்கும். குறைந்த அளவு அல்லது தாளும் அளவு கொழுப்பும் மாவுச்சத்துமான உணவுகள் “பச்சை” என்னும் வகைப்படுத்துதலில் வரும். இதைத் தவிர ஒவ்வொரு பொட்டலத்தின் மீது ஒரு உணவில் இருக்கும் கொழுப்பு, மாவுச்சத்தின் எடை, சதவீதம் இவை கண்டிப்பாகக் குறிப்பிடப் பட வேண்டும். ஒரு வளர்ந்த ஆள் ஒரு நாளில் அந்த வகை உணவை எவ்வளவு சாப்பிடலாம் என்பதும் குறிப்பிடப் பட வேண்டும். ஐரோப்பியக் கூட்டமைப்பு இன்னும் நவீனமான ஒரு வழிமுறையைக் கொண்டு வருகிறது. “லேசர்” கதிர்களால் பழங்களின் மீது அவை தயாரிக்கப் பட்ட தேதி மற்றும் அவற்றில் உள்ள உணவுச்சத்து விவரங்களை பதிக்கும் முறை வர இருக்கிறது.\nமிகப் பெரிய உடனடி உணவு விற்கும் நிறுவனங்கள் இதற்குக் கட்டுப்பட ஒப்புக் கொண்டன. இந்தக் கட்டுப்பாட்டை, விதி முறைகளை இங்கிலாந்து கொண்டு வரக் காரணம் அதிக எடை என்னும் பிரச்சனைக்காக அரசுக்கு ஆகும் கடுமையான மருத்துவச் செலவைக் குறைப்பதே.\nபேருந்துகளில் இருவர் அமரும் இடம் தேவைப்படும் ஒரே நபரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவருக்காகக் காத்திருப்போரின் பெரும்பான்மையினர் அதிக எடை கொண்டோரே. அதிக எடை குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. அரிசிச் சோற்றை வரைமுறையின்றி விழுங்காவிட்டால் நம்மைப் பண்பாடற்றவர் என்று கூறிவிடுவார்களோ என்று பயப்படுவது போல மாவுச் சத்து உணவுகள் மீது மாறாக் காதல். வெகு தூரம் போக வேண்டும் நாம். இந்திய அரசு உடனடியாக இந்த திசையில் நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← மன நோயை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் – ஆரோகணம்\nநீ உன் காத்தாடி பற்றியா பேசினாய்\n1 Response to உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன\nதடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nகாலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்\nஅஞ்சலி- தோப்பில் முகம்மது மீரான்\nதிருப்பூர் வெற்றி அமைப்பின் பசுமைச் சாதனை – வாழ்த்துக்கள்.\nபெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/28/rmv.html", "date_download": "2019-06-26T14:36:44Z", "digest": "sha1:WXYXEDCBW24PFHJFYYQ5QG2MBONZGIQB", "length": 12376, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகரீக வரம்புகளை மீறி விட்டார் ஜெ ...ஆர்.எம்.வீரப்பன் | rmv blasts jaya on karunanidhi issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n32 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n45 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகரீக வரம்புகளை மீறி விட்டார் ஜெ ...ஆர்.எம்.வீரப்பன்\nமுதல்வர் கருணாநிதிக்கு ஆயுள் சிறை என்று சொல்லி நாகரீகத்தின் வரம்புகளைஎல்லாம் மீறியுள்ள ஜெயலலிதாவின் ஆணவத்தை தமிழ் சமுமதாயம் பொறுத்துக்கொள்ளாது என்று எம்ஜிஆர் கழகம் கூறியுள்ளார்.\nஎம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா வாய்க் கொழுப்போடு தமிழ் சமுதாயத்தின் மீதுவசை பாடி வக்கணை காட்டி, விஷம் கக்கியுள்ளார்.\nதமிழ்ப் பண்பாட்டில் வளர்ந்த எந்த தமிழரும் வெட்கப்படுகிற வகையில், கட்சிஅரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மக்களால் நேசிக்கப்படுகிற முதல்வர் கருணாநதிமீது அவச்சொற்களை அள்ளி வீசியுள்ளார்.\nகருணாநிதியை ஆயுள் முடியும் வரை சிறையிலடைப்பேன் என்று பேசியுள்ளார்.ஜெயலலிதாவின் ஆணவப் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் நாகரீக உணர்வுள்ள,தன்மானம் மிக்க அரசியல்வாதிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநாகரீகத்தின் வரம்புகளை எல்லாம் மீறியிருக்கிறார் ஜெயலலிதா. எதையும் செய்வதற்குதுணிகிற ஜெயலலிதா கூட்டம் ஏதோ அரசியல் சதித் திட்டத்தில் இறங்கியிருக்கிறதுஎன்று எண்ணத் தோன்றுகிறது. சதிச் செயலின் வெளிப்பாடாகத் தான் ஆயுள் இருக்கும்வரை சிறையில் அடைப்பேன் என கூறுகிறார் என்று ஆர்.எம்.வீ. கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/news/coverstory/113073-now-rekhla-race-in-trouble-after-jallikattu.html", "date_download": "2019-06-26T14:08:55Z", "digest": "sha1:2K62CWPVO4V3F2TP6RCPK6TLSWAPJ345", "length": 28234, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "உட்றேஏஏஏஏ... கோவை மாணவர்கள் நடத்திய பரபர ரேக்ளா ரேஸ்! | Now Rekhla race in trouble after jallikattu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:14 (08/01/2018)\nஉட்றேஏஏஏஏ... கோவை மாணவர்கள் நடத்திய பரபர ரேக்ளா ரேஸ்\n“உட்றேஏஏஏஏ...” என்ற சத்தத்தை தொடர்ந்து தடதடவென புழுதி பறக்க ஓடுகளத்தில் மாட்டு வண்டியை இழுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தன நம் நாட்டுக் காளைகள்.\nஅப்போது தெரியவில்லை கிளம்பும்போது அப்படியோர் அதிர்ச்சி காத்திருக்கிறது என்று.\nஅதை ஓட்டிக்கொண்டு வந்தவர்களை ஓரங்கட்டி பேசினேன்.\n“என்னப்பா ஃபோட்டோ புடிச்சு கேஸ் போடப்போறியா அந்த கேமராவக் கொண்டுவா..” என்று கோபமாக வந்தவர்கள், பந்தயம் நடத்தும் கிளப்காரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேசத்தொடங்கினர்\n”உங்கள் எல்லாருக்கும் ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று தெரியும். ஆனால் ரேக்ளா பந்தயம் பற்றி உங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. நாட்டு மாடுகள் மற்றும் பசுக்களை காப்பதில் இந்த ரேக்ளா பந்தயத்திற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதை, இந்தப் பந்தயம் தடை செய்யப்பட்ட பிறகுதான் தெரிந்துகொண்டோம். அதுவரை நாங்கள் உண்டு, எங்கள் மாடுகள் உண்டு என்றிருந்தோம்.” என்றவரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டோம்.\n“11AA என்று எழுதிக்கொள்ளுங்கள்” என்றார். அது அவருடைய வண்டியின் பந்தய எண்.\nரேக்ளா பந்தயம் என்பது மாட்டு வண்டி ரேஸ்தான். ஆனால், அதை அவ்வளவுதான் என்று எளிதாக விட்டுவிடமுடியாது. ஏனெனில் ஜல்லிக்கட்டுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விளையாட்டு இந்த ரேக்ளா பந்தயம்.\n”நீதிமன்றம் இதை தடை செஞ்வுடன், காளை வளர்க்கமுடியாதவன்லாம் அடிமாட்டுக்கு வித்தான். ஆசை ஆசையா வளர்த்த காளைய கறிக்கடைக்குக் கூட்டிப்போறத பார்த்தா சாகத்தோணும். பல பேரு பல்லக்கடிச்சிட்டு , தனக்கு இல்லைனாலும் மாட்டுக்கு மூனு வேளையும் பருத்திப் புண்ணாக்குன்னு போட்டு வளர்த்தான். இப்ப இந்தா நிக்குது பாருங்க, இது ரேக்ளா ரேஸ்ல 5வது பரிசு வாங்கிச்சு. இந்த வருஷமும் தடை இருந்திருந்தா நானும் மாட்டை வித்துட்டுதான் போயிருக்கணும்” என்று சொல்லிவிட்டு மாட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார் 11AA.\nகோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது நாட்டு மாடுகள் கண்காட்சியும், ரேக்ளா பந்தயமும். இந்த ரேக்ளா பந்தயத்தின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. பொதுவாக காளைகளை வளர்ப்போர் பொங்கல் திருநாளன்று தங்களது காளைகளை ஊருக்கே காட்சிப்படுத்துவர். ஒரு குடும்பத்தின் கம்பீரம் என்பது அவர்கள் வளர்க்கும் காளைகளின் கம்பீரத்தை பொருத்தே கணிக்கப்படும். அப்படி இருக்கும்போது, தங்களுடைய காளைகளை கவுரவப்படுத்தும் விதமாக ஒரு பந்தயம் நடத்தி, அதில் தங்கள் காளைகளின் வீரத்தை வெளிப்படுத்தும் வழக்கமும், அம்மாடுகளுக்கு நன்றி சொல்லும்விதமாக மாட்டுப்பொங்களன்று அந்த விளையாட்டுகளை நடத்துவதும் தமிழர்களின் வழக்கமாக இருந்துவந்துள்ளது. இது ஒரு விளையாட்டு என்பதைத்தாண்டி காளைகளை கவுரவப்படுத்தும் விழாவாகவே கடைபிடித்து வரப்பட்டது. விலங்குகளை காட்சிபடுத்துதல் சட்டத்தின் கீழ் காளைகளை கொண்டு வந்ததை சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதைப்போலவே, நாட்டு மாடுகள் சம்பந்தப்பட்ட மஞ்சு விரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற அனைத்து விளையாட்டுகளும் தடை செய்யப்பட்டன. அதிலும் ஜல்லிக்கட்டைப் போலவே ரேக்ளா பந்தயங்களிலும் மாடுகளுக்குச் சாராயம் கொடுக்கப்படுகிறது, தார் முள் மற்றும் கரன்ட்டு பெட்டி வைத்து குத்தி துன்புறுத்துகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை முறை படுத்தி மாடுகள் சோதிக்கப்பட்டு, தார் முள், கரன்ட் பெட்டி ஆகியன தடை செய்து ஒரு நெறிமுறைக்குள் கொண்டுவரப்பட்டது இந்த ரேக்ளா பந்தயம்.\nதற்போது ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கிய நிலையில், ரேக்ளா பந்தயத்துக்கு இன்னும் சிக்கல் நீடிக்கிறது என்றும் தொடர்ந்து ஸ்டே ஆர்டர் வாங்கி வழக்கு நடத்துவதே வேலையாக இருக்கிறது என்றும் வேதனைப்படுகிறார், ரேக்ளா பந்தயங்களுக்குக் குரல் கொடுத்துவரும் வக்கீல் செந்தில்குமார்.\n“அரசாங்கம் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அழிக்கிறது. மாடுகளை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவர்கள்தாம் மாடுகளுக்கான பாதுகாப்பு சட்டங்களை இயற்றிவருகின்றனர். நீங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பாரம்பர்ய விளையாட்டுகளை அழித்துக்கொண்டே வந்தால், அழிவது நாட்டுமாடுகள் மட்டுமல்ல. நம் பாரம்பர்யமும் ஆரோக்கியமும்தாம்.\nநாங்கள் உங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்கள் மாடுகளை வளர்க்க பணம் கேட்கவில்லை. எங்களை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுங்கள். உங்கள் தலையீடு இல்லாமல் இருந்தால் போதும். எங்கள் மாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம்”, என்றார்.\nஅவரைக் கடந்ததும் இளைஞர்களின் மறைவில் ஒரு பெரிய காளை கம்பீரமாக நடந்து வந்தது. 20களில் இருக்கும் அந்த இளைஞர்களின் பிடியில் ஒரு சிங்கத்தை வீழ்த்தும் கம்பீரத்துடன் நின்ற காளையைக் கண்டால் வியப்பை தவிர வேறு வார்த்தை வரவில்லை.\nஇந்தப் பொடியன்கள் வளர்த்த காளையா என்று ஆச்சர்யமாக இருந்தது நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கோவையை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் நண்பர்கள் எனத் தெரிந்தது.\nஇந்தத் தடை குறித்து விசாரித்தபோது,“ சும்மா போராட்டம் மட்டும் செஞ்சுட்டு எவனோ மாட்டை பாத்துக்குவான்னு விடக் கூடாது. அதை காப்பாத்தறதுல நமக்கும் பங்கு இருக்கு. அதான், நாங்க நண்பர்களா சேர்ந்து ஒரு ஜோடி நாட்டுக் காளைகளை வாங்கி வளர்த்துட்டுருக்கோம். ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு என்னவேணாலும் பேசுவாங்க, சட்டம் போடுவாங்க. வந்து நம்ம மாட்ட தொடச் சொல்லுங்க பார்ப்போம். தடை சொல்லுறவங்க இந்த மாட்டை தொட்டுட்டா தடையை ஏத்துக்குறோம். இனியும் பார்த்துட்டே இருந்த நமக்கு அடுத்த ஜெனரேஷன் மாடுகளை போட்டோலதான் பாத்துட்டு இருக்கும் ப்ரோ..” என்றனர்.\nசிலிர்த்துவிட்டது. ஒரு யுகம் களத்தில் இறங்கிவிட்டது. இதற்கும் தடை என்று தீர்ப்பு வந்தால், தயாராகிக்கொள்ளுங்கள். பொங்கலில் இனியொரு போராட்டத்திற்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n`எந்த அடிப்படை வசதியும் இல்லை' - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்புடன் குடியேறிய மக்கள்\n' - ஆணவத் தாக்குதலுக்கு ஆளான மேட்டுப்பாளையம் இளம் பெண்ணின் தாய்\n`2 பதக்கங்கள் வெல்வது குற்றமா - ஹரியானா அரசின் அறிவிப்பும் வீரர்களின் கொந்தளிப்பும்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n`அவர்கள் 37 பேர்; தமிழக அரசுக்கு நான் ஒற்றை ஆள் மட்டும்தான்’ - மக்களவையில் ரவ\n' - சென்னையில் கல்லூரி முன் நடந்த பயங்கரம்\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yazhvenba.wordpress.com/2018/03/09/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-14/", "date_download": "2019-06-26T14:17:31Z", "digest": "sha1:DNUHHAGBRIMM5EXV4EIJCGUI7ET7P5NZ", "length": 4266, "nlines": 124, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "வேந்தர் மரபு – 14 – யாழ்வெண்பா", "raw_content": "\nவேந்தர் மரபு – 14\nMarch 9, 2018 யாழ்வெண்பா\nகதையுடனே பயணித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையின் அடுத்த அத்தியாயம்…\nவேந்தர் மரபு – 14\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nNext postவேந்தர் மரபு – 15\nசமுத்திரை க்கு ஜோடியான இளவரசர் யார்னு\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
{"url": "http://bestaffiliatejobs.blogspot.com/2011/04/vcbux-my-own-payment-proof.html", "date_download": "2019-06-26T13:45:52Z", "digest": "sha1:E7NJTR7AZGI5RQYQD5ET5AMCK6P45GCY", "length": 6249, "nlines": 69, "source_domain": "bestaffiliatejobs.blogspot.com", "title": "Vcbux My Own Payment Proof", "raw_content": "\nஎங்களது அணைத்து ONLINE JOB-களும் VIDEO வடிவில் YOUTUBE-ல் உள்ளது.\nஎங்களுடைய YOUTUBE பக்கம் செல்ல இங்கு CLICK செய்யவும். மறக்காமல் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி \nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nதமிழ் நண்பர்களுக்கு . . . . .\nநான் Clixsenseல் அண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே, முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப...\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உல...\nGo Down For Payment Proofs தினமும் இதில் வேலை செய்ய முடியும் என்றால் மட்டும் இந்த தளத்தில் சேருங்கள். தினமும் வேலை செய்தால் மட்டுமே இ...\nWe Provide Online Jobs Since 2009 (Note : Read Entire Page) (இங்குள்ள 14 வகை Jobகளும் தமிழ் நண்பர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க...\nநண்பர்களுக்கு வணக்கம், .................................. \"முயற்சி செய்யாமல் சம்பாரிக்க முடியது . முயற்சி செய்யமுடியும...\nமுதலீடு இல்லமால் நீங்களும் இணையத்தில் மாதம் 250$ வரை சம்பாரியுங்கள்\nஇங்கு நான் சொல்லுவதை முறைப்படி செய்தால் உங்களால் கண்டிப்பாக இணையத்தில் மாதம் 250$ வரை சம்பாரிக்க முடியும்...\nI Receive $4 in TviPtc. நான் இங்கு சில PTC தளங்கள் பற்றி உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ள்ளேன். இதில் நீங்கள் இனைந்து பணம் சம்பாரித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8676:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-06-26T15:05:55Z", "digest": "sha1:PZQAJEPQT5PAXD4C5CHMZA2QAVN7NMVK", "length": 18613, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "பாவம் பலவீனப்படுத்தும்!", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் பாவம் பலவீனப்படுத்தும்\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.\nமனித இனத்தைப் படைத்த இறைவன் அவன் இப்பரந்த நிலத்தில் வாழ்வதற்கெனச் சட்டதிட்டங்களை வகுத்தான்; கடமைகளையும் உரிமைகளையும் கட்டமைத்தான்; எல்லைகளை நிர்ணயித்தான்; குறிப்பிட்ட எல்லையை அவன் தாண்டக்கூடாதெனக் கட்டளையிட்டான். இத்தனையும் ஏன் செய்தான் அவன் இந்நிலத்தில் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.\nபிறர் மத்தியில் செல்கின்றபோது அவனுடைய மானத்திற்கும் மரியாதைக்கும் இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே சட்டவரையறைகளை நிர்ணயித்தான். அவனுடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவன் செய்துவருகின்ற சின்னச் சின்னப் பாவங்களையும் தவறுகளையும் மறைத்துவிடுகின்றான்.\nஇறைவன் மனிதனுக்கு விதித்த எல்லைகளை மீறாத வரை அவன் தலைநிமிர்ந்து கம்பீரமாக நடைபோடுகிறான். இறைவன் விதித்த எல்லைகளை அவன் மீறத் தொடங்கிவிட்டால் மனதளவில் தளர்வடைந்துவிடுகிறான். மனத்தில் தளர்வு ஏற்பட்டுவிட்டால் நடையில் கம்பீரம் காணாமல் போய்விடும்.\nமனிதன் பாவம் செய்யத் தொடங்கிவிட்டால் அவன் தனது மனத்துணிவை இழந்துவிடுவான்.\nஎப்போதும் பயமும் அச்சமும் அவனைக் கவ்விக் கொள்ளும்.\nஎதையும் தீர்மானமாகப் பேசவோ செய்யவோ துணிவு ஏற்படாது.\nபிறர்மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவான்; யாரையும் எளிதில் நம்பமாட்டான்.\nகாரணம் தன்னைப் போலவேதான் பிறரும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.\nஎனவேதான் படைத்தோன் இறைவன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ளுமாறு பகர்கின்றான். மனித உள்ளத்தில் நன்மையைச் செய்யத் தூண்டும் ஓர் உந்துதல் உள்ளதைப் போலவே தீமை செய்யத் தூண்டுவதற்கான ஓர் உந்துதலும் உள்ளது. அது அவனைத் தீமை செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கும். அதை அடக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்தால்தான் நன்மையைச் செய்ய முடியும்; அதன்மூலம் தன் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும்.\nஇக் கருப்பொருளைப் பொதிந்துள்ள திருவசனத்தை உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:\n''நன்மை தீமைகளை அந்த ஆன்மாவுக்கு அறிவித்தவன்மீது சத்தியமாக யார் (பாவங்களிலிருந்து தன் ஆன்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான்''. (அல்குர்ஆன் 91: 8-9)\nநன்மை எது, தீமை எதுவெனப் படைத்தோன் இறைவன் தெளிவுபடத் திருக்குர்ஆனில் கூறி, சீரான வழியைக் காட்டிவிட்டான். அதன்பின்னர் சீரான பாதையில் நடைபோடுவது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்.\n\"ஷைத்தான் மனிதனின் பகிரங்க எதிரி'' என்று படைத்தோன் இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாக எடுத்துரைத்துள்ளான். ஆகவே அவன் மனிதனை வீழ்த்துவதற்கான எல்லாச் சூழ்ச்சிகளையும் முயற்சிகளையும் செவ்வனே செய்துகொண்டே இருப்பான். அவனுடைய மிகப்பெரும் வேலை மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவதுதான்.\nமனிதன் பலவீனனாகவே படைக்கப்பட்டுள்ளான். அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி மிக எளிதில் ஷைத்தான் தன் வலையில் அவனைச் சிக்க வைத்து மேன்மேலும் அவனைப் பலவீனனாக ஆக்கிவிடுகின்றான். தவறு செய்த மனிதன் அது வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே இருந்துகொண்டிருக்கிறான். அதன் காரணமாக அவனால் துணிச்சலாக எதையும் செயலாற்ற முடியாது; கம்பீரமாக நடைபோட முடியாது.\nஅதே உத்தியை இன்றைய யூதர்கள் கையாளுகின்றார்கள். உலகம் முழுவதும் தம்முடைய ஆட்சியே ஓங்கி இருக்க வேண்டுமென்ற நப்பாசையில் அவர்கள் இருந்துகொண்டிருப்பதால் ஆங்காங்கே தவறு செய்யக்கூடியவர்களைக் கண்காணித்து வருகின்றார்கள்.\nஅரசுப் பதவியில் உள்ளோர் செய்கின்ற பஞ்சமாபாதகச் செயல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, தக்க தருணம் வரும்போது அவர்கள் செய்த மாபாதகத் தவறுகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுவதாகக் கூறி மிரட்டி அவர்களைத் தமக்கு அடிமையாக்கிக் கொள்கின்றார்கள். பின்னர் தம்முடைய திட்டங்களையெல்லாம் அவர்களை வைத்தே நிறைவேற்றிக்கொள்கின்றார்கள்.\nஅந்தக் கண்ணோட்டத்தோடு இன்றைய தமிழகத்தை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் உண்மை புலப்படும். ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒரே திசையில்தான் பயணிக்கின்றார்கள். ஆளும் கட்சியினர் மத்திய அரசை எதிர்த்து எதுவும் செய்யத் திராணியற்றவர்களாக உள்ளனர்.\nதமிழக ஆளும் கட்சியினர் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்குத் துணிவில்லை. ஏனென்றால் எதிர்ப்போர் அனைவரும் கடந்த காலங்களில் மாபாதகச் செயல்களைச் செய்தவர்கள்தாம். ஆளும் கட்சியின் கொள்கை முடிவுகளைத் துணிவோடு எதிர்க்கத் தயாராகிவிட்டால் சிறைக்கூடம் தயாராக இருக்கிறது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால்தான் வீரியமாக யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மக்களின் மனத்தைச் சமாதானப்படுத்தும் விதமாக மேலோட்டமான எதிர்ப்பு வார்த்தைகளை மட்டும் அவ்வப்போது உதட்டளவில் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்று இந்த உத்தியை உலக அளவில் யூதர்கள் பரவலாகக் கையாண்டு வருகின்றார்கள். ஒரு நாட்டில் அவர்கள் தம் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் போன்றோர் செய்கின்ற தவறுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள்மூலம் அந்நாட்டிற்குள் நுழைந்துவிடுகின்றார்கள். அல்லது அந்நாட்டின் முக்கியப்புள்ளிகளை விலைகொடுத்து வாங்கிவிடுகின்றார்கள்.\nபின்னர் அவர்கள் தம் விருப்பம்போல் அதில் செயல்படுகின்றார்கள். ஆக, ஆள்வதோ அந்தந்த நாட்டின் குடிப்பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் தம் விருப்பப்படி ஆட்சி செய்ய முடியாது; குடிமக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாலும் முடியாது. அவர்களின் ஆட்சியும் காட்சியும் யூதர்களின் கட்டளைப்படியே இருக்கும்.\nநேர்மையான அலுவலர்களும் அதிகாரிகளும் எதிரிகளின் திட்டங்களுக்குத் தடையாக இருப்பார்கள். அவர்களை எப்படியாவது தவறு செய்யவைத்து, அதைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களின் தடை உடைபட்டு புதிய மடை திறந்துவிடும். அதன்பின்னர் அவர்கள் தம் விருப்பம்போல் திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். இதுவே இன்றைய நடைமுறை.\nஇறைவன் விதித்த கட்டளைகளையோ அரசு விதித்துள்ள சட்டங்களையோ மீறும்போது மனது படபடக்கிறது; துடிதுடிக்கிறது; துணிவை இழக்கிறது. இதனால்தான் அல்லாஹ் ஷைத்தான் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறான்.\nஅவனுடைய வலையில் மாட்டிக்கொள்ளாமல் இறைவன் விதித்த கட்டளைகளை நிறைவேற்றி, தடுத்தவற்றை அறவே செய்யாமல் முற்றிலும் தவிர்ந்துகொண்டு வாழ்வதே மன உறுதியையும் மன நிம்மதியையும் பெற்றுத் தரும்.\nஆகவே ஷைத்தானுடைய மாய வலையில் விழாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள கடுமுயற்சி செய்வதைப்போலவே அரசு விதித்துள்ள சட்டங்களை மீறாமல் நடைபோட்டால் நம்முடைய நன்மையான செயலுக்கு யாரும் தடைபோட முடியாது. அத்தகைய முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வெற்றிவாகை சூட வல்லோன் அல்லாஹ் நல்வாய்ப்பை நல்குவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://serandibenews.com/tag/hisbullah/", "date_download": "2019-06-26T13:47:28Z", "digest": "sha1:MQOACN64UNVF6QOHL6HUFILGZIDIPU6F", "length": 7588, "nlines": 70, "source_domain": "serandibenews.com", "title": "hisbullah – Serandib News – Sri Lanka Tamil News", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nயுத்த காலத்தில் குடியேறியவர்களுக்கு சலுகை\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகை காட்டப்படும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வன பரிபாலனத் திணைக்களக் காணி தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா...\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்காதீர் – ஹிஸ்புல்லாஹ்\nஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பிலான அறிக்கை ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால்...\nகிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக ஹர்த்தால்\nகிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (11) காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன்...\nஅரச காணிகளது தரவுகளை நான் கோரவில்லை – ஹிஸ்புல்லாஹ்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளது தரவுகளை உடனடியாக தமக்கு வழங்கும்படி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச காரியாலயங்களிலும் கோரியுள்ளதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. பொய்யான, கீழ்தரமான செய்திகளை வெளியீட்டு...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சாந்த பண்டார இன்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இளைஞர்...\nஇலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்\nஇலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையின் கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை...\nஹிஸ்புல்லா இடத்துக்கு சாந்த பண்டார\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய...\nஎமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.mathavaraj.com/2008/12/blog-post_10.html?showComment=1231652760000", "date_download": "2019-06-26T14:59:49Z", "digest": "sha1:53K2O7HKUFAPCOBDVPICTFGF45YG5IWW", "length": 29503, "nlines": 249, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கெண்டைக்கால் திமிர் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சொற்சித்திரம் � கெண்டைக்கால் திமிர்\nபள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும்போது எங்களுக்காக\nமைதானத்தில் வேப்பமரத்தடியில் அவன் காத்து நிற்பான்.\nவலது கையில் வட்டக்கல் கொண்டு\nகோட்டுப் பாத்திக்குள் வீசிப் போட்ட காசுகளுக்குள்\nநான் கைகாட்டிய நாலணாவை குறிபார்த்து\nஅத்தியில் ஊன்றி நிற்கும் அவனது இடதுகாலில்\nகெண்டைக்கால் திமிர் விடைத்து இருக்கும்.\nவட்டக்கல்லில் அடிபட்டு நாலணா மட்டும்\nஅவனுக்கு ஒரடி பின்னாலும்கூட வைத்துப் பார்த்தோம்.\nநான், விஷ்ணுராம், மகாதேவன், விக்னேஷ்வரன்,\nவெங்கடேசன், சாலமன் எல்லோருமே தோற்றுப் போனோம்.\n'உன் அம்மா வள்ளியைப் போல\nஅவன் கெண்டைக்காலில் அடித்து விரட்டிய பிறகு\nஇருபது வருடம் கழித்து ஒருநாள் அவனை\nபூச்சிக்காட்டு மந்தையில் வைத்துப் பார்த்தேன்.\nசைக்கிள் ரிக்சாவில் ஏறி அமர்ந்தேன்.\n\"நாந்தான் மாது...என்னைத் தெரிகிறதா\" என்றேன்.\nபெடல் ஊன்றி அழுத்திய அவனது\nகெண்டைக்காலில் என் கண்கள் பதிந்தன.\nஇதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்\nஎதோ ஒரு நூலிழை இடைவெளியில்\nமாரடியான்களிடம் இருந்து நாம் தொலைந்து\nஒட்டிக்கொண்ட பால்ய கலத்து இனிப்பு\nஇன்னும் உள்நாக்கில் இருந்து வெளியேறவில்லை.\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nஅந்த சோகம் பிரக்ஞையுள்ளவர்களை அறுத்துக் கொண்டே இருக்கிறது.\nஉங்கள் வலைத்தளம் பார்த்தேன். புதிய முயற்சி. முக்கிய முயற்சி தமிழில்\nஆரோக்கியமான, நுட்பமான இதயம் இருப்பதால்தான் அழுகை வருகிறது.\nஇதுதான் வாழ்க்கையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது.\nபத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது.\nஅது போட்டோ அல்ல. ஒவியம். காலம் காலமாய் நிமிரமுடியாமல் வஞ்சிக்கப்பட்ட மனிதனின் உருவம். மாரடியான் அப்படிப்பட்டவன் தானே அம்மாவைப்போல அவனும் கக்கூஸ் அள்ளவா பிறந்தான் அம்மாவைப்போல அவனும் கக்கூஸ் அள்ளவா பிறந்தான் மிகச்சரியாக குறி பார்க்கும் திறமை படைத்த அவனை யார் வஞ்சித்தது\nஇன்னமும் சிறிது நீட்டியிருக்கலாமோ எனத்தோன்றுகிறது.\nஅதை கவிதையாக நான் எழுதவில்லை. கவிதைக்கு இன்னும் உயர்ந்த தளமும், அர்த்தமும், படிமமும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால்தான் சொற்சித்திரம் எனக் குறிப்பிடுகிறேன். நீங்கள் சொன்ன மாதிரி இன்னும் எதோ சொல்லத் தோன்றுகிறது அல்லவா\nமிக்ச்சரியாக குறிபார்க்கும் திறமை உடையவனை வஞ்சித்தது யார் என்ன செய்வது மாதவராஜ் நாம் தான் தூக்கி விட வேண்டும். நகர்ப்புறங்களில் முன்னேறியவர்கள் தங்கள் சகோதரர்களைத் தூக்கி விட முயல்வதில்லையே \nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://patrikai.com/dakalti-first-look-poster-went-controversy/", "date_download": "2019-06-26T13:54:54Z", "digest": "sha1:QAST67IDT7M3F3HZYI6ZYGZUWSUJGEHO", "length": 12084, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "டகால்டி First Look போஸ்டர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்தானம்...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»டகால்டி First Look போஸ்டர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்தானம்…\nடகால்டி First Look போஸ்டர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்தானம்…\nடகால்டி ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டகால்டி’ .\nமும்பையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n18 ரீல்ஸ் சார்பில் செளத்ரி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வெள்ளி அன்று படக்குழுவினர் வெளியிட்டனர். போஸ்டரில் சந்தானம் புகை பிடிப்பது போன்று காட்சி இருந்தது. சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்குக்கு எதிர்ப்பு வந்த போல சந்தானத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதனையடுத்து நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டது. அது புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பலர் தெரிவித்திருந்தனர். வருங்காலத்தில் இதுபோன்ற போஸ்டர் வெளியிட மாட்டோம் என்பது உறுதியுடன் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த போஸ்டரை சந்தானம் நீக்கவில்லை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசந்தானத்தின் ‘டகால்டி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…\n‘தில்லுக்கு துட்டு 3’ படத்தை 3டி-யில் தயாரிக்க பேச்சுவார்த்தை…\nஇசையமைக்க ஒப்புக்கொண்டது பற்றி சிம்பு\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.goodreturns.in/company/hindalco-industries/", "date_download": "2019-06-26T13:46:37Z", "digest": "sha1:GPBW7HL2TTSQBRDRRM7ZQ7QWXPVFTDCZ", "length": 17614, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Hindalco Industries Ltd. நிறுவன தகவல், Hindalco Industries Ltd. பங்குகள், மேற்கோள் மற்றும் இதர தகவல் - Tamil Goodreturns", "raw_content": "\nநிறுவன பெயரின் முதல் சில எழுத்துக்களை நிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nHindalco Industries Ltd. நிறுவனம் மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்ஈ) மற்றும் நேசிய பங்குச்சந்தைகளில் (என்எஸ்ஈ) பட்டியலிடப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனம் ஒவ்வொரு காலாண்டு முடிவுகள் மற்றும் நிர்வாக குழு கூட்டங்கள் தக்க தேதிகளில் தவறாமல் நடத்தி வருகிறது. Hindalco Industries Ltd. இந்நிறுவனம் உயர் மட்ட மேலாண்மை அமைப்பின் வழிகாட்டல் மூலம் நிர்வாக குழுவால் இயங்கி வருகிறது. மேலும் நிர்வாக குழு நிறுவனத்தின் செயல்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு செய்துவருகிறது. Hindalco Industries Ltd. பங்கு விலை விபரம் மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை குறித்த தகவல்களை\nHindalco Industries Ltd. குறித்த கூடுதல் தகவல்களை\nமும்பை பங்குச் சந்தையில் விலை வரலாறு\nHindalco Industries Ltd. முக்கிய நிதியில் விகிதங்கள்\nHindalco Industries Ltd. கார்ப்பரேட் அறிவிப்புகள்\nகடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n553 புள்ளிகள் அவுட், காரணம் வட்டிவிகிதம்.. என்னய்யா வட்டி விகிதம் குறைஞ்சது ஒரு தப்பா..\nமுட்டு கொடுக்கும் மோடி சக்தி.. புதிய உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி..\n2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை\nமோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா\n1313 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. காலையில மேல, சாயங்காலம் கீழ.. காலையில மேல, சாயங்காலம் கீழ..\nகாளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது\nபாஜக அதிரடி வெற்றி. பங்குச் சந்தையில் அதகளம்.. விர்ரென உயர்ந்த சென்செக்ஸ்\nபட்டையை கிளப்பிய சந்தைகள்.. சென்செக்ஸ் 1421 புள்ளிகள் ஏற்றம்\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.. ஏன்னா... எனக்கு வியாபாரம் தான் முக்கியம்..\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nசிம்பொனியில பத்து வருஷத்துக்கு முன்னாடி பணத்தை போட்டவங்க இப்போ கோடீஸ்வரர்கள்- எப்படி தெரியுமா\nஇந்திய பங்குச் சந்தைகள் சரிய ஐந்து முக்கியக் காரணங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/jun/14/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3171046.html", "date_download": "2019-06-26T14:14:17Z", "digest": "sha1:QGHSFFG2SU5QKNBDF52HWJE2CYDVZ6Y4", "length": 11246, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பக்தர்கள் வசதிக்காக மருதமலை கோயிலில் மின் தூக்கி அமைக்க ஆய்வு- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபக்தர்கள் வசதிக்காக மருதமலை கோயிலில் மின் தூக்கி அமைக்க ஆய்வு\nBy DIN | Published on : 14th June 2019 08:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமருதமலை முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி, பேட்டரி வாகனங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முதற்கட்ட ஆய்வை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.\nகோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மருதமலை முருகன் கோயில். இங்கு உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.\nஆன்மீகத் தலமாக மட்டுமின்றி சுற்றுலாத் தலமாகவும் உள்ளதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.\nதினமும் சராசரியாக 5 ஆயிரம் பக்தர்களும், வார இறுதி, விடுமுறை நாட்களில் 25 ஆயிரம் பக்தர்களும், கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாள்களில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களும் இங்கு வருகின்றனர்.\nதைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த தினங்களில் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகை தருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஅடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலை அடைய 600க்கும் அதிகமான படிகள் உள்ளன. தவிர வாகனங்கள் மூலமும் மலைக் கோயிலுக்குச் செல்லலாம். பக்தர்களின் வசதிக்காக மலைக் கோயிலுக்குச் செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇதற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் மூலம் சென்றாலும் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து 140 படிகளைக் கடந்தே முருகனை தரிசிக்க முடியும்.\nஇதனால் வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக சிரத்தையோடு வரும் வயதான பக்தர்கள் 140 படிகளைக் கடந்த செல்வதற்குள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.\nசில நேரங்களில் படிகளில் ஏற முடியாமல் இவர்கள் திரும்பும் நிலையும் ஏற்படுகிறது. இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பேட்டரி வாகனங்கள், மின் தூக்கி, ரோப் கார் போன்றவற்றை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மருதமலை கோயிலில் மின் தூக்கி, பேட்டரி வாகனங்கள் அமைப்பது தொடர்பாக முதல்கட்ட ஆய்வை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டுள்ளது. மின் தூக்கி அமைக்கப்பட்டால் முருகனை சந்திக்க சிரமப்பட வேண்டியதில்லை என பக்தர்களும் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மருதமலை கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது:\nபக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி அமைப்பது குறித்த முதற்கட்ட ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.\nஅலுவலக அறையில் இருந்து மின்தூக்கி அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், பேட்டரி வாகனங்கள் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.\nதற்போது மண் மாதிரிகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன.\nதொடர்ந்து ஆய்வு செய்து சாத்தியக் கூறுகளுக்கேற்ப மின்தூக்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.ndtv.com/tamil/exit-poll-result-2019-lok-sabha-poll-of-polls-predict-who-will-form-the-next-government-as-voting-co-2039815?ndtv_related", "date_download": "2019-06-26T13:57:54Z", "digest": "sha1:DEKAZFB5MPR66SSUYXS4OEPOWMLX4FAL", "length": 11172, "nlines": 130, "source_domain": "www.ndtv.com", "title": "Poll Of Exit Poll 2019: Lok Sabha Poll Of Polls 2019; Poll Of Polls Predict Who Will Form The Next Government As Voting Concludes | Poll of Exit Poll 2019: பாஜகவே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்.. LIVEUPDATES", "raw_content": "\nPoll of Exit Poll 2019: பாஜகவே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்.. LIVEUPDATES\nPoll of Exit Poll 2019, Indian General Election: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை தொடர்ந்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மெகா கூட்டணி அமைக்கும் காங்கிரஸ், மற்றும் அதிகளவிலான மாநிலக் கட்சிகள் ஆகியவற்றை பாஜக எதிர்கொள்கிறது.\n2019 Poll of Exit Poll India: 7கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.\nநாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த மாதம் முதல் நடந்த வந்த மக்களவை தேர்தல், இறுதி கட்டத்தை எட்டியது. இன்று நடந்த 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.\nகடந்த ஏப்.11ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், 6 கட்டமாக இதுவரை 483 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.\n7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது. பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 உள்ளிட்ட தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர்.\nவாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு அப்டேட்ஸ்\nபாஜக எளிதாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தகவல்.\nEXIT POLLS 2019: பஞ்சாப்பில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்.\nகேரளாவில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் என்று கணிப்பு.\nPoll of Exit Polls: ஒடிசாவில் பாஜகவுக்கும் பிஜூ ஜனதா தளத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கணிப்பு.\nமேற்குவங்கத்தில் கடந்த 2014 தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெறும் என கணிப்பு\nமகாராஷ்டிராவில் பாஜக + சிவசேனா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிப்பு..\nஉத்தரபிரதேசத்தில் பாஜக 46 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் + சமாஜ்வாதி கூட்டணி 32 தொகுதிகளில் வெற்றி பெறும்..\nதேர்தலுக்கு பிந்தை கருத்துகணிப்புகள் படி பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜகவுக்கு ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீயூஸ் 18 இந்தியா கருத்து கணிப்புகள் படி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 13 முதல் 14 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 10 முதல் 12 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 26 முதல் 28 தொகுதிகளில் பாஜகவே வெற்றி பெறும் என ஆஜ் தாக் கணித்துள்ளது.\nடெல்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இந்தியா டிவி கூறுகிறது.\nவாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களின் முதல் புள்ளிவிவரங்கள்..\n7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.\n6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nமத்திய அரசில் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள்\nதமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\n6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nமத்திய அரசில் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள்\nதமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nசிறுபான்மையினரும் ஜனநாயகமும் சிறப்பாக இருக்கு : பாஜக எம்.பி கே.ஜே. அல்போன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.nhm.in/shop/literature/?sort=review_rating&page=5", "date_download": "2019-06-26T13:59:06Z", "digest": "sha1:KRQQILY5QIGNYK7S4Z3HCY2CDV45TGJW", "length": 6066, "nlines": 154, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nதிருக்குறள் மூலமும் உரையும் தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும் ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்\nபுலியூர் கேசிகன் தமிழண்ணல் கண்ணதாசன்\nமா.பொ.சியின் தமிழ் உணர்வு அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 2 அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 1\nசேது பாண்டியன் பழனியப்பன் பழனியப்பன்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் பாகம் 1 முதல் 2 வரை குறுந்தொகை பாகம் 2 வீரமாமுனிவர் அருளிய ஐந்திலக்கண தன்நூல் விளக்கம்\nசுபா திருவேந்தி வீரமா முனிவர்\nஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம் கம்பன் அமுதில் சில துளிகள் ஜெயகாந்தனும் நானும்\nதமிழண்ணல் சாலமன் பாப்பையா தேவபாரதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://babynames.tamilgod.org/scandinavian-baby-names-starting-letter-o", "date_download": "2019-06-26T13:53:41Z", "digest": "sha1:WLB44HXAPBTLTEDDGKBQPFUKEZW7X52B", "length": 13354, "nlines": 251, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Scandinavian Baby Names starting with letter 'O' | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 04\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 03\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 02\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள்\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=15727&p=56149", "date_download": "2019-06-26T14:44:27Z", "digest": "sha1:G4Q45MIDC5RHYPGNWZJPLSV3ZNLK6Q5V", "length": 7460, "nlines": 106, "source_domain": "padugai.com", "title": "இல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா? - Forex Tamil", "raw_content": "\nஇல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nஇல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா\nஇரண்டு நாட்களுக்கு முன்பு உதவிகளத்தில் நண்பர் ஒருவரின் திருமணம் உதவி என்ற பதிவும் அதற்கான பின்னுாட்டங்கள் சிலவற்றை படித்தபோது எனக்குத் தோன்றிய சில வரிகளை எழுதியுள்ளேன், உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் படியுங்களேன்.\nஇணையம் தனில் இருகரம் கொண்டு\nஇல்லாதோர். இயலாதோர் பல இருக்க\nஇல்லறம் தனில் அடியெடுத்து வைக்க\nஇரவலாய் பணம் கேட்பதும், கொடுப்பதும் சரிதானோ\nஇருமனம் இணையும் இல்லறத்தை நல்லறமாக்க\nஇரவல்தனை கேட்கும் இல்லானை நம்பிவரும்\nRe: இல்லறம் தனை அமைக்க இறவல் பணம் தேவைதானா\nகவிதைநயம் நன்றாக இருந்தாலும் தனிமனித விமா்சனம் தேவைதானாநொந்தவரை மேலும் ஏன் நோகடிப்பானேன்\nRe: இல்லறம் தனை அமைக்க இறவல் பணம் தேவைதானா\nவெங்கட் wrote: கவிதைநயம் நன்றாக இருந்தாலும் தனிமனித விமா்சனம் தேவைதானாநொந்தவரை மேலும் ஏன் நோகடிப்பானேன்\nஇது தனிமனித விமர்சனம் கிடையாது. என்னைப் பொருத்தவரை படுகை தளம் என்பது மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் தளம் இதுபோன்ற தளத்தில் பதிவிடவேண்டும் என்பதற்காக எதையாவது பதிவிடுவதும். அதற்கு பின்னுாட்டமிடவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒன்றை பின்னுாட்டமிடுவதையும் படிக்கும்போது மனதிற்கு சங்கடமாக உள்ளது. அதற்காகத்தான் இதை எழுதினேன், தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் திருத்திகொள்கிறேன்.\nஇறவலை இரவலாக மாற்றியுள்ளேன். சுட்டிகாட்டியதற்கு நன்றி\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%202", "date_download": "2019-06-26T14:28:56Z", "digest": "sha1:46Z7G2MYM3VRQ5PHO7HPM65EOP2R3QS5", "length": 2631, "nlines": 38, "source_domain": "thamizmanam.com", "title": "குரூப் 2", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : குரூப் 2\nCinema News 360 Diversity & Inclusion Events General NEP National education policy New Features News Review TNPSC Group 4 Tamil Cinema Uncategorized WordPress.com home improvement national Education அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை குட்டிக்குட்டிச் சாரல்...... சினிமா தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பீஷ்மர் பொது பொதுவானவை பொருளாதாரம் வரைவு தேசியக் கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
{"url": "http://www.inandoutcinema.com/tag/nikki-galrani/", "date_download": "2019-06-26T14:45:08Z", "digest": "sha1:VLNQJ6YPPO77S5PKYTZBVGFEJ5G3C2EZ", "length": 8902, "nlines": 102, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Nikki Galrani Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n சோகத்தில் ஜீவா படத்தின் நாயகி\nநிக்கி கல்ராணி தமிழில் கடந்த வருடம் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜீவா நடக்கும் கீ படத்தில் ஜீவாக்கு ஜோடியாக நடித்துள்ளார், நிக்கி கல்ராணி. கடந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த நிலையில், இப்போது ஓரிரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டப்போது, ‘நான் கடந்த இரண்டு வருடங்களில் அதிக படங்களில் நடித்த ஒரே நடிகை. சிறிது நேரம் கூட ஓய்வின்றி நடித்ததால், எனக்கு திடீரென்று உடல்நிலை பாதித்ததுவிட்டது. இதனால் வீட்டில் என்னை மிகக் […]\nஜீவாவின் “கீ” திரையரங்கின் கதவுகளை திறக்க இருக்கிறது.\nஜீவா தமிழ் சினி உலகின் முக்கியமான கதாநாயகன். கலகலப்பு-2 ற்கு பிறகு அவருக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் கையில் முடிந்த நிலையிலும், முடியும் தருவாயிலும் எண்ணற்ற படங்கள். அவருடைய படங்களில் ட்ரைலர், டீசர் மட்டும் ரிலீஸ் ஆகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவர் நடித்த கீ படம் ரெடியாகி ஒரு வருடத்திற்கு மேல் ரிலீஸ் ஆக முடியாமல் நிற்கிறது. இப்பொழுது அந்த படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் மாதம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. […]\nநிக்கி மற்றும் சசிகுமார் இணையும் முதல் படம்\nசசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்பொழுது சசிகுமார் அடுத்த படத்தை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். TD.ராஜாவின் செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நிக்கி கர்லானியுடன் இணைகிறார் சசிகுமார். இந்த படத்தின் இயக்குநர் கதிர். இவர் சுந்தர் சி இடம் பணிபுரிந்தவர். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகல்யாண புரோக்கர் பிரபுதேவா – சார்லி சாப்ளின் -2 கதை\nசார்லி சாப்ளின்-3, 4, 5க்கும் கதை ரெடி- இயக்குநர்\nசார்லி சாப்ளின் – 2 பிரபுதேவா, நிக்கி கர்லானி நடிக்கும் படம். இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்குகிறார். படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அம்ரிஷ். இந்த படத்தில் விஜய் டிவி புகழ் பாடிய சின்ன மச்சான் பாடல் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ட்ரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசுகையில் படத்தின் பார்ட் […]\nசார்லி சாப்ளின்-2 படக்குழுவினரை வாழ்த்தி சிங்கில் டிராக்கை வெளியிட்ட நடிகர் தனுஷ்\nசென்னை: நடிகர் திலகம் பிரபு, நடனப்புயல் பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த படம் “சார்லி சாப்ளின்”. காமெடி படமாக இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 18 வருடங்கள் கழித்து “சார்லி சாப்ளின்” படத்தின் இரண்டாம் பாகம் “சார்லி சாப்ளின்-2″ஆக தற்போது உருவாகி வருகிறது. இதில், பிரபு, பிரபுதேவா நிக்கி கல்ராணி, ஆத்ர்ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், “சார்லி சாப்ளின்-2” படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் சற்று முன்பு டிவிட்டர் மூலம் யூடியுபில் வெளியிட்டார். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Parents.html", "date_download": "2019-06-26T14:38:55Z", "digest": "sha1:SDFNX2KOX4M23W4ZBJZHDR6WDV3KH6RN", "length": 9111, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Parents", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபள்ளி மாணவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்\nதருமபுரி (06 மார்ச் 2019): தருமபுரி அருகே திருமணத்திற்கு உடன்படாத பள்ளி மாணவிக்கு பெற்றோரே உணவில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவர்கள் குளித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை\nசென்னை (03 பிப் 2019): சென்னை மெரினாவில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் தனியாக வந்து குளித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது.\nபெற்றோர் துபாயில் - மகள் தனிமையில் செய்த காரியம்\nமும்பை (28 ஜன 2019): மகளை தனிமையில் விட்டு பெற்றோர் துபாயில் இருக்க விரக்தியில் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஎன் சாவுக்கு என் குடும்பமே காரணம் - பெண்ணின் அதிர வைக்கும் வாக்குமூலம்\nமன்சிரியாலா (24 டிச 2018): தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது.\nமதுவின் கொடுமை - மகனையே கொலை செய்த பெற்றோர்\nவிருதுநகர் (26 செப் 2018): மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி ஓவராக டார்ச்சர் செய்த மகனை அவரது பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 2\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.inneram.com/tamilnadu/16773-nirmala-sitharaman-talk-about-cauvery-issue.html", "date_download": "2019-06-26T13:49:04Z", "digest": "sha1:TBN26U7VEO64BHDIBQUN6VVRF2FDAFFZ", "length": 12357, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "காவிரி விவகாரத்தில் நிர்மலா சீதாரமன் சொல்வதை பாருங்கள்!", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nகாவிரி விவகாரத்தில் நிர்மலா சீதாரமன் சொல்வதை பாருங்கள்\nமதுரை (02 மே 2018): காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனிச்சையாக செயல்பட முடியாது'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nராமநாதபுரம் செல்வதற்காக விமானம்மூலம் இன்று மதுரை விமான நிலையம் வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், \"115 மாவட்டங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லத் தேவையான மத்திய அரசின் திட்டங்களான குடிநீர், சுகாதாரம், சாலை மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவை அந்த மாவட்டங்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆய்வுசெய்ய, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு வந்துள்ளேன்.\nராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் 75 சதவிகிதம், பட்டியலின மக்கள் வசிக்கும் 36 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு மத்திய அரசு திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆய்வுசெய்ய வந்திருக்கிறேன். தமிழகத்தை அறிந்த மத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாநில அரசின் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைவருடனும் கலந்து பேசி, அதை நீதிமன்றத்தில் சொல்லித்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விஷயத்தில், மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. 2007ல் இருந்து மத்திய-மாநில அரசுகளைக் கையில் வைத்திருந்த இன்றைய எதிர்க்கட்சியினர், கர்நாடகா தேர்தலை மனதில்வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாங்கள் காலம் தாழ்த்துவதாகச் சொல்வதில் உண்மையில்லை. அன்று, அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எந்தெந்தத் தேர்தல்களை எல்லாம் மனதில்வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்தார்கள் என நான் கேட்கவா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.\nபட்டாசு விபத்துகள் சமீப காலமாக அதிகரித்திருப்பதற்கு, மத்திய அரசின் கண்காணிப்புக் குறைபாடு என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாநில அரசில், பட்டாசுத் தொழிலைக் கண்காணிக்க மற்றும் பட்டாசு விபத்துகளைத் தவிர்க்க, இருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட துறையினர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.\n« முத்தம் கொடுத்தால் மார்க் போடுவேன் - இவர் வேற லெவல் பேராசிரியர் ராகுல் காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பின் பின்னணி ராகுல் காந்தியுடன் திருமாவளவன் சந்திப்பின் பின்னணி\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அன…\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=18", "date_download": "2019-06-26T14:29:50Z", "digest": "sha1:IBVAG3COYBDUY325BWBTAZV4NBESQDIA", "length": 16762, "nlines": 74, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]\nஎஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்\nகதை 1 - சேந்தன்\nகட்டடக்கலை ஆய்வு - 2\nகருங்கல்லில் ஒரு காவியம் - 2\nஇது கதையல்ல கலை - 2\nஇதழ் எண். 2 > ஆலாபனை\nசென்ற மாதம் எழுதியதை கர்நாடக சங்கீதம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நண்பனிடம் காட்டினேன். படித்துவிட்டு அவன், \"எல்லாம் சரிடா, ஆனால் இந்த ஸ்வரம் ஸ்வரம்-னு அடிக்கடி வருதே அப்படினா என்ன\" என்று கேட்டான். அவனுக்கு பொறுமையாக விளக்கியவுடன் \"அட நம்ப ஸரிகமபதனிஸ, இதை சொல்லவா இவ்வளவு ரவுசு விட்ட\" என்றான். ஆக சங்கீதம் தெரிகிறதோ இல்லையோ எல்லொருக்கும் ஸ ரி க ம ப த நி தெரிந்துதான் இருக்கிறது. இதை இவ்வளவு பிரபலமாக்கிய பள்ளிக்கூட பாடலாசிர்¢யர்களைப் பற்றி இரண்டு வார்த்தையேனும் கூறாவிடில் நான் பெரும்பாவத்திற்கு ஆளாவேன். என் பள்ளிப் பருவத்தில் என் தந்தைக்கு அடிக்கடி மாற்றல் இருந்ததால், பல பள்ளிகள் மாற வேண்டியிருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் சொல்லி வைத்தாற்போல் வருட ஆரம்பத்திலிருந்து கடைசி வரையில் அதே ஸரிகமபதநி-தான். இதில் வேறு இந்த பாட்டு வாத்தியார்களை காலை assembly-யில் பாடச் சொல்லிவிடுவார்கள். mic-ஐ பார்த்தவுடன் இவர்களுக்கு என்னமோ music academy-யில், ரேடியோவில், டிரான்சிஸ்டரில் எல்லாம் கச்சேரி செய்வது போல ஒரு நினைப்பு வந்து விடும். தேசிய கீதத்தைக்கூட ஏதோ சங்கராபரண கீர்த்தனையைப் போல கமகம் பிருகாவெல்லாம் கொடுத்து 5-நிமிடத்துக்குப் பாடுவார்கள். தாலி என்றால் என்னவென்றே தெரியாத இளைஞன் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் இருப்பது போல, இந்த மாதிரி பாட்டு வாத்தியார்கள் எல்லா பள்ளிகளிலும் உண்டு. அப்படி யாரும் எங்கள் பள்ளியில் இல்லை என்று கூறுபவர்களுக்காகவே பார்த்திபன் படமெடுத்து ஸரிகமபதநி புகழை கோபால் பல்பொடி புகழ் அளவுக்குப் பரப்பி விட்டார்.\nஏழு ஸ்வரம், ஏழு ஸ்வரம் என்று அடிக்கடி பல பாடல்களில் வருவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் இருப்பது 12 ஸ்வரங்கள் ( 7-ஐ ஸ்வரம் என்றும், 12-ஐ ஸ்வரஸ்தானம் என்றும் கூறுவர்.). ஸ்வரங்கள் என்னமோ ஸ ரி க ம ப த நி தான் என்றாலும் இதில் ஸா மற்றும் பா-வைத்தவிர மற்ற எல்லா ஸ்வரங்களும் double action கதாநாயகிகள். இந்த 12 ஸ்வரங்களை வைத்துக்கொண்டு வெவ்வேறு விதமான ஸரிகமபதநி-க்களை உருவாக்க முடியுமல்லவா (various combinations). அப்படி உருவாகும் 72 ஸரிகமபதநி-க்களைத்தான் மேளகர்த்தா ராகங்கள் என குறிக்கிறோம். ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்திலிருந்தும் பல கோடி ராகங்கள் உருவாக முடியும். அந்த ராகங்களுக்கு ஜன்ய ராகங்கள் என்று பெயர்.\n ஏதோ கணக்கு பாடம் போல அடுக்கிக்கிட்டே போற இந்த விஷயமெல்லாம் விளங்கினால்தான் ராகம் எல்லாம் புரியுமா\" என்று கேட்டால், அதற்கான பதில், \"நிச்சயமாக இல்லை\" என்பதாகும். (எனக்கு விஷயம் தெரியும்னு காட்டிக்கொள்ள வேண்டுமில்லையா;-)..) உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு ராகம் எல்லாம் ஒரு அளவுக்கு புரிய ஆரம்பித்தவுடன்தான் இந்த விஷயம் எல்லாம் விளங்கியது. இந்த சமாச்சாரமெல்லாம் புரிந்தால் ரொம்ப நல்லது, அப்படி புரியாவிடினும் பெரிய பாதகமில்லை.\nஇப்பொழுது ஒரு ராகத்தை எப்படி புரிந்து கொள்வதென்று பார்ப்போம். ஒரே ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெவ்வேறு சூழ்நிலைகளில் அமைந்த இரு பாடல்களை எடுத்துக்கொண்டு கவனமாகக்கேளுங்கள். இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாமல் தோன்றினால் ரொம்ப நல்லது. இரண்டும் ஒரே ராகத்தின் இரு பிரயோகங்களை படம் பிடிக்கின்றன என்று அர்த்தம். இப்பொழுது மூன்றாவதாக அதே ராகத்தில் ஒரு பாடலைக் கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில் முன்னால் கேட்ட பாடல்களுக்கும் இந்த பாடலுக்கும் ஒரு ஒற்றுமை தோன்றும். (ஒருநாள் கேட்டுவிட்டு \"அட போய்யா எல்லாம் கட்டுக்கதை\" என்று சொன்னால் ஒன்றும் செய்ய்ய முடியாது. பொறுமையாக கேளுங்கள். காலப்போக்கில் இந்த \"pattern matching\" சூட்சுமம் நிச்சயம் கைவர ஆரம்பிக்கும்).\nபல ராகங்கள் முதல் முறை கேட்கும்போது ஒரே மாதிரிதான் தோன்றும். உதாரணமாக, ஆபேரிக்கும் சுத்ததன்யாசிக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லையெனில் யாரேனும் சங்கீதம் நன்றாய் தெரிந்தவரிடம்போய் கேட்டு விடாதீர். \"ஓ இதென்ன பெரிய விஷயம் சுத்தன்யாசில 'ரி' வராது\", என்று எதாவது கூறிவைப்பார். ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிடும் (சொந்த அனுபவம் ஐயா). முதலில், இரண்டு ராகங்கள் ஒரே மாதிரி இருக்கிறது என்று தெரிந்தாலே 'moral victory'-தான். நிறைய கேட்க கேட்க வித்தியாசம் தானே புரிபடும்.\nசரி இவ்வளவு நேரம் அடிப்படை விஷயமெல்லாம் அலசியாகிவிட்டது .நல்ல உணவிற்கு முன்பு கொஞ்சம் சூப் குடிப்பது போலத்தான் இதெல்லாம். சூப் குடித்தால் நல்லது அதற்காக சூப் இல்லாவிடில் சாப்பிடவே முடியாது என்று எதாவது உண்டா என்ன அதைப்போலத்தான் இந்த theoretical சமாச்சாரங்களும். இனி மாதம் ஒரு ராகம் என எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் ஆழம் சென்று பார்ப்போம்.\n“இப்பொழுது ரசிப்பது போலவே திரையிசைப்பாடல்களை ரசித்தால் போதாதா இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது” என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு \"உன்னால் முடியும் தம்பி\" படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் கதாநாயகனின் அண்ணி \"பொறுப்புள்ள பையனாக வா\" என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும்” என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு \"உன்னால் முடியும் தம்பி\" படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் கதாநாயகனின் அண்ணி \"பொறுப்புள்ள பையனாக வா\" என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும் அதே படத்தில், 'இதழில் கதையெழுதும் நேரமிது' என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா அதே படத்தில், 'இதழில் கதையெழுதும் நேரமிது' என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது அவர்கள் கஷ்டப்பட்டதிற்கு பெரியதாக பாராட்ட வேண்டாம், லேசாக புருவம் உயர்த்திப் பார்த்தால் கூடப்போதும். அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம் அவர்கள் கஷ்டப்பட்டதிற்கு பெரியதாக பாராட்ட வேண்டாம், லேசாக புருவம் உயர்த்திப் பார்த்தால் கூடப்போதும். அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.indiaglitz.com/trisha-in-raangi-first-look-poster-released-news-236625", "date_download": "2019-06-26T13:46:17Z", "digest": "sha1:CA6R3TJEG2ALHB47DFSWK4LMNPSKV57Y", "length": 8764, "nlines": 166, "source_domain": "www.indiaglitz.com", "title": "Trisha in Raangi first look poster released - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » வெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படும் த்ரிஷா\nவெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படும் த்ரிஷா\nநடிகை த்ரிஷாவை வெளிநாட்டு போலீசார் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம் 'ராங்கி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்காக சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகை த்ரிஷா நடிப்பில் 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா 'ராங்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்தது.\nஇந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் 'ராங்கி' பர்ஸ்ட்லுக் வெளியானது. இதில் இரண்டு வெளிநாட்டு போலீசார் த்ரிஷாவின் கையில் விலங்கு மாட்டுவது போல் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கதையில், சத்யா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.\nஆர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் ரசிகர்களை முந்திய அஜித் ரசிகர்கள்\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு\nவிஜய்சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் அனுஷ்கா ஷெட்டி காயம்\nமுழுக்க முழுக்க விஜய்சேதுபதியிஸம்: 'சிந்துபாத்' படத்தின் முதல் விமர்சனம்\n'எஸ்கே 17' பட அப்டேட்டை தெரிவித்த விக்னேஷ் சிவன்\nசிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபல நடிகர்: வைரலாகும் வீடியோ\nசிந்துபாத் படத்தின் சிறப்பான ரன்னிங் டைம்\nசென்னை தண்ணீர்ப்பஞ்சம் குறித்து டைட்டானிக் ஹீரோவின் பதிவு\nபிக்பாஸ் வீட்டை கண்ணீர் குளமாக்கிய ரேஷ்மா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு\nஇளையராஜா கம்போஸ் செய்த ஆங்கில பாடல்: எந்த படத்திற்கு தெரியுமா\nஹாலிவுட் படத்தில் இணைந்த நடிகர் சித்தார்த்\nமிரா வருகையால் களைகட்டும் பிக்பாஸ்\nசிந்துபாத் ரிலீஸ் தேதியை உறுதி செய்த விஜய்சேதுபதி\n'பாகுபலி' நடிகருடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன்\nஅப்துல்கலாம் கனவை நனவாக்க முயற்சித்த மாணவிக்கு விஜய்சேதுபதி உதவி\nபடப்பிடிப்புக்கு செல்லுமுன் மணிரத்னத்துடன் செல்பி எடுத்த நடிகை\nயோகிபாபுவின் முதல் கனவுக்காதல் குறித்த தகவல்\n'பிக்பாஸ் 3' திட்டமிட்டபடி நடக்குமா சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு\nநடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாக்யராஜ்\nபிக்பாஸ் 3 வீட்டில் கமலுடன் ரஜினி: புதிய தகவல்\nமணிரத்னம் பார்ட்னராக மாறிய பிரபல சாமியார்\nஅரவிந்தசாமியின் 'புலனாய்வில்' இணைந்த பிரபல இயக்குனர்\n'தளபதி 63' அப்டேட்டுக்கு திமுக எம்.எல்.ஏ வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
{"url": "https://www.jeyamohan.in/91979", "date_download": "2019-06-26T13:52:22Z", "digest": "sha1:R2NW5LYNK4PBLAVQKYAJNYHMX7KGS5IQ", "length": 8085, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "சில சிறுகதைகள் – 4", "raw_content": "\n« மா.அரங்கநாதன் கதைகள் பற்றி…\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23 »\nசில சிறுகதைகள் – 4\nகே.ஜே.அசோக் குமாரின் பாம்புவேட்டை என்னும் சிறுகதை. சொல்வனம் இதழில்\nஅன்பிற்க்கும், மதிப்பிற்க்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,\nஎன்னுடைய சிறுகதையை இணைத்துள்ளேன். தங்கள் கருத்துதை எதிர்பார்க்கிறேன்\nசிறுகதைகள் – என் மதிப்பீடு -1\n[…] சிலசிறுகதைகள் 4 […]\nமேலும் இரு சிறுகதைகளைப் பற்றி…\n[…] சிலசிறுகதைகள் 4 […]\n[…] சிலசிறுகதைகள் 4 […]\n[…] சிலசிறுகதைகள் 4 […]\nசிறுகதைகள் என் மதிப்பீடு -3\n[…] சிலசிறுகதைகள் 4 […]\nகேள்வி பதில் - 45, 46\nகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.ndtv.com/tamil/lok-sabha-election-results-2019-election-results-today-counting-of-votes-begins-main-points-2041568?stky", "date_download": "2019-06-26T14:27:32Z", "digest": "sha1:AX4MKZPQNMLUWONCJSPWKXY4TKNHSYFH", "length": 12493, "nlines": 102, "source_domain": "www.ndtv.com", "title": "Lok Sabha Election Results 2019: Election Results Today, Counting Of Votes Begins At 8 Am: 10 Points | Election Results 2019: இந்தியாவில் மீண்டும் அமைகிறது மோடி சர்கார்!", "raw_content": "\nElection Results 2019: இந்தியாவில் மீண்டும் அமைகிறது மோடி சர்கார்\n542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கவுள்ளது.\nElection results: தேர்தல் பிந்தைய முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவாகவே உள்ளது\nNew Delhi: அடுத்த ஐந்து ஆண்டுகள் நம் நாட்டை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இது திகழ்ந்தது. பாஜக தான் ஆட்சி செய்ய போகிறது என பல கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நேரங்களில் கருத்து கணிப்புகள் உண்மையாகுவதில்லை. 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கவுள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் சுவஷ் பாரத் (Swachh Bharat), மேக் இன் இந்தியா (Make in India) போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி. ஆனால் பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக்க தவறியது, விவசாய பிரிவில் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு மோடியின் அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.\nகடந்த சில மாதங்களாக நடந்த இந்த தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துவங்கியது.\nதேசியம், தேசிய பாதுகாப்பை சுற்றியே பாஜகவின் தேர்தல் பிரசாரம் இருந்தது. ரபேல் விவகாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் சுற்றியே காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் அமைந்தது.\nஇந்த முறை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் மோடி, அமித் ஷா மீது முறையிடப்பட்டது. ஆனால் அனைத்து முறையும் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து.\nமூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் 2:1 என்றே முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனால் அஷோக் வர்மா தேர்தல் ஆணையத்தின் மீட்டிங் கலந்து கொள்ளவில்லை.\nகடந்த டிசம்பர் மாதம் மத்திய இந்தியாவில் இருக்கும் 3 மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதியாக அந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது. இந்த முறை மக்களவை தேர்தலுக்கு, காங்கிரஸ் இந்த அனைத்து மாநிலங்களிலும் தனியாக போட்டியிட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாஜக தலைவர் அமித்ஷா, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேசி தேசிய ஜனநாகயக் கூட்டணியை உறுதிபடுத்தினார். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், ஓரணியாக திரளவில்லை.\nஉத்தர பிரதேசத்திலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயாவதி, தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் கூட்டணி அமையாமல் போனது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், தனியாக போட்டியிட்டது.\nமேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு, பாஜக கடும் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. அங்கு மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் 23 இடங்களை பாஜக, கைப்பற்றப் பார்க்கிறது.\nவிவிபேட் இயந்திரத்தை, வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும் முன்னர் ஒப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 5 விவிபேட் இயந்திரங்களில், வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் ஒப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.\nயோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து: 3 நாட்களில் 4 பேர் கைது\nமத்திய அரசில் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள்\n6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nமத்திய அரசில் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள்\nதமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nதமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nபாசிசத்தின் 7 அறிகுறிகளும் இந்தியாவில் உள்ளன : என்.டி.ஏவை கிழித்து தொங்க விட்ட மஹுவா மொய்த்ரா\n’இன்னும் உயரத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன்’ மக்களவையில் ராகுலை கலாய்த்த மோடி\n6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nமத்திய அரசில் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள்\nதமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு\nசிறுபான்மையினரும் ஜனநாயகமும் சிறப்பாக இருக்கு : பாஜக எம்.பி கே.ஜே. அல்போன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu.com/2018/09/Accident.html", "date_download": "2019-06-26T15:16:23Z", "digest": "sha1:TRWLGTANVQ7GORTRCOUCKAP6MNKMOUE4", "length": 7869, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மீன்பிடி படகு விபத்திற்குள்ளானதில் நால்வர் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / மீன்பிடி படகு விபத்திற்குள்ளானதில் நால்வர் பலி\nமீன்பிடி படகு விபத்திற்குள்ளானதில் நால்வர் பலி\nநிலா நிலான் September 12, 2018 தென்னிலங்கை\nபேருவளை கடலில் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nநேற்று (11) மாலை பேருவளை கடலிற்கு 7 பேருடன் சென்ற ´மலிது புதா´ என்ற படகு இந்நாட்டு எல்லைக்குள் கப்பல் ஒன்றுடன் மோதி இவ்வாறு விபத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த 7 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்த நால்வரினது சடலங்களையும் காப்பற்றப்பட்ட நபரையும் காலி துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வர கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.tamilarul.net/2019/04/Trincomalee.html", "date_download": "2019-06-26T13:51:10Z", "digest": "sha1:3BDDXCSXJF4W63A35KTIWB34GZZ2HIGP", "length": 10400, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "திருகோணமலையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு ஒருவர் கைது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / திருகோணமலையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு ஒருவர் கைது\nதிருகோணமலையில் பாரியளவிலான வெடிபொருட்கள் மீட்பு ஒருவர் கைது\nதிருகோணமலை இரக்ககண்டியில் பெருந்தொகையான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலும் வீட்டின் நிலத்தடியிலும் பாரியளவிலான வெடிப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதன்போது, Water jell 8 inch – 39, Water jell 5 inch & 6 inch – 25, டெட்டனேட்டர்கள்-215, Safety fuse – 94 என்பன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yazhvenba.wordpress.com/2019/03/01/%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4-14/", "date_download": "2019-06-26T14:19:57Z", "digest": "sha1:QGRI7JJXXYSQGJEYYWNESZDQNFAVU54H", "length": 4393, "nlines": 113, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 15 – யாழ்வெண்பா", "raw_content": "\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 15\nMarch 1, 2019 யாழ்வெண்பா\nசந்திரனுக்குள்ள இருக்க பாசம் எல்லாம் எப்படி வெளில வருது பாருங்க ☺\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 15\nநிறை, குறைகளை தெரிவியுங்கள் friends…\nPrevious postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 14\nNext postஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 16\n4 thoughts on “ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 15”\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-259-mahela-jayawardene-last-presentation.html", "date_download": "2019-06-26T14:22:50Z", "digest": "sha1:I5VG3H2IZOZ32DLB5X3IU7JATP5ZKJBO", "length": 6363, "nlines": 99, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Mahela Jayawardene - Last Presentation - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \nபடிக்கிற வயசில - மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \n2019 ஆண்டின் உலகக்கிண்ண இலங்கை அணிக்கான உத்தியோக பூர்வ பாடல்\nபெண்களுக்கான மிக இலகுவான \" டிப்ஸ் \" காணொளியைப் பாருங்கள் - Easy Peasy Peeling Hacks\n ஆண்மை இல்லாதவர்...இளையராஜாவின் பேச்சினால் எழுந்த சர்ச்சை \nதனுஷ் மெஜிக் வித்தைக்காரனாக மிரட்டும் நடிப்பில் உருவாகும் \" பக்கிரி \" திரைப்பட Trailer - Pakkiri - Official Trailer | Dhanush | Ken Scott | YNOTX | 2019\nபாடகர் \" திவாகரின் \" சுவாரஷ்யமான நேர்காணல் SOORIYAN FM - Rj RAMESH \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் \" சொம்பி \" திரைப்பட Teaser - “Zombie\" Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஜோதிக்காவின் \" ராட்சசி \" திரைப்பட Trailer \nஅடுத்த ஓவியா & ஆரவ்வாக மாறும் கவின் + அபிராமி\nசிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி ; கலங்கிய கௌதம் கார்த்திக்\nநேரலை விவாத நிகழ்ச்சி, சண்டையில் முடிவடைந்தது...\n8 வருடங்களின் பின்னர், மகனின் பணத்தைப் பெற்ற தாய்\nஆந்தை போன்ற ஆளில்லா விமானம்\nஇந்த 10 வது புள்ளியை அழுத்தினால் உடம்பில் நடக்கும் மாற்றத்தைப் பாருங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-26T14:08:28Z", "digest": "sha1:2QDDOW2LEBJL73CH4MRYJYL6N6475SWZ", "length": 11586, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "புதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும் |", "raw_content": "\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான மற்றொரு அவதூறு\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்\nபிரதமர் நரேந்திர மோடி, கலிபோர் னியாவில் நடந்த எட்டாவது சர்வதேச சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் மாநாட்டில் காணொலிகாட்சி மூலம் பேசினார். இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்தமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ''வெளிநாடுவாழ் இந்தியர்கள் எப்போதும் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார்கள். இந்திய பாஸ்போர்ட்டுக்கு உலகம் முழுவதும் காணப்படும் மதிப்பைவைத்து அவர்களது முயற்சிகளை எடைபோடலாம். தூய்மை இந்தியா போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து குடும்பத்தின ரையாவது இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒரேபாரதம், சிறந்தபாரதம் இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்ற புதியவழியை ஏற்படுத்தும்.\nஇதன் மூலம் இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம்கிடைக்கும். மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்களிக்கலாம். வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி முதல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டங்கள் இந்தியாவில் தொடங்கும். இந்தியாவின் இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரில் பிரம்மாண்டமான ஒற்றுமை சிலை நர்மதை நதியில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி அந்தப் பணிகள் நிறைவடையும். பணிகள் நிறைவடைந்ததும் உலகின் மிக உயரமான சிலையாக அது இருக்கும்.\nஇந்தியா தற்போது உலகின் ஒளிரும் நட்சத்திரமாக காணப் படுகிறது. இந்தியா தற்போது விரைவான பொருளாதார வளர்ச்சி, நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. ஜி.எஸ்.டி, ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை போன்ற முன்முயற்சிகள் மக்கள் நேர்மையுடன் தொழில் நடத்துவதற்கு உதவி உள்ளது. இந்த முன்முயற்சிகள் காரணமாக எளிதாக தொழில்புரியும் நாடுகளின் கடந்த நான்காண்டு பட்டியலில் இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது. எனவே,புதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க வெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினர் பாடுபடவேண்டும்'' என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதியேற்போம்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்\nகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி மரியாதை…\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா\nதூய்மை இந்தியா 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்\nஉலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்\nசர்தார் வல்லபாய் பட்டேல், புதிய இந்தியா\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல� ...\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண ...\nசர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக ...\nகுஜராத் பிரச்சினைகள் குறித்து நேரம் ஒ� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இ� ...\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nஇந்திய ஒருமைப் பாட்டிற்காக தனது வாழ்க� ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-26T14:23:45Z", "digest": "sha1:DN7TJHKIAHDRZXJBY2AYLT7S5BZYNCXG", "length": 6987, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குடியரசு தலைவரை சந்தித்த மூன்று முக்கிய அமைச்சர்கள் | Chennai Today News", "raw_content": "\nகுடியரசு தலைவரை சந்தித்த மூன்று முக்கிய அமைச்சர்கள்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nகுடியரசு தலைவரை சந்தித்த மூன்று முக்கிய அமைச்சர்கள்\nடெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், கிரண் ரிஜிஜு, சஞ்சய் தோத்ரே ஆகியோர் சற்றுமுன் சந்தித்து பேசினர்\nநரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்ற நிலையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமித்ஷா, தனது சக அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, சஞ்சய் தோத்ரே ஆகியோர்களுடன் சற்றுமுன் குடியரசு தலைவரை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது\nகணவரின் நினைவாக 78 ஆயிரம் மரங்களை நட்ட பெண்\nமணல் அள்ளுவதற்கு தடை: ஆந்திர அரசு அதிரடி உத்தரவு\nஇன்று மாலை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nமேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியா\nதேசிய விருதை புறக்கணித்த திரையுலக பிரபலங்கள்: காரணம் என்ன\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://patrikai.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T14:06:29Z", "digest": "sha1:C5QFFXEN4Q42KV6HZ47G67FU42RGDEDA", "length": 10809, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "ஆன்மிகம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்\nஆம்புலன்சுக்கு வழிவிட்ட கள்ளழகர்… வைரலாகும் வீடியோ…\nமதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)\nஅலை கடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம்….. (வீடியோ)\nமதுரையில் கோலாகலம்: சிறப்பாக நடைபெற்ற மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nமதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது….. ஏப்ரல் 18 தேர்தல் நாளன்று தேரோட்டம்\nதிருவாரூரில் ஆரூரா தியாகேசா… கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்று வரும் ஆழித்தேரோட்டம்…. (வீடியோ)\nபங்குனி உத்திரம்: இன்று குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்\nசபரிமலை கோவிலில் புதிய தங்க கதவு பிரதிஷ்டை செய்யப்பட்டது…\n‘மஹா சிவராத்திரி’ பூஜை நேரம்: தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\nஇந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பெருமாளுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் தங்க கை கவசம் : தமிழக பக்தர் அளிப்பு\nமடிக்கும் வசதியுடன் கூடிய கணினி : மைக்ரோசாப்ட்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_(2001_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-26T14:23:47Z", "digest": "sha1:NNC3U4WUDQDVBCAYD4XJFXLWR5HSDD4F", "length": 8521, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்ரி (2001 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படத்திற்கு பத்ரி (2000 திரைப்படம்)\nபி. ஏ. அருண் பிரசாது\nசிறீ வெங்கடேசுரா ஆர்டு விலிம்சு\nபத்ரி (Badri) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் பி. ஏ. அருண் பிரசாதின் இயக்கத்தில் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]\nஇந்தத் திரைப்படம் தம்முடு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]\nஇலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்\n1 ஏஞ்சல் வந்தாளே தேவி சிறீ பிரசாது, கே. எசு. சித்ரா 04:46 பழனி பாரதி\n2 கலகலக்குது எங்கள் (சங்கர் மகாதேவன்) சங்கர் மகாதேவன் 05:05 பழனி பாரதி\n3 என்னோட லைலா விசய் 05:13 பழனி பாரதி\n4 அடி ஜிவ்வுனு ஜிவ்வுனு இரமணா கோகுலா, தேவி சிறீ பிரசாது 02:06 பழனி பாரதி\n5 காதல் சொல்வது சீனிவாசு, சுனிதா 04:36 பழனி பாரதி\n6 கலகலக்குது எங்கள் (மனோ) மனோ 05:05 பழனி பாரதி\n7 கிங் ஒஃப் சென்னை தேவி சிறீ பிரசாது 04:19 பழனி பாரதி\n8 சலாம் மகராசா தேவன், பிரியா 02:23 பழனி பாரதி\n9 ஸ்ரெல்லா மேறிஸ் லாறா திப்பு, விவேக்கு, தாமு 01:46 பழனி பாரதி\n10 ற்ரவெலிங் சோல்ட்யர் இரமணா கோகுலா 04:07 பழனி பாரதி\n↑ பத்ரி (ஆங்கில மொழியில்)\n↑ இளையதளபதியின் 37வது பிறந்த நாள் இன்று.\n↑ பத்ரி பணிக்குழு (ஆங்கில மொழியில்)\n↑ பத்ரி (2001) (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2014, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-h-raja-condemns-mnm-kamal-hasan-335548.html", "date_download": "2019-06-26T14:14:37Z", "digest": "sha1:3ZLOTOXMWVX5E4ZCFDNWVEIPUMSEKTK5", "length": 17256, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்க 6 மணி நேரத்தில ஓடினோம்.. ஆனால் கமல்.. எச். ராஜா அடடே கேள்வி | BJP H. Raja Condemns MNM Kamal Hasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n10 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n23 min ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n50 min ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n1 hr ago என் மகனா.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nSports இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nAutomobiles ஆச்சரியம் அளிக்கும் குறைவான விலையில் அதிநவீன கார் நாளை அறிமுகம் நொடிக்கு நொடி எகிறும் எதிர்பார்ப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nTechnology கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்க 6 மணி நேரத்தில ஓடினோம்.. ஆனால் கமல்.. எச். ராஜா அடடே கேள்வி\nசென்னை: \"புயல் பாதித்து 6 மணி நேரத்தில் நாங்கள் ஓடினோம்.. ஆனால் கமல் 17-வது நாளில் பார்வையிட போயிருக்கிறார்\" என்று எச். ராஜா கூறியுள்ளார். எனவே 30 வருடமாக தமிழ் மக்களை சினிமா மோகத்தில் ஆழ்த்திய கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.\nகொருக்குப்பேட்டையில் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசும்போது கமலை கடுமையாக தாக்கி பேசினார்.\nகஜா புயல் தாக்கி 6 மணி நேரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று மக்களோடு மக்களாக நின்றார். அதுபோலதான் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நானும், தொண்டர்களும் களத்தில் இன்று வரை நிற்கிறோம்.\nமக்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்தும் வருகிறோம். இதைதவிர மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாள் புயல்பாதிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருந்து, மண்ணெண்ணை முதல் எல்லா நிவாரணமும் கிடைக்க வழி செய்தார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. இப்படியெல்லாம் மத்திய பாஜக செய்து கொண்டு இருக்கிறது.\nஆனால், பாதிக்கப்பட்ட மக்களை 17-வது நாளில் போய் பார்க்கிறார் கமல். இதில் மத்திய அரசையும் குற்றம் சொல்கிறார். 30 வருஷமாக தமிழ் மக்களை சினிமா மோகத்திலே வைத்திருந்த கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது\nகமல் மட்டும் இல்லை, இதே போல ஸ்டாலினும் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2010-தானே புயல் வந்ததே அப்போ போய் கருணாநிதி பார்த்தாரா அப்போ போய் கருணாநிதி பார்த்தாரா இல்லை மன்மோகன்சிங் தான் பார்த்தாரா இல்லை மன்மோகன்சிங் தான் பார்த்தாரா அதனால் மீறி மோடியை விமர்சித்துகொண்டே வந்தால், திமுகவை தோலுரித்து காட்டுவோம்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n\"தங்கம்\" திமுகவுக்கு வைக்கும் டிமாண்டு என்ன தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngaja h raja kamal slams கஜா கமல் எச் ராஜா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/08/15170113/Occasions-this-week-1482018-to-2082018.vpf", "date_download": "2019-06-26T15:03:21Z", "digest": "sha1:EHBVID6TIWEQ6MGZK2SAWT4XGJDBRIF5", "length": 8952, "nlines": 85, "source_domain": "www.dailythanthi.com", "title": "இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை||Occasions this week: 14-8-2018 to 20-8-2018 -DailyThanthi", "raw_content": "\nஇந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n14-ந் தேதி (செவ்வாய்) நாக சதுர்த்தி. சதுர்த்தி விரதம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் வீதி உலா.\nராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், வெள்ளி கமலத்தில் தவழ்ந்த கோலத்துடன் தபசு மண்டபம் எழுந்தருளல்.\nசேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில் வசந்த உற்சவம்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி உலா.\nதிருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் தபசுக் காட்சி.\nராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன் ஆகிய தலங்களில் திருக்கல்யாண வைபவம்.\nமதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம், கருங்குருவிக்கு உபதேசித்து அருளிய லீலை, கற்பக விருட்சத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா.\nநயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் மின்விளக்கு தீப அலங்காரத்தில் திருமண கோலத்துடன் பவனி.\nதிருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாரைக்கு மோட்சம் அளித்தல், பூத அன்ன வாகனத்தில் பவனி.\nராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகி ஆகிய தலங்களில் ஊஞ்சல் சேவை.\nவிருதுநகர் சொக்கநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல், கயிலாசம் மற்றும் காமதேனு வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வேதவள்ளி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளல், தங்க சப்பரத்திலும், யானை வாகனத்திலும் சுவாமி- அம்பாள் வீதி உலா.\nராமேஸ்வரம் சுவாமி- அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா, இரவு இருவரும் ஏக சிம்மாசனத்தில் பவனி.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nமதுரை சோமசுந்தரர் உலவாய்க்கோட்டை அருளிய திருவிளையாடல், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் புறப்பாடு.\nராமேஸ்வரம் சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டினப் பிரவேசம்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\nதிருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் வீதி உலா.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.\nராமேஸ்வரம் சுவாமி- அம்பாள் தங்க கேடய சப்பரத்தில் பவனி.\nவிருதுநகர் சொக்கநாதர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153447&cat=33", "date_download": "2019-06-26T15:07:23Z", "digest": "sha1:LCDH3VCN6N2QLRKR5BEIDNARK5JCW5NH", "length": 32675, "nlines": 662, "source_domain": "www.dinamalar.com", "title": "கிணறு வெட்டும் போது 3 பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கிணறு வெட்டும் போது 3 பேர் பலி செப்டம்பர் 28,2018 00:00 IST\nசம்பவம் » கிணறு வெட்டும் போது 3 பேர் பலி செப்டம்பர் 28,2018 00:00 IST\nநெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த அதிமுக நகரச் செயலாளர் சுப்ரமணியன். இவருக்கு சொந்தமான தோட்டம் அத்தியூத்து பகுதியில் உள்ளது. தோட்டத்தில் உள்ள கிணற்றை துார்வாரும் பணியில் கான்ட்ராக்டர் ராமகிருஷ்ணன் என்பவரின் கீழ் 5 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மண்ணை துார்வாரும் போது, பக்கவாட்டு மணல் சரிந்து தொழிலாளர்கள் மேல் விழுந்தது. இதில் 30 வயது மதி, 60 வயது சோனாச்சலம், 55 வயது சுடலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மணலில் சிக்கிய முருக பிரபாகர், கால்முறிந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nOLX மோசடி 5 பேர் கைது\nகிணறு தோண்டும் போது ஒருவர் பலி\nபோலீசார் துரத்தியதில் காரில்வந்த கொள்ளையன் பலி\nகஞ்சா விற்பனை : 5 பேர் கைது\nகல்குவாரி வெடிவிபத்து : 3 பேர் படுகாயம்\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nஉருவாகி வருகிறது மணல் பாலம்\nதயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nபாம்புகள் விளையாட்டில் சிக்கிய சிறுவன்\nஅமைச்சர் துணையுடன் மணல் கொள்ளை\nஅதிமுக பிரமுகரை தாக்கிய இன்ஸ்பெக்டர்\nமீன் வலையில் சிக்கிய முதலைகுட்டி\nஅணை கட்டாத அதிமுக அரசு\nஅதிமுக டெபாசிட் கூட பெறாது\nகுளம் தூய்மை பணியில் கலெக்டர்\nஅதிமுக பிரமுகர் கடத்தி கொலை\nஅதிமுக அரசு போட்ட பிச்சை\nபார்வை பறிபோகும் நிலையில் 'சேரன்'\nஅர்ச்சகர்கள் எப்படி வேலை செய்றாங்க\nமணல் கடத்தல்: அதிகாரிகளுக்கும் 'பங்கு'\nவிஷவாயு தாக்கி 2பேர் பலி\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nநெல்லை கொட்டி விவசாயம் போராட்டம்\n3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை\nவேலை சரியா செய்யனும்: விக்ரம் பிரபு\nஆற்றில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் மீட்பு\nகேரளாவுக்கு கடத்த முயன்ற மணல் பறிமுதல்\nமணல் கடத்தல் 26 லாரிகள் பறிமுதல்\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nஅதிமுக பேனரில் அமமுக கொடி பறக்குது\nநிரந்தர வேலை கேட்டு தற்கொலை மிரட்டல்\nபோலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது\nபோலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி\nமின் வேலியில் சிக்கி 2பேர் பலி\nஅரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்\nமணல் கடத்தல் 7 லாரிகள் பறிமுதல்\nபூட்டிய வீடுகளில் 60 பவுன் கொள்ளை\nபுதிய வாக்காளர்கள் 25 லட்சம் பேர்\nஇடிந்து விழும் நிலையில் தியாகராஜர் கோயில் மண்டபம்\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nலஞ்சம் வாங்கி சிக்கிய ஆய்வாளர் வீட்டில் ரெய்டு\nசிறுமியைச் சீண்டிய வாலிபருக்கு 55 ஆண்டு கடுங்காவல்\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nகுட்கா பறிமுதல் : 4 பேர் கைது\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை\nபோலீஸ் வேன் கவிழ்ந்து 23 பேர் காயம்\nஇமாச்சலில் பனிப்பொழிவு: 300 பேர் சிக்கி தவிப்பு\n7 பேர் விடுதலை கூடாது; கவர்னரிடம் மனு\nமணல் கடத்தல் லஞ்சம் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nவனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு\nதாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nகைவசம் 3 ஓட்டர் ஐடி தி நகர் MLA பதவி பறிப்பா\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகுழந்தையை மாத்திட்டாங்க... புலம்பவிட்ட ஆஸ்பிடல்\nநடுரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மக்கார்\nஐபோன் போலி பாகங்கள் விற்பனை ஜரூர்\n2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nதிருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் இன்ஜினியர்\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nநார் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்\n2.0 சீனா வெளியீடு 'கேன்சல்'\nகைவிட்ட காவிரி : கண்ணீரில் காவலர்கள்\nதிருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர்\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nஹவுஸ் ஓனர் ஜாதிய பின்னணி படமா \nஹவுஸ் ஓனர் Low budget படம் இல்லை லக்ஷ்மி ராமகிருஷ்னன் ஆவேசம்\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓபிஎஸ் முட்டுக்கட்டையா : த.த.செல்வன் | thanga tamilselvan\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nகுழந்தையை மாத்திட்டாங்க... புலம்பவிட்ட ஆஸ்பிடல்\nஐபோன் போலி பாகங்கள் விற்பனை ஜரூர்\nநடுரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மக்கார்\n2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nநார் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்\nதிருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் இன்ஜினியர்\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசியல் கட்சிகள் உதவலாமே....\nசெங்கோட்டையன் வாக்குறுதி ஒண்ணுமே தேறல\nகைவிட்ட காவிரி : கண்ணீரில் காவலர்கள்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nபந்தல்குடியில் 'டி சர்ட்கள்' மாயமாகும் அதிசயம்\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nதிருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nமாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி\nவாலிபால்; தமிழ்நாடு போலீஸ் வெற்றி\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\n2.0 சீனா வெளியீடு 'கேன்சல்'\nஹவுஸ் ஓனர் ஜாதிய பின்னணி படமா \nஹவுஸ் ஓனர் Low budget படம் இல்லை லக்ஷ்மி ராமகிருஷ்னன் ஆவேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166964&cat=31", "date_download": "2019-06-26T15:09:48Z", "digest": "sha1:4K7DJWT67DM6NP25SIZBCJPYFT567P7T", "length": 36414, "nlines": 667, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » மதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா மே 21,2019 00:00 IST\nஅரசியல் » மதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா மே 21,2019 00:00 IST\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான மின்னணு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் சீலிடப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு மேல், லோடு ஆட்டோவில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்று, கல்லுாரி வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரத்தை, சீல் வைக்கப்பட்ட அறைகளுக்கு அருகே உள்ள அறையில் கொண்டு செல்ல துணை தாசில்தார் தயாராயினார். அங்கிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் முகவர்கள், துணை தாசில்தாரை தடுத்தனர். சம்பவ இடத்திற்கு, உதவி தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணம் வந்தபோது, ஜெராக்ஸ் இயந்திரத்தை கொண்டு செல்ல, தேர்தல் அதிகாரியின் அனுமதி கடிதம் உள்ளதா என, திமுக வேட்பாளர் சரவணன், கேள்வி எழுப்பினார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு செல்ல முயன்றதாக பெண் தாசில்தார் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக கலெக்டர் நடராஜனும் மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் வேறொரு பிரச்னை எழுந்துள்ளதாக அனைத்து கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.\n3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nதாசில்தார் சஸ்பெண்ட் : அதிகாரியிடம் மனு\nமோடிக்காக தேர்தல் விதிமீறல்; விவசாயிகள் புகார்\nதேனிக்கு வந்த திடீர் மின்னணு இயந்திரங்கள்\nகாரை கடத்திய 3 பேர் கைது\nகிணற்றில் மூழ்கி 3 பேர் பலி\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்\n3 மணி நேரம் தாசில்தார் என்ன செய்தார்\nதிருப்பரங்குன்றம் திமுக வின் படைவீடு : வைகோ\nபஸ் ஆட்டோ மோதல் 3 பேர் பலி\nமின் கசிவால் தீவிபத்து 3 பேர் பலி\nதிமுக திருவிளையாடல்; இது புது அடாவடி | DMK | Rowdyism in Chennai | DMK Fight\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nஉள்ளாட்சி தேர்தல் நடப்பது கேள்விக்குறி\nஜெயின் பெண் துறவி முக்தி\nசெந்தில் பாலாஜி அரசியல் வியாபாரி\nதினகரன் மீது கிருஷ்ணசாமி புகார்\nதேர்தல் ஆணையம் தெளிவா சொல்லிருச்சே\nரஜினியின் அரசியல் தாமதம் நல்லதுதான்\nவீட்டினருக்காக வாழும் கம்பெனி திமுக\nஆதரவற்ற குழந்தைகளுக்கு போலீசார் உதவி\nதேர்தல் ஆணையத்தில் மோதல் வெடித்தது\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\nஅமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் ராஜினாமா\nபெரியகோவிலில் பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு\nஅரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண்\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞருக்கு குண்டாஸ்\nமோடி மீண்டும் பிரதமரானால் ராகுல்தான் பொறுப்பு\nசெந்தில் பாலாஜி மீது கடத்தல் புகார்\nஅதிகாலையில் தேர்தல் சாத்தியமில்லை; சுப்ரீம் கோர்ட்\nமீண்டும் நடிக்கப் போங்க கமல் சார்\nகமல் மீது அரசு வழக்கறிஞர் புகார்\nகண்ணியமில்லா கமல் ; கொள்கையில்லா திமுக\nஅண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு இல்லை\nகொலை செய்துவிட்டு காணவில்லை என புகார்\nஅரசு மருத்துவமனைகளில் ஊழல்; அறப்போர் புகார்\nநடந்து சென்ற பெண் கழுத்தறுத்து கொலை\nதூத்துக்குடியில் ஒதுங்கும் கேரள மருத்துவக் கழிவுகள்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nஉண்டியல் பணம் அபேஸ் : அதிகாரிகள் சஸ்பெண்ட்\nஓட்டுச்சாவடிக்குள் நுழைந்த தாசில்தார் : விரைவில் அறிக்கை\nகணவனின் சந்தோஷத்திற்காக குழந்தை திருடிய பெண் கைது\n6ம் கட்ட தேர்தல் : ஜனாதிபதி ஓட்டளித்தார்\nசர்க்கரை ஆலை அதிபர் மீது விவசாயிகள் புகார்\n6ம் வகுப்பு மாணவியின் கனவை நனவாக்கிய கலெக்டர்\nஅரசியல் வேண்டாம் : ஸ்டாலின்; போகக்கூடாது : தமிழிசை\nமுதல் பேட்டி முழு நம்பிக்கை மீண்டும் ஆட்சி\nஅரவக்குறிச்சியில் திமுகவினர் ரூ.2000 ஜெராக்ஸ் டோக்கன் விநியோகம்\n306 இடங்களில் பா.ஜ.,வெற்றி மீண்டும் பாஜ ஆட்சி\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஸ்டாலின் 14 ஆண்டு என்ன செய்தார்\nஆண்கள் பள்ளிகளில் நாப்கின் மிஷின்கள்\nமதுபான ஆலை முற்றுகை : 300 பேர் கைது\nகோட்சே குறித்து பேசியது சரித்திர உண்மை : கமல்\nகார் விபத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழப்பு\nபைக் - கார் மோதல் 4 பேர் பலி\nபெண் போலீசார் சண்டை; வீடியோ வைரல் | police fight\nபழிக்கு பழியாக 2 பேரை வெட்டிய 4 பேர் கைது\nகுழந்தை விற்பனையில் பெண் புரோக்கர் கைது; 260 குழந்தைகள் எங்கே\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nகருக்கலைப்பு ஊசியால் 6 மாத கர்ப்பிணி பலி; போலி ஆயுர்வேத கிளினிக்கிற்கு சீல்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.onlinejaffna.com/2019/02/2000.html", "date_download": "2019-06-26T14:54:43Z", "digest": "sha1:G2Q7RMAP5KOVBV6YUVJKVYMBSKOZ4K67", "length": 17955, "nlines": 107, "source_domain": "www.onlinejaffna.com", "title": "2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHome Unlabelled 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்\n2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்\nமுல்லைத்தீவு – நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்று சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்\nநாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அதன் சுற்றாடலை ஆக்கிரமித்து பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த விகாரையையும், புத்தர் சிலையையும் அமைத்து வருகிறார்.\nஅங்கு கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையிலும், புத்தர் சிலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.\nதைப்பொங்கல் நாளன்று நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடு செய்த தமிழ் மக்களுடன் பௌத்த பிக்குவும், தென்பகுதியில் இருந்து வந்தவர்களும் முரண்பட்டனர்.\nஇதனால் காவல்துறையினர் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியதுடன் முல்லைத்தீவு நீதிவானின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தனர்.\nஇந்த வழக்கில் நேற்று தொல்பொருள் திணைக்க பணிப்பாளரை மன்றில் முன்னிலையாகும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.\nஇதற்கமைய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நேற்று முன்னிலையாகி, நாயாறில் உள்ள, குருகந்த ரஜமகாவிகாரை 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.\nபுராதன பௌத்த விகாரை இருந்த இடத்தில் இந்து ஆலயத்தை அமைப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 26ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும் தகவல் தெரிவிக்க. 0788339421 . 77083762...\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nஅம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாய...\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\nகுடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்ப...\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மூன்றாவது விடுதியில் தனது நான்குமாதக் கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நிற்கும் 21 வயதுடைய இளம்தாய் ஒரு...\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nமாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ...\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nசிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ்சினுள் இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் இ...\nஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா\nஅமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண...\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nயாழ்ப்பாண பல்கலையில் பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தப்படும் மாணவிகள் துணைபோகும் நிர்வாகம்\nஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும். அதான் தாக்கத்தை குறைப்பதற்காக சில யோச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_506.html", "date_download": "2019-06-26T14:40:52Z", "digest": "sha1:SYL2NYET3WGDMVRK25U7KJRQNQ3XTKSE", "length": 10085, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "பாவப்பட்ட பணம் வாங்க தவராசா சபைக்கு வரவில்லை - ஓடி ஒளிந்துகொண்டார் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பாவப்பட்ட பணம் வாங்க தவராசா சபைக்கு வரவில்லை - ஓடி ஒளிந்துகொண்டார்\nபாவப்பட்ட பணம் வாங்க தவராசா சபைக்கு வரவில்லை - ஓடி ஒளிந்துகொண்டார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக் கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றை ய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர்.\nஎனினும் இன்றைய (12) அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளாது ஒளித்துக்கொண்டுள்ளார்.\nகுறித்த நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இன்று வடக்கு மாகாணசபைக்கு வருகைதந்து தவராசாவிடம் பணத்தினைக் கையளிக்கப்போவதாகக் கூறியிருந்தனர். அவ்வறோ பாவப்பட்ட பணம் என எழுதப்பட்ட பையினுள் சில்லறைக் காசுகளுன் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு மாகாணசபைக்கு வருகைதந்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே தவராச சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாது ஒளித்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.\nஇதேவேளை தவராசாவின் வங்கிக் கணக்கிற்கும் பாவப்பட்ட பணம் எனக்கூறி இளைஞர்கள் சிலர் ஆகக் குறைந்த வைப்பிலிடும் தொகைகளை வைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_548.html", "date_download": "2019-06-26T14:22:06Z", "digest": "sha1:UB5I4FHL72N5MFL3PVKHOOUSU75TE35N", "length": 8323, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் துணோரி ஒனோஜெரா Itsunori Onodera எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஅவர் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nநட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது NP-JF 9739 என்ற இலக்க...\nஇலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ். – வெளிவரும் புதிய தகவல்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...\nபலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்\nமுஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...\nசிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை\nசிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...\nவெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை\nவடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...\nகுருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு\nதிருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை சிறுகதை சினிமா தொழில்நுட்பம் மருத்துவம் விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7400:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-06-26T15:04:30Z", "digest": "sha1:SZ2Q5D3NYLJJSKFFAYSKNRNZ7Z3VCMS3", "length": 13105, "nlines": 107, "source_domain": "nidur.info", "title": "புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா?", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nபுத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா\nபுத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா\n“புத்திசாலிப் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கவே புடிக்காது” என பல பெண்கள் அங்காலய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒன்று தான் புத்திசாலி என அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அல்லது உண்மையிலேயே ஆண்களுக்கு புத்திசாலிப் பெண்கள் கொஞ்சம் அலர்ஜியாய் இருக்கலாம்.\nபெரும்பாலான புத்திசாலி ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். ஒருவேளை ஒரு பையன் புத்திசாலிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறானென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும்.\nஇன்னும் சிலருக்கு பொண்ணுன்னா நாம வரைஞ்ச கோட்டைத் தாண்டக் கூடாதுங்கற ஒரு ஆணாதிக்க சிந்தனை இருக்கும். புத்தியில்லாத பொண்ணுன்னா நாம சொல்றதைக் கேப்பா. நாம போய் “கிளையண்ட் கான்ஃபரன்ஸ் ல புராஜக்ட் பிளான் டெமோன்ஸ்ட்ரேட் பண்ணினேன்” ன்னு கப்ஸா விட்டா நம்பபிடுவாள்னு நினைக்கிறாங்க. எப்பவுமே நம்மை விட ஒரு ஸ்டெப் கீழே பொண்ணு இருக்கணுன்னு நினைக்கறவங்களோட மனநிலை இது.\nஇன்னும் சிலர் என்னன்னா புத்திசாலிப் பொண்ணுன்னாலே “சுயமான பொண்ணு”ன்னு நினைக்கிறாங்க. அதாவது தனியா வாழறதுக்கு அவளுக்கு பயம் கிடையாதுங்கற நினைப்பு இருக்கும். அதாவது தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிலை அவளுக்கு இல்லை எனும் சிந்தனை. ஒருவேளை நாம பண்ற டகால்டி வேலையெல்லாம் தெரிஞ்சுபோச்சுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு போனாலும் போயிடுவாளோங்கற பயம் இருக்கும். அந்த பயத்துல “எதுக்கு புத்திசாலிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு” என பின்வாங்க வாய்ப்பு உண்டு.\nபசங்கதான் இப்படின்னா, பசங்களோட அம்மா, அப்பாக்கள் இன்னும் ஒரு படி மேலே. கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கும்போ “பொண்ணு பையனை விட அதிகம் படிச்சிருக்கா. பையனுக்கு அடங்கி இருக்க மாட்டா” என பில்டப் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். “தான் கம்மியா படிச்சதனால தான் கணவனுக்கு அடங்கி இருக்கிறோம்” என நினைக்கிறார்களோ என்னவோ அது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.\nஇந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு இணையா படிச்சிருக்கிற பெண்களை விரும்புகிறார்கள். அதாவது கம்ப்யூட்டர் படிச்ச பையன் அதே லைன்ல படிச்ச பொண்ணை விரும்புகிறான். இதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி, இந்த வேலையில உள்ள கஷ்டம் இதே வேலையில இருக்கிற இன்னொருத்தருக்குத் தான் தெரியும்ங்கற மனநிலை. இன்னொன்னு தெரிஞ்ச ஏரியாங்கறதனால வேலை வாங்கிக் கொடுக்கலாம்ங்கற எண்ணம்.\nபசங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்குன்னு வெச்சுக்கோங்க, புத்திசாலிப் பொண்ணை முடிஞ்ச மட்டும் அவாய்ட் பண்ணுவாங்க. கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவங்க வாழ்க்கைல சிக்கல் வர வாய்ப்பு அதிகம். “ஏங்க, இப்படி பண்ணியிருக்கலாமே” ன்னு ஒரு சின்ன கருத்து சொன்னா கூட “ரொம்ப படிச்ச திமிரு. அதனால நான் செய்றதெல்லாம் தப்பா தெரியுது”. என எகிற ஆரம்பித்து விடுவார்கள். உண்மையிலேயே மனைவி சொல்வது சரியா தப்பா என்றெல்லாம் ஆராய அவர்கள் முயல்வதில்லை.\n“ஆண்கள் தங்களை விடப் புத்திசாலித் தனமான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயங்குவார்கள்” என்கின்றனர் சில உளவியலார்கள். ஆனால் அதற்கெல்லாம் குறிப்பாக எந்த ஆராய்ச்சி முடிவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. பல வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்னால் அறிவார்ந்த பெண்கள் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. பல ஆண்கள் புத்திசாலிப் பெண்களை விரும்புகிறார்கள். உரையாடல்களில் நல்ல அர்த்தத்துடன் பேச அவர்களால் முடியும் என்பது அவர்கள் சொல்லும் ஒரு காரணம்.\nமுக்கியமான ஒரு விஷயம், தினமும் நியூஸ் பேப்பர் படிச்சுட்டு புள்ளி விவரங்கள் பேசறதெல்லாம் புத்திசாலித் தனத்துல வராது. ஒரு பிரச்சினை வருதுன்னா அதுல இருந்து எப்படி எத்தரப்புக்கும் இழப்பின்றி மீளலாம்ன்னு யோசிப்பதில் தெரியலாம் புத்திசாலித்தனம். குடும்பத்தை ஆனந்தமாகவும், வளமாகவும் கொண்டு போக திட்டமிடுவதில் மிளிரலாம் புத்திசாலித்தனம். குழந்தை வளர்ப்பைக் கையாள்வதில் வெளிப்படலாம் புத்திசாலித்தனம். பெண் புத்திசாலியாய் இருப்பது குடும்பத்துக்கு மிகவும் நல்லது. ஆனால் என்ன, “தான் புத்திசாலி” எனும் தற்பெருமையை உச்சந்தலையில் ஒட்டி வைக்காமல் இருக்க வேண்டும்.\nபெண் வீட்டை ஆளணும், ஆண் நாட்டை ஆளணுங்கற கதையெல்லாம் கற்காலமாயிடுச்சு. இந்த கால மாற்றத்தில் தம்பதியர் தங்களோட ஈகோவை மூட்டை கட்டி வெச்சுட்டு, அன்பா பழக ஆரம்பிச்சா இப்படிப்பட்ட பிரச்சினைகளே வராது என்பது தான் நிஜம். நீயா நானா போட்டி போட குடும்பம் ஒண்ணும் பிளே கிரவுண்ட் இல்லையே \nநன்றி : பெண்ணே நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.athirady.com/tamil-news/news/1284172.html", "date_download": "2019-06-26T13:55:51Z", "digest": "sha1:JOAYLWLNPRKA3G53IG2COCBBDJOBSYAK", "length": 12392, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேகம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேகம்\nஅச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேகம்\nஅச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலின்; மஹாகும்பாபிஷேக விழா இன்று 12.06.2019 காலை நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி, விநாயகர், முருகன், வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை தொடக்கம் கிரியைகள் இடம்பெற்றன.\nஇன்று காலை 11.40 மணிக்கு பிரதான கும்ப அபிஷேகம் இடம்பெற்றது.\nஅதனைத்தொடர்ந்து தசதரிசனம், குருமார் மற்றும் கலைஞர் கௌரவிப்பு, மகாபிஷேகம் என்பன இடம்பெற்றன.\nகும்பாபிஷேக நிகழ்வுகளின் பிரதம குருவாக சிவஸ்ரீ மு.பிரசன்னக் குருக்கள் செயற்பட்டார். இவருடன் சிவஸ்ரீ யோகானந்தேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ வி.கஜேந்திரக் குருக்கள், சிவஸ்ரீ சிவசாமிக் குருக்கள், சிவஸ்ரீ சுதாகரக் குருக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். சர்வசாதகாசாரியார்களாக சிவஸ்ரீ ப.சிவானந்தசர்மா (கோப்பாய் சிவம்), சிவஸ்ரீ வத்சன் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலய முன்னாள் குரு அமரர் தியாகராஜக் குருக்களின் புதல்வர் சிவஸ்ரீ கிருபாகரசர்மாவும் கிரியைகளில் பங்கேற்றார். ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ ச.லோகேஸ்வர சர்மா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.\nகௌரவிப்பு நிகழ்வுகள் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.\nகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பன்னிரு தினங்கள் பிற்பகல் 3 மணிக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nகொழும்பு – கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று\nமாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\nஇந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்\nஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி…\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய…\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..\nஎந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்\nஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..\nபயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை\nபிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்..\nமட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அவசரகால சட்டம்…\nஇலங்கை மீதான இந்தியாவின் கவனம்\nஎமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்\nபயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.behindwoods.com/tv/viswasam-rise-up-theme-unplugged-version-a-tribute-to-thala-ajith.html", "date_download": "2019-06-26T14:41:22Z", "digest": "sha1:W2VVAMA764ZX3IVMVLEEBJXQQ4IGFJLW", "length": 6809, "nlines": 111, "source_domain": "www.behindwoods.com", "title": "Viswasam Rise Up Theme - Unplugged Version | A Tribute to Thala Ajith", "raw_content": "\n - வீடு வாங்கும் Plan சொதப்புவது ஏன்\nமனைவியை துண்டு துண்டாய் வெட்டி கொன்ற Cinema Director - நேரடி Investigation\nவாகன நிறுத்த மேலாண்மை திட்டம்\nகைத்தறி மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்\nமானிய விலை இருசக்கர வாகனம்\nஆதி திராவிட, பழங்குடியினருக்கான கல்வி உதவிகள்\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக நிதி\nகாவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி\nமின்சார பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் 2020\nவிவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன்\nவீட்டு வசதிக்கான நிதி ஒதுக்கீடு\nடாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு\nஅப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி - மகப்பேறு உதவித் தொகை\nதமிழக அரசின் நிதி பற்றாக்குறை\nதமிழகம்: பயன்படுமா பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் 2019-2020.. முழு விபரங்கள்\n 'விஸ்வாசம்' தமிழ்சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படம்\n90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours\n90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours\nThalapathy ஒத்து வராததால் Thala - காக விரித்த வலையா அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/54-2.php", "date_download": "2019-06-26T13:46:54Z", "digest": "sha1:Q2EIQ72N23IG43M5OXGSPHIV3G2S7KXW", "length": 10984, "nlines": 93, "source_domain": "www.biblepage.net", "title": "1 தீமோத்தேயு 2, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nதுஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 பதிப்பு Tamil Bible\n1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;\n2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.\n3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.\n4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.\n5 தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.\n6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.\n7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.\n8 அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.\n9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,\n10 தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.\n11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.\n12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.\n13 என்னத்தினாலெனில், முதவாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.\n14 மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.\n15 அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2019-06-26T13:53:19Z", "digest": "sha1:KGU7RZHRPMQNML2WV5TXBI3P2YV2D4II", "length": 7447, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அனாதை பெண் பிணத்தின் அடக்கத்திற்கு உதவி செய்த போலீஸ்காரர்கள் | Chennai Today News", "raw_content": "\nஅனாதை பெண் பிணத்தின் அடக்கத்திற்கு உதவி செய்த போலீஸ்காரர்கள்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஅனாதை பெண் பிணத்தின் அடக்கத்திற்கு உதவி செய்த போலீஸ்காரர்கள்\nபிரயாக் என்ற பகுதியில் ஒரு பெண் உடல்நலம் குன்றி மரணம் அடைந்தார். அவருடைய உடலை அடக்கம் செய்ய அவரது கணவர் உள்பட உறவினர் யாரும் முன்வரவில்லை.\nஇந்த நிலையில் அந்த பகுதி காவல்துறையை சேர்ந்த விஜயேந்திர யதவ் மற்றும் மம்தா ஆகிய இரண்டு பிசிக்கள் அந்த் பெண்ணை அடக்கம் செய்ய தேவையான ஏற்பாடுகளையும் செலவுகளை செய்து இறுதியாத்திரையை முடித்து வைத்தனர்.\nபோலீஸ் என்றால் கல்நெஞ்சம் கொண்டவர்கள் என்று பலர் கூறி வரும் நிலையில் சில போலீசாரகள் இரக்க குணம் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது\nவளர்த்த பசுவை விற்றுவிட்டு கண்ணீர் விட்டு கதறும் வாலிபர்\nகைக்குழந்தையுடன் இரவு ரோந்து செல்லும் பெண் டிஎஸ்பி\nநிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணின் தாயார் கொலை\nநித்யா பொய்ப்புகார் கொடுத்துள்ளார்: தாடி பாலாஜி விளக்கம்\n5 கிமீ சைக்கிளில் தாயின் பிணத்தை எடுத்து சென்ற மகன்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.chennaitodaynews.com/vaiko-challenge-to-tn-government/", "date_download": "2019-06-26T13:48:08Z", "digest": "sha1:2YAJ4PEZJV3LFQCBQIXARCL6J5UFAFXP", "length": 7653, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Vaiko challenge to TN government | Chennai Today News", "raw_content": "\nஸ்டாலின் மீது வழக்கு போட தயாரா\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஸ்டாலின் மீது வழக்கு போட தயாரா\nஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவராக்குவதே தனது லட்சியம் என்று கூறும் பெருந்தன்மையான தலைவர் வைகோ என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களாக ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று சபதம் ஏற்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருவதும், அதற்கு அரசு தரப்பில் இருந்து அமைச்சர்கள் பதில் சொல்வதுமாக உள்ளது.\nஇந்த நிலையில் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்கும் ஸ்டாலின் மீது வழக்கு போட தயாரா மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிமுகவிற்கு சவால் விட்டுள்ளார். அரசுக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஸ்டாலின் மீது வழக்கு போட தயாரா\nஅரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n7 பேரின் விடுதலையை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகர்நாடக அரசின் மேகதாது அணையை தடுக்க ஸ்டாலின் யோசனை\nநாங்குனேரிக்கு பதில் ராஜ்யசபா: முக ஸ்டாலின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்குமா\nஇதை சொல்ல ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளது: தமிழிசை\nஈபிஎஸ் ஆட்சி இன்னும் எத்தனை நாள்\nஅமமுக இனி அவ்வளவுதான்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதயாநிதி மாறன் என்ன காந்தியின் வாரிசா பரம ஏழையா\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்\nசசிகலாவை விரைவில் சந்திப்பேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62464-indian-coast-guard-on-high-alert-after-sri-lanka-serial-blasts.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T13:49:54Z", "digest": "sha1:5PS7YV3ES7BY3BFFBV5EACNXVHBW5MA7", "length": 9428, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை | Indian Coast Guard on high alert after Sri Lanka serial blasts", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இலங்கையை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், அங்கு குண்டுவெடிப்பு நடத்துவதற்காக பயன்படும் 87 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇதையடுத்து, இந்தியாவில் தாக்குதல் நிகழாமல் இருப்பதற்காக, இலங்கையை ஓட்டிய கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள் கடல் வழியாக தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், மும்பை தாக்குதல் போல மீண்டும் ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றியுள்ள கடல் எல்லையை தீவிரமாக கண்காணிக்க, கப்பல்கள் மூலம் கடலோர பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக கே.நடராஜன் நியமனம்\nஅரை இறுதிக்கு இந்தியா முன்னேற என்ன செய்ய வேண்டும் - வேர்ல்ட் கப் திக்திக்\n“இலங்கையில் விரைவில் ஆட்சியை பிடிப்போம்”- ராஜபக்சே\nஉலகக் கோப்பை தொடரை விறுவிறுப்பாக்கியதா இங்கிலாந்தின் தோல்வி \nபென் ஸ்டோக்ஸுக்கு அழுத்தத்தைக் கொடுத்தோம்: சாதனை மலிங்கா பேட்டி\nமலிங்கா வேகத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து - இலங்கை அசத்தல் வெற்றி\nகுறைந்த போட்டிகளில் 50 விக்கெட் - மலிங்கா சாதனை\nஆர்ச்சர், மார்க் வுட் மிரட்டல் - 232 ரன்களில் சேர்த்த இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை பேட்டிங்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் புகார் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பணியாளர் சங்கம் ஆதரவு\n''நான் பிரதமராக இருக்கும்வரை இடஒதுக்கீடுகள் ரத்தாகாது'' - பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49393-georgian-chess-legends-face-off-over-wine-cap.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T14:23:13Z", "digest": "sha1:6N6ERX6X2FGJ67XRWKHKSRLJUL4PUQRK", "length": 6921, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜார்ஜியாவில் வித்தியாசமான செஸ் போட்டி | Georgian chess legends face off over wine cap", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஜார்ஜியாவில் வித்தியாசமான செஸ் போட்டி\nஜார்ஜியாவில் நடந்த சதுரங்க போட்டியில் வழக்கத்துக்கு மாறாக, காய்களுக்கு பதில் மது கோப்பைகளை வைத்து இரு முன்னாள் சாம்பியன்கள் விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nவெள்ளை காய்களுக்கு பதில், வெள்ளை மது ஊற்றப்பட்ட கோப்பையும், கறுப்பு காய்களுக்கு பதில், சிவப்பு மது ஊற்றப்பட்ட கோப்பையும் வைத்து இருவரும் விளையாடியதை, திரளானோர் ஆர்வமுடன் ரசித்தனர். இறுதியில் போட்டி சமனில் முடிந்தாலும், ஒவ்வொரு காயும் வெட்டப்படும்போது, இருவரும் பரஸ்பரம் மது கோப்பையை ஏந்தி ஓயினை ருசி பார்த்தது, பார்வையாளர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. வரும் செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை ஜார்ஜியாவின் கடற்கரை நகரமான பட்டூமியில் தொடங்கவுள்ள 43 ஆவது உலக சதுரங்கப் போட்டியை முன்னிட்டும், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: உமா மீது நடவடிக்கை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: உமா மீது நடவடிக்கை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.valaitamil.com/tamil-nadu-food-varieties-list_13627.html", "date_download": "2019-06-26T14:44:26Z", "digest": "sha1:GGYDI7O24X43KCLDO57CZFAQRWGX3I5U", "length": 20180, "nlines": 278, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamilnadu Famous Food Varieties List | தமிழகத்தின் சிறப்பான உணவு வகைகள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சமையல் கட்டுரைகள்\nதமிழகத்தின் சிறப்பான உணவு வகைகள் \n1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை\n2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா\n4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்\n5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை\n7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்\n12. கும்பகோணம் டிகிரி காபி\n13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா\n14. கோவில்பட்டி கடலை மிட்டாய்\n15. ஆம்பூர் தம் பிரியாணி\n16. நாகர்கோவில் அடை அவியல்\n18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா\n20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்\n21. மணப்பாறை அரிசி முறுக்கு\n23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி\n24. பண்ருட்டி முந்திரி சாம்பார்\n25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்\n26. சாயல்குடி கருப்பட்டி காபி\n27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா\n28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்\n29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி\n30. புதுக்கோட்டை முட்டை மாஸ்\n32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி\n33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு\n34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்\n35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்\n37. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..\n5. பூண்டு வெங்காய குழம்பு\n10. நாட்டுகோழி மிளகு வறுவல்\n12. நட்டுக் கோழி ரசம்\n17. பருப்பு உருண்டை குழம்பு\nஉணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.\n\"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்\"\nநன்றி : கருப்பு தமிழன்\nTags: தமிழர்களின் உணவு வகைகள் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் Tamilnadu Famous Food Items Tamilnadu Famous Varieties\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-26T14:41:10Z", "digest": "sha1:MU4GTCGFP4HVJCCSN3BBZJBLBZ3ISHZR", "length": 4936, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூழல் வெப்பநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூழல் வெப்பநிலை (Ambient Temperature) என்பது சுற்றுப்புறத்தின் வெப்ப நிலையை குறிக்கும். ஒரு மூடிய அறையினுள் சூழல் வெப்பநிலையும் அறை வெப்பநிலையும் ஒன்று தான்.\nமூடிய அறைக்கு வெளியே, சூழல் வெப்பநிலையானது இடத்தைப் பொறுத்தும், பருவநிலையைக் பொறுத்தும் பெரிதாக மாறும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-26T15:10:42Z", "digest": "sha1:Y55VT5CZV6OYA2CBQLXBATNBNTVTOVOV", "length": 5613, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ரெனால்ட் இந்தியா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த க்விட் ஹேட்ச்பேக்\nரெனால்ட் நிறுவனத்தின் க்விட் ஹேட்ச்பேக் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருப்பதாக அறிவித்துள்ளது.\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\n ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nஉலகக்கோப்பையுடன் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடியாது: கிறிஸ் கெய்ல்\nதோனிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nஅணுசக்திக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்: சுப.உதயகுமார் பேட்டி\nநிதி ஆயோக் தலைவரின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/entertainment/04/197473", "date_download": "2019-06-26T15:09:06Z", "digest": "sha1:VQXHIWGMPORY4LXPI64XCEHN3QCDWNPJ", "length": 12110, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "மீண்டும் சினிமாவில் அதிரடியாக குதித்த நடிகை! தமிழ் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் காட்சி - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nமீண்டும் சினிமாவில் அதிரடியாக குதித்த நடிகை தமிழ் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும் காட்சி\nதமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.\nதற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கணவரின் விருப்பத்திற்காக மீண்டும் நடித்துள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியுள்ளனர்.\nஇவர் தமிழில் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின.\nதமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.\nபின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள்.\nகுழந்தை பிறந்த பின்னர் தனது குடும்ப வாழ்க்கையில் மூழ்கி போன ஜெனிலியா அதன் பின்னர் சினிமாவில் தலை காட்டவில்லை.\nஇந்நிலையில் நான்காண்டு இடைவேளைக்கு பின்னர் தனது கணவருக்காக மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் ஜெனிலியா.\nதற்போது ஜெனிலியாவின் கணவர் ரிதீஸ் தேஸ்முக் ‘மௌலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் நடிகை ஜெனிலியா ஹோலி கொண்டாடுவது போல படு பயங்கரமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.\nஇந்த காட்சி தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.pathivu.com/2019/04/manivannan.html", "date_download": "2019-06-26T15:12:20Z", "digest": "sha1:2VQ4RBTAFSDMS5AZSFX3FVS4J2VTTB5E", "length": 12583, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "பிரிகேடியர் மணிவண்ணன - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / பிரிகேடியர் மணிவண்ணன\nவேந்தன் April 04, 2019 மாவீரர்\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார்.\nகேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.\nகேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்ககது.\nபலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே.\nஅதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூச்சின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\nமுன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சூற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்ததன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.\nஇந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.\nஅந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவாணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார்.\nஇந்த நிலையில்தான் சிங்களப் படையின் தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.padasalai.net/2017/09/21-4900.html", "date_download": "2019-06-26T13:49:01Z", "digest": "sha1:PUGQAQQYZLERKZ4JMRXX2M6H3LH767U6", "length": 9256, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "பிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் 21 ஆயிரம் பேர் ரூ. 4900 கோடி கருப்பு பணம் உள்ளதாக அரசிடம் தகவல்!! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் 21 ஆயிரம் பேர் ரூ. 4900 கோடி கருப்பு பணம் உள்ளதாக அரசிடம் தகவல்\nபிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் 21 ஆயிரம் பேர் ரூ. 4900 கோடி கருப்பு பணம் உள்ளதாக அரசிடம் தகவல்\nகருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாக கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். புழக்கத்தில் உள்ள நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவும் அளிக்கப்பட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் அதை கணக்கில் கொண்டு வர பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்) எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருப்பவர்கள், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து, 50 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இருந்து விலக்கு பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஅவ்வாறு செலுத்தப்படும் தொகையில் நான்கில் ஒரு பங்குத் தொகை, 4 ஆண்டுகளுக்கு வட்டியின்றி வைப்பு நிதியாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் மார்ச் 31-ம் தேதி வரை கருப்பு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி டெபாசிட் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4900 கோடி ரூபாய் கருப்புப் பணம் உள்ளதாக 21 ஆயிரம் பேர் தகவல் அளித்து உள்ளனர் என அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.\nமார்ச் 31 வரையில் 21 ஆயிரம் பேர் 4900 கோடி ரூபாய் கருப்புப் பணமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர், 2451 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.\n0 Comment to \"பிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் 21 ஆயிரம் பேர் ரூ. 4900 கோடி கருப்பு பணம் உள்ளதாக அரசிடம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
{"url": "https://www.vikatan.com/author/2995-rahini-aathma-vendi-m", "date_download": "2019-06-26T14:42:58Z", "digest": "sha1:ISHCRTSAFQII4VNWQDM7ID2QIPLNJJWF", "length": 13064, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n`மக்களை சமாதானப்படுத்தவே அரசு ஆலையை மூடியது' - ஸ்டெர்லைட் நிர்வாகம்\n`தூத்துக்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' - மக்களவையில் கனிமொழி பேச்சு\n' - பத்திரிகையாளர்கள் கொந்தளிப்பு\nராகினி ஆத்ம வெண்டி மு.\n``ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தினகரன்”: புகழேந்தி\nகுல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் சிறையில் சந்தித்த அவரின் குடும்பத்தினர்..\n``துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை”: அ.தி.மு.க கூட்டத்தில் முடிவு\nமீண்டும் களம் இறங்கினார் செரினா வில்லியம்ஸ்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி: நன்றி தெரிவித்தார் தினகரன்\nகட்டலோனியா தேர்தல் எதிரொலி: ஒற்றுமையுடன் இருக்க ஸ்பெயின் மன்னர் அழைப்பு\nபாசம் வைக்க நேசம் வைக்க… - இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா\nநல்ல தூக்கத்துக்கு 4-7-8 கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://yazhvenba.wordpress.com/2018/06/29/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-37/", "date_download": "2019-06-26T14:21:23Z", "digest": "sha1:Z2UI3LF4TESQSUTGJAB757LMMJ5HV5HP", "length": 5047, "nlines": 143, "source_domain": "yazhvenba.wordpress.com", "title": "வேந்தர் மரபு – 37 – யாழ்வெண்பா", "raw_content": "\nவேந்தர் மரபு – 37\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.\nநான் எழுதுகிற கவிதை பொருத்தமா இருக்கா Or இன்னும் improve பண்ணனுமா friends\nவேந்தர் மரபு – 37\nபடித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in சரித்திர புனைவு நாவல்கள், வேந்தர் மரபு\nNext postவேந்தர் மரபு – 38\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nமொழி பொய்த்த உணர்வுகள் – 09\nமொழி பொய்த்த உணர்வுகள் – 08\nமொழி பொய்த்த உணர்வுகள் – 07\nமொழி பொய்த்த உணர்வுகள் – 06\nமொழி பொய்த்த உணர்வுகள் – 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5987:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2019-06-26T14:57:11Z", "digest": "sha1:R5XL4EYJNSMZ3M5OE5JSKGGJA2U2J3J2", "length": 17203, "nlines": 111, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகளும் பாலியலும் (4)", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளும் பாலியலும் (4)\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\n50% குழந்தைகள் கட்டிளமைப்பருவத்திற்கு முன்பேயே பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். 34% குழந்தைகள் மற்றப் பாலின விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.\nபாலின்ப விளையாட்டு (Sexual Play) வெளித்தெரியும் பாலுறுப்பு வளர்ச்சி அடிப்படையான மறுபால் தெரிவு, கரமைதுனம் போன்ற ஒன்றே. ஒரு பாலினர் அடுத்த பாலினை அறியும் ஆவல், அடுத்த பாலினை ஆடையின்றிப் பார்ப்பதற்கும் தொடுவதற்கும் இட்டுச் செல்கின்றது. பெரும்பாலும் பெரும்பாலும் மருத்துவர் நோயாளி விளையாட்டு, வாப்பா உம்மா விளையாட்டு, மாப்பிள்ளை பெண் விளையாட்டு போன்ற குழந்தைப் பருவ விளையாட்டுக்களில் அவதானிக்கலாம்.\nஓரளவு குழந்தை வளர்ந்ததும் மலங்களிக்கும் போது வளைத்து வட்டமாக ஒவ்வொருவரும் குந்திக் கொள்வார்கள். அல்லது களிப்பறையில் பாடிக் கொண்டு மலங்களிப்பார்கள். அடுத்தவரின் களிப்புப் பெட்டியை பார்க்க விரும்புவார்கள். அவர்கள் களித்திருக்கும் அளவை அறிய விரும்புவர்கள். அவர்கள் எவ்வாறு முக்கி முனகிக் கொண்டு களிக்கிறார்களோ அதேபோன்று தாமும் முக்குவார்கள்.\nஇதில் நாம் எல்லை கடந்த கண்கானிப்பையும் கண்டிப்பையும் காட்டக்கூடாது. இது ஒரு நகர்வுக்கட்டம் இதை சாதாரணமாக அவதானித்தாலே போதுமானது. இது குழந்தை கழிவகற்றும் நடத்தையோடு தொடர்பானது. அதைச் செய்ய அது சிரமப்படுகிறது. இதை நாம் பிரச்சினையாகக் கருதக்கூடாது. இச்சந்தர்ப்பங்களில் அதட்டுவதோ, அடிப்பதோ கூடாது. கட்டிளமைப் பருவத்திற்கு முன்னதான குழந்தைப் பாலியல் நடத்தை அதன் தேவையோடு சம்பந்தப்பட்டதாகும். அது பார்த்தல், தொடுதல், அசைத்தல் போலச்செய்யும் பாலியல் விளையாட்டுக்களைப்போல உறுப்பைத் தூக்குதல், பற்றிப்பிடித்தல், மற்றப்பாலினரை அறிதல் எனப் பலதரப்பட்டதாகும்.\nKinsey என்ற உளவியலாளரின் அறிக்கைப்படி 50% குழந்தைகள் கட்டிளமைப்பருவத்திற்கு முன்பேயே பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். 34% குழந்தைகள் மற்றப் பாலின விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். பெண் குழந்தைகளிடம் பாலின்ப விளையாட்டுக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் வயது ஏற ஏற அவர்களிடமும் பாலின்ப விளையாட்டுக்கள் அதிகரிக்கின்றன. ஒரே பாலின் பாலின விளையாட்டுக்கள் பிறப்புறுப்புக்களை மாறி மாறித் தொடுவதாகும். தகாப் புணர்ச்சியோடு தொடர்பான இந்த நிலை மாறுகட்டம் தான் எதிர்கால சமப்பாலுறவுக்கு இட்டுச் செல்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nபாலின்ப விளையாட்டுக்கு குழந்தையைத் தூண்டும் காரணிகள், அடுத்தவரை அறியவேண்டும் என்ற ஆவல், இருண்மை, பால்நிலையுடன் தொடர்பான தடை, சகபாடியின் அழுத்தம், வீட்டில் பெற்றோரின் பாலியல் நடத்தையைக் காணுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பாலின்ப தூண்டியைப் பொறுத்தவரையில் கட்டிளமைப் பருவத்திற்கு முன் குழந்தை பாலின்ப ஊக்க பலமான ஒன்றாக இருப்பதில்லை.\nஉங்கள் குழந்தை பாலின்ப விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அதை உற்சாகப்படுத்துங்கள், பாராட்டுங்கள் என்று நாம் சொல்வதாக நினைத்துவிடாதீர்கள். மாறாக இந்த விடயங்களை மிக நிதானமாக அவதானியுங்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். குழந்தையின் ஏனைய நடவடிக்கையைப் போல இதனையும் அவதானியுங்கள். குழந்தையின் நடத்தைகளுக்கு நீங்கள் போட்டுவைத்திருக்கின்ற வரையறைகளின் அளவை இதற்கும் நீங்கள் வழங்குங்கள். அதில் கூடுதலோ குறைவோ காட்டாதீர்கள். நீங்கள் அவ்வாறு நடந்து கொண்டால்தான் குழந்தையும் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்து கொள்ளும். காலப்போக்கில் அதிலிருந்து விடுபடவும் வழிவகுக்கும்.\nஆறுவயதுக் குழந்தையின் பாலின்பச் செயற்பாடு சாதாரணமானது. ஆனால் பத்து வயதாகும்போதும் தொடர்ந்தால் கவனிக்க வேண்டும். அதே நேரம் அதிரடி நடவடிக்கைகளிலும் இறங்கிவிடக்கூடாது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு நபரோடு ஆரம்பித்து பின்னர் படிப்படியாக பல குழந்தைகளுக்கு மத்தியில் பரவ ஆரம்பித்துவிடும். இத்தகைய பாலியல் கிசுகிசுக்கு பதினொன்று பன்னிரெண்டு வயதுப் பிள்ளைகளிடம் மிக உற்சாகமாகக் காணப்படும். இது பிரச்சினையாக மாறும் போது பின்வரும் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.\n1). Confrontation – எதிர்கொள்ளல் : அதாவது பாலியல் நடத்தையானது வளர்ந்தவர்களுக்கே உரியது. அதுவரை குழந்தைகள் பொறுமையாக இருக்க வேண்டும் எனக்கூறித் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு மாறாக இது மாபெரும் குற்றச்செயல், கடும் குற்றம் என்று குற்றவுணர்ச்சியை குழந்தைக்கு ஏற்படுத்திவிடாதீர்கள். பாலியல் நடத்தைகளில் ஈடுபட விரும்புவது, ஈடுபடுவது எல்லாம் இறைவன் படைத்த மனித இயல்புதான். ஆனால் தற்போதைக்கு அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் இரண்டாவது தடவையாகவும் இதில் ஈடுபட்டால் உன்னோடு நான் பேசப்போவதில்லை என்று ஒருபோதும் கூறாதீர்கள். அதே நேரம் நீண்ட உபன்னியாசங்களையோ தெளிவுரைகளையோ குழந்தையிடம் செய்யப்போகாதீர்கள்.\n2) Substitute Activities – பதிலி செயற்பாடுகளை உருவாக்குதல் :வீட்டிலோ, அயலிலோ குழந்தைகள் கவனத்தைப் பெறக்கூடிய செயற்பாடுகள் காணப்படுகின்றன. எப்போதும் அவர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடுவார்கள் என்றில்லை. எனவே அவர்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய வேறு விளையாட்டுக்களின் பக்கம் கவனத்தைத் திருப்பலாம்.\n3) Sexual Education – பாலியல் கல்வி வழங்கல் : பாலியல் நாட்டமுள்ள குழந்தையிடம் அதனைத் தனிப்பதற்கு வீட்டில் பெற்றோர் அதனுடன் பாலியல் பற்றிக் கதைக்கலாம். குழந்தையின் கேள்விகளுக்கு தெளிவாகவும் அறிவுபூர்வமாகவும் பதிலளிக்கலாம். கட்டிளமைப் பருவத்திற்கு முன்பு பாலியல் தொடர்பான அறிவு 65% குழந்தைகளிடம் குறைவாகக் காணப்படுகின்றன. 13% குழந்தைகள் செவிவழித் தகவல்களைப் பெற்றுள்ளனர். 5% குழந்தைகள் பாலியல் பற்றி எந்த அறிவும் அற்றவர்கள் என ஒர் ஆய்வறிக்கை கூறுகின்றது. தமது பாலியல் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களைப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளிடம் பாலின்ப செயற்பாடுகள் மிகவும் குறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக அவர்களிடம் பாலியல் குறித்த மயக்கங்கள் இருப்பதில்லை.\n4) Parental Model – முன்மாதிரியான பெற்றோர் : பெற்றோருடைய பாலியல் நடவடிக்கைகளை குழந்தைகள் முழுவதுமாக அவதானிக்கின்றார்கள் என்றில்லை. அதாவது ஒன்பது பத்துவயதுக்குட்பட்ட பிள்ளைகள் பாலியல் நடத்தைகளை ஒழுக்காற்று விதிகள், வரன்முறைகள் முழுவதுமாக அறிந்திருக்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை. எனவே பெற்றோர் முன்மாதிரியாக விளங்கினால் பிள்ளைகளும் அவற்றைப் பின்தொடர்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8836:%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-06-26T15:00:20Z", "digest": "sha1:TQL5ZIKR7XQZPLXBWPJRWJYLRUMH3OHU", "length": 8739, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "ஷாம் (சிரியா) சிறப்பு", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் ஷாம் (சிரியா) சிறப்பு\nஇந்த வார்த்தை அல்லாஹுவுடை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தை ஒருக்காலும் இது பொய்யாகாது..\nஷாமிற்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு..\nஇப்போது வேண்டுமானல் ஷாம் அலக்கழிக்கபடலாம், ஆனால் ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ்\nஷாம் தேசம் என்பது சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான் இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்.\nமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாமும் தான்\nஅல்லாஹுவின் பர்க்கத் பொருந்திய இடமும் ஷாம் தான்..\nநமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல்_அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..\nநமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்..\nஅதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..\nஉலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி சுஜூத் செய்ததும் ஷாமில் தான்..\nவானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..\nவானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..\nமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்..\nபாரசீக கோட்டையில் இஸ்லாமிய_கொடி பறக்கும் என்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்..\nஎட்டாயிரத்திற்கும் அதிகமான சஹாபாக்கள் ஷஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..\nஉலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்..\nகியாம நாள் வரையிலும் #ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்..\nமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போராட்டக் குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை தான்..\nஅப்போதைய வல்லரசான பாரசீகத்தை இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்..\nமல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்..\nரோமர்களுக்கு இமாம் மஹ்தி தலைமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்..\nயூதர்களை பார்க்கும் இடமெல்லாம் வெட்டுவதும் ஷாமில் தான்..\nஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவதும் ஷாமில் தான்\nதஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்..\nமஹ்ஷர் பூமி ஏற்ப்படுவதும் ஷாமில் தான்..\nகியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்..\nஇன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது\nஇஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது\nஇப்போதைய நமது பணி ஷாமிற்கும் அம்மக்களுக்கும் அதிகம் பிராத்திப்பதே ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.muthukamalam.com/quotes/p142.html", "date_download": "2019-06-26T13:45:29Z", "digest": "sha1:I4H45JWYLW6QIK2J7QOLT5APMWKQMLBR", "length": 19847, "nlines": 245, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Quotes - பொன்மொழிகள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nசீரடி சாயிபாபா உபதேச மொழிகள்\n1. சீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் அனைத்தும் மறைந்து நலமடைவான்.\n2. துவாரகாமாயியை அடைந்த பொழுதில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான மகிழ்ச்சியை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு நிறைய ஆசிகளையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியில் இருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னைத் தஞ்சம் அடைபவர்களுக்கும் என் வழிகாட்டுதலுக்காக, என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை மகிழ்ச்சியடையச் செய்வேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவைச் சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nதொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.\nபொன்மொழிகள் | கணேஷ் அரவிந்த் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/62367-delhi-capitals-beat-kings-xi-punjab-by-5-wickets.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T14:32:34Z", "digest": "sha1:3CB7H3ZE54H2ZGEDNDOXRUEVBLE5PD3W", "length": 10038, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி | Delhi Capitals beat Kings XI Punjab by 5 wickets", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மயங்க் அகர்வால் 2, மில்லர் 7 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடினார். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். அதனால் பஞ்சாப் அணியின் ரன் உயர்ந்தது.\nமந்தீப் சிங் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாம் கரன் டக் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த கெயில் 37 பந்தில் 69 ரன் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் லமிசனே 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ரபாடா, அக்ஸர் படேல் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.\nபின்னர் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு, தவான் மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணை, நேர்த்தியாக விளையாடி அரை சதம் அடித்தனர். தவான் 56 ரன்கள் எடுத்த நிலையில் விஜிலியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதி வரை ஸ்ரேயஸ் ஐயர் களத்தில் நின்று ஆட, டெல்லி அணி 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து நடப்பு தொடரில் ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. பொறுப்புடன் ஆடிய டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்\n3 ஆம் கட்ட வாக்குப் பதிவு: இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“முஸ்லிம் ஆண்களை குறிவைத்து சட்டம் இயற்றக் கூடாது” - சசிதரூர்\nமுத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல்\n“முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும்” - குடியரசுத் தலைவர் உரை\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\n‘முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம்’ - ஐக்கிய ஜனதா தளம்\n‘மீண்டும் முத்தலாக் மசோதா அறிமுகம்’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஸ்டெயின் காயத்திற்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிசிஸ் காட்டம்\nநோன்பு திறப்பது இஸ்லாமியர்கள் ; கஞ்சி வழங்குபவர் இந்துக்கள்\nRelated Tags : Delhi Capitals , XI Punjab , பஞ்சாப் அணி , டெல்லி அணி , Ipl , ஐபிஎல் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் , கிறிஸ் கெயில்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாக்குப் பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்\n3 ஆம் கட்ட வாக்குப் பதிவு: இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/54379-vintage-mickey-mouse-posters-to-fetch-thousands-at-auction.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T13:48:38Z", "digest": "sha1:OAHKHDEQSHB4Z27YQN6647BMVERH4PTK", "length": 7485, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிக்கி மவுசின் பிறந்தநாள் ! புகைப்படங்கள் ஏலம்! | vintage Mickey Mouse posters to fetch thousands at auction", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nலண்டனில் ஏலம் விடப்பட்ட மிக்கி மவுசின் புகைப்படங்கள் மூலம் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nமிக்கி மவுஸ் கார்ட்டூனை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு உலக பிரபலம் தான் மிக்கி மவுஸ். மிக்கி மவுசை உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி. எலியை வைத்து ஒரு `மார்டிமர் மவுஸ் என்ற கார்ட்டூனை உருவாக்கினார் டிஸ்னி. `மார்டிமர் மவுஸ்' என்ற பெயர் வேண்டாமென்றும், வேறு பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார் டிஸ்னியின் மனைவி. அதனால் தன் மனைவி பரிந்துரை செய்த பெயரையே தனது கார்ட்டூனுக்கு வைத்தார் டிஸ்னி. அந்த பெயர் தான் ''மிக்கி மவுஸ்''\nஅப்படி உருவான மிக்கி மவுஸ், அமெரிக்காவின் அனிமேஷன் குறும்படமான ‘ஸ்டீம்போட் வில்லி’ மூலம் 1928ம் ஆண்டு நவம்பர் 18ல் அறிமுகமானது. இதன்மூலம் உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுசின் 90வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. மிக்கியின் பிறந்தநாளை முன்னிட்டு அதன் அரிய புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டன.\nஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்திய மதிப்பில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கிடைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \nபுயல் பாதிப்பு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு \nபுயல் பாதிப்பு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D/23", "date_download": "2019-06-26T13:46:09Z", "digest": "sha1:JHG3OS46IWKQEBHDUDMWBRHEPHMYSBDC", "length": 7385, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வீடியோ கேம்", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஉபியில் கொடூரம்… 2 பெண்களை மானபங்கம் செய்து வீடியோ வெளியிட்ட வெறியர்கள்\nஇணையத்தில் வைரலாகும் பிரேமலதா விஜயகாந்தின் டப்ஸ்மேஷ் வீடியோ\nபொம்மை கார் விளையாடிய தோனி\nதற்கொலைக்குத் தூண்டும் வீடியோ: தடை விதித்தது சிலி\nதேவையில்லாத ஆணிகளுக்காக ஒரு சாப்ட்வேர்\nகரும்புள்ளி குத்தி, செருப்புமாலை அணிவித்து... முதியவருக்கு நேர்ந்த கொடுமை\nஅப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்\nவைரலாகும் லா லா லேண்ட் வெண்ணிலவே...\nபுதுசா வந்திருக்கு, யூடியூப் கோ\nஅது மோசடி வீடியோவாம்: அடித்துச் சொல்லுது அதிமுக அம்மா அணி\nதொப்பிக்கு வாக்கு கேட்டு பணம்: வைரலான வீடியோ\nகூகுள் மேப்பில் ஒரு கூல் விளையாட்டு\nட்ரூ காலர் ஆப்பிலும் இனி ரீசார்ஜ், வீடியோ காலிங் வசதி\nவீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா\nட்ரோனை உணவென நினைத்து துரத்திய புலிகள் (வீடியோ)\nஉபியில் கொடூரம்… 2 பெண்களை மானபங்கம் செய்து வீடியோ வெளியிட்ட வெறியர்கள்\nஇணையத்தில் வைரலாகும் பிரேமலதா விஜயகாந்தின் டப்ஸ்மேஷ் வீடியோ\nபொம்மை கார் விளையாடிய தோனி\nதற்கொலைக்குத் தூண்டும் வீடியோ: தடை விதித்தது சிலி\nதேவையில்லாத ஆணிகளுக்காக ஒரு சாப்ட்வேர்\nகரும்புள்ளி குத்தி, செருப்புமாலை அணிவித்து... முதியவருக்கு நேர்ந்த கொடுமை\nஅப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்\nவைரலாகும் லா லா லேண்ட் வெண்ணிலவே...\nபுதுசா வந்திருக்கு, யூடியூப் கோ\nஅது மோசடி வீடியோவாம்: அடித்துச் சொல்லுது அதிமுக அம்மா அணி\nதொப்பிக்கு வாக்கு கேட்டு பணம்: வைரலான வீடியோ\nகூகுள் மேப்பில் ஒரு கூல் விளையாட்டு\nட்ரூ காலர் ஆப்பிலும் இனி ரீசார்ஜ், வீடியோ காலிங் வசதி\nவீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா\nட்ரோனை உணவென நினைத்து துரத்திய புலிகள் (வீடியோ)\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=64074", "date_download": "2019-06-26T13:51:59Z", "digest": "sha1:BLY4VT3NKV4USIHHKOGV2XWYAFXZ3S6C", "length": 11561, "nlines": 86, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதண்ணீர் பிரச்சினை- போர்க்கால வேகத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்\nதண்ணீர் பிரச்சினை- போர்க்கால வேகத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்\nதமிழகம் முழுவதும் குடிநீர் இன்றி மக்கள் அல்லல்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கின்ற வேளையில், தமிழக அரசு போர்க்கால வேகத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.\nஇதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி, 22 மாவட்டங்களுக்கு மேல் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கின்ற நிலைமை வேதனை அளிக்கின்றது.\nநாள்தோறும் குடிநீருக்காக பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் செய்திகள் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் வெளியாகி வருகின்றன.\nசென்னை பெருநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த ஆண்டில் 3872 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.\nதற்போது ஜூன் 4 ஆம் தேதி நிலவரப்படி 261 மில்லியன் கன அடி நீர்தான் இருக்கிறது. நாளொன்றுக்கு சென்னை மக்களின் தாகத்தைப் போக்க 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், மாநகர குடிநீர் வாரியம் தற்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் விநியோகிக்கிறது.\nவீராணம் ஏரியிலிருந்து அனுப்பப்படும் குடிநீர், கடல் நீரை குடிநீராக்கி விநியோகம் செய்யப்படும் நீர், விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சென்னையில் விநியோகம் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது.\nஆனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் கேன் வாட்டர் விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டன. குடியிருப்புகளில் அன்றாடத் தேவைக்காக விலைக்கு வாங்கும் நீரை லாரி நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்திவிட்டன.\nகுடிநீரையும், மற்ற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையையும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உயர்த்திக் கொள்ளை லாபம் அடிப்பதை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு முறைப்படுத்த வேண்டும்.\nபருவ மழை பொய்த்து, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போவதையும், நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்குக் கீழே போனதையும் தமிழக அரசு முன்கூட்டியே கணித்துத் தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதால்தான் இன்று சென்னை மக்கள் தண்ணீருக்குத் தவித்து நடுத்தெருவில் போராடும் நிலைமையை உருவாகி இருக்கின்றது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி 3,600 நீர்நிலைகள் உள்ளன. அவற்றை முறையாக தூர் வாரி பராமரித்திருந்தால் 80 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும். பெய்த சொற்ப மழை நீரும் அரசின் அலட்சியப் போக்கால் வீணானது.\nதமிழகம் முழுவதும் குடிநீர் இன்றி மக்கள் அல்லல்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கடந்த 7 ஆம் தேதிதான் உள்ளாட்சித்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.\nதமிழக அரசு இயந்திரம் போர்க்கால வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து செயலாற்ற வேண்டும்\", என வைகோ தெரிவித்துள்ளார்.\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "http://www.valaitamil.com/sri-divya-play-guest-role-in-remo_16207.html", "date_download": "2019-06-26T14:23:31Z", "digest": "sha1:DS66ATCPZ3L4JJDTPCEQIECUZA37TTSA", "length": 15212, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "ரெமோ படத்தில் இன்னொரு கதாநாயகி...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nரெமோ படத்தில் இன்னொரு கதாநாயகி...\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ரெமோ.. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. இதில் சிவகார்த்திகேயன் பெண் செவிலியர் வேடத்தில் தோன்றியிருந்தார்.\nசிவகார்த்திகேயனின் பெண் வேட முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஏன் இந்த பெண் வேடம் என விசாரித்த போது, கீர்த்தி சுரேஷை காதலிக்க வைக்க தான் இந்த அலப்பரையாம்...\nமேலும், இப்படத்தில் ஒரு ஹீரோயின் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார்.அவரு வேரு யாரும் இல்லை, சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யா தானாம்.\nTags: ரெமோ கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் பாக்யராஜ் கண்ணன் Remo Sivakarthikeyan Keethi Suresh\nரெமோ படத்தில் இன்னொரு கதாநாயகி...\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் திரிஷா, நயன்தாரா..\nகே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா\nகவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் \nவிஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா\nசிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் \nமிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:36:12Z", "digest": "sha1:DZM7FHHWJXUSA3GNZ4T23E6GOEW6OY2I", "length": 5555, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பிரட் ஹின்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்பிரட் ஹின்ட் (Alfred Hind , பிறப்பு: ஏப்ரல் 7 1878, இறப்பு: மார்ச்சு 21 1947) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1898-1901 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஅல்பிரட் ஹின்ட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 8, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:46:45Z", "digest": "sha1:YITF2IYESL6F5OYMX4QPY7W6K4MFZZNB", "length": 7048, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரம் பார்த்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறியப்படாத அமிலம் அல்லது காரத்தின் செறிவினைக் காண்பதற்கான அளவறி பகுப்பாய்வே அமில-கார தரம் பார்த்தலாகும்.\nதரம் பார்த்தல்(Titration) என்பது அளவறி பகுப்பாய்வு வேதியியலில் ஒரு பொதுவான ஆய்வக முறையாகும். இம்முறை அடையாளம் தெரிந்த ஒரு சோதனைப்பொருளின் செறிவினைக் கண்டறிய உதவுகிறது. தரம் பார்த்தல் சோதனைகளில் கன அளவுகள் முக்கியமான பங்காற்றுவதால் தரம் பார்த்தலானது பருமனறி பகுப்பாய்வு எனவும் அழைக்கப்படுகிறது. செறிவு காணி எனப்படும் வேதிப்பொருளானது, திட்டக் கரைசலாக தயாரிக்கப்படுகிறது.[1] செறிவு மற்றும் பருமன் தெரிந்த ஒரு செறிவு காணி அல்லது தரம் பார்த்தல் கரைசலானது செறிவு காணப்பட வேண்டிய கரைசலுடன் அதன் செறிவினைக் காணும் பொருட்டு வினைபுரியச் செய்யப்படுகிறது.[2] செறிவு காணப்பட வேண்டிய திரவம் வினையில் ஈடுபட்ட கன அளவானது தரம் பார்த்தலின் கன அளவு என அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2018, 18:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T14:28:45Z", "digest": "sha1:PM55UNUQYMUWTHQOWXEA7FVFCXTIB7O4", "length": 28546, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவைகாசி திருவிழா, சிவராத்திரி, திருக்கார்த்திகை.\nதருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.\nசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.\nஇக்கோயிலில் உள்ள இறைவன் தருமபுரீசுவரர்,இறைவி மதுரமின்னம்மை.\nமுன் மண்டபம், அம்மன் சன்னதி\nஇக்கோயிலின் ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் இடது புறம் தேனாமிர்தவல்லி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். அடுத்துள்ள வாயிலைக் கடந்து செல்லும்போது பலி பீடமும், நந்தியும் உள்ளன. கருவறையில் மூலவர் யாழ்முரிநாதர் லிங்கத்திருமேனியாக உள்ளார். மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, அடிமுடிகாணா அண்ணல், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் மடப்பள்ளி உள்ளது. தொடர்ந்து விநாயகர், நால்வர், சந்தானாசார்யார், 63 நாயன்மார்கள் உள்ளனர். அடுத்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், காசி விசுவநாதர், சந்திரசேகர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இத்திருச்சுற்றில் சூரியன், சந்திரன், பைரவர், நவக்கிரகம் ஆகியோர் உள்ளனர். நடராசர் சன்னதியும் உள்ளது.\nதிருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத்தலமான இதில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்திற்கு யாழ் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் முயல, யாழில் இசை அடங்காது யாழ் முரிந்த தலமாதலால் யாழ்முரி என்ற சிறப்புப் பெற்ற தலம்.[1]\nஇக்கோயிலின் குடமுழுக்கு 9 பிப்ரவரி 2017 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 209\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nதிருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 51 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 51\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nபுதுச்சேரி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/26/sadam.html", "date_download": "2019-06-26T14:57:28Z", "digest": "sha1:MDLYUKEIJ7HK6SVTOIOT2BSGNWXMVGHD", "length": 16020, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சதாமுக்கு புற்றுநோய் தீவிரம்: ரஷ்ய, பிரான்ஸ் டாக்டர்கள் விரைந்தனர் | FOREIGN PLANES CARRIED DOCTORS FOR SADDAM - PAPER - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n13 min ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\n52 min ago பருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\n1 hr ago பூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\n1 hr ago கொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் அசத்தலான அசுஸ் 6Z ஸ்மார்ட்போன்.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nSports கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசதாமுக்கு புற்றுநோய் தீவிரம்: ரஷ்ய, பிரான்ஸ் டாக்டர்கள் விரைந்தனர்\nபுற்றுநோயால் அவதிப்பட்டு வரும் இராக் அதிபர் சதாம் உசேனில் உடல் நிலை மோசமடைந்தத அடுத்து அவருக்கு சிகிச்சைஅளிக்க ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\n2 சிறப்பு விமானங்களில் இவர்கள் இராக் அழைத்து வரப்பட்டனர். இச் செய்தியை சவுதி அரேபியாவின் அல்-ஹயாத் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.\nசமீபத்தில் சதாம் உசேனின் உடல் நிலை மோசமடைந்தது. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. இதையடுத்துஇந்த இரு நாடுகளில் இருந்தும் சிறப்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.\nமாஸ்கோவிலிந்து புறப்பட்ட ஒரு விமானம் நேரடியாக சனிக்கிழமை பாக்தாத் விமான நிலையம் வந்திறங்கியது. பிரான்ஸ்விமானம் வெள்ளிக்கிழமை பாக்தாத் வந்தது. அமெரிக்கா, பிரிட்டனின் கடும் எதிர்ப்பை மீறி பிரான்ஸ் தனது மருத்துவக்குழுவை இராக் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசதாம் உசேன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 1998ம் ஆண்டில் அமெரிக்க,பிரிட்டிஷ் விமானங்கள் குண்டுவீச்சில் இடிந்து விழுந்த அதிபரின் அரண்மனை திறப்பு விழா கடந்த வாரம் நடந்தது. அதிலும்சதாம் கலந்து கொண்டார். அப்போது அவர் நலமுடன் தான் காணப்பட்டார்.\nஇதன் பின்னர் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nசதாமுக்கு புற்றுநோய் தாக்குதல் இருப்பதை அமெரிக்கா 3 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்தது. ஆனால், இதை இராக் அதிபரும்அதிகாரிகளும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவுடன் உச்சகட்ட பதற்றம்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை.. சுஷ்மாவுடன் சந்திப்பு\nஅழிவை நோக்கி செல்லும் சவுதியின் ''கேஜிஎப்''.. முடிவை நெருங்கும் பிரம்மாண்ட எண்ணெய் சுரங்கம்\nகச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலர்.. பெட்ரோல், டீசல் விலையும் அடியோடு சரியுமா\nஅமெரிக்காவின் மிரட்டல்களை வரிசையாக புறக்கணிக்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன\nஅமெரிக்காவின் நெருக்கடி எதிரொலி: ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் மத்திய அரசு\nசவுதியின் பொற்காலத்திற்கு முடிவு.. கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடம் பிடிக்கும் அமெரிக்கா\nஇனி மாதம்தோறும் சிலிண்டர் விலை உயராது.. மத்திய அரசு அறிவிப்பு\nதவறு செய்த குழந்தையை எண்ணெய் சட்டியில் உட்கார வைத்த தாய்... ஹைதராபாத்தில் நடந்த கொடுமை\nதிடீர் பிரேக் போட்டதால் குப்புறக் கவிழந்த லாரி.. சாலையில் ஆறாக ஓடிய பாமாயில்.. நெல்லையில் பரபரப்பு\nதனியார் பாலில் சோப்பு ஆயில்... நடவடிக்கை எடுக்க அரசு முடிவு\nகாளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி அதிகாரிகள் சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/astrology/04/215571?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2019-06-26T15:10:38Z", "digest": "sha1:NSUDB2KMEPARFUSO7BCQE3NIKM6H6THP", "length": 9938, "nlines": 129, "source_domain": "www.manithan.com", "title": "இந்த ராசிக்காரர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்குமாம்...! - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nஇந்த ராசிக்காரர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்குமாம்...\nமனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.\nஅதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://www.manithan.com/entertainment/04/211026", "date_download": "2019-06-26T15:15:03Z", "digest": "sha1:BNRO2LKD6CWGSZUURNQM2NEMWU4VJUBC", "length": 11264, "nlines": 129, "source_domain": "www.manithan.com", "title": "சாப்பாட்டுக்கே வழி இல்லாத நாசரின் பெற்றோர்... 25 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த தம்பி! - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nமாட்டுச் சாணியை உண்டுபார்த்த முல்லாவும் இன்றைய மைத்திரியும்\nஇன்றைய பத்திரிகைப் பார்வையின் பிரதான தலைப்புச் செய்தி என்ன\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nபறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வாங்கனு தெரியுமா\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nசாப்பாட்டுக்கே வழி இல்லாத நாசரின் பெற்றோர்... 25 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த தம்பி\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர்,நடிகர் சங்கத்தலைவர் என்று பல முகங்களுடன் சமூகத்தில் கெத்தாக அலையும் நடிகர் நாசரின் இன்னொரு அதிர்ச்சிகரமான முகத்தைத் தோலுரித்துக்காட்டி ஒரு இரண்டு நிமிடக் காணொளி மூலம் பார்ப்பவர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அவரது உடன்பிறந்த சகோதரர் ஜவஹர்.\nஜவஹர் பேசியுள்ள காணொளியின் சாராம்சம் இதுதான்...கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே செங்கல்பட்டில் கடுமையான வறுமையில் வசிக்கும் பெற்றோர்களை நாசர் கண்டுகொள்வதோ உதவி செய்வதோ இல்லை. அவர்களது பேரன்களைக் கூட ஒன்றிரண்டு முறை மட்டுமே கண்ணில் காட்டியுள்ளார்.\nஇது குறித்து நடிகர் சங்கத்துக்கு புகார் கொடுக்க ஜவஹர் சென்றபோது அதை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. காரணம் நடிகர்களுக்கு மத்தியில் அவருக்கு உள்ள மிஸ்டர் நல்லவர் என்ற இமேஜ். மேடைகளில் நல்லது கெட்டது, குறிப்பாக சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துவது குறித்து இலக்கண இலக்கியத்தோடு உரையாற்றும் நாசர் தன்னைப் பெற்றெடுத்தவர்கள் விஷயத்தில் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருப்பதை ஜவஹர் சொல்லும்போது கேட்பவர்களின் நெஞ்சம் பதை பதைக்கிறது.\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\nகொழும்பில் சிக்கிய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் புலனாய்வு பிரிவு\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nஜனாதிபதி தனது இயலாமையை மூடி மறைக்க முயற்சி\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
{"url": "https://zeenews.india.com/tamil/sports/india-vs-west-indies-1st-t20-india-beat-west-indies-by-5-wickets-to-take-1-0-series-lead-313480", "date_download": "2019-06-26T14:56:25Z", "digest": "sha1:YESJGK6VREAP5XGUDYYVMJJISAVH5L5I", "length": 15364, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "INDvsWI 1st T20: 5 விக்கெட் வித்தியாசத்தி இந்தியா அபார வெற்றி.... | Sports News in Tamil", "raw_content": "\nINDvsWI 1st T20: 5 விக்கெட் வித்தியாசத்தி இந்தியா அபார வெற்றி....\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி....\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி....\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையான முதல் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு (04/11/18) நடைபெற்றது. இத்தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா, தலைமையில் இந்தியா களம் கண்டது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.\nஇதையடுத்து, எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ரோஹித், தவான், ரிஷப் பந்த் ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். பின்னர், மணீஷ் பாண்டே சற்று ஆறுதல் அளித்தாலும், அவரும் 19 ரன்களில், பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் கைகோர்த்த குர்ணால் பாண்டியா, அதிரடியாக ஆடியதால், ரன் வேகம் உயர்ந்தது.\n17.5 ஓவர்களில் இந்தியா, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.\nஇந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி, 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப், ஆட்ட நாயகனாக தேர்வானார். மேலும், இரண்டாவது டி-20 போட்டி, லக்னோவில் நாளை (06/11/18) நடைபெறவுள்ளது.\nt20 வரலாற்றில் முதன் முறையாக Dhoni இல்லாமல் ஒரு போட்டி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000353.82/wet/CC-MAIN-20190626134339-20190626160339-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}