{"url": "http://marudhang.blogspot.com/2010/07/blog-post_11.html", "date_download": "2018-08-17T23:26:28Z", "digest": "sha1:YUFIWFVZD7N2OAMYMPVJSL3LQ7MQPWU3", "length": 8429, "nlines": 36, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: ஸ்டாலின் வேண்டும்!", "raw_content": "\nநகரின் மையத்தில் அமைந்திருந்தது ஆறு மீட்டர் உயரமுள்ள ஸ்டாலினின் அந்த வெங்கலச் சிலை. ஜூன் 25ம் தேதி, வெள்ளிக்கிழமை. நடு இரவைத் தேர்ந்தெடுத்தார்கள். காவல் துறையினர் துப்பாக்கியுடன் வட்டமாக நின்றுகொண்டிருக்க, பணியாளர்கள் சிலையை கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டி, மெல்ல, மெல்ல சாய்க்க ஆரம்பித்தார்கள்.\nஅதற்குள் விஷயம் எப்படியோ கசிந்து உள்ளூர் தொலைக்காட்சியில் இருந்து நிருபர்கள் காமிராவுடன் வந்துவிட்டார்கள். படம் பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். பளிச்சென்று வெளிச்சம் பாய்ந்த மறுகணமே, காவலர்கள் நிருபர்கள் மீது பாய்ந்துவிட்டார்கள். காமிரா கைப்பற்றப்பட்டது. நிருபர்கள் தாக்கப்பட்டனர். அதற்குள் சிலை தரையில் படுக்கவைக்கப்பட்டிருந்தது. ஸ்டாலினின் முகம் நிலத்தை நோக்கி திரும்பியிருந்தது. திறந்திருந்த கண்கள் அவர் பிறந்த மண்ணை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தன. மீண்டும் நிமிர்த்தி, தயாராக இருந்த வண்டியில் வைத்து கொண்டு சென்றுவிட்டார்கள்.\nஜார்ஜியாவில் உள்ள கோரி என்னும் பகுதியின் மையத்தில் நின்றுகொண்டிருந்த சிலை அது. சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் பிறந்த இடம். கோரியில் எஞ்சியிருந்த ஸ்டாலினின் இறுதி சிலை இதுவே என்கிறார்கள். 1952ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்போது அந்த இடத்தில் போரில் (ஜார்ஜியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 2008ல் நடைபெற்ற யுத்தம்) இறந்த ஜார்ஜியர்களின் நினைவுச் சின்னத்தை அமைக்கவிருக்கிறார்கள்.\nசிலை அகற்றப்பட்டதை கைதட்டி ரசிக்கும் ஒரு கும்பலை மறு நாள் காலை தொலைக்காட்சியில் காட்டினார்கள். கண்களில் நீர் கோர்த்து உறைந்து நிற்கும் சிலரையும் காட்டினார்கள். அவர்களில் ஒருவர் பிபிசி நிருபரிடம் வெடித்தார். ‘எதற்காக இரவு நேரத்தில் சிலையை கைப்பற்றி எடுத்துச்செல்ல வேண்டும் இதைத் திருட்டு என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது இதைத் திருட்டு என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது’ மற்றொரு பெண் பதிலளித்தார். ‘ஒரு வேளை பகலில் வந்திருந்தால், அவர்கள் முயற்சி தோல்வியடைந்திருக்கும். இங்குள்ள மக்கள் இந்தச் சிலையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.’\nஸ்டாலினின் இந்தச் சிலையை அகற்றவேண்டும் என்று 1950களில் முதல் முதலில் குரல் கொடுத்தவர் அப்போதைய தலைவர் நிகிதா குருஷேவ். அதற்கான பணிகளையும் அவர் ஆரம்பித்து வைத்தார். ஆனால், பலன் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு, வெவ்வேறு அரசாங்கங்கள் வெவ்வேறு வழிகளில் முயன்றிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகள், தடங்கல்கள், போராட்டங்கள். எனவே, இந்த ரகசிய இரவு நேர ஏற்பாடு.\nஅவிழ்க்கப்பட்ட நெல்லிக்கனி மூட்டையாக சோவியத் யூனியன் சிதற ஆரம்பித்தபோதே அடையாள அழிப்புகளும் தொடங்கிவிட்டன. லெனின், ஸ்டாலின் இருவரது உருவச் சிலைகளும் பல இடங்களில் இருந்து அகற்றப்பட்டன. மேற்கத்திய அரசியலையும் கலாசாரத்தையும் தழுவிக்கொண்ட இன்றைய ரஷ்யாவுக்குக் கம்யூனிசத்தை நினைவூட்டும் எந்தவொரு அடையாளமும் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை ஆபத்தானவை. எனவே, கறுப்பு கொண்டு சிவப்பை அழிக்க ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில், ஸ்டாலினின் இந்தச் சிலையும் அகற்றப்பட்டுள்ளது.\n(கல்கியில் இந்த வாரம் வெளிவந்த என் கட்டுரை)\nமீடியாவில் இது பற்றிய எந்த செய்தியும் இல்லையே ஒரு சிலையை அகற்றுவதன் வாயிலாக ஸ்டாலினின் பங்களிப்பை வீழ்த்த முடியுமா\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://reachandread.forumta.net/t167-8-8000", "date_download": "2018-08-17T22:47:56Z", "digest": "sha1:UK2L26OT7DEM2YSWE2VOWCQRNGWQR6KB", "length": 6557, "nlines": 64, "source_domain": "reachandread.forumta.net", "title": "8ம் தேதி, 8,000 பேர் மெரீனா பீச்சுக்கு போறாங்க - எதுக்கு தெரியுமா?!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » 8ம் தேதி, 8,000 பேர் மெரீனா பீச்சுக்கு போறாங்க - எதுக்கு தெரியுமா\n8ம் தேதி, 8,000 பேர் மெரீனா பீச்சுக்கு போறாங்க - எதுக்கு தெரியுமா\nசென்னை: சென்னை மெரீனா கடற்கரையை வரும் 8 ஆம் தேதி அன்று 8 ஆயிரம் இளைஞர்கள்,மாணவ, மாணவியர்கள் இணைந்து சுத்தப்படுத்த இருக்கிறார்கள்.\nபல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணந்து 5 ஆவது முறையாக இந்த கடற்பகுதியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த பணி நடைபெற்று வருகின்றது.\nசென்னை கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் இப்பணியில் சென்னை டிரெக்கிங் கிளப், பூமி போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஈடுபட உள்ளனர்.\nஇந்த சுத்தப்படுத்தும் பணியினை சென்னை மேயர் சைதை துரைசாமி துவங்கி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.\nமெரீனா கடற்கரையில் இருந்து அக்கரை என்ற இடம் வரை, 20 கி.மீ. தூரம் வரை இந்த பணி நடைபெறுகிறது. 8 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.\nஇந்த பணியின்போது 50 டன் குப்பை சேகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் 85% சதவீதம் குப்பைகளையாவது அகற்ற வேண்டும்.\nஇந்த முகாமில் ஒரு பகுதியாக சென்னை டைவ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் டெம்பிள் அட்வென்ச்சர்- புதுச்சேரி குழுவினர் இணைந்து பெசன்ட் நகர் பகுதியில், கடலில் மூழ்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற உள்ளனர்.கடல்நீர் மாசுபாட்டை தடுக்கும் விழிப்புணர்விற்காக இதில் ஈடுபட உள்ளனர்.\nகடற்கரையை தவிர மாடம்பாக்கம், தாழம்பூர், நாராயணபுரம், கீழ்க்கட்டளை உட்பட 4 ஏரிகளிலும் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது.இப்பணியினை இந்திய சுற்றுச்சூழல் சமூக நிறுவனம் மேற்பார்வை இட உள்ளது.\nகல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், வேலை செய்யும் இளைஞர்கள் உட்பட பலர் இதில் பங்கேற்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் www.bhumi.org.in என்ற இணையதள முகவரியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » 8ம் தேதி, 8,000 பேர் மெரீனா பீச்சுக்கு போறாங்க - எதுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999968871/cored-wars_online-game.html", "date_download": "2018-08-17T22:25:39Z", "digest": "sha1:PWPE3NVBVVEKBRGGL7B6WJP2JHH3NHKV", "length": 9547, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு போர் கோர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட போர் கோர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் போர் கோர்\n குழு தோண்டி மேலும் திறம்பட வளங்களை பயன்படுத்தி எப்படி முடிவு. . விளையாட்டு விளையாட போர் கோர் ஆன்லைன்.\nவிளையாட்டு போர் கோர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு போர் கோர் சேர்க்கப்பட்டது: 01.11.2011\nவிளையாட்டு அளவு: 6.68 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு போர் கோர் போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nவிளையாட்டு போர் கோர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் கோர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு போர் கோர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு போர் கோர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு போர் கோர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.okynews.com/2013/08/2.html", "date_download": "2018-08-17T22:40:17Z", "digest": "sha1:UGP7E3OWTOZSOHDMI6CAVEBEJGSVI5TH", "length": 15651, "nlines": 175, "source_domain": "tamil.okynews.com", "title": "பெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா? - Tamil News பெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா? - Tamil News", "raw_content": "\nHome » Strange » பெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா\nபெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா\nஅதிசயங்கள் ஆயிரம் நடக்கிறது அவைகள் எங்களுடைய கற்பனைக்கு எட்டாதது. வயிற்றில் பாம்பை சுமந்த பெண். \"டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்\" அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப்பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம்\nஎடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.\nநியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள். அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான். உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப்பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.\nஅப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது. ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.\nஇதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது\nபெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியு...\nஇளவரசி டயானா படுகொலை செய்யப்பட்டரா \nஐபோன் பாவனையாளருக்கான பாவனை தொடர்பான எச்சரிக்கை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_19.html", "date_download": "2018-08-17T23:08:04Z", "digest": "sha1:IDHR6G7C362HWGEJRP2AS2LQPFPVIC4Y", "length": 7884, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அகற்றிவிடல் அவசியமே ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் அகற்றிவிடல் அவசியமே ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nஅசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே\nஅசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே\nபிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்\nகொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை \nபடித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்\nநினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்\nதமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்\nநிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் \nபடித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்\nஅடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்\nஎடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே\nஎடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ \nகாமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்\nகாணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்\nமாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ\nகாமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை \nகணநேரம் காணுகின்ற காமசுகம் தனைநினைப்பார்\nகாலமெல்லாம் தவித்தழுவார் காயமதை நினைப்பதில்லை\nஉயிர்போகும் அவர்நிலையை ஒருகணமும் பொருட்படுத்தா\nஉணர்வில்லா அசுரர்களாய் உலவுகிறார் உலகினிலே \nஅறியாத பிஞ்சுகளை அழித்துநிற்கும் அசுரர்களை\nஅனைவருமே சேர்ந்துநின்று அகற்றிவிடல் அவசியமே\nநெறியிழந்து நிற்பாரை நீழ்புவியில் வாழவிட்டால்\nஅளவிறந்த ஆவேசம் கொண்டுநிற்கும் அசுரகுணம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://patrikai.com/need-exemption-tamilnadu-government-decide-both-sides-not-to-harm-health-minister-vijayabaskar/", "date_download": "2018-08-17T22:37:26Z", "digest": "sha1:K2MERMDU27KAMXWLESRKJLVP75O2YALI", "length": 13866, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "நீட் விலக்கு: இருதரப்பும் பாதிக்காத வகையில் முடிவு! விஜயபாஸ்கர் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»நீட் விலக்கு: இருதரப்பும் பாதிக்காத வகையில் முடிவு\nநீட் விலக்கு: இருதரப்பும் பாதிக்காத வகையில் முடிவு\nநீட் விலக்கு அவசர சட்டம் காரணமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் நீட் விலக்கு அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் 3 துறைகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு உடனே நடத்த வலியுறுத்தியும் சிபிஎஸ்சி மாணவர்கள் சார்பில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் வரும் 22ந்தேதி வரை மருத்துவ கலந்தாய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.\nஇந்நிலையில், டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் இருதரப்பும் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. த\nமிழக சட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\n‘நீட்’ விலக்கு: நாளையே சட்டமுன்வடிவு\n‘நீட் விலக்கு’ சட்டத்தை எதிர்ப்போம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2-3/", "date_download": "2018-08-17T22:38:49Z", "digest": "sha1:NGV5742JZHR5CEMFE3T5NTBM22DJ5FR6", "length": 8894, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்றும் பணிகள் ஆரம்பம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇன்று (வெள்ளிக்கிழமை) நண்பகலுக்குள் கடைகள் அப்புறப்படுத்தப்படவேண்டும் என்ற மதுரை நீதிமன்றத்தின் கட்டளைக்கு இணங்க இந்தப் பணிகள் இடம்பெற்று வருகிறன.\nமுதற்கட்டமாக 22கடைகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், ஏனைய கடை உரிமையாளர்கள் தமக்கு மாற்றுவழி தந்தால் மாத்திரமே கடைகளை அகற்றுவோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் ஏனைய கடைகளையும் அகற்ற மாற்றுவழிகள் செய்துகொடுக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஏனைய கடைகளும் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஆலயத்தின் வடக்குவாசல் பகுதி தீக்கிரைக்கு உள்ளானமை அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nஆலயத்தைச் சுற்றியுள்ள வியாபாரக்கடைகளே மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தீ ஏற்படக்காரணமாகின.\nஇதனால் குறித்த கடைகள் தொடர்ந்தும் இருப்பது ஆலயத்திற்கும், பக்தர்களுக்கும் இன்னலைத்தான் கொடுக்கின்றது என்ற பெரும்பான்மை கருத்துக் கொண்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் கடைகளை அகற்றுமாறு நேற்று உத்தரவிட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரபல இயக்குனருடன் இணையும் அதர்வா: உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியீடு\nநடிகர் அதர்வா நடிப்பில், ‘இமைக்க நொடிகள்’, ‘பூமராங்’ உள்ளிட்ட படங்கள் திரைக்\nமதுரையில் ஒரே இடத்தில் 80 மயில்கள் இறப்பு \nமதுரையருகே ஒரே இடத்தில் 80 க்கு மேற்பட்ட மயில்கள் மற்றும் காடைகள் இறந்து கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி\nநிர்மலாதேவி விவகாரம்: விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்ய உத்தரவு\nமாணவர்களை தவறாக வழிநடத்திய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கை,\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் தொடர்பில் அதிகாரிகள் ஆய்வு\nமதுரை மாவட்டம் தோப்பூர் அருகே, எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை கட்டுமானப்பிரிவு அதிகாரிகள் ஆய்வ\nஉலக வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சம்பத்\nஉலக வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளா\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/74_159804/20180609214338.html", "date_download": "2018-08-17T23:15:20Z", "digest": "sha1:TDVYEUHI4RXHVW2OZXSWOXPWYZOTRD74", "length": 6787, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க சீரியல்!", "raw_content": "இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க சீரியல்\nசனி 18, ஆகஸ்ட் 2018\n» சினிமா » செய்திகள்\nஇந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க சீரியல்\nபிரியங்கா சோப்ரா நடித்து வரும் ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க சீரியல் தயாரிப்பு நிறுவனம் இந்தியர்களின் மன்னிப்பு கேட்டுள்ளது.\nபிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலில் அவர் சி.ஐ.ஏ அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல் எபிசோட் ஒன்றில், இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாகிஸ்தானியர் போல நடித்து நியூயார்க் நகரில் அணு குண்டை வெடிக்க சதி செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.\nஇந்த காட்சிக்கு இந்தியர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் சீரியலுக்கு எதிராக பதிவிட்டு வந்தார்கள். எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வந்த நிலையில், சீரியல் தயாரிப்பு நிறுவனம் இந்தியர்களின் மன்னிப்பு கேட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசெக்கசிவந்தவானம் படத்தின் கதாபாத்திர பெயர்கள் வெளியீடு\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை: பிரகாஷ்ராஜ்\nஆருஷி கொலை வழக்கு கதையில் ராய் லட்சுமி - அஞ்சலி\nகலைஞர் கையால் பரிசு வாங்குவேன்: சபதத்தை நிறைவேற்றிய ரஜினி\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமெரினாவில் கருணாநிதி சமாதியில் திரிஷா அஞ்சலி\nகருணாநிதி இறந்த துக்கத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் : இளையராஜா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-08-17T22:36:16Z", "digest": "sha1:NWSCNH73UB3VNNXQHJMH6FGU2KKUO7NV", "length": 9885, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\n இல்லையா இந்தக் கேள்விக்கு இருக்கு ஆனால் இல்லை என்ற பதிலையே இதுவரையிலும் விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றனர்.\nஎன்றாலும் மறைமுகமாக வேற்றுக்கிரகவாசிகள் இருப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டே இருக்கின்றார்கள் என்பதே பலரது வாதம். காரணம் இப்போதைக்கு எந்த ஆய்வுக்கும் கொட்டப்படாத பணத்தினை வேற்றுக்கிரக தேடலுக்காக விஞ்ஞானிகள் முன்வைத்து வருகின்றனர்.\nஇல்லாத ஒன்றை இத்தனை சிரமப்பட்டு பணத்தினை வாரி இறைக்கும் அளவிற்கு விஞ்ஞானிகள் ஒன்றும் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் அல்ல என்பது இதனை வலுப்படுத்திவிடும்.\nஇப்போதைக்கு வேற்றுக்கிரகத்தினையும், விண்வெளி பற்றியும் தேடிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய தொலைநோக்கி அமெரிக்கா வசமே உள்ளது. செட்டி ( seti telescope அல்லது Allen Telescope Array) எனப்படும் இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியை கண்காணிப்பது மட்டுமல்லாமல் அலைவரிசைகளும் துல்லியமாக கணக்கிடப்படும்.\nசுமார் 3235 அடிகள் அளவு பெரிய இந்த தொலைநோக்கி விண்வெளியில் பயணிக்கும் அலைக்கதிர்களை ஆராய்ந்து அதில் வேற்றுக்கிரக சமிஞ்சைகள் இருக்கின்றதா எனவும் ஆய்வு செய்து வருகின்றது.\nஇந்த சக்திமிக்க தொலைநோக்கிக்கு போட்டியாக இன்னுமோர் மாபெரும் தொலைகாட்டியை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதோடு. அதற்கான அனுமதியினையும் பெற்றுவிட்டது.\nqitai 11om radio telescope (QTT) இந்த தொலைகாட்டி நவீன தொழில்நுட்பத்தோடு கூடியது அதுமட்டுமல்லாது விண்ணில் 75 சதவீதத்தை ஒரே தடவையில் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது.\nஇதன்மூலம் வேற்றுக்கிரக தேடலில் சீனா ஈடுபடவுள்ளது. இந்த அளவுக்கதிகமான ஆய்வும் தேடலுமே வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை உறுதிசெய்துவிடுகின்றன. எனினும் இதனை ஏன் பெறும்பாலான மனிதர்கள் மட்டும் நம்ப மறுக்கின்றனர் என்பது இன்றளவும் கேள்விக்குறியே.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்காவைத் தாக்க சீனா தயாராகின்றதா\nஅமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் நேச நாடுகளை பசுபிக் சமுத்திரத்தின் ஊடாக தாக்குவதற்கு சீனா தனது இராணு\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\nசீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீடானது ஆண்டுதோறும் 5.5 சதவீதத்தினால் அதிகரித்து வருவதாக சீன பொருளாதார\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\n2018இற்கான சர்வதேச மனித மூளை-கணனியுடனான தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சியொன்று சீன தலைநகர் பீஜிங்கில் நடைப\n – கென்டகி மாநில ஆளுனர்\nவர்த்தகம், பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் வகையில் மாநில அளவில் சீனாவுடனான இணைந்த வர்த்த நடவடிக்கைகளை\nசுதந்திர தின நிகழ்வில் இந்திய- சீன இராணுவ வீரர்கள்\nசிக்கிமில்- நாதுலா எல்லை பகுதியில் இந்திய இராணுவ வீரர்களும் சீன இராணுவ வீரர்களும் ஒன்றிணைந்து இந்திய\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/9538/2018/02/international-news.html", "date_download": "2018-08-17T23:35:14Z", "digest": "sha1:DLOTDUV7DGYHIIWUORX4VNJI2WGYJ5JZ", "length": 11713, "nlines": 145, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இந்தியக் கோழிகளுக்கு சவுதியில் தடா ..!! - International News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்தியக் கோழிகளுக்கு சவுதியில் தடா ..\nInternational news - இந்தியக் கோழிகளுக்கு சவுதியில் தடா ..\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக கால்நடை சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.\nஇதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. இந்த அறிவிப்பை சவுதி அரேபிய கால்நடை இடர் மதிப்பீட்டுத்துறை அமைச்சக இயக்குனர் சனாத் அல்-ஹார்பி வெளியிட்டு உள்ளார்.\nசவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் கோழி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.\nமின்னலே திரைப்பட ஹீரோயினா இது\nவிஜய்,சூர்யாவைப் பற்றி கருத்து வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி....\nரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட தளபதி - \"சர்கார்\" இல் சம்பவம்..\nபிக் பாஸ் வீட்டில் பயங்கர சண்டை ; முகத்திரை கிழியும் பிரபலங்கள்\nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\nமருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1146632.html", "date_download": "2018-08-17T22:57:51Z", "digest": "sha1:55PYDU47RMZXOYDMLXRXSJRJCZKOQMCP", "length": 13760, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "“புளொட்” செயலதிபரின் கொலையாளியென கருதப்படும் ராபின், சுவிஸில் கொலை செய்யப்பட்ட வழக்கு..! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\n“புளொட்” செயலதிபரின் கொலையாளியென கருதப்படும் ராபின், சுவிஸில் கொலை செய்யப்பட்ட வழக்கு..\n“புளொட்” செயலதிபரின் கொலையாளியென கருதப்படும் ராபின், சுவிஸில் கொலை செய்யப்பட்ட வழக்கு..\n“புளொட்” செயலதிபரின் கொலையாளியென கருதப்படும் ராபின், சுவிஸில் கொலை செய்யப்பட்ட வழக்கு..\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் முகுந்தன் எனும் உமா மகேஸ்வரன் 16.07.1989 இல் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கொலையாளியெனக் கருதப்பட்ட அச்சுவேலியைச் சேர்ந்த ராபின் எனும் உதயகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சுமார் இருபத்திநான்கு வருடத்துக்கு முன்னர், அதாவது 28.11.1994 இல் சுவிஸர்லாந்து நாட்டில் வைத்து “இனந்தெரியாத நபர்களினால்” கொலை செய்யப்பட்டது தெரிந்ததே.\nஇக்கொலை குற்றச்சாட்டில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம்சாட்டி, சுவிஸ் பொலிஸாரினால் அப்போதைய “புளொட்” சர்வதேச பொறுப்பாளரான சுவிஸ்ரஞ்சன் எனும் சொக்கலிங்கம் ரஞ்சன் டிசம்பர் 1994 முதல் கைது செய்யப்பட்டு, சுமார் மூன்று வருடங்களாக, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு,\nவிசாரணையின் பின்னர் (சுமார் மூன்று வருடங்களின் பின்னர்) 30.04.1997 அன்று, “குற்றச்சாட்டுக்கான எந்தவித ஆதாரங்களோ, தடயங்களோ இல்லையெனக் கூறி” சுவிஸ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது…\nஇதேவேளை “உண்மை தெரிந்தும், தெரிவிக்க மறுப்பதாகக் கூறி”, மற்றும் மூன்று புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர்களும், சுமார் மூன்று முதல் ஆறு மாதம் வரை தடுத்து வைக்கப்பட்டு இருந்து, “குற்றச்சாட்டுக்கான எந்தவித ஆதாரங்களோ, தடயங்களோ இல்லையெனக் கூறி” விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதகவல் & வீடியோ உதவி… -புளொட்.\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985) காட்சிகள்.. -001 (படங்கள் & வீடியோ வடிவில்)\nதிருச்சி அருகே இளம்பெண்ணை கொன்று 20 பவுன் நகை கொள்ளை..\nஉலகின் முதல் கருப்பு சுறா பிரித்தானியாவில் கண்டுபிடிப்பு..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/latest-news/5959-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-17T22:34:01Z", "digest": "sha1:I2IWLNNZCP4SAPZTQFQOV6OK32SNG3YW", "length": 21105, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது : கருணாநிதி வலியுறுத்தல் - தினசரி", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nவாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை\nமெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா குதிரை வண்டியா\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு சற்றுமுன் கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது : கருணாநிதி வலியுறுத்தல்\nகல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது : கருணாநிதி வலியுறுத்தல்\nகல்வியை கடை சரக்காக்கும் உலக வர்த்தக அமைப்பு உடன்பாடு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nகருணாநிதி வெளியிட்டுள் அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.\nஉலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளை சோந்த வர்த்தக அமைச்சர்களின் மாநாடு கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சேவைத்துறையில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில் இந்தியா தற்போது கையெழுத்திடும் அபாயம் உள்ளது. அந்த உடன்படிக்கை ஒப்பந்த வடிவம் பெறுமானால் இனிமேல் உயர்கல்வி வணிகமயமாகிவிடும்.\nஇந்திய உயர்கல்வியில் வெளிநாடுகளின் மேலாதிக்கம் அதிகரிக்கும் என்று கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய கல்வி துறையில் இப்போதே தனியாரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உயர்கல்வியில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையும் அனுமதித்தால் கல்வி சேவை என்பது மாறி சந்தை பொருட்களில் ஒன்றாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கல்வி, வணிகம் செய்ய வரும் போது இட ஒதுக்கீடு, கல்வி உதவி தொகை, இந்திய மொழிகள் ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்படும் என்று கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். கல்வியை கடை சரக்காக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது என்று பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்த போதிலும் மத்திய பாஜக அரசு அதனை காதில் போட்டுக்கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும். மத்திய பாஜக அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nமுந்தைய செய்திஉயர் கல்வியை வணிக மயமாக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் அபாயம்\nஅடுத்த செய்திவிஜயகாந்துடன் தமிழக பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: வைகோ காரணமா\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன் 17/08/2018 11:33 PM\nSHOCKING VIDEO: கேரளத்தில் கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள் 17/08/2018 10:38 PM\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம் 17/08/2018 7:13 PM\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு 17/08/2018 6:12 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/1000005080/engage-and-destroy_online-game.html", "date_download": "2018-08-17T22:24:02Z", "digest": "sha1:RX3VQWO6OGCJH23YA2HZKXWCJQWSKQPF", "length": 11640, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு\nவிளையாட்டு விளையாட ஈடுபட மற்றும் அழித்துவிடு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஈடுபட மற்றும் அழித்துவிடு\nநீங்கள் சாகச மற்றும் உற்சாகத்தை ஒரு அற்புதமான உலகில் உங்களை மூழ்கடித்து அங்கு, ஒரு அற்புதமான மற்றும் திரில்லிங்கான நிகழ்ந்த பங்கேற்க. நீங்கள் ஒரு உண்மையான கடல் கேப்டன் கப்பல், ஒரு பெரிய நீல கடல் நீரை வென்ற உணர முடியும். இந்த விளையாட்டில் நீங்கள் உங்கள் கப்பல் இணையாக செல்லும் எந்த கப்பல் பீரங்கி, உடன் மூழ்க வேண்டும். முக்கிய பணி துல்லியமாக இலக்கு மற்றும் இலக்கு நேராக படம்.. விளையாட்டு விளையாட ஈடுபட மற்றும் அழித்துவிடு ஆன்லைன்.\nவிளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு சேர்க்கப்பட்டது: 18.10.2013\nவிளையாட்டு அளவு: 0.73 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.42 அவுட் 5 (31 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு போன்ற விளையாட்டுகள்\nபாய்மர கப்பல் கோட்டையில் தாக்குதல்\nஆடு மற்றும் அமைக்க: வேற்று அலைகளை பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்\nசாதாரணமான வாய் நிஞ்ஜா: பைரேட் உள்ளிடவும்\nவிளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஈடுபட மற்றும் அழித்துவிடு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபாய்மர கப்பல் கோட்டையில் தாக்குதல்\nஆடு மற்றும் அமைக்க: வேற்று அலைகளை பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்\nசாதாரணமான வாய் நிஞ்ஜா: பைரேட் உள்ளிடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999968581/develops-memory_online-game.html", "date_download": "2018-08-17T22:26:25Z", "digest": "sha1:IZ33WOXLT7QKX427CXHP5CAQVCTGU5AS", "length": 10493, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி\nவிளையாட்டு விளையாட நாம் நினைவு அபிவிருத்தி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நாம் நினைவு அபிவிருத்தி\nஇந்த ஃபிளாஷ் விளையாட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் காட்சி நினைவக பயிற்சிகள் இருக்கிறது. விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே அவர்கள் மூடப்படும் நீங்கள் ஒரே நினைவகம் ஜோடிகள் கண்டுபிடிக்க வேண்டும் அதன் பிறகு, படங்கள் இடம் காண்பிக்கப்படும். . விளையாட்டு விளையாட நாம் நினைவு அபிவிருத்தி ஆன்லைன்.\nவிளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி சேர்க்கப்பட்டது: 10.10.2011\nவிளையாட்டு அளவு: 0.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.01 அவுட் 5 (939 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி போன்ற விளையாட்டுகள்\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nடாம் பூனை 2 பேசி\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nவிளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நாம் நினைவு அபிவிருத்தி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nடாம் பூனை 2 பேசி\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nஅமேசிங் வேகமாக கார் நிறம்:\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.okynews.com/2013/03/blog-post_8.html", "date_download": "2018-08-17T22:39:17Z", "digest": "sha1:5JET5CI24OXN5WMQOPKRNDRE5ZPEKYRE", "length": 13154, "nlines": 201, "source_domain": "tamil.okynews.com", "title": "காணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு - Tamil News காணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு - Tamil News", "raw_content": "\nHome » Local News » காணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nகாணாமல் போதல்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் செய்யப்படவில்லை என அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் அறிவித்துள்ளது. நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 60 வீதமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.\nகடந்த வருடத்தில் பாதுகாப்பு அமைச்சினால், காணாமல் போனவர்கள் தொடர்பில் தரவுத் தளமொன்று உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.கடத்தல் அல்லது காhணமல் போதல் தொடர்பான 264 முறைப்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 80 வீதமான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.\nகடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்...\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படு...\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilangadi.forumotion.com/t42-topic", "date_download": "2018-08-17T23:07:03Z", "digest": "sha1:AYKRFYTXCMIS5ABLEJOCSMJ3BNNPFO2E", "length": 15623, "nlines": 79, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "மனிதருள் மாணிக்கங்கள்", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: மனதிலிருந்து ஒரு செய்தி :: பட்டிமன்றம் Share |\nஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க மனிதருள் மாணிக்கங்கள் தோன்றினார்கள். மத தத்துவங்களால் மனித மனங்களை புனிதப்படுத்தினார்கள் மகான்கள். மனித சமுதாய தேவைகளை கண்டுபிடிப்புகளின் வழியே நிறைவேற்றி முன்னேற்றம் ஏற்பட செய்தனர் விஞ்ஞானிகள். அரசியல் தொண்டறம் புரிந்து மாற்றங்களை உருவாக்கினார்கள் சீர்திருத்தவாதிகள். இவர்களின் போதனைகள், கண்டுபிடிப்புகள், கொள்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊடுருவி நிற்பதால் அவர்கள் என்றும் மறக்கக்கூடாதவர்களாகிறார்கள்.\nமகான்கள், விஞ்ஞானிகள், சீர்திருத்தவாதிகள் போன்றவர்களால்தான் மனித சமுதாயம் இன்றைய நவ நாகரீகத்துக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்துவிடுவதுண்டு. ஆன்மிகம்தான் சிறந்தது என்றும், அறிவியல் இல்லாவிட்டால் மாற்றங்களே வந்திருக்காது என்றும் முடிவில்லாத விவாதம் நடத்திக் கொண்டே போகலாம். ஆராயத் தொடங்கினால் ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் குறைத்து மதிப்பிட முடியாத வகையில் இருக்கிறது. எனவே யார் சிறந்தவர்கள் என்பதைவிட இவர்கள் அனைவரும் சிறப்புக்குரியவர்கள், வணங்கப்படத் தக்கவர்கள் என்பதே சரி.\nபுவிஈர்ப்பு விசையை கண்டறிந்து மக்களுக்கு அறிவியலின்பால் ஈர்ப்பு உண்டாகச் செய்தவர் ஐசக் நியூட்டன் (1642 – 1727). இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு அஞ்சி பல கண்டுபிடிப்புகளை வெளியிட தயங்கியவர். பலதுறை நுண்ணறிவு கொண்டவர். இவரது ஒளி இயல்பு ஆராய்ச்சி(1668)யில் உருவாக்கிய `பிரதிபலிப்பு தொலைநோக்கி’யின் நவீன வடிவங்களே இன்றைய வானியல் தொலைநோக்கிகள். ஒளி விதிகள், பொருள் இயக்க விதிகள் (ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு), கணிதவியலில் `இன்டகரல் கால்குலஸ்’ போன்றவை ஐசக் நியூட்டனை என்றும் அழியாப்புகழ் மிக்கவராக நிலைக்கச் செய்யும் கண்டுபிடிப்புகளாகும்.\nபவுத்த சமயத்தை நிறுவிய புத்தர் (கி.மு.563 – 483), மகான்களில் ஒருவர். நேபாளத்தில் அரச வம்சத்தில் சித்தார்த்தராக பிறந்தவர் திருமணத்திற்குப்பின் துறவுக்கு வந்தார். தியானத்தில் ஆழ்ந்தபோது வாழ்வியல் பிரச்சினைகளுக்கு ஆசையே காரணம் என அறிந்தார். ஆசையை வெல்ல 4 போதனைகளை உருவாக்கினார். வாழ்க்கை துயருடையது, துயருக்கு தன்னலமும், ஆசையும் காரணம். ஆசை அடங்கிய நிலை நிர்வாணம், அதை அடைய 8 வழிகள் உண்டு என்பதே அவரது போதனை. நற்காட்சி, நல்லெண்ணம், நல்வார்த்தை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்லன கடைபிடித்தல், நல்லோர் உறவு ஆகியவை அந்த 8 வழிகள்.\nஜெர்மனியின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879 – 1955) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. சார்பியல் கொள்கையை அளித்தவர். அவரது ணி=னீநீ2 கோட்பாடு விஞ்ஞான உலகை புரட்டிப்போட்டது. அணுஆற்றல் உள்ளிட்ட பல முக்கிய பயன்பாடுகளுக்கு இக்கொள்கை உதவுகிறது. அவரது பொதுச்சார்புக் கொள்கை தனிப்புகழ் பெற்றது. ஒளிமின் விளைவை விளக்கி கூறியதற்காக நோபல் பரிசு வென்றவர். ஹிட்லரின் எதிர்ப்பால் யூதரான இவர் ஜெர்மனை துறந்து அமெரிக்க பிரஜையானார். மனிதர்களில் அதிகப்படியாக மூளையை உபயோகித்தவர் என்று பாராட்டப்படுபவர். இவரது மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஅறிவியல் சார்ந்த சமதர்ம கொள்கை (மார்க்சியம்) வகுத்தவர் காரல்மார்க்ஸ். 1818-ல் ஜெர்மனியில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்த இவர் `வறுமையின் வரலாறு’ என்னும் முதல்நூலை வெளியிட்டு புகழ் பெற்றார். பொருளாதார மேதையான இவர் 1867-ல் டாஸ்காபிட்டல் (மூலதனம்) என்னும் நூலை வெளியிட்டார். இதன் அடுத்த 2 பாகங்களை தொகுத்து வந்தபோதே 1883-ல் உயிரிழந்தார். இந்நூல்கள் பொதுவுடைமை சித்தாந்த வேதமாக புகழப்படுகிறது. பணி முடியாத மார்க்சின் நூல்களை தொகுத்து பதிப்பித்தவர் அவரது நண்பரான அரசியல் அறிஞர் எங்கெல்ஸ். இவரது பங்களிப்பு மூலதனத்தில் முக்கியமானது என்றாலும் மார்க்சின் பங்கு பிரதானமானது.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த வர்ஜீனியாவில் பிறந்தவர் வாஷிங்டன் (1732-1799). போர்வீரரான இவர் 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். பின் பதவி விலகி வணிகரானார். 1775-ல் இரண்டாவது அமெரிக்க புரட்சி ராணுவத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். போரில் வெற்றி பெற்று சுதந்திர அமெரிக்காவை மலரச் செய்தார். அப்பெருமையால் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று 2 முறை அப்பதவியில் நீடித்தார். அவரது ராணுவ அனுபவம், நிர்வாகத்திறமை அவரை அப்பதவிக்கு தகுதியுடையவராக்கியது. அவரது பல திட்டங்கள் அமெரிக்காவில் மக்களாட்சி நிலைபெறவும், வல்லரசாக திகழவும் அடிகோலி நிற்கின்றன.\nஇன்றைய நவீன உலகில் எந்த தொழில்நுட்பமும் மின்சாரமின்றி இயங்காது. அந்த அற்புத மின்சாரத்தை காந்தசக்தி மூலம் உருவாக்கும் வழியை கண்டுபிடித்து தந்தவர்தான் மைக்கேல் பாரடே. இங்கிலாந்தில் 1791-ல் பிறந்தவர். 1821-ல் மின்மோட்டாரின் அடிப்படை இயக்கத்தை அறிந்து விளக்கியதால் மோட்டார்களின் தந்தையாக திகழ்ந்தார். சில வேதியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி உள்ளார். மின்பகுப்பாய்வு இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது. காந்தப்புல ஆய்வால் நவீனயுகத்தின் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ள பாரடேவின் புகழ் பாருள்ளவரை நிலைக்கும்.\nTamil Angadi :: மனதிலிருந்து ஒரு செய்தி :: பட்டிமன்றம்\nTamil Angadi :: மனதிலிருந்து ஒரு செய்தி :: பட்டிமன்றம்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sivakasikaran.com/2012/09/blog-post_30.html", "date_download": "2018-08-17T23:07:52Z", "digest": "sha1:GL4QR2DGOWXRMOPPEDSIKWOJJBJFBCD5", "length": 41156, "nlines": 298, "source_domain": "www.sivakasikaran.com", "title": "என் தாத்தா சிவாஜி... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\n”ஒரு ஜீப்ல ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் காட்டுக்கு வேட்டையாட போனாங்களாம்” - என்னை தூங்க வைக்க கதை சொல்ல ஆரம்பித்தார் எங்கள் அப்பா..\n“ம்.. சரி” - இது நானு..\n“ரெண்டு பேரும் ட்ரெஸ்ல பாம், கத்தி, துப்பாக்கி எல்லாம் மாட்டி வச்சிருந்தாங்க”\n” - என்னை செக் பண்ண கேள்வி கேட்கிறார் என நினைப்பேன். பின்பு தான் புரிந்தது அவர் நேற்று சொன்னதை மறந்து கேட்கிறார் என்று..\n“நேத்து ரஜினி மாமா ஓட்டுனாங்க”\n“அப்படின்னா இன்னைக்கு சிவாஜி தாத்தா தான் வண்டி ஓட்டுறாங்க. காட்டுக்குள்ள வண்டி வேமா போகுது”\n“வேமா போனா வண்டி வுழுந்துறாதாப்பா\n“ரஜினி மாமா போற வண்டி விழுமா எதுத்தாப்லா யாராவது வந்தா தான் பயந்து ஓடிருவாங்க”\n“சரி பெறகு என்ன ஆச்சி\n“ப்பா... எப்பா...” - அப்பா கண் அயர்ந்திருப்பார்.. “எப்பா எந்திரிங்கப்பா.. அடுத்த என்னப்பா ஆச்சி” - தட்டி எழுப்ப ஆரம்பித்துவிடுவேன் அவரை..\nமெதுவாக கண் விழித்து, எனக்கு கதை சொல்வதை உணர்ந்து, “அப்போ எதுத்தாப்ல ஒரு யான வந்துச்சி”\n“ம் ஆமா பெரிய காது, நீளமா தந்தம் எல்லாம் இருக்கும்.. அப்படியே வேமா காருகிட்ட வருது”\n”காருகிட்ட அப்டியே வந்து நிக்குது” - இதை சொல்வதற்குள் மீண்டும் ஒரு முறை கண் சொக்கி தூங்க ஆரம்பித்திருப்பார் என் அப்பா.. நான் வழக்கம் போல ‘எப்பா எப்பா’ என்று கத்திக்கொண்டிருப்பேன்..\n”இப்ப கத்தாம தூங்க போறியா நாளைக்கு மிஸ்கிட்ட சொல்லவா” - அம்மாவின் குரல் வரும் போது என் குரல் நின்றுபோகும்.\nஎன் அப்பா கதையை முழுதாக சொல்லாமல் முடித்திருந்தாலும் எனக்கு என்ன நடக்கும் என தெரியும். அந்த யானையை ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் தூக்கி போட்டு பந்தாடியிருப்பார்கள். எத்தனை தடவை கேட்டிருப்பேன் இந்த கதையை ஆனால் தினமும் புதிதாக கேட்பது போல் என் அப்பா அவ்வளவு அழகாக சொல்லுவார்.\nநான் அப்போது பார்த்திருந்த ஒரே சிவாஜி படம் வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டும் தான். ஒரு சில ரஜினி படங்கள் பார்த்திருந்தேன். எங்கள் சொந்தக்காரர்கள் தான் வெளியூரில் தங்கி சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே பல காலம் நினைத்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி அப்பாவிடம் “எப்பா ரஜினி மாமா எப்ப நம்ம வீட்டுக்கு வருவாங்க” என்று அம்மா இல்லாத சமயம் கேட்டதுண்டு. அம்மா இருக்கும் போது கேட்டால் எனக்கு நல்லா வசவு விழும் அதான். அப்பாவும் “அவங்க வேலயெல்லாம் முடிஞ்சதும் கண்டிப்பா வந்துருவாங்க” என்பார். நானும் நம்பிக்கொண்டிருப்பேன் என்றாவது ஒரு நாள் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை மடியில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று.\nஎன் அப்பா ஒரு தீவிரமான சிவாஜி ரசிகர். என் பெயர்க்காரணம் கூட அதனால் அமைந்தது தான். என் பெரியப்பாவும் என் அண்ணனுக்கு கணேசன் என்றும் அக்காவுக்கு சாந்தி என்றும் பெயரிட்டு அழகு பார்த்தார். நல்ல வேளை என் தம்பி பிரபு என்னும் பெயரில் இருந்து தப்பித்துவிட்டான்.\nஎனக்கு ரஜினி மாமா அளவுக்கு சிவாஜி தாத்தாவை பிடிக்காது. நான் பக்கத்து வீட்டு டிவியில் பார்த்த பல படங்களில் சிவாஜி தாத்தா கஷ்டப்படுவார், கடைசியில் இறந்து போய்விடுவார். “ச்சே என்ன இப்பிடி இருக்காரு நம்ம தாத்தா மாமா மாதிரி ஜாலியாவே இருக்க மாட்றாரே மாமா மாதிரி ஜாலியாவே இருக்க மாட்றாரே நம்ம வீட்டுக்கு வரப்ப கேக்கணும்” என நினைத்துக்கொள்வேன்.\nகொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தது.. சிவாஜி நமக்கு சொந்தக்காரராய் இருக்க முடியாது என்பது புரிந்தது. ஒரு பத்து வயது இருக்கும். அதே பக்கத்து வீட்டில் அதே டிவியில் ’தங்கப் பதக்கம்’ படம் பார்த்தேன். அப்போது தான் அவர் நடிப்பின் பிரமாண்டம் எனக்கு லேசாக புரிந்தும் புரியாதது போன்றும் இருந்தது.. சௌத்ரியினுடைய பேச்சும் கம்பீரமான நடையும் ஒரு வித பயத்தை கொடுத்தாலும், ஜெகன் மீது அவர் வைத்திருக்கும் பாசமும் அதை அவர் வெளிக்காட்ட துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என் அப்பா தான் கண் முன் வந்தார். சிவாஜி மாதிரி சில நேரம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போடுவதாலோ என்னவோ சிவாஜியை அதற்கு பின் எப்போது பார்த்தாலும் என் அப்பாவின் சாயல் அங்கு இருக்கும்..\nராஜபார்ட் ரங்கதுரை படம் பார்க்கும் போது அதில் எது நாடகம், எது படத்தில் நடப்பது என புரியாமலே படம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிவாஜி அந்த படத்திலும் செத்துப்போவது எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் அதில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்னும் பாடலை இப்போது கேட்டாலும் பார்த்தாலும் கண் கலங்கிவிடும். நம் கண் முன் நின்று தன் குடும்ப நிலையை எண்ணி அவர் வருந்தி பாடுவது போலவே இருக்கும்.\nஒரு நிமிடம் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு கட்டபொம்மன், வ.உ.சி., சிவபெருமான், ராஜ ராஜ சோழன், அப்பரென்று யாரை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்.. கண்டிப்பாக சிவாஜி எல்லார் போலவும் இருப்பார். நானெல்லாம் சின்ன வயசுல சாமி கும்பிடும் போது கண்ணை மூடியவுடன் சிவபெருமான் ரூபத்தில் சிவாஜி தான் மனதிற்குள் நிற்பார். சிவபெருமானுக்கே கூட டவுட் வந்திருக்கலாம், ‘யாருடா இவன் நம்மள விட நம்ம ரோல அலப்பறையா பண்ணுறான்\n’பர்ஸ்ட் ரஜினி, செகண்ட் சிவாஜி’ என்று பிடித்த நடிகர்களை வரிசை படுத்தி பேசும் போது சொல்வேன். ஆனாலும் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் ஏன் ஒன்றாக நடிப்பதில்லை என்று ஒரு கேள்வியை எனக்குள் மட்டுமே கேட்டுக்கொள்வேன். ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம், ‘படிக்காதவன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ரஜினியும் சிவாஜியும் வெளுத்துவாங்கியிருப்பார்கள். ரஜினி நடித்த படங்களில் எப்போதும் என் ஆல் டைம் ஃபேவரைட்டில் “படிக்காதவன்”ம் ஒன்று. அந்தப்படம் பார்த்ததில் இருந்து ஃபர்ஸ்ட் செகண்ட் எல்லாம் கிடையாது. பிடித்த நடிகர்கள் என்றாலே ரஜினியும் சிவாஜியும் தான்.\nவளர்ந்தவுடன் நண்பர்களிடம் ரஜினி ’மாமா’, சிவாஜி ’தாத்தா’ என்று உறவு முறை சொல்லி கூறுவதை நிறுத்தியிருந்தாலும் மனதிற்குள் அந்த உறவை இப்போது வரை வைத்துக்கொண்டுதானிருக்கிறேன். 'கௌரவம்' பாரிஸ்டர் ரஜினிகாந்தும், ’ஞானஒளி’ கோயில் மணியடிக்கும் அந்தோணியையும், ’பாரத விலாஸ்’ குடும்ப தலைவனையும், ’தில்லானா மோகனாம்பாள்’ சிக்கலையும், ’வசந்த மாளிகை’ சின்ன துரையையும், ’தெய்வ மகன்’ல் ”ஹொட்டேல் ஸ்டார்ட் பண்ணபோறேன் டேட்” என்று நெகத்தை கடித்துக்கொண்டே வரும் அந்த சுட்டி சிவாஜியையும், கர்ணனையும், ’முதல் மரியாதை’ மலைச்சாமியும், ’வியட்நாம் வீடு’ ப்ரெஸ்டிஜ் பத்மனாபன் என்று எத்தனையை சொல்ல அவர் நடித்த எந்த படத்திலும் அவரது நடைப்பை குறை சொல்ல முடியாது..\n‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடகத்தில் நடித்தவர்கள் தான் அப்போது திரைத்துறைக்கு வர முடிந்தது. நாடகத்தில் க்ளோஸ்-அப் காட்சிகள், ஸ்லோ மோசன் காட்சிகள் எல்லாம் கிடையாது. அதிக உணர்ச்சியை காட்டி தான் நடிக்க வேண்டும். சினிமாவிலும் அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர் நடிகர்கள். சிவாஜியே ஒரு பேட்டியில் அவரது ‘ஓவர் ஆக்டிங்’ பற்றி கேட்கப்பட்ட போது, “சினிமாங்குறதே நிஜ வாழ்க்கைக்கும், நிஜத்துக்கும் மீறிய ஒரு விசயம் தானே அப்போது அதில் இருக்கும் நடிப்பு எப்படி இயல்பாய் இருக்க முடியும் அப்போது அதில் இருக்கும் நடிப்பு எப்படி இயல்பாய் இருக்க முடியும் இயல்பை மீறியது தானே நடிப்பு இயல்பை மீறியது தானே நடிப்பு” என்பது போல் பதில் சொல்லியிருப்பார்.\nஎனக்கு 6 வயதாக இருக்கும் போது, அப்பா ‘கர்ணன்’ படத்திற்கு கூட்டிச்சென்றார். வேலையெல்லாம் முடித்து வர லேட்டாகும் என்பதால் நைட் ஷோ தான் கூட்டி செல்வார். அம்மாவிடம் அடிவாங்கி கஷ்டப்பட்டு ஹோம்-வொர்க் செய்த பையனை, அதுவும் 6 வயசு பையனை நைட் ஷோவுக்கு ‘கர்ணன் படத்துக்கு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறது எவ்வளவு கொடுமைனு உங்களுக்கு தெரியாது. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் நான் தூங்கிவிட்டேன். என் அப்பா என்னை அடித்தார், கிள்ளினார், என்னென்னமோ செய்து பார்த்தார். ம்ஹீம் நான் எழவே இல்லை. அவருக்கு ஒரே வருத்தம், நான் அந்த க்ளைமேக்ஸ் போர் காட்சியையாவது பார்த்திருக்க வேண்டும் என்று. எனக்கு என் அப்பா மேல் கோவம் வந்ததே தவிர சிவாஜி மீது அப்போது கோவம் வரவில்லை.15, 16 வயதில் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தலைக்கு ஏறும் அந்த காலத்தில் என் அப்பாவை பயங்கரமாக கிண்டலடிப்பேன், அவர் சிவாஜி ரசிகர் என்கிற ஒரே காரணத்துக்காக. “அவா வீட்டுக்குள்ள கால வச்சதும் இவரு கையி அப்டியே துடிக்குமாம் என்னமா ஏமாத்துறாய்ங்க அவருக்கு நீங்க ஃபேன் வேற” என்று முதல் மரியாதை க்ளைமேக்ஸில் இருந்து வசந்த மாளிகை, தங்க பதக்கம் என்று நான் கிண்டல் செய்த அனைத்து படங்களையும் இப்போது மீண்டும் தேடித்தேடி விரும்பி பார்க்கிறேன்.\nஏதோ ஒரு வெளிநாட்டு பல்கலையில் நடிப்பு பற்றிய பட்டிய பாடப்பிரிவிற்குரிய டிக்ஸ்னரியில் சிவாஜியை பற்றி பெருமையாக “முகத்தில் கிட்டத்தட்ட 60 விதமான பாவங்களை காட்டும் திறமை பெற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என ஆனந்த விகடனில் வந்த ‘ஹாய் மதனி’ல் ஒரு முறை சிவாஜியை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை கண்ணாடி முன் கொண்டு சென்று வித விதமாகமுக பாவனையை மாற்றி பாருங்கள். ஒவ்வொரு பாவனையின் போதும் உங்கள் முகம் இன்னும் இன்னும் கேவலமாக தெரியும். ஆனா அந்த மனுசன் செஞ்ச எல்லா நடிப்பும் நம்மை ஆச்சரியப்படவும் அழவும் மெய்மறக்கவும் வைத்தன.\nசுஜாதா, சிவாஜி போன்ற கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களின் மூச்சு கலந்திருந்த இந்த காற்றில் நமது மூச்சும் கலந்திருக்கிறது என்பதே நமக்கு மிகவும் பெருமையான விசயம் தான். இன்றைக்கு நாம் மிகப்பெரும் நடிகர்கள் என்று சொல்லும் எல்லோருமே சிவாஜி சாப்பிடும் போது சிதறிய பருக்கைகளை தான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு பெரிய நடிகர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள். நாளை அக்டோபர் ஒன்று, ’கலைத்தாயின் தவப்புதல்வன்’ சிவாஜியின் பிறந்த நாளுக்காக நான் எழுதிய இந்த பதிவு சிவாஜியின் ரசிகர்கள் அனைவருக்கும், என் அப்பாவிற்கும் சமர்ப்பணம்..\nLabels: அனுபவம், ஆனந்த விகடன், கட்டுரை, சிவாஜி, சினிமா, ரஜினி\n@Karuppasamy Duraichamy Nadar : சிவாஜி யாரோடும் ஒப்பிட முடியாத கலைஞன் சார்.. நீங்கள் உங்கள் மருமகளுக்கு சிவாஜியின் அனைத்து படங்களையும், பாடல்களையும், பாடலுக்கு அவர் வாய்சைக்கும் அழகையும் காட்டுங்கள்.. அமெரிக்காவில் ஒரு die hard fan உருவாகிவிடுவார் (என் தாத்தா) சிவாஜிக்கு..\n// நாடகத்தில் நடித்தவர்கள் தான் அப்போது திரைத்துறைக்கு வர முடிந்தது. நாடகத்தில் க்ளோஸ்-அப் காட்சிகள், ஸ்லோ மோசன் காட்சிகள் எல்லாம் கிடையாது. அதிக உணர்ச்சியை காட்டி தான் நடிக்க வேண்டும்.// nice...\n//கொஞ்சம் உங்கள் முகத்தை கண்ணாடி முன் கொண்டு சென்று வித விதமாகமுக பாவனையை மாற்றி பாருங்கள். ஒவ்வொரு பாவனையின் போதும் உங்கள் முகம் இன்னும் இன்னும் கேவலமாக தெரியும்.//\n//“வேமா போனா வண்டி வுழுந்துறாதாப்பா\n“ரஜினி மாமா போற வண்டி விழுமா எதுத்தாப்லா யாராவது வந்தா தான் பயந்து ஓடிருவாங்க”//\nஅருமையான எழுத்து நடை மற்றும் நடிகர்திலகத்தின் சிறப்பை பற்றிய கட்டுரை. என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா \nதாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nசிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/vijay-s-son-wants-be-dhoni-173558.html", "date_download": "2018-08-17T23:24:38Z", "digest": "sha1:D35K42RE7W5F46HHPNXCYXN5MELJROTX", "length": 11481, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகரல்ல, டோணி மாதிரி கிரிக்கெட் வீரராக விரும்பும் விஜய் மகன் | Vijay's son wants to be a Dhoni | அப்பா மாதிரி இல்ல, 'டோணி' மாதிரி ஆக விரும்பும் விஜய் மகன் - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகரல்ல, டோணி மாதிரி கிரிக்கெட் வீரராக விரும்பும் விஜய் மகன்\nநடிகரல்ல, டோணி மாதிரி கிரிக்கெட் வீரராக விரும்பும் விஜய் மகன்\nசென்னை: தனது மகன் சஞ்சய் கிரிக்கெட் வீரனாக ஆசைப்படுவதால் பயிற்சியாளர் வைத்து அதற்கான பயிற்சி அளிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.\nஇந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட திரைத்துறையில் நடிகர்களின் வாரிசுகள் அதிக அளவில் அறிமுகமாகின்றனர். திரை நட்சத்திரங்களும் தங்கள் பிள்ளைகள் தங்களைப் போன்றே நடிகராக விரும்புகின்றனர்.\nஆனால் விஜய் இதில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளார். தனது மகன் என்னவாக விரும்புகிறாரோ அதுவாக ஆகட்டும் என்கிறார் அவர்.\nதனது மகன் சஞ்சய் டான்ஸ் ஆட வேண்டும் என்று விரும்பியதால் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாட்டில் தன்னுடன் ஆட வைத்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.\nஎனது மகனை நடிகனாக்கிப் பார்க்க விரும்பவில்லை என்று விஜய் தெரிவித்தார். சஞ்சய்க்கு எந்த துறையில் ஈடுபாடு இருக்கிறதோ அதில் அவன் ஈடுபடட்டும் என்கிறார்.\nவிஜய் மகனுக்கு கிரிக்கெட் வீரராக ஆசை வந்துள்ளதாம். அதனால் பயிற்சியாளர் வைத்து தன் செல்ல மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்கிறார் விஜய்.\nசஞ்சய் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அவர் விரும்பும் துறையில் ஈடுபட அனுமதிக்கப் போவதாக விஜய் கூறினார்.\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nஅஜித் பிடிக்கும், விஜய் அழகானவர், சூர்யா ரொம்ப நல்லவர்: புது பிட்டு போடும் ஸ்ரீ ரெட்டி\n ராஜமௌலி, சசிகுமார் சந்திப்பின் பின்னணி\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா\nகருணாநிதி மரணம்.. அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பு ரத்து.. டிவிட்டரில் முருகதாஸ் இரங்கல்\nகியாரே… விஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசர்க்கார் திரைப்பட அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்க தெரியுமா…\nவிஜய் 63… அட்லிக்கு இத்தனை நிபந்தனைகள்\n சிறந்த ஆசிய திரைப்படங்களில் ஒன்றாக மெர்சல் தேர்வு\n ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிய விஜய்\nவிஜய்யாக இருந்தாலும் ஏற்க முடியாது: கவுதமி கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/i-m-writing-script-sridevi-says-ka-169790.html", "date_download": "2018-08-17T23:24:35Z", "digest": "sha1:QT6EL22IXQOGWZ6JH6HV6D6B2N2RC2XS", "length": 19333, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீதேவியுடன் மீண்டும் நடிக்கப் போகிறேன், கதை தயாராகிறது - கமல்ஹாசன் | I'm writing a script for Sridevi, says Kamal Haasan | ஸ்ரீதேவியுடன் மீண்டும் நடிக்கப் போகிறேன், கதை தயாராகிறது - கமல்ஹாசன் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரீதேவியுடன் மீண்டும் நடிக்கப் போகிறேன், கதை தயாராகிறது - கமல்ஹாசன்\nஸ்ரீதேவியுடன் மீண்டும் நடிக்கப் போகிறேன், கதை தயாராகிறது - கமல்ஹாசன்\nமும்பை: ஸ்ரீதேவியுடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன். அவரும் தயார்தான். நானே கதையும் எழுதி வருகிறேன். அந்தக் கதை அவருக்குப் பொருத்தமாகவும் இருக்கும்.விரைவில் தகவல்கள் முழுமையாகும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார் என்று பாலிவுட்டிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇப்போது 40 வயதுகளில் இருக்கும் முக்கால்வாசிப் பேருக்கு இன்னும் கனவுக் கன்னி ஸ்ரீதேவிதான். அதுவும் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தத அத்தனைப் படங்களையும் எத்தனை தடவை இவர்கள் பார்த்திருப்பார்கள் என்று கணக்கே சொல்ல முடியாது. அப்படி ஒரு தீவிரமான கமல் -ஸ்ரீதேவி காம்பினேஷன் ரசிகர்களாக இவர்கள் இருப்பார்கள்.\nஇப்போது இவர்களுக்கு ஒரு நற்செய்தி .. அதாவது கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் மீண்டும் இணையப் போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.\nஅழகு மயிலும் .. சப்பாணி கமலும்\nகமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் சேர்ந்து மிரட்டிய அற்புதப் படம் 16 வயதினிலே. இருவரின் நடிப்பையும் பார்த்துப் பிரமித்துப் போனது தமிழ் சினமா அன்று. கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து தமிழில் ஜோடியாக நடித்த முதல் படம் அதுதான். கமல்ஹாசனுக்குள் ஒளிந்திருந்த நடிகன் அந்தப் படத்தில்தான் முழுமயாக வெளியே வந்தான்.\nகுடை மிளகாய் மூக்கும் ரெட்ரோஸும்...\nஅதன் பிறகு இருவரும் சேர்ந்து நடித்த 2வது படம் சிகப்பு ரோஜாக்கள். குடைமிளகாய் மூக்குக்காரி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்ரீதேவி, இப்படத்தில் அருமையாக நடித்திருப்பார். கமல், ஸ்ரீதேவி ஜோடி நிரந்தரமாக செட்டாக இந்தப் படங்கள் எல்லாம் உதவின.\nஅடுத்து இருவரும் இணைந்த படம் கல்யாண ராமன். இப்படத்தில் கமல்ஹாசனின் மாறுபட்ட இரு வேடமும், ஸ்ரீதேவியுன் நடிப்பும், அவர்களுக்குள் நிலவிய அபாரமான கெமிஸ்ட்ரியும் வெகுவாக அப்போது பேசப்பட்டது.\nநடிப்பில் வெளுத்துக் கட்டிய வறுமையின் நிறம் சிவப்பு\nஸ்ரீதேவியும் சரி, கமல்ஹாசனும் சரி நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு வெளுத்துக் கட்டிய படம் என்றால் அது வறுமையின் நிறம் சிவப்புதான். இருவரையும் அட்டகாசமாக வேலை வாங்கியிருப்பார் கே.பாலச்சந்தர். யாருடைய நடிப்பைப் பார்ப்பது, யாரைப் பார்த்து வியப்பது என்று ரசிகர்ள் குழம்பிப் போகும் அளவுக்கு இருவரும் பின்னி எடுத்திருப்பார்கள்.\nகமலையே ஓவர்டேக் செய்த மீண்டும் கோகிலா\nகமல்ஹாசன் படத்தில் அவ்வளவு சீக்கிரம் யாரும் அவரை ஓவர்டேக் செய்ய முடியாது. ஆனால் மீண்டும் கோகிலா படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு படு பிரமாதமாக இருக்கும். பல சீன்களில் கமல்ஹாசனையே முந்தியிருப்பார்.\nசிவாஜிக்கு வசந்த மாளிகை.. கமல், ஸ்ரீதேவிக்கு வாழ்வே மாயம்\nவசந்த மாளிகையின் காப்பிதான்.. இருந்தாலும் தங்களது வித்தியாசமான நடிப்பால் படத்திற்குப் புது முகம் கொடுத்திருப்பார்கள் கமலும், ஸ்ரீதேவியும். அக்கால இளைஞர்களுக்கு இப்படம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.\nமுத்திரை பதித்த மூன்றாம் பிறை\nஇந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம். பாலுமகேந்திராவின் கவித்துவமான இயக்கத்தில் வித்தியாசமான ஸ்ரீதேவியை நாடே பார்த்தது. ஸ்ரீதேவி்க்கு அகில இந்திய அளவில் ஒரு முகம் தேடிக் கொடுத்ததும் இப்படம்தான். இதுவே பின்னர் இந்தியில் சத்மா என்ற பெயரில் டப் ஆனது. கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் கடைசி சீன் வரை ஜமாய்த்திருப்பார்கள்.\nஇதுதான் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்த கடைசிப் படமும் கூட.\nஇந்த நிலையில் கமல்ஹாசனும்,ஸ்ரீதேவியும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மூன்றாம் பிறையின் தொடர்ச்சி என்று ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி இல்லை என்று இன்னொரு தரப்பு தகவல் கூறுகிறது. ஆனால் இருவரும் இணையப் போவது உண்மைதான் என்று கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், உண்மைதான்,ஸ்ரீதேவியுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். கதையும் தயாராகி வருகிறது, நானே எழுதுகிறேன். அவருக்குப் பொருத்தமானதாக இருக்கும். முழு விவரம் இன்னும் முடிவாகவில்லை என்றார்.\nசமீபத்தில் மும்பைக்கு வந்தபோது இந்தப் புதுப் படம் குறித்து ஸ்ரீதேவியுடன் போனில் பேசினாராம் கமல்ஹாசன். ஸ்ரீதேவியிடம் கதை குறித்தும் பேசியதாக சொல்கிறார்கள். ஸ்ரீதேவிக்கும் கதை பிடித்து விட்டதாம். நடிக்க ஆர்வமாக இருப்பதாக கமலிடம் கூறியுள்ளார் ஸ்ரீதேவி என்றும் சொல்கிறார்கள்.\nஇது சத்மா அல்லது மூன்றாம் பிறையின் ரீமேக்கா அல்லது தொடர்ச்சியா அல்லது வேறு கதையா... கமலே சொன்னால்தான் உண்டு...\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nஇனிமேல் பொன்னம்பலம் வெளியே இருந்தா என்ன, பிக் பாஸ் வீட்டில் இருந்தா என்ன\nஎப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2.. ஒரு விறு விறு விமர்சனம்\n7 மாவட்டங்கள், புதுச்சேரியில் வெளியாகாத விஸ்வரூபம் 2: ரசிகர்கள் ஏமாற்றம்\nகமலுடன் களத்தில் மோதும் 4 படங்கள்... ஜெயிப்பார்களா\n“கமலின் அரசியல் பிரவேசம், 22 கட், கேள்விகளுக்குப் பதில்”.. விஸ்வரூபம் 2 பார்க்க இதோ 6 காரணங்கள்\nவிஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கு: ட்விட்டர் விமர்சனம் #Vishwaroopam2\nவிஸ்வரூபம் 2.. சென்சார் போர்டில் ‘கட், மியூட்’ செய்யப்பட்ட 22 காட்சிகள் இவை தான்\nகருணாநிதிக்கு மரியாதை.. மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றிய ‘பியார் பிரேமா காதல்’\nஅரசியலில் கருணாநிதி எனும் பேரிளைஞனை பின்பற்றும் கமல்\nஇப்படித் தாங்க தினமும் நம்பி நம்பி ஏமாந்து போகிறோம்\nகடைசியில் கமலையே வச்சு செஞ்சுட்டாரே பிக் பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-08-17T22:34:30Z", "digest": "sha1:ODGZNVTMUL2IFYEZDZQ74PUWBZGDYPLC", "length": 8121, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஸ்கொட்லாந்தில் வளி மாசடைவு: வருடாந்தம் 2,500 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஸ்கொட்லாந்தில் வளி மாசடைவு: வருடாந்தம் 2,500 பேர் உயிரிழப்பு\nஸ்கொட்லாந்தில் வளி மாசடைவு: வருடாந்தம் 2,500 பேர் உயிரிழப்பு\nஸ்கொட்லாந்தில் வளி மாசடைந்துள்ளதன் காரணமாக, ஒவ்வொரு வருடமும் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஸ்கொட்லாந்தில் வளி மாசடைவு பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதுடன், வளி மாசடைவு காரணமாக பெருமளவான மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வருடந்தோறும் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகவும், ஸ்கொட்லாந்தின் பூமியின் நண்பர்கள் குழு தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், தற்போது ஸ்கொட்லாந்தில் வளி மாசடைதல் சற்றுக் குறைந்துள்ளதாகவும், அக்குழு கூறியுள்ளது.\nஇதேவேளை, ஸ்கொட்லாந்தில் வளி மாசடைதலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக, ஸ்கொட்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், பெற்றோல் மற்றும் டீசல் பயன்பாடுடைய வாகனங்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், ஸ்கொட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇங்கிலாந்தில் மீண்டும் வெப்பநிலை உயர்கிறது\nபிரித்தானியாவில் கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட கடுமையான வெப்பநிலை தொடர்ந்து ஜூலை மாதம் ம\nஇந்தோனேஷிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 400ஐ அண்மித்துள்ளது\nஇந்தோனேசியாவின் லம்பொக் தீவில் கடந்த வாரம் 2 தடவைகள் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எ\nஸ்கொட்லாந்தில் கோல்டன் Retriever நாய் இனத்தின் 150 ஆவது ஆண்டு தினம்\nஸ்கொட்லாந்தில் கோல்டன் Retriever நாய் இனம் உருவான 150 ஆவது ஆண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட\nஸ்கொட்லாந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருடைய பாரியார் மெலனியா ட்ரம்ப் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவ\nமாம்பழங்களில் வைட்டமின்கள் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அவை கெட்ட கொழுப்பை குறைப\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/india/03/185260?ref=media-feed", "date_download": "2018-08-17T22:41:55Z", "digest": "sha1:N46YGW4KZVL2GWRUXO7NGDVEGSG5ANPX", "length": 10120, "nlines": 154, "source_domain": "lankasrinews.com", "title": "மெரினா கடற்கரை கருணாநிதிக்கு ஏன் அவ்வளவு முக்கியம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெரினா கடற்கரை கருணாநிதிக்கு ஏன் அவ்வளவு முக்கியம்\nசென்னை என்றால் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சின்னங்கள் அடையாளமாக இருந்தாலும் அண்ணா சமாதிதான் அதன் முக்கிய அடையாளமாகும்.\nதமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா கடந்த 1969-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.\nஅண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் கலந்து கொண்டனர். இது கின்னஸ் சாதனையாக பின்னர் மாறியது.\nஅண்ணா மறைந்த பின்னர் அவரது உடல் மெரீனா கடற்கரையில் கூவம் நதிக்கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பகுதி அண்ணா சதுக்கமாக அறிவிக்கப்பட்டது.\nமெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவரை பற்றிய அருங்காட்சியகமும் உள்ளது. இந்த சமாதி தமிழக அரசின் செய்தித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பொதுப் பணித்துறை பராமரித்து வருகிறது. இந்த இடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சமாதிகளும் உள்ளன.\nமேற்கண்ட சிறப்புகளை பெற்ற அண்ணா சமாதிக்கு அருகில் தனக்கு 6 அடியில் இடம் வேண்டும் என்று கருணாநிதியே உயிருடன் இருந்த போது கேட்டு கொண்டார்.\nஅறிஞர் அண்ணா இறந்துபோது அவருக்காக கருணாநிதி எழுதிய கவிதை இதோ,\nஎழுந்து வா எம் அண்ணா\nஇயற்கையின் சதி எமக்குத் தெரியும்\nஇரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..\nநான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை\nஉன் கால் மலரில் வைப்பேன் அண்ணா...\nஅண்ணாவின் வழியில் தன்னை வளர்த்துக்கொண்ட கருணாநிதி அவர் வகுத்து கொடுத்த பாதையிலேயே தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.\nமெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. அதாவது திராவிடத் தலைவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக அரசு முன்னா கருணாநிதிக்கு இடம் ஒதுக்கியதாக கூறப்படும் காந்தி மண்டபம் பகுதியில் தேசிய கட்சியான காங்கிரஸ் சார்பில் முதல்வர்களாக இருந்த காமராஜர், ராஜாஜி மற்றும் பக்தவத்சலம் ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன.\nமெரினாவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை மட்டுமல்லாது, மெரினா என்பது திராவிடக்கட்சியின் நினைவிடமாக மாறியுள்ளது என்பதற்காகவே, மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய திமுக சார்பில் இடம் கேட்கப்பட்டது,\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pa-thiyagu.blogspot.com/2013/04/blog-post_8.html", "date_download": "2018-08-17T22:56:04Z", "digest": "sha1:FJLTQJGRVQ7JH7OGXO5OM5ZUGNKRXMQY", "length": 7243, "nlines": 153, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: இதற்குள்", "raw_content": "\nபசி உன்னை வதைக்குமே குட்டி\n நேரிலே சாதிக்க முடியாத காரியத்தையும் கனவுவழி சாதித்துவிடுகிறார்களே... விட்டுவந்த நாய்க்குட்டியைத் தேடி இன்று செல்வீர்கள்தானே...\nதாயைப் பிரிந்த குட்டி நாய், ரோமம் உதிர நோய்ப்பட்ட தெரு நாய், பேக்கரியின் வாசலை மிதிக்கும்போதே முன்னெப்போதோ வாங்கியளித்த ரொட்டித்துண்டுக்கு இன்றும் அணுகி வாலாட்டும் நாய், எஜமான் விசுவாசத்தில் புதியவர்களை வாசலுக்கு வெளி்யேயே வைக்கும் நாய் என்று, நாய்கள் என்றைக்கும் என் மனதுக்கும் நேசிப்பிற்கும் நெருக்கமாகவிருக்கின்றன. இந்த நேரத்தில் என் பிரிய சுந்தர்ஜி-யின் (http://sundargprakash.blogspot.in) குரைப்பின் மொழி கவிதையை நினைத்துக்கொள்கிறேன். நன்றி கீதமஞ்சரி.\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவிருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilangadi.forumotion.com/t43-topic", "date_download": "2018-08-17T23:06:42Z", "digest": "sha1:OTXLYFIV3G2YYRHBL6K7SJSMTH3IE7KR", "length": 6998, "nlines": 68, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "அநியாய ஆடம்பரம்", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: மனதிலிருந்து ஒரு செய்தி :: பட்டிமன்றம் Share |\nதன்னை `சூரியக் கடவுள்’ என்று அழைத்துக் கொண்ட பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி வீண் ஆடம்பரத்துக்காகக் கட்டியதுதான் வெர்செய்ல்ஸ் அரண்மனை. நாட்டையே திவாலாக்கிய இதைக் கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆயின. முப்பதாயிரம் பேர் வலுக்கட்டாயமாக கூலியில்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். பணியின்போது நூற்றுக்கணக்கான பேர் கொள்ளை நோயால் உயிரிழந்தனர்.\nகட்டுமானப் பணிகளை மன்னன் நேரடியாக மேற்பார்வையிட்டான். சலவைக் கல், வெண்கலச் சிலைகள் பல நிறுவப்பட்டன. 250 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைக்கப்பட்டது.\nஏராளமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. பல வகையான விலங்குகளும், பறவைகளும் கொண்ட காட்சி சாலையும் ஏற்படுத்தப்பட்டது. அரண்மனையை ஒட்டி ஒரு மைல் நீளமும், 200 அடி அகலமும் உடைய கால்வாய் வெட்டப்பட்டது. அதில் படகுகள் விடப்பட்டன.\n1682-ல் மன்னர் தனது பரிவாரங்களுடன் இங்கு குடியேறினார். 1789-ம் ஆண்டு வரை வெர்செய்ல்ஸ், பிரான்சு நாட்டின் தலைநகராக இருந்தது. அரசனின் பரிவாரம், 9 ஆயிரம் வீரர்கள் உட்பட 20 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அரண்மனையில் ஆயிரம் பிரபுக்களும், 4 ஆயிரம் பணியாளர்களும் வசித்தனர். அது ஆடம்பர மாளிகையாக இருந்ததே தவிர, அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அரண்மனையின் கோலாகல வாழ்க்கைக்கு 1789-ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடிவு கட்டியது. தற்போது இது அருங்காட்சியமாக உள்ளது.\nTamil Angadi :: மனதிலிருந்து ஒரு செய்தி :: பட்டிமன்றம்\nTamil Angadi :: மனதிலிருந்து ஒரு செய்தி :: பட்டிமன்றம்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1157536.html", "date_download": "2018-08-17T22:58:01Z", "digest": "sha1:TBZSSPTDQSQ4J7IPURZ3YJLUFTZ3MD2Y", "length": 19227, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (17.05.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nகுடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்\nபுதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிறுத்தி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் சங்கம் நேரத்திற்கு மாத்திரம் வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளனர்.\nஇன்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக விமான நிலையத்தின் முன்னால் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை அவர்கள் மேற்கொண்டிருந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.\nநாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றிரவு 100 மில்லிமீற்றர் மழை\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (17) இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யலாம் என்று தெரிவிகப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அதிகரித்து வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தயாராகியுள்ளது.\nஇதனடிப்படையில் இன்று முதல் 2 வாரங்களுக்கு இதுதொடர்பான ஒத்திகை மேற்கொள்ளப்படவிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nமின்னல் தாக்கியதில் முன்னாள் இராணுவ வீரர் பலி\nதிருகோணமலை, கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வயல்வெளியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\n56 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் சு.ஆ.அபேரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபர் தனது 50 ஆவது வயதில் இராணுவ சேவையில் இருந்து விலகி பின்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறையில்\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெற உள்ளது.\nஅன்றைய தினம் காலை 09.30 மணிக்கு காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளனர்.\nஅதேவேளை காலை 11.30 மணிக்கு சிவில் சமூக அமைப்புக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் கூறியுள்ளது.\nகாணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதல் சந்திப்பு கடந்த 12ம் திகதி மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்றது.\nஅரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வு\nஅரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி இதுவரை அந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார்.\nபிரதமர் தலைமையில் இன்று கூடிய, பொருளாதாரத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.\nஅரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி தீர்வுகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு குறுகிய காலத்தில் தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nஅமைச்சர் ராஜிதவுக்கு விசேட விருது\nதாதியர் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தமை காரணமாக சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.\nசர்வதேச தாதியர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், ​அரச தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்று (17) அலரி மாளிகையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில், தாதியர் சேவையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவடகொரியாவில் வி.கே சிங் – 20 ஆண்டுகளுக்கு பின் இருதரப்புக்கு இடையே உயர்மட்ட சந்திப்பு..\nசிங்களவர்கள் இதனை செய்கின்றனர், தமிழர்கள் யோசிப்பதுகூட கிடையாது..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/04/41.html", "date_download": "2018-08-17T23:24:16Z", "digest": "sha1:7JADR5PBVO7QW2GDJZJYMQQ3JHTYWA3X", "length": 13574, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தமிழகம் » தேர்தல் 2016 » திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு \nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு \nTitle: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு \nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலை திமுக தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்கிறது. ...\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலை திமுக தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்கிறது.\nதமிழக அரசியல் களத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்புதான் முதல் கூட்டணி அறிவிப்பாக இருந்தது.\nஇரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முடிவான நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த 25-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கருணாநிதியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அன்றைய தினம் எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை.\nதிமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி என பேசப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று (திங்கள்கிழமை) சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.\nமுன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், \"காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டில் நல்ல முடிவு ஏற்படும்\" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை 54 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது:\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 234 தொகுதிகளில் திமுக இதுவரை 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விவசாய தொழிலாளர் கட்சி, சமூக சமத்துவ படை, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.\nLabels: அரசியல், தமிழகம், தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://patrikai.com/sonia-and-rahul-met-gujarat-congress-leaders-to-discuss-about-gujarat-election/", "date_download": "2018-08-17T22:35:01Z", "digest": "sha1:3BZ6ESCFCBL2DGPEKJYMUH277XAI36VJ", "length": 15502, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "குஜராத் தேர்தல் : காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் சோனியா – ராகுல் சந்திப்பு… | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»குஜராத் தேர்தல் : காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் சோனியா – ராகுல் சந்திப்பு…\nகுஜராத் தேர்தல் : காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் சோனியா – ராகுல் சந்திப்பு…\nவரப்போகும் குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் குஜராத் தலைவர்களுடன் சந்திப்பு நிகழ்த்தினர்.\nகுஜராத் மாநிலத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பல ஆண்டுகளாக மோடியிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பதில் மும்முரமாக உள்ளது. ஆனால் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது முக்கிய தலைவர்களில் ஒருவரான சங்கர்சிங் வாகேலா தனது ஆதரவு எம் எல் ஏக்களுடன் கட்சியை விட்டு விலகியது பெரும் பின்னடைவை கொடுத்தது.\nஇந்நிலையில் குஜராத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் சந்தித்து பேசினார். துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார். இந்த சந்திப்பில் குஜராத் மாநில காங்கிரஸ் எம் எல் ஏக்களும், எம் பிக்களும் கலந்துக் கொண்டனர். அவர்களுடன் குஜராத் மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அசோக் கெஹ்லாத், மற்றும் அகமது படேல் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.\nஇந்த சந்திப்பு நன்கு நடந்ததாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.\nஇந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, குஜராத் எம் எல் ஏ சக்திசிங் கோஹில், “சோனியா, ராகுல் இருவரும் அகமது படேலை வெற்றி அடையச் செய்ததற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர். இது உண்மைக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறினர். நாம் குஜராத் தேர்தலில் பதவிக்காகவோ ஆட்சிக்காகவோ போட்டியிடவில்லை. மகாத்மா காந்தியின் கொள்கையை நிலைநிறுத்தவே போட்டியிடப் போகிறோம். கடந்த ராஜ்யசபை தேர்தலில் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் வாக்களித்தது போல் வரும் சட்டசபை தேர்தலிலும் அனைவரும் ஒற்றுமையாக காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும், இந்த தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி நமது ஒற்றுமைக்கும், மகாத்மாவின் கொள்கைக்கும் கிடைக்கப்போகும் வெற்றி என தெரிவித்தனர்” என கூறி உள்ளார்.\nதீபாவளிக்கு பிறகு காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்காந்தி\nமக்கள் பாதிக்கப்படுவதை அம்பலப்படுத்தாமல் ஊடகத்துறையினர் பாரபட்சம்\nகுஜராத் தேர்தல் : பா ஜ க வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/358", "date_download": "2018-08-17T23:05:57Z", "digest": "sha1:I3DAPTZXSX4N5NYES4QP6EW5MVUJANDW", "length": 4907, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "வலி அறியா குடும்பம்", "raw_content": "\nsenthilmsp 873 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஉடலில் ஏற்படும் வலி ஒரு ஆரோக்கிய கண்ணாடி. நமது உடலில் தோன்றும் பாதிப்புகளை உடனுக்குடன் அறிவிக்கும் எச்சரிக்கை மணி. வலி மட்டும் இல்லையென்றால் இத்தனை மருத்துவம் தோன்றியிருக்காது, மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்காது. எல்லா மருவத்துக்கும் அடிப்படை வலிதான். ஒருவேளை அந்த வலி நமக்கு இல்லையென்றால் என்னவாகும் நினைக்கவே வியப்பாக இருக்கிறதல்லவா. அப்படி ஒரு வலியில்லா குடும்பமும் உலகில் இருக்கிறது.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilbm.com/news_details/952", "date_download": "2018-08-17T23:11:34Z", "digest": "sha1:HI74OUOMNU6QQ5IHVTCKXB3IS6Y632YZ", "length": 4224, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "கருஞ்சீரகம்", "raw_content": "\nsukumaran 722 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nகருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1111377.html", "date_download": "2018-08-17T22:57:18Z", "digest": "sha1:RYCL4HKX6XWTS7VUEJAYR2MT57BMWAR2", "length": 18758, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "நீளமான கூந்தல் உள்ள பெண்களை, ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன?… -அந்தரங்கம் (+18) – Athirady News ;", "raw_content": "\nநீளமான கூந்தல் உள்ள பெண்களை, ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன\nநீளமான கூந்தல் உள்ள பெண்களை, ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன\nநீளமான கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன\nபெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.\nசிலருக்கு வட்டமான முகம் அவர்களது அழகை எடுத்துக் காட்டும். சிலருக்கு உடல் வாகு, பலருக்கு புட்டுன்னு இருக்கும் கன்னம்.ஆனால், பொதுவாக அனைத்து பெண்களையும் அழகாக காட்டும் ஒரு விஷயம் இருக்கிறது எனில் அது அவர்களது கூந்தல் தான்.\nபேருந்தில், வகுப்பறையில், மார்பில் மனைவி சாய்ந்திருக்கும் போதென அவர்களது கூந்தல் நறுமணத்தை நாசியின் மூலம் களவாடாத ஆண்களே இல்லை…\nபெண்களுக்கு கூந்தல் தான் மிகப்பெரிய அழகு. அதிலும் அவர்கள் காதோரம் கூந்தலை விரல்களால் கோதிவிட்டுக் கொண்டு, கழுத்தை திருப்பும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nபெண்களிடம் ஓர் செய்கை இருக்கிறது, அமைதியாக முதுகில் பரவிக்கிடக்கும் கூந்தலை, குழந்தையை போல தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டு, சிறிது நேரத்தில் தலை மிடுக்காக திருப்பி மீண்டும் குழந்தையை தொட்டிலில் போடுவது போல முதுகில் சாய்ப்பது. ஆஹா… எத்தனை அழகு\nபெண்களின் கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா என்பது இந்திரன் காலத்தில் இருந்து இன்றைய எந்திரன் காலம் வரை நீடித்துக் கொண்டே தான் போகிறது. ஆனால், அவரவருக்கு பிடித்த பெண்களின் கூந்தல் மணம் ஆண்களின் நாசியிலே குடியிருக்கும் என்பது காதல் மன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.\nஅதிலும், என்ன மாயமோ மல்லிகை பெண்களின் கூந்தலில் குடியேறும் போது மட்டும், ஆண்களின் மனது குடை சாய்ந்து விடுகிறது. மணம் எங்கிருந்து வந்தால் என்ன, ஆண்களின் மனம் திருடும் அழகு பெண்களின் கூந்தலுக்கும் இருக்கிறது.\nபெண்களின் கூந்தல் அழகு மட்டுமல்ல, அலங்கார மாளிகையும் கூட. நீளமான கூந்தல் இருக்கும் பெண்களுக்கு தான் பூக்களை வைத்து நிறைய சிகை அலங்காரம் செய்ய முடியும்.\nஇப்போதெல்லாம், திருமணத்தின் போது மட்டும் சவுரி முடியில் பிளாஸ்டிக் பூக்களை சூடிக் கொண்டு சில மணிநேரத்தில் கட்டி எழுப்பி அந்த அலங்கார மாளிகையை இடித்து நொறுக்கி விடுகிறார்கள்.\nதங்கள் மனைவி அல்லது காதலிக்கு நீளமான கூந்தல் இருந்தால் அழகு என்பதையும் தாண்டி, பத்து பேர் வயிர் எரியும் என்பதும் ஓர் கொசுறு செய்தி. பொதுவாக ஓர் பெண்ணுக்கு நீளமாக கூந்தல் இருந்தால், அது மற்ற பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. சற்று பொறாமைப்படுவார்கள்.\nஏன் இன்றைய காலத்தில் ஆண்களே, இன்னொரு ஆணுக்கு அதிகமாக கூந்தல் இருந்தால் பொறமைப் படுகிறார்கள். மற்றவர்களை பொறாமைப் பட வைக்கவும் கூட சிலர் தங்களுடைய துணைக்கு நீளமான கூந்தல் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.\nபுராணம் முதலே பெண்கள் என்றால் அவர்களுக்கு நீளமான கூந்தல் இருக்கும் அது அவர்களுடைய அழகின் மணிமகுடம் என்பது போல உவமை கூறி சென்றுவிட்டனர். இதிலிருந்து வெளியே வர தமிழ் ஆண்களின் மனம் கொஞ்சம் தடுமாற தான் செய்யும்.\nஆனால், வேலை இடம், ஸ்டைல் மாற்றம், ஷாம்பூ செலவு, முடி உதிர்தல் போன்ற காரணங்களை காட்டி இன்றைய பெண்கள் பெரும்பாலும் நீளமாக கூந்தலை வளர்ப்பது இல்லை.\nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா பெண்களுக்கு எவ்வளவு கூந்தல் நீளமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகம் அவர்களுக்கு “அந்த” விஷயத்தில் ஈடுபாடு இருக்கும் என்று பண்டையக் காலம் முதலே கூறப்பட்டு வருகிறது.\nகணவன் இறந்த பிறகு, மற்ற ஆண்களின் மீது ஆசை அலைபாயக் கூடாது என்பதற்காக தான் மனைவிக்கு அந்த காலத்தில் மொட்டை அடிக்கப்பட்டது என்றும் சில கூற்றுகள் மூலம் தகவல் தெரிய வருகிறது.\nநீளமான கூந்தலை கொண்டுள்ள பெண்கள் மீது ஆண்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்க இத்தனை காரணங்கள் இருக்கின்றன. இதற்காகவாவது பெண்கள் வீட்டில் விஷேச சமயங்களில் நீண்ட கூந்தலுடன் தரிசனம் தரலாம். (சவுரி முடி வைத்துக் கொண்டாவது.)\nதேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்: சிவசேனா குற்றச்சாட்டு..\nசுவிட்சர்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்ட மம்மி உடல் யாருடையது\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pattabiwrites.in/2017/07/", "date_download": "2018-08-17T22:41:16Z", "digest": "sha1:YKTFS4T3NRFJV2BBL4X5HW4MXQE5RDC6", "length": 30207, "nlines": 98, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: July 2017", "raw_content": "\nமார்க்ஸ் மாபெரும் மாமேதை என்கிற சித்திரம் பொதுப்புத்தியிலேயே இன்று ஏற்கப்படுகிற ஒன்று. அவரின் வளர்ச்சி, மகிழ்ச்சி, துன்பம், போராட்டங்கள், குடும்பத்தார்கள்- உறவுகளை பேணுதல், அவரின் attitude, பெருமை-குறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏராள ஆய்வு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இனியும் வரலாம். அதில் காணப்படும் பல செய்திகள் தமிழ் வாசகர்களை சென்றடையவில்லை.\nமார்க்ஸ்- எங்கெல்ஸ் அவர்கள் கால சூழ்நிலையில் படித்த இளைஞர்களாக, சமுக அவலங்களை எதிர்த்து நியாயம் கேட்கும் ஆவேச போராளிகளாக, வருங்கால சமூகம் சோசலிச சமூகமாக கட்டமைக்கப்படவேண்டும் என அவர்களுக்கு முன்பு பேசிய பலரின் கருத்தாக்கத்தை வளப்படுத்தி அதற்கான நடைமுறை திட்டம் ஒன்றை அளிக்கும்வரை எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்- அவர்கள் மறையும்போது இருந்த சூழல் என்ன என்பதை இக்கட்டுரைகள் ஓரளவிற்காவது பேசும் என நம்புகிறேன்.\nமார்க்சை தெய்வநிலைக்கு உயர்த்தும் மனோபாவம் கொண்டவர்களுக்கு இம்மாதிரியான எழுத்துக்கள் சற்று வலியைத்தரும் அவ்வகை எழுத்தாளர்கள் குறித்து வசைப்பாடத் தோன்றும். நம்மைபோன்ற சக மனிதன் 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்து தனக்கு முந்திய காலத்தின் அறிவையெல்லாம் சேகரித்து ஜீரணித்த மனிதன், பிற்காலம் குறித்த கனவுகளை வசப்படுத்த தனக்கு சரி என உணர்ந்த வழியை அழுத்தமாக தெரிவித்த மனிதன்- கொண்டாடப்படவேண்டிய மனிதன் என்கிற நிதான பார்வை இருந்தால் இம்மாதிரி புத்தகங்கள் பயன்படுவதாக இருக்கும்.\nமனித குல முயற்சியில் முற்றானது முடிந்து போனது என எதுவும் இல்லை. கடக்கவேண்டும்- ஒவ்வொன்றையும் கடந்தாக வேண்டும். மார்க்ஸ்க்கு அவருக்கு முந்தி இருந்த எவரும் முற்றானவராக தோன்றவில்லை. மார்க்சியத்தின்படி மார்க்ஸ் முற்றானவர் அல்ல. ஆனால் இதன் பொருள் எதிர்மறையான ஒன்றல்ல. மார்க்ஸ் தேவைப்படுகிறார் என்பதை குறைக்கும் அர்த்தத்தில் அல்ல. இந்தியாவில் மார்க்ஸ் உடன் பெரியார், அம்பேத்கார், காந்தி என சிந்தனை சேர்மான கலவை - chemistry of ideas நடந்து கொண்டுதான் இருக்கிறது. யார் விரும்பினாலும், விலகினாலும் இந்திய சமுகத்தின் எதார்த்தங்களில் மார்க்சியம் ஊடாடவேண்டியிருக்கிறது.\nசமுக மேம்பாடு குறித்த விழிப்புணர்வும் சுய சிந்தனையும் கொண்ட எவரும் மார்க்சியத்தை ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் வாழ்க்கையின் ஓட்டம் குறித்த ’கூகுள் மேப் ஆக’ மார்க்சியத்தை வறட்டுத்தனமாக பார்க்கவும் கூடாது.. செயலுக்கும், சிந்திக்கும் பாங்கிற்குமான பொதுவான வழிகாட்டல் என்பதில் கவனம் தேவைப்படுகிறது. அட்சரம் பிசகாமல் மேற்கோள்களை கொண்டு வாழ்க்கையை அளக்கவோ செப்பனிடவோ முடியாது என்கிற அனுபவத்தை புறக்கணிக்கமுடியாது. இந்திய சமுகத்தில் மக்களை ஒன்றுபடுத்த விழையும் பிற சிந்தனைகளை ரீ-ஆக்‌ஷ்னரி என்று முத்திரை குத்தி அப்புறப்படுத்துவதற்கு முன்னர் பலமுறை யோசிக்கவேண்டும். அச்சிந்தனைகள் தோழமை கொள்ளத்தக்கவையா- இல்லை எதிரி பக்கம் தள்ளப்படவேண்டியவையா என்று.\nதமிழ் வாசக பரப்பில் ஹெகல் குறித்த செய்திகள் மிகவும் குறைவுதான். மார்க்ஸ் பற்றி அறியும்போது ஹெகல் குறித்து சில வார்த்தைகள் சொல்லப்படும். அதுவும் ஹெகலை மார்க்ஸ் திருத்தி நேராக்கினார் என்கிற அளவில்தான் இருக்கும். ஹெகலிய மொழி கடினமானது. ஹெகல் குறித்த பல அறிஞர்களின் புத்தகங்களுக்குள் போவதும் எனக்கு கடினமாகவே இருக்கிறது. இங்கு அவர் குறித்த நீள் கட்டுரை ஒன்றும் தரப்படுகிறது. கடைசி பகுதி முற்றிலுமாக அவரது மேற்கோள்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. மீதி 6 பகுதிகளில் அவரது வாழ்க்கை குறித்த சித்திரம், சிந்தனைகள் பேசப்படுகிறது. கடினமான ஒன்றுதான் எனக்கு... முயற்சி செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். சுவாரசியமற்ற எழுத்துக்களில் உள் நின்று வாசிப்பது பொதுவாக கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அவசியம் புரிபடும்போது அவை தரும் பயனை அனுபவிக்க முடியும். தமிழில் நான் பார்த்திராத ஹெகல் குறித்த செய்திகள் சிலவற்றை தேடிப்பிடித்து இக்கட்டுரையில் சொல்ல முயற்சித்துள்ளேன்.\nமார்க்சின் தளபதி என அழைக்கப்பட்ட தோழர் எங்கெல்ஸ் குறித்து நீள் கட்டுரை ஒன்றும் இங்கு தரப்பட்டுள்ளது. தமிழ் வாசகர்களுக்கு பல செய்திகள் புதிதாக இருக்கும் என நம்புகிறேன். பல மணிநேர உழைப்பை இக்கட்டுரைகள் விழுங்கின. மார்க்ஸ்- எங்கெல்ஸ் பற்றி தொடர்ந்து தேடல் கொண்ட தோழர்களுக்கு தமிழில் இவற்றை கிடைக்க செய்துள்ளேன் என்கிற அளவில் சிறிய மகிழ்ச்சி. மார்க்ஸ் தனது motto ’Doubt Everything’ என்றார். எங்கெல்சோ Take it Easy’ என்றே சொன்னார். அப்படியே வாழ்ந்தார் என்பதை எங்கெல்ஸ் குறித்த கட்டுரையை படிக்கும் ஒருவரால் புரிந்து கொள்ளமுடியும்.\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes\nஜெர்மனியின் ரைன்லாந்த் தாதுப்பொருட்கள் நிறைந்த பூமி. 1795.ல் பிரஞ்சு ஆதிக்கப்பகுதியாக மாற்றப்பட்டது. விவசாயத்தை காவுகொடுத்து முதலாளித்துவம் வளர்வதற்கான முயற்சிகள் அங்கு நடக்கத் துவங்கின. உப்பர்டால் எனும் பகுதி ஜெர்மனியின் மான்செஸ்டர் என கருதப்பட்டது. எங்கெல்ஸ் குடும்பம் பர்மெனில் வாழ்ந்து வந்தது. தந்தை பஞ்சாலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர். மகனும் தொழிலை கவனித்து முன்னேற வேண்டும் என்கிற விருப்பத்தை மகன்மீது திணித்துவந்தவர்.\nஎங்கெல்ஸ் 1820 28 ஆம் நாள் செவ்வாய் இரவு 9 மணிக்கு பிறந்தார். அவரின் தந்தை ப்ரெடெரிக் எங்கெல்ஸ். தாய் எலிசி. எங்கெல்ஸ் உடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், 4 சகோதரிகள். அக்குடும்பம் பர்மன், ரைன்லாந்து பகுதியில் இரண்டு தலைமுறையாக வர்த்தக குடும்பமாக செழித்து வந்தது . கொள்ளுதாத்தா ஜோகன் காஸ்பர் (1717-87) விவசாயத்திலிருந்து சாயத்தொழிலுக்கு மாறினார். தாத்தா காஸ்பர் 1808ல் அப்பகுதியில் முனிசிபல் கவுன்சிலராக இருந்தார். அங்கு பிராடெஸ்டண்ட் சர்ச் வருவதற்கு காரணமாக இருந்தார். தந்தை எங்கெல்ஸ் உறவுக்காரர் எர்மனுடன் சேர்ந்து டெக்ஸ்டைல் வர்த்தகத்தை உள்ளூரிலும் மான்செஸ்டரிலும் செய்துவந்தார். 1810ல் 16000 மக்கள் தொகையுடன் இருந்த பர்மன் 30 ஆண்டுகளில் பெரிய நகரமாக 40ஆயிரம் மக்கள் வாழும் பகுதியாக விரிந்தது..\nதந்தை கண்டிப்பானவர் என்பதால் பொதுவாக அனைவரும் பணிந்து செல்லும் பழக்கம் இருந்தது. வீட்டில் ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு மொழிகளில் பத்ரிக்கைகளை படிக்க துவங்கினார் எங்கெல்ஸ். படிக்கும் காலத்தில் வரலாறு, மொழி ஆய்வுகள், இலக்கியம், இசை குறித்த நாட்டம் அவரிடத்தில் வளர்ந்தது. தனது நண்பர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தன்னால் லத்தீன், கிரேக்கம், இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துகீசியம் போன்ற மொழிகளிலும் படிக்க முடிவதாக தெரிவித்தார். தடை செய்யப்பட்ட பல புத்தகங்களை தேடி அவற்றை படிக்கலானார். வர்த்தக நாட்டத்தைவிட படிப்பதில், மொழிகளை அறிவதில் விருப்பம் அதிகம் இருப்பதாகவும் தான் ஏறக்குறைய 25 மொழிகளை கற்றிருப்பதாகவும் தனது சகோதரிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்தார் எங்கெல்ஸ். நண்பர்களுக்கு பல மொழிகளில் கடிதம் எழுதலானார். தியேட்டர்களுக்கு செல்வது, இசை நிகழ்வுகளுக்கு செல்வது என்பதில் ஆர்வம் காட்டினார்.\nஅம்மாவழி முன்னவர்கள் வர்த்த்கம் என்பதைவிட இலக்கியத்தில் ஆர்வமாக இருந்தனர். தாத்தா மாணவன் எங்கெல்ஸ்க்கு கதேயை படி என அறிமுகப்படுத்தினார். கிரேக்க தொன்மக்கதைகளை அறிமுகப்படுத்தினார். சாகச கதைகளை சொல்லித்தந்தார். தந்தையோ கதே கடவுள் மறுப்பாளன், எனவே வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தினார். படிப்பில் கவனம் செலுத்தி மகன் தன்னைப்போல் பெரிய முதலாளியாக வரவேண்டும் என்பதில் கறாராக இருந்தார். 1837ல் அவரின் 17 ஆம் வயதில் அவர் கல்விக்கூடத்திலிருந்து நிறுத்தப்பட்டு டெக்ஸ்டைல்ஸ் வர்த்தக வெளிக்கு அனுப்பப்படுகிறார். தந்தையுடன் 1838ல் மான்செஸ்டர் செல்கிறார்.. சில மாதங்கள் ஊர் அருகில் தொழில் கல்விக்கு அப்பரண்டிஸ் ஆக அனுப்பப்படுகிறார்.\n1800களின் துவக்கத்தில் ஷெல்லிங், பிச்டே தாக்கத்தில் இல்லாத மாணவர்கள் பிரஷ்யாவில்- பெர்லினில் இல்லையென்ற நிலை இருந்தது. நெப்போலியன் தோல்விக்கு பின்னர் ஜெனாவில் ’அரசியல் அமைப்பு சட்டப்படி ஆட்சி’ முழக்கம் மாணவர்களால் முன் எடுக்கப்பட்டது. பிரெமனில் இருந்த காலத்தில் நாட்டிய பள்ளியில் சேர்தல், பீர் குடிப்பது, புத்தக கடைகளை மேய்வது- வாங்குவது, படிப்பது என நேரம் செல்வதாக தன் சகோதரிக்கு எங்கெல்ஸ் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.\nஎங்கெல்ஸ் பி பி ஷெல்லி, பைரன், கோல்ரிட்ஜ் ஆகியவர்களின் கவிதையை விரும்பி படித்தார். ஷெல்லியின் கலகக்குரல் அவரை வசிகரித்தது. ராணி மாப் போன்ற ’குடியரசை, மதத்தன்மையற்ற, லிபரல் சமுகத்தை’ கட்டியமைக்கும் குரலில் ஈர்ப்பு ஏற்பட்டது. ஷெல்லியின் விடுதலை பாடல் போன்று எழுதிப்பார்த்தார். என்னால் தூங்க முடியவில்லை. விடுதலை குறித்த குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது என்று சகோதரிக்கு எழுதினார் எங்கெல்ஸ். அந்நிய கலாச்சார ஊடுருவலால் தடுமாறிப்போன பெடோயின் மக்கள் பற்றிய கவிதை தொகுப்பை அவர் முதலில் வெளியிட்டார். இதிகாச வகைப்பட்ட நாடகம் ஒன்றை ஜெர்மனியின் பழமையான நாட்டுப்புற கதாநாயகனை வைத்து எழுத முயற்சித்து பாதியிலேயே கைவிட்டார்.\nஹெகலின் டயலக்டிக்ஸ் எங்கெல்சிடம் வேர்பிடிக்க துவங்கியது. நிரந்தரமான நீடித்த காலாகாலத்திற்குமான உண்மை- புனிதம் என்பதெல்லாம் இல்லை. அனைத்தும் மாறக்கூடிய கட்டங்களைக்கொண்டுதான் இருக்கின்றன என்பது அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்தது. கிறிஸ்துவம் அல்லது மதம் என்பது இனி காரணகாரிய விமர்சனத்திற்கு அப்பால் வைக்கப்படமுடியாதது என்கிற கருத்தும் அவரை தொட்டது. பெர்லினில் நேரடி மாணவனாக இல்லாதபோதும் கல்லூரி வளாகத்தில், படிப்புக்கூடங்களில் கிளப்களில் நடக்கும் அறிவு விவாதங்களில் எங்கெல்ஸ் ஈடுபடுத்திக்கொண்டார். 1840ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் பிரடெரிக் லெஸ்ஸனர் எங்கெல்சை பற்றி ஆரடி உயரம். ஒல்லியான திரேகம். உடனடியாக எதையும் செய்யும் ஆற்றல், சுருக்கமாக அழுத்தமாக பேசும் பாணி, நிமிர்ந்து நின்று பார்த்து பேசும் பழக்கம் கொண்டவர் என வர்ணிக்கிறார்\n‘பீர் இலக்கியக்குழு’ என்கிற பெயரில் புருனோ பாயர், மாக்ஸ் ஸ்டிர்னர், புத்த அறிஞர் கார்ல்கோப்பன், கார்ல் நெளரிக், எட்வெர்ட் மேயன் என்கிற குழாமுடன் அவரும் இணைந்தார், செக்ஸ், ஒழுக்கம் என்பது குறித்தெல்லாம் இளைஞன் எங்கெல்சிடம் தாராளவாத சிந்தனைகள் இருந்தன. 1842 நவம்பரில் அவர் ரெயினிஷ் ஜெய்டுங் பத்ரிக்கை அலுவலகத்தில் முதன்முதலில் மார்க்சை சந்திக்கிறார். மார்க்ஸ் பாயர் சகோதரர்களுக்க்கு எதிரான நிலை எடுத்த நேரமது. பாயர்களுடன் தொடர்பில் இருந்த எங்கெல்ஸ்க்கு மார்க்ஸ் குறித்த சந்தேகங்களை அவர்கள் ஏற்படுத்தி இருந்ததாக அப்போதைய சூழலில் எங்கெல்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் அச்சந்திப்பும், தொடர் உரையாடல்களும் இருவருக்கும் வாழ்நாள் தோழமை எனும் பந்தத்தை தந்தன.\nஇங்கிலாந்தில் வளர்ந்துவரும் முதலாளித்துவம் தொழிலாளர்களை வஞ்சிக்கிறது என்கிற உணர்வில் சார்ட்டிஸ்ட் இயக்கம் உருவாகி வளரத்துவங்கியது. 1835-45 ஆண்டுகளில் பெரும் எதிர்ப்பு இயக்கங்கள் கட்டப்பட்டன. ஹெகலிய இடதுசாரிகள் தத்துவ உலகில் முன்னுக்கு இருந்தனர். அனைத்தும் மாறக்கூடியவை என்பது போராடுபவர்களுக்கு நம்பிக்கை தந்தது. இருக்கிற அரசாங்கம் இலட்சிய அரசாங்கம் என்கிற ஹெகலின் குரலை ஏற்க முடியாவிட்டாலும் அவரின் இயக்கவியல் ஈர்ப்பை ஏற்படுத்தியது. 1840 களின் துவக்கத்தில் தான் தினம் மாலை ஹெகல் புத்தகங்களுடனேயே இருந்ததாக எங்கெல்ஸ் கூறினார். ஹெகல் சாலையில் நான் பயணித்துவருகிறேன் என தன் நண்பர்களுக்கு எழுதினார். கிறிஸ்துவ மதம் குறித்து விமர்சனபூர்வமாக வெளிவந்த எழுத்துக்கள் அவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தின. பைபிள் முரண்பாடுகளின் தொகுப்பு என்று நண்பர்களிடம் பேசலானார். தந்தைக்கு கவலை அதிகரித்தது.\nஹம்பர்க் டெலிகிராப் என்கிற முற்போக்கு இலக்கிய பத்ரிக்கை ஒன்றில் எங்கெல்ஸ் எழுத துவங்குகிறார்.. சில ஜெர்மானிய கவிஞர்களை அவர் விமர்சித்து எழுதினார். இரவின் கொடுமை எவ்வளவு நாட்களுக்கு.. குருட்டு மனிதர்களாக இருட்டில் உழல்கிறோம் போன்ற கவிதை வரிகளையும் அவர் தந்தார். தனக்கு கவித்துவ நடை வாய்க்கவில்லை எனவும் அவர் சொல்லிவந்தார். உப்பர்டால் கடிதங்கள் என்கிற பதிவை அவர் புனைபெயரில் எழுதினார். பிரடெரிக் ஆஸ்பால்ட் என்கிற பெயரிலும் சில எழுதியதாக அறியமுடிகிறது. பிரஷ்யா அரசர் குறித்து கடும் விமர்சன பார்வை அவரிடம் வரத்துவங்கியது இளவரசர் என சொல்லிவரும் எவனுக்கும் மரணதண்டனை தரவேண்டும் என்கிற கோப வெளிப்பாட்டை அவர் கொண்டிருந்தார்.\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes 2\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes 3\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some Notes ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\nஎங்கெல்ஸ் சில குறிப்புகள் Engels- Some ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2013/07/how-to-use-googles-free-internet.html", "date_download": "2018-08-17T22:36:25Z", "digest": "sha1:PFZ67YCS63HYAIW77U3KNE47ZSMZTHEF", "length": 6053, "nlines": 121, "source_domain": "www.tamilcc.com", "title": "How to use Google's Free Internet", "raw_content": "\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிம...\nகடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nSIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்பட...\nDialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dial...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்...\nNSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும...\nவடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Can...\nவேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள்...\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் ...\nஉலகின் மிக உயரமான Burj Khalifa (டுபாய்) கட்டிடத்தை...\nஉங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://www.tamillocal.com/rajani-politic/", "date_download": "2018-08-17T22:27:05Z", "digest": "sha1:KFHWQTQDQK7RLWX4Q6VZP5VPBSUBAYX7", "length": 4085, "nlines": 95, "source_domain": "www.tamillocal.com", "title": "அரசியலில் வருவது குறித்த ரஜினியின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் பெண் - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nHome > Blog > அரசியலில் வருவது குறித்த ரஜினியின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் பெண்\nஅரசியலில் வருவது குறித்த ரஜினியின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் பெண்\nதனது ரசிகர்களை இன்று சந்தித்த ரஜினிகாந்த் கிட்ட தட்ட தான் அரசியலுக்கு வரப்போகின்றேன் என்பதை நேரடியாகவே சொல்லிவிட்டார். அவரது ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெண் ஒருவரின் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.\nஅதில் ”அரசியலுக்கு வருவது இருக்கட்டும் முதலில் நீங்க நடித்த படங்களில் என்ன நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள் உங்களை பார்த்த பல பேர் புகை மது பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்துள்ளனர்” என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇன அழிப்பிற்கு நீதி கேட்டு ஒன்று கூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10501", "date_download": "2018-08-17T22:49:55Z", "digest": "sha1:7YH3FVB2VG6VSZJVIDJHUHGJQNIO7OCP", "length": 3760, "nlines": 53, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.Com-LatestNews- தீவிரவாதி கசாப் புனே சிறைக்கு மாற்றப்படுவான்: மும்பை போலீஸ்", "raw_content": "\nதீவிரவாதி கசாப் புனே சிறைக்கு மாற்றப்படுவான்: மும்பை போலீஸ் 2010-10-05\nபுனே: மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை புனே, மரத்வாடா சிறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 160திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மும்பையில் அமைக்கப்பட்டு வரும் மோனோரயில் திட்டத்தில் ரயில் பாதை சிறை இருக்கும் பகுதி வழியாகச் செல்வதால் இது பாதுகாப்பானது அல்ல என்று கருதி கசாபை மும்பை சிறையிலிருந்து மாற்ற முடிவு செய்துள்ளனர். இதன்படி, கசாப் மும்பை சிறையிலிருந்து இன்னும் 2 மாதங்களுக்குள் புனேயிலுள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்படுபான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/2279", "date_download": "2018-08-17T23:04:50Z", "digest": "sha1:D3CBBTXO4FX5APYWC3A6M7DYBQXGPOI7", "length": 13006, "nlines": 119, "source_domain": "www.tamilan24.com", "title": "வரலாற்றில் இன்று : 13.06.2018 | Tamilan24.com", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவரலாற்றில் இன்று : 13.06.2018\nஜூன் 13 கிரிகோரியன் ஆண்டின் 164 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 165 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன.\n1871 – லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\n1881 – ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.\n1886 – பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.\n1886 – பாவாரியாப் பேரரசன் இரண்டாம் லுட்விக் மியூனிக்கின் ஸ்டார்ன்பேர்க் ஆற்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டான்.\n1917 – முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.\n1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.\n1934 – ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.\n1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.\n1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.\n1952 – சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.\n1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.\n1978 – இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்.\n1981 – லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்த்தான்.\n1983 – பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.\n2006 – நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.\n2007 – திருகோணமலையில் மேர்சி கோப்ஸ் என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.\n1831 – ஜேம்ஸ் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (இ. 1879)\n1897 – ஜெப்ரி ஃபார்ன்பீல்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1974)\n1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996)\n1944- பான் கி மூன், ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளர்\n1966 – கிரிகோரி பெரல்மான், ரஷ்யக் கணிதவியலாளர்\n1969 – சார்ல்ஸ் ஃபோர்வார்ட் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.\n1987 – ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்\n1972 – கியோர்க் வொன் பெக்கெசி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)\n2012 – மெஹ்தி ஹசன் ஓர் பாக்கித்தானிய கசல் பாடகரும் முன்னாள் லாலிவுட் திரைப்பட பின்னணிப் பாடகர். (பி. 1927)\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nfpep3dharmapuri.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-08-17T22:21:04Z", "digest": "sha1:JU2BNFB6V3NXJRETLYSLKNNTZNSFODBN", "length": 6552, "nlines": 140, "source_domain": "nfpep3dharmapuri.blogspot.com", "title": "NFPE P3 DHARMAPURI DIVISION : கோட்ட சங்கத்தின் தொடர் வெற்றி !!!", "raw_content": "\nகோட்ட சங்கத்தின் தொடர் வெற்றி \nஅன்பு தோழர்களே தோழியர்களே ,\nநம் கோட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான (கடந்த ஓர் ஆண்டாக )பொம்மிடி துணை அஞ்சல் அலுவலகத்தின் குடிஇருப்பு பகுதி அடிப்படை வசதிகள் இல்லாததை தொடர்ந்து சுட்டி காட்டியதின் விளைவாக தற்போது dequaterisation செய்யபட்டுள்ளது .இதற்கு ஆவண செய்த தருமபுரி கோட்ட நிர்வாகத்திற்கும், இதற்கு துணை நின்ற நமது மாநில அஞ்சல் 3 -க்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .\nஇது போன்று அடிப்படை வசதிகள் இல்லாத B.AGRAHARAM ,MENISI ,KAMBAINALLORE மற்றும் Buddireddipatti அஞ்சல் அலுவலகங்களை dequaterisation செய்து தருமாறு சங்கத்தின் சார்பாக கோட்ட நிர்வாகத்தை கேட்டுகொள்கிறோம் .\nED களின் உயிரோடு விளையாடா தீர்கள் \nஅஞ்சல் மூன்று மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கு அவசர ...\nகோட்ட சங்கத்தின் தொடர் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/04/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%83/", "date_download": "2018-08-17T23:31:15Z", "digest": "sha1:BL5MUHMKFYE3RYRJ6CRRUDGUJP7M2TCZ", "length": 8997, "nlines": 103, "source_domain": "peoplesfront.in", "title": "காஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி! – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nகாஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்\nகாஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி\nதமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்\nமுன்னெடுப்பில் மெழுகுவர்த்தி அஞ்சலி அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் வழங்கப்பட்டது.\nமதுரை மாநகர் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரியைச் சந்தித்து மெழுகுவர்த்தி அல்லாத அஞ்சலிக் கூட்டம் அனுமதி பெற்று நடத்தப்பட்டது.\nகம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி அவர்களின் 3வது ஆண்டு வீரவணைக்கப் பொதுக்கூட்டம் – மதுரை கருமாத்தூரில் நடைபெற்றது.\nதி நகர் போக்குவரத்து காவல்நிலையம் முற்றுகை 16 தோழர்கள் கைது, புழல் சிறையில் அடைப்பு\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – நெல்லையில் தயாரிப்பு கூட்டம்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதூத்துக்குடி படுகொலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் குடவாசலில் சாலை மறியல்\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு – தோழர் மீ.த.பாண்டியன்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://peoplesfront.in/2018/08/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-08-17T23:32:27Z", "digest": "sha1:HPDOLQA6WJSZ3MNIOXLIRC32NSHEZWYJ", "length": 12287, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து உரையாற்றியதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று கைது செய்யப்பட்டு, இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 14 பேருக்கு வீரவணக்கக் கூட்டம் நடத்த வேண்டுமென்றால் கூட உயர்நீதிமன்ற அனுமதி பெற வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் விமானநிலையத்திலேயே கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆறு பேர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. எட்டுவழிச்சாலைக்கு எதிரான கருத்துச் சொல்லும் சனநாயக உரிமை பறிக்கப்பட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு, தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. நடைப்பயணம் தொடங்கிய சிபிஐ-எம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் எமது தமிழ்த்தேச மக்கள் முன்னணி பரப்புரை இயக்கப் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை தற்போது அனுமதி மறுத்துள்ளது. தற்போது வெளிநாட்டில், ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் பேசியதற்காக தோழர் திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த ஆண்டு குண்டர் சட்டம் போட்ட அரசு, தற்போது தேசத்துரோக வழக்குப் போடுகிறது. தமிழ்நாட்டில் நிலவும் அரசு அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் இயக்கங்கள் ஓரணியில் திரள தமிழ்த்தேச மக்கள் முன்னணி, அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறைகூவல் விடுக்கிறது\nஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nதி நகர் போக்குவரத்து காவல்நிலையம் முற்றுகை 16 தோழர்கள் கைது, புழல் சிறையில் அடைப்பு\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் தியாகு உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nகாவேரி மீட்க தஞ்சை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் – தமிழநாடு மாணவர் இயக்கம் தோழர்கள் பங்கேற்பு\nதமிழக மக்களின் முதுகில் குத்திய பா.ஜ.க.அரசு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nதோழர் கோவை ஈஸ்வரனுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=07bdc6fa3a0c8406f8f916cfc9faa592", "date_download": "2018-08-17T23:09:22Z", "digest": "sha1:V6VY4F6DBJQLQCEQCMRKELNBVVB5XT62", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=e2605bce9439f8b2994f862fe8a68af5", "date_download": "2018-08-17T23:09:25Z", "digest": "sha1:R6SQUIHP5N7HFSGIXTBNP4MPFLQI6XM3", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=89b505e875370438d830a7cde91d281e", "date_download": "2018-08-17T23:09:28Z", "digest": "sha1:JG6WLCGKBLRJR3GPLYORZQMNQOSEJAKL", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=1dd53df1a680ba1f921f57e18e393729", "date_download": "2018-08-17T23:09:02Z", "digest": "sha1:DPL2Q3V3L36FCHDEUEQAREXJRTXDUTKC", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E2%80%98%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%99-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-17T22:39:02Z", "digest": "sha1:XN2GVUMUT6TWSZ46KMREVYOWGU7QSB6N", "length": 4922, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி! | Sankathi24", "raw_content": "\n‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி\nகடல் குதிரைகள்’ திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி இன்று வெளியாகியிருக்கிறது.\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஇயக்குனர் பாரதிராஜாவின் \"ஒம்\" பாடல் வெளிீட்டு விழா\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின்\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் அஜீத்\nபோனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கத் தயாராகியுள்ளார்\nஎன்னால் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது - அமலாபால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால்\nநிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம்\nபாடலாசிரியர் பா.விஜய், பட விழாவில் கூறியிருக்கிறார்.\n80 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா\nசமந்தா திருமணத்துக்கு பின்பும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்\nஇளையராஜாவின் இசையை மருந்தாக்க மருத்துவர்கள் முயற்சி\nஎன் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும்\nஇயக்குனர்கள் நிறத்துக்காக பிறமொழி நடிகைகளை கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களா என்று சந்தேகப்படுவதாக கூறிய பாரதிராஜா, என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் என்றார்.\nஜோதிகாவின் படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்\nநடிகை ஜோதிகா – நடிகர் விதார்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் ‘காற்றின் மொழி’ படத்தில்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.itsmygame.org/999970871/physics_online-game.html", "date_download": "2018-08-17T22:24:18Z", "digest": "sha1:Z6AUFLU2O23UTW3F6HXSIIJ5VG46NXC2", "length": 9621, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இயற்பியல் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட இயற்பியல் ஆன்லைன்:\nஅதனால் கியர்கள் இணைக்க ஒரு குறிப்பிட்ட வேகத்தில் குறிப்பிட்ட முறுக்கு. விகிதத்தில் கியர்கள் மதிப்பு பாதிக்கிறது. . விளையாட்டு விளையாட இயற்பியல் ஆன்லைன்.\nவிளையாட்டு இயற்பியல் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இயற்பியல் சேர்க்கப்பட்டது: 21.03.2012\nவிளையாட்டு அளவு: 1.41 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இயற்பியல் போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இயற்பியல் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இயற்பியல் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இயற்பியல், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இயற்பியல் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.okynews.com/2013/02/blog-post_5655.html", "date_download": "2018-08-17T22:39:41Z", "digest": "sha1:V3PX2BP6DBYCPKEXA7PNDN53TC3JBVPH", "length": 26054, "nlines": 212, "source_domain": "tamil.okynews.com", "title": "இஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக்குமா? - Tamil News இஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக்குமா? - Tamil News", "raw_content": "\nHome » World News » இஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக்குமா\nஇஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக்குமா\nபவஸ்தீனத்திற்கு வயது 64. உலக வரைபடத்தில் எகிப்து, சிரியா, ஜோர்தான், லெபனானுக்கு அருகில் சிறிய கோடொன்று இருக்குமே அதுதான் இஸ்ரேல். 64 ஆண்டுகளுக்கு முன்னருள்ள வரைபடத்தையோ, ஈ மொய்க்கும் வரைபடத்தையோ எடுத்து ஆராயாதிர்கள். ஒன்றில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது. மற்றதில் ஈ மொய்த்து மறைத்திருக்கக் கூடும். இந்த சிறு புள்ளி அரசியல்தான் உலகையே ஆட்டிப்படைக்கிறது.\nஇங்கே பலஸ்தீனத்தை பற்றி கேட்டால் அது வாய்மொழியாக மட்டுமே இருக்கிறது. தப்பித் தவறி உலக வரைபடத்தில் தேடிவிடாதீர்கள். அங்கே பலஸ்தீனம் இருக்காது. இஸ்ரேல் என்ற புள்ளிக்குள் மேற்குக்கரை என்று ஒரு கோணத்திலும் காசா என்று மற்றொரு கோணத்திலும் எழுதப்பட்டிருக்கும். இவைகளைச் சேர்த்துத்தான் பலஸ்தீனம் என்கிறார்கள்.\nஆனால் இதனை ஒரு நாடாக சொல்ல முடியாது. வேண்டுமென்றால் நாடுபோன்றது என்று வைத்துக்கொள்ளலாம். அடிப்படை பொருளாதார கட்டமைப்பு இல்லை, அரசியலமைப்பு ஒன்றில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலிடம் இருந்து இன்னும் சுதந்திரம் இல்லை. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு இஸ்ரேலால் போக முடியும், கட்டிடங்களை கட்ட முடியும். இவைகள் அத்துமீறலாக கூறப்படுவதில்லை. ஒரு இறையாண்மையுள்ள நாட்டுக்குள் இவ்வாறு நடப்பதை நீங்கள் கனவிலும் பார்க்க முடியாது. பலஸ்தீனம் என்பது வெறும் பெயரளவுதான்.\nபலஸ்தீனத்தில் ஏற்பட்ட வரலாற்றுத் துரோகங்கள் நீண்டது. மேற்கு நாடுகள், இஸ்ரேல் மட்டுமல்ல பலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறும் அயலில் இருக்கும் அனைத்து அரபு முஸ்லிம் நாடுகளும் இந்த துரோகத்திற்கு பங்குதாரர்கள்தான். இயலாமை, முதிர்ச்சியற்ற ராஜதந்திர நடவடிக்கை, ஆயுதத்தையும் மனிதரையும் மாத்திரம் வைத்துக்கொண்டு யுத்தம் செய்ய முடியும் என்று சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை போன்ற அரபு நாடுகளின் செயல்களால் இந்த 64 ஆண்டுகளில் பலஸ்தீன பிரச்சினை இன்னும் சிக்கலானதே ஒழிய வேறு எதுவும் நடக்கவில்லை.\n1350 ஆண்டுகள் கொண்ட அகன்ற இஸ்லாமிய சாம்ராஜ்யமான துருக்கியை மையமாகக் கொண்டு செயற்பட்ட உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கம்தான் இந்த பலஸ்தீனம். முஸ்தபா கமால் அதாதுர்க் இந்த சாம்ராஜ்யத்தை 1924இல் கேள்வி கணக்கின்றி கலைத்துவிட்டது மத்திய கிழக்கில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது என்பது வேறுகதை.\nஆனால் 1917 இல் பலஸ்தீனப் பகுதியை கைப்பற்றிய பிரிட்டன் அதனை ஐ.நாவில் இஸ்ரேலுக்கான நாடாக உருவாக்குவதில் சூட்சுமமாக செயற்பட்டு விட்டு 1948 மே 15ஆம் திகதி அங்கிருந்து மூட்டையை கட்டியது.\nஆனால் அதற்குள் பலஸ்தீன நிலம் குறித்து ஐ,நா ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தது. அதன் சுருக்கம் இந்த நிலத்தில் பலஸ்தீனம், இஸ்ரேலுக்கு பாதிபாதி இடம் புனித நகர் ஜெரூசலேம் சர்வதேச கட்டுப்பாட்டில் இருக்கும் என்றிருந்தது. ஆனால் இவையெல்லாம் வெறும் ஆவணத்தில்தான் இருந்தது. இதற்கு மாறாக பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒரு தினத்திற்கு முன்னரே அதாவது 1948 மே 14 ஆம் திகதி இஸ்ரேல் சுதந்திர பிரகடனத்தை செய்தது.\nஇதற்கு எதிராக அடுத்த தினமே அயல் நாடுகளான எகிப்து, ஈராக், ஜோர்தான், சிரியா, லெபனான், பலஸ்தீன் போராளிகள் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடுத்தது. எந்த யுத்த தந்திரமும் இல்லாமல் களமிறங்கிய அரபு நாடுகள் ஓர் ஆண்டாக நீடித்த போரில் அந்த சிறு நாட்டுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.\nஇதன் பின்னர் ஏற்பட்ட யுத்த நிறுத்தம்தான் சுவாரஸ்யமானது. சம்பவம் முடிந்த பின்னர் வரும் பொலிஸ்காரர் போல் தலையிட்ட ஐ.நா இந்த மோதலுக்கு முடிவு கட்டியது. இதன்போது செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்தத்தில் சம்பிரதாயமாக எந்தெந்த நாடுகள் எந்த இடம்வரை முன்னேறினார்களோ அதுவரை அவர்களுக்கு சொந்தமானது. இதனால் காசா வரை வந்த எகிப்து காசாவை எடுத்துக்கொண்டது. மேற்குக்கரை வரை வந்த ஜோர்தான் அதை கைப்பற்றியது. கிடைத்தது லாபம் என்று சுருட்டிக்கொண்டு அரபு நாடுகள் ஓட இஸ்ரேலுக்கு லாபம்தான். இந்த யுத்தத்தில் இஸ்ரேல் ஐ.நா வகுத்ததை விடவும் அதிக நிலத்தை கைப்பற்றியது. அவை அனைத்தையும் இஸ்ரேல் தனதாக்கிக் கொண்டது.\nஐ.நா தீர்மானித்த பாதிக்குப்பாதி நிலத்தை வைத்திருந்தால் கூட பலஸ்தீனம் என்ற நாடு கூடிய நிலப்பரப்புடன் அப்போதே உருவாகியிருக்கும். அரபு நாடுகள் இராஜதந்திரம், யுத்த தந்திரம் இல்லாமல் மூக்கை நூழைத்ததால் இருந்ததும் இல்லாமல் போய்விட்டது. இது இத்தோடு முடியவில்லை.\nபின்னர் சர்வதேச கப்பல்கள் செல்லும் சுயேஸ் கால்வாயை எகிப்து மூட அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ¤டன் இணைந்து 1956இல் எகிப்து மீது நடத்திய கடுமையான தாக்குதலால் அது மீண்டும் மூக்கை உடைத்துக்கொண்டது.\nஅரபு நாடுகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் இஸ்ரேல் தனக்கு சாதகமாகவே மாற்றிக்கொண்டது. 1967இல் இடம்பெற்ற ஆறு நாள் யுத்தம் அல்லது மத்திய கிழக்கு யுத்தம் அரபு நாடுகளின் முதிர்ச்சி இல்லாத செயலுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இஸ்ரேலை மீண்டும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்த அரபு நாடுகளுக்கு 1967 ஏப்ரல் 7ஆம் திகதி இஸ்ரேல் எதிர்பார்க்காத தருணத்தில் பதில் கொடுத்தது. அன்றைய தினம் சிரிய ஆளுகைக்குட்பட்ட கோலன் குன்றுக்குள் ஊடுருவி இஸ்ரேல் பிரச்சினையை பெரிதாக்கி ஒட்டுமொத்த கோலன் பகுதியையும் கைப்பற்றியது. இதன்போது இஸ்ரேல் சிரியாவின் 7 யுத்த விமானங்களை சுக்குநூறாக்கியது.\nஇதனையடுத்து எகிப்து, சிரியா, ஜோர்தான், யுத்தத்தில் இறங்கியது. ஈராக், சவூதி அரேபியா, குவைட், அல்ஜீரியா ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக படையை அனுப்பின. 1967ஆம் ஆண்டு ஜுன் 5 முதல் 10ஆம் திகதி வரைதான் உக்கிர மோதல் நீடித்தது. இஸ்ரேல் அதற்குள் தனக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டது. அதாவது 1948இல் இழந்த காசா மற்றும் மேற்குக் கரையை கைப்பற்றியதோடு எகிப்துக்கு சொந்தமான சினாய் சிரியாவுக்கு சொந்தமான கோலன் குன்றுகளையும் ஆக்கிரமித்தது.\nஇந்த யுத்தத்தில் இஸ்ரேல் இழந்த இராணுவத்தின் எண்ணிக்கை வெறும் 338தான். ஆனால் எகிப்து 15 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்தது. ஜோர்தான் தரப்பில் 800 வீரர்களும் சிரியாவின் 2500 வீரர்களும் பலியாகினர். யுத்தம் என்பது ஆயுதம், மனிதர்களை வைத்து நடத்தும் தெருச் சண்டை அல்ல என்று அரபு நாடுகள் மீண்டும் ஒருமுறை புரிந்துகொண்டது.\nஇஸ்ரேல் 1967ஆம் ஆண்டு கைப்பற்றிய மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் பகுதிகளில் இஸ்ரேல் இன்றுவரை தன்பாட்டுக்கு யூதக்குடியிருப்புகளை அமைத்து தமது நிலப்பகுதியாக மாற்றிவருகிறது. காசாவிலிருந்து 2005 ஆம் ஆண்டு இஸ்ரேல் வெளியேறினாலும் இந்த பகுதி மீது பொருளாதார, பயணத் தடைகளை விதித்து நச்சரித்து வரும் இஸ்ரேல் நினைத்த நேரத்தில் குண்டுகளையும் போட்டு செல்கிறது.\nஇஸ்ரேல் யுத்தபலத்திற்கு முன்னால் மத்திய கிழக்கு நாடுகளால் இன்றும் நின்று பிடிக்க முடியாதுள்ளது. இதனால் இஸ்ரேலின் அநியாயங்களுக்கு அவைகளால் அறிக்கைகள்தான் விட முடிகிறது.\nஇலங்கையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது\nகலாநிதி ரீ.பீ.ஜாயா அவர்கள் முஸ்லிம்களின் கல்வி வளர...\nபுதிய பிரதம நீதியரசர் கடந்த 15ல் பதவியேற்றார்\nமழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம...\nஇப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும...\nகலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் கா...\nமுஸ்லிம்கள் இலங்கைக்கு ஆற்றிய பணி சிறப்பானது என பி...\n30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரியாக வந்து அதிர்ச்சி...\nதுப்பாக்கியுடன் ஒபாமா – வெளியிட்டது வெள்ளை மாளிகை\nஇஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக...\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் க...\nறிசானாவின் மரண தண்டனையும் இஸ்லாமிய பார்வையும்\nசிறைப்பறவை ஒன்று சொன்ன உண்மைகள்\nஇலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்கு...\nகலைஞர்களை கௌரவிக்கும் ஹாசிம் உமர் என்னும் மனிதர்\nஒரு கைதியின் டையரி - உண்மைச் சம்பவம்\nஎனது காலைப் பொழுது - சிறுவர் கதை\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவ...\nவரிகள் இல்லாத மௌனங்கள் - கவிதை\nஉன்னைத் தேடுகின்றேன் - கவிதை\nவிதி வரைந்த ஓவியம் - கவிதை\nகல்யாணப் பெண் - கவிதை\nஇனிய தமிழில் இஸ்லாம் - கவிதை\nகாதல் தந்த வலி - கவிதை\nஉயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள...\nவெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்ப...\nவின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sahabudeen.com/2013/11/blog-post.html", "date_download": "2018-08-17T22:31:41Z", "digest": "sha1:Q2ZEAABTRFAEH3XDCPJIIF3SQNSKY2CQ", "length": 26292, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பழைய கார் வாங்குவது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபழைய கார் வாங்குவது எப்படி\nபழைய கார் வாங்குவது எப்படி\nதனக்கென ஒரு புதிய கார் வாங்கி, அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கினால், மாதா மாதம் கணிசமான இ.எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பாலான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல்லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்' எனச் சொல்லப்படும் 'பழைய கார்' நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், வாங்கும் பழைய காரிலும் புத்தம் புதிய காரின் ஃபீல் கிடைக்கும்\nபுத்தம் புதிய கார் வாங்க ஷோ ரூம் போனால், அங்கு நீங்கள்தான் ராஜா. உங்களுக்கு காரைப் பற்றி எடுத்துச் சொல்ல சேல்ஸ் ஆபீஸர் இருப்பார். உங்கள் வீடு தேடி டெஸ்ட் டிரைவ் கார் வரும். ஆனால், பழைய கார் விஷயத்தில் அப்படிக் கிடையாது. நீங்கள்தான் அலைந்து திரிந்து தகவல்களைப் பெற வேண்டும். அதிலும், நீங்கள் உடனடியாக முடிவு எடுத்துவிட முடியாது. நல்ல கண்டிஷனலில் இருக்கும் காரா ஆக்ஸிடென்ட் ஆகாத காரா இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன் எல்லாம் சரியாக இருக்குமா என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதைக் குடையும். அதனால், கார் வாங்கச் செல்வதற்கு முன்பு, தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்.\nபழைய கார் விஷயத்தில், முதலில் நீங்கள் திட்டமிட வேண்டியது பட்ஜெட்தான். 'கார் என் கைக்கு வருவதற்கு முன் இந்தத் தொகைதான் என்னால் செலவு செய்ய முடியும். இதற்கு மேல் செலவு வைக்கும் என்றால், அந்த கார் எனக்கு வேண்டாம்' என்று திட்டவட்டமாக முடிவெடுங்கள். பட்ஜெட் விஷயத்தில் சரியாகத் திட்டமிடவில்லை என்றால் என்ன ஆகும் ஒரு பழைய கார் ஐந்து லட்சத்துக்கு விற்பனைக்கு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 'சார், ஒரு 75,000 எக்ஸ்ட்ரா போட்டா, அதைவிட நல்ல கார் ஒண்ணு இருக்கு. அதைப் பார்க்கலாமா ஒரு பழைய கார் ஐந்து லட்சத்துக்கு விற்பனைக்கு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 'சார், ஒரு 75,000 எக்ஸ்ட்ரா போட்டா, அதைவிட நல்ல கார் ஒண்ணு இருக்கு. அதைப் பார்க்கலாமா\nலட்சங்களில் டீல் செய்யும்போது, 75,000 ரூபாய் உங்களுக்குப் பெரிதாகத் தெரியாது. அந்த காரையும் பார்க்கிறேன் என கடைசி வரை கார்களைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். கடைசியாகப் பார்த்த காரின் விலை 8 லட்சத்தில் வந்து நிற்கும். மதில் மேல் பூனை போல, எந்த காரையும் வாங்க மனமில்லாமல் குழம்பிக்கொண்டே இருப்பீர்கள். அதனால், பட்ஜெட் விஷயத்தில் கறாராக இருப்பதே நல்லது பட்ஜட்டைப் பொருத்து காரின் செக்மென்டைத் தேர்வு செய்யலாம். செக்மென்டைப் பொருத்தும் பட்ஜெட்டைத் தீர்மானிக்கலாம். எம்யூவி, எஸ்யூவி, செடான், ஹேட்ச்பேக், சின்ன கார் என ஐந்து செக்மென்ட் கார் வகைகள் இருக்கின்றன\nபழைய கார் சந்தை, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்ல அரசு இதைக் கண்காணிப்பதும் இல்லை. டீலருக்கு இது தொழில். உங்களுக்கு இது கனவு. டீலர் உங்களை ஒரு வாடிக்கையாளராகத்தான் அணுகுவார். ஆனால், அவருடைய நடத்தை ஒரு நண்பனைப் போல இருக்கும். டீலரிடம் பழைய கார் வாங்கச் செல்லும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா வியாபாரத்தைப் போல, இதிலும் ஏமாற்றுப் பேர்வழிகள் இருப்பார்கள். விபத்துக்குள்ளான காரைச் சரி செய்து, பெயின்ட் அடித்து புதிய கார் போல் மாற்றி விற்பவர்களும் உண்டு. உங்களால் இது விபத்தான கார் எனப் மேலோட்டமாகப் பார்த்தால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால், உங்களுடன் ஒரு தேர்ந்த மெக்கானிக் அல்லது ஆட்டோமொபைல் விஷயங்கள் அறிந்த நண்பரை அழைத்துச் செல்வது நல்லது. அரிதான சமயங்களில், பழைய கார் டீலர்களிடம் சிறந்த விலைக்கு நல்ல காரும் வாங்கலாம்\nபழைய கார் டீலர்களில் இன்னொரு வகையினர் உண்டு. கார் நிறுவனங்களே பழைய கார் டீலர்களாகச் செயல்படுகிறார்கள். டொயோட்டா - யு-டிரஸ்ட், ஹூண்டாய் - அட்வான்டேஜ், ஹோண்டா - ஆட்டோ டெரஸ், டாடா - அஷ்யூர், மஹிந்திரா - எக்ஸ் மார்ட், ஃபர்ஸ்ட் சாய்ஸ், செவர்லே - ஓகே, மாருதி - ட்ரூ வேல்யூ போன்ற நிறுவனங்கள் இப்படிப் பட்ட அமைப்புகள். இவர்களிடம் கார் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. இவர்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போவதை விரும்ப மாட்டார்கள். எனவே, உங்களுக்கு இங்கே நல்ல கார் கிடைக்கும். மேலும் வாரன்டி, சர்வீஸ் போன்றவையும் கிடைக்கும். ஆனால், விலை கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.\nடீலர் வேண்டாம்; அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மூலமாகவோ கார் வாங்க விரும்பினால், முதலில் ஓனரின் வீட்டுக்கு விருந்தாளி போலச் சென்று காரைப் பார்த்து வரலாம். அறிமுகமானவர்களுக்குள் நடக்கும் விற்பனை என்பதால், இரு தரப்பினரும் விலையில் விட்டுக் கொடுத்துப் போவார்கள். திருப்தி ஏற்படும் பட்சத்தில், கார் வாங்கும் படலம் இரு தரப்பினருக்கும் நல்ல அனுபவமாக அமையும். சில சமயங்களில், தெரிந்த நபர் மூலம் தெரியாத யாராவது கார் விற்க இருக்கும் தகவல் வரலாம். அவரிடம் நீங்கள் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், கார் வாங்கும்போது நீங்கள் குறைந்த விலைக்கு நல்ல காரை வாங்கலாம்.\nஇப்போது இருக்கும் விலை நிலவரத்துக்கு, இதுதான் எல்லோருக்கும் பெரிய கேள்வி. 'காரை அடிக்கடி ஓட்டுவீங்க, ஒரு நாளைக்கே குறைந்தது ஐம்பது கி.மீட்டருக்கு மேலே சுற்றுவேன்... அப்படீன்னா, டீசல் எடுத்துக்குங்க சார். ஆனா, காரையே எப்பவாவதுதான் ஓட்டுவேன். அதுவும் லாங் ட்ரிப்புக்குத்தான்னா பெட்ரோல்தான் உங்களுக்கு சரியா இருக்கும் சார்' - காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் இந்த வசனம் ஓரளவுக்கு உண்மை என்றாலும், இது கொஞ்சம் பழைய கார்களுக்குத்தான் சரி டீசல் கார் என்றாலே மெயின்டெனன்ஸ் அதிகம், சத்தம் அதிகம், அடிக்கடி செலவு வைக்கும் என்பார்கள். ஆனால், இப்போது இருக்கும் லேட்டஸ்ட் டீசல் இன்ஜின்கள் ஸ்மூத்தாகவும், சத்தம் குறைவாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜினுக்கும், டீசல் இன்ஜினுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளைத் தவிர, இரண்டும் இப்போது கிட்டத்தட்ட ஒரே தரத்துக்கு வந்து விட்டன.\nஎனவே, டீசல் கார்தான் வேண்டும் என்றால், முடிந்தவரை குறைந்த கிலோ மீட்டர்களே இயங்கிய லேட்டஸ்ட் மாடலாக எடுப்பது நல்லது. பெட்ரோல் கார் என்றால், சர்வீஸ் இன்டர்வெல் சரியாக உள்ள காராகத் தேர்ந்தெடுங்கள்.\nமறக்காமல் டெஸ்ட் டிரைவ் செய்துவிடுங்கள். இது காரினுள் இருக்கும் பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க உதவும். காரில் ஏதாவது அப்-நார்மல் சத்தம் வருகிறதா எனக் கவனியுங்கள். நீங்களேகூட சில விஷயங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம். மேடு- பள்ளங்களில் ஓட்டிப் பாருங்கள். இது சஸ்பென்ஷன் நல்ல நிலைமையில் உள்ளதா என அறிய உதவும். பிரேக், கிளட்ச் போன்றவற்றை நன்றாகச் சோதியுங்கள். வேகமாக ஓட்டிப் பார்த்து, கார் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பாருங்கள்\nகார் ஓனரிடம் சர்வீஸ் ரெக்கார்டுகளை வாங்கிப் பாருங்கள். இது, கார் சரியாகப் பராமரிக்கப்பட்டு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள உதவும். மேலும், எதற்காவது இன்ஷூரன்ஸ் கிளைம் செய்திருக்கிறார்களா என்று விசாரியுங்கள். சர்வீஸ் வரலாறைப் பார்த்தால், முக்கியமான பாகம் இதற்கு முன்பு பழுதாகி உள்ளதா எனக் கண்டு பிடிக்கலாம்.\nகார் வாங்கியவுடன் பலரும் வேலை முடிந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் நிஜம் அப்படி இல்லை. கல்யாணத்தில் தாலி கட்டிய பிறகும் எப்படி எண்ணற்ற சடங்குகள் இருக்கிறதோ, அது போல கார் வாங்கிய பிறகும் சில சடங்குகள் உண்டு. முதலில் என்.ஓ.சி, இன்ஷூரன்ஸ், டெலிவரி நோட், ஓனர்ஸ் மேனுவல், ஆர்.சி போன்ற சமாச்சாரங்களை எல்லாம் கைப்பற்றுங்கள். தாமதம் செய்யாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் சென்று, காரை உங்கள் பெயருக்கு மாற்றிப் பதிவு செய்யுங்கள். அதன் பின்பு, இன்ஷூரன்ஸ் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண் டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு சென்று, முழுமையாக செக்-அப் செய்து விடுங்கள்.\n ஆசைதான் நிறைவேறியாச்சே... காரில் பயணிப்பதை குடும்பத்துடன் ரசித்து அனுபவியுங்கள்\nமுதல் உதவி செய்வது எப்படி\nகவனம் : பால் வாங்கும் முன் \nபெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nபெட்ரோல் டீசல் எது லாபம்\nஉங்க டூத் பேஸ்ட்டில் ஆரோக்கியம் இருக்கா\nகுழந்தையின் அழுகை சொல்லும் செய்தி என்ன\nகொழுக் மொழுக் குழந்தை அழகா\nபழைய கார் வாங்குவது எப்படி\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/user/tamil-padi/uyireluthu.php", "date_download": "2018-08-17T22:48:35Z", "digest": "sha1:OPEO536AGOFRPPPMIL7QSTMJCCCXBZ7M", "length": 5285, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் உயிரெழுத்துக்கள் (Tamil Uyireluthukkal) | 12 உயிர் எழுத்துக்கள் (Uyir Eluthukkal) - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் படி >> உயிரெழுத்துக்கள்\nதமிழ் உயிரெழுத்துக்கள் (Tamil Uyireluthukkal)\nதமிழ் உயிரெழுத்துக்கள் (Tamil Uyireluthukkal) மொத்தம் 12. உயிர் எழுத்து தனித்து இயங்கும் சொல் ஆகும் (ஈ, மா, வை) உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை.\nஎழுத்து.காம் இணையத்தள புத்தகம் வழியாக 12 தமிழ் உயிரெழுத்துக்கள் கற்றுக்கொள், பிறருக்கும் கற்பி. Learn tamil uyir eluthukkal online.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/16183717/Cabinet-nod-to-array-of-agreements-on-rly-medicine.vpf", "date_download": "2018-08-17T22:21:04Z", "digest": "sha1:ABXPWP37BVZRLDGOPGQICXKSXG6AUFLY", "length": 9965, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cabinet nod to array of agreements on rly, medicine, law || ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெயில்வே உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல் + \"||\" + Cabinet nod to array of agreements on rly, medicine, law\nரெயில்வே உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nரெயில்வே, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நாடுகளுடனான ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. #UnionCabinet\nமத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்திய ரெயில்வே துறை மற்றும் பிரான்ஸ் நாட்டிலுள்ள எஸ்.என்.சி.எப். நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இது ரெயில்வே துறையில் தொழில் நுட்ப ஒத்துழைப்பிற்கு பயன்படும்.\nரெயில்வே பிரிவில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் விவரங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு இந்திய ரெயில்வேக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.\nஇந்தியா மற்றும் மொராக்கோ இடையேயான சட்ட துறையில் ஒத்துழைப்பு, சுவாசிலாந்து இடையேயான சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைக்கான ஒத்துழைப்பு மற்றும் சூரிநேம் நாட்டுடன் தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாக துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்தியா மற்றும் ஈகுவாடோரியல் கினியா இடையேயான மருத்துவ செடிகள் துறையில் ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையை தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்\n2. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n3. கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய தொழில் அதிபர்\n4. வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்த சிறுத்தை குட்டி\n5. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-sep-16/fitnes", "date_download": "2018-08-17T22:29:40Z", "digest": "sha1:5BNBTESIJYSDQ7FRBHKJQJUPOJ3I6ESH", "length": 14342, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன் - Issue date - 16 September 2017 - ஃபிட்னஸ்", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nடாக்டர் விகடன் - 16 Sep, 2017\nஉற்சாகத்துக்கும் ஊட்டத்துக்கும் உலர் பழங்கள்\nபெட் தெரபி... செல்லங்களே தரும் சிகிச்சை\n - உங்கள் எடை கூடும்\nஎதையும் தாங்கும் இதயம் பெறுவோம்\nமிகை எதார்த்தம் எதிர்பார்ப்புகள் கூட்டும் எதிர்கால மருத்துவம்\nகர்ப்பகால முதுகுவலி - ஹார்மோன் மாறுதல்களும் காரணமாகலாம்\n - செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்\nஎந்தப் பிரச்னைக்கு எப்போது பரிசோதனை\n” - மாற்றங்களுக்கான மருத்துவர் ஐஸ்வர்யா\nமணல் கொசு கருப்புக் காய்ச்சல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் குறைகிறது எடை\nடாக்டர் டவுட் - வாய்ப்புண்\nகை கால்களை உறுதியாக்க உதவும் பேண்ட் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 17\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nகை கால்களை உறுதியாக்க உதவும் பேண்ட் பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98379-tamilnadu-received-highest-foreign-tourist-footfall-in-2016.html?artfrm=prev_btm", "date_download": "2018-08-17T22:20:43Z", "digest": "sha1:U3HVKXOD5C54JWSETUZSU6AL5HPWL4NG", "length": 19006, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "மவுசு இழக்காத தமிழகம்: சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவில் நம்பர் 1 | Tamilnadu received highest foreign tourist footfall in 2016", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nமவுசு இழக்காத தமிழகம்: சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவில் நம்பர் 1\nஅரசியல் சர்ச்சைகளில் சிக்கி தமிழ்நாடு மதிப்பிழந்துவிட்டதாகத் தோன்றினாலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.\n2016-ம் ஆண்டு தமிழகத்துக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 47.22 லட்சம். இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், 19 சதவிகிதம் பேர் தமிழகத்துக்கு வருகைதருகின்றனர். இரண்டாவது இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை உத்தரப்பிரதேசமும் பெறுகின்றன.\nதென்மாநிலங்களில், கேரளாவுக்கு 10.38 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அதாவது, 4.2 சதவிகிதம். தமிழகத்துக்கும் கேரளாவுக்குமிடையேயான வித்தியாசம், மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள், அதிக அளவில் தமிழகத்துக்கு விரும்பி வருகை தருகின்றனர். அதேபோல மலேசியா, மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தமிழகத்துக்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், தொடர்ந்து 3-வது ஆண்டாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருக்கிறது, தமிழகம்.\nதமிழ்நாட்டுக்கு 3 கோடியே 43 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2016-ம் ஆண்டு வருகைதந்திருக்கின்றனர். இதிலும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தை ஆந்திராவும், அடுத்த இடத்தை உத்தரப்பிரதேசமும் பெறுகின்றன.\nஇந்தத் தகவலை, மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த வார தொடர் விடுமுறையைக் குழந்தைகளுடன் எப்படி கொண்டாடலாம்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.Know more...\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமவுசு இழக்காத தமிழகம்: சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவில் நம்பர் 1\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்\nநீட் தேர்வுக்கு சி.டி வடிவில் கையேடு\n''அதிகார மமதையில் ஆணவத்தோடு மத்திய அமைச்சர் பேசுவதா நீட் விவகாரத்தில் வைகோ ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gossip.sooriyanfm.lk/10636/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-08-17T23:36:12Z", "digest": "sha1:J5NL5KVNOXW3TK5FF7WCDUJF7CCNMYQT", "length": 12717, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்\nSooriyan Gossip - 300 முதலைகளை பழி தீர்த்த மக்கள்... காரணம் இது தான்\nஇந்தோனேஷியாவில் உள்ள கிராமம் ஒன்றில் 300 முதலைகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பகுதியில் உள்ள நபர் ஒருவரை, முதலையொன்று விழுங்கியுள்ளது.\nஇதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த முதலை வசித்த முதலைப் பண்ணையில் உள்ள 300 முதலைகளையும் கொன்று குவித்துள்ளனர்.\nகுறித்த மக்கள் 300 முதலைகளையும் ஒவ்வொன்றாக கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.\nஇது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகிளிநொச்சியில் சூரியன் படைத்த வரலாற்றுச் சாதனை மெகா பிளாஸ்ட் -2018\nஅரசியலும் சினிமாவும் இரு கண்கள் : கமல் ஹாசன்\nஆசியாவில் பிறக்கப்போகும் ''முதல் அதிசய குழந்தை'' - தாய்மையின் பூரிப்பில் மீனாட்சி\nதிடீரென மீரா ராஜ்புட்க்கு என்ன நடந்தது\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nபில்லி,சூனியத்திற்கு எலுமிச்சைப் பழத்தை வைக்கும் காரணம் தெரியுமா\nதாயொருவரின் சந்தேகம் - தாய்ப்பால் ஊட்டுவது அவசியம்தானா\nவயது கூடிய ஆண்களை பெண்கள் விரும்ப காரணம் இதுதான்\nடார்ச் லைட்- சதாவிடம் இருநூறு ரூபாவாம்\nஅத்தியாவசிய பொருட்களில் அதிகம் பரவும் கலப்படம் - தவறுகள் திருத்தப்படுமா......\nஇந்த ஒருவார காலத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் யார் \nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\nமருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcookery.com/9680", "date_download": "2018-08-17T22:57:57Z", "digest": "sha1:ENRB5YAVFH2XOVICHKEQG5WGEBHJTSBQ", "length": 8909, "nlines": 195, "source_domain": "tamilcookery.com", "title": "வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால் - Tamil Cookery", "raw_content": "\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nமசாலா பால் உடலுக்கு நல்லது. இந்த மசாலா பாலை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து குடிக்கலாம். இப்போது மசாலா பாலை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்க்கலாம்.\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nபால் – 2 கப்\nசர்க்கரை – 1 டீஸ்பூன்\nபனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்\nமிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்\nபட்டை – 1/2 இன்ச்\nஏலக்காய் – 1 (தட்டிக் கொள்ளவும்)\n* பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, தோலுரித்து பொடியாக நறுக்கி அல்லது அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\n* 1 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\n* பின் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காயை எடுத்துவிட வேண்டும்.\n* அடுத்து அதில் குங்குமப்பூ கலந்த பால், மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், சுவையான மசாலா பால் ரெடி\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilworkers.org/2016/09/14/wordpress-resources-at-siteground/", "date_download": "2018-08-17T22:54:43Z", "digest": "sha1:2ES57LNM4U3TABVQ5KCSLNKY53N5YMHY", "length": 10380, "nlines": 58, "source_domain": "tamilworkers.org", "title": "மாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா? | தமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல்", "raw_content": "\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nமாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா\nமாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா\nஜீலை மாத இறுதியில் நாம் அனைவரும் எதிர்பார்த்த மாறிவரும் வேலைத்தளங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. முன்னர் கனடாவின் தொழிற்தள மையமாக இருந்த ஒரு மாகாணத்தில் மாறிவரும் புதிய தொழில் நிலைகளை வெளிக்காட்டும் ஒரு 320 பக்க ஆய்வாக இது வெளியிடப்பட்டுள்ளது. 25 வீதத்துக்கும் அதிகமான வேலைகள் சிறப்பான ஊதியம் கொண்ட தொழிற்சாலை வேலைத்தளத்தில் இருந்த நிலை மாறி 10 வீதத்துக்கு குறைந்துள்ளது. சேவை வழங்கும் வேலைத்தள வேலைகள் பாரிய வளர்ச்சியை சந்தித்துள்ளன. 13 வீதமான தொழிலாளர்கள் தற்போது தற்காலிக வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் 14 வீதமான தொழிலாளர்களுக்கே வேலைத்தளத்தில் தங்களின் உரிமைக்கான குரலை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் உள்ளன. எமது அடுத்த தலைமுறை கல்வியை முடித்து வரும்போது அவர்கள் எந்த மாதிரியான வேலைகளை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு அறிக்கையாகவே இது உள்ளது.\nதற்போதைய வேலைத்தளங்களில் தொழிலாளர் உரிமைச் சட்டம் மற்றும் தொழில் தரச் சட்டம் ஆகியவற்றின் பங்கை இந்த அறிக்கை ஆய்வு செய்கின்றது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் அனுபவங்கள், தொழிற்சங்கங்களின் அறிக்கைகள் மற்றும் சமூக அமைப்புக்களின் அறிக்கைகளை உற்று நோக்கும்போது இந்த இரு சட்டங்களும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாது எமது பொருளாதாரம் தொழில் நிறுவனங்களினால் சுரண்டப்படுவதற்கு எதிராகவும் ஒரு புதிய பாதை வகுக்கப்பட வேண்டும் என்பதும் தெளிவாகின்றது. இந்த ஆய்வறிக்கையை உருவாக்கியவர்கள் மாற்றத்துக்கான சில வழிவகைகளை கோடிட்டுக் காட்டியிருந்தாலும் தற்போதைய நிலை தக்க வைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர். இது தொழிலாளர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கும் சட்டத்தை மதிக்காத நிறுவனங்களுக்கு எதிரான எந்த வித விதிமீறல் குற்ற அறிக்கையும் தாக்கல் செய்யப்படாமல் தடுக்கும் வர்த்தக நோக்கத்தை மட்டுமே முன்னிறுத்தும் மனப்பாங்கை காட்டி நிற்கின்றது.\nஆய்வின் அடுத்த கட்டமாக தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களிடம் இருந்து இது தொடர்பான கருத்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். வர்த்தக சமூகம், லிபரல் அரசிடமிருந்து வேலைத்தளத்தில் மிகக் குறைவான தரத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து பரப்புரைகளையும் செய்யத் தொடங்கி விட்டது. சரியான மாற்றத்தை உருவாக்குவதற்கு தொழிலாளர்கள் உடனடியாக ஒன்று பட வேண்டும்.\nஇது எமது அடுத்த தலைமுறைக்கான போராட்டம். தற்போதைய நிலை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. எமது குழந்தைகள் குறைந்த ஊதியத்தில் உறுதியற்ற வேலை நிலையில் இருக்க நாங்கள் விரும்புகிறோமா அல்லது தொழிலாளர் உரிமைகளை மதிக்கும் தரமான வேலைத்தள விதிகள் உருவாக்கப்பட்டு அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோமா அல்லது தொழிலாளர் உரிமைகளை மதிக்கும் தரமான வேலைத்தள விதிகள் உருவாக்கப்பட்டு அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோமா மாறிவரும் வேலைத்தள ஆய்வு அறிக்கை என்பது சட்டம் தொடர்பானதாக இருந்தாலும் இது எமது அடுத்த தலைமுறைகள் இந்தக் கனடிய மண்ணில் வாழும் வாழ்க்கைக்கான சரியான அடித்தளமாகவே நாம் பார்க்க வேண்டும்\nமேலதிக விபரங்களுக்கு, network@labourcouncil.ca என்னும் மின்னஞ்சலிலோ 416 441 3663 என்னும் இலக்கத்திலோ எம்மைத் தொடர்பு கொள்ளவும்\nஓக்டோபர் 1ம் திகதி மதியம் 1 மணி அளவில் Queen’s Park இல் நடைபெற இருக்கும் பேரணிக்கு உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nமாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://freetamilebooks.com/ebooks/binary-uraiyadal/", "date_download": "2018-08-17T22:52:03Z", "digest": "sha1:BHQPOIFSPLS4T7NGSD5VFAR4EGA2EJ2G", "length": 8302, "nlines": 105, "source_domain": "freetamilebooks.com", "title": "பைனரி உரையாடல் – கவிதைகள் – விக்னேஷ்", "raw_content": "\nபைனரி உரையாடல் – கவிதைகள் – விக்னேஷ்\nநூல் : பைனரி உரையாடல்\nமின்னூலாக்கம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமுப்பது வருடத்திற்கு முந்தைய கால கட்டம். கணிப்பொறி வளர்ச்சி பெறா உலகம்.மனித சிந்தனைகளும் , மனிதநேயமும் மேம்பெற்றிருந்த காலமது. உறவுகளும் உணர்வுகளின் நெருக்கங்களும் பின்னிப்பிணைந்த காலமும் கூட…\nஇன்று முப்பது ஆண்டுகள் கடந்து நிற்கிறோம் என்பதை விட இழந்து நிற்கிறோம் என்பதே நிதர்சன உண்மை. நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம். இதை உணரா தவறுகள் புரியும் மானிடற்கில்லை இவ்வுலகில் பஞ்சம். இதை உணர்த்தும் பொருட்டு அன்றும் இன்றும் உலக நிகழ்வுகளை நான் அறிந்த கவி வழி வேறுபடுத்துகிறேன் .\n“உறவுகள், உலக உணர்வுகள் அறியா வாழும் சராசரி மனிதர்கள் யாவருமே எதிர்கால இயந்திரங்களே என்பதை உணர்த்தும் களமே”\n” பைனரி உரையாடல் ”\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 372\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன், விக்னேஷ் | நூல் ஆசிரியர்கள்: விக்னேஷ்\nஇந்நிலை வாழ்க்கையின் பிரதிபலிப்பு . புதுசிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது . “எதார்த்த வாழ்க்கை உணரா யாவருமே எதிர்கால எந்திரமே ” என்பதை உடைத்துக்காட்டுகிறது .மேலும் இதுபோன்ற படைப்புகள் மேலும் படைக்க ஆசிரியருக்கு என் வாழ்த்துகள் .\nபுது சிந்தனை ,புது களம் … இரு சமகால வேற்றுமைகள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது ..வாழ்த்துக்கள் .\nமிக நன்றாக உள்ளது ,மேலும் இதுபோன்ற படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lankamuslim.org/2018/05/24/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8/", "date_download": "2018-08-17T22:26:37Z", "digest": "sha1:EJFI3MSJIW4F2V3A23XXOUBJITPCGBNB", "length": 39888, "nlines": 324, "source_domain": "lankamuslim.org", "title": "தூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் !! | Lankamuslim.org", "raw_content": "\nதூபமிடப்படும் இந்து -முஸ்லிம் இனவாத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் பூதம் \nலத்தீப் பாரூக்: திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் முஸ்லிம் பெண்களுக்காக இஸ்லாம் வகுத்துக் கொடுத்துள்ள கலாசார முறைப்படியான பெண்களின் கண்ணியம் காக்கும் ‘ஹபாயா’ அணிவது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சர்ச்சை முஸ்லிம் சமூகத்துககு எதிராக தமிழ் மக்களைத் தூண்டிவிடும் RSS இன் சதித் திட்டமாகும். தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு இடயிலான நல்லுறவை இரு சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கிழித்தெறிவதற்கான ஒரு சதித்திட்டமே இங்கு அரங்கேற்றப்பட்டுள்ளது.\nசில தீய சக்திகளால் கையாளப்படும் இந்த சந்தேகத்துக்கு இடமான சதி முயற்சிகள் இரு சமூகங்களினதும் நலன் கருதி முளையிலேயே சமாதானமான முறைகளைக் கையாண்டு களையப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் தமது தீய நோக்கம் கொண்ட சொந்த நிகழ்ச்சி நிரலுடன் உள்நாட்டில் நிலை கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகள் இந்த நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இரு சமூகங்களுக்கும் பாதிப்பக்களை எற்படுத்தக் கூடிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்க வாய்ப்புண்டு.\nஇன்று இந்த நாட்டின் அரசியல் நிலைமைகள்; ஊழல், மோசடி, வர்த்தகமயமாக்கல், இனவாதம் மற்றும் குற்றப் பிண்ணனிகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. 30 வருடகால யுத்தம் ஏற்படுத்திய காயம் இன்னும் குணப்படுத்தப்படவில்லை. அந்தக் காயங்கள் சிக்கல் மிக்கவையாகக் காணப்படுகின்றன. இரு சமூகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன.\nஇனவாத யுத்தம் 2009 மே மாதத்தில் முடிவடைந்த பிறகு சமூகங்களை ஒன்றிணைக்கும் பணியை ராஜபக்ஷ அரசு மேற்கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில இட்டுச் செல்லும்; என முழு நாடும் எதிர்ப்பார்த்தது.\nஆனால் அது நடக்கவில்லை. மாறாக எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் ராபக்ஷ அரசின் அனுசரணையோடு வன்முறைகள் மற்றும் இனவாதம் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டு இந்த நாடு நரகமாக மாற்றப்பட்டது. இந்த மோசமான நிலையில் இருந்து விடுபடுவதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதனை அடுத்த பொதுத் தேர்தலிலும் மக்கள் மைத்திரி – ரணில் சுட்டணிக்கு நம்பிக்கையோடு வாக்களித்தனர்.\nஆனால் மைத்திரியும் ரணிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர். மாறாக அவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான ராஜபக்ஷ யுகத்தின் இனவாதத்தையே தொடர்ந்தனர்.\nதெற்கில் உள்ள இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான தமது சொந்த நிகழ்ச்சி நிரலை இந்த அரசின் கீழும் அமுல் செய்யத் தொடங்கின. அரசாங்கம் அதை கண்டு கொள்ளத் தவறிவிட்டது. ஏற்கனவே மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் உறவுகளை மேலும் பிளவு படுத்தி இதை விட மோசமான நிலைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை நிச்சயமாக இந்த இனவாத சக்திகள் தவற விடப்போவதில்லை.\nஇவ்வாறான சூழ்நிலைகளின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் யார் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி தமது சொந்த நலன் கருதி ஒற்றுமையாக வாழவேண்டியது கட்டயாமாகும்.\nகடந்த காலங்களைப் போல் அன்றி இன்று இலங்கை அழிவை ஏற்படுத்தும் சர்வதேச சக்திகளின் ஆடுகளமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த சக்திகள் எல்லாமே இந்த நாட்டை குட்டிச் சுவராக்கும் தீய நோக்குடன் தமக்கே உரிய சொந்த நிகழ்ச்சி நிரல்களோடு இங்கு நிலை கொண்டுள்ளனர்.\nஉதாரணத்துக்கு இந்து பாஸிஸவாதிகளான ராஸ்திரிய சுவயம் செவாக் அல்லது சுளுளு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அடியோடு துடைத்தெறியும் கொள்கைப் பிரகடனத்தை; நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட ஒரு அமைப்பு. அவர்கள் இங்கு உள்ளார்கள் என்பது பொதுவாகத் தெரிந்த ஒரு விடயம். ஊடகம் போன்ற உணர்வுபூர்வமான துறைகளுக்குள் அவர்கள் ஊடுறுவி உள்ளார்கள் என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகின்றது.\nஇரண்டு வருடங்களுக்கு முன் மரவண்புலவு சச்சிதானந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் RSS அலுவலகத்தை திறந்து வைத்தனர். தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் சுளுளு சிவசேனா நிகழ்ச்சி நிரல் இதன் மூலம் இங்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்து மதத்தை ஊக்குவிப்பதோ அல்லது பிரபலப்படுத்துவதோ அவர்களின் நோக்கம் அல்ல. மாறாக முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக இந்துக்களைத் தூண்டி விடுவது தான் அவர்களின் குறிக்கோள்.\nஇதுபற்றி மரவண்புலவு சச்சிதானந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுளுளு வவுனியா அலுவலகமானது RSS, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் சிவசேனா என்பனவற்றின் ஆலோசனை பெற்றே திறந்து வைக்கப்படுவதாகக் கூறினார்.\nRSS இங்கு வருகை தந்துள்ளமை பற்றியும் அதன் முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரல் பற்றியும் பலர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இப்போது திருகோணமலை பாடசாலை விடயம் தலைதூக்கியுள்ள நிலையில் அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப், பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உற்பட LTTE ஆதரவு சக்திகளும் இந்த சர்ச்சையின் பின்னணியில் இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். இந்த விடயத்தை சமாதானமான முறையில் தீர்த்து வைக்க தான் பல தமிழ் அரசியல்வாதிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் ஆனால் எந்த ஒரு தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும் இதற்கு பதில் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nசில தகவல்களின் படி ஒரு RSS முகவர் முஸ்லிம் பெண் போல் பாசாங்கு செய்து ஹபாயா அணிந்து வந்து கல்லூரிக்குள் வேண்டத்தகாத முறையில் நடந்து இந்த விடயத்துக்கு மேலும் தூபம் இட முனைந்தமை தெரியவந்துள்ளது. இவரிடம் தமிழ் பெண்களையும் தமிழ் சலாசாரத்தையும் கேவலப்படுத்தும் வகையிலான சில படங்களும் எழுத்துக் குறிப்புக்களும் கூட இருந்துள்ளன. இவை முஸ்லிம்களின் பெயரால் தயாரிக்கப்பட்டவை போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டைத் தூண்டிவிடும் ஒரு சதி முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை.\nஇவற்றைப் புரிந்து கொள்ள முடியாத இரு சமூகங்களையும் சேர்ந்த குறுகிய நோக்கம் கொண்ட சில சக்திகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிய வண்ணம் உள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள கல்வி அதிகாரிகள் உடனடியாக இந்த விடயத்தில் தலயிட்டு இந்தப் பிரச்சினைக்கு மிக விரைவில் நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லுமுன் சமாதானமான முறையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.\nஇந்தச் சம்பவம் பற்றி பக்கச்சார்பற்ற விதத்தில் நியாயமான ஒரு விசாரணை நடத்தப்பட்டால், இந்தச் சம்பவத்தின்; பின்னால் உள்ள உண்மையான தீய சக்திகளை அடையாளம் காண அது வழிவகுக்கும். ஆனால் நாட்டில் காணப்படும் குழப்பமான சரிவடைந்து வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக இவ்வாறான ஒரு விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்படுவது பெரும்பாலும் சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.\nமறுபுறத்தில் முஸ்லிம் நாடுகளில் யுத்தத்தை தூண்டி விடுவதிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் அந்த நாடுகளை சின்னாபின்னப் படுத்துவதிலும் பிரதான சூத்திரதாரியாகத் திகழும் இஸ்ரேலின் பிரசன்னமும் தற்போது இந்த நாட்டில் உள்ளது. அவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது சொந்த வேலைத் திட்டத்தோடுதான் இங்கு வந்துள்ளனர். ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டில் இஸ்ரேலின் வருகையோடுதான் இனவாத அமைப்புக்கள் தலைதூக்கின. இன்று இந்த நாட்டில் முஸ்லிம்களால் நிம்மதியாக வாழ முடியாத சூழலை அவர்கள் முன்னின்று உருவாக்கினர்.\nஇஸ்ரேலிய யூத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் சுளுளு உடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். பல்வேறு சக்திகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விடுவதில் இந்த சக்திகள் தற்போது முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழர்களைக் கொண்ட ஒரு குழு எந்த விதமான நியாயமான காரணமும் இன்றி இஸ்ரேலுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இஸ்ரேலின் கொடியுடன் அவ்வாறான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவது முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். இருந்தாலும் இவை பற்றி கவலைப்படாமல் அந்தக் கூலிப்படையினர் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம் என்பது தெரியாமலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇதேவேளை இஸ்ரேலியர்கள் இந்த நாட்டில் அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஆசீhவாதம் என்பனவற்றுடன் தான் தங்கி உள்ளனர். கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவர்கள் பல்வேறு திட்டங்களோடு பல்வேறு போர்வையில் நடமாடி வருகின்றனர் என சில தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களது வருகையின் பின்தான் சிங்கள மக்களின் எண்ணங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் திசை திருப்பப்பட்டு அண்மைக்கால அசம்பாவிதங்களும் இடம்பெற்றன.\nஇஸ்லாத்தை முன்னொருபோதும் இல்லாத வகையில் காரசாரமாக விமர்சிக்கவும், கேலி செய்யவும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவும் தீவிரவாத பௌத்த அமைப்புக்கள் ஈடுபடத் தொடங்கியது இவர்களின் தூண்டலில் தான் என்பது பரவலாக உள்ள சந்தேகமாகும். பொது பல சேனா அமைப்புக்கு தென் பகுதியில் ஒரு இல்லத்தை அன்பளிப்பாக வழங்கியவர் ஒரு ஜெர்மனிய யூதர் என்பதும் இங்கே நினைவூட்டத்தக்கது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சீர்குலைக்க வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம் என்பது தெட்டத் தெளிவாகப் புலனாகும் ஒரு விடயமாகும்.\nஅழிவை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் சிங்கள இனவாத அமைப்பான பொது பல சேனாவும் ஏனைய பௌத்த அமைப்புக்களும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டு வருகின்றன. ரணில் – மைத்திரி கூட்டரசும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பேரழிவாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போதை அரசின் ஆதரவும் இந்த இனவாத சக்திகளுக்குக் கிடைத்துள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு தான் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹபாயா விவகாரத்துக்கு எவ்வித காலதாமதமும் இன்றி இனக்கமானதோர் தீர்வு காணப்பட வேண்டியது கட்டாயமாகும்.\nபிரிவினையையும அழிவையும் ஏற்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் RSS, BJP மற்றும் VHP போன்ற சக்திகளுக்கு இடமளிப்பது இந்த நாட்டில் ஒரு போதும் நன்மையை ஏற்படுத்தாது. அது தற்போது எமக்கு நன்மையளிக்கக் கூடியதும் எமக்கு மிக அத்தியாவசியமாகத் தேவைப்படுவதுமான இரு சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்துக்கு சாவு மணி அடிப்பதாகவே அமையும். வடக்கு கிழக்கில் மட்டும் அல்ல அதற்கு வெளியிலும் இதே நிலைதான்.\n(இந்தக் கட்டுரை 2018 ஏப்பிரல் 30ம் திகதி திங்கள் கிழமை எழுதப்பட்டது)\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மைகளுக்கு சாதகமா\nஎம்பிலிட்டிய பிரதேசங்களில், மாட்டிறைச்சி விற்பனைக்கு, முற்றாகத் தடைவிதிக்கப்படும் : மாகாண ஆளுநர் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nகல்வியின் மூலம் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஅறபாவில் ஹாஜிகள் கூடும் தினமே அறபா தினம்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\n(FJP) \"விதை ஒன்று விருட்சமாகும் நாள்\"- அரசியல் பொதுக்கூட்டம்\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« ஏப் ஜூன் »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 1 day ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_103.html", "date_download": "2018-08-17T23:16:05Z", "digest": "sha1:NM7GXZAI6ZFD4ZDC2NQE54ZBCZAMLOKD", "length": 5203, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கிளிநொச்சியில் புதையல் வேட்டை: இந்தியர்கள் உட்பட ஏழு பேர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிளிநொச்சியில் புதையல் வேட்டை: இந்தியர்கள் உட்பட ஏழு பேர் கைது\nகிளிநொச்சியில் புதையல் வேட்டை: இந்தியர்கள் உட்பட ஏழு பேர் கைது\nகிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇதில் மூவர் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் எனவும் தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nவிடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தைத் தேடியும் அவ்வப்போது இவ்வாறான குழுக்கள் புதையல் வேட்டையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilcc.com/2011/11/blog-post_08.html", "date_download": "2018-08-17T22:33:55Z", "digest": "sha1:VQICXUWN5EV6VTF2TRUJQRFU6K7CGOGE", "length": 11530, "nlines": 144, "source_domain": "www.tamilcc.com", "title": "வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள", "raw_content": "\nHome » News PC Webs » வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nவீட்டு வேலை என்றாலே நமக்கு அலர்ஜிதான். நம் வீட்டு ஹால், சமையலறை, குளியலறை, படிக்கும் அறை, பூஜை அறை என ஒவ்வொன்றும் ஒருவிதமான தூசியையும், தூசு சார்ந்த அசுத்தத்தையும் காட்டும். எனவே இவற்றை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால், நமக்குத்தான் தலைவலி, நோய் என முடியும்.\nஇவை தான் இப்படி என்றால், இவற்றைச் சுத்தம் செய்திட நாம் பயன்படுத்தும் பொருட்கள் தரும் பிரச்னை இன்னொரு வகை. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி பராமரிப்பதுவும் ஒரு வகை வேலைதான்.\nஅறைகள் தான் என்றில்லை; வாஷ் பேசின், கழிவறை டேங்க், சமையலறை சிங்க் தொட்டி, ஸ்டவ் அடுப்பின் மேல்புறத் தகடு, மைக்ரோவேவ் அடுப்பின் உள், வெளிப்புறம், எவர்சில்வர் பாத்திரங்கள், திரைச்சீலைகள், சிறிய பெரிய மேஜைகள், கீ போர்டுகள், மின்விசிறிகள், வாஷிங் மெஷின், ட்ரையர்கள் என நாம் பயன்படுத்தும் சாதனங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஏறத்தாழ இவை அனைத்தின் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்வது குறித்து ஓர் இணைய தளம் நமக்குக் குறிப்புகளைத் தருகிறது. ஒரு சட்டைய எப்படி சில நொடிகளில் மடிப்பது என்று கூட இந்த தளத்தில் குறிப்பு உள்ளது. இந்த தளத்தின் முகவரி\nhttp://www.renest.com/renest/roundup/housekeepingbasics35stepbystepguidestoeverychoreinyourhome156566. இந்த தளம் சென்றால், மேலே சொன்னவற்றுடன் இன்னும் பல பணிகள் குறித்து நமக்கு லிங்க்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிளிக் செய்து நமக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம். சில தகவல்களைப் படித்தால், மிகவும் பயனுள்ளதாகத் தோன்றும். சிலவற்றைப் படித்தால், அட இது எனக்குத்தெரியாதா என்று எண்ணத் தோன்றும். எதற்கும் ஒருமுறை இந்த தளத்தைப் பார்த்துவிடுங்களே\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nபிபனோச்சி எண்கள் - ஓர் அறிமுகம் Fibonacci number\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்க...\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்...\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற...\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்...\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்...\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geniustv.in/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/4/", "date_download": "2018-08-18T01:25:13Z", "digest": "sha1:D3NMQ2OMBOKVELJBGDLSP2ODQG72GQ6K", "length": 21817, "nlines": 171, "source_domain": "geniustv.in", "title": "அரசியல் – Page 4 – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்\nஅரசியல், செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுகவினர், இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். அதே போல, நந்தம்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்காசி, மேலகரம் தஞ்சாவூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், …\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்\nஅரசியல், செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 74. சுவாசக் கோளாறு காரணமாக சுவ்ரா முகர்ஜி கடந்த 7-ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.50 மணியளவில் இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் குடியரசுத் …\nபுதிய கட்சியின் கொடி நாளை அறிமுகம்: ஜி.கே.வாசன்\nslider, அரசியல், முக்கியசெய்திகள் 0\nபுதிய கட்சியின் கொடி சென்னையில் நாளை வெளியிடப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே கட்சிக்கு வைக்க வேண்டும் என பெரும்பாலான ஆதரவாளர்கள் விரும்புவதாக குறிப்பிட்டார்.\nசார்க் மாநாடு: நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி\nslider, அரசியல், முக்கியசெய்திகள் 0\nசார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றடைந்தார். பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் காத்மாண்டு சென்றடைந்தார்.காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளம் தலைநகர் காட்மண்டில், 36 வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், பூடான், இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு, நேபாளம் தலைநகர் காட்மாண்டு 26 மற்றும் …\nமுன்னாள் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா காலமானார்.\nமூத்த அரசியல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா திங்கட்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 77. சிறிது காலம் உடல்நலமின்றி இருந்த அவர், மும்பையில் தனது இல்லத்தில் காலமானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கடந்த வாரம்தான் வீடு திரும்பியிருந்தார். நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தேவ்ரா, 2006ல் பெட்ரோலியத் துறை அமைச்சரானார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா இவருடைய …\nஐந்து மீனவர்களின் விடுதலைக்கு, இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நன்றி: கருணாநிதி\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழகம் 0\nஐந்து மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து மீனவர்களின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொள்ள …\n’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்\nசட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான …\nபிரதமர் மோடி 3 நாடுகளுக்கு 10 நாள் பயணத்தைத் தொடங்கினார்.\nஅரசியல், இந்தியா, செய்திகள் 0\nஜி20 உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி தெற்கு ஆசிய நாடுகளுக்கான தனது 10 நாள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று துவங்கினார். பயணத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் டெல்லியிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டார். அங்கு அவர் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் …\nஜி.கே வாசன் புதிய கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு\nதிருச்சியில் இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமது புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜி.கே வாசன் புதிய கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸிலிருந்து விலகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் புதுக்கட்சி தொடங்கியுள்ளார். புதுக் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு அணியிலும் உள்ள தனது …\n​மத்திய அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது\nஅரசியல், இந்தியா, செய்திகள் 0\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே, புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் யார், யார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த மே மாதம் 26–ந் தேதி பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் 23 கேபினட் அமைச்சர்களும், 22 ராஜாங்க அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் சில அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை பொறுப்பேற்றுள்ளதால், புதிய அமைச்சர்களை நியமிக்க …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithrapapa.blogspot.com/2010/11/blog-post_5177.html", "date_download": "2018-08-18T00:50:31Z", "digest": "sha1:E7YYICPIJCZHKPAFOHN4G5JOSE464JL3", "length": 4322, "nlines": 108, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : சளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே!", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nசளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே\nசளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nமித்ரா.. பெயர் பிறந்த கதை\nசளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே\nFun walk @ சிங்கப்பூர்\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/14/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2863181.html", "date_download": "2018-08-18T00:30:41Z", "digest": "sha1:RSTFXLN6L3QTAKINOVUP24LMDXLZTGEQ", "length": 12251, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "டெம்போ கட்டணம் நாளை உயர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுச்சேரியில் டெம்போ கட்டணம் நாளை முதல் உயர்வு\nபுதுச்சேரியில் டெம்போக்களுக்கான பயணக் கட்டணம் வியாழக்கிழமை (பிப்.15) முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, புதுவையில் இருந்து வெளி மாநிலம் செல்லும் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. புதுவைக்குள் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலித்து வருகின்றன. அரசுப் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5-ஆக உள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.7-ஆக உள்ளது.\nஅதேபோல பல்வேறு வாகனங்களிலும் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியாரால் இயக்கப்படும் டெம்போக்களுக்கான கட்டணமும் உயர்த்தப்படுகிறது. அதாவது டெம்போக்களில் குறைந்தபட்ச கட்டணம் தற்போது ரூ.5-ஆக உள்ளது. இது பிப்.15-ஆம் தேதி முதல் ரூ.7-ஆக உயர்த்தி வசூலிக்கப்படும் என டெம்போக்களில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.\nஇது குறித்து புதுச்சேரி பிரதேச டெம்போ உரிமையாளர்கள் சங்கச் செயலர் மணிவண்ணன் கூறியதாவது: கடந்த ஆண்டு டெம்போக்களுக்கான காப்பீடுத் தொகை ரூ.14 ஆயிரமாக இருந்தது. இது இந்த ஆண்டு ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் காப்பீட்டுத் தொகையை உயர்த்தி வருகின்றனர். டெம்போவுக்கு வண்ணம் பூச கடந்த ஆண்டு ரூ.5,500 கூலி கேட்டனர். இந்த ஆண்டு ரூ.6,500 கேட்கின்றனர். உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஒர்க்ஷாப், லேத் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கட்டணம் உயர்ந்துவிட்டது. இதனால் டெம்போக்களில் பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம். இந்த கட்டண உயர்வு பிப்.15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். 2011-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் கட்டணத்தை உயர்த்துகிறோம்.\nபுதுச்சேரியில் 4 வழித்தடங்களில் 127 டெம்போக்கள் ஓடுகின்றன. 2011-ஆம் ஆண்டு முதல் டெம்போவுக்கான வாடகையானது வேலை நாள்கள், விடுமுறை தினங்கள் என பிரித்து நாள் வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது திங்கள் முதல் வியாழக்கிழமை வரை ரூ.900-ம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.850-ம் நாள் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.\nஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து, பயணிகள் அதிகம் வரவில்லை எனக்கூறி ஓட்டுநர்கள் வாடகையை குறைத்துவிட்டனர். தற்போது ரூ.700 முதல் ரூ.850 வரை மட்டுமே வாடகை உரிமையாளர்கள் வசூலித்து வருகின்றனர். தற்போது கட்டண உயர்வு பிப்.15-ஆம் தேதி அமலுக்கு வந்த பின்னர் 3 நாள்கள் வரும் வசூலைக் கணக்கிட்டு, ஓட்டுநர்கள் செலுத்த வேண்டிய வாடகையை உயர்த்துவது குறித்து இறுதி செய்யப்படும் என்றார்.\nஇது குறித்து சிஐடியூ புதுச்சேரி பிரதேச டெம்போ ஓட்டுநர் சங்க பொறுப்பாளர் மதிவாணன் கூறியதாவது: டெம்போக்கள் கட்டணம் உயர்வு குறித்து ஓட்டுநர்களிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை. டெம்போக்களுக்கு தினமும் வாடகையாக தற்போது ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் ரூ.900 வழங்கி வருகின்றனர். இதை உயர்த்தி வசூலிக்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஇதனால் தற்போது கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கும் நோட்டீசை டெம்போக்களில் ஓட்டியுள்ளனர். இதையடுத்து வாடகையை ரூ.1200-ஆக உயர்த்தித் தர ஓட்டுநர்களை நிர்பந்திப்பார்கள். டெம்போ கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/boldness", "date_download": "2018-08-18T01:00:34Z", "digest": "sha1:AMGJBZQB6QJH2JLEZWMUTIC53MCWTRUB", "length": 4282, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"boldness\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nboldness பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசாகசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாராளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெஞ்சுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ9kZUy", "date_download": "2018-08-18T01:22:44Z", "digest": "sha1:I6W4XIIWK6VIGHQ2EGIJUVIPU77NRQVN", "length": 7018, "nlines": 127, "source_domain": "tamildigitallibrary.in", "title": "சங்ககாலத் தமிழ் மக்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்சங்ககாலத் தமிழ் மக்கள்\nஆசிரியர் : வெள்ளைவாரணன், க.\nபதிப்பாளர்: சென்னை : நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி , 1948\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவெள்ளைவாரணன், க.(Veḷḷaivāraṇan̲, Ka.)நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை,1948.\nவெள்ளைவாரணன், க.(Veḷḷaivāraṇan̲, Ka.)(1948).நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை..\nவெள்ளைவாரணன், க.(Veḷḷaivāraṇan̲, Ka.)(1948).நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2863102.html", "date_download": "2018-08-18T00:31:51Z", "digest": "sha1:G6MGE4KTX2XK2SILIGFWMXE2RIIJL5Q7", "length": 7902, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இரு தேச கலாசாரம் குறித்த கருத்தரங்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இரு தேச கலாசாரம் குறித்த கருத்தரங்கு\nபிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பிரெஞ்ச் துறை சார்பில் \"கலாசார வேறுபாடுகள் - பிரான்ஸ் மற்றும் இந்தியா' என்ற தலைப்பிலான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளமென்ட் டெபியர் பங்குபெற்றார். பிரெஞ்ச் மொழியில் இறைவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கியது. பிரெஞ்ச் துணைப் பேராசியரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான சிந்தியா ஜார்ஜ் வரவேற்றார். சகோதரி செல்வி வாழ்த்துரை வழங்கினார்.\nஇந்த நிகழ்சியில் கிளமென்ட் டெபியர் பேசுகையில், இந்தியா, பிரான்ஸுக்கு இடையே உள்ள கலாசார வேறுபாடுகளை விவரித்தார். கோயிலுக்குச் செல்லும் முன் காலணிகளைத் தவிர்த்தல், மது அருந்துதலை இழிவாகக் கருதுதல், வேற்றுமையிலும் ஒற்றுமை, மகளிரின் நிலை ஆகிய இந்திய அம்சங்களை அவர் எடுத்துக்காட்டினார்.\nபிரான்ஸ் நாட்டுக்கு முதன்முறையாக வரும் இந்தியர்களும் அவர்களின் கலாசாரத்தைக் கண்டு வியப்பார்கள் என்றார். எடுத்துக்காட்டாக சந்தித்தவுடன் கட்டியணைத்தல், அனைத்து நேரங்களில் அலுவலக உடையில் இருப்பது ஆகிய பிரான்ஸ் அம்சங்களை அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்திய நாடு முழுவதும் விருந்தினரை வரவேற்கும் தன்மையும் ஒற்றுமை உணர்வும் சிறப்பாக உள்ளது என்று அவர் பாராட்டினார். ஹிந்தி பேராசிரியர் ரேகா நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-08-18T00:26:35Z", "digest": "sha1:KR2PMO6RCNJEYDTVH43LIXZ3IL673QDX", "length": 7885, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்கா அதிரடி பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாத தலைவன் சாவு\n பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாத தலைவன் சாவு\nபாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியின பகுதியில் அமெரிக்கா சமீபத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் தெரிக்-இ-தலிபான்-பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவன் காலித் மெஹ்சுத் உயிரிழந்தான். பயங்கரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் அசாம் தாகீர் மெஹ்சுத் பேசுகையில், வடக்கு வசிரிஸ்தானில் வியாழன் அன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலில் காலித் மெஹ்சுத் உயிரிழந்தார் என தெரிவித்து உள்ளார். வடக்கு வசிரிஸ்தான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக பார்க்கப்படுகிறது.\nஇப்போது காலித் மெஹ்சுத் பதவிக்கு கமாண்டர் முப்தி நூர் வாலி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக போரிட அமெரிக்கா நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வந்தது. பாகிஸ்தான் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஏமாற்றுவதாக நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா நிறுத்துவிட்டது. மாறாக அமெரிக்கா இப்போது பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதலை முன்னெடுக்க தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் எதிர்ப்பை பதிவு செய்தாலும் அமெரிக்கா கண்டுக்கொள்வது கிடையாது. பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் வான்வழி தாக்குதலை தொடரத் தொடங்கிவிட்டது.\nPrevious articleஐதேகவின் தேர்தல் விஞ்ஞானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சிவாஜிலிங்கம் கடிதம்\nNext articleகுளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய சியர் லீடர்ஸ் பெண்களின் முகமூடியால் சர்ச்சை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2011/04/4.html", "date_download": "2018-08-18T00:39:25Z", "digest": "sha1:5BFKAD3MR4DYGXPPV43SLJEIDT22R62A", "length": 7339, "nlines": 146, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: திரும்பிப்பார்க்கின்றேன் -4", "raw_content": "\nதாய்யில் இருந்து மலேசியா செல்வதற்கு தலைக்கு 300வெள்ளிப்பணம் கொடுத்து சட்டத்தின் காவலரே சட்டத்திற்கு புறம்பாக எங்களை நாங்கள் போய் சேரவேண்டிய இடத்திற்கு கொண்டே சேர்த்தார்.கடவுளை நம்பும் என் நிலைகு மீண்டும் ஓரு உறுதியான நிகழ்வு மனிதன் வடிவில் கடவுள் வந்தார் என்றாள் அது காவல் அதிகாரி ரூபத்தில் முகம் தெரியாத எங்களை ஒரு பிரச்சனையும் இல்லாமல் தன்முயற்ச்சியில் எம்மை மலேசியாவில் இறக்கிவிட்டார்.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/01/2011 01:15:00 am\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-நிறைவுப்ப...\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-3\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-2\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைத்த நிம்மதியும்\nதிரும்மிப் பார்க்கிறேன் நிறைவுப் பகுதி.\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2016/05/blog-post_25.html", "date_download": "2018-08-18T00:44:22Z", "digest": "sha1:PXQ3FA3TYTDO5EQ67Q7FA2B526JG4AYU", "length": 17298, "nlines": 194, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: வாங்க மின்னலுக்கு பூ கொடுப்போம்[[[[", "raw_content": "\nவாங்க மின்னலுக்கு பூ கொடுப்போம்[[[[\nவலையுலகில் நகைச்சுவையை மையம் கொண்டு சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து தனித்துவத்துடன் பதிவு எழுதுபவர்கள் பலரில் அதிக நட்புக்களை அன்பால் ஈர்த்தவர் இந்த வார்த்தியார் என ஒரு சிலர் சொல்லக்கூடும் ))\nஅந்த அன்பு வார்த்தையை தனிமரமும் வழிமொழிகின்றேன் .என் ஆரம்ப கால பதிவுகளில் அதிகம் தட்டிக்கொடுத்து, ஊக்கம் கொடுத்து ,எழுதத் தூண்டியவர் கணேஸ் அண்ணாச்சி .\nஅன்பில் எங்களுடன் பதிவாளினி ஹேமாவின் தளத்தில் போட்டிக்கு எழுதிய கவிதை இன்னும் மறக்க முடியாது \nஉன் வழி உனது என் வழி எனதென\nபாதை,பாசம் ,நிலா என அவரின் கவிதை ஈடுபாடு வியப்பிக்க வைத்தது.\nஆனாலும் தொடர் என்றால் அது நடைவண்டித்தொடர். அடுத்து எப்ப வெளிவரும் என்று காத்திருந்து பின்னூட்டம் இட்ட பசுமையான நாட்கள் மீண்டும் வராதா என இன்றும் மனம் விரும்புகின்றது.\nநல்ல படைப்புக்களை பலர் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் இவரின் மேய்ச்சல் மைதானம் வலைப்பதிவு ஒரு தகவல் களஞ்சியம் .http://horsethought.blogspot.fr/2013/05/blog-post.html\nசிறுகதை எழுதுவதில் கில்லாடி, இவரின் அம்மா கதை இன்னும் பலர் படிக்க வேண்டியது.\nநல்ல நடிகர் நூல் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர் .வலைச்சரத்தில் முத்திரை பதித்தவர் .மொக்கைப்படம் பார்த்த அனுபவம் இங்கே[http://minnalvarigal.blogspot.com/2013/04/blog-post_20.html\nஇன்றை புதியவர்களுக்கு இவரின் இலக்கிய ஆளுமை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் எனில் இங்கே பார்க்கலாம்.http://minnalvarigal.blogspot.com/2012/05/16.html\nசென்னைப்பதிவர் விழா சிறப்பாக அமைய அண்ணாச்சியின் பங்களிப்பும், பணியும் அளவிடமுடியாத சேவை எனலாம் \nஏனோ வலையுலகில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் இன்று அவரை முகநூல் பக்கங்களில் மட்டும் பதிவை பகிர்கின்றார்.\nஎன்றாலும் மீண்டும் தாய்வீடு போன்ற இந்த வலையுலகில் முன்னைய கலகலப்புடன் மீண்டும் நண்பர் வரவேண்டும் என்பதே என் போன்ற வழிப்போக்க வாசகர்களின் வேண்டுதலாக இருக்கும்\nஎன்னடா தனிமரம் இன்று மின்னல்வரிகள் கணேஸ் பற்றி நினைவுபடுத்துகின்றது\nஇன்று அவருக்கு ஒரு சிறப்பான நாள் 26/5/-- /ஆம் அன்பு அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் இன்றை தினம் .\nகாலத்துக்கு காலம் வலையில் வந்து போகும் பல உறவுகளில் இந்த தனிமரமும் வலையுறவுகள் சார்பாக கடல்கடந்து இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் .மின்னலுக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பூ தர சினேஹா சார்பில் திருமதி தமிழ் அவர்கள் மின்னல் வீடு நோக்கி [[[[\nவாழ்த்துவதற்கு வயது ஒரு தடையல்ல நல்ல இதயம் போதும் என்ற அண்ணாச்சியின் வார்த்தையை கடன் வாங்கியே அன்பு பாடலை பரிசாக காற்றில் கலந்து விடுகின்றேன் .என் வாழ்த்தையும் நோய் நொடி இன்றி என்றும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்\n.அண்ணாச்சிக்கு இந்த பாடல் அதிகம் பிடிக்கும் ஏன் என்று நான் அறியேன்[[ பூரிக்கட்டை அடி அமெரிக்கா வரை புகழ்[[[ இந்தப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளி/ஓலிபரப்பாக எத்தனை விளம்பர இடைவெளி இம்சை என்பதை தாங்கிய நெஞ்சம் இந்த ஏதிலி[[[\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 5/25/2016 04:39:00 pm\nநம்மூர் நடிகையின் வயதும் நம்ம வாத்தியார் வயதையும் கேட்கக்கூடாது.காரணம் எப்போதும் இளைஞர் கூட்டதுடனேயே தானும் இளைங்கனாக இணைத்துக் கொள்வார்.அவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅடாடா... ஓராண்டுக்கும் மேலாக வலைத்தளம் பக்கம் தடம் பதித்திராத என்னை இப்பவும் நினைவுகூர்ந்து இப்படிபொரு அன்பில் தோய்ந்த வாழ்த்தை வழங்க ஒரு தனிமரம் இருப்பதைக் காண்கையில் பேருவகை கொள்கிறது நெஞ்சம். இந்த அன்பிற்காகவேனும் முகநூல் தவிரவும் இந்தப் பக்கம் வர வேணுமடா என்று ஒருபுறம் மனக்குரல் ஒன்று கேட்கிறது. மீண்டு(ம்) வர முயற்சிக்கிறேன் நேசன். மனசை மகிழ்ச்சியால நிரப்பிய வாழ்த்துக்கு என் மனம் கனிந்த நன்றி.\nஅந்தப் பாடலில் இருக்கும் இயல்பான நகைச்சுவைக்காகவும், ஜென்ஸியின் குரலுக்காகவும் எனக்கு அது மிகமிகப் பிடிக்கும் நேசன். இப்போ உங்கள் வாழ்த்துக்களோ மறுபடியும் பாத்து மகிழ்ந்துட்டேன்.\nவாத்தியார் பாலகணேஷ் சாரின் அன்பையும் புதிய வலைப்பூ எழுத்தாளர்களை அவர் தட்டிக்கொடுத்து வளர்ப்பதையும் என்றும் மறக்க முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nநாங்களும் சேர்ந்து வரவேற்கிறோம். சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசிய பொது நானும் மீண்டும் பதிவுகள் எழுத வேண்டுகோள் விடுத்தேன்.பன்முகத் திறமை மிக்கவர். அவருக்காக ஒரு பதிவிட்டதற்கு நன்றி நேசன்\nஉங்களுடன் எங்களது வாழ்த்துகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவரைப் பற்றிய தங்களின் அறிமுகம் அருமையாக இருந்தது.\nவாங்க மின்னலுக்கு பூ கொடுப்போம்[[[[\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_01_24_archive.html", "date_download": "2018-08-18T00:23:12Z", "digest": "sha1:6NEHG3AM56I6NRDLJY4VAYLPSVQQRAX4", "length": 53949, "nlines": 720, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/01/24", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/08/2018 - 19/08/ 2018 தமிழ் 09 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇந்தக் கவிதையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் தமிழ்முரசை தொடர்புகொள்ளுங்கள்\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….\nநீ கொண்டு வந்து சேர்த்த\nஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ\nவெளியேறிய போது, முன்பு நானும்\nசிட்னி முருகன் ஆலயத்தில் இன்று தைப்பூச நன்னாள்\nதிரும்பிப்பார்க்கின்றேன் -திருமதி சிவமணி நற்குணசிங்கம் - முருகபூபதி\nஅதிபர் பணியிலிருந்து ஓய்வுபெறும் மணிவிழா நாயகி\nஆசிரியப்பணியில் தாயாகவும் சகோதரியாகவும் வாழ்ந்த\nகிழக்கிலங்கை பெரிய நீலாவணை திருமதி சிவமணி நற்குணசிங்கம்\nமுப்பத்தியைந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி எமது குடும்பத்திற்கு ஒரு புதியவிருந்தினர் பெண் குழந்தைவடிவில் வந்தாள். அவளுக்கு பாரதி என்று பெயர்சூட்டினோம்.\nஅவள் பிறந்து சில நாட்களில், இரண்டு இளம் யுவதிகள் இயற்கை எழில்கொஞ்சும் மலையகம் பதுளையிலிருந்து விருந்தினர்களாக எமதில்லம் வந்தார்கள். அந்த இரண்டு விருந்தினர்களினதும் கரங்களில் எமது குழந்தை தவழ்ந்தாள்.\nவந்த யுவதிகள் இருவரும் பதுளையில் ஒன்றாக ஆசிரியப்பணியில் ஈடுபட்ட உடன்பிறவாச்சகோதரிகள். அவர்கள்தான் செல்வி சிவமணி, செல்வி. சரோஜினி. எனது குடும்பவாழ்விலும் பொதுவாழ்விலும் எனக்கு ஏராளமான பாசமலர்கள். அந்த பாசமலர்களின் பட்டியலில் இந்த இரண்டு ஆசிரியைகளும் எமது குடும்பத்தில் இணைந்தனர்.\nகாலம் சக்கரம் பூட்டிக்கொண்டு ஓடும். இடையில் 1983 வன்செயல், இடப்பெயர்வு, புலப்பெயர்வு. யார் யார் எங்கே என்பது தெரியாமல் ஒவ்வொருவரும் நினைவுகளை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு அலைந்திருக்கிறோம். வாழ்ந்திருக்கிறோம்.\nசைவ மன்றம் வழங்கும் 'சங்கீத இன்னிசைக் கச்சேரி \" 26 01 2016\nகவிவிதை - 8 - நம்பிக்கை - --விழி மைந்தன் --\nஉலகப் பெரிய மனிதர்கள் மறந்து விட்ட ஒரு சிறிய நாட்டில், நாட்டுத் தலைவர்கள் அடிக்கடி எண்ணாத ஒரு பின்தங்கிய பிரதேசத்தில், பிரதேச நகரத்தார் அடிக்கடி செல்லாத ஒரு பிற்பட்ட கிராமம்.\nபக்கத்தே காடு. காட்டையொட்டிச் சில வயல்கள். மாரியில் நீரும் கோடையில் சேறும் இருக்கிற ஒரு தாமரைக் குளம். காட்டுப் புல்வெளிகளில் மேய்ந்து விட்டுப் பின்னேர வாக்கில் குளத்தில் உருண்டு புரண்டு செல்கிற சில எருமைகள். அவற்றைப்பார்த்துக் கீச்சிட்டு ஏளனம் செய்து விட்டு நிற்காமல் பறந்து விடுகிற பச்சைக் கிளிகள்.\nமூங்கில் இலைக் காடுகளே …– கவிஞர் காவிரிமைந்தன்.\nஅடர்ந்து வளர்ந்த மூங்கில்காடுகளில் காற்று மழை புயல்களினிடையே சிக்கிடும்போது ஒரு சில துளைகள் உண்டாகும் அதில் உண்டான துளைகளின் வழியே காற்று நுழைந்த போது புல்லாங்குழல் நாதம் கண்டறியப்பட்டது, அதுவே பூபாளம் எனப்பட்டது.\nகாலைக் கதிரவன் கடலில் குளித்தெழுந்து வருகின்ற அழகும், அதிகாலை இளங்குயில் பாடி நமை அழைக்கும் இனிமையும் நம் இதயத்திற்கு இதமானவை. எனவேதான் திரைப்படப்பாடல்களில் பெரும்பாலும் தொடக்கம் புல்லாங்குழல் இசையிருக்கும்.\nமிகக்குறைந்த செலவில் திரைப்படம் எடுப்பதையும், அதில் அன்றாட வாழ்க்கையில் சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அலசி ஆராய்வதையும் தனது கொள்கைகளாய் கொண்டிருந்த விசு அவர்கள் இயக்கிய “பெண்மணி அவள் கண்மணி” திரைப்படத்தில் தேனிலவு செல்லும் தம்பதிகள் பாடும் பாடலாய் இந்தப் பாடல்\nதாய்­வானின் முத­லா­வது பெண் ஜனா­தி­பதி தெரிவு\nஆங்கிலத்தை கற்காத முஸ்லிம் பெண்கள் நாடு கடத்தபடுவார்கள்\nஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற சீமான் கைது\nயேமனில் பொலிஸ் தலை­மை­யகம் மீது வான் தாக்­குதல்; 25 பேர் உயி­ரி­ழப்பு\nதீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி\nபாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு : 21 பேர் பலி: பலர் காயம்\nரஷ்ய வான் தாக்குதல்களில் 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் பலி\nசிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் அலங்கார உத்சவம் 13 02 16\n13 - 02 - 2016 Sat சிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் அலங்கார உத்சவம் ஆரம்பம்\n22 - 02 - 2016 Mon சிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் மகா மக தீர்த்தோற்சவம்\n24 - 02 - 2016 Wed சிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் அலங்கார உத்சவம் நிறைவு நாள்\n\" இவர்களிடம் பேனைகளும் அவர்களிடம் துப்பாக்கிகளும் இருந்தன. \"‏ லெ.முருகபூபதி\nபிரான்ஸில் வதியும் படைப்பாளி திரு. கோமகன் முருகபூபதியுடன் நடத்திய நேர்காணல் எதுவரை இணைய இதழில் இம்மாதம் வெளியாது. அதனை தமிழ்முரசு பகிர்ந்துகொள்கிறது.\nஈழத்து இபுகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited) நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி சமூகஇ கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும் , பின்னர் . 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து, அங்கு தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைப்பதும், 2011 ஆம் ஆண்டில் தாயகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கன.\nசிறுவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என மக்கள் ஆர்பாட்டம்\nயாழ் - கொழும்பு சொகுசு பஸ் விபத்து : ஒருவர் பலி, 8 பேர் காயம்\nபருத்தித்துறை - திருகோணமலைக்கு புதிய பஸ் சேவைகள்\nஉயர்நீதிமன்றத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..\nஉறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது : பிரதமரின் கூற்றால் அதிர்ச்சி\nஅமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்\nநாடு திரும்பிய ஊடகவியலாளர் கைது\nயுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தீர்மானம்\n - ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )\nமட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்\nமகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்\nகட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்\nகளனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்\nஇட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்\nஇசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்\nஎத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற\nஎழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் \nஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்\nஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்\nதுறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்\nஅமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே \nவிஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்\nநல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே\nசொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்\nசெல்லுமிட மெல்லாமே சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே \nஅமரர் திருமதி அருண் விஜயராணி - அஞ்சலி நினவுப்பகிர்வு\nகடந்த 13-12-2015 ஆம் திகதி அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் நினைவாக நடைபெறும் அஞ்சலி நிகழ்வு - நினவுப்பகிர்வு நடைபெறும் இடம்:\nமாலை 4.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரையில்.\nதங்கள் வரவை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nதிரு. அருணகிரி ( கணவர் ) 0416 25 5363\nநமது சமய இலக்கியங்களில் உள்ள பல அற்புதங்களில் ஒன்றாக \"சித்ர கவியும்\" ஒன்றாக அமைந்துள்ளது.இதில் ஒரு வகை தேர் பந்தம்.தமிழில் மேலும் முரசு , வேல் , நாக பந்தங்கள் உண்டு என்று சொல்கிறார்கள்.இதில் தேர் பந்த பாடல்களை ஒரு தேர்வடிவில் நம்மால் வரைய/காண்பிக்க முடியும்.\nதேர் பந்தம் இயற்றியவர்கள் இதோ.\nஇந்த பதிவை எழத தூண்டியதே ..\nரோஹித் என்ற மாணவனின் தற்கொலை நிகழ்ச்சி தான்.,\nஎன்ன ஒரு மாபெரும் இழப்பு. உயர்கல்வி படிக்கும் மாணவன் ஒருவன் இனிமேலும் என்னால் இதை தாங்கி கொள்ள முடியாது என்ற முடிவு. இது நாம் ஒரு சமூதாயமாக தவறிவிட்டோம் என்று தான் காட்டுகின்றது.\nமிகவும் பழமைவாய்ந்த புகழ்பெற்ற ஒரு பல்கலைகழகம். அதில் \"டாக்டரேட்\" வாங்குவதற்கு வந்த மாணவர்கள், அதில் ஒருவர் தான் இந்த ரோஹித்.\nஅங்கே இரு மாணவ அமைப்புகளுக்கு ஒரு பிரச்சனை.\nஇம்மாதிரியான பிரச்சனைகளில் கல்லூரி நிர்வாகம் மட்டுமே தலையிட வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும். அதற்கும் முன்பு.. ஒர் நிமிடம், கல்லூரி நிர்வாகிகள் நியமிப்பதில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது. இந்த தறுதலை அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் கல்லூரி அருகே மருந்துக்கு கூட செல்லாதவர்கள்.\nஉதாரணம் : பிரதமர் மோடி, கல்வி அமைச்சர் ஸ்மிரிடி இராணி, காங்கிரஸ் தலைவி சோனியா, ராகுல், முதல்வர் ஜெயலலிதா, முன் னால் முதல்வர் கருணாநிதி, \"கும்பிடறேன் சாமி பன்னீர்செல்வம்\", மற்றும் பலர்.\nகலகத்தின் கலைமுகம் கே.ஏ.குணசேகரன் - வீ. அரசு\nநாட்டார் இசை, நாடகத் துறை, ஆய்வுத் துறை என்று பல தளங்களில் இயங்கியவர் கே.ஏ.குணசேகரன்.\nபேராசிரியர் கே.ஏ.குணசேகரன் காலமான செய்தியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. 1955-ல் சிவகங்கை அருகே மாறந்தை கிராமத்தில் பிறந்தவர் அவர். 1970-களின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்தார். 1978-ல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜத்தின் பயிற்சியில் நாடகப் பயிற்சி பெற்றார்.\n1980-களில் தமிழில் நவீன நாடக எழுச்சி உருவானது. இந்த எழுச்சியின் விளைவாக, தமிழ்நாட்டில் செயல்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் வெகுஜனத் தளத்தில் நாடகங்களையும் அரசியல் கருத்து பரப்புரைப் பாடல்களையும் நிகழ்த்தத் தொடங்கினர். இந்தக் காலத்தில் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் பல முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து மேடைகளில் நாட்டார் இசை மரபு சார்ந்த அரசியல் பாடல்களைப் பாடத் தொடங்கினார். அன்றைக்கு, பிரபலமாக அறியப்பட்ட நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயியைத் தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nபுதிய ஏழு அதிசயங்களுக்கான போட்டியில் 100 மில்லியன் வாக்குகள் பெற்றது தாஜ்மஹால். தாஜ் மஹால் என்றால் பெர்சிய மொழியில் மாளிகைகளின் மகுடம் என்று பொருள். வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அந்த பிரம்மாண்டம் 1632 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1643 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஒட்டுமொத்த அரங்கத்தையும் கட்டி முடிக்க 1963 ஆம் ஆண்டு வரையிலும் ஆனது.\nஷாஜகான் தனது மனைவிகளில் ஒருவரான மும்தாஜுக்காக கட்டிய கல்லறை என்பதை விடவும் தாஜ்மஹால் பற்றி சொல்ல ஏராளம் தகவல்கள் நிறைந்துள்ள – மனித அறிவும், கலை நயமும், உழைப்பும் குவிந்த பொக்கிசமே தாஜ்மஹால் ஆகும்.\nஉஸ்தாத் அஹமத் லஹரி, மிர் அப்துல் கரிம் என்ற வடிவமைப்பாளர்களின் தலைமையில் 20 ஆயிரம் கலைஞர்கள் இணைந்து இந்தக் கட்டுமானத்தை உருவாக்கியுள்ளனர். ஷாஜகான் இப்படியான கட்டுமானங்களை அமைப்பதில் தனியான விருப்பத்தோடு இருந்ததாக சொல்கின்றனர்.\nதமிழ் சினிமா - கதகளி\nபசங்க-2 வெற்றி உற்சாகத்தில் பாண்டிராஜ், நடிசர் சங்க வெற்றியில் விஷால் இருவரும் இணைந்து படம் தான் கதகளி. ஆம்பள, பாயும் புலி படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nசினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என விஷால்மீண்டும் பாண்டியநாடு ஸ்டைலில் ஒரு யதார்த்த ஆக்‌ஷன் களத்தில் இறங்கியுள்ளார்.\nகடலூர் மீனவர் தலைவனாக தம்பா, அந்த ஊரில் அவர் வைத்தது தான் சட்டம், அவர் சொன்னால் தான் ஒருவர் தும்ம கூட முடியும் என்ற அளவிற்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர். இவருக்கு எங்கும் எதிரிகள் தான். எல்லோரிடமும் ஏதாவது வம்பு செய்வது என தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டே இருக்கின்றது.\nஅதில் ஓர் கூரிய கத்தி தான் விஷால். விஷாலின் குடும்பத்தையும் தம்பா ஒரு முறை தாக்க, இதில் விஷாலின் அப்பாவிற்கு ஒரு கால் போகிறது. ஆனால், நமக்கு எதற்கு பிரச்சனை என விஷால் வெளிநாடுசெல்கிறார்.\nகேத்ரினுடன் திருமணத்திற்காக விஷால் கடலூர் வரும் நிலையில் தம்பாவை யாரோ ஒருவர் கொல்கிறார். தம்பாவை கொன்றது யார் என்று போலிஸ் தேட ஆரம்பிக்க, விஷால், விஷாலின் அண்ணன்மைம் கோபி, விஷாலின் நண்பர்கள் என பலரது மேல் சந்தேகம் எழுகிறது.\nபோலிஸ் வழக்கை உடனே முடிக்க இதில் விஷாலை இழுத்து விடுகின்றது, விடிந்தால் திருமணம், விஷாலின் குடும்பம் உயிருக்கு பயந்து ஊர் ஊராக சுற்ற, தம்பாவை யார் கொன்றார்கள் என விஷாலே களத்தில் இறங்கி கதகளி ஆடுவதை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.\nவிஷால் ஆறடி இளைஞனாக கம்பீர தோற்றம், இன்னும் 50 பேரை அடித்தால் கூட நம்பலாம், ஆனால், ஸ்டண்ட் காட்சிகளில் பறந்து பறந்து அடிக்காமல் மிக யதார்த்தமாக கலக்குகிறார். தன் குடும்பத்திற்கு ஏதும் ஆக கூடாது என தவிக்கும் தருணம், தம்பாவை யார் கொன்றிருப்பார்கள் என பதட்டம் என பாண்டியநாடு விஷால் பேக்.\nகேத்ரின் வெறும் காதலிக்க மட்டும் தான், விஷாலின் நண்பராக வரும்கருணாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார், இடையில் நடிகர் சங்கத்தை எல்லாம் லைட்டாக அவரே கலாய்க்கிறார்.\nபடத்தில் எத்தனை நடிகர்கள் நடித்திருந்தாலும், படத்தின் மிகப்பெரும் பலமே திரைக்கதை தான். பாண்டிராஜ் அடுத்து என்ன அடுத்து என்ன, டுவிஸ்ட்டுக்குள் ஒரு டுவிஸ்ட், அந்த டுவிஸ்ட்டுக்குள் ஒரு டுவிஸ்ட் என ஆடியன்ஸ் பல்ஸை எகிற வைக்கின்றார்.\nஹிப்ஹாப் ஆதி இந்த முறை அனைவரையும் ஏமாற்றி விட்டார், பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருந்தாலும், படத்தில் வரும் 2 பாடல்களும் மனதில் நிற்கவில்லை. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவும் இரண்டாம் பாதி முழுவதையும், அந்த இரவிற்குள் நம்மையும் பதட்ட பட வைக்கின்றது.\nகண்டிப்பாக இரண்டாம் பாதி தான், மிக நேர்த்தியான ஒரு ராவ்வான ஸ்கிரீன் ப்ளே. அந்த குடும்பத்திற்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது, யார் அந்த கொலையை செய்திருப்பார்கள் என ஆடியன்ஸ் நெகங்களை கடிக்க வைத்ததிலேயே பாண்டிராஜ் பாஸ் மார்க் வாங்கி விட்டார்.\nபடம் ஆரம்பித்து கதைக்குள் செல்ல அரை மணி நேரத்திற்கு மேல் இழுக்கின்றது.\nமேலும், டுவிஸ்ட்டை கொஞ்சம் இடைவெளி விட்டு அவிழ்ந்திருந்தால் இன்னும் சுவாரசியம் நிறைந்திருக்கும், அடுத்தடுத்து உடனே டுவிஸ்ட்டை உடைப்பது, கொஞ்சம் யதார்த்ததை விலகி உள்ளது.\nமொத்தத்தில் விஷாலுக்கு வழக்கமான ஆக்‌ஷன் என்றாலும், பாண்டிராஜ் முதன் முறையாக ஆக்‌ஷன் களத்தில் இறங்கி கதகளிஇல்லை ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.\nரேட்டிங்- 3/5 நன்றி cineulagam\nசிட்னி முருகன் ஆலயத்தில் இன்று தைப்பூச நன்னாள்\nதிரும்பிப்பார்க்கின்றேன் -திருமதி சிவமணி நற்க...\nசைவ மன்றம் வழங்கும் 'சங்கீத இன்னிசைக் கச்சேரி \" 2...\nகவிவிதை - 8 - நம்பிக்கை - --விழி மைந்தன் --...\nமூங்கில் இலைக் காடுகளே …– கவிஞர் காவிரிமைந்தன்.\nசிட்னி துர்க்கை அம்மன் தேவஸ்தானம் அலங்கார உத்சவம் ...\n\" இவர்களிடம் பேனைகளும் அவர்களிடம் துப்பாக்கிகளும் ...\n - ( எம். ஜெயராமசர்மா .. மெ...\nஅமரர் திருமதி அருண் விஜயராணி - அஞ்சலி நினவுப்ப...\nகலகத்தின் கலைமுகம் கே.ஏ.குணசேகரன் - வீ. அரசு\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nதமிழ் சினிமா - கதகளி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilnetwork.info/2011/07/bharathirajas-annakodiyum-kodiveeranum.html", "date_download": "2018-08-18T00:22:51Z", "digest": "sha1:SSEPRGR42HBKQF5IZLSAKEEBNDCQK6XX", "length": 10546, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பரபரப்பில் ஹீரோக்கள் பாரதிராஜா படம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பரபரப்பில் ஹீரோக்கள் பாரதிராஜா படம்.\n> பரபரப்பில் ஹீரோக்கள் பாரதிராஜா படம்.\nஇன்னும் இருபது வருடங்களுக்கு பேசப்படும் படமாக எனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படம் இருக்கும் என அறிவித்திருக்கிறார் பாரதிராஜா. பல வருட உழைப்பை இந்தப் படத்தின் திரைக்கதைக்காக அவர் செலவிட்டுள்ளார்.\nதனது சொந்த பூமியில் இந்தப் படத்தை இமயம் இயக்குகிறார். படத்துக்காக லொகேஷன்களை அவர் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.\nபாரதிராஜா படத்தில் அறிமுகமாவது கௌரவம். அவர் படத்தில் நடிப்பது பெருமை. அன்னக்கொடியும் கொடிவீரனும் இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு சவாலாக இருக்கும் என்று அவரே தெ‌ரிவித்திருப்பதால் அதில் நடிக்க ஒவ்வொரு நடிகருக்குமே ஆவல் உள்ளது. படத்தின் பெயரை வெளியிட்ட பாரதிராஜா இதுவரை நடிக்கப் போவது யார் என்று சொல்லவில்லை. இதனால் நமக்கும் வாய்ப்பு இருக்கும் என்று முந்தாநாள் மேக்கப் டெஸ்ட் போட்ட கத்துக் குட்டியும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/vetha-center-for-transdisciplinary-studies%E2%80%93workshops-and-online-courses_16851.html", "date_download": "2018-08-18T00:39:57Z", "digest": "sha1:UD6CIVFAMYMRQANJS2DDN4EVPWP2QGZJ", "length": 23062, "nlines": 294, "source_domain": "www.valaitamil.com", "title": "Vetha Center for Transdisciplinary Studies – Workshops and Online Courses", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nவடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டது.\nகனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nஅமெரிக்காவின் (Loudoun County Public Library)லவுடன் பகுதி அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523 தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/05/hail-kabali-teaser.html", "date_download": "2018-08-18T00:26:05Z", "digest": "sha1:4MUYQPF62P2DEV5GQSPMRTGRYOFHSLXO", "length": 11915, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' - டீசர் வெளியீடு (விடியோ இணைப்பு) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' - டீசர் வெளியீடு (விடியோ இணைப்பு)\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் டீசல் யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nரஜினி - இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் - கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\nகபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று சமீபத்தில் தகவல் தெரிவித்தார் ரஜினி.\nஇந்நிலையில் கபாலி படத்தின் டீசர், யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. சுமார் ஒரு நிமிஷம் ஓடும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithrapapa.blogspot.com/2011/01/blog-post_09.html", "date_download": "2018-08-18T00:51:23Z", "digest": "sha1:YCW5DPFMAO6TJSZLJ7RDK3YR3BPVIWT6", "length": 6455, "nlines": 124, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : ஈசி உருளை கிழங்கு சப்ஜி", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஈசி உருளை கிழங்கு சப்ஜி\nஈசி உருளை கிழங்கு சப்ஜி\nஉருளை கிழங்கு -1 /4 கிலோ\nசோம்பு தூள்- 1 ஸ்பூன்\nமிளகாய் தூள்- காரத்துக்கு ஏற்ப\nகறிவேப்பிலை - 1 கீற்று\n1 .உருளை கிழங்கை நன்கு வேக வைத்து சிறு சிறு துண்டாக வருமாறு மசித்து கொள்ளவும் .\n2 வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் ,கறிவேப்பிலை தாளிக்கவும்\n3 . கீறிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு,நன்கு வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்\n4 . பிறகு மசித்த கிழங்கை போட்டு சிறிது நீர் ஊற்றி நன்றாக கிளறி பின் சோம்பு தூளை சேர்க்கவும் .\n5 சோம்பின் பச்சை வாசனை போகும் படி வதக்கி பின் உப்பு சேர்த்து தேவை ஆனால் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.\n6 பின் தேவை ஆன அளவு நீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் போல் அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும் .\n7 . கிரேவி கெட்டி ஆனவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய மல்லி தழை சேர்த்து பரிமாறலாம் .\nமிகவும் சுலபமாக செய்யும் இந்த கிரேவி எனக்கு அவசரத்தில் கை கொடுக்கும் . இதை califlower கொண்டும் செய்யலாம் . சப்பாத்தி மற்றும் பரத்தாக்கு ஏற்றது\nLabels: என் சமையல் அறையில்\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nதமிழ்நாட்டு பள்ளி கல்வி முறை\nஈசி உருளை கிழங்கு சப்ஜி\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraioli.com/783/", "date_download": "2018-08-18T01:23:42Z", "digest": "sha1:PTSD2KVNWBRVQZSSLPVL7I2I7BLY3Z2Z", "length": 4612, "nlines": 36, "source_domain": "thiraioli.com", "title": "நல்ல தானா வாழ்ந்துட்டுயிருந்தீங்க..? தினேஷின் கெட்ட பழக்கத்தால் சண்டை", "raw_content": "\n தினேஷின் கெட்ட பழக்கத்தால் சண்டை\nபிரபல தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை தான் ரச்சித்தா. இவர் பிரிவோம் சிந்திப்போம் தொடரை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஹைதராபாத்தை சேர்ந்த இவர் தமிழில் பிரிவோம்சந்திப்போம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வந்தனர்.\nமேலும், கணவன் மனைவி இருவரும் இணைந்தே சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள். அந்த வகையில் அண்மையில் ஒரு பேட்டியில், ரச்சித்தா அவரது கணவருக்கு இருக்கும் கெட்ட பழக்கம் குறித்து கூறியுள்ளார். கணவர் தினேஷிற்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதாம். இதனால் அடிக்கடி ரச்சித்தா அவரோடு சண்டைபோடுவாராம். இந்த பழக்கத்தை போக்க பல முயற்சிகள் எடுத்தாலும் தினேஷ் பழக்கத்தை விடமருகிறாராம்.\nஷாப்பிங் மாலில் ஆடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய கேமரா \nவெளிநாட்டில் நடக்கும் BIGBOSS-ல் என்ன பண்ணுறாங்க பாருங்க – வீடியோ\n ஜனனியிடம் என்ன சொன்னார் மும்தாஜ்\nகையில் அடிபட்ட நிலையிலும் கேரளா மக்களுக்காக அமலா பால் செய்த செயல்- வைரலாக புகைப்படம்\nகண் கலங்க வைக்கும் காணொளி.. வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nசன் டிவி கேரளா வெள்ளத்திற்கு எவ்வளவு தொகை கொடுத்தது தெரியுமா\n440 அடி உயரத்தில் இருந்து நடிகர் நகுல் வியக்கவைக்கும் புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16212-Chakarapani-Periyavaa", "date_download": "2018-08-18T01:13:25Z", "digest": "sha1:22XH5K4HUWY3BQZEKWKMC7JPU2KU3CNP", "length": 10887, "nlines": 224, "source_domain": "www.brahminsnet.com", "title": "Chakarapani - Periyavaa", "raw_content": "\nஸ்ரீ வேங்கடாசலம் என்ற வைணவ அன்பருக்கு சங்கரரான ஸ்ரீ பெரியவா அவர் வணங்கும் சக்ரபாணியாக காட்சியருளியுள்ளார்.\nஒரு முறை வேங்கடாசலம் திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீப தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க அந்த மாலை சென்றார். அச்சமயம் ஸ்ரீ பெரியவா சற்று ஓய்வாக இருந்த நேரம்.\nஇவர் போய் தரிசிக்க நின்றபோது \"நீ எங்கிருந்து வரே\" என்று பெரியவா கேட்டார்.\n\"திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவண தீபம். அங்கேர்ந்து வரேன்\" என்றார் இவர். இப்படி சொன்ன பக்தரை ஸ்ரீ பெரியவா ஏனோ ஊடுருவுவதைப் போல் நோக்கினார். வேங்கடாசலத்துக்கு ஏதோ மனதிற்குள் உறுத்தியது. அப்படியே கரைந்து போவது போலானார். பேச முயன்றார். நா எழவில்லை, நெஞ்சு தழுதழுத்தது.\nகுற்ற உணர்வோடு ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டார் \"எங்க குடும்பத்திலே ரொம்ப நாளா சிரவண தீபம், பூஜை, சந்தர்ப்பனை எல்லாம் நடந்தது. ஆனா இப்போ குடும்பத்திலே எல்லாரும் பிரிஞ்சு போயிட்டதாலே நடத்த முடியலே. மனசுக்கு கஷ்டமா இருக்கு…குத்தம் செய்யறாமாதிரி இருக்கு…ஆத்திலே இதனாலே வெளிச்சம் இல்லாம போயிட்டாப்போல இருக்கு\" என்றார்.\nஸ்ரீ பெரியவாளெனும் தெய்வமே தன்னை தன் தீர்க்கமான பார்வையால் உள்ளேயிருந்த உணர்வை வெளியே கொட்ட செய்தது போல இவருக்கு தோன்றியது.\nஉடனே ஸ்ரீ பெரியவாளெனும் தாயன்பரின் ஆறுதல் கிடைத்தது. ஸ்ரீ பெரியவா அங்கிருந்த சிஷ்யரை கூப்பிட்டு எதோ சொல்ல, அவர் உள்ளே சென்று சற்று நேரத்தில் பெரிய அகல்விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு ஏற்றிக் கொண்டு வந்து ஸ்ரீ பெரியவாளின் எதிரில் வைத்தார்.\nஸ்ரீ பெரியவா எழுந்து கையில் தண்டத்தை ஏந்தி அந்த விளக்கை வலம் வந்தார். பின் விளக்கினை மகான் வணங்கினார்.\nவேங்கடாசலம் திகைத்துநிற்க, ஸ்ரீ பெரியவா இவரை பார்த்து \"சேவிச்சுக்கோ…சிரவண தீபம் போட்டாச்சு இனிமே எல்லாம் வெளிச்சம்தான்\" என்று அருளமுதமாக பொழிந்தார்.\nவேங்கடாசலத்தால் உணர்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் போனது. கண்களில் நீர் பெருக ஸ்ரீ பெரியவா காட்டிய சிரவணதீபத்தை வணங்கி நிமிர்ந்தார்.\nஅப்போது வேங்கடாசலத்திற்கு ஸ்ரீ பெரியவள், சங்கரராக தெரியவில்லை.\n\"அங்கே சங்கரரை காணவில்லை சக்ரபாணியை தரிசித்தேன்\" என்கிறார் அந்த பக்தர். அசிரத்தை காரணமாக ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக் கூடாது…தன்னால் முயன்ற அளவில் கட்டாயம் கடைபிடித்து செய்யவேண்டுமென்ற பெரிய அறிவுரையை ஸ்ரீ பெரியவா தனக்கருளிய அதே சமயம், தானே ஏழுமலையான், தானே சக்ரபாணி என்பதையும் மிக எளிமையாக ஆணித்தரமாக காட்டிவிட்டதாக வேங்கடாசலம் அனுபவித்து மகிழ்கிறார்.\nஇப்படி எல்லாமுமாகிய பெருந்தெய்வம், மகா எளிமையோடு நமக்கெல்லாம் அருளிய ஸ்ரீ பெரியவாளெனும் தூய உருவில் காத்திருக்க, நாம் கொள்ளும் பூர்ண பக்தி நமக்கெல்லாம் அந்த பேரனுக்கிரஹத்தால் சகல ஐஸ்வர்யங்களும், சகல மங்களத்துடன் நல்வாழ்வும் அருளும் என்பது சத்தியமல்லவா\n– கருணை தொடர்ந்து பெருகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=12030", "date_download": "2018-08-18T01:31:36Z", "digest": "sha1:O5RVIFCOG35DZS7MVDZS2NDTLVDPOQPY", "length": 7089, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Demonstration across the country demanding wage increases: thousands of teachers participated|ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் பிரம்மாண்ட பேரணி: ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமணப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nகேரளாவுக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி, தெலங்கானா ரூ.25 கோடி நிதியுதவி\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவுக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் பிரம்மாண்ட பேரணி: ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்பு\nகரோலினா: மாநில முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து ஆசிரியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்த சம்பளங்கள் மற்றும் மோசமாக நிதியளிக்கப்படும் பள்ளிகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சுமார் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் ஊதிய உயர்வு, மாணவர்களுக்கான கூடுதல் செலவினம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். சிகப்பு வண்ணத்தில் ஆடை அணிந்து கடந்த புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருந்தது.\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180515218120.html?ref=manithan", "date_download": "2018-08-18T00:36:51Z", "digest": "sha1:SM3VAF2BRAH7FWZATZV6TPM2WBHCRRZV", "length": 2692, "nlines": 28, "source_domain": "www.kallarai.com", "title": "திரு பூபதி பிரதீபன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 30 ஏப்ரல் 1981 — இறப்பு : 15 மே 2018\nயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி பிரதீபன் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர்.\nஅன்னார், காலஞ்சென்ற பூபதி(றேடியோஸ்பதி), ஜெகதீஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சுப்ரமணியம், றெஜினா தம்பதிகளின் மருமகனும்,\nசாரா, அகரா ஆகியோரின் தந்தையும்,\nஅரவிந்தன், கண்ணன், தயாபரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA3MTk5NDY3Ng==.htm", "date_download": "2018-08-18T01:33:20Z", "digest": "sha1:236IS3TJCQB5RLFP7YM6TD6FJIPZSBJR", "length": 17453, "nlines": 145, "source_domain": "www.paristamil.com", "title": "பணமூட்டை...!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nசகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தர்ப்படும்.\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nமுன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.\nகொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.\nஅதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.\nசற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, \"ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.\n\"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.\nஅந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.\nபூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.\nஅண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, \"ஐயோ நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.\nஅன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.\nஅதைக் கண்டு திகைத்தான் அமுதன். \"இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.\nஅப்போது, \"அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.\n\"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.\nஅதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநூறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇலாபம் பெரும் நோக்கமே முதலாலித்துவம்...\nஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று\nஇரண்டு புலிக்கு எங்கே போவேன்...\nஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே\nகரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம்\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/category/science/", "date_download": "2018-08-18T01:21:17Z", "digest": "sha1:SLDNHG5L3IMBRRS2D4DMNNDIFVYKWL43", "length": 26916, "nlines": 174, "source_domain": "www.tamilhindu.com", "title": "அறிவியல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து அறிவியல் சிந்தனைகள், பங்களிப்புகள், ஆன்மிக-அறிவியல் உரையாடல்கள்..\nஅறிவியல், ஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், சைவம், தத்துவம், வழிகாட்டிகள்\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nபள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை ’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும். பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார். [மேலும்..»]\nஅறிவியல், சமூகம், நிகழ்வுகள், பிறமதங்கள், பொருளாதாரம், மகளிர், விவாதம்\nஇஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை\nசவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பைத் தேடிவந்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு -- எந்தவிதமான உரிமையோ, அதிக ஊதியமோ இல்லாது அனுதினமும் உழைக்கும் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு குடியுரிமை வேண்டுமென்றால் அரபுமொழி நன்கு எழுதப்படிக்கப்பேசத் தெரிந்டிருக்கவேண்டும் என்று சொல்லும் அரசு, இது எதையும் எதிர்பார்க்காது, அரபுமொழியே தெரியாத ஒரு ரோபாட் பெண்ணுக்குக் குடியுரிமை எப்படி வழங்கியது என்று பலரும் கேள்விக்கணை தொடுக்கிறார்கள். தலைநகரான ரியாதில் இருபது சதவிகிதமே தரைக்கடி சாக்கடை வசதி உள்ளது. இந்த அரசு அடிப்படைத் தேவையையே நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, ரோபாட்டுகளுக்காகப் புது நகரை உருவாக்க முனைகிறதே என்ற கோபமே அது. “வீட்டைவிட்டு வெளியே வர இயலவில்லையே என்று... [மேலும்..»]\nபுல்லட் ரயில் எனும் பெருங்கனவு\nநம்மூரிலே இருக்கும் ஆகச்சிறந்த அறிவாளிகள் ராக்கெட் விட்ட போதும் இதையே தான் கேட்டார்கள். இப்போது புல்லட் ரயிலுக்கும் இதையே தான் கேட்கிறார்கள். சீனா எப்போது புல்லட் ரயிலை ஆரம்பித்தது 2007 இல் தான். ஆமாம். பத்தே பத்து வருசம் முன்பு தான்...சென்னை மும்பை விமான வழியாக 2 மணி நேரம் ஆகும். அதுவே அதிவேக ரயில் வழியாக 4 மணி நேரம் தான் என்றால் 2007 இல் தான். ஆமாம். பத்தே பத்து வருசம் முன்பு தான்...சென்னை மும்பை விமான வழியாக 2 மணி நேரம் ஆகும். அதுவே அதிவேக ரயில் வழியாக 4 மணி நேரம் தான் என்றால் அதுவும் கட்டணமும் விமானக் கட்டணத்தைவிட மூன்று மடங்கு குறைவு என்றால் அதுவும் கட்டணமும் விமானக் கட்டணத்தைவிட மூன்று மடங்கு குறைவு என்றால் இதைவிடவும், புல்லட் ரயில் புதிய அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளுக்கான கனவை தூண்டிவிடுமல்லவா இதைவிடவும், புல்லட் ரயில் புதிய அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளுக்கான கனவை தூண்டிவிடுமல்லவா டெல்லி மெட்ரோ கட்ட 7 வருடங்கள் என்றால்... [மேலும்..»]\nஇந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்\nதமிழில் இப்படி ஒரு நூல் வந்திருப்பது நம் நல்லூழ். இன்றைய அறிவியலுக்கும் பாரத மெய்ஞானச் சிந்தனை முறைகளுக்கும் என்ன தொடர்பு அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் பாரம்பரியமான சிந்தனை மரபுகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என்னும் கேள்வியுள்ள தேடல் கொண்டவர்களுக்கு வீணான பெருமித மார்தட்டல்களின்றி, மிகக் கறாராக நவீன விஞ்ஞானத்தின் பாய்ச்சலை, பாரதத்தின் மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் விளக்கும் சிறந்த நூல். இந்நூலுக்காக அரவிந்தன் நீலகண்டனுக்கும் சாந்தினிதேவி ராமசாமிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பாரதம் அளித்த தரிசனங்களிலும் நவீன அறிவியலிலும் ஈடுபாடுள்ளவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாது.... [மேலும்..»]\nஅவர் புன்னகைத்தார். “ நாலு மார்க்” என்றார். ராகவன் சாரின் ஒரு சிறப்பு அம்சம் அது என்று சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னைப் பார்த்தார். “ நீ அந்த சியாமளாவைப் பார்த்து ஜொள்ளு விடுவதை நான் பாத்திருக்கேன். அந்த காதலை ஜி g ந்னு வைச்சுக்குவோம். சியாமளாவின் புன்னகையை எக்ஸ் Xனு வைச்சுக்குவோம்\" ... வீட்டின் உட்புறம் , ஒரு அறையில் கட்டிலின் அருகே நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார். உடல் வற்றிப்போய், கைகளில் நரம்புகள் புடைத்து, அசாதாரணப் பளபளப்பில் தோல் மினுங்க, அவரைப் பார்க்கையில் என்னமோ செய்தது.... [மேலும்..»]\n“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை\n\"அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும்\"... தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் சுதாகர் கஸ்தூரி இந்தக் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை...இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும், துப்பாக்கிகள், ஓநாய்கள்,... [மேலும்..»]\nஅரசியல், அறிவியல், கல்வி, நிகழ்வுகள், விவாதம்\nசெவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்\nமங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப் பட்டது என்பது இந்திய மக்களிடம் மட்டும் இன்றி உலக அளவிலும் இந்தியாவை இனி நிமிர்ந்து பார்க்க வைத்துள்ள ஒரு நிகழ்வு. குறைந்த காலத்திற்குள் வெகு குறைவான நிதியில் இந்தியா இதைச் சாதித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல... இந்தியாவில் கக்கூஸ் இல்லை, பள்ளிக் கூடம் இல்லை, குடிநீர் இல்லை, இந்த லட்சணத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு கோள் அனுப்புவது தேவையா என்றெல்லாம் இடது சாரிகளும் ஞாநி சங்கரன் போன்ற அணு சக்தி விஞ்ஞானிகளும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா அறிவியல் ஆராய்ச்சிகளில் செய்யும் சொற்ப முதலீட்டைக் கூட அவதூறு... [மேலும்..»]\nசூரியனுக்கு அருகே தான் பாறை கிரகங்கள் உருவாகும்.ஆனால் சூரியனுக்கு இத்தனை தொலைவுக்கு அப்பால் பாறை கிரகங்கள் உருவானது எப்படி என மண்டையை பிய்த்து கொண்ட விஞ்ஞானிகள் யுரானசும், நெப்டியூனும் தற்போது உள்ள இடங்களில் உருவாகியிருக்க சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.இந்த கிரகங்கள் சூரியனுக்கு அருகே உருவானவை.முன்பு இவற்றின் பாதை அருகே ஜூபிடரும், சாடர்னும் (குருவும் சனியும்) ஒரே நேரத்தில் வந்தன.அப்போது அவற்றின் ஈர்ப்பு விசை இந்த இரு கிரகங்களையும் சூரிய குடும்பத்தை விட்டு உந்தி தள்ளியது.... தியாவையும், பூமியையும் மாங்கனியாக கற்பனை செய்து கொள்ளுங்கள் மாங்கனிக்கு நடுவே கொட்டை, மேற்புரம் கெட்டியான பழம்,அதை மூடும் தோல்..அதே... [மேலும்..»]\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\n1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை. அந்த அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர். காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin) பற்றிய திட்டவட்டமான முடிவுகளை 1959ல் அறிவித்தார். காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாக இந்தக் கண்டுபிடிப்புகளே மூல காரணம்.... கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார்... மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல... [மேலும்..»]\n நம்மை போல வளரும் நாட்டின் பொருளாதாரத்துக்கு முடியுமா அதுவும் அமெரிக்கா விதித்த தடைகள் எல்லாம் இருக்கின்றனவே\".... ”அதையெல்லாம் கவலைப்படாதீர்கள். இந்திய தொழில்நுட்பத்தால் அதிசயங்களை செய்ய முடியும். அரசு முழுமையாக துணை செய்ய வேண்டும்\".... சர்வ சிக்க்ஷா அபியானுக்கும் சந்திரயானுக்கும் இன்றைக்கு மங்கல்யானுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது இந்த செயல்திட்டங்களின் சிக்கனம் சார்ந்த செயல்திறமை. இயல்பாக நம் பண்பாட்டில் ஊறியது அது. ... பாரதத்துக்கும் எனவே இந்துத்துவத்துக்கும், எதிராக மார்க்ஸியர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடன் கை கோர்ப்பதென்பது வரலாற்றில் எப்போதும் நடக்கும் துரோகம்தானே அதுவும் அமெரிக்கா விதித்த தடைகள் எல்லாம் இருக்கின்றனவே\".... ”அதையெல்லாம் கவலைப்படாதீர்கள். இந்திய தொழில்நுட்பத்தால் அதிசயங்களை செய்ய முடியும். அரசு முழுமையாக துணை செய்ய வேண்டும்\".... சர்வ சிக்க்ஷா அபியானுக்கும் சந்திரயானுக்கும் இன்றைக்கு மங்கல்யானுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது இந்த செயல்திட்டங்களின் சிக்கனம் சார்ந்த செயல்திறமை. இயல்பாக நம் பண்பாட்டில் ஊறியது அது. ... பாரதத்துக்கும் எனவே இந்துத்துவத்துக்கும், எதிராக மார்க்ஸியர்கள் ஏகாதிபத்தியவாதிகளுடன் கை கோர்ப்பதென்பது வரலாற்றில் எப்போதும் நடக்கும் துரோகம்தானே\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\nபோகப் போகத் தெரியும் – 44\nதிராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nதிராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்\nசெக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்\nஅறியும் அறிவே அறிவு – 11\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 04\nமறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamakathaikalpdf.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-08-18T00:21:09Z", "digest": "sha1:OKZEO3F647HP5ZGWNHHZDI2GRDKE3FJU", "length": 13751, "nlines": 96, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "தமிழ் காம கதைகள் – மூன்று விதமான அனுபவங்கள்…!! – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nதமிழ் காம கதைகள் – மூன்று விதமான அனுபவங்கள்…\nதமிழ் காம கதைகள் – மூன்று விதமான அனுபவங்கள்…\nதமிழ் காம கதைகள் செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகின்றன. ஒரே சமயத்தில் மூன்று அனுபவங்களும் ஒன்றுசேரலாம்.. அல்லது தனித்தனியாக நடை பெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட நடைபெறலாம்.\nமுதலாவது செக்ஸ் என்பது இனப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது.எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது.ரூnடிளி; சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இன்பபெருக்கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகிறது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப்பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமான சூழல் இருந்தால் அது வளர்ச்சியடையும். இது நவீன அறிவியல் வளர்ச்சியடைந்த சூழலில் செயற்கை கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.ரூnடிளி; இமமாதிரியான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதில்லை., காரணம் மக்கள் தொகைப் பெருக்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டுள்ள காதலர்களும், விதவையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வாழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.,\nசெக்ஸ் என்பது காதலை வெளிப்படுத்தும் ஒரு வழி., காதலர்களுக்கு இடையே கொஞ்சல் வார்த்தைகளும் ஊடல்களும் இருந்தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டு இணையும்பொழுது காதலின் உன்னதமானவை. செக்ஸ்க்குத் திருமணம் அவசியம் என்பது சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் விஷயமாகுமு்.ரூnடிளி; மற்றப்படிஇ திருமணம் செய்தால்தான் செக்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகும். ஆனால், இன்றைய இளம் காதலர்களுக்கிடையே,காதலை விட காமம் முன் நிற்பதால் காதல்இ பாலுறவாகி நமது சமூகத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்துகிறது.,\nஇந்த வகைப் பாலுறவை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற்றப்பட்டது. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர் மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட்டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும் பொழுது போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இது கள்ள உறவாக வயது வித்தியாசத்துடன் நடைபெறுகிறது. மேலும் உறவுமுறைகளை மீறியும் பாலுணர்வு வேட்கை. மனிதர்களை வேட்டையாடிக்பொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா விலங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்றன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படுகிறதுசெக்ஸ் என்பது சந்தோஷமான விஷயமாகும். ஆனால், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.\nசெக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி\nசெக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவது எளிது. அதற்கு செக்ஸில் குறைந்தப்பட்ச தெளிவு இருக்கவேண்டும். இன்றைய நவீன உலகில், இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும் பாலுறுப்புகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து கற்றுத் தருவதில்லை. எல்லாம் மறைமுகமாக, ஒருவித பரவசத்துடன் செக்ஸ் பார்க்கப்பட்டு வருகிறது. இது தவறு,இனப்பெருக்கத்தைப் பற்றி பள்ளியில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்கஇ பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என்பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக்குஇ வீணான கற்பனைகளை, கட்டுக் கதைகளைத் தவிர்க்க உதவும். மேலும் செக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை ஆண், பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன்று பெரும்பாலான விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கி காரணமாக இருக்கிறது. ஆண். பெண்ணையும். பெண்.ஆணையும் குற்றம் சாட்டி வருகிறார்கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.,\nசெக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகிறார்களா\nமலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயதுக்கு வந்த ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற பெண்கள் அழைத்துச் சென்று எப்படி செக்ஸில் ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறார்கள்.அதுபோல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயிற்சி தருகிறார்கள்; அப்படிப்பட்ட நபர்கள் அந்த சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக உள்ளார்கள்.\nசெக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்\nசெக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண்ணும் எந்த மாதிரியான செக்ஸ் தேவை என்பதை முடிவு செய்வது அவசியம்.. இனப்பெருக்கம் செய்வதற்காகவா அல்லது அன்பை வெளிப்படுத்தவா அல்லது பொழுதுபோக்குக்காகவா என்பதில் தொளிவாக இருக்க வேண்டும். உங்களின் தேவையை முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவரும் தெளிவான எண்ணத்துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்.\nதங்கையின் தாகம் – 2\nபாங்காக் பிரதாபங்கள் – 1\nதமிழ் காம கதைகள் (1,818)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovaisakthi.blogspot.com/2012/06/9.html", "date_download": "2018-08-18T01:18:42Z", "digest": "sha1:FMO3RPC45D7OOG4J77XKL7DCTXPBV2WG", "length": 6142, "nlines": 135, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-9 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-9\nஇந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய முடிவுகள் இதோ :\nபெரிதாக்க படத்தை \" க்ளிக் \" பண்ணவும்,,,\nஉங்கள் நல் ஆதரவும் , நட்பும் , தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,\nஉங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .\nLabels: பங்கு ஆலோசனையின் அறிக்கை\nதிண்டுக்கல் தனபாலன் June 23, 2012 12:36 PM\nசார் ,மிக்க நன்றி ,உங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து வழங்குங்கள் .\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-10\nபங்கு வர்த்தகம் மலர் -81\nபங்கு வர்த்தகம் மலர் -80\nபங்கு வர்த்தகம் மலர் -79\nபங்கு வர்த்தகம் மலர் -78\nபங்கு வர்த்தகம் மலர் -77\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-9\nபங்கு வர்த்தகம் மலர் -76\nபங்கு வர்த்தகம் மலர் -75\nபங்கு வர்த்தகம் மலர் -74\nபங்கு வர்த்தகம் மலர் -73\nபங்கு வர்த்தகம் மலர் -72\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-8\nபங்கு வர்த்தகம் மலர் -71\nஉயிர் காக்க உதவுங்களேன் -ப்ப்ப்ப்பப்ப்ப்பப்ப்ளீஸ்...\nபங்கு வர்த்தகம் மலர் -70\nபங்கு வர்த்தகம் மலர் -69\nபங்கு வர்த்தகம் மலர் -68\nபங்கு வர்த்தகம் மலர் -67\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-7\nபங்கு வர்த்தகம் மலர் -66\nபங்கு வர்த்தகம் மலர் -65\nபங்கு வர்த்தகம் மலர் -64\nபங்கு வர்த்தகம் மலர் -63\nபங்கு வர்த்தகம் மலர் -62\nபங்கு வர்த்தகம் மலர் -61\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=12031", "date_download": "2018-08-18T01:31:34Z", "digest": "sha1:CFIGACVAR5ZC65BDZF5BAECXKAH75HZO", "length": 6921, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Council of trade unions protesting against online merchant|ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமணப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nகேரளாவுக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி, தெலங்கானா ரூ.25 கோடி நிதியுதவி\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவுக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தை கொள்ளையடிக்க வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிளிப்கார்ட்டும், வால்மார்ட்டும் இணைந்து ஆன்லைன் வணிகம் மூலமாக சில்லறை வியாபாரத்தை ஒழிக்க முயற்சித்து வருவதாக வணிகர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30412", "date_download": "2018-08-18T00:22:46Z", "digest": "sha1:N7YR6X45JYGOPJZY3LXUNLHY4MLFKEW3", "length": 11344, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள்!!! | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nபொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள்\nபொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள்\nசீனாவில் குற்றவாளிகளை பார்த்த உடன் கண்டுபிடிக்க பொலிஸாருக்கு கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே சீனாவில்தான் அதிக கமராக்கள் இருக்கிறது. சீனாவில் திரும்பும் திசையெல்லாம் சி.சி.டி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.\nஇதுவரை சுமார் 17 கோடி கமராக்கள் அங்குப் பொருத்தப்பட்டுள்ளது. சாலையில் நடக்கும் எந்த ஒரு நபரின் அடையாளத்தையும் இதன் மூலம் ஒரே நொடியில் கண்டுபிடித்துவிட முடியும் என்று கூறப்படுகிறது.\nதற்போது அங்கு இருக்கும் கமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் மேற்கொண்டு 40 கோடி கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.\nஇதன்மூலம் சீனாவில் எந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என ஒரு நொடியில் கண்டுபிடிக்க முடியும்.\nஇந் நிலையில் அங்குத் திருடர்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக மூக்குக்கண்ணாடி பயன்படுத்தப்பட உள்ளது.\nமூக்குக்கண்ணாடி ஒன்றின் மூலம் திருடர்களை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇக் கண்ணாடிகள் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து யாரையாவது பார்ப்பதன் மூலம் அவர்கள் குற்றவாளிகளா இல்லையா\nஇக் கண்ணாடியில் கமராவுடன் ஸ்கேன் செய்யும் அமைப்பும் இருக்கும். இது எதிரே வருபவர்களை ஸ்கேன் செய்தவுடன் பொலிஸாரிடம் இருக்கும் தகவலை வைத்து அந்த நபர் குற்றவாளியா\nதற்போது இந்த தொழில்நுட்பத்தை மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள்.\nஇந்த தொழில்நுட்பம் மூலம் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதற்போது இந்த மூக்குக்கண்ணாடி மிகவும் நன்றாக இயங்கி வருகிறது எனவும், இது சீனாவில் புதிய பாதுகாப்பை உருவாக்கும் எனவும் இதை தயாரித்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.\nசீனா கமரா பொருத்தப்பட்ட மூக்குக்கண்ணாடிகள் சி.சி.டி.வி. கமரா பொலிஸார் தொழில்நுட்பம்\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் நாசா\nசூரி­யனை இது­வரை இல்­லாத வகையில் நெருக்­க­மாகச் சென்று ஆய்வு செய்­வ­தற்­காக நாசா தயா­ரித்­துள்ள செயற்­கைக்கோள் இன்று விண்ணில் செலுத்­தப்­பட உள்­ளது.\n2018-08-12 15:14:31 சூரியன் செயற்­கைக்கோள் நாசா\nவட்ஸ் அப் இல் காணப்படும் 5 இலகுமுறை (whatsapp trick )\nநாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் சமூகத்தளம் தான் வட்ஸ் அப் ( whatsapp) , நாம் உபயோகிக்கும் இந்த whatsapp இல் இலகுவாக கையாள சிறந்த ஐந்து whatsapp trick ஐ பார்க்க முடியும்.\nசெவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.\n2018-07-31 12:21:08 செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகள் பூமி\nவட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஐபோன்களுக்கான வட்ஸ் எப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளது.\n2018-07-26 17:20:43 ஐபோன் புதிய பதிப்பு தொலைபேசி\nசெவ்வாயில் நீர் : விஞ்ஞானிகள் புதிய தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என முன்பே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n2018-07-25 23:27:34 செவ்வாயில் நீர் .விஞ்ஞானிகள் தகவல்\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adadaa.net/11320/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-08-18T00:40:46Z", "digest": "sha1:7SIWDPPHDDOXGCWWART75F6YCWCSOATI", "length": 8978, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "அவுஸ்திரேலிய பெண்ணுடன் சிக்கிய இலங்கை இளைஞர்கள் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » அவுஸ்திரேலிய பெண்ணுடன் சிக்கிய இலங்கை இளைஞர்கள்\nஅவுஸ்திரேலிய பெண்ணுடன் சிக்கிய இலங்கை இளைஞர்கள்\nComments Off on அவுஸ்திரேலிய பெண்ணுடன் சிக்கிய இலங்கை இளைஞர்கள்\nகொழும்பு டெஸ்டிலும் இலங்கை வெற்றி- தென்ஆப்பிரிக்காவை …\n2 ஆயிரம் தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை அட்டூழியம்\nராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: 12 …\nஇலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் : டிராவல்ஸ் அதிபர் …\nடொரன்டோ விபத்தில் இலங்கை பெண் உயிரிழப்பு\nஅவுஸ்திரேலிய பெண்ணுடன் சிக்கிய இலங்கை இளைஞர்கள் தமிழ்வின்Full coverage\nComments Off on அவுஸ்திரேலிய பெண்ணுடன் சிக்கிய இலங்கை இளைஞர்கள்\nPhotos:சிங்களவர் வந்து திறந்தால் வெடிக்க கூடிய வகையில் கேட்டில் வெடி குண்டு பொருத்திய முஸ்லீம்கள்\nPhotos:ஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nஅந்தமானில் உள்ள 48 இலங்கை தமிழர்கள் குடும்பத்துக்கு 1.5 …\nஇலங்கை வந்த பிரித்தானியரின் ஆபத்தான செயற்பாடு\nஇலங்கை தொழில் சந்தையில் 5 லட்சம் வெற்றிடங்கள்\nதிருப்பதி வந்தடைந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://mithrapapa.blogspot.com/2010/12/blog-post_08.html", "date_download": "2018-08-18T00:50:19Z", "digest": "sha1:CNXMONDQ7BAYDQ55MJK6SJFXDKODM2DU", "length": 9077, "nlines": 120, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nசிங்கப்பூரில் என்னை கவர்ந்த சில விஷயங்கள்....\nஅங்கே நம் சிங்கார சென்னை இந்த அடை மழையில் படும் பாட்டை பார்க்கும் போது இதுவரை இங்கே என் கண்ணுக்கு படாத பல விஷயங்கள் இப்போ என்னை ரொம்பவே ஆச்சர்ய படுத்துது... அவற்றுள் சில\n1 . சுத்தம் .\nசிங்கப்பூரின் சுத்தம் பற்றி எல்லாருக்கும் தெரியும் . ஆனால் அதை பராமரிக்க அரசாங்கம் எடுத்துகொள்ளும் முயற்சி ரொம்பவே பாராட்டத்தக்கது.எல்லா தெருக்களிலும் கண்டிப்பாக நடை பாதையும் ,பாதாள சாக்கடையும் இருக்கும்.\nகடை வீதிகளோ, உணவகமோ, பொது மக்கள் கூடும் இடமான பேரூந்து நிறுத்தம் , இரயில் நிலையம் , கடற்கரையோ... கையில் குப்பையோடு நம் யோசிக்கும் முன்னே நம் கண்ணில் குப்பை தொட்டிகள் படும்.\nஇங்கே அரசு மருத்துவமனைகளின் சுத்தமும் கவனிப்பும் நம்மூர் தனியார் மருத்துவமனையை விஞ்சி விடும்.\n3 . விளையாட்டு :\nஇங்கே குழந்தைகளின் விளையாட்டுக்கும் , பெரியவர்களின் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் அதிகம். இரண்டு அல்லது மூன்று ப்ளோக்குகள் நடுவே ஒரு விளையாடும் இடமும் ( சின்ன சறுக்கு , சி-சா), உடற்பயிற்சி செய்யும் இடமும் கண்டிப்பாக இருக்கும்.\nமத்தியானம் 12 மணி வெயிலில் கூட யாராவது ஒன்று , இரண்டு பேர் jogging செய்வதை தெருக்களில் பார்க்கலாம் .\nநான் முதல் நான் சிங்கப்பூர் வந்த அன்று காலை 7 மணி அளவில் ஒரு வயதான பாட்டி ( 70 க்கும் குறையாமல் இருக்கும் ) , பிளாக் கீழே தனியாக நின்று கை வீசி ஆட்டி கொண்டே , ஏதோ பேசி கிட்டே இருந்தாங்க .. நான் கூட எதோ மன நிலை சரி இல்லாதவங்கன்னு நினைச்சுட்டேன் .. ஆனா ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிஞ்சது அவங்க செஞ்சது ஒரு வகை உடல் பயிற்சி - TAIJI அப்டின்னு ...\n4 . நூலகம் :\nஇங்கே உள்ள அரசாங்க நூலகங்கள் என்னை போல வாசிப்பு பிரியர்களுக்கு ஒரு நல்ல வர பிரசாதம் ....நிறைய தமிழ் , ஆங்கில புத்தகங்கள் , குழந்தைகளுக்கான புத்தகங்கள் ன்னு நிறைய இருக்கும். முக்கியமான விஷயம் நிறைய இடங்கள்ள இருக்கும் . நம்ம அரசியல் வாதிங்க மாதிரி தமிழ் வளர்ப்போம் வளர்ப்போம் ன்னு வெறும் சேருமே பேசிக்கிட்டே இருந்து , ஊருக்கு ஒரு நல்ல நூலகம் கூட வைக்க மாட்டாங்க ....\n5 பூங்காக்கள் : இங்கே நிறைய இயற்கை பூங்காக்கள்(Natural Parks) அரசாங்கமே நல்ல வகையில் பராமரிச்சுகிட்டு இருக்கு...\nஇப்டி இன்னும் நிறைய சொல்லிகிட்டே போகலாம்.. இன்னும் சொல்றேன்\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nசிங்கப்பூரில் என்னை கவர்ந்த சில விஷயங்கள்....அங்...\nகுடுக்க மாட்டேன் போ .........\nதாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா.\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/ndlf-bats-for-it-employees-in-2015-video/", "date_download": "2018-08-18T01:32:27Z", "digest": "sha1:QW6JDQMMF6MUWBLM4JKDNASOM522DCZE", "length": 10411, "nlines": 104, "source_domain": "new-democrats.com", "title": "\"நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லை\" - தொலைக்காட்சி விவாதம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\n“உழைப்பை கழித்து விட்டு பார்த்தால், முதலாளிகள் வெறும் ஜீரோதான்” – உரை\nஅத்தியாவசிய மருந்துகளும் கொள்ளை லாபமும் – நிதி மூலதனத்தின் கிடுக்குப்பிடி\n“நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லை” – தொலைக்காட்சி விவாதம்\nFiled under காணொளி, சென்னை, பு.ஜ.தொ.மு-ஐ.டி, முதலாளிகள், யூனியன்\n2015-ல் டி.சி.எஸ் பெருமளவு ஆட்குறைப்பு நடவடிக்கையை ஒட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் கலந்து கொண்ட ஆய்வுக்களம் என்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி.\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகார்ப்பரேட் தாக்குதலை எதிர்ப்பதில் விவசாயிகளோடு இணையும் ஐ.டி ஊழியர்கள் – வீடியோ\nதொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்\nசட்டப் போராட்டங்கள், Layoff பிரச்சினை,NDLF IT ன் சாதனைகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்\n“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nஉழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nCategories Select Category அமைப்பு (225) போராட்டம் (221) பு.ஜ.தொ.மு (20) பு.ஜ.தொ.மு-ஐ.டி (119) இடம் (468) இந்தியா (260) உலகம் (82) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (493) அரசியல் (196) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (113) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (311) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (487) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (75) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (87) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (50) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்\nவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் 3-ம் தேதி அன்று மாலை மாலை 4 மணி முதல் 5 மணி வரை...\nஐ.டி வேலை பறிப்பால் இன்னுமொரு உயிரிழப்பு\nTechie commits suicide தேஜஸ்வனி என்ற 25 வயது ஐ.டி ஊழியர் கொடிகஹல்லியில் உள்ள தனது ஃபிளாட்டில் வெள்ளிக் கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். 8...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.kasangadu.com/2012/09/kasangadu-android-app.html", "date_download": "2018-08-18T00:52:18Z", "digest": "sha1:PH7W6YXHGD5GAQFPQROZGK7PP5GSTYZR", "length": 9393, "nlines": 173, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: Kasangadu - கைதொலைபேசி Android App வெளியிடப்பட்டுள்ளது", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், செப்டம்பர் 04, 2012\nKasangadu - கைதொலைபேசி Android App வெளியிடப்பட்டுள்ளது\nகாசாங்காடு கிராமத்தை பற்றி எளிதாக கைபேசிகளில் தெரிந்து கொள்ள Android மென்பொருள் கொண்ட கைபேசிகளுக்கு Kasangadu என்ற தலைப்பில் செயலி (Application) வெளியிடப்பட்டுள்ளது.\nபின்வரும் சுட்டியில்ரிந்து தங்கள் Android கைபேசிகளில் மேம்படுத்தி கொள்ளலாம்.\nபின்வரும் திரை பிடிப்பு அதன் ஒரு சில பகுதிகளாகும்.\nமுதல் கட்டமாக சில எளிய பகுதிகளை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.\nதங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/04/2012 05:34:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nபாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் மாணவர்கள் / மாணவ...\nபாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில்ரிந்...\nகுட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் அவர்களுக்கு பேரன் ...\nசிங்கப்பூரில் காசாங்காடு கிராம மக்கள் கூட்டம்\nதலைகீழாக ஊடுகசிவு முறையில் குடிநீர் சுத்திகரிப்பு ...\nவேதராசு மாசிலாமணி இல்ல சீமந்த (வலையல் காப்பு) சடங்...\nAndroid கைபேசிகளுக்கு மேலும் தகவல்களை எளிதாக பகிர்...\nKasangadu - கைதொலைபேசி Android App வெளியிடப்பட்டுள...\n659 உலக நகரங்களிளிரிந்து 1,25,605 பேர் காசாங்காடு ...\nகாசாங்காடு இணைய தளம் - ஐந்தாம் ஆண்டு தொடக்கம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20980&cat=3", "date_download": "2018-08-18T01:32:59Z", "digest": "sha1:ZDSJQQUINO2NOEFEZHK3TRFWFJICLFRX", "length": 7076, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வைத்தீஸ்வரன்கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nவைத்தீஸ்வரன்கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு\nசீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான 51 வகையான வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் 3 மணி நேரம் நடந்தது.\nதொடர்ந்து நவரத்தின ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதங்களை வழங்கினார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமேலக்கோயிலில் ஆவணி தேர் திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nமீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூல திருவிழா : நாரைக்கு முக்தி கொடுத்த லீலை\nஆர்.பி. காட்டூர் பொன்காளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்\nமேலூர் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு\nமுத்துமாலை அம்மன் கோயிலில் ஆடி கொடை விழா கோலாகலம்\nதிருவானைக்காவல் கோயிலில் ஆடிப்பூர தெப்போற்சவம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=12032", "date_download": "2018-08-18T01:31:41Z", "digest": "sha1:S67VOFVBFMIJDBYROEURXV5POAN5E6SF", "length": 6666, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "People's Justice Minister Kamal Hassan toured Nellai district|மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமணப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nகேரளாவுக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி, தெலங்கானா ரூ.25 கோடி நிதியுதவி\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவுக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், இன்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். சுற்றுப்பயணத்தின் போது பேசிய கமலஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் வழிகாட்டிகள் மக்கள்தான் என்றும், மக்களின் தேவையை அறியாமல் எதுவும் செய்ய முடியாது என்பதால் நேரில் சந்திக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T01:20:58Z", "digest": "sha1:OZR57MM3XJBG3XGWGBUQJ3KXXDHCPZID", "length": 10191, "nlines": 127, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழ் மாதங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தமிழ் மாதங்கள் ’\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\nதமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது... கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nஅறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்\nஇன்று போய் நாளை வா – எதற்கு\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nதரையைத் தொடாமல் வரும் கங்கை\nமாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..\nதிருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்\nமீனவர் துயரம்: சும்மா இருக்கிறதா மோதி அரசு\nவிழா அறை காதை (மணிமேகலை – 2)\nநிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.thiruvarul.medialinkconcepts.net/thiruvarulkalvi/blog/4-c-i-p-yarcci-2017.html", "date_download": "2018-08-18T01:04:42Z", "digest": "sha1:FGHWPXBKYGDV5IRINCT5U5S6UBU3NORS", "length": 4079, "nlines": 63, "source_domain": "www.thiruvarul.medialinkconcepts.net", "title": "சனி பெயர்ச்சி-2017 thiruvarulfoundation", "raw_content": "\nதிருவருள் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு...\nமார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி\nதிருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு...\n\"சனி பெயர்ச்சி \" என்ற சொல்லை கேள்விப்பட்டவுடன் நம்மில் பலரும் பலவிதத்தில் பயப்படுகிறோம், பல இடங்களுக்கு சென்று பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகிறோம்.\nஇதற்க்கு மாற்றாக எளிமையான வழிகளை நமது திருமுறைகள் காட்டியுள்ளது.\nஇந்த எளிமையான வழி நம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் திருவருள் பவுண்டேஷன் முயற்சித்து இந்த பதிவை பகிர்கிறது.\nசனி பெயர்ச்சியின் நன்மைகளை பெற...\nசனி பெயர்ச்சியின், நன்மைகளை பெறவும் அல்லது சனி பெயர்ச்சியின் தாக்கத்திலிருந்து விடுபெறவும் திருமுறைகள் காட்டும் வழி.\nதிருவருள் பவுண்டேஷன், திருமுறையில் காட்டிய பதிகத்தை பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் (Upload) செய்து உள்ளது.\nஇந்த திருநள்ளாற்றுத் திருபதிகம் முழுமையாக பதிவிறக்க (Download) செய்தும் கேட்டும் பயன் பெறவும்.\nமனித சமுதாயத்திற்கு வேண்டிய வாழ்வியல் நெறிகள், நற்பண்புகள் மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகள் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்துவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=20393", "date_download": "2018-08-18T00:45:15Z", "digest": "sha1:GIWDKKGMD5AOHDADI2GIKZJDMEIA4N7X", "length": 9550, "nlines": 126, "source_domain": "kisukisu.lk", "title": "» விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்! (வீடியோ)", "raw_content": "\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல நடிகை\nகணய புற்றுநோயால் உயிரிழந்த பிரபல பாடகி\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\n← Previous Story பிச்சை எடுக்கும் காமெடி நடிகர் – வைரலாகும் தகவல்\nNext Story → தடை வதந்திகளை மீறி நாய் இறைச்சித் திருவிழா\nவிஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nஇளைய தளபதி விஜய் யாரிடமும் கோபமே படமாட்டார். படப்பிடிப்பில் கூட மிகவும் அமைதியாக தான் இருப்பார். எத்தனை விமர்சனங்கள் தன்னை பற்றி வந்தாலும் அமைதியாக தான் கேட்பாராம்.\nஆனால், ஒரு நாள் லவ்டுடே படப்பிடிப்பில் விஜய்யின் தந்தை இறப்பது போல் ஒரு காட்சியை எடுத்தார்களாம்.\nஅதில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஜுனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் படப்பிடிப்பில் கவனம் இல்லாமல், வேறு ஏதோ செய்துக்கொண்டிருந்தாராம்.\nஇதை ஆரம்பத்திலேயே கவனித்த விஜய், ஷுட்டிங் முடிந்த பிறகு அவரை அருகில் அழைத்து, ‘ஏன் அப்படி செய்தீர்கள்\nஅவர் நான் அப்படி செய்யவே இல்லை என சமாளிக்க, விஜய் ‘நான் உங்களை பார்த்தேன்’ என கூறியுள்ளார்.\nஒரு சில நிமிடங்கள் அவரை பார்த்துவிட்டு, போங்க என்று சொல்லவிட்டாராம், விஜய்யின் உச்சக்கட்ட கோபமே அவ்வளவு தானாம்.\nOne Comment on “விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/category?pubid=0235&showby=list&sortby=firstedi", "date_download": "2018-08-18T00:57:49Z", "digest": "sha1:5M7BUUB26D6JTRNCFNBTIDNNPIQOLXXO", "length": 3343, "nlines": 81, "source_domain": "marinabooks.com", "title": "வாதினி", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சுற்றுச்சூழல் சட்டம் மகளிர் சிறப்பு பெண்ணியம் சித்தர்கள், சித்த மருத்துவம் ஜோதிடம் பகுத்தறிவு வாஸ்து மாத இதழ்கள் வேலை வாய்ப்பு தமிழ்த் தேசியம் கம்யூனிசம் நகைச்சுவை இல்லற இன்பம் பொது அறிவு மேலும்...\nவேதாத்ரி பதிப்பகம்பாரதி புத்தகாலயம்ராணி முத்துகல்வி உலகம் பதிப்பகம்தமிழ்த்தோட்டம்ஜனக நாராயண பப்ளிகேஷன்ஸ்இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்பவித்ரா பதிப்பகம்BAMBOOSKY STUDIOவிடியல் பதிப்பகம்சொல் புதிது பதிப்பகம்தமிழர் பண்பாட்டு ஆய்வகம்தாழையான் பதிப்பகம்கோரல்பயணி வெளியீடு மேலும்...\nஅநலெயோ (அஜந்தா,நட்டை,வெக்ரோ,யோசிகநான்கு கடிகாரங்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mithrapapa.blogspot.com/2010/10/blog-post_6858.html", "date_download": "2018-08-18T00:52:04Z", "digest": "sha1:U7CLCT4Q4FCYWPZGL4ALY6QWJWNW57TA", "length": 5329, "nlines": 111, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : விளையாட்டு", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nரெண்டு நாலா buds டப்பாவோட தான் எங்க விளையாட்டு.\nஎல்லாத்தையும் கீழ கொட்டி மறுபடியும் பொறுமையா எடுத்து உள்ள வைக்கிறா . சில சமயம் உள்ள அடுக்கி குடுக்க வேண்டியது என் இல்லேன்னா சிவா வோட வேலை ... ஆனா தூக்கம் வர வரைக்கும் நல்ல பொழுது போகுது.\nஅப்புறம் தண்ணி , காபி இப்படி எந்த liquid கிடைச்சாலும் இன்னொரு பத்திரம் எடுத்துகிட்டு transfer பண்ணி விளையாடுறா. ஆனா போக போக கீழ சிந்துற அளவு கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகுது . கைக்கும் கண்ணுக்கும் நல்ல coordination .\nநேத்து அதே மாதிரி கடலை எடுத்து டப்பால போட்டு விளையாடுனா . ஒவ்வொன்னா போடா சொன்ன , ரெண்டு கடலை போட்டுட்டு மறுபடியும் அப்படியே கொட்ட ஆரம்பிச்சிட்டா .\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநிலா நிலா வா வா\nஎங்க வீட்டு குட்டி கிருஷ்ணன்\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18847&cat=3", "date_download": "2018-08-18T01:32:16Z", "digest": "sha1:6T7VWJ4EQYFYYBGBZBDS6I7G3QCE2QTU", "length": 5734, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா\nஅரூர்: அரூர் நான்கு ரோடு ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. அரூர் அருகே நான்கு ரோடு ஐயப்பன் கோயிலில், வருடாபிஷேக விழா நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவின் முதல் நாள் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கலசாபிஷேகம் ஆகியவையும், மாலை சிறப்பு அலங்கார வழிபாடும் நடத்தப்பட்டது. மறு நாள் ஐயப்பனுக்கு வருடாபிஷேகம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தீர்த்தமலை குருமண்டல அகத்தியர் ஆஸ்ரம நிறுவனர் பக்தி பாடகர் வீரமணிதாசன், சத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nஎல்லையம்மன் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா\nகூகூர் மூங்கிலடியான் கோயில் திருவிழா\nநாகம்மன் கோயில் செடல் விழா\nஅம்பை சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : திரளானோர் பங்கேற்பு\nஅம்பை கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=12033", "date_download": "2018-08-18T01:31:39Z", "digest": "sha1:R7IQXSQS4YKNPC54KJURJOFOJE6FAADP", "length": 6613, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "International Train Box Technology Exhibition on behalf of ICF in Chennai: Governors participation|சென்னையில் ஐசிஎப் சார்பாக சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமணப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nகேரளாவுக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி, தெலங்கானா ரூ.25 கோடி நிதியுதவி\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவுக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nசென்னையில் ஐசிஎப் சார்பாக சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு\nசென்னை அயனாவரத்தில் உள்ள ஐசிஎப் சார்பாக சர்வதேச ரயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புதிய ரயில் பெட்டிகளின் மாதிரி வடிவமைப்புகளை வெளியிட்டார். மேலும் ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வானிலோகானி, ஐசிஎப் பொதுமேலாளர் சுதன்சு மணி, தினேஷ், சி.பி.சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2863986.html", "date_download": "2018-08-18T00:32:09Z", "digest": "sha1:7CTOQAQRQSNL3C7YHSMCFXLBGEXCGP73", "length": 16466, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்- Dinamani", "raw_content": "\nதமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nதமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களை மையம் கொண்டு வீசத் தொடங்கியுள்ள புயல் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. பாரதியார், பெரியார் பல்கலைக்கழகங்களைத் தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.\nதமிழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 23 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அந்தப் பணிகளை வகிக்க தகுதி பெற்றவர்கள் கிடையாது. தகுதியிலும், அனுபவத்திலும் இவர்களை விட பல மடங்கு சிறந்த பலர் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களை ஒதுக்கிவிட்டு, இவர்கள் நியமிக்கப்பட காரணம் ஊழல்... ஊழல் மட்டுமே. அதேபோல் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமிப்பதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகிக்கும் பாஸ்கரன் மீது கடந்த இரு ஆண்டுகளாகவே ஊழல் குற்றச்சாற்றுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை; பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கிறார் ஆகியவை தான் அவர் மீதான முதன்மை குற்றச்சாற்றுகள் ஆகும். அக்குற்றச்சாற்றுகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களும் உள்ளன. பல்கலைக்கழகங்களில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியராகவும், இணைப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்கள் மட்டுமே பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். ஆனால், இத்தகைய தகுதிகள் எதுவும் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் 6 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியர் நிலையில் பணியாற்றிய ஒருவருக்கு தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியோ, திறமையோ முக்கியமல்ல, ரூ.50 லட்சம் கொடுத்தால் பேராசிரியர் பதவியும், ரூ.30 லட்சம் கொடுத்தால் உதவிப் பேராசிரியர் பதவியும் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் வெளிப்படையாக குற்றஞ்சாற்றியுள்ளனர்.\nபணியாளர்கள் நியமனங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நியாயம் கேட்கச் செல்பவர்களிடம், ‘‘ரூ. 3 கோடி பணம் கொடுத்து தான் துணைவேந்தர் பதவியை வாங்கியுள்ளேன். கொடுத்த பணத்தை நான் எடுக்க வேண்டும். பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் வேலை கொடுப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது ’’ என்று துணைவேந்தர் பாஸ்கரன் வெளிப்படையாகவே கூறுவதாக பல தரப்பினரும் குற்றஞ்சாற்றி வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக அதன் துணைவேந்தர் கணபதி கையும், களவுமான கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பற்றியெல்லாம் அச்சப்படாமல் கையூட்டை ஒருவர் வாங்கிக் குவிக்கிறார் என்றால், அதற்கான துணிச்சல் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களும், அத்துமீறலும் இன்னும் கொடுமையானவை. துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருகின்றனர். அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகக் கூறப்படுகிறது.\nதொலைதூரக்கல்வி முறையில் விடைத்தாள்களில் திருத்தம் செய்து கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கு தனியாக லஞ்சம், பகுதி நேரப் படிப்பில் எம்.பில் ஆய்வுப் பட்டம் வழங்குவதற்கு லஞ்சம் என மிகப்பெரிய அளவில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலித்திருப்பதாக மாணவிகள் புகார் தெரியுள்ளனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளது.\nதமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டுமின்றி அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இது தான் நிலையாகும். பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாக மாறி வருவது தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும். எனவே, இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் நியமனங்கள், தொலைதூரக் கல்வி, பகுதிநேரக் கல்வி ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றி விசாரணை நடத்த ஆணையிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuveli.com/2014/09/blog-post_7.html", "date_download": "2018-08-18T01:17:03Z", "digest": "sha1:QGESE6BJQJOH5M56H6YVAEPHEDGRF7H6", "length": 19383, "nlines": 218, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nஞாயிறு, 7 செப்டம்பர், 2014\nகமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட, திரு. சண்முகநாதன் அவர்களுடனான சந்திப்பு\n17.08.2014 அன்று மாலை 6 மணியளவில் சூரிச் மாநிலத்தில் நடைபெற்றது. அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் வந்திருந்தனர்.\nஅறிமுகத்தைத் தொடர்ந்து திரு. சண்முகநாதன் அவர்கள் உரையாற்றினார். எமது பாடசாலையின், கிராமத்தின் இன்றைய நிலை, இதுவரை செய்யப்பட்ட திட்டங்கள், இனி என்ன செய்யப்பட வேண்டும் போன்றன பற்றிய நீண்ட உரையாய் இருந்தது.\nஉணர்வும், உணர்ச்சியும் கலந்ததோர் நிலை.\nஎம் கிராமம் மரங்களின்றி, நீரின்றி, பறவைகளின்றி ஏதோ ஒன்றாய் மாறிக்கொண்டிருக்கும் நிலை. நின்ற இடத்தில் மாடுகள் விழுகின்றன. பிள்ளைகளின் முன்னேற்றமில்லா கல்விநிலை, அம் மக்களின் ஏதோ ஒன்றாய் வாழும் நிலை இப்படி எத்தனையோ இறுக்கங்களின் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருந்த தன் கிராமத்தில் போய் நின்று, தன் மக்களுக்காக இருக்கும் வரை ஏதாவது செய்து, என் கிராமத்தை முன்னேற்ற வேண்டும் எனத் துடிக்கும் ஓர் சமூகப் போராளி. அவர் உரையின் முழச் சாரமும் பாடசாலை, கிராம முன்னேற்றம் என்பதைச் சுற்றியே இருந்தது.\nகிராமத்தின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்குத் தேவை நீர். அதாவது நிலத்தடி நீர் சேகரிப்பு. இப்படி எம் கிராமத்தின் முக்கிய தேவையான நிலத்தடி நீர் சேகரிப்பிற்கு குளங்கள், ஓடைகள் தூர் வாரப் பட வேண்டும். அதற்கான இயந்திரம் ஒன்று உடனடியாக வாங்கப் பட வேண்டும். இதுவே முக்கியமானதும், முதன்மையானதும் எனக் கூறினார். நீர் இல்லாததனால் வாழ்க்கையையே இழந்துகொண்டிருக்கிறோம் என்றார். அதன்படி தூர் வாரும் இயந்திரம் வாங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதெனவும், செலவை, கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கங்களினூடாக அந் நாடுகளிலுள்ள எமதூர் மக்களிடம் சேகரிப்பதென முடிவெடுக்கப்பட்டது.\nஇதன் முக்கிய அங்கமாக வீதியோரங்களில் மரங்கள் நடுவதற்கான முன்னெடுப்புகளை செய்துவிட்டு வந்திருப்பதாக கூறினார். நீண்ட தூரத்திற்கு மரக்கன்றுகள் வைத்து, அதற்கு பாதுகாப்பரண் அமைத்தல் வேண்டும் என்றார். இதற்குண்டான முழுச் செலவையும் திரு. இராசமாணிக்கம் ரவீந்திரன் வழங்குவதாக முன்வந்தார்.\nதற்போதைய உடனடி தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காய், இரண்டு இடங்களில் ( மடத்துவெளி முருகன் கோவில் அருகாமையிலும், ஊரைதீவு பாணாவிடைச் சிவன் கொவில் அருகாமையிலும்) ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான செலவை வழங்கவதற்கு ஏற்கனவே திரு. இ.ரவீந்திரன் அவர்கள் முன்வந்திருந்தார். அடுத்தொன்றிற்கானதை திரு. அரியபுத்திரன் நிமலன் உதவி புரிவதாக கூறினார். ஊரைதீவினூடாக கேரதீவு செல்லும் வீதி இருளடைந்து கிடைப்பதாகவும், அதனால் பழுதடைந்து கிடக்கும் அந்த வீதிகளில் இரவில் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே அங்கு வீதி விளக்குகள் பொருத்துவதற்கு உதவினால் நல்லது என்றார். அதற்கான செலவுகளை திரு. நா. ஜெயக்குமார் அவர்களும் திரு. கு. சுரேஸ்குமார் அவர்களும் பொறுப்பெடுத்தனர்.\nபாடசாலை அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலில், எம் பாடசாலையில் நிரந்தர கணணி வகுப்பு தொடங்கினால் மாணவர்களுக்கு உதவியாயிருக்கும் என்றார். அங்கு ஏற்கனவே 10 கணணிகள் உள்ளன. ஆனால் உதவி அடிப்படையில் இலவசமாக கற்பிக்கப்படுகிறது. பாடசாலைக்கு மேலும் சில கணணிகள் வழங்குவதற்கு திரு. இ. சிறீஸ்கந்தராஜா அவர்கள் முன் வந்தார். அத்துடன் நிரந்தர ஆசிரியருக்கான சம்பளப் பணம் மாதா மாதம் கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ் கிளை வழங்க முன்வந்தது.\nமுக்கியமாக எமது பாடசாலைக்கு விளையாட்டு மைதானத்தின் தேவை கருதி திரு. இராமனாதி அவர்கள் 32 பரப்புக் காணியை இலவசமாக வழங்கியுள்ளார். அது ஒரளவு புனரமைக்கப்பட்டு பாவிக்கப்படுகிறது. எனினும் அம் மைதானம் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும். அதற்கு மைதானத்தைச் சுற்றி மதில் அமைப்பது அவசியம் என்றார். மதில் அமைப்பதற்பான செலவை கணக்கிற் கொண்டு, சுவிஸ் வாழ் ஊரைதீவு, மடத்துவெளி மக்களிடம் நிதி சேகரிப்பதெனவும், அப் பணியை பழைய மாணவர் சங்கம் சுவிஸ் கிளை செய்வதாவும் முடிவு செய்யப்பட்டது.\nஊரைதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் பாழடைந்து போய்க்கிடக்கின்றது. புகழ் பெற்ற எம் பாடசாலை கண் முன்னே அழிகிறது. எனவே அது மீண்டும் புனரமைக்கப்பட்டு, மீளவும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேற்படி விவாதத்திற்கமைய தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக திரு. சண்முகநாதன் அவர்கள் உறுதி கூறினார். அதற்குரிய செலவு விபரங்களையும் கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் பொறுப்பெடுத்துக்கொண்டது\nநீண்ட விவாதங்கள். நேரம் போனதே தெரியவில்லை. தன் அகச் சூழல் காரணிகளை புறந்தள்ளி சமுகத்திற்காய் பாடுபடும் ஓர் மனிதனைச் சந்தித்த சந்தோசம். தேவைகள் அதிகமிருப்பினும் இப்போதைக்கு முடித்துக் கொள்கிறோம். கைகள் கொடுத்து இருட்டினூடே பிரிந்தோம்\nஊரைதீவு, மடத்துவெளி நண்பர்களே உங்களிடம் வருகிறோம். ஒரு சமூகப் போராளி எங்களுக்காய் போராட தயாராயிருக்கிறான். அந்த மனிதனை பயன்படுத்துங்கள்;. அவன் நேர்மையை பயன்படுத்துங்கள். காலம் எமக்கு கட்டளையிடுகிறது. செவி கொடுங்கள். தரத்தின் உச்சத்தில் இருந்த எம் பாடசாலையை மீளக் கட்டியமைப்போம். எம் கிராமங்களுக்கு உயிர் கொடுப்போம். அதற்காய் எம்மோடு கை சேருங்கள்\nகமலாம்பிகை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 2:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ...\nபுங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர...\nஅண்மைக் காலங்களில் புங்குடுதீவு மடத்துவெளி பழைய ம...\nபுங்குடுதீவு கமலாம்பிகை பழைய மாணவர் சங்கம் - கனடாக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2012/06/80.html", "date_download": "2018-08-18T00:43:03Z", "digest": "sha1:VMTBNKOWYZGHE7ON5VWB7N7UB3YCP6IK", "length": 88795, "nlines": 720, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-80", "raw_content": "\nமததீயில் மாணவிகள் போராட்டம் மலையகம் எரிகின்றது \nஅறிவிச் சோலையில் அடுப்பு ஊதும் குழல்கள் ;ஆட்டுவிப்போர் ஆடைகிழித்தார்கள், பள்ளிமாணவியின் பாவாடையில் இரத்தம் பார்த்தவர்கள் கண்களில் ..;என்று எல்லாம் தலையங்கமாக தலைநகரில் இருந்து வரும் பத்திரிகைக்கு செய்தி எழுதும் செய்தியாளர்\nதெரியாத எரிகின்றது என்ன எரிக்கின்றது என்ன என்று.\nஉண்மையின் குரல் என்று விட்டு பொய்யின் போதையை இரவு விடுதியில் இறைத்த மதவாதிகள் மாட்டின் ஜின் ஒரு புறம், தொட்டுக்கொள்ள மாட்டுப்பொறியல் அதில் தெரியவில்லையா மதம் எண்ண என்று\nஊதுகுழல் என்று எழுதும் போது தெரியவில்லை ஊதும் குழல் பெண்களா இல்லை கர்ணன் குழலா என்று அடுப்பு என்று எள்ளி நகையாடும் போது தெரியவில்லை பெண்கள் அடக்கி வைக்கணும் என்று நினைக்கும் ஆணாதிகப்பார்வை\nஆட்டுவிப்போர் என்ற தலையகம் தீட்டிய போது தெரியவில்லை மாணவிகள் மாணவர்கள் கைமீறி அது யாரிடம் போய் அரசியல் விளையாட்டில் கிரிக்கட் ஆட்டம் போல அடித்தாடும் நிலையில் மதத்தீ எரிந்துக் கொண்டு இருக்கிறது.\nவாக்கு அரசியலுக்கா மாணவர் சமுகத்தை தூண்டிவிட்டு வேசம் போட்ட அரசியல் முகம் தெரியாதா அந்த செய்தி ஆசிரியருக்கு நகரின் முக்கிய வாடிவீட்டில் மங்கள் வெளிச்சத்தில் மாலைப்நேரம் மப்பு போதவில்கைவென்று மண்டியிட்ட நேரம் சாரம் கட்டியவன் கண்டது எல்லாம் கமராவில் விழாது.\nஆனால் விழியில் விழும் செவியில் விழும் மொழியில் புரியும் .ஆடைகிழித்தார்கள் என்று அசிங்கமாக எழுதிய போது எப்படி இருந்து இருக்கும் செய்தியைப் பார்த்து உணர்ச்சிக்கு அடிமையாகும் வாசகர்களுக்கு வெட்டணும் கொத்தணும் சுடணும் என்று தீ மூட்டும் செய்தி எழுத்தாளர் சமுகப்பார்வையில் செய்தி சொல்லமல் விட்டது ஏன்\nஉள்ளார்ந்த பார்வையில் ஒரே வீட்டில் நண்பர்கள் ,நண்பியாக ,ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள் சக நண்பிகளை துரியோதனன் சபையில் பாஞ்சாலியின் சேலை உருவியது போல பர்தாவை உருவ இது என்ன சினிமாவா ,,,\nஅவர்கள் நம் தோழிகள் எந்த காம வெறியும் இல்லாத நண்பிகள் தீபாவளிக்குப் பலகாரமும் ரம்சாணுக்கு வட்டல் அப்பம் தின்ற வீட்டில் எப்படி ரெண்டகம் செய்வார்கள் தீயாக வதந்தியைப் பரப்பி மாணவர்களின் மனங்களில் மதத்தீ கீறல்போட்டவர்கள் எல்லாம் எப்படி மதவாதிகள் பின் நின்று தீயிட்டார்கள் மறக்கமுடியாத பள்ளிமாணவர் பருவ வாழ்வில்.எல்லாம் ஆராய வேண்டி கல்வியமைச்சு வேடிக்கை பார்த்தது பாராளமன்றத்தில் பதிவாகும் வரை .\nஅந்தளவு இந்த அறிவுச் சோலையும் கலைத்தாயியும் மதச்சண்டையில் இருந்த போது வீதியில் நிற்கும் காடையர் காமக் கூட்டத்துக்கு பாவடையில் இரத்தம் எதனால் என்றே எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரியாது .\n.பருவயது கடந்து தானே தாய் ஆனால் இவனைப் பெற்றவள் அந்த ரத்தம் தெரியாதவன் ஆனால் மதம் என்ன எழுதினது என்று மட்டும் படித்து விடுவார்களே\nஎங்கும் உள்ள அல்லா பெயரைச் சொல்லும் அல்லாவின் ஆணையும் தொழுதால் அய்யனைச் சேர்ந்த பின் அம்மை தொழுதேத்தும் மெய்வினை அங்குண்டோ மெய்யுலகில்\nவீதியில் போகும் அறிவுச்சோலை இந்துப் பெண்பிள்ளைகளிடம் வீதியில் நின்று மோசமான வார்த்தைகள் பேசிய ஆட்டோ ஓட்டும் முஜாஹீதீன்களுக்கு எல்லாம் எப்படி இலவசமாக மதவெறி டீசல் ஊத்தினார்கள் வியாரிகள் இவர்களுக்கும் வீட்டில் சகோதரிகள் இருந்தால் இப்படியா தரம்கெட்ட வார்த்தைகள் தங்கையிடம் பேசுவார்கள் உணர்ச்சி வேகத்தில் உதிர்கும் வார்த்தைகளுக்கு உறவு முறை தெரியாதா \nகேவலம் மதம் என்ற அரக்கன் புகுந்து வீதிகளில் மாணவர்கள் மாணவிகளுக்கு மன உளைச்சல் தந்த போது தான் ராகுல் அயிசாவிடம் கலைத்தாயின் பள்ளியில் அன்று பேசியது.\nஅயிசா ஒரு சட்டப்பிரச்சனைக்கு மதச்சாயம் பூசிய மதப்பிரச்சனையில் கூட புரிந்து கொள்ளாமல் யார் யாரோ தீ மூட்டிவிட அதில் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லாம் வேற்று நாட்டவர்கள் போல நினைக்கும் போது எப்படி சுகுமார்கூட காலம் எல்லாம் காதல் வாழ்க என்று ஜோடியாக முடியும்.\nஎது பிரச்சனையாகும் என்று நினைத்தேனோ அது நேரில் நடக்குது நான் மதவாதி அல்ல. ஆனால் மதம் கடந்து நீங்க வரமுடியுமா \nவந்தாலும் உங்களுக்குப் பின் வீட்டில் இருக்கும் இரு சசோதரிகள் வாழ்வில் வரும் நடைமுறைச்சிக்கள் ஏன் உணரவில்லை அதே போல தானே சுகுமார் வீட்டிலும் அவனுக்கும் இருக்கும் இரு சகோதரிகள் வாழ்வில் எப்படி எல்லாம் கலியாணச் சந்தையில் கேள்வி வரும் என்று ஜோசிக்கவில்லை\nஅவன் மூத்தவன் விடும் தவறினால் குடும்பத்தில் ஏற்படும் புயல்கள் ஏன் புரிய மறுக்கின்றீங்கள் ஆயிசா18 வயதில் காதல் தேவை என்று ஜோசிக்கும் போது தன் குடும்பத்தின் கெளவரவம் ,பொறுப்பு தேவை என்று ஏன் ஜோசிக்கக்கூடாது18 வயதில் காதல் தேவை என்று ஜோசிக்கும் போது தன் குடும்பத்தின் கெளவரவம் ,பொறுப்பு தேவை என்று ஏன் ஜோசிக்கக்கூடாது\nபடிப்பு முடிக்கவில்லை ,இன்னும் ஒரு தொழில் கிடைக்கவில்லை அதன் பின் குடும்பத்தில் பொறுப்பு முடிக்கவில்லை .அதுக்குள் கலியாணம் என்றுஒரு ஆணை எப்படி ஒரு பெண் அவசரப்படுத்த முடியும் நடைமுறையில் பல சிக்கல் வரும் இது எல்லாம் புரியாமல் காதல் என்றால் எப்படி அயிசா\nநீங்க மதம் கடந்து வந்தாலும் நடைமுறையில் எங்க போய் வாழமுடியும் மன்னாரில் இல்லை கண்டியில் ஊர் விட்டுத்தான் போகணும். நிச்சயம் பதுளையில் வாழ மதவாதிகள் விட மாட்டிணம் .அதிலும் பார்க்க இந்த காதல் என்ற வேசத்தைக்களையுங்கோ இது எல்லாம் ஒரு ஈர்ப்பு ஆனால் பகிஸ்கரிப்பு நேரம் வராமல் விடாதீங்க பள்ளிக்கு .\nஏன்னா பொடியங்கள் எல்லாம் நீங்களும் மதவாதி என்று முத்திரை குத்துவாங்க அயிசா. .இவன் சுகுமார் காதலை நிராகரித்தால் அவன் வாழ்க்கை நல்ல இருக்கும் .ஒரு நண்பனாக இருவருக்கும் சொல்லுறன் இதுக்கு மேல் உங்க விருப்பம் நான் வில்லன் ,துரோகி என்று எப்படி நினைச்சாலும் பருவாயில்லை .\nஅயிசாவை எங்காவது ஊரில் பார்க்கும் போது நல்ல ஒரு வகுப்புத் தோழியாக பார்க்கணும் இனி உங்க இஸ்ரம்.மதத்தீயில் விழுந்த போது குளம்பிய குட்டியையில் மீன் பிடிக்க முடியாது என்பதை அயிசா சுகுமாரின் காதலை நிராகரித்து அத்தோடு பாடசாலைக்கும் வராமல் வீட்டில் இருந்து படித்துக்கொண்டு இருந்தால்.\nசந்தேகம் என்ற தீ சந்தர்ப்பம் கிடைக்கும் போது எண்ணை வார்க்கும்.\nசுகுமார் அயிசா ஒரு இஸ்லாம் .இந்த நேரம் வரமால் போனது அவளுக்கும் இயற்கை உபாதை இருக்கும் ஆனால் பொடியங்கள் மனதில் அவளும் மதவாதியின் பின்னால் போய் விட்டால் என்று நினைக்கின்றாங்க.\nஒரு பகிஸ்கரிப்பிலே இப்படி என்றால் வாழ்க்கையில் எத்தனை தடைகள் தாண்டணும் வேண்டாம் இந்தகாதல் ஒழுங்கா படி. உன்னால் முடியும் பல்கலைக்கழகம் போக நான் பரீட்சை முடிய கொழும்பு போறன் இனி சந்திப்பது கடினம் மச்சான் .\nஆனால் குடும்பத்தில் நீ பொறுப்பா இருக்கணும் நண்பர்களில் பல வகை இருக்கு எல்லார் மனதும் ஒரே மாதிரி இருக்காது .\nஉன் வீட்டில் சாப்பிட்ட போது உன் தங்கையும் எனக்குத் தங்கைதான் அப்படி உறவில் தான் எல்லா வீட்டிலையும் நான் வேண்டுவது நண்பன் ஒரு அண்ணாவக இருக்க முடியும்.\nஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள் யாரும் நண்பர்கள் வீட்டில் மருமகனாக இருக்க முடியாது .அதுதான் என் நிலை .இதுக்கு கொஞ்சம் அவதானிப்பு தேவை ஒரு நண்பரின் செயல் எனக்கு பிடிக்கலை.\nஇதை நீ நிராகரிக்க விட்டால் நான் உன்னை நிராகரிப்பேன் ஏன்னா எனக்கு அண்ணா பதவி தான் முக்கியம் புரிஞ்சுக்க யார் அந்த நட்பு என்பதை உணர்கின்ற தருணம் காதலைவிட முக்கியம் .\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 6/16/2012 11:08:00 am\nலேபிள்கள்: மலையகத்தில் முகம் தொலைத்தவன்\nவணக்கம் நேசன் அண்ணா, கடைசி இரண்டு பதிவுகளையும் வாசித்து விட்டு நித்திரைக்குச் சென்றேன்... மிண்டும் வந்து விட்டேன்\nவணக்கம் கலைவிழி வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ தூக்கம் போய் விடும்\nஊரில் நடந்த சம்பவம் கேட்டு தூக்கம் போய் விட்டது.. தலையிடிதான் இருக்கு அதுக்கா இந்த பால் கோப்பி அருந்துகிறேன். நன்றி\nகலை விழிக்கு என்ன ஆயிற்று \nஇந்தச் சம்பவம் எத்தனையாம் ஆண்டில் நடைபெற்றது\nஇனிய இரவு வணக்கம் யோகா ஐயா, நான் நலமே இருக்கிறேன் நீங்கள் நலமா\nஊரில் நடந்த சம்பவம் கேட்டு தூக்கம் போய் விட்டது.. தலையிடிதான் இருக்கு அதுக்கா இந்த பால் கோப்பி அருந்துகிறேன். நன்றி\n16 June 2012 11:37 //ம்ம் தூக்கம் தொலைந்த இரவுகள் எல்லாம் இருட்டறையில் போய் விட்டது கடல் ,கடக்கும் போது கதறி வருவது என்ன எம்கையில் ஏதும் இல்லை\nஉண்மையில் எனக்கும் இந்தக் கலவரம்/வன்முறை புதுசு தான்.உண்மையைச் சொல்ல வேண்டும்,நான் இன்று வரை அறிந்திருக்கவில்லை\nநண்பர் ஒருவரின் விட்டு அயலில் உள்ள வீட்டில் கள்ளர்கள் அட்டகாசமாம்..\nஇனிய இரவு வணக்கம் யோகா ஐயா, நான் நலமே இருக்கிறேன் நீங்கள் நலமா\nகலை விழிக்கு என்ன ஆயிற்று // வணக்கம் யோகா ஐயா நலம் தானே விழிக்கு தூக்கம் போச்சாம்ஹீ கோப்பி குடித்த படியால்.\nஇந்தச் சம்பவம் எத்தனையாம் ஆண்டில் நடைபெற்றது// 1999 மே மாதம் தொடக்கம் செப்டம்பர் வரை குறித்த பகுதியில்\nயாழில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவர்களை பாதுகாக்க நித்திரை இன்றி தவிக்கின்றனர்.\nபொருள் வைத்திருப்போர் அவற்றை பாதுகாக்க, பெண் பிள்ளைகளும் இல்லாமல் பொருளும் இல்லாமல் இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.\nஉண்மையில் எனக்கும் இந்தக் கலவரம்/வன்முறை புதுசு தான்.உண்மையைச் சொல்ல வேண்டும்,நான் இன்று வரை அறிந்திருக்கவில்லை//ம்ம் தப்பி விட்டீர்கள் தாயகத்தில் மூத்த தலைமுறையில் பிறந்து//ம்ம் தப்பி விட்டீர்கள் தாயகத்தில் மூத்த தலைமுறையில் பிறந்து\nநண்பர் ஒருவரின் விட்டு அயலில் உள்ள வீட்டில் கள்ளர்கள் அட்டகாசமாம்..///கொஞ்ச நேரத்துக்கு முன்பு நடந்ததா\n\"அவர்கள்\"இல்லாதது \"எல்லோருக்கும்\" வசதியாகப் போய் விட்டது\nநண்பர் ஒருவரின் விட்டு அயலில் உள்ள வீட்டில் கள்ளர்கள் அட்டகாசமாம்..//ம்ம் ஊழிக்காலத்தில் உருண்டு ஓடும் நிலையில் பேய் ஆட்சிகள் பேதலிக்கும் கம்பனில் படித்தது\nகோப்பி குடித்த படியால் தலையிடி வரவில்லை அண்ணாச்சி........ கோப்பி நல்லா இருக்கு இன்டைக்கு ஒன்று காணும் அதிகம் குடித்தால் சக்கரை நோய் வந்திடும்....\nயாழில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவர்களை பாதுகாக்க நித்திரை இன்றி தவிக்கின்றனர்.\nபொருள் வைத்திருப்போர் அவற்றை பாதுகாக்க, பெண் பிள்ளைகளும் இல்லாமல் பொருளும் இல்லாமல் இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.\n16 June 2012 11:45 //ம்ம் நகை சூறையாடல் தொடரும் கற்பு சூறையாடல் என அழுது வடிப்பது தமிழர்தான்\nஇப்பதான் ஒரு மணத்தியாலம் ஆகுது......... பொலிஸ் இலக்கம் கேட்டு என்னிடம் தொடர்பு கொண்டார்கள்.. அது தான் விழித்து விட்டேன்\n\"அவர்கள்\"இல்லாதது \"எல்லோருக்கும்\" வசதியாகப் போய் விட்டது// ம்ம் உண்மைதான் யோகா ஐயா\n// ஓம் நன்றி ஐயா\nஎல்லாவற்றுக்கும் ஒரு \"முடிவு\" வரும்,விரைவிலேயே\nகோப்பி குடித்த படியால் தலையிடி வரவில்லை அண்ணாச்சி........ கோப்பி நல்லா இருக்கு இன்டைக்கு ஒன்று காணும் அதிகம் குடித்தால் சக்கரை நோய் வந்திடும்....\n16 June 2012 11:48 // ஹீ 20 மணித்தியாளம் ஓடி வேலை செய்தால் வராதாம் ஹீ சக்கரை நோய் நித்திரை வரும்ஹீ சக்கரை நோய் நித்திரை வரும்\nஎல்லாவற்றுக்கும் ஒரு \"முடிவு\" வரும்,விரைவிலேயே/ம்ம் இப்படிச் சொல்லியே காலம் போய்விட்டது பல இடங்களில்/ம்ம் இப்படிச் சொல்லியே காலம் போய்விட்டது பல இடங்களில்\nகோப்பி குடித்தால் நித்திரை வராது, உற்சாகம் பிறக்கும். பால் சேர்க்காத எத்தனை வெறும் கோப்பி என்றாலும் குடிக்கலாம்.........\nகோப்பி குடித்தால் நித்திரை வராது, உற்சாகம் பிறக்கும். பால் சேர்க்காத எத்தனை வெறும் கோப்பி என்றாலும் குடிக்கலாம்.........\n16 June 2012 11:54 // ம்ம் ஆனால் உடல் அலுப்பு வரும்போது தூக்கம் வருகின்றதே கோப்பி குடித்தவுடன் தூங்கி விடுவேன் இரவில்.ஹீ\nநல்லதொரு மாற்றத்தை தான் எதிர்பார்த்து காலம் கடந்து விட்டது.\nயாழ் செய்திகளை கேட்டால் அடுத்தகண நகர்வே பெரும் சுமையாகியது\nஎங்கே சகோதரிகள் ஒருவரையும் காணவில்லை\n16 June 2012 11:56 // ஹீ அப்படி இல்லை உழைப்பு முக்கியம் தானே தூக்கம் பின் காலத்தில் கொள்ள முடியும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம் ஐரோப்பாவில்\nயாழ் செய்திகளை கேட்டால் அடுத்தகண நகர்வே பெரும் சுமையாகியது\nஇப்படியே ஊக்குவித்து,குடாவை குழப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள்.இளைஞர் கையில் தான் இந்தப் பிரச்சினை இப்போது இருக்கிறது,பார்ப்போம்\nஎங்கே சகோதரிகள் ஒருவரையும் காணவில்லை\n16 June 2012 11:58 //ம்ம் வார இறுதி வீட்டில் பல சோலி இருக்கும் தானே கலைவிழி\nஎங்கே சகோதரிகள் ஒருவரையும் காணவில்லை////சின்னவ ஊர் உலாவருவா என்று நினைக்கிறேன்,ரெண்டு நாளா காணயில்ல.\nஇப்படியே ஊக்குவித்து,குடாவை குழப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள்.இளைஞர் கையில் தான் இந்தப் பிரச்சினை இப்போது இருக்கிறது,பார்ப்போம்// ஒன்றும் செய்ய முடியாது அல்லக்கைகள் உதவிக்கு இருக்கும் வரை// ஒன்றும் செய்ய முடியாது அல்லக்கைகள் உதவிக்கு இருக்கும் வரை\nஉழைப்பும் முக்கியம் ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... துணைவியார் வாறாதானே அவா பாத்துக் கொள்வா\nஉழைப்பும் முக்கியம் ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... துணைவியார் வாறாதானே அவா பாத்துக் கொள்வா\nதனிமரம் என்றால் சோலி இல்லை.. ஹி... ஹி..........\nஎங்கே சகோதரிகள் ஒருவரையும் காணவில்லை////சின்னவ ஊர் உலாவருவா என்று நினைக்கிறேன்,ரெண்டு நாளா காணயில்ல.\n16 June 2012 12:02///ம்ம் அறுதலாக வரட்டும் எல்லாச் சோலியும் முடித்துவிட்டு அதுக்குள் நான் முடிக்கணும் நாளை ம்ம் பார்ப்போம் சித்தன் செயல் சிவன் செயல்.\nஉழைப்பும் முக்கியம் ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... துணைவியார் வாறாதானே அவா பாத்துக் கொள்வா\n16 June 2012 12:03 //ம்ம் அவா மேல் பாரத்தைப்போட்டு விட்டு இருக்க முடியாது பொறுப்புக்கள் இருக்கு காகாகூட்டம்\nபதிவை படித்துவிட்டு அப்படியே அமைதியாகிட்டேன் .மனம் கனத்தது .\nகட்டையில் போற வரைக்கும் பொறுப்பைச் சுமக்கிற ஒரே இனம் உலகத்திலையே,எங்கட இனம் தான்ஹி\nஉழைப்பும் முக்கியம் ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்... துணைவியார் வாறாதானே அவா பாத்துக் கொள்வா\n16 June 2012 12:04 //ம்ம் இப்ப சித்திரம் விட கறப்பது முக்கியம் என்ற நிலையில் சுவர் என்ன சித்திரம் என்ன எல்லாம் காலம் செய்த கோலம் அகதியாக்கி அலையவிட்டது\nயோகா அண்ணா /நேசன் /ஹேமா /கலா /கலை /ரெவரி\nவந்திருக்கும் கலைவிழி சகோதரியும் நலமா\nவாங்க அஞ்சலின் அக்காள் நலமா ம்ம் என்ன செய்வது ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு முகம்\nசுமைகளை துணைவியார் மீது போட முடியாது தான்..... சுமைகளை எப்படி எந்த நேரத்தில் எந்த நுமையை இறக்கி வைப்பது என உங்களுக்கு ஆலோசனை தந்து மனச் சுமையை இறக்கி வைப்பதே பெரிய ஆறுதல் அல்லவா\n//கட்டையில் போற வரைக்கும் பொறுப்பைச் சுமக்கிற ஒரே இனம் உலகத்திலையே,எங்கட இனம் தான்ஹி\nநீங்க சொல்வது சரிதான் .\nதனிமரம் என்றால் சோலி இல்லை.. ஹி... ஹி........../ம்ம் தனிமரமும் உதவாக்கரையாக இருந்தால் சோலி இல்லை ஆனால் அதுவும் உதவும்கரையாக இருந்தால் கோவிந்தா\nயோகா அண்ணா /நேசன் /ஹேமா /கலா /கலை /ரெவரி\nவந்திருக்கும் கலைவிழி சகோதரியும் நலமா/////எல்லாரும் நல்லாயிருக்கோம்.ரொம்ப நன்றிம்மா,நீங்க நலமா/////எல்லாரும் நல்லாயிருக்கோம்.ரொம்ப நன்றிம்மா,நீங்க நலமா கடந்து போய்ச்சு,அதுவும்இனி வரும் காலம் நல்லாயிருக்கட்டும்,ஆண்டவன் தயவில்\nபம்பாய் //படப் பாடல் மிக அருமை .\nகட்டையில் போற வரைக்கும் பொறுப்பைச் சுமக்கிற ஒரே இனம் உலகத்திலையே,எங்கட இனம் தான்ஹி\n16 June 2012 12:08//ம்ம் அது எல்லாம் மாறுதாம் நீ உன் சோலி பார் நான் படலைதாண்டிப்போறன் எல்லாம் எனக்குத்தெரியும் நான் உன்னைவிட ஏட்டுக்கல்வி படிச்சிட்டன் என்று\nஇனி வரும் காலம் நல்லாயிருக்கட்டும்,ஆண்டவன் தயவில்\nஅதுவேதான் அண்ணா .மனிதர் கைவிட்டாலும் இறைவன் கைவிடமாட்டார் .அந்த நம்பிக்கையில் இருப்போம்\nஇனிய வணக்கம் அஞ்சலின் அக்கா..... இன்று முதல் உங்களுடன் நட்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி,,,,,,,,,\nநான் நலமே இருக்கிறேன்... நன்றி\nசுமைகளை துணைவியார் மீது போட முடியாது தான்..... சுமைகளை எப்படி எந்த நேரத்தில் எந்த நுமையை இறக்கி வைப்பது என உங்களுக்கு ஆலோசனை தந்து மனச் சுமையை இறக்கி வைப்பதே பெரிய ஆறுதல் அல்லவா\n16 June 2012 12:10 //ம்ம் அது உண்மைதான் கலைவிழி\nம்ம் அது எல்லாம் மாறுதாம் நீ உன் சோலி பார் நான் படலைதாண்டிப்போறன் எல்லாம் எனக்குத்தெரியும் நான் உன்னைவிட ஏட்டுக்கல்வி படிச்சிட்டன் என்றும்ம்..///ஆறுமாதத்தால கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பெல் அடிப்பினம்\nகட்டையில் போற வரைக்கும் பொறுப்பைச் சுமக்கிற ஒரே இனம் உலகத்திலையே,எங்கட இனம் தான்ஹி\nநீங்க சொல்வது சரிதான் .\n16 June 2012 12:11 //ம்ம் ஒரு விதத்தில் சரிதான் அஞ்சலின் அக்காள்.\nநலம் அண்ணா .ஆனா அந்த கண்களில் இன்னமும் இருந்தாற்போலிருந்து ஒரு கடிக்கிற SENSATION //IRRITATE செய்கிறது\nபம்பாய் //படப் பாடல் மிக அருமை .// ந்ன்றி அஞ்சலின் அக்காள் அந்தப்பாடல் வைரமுத்துவின் முததில் எனக்கும் பிடிக்கும்.\nஅண்ணாச்சி இந்த இடத்தில் தனிமரம் என்று என்னை சொன்னேன்.... கோவிக்க கூடாது உங்கள் பெயரை அனுமதி இன்றி பாவித்ததுக்கு\nநாங்கள் எப்பவும் உதவாக்கரை லிஸ்டிலதான் இருப்போம்.. கொஞ'சம் வித்தியாசமா இருக்கட்டுமே\nஆறுமாதத்தால கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பெல் அடிப்பினம்\nஅப்படி கண்ணை கசக்கினாலும் நம்ம பெற்றோர் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்கே\nஅதுவேதான் அண்ணா .மனிதர் கைவிட்டாலும் இறைவன் கைவிடமாட்டார் .அந்த நம்பிக்கையில் இருப்போம்\n16 June 2012 12:15//ம்ம் உண்மைதான் அஞ்சலின் அவர் தான் எல்லாம்.\nநலம் அண்ணா .ஆனா அந்த கண்களில் இன்னமும் இருந்தாற்போலிருந்து ஒரு கடிக்கிற SENSATION //IRRITATE செய்கிறது.///கண் கவனமாக இருக்க வேண்டும்.ஓய்வு கொடுக்க வேண்டும் நிறையவேகம்பியூட்டர்,தொலைக்காட்சி கொஞ்சமாக பார்க்க/படிக்க வேண்டும்.\nஎங்கே உங்கள் மருமகள் கலையை காணோம் .\nஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ /என்ற கர்ஜனை கேட்டு நாளாகுது:))))))))\nஆறுமாதத்தால கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பெல் அடிப்பினம்\nஅப்படி கண்ணை கசக்கினாலும் நம்ம பெற்றோர் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்கே////ஆமாமா,அப்போ தான் நாம பிறவிப் பயனை அடைவோம்\nஆறுமாதத்தால கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து பெல் அடிப்பினம்//ம்ம் அது வேண்டாம் என்றாள் வில்லனாக இருப்பது மேல் என்பது என் கணிப்பு ஆனால் பாசக் கயிறு விடாதாம் //ம்ம் அது வேண்டாம் என்றாள் வில்லனாக இருப்பது மேல் என்பது என் கணிப்பு ஆனால் பாசக் கயிறு விடாதாம் \n.ஓய்வு கொடுக்க வேண்டும் நிறையவேகம்பியூட்டர்,தொலைக்காட்சி கொஞ்சமாக பார்க்க/படிக்க வேண்டும்.//\nஇது மகரந்தம் பறப்பதால் ஏற்படும் HAY FEVER அலர்ஜி\nநலம் அண்ணா .ஆனா அந்த கண்களில் இன்னமும் இருந்தாற்போலிருந்து ஒரு கடிக்கிற SENSATION //IRRITATE செய்கிறது\n16 June 2012 12:1//ம்ம் சரியாகும் யோசிக்காதீங்கோ அஞ்சலின் அக்காள்§\nஎங்கே உங்கள் மருமகள் கலையை காணோம் .\nஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ /என்ற கர்ஜனை கேட்டு நாளாகுது:))))))))////என்ன சிரிப்புஎன்னோட செல்ல மருமக உங்களுக்கு இளக்காரமாப் போச்சோஎன்னோட செல்ல மருமக உங்களுக்கு இளக்காரமாப் போச்சோஊருலா போயிருக்கிறா,வருவா கருக்கு மட்டையோடஊருலா போயிருக்கிறா,வருவா கருக்கு மட்டையோடஹ\nயோகா ஐயா கருக்கு மட்டை உங்கேயும் இருக்குதோ........\nஅண்ணாச்சி இந்த இடத்தில் தனிமரம் என்று என்னை சொன்னேன்.... கோவிக்க கூடாது உங்கள் பெயரை அனுமதி இன்றி பாவித்ததுக்கு\nநாங்கள் எப்பவும் உதவாக்கரை லிஸ்டிலதான் இருப்போம்.. கொஞ'சம் வித்தியாசமா இருக்கட்டுமே// ம்ம் நான் கோபிக்க மாட்டன் தனித்துவம் முக்கியம் கலைவிழி பட்டியல் போட்டு சுட்டிக்காட்டினால் சுற்றில் நிக்காது காட்டாறு\n.ஓய்வு கொடுக்க வேண்டும் நிறையவேகம்பியூட்டர்,தொலைக்காட்சி கொஞ்சமாக பார்க்க/படிக்க வேண்டும்.//\nஇது மகரந்தம் பறப்பதால் ஏற்படும் HAY FEVER அலர்ஜி.////ஓ......அதுவாஇங்கே எனக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு நண்பருக்கும் இதே தொல்லை. ,\nஇல்லையில்லை :) நான் கிண்டல் செய்யல உங்க மருமகளை\nயோகா ஐயா கருக்கு மட்டை உங்கேயும் இருக்குதோ........///இங்க கடைக்கு பொருள் இறக்குமதி செய்வோரிடம் சொன்னால் இறக்கிவிட மாட்டார்கள்///இங்க கடைக்கு பொருள் இறக்குமதி செய்வோரிடம் சொன்னால் இறக்கிவிட மாட்டார்கள்ஹ\nஅப்படி கண்ணை கசக்கினாலும் நம்ம பெற்றோர் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்கே//ம்ம் அதைச் சொல்லணும் தப்பு என்று வெட்டிவிட்டால் போதும் பாசக்கயிறை கம்பன் கந்தர்வன் கோட்டையில் மரம் வெட்டிய இலக்குவன் போல\nஉண்மைய சொன்னா ரொம்ப போரடிக்குது அண்ணா உங்க மருமக இல்லாம .\nஹேமாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும்\nஎங்கே உங்கள் மருமகள் கலையை காணோம் .\nஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ /என்ற கர்ஜனை கேட்டு நாளாகுது:))))))))\n16 June 2012 12//ம்ம் ஊரில் ஓய்வு வரட்டும் மெதுவாக அப்பா அம்மா அண்ணா செல்லம் தானே இளவரசி\nசீசி இனி நான் எங்கேயும் உங்களுடைய தனித்துவமான பெயரை உபயோகிக்க மாட்டேன்.........\nஒருக்காத் தான் சும்மா சொல்லிப் பாத்தன்.\nஇல்லையில்லை :) நான் கிண்டல் செய்யல உங்க மருமகளை///நானும் சும்மா தான்,ரவுசு விட்டுப் பாத்தேன்\nகருக்கு மட்டை என்றால் தென்னை மரத்தில் இருக்கும் கிளைதானே\nஅப்படி கண்ணை கசக்கினாலும் நம்ம பெற்றோர் ஆதரவு தருவாங்க என்ற நம்பிக்கை இருக்கே////ஆமாமா,அப்போ தான் நாம பிறவிப் பயனை அடைவோம்\nரெவரியின் பதிவில் படங்கள் எதுவும் தெரியல ..உங்க யாருக்கும் தெரிகிறதா\nஉண்மைய சொன்னா ரொம்ப போரடிக்குது அண்ணா உங்க மருமக இல்லாம .///அவவுக்கும்,அப்புடித்தான் இருக்கும்என்ன செய்ய இரத்த உறவுகளும் முக்கியமில்லியா\nஇது மகரந்தம் பறப்பதால் ஏற்படும் HAY FEVER அலர்ஜி\n16 June 2012 12:22 //ம்ம் பூக்களால் மூக்கில் வரும் அலர்ச்சி அதிகம் அஞ்சலின் இங்கும் அதிகமானவருக்கு இருக்கு\nதிடீரென என்னை காணவில்லை என்றால் யாரும் தேடாதேங்கோ\nகருக்கு மட்டை என்றால் தென்னை மரத்தில் இருக்கும் கிளைதானே////Ha\nகனனியில் பட்டறி முடிஞ்சு போட்டுது\nயோகா ஐயா கருக்கு மட்டை உங்கேயும் இருக்குதோ........//ம்ம் எல்லாம்இம்போட் கலைவிழி\nஎன்ன செய்ய இரத்த உறவுகளும் முக்கியமில்லியா\nஆமாம் அண்ணா .நீங்க சொல்வதும் சரியே .\nதிடீரென என்னை காணவில்லை என்றால் யாரும் தேடாதேங்கோ////ஷாக் எல்லாம் குடுக்காதையுங்கோஇந்த இடத்தில எண்டு சொல்ல வேணும்\nகருக்கு மட்டை என்பது பனை மரத்தின் ஓலையை தாங்கும் தண்டு.. அதில் முற்கள் இருக்கும்.. அதால் அடித்தால் தோல் எல்லாம் காயம் ஏற்பட்டு இரத்தம் வரும்\nகருக்கு மட்டை என்றால் தென்னை மரத்தில் இருக்கும் கிளைதானே////Ha\nஏன் அண்ணா ..இப்படி சிரிக்கீங்க ..எனக்கு இன்னமும் தெரியாது\nநானும் சும்மா தெரிந்தாற்போல் தலையாட்டுவேன்\nகனனியில் பட்டறி முடிஞ்சு போட்டுது.///அடச்சீஇவ்வளவு தானா\nஉண்மைய சொன்னா ரொம்ப போரடிக்குது அண்ணா உங்க மருமக இல்லாம .//ம்ம் சமயத்தில் எனக்கும் தான் அஞ்சலின் கலாய்ப்பதில் கலை ஒரு குறும்புக்கார தங்கச்சி எனக்கும் வலையில் வந்தாலும் என் உடன் பிறப்பு பட்டியலில் வாத்தும் ஒரு உறவு எனக்கு.\nகருக்கு மட்டை என்றால் தென்னை மரத்தில் இருக்கும் கிளைதானே///இல்லேம்மா,அது \"பனை\" மரத்துக் கிளை\nபயப்புடாதேங்கோ ஐயா நான் நல்ல பொண்ணாக்கும்.........\nஇந்த உறவுகளை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போக மாட்டேன்\nகருக்கு மட்டை என்பது பனை மரத்தின் ஓலையை தாங்கும் தண்டு.. அதில் முற்கள் இருக்கும்.. அதால் அடித்தால் தோல் எல்லாம் காயம் ஏற்பட்டு இரத்தம் வரும்///\nஅவ்வ்வ்வவ்வ்வ் ..இனிமே கவனமாதான் பேசணும் .நான் தென்ன மட்டை என்றல்லவா நினைத்தேன்\nரெவரியின் பதிவில் படங்கள் எதுவும் தெரியல ..உங்க யாருக்கும் தெரிகிறதா\n16 June 2012 12:31 //ம்ம் புதிய மாற்றம் ஒரு படமும் எனக்குத்தெரியவில்லை\nதிடீரென என்னை காணவில்லை என்றால் யாரும் தேடாதேங்கோ\n16 June 2012 12:32 // நீங்க நித்திரை என்று நினைப்போம் கலைவிழி\nஆமாம் நேசன் .அவ ஆடு பற்றி சொன்னவுடன் ,நான் ஆட்டுடன் இருக்கும் ஒரு படம் தேடி எடுத்தேன் ,அதை போட்டா இன்னமும் என்னை கிண்டல் செய்வா .அந்த பயத்தில் படத்தை போடாம் வச்சிருக்கேன் :))))))\nபயப்புடாதேங்கோ ஐயா நான் நல்ல பொண்ணாக்கும்.........\nஇந்த உறவுகளை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போக மாட்டேன்.///நான் சும்மா தாம்மா சொன்னேன்,மருமக இல்லாத இடத்துக்கு நீங்க ரெண்டு பேர் வந்திருக்கிறீங்க.சந்தோஷமாயிருக்கு\nஹேமாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும்//ஓம்` சேர்ந்து களவு எடுக்க ஆள் இருக்காது தனியாக போகணும் களவானிக்கூட்டம்\nஆமாம் நேசன் .அவ ஆடு பற்றி சொன்னவுடன் ,நான் ஆட்டுடன் இருக்கும் ஒரு படம் தேடி எடுத்தேன் ,அதை போட்டா இன்னமும் என்னை கிண்டல் செய்வா .அந்த பயத்தில் படத்தை போடாம் வச்சிருக்கேன் :))))))///உங்கள அப்புடீல்லாம் கலாய்க்க மாட்டாஉங்க பேர்ல ஒரு மரியாத இருக்கு அவவுக்கு.சும்மா ஜாலிக்குப் பேசுவா.\nகனனியில் பட்டறி முடிஞ்சு போட்டுது//ம்ம் நன்றி கலைவிழி வருகைக்கும் கருத்துக்கும் ஓய்வு கொடுங்கோ கணனிக்கு அதுவும் பாவம் தானேம்ம் உங்கள் விரல்வேகத்துக்கு ஈடுகொடுக்கும் கருக்குமட்டை அல்லவா\nஇலங்கை தமிழ் அழகிய தமிழ்\nஒரு அக்கா என்னிடம் நிக்கறீங்களா என்றார்கள்\nசேர்ல உக்காந்திருந்த நான் விளங்காமல் எழ்ம்பி நின்றேன் .\nஅவங்களே சிரிச்சுட்டாங்க .இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது .கலை படிக்க மாட்டா என்ற தைரியத்தில் எழுதுகிறேன் :))\nஹேமாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும்//ஓம்` சேர்ந்து களவு எடுக்க ஆள் இருக்காது தனியாக போகணும் களவானிக்கூட்டம்ஹீ\nகருக்கு மட்டை என்பது பனை மரத்தின் ஓலையை தாங்கும் தண்டு.. அதில் முற்கள் இருக்கும்.. அதால் அடித்தால் தோல் எல்லாம் காயம் ஏற்பட்டு இரத்தம் வரும்\n16 June 2012 12:35 //ம்ம் சமயத்தில் வேலி கட்டவும் உதவும்\nசரி அண்ணா /நேசன் கலைவிழி .பணி சப்பாத்தி சுடும் பணி எனை அழைக்குது .மீண்டும் சந்திப்போம் நல்லிரவு வணக்கம்\n.கலை படிக்க மாட்டா என்ற தைரியத்தில் எழுதுகிறேன் :))///அவ படிக்காட்டி என்னநாங்க படிக்க வைப்பமேஎப்புடியும் ஒரு வாரத்துக்குப் பத்தாதுஹ\nஎன்னதான் ஊருக்கு நல்லது செய்தாலும் எப்படா இந்தப் பொண்ணு ஊர விட்டு ஓடும் என்று ஒரு கூட்டம் பாத்துக் கொண்டே இருக்குதுகள்.....\nஆமாம் நேசன் .அவ ஆடு பற்றி சொன்னவுடன் ,நான் ஆட்டுடன் இருக்கும் ஒரு படம் தேடி எடுத்தேன் ,அதை போட்டா இன்னமும் என்னை கிண்டல் செய்வா .அந்த பயத்தில் படத்தை போடாம் வச்சிருக்கேன் :))))))///உங்கள அப்புடீல்லாம் கலாய்க்க மாட்டாஉங்க பேர்ல ஒரு மரியாத இருக்கு அவவுக்கு.சும்மா ஜாலிக்குப் பேசுவா.\n16 June 2012 12:42// உண்மைதான் அஞ்சலின் அண்ணா என்னையே கலாய்க்கும் போது அக்காளை என்ன பாடு படுத்துவா வாய்க்காரி பாவம் நாத்தனாரும் ஹேமாவும் தான்/\nநடுச் சாமத்தில் இப்படி சிரிக்க வச்சுட்டிங்களே அக்கா..........\nஅத சரி கால்கடுக்க எவ்வளவு நேரம் நிண்டீங்க\n///எட்டே முக்கா வரைக்கும் பொண்ணுக்கு சப்பாத்தி சுடாமையா இங்க இருந்தீங்கஒங்களுக்குக் கருக்கு மட்டை அடி கலை வந்து கொடுப்பா\nஇலங்கை தமிழ் அழகிய தமிழ்\nஒரு அக்கா என்னிடம் நிக்கறீங்களா என்றார்கள்\nசேர்ல உக்காந்திருந்த நான் விளங்காமல் எழ்ம்பி நின்றேன் .\nஅவங்களே சிரிச்சுட்டாங்க .இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது .கலை படிக்க மாட்டா என்ற தைரியத்தில் எழுதுகிறேன் :))\n16 June 2012 12:44 //ம்ம் எனக்கு பாண்டி அனுபவம் அதிகம் என்பதால் தப்பிக்கின்றேன் அஞ்சலின் அக்காள்\nஅவ ஆறு மணிக்கே சாப்பிட்டா அண்ணா இது எனக்கும் கணவருக்கும்\nஹேமாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும்//ஓம்` சேர்ந்து களவு எடுக்க ஆள் இருக்காது தனியாக போகணும் களவானிக்கூட்டம்ஹீ\n16 June 2012 12:44 // ஹீ அதுக்குள் நான் படலையாள் சந்திக்கு போய் விடுவேன் ஓட்டத்தில் தனிமரம்\nஒரு ஆறேழு நிமிடம் இருக்கும் கலைவிழி :)))\nநல்லவேளை அவங்க திரும்பி பார்த்தாங்க (வடை சுட்டு கொண்டு இருந்தாங்க )\nஅவ ஆறு மணிக்கே சாப்பிட்டா அண்ணா இது எனக்கும் கணவருக்கும்.///சரிம்மா,குட் நைட்\nசரி அண்ணா /நேசன் கலைவிழி .பணி சப்பாத்தி சுடும் பணி எனை அழைக்குது .மீண்டும் சந்திப்போம் நல்லிரவு வணக்கம்\n16 June 2012 12:4// நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் சந்திப்போம் குட் நைட்\nகாற்றில் எந்தன் கீதம் said...\nஇதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...\nஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....\nசரி கலைவிழி,நல்லிரவு வணக்கம்,கொஞ்சமா கண் உறங்குங்கள்நேசன் சாப்பாடு ............உங்களுக்கும் நல்லிரவு,மீண்டும் சந்திப்போம்\nஎன்னதான் ஊருக்கு நல்லது செய்தாலும் எப்படா இந்தப் பொண்ணு ஊர விட்டு ஓடும் என்று ஒரு கூட்டம் பாத்துக் கொண்டே இருக்குதுகள்.....\n16 June 2012 12:48 // சீச்சீ அப்படி இல்லை கலைவிழி அந்தப்பொண்ணுக்கும் ஆயிரம் சோலி இருக்கும் என்று புரியாத வாத்துமடையங்களா ஐரோப்பாவில் வாழும் அண்ணாக்கள் ஐயாக்கள் அக்காள்கள் நாத்தானார்கள்\nஅத சரி கால்கடுக்க எவ்வளவு நேரம் நிண்டீங்க//ம்ம் என்ன ஒரு 40 நிமிட பாட நேரத்தில் நாள் முழுவதுமா இல்லையே ,,\nகாற்றில் எந்தன் கீதம் said...\nஇதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...\nஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....////உண்மைதான் சகோ\nஅவ ஆறு மணிக்கே சாப்பிட்டா அண்ணா இது எனக்கும் கணவருக்கும்\n16 June 2012 12:51//ம்ம் எனக்கும் அனுப்புக்குங்கோ நாளை இரவு நானும் அக்காள் குசினியை உருட்டணும் சப்பாத்தி ஆசையாக இருக்குஹீ அவாக்கு அது பக்குவம் வராது தம்பிதான் கிங்ஹீ அவாக்கு அது பக்குவம் வராது தம்பிதான் கிங்\nஇதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...\nஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....//ம்ம் வாங்க தோழி காற்றில் என் கீதம் நலமாம்ம் நான் ஒன்றும் அறியேன் பராபரனே ஒரு வழிப்போக்கன் அவ்வளவும் தான் ஆனால் மனதில் சாந்தியும் சமாதானமும் உண்டாக என்று சொன்னவர்கள் ஊட்டிவிட்டது ஒரு குடும்ப தேவதையின் வாழ்வில் புயலை மரணத்தை அறிந்த வழிப்போக்கன் வலி ஊருக்குத்தெரியாதும்ம் நான் ஒன்றும் அறியேன் பராபரனே ஒரு வழிப்போக்கன் அவ்வளவும் தான் ஆனால் மனதில் சாந்தியும் சமாதானமும் உண்டாக என்று சொன்னவர்கள் ஊட்டிவிட்டது ஒரு குடும்ப தேவதையின் வாழ்வில் புயலை மரணத்தை அறிந்த வழிப்போக்கன் வலி ஊருக்குத்தெரியாது என்பது நிஜம் தோழி அது கடவுள் செயல் என்று நான் அறிந்தாலும் மற்றவர்கள் அறியணும் அதுதான் அவனுக்கு நான் எழுத்தாணியாக் இருந்து வ்லையில் எடுத்துவாரன் என்பது நிஜம் தோழி அது கடவுள் செயல் என்று நான் அறிந்தாலும் மற்றவர்கள் அறியணும் அதுதான் அவனுக்கு நான் எழுத்தாணியாக் இருந்து வ்லையில் எடுத்துவாரன்\nஇதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...\nஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....//ம்ம் நன்றி தோழி நான் சாமானியன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகாற்றில் எந்தன் கீதம் said...\nஇதற்கு நான் கருத்துரை இடுவது சரியகவிராது என்பதாலும்... இன்று வரையில் அந்த காயங்கள் எம் மனதில் ஆறது இருப்பதாலும்.... ரணமான மனதோடு இதை கடந்து செல்கின்றேன் நேசன்...\nஆனால் இதை தொடங்கி வைத்து எமது சாபங்களுக்கு காரணமானவர்கள் இன்று அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது... தெய்வம் நின்று கொல்லும் என்பதை உண்மை என நம்புகிறேன்.....////உண்மைதான் சகோ\n16 June 2012 13:02//ம்ம் யோகா ஐயா அந்தத்தோழி என் மரியாதைக்குரிய சகபதிவாளினி ஒரு காலத்தில் இருகோடுகள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nரி கலைவிழி,நல்லிரவு வணக்கம்,கொஞ்சமா கண் உறங்குங்கள்நேசன் சாப்பாடு ............உங்களுக்கும் நல்லிரவு,மீண்டும் சந்திப்போம்\n16 June 2012 12:58 //ம்ம் இனித்தான் யோகா ஐயா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை மதியம் சந்திப்போம்\nஆணாதிக்கத் தனங்கள் இன்றும் இருந்துகொண்டு தான்\nமதங்கள் என்றுமே ஆண்கள் தான் உயர்ந்தவர்கள்\nபெண்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லியதில்லை..\nஇன்று இருப்பவர்களின் தவறான புரிதலே காரணம்...\nஇங்கே நீங்கள் குறிப்பிட்ட பாடலும் அதன் கருவாக்கமும்\nகாதலுக்காக தன் மனதுக்கு பிடித்தவனுக்காக\nதன் மதம் கொண்ட சடங்கை\nஉதறிவிட்டுப் போகும் ஒரு புதுமைப்பெண்...\nதொடரட்டும் ... மலையகத்தில் தொலைத்ததெல்லாம்\nமீண்டு வருகிறது உங்கள் எழுத்துக்கள் மூலம்...\nஆணாதிக்கத் தனங்கள் இன்றும் இருந்துகொண்டு தான்\nமதங்கள் என்றுமே ஆண்கள் தான் உயர்ந்தவர்கள்\nபெண்கள் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லியதில்லை..\nஇன்று இருப்பவர்களின் தவறான புரிதலே காரணம்...\nஇங்கே நீங்கள் குறிப்பிட்ட பாடலும் அதன் கருவாக்கமும்\nகாதலுக்காக தன் மனதுக்கு பிடித்தவனுக்காக\nதன் மதம் கொண்ட சடங்கை\nஉதறிவிட்டுப் போகும் ஒரு புதுமைப்பெண்...\nதொடரட்டும் ... மலையகத்தில் தொலைத்ததெல்லாம்\nமீண்டு வருகிறது உங்கள் எழுத்துக்கள் மூலம்...\n16 June 2012 19:21 // நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் அனித்தரமான கருத்துரைக்கும்\nமலையகத்தில் முகம் தொலைந்தவன்...-சிறப்பு நன்றிகள்\nமலையகத்தில் முகம் தொலைந்தவன்...- பின்னே சில முகங்...\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் -- -எழுபத்தைந்து\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் --74\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ..73\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ...70\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ---66\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-18T00:22:58Z", "digest": "sha1:TDKBQS2ZI4SJDJEN4ALYJW7CKXCILKMP", "length": 8749, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: லிபியா | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nபடகு மூழ்கியதில் 100 அகதிகள் பலி\nலிபியா அருகே அகதிகள் சென்ற படகு மூழ்கியதில் 100 அகதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு...\nபள்ளி வாசலில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் : இருவர் பலி\nலிபியாவில் உள்ள பள்ளி வாசல் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் இருவர் பலியானதோடு 75 பேர் படுகாயம...\nலிபியா மோதலில் 9 பேர் பலி : 28 பேர் படுகாயம்\nலிபியாவின் தலைநகரான திரிபோலியில் இன்று காலை ஆயுதக் குழுவினருக்கும் சிறப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல...\nஅகதிகளை பாலியல் வன் கொடுமைகளுக்குள்ளாக்கும் லிபியா\nலிபியாவில் பிடிபடும் அகதிகள் மீது வன்முறைகள் ஏவப்படுவதாகவும், பெண் அகதிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவு...\nஅமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை\nசிங்கப்பூர் கடல் பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலொன்று, லிபியாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பல...\nஈரானிலிருந்து கட்டாருக்கு அனுப்பப்பட்டுள்ள விமானங்களும், 3 கப்பல்களும்..\nகட்டாரின் அயல் நாடுகள், அந்நாட்டுடனான சகல தொடர்புகளையும் துண்டித்தமையால் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் தட்டுப்பாடுகளை தீர...\nஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் அழித்து ஒழிக்க திட்டம் : டிரம்ப் அதிரடி\nசிரியா மற்றும் ஈராக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கு...\nஆபத்தான முஸ்லிம்கள் நாட்டவர்கள் வருவதற்கு தடை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவருகின்ற...\nஒபாமாவின் கடைசிக் கட்டளை: லிபியாவில் இரண்டு ஐஎஸ் முகாம்கள் தாக்கியழிப்பு\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் கட்டளைக்கு இணங்க, லிபியாவில் இயங்கிவந்த ஐஎஸ் பயங்கரவாதிகளின் இரண்டு முகாம்கள் அமெரி...\n118 பேருடன் நடுவானில் கடத்தப்பட்டது லிபிய விமானம் ; குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல்\nலிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் மால்டாவில் சற்றுமுன்னர் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது கடத...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-18T00:22:54Z", "digest": "sha1:SIRRZS4HIRVZVXKPGVAJTEDZHLJBDGMF", "length": 8453, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளை மாளிகை | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஅந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்...\nஅமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் மரணம்\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிலிப் ரோத் இதய செயலிழப்பு காரணமாக த...\nநிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி\nஅமெரிக்காவின் டென்னஸி பிராந்தியத்தில் நிர்வாண நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்....\nவெள்ளை மாளிகையில் அமோக வரவேற்பு\nஜோர்ஜிய அணியை வீழ்த்தி கல்லூரிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்ற அலபாமா பல்கலைக்கழக கால்பந்து அணிக...\nபுட்டினை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார்...\nசர்ச்சையை கிளப்பிய ஆபாச பட நடிகைக்கு மர்ம நபர்களிடமிருந்து கொலை மிரட்டல்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் உறவு இருந்ததாக கூறி சர்ச்சையை கிளப்பிய நடிகை தனக்கு மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டல் வருவதா...\nமனம் ஒத்து விவாகரத்து செய்ய ஜூனியர் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதி அறிக்கை\nட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வனேஸ்ஸா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்\nவெள்ளை மாளிகைக்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை \nஅமெரிக்கா - வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார...\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் துப்பாக்கி வாங்குவோர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக அறிவித்துள்ளாா்....\n2 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளுக்கு அமெரிக்க குடியுரிமை\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள சுமார் 2 மில்லியன் பேருக்கு, குடியுரிமை வழங்கும் திட்டத்தை, ட்ரம்ப் நிர்வாகம்...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/09/terrors-attack-in-london.html", "date_download": "2018-08-18T00:25:16Z", "digest": "sha1:O6J62C4KQSMV6RWMSAA7RY7VB4WNHNP6", "length": 19628, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் சுரங்க ரயிலில் தீவிரவாதத் தாக்குதல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் சுரங்க ரயிலில் தீவிரவாதத் தாக்குதல்\nby விவசாயி செய்திகள் 13:28:00 - 0\nலண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள புல்ஹாமில் சுரங்க ரயிலில் வெடிச்சம்பவம் நடைபெற்றதாகவும்,\nஅதை தீவிரவாத நடவடிக்கையாகக் கருதுவதாகவும் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில், தீக்காயங்களுடன் சுமார் 18 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nசுரங்க ரயில் சேவை தொடரமைப்பில் திறந்தவெளிப் பகுதியில் உள்ள பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்தில், உள்ளூர் நேரப்படி காலை 8.20 மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\nரயிலின் முன்புற பெட்டிகளில் ஒன்றில் வெடிப்பு சப்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து தீப்பிழம்பு தோன்றியதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.\nபீதியடைந்த பயணிகள் ரயிலின் கதவுகள் திறந்ததும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு தரைத்தளத்திற்கு ஓடமுயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் காயமடைந்தனர்.\nமுகத்திலும், கால்களிலும் தீக்காயம் ஏற்பட்ட பெண், சுயநினைவுள்ள நிலையில் ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டதை கண்டதாக சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nசூப்பர் மார்க்கெட் பெயர் பொறித்த பை ஒன்றில் பெயிண்ட் டப்பாவில் வைக்கப்பட்டிருக்கும் வயர்களை போல் தோன்றும் பொருட்கள், எரிவதாக காட்டும் புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் சிறிதளவு தீப்பிழம்புகள் காணப்படுகிறது, சேதம் பெருமளவு இருப்பதாக தெரியவில்லை.\nசம்பவம் நடந்த டிஸ்ட்ரிஸ் லைன் ரயில், விம்பிள்டனில் இருந்து கிழக்குப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.\nபிரிட்டனின் எம்.ஐ. 5 நிறுவனத்துடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான உளவுத்துறை நிபுணர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக உதவி ஆணையர் மார்க் ரெளலி தெரிவித்தார்.\nபார்சன்ஸ் கிரீன் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு அனுதாபப்படுவதாகவும், இந்தத் தீவிரவாத நடவடிக்கையை அடுத்து அவசரகால சேவை அமைப்புக்கள் மிகத் துரிதமாகவும் தைரியமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என பிரதமர் தெரீசா மே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nலண்டனில் உள்ள பொதுப் போக்குவரத்து அனைத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என கூடுதல் ஆணையர் ரெளலி தெரிவித்துள்ளார்.\nமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில், அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nபுகைப்படம் அல்லது வீடியோ காட்சி எடுத்துவர்கள் போலீசாருக்கு அனுப்பி வைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபெரும் வெடிச் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nவெடிச் சம்பவம் நடந்தபோது அந்த ரயிலில் இருந்ததாகக் கூறும் எம்மா ஸ்டீவி என்ற 27 வயதுப் பெண், மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறிய போது, ரயில் நிலைய படிக்கட்டுக்களில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவித்தா்.\nகூட்ட நெரிசலில் தனது காலுக்கடியில் கர்ப்பிணி ஒருவர் சிக்கிக் கொண்டிருந்ததாகவும் அவரை மிதிக்காமல் இருக்க தான் பெரிதும் கஷ்டப்பட்டதாகவும் கூறினார். மேலும், தலையில் காயத்துடன் சிறுவன் ஒருவன் இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள்தான் அதிகமாக இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு, லண்டனில் ஐந்தாவது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக பிசிசி உள்நாட்டு விவகாரங்களுக்கான செய்தியாளர் டொமினிக் கேஸியானி தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்பு நடைபெற்ற நான்கு சம்பவங்களில் 36 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவத்தில்தான் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், 6 முக்கிய தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவிட்டதாகவும், அவற்றின் விவரங்கள் விரைவில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த 1970களில் ஐஆர்ஏ குண்டுவெடிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் தொடர்ச்சியாக தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவது இப்போதுதான்.\nஇதை செய்வது யார், மேலும் ஏதாவது வெடிபொருள்கள் உள்ளனவா, யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்ற கேள்விகளுக்கு போலீசார் உடனடியாக விடை கண்டுபிடித்தாக வேண்டும்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/108625-dressing-is-my-choice-slams-vidyuraman.html", "date_download": "2018-08-18T00:49:24Z", "digest": "sha1:2WDLLITW2F3JWH3DZTKNMKDPSEAKEZCJ", "length": 30033, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "''கிளாமரா டிரெஸ் பண்றது என் விருப்பம்'' - வித்யூலேகா தடாலடி | Dressing is my choice, slams VidyuRaman", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n''கிளாமரா டிரெஸ் பண்றது என் விருப்பம்'' - வித்யூலேகா தடாலடி\n'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் மூலம் தமிழில் காமெடி நடிகையாக அறிமுகமானவர், வித்யூலேகா ராமன். சென்னை, எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்.சி விஷூவல் கம்யூனிகேஷன் முடித்த கையோடு சினிமாவில் நுழைந்தார். 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'வீரம்', 'ஜில்லா' எனப் பல படங்களில் நடித்தவர், தெலுங்குப் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார். சமீபத்தில், தன் ட்விட்டர் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பல கோணங்களில் விமர்சனங்கள் வந்துள்ளன. இதுகுறித்து வித்யூலேகாவிடம் பேசியபோது...\n''திடீர் வைரலாகிட்டீங்க. 'ஹீரோயின் வாய்ப்புக்காகத்தான் இப்படியான படங்களைப் பதிவிட்டுள்ளார்' என்று சொல்லப்படுகிறதே...''\n''நிச்சயமா இல்லே. இப்படி எடுத்துப் போட்டுத்தான் வாய்ப்புக் கேட்கணும்னு அவசியம் இல்லே. காமெடி ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும், நானும் ஒரு இளம்பெண். ஏன் ஹீரோயின்கள் மட்டும்தான் இந்த மாதிரி மாடர்ன் மற்றும் கிளாமர் டிரஸ்ஸில் போஸ் கொடுக்கணுமா. நாங்க இப்படி டிரஸ் பண்ணக்கூடாதா. ஹீரோயின்களின் கிளாமர் படங்களை ரோடு ஓரங்களிலும், ஷோரூம்களின் முன்னாலும் பார்க்க முடியும். அந்த அழகு உண்மையில்லை. அந்த மாதிரி படங்களைப் பார்த்துட்டு, அதுதான் உண்மையான அழகுனு எல்லாரும் முடிவுப் பண்ணிக்கிறாங்க. அவ்வளவும் மேக்கப், ஃபோட்டோ எடிட்டிங். இதுதான் அழகுனு யாரும் முடிவு செய்ய முடியாது. என் புகைப்படத்தை சாதாரணமாகத்தான் போட்டேன். இந்தப் படம் போட்ட பிறகுதான் என் தன்னம்பிக்கை அதிகமாகி ரொம்ப சந்தோஷபட்டேன்.''\n''இந்தப் படத்துக்கு விமர்சனங்கள் வந்துட்டே இருக்கே...''\n''நீங்க சினிமாவில் பார்க்கும் காமெடி வித்யூலேகா வேற. நிஜத்தில் எப்பவும் மாடர்னாக, ஸ்டைலாகத்தான் டிரஸ் பண்ணுவேன். சின்ன வயசிலிருந்தே நான் இப்படித்தான். ஹீரோயின் சான்ஸூக்காக இப்படிச் செய்யலை. நிஜமா சொல்றேங்க... எனக்கு காமெடியாக நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு. கிளாமராக நடிக்கிறதில் விருப்பம் கிடையாது. படங்களில் என்னை காமெடியாப் பார்த்து பழகிட்டதாலே இப்படி ஒரு படத்தைப் பார்த்ததும் ஷாக் ஆகிட்டாங்க. செந்தில், கவுண்டமணி படங்களைவெச்சு மீம்ஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க. இந்தக் கலாய்ப்பு, மீம்ஸூக்கு நான் அஞ்ச மாட்டேன். இப்போதெல்லாம் யார் என்ன செஞ்சாலும் தேடிவந்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறதையே சிலர் வேலையா வெச்சுட்டிருக்காங்க. அது அவங்க தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிடவும் போறதில்லை.''\n''உங்கள் உருவத்தைக் கிண்டல் செய்வதாக நினைக்கிறீர்களா\n இன்றைய சமூகம் அந்தக் கண்ணோட்டத்தில்தான் பெண்களைப் பார்க்குது. இதையெல்லாம் உடைத்துதான் வெளியே வரணும். ஒரு பொண்ணு எந்த உருவத்தில், எந்த சைஸில், எந்த கலரில் இருந்தாலும் 'நான் அழகு'னு முடிவுப் பண்ணிக்க உரிமை இருக்கு. அந்தத் தன்னம்பிக்கை எனக்கு இருக்குனு காண்பிக்கவே இந்த போட்டோவைப் பதிவிட்டேன். எனக்குத் தெரியும் நான் ஒல்லிக்குச்சி கிடையாது. ஒரு மாடலும் கிடையாது. இந்த மாதிரி டிரெஸ் போட்டு ராம்ப் வாக் நடக்கலையே. பல பொண்ணுங்களுக்கு இந்த போட்டோ தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. பல பொண்ணுங்க எனக்கு மெசேஜ் போட்டு வாழ்த்தி இருக்காங்க. 'உங்க போட்டோ எனக்கு ஊக்கம் கொடுத்திருக்கு. இந்த மாதிரி டிரஸ் போட்டு கண்ணாடி முன்னாடி நிற்கும் தன்னம்பிக்கை வந்திருக்கு'னு சொல்லியிருக்காங்க.''\n''காமெடி நடிகைகள் என்றாலே உருவத்திலும் நடையிலும் சிரிக்கவைப்பதுபோல இருந்தால்தான் ரசிக்கிறார்களா\n''காலம் காலமாக அப்படித்தானே இருக்கு. அதனால்தான் பெண் காமெடி ஆர்ட்டிஸ்ட் குறைவாக இருக்காங்க. அழகாக இருப்பவர்களை காமெடி நடிகைகளாக நடிக்கவைப்பதில்லை. உடல் பருமன், கறுப்பு நிறம் போன்ற ஏதோ ஒண்ணு இருக்கணும்னு முடிவு பண்றாங்க. முன்பெல்லாம், காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக காமெடி நடிகைகளும் இருந்தாங்க. இப்போ அதுவும் குறைஞ்சுபோச்சு.''\n''உங்களுக்குத் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு வரலையா\n''தமிழ்ப் படங்களில் ஸ்கிரிப்ட் எழுதும்போது, பெரும்பாலும் பெண் காமெடி நடிகைகளை மனதில்வைத்து எழுதறதில்லே. ஹீரோ, ஹீரோயின், காமெடியன் அதைத்தான் பார்க்கிறாங்க. அதில் காமெடி நடிகைகள் இடம்பெறுவதில்லை. சூரி, சதீஸ் போன்றவர்கள் அவர்களுக்கான ஜோடியைப் போடுவதில்லை. முன்பு, சந்தானத்தின் ஜோடியாக என்னைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவரும் ஹீரோவாகிட்டதால் எனக்குத் தமிழிலில் காமெடிக்கான ரோல் கிடைக்கிறதில்லே. தெலுங்கில் அப்படியில்லை. கோவை சரளா மேடத்துக்குப் பிறகு அந்த இடத்தை நான் நிரப்பிவருவதாகச் சொல்றாங்க. ஆந்திர மாநிலத்தின் சிறந்த காமெடி நடிகைக்கான 2015, 16, 17 நந்தி விருதுகள் எனக்குக் கிடைச்சிருக்கு. சந்திரபாபு நாயுடு அவர்கள் கையால் வாங்கப்போறேன். தெலுங்கில் நிறையப் படங்களில் கமிட் ஆகியிருக்கேன்.''\n''நடிகை சமந்தா உங்களுக்கு அட்வைஸ் பண்ணாங்களாமே\n முன்னாடி என்னைப் பார்க்கும்போது, 'உங்களுக்கு நல்ல டிரஸ்ஸிங் சென்ஸ் இருக்கு. இன்னும் அதை இம்ப்ரூவ் பண்ணுங்க'னு சொன்னாங்க. அவங்க என் நலம்விரும்பி. அவங்க நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன்.''\n''இப்போது வெளியிட்டிருக்கும் படங்கள் பற்றி வீட்டில் என்ன சொன்னாங்க\n''ரொம்ப டீசன்டாக எடுத்த போட்டோதான் எனச் சொன்னாங்க. அப்பாவுக்குத்தான் முதல்ல காண்பிச்சேன். பாராட்டினார். அம்மாவும் பாராட்டினாங்க. இப்போ எங்களை மாதிரியானவங்களுக்கு பிளஸ் சைஸ் மாடல் என்கிற டிரஸ் கிடைக்குது. இந்த ஆண்டின் பெரிய ட்ரெண்டாகி இருக்கு. பிளஸ் சைஸ் மாடலிங்காகவே டிரஸ் தைக்கிறாங்க. அவ்வளவு அழகாக மாடலிங் பண்ணி போட்டோ ஷூட் பண்ணியிருக்காங்க. லண்டனிலிருந்து இரண்டு போட்டோகிராஃபர்கள் மற்றும் மேக்கப் வுமன் வந்தாங்க. சும்மா மீட் பண்ணோம். 'வித்யூ, எனக்காக ஒரு போட்டோஷூட் பண்ண முடியுமா'னு கேட்டாங்க. அவங்க ஐடியாதான் இந்தப் போட்டோ. அவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். போட்டோ ரொம்ப அழகாக வந்திருக்கு. இன்னும் நிறையப் படங்கள் இருக்கு. சீக்கிரமே போஸ்ட் பண்ணுவேன்.''\n“சின்னத்திரையில இதெல்லாம் கஷ்டமப்பா” - ‘அழகு’ சீரியலில் நடிக்கும் விஜேக்கள்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.Know more...\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n''கிளாமரா டிரெஸ் பண்றது என் விருப்பம்'' - வித்யூலேகா தடாலடி\nஎம்.ஜி.ஆரின் கேமரா ஞானம் குறித்துத் தனிப் புத்தகமே எழுதலாம்.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-23\n‘கொடிவீரன்’ ரைட்ஸ் கொடு... இல்லேன்னா’ - அசோக்கை மிரட்டிய அன்பு\n''20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன்..’’ - பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithrapapa.blogspot.com/2010/11/blog-post_16.html", "date_download": "2018-08-18T00:50:36Z", "digest": "sha1:C3JWUF56J6BREP6LNEPKG7AKIAO6NMPY", "length": 5232, "nlines": 115, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : முதல் புகைப்படம்", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஎனக்கோ குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. அனால் கர்ப்ப காலத்திலேயே சிவா கண்டிப்பா கூடாதுன்னு சொல்லிட்டார்.. நான் கூட சரி பாப்பா பிறந்தவுடனே பேசி சரி பண்ணிடலாம்னு நெனெச்சேன்.. ஆனா முடியலையே.... அதுனால மித்தாவோட முதல் புகைப்படம் அவளது 11 ஆவது நாள்ள தான் எடுத்தோம் ...\nகுழந்தை புகைப்படங்கள் எடுப்பதில் சிலர் கண் திருஷ்டி, செண்டிமெண்ட் எல்லாம் பார்ப்பார்கள்\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nமித்ரா.. பெயர் பிறந்த கதை\nசளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே\nFun walk @ சிங்கப்பூர்\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402664", "date_download": "2018-08-18T01:33:53Z", "digest": "sha1:CAU2MILK6URTJFI2GUO2AZFQKBBKUJDP", "length": 8382, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் : நடப்பு பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிப்பு | The Malaysian Prime Minister, who was released after granting amnesty, expressed his gratitude to the current Prime Minister - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் : நடப்பு பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிப்பு\nகோலாலம்பூர்: பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்வர் கோலாலம்பூர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து அன்வர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து மலேசிய மன்னர் சுல்தான் முகமதுவை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அன்வர், அரசியல் காரணங்களுக்காகவே தம் மீது வழக்கு போடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.\nமேலும் பேசிய தங்கள் தரப்பிற்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் எங்களுடைய அரசியல் வாழ்க்கையை சீர்குலைப்பதற்காகவே வேண்டுமென்றே பொய் வழக்குகள் போடப்பட்டது. இது முற்றிலும் சதி செயலே என குற்றம்சாட்டினார். ஊழல் மற்றும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஆகியவை அன்வர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள். இதனால் 1998 முதல் 2004 வரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், மீண்டும் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அன்வர் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியி்ன் ஆதரவோடு தான் மஹதீர் முகமது பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஆட்சிக்கு வந்ததும் அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு வருடங்களில் மஹதீர் முகமது பதவி விலக திட்டமிட்டுள்ளதால், அதன் பின் அன்வர் இப்ராஹிம் மலேசிய பிரதமராக பதவியேற்பார் என தெரிகிறது.\nவாஜ்பாய் மறைவால் வெற்றிடம் இம்ரான்கான் இரங்கல்\nஉலக பொருளாதாரத்தில் இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்டவர் : அமெரிக்கா புகழாரம்\nநாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் வெற்றி பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் இன்று பதவியேற்பு\nதிமிங்கலங்களை கொன்று திருவிழா கொண்டாடும் டென்மார்க்கில் உள்ள பரோயே தீவு மக்கள்\nவெனிசுலா நாட்டில் சம்பள உயர்வு கோரி மருத்துவர்கள் போராட்டம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnetwork.info/2015/12/chinas-beijing-red-alert-on-air.html", "date_download": "2018-08-18T00:20:48Z", "digest": "sha1:53II6SJFTVMAMFSBQUCWK3GWOWI4V2D4", "length": 11443, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome உலக செய்திகள் மாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் சுவாசிக்கத் தகுதியற்றதாக காற்று மாறிவிட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான வாழ்வுக்கு காற்றில் மாசின் அளவு 200 அலகுகளுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனமான WHO இன் மதிப்பீடாக உள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி பீஜிங்கில் 256 அலகுகளாக இருந்த மாசின் அளவு படிப்படியாக உயர்ந்து இன்று 365 அலகுகளை எட்டியுள்ளதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது 2.5 மைக்ரான் அடர்த்திக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையால் பீஜிங் நகரில் மாசுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களின் இயக்கம் தற்காலிகமாக முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n300 அலகுகளைத் தாண்டிய காற்று மாசின் அளவு சுவாசிக்க தகுதி அற்றதாகவும், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பேராபத்து நிறைந்ததாகவும் கருதப்படுகின்றது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/17023", "date_download": "2018-08-18T00:22:01Z", "digest": "sha1:KBTO5IR7EKFRGOUM4II3AIIXKG5N2IRB", "length": 9844, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நுவரெலியாவில் அதியுச்ச தொழில்நுட்பத்துடன் உள்ளக பயிற்சிக்கூடம் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nநுவரெலியாவில் அதியுச்ச தொழில்நுட்பத்துடன் உள்ளக பயிற்சிக்கூடம்\nநுவரெலியாவில் அதியுச்ச தொழில்நுட்பத்துடன் உள்ளக பயிற்சிக்கூடம்\nநுவ­ரெ­லி­யாவில் அதியுச்ச தொழில்­நுட்­பத்­து­ட­ன்கூடிய விளை­யாட்டு பயிற்சிக்கூடக் கட்­டடத்தொகுதி ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nநுவ­ரெ­லி­யாவில் 34.5 ஹெக்­டேயர் பரப்­ப­ள­வி­லேயே இந்த அதி உச்ச தொழில்­நுட்­பத்­துடன் கூடிய பயிற்சிக்கூடம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇதற்­கான வர்த்­தக உடன்­ப­டிக்­கையில் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை பிரான்ஸ் நிறு­வ­ன­மான 'எலிப்ஸ் புரஜக்ட் எஸ்.ஏ.எஸ்.' உடன் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கையெ­ழுத்­தி­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்தப் பயிற்சிக்கூடம் சர்­வ­தேச தரத்­தி­லான ஓடு­பா­தைகள் மற்றும் பயிற்சிக் கூடங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. அத்­தோடு இலங்கை வீரர்கள் தரம்­மிக்க பயிற்சிக்­கூ­டங்­க­ளுக்­காக வெளிநா­டு­க­ளுக்கு செல்லத் தேவை­யில்­லை­யென்றும், இதன்­மூலம் இலங்­கையின் விளை­யாட்டுத்­து­றையும் மேம்­படும் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.\nஅத்­தோடு இதன் மொத்த செலவு 8500 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் என்று கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. இதுபோன்ற பயிற்சிக்கூடங்கள் இதுவரையில் சீனா மற்றும் ஜப்பானில் மட்டுமே அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநுவரெலியா தொழில்நுட்பம் விளையாட்டு பயிற்சிக்கூடம் பிரான்ஸ்ஈ தயாசிறி ஜயசேகர\nஇலவச அனுமதிச்சீட்டுகளை விளையாட்டுத் துறை அமைச்சரிற்கு வழங்கவில்லை - இலங்கை கிரிக்கெட்\nவிளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தனது ஆதரவாளர்களிற்கு வழங்குவதற்கு இலவச அனுமதிச்சீட்டுகள் எதனையும் வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2018-08-17 16:10:22 கிரிக்கெட் இலங்கை தென்னாபிரிக்கா\nஅவர் அடுத்த கபில்தேவ் ஆகமாட்டார் என நான் தெரிவிக்கமாட்டேன் ஆனால்தற்போது அவர் அந்த தரத்தில் இல்லை\n2018-08-17 16:11:02 ஹர்டிக் பாண்ட்யா\nகோஹ்லியை சார்ந்திருப்பது நியாயம் அல்ல\nஇந்­திய அணி விராட் கோஹ்­லியை மட்­டுமே சார்ந்­தி­ருக்­கி­றது என்­பது நியாயமல்ல. திற­மை­யான வீரர்கள் அந்த அணியில் உள்­ளனர் என்று இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்­ப­வான் குமார் சங்­கக்­கார தெரி­வித்­துள்ளார்.\n2018-08-17 11:14:04 குமார் சங்கக்கார கோஹ்லி இந்தியா\n18 ஆவது ஆசிய விளையாட்டு விழா நாளை ஆரம்பம்\n18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஜி.பி.கே. விளையாட்டாரங்களில் நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.\n2018-08-17 12:17:20 இந்தோனேஷியா ஜகர்த்தா ஆசிய விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவில் டெஸ்டை வெல்வதே எமது இலக்கு -ஹதுருசிங்க\nஅவுஸ்திரேலியாவில் எதனையாவது சாதிப்பதற்கான வாய்ப்பு ஜனவரியில் கிடைக்கின்றது\n2018-08-16 11:32:08 சண்டிக ஹதுருசிங்க\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/3600", "date_download": "2018-08-18T00:21:56Z", "digest": "sha1:76ZPDYBOJI524IZMTQIHYHDGJWVNIIFH", "length": 9434, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆபாச பட நடிகையுடன் ஒரு மாதம் ; 16 வயது மாணவனுக்கு கிடைத்த பரிசு | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஆபாச பட நடிகையுடன் ஒரு மாதம் ; 16 வயது மாணவனுக்கு கிடைத்த பரிசு\nஆபாச பட நடிகையுடன் ஒரு மாதம் ; 16 வயது மாணவனுக்கு கிடைத்த பரிசு\nரஷ்யாவில் ஆபாச பட நடிகை ஒருவருடன் ஒரு மாதம் ஹோட்டலில் தங்க விநோதமான பரிசு ஒன்று அந்நாட்டு 16 வயது பள்ளி மாணவன் ஒருவருக்கு கிடைத்துள்ளது.\nருச்லன் ச்செட்ரின் (Ruslan Schedrin) என்ற மாணவன் கணனி விளையாட்டுகளை விளையாடும் இணையதளத்திற்கு 100,000 வது நபராக சென்றதனால் ரஷ்யாவை சேர்ந்த ஆபாசபட நடிகையான ஏகதெரினா மகரோவ (Ekaterina Makarova) என்பவருடன் தங்குவதற்கான பரிசு கிடைத்துள்ளது.\nதனக்கு இவ்வாறான பரிசு கிடைத்திருப்பதை முதலில் தன்னால் நம்ப முடியவில்லை அத்துடன் அந்த ஆபாச பட நடிகையை பார்ப்பதற்கு எனக்குள் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது என்றும் அதன் பின்னர் அவருடனான சந்திப்புக்கு காத்திருக்கின்றேன் என்று அந்த சிறுவன் கூறியுள்ளார்.\nமொஸ்கோவில் ஹோட்டல் அறையில் என்னுடன் தங்குவதற்கு அம்மாணவனுக்கு விருப்பம் என்றால் என்னுடன் தங்கட்டும், இல்லையென்றால் வேறு இடத்திற்கு பயணிக்காலம் மாணவனுடைய புகைப்படங்களை பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்தவிட்டது என்று ஆபாசபட நடிகை கூறியுள்ளார்.\nரஷ்யா ஆபாச பட நடிகை ஹோட்டல் புகைப்படம்\n12 வருடத்திற்கு முன் தொலைந்த மோதிரம் கிடைத்த அதிசயம் \nகணவரொருவர் தனது மனைவிக்கு 40 ஆவது பிறந்ததினத்தை சிறப்பிக்ககும் முகமாக தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்.\n2018-08-17 17:44:45 மோதிரம் தங்கம் கரட்\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nசீனாவில் காதலர் தினம் \"கிஷி\" என்ற பெயரில், 2000 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழா இன்று தென் மற்றும் கிழக்கு சீன மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.\n2018-08-17 16:47:28 சீனா காதலர் தினம் கிஷி\n9 வயதில் மூக்­கி­னூ­டாக உள்ளே சென்ற பேனா மூடி: 40 ஆண்டுகளாக நுரை­யீ­ரலில் தங்கியிருந்த கொடூரம்\nகடும் வயிற்று வலிக்­குள்­ளான நிலையில் வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணொ­ரு­வரின் நுரை­யீ­ரலில் பேனா மூடி­யொன்று இருப்­பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்­சி­ய­டைந்துள்ளனர்.\n2018-08-17 16:34:17 நுரை­யீ­ரல் 40 ஆண்டுள் பேனா மூடி­\nஉலகில் மிகப்பெரிய ஸ்ரோபெரி பீட்ஸா ; நுவரெலியாவில் தயாரிப்பு\nஉலகில் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸாவை தயாரிக்கும் முயற்சி, நுவரெலியாவில் கடந்த 17.08.2018 அன்று முன்னெடுக்கப்பட்டது.\n2018-08-17 16:31:15 ஸ்ரோபெரி பீட்ஸா நுவரெலியா\nதீவிர உணவு பிரியர் வாஜ்பாய்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் என பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர்.\n2018-08-17 16:09:22 பிரதமர் வாஜ்பாய் பத்திரிகை\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-18T00:21:58Z", "digest": "sha1:IPO5Y5MAJAP7MD43WP57256Q4TOEHVVZ", "length": 8255, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nதென்னாபிரிக்க அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியின் வலது தோள் பட்டையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான இறுதி இர...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சியினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பத...\nபுத்­த­ளத்தில் இறால் பண்­ணை­யா­ளர்கள் பாதிப்பு\nதொடர்ந்து பெய்­து­வரும் மழை கா­ர­ண­மாக புத்­த­ளத்தில் சில பகு­தி­களில் உள்ள இறால் பண்­ணைகள் நீரில் மூழ்கி பாதிப்புக...\nஇதய நோயிற்கும், பூப்பெய்தலுக்கும் தொடர்பு உண்டா..\nபெண்களைத் தாக்கும் இதய நோயிற்கும் அவர்கள் பூப்பெய்துவதற்கும் தொடர்பு உண்டு என்று அண்மைய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.\nஇஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேத்தை அறி­வித்­தமை குறித்து இலங்கை அதி­ருப்தி\nஇஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லே த்தை அறி­வித்­த­மை­யினால் மத்­திய கிழக்கு நாடு­களின் அமைதி நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாதிப்...\nசீரற்றகாலநிலையால் இதுவரை 7 பேர் பலி ; 20 ஆயிரம் பேர் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....\nமலையக ரயில் சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு\nஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட சுரங்கப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில்...\nபொம்பகலயில் மண்சரிவு : 49 பேர் இடம்பெயர்வு\nஇரத்­தி­ன­புரி பொம்­ப­கல பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற மண்­ச­ரிவு கார­ண­மாக 12 குடும்­பங்­களை சேர்ந்த 49...\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய வேண்டுகோள் \nஅமெரிக்காவில் வீசிய கடும் சூறாவளியில் அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அங்குள்ள இலங்கைக...\nதிடீரென மின் உபகரணங்கள் பாதிப்பு : கொட்டகலையில் சம்பவம்\nகொட்டகலை பாத்தியாபுர கிராமப் பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் அதிக மின் வலுகொண்ட மின்சாரம் பாய்ந்ததால...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/bali-island-handmade-rattan-bag", "date_download": "2018-08-18T00:28:55Z", "digest": "sha1:INJOXHUVSQIGJLANUHQRWWXNTU3FN3BG", "length": 27558, "nlines": 468, "source_domain": "ta.buddhatrends.com", "title": "பாலி தீவு கையேடு ரத்தன் பேக் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nபாலி தீவு கையால் ரத்தன் பை\n$ 50.40 $ 72.00 நீங்கள் சேமித்து வைக்கும் 30% ($ 21.60)\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nRattan Circular Bag என்பது ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள காடுகளில் காணப்படும் பனைகளை ஏறும் இடத்திலிருந்து பெறப்பட்ட ஒரு நெகிழ்வான வனப்பகுதியிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு வட்ட கூடை போன்ற நெய்த பையாகும். மணல் நிற தையல் மூலம் டான், கேரமல், மற்றும் பழுப்பு நிறத்தில் நிற்கும் வண்ணம் மாறுபடும் வண்ணமயமான பூமிக்குரிய பையில் உள்ளது. இது ஒரு நீண்ட தோல் பட்டா, திறந்திருக்கும் போது இயற்கை துணி புறணி, மற்றும் ஒரு keyhole வளைய தாழ்ப்பாளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பையை கரிம பொருட்களுடன் வடிவமைத்து வடிவமைக்கப்பட்டு, நெசவு நெசவுகளுடன் வடிவமைக்கப்பட்டு, மாலை உடைகள் மூலம் எளிதில் இணைக்க ஒரு தளர்வான உபகரணத்தை வழங்கியது, இன்னும் உங்கள் சாதாரண நாள் உடைகள் போஹோ-சிக் மென்மையானவை. இந்த ரத்தன் பை இந்த கோடைகாலத்தில் உங்கள் தினசரி அலமாரிக்கு சேர்க்க ஒரு பல்துறை துண்டு.\nஎப்படி பாணி அதை உறுதியாக இல்லை இங்கே கிளிக் செய்யவும் சிறந்த ஸ்டைலிங் பரிந்துரைகளை பார்க்க\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nபத்து இலட்சம் பருத்தி இலக்கியப் பசுமை\nபத்து இலட்சம் பருத்தி இலக்கியப் பசுமை $ 42.00 $ 70.00\nபத்தொன்பது% பருத்தி பிட்ச்வேர் பிளாக் ஸ்கார்ஃப்\nபத்தொன்பது% பருத்தி பிட்ச்வேர் பிளாக் ஸ்கார்ஃப் $ 36.00 $ 60.00\n100% பருத்தி ஊதா நீண்ட ஸ்லீவ் சட்டை\n100% பருத்தி ஊதா நீண்ட ஸ்லீவ் சட்டை விற்பனை அவுட்\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம்\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம் $ 46.20 $ 77.00\nஎக்ஸ்எம்எல் நிறங்கள் சரிவு நீண்ட ஹிப்பி பிடித்த\nஎக்ஸ்எம்எல் நிறங்கள் சரிவு நீண்ட ஹிப்பி பிடித்த $ 40.80 $ 68.00\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 46.20 $ 77.00\n3 / 4 நீள பூக்கள் Harem பேன்ட்ஸ்\n26 / x நீளம் இயற்கை ஊக்கம் ஹரேம் பேன்ட்ஸ்\n26 / x நீளம் இயற்கை ஊக்கம் ஹரேம் பேன்ட்ஸ் $ 43.40 $ 62.00\n3 / X நீளம் அச்சிடப்பட்ட பாலாஸ்ஸோ பேன்ட்ஸ்\n3 / X நீளம் அச்சிடப்பட்ட பாலாஸ்ஸோ பேன்ட்ஸ் $ 47.60 $ 68.00\nநாகரிக ஃபேஷன் பிங்க் மற்றும் ப்ளூ பாஸ்டல் மாக்ஸி பிடித்த\nநாகரிக ஃபேஷன் பிங்க் மற்றும் ப்ளூ பாஸ்டல் மாக்ஸி பிடித்த $ 47.40 $ 79.00\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/categories.php?category=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&sort=featured&page=9", "date_download": "2018-08-18T01:23:06Z", "digest": "sha1:N7LZJ3KBZN3OWEJ3HMC3E7OXIGR53EYJ", "length": 8272, "nlines": 318, "source_domain": "discoverybookpalace.com", "title": "கட்டுரைகள் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஇணையம் கற்போம் -முனைவர் மு இளங்கோவன் -inayam karpom- munaivar mu ilankovan\nஇது உங்க டைரியா பாருங்க \nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ...\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\nஇந்திய அரசும் மரண தண்டனையும்\nஇந்திய இஸ்லாமியக் கலை வரலாறு\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்\nஇந்திய நாடும் இறையாண்மைக் கோட்பாடும்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Rs.250.00\nதிரைக்கதை எழுதலாம் வாங்க Rs.200.00\nதூக்குக் கயிற்றில் நிஜம் Rs.250.00\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\nப்ரைலியில் உறையும் நகரம் Rs.150.00\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு\nதியாக பூமியில் மாநில மாநாடு\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-08-18T01:20:23Z", "digest": "sha1:TEKDWVGHMUVT45CFBC3OPGXS3PBYKNRT", "length": 6815, "nlines": 221, "source_domain": "discoverybookpalace.com", "title": "அக்கடா", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nமனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உணர்த்துகிறது.\nஇந்தக் கதையில் வரும் குண்டூசி, எலி, பூனை, ஆமை, நண்டு போன்றவை. குழந்தைகளின் வாசிப்பில் ஒரு வேளை அவர்களுக்கு மட்டும் விடைகள் கிடைக்கக்கூடும்.\ns.ramakrishnan Vamsi Books எஸ்.ராமகிருஷ்ணன் வம்சி புக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://mutiru-nallatamil.blogspot.com/2011/11/1-5.html", "date_download": "2018-08-18T00:45:30Z", "digest": "sha1:OPK7LZWNT4STRFPQQOX47T62JIAIOZ5D", "length": 9846, "nlines": 52, "source_domain": "mutiru-nallatamil.blogspot.com", "title": "நல்ல தமிழ்", "raw_content": "\nபிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\nபிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\n(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)\nஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...\n\"தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா.\nஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள.\nகூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ\nஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை.\nஅன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே உச்சரிக்க வேண்டும். சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை.\nஎன்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.\nதமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.\nமாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை - எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி - இயற்கைமொழி தமிழேயாகும்.\nஎந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து \"என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா'' என்போமன்றோ வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி \"அ\". சற்று அதிகம் திறந்தால் \"ஆ\" தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே - இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.\nஇந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும்.\nநாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை.\nதமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர்.\nதமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம்.\nதமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள்.\n\"தமிழ்மொழி என் தாய்மொழி\" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும்.\n\"என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர்.\nநிகழ்ச்சி என்னும் சொல்லில் \"ச்\"சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும்.\nதமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள்.\nஅதனால், \"சார் இங்கே என்ன \"ல\"னா சார் போடணும் வல்லினமா மெல்லினமா\nபதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள்.\nமேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் \"ல\"கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் \"ள\"கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி \"ழ\"கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும்.\nஇம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.\nதால் - நாக்கு, தாள் - எழுதும் தாள், பாதம் (அடி);\nதாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);\nவால் - தூய்மை (வெண்மை)\nவாள் - வெட்டும் கருவி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30390", "date_download": "2018-08-18T00:21:12Z", "digest": "sha1:7OCQMBOZP7U5S27W32KOXMD3CNNDSCKQ", "length": 10571, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "\"நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்\" | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\n\"நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்\"\n\"நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்\"\nவிரைவில் மரணத்தை சந்திக்கப்போவதாகவும், கடவுளின் இல்லத்திற்கு புனித பயணம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் போப் பெனடிக்ட் அறிவித்துள்ளார்.\nஉலக கத்தோலிக்க மத தலைவராக ஜேர்மனி நாட்டை 16 ஆம் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகாலம் பணியாற்றிய அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு போப் பணியில் இருக்க விரும்பவில்லை என்று அறிவித்து ஓய்வுபெற்றார்.\nஇதையடுத்து பிரான்சிஸ் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.\nமுன்னாள் போப் பெனடிக்ட் தொடர்ந்து ரோம் நகரில் உள்ள சிறிய மடத்தில் தங்கி இருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக 4 கன்னியாஸ்திரிகளும், தனி செயலாளர் ஒருவரும் உள்ளனர்.\nதற்போது போப் பெனடிக்ட்க்கு 91 வயது ஆகிறது. இந் நிலையில் அவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\n\"எனது கடைசி கால வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை பலரும் அறிவதற்கு ஆவலாக இருக்கிறார்கள். என்னை சுற்றி எல்லாமே நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. என்மீது மக்கள் மிகவும் அன்பு காட்டி என்னைப்பற்றி விசாரிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஅதே நேரத்தில் நான் இப்போது 90 வயதை கடந்து விட்டேன். எனது உடல் உள்உறுப்புகள் பணி செய்வதை குறைத்துக் கொண்டுள்ளன.\nநான் வலிமை குன்றி வருகிறேன். நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் இல்லத்திற்கு புனித பயணம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்\" என தெரிவித்தார்.\nமுன்னாள் போப் பெனடிக்ட் உலக கத்தோலிக்க மத தலைவர்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது\n2018-08-18 01:06:16 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nஅமெரிக்க அரசாங்கம் மியன்மாரில் இடம்பெற்றது இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிடாததும் முக்கியமானது.\n22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது\nபாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார்.\n2018-08-17 18:56:36 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nசுவீடனில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னை நேர்முகப் பரீட்சை செய்த நபரிடம் கை குலுக்காமல் பேசிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\n2018-08-17 15:12:03 சுவீடன் இஸ்லாமியப் பெண் நேர்முகப் பரீட்சை\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது - கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டில்லியிலுள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது.\n2018-08-17 14:58:31 பிரதமர் வாஜ்பாய் டில்லி\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/24031", "date_download": "2018-08-18T00:23:02Z", "digest": "sha1:EU522I3EHWPWZFCHVRND3ZHLQMMBKOMM", "length": 7629, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "றிஸ்வி நகர் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலின் சுற்று மதில்: ஷிப்லி பாறூக் நிதி - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் றிஸ்வி நகர் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலின் சுற்று மதில்: ஷிப்லி பாறூக் நிதி\nறிஸ்வி நகர் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலின் சுற்று மதில்: ஷிப்லி பாறூக் நிதி\nபுதிய காத்தான்குடி றிஸ்வி நகர் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலின் சுற்று மதிலினை அமைப்பதற்கு முதல்கட்டமாக 200,000.00 ரூபாயும், இரண்டாம் கட்டமாக 150,000.00 ரூபாயும் கடந்த மாகாணசபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மஸ்ஜிதுல் ஸலாஹ் பள்ளிவாயலுக்கு வழங்கியிருந்தார்.\nஅதன் அடிப்படையில் பள்ளிவாயலின் சுற்றுமதிலினை சம்பூர்ணமாக்குவதற்கு மூன்றாம் கட்டமாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவரிகளின், 2015ம் ஆண்டின் மாகாணசபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 115,000.00 ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது, அதன் பிரகாரம் தற்பொழுது பள்ளிவாயலின் சுற்றுமதில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nசில தினங்களுக்கு முன்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சுற்றுமதில் கட்டுமான பணியினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், சுற்றுமதிலை நேர்த்தியாக அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி எதிர் காலத்தில் இன்னும் பல அபிவிருத்தி செயற்பாடுகளை இப் பள்ளிவாயலுக்கும், இப் பிரதேசத்திற்கும் முன்னெடுக்க முயற்சி செய்வதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.\nPrevious article(Letter) அதிகரித்துவரும் காத்தான்குடி வீதி விபத்துகள் தொடர்பில் கவனமெடுங்கள்\nNext articleதிருமலை மாவட்டத்தின் மூதூர் சீதனவெளி கிராமத்தில் ஆடைத்தொழிற்சாலைக்கான ஆரம்ப நிகழ்வு\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69652-kashmora-artist-reveals-the-secret-behind-the-eagle-tattoo.html", "date_download": "2018-08-18T00:49:18Z", "digest": "sha1:U3Y4KQIOGWP4LV7CMHAN65JLHX4ZWPJW", "length": 29013, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "’காஷ்மோரா’ கார்த்தி நெற்றியில் இருக்கும் டாட்டூ பற்றி தெரியுமா? | kashmora artist reveals the secret behind the eagle tattoo", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n’காஷ்மோரா’ கார்த்தி நெற்றியில் இருக்கும் டாட்டூ பற்றி தெரியுமா\n\"காஷ்மோராவில் கோகுல் சாரின் கதைப்படி, ஹீரோ கழுகைச் சின்னமாகக் கொண்ட ராஜாங்கத்தைச் சேர்ந்தவர். அதுக்கு ஹீரோவின் நெத்தியில் கழுகை டாட்டூவா வரையலாம்னு முடிவெடுத்தாங்க. மும்பையிலிருந்தெல்லாம் கைதேர்ந்த கலைஞர்கள் நிறைய பேர் அதற்கான டிசைன்களைக் கொடுத்தாலும் அதிலிருந்து எதுவும் சரியா செட் ஆகவே இல்லை. சரி...நாமளும் ட்ரை பண்ணலாம்னு ஒரு டிசைன் வரைஞ்சு கொடுத்தேன். ஆச்சரியமான விஷயம், அது இயக்குனர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சு போச்சு. அந்த கழுகுதான், ட்ரெய்லரில் கார்த்தி சாரின் நெற்றியில் நீங்க பார்க்கறது...\"\nசிறியதாக மாடியை ஒட்டிய அறைதான் அவருடையது....உள்ளே நுழையும் வாயிலிலேயே பிரமாண்டமான யானை ஒன்றின் ஓவியம் நம்மை வரவேற்கிறது. அருகிலேயே மற்றொரு சுவரில் மீனாட்சியின் கைகைகளில் எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் கிளி தனியாக கிளையொன்றில் அமர்ந்து கொண்டிருக்கிறது அழகோவியமாக.\n’இதுதான் என்னோட ஸ்டூடியோ...உயிர்மூச்சு எல்லாம்’ என்று நம்மை வரவேற்கிறார் ஏகாம்பரம். ஓவியர்களுக்கான லுக் கொஞ்சமும் குறையாமல் நீளத்தலைமுடி, தாடி, ஜிப்பா என்று ட்ரைபல் ட்ரெண்டியாக காட்சியளிக்கும் ஏகாம்பரம், ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கும் ‘காஷ்மோரா’ திரைப்படத்தில் கார்த்தியின் கழுகு‘டாட்டூ’வை வடிவமைத்த கலைஞர்.\nடெக்ஸ்டைல் டிசைனிங்கில் மாஸ்டர் டிகிரி முடித்துள்ள ஏகா, சினிமா வேலைகளுக்கு நடுவே, ‘கலம்காரி வேலைப்பாடுகள்’ என்னும் தலைப்பில் சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி ஆய்வுப் படிப்பிலும் பிஸியாக உள்ளார்.\n‘என்னுடைய குடும்பம் நெசவுத் தொழில் சார்ந்த கலைஞர்கள் நிறைந்தது. சின்னவயசில் இருந்தே அதனாலேயே துணிகள், ஓவியங்கள் மீதான காதலும் எனக்கு ஜாஸ்தியா இருந்துச்சு. பள்ளிக்கூடம் முடிச்சதுமே பைன் ஆர்ஸ்ட் கல்லூரியில் டெக்ஸ்டைல் டிசைனிங் பிரிவுதான் எடுத்தேன்.\nபுடவைகள், துணிகளில் வரையக் கூடிய வடிவமைப்புகளை உருவாக்குவதுதான் அங்க முக்கிய பாடம். எக்கச்சக்கமான புதுப்புது டிசைன்களை உருவாக்கி வச்சுருக்கேன். இதுக்கு நடுவில்தான் என்னோட வடிவமைப்புகள் பார்த்துட்டு திரைப்படத்திற்கான வாய்ப்புகள் நிறைய வர ஆரம்பிச்சது. சினிமாவிற்கான ஆடை வடிவமைப்புகளையும் கத்துக்கணும்னு காஸ்ட்யூம் டிசைனர் அனு வர்தன் மேடம்கிட்ட அசிஸ்டண்டா சேர்ந்தேன்’ என்று முன்கதைச் சுருக்கத்தை முடிக்கிறார் ஏகாம்பரம்.\nஅனு வர்தன் மூலமாக ‘காஷ்மோரா’ குழுவிலும் இணைந்திருக்கிறார் ஏகாம்பரம். ‘காஷ்மோராவில் கார்த்தி சாரோட உடைகளுக்கான வடிவமைப்புகளைச் செய்திருக்கறது பாலிவுட் பேமஸ் காஸ்ட்யூம் டிசைனரான நிஹார் தவான். அவங்களோட சேர்ந்து நானும் ஆடைகள் வடிவமைப்பில் வேலை செய்துருக்கேன். சோழ, சேர, பாண்டிய மன்னர்கள், பழங்கால கோவில் சிலை வடிவமைப்புகள் பற்றியெல்லாம் நான் நிறைய ஆய்வு செய்துட்டு இருக்கறதால ராஜா, ராணி ஆடைகளை உருவாக்கறதுக்கு என்னோட ஐடியாக்களும் உதவிச்சு.\nஅந்த நேரத்தில்தான் காஷ்மோராவில் கோகுல் சாரின் கதைப்படி, ஹீரோ கழுகைச் சின்னமாகக் கொண்ட ராஜாங்கத்தைச் சேர்ந்தவர். அதுக்கு ஹீரோவின் நெத்தியில் கழுகை டாட்டூவா வரையலாம்னு முடிவெடுத்தாங்க. மும்பையிலிருந்தெல்லாம் கைதேர்ந்த கலைஞர்கள் நிறைய பேர் அதற்கான டிசைன்களைக் கொடுத்தாலும் அதிலிருந்து எதுவும் சரியா செட் ஆகவே இல்லை. சரி...நாமளும் ட்ரை பண்ணலாம்னு ஒரு டிசைன் வரைஞ்சு கொடுத்தேன். ஆச்சரியமான விஷயம், அது இயக்குனர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சு போச்சு. அந்த கழுகுதான், ட்ரெய்லரில் கார்த்தி சாரின் நெற்றியில் நீங்க பார்க்கறது’ என்று குதூகலிக்கிறார் ஏகா.\nகாஷ்மோராவில் கார்த்தியின் கழுகு டாட்டூ மட்டுமில்லாமல் படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் நெற்றிப் பொட்டு, தலைப்பாகை ஸ்கெட்ச்களையும் தயாரித்திருக்கிறார் ஏகாம்பரம்.\nகழுகு டாட்டூவிற்காக ஸ்பெஷலான இங்க் ஒன்றினை உபயோகித்துள்ளனராம் படக்குழுவினர். ’நெற்றியில் இருக்கற தோல் சுருங்கும் தன்மை கொண்டது. அதனால ஸ்டிக்கர் ஒட்டினா அது ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்காது. ஸ்டென்சில் கட் போட்டாலோ, பழங்கால அரசர்களோட லுக் வராதுனு கோகுல் சார் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். இதுக்கு ஒரே தீர்வு வரையறது மட்டும்தான்னு முடிவு செஞ்சோம். ஸ்கின்னை பாதிக்காத ஸ்பெஷல் டாட்டூ இங்க் வரவழைச்சோம்.\nஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் 3 மணிநேரம் முன்னாடியே வந்துடுவார் கார்த்தி சார். கிட்டதட்ட 1 மணி நேரத்துக்கு மேல ஆகும் அந்த டாட்டூ வரைஞ்சு முடிக்க. அதுவும் முதல்நாளோட அதே லுக் மாறாம அப்படியே இருக்கணும். கண்டினியுட்டி மிஸ் ஆகவே கூடாதுங்கறதில் ரொம்பவே கவனமா இருந்தோம். ஸ்பெஷல் இங்க் அப்படிங்கறதால, அதை நீக்கறதும் ரொம்பவே கஷ்டம். அதுக்காக நான் ஷூட் முடியறவரை கூடவே இருந்தாகணும். ஷூட் முடிஞ்சதும் இன்னொரு லிக்விட் கொண்டு அதை சுத்தமா துடைச்சாகணும்’ என்று டாட்டூவின் ரகசியம் சொல்லும் ஏகாம்பரம், கிட்டதட்ட 54 நாட்கள் இந்த டாட்டூவை தினசரி கார்த்தியின் நெற்றியில் வரைந்திருக்கிறார்.\n’சினிமா வாய்ப்புகள் மட்டுமில்லாமல் இயற்கை வண்ணங்களில் கலம்காரி ஓவியங்களைக் கொண்டுவரதுதான் என்னுடைய ஆய்வு. மஞ்சள், வெள்ளை, சிவப்பு, அரக்கு, நீலம்னு இயற்கைச் சாயங்களில் ஐந்து வண்ணங்களை மட்டும்தான் உருவாக்க முடியும். அதை ஒன்னோட ஒன்னு மாத்தி மாத்தி குழைச்சுதான் மற்ற வண்ணங்களை உருவாக்க முடியும். அப்படி உருவாக்கினதுதான் இந்த சிவதாண்டவமும், மயிலும்’ என்று இரண்டு அழகான ஓவியங்களை நம் முன்னே வைத்தார்.\n’அஜந்தா, எல்லோரா, தஞ்சாவூர், எகிப்துனு எல்லா ஊர் சிற்பக்கலைகளையும், ஓவிய நுணுக்கங்களையும் துணிகளில் இயற்கையோடு இழைந்த வண்ணங்களால் உருவாக்கணும். அதற்கான நெசவு வாய்ப்புக்களை நசிந்த கலைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கனும். அதுக்கான தொடக்கம்தான் காஷ்மோரா தொடங்கி கலம்காரி வரையான என்னுடைய முயற்சிகள் எல்லாமே’ என்று எல்லோரையும் நேசிக்கும் குரலில் சொல்லி முடித்தார் அந்த இளம் கலைஞர்.\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n’காஷ்மோரா’ கார்த்தி நெற்றியில் இருக்கும் டாட்டூ பற்றி தெரியுமா\nஒரு சிங்கம் பாவம்...இன்னொரு சிங்கம் கோவம்... இது கார்ட்டூன் பில்லா -மோட்டூ பட்லு படம் எப்படி\nதனுஷ் - செளந்தர்யா - சோனம் கபூர்... ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ கூட்டணி\nதமிழ் சினிமாவின் ஜிலீர் காதல் தருணங்கள் #PhotoStory\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2016/02/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-29/", "date_download": "2018-08-18T00:56:26Z", "digest": "sha1:AY55X5ZUMWOJWJGUXLXEXCDBM2M4QP6S", "length": 14660, "nlines": 169, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 29 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி – 29\nசென்ற பதிவுக்குக் கமண்ட்ஸ் எழுதிய அனைவருக்கும் நன்றி.\nஇன்றைய பகுதியில் Ghost marriage பற்றி எழுதி இருக்கிறேன். இன்றும் கூட சீனாவில் சில இடங்களில் இந்த சடங்கு நடக்கிறது. பின்னணியில் பதிவிடப்பட்டிருக்கும் புகைப்படம் அப்படி ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்டது. அதனைப் பற்றி விரிவாக இன்னொரு முறை பார்ப்போம். இனி நிலவு ஒரு பெண்ணாகி – 29 பதிவு உங்களுக்காக\nநிலவு ஒரு பெண்ணாகி – 29\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nகாதல் வரம் யாசித்தேன் – 5\nகாதல் வரம் யாசித்தேன் -6\nஹாய் மதுரா இன்று தான் அனைத்து பதிவுகளும் படிக்க நேரம் கிடைத்தது ………ஒவ்வொரு பதிவும் சிலிர்க்க வைத்தது …………இப்பொழுது எல்லா முடிச்சும் அவிழ்ந்துவிட்டது ………….ஆத்ரேயன் இனி எப்படி ரீமாவைக் காப்பாற்றப் போகிறான் …………..மாந்த்ரீகத்திற்கும் தெய்வ சக்திக்கும் இடையில் நடக்கும் யுத்தம் ………….உங்களின் அடுத்த பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் …………நன்றி பதிவுகளுக்கு .\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=25446", "date_download": "2018-08-18T00:46:38Z", "digest": "sha1:IOE56NCAGI3SHVICYNWN4MHOT55LBELJ", "length": 21128, "nlines": 135, "source_domain": "kisukisu.lk", "title": "» காதலிப்பதற்கு முன்னால் இத செய்திருக்கிறீர்களா?", "raw_content": "\nயார் யார் எந்த திசையில் தூங்க வேண்டும்\nகாதல், நட்பு இந்த இரண்டுக்கும் நடுவே வேறு ஒரு உறவும் இருக்கிறது\nஎப்ப ஐ லவ் யூ சொன்னா உடனே ஓகே ஆகும்…\nஇதை வைத்து திருமண பந்தம் சிக்கலில் உள்ளதை அறியலாம்…\n← Previous Story இந்த விஷயங்களை பற்றி வாயே திறக்க வேண்டாம்..\nNext Story → பல்கலைகழக வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு\nகாதலிப்பதற்கு முன்னால் இத செய்திருக்கிறீர்களா\nஎதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும் தானே…. அதை இன்னொரு வகையில் குறிப்பிட வேண்டும் என்றால் உல்லாச வாழ்க்கை என்று சொல்லலாம். அதைச் செய்வதற்கான எந்த பிரத்யோக காரணமும் இருக்காது.\nபொழுது போக்கிற்காக செய்கிற ஒரு விஷயம் என்று கூட அதனை சொல்லலாம். தமிழில் சொல்லும் போது மிகச் சாதரணமாக பொழுது போக்கும் ஓர் விஷயம் தானே என்று நாம் கடந்து சென்று விட முடியும். இதே விஷயத்தை அப்படியே பிசகாமல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துப் பாருங்களேன்… உங்களுக்கே லேசாக கோபம் எட்டிப்பார்க்கும்.\n ஆர் யூ ஃப்ளர்டிங் மீ என்று உங்கள் இணையரிடம் கேட்டுச் சண்டையிட்டது எல்லாம் நினைவுக்கு வருகிறதா\nஃப்ளர்டிங் நாம் பல நேரங்களில் கடந்து வந்திருப்போம் . பல நேரங்களை அதனை ஃப்ளர்ட் என்று தெரியாமலே கூட கடந்திருப்போம். நமக்கு மட்டுமே ஃப்ளர்ட்டிங் செய்யப்படுகிறது என்று நினைக்காதீர்கள் நாமும் செய்திருப்போம். சில நேரங்களில் உங்களை அறியாமல் கூட செய்திருக்கலாம்.\nஇயற்கை : ஃப்ளர்டிங் பற்றிய சில அடிப்படைகளை தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் இயற்கையானது. இது ஒரு ரிலேஷன்ஷிப்பிற்குள் நம்மை இட்டுச் செல்லாது. வெறும் டைம் பாஸ் என்பது போல அந்த நேரத்திற்கான கிளர்சிக்கு ஓர் வடிகாலாக இந்த ஃப்ளர்டிங் இருக்கும்.\nஇது பிறரின் மனதை புண்படுத்தாத வரையில் தவறில்லை. எப்போது இது எல்லை மீறிச் செல்லும் என்பதை தொடர்ந்து உங்களால் கண்காணித்துக் கொண்டேயிருக்க முடியாது என்பது தான் இதிலிருக்கும் மிகப்பெரிய சிக்கல்.\nபல விதங்களில் : ஃப்ளர்ட் என்பது, வெறும் உடல் ரீதியாக, பேசுவதன் மூலம், அல்லது ஏதேனும் செய்கைகள் மூலமாக மட்டுமே நடைபெறும் என்பதல்ல அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஒருவரை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருப்பது கூட ஒரு வகை ஃப்ளர்ட்டிங் தான். சில நேரங்களில் இதனை உங்களை அறியாமலும் செய்து கொண்டு இருப்பீர்கள்.\n : ஃப்ளர்ட் செய்யும் போது சில நேரங்களில் சப் கான்சியஸ் மைண்டில் இருப்பதால் உங்களை அறியாமல் சில செய்கைகளை செய்வீர்கள். சில நேரங்களில் இது எதிரில் இருப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம்.\nவிலங்குகள் : இந்த ஃப்ளர்டிங் என்பதை ஒரு வகையில் கவர்தல் என்று கூட சொல்லலாம். எதிர் பாலினத்தை தன்னை நோக்கி திரும்பி பார்க்கச் செய்கிற செயல்கள், அவர்களின் கவனத்தை ஆட்கொள்கிற விஷயங்களை நாம் செய்வதும் ஃப்ளர்டிங் தான். இது விலங்குகளிடத்தில் கூட காணப்படுகிறது. பெண் மயிலை கவர்வதற்காக ஆண் மயில் தோகை விரித்தாடி கவர்ந்திழுக்கிறதே அதுப் போலத்தான்…\nசில சிக்னல்கள் : ப்ளர்டிங் ஆளுக்கு தகுந்தாற் போல, அவரது அதாவது அந்த தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இது அமைந்திடும். ஆனாலும் சில பொதுவான ஃப்ளர்டிங் சிக்னல்கள் என்னென்ன தெரியுமா சிரிப்பது, கண் அடிப்பது, முடியை பிடித்து நொண்டுவது, உதட்டை சுழற்றுவது, உதட்டினை நாக்கால் தடவுவது ஆகியவை பொதுவானதாக இருக்கிறது.\nமொழித் தேவையில்லை : ஃப்ளர்ட் நீங்கள் பேசித்தான் அல்லது ஏதேனும் ஓர் மொழி மூலமாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதல்ல இது சப்கான்சியஸ் மைண்டில் இருப்பதால் உங்களது செயல்களே அவர்களுக்கு உணர்த்தும் என்பதை மறக்க வேண்டாம்.\nஃப்ளர்டிங் டிப்ஸ் 1 : அவரை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவரை அடைந்தே தீருவேன் என்று நினைப்பதை முதலில் கைவிடுங்கள். முதலில் உங்கள் மீதான நல்ல அபிப்ராயத்தை உண்டாக்குங்கள். நீங்களாக வழியச் சென்று அவரிடத்தில் பேசுவது எல்லாம் பழைய கதை…. இன்றைய யுகத்தினருக்கு ஏற்ப உங்களுக்கு வந்திருக்கிறதே ஆசை அதே போல அவர் மனதிலும் ஆசையை உண்டாக்க வேண்டும்.\nடிப்ஸ் 2 : திடிரென்று ஒரு பெண்ணின் மனதில் ஆசையை உண்டாக்குவது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். இதனை நீங்கள் கவனமாக கையாள்வது உங்களிடத்தில் தான் இருக்கிறது. அவருக்கு எதில் விருப்பம், எதில் நாட்டம் அதிகம் என்ற தகவல்களை முதலில் திரட்டுங்கள்.\nடிப்ஸ் 3 : வெறும் பார்வையினால் கூட ஃப்ளர்ட் செய்ய முடியும், அதாவது உங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவிக்க முடியும். முதன் முறையாக பார்க்கும் போதே ஏதோ கொள்ளைக்கார கும்பலிலிருந்து ஒருவன் பார்ப்பது போன்றோ வேண்டாமே….\nடிப்ஸ் 4 : அட்மையரிங் லுக் போல உங்கள் பார்வை இருக்கட்டும்.தொடர்ந்து அவரை பாருங்கள்…. இது ரொமாண்டிக் லுக்காக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்குப் பிடித்த ஒரு பொருளை வியந்து பார்க்கிறீர்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது, அவருக்கோ அல்லது அவரின் உடனிருக்கும் நண்பர்களுக்கோ தெரிந்தால் கூடுதல் சிறப்பு. இங்கே பல காதல்களை ஊட்டி வளர்ப்பது உடனிருக்கும் நண்பர்கள் தானே….\nடிப்ஸ் 5 : ஒரு கட்டத்தில் இருவரது பார்வையும் சந்திக்கும். அப்போதும் அவரை முறைத்துக் கொண்டே இருக்காமல் லேசாக சிரித்திடுங்கள். சின்ன புன்னகை போதும். அது அரைவிநாடிக்கு அதிகமாக இருக்க வேண்டாம். பின்னர் சில நிமிடங்களுக்கு பார்ப்பதை தவிர்த்திடுங்கள். நீங்கள் வேறு வேலைகளில் மூழ்கியிருப்பது போல காட்டிக் கொள்ளுங்கள். உங்களின் திடீர் புன்னகை பிறகு அந்த தவிர்க்கும் தருணம் ஆகியவை உங்கள் இணையின் மனதில் பல கேள்விகளை உருவாக்கிடும். இது போதாதா என்ன\nடிப்ஸ் 6 : இருவரின் சந்திப்பு சகஜமானதும் உடனேயே போன் நம்பர் கேட்டு வாட்சப்பில் உங்களின் அன்றாட தினசரிகளை ஒப்பிக்கும் வேலையை தயவு செய்து செய்யாதீர்கள். சில காலங்கள் இந்த ஃப்ளர்டிங்கிலேயே தொடரட்டும். அவ்வப்போது பார்த்து புன்னகை மட்டும் செய்திடுங்கள்.\nடிப்ஸ் 7 : இதன் அடுத்த கட்டமாக பாராட்டுங்கள். வழக்கம் அழகாய் இருக்கிறாய் என்று பொதுவாக சொல்லாமல் ஏதேனும் சின்ன மாற்றம் செய்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று நிறுத்துங்கள். உதாரணத்திற்கு கண்மையிட்டால் அழகாக இருக்கும், மீசையை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்தால் அழகாக இருக்கும். ஃப்ரென்ச் பியர்ட் வைத்தால் செம்ம மாஸ் என்று சொல்லுங்கள். இந்த மாற்றங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்பட்டால் கங்கிராட்ஸ் பாஸ்…..\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=9230", "date_download": "2018-08-18T00:26:39Z", "digest": "sha1:TJZKPS7KWKCQNE4AABSVPDBG72SVPNYE", "length": 78220, "nlines": 371, "source_domain": "rightmantra.com", "title": "தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்\nதினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்\nஎத்தனையோ பறவைகள் இருக்க அன்னை மீனாக்ஷி, காமாக்ஷி மற்றும் ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாள் ஆகியோரின் திருக்கரங்களில் அமரும் பாக்கியத்தை கிளிகள் ஏன் பெற்றன தெரியுமா கிளிகள் தெய்வாம்சம் மிக்கவை. அதுமட்டுமல்ல கிளிகளும் குழந்தைகளும் ஒன்று. எனவே தான் அவற்றை கிளிப்பிள்ளை என்று சொல்கிறார்கள்.\nசமீபத்தில் நீங்கள் கிளிகளை பார்த்தது எப்போது அநேகமாக ஏதாவது மிருகக் காட்சி சாலையில் வலைக்குள்ளோ அல்லது கூண்டுக்குள்ளோ அடைக்கப்பட்டு, அவற்றின் சுதந்திரத்தை பலிகொடுத்து, நமக்கு காட்சிப் பொருளாக அவை வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். (எதிர்கால சந்ததியினர் கிளிகளை மிருகக் காட்சி சாலையில் கூட பார்க்கமுடியுமா என்பதே சந்தேகமே.) மற்றபடி கிளிகளை பார்ப்பது மிகவும் அபூர்வம். கிராமப்புறங்களிலே கூட அவற்றை பார்ப்பது அபூர்வமாகிவிட்டது.\nஆனால் AIR POLLUTION & NOISE POLLUTION அதிகம் உள்ள சென்னை நகரில் அதுவும் போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு இடத்தில் சொல்லிவைத்தார்ப் போல நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் ஏன் கிளிகள் (ஆம்… கிளிகள் தான்) ஒரு வீட்டிற்கு பேட்ச் பேட்ச்சாக வந்து உணவு சாப்பிட்டுவிட்டு செல்கின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா) ஒரு வீட்டிற்கு பேட்ச் பேட்ச்சாக வந்து உணவு சாப்பிட்டுவிட்டு செல்கின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா அழிந்து வரும் இனங்களில் கிளியும் ஒன்று என்பது இங்கே நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.\n[*இந்த பதிவை பார்த்து, ரசித்து, அனுபவித்து படிக்க (எம் எழுத்துக்களை அல்ல. கிளிகளின் அழகை) அவகாசம் தேவை என்பதால் இப்பொழுதே அளிக்கிறோம்.]\nஎங்கே.. எப்படி… யாரால் இந்த அற்புதம் நடக்கிறது \nதெரிந்துகொள்வதற்கு முன்னர் இது பற்றிய தகவல் நமக்கு எப்படி கிடைத்தது என்று பார்ப்போம்.\nநாம தளத்தின் வாசகி வள்ளியம்மை என்பவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நமக்கு ஒரு மின்னஞ்சல் மூலம் ஒரு காணொளி லிங்க்கை அனுப்பியிருந்தார். அதில், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மார்கழி வைபவம் நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு மார்கழி வைபவத்தை முன்னிட்டு தயாரிக்கப்படும் ஆண்டாள் கிளி பொம்மை பற்றிய ஒரு காணொளி ஒளிபரப்பானது. அந்த எபிஸோடில் சென்னையில் உள்ள ஒரு வீட்டுக்கு தினமும் இருவேளையும் ஆயிரக்கணக்கில் கிளிகள் வந்து உணவருந்திவிட்டு செல்லும் அற்புத காட்சியை விஜய் டி.வி.யினர் இணைத்திருந்தார்கள். கிளிகளுக்கு உணவு வைக்கும் அந்த வீட்டின் உரிமையாளரை நம் தளத்துக்காக பேட்டி எடுக்கவேண்டும் என்றும் வள்ளி நம்மிடம் கேட்டுக்கொண்டார்.\nவீடியோவை பார்த்தபோது நமக்கு ஏற்பட்ட பரவசத்துக்கு அளவேயில்லை.\nஅந்த ஒரு வீடியோவை பாருங்கள். மற்ற அனைத்து எபிசோடுகளையும் தானாகவே பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். அத்தனை அற்புதம் மார்கழ வைபவம் நிகழ்ச்சியின் காணொளிகள். (அந்த வீடியோ பதிவின் இறுதியில் இணைக்கபட்டுள்ளது). உடனே எப்படியோ முயற்சித்து ஊடகத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் திரு.சேகர் அவர்களின் நம்பரை பெற்றுவிட்டோம். நாம் தொடர்பு கொண்டு சந்திப்புக்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்டபோது சற்று தயங்கினார். ஏனெனில் ஊடகத்தில் (ஓரிருவர் தவிர) அந்தளவு அவரிடம் நல்ல பெயர்(\n“ஸார்… நாம் வருவது உங்கள் பேட்டிக்காகவும் கிளிகளை புகைப்படம் எடுக்கவும் மட்டும் அல்ல. உங்கள் தேவைகளை பற்றி அறிந்து உங்களுக்கு உதவி செய்வதற்கு தான். இந்த உலகமே சுயநலத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்ற வேளையிலே, நீங்கள் செய்து வருவது அருந்தொண்டு. உங்கள் தொண்டை வெளியுலகிற்கு தெரியவைப்பது மட்டுமல்ல… உங்கள் தொண்டு சிறக்கவும், உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கே நாம் வர விரும்புகிறோம்\n” என்று கூறி அப்பாயிண்ட்மெண்ட் தந்தார்.\nசென்னை ராயபேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் உள்ள பாரதி சாலையிலிருக்கும் ஒரு வீட்டின் மாடி தான் இந்த கிளிகளுக்கு சரணாலயம். அந்த வழியே நடந்து போகின்றவர்களின் கண்களும் வாகனங்களில் பறப்பவர்களின் கண்களும் ஒரு விநாடி அந்த வீட்டின் மொட்டை மாடியை ஆச்சரியத்துடன் பார்த்துப் பரவசமாகின்றன. பின்னே கூட்டம் கூட்டமாக பச்சைக் கிளிகளின் கும்மாளத்தை பார்த்தால் யாருக்கு தான் நின்று ரசிக்க ஆசை இருக்காது\nஇது டாப் ஆங்கிள் ஷாட் \nஅந்த அற்புத காட்சியின் திகைப்பு நமக்குள் அடங்குவதற்கு முன்னதாகவே, அருகிலிருக்கும் அரச மரத்துக்கு கூட்டமாகப் பறப்பதும், மீண்டும் மாடிக்கு திரும்புவதுமாய் இருக்கின்றன. கட்டிடங்களுக்கிடையே தொங்கிக்கொண்டிருக்கும் கேபிளில் அவை அமர்ந்திருக்கும் அழகே தனி தான். பரபரப்பான அந்தச் சாலையில் விரையும் வாகனங்களையோ, மக்களையோ அந்தக் கிளிகள் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. யாராவது பலத்த ஹார்ன் எழுப்பினால் மட்டுமே அவை நாலாபுறமும் சிதறிப் பறக்கின்றன. அது கூட பார்க்க அழகு தான்.\nமனிதனின் வாடை தெரிந்தாலே பறந்தோடிவிடும் கிளிகள் இத்தனை பரபரப்பான ஒரு இடத்தில் நூற்றுகணக்கில் ஏன் ஆயிரக்கணக்கில் வந்து அமைதியாக சுதந்திரமாக உணவருந்திவிட்டு செல்கின்றன என்றால் அதற்கு காரணம் சேகர் என்கிற ஒருவர் நமக்காக இருக்கிறாரே என்கிற நம்பிக்கை தான்.\nபக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கேமிராவை நன்கு ZOOM செய்து எடுக்கப்பட்டது இந்த படம்.\nசேகர், கிளிகள் வந்து அமரும் அந்த வீட்டில் வசிப்பவர். இவர் அடிப்படையில் ஒரு கேமிரா மெக்கானிக். கடந்த 36 ஆண்டுகளாக கைவிடப்பட்ட கேமராக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த மெக்கானிக். புகைப்படத் துறையில் இவரைத் தெரியாதவர்களே கிடையாது.\nநாம் பேசிக்கொண்டிருக்கும்போதே வாகனங்கள் எழுப்பும் “ஹாரன்’ ஒலிகளால் பயந்துபோய் பறப்பதும் மீண்டும் அங்கே அமர்வதுமாய் இருக்கின்றன கிளிகள். அந்தப் பகுதியில் நடப்பவர்களில் பலர் தங்களின் செல்போனின் மூலம் படம் பிடிக்கின்றனர்.\nஅருகே சென்றாலே பறந்துவிடும் என்பதால் யாரும் கிளிகளை அருகே சென்று படம் பிடிக்கமுடியாது. சேகர் அவர்கள் அதற்கு அனுமதிப்பதுமில்லை. ஒருமுறை அவை பறந்து சென்றால், மீண்டும் வந்து அமர்வதற்க்கு 10-15 நிமிடங்களாவது ஆகும். தேவைப்பட்டால் எதிரே உள்ள கட்டிடத்துக்கு சென்று அங்கிருந்து தான் ரசிக்க முடியும்.\nநாம் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அக்கம்பக்கத்‌தில் உள்ள கட்டிடங்களுக்கு சென்று அங்கிருந்து எடுக்கப்பட்டவை தான்.\nகிளிகள் வரும் நேரம் இவர் மேலே செல்வதில்லை. எனவே நாங்கள் கீழே நின்று தான் பேசிக்கொண்டிருந்தோம்.\n“தினசரி மாலை 4-6.30 வரை இதுகளை பார்த்துக்கிறது தான் என் வேலையே. பல கி.மீ. தூரங்களில் இருந்து பசியாற வரும் இந்தக் கிளிகளை சிலர் கல்லால் அடிக்க முயற்சிப்பார்கள். அவர்களிடமிருந்து இவற்றை பாதுகாக்கவேண்டும். கிளியை பிடித்துப் போய் விற்பதற்குக் கூட சிலர் வந்திருக்கிறார்கள். ஒரு முறை ஒரு பெண், “கிளி வளர்க்க ஆசையாக இருக்கிறது, ஒன்றை பிடித்துப் போகட்டுமா” என்று கேட்டார். இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கிளிகளைப் பாதுகாக்கத்தான் காவல் நிக்கிறேன். காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் வேற எந்த வேலையையும் நான் பார்ப்பதில்லை. நான் இருப்பது வாடகை வீடுதான். 20 வருஷமா இந்த வீட்ல தான் இருக்கேன்” என்று கேட்டார். இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து கிளிகளைப் பாதுகாக்கத்தான் காவல் நிக்கிறேன். காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் வேற எந்த வேலையையும் நான் பார்ப்பதில்லை. நான் இருப்பது வாடகை வீடுதான். 20 வருஷமா இந்த வீட்ல தான் இருக்கேன்\nசாலையில் வண்டியில் போகும் பெற்றோர்களுடன் போகும் சின்னக் குழந்தைகள் பச்சைக்கிளி கூட்டத்தை வாய்பிளந்து பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். சிலர் தங்கள் செல்போன்களால் பச்சைக்கிளிகள் கூட்டத்தை பரவசமாக படமெடுத்து செல்கிறார்கள். சென்னையின் பரபரப்பான ஒரு பகுதியில், இவ்வளவு பச்சைக்கிளிகள் இயல்பாகக் கூடுவது நிச்சயம் சாதாரண விஷயமில்லை. காரணம் சென்னையில் மரங்கள் குறைந்து, கட்டடங்கள் பெருகி விட்டதுதான்.\n“30 வருஷத்துக்கு முன்னாடி தர்மபுரியில் இருந்து அப்பாக்கிட்ட கோபப்பட்டு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். ஒரு நல்ல கேமரா மெக்கானிக்கா ஆகணும்னு அப்போ ஆசைப்பட்டேன். இன்னைக்கு சென்னையில் பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு கேமரா மெக்கானிக்கா இருக்கேன். பல அரிய வகை காமிராக்கள் என்கிட்டே இருக்கு. சில வருஷங்களுக்கு முன்னாலதான் இந்த ராயப்பேட்டை வீட்டுக்குக் குடிவந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு கிளிகளைப் பத்தி எதுவுமே தெரியாது. எப்போ இருந்து இந்தக் கிளிகள் எல்லாம் என்னைத் தேடி இங்கே வர ஆரம்பிச்சுதுன்னும் ஞாபகம் இல்லை\n“எப்படி இந்த கிளிகளுக்கு உணவு கொடுக்குற விஷயம் ஆரம்பமாச்சு\n“என்னோட மனைவி மாடியில காக்காவுக்கு சோறு, அரிசி, கோதுமை வைப்பாங்க. அந்தப் பழக்கம் எனக்கும் வந்தது. முதலில் காக்காவோட சேர்ந்து சில தடவை புறாக்களும் வந்துச்சு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருநாள், 10 – 15 காக்காக்களுக்கு நடுவுல ஒரு கிளி சாப்பிட வந்துச்சு. எல்லாக் காக்காவும் சேர்ந்து அந்தக் கிளியைக் கொத்தி விரட்டிவிட்ருச்சு.\nகொஞ்ச நாள் கழிச்சு, 10 கிளிகள் சேர்ந்து கோஷ்டியா வந்து சாப்பிட ஆரம்பிச்சது. இப்போ காக்காக்களுக்கு அமைதியா வேடிக்கை பார்க்கிறதைத் தவிர வேற வழி இல்லை. மொட்டை மாடியில் ஒரு பக்கம் கிளிகளும், இன்னொரு பக்கம் காக்காக்களும் சாப்பிட ஆரம்பிச்சது. ஒரு வாரம்தான். பத்து இருபதாகி, இருபது நாப்பதாகி இப்போ தினமும் 1000 கிளிகள் வந்து சாப்பிட்டுட்டுப் போகுதுங்க. கிளிகளுக்கு வழிவிட்டு காக்காக்கள் வர்றதை நிறுத்திச்சிருச்சு. எப்போவாச்சும் ஒண்ணு ரெண்டு காக்கா மட்டும் வரும்.”\n“சார்… கிளிகளுக்கு வழிவிடும்படி காக்கைகளுக்கு அன்னை மீனாக்ஷி கட்டளையிட்டிருப்பாள்…”\nநமது பதிலை கேட்டு சற்று அதிசயமாக பார்த்தார்.\n“கிளிகளுக்கு உணவளிக்க வேண்டும்… அதுவும் தொடர்ந்து உணவளிக்க வேண்டும் என்று தோன்றியது எப்படி\n“வெயில் காலத்தில் மனிதர்களுக்கு நாவறண்டு போவதைப் போல பறவைகளுக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும். அவை யாரிடம் போய் தண்ணீர் கேட்கும் இந்த யோசனை எனக்கு இருந்ததால், வாளியில் தண்ணீர் கொண்டுவைப்பதை நான் பல ஆண்டுகளாகச் செய்துவந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், வீட்டிற்குள் கேமரா சர்வீஸ் செய்துகொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் மதில் சுவரின் மேல் பார்த்தபோது, அமர்ந்திருந்த சில கிளிகள் உணவுக்கு ஏங்குவதை அறிய முடிந்தது. அன்றிலிருந்து கிளிகளுக்கு ஏற்ற தானியங்களைப் கொடுப்பதென்று முடிவுசெய்தேன்”\n“இந்த இடத்தை மட்டுமே நாடி அதுவும் தங்கள் இனத்தையே அழைத்துக்கொண்டு எப்படி அவை வருகின்றன இது ஒரு அதிசயமாச்சே…\n“எனக்கே கூட இது புரியவில்லை. எல்லாம் இறைவன் நிகழ்த்தும் அதிசயம் தான். இயற்கையாக வாழும் இந்தப் பச்சைக்கிளிகள், எந்தத் தொந்தரவும் இல்லாததாக உணர்வதால்தான் இங்கே வருகின்றன. சமீபத்தில் இதை பார்க்க வந்த சில வெளிநாட்டுக்காரர்கள், “இது ஒரு மிகப் பெரிய அதிசயம். ஏனெனில் இது கிராமப்புறமோ காடோ அல்ல. பசுமையான சோலையும் அல்ல. POLLUTION அதிகம் உள்ள ஒரு நகரம். இங்கு, இது போல ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு சுமார் 1000 கிளிகள் வருகின்றன என்றால் இது ஒரு பேரதிசயம்… அற்புதம்” என்றார்கள்.\n“கிளிகளுக்கு சாப்பிட என்ன வைக்கிறீர்கள்\n“ஆரம்பத்தில் மாடி கட்டைச் சுவரில் அரிசி, பொட்டுக்கடலை, உப்புக்கடலை போன்றவற்றை வைத்து வந்தேன். கிளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்ததால், மாடி கட்டைச்சுவர்களுக்கு இடையே மரக்கட்டைகளை வைத்து இரை வைத்து வருகிறேன்.\nஇதற்கென்றே பாரிமுனை, கோழிமார்க்கெட் பகுதிக்குச் சென்று தினை, நவதானியங்கள், பொட்டுகடலை, அரிசி போன்றவற்றை வாங்கி வந்து நாளுக்கு ஒன்றாக ஊறவைத்துப் போடுவேன். நாள் ஒன்றுக்கு இரண்டு கிலோ முதல் எட்டு கிலோ வரை தானியங்கள் செலவாகும். ஒரே தானியத்தை தினமும் போடுவதை விட நாளுக்கு ஒரு தானியம் போடுவதை வழக்கமாகக் கொண்டேன். ஆனால் இப்போது பதப்படுத்திய அரிசியையே வைக்கிறேன். காரணம், கிளிகள் மிகவும் சென்ஸிடிவ். காடுகளை போலவோ, கிராமப்புறங்களை போலவே ஆற அமர அவைகளால் இங்கே சாப்பிட முடியாது. பதப்படுத்திய அரிசி என்றால் சாப்பிட மிகவும் சுலபம்.\n(இந்த கிளி ஏன் இப்படி இருக்கிறது தெரியுமா\n* மேலே காணப்படும் படத்தில் உள்ள கிளி, முடியெல்லாம் உதிர்ந்து ஏன் இப்படி கொடூரமாக காட்சி தருகிறது\n கிளிக்குஞ்சுகளுக்கு முடி இருக்காது. பார்க்கவே அருவருப்பாக இருக்கும். கிளியானது வளர வளர தான் முடி வளர்ந்து தோல் பச்சைப் பசேலென்று காட்சி தரும். மேலும், தாய்க்கிளி இரை தேட குஞ்சை பழக்குவதன் பொருட்டு வெளியே அழைத்து வந்துள்ளது. அப்போது எடுத்த படம் தான் இது”. – (திரு.சேகர் கூறிய தகவல் இது.)\n“இவ்ளோ கிளிகளுக்கும் போட, ஒரு நாளைக்கு 15 கிலோ அரிசி தேவைப்படுது. இவ்ளோ ஜீவன்கள் என்னை நம்பி வருதுங்க. என் பர்ஸில் கடைசி ரூபா இருக்கிறவரைக்கும் நான் என் விருந்தினர்களுக்கு சாப்பாடு கொடுப்பேன் சார்\n“இதனால் பச்சைக் கிளிகள், அணில்கள், காகங்கள், புறாக்கள் எனப் பல உயிரினங்களும் பசியாறுகின்றன. அதைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. இதனால் அந்த நேரத்தில் யாரையும் நான் சந்திப்பதைத் தவிர்க்கிறேன். என்னைப் பார்க்க வருபவர்களின் சத்தத்தால் அந்தப் பறவைகளின் அமைதி குலைகிறது. அதனால் என்னுடைய வாடிக்கையாளர்களைக் கூட அந்த நேரத்தில் வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.”\n“கிளிகள் மட்டும் தான் வருகின்றனவா\n“நீங்களே பாருங்களேன்…” (அங்கு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பறவைகளை காட்டுகிறார். 90% கிளிகள் மற்றும் சில புறாக்கள் தென்பட்டன.)\n“கிளிகள் மட்டுமல்ல. சிலசமயம் புறாக்களும் வருவதுண்டு. இப்போது அரிய வகை அலெக்சாண்டிரியா கிளிகள் கூட வருகின்றன. ஓரிரண்டு பஞ்சவர்ணக் கிளிகளும் வருகிறது.”\n“இப்படி தினசரி உணவளிப்பது சிரமமாக இல்லையா பணத்தை கூட செலவு செய்யலாம்… நேரத்தை செலவு செய்ய முடியாதே பணத்தை கூட செலவு செய்யலாம்… நேரத்தை செலவு செய்ய முடியாதே\n“உண்மை தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாலை 4 முதல் 6-30 மணிவரை நான் எந்த வேலையையும் பார்ப்பதில்லை. இவரின் தினசரி இரண்டரை நேரம் இந்தப் பறவைகளுடன்தான் கழிகிறது. தினம் சில மணிநேரங்களை அந்தப் பறவைகளுக்காகச் செலவிடுவதில் என்னுடைய வருவாய் கணிசமாகக் குறையும்தான்; ஆனால் மன நிம்மதி கூடும்\n“கிளிகள் வரும் நேரம் என்ன இந்த பணிகளில் உங்களுக்கு உதவுகிறார்களா இந்த பணிகளில் உங்களுக்கு உதவுகிறார்களா\n“காலை 6.00-7.30 மாலை 4.30 – 6.00. இந்த இரண்டு நேரமும் கிளிகள் வரும். சூரிய வெளிச்சம் இருக்கும். அதேசமயம் வெயில் அதிகம் இருக்காது இந்த நேரங்களில். காலை 5.00 – 5.30 மணிக்கெல்லாம்எழுந்து விடுவேன். அப்போது கிளிகள் தலைக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்கும். இரையை வைத்து முடிக்க அரை மணி நேரம் ஆகும். இதற்கு ஒரு நாளைக்கு 15 கிலோவுக்கு மேல் அரிசி தேவைப்படுகிறது. பரபரப்பான இந்த இடம் அவற்றுக்கு பாதுகாப்பு உணர்வைத் தராது என்பதால், உடனடியாக கொத்திச் சாப்பிடும் உணவையே போடுகிறேன்.\nசென்னையில் பறவைகள் வாழ எங்கே இடம் இருக்குனு தெரியலை. ஆனா, இத்தனை கிளிகள் இங்கே இருக்குதேனு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. கிளிகளில் பெரும்பாலும் சிவப்பு மூக்குக் கிளிகள்தான் வரும். இப்போ புதுசா சில பஞ்சவர்ணக் கிளிகளும் வர ஆரம்பிச்சிருக்கு\nகுழந்தைகளுடன் நின்று ரசிக்கும் குடும்பத்தினர்\nசெலவே இல்லாமல் ஒரு அவுட்டிங்\nஉங்கள் குழந்தைகளை இங்கு ஒரு முறை அழைத்து வந்து காட்டுங்கள். (பைனாக்குலர் இருந்தால் நன்று) ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஷாப்பிங் மால்களுக்கு அழைத்து சென்று அவர்களை ஒரு நாகரீக அடிமை ஆக்குவதற்கு பதில், இது போன்ற செலவே இல்லாத இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். கிளிகள் பறப்பதும் வருவதும் பார்க்க அத்தனை அழகு. இயற்கையை ரசிக்கும் குழந்தை என்றும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கர்ப்பஸ்த்ரீகள் இயற்கையை குறிப்பாக பறவைகளை ரசித்தால் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். அவர்கள் மனநிலை மகிழ்ச்சியாக அமைந்து ஹார்மோன்கள் சரியாக சுரக்கும். அது சுகப் சுகப் பிரசவத்திற்கு உதவியாக இருக்கும்.\nஇவர் குறை தீரவேண்டும் – திருவருள் கண் திறக்கவேண்டும்\nசேகர் அவர்களிடம் பேசியதில் இருந்து, ஒரு சில விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது.\nமிக அரிய வகை காமிராக்களை வைத்திருக்கும் இவர் அதை வைத்து ஒரு கேமிரா மியூசியம் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இவருக்கு அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை. இருப்பதோ வாடகை வீடு. வாடகை வீட்டில் இருந்துகொண்டு தினமும் கிளிகளுக்காக 4 மணிநேரம் வேறு செலவு செய்து வருகிறார்.\nமத்திய அரசோ மாநில அரசோ தமக்கு உதவினால் நம் வருங்கால தலைமுறையினர் / விஸ்காம் மாணவர்கள் புகைப்படக் கலையின் பரிமாணத்தை தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு மியூசியத்தை வைக்க முடியும் என்று கூறுகிறார். தான் வைத்திருக்கும் காமிராக்களை சர்வதேச அளவில் ஏலம் விட்டாலே போதும் கோடிக்கணக்கில் அவை போகும். பிரிட்டிஷாரின் காலத்தில் பயன்பாட்டில் இருந்த காமிராக்கள் கூட இவரிடம் உண்டு. ஆனால் நம் மாணவர்களும் வருங்கால சந்ததியினரும் பயன்பெறவேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறுகிறார் சேகர்.\n“எத்தனை நாள் தான் சார் நான் இப்படி போராடுவது விற்கும் விலைவாசியில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமமாக உள்ள சூழ்நிலையில் என்னை நம்பி வரும் இந்த கிளிகளுக்கு வேறு உணவளிக்க வேண்டிய சூழல்”.\nநம் தளம் சார்பாக ஒரு எளிய பரிசு\nஇந்த கிளிகளை இவர் பார்த்துக்கொள்ளும் அந்த இரண்டு மணிநேரம் தனது தொழிலை செய்தால் ஆயிரமோ இரண்டாயிரமோ சம்பாதிக்க முடியும். அதை துறந்துவிட்டு தான் இவர் கிளிகளை பார்த்துக்கொள்ளும் பணியை செய்துவருகிறார்.\nநாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, விஷயத்தை கேள்விப்பட்டு கிளிகளை பார்க்க வருபவர்களும் சரி… அந்த பக்கம் நடந்து போகும் சிலரும் சரி, கிளிகளுக்கு இவர் தான் உணவு வைக்கிறார் என்று தெரிந்ததும் இவரிடம் வந்து, “ஸார்… நீங்க செய்றது பெரிய விஷயம். எங்கள் வாழ்த்துக்கள். ரொம்ப நன்றி…” என்று கைகுலுக்கிவிட்டு செல்கின்றனர். இவர் அருகே நாம் நின்றுகொண்டிருந்ததால் நமக்கும் சிலர் கைகொடுத்தனர். தொண்டு செய்றவங்க கூட நின்னாக் கூட அது பெருமைக்குரிய விஷயம் போல\nயார் யாருக்கோ விருதும் பட்டமும் பதக்கமும் பொருளுதவியும் தந்து கௌரவிக்கும் அரசுகள் (இப்போதெல்லாம் விருதுகள் கூட அரசியலாக்கப்பட்டுவிட்டது. ஜாதி ஓட்டுக்களை குறிவைத்தே அவை வழங்கப்படுகின்றன.) இவரையும் இவரது கலைப் பொக்கிஷங்களையும், இவரை தேடி வரும் கிளிகளுக்கு உணவிடுவது பற்றியும் சிறிதும் கவலைப்படவில்லை. அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமுமில்லை.\nநம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரிடம் நம் தளம் சார்பாக ரூ.1,500/- கான காசோலையை அவர் பெயர் எழுதிக் கொடுத்தோம்.\n” என்று வாங்க மறுத்துவிட்டார்.\n“கிளிகளை பார்த்துக்கொள்ள நீங்கள் எவ்வளவோ தியாகம் செய்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேல் நேரத்தை தியாகம் செய்கிறீர்கள். அதுவும் தினமும் காலை இரண்டு மணிநேரம், மாலை இரண்டு மணிநேரம்… ஏதோ எங்களால் முடிந்த அளவு உங்கள் ஒரு நாள் வருவாய் இழப்பை ஈடு செய்ய விரும்பியே எங்கள் தளம் சார்பாக இந்த சிறிய தொகையை அளித்திருக்கிறோம். இதை வைத்து நீங்கள் என்ன வேண்டுமோ உங்கள் விருப்பம் போல செய்துகொள்ளுங்கள். இனி மாதந்தோறும் கிளிகளுக்கு உணவளிக்க ஆகும் செலவில் கணிசமான அளவு எங்கள் தளமும் ஏற்றுக்கொள்ளும். தவிர உங்களது இந்த சேவையை பற்றி கூறி கிளிகளை அவை வரும் நேரம் பார்த்துகொள்ள, உங்களுக்கு துணையாக என்.சி.சி. / என்.எஸ்.எஸ். மாணவர்களை சுழற்சி முறையில் அனுப்பி உதவவேண்டும், என்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு கடிதம் எழுதப்போகிறோம் அப்படி பள்ளி மாணவர்கள் இருவர் தினமும் மாலை வந்து கிளிகளை பார்த்துக்கொண்டால், அந்த நேரம் நீங்கள் நிம்மதியாக உங்கள் தொழிலில் கவனம் செலுத்தலாம் இல்லையா அப்படி பள்ளி மாணவர்கள் இருவர் தினமும் மாலை வந்து கிளிகளை பார்த்துக்கொண்டால், அந்த நேரம் நீங்கள் நிம்மதியாக உங்கள் தொழிலில் கவனம் செலுத்தலாம் இல்லையா\nநாம் கூறி முடித்ததும் அவருக்கு நெகிழ்ச்சியில் ஒரு கணம் கண்ணீரே வந்துவிட்டது.\n“சார்… எத்தனையோ பேர் வந்து பேட்டி எடுத்துட்டு போயிருக்காங்க. யாரும் இப்படி சொன்னதில்லே. இது மாதிரி செஞ்சதும் இல்லே. (செக்கை காண்பித்து). எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.”\nபணத்திற்காக இல்லையென்றாலும் நம் கஷ்டத்தை இவர் உணர்ந்து ஏதேனும் செய்ய விரும்புகிறாரே என்று தான் அவர் நெகிழ்ந்துபோனார் என்பது புரிந்தது.\nசமீபத்தில் கமிஷனர் அலுவலகத்தில் மிகப்பெரிய ரேங்கில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் கிளிகளுக்கு 25 கிலோ அரிசி வாங்கி வந்ததாகவும் கூறினார்.\n“சில பத்திரிக்கைகள் / தொலைக்காட்சிகளிலிருந்து இருந்து இதை படம்பிடிக்க என்னை பேட்டியெடுக்க வருகிறார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சினிமா நட்சத்திரங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்கள் இங்கு வரும்போது குறைந்த பட்சம் இந்த கிளிகளை மனதில் கொண்டாவது அவற்றுக்கு ஒரு 20 கிலோ அரிசி வாங்கி வரலாம். ஆனால் எவருக்கும் தோன்றவில்லை. ஆனால் நீங்கள் ஒரு சாதாரண வெப்சைட் ஆசிரியர்… அதில் உங்களுக்கு விளம்பர வருவாயெல்லாம் கூட கிடையாதுன்னு தெரியுது… உங்களுக்கு தோன்றிய இந்த விஷயம் அவர்களுக்கு தோன்றாமல் போனது ஆச்சரியம் தான்\n“சார்… பணம் தான் என்னுடைய நோக்கம் என்றால் நம்ம ரூட்டே வேறு. ஒரு பக்கம் வேலையும் பார்த்துக்கொண்டு மறுபக்கம் ஒய்வு ஒழிச்சலின்றி அலைந்து திரிந்து இரவு பகலாக எழுதிக்கொண்டு இப்படி ஒரு ஆன்மீக / சுயமுன்னேற்ற தளம் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன். நம் நோக்கமே தேசபக்தியையும் தெய்வபக்தியையும் வளர்த்து, தொண்டு செய்ய அனைவரையும் தூண்டுவது தான். மற்றவர்கள் கவனிக்கத் தவறும் / புறக்கணிக்கும் மகத்தான விஷயங்களை வெளியே கொண்டு வந்து அவற்றை உலகறியச் செய்ய இறைவன் எம்மை பணித்திருக்கிறான் இறைவனின் விருப்படியான எம் பயணம் இருப்பதால் எமக்கு தேவையான அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான். இதில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், மான, அவமானங்கள் பற்றி எமக்கு கவலை இல்லை. அது பற்றி சிந்திக்க நேரமும் இல்லை இறைவனின் விருப்படியான எம் பயணம் இருப்பதால் எமக்கு தேவையான அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான். இதில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், மான, அவமானங்கள் பற்றி எமக்கு கவலை இல்லை. அது பற்றி சிந்திக்க நேரமும் இல்லை\n“ரொம்ப நல்ல விஷயம் ஸார். நீங்க செய்வதும் பெரிய தொண்டு தான்\nநாம் தொடர்ந்தோம்… “நன்றி சார்… தொண்டிற்கு நேரம் செலவு செய்வது எத்தனை கடினம்…. அதுவும் எவரும் நம் தொண்டை அங்கீகரிக்காத நிலையில் அதை செய்வது எவ்வளவு கடினம்… பொருளாதார நெருக்கடிக்கு இடையே அதை தொடர்வது இன்னும் எத்தனை கடினம் என்பதெல்லாம் எனக்கு தெரியும் ஏனெனில், இந்த கிளிகளுக்கு நீங்கள் உணவிடுவதை எப்படி ஒரு தவம் போல எந்த இன்னல்களை பொருட்படுத்தாமல் செய்கிறீர்களோ அதே போலத் தான் ரைட்மந்த்ராவையும் நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் ஏனெனில், இந்த கிளிகளுக்கு நீங்கள் உணவிடுவதை எப்படி ஒரு தவம் போல எந்த இன்னல்களை பொருட்படுத்தாமல் செய்கிறீர்களோ அதே போலத் தான் ரைட்மந்த்ராவையும் நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்\n“தவிர இங்கு வருபவைகளை கிளிகளாக நாங்கள் பார்க்கவில்லை. அவை எங்கள் அன்னை மீனாக்ஷியின் செல்லப் பிள்ளைகள், காமாக்ஷியின் குழந்தைகள். எங்கள் கோதை நாயகி ஆண்டாளுக்காக இறைவனிடம் தூது சென்ற தூதுவர்கள். உங்கள் தொண்டு சிறக்கவும், உங்களுக்கு உதவிகளை செய்யவுமே இறைவன் எம்மை உங்களிடம் அனுப்பியிருப்பதாக நாம் கருதுகிறோம். கவலை வேண்டாம்” என்று கூறி விடைபெற்றோம்.\nசில ஏமாற்றங்களை வருத்தங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, நாம் பரிசளித்த விவேகானந்தர் படத்தை காட்டி தான் அவருக்கு நம்பிக்கை ஊட்டினோம்\nகேமிரா சர்வீஸ் & சேல்ஸ்\nஇவரிடம் உங்கள் கேமிராவை சர்வீஸுக்கு கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். செகண்ட் ஹாண்டில் கேமிராக்களை வாங்குவதாக இருந்தாலும் வாங்கிக்கொள்ளலாம். இவரது காமிரா சர்வீஸ் தொடர்பான விபரங்களை இவரது முகவரியுடன் கூடிய விளம்பரம் ஒன்றை தயார் செய்து நமது தளத்தில் வெளியிட்டு உதவுவதாக கூறியிருக்கிறோம்.\nஇவரைப் போன்றவர்களின் தொண்டு தொடரவேண்டும். அதற்கு இவரது காமிரா சர்வீஸ் செய்யும் தொழில் ரீதியாகவும் சரி.. கிளிகளை இவர் போஷிப்பதிலும் சரி… நம்மால் இயன்ற உதவிகளை இவருக்கு செய்யவேண்டும்\nஇவரைப் பற்றிய தகவலை நமக்கு அனுப்பி பேட்டி எடுக்க தூண்டுகோலாக இருந்த வாசகி வள்ளி அவர்களுக்கு நன்றி.\nஇவரை பேட்டி கண்டதையும் இவரது நட்பு கிடைத்ததையும் பெருமையாக கருதுகிறோம்.\nசென்னையில் ஒரு ரியல் ஹீரோ இவர் என்றால் மிகையாகாது. இவரை பேட்டி காணச் சென்றபோது தான் இவர் வீட்டுக்கு சற்று எதிரே உள்ள நேதாஜியின் வீட்டை பார்த்தோம். அதற்கு பிறகு நடந்தவை தான் உங்களுக்கு தெரியுமே (சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ் (சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்\n* இது போன்ற ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்களில் நம்முடன் பங்கேற்க விரும்புகிறவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும்.\nஇவர் முகவரி : கேமிரா சேகர், புதிய எண் : 242, 2வது தளம், பாரதி சாலை, (எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ எதிரே), ராயப்பேட்டை, சென்னை – 600014.\n1000 கிளிகளுக்கு உணவுcamera sekarChennai Parrotsparrot houseParrots in chennai houseகிளிகளை வளர்ப்பவர்கிளிகள்கிளிப்பிள்ளைகிளியே கிளியேசென்னையில் கிளிகளுக்கு உணவுசென்னையில் படையெடுக்கும் கிளிகள்ராயபேட்டை கிளிகள்\nஅன்புக்குரியவர்கள் உங்களை காயப்படுத்தினால் என்ன செய்வீர்கள்\nஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்\nகொதித்தெழுந்த இந்திய வீரர்கள் – மறக்கக் கூடாத வேலூர் சிப்பாய் புரட்சி\nவசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்\n27 thoughts on “தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம் DIRECT PICTORIAL REPORT\nஉங்கள் மனம் உயர்ந்து கொண்டே இருக்கின்றது, கூடவே எங்களையும்….\nமிக்க நன்றி வசந்தகுமார் அவர்களே\nகண்ணீரை தவிர வேறு எதுவும் இப்போது என்னிடம் இல்லை. எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதியும், மா மகரிஷி சுகரும் இவருக்கும் உங்களுக்கும் துணை புரிய வேண்டும்.\nஇந்தப் பேட்டியை / கிளிகளைப் பார்க்கும்போது நாமும் அய்யா சேகர் வசிக்கும் தெருவில் வசித்திருக்ககூடாத என்று ஏக்கம் வருகிறது. கிளிகளை கூட்டமாகப் பார்க்கும் போது மனம் குதூகலிக்கிறது..\nநானும் எனது வீட்டில் சென்ற கோடை காலம் முதல் தினமும் வீட்டு சுவற்றில் உணவும், தானியங்களும், தண்ணீரும் வைத்து வருகிறேன். வேகமாக அழிந்துவரும் குருவிகள் காலையில் எங்கள் வீட்டில் வந்து கீச்சிடுவதைக் கேட்பதே அலாதி சுகம். தற்போது அடிக்கடி இரண்டு கிளிகள் வந்து செல்கின்றன. ஆனால் உணவைத் தொடுவதில்லை. இடப்பற்றாக்குறை போலும். நாளை முதல் உணவை வீட்டின் மொட்டை மாடியில் வைக்க எண்ணி இருக்கிறேன்..கிளிகள் வந்து தானியங்களை உண்டால் தினமும் அவைகளுக்கும் சேர்த்து உணவினை வைக்க எண்ணியுள்ளேன்.இறைவன் திருஅருளால் நடக்கும் என நம்புகிறேன்…\n“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”\nநன்றி. தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.\nகண்களில் கண்ணீர் வர வைக்கிறீங்க சார்\nஇதுவரை ஆலயங்களுக்கும், பல வகையில் சிரமப்படும் மனிதர்களுக்கும், பசுக்களுக்கும் சேவை செய்ய உதவிய நம் தளத்தை பறவைகளுக்கும் உதவுமாறு திரு.சேகர் மூலம் இறைவன் தங்களை அழைத்து இருக்கிறார்கள். தளத்தின் வாசகி வள்ளியம்மைக்கும் நாம் நன்றி சொல்வோம். இதையும் மகா பெரியவா அவர்களின் அருள் என்றே சொல்லலாம். ஏன் என்றால் அவர் அருளால் சாட்சாத் அந்த காமாட்சியின் அம்சமான கிளிகளுக்கும் மற்றும் அவள் பரிவாரமான அவள் சன்னதியில் கிளிகளாக வந்த தேவர்களுக்கும் நாம் உணவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. சேகர் நகரத்தில் வாடகை வீட்டில் கிளிகளுக்கு உணவிடுவது போல் கிராமத்தில் கூட வாய்ப்பு உள்ளதா எனத் தெரியவில்லை . தொடரட்டும் அவரது சேவையும் நம் தளத்தின் சேவையும் இறைவன் பெரும் கருணையுடன்\nகிளிகள் என்று சொன்னால் நமக்குள் ஒரு பரவசம். கிளிகள் பச்சை நிறமும், சிகப்பு நிறமும் பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி.சேகர் நகரத்தில் வாடகை வீட்டில் கிளிகளுக்கு உணவிடுவது ஒரு சாகசம் தான். தொடரட்டும் அவரது சேவையும் நம் தளத்தின் சேவையும் .\nஉங்கள் பதிவை படித்து கண்ணீர் வந்து விட்டது . வள்ளியம்மைக்கு என் நன்றிகள்.\nதிரு சேகரின் செயல் மிகவும் அற்புதமானது, திரு சேகர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nசார், உங்கள் தேடுதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்.\nஉங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்.\nஅன்று நான் சென்னை யில் இல்லையே என்று சிறிய வருத்தம்\nஅந்த கிளிகளுகாக இவரை படைத்தானோ ஆண்டவன்\n///மற்றவர்கள் கவனிக்கத் தவறும் / புறக்கணிக்கும் மகத்தான விஷயங்களை வெளியே கொண்டு வந்து அவற்றை உலகறியச் செய்ய இறைவன் எம்மை பணித்திருக்கிறான்\nஎவளவு தெளிவு இருப்பின் நீங்கள் இப்படி கூறுவீர்கள்…\nஅண்டவன் செயல் ..கிளிகள் மூலமாக உங்களுக்கு நேதாஜி வீட்டை காட்டினாரோ\nஆச்சரியம் ஆச்சரியம் …சொல்வதற்கு வார்த்தை வரவில்லை\nஇந்த கிளிகளை பார்க்கும்போது மனது அவ்வளவு சந்தோசப்படுகிறது..\nபுகைப்படத்தை பார்க்கும்போதே இப்படி என்றால் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் …ஆஹா.. சூப்பர் ..\nநம் முன்னோர்களும், நீங்களும் செய்த/செய்யும் கைய்ங்கரியத்திற்க்கு முன்னால் எனக்கு ‘நன்றி’ என்பதெல்லாம் மிக பெரிய வார்த்தை.\n//”எமக்கு தேவையான அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான். இதில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், மான, அவமானங்கள் பற்றி எமக்கு கவலை இல்லை. அது பற்றி சிந்திக்க நேரமும் இல்லை\nசரியாக சொன்னீர்கள் சுந்தர் சார். மிகவும் நல்ல காரியம் பண்ணி இருக்கீர்கள். வாழ்க வளமுடன்.\nஎன்னுடைய வாழ்நாளின் மிக பெரிய திருப்புமுனை, நமது தளத்தினை பற்றி அறிந்து கொண்டது.கடந்த ஆறு மாதங்களாக நமது தளத்தினை தினமும் வாசிக்கிறேன்.\nஇதனால் எனது மனம் மிகவும் பக்குவபட்டுள்ளது.மிக்க நன்றி\nஇக்கட்டுரையின் முத்தாய்ப்பாக தாங்கள் கூறிய கருத்துத்தான் நம்மை வழி நடத்தி செல்லுகிறது\n“இறைவனின் விருப்படியான எம் பயணம் இருப்பதால் எமக்கு தேவையான அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான். இதில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள், மான, அவமானங்கள் பற்றி எமக்கு கவலை இல்லை. அது பற்றி சிந்திக்க நேரமும் இல்லை\nசொல்வதற்கு வார்த்தையே இல்லை … விரைவில் என்னால் முடுந்த உதவியை திரு . சேகர் அவர்களை சந்தித்து கொடுப்பேன் \nஉங்கள் மகத்தான பதிவுக்கு என் வாழ்த்துக்கள் சுந்தர் \nபட்சிளம் கிளிகள் … பசியாறும் காட்சிகள்……அருமை அருமை நன்றி ஜி.\nகடவுளின் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.\nநான் இந்த பதிவை மிக தாமதமாகத்தான் பார்த்தேன். மிகவும் ஆச்சரியமாகவும் அதே சமயம் கண்களில் நீருடனும் படித்தேன். இந்த சேவையில் சேகருடன் உதவிட நினைக்கிறேன். பொருள் மற்றும் நேரம் , என்னால் முடிந்தவரை உதவ, எனக்கு நீங்கள் உதவ வேண்டும். தொடர்புக்கு: ஈமெயில் : parthasow@yahoo.co.in\nஅன்பன்: r .பார்த்தசாரதி, வேளச்சேரி.\nஉங்கள் மொபைல் எண்ணை எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.\nAwesome சேகர் சார் நீங்க அந்த கிளிகளுக்கு கடவுள் போல … நீங்க சொன்ன செய்தி சந்தோசம் தருகிறது சேகர் சார் … நீங்கள் நூறு ஆண்டுகள் மேல் vaazha vendum ….\nஇப்படி ஒரு நல்ல பகிர்வை இங்கு நீங்கள் எழுதியமைக்கு நன்றி. எங்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வை ஏர்ப்படுத்தியுள்ளது. நல்ல பதிவு.\n//மற்றவர்கள் கவனிக்கத் தவறும் / புறக்கணிக்கும் மகத்தான விஷயங்களை வெளியே கொண்டு வந்து அவற்றை உலகறியச் செய்ய இறைவன் எம்மை பணித்திருக்கிறான்/ என்ன வார்த்தைகள் சார்/ கடவுள் உங்களை ஆயுள் முழுவதும் நல்ல வைத்திருப்பார்.\nஇந்த கிளிகளை பார்க்கும்போது மனது அவ்வளவு சந்தோசப்படுகிறது..\nபுகைப்படத்தை பார்க்கும்போதே இப்படி என்றால் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் …ஆஹா.. சூப்பர் ..அந்த இடத்தில இல்லாமல் போய்விட்டோமே// என்கிற வருத்தம் தாங்கமுடியலை சார்.\nநானும் தினமும் 50/60 புறகளுக்கு காலையில் உணவு இடுகிறேன்// இப்போ அதுகூட 10/15 சிட்டுக்குருவிகள் கலை 6 டு 7.00 மணிக்கும் மாலையில் 4.30 டு 5.45 வரையிலும் வருகிறது . காலையில் நானும் மாலையில் என் மனைவியும் உணவு இடுகிறோம். இப்போ இந்த கூட்டத்தை இன்னும் அதிக படுத்த முயற்சி செய்கிறேன் . கிளிகள் இருக்குது ஆனால் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை . மீனாக்ஷி அருளால் வரும்.\nமனமார்ந்த நன்றி நம்ம வாசகி வள்ளி அவர்களுக்கும் திரு சேகர் அவர்களுக்கும்.\nசென்னை வரும் பொது கட்டாயம் அவர்கள் வீட்டுக்கு சென்று அந்த அதிசயத்தை பார்ப்பேன் . உதவி செய்து விட்டு வருவேன் சார். இது அத்தனைக்கும் தங்கள் மனது தான் காரணம். தங்களின் தாய் தந்தையர்க்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/117869-nikki-galrani-has-a-special-quality-after-kushboo-says-sakthi-chidambaram.html", "date_download": "2018-08-18T00:47:43Z", "digest": "sha1:DC6D5XI76QJWUHMHYD5JSZ25KJJ2GZMM", "length": 27259, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"குஷ்புவுக்குப் பிறகு நிக்கி கல்ராணிக்கு ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி இருக்கு!\" - 'சார்லி சாப்ளின்' சக்தி சிதம்பரம் | nikki galrani has a special quality after kushboo says Sakthi Chidambaram", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n\"குஷ்புவுக்குப் பிறகு நிக்கி கல்ராணிக்கு ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி இருக்கு\" - 'சார்லி சாப்ளின்' சக்தி சிதம்பரம்\n2002-ம் ஆண்டு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவான 'சார்லி சாப்ளின்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு பிறகு, 'மகாநடிகன்', 'கோவை பிரதர்ஸ்' போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்த சக்தி சிதம்பரம், மீண்டும் 'சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார். இயக்குநர் சக்தி சிதம்பரத்திடன் பேசினேன்.\n'சார்லி சாப்ளின்' படத்துக்குப் பிரபு - பிரபுதேவா ஜோடியை நடிக்க வைக்கணும்னு எப்படித் தோணுச்சு\n\"நான் வெறித்தனமான சார்லி சாப்ளின் ரசிகன். என் கம்பெனியோட லோகோவுலகூட சார்லி சாப்ளின் இருப்பார். உடல் பருமனா ஒரு அண்ணன், ரொம்ப ஒல்லியா ஒரு தம்பி இவங்களுக்குள்ள நடக்குற கலாட்டாவை வெச்சுப் படம் பண்ணலாம்னு யோசிக்கும்போதுதான் இந்தப் படத்துக்கான ஒன்லைன் கிடைச்சது. நானும் பிரபுதேவாவும் நல்ல நண்பர்கள். அவர் போன் பண்ணா, 'ஹலோ நான் நகம் பேசுறேன். அங்க யாரு, தசையா'னு கேட்பார். நான் போன் பண்ணா, 'ஹலோ நான் தசை பேசுறேன். அங்க யாரு, நகமா'னு கேட்பார். நான் போன் பண்ணா, 'ஹலோ நான் தசை பேசுறேன். அங்க யாரு, நகமா'னு கேட்பேன். அந்த அளவுக்குப் பழக்கம். அதனால, அவரும் பிரபு சாரும் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அப்படித்தான் இந்தக் கூட்டணி அமைஞ்சது. அந்தப் படம் எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்துச்சு. அதை தெலுங்குலேயும், இந்தியிலேயும் என்னையே டைரக்ட் பண்ணக் கூப்பிட்டாங்க. என்னாலதான் போகமுடியாம போச்சு. இரண்டாம் பாகத்திலேயும் இந்தக் காம்போவை நடிக்க வெச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு.\"\n\"இரண்டாவது பாகத்தை இவ்ளோ வருடம் கழிச்சு இயக்கக் காரணம் என்ன, இந்தப் படத்துல பிரபு - பிரபுதேவாவிற்கு என்ன மாதிரியான ரோல்\n\" 'சார்லி சாப்ளின்' படத்தோட இரண்டாவது பாகத்தை எடுக்கணும்னு ரொம்ப நாளாவே பிளான் இருந்துச்சு. ஆனா, அதுக்கான ஒன்லைனைப் பிடிக்க கொஞ்சம் தாமதமாகிடுச்சு. இப்பவும் ஒரு சின்ன ஒன்லைனைப் பிடிச்சு அதை மெருகேற்றி இருக்கோம். இந்தப் படத்துல பிரபுவும் பிரபுதேவாவும் மாமனார் - மருமகன் கேரக்டர்கள்ல நடிக்கிறாங்க. இந்தப் படத்துல பிரபுதேவாவோட நடிப்பைப் பத்தி சொல்லியே ஆகணும். அவருக்குள்ள ஒரு ரியல் சார்லி சாப்ளின் ஒளிஞ்சிருக்கார். நிறைய இடங்கள்ல டயலாக்கே இல்லாமல் பாடி லாங்குவேஜ்லேயே சிரிக்க வெச்சிருக்கார். அவரை எல்லாரும் ஒரு டான்ஸ் மாஸ்டராதான் பார்க்குறாங்க. ஆனா, அவரோட நடிப்பை வெளிக்கொண்டுவர சரியான தீனி கிடைக்கலைனுதான் சொல்லணும். இந்தப் படத்துல பிரபு சார் தன் மருமகனை 'மரோ'னுதான் கூப்பிடுவார்.\"\n\"முதல் பாகத்துல அபிராமி, காயத்ரி ரகுராம்னு ரெண்டு பேருக்கு ரெண்டு ஹீரோயின் வெச்சிருந்தீங்க. இந்தப் பாகத்துலயும் நிக்கி கல்ராணி, அடா ஷர்மானு ரெண்டு ஹீரோயின் இருக்காங்களே\n\"ஆமா. அதுல ரெண்டு பேருக்கும் ஜோடி இருக்கும். இதுல பிரபுதேவாவுக்கு நிக்கி கல்ராணி ஜோடி. பிரபு சார் நிக்கி கல்ராணிக்கு அப்பாவா நடிக்கிறார். அடா ஷர்மா பிரபுதேவா லைஃப்ல எப்படி வர்றார்ங்கிறது சஸ்பென்ஸ். செட்ல எல்லார்கிட்டேயும் அவங்க குடும்பத்துல இருக்கிற நபர்கள்கிட்ட பேசுற மாதிரிதான் பேசுவார் நிக்கி. அது நிக்கி கல்ராணியோட ப்ளஸ்னு சொல்லலாம். நான் பார்த்தவரைக்கும் குஷ்புவுக்குப் பிறகு ஒரு சில ஸ்பெஷல் நிக்கி கல்ராணிகிட்ட இருக்கு\"\n\"கேரியர்ல இவ்ளோ வருடம் இடைவெளிக்கு என்ன காரணம்\n\" நான் ஒரு சில படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணேன். அதுல சில, பல காரணங்களால் லேட் ஆயிடுச்சு. என்மேல எந்தத் தப்பும் இல்லாமலே கொஞ்சம் கெட்ட பேர் வந்திடுச்சு. அதிலிருந்து மீண்டு வந்து முழு உத்வேகத்தோட படம் பண்றதுக்குக் கொஞ்சம் தாமதமாகிடுச்சு. இந்தப் படத்துக்காக அம்மா கிரியேஷன்ஸ் சிவா சார் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருந்தார். நான் இதை இடைவெளியா நினைக்கலை. ஊருக்குப் போற வழியில ஒரு இடத்துல இறங்கி தண்ணி பாட்டில் வாங்கிட்டு மறுபடியும் பஸ் ஏர்ற மாதிரிதான் நான் நினைக்கிறேன்.\"\n\" 'ஜெயிக்கிற குதிரை' படம் என்ன ஸ்டேஜ்ல இருக்கு\n\"ஜீவனை வெச்சுப் பண்ண படம் 'ஜெயிக்கிற குதிரை'. இந்தப் படத்தை நானே தயாரிச்சு இயக்கிருக்கேன். இப்போ இருக்கிற அரசியல் சூழலை வெச்சு ஒரு காமெடியான படமா எடுத்திருக்கோம். இது எனக்கு இன்னொரு 'மகாநடிகன்' மாதிரி அமையும்னு நம்புறேன். இந்தப் படத்துக்கு சென்சார் கிடைக்கவே மூணு மாசம் ஆச்சுனா பாத்துக்கோங்க. மார்ச் மாசம் வெளியிடலாம்னு இருக்கோம். ஜீவனும் இந்தப் படம் மூலம் கவனிக்கப்படுவார்\"\n\"'சார்லி சாப்ளின் 2' படத்தோட ஷூட்டிங் இன்னும் சில நாள்கள் பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு மே மாசம் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடிவு பண்ணிருக்கோம். அதுக்கு முன்னாடி 'ஜெயிக்கிற குதிரை' வந்திடும். இந்த 2018 எனக்கு நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம், 'சார்லி சாப்ளின்-3' படத்துக்கான ஒன்லைன் ரெடியா இருக்கு. இதே பிரபு - பிரபுதேவா கூட்டணியுடன் இன்னொரு ஸ்டாரையும் வெச்சுப் பண்ணலாம்னு இருக்கேன் \"\n''கடைசிவரை அவருக்கான கிஃப்ட்டை கொடுக்கமுடியலை\" ரகுவரனுக்காக நெகிழும் ரோகிணி\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n\"குஷ்புவுக்குப் பிறகு நிக்கி கல்ராணிக்கு ஒரு ஸ்பெஷல் குவாலிட்டி இருக்கு\" - 'சார்லி சாப்ளின்' சக்தி சிதம்பரம்\n\"ஜோதிகாவின் குரல், சூர்யாவின் ஆர்வம், நடிகையின் தேடல், நயன்தாராவுக்கான கதை...\" - இயக்குநர் ராதாமோகன்\n\"இளையராஜா குழந்தையாக்கி தூங்க வைக்க... தூக்கம் தொலைக்க வைத்த யுவன்\n\"பணத்தைக் கொடுங்க; இல்லைனா நடிச்சுக்கொடுங்க\" 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்கிறதா\" 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/collections/grey-dresses", "date_download": "2018-08-18T00:27:53Z", "digest": "sha1:FRVAFXZJE5RG6UEAPT6IL2PK3ZSINOBS", "length": 28560, "nlines": 545, "source_domain": "ta.buddhatrends.com", "title": "சாம்பல் நிற ஆடைகள் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nமுகப்பு / சாம்பல் நிற ஆடைகள்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி: AZ அகரவரிசையில்: ZA விலை: குறைந்த முதல் உயர் விலை: அதிக உயரம் தேதி: பழையது பழையது தேதி: புதியது பழைய\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nவடிவியல் விண்டேஜ் அச்சு ஹிப்பி பிடித்த\nவடிவியல் விண்டேஜ் அச்சு ஹிப்பி பிடித்த $ 32.00 $ 64.00\nதளர்வான வடிவியல் முழங்கால் நீளம் பிடித்த\nதளர்வான வடிவியல் முழங்கால் நீளம் பிடித்த $ 39.50 $ 79.00\nசாதாரண ஜென் அதிகப்படியான பருத்தி பிடித்த\nசாதாரண ஜென் அதிகப்படியான பருத்தி பிடித்த $ 44.50 $ 89.00\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த\nரேண்டம் பட்ச் ஹேண்ட்மேட் விண்டேஜ் ஹிப்பி பிடித்த $ 58.80 $ 98.00\nஅடுக்கு ஒழுங்கற்ற லேஸ் போஹேமியன் உடைகள்\nஅடுக்கு ஒழுங்கற்ற லேஸ் போஹேமியன் உடைகள் $ 44.50 $ 89.00\nபட்டு மற்றும் பருத்தி ப்ளோயி ஹிப்பி பிடித்த\nபட்டு மற்றும் பருத்தி ப்ளோயி ஹிப்பி பிடித்த விற்பனை அவுட்\nபிளஸ் சைட் விண்டேஜ் பிளாக் ஒட்டுமொத்த உடை\nபிளஸ் சைட் விண்டேஜ் பிளாக் ஒட்டுமொத்த உடை $ 42.00 $ 70.00\nபோஹோ வி நெக் ஸ்லீவெல்லஸ் பீச் பிடித்தம்\nபோஹோ வி நெக் ஸ்லீவெல்லஸ் பீச் பிடித்தம் $ 27.00 $ 54.00\nபிளஸ் சைஸ் லூஸ் சாம்பல் ஸ்ட்ரைப்பட் மொத்தம் பிடித்தது\nபிளஸ் சைஸ் லூஸ் சாம்பல் ஸ்ட்ரைப்பட் மொத்தம் பிடித்தது $ 51.80 $ 74.00\nL-5L சுற்று கழுத்து நீண்ட ஸ்லீவ் பியாகி காஃப்டன்\nL-5L சுற்று கழுத்து நீண்ட ஸ்லீவ் பியாகி காஃப்டன் $ 36.00 $ 60.00\nஜென் அழகியல் வி நெக் ஸ்லீவெலேசஸ் பிடித்த\nஜென் அழகியல் வி நெக் ஸ்லீவெலேசஸ் பிடித்த $ 40.20 $ 67.00\nகார்டிகன் பொருந்திய மலர் அலங்காரம்\nகார்டிகன் பொருந்திய மலர் அலங்காரம் $ 46.20 $ 77.00\nரெட்ரோ கார்டூரோ ஒட்டுமொத்த உடை\nரெட்ரோ கார்டூரோ ஒட்டுமொத்த உடை $ 32.40 $ 54.00\nநீண்ட ஸ்லீவ் டர்டில்லெனெ ஸ்வெட்டர் பிடித்த\nநீண்ட ஸ்லீவ் டர்டில்லெனெ ஸ்வெட்டர் பிடித்த $ 43.20 $ 72.00\nஎம்ப்ராய்டரி லேஸ் மாக்ஸி ஆடைகள்\nஎம்ப்ராய்டரி லேஸ் மாக்ஸி ஆடைகள் $ 72.60 $ 121.00\nEleganza பிளாக் மற்றும் ரெட் பூக்கள் Chiffon பிடித்த\nEleganza பிளாக் மற்றும் ரெட் பூக்கள் Chiffon பிடித்த விற்பனை அவுட்\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம்\nகாட்டில் டாங்க் மாக்ஸி பிடித்தம் $ 46.20 $ 77.00\nலூஸ் ஒரு வரி சாம்பல் மாக்ஸி பிடித்த\nலூஸ் ஒரு வரி சாம்பல் மாக்ஸி பிடித்த $ 72.60 $ 121.00\nசாம்பல் மாக்ஸ் Turtleneck ஸ்வெட்டர் பிடித்த\nசாம்பல் மாக்ஸ் Turtleneck ஸ்வெட்டர் பிடித்த $ 77.70 $ 111.00\nகோவல் கழுத்து அலங்கரிக்கப்பட்ட ஸ்வெட்டர் பிடித்த\nகோவல் கழுத்து அலங்கரிக்கப்பட்ட ஸ்வெட்டர் பிடித்த $ 65.10 $ 93.00\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/recipes", "date_download": "2018-08-18T00:40:27Z", "digest": "sha1:M4XJF7CNC2PW23ABU3O3CJRRIPOGJTV2", "length": 14557, "nlines": 251, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் சமையல் குறிப்புகள் - ValaiTamil | List of Vegetarian and Non Vegetarian Recipes in Tamil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)\nஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)\nபட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)\nசிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்(Chicken egg pepper)\nகொத்தமல்லி & கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி\nதேங்காய் சட்னி செய்வது எப்படி\nபாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி\nஇட்லி மாவு செய்வது எப்படி\nபீட்ரூட் உருளைக்கிழங்கு பொரியல்-How to cook Beetroot potato poriyal\nஇனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...\nகேழ்வரகு கோதுமை ரவை இட்லி\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nஎண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்\nவரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji\nசிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி (Red Rice Idly)\n (வரகு பொங்கல் செய்வது எப்படி\n(சாமை பொங்கல் செய்வது எப்படி\n (கம்பு கஞ்சி செய்வது எப்படி)\nதமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள்(Tamil Traditional Foods Benefit) -நல்லசோறு ராஜமுருகன் - பகுதி 2\nதமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் (Tamil Traditional Foods Benefit)-நல்லசோறு ராஜமுருகன் - பகுதி 1\nசிறுதானியங்களை ஏன் பயன்படுத்த வேண்டும்\nஉணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nகோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம்\nஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-18T01:38:52Z", "digest": "sha1:PXVBTZHUEV2EIINGY7WW7H32NFD3ZXTM", "length": 6830, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்து கணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்து கணம் (Universal Set) என்பது ஒரு குறிப்பிட்ட விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கிய தொகுப்புகளின் கணம் ஆகும். அனைத்து கணம் U என்ற குறியீட்டால் குறிப்பிடப்படும்.\nதற்சமயம் நாம் எடுத்துக் கொண்ட விவாதத்தில் இயல் எண்களின் கணம், நிறைவெண்களின் கணம், முழு எண்களின் கணம், விகிதமுறு எண்களின் கணம், விகிதமுறா எண்களின் கணம், மெய் எண்களின் கணம் முதலியவற்றை கொண்டிருந்தால், இவற்றில் உள்ள அனைத்து கணங்களையும் உள்ளடங்கிய கலப்பெண்கள் அல்லது சிக்கலெண்களின் கணமானது, இவ்விடத்தில் அனைத்து கணம் ஆகும்.\nவென்படம் மூலமாக அனைத்து கணத்திற்கும் நிரப்பு கணத்துக்குமுள்ள தொடர்பு.\nகணிதத்தில், கணங்களுக்கிடையிலான உறவுகளைக் குறிக்கவும் மற்றும் கணச்செயல்களை பார்த்து புரிந்து கொள்ளவும் நாம் பயன்படுத்தும் வரைபட விளக்கங்கள் படங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1]\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2017/12/05/mystery-tamil-scenes-in-mahavamsa/", "date_download": "2018-08-18T00:36:04Z", "digest": "sha1:Y2OBSYOCXSP2XCKMTMEPX5JBGJPGVHW4", "length": 87277, "nlines": 234, "source_domain": "nakkeran.com", "title": "மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்! – பகுதி 1,2, 3 – Nakkeran", "raw_content": "\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nகட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1291; தேதி: 16 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது நாலாவது கட்டுரை.\nமகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் பெயர்கள் இதில் அதிகம் பயிலப்படுவதால் இது அக்காலத்தை ஒட்டியது என்பதும், இதை எழுதியவர் தமிழராகவோ அல்லது தமிழர்களை நன்கு அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்றும் கருத இடம் உண்டு. நான் இப்படிக் கூறுவதற்கு கீழ்கண்ட 27 (27 reasons) விஷயங்களே காரணங்கள்:\nசங்க இலக்கியத்தில் உள்ள பெயர்களும் சொற்களும் கதைகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பெயர் அளவு அல்லது கதை அளவு ஒற்றுமைதான். சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–\nசங்க காலத்தில் கபிலன் என்ற பிராமணப் புலவர் தான் அதிக செய்யுட்களைச் செய்தார். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பெருமக்களால் போற்றப்பட்டார். பாரி என்ற ஒரு சிற்றரசனுக்காக மூவேந்தரையும் பகைத்து நின்றார். மூவேந்தர்களும் பாரியை வஞ்சனையால் கொன்றனர். ஜாதி மதங்களை உதறிவிட்டு பாரியின் இரண்டு மகள்களையும் தன் சொந்த மகளாகக் கருதி ஊர் ஊராக அழைத்துச் சென்று கெஞ்சிக் கதறி திருமணம் செய்துவிட்டார். மூவந்தருக்கு அஞ்சிய பயங்கொள்ளிகள் அந்தப் பெண்களைத் திருமணம் செய்ய பயந்து நடுங்கினர்.\nதமிழ் மொழியைக் கிண்டல் செய்த யாழ் பிரம்மத்தன் என்ற வடக்கத்தியானுக்குத் தமிழ் கற்பித்து அவனையும் சங்கப் பாடலை பாடச் செய்து அதையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தார். பிறகு தீயில் பாய்ந்து உயிர் நீத்தார். வாழ்க்கையில் தாம் செய்யவேண்டியதை செய்தாயிற்று என்ற நிறைவு கண்டவுடன் இந்துக்கள் இப்படி உயிர்துறப்பது வழக்கம். (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை))\nகபிலருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரில் கபிலதேவ நாயனார் என்பவர் தோன்றி பாடினார். அவர்தம் பாடல்கள் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டன. இவ்வளவு புகழுடைய கபிலன் என்ற பெயர் மக வம்சத்திலும் வருகிறது. ஆயினும் இவர் சங்க கால கபிலர் அல்ல. பெயரளவு ஒற்றுமைதான்.\nகபில-பரணன் என்று இணைத்தே சொல்லும் அளவுக்குச் சங்க காலத்தில் கொடிகட்டப் பறந்த பரணரும் ஒரு பிராமணர். அவர் ஒரு பெரிய வரலாற்று அறிஞர். “வரலாறு எழுதிய முதல் தமிழன்” — (First Tamil Historian) என்ற எனது கட்டுரையில் அவரது சாதனைப் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். அவர் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தியை உவமையாகப் பயன்படுத்துவார். இவரைப்போல ஒவ்வொரு இந்தியக் கவிஞரும் செய்திருந்தால் இன்று நம் வரலாறு இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கும். வன்பரணர் என்ற ஒருவரைத் தவிர பிள்ளையார்பட்டி பாண்டியர்காலக் கல்வெட்டில் ஒரு பரணரைக் கண்டுள்ளேன்.\nஇந்தப் பெயரும் மஹாவம்சத்தில் வருவது சிறப்புடைத்து. அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். பெரும் வீரன். கி.மு.வில் இலங்கையை ஆண்ட ஏலாரா காலத்தவன் இவன். அதாவது சங்க காலத்தை ஒட்டியவன்.\nஇலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். சங்க காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் உதியஞ் சேரலாதன் அதே பெயருடைய வேறு ஒருவர் மகாவம்சத்தில் வருவது வியப்புக்குரியது. வேறு எங்கும் காணப்படாதது. 20-ஆவது அத்தியாயத்தில் உதியன் என்ற பெயரில் அரசாண்ட மன்னரின் பெயரும் வருகிறது\nகல்லாடம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். இதை எழுதியவர் கல்லாடர். இதே போல சைவத் திருமுறைகளில் எழுதிய கல்லாடரும் உண்டு. அந்தப் பெயரில் மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் இருப்பது வியப்புக்குரியது. சங்கத் தமிழ் நூல்களில் 20 பெயர் “நாகன்” என்ற பெயரில் பாடி தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.\nநாகன் (Naga, Nagan) என்ற பெயர் ஒரு மர்மமான பெயர். காஷ்மீர் முதல் கண்டிவரை காணப்படும் இவர்கள் யார் என்றே தெரியவில்லை. குப்தர்கால கல்வெட்டுகளில் பல நாகர்கள் பெயர்கள் வருகின்றன. பலர் படைத் தலைவர்கள். இலங்கையில் பல “நாகன்” பெயர் மன்னர்களின் பெயரில் வருகிறது. இதுபற்றிப் பல ஆராய்ய்சிக் கட்டுரைகள் வந்த போதிலும் நிச்சயமாக ஒன்றும் சொல்ல இயலவில்லை.\nமருதன் இளநாகன் என்ற புலவன் சங்ககாலத்தில் சக்கைப்போடு போட்ட புலவர்களில் ஒருவர். கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை Accidental Coincidence –“கோஇன்சிடென்ஸ்”– என்று ஒதுக்க முடியாது (காண்க:– அத்தியாயம் 35)\nபுறநானூற்றில் பாடல் 158 முதல் 165 வரை குமணன் கதை வருகிறது. குமணன் என்ற சிற்றரசனை அவன் தம்பி இளங்குமணன் விரட்டிவிட்டு நாட்டை ஆள்கிறான். அது மட்டுமல்ல. அண்ணன் தலையைக் கொண்டு வருவோருக்கு பெரும் பரிசு தருவேன் என்றும் அறிவிக்கிறான் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இதுகண்டு வருத்தம் அடைகிறார். இருவரிடையே சமரசம் செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார்.\nகாட்டில் வாழ்ந்த பெரிய குமணனைச் சந்தித்துப் பாடுகிறார். அவன் இந்தப் புலவர் காசுக்காகப் பாடும் புலவன் என்று எண்ணி, “அன்பரே, பொருள் அற்ற நிலையில் வாடுபவன் நான். இதோ இந்த வாளை எடுத்துக் கொள்ளும். இதனைக் கொண்டு என்னைக் கொல்லும். அப்படிக் கொன்றபின் என் தலையை என் தம்பி இளம் குமணனிடம் கொடுத்தால் உமக்குப் பெரும் பொருள் கிட்டும்” — என்கிறான். என்னே தமிழர்களின் பெருந்தன்மை தான் இறந்தாலும் புலவருக்குப் பணம் கிடைத்து வறுமை நீங்கினால் போதும் என்று எண்ணுகிறான்.\nஅந்தப் புலவர் ஒரு பெரிய வாழை மரத்தின் அடிப்பகுதியை வெட்டி அதில் செந்நிறச் சாயம் பூசி, ஈரமான வெள்ளைத் துணியில் சுற்றிக் கொண்டுவந்து இளங் குமணனிடம் சென்று பாடுகிறார். “பார், உன் அண்ணனின் பெருந்தன்மையை” கையில் வாளைக் கொடுத்து தலையைச் சீவச்செய்து அதைக்கொடுத்து உன்னிடம் பரிசு பெறச் சொன்னான் என்கிறார். வாளையும், வாழைத் தண்டையும் கண்டு அண்ணன் இறந்தானே என்று கண்ணீர் வடித்து தன் தவறை உணர்கிறான். “அது அண்ணன் தலை அல்ல, வெறும் வாழை மட்டையே, வருந்தற்க” என்றவுடன் மனம் மாறி அண்ணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைக்கிறான்.\nமகாவம்சம் அத்தியாயம் 36-ல் சங்க கால குமணன் கதை போலவே ஒரு கதை வருகிறது. கோதகாபயன் என்ற மந்திரி திடீர்ப் புரட்சியில் இறங்கி படை எடுக்கவே சங்கபோதி என்னும் அரசன் தப்பி ஓடுகிறான். அப்போது வழியில் தனக்கு உணவு கொடுத்த ஒரு வழிப்போக்கனிடம் என் தலையைச் சீவி கோதகாபயனிடம் கொடு; உனக்கு நிறைய பொருள் கிடைக்கும் என்கிறான். ஆனால் வழிப்போகன் மறுத்துவிடுகிறான். அவனுக்கு உதவுவதற்காக அரசன் அங்கேயே அமர்ந்து உயிர்விடுகிறான். உடனே அந்த வழிப்போக்கன் , சங்கபோதியின் தலையை கோதகாபய னிடம் கொடுக்கவே நிறைய பொருள் கிடைக்கிறது. இறந்துபோன மன்னனுக்கு உரிய ஈமச் சடங்குகளை கோதகாபயன் செய்தான்\nஅத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்துவந்த ஏலாரா இலங்கையை 44 ஆண்டுகளுக்குச் சீரும் சிறப்புடனும் ஆண்டான். அவன் சயன அறையில் ஆராய்ச்சிமணி தொங்க விட்டிருந்தான். குறை தீர வருவோர் அதை அடிக்கலாம்.. ஏலாராவின் மகன் ஒருநாள் ஒரு ரதத்தை ஓட்டிச் சென்ற போது அதில் ஒரு பசுங்கன்று அடிபட்டு இறந்தது. உடனே தாய்ப்பசு அரண்மனைக்கு வந்து நீதிகோரி ஆராய்ச்சி மணியை அடிக்கவே மன்னன் தனது மகனை தேர்ச் சக்கரத்தின் அடியில் கொல்கிறான்.\nஇந்தக் கதை அப்படியே மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்தில் உள்ளது. நாம் திருவாரூரில் இது நடந்ததாகக் கூற, மகாவம்சமோ தீசவாபியில் நடந்ததாகச் சொல்லும். ஆனால் இருவரும் சோழ வம்சத்தினர். இது வியப்பான ஒற்றுமை. மேலும் ஆராய வேண்டிய விஷயம். ஏலாராவைத் துட்டகாமினி கொன்ற பின்னரும் அவனுக்கு உரிய மரியாதை செய்கிறான். அவன் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த இலங்கை மன்னர் ஒவ்வொருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி மரியாதை செய்வது மரபாகிவிட்டது. நீதி நேர்மை தவறாது ஆண்ட மாபெரும் தமிழன் ஏலாரன் (அத்தியாயம் 25ல் காண்க).\n9.மலய மலை/ சந்தனக் கட்டை\nபல இலங்கை மன்னர்கள் மலய மலையில் வந்து தங்கி படை திரட்டிச் சென்றதை மகாவம்சத்தில் காணலாம். அதே போல பொதியம், மலயம் ஆகியவற்றின் சந்தனமும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. (உ.ம்: அத்தியாயம் 28 மற்றும் 36, 37)\nஅத்தியாயம் 5 & 11:– அசோகன் மற்றும் தேவனாம்ப்ரிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பறவைகள் அரிசி கொண்டுவந்தன என்பது கபிலர் காலத்தில் நடந்தது போல இருக்கிறது. மூவேந்தர்களும் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டுவந்தார் என்று சங்க இலக்கியம் கூறும்.\nகோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் (வடக்கிருத்தல்) இருந்தபோது பிசிராந்தையார் என்னும் கிழப் புலவருக்கு ஒரு இடம் ஒதுக்கச் சொன்னார். “யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்” – என்று அற்புதமான பாடல் (காண்க புறம்.191) பாடிய அந்தக் கிழவனாரோ மன்னரைப் பார்த்ததே இல்லை. ஆயினும் இருவரும் நண்பர்கள் என வினவுதிர் ஆயின்” – என்று அற்புதமான பாடல் (காண்க புறம்.191) பாடிய அந்தக் கிழவனாரோ மன்னரைப் பார்த்ததே இல்லை. ஆயினும் இருவரும் நண்பர்கள் மன்னன் சொன்னபடியே புலவரும் வந்தார் மன்னன் சொன்னபடியே புலவரும் வந்தார் அதேபோல இலங்கை மன்னன் தேவனாம்ப்ரியன் காலத்தில் ரத்தினங்களும் விலை உயர்ந்த உலோகங்களும் கிடைத்தன. அவற்றை இதுவரை பார்த்தே இராத அசோகனுக்கு அனுப்புகிறார்\nஅத்தியாயம் 21-ல் சேனன், குட்டகன் என்ற இரண்டு தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு வருகிறது. இவர்கள் குதிரை வியாபாரிகளின் பிள்ளைகள். இதைப் படிக்கையில் மாணிக்கவாசகரின் கதை நினைவுக்கு வரும். அவரது காலமும் சம்பந்தருக்கு முந்தியது என்று நான் கட்டுரையில் நிரூபித்திருக்கிறேன்.\nசிலப்பதிகாரத்தில் சமணர்களின் தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். மகாவம்சத்தில் புத்தமத தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். போதிமரத்தைத் தேரில் வைத்து ஊர்வலம் விடுகின்றனர். பிரபல பிராமணர் கிராமம் வந்தவுடன் அதைத் தரையில் இறக்கி மன்னன் மரியாதை செலுத்துகிறான்.\nகார்த்திகை விழா சங்க இலக்கியத்திலும் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இதை இலங்கை மன்னரும் கொண்டாடியதை அத்தியாயம் 17-ல் காணலாம்.\nகாரைக்கால் அம்மையார் என்ற சைவப் பெரியார் காலத்தால் சம்பந்தர் முதலிய நால்வருக்கும் முந்தியவர். இவர் திருமணம் ஆனபின் மந்திர மாங்கனி வரவழைத்ததும் இவரது கணவர், மனைவியின் அமானுஷ்ய சக்திகளைக் கண்டு பயந்து ஒதுக்கி வைத்துவிடுகிறார். பின்னர் அப்பெண்மணி சிவனடியாராக மாறி அற்புதமான திருவந்தாதிகளைப் பாடி தமிழில் அந்தாதி இலக்கியம் தோன்ற படி அமைத்துத் தருகிறார்.\nமகா வம்சத்தில் 15ஆம் அத்தியாயத்தில் ஒருதேரர், மாம்பழத்தச் சாப்பிட்டு கொட்டையைப் போடவுடன் அது உடனே மீண்டும் வளர்ந்து கனிகள் நிறைந்த மா மரமாயிற்று\nஉண்பது நாழி உடுப்பவை இரண்டே (புறம் 189) — என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரின் கூற்று. இந்த அருமையான சொல் மகாவம்சம் 36 ஆம் அத்தியயத்தில் வருகிறது. குஜ நாகன் தம்பி குஞ்சநாகன் ஆட்சிக்க்காலத்தில் ஏக நாழிகைப் பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் கூறும் மகாவம்ச உரை நாழி என்பது கையளவைக் குறிக்கும் ஒரு அளவை என்றும் ஒரு கவளம் சோறு இது என்றும் கூறும். ஒரு கவளம் கூடச் சோறு கிடைக்காத காலம் ஏக நாழிப் பஞ்சம் என்று அழைக்கப்பட்டது. நாழி என்னும் சொல்ல் இப்போது புழக்கத்தில் இல்லை.\n27 காரணங்களில் 16 காரணங்களை இங்கே பட்டியலிட்டேன். அடுத்த கட்டுரையில் மிக முக்கியமான, பாண்டிய ராஜகுமாரி—விஜயன் திருமணம், யானையை விட்டு குழந்தையைக் கொல்ல முயன்றது, கஜபாகு என்னும் மன்னனால் சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கண்டறிந்தது, சோழ நாட்டுப் புத்த பிட்சு இலங்கையில் போர்க்கொடி உயர்த்தியது, நாகர்களின் பட்டியல் முதலியவற்றைக் காண்போம்.\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1293 தேதி: 17 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஐந்தாவது கட்டுரை.\nகட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது இரண்டாம் பகுதி.\n17.யானை மூலம் குழந்தைக் கொலை\nஅத்தியாயம் 35:– சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” — என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை முதுகிலேற்றிக் கொண்டு சென்று அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது.\nஇது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது. மூர்த்தி நாயனாரையும் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னனையும் யானையே மன்னனாகத் தேர்ந்தெடுக்கிறது.\nசங்க இலக்கியத்திலும் இதை ஒட்டிய ஒரு காட்சி உண்டு.\nபுறநானூறு பாடல் 46 (கோவூர்க்கிழார் பாடியது)\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தனது எதிரியான மலையமான் குழந்தைகளை யானையின் காலடியில் வைத்து நசுக்குங்கள் என்று உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு பதறிப்போய் கோவூர்கிழார் என்னும் புலவர் ஓடோடி வருகிறார்.\n“மன்னா, என்ன காரியம் செய்கிறாய் ஒரு புறாவுக்காக தன்னுயிரையே கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் நீ. இவர்களோ பால் மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகள். பூதாகார கருப்பு உருவம் உடைய யானையைக் கண்டு மகிழக்கூடிய வயது. புது முகங்களைக் கண்டால் மருளுவர். உடனே இந்த இழி செயலை நிறுத்து” — என்கிறார். மன்னனும் புலவனின் நல்லுரைக்குச் செவி சாய்க்கிறான். இதோ அப்பாடல்:—\nநீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்\nஇடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை\nஇவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,\nதமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;\nகளிறு கண்டு அழூ உம் அழா அல் மறந்த\nபுன் தலைச் சிறார்; மன்று மருண்டு நோக்கி\nகேட்டனை ஆயின், நீ வேட்டது செய்மே\nசங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலை கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)\nமகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—\nநாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்):\nகல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்\nநாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.\n(( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க))\nஇலங்கை வரலாறு தமிழர்களுக்குச் செய்த பெரிய உதவி கஜபாகு பற்றிய குறிப்பாகும். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலம்பு. இதன் மூலம் சேரன் செங்குட்டுவன் காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது உறுதி ஆயிற்று.\nகஜபாகு ஆட்சி மகாவம்ச 35 ஆம் அத்தியாயத்தில் உளது\n2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு\nமகாவம்சத்தில் மிகவும் சுவையான விஷயம் பாண்டிய நாட்டு இளவரசிகள் இலங்கைக்கு வந்ததாகும்; இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து வந்த விஜயன், குவென்னா என்ற ஒரு யக்ஷிணியைக் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை ( ஒரு மகன், ஒரு மகள்) ஆகிறான். ஆனால் உயர்குலத்து (க்ஷத்ரிய) மங்கை ஒருவளை ராணியாகப் பெறும்வரை மன்னன் ஆக முடிசூட்ட மாட்டேன் என்கிறான். உடனே மந்திரிமார்கள், ஒரு தூதர் குழுவை அமைத்து, முத்துக்களையும் விலை உயர்ந்த நகைகளையும் கொடுத்து பாண்டிய மன்னனிடம் பெண் கேட்க அனுப்புகின்றனர்.\nதூதர்களும் கப்பல் மூலம் சென்று மதுரை மாநகரை அடைகின்றனர். (இது கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பதால் முதல் தமிழ் சங்கம் கொலு வீற்றிருந்த தென் மதுரையாக இருக்கலாம் என்பது என் கருத்து. இப்போதைய மதுரை அல்ல)\nமதுரையில் பாண்டிய மன்னனும் மந்திரிகளைக் கலந்தாலோசித்து தன் பெண்ண அனுப்ப முடிவு செய்கிறான். உடனே மதுரை நகர தெருக்களில் தண்டோரா போடுகிறார்கள்:\n“இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்…… மதுரை மாமன்னனின் மகள் — இளவரசியை — விஜனுக்கு மணம் முடிக்கப் போகிறோம். அங்குள்ள மந்திரிமார்களுக்கும் பெரிய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெண்கள் தேவை. இதுவரை நூறு பெண்கள் வந்து இருக்கிறார்கள். இன்னும் யார் யார் இலங்கைத் தீவுக்குப் போக விருப்பமோ அவர்கள் அனைவரும் இரண்டு மாற்று உடைகளுடன் வீட்டு வாசலில் நின்றால் மன்னரின் ஆட்கள் அழைத்துச் செல்வர். பெண்களை அனுப்புவோருக்கு மாமன்னன் நஷ்ட ஈடும் வங்குவார். தகுதிக்கு ஏற்ப இலங்கை செல்லும் பெண்களுக்கு யானை, குதிரை, தேர் வாகன வசதிகளும் அனுப்பப்படும்” — இந்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமான தமிழ்ப் பெண்கள் முன்வந்தனர். அவர்கள் கொண்டுவந்த இரண்டு உடைகளுடன் மன்னனும் ஆடை அணிகலன்களை வழங்கி கப்பலில் ஏற்றி விடுகிறான்.\nகைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு முன்கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இவர்கள் இலங்கையில் மகாதிட்டு என்னும் இடத்தில் கரை இறங்கினர்.\n((ஆதாரம்: மகாவம்சம் அத்தியாயம் 7))\nபின்னர் பழைய மனைவி குவென்னாவை, விஜயன் கெஞ்சிக் கூத்தாடி பணம் கொடுத்து வழியனுப்பியதையும், அவளை யக்ஷர்களில் ஒருவனே, ஒரே குத்தில் கொன்றதையும் மஹாவம்சப் படுகொலைகள் கட்டுரையில் தந்துவிட்டேன்.\nஇதில் கவனிக்க வேண்டிய மற்றொரு மஹாவம்ச வரி “18 குடிகள்”. தமிழ்நாட்டில் அகஸ்தியர் குடியேறியபோது வடக்கில் இருந்து 18 குடிகளை அழைத்துவந்தார் என்பது நச்சினார்க்கினியர் உரைதரும் விஷயம்\nமஹாவம்சத்தை எல்லா தமிழர்களும் படிக்கவேண்டும். இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இன்னும் சில சுவையான விஷயங்களைத் தருவேன்.\nகட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.\n2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு\nமகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்\nகட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1297 தேதி: 19 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஏழாவது கட்டுரை.\n( இலங்கையில் தமிழ் செல்வாக்கைக் காட்டும் 20 விஷயங்களை முதல் இரண்டு பகுதிகளில் காண்க. ))\nஅத்தியாயம் 36-லும் 37-லும் சோழநாட்டு பிக்கு சங்கமித்ரன் இலங்கைக்கு வந்து பெரும் குழப்படி செய்ததைப் படிக்கிறோம். இலங்கையில் புத்தபிட்சுக்கள், அரசாங்கப் பணிகளில் குறுக்கிடுவது இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறுவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. அவர் அங்குள்ள பௌத்தர்களிடையே பெரும்பிளவை ஏற்படுத்தி பழம்பெரும் கட்டிடங்களான மஹாவிஹாரை, லோகபஸாதா ஆகியவற்றை இடிக்கச் செய்கிறார். இதனால் கோபம் அடைந்த ராணி, ஒரு ஆளை அனுப்பி அவரையும் அவருக்கு உதவி செய்த மந்திரியையும் கொன்றுவிடுகிறாள். மகாசேனன் (கி.பி..275—301) காலத்தில் இது நடந்தது. 37ஆம் அத்தியாயத்துடன் மஹாவம்சமும் முடிவடைகிறது.\nஇதனால் கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டின் மலயப் பகுதியும் சோழ நாட்டுக் கடற்கரைகளும் இலங்கை அரசியலில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை அறியமுடிகிறது\n22.தமிழ் மன்னர்கள்: ஏலாரா/எல்லாளன் (கி.மு.205 –161)\nஅத்தியாயம் 21 முதல் 33 வரை சோழநாட்டில் இருந்து வந்த ஏலாரா என்ற உயர்குலத் தமிழன் பற்றியும் அவனை வெற்றி கொண்ட துட்டகாமினி என்பவனின் வரலாறு பற்றியும் இருக்கிறது. 44 ஆண்டுக்காலம் இலங்கையை நீதி நேர்மையுடன் ஆண்ட தமிழ்ப் பெருந்தகை ஏலாராவைப் பற்றி மஹாவம்சம் புகழ்கிறது. அவன் இறந்த பின்னரும் இலங்கை மன்னர்கள் அவ்விடத்தில் மரியாதை செலுத்தி வந்ததையும், துட்டகாமினி பிறப்பில் இருந்தே தமிழ் விரோதியாக இருந்ததையும் மஹாவம்சம் ஒளிவு மறைவு இன்றி உரைக்கிறது.\nஏலாரா ஆட்சி நமக்குத் தெரிவிக்கும் விஷயம் — 2200 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் “ஞாலம் நடுங்கவரும் கப்பற்படை” வைத்திருந்தனர் என்பதாகும்.\n“தமிழர்களுடன் சமாதானமாக வாழ்” — என்று சொன்ன தந்தைக்கு பெண்கள் அணியும் நகைகளை அனுப்பி, நீ ஒரு ஆண்மகன் அல்ல என்று தந்தையையே துட்டககாமினி இழிவு படுத்தியதையும் காணமுடிகிறது. துட்ட காமினி 32 தமிழ் மன்னர்களை வெற்றிகொண்டதாக மஹாவம்சம் கூறுகிறது. சந்தன், தித்தம்பன் என்ற சில பெயர்களையே மஹாவம்சம் நமக்கு அளிக்கிறது. இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) புகழை தனியாக ஆய்வு நூலாக வெளியிடுவதும் வரலாற்றில் புத்தொளி பரப்பும்.\nதுட்டகாமினியின் புகழ்பாட ஏறத்தாழ மஹாவம்சத்தின் மூன்றில் ஒருபகுதியை ஒதுக்கியிருப்பதையும் காணமுடிகிறது. மஹாவம்சம் இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல் என்பதைவிட இலங்கையில் புத்தமதத்தின் வளர்ச்சியை வருணிக்கும் நூல் என்பதே பொருத்தமாக இருக்கும்\n23. ஏழு தமிழ் மன்னர்கள் (கி.மு 104-ஐ ஒட்டிய காலம்)\nஅத்தியாயம் 33 (பத்து அரசர்கள்): வட்டகாமனி ஆட்சி செய்த காலத்தில் ரோஹணாவில் வசித்துவந்த தீசன் என்ற பிராமணன் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்தான். அப்போது தமிழ்நாட்டிலிருந்து வந்து இறங்கிய ஏழுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். “ஆட்சியை ஒப்படைத்துவிடு” — என்று செய்தியும் அனுப்பினர். ஆனால் கூரிய மதிபடைத்த வட்டகாமனி, தனியாக தீசனுக்குச் செய்தி அனுப்பி, இது உன் நாடு, முதலில் தமிழர்களை விரட்டு என்றான். அந்தப் பிராமணனும் உடனே தமிழர்களை எதிர்த்தான், ஆனால் தோற்றுப் போனான். ஏழு தமிழர்களில் ஒருவன் ராணி சோமதேவியைக் கல்யாணம் செய்துகொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிப் போனான். மற்றொருவன் புத்தரின் பிட்சா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தமிழகம் சென்றான்.\n(பிச்சை எடுக்கப் பயன்படுத்தும் பாத்திரம் பிக்ஷா பாத்திரம். பிச்சை என்பது ‘பிக்ஷா’ என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்த சொல். ஆதிகாலத்தில் வேதம் கற்கும் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று “பவதி பிக்ஷாம் தேஹி” என்று வேண்டுவர். மதுரையில் வேத பாடசாலை மாணவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து இப்படிக் குரல் கொடுத்தது இன்றும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. உடனே எனது தாயார் அன்னத்தை அவர்கள் பாத்திரத்தில் போடுவார். அதை அவர்கள் குருநாதருடன் பகிர்ந்துகொள்வார்கள். வள்ளுவனும் “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” — என்ற குறளில் விருந்தினர் பற்றிப் பேசுகிறார்).\nஏழு தமிழரில் ஐவர் மட்டும் தங்கி இலங்கையை ஆண்டனர். புலஹதன், பாஹியா, பணயமாரன், பிழையாமாறன், தாதிகன் என்ற ஐவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்துவிட்டு அடுத்தடுத்து ஆண்டனர். மொத்தம் ஆண்ட வருடங்கள் 14 ஆண்டு 7 மாதம்.\nஇந்தப் பெயர்களில் சில தமிழ்ப் பெயர்கள் போலத் தோன்றவில்லை. மாறன் என்ற பெயர் கொண்டவர்கள் பாண்டி நாட்டுக்காரர்கள். தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளில் பணய மாறன் என்ற பெயர் உண்டு. இவைகளைப் பற்றித் தமிழ் வரலாற்றில் ஒன்றையும் காணோம். இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.\n(“தமில் வாள்க்க” (தமிழ் வாழ்க) என்று கோஷம் போடுவதை நிறுத்திவிட்டு உருப்படியான ஆராய்ச்சிகளில் இறங்க வேண்டும். தமிழர்களை ஆஹா ஒஹோ என்று புகழ்வதோடு நிற்காமல் உண்மை நிலையையும் கண்டு உரைக்க வேண்டும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் காரவேலன் என்ற ஒரிஸ்ஸா மாநில (கலிங்க) சமண மன்னனிடம் தோற்றுப்போன பாண்டியன் யார் ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தரபாண்டியன் யார் ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தரபாண்டியன் யார் என்பதை எல்லாம் ஆராய்வது நலம் பயக்கும். வெற்றியை வெற்றி என்றும் தோல்வியை தோல்வி என்றும் ஒப்புக்கொள்ளும் பக்குவமும் வேண்டும் என்பதை எல்லாம் ஆராய்வது நலம் பயக்கும். வெற்றியை வெற்றி என்றும் தோல்வியை தோல்வி என்றும் ஒப்புக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்\nசந்தமுக சிவன் – தமிழா தேவி\nசந்தமுக சிவன் என்ற அரசனின் மனைவி பெயர் தமிழாதேவி. சந்தமுகசிவனின் தந்தை பெயர் இளநாகன். சங்க இலக்கியத்தில் அதிகம் தமிழ்ப் பாடல்களை இயற்றியவரில் ஒருவர் பெயரும் இளநாகன். ஆகவே இந்தத் தமிழதேவி தமிழ்நாட்டுத் தொடர்புடைய பெண்ணே.\nசிங்களவரும் தமிழரும் ரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயம் இது.\nதுட்டகாமினி ஒரு முறை புத்த பிக்குகளை நினைக்காமல் மிளகு சாப்பிட்டதற்குப் பிராயச்சித்தமாக மாரீசவதை விஹாரத்தையும் சேதியத்தையும் அமைத்தார். மிளகு என்றவுடன் கேரள மிளகு ஏற்றுமதி நினைவுக்கு வரும். அக்காலத்தில் அது சேர நாடு என்னும் தமிழ்ப் பகுதியாக இருந்தது. மிளகு சாப்பிடும் வழக்கம் உண்டு என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது\nஅத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.\nகல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடித்ததைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.\nஇது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.\nஉடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான். இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.\nவடிவேல் எறிந்த வான் பகை பொறாது\nபஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்\nவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு\nதென் திசை ஆண்ட தென்னவன் வாழி\nஇதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.\nஅதிகாரம் 28-இல் வரும் உடும்பு அதிசயம் பற்றி ஏற்கனவே மஹாவம்சத்தில் அற்புதச் செய்திகள் என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்.\nஉலகப் புகழ்பெற்ற கம்போடியாவின் அங்கோர்வட் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு பட்டுப்பூச்சிதான் காரணம். உலகப் புகழ்பெற்ற அஜந்தா குகைக் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு ஆடு தான் காரணம். சிருங்கேரியில் முதல் மடத்தைச் சங்கராச்சார்யார் ஸ்தாபிக்க தவளைக்குக் குடைபிடித்த பாம்புதான் காரணம். பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை கட்ட முயலும் வேட்டை நாயும் தான் காரணம் என்பதை எல்லாம் விளக்கி நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன் — Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri (3-10-2011). இதே போல வனதேவதை உடும்பு வடிவில் வந்து இந்திரனும் விசுவகர்மாவும் அனுப்பிவைத்த செங்கற்களைக் காட்டியதாகவும் துட்டகாமினி அதைப் பயன்படுதியதாகவும் படிக்கிறோம். இதுபோல தமிழ் நாட்டுக் கோவில்களிலும் உடும்பு தொடர்புடைய கோவில்கள் உண்டு\n27.கோவலன் யானை அடக்கியது/ நந்திமித்ரன் யானை அடக்கியது\nபுத்தர் பிரான், யானையை வசப்படுத்தியது யோக சக்தியால்;\nஉதயணன் யானையை அடக்கியது மந்திர சக்தியால்;\nகோவலன் யானையை அடக்கியது புஜபலத்தால்:\nஇதே போல கந்துலன் என்னும் யானை கதை மஹாவம்சத்தில் வருகிறது அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது\nகட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.\nகட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1283; தேதி: 12 செப்டம்பர் 2014\nமகாவம்ச ஆய்வுக்கட்டுரை வரிசையில் நேற்று மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். இன்னும் நிறைய ஜோதிடச் செய்திகள் இருந்தும் மாதிரிக்காக கொஞ்சம் விஷயங்களைக் குறிப்பிட்டேன். அது போலவே புத்தர் பற்றிப் பல அற்புதச் செய்திகள் இருக்கின்றன. இலங்கைக்கு புத்தர் வந்தாரா என்ற தலைப்பில் அவற்றைத் தனியாகத் தருவேன்.\nமகாவம்சத்தை எழுதியதே ஒரு தமிழராகவோ அல்லது சங்கத் தமிழ் இலக்கியத்தைப் படித்தவராகவோ இருக்க வேண்டும் என்பது எனது துணிபு. மநுநீதிச் சோழன் கதை, குமணன் கதை, கோப்பெருஞ்சோழன் நட்பு, கிளி நெல் கொண்டு வந்த கதை, குழந்தையை யானை காலில் இடறவிட்ட கதை போன்ற பல சங்கத் தமிழ் கதைகளும் சங்க காலப் பெயர்களான கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன், ஏராளமான நாகர்கள் பெயர்களும் மகாவம்சத்தில் வருவதால் இது தமிழ் வரலாற்றுக்குத் துணைபுரியக்கூடும். அதையும் தனியாக எழுதுவேன். நேரடியாகத் தமிழர் பற்றிச் சொல்லும் கதைகளை எல்லோரும் முன்னரே அறிவர்.\nமகாவம்சம் என்னும் பாலி மொழி நூல் இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் என்பதை முதல் பகுதியில் விளக்கி இருக்கிறேன். மகவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உண்டு.\nபாண்டு அபயன் பட்டாபிஷேகம் பற்றிய பத்தாவது அத்தியாயத்தில் ஸ்வர்ணபாலி என்பவர் செய்த அற்புதம் வருகிறது. அவர் தங்கக் கிண்ணத்தில் உணவு கொடுத்த பின்னர் அவர் பறித்த ஆலமர இலைகள் எல்லாம் தங்கக் கோப்பைகளாக மாறிவிடுகின்றன. இதை மஹாபாரத ராஜசூய கீரி கதையுடன் ஒப்பிடலாம். தர்மம் செய்த ஒரு ஏழைப் பிராமணன் வீட்டில் சிந்தப்பட்ட உணவில் புரண்ட கீரியின் பாதி உடல் மட்டும் தங்கமான கதையை ஏற்கனவே எழுதிவிட்டேன். உணவு தானம் செய்வோர் தொட்டதெல்லாம் தங்கமாகும். ‘’மண் எல்லாம் பொன் ஆகும் ராமர் வரவாலே’’ என்ற சம்பூர்ண ராமயணத் திரைப்படப் பாடலையும் நினைவிற் கொள்க.\nதேவனாம்ப்ரிய திஸ்ஸன் பற்றிய பதினோறாவது அத்தியாயத்தில், நாட்டில் ரத்தினக் குவியல்கள் பூமிக்குள்ளிருந்து தானாக வந்த செய்திகளும் எலிகளும் கிளிகளும் உண்வுதனியங்களைக் கொண்டு குவித்த செய்திகளும் உள்ளன. குதிரை முத்து , யானை முத்து , ரத முத்து ,மணி முத்து , அணி முத்து , மோதிர முத்து , காகுத பழ முத்து, சிப்பி முத்து ஆகிய எட்டு வகை முத்துகள் கடலுக்கு வெளியே கரையில் குவிந்த அற்புதச் செய்திகளும் உள. அந்த மன்னன் அவைகளை அசோக மாமன்னனுக்கு அனுப்ப நினைக்கிறான். இருவரும் பார்த்ததே இல்லை. ஆயினும் ஆப்த நண்பர்கள் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் போல\nமகாவம்சத்தில் பல இடங்களில் பூமி அதிர்ச்சி அற்புதங்கள் வருகின்றன. 15-ஆவது அத்தியாயத்தில் பௌத்தர்களுக்கு மகாமேக வனத்தைக் கொடுக்க தாரை (நீர்) வார்த்தவுடன் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன், இலங்கைத் தீவில் பௌத்த தர்மம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார். மன்னன் கொடுத்த மல்லிகைப் பூவை எட்டு திசைகளிலும் போட்டவுடன் மீண்டும் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன் போதி (அரச) மரம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார்.\nபுத்தரும் பல தேரர்களும் பறவைகள் போலப் பறந்து வருவதும் காற்றில் மிதப்பதும் பல இடங்களில் பேசப்படுகிறது. இது இந்துமதப் புராணங்களில் காணப்படும் காட்சியே. நாரதர் என்ற முனிவர் த்ரிலோக சஞ்சாரி. அவர் ஒரு விண்வெளிப் பயணி. கிரகம் விட்டு கிரகம் தாவுவார். 14-ஆவது அத்தியாயத்தில் தேரர்களை அழைத்துவர ரதத்தை அனுப்பினான் மன்னன். அதை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டு வானத்தின் வழியே பறந்து வந்து இறங்கினர் என்று 14-ஆவது அத்தியாயம் பகரும் ஜாம்பூத்வீபத்தில் (இந்தியாவில்) உள்ள துறவிகளுக்கு மற்றவர் எண்ணங்களை அறியும் சக்தி உண்டு என்றும் அவர்கள் ‘’தெய்வீகக் காது’’ படைத்தவர்கள் என்றும் தேரர்கள் விளக்குகிறார்கள்.\n17-ஆவது அத்தியாயத்தில் ஒரு யானை புத்தரின் அஸ்திக் கல்சத்தைச் சுமந்து வருவதையும் அந்தக் கலசம் தானாக வானில் பறந்து மிதந்ததையும் படித்தறியலாம். மன்னரும் மக்களும் அதைக் கண்டு வியக்கின்றனர்.\n19-ஆவது அத்தியாயத்தில் போதி மரம் வருகை பெற்றி விவரிக்கப்பட்டுளது. முழுக்க முழுக்க அதிசய சம்பவங்கள் வருணிக்கப்பட்டுள்ளன போதிமரத்தைக் கடவுள் போல வழிபட்டு ஊர்வலம் நடத்தியது, பூஜை போட்டது, ஊரையே அலங்கரித்தது, மன்னன் அதன் பின்னாலேயே வந்தது எல்லாம் உள. அனுராதபுரத்தில் அதை இறக்கியவுடன் அது 80 முழ உயரத்துக்கு வானில் பறந்து தானாகவே அதற்கு நிர்மாணிக்க்ப்பட்ட பூமியில் இறங்கியது. உடனே பூமியே அதிர்ந்தது. மன்னன் தேவனாம்ப்ரிய திஸ்ஸனும் பல்லாயிரக் கணக்கானோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்தனர்.\n12-ஆவது அத்தியாயத்தில் ஆண் குழந்தை பிறந்தால் விழுங்கிவிடும் கடல் பூதத்தை ஒரு தேரர் அடக்கிய கதை விவரிக்கப்படுகிறது. அவர் பெயர் சோனதேரர். அதிலிருந்து அரண்மனையில் குழந்தை பிறந்தால் அதற்கு சோனதேரா என்னும் பெயரிடும் வழக்கம் ஏற்பட்டது. கடல் பூதம் ஓட்டம் பிடித்தது.\nஇதுபோன்ற அற்புதச் செய்திகளில் அற்புத அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் வெளிப்படும். ஆகையால் இத்தகைய செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அறிவு எனும் மைக்ரஸ்கோப்பின் அடியில் வைத்த ஆராய்வது நலம் பயக்கும்.\n28-ஆவது அத்தியாயத்தில் துட்டகாமனி, புத்த சைத்தியம் கட்டுவதற்காக, இந்திரன் உத்தரவின் பேரில் விஸ்வகர்மா கற்களைத் தயார் செய்தான். அதை ஒரு வேட்டைக்காரன் காட்டுக்குள் சென்று கண்டுபிடித்து மன்னனிடம் சொன்னான். கற்கள் இருந்த இடத்தை அவனுக்குக் காட்ட, வனதேவதை ‘உடும்பு’ உருவத்தில் வந்து அவனை அழைத்துச் சென்றது. அதற்குப்பின் நாடு முழுதும் ரத்தினக் கற்களும், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களும் கிடைத்தன.\nதமிநாட்டிலுள்ள 38,000 கோவில்களின் தல புராணங்களைப் படிப்போருக்கு இந்த அற்புதங்கள் வியப்பளிக்கா. ஏனெனில் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு பறவை, விலங்கு, மரம் முதலியன் தொடர்பு பெற்று இருக்கும். இலங்கை பூமி — இராவணன், குபேரன் காலத்தில் இருந்தே ரத்னம் கொழித்த பூமி. இதை வால்மீகி முனிவரும் தொட்டுக்காட்டி இருக்கிறார். இலங்கையின் பொன்மயமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய லெட்சுமணனிடம், ‘’பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’’ என்று கூறி ஸ்வர்ணமய இலங்கையை நிராகரித்து விடுகிறான் ராமன். ஆகவே துட்ட காமினி சேதியம் கட்டத்துவங்கியவுடன் ஆளுக்கு ஆள் பூமியைத் தோண்டத் துவங்கினர் என்றும் அப்போது எங்கு பார்த்தாலும் தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள் கிடைத்தன என்றும் பொருள் கொள்வதில் தடை ஏதும் இல்லை.\n12 அரசர்கள் பற்றிய 35-ஆவது அத்தியாயத்தில் யானை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. ராணியானவள் ஒரு குழந்தையை யானையின் காலுக்கு அடியில் வைத்துக் கொல்லச் சொல்கிறாள். அதை எடுத்துச் சென்ற சேவகப் பெண் யானையிடம் உண்மையைச் சொன்னவுடன் அது கண்ணீர் வடித்து கோபம் கொண்டு அரண்மனை வாயிலைத் தகர்த்து, சிறைப்பட்ட மன்னனை விடுவித்து, அவன் மறுகரைக்குச் செல்ல கப்பல் ஏற உதவிய கதை அது. இது போன்ற யானைக் கதைகள் சங்க கலம் முதல் ஏராளமாக உள. அத்தனையையும் யானை அதிசயங்கள் என்ற ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே பட்டியலிட்டுவிட்டேன். இதே போல சோழ மன்னன் ஒரு குழந்தையைக் கொல்ல எத்தனித்தபோது கோவூர்க் கிழார் சென்று தடுத்ததை புறநானூற்றில் (பாடல் 46) காண்க. மாபெரும் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் அனுப்பிய யானை அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்துவிட்டது\n36-ஆவது அத்தியாயத்தில் மழை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. இது போன்ற செய்திகளையும் மழை அதிசயங்கள் என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். சங்கபோதி என்ற மன்னன் நாட்டில் வறட்சி மிகவே, மகாஸ்தூப முற்றத்தில் படுத்துக்கொண்டு மழை பெய்யாதவரை நான் வெளியேறமாட்டேன். மழை பெய்யாவிடில் இங்கேயே உயிர் துறப்பேன் என்று சபதம் செய்கிறான். உடனே தேவர்கள், தீவு முழுதும் மழை பெய்யவைத்து வளம் ஊட்டினர்.\nஇது போன்ற எத்தனையோ அதிசயங்கள் மகாவம்சத்தில் காணக் கிடக்கின்றன. படித்து மகிழ்க. அவற்றின் உட்பொருளை உணர்க\nபௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்\nவடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\nகேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23 லட்சம் பேர், பிரதமர் விரைந்தார் August 17, 2018\nகாவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை August 17, 2018\nபாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு August 17, 2018\nகோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி) August 17, 2018\nவாஜ்பேயி: இந்திய அணு ஆயுத திறனுக்கு வலு சேர்த்தவர் August 17, 2018\nகேரள வெள்ளம்: 'மக்களை காப்பாற்ற முடியவில்லையே' - கதறி அழுத ஊராட்சித் தலைவி August 17, 2018\nயமுனை நதிக்கரையில் வாஜ்பேயி உடல் தகனம் August 17, 2018\nகேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள் August 17, 2018\nசினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா August 17, 2018\nவாஜ்பேயி: அமெரிக்க எதிர்ப்பை மீறி மாறனை ஆதரித்தார் - நினைவுகூரும் பழனிமாணிக்கம் August 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/category/place-ta/chennai-ta/", "date_download": "2018-08-18T01:35:04Z", "digest": "sha1:XK3K6PQD4P3PW37R6KUL3JTBQ7LVEK4P", "length": 19550, "nlines": 189, "source_domain": "new-democrats.com", "title": "சென்னை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nFiled under அரசியல், இந்தியா, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் – உறுப்பினர்கள் கூட்டம்\nநேரம்: மாலை 4 முதல் 6 வரை\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nFiled under அம்பலப்படுத்தல்கள், உழைப்பு சுரண்டல், சென்னை, பத்திரிகை, போராட்டம், யூனியன்\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் சென்னை குறளகம் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழில் தாவா தாக்கல் செய்துள்ளனர். வேலைக்கு கூட பாதிப்பு வராமல் சொந்த நேரத்தில் போராடி வரும் ஊழியர்களை நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்துகிறது நிர்வாகம்.\nதூசான் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்\nFiled under சென்னை, செய்தி, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு, போராட்டம், யூனியன்\nஐ.டி ஊழியர்களின் சார்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு, தூசான் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nFiled under சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு – உறுப்பினர் கூட்டம்\nநேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nFiled under இந்தியா, சென்னை, பணியிட உரிமைகள், பத்திரிகை, முதலாளிகள், யூனியன்\nநவம்பர் 1918-ல் முதல் உலகப்போர் முடிந்தது. இனிமேல் கெடுபிடி இருக்காது; இழந்தவற்றை மீட்கலாம் என்றெண்ணி மகிழ்ந்தனர், தொழிலாளர்கள். இந்த மகிழ்ச்சி சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை.தொழிலாளர்களை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வாழவிடக்கூடாது என்பது தானே முதலாளிகள் கற்றுக்கொண்ட பாலபாடம்\nடெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்\nFiled under அறிவிப்பு, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nடெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் – எதிர்கொள்வது எப்படி\nகோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஊடகங்கள் விற்பனைக்கு\nஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்\nFiled under அரசியல், சென்னை, செய்தி, தமிழ்நாடு, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம்\n5 இலட்சம் ஐ.டி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் இறங்கினால் பந்தோபஸ்துக்கு எத்தனை போலீஸ் போட முடியும் எத்தனை நாள் போட முடியும்\nமே மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nFiled under அமைப்பு, அறிவிப்பு, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nBPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம்\nவிப்ரோ 2K – இனி செய்ய வேண்டியது என்ன\nகாவிரி உரிமை – ஏப்ரல் 28ல் தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nFiled under அரசியல், சென்னை, செய்தி, தமிழ்நாடு, நிகழ்வுகள், போராட்டம்\n“போர்க்காலத்தில் கூட, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு செல்லும் ஆற்று நீரைத் தடுக்கக்கூடாது” என்பது சர்வதேச நியதி. போரின்போது ஒரு பகை நாட்டு மக்களுக்கே இழைக்க முடியாத அநீதியை, ஒருமைப்பாட்டின் பெயரால் தமிழகத்துக்கு இழைத்து வருகிறது இந்திய அரசு.\nஏப்ரல் மாத சங்க உறுப்பினர் கூட்டம்\nFiled under அமைப்பு, அறிவிப்பு, சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nதீர்வுக்கான பாதையில் போராடுகிறதா தமிழகம்\nமுகநூல், ஆதார் – பீரோ புல்லிங் திருடர்கள்\nவருடத்திற்கு வருடம் உயரும் ஐ. டி. நிறுவனங்களின் இலாப விகிதம்\nLycatech மற்றும் Plintron global technology சட்டவிரோத வேலைப் பறிப்பு\nFiled under அம்பலப்படுத்தல்கள், சென்னை\nலைக்கா டெக் / பிளின்ட்ரான் குளோபல் டெக்னாலஜி ஊழியர்களே\nகட்டாய ராஜினாமா/வேலைப் பறிப்பை எதிர்கொள்ள நமக்கு சட்டத்தின் துணை உள்ளது. இது தொடர்பாக தொழில் தகராறு சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழிற்தாவா தாக்கல் செய்தால், அந்த வழக்கு முடிவது வரை வேலையை விட்டு நீக்க முடியாது என்ற சட்ட பாதுகாப்பு உள்ளது.\nஎச்.ஆர் மிரட்டலை எதிர்கொள்வது எப்படி – ஐ.டி சங்கக் கூட்டம்\nFiled under சென்னை, செய்தி, பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nபொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட தேவையில்லை. நிர்வாகம் தனது விருப்பப்படி ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க முடியாது. முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை தெரிந்து கொண்டு பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும்.\nசங்கக் கூட்டம் மார்ச் 2018 – போஸ்டர்\nFiled under சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nமார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.\nFiled under அமைப்பு, அறிவிப்பு, ஊழல், சென்னை, நிகழ்வுகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, மோசடிகள், யூனியன்\nநமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17 சனிக்கிழமை 2018 அன்று நடைபெறும்.\nவிப்ரோ 2K பேச்சுவார்த்தை : நிர்வாகத்தின் ஆணவப் போக்கு\nFiled under கார்ப்பரேட்டுகள், சென்னை, செய்தி, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\n“ஒவ்வொரு அமர்வுக்கு வரும்போதும், ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகளின் பட்டியலையும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறோம். ஆனால், நிர்வாகத் தரப்பில் அதற்கான பதில்களை தராமல் ஆணவமாக பதில் சொல்கிறார்கள்”\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nஉழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nCategories Select Category அமைப்பு (225) போராட்டம் (221) பு.ஜ.தொ.மு (20) பு.ஜ.தொ.மு-ஐ.டி (119) இடம் (468) இந்தியா (260) உலகம் (82) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (493) அரசியல் (196) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (113) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (311) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (487) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (75) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (87) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (50) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20965&cat=3", "date_download": "2018-08-18T01:34:10Z", "digest": "sha1:3SCPHH5IQBKQS3ATDROPZJYR4BF3J4M4", "length": 7204, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் தீமிதி திருவிழா : திரளான பக்தர்கள் வழிபாடு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nதிருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் தீமிதி திருவிழா : திரளான பக்தர்கள் வழிபாடு\nஆலங்குடி: ஆலங்குடி அடுத்த திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 8ம்தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு மண்டகப்படிதாரர்களால் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 8ம் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பால்குடம், பறவைக்காவடி, குழந்தைக்கு தொட்டி கட்டுதல், அலகு குத்தி வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்று பக்தர்கள் தீமித்து வழிபாடு செய்தனர்.\nபெண்கள் குடத்தில் நவதானியங்களை கொட்டி குடத்தின் மீது பலவண்ண மலர்களால் அலங்கரித்து மது எடுத்து வந்து கோயில் வாசலில் ஒன்றிணைந்து அம்மன் பாடல்களை பாடி பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். மேலும், தங்கள் நிலத்தில் விளைந்த நெல்மணிகளை கொண்டு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு செய்தால் மழை பெய்யும், விவசாயம் செழிக்கும், அம்மை போன்ற நோய்கள் தாக்காது என்பதற்காகவே இந்த மது எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமேலக்கோயிலில் ஆவணி தேர் திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nமீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூல திருவிழா : நாரைக்கு முக்தி கொடுத்த லீலை\nஆர்.பி. காட்டூர் பொன்காளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்\nமேலூர் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு\nமுத்துமாலை அம்மன் கோயிலில் ஆடி கொடை விழா கோலாகலம்\nதிருவானைக்காவல் கோயிலில் ஆடிப்பூர தெப்போற்சவம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180109217233.html?ref=ls_d_obituary", "date_download": "2018-08-18T00:35:05Z", "digest": "sha1:S24XPMB77LPEGMUQQ7GKVH7P7UW2SY53", "length": 4691, "nlines": 34, "source_domain": "www.kallarai.com", "title": "திரு இரங்கநாதன் கணேசன் - மரண அறிவித்தல்", "raw_content": "\n(முன்னாள் ஆசிரியர்- யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி, பதுளை ஊவா கல்லூரி, முன்னாள் அதிபர்- பதுளை சரஸ்வதி வித்தியாலயம், வீமன்காமம் மகா வித்தியாலயம்)\nதோற்றம் : 8 நவம்பர் 1928 — மறைவு : 7 சனவரி 2018\nயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இரங்கநாதன் கணேசன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கநாதன் இராசாங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா சோதிமதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற சிவாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,\nகாலஞ்சென்ற சிவநேசன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,\nகீதாகௌரி, மதிவதனன், மதிசுதனன்(அவுஸ்திரேலியா), சாய்கிருஷ்ணா(கனடா), சாய்சங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவதனி, சுபாதினி, தர்ஷினி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமயூரநாதன், நிவேதிதா, ஓங்காரப்பிரியன், வித்யாரமணன், கோபிஈஸ்வர், கிருஷ்ணி, யஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் பி.ப 10:00 மணிவரையும், 10-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் மு.ப 11:30 மணிவரையும் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 11:30 மணிதொடக்கம் பி.ப 12:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிதொடக்கம் 01:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2016/07/blog-post.html", "date_download": "2018-08-18T00:43:56Z", "digest": "sha1:U5DGFPLYRM2TZHLW6D3VZQKB7VRXZXUP", "length": 8052, "nlines": 150, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: விடியுமா பொழுது!", "raw_content": "\nவேதனைகள் பல தொடராக வெட்டியாக வலையில் எழுதினாலும் \nசொல்ல வந்த விடயம் செவிடன் காதில் சங்கு போலத்தான் சர்வதேசம் மட்டுமா உள்நாட்டு நல்லாட்சியும்\nமுன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இப்போது சொல்லுவது போல இறப்பு சான்றிதல் வாங்கி .நீங்களும் உங்க உறவுகளும் நல்லாக இருங்க என்றால்\nஇந்த மனித உரிமைகள் , கானாமல் போனோர் ஆய்வுக்குழு.ஜனாதிபதி ஆணைக்குழு, இன்னும் வெட்டி கிழட்டு பித்தலாட்ட தேடுவோர் தூங்கும் ஜால்ரா அரச அமைப்புக்கள் \nஎல்லாம் ஏன் இன்னும் பிச்சை புடுங்கனும் சர்வதேசத்திடம்எனக்கும் கோபம் வரும் பொதுவெளியில் ஏன் பேசுவான் தணிக்கை போல\nகுறும்பட குழுவுக்கு என் வாழ்த்துக்கள்\nநம் வலி எந்த நாயும் அறியாத துயரம் அரசியல் ஜால்ராவுக்கு சூரியன் தோற்றது சொகுசாகப்போச்சு அரசியல் கதிரையில் எதிர்க்கட்சி தலைவர் என்று உலகம் ஏமாற்ற\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 7/02/2016 05:09:00 pm\nஉணர்வுகள் கொப்பளிக்க - தாங்கள்\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\nமுறும்படம் மனதை உலுக்கிவிட்டது தனிமரம் நேசன்..\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/06/blog-post_968.html", "date_download": "2018-08-18T00:55:43Z", "digest": "sha1:KBTCJAK6NEWBHZSYJEPVTUDLT3JIDRDI", "length": 12366, "nlines": 284, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: ஆதாரைக் கைவிடும் ஆஸ்திரேலியா!", "raw_content": "\nஇந்தியாவில் ஆதாரைப் போன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட பயோமெட்ரிக் திட்டத்தைக் கைவிடுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியாவில் 2009ஆம் ஆண்டு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. குடிமக்களுக்கு தனித்தனி அடையாள எண் மற்றும் நாடுதழுவிய தரவுத்தளத்தை உருவாக்கும் நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இந்தத் திட்டம் விரைவில் எல்லா நாட்டிலும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தத் திட்டத்திற்கு பல்வேறு நாடுகளில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய தனது பயோமெட்ரிக் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.\n`இன்னோவேசன் ஆஸ்திரேலியா' ஊடகத்திடமிருந்து கிடைத்த தகவலின்படி, ஆஸ்திரேலிய அரசு ரூ.40 மில்லியன் டாலர் செலவில் (இந்திய மதிப்பில் சுமார் 273 கோடி) தொடங்கிய பயோமெட்ரிக் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது தெரிவந்துள்ளது.\nஆஸ்திரேலிய குற்றவியல் புலனாய்வு ஆணையம்(ACIC) 46 மில்லியன் டாலர் செலவில் 2016ஆம் ஆண்டு இந்த பயோமெட்ரிக் திட்டத்திற்கான ஒப்புதலை என்இசி நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இந்தத் திட்டத்தில் ஆதாரைப் போலவே கைரேகைகள், முக அங்கீகாரம், மற்றும் பாதச் சுவடுகள் ஆகியவற்றைப் பதிவு செய்யப்படவிருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய அரசு இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஆதார் திட்டம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனிதர்களின் தவறாலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்தபோதிலும், இந்திய அரசு விடாப்பிடியாக தொடர்ந்து இத்திட்டத்தை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு தனிமனிதனின் அந்தரங்க விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையும் ஆதார் வழக்கிலும் தொடர்புப்படுத்தி இன்னும் இறுதித்தீர்ப்பு வழங்கப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n🅱REAKING NEWS LIVEஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை. 17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க...\nஉடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி இதோ...\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\n2017-18 ஆம் ஆண்டிற்கான Cps கணக்கீட்டு தாள் வெளியீடு\nL K G. U .K G ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் \nஅரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வ...\nதமிழ்நாட்டில் பக்ரீத் விடுமுறை 22.08.2018 - புதன்கிழமை.\n வருமான வரி பற்றிய முக்கிய செய்தி\nஉங்களுடைய கிட்னி நீண்டநாட்கள் நோயின்றி செம்மையாக செயல்பட வேண்டுமா தினமும் இதை செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/collections/floral-overalls", "date_download": "2018-08-18T00:28:19Z", "digest": "sha1:VIFHVBN23NQO2NHCY66XR57ROFRAW6ZI", "length": 27800, "nlines": 536, "source_domain": "ta.buddhatrends.com", "title": "மகளிர் மலர் பூக்கள் | Buddhatrends", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nமுகப்பு / மலர் ஓவர்சால்ஸ்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி: AZ அகரவரிசையில்: ZA விலை: குறைந்த முதல் உயர் விலை: அதிக உயரம் தேதி: பழையது பழையது தேதி: புதியது பழைய\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nலூஸ் பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த\nலூஸ் பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த $ 49.00 $ 98.00\nதேங்காய் மரம் அச்சிடல் 90's Overalls\nமலர் விண்டேஜ் மொத்தம் மொத்தம்\nமலர் விண்டேஜ் மொத்தம் மொத்தம் $ 62.30 $ 89.00\nமஞ்சள் மலர் மொத்த ஜெப்டிசைட்\nமஞ்சள் மலர் மொத்த ஜெப்டிசைட் $ 62.30 $ 89.00\nதளர்வான பிளஸ் அளவு பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த\nதளர்வான பிளஸ் அளவு பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த $ 58.10 $ 83.00\nஎம்ப்ராய்டரி லேஸ் டெனிம் ஒட்டுமொத்த பிடித்த\nஎம்ப்ராய்டரி லேஸ் டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 72.60 $ 121.00\nமலர் நீண்ட டெனிம் ஒட்டுமொத்த பிடித்த\nமலர் நீண்ட டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 67.20 $ 112.00\nலூஸ் பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த\nலூஸ் பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த $ 58.10 $ 83.00\nபரந்த லெக் டெனிம் மொத்தம் மொத்தம்\nபரந்த லெக் டெனிம் மொத்தம் மொத்தம் $ 62.30 $ 89.00\nதளர்வான மலர் சாம்பல் ஒட்டுமொத்த\nதளர்வான மலர் சாம்பல் ஒட்டுமொத்த $ 60.90 $ 87.00\nமலர் Hippe ஒட்டுமொத்த உடை\nமலர் Hippe ஒட்டுமொத்த உடை விற்பனை அவுட்\nமலர் டெனிம் ஒட்டுமொத்த $ 53.90 $ 77.00\nபரம்பரையல் மலர் அச்சிடப்பட்ட மொத்தம்\nபரம்பரையல் மலர் அச்சிடப்பட்ட மொத்தம் $ 66.49 $ 94.99\nமலர் அச்சிடப்பட்ட டெனிம் லூஸ் ஒட்டுமொத்த\nமலர் அச்சிடப்பட்ட டெனிம் லூஸ் ஒட்டுமொத்த $ 84.70 $ 121.00\nவிண்டேஜ் பூக்கள் அச்சிடப்பட்ட டெனிம் ஒட்டுமொத்த\nவிண்டேஜ் பூக்கள் அச்சிடப்பட்ட டெனிம் ஒட்டுமொத்த $ 55.30 $ 79.00\nமலர் அச்சிடப்பட்ட லூஸ் ஒட்டுமொத்த\nமலர் அச்சிடப்பட்ட லூஸ் ஒட்டுமொத்த $ 67.20 $ 96.00\nவிண்டேஜ் அச்சிடப்பட்ட மலர் ஃப்ளோஸ் ஒட்டுமொத்த\nவிண்டேஜ் அச்சிடப்பட்ட மலர் ஃப்ளோஸ் ஒட்டுமொத்த $ 55.30 $ 79.00\nமண்டல டெனிம் ஒட்டுமொத்த $ 62.30 $ 89.00\nமலர் அச்சு சாதாரண பிளஸ் அளவு மீறல்கள்\nமலர் அச்சு சாதாரண பிளஸ் அளவு மீறல்கள் $ 47.60 $ 68.00\nபழைய பள்ளி மொத்தம் மலர் மலர் சாம்பல்\nபழைய பள்ளி மொத்தம் மலர் மலர் சாம்பல் விற்பனை அவுட்\nதளர்வான பிளஸ் அளவு பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த\nதளர்வான பிளஸ் அளவு பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த $ 58.10 $ 83.00\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/abstract-canvas-loose-dress", "date_download": "2018-08-18T00:26:51Z", "digest": "sha1:NCTD4ZIZKU5PHSBRQ22URKCIDEMOTPKV", "length": 25431, "nlines": 469, "source_domain": "ta.buddhatrends.com", "title": "சுருக்கம் கேன்வாஸ் லூஸ் பிடித்த - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nசுருக்கம் கேன்வாஸ் லூஸ் பிடித்த\nவிற்பனை அவுட் $ 53.40\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nபொருள்:பருத்தி மற்றும் லினென் கலப்பு\nநீளம்: 116cm சிதைவு: 140cm தோள்பட்டை: 42 செமீ: 50cm\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nசமச்சீர் இரட்டை அடுக்கு ஐரீன் பிடித்த\nசமச்சீர் இரட்டை அடுக்கு ஐரீன் பிடித்த $ 54.00 $ 77.00\nஸ்லீவ்லேஸ் பேட்ச்வர்க் ஹிப்பி பிடித்த\nஸ்லீவ்லேஸ் பேட்ச்வர்க் ஹிப்பி பிடித்த $ 36.00 $ 60.00\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த\nஃப்ளோரர் போஹேமியன் ஹிப்பி பிடித்த $ 66.00 $ 110.00\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 46.20 $ 77.00\nஆசியா ஈர்க்கப்பட்ட பருத்தி ரவிக்கை\nஆசியா ஈர்க்கப்பட்ட பருத்தி ரவிக்கை $ 42.00 $ 60.00\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 43.40 $ 62.00\nFlowy அடுக்கு Linen பேன்ட்ஸ்\nமலர் பிட்ச்ஸ் லினென் ஹிப்பி பேன்ட்ஸ்\nமலர் பிட்ச்ஸ் லினென் ஹிப்பி பேன்ட்ஸ் $ 50.40 $ 72.00\nரெட்ரோ தோல் காலணி $ 96.05 $ 113.00\nபிளஸ் சைஸ் ஃப்ளாலல் எம்ப்ராய்ட்ரி மாக்ஸி பிடித்த\nபிளஸ் சைஸ் ஃப்ளாலல் எம்ப்ராய்ட்ரி மாக்ஸி பிடித்த விற்பனை அவுட்\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2018/06/page/2/", "date_download": "2018-08-18T00:37:21Z", "digest": "sha1:PB6AJTM6BGRYSTDNZNAPPL2DKX73PRL4", "length": 9156, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "June 2018 – Page 2 – Nakkeran", "raw_content": "\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\nஅரசியல் களம் நக்கீரன் பார்வையில் அடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது அடாது மழைபெய்தாலும் விடாது நாடகம் நடாத்தப்படும் என்று வீரம் பேசிய சனாதிபதிசந்திரிகா இப்போது நாடகம் நடைபெறாது, இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். […]\nஅரசுடனான உறவை முறிக்கிறது கூட்டமைப்பு, சர்வதேச சமூகமும் கூட அதைத்தான் எதிர்பார்க்கிறது\nஅரசுடனான உறவை முறிக்கிறது கூட்டமைப்பு, சர்வதேச சமூகமும் கூட அதைத்தான் எதிர்பார்க்கிறது – சுமந்திரன் செவ்வி யாழ்ப்பாணம் யூன் 09, 2018 மைத்திரி – இரணில் அரசுடனான இணக்கப் போக்கைக் கைவிட்டு, உறவை முறித்துக் கொள்ளும் […]\nகுற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\nகுற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்-வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை சிலர் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக […]\nதிட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படும் திருகோணமலை\nதிட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் விழுங்கப்படும் திருகோணமலை நக்கீரன் திரு இரா சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை இரண்டு நாள்க்களுக்கு முன்னர் (ஏப்ரில் 11) சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தியத் […]\nதமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்\nதமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள் நக்கீரன் தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்தெறிய சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியம் கையில் எடுத்த ஆயுதம் சிங்களக் குடியேற்றமாகும். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச […]\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\nகேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23 லட்சம் பேர், பிரதமர் விரைந்தார் August 17, 2018\nகாவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை August 17, 2018\nபாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு August 17, 2018\nகோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி) August 17, 2018\nவாஜ்பேயி: இந்திய அணு ஆயுத திறனுக்கு வலு சேர்த்தவர் August 17, 2018\nகேரள வெள்ளம்: 'மக்களை காப்பாற்ற முடியவில்லையே' - கதறி அழுத ஊராட்சித் தலைவி August 17, 2018\nயமுனை நதிக்கரையில் வாஜ்பேயி உடல் தகனம் August 17, 2018\nகேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள் August 17, 2018\nசினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா August 17, 2018\nவாஜ்பேயி: அமெரிக்க எதிர்ப்பை மீறி மாறனை ஆதரித்தார் - நினைவுகூரும் பழனிமாணிக்கம் August 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/festival/03/136056?ref=category-feed", "date_download": "2018-08-18T00:50:22Z", "digest": "sha1:C7QS4GBUY7MM3XOWTU22T7DGPU4MLXOJ", "length": 6173, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "1000 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறிகளுடன் கோலாகல திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n1000 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறிகளுடன் கோலாகல திருவிழா\nதஞ்சாவூரின் பிரகதீஸ்வரர் கோவிலில் 1000 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறிகளுடன் ஐப்பசி அன்னாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடந்தது.\nஐப்பசி மாதத்தில் இரண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும், ஒன்று ஐப்பசி மாதத்தின் சதய நட்சத்திர நன்னாள், ராஜராஜ சோழனின் பிறந்தநாளாக சதயப் பெருவிழாக நடைபெறும்.\nஅடுத்து ஐப்பசி பௌர்ணமி அன்று, பிரகதீஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெறும்.\nநேற்று பௌர்ணமி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ விழா நடைபெற்றது.\nமேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=21220", "date_download": "2018-08-18T00:26:31Z", "digest": "sha1:JDBQSLOCS7KYXXDK6SB2W3ARTPMJ4B54", "length": 39315, "nlines": 247, "source_domain": "rightmantra.com", "title": "நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி\nநேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – இந்திய விடுதலை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆளுமை. ‘ஜெய் ஹிந்த்’ என்ற ஒரு சொல் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மத்தியில் தேசபக்தியை கொழுந்துவிட்டெரியச் செய்தவர். இன்று நேதாஜியின் நினைவு நாள். அவர் மறைந்ததாக சொல்லப்படும் நாள். அவர் மரணம் குறித்து ஆணித்தரமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்தில் அவர் இறந்ததாக கூறப்படும் நாள் இன்று தான். அவருடைய உடலுக்கு தான் மறைவே தவிர அவருடைய பெயருக்கு அல்ல.\nசென்னையின் பெருமிதம் – நேதாஜி இரு முறை தங்கிய ‘காந்தி பீக்’ இல்லம்\nஇன்று காலை எழும்போதே நேதாஜியின் சென்னை வந்தபோது சில நாட்கள் தங்கிய – ராயப்பேட்டையில் உள்ள ‘காந்தி பீக்’ இல்லம் நினைவுக்கு வந்தது. இன்று மறுபடியும் நேதாஜியின் மூச்சுக் காற்று பட்ட அந்த இல்லத்தில் மீண்டும் நம் கால் பதிக்க விரும்பினோம். வீட்டு உரிமையாளர் திரு.தனஞ்செயனை தொடர்புகொண்டு நமது விருப்பத்தை தெரிவித்தோம். மதியம் 4.00 – 5.00 க்குள் வரச் சொன்னார்.\nநமக்கு ராயப்பேட்டையில் வேறொரு வேலையும் இருந்தது. அதாவது கிளிகளின் தந்தை சேகர் அவர்களுக்கு இந்த மாதத்திற்கான உதவியை வழங்குவது. நமது நண்பர் ஒருவர் அனுப்பிய தொகையுடன் நமது தளம் சார்பாகவும் சேர்த்து சேகர் அவர்களுக்கு காசலை வரைந்து எடுத்துக்கொண்டோம். சேகர் அவர்களுக்கு போன் செய்து நேதாஜியின் நினைவு நாளை முன்னிட்டு ‘காந்தி பீக்’ இல்லத்திற்கு நாம் வரும் விஷயத்தை கூறி, அவரும் அங்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். தான் அதே தெருவில் இருந்தாலும் இதுவரை அந்த இல்லத்திற்கு சென்றதில்லை என்றும் இதை வாய்ப்பாக வைத்து வருவதாகவும் சொன்னார். (அந்த இல்லத்திற்கு நான்கைந்து வீடுகள் தள்ளி தான் சேகர் அவர்களின் வீடும் இருக்கிறது.)\nநேரே ராயப்பேட்டை மார்கெட் சென்று ஒரு மாலை வாங்கிக்கொண்டு காந்தி பீக் சென்றோம். நேரத்தை குறிப்பிட்டு அந்த நேரத்தில் நாம் வந்துவிடுவோம் நீங்களும் வந்துவிடுங்கள் என்று சேகர் அவர்களிடம் சொன்னதால் சேகர் அவர்களும் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டார்.\nகாந்தி பீக் இல்லத்தின் உரிமையாளர் திரு.தனஞ்செயன் அவர்கள் நம்மை வரவேற்றார்.\nதனஞ்செயன் அவர்களிடம் சேகர் அவர்களை அறிமுகப்படுத்தி கிளிகளை அவர் சம்ரட்சணம் செய்து வரும் விஷயத்தை சொன்னோம்.\nதனஞ்செயன் “நான் தான் தினமும் கிளிகளை பார்க்கிறேனே… இயற்கை அதிசயம் அது. நானே உங்களை நேர்ல பார்க்கனும்னு நினைச்சிகிட்டுருந்தேன் சார்… சுந்தர் புண்ணியத்துல பார்க்க வாய்ப்பு கிடைச்சது சேகர் சார்\n“நானும் இந்த வீட்டுக்கு வரணும்னு நினைச்சிக்கிட்டுருந்தேன். சுந்தராலே இதுவும் இப்போ சாத்தியமாச்சு… அதுவும் நேதாஜியின் நினைவு நாளான இன்னைக்கு…” என்றார் திரு.சேகர்.\nமூவரும் சிறிது நேரம் பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். இன்று தூர்தர்ஷனில் திரு.தனஞ்செயன் அவர்களை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த பேட்டியை மறுஒளிபரப்பு செய்ததாக சொன்னார்.\nநாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திருமதி.தனஞ்செயன் அவர்கள் எங்கள் அனைவருக்கும் டீ போட்டு கொண்டுவந்தார். டீ சாபிட்டுவிட்டு மேலே மாடியில் நேதாஜி தங்கியிருந்த அறைக்கு சென்றோம்.\nஅங்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தினோம்.\nதனக்கு தெரிந்த அவரது தந்தையும் தாத்தாவும் சொல்லி கேட்ட நேதாஜியின் நினைவுகள் சிலவற்றை பகிர்ந்துகொண்டார் தனஞ்செயன்.\nதனஞ்செயன் அவர்களுடனான சந்திப்பு நமது தளத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது. (சென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்\nபின்னர் சேகர் அவர்களுக்கு ரூ.3000/- த்துக்கான காசோலையை அளித்தோம்.\nநேதாஜி தங்கிய அறையில் தமக்கு அதுவும் அவரது நினைவு நாளான இன்று தமக்கு இது கிடைத்தது மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டார் திரு.சேகர்.\nசில வினாடிகள் கண்களை மூடி பிரார்த்தனை செய்தோம். “நேதாஜி, அரும்பாடுபட்டு பல தியாகங்களை செய்து உங்களை போன்ற தலைவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அருமையை இளைய தலைமுறையினர் உணரவில்லை. சுதந்திரத்தின் அருமையையும் விடுதலை வீரர்களின் தியாகத்தையும் அவர்கள் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். ஜெய் ஹிந்த்\nபின்னர் தனஞ்செயன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.\nநேதாஜியின் தங்கிய அறையை தரிசித்தது மறக்கமுடியாத அனுபவம் என்றார் திரு. சேகர்.\nஅவருடன் சென்று கிளிகள் வந்து செல்லும் அழகை ரசித்துவிட்டு புறப்பட்டோம்.\nநேதாஜியின் நினைவு நாளை முன்னிட்டு அவர் வாழ்வில் நடந்த நெஞ்சை நெகிழ வைக்கும் இரண்டு சம்பவங்களை தந்திருக்கிறோம்.\nபடித்து முடிக்கும்போது உங்கள் மனதில் தோன்றக்கூடியது ஒன்றே ஒன்று தான். அதை இறுதியில் சொல்லியிருக்கிறோம்.\nநேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி\n‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்ற பழமொழிக்கு சரியான உதாரணமாக விளங்கியவர் நம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.\nசுபாஷ் சந்திர போஸ் பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் தான் ஆரம்பக் கல்வியை கற்றார். கடும் கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் மிக்க பள்ளி அது. வங்காள மாணவர்களுக்கோ அது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் சுபாஷுக்கு அது மிகவும் பிடித்துப்போனது. எனவே படிப்பில் நல்ல ஆர்வத்தை செலுத்தி நன்றாக கல்வி கற்றான்.\nஅந்த பள்ளியில் எல்லாம் இருந்தாலும் ஒரு மாபெரும் குறை இருந்தது. ஆங்கிலேயே மாணவர்களும் அந்த பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் இனவெறி மிக்கவர்களாக இருந்தனர். நம் மண்ணின் மைந்தர்களை சமயம் கிடைக்கும்போதெல்லாம் இழித்தும் பழித்தும், கேலி கிண்டல்கள் செய்தும் வந்தனர்.\nசுபாஷின் வகுப்பில் படித்த சக வங்காள மாணவன் ஒருவன், ஒரு வெள்ளைக்கார துரையின் மகனின் புத்தகத்தை தொட்டுவிட்டான்.\n“ஏய்… கருங்குரங்கே…. என்ன தைரியம் இருந்தால் என் புத்தகத்தை நீ தொடுவாய் என் அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று அம்மாணவனை மிரட்டிக்கொண்டிருந்தான்.\nஅம்மாணவனோ மிகவும் பயந்துவிட்டான். “தெரியாமல் தொட்டுவிட்டேன். சாரி…\nவெள்ளைக்கார மாணவனோ அதை ஏற்கவில்லை. இந்திய மாணவனை பல கேட்ட வார்த்தைகளால் ஏசி, மாணவனின் காதை பிடித்து திருகி பலவாறு துன்புறுத்தினான்.\nஇதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சுபாஷூக்கு நரம்புகள் புடைத்தன. இருப்பினும் பள்ளியில் கண்ணியம் காக்கவேண்டும் என்பதால் அமைதியாக இருந்தான்.\nவகுப்புக்கள் நிறைவடைந்தவுடன், வெள்ளைக்கார சிறுவனால் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட நம் மாணவனை பார்த்து, “அவன் செய்த அனைத்தையும் ஏன் சகித்துக்கொண்டிருந்தாய்\n“அவன் அப்பா பிரிட்டிஷ் இந்தியா அரசில் பெரிய அதிகாரி. நான் ஏதாவது செய்யப்போய் அவரால் எங்கள் குடும்பத்திற்கு ஏதும் தொல்லை வரக்கூடாது என்பதால் பொறுமையாக இருந்தேன்” என்றான்.\n“நான் என்ன செய்கிறேன் என்பதை பொறுத்திருந்து பார்” என்று கூறி, பள்ளியை விட்டு வெளியே வந்த வெள்ளைக்கார சிறுவனிடம் போய், “ஏன் எங்கள் சக மாணவனை தவறாக நடத்தினாய்\n“அதைக் கேட்க நீ யார் கருங்குரங்கே…” என்றான் சுபாஷை பார்த்து அந்த சிறுவன்.\n” என்று கோபத்தில் வெடித்த சுபாஷ் அந்த சிறுவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து கீழே தள்ளினான். இத்தனைக்கு சுபாஷைவிட அவன் நன்கு வளர்ந்திருந்தான் பலசாலி வேறு. ஆனால், நம் சுபாஷின் ஆன்ம பலத்திற்கு முன்னர் அது எம்மாத்திரம்\nஇதைப் பார்த்தவுடன் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தைரியம் வந்தது. தன் பங்கிற்கு அந்த வெள்ளைக்கார சிறுவனுக்கு இரண்டு தர்மடிகள் விழுந்தன.\n“இனி எங்களை குறைத்து மதிப்பிடாதே… உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான் சுபாஷ்.\nபிற்காலத்தில் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு குரல் கொடுக்கிறதா\nவிடுதலை போராட்டம் இந்தியாவில் மிக தீவிரமாக இருந்த நேரம். அப்போதெல்லாம் போலீஸார் ஒருவரை கைது செய்ய காரணமே தேவையில்லை. அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டினார் என்று காரணத்தை காட்டி நேதாஜி அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். போஸை ஒரு தீவிரவாதியாக சித்தரித்து கைது செய்திருந்தனர்.\nபோஸைத் தவிர இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்றோர் கைது செய்யப்பட்டிருந்தனர். சிறைக்குள் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் வெடிக்கும். வெறி கொண்ட போலீஸார் கைதிகளை ‘நன்கு’ கவனிப்பார்கள்.\nஅப்படி ஒருமுறை ஒரு கைதியை காட்டுமிராண்டித் தனமாக அடித்துக்கொண்டிருந்ததை போஸ் பார்த்துவிட்டார்.\nசிறு வயதில் சகமானவனை காதை பிடித்து திருகியதற்கே பதிலடி கொடுத்தவராயிற்றே…. சும்மாயிருப்பாரா\n“ஏன் இந்த அப்பாவியை போட்டு இப்படி அடிக்கிறீர்கள் ஒரு கைதியிடம் போய் உங்கள் வீரத்தை காட்டுகிறீர்களே ஒரு கைதியிடம் போய் உங்கள் வீரத்தை காட்டுகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை\nயாரது நமக்கு எதிராக இப்படி கர்ஜிப்பது\nதிரும்பிப் பார்த்த சிறைக்கவலர்களுக்கு கோபம் கொப்பளிக்க போஸ் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.\n“நீயே இங்கே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு குரல் கொடுக்கிறதா” என்று எகத்தாளமாக சிரித்தனர்.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nநம் தளம் மேலும் மேலும் வளர, உங்கள் பங்களிப்பு அவசியம்\n“எங்கள் அடிமைத் தளை அறுபடும் நாள் சீக்கிரமே வந்துவிடும். ஆனால் நீங்கள் கைக்கூலிகள் என்ற பெயரில் தான் இருப்பீர்கள்\nசிறை அதிகாரிகளின் கோபம் தலைக்கேறியது. என்ன துணிச்சல் இவனுக்கு இவனுக்கு நிச்சயம் ஏதேனும் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்தனர்.\nஎந்தக் கைதிக்கு பரிந்து போஸ் பேசினாரோ அதே கைதியை கொண்டு அவரை அடிப்போம் என்று முடிவு செய்து, அடி தாங்காமல் சுருண்டு ஓரமாக கிடந்த கைதியிடம் “போஸை அடித்தால் உன்னை அடிக்காமல் விட்டுவிடுகிறோம்” என்று சொன்னார்கள்.\nஒரு நிமிடம் தயங்கினான். பின்னர் என்ன நினைத்தானோ போஸை அடிக்கத் தொடங்கினான். எத்தனையோ ஆங்கில வீரர்களின் அடிகளை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட போஸால், தன் சொந்த சகோதரனின் அடியை தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அடி தாங்காமல் படிகளில் உருண்டார் போஸ்.\nஇது தான் உலகம். இது தான் வாழ்க்கை. போஸ் மட்டும் விதிவிலக்கா என்ன\nநல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 5\nதெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.\nபூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.\nசென்னையில் நேதாஜி தங்கிய ‘GANDHI PEAK’ல் சில மணித்துளிகள் – EXCL கவரேஜ்\nநேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்\nநேதாஜிக்கு எடைக்கு எடை பொன் கொடுத்த தமிழர்கள் – INA வீரரின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்\nஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்\nஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்\nஇறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா\nபாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nசைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா\nசுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா\nஇவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்\nமகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன\nதேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்\n” என்று சொன்ன பகத்சிங். ஏன் \nஉங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்\nஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை\n“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை\nபாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23\nபாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ \nபிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்\n‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nவட திருநள்ளாறு – சனிப்ரீதி செய்ய இதோ சென்னையில் ஒரு திருநள்ளாறு\n5 thoughts on “நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி\nநேதாஜியின் பதிவு மிக அருமை. அந்த காலத்தில் வெள்ளையனிடமிருந்து நம் நாட்டை மீட்பதற்கு எவ்வளவு தியாகங்களை செய்து அடி வாங்கி நம் நாட்டை மீட்டிருக்கிறார்கள் சுதந்திர போராட்ட தியாகிகள். அனால் இன்றைய இளைய சமுதாயம் நடிகர்களின் பின்னே வால் பிடித்து கொண்டு அவர்களை மென்மேலும் பணக்காரர்கள் ஆக்கி கொண்டிருக்கிறார்கள்.\nஇப்பொழுதுதான் நல்ல மனம் படைத்த பேர் விழித்து கொண்டு ஆக்க பணியினை துவக்கியுள்ளர்கள். அனைத்து இளம் தலைமுறையினரும் அவர்களை பின்பற்றி ஒற்றி நடந்தால் நாடும் பயன் பெறும். அவர்களும் பயன் பெறுவார்கள்.\nவாழ்க நம் தாய் திரு நாடு.\nநேதாஜியின் நினைவு நாளன்று அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று கௌரவித்தமைக்கு நன்றி.\nரமா ஷங்கர் அவர்கள் கூறியுள்ளது போல நாட்டுக்காக போராடியவர்களை மறந்துவிட்டு தங்களை சுரண்டும் திரைப்பட நடிகர்கள் பின்னே இளைஞர்கள் செல்வது வேதனைக்குரியது. சில பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவர்களின் ரசிகர்கள் வைக்கும் அலங்கார பேனர்களின் செலவுகள் மட்டும் எங்கள் ஊரிலேயே பல லட்சங்கள் ஆகும். இதற்க்கெல்லாம் அந்த நடிகர்களா பணம் தருகிறார்கள்\nஇவர்கள் பெற்றோர் பாடுபட்டு சேர்த்த பணத்தை இவர்கள் உழைத்து சேர்க்கும் பணத்தை இப்படி வீணாகுகிறார்கள். அந்தப் பணத்தில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு கரும்பலகை, பெஞ்ச் உள்ளிட்ட ஏதாவது செய்தால் கூட உபயோகமாக இருக்கும்.\nநேதாஜி அவர்களின் இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று நேர் காண்டிராஸ்ட். கண்களில் நீரை வரவைக்கிறது.\nநேதாயின் நினைவு நாளில் சேகர் அவர்களுக்கு உதவி கிடைத்தது மகிழ்ச்சி. அதுவும் தகுதியுடைய ஒருவரின் கரங்கள் மூலம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.\nசம்பந்தப்பட்ட அனைவருக்கும், இந்த அற்புத பதிவை அளித்த உங்களுக்கும் என் நன்றி.\nவணக்கம் சுந்தர்.இதுதான் நம்மிடம் இருக்கும் பெரிய குறை. நமக்கு சப்போர்ட் செய்தவரை காட்டிகொடுப்பது ,அடிப்பது என.இதனாலே பல மாபெரும் இயகயங்கள் பல வெற்றி பெறாமலே போய்விட்டன.டிப்சும் ,கட்டுரையும் அருமை. நன்றி\nதிரு நேதாஜியின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து அவர் தங்கி இருந்த இருப்பிடத்திற்கு சென்று மாலை அணிவித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nதிரு சேகரையும், திரு தனஞ்சயனையும் மீட் பண்ண வைத்து அவர்கள் இருவரையும் நெகிழச் செய்த இடம் அருமை.\nமுதல் சம்பவம், நேதாஜியின் வீரத்தையும், நாட்டுபற்றையும் பறைசாற்றுகிறது . இரண்டாவது சம்பவம், நெஞ்சை நெகிழச் செய்கிறது. உதவி செய்பவர்களை எட்டி உதைத்து, உதாசீனப் படுத்தும் உலகம் இது.\nதேசப் பற்றுள்ள பல பதிவுகளை நம் தளத்தில் எதிர் நோக்குகிறோம்.\nவெற்றிலை விதிகள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20966&cat=3", "date_download": "2018-08-18T01:33:01Z", "digest": "sha1:XNQ6BSMMPQNCQCAOP5UUKGFUGNBUHKAM", "length": 6512, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அஞ்சுகோட்டை அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nஅஞ்சுகோட்டை அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nதிருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் ஜகத் ஜனனி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் ஜகத் ஜனனி அம்மன் கோயில் திருவிழா கடந்த மே 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொறு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஐந்தாம் திருநாளான நேற்று சிறப்பு நிகழ்வாக பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.\nகாப்பு கட்டியது முதல் விரதமிருந்து அஞ்சுகோட்டை கருப்பசாமி கோயிலில் இருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயில் நிர்வாகத்தாரால் அன்னதானம நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெற்றது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா\nகீழ்பென்னாத்தூர் மாரியம்மன் கோயிலில் மழைவேண்டி வேள்வி பூஜை\nஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nமன்னார்குடி மதியழகி காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை\nபொன்னமராவதி அருகே பிடாரி அம்மன் கோயிலில் ஒற்றைத் தேரோட்டம்\nஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA2ODM5NTU1Ng==.htm", "date_download": "2018-08-18T01:33:58Z", "digest": "sha1:FSSIYT4XCFMVN3FQHZKVQ4Z7ZQXLJXAQ", "length": 13027, "nlines": 136, "source_domain": "www.paristamil.com", "title": "இரண்டாம் வட்டாரத்தில் கொள்ளை! - €100,000 மதிப்புள்ள நகைகள் திருட்டு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nசகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தர்ப்படும்.\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\n - €100,000 மதிப்புள்ள நகைகள் திருட்டு\nபரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் தங்கியிருந்த சுற்றுலாப்பயணி ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது. மொத்தம் 100,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.\nபரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள rue Sainte-Foy வீதியில் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் Airbnb மூலம் வீடு முன்பதிவு செய்து தங்கியிருந்தார். முழுதாக 24 மணிநேரங்கள் கூட ஆகாத நிலையில், நேற்று புதன்கிழமை குறித்த வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், சுற்றுலாப்பயணியை மயக்கம் வரும் நிலைக்கு அடித்துவிட்டு கொள்ளையிட்டுள்ளனர்.\nஆறு ரோலக்ஸ் ஆடம்பர கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த சப்பாத்துக்கள், Louis Vuitton கைப்பைகள் 14 என பல்வேறு உடமைகளை திருடிச்சென்றுள்ளனர். மொத்த மதிப்பு €100,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவெள்ளம், புயல், நிலச்சரிவு - இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட 865 இடங்கள்\nமே மற்றும் ஜூலை மாதங்களில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை அரசு பட்டியலி\nபிரெஞ்சு அணியின் புதிய உடை - இன்று முதல் விற்பனைக்கு - இன்று முதல் விற்பனைக்கு - பரிசில் குவிந்த ரசிகர்கள்\nஉதைப்பந்தாட்ட உலக்கிண்ண கோப்பையை இரண்டாவது தடவையாக பிரெஞ்சு அணி கைப்பற்றியதோடு, அதன் நீல நிற உடையில் ஒ\nArnouville - வெடிக்கும் நிலையில் உள்ள பொருட்கள் நிரப்பப்பட்ட மகிழுந்து மீட்பு\nவணிக வளாகம் ஒன்றின் தரிப்பிடத்தில் மகிழுந்து பாரிய அளவில் வெடித்துச்\nவாதுமை விதைக்குள் கொக்கைன் போதைப்பொருள்\n22 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு, Versailles குற்றவியல் நீதிமன்றத்தினால்\n - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை\nFresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி\n« முன்னய பக்கம்123456789...12721273அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahaperiyavaa.blog/2017/06/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-08-18T01:14:45Z", "digest": "sha1:D5XL5MVSVLDA3XYI67PI6J7F2KNH3SVX", "length": 15069, "nlines": 174, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை – Sage of Kanchi", "raw_content": "\nHome › Audio Content › ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை\nஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை\nஸ்ரீலலிதா நவரத்தின மாலையை அறியாதார் யாருளர்\nசில வருடங்கள் முன்பாக மேற்கு மாம்பலம் போஸ்டல்காலனி ரோடிலே வந்து கொண்டிருந்தவனை இடிப்பதுபோலே நெருங்கி வந்த வண்டியிலிருந்து அடிபடாமல் காப்பாற்றினார் ஸ்ரீசரணாள். அதுமட்டுமா அந்த வண்டியுள் இருந்தவர்கள் வண்டியை நிறுத்தி கதவைத் திறந்து என்னிடம் மன்னிப்புக் கோருகையில் அந்த வண்டியில் இருந்து கேட்ட கானம்… மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே என்பது தாம்.\nஅடிபடாமல் தப்பிய அயர்ச்சியிலே அந்த பாடல் வரிகள் என்னை ஏதோ ஒரு விதமான பரவசத்திற்குனிட்டுச் சென்றது. அந்த கார் என்னைத் தாண்டிச் சென்றும் கூட அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அருகிலே இருந்த என் மனைவி என்னைத் தட்டி\n“என்ன ஆச்சு… கிளம்புங்க, போகலாம்” என்றபோது என் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது… “சந்திரசேகர சரணம்.. சரணம்…”.\nதிரும்பி அவளிடம் சற்று இரு என்றவன். வண்டியை நிறுத்தி பாடல் வரிகளைப் பதிய ஆரம்பித்தேன் எந்தன் கைபேசியில்… சங்கரா… மறக்கவியலாத பொழுது. பாடலை அங்கேயே நின்று தான் எழுதி பகிர்ந்தேன்.\nலலிதை என்றாலே மிகவும் அழகானவள் என்பதாகத் தானே அர்த்தம் சொல்கின்றனர்.\nபிரத்யக்ஷ பரமேஸ்வரரான சசிசேகர சங்கரனின் புன்சிரிப்பைப் பஸ்ரீக்கையிலே லலிதை தானே ஞாபகம் வருகிறாள். அவளும் மஹாபட்டாரிகா… சிவசக்த்யைக்ய ஸ்வரூபம்.\nஎந்தன் ஹ்ருஹயத்தில் இருந்து ஒழுகிவந்த கீதத்தின் நெய்யூற்றி அற்புதனாம், ஆச்சார்யனாம், அழகுரதமாம், அலகிலாத்தூயவனாம் ஸ்ரீசரணாளுக்கு ஓர் இசைத் தீபமேற்றித் தொழுவோமே என்பதாக செல்வி Lohitha swaminathan- ன் பக்தி ப்ரவாகத்திலே யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாக இன்றைய பகிர்வு.\nஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை\nஞாலங் காக்கும் உமையாள் பதியோன்\nஞானக் குழந்தை வடிவா னழகன்\nஞாலம் உடைசால் தொந்தியன் அருளில்\nஞானக் குருவை போற்றிடு வோமே\n“சந்திர சேகர குருவே சரணம்\nசந்திர சேகர குருவே சரணம்\nசந்திர சேகர குருவே சரணம்\nசந்திர சேகர குருவே சரணம்”\nபூக்கும் புலர் காலையில் தினமும்\nநோக்கும் விழி யாலருளும் பதியாம்\nவாக்கில் அறமும் உடைசால் குருவாய்\nகாக்கும் கருணா நிதியே சரணம்\n“சந்திர சேகர குருவே சரணம்…”\nதேறா தெதுவும் தேறித் தெளிய\nதாரா வரமும் தந்தெமைக் காக்க\nநாரா யணனாய் நரணெனக் கருளும்\nபாதாம் புயமுடை பதியே சரணம்\n“சந்திர சேகர குருவே சரணம்…”\nமூவாப் பிணியும் வெகுண்ட துமோட\nகாணா தெதுவும் தீண்டா தருள\nதீராத் துயரும் தீர்த்தருள் பெறவே\nகோணா வாழ்வின் நிதியே சரணம்\n“சந்திர சேகர குருவே சரணம்…”\nசாடா வாழ்வில் நாணமும் பேதமும்\nநாடா தருள்வாய் நலம்பல தருவாய்\nகூடா நட்பின் குறையும் களைந்தே\nவாடா வாழ்வருள் கதியே சரணம் \n“சந்திர சேகர குருவே சரணம்…”\nசூரர் வினையும் சூழா தருளும்\nதீரர் திருத்தாள் பணிந்தேத் துவமே\nவீரத் தெழிலாய் வதனந் தருவாய்\nவீழா வாழ்வருள் திருவே சரணம்\n“சந்திர சேகர குருவே சரணம்…”\nசூலம் கொண்டருள் சுந்தரி எந்தரி\nதூலம் காத்திடும் தூயநற் சங்கரி\nநாளும் எமைகாத் தருளும் பதமும்\nநல்கும் காஞ்சிநற் குருவே சரணம்\n“சந்திர சேகர குருவே சரணம்…”\nநேயம் கொண்டிட நெறிதந் தவராய்\nகாயம் திரித்தே தவமேற் பதியாய்\nமாயம் எதுவென மதிதந் தருள்வாய்\nதாயம் தந்தருட் தருவே சரணம்\n“சந்திர சேகர குருவே சரணம்…”\nகாலம் எல்லாம் கதியாய் நின்னருட்\nகோலம் மனதுள் தியானித் தனமே\nநாளும் இனியாம் நல்லன கொண்டிட\nதாளும் பணிந்தோம் சசி சேகரனே\n“சந்திர சேகர குருவே சரணம்\nசந்திர சேகர குருவே சரணம்\nசந்திர சேகர குருவே சரணம்\nசந்திர சேகர குருவே சரணம்”.\nஎல்லாம் வல்லதொரு பேரிறையாய் நமக்கெல்லாம் அருள்பாளித்து வரும் ஸ்ரீசரணாளின் க்ருபைதனிலே எல்லோரும் இன்புற்று வாழ அனுதினமும் அவரது கமலபாதங்களில் தண்டமென வீழ்ந்து நமஸ்கரித்து ப்ரார்த்திப்போமாக\nகுருவருள் நம்மை குறையின்றி காக்கும் சத்தியம் உணர்வோம்\nகுருவுண்டு – பயமில்லை; குரையேதும் இனியில்லை\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/asymmetrical-patchwork-pleated-t-shirt", "date_download": "2018-08-18T00:26:42Z", "digest": "sha1:S2HV2MKVWSJGPUOVPN5ESA2H4O5QWVHN", "length": 25609, "nlines": 473, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Pleated Long Sleeve T-shirt - Buddhatrends", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nநீண்ட தூங்கும் டி-ஷர்ட்டை தூக்கினார்\n$ 39.20 $ 56.00 நீங்கள் சேமித்து வைக்கும் 30% ($ 16.80)\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகருப்பு / ஒரு அளவு ஒளி நீலம் / ஒரு அளவு வெள்ளை / ஒரு அளவு\nதுணி வகை: ஒருவித கம்பளி நுல்\nஸ்லீவ் ஸ்டைல்: குளிக்கும் ஸ்லீவ்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nகாட்டில் வெள்ளை மடக்கு கார்டிகன்\nகாட்டில் வெள்ளை மடக்கு கார்டிகன் $ 77.00 $ 110.00\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 46.20 $ 77.00\n3 / XXX ஸ்லீவ் பாரம்பரிய சீன பருத்தி மற்றும் லினென் ப்ளூஸ்\n3 / XXX ஸ்லீவ் பாரம்பரிய சீன பருத்தி மற்றும் லினென் ப்ளூஸ் $ 50.40 $ 72.00\n3D எம்ப்ராய்ட்ரி பட்டாம்பூச்சி போஹேமியன் திருமண பிடித்த\n3D எம்ப்ராய்ட்ரி பட்டாம்பூச்சி போஹேமியன் திருமண பிடித்த $ 72.60 $ 121.00\nஆசிய கலை காப்டன் மாக்ஸி பிடித்த\nஆசிய கலை காப்டன் மாக்ஸி பிடித்த $ 43.20 $ 72.00\nஅசைவூட்டப்பட்ட பருத்தி மற்றும் லினன் ஷர்ட்\nஅசைவூட்டப்பட்ட பருத்தி மற்றும் லினன் ஷர்ட் $ 42.00 $ 60.00\nசமச்சீர் இரட்டை அடுக்கு ஐரீன் பிடித்த\nசமச்சீர் இரட்டை அடுக்கு ஐரீன் பிடித்த $ 54.00 $ 77.00\nசமச்சீரற்ற லினன் சட்டை $ 46.90 $ 67.00\nநீண்ட நீளமான சட்டை சட்டை\nநீண்ட நீளமான சட்டை சட்டை $ 47.60 $ 68.00\nபட்டாணி ஸ்லீவ்ஸ் பட்டன் அப் ஷர்ட்\nபட்டாணி ஸ்லீவ்ஸ் பட்டன் அப் ஷர்ட் $ 50.40 $ 72.00\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=24856", "date_download": "2018-08-18T00:46:49Z", "digest": "sha1:OBAKRGYEFL57I6CV42WDXZUTTS5AKBMY", "length": 10627, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» சிறுமியை கற்பழித்து கொன்ற மூன்று பேருக்கு மரண தண்டனை!", "raw_content": "\n1000 பாடசாலைகளுக்கு மூடு விழா\nஉலகின் பசியை போக்க புதிய வரைபடம்\nமுதல் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் கருத்தரிப்பு\nஇறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் – நெகிழ்ச்சி சம்பவம்\n28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது பூசாரி\n← Previous Story மாணவர் தற்கொலைகள் – யார் காரணம்\nNext Story → குழந்தை பெற விரும்பும் பெண் ரோபோ\nசிறுமியை கற்பழித்து கொன்ற மூன்று பேருக்கு மரண தண்டனை\n15 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த மூன்று ஆண்களுக்கு மரண தண்டனை விதித்து மகாராஷ்டிராவிலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.\n20 வயதுக்கு மேற்பட்ட அந்த இளைஞர்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தனர். இதுகுறித்த வழக்கில் இந்த ஆண்களை குற்றவாளிகள் என நவம்பர் 18ம் திகதி அன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nபாதிக்கப்பட்ட சிறுமி ஆதிக்க சாதியான மராத்தா சாதியைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் அனைவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.\nஇச்சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் இலட்சக்கணக்கான மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள் சில வாரங்கள் போராட்டங்கள் நடத்தினர்.\nஇதில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் புரிந்தவர்கள் என இருத்தரப்பினரும் கோபார்டி என்ற கிராமத்தில் வசித்ததால், இவ்வழக்கு பொதுவாக கோபார்டி வழக்கு என்று அறியப்படுகிறது.\nஇந்த குற்றத்தின் கொடூரத்தன்மையானது, கடந்த 2012ம் ஆண்டு இந்திய தலைநகரான டில்லியில் பேருந்தொன்றில் இளம்பெண் ஒருவர் கும்பலொன்றால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதுடன் பலரால் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கவனத்தைப் பெறுகின்றன.\nஇருந்தபோதிலும், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவு வழக்குகளைப் பதிவு செய்கிறது பொலிஸ்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/author/editor/page/2/", "date_download": "2018-08-18T00:35:51Z", "digest": "sha1:RRBVW4IHFJNRI3WH6GQD4EAME3QJWO4P", "length": 10489, "nlines": 82, "source_domain": "nakkeran.com", "title": "editor – Page 2 – Nakkeran", "raw_content": "\nமாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன பந்தயம்” என்கிறார் kugan — August 6, 2018 in கட்டுரைகள் • comments off தெருவுச் சண்டை கண்ணுக்கு குளிர்த்தி என்பார்கள். இது அப்படியல்ல. தெருவுச் சண்டையால் வட மாகாண […]\nதிட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் அழிவிலிருக்கும் தமிழர் இருப்பும்\nதிட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் அழிவிலிருக்கும் தமிழர் இருப்பும் ஈழத்து துரோணர் இன்று மிகப்பெரும் அபாயகரமான ஒரு கட்டத்தில் ஈழத்தமிழர் நாம் இருக்கின்றோம். ஈழத்து துரோணர் இன்று மிகப்பெரும் அபாயகரமான ஒரு கட்டத்தில் ஈழத்தமிழர் நாம் இருக்கின்றோம். ஆம், தமிழரின் பழம்பெரும் கிராமமான நாயாறு கிராமம் “நாயபுரவாக” மாறிச், சிங்களக் குடியேற்றம் […]\n இலங்கை என்னும் தீவை பொறுத்தவரை சிங்களம் என்பது முக்கிய ஒரு சொல்லாகவும் சிங்களவர்கள்ஆட்சி உரிமையாளர்களையும் மாறி போய் விட்டார்கள். இலங்கையில் சிங்களம் தன்னோடு இறுகப்பினைத்து கொண்டு இருகின்ற விடயம் […]\nஇலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் – விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்\nஇலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் – விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும் இரா.சிவசந்திரன் முகவுரை தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு […]\nஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை\nஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை [Tuesday 2014-04-29 20:00] சென்ற சனிக்கிழமை அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த ஈழநாடு வார ஏட்டின் 21 ஆவது ஆண்டுவிழாவுக்குப் போயிருந்தேன். நானும் […]\n2009 மே யில் நடந்தவை என்ன காகத்தின் நீண்ட பதில்களை வழங்கியிருக்கிறார் மாவை\n2009 மே யில் நடந்தவை என்ன காகத்தின் கேள்விகளுக்கு நீண்ட பதில்களை வழங்கியிருக்கிறார் மாவை கேள்வி 5: அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நிலை 1977 பொதுத்தேர்தலில் எவ்வாறுஇருந்தது பதில்: அப்போது அகில இலங்கை தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த விநாயக மூர்த்தி கூட்டணியாக […]\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில் சி. தவராசா, எதிர்கட்சித் தலைவர், வ.மா.ச வட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் […]\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\nகேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23 லட்சம் பேர், பிரதமர் விரைந்தார் August 17, 2018\nகாவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை August 17, 2018\nபாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு August 17, 2018\nகோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி) August 17, 2018\nவாஜ்பேயி: இந்திய அணு ஆயுத திறனுக்கு வலு சேர்த்தவர் August 17, 2018\nகேரள வெள்ளம்: 'மக்களை காப்பாற்ற முடியவில்லையே' - கதறி அழுத ஊராட்சித் தலைவி August 17, 2018\nயமுனை நதிக்கரையில் வாஜ்பேயி உடல் தகனம் August 17, 2018\nகேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள் August 17, 2018\nசினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா August 17, 2018\nவாஜ்பேயி: அமெரிக்க எதிர்ப்பை மீறி மாறனை ஆதரித்தார் - நினைவுகூரும் பழனிமாணிக்கம் August 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thannambikkai.org/1991/10/01/1535/", "date_download": "2018-08-18T01:25:10Z", "digest": "sha1:TT57DUAS4FVHQTBS4OVITJ55PY3XKUYX", "length": 46424, "nlines": 705, "source_domain": "thannambikkai.org", "title": " மன அமைதி... மன உறுதி... - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nமன அமைதி… மன உறுதி…\nமனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.\nமனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது.\nதிடீர் திடீர் என்று கோபம் வரும் – மிக நெருங்கியவர்கள் மீது அந்தக் கோபத்தைவிட வேண்டிவரும். அதனால் அருகில் நெருக்கமாக உள்ளவர்கள் எல்லாம் பகைவர்களாக மாறுவார்கள்.\nமன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும். எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுத்தாலும் தவறானதாகவே முடிந்து விடும்.\nமன அமைதி இன்மையால் உறக்கம் வராது. பலர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதற்கு மன அமைதி இன்மையே காரணமாகும்.\nமன அமைதி இன்மை உறக்கத்தைக் கெடுப்பதோடு உடல் நலனையும கெடுக்கும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்த நோயும் உடம்பில் இருக்காது, ஆனால் உடல் நலமாக இருக்காது.\nமன அமைதி இன்மை புகை, மது, மங்கை என்ற தவறான வழிகட்கு எல்லாம் இட்டுச் செல்லும் – பல குடும்பங்கள் அழிந்தது – அழிவது எல்லாம் – ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் மன அமைதி இன்மையே அடிப்படைக் காரணமாகும்.\nமன அமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது. எப்போதும் முகம் இருளடைந்தே இருக்கும். அதனால் மன அமைதியின் இன்றியமையாமையைப் புறக்கணிக்காமல் எச்சரிக்கையாக இருந்து அமைதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nமன அமைதி கெடக் காரணங்கள்\nஇரண்டு வகையில் மன அமைதி கெடுகின்றது. ஒன்று ஒருவன் தனது எண்ணங்களால், பேச்சால், செயல்பாடுகளால் மன அமைதியை இழந்து விடுதல்.\nஇரண்டு மற்றவர்களால், மன அமைதி இழத்தல். ஆக நம்மாலும் மற்றவர்களாலும் இந்த இரண்டு வகையாலும் மன அமைதி கெடுகின்றது.\nஒரு சிலர் தாங்கள் அறியாது, ஆராயாது, ஆசை காரணமாகச் செய்கின்ற செயல்களின் விளைவினால் மன அமைதியை இழக்கிறார்கள். இவர்கள் தங்கள்தவறுகளைப் புறக்கணித்த போதும் மனசாட்சி இடைவிடாது உறுத்திக்கொண்டே இருக்கும். அதனால் மன அமைதியை இழப்பர்.\nயாரையேனும் கடுமையாகப்பேசிவிட்டு வருந்துதல்; தனக்கு இருக்கும் செல்வாக்கால் வரம்பு மீறிய செயல்களைச் செய்து விட்டு வருந்துதல், இவைகள் எல்லாம் மன அமைதியை கெடுத்து விடுகின்றன.\nசிலர் வீண் செலவு செய்து விட்டு வருந்துதல், நேரத்தை வீண்டித்துவிட்டு வருந்ததல் இதுபோன்ற செயல்களால் அமைதியை இழந்து தவிப்பதும் உண்டு.\nபிறரால் மன அமைதி கெடுதல்\nபலர் மன அமைதியை இழப்பதற்கு அவர்களோடுதொடர்புடையவர்கள் காரணமாக இருப்பார்கள். மன உறுதி இல்லாதவர்கள் பிறரால் மன அமைதி கெடுவதே அதிகமாகும். குடும்பத்தில் இருந்தே இந்தச் சிக்கல்கள் தொடங்குகின்றன. குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை, வீட்டில் உள்ளவர்கள் சொன்னபடி கேட்கவில்லை, குடும்பத்தில் அளவிற்கு மீறிய செலவினங்கள் – இப்படி ஏதேனும் ஒரு காரணம் பெற்றோரின் மன அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.\nசிலர் தம் தாட்சண்யம், கருணை காரணமாகவே மன அமைதியை இழந்து விடுகிறார்கள். பாவம் என்று வேலை தெரியாதவனை ஒரு வேலைக்கு வைத்துக்கொள்ளுதல், பாவம் என்று உதவி செய்துவிட்டு அது திரும்ப வராதபோது மன அமைதியை இழத்தல் – அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்து விட்டு அதனை வசூல் செய்யாதபோது மன அமைதி இழந்து விடுதல் – ஒருவரை நம்பி மோசம் போனபோது மன அமைதியை இழத்தல் – இப்படிச் சிலர் மன அமைதியை இழந்து விடுகின்றனர்.\nதொழில் செய்யும் இடத்தில் தேவையில்லாததைப் பேசி அதனால் ஏற்படும் துன்பத்தால் மன அமைதியை இழப்பவர்கள் உண்டு. அவசரப்பட்டு ஏதோ சொல்வதும் சில செயல்களைச் செய்வதாலும் விளைவு வேறாக வரும்போது மன அமைதி போய்விடுகிறது.\nவீட்டில் அமைதி இல்லாதவர்களால் தொழில் செய்யும் இடத்தில் அமைதியாக இருக்க முடியாது. தொழில் செய்யும் இடத்தில் அமைதியை இழந்தவர்கள் வீட்டில் அமைதியைக் கெடுத்து விடுவார்கள். எல்லோரும் இழந்த அமைதியை மீண்டும் தேடி அலைகிறார்கள் என்பதுதான் உண்மை. அமைதி என்பது வெளியில் இல்லை. அது நம்முள்ளேதான் இருக்கிறது. அதைக் கண்டறிந்து நாம்தான் பாதுகாக்க வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஒரு தாளை எடுங்கள், உங்கள் அமைதி கெட்டதற்குரிய காரணங்களை வரிசைப்படுத்துங்கள். அமைதியாக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள். அதற்குப் பிறகு எப்போதிலிருந்து, எப்படி அமைதி கெட்டது என்பதற்குரிய காரணங்களை கண்டறியுங்கள். வரிசைப்படுத்துங்கள்.\n1. யாரேனும் உங்களைப்பற்றித் தவறாகப் பேசியதால் நீங்கள் அமைதியை இழந்திருக்கலாம்.\n2. நீங்கள் வாங்கிய கடனைத்திரும்பக் கேட்டபோது உங்கள் அமைதிக்குப் பாதிப்பு நேர்ந்திருக்கலாம்.\n3. நடக்க வேண்டிய காரியங்கள் சரியாக, சீராக நடக்கவில்லையானாலும் நீங்கள் நினைத்தக் காரியம் நினைத்தபடி நடக்கவில்லையானாலும் அமைதி இழக்கும் நிலை ஏற்படும்.\n4.. நீங்கள் அன்பு செலுத்தியவர்கள் உங்களைப் புறக்கணித்த போது அமைதியை இழந்திருக்கலாம்.\n5. ஒரு பொருளை வாங்க எண்ணி முடியாதபோது, ஒரு பதவியை அடைய முயற்சித்துத் தோல்வி அடைந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.\n6. உங்கள் குழந்தைகள் தவறான பழக்கத்தற்கு அடிமையாகி விட்டமை அறிந்தபோது அமைதியை இழந்திருக்கலாம்.\n7. அநியாயமாகச் செயல்கள் நடைபெறுகின்றபோதும், அதனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்பட்ட போதும் அமைதியை இழந்து இருக்கலாம்.\n8. உடல் நலக்குறைவு, தீராத நோய், உடல் ஊனம் போன்றவைகளும் மன அமைதியைக் குலைத்து விடும்.\n9. காதல் தோல்வி – இது போன்ற உள்ளார்ந்த செயல்பாடுகளால் அமைதியை இழக்க நேரிடலாம்.\n10. நாட்டின் நிலையை நினைத்து சிலர் அமைதியை இழப்பதும் உண்டு.\nஇத்தகைய இவை போன்ற பல காரணங்களால் நம் மன அமைதிக்கு பாதிப்பு நேர்வதுண்டு எதனால் என்று கண்டறிந்து அதை நீக்க முயற்சிக்க வேண்டும். அதுவே மன அமைதியை மீண்டும் பெறுவதற்குரிய சிறந்த வழியாகும்.\nஅமைதியை வளர்த்துக் கொள்ள சில விதி முறைகள்.\n1. நல்ல பழக்க வழக்கங்கள்.\nமுறையான பழக்க வழக்கங்கள் அமைதியை நல்கும். நமது முறையான பழக்க, வழக்கங்களே – அதிகாலையில் எழுதல், குளித்துவிட்டுப் பணிகளுக்குச் செல்லல் போன்ற சிறு சிறு செயல்கள்தாம் நம் குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்கு நிரந்தர பாடமாக அமைகின்றன.\nதநதை தாம் புகை பிடிப்பதை அங்கீகரித்துக் கொள்கிறார். தன் மகன் புகை பிடிக்கும்போது மன அமைதியை இழந்து விடுகின்றார். காரணம் மகனைத் திருத்தும் தகுதியை அவர் இழந்துவிடுகிறார்.\nமுடிவதை முடியும் என்றும் முடியாத்தை மறுத்துவிடுதலும் அப்போதைக்குச் சிரமாக இருந்தாலும் நாளடைவில் மன அமைதி கிட்டும். இல்லாவிடின் மன அமைதி கெட்டுவிடும். முறை தவறி, தாட்சண்யம் கருதிச் செய்வதால் பலர் துன்பத்திற்கு ஆளாகி மன அமைதியை இழந்து விடுகின்றனர்.\nநல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். நல்ல நண்பர்கள் இருக்கும்போது தீய சிந்தனைக்கோ, தீய பேச்சுக்களுக்கோ இடமில்லை. தீமையில்லாதபோது அமைதி நிலைபெறுகிறது. நல்ல நூல்களும் மன அமைதிக்கு வழி வகுக்கிறது.\nபிறர் செய்யும் சில குறைகளை – பொறுத்துக் கொள்ளவும் – சில குறைகளை மன்னிக்கவும் – சிலவற்றை முழுமையாக மறந்து விடவும் கற்றுக் கொள்வதால் பலரது அமைதி பாதுகாக்கப்படுகிறது.\nதியானப் பயிற்சியால் மனம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி காக்கப்படுகிறது; தியானப் பயிற்சி – முறையாக – நீண்ட நாள் – தொடர்ந்து செய்தால் அன்றிப் பயன் நல்காது. ஈடுபாடு இல்லாத தியானத்தாலும் பயனில்லை.\nசில வகையான துன்பங்கள் – விரைவில் தீர்க்கமுடியாத – ஊனங்கள் அவமானங்கள் – மன அமைதியைக் கெடுத்து விடுவதுண்டு. அத்தகைய சூழலில் இறையருளை எண்ணி நமது கடமையைச் செவ்வனே ஆற்றுவதே மன அமைதிக்குச் சிறந்த வழியாகும். அறிவுக்கும் அப்பாற்பட்டு – காரணம் காணவே முடியாத சில துன்பங்களுக்கு இறையருள்தான் வழிகாட்ட வேண்டும். அந்த நம்பிகையோடு செயல்படுவதுதான் மன அமைதிக்கு சிறந்த வழியாகும்.\nநாம் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்து இருப்போம். அதற்குப் பிராயச்சித்தமாக – அதற்கு ஈடுசெய்யும் வகையில் – இசல நன்மைகளைச் செய்யும்போது நமக்கு மன அமைதி ஏற்படுகின்றது.\nஇது ஒரு வகை. மற்றொரு வகை நாம் செய்யாத ஒரு தவறுக்காக தண்டனை ஏற்க வேண்டிவரும். அப்போது, நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள துன்பம் ஏற்கனவே செய்த தவறுக்கு உரியது என்று சமநிலைப்படுத்திக்கொண்டால் அமைதியை இழக்க நேரிடாது.\nமன அமைதியும் மன உறுதியும்\nமன அமைதியும் மன உறுதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதை அமைதியாக வைத்திருப்பவர்கள் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடன் இருப்பார்கள். அதேபோல் மன உறுதியுடன் இருப்பர்கள் ஒருபோதும் மன அமைதியை இழக்கமாட்டார்கள்.\nமாறாக ஒன்றை இழந்தால் மற்றொன்றையும் இழந்துவிட நேரிடும், ஆகவே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக விளங்கும் இரண்டையும் ஒரு சேரப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.\nஇந்த இரண்டு தன்மைகளையும் பாதுகாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் எவ்வித முதலீடு தேவை இல்லை. பொருட் செலவும் செய்ய வேண்டுவதில்லை. உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விடுத்து அறிவு பூர்வமாகச் சிந்தித்து நம்மை நாமே சரிசெய்துகொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.\nசிலரைப் பாருங்கள். எப்போதும் சிரித்த முகத்துடனேயே செயலாற்றுவார்கள். அவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாப் பொருளாதாரப் பிரச்னைகள், தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினைகள். பல்வேறு வெளி விவகாரங்கள் என்று பல இருக்கும்.\nஅவற்றை அவர்கள் அணுகும் முறை – அவற்றைக் கையாளும்முறை – அவற்றைச் சீரணிக்கும் முறை – அவற்றை ஏற்றுக்கொள்ளும் முறை இவற்றை உற்றுக் கவனித்தால் – உண்மை விளங்கும். நாம் எந்த அளவுக்கு – இந்த அணுகு முறைகளில் குறைபாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பது விளங்கும்.\nவெரி குட் இட் இஸ் வெரி உசெபிஉல்\nஉண்மாயில் இந்த கருத்து மிகவும் நல்ல இருக்கு , நான் மிகவும் மன உளைச்சலில் இருக்றேன் . முடிந்தால் எனக்கு உதவி புரியவும் . என் செல் நம்பர் 9003614113\nபடிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது.\nஐயா நான் மிகும் துயரத்தில் இருக்றேன். என் மனம் அமைதி பெற வலி கூறுங்கள்.\nவெரி குட் ரேஅல்லி கிரேட்\nமிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி…….\nமிக மிக பயனுள்ளதாக இருந்தது. படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது மிக்க நன்றி……. மிக்க நன்றி…….\nஉண்மாயில் இந்த கருத்து மிகவும் நல்ல இருக்கு , நான் மிகவும் மன உளைச்சலில் இருக்றேன் . முடிந்தால் எனக்கு உதவி புரியவும்\nவெரி குட் ஐடியா சூப்பர் ஐடியா யாம் இம்ப்ரெஸ் போர் தி pages\nசூப்பர் சார் எனக்கு நோய்களை பற்றி பயம் இருந்ததது ஆனால் இ தனால தூக்கம் வரலை இதை பார்த்து தெரிஞ்சுக்கிறேன்\nதிஸ் மெசேஜ் வெரி வெரி சூப்பர் சார்,\nஇட்’ச வெரி நிசே சார்.. i அம் ரேஅல்லி லவ் திஸ் சுப்ஜெக்ட் தங்க உ சோ மச் sir\nநான் ஈரோடு நகரத்தை சேர்ந்தவள் ,\nநான் காதல் திருமணம் செய்து கொண்டவள், நான் 3 வருடங்கள் நன்றாக இருந்தேன் ஆனனல் இப்போது இல்லை, எல்லா பெண்களை போல எனக்கும் வரதட்சணை கொடுமை தான், தினமும் வீட்டில் கொடுமை தான் நடக்கிறது அதனால்தான் என் மன அமைதி கேட்டு விட்டது, ஆனனல் இப்பொது உங்கள் கரத்தை படித்த பிறகு மன அமைதி எப்படி வைத்து கொள்வது என்று தெரிந்த கொண்டேன், மிக மிக நன்றி தேங்க்ஸ் டு உ\nமன அமைதிகான இன்னும் பல கருத்துகளை எதிர் பார்க்கிறேன்…இந்த கருத்துகளுக்கு நன்றி….\nவி ஹவே சென்ட் திஇஸ் மெசேஜ் மி ஆல் பிரீண்டே டு ஷேர்\nமிக நன்றாக உங்கள் கருத்துக்களை கூறியுள்ளிர்கள். மன அமைதி பற்றிய இக்கட்டுரையை கொடுத்த பேராசிரியர் இல.செ.கந்தசாமி இன்ன்று நம்மிடையே இல்லை. நான் இவரிடம் முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவன். அவரின் எழுத்துக்கள் சாகா வரம் பெற்று iruppathu கண்டு மிக மகிழ்ச்சி\nகருத்துகள் அழகாகவும் தெழிவாகவும் இருக்கிறது\nநன்றாக உள்ளது, எனக்கு தேவையானதுதான்\nமிகவும் நன்றாக உள்ளது.உங்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி தொடரட்டும். உங்களை போன்றவர்கள் நல்ல கருத்துகளை சொல்வதால் மன அமைதியை இழந்த நாங்கள் மன அமைதி அடைகிறோம். கோடானு கோடி நன்றி.\nஇட்ஸ் வெரி உஸ் புல் அட்வைஸ் தந்க்யௌ\nஇந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்\nஒரு சிலர் தாங்கள் அறியாது, ஆராயாது, ஆசை காரணமாகச் செய்கின்ற செயல்களின் விளைவினால் மன அமைதியை இழக்கிறார்கள். இவர்கள் தங்கள்தவறுகளைப் புறக்கணித்த போதும் மனசாட்சி இடைவிடாது உறுத்திக்கொண்டே இருக்கும். அதனால் மன அமைதியை இழப்பர்.கேள்விக்கு பதில் சொல்லுங்கள்\nஎனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ஆனா இப்ப அப்படி இல்லை ரொம்ப தேங்க்ஸ் நா முதோ காமன் ஆசை இருந்து நா ரொம்ப கை அடிசு மனசு கஷ்டமா இருந்துஷு ஆனா இப்ப அது இல்லை\nமிக மிக பயனுள்ளதாக இருந்தது. படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது மிக்க நன்றி…….\nநீங்கள் அளித்த தகவல் மிக சிறப்பாக இருந்தது.நன்றி.\nமிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. மிகவும் நன்றி ஐயா\nமிகவும் நயமான வார்த்தைகளால் வழங்கப்பட்ட தங்களின் தொகுப்பு மிகவும் அருமை. மனதிற்கு மிகவும் இதமான அமைகின்றது. பலர் கூறியுள்ளது போது நிலைப்பாடின்றி இருந்த மனநிலையுடன் தங்களின் தொகுப்பை படித்த போது மனதை வருடுகிறது.. மிக்க நன்றி…\nஐயா மிக மிக ரொம்ப நன்றி\nஇன்று முதல் நான் என்னுடைய கஷ்டங்களை ஏற்று கொண்டு சந்தோஷமாக இருப்பேன்\nமிக மிக பயனுள்ளதாக இருந்தது. படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது மிக்க நன்றி…….\nகட்டாயம் இதனை பின்பற்றினால் வாழ்க்கை ஜொலிக்கும் ok….மிக்க நன்றி…\nமிக மிக பயனுள்ளதாக இருந்தது. படிக்கும் போதே மன அமைதி ஏற்படுகிறது மிக்க நன்றி…….\nமிக மிக பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி…….\nஐயா மிகவும் நன்றி.நான் நீங்கள கூரியதை கண்டிப்பாக எனது வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்வேன்\nஐயா மிகவும் நன்றி.நான் நீங்கள கூரியதை கண்டிப்பாக எனது வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்வேன்.நான் எனது தவறுகளை உணர்ந்துவிட்டேன்.மிக்க நன்றி….\nமன உறுதி.. மன உறுதி.. மன உறுதி…\nமன அமைதி… மன உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ongc-decided-to-make-well-in-5-district-at-tamilnadu/", "date_download": "2018-08-18T01:19:24Z", "digest": "sha1:B7GMBA54NZX4O4LPYAUV3VRYS3H3A476", "length": 12083, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தஞ்சை, நாகை, திருவாரூரில் எண்ணெய் கிணறுகள்! - ONGC decided to make well in 5 district at Tamilnadu", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nதஞ்சை, நாகை, திருவாரூரில் எண்ணெய் கிணறுகள்\nதஞ்சை, நாகை, திருவாரூரில் எண்ணெய் கிணறுகள்\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம் அடங்கிய சூடு மறைவதற்குள், புதிய அதிர்ச்சிகர செய்தி ஒன்று வெளியாகியுள்ளது\nதமிழ்நாட்டில் 21 புதிய எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியா முழுவதும் 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, பிப்ரவரி 15-ஆம் தேதி செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அங்கு பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன.\nபல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போராட்டக் குழுவினர் சந்தித்தனர். அப்போது தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கவே கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து, இந்த திட்டத்திற்கு மாநில அரசு வழங்க வேண்டிய அனுமதிகளை வழங்காது என முதல்வர் உறுதியளித்த பின்னரே இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவித்தனர்.\nஇந்தச் சூழ்நிலையில் இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து பதிலளித்துள்ள ஓ.என்.ஜி.சி, 2011-ஆம் ஆண்டு கருத்து கேட்பு கூட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டடுள்ளது என கூறியுள்ளது.\nதூதுவன் வருவான்… மாரி பொழியும் சென்டிமென்ட்டாக வைரலாகும் ‘ராஜ ராஜ சோழன்’ மீம்\nதம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓ.என்.ஜி.சி; மக்கள் நலனில் ஒண்ணுமில்லை\nஅரசு மருத்துவமனையின் அலட்சியம்: காரிலேயே குழந்தையை பிரசவித்த பெண்\nநன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட மக்களை தூண்டியதாக பேராசிரியர் ஜெயராமன் கைது\nதிருவாரூரில் ரமணா திரைப்பட பாணியில் இறந்த பெண்ணுக்கு சிகிச்சை: கதறும் கணவர்\n டூ-வீலரில் சென்றவர் “சீட் பெல்ட்” போடாததற்கு ரூ.500 அபராதம்\nஆளுநரின் நடவடிக்கை இல்லை என்றால், ஜனாதிபதியை சந்திப்போம்: மு.க ஸ்டாலின்\nசோதனைகளை கண்டு அஞ்சப்போவதில்லை: முதல்வர் பழனிசாமி திருவாரூரில் பேச்சு\n110 இடங்களில் எண்ணெய் கிணறுகள்: மக்கள் நலனைக் காக்க தமிழக அரசின் பதில் என்ன\n50% இடஒதுக்கீடு கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடலாமா\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nAnti-Sterlite Protests: ஆறு பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nபிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2006451", "date_download": "2018-08-18T00:29:10Z", "digest": "sha1:2KZHIM4PQQCN7JJM7Z7IGXWJEJLC6JKD", "length": 18057, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு | Dinamalar", "raw_content": "\nகோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு\nசிங்கப்பூர்: சிங்கப்பூரில், 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர், லீ சீன் லுாங் பங்கேற்றார்.\nசிங்கப்பூரின், 'லிட்டில்இந்தியா' பகுதியில், 164 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 1978ல், தேசிய நினைவுச் சின்னமாக, சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கோவிலை, 29 கோடி ரூபாய் செலவில், நான்காவது முறையாக சீரமைக்கும் பணி, 2016ல் துவங்கியது. இப்பணியில், உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களும் ஈடுபட்டனர்.\nசீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, குடங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், ஒன்பது கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது.\nஇவ்விழாவில், 40 ஆயிரம் பக்தர்கள், சிங்கப்பூர் பிரதமர், லீ சீன் லுாங், பிரதமர் அலுவலக அமைச்சர், சான் சுன் சிங் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் பங்கேற்றனர்.\nRelated Tags கோவில் கும்பாபிஷேகம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் ... லிட்டில் இந்தியா அமைச்சர் சான் சுன் சிங் சிங்கப்பூர் பக்தர்கள் சிங்கப்பூர் தேசிய நினைவுச் ... சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர் பிரதமர் ... Temple Kumbabishekam\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசொரியார், கட்டுமரம், கட்டுமர பிரைவேட் கம்பனி, பெர்மனெண்ட் தி க தலைவன், இவர்களளெலாம் தமிழ் நாட்டு சாபக்கேடுகள். சிலர் இன்றும் 'புகழ்' பாடுவார்கள்\nடாஸ்மாக் நாட்டில் தமிழ் மட்டும் அல்ல சட்டம் ஒழுங்கு ..சீரழிய கட்டு மரம் தான் காரணம் ,, இதை நம்பாதவர்கள் மன நோய் மருத்துவரை அணுக வேண்டும் சிங்கப்பூரில் பேசப்படும் ..எழுதப்படும் அழகிய தமிழ் அங்கு போகும் டாஸ்மாக் நாட்டு அரசியல் வியாதிகளுக்கு விளங்குமா ....சென்ட்ரல் ஸ்டேஷன் ...டி ஸ்டால்..சென்ட்ரல் ஆஸ்பிடல்...இவை எல்லாம் செம்மொழி ஹி ஹி ஹி .இந்த அழகில் செம்மொழி மாநாடு\nதமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்க லில், நம்மூர் தங்க சிலை சீதபேதி இல்லாதவரை மகிழ்ச்சி.\nடாஸ்மாக் நாட்டு இஸ்தபதிகள் சிலை செய்ய கொடுத்த தங்கத்தையே விழுங்குபவர்கள் அல்லவா ..உபயம் கட்டுமரம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/galle/events-entertainment", "date_download": "2018-08-18T00:31:04Z", "digest": "sha1:C7UFGTQX42NSWIVPNL7ICHAVNB2XFFL4", "length": 4059, "nlines": 84, "source_domain": "ikman.lk", "title": "நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nகாலி உள் நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகாலி, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகாலி, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகாலி, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nகாலி, நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/bharathirajaa-s-abusive-comments-kills-manivannan-177193.html", "date_download": "2018-08-18T00:58:16Z", "digest": "sha1:ELW66RY7BSR5FX4VP4BS6DD4YKYUDAFI", "length": 13548, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா!! | Bharathirajaa's abusive comments kills Manivannan? - Tamil Filmibeat", "raw_content": "\n» மணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா\nமணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா\nமணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்... அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nபாரதிராஜாவிடமிருந்து வந்து மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர்கள் இருவர்தான். ஒருவர் கே பாக்யராஜ். மற்றவர் மணிவண்ணன்.\nபாரதிராஜாவின் கேம்பில் எழுத்தாளர்கள் என கம்பீரமாகச் சொல்லிக்கொண்ட இருவர் பாக்யராஜும் மணிவண்ணனும்தான். இதை பலமுறை பாரதிராஜாவே கூறியுள்ளார்.\nமணிவண்ணன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் வேகத்துக்கு படப்பிடிப்பில் யாராலும் ஈடு கொடுக்க முடியாது. அதே நேரம் மிக இளகிய மனம் படைத்தவர். தன்னிடம் பழகிய அனைவரிடமுமே வெளிப்படையாக நடந்து கொள்பவர்.\nஎதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தாலும், தான் பெரிதும் மதிப்பவர்கள் தன்னை அவதூறாகப் பேசினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார்.\nஆயிரம் கருத்து பேதங்கள் இருந்தாலும், தான் மதிக்கும் ஒருவரை எப்போதும் மரியைதைக் குறைவாக அழைத்ததில்லை மணிவண்ணன். ஈழப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தாலும், அவரை எப்போதும் தலைவர் கலைஞர் என்றே குறிப்பிட்டு வந்தார் அத்தனை பேட்டிகளிலும்.\nஇயக்குநர் பாரதிராஜா மீதும் மணிவண்ணனுக்கு வருத்தங்கள் உண்டு. அவர் தன்னை நடத்திய விதம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மணிவண்ணன் எள்ளலுடன் பேசினாலும், 'பாரதிராஜா என் தகப்பனைப் போன்றவர். அவரில்லா விட்டால் இன்று திரையுலகில் நான் இல்லை. என்னை இரண்டாம் முறை ஈன்றவர். அவருக்கு என் மீது அன்பிருக்கிறதோ இல்லையோ... எனக்கு எப்போதும் உண்டு. நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால்கூட மன்னிச்சிடுங்கப்பா,\" என்று வெளிப்படையாகப் பேசியவர் மணிவண்ணன்.\nஆனால் பாரதிராஜாவுக்கோ அந்த பெருந்தன்மை துளியும் இல்லை. தன்னைவிட 20 வயது இளையவரான மணிவண்ணன் பற்றி பாரதிராஜா சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருந்ததைப் படித்த அத்தனைப் பேருமே முகம் சுளித்ததோடு, பாரதிராஜாவை சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். அத்தனை கேவலமான எழுத்து.\nஇதைப் படித்த மணிவண்ணன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவரிடம் பலரும் கருத்துக் கேட்க முயன்றனர். கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது அலைபேசி. ஆனால் அவர் யாருக்கும் பதிலோ விளக்கமோ சொல்லவில்லை.\nஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை இந்த மனஅழுத்தமே கொன்றுவிட்டது என்பதுதான் பேச்சாக உள்ளது.\nயாகாவாராயினும் நாகாக்க என அய்யன் சொன்னதை பாரதிராஜாக்கள் மறந்துவிடுகிறார்களே\nபாரதிராஜா ஆனந்தவிகடனில் மணிவண்ணன் பற்றி எழுதியது குறித்து இரு தினங்களுக்கு முன் நாம் வெளியிட்ட கட்டுரை..\nபாரதிராஜாவின் கடைசிக் காதல் படம் - கடலோரக் கவிதைகள்\nஇன்று எந்தெந்த படங்களுடைய ஆடியோ லாஞ்ச் என்று தெரிஞ்சிக்க இத படிங்க\nபணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு.. 'ஏ' படத்துக்கு பாரதிராஜா கடும் கண்டனம்\nஇதுக்காகத்தான் நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்\nஉதயமானது தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை\nதமிழர் வாழ்வியலைக் கூறும் பாரதிராஜாவின் மண்வாசனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/police-attacks-on-mathaappu-hero-jayan-175599.html", "date_download": "2018-08-18T00:58:15Z", "digest": "sha1:Z7SKD5J757P4J7R33XOYGTCDQRGVA4G5", "length": 10276, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மத்தாப்பு பட நாயகன் மீது சொந்த ஊரில் போலீஸ் தாக்குதல்! | Police attacks on Mathaappu hero Jayan | மத்தாப்பு பட நாயகன் மீது சொந்த ஊரில் போலீஸ் தாக்குதல்! - Tamil Filmibeat", "raw_content": "\n» மத்தாப்பு பட நாயகன் மீது சொந்த ஊரில் போலீஸ் தாக்குதல்\nமத்தாப்பு பட நாயகன் மீது சொந்த ஊரில் போலீஸ் தாக்குதல்\nதிசையன்விளை: மத்தாப்பு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் புது நடிகர் ஜெயனை, அவரது சொந்த ஊரில் காவல்துறை அதிகாரிகள் தாக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாகிராமத்தை சேர்ந்தவர் ஜெயன். இவர் தினந்தோறும் நாகராஜன் இயக்கும் மத்தாப்பு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nநாலந்துலாகிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.\nதனது நண்பர்களை காரில் அழைத்து செல்வதற்காக திசையன்விளை பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றார். அப்போது அங்கு ரோந்து வந்த திசையன்விளை காவல்துறையினர் காரை அங்கிருந்து எடுக்குமாறு கூறியுள்ளனர்.\nஇது தொடர்பாக ஜெயனுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஜெயனை சரமாரி தாக்கி அவரது காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டனராம்.\nஇந்நிலையில் நேற்று ஜெயன் தன்னை காவல்துறை அதிகாரி தாக்கியதாக கூறி பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் ஜெயனின் தந்தை சுடலைக்கண்ராஜா தனது உறவினர்களுடன் இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து எஸ்.பி.யிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் திசையன்விளை ஏ.எஸ்.பி. வருண்குமார் எனது மகனை எந்தவித காரணமும் இல்லாமல் தாக்கியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஏ.எஸ்.பி. வருண்குமார் மீது ஏற்கெனவே பலதரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். அப்பகு வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இப்போது நடிகரைத் தாக்கிய வழக்கு மூலம் ஏஎஸ்பி சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nஅந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/08/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-vs-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T00:50:48Z", "digest": "sha1:XGNALQR26H4BRHKN3L322FXIBXZ255MB", "length": 43026, "nlines": 279, "source_domain": "tamilthowheed.com", "title": "மாமியார் Vs மருமகள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← குடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே\nமாமியார் மருமகள் சண்டைகள் ஏற்பட்டு பெற்ற தாய் கட்டிக்கொண்ட மனைவியை பார்க்கக்கூடாது என்று கூறுகிறார் அல்லது அருமை மனைவி தாயை பார்க்க வேண்டாம் என்றும் அடம்பிடிக்கிறாள் என்ன செய்வது\nகுடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர்களே குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட் கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம். நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட் கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம். நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார் நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார் உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன அலசிப்பார்ப்போம் எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52\nமுதலில் மேற்கண்ட இந்த இறை வசனத்தை உள்ளத்தில் ஆழமாக பதித்துக்கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு இடமே இல்லை காரணம் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கம் கீழ்படியாமைதான் எந்த இடத்திலாவது அல்லாஹ் பெற்ற தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உறவுமுறைகள் ஆகியவற்றை முறித்துக்கொண்டு வாழ அறிவுறுத்தி யிருக்கிறானா எந்த இடத்திலாவது அல்லாஹ் பெற்ற தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உறவுமுறைகள் ஆகியவற்றை முறித்துக்கொண்டு வாழ அறிவுறுத்தி யிருக்கிறானா நம் ஆதிபிதா ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) இருவரும் தவறு செய்தார்கள் அல்லாஹ் இருவருக்கும்தான் தண்டனை அளித்தான் இதில் ஆண் பெண் என்ற பாரபட்சம் பார்த்து தண்டனை அளிக்கவில்லையே\nபெற்றோரை பேணுதல் பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14).\nஇன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).\nதாய்க்கு முன்னுரிமை வழங்கிய மாநபி நாயகம் (ஸல்)\n‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)\nதந்தைக்கு கண்ணியம் அளிக்க அறிவுறுத்திய அருமை நபி (ஸல்)\nநபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும். நூல்: திர்மிதீ\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’ அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516\nபெற்ற தாய், தந்தையர் சுவனத்திற்கு உவமை\nமுஆவியா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ” நான் போரில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அதுபற்றி உங்கள் ஆலோசனையைப் பெற வந்துள்ளேன்” என்று கூறினேன். “உனக்குத் தாய் இருக்கிறார்களா” என்று நபி(ஸல்) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்கள் : நஸயீ, தப்ரானி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார். அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி) நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்\n“உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.” (ஸஹீஹ் முஸ்லிம்)\n(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 30:21)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஅபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)\nபெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nமனைவியின் நியாயமான உரிமையை பரிக்காதீர்கள்\n உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள் உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஸுனனுத் திர்மிதி)\n சுய பரிசோதனை செய்து பாருங்கள்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)\nபெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு\nபெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள், உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள் முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன் முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன் நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒரு படைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப் பீர்களா நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒரு படைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப் பீர்களா இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும் இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும் உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப்பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன்பிறந்தவர்களுமே உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப்பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன்பிறந்தவர்களுமே அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும் இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும் மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம் மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம் தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும் தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும் மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள் மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்\n அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன் மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52 குறிப்பு\nமார்க்க அறிவு குறைந்த, இணைவைப்பு பெற்றொர் அல்லது மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரரிகள், உறவுமுறைகளை உடையவராக நீங்கள் இருந்தால் அவர்கள் வெறுக்காதீர்கள் மாறாக அவர்கள் திருந்தும் வரை அவர்களிடம் அழகிய முறையில் தாஃவா செய்யுங்கள் உங்கள் மூலமாக அல்லாஹ் அவருக்கு நேர்வழிகாட்டினால் உங்கள் சுவனப்பாதை வலுவாக அமையலாம். ஒவ்வொருவரும் தத்தம் குடும்பத்தை சிறந்த தாஃவா தளமாக அமைத்துக்கொண்டால் நிம்மதி கிடைக்குமே ஆனால் நாம் நம் குடும்பத்தை சினிமா திரையரங்கு போலத்தானே மாற்றியுள்ளோம்\nநம் அனைவருக்கும் நல் குடும்பத்தை வழங்கி அல்லாஹ் நல்லருள் புரிவானாக\n– நன்றி: IslamicParadise சிராஜ் அப்துல்லாஹ்\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\nநபி வழியில் நம் ஹஜ்\nபெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newindian.activeboard.com/t47885794/topic-47885794/?page=1", "date_download": "2018-08-18T01:30:10Z", "digest": "sha1:HZ2SJQLJAMKU5WZUEUPKBUU4456FL6JW", "length": 21639, "nlines": 76, "source_domain": "newindian.activeboard.com", "title": "மதரஸாக்களில் என்ன நடக்கின்றன - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம்-இந்தியா- -> மதரஸாக்களில் என்ன நடக்கின்றன\nTOPIC: மதரஸாக்களில் என்ன நடக்கின்றன\nமதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா\nமதரஸாக்களில் என்ன நடக்கின்றன – அவை மன-நோய், மனச்சிதைவு, முதலியவற்றை தீர்க்கின்றனவா அல்லது அதை துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனவா\nமதரஸாவில் நடந்த ரெயிட்/அதிரடி சோதனை: பாகிஸ்தான் தலைநகரமான கராச்சியில், சோரம் கோத் என்ற இடத்தில் மசூதிக்குப்பக்கத்தில் இயங்கி வரும் ஒரு மதரஸாவிலிருந்து 50ற்கும் மேற்பட்ட 10-14 வயது சிறுவர்கள், 15-30 வயது இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்[1]. ஜக்கரியா மதரஸா என்ற இஸ்லாமிய மத போதனை செமினரி / பள்ளிக்கூடம் / குருகுலம் இயங்கி வரும் இடத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கு அங்கிருந்து வினோதமான சப்தங்கள் வருவதினால் சில சந்தேகங்கள் ஏற்பட்டதால், அவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்[2]. அதன்படி, 12-12-2011 (திங்கட்கிழமை இரவு) அன்று அந்த ஜக்காரியா மதரஸாவின் அடித்தளத்தை போலீஸார் அதிரடியாக சோதனையிட்ட போது, சிறு-சிறு புறாக்கூண்டுகள் போன்ற அறைகளில் சங்கிலிகளால் கட்டுண்ட, அடிபட்ட, மனநிலை சமமாக/சரியாக இல்லாத, போதை மருந்துக்குட்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட என்ற பலர் காணப்பட்டனர்[3]. உடனடியாக அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nவிடுவிக்கப்பட்டவர்களின் மனோநிலை: இலவசமாக இஸ்லாம் மதக்கோட்பாடுகள் சொல்லித்தரப்படும் என்று அவர்கள் அங்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்களாம். ஆனால், அவர்களை சங்கிலியிலால் பிணைக்கப்பட்ட நிலையிலும், அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையிலும், செக்ஸ் தொல்லைக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது பிடோபைல் போன்ற தொந்தரவு / வழக்கம் பின்பற்றப்பட்டதா அல்லது, அந்த சிறுவர்கள்-இளைஞர்கள் அவ்வாறு துர்பிரயோகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டனரா என்று ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பாடி-ஆட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோருமே மன-அளவில் பாதிக்கபட்டவர்கள் என்று தெரிந்தது[4]. இதே மாதிரியான அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள்-இளைஞர்களின் நிலை முன்பு மூல்தான், சிந்த், கைபர் பக்துன்ங்வா முதலிய இடங்களிலிலும் கண்டறியப்பட்டன.\n: அரசு புள்ளி விவரங்களின் படி, 15,000ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன. அவை சுமார் 2 மில்லியன்கள் – 20,00,000 அதாவது 20 கோடி மாணவர்களுக்கு இத்தகைய இஸ்லாம் மதகோட்பாட்டு கல்வி கொடுத்து வருகின்றன. மக்கள் மற்ற பள்ளிகளுக்கு தங்களது சிறுவர்களை அனுப்பினால் செலவாகும் என்பதினாலும், தீவிரவாத கொள்கைகளில் பிடிப்புள்ளதனாலும், கல்வி, உணவு இலவசம் என்பதினாலும் பெற்றோர்கள் அனுப்பிவைப்பதாக தஎரிகிறது. இத்தகைய மதரசாக்கள் அரசின் கட்டுப்பாடுகள், விதிகள் முதலியவற்றில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்று மனித உரிமை மற்றும் சமூக சேவகர்கள் கூறுகிறார்கள். நாஸிஸ் புரோஹி என்ற சமூகவியல் ஆர்வலர், அடிப்பது, தண்டிப்பது முதலியன சட்டப்படி குற்றம் என்றாலும், இத்தகைய பள்ளிகள், மதரஸாக்களில் சாதாரண விஷயங்களாக இருக்கின்றன என்கிறார்[5].\n: மதரஸா ஜக்கரையாவின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்[6]. உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமைசர் ரஹ்மான் மாலிக், “அவர்கள் மூளசலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சமூகத்திலுள்ள மற்ற மக்களின் மீதான எதிர்ப்புத்தன்மை முதலியவற்றை அறிந்து கொள்வது கடினம். அவர்களை மிருகங்களைப் போலக் கட்டிவைத்துள்ளார்கள்”, என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[7]. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என்றால், அவர்கள் ஏன் “மூளைச்சலவை” செய்யப்படவேண்டும் இன்றைய நிலையில் “சிக்ஸோபிடனியா” என்ற சாதாரண நிலைகளுக்கே மருத்துவர்கள், ஆஸ்பத்திரிக்களில், விஞ்ஞான ரீதியில் சிகிச்சை அளிக்கிறார்கள். பிறகு, மதரஸாக்களில் கட்டிப் போட்டு அடித்தால், அவர்கள் குணமாவார்களா இன்றைய நிலையில் “சிக்ஸோபிடனியா” என்ற சாதாரண நிலைகளுக்கே மருத்துவர்கள், ஆஸ்பத்திரிக்களில், விஞ்ஞான ரீதியில் சிகிச்சை அளிக்கிறார்கள். பிறகு, மதரஸாக்களில் கட்டிப் போட்டு அடித்தால், அவர்கள் குணமாவார்களா அல்லது இதன் பின்னணி என்ன\nபாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அறியப்பட்ட விஷயங்கள்: தீவிரவாத, பயங்கரவாத இயகங்களுக்கும், இந்த மதரஸாவிற்கும் தொடர்பு இருக்குமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். அடைப்பட்டுள்ளவர்களை கேட்டபோது, அவர்கள் பலவிதமான விவரங்களைக் கூறியுள்ளது திகைப்படையச் செய்துள்ளன[8]:\nஎங்களுக்கு ஜிஹாத் போதிக்கப் படுகிறது. புனித போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.\nவடமேற்கிலிருந்து தாலிபான்கள் எங்களை தயார்படுத்து அழைத்துச் செல்கிறார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். எங்களை ‘முஜாஹித்தீன்’களாக மாற்றுகிறார்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளனர்[9].\nஎங்களுக்கு சாப்பாடே சரிவர கொடுப்பதில்லை, அடைத்து வைத்து அடிக்கிறார்கள். எங்கள் பொற்றோர்களைப் பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை.\nமுப்பது நாட்களுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வெயிலையே பார்க்காமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nமாறாக, பெற்றோர்கள் தாம் அவர்களை அங்கு சேர்த்துள்ளனர். அவர்கள் சில குற்றங்களில் அகப்பட்டுள்ளதால், தப்பிவிடாமல் இருக்க பிணைத்து வைத்துள்ளோம் என்று மதரஸாவில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.\nபோதை மருந்துக்குட்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சிகிச்சையளிக்க அழைத்துவரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.\nஹெராயின் போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையான அவர்கள் தப்பித்து விடக்கூடாது என்றுதான் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டுள்ளார்கள்.\nஆனால் மருத்துவ ரீதியில் சிகிச்சையளிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவுமே அங்குக் காணப்படவில்லை.\nதனித்தனியாக கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டவிதம், சங்கிலிகளால் பிணைத்து வைக்கப்பட நிலை, கை-கால்களில் அடி-காயம் முதலியவை இருப்பது, சரியான பேச்சில்லாமை அல்லது முன்னுக்கு முரணாக பேசுவது முதலியன சந்தேகங்களை எழுப்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\nசமூகத்தில் கீழுள்ளவர்கள்[10] இவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என்று “டான்” பத்திக்கைக்கூறுகிறது. அப்படியென்றால், இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது[11].\nமதரஸாக்கள்: மதரீதியில் இயங்குகின்றனவேயன்றி, பொது காரணங்களுக்கக இயங்குவதில்லை: பாகிஸ்தானின் “டான்” என்ற பத்திரிக்கை, ஏன், எதற்காக, எவ்வாறு இப்படி முஸ்லீம் சிறுவர்கள்-இளைஞர்கள் போதை மருந்து, மன-நோய், மனச்சிதைவு முதலிய தவறுகளுக்கு-குற்றங்களுக்கு அடிமையாகிறார்கள் என்று அலசியுள்ளது. ஆனால், மற்ற சமுகங்களைப் போல பொதுவான காரணங்களையே கூறியுள்ளது[12]. ஒரு இஸ்லாமிய சமூகத்தில், இஸ்லாம் அடிப்படவாதம் போற்றும் நாட்டில், எப்படி அதுவும் இஸ்லாம் போதிக்கும் மதரஸாக்களில் அத்தகைய சீரழிவுகள் ஏற்படமுடியும் என்ற முக்கிய விஷயத்தை தவிர்த்து மற்ற பொதுகாரணங்களின் மீது முடிவாக தீர்வைக் காணுவது வேடிக்கையாக உள்ளது[13].\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம்-இந்தியா- -> மதரஸாக்களில் என்ன நடக்கின்றன\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newindian.activeboard.com/t47885891/topic-47885891/?page=1", "date_download": "2018-08-18T01:30:12Z", "digest": "sha1:5KNDRKX3L6LDO25QXEL6UA3GD6VOTGRZ", "length": 20494, "nlines": 60, "source_domain": "newindian.activeboard.com", "title": "பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்! - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம்-இந்தியா- -> பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்\nTOPIC: பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்\nபன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்\nபன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்\nபன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்\nபள்ளிக்குச் செல்லாத அப்துல் மஜீத் குப்பைத்தொட்டியிலிருந்து டிடோனேரை எடுத்தல்: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி கிராமத்தில் மு.ந.அ.தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் அப்துல் முஜீத். முகமது அன்சாரி. அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்[1]. அப்துல் முஜீத் (14) அவ்வூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அவன் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளான். மாலையில் அவன் வீட்டில் இருந்த நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் போல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்தவர்கள் முஜீபின் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பேட்டரி கட்டைகள், வயர் துண்டுகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்கள் சிதறியும், அப்துல் முஜீப் ரத்த காயங்களுடனும் இருந்துள்ளான். உடனடியாக அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nமற்றொரு செய்தி: இன்று மாலை, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு கிடந்த பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதில் 2 வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு அவன் மின் இணைப்பு கொடுத்துள்ளான். அப்போது, அது திடீரென்று வெடித்தது[2]. இந்த சம்பவத்தில், முஜீத்தின் கை, கால் என உடலின் பல பாகங்களில் பயங்கர அடிபட்டது. இதனையடுத்து, அவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபோலீஸார் விசாரணை: மாணவன் கையில் டெட்டனேட்டர் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கைரேகை பிரிவு சிறப்பு படையினர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, டிஐஜி வரதராஜு உள்ளிட்டோர் பண்பொழி வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்[3]. பள்ளி மாணவன் கையில் டெட்டனேட்டர் குச்சி கிடைத்தது எப்படி, சிறுவர்கள் கைக்கு கிடைக்கும் வண்ணம் இதனை யாரும் ரோட்டில் போட்டு சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு[4] என்ற தலைப்பில் இப்படி ஒரு இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது பன்றியைக் கொல்ல வாங்கும் வெடிகூட எப்படி குப்பையில் கிடைக்கிறது, அதை எப்படி சிறுவன் எடுக்கிறான், எடுத்தவன், வயர்களை இணைக்கிறான் என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு சிறுவர்கள் அறிவில்லாமல் இருக்கும் போது, மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குப்பைத்தொட்டியில் எளிதாக கிடைக்கும் வகையில் வைத்திருக்கக் கூடாது அல்லது போட்டிருக்கக் கூடாது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சரக டிஐஜி வரதராஜு, ரூரல் எஸ்பி விஜயேந்திர பிதாரி உட்பட காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு லோக்கல் முதல் நேஷனல் வரை உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் குவிய ஆரம்பித்தனர். அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டி அளித்த டிஐஜி வரதராஜூ கூறும்போது, “முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு எப்படி டெட்டனேட்டர் வந்தது தகவல் தெரிந்து விடும். இச்சம்பவத்திற்கும் மதுரையில் அத்வானி ரத யாத்திரையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடி குண்டு சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று உறுதியாக கூறினார். சமீபத்தில் டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தமாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5].\nபன்றி வெடியால் அப்பாவி சிறுவன் காயம்: அப்பாவி சிறுவன் தெரியாமல் செய்திருக்கும் பட்சத்தில் முதலில் இப்படி சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. “ஆனால் பரப்பரப்பு செய்திகளைக் கொடுத்து மட்டுமே பழக்கப்பட்ட நமது பத்திரிக்கையாளர்கள் இச்சம்பவத்தையும் மதுரை சம்பவத்தையும் தொடர்பு படுத்தி கதை எழுத ஆரம்பித்தனர்”, என்கிறது அந்த இனைத்தளம்[6]. மேலும், “ஆனால் அங்கு கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சி பன்றியைக் கொல்ல ஒருவர் பயன்படுத்தியது என்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது”, என்றும் கூறுகிறது[7]. பன்றியைக் கொன்றுவிட்டு அல்லது அவ்வாறு உபயோகப் படுத்திய பிறகு, ஏன் அப்படி டிடோனேடரை அஜாக்கிரதையாக விட்டுவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவில்லை.\nஎளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்கள், வன்முறை, மனப்பாங்கு வளரும் விதம்: பன்றியைக் கொல்ல, கிணறு தோண்ட, பாறைகளை உடைக்க, ரோடு போட, குவாரிகளில் உபயோகப்படுத்த என பல காரியங்களுங்கு வெடிப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகவே, அவ்வாறு வெடிப்பொருட்களை வாங்குபவர்கள் எதற்கு உபயோகிப்பார்கள் என்று தெரியவில்லை. மற்ற வகை வெடிப்பொருட்கள், ரசாயனப் பொருட்கள் எப்படி கிடைக்கின்றன என்று ஏற்கெனவே விளக்கியுள்ளேன்[8]. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளதால் தான் சிறுவர்களுக்கு அத்தகைய எண்ணம் வருகிறது. கத்தியைப் பார்த்தவுடன் கழுத்தை வெட்ட வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராது. அப்படி வந்தால், அத்தகைய காட்சிகளைப் பார்த்து, மனத்தில் பதிய வைத்துக் கொண்டதாலும், மனம் அதற்கேற்றப்படி பழகிப்போனதாலும் பயமின்றி அத்தகைய மனம் உருவாகி விடுகிறது. இன்றைய திரைப்படங்களிலேயே, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது போல, குண்டுகள் வெடிப்பது போன்ற வன்முறைக் காட்சிகளைக் காட்டுகிறார்கள். சிறுவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளில் பெரும்பாலாக துப்பாக்கியை வைத்து சுடுவது, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது, குண்டுகள் வெடிப்பது, மனிதர்களை கண்டபடி சுட்டுக் கொல்வது………….என்றுதான் உள்ளன. அவ்வளவு ஏன் சிறுவர்களுக்கு துப்பாக்கி பொம்மைகள் அல்லது பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெற்றோர்களே தயாராக உள்ளார்கள். அஹிம்சை பேசும் நாட்டில் தூக்க்குத் தண்டனைத் தேவையா என்று கேட்கும் தமிழ்நாட்டில்[9], முதலில் இத்தகைய எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.\n[2] தினமலர், நெல்லையில்குண்டுவெடிப்பு : மாணவன்காயம், நவம்பர் 03, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\n[8] வேதபிரகாஷ், தமிழகத்தில்வெடிகுண்டுதயரிப்பு,வெடிப்பொருட்கள்உபயோகம், வெடிகுண்டுகலாச்சாரம் (2),http://dravidianatheism2.wordpress.com/2011/10/29/bomb-blasts-in-tamilnadu-manufacture-logistics/\n[9] இன்று டிவியில் “வீரவாண்டி” படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம்-இந்தியா- -> பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/feb/15/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863857.html", "date_download": "2018-08-18T00:29:56Z", "digest": "sha1:PXFJR5QHQB3MNDZ3GXSDOP37NHKSUQQ6", "length": 7387, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு வங்கி மேலாளர் பணியிடை நீக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகூட்டுறவு வங்கி மேலாளர் பணியிடை நீக்கம்\nதிருக்கோவிலூரில் கூட்டுறவு வங்கி மேலாளர் செவ்வாய்க்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.\nதிருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் தஜ்மல்உசேன், கள்ளக்குறிச்சி வங்கிக் கிளை துணை மேலாளராகப் பணிபுரியும் கண்ணன் ஆகியோர் வருங்கால பொது வைப்பு நிதியில் இருந்து கடனுதவி கேட்டு விண்ணப்பித்தனர்.\nஇவர்களது விண்ணப்பங்களை பொது மேலாளர் (பொ) பிரபாகரன் கிழித்தெறிந்து, கடனுதவி வழங்காமல் 2 மாதங்களுக்கும் மேலாக அவமதிப்பு செய்து வந்தாராம்.\nஇதுபற்றி, கடந்த திங்கள்கிழமை வங்கியில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுந்தபோது, ஊழியர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களிடம் பிரபாகரன் வரம்பு மீறி நடந்துகொண்டாராம். மேலும், கூட்டத்தில் கேள்வி எழ காரணமாக இருந்ததாக, வங்கித் துணைத் தலைவர் ஆதம்.சபியை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.\nஇதையடுத்து ஊழியர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட காரணத்துக்காக, பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, வங்கி நிர்வாக இயக்குநர் பால்ராஜ் வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/10/fake-news-spread.html", "date_download": "2018-08-18T00:25:03Z", "digest": "sha1:PC53CRE3V6V4YSIBQFGU6XEGQHUW2YRM", "length": 12464, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "நீதிமன்ற தடையுத்தரவு என பொய்ப்பரை செய்த பத்திரிகைகளால் மக்கள் போராட்டம் மழுங்கடிப்பு-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநீதிமன்ற தடையுத்தரவு என பொய்ப்பரை செய்த பத்திரிகைகளால் மக்கள் போராட்டம் மழுங்கடிப்பு-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு\nby விவசாயி செய்திகள் 11:27:00 - 0\nநீதிமன்ற தடையுத்தரவு என பொய்ப்பரை செய்த பத்திரிகைகளால் மக்கள் போராட்டம் மழுங்கடிப்பு-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு\nமைத்திரிபாலசிறீ சேனாவின் விஜயத்தை எதிர்த்து கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆனாலும் பெருமளவு கலந்து கொள்ளவிருந்தவிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் உதயன் பத்திரிகையும் துரதிஸ்டம் வலம்புரியும் நீதிமன்ற தடையுத்தரவு என பொய்ச்சேதிகளை பரப்பிய காரணத்தால் மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தையும் காப்பாற்றியுள்ளனர்.இதே மைத்திரிபாலசிறீ சேன காரில் இறங்கிவந்து தன்னை ஒரு நாயகனாக காட்ட முனைகிறார்.இத்தனை நாட்கள் கைதிகள் உண்ணாவிரதமிருப்பது மைத்திரிக்கு தெரியாத விடயமல்ல என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/opinion/across-the-aisle-celebrating-gods-neglecting-children/", "date_download": "2018-08-18T01:21:41Z", "digest": "sha1:5BEO6ISBAC7RH55FK5GN5HSN4BTXE5UT", "length": 25243, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ப.சிதம்பரம் பார்வை : கொண்டாடப்படும் கடவுள்களும், புறக்கணிக்கப்படும் குழந்தைகளும். - Across the aisle: Celebrating gods, neglecting children", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nப.சிதம்பரம் பார்வை : கொண்டாடப்படும் கடவுள்களும், புறக்கணிக்கப்படும் குழந்தைகளும்.\nப.சிதம்பரம் பார்வை : கொண்டாடப்படும் கடவுள்களும், புறக்கணிக்கப்படும் குழந்தைகளும்.\nநாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கும், ஒரு சிறந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் வகையில் குழந்தைகள் உருவாகாமல் போனால், நாட்டை வல்லரசாக்க முடியாது.\nநாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கும், ஒரு சிறந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் வகையில் குழந்தைகள் உருவாகாமல் போனால், உலகில் இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை வைத்திருப்பதும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதும், விண்வெளியில் செயற்கைக் கோள் ஏவுவதும், நமது நாட்டை வல்லரசாகவோ, சிறந்த நாடாகவோ உருவாக்காது.\n16 மார்ச் 2017ல், கொண்டாடப்படும் கடவுள்களும் புறக்கணிக்கப்படும் குழந்தைகளும் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்த கட்டுரையில், “குழந்தைகள் நலன், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத மனித வள மேம்பாட்டை செய்து கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தேன். குழந்தைகளின் நலன் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக, 2015-16ம் ஆண்டின் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் அடிப்படையில் அவ்வாறு கூறியிருந்தேன். குழந்தைகளின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சியும் விடுபட்டுப் போயுள்ளது என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nஒவ்வொரு ஆண்டும் மற்றொரு அறிக்கை வெளியிடப்படுகிறது. அது வருடந்தோறும் வெளியிடப்படும் கல்வி அறிக்கை. 2017ம் ஆண்டுக்கான அறிக்கை 16, ஜனவரி 2018ல் வெளியிடப்பட்டது. அதில் ஊரகக் கல்வி குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.\nகல்வி அறிக்கையில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் கல்வி அறிக்கை, கடந்த 12 ஆண்டுகளாக, ஆரம்பப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு, கணிதம் மற்றும் அடிப்படைத் திறன்களை வளர்க்க வேண்டும் என்று அவ்வறிக்கை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. எண்ணிக்கையைத் தவிர இந்த விபரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அடிப்படை கல்வி உரிமை சட்டத்தின் காரணமாக, பள்ளியில் இருந்து படிப்பை பாதியிலேயே நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை 3.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்னால் குழந்தைகள் 5ம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் வழக்கம் இருந்தது. தற்போது 5ம் வகுப்புக்கு பிறகு படிப்பை தொடரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 8ம் வகுப்புக்கு பிறகு படிப்பை தொடரும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது. ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கும் இதே வேளையில், அடிப்படை திறன்களை வளர்த்துக் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 8ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினருக்கு 2ம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை. 8ம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் பாதி பேரால், சாதாரண வகுத்தல் கணக்கை போட முடிவதில்லை.\nஇந்த ஆண்டின் கல்வி அறிக்கை 14 முதல் 18 வயதுள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள குழந்தைகளின் மீது கவனம் செலுத்துகிறது. அதற்கான காரணம் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 14 வயதில், அதிக குழந்தைகள் 8 வருட ஆரம்பப்பள்ளி கல்வியை முடிக்கிறார்கள். நான்கு வயதை கடந்ததும் இவர்கள் பெரியவர்கள் ஆகிறார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் இந்த குழந்தைகள் என்ன செய்கிறார்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை திறன்களை இவர்கள் வளர்த்துக் கொண்டு, நல்ல வாழ்க்கையை நடத்த தயாராகிறார்களா\nதுரதிருஷ்டவசமாக இதற்கான பதில் இல்லை என்பதே. 2008-09ம் ஆண்டில், 24 மில்லியன் குழந்தைகள் 8ம் வகுப்பில் சேர்ந்தார்கள். 2011-12ம் ஆண்டில் 19 மில்லியன் குழந்தைகள் மட்டுமே 8ம் வகுப்பில் சேர்ந்தார்கள். 5 மில்லியன் குழந்தைகள் குறைவாக சேர்ந்திருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு நகர்கையில், 12ம் வகுப்பில் வெறும் 12 மில்லியன் குழந்தைகள் மட்டுமே சேர்ந்துள்ளார்கள். சராசரியாக 1.7 மில்லியன் குழந்தைகள், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப் படிப்பை நிறுத்துகிறார்கள். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு வராமல் இருந்தது, தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தாமை, கல்விக்கான அரசின் குறைந்த நிதி ஒதுக்கீடு ஆகியவை இதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.\n14 முதல் 18 வயது உடையோர்.\n14 முதல் 18 வயதுடையவர்கள் என்ன செய்கிறார்கள் பலர் பள்ளிகளில் சேர்கிறார்கள். அதே போல படிப்பை நிறுத்தவும் செய்கிறார்கள். படிப்பை நிறுத்துவோரின் எண்ணிக்கை வயது ஏற ஏற குறைந்து கொண்டே செல்கிறது. இப்படி படிப்பை நிறுத்துவோரில், நான்கில் ஒரு பகுதியினர், நிதி நெருக்கடியை காரணமாக கூறுகிறார்கள். 34 சதவிகிதம் பேர், ஆர்வம் இல்லை என்பதையும், 16 சதவகிதம் பேர், தேர்வில் தோல்வியடைந்ததையும் காரணமாக கூறுகிறார்கள்.\n14 முதல் 18 வயதுடையவர்களில் ஊரகப் பகுதியில் 78 சதவிகிதத்தினர், பள்ளியில் படித்தாலும் படிக்காவிட்டாலும் கூலிக்காகவும், சில சமயம் சொந்த நிலத்திலும் விவசாயப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இவர்களின் ஏறக்குறைய அனைவருமே, கால்நடை மருத்துவப் படிப்பையோ, விவசாயப் படிப்பையோ தேர்ந்தெடுப்பதில்லை. நாட்டில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நபர்களில் அரை சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே, விவசாயத்தையோ, கால்நடை மருத்துவத்தையோ தேர்ந்தெடுக்கிறார்கள்.\n14 முதல் 18 வயதுடையவர்களை நாம் என்ன செய்கிறோம். கல்வி அறிக்கை தனது ஆய்வில், இந்த பிள்ளைகள் வேலைக்கான திறனை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை என்று கூறுகிறது. திறன் பயிற்சி இல்லாத இளைஞர்கள், திறமையை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை. தொழில் நிறுவனங்களும், பயிற்சி மையங்களை நாடுவதில்லை.\nவிவசாயம் ஊரக இளைஞர்களுக்கு முக்கிய வேலை வாய்ப்பை தருவதாக இருக்கும் வரையில், விவசாயம் திறன் பயிற்சி உள்ள இளைஞர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், உற்பத்தித் திறனில் வளர்ந்த நாடுகளை விட நாம் பின் தங்கியுள்ளோம் என்று கூறுகிறது கல்வி அறிக்கை. ஆனால், விவசாயம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பதற்கு, இளங்கலை பட்டப்படிப்புகளைப் போல அல்லாமல், குறுகிய கால கல்வித் திட்டங்கள் ஏதும் இல்லை.\nநமது பள்ளிக் கல்வி முறை ஒரு தோல்வியான நடைமுறை. 18 வயதை அடைவதற்கு முன்னதாகவே அனைத்து வயதுகளையும் சேர்ந்த 50 சதவிகிதத்தினர் படிப்பை நிறுத்துகிறார்கள். இவர்களின் பெரும்பாலானவர்களுக்கு எழுதவோ, படிக்கவோ, தொழில் திறமையோ இல்லை. இதன் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர், விவசாயக் கூலிகளாகவோ, அல்லது வேறு கூலித் தொழிலிலோ ஈடுபடுகின்றனர்.\nஇதே போல குழந்தைகளின் உடல் நலனை பார்ப்போம். 5 வயதுள்ள குழந்தைகளில், பாதி குழந்தைகள், சத்துக் குறைபாடுள்ள குழந்தையாக இருக்கிறது. மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவோடு இருக்கிறது. ஐந்தில் ஒரு குழந்தை நலிந்த உடல்நிலையோடு இருக்கிறது. ஒரு குழந்தையின் முதல் ஐந்து ஆண்டுகள், பிற்காலத்தில் அதன் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்ட உண்மை.\nநாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கும், ஒரு சிறந்த நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் வகையில் குழந்தைகள் உருவாகாமல் போனால், உலகில் இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை வைத்திருப்பதும், அணு ஆயுதங்களை வைத்திருப்பதும், விண்வெளியில் செயற்கைக் கோள் ஏவுவதும், நமது நாட்டை வல்லரசாகவோ, சிறந்த நாடாகவோ உருவாக்காது.\n“மாற்றத்தை உருவாக்க மிகச் சிறந்த ஆயுதம் கல்வி” என்றார் நெல்சன் மண்டேலா. ஆனால் இந்தியா\nப. சிதம்பரம் பார்வை : பாஜக ஆட்சியில் பொருளாதாரம் தன்னிறைவு அடையுமா\nப. சிதம்பரம் பார்வை : இம்ரான் கானுடன் இந்தியா சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள் என்னென்ன\nமீண்டும் ஆஜராகாத ப.சிதம்பரம் குடும்பத்தினர்… 20ம் தேதி கண்டிப்பாக ஆஜராக உத்தரவு\nப.சிதம்பரம் சிக்கினார்: ஏர்செல்-மேக்சிஸ் குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு\nப. சிதம்பரம் பார்வை : துணைநிலை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்\nசுஷ்மாவை தாக்கிய ட்விட்டர் ஆர்மி… உள்துறை அமைச்சருக்கு ஒரு கேள்வி\nமுன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் கொள்ளை… 2 பெண்களிடம் போலீஸ் விசாரணை\nகார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு சொத்து வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுமா\nசட்டவிரோதமாக சொத்து வாங்கிய வழக்கு: எழும்பூர் கோர்ட்டில் குடும்பத்தினருடன் கார்த்தி சிதம்பரம் ஆஜர்\nதன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி: காதலன் திருமணத்தை தடுத்துநிறுத்திய பெண்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : மாணவர்கள் கிளர்ச்சி பரவுகிறது\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nInternet of Things தொழில் நுட்பம் ஆட்டோமேட்டிக் இல்லங்கள் அமைப்பது உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nபுதிய தலைமை செயலக முறைகேடு குறித்த விசாரணை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/21014552/Tamannas-Nostalgia.vpf", "date_download": "2018-08-18T00:50:52Z", "digest": "sha1:SM4ZXD4UB43OLIEES4Z664FMF7KIJKAO", "length": 9703, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamanna's Nostalgia || தமன்னாவின் ஏக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ், தெலுங்கு படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.\nதமன்னா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகியும் மார்க்கெட் சரியவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாகவே இருக்கிறார். பாகுபலிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடுகிறார். இந்தியில் வசூல் அள்ளிய குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்துக்கொண்டிருக்கும் அவர் சினிமா வாழ்க்கை பற்றி கூறியதாவது:-\n“நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டேன். 25 வயதில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தேன். எனது எல்லா படங்களுமே நல்ல வசூல் பார்த்துள்ளன. எனக்கும் பெயர் வாங்கி கொடுத்தன. 36 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் நீடிக்க முடியும். அதன்பிறகு அக்காள், அண்ணி வேடங்களுக்கு இறக்கி விடுவார்கள். நான் இன்னும் 4, 5 வருடங்களுக்குள் 100 படங்களில் கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த நம்பிக்கை இருக்கிறது.\nசினிமாவில் 15 ஆண்டுகள் கதாநாயகியாக நான் நீடிப்பதற்கு காரணம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம்தான். குறைகளை சொல்லும்போது வருத்தப்படாமல் ஏற்றுக்கொண்டு என்னை திருத்தி இருக்கிறேன். விமர்சனங்கள்தான் என்னை வளர்த்து இருக்கிறது. நிறைய பேருக்கு விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மன நிலை இருப்பது இல்லை. இதனால் அவர்கள் பக்கம் உள்ள பலவீனத்தை அறிய முடியாமல் போகும். எனக்கு இப்போது நல்ல நேரம் நடக்கிறது. சிறந்த கதைகள், கதாபாத்திரங்கள் அமைகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்க விரும்பிய நடிகை யார் \n2. ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா\n3. இயக்குநர் வினோத் இயக்கத்தில் அமிதாபச்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் அஜித்\n4. விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படமாகிறது\n5. தமிழில் தயாராகும் ‘பிங்க்’ இந்தி படம் அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித்குமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-mar-31/general-knowledge/116987-chutti-journalist-visit-to-agriculture-garden.html", "date_download": "2018-08-18T00:24:28Z", "digest": "sha1:2KTESN7W5IMYNYDVA5IZHP6EDAMKLNUB", "length": 24540, "nlines": 491, "source_domain": "www.vikatan.com", "title": "வயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்! | Chutti Journalist Visit to Agriculture Garden - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nசுட்டி விகடன் - 31 Mar, 2016\nமீட் டு த கோர்ட்\nவயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்\nதூங்கா நகரில் உளியின் ஓசை\nநாம் வாழ நீரைக் காப்போம்\nசந்தைக்குச் சென்று பாடம் படித்தோம்\nநான் யார், என் இடம் எது\nசின்னக் கோடு பெரிய கோடு\nஅஞ்சு நிமிஷத்தில் செஃப் ஆகலாம்\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nசந்தோஷம் வருத்தம் எல்லாமே டிரம்ஸ்தான்\nடாப் 10 ஆப்ஸ் 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nவயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்\nஸ்மார்ட்போனில் விதவிதமான கேம்ஸ் விளையாடிய விரல்களால், பசுமையான நெற்பயிர்களைத் தடவியபோது, மனதுக்குள் பரவியது பரவசம்.\nஆமாம் நண்பர்களே, மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடத்தில் முதலில் இருப்பது உணவு. அதை நமக்கு அளிக்கும் விவசாயி ஒருவரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க, மதுரைக்கு அருகே இருக்கும் குலமங்கலம் கிராமத்துக்குச் சென்றோம்.\nஅங்கே, ஒரு வயலில் களை பறிப்பு நடந்துகொண்டிக்க, ‘‘இந்த வயலுக்கு ஓனர் யாருங்க\n‘‘நான்தான். என் பேரு கிருஷ்ணன். சொல்லுங்க புள்ளைங்களா என்ன விஷயம்’’ என்றபடி வயலில் இருந்து மேலே வந்தார்.\n‘‘என்ன அண்ணே, நீங்களும் வேலை செஞ்சுட்டு இருக்கீங்க சினிமாவில் காட்டுற மாதிரி, வெள்ளை வேட்டி சட்டையில் குடையோட நிற்பீங்கன்னு நினைச்சேன்’’ என்றான் சந்துரு.\nசிரித்த அவர், ‘‘நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லே அப்பு. கூலி ஆட்களோட சேர்ந்து குடும்பமே வயலில் இறங்குவோம். ஆபீஸுக்குப் போற மாதிரி, இதை வேலையா நினைக்கிறது இல்லை. இது குழந்தை மாதிரி, நாங்களும் சேர்ந்து கவனிச்சுப்போம்’’ என்றார்.\n‘‘நீங்க செய்ற விவசாயம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்றாள் தாரிணி.\n‘‘இது, ஒருங்கிணைந்த பண்ணையம். அதாவது, வயல் விவசாயம் மட்டுமில்லாம ஒண்ணோட ஒண்ணு தொடர்புடைய பண்ணை விஷயங்களைச் செய்றது” என்றார்.\n‘‘வாங்க, சுத்திக்காட்டி சொல்றேன்’’ என்று, அழைத்துச் சென்றார்.\nஅங்கே ஒரு குட்டை இருந்தது. ‘‘இது, மீன் வளர்ப்பு, குட்டை. இங்கே பல வகை மீன்களை வளர்க்கிறோம். அதோ, அந்த தென்னந்்தோப்புக்கு நடுவில் மண்புழு உரம் தயாரிக்கிறோம். அதோடு, தேன் சேகரிப்பும் செய்றோம். விடியற்காலையில் ஆரம்பிச்சு ராத்திரி வரை பல வேலைகளைச் செய்வோம். இங்கே தயாரிக்கும் உரத்தையே வயலுக்குப் போடுவோம்’’ என்றவர், ஒவ்வோர் இடமாக அழைத்துச் சென்றார். மீன் வளர்ப்பு, தேன் சேகரிக்கும் பெட்டிகளைவைத்து தேன் கூடுகளை உருவாக்குவது எப்படி என ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகச் சொல்ல, ஆச்சர்யமாக இருந்தது.\nபண்ணையை ஒட்டி, சோலார் பேனல்கள் இருந்தன. அதன் மூலம் விவசாயத்துக்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்குவதாகச் சொன்னார். அங்கே இருந்த ஆட்டு மந்தையில் இருந்து ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிக் கொஞ்சினோம்.\n‘‘அண்ணே, நாங்களும் கொஞ்ச நேரம் விவசாயம் செய்ய ஆசைப்படுறோம். கத்துக்கொடுக்கறீங்களா\n‘‘அதுக்கென்ன வாங்க. எப்படி களை பிடுங்கறதுனு சொல்லித் தர்றேன்’’ என்று வயலுக்கு அழைத்துச் சென்றார்.\nவரப்பு வெட்டி, களை பிடுங்கி, உற்சாகத்துடன் சேற்றை வாரி ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டோம்.\n‘‘சேற்றில் கால் வைப்பதை கேவலமா நினைக்காம, உங்களை மாதிரி ஊருக்கு நாலு பேர் வந்தா போதும். நம்ம விவசாயம் என்றைக்கும் அழியாது’’ என்றார் கிருஷ்ணன் அண்ணன்.\n‘‘முழுப் பரீட்சை முடியட்டும் அண்ணே, மறுபடியும் இங்கே வந்து முழு விவசாயத்தையும் கத்துக்கிறோம்’’ எனச் சொல்லிவிட்டு விடைபெற்றோம்.\n- ஸ்ரீஅஸ்வினி, வினிதா, மதுநிஷா, தாரிணி, ஸ்வேதா, அரவிந்த் குமார், அஷ்ரஃப் அலி, சந்துரு, அஸ்கர், ஆனந்த முருகன்.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/category?authorid=6264", "date_download": "2018-08-18T00:58:23Z", "digest": "sha1:UGHTUB7V5EPTQWANH2NWEGAVLZ2NN7HL", "length": 2981, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "சீ.ராகவன்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் மனோதத்துவம் கம்யூனிசம் ஓவியங்கள் கட்டுரைகள் பகுத்தறிவு இஸ்லாம் நகைச்சுவை வேலை வாய்ப்பு சட்டம் இலக்கியம் சிறுவர் நூல்கள் கவிதைகள் சமூகம் English நவீன இலக்கியம் மேலும்...\nC.G.Publicationதொடல் வெளியீடுசிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுஷன்லாக் பப்ளிகேஷன்ஸ்புரட்சிக்கனல் வெளியீடு ஆக்காட்சி வெளியீடுவரலாற்றாய்வு மையம்Transworld Publishersகுமரன் பதிப்பகம்வலசை பதிப்பகம்Meenakshi Ammal Publicationஅபயம் பப்ளிஷர்ஸ்உமாபதி கலையரங்கம்மனிதத்தேனீ பதிப்பகம்பொதுமைப் பதிப்பகம் மேலும்...\nநிலத்தடி நீர்வளமும் நீர் மேலாண்மையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil-kama-kathaikal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-18/", "date_download": "2018-08-18T01:35:38Z", "digest": "sha1:KBLHWGJCCSVKFRUZUSSNVGKYJNIHWVT2", "length": 27909, "nlines": 149, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "சித்தியின் வாசம் – 18 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nசித்தியின் வாசம் – 18\nTamil Kamakathaikal – அன்பான வாசகர்களுக்கு நன்றி, கதையை தொடர்ந்து எழுத முடியாமல் போவதற்கு மன்னிக்கவும். வேலை பழு காரணமாக நேரம் கிடைப்பது குறைவு. என்னால் இயன்ற அளவு சீக்கிரம் எடுத்த பகுதியையும் போடுகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள். மற்றும் எனது கதைக்கு தொடர்ந்து ஆதரவு தரும் உள்ளங்களுக்கு நன்றி. உண்ணலது தொடர்ச்சியான கமெண்டினை பதிவு செய்யுங்கள் மற்றும் மெயில் அனுப்புங்க.\nசற்று நேரம் கழித்து நான் ரூமில் இருந்து சித்தியின் யட்டியை மூக்கில் வைத்து மோப்பம் பிடித்து கொண்டு வெளியே வந்தேன், சித்தி குளித்து விட்டு சமையல் வேலையில் இருந்தால். நான் அவளை பின்புறமா சென்று கட்டிப்பிடித்தேன். சித்தி கோபத்துடன் என்னை தள்ளி விட்டு தள்ளி நில் என்று போசினால். நான் விலகி வந்து அவள் முன்னாள் சித்தியின் யட்டியை மோந்து கொண்டிருந்தேன்.\nஅதை கண்டவள், எருமை மாடு அதை ஏன்டா கையில் வைத்திருக்காய் உனக்கு பண்ணினது பத்தலையடா உனக்கு நீ செய்வது அசிங்கமா இல்லையடா மாடு என்று திட்டிவிட்டு. அதை கொண்டு போய் துவைக்க போடு என்றால். நான் போ சித்தி இதுல உன்னோட வாசம் இன்னும் இருக்கு, இன்னைக்கு முழுக்க நான் இத போட்டுக்க போறன். என்றேன். அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டு. உன்னை எல்லாம் திருத்த முடியாது, நீ இங்கிருந்து போ எனக்கு வேல இருக்கு என்றல்.\nநான் சித்தியுடன் பேசிக்கொண்டு இருக்கையில் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டது. உடன் சித்தி அதை இங்கே வச்சிட்டு யார் என்று போய் பார் என்று என்னை அனுப்பினால். அங்கு ஒரு வயதானவர் வந்து சித்திய கேட்டார், நான் உள்ளே வருமாறு கூறி சித்தியை அழைத்தேன். அவர் சித்தியிடம் இந்த வருடத்துக்கான குத்தகை பணம் 500,000/- இதில் இருக்கு என்று கூறி ஒரு பார்சலை எடுத்தது கொடுத்தார்.\nபின் சிறிது நேரம் பேசிவிட்டு அவர் கிளம்பி சென்றார். நான் சித்தியிடம் விசாரித்தபோது, அவருக்கு தான் சித்தப்பாவின் காணி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்று கூறினால். பின் சித்தி அவள் ரூமில் இருந்து ஒரு அக்கவுன்ட் நம்பரை இறுத்து கொடுத்து இதனை டெபாசிட் செய்துவிட்டு வருமாறு கூறினால். நானும் உடனே போய் டெபாசிட் செய்து விட்டு வந்தேன், அப்போதும் சித்தி சமையல் அறையில் தான் இருந்தால். பின் எனக்கு அவளது யட்டியை சமையல் அறையில் வைத்தது ஞாபகம் வர நான் அங்கு சென்று பார்த்தேன். அதை காணவில்லை.\nநான் – சித்தி இங்கிருந்த துணி எங்கே\nசித்தி – என்ன துணி, நான் காணவில்லை.\nநான் – சித்தி விளையாடாதீங்க, உண்மையா சொல்லுங்க, எங்கே அது\nசித்தி – என்ன துனிடா, நான் காணவில்லை,\nநான் – உங்களோட யட்டி…………..\nசித்தி – சீ, நாய்க்கு தைரியத்தை பார், நீ இங்கிருந்து போ எனக்கு நிறைய வேலை இருக்கு.\nநான் – ப்ளீஸ் சித்தி என்னிடம் தா.\nசித்தி – உனக்கெதுக்குடா, என்னோட யட்டி, தர முடியது போடா.\nநான் – ப்ளீஸ் சித்தி தா, இல்லன்னா நடக்குறது வேற.\nசித்தி – ஓ, நீங்க மிரட்டுற அளவுக்கு வந்திட்டிங்க, உனக்கு இடம் கொடுத்தது தான் பிழை.\nநான் – இப்ப நீங்க தராவிட்டால் நீங்க போட்டுருக்கிறத கழட்டி எடுத்திடுவேன்.\nசித்தி – நான் போட்டிருந்த தானே நீ கழட்டுறதுக்கு……..\nநான் பரத்துக்கு கொள்கிறேன் என்று கூறி கொண்டு, அவளது காலடியில் இருந்து அவளது சட்டையுடன் பாவாடைய மேலே தூக்கினேன். அவள் என்னை தூக்கவிடாது தடுத்தால். நான் அவளை மீறி முட்டி வரை தூக்கினேன். அவள் உனக்கென்ன லூசாடா இந்த என்று சொல்லி மேலே ஒழித்து வைத்திருந்த யட்டியை கொடுத்தது இத எடுத்து கொண்டு இங்கிருந்து போடா. என்றால். நான் அதனை வாங்கிக்கொண்டேன், ஆனால் சித்திய விடவில்லை. அதுதான் தந்தாச்சுல, இங்கிருந்து போடா மாடு.\nஇத நீ முதல்லயே கொடுத்திருக்கலாம் சித்தி என்றேன். அது தான் தந்தாச்சுல போடா.\nநான் – சித்தி இவ்வளவு தூரம் பார்த்திட்டேன், ஒருதடவை மேலே பார்த்தடுக்கிறேன் ப்ளீஸ்.\nசித்தி – முடியாது போடா, காலையில எல்லாம் பார்த்தாச்சு, இனிமேல் என்னால் முடியாது.\nநான் – ப்ளீஸ் சித்தி ஒரு தடவை மட்டும், சும்மா பார்க்கிறேன் வேற ஏதும் செய்ய மாட்டேன், என்று கூறி கொண்டு எனது ஒரு கையை அவளது பாவாடைக்குள் விட்டு குதியை பிடித்த்தேன்.\nசித்தி , செய்வதறியாமல் நின்று கொண்டு, உன்னோடு போறும் கஷ்டம்டா. ப்ளீஸ் எனக்கு வேல இருக்கு நீ இங்கிருந்து போ என்றால்.\nநான் – ஒரு தடவ பார்த்திட்டு போயிடுவன் ப்ளீஸ், என்று கூறினேன் அவள் ஏதும் பேசவில்லை. நான் தொடர்ந்து. என்ன சித்தி யட்டி போடல என்றாய்.\nசித்தி – இப்ப அதுவாடா உனக்கு முக்கியம், சீக்கிரம் பார்த்துட்டு போடா எருமை மாடு என்று செல்லமா கோவித்தது கொண்டால்.\nநான் பின் அவளது பாவாடையுடன் சேர்த்தது சட்டையை தூக்கி சித்தி இதை பிடித்தது கோள் என்றேன்.\nஅவள் என்னை முறைத்தபடி பிடித்டுக்கொண்டாள்.\nநான் அவளது குதியினை வட்டியுடன் சேர்த்து தடவி எனது மூக்கை கொண்டு குதியில் வைத்தது ஆழமாக மோப்பம் பிடித்தது ஒரு முத்தத்தை பதித்தேன். நான் அவளிடம் பார் சித்தி என்னுடன் போராடியதிலேயே உன் குதி வேர்த்துவிட்டது என்றேன். அவள் என் தலையில குட்டி, சட்டையை கீழே இறக்கி விட போனால். நான் விடாது ஒருநிமிடம் இரு சித்தி என்று கூறி. அவளது இடுப்பை பிடித்தது தடவி யட்டியை கீழே இறக்கினேன்.\nஅவள் விடாது என்னை தடுத்து, ப்ளீஸ் யட்டியை கலாட்டாதே, நீ இங்கிருந்து போ என்றால். சற்று அவளது பேச்சில் கோவம் தெரிந்தாலும், நான் பொருட்படுத்தாது.\nப்ளீஸ் சித்தி யட்டியோட எப்பிடி பார்க்க முடியும், கொஞ்சமா கீழே இறக்கி பார்த்துகிறேன், சாத்தியமா வேற எது செய்ய மாட்டேன். அவள் எனது பேச்சை நம்பி ஒத்துக்கொண்டால். நானும் அவளது யட்டியை கீழே இறக்கி குதியில் ஒரு ஆழமான முத்தத்தை பாதித்தது மேலே எழும்பினேன். அவள் என்னை முறைத்தது கொண்டு இருந்தால். நான் என்னை முறைக்காதே சித்தி உன்னால தான் எல்லா பிரச்சசினையும் வந்தது என்றேன்.\nநான் – ப்ளீஸ் சித்தி இன்னும் ஒன்னு,\nசித்தி – என்னடா ஒன்னு.\nநான் – உன்ன ஒருக்கா கிஸ் பண்ணிக்கிறேன்.\nசித்தி – நீ அடங்கிளையாட\nநான் அவளை வேறு போசவிடாமல் கட்டிபிடித்தது அவள் உதட்டில் உதட்டை வைத்து சாறு பிழிந்து குடித்தேன். பின் எனது நாக்கினை உள்ளே விட்டு ஒரு பத்து நிமிடத்துக்கு மேல் அவள் உதட்டை சுவைத்தேன், அவளது எதிர்ப்பும் குறைந்து ஒத்துழைப்பு கிடைத்தது.\nபின் நான் அவளது உதட்டை விடுவித்து, சரி சித்தி உன் கோவம் எல்லாத்தயும் உறிஞ்சி எடுத்துட்டேன். இப்ப நீ ஓகே என்றேன். அவளும் சிரித்தது கொண்டு போடா நாயே இங்கிருந்து என்று என்னை துரத்தி விட்டால். நானும் அவளது யட்டியை எடுத்தது கொண்டு முன் சோபாவில் வந்து இருந்தேன்.\nசித்தி வேலைய முடித்து விட்டு ஹாலிற்கு வந்தால், அவள் வருவதை கண்டா நான் வேண்டும் என்றே அவளது யட்டியை முகத்தில் போட்டுக்கொண்டேன். அதை கண்ட அவள், என்னடா அதில் உனக்கு வர்ற வாசம், அத தூக்கி தூர போடுடா என்று திட்டினாள். பின் நீ செய்யும் வேலைகளுக்கு உன்னிடம் கோவப்படவும் முடியல கோவப்படாமலும் முடியல. உன்ன என்ன பண்ணுறது என்று புரியலடா. நான் நீ என்மேல் கேவப்பட வேண்டாம். எனக்கு தோணுறப்பெல்லாம் உன்னைக் தொட்டுக்க விட்ட போதும் என்றேன். அவளும் பார்க்கலாம், பார்க்கலாம் என்றால்.\nநான் – சித்தி எனக்கு உன்னிடம் ரொம்ப நாளா ஒன்னு சொல்லணும் சித்தி, ஆனா எப்பிடி சொல்லுறது ஏன்னு தான் புரியல\nசித்தி – அப்பிடி என்னடா, அது தான் நீ முழு உரிமையும் எடுத்துக்கிட்டாயே, அப்புறம் என்ன தயக்கம்.\nநான் – இல்ல சித்தி இது அப்பிடி இல்ல, சூரியோட லைப் சம்பந்த பட்டது. இத எப்பிடி ஆரம்பிப்பது, நீ எப்பிடி எடுத்டுப்ப சாத்தியமா நீ என்மேல் கோவப்படுவ, அது தான் தயக்கமா இருக்கு.\nசித்தி – அதுதான், அவன் இப்ப நல்ல படிக்கிறான், ஸ்கூல்லயும் எந்த காம்ப்ளிண்டும் இல்லையே\nநான் – அதுலதான் சித்தி ஒரு பிரச்சினை இருக்கு\nசித்தி – அப்பிடி என்ன பெரிய பிரச்சினை, சொன்னாத்தானே தெரியும்.\nநான்- ஆமா, சித்தி சூரி இப்ப நல்ல படிக்கிறான். பட் அதுக்கு ஒரு காரணம் இருக்கு, நான் அவனுக்கு ஒரு பொய் சொல்லியிருக்கேன். ஆனா, ஆனா……\nசித்தி – என்னடா, ஆனா, இழுக்கமா விசயத்த சொல்லு….\nநான் – இல்ல சித்தி அவனுக்கும் உன் மேலே ஆசை இருக்கு.\nசித்தி – என்னடா, ஆசை. எனக்கு புரியல. ( சித்தியின் முகம் மாறியது, முகத்தில் பேய் ஏறியது போல்)\nநான் – இல்ல சித்தி அவனுக்கும் உன்கூட செய்யணும் எண்டு ஆசை இருக்கு.\nசின்னது தான் தாமதம், அவள் எப்பிடி சோபாவில் இருந்து எழுந்தாள் என்று கூட தெரியவில்லை. எனக்கு மின்னல் அடித்தது போல், சரமறியக அடி பின்னி எடுத்தால். கன்னம், தலை முதுகு என்று எதுவும் தப்பவில்லை. என் கையினால் முகத்தை கூட மறைக்க முடியவில்லை அப்பி ஒரு அடி…. போதத்துக்கு கால்களினாலும் எட்டி உதைத்தாள்.\nஅது மட்டும் இல்லாமல் சித்திக்கு இவ்வளவு அசிங்கமா போச கூட முடியும் என்று எனக்கு அன்னைக்கு தான் தெரியும்.\nசித்தி – என்னடா நாயீ, உனக்கு அசிங்கமா இல்ல இப்படி சொல்ல, என்னடா நினைச்சீங்க என்ன பத்தி. நா என்னடா விபச்சாரியாடா. என்ன செருப்பால அடிக்கணும். சீ, அசிங்கம். என் உணர்ச்சிக்கு உனக்கு இடம் கொடுத்தேன் பார். ( சில வசனங்கள் சொல்லமுடியாது, அவ்வளவு அசிங்கம்)\nஅப்பிடியே கண்ணீர் போங்க சோபாவில் என்னை அடித்தும் திட்டியும் களைத்து விழுந்தால்.\nஎனக்கோ உடம்பு வலி தங்க முடியவில்லை, உடம்பு முழுக்க ஒரு எரிச்சல். அனால் என் மனது எப்பிடியாவது இன்னைக்கே சித்தியிட இதை பற்றி சொல்லிவிடனும் என்று தோணியது. அனால் சித்தி என்னை அவள் கண் முன்னே நிக்கவேண்டாம் என்று திட்டினாள்.\nநான் – சித்தி, என்று தயக்கத்துடன் அழைத்தேன்.\nசித்தி – சித்தி, உன் வாயால் என்னை கூப்பிடாதே, இங்கிருந்து போடா சனியனே. என்று பழையபடி திட்ட ஆரம்பித்தாள்.\nநான் – என்னை தயார் படுத்திகொண்டு. கொஞ்சம் நிறுத்து சித்தி நீ…. என்னையும் போசவிடு. எல்லாமே உனக்கு அவசரம் தான், கொஞ்சமாவது பொறுமையா நான் சொல்வதையும் கோள். எனது குரலை உயர்த்தி. அவளை அடக்கினேன்.\nசித்தி – இதுக்கு மேல என்னடா பொறுமை வேண்டி கிடக்கு. என்னை இதைவிடவும் உங்களால அசிங்கப்பட வேணும்டா…. ஐயே கடவுளே……… ஏன் எனக்கு இப்படி தண்டனை…..\nநான் – இங்க பார் சித்தி, நான் சொல்வதை கொஞ்சம் அழாமல் கேள்.\nஎனக்கு ஒன்னும் உன்மேல் ஆரம்பத்தி ஆசை இருக்கவில்லை, நான் உன்னை என் அம்மா போல் தான் நினைத்தேன். ஆனால் சூரியின் செயல் தான் என்னை மாத்தியது. சூரி உனது அழுக்கு துணிகளை பாத் ரூமில் இருந்து திருடுவது, பரண் மேல் இருந்து உன்னை நிர்வாணமாக பார்ப்பது என்று தொடக்கி எல்லாத்தயும் சொல்லி முடித்தேன்.\nஅவனோட இந்த செயல் தான் உன்மேல் எனக்கும் ஆசை வர வைத்து. உன்மேல் இருந்த ஆசையினால் தான் அவனுடைய படிப்பும் டிஸ்டர்ப் ஆனது. அவனது பையில் இருந்து போதை மாத்திரை ஸ்கூலில் எடுத்ததும், எல்லாமே உன்னால் தான்.\nஅவனுக்கு உன்மேல் இருந்த ஆசையா உன்னிடம் சொல்ல முடியாமல், உனக்கு அதை தந்து மயக்கி, உன்னை எப்பிடியாவது. நிர்வாணமா பார்க்கணும் முன்குட படுக்கணும் எண்டு தான். அவன் ஒன்னும் அது பவிக்கிறது இல்ல.\nநாம ரெண்டு பெரும் போட்ட டீல் தான், யாருக்கு சான்ஸ் கிடைச்சாலும், அவங்க உன்கூட செய்றது. யாரும் யாரையும் தடுக்க மாட்டம் என்று. நான் உன்கூட செய்றது எல்லாமே உன் புள்ளைக்கு தெரியும், உன்னேட அழுக்கு துணிய கொண்டு போய் அவனுக்கு தான் கொடுப்பேன். அத ஈர படுத்டுறதெல்லாம் உன் புள்ளத்தான்.\nதயவு செய்து உங்கள் கமெண்ட்களை இந்த தளத்திலேயே பதிவிடவும், நன்றியுடன் உங்கள் ரமேஷ்\nதங்கையின் தாகம் – 2\nபாங்காக் பிரதாபங்கள் – 1\nதமிழ் காம கதைகள் (1,818)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/04/05153301/Week-OneMiracle.vpf", "date_download": "2018-08-18T00:51:36Z", "digest": "sha1:JIAVKL4SVYVEHP46F5IDYHV2PLD6MMM5", "length": 7291, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Week One Miracle || வாரம் ஒரு அதிசயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானர வீரர்களால் கடலில் கற்கள் கொண்டு பாலம் அமைக்கப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\nராமாயண காலத்தில் கடல் தாண்டி இலங்கை செல்வதற்காக வானர வீரர்களால் கடலில் கற்கள் கொண்டு பாலம் அமைக்கப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு சான்று பகிரும் வகையில் ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில், தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்ட சில கற்கள் இருக்கின்றன. அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கற்களை மிதக்க விட்டிருக்கிறார்கள். இன்னும் சில கற்கள் அங்கே வருவோர் கைகளால்\nதொட்டுப் பார்ப்பதற்காகத் தனியே வைக்கப்பட்டிருக்கின்றன.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/feb/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D16-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863324.html", "date_download": "2018-08-18T00:30:47Z", "digest": "sha1:LUZEQCIX2XAULCCPHKM7KDDVQVY7YW3P", "length": 5693, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பிப்.16-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nபிப்.16-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nமதுரைமாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வரும் பிப்.16 -இல் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.\nமாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஆகவே, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய பிரச்னைகளைக் கூறிப் பயன்பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gloriousquran.wordpress.com/", "date_download": "2018-08-18T00:15:42Z", "digest": "sha1:72DAMAEOYHODRASSVSDBEYQBEMQJHIVP", "length": 30881, "nlines": 116, "source_domain": "gloriousquran.wordpress.com", "title": "குர்ஆனும் அறிவியலும் | சிராஜ்அப்துல்லாஹ்", "raw_content": "\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nMay 11, 2010 by சிராஜ் அப்துல்லாஹ்\nஅருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்\nஅருள்மறை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது இந்த குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் அதாவது பேரருள் என்றும் அருமருந்தாகவும் என்றும் குறிப்பிடுகிறான். இதோ அந்த அருமையான வசனத்தை சற்று படியுங்கள்\nகுர்ஆனை ஆராய்ச்சி செய்துப்பார்க்கும் போது அது பல்வேறு அரிய தகவல்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அவைகளின் வரிசையில் மருத்துவப் படிப்புகள் பற்றி இஸ்லாம் கூறும் பல அறிய தகவல்களை உங்கள் முன் பதிக்கிறோம்\nஅத்தியாயம் – பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)\nஇன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அருள்மறை குர்ஆன் 17:82)\nவாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் இறைவன் எங்கே என்று அலைந்து திரிந்து தன் வாழக்கையைத் தொலைத்துவிடக் கூடாது அதே சமயம் படைத்த இறைவனை அவன் சரியாக அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அருள்மறையை குர்ஆனை புரட்ட வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் மூஃமின்களுக்கு அதாவது இறைநம்பிக்கை யாளர்களுக்கு ரஹ்மத் எனும் பேரருள் கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது.\nரஹ்மத் என்றால் பேரருள் என்று பொருள்படும் மனிதன் உள்ளிட்ட படைப்பினங்களுக்கு அருள்புரிபவன் அல்லாஹ் மட்டுமே அவனைத்தவிர யாரும் எவருக்கும் அருள்பாளிக்க இயலாது என்ற கருத்தையும் வலியுறுத்துவதன் மூலம் உலகில் உள்ள எந்த வஸ்துக்களையும் வணங்கி மோசம் போகாதீர்கள் என்று குர்ஆன் வலியுறுத்துகிறது.\nஅல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு இந்த குர்ஆனை பொருளுணர்ந்து படித்தால் படிக்கக்கூடிய மனிதனது மனம் புத்துணர்ச்சி பெற்று அவனுடைய உள்ளத்தில் காணப்படும் ஏக்கம், தாகம், மற்றும் பயம் ஆகியன விலகுகிறது.\nஉடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மனிதன் திருமறைக் குர்ஆனை படித்து இறைவனது தன்மைகளை உணர்ந்துக் கொண்டால் அவன் நற்பாக்கியத்தை பெறுகிறான் மேலும் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட முற்படுகிறான் இப்படிப்பட்ட பேரருள் மற்றும் பாக்கியம் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்த ஒரு இறைவிசுவாசிக்கே கிடைக்கிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் முஃமின்களுக்கு ரஹ்மத்தாக உள்ளது.\nகுர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து\nஅருமருந்து என்று கூறப்படும்போது அதற்கு எதிர்ப்பதமாக நோய் என்ற ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இயல்பாகவே மனிதனுக்கு உண்டாகும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அதாவது\nஒரு மனிதனுக்கு இதயம், சுவாச உருப்புகள் உள்ளது போன்று உள்ளமும் இருக்கிறது. அந்த உள்ளத்தை உணரத்தான் முடியுமே தவிர யாராலும் காட்ட இயலாது.\nஒரு மனிதன் நல்ல உள்ளம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருப்பதாகவும் ஒருவன் கெட்ட எண்ணடம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் சாத்தான் குடியிருப்பதாகவும் அனைத்து மதத்தவர்களாலும் நம்பப்படுகிறது எது எப்படியோ உள்ளம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்ப வேண்டும்.\nஇஸ்லாம் இந்த உள்ளத்தை பற்றி கூறும் போது அந்த உள்ளத்தில் கூட நோய் உருவாகும் என்றும் இது அப்பாவி மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது ஒருவனை ஏமாற்ற நினைப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏமாற்றுவித்தைகளில் மூழ்கி நன்மை தீமைகளை உணரக்கூடிய நிலையை இழந்துவிடுகிறான். உதாரணமாக பிரேமானந்தா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறலாம் இப்படிப்பட்ட சாமியார்கள் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு தீட்சை அளிப்பதாக பொய் கூறுவார்கள் பின்னர் இந்த பொய்களில் மூழ்கி பித்தலாட்டம் மற்றும் விபச்சாரம் ஆகிய பாவங்களில் தங்களை சிக்கவைத்துக் கொண்டு பாவத்தில் மூழ்கி விடுகிறார்கள் இறுதியாக அவர்கள் தங்கள் கரங்களாலேயே தங்களை சந்தி சிரிக்க வைத்து விடுகிறார்கள். இது போன்ற நோய்கள்தான் உள்ளத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கிறது.\nஅல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 2:9,10)\nஒரு இறைவிசுவாசிக்கு உள்ளத்தில் இப்படிப்பட்ட நோயின் தாக்கம் ஏற்பட்டால் உடனே அந்த நோயிலிருந்து அவன் சுதாரித்தக் கொள்ள அருள்மறை குர்ஆன் மாபெரும் சாதனமாக விளங்குகிறது. அதாவது பொய் கூற முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், திருட முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், விபச்சாரத்தை நெருங்கும்பொது இஸ்லாம் கடுமையாக கண்டிப்பதை உணரலாம். மேலும் எந்த ஒரு செயலையாவது நாம் செய்ய முற்படும்போது இது கூடுமா கூடாதா மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலா\nமனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம் சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் (ஸல்) கூறிய அறிவுரைகளையும் அவர் வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம் உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன் குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.\nஉள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும் இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ் அவன் காட்டும் மருந்தே அருள்மறை குர்ஆன்\nஉடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.\nஇதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.\nஉம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)\n“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)\nகுர்ஆன் கூறும் தேனீ மற்றும் தேன் ஆராய்ச்சி படிப்பினை\nஅருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன் பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது.\nசற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே\nநீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.\nஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும் வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது\nதேனியிடம் மருந்து உள்ளது மேலும் தேனீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை\nதேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள், மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை.\nதேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம்.\nஇறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்\nஉடலளவில் ஏற்படும் ஒரு நோய்க்கு கீழ்க்கண்ட ஆராய்ச்சிகள் இன்றியமையாதவை\nமனிதன் கற்க வேண்டிய ஆராய்ச்சி படிப்புகள்\nநவீன உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சி படிப்பு\nமருந்து தயாரிப்பு ஆராய்ச்சி படிப்பு\nசிந்தித்துப்பாருங்கள் அருமைச் சகோதரர்களே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆராச்சி பற்றிய அறிவு யாருக்கேனும் இருந்ததா ஆனால் அருள்மறை குர்ஆன் இத்தனை ஆராய்ச்சிகளையும் தேடுங்கள் அந்த தேடுதல் உங்களுடைய நோய்களுக்கு மருந்தாக அமையும் என்று அழகாக வர்ணிக்கிறது நாம் ஆராய்கிறோமா\nதேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா\nதேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை\nசித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம்\nபுதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம்\nதேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம்.\nதேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.\nதேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம்.\nதேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம்.\nஇதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம்.\nதேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம்.\nமுகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.\nகாயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.\nஅருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வரலாமே\nதேனீக்கள் ஆராச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல\n(எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nஎன் அருமை கலீஃபா உமர் பின் கத்தாப் (ரலி)\nவாசல் கதவுகளை அடைத்து வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/exams/current-affairs-questions-practice-for-competitive-exams-002606.html", "date_download": "2018-08-18T00:35:57Z", "digest": "sha1:BZNCIHLIJFRP5KVL2LJ3Z4ICDDCWVZUF", "length": 8618, "nlines": 98, "source_domain": "tamil.careerindia.com", "title": "நடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள் | current affairs questions practice for competitive exams - Tamil Careerindia", "raw_content": "\n» நடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள்\nநடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள்\nபோட்டி தேர்வுக்கான நடப்பு கேள்வி பதில்களின் தொகுப்பு தேர்வு எழுதுவோர்க்கு வழங்கப்படும் . தேர்வில் நடப்பு தேர்வுகளின் குறிப்புகள் அறிந்திருக்க வேண்டும் எந்த அளவிற்கு கேள்வி பதில்கள் அறிந்திருக்கிறோமே அந்தளவிற்கு நம்மால் எளிதில் வெற்றி பெறலாம் .\n1 இந்தியாவின் முதல் பாஸ்போர்டு கேந்திரா துவங்கப்பட்டது\n2 ஜல்லிக்கட்டு நடத்த எந்த சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது\n3 மத்திய பிரதேஷ அரசு உருவாக்கிய சட்டத்தில் தேவையானோர்க்கு உதவுதல்\n4 பெரட்ரோலியத்துரை அமைச்சர் உருவாக்கிய விழிப்புணர்வு திட்டதின் பெயர்\nவிடை: சன்ராக்ஷ்ன் சாம்தா மகா உத்சவ்\n5 எந்த மாநிலத்தில் இசை மற்றும் சாகசதிற்கான ஆரஞ்சு திருவிழா வெளியிடப்பட்டது\n6 எந்த மாநிலத்தில் வருடாந்திர மாலிகான யாத்ரா திருவிழா நடைபெறுகிறது\n7 டெல்லியில் குடியரசு தினவிழாவில் சிறப்பான அணிவகுப்பு நடத்திய அணியாக 2016 ஆண்டின் தேர்வு பெற்ற அணி\n8 104வது இந்திய தேசிய காங்கிரஸ்\nவிடை: சென்னை எஸ்ஆர்எம் பல்கலைகழகம் 2017\n9 இந்தியா எந்த நாட்டில் தனது பிரத்யோக கடற்படை தளத்தை அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது\n10 உலக வங்கியின் மூத்த இயக்குநராக நியமிக்கப்படுபவர்\nதமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும்\nமொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள்\nபொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://traynews.com/ta/tag/wallet/", "date_download": "2018-08-18T00:25:06Z", "digest": "sha1:SO2VJQGSR2C2YGALEMNJ3DPQXZVQG4KA", "length": 9883, "nlines": 93, "source_domain": "traynews.com", "title": "wallet Archive - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஜூலை 25, 2018 நிர்வாகம்\nஜூலை 11, 2018 நிர்வாகம்\nகிரிப்டோ சில்லறை அனைத்து PoS டெவலப்பர் உலகளவில் 100k இயந்திரங்கள் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது 2021 ஜாக் Cheah, Pundi எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி, ஒரு\nஜூன் 18, 2018 நிர்வாகம்\nஜூன் 3, 2018 நிர்வாகம்\nEthereum கைப்பை ImToken உள்ளது $ 35வைப்பு பி, விட 99% அமெரிக்க வங்கிகளின்\nEthereum கைப்பை ImToken சீனா சார்ந்த ImToken, ஆப்பிள் App Store இல் பட்டியலிடப்பட்ட முதல் Cryptocurrency மற்றும் Ethereum பணப்பைகள் ஒன்று, has\nமே 14, 2018 நிர்வாகம்\nநியூயார்க் Blockchain வாரத்தில் திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது நியூயார்க் நகரம் திட்டங்களை blockchain மையம், நியூயார்க் நகரம் பொருளாதார அபிவிருத்தி\nமே 8, 2018 நிர்வாகம்\nநியூயார்க் பங்குச் சந்தை விக்கிப்பீடியா வர்த்தக மேடையில் நடத்த கூடும் நியூ யார்க் பங்குச் சந்தையின் தாய் நிறுவனமான வருகிறது\nமார்ச் 10, 2018 நிர்வாகம்\nகிரிப்டோ முதலீட்டாளர்கள் பிழைகள். பிழை 3\nCryptocurrencies முதலீடு பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிப்பு உயர் அபாயங்கள் தொடர்புடையதாக உள்ளது, including as a result of the presence on\nமார்ச் 2, 2018 நிர்வாகம்\nவிட 1200 ஆஸ்திரேலியாவில் பத்திரிகை விற்பனையாளர்கள் மார்ச் 1 வரை விக்கிப்பீடியா ஷாப்பிங் சேவையை\nஇன்று ஆஸ்திரேலியர்கள் விட இருந்து ஸ்டோரில் விக்கிப்பீடியா மற்றும் Ethereum வாங்க முடியும் 1,200 நாடு முழுவதிலும் newsagents.\nபிப்ரவரி 25, 2018 நிர்வாகம்\nக்ரிப்டோ உலகை விரிவுபடுத்தலாம் தொடர்கிறது என Eidoo Cryptocurrency உலகத்திற்கு ஒரு கலப்பின பரிமாற்றம் மற்றும் பல-கைப்பை கொண்டு, அது\nபிப்ரவரி 20, 2018 நிர்வாகம்\nவிக்கிப்பீடியா கோர் புதிய பதிப்பு முழுமையாக SegWit-முகவரிகளை மட்டுமே ஆதரிக்கிறது\nSoftfork SeqWit கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெட்வொர்க் விக்கிப்பீடியா நடந்தன, hardfork போலல்லாமல், கட்டாய அர்த்தம் இல்லை\nஜனவரி 20, 2018 நிர்வாகம்\nஎன்ன விக்கிப்பீடியா கோர் மற்றும் அவர்கள் என்ன செய்ய\nஜனவரி 19, 2018 நிர்வாகம்\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraiweb.com/site-map", "date_download": "2018-08-18T00:59:22Z", "digest": "sha1:6QGIBXIF6NWVHQFPO2P2KNIP5SNMUFOY", "length": 2721, "nlines": 85, "source_domain": "adiraiweb.com", "title": "Site Map", "raw_content": "\nAbout This Siteஇந்த தளம் பற்றி\nQ & Aகேள்வி பதில்\nஅன்பான சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.\nஇறைவனின் பேரருளால் நாங்கள் இந்த வலைதளத்தை துவக்கியிருப்பதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே தவிர வேறில்லை. இறைவன் எங்களின் இந்த முயற்சியை அங்கீகரித்து மக்கள் இதன் மூலம் பயன்பெறும் வகையில் ஆக்கியருள பிரார்த்திக்கிறோம்.\nQ & A|| கேள்வி பதில்\nAbout This Site||இந்த தளம் பற்றி\nAbout This Siteஇந்த தளம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180110217247.html?ref=ls_d_obituary", "date_download": "2018-08-18T00:35:14Z", "digest": "sha1:IXP4CD7OUACKOL5XGDEAIWXP5OVPBTH7", "length": 5618, "nlines": 43, "source_domain": "www.kallarai.com", "title": "திரு இராமலிங்கம் வேலாயுதபிள்ளை JP - மரண அறிவித்தல்", "raw_content": "\nதிரு இராமலிங்கம் வேலாயுதபிள்ளை JP\nஅன்னை மடியில் : 13 பெப்ரவரி 1930 — ஆண்டவன் அடியில் : 9 சனவரி 2018\nயாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரம், யாழ். தெல்லிப்பழை வீமன்காமம், கொழும்பு வெள்ளவத்தை, நோர்வே Oslo, Bergen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் வேலாயுதபிள்ளை அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற குமாரசூரியர், நாகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nதயாளன்(நோர்வே Bergen), கோகுலன்(நோர்வே Oslo), பாமினி(நோர்வே Oslo), வதனி(நோர்வே Oslo), விமலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவானந்தி, பவானி, ஆனந்தகரன், கிசோகுமார், உஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,\nதனுசன், சோபியா, மயூரன், சேந்தன், சீரோன், செந்தமிழ்ப்பிரியாள், அன்பிற்கினியாள், இயற்றமிழழகன், ஆரூரன், அர்ச்சனா(காயா), ஆரணி, சிவதர்சன், தாட்சாயணி, தாரணி, சேனன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், பாட்டாவும்,\nசண்முகநாதன்(கொழும்பு), மகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராமநாதன், ரட்ணகோபால், பஞ்சநாதன், வைத்தியலிங்கம், சிறிரங்கநாதன், கண்ணகிதேவி, சகுந்தலாதேவி மற்றும் இரத்தினமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅனுஷியாதேவி, கமலாதேவி, குகமணி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஜெயந்தி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான தனேஸ்வரி ராஜரட்ணம், சர்வேஸ்வரி மாசிலாமணி, வாமதேவன், விக்னேஸ்வரி தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 16/01/2018, 11:00 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajini-women-wing-commitee-meeting-held-today/", "date_download": "2018-08-18T01:21:36Z", "digest": "sha1:UIOLI4RRXJSOHG5QAZVM4QTAYZUWY3T5", "length": 13615, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க கவர்நர் 15 நாள் கெடு அளித்தது தவறு : ரஜினி! rajini women wing commitee meeting held today", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nதேர்தல் நடந்தால் ரஜினிக்கு 150 இடங்களா\nதேர்தல் நடந்தால் ரஜினிக்கு 150 இடங்களா\nநடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்காக மக்கள் மன்றம் நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றம் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தில் முக்கிய பங்காற்றும் மகளிர் அணி நபர்கள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்.\nஇந்தக் கூட்டத்தின் முடிவிற்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடக தேர்தல் முடிவு, குமாரசாமி பதவியேற்பு, காவிரி விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவை அனைத்திற்கும் பதிலளித்த ரஜினிகாந்த், “கர்நாடகத்தில் குமாரசாமிக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி. எடியூரப்பாவிற்கு பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கெடு அளித்தது தவறு. ஆனால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது.” என்றார்.\nமேலும் காவிரி விவகாரத்தில் கமல் ஹாசன் அழைப்பு விடுத்தும் தான் பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு, “அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார் ஆனால் நாங்கள் இன்னும் கட்சியே துவங்கவில்லை எனவே தான் பங்கேற்க முடியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அழைப்புகள் வரும்போது நிச்சயம் பங்கேற்போம். காவிரி பிரச்சனையில் கமல் ஹாசனின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.” என்றும் கூறினார்.\nஇறுதியாகக் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு மற்றும் மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் குறித்துக் கேட்டதற்கு, “காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும். அது அவர்களின் கடமை. மேலும் காவிரி விவகாரத்தில் அதிகாரம் ஆணையத்திடம் இருப்பது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘சட்டமன்றத் தேர்தல் நடந்தால், உங்களுக்கு 150 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கணித்திருக்கிறது என செய்திகள் வந்திருக்கிறதே’ என ரஜினிகாந்திடம் கேட்டார்கள். அதற்கு ரஜினிகாந்த், ‘அப்படி கிடைத்தால் மகிழ்ச்சி’ என்றார்.\nஇந்தச் சந்திப்பின் முடிவுல் விரைவில் கட்சி துவங்கப்படும் என்றும், இனி வரும் காலத்தில் அனைத்தையும் சந்திக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nஉதவியெல்லாம் வேண்டாம் ரஜினி அங்கிள் நேரில் பார்க்கணும்: நேர்மை சிறுவனின் நீண்ட நாள் ஆசை\nகாலா நீங்கள் பார்த்தீராத வண்ணத்தில் …. ஃபோட்டோ கேலரி\n ரஜினி அரசியல் பேசியதால் எதிர்ப்பு\nஇன்று மாலை வெளியாகிறது காலா படத்தின் புதிய டிரெய்லர் : தனுஷ் அறிவிப்பு\nவிரைவில் ரஜினி மக்கள் மன்ற மாநாடு நடைபெறும்\nகாலா படத்தின் முதல் பாடல் வீடியோ ‘செம்ம வெயிட்டு’ நாளை ரிலீஸ் : தனுஷ்\nமே 9ம் தேதி முதல் ஒலிக்கிறது ‘காலா’ பாடல்கள் : நடிகர் தனுஷ் அறிவிப்பு\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி\nநாளை பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது உறுதி : பாரதிராஜா\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த் கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nInternet of Things தொழில் நுட்பம் ஆட்டோமேட்டிக் இல்லங்கள் அமைப்பது உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nபுதிய தலைமை செயலக முறைகேடு குறித்த விசாரணை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamakathaikalpdf.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2/", "date_download": "2018-08-18T00:21:13Z", "digest": "sha1:2Z2YYEV5ZETSGPWSE3QKYQ6IQ6E5OJGI", "length": 25529, "nlines": 102, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "தங்கையோடு ஸ்விம்மிங் பூலில் ஸ்வெட்குளியல் – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nதங்கையோடு ஸ்விம்மிங் பூலில் ஸ்வெட்குளியல்\nTamil Kamakathikal – தங்கையோடு ஸ்விம்மிங் பூலில் ஸ்வெட்குளியல்\nTamil Kamakathaikal – சம்மர் லீவ்ல தங்கை ஸ்விம்மிங் கற்றுக்கொள்ள ஆசைபட்டு என்னிடம் வீட்ல அப்பா, அம்மா கிட்டே சொல்லி சேர்த்து விட சொன்னாள். அப்பா ஒத்துக்கொண்டாலும், அம்மாவுக்கு அவள் ஸ்விம்மிங் கற்றுக் கொள்ள விருப்பமில்லை. தனியாக மகளை அனுப்பவும் பயந்தாள். அப்போது தங்கைக்கு சப்போர்ட்டாக நான் பேசி வீட்டில் சம்மதம் வாங்கினேன்.\nஅப்போது அப்பாவும் அம்மாவும் நீயும் ஸ்விம்மிங்ல சேர்ந்து தங்கைக்கு துணையாக போய் விட்டு வா என்று சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் நான் மாட்டேன் என்றால் தங்கையை அனுப்ப மாட்டார்கள் என்பதால் நானும் சரி என்று தலையை ஆட்டினேன்.\nபிறகு தினமும் தங்கையை பக்கத்தில் இருந்த பிரைவேட் ஸ்விம்மிங் பூலுக்கு அழைத்துச் சென்றேன். அங்கே பெண்களுக்கும், பசங்களுக்கும் தனித்தனி நேரத்தில் தான் ஸ்விம்மிங் கற்று கொடுத்தார்கள். ஆனால் முதலில் கூச்சப்படும் பெண்களுக்கு துணையாக அப்பாவோ அல்லது அண்ணாவோ கூட இருக்கலாம். மேலும் பெண்களுக்கு தனியாக பெண் பயிற்சியாளர்கள் இருந்தாலும் முதல் சில நாட்கள் அவளுக்கு தைரியமூட்ட நான் கூட இருந்தேன்.\nமுதலில் என் தங்கை பசங்க போடுவது போல் ஷார்ட்ஸ் டிசர்ட் போட்டு குளிக்க ஆரம்பித்தாள். ஆனால் கூட குளிக்கும் பெண்கள் ஸ்விம்சூட் போட்டுக் கொண்டு குளிப்பதை பார்த்து அவளுக்கு அதை போட்டுக் கொண்டு குளிக்கும் ஆசை வந்தது. ஆனால் அப்போது அந்த ஸ்விம் கிளப் உள்ளே இருக்கும் ஸ்டோரில் நாமே செல்க்ட் செய்து போட்டுப் பார்த்து, கார்டை ஸ்வைப் செய்து வாங்கிக் கொள்ளலாம். அது செல்ஃப் பர்சேஸ் ஸ்டோர். வேறு எந்த சேல்ஸ் நபரும் இருக்க மாட்டார்கள். மேலும் கிளப் மெம்பர்கள் மட்டுமே வந்து போவதால் யாரும் அவ்வளவு எளிதாக எதையும் திருடிக் கொண்டு போக முடியாது.\nஅந்த ஸ்டோருக்குள் நான் என் தங்கையை அழைத்துச் சென்றேன். அவள் விதவிதமாக அவள் சைஸுக்கேற்ப ஸ்விம் சூட்டை செலக்ட் செய்து விட்டு என்னிடம் காட்டிய போது, அந்த டிரையல் ரூம்குள்ளே போய் போட்டு பாருடி. சைஸ் சரியா இருந்தா உனக்கு பிடிச்சதை வாங்கிக்கோ என்று சொல்லி அங்கே இருந்த வெயிட்டிங் சோபாவில் உட்கார்ந்து மேகசீன்களை புரட்ட ஆரம்பித்தேன். ஆனால் தங்கை ஸ்விம் சூட்டை விரித்து பார்த்த போது எனக்குள் செக்ஸ் மூட் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அதை மேலும் தூண்ட நான் புரட்டிய ஸ்விம்மிங் ஸ்பெஷல் மேகசீன்களில் தொடை தெரிய பல வயதுகளில் டீன் ஏஜ் பெண்களை பார்த்து போது ரொம்பவே சூடு ஏறியது.\nஅந்த மேகசீனில் பல வெளிநாட்டு பெண்களின் ஸ்விம் சூட் செக்ஸி படங்களோடு நமது இந்திய அதுவும் சவுத் இந்தியன் பெண்களில் ஸ்விம் சூட் மாடல் படங்களும் இருந்தன. நம்ப ஊர் கலரில் இருந்த பெண்கள் முலைகளும், தொடைகளும் அந்த இருக்கமான ஸ்விம் சூட்களுக்குள் புடைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தபோது எனக்கும் கீழே புடைக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு மாடலும் முன் மற்றும் பின்பக்க போஸ்களில் கிறங்க வைத்தார்கள். பின்னால் பார்த்த போது பாதி குண்டிகளி இரு பக்கமும் பிதுங்கி வழிய நானும் செக்ஸ் ஜொள்ளுவிட்டபடி அந்த படங்களை பார்த்து பரவச கனவுகளில் மூழ்கினேன்.\nஅந்த படங்கள் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து அந்த முகங்களில் என் தங்கையின் முகத்தை கற்பனை செய்து விதவிதமான வண்ணங்களில், பல்வேறு மாடல்களில் என் தங்கையை செக்ஸியான ஸ்விம் சூட்டில் கற்பனை செய்து கொண்டே மேகசீன்களுக்கு கீழே கையை விட்டு மெதுவாக என் ஷார்ட்ஸ் மேல் வருடி, பிசைந்து விட ஆரம்பித்தேன். அப்போது அந்த ஸேல் ஸ்டோர் முழுவதும் கேமரா இருப்பதை கவனித்து ஷாக் ஆகி என்னை கன்ட்ரோல் செய்து கொண்டேன். ஆனாலும் என் தங்கையை பல வித ஸ்விம் சூட்களில் போஸ் கொடுப்பதை கற்பனை செய்வதில் இருந்து மீள முடியவில்லை.\nசரியாக அப்போது பார்த்து டிரையல் ரூமுக்குள் சென்ற என் தங்கை கதவை திறந்து எட்டிப்பார்த்து, “அண்ணா இங்கே ஒரு நிமிஷம் வாயேன்.. “ என்று அழைத்தாள். நான் கொஞ்சம் ஷாக் ஆகி அவள் ரூம் வாசல் பக்கம் சென்ற போது, அவள் மேலும், “எல்லாமே சைஸ் ஒகே ஆனா ரொம்ப கனஃப்யூஷனா இருக்குடா. டெக்னிக்கலா எது சேஃப் குட்னு தெரியல. சைஸ், குவாலிட்டி ஒகே, ரேட்டுக்கு ஏத்தமாதிரி குவாவிட்டியானு நீ பார்த்து சொல்லேன்“ என்றாள்.\nநான், “அய்யோ அதெப்படி டி நான் உள்ளே வந்து பார்க்க முடியும். நீ போட்டு பார்த்து கழற்றிட்டு கொடு, நான் கிளாத் குவாலிட்டி ரேட்டை பார்க்கிறேன்“ என்றேன். அவளோ, “அய்யோ லூசு அண்ணா இதை போட்டு பார்க்கும் போது தான் ஃபுல் ஐடியா கிடைக்கும். காட்டுற நானே வெட்கப்படல, ஆம்பள உனக்கு என்ன, உள்ளே வாடா ப்ளீஸ்.. “ என்று கெஞ்ச நானும் வேறு வழி இல்லாமல் அந்த ட்ரையல் ரூமுக்குள் சென்றேன். அன்றைக்கு நான் டிசர்ட், ஷார்டில் இருந்தேன். தங்கையோ என்னைப் போல் குட்டி ஷார்ட்ஸும், டிசர்ட்டும் போட்டிருந்தாள்.\nநான் டிரையல் ரூமுக்குள் போன உடனே ஹேங்கரில் அவள் டிசர்ட், ஷார்ட்சை பார்த்த போது எனக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று சூடு பரவ ஆரம்பித்த விட்டது. ஆஹா தங்கச்சி முழுசா கழற்றி போட்டுட்டு தான் ஸ்விம் சூட்டை போட்டிருக்காளா என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அப்போது ஸ்விம் சூட்டில் தங்கையின் கைக்கு அடக்கமான முலைகள் விம்மி பெருத்து என்னை வெறித்து பார்ப்பது போல் தோன்றியது. அவை நல்ல உருண்டு திரண்டு தங்கையோடு ஸ்விம் சூட்டுக்குள் பந்துகள் போல் பம்மிக்கொண்டு இருப்பதை பார்த்த போதே மிகவும் பரவசமானேன். அப்படியே கீழே பார்த்த போது தங்கையின் அழகு தொடைகள் ஸ்வீம் சூட்டில் அட்டகாசமாக தெரிந்தது.\nஅதை ரசித்த போதே மேலே கண்ணால் ரசித்தபடியே தங்கையின் கட்டுடலை கடந்து வந்த போது ஏதோ ஒரு சின்னச்சுழியோல் குழிபோல் தாவி குவிப்பதை அறிந்து மீண்டும் என் கண்களை மேலே குவித்த போது நான் மிகவும் குஷியானேன். அந்த சின்னச்சுழி குழியில் குழித்து குத்தாட்டம் போட வேண்டும் போல் தோன்றியது. அது என் தங்கையில் அழகிய தொப்புள் சுழி தான். அந்த ஸ்விம் சூட் மாடலில் தங்கையின் தொப்புள் குழி தெரிவது போல் டிசைன் செய்யப்பட்டு இருந்தது. அந்த அறைக்குள் இருவர் மட்டுமே நிற்க முடியும். குட்டி ஃபேன் ஓடினாலும் இருவரும் ஸ்வெட் ஆகி வியர்வைக் குளியலில் நனைய ஆரம்பித்தோம்.\nஆனால் என் தங்கைக்கு அந்த ஸ்விம் சூட் பொருத்தமாக, செக்ஸியாக இருப்பதை நான் சொல்லியபோது அவளும் வெட்கத்தில் முகம் சிவந்தாள். மேலும் “இரு அண்ணா எல்லாத்தையும் போட்டு காமிக்கிறேன். சரி நீ வெளியே போ நான் அடுத்த சூட்டை போடுறேன்“ என்றாள். நான் பொய் கொபத்தோடு முறைத்து, “என்னடி விளையாடுறியா உள்ளே கூப்பிட்டுட்டு இப்போ வெளியே போனு சொல்றே. நீ ஒவ்வொரு டிரஸ்ஸா போட்டு கழற்ற நான் வெளியே போயிட்டு போயிட்டு வர முடியுமா. வெளியே கேமரா வேற இருக்கு. யாராவது பார்த்தா தப்பா ஆகிடும். நான் சீக்கிரமா எல்லாத்தையும் போட்டுக்காமிடி“ என்றேன்.\nதங்கை வேற வழியில்லாமல் அந்த சூட்டை கழற்ற முயற்சித்த போது அது சிக்கென்று அவள் உடம்போடு இருக்கமாக ஒட்டிக் கொண்டதால் கழற்ற முடியவில்லை. நான் வெறித்து வெறித்து பார்க்க, அவள் முறைத்து, டே லூசு அண்ணா சும்மா பார்க்கிற நேரத்துல எனக்கு கழற்ற ஹெல்ப் பண்ணலாம்ல என்று சொன்னபோது அதற்காகவே காத்திருந்த நான் தங்கையின் உத்திரவு கிடைத்ததும் அவள் ஸ்விம் சூட்டை கழற்ற உதவினேன். அப்போது அவள் ஸ்விட் சூட் தலையில் மாட்டிக் கொள்ள அம்மணமாக பார்த்த தங்கையின் அம்சத்தை அப்படியே பார்த்து சொக்கிப்போய் அணைத்துக் கொண்டேன்.\nஅப்போது அவளும் என்னை ஆசையோடு இறுக்கி அணைத்துக் கொள்ள இருவரும் வியர்வைகுளியலில் நனைந்தபடி காமக்குளத்தில் மூழ்கி குளியல் போட குதிக்க ஆரம்பித்தோம். அப்போது அவள் சூட்டை முகத்தில் இருந்து விலக்கி நான் முத்தம் கொடுத்தேன். அவளும் கிஸ் அடித்தாள். இருவரும் லிப் கிஸ் அடித்தபோதே நான் தங்கையின் முலைகளை பிடித்து பிசைந்து உருட்டினேன். அப்போது அவளோ முழுசா முளைக்காத காம்புகள் விம்மி வெடித்து என் கைக்குள் கச்சிதமாக அடங்கியது. அப்போது என் தங்கை என் ஷார்ட்ஸில் கைவைத்து அடுத்த சிக்னலை கொடுத்தாள்.\nநானும் ஆசையோடு தங்கையின் முலைப்பழங்களை குனிந்து முத்தமிட்டு, நாக்கில் அவள் காம்பு வட்ட தடங்களை முத்தமிட்டு எச்சிலால் வருடி அதை வாயில் கவ்வி சப்பிய போது தங்கை சொக்கிப்போய் கண்களை மூடிக்கொண்டு ஐ லவ் யூ டா அண்ணா என்று அனத்த ஆரம்பித்தாள். நானும் தங்கையை அம்மண குண்டியோடு அள்ளி அணைத்து அவள் முலைகளை சப்பிக்கொண்டே மெதுவாக கீழே வந்து அவள் தொப்புள் குழியை முத்தமிட்டு நாக்கில் வட்டமிட்டபோது அவள் ஆஆ…சூப்பர்ணா…அப்படித்தான் பறக்கிற மாதிரி இருக்குடா என்று சொக்கியபோது நான் அப்படியே கீழே போனேன்.\nஅங்கே சுருள் முடிகள் சூழ்ந்த என் தங்கையின் சூப்பர் புண்டையை முத்தமிட்டபோது அது ஏற்கனவே காமத்தில் வியர்த்து கசிய ஆரம்பித்து இருந்தது. தங்கையின் கன்னிக்கூதி தேனை சுவைக்கும் அண்ணன்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று மாமுவின் முதுமொழிகள் புத்தகத்தில் படித்த ஞாபகம் வர தங்கையின் காமத்தடாகத்தின் மேல் வாய் வைத்து நாக்கால் அவள் மன்மத மொட்டை நிமிட்டி விட, அது மேலும் பொங்கி பெருக்கெடுத்து வழிய அதில் வாய் வைத்து தங்கையின் காமஜூஸை பருகி ருசித்தேன். அப்போது அவளும் என்னை அவள் புண்டையோடு அழுத்திக் கொள்ள ஏற்கனவே வியர்வை குளியலில் தொப்பலாக நனைந்திருந்த நாங்கள் இப்போது காமத்தெப்பத்தில் மூழ்கி சுகத்தை அனுபவித்து திளைத்தோம்.\nஅதற்கு பிறகு தங்கைக்கு நானே பல டிசைன் ஸ்விம் சூட்களை போட்டு விட்டு மறக்காமல் தங்கையின் தொப்புள் தரிசனம் தந்த அந்த சூப்பர் டிசைன் ஸ்விம் சூட்டை செலக்ட் செய்து வாங்க வைத்தேன். அதற்கு பிறகு அடிக்கடி பூலுக்கு செல்லும் போதெல்லாம் சும்மானாச்சும் அங்கு ஸ்டோரில் இருக்கும் ஸ்விம் சூட்டை போட்டு பார்க்க டிரையல் ரூமுக்குள் போல் செக்ஸ் ட்ரில் எடுத்து என்ஜாய் பண்ண ஆரம்பித்தோம்.\nஅது பிறகு அடிக்கடி எங்கள் வீட்டிலும் தொடர்ந்தது. என்ன தான் வெட்கத்தை விட்டு அண்ணா தங்கை உறவில் இன்செஸ்ட் சுகத்தை அனுபவித்தாலும் அந்த செக்ஸ் ஸ்டார்ட்டர் இப்போதும் ஸ்விம் சூட் தான். அதை போட்டுக்கொண்டு தங்கை அழைத்தாலே அவள் மூட் ஸ்டார்ட் ஆகிவிட்டதை அறிந்து மற்ற செக்ஸ்கேமை நானே ஸ்டார்ட் செய்து விடுவேன்.\nதங்கையின் தாகம் – 2\nபாங்காக் பிரதாபங்கள் – 1\nதமிழ் காம கதைகள் (1,818)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/25145813/1172509/Director-Gowthaman-imprisoned-for-attacking-police.vpf", "date_download": "2018-08-18T01:02:32Z", "digest": "sha1:YLBBIMKC2G42IUHMHZN7VPUD6GZ6Y4WO", "length": 13640, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலீசாரை தாக்கியதாக டைரக்டர் கவுதமன் சிறையில் அடைப்பு || Director Gowthaman imprisoned for attacking police", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலீசாரை தாக்கியதாக டைரக்டர் கவுதமன் சிறையில் அடைப்பு\nகாவிரி நதிநீர் போராட்டத்தின் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டைரக்டர் கவுதமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #Gowthaman\nகாவிரி நதிநீர் போராட்டத்தின் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டைரக்டர் கவுதமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #Gowthaman\nகாவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன.\nமத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை கண்டித்து அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇதில் நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சினிமா டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக சீமான், கவுதமன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.\nபோராட்டத்தின் போது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டது, தடையை மீறி அண்ணாசாலையில் கூடியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கவுதமன் மீது மேலும் 2 வழக்குகளும் போடப்பட்டிருந்தன.\nஇந்த வழக்குகளில் நேற்று இரவு டைரக்டர் கவுதமன் திடீரென கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கவுதமனை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கவுதமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த வழக்கில் சீமான் ஏற்கனவே முன் ஜாமீன் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. #Gowthaman\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஇமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட்\nகனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nசூப்பர் டூப்பரான படத்தில் துருவா, இந்துஜா\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/30120128/1173539/Pretty-scary-date-coming-up-for-Tamilpadam-2-Release.vpf", "date_download": "2018-08-18T01:02:28Z", "digest": "sha1:G2EWHW777NJDQRAUO5FJ45NY6UYK6UX3", "length": 13802, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "பயங்கரமான நாளில் தமிழ்ப்படம் 2 ரிலீஸ் - படக்குழு ஆலோசனை || Pretty scary date coming up for Tamilpadam 2 Release", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபயங்கரமான நாளில் தமிழ்ப்படம் 2 ரிலீஸ் - படக்குழு ஆலோசனை\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான நாளை தேர்ந்தெடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TamizhPadam2 #TP2\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான நாளை தேர்ந்தெடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TamizhPadam2 #TP2\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை ரிலீஸ் குறித்து படக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.\nஇந்த நிலையில், படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் அவரது டுவிட்டர் பக்கத்தில் `ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்'. என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதில் இருந்து படத்தை ஜுலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் வெளியான படத்தில் டீசர், நேற்று வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #TamizhPadam2 #TP2\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஇமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட்\nகனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nசூப்பர் டூப்பரான படத்தில் துருவா, இந்துஜா\nதமிழ்ப்படம் 2 உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி\nவெற்றி அடைந்த படங்களை தான் வச்சி செய்ய முடியும் - தமிழ்ப்படம் 2 சிவா\nதமிழ்ப்படம் 2 ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய சி.எஸ்.அமுதன்\nசென்சார் ரிசல்ட்டுக்கு பாகுபலியா - தமிழ்ப்படம் குழுவினரின் அடுத்த அட்ராசிட்டி\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/05/28093617/1166111/millet-palak-adai.vpf", "date_download": "2018-08-18T01:02:23Z", "digest": "sha1:ZBG7CKUCFPGLQASVTN3JTO4SS7SUX52S", "length": 13085, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்து நிறைந்த சிறுதானிய பாலக் அடை || millet palak adai", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்து நிறைந்த சிறுதானிய பாலக் அடை\nசிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், பாலக்கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், பாலக்கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுதிரை வாலி, வரகரசி, தினை, சாமை - தலா கால் கப்,\nகடலைப் பருப்பு - அரை கப்,\nதுவரம் பருப்பு, பாசிப்பருப்பு - தலா 5 டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் - ஒன்று,\nதோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு,\nபாலக் கீரை - ஒரு கட்டு,\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nபாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசிறுதானிய அரிசி வகைகளுடன் பருப்பு வகைகள் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு களைந்து இஞ்சி, பாலக் கீரை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.\nஅதனுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.\nதோசைக்கல்லை காய விட்டு மாவை சிறிய அடைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.\nஹெல்தியான, சத்தான சிறுதானிய பாலக் அடை ரெடி.\nபயன்: சிறுதானியங்களின் சத்துக்களுடன் கீரையில் உள்ள சத்துக்களையும் பெறலாம். ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவு.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்து நிறைந்த சிவப்பு அரிசி வெண் பொங்கல்\nசத்து நிறைந்த கம்பு சிறுகீரை அடை\nசத்து நிறைந்த பருப்பு முருங்கை கீரை அடை\nசர்க்கரை நோயாளிகளுக்கான சத்துமாவு பாசிப்பருப்பு அடை\nமாலை நேர டிபன் உப்புமா அடை\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி - சிறுதானிய அடை\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/09001507/1182564/Maratha-stir-Security-beefed-up-in-Maharashtra-ahead.vpf", "date_download": "2018-08-18T01:02:25Z", "digest": "sha1:U2BGEVZSTTW7FIATVGHUD44IBGWSWUW6", "length": 14055, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு இன்று முழு அடைப்பு: மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு || Maratha stir: Security beefed up in Maharashtra ahead of bandh", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு இன்று முழு அடைப்பு: மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு\nமராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation\nமராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation\nமகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.\nஅப்போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.\nவன்முறை தீவிரமடைந்ததால், முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் அறிவித்தனர்.\nதங்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இடஒதுக்கீடு கேட்டு மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமுழு அடைப்பை ஒட்டி மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிஐஎஸ்எப் மற்றும் எஸ்ஆர்பிஎப் படைவீரர்கள் உள்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களை சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation\nMaratha reservation | bandh | மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு | முழு அடைப்பு போராட்டம்\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்ததால் கேரள மக்கள் பீதி - வெள்ள சேதங்களை மோடி இன்று பார்வையிடுகிறார்\nபாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்\n2014-ம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரங்கல்\nவிமானத்தில் தூங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் - இந்திய ஐ.டி. நிறுவன அதிகாரி குற்றவாளி என தீர்ப்பு\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/15122947/1145999/Nokia-7-Plus-Nokia-1-press-images-surface.vpf", "date_download": "2018-08-18T01:02:36Z", "digest": "sha1:GK4BQB4PFEJFXKV23EXLLWPLI4YNFVZ6", "length": 16535, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா 7 பிளஸ் || Nokia 7 Plus, Nokia 1 press images surface", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅசத்தல் அம்சங்களுடன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா 7 பிளஸ்\nபதிவு: பிப்ரவரி 15, 2018 12:29\nஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் நிலையில், இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் நிலையில், இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிப்ரவரி 25-ம் தேதி வெளியிட இருக்கிறது. நோக்கியா 1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவான் பிளாஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நோக்கியா 1 மற்றும் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் புகைப்படம் மற்றும் இதர தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு ஒன் எடிஷனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனுடன் இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்கள் ஏற்கனவே வெளியான சிறப்பம்சங்களையை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. புதிய நோக்கியா 7 பிளஸ் வெள்ளை, ஆரஞ்சு மற்றும் கிரே நிறங்களில் வடிவமைக்கப்பட்டு இருப்பதை புதிய புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.\nநோக்கியா 7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ்\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்\n- அட்ரினோ 512 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- 12 எம்பி + 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், f/2.0 அப்ரேச்சர்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nஇத்துடன் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் வெளியாகி இருக்கிறது. மற்ற விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய நோக்கியா 1 ஸ்மார்ட்போனிலும் ஸ்கிரீனை சுற்றி பெரிய பெசல்கள் இடம்பெற்றிருக்கிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nநோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 ஆன்ட்ராய்டு ஒன் போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் நோக்கியா X5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜியோவை தொடர்ந்து நோக்கியா ஃபீச்சர்போனிலும் வாட்ஸ்அப் வசதி\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம்\nஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு ஆப் புதிய பேமென்ட் ஆப்ஷன்\nகேரள வெள்ளம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை தேதி\nநோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 ஆன்ட்ராய்டு ஒன் போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஎல்லா நோக்கியா போன்களுக்கும் நிச்சயம் கிடைக்கும்\nஏர்டெல் சலுகையுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nவிரைவில் வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nமாற்றம்: பிப்ரவரி 15, 2018 12:29\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/tag/junga/", "date_download": "2018-08-18T01:14:06Z", "digest": "sha1:PC6ZSISFPGOW7TXRYE4OAIV3N363X7QG", "length": 6580, "nlines": 151, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Junga Archives - Cinema Parvai", "raw_content": "\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nகஞ்ச டான் “ஜுங்கா” – இயக்குநர் கோகுல்\nநடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன்...\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.. விஜய் சேதுபதி கலக்கல் பேச்சு\n“விஜய் சேதுபதி புரொடக்சன்” தயாரிப்பில், “ஏ அண்ட் பி...\nவிஜய்சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாட்டு\nவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்...\nஇசைக் குடும்பத்தோடு சங்கமிக்கும் விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி. எப்படி...\nவிஜய் சேதுபதியின் டபுள் ட்ரீட்\nதமிழ் சினிமாவின் ஆச்சர்யம் விஜய் சேதுபதி....\nமீண்டும் சாயிஷாவுடன் ப்ரியா பவானி கூட்டணி\nகார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற...\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poetjayapalan.blogspot.com/", "date_download": "2018-08-18T01:18:53Z", "digest": "sha1:MB4UFBBKCZONKYXC7A4KEGSJOQYHDNGN", "length": 55870, "nlines": 494, "source_domain": "poetjayapalan.blogspot.com", "title": "நிலா Nila Tamil Poems of V.I.S.Jayapalan alias Shanmugampillai Jayapalan ( Poet )", "raw_content": "\nவாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது\n`நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை\nநீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ்.\nவசந்தப் பூ முகம் பார்க்க நெரியும்\nகழுத்தை நெழித்து சிறகை அகட்டி\nநீர்மீது ஓடி வான் எழுந்த\nஅன்னப் பறவை ஒன்றின் கர்வத்தோடு\nசிறுமியோ நனவுகளின் புல்வெளியில் நடக்கின்றாள்.\nநானோ தேம்ஸ் அமைதியின் தேவதை என்றேன்.\n”என் அம்மா மாதிரி நம்ப முடியாதவள் மாமா” என்று\nஅந்தச் சிறுமி உன்னைக் கிண்டல் செய்தாள்..\nஇதே தேம்ஸ் இதே இதே இதே தேம்ஸ்\nவெறிகொண்டு வெள்ளப் பெருக்காய் எழுந்து வந்து\nஎங்கள் வீட்டு வேலிக்கு உதைத்ததை\nநம்புவாயா மாமா எனக் கேட்டாள்.\nசாப்பிடு இல்லையேல் தேம்ஸ் நதி மீண்டும்\nஅம்மா மிரட்டுவாள் என்று சிரித்தாள்\nஅந்த தேம்ஸ் நதிக்கரையின் நனவான பெட்டை.\nஆயிரம் ஆயிரம் `டாண்டிலியன்கள்` பூத்த\nஅகாலமாய் முற்றி விதைப் பஞ்சான\nபூக்களைத் தேடிப் பறித்துப் பறித்து\nமுகில் மலைகளையும் புல் மேடுகளையும்\nவிலகி விலகி வருகின்ற தேம்ஸ் நதியே\nஅவள் உன்னுடைய கபிலநிறச் சிற்றருவி.\nஎப்போதும் தயாராக உனது கதைகளை\nதன் இளைய மனம் நிறைத்து வைத்துள்ளாள்.\nமீண்டும் இங்கிலாந்தின் புன்னகையாய் நெழிகிறதாம்.\nமீண்டு வந்துவிட்டது மாமா என்று\nவீட்டுக்குத் தோழிகள் வந்ததைச் சொல்வதுபோல்\nபார் முன்னும் பின்னும் அப்பா அம்மா அன்னங்கள்\nபாதுகாப்பாகக் குஞ்சுகள் நடுவே பார் என்று\nஅன்னக் குடும்ப அழகைக் காட்டியபோது\n”அன்னங்கள் நல்ல பெற்றோர்கள்” என்றாள்.\nஇரண்டும் ஒன்றாக முட்டைகளை அடைகாத்து\nஇரண்டும் ஒன்றாகக் குஞ்சுகளைப் பேணுகிற பேரழகை\nஎன்கிற போதவள் குரலுடன் மனசும் உடைந்தது.\nஅப்பா அம்மா பிரிந்தபோது நான்\nபாட்டிதான் என்னை வளர்த்தது என்றாள். .\nதேம்ஸின் இரைச்சல் பிடிக்கும் மாமா\nநதி இரையவும் புலம்பவும் இல்லை என்றேன்.\nதேம்ஸ் நதியின் ஒவ்வொரு திவலையும்\nஒவ்வொரு காலத்தின் பாடலை இசைக்கிறது\nசில ரோமானியப் படைகளை எதிர்த்து\nநாடாளுமன்ற வாதிகளின் போர்ப் பாடல்.\nஎங்கள் மூதாதைரிடம் யுத்தத்தைக் கொடுத்துவிட்டு\nமமதைப் பாடலும் ஒலிக்கிறதடி என்றேன்.\nகுளோப் அரங்கின்முன் தரித்துக் கேட்ட\nஇந்த மாநதி இசைக்காத நாளுமுண்டோ.\nகாலமெல்லாம் நதிகள் இடத்தில் ததும்புகிற\nகரையோரங்களில் நாயகர் நாயகிகள் விட்டுச்செல்கிற\nபெருகு பெருகு தேம்ஸ் நதியாகப் பெருகு\nஎன் கை பற்றிய சின்ன நதியே பெருகு\nபெருகு போரின் மாசுகள் அகன்று பெருகு என்றேன்.\nஉன் நாட்களிலாவது நமது தாய்நாட்டுக்கு\nபீரங்கிக் குழலாய் சிதைகிற எங்கள் கனகராயன் ஆறும்\nமீண்டும் வந்து பறவைகள் பாட\nமீண்டும் உயிர்த்து மீன்கள் துள்ள\nஈழத்தின் புன்னகையாய் நெழியட்டும் வாழிய என்றேன்.\nஅவளுக்கு எங்களூர்ச் சிற்றாறை தெரியவில்லை.\nஎன்தாய்நாடு இங்கிலாந்துதானே மாமா என்றாள்.\nசற்று நேர மெளவுனம் குலைய\nஆனால் ஒன்று செய்யலாம் என்றாள்.\nவளர்ந்ததும் தேம்ஸ் நதியின் துடைப்பங்களோடு\nசிற்றாறுகளைப் பெருக்க வருவேன் என்றாள்.\nதேம்ஸ் நதியே தேம்ஸ் நதியே\nபோர் குதறிய எங்கள் சிற்றாறுகளுக்கும் தா என்றேன்.\nஎன்னைக் காதல் வசப் படுத்திய தேம்ஸ்\nஅந்தச் சிறுமியில் புன்னகையாய் நெழிந்தது.\n* 1642 ஆண்டு இந்ங்கிலாந்தின் உள்ள்நாட்டுப்போரில் கேம்பிறிஜ் நாடாளுமன்ற உறுப்பினர் குறொம்வெல் (Oliver Cromwell 1599 - 1658) தலைமையில் சாள்ஸ் மன்னனுக்கு எதிராக எழுந்த படை.\n** தேம்ஸ் நதியின் தென் கரையில் 1599 சேக்ஸ்பியர் சேர்ந்து கட்டிய அரங்கம்\nஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்\nசீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில்\nகண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது\nஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது\nஒரு தனித்த காட்டு வாத்து.\nரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில்\nபசிய அறோரா துருவ ஒளியையும்\nவானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன்.\nவண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும்.\nஉலகம் சிருஸ்டி மூர்க்கத்தில் அதிர்கையில்\nஅடி நகரில் அலைந்து கொண்டிருந்தேன்.\nஎன்னோடு படகில் ஒரு புதிய நாள்.\nஒற்றைத் தமிழனாக அங்குபோய் இறங்கினேன்.\nவசந்தம் வந்ததென்று யாராவது சொல்லுங்கள்.\nவாழ்வு நிறைந்த ஸ்காபறோ வீடுகளை மடக்க\nவாழ்வு பற்றிய புதிய கண்டுபிடிப்புகளோடு\n416 தொலைபேசி வட்டத்துள் அது இல்லை என்றார்கள்.\n905 வட்டத்துள் அது இருக்கிறது என்றபடி\nஅடி நகரின் பூத்த சதுக்கங்கள்\nபாணர்களும் கூத்தர்களும் கைப்பற்றிய தெருக்கள்\nஒன்ராறியோ ஏரித் தீவு என்று\nசெவ்வந்திக்கும் அவரைக்கும் மலர் சூடி\nபாகல் சுரைப் பூக்களின் மகரந்ததைச் சிந்திவிடுகிறது.\nதன் பூவை நீட்டிவிடுகிற புல்லைப்போல\nஇறுதியில் வென்று விடுகிறது வாழ்வு.\nதெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்\nசினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய\nவாசனையோடும் என் படகில் இருந்தாள்.\nஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.\nநாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்\nஅவள் கமழும் ஒரு படகு\nஎங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்\nவெல்க நம் பெட்டையள் என்றாள்.\nமேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.\nஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.\nவண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்\nஉரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.\nகைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.\nபோர் நாட்களிலும் கதவடையா நம்\nஉன் விரல் பற்றிக் குறு குறு நடந்து\nமுன்றிலில் நின்று எனை நினைத்தாயா\nமீண்டு வந்து பாடுதாம் உண்மையா\nகொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்\nநெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.\nமேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர\nகொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே\nஎங்கள் ஆற்றை எங்கள் காட்டை\nஉன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.\nஎன்னரும் தோழமைக் கவிஞன் புதுவை\nயானையின் மதநீர் உண்டு செளித்த நம்\n*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு\nஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை.\nஉனக்குப் புட்பக விமானப் பாடை\nஇந்த நாட்கள் எனது நண்பர்களும் தோழர்களும் உதிருகிற காலமாகி மிகுந்த சோகம் தருகிறது. ஒவ்வொரு அஞ்சலி எழுதுகிற போதும் கால நதி எங்களதும் எங்கள் தந்தையரதும் தலைமுறைகளின் காலடி மண்ணை ஓயாமல் வாரிச் செல்கிறதைத் துயரத்துடன் உணர்கிறேன்.\nதோழர்கள் குகமூர்த்தி, சசி கிருஸ்ணமூர்த்தி, சார்ல்ஸ் அபயசேகர, எம்.எஸ்.எம். அஸ்ர்ப், சிவராம், சுந்தரராமசாமி, கலைச்செல்வன், வில்வரத்தினம், புஸ்பராசா, அன்ரன் பாலசிங்கம், பராமாஸ்டர் என நம்பிக்கையுடன் சூரியனைத் தேடி எதிர் புதிர் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்த தோழமைக்கு இனிய பலர் தமது பயணம் முடியாமலே பாதிவழியில் உதிர்ந்துபோனார்கள்.\nபராவின் நினைவு எனக்கு 1970 பதுகளின் பிற்பகுதியில் இன ஒடுக்குதலுக்கு எதிராகப் பரந்த தளத்தில் இயங்கிய மேர்ஜ் (MIRJE- Movement for Inter-Racial Justice and Equality-இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பு) அமைப்பின் செயற்பாட்டாளர்களை நினைவு படுத்துகிறது.\nஅந் நாட்களில் இலங்கைத் தீவு எங்கும் பால், இனம், மதம் கடந்து எங்கள் தலைமுறையின் முற்போக்காளர் பலர் ஏதோ ஒரு வகையில் மேர்ஜ் அமைப்புடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள். தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் பொது நலன் கருதி, மனித உறவுகளும் உரையாடல்களும் தொடரமுடியும்; தொடரவேண்டும் என்கிற சேதியை நவீன யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்ததில் மேர்ஜ் அமைப்புக்கு பெரும் பங்கிருக்கிறது. மேர்ஜ் பதாகையின் கீழ் இன ஒடுக்குதலை நிராகரித்தும் அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம்,மலையக முற்போக்காளருடன் நாமும் அணிதிரண் டெழுந்த அந்த நாட்கள் இப்போதும் கிளர்ச்சி தருகிறது. அந்த மகத்தான எழுச்சியின்\nமுகங்களாக வடகிழக்கில் வண.பிதா ஜெயசீலனும் அமரர் வண. பிதா சந்திரா பெர்னாண்டோவும், அமரர்கள் வணசிங்கா மாஸ்டர்ரும் அண்ணாமலையும் விமலேஸ்வரனும் பரா மாஸ்டரும் இருந்தார்கள். அவர்களுக்கு உறுதுணையாக நானும் எனது நண்பர்களும் இருந்தோம்.\n‚மேர்ஜ் பண்பாடு’ என்பது கண்டியில் இருந்து செயற்பட்ட வண. கத்தோலிக்க பிதா போல் கஸ்பஸ் அவர்களது கனவுகளின் செயல் வடிவமாகும். என் வாழ்வில் சந்தித்த நம்பிக்கை தருகிற கனவுகள் நிறைந்த மனிதர்களுள் அவரும் ஒருவர். அவரது கனவை நனவாக்குவதில் சார்ள்ஸ் அபயசேகரவும் வண. பிதா ஜெயசீலனும் பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் சுனந்த தேசபிரியாவும் வழக்கறிஞர் சிவபாலனும் தீவிரமாக உழைத்தார்கள். இலங்கைத்தீவடங்கிலும் எஞ்சியிருந்த நன்னம்பிக்கைகள் மேர்ஜ் பண்பாடாகத் திரட்டப்பட்டது. மறைந்த சூரியனைப்போல அந்தப் பண்பாடு மீண்டும் ஒருநாள் உதயமாகும்.\n1970பதுகளின் பிற்பகுதியில் வண. பிதா ஜெயசீலனின் ஒருங்கிணைப்பில் செயற்பட்ட மேர்ஜ் குழுக் கூட்டம் ஒன்றிலேயே தோழர் பரா எனக்கு அறிமுகமானார். மாக்சிய ரொட்ஸ்கிய கோட்பாட்டாளரும் தொழிற்சங்கவாதியும் மேர்ஜ் குழுவின் முன்னணிச் செயற்பாட்டாளருமாக இருந்த தோழர் பராவை எனக்கு முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்தது வண. பிதா ஜெயசீலனா, நித்தியானந்தனா, அல்லது நிர்மலாவா என்பது எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. அப்பொழுது நான் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராகவும் மேர்ஜ் குழுவின் ஆதராவாளனாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். இருந்தும் நாங்கள் 1977-78 க்களின் பிற்பகுதியில் ஜெயவர்த்தனாவின் அவசரகால ஆட்சி கொடுமைகளின் போதுதான் மிகவும் நெருக்கமானோம். சிங்கள அரச இராணுவம் இன்பம் செல்வமென தலை நிமிர்ந்த பல தமிழ் இளைஞர்களைப் பட்டியலிட்டுக் கடத்திச் சென்று, கொன்று காகங்களுக்கும் நாய்களுக்கும் இரையாக வீசப் பட்ட அந்த இருண்ட நாட்களில் மேர்ஜ் குழுவைச் சேர்ந்தவர்களே எங்கள் கைவிளக்காக இருந்தார்கள். வண. பிதா ஜெயசீலனின் தேவாலயம், யாழ் பல்கலைக் கழகம் மற்றும் பரா-மல்லிகா; நித்தி -நிர்மலா போன்றவர்களது வீடுகளும் தான் எம்போன்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரது புகலாக இருந்தன.\nநெருக்கடிகளில் இந்த வாசல்கள்தான் எங்களுக்காகத் திறந்திருந்தன. இந்தக் கூரைகளின் கீழ் தேனீர் அருந்தியபடி அன்றைய வரலாற்றின் மிக முக்கியமான விடயங்களை நாங்கள் கையாண்டிருக்கிறோம். இதில் ஆச்சரியமானவிடயம் நாங்கள் அனைவருமே மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள் என்பதுதான்.\nதுரதிஸ்டவசமாக அந்தக் கலாசாரம் இன்று இல்லாதொழிந்து போயிற்று. தமிழரது விடுதலைப் போராட்டம் எதிர் நோக்குகிற மிகப் பெரிய நெருக்கடி இதுதான்\nநாங்கள் எல்லோரும் 1970 களின் பின்பகுதியில் இருந்து மனித உரிமைக்கான போராட்டங்களில் அசாத்திய துணிச்சலுடனும் தீவிரமாகவும் செயற்பட்டோம். 1980 களில் மலைய மக்கள் பற்றிய கள ஆய்வுகளை மேற்கொள்ள நான் ஹட்டன் சென்றுவிட்டேன். பின்னர் முஸ்லிம் மக்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தேன். 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் இந்தியா சென்றுவிட்டேன். 1987ல் இந்திய இராணுவ நடவடிக்கைகளின்போது மேர்ஜ் இயக்கம் மீண்டும் தீவிரமாக இயங்கியபோது நான் வண. பிதா ஜெயசீலனுடன் சேர்ந்து பணியாற்றினேன். அந்தக் கால கட்டத்தில் பரா மாஸ்டர் அவர்கள் ஐரோப்பா சென்றுவிட்டதை அறிந்தேன். அதன் பின்னர் அவரை 1989 ஆம் ஆண்டு சுசீந்திரனின் அழைப்பின்பேரில் ஆறாவது இலக்கியச் சந்திப்பிற்காக பெர்லின் சென்றபோதுதான் மீண்டும் பார்த்தேன். அப்பொழுது இலக்கியச் சந்திப்பு ஒரு பரந்த ஜனநாயகத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தமை மகிழ்ச்சி தந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட மூன்று அல்லது நாலு சந்திப்புக்களைவிட பெர்லின் சந்திப்பின் போது எங்களிடையே நடைமுறை அரசியல் சார்ந்து அதிக இணக்கப்பாடு இருந்தது என்று கருதுகிறேன். எனினும் முரண்பாடுகளுக்கு வெளியில் நம் தோழமை விட்ட இடத்தில் இருந்து மீள ஆரம்பித்ததையும் இத் தருணத்தில் நினைவு கூர வேண்டும். முரண்பாடுகளோடும் பொதுவிடயங்களில் ஒருமைபட்டுச் செயல்படுகிற வெளி எப்பவும் அவரைச் சுற்றிப் பரந்து கிடந்தது. கருத்து வேறுபாடுகளுடனும் மனிதர்கள் மீது அக்கறையோடு பொதுப் பிரச்சினைகளில் ஒருமைப்பட்டுச் செயற்படுதலும் நட்பைப் பேணுதலும் என்கிற மேர்ஜ் பண்பாட்டை அவர் தொடர்ந்தும் கடைப் பிடித்தார். பழைய மேர்ஜ் தோழர்கள் என்ற முறையில் நித்தியானந்தனையும் என்னையும் சந்தித்ததில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.\nபுலம் பெயர்ந்த தேசிய வாதிகள் பொதுவிடயங்களில் இணைந்து செயற்படுகிற எங்கள் விடுதலைக்கு மிக அவசியமாய் இருக்கிற பண்பை தோழர் பராபோன்ற புலம் பெயர்ந்த மேர்ஜ் நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவர்களை எதிர்த் திசைகளில் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருந்துவிட்டார்கள்.\nநமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மட்டத்தில் வாய்ப்புகளை இழந்து வருவதற்கு இந்த அணுகுமுறையும் முக்கியமான ஒரு காரணமாகிறது. இந்தப் பிழையான அணுகுமுறை திருத்தப் படவேண்டும் என்கிற சிந்தனையும் கவலையும் மேர்ஜ் நண்பர் ஒருவரின் பிரிவின்போது ஏற்படுவது இயல்பானதே. பரா மாஸ்டரின் பிரிவினால் துயருறும் அவரது தோழர்களுக்கும் அவரது மனைவியார் மல்லிகாவுக்கும் பிள்ளைகள் உமா, சந்தூசுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nதெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்\nசினைப் பிடித்த சமன் மீன்கள் நீந்திய\nவாசனையோடும் என் படகில் இருந்தாள்.\nஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.\nநாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்\nஅவள் கமழும் ஒரு படகு\nஎங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்\nவெல்க நம் பெட்டையள் என்றாள்.\nமேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.\nஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.\nவண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்\nஉரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.\nகைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.\nஎங்கள் யானைக் காடு சிந்துவது\nகற்சிலை மடுவில் சிந்திய குருதி\nசெங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில்\nவாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என\nவன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது.\nகாலனை வென்று ஞாலப் பந்தில்\nபுலிச்சினை பொறித்த உன் தவப் புதல்வன்.\nநாம் கலங்குவதை அவன் விரும்பான்\nதன் உயிரிலும் தாங்கிய கொடியை\nஐநாவில் ஏற்றுக எனப் பணித்தே அவன் போனான்\nகலைஞருக்கு வாழ்த்து Greetings to M.Karunanidhi - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஎம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு\nஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய்\nகலைஞருக்கு மனம் கனிந்த நன்றி, ஈழத்தமிழர்கள் போராளிகள் தோற்றுப் போனால் நிச்சயமான இனக்கொலை ஆபத்தை எதிர் நோக்குகிற காலம் இது. தமிழர்களும் வங்காளிகளும் பல்தேசிய இனம் என்கிற வகையில் இந்திரா காந்தி அம்மையார் வங்காளதேசம் விடுதலைப் போரின்போதும் எங்கள் போராட்டதிலும் விசேட நிலைபாடு எடுத்தார். மேற்க்கு வங்கம் இந்தியா நாமிருக்கப் பயமேன் என்று வங்க மக்களும் சி.பி.எம் கட்சியும் பக்க பலமாக நின்றார்கள். இன்று எங்கள் பிரச்சினையில் சி.பி.ஐ எடுத்த மனித நேய நிலையை சிபிஎம் கட்சியும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகிறேன். தோழர் சீதாராம் எச்சூரி போன்றவர்கள் நிலமையை நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தருகிறது. சீனச் சார்பு ஜெவிபி கட்சியினரால் ஒரு பத்திரிகையாலரால் சிலர் பிழையாக வழி நடத்தப் பட்டாலும் சி.பி.எம் ஆதரவுக்கு நாம் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். தமிழகத்தில் நெடுமாறன், வீரமணி, திருமாவளவன், மருத்துவர், வைகோ, கவிஞர் கனிமொழி, கவிஞர் இன்குலாப், டாக்டர் கிருஸ்ணசமி தோழர்கள் மகேந்திரன், நல்லக்கண்ணு, குளத்தூர் மணி போன்றோரின் ஆதரவு இல்லாதிருந்தால் நாம் எப்பவோ தெருத்தெருவாக எரிக்கப் பட்டிருப்போம். மேலும் இலகணேசனும் அண்மையில் எங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயலலிதா அம்மையாரின் கண்களும் திறக்கும் என ஈழத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். கடந்த கால இரு பக்கப் பிழைகள் மற்றும் எங்களது பெரும் தவறு என்பவை இன்று ஊனரப்பட்டு திருத்தப் படுகிறது. இன்றைக்கு வன்னி இந்து சமுதிரத்தில் வலுத்துவரும் சீனச் சதிக்கு எதிராக இந்தியாவின் உறுதியான ஆதரவாளனாக தன்னை அடையாளம் காட்டி இருக்கிறது. இலங்கை பாகிஸ்தான் பர்மா வழியில் இந்தியாவுக்கு எதிரான துறைமுக தளத்தை சீனாவுக்கு வளங்க முன்வந்துள்ளது. கலைஞர் மனம் வைத்தால் எங்கள் விடுதலையும் இந்தியாவுக்கு தலை கொடுக்கிற தோழமையான இலங்கைத் தமிழர்களது தேசமும் உருவாகும் என்பதில் ஐயமில்லை.\nஎங்களை இனக்கொலை முயற்சியில் இருந்து எங்கள் மொழி வழித் தாயான தமிழ்நாடும் கலாச்சார தாயான இந்தியாவும் காப்பாற்ற முன்வரவேண்டும்.\nநான் சிறகுகளால் உலகளக்கிற பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/2015/01/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8B-4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-18T01:23:23Z", "digest": "sha1:NQAPDWETHBWDBDESABSW47D6CARPJRLD", "length": 36060, "nlines": 205, "source_domain": "www.tamilhindu.com", "title": "எப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இசை, கலைகள்\nஎப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\nஎப்படிப் பாடினரோ தொடரின் மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.\nகவிகுஞ்சரபாரதி (1810 – 1896)\nகர்நாடக சங்கீத உலகில் இந்தப் பெயர் மிகவும் அறிமுகமான பெயர். இவர் பாடல்கள் இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருபவை. பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர் இந்த கவி குஞ்சர பாரதியார்.\nஇவருடைய முன்னோர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து குடிபெயர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்கரை எனும் ஊருக்குக் குடியேறினார்கள். 17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தை ஆண்ட ரகுநாத சேதுபதி மஹாராஜா இவருடைய முன்னோர்களுக்கு இந்த கிராமத்தை கொடையாக அளித்திருக்கிறார்கள். கவி குஞ்சர பாரதியின் தந்தை வழித் தாத்தாவின் பெயர் கோட்டீஸ்வர பாரதி. தந்தையார் பெயர் சுப்பிரமணிய பாரதி. தாத்தாவின் பெயரே இவருக்கும் கொடுக்கப்பட்டதால் இவரை பெயர் மாற்றி அழைத்து வந்தனர். இந்தக் குடும்பத்தில் அனைவருமே இசையில் வல்லவர்கள். கவி குஞ்சர பாரதியின் தாய்வழிப் பாட்டனார் பெயர் நந்தனூர் நாகபாரதி. இவருடைய தந்தை பாட்டானார் அனைவருமே தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nஇவருடைய பெற்றொர்கள் குழந்தைக்காக தவமிருந்து பெருங்கரைக்கு அருகிலுள்ள கொடுமாலூர் எனுமிடத்தில் உள்ள முருகனை வழிபட்டு இந்தக் குழந்தை பிறந்ததால், இவன் முருகனின் கொடை என்று கருதினார்கள். இவரது இளம் வயதிலேயே தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் முறையாகப் படித்தார். இவருக்கு மொழிப் புலமையும், கவி இயற்றும் திறமையும் இயற்கையிலேயே அமைந்திருந்தது. இசையிலும் இவர் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் இப்படி பல்துறை வித்தகராகப் பரிமளிக்கத் தொடங்கியதுமே, அப்போது பிரபலமாக இருந்த மதுரகவி பாரதியார் என்பவருடன் அறிமுகமானார். இவ்விருவரின் நட்புறவின் பயனாக கவி குஞ்சர பாரதி தனது 12ஆம் வயதிலேயே கவிதைகள் இயற்றத் தலைப்பட்டு விட்டார். தமிழில் கீர்த்தனைகளும், பிரபந்தங்களும் கூட இயற்றத் தொடங்கினார். இவர் பாடல்களில் முருகப் பெருமானையே கருப்பொருளாக வைத்து பாடியிருப்பதைக் காணமுடிகிறது.\nஇவன் ஆரோ (காம்போதி) – சுகுணா வராதாச்சாரி குரலில்\nஇவருடைய 18ஆம் வயதில் இவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அபாய கட்டத்தை அடைந்து நினைவிழந்து கிடந்தபோது, இவருடைய கனவில் அவ்வூரின் கிராம தேவதை தோன்றி தன்னைப் பற்றி ஒரு பாடல் பாடுமாறு கேட்டதாம். மறுநாள் அவரது உடல்நிலை படிப்படியாகத் தேறத் தொடங்கியது. அதன் பின் தன்னுடைய ஆபத்தான கட்டத்தில் தன் கனவில் தோன்றித் தன்னைப் பாடுமாறு பணித்த அந்த கிராம தேவதையின் மீது அடுக்கடுக்காகப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். 1840இல் இவர் இயற்றிய “அழகர் குறவஞ்சி” மிகவும் பிரபலமடைந்தது. இந்த குறவஞ்சி இலக்கியம் முதன்முதலாக சிவகங்கை ஜமீந்தாரின் அவையில் அரங்கேற்றப்பட்டது. அதன் பிறகு இந்தக் குறவஞ்சி பிரபலமடைந்து தொலைதூர ஊர்களில் எல்லாம் கூட இது பாடப்பட்டு வந்திருக்கிறது.\nஅப்போதைய சிவகங்கை மன்னர் கெளரிவல்லபர் தன்னுடைய அவையில் புலவர்கள், பண்டிதர்கள் ஆகியோர் நிரம்பியிருக்கிற அவையில் வந்து தன்னைப் பற்றிப் பாடும்படி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட கவி குஞ்சர பாரதியும் அரசர் அவைக்குச் சென்று பல பாடல்களை மன்னர் பேரில் பாடினார். இவருடைய திறமையைப் பாராட்டி அவர் இவருக்குக் “கவி குஞ்சரம்” எனும் விருதினை வழங்கி இவரைத் தனது சிவகங்கை சமஸ்தானத்து ஆஸ்தான வித்வானாக நியமித்தார். அது முதலாக இவர் அந்த சிவகங்கை அவையில் அடுத்து வந்த சத்ரபதிபோதகுரு என்பவரின் காலத்திலும் தொடர்ந்து அந்த சிறப்போடு அங்கு இருந்து வந்தார்.\nஇனிமேல் அவர்க்கும் (பைரவி) : எஸ்.பி.ராஜாயி குரலில்\n“வேங்கைக் கும்மி” என்ற பெயரில் ஒரு கும்மி அடிக்கும் பாட்டையும் இவர் இயற்றினார். சிவகங்கை மன்னர் ஒரு முறை 16 அடி நீளமுள்ள வேங்கையொன்றை வேட்டையாடிக் கொன்றாராம். மன்னருடைய திறமையைப் புகழ்ந்து பாராட்டி இவர் இந்த வேங்கைக் கும்மியை இயற்றினாராம். இந்த கும்மிப் புகழ் மாலையைப் பாராட்டி சிவகங்கை அரசர் இவருக்கு கொட்டாங்கச்சியேந்தல் எனும் கிராமத்தைத் தானமாகக் கொடுத்திருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல், இவரை ஒரு பல்லக்கில் உட்காரவைத்துப் பரிசுப் பொருட்களையும் ஏராளமாகத் தந்து அந்த கிராமம் வரையிலும் அரச குடும்பத்தார் பின் தொடர இவரை அங்கு கொண்டு போய் விட்டனராம்.\nஇவரது புகழைக் கேள்விப்பட்டு இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா இவரைத் தங்கள் ஊருக்கும் அழைத்து, அந்த சமஸ்தானத்து ஆஸ்தான வித்வானாகவும் நியமித்து பெருமை சேர்த்தார். இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அரசர் சேதுபதி மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவர் “ஸ்கந்தபுராண கீர்த்தனைகள்” எனும் பெயரில் முருகப் பெருமான் மீது பாடல்களை இயற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 55 ஆகியிருந்தது. அதன் பின்னர் இவர் அமைதியாகத் தன் கிராமத்தில் தானுண்டு தன் இசையுண்டு என்று கவிகள் இயற்றிப் பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார்.\nஒருவர் ஏதாவதொரு துறையில் பிரபலமடைந்து விட்டாலே அவரைப் பற்றி பல பொய்யும், மெய்யும் கலந்து செய்திகள் வெளிவருவதுண்டு அல்லவா அந்த வகையில் இவரைப் பற்றி சொல்லப்படும் செவிவழிக் கதையொன்று உண்டு. ஒரு முறை இராமநாதபுரம் சமஸ்தானம் மழையின்றி வறண்டு கிடந்த நிலையில் இவர் ஒரு வெண்பாவைப் பாடி மழையை வரவழைத்தார் என்கிறார்கள். இவர் தன்னுடைய 86ஆம் வயதில் சுற்றத்தார் அனைவரும் அவ்ரைச் சுற்றி சூழ்ந்திருக்க அமைதியாகத் தன் பூதவுடலை நீத்து அமரர் ஆனார்.\nஎல்லாம் அறிவேன் – பதம் (கல்யாணி): நாட்டியம்\nஇவரது படைப்புகளில் பெருமை சேர்ப்பவைகளில் “அழகர் குறவஞ்சி”யும் ஒன்று. திருமாலிருஞ்சோலைமலையில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப்பட்ட குறவஞ்சி இலக்கியம் இது. “அடைக்கலமாலை”, “கயற்கண்ணிமாலை” ஆகியவை மதுரை மீனாட்சியம்மன் மீது பாடப்பட்டவை. “பேரின்ப கீர்த்தனைகள்” எனும் தொகுப்பு இவரது பெருமையை பறைசாற்றும் நூலாகும். இவருடைய பாடல்கள் சிலகாலம் முன்பு வரை தலைசிறந்த சங்கீத வித்வான்களால் சபைகளில் பாடப்பட்டு வந்திருக்கின்றன. தற்போது கவி குஞ்சர பாரதியின் பாடல்களைப் பாடுவது சற்று குறைந்து போயிருப்பதைப் போலத் தோன்றுகிறது. மீண்டும் அவரது அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டால், அது அந்த மகானுக்குச் செய்யும் கைமாறாகக் கருதலாம்.\nமுக்கியமான ஒரு செய்தி, பல வாக்யேயக் காரர்கள் செய்வது போல, இவரும் இவருடைய சாகித்தியங்களில் ‘கவி குஞ்சரம்’ எனும் முத்திரையை பதித்து வைத்திருக்கிறார். காலவோட்டத்தில் எத்தனையோ வாக்யேயக் காரர்கள் தோன்றினாலும், கவி குஞ்சர பாரதி போன்ற மகான்கள் ஒளி வீசிக்கொண்டுதான் இருப்பார்கள். வாழ்க கவி குஞ்சர பாரதி புகழ்\nஇவருடைய பால்களில் அமரத்துவம் பெற்றுவிட்ட பல சாகித்தியங்கள் உள. அவைகளில் குறிப்பிடத் தக்கவை:\n1. சுத்தசாவேரி ராகத்தில் அமைந்த “எல்லோரையும் போலவே”\n2. பேகடா ராகத்தில் அமைந்த “என்னடி பெண்ணே உனக்கு”\n3. மோகன ராகத்தில் அமைந்த “சந்நிதி கண்டு”\n4. கல்யாணி ராகப் பாடலான “தெய்வம் உண்டென்று”\n5. காம்போஜி ராக “இவனாரோ\n6. கலாவதி ராகத்தில் அமைந்த “சித்தி விநாயகனே”\nகுறிச்சொற்கள்: carnatic-music-legends, இசை அனுபவம், இசைக்கலைஞர், இசைமேதை, எப்படிப் பாடினரோ, கவிகுஞ்சர பாரதி, கீர்த்தனை, சிவகங்கை, தமிழ்க் கீர்த்தனை, ராமநாதபுரம், வாக்கேயக் காரர்\n8 மறுமொழிகள் எப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\n பபனச சிவம் பற்றி அழுத்துமாறு\nஅவ்வளவாகத் தெரியாத ஒருவரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி\nஏதாவது ஆடியோ இணைப்புகளும் தர முடியுமா\nநல்லதொரு தகவல் நன்றி இவர் பாடல்களை சங்கீத வித்வான்கள் பாடீருந்தால் இதன் ஆடியோ விவரங்கள் வழங்கினால் சங்கீத கச்சேரிகளில் பாடி எல்லோரும் மகிழலாம் இவைகள் கிடைக்கும் இடங்கள் தெரிவித்தால் நலம்\nஇதில் தெரிவது என்னவென்றால் – தமிழ் சங்கீதம் 16-17 ஆம் நூற்றாண்டில் இருந்தே இருக்கிறது. ஏதோ ஒரு சாரர் தமிழுக்கு விரோதி என்பது ஒரு தவறான கருத்து.\nதமிழ் இசை சங்க காலத்திற்கும் முன்பிருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இசைத்தமிழ் , முத்தமிழில் ஒன்று.\nஅன்புள்ள திரு -தனசேகரன், நான் கூறியது – இன்றைய கீர்த்தனை மரபு பற்றி. அதை அவ்வாறு கூறாதது என் தவறுதான். இசைத்தமிழின் தொன்மை தங்கள் கூறியபடியே பழமையானதே.\nதமிழிசை தொன்மையானது. சங்க காலத்துத் தமிழிசை பற்றி அதிகம் அறிய இயலவில்லை. சங்க இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடல் பரிந்த பாட்டாக இசையுடன் அமைந்தது ஆகும். சங்க காலத்தில் இசைக்கலைஞர்கள் ராக தாளத்துடன் பாடி வந்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பட்ட பரிபாடலில் இசையாசிரியர்கள் பண்களை பாலையாழ், நோதிறம், காந்தாரம் என வகுத்தனர். இவை கர்நாடக இசையின் ராகங்களில் இடம் பெற்றுள்ளன. இன்று கர்நாடக இசைக்கலைஞர்கள் பாடும் தோடி என்பது மிகப்பழமையான தமிழிசை ராகமாகும். தக்கேசி எனப்படும் தமிழிசை ராகம் இன்று கர்னாடக இசையில் வழங்கி வரும் காம்போதி ராகமாகும். கி.பி. 7-8ம் நூற்றாண்டுகளில் பாடப்பட்ட தேவாரம் திருவாசகம் முதலியன பல வகைப்பட்ட பண்களைக் கொண்டு பாடப்பட்டனவாகும்.\nஇந்த மரபைத் தொடர்ந்தே இடைக்காலத்தும் தற்காலத்தும் தமிழில் அழகான பாடல்களை இயற்றிய அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதியார், மாரிமுத்தா பிள்ளை முதலியோர், எல்லாரும் புரிந்து கொண்டு பாடும் வண்ணம் எளிமையான சொல் நயத்தில் அருமையான தத்துவங்களைப் பொதிந்து வைத்து இறைவன் மீது பாடல்களை இயற்றினர். இவற்றுள் பல பாடல்கள் அக்காலத்து சங்கீத வித்துவான்களுக்குத் தெரிந்திருக்கிறது. பிறகு வழக்கொழிந்தும் போயுள்ளன.\nகவி குஞ்சர பாரதியின் இன்னும் ஒரு பாடல்: சுகுணா புருஷோத்தமன் பாடியுள்ள ‘திருக்கல்யாணம்’ எனும் பாடல்- மோஹன ராகத்தில் அமைந்தது. நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகடாக வெளிவந்தது.\nநாரதா, ஹ்ம்ம்… இதை வைத்து மீண்டும் தமிழிசை விவாத விளையாட்டை துவங்குகிறீர்கள்.\nஎல்லாம் நன்மைக்கே பிரபோ …\nகர்நாடக இசை தமிழிசையை அழித்துவிட்டது\nகர்நாடக இசை தான் தமிழிசை\nதமிழில் பாடப்படுவது எல்லாமே தமிழிசை\nதமிழிசை என்பது வேறு கர்நாடக இசை என்பது முற்றிலும் வேறு\nகர்நாடக இசை என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் இசை\nகர்நாடக இசை என்பது தமிழர்கலின் இசை அல்ல\nதமிழிசை என்பது கர்நாடக இசையை விட பல படி மேலான ஒன்று\nகர்நாடக இசை வேதத்திலிருந்து வந்தது\nதமிழிசை சிவனின் உடுக்கிலிருந்து வந்தது\nதமிழ் செய்யுள்கள் எல்லாமே இசைப்பாடல்கள் தாம்\nஉலகின் முதல் மூத்த இசை தமிழிசைதான்\nஉலகத்தோற்றத்தின் மூல இசை கர்நாடக இசைதான்\nகுறிப்பிட்ட மொழிகளில் பாடுவது மட்டுமே தெய்வத்திடம் அதை கொண்டு சேர்க்கும்\nகர்நாடக இசையை தமிழில் பாடினால் அவ்வளவாக ருசி இல்லை\nஎன்றெல்லாம் சொல்பவர்கள் வரிசையாக தகுந்த சான்றுகளோடு வரவும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nசில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\n[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 2\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/78389-jomonte-suvisheshangal-movie-review.html", "date_download": "2018-08-18T00:49:44Z", "digest": "sha1:ZMHNA5LNLI72KSQH5O2YSLF5X26LXIOA", "length": 25734, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "இது அந்தப்படம்ல?? துல்கர் நடிப்பில் ‘ ஜோமோன்டே சுவிஷேசங்கள்’ படம் எப்படி? | Jomonte Suvisheshangal movie review", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n துல்கர் நடிப்பில் ‘ ஜோமோன்டே சுவிஷேசங்கள்’ படம் எப்படி\nஜோமோன்டே சுவிஷேசங்கள் இந்த வார மலையாள சினிமா. அவர் ஒரு தொழிலதிபர், ரசனையாக தன் குடும்பத்துடன் வாழ்க்கை செல்லும் போது, ஒருவரின் துரோகத்தால் தொழிலில் கடன் நெருக்கடி ஏற்படுகிறது. மொத்த குடும்பமும் ஆரம்பித்த இடத்திற்கே போகும் நிலை. அப்போது அவர் இதைப்பற்றி குடும்பத்துடன் எதுவும் பகிர்ந்து கொள்ளாமல் தலைமறைவாகிறார். இந்த நிலையை அவரது மகன் எப்படி சரி செய்கிறான் என்பது தான் ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம் படத்தின் கதை. நிவின் பாலி, ரெஞ்சி பணிக்கர் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இப்படத்தை இயக்கியிருந்தார்.\nஇந்த சூத்திரத்தை கொஞ்சம் மாற்றி, துபாயை திருச்சூராக, அப்பாவுடன் மகனும் தலைமறைவு, அந்தக் குடும்பத்துக்குள்ளேயே சில பிரச்சனைகள், மகனுக்கு சின்ன காதல் என செய்து கொள்வோம். வின்சென்ட் (முகேஷ்) திருச்சூரில் பெரிய தொழிலதிபர். அவரது கடைசி மகன் ஜோமோன் (துல்கர்). முதல் இருவர் தங்களுக்கான தொழிலைத் தேர்தெடுத்து சிறப்பாக இருக்க, வீட்டில் இருக்கும் நாய் கூட, ‘லொள் உனக்கு பொறுப்பே இல்லையா லொள்’ எனக் குரைக்கும் அளவுக்கு ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறார் துல்கர். இதே சமயத்தில் முகேஷ் கட்டிவரும் அப்பார்ட்மென்ட் இடத்தில் சட்ட சிக்கல் வர, வாங்கிய கடன்களால் சொத்தை எல்லாம் இழக்க நேரிடுகிறது. இதிலிருந்து எப்படி ஜோமோனுடைய குடும்பம் மீள்கிறது என்பது ஜோமோன்டே சுவிஷேசங்கள் படத்தின் கதை.\nஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்ஜியம் பார்த்து சிலிர்த்த சிலருக்கு ஜோமோன்டே சுவிஷேசங்கள் பெரிய ஈர்ப்பை கொடுக்காமல் போக வாய்ப்பு உண்டு. சரி ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்ஜியம் என ஒரு படம் வந்ததை மறந்துவிட்டுப் பார்த்தால் ஜோமோன் என்ன தருகிறான்\nஒரே பாட்டில் பணக்காரனாகும் கண்கட்டிவித்தை எதுவும் காட்டவில்லை. ஒரே சீனில் வாழ்க்கை சூன்யமாகி ஏழ்மையை சந்திக்கும் எதார்த்தமும், மீண்டு வந்து தொழில் துவங்கி முதல் லாபம் பெருவது வரையான சிரமத்துக்கு இடையே காமெடி, காதல், டூயட் எல்லாமும் இருக்கிறது.\n'உனக்கு பொறுப்பே இல்லையேப்பா' என சொல்லும் போது அதற்கு வெறுப்பாவது, தந்தையிடம் காட்டும் பாசம், அவ்வப்போது, சைட் அடித்துக் கொண்டு தன்னை ரீசார்ஜ் (சைட் அடிப்பதற்கு துல்கர் வைத்திருக்கும் பெயர்) செய்துகொள்ளும்போது குறும்பாக சிரிப்பதுமாய் ரகளை செய்கிறார் துல்கர். அனுபமா பரமேஷ்வரன் முதல் பாதிக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாம் பாதிக்கு என இரண்டு ஹீரோயின்கள். ஐஸ்வர்யாவிடம் ஹீரோவுக்கு உதவிகள் செய்யும் கூடுதல் பொறுப்பு இருப்பதால் பின்பாதி முழுக்க வருகிறார், நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார்.\nமீண்டும் ஜேக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியத்தை உதாரணம் காட்டாமல் இருக்க முடியவில்லை. ஒருவேளை அந்தப் படத்தில் ரெஞ்ஜி பணிக்கர் தலைமறைவாகாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதைத் தான் சுரேஷின் கதாபாத்திரம் செய்து கொண்டிருக்கிறதோ என்பது போன்ற யோசனைகள் எழுந்தது. சுரேஷின் அந்த 555 சென்டிமென்ட்டும், ஏதாவது தவறு செய்துவிட்டு, 'ஸ்டில் ஐ லவ் யூ' என சொல்லி துல்கர் தப்பிக்கும் போது ராஸ்கல் எனக் கொடுக்கும் முகபாவமும் செம்ம்ம...\nவித்யாசாகர் இசையில் நோக்கி நோக்கி (லேசாக ஜன்னல் ஓரம் படத்தில் வரும் உன்னப்பாக்காம பாடலை நினைவுபடுத்துகிறது) பாடல் சூப்பர். சில சென்டிமென்ட் காட்சிகளுக்கு பின்னணி இசையும் கொஞ்சம் கனம் சேர்க்கிறது. திருச்சூர் மற்றும் திருப்பூர் பகுதிகளை தன் ஒளிப்பதிவு மூலம் வித்தியாசப்படுத்தி காட்டுகிறார் குமார்.\nமலையிலிருந்து பாதாளம் நோக்கி ஒரு வீழ்ச்சி, அதிலிருந்து சம தளம் நோக்கி வரப் போராட்டம், மலை ஏறுவதற்கான முதல் அடி... இதற்கிடையில் வரும் காட்சிகள், குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் எதிலும் அழுத்தம் இல்லாமல் நகர்வது படத்தின் பெரிய குறை. அதனாலேயே முக்கியமான காட்சியும், \"சரி ஓகே, ஜெயிச்சுட்டாங்களா, படம் முடிஞ்சிடுச்சா\" என்பது போன்ற மந்த நிலையிலேயே பார்வையாளர்களை வைக்கிறது.\nமிக சமீபத்தில் பார்த்த படத்தின் சுவடுகளை நினைவுபடுத்துவதால் இக்பாலின் கதையோ, சத்தியன் அந்திகாட் இயக்கமோ கவனம் கவரவில்லை. அதே சமயத்தில் மிகப் பெரிய ஏமாற்றத்தையும் அளிக்கவில்லை. கொஞ்சம் பாதுக்காப்பாக இரண்டிற்கும் நடுவில் தத்தளிக்கிறது ஜோமோன்டே சுவிஷேசங்கள்.\nதிருஷ்யம் ஜோடி மோகன்லால் - மீனா... அதே மேஜிக் கொடுக்கிறார்களா முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் படம் எப்படி முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் படம் எப்படி\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n துல்கர் நடிப்பில் ‘ ஜோமோன்டே சுவிஷேசங்கள்’ படம் எப்படி\nதிருஷ்யம் ஜோடி மோகன்லால் - மீனா... அதே மேஜிக் கொடுக்கிறார்களா முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் படம் எப்படி முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் படம் எப்படி\n’டக்கரு டக்கரு’ முதல் ’யாருடா நீங்க’ வரை... ஜல்லிக்கட்டு கீதங்கள்\nஅட... டிவி, சினிமா இரண்டிலும் ஜொலிக்கும் இயக்குநர்கள் இவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/central-university-karnataka-proposes-new-courses-next-year-000867.html", "date_download": "2018-08-18T00:37:25Z", "digest": "sha1:HCNWTULVWHNHNSVYKHJSDKB3R62C6WWE", "length": 8656, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "அடுத்த ஆண்டுமுதல் கர்நாடகாவிலுள்ள மத்திய பல்கலை.யில் புதிய படிப்புகள்!! | Central University of Karnataka proposes new courses next year - Tamil Careerindia", "raw_content": "\n» அடுத்த ஆண்டுமுதல் கர்நாடகாவிலுள்ள மத்திய பல்கலை.யில் புதிய படிப்புகள்\nஅடுத்த ஆண்டுமுதல் கர்நாடகாவிலுள்ள மத்திய பல்கலை.யில் புதிய படிப்புகள்\nசென்னை: கர்நாடக மாநிலத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nபாதுகாப்புப் படிப்பு, வரலாறு, பத்திரிகையியல், பழங்குடியின படிப்புகள், இசை, ஃபைன் ஆர்ட்ஸ் ஆகிய துறைகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய படிப்புகள் தொடங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக சென்டிரல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எச்.எச். மகேஸ்வரய்யா கூறியதாவது:\nஇந்தப் பல்கலை.யில் புதிதாக 20 துறைகள் தொடங்க அனுமதி தரப்பட்டது. தற்போது 16 துறைகள் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 4 துறைகள் அடுத்த கல்வியாண்டுக்குள் தொடங்கப்படும்.\nபுதிய படிப்புகள் தொடங்குவதற்காக பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்தப் படிப்புள் அடுத்த கல்வியாண்டில் தொடங்கப்படும். மேலும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் பிரிவில் என்ஜினீயரிங் படிப்புகளைத் தொடங்குவதற்கு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. புதியப் படிப்புகளுக்காக ரூ.67 லட்சத்தையும் மானியக் குழு ஒதுக்கியுள்ளது.\nகரும்பு தொழில்நுட்பம், உணவுப் பதனிடுதல் பிரிவில் புதிய படிப்புகள் தொடங்கவும், தொழில் படிப்புகள் தொடங்கவும் ரூ.1.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thiruvarul.medialinkconcepts.net/thiruvarulkalvi/blog/3-ungkllukkum-ungkll-ku-ntaikllukkum.html", "date_download": "2018-08-18T01:04:40Z", "digest": "sha1:B2FPY2UREWZOY34LB6CLA27JVC7JNUAL", "length": 11155, "nlines": 85, "source_domain": "www.thiruvarul.medialinkconcepts.net", "title": "உங்களுக்கும்... உங்கள் குழந்தைகளுக்கும்... thiruvarulfoundation", "raw_content": "\nதிருவருள் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு...\nமார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி\nதிருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு...\nஉங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், தொலைநோக்கு சிந்தனை வேண்டுமா \nஇல்லை தொல்லை தரும் சிந்தனை (தொலைக்காட்சி சிந்தனை) வேண்டுமா \nஉங்கள் சிந்தனைக்கு........ இந்த ஆராய்ச்சி முடிவுகள் \nடிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும் சாவு மேளதாளம் இசைகள் இவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர் குலைத்து கெடுத்து விடும்.\nஇதனால் அபசகுனமான நிகழ்ச்சிகளின் காட்சிகள் TV-க்குள் நடந்தாலும் அதன் ஒளி - ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள், நமது வீட்டிற்குள்ளேயே நடப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.\nஇதனால் பல நோய்கள் வரலாம் வீட்டில் பணம் தங்காமல் போகலாம், வீண் செலவுகள் ஏற்படலாம், தொழில் நஷ்டம் ஏற்படலாம் என்று இப்படி பட்ட அதிர்ச்சி தரும் ஆன்மீக ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..\nஅதை சமயம் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.\nஆம் உங்கள் உடல் நலத்தையும் சீரழித்து விடும் அதிர்ச்சி ரிப்போர்ட்...\nஇதனால் கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம், மன அழுத்தம், மன நோய் வந்து, உடல் எடை அதிகரித்து....\nஇதன் தொடர்ச்சியாக... சர்க்கரை வியாதி,மாரடைப்பு, இருதய கோளாறு, ரத்த அழுத்தம், கழுத்து எலும்பு தேய்மானம் ,தலைசுற்றல், தலைவலி,மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...\nஇதற்கு எல்லாம் முக்கியமான காரணம்....பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, குடும்பத்தினருக்குள் மாமியார் மருமகள் சண்டை, அண்ணன் தம்பி சண்டை, சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது, எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.\n கற்றுக் கொள்ளலாம். அதோடு நேர்மையான அரசு அதிகாரிகளை எப்படி லஞ்சம் வாங்கியது போல் திட்டமிட்டு மாட்டி விடுவது என்றும் கற்றுக்கொடுக்க படுகிறது .\nபிறர் தொழிலை எப்படி கெடுப்பது, எப்படி நம்பிக்கை துரோகம் செய்வது என்பது எல்லாம் காண்பிக்கப்பட்டு மக்களுக்கு\nஇவை எல்லாவற்றையும் விட பெரிய பேரிழப்பு உங்கள் அருமை குழந்தைகளின் விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது.\nஇத்தனை பாதிப்புகள் தெரிந்ததும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட சுய லாபத்துக்காக இப்படி பட்ட மக்களைச் சீரழிக்கும் டிவி சீரியல்கள் தயாரித்திட முக்கியத்துவம் தருகிறது..\nதயவு செய்து மக்களே, இது போன்ற கேவலமான நாடகங்களைப் புறக்கணியுங்கள்..\nநாம் புறக்கணித்தால் தானே TRP ரேட்டிங் குறைந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள்.\nநமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மாதான்.\nஎனவே உங்கள் விலை மதிப்பு இல்லாத ஓய்வு நேரத்தை அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்.\nகுறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள். மற்ற நேரங்களில் நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.. .கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல காரியங்களிலும் ஈடுபடுங்கள்.\nஇல்லையேல் வரும் பலன்களை நல்லதோ கெட்டதோ நீங்கள் தான் அவற்றை TV பார்த்து உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து அனுபவிக்க தயாராகுங்கள்.\nஅல்லதை விடுத்து நல்லதை பாருங்கள் , கேளுங்கள் பேசுங்கள், சிந்தியுங்கள் வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும்.\n\"தீதும் நன்றும் பிறர் தர வாரா\" நம்மை சுற்றி நடப்பனவற்றுக்கு நாமே பொறுப்பு....எண்ணம் போல் வாழ்க்கை....\nபயனுள்ள TV பார்க்க வேண்டுமானால் திருவருள் டிவி பாருங்கள்.......\nமனித சமுதாயத்திற்கு வேண்டிய வாழ்வியல் நெறிகள், நற்பண்புகள் மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகள் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்துவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/kurunthogai-conference-2017-in-usa_16696.html", "date_download": "2018-08-18T00:39:50Z", "digest": "sha1:TQKGBPXV3LYSMUB3EJZI3JVURATCJIDH", "length": 17640, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "அமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nஅமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு \nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகள் இணைந்து உலகிலேயே முதல் முறையாக பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடை அமெரிக்க நாட்டின் மேரிலாந்தில் ஆகஸ்டு 26 ஆம் நாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇம்மாநாட்டில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சார்ந்த தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். குறுந்தொகையை மையமாக வைத்து பட்டி மன்றம்,கருத்தரங்கம், வினா விடை, கலை நிகழ்ச்சி (குறுந்தொகை சார்ந்த இயல் இசை நாடக நிகழ்ச்சிகள்), மாணவர்களுக்கான இணையரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. இம்மாநாட்டில், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கலந்துகொண்டு சங்க இலக்கியமாம் குறுந்தொகையின் புகழ் போற்றுவோம் இந்நிகழ்ச்சி தொடர்பான பல்வேறு செய்திகளுக்கு பின்வரும் இணையத் தளத்தைப் பார்க்கவும்.\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2018-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-08-18T01:05:14Z", "digest": "sha1:LBAAMUEFTJGLM6ZY7XE6RERUHPS62JEN", "length": 5134, "nlines": 49, "source_domain": "www.velichamtv.org", "title": "2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு; இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்… | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\n2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு; இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்…\nIn: அண்மைச் செய்திகள், தமிழகம், மாவட்ட செய்திகள், முக்கியச் செய்திகள்\n2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு; இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்…\n2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு தேதியை மத்திய கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஅனைத்து மாணவர்களுக்கும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு கடந்த வருடம் முதல் நடைபெறுகிறது. அதன்படி 2018ஆம் ஆண்டிற்கான தேர்வு தேதியை மத்திய கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த தேர்வுக்கு மார்ச் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வி வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும் என தெரிவித்துள்ள சி.பி.எஸ்.சி, பொதுப்பிரிவினர், ஒபிசி பிரிவினருக்கு ஆயிரத்து 400 ரூபாய் கட்டணமும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 750ரூபாய் தேர்வு கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nNext Post: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்; அம்பேத்கர் திடலில் தொல்.திருமாவளவன் தீவிர ஆலோசனை…\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/91165", "date_download": "2018-08-18T00:20:41Z", "digest": "sha1:EMVXHMLSUXME4PCZ4PUFHLW2NBWTAJBH", "length": 5270, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "சிறி லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் ஐனாதிபதி தலைமையில் செங்கலடியில் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் சிறி லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் ஐனாதிபதி தலைமையில் செங்கலடியில்\nசிறி லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் ஐனாதிபதி தலைமையில் செங்கலடியில்\nசிறி லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் இன்று (07) மட்டக்களப்பு செங்கலடியில் ஐனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் நடை பெற்றது.\nதேசிய ஒற்றுமைக்கு தொழிலாளர்கள் பலம் எனும் தொனிப்பொருளின் கீழ் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.\nPrevious articleசீ.வி.விக்னேஷ்வரனின் மெளனம் பாரிய ஊழலுக்கு வழிவகுக்கும்\nNext articleமுச்சக்கர வண்டி சாரதிகள் போதை வஸ்த்துக்களை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/91462", "date_download": "2018-08-18T00:21:13Z", "digest": "sha1:Q6EZWYWUO7L57WYFNNVESLXFQ5BQZSXW", "length": 33553, "nlines": 140, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண் கடனால் அதிகரித்து வரும் தற்கொலை மரணங்கள் - Zajil News", "raw_content": "\nHome Articles மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண் கடனால் அதிகரித்து வரும் தற்கொலை மரணங்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நுண் கடனால் அதிகரித்து வரும் தற்கொலை மரணங்கள்\nநாளுக்கு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன்கள் பலரின் உயிரை காவுகொள்ளச் செய்கின்றன.\nஅதிக வட்டிக்கு நுண் கடன் எடுத்து அதனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது.\nகடந்த வருடங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த 2018 ஆண்டு முதலாம் திகதி தொடக்கம் கடந்த நான்கு மாதங்களில் 52 தற்கொலை மரணச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன் 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன.\nகடந்த இரண்;டு வருடங்களையும் விட இந்த ஆண்டு நான்கு மாதத்திலேயே 52 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விடவும் அதிகமானதாக உள்ளது.\nஇந்த தற்கொலை மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூளை, களுவன்கேணி, சித்தாண்டி ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறான தற்கொலை மரணங்கள் அதிகம் இடம் பெறுவதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் தெரிவிக்கின்றார்.\nநுண்கடன், வறுமை, போதைப் பொருள் ஆகிய காரணங்களாலேயே தற்கொலை செய்து கொள்கின்றனர்\nநுண் கடனைப் பெறுபவர்கள் இறுதியில் அதனை மீள செலுத்த முடியாததால் தற்கொலைக்கு செல்கின்றனர்.\nசில நுண் கடன் நிறுவனங்கள் பல் வேறுபட்ட பெயரில் இந்த நுண்கடன்களை வழங்கி வருகின்றனர்.\nநுண்நிதி நிறுவனங்களில் காணப்படும் ஒழுங்கற்ற நிதியியல் நடைமுறைகள் காரணமாக இன்று நுண்நிதியியல் நிறுவனங்களும் நுண்கடன்களைப் பெற்றுக்கொள்ளும் மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.\nசிறுகடன்கள் சமூகக் கட்டமைப்பில் மிகப் பாதகமானத் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது.\nநுண்கடன் திட்டங்களானது சமூக, பொருளாதார, உளவியல் ரீதியாக பல தாக்கங்களினை ஏற்படுத்தி விடுகின்றது.\nஏதோ ஒரு தேவை கருதி நுண்கடன்களினைப் பெற்றுக்கொள்ளும்போது கடனாளி தாம் பெற்றுக்கொள்ளும் கடனைச் சரியான விதத்தில் கட்டி முடிக்க முடியாத நிலையில் சிக்கலான சூழ்நிலை உருவாக ஆரம்பிக்கின்றது.\nசமூகப் பிரச்சினைகள் என்னும்போது நுண்கடன் நிறுவனங்களுக்குக் கடனாளிகளான குடும்பங்களில் காணப்படும் பிள்ளைகளின் கல்வி நிலையானது பாதிக்கப்படுகின்றது.\nபெண்கள் ஆண்களுக்குக் கீழேதான் வேலை செய்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் குடும்பப் பொறுப்பு முழுவதுமாக இவர்களின் மீதே சுமத்தப்படுகின்றது.\nஇவர்களும் சிறுகடன் திட்டங்களுக்கு வெளியேயான வேலைகளைச் செய்யும்போது வீட்டு வேலைகளைக் குடும்பத்தில் பெண் பிள்ளைகளின் மீது சுமத்துகிறார்கள்.\nஇதனால் பெண் பிள்ளைகளினுடைய கல்வி நிலையானது பாதிக்கப்படுகின்றது.\nஇதனைவிடவும் கடன்களினை உரிய திகதியில் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் பணத்தினைப் பெற்றுக்கொள்ளும் மாற்று வழிமுறையாகவும் ஆண் பிள்ளைகளின் மீது வருமானம் பெறும் சுமையானது சுமத்தப்படுகின்றது. இதனால் ஆண் பிள்ளைகளினது கல்வி நடவடிக்கையானது பாதிக்கப்படுகின்றது.\nஇன்று சிறுகடன்கள் மூலம் துஷ்பிரயோக செயல்கள் தூண்டப்படுவதனைக் காணலாம்.\nசிறுகடன் திட்டங்களைச் செயற்படுத்தும் முகவர்கள் மூலமாகப் பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.\nஇன்று வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கடன்தொகையை அறவிடும் இம் முகவர்கள் கடனாளி கடனை மீள்செலுத்த முடியாத நிலையில் பாலியல் ரீதியாக லஞ்சம் கோரும் விடயங்களில் ஈடுபடுகின்றனர்.\nதற்போது அதிகமான வங்கிகள் கடனாளி கடனுக்கு விண்ணப்பித்த சிறிது காலத்திற்குள்ளேயே உடனடியாக கடனைக் கொடுத்த விடுகின்றனர். நிறுவன உத்தியோகத்தருக்கும் எவ்வளவு கடன்களைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு கடன்களைக் கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகின்றன.\nகடன்களினை வழங்கும் நிறுவனங்களுக்கு மக்கள்மீது கவலை இல்லை. இலாபத்தில் மாத்திரமே கவனமுண்டு. பலர் வட்டி மற்றும் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போகும் போது தங்கள் கடமையினைத் தவறிவிட்ட உணர்விலும் நெருக்குதல்கள் ஏற்படும்போது அதற்கு முகங்கொடுக்க முடியாமலும் குழம்பிப்போய் தற்கொலை செய்துகொள்கின்றனர்.\nஇதனால் இறந்தவரின் குடும்பம் கவலையுறும். பிள்ளைகளும் பெற்றோர்களினது இச்செயலினால் மிகவும் பாதிக்கப்பட்டு ஆதரவு அற்றவர்களாகச் சமூகத்தில் தூக்கி வீசப்படும் நிலை உருவாகும்.\nநுண்கடன்கள் மன அழுத்தத்திற்கும் காரணமாக அமைகின்றன. இன்றைய அவசர உலகில் எந்த ஒரு தனிமனிதனும் தன்னை மன அழுத்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். தாம் ஒரு கடனாளி என்ற உணர்வு தினம் தினம் கடனாளியை வாட்டி எடுக்கின்றது. கடன் தொகையையைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்ற சிந்தனை நாளுக்கு நாள் கடனாளிக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் போது நாளடைவில் கடனாளியின் உடல்நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு நுண்கடன்களானது தள்ளி விடுகின்றது.\nமுரண்பாட்டு நிலையினை தோற்றுவிப்பதாகவும் இவ் நுண்கடன்கள் காணப்படுவதனைக் காணலாம். அந்த வகையில் கடன் வழங்குகின்றவர் மற்றும் கடனினைப் பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலையினைத் தோற்றுவிக்கின்றது. சிறுகடனை வழங்கும்\nநிதி நிறுவன முகவர்கள் கடன் தொகையை மீள் பெற்றுக்கொள்ளுதல் என்னும் விடயத்தில் கவனம் செலுத்தவதனையும் கடனாளியின் குடும்பத்தின் நிலைமையினையோ அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலையினையோ கருத்திற்கொள்ள தவறுகின்ற நிலையில் கடன் தொகையினைக் கட்ட முகவர்கள் இறுக்கமான முறையில் செயற்படுவதானாலும் கடனாளி கடனைக் கட்ட முடியாத நிலையிலும் இருவருக்கிடையிலும் முரண்பாடானது ஏற்படுகின்றது.\nமேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலும் முரண்பாடு தோன்றுகின்றது. குறிப்பாகக் கணவன் மனைவிக்கு இடையிலே முரண்பாடு உருவாகின்றது. அதாவது நுண்கடன் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடனாளிகளாக மாறுகின்றவர்கள் ஒப்பீட்டளவில் பெண்களாகத்தான் காணப்படுகின்றார்கள். எனவே பெண்கள் கடனைப்பெற்று ஏதோ ஒரு தேவைக்காக அதனைப் பயன்படுத்தியிருப்பர். கடன்தொகை கட்ட ஆரம்பித்த பின்னர் அந்த கடன் தொகைக்கான பணத்தினைச் செலுத்துவதற்கு மனைவி கணவனிடம் பணம் கேட்கும்போது கணவனிடம் பணம் இல்லாத நிலையில் இருவருக்கிடையிலும் முறிவு ஏற்படத் தொடங்குகின்றது. சில வேளைகளில் கணவனுக்குத் தெரியாமல் மனைவி கடன்பெறல் அல்லது மனைவி வேறு ஒரு நபருக்குக் கடன் தொகையினைப் பெற்றுக் கொடுத்தல் என பல காரணங்களினால் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படுகின்றன.\nகடனாளிக்கும் மற்றும் கடனாளிக்குப் பிணையாக இருந்தவருக்குமிடையே பிணக்குத் தோன்றுகின்றது.\nகடனாளியினால் கடன் தொகையினைக் கட்ட இயலாத நிலையில் அவர் கடன் பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் மோசமான செயற்பாடுகளுக்கு உட்பட வேண்டிய நிலை உருவாகின்றது. இதனால் கடனாளி, ஏமாத்துக்காரர் என்கின்ற பட்டம் சூட்டப்பட்ட நிலையில்தான் வாழும் நிலை உருவாகின்றது. இதனைவிடவும் மதுபாவனையின் பாதிப்பும் சமூகத்தினைப் பாதிக்கின்றது. மனைவி கடனினைப் பெறும்போது கணவன் அதனைத் தவறான முறையில் மதுபாவனையில் மூழ்கிக் கரைத்துவிடுகின்றான். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் இதனால் பாதிக்கப்படுகின்றது.\nஅறியாமையினால் தமது வருமானத்தை மீறிக் கடனைப் பெற்றுக் கொள்வதனால் கடனில் இருந்து இருந்து மீள முடியாத நிலை உருவாகிறது. அதாவது நுண்கடன் நிறுவனங்களினது விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் என்பன ஆங்கில மொழியிலே காணப்படுவதனால் நுண்கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற மக்கள் குறித்த நிறுவனத்தின் கடன்தொகை தொடர்பான பூரணமான விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையானது காணப்படுகின்றது. எனவே எல்லோரும் கடன் எடுக்கின்றார்கள் நாமும் கடனைப் பெறலாம் என்ற ஆசை தூண்டப்பட்ட நிலையில் கடனுக்குள் போய் சிக்கிக் கொள்கின்றனர். கடன் தொகையினைக் கட்ட ஆரம்பிக்கின்ற போதுதான் உண்மையான நிலையினைக் கண்டு கொள்கின்றனர்.\nதம்முடைய வழமையான வருமானத்தினைக் கொண்டு கடன் தொகையினைக் கட்டவும் முடியாமல், கடன் தொகையில் இருந்து மீளவும் முடியாமல், குடும்பத்தினைக் கொண்டு சரிவர நடத்தவும் முடியாமல் அல்லல்படுகின்றனர். கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற கடனாளிகளின் குடும்பத்தினுடைய எதிர்கால பணத்துடன் தொடர்புடைய நல்ல திட்டங்களானது பாதிக்கப்படும். கடன்களில் சிக்கித் தவிப்பதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குக் கூட போசாக்கான உணவினைக் கொடுக்க முடியாத நிலையில் காணப்படுவர். இவ்வாறு பல்வேறுபட்ட பாதகமான தாக்க விளைவுகளினை நுண்கடன்கள் ஏற்படுத்துகின்றது.\nகிராமத்திலுள்ள வறிய மக்களை தேடிச் செல்லும் சில நுண்கடன் வழங்கும் நிறுவன அதிகாரிகள் இலகுவாக கடன்களை வழங்குகின்றனர்.\nஅவர்களிடத்தில் கடனுக்கான வட்டி வீதம் எப்படி அதை செலுத்துவது என்பன போன்ற தகவல்களை வழங்காமல் சில பொய்களை கூறி கடனை வழங்கி விடுகின்றனர்.\nவறுமையில் காணப்படும் இந்த மக்கள் கடனைப் பெற்று விட்டு அதனை வட்டியுடன் சேர்த்து மீள செலுத்துவதற்கு மிகவும் கஸ்டப்படுகின்றனர். இந்தக் கடன்களுக்கான வட்டியென்பது மிகவும் கொடூரமானது. அதிக வட்டிக்கே கடன்களை வழங்குகின்றனர்.\nகடனை வழங்கி விட்டு அதனைப் பெறுவதற்காக வாராந்தம் அவர்களின் வீடு தேடிச் செல்லும் அதிகாரிகள் பயணாளி கடனை செலுத்த குறித்த வாரம் தவறினால் அதற்கு இந்த அதிகாரிகள் தேவையற்ற விதத்தில் கதைப்பதும் அவர்களின் உள்ளங்களை காயப்படுத்தும் வகையில் கதைப்பதாகவும் சில பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nநுண்கடன் நிறுவனங்களின் சில அதிகாரிகள் கடனைப் பெற்று அதனை திருப்ப செலுத்த கஸ்டப்படும் பெண்களுடன் தேவையற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு கடனை திருப்ப செலுத்த முடியாதவர்கள் தற்கொலைக்கே செல்கின்றனர்.\nசமூகத்தை அழிக்கும் செயலாக மாறியுள்ள இந்த நுண் கடன் திட்டமானது பலரின் குடும்பங்களை சீரழித்துள்ளது.\nஇந்த நுண் கடன் திட்டத்தினால் சில குடும்பங்களில் தாய் தந்தையரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மனைவியை இழந்து கனவன், கனவனை இழந்து தவிக்கும் மனைவி இவ்வாறு பல குடும்பங்களின் நிலைமைகளை காணமுடிகின்றது.\nதனது மரணவிசாரனை அனுபவத்தில் மிகக் கூடுதலான தற்கொலைகள் நுன்கடன் திட்டத்தினாலும், போதைப்பொருள் பாவனையினாலுமே நடைபெற்றிருப்பதை அவதானிக்க முடிவதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் குறிப்பிடுகின்றார்.\nஅத்தோடு குடும்ப பிணக்குகள், .இளம்வயது திருமணங்கள், பாலியல் தொல்லைகள் போன்றவற்றினாலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.\nகடன் பெற்று வெளிநாட்டுக்கு தொழிலுக்காக அனுப்பிய கனவன் இரண்டு மாதங்களினால் கனவன் ஊர் வந்து விட்டார் கடனை அடைக்க முடியாததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட மிகப்பரிதாபரகமான சம்பவம் கடந்த வாரம் மட்டக்களப்பு வந்தாறுமூளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇரண்டு முறை கட்ட பெற்ற இந்த மனைவி மூன்றாவது முறையும் கடனைப் பெற்று கனவனை வெளி நாடு அனுப்பியுள்ளார். கனவனுக்கு அங்கு தொழில் கஸ்டம் என்பதால் அவர் ஊர் வந்து விட்டார் கடன் வழங்கிய நிறுவன அதிகாரி அடிக்கடி வீட்டுக்கு வந்து கடனை கட்டுங்கள் என கஸ்டப்படுத்த மனைவி தனது உயிரை மாய்த்து கொண்டார்.\nகாளிகோவில் வீதி ஏறாவூர் 4ல் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தை இவர் ஒரு மேசன் கூலித்ததொழிலாளி தனது பிள்ளைகளை கல்வி கற்க வைப்பதற்கு அதே போன்று அன்றாட தேவைகளுக்காக தான் உழைத்து வரும் பணம் போதாது என்பதற்காக பல் வழிகளிலும் கடன் பட்டு பிள்ளைகளை பராமரித்து வந்த போது கடன் தொல்லை அதிகரிக்க உள நோய்க்கு ஆளாகினார்.\nமனோ நிலை பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு தொழில் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து குடும்ப நிலையை கருத்திற் கொண்டு இவரது மனைவி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கூலி வேலைக்கு சேர்ந்தார்.\nமனோ நிலை பாதிக்கப்பட்டிருந்த கனவன் ஒரு நாள் இங்கு தனது படுக்க அறையில் தற்கொலை செய்து கொண்டார்.\nமட்டக்களப்பு களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் கடற்றொழில் செய்து வந்தவர் இவர் ஒரு பிள்ளைக்கு தந்தை தான் பட்ட பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.\nமாவடிவேம்பு பிரதேசத்தில் ஒரு குடும்பம் வீட்டை திருத்துவதற்கு தனியார் வங்கியொன்றில் கடன் பெற்றதால் அதை செலுத்துவதற்கு வசதியில்லாத நிலையில் கனவன் மனைவிக்கிடையே பிரச்சினை அதிகரித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.\nஇவ்வாறு பல சம்பவங்களை அடிக்கிச் செல்ல முடியும் என திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் மேலும் தெரிவிக்கின்றார்.\nஇந்த தற்கொலை மரணங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்தது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சமய, சமூக தலைமைகள், அரசியல் தலைமைகள் முன்வந்து இம் மக்களுக்கு வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், நுன்கடன் திட்டத்திலிருந்து இம் மக்களை பாதுகாத்து தற்கொலை முயற்சியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nPrevious articleமண்முனையில் 28 வருடங்களுக்கு பின்னர் ஜும்ஆ தொழுகை ஆரம்பம்\nNext article​ஓட்டமாவடி – பதுரியாவில் பள்ளிவாசல் திறந்துவைப்பு\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/collections/4xl", "date_download": "2018-08-18T00:28:46Z", "digest": "sha1:5EKFO7ITXSX3QMGWCWDYXACPP74P46IE", "length": 30433, "nlines": 591, "source_domain": "ta.buddhatrends.com", "title": "4L - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி: AZ அகரவரிசையில்: ZA விலை: குறைந்த முதல் உயர் விலை: அதிக உயரம் தேதி: பழையது பழையது தேதி: புதியது பழைய\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\n3 / XX ஸ்லீவ்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nஎக்ஸ்எம்எல் நிறங்கள் சரிவு நீண்ட ஹிப்பி பிடித்த\nஎக்ஸ்எம்எல் நிறங்கள் சரிவு நீண்ட ஹிப்பி பிடித்த $ 40.80 $ 68.00\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ\n3 / 4 Batwing ஸ்லீவ் பிளஸ் அளவு நீண்ட ராபீ $ 46.20 $ 77.00\n3 / 4 நீள பூக்கள் Harem பேன்ட்ஸ்\n26 / x நீளம் இயற்கை ஊக்கம் ஹரேம் பேன்ட்ஸ்\n26 / x நீளம் இயற்கை ஊக்கம் ஹரேம் பேன்ட்ஸ் $ 43.40 $ 62.00\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த\nஒரு வரி ராயல் ப்ளூ லாங் ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 44.50 $ 89.00\nசுருக்கம் அச்சிட்டு வெள்ளை மற்றும் நீல பெட்டி பிடித்த\nசுருக்கம் அச்சிட்டு வெள்ளை மற்றும் நீல பெட்டி பிடித்த $ 44.50 $ 89.00\nஆசிய கலை காப்டன் மாக்ஸி பிடித்த\nஆசிய கலை காப்டன் மாக்ஸி பிடித்த $ 43.20 $ 72.00\nஅசைவூட்டப்பட்ட பருத்தி மற்றும் லினன் ஷர்ட்\nஅசைவூட்டப்பட்ட பருத்தி மற்றும் லினன் ஷர்ட் $ 42.00 $ 60.00\nசமச்சீரற்ற ஸ்லீவெலஸ் மிடி பிடித்த\nசமச்சீரற்ற ஸ்லீவெலஸ் மிடி பிடித்த $ 40.80 $ 68.00\nசமச்சீர் இரட்டை அடுக்கு ஐரீன் பிடித்த\nசமச்சீர் இரட்டை அடுக்கு ஐரீன் பிடித்த $ 54.00 $ 77.00\nமீண்டும் பட்டன் பிளப் பிளஸ் அளவு மாக்ஸி பிடித்த\nமீண்டும் பட்டன் பிளப் பிளஸ் அளவு மாக்ஸி பிடித்த $ 36.00 $ 60.00\nபிஷப் ஸ்லீவ் பட்டன் அப் ஷர்ட்\nபிஷப் ஸ்லீவ் பட்டன் அப் ஷர்ட் $ 39.20 $ 56.00\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல்\nபிளாக் & வைட் ப்ளைட் லூஸ் பெர்சஸ் ஷர்ட் அப் பிடித்தல் $ 40.60 $ 58.00\nகருப்பு மற்றும் சாம்பல் பெரிதாக்கப்பட்ட வடிவியல் சட்டை பிடித்த\nகருப்பு மற்றும் சாம்பல் பெரிதாக்கப்பட்ட வடிவியல் சட்டை பிடித்த $ 42.00 $ 60.00\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரிப் பாலாஸ்ஸோ ஒட்டுமொத்த\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரிப் பாலாஸ்ஸோ ஒட்டுமொத்த $ 27.00 $ 54.00\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த\nபிளாக் அண்ட் வைட் ஸ்ட்ரைப் பிளஸ் சைவர் ஸ்வெட்டர் பிடித்த $ 43.40 $ 62.00\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ்\nபிளாக் அப்டேட்ஸ் ஸ்வெட்டர் பிளஸ் சைஸ் இருந்து $ 43.40 $ 62.10\nபிளேய்ங் ஸ்லீவ்ஸ் உடன் பிளாக் அவிழ்சிவ் ஸ்வெட்டர் பிடித்திருக்கிறது\nபிளேய்ங் ஸ்லீவ்ஸ் உடன் பிளாக் அவிழ்சிவ் ஸ்வெட்டர் பிடித்திருக்கிறது $ 40.60 $ 58.00\nபிளாக் பெரிதாக்கப்பட்ட டி-ஷர்ட் பிடித்த\nபிளாக் பெரிதாக்கப்பட்ட டி-ஷர்ட் பிடித்த $ 46.90 $ 67.00\nபிளாக் பாக்ஸ் பிளஸ் சைட் ஹரேம் பேன்ட்ஸ்\nபிளாக் பாக்ஸ் பிளஸ் சைட் ஹரேம் பேன்ட்ஸ் $ 43.40 $ 62.00\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த\nபிளாக் ப்ளஸ் அளவு மாக்ஸி பிடித்த $ 27.00 $ 54.00\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/arrears-exam-10th-standard-dates-announced-000454.html", "date_download": "2018-08-18T00:36:27Z", "digest": "sha1:GLXKBIDJIRNCJ4FVM2KSBYOFI55YDVRP", "length": 8830, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: ஆக.17 முதல் விண்ணப்பம் செய்யலாம் | Arrears exam for 10th standard dates announced - Tamil Careerindia", "raw_content": "\n» பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: ஆக.17 முதல் விண்ணப்பம் செய்யலாம்\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு: ஆக.17 முதல் விண்ணப்பம் செய்யலாம்\nசென்னை: பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:\nஇந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்துக்குச் சென்று ஆகஸ்ட் 17 முதல் 26 வரை இணைய வழி மூலமாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nநேரடித் தனித் தேர்வர்கள், பிற பாடத்திட்ட தனித் தேர்வர்களுக்கு சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு உண்டு. எனவே, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இப்போது எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.\nஅரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகளிலும், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு அட்டவணை:\nசெப்டம்பர் 28 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்\nசெப்டம்பர் 29 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்\nசெப்டம்பர் 30 - புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்\nஅக்டோபர் 1 - வியாழக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்\nஅக்டோபர் 3 - சனிக்கிழமை - கணிதம்\nஅக்டோபர் 5 - திங்கள்கிழமை - அறிவியல்\nஅக்டோபர் 6 - செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=5%204933&name=%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%29", "date_download": "2018-08-18T00:57:40Z", "digest": "sha1:OPCYNLDGTOHFZKZD2CSSOBKVXTMTFX2T", "length": 7203, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "சல்லிக்கட்டுக்குத் தடை தீர்ப்பும் தீர்வும் (ஒரு மீள்பர்வை) Sallikkattukku Thadai Therppum Thervum (Oru Milparvai)", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சமையல் சுயசரிதை அறிவியல் சங்க இலக்கியம் நாட்டுப்புறவியல் சட்டம் தமிழ்த் தேசியம் தத்துவம் சுற்றுச்சூழல் பொது அறிவு மொழிபெயர்ப்பு உடல்நலம், மருத்துவம் வணிகம் அகராதி நாவல்கள் மேலும்...\nகீதாலயா பதிப்பகம்கல்கி பதிப்பகம்வானதி பதிப்பகம்நெல்லை செல்வம் வெளியீடுHoneybee Publicationsஅந்தாதி பதிப்பகம்VK Global Publicationsதமிழ்ப்பேராயம்உலகத் திருக்குறள் மையம் வசந்தவேல் பதிப்பகம்பொதுமைப் பதிப்பகம்மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புகீழைக்காற்று வெளியீட்டகம்மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ்சுபம் பப்ளிகேஷன்ஸ் மேலும்...\nகருத்து - பட்டறை வெளியீடு\nசல்லிக்கட்டுக்குத் தடை தீர்ப்பும் தீர்வும் (ஒரு மீள்பர்வை)\nசல்லிக்கட்டுக்குத் தடை தீர்ப்பும் தீர்வும் (ஒரு மீள்பர்வை)\nகருத்து - பட்டறை வெளியீடு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய விலாசங்களும்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nநாய்களை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி\nகருத்து - பட்டறை வெளியீடு\nபத்தினிப் பெண்டிர் அல்லோம்: பரத்தையர் கணிகையர் தேவதாசியர் பற்றிய பதிவுகள்\nதமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும்\nஏறுதழுவுதல் சல்லிக்கட்டு (தொன்மை - பண்பாடு - அரசியல்)\nஆல்பெர் காம்யு நூற்றாண்டு நாயகன்\nமரண தண்டனையின் இறுதித் தருணங்கள்\nசல்லிக்கட்டுக்குத் தடை தீர்ப்பும் தீர்வும் (ஒரு மீள்பர்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-18T00:25:10Z", "digest": "sha1:E4ZBRB53Q7LYZNJMWYJRI3IA3UFHIUYX", "length": 8172, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் வடக்கில் கேபிள் ரீவி பார்ப்போருக்கு ஏற்பட்டுள்ள புதுச் சிக்கல்\nவடக்கில் கேபிள் ரீவி பார்ப்போருக்கு ஏற்பட்டுள்ள புதுச் சிக்கல்\nவடக்கு மாகாணத்தில் மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள கம்பி வழி தொலைக்காட்சி இணைப்பு வயர்களை அகற்றுமாறு இலங்கை மின்சார சபையின் தலைமையகம் வடபிராந்திய அலுவலகத்துக்கு பணித்துள்ளது.\nஅதற்கமைய கேபிள் ரீவி இணைப்பு வயர்களை அகற்றும் பணிகளை மின்சார சபை ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்தனர்.\nஇலங்கை மின்சார சபையின் இந்த திடீர் நடவடிக்கையால் கேபிள் ரீவி வாடிக்கையாளர்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தில் பல இடங்களில் மின்சார சபையின் மின் கம்பங்கள் ஊடாக கேபிள் ரீவி இணைப்பு வயர்கள் செல்கின்றன. இந்த நடவடிக்கைக்கு மின்சார சபை துணை நிற்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் ரீவி வயர்களை அகற்றும் பணிகளை இன்று (5) காலை முதல் முன்னெடுக்குமாறு மின்சார சபையின் தலைமையகம், வடபிராந்திய அலுவலகத்துக்கு நேற்று பணிப்புரை விடுத்தது.\nகேபிள் ரீவி இணைப்பு வழங்குவதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உரிமம் பெற்றவர்களுக்கு கட்டண அறவீட்டுடன் இணைப்பு வயர்களை மின் கம்பங்கள் ஊடாகக் கொண்டு செல்வது தொடர்பில் உரிய செயற்றிட்டம் தயாரிக்கப்படும் வரை தீர்மானத்தை இடைநிறுத்துமாறு அரசியல் தலைமைகளால் பரிந்துரைக்கப்பட்ட போதும் மின்சார சபை தனது தீர்மானத்தில் உறுதியில் உள்ளது என தெரியவந்துள்ளது.\nPrevious articleவலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் 3 இடங்களில் புத்தர் சிலைகள்\nNext articleவரியை 20 வீதத்தினால் குறைக்கப் போகிறாராம் மகிந்த\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnetwork.info/2010/03/orange-colour-food-item-good-for-health.html", "date_download": "2018-08-18T00:21:09Z", "digest": "sha1:BE3LQLSXW4AIVIPKOIDWCQHG2KLTBICW", "length": 10702, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஆர‌ஞ்‌சு உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ம‌கிமை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஆர‌ஞ்‌சு உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ம‌கிமை\n> ஆர‌ஞ்‌சு உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ம‌கிமை\nஆர‌ஞ்சு அதாவது கா‌வி ‌நிற‌த்‌தி‌ல் உ‌ள்ள பழ‌ங்க‌ள், கா‌ய்க‌றிக‌ளி‌ல் ‌பீ‌ட்டா கரோ‌ட்டி‌ன், வை‌ட்ட‌மி‌ன் ‌சி ம‌ற்று‌ம் ப‌ல்வேறு ஊ‌ட்ட‌ச்ச‌த்துக‌ள் உ‌ள்ளன.\nவயது சா‌ர்‌ந்த பா‌ர்வை‌க் குறைபா‌ட்டை‌த் தடு‌க்க இவை உதவு‌கி‌ன்றன. பு‌ற்றுநோ‌ய் ஆப‌த்தை‌த் தடு‌க்க‌க் கூடிய ச‌க்‌தியு‌ம் இ‌ந்த ‌நிற‌ம் கொ‌ண்ட கா‌ய்க‌றி, பழ‌‌ங்களு‌க்கு உ‌ண்டு.\nஇதுபோ‌ன்ற பழ‌ங்க‌ள் ம‌ற்று‌ம் கா‌ய்‌‌க‌றிகளை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ம்‌பி‌ல் கொழு‌ப்‌பி‌‌ன் அளவை க‌ட்டு‌ப்படு‌த்‌தி ‌சீராக வை‌க்க உதவு‌ம்.\nமேலு‌ம் ர‌த்த அழு‌த்த‌ம் அ‌திகமாக‌ இரு‌ப்பவ‌ர்க‌ள் ஆர‌ஞ்சு பழ‌ம், கேர‌ட், ப‌ப்பா‌ளி போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ர‌த்த அழு‌த்த அளவு‌க் குறையு‌ம்.\n‌சிலரு‌க்கு மூ‌ட்டு‌த் தே‌ய்வு, மூ‌ட்டு வ‌லி போ‌ன்ற உபாதைக‌ள் இரு‌க்கு‌ம். அ‌ப்படியானவ‌ர்களு‌ம் கா‌வி ‌நிற‌த்‌திலான உணவு‌ப் பொரு‌ட்களை உ‌ண்டு வ‌ந்தா‌ல் ந‌ல்ல ‌பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/opinion/one-year-eps-government-safeguard-his-wicket-no-runs/", "date_download": "2018-08-18T01:19:28Z", "digest": "sha1:2X5RJ5WW4ZEVRFF366ZYO2WQGWBBAB3G", "length": 27430, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடப்பாடியின் ஓராண்டு : விக்கெட்டை பாதுகாத்தார், ரன்கள் வரவில்லையே?-One Year EPS Government, safeguard his wicket, no Runs", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nஎடப்பாடியின் ஓராண்டு : விக்கெட்டை பாதுகாத்தார், ரன்கள் வரவில்லையே\nஎடப்பாடியின் ஓராண்டு : விக்கெட்டை பாதுகாத்தார், ரன்கள் வரவில்லையே\nஉட்கட்சி அரசியல், பதவி நெருக்கடி - இவற்றிலேயே அவரது பெருமளவு கவனம் இருந்ததே தவிர, நிர்வாகத்தில் முத்திரை பதிக்கும் மாதிரி அவர் எதுவும் செய்யவுமில்லை.\nதமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இவர் இந்தப் பதவிக்கு வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து, அல்லது அதற்காக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்பது தெரிந்த செய்திதான். சொல்லப்போனால், அவருக்கு இப்பதவி கிடைத்தது, சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு.\n2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்தபோது நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக (முதல்வராக) தேர்வானவர் ஓ. பன்னீர்செல்வம் தான். அப்போது சில வாரங்கள் முதல்வராக இருந்த அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தையும், சென்னையில் வீசிய புயல் பாதிப்பையும் சரியாகவே கையாண்டார். ஆனால் அவர் பதவியில் நீடிப்பதை விரும்பாத சசிகலா, கட்டாயப்படுத்தி அவரைப் பதவி விலக வைத்தார்.\nகுடும்பத்தார் சிலரும், அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரும் தூபம் போட்டதன் விளைவு – கட்சி, ஆட்சி இரண்டுமே தன் பிடியில் இருக்க வேண்டும் என்று சசிகலா விரும்பினார். எம்.எல்.ஏ.க்களை சென்னைக்கு வெளியே கடற்கரையோர ரிசார்ட்டில் தங்க வைத்து, பேரங்கள் நிகழ்த்தப்பட்டு, சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலாவின் தேர்வு அரங்கேறியது.\nஆனால் இங்குதான் ஒரு திருப்பம் – எடப்பாடிக்கு ‘ஜாக்பாட்’ அடிக்க வழி வகுத்தது. சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால், சசிகலாவைப் பதவி ஏற்க அழைப்பதற்கு அவசரம் காட்டாமல் அன்றைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் சட்ட ஆலோசனையை நாடினார். ஒரு வாரத்துக்குள் சசிகலாவுக்குத் தண்டனை என்ற செய்தி வந்தது. கட்சிக்குள் நிதி பலம் மிக்கவராக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார். இது முன்கதைச் சுருக்கம்.\nசசிகலா சிறைக்குப் போவதற்கு முன், கட்சியைத் தன் குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஏற்பாடாக, டி.டி.வி. தினகரனைத் துணைப் பொதுச் செயலாளராக்கினார். அந்த சமயத்தில் முதல் சோதனை எடப்பாடிக்கு உருவானது. ஜெயலலிதா மறைவால் உருவான ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி காலியிடத்திற்கு டி.டி.வி. தினகரன் போட்டியில் இறங்கினார். இதனிடையே பதவி பறிக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ தொடங்கி, தனி அணி கண்டிருந்தார். அவரை 11 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரித்தனர். இருந்தாலும் மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க. மேலிடத்தின் ஆசி அவருக்கு இருந்தது.\nஆர்.கே. நகர் தேர்தலில் முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் தினகரனுக்காகப் பிரச்சாரம் செய்தாலும், உள்ளூர அவர் வெற்றி பெறக் கூடாது என்றே பலரும் விரும்பினார்கள். காரணம், அவர் வென்றால், எங்கே தன்னை பதவியில் இருந்து நகர வைத்து விடுவாரோ என்று எடப்பாடிக்கு உள்ளூர இருந்த கவலை. அந்தத் தேர்தல் நேரத்தில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட பணப் பறிமுதல், அதன் மூலம் கிடைத்த ஒரு துப்பைக் கொண்டு, வருமான வரித்துறை சுகாதார அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தி 89 கோடி ரூபாய் அளவுக்கு வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தொடர்பாகக் கைப்பற்றிய சில குறிப்புகள் எல்லாமாகச் சேர்ந்து தேர்தல் நிறுத்தப்பட வழி வகுத்தது. இது எடப்பாடியின் பதவி தப்புவதற்குச் சாதகமாக நிகழ்ந்த முக்கிய திருப்பம் எனலாம்.\nஇந்த கட்டத்தில் சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. இருப்பதை பா.ஜ.க. மேலிடம் துளியும் விரும்பவில்லை என்பதை எடப்பாடிக்கு சில அமைச்சர்கள் சரியாகப் புரிய வைத்தார்கள். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி செயல்படுமென 10 அமைச்சர்கள் கூட்டாக நிருபர்களிடம் அறிவித்தார்கள். அடுத்த நகர்வாக தனி அணியாக இருந்த ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள். பா.ஜ.க. மேலிடமும் இதை விரும்பியது. இங்குதான் எடப்பாடியின் அடுத்த வெற்றியும், பன்னீர்செல்வத்தின் சறுக்கலும் நிகழ்ந்தது.\nகட்சி நடத்துவதில் பொருளாதார ரீதியாகச் சந்தித்த சிரமங்களின் நெருக்கடியில் இருந்த ஓ.பி., முதலமைச்சர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற இரண்டும் (பா.ஜ.க. ஆதரவு இருப்பதால்) தனக்கு கிட்டும் என்று எதிர்பார்த்தார். இதை நிபந்தனையாகவும் விதித்தார். ‘இரண்டும் கிடையாது; இதைத் தவிர வேறு ஏதாவது கேளுங்கள்’ என்று எடுத்த எடுப்பிலேயே தீர்மானமாக இருந்தார் எடப்பாடி.\nபல சுற்றுப் பேச்சுகளுக்குப் பிறகு, கலெக்டராக இருந்தவர் தாசில்தார் ஆவது மாதிரி, முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், துணை முதல்வர் பதவி அளிக்க முன் வந்ததை ஏற்றார். அவர் விரும்பிய கட்சி பொதுச் செயலாளர் பதவியும் தரப்படவில்லை. மாறாக, பொதுச் செயலாளர் என்ற பதவியையே எடுத்து விடுவதாகத் தீர்மானம் போட்டு, முழு அதிகாரம் இல்லாத ‘ஒருங்கிணைப்பாளர்’ என்ற புதிய பதவியை உருவாக்கி, அதை ஓ.பி.க்கு அளித்து, இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ‘இரட்டைத் தலைமை’க்கு வழி வகுக்கும் பதவியில் எடப்பாடி அமர்ந்து கொண்டார். இது அரசியல் ரீதியாக அவர் பெற்ற மற்றொரு வெற்றி.\nஇப்படியாக கடந்த ஓராண்டில் உட்கட்சி அரசியல், பதவிக்கு ஏற்பட்ட நெருக்கடி – இவற்றிலேயே அவரது பெருமளவு கவனம் இருந்ததே தவிர, நிர்வாகத்தில் முத்திரை பதிக்கும் மாதிரி அவர் எதுவும் செய்யவுமில்லை; அதற்கான முனைப்பையும் செலுத்தவில்லை. ஜெயலலிதாவால் சில முக்கிய துறைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமை வாய்ந்த அதிகாரிகள்தான் அரசு நிர்வாகத்தை எடப்பாடியின் முதல் ஆறு மாதங்கள் பார்த்துக் கொண்டார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.\nஜெயலலிதா பாணியில், ‘பூரண மதுவிலக்கை நோக்கி’ என்ற பெயரில், 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் கோப்பில் எடப்பாடியும் கையெழுத்திட்டார். ஆனால் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவால் தேசிய – மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருந்த, சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகளை மூட நேரிடும் நிலை உருவானபோது, வருமானத்தை மட்டுமே குறியாகக் கொண்டு, அந்தக் கடைகளை மீண்டும் திறக்கச் செய்ய அரசு அரும்பாடுபட்டது. இதை வேண்டுமானால் ஒரு ‘சாதனை’யாகக் கூறிக் கொள்ளலாம்.\nமற்றபடி, பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கக் வடிய ஒரு புதிய பெரும் தொழில் திட்டத்தைக் கொண்டு வந்ததாகவோ, அதற்கான ஒப்பந்தம் போட்டதாகவோ எடப்பாடி சொல்லிக் கொள்ள முடியாது. நிர்வாகத் திறமையை அவர் வெளிப்படுத்தியிருப்பதாக பறைசாற்றுவதற்கும் ஒரு சான்றுகூட தென்படவில்லை.\nமாறாக, மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தமிழகத்திற்கு மட்டும் 2017இல் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிடும் என்ற தவறான நம்பிக்கையை விதைத்து, அதன் காரணமாக மாணவர்களிடம் பெரும் குழப்பமும், மனச் சோர்வும் ஏற்பட இந்த அரசு காரணமாக அமைந்தது.\nஜெயலலிதா தொடங்கி வைத்த இலவசத் திட்டங்களை, நிதிநிலைத் தள்ளாட்டத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து செயல்படுத்துவதை ஒரு சாதனையாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்தத் திட்டங்களில் ஒன்றில் கை வைத்தாலும், நிஜத்திற்கும், நிழலுக்கும் உள்ள இடைவெளி பட்டவர்த்தனமாக பல்லிளித்துவிடும்.\nஆகவே, வருவாயை அதிகரிக்க வழி புரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அரசு. கடைசியாக, அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தும் சாதாரண மக்கள் மீது அதிரடித் தாக்குதல்போல, இரு மடங்கு, மூன்று மடங்கு கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதனைப் பட்டியலில் வராது; வேதனைக் கணக்கில்தான் கூடும்.\nமுதலமைச்சர் வசம் உள்ள பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகள் நடைபெறும் துறைகள் மீதெல்லாம் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. துணைவேந்தர் பதவிக்கும், தேர்வாணைய உறுப்பினர் பதவிகளுக்கும் பேரங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் இலஞ்சப் புகார்கள். அதனால் மத்திய பா.ஜ.க. மேலிடத்தின் ஆசியையும், அ.தி.மு.க,. இப்போது இழந்திருக்கிறது. புதிய கவர்னர் புரோகித்தின் அதிரடி ஆய்வுகள் மூலம் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nபதவி நாற்காலியை இடையில் இழக்காமல் எடப்பாடி ஓராண்டைக் கடந்து முடிந்திருப்பதே ஒரு சாதனை என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, குறிப்பிடத்தக்கபடி அவர் செய்த ஒன்றைக் கூற வேண்டும் என்றால், யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். விக்கெட்டை மட்டும் பாதுகாத்துக் கொண்டு, சிங்கிள் ரன்கூட எடுக்காமல் நிற்கும் பேட்ஸ்மேனால் அணிக்கு என்ன லாபம்\nநாமக்கல் திமுக.வினர் கைது ஏன்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nஅணைகள் பாதுகாப்பு வரைவு மசோதா: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nதமிழ்நாடு சட்டமன்றம் : சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை விவாதம், மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி: கே.சி.பழனிசாமி அப்பீல்\nதமிழ்நாடு சட்டமன்றம்: ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஆறுதல் கூற ஜூன் 9-ல் எடப்பாடி பழனிசாமி வருகை\nபுகைப்படங்கள்: ராகவேந்திரர் மடத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் ரஜினிகாந்த்\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ஒரு வகுப்பையே காப்பாற்றிய தமிழக ஆசிரியை\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nAnti-Sterlite Protests: ஆறு பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nபிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/02142713/Aggressive-River--Quiet-Buddha.vpf", "date_download": "2018-08-18T00:49:57Z", "digest": "sha1:3Z6Q76P3REOTX5MZZOWWPZY7NBWIPVVX", "length": 15351, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aggressive River .. Quiet Buddha .. || ஆக்ரோஷமான ஆறு.. அமைதியான புத்தர்..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆக்ரோஷமான ஆறு.. அமைதியான புத்தர்..\nஉலகில் உள்ள புத்தர் சிலைகளில் மிகப்பெரியதில் இதுவும் ஒன்று. இந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஉலகிலேயே அதிக அளவில் சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. அதுவும் விதவிதமான நிலைகளில் புத்தர் சிலைகளை நாம் காண முடியும். நின்றபடி, அமர்ந்தபடி, தியானித்தபடி என்று அவரது உருவங்கள் பலவாறாக வடிக்கப்பட்டிருக்கின்றன. உலக அளவில் சீனா, ஜப்பான், தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் புத்தரின் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், சீனாவில் ஒரு புத்தர் சிலை இருக்கிறது. இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்கப்பட்டது.\nஉலகில் உள்ள புத்தர் சிலைகளில் மிகப்பெரியதில் இதுவும் ஒன்று. சீனாவின் தெற்குப் பகுதியான லெசான் நகரத்தின் பிரமாண்ட மலையை குடைந்து தான் இந்த பிரமாண்ட புத்தர் சிலையை வடித்திருக்கிறார்கள். இந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nவியப்பை ஏற்படுத்தும் இந்த பிரமாண்ட சிலையின் பின்னால், அது உருவானதற்கான காரணமும் வியப்பை தருவதாக அமைந்திருப்பதுதான் விசேஷம்.\nபுத்தர் சிலை அமைந்திருக்கும் லெசான் மலைப் பகுதியைச் சுற்றி ‘மின்சியாங்’ என்ற ஆறு ஓடுகிறது. தற்போது அமைதியே உருவாக காணப்படும் இந்த ஆறு, கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஆக்ரோஷத்தின் உச்சமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதீத இரைச்சலுடன், அதிகபட்சமான இழுப்பு சக்தியுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ஆற்றைக் கடப்பதும், படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவது என்பதும் அசாத்தியமான விஷயமாகவும், சவாலாகவும் இருந்திருக்கிறது.\nஇதனால் லெசான் பகுதியில் வசித்து வந்த மக்கள், ‘ஹை டாங்’ என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். மக்களின் நிலைமையை உணர்ந்த அந்தத் துறவி, ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொல்லியிருக்கிறார். ‘ஆர்ப்பரிக்கும் மனதையே தியானத்தால் அடக்கும் புத்தர்.. ஆக்ரோஷமான ஆற்றையும் அடக்கிவிடுவார்’ என்று நம்பிய மக்களும், சிலை வடிப்பதற்காக பணியைத் தொடங்கினர். அவர்கள் சிலை வடிப்பதற்காக தேர்வு செய்தது ஆற்றை ஒட்டியுள்ள மலையை.\nகி.பி.713-ல் தொடங்கிய இந்தப் பணி, மும்முரமாக நடைபெற்றது. புத்தரின் சிலை பாதி வடிக்கப்பட்ட நிலையில், சிலை அமைக்கும்படி ஊக்கம் அளித்து வந்த துறவியான ‘ஹை டாங்’ இறந்து போனார். அதனால் சிலை வடிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, நாளடைவில் அந்தப் பணி நின்றே போனது. ஆனால் மின்சியாங் ஆற்றின் ஆக்ரோஷம் மட்டும் நிற்க வில்லை.\nசுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர், லெசான் நகரை பார்வையிடுவதற்காக வந்த அந்தப் பகுதியை ஆட்சி செய்த டாக் வம்ச ஆளுநர் சிலையைப் பற்றியும், அது பாதியில் நிற்பது பற்றியும் அறிந்தார். பின்னர் அவரது முழு முயற்சியின் பயனாக கி.பி.803-ல் புத்தர் சிலை முழு வடிவம் பெற்றது. இதில் ஆச்சரியம் மிக்க விஷயம் என்னவென்றால், சிலை முழுமைப் பெற்றதுமே.. ஆக்ரோஷமான மின்சியாங் ஆறு அமைதியின் மறு உருவாக மாறிவிட்டதாம்.\nஇந்த புத்தர் சிலையின் தலையில் 1,021 சுருள் முடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் மலையின் பாறையிலேயே அமைக்கப்பட்ட இந்த புத்தரின் காதுகள் மட்டும் மரத்தால் ஆனது. இப்படி காதுகளை மட்டும் மரத்தில் செய்து இணைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். இதற்காக மட்டும் சுமார் 1,000 பேர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி இருக் கிறார்கள்.\nஇந்த புத்தர் சிலையை காண வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை புத்தரை ரசித்தபடியே செல்ல பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.\n‘இது புத்தர் சிலை இல்லை.. புத்தர் மலை..’ என்ற சீன மக்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட யுனஸ்கோ நிறுவனம், இதை உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.\nபுத்தர் சிலையை வெயில், மழை போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட மரபந்தல்கள், டாங் வம்ச அரசர்களை எதிர்த்து நடந்த போர்களில் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் இந்த புத்தர்.. இன்னும் தன்னுடைய புன்னகை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/author/athavan/page/133", "date_download": "2018-08-18T00:45:29Z", "digest": "sha1:O7XE6K5FDI674EI3GWBGAXTSAMGQ2XRY", "length": 17182, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "S. Athavan, Author at Kathiravan.com - Page 133 of 136", "raw_content": "\nகேரள வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகரின் அம்மா… அதிரடியாக மீட்கப்பட்ட சம்பவம் (படம் இணைப்பு)\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nவெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் கேரள மக்கள்… வைரலாகும் வீடியோ\nபிரபல நடிகை திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கியது திரையுலகம்\nசுவிசில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்\nபுலம்பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறை தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் அதே நிலையில் அந்தந்த நாட்டின் உள்ளூர் அரசியலிலும் பிரவேசித்து முத்திரை ...\nதமிழரின் வரலாறு : தமிழனின் நாகரீக வீழ்ச்சிக்குச் சில காரணங்கள் \n1. தமிழ் உணர்வு அற்றுப் போயிற்று 2. கலப்பு மன்னர்கள் ஆட்சியும் ( குலோத்துங்கன் ) வேற்று மன்னர்கள் ஆட்சியும் ( விசயநகர மன்னர்கள் ) ...\n – மங்களசமர வீர பரபரப்பு செவ்வி \nதலைவர் எப்போ வருவார் என ஏங்கும் தமிழ் மக்கள் இன்றும் அவர் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் சிங்களம் அவர் வந்து விடுவார் என பயத்தில் வாழ்கிறது.உண்மைகள் ...\nஇலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணையில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ...\n29 வயது பெண்ணை மணம் முடித்த 67 வயது அமைச்சர் (படங்கள், காணொளி இணைப்பு )\nவங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக் தனது 67வது வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக் (67). இவருக்கும் ...\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nசிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ...\nமந்திரங்கள் சில நேரங்களில் தந்திரங்களாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் புத்தமதம் மற்றும் இந்து மதத்தினை சேர்ந்தவர்கள் தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற ...\nகத்தி : உண்மையில் விவசாயிகளி​ன் பிரச்சனையா​\nஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு சாகச வீரன் வந்துதான் தன்னை காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் இளவரசிகள் பற்றிய பழைய ராணி காமிக்ஸ் கதைகள் ...\nவயது கூடும் போது உடலுறவில் ஆர்வம் குறையுமா..\nசெக்ஸ் பற்றி நிலவும் தவறான கருத்துக்களில் இதுவும் ஒன்று. பெண்களுக்கு 50 வயதை நெருங்கும்போது மாதவிடாய் முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே ...\nநீருக்கு அடியில் எரியும் நெருப்பு, அதிசயத்தை பாருங்கள் வியப்பின் உச்சத்தை அடைவீர்கள் (வீடியோ)\nமேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்\nபாயும் புலி மாவீரன் பண்டாரவன்னியனின் 211ஆவது வீரவணக்க நாள் இன்று.\nமுழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் ...\nபித்தக் கோளாறுகள் நீங்க – இயற்கை வைத்தியம்\n* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து ...\nநீர் பிரம்மி செடி மருத்துவக்குணங்கள்\nநீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நினைவாற்றலைத் தூண்ட: நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி ...\nமனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு\nமனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை .. 1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்; 2. ...\nஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் .\nஅவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்வோம். 1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) ...\nசமஸ்டி அடிப்படையிலான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற கொள்ளையிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகவில்லை என வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். …\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான …\nபாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nதெஹிவளையில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றின் பிரதம பராமரிப்பாளராகவும், பாலியல் தொழிலாளியாகவும் கடமையாற்றி வரும் பெண் ஒருவருக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. …\nபொலன்னறுவையில் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்\nபொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரை அவரின் கணவரே கொலை செயது வீசியதாக குறித்த ஆசிரியையின் கணவர் காவல் …\nமஹிந்த ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்று சென்றனர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சற்றுமுன்னர் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?p=27606", "date_download": "2018-08-18T01:19:44Z", "digest": "sha1:XVKSISTTRHIZUVMWCU4AE3YVGOF6BPXV", "length": 8054, "nlines": 61, "source_domain": "sathiyamweekly.com", "title": "மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா?", "raw_content": "\nஎடப்பாடி பழனிச்சாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா\nஅதிமுக கட்சியில் ஒவ்வொரு நாளும் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தமிழக அரசியல், பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது. இன்றைய காட்சி, நாளைய குப்பை காட்சியாகி விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமிஅணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் இணைந்து விட்டாலும், எடப்பாடி பழனிச்சாமியால், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியை அரசியலாளர்கள் எழுப்பியுள்ளனர்.\nதமிழக சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை: 234. இதில் அ.தி.மு.க கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை:134. இந்த நிலையில், அதிமுக கட்சி தற்போது மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளது. இதில் எடப்பாடி அணியும், பன்னீர் செல்வம் அணியும் இணைந்து விட்டன. எடப்பாடி அணியில் 122 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். பன்னீர் செல்வம் அணியில் 10 எம்.எல்.ஏ.க்கள் வரை இருந்தனர்.\nஇந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து ஏறத்தாழ 25 எம்.எல்.ஏ.க்களை, டி.டி.வி. தினகரன் தன் பக்கம் இழுத்து விட்டார். இதனைத்தவிர, “எடப்பாடி அணியில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலர் “சிலிப்பர் செல்”களாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் தினகரன் சமீபத்தில் கூறி,அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறார். இதனைத்தவிர, திவாகரனின் ஆதரவாளர்கள் ஏறத்தாழ 10 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறதா\nஇது போன்ற நிலையில், ஆளுனரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், எடப்பாடிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள். அதே நேரத்தில், சட்டசபையில், இந்த அரசின் மீது, தினகரன் அணி அல்லது 98 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை கொண்ட தி.மு.க. அணி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை (திமுக:89., காங்கிரஸ்:8, இந்திய யூனியன் மு.லீக்: 1) கொண்டு வந்தால், எடப்பாடியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விரைவில் பதில் கிடைத்து விடும் என எதிர்பார்க்கலாம்… என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விரைவில் பதில் கிடைத்து விடும் என எதிர்பார்க்கலாம்…\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/08/10/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T01:16:18Z", "digest": "sha1:QFHHFOJH5YWK4LGIYAGSABS32YGYNAQN", "length": 2833, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பட்டியலில் அடுத்த பிரபலம் இவர்தானாம் ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பட்டியலில் அடுத்த பிரபலம் இவர்தானாம் \nநடிகை ஸ்ரீரெட்டி பற்றி இணைய பாவனையாளர்கள் பலரும் நன்கு அறிந்திருப்பார்கள். அண்மைகாலமாக பல சினிமா பிரபலங்களின் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார்.\nமேலும் அவர் கூறிவரும் பிரபலங்களின் பட்டியலும் முடிவே இல்லாமல் சென்றுகொண்டே இருக்கிறது.இது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீரெட்டியின் பட்டியலில் தற்போது தெலுங்கு நடிகர் பிருத்விராஜூம் சிக்கியுள்ளார் . மேலும் அவர் தன்னுடைய பதிவில் காமெடி பிருத்வி நீங்கள் செய்தது எல்லோருக்கும் தெரியும் என்று விளக்கத்துடன் கூறி தவறான வார்த்தைகளையும் பிரயோகித்து திட்டியுள்ளார்.\n4 பயிற்சியாளர்கள் நியமனம்,இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கு.\n“கோலமாவு கோகிலா” படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/feb/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D23-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863272.html", "date_download": "2018-08-18T00:32:44Z", "digest": "sha1:XZO6TQJFESS2H6GR5GNKBQMGQ2Z4BSOD", "length": 6073, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவிவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nதிருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக பிப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக பிப்ரவரி 4-ஆவது வெள்ளிக்கிழமைக்கு (பிப். 23) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA0NTEzMTk1Ng==.htm", "date_download": "2018-08-18T01:34:37Z", "digest": "sha1:7XZ5ALCX7T2XWYADTPY7KC32Q2PGK2PU", "length": 12751, "nlines": 135, "source_domain": "www.paristamil.com", "title": "சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் விண்கலம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nசகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தர்ப்படும்.\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் விண்கலம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ள முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.\nசூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். சூரியனின் ஈர்ப்பு சக்தி புவியின் ஈர்ப்பு சக்தியைவிட 28 மடங்கு அதிகம். சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு விண்கலங்கள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nஆனால் இதுவரை சூரியனை நெருங்க முடியவில்லை. சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்ப நாசா தீவிரமாக முயற்சித்து வந்தது. இந்நிலையில் தற்போது ஜூலை 31ஆம் தேதி சூரியனுக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.\nசூரியனின் வலிமண்டலத்திற்கு இதற்கு முன் சென்றதை விட இந்த ஆய்வு விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்கலத்தி 11 லட்சம் மனிதர்களின் பெயர்கள் கொண்ட மெமரி கார்டு பொருத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n• உங்கள் கருத்துப் பகுதி\nசூரியனுக்கு மிக அருகில் செல்ல ஆயத்தமாகும் விண்கலம்...\nவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் Parker\nவிண்வெளி கெப்ஸ்யூல் இயந்திரத்தை உருவாக்கியுள்ள இஸ்ரோ ஆய்வு மையம்\nவிண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்காக பயன்படுத்தப்படும் விண்வெளி கெப்ஸ்யூல் என்ற இயந்திரத்தை இஸ்ரோ\n15 ஆண்டுகளின் பின் பூமியை நெருக்கும் செவ்வாய் கிரகம்\nபூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூ\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பட்ட பிரம்மாண்டமான ஏரி\nசெந்நிற கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மிகப்பிரம்மாண்டமான ஏரி இருப்பதற்கான வலுவான ஆதாரத்தினை\nநட்சத்திரம் விட்டு விட்டு ஒளிர்வதன் காரணம் என்ன\nஒவ்வொரு நட்சத்திரமும் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது என்பதற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை விஞ்ஞானிகள்\n« முன்னய பக்கம்123456789...5657அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2017/03/10.html", "date_download": "2018-08-18T00:44:29Z", "digest": "sha1:5SQ5IAGRJ4UYV7VQMIEPWBDAAB7TBNYQ", "length": 10767, "nlines": 186, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: காற்றில் வந்த கவிதைகள் -10", "raw_content": "\nகாற்றில் வந்த கவிதைகள் -10\nபுறந்தள்ளி இவன் மோசக்காரன் என்று\nஆசையைத் துறந்து வா என\nவிரைந்து வரும் என காத்திருந்தேன்.\nடிஸ்கி போட்டு பல மாதங்கள்§[[[\n/// அசட்டையினத்தின் சோகக்கதை இங்கே- ஆனாலும் எழுத்து ஆர்வம் தொடர்ந்து இயங்க சினேஹாவின் காதல் போல[[http://www.thanimaram.com/2017/03/9.html\nஇதுவரை தனிமரம்.org என்ற முகவரி கொஞ்சம் மாற்றவேண்டியதாகிவிட்டது .இனி தனிமரம் .com என்றே வாசம் வீசும் உங்களின் ஆதரவுடன். தனிமரத்தோடு மீண்டும் இணைந்து பின்தொடர்வோர் பட்டியலில் உங்களையும் இணைதுவிடுங்கள் தயவு கூர்ந்து உங்கள் ஒரு சில இணைய நேரத்தில் நட்பாக ஏதிலி தனிமரத்துடன் நேசமுடன் நேசன்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 3/12/2017 01:57:00 pm\nஆவ்வ்வ்வ் கவிதையில் கலக்குறீங்க கவிஞர் நேசன்... படங்களும் கவிதைகளும் அழகு... ஆன்மிகக் கவிதை எனக்கு நன்கு பிடிச்சிருக்கு.\nஓ நீங்களும் கொம் க்கு மாறிட்டீங்களோ... அதனால்தான் நோட்டிபிகேசன் காட்டாமல் இருந்து, ஏன் என யோசிச்சு, தேடி வந்து புதுசு எடுத்திட்டேன், இப்போ காட்டுது.\nபாட்டு.. ஆரம்பகால அப்பாஸ் ஆ\nபாட்டு.. ஆரம்பகால அப்பாஸ் ஆ நம்ப முடியவில்லை.../இல்லை இது 2000 ஆண்டில் வந்த படம் இதே காலத்தில் தான் ஆனந்தம் படத்தில் சினேஹாவுக்கு ஜோடியாக துணைப்பாத்திரம் ஏற்றார். சிந்தாமல் சிதறாமல் படம் இலங்கையில் தான் அதிக நாட்கள் ஓடியது எனலாம் நம்ப முடியவில்லை.../இல்லை இது 2000 ஆண்டில் வந்த படம் இதே காலத்தில் தான் ஆனந்தம் படத்தில் சினேஹாவுக்கு ஜோடியாக துணைப்பாத்திரம் ஏற்றார். சிந்தாமல் சிதறாமல் படம் இலங்கையில் தான் அதிக நாட்கள் ஓடியது எனலாம் இந்தப்பாட்டு கூட இலங்கை பண்பலைகளில் சக்கை போடு போட்டது\nநேசன் உங்க பதிவுகள் எனக்கு தெரியலியே என்னாச்சு இப்போ தேடி ஓடி வந்தேன் உள்ளே விடறதுக்கும் பிளாக் விடலை நான் கேட்டை தள்ளிட்டு வந்தேன் .கவிதை அருமை\nபதிவுகள் வளமாய் உள்ளன பாராட்டுகள்\nகாற்றில் வந்த கவிதைகள் -10\nகாற்றில் நீண்ட மூச்சு கவிதை)))\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.uktamil.co.uk/2018/02/blog-post_61.html", "date_download": "2018-08-18T00:38:25Z", "digest": "sha1:ZFLCLA52VGILHLSKYC65YTE7Y2AMH5QP", "length": 6894, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தென்னாபிரிக்கஜனாதிபதியை பதவி விலக கோரிக்கை!!! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » தென்னாபிரிக்கஜனாதிபதியை பதவி விலக கோரிக்கை\nதென்னாபிரிக்கஜனாதிபதியை பதவி விலக கோரிக்கை\nதென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமாவை பதவி விலக வேண்டுமென்று ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் முறையாக இன்று கோரிக்கை விடுக்கவுள்ளது.\nஇருப்பினும் பதவி விலகலை ஷுமா ஏற்றுக்கொள்வாரா என்பது தொடர்பாகத் தெளிவாகத் தெரியவில்லையெனவும் சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.\nதென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகக் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்துவரும் 75 வயதான ஷுமா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.\nஇந்நிலையில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி ஷுமா நீக்கப்பட்டதுடன் அக்கட்சிக்குப் புதிய தலைவராக துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா நியமிக்கப்பட்டார்.\nஇதனையடுத்து, ஜனாதிபதி பதவியிலிருந்து ஷுமாவை விலக்குவதற்கான அழுத்தம் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸில் அதிகரிகத்துக் காணப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலக ஷுமா மறுத்துள்ளார்.\nமேலும் ஜனாதிபதி ஷுமாவின் பதவி விலகல் தொடர்பாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அதன் திட்டத்தை இதுவரையில் வெளியிடவில்லையெனவும் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.\n மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் நாட்டு மாப்பிள்ளை\nயாழ்ப்பாணம் - மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ். மீசாலையைச் சேர்ந...\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ண...\nவிரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்\nவெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/79260", "date_download": "2018-08-18T00:24:03Z", "digest": "sha1:DVIC5AAFOCD3QBRUB7E5SGOFUZRYJMU6", "length": 8825, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "நல்ல மனிதர் ஜப்பார் அலி சேர்: நஸீர் அனுதாபம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நல்ல மனிதர் ஜப்பார் அலி சேர்: நஸீர் அனுதாபம்\nநல்ல மனிதர் ஜப்பார் அலி சேர்: நஸீர் அனுதாபம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும், ஆசிரியரும், சமூக ஆர்வலரும், சிறந்த அரசியல் வாதியும், அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு செயலாளருமான ஜப்பார் அலி சேரின் மரண செய்தியை கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன். இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான ஏ.எல். முஹம்மட் நஸீர் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;\nகட்சியின் செயற்பாட்டிற்காக தனது உயிர் உள்ளவரை மிக கட்சிதமாக செயற்பட்டு வந்த அன்னார் அதிக சமூக ஆர்வல விடயங்களிலும் அதிக சமூக, மார்க்க சார் செயற்பாட்ட்டில் ஈடுபட்டு வந்தார். ஆரம்ப காலத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் வளர்சிக்கு அதிக பங்களிப்பு செய்து வந்ததுடன் சிறந்த அரசியல் வாதியாக காணப்பட்டு மக்களுக்காகவும் அதிக தியாகங்களை செய்த செம்மமே ஜப்பார் அலி சேர்.\nகடந்த காலங்களில் நான் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அதிகாமாக எனது திருகோணமலைக்காரியாலயத்திற்கு வருகை தந்து கட்சி விடயங்களை பேசிவருவதுடன் பல வகையான ஆலோசனைகளையும் எனக்கு முன் வைத்து வந்ததுடன், மக்கள் பிரச்சினைகளையும் என்னிடம் எத்தி வைத்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுத்தரக்கோருவார்.\nஅதுபோல், இறுதியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்க்குழு கூட்டத்தை எமது கட்சியின் தலைவர் முன்னிலையில் பல கருத்துக்களை கூறுவதற்கு மிகவும் உந்து சக்தியாக இக்கலந்துரையாடல்களை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்தார்.\nநல்ல நற்பன்புகளைக் கொண்ட அன்னாரில் சுவன வாழ்வுக்கு நாம் பிராத்தித்து அன்னாரில் சகல பாவங்களையும் வல்ல இறைவன் மன்னித்து ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்க நுழைய அல்லாஹ் அருள் புரிவானாக.\nPrevious article(innaalillah) கந்தளாய் குளத்திற்கு குளித்த 20 வயது பாஹீம் முகம்மட் வபாத்\nNext articleபோதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டவரின் விளக்கமறியல் நீடிப்பு\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/general-consultation-the-post-medical-graduates-started-001963.html", "date_download": "2018-08-18T00:36:48Z", "digest": "sha1:N2B3UOA7IQWSWB5RZFPAPTUVO56T2IU4", "length": 11138, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவ பட்ட மேற்படிப்பு...... முதல் கட்ட பொது கலந்தாய்வு நாளை முடிவு..! | General consultation for the post of medical graduates started yesterday - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவ பட்ட மேற்படிப்பு...... முதல் கட்ட பொது கலந்தாய்வு நாளை முடிவு..\nமருத்துவ பட்ட மேற்படிப்பு...... முதல் கட்ட பொது கலந்தாய்வு நாளை முடிவு..\nசென்னை : நேற்று நடந்த மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான பொது கலந்தாய்வில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்ந்து எடுத்தனர். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு நாளை நடக்கிறது.\nதமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மருத்து பட்ட மேற்படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால் வெளியிடப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு கடந்த 8ந் தேதி சென்னை பல் நோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. 11 பேர்கள் அழைக்கப்பட்டதில் 10 பேர் வந்திருந்தனர். அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.\nபொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக்கு 400 பேர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். கலந்தாய்வுக்கு தரவரிசை பட்டியல்படி அழைக்கப்பட்டனர். அவர்கள் விரும்பிய படிப்பை விரும்பிய கல்லூரியை தேர்வு செய்தனர்.\nதரவரிசையில் முதல் இடம் பிடித்த மாணவி டாக்டர் புவனேஸ்வரி சென்னை மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு படிப்பையும் 2வது மாணவி ஐஸ்வர்யா சென்னை மருத்துவக் கல்லூரியில் தோல் சிகிச்சை படிப்பையும் தேர்ந்து எடுத்தனர். 3வது வந்த மாணவர் பிரதாப் சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேடியோ டயக்னாசிஸ் (ஸ்கேன்) படிப்பை எடுத்தார்.\n4வதாக வந்த மாணவர் சீனிவாசன் சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேடியோ டயக்னாசிஸ் படிப்பை தேர்வு செய்தார். இந்த பொது கலந்தாய்வு நாளை மே 11ந் தேதி வரை நடைபெறும். முதல் கட்ட பொது கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது.\nஎஸ்சி எஸ்டி பிரிவினருக்கு கலந்தாய்வு\nநாளைக்கு வியாழக்கிழமை பொது கலந்தாய்விற்கான கடைசி நாள். நாளை எஸ்சி மற்றும் எஸ்டி (பழங்குடியினர்) ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்கு 19 பேர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் உள்ள காலியிடங்கள் இன்னும் ஒரு வாரத்தில் 2வது கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வு நாளையுடன் முடிகிறது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/11/19/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-08-18T00:50:28Z", "digest": "sha1:UD4NH3MFVU5B7NVHZEQ44EDZ3XA4Q6U6", "length": 53227, "nlines": 282, "source_domain": "tamilthowheed.com", "title": "இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nலாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\n(“ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்”. (அல்குர்ஆன் 2:213)\nஎல்லாம் வல்ல அல்லாஹ், ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்து அவர்களிலிருந்தே, அவர் மனைவியைப் படைத்தான், அவர்கள் இருவரிலிருந்தும் கோடான கோடி மனிதர்களைத் தோன்றச் செய்தான். எனவே ஆரம்பத்தில், மனிதர்கள் ஒரே கூட்டத்தினராக இருந்தனர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களிடையே ஏற்பட்ட பிரிவுகளுக்கும், பிளவுகளுக்கும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையம், பகையுமே காரணமாகும். அடையாளம் தெரிந்துகொள்ள இந்தப் பிரிவுகளும் பிளவுகளும் ஏற்படவில்லை என்பதை குர்ஆனின் மேற்கண்ட வசனமே உறுதியாகத் தெளிவுபடுத்துகிறது. இப்படி போட்டி, பொறாமை, பகை காரணமாகத் தோன்றிய ஒவ்வொரு பிரிவாரும், தாங்கள் தான் நேர்வழியில் இருப்பதாகவும், தங்களுக்கே இறைவனின் பொருத்தமும் சுவர்க்கமும் கிடைக்கும் என்று வாதாடி வருகின்றனர். கல்லை வணங்குகிறவர்கள், கபுரை வணங்குகிறவர்கள், தங்களைப் போன்ற மனித இனத்தைச் சார்ந்த, நபிமார்களுக்கும் வலிமார்களுக்கும் தெய்வாம்சங்களைக் கற்பித்து வணங்குகிறவர்கள், மலக்குகளையும் ஜின்களையும் வணங்குகிறவர்கள், தங்கள் மனோ இச்சையை தெய்வமாக்கிக் கொண்டவர்கள், இப்படி ஒவ்வொரு பிரிவாரும் தாங்கள் செய்து வருவதுதான், மிகச் சரியானதாகவும், தாங்களே நேர்வழி நடக்கிறவர்கள், தங்களுக்கே இறைவனின் பொருத்தமும் சுவர்க்கமும் கிடைக்கும் என்று துணிந்து கூறி வருவதையே பார்க்கிறோம். எந்தப் பிரிவாரும் தங்களை வழிகெட்ட கூட்டமென்றோ, நரகத்திற்குச் செல்லும் கூட்டம் என்றோ சொல்லுவதே இல்லை. இதையே அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்;\n“எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவுகளை உண்டாக்கிப்(பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களிலாகி விட வேண்டாம்; அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்” (30:32)\nஇன்னும் 23:53 வசனமும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.\nஈமான் கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் , ஸாபியீன்கள் இன்னும் அனைத்துப் பிரிவாரும் இவ்வாறு தாங்கள் செய்து கொண்டிருப்பதைக் கொண்டு, சந்தோஸப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிரிவினரின் இந்த வீண்வாதம் தவறு, அவர்களின் இறைவனைப் பற்றிய நம்பிக்கை, இறுதிநாளைப் பற்றிய நம்பிக்கை, நல்ல செயல்கள். இவையே அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும், மற்றவர்கள் நஷ்டம் அடைவார்கள் என்பதையே 2:62 வசனமும், 5:69 வசனமும் தெளிவுபடுத்துகின்றன. சிலர் வாதம் செய்வது போல், இப்படிப்பட்ட பிரிவுப் பெயர்களை அல்லாஹ் அனுமதித்துள்ளான் என்ற எண்ணம் மிகவும் தவறானதாகும். அவர்கள் சொல்லுவது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள் எவருமே தங்கள் பிரிவுக் கொள்கைகளை விட்டு முஸ்லிம்களாகி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. தங்கள் தங்கள் பிரிவுகளில் இருந்து கொண்டு வெற்றி பெற்றிருக்க முடியும். நபி(ஸல்) அவர்களும் அதை மறுத்திருக்க முடியாது. ஆனால் அவர்கள் அனைவரும் கலிமா சொல்லி, முஸ்லிம்களாகி நல்லமல்கள் செய்வது கொண்டே வெற்றியடைய முடிந்ததும், இது ஒன்றே பிரிவுகளை ஆதரிப்பவர்களின் வாதம் தவறு என்பதை நிரூபிக்கப் போதுமானது. மேலும்.\n“அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்”. (22:78)\n“உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையே பொருந்திக் கொண்டேன்” (5:3)\n“நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்க இஸ்லாம்தான்” (3:19)\n“இஸ்லாத்தையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது; மறுமையில் அவன் நஷ்டம் அடைந்தோரில் இருப்பான்”. (3:85)\n“நீங்கள் முஸ்லிம் அல்லாத நிலையில் மரணிக்க வேண்டாம்”. (3: 102)\n“அல்லாஹ் அளவில் (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து, நிச்சயமாக, நான் முஸ்லிம்களில் உள்ளவன், என்று சொல்பவனை விட சொல்லால் அழகியவன் யார்\nஇன்னும் இவைபோன்ற வசனங்கள் இவர்களின் வாதத்தைப் பொய்ப்பிக்கின்றன.\nஉண்மையில், முகல்லிதுகள் (மதஹபுப் பிரிவினர்) மதஹபுகளைத் தெளிவாக மறுக்கும் 4:115 வசனத்தையே, மத்ஹபுகளுக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவது போல், இவர்களும் பிரிவுகள மறுக்கும் இந்த 2:62, 5:69 வசனங்களைப் பிரிவுகளுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். ஆக இரு கூட்டத்தாரின் வாதங்களும் தவறான வாதங்களேயாகும்.\nயூத, கிறிஸ்தவப் பெயர்கள் கோத்திரத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பெயர்கள் என்று சொல்லுவது தவறாகும். அது உண்மையானால்,\n“யூதர்கள், கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீண் ஆசையே ஆகும்.” (2: 111)\nஎன்று குர்ஆன் குறிப்பிடுவது போல், அவர்கள் சொல்லி இருக்க முடியாது. வெற்றி பெறும் கூட்டம் என்ற காரணத்தினால் தான் இவ்வாறு அவர்கள் கூறியள்ளார்கள், என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்கிக் கொள்ளலாம். இதை அடுத்துவரும் வசனம் இன்னும் உறுதிப்படுத்துகின்றது.\n எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கு முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறாரோ, அவனுடைய நற்கூலி இறைவனிடம் உண்டு; இத்தகையவர்களுக்கு அச்சமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” (2: 112)\nதன்னை அல்லாஹ்வுக்கு முழுமையாக அர்ப்பணம் செய்துகொண்ட எவனாவது, அல்லாஹ் பெயரிட்ட “முஸ்லிம்” என்ற பெயரைவிட்டு, சுயமாக ஒரு பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்வானா என்பது அறிவாளிகளின் சிந்தனைக்கு உரியதாகும். அடுத்து,\n நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைப் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.” (49:13)\nஎன்ற இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டி, தங்கள் பிரிவு பெயர்களை நியாயப்படுத்த முனைகின்றனர். இங்கும் அவர்கள் தவறே செய்கின்றனர். அல்லாஹ் தெளிவாக, “நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு கிளைகள், கோத்திரங்களாக ஆக்கியிருக்கிறோம்” என்று தெளிவாகச் சொல்லுகிறான்.\n“அப்துல்லாஹ்” என்ற மாத்திரத்தில், இன்னார் என்று அறிகிறோம், அப்துல்லாஹ் என்ற பெயர்களுடையவர்கள் அனைவரும் நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கவாதிகள் என்று யாரும் சொல்லுவதில்லை; இன்ன கிளையைச் சார்ந்தவர்கள் வழி தவறியவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது; இன்ன கோத்திரத்தார் நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கவாதிகள் என்று யாருக்கும் சொல்ல அதிகாரமில்லை.\n‘அப்துல்லாஹ்’க்களில், கிளைகளில், கோத்திரங்களில் , நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்வோரும் உண்டு; தவறான வழி சென்று நரகம் செல்வோரும் உண்டு என்பதே அறிவாளிகள் சொல்லும் உண்மையாகும். ஆக அல்லாஹ் அனுமதித்துள்ள – அடையாளம் தெரிந்து கொள்ள வைக்கும் பெயர்களின் நிலை இதுவேயாகும். ஆனால் இவர்களாக உண்டாக்கிக் கொண்டிருக்கும் பிரிவுப் பெயர்களின் நிலை இதுவல்ல. ஒவ்வொரு பிரிவாரும் தாங்கள் தான் நேர்வழி நடப்பவர்கள் சுவர்க்கம் அடைபவர்கள் என்று மார்தட்டிச் கொள்கிறார்கள்.\n“கபுரு வணங்கிகள் மற்றும் வழி கெட்டவர்களிடமிருந்து தனித்துச் காட்டிக் கொள்ள மட்டும்தான் அந்தப் பெயர் பயன்படுத்தப்பட வேண்டும்”,\nஎன்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதே, அவர்கள் தங்களை நேர்வழி நடக்கும் கூட்டமென்று, பிரித்துக் காட்டவே, இப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை சந்கேத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றது. அதாவது இஸ்லாத்தில் அவர்கள் அல்லாத வேறு பிரிவினரும் இருக்கிறார்கள் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இஸ்லாத்தில் பிரிவுகள் உண்டு என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இந்த அடிப்படையில் 42:14, 2:213, 6:159, 30:32, 45:17, 21:92,93, 22:52, 53:54 இந்த வசனங்கள் இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லையென்றே திட்டவட்டமாக அறிவிக்கின்றன.\n“ஆனால் இன்று தம்மை ஹனஃபி என்றும், ஷாஃபி என்றும், கூறுவோர் குர்ஆன், ஹதீஸ் இரண்டும்தான் அடிப்படையென்று ஒப்புக் கொள்வதில்லை. மாறாக குர்ஆன், ஹதீஸ்களை நம்மால் விளங்க இயலாது என்று விலகிச் செல்வதைத்தான் காண்கிறோம். பெரியார்கள், முன்னோர்கள் சொன்னது மட்டும் போதும் என்பதே அவர்களின் கொள்கை. ஆனால் ஸலஃபி, முஜாஹித், அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகளில் உள்ள எவரும் குர்ஆன், ஹதீஸ் இரண்டும்தான் அடிப்படை என்பதை மறுக்கவில்லை. மறுக்காதது மட்டுமல்ல; குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் அடிப்படையாகக் கொள்ள மறுப்பவர்களைக் கண்டிக்கவும் செய்கின்றனர்.\nஅவர்களின் இந்தக் கூற்றை நாமும் மறுக்கவில்லை, அதே சமயம் அவர்களே, அவை பிரிவுப் பெயர்களே என்று ஒப்புக் கொண்டுள்ளதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.\nசெயல்பாடுகளில் அவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடந்தாலும், அல்லாஹுவோ, அவன் தூதரோ கற்றுத்தராத பெயர்களைக் கொண்டு தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். இப்பெயர்கள், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் முன்னோர்களால் இடப்பட்டு, அழைத்து வரப்பட்ட பெயர்களாகும்; முன்னோர்களை நம்பி இப்பெயர்களையே அவர்களும் வைத்துக் கொள்வதால், தங்களை அழைத்துக் கொள்ளும் விஷயத்தில், குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாறு செய்கிறார்கள். எனவே தங்களை அழைத்துக் கொள்ளும் விஷயத்தில், பெரியார்கள், முன்னோர்கள் சொன்னது மட்டுமே போதும் என்பதே இவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பதை உணர வேண்டும்.\nசாதாரண சிறிய சிறிய மார்க்க காரியங்களையே வெள்ளை வெளேறென்று, இரவையும் பகலைப் போன்ற நிலையில் தெள்ளத் தெளிவாக, சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளக்கிச் சென்றுள்ள, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே வெற்றிபெறும் கூட்டம் தங்களை இப்படித்தான் அழைத்துக் கொள்ள வேண்டுமென்பதை தெளிவுபடுத்தாமல் சென்று விட்டார்களா அல்லாஹுவும் அவனது தூதரும், இது விஷயத்தில், அக்கறை இல்லாமல் இருந்து விட்டார்கள் என்று இவர்கள் எண்ணுகிறார்களா அல்லாஹுவும் அவனது தூதரும், இது விஷயத்தில், அக்கறை இல்லாமல் இருந்து விட்டார்கள் என்று இவர்கள் எண்ணுகிறார்களா அதிலும் குறிப்பாக, “எனது உம்மத் 73 பிரிவுகளாகப் பிரிவார்கள், அவர்களில் 72 பிரிவினர் நரகம் செல்வர், ஒரே ஒரு பிரிவினர் மட்டுமே (ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவினர்கள் இல்லை) சுவர்க்கம் செல்வர்” – என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னவுடன், நபித் தோழர்கள் வெகு ஆவலுடன் அக்கூட்டத்தினர் யார் என்று கேட்ட அந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கென்று ஒரு பெயர் சூட்டாமல், ” இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ, அவ்வாறே இருப்பவர்கள்” என்று கோடிட்டுக் காட்டுவதோடு, நிறுத்திக் கொண்டார்கள். இதிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கே வெற்றி பெறும் கூட்டத்திற்கு அப்படியொரு தனிப்பெயர் சூட்டிட, அனுமதி இல்லை என்பதும் தெளிவாகிறது. பிரிவுகள் சம்பந்தப்பட்ட ஆயத்துகளை தெளிந்த சிந்தனையோடு பார்ப்பவர்கள் இதனை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். அதாவது அப்படியொரு தனிப் பெயரை சூட்டிக்கொண்டால், இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கிய குற்றத்திற்கு ஆளாக வேண்டிவரும், அதற்கு நபிமார்களுக்கும் அனுமதியில்லை என்பதே உண்மையாகும். குர்ஆன் 42:13 வசனம் இதைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களே செய்யத் துணியாத ஒரு காரியத்தை நாம் செய்யலாமா அதிலும் குறிப்பாக, “எனது உம்மத் 73 பிரிவுகளாகப் பிரிவார்கள், அவர்களில் 72 பிரிவினர் நரகம் செல்வர், ஒரே ஒரு பிரிவினர் மட்டுமே (ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவினர்கள் இல்லை) சுவர்க்கம் செல்வர்” – என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னவுடன், நபித் தோழர்கள் வெகு ஆவலுடன் அக்கூட்டத்தினர் யார் என்று கேட்ட அந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கென்று ஒரு பெயர் சூட்டாமல், ” இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ, அவ்வாறே இருப்பவர்கள்” என்று கோடிட்டுக் காட்டுவதோடு, நிறுத்திக் கொண்டார்கள். இதிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கே வெற்றி பெறும் கூட்டத்திற்கு அப்படியொரு தனிப்பெயர் சூட்டிட, அனுமதி இல்லை என்பதும் தெளிவாகிறது. பிரிவுகள் சம்பந்தப்பட்ட ஆயத்துகளை தெளிந்த சிந்தனையோடு பார்ப்பவர்கள் இதனை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். அதாவது அப்படியொரு தனிப் பெயரை சூட்டிக்கொண்டால், இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கிய குற்றத்திற்கு ஆளாக வேண்டிவரும், அதற்கு நபிமார்களுக்கும் அனுமதியில்லை என்பதே உண்மையாகும். குர்ஆன் 42:13 வசனம் இதைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களே செய்யத் துணியாத ஒரு காரியத்தை நாம் செய்யலாமா என்பதை ஆழ்ந்து சிந்தித்து விளங்கவும்.\nவெற்றி பெறும் கூட்டத்திற்கு இஸ்லாம் அல்லாத பெயரை சூட்ட விரும்புகிறவர்கள், இஸ்லாத்தில் பிரிவினைகள் இருக்கின்றன என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எனவே இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்ற இறை வசனத்திற்கு விரோதமாக, இஸ்லாத்தில் பிரிவினையைக் கற்பித்து, இவர்களும் பிரிவினை வாதிகளாக ஆகிவிட்டார்கள். இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்ற அல்லாஹுவின் தெளிவான அறிவிப்புகளில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்குமானால், “அல்லாஹுவின் அங்கீகாரம் இல்லாத பெயர்களை சூட்டி கொள்கிறவர்கள் அவர்களாகவே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள்; நாம் முஸ்லிம்கள் என்று மட்டும் சொல்லிக்கொண்டு, இஸ்லாத்தில் நிலைத்து இருப்போம்” என்ற முடிவுக்கே வரமுடியும்.\nமேலும் மனிதர்கள் சரிகண்டு, தேர்ந்தெடுத்திருக்கும் எந்தப் பெயரின் கீழும், மனித சமுதாயத்தை, ஒரு போதும் ஒன்று சேர்க்க முடியாது. மனித அபிப்பிராயங்கள் என்று வரும்போது பல அபிப்பிராயங்கள் வருவதைத் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட மனித அபிப்பிராயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரின் கீழ் செயல்படும் ஒரு பிரிவு வழிகெட்டு 72 பிரிவுகளில் ஆகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது யார் அந்த உத்திரவாதத்தை தர முடியும் யார் அந்த உத்திரவாதத்தை தர முடியும் எனவே மனித அபிப்பிராயங்கள் அனைத்தையும் விட்டு, அல்லாஹ் பெயரிட்ட “முஸ்லீம்” என்று பெயரின் கீழ் மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியிலேயே நாம் அனைவரும் அவசியம் ஈடுபட வேண்டும். மனித சமுதாயத்தின் ஐக்கியத்தையும், உலக சமாதான சகோதரத்துவ வாழ்க்கையையும் விரும்பும் எந்த நல்ல உள்ளமும் இதை ஏற்காமல் இருக்க முடியாது. இதற்கு மேலும் இது விஷயத்தில் தங்கள் கெளரவம், போட்டி, பொறாமை எண்ணங்கள் காரணமாக மாறுபடும் சகோதரர்களுக்கு இறுதியாக அல்லாஹுவின் இந்த எச்சரிக்கையைக் கூறி முடிக்கிறோம்.\n“எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை, அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளது; அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.” (6:159)\nமார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும்(பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால் எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து , அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார். (2: 256)\nநிச்சயமாக அல்லாஹ். தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர்கள், நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கின்றனர் , (4:48)\nFiled under ஆய்வுகள், இஸ்லாம், நபி வழி\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\nநபி வழியில் நம் ஹஜ்\nபெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=jeyakanthan-irandu-kuzanthaigal", "date_download": "2018-08-18T01:19:40Z", "digest": "sha1:CBGFXUBMJQ4SEHOB53PCIQVP2SMRNFWP", "length": 39406, "nlines": 152, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nஇரண்டு குழந்தைகள் - ஜெயகாந்தன்\nஇரண்டு அடுக்கு மூன்று அடுக்கு மாடிகள் உடைய கட்டிடங்கள் நிறைந்த அந்தத் தெருவில் பெரிய உத்தியோகஸ்தர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் முதலியோர் வாழ்ந்தனர். அது மட்டுமல்லாமல், அநேகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பக்கத்தில் சற்றுத்தள்ளியோ நெருங்கியோ அமைந்துள்ள கொட்டகைகளில் மாடுகள், பசுக்கள் வசித்தன. சில கொட்டகைகளில் கார்கள் இருந்தன.\nசேதன அசேதனப் பொருட்கள் யாவற்றுக்கும் இடம் கொடுத்த அந்தத் தெரு சிவப்பிக்கும் அவள் மகன் சோணையாவுக்கும் இடம் தந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட முடியுமா\nமுதலில் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலிருந்தும் அவளையும் அவள் குழந்தையையும் விரட்டினார்கள். பிறகு அந்த ரிட்டையர்ட் சப்ரிஜிஸ்திரார் சுப்புஐயரின் மனையாள் தயவின் பேரில், அவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகையில் இடம் பிடித்தாள் சிவப்பி.\nமழையென்றும் குளிரென்றும் இயற்கை தொடுக்கும் தாக்குதல்களுக்கு அரணாய் அமைந்தது அந்தக் கொட்டகை. தினசரி அந்த மாட்டுக்கொட்டகையை அவள் சுத்தம்செய்வாள். அவள் படுத்துக்கொள்ளும் இடத்தை அவள் சுத்தம் செய்து கொள்ளுகிறாள். அதற்குக் காசு கொடுப்பார்களா, என்ன\nபகல் பொழுதெல்லாம் இடுப்பில் பிள்ளைச் சுமையுடன், அந்தத் தெருவின் கோடியில் உள்ள விறகுக் கடையில் அவளைப் பார்க்கலாம். விறகுச் சுமை கிடைத்துவிட்டால், பிள்ளைச்சுமை இறங்கிவிடும். அவன் கையில் காலணாவுக்கு முறுக்கை வாங்கிக் கொடுத்து அங்கேயே மரத்தடியில் குந்தி இருக்கச் சொல்லிவிட்டு ஓடுவாள். பிள்ளையை விட்டுவிட்டுப் போகும் துடிப்பில், சுமையுடன் ஓட்டமாய் ஓடி ஒரு நொடியில் திருப்புவாள். சோணையாவும் புத்திசாலித்தனமாய், அம்மா வரும் வழியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். அதுவரை முறுக்கைக் கடிக்கவேமாட்டான். தாயைக்கண்டதும் ஒரு சிரிப்பு மலரும். அவளும் ஓடி வந்து பிள்ளையைத் தூக்கி முத்தமிடுவாள். தாயுள்ளம் அந்தப் பிரிவைக் கூடத் தாங்க முடியாதது என்பது அவள் தவிப்பில் தெரியும். கையிலுள்ள முறுக்கைத் தாயின் வாயில் வைப்பான் சிறுவன். அவள் கொஞ்சம் கடித்து, அதை எடுத்து அவன் வாயில் வைத்து, \"நீ தின்னுடா ஐயா....\" என்று சொன்ன பிறகு தான் தின்பான்.\nவிறகுச் சுமை இல்லாத நேரங்களில் கடைத்தெருவில் சென்று கடைகளில் தானியம் புடைப்பாள்.\nமாலை நேரத்தில் அந்தப் பெரிய தெருவின் ஒரு மூலையில், மரத்தடியில் மூன்று கற்களைச் சேர்த்து அடுப்பு மூட்டிச் சோறு சமைத்துத் தானும் தன் மகனும் உண்டபின் மாட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் நித்திரை கொள்வாள்.\nஅந்தத் தெருவில் எல்லா வீட்டுக்கும் அவள் வேலை செய்வாள். அதிலும் சுப்பு ஐயர் வீட்டுக்காரர்களுக்கு அவளிடம் தனிச்சலுகை. அவளும் மற்ற வீட்டுக்காரர்களிடம் செய்யும் வேலைக்குக் கூலியாகக் காசு பெறுவது உண்டு. சுப்பு ஐயர் வீட்டில்...எப்பொழுதாவது அவர் மனைவி கொடுத்தாலும்கூட வாங்குவதில்லை. அவள் செய்யும் வேலைகளுக்காக மீந்துபோன சோறு, கறி குழம்பு வகையறாக்கள் அவளைச் சாரும். சுப்பு ஐயர் வீட்டில் அவளாகக் கேட்டு வாங்குவது, மத்தியான நேரத்தில் ஒரு குவளை சோறு வடித்த கஞ்சி மட்டும்தான்.\nஅந்தக் கஞ்சியில் அவளுக்கு அபரிமிதமான சுவை. சுப்பு ஐயர் வீட்டுக்குக் கிராமத்தில் இருந்து நெல் வருகிறது. நல்ல வீட்டு அரிசி; பச்சரிசிக் கஞ்சி மணக்கும்; அவளுக்குக் குடிக்க குடிக்க அது இனிக்கும். எந்த வேலை எப்படிப் போனாலும் பத்து பதினோரு மணிக்கு ஐயர் வீட்டு வாசற்படியில் தகரக் குவளையும் கையுமாய் வந்து நின்று விடுவாள்.\nசுப்பு ஐயர் திண்ணையருகே ஈஸிச்சேரில் சாய்ந்திருக்கிறார். கையிலுள்ள விசிறி லேசாக அசைகிறது.\nதிண்ணையில் தகரக் குவளையின் சப்தம் கேட்கவே ஐயர் நிமிர்ந்து பார்க்கிறார்.\n\"அடியே...ஒன் ஸ்வீகாரம் வந்திருக்கா; பாரு\"\nசுப்புஐயருக்கு சிவப்பியைப் பார்த்தால் கொஞ்சமும் பிடிக்காது. மனைவி அவளிடம் பிரியமாய் இருப்பதே அதற்குக் காரணம். தனது வெறுப்பை எப்படியெப்படி யெல்லாமோ காட்டிக் கொள்வார்.\n\"என்னடா பயலே, வயசு நாலாகுதோன்னோ இன்னம் என்ன ஆயி இடுப்பைவிட்டு எறங்கமாட்டேங்கறே. நீயும் போயி வெறகு தூக்கறதுதானே.... எப்பப் பார்த்தாலும் சவாரிதான்; நாளைக்கு நடந்து வரலேன்னா ஒன்னெ என்ன செய்றேன் பாரு....\" என்று வேடிக்கை பேசவே சிவப்பி மகிழ்ந்து போனாள். ஐயர் தன் பிள்ளையைக் கொஞ்சிவிட்டார் என்ற நினைப்பில் சோணையாவை முத்தமிட்டாள்.\nஅதற்குள் சுப்பு ஐயரின் மனைவி உள்ளே இருந்து கஞ்சியில் உப்பைப் போட்டுக் கலக்கிக் கொண்டே வந்தாள். திண்ணையோரமாய் ஒதுங்கி, எட்டி நின்றவாறே புடவையைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சிவப்பி கையிலேந்தி நிற்கும் தகரக் குவளையில் அவள் கஞ்சியை வார்க்கும்போது, ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சுப்பு ஐயர் நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனித்தார்.\nகஞ்சியிலிருந்து ஒரு பருக்கை விழுவது தெரிந்ததோ, போச்சு, அவ்வளவுதான்'.... ஐயர் வீட்டு அம்மாள் இருந்த இருப்பும், இந்தக் கஞ்சித்தண்ணிக்குக்கூட வக்கில்லாமல் அவள் அப்பன் அடித்த 'லாட்ரி'யும்.... வம்ச பரம்பரையாகக் குலமுறை கிளர்த்த ஆரம்பித்துவிடுவார்.\n\"என்னடி அது 'லொடக்'னு கொட்டித்தே...\" என்று புருவத்தை உயர்த்தினார்.\nஅம்மாளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.\n\"காட்டுடீ...ஐயர்கிட்டே கொண்டுபோய்க் காட்டு. கையைவிட்டுத் துழாவிப் பாருங்கோ... இந்த ஆத்து சொத்தெல்லாம் கொண்டுபோய்க் கொட்டிட்டேனேன்னோ.... இவர் துப்புக் கண்டுபிடிக்கிறார்....\" என்று இரைந்துவிட்டு உள்ளே போனாள்.\n\"ஒண்ணுமில்லே சாமி....வெறும் கஞ்சி ஆடை\" என்று அதை விரலால் எடுத்துக் காட்டி தூக்கி எறிந்தாள் சிவப்பி.\n\"அடி அசடே....அதை எறிஞ்சுட்டியே...அதிலேதான் 'வைடமின் பி' இருக்கு.\"\n\"எனக்கு அதொண்ணும் வாணாம் சாமி....\" என்று கஞ்சிக் குவளையுடன் நகர்ந்தாள் சிவப்பி.\nஅவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐயர் தனக்குள் சொல்லிக் கொண்டார்:\n\"ஹ்ம்...கஞ்சித் தண்ணியைக் குடிச்சுட்டு என்ன தெம்பா, இருக்கா' அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு\" என்று முணகியபின், உரத்த குரலில்....\n\"அடியே...இனிமே சோத்தெ வடிக்காதே. பொங்கிப்பிடு. அதிலேதான் சத்தெல்லாம் இருக்கு. ஒடம்புக்கு ரொம்ப நல்லது....\" என்று சொன்னார்.\n\"ஆமா...இப்போ இருக்கற சத்தே போறும்\" என்று சலித்துக்கொண்டு உள்ளே போனாள் அம்மாள்.\nஅம்மாள் எத்தனை தடவைகள் சலித்துக் கொண்டாலும், ஐயருக்கு சிவப்பியைப் பார்க்கும் போதெல்லாம் --- லோகத்தில் இருக்கும் சத்தெல்லாம் தன் வீட்டுக் கஞ்சித் தண்ணீரில் தான் இருப்பதாகத் தோன்றும்.\nராமநாதபுரம் ஜில்லாவிலிருந்து \"பஞ்சம் பிழைப்ப\"தற்காக மதுரை வந்தவள் சிவப்பி.\nபெயரளவில் சிவப்பி. கரிய ஆகிருதி...ஆரோக்கியமும் திடமான உடற்கட்டும் உடைய அவள் பஞ்சத்திலடிபட்டு இந்த நகரத்திற்கு வந்தவள்தான் என்றாலும், இங்குள்ளவர்கள் கண்டு வியக்கும்படிதான் இருந்தது அவள் உடல் வனப்பு. செழிப்பாக இருக்கும் பூமியில் வளமாக வாழும் வாய்ப்பும் கிட்டியிருந்தால் நிச்சயம் இவளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடியும்'\nமுறம் கொண்டு தானியங்கள் புடைப்பதும், கூலிக்கு விறகு சுமப்பதுமாய் உழைத்துத் தானும் ---- கருப்பையாத்தேவனின் வாரிசாக திகழ்ந்து, தன் சிரிப்பிலும் புன்னகையிலும் அவள் கணவனின் சாயல் காட்டி, ஆறுதல் தரும் நான்கு வயது மகனான --- சோணையாவும் வயிறு வளர்ப்பது தான் அந்த மறத்தியின் உடல் வலு புரியும் மகத்தான சாதனை.\nஇடுப்புக் குழந்தையும் தாயுமாய் அவளை இங்கே விட்டு விட்டு, ஏதாவது வேலை தேடி வருவதாகச் சொல்லி, வடக்குச் சீமைக்குப் போன அவள் புருஷன் கருப்பையாத் தேவனின் முகதரிசனம் ஆறு மாசமாகியும் கிடைக்கவில்லை.\nஅன்று ஐயரவர்களுக்கு பிறந்த தின வைபவம். வீட்டில் விசேஷமானதால் விருந்தினர்களும் வந்திருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் பந்தி நடந்ததால் சிவப்பி கஞ்சிக்காகக் காத்திருக்க வேண்டி இருந்தது.\nஅவனுக்கு 'பராக்கு'க் காட்டிப் பேசிச் சிரித்து விளையாடியவாறு கொட்டகையின் ஓரத்திலிருந்த மர நிழலில் குந்தியிருந்தாள் சிவப்பி.\n\"ஒங் ஐயா எங்கலே....\" என்று மகனின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சினாள் சிவப்பி.\n\"எப்பலே வரும் ஒங்க ஐயா...\" என்றதும் அவன் அவள் மடியிலிருந்து இறங்கி நடந்து, தெருவில் போய் நின்று இரண்டு பக்கமும் மாறி மாறிப் பார்த்துவிட்டு வந்தான்.\n\"ஆத்தா...ஐயா....ஊம்\" என்று இரண்டு கையையும் விரித்தான். அவன் முகத்தில் ஏமாற்றமும் சோர்வும் படர்ந்திருந்தது.\n\"ஐயா நாளைக்கு வந்துடும். வாரப்போ ஒனக்கு முட்டாயி, முறுக்கு, புதுச் சட்டை எல்லாம் கொண்ணாந்து குடுத்து...அப்புறம் நாம்ப நம்ம ஊருக்குப் போயி, நம்ம ஊட்லே இருக்கலாம்....\" என்று கூறும்போது அவள் குரல் தழுதழுத்தது; கண்களில் நீர் துளிர்த்தது. மகனின் முகத்தில் முத்தம் கொடுக்கும் போது அவன் முகத்திலேயே கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.\nஇந்த சமயத்தில் ஐயர் வீட்டு வாசலில் இலை வந்து விழும் சப்தம் கேட்டது----\n\"ஆத்தா...கஞ்சி....கஞ்சி...\" என்று குழந்தை பறந்தான்.\nமகனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கையில் தகரக் குவளையுடன் போய் நின்றாள் சிவப்பி.\nசுப்பு ஐயர் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்து, திண்ணைக்கருகே ஈஸிசேரில் வந்து சாய்ந்து ஏப்பம் விட்டார்.\n---அவள் சாதாரணமாய், உபசாரத்திற்குத்தான் கேட்டு வைத்தாள்.\n\"என்னத்தெ விசேஷம் போ....ஊர்லேந்து பொண்ணு வந்திருக்காளோன்னா\n---இவளுக்கு ஏதாவது தரவேண்டி இருக்குமோ என்ற பயத்தில் பூசி மழுப்பினார் ஐயர்.\nஉள்ளேயிருந்து அம்மாளின் குரல் மட்டும் கேட்டது.\n\"சித்தெ சந்துவழியா கொல்லப்புறம் வாயேண்டி....ஒன்னத்தான் நெனச்சிண்டே இருந்தேன். தொட்டியிலே.... ரெண்டு வாளி ஜலம் சேந்தி நெரப்பு... சாப்பிட்டவாளுக்குக் கையலம்பக்கூட ஜலம் இல்லே....சீக்கிரம் வா....\" என்று அம்மாவின் குரல் ஒலித்ததும் இடுப்பிலிருந்த குழந்தையுடன் உள்ளே போகும் சிவப்பியைப் பார்த்து,\n\"இடுப்பைவிட்டு எறங்காமே ஒன் உசிரை வாங்கறதே, சனி அத்தெ எறக்கி விட்டுட்டுப் போ'...\" என்றார் ஐயர்.\nகுழந்தையை இறக்கி மர நிழலில் உட்கார வைத்து \"ஆத்தா போயி கொஞ்சம் தண்ணி எறைச்சி ஊத்திட்டு வாரேன்; அழுவாமே குந்தி இருக்கியா, ஐயா...\" என்று அவனை முத்தம் கொஞ்சினாள் சிவப்பி.\n'சரி' என்று சமர்த்தாகத் தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்து கொண்டான் சிறுவன்.\nசந்துப் பக்கம் போகும் போது சிவப்பி திரும்பித் திரும்பித் தன் மகனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சென்றாள். அவனும் சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான்.\nபையன் அழாமல் அடம் பிடிக்காமல் இருந்ததில் ஐயருக்குக் கொஞ்சம் ஏமாற்றம்; ஆத்திரம் என்று கூடச் சொல்லலாம்.\nஉள்ளேயிருந்து ஆரோகண அவரோகண கதிகளிலெல்லாம் குரலை முழக்கிக் கொண்டு வந்தான் அவர் மகள் வயிற்றுப் பேரன். அவனுக்கும் வயது நான்குதான் இருக்கும். நான்கு விரலையும் வாய்க்குள் திணித்தவாறு சிணுங்கிக் கொண்டே அவருகே வந்தான் பேரன்.\n இப்படி வா...மடியிலே வந்து தாச்சிக்கோ\" என்று பேரனை அழைத்தார்.\n\"மாத்தேன் போ....அம்மா...ஆ...ஆ\" என்று வாயைப் பிளந்து கொண்டு அழ ஆரம்பித்தான் குழந்தை.\n\"அம்மா சாப்பிடறாடா கண்ணா...சாப்டுட்டு வந்து ஒன்னெத் தூக்கிண்டுடுவா. சமத்தோன்னோ....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ....அதோ பாரு, அந்தப் பையனை...அவ அம்மாவும் எங்கேயோ போயித்தான் இருக்கா...ஒன்னெ மாதிரி அவன் அழறானோ\" என்று சோணையாவைக் காட்டினார் ஐயர்.\nசோணையா கையைத் தட்டிக்கொண்டு ஐயரின் பேரனைப் பார்த்துச் சிரித்தான்; அவனோ காலை உதைத்துக் கொண்டு அழுதான்'\n---தனது பேரனுக்கு அவனை வேடிக்கை காட்டப்போய், தன் பேரன் அவனுக்கு வேடிக்கையாகிப் போனானே என்ற ஊமை ஆத்திரம் ஐயருக்கு...\n அப்படியே போட்டேன்னா...\" என்று விளையாட்டாய்க் கண்டித்து தம் எரிச்சலைத் தீர்த்துக் கொண்டார் ஐயர். \"அந்தப் பையன்தான் அசடு....அவனை நன்னா அடிப்போமா\n---அவர் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கத்தினான் பேரன்.\n\"இதெவிட அசடு லோகத்திலே உண்டோ.... நன்னா ஒதைக்கணும்\" என்று கருவிக்கொண்டே ஐயரின் மகள் எச்சில் இலையுடன் தெருப்பக்கம் வந்தாள். இலையைப் போட்டுக் கையைக் கழுவிய பின்,\n\"சனியனே, கத்திப் பிராணனைத் தொலைக்காதே' \" என்று பல்லைக் கடித்துக் கொண்டு வந்து மகனைத் தூக்கிக் கொண்டாள்.\n\"என்னடி பொண்ணே, ஒன்னும் சாப்பிடாம இலையைக் கொண்டு வந்து எறிஞ்சிருக்கே... எல்லாம் அப்படியே இருக்கு ...ஜாங்கிரிகூடன்னா அப்படியே கெடக்கு இப்படி 'வேஸ்ட்' பண்ணுவாளோ...\" என்று அரற்றினார் ஐயர்.\n\"இந்த சனி என்னெ சாப்பிட விட்டாத்தானே...\n\"சரி...அவனெக் கத்த விடாதே' அவனுக்கு ஒரு ஜாங்கிரி குடு\" என்று சொல்லிவிட்டு சோணையாவைப் பார்த்தார்.\n\"ஏண்டா பயலே, நோக்கு ஜாங்கிரி வேணுமா\" என்றார் கண்களைச் சிமிட்டிக் கொண்டே.\nமிட்டாயி என்றதும் பையனுக்குப் புரிந்துவிட்டது. சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு எழுந்து வந்தான்.\n\"அதோ, அதான்...மிட்டாயிடா... எடுத்துத் தின்னு பாரு, இனிக்கும்....\" என்று நாக்கைச் சப்புக்கொட்டி ஆசை மூட்டி எச்சில் இலையைக் காட்டினார் ஐயர்.\nசோணையா தனது பிஞ்சுக் கரங்களால் எச்சிலையில் கிடக்கும் துண்டு ஜாங்கிரியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்தான்....\n\"எலே...எலே...போடுலே கீளே----தூ....\" என்று கூவியவாறு சந்திலிருந்து ஓடிவந்த சிவப்பி அவன் கையிலிருந்த ஜாங்கிரியைத் தட்டிவிட்டாள். \"துப்புலே.... துப்பு...\" என்று அவன் தலையில் 'நறுக்' கென்று குட்டினாள். சோணையா அழுதான்; அவன் பிளந்த வாய்க்குள் விரலைவிட்டு அந்த ஜாங்கிரித் துண்டை வழித்து எறிந்தாள்.\n\"நா எலும்பை முறிச்சி கஞ்சி ஊத்தறேன்....எச்சப் பொறுக்கறியா...\" என்று முதுகில் அறைந்தாள்.\n\"கொழந்தேயெ அடிக்காதே சேப்பி...\" என்றார் ஐயர்.\n\"இல்லே சாமி...நாங்க இல்லாத ஏளைங்க....இப்பவே கண்டிக்காட்டி நாளைக்கி எச்சிக்கலை பொறுக்கியாவே ஆயிடும்...\" என்று சொல்லிவிட்டு இடுப்பில் இருக்கும் சோணையாவின் முகத்தைத் துடைத்து \"இனிமே எச்சியெல்லாம் எடுக்காதே' \" என்று சமாதானமாய்க் கேட்டாள்.\nபையன் விம்மிக் கொண்டே ஐயரைக் காட்டி, \"சாமி....சாமிதான் எடுத்துத் திங்கச் சொல்லிச்சு...\" என்று அழுதான். சிவப்பிக்கு உடம்பு பதைத்தது, கண்கள் சிவக்க ஐயரைப் பார்த்தாள்.\n\"ஏன் சாமி...ஒங்க புள்ளையா இருந்தா சொல்லுவீங்களா... ஒங்க எச்சி ஒஸத்தியா இருந்தா ஒங்களோட, எம் பையனுக்கு ஏன் அதைத் தரணும்...\" என்று கோபமாய்க் கேட்டாள்.\n\" என்று கேட்டுக் கொண்டே பாத்திரத்தில் கஞ்சிக் கொண்டு வந்தாள் வீட்டு அம்மாள்.\n\"நீயே பாரும்மா...எம்மூட்டப் புள்ளைக்கி எச்சிலைத் திங்கப் பளக்கிக் கொடுக்கிறாரும்மா, சாமி...\" என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சிவப்பி.\n\"நான் என்ன பண்ணுவேண்டி...நேக்கு அவர் ஒரு பச்சைக் கொழந்தை...ஒன் கொழந்தையை நீ அடிக்கறே; நா என்ன பண்றது, சொல்லு\n\"ஏண்டி சேப்பி, நான்தான் அவனை எடுத்துத் திங்கச் சொன்னேன்னு சொல்றயே, நான் சொன்னதை நீ கண்டையா....\" என்று எழுந்து வந்தார் ஐயர்.\n\"எம்மவன் வறவனுக்கு பொறந்தவன். பொய் சொல்ல மாட்டான் சாமி...\" ஆக்ரோஷத்தோடு இரைந்தாள் சிவப்பி.\n\"ஆமா; சொன்னேன்னுதான் வச்சுக்கோயேன்...எங்க வீட்டுக் கஞ்சியெ தெனம் குடிக்கறயே, அது மட்டும் எச்சல் இல்லியா... அதுவும் எச்சல்தான் தெரிஞ்சுக்கோ...\" என்று பதிலுக்கு இரைந்தார் ஐயர்.\n\"இந்தாங்க சாமி...ஒங்க எச்சிக் கஞ்சி' நீங்களே தான் குடிச்சிக்குங்க... இந்த எச்சில் எனக்கு வாணாம்...\" என்று தகரக் குவளையைத் 'தடா'லெனச் சாய்த்துவிட்டு, மகனைத் தூக்கி இடுப்பில் பொத்தென இருத்திக்கொண்டு வேகமாய் நடந்தாள் சிவப்பி; இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து மனம் பொறுக்காமல் \"எல்லாம் என் கர்மம், என் கர்மம்' \" என்று தலையிலடித்துக் கொண்டு உள்ளே போனாள் ஐயரின் மனைவி.\nஉள்ளே தோட்டத்தில் தொட்டி நிறைய---சிவப்பியின் உழைப்பால் நிறைந்திருந்த--- தண்ணீரையும் பாத்திரம் நிறைய அவளுக்காக எடுத்து வைத்திருந்த சோற்றையும் குழம்பையும் பார்த்த அம்மாளுக்குக் கண்கள் கலங்கிப் போயின.\n\"அடியே...பாத்தையோ, நம்மாத்துக் கஞ்சியெக் குடிச்சு வந்த கொழுப்புடீ... இனிமே அவளுக்கு கஞ்சி ஊத்தப் படாது சொல்லிட்டேன்... நாளையிலேருந்து சாத்தெ வடிக்காதே.... பொங்கிப்பிடு.... அதிலேதான், சத்து இருக்கு...\" என்ற ஐயரின் வழக்கமான பல்லவி திண்ணையிலிருந்து சற்றுக் கண்டிப்பான குரலில் ஒலித்தது.\nமறுநாள் ஐயர் வீட்டில் சோற்றை வடித்தார்களோ, பொங்கினார்களோ,.... ஆனால், வழக்கமாகக் கஞ்சி வாங்க வரும் சிவப்பியை மட்டும் மறுநாள்... மறுநாள் என்ன, அதன் பிறகு ஒரு நாளும் அந்தத் தெருவில் காணவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-18T00:21:03Z", "digest": "sha1:OHRQNIOLE3CKBFUOAHJNII7Q32Q3KL2V", "length": 14141, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்று அறிவிக்கும் பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளது. | CTR24 கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்று அறிவிக்கும் பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளது. – CTR24", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்வில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன\nஜெனீவாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு கடும் சவாலாக செயற்படவுள்ளதாக சிங்கள அமைப்பு ஒன்று சூளுரைத்துள்ளது\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்று அறிவிக்கும் பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை இன்று கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nஅத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அண்மையில் கனகபுரம் துயிலும் இல்ல புனரமைப்பு தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கடந்த நவம்பர் 27ஆம் நாள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதுடன், இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nமாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கரைச்சிப் பிரதேச சபை துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பொறுப்பேற்ற நிலையிலேயே இந்த பெயர் பலகை நாட்டப்பட்டுள்ளது.\nPrevious Postஇனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றும் தற்போதய இலங்கை அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம் என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார் Next Postதிரு அரியதாஸ் ஜினோபன் (உரிமையாளர்- A.J.S Construction)\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்...\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovaisakthi.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-08-18T01:18:28Z", "digest": "sha1:XEXTU7FUBYI7BUOJHNC7DQKSDOKJIV66", "length": 8366, "nlines": 148, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "கோவையில் பயங்கரம் குழந்தைகள் கொலை -வழக்கு | கோவை சக்தி", "raw_content": "\nகோவையில் பயங்கரம் குழந்தைகள் கொலை -வழக்கு\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவையை மற்றுமன்றி உலகையே உலுக்கிய ரித்திக் ( 3 ம் வகுப்பு, 8-வயது சிறுவன் ) ,முஸ்கின் ( 5ம் வகுப்பு ,11-வயது சிறுமி ) குழந்தைகள் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டனர் .\nசம்பவம் பற்றிய விரிவான நமது பதிவு காணவும் :\nகோவையில் பயங்கரம் குழந்தைகள் கொடூர கொலை\nஇரு குற்றவாளிகளாக மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரன் பிடிபட்டனர் ,இதில் மோகனகிருஷ்ணன் சுட்டு கொல்லப்பட்டான் .\nஇது பற்றிய விரிவான நமது பதிவு காணவும் :\nகோவை குழந்தைகள் கொடூர கொலைகாரன் போலீசால் சுட்டு கொலை\nமனோகரனின் வழக்கு கோவை மகளிர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது .இரண்டு ஆண்டுகளில் நீண்ட தீர விசாரணைக்கு பின் தீர்ப்பு திரு .நீதிபதி அவர்கள் தீர்ப்பு கூறினார் .\nஇந்த தீர்ப்பில் மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.1000 அபராதமும் , இரட்டை தூக்கு தண்டனையும் வழங்கினார் .\nஇந்த தீர்ப்பு தவறு செய்பவர்களுக்கு ஒரு சரியான தீர்ப்பாகும் .மேலும் இந்த உலகிற்கே இந்த தண்டனை ஒரு முன் உதாரணமாக அமையும் .\nஇறந்த பிஞ்சு குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்கவும் , இந்த வழக்கை விரைந்து முடிக்க பாடுபட்ட நமது தற்போதைய A.D.G.P உயர்திரு .Dr.சைலேந்திர பாபு ஐயா அவர்களுக்கும் , காவல் துறை சார்ந்த நண்பர்களுக்கும் ,நீதிமன்ற நண்பர்களுக்கும் ,இந்த வழக்கிற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் ,பாராட்டுகளும் தெரிவித்துகொள்கிறோம் .\nதண்டனை....ரொம்ப லேட்..இவனையும் என்கவுண்டர்ல போட்டு இருக்கனும்..\n இவன் தப்பிக்க இன்னும் மேல் அப்பில் இருக்கு \nதிண்டுக்கல் தனபாலன் November 02, 2012 8:31 AM\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nபங்கு வர்த்தகம் மலர் -163\nபங்கு வர்த்தகம் மலர் -162\nபங்கு வர்த்தகம் மலர் -161\n தீபாவளி திரு நாள் கொண்டாடுவோம் \nபங்கு வர்த்தகம் மலர் -160\nகோவையில் பயங்கரம் குழந்தைகள் கொலை -வழக்கு\nபங்கு வர்த்தகம் மலர் -159\nபங்கு வர்த்தகம் மலர் -158\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/2018/01/17/", "date_download": "2018-08-18T01:28:29Z", "digest": "sha1:WKC5GAULBX4P3ZMWJ5UPD3IW4EIQNELZ", "length": 5555, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –January 17, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nகேணல் கிட்டு அண்ணன் உட்பட பத்து வேங்கைகள்\nதமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் வீரவணக்க நாள் (16.01.1993). தாய்மண்ணின் நினைவுடன் வங்கத்திலே தீயுடன்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”\nபுலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”\nஇலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க\n295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/feb/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2863902.html", "date_download": "2018-08-18T00:30:45Z", "digest": "sha1:DW5QVCOT7EVQQQ4JIEDS2PGVEZJ35URO", "length": 8835, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கோதையாற்றில் பிடிபடாத முதலை: மக்கள் அச்சம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகோதையாற்றில் பிடிபடாத முதலை: மக்கள் அச்சம்\nகுமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை அவ்வப்போது தண்ணீருக்கு மேல் தலைகாட்டுவதால் கடந்த 10 நாள்களுக்கு மேலாக இந்த ஆற்றில் குளிப்பதற்காக இறங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nகுமரி மாவட்டதில் பிரதான ஆறுகளில் ஒன்றாக கோதையாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையைக் கடந்து வரும் கோதையாறு, கடையாலுமூடு அருகே சிற்றாறுகளுடன் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. மேலும், திருவட்டாறு அருகே மூவாற்றுமுகத்தில் பரளியாறுடன் இணைந்து தாமிரவருணி ஆறாக அரபிக்கடலில் கலக்கிறது. கோதையாற்றில் கடையாலுமூடு அருகே ஒருநடைக்கல் பாலம் அருகே கடந்த வாரம் சுமார் 6 அடி நீளம் தென்பட்டதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த முதலையைப் பிடிக்க வேண்டுமென்று வனத்துறையினரிடம் முறையிட்டனர். ஆனால், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆற்றினுள் இறங்கி குளிக்க மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை: மேலும், கோதையாற்றில் ஒரு நடைக்கல், கூடல் கடவு, களியல், திற்பரப்பு தடுப்பணை என பல்வேறு பகுதிகளில் உள்ள படித்துறைகளின் பொதுமக்கள் குளிப்பது மற்றும் துணிகளை சலவை செய்வது குறைந்துள்ளது. முதலை வேவ்வேறு இடங்களில் அடிக்கடி தலைகாட்டுவதாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவுவதாலும், சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடப்படுவதாலும் மக்கள் தொடர்ந்து அச்சப்பட்டு வருகின்றனர். சலவைத் தொழிலாளர்களின் பணியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதலையை தொடர்ந்து கண்காணித்து அதைப் பிடித்து அணைக்குள் கொண்டு சென்றுவிட மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2012/07/77.html", "date_download": "2018-08-18T01:05:51Z", "digest": "sha1:RTISTDVBZEC2NBWY4CTORML46IBNWQHI", "length": 13011, "nlines": 200, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-77 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-77", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஆர்த்தி ராவ் கர்நாடக போலீசிடம் கொடுத்த புகாரில் ஒரு பிட்டு படத்திற்கான திரைக்கதை வசனங்களுடன் சீன் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறார். அதற்கு துணை தலைப்புகள் வேறு “ஆனந்தேஷ்வரா, ஆனந்தேஸ்வரி”, “வாரணாசியில் தாசி” என்று கிட்டத்தட்ட சரோஜாதேவி சமாச்சாரங்கள் நிறைந்த ஒரு கிளுகிளு புத்தகம்.\nநித்தி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிடதி பக்கம் செல்ல முடியாது. தப்பி தவறி போனால் அவனவன் நொங்கு எடுக்க காத்திருக்கிறான். பரமஹம்ச நித்யானந்தா இனி கொடைக்கானல் பக்கமே பம்ம வேண்டியதுதான்.\nவிருதுநகர் ஆட்சியர் “பாலாஜி” காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது இன்றைய செய்தி. இது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் “தக்காளி” நீதி நேர்மை என்று எந்த ஆட்சியர் கடைபிடித்தாலும் இது தான் கதி, இதுதாண்டா இன்றைய அரசியல். சரி அவர் செய்த குற்றங்கள் என்ன\nவிருதுநகரில் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார்.\nபுதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்தினார்.\nஅரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்தார்.\nமோசடி செய்யும் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆப்படித்தார்.\nஒழுங்காக வேலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nமேலும் சத்துணவு கூடம், அங்கன்வாடி பணியாளர்களை நியமிப்பதில் “தகுதி” முறையைக் கடைபிடித்தார். அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்தார்.\nஇந்த பணியிடங்களை நியமனம் செய்வதில் எல்லா ஆளும்கட்சி அல்லக்கைகளும் ஒரு வேலைக்கு மூன்று லட்சம் வரை மால் வாங்கியிருக்கிறார்கள். இப்பொழுது கொடுத்தவன் .....ட்டையை நசுக்கிறான். அவ்வளவுதான் ஆத்தாவிடம் சொல்லி அவருக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள்.\nஇசை சித்தர் சி.எஸ். ஜெயராமன் குரல் ஒரு வித்தியாசமானது. அவரை நிறைய பேர் வெற்றிலை போட்டுக் கொண்டு பாடுவது போல் பாடி நக்கல் செய்வார்கள். அவர்கள் அவரின் இசைத்திறமை பற்றி அறியாதவர்கள். அவரது குரலில் உள்ள பாவம், அவருடைய கமகங்கள் பிர்காகளுக்கு நான் அடிமை. அவர் பாடிய “நெஞ்சு பொறுக்குதில்லையே” அதற்கு சான்று. சமீபத்தில் இணையத்தில் இந்த பாட்டை ரசித்தேன். சி.எஸ் அவர்களும், எம்.எல்.வியும் இணைந்து பாடியது. முழுப்பாட்டு கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த இரண்டு நிமிட காணொளி ஒரு பொக்கிஷம். (புரட்சி தலைவர் அட்டகாசம்) .\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், படங்கள், மொக்கை\n அதனால்தான் கலெக்டர்கள் ஜால்ராக்களாக மாறிவருகிறார்கள்\nஏன் இந்த காக்டெயில் இப்படி போதை தருது..\nஇப்பல்லாம் காக்டெயில் முப்பது மில்லி கூட ஊத்த மாட்டேங்குறீங்க...\nசரக்கு சப்ளை கம்மி பாஸ், அடுத்த முறை தண்ணி கலக்க வேண்டியதுதான். வருகைக்கு நன்றி பிரபா.\nஅந்த ஆட்சியருக்கு ஆதரவாக நம்மால் ஏதும் செய்ய முடிந்தால் சொல்லுங்கள், காத்திருக்கிறேன்....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமலையேறிய ஆத்தாவும் கோவணம் இழந்த தமிழினத் தலைவனும்...\nபதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ\nசினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன\nவயாகரா தாத்தா நகைச்சுவை (18++)\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-aug-15/special/108696.html", "date_download": "2018-08-18T00:26:12Z", "digest": "sha1:WOAFMTWBBPGOEHOXEQCG3U4WVO4FJ64U", "length": 23631, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "Minions ஒரு தலைவனைத் தேடி... | Origin of Minions | சுட்டி விகடன்", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nசுட்டி விகடன் - 15 Aug, 2015\nநீரைக் காக்க ஒரு நடைப் பயணம்\nMinions ஒரு தலைவனைத் தேடி...\nஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்\nநண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்\nமூளையின் செயல்பாடுகள் - பாடல்\nஈஸியாக அறியலாம் தசம பின்னங்கள்\nஇணைச் சொற்களின் வகை அறிவோம்\nBoost NRG Biscuits - நண்பன் தந்த ஊக்கம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nMinions ஒரு தலைவனைத் தேடி...\nமஞ்சள் நிறம், குட்டையான உருளை வடிவம், சற்றே வாழைப்பழத்தை நினைவுபடுத்தும் தோற்றம், ஜீன்ஸ், ஒற்றை மற்றும் இரட்டைக் கண்கள், அந்தக் கண்களை கவர் செய்யும் பூதக் கண்ணாடி போன்ற மாஸ்க் என உலகச் சுட்டிகளை ஒட்டுமொத்தமாகச் சுண்டி இழுத்த மினியன்ஸ், மீண்டும் அட்டகாசம் பண்ண வந்துட்டாங்க.\n2010-ம் ஆண்டு வெளியான ‘டெஸ்பிகபிள் மி’ (Despicable me) படத்தில் அறிமுகமானவங்கதான் இந்த மினியன்ஸ். படத்தின் ஹீரோ, க்ரூவுக்கு உதவியாக இருந்து, தங்களின் குறும்புகளால் எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்கவெச்சாங்க. இரண்டாம் பாகமான, ‘டெஸ்பிகபிள் மி 2’ படத்திலும் அதகளம் செய்தாங்க. இந்த கேரக்டர்களுக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்த்து, இவங்களை மட்டுமே மையமாவெச்சு எடுக்கப்பட்டிருக்கும் புதிய அனிமேஷன் 3D படம், ‘மினியன்ஸ்’ (Minions). 66 நாடுகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிச்சிருக்கு.\n’ என்ற கேள்விகளுக்கு, முந்தைய படங்களில் பதில் இருக்காது. இந்தப் படம், அதுக்கான பதிலில் இருந்து ஆரம்பிக்குது. ஒற்றைச் செல் உயிரினம் தோன்றிய காலத்தில், அதிலிருந்து பிரிந்து உருவானதுதான் மினியன்ஸ். ஒவ்வொரு காலகட்டத்திலும் வலிமையும் புத்திக்கூர்மையும் உள்ள ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, உதவி செய்துட்டு இருக்கிறதுதான் இவங்களோட வாழ்க்கை.\nஉதவுறாங்க என்பதைவிட, தங்களின் குறும்புத்தனத்தால் அந்தத் தலைவர்களைப் படுத்துறாங்க எனச் சொல்றதுதான் சரியா இருக்கும். டி-ரெக்ஸ் என்கிற டைனோசர்களின் முன்னோடி, குகை மனிதன், ட்ராகுலா என ஒவ்வொரு காலகட்டத்திலும் இவங்ககிட்டே தலைவனா சிக்கிக்கிட்டுத் தவிக்கும் பட்டியல் ரொம்ப நீளம். ஆரம்பத்தில் வரும் அந்தக் காட்சிகள், வயிறு குலுங்கச் சிரிக்கவைக்குது. மாவீரன் நெப்போலியனையும் விட்டுவைக்கலை.\nஒருவழியாக அந்தத் தலைவர்களின் காலங்கள் முடிஞ்சுடுது. இப்போ, மினியன்ஸ் அன்டார்ட்டிகாவில் இருக்காங்க. அந்தக் கூட்டத்தில் புத்திசாலிகள் எனச் சொல்லிக்கிற ஸ்டூவர்ட், கெவின், பாப் என்ற மூன்று பேருக்கும் புதுத் தலைவனைத் தேடும் பொறுப்பு வருது.\nஅன்டார்ட்டிகாவில் இருந்து நியூயார்க் நகருக்கு வந்து, ஸ்கார்லெட் ஓவர்கில் (Scarlet Overkill) என்ற பெண்ணைச் சந்திக்கிறாங்க. சூப்பர் வில்லியான ஸ்கார்லெட், ‘லண்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தைத் திருடி எடுத்துவந்தால், உங்களுக்கான தலைவனைக் காட்டுகிறேன்’ என்கிறார். அடுத்து என்ன நடக்குது மினியன்கள், தங்கள் தலைவனைக் கண்டுபிடிச்சாங்களா என்பதை குறும்பு கொப்பளிக்கச் சொல்வதுதான் மீதிக் கதை.\nகலக்கலான இந்த 3D அனிமேஷன் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிச்சு இருக்கு. வில்லியான ஸ்கார்லட்டுக்குக் குரல் கொடுத்திருப்பவர், புகழ்பெற்ற ஹாலிவுட் நாயகி, சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock). டெஸ்பிகபிள் மி 1 & 2 படங்களை இயக்கிய, பியர்ரி கோஃபின் (Pierre Coffin), கெலே பால்டா (Kyle Balda) சேர்ந்து இயக்கி இருக்கிறார்கள். பால்டா, ‘ஜுமான்ஜி’, ‘டாய் ஸ்டோரி 2’ ஆகிய படங்களில் பணியாற்றியவர்.\nமினியன்ஸ் பாடும் ‘பா... பா... பா... பனானா’ என்ற பாட்டுதான் இப்போ உலகச் சுட்டிகளின் ரைம்ஸ்.\nஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/2018/03/07/", "date_download": "2018-08-18T01:27:20Z", "digest": "sha1:H2EW5QIEB36ALTADGHO46OB4WOCGVE3W", "length": 5838, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –March 7, 2018 - World Tamil Forum -", "raw_content": "\n400 ஆண்டுகள் பழமையான படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், 400 ஆண்டுகளுக்கு முந்தைய படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 400 ஆண்டுகளுக்கு முந்தைய படைவாத்திய கலைஞர்களின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது மாணவர்கள்,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”\nபுலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”\nஇலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க\n295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kavithaivaanam.blogspot.com/2018/01/Twitter-poll.html", "date_download": "2018-08-18T00:55:18Z", "digest": "sha1:RX2A66FOQJLIXXUQYDO7M5EGBFARMQ5Y", "length": 4514, "nlines": 43, "source_domain": "kavithaivaanam.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அடுத்த தமிழக முதல்வர் யார்?-டுவிட்டர் கணிப்பு", "raw_content": "\nஅரசியல் கவிதை ட்விட்டர்கள் நகைச்சுவை நையாண்டி\nஅடுத்த தமிழக முதல்வர் யார்\nஅடுத்து தமிழக முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு என்று டுவிட்டரில் சிந்தனைவாதி நடத்திய ஒருநாள் கருத்துக் கணிப்பில் வெற்றியாருக்கு\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nஇந்திய முதல் குடிமகன்,இந்திய விஞ்ஞானி,ஏவுகணை நாயகன்,பொறியாளர், தமிழறிஞர், ஆசிரியர்... போன்ற பல முகங்கள் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் ஒரு...\nஇந்த பூமியே முக்கால்வாசி தண்ணீர் சூழ்ந்திருக்க மனிதனும் மனிதனைப் போல் சில உயிர்கள் மட்டுமே உயிர்வாழ அத்தியாவசிய குடிநீர் இல்லாமல் கண்ண...\nகலாம் பின் தொடர்ந்த பிரபல ட்விட்டர்கள்\nசமுக வலைத்தளமான டிவிட்டரில் இந்தியாவின் அறிவியல் சிந்தனை சிற்பி டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களை 1.43M FOLLOWERS பின்தொடர்ந்திட..... அ...\n( குறிப்பு- ஆங்கில வலைப்பதிவுகளில் இருந்து சுட்டப்பழம் இது...எனது கருத்து எதுவுமில்லை ஆனாலும் படத்தின் பற்றிய மதிப்பீடு அருமையாக இருக்க...\nஅஜித்-விஜய் ரசிகர்கள் ஆதரவுடன் அனுமார் வால் போல் மூனு வருஷமாய் வழி தெரியாமல் நீண்டு கொண்டே போன சிம்பு-வின் வாலு திரைப்படம் இன்று ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-08-18T00:18:37Z", "digest": "sha1:CM5YQHA4P5EE3JQI3UIC3BXCBXAM7EVT", "length": 15825, "nlines": 204, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழம் அடையும் வரை இடைவிடாது சமர்செய்வோம்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தமிழீழம் அடையும் வரை இடைவிடாது சமர்செய்வோம்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழம் அடையும் வரை இடைவிடாது சமர்செய்வோம்…\nஅன்று ஈழ அறவழிப் போராட்டத்தில் குருதித் திலகம் இட்டவர்.\nஎப்பொழுது அறவழி அரசியற்பிரசார மேடைகளில்\nகுருதித் திலகம் இடப்பட்டதோ அப்பொழுதே மாணவ\nஇளைஞர்களின் கருவி ஏந்திய அரசியற் போராட்டம்\nகுருதிப் பொட்டு வைப்பதை தொடர்ச்சியாக\nசெய்து வந்த ஒரு இளைஞர் பின்னாளில் கருவி ஏந்திய\nபோராட்ட இயக்கத்தில் இணைந்த போது அவர் வைத்த குருதிப்\nபொட்டுக்களை நினைவுகூர்ந்து அவருக்கு பொட்டு என்று இயக்க\nஅவரே பின்னாளில் உலகை அதிர\nவைத்த உலக புலனாய்வுத்துறைகளுக்கு நிகராக சவாலாக\nநின்ற தலைவரின் நிழல். இவரால் தான் தமிழினத்தின்\nவரலாறு மாற்றி எழுதப்படும். தமிழர் வரலாற்றின்\nவிடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின்\nபடம் – தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவருடன்\nபொட்டம்மான் அவர்கள் 1983 களில் கோவையில்\n“”தமிழரின் தாகம் தமிழ் தாயகம்””\nதமிழர்க்கு என்று ஒரு தமிழ்த்தாயகம் அமையும்\nவரை இடைவிடாது சமர்செய்வோம். மொழி,இனம்\nகாக்கின்ற தலைவனின் வழி நின்று வாழ்வோம்.\n« பிரபாகரன் போன்று ஒருவர் இனி வரவே முடியாது. வந்தால் இந்த ஆண்­டுடன் உலகம் அழியும்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vjpremalatha.blogspot.com/2015_04_20_archive.html", "date_download": "2018-08-18T00:18:33Z", "digest": "sha1:JD7BEH3V2KQMBQ7R5XQRTL3OAV4FAVWG", "length": 15109, "nlines": 205, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: 04/20/15", "raw_content": "\nஇனக்குழு சமுதாயம்,குறுநில அரசாகவும்,பேரரசாகவும் மாறுவதற்காகப் பல போர்கள் நடத்தப்பட்டன. நில எல்லையை மையமிட்டே இவர்களுடைய போர்கள் நிகழ்த்தப்பட்டன. தமக்கு இணங்காத அடிபணியாத குறுநில மன்னர்களையும், அவர்களை ஆதரிக்கும் மக்கள் வாழும் நாட்டையும் அழித்து இல்லாமல் ஆக்குவதற்காக அவர்கள் ஊர்களை எரியூட்டுதல்,வளங்களைச் சூறையாடுதல்,மகளிரை இழிவுபடுத்துதல் உள்ளிட்ட பல செயல்களைச் செய்துள்ளனர். தம்மை எதிர்ப்போரின் கதி இதுவே என்பதை மற்ற மன்னர்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளனர் என்பது வெளிப்படை.\nசங்க காலப் போர் முறை – காலமாற்றம்\nசங்க காலப் போர் முறை – காலமாற்றம்\nசங்ககால மக்களில் போர் மரபைப் பின்பற்றிய இருவகை மக்கள் நிலையைக் காண்கிறோம். ஆதிகுடிகள் எனப்பட்ட பழங்குடியினர் எந்த நேரத்திலும் அறப்போர் முறைக்குப் புறம்பாகப் போரிட்டதில்லை. ஆனால் பின்னால் நாடு பிடிக்கும் ஆசையில் பல மன்னர்கள் அறப்போர் முறைக்கு மாறாக செயல்பட்டிருக்கின்றனர். தமிழரின் அறப்போர் முறைக்கு மாறான தன்மைகளையும் சில பாடல்கள் வெளிப்படுதியுள்ளன. தகடூர் யாத்திரை என்னும் நூல் அதியமானின் மீது நடத்தப்பட்ட போர் குறித்த ஒரு நூலாகும். முழுதும் கிடைக்காத ஒரு அரிய நூல். இதில் ஒரு மறக்குடி மறவனுக்கும் ஒரு முன்ன்னுக்கும் நடக்கும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.தன்னுடைய படைபலத்தைக் கொண்டு எதிரியை வெற்றி பெற முடியாது என்று ஒரு மன்னன் உணர்கிறான். உடனே, படைத்தளபதியாக விளங்கும் மறக்குடி தலைவனை அழைத்து. இரவில் எதிரிப்படையைத் தாக்குமாறு அறிவுறுத்துகிறான். ஆணையிடுகிறான். அம்மறக்குடி மறவன்வேல் படைக்குத் தலைவன். வெறும் கூலி மட்டுமே பெற்று வாழும் அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் கீழ்வரும் பாடல் தெரிவிக்கிறது.\nதற்கால உலக அமைதி கொள்கைகளும் சங்கப் புலவர்களும்\nதற்கால உலக அமைதி கொள்கைகளும் சங்கப் புலவர்களும்\n“போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகையினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். போர்விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வெல்லாம் இறுதியில் போரற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கே பயன்படவேண்டும் என்கிறார்” பேராசிரியர் க. பூரணசந்திரன்.\nபோரில் தோற்றாலும் பகை வென்றாலும் பகை\nபோரில் தோற்றாலும் பகை வென்றாலும் பகை\nபக்குவப்பட்ட மனதிலிருந்து நல்ல எண்ணங்களே வெளிப்படும்; இது நலம் தரக்கூடிய செயல்களாக மாற்றமடையும். மனதைப் பக்குவப்படுத்தலே புலவர்கள் இவ்வுலகிற்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும். அரசுகளுக்கிடையே யார் பெரியவர், யார் வல்லவர் என்ற போட்டி மனப்பான்மையே ‘போர்‘ ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. இதனால்தான், உள்நாட்டுப் பிணக்குகளாலும், வெளிநாட்டு நெருக்கடிகளாலும் அரசர்களுக்கிடையே போர் தோன்றிக்கொண்டே இருக்கிறது. போர் சிறியதோ, பெரியதோ, போரில் தோற்றாலும், வென்றாலும், பகை மட்டும் என்றும் மறைவதில்லை. இதனால் நாடுகளிடையே அமைதி என்பதும் என்றும் இருப்பதே இல்லை. நாடுகளிடையே அமைதி என்பது மிக அரிதாகவே உள்ளது. மிகமிக அரிதாக எப்போதாவது அமைதி தோன்றுமானால், பின்னர் ஏதாவாதொரு பூசல் தோன்றி அமைதியைக் கெடுத்து மீண்டும் போரை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொரு அரசும் தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ளவே விரும்புகிறது. தன் நாடு பெருநாடாக வேண்டும், பேரரசாக வேண்டும் என்பது ஒவ்வொரு அரசின் குறிக்கோளாகவும் இருக்கிறது. ‘ஏகச் சக்கரவர்த்தியாக’ வாழவே ஒவ்வொரு அரசனும் விரும்புகிறான். இந்தப் பேராசையாலேதான் அரசுகளிடையே அமைதி கெடுகிறது. இதனால்தான் போட்டி, பூசல்,பகை,போர் என்றும் முடிவது இல்லை.\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.odepsi.sp.gov.lk/index.php?lang=ta", "date_download": "2018-08-18T01:04:22Z", "digest": "sha1:RMPNZUS7GBOJRL2TWXET45T6XA743QH7", "length": 3116, "nlines": 39, "source_domain": "www.odepsi.sp.gov.lk", "title": "கைத்தொழில் பிரதி செயலாளரின் அலுவலகம்", "raw_content": "கைத்தொழில் பிரதி செயலாளரின் அலுவலகம்\nதென்மாகாணத்தில் சிறுகைத்தொழில் மற்றும் ஆடைக்கைத்தொழில் துறைகளில் சிறந்த நிறுவனங்களாக நடவடிக்கை எடுத்து இத்துறை சம்பந்தமான சகலருக்கும் அரிய வசதிகளை வழங்குவது.\nகைப்பணித்துறை மற்றம் சிறுகைத்தொழிற்றுறைக்கான சந்தை வாய்ப்பினை விரிவாக்கம் செய்தல்.மாகாண அபிவிருத்தியில் சிறந்த பெறுபேற்றினைத் தரும் முக்கிய துறைகளாகிய ஆடைக்கைத்தொழில் மற்றம் சிறு கைத்தொழில் துறைகளில் ஏற்படும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையை ஒழித்தல் மற்றம் மனித வளங்களை அபிவிருத்தி செய்தல்\nBackground of the Department தால் நிர்மானிப்பி்ல் உள்ளது.\nஎழுத்துரிமை © 2018 கைத்தொழில் பிரதி செயலாளரின் அலுவலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2016/02/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-6/", "date_download": "2018-08-18T00:56:06Z", "digest": "sha1:FZ7VKSKULUM7DL4V54T2GLZYUVCJU46J", "length": 13657, "nlines": 187, "source_domain": "tamilmadhura.com", "title": "காதல் வரம் யாசித்தேன் -6 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nகாதல் வரம் யாசித்தேன் -6\nசென்ற பதிவுக்கு கமண்ட்ஸ் செய்த, விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இனி இன்றைய பதிவு.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 29\nநிலவு ஒரு பெண்ணாகி – 30\n“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் சத்தியமா செய்ய மாட்டேன்” – hehehe …. நல்லா பல்பு குடுத்தா…. இந்த பல்பு வாங்கியும் கடைசியில திரும்பவும் சத்தியம் கேட்டு மாட்டிக்கறான்… poor fellow… 🙂 🙂\nஈஈஈஈ….. நான் நினைச்ச மாதிரியே மீனா மனசுல எதோ ரகசியம் இருக்குனு ராஜியும் சந்தேகப் படறாங்க…\nகடைசியா செய்த சத்தியத்துலயும் எதோ விஷயமிருக்கு…. குழந்தைங்க மேல உயிரையே வெச்சிருக்கறவ அவங்களுக்கு பாதகம் வர்ற மாதிரி எதுவும் செய்யமாட்டா…\nமீனாவுக்கு கைலாஷ் மாமா தானே. மாமா எனும் உறவு இருக்கிறதே அதை மனதில் வைத்துத்தான் சத்தியம் செய்தாள்போலும். மீனாவிடம் இந்த அளவு பிடிவாதமும், வைராக்கியமும் வர காரணம் என்ன அதை மனதில் வைத்துத்தான் சத்தியம் செய்தாள்போலும். மீனாவிடம் இந்த அளவு பிடிவாதமும், வைராக்கியமும் வர காரணம் என்ன கைலாஷின் இன்னொரு முகத்தை நமக்கு காண்பிக்க வைக்க போகிறாள் மீனா. நிரஞ்சனா நல்லவளாகவும், சிந்தித்து செயல்படுபவளாகவும் இருக்கிறாள். நல்ல கதாபாத்திரம். கல்யாணம் முடிந்து விட்டது. அடுத்து மோதல்..பிறகுதான் காதலோ கைலாஷின் இன்னொரு முகத்தை நமக்கு காண்பிக்க வைக்க போகிறாள் மீனா. நிரஞ்சனா நல்லவளாகவும், சிந்தித்து செயல்படுபவளாகவும் இருக்கிறாள். நல்ல கதாபாத்திரம். கல்யாணம் முடிந்து விட்டது. அடுத்து மோதல்..பிறகுதான் காதலோ தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam..\nகைலாஷ் வெட்டி கோபம் வெள்ளைக்கு ஆகாது\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-18T00:20:14Z", "digest": "sha1:7MDKMP53EICNQNLLSJYC7BEJ4XUIVJ33", "length": 13433, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள் | CTR24 நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள் – CTR24", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்வில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன\nஜெனீவாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு கடும் சவாலாக செயற்படவுள்ளதாக சிங்கள அமைப்பு ஒன்று சூளுரைத்துள்ளது\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்\nகண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். கண் இமைகளில் மீது மிகவும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது கண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.\nமேலும் கண்களை சுற்றியுள்ள தசைகளை ஆசுவாசப்படுத்தும். அதே நேரம், கண்ணீர் சுரப்பிகளை ஊக்குவித்து, கண்கள் வறண்டு போவது தடுக்கப்படும்.\n1. கண் இமைகளின் மீதும் புருவத்திற்கு மேலே தசைகளின் மீதும் உங்கள் விரல்களை கொண்டு 10-20 நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.\n2. கண் இமைகளுக்கு கீழ் உள்ள எலும்புகளின் மீது 10-20 நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.\n3. கன்னப்பொட்டு மற்றும் மேல் தாடையெலும்புகளின் மீதும் மசாஜ் செய்யுங்கள்.\n4. இதனை தினமும் 1 அல்லது 2 முறை செய்யுங்கள்.\nகுறிப்பு: மசாஜ் செய்யும் போது சில துளி ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.\nPrevious Postசங்க காலம் முதல் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் பொங்கல் Next Postஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களின் பாரம்பரியமும் வீரமும் மழுங்கடிக்கப்படுகிறதா\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்...\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-18T00:20:43Z", "digest": "sha1:ZL64HMIZKOTQX35SUFD7PBKJMC2UWWA6", "length": 12193, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு | CTR24 மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு – CTR24", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்வில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன\nஜெனீவாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு கடும் சவாலாக செயற்படவுள்ளதாக சிங்கள அமைப்பு ஒன்று சூளுரைத்துள்ளது\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு\nநவம்பர் 20 ஆம் நாள் ஞாயிறுகாலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2 மணி வரை 3840 Finch Av east, Metropolition centre இல் நடைபெறும் என்பதை கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம் அறிய தருகின்றது.\nமாவீரரை வணங்கும் மகத்துவம் மிக்க மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் அவர்தம் உறவினர்கள் , உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறது.\nகனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம்\nPrevious Postமாவீரர் நாளை தமிழ் மக்கள் விளக்கேற்றி நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் - சிறிதரன் Next Postபோரில் உயிர்நீத்த போராளிகளை நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்...\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=401502", "date_download": "2018-08-18T01:34:40Z", "digest": "sha1:LOYPHI42LV5G2INNEFQ7IWOPZHDSJOVU", "length": 9057, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "காரில் நல்ல மைலேஜ் கிடைக்க வழி? | good mileage available in the car? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nகாரில் நல்ல மைலேஜ் கிடைக்க வழி\nகார் வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமானது. காரின் ஓட்டுமொத்த செலவும் இதை பொருத்துதான் அமைகிறது. நீங்கள் கார் ஓட்டும் விதத்தை பொருத்தே எரிபொருள் பயன்பாடு அமையும். அதன் விவரம் இதோ...\n* ஒவ்வொரு காரும் மெதுவாக செல்வதற்கும், மிதமான வேகத்தில் செல்வதற்கும், வேகமாக செல்வதற்கும் ஏற்றபடிதான் டிசைன் செய்யப்பட்டிருக்கும். எப்படியும் நீங்கள் குறைந்தது 1,000-3,000 ஆர்.பி.எம் மெயின்டெயின் செய்ய வேண்டும். அதைவிட குறைவான ஆர்.பி.எம்.மில் சென்றால் நீங்கள் குறைவான கியரைத்தான் பயன்படுத்த வேண்டும் அதனால் உங்களுக்கு அதிகமாக பெட்ரோல் செலவாகத்தான் செய்யும். இதனால் குறைந்த மைலேஜ்தான் பெற முடியும்.\n* காரில் மித வேகமாக செல்லுதல் என்பது எரிபொருள் சிக்கனத்திற்கு சரியான வழிதான். மிதவேகம் என்பது 50-80 கி.மீ. வேகத்தில் செல்லுதல். எனினும், இது நீங்கள் செல்லும் காரை பொருத்தும், ரோட்டை பொருத்தும் அமையும். உங்கள் கார் காற்றை எளிதாக கிழித்துக்கொண்டு செல்லும் வடிவில் அமைக்கப்பட்டிருந்து, நீங்கள் ஏற்றம் இறக்கம் இல்லாத நல்ல ரோட்டில் சென்று கொண்டிருந்தால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் அல்லது மைலேஜில் மாற்றம் இருக்கும்.\n* காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட கார்கள் 90 கி.மீ. வேகத்தை தாண்டும்போது மைலேஜை இழக்கிறது. காரில் வேகமாக செல்லும்போது நீங்கள் அதிகமான கியரைத்தான் பயன்படுத்த வேண்டும் அது உங்களை 150 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் காரை ஓட்டிச்செல்ல அனுமதிக்கும். அதே நேரத்தில், நீங்கள் வேகமாக செல்லும்போது காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் திறன் நான்கு மடங்கு அதிகரிக்கும். எனவே, அதற்கு தகுந்தாற்போல் இன்ஜின் வேலை செய்யவேண்டும்.\n* நீங்கள் செல்லும் வேகத்திற்கு இணையாகவும், எதிர்காற்றை கழித்து செல்லவும் இன்ஜின் செலாற்ற வேண்டியுள்ளதால் பெட்ரோல் அதிகமாக செலவாகும் அதேநேரத்தில் நீங்கள் மைலேஜையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மொத்தத்தில், மிதவேகமாக காரை ஓட்டும் போதுதான் சரியான அளவு மைலேஜ் கிடைக்கும். நீங்கள் சிறந்த மைலேஜ் பெற 90-120 கி.மீ. வேகம் வரை உங்கள் காரையும், ரோட்டையும் பொருத்து பயணிக்கலாம். அதன்மூலம் அதிகமான மைலேஜ் பெற முடியும்.\nகார் CAR எரிபொருள் மைலேஜ்\nநாளை சுதந்திர தினவிழா : தேசிய கொடிகள் விற்பனைக்கு குவிப்பு\nஆஷ் துரையை கொல்ல ஆயத்தமான மாவீரர் தர்மபுரி தியாகி தீர்த்தகிரியார்\nசமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட டாக்டர் சுப்பராயன்\nகாந்தியின் காலடி பதிந்த சேலம்\nதேசிய சுதந்திர செந்தில் விநாயகர் கோவில்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-12-02-2018/", "date_download": "2018-08-18T00:26:08Z", "digest": "sha1:7NE2KZ76CNAOUVDQIUPSE5FZSNQ5TZST", "length": 9770, "nlines": 131, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 12.02.2018\nபெப்ரவரி 12 கிரிகோரியன் ஆண்டின் 43 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 (நெட்டாண்டுகளில் 323) நாட்கள் உள்ளன.\n55 – ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.\n1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.\n1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.\n1818 – சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.\n1832 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.\n1873 – எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.\n1912 – சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.\n1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.\n1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.\n1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.\n1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.\n2001 – நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.\n2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் கொல்லப்பட்டனர்.\n1809 – சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)\n1809 – ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)\n1918 – ஜூலீயன் ஷ்விங்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1994)\n1967 – என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்\n1804 – இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர், (பி. 1724)\n1908 – ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)\n2009 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்\n2009 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)\nPrevious article“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “\nNext articleஐ.தே.க முன்னோக்கிச் செல்ல சஜித் கட்சிப் பொறுப்பேற்க வேண்டும் – ஸ்ரீநாத் பெரேரா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180512218094.html?ref=jvpnews", "date_download": "2018-08-18T00:37:24Z", "digest": "sha1:RWLUL55ZZF2QYWZAOTQP2FGJKUQ56ILB", "length": 4722, "nlines": 46, "source_domain": "www.kallarai.com", "title": "திரு வேலுப்பிள்ளை அருளானந்தம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 11 செப்ரெம்பர் 1941 — இறப்பு : 11 மே 2018\nயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவிமலாராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,\nஅருள்மாறன்(லண்டன்), அருள்வாணி(பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசிவமலர், லிவியோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசாமிநாதன்(அனலைதீவு), நவரத்தினம்(கனடா), சுப்பிரமணியம்(பிரான்ஸ்), ஐயம்பெருமாள்(கனடா), காலஞ்சென்றவர்களான விமலாதேவி, நடேசபிள்ளை, பரமேஸ்வரி(கனடா), சாரதாதேவி(யாழ்ப்பாணம்), குமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nநிர்மலன், நிறோஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 13/05/2018, 01:00 பி.ப — 01:30 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 17/05/2018, 10:30 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: வியாழக்கிழமை 17/05/2018, 01:30 பி.ப — 02:30 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 17/05/2018, 02:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuveli.com/2011/02/blog-post_28.html", "date_download": "2018-08-18T01:15:41Z", "digest": "sha1:MOAQSK5WFE5YHW7OYZXASK2O5SXLAHMS", "length": 6942, "nlines": 199, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nதிங்கள், 28 பிப்ரவரி, 2011\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 1:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமடத்துவெளி சன சமூக நிலையத்தின் பாசறையில் வளர்ந்து ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuveli.com/2014/04/15-8-7.html", "date_download": "2018-08-18T01:15:27Z", "digest": "sha1:GU63QYCT5QWBDIVQZZRV4W4R7NHPALBV", "length": 17814, "nlines": 315, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nபுதன், 30 ஏப்ரல், 2014\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி\n8 அணிகள் இடையிலான 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.\nஇந்த நிலையில் துபாயில் இன்றிரவு நடக்கும்20–வது லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இது தான் அரபு நாட்டில் நடைபெறும் கடைசி ஐ.பி.எல். போட்டியாகும். இதன் பிறகு எஞ்சிய ஆட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும்.\nஇதில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதன்படி ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.\nஇதன்படி ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் வார்னர் அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 12:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகூட்டமைப்பு கட்சியாக பதியப்படும் யாப்பினை தயாரிக...\nஹைதராபாத் 15 ஓட்டங்களால் வெ ற்றி 8 அணிகள் இடைய...\nசென்னை பெங்களூர் நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதி செ...\nதமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் பொசுக்கிப்போட்ட...\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையை...\nமோடியின் பிரதமர் கனவுக்கு விதையிட்ட மாநிலங்கள் என...\nகடந்த ஆறுமாத காலமாகவே தேர்தலுக்காக தயாரான அமைச்சர்...\nசமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எதிரும் ...\nதி.மு.க.வின் மூத்த துணைப் பொதுச் செயலாளர் துரைமுரு...\nஇந்தியாவோட எதிர்காலம் வாக்குப்பதிவு இயந்திரத்துக்க...\n7ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 60 சதவிகித வாக்குப்பதி...\nபிரேமதாச கொலை: 21 வருடங்களின் பின் வெளியான அதிர்ச்...\nசுமந்திரன் எம்பிக்கும் அனந்திக்குமிடையில் கடும் வா...\nவவுனியா கொழும்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 70...\n80 ஆயிரம் பேர் மதமாற்றம் 890, 000 சிங்கள பெண்கள் ...\nகொழும்பு, சென்னை நகரங்கள் நிலமட்டத்துக்கு கீழிற...\nதிருக்கோவிலில் 11 வயது மாணவிகள் 5 பேர் ஆசிரியரினால...\nஅரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிர...\nமகிந்தவை பொதுநலவாய தலைவர் பதவியில் இருந்து நீக்கு...\nஎகிப்தில் பரபரப்பு - 682 பேருக்கு மரணதண்டனை எகிப்...\nயாழிலிருந்தும் நடனகுழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப...\n12 பேர் கொண்ட குழு பாஜகவுக்கு ஆதரவு திரட்டிய இஸ்லா...\nபோராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்ப...\nபிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் ...\nமாஜி அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜ...\nவெளிநாட்டு வங்கியில் கருப்பு பணம்: 26 பேரின் விவர...\n89 தொகுதிகளில் 7ம் கட்ட வாக்குப்பதிவு7 மாநிலங்கள்...\nஉடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த நடிகர் மர...\nஒபாமை சீண்டும் வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒ...\nவடமாகாண சபை உறுப்பினருக்கான நிதி ஒதுக்கீடு 40 லட்ச...\nஆயர்கள் தொடர்பில் பொதுபலசேனாவின் கருத்துக்கு கூட்ட...\n7 பேருக்கு மரண தண்டனை- நுவரெலியா மேல் நீதிமன்றம் ...\nபல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணச...\nரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு இடமாற்றப்பட்டுள்...\nயாழ். மாநகர சபை ஆகஸ்ட் மாதம் கலைக்கப்படும்\nதலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட இலங்கை“யானை ...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\nஇந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில...\n’மருமகன் சிடி’, ‘ஓடி ஒளியும் எலிகள்’ : வலுக்கும் ...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை ரத்து ...\nபுங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின...\nமுருகன் தேர் திருவிழா 1\nஇடம் இருந்து கு.சிவராசா ,தி.கருணாகரன்,சு.மா.தனபாலன...\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூகநிலைய புதிய கட்டிட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/88174", "date_download": "2018-08-18T00:23:36Z", "digest": "sha1:PUMYRXXZRIORCOSDABJ63L7OTCLAWN32", "length": 14665, "nlines": 101, "source_domain": "www.zajilnews.lk", "title": "முஸ்லீங்கள் மீதான வன்முறை மனோபாவம் மாற்றப்பட வேண்டும் - Zajil News", "raw_content": "\nHome Articles முஸ்லீங்கள் மீதான வன்முறை மனோபாவம் மாற்றப்பட வேண்டும்\nமுஸ்லீங்கள் மீதான வன்முறை மனோபாவம் மாற்றப்பட வேண்டும்\nநாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவ நேரத்திலும் அதன் பின்னரும் அரசியல் தலைமைகள் சமூக, சிவில் அமைப்புகள், தலைவர்கள் எங்கே இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்ற கவலையொன்று இலங்கையில் உருவாகியிருக்கிறது.\nஇலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த முதலாவது இனக்கலவரம், 1915 ஆம் ஆண்டின் கண்டிக் கலவரம் தான். ஆனால், இப்போது 2018 மார்ச்சில் ஏற்பட்ட கலவரத்தோடு இரண்டாகிக் ‘கண்டிக் கலவரங்கள்’ என்று வரலாறு பதிவு செய்கிறது.\nசிவில் சமூகம், அரசாங்கம், அரசியல்வாதிகள், ஊடகங்கள், மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் யாவும் இணைந்தவையாக ஒன்று சேர்ந்து இயங்கும் பொழுதே, நாட்டில் நன்மை நடக்கும்\nயுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், நாட்டில் எல்லாமே முடிந்து விட்டது நினைத்து கொள்ள முடியவில்லை. அடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள், பேருவளைக் கலவரம் மிகவும் கொடுரமானதாகவே கொள்ளப்பட்டது. ஆனால், அது ஒரு வகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அமைதி காக்கப்பட்டது.\nபின்னர், கொழும்பில் தஞ்சம் அடைந்த றோகிஞ்சா அகதிகள் பிரச்சினை எழுந்து, அமைதி பெற்றது. அவ்வேளைகளில், ஒருசில சிவில் அமைப்புகள் ஒன்று திரண்டு அமைதிக்காகப் பாடுபட்டன.\nஇப்போது, அம்பாறையில் ஹோட்டல் ஒன்றில் உணவருந்த வந்த பெரும்பான்மைச் சிங்கள இளைஞர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை, தற்போதும் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ‘பேஸ் புக்’ என்கிற முகநூலே வாழ்க்கை என்றிருந்தவர்களுக்குப் பேரிடியைக் கொடுத்திருக்கிறது.\nஅதேபோலத்தான் வைபர்; பக்கத்திலிருப்பவரைக்கூட கணக்கிலெடுக்காது வைபருடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், அடுத்தவருடனும் பேசத்தான் வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.\nநாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை, தானாக ஏற்பட்டதா இல்லாவிட்டால் சதிசெய்யபட்ட சதியா என்ற சந்தேகங்கள் பலவற்றைத் உருவாகிறது.\nமுகநூல் மற்றும் வைபர் போன்ற சமூக வலைத்தளங்கள், ஒரு பிரதேசத்துக்குள் தடைசெய்யப்படுவதால் பிரயோசனமில்லை.\nநாடு முழுவதும் முகநூல் மற்றும் வைபர் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி கேட்கப்பட்டாலும், உண்மையைச் சொன்னால், உலகத்துடனான தமது தொடர்பை அறுத்து விட்டிருப்பதாகவே நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.\n2015ஆம் ஆண்டு ஐ.நாவில், இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பொறுப்புக் கூறல் விடயம், வெறும் கண்துடைப்பாக அமையக் கூடாது என்ற வலியுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், பற்றவைக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான குழப்பம், இப்போது தணிந்து விட்டது என்று வெளிப்படையாகச் சொன்னாலும், அது முடிந்துவிடவில்லை. ஆனால், சமூக ஊடகங்கள் இலங்கையில் சாதாரணமாகப் பாவனைக்கு வராத காலத்தில், ஊடகங்களுக்கான தணிக்கை, வலைத்தளங்களுக்கான தடைகள் கட்டுப்பாடுகளோடு ஒப்பிட்டு பக்கும் போது சிறிய செயற்பாடு என்றாலும், இன்றைய கால கட்டத்தில் பெரிய தாக்கத்தையே உருவாகிறது\nபிரச்சினைகள் ஏற்படுகின்ற வேளைகளில், அவற்றை ஊதிப் பெரிதாக்குவதற்காக அமைப்புகளும் நிறுவனங்களும் தனி நபர்களும் தோன்றிவிடுகின்றனர். ஆனால், பிரச்சினைகளைச் சீர்செய்வதற்கும் ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொள்வதற்கும் யாரும் இல்லாததொரு நிலையே இப்போதைய காலத்தில் நாட்டில் இருக்கின்றது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களை நன்றாகவே அந்த பகுதி ( பிரச்சினை ஏற்பட்ட பகுதி ) மக்கள் நன்றாகவே புரிந்து இருப்பார்கள் அதிகாரம் என்ற ஒன்று இருந்தததாலேயே பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் அரசியல் அதிகாரத்தினால் தான் அந்த பகுதிகளுக்கு சென்று கலவரங்களை கட்டுப்பாடடுக்குள் கொண்டுவரப்படுள்ளது சிவில் அமைப்புக்கள் வெளியில் இருந்து குரல் கொடுத்ததே தவிர நேரடியாக கலத்துக்கு செல்ல முடியாத நிலை உருவானது\nஎமது அரசியல் தலைமைகள் இந்த ஆட்சி அதிகாரங்களை விட்டு விலகி இருந்திருந்தால் எமது சமுகம் இன்னும் பாதிக்கப்பட்டு இருந்திருக்கும் அதிகாரத்தை, பதவியை தூக்கி எறிந்திருந்தால் ஹக்கீமோ, ரிஷாத்தோ, ஹலீமோ, பைசர் முஸ்தபாவோ, வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டிருக்கும் இந்த பதவியினால் தான் இந்த அமைச்சரகளுக்கு ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியில் எமது தலைமைகள் பாத்திக்கப்ட்ட மக்களுடன் களத்த்தில் நின்றனர் என்பதை யாராலும் மறக்க முடியாது\nPrevious articleகிண்ணியா குட்டிக்கராச்சி பால திருத்த வேலை காரணமாக போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்தவும்\nNext articleமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பத்தொரு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/five-exciting-ideas-to-make-first-night-memorable-021198.html", "date_download": "2018-08-18T00:40:13Z", "digest": "sha1:SXZF57GR7L3VP67EPS234GL3K7E5ZCQM", "length": 15207, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "முதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்... | Five exciting ideas to make first night memorable - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்...\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்...\nமுதலிரவு இந்த வார்த்தைக்கே ஒரு தனி கிக் இருக்கிறது. வயசு பையங்க முதல் கிழம் கட்டை வரை இந்த வார்த்தையை கேட்டவுடன் கிளுகிளுப்பாகி விடுவாங்க.\nஅதுவும் புதிதாக திருமணமாகி இருக்கும் ஜோடி என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். அவர்கள் ஒருவித பயத்துடன் ஆனால் ஆர்வத்துடன், அந்த அரங்கேற்றத்திற்காக காத்திருந்த தருணம் அது. இந்த முதல் இரவை இன்னும் சிறப்பாக மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாற்ற மேலே படிங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதலிரவு என்பது எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஒரு மறக்க முடியாத விஷயம் தான். ஏனென்றால் அதுதான், ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கான துவக்கமாக இருக்கிறது. அப்படிப்பட்ட முதலிரவு மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவும், தான் தன்னுடைய வாழ்நாளில் எப்போது அதைப்பற்றி நினைத்தாலும் மனதுக்குள் குதூகலம் பொங்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கும். அப்படி ஒவ்வொருவரின் முதலிரவும் மறக்க முடியாத இனிமையான இரவாக மாற வேண்டும் என்றால் அதற்கென சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அப்படி தான் செய்யும் விஷயங்கள் தன்னுடைய வாழ்க்கைத் துணையை இன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் குதூகலமும் இருந்தால் நிச்சயம் உங்களுடைய முதலிரவு மறக்க முடியாததாக தான் இருக்கும்.\nஒருவரை ஒருவர் பரஸ்பரம் நன்றாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இருவரும் மனம் விட்டு ,கொஞ்ச நேரம் பேசிக் கொள்ளுங்கள். கருத்துகளை பராமரி கொள்ளுங்கள். அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி. இது ஒரு அன்பார்ந்த பந்தத்தை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஒருவர் நன்றி பாராட்டுங்கள்.\nஇது மிகவும் சுவரசியமான விளையாட்டு. உங்கள் முதலிரவு அறையில் , சில சாக்லேட்கள், சில சிடிக்கள், சில கிளுகிளுப்பான பொருட்களை மறைத்து வைத்து விடுங்கள். அவற்றை உங்கள் துணை தேடி கண்டுபிடிக்க சொல்லுங்கள். க்ளு கொடுங்கள். ஞாபகம் இருக்கட்டும், தேடி பிடிக்க வேண்டிய பொருட்களில், நீங்களும் ஒன்றாகி விட ஒரே அதகளம் தான்.\nமெதுவா.. மெதுவா... ஒரு காதல் பாட்டு .....ஆமாம், அவசரம் அவசரமாக ஆரம்பிக்கக்கூடாது. மெதுவா..அப்படியே ரொமாண்டிகா கட்டி புடிச்சிகிறது, அப்புறம் முத்தம் கொடுக்கறதுனு.. ஆனா முத்தம் மட்டும் சும்மா நச் நச்னு இருக்கணும்.. அப்புறம் ஒருவருக்கு ஒருவர் சாக்லெட் அல்லது எதாவது ஸ்விட் ஊட்டுவிடுவது. ஏனென்றால் வாழ் நாள் முழுக்க நீங்க எப்படி அன்பா இருப்பிங்கன்னு முதல் முதலா காட்டுகிற தருணம் இல்லையா\nஅந்த மிகச்சிறப்பான ராத்திரிக்கு இது செம ஐடியா... இரண்டு பேரும் சேர்ந்து ஒரே பாத் டப்பில் குளிக்கிறது..அந்த பாத் டப் நீரில் அப்படியே ரோஜா இதழ்களை தூவுவது, மசாஜ் பண்ணி விட ஆயில், அப்புறம் இவை அனைத்தும் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் என்றால் மூடுக்கு சொல்லவா வேண்டும். அந்த குளியலை வாழ்க்கையில் மறக்க முடியுமா\nஇது மிக முக்கியம். அப்படியே பெர்ஃயும் வாசனை நிரம்பி இருக்க, சத்தம் கம்மியா ஒரு ரொமாண்டிக் பாட்டு ஒலிக்க, கவர்ச்சிஉடையை அணிந்து இடையில் சாக்லெட் சாப்பிட்டுகிட்டே... அடடடடா.. அந்த நினைவை அப்படியே வாழ் நாள் முழுக்க எப்போ நினைச்சாலும் அந்த மூடுக்கு கொண்டு செல்லும்படி இருக்கனும்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்... - My Story #295\nவாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nகலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பின் வலிமை\nநண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\nசெக்ஸ் வாழ்க்கை ஜோரா இருக்கணும்னா 12 ராசிக்காரர்களும் எதிலெல்லாம் கவனம் செலுத்தணும்\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nவட இந்திய பெண்கள், தென்னிந்திய மச்சான்ஸை விரும்புவதன் காரணங்கள்\nநடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி\nபுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்\nJun 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுட் பாய்சன் ஏற்பட்ட தாய் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/the-diploma-teacher-education-exam-hall-ticket-download-from-002309.html", "date_download": "2018-08-18T00:37:46Z", "digest": "sha1:2V7KSTCU6LHGOLDV6X3RO3L4JAZZLULB", "length": 7960, "nlines": 77, "source_domain": "tamil.careerindia.com", "title": "தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு..! | The diploma teacher education exam hall ticket download from tomorrow - Tamil Careerindia", "raw_content": "\n» தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு..\nதொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியீடு..\nசென்னை : தொடக்கக்கல்வி (ஆசிரியர் பயிற்சி) பட்டயத் தேர்வுக்கு நாளை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுக்கூட அனுமதிச்சீட்டை நாளை முதல் ஜூலை 5ந் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு தேர்வுகள் ஜூன் 29 முதல் ஜூலை 14ந் தேதி வரை நடைபெற உள்ளது.\nதொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு இரண்டாமாண்டு தேர்வுகள் ஜூன் 28 முதல் ஜூலை 12ந் தேதி வரை நடைபெற உள்ளது.\nஇந்த மாதம் (ஜூன்) நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் (ஆசிரியர் பயிற்சி) தேர்வுகள் 28.06.2017 தொடங்கி 14.07.2017 வரை நடைபெற உள்ளது. தனித் தேர்வர்களாக முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான 22.05.2017க்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள், பின்பு சிறப்பு அனுமதித்திட்டத்தின் (தட்கல்) மூலம் விண்ணப்பித்தவர்களும் நாளை முதல் ஜூலை 5ந் தேதி வரை ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: dted hall ticket, teacher training hall ticket, primary teacher exam hall ticket, தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு ஹால் டிக்கெட், தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு நுழைவுச் சீட்டு, தொடக்கக்கல்வி ஹால் டிக்கெட்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2017/07/04163810/1094530/Bajaj-Auto-Sales-Slides-upto-23-percent.vpf", "date_download": "2018-08-18T01:02:02Z", "digest": "sha1:X7QNJ3PN4KYDRDT67IKETPVQ5I4IWNRT", "length": 12994, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "பஜாஜ் ஆட்டோ விற்பனை 23% குறைந்தது || Bajaj Auto Sales Slides upto 23 percent", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபஜாஜ் ஆட்டோ விற்பனை 23% குறைந்தது\nஇந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் விற்பனை 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் விற்பனை 23 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ விற்பனை முந்தைய காலாண்டுகளை விட 23 சதவிகிதம் குறைந்துள்ளது. இத்தகவல் அந்நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்த பி.எஸ்.இ. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் பஜாஜ் ஆட்டோ ஜூன் மாதத்தில் மொத்தம் 2,44,878 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ 3,16,969 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.\nபஜாஜ் ஆட்டோ விற்பனை சுமார் 25 சதவிகிதம் குறைந்துள்ளது. இத்துடன் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 4 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,17,903 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,23,252 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது. வணிக ரீதியாக பஜாஜ் ஆட்டோ விற்பனை ஜூன் மாதத்தில் மட்டும் 40,211 யுனிட்கள் குறைந்துள்ளது.\nமுன்னதாக ஹோண்டா நிறுவன விற்பனை ஜூன் மாத நிலவரப்படி லாபகரமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 444,713 வாகனங்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 சதவிகிதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் ஹோண்டா நிறுவனம் 427,222 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஹோன்டா நவி விற்பனையில் புதிய மைல்கல்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nபின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160\nபஜாஜ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்கள்\nபஜாஜ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை அதிரடி மாற்றம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2017/11/23163506/1130614/Narendra-Modi-To-Unveil-Fleet-Of-400-Tata-Nano-Electric.vpf", "date_download": "2018-08-18T01:01:54Z", "digest": "sha1:4VHWSKRVV4IJQIHEK3L5ROVQBFALDGR4", "length": 13916, "nlines": 163, "source_domain": "www.maalaimalar.com", "title": "400 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பிரதமர் மோடி || Narendra Modi To Unveil Fleet Of 400 Tata Nano Electric In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n400 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பிரதமர் மோடி\nபதிவு: நவம்பர் 23, 2017 16:35\nமத்திய அரசின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு அங்கமாக 400 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருக்கிறார்.\nமத்திய அரசின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு அங்கமாக 400 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருக்கிறார்.\nஇந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் மின்சாரத்தில் இயங்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனங்களுக்கு 10,000 மின்சார வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு நிறுவனம் ஆர்டர் கொடுத்திருக்கிறது.\nஅந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி டெல்லியில் ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 டாடா நானோ எலெக்ட்ரிக் வாகனங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்த நானோ எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்து 150 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என்றும் இந்த மாடல் வெள்ளை நிறம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டாடா நானோ மின்சார காரில் பயன்படுத்தப்பட இருக்கும் தொழில்நுட்பமும் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கும் டிகோர் எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பமும் ஒன்று தான்.\nஇந்த எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பம் ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் பிரிட்டன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதை விட மற்ற அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது.\nநானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட் கீழ் பொருத்தப்படும். முன்னதாக வெளியான தகவல்களில் நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டது.\nவிரைவில் நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படலாம் என்றாலும், தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் டிகோர் செடான்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஹோன்டா நவி விற்பனையில் புதிய மைல்கல்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nமாற்றம்: நவம்பர் 23, 2017 16:35\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/05130115/1174570/should-not-eat-with-milk.vpf", "date_download": "2018-08-18T01:02:03Z", "digest": "sha1:D24CGFE4RH7GLPS7JOCKJKOZLKU3NJVM", "length": 12243, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாலுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது? || should not eat with milk", "raw_content": "\nசென்னை 13-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாலுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nபாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பாலுடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.\nபாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பாலுடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.\nமீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.\nஅதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.\nதர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.\nபால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.\nகீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்...\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கான பற்கள் பராமரிப்பு\nஇனிய ஊட்டச்சத்து உணவு பால்\nகலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிக்கும் பால்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/05152359/1161113/LG-K30-Smartphone-Launched.vpf", "date_download": "2018-08-18T01:01:58Z", "digest": "sha1:JFWO7AQYR27VVQNGWRFXIT64MLO7OAFK", "length": 14439, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் எல்ஜி K30 அறிமுகம் || LG K30 Smartphone Launched", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் எல்ஜி K30 அறிமுகம்\nஎல்ஜி நிறுவனத்தின் K30 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஎல்ஜி நிறுவனத்தின் K30 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஎல்ஜி நிறுவனத்தின் K30 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி X4 பிளஸ் போன்று காட்சியளிக்கிறது. எல்ஜி K30 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.\nஅமெரிக்காவில் எல்ஜி K30 ஸ்மார்ட்போன் டிமொபைல் சேவையுடன் ஒப்பந்தமில்லாமல் 225 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,000) விலையிலும், ஒப்பந்தத்துடன் மாதம் 9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.600) என 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எல்ஜி K சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன.\n- 5.3 இன்ச் ஹெச்டி 720x1280 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n- குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்\n- 2 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 2880 எம்ஏஹெச் பேட்டரி\n- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nசிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது புதிய எல்ஜி K30 அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த எல்ஜி K10 (2018) ஸ்மார்ட்போனின் ரீபிரான்டெட் வெர்ஷனாக இருக்கிறது. எனினும் எல்ஜி K10 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எல்ஜி K30 ஆன்ட்ரய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ P30 அறிமுகம்\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம்\nஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு ஆப் புதிய பேமென்ட் ஆப்ஷன்\nகேரள வெள்ளம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை தேதி\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathiyamweekly.com/?cat=68", "date_download": "2018-08-18T01:24:32Z", "digest": "sha1:GA2UNA543IOUOUJLF5YL5WQMJ2G7SNCJ", "length": 5803, "nlines": 84, "source_domain": "sathiyamweekly.com", "title": "யாதும் ஊரே Archives - Sathiyam Weekly — Sathiyam Weekly", "raw_content": "\nHome / பொது / யாதும் ஊரே\nவிமானம் ஓட்ட வேட்டியோடு தான் வருவேன்… அமெரிக்காவையே அதிர வைத்த ஈழத் தமிழன்\nவிமானம் ஓட்ட வேட்டியோடு தான் வருவேன்… அமெரிக்காவையே...\nதற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் – காத்திருக்கும் 10 வயது சிறுவன்\nதற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான்...\n600 ஆண்களுடன் செல்பி எடுத்த பெண்\n600 ஆண்களுடன் செல்பி எடுத்த பெண் 600 ஆண்களுடன் செல்பி...\nமருத்துவ துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு\nமருத்துவ துறைக்கான நோபல் பரிசு \nமலைப்பாம்பை வளர்த்தவர் பரிதாபமாக மரணம் \nமலைப்பாம்பை வளர்த்தவர் பரிதாபமாக மரணம் \nஉலகின் மிகப்பெரிய வைரம் – 53 மில்லியனுக்கு ஏலம்\nஇளமையாக தோற்றமளித்த 41 வயது பெண்ணுக்கு விமானத்தில்...\nஉலகின் மிக நீளமான இமை முடிகள் கொண்ட பெண்; கின்னஸ் சாதனை\nஉலகின் மிக நீளமான இமை முடிகள் கொண்ட பெண்; கின்னஸ்...\nபலரின் கனவில் தோன்றிய மர்ம மனிதன்\nபலரின் கனவில் தோன்றிய மர்ம மனிதன்\nவிண்ணை தொட்ட சாதனை.. 665 நாட்கள் விண்வெளியில் கழித்த 57 வயது பெக்கி விட்சன்…\nவிண்ணை தொட்ட சாதனை.. 665 நாட்கள் விண்வெளியில் கழித்த...\nயாதும் ஊரே 400 வருடங்களுக்கு முன்னரே ஐபோன்: வெளியான...\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY0kuty", "date_download": "2018-08-18T01:23:02Z", "digest": "sha1:ADAIL57BTHILQK4PI3D5ZRR62MCNRKCP", "length": 7302, "nlines": 128, "source_domain": "tamildigitallibrary.in", "title": "நேஷனல் தமிழ் வாசகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்நேஷனல் தமிழ் வாசகம்\nஆசிரியர் : இராசமாணிக்கம், மா.\nபதிப்பாளர்: சென்னை : நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி , 1958\nகுறிச் சொற்கள் : காஞ்சி மாநகரம் , வீரமாமுனிவர் , இயற்கை , அழகு , நன்னெறி , நீதிநெறி விளக்கம் , கதை , பலசுவை.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇராசமாணிக்கம், மா.(Irācamāṇikkam, mā.)நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை,1958.\nஇராசமாணிக்கம், மா.(Irācamāṇikkam, mā.)(1958).நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை..\nஇராசமாணிக்கம், மா.(Irācamāṇikkam, mā.)(1958).நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி.சென்னை.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43371.html", "date_download": "2018-08-18T00:50:14Z", "digest": "sha1:NWKEM2H7DDAPBR3F3TL2OR7VQQFDM4XN", "length": 26147, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்கிற மாதிரி நடிக்கலை!” | “சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்கிற மாதிரி நடிக்கலை!”, வாலு, சிம்பு, ஹன்சிகா, விஜய் சந்தர்", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n“சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்கிற மாதிரி நடிக்கலை\n''பொண்ணு அழகா இருக்காளேனு ஆசைப்படுறதுக்கு பேர் காதல் இல்லை; நம்ம வாழ்க்கையை அழகாக்குவானு நம்பவைக்கிறதுதான் காதல்’ - இப்படி படம் முழுக்க சிம்பு ஸ்பெஷல் பன்ச்தான். திரும்பிப் பார்த்தா சமீபத்தில் தமிழ் சினிமாவுல காதல் சினிமா வரவே இல்லை. சாப்பிட, தூங்க மறந்தாலும் காதலிக்க மறக்காதவங்க நாம. அதான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காதலும் காதல் சார்ந்த விஷயங்கள் மட்டுமே இருக்கணும்னு பிளான் பண்ணி அடிச்சிருக்கோம். செம வெயிட்டான காதல் பொக்கேவா படம் இருக்கும்'' - அடித்துப் பேசுகிறார் 'வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர். பிரசித்திபெற்ற 'சிம்பு - ஹன்சிகா காதல்’ தருணங்களை உடன் இருந்து பார்த்தவர்.\n''டிரெய்லர் பரபர பட்டாசா இருந்துச்சுனு ஏகப்பட்ட லைக்ஸ், கமென்ட்ஸ். படம் அதைவிட சூடா இருக்கும். சிம்பு அடிப்பார்னு நினைக்கும்போது அடிக்கமாட்டார்; அடிக்க மாட்டார்னு நினைக்கும்போது அடி தூள் கிளப்புவார். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, கிட்டத்தட்ட ரஜினி சார் படம் மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு சிம்பு ஹீரோயிசம், காமெடி, ரொமான்ஸ், டான்ஸ், சென்ட்டிமென்ட்னு எல்லா ஏரியாவிலும் புகுந்து புறப்பட்டிருக்கோம். சிம்புவைப் பிடிக்காதவங்களுக்கும் இந்தப் படத்தில் அவரைப் பிடிக்கும்\n''பில்ட்-அப் நல்லாத்தான் இருக்கு. ஆனா, அதுக்காக படம் ரிலீஸ் ரெண்டு வருஷமாவா தாமதம் ஆகும்\n''நம்புங்க... அதுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் காரணம். கேமராவுக்கு முன்னாடியும் பின்னாடியும் ஏகப்பட்ட சிக்கல்கள். ஹைதராபாத் ரயில்வே ஸ்டேஷன்ல செட் போட்டு ஒரு மாஸ் ஃபைட் எடுக்கணும். கம்பிகளை உடைச்சு சண்டை நடக்கும். அதுக்கான திட்டம் என்ன, எங்கேலாம் பொக்லைன் பயன்படுத்துவாங்க, அடிவாங்குறவங்க எந்த அளவுக்குப் பறப்பாங்கனு மொத்த ப்ளூபிரின்ட்டும் கொடுத்து, ரயில்வேல அனுமதி வாங்கினோம். ஆனா, அந்த நேரம்தான் ஹைதராபாத்தில் குண்டு வெடிச்சது. அதனால மூணு மாசம் அனுமதி தரலை. வேற ரயில்வே ஸ்டேஷன்ல ஷூட் பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா, படம் முழுக்க வரும் அந்த ஸ்டேஷன்லதான் சண்டைக் காட்சியும் இருக்கணும்னு காத்திருந்து படம்பிடிச்சோம். இப்போ ரஷ் பார்க்கிறப்போ அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் இருக்குனு தோணுது. இப்படி பல காரணங்களால் பட ரிலீஸ் தாமதம் ஆச்சு. ஆனா, அதுக்காக மேக்கிங்ல எந்தச் சமரசமும் பண்ணிக்கலை\n'''வாலு’ ஷூட்டிங்லதான் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள பிரிஞ்சிட்டாங்களே\n''படத்துக்கு வெளியே எப்படினு தெரியலை. ஆனா, படத்துல சிம்புவும் ஹன்சிகாவும் நிஜமான காதலர்கள் மாதிரியே வாழ்ந்தாங்க. 'மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடினு தைரியமா சொல்லலாம். மத்தபடி காதல், பிரிவு எல்லாம் அவங்க பெர்சனல். நிஜ வாழ்க்கையில் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிச்சுட்டு இருந்தப்ப படத்துக்காக காதல் காட்சிகளைப் படம் பிடிச்சுட்டு இருந்தோம். அதேமாதிரி நிஜத்தில் அவங்க பிரிஞ்சிருந்தப்ப, படத்திலும் எமோஷனல் காட்சிகளைப் படம்பிடிச்சுட்டு இருந்தோம். ஏதோ ஒருவிதத்தில் ரீலும் ரியலும் ஒரே அலைவரிசையில இருந்தது. நிஜத்துல சிம்புவும் ஹன்சிகாவும் திரும்ப சேர்வாங்களானு படம் பார்த்தா, உங்களுக்கே தெரியும்\n''சிம்புவுடன் காதல் தோல்வியால் ஹன்சிகா இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்கனு ஒரு தகவல் வந்ததே உண்மையா\n''அப்படியெல்லாம் இல்லை. ஹன்சிகா ரொம்ப டெடிகேட்டிவ் ஆர்ட்டிஸ்ட். நான் முதல்முறை படம் பண்றேன்னு நிறையத் தடவை எனக்காக கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணினாங்க. ஆனா, எதிர்பார்க்காத சிக்கல்களில் சிக்கிட்டு அடுத்தடுத்து படப்பிடிப்பு கேன்சல் ஆச்சு. அதனால ஹன்சிகா வேற படங்களில் நடிச்சுட்டு இருந்தப்ப, நாங்க எங்க படத்துக்காக தேதி கேட்டோம். அப்போ அவங்களால ஒருநாள்கூட ஒதுக்கித் தர முடியலை. 'என் கால்ஷீட் இருந்தப்பலாம் வேஸ்ட் பண்ணிட்டீங்க. ஆனா, நான் ஆசைப்பட்டாலும் இப்போ என்னால தேதி கொடுக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. அது ரொம்ப நியாயமான கோபம்தான். எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, அப்புறம் எப்படியோ தேதி அட்ஜஸ்ட் பண்ணி, பாங்காக்ல ஷூட் பண்ண டூயட்டுக்கு வந்து நடிச்சுக்கொடுத்தாங்க\n''ரியல் காதல், பிரிவு பத்தி சிம்பு எதுவும் ஷேர் பண்ணிக்கிட்டாரா\n''அவரின் முதல் காதலி சினிமாதாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டா எல்லா கவலைகளையும் மறந்துட்டு செம ரேஸிங்ல இருப்பார். அந்த எனர்ஜிதான் சிம்பு ப்ளஸ். அதே எனர்ஜியோடு எல்லாரையும் கலாய்ப்பார். அவரோட அந்த ஜாலி கேலி தாங்காமதான், 'உயிரைக் கொடுத்து லவ் பண்றவனைப் பார்த்திருக்கேன்; ஆனா, உயிரை எடுத்து லவ் பண்றவனை இப்பத்தான் பார்க்கிறேன்’னு ஒரு பன்ச் பிடிச்சார் சந்தானம்\n“சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்கிற மாதிரி நடிக்கலை\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n“சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்கிற மாதிரி நடிக்கலை\nகார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி என்ன பேசினார் \nதமிழ் சினிமாவின் முதல் சிக்ஸ்பேக் ஹீரோ\nவிரைவில் 'என்னை அறிந்தால்' ஒரு பாடல் ரிலீஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/drunk-man-selects-wrong-uber-drop-location-pays-more-than-rs-1-lakh-for-cab/", "date_download": "2018-08-18T01:20:04Z", "digest": "sha1:RX454CTFABF4H2ORBQOVQFBOS5F4DSVY", "length": 14289, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தவறான இடத்தைத் தேர்வு செய்ததால் உபர் கேபிற்கு 1 லட்சம் பில் கட்டிய இளைஞர்! - Drunk man selects wrong Uber drop location, pays more than Rs 1 lakh for cab!", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nதவறான இடத்தைத் தேர்வு செய்ததால் உபர் கேபிற்கு 1 லட்சம் பில் கட்டிய இளைஞர்\nதவறான இடத்தைத் தேர்வு செய்ததால் உபர் கேபிற்கு 1 லட்சம் பில் கட்டிய இளைஞர்\nதொழில் நுட்பங்களின் வளர்ச்சி சில நேரங்களில் நமக்கு ஆபத்தையும் விளைவிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.\nஅமெரிக்காவில் இளைஞர் ஒருவர், குடி போதையில் தவறான இடத்தை தேர்வு செய்ததால், 1 லட்சம் வரை பில் கட்டிய சம்பவம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.\nநவீன உலகில் பயணம் செய்வது மிகவும் எளிமையாக மாறி வருகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஸ்மார்ஃபோன்கள் பெரிதளவில் உதவுகின்றன. வழி காட்டலில் துவங்கி, பயணத்திற்கு ஏதுவான வாகனத்தை தேர்வு செய்வது வரை ஸ்மார்ஃபோன்களின் பங்கு அதிகளவில் இருந்து வருகின்றன. இப்படி தொழில் நுட்பங்களின் வளர்ச்சி சில நேரங்களில் நமக்கு ஆபத்தையும் விளைவிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.\nஇதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா நகரத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்னி பச்மேன் என்ற இளைஞர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வருகிறார். சம்பவதன்று, அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விடுதி ஒன்றிற்கு பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார்.\nஇந்த நிலையில், தான் தனியாக கார் ஓட்டிச் செல்வது பாதுகாப்பு அற்றது என நினைத்த அந்த இளைஞர், ஆன்லைனில் உபர் நிறுவனத்தில் கேப் ஒன்றை புக் செய்துள்ளார். காரில் ஏறிய பின்பு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பச்மேன், சுமார் 2 மணி நேரம் கழித்து கண் விழித்து பார்த்துள்ளார். அதன் பின்பு, காரை ஓட்டிய டிரைவரிடம் தனது வீட்டின் முகவரியைக் கேட்டு இன்னும் அந்த இடம் வரவில்லையா\nஅதிர்ச்சி அடைந்த கார் டிரைவர், பச்மேனிடன் நீங்கள் புக் செய்துள்ள இடம் 300 மையில்களை தாண்டியது என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு திகைத்த அந்த இளைஞர் உடனடியாக காரை நிறுத்தச் சொல்லிவிட்டு காரில் இருந்து வெளியேறியுள்ளார், அதன் பின்பு, புக் செய்த இடத்தை ஸ்மாட்ஃபோனில் சரி பார்த்ததில், தவறுதலான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.\nபின்பு, அந்த காரிலே மீண்டும் தனது வீட்டிற்கு பயணித்த என்னி பச்மே, இறுதியாக 1.06 லட்சம் பில்லாக உபர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.\nஇறந்த குட்டியை தோள் மீதே சுமந்துக் கொண்டிருந்த தாய்.. 17 நாட்கள் தண்ணீருக்குள் நடந்த பாசப்போராட்டம்\nவைரலாகும் வீடியோ: நடனம் ஆடிக்கொண்டே ஆப்ரேஷன் செய்த டாக்டர்.. உயிரிழந்த அப்பாவி நோயாளி\nநாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று இந்தியரை சுட்டு கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு\nஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கிடைக்கும் ’சிலந்தி பர்கர்’…செம்ம டேஸ்ட்.\nயுடியூப் தலைமை அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த பெண்\nபிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் உரிமத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்\nஊபெரின் தானியங்கி கார் மோதி பெண் பலி : அமெரிக்கா, கனடாவில் சேவை நிறுத்தம்\nஇயேசு கிறிஸ்து குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் விற்பனை\nசாகும் தருவாயில் இருந்த காதலியை மணந்து, இறுதி ஆசையை நிறைவேற்றிய காதலன்.\nராஜஸ்தானில் கல்லூரி மாணவர்களுக்கும் இனி சீருடை: பாஜக அரசை சாடும் காங்கிரஸ்\nசட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்\nகமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்\nகமல்ஹாசன் அரசியல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/indvsafg-you-cannot-buy-experience-says-dinesh-karthik.html", "date_download": "2018-08-18T00:37:06Z", "digest": "sha1:7X5S2NJOBY3SFY6RDHT4FFME6F7Z36I5", "length": 6384, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "INDVSAFG: You cannot buy experience says Dinesh Karthik | தமிழ் News", "raw_content": "\nஇந்திய அணி 'சிஎஸ்கே' போல அனுபவம் வாய்ந்தது.. ஆப்கானுக்கு 'பதிலடி' கொடுத்த பிரபலம்\nமுதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து ஆப்கானிஸ்தான் அணிக்குக் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை(ஜூன்14) பெங்களூரின் சின்னச்சாமி அரங்கில், இந்திய அணியுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆப்கான் அணி விளையாடவுள்ளது.\nஇதுகுறித்து ஆப்கான் அணியின் கேப்டன் எங்கள் அணியில் இந்திய அணியைக் காட்டிலும், சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர் என்று பெருமையாகத் தெரிவித்துள்ளார்.மேலும் நாங்கள் இந்தியாவுக்கு சுழற்பந்து வீச்சில் அச்சுறுத்தல் கொடுப்போம் என, அந்நாட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் ரஷித்கான், முகம்மது நபி, முஜிபூர் ஆகியோர் சவால் விடுத்துள்ளனர்.\nஇந்தநிலையில் அனுபவத்தை விலைகொடுத்து வாங்க முடியாது என ஆப்கான் வீரர்களுக்கு, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், \"அனுபவம் எப்படிப்பட்டது என்பதை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\n30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொண்ட அணி என விமர்சித்தாலும், அனுபவ வீரர்கள் கொண்ட சிஎஸ்கேதான் சாம்பியன் பட்டம் வென்றது. ஆதலால், அனுபவத்தை ஒருபோதும், யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அதுபோலத்தான் இந்திய அணி அனுபவம் மிகுந்தது,'' என தெரிவித்துள்ளார்.\nமனைவி சாக்ஷியுடன் 'சூப்பர் ஸ்டார்' படத்தை பார்த்து ரசித்த தோனி\n'ஐபிஎல்' நிர்வாகத்திடம் நான் வைத்த ஒரே 'வேண்டுகோள்' இதுதான்: தோனி\n'எனது இடத்தை தோனியிடம் தான் இழந்தேன்'... மனந்திறந்த தினேஷ் கார்த்திக்\n'களவாணி 2'வில் சூரிக்குப் பதில்...விமலின் 'நண்பனாக' களமிறங்கிய பிரபலம்\nஐபிஎல் 'இறுதிப்போட்டிக்கு' முன் நடந்தது என்ன.. 'ரகசியத்தை' உடைத்த தோனி\nசென்னையின் பிரபல 'கோயில்களுக்கு' விசிட் அடித்த ஐபிஎல் கோப்பை\n'என் இனிய தமிழ் மக்களே'.. பாரதிராஜா பாணியில் 'உருக்கமாக' விடைபெற்ற சிஎஸ்கே வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/category?pubid=0006&showby=list&sortby=image", "date_download": "2018-08-18T00:58:41Z", "digest": "sha1:NS52LQGB47G5DBNJLYBIDYZV6GLLRBKH", "length": 4987, "nlines": 138, "source_domain": "marinabooks.com", "title": "பாரதி பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் அகராதி பொது நூல்கள் நாவல்கள் குடும்ப நாவல்கள் கவிதைகள் சமையல் வாஸ்து விவசாயம் ஆன்மீகம் வணிகம் நேர்காணல்கள் தத்துவம் சித்தர்கள், சித்த மருத்துவம் கணிப்பொறி நவீன இலக்கியம் மேலும்...\nஜெ.இ பப்ளிக்கேஷன்செல்லம் & கோமூலிகைமணிவிநாயகம் & கோநற்றிணை பதிப்பகம்மதி வெளியீடுநண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளைராணி முத்துபாசமலர் காலலயம்இயல்வாகை பதிப்பகம்புதுகைத் தென்றல் வெளியீடுபஞ்சவர்ணம் பதிப்பகம்செம்புலம்பந்தள பதிப்பகம்தூரிகை வெளியீடு மேலும்...\nஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி\nஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி\nஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி\nஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி\nநட்சத்திர பாத பலன்களும், அஷ்டவர்க்க விளக்கமும்\n5ம் பாவம் அல்லது புத்திரபாவ சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/golisoda-2-songs/", "date_download": "2018-08-18T01:13:57Z", "digest": "sha1:XS4YQ7Y5GVP5SXQNVMZ2YAEF7TLOCYYL", "length": 5097, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Golisoda 2 Songs - Cinema Parvai", "raw_content": "\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-18T00:22:49Z", "digest": "sha1:LD52SD6E4XRDU6SPCUHRIEM4ITI2JSVV", "length": 3897, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பகமுவ பிரதேச செயலக காரியாலயம் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nArticles Tagged Under: அம்பகமுவ பிரதேச செயலக காரியாலயம்\nஅம்பகமுவவில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு\nஎதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கல்வித்துறை சார்ந்தவர்...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/93847", "date_download": "2018-08-18T00:24:33Z", "digest": "sha1:ZWKT2NY4U4ZC3TNKXINZDKGP522VWHJL", "length": 7914, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "திருகோணமலை-மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் திருகோணமலை-மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு\nதிருகோணமலை-மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தின் மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட 99வது மற்றும் 100 வது மாதிரிக்கிராமங்களான தெட்சனாபுரம் மற்றும் கைலாயபுரம் ஆகிய மாதிரிக்கிராமங்கள் இன்று(29) வீடமைப்பு மற்றும் நிரமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nதெட்சனாபுரத்தில் 25 வீடுகளும் கைலாயபுரத்தில் 22 வீடுகளம் இதில் அடங்குவதிடன் இங்கே நீர்வசதி மற்றும் மின்சாரவசதி மற்றும் பாதைவசதிகளும் அரசாங்கத்தினால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.\n2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிவைடைய முன் 2500 மாதிரிக்கிராமங்களின் வேலைகள் ஆரம்பிக்கப்படும். 2025ம் ஆண்டு அனைத்து மக்களதும் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதன் அடிப்படையில் தான் செயற்பட்டு வருவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் மக்களது தேவைகள் அறிந்து செயற்படுவதாகவும் இன்னோர் பிரவினர் அரச சிம்மாசனத்தை மீள பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் முண்டியடிப்பதாகவும் மக்கள் அதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் பாராமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் இம்ரான் மஹ்ரூப் எம்.எஸ்.தௌபீக், கே. துரைரட்ணசிங்கம் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.\nPrevious articleசுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவராக பைசர் முஸ்தபா: செயலாளராக சுபையிர் தெரிவு\nNext articleபுதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geniustv.in/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/5/", "date_download": "2018-08-18T01:24:44Z", "digest": "sha1:PCRQJE27EN56OINRPP5FT3MLUC4YT6PR", "length": 21495, "nlines": 171, "source_domain": "geniustv.in", "title": "அரசியல் – Page 5 – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்பதே எனது கருத்து என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். பாஜகவினரும், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஜி.கே. வாசனும் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்த்து அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரக் கூடாது. …\nஇந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான ஆட்சியமைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை இந்த வார இறுதியில் மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த மே மாதம், 7 பெண்கள் அடங்கலாக 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஆறுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்றனர். குறிப்பாக, அமைச்சர் அருண் ஜெட்லி முக்கிய இரண்டு பொறுப்புக்களான …\nநாடாளும் மக்கள் கட்சி கலைப்பு: காங்கிரஸில் இணைந்தார் நடிகர் கார்த்திக்\nநாடாளும் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதன் தலைவர் நடிகர் கார்த்திக் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக், “நான் காங்கிரஸுக்கு புதியவன் அல்ல. மக்களவை தேர்தலிலும் எனது ஆதரவை அளித்தேன். இப்போது என் வீட்டுக்கு நான் திரும்பி வந்துள்ளேன். வீட்டில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. பிரச்சினை …\nவாக்காளர் பட்டியலில் குளறுபடி: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\nதமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. அந்த புகார் மனுவில், வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவரின் புகைப்படம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால் அவர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் பதிவாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இது குறித்து திமுக சார்பில் …\nடில்லி சட்டசபை கலைப்பு : குடியரசுத் தலைவர் உத்தரவு\nடில்லி சட்டசபையை கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும்பான்மை பெறாத காரணத்தால் எந்த கட்சியும் டில்லியில் ஆட்சி அமைக்க முன் வராததால், டில்லி சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரை செய்திருந்தார். இதனை அடுத்து குடியரசுத் தலைவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவைக் கலைக்கப்பட்டதால், டில்லி சட்டப்பேரவையின் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கை ரத்து …\nசென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தேவை : நிதின் கட்கரி வேண்டுகொள்\nசென்னைத் துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை திட்டப் பணிகள் தொடர்பான பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும், இப்பணியை முடிக்க தமிழக முதல்வர் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக சென்னைத் துறைமுகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- சென்னைத் …\nடெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரை\nடெல்லியில் மறுதேர்தல் நடத்த பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி சட்டப் பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசுத் தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிக்கை அனுப்பினார். டெல்லியில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், 49 நாள் ஆட்சிக்குப் பிறகு, லோக்பால் மசோதாவை அமல்படுத்த முடியவில்லை எனக் கூறி ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அங்கு குடியரசுத் …\nசகாயம் ஆணையத்துக்கு தாமதம் ஏன்\nஅரசியல், செய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் 0\nநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட சகாயம் ஆணையத்துக்கு அனுமதி அளிக்க தாமதம் செய்யப்பட்டது ஏன் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்” என்று தலைப்பிட்டிருக்கின்றன. உண்மை தான்; முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்” என்று தலைப்பிட்டிருக்கின்றன. உண்மை தான்; முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும்\nகாங்கிரஸில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசனை நீக்கி அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தத் தகவலை டில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் குமார் உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் புதிய கட்சியை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சென்னையில் செய்தியாளர்களுக்கு ஜி.கே. வாசன் திங்கள்கிழமை பேட்டியளித்துள்ளார். அப்போது …\nதேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு\nஅரசியல், இந்தியா, முக்கியசெய்திகள் 0\nமகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். பாஜக தலைமையிலான முதல் அரசு அமைந்த இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக சார்பில் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்ற தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://geniustv.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/3/", "date_download": "2018-08-18T01:23:58Z", "digest": "sha1:GAOSXI7IGYG4P33MUP4ER4UYALUPCQLD", "length": 15080, "nlines": 171, "source_domain": "geniustv.in", "title": "சினிமா – Page 3 – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nநடிகர் சாந்தனு – கீர்த்தி திருமணம் நடைபெற்றது\nசினிமா, செய்திகள் Comments Off on நடிகர் சாந்தனு – கீர்த்தி திருமணம் நடைபெற்றது\nதிரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு – பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் இன்று நடைபெற்றது. நாளை மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது.\nவிஜய் நடிக்கும் “புலி” டிரைலர்\nசினிமா, டிரைலர் Comments Off on விஜய் நடிக்கும் “புலி” டிரைலர்\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் புதிய டிரெய்லர் நேற்று இரவு 12 மணிக்கு சோனி நிறுவனம் வெளியிடப்பட்டது. யூடியூபில் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் அதை கண்டு களித்து ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் டியெய்லர் வெளியான சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்தது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.\nஇன்று இரவு 12 மணிக்கு விஜய் நடிக்கும் “புலி” படத்தின் டிரைலர் வெளியீடு\nசினிமா, செய்திகள் Comments Off on இன்று இரவு 12 மணிக்கு விஜய் நடிக்கும் “புலி” படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக புலி படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது.அனைவரும் கண்டு மகிழுங்கள் என்று சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. Cant handle the wait\nரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி”\nசினிமா Comments Off on ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி”\nரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஜினி-ரஞ்சித் படத்துக்கு “காளி” என்றும் பெயர் சூட்டப்படவுள்ளதாக செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து ரஜினி படத்தின் பெயர் “கபாலி” என அப்படத்தை இயக்கும் இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. “கபாலி”( K A B A L I )…..magizhchi\nஜாக்சன் துரை – டிரைலர்\nசினிமா, டிரைலர் Comments Off on ஜாக்சன் துரை – டிரைலர்\nஜாக்சன் துரை – டிரைலர்\nஉனக்கென்ன வேனும் சொல்லு – டிரைலர்\nசினிமா, டிரைலர் Comments Off on உனக்கென்ன வேனும் சொல்லு – டிரைலர்\nஉனக்கென்ன வேனும் சொல்லு – டிரைலர்\nபரத் நடிக்கும் சிம்பா படம் டிரைலர்\nசினிமா, டிரைலர் Comments Off on பரத் நடிக்கும் சிம்பா படம் டிரைலர்\nபரத் நடிக்கும் சிம்பா படம் டிரைலர்\nவிஷால் நடிக்கும் பாயும் புலி டிரைலர்\nசினிமா, டிரைலர் Comments Off on விஷால் நடிக்கும் பாயும் புலி டிரைலர்\nவிஷால் நடிக்கும் பாயும் புலி டிரைலர்\nநைட் ஷோ சினிமா டிரைலர்\nசினிமா, டிரைலர் Comments Off on நைட் ஷோ சினிமா டிரைலர்\nநைட் ஷோ சினிமா டிரைலர்\nதிருட்டு சி.டி. விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார் மனு\nதமிழகத்தில் திருட்டு சி.டி. விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லாவிடம் நடிகர் சங்கத் தலைவர் ஆர். சரத்குமார் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார். அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: திருட்டு சி.டி. விற்பவர்கள் மீது கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக அப்போது திருட்டு …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vjpremalatha.blogspot.com/2016_09_30_archive.html", "date_download": "2018-08-18T00:17:36Z", "digest": "sha1:AZOFO7U53LDQOBKOYRDZGE2QIKX2L4VM", "length": 5783, "nlines": 178, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: 09/30/16", "raw_content": "\nஎன்னுடைய மாணவி வெ.வெண்ணிலாவின் முன் பொதுவாய்மொழித்தேர்வு\nஉடன் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர்\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=5002&name=Jey%20Kay%20-%20jeykay@email.com", "date_download": "2018-08-18T00:26:47Z", "digest": "sha1:7J5IMLDKPTZR7ZJU3U3WWO3ULCNDOAN5", "length": 44224, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Jey Kay - jeykay@email.com", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Jey Kay - jeykay@email.com அவரது கருத்துக்கள்\nபொது துருக்கி பிரச்னை இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nமீண்டும் ஒரு முறை. இந்தியாவின் ரூபாய் மதிப்பு மட்டுமல்ல இந்தோனேஷியா, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, துருக்கி போன்ற நாடுகளின் நாணய மதிப்பும் சரிந்துள்ளது. சென்ற வாரம் வரை அர்ஜென்டினாவில் பெசோ வே மோசமான சரிவை சந்தித்துவரும் நாணயமாக இருந்தது, எந்த வாரம் முதல் அந்த இடத்தை துருக்கியின் லிரா பிடித்துள்ளது. உலக வர்த்தகம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டுள்ளது அதனால் துருக்கியின் லிரா சரிவை சந்திக்கும் பொழுது இந்தியாவின் ரூபாயும் சரிவை சந்திக்கிறது. லிரா சரிவை சந்திக்க பல காரணம் உண்டு. அவற்றில் நான் படித்தது வரை அறிந்தது. துருக்கியின் பொருளாதாரம் சமீபத்திய ஆண்டுகளில் வலுவாக வளர்ந்துள்ளது, அந்த வளர்ச்சி தொடர வேண்டுமானால் வெளிநாட்டு முதலீடுகலும் தொடரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க புரோஸ்டெஸ்டன் மத போதகர் ப்ருன்சொன் என்பவர் துருக்கியில் உள்ள கிளர்ச்சியாளர்களை தூண்டி ஆட்சியை கலைப்பதற்காக சில தொண்டு நிறுவனங்களுக்கு பெரும் தொகை வழங்கியதாக துருக்கி அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது, கிளர்ச்சியாளர்களுக்கு பணஉதவி புரிந்ததாக 15 ஆண்டு சிறை தண்டனையும், துருக்கியை வேவு பார்த்ததாக மேலும் 20 ஆண்டு சிறை தண்டனையும் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து அமெரிக்காவின் டிரம்ப் அரசு துருக்கிய அரசாங்க அமைச்சர்கள் மீது பொருளாதாரத் தடைகளை சுமத்தியது, மேலும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கான கட்டணத்தை ரெட்டிப்பாக்கியது. கடந்த ஆண்டில் துருக்கியின் எஃகு ஏற்றுமதி சந்தையில் அமெரிக்காவே முதல் இடத்தை பிடித்திருந்தது. இந்த கட்டான உயர்வு லிராவை மேலும் வீழ்ச்சி அடைய செய்தது. அமெரிக்க டாலருக்கு எதிராக 40% வரை லிரா வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம் 5% மாக இருந்த துருக்கியின் பணவீக்கம் 15% வரை உயர்ந்தது. துருக்கி வங்கிகளும், வியாபாரிகளும் லிராவில் வர்த்தகம் புரிகின்றனர், அதே வேலையில் துருக்கி அரசாங்கம் அந்நிய கடனை யூரோவில் வாங்கி குவித்துள்ளது, லிரா 40% வரை வீழ்ச்சி அடைந்ததினால் வட்டி தவணை தொகை அதிகரிக்கிறது. இந்த தீடீர் வீழ்ச்சியால் பெருநிறுவனங்கள் திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது, மேலும் வங்கிகளுக்கு இது பெரும் பாரமாக இருக்கிறது, இதனால் துருக்கியின் பொருளாதாரம் மேலும் படுக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் துருக்கியில் முதலீடு செய்ய தயங்குவது மட்டுமல்லாமல், முதலீடு செய்துவந்த அணைத்து லிராவையும் அமெரிக்க டாலராக மாற்றி துருக்கியிலிருந்து வெளியே எடுத்துவந்துவிடுவார்கள். மேலும் துருக்கி தனது அந்நிய கடனை அடைக்க முடியாது என்று முதலீட்டாளர்கள் கருதுவதால் இது ஐரோப்பிய வங்கிகளை பாதித்துள்ளது, இதனால் யூரோவும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால் இந்தியாவும் பாதிக்கிறது. அடுத்ததாக அமெரிக்காவும் தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அமெரிக்க தனது பண விநியோக வளர்ச்சியை குறைத்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கும், சென்ற ஆண்டு அமெரிக்க கருவூல பத்திரங்கள் மீதான வட்டி 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்ந்தது, இதனால் வளர்ந்து வரும் நாட்டில் முதலீடு செய்திருந்தவர்கள், முதலீடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமெரிக்காவில் முதலீடு செய்வர். அதாவது வளர்ந்து வரும் நாடுகலின் நாணயம் அதிகமாக வெளியேறும் (supply அதிகரிக்கும்), அதே வேலையில் அமெரிக்க டாலரின் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் (demand அதிகமாகும்). சுருக்கமாக பிற நாடுகளின் பணம் மேலும் வீழ்ச்சி அடையும். 14-ஆக-2018 15:15:08 IST\nபொது துருக்கி பிரச்னையால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு\nஇந்தியாவின் ரூபாய் மதிப்பு மட்டுமல்ல இந்தோனேஷியா, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, துருக்கி போன்ற நாடுகளின் நாணய மதிப்பும் சரிந்துள்ளது. சென்ற வாரம் வரை அர்ஜென்டினாவில் பெசோ வே மோசமான சரிவை சந்தித்துவரும் நாணயமாக இருந்தது, எந்த வாரம் முதல் அந்த இடத்தை துருக்கியின் லிரா பிடித்துள்ளது. உலக வர்த்தகம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டுள்ளது அதனால் துருக்கியின் லிரா சரிவை சந்திக்கும் பொழுது இந்தியாவின் ரூபாயும் சரிவை சந்திக்கிறது. லிரா சரிவை சந்திக்க பல காரணம் உண்டு. அவற்றில் நான் படித்தது வரை அறிந்தது. துருக்கியின் பொருளாதாரம் சமீபத்திய ஆண்டுகளில் வலுவாக வளர்ந்துள்ளது, அந்த வளர்ச்சி தொடர வேண்டுமானால் வெளிநாட்டு முதலீடுகலும் தொடரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க புரோஸ்டெஸ்டன் மத போதகர் ப்ருன்சொன் என்பவர் துருக்கியில் உள்ள கிளர்ச்சியாளர்களை தூண்டி ஆட்சியை கலைப்பதற்காக சில தொண்டு நிறுவனங்களுக்கு பெரும் தொகை வழங்கியதாக துருக்கி அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது, கிளர்ச்சியாளர்களுக்கு பணஉதவி புரிந்ததாக 15 ஆண்டு சிறை தண்டனையும், துருக்கியை வேவு பார்த்ததாக மேலும் 20 ஆண்டு சிறை தண்டனையும் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து அமெரிக்காவின் டிரம்ப் அரசு துருக்கிய அரசாங்க அமைச்சர்கள் மீது பொருளாதாரத் தடைகளை சுமத்தியது, மேலும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கான கட்டணத்தை ரெட்டிப்பாக்கியது. கடந்த ஆண்டில் துருக்கியின் எஃகு ஏற்றுமதி சந்தையில் அமெரிக்காவே முதல் இடத்தை பிடித்திருந்தது. இந்த கட்டான உயர்வு லிராவை மேலும் வீழ்ச்சி அடைய செய்தது. அமெரிக்க டாலருக்கு எதிராக 40% வரை லிரா வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம் 5% மாக இருந்த துருக்கியின் பணவீக்கம் 15% வரை உயர்ந்தது. துருக்கி வங்கிகளும், வியாபாரிகளும் லிராவில் வர்த்தகம் புரிகின்றனர், அதே வேலையில் துருக்கி அரசாங்கம் அந்நிய கடனை யூரோவில் வாங்கி குவித்துள்ளது, லிரா 40% வரை வீழ்ச்சி அடைந்ததினால் வட்டி தவணை தொகை அதிகரிக்கிறது. இந்த தீடீர் வீழ்ச்சியால் பெருநிறுவனங்கள் திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது, மேலும் வங்கிகளுக்கு இது பெரும் பாரமாக இருக்கிறது, இதனால் துருக்கியின் பொருளாதாரம் மேலும் படுக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் துருக்கியில் முதலீடு செய்ய தயங்குவது மட்டுமல்லாமல், முதலீடு செய்துவந்த அணைத்து லிராவையும் அமெரிக்க டாலராக மாற்றி துருக்கியிலிருந்து வெளியே எடுத்துவந்துவிடுவார்கள். மேலும் துருக்கி தனது அந்நிய கடனை அடைக்க முடியாது என்று முதலீட்டாளர்கள் கருதுவதால் இது ஐரோப்பிய வங்கிகளை பாதித்துள்ளது, இதனால் யூரோவும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால் இந்தியாவும் பாதிக்கிறது. அடுத்ததாக அமெரிக்காவும் தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அமெரிக்க தனது பண விநியோக வளர்ச்சியை குறைத்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கும், சென்ற ஆண்டு அமெரிக்க கருவூல பத்திரங்கள் மீதான வட்டி 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்ந்தது, இதனால் வளர்ந்து வரும் நாட்டில் முதலீடு செய்திருந்தவர்கள், முதலீடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமெரிக்காவில் முதலீடு செய்வர். அதாவது வளர்ந்து வரும் நாடுகலின் நாணயம் அதிகமாக வெளியேறும் (supply அதிகரிக்கும்), அதே வேலையில் அமெரிக்க டாலரின் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் (demand அதிகமாகும்). சுருக்கமாக பிற நாடுகளின் பணம் மேலும் வீழ்ச்சி அடையும். 13-ஆக-2018 15:27:14 IST\nஅரசியல் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் மம்தா அமித்ஷா\nஇங்கு பலர் தனது அறியாமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். 1971இற்கு பிறகு சட்டத்திற்கு புறம்பாக வந்தவர்களின் பெயர் தான் nrc பட்டியலில் இடம் பெறவில்லை. சட்டத்திற்கு புறம்பாக வந்தவர்களை தான் மோடி அரசு நினைக்கிறது, அதில் தவறொன்றும் கிடையாது. இதே nrc யை ஆதரித்த மம்தா இன்று எதிர்க்க காரணம் வோட்டு வங்கி தான் என்பது பலரும் அறிந்ததே. ஒருகாலத்தில் கொடி கட்டி பரந்த கொல்கத்தாவின் நிலைமை இன்று பரிதாபமான நிலையில் இருக்கிறது. அந்த காலத்தில் மொத்த இங்கிலாந்தை விட மேற்குவங்கமே செல்வம் நிறைந்த பகுதியாக இருந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தாவே இருந்தது, 1911லில் தான் டெல்லி இந்தியாவின் தலைநகரமாக மாறியது. இன்று இந்தியாவின் முக்கிய தலைநகரங்களில் கொல்கத்தா கடை கோடி இடத்தில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கொல்கத்தாவை நிர்மூலமாக்கி விட்டனர். அவர்களுக்கு மாற்றாக மம்தாவை தேர்ந்தெடுத்தனர், ஆனால் இன்று மம்தாவிற்கு வாய்பளித்ததை எண்ணி மேற்கு வங்காள மக்கள் வருந்திக்கொண்டிருக்கின்றனர். நிதர்சனத்தை புரியாமல், மத கண்ணாடியுடனும், துரு பிடித்த திராவித சிந்தனையுடன் குறுகிய வட்டத்தினுள் இருந்து கொண்டு பலர் இங்கு வந்து புலம்புகின்றனர். கொஞ்சம் வடநாட்டு ஊடகங்களையும் புரட்டிப்பாருங்கள், நிலவரம் புரியும். தேசிய கட்சிக்கு தமிழகம் வாய்ப்பளித்த காலம் என்றோ போய்விட்டது, அதனால் 2019தில் பாஜகவிற்கு தமிழகத்தில் சூழ்நிலை சாதகமாக இல்லாவிடிலும் ஏனைய மாநிலங்களில் மோடிக்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மோடியை எதிர்ப்பது அவரவரை விருப்பம், அதில் தவறில்லை, ஆனால் கிணற்று தவளைகள் மதம் மற்றும் திராவிடம் என்னும் குறுகிய வட்டத்தை கடந்து தேசிய அளவில் சிந்திக்க பழகிக்கொள்ளவேண்டும். 11-ஆக-2018 21:08:21 IST\nபொது முஸ்லிமை மணந்த இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு மறுப்பு\nபுரிந்து கொண்டேன் ஸ்ரீராம் ஜி. எந்த வாய்ஸ் சாட் ப்ரோக்ராம் யூஸ் பண்றீங்கன்னு தெரிந்து கொள்ளலாமா. 10-ஆக-2018 19:22:15 IST\nபொது முஸ்லிமை மணந்த இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு மறுப்பு\nசார் வடநாட்டு ஆங்கில செய்தி ஊடகங்களை படிப்பதில்லை போலும். பெரும்பாலான இந்திய ஊடகங்கள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் வசமே இருக்கிறது. பெரும்பான்மையினர் தவறு செய்தால் ஜாதி முதல்கொண்டு பிரகடனப்படுத்தி, மதத்தை சம்பந்தப்படுத்தி பரபரப்பான செய்தியாக்குவதும், அதே வேலையில் சிறுபான்மையினர் தவறு செய்தால் பெயரைக்கூட குறிப்பிடாமல் செய்தி வெளியிடுவதும் அங்கு வாடிக்கை. கேரளாவின் பழங்குடி மக்களில் ஒருவரான மது என்னும் மனநலம் குன்றிய ஒருவரை 16 பேர் அடித்துக்கொன்றனர். அதில் குற்றவாளிகளின் பெயரை கூட பல ஊடகங்கள் வெளியிடவில்லை. தினமலரின் இந்த கட்டுரையின் தலைப்பில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இறந்து நிவேதிதா அவர் ஒரு ஹிந்து, அவர் மணந்தது ரஹ்மான் என்னும் ஒரு இசுலாமியரை, இதில் தவறு என்ன உள்ளது. மக்களை பிரிப்பது வோட்டிற்காக காங்கிரஸ் ஆரம்பித்து வைத்த வேலை. நம்பிக்கை இல்லையா காங்கிரஸின் முதல் தேர்தல் சின்னம் இரு மாடுகள், பின்னர் இந்திரா காங்கிரஸ் சின்னம் பசுவும் கன்றும். பிறகு தான் கை சின்னம் என்று மாறியது. இந்திரா மட்டுமே 3 சின்னங்களில் போட்டியிட்ட ஒரே இந்திய பிரதமர். பசு வதை சட்டத்தையும் கொண்டுவந்தது அவர்களே, nrc அறிமுகப்படுத்தியதும் அவர்களே, இன்று அவர்களே அதனை எதிரிகின்றனர். காரணத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கும் என்று நினைக்கிறேன் 10-ஆக-2018 16:47:46 IST\nபொது முஸ்லிமை மணந்த இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு மறுப்பு\nபிரியங்கா சோப்ராவின் பாட்டிக்கு அவர் விருப்பப்படி அவர் அளித்த அன்பளிப்பை வைத்து கட்டிய தேவாலயம் அவரது ஆசை படி அவரது இறுதி சடங்கை செய்ய மறுத்த பொழுது கொதிக்காத நெஞ்சங்கள் இன்று கொதிக்கப்போகிறது. தனது இறுதி சடங்கு ஹிந்து முறைப்படியே இருக்கவேண்டும் என்று ஒருவர் விரும்பினால், அவர் மனதளவில் கடைசிவரை ஹிந்துவாகவே வாழ்ந்து வந்ததாகவே தோன்றுகிறது. பல தருணங்களில் விடாபுடித்தனத்தை களைந்து காலத்திற்கு ஏற்றவாறு ஹிந்து மதம் தனது பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக்கொண்டுள்ளது. மத மாற்றம் செய்யாமல் கடைசி வரை ஹிந்துவாக இருந்த நிவேதிதாவின் இறுதி சடங்கை கோயில் நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 10-ஆக-2018 16:05:32 IST\nஉலகம் பலுசிஸ்தானில் அடக்குமுறை இந்தியா கவலை\nஇந்தியா தனது முதுகை கவனித்ததினால் தான் (தனது மக்களின் எதிர்கால நலனை) பல மதங்கள் இந்தியாவில் இன்றளவும் தழைக்கிறது. மதம் ஒன்றையே காரணமாக வைத்து பாகிஸ்தானுக்கு முட்டுக்கொடுக்கும் மக்கள் இங்கு சுதந்திரமாக திரியமுடிகிறது. பிரிவினையை ஆதரித்தாலும் இந்தியா பெல்ட் குண்டுகளுக்கு மாற்று ஏற்பாட்டை யோசித்து வருகிறது. விராட் க்ஹோலியின் பாகிஸ்தானிய ரசிகரை அந்நாட்டில் பட்ட பட்டை அறியவில்லை போலும். பாகிஸ்தானிலிருந்து அந்நாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலேயே இருப்பார், ஆனால் இந்தியாவில் கண்ணுக்கு தெரியாத தேச துரோகிகள் ஏராளம். இருப்பினும் இந்தியா இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் மீது விசுவாசம் இருப்பவர்கள் தாராளமாக அங்கு குடியேறலாம். என்ன முஹாஜிர் என்னும் அடைமொழியுடன் அன்பாக அவர்களுக்கே உரிய அமைதியான வழியில் உபசரிப்பர். போய் வந்து அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே. மோடியை எதிர்ப்பதாக நினைத்து இந்தியாவை கேலிக்குறியாகும் அற்பமான ஜென்மங்கள் திருந்துவது எப்போது. 10-ஆக-2018 14:34:30 IST\nஉலகம் பலுசிஸ்தானில் அடக்குமுறை இந்தியா கவலை\nபாகிஸ்தான் மேலும் உடைவதற்கு வாய்ப்பு இல்லை, அங்கு பிடி ராணுவத்தின் கையில் இருக்கிறது. மக்களாட்சி என்பதெல்லாம் பெயரளவில் மட்டுமே. ஒருவேளை அவ்வாறு உடைந்தால் இந்தியாவிற்கு அகதிகளின் வருகை மேலும் அதிகமாகும். ராகுல், மம்தா, கெஜ்ரிவால் போன்ற தேசத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட தலைவர்கள் அகதிகளுக்கு முட்டு கொடுப்பார்கள். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பதால், அகதிகளை எளிதாக நாடு கடத்த முடியாது. அதே அகதிகள் இங்கும் தனது அமைதி வேலையே கையிலெடுப்பார்கள். சிரியா அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்து அங்கு அமைதியின் கைவரிசையை ஐரோப்பாவிற்கு காட்டிவருவது ஒரு உதாரணம். நமது பொருளாதார முன்னேற்றத்திற்கு அகதிகள் பாரமாக இருப்பார்கள். ஏற்கனவே காஷ்மீரில் இருக்கும் திருகுவலியை சமாளிப்பதற்க்கு நாம் அதிகம் செலவிடுகிறோம். பாகிஸ்தான் தோன்ற காரணமாக இருந்த அடிப்படை சித்தாந்தமே தவறு, அதையே அவர்கள் இன்றுவரை பற்றிக்கொண்டிருப்பது அவர்கள் மேன்மேலும் செய்துவரும் தவறு. அங்கு அமைதி ஏற்படுவது என்பது கானல் நீராகவே அமையும். வலுவான மக்களாட்சியுடனும், வலுவான பொருளாதாரத்துடனும், மதச்சார்பு அற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கையுடைய வலுவான பாகிஸ்தானே நமது இன்றைய தேவை. ஆனால் இந்த மூன்றில் ஒன்று கூட அங்கு நடக்கப்போவதில்லை. 10-ஆக-2018 14:08:33 IST\nபொது ஜின்னா இந்திய பிரதமராக காந்தி விருப்பம் தலாய்லாமா\nதலாய்லாமா கூறியது உண்மையே. பிரிவினையை லார்ட் மௌண்ட்பாட்டனும், காந்தியும் விரும்பவில்லை, அதனால் ஒருங்கிணைந்த இந்தியாவிற்கு ஜின்னா தலைமையில் அரசவையை உருவாக்க அழைக்கும் படி காந்தி லார்ட் மௌண்ட்பாட்டனை கேட்டுக்கொண்டார். பஞ்சாப் மற்றும் பெங்காலை பிரிப்பதில் உள்ள சிக்கல்களை லார்ட் மௌண்ட்பாட்டன் ஜின்னாவிற்கு எடுத்துரைத்தார். ஆனால் ஜின்னா பாகிஸ்தானை உருவாக்குவதில் உறுதியாக இருந்தார். மௌண்ட்பாட்டனின் உறுதியும், நேரு மற்றும் பட்டேலின் முயற்சியும் ஜின்னாவின் விடாபுடித்தனத்திற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. அதனால் காந்தியை தவிர அனைவரும் பிரிவினையை வழியின்றி ஏற்றுக்கொண்டனர். 09-ஆக-2018 08:52:16 IST\nபொது ஜின்னா இந்திய பிரதமராக காந்தி விருப்பம் தலாய்லாமா\nலார்ட் மௌண்ட்பாட்டனுடன் இணக்கமான தோழமையுடன் பிரிவினையின் பொழுது எழுந்த சிக்கல்களை சிறப்பாக கையாண்டார் என்று கூறுவது பொருந்தும், காஷ்மீர் பிரச்சனையை சுலபமாக முடிக்க தவறவிட்டதும், சீனாவுடன் போர் புரிந்ததுமே அவர் செய்த தவறு. 500ருக்கும் மேற்பட்ட சமஸ்தினங்களை ஒரு குடையின் கீழ் இணைப்பது என்பது சுலபமான காரியமில்லை. 1971டில் ருசியாவை தவிர அணைத்து நாடுகளும் நமக்கு எதிராக நின்றது. அரபு நாடுகள், மற்றும் அமெரிக்கா பாகிஸ்தான் பின்னால் அணிவகுத்து நின்றது. 1971 வங்கப்போரில் இந்திரா அரசு செயல்படாமல் போயிருந்தால் அந்த ஆண்டே வங்காளத்தில் உள்ள அணைத்து ஹிந்துக்களையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் துடைத்தெறிந்திருப்பர். அன்று பாகிஸ்தான் ராணுவத்தின் முதல் இலக்கே வங்காளத்தில் இருக்கும் ஹிந்துக்களே. இந்திரா காலத்திற்கு பிறகு நேரு குடும்பத்தை விட்டு காங்கிரஸ் வெளியேவந்திருக்கவேண்டும். இந்திராவிற்கு பின்னால் நேரு குடும்பத்திலிருந்து வந்த எவரும் பிரதமர் நாற்காலிக்கு பொருத்தமில்லாதவர்களே. 09-ஆக-2018 08:36:28 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_01_15_archive.html", "date_download": "2018-08-18T00:24:01Z", "digest": "sha1:IPXZIVFAIFNHKDFYS2ZAQGSOIWWS76EN", "length": 67738, "nlines": 721, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/01/15", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/08/2018 - 19/08/ 2018 தமிழ் 09 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n - கவிஞர் க. கணேசலிங்கம்\nமெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் ”தைத்திருநாள் விழா 2017”\nதைத்திருநாள், தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 சனிக்கிழமையன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ் லேண்டிங் என்னுமிடத்தில் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களால் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டுள்ளது.\nகாலை 10.00 மணிக்கு மண்பானை வைத்து கலாச்சார முறைப்படி ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு \"விந்தம்\" தமிழ்ப்பாடசாலை மாணவர்களது தைவணக்க நிகழ்வுகளுடன் சிறப்பாகஆரம்பித்தது, அடுத்து தமிழர் பண்பாட்டு விளையாட்டுக்களான சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுகள் நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் முதியவர்களால் பாகுபாடின்றி மிகவும் உற்சாகத்துடன் விளையாடப்பட்டது அத்துடன் சிறுவர்களுக்கான குறுந்தூர ஓட்டம், பலூன் உடைத்தல் ஆகிய விளையாட்டுக்களும் சிறப்பாக நடைபெற்றன.\nகம்பன் கழகம் நடாத்தும் தகவல் தினம் 21 .01 .2017\nஇலங்கையில் பாரதி --- அங்கம் 06 - முருகபூபதி\nஇலங்கையில் ஐந்து சதத்திற்கு ஒரு தமிழ்ப்பத்திரிகை விற்கப்பட்டிருக்கும் தகவலுடன், இந்தத்தொடரின் ஆறாவது அங்கத்திற்குள் வருகின்றோம்.\nஇன்று இவ்வாறு மிக மிகக்குறைந்த விலையில் ஒரு அச்சுஊடகத்தின் பிரதியை வாங்கமுடியாதிருப்பதற்கான காரணங்கள் வாசகர்களுக்குப்புரியும்.\nஎதிர்காலத்தில் இணையத்தின் ஊடாக செய்திகளை படிக்கமுடியும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்காத -- கற்பனை செய்தும் பார்த்திராத அக்காலத்தில் ஐந்து சதத்திற்கு கொழும்பிலிருந்து விற்பனைக்கு வந்திருக்கும் வீரகேசரி, சுமார் 86 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் தோன்றியது.\nஅக்காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து சதேசமித்திரன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளும் மலேசியாவிலிருந்து தமிழ்நேசன் பத்திரிகையுமே இலங்கைத்தலைநகர் தமிழ் வாசகர்களின் தேவையை பூர்த்திசெய்தன.\nவடபுலத்தில் ஈழகேசரி, ஈழநாடு என்பன இங்குள்ள வாசகரிடம் செல்வாக்குச்செலுத்தின. காலப்போக்கில் இவற்றின் மறைவையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து ஈழமுரசு, முரசொலி, ஈழநாதம், வெள்ளிநாதம், திசை, நமது ஈழநாடு, நமது முரசொலி, வைகறை, தாய்வீடு முதலான பத்திரிகைகளும் அதன்பின்னர், உதயன், வலம்புரி, தினமுரசு, யாழ். தினக்குரல் என்பனவும் வெளியாகி கடந்த தேர்தலையடுத்து தினமுரசுவும் தனது ஆயுளை முடித்துக்கொண்டது.\nவெம்பல் - நோயல் நடேஷன்\nஇருபத்தைந்து வருடங்களின் பின்பாக யாழ்ப்பாணம் செல்ல முடிந்ததற்கு ரோஜாவிற்குப் போர் முடிந்தது மட்டுமல்ல. பலகாரணங்கள்.\nகாரணங்களை அவள் மனத்தில் உருவகித்துப் பார்த்தாள்.\nசில வருடங்கள் முன்பாக கணவன் இறந்தது பெரிய வெற்றிடத்தை வாழ்வில் உருவாக்கியது.\nஇவ்வளவு காலமும் மகனும் மகளும் குழந்தைகள் எனப் பொத்திப் பொத்தி பொக்கிசமாக வளர்த்தபின் பெரியவர்களாக கிழமைக்கும் மாதத்திற்கும் ஒரு தடவை வந்து அம்மாவைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பிழைசொல்லமுடியாது. இறகுகள் முளைத்த பின்பு புதிதான வாழ்க்கையை அவர்கள் தேடுவதுதானே எனது விருப்பமும். பதினைந்தாவது வயதில் தனியே விடப்பட்ட என்னை விடப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களே\nஎனது வாழ்க்கை, குழந்தை, சிறுமி எனப் பயமற்று புல்தரையில் விளையாடிய பருவகாலம் போரின் வேகத்தில் பந்தயக் குதிரையாக வாழ்க்கை மைதானத்தை வேகமாகக் கடந்தது. இளம்பெண், மனைவி என்ற காலம் சுதந்திரத்தை இழந்து, பயத்தில் வனத்தில் ஒதுங்கி வாழும் நிலையாகியது. இப்பொழுது கடமைகள் முடிந்து பயமற்று நீண்ட மணற்பிரதேசத்தில் கால் புதைய நடக்கும் சுதந்திரமான காலத்தை அடைந்துவிட்டதுபோன்ற எண்ணம் துணிவைக்கொடுத்தது. எனது முதிர்வே துணையற்று போகும் துணிவை எனக்குக் கொடுத்து தனியாக இலங்கைக்கு செல்லத் தூண்டியது\nNew South Wales மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான Parramatta மாநகரில், அவுஸ்திரேலியாவில் புதிதாய் குடியேறியவர்களும் - அவர்களை வழிநடத்தும் நிறுவனங்களாகிய Community Migrant Resource Centre, Settlement Services International, Marist 180, Jesuit Refugee services மற்றும் தமிழ் நலன் விரும்பும் சங்கங்களான அன்பாலயம், தமிழ் மகளிர் அஅபிவிருத்தி குழு, Recover, தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், அவுஸ்திரேலிய கம்பன் கழகம் என்பன இணைந்து நடாத்தும் மாபெரும் தைப்பொங்கல் விழா,\nஎதிர்வரும் தைத்திங்கள் 21ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாவிலை தோரணங்கள் சலசலக்க, மங்கள நாதஸ்வரம் முழங்க Parramatta Centinary Square இல்\nதமிழர் திருநாளாம் உழவர் திருநாள் தைப்பொங்கல் விழா கொண்டாட அனைத்து தமிழர்களையும் சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினராகிய நாங்கள் அன்போடு வருக வருக என்று அழைக்கின்றோம்.\nதமிழர் விளையாட்டு விழா- 2017 மெல்பேர்ண்- ஒஸ்ரேலியா\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (8ம் திகதி), 16-01-1993 அன்று வங்கக்கடலில் வீரகாவிய -மாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக தமிழர் விளையாட்டு விழா மெல்பேர்ணில் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்படுகின்ற இவ்விளையாட்டுவிழா, இந்த ஆண்டும் மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.\nகாலை 9.00 மணிக்கு மெல்பேர்ண் East Burwood மைதானத்தில் ஆரம்பமான இவ்விளையாட்டுவிழா நிகழ்வில், ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு விஸ்ணுராஜன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை இளைய தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரான செல்வன் ரகு அவர்கள் ஏற்றிவைத்தார்.\nதொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு பாரதி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் திரு வே. பரந்தாமன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.\nசிட்னியில் ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா 21 .01 .2017\nமோடிக்கு பன்னீர்செல்வம் அவசர கடிதம்\nவெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி - தாய்லாந்தில் தொடரும் இயற்கையின் சீற்றம்\nஇந்திய உணவகத்தில் உணவு உண்ட லண்டன் சிறுமி மரணம்\n48 ஐ .எஸ். தீவிரவாதிகளை கொலை செய்த துருக்கி இராணுவம்..\nவறண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது தமிழ்நாடு\nஇறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா\nஅவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம்\nஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார்\nகந்தகார் குண்டுவெடிப்பு ; 5 ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலி\nதமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்\nஇலங்கையில் சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழ் மக்கள், சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன், இது எனது கடமை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய ரீதியாக வழங்கப்படுகின்ற அரசியல் தீர்வின் ஊடாக நாட்டில் வாழும் சகல மக்களதும் இறைமை மதிக்கப்பட வேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கூட்டமைப்பு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். புதிய அரசியல் யாப்பை பொறுத்தளவில் ஒற்றையாட்டி, சமஷ்டி, வடக்கு – கிழக்கு மீள் இணைப்பு என்பன குறித்து பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன. அரசியல் சாசன உருவாக்கத்தின்போது சர்ச்சைகளும் கேள்விகளும் எழுவது சகஜம். இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஜல்லிக்கட்டு விவகாரம் வலுத்துள்ள நிலையில், இந்திய அளவில் சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டும், அலங்காநல்லூரும் பேசுபொருளாக ஆயிரக்கணக்கானோரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அரசியல், சாதி, மதங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தன்னார்வலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் முடிவு செய்ததுடன் களத்திலும் குதித்துள்ளனர்.\nநீதிமன்றங்களின் கடும் நிபந்தனைகள், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்ச நீதிமன்றம் விதித்த தடை காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது. | அதன் விவரம்: உச்ச நீதிமன்றத் தடையால் இளைஞர்கள் எழுச்சி: 3 நாள்களில் 30 கிராமங்களில் ஜல்லிக்கட்டு |\nகுறிப்பாக, தமிழகத்தில் பரவலாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டம் வலுப்பெற்றதற்கு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பதிவுகள் முக்கியக் காரணமாக இருக்கிறது.\nதமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை ; 43ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு\nகஞ்சாவில் ரொட்டி சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில் வாக்குமூலம்\nபெற்றோர் பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்\nஜோசப் பராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.\nநல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் பரிந்துரைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்துங்கள்\nஇலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்திரேலியா.\nஇந்திய ரூபாயின் சுவையான வரலாறு பேராசிரியர் கே. ராஜு\nஇந்திய ரூபாய் பல நூற்றாண்டுகால சுவையான வரலாற்றினை உடையது. உங்கள் பாக்கெட்டிலோ பர்சிலோ உள்ள ரூபாயின் (மோடியின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு உங்கள் பாக்கெட்டில் ரூபாய் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்) கடந்த காலம் பல திருப்பங்கள் கொண்டது. ரூபாய் நோட்டில் பிரபலாகிவிட்ட மகாத்மா காந்தியின் சிரிப்புக்குப் பின்னால் நீண்ட போராட்டம், தேடல், செல்வம் கொண்ட வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு பண்டைக்கால இந்தியாவில் கி.மு. 6வது நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றில் சில முக்கியமான அம்சங்களை மட்டும் பார்ப்போம்.\nசீனர்கள், மத்தியக் கிழக்கைச் சேர்ந்த லித்தியர்களோடு உலகின் பழமையான நாணயங்களை வெளியிட்ட பெருமை பண்டைக்கால இந்தியர்களுக்கு உண்டு. கி.மு. 6வது நூற்றாண்டில் அச்சிடப்பட்ட இந்த நாணயங்கள் பண்டைய இந்தியாவில் அன்றிருந்த காந்தாரா, குண்டல, குரு, பாஞ்சால, சௌராஷ்ட்ரா போன்ற ராஜ்யங்களைக் குறிக்கும் மகாஜனபதாஸ் என அழைக்கப்பட்டன. வெள்ளியிலான இந்த நாணயங்கள் வட்டம், சதுரம் போன்ற முறையான வடிவத்தில் அமையவில்லை. பிறகு வந்த மௌரியர்கள் தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம் போன்ற உலோகங்களில் நாணயங்களை வெளியிட்டனர். அடுத்து வந்த இந்திய கிரேக்க குஷான வம்சத்து மன்னர்கள் நாணயங்களில் ஓவியத் தலைகளைப் பொறிக்கும் வழக்கத்தைத் தொடங்கினர். இந்த வழக்கம் எட்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. குப்தப் பேரரசு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்டது. அந்த நாணயங்களில் குப்த மன்னர்களின் சித்திரங்கள் இடம் பெற்றன.\nகி.பி. 12-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய சுல்தான்கள் இந்திய மன்னர்களின் வடிவங்களை நீக்கிவிட்டு இஸ்லாமிய எழுத்துக்களைப் பதித்தனர். 1526ஆம் ஆண்டில் தொடங்கிய முகலாய சாம்ராஜ்யம் ஓர் ஓருங்கிணைக்கப் பட்ட நிதியமைப்பு முறையைக் கொணர்ந்தது. ஹுமாயூனைத் தோற்கடித்த ஷேர் ஷா `ருபியா' எனப் பெயரிடப்பட்ட வெள்ளி நாணயத்தை வெளியிட்டது ரூபாயின் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை எனலாம்.\nமுதன்முதலாக தாளில் அச்சடித்த ரூபாய் நோட்டு பிரிட்டிஷ் இந்தியாவால் வெளியிடப்பட்டது. 1857 சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு ரூபாயை இந்தியாவின் அதிகாரபூர்வமான கரன்சி என பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. நோட்டுகளிலும் நாணயங்களிலும் ஐந்தாவது ஜார்ஜ் மன்னரின் தலை இடம் பெறத் தொடங்கியது.1862-ல் மகாராணி விக்டோரியாவைக் கௌரவிக்கும் விதமாக அவரது படம் இடம் பெற்ற வங்கி நோட்டுகளும் நாணயங்களும் ஏராளமாக வெளியிடப்பட்டன. அவரது காலத்திற்குப் பின் வந்த மன்னர்களின் படங்கள் நாணயங்களில் இடம் பெறுவது பின்னர் தொடர்ந்தது.\nஆட்சியில் இருக்கும் வரை சமஷ்டிக்கு இடமளியேன்\nதான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ, நாட்டைப் பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்டன. அவற்றை தீர்க்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றோம். ஆனால், நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நாம் இணங்கியுள்ளதாலேயே ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் எமக்கு கிட்டியுள்ளதாக சில அச்சு ஊடகங்கள் முதற்பக்க செய்தியாக வெளியிட்டிருந்தன. நாட்டின் ஊடகத்துறை இந்தளவு ஒழுக்கமற்று செயற்படுவதை முன்னிட்டு மிகவும் வேதனையடைகிறேன். செய்திகளை வழங்கும்போது சமூகத்திற்கு உண்மையை உரைக்க வேண்டும்.\nஅதேபோன்று, வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்துள்ள நிலையில், நாட்டை விற்கப் போகின்றோம் என சிலர் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். நாட்டில் கடந்த காலங்களில் முதலீட்டு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் வெளிநாட்டவர்களே அதிகமாக உள்ளனர். இதில் எங்காவது நாட்டை விற்பனை செய்துள்ளார்களா இன்று பலர் குறிப்பிடுவதைப் போன்று இந்நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தவோ நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன்” என்றார்.\nகாலனித்துவ வரலாறு - தி. சுவாமிநாதன், நாமக்கல்.\nஐரோப்பிய நாடுகள் மறுமலர்ச்சியை அடுத்து பின்பற்றிய குடியேற்றக் கொள்கையினால் பல நாடுகள் கைப்பற்றப்பட்டு சில நூற்றாண்டுகள் ஆதிக்கத்திற்கு உட்ப்படுத்தப்பட்டு பின்பு சுதந்திரமும் வழங்கப்பட்டது.\nஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் பிரான்ஸ் ஸ்பெயின் போர்ட்ச்சுக்கல் நெதர்லாந்து முதலான நாடுகள் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்காசிய நாடுளை காலனித்துவத்திற்கு உட்படுத்தின.\nகுடியேற்றவாதம் பொதுவாக குடியேறுபவர்களுடைய பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் உள்@ர் மக்களுடையவற்றை காட்டிலும் மிக உயர்ந்தவை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பது வழக்கம். வலிமை பொருந்திய ஐரோப்பிய நாடுகளிடம் துப்பாக்கி பீரங்கி கட்டுக்கோப்பான ராணுவம் மற்றும் நவீன கப்பல்படை இருந்தது. வறிய நாடுகளை ஆக்கிரமித்தன. முதலாளித்துவ காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் இரும்புக் கரங்களின் பிடியில் பல நாடுகள் சிக்கிக் கொண்டன.\nஇன்று மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய சக்திகள் பலாத்காரமாக பிடித்து வைத்து அவற்றின் வளங்களை சுரண்டிய காலனித்துவ காலகட்டம் நீடித்தது பல நூற்றாண்டுகள் ஆகும். 16ம் நூற்றாண்டில் தொடங்கிய காலனி ஆதிக்கம் 20-ம் நூற்றாண்டின் முற்பாதி வரை நீடித்தது. காலனி நாடுகளை பிடிப்பதில் பிரிட்டன், போர்ட்சுகல் பிரான்சு ஸ்பெயின் ஆகிய நாடுகள் வெகுவேகமாக தீவிரமாக செயல்பட்டன. சீனா ஜப்பான் போன்ற நாடுகளை ஐரோப்பிய சக்திகளால் நெருங்கவோ, அடிமைப்படுத்தவோ இயலவில்லை. அமெரிக்காவும் கூட பிரிட்டிஷ் காலனியாகத்தான் முதலில் இருந்தது. ஆஸ்திரேலியாவை பிரிட்டன் அடிமைப்படுத்தியது. பிரான்ஸ் நாட்டிற்கும் பாண்டிச்சேரிக்கும் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு.\nவிளம்பர கட்டுப்பாடு: தயாரிப்பாளர் சங்கம் மீது பார்த்திபன் அதிருப்தி\nவிளம்பர கட்டுப்பாடுகள் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் பார்த்திபன்.\nபார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சாந்தனு, பார்வதி நாயர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது. விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' படத்துடன், இப்டம் மட்டும் தான் வெளியாகியுள்ளது.\nமிகவும் குறைந்த திரையரங்களில் வெளியாகியுள்ளது 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன், தயாரிப்பாளர் சங்கத்தின் மீதிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.\n\"தமிழகத்தில் இருக்கும் 1000 திரையரங்குகளில், 800-ல் 'பைரவா' வெளியாகியுள்ளது. மீதமுள்ள 200-ல் தான் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெளியாகியுள்ளது. 'பைரவா' போன்ற பெரிய படத்தோடு வெளியாகும் போது, முழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டியுள்ளது.\nஆனால், தயாரிப்பாளர் சங்கம் அவர்களுடைய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. 'பைரவா'வுக்கு இணையாக 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்கு திரையரங்குகள் கிடைக்காத போது என்னுடைய விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியாது.\nஎங்களுக்கு சுதந்திரம் அல்லது சமத்துவம் கொடுங்கள் அல்லது எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்\" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.\nபேய் கதைகள் தமிழ் சினிமா பாத்து பழகிய விஷயம். இங்கேயும் நாங்களும் வித்தியாசமான பேய் கதையை எடுப்போம் என கூறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோ என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் புவன் R நுல்லன்.\nசரி இது நிஜமாகவே பேய் கதையா, இல்லை எப்படிபட்ட கதை என பார்ப்போம்.\nதுணை நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், மேக்கப் மேன் முனிஸ்காந்த் இருவரையும் வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பேய் இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் செல்வாவை ஏமாற்றுகிறார்கள் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள்.\nஒரு கட்டத்தில் செல்வாவிடம் சுரேஷ் மாட்டிக்கொள்கிறார். பின் செல்வா, சுரேஷை வைத்தே பாலடைந்த ஒரு ஸ்கூலை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அதே ஸ்கூலை முன்னாள் எம்.எல்.ஏ. மைம் கோபியும் வாங்க நினைக்கிறார்.\nகெட்ட சக்திகள் இருக்கும் கட்டிடத்தை மைம் கோபி வாங்க மாட்டார் என்பதை தெரிந்துக் கொண்ட செல்வா, சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களை அந்த பாலடைந்த ஸ்கூலில் பேய் இருப்பதாக நாடகம் நடத்தி மைம் கோபியை பயமுறுத்த சொல்கிறார். இல்லையென்றால், போலீசிடம் சுரேஷ் ரவியை சிக்க வைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். போலீசுக்கு பயந்து அந்த பாலடைந்த ஸ்கூலுக்கு நண்பர்களுடன் செல்கிறார் சுரேஷ் ரவி.\nஇறுதியில் மைம் கோபி அந்த ஸ்கூலை வாங்கினாரா இல்லை செல்வா வாங்கினாரா சுரேஷ் மற்றும் நண்பர்கள் நிலைமை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.\nமுன்பே சொன்னது போல் பேய் கதைகள் தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிது அல்ல. ஆனால் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமான பேய் கதைதான். இதில் முக்கியமாக இருப்பது காமெடி. திகில் படத்திற்கு தேவையான காட்சிகளை வைத்து சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார்.\nபடத்தில் காமெடி காட்சிகள் பெரிய ப்ளஸ். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு ஆங்கிலம் பேசுவது, முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகளிலெல்லாம் திரையரங்கில் சிரிப்பு சரவெடி தான்.\nகாமெடி சரவெடி தான். பக்காவான கதைக்களம்.\nசிரிப்புக்கு புல் கேரண்டி என்பதால் குறை தெரியவில்லை.\nமொத்தத்தில் மோ தியேட்டர் போய் பாருங்க புல் கேரண்டி காமெடிய Enjoy பண்ணுங்க.\n - கவிஞர் க. கணேசலிங்கம்\nமெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் ”தைத்திருநா...\nகம்பன் கழகம் நடாத்தும் தகவல் தினம் 21 .01 .2017\nஇலங்கையில் பாரதி --- அங்கம் 06 - முருகபூபதி\nவெம்பல் - நோயல் நடேஷன்\nதமிழர் விளையாட்டு விழா- 2017 மெல்பேர்ண்- ஒஸ்ரேலியா...\nசிட்னியில் ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா 21 .01 ....\nதமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைக...\n. ஜல்லிக்கட்டு விவகாரம் வலுத்துள்ள நிலையில், இந்த...\nஇந்திய ரூபாயின் சுவையான வரலாறு பேராசிரியர் கே. ராஜ...\nஆட்சியில் இருக்கும் வரை சமஷ்டிக்கு இடமளியேன்\nகாலனித்துவ வரலாறு - தி. சுவாமிநாதன், நாமக்கல்.\nவிளம்பர கட்டுப்பாடு: தயாரிப்பாளர் சங்கம் மீது பார்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/19-secrets-women-wish-you-knew-021226.html", "date_download": "2018-08-18T00:40:03Z", "digest": "sha1:JGQW636DGDLHYCMRA7DBGRJQZ6G3Z4AC", "length": 28481, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்கள்மேல் பெண்களுக்கு இருக்கும் 19 ரகசிய ஆசைகள் என்னென்ன தெரியுமா?... நீங்க இத செய்வீங்களா? | 19 Secrets Women Wish You Knew - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்கள்மேல் பெண்களுக்கு இருக்கும் 19 ரகசிய ஆசைகள் என்னென்ன தெரியுமா... நீங்க இத செய்வீங்களா\nஆண்கள்மேல் பெண்களுக்கு இருக்கும் 19 ரகசிய ஆசைகள் என்னென்ன தெரியுமா... நீங்க இத செய்வீங்களா\n இந்த கேள்விக்கான பதிலைத் தேடும் ஆண்களுக்கு இந்த பதிவில் பதில் உள்ளது. ஆம், பெண்களின் விருப்பங்கள் பற்றிய 19 ரகசியங்கள் இங்கே ஒன்றின் பின் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளன. சந்தோஷமான மற்றும் ஆரோக்கியமான ஜோடிகளைப் பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த ரகசியங்கள் அறியப்பட்டது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசென்சிடிவ் சுபாவம் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் பாராட்டுவார்கள். குறிப்பாக அவர்கள் சோகமாக இருக்கும்போது, அவர்கள் தோளை சுற்றி கைகளைக் கோர்த்து அவர்களுக்கு ஒரு ஆறுதலைத் தாருங்கள். ஆறுதலும் சமாதானமும், உங்களை இணைக்க ஒரு சிறந்த வழியாகும்.\nதீரச்செயலுக்கு ஒரு இடம் உண்டு\nகாதல் என்று வரும்போது, பாரம்பரிய வீர பண்புகள் நிறைந்த ஒரு ஆடவனை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். காதல் பற்றி பல புத்தகங்களை எழுதிய உளவியல் நிபுணர் டயானா கிர்சினெர், பி.எச்.டி, கூறுவது என்னவென்றால் , இத்தகைய பண்புகளை பெண்கள் குறிப்பாக திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ள, காதலின் முதல் கட்டத்தில் இருப்பவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். பெண்களை ஆண்கள் முன்னின்று வழி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு, பெண்களால் ஒரு கதவைத் திறக்க முடியும், ஒரு நாற்காலியை இழுக்க முடியும், ஆனால் அவர்கள் அப்படி செய்யத் தயங்கும்போது , ஆண்கள் அவர்களுக்கு இதனைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி நடப்பவர்கள் ஜென்டில்மேன் என்று பெண்கள் நினைக்கின்றனர்.\nஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கலாம். ஆனால் ஆண்கள் எப்போதும் தங்கள் உடை மற்றும் அழகில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் முதல் பார்வையில் இருந்து தேனிலவிற்கு பிறகும் உங்கள் தேவதைக்கு பிடித்தமான வகையில் உடைகள் உடுத்த வேண்டும். அவளுக்கு பிடித்த விதத்தில் உங்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் டைட் ஜீன்ஸ் அணிவது தான் அவளுக்கு பிடிக்கும் என்றால் அதனை நீங்கள் உடுத்தியே தீர வேண்டும்.\nசிவப்பு அணியும் ஆண்களுக்கு பெண்கள் விரைவில் கிடைப்பார்கள். இதனை பெண்கள் சொல்லவில்லை. பெண்களின் உள்ளுணர்வை சோதித்த உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிவப்பு நிறம், ஆண்களை சக்திமிக்கவராக, கவர்ச்சியானவராக மற்றும் பெண்களுக்கு பிடித்தமானவராக வெளிபடுத்துவதாக ஒரு சுவாரஸ்யமான ஆய்வு கூறுகிறது. ஆனாலும் அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது. சிவப்பு நிறத்தில் பொதுவாக ஆண்கள் அழகாக தோன்றுவதில்லை. ஆகவே இந்த குறிப்பை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்களைப் பொறுத்தது.\nஉங்கள் தவறுகளை மறைக்க வேண்டாம்\nஒரு நல்ல மனிதன் மிக நல்ல மனிதானாக மாற்றம் பெறுவதைப் போல் வேறு ஒரு சிறந்த விஷயம் ஒரு பெண்ணைக் கவருவதில்லை. இதனைக் கூறுவது அன்பு குரு டயானா கிர்சினெர். \"பெண்கள் தனிப்பட்ட வளர்ச்சியை நேசிக்கிறார்கள், அவர்கள் சிந்தனையும் உணர்ச்சிகளும் உள்ள ஒருவரை நேசிக்கிறார்கள்.\" ஒரு மனிதன் தன் குறைபாட்டை உணர்ந்து கொண்டால், அதை அவள் விரும்புகிறாள் - உதாரணமாக, ஒரு குறுகிய மனப்போக்கு, அல்லது வேலைக்குப் பிறகு ஒரு தவறான மனநிலையை - அதை உரையாற்ற முயற்சிக்கும் போது அதை நேசிக்கிறாள்.\nஅவள் உலகத்தை நீங்கள் உருவாக்க வேண்டாம்\nஒரு பெண்ணை எதாவது ஒன்று பாதிக்கும்போது, அவள் அதைப் பற்றி உங்களிடம் கூறும்போது நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதைத் தவிர வேறு அறிவுரையை அவள் ஏற்பதில்லை.\n\"விஷயங்களை சரிசெய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக ஆண்கள் உணர்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தீர்வை அடிப்படையாகக் கொண்டவர்கள்\" என்கிறார் கிர்சன்னர். \"ஆனால் ஒரு பெண், உண்மையில் அவள் சொல்வதை அவளின் துணை காது கொடுத்து கேட்பதையே அற்புதமாக நினைக்கிறாள். அது உறவை ஆழப்படுத்துகிறது.\"\nதலை அசைப்பது மட்டும் போதாது\nகேட்பது முக்கியம், ஆனால் அவள் கேட்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தலை ஆட்டுவது மட்டும் போதாது. அவள் இடையில் நிறுத்தும்போது, அவளைக் கருணையுடன், கவனிக்க வேண்டும் என்று அவள் விரும்புவதாக கிர்சினெர் கூறுகிறார். அவளுடைய முதலாளி அவளுக்கு ஒரு கடினமான நேரம் கொடுத்ததால் அவள் வருத்தப்படுகிறாள் என்று சொன்னால், \"நீ இன்று கடினமான வேலையை செய்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன் :என்று நீங்கள் சொல்ல வேண்டும். இதற்கான தீர்வை சொல்வதற்கு உங்கள் மனதில் எழும் உணர்வை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.\nஒரு பெண்ணிற்கு பாலியல் உணர்வு திருமணத்திற்கு பின் உடனே தோன்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் உறவில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நம்பிக்கை மற்றும் புரிதல் ஏற்பட்ட பின் அதனைத் தொடங்க ஒரு பெண் நினைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.\nபெண்கள் எதிலும் நிதானைத்தை விரும்புவார்கள். குறிப்பாக தன் கணவருடன் பேசுவது, தொடுவது அவருடன் நேரம் செலவழிப்பது என்ற ரீதியில் தான் அவர்கள் அன்பு இருக்கும். ஆனால் ஆண்கள் பெண்களுடன் துரிதமாக உறவில் ஈடுபட நினைப்பார்கள். அவர்கள் ரொமான்ஸ் செய்வதை மட்டுமே அந்த நேரத்தில் எதிர்பார்ப்பார்கள்.\nஇந்த பாதுகாப்பு உணர்வைப் பற்றி இருவரும் யோசிக்க வேண்டும். ஆண்கள் பெண்களை பாதுகாப்பாக அரவணைப்பதை எல்லா பெண்ணும் விரும்புவார்கள்.\nபெண்கள் எப்போதும் தங்கள் மனதில் உள்ளதை இரவில் கணவருடன் பகிர்ந்து கொள்வதை விரும்புவார்கள். அந்த நேரத்தில் தான் கணவரை தன் பக்கம் கொண்டு வர முயற்சிப்பார்கள். அவளுடைய விருப்பம் என்ன என்பதை அவளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். உன்னை நான் அதிகம் நேசிக்கிறேன் என்று அவளிடம் கூறுங்கள்.\nஅவள் விருப்பத்தை உங்கள் நிறைவேற்ற முடியாத தருணத்தில் வீண் பதட்டம் வேண்டாம். இருவரும் கலந்து பேசுங்கள். உங்களால் அவள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத காரணத்தை சொல்லி புரிய வையுங்கள்.\nபிரதிபலிப்பு என்பது ஒரு சிறந்த சாயலை உருவாக்கும். உங்கள் மனநிலை மற்றும் நகர்வுகளை பிரதிபலிப்பதன் மூலம், உங்களைப் பற்றி அவர் எவ்வாறு உணருகிறார் என்பதை ஒரு பெண் அடிக்கடி தெரிவிக்கிறார்.. அவள் உங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்யலாம், உங்களுக்கு பிடித்த நிறத்தை அணியலாம் அல்லது நீங்கள் அவளை அணைக்கும்போது உங்களைப் பார்த்து புன்னகை செய்யலாம், உங்களை போல் அவள் பிரதிபலிப்பதால் அவளுக்கு உங்களைப் பிடிக்கும் என்பதை உங்களுக்கு எளிதாக உணர்த்தலாம்.\nஉங்கள் சட்டை ஒரு காந்தமாக இருக்கலாம்\nஉங்கள் துணை, நீங்கள் அணியும் ஸ்வெட்டர் அல்லது சட்டையை எடுத்து அடிக்கடி அணிந்து கொள்ளலாம். ஆண்களின் சென்ட் வாசனை சில பெண்களுக்கு ஒரு ரிலாக்ஸ் உணர்வைத் தரும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nபெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதை ஆண்கள் அடிக்கடி சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆண்கள் சொல்வதை விட, ஆண்கள் அவர்களை கவனிக்கிறார்கள் என்பதையும் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். பெண்கள் அழகாக உடை அணிந்தால் நீங்கள் பாராட்ட வேண்டுமென்று என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களுடைய புதிய ஹேர் கட், புதிய உடற்கட்டு போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு உங்கள் பாராட்டை தெரிவித்துக் கொண்டே இருங்கள்.\nஉங்கள் உறவைப் பற்றி பேசுவதற்கு பயம் வேண்டாம். உங்கள் இருவருக்குமான உறவைப் பற்றி உங்கள் துணைவி உங்களிடம் பேசும்போது, நீங்கள் எதோ தவறு செய்து விட்டீர்கள் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் எது சரியாக நடக்கிறது, எது தவறாக நடக்கிறது, எல்லாம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி உங்கள் துணை உங்களிடம் கலந்து பேசுவது ஒரு நல்ல விஷயம் தான். ஒரு நேர்மையான வெளிப்படையான கலந்துரையாடல் எப்போதும் நன்மை செய்யும். இதனால் இருவரும் நெருக்கமாக முடியும்.\nநீங்கள் உங்கள் துணையின் பக்கத்தில் அமர்ந்து பேசுவதை சௌகரியமாக உணரலாம். ஆனால் பெண்கள் உங்கள் முகம் பார்த்து பேசுவதை மட்டுமே விரும்புகின்றனர். சமீபத்திய கண்டுபிடிப்பான மொபைல் வீடியோ சாட்டிங் பற்றி பேசவில்லை. நேரடியாக கண்களைப் பார்த்து பேசுவதை பெண்கள் விரும்புகின்றனர். அதுவும் இருவரும் தனிமையில் இருக்கும்போது பெண்களின் கண்களைப் பார்த்து பேசும் ஆண்களை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nஒரு பெண் தனக்கு இந்த உறவில் தொடர்வது பிடிக்கிறது என்று அடிக்கடி கூற மாட்டாள். ஒரு முறை தான் சொல்வாள். இதனை பற்றிய பேச்சு அடுத்த முறை வரும்போது, நீங்களாகவே முன் வந்து அடுத்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டும்.\nகாதல் என்பது எளிது, அது தானாக வரட்டும்:\nஒரு பெண் எப்போதும் காதல் தருணங்களை அதிகம் விரும்புவாள். அது காதலிக்கத் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆனாலும் இருபது வருடம் ஆனாலும், இந்த விருப்பம் அவளுக்கு எப்போதும் இருக்கும். பூக்கள் பரிசளிப்பது, ஒரு அழகான டின்னருக்கு வெளியில் செல்வது, காதல் கவிதைகள் கூறுவது, (உங்களுடைய கவிதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ), போன்றவை எப்போதும் ஒரு இனிமையான அனுபவத்தை தரும். இத்தகைய ரொமாண்டிக் தருணங்களை பெண்கள் எப்போதுமே விரும்புவார்கள். மற்றும் இதற்கான பாராட்டை அவர்கள் உங்களுக்கு நிச்சயம் வழங்குவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்... - My Story #295\nவாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nகலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பின் வலிமை\nநண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\nசெக்ஸ் வாழ்க்கை ஜோரா இருக்கணும்னா 12 ராசிக்காரர்களும் எதிலெல்லாம் கவனம் செலுத்தணும்\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nவட இந்திய பெண்கள், தென்னிந்திய மச்சான்ஸை விரும்புவதன் காரணங்கள்\nநடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி\nபுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/83-prisoners-plus-2-succeeded-001986.html", "date_download": "2018-08-18T00:38:02Z", "digest": "sha1:OET6JROPDEZAHQSOHU4H4HZNF2RXGN5G", "length": 10726, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "83 கைதிகள் பிளஸ்2 தேர்வு எழுதி தேர்ச்சி | 83 Prisoners Plus 2 succeeded - Tamil Careerindia", "raw_content": "\n» 83 கைதிகள் பிளஸ்2 தேர்வு எழுதி தேர்ச்சி\n83 கைதிகள் பிளஸ்2 தேர்வு எழுதி தேர்ச்சி\nசென்னை : புழல் சிறையை தேர்வு மையமாக வைத்து திமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 95 பேர் பிளஸ்2 தேர்வு எழுதினர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் புழல் சிறையில் தேர்வு எழுதிய 95 பேரில் 83 கைதிகள் தேர்ச்சி பெற்றனர்.\nஅதில் 8 பேர் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்து உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை படிப்பதற்கு வயது வரம்பு, இடம் சூழல் எதுவும் தடையாக இருப்பதில்லை. ஜெயிலில் இருந்த கைதிகளும் பிளஸ்2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.\nபடிப்பதற்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் போதும் எந்த இடத்தில் இருந்தாலும் படிக்கலாம் என்பதற்கு ஜெயில் இருந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இவர்கள் எடுத்துக்காட்டாவார்கள்.\nபுழல் சிறையில் உள்ள கைதி முத்துச் செல்வன் (வயது 24) 1064 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றார். பாளையங்கோட்டை சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி முத்துராமலிங்கம் 1057 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். திருச்சி சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி செந்தில்குமார் 1052 மதிப்பெண்களைப் பெற்று 3ம் இடத்தைப் பெற்றுள்ளார்.\nதிருச்சி சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சுவாமிநாதன் 1038, யோகநாதன் 1022, டேனியல் 1019, கோவை சிறை கைதி வேல்முருகன் 1006 புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஜெயகர்உசேன் 1034 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.\nமுதல் இடம் பெற்று புழல் சிறை கைதி முத்துச் செல்வன் கடந்த 2011ம் ஆண்டு சென்னை நெற்குன்றத்தில் நான்கு அரை பவுன் நகைக்காக ஜெயலட்சுமி என்ற பெண்ணை கொலை செய்து குளிர் சாதனை பெட்டிக்குள் அடைத்து வைத்தவர். இந்த வழக்கில் அவருக்கு 2013ம் ஆண்டில் திருவள்ளூர் கோர்ட்டு தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் அவர் தொடர்ந்த மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபிளஸ்2 தேர்வில் தேர்ச்சி அடைந்த கைதிகளை சிறை அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/11/23163520/What-is-the-food-that-strengthens-the-soul.vpf", "date_download": "2018-08-18T00:51:44Z", "digest": "sha1:HOF5GRVAKUEIENIJ24WDVX45PX2PRZ4G", "length": 20509, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "What is the food that strengthens the soul? || ஆன்மாவை பலப்படுத்தும் உணவு எது?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆன்மாவை பலப்படுத்தும் உணவு எது\nஆன்மாவை பலப்படுத்தும் உணவு எது\nகண்களுக்கு ஒருவனாக காணப்பட்டாலும், மனிதன் முப்பரிமாணங்களை உடையவனாக இருக்கிறான். ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்றையும் ஒருங்கிணைந்து பெற்றவனே மனிதன்.\nகண்களுக்கு ஒருவனாக காணப்பட்டாலும், மனிதன் முப்பரிமாணங்களை உடையவனாக இருக்கிறான். ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்றையும் ஒருங்கிணைந்து பெற்றவனே மனிதன். மிருகங்களுக்கு ஆத்மா மட்டும் கிடையாது. மனிதன் தன்னுடைய முப்பரிமாணத்தில் கண்ணுக்குத் தெரியும் அம்சத்தையே போற்றிக் கொண்டாடுகிறான். அந்த வகையில் கண்களுக்குத் தெரியும் சரீரத்தை, அதாவது உடலைப் பேணுவதில் தான் ஆயுள் நாட்களைக் கழிக்கிறான்.\nஅழகு, அந்தஸ்து, இவற்றை அடைய தேவைப்படும் செல்வம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறான். இவற்றைப் பெற்று, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிலர் திருப்தி அடைகின்றனர். பலர் திருப்தி அடையாமலேயே கடந்து செல்கின்றனர். உடல் என்பது அழியாதது அல்ல என்ற உண்மையை இவர்கள் அறியாதவர்கள் அல்ல. அழியக்கூடியதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது, கோடையில் ஐஸ்கட்டியில் சிலை செய்து அதை அலங்கரிப்பது போன்றது.\n‘எந்தக் காலத்திலும் அழியாத ஆத்துமான் என்ற வஸ்து தனக்குள் இருக்கிறது’ என்பதை உணர்ந்தாலும் அதை அழகுள்ளதாக்கும் வழிகளை மிகப் பெரும்பாலானோர் நாடுவதில்லை. ஆத்மாவை பலப்படுத்தும் ஆன்மிக மார்க்கத்தில் செல்வதாகக் கருதி, பலர் தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள். புனிதப் பயணங்கள் உள்ளிட்ட உடல் ஒடுக்குதல்களால் ஆத்மா பலப்படாது. உடலை பலப்படுத்தி வாழச் செய்வதற்கென்று இருக்கும் உணவுகள் போல, ஆத்மாவுக்கென்று தனி உணவு உள்ளது.\nஅந்த உணவைக் குறித்து இயேசு, ‘ஜீவ அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்’ என்றார் (யோவான் 6:35). சரீரத்துக்கான உணவு, நீர், உறவுகள் போன்றவை தற்காலிக திருப்தியை அளித்தாலும், மீண்டும் அவற்றை சரீரம் நாடுகிறது. தற்காலிக திருப்தியை மட்டுமே அளிக்கும் எந்த அம்சமும் ஆத்மாவுக்கு தொடர் புடையது அல்ல.\nஆனால் இயேசு கூறிய போதனைப்படி, தீய வழியில் இருந்து மனம் மாற வேண்டும்; குற்றச்செயலுக்கான மன்னிப்பை சம்பந்தப்பட்டவரிடத்திலும் இறைவனிடத்திலும் பெற வேண்டும்; சரீரத்தை கெடுக்கும் பாவங்களை விலக்க வேண்டும்; உள்ளத்தில் இருந்து புறப்படும் பெருமை, பொறாமை, இச்சை போன்ற தீய குணங்களை அகற்ற வேண்டும்; பிறவிக் குணங்களான எரிச்சல், கோபம் போன்றவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகளை நீக்க வேண்டும் என்ற முடிவை ஒருவன் முழுமனதோடு எடுத்தான் என்றால், அப்போதுதான் அவனது ஆத்மா விழிக் கிறது.\nவிழிக்கும் அந்த ஆத்மாவை இறைவன் பலப்\nபடுத்துகிறார். ஆவி, ஆத்மா, சரீரம் ஆகிய மூன்றையும் கறைப்படுத்தக் கூடிய பாவங்கள் சூழ்ந்தாலும் அவற்றை செய்யாமல் இருக்கும் பலத்தை அவனுக்கு இறைவன் அளிக்கிறார். இந்த பாவங்களுக்குத் தப்பி வாழும் வாழ்க்கைதான் ஒருவனுடைய ஆத்மாவுக்கு நிரந்தர திருப்தி அளிப்பதாக அமைகிறது. அதாவது, இனி தனது ஆத்மாவை திருப்திப்படுத்த வேறு வழிபாடுகளுக்கு அவன் செல்லத் தேவையில்லை.\nகடல் பயணத்தில் இருப்பவர்களுக்கென்று தயாரிக்கப்படும் ஒருவகை உணவு, ஒருமுறை சாப்பிட்டாலே பல மாதங்கள் உடலுக்கு சக்தியை அளித்துக் கொண்டிருக்கும் என்று கூறப்படுவதுண்டு. அதுபோல இயேசு என்ற ஜீவ அப்பத்தை ஒருமுறை ஏற்று அவர் காட்டிய வழியில் நடக்கத் தொடங்கிய பிறகு, வாழ்நாள் முழுவதும் எந்த சூழ்நிலையிலும் ஆத்ம திருப்தியோடு அமைதி குலையாமல் இருக்கலாம். இன்னொரு உணவுக்கு அங்கும் இங்கும் அலைய வேண்டியதில்லை.\nஆத்மாவில் இப்படிப்பட்ட திருப்தியை அடைந்தவர்கள், தங்களின் சரீர ரீதியான வாழ்க்கையைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். வறுமை, வியாதி போன்ற துன்பங்கள் அவனது நிம்மதியைக் குலைத்துவிடாது. இதுவே உண்மையான ஆன்மிக வழி. ஆன்மிக வழியில் இருப்பதாக தங்களைப் பற்றி நினைப்பவர்கள், இதுபோன்ற திருப்தியோடு புலம்பாமல் இருக்கிறோமா என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.\nஇந்தக் கருத்தை தன்னை தேடி வந்த மக்களுக்கு ஒரு உதாரணம் மூலமாக இயேசு விளக்குகிறார். ஒருமுறை அதிக எண்ணிக்கையில் இயேசுவை நோக்கி மக்கள் வந்தனர். அவர்களுக்கு போதனை வழங்கிய இயேசு, அப்பத்தையும், சமைத்த மீனையும் அற்புதமாக கொண்டு வந்து அவர் களுக்குக் கொடுத்தார். இந்த அற்புதத்தைக் கண்ட அவர்கள், இயேசுவை தங்கள் நாட்டை ஆளும் ராஜாவாக ஆக்கும் முயற்சியில் இறங்கினர் (யோவான் 6:14, 15).\nஅற்புதங்களைச் செய்வதன் மூலம் மக்களை தன்பக்கம் வரச் செய்து, ஆத்மாவுக்கு ஏற்ற போதனைகளை இயேசு வழங்கினாலும், மக்களோ அந்த போதனைகளுக்கு செவி சாய்க்காமல் சரீர ரீதியான கண்ணோட்டத்திலேயே அவரது அற்புதங்களையே நாடினர். அப்படிப்பட்ட மக்களை விட்டு இயேசு விலகிச் சென்றார்.\nஇன்றும் அதுபோன்ற மக்கள் கூட்டம் உள்ளது. ஆத்மாவை குணப்படுத்தும் இயேசுவின் தன்மை, நோக்கம் பற்றி அறிந்தும், அவரை வியாதி, வறுமை போன்ற சரீர விடுதலைகளுக்காக மட்டும் தேடி வருகிறவர்களை விட்டு அவர் விலகுகிறார் என்பதற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம்.\nமீண்டும் அந்த மக்கள் அவரை விரட்டிப் பிடித்தனர். அப்போது இயேசு, ‘வயிற்றை நிரப்பி தற்காலிக திருப்தி அளிக்கும் உணவுக்காக என்னை தேடி வருகிறீர்கள். இது தின்ற பிறகு அழிந்துபோய்விடுகிறது. என்னிடத்தில் இருந்து அழியாத ஆன்மாவுக்கான உணவை பெற்றுக்கொள்ளுங்கள். என் போதனைகளை விசுவாசித்து அதன்படி நடப்பதுதான் என்றென்றும் அழியாத திருப்தி தரும் உணவாக உள்ளது’ என்று போதித்தார்.\nமோசே காலத்தில் மக்களின் பசிக்காக வானத்தில் இருந்து அதிசயமாக ‘மன்னா’ என்ற உணவு தரப்பட்டது. அது தூதர் களுக்கான உணவு. அதை உண்டவர்கள்கூட பின்னர் இயல்பாக இறந்துவிட்டனர். தூதர்கள் போல் சரீரத்துக்கு அழியாத தன்மையை அது கொடுக்கவில்லை. எனவே, ‘சரீர ரீதியான வி‌ஷயங்களை என்னிடம் தேடாதீர்கள். நான் சொல்வதெல்லாம் ஆவி, ஆத்மாவுக்கானது’ என்பதை வலியுறுத்தினார் (யோவான் 6: 26, 27, 49, 50, 51, 63).\nஇன்றும் பலர் மூலம் விடுதலைக்கான அழைப்பு விடுக்கப் படுகிறது. அந்த விடுதலை எதற்கானது சரீரத்துக்கானதா என்பதை ஆராய வேண்டும். இயேசுவின் போதனைப்படி நடக்காதவன் சரீர தேவைகளைதான் முன்னிறுத்துவான். அதையே மற்றவர்களுக்கும் போதிப்பான்.\nஆனால் இயேசுவின் வழிநடந்து, ஆத்ம விடுதலை அடைந்து, நிரந்தர திருப்தியை அடைந்தவன், ஆத்மா சம்பந்தப்பட்டதையே போதிப்பான் என்று இயேசு கூறியிருக்கிறார் (யோவான் 3:6).\nஎனவே போதனை எதைப் பற்றியது என்பதை வைத்து போதகரை அடையாளம் காணுங்கள்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\n2. நோய்களை பூரண குணமாக்கும் அமிர்த நாழிகை\n3. தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை\n4. வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன்\n5. ஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mktyping.com/viewtopic.php?f=17&t=2270&sid=1558415a21b58ec486268a9cc29ff549", "date_download": "2018-08-18T01:06:31Z", "digest": "sha1:IATGJPXND6WWNEO36DTL3N7ZCOA4XUXJ", "length": 2542, "nlines": 70, "source_domain": "mktyping.com", "title": "Snapdeal Deal Of The Day - UPTO 80% OFF - MKtyping.com", "raw_content": "\nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்கார்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஇன்று Snapdeal - 80% வரை ஆஃபர் நாம் வாங்கும் பொருட்களுக்கு தருகிறார்கள், electronics, computer accessories, mobile accessories, home & kitchen, baby care இது போன்ற பொருட்களுக்கு ஆஃபர் கிடைக்கிறது, ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க நினைப்பவர்கள், இந்த ஆஃபர் பயன் படுத்தி உங்களது பணத்தை மிச்ச படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு : amazontamil.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403262", "date_download": "2018-08-18T01:32:57Z", "digest": "sha1:Z632CI3LGUZ3DG3M3UEYS5STVCHTBDBS", "length": 11950, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் மீண்டும் சிக்கல் : திண்டிவனம் மக்கள் வேதனை | The problem of building a new bus station is: Tindivanam people are suffering - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதிய பேருந்து நிலையம் கட்டுவதில் மீண்டும் சிக்கல் : திண்டிவனம் மக்கள் வேதனை\nதிண்டிவனம்: திண்டிவனத்தில், நகராட்சி ஆணையர் மாற்றப்பட்டதை தொடர்ந்து, புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் துவங்குமா என்ற வேதனையில் பொதுமக்கள் உள்ளனர்.திண்டிவனத்தில், ரயில்வே நிலையம் அருகில் இந்திரா காந்தி பஸ் நிலையம் கடந்த 1971ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பேருந்துகள் அதிகரிப்பால் பேருந்துகள், நிலையத்துக்குள் வராமல், மேம்பாலத்தின் அருகிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல துவங்கின. அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் நகருக்கு புதிய பேருந்து நிலையம் கட்டாயம் தேவை என்ற நிலையில் 1997ல் திமுக ஆட்சியில், திண்டிவனம் ஏரியில் நீர்பிடிப்பு இல்லாத பகுதியில் ஆறு ஏக்கர் இடம் நகராட்சி மூலம் வருவாய் துறையிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், 2001ல் அந்த இடத்தில் பேருந்து நிலையம் வருவதற்கு அதிமுக அமைச்சர் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து, அதற்கு பதிலாக மயிலம் ரோட்டில் உள்ள வக்ப் போர்டுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு பேருந்து நிலையம் வர முயற்சி மேற்கொண்டார்.\nஇதை தொடர்ந்து 2005ல் திறப்பு விழா நடந்தது. அப்போது தேர்தல் அறிவிப்பு வந்ததால் திறந்த பேருந்து நிலையம் உடனே மூடப்பட்டது. அதன்பிறகு பேருந்து நிலையம் வருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தது. இதனால் 2013ல் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கியதாக சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் புதிய பேருந்து நிலையம் தொடங்குவதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த நிலையில், திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையராக பதவியேற்ற சுரேந்தர்ஷா, நகர மக்களின் கோரிக்கையை ஏற்று 20 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த புதிய பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்த அதிக ஆர்வம் காட்டினார்.\nரூ.20 கோடி செலவில் 100 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் நவீன பேருந்து நிலையம் அமைக்க திட்டம் தீட்டி, அதை அரசுக்கு அனுப்பி வைத்தார். நகரில் உள்ள அனைத்து பிரமுகர்களையும் அழைத்து நகராட்சியில் கூட்டம் நடத்தி, புதிய பேருந்து நிலையம் வர அவர்கள் தந்த நிபந்தனையற்ற ஆதரவை வீடியோவாக எடுத்து அரசுக்கு அனுப்பி வைத்தார். புதிய பேருந்து நிலையம் அமைய ஆணையர் சுரேந்தர்ஷா எடுத்த நடவடிக்கைகளை நகர மக்கள் வரவேற்றனர். புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்புடன் இருந்தனர் இந்நிலையில், திண்டிவனம் நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்து சுரேந்தர்ஷாவை தமிழக அரசு நீக்கியுள்ளது. அவருக்கு எந்த பொறுப்பும் தராமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. இது திண்டிவனம் நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புதிதாக பதவி ஏற்க வரும் ஆணையர், புதிய பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பாரா என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் உள்ளனர்.\nபுதிய பேருந்து நிலையம் சிக்கல் திண்டிவனம் மக்கள் வேதனை\nகொள்ளிடம் கரையோர பகுதிகளில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது: லால்குடி விவசாயிகள் கவலை\nகூரியர் நிறுவனங்கள் தயக்கத்தால் வெளிநாடுகளில் சீன தயாரிப்பு இந்திய தேசியக்கொடி விற்பனை\n7 மணி நேரமாக கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்பு\nதாராபுரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு டைல்ஸ்கள் வெடித்து சிதறியதால் நோயாளிகள் ஓட்டம்\nகண்டக்டர்கள் இல்லாமல் பஸ்சை இயக்க எதிர்ப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்: 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது\nதிருமங்கலத்தில் பரபரப்பு பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை விற்பனை: தத்தெடுத்த தம்பதியிடம் விசாரணை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/signs-and-different-types-of-kidney-disease-019844.html", "date_download": "2018-08-18T00:37:09Z", "digest": "sha1:GGAX2THMD4SE2VWRV5SXD3BHHUEEKUXC", "length": 20802, "nlines": 190, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த அறிகுறிகள்ல ஏதாவது உங்களுக்கு இருக்கா?... இருந்தா மொதல்ல போய் டாக்டர பாருங்க... | signs and different types of kidney disease - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த அறிகுறிகள்ல ஏதாவது உங்களுக்கு இருக்கா... இருந்தா மொதல்ல போய் டாக்டர பாருங்க...\nஇந்த அறிகுறிகள்ல ஏதாவது உங்களுக்கு இருக்கா... இருந்தா மொதல்ல போய் டாக்டர பாருங்க...\nகண்,காது போன்று சிறுநீரகமும் ஒரு ஜோடி உறுப்பு ஆகும். இது நமது ஊடலின் பின் முதுகிற்கு கீழ் அமைந்துள்ளது . உங்கள் முதுகெலும்பின் இரு பக்கத்திலும் ஒரு சிறுநீரகம் அமைந்துள்ளது சிறுநீரகம் உங்கள் உடம்பில் உள்ள இரத்தத்தை வடிகட்டி கழிவுகளை நீக்குகிறது, நீக்கியகழிவுகளை சிறுநீர்ப்பைக்கு அனுப்புகிறது. சிறுநீர் வழியாக நமது உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது.\nஉங்கள் சிறுநீரகங்கள் போதுமான அளவு இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டும் திறனை இழக்கும் போது சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. உங்கள் சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை கெடுக்க பல்வேறு காரணங்கள் உள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசுற்றுச்சூழல் மாசு அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவுகள்\nசிறுநீரக காயம் அல்லது அதிர்ச்சி\nஉங்கள் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும் போது\nஉங்கள் சிறுநீரகங்கள் தங்கள் வழக்கமான வேலையைச் செய்ய முடியாமால் போகும். இது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கலாம். மேலும் அது சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கலாம்.\nசிறுநீரக செயலிழப்புகளில் பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம்.\nபொதுவாக சிறுநீரக செயலிழப்பு கொண்ட ஒருவர் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்,\nசிலசமயம் நோய்க்கான அறிகுறி இல்லாமலும் இருப்பார்\nசிறுநீரகம் சரியாக செயல்படாததால், உங்கள் கால்கள்,கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும்\nஅதிகப்படியான சோர்வு அல்லது தூக்கம்\nநெஞ்சு வலி அல்லது அழுத்தகம்\nசிறுநீரக செயலிழப்புக்கு மிகவும் ஆபத்திலுள்ளவர்கள், பொதுவாக பின்வரும் காரணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களில் பாதிக்கப்பட்டுஇருப்பர்.\nசிறுநீரக செயலிழப்புக்கு மிகவும் ஆபத்திலுள்ளவர்கள், பொதுவாக பின்வரும் காரணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களில் பாதிக்கப்பட்டு இருப்பர். சிறுநீரகங்களுக்கு இடையே இரத்த ஓட்டம்பாதிக்கப்பட்டுஇருக்கும். சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் திடீர் இழப்பினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.\nமாரடைப்பு, இதயநோய், கல்லீரல் பாதிப்பு அல்லது கல்லீரல் செயலிழப்பு\nஉடல் வறட்சி, கடுமையான எரிச்சல், ஒவ்வாமை, கடுமையான தொற்று, ஸிப்ட்சிஸ்\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆன்டி -இனபிலம்மாட்டோரி மருந்துகள் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தலாம். சிறுநீர் கழிப்பதில் சிரமம் உண்டாகும். மேலும்\nஉங்கள் உடல் சிறுநீரை சரிவர வெளியேற்ற முடியாதபோது , நச்சுத்தன்மை அதிகரித்து சிறுநீரகத்தை செயல்பட சிரமத்தை தருகிறது.\nசில புற்றுநோய்கள் சிறுநீர் செல்லும் பாதைகளைத் தடுக்கலாம்.\nஇவை புரோஸ்டேட் (ஆண்களின் பொதுவான வகை), பெருங்குடல், கர்ப்பப்பை வாய், மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆகியவை அடங்கும்.\nசில சமயங்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்படலாம், மேலும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கலாம்.\nஉங்கள் சிறுநீரில் உள்ள இரத்தக் கட்டிகள்\nஉங்கள் சிறுநீரை கட்டுப்படுத்தும் நரம்புகளுக்கு பாதிப்பு\nஉங்கள் சிறுநீரகத்தைச் சுற்றிஇருக்கும் இரத்தக்கட்டு\nகன உலோகங்களில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான நச்சுகள்\nமது போதைப்பொருட்கள் அல்லது மருந்துகள்\nவாஸ்குலிடிஸ், இரத்த நாளங்களின் வீக்கம்\nலூபஸ், ஒரு ஆட்டோ இம்யூன் நோய் இதன் மூலம் உடல் உறுப்புகளின் வீக்கம் ஏற்படலாம்\nகுளோமெருலோனெர்பிரிஸ், சிறுநீரகங்களின் சிறிய இரத்த நாளங்களின் வீக்கம்\nஹீமோலிடிக் யூரேமிக் நோய்க்குறி, இது ஒரு பாக்டீரியா தொற்றுக்குப் பின் சிவப்பு இரத்த அணுக்களின் முறிவு,\nஐந்து வகையான சிறுநீரக செயலிழப்புகள்\nசிறுநீரகங்களுக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாதபோது\nகடுமையான பிரேரெனல் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.\nபோதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீரகங்களால் வடிகட்ட முடியாது.\nகுறைவான இரத்த ஓட்டத்தின் காரணமாக நீங்களும் உங்கள் டாக்டரும் தீர்மானித்தவுடன் சிறுநீரக செயலிழப்பு பொதுவாக குணப்படுத்த முடியும்.\nஉடல் பாதிப்பு அல்லது விபத்து போன்ற காரணங்களால் சிறுநீரகங்களுக்கு நேரடியான அதிர்ச்சியால் ஏற்படுகிறது. சிறுநீரகங்களுக்கு ஆக்ஸிஜன் இல்லாததும் , டோக்சின் ஓவர்லோட் மற்றும் இஸ்கிமியா: முக்கிய காரணங்கள்\nஅதிகப்படியான இரத்தப்போக்கு, அதிர்ச்சி, சிறுநீரக இரத்தக் குழாய் அடைப்பு\nகுரோனிக் பிரேரெனல் சிறுநீரக செயலிழப்பு\nகுறிப்பிட்ட காலத்திற்கு சிறுநீரகங்களுக்குப் போதுமான இரத்தஒட்டம் இல்லாத போது, சிறுநீரகங்கள் சுருங்கி செயல்படும் திறனை இழக்கின்றன.\nகுரோனிக் இன்டர்ன்சிக் சிறுநீரக செயலிழப்பு\nநீண்டகால இன்டர்ன்சிக் சிறுநீரகநோய் மூலம் சிறுநீரகத்தை பாதிப்படைய செய்கிறது,\nஇன்டர்ன்சிக் சிறுநீரகநோய் என்பது சிறுநீரகத்துக்குள் ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு அல்லது ஆக்ஸிஜன் இல்லாமையாகும். இது சிறுநீரகத்துக்கு நேரடி பாதிப்பை உண்டாக்குகிறது\nகுரோனிக் போஸ்ட் ரெனால் சிறுநீரக செயலிழப்பு\nசிறுநீரகத்தில் நீண்டகால அடைப்பு ஏதேனும் இருந்தால் சிறுநீர்ப்பையின் செய்ல்பட்டை தடுத்து சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி சிறுநீரகத்தை பாதிப்படைய செய்கிறது. இறுதியில் சிறுநீரகம் செயலிழக்க நேருகிறது\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nஇந்த இலையும் காயும் பார்த்திருக்கீங்களா மழைக்காலத்தில் வரும் எல்லா நோய்க்கும் இதுதான் மருந்து\nநம் முன்னோர்கள் ஆண்மை குறைவிற்கு பயன்படுத்திய உட்டியாணா பந்தா பயிற்சியை பற்றி தெரியுமா..\nஇறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..\nஆரோக்கியம், அதிர்ஷ்டம் ரெண்டும் நிறைந்திருக்கும் ஆத்தி மரம்... உங்க வீட்ல இருக்கா\nஃப்ரிட்ஜில் வைக்கும் தக்காளி எத்தகைய ஆபத்தானது தெரியுமா...\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nMar 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஆஞ்சநேயருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த போட்டி\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=10328", "date_download": "2018-08-18T00:44:30Z", "digest": "sha1:VUY66UIU7J2GIAIFNGB6KYYENSCNVTOR", "length": 15236, "nlines": 140, "source_domain": "kisukisu.lk", "title": "» மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!", "raw_content": "\nவெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\nநல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்\n10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\n நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமா\nஎப்போதும் எண்ணெய் வழியும் முகமா\n← Previous Story சீரற்ற இதயத்துடிப்பால் ஆண்களை விட பெண்களுக்கே ஆபத்து அதிகம்\nNext Story → ரசிகர்களை கவர்ந்த குட்டித்தல\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஇன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.\nஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.\nசரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா\nவெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.\nஎலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.\nபுதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.\nதண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.\nமேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.\n2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி\nவெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.\nஇப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/238365", "date_download": "2018-08-18T00:46:43Z", "digest": "sha1:2WPGBC3BS5GELLSXY7TTBIVG4K5PREGJ", "length": 79278, "nlines": 157, "source_domain": "kathiravan.com", "title": "விருச்சிக ராசிக்கு பணம் கொட்டப் போகுது... ஏனைய ராசிகளுக்கு எப்படி? ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - Kathiravan.com", "raw_content": "\nகேரள வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகரின் அம்மா… அதிரடியாக மீட்கப்பட்ட சம்பவம் (படம் இணைப்பு)\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nவெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் கேரள மக்கள்… வைரலாகும் வீடியோ\nபிரபல நடிகை திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கியது திரையுலகம்\nவிருச்சிக ராசிக்கு பணம் கொட்டப் போகுது… ஏனைய ராசிகளுக்கு எப்படி ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்\nபிறப்பு : - இறப்பு :\nவிருச்சிக ராசிக்கு பணம் கொட்டப் போகுது… ஏனைய ராசிகளுக்கு எப்படி ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்\nஆகஸ்ட் மாதம் உங்களுக்கு மிகவும் நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இருக்காது. இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இதுவரை இருந்து வந்த தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் மேஷ ராசியினர் எந்த விஷயத்திலும் இனிமேல் தயக்கத்தை விட்டொழிக்கவும்.\nவியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும்.\nவயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும்.\nகணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். சிலருக்கு சுபச்செலவுகளும், விரயங்களும் இருக்கும். செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் இந்த மாதம் வருமானமும் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும். அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள். பொதுவில் இது சிறப்பான மாதம்தான்.\n1,2,3,7,8,9,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி காலை 10.59 மணி முதல் 20-ம் தேதி இரவு 9.41 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், முதலீடுகள், ஆரம்பங்கள் எதையும் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதமோ, வீண் பிரச்சனைகளையோ செய்ய வேண்டாம்.\nஉங்களின் முயற்சிகள் தடைபடும் தரும் மாதமாக ஆகஸ்டு மாதம் இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் நீசமாக இருப்பதால் குழப்பங்களும், சாதகமற்றவைகளும் இப்போது இருக்கும். அஷ்டமச்சனியின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதால் இளைய பருவத்தினர் கடுமையாக உழைக்க வேண்டிய மாதம் இது. ரிஷபத்தினருக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள்.\nசாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாத நிலைமை இருக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும். சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.\nதேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள்.\n2,4,6,10,14,15,22,23,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி இரவு 9.41 மணி முதல் 23-ம் தேதி காலை 10.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்து விஷயங்களிலும் நிதானத்துடனும், கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், நீண்ட பிரயாணங்கள் வேண்டாம்.\nராசிநாதன் புதன் வலுக்குறைந்து இருந்தாலும் ராசிக்கு குருபார்வை இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்ல அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு தந்தையின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் உண்டு. வயதான தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும். பழைய கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.\nவழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஆறுக்குடையவன் உச்ச வலுப் பெறுவதால் நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ராசிநாதனை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் சேருவார்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nநீண்டநாள் எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் கிடைக்கும். தாய் வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும்.\nதிருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம். ஆகஸ்டு மாதம் மிதுனத்திற்கு தொல்லைகள் எதுவும் தராமல் நன்மைகள் மட்டுமே இருக்கும் மாதம்தான்.\n5,6,8,9,11,12,22,24,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி காலை 10.26 மணி முதல் 25-ம் தேதி இரவு 11.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது.\nகடகத்திற்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. எல்லாவகையிலும் சந்தோஷமாக இருப்பீர்கள். அவரவர்களின் வயதுக்கு தகுந்தபடி நல்ல விஷயங்கள் மட்டுமே இந்த மாதம் நடக்கும்.\nகுறிப்பாக இளைய பருவத்தினரின் ஆனந்த மாதம் இது. பருவத்திற்கேற்ப உல்லாசமாக இருப்பீர்கள். ஆணுக்கு, பெண்ணையும் பெண்ணுக்கு ஆனையும் அறிமுகப்படுத்தும் மாதம் இது. எதிர்கால நன்மைக்கு தேவையான அத்தனையும் இப்போது கிடைக்கும். உங்களில் பூசம் நட்சத்தினருக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகள் இந்த மாதம் அமையும்.\nவருமானத்தை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா கிடைக்காதா என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். நீங்கள் மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.\nகடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. குடும்பத்தில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.\n2,3,4,5,11,12,13,28,29,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி இரவு 11.14 மணி முதல் 28-ம் தேதி காலை 10.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட நாட்களில் நீண்ட பிரயாணங்களோ, புதிய முயற்சிகளோ செய்வதை தவிர்ப்பது நல்லது.\nசிம்மநாதன் சூரியன் ஆகஸ்டு மாத முற்பகுதியில் பனிரெண்டில் மறைந்திருந்தாலும் பிற்பகுதியில் அவர் ராசியில் ஆட்சி பெறுவது யோக அமைப்பு என்பதால் ஆகஸ்டு மாதம் கெடுதல்கள் இல்லாத நல்ல மாதமாகவே இருக்கும். உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதம் இது. குருபகவான் மூன்றாமிடத்தில் அமர்ந்து ஒன்பதைப் பார்ப்பதால் பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது கிடைக்கும். ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் இப்போது வெற்றியாகும். சிம்மத்தினர் அனைவருமே புத்துணர்ச்சி பெறும் மாதம் இது.\nஉங்களில் தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும்.\nஇளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் சிலருக்கு பொருள் சேர்க்கையும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள்.\nவாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது.\n1,2,4,5,6,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி அதிகாலை 4.54 மணி முதல் 3-ம் தேதி மதியம் 2.25 மணி வரையும், மாத இறுதியில் 28ம் தேதி காலை 10.39மணி முதல் 30ம் தேதி இரவு 8.01 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் முதலீடுகளை இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.\nராசிநாதன் புதன் பலவீனம் அடைந்திருந்தாலும் குருபகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் சரளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும் ஏற்படும் மாதம் இது. ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடைபெறும்.\nஅரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக்குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களில் சிலர் ஏதேனும் ஒரு சாதனைச் செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.\nபிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். கோபத்தை தவிருங்கள். மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் கன்னியின் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.\n3,8,9,10,16,17,18,19,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 3-ம் தேதி மதியம் 2.25 மணி முதல் 5-ம் தேதி இரவு 8.45 மணி வரையும், மாத இறுதியில் 30ம் தேதி இரவு 8.01 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி அதிகாலை 3.01 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் மேற்கண்ட தினங்களில் எடுக்க வேண்டாம்.\nதுலாம் ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் நடுநிலைமையுடன் செயல்படுவீர்கள் என்பதால் ஆகஸ்டு மாதம் உங்களின் குணநலன்களுக்கு ஏற்ப நன்மைகளை மட்டும் தரும் மாதமாக இருக்கும். உங்களை சந்தோஷப்படுத்தும் மாதம் இது. துலாத்திற்கு இனிமேல் கஷ்டங்கள் என்று சொல்ல எதுவுமே இல்லை. இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு.\nகிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தெய்வம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் வீட்டிற்குள் வரும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் எதையும் சாதிப்பீர்கள். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.\nவியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் நல்ல வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.\nஇளைஞர்களுக்கு எதிர்மறை பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும்.\nஉங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு.\n1,2,4,7,11,16,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி இரவு 8.45 மணி முதல் 7-ம் தேதி இரவு 11.49 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.\nஆகஸ்ட் மாதம் விருச்சிக ராசிக்கு ஆனந்த மாதமே. வருமானமும், எதிர்பாராத பண வரவும், திருப்தியாக வரும். வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு பணஉதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. அலட்சியம் வேண்டாம். பெண்கள் விஷயத்தில் கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.\nஇளைஞர்களின் மனோதைரியம் கூடுதலாகும். பிரச்னைகளை இனிமேல் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். புதிய முயற்சிகளை சிலவாரங்களுக்கு தள்ளி வைப்பது நல்லது. பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். இதுவரை மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.\nதாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நண்பர்கள் உதவுவார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். விருச்சிகத்திற்கு நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும் மாதம் இது.\n3,8,11,12,13,14,21,22,23,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி இரவு 11.49 மணி முதல் 10-ம் தேதி அதிகாலை 12.25 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். மேற்கண்ட தினங்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.\nதனுசு ராசி இளைஞர்களுக்கு முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்தமாதம் நல்லவைகள் நடக்கும். கிரக அமைப்புகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஜென்மராசியில் இருக்கும் சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். குறிப்பாக மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சனி இப்போது மூல நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள், வேலையில் நெருக்கடிகள், மன அழுத்தம் தரும் சம்பவங்கள், காதல் தோல்வி போன்றவைகள் இருக்கும். எதிலும் நிதானமும், தைரியமும் தேவைப்படும்.\nஎன்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த மாதம் சுமாரான மாதமாகத்தான் இருக்கும். ஏழாம் அதிபதிக்கு பாபகிரக தொடர்பு இருப்பதால் கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம். பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது.\nஉங்களை கோபப்படுத்தி எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். உங்களின் நண்பர்களே உங்களின் கோபத்தால் பாதிக்கப்பட்டு எதிரியாகும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். பொதுவில் இளையவர்களுக்கு நிதானமான பலன்களும், பெரியவர்களுக்கு நல்ல பலன்களும் நடக்கும் மாதம் இது.\n5,6,7,11,12,13,19,24,25,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி இரவு 12.25 மணி முதல் 12-ம் தேதி அதிகாலை 12.05 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய ஆரம்பங்கள், முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். கூடுமான வரை நீண்ட பிரயாணங்களை தவிர்ப்பதும் நல்லது.\nமகர ராசியினர் தேவையற்ற கோபத்தையும் அடுத்தவர் மேல் காட்டவேண்டிய எரிச்சலையும் வீட்டில் காட்டுவீர்கள் என்பதால் நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது. ராசியில் செவ்வாய், கேது, ஏழில் ராகு என்ற அமைப்பு இப்போது மகரத்திற்கு இருப்பதால் ஒருமுறை ராகு, கேது பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று ராகு,கேது பரிகாரங்களை செய்து வாருங்கள். உங்களில் சிலருக்கு இந்த மாதம் பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.\nராசிநாதன் வலுவாக குருவின் வீட்டில் இருப்பதால் பெரிய கெடுபலன்கள் எதுவும் வரப்போவது இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்தும் லாபத்துடன் இயங்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. வேகமாக போய்க் கொண்டிருக்கும் கார்\nவேகத்தடையை பார்த்ததும் வேகம் குறைவதைப் போல சிலருக்கு மட்டும் எதிர்மறை அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு நிறைய மாற்றங்கள் இருக்கும். வேலையில் டிரான்ஸ்பர் கிடைத்து ஊரை விட்டு மாறுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும்.\nஆறாமிடம் பாபத்துவம் பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். தன, லாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் பணவரவு இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது.\n1,2,4,10,11,12,21,24,25,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம் தேதி அதிகாலை 12.05 மணி முதல் 14-ம் தேதி அதிகாலை 12.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆயினும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.\nகும்ப ராசிக்கு எதிர்மறை பலன்கள் எதுவும் இருக்காது. நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இந்த மாதம் ஆரம்பிக்கும். உங்களின் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முக்கியமான பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும்.\nகும்பத்திற்கு எப்போதோ ஒருமுறை நன்றாக அமையும் கோட்சார கிரகநிலைகள் இப்போது நன்றாக அமைந்திருக்கின்றன. ஆனாலும் பிறந்த ஜாதகப்படி நன்மை தரும் தசாபுக்தி அமையாத சிலர் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ராசிப்படி பலன் சொல்வது இன்றைய கிரக நிலையான கோட்சார நிலையை கணித்து சொல்லப்படுவது. ஆனாலும் நீங்கள் பிறந்த ஜாதகத்தின் படி என்ன தசா, புக்திகள் நடக்கின்றன\nஎன்பதுதான் மிகவும் முக்கியம். தசா, புக்தி அமைப்பு சரியில்லை என்றாலும் கோட்சார நிலைகளை வைத்து ஓரளவிற்கு சமாளிக்க முடியும். எனவே கும்பத்திற்கு கெடுதல் சொல்வதற்கு இல்லை. நல்ல தசாபுக்தி அமையப் பெற்ற கும்ப ராசிக்காரர்கள் இந்தமுறை மனதளவிலும் உடல்நிலையிலும் பத்துவயது குறைந்து புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம்.\nநீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இனிமேல் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.\nகுடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.\n3,5,6,11,13,14,21,22,23,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி அதிகாலை 12.39 மணி முதல் 16-ம் தேதி அதிகாலை 3.55 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் மனம் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.\nதொழில், வேலை போன்ற விஷயங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல வருமானத்துடனும், வரவுடன் இருக்கும் என்பதால் மீனராசிக்காரர்கள் வெற்றி பெறும் மாதமாக இது இருக்கும். வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இடைஞ்சல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆவார். வியாபாரம் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும்.\nஅனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு.\nஇளைய பருவத்தினருக்கு திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள். பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு.\n1,8,9,10,15,16,19,21,22,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம் தேதி அதிகாலை 3.55 மணி முதல் 18-ம் தேதி காலை 10.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், புதிய ஆரம்பங்கள் எதையும் ஒத்தி வைப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.\nPrevious: சிரித்துக்கொண்டே பேட்டி கொடுத்த துரைமுருகன்… அப்போ கலைஞர் உடல்நிலையில் முன்னேற்றம் தான்\nNext: இலங்கை தமிழ்க் குடும்பத்திற்கு அந்தமானில் நிலம் ஒதுக்க வலியுறுத்தல்\nசிம்ம வீட்டில் பலம் பெறும் சூரியன்… ஆவணி தமிழ் மாத பலன்கள் உங்களுக்கு எப்படி\nகாதலித்தவரையே கல்யாணம் பண்ண வேண்டுமா\n2018 குருப்பெயர்ச்சிக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன… குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள் இவைதான்\nசமஸ்டி அடிப்படையிலான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற கொள்ளையிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகவில்லை என வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு அட்டன் பொலிஸார் தெரிவித்துளளனர். அட்டன் குடாகம பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக சிறிய அளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒரு சில வீடுகளில் கூரைகளின் நடுவில் மழை நீர் கசிவதனை தொடர்ந்து பார்வையிட்ட பொலிஸார் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் உள்ள 10 வீடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள விகாரையில் குடியேறுமாறு அறிவித்துள்ளதோடு இந்த மண்சரிவு தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த வீடுகளில் வாழும் பலரது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தற்போது இந்த வீடுகளில் வாழ …\nபாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nதெஹிவளையில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றின் பிரதம பராமரிப்பாளராகவும், பாலியல் தொழிலாளியாகவும் கடமையாற்றி வரும் பெண் ஒருவருக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் பார்லர் ஒன்றில் இரகசியமாக நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றை அண்மையில் பொலிஸார் சுற்றி வளைத்திருந்தனர். இதன்போது குறித்த மையத்தின் முகாமையாளரும், பிரதம பராமரிப்பாளர் உள்ளிட்ட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பெண்களில் ஒரு பெண்ணுக்கே இவ்வாறு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 6ஆம் திகதி இந்தப் பெண்களை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதன்போது அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விடுதலை செய்யுமாறு நீதவான் லோசன அபேவிக்ரம உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை அண்மையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் குறித்த பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் காணப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நீதிமன்றில் முன்னிலையாகும் போது கௌரவமான ஆடைகளை அணிந்து வர வேண்டியது அவசியமானது என நீதவான் குறித்த …\nபொலன்னறுவையில் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்\nபொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரை அவரின் கணவரே கொலை செயது வீசியதாக குறித்த ஆசிரியையின் கணவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குறித்த ஆசிரியையை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணவில்லை என குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் கணவர் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே தனது மனைவியை தாமே கொலை செய்ததாக காவல் நிலையத்தில் சாட்சியமளித்துள்ளார். தனது மனைவியுடன் வாய் தர்க்கம் அதிகரித்ததாகவும், அதனை தொடர்ந்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், பின்னர் மனைவியின் சடலத்தினை மொறகஹகந்த நீர்தேக்கத்திற்கு அருகில் வீசியதாகவும் சாட்சியமளித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமஹிந்த ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்று சென்றனர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சற்றுமுன்னர் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 11.15 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர். சுமார் 03 மணித்தியாலங்களின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/category?catid=0016", "date_download": "2018-08-18T01:00:05Z", "digest": "sha1:R5X7VHQ44US4XOLQ5J3NPDORCLNCXYFR", "length": 5011, "nlines": 131, "source_domain": "marinabooks.com", "title": "ஆய்வு நூல்கள்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வேலை வாய்ப்பு வரலாறு சங்க இலக்கியம் அறிவியல் நேர்காணல்கள் வாழ்க்கை வரலாறு பொது நூல்கள் கம்யூனிசம் சித்தர்கள், சித்த மருத்துவம் நாட்டுப்புறவியல் அகராதி சிறுகதைகள் குடும்ப நாவல்கள் சமூகம் சரித்திரநாவல்கள் மேலும்...\nஉலகத் திருக்குறள் மையம் அறிவாலயம்சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி மையம்அய்யனார் பதிப்பகம்கவியுலகப் பூஞ்சோலை பதிப்பகம்பாரதி புத்தகாலயம்ராஜ்மோகன் பதிப்பகம்ராஜ் பதிப்பகம்மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புநிக்கோலஸ் பதிப்பகம்திருக்குறள் பதிப்பகம் புகழ் பதிப்பகம்பிரகாஷ் புக்ஸ் உமா பதிப்பகம்உமாபதி கலையரங்கம் மேலும்...\nஆசிரியர்: குடவாயில் எம் பாலசுப்ரமணியன்\nமணிமேகலை காட்டும் மனித வாழ்வு\nதர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://varnamfm.com/2018/08/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2018-08-18T01:15:56Z", "digest": "sha1:WEGWDOYTLQFTG5OWFUG3M3K4SPYBBO4U", "length": 2963, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nமுதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nஇங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.\nலோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெறவிருந்த இந்த போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக, எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்திருந்தது.\nஇநத நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில், நாணயசுழற்சிக்கு முன்னதாகவே மழை பெய்தது.\nமதிய போசன இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படாத நிலையில், அதன் பின்னரும் மழை பெய்ததை அடுத்து, முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.\n4 பயிற்சியாளர்கள் நியமனம்,இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கு.\n“கோலமாவு கோகிலா” படம் எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403263", "date_download": "2018-08-18T01:31:16Z", "digest": "sha1:E2DGYTX4AL3IVUCQACTK6AXDXVRVTPV2", "length": 6866, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் சீதாராம் உபதாய்க்கு அஞ்சலி | Siddharth Upadhyay, the hero of the Pakistani attack - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் சீதாராம் உபதாய்க்கு அஞ்சலி\nஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமறி தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர் சீதாராம் உபதாய் வீரமரணம் அடைந்தார். மேலும் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வீரமரணமடைந்த சீதாராம் உபதாய்க்கு, மலர்வளையம் வைத்து வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nபாகிஸ்தான் தாக்குதல் வீரமரணம் வீரர் சீதாராம் உபதாய் அஞ்சலி\nமணப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nகேரளாவுக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி, தெலங்கானா ரூ.25 கோடி நிதியுதவி\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவுக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கேரளா செல்லக்கூடிய பயணிகள் முற்றுகை போராட்டம்\nகேரளா வெள்ளத்தில் சிக்கி மீட்டகப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை\nகாவிரியில் வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி நீர் திறப்பு\nஉரிய ஆவணங்களின்றி வந்த செனகல் நாட்டை சேர்ந்தவர் தப்பியோட்டம்\nகொச்சிக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர்\nநாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி\nகேரளாவுக்கு ரூ.10 கோடி பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிப்பு\nகேரளாவில் கனமழை, வெள்ளத்தால் 324 பேர் உயிரிழப்பு : முதல்வர் பிரனாயி விஜயன் தகவல்\nமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்புகிறது தெற்கு ரயில்வே\nமதுரை காமராஜர் பல்கலை.,க்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேடல்குழு : தமிழக அரசு அரசாணை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/userprofile.php?uid=8&uname=Swathi", "date_download": "2018-08-18T00:41:21Z", "digest": "sha1:I5QMMZJL2INH3WARXGJLIUCSBB35YMUM", "length": 13301, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "Swathi Profile", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா உண்மையாகவா\nஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா\nமாற்றங்களை ஏற்படுத்த பங்கெடுப்போம் கிராமசபையில் \nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 06 : சித்த மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக 21ம் நூற்றாண்டில் செய்வது எப்படி – ஒரு சுய ஆய்வும், 15 வழிகளும்\nபயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா\nதேனீ மாவட்டத்தை சேர்ந்த திருமதி அமுதா பெரியசாமி இயேசு கலைஞரை வழியனுப்ப நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி\n‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்\nதவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் - காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nமுதல் தேர்வு... முழுமதிப்பெண்... 96 வயதில் அசத்தும் கார்த்தியாயினி அம்மாள் \nஅம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே -வள்ளலார் திருவருட்பா\nவானத்தின் மீது மயிலாடக் கண்டேன் - வள்ளலார் பாடல் - திருபுவனம் குரு.ஆத்மநாதன்\nஇசை பாடி மகிழ இனிய தமிழ் உண்டு -திருபுவனம் குரு.ஆத்மநாதன்\nஇந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னிஷியன் ஆகிய பணிக்கு மேலும் 33,458 காலிப்பணியிடங்கள்\nஇந்தியன் வங்கியில் புரபெஷனரி ஆபீசர் காலிப்பணியிடங்கள் - ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nகோவை நீதிமன்றத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு - பத்தாம்வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\n - மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா,அமெரிக்கா\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\n14-வது ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ நாளை துவங்குகிறது\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபெரும்பேர் கொண்டயென் நாடு - வித்யாசாகர்\nஅமெரிக்காவில் நடந்த தமிழிசை பயிற்சிப் பட்டறையில் தமிழிசை வீட்டிலிருந்தே கற்க இணைய வகுப்புகள் தொடங்கப்பட்டது...\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 05 : “பாரம்பரிய சித்த மருத்துவ இருக்கை” மூலம் தமிழின் அறிவியல் முகத்தை (Scientific Domain) உலகறிய செய்வோம்\nமரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/category/history/page/2/", "date_download": "2018-08-18T00:36:59Z", "digest": "sha1:IIQUTVZAITR5W2T5LZH6Z2YRRHFDBELW", "length": 11040, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "வரலாறு – Page 2 – Nakkeran", "raw_content": "\n இலங்கை என்னும் தீவை பொறுத்தவரை சிங்களம் என்பது முக்கிய ஒரு சொல்லாகவும் சிங்களவர்கள்ஆட்சி உரிமையாளர்களையும் மாறி போய் விட்டார்கள். இலங்கையில் சிங்களம் தன்னோடு இறுகப்பினைத்து கொண்டு இருகின்ற விடயம் […]\n2009 மே யில் நடந்தவை என்ன காகத்தின் நீண்ட பதில்களை வழங்கியிருக்கிறார் மாவை\n2009 மே யில் நடந்தவை என்ன காகத்தின் கேள்விகளுக்கு நீண்ட பதில்களை வழங்கியிருக்கிறார் மாவை கேள்வி 5: அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நிலை 1977 பொதுத்தேர்தலில் எவ்வாறுஇருந்தது பதில்: அப்போது அகில இலங்கை தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த விநாயக மூர்த்தி கூட்டணியாக […]\nமுதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள் – ப.சத்தியலிங்கம்\nமுதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள் – ப.சத்தியலிங்கம் July 1, 2018 முதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள்.அந்த பிழையான வழிநடத்தலை கேட்டமையால் வந்தது தான் இந்த விளைவு என்று முன்னாள் சுகாதார […]\nசிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’ – மெகா வசூலில் அரசியல் சாமியார்\nசிவன் பெயரில் ‘சதுரங்க வேட்டை’ – மெகா வசூலில் அரசியல் சாமியார் JAYAVEL B சி.ய.ஆனந்தகுமார் என்.ஜி.மணிகண்டன் ‘சிதிலமடைந்த சிவாலயங்களைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்துகொடுக்கிறோம்’ என்று சொல்லி, ‘சதுரங்க வேட்டை’ பாணியில் தமிழகம் முழுவதும் […]\nபுலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”\nபுலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்” என்பதை உறுதிப்படுத்தினார் புலிகளின் மூத்தபோராளி பசீர் காக்கா..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முழுமையான விபரம்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முழுமையான விபரம்.. (படங்கள்) By Athirady Last updated Jun 22, 2018 வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல […]\nபௌத்த மதம் மறைந்த வரலாறு (6)\nபௌத்த மதம் மறைந்த வரலாறு (6) மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) பௌத்த தம் தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம். செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம்பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை. பௌத்த மதத்தைஉண்டாக்கிய சாக்கிய புத்தரும், ஜைன மதத்தையுண்டாக்கிய வர்த்தமான மகாவீரரும், ஆசீவக மதத்தையுண்டாக்கிய கோசால மக்கலிபுத்திரரும் ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர். […]\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\nகேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23 லட்சம் பேர், பிரதமர் விரைந்தார் August 17, 2018\nகாவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை August 17, 2018\nபாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு August 17, 2018\nகோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி) August 17, 2018\nவாஜ்பேயி: இந்திய அணு ஆயுத திறனுக்கு வலு சேர்த்தவர் August 17, 2018\nகேரள வெள்ளம்: 'மக்களை காப்பாற்ற முடியவில்லையே' - கதறி அழுத ஊராட்சித் தலைவி August 17, 2018\nயமுனை நதிக்கரையில் வாஜ்பேயி உடல் தகனம் August 17, 2018\nகேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள் August 17, 2018\nசினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா August 17, 2018\nவாஜ்பேயி: அமெரிக்க எதிர்ப்பை மீறி மாறனை ஆதரித்தார் - நினைவுகூரும் பழனிமாணிக்கம் August 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403264", "date_download": "2018-08-18T01:31:29Z", "digest": "sha1:KI7HVRDIQLRNPGTUYYETOKU3YMDR66ZR", "length": 8495, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பழநி அருகே பாலசமுத்திரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் திருவிழா | Muttalamman Temple Festival is a 300 year old temple at Balasamudra near Palani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபழநி அருகே பாலசமுத்திரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் திருவிழா\nபழநி: பழநி அருகே பாலசமுத்திரத்தில் நடந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநி அருகே பாலசமுத்திரத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக முத்தாலம்மன் கோயில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாட்டுதலுடன் துவங்கியது. பக்தர்கள் விரதமிருந்து, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. கேரள பராம்பரிய இசையுடன், வாணவேடிக்கைகளுடன் அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது.\nஊர்வலத்தின்போது பல்வேறு சமூகத்தினரின் மண்டகப்படிகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி போன்றவற்றுடன் ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீச்சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பல்வேறு அமைப்புகளின் சார்பில் அலங்கார ரத ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை முத்தாலம்மன் ராமநாத நகர் சென்று கொழுவிருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் நீராடுதலுடன் விழா முடிவடையும். விழாவைக் காண பழநி பகுதி கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.\nபழநி பாலசமுத்திரம் 300 ஆண்டுகள் முத்தாலம்மன் கோயில் திருவிழா\nகொள்ளிடம் கரையோர பகுதிகளில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது: லால்குடி விவசாயிகள் கவலை\nகூரியர் நிறுவனங்கள் தயக்கத்தால் வெளிநாடுகளில் சீன தயாரிப்பு இந்திய தேசியக்கொடி விற்பனை\n7 மணி நேரமாக கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்பு\nதாராபுரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு டைல்ஸ்கள் வெடித்து சிதறியதால் நோயாளிகள் ஓட்டம்\nகண்டக்டர்கள் இல்லாமல் பஸ்சை இயக்க எதிர்ப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்: 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது\nதிருமங்கலத்தில் பரபரப்பு பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை விற்பனை: தத்தெடுத்த தம்பதியிடம் விசாரணை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/12172806/1183430/Mahima-Says-i-am-not-having-lover.vpf", "date_download": "2018-08-18T01:02:17Z", "digest": "sha1:ST74AW7BIDDQDHGI5KJMTKSCEYY64236", "length": 12486, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "எனக்கு இப்போது காதலர் இல்லை - மகிமா || Mahima Says i am not having lover", "raw_content": "\nசென்னை 12-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஎனக்கு இப்போது காதலர் இல்லை - மகிமா\nஅண்ணனுக்கு ஜே, ஐங்கரன் ஆகிய படங்களில் நடித்து வரும் மகிமா நம்பியா, எனக்கு இப்போது காதலர் இல்லை என்று கூறியுள்ளார். #Mahima\nஅண்ணனுக்கு ஜே, ஐங்கரன் ஆகிய படங்களில் நடித்து வரும் மகிமா நம்பியா, எனக்கு இப்போது காதலர் இல்லை என்று கூறியுள்ளார். #Mahima\nசமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படம் மூலம் அறிமுகமானவர் மகிமா நம்பியார். இப்படத்திற்குப் பிறகு ‘குற்றம் 23’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து விக்ரம் பிரபுவுடன் ‘அசுரகுரு’, தினேசுடன் ‘அண்ணனுக்கு ஜே’, ஜி.வி.பிரகாசுடன் ‘ஐங்கரன்’ படங்களில் நடிக்கிறார்.\nஇதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காத ரகசியத்தை கேட்டபோது ‘நல்ல வி‌ஷயம் தானே... நான் ரொம்ப நல்ல பொண்ணு. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போய்விட்டால் நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருப்பேன். அது போல நான் காதல் எதுவும் பண்ணலை. காதல் பண்றது தப்பு கிடையாது. ஆனால் இப்போதைக்கு எனக்கு ஆள் இல்லை. அதனால் தான் என்னைப்பற்றி கிசுகிசு ஏதும் வரவில்லை.\nஎம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். அடுத்து எம்.பில்., பி.எச்டி, நெட் தேர்வுன்னு பிளான் பண்ணிருக்கேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பு தான் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம்’ என்று கூறினார்.\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஇமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட்\nகனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nசூப்பர் டூப்பரான படத்தில் துருவா, இந்துஜா\nதேர்வில் கவனம் செலுத்தும் மகிமா\nஆகஸ்டில் அண்ணனுக்கு ஜே போட வரும் தினேஷ்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nமாற்றம்: ஆகஸ்ட் 12, 2018 17:28\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/05/26105224/1165761/Dandruff-Home-Treatment.vpf", "date_download": "2018-08-18T01:02:21Z", "digest": "sha1:DXPVORDZRQE6SV5WA524Y267OVOUAWZO", "length": 14360, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொடுகு தொல்லைக்கு வீட்டு சிகிச்சை || Dandruff Home Treatment", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொடுகு தொல்லைக்கு வீட்டு சிகிச்சை\nபொடுகு தொல்லையால் கூந்தல் அதிகளவு உதிர ஆரம்பிக்கும். பொடுகு தொல்லையை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.\nபொடுகு தொல்லையால் கூந்தல் அதிகளவு உதிர ஆரம்பிக்கும். பொடுகு தொல்லையை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.\nகற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக கிடைக்கிற கற்றாழை ஜெல்லைவிட, வீட்டில் வளர்க்கும் கற்றாழைச் செடியில் இருந்து அதன் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து நான்கைந்து முறை அலசி வைத்துக் கொள்ளவும். அதைத் தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, மைல்டான ஷாம்பு போட்டு அலசவும்.\nஅரை கப் வினிகரை, ஒன்றரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். ஒவ்வொரு முறை ஷாம்பு குளியல் எடுத்து முடித்ததும், இந்தக் கரைசலை கடைசியாக தலையில் விட்டு அலசி, நன்கு காய விடவும். பொடுகு குறையும்.\nவெள்ளை மிளகுப் பொடியை சிறிதளவு தயிரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். சிறிதளவு பாதாம் எண்ணெயில் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு விட்டுக் கலந்து தலையில் தடவி, விரல் நுனிகளால் மிதமாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.\nமுட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி ஊற வைத்தும் குளிக்கலாம். கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். வேப்பிலையை அரைத்து, தலையில் தடவி, ஊற வைத்தும் அலசலாம். இரண்டு சிகிச்சைகளுமே பொடுகை விரட்டும்.\nவெயிலே படாமல் வாழ்வது சருமத்தை அழகாக வைக்கலாம். ஆனால், பொடுகுப் பிரச்சனைக்கு சூரிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயில் சிறிதாவது நம் மேல் படும்படி இருப்பதுகூட பொடுகை விரட்ட உதவும்.\nதேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பு கொண்டு கழுவினாலும் பொடுகு மறையும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசரும வறட்சி, முதுமையை தடுக்கும் ஆலிவ் ஆயில்\nபொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\n அசர வைக்கும் பாட்டி வைத்தியம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_05_17_archive.html", "date_download": "2018-08-18T00:21:34Z", "digest": "sha1:O5ERX3FBXT7HIISOE5MVXDTIE425GWUK", "length": 62237, "nlines": 728, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/05/17", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/08/2018 - 19/08/ 2018 தமிழ் 09 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமழையென்பது யாதென (2) --- சேயோன் யாழ்வேந்தன்\nசின்ன வயது சேயோனிடம் கேட்டால்\nஅன்னையர் தினப் பரிசு , சிட்னியில் நடாத்தப்பட்ட Ping Sari நிகழ்வு\nகடந்த 2.5.15 அன்று மாலை 2.45 – 5.00 மணிவரை ஹொல்ரொயிட் நகரசபை மண்டபத்தில் தமிழ் தாய் மார்களுக்கான பிங் சாறி அன்னையர் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப் பட்ட்து.\nமூன்று அமைப்புகள் சேர்ந்து நடாத்திய இந் நிகழ்வில் பல எண்னிக்கையிலான அன்னைமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அன்னையரை வரவேற்றுப் பேசிய கொன்சிலா ஜெரோம் ( CMRC – SGP worker) மழையும் குளிரும் காற்றும் சூழ்ந்திருந்த இப்பொழுதில் வந்து கலந்து கொண்டோரை வெகுவாகப் பாராட்டி வரவேற்றார்.\nமே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள்\nஇலங்கை அக­திகள் 65 பேர் நாளை நாடு திரும்­பு­கின்­றனர்\nகோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை\nஇலங்கை அக­திகள் 65 பேர் நாளை நாடு திரும்­பு­கின்­றனர்\n12/05/2015 யுத்தம் காரா­ண­மாக நாட்டை விட்டு இந்­தி­யா­விற்கு அக­தி­க­ளாகத் தஞ்சம் புகுந்­த­வர்­களில் 65 பேர் நாளை புதன்­கி­ழமை நாடு திரும்­ப­வுள்­ள­தாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சு அறி­வித்­துள்­ளது.\nஇந்த 65 இலங்­கை­யர்­களும் நாளை காலை கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டை­ய­வுள்­ளனர். இவர்­களை மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம் சுவா­மி­நாதன் வர­வேற்­க­வுள்ளார்.\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 விழா வர்ணனை – தொடர்ச்சி\nசென்ற ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 அருள்மிகு துர்க்கை அம்மன் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் அவை நிறைந்த தமிழ் அன்பர்களுடன் கோலாகலமாகவும் வெற்றி விழாவாகவும் கொண்டாடப்பட்டது.\nதிருவள்ளுவரைக் கௌரவித்ததைத் தொடர்ந்து ‘யாழ் நூல்’தந்த விபுலானந்த அடிகளாரையும் ‘தமிழ்த்;தென்றல்’ திரு வி. கல்யாணசுந்தரனாரையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட சான்றோர் விழா ஆரம்பமானது.\nமங்கல விளக்கேற்றல் - தமிழ்த்தாய் வாழ்த்து – தேசிய கீதம் - ஆசி உரை- இவற்றைத் தெடர்ந்து உலக சைவப் பேரவை ஆஸ்திரேலியக் கிளையின் தலைவர் திரு மா அருச்சுனமணி அவர்கள் தனது உரையில்இ “சிட்னியில் தமிழ் கற்றுவரும் மாணவர்கட்குஇ தமிழ்க் கல்வி நிலையங்கட்கு வெளியேஇ தமிழை மேடையில் பேச வாய்ப்பளிக்கவும்இ தமிழ்ச் சான்றோர்களையும் அவர்களது ஆக்கங்களையும் அறிமுகப்படுத்துவதற்காகவும் இவ்விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது “எனக் கூறினார்.\n“உலகச் சைவப் பேரவை ஆஸ்திரேலியக் கிளை மாதந்தோறும் நடத்திவரும் திருமுறை முற்றோதல்இ ஆண்டிற்கு இருமுறை நடத்தும் திருவாசக முற்றோதல் ஆகியவற்றில் இளைஞர்களும் பெரி யோர்களும் கலந்து ஆதரவளிப்பதுடன் இறையருளும் பெற்றுய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.\nஉலகச் சைவப் பேரவை ஆஸ்திரேலியக் கிளை வரும் ஜூலை மாதத்திலிருந்து நடத்த இருக்கும் ‘சிவஞானபோத ஞானயோகப் பயிற்சி’யில் பங்கேற்றுப் பயன்பெற வேண்டுமென அழைப்புவிடுத்தார் அவர்.\nஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறினார் மோடி\nநேபாள நிலநடுக்கத்தில் இலங்கைக்கான தூதரகத்துக்கு சேதம்\nநேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் : 41 பேர் பலி\nஅமெரிக்காவில் புகையிரத விபத்து : 7 பேர் பலி\n11/05/2015 சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேன் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கர்நாடக உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் இறுதி நாளான இன்று கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.\nஜோதிகா 36 வயதினிலே ...... --முருகபூபதி\nஆற்றலை இனம் கண்டு ஊக்குவிக்கும் பண்பு முதலில் குடும்பத்திலிருந்து தோன்றவேண்டும்\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் திரையில் தோன்றிய ஜோதிகா\nஒவ்வொரு குடும்பமும் பார்க்கவேண்டிய பெண்ணுலகத்தின் பக்கங்கள்\nஉடைகள் உலர்த்தும் - சீட்டாட்டம் நடக்கும் - பெற்றோருக்குத் தெரியாமல் இளசுகள் திருட்டுத் தம் - தண்ணி அடிக்கும் - பெண்கள் அப்பளம், வடாகம், மோர் மிளகாய், ஊறுகாய் காயப்போடும், எதிர் எதிர் வீட்டு இளசுகள் கண்களினால் காதல் மொழி உதிர்க்கும் மொட்டை மாடிகளில் பசுமைப்புரட்சியும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கும் படம் 36 வயதினிலே.\nதிருமணத்திற்குப்பின்னர் கமெராவுக்கு முன்னால் நடிக்காதிருந்த ஜோதிகா மீண்டும் திரைப்பிரவேசம் செய்து கலக்கியிருக்கும் படம்.\nஒவ்வொருவரிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்திருக்கும். ஆனால் , வெளியே தெரிவதில்லை. குடும்பம், தொழில், சுற்றுச்சூழல் அவர்களின் திறமைகளை மறைத்துவிடும். தங்களிடமிருப்பதை தேடி ஆராய்ந்து வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காது. தப்பித்தவறி வெளிப்பட்டாலும் - அதில் குறைகண்டு பிடித்தே அவமானப்படுத்திவிடும் சமூகம், எப்பொழுதும் பாதகமான விடயங்களையே பேசி சுயதிருப்தியடைகிறது.\nசிட்னியில் நடைபெற்ற சன்னத்தின் சுவடுகள் நூல் வெளியீடு\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வாகாஸ் நிறுவனத்தின் பேராதரவில் தமிழ்லீடர் வெளியீட்டகத்தின் ச(ன்)னத்தின் சுவடுகள் கவிதை நூல் மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.\nதமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஇளையசமூக செயற்பாட்டாளர் கௌசிக் மற்றும் ,காந்திமதி ஆகியோர் நிகழ்வை நிறைவாக தொகுத்தளித்தனர்.\nமாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக தாயக விடுதலைப் போரில் மரணித்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து நினைவுத்தீபம் ஏற்றப்பட்டுஅகவணக்கம் செலுத்தப்பட்டது.\nசங்க இலக்கியக் காட்சிகள் 49- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nகாளையை முறியடித்தான், கன்னியைக் கரம்பிடித்தான்\nமுல்லை நிலத்தில் “ஏறுதழுவுதல்” என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி. மணப்பெண்ணின் வீட்டில் அதற்காகவே வளர்க்கப்பட்ட காளையை அடக்க முயல்வதே ஏறுதழுவுதல் ஆகும். காளையை அடக்கி வெற்றி பெறுபவனுக்கே அந்தப்பெண்ணை மணம் முடித்துக்கொடுப்பது பண்டைக்காலத்தில் வழக்கமாயிருந்தது. “கொல்லேறு தழுவுதல்” என்று அதை ஒரு விழாவாகவே நடாத்தினார்கள்.\nஊளைச் சதையை குறைக்க :\nசாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.\nபப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாகக் காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.\nசுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.\nஇதுதவிர, வாழைத்தண்டுச் சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.\nபண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் திருவடிக்கலப்பு நினைவு\nசான்றோராகிய பண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள்\nசிவனடி மறவாத சிந்தையாளராக விளங்கி வந்தவரும்\nசைவத்துக்கும் செந்தமிழுக்கும் அரும்பணிகள் ஆற்றி வந்தவருமான\nசான்றோராகிய சிவத்தமிழ் வித்தகர்ää மூதறிஞர்ää தத்துவக்கலாநிதிää\nபண்டிதமணி க. வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் 99 ஆவது அகவை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ( வெள்ளி இரவு) 25-04-2015 சனிக்கிழமை அதிகாலை 3:00மணியளவில் சிவபதம் - திருவடிக்கலப்பு எய்தினார்.காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை உருவாக்கி இறுதிவரை அதை நெறிப்படுத்த பெருமை குருக்களையே சாரும். காரைநகர் மணிவாசகர் சபையைத் தோற்றுவித்ததுடன் அது செவ்வனே நடைபெறக் குருக்கள் ஐயா பெரும் பணி இயற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் அறிஞராக – பதிப்பாசிரியராக – எழுத்தாளராக – ஆசிரியராகப் - மனித நேயம் மிக்கவராக - பலதரப்பட்ட சேவைகள் ஆற்றியவர். அன்னாரை வணக்கத்துடன் நினைவுகூருகிறேன்.\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி\nவடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன.\nநீதித்துறை மீது நம்பிக்கையில்லை – இந்தியா முழுவதும் குமுறல்கள்\nஎனது வாழ்வின் அந்திப் பொழுதில், இந்த நாட்டின் நீதித்துறை மீதும், சட்ட ஒழுங்கு எந்திரத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது. நான் ஒரேயடியாக இடிந்து போயிருக்கிறேன்.\nஜெயா – சசி கும்பலை ‘கணக்கு’ போட்டு விடுவித்த நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்திருந்த பலர் – தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும் – கசப்புடனும், ஆத்திரத்துடனும் எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர். பல்வேறு ஆங்கில இணைய தளங்களில் பின்னூட்டங்களாக வெளியிடப்பட்ட சில கருத்துக்களை இங்கு தொகுத்து தருகின்றோம். ‘அம்மா’ அவர்களின் விடுதலை இப்படியாக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இனி நீதிமன்றம்தான் இறுதி நம்பிக்கை எனும் ஆசுவாசமெல்லாம் மக்களிடம் எடுபடாது.\nசூப்பர்மேன்களும், சூப்பர்வுமன்களும் – by vorpal on May 12, 2015 07:51 PM ரீடிஃப்\nலாலு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டு, பின்னர் பிணை வாங்கி சந்தோஷமாக தனது வழக்கமான தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.\nசல்மான் கான் 13 ஆண்டுகள் வெற்றிகரமான இழுத்தடிப்புக்குப் பிறகு தண்டிக்கப்பட்டாலும், ஒலியின் வேகத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.\nஜெயலலிதாவின் வழக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது. மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்த போதும் அவர் விடுவிக்கப்படுகிறார். அரசுத்தரப்பு மோசடியாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது.\nஒரு பேருந்து ஓட்டுனர் அடித்து உதைக்கப்பட்டு இறக்கிறார்.\nதமிழ் சினிமா - இந்தியா-பாகிஸ்தான்\nநான், சலீம் என த்ரில்லர் மற்றும் சீரியஸ் கதையில் கலக்கி கொண்டிருந்த விஜய் ஆண்டனி முதன் முதலாக நகைச்சுவை களத்தில் குதித்துள்ளார். பெயரிலேயே விஜய்யை வைத்து கொண்டு ஜனரஞ்சகமான ஹீரோவாக மாறாமல் இருந்தால் எப்படி என்று யாரோ அவரின் காதில் ஒரு யோசனையை கூறியுள்ளனர்.\nஉடனே நானும் முழு நீள ஹீரோவாகிறேன் என தன் இசை பொறுப்பையும் மற்றவரிடம் கொடுத்து, ஜெகன், பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் என பெரிய சில நடிகர்களையும் தன்னுடன் இணைத்து கொண்டு 20/20 மேட்ச் ஆடியிருக்கும் படம் தான் இந்தியா-பாகிஸ்தான்.\nவிஜய் ஆண்டனி ஒரு வக்கீல், படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு DVD கடையில் ஹீரோயினை பார்க்க, பிறகு என்ன 100 வருட தமிழ் சினிமாவின் லாஜிக் தான். பார்த்தவுடன் காதல், பின் சோலோ டூயட். தன் ஆபிஸை வைக்க ஒரு நல்ல வீடு தேட, ஜெகன் வீடு ப்ரோக்கராக வந்து ஒரு வீட்டை விஜய் ஆண்டனிக்கு பிடித்து கொடுக்கிறார்.\nஇதே வீட்டை ஹீரோயின் சுஷ்மா ராஜும் பார்க்க வர, இரண்டு பேரும் வேறு வேறு தொழில் என்றால் சேர்ந்து இருக்கிறோம் என்று சம்மதம் தெரிவிக்கின்றனர். ஆனால், இரண்டு பேருமே வக்கீல் என்பதை மறைக்கிறார்கள் ப்ரோக்கர்கள். இதை அறிந்து சந்தானத்திற்கு, விஜய் ஆண்டனி போன் செய்ய..ஓ சாரி வணக்கம் சென்னை படம் மாதிரியே இருந்ததால் அங்கு போயிடுச்சு கதை.\nவழக்கம் போல் அவர் போனை ஆப் செய்ய, இவர்களாகவே யாருக்கு முதல் வழக்கு வருகிறதோ, அவர்கள் தான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அப்போது தான் ஜெகன் மூலமாக, பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் நில வழக்கு ஒன்று விஜய் ஆண்டனி, சுஷ்மா கைக்கு வர பின் இந்த வழக்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு தான் வீடு என்று போட்டி மாறுகின்றது. இதற்கிடையில் இவர்களின் ஈகோ வழக்கம் போல் காதலாக மாறி, பின் மோதலில் இடைவேளை வருகிறது.\nபடத்தின் முதல் காட்சியிலேயே விஜய் ஆண்டனியும், சுஷ்மாவும் காதலுக்கு மரியாதை சிடி ஒன்றை வாங்குகிறார்கள். ஆனால், பிரச்சனையே இங்கு தான், இன்ஸ்பெக்டர் ஒருவர் போலி என்கவுண்டர் செய்ததை DVD போட்டு, இந்த காதலுக்கு மரியாதை DVDயி\nல் மறைத்து வைப்பார் ஒரு பத்திரிக்கையாளர். இதை அறிந்த போலிஸ் ஆபிஸர் சுஷ்மாவை பின்தொடர, பசுபதி மகனையும், எம்.எஸ்.பாஸ்கர் மகளையும் கடத்தி, அந்த DVDயை தரச்சொல்லி மிரட்டுகிறார். இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு வக்கீலான நம்ம ஹீரோ எப்படி முடிவு கட்டுகிறார் என்பதே மீதிக்கதை.\nநடிகர், நடிகை மற்றும் டெக்னிஷியன் பங்களிப்பு\nபடத்தின் இயக்குனர் ஆனந்த் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட வேண்டும் என்று முடிவோடு தான் இறங்கியிருக்கிறார் போல, படம் ஆரம்பித்தது முதல் கிளைமேக்ஸ் வரை சிரிப்பு சரவெடி தான். குறிப்பாக பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் கோஷ்டி செய்யும் கலாட்டக்களில் திரையரங்கமே அதிர்கிறது.\n‘எங்கய்யா உண்மையா 10 பேரை ஓடவிட்டு வெட்டுவாருய்யா’ என்று பசுபதியின் கெத்தை காட்ட அவர்கள் கூட்டாளிகள் கெஞ்சும் இடத்திலும் சரி, விஜய் ஆண்டனிக்கு தன் கெத்தை புரிய வைக்க 10 பேரை பசுபதி வெட்டுவது வரை கலாட்டா தான். ‘நீ எனக்கு பீரே குடுக்க மாட்டா, அப்பறம் எப்படிடா உயிரா கொடுப்ப’ என்று ஜெகனும் அவ்வபோது கிச்சுகிச்சு மூட்டுகிறார்.\nகிளைமேக்ஸில் DVD Copy எங்கே என்று கேட்கும் இடத்தில் காளி வெங்கட் செய்யும் கலாட்டாவில் சிரிப்பு சரவெடிக்கு நாங்கள் கேரண்டி. இசையமைப்பாளரே ஹீரோ என்பதால் நன்றாகவே தீனா தேவராஜன் அவர்களை வேலை வாங்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சார் இன்னும் கொஞ்சம் நல்ல எக்ஸ்பிரஷன் கொடுங்க ஜி.\nபசுபதி, எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா, காளி வெங்கட் அனைவரும் காமெடியில் பிண்ணி பெடலெடுத்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் ஒன் லைன் வசனம் கூட ரசிக்க வைக்கின்றது. ஹீரோயின் சுஷ்மா, கொஞ்சம் அனுஷ்கா சாயல் உள்ளது, அவருடைய நடிப்பு நன்றாகவே உள்ளது.\nபடத்தின் இரண்டாம் பாதியில் சென்னையை சுற்றி பார்க்க வரும் பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் குழுவினர் ஒரு மாலில் செய்யும் அட்டகாசம், தொடர்ந்து 15 நிமிடம் இடைவிடாமல் சிரித்து கொண்டே இருக்கலாம்.\nகாமெடி காட்சியில் விஜய் ஆண்டனியின் முகபாவனைகள். சார் நான், சலீம் படத்திலிருந்து கொஞ்ச வெளியில வாங்க. அதே போல் வசன உச்சரிப்பில் ‘தமிழ் படம்’ சிவா சாயல் தெரிகிறது, அதையும் குறைக்கலாம்.\nதேவையில்லாத இடத்தில் வரும் ஒரு சில பாடல்.\nமொத்தத்தில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றாலே நகத்தை கடித்து கொண்டு தான் பார்ப்போம், ஆனால், இந்த மேட்சை ஜாலியாக 2.30 மணி நேரம் சிரித்து கொண்டே பார்க்கலாம்.\nவிழுதல் என்பது எழுகையே....... தொடரின் 46\nஅவளோடு பேசிக் கொண்டிருந்தாலும் மனம் அவளோடான எதிர்காலக் கனவுகளில் திளைக்க மறுத்தது. அந்த வித்தியாசம் ஒரு நெருக்கமற்ற உணர்வாய் அவளை உறுத்த அடிக்கடி வாக்குவாதப் பட்டுக் கொண்டாள். அப்போதும் அவனால் தன்னை மாற்றிக் கொள்ள விருப்பமில்லாது போயிற்று.\nமனம் எப்போதும் உழைப்பு உயர்வு என்று ஓலமிட ஆரம்பித்தது . உழைப்பே உத்வேகமாகையில் பருவத்துக்கே உரிய காதல் கனவுகளின் ஆக்கிரமிப்பு குறைந்து நிஜ வாழ்வில் சிறக்க முயன்று கொண்டிருந்தான். உள்ளங்கையில் உள்ள பொருளே எந்த நேரத்திலும் தவறி விழத் தயாராக இருப்பது போல்இ கனவுகண்டு கைக்கெட்டிய மருத்துவப் படிப்பே எதிர்பாராமல் காவு போகையில் அருகே இல்லாத இன்னொரு உள்ளத்தை நம்பி அதையே எண்ணி அது கிடைக்கும் என்ற காத்திருப்பில் நிஜத்தில் உள்ள கடமைகளைத் தொலைக்க அவன் தயாராக இல்லை.\nஅவன் பட்ட அடிகளும் இடையில் பத்மகலாவுடக்ன் ஏற்பட்ட பிளவும் அவனை நிறையவே வாழ்க்கையின் யதார்த்தத்துக்குப் பதப்படுத்தியிருன்தது. விரும்பிய காதலி கிடைத்தால் வாழ்க்கை இனிக்கலாம் அதற்காக அதுவே கதி என்று கிடந்து கிடைக்காமல் போனால் மூலையில் சுருள அவன் தயாராக இல்லை. அவனை நம்பி அவன் மீது பாசமானவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்கால அத்திவாரம் அவனிடம் இருக்கிறது. அதை செய்து முடிக்க வேண்டும் பிறந்ததின் அர்த்தத்தை எழுந்து நின்று நிரூபிக்க வேண்டும்.\nமழையென்பது யாதென (2) --- சேயோன் யாழ்வேந்தன்\nஅன்னையர் தினப் பரிசு , சிட்னியில் நடாத்தப்பட்ட Pin...\nமே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள்\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 விழா வர்ணன...\nஜோதிகா 36 வயதினிலே ...... --முருகபூபதி\nசிட்னியில் நடைபெற்ற சன்னத்தின் சுவடுகள் நூல் வெளிய...\nசங்க இலக்கியக் காட்சிகள் 49- செந்தமிழ்ச்செல்வர், ப...\nபண்டிதமணி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் திருவ...\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, வீக்கெண்ட் லீடர் பத்த...\nநீதித்துறை மீது நம்பிக்கையில்லை – இந்தியா முழுவதும...\nதமிழ் சினிமா - இந்தியா-பாகிஸ்தான்\nவிழுதல் என்பது எழுகையே....... தொடரின் 46\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30422", "date_download": "2018-08-18T00:20:37Z", "digest": "sha1:3RRMEVUHBTFCIU6AG7OUQZDIQCJ524NW", "length": 12620, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு எச்­ச­ரிக்கை.! | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nசுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு எச்­ச­ரிக்கை.\nசுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு எச்­ச­ரிக்கை.\nதேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கால எல்லை கடந்த புதன்கிழமை நள்­ளி­ர­வுடன் நிறை­வ­டைந்­துள்­ளது. எனினும் இர­க­சி­ய­மான முறையில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ளது.\nஎனவே அவ்­வாறு இர­க­சி­ய­மாக தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக அவ்­வா­ணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.\nஉள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான கால எல்லை நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தேர்தல் சட்­ட­மீறல் தொடர்பில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் இரத்­தின ஜீவன் எச். ஹூலிடம் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nநாளை சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான சகல ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. வாக்­கா­ளர்கள் அனை­வ­ருக்கும் வாக்­காளர் அட்­டைகள் அனுப்­பப்­பட்­டுள்­ளன. மேலும் தேர்­தலை உரிய முறையில் முன்­னெ­டுப்­ப­தற்­கான ஆலோ­ச­னைகள் மாவட்ட தெரி­வத்­தாட்சி அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.\nஇதே­வேளை வாக்குப் பெட்­டிகள் இன்று வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பப்­ப­ட­வுள்­ளன. எனவே வாக்குப் பெட்­டிகள், ஆவ­ணங்­களை விநி­யோ­கித்தல் மற்றும் பொறுப்­பேற்றல் போன்ற பணி­க­ளுக்­காக பத்­தொன்­பது பாட­சா­லை­களும் இரண்டு கல்­வி­யியல் கல்­லூ­ரி­களும் தயார்­செய்­யப்­பட்­டுள்­ளன.\nசமய அனுஷ்­டா­னங்­களை நிறை­வேற்­று­வ­த­னூ­டாக சிலர் அபேட்­ச­கர்­களை ஊக்­கு­விப்­ப­தற்­கான பிரசா­ரங்­க­ளையும் முன்­னெ­டுக்­கலாம். அவ்­வாறு மேற்கொள்வதும் தேர்\nதல் சட்டத்தை மீறும் செயலாகும். ஆகவே அவ்வாறு எவராவது தேர்தல் சட்டத்தை மீறுவார்களாயின் அது குறித்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­ வாக்குப் பெட்­டிகள் வாக்­க­ளிப்பு\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nகிளிநொச்சியில் இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் இனறு வடமாகாண மகளீர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்\n2018-08-17 23:54:36 இராணுவத்தினரின் ட்றக் வாகனம் அனந்தி சசிதரன் உயிரிழந்தவரின் குடும்பம்\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nமகப்பேற்று வைத்தியர்கள் இன்மையால் கற்பிணி பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மாற்றீடாக பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் என அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2018-08-17 23:02:48 கிளிநொச்சி வைத்தியசாலை. மகப்பேற்று வைத்தியர்கள் அனந்தி சசிதரன்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் தற்போது இன்மையால் கர்ப்பவதிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\n2018-08-17 22:22:02 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மகப்பேற்றியல் வைத்தியர்\nஇது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை- சிஐடி விசாரணை குறித்து மகிந்த கருத்து\nஅரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக பல விடயங்களை செய்கின்றது\nமஸ்கெலியா பகுதியில் 18 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் இடம்பெயர்வு\nமஸ்கெலியா, பிரவுன்வீக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவில், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலமரமொன்று, முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், மேற்படி குடியிருப்பில் வசித்து வரும் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் வெளியேற்றப்பட்டுள்னர்.\n2018-08-17 22:00:20 மஸ்கெலியா பிரவுன்வீக் தோட்டம் கெஸ்கீபன்\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-18T00:20:36Z", "digest": "sha1:D6O2D75C7HCK5PCXWF2OO3RZAT6CHY4W", "length": 4423, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்க காங்கிரஸ் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nArticles Tagged Under: அமெரிக்க காங்கிரஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்\nஇலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகி...\nஆண்டில் இரண்டாவது முறையாகவும் அமெரிக்காவில் \"ஷட்டவுன்\"\nஅமெரிக்க காங்கிரசில் செலவின மசோதா குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றப்படாததால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அரசு அலுவ...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamalar.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-8/", "date_download": "2018-08-18T00:21:15Z", "digest": "sha1:CWEF4CLVRXG6LHF745STRKM47HWRR4L3", "length": 34489, "nlines": 190, "source_domain": "eelamalar.com", "title": "இனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள்! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » சிறப்பு கட்டுரைகள் » இனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஇனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள்\nஇனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள்\nமே18, இன்றைய நாள் இலங்கையின் போர்க்குற்ற நாளாகவும் தமிழர் இனப்படுகொலை நாளாகவும், முள்ளிவாய்க்கால்நினைவுநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மாபெரும் அவலமாக, மாபெரும் இனப்படுகொலையாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஈழத் தமிழ் மக்கள் சந்தித்து, இன்றுடன் எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. உலகில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக இனப்படுகொலை கருதப்படுகின்றது. ஈழத் தமிழர்களின் விடயத்தில், ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் விடயத்தில் இந்தப் பார்வைகள் மாறுபட்டடிருப்பதை இந்தக் காலகட்டம் உணர்த்துகிறது.\nஇனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தையை முதன் முதலில் ரபேல் லேம்கின் என்பவர் 1944ல் வெளிவந்த “Axis Rule in Occupied Europe” என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார். உலகில் ஆர்மேனியன் இனப்படுகொலை – Armenian Genocide, கிரேக்க இனப்படுகொலை, பெரும் இன அழிப்பு (2ஆம் உலகப் போரில் யூதர் இனப்படுகொலை) Holodomor இனப்படுகொலை, கம்போடியா இனப்படுகொலை, Communist genocide, ருவாண்டா இனப்படுகொலை, போசுனியன் இனப்படுகொலை, குர்துமக்கள் இனப்படுகொலை, தார்ஃபூர் போர் இனப்படுகொலை போன்ற பல இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் உலகில் இறுதியாக நடந்த மாபெரும் இனப்படுகொலையையாக ஈழத் தமிழர் இனப்படுகொலையை பலரும் கருதுகின்றனர்.\nஇனப்படுகொலை யுத்தம் காரணமாக ஏற்படும் வடு என்பது சில வருடங்களில் இல்லாமல் போகும் ஒன்றல்ல. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்துவிட்ட வடு. ஈழ மக்கள் மாத்திரமின்றி உலக மக்கள் அனைவரும் ஒரு ஒடுக்குமுறை இன அழிப்பின் கொடூரத்தை புரிந்துகொள்ளும் கறைபடிந்த கதை. மாபெரும் இனப்படுகொலை என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல லட்சம் ஈழத் தமிழர்களை காயப்படுத்தியுள்ளது. போர் வலயத்தில் நாம் சந்தித்த, பார்த்த கொடுஞ் செயல்களைவிடவும் இன்னமும் வெளிவராமல், மறைக்கப்பட்ட கொடுஞ்செயல்கள் அதிகம். இன்றுவரை இனப்படுகொலையின் கோரங்கள்வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இலக்கியமாகவும், சாட்சியமாகவும், வாக்குமூலங்களாகவும் அவை இனப்படுகொலையின் இருண்ட பக்கங்களிலிருந்து வெளிவருகின்றன.\nஇலங்கையில் இன ஒடுக்குதல் காரணமாக சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்தித்துள்ளனர். அவற்றுக்கான நீதியை நிலை நாட்ட மறுத்தமையின் வெளிப்படாக அதன் உச்ச நடவடிக்கையாக 2009 மே மாத்தில் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழ் இனம் மறக்க முடியாதவொரு இனப்படுகொலைக்கு முகம் கொடுத்தது. அப்படியிருக்க முள்ளவாய்க்கால் இனப்படுகொலையையும் மனிதாபிமான யுத்தம் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றும் மறைக்க நினைப்பது எத்தகைய விளைவை தரும்\n ஒரு இனத்தை முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ, சமயம் மற்றும் அதன் இன வேறுபாடுகளின் நிமித்தம், தேசிய இனம் என்ற காரணங்களின் நிமித்தம் கொல்ல நினைப்பதும் அழிப்பதுமாகும். 1948 இல் ஐ நா சட்ட விதி 2 இன்படி ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதனை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக அறிவித்தது. ஆனால் அதனை பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் இந்த உலகம் தங்கியமை காரணமாக உலகத்தின் பல பகுதிகளிலும் இலங்கையிலும் இனப்படுகொலைகள் சுதந்திரமாக நிகழ்ந்ததன.\nஉடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்துவது, கொலை செய்யதிட்டமிடுவது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும் என வரையறுக்கப்படுகிறது. இதற்கான முள்ளிவாய்க்காலின் அத்தனை சாட்சியங்களும் வாக்குமூலங்களும் காணொளிக் காட்சிகளும் உலகமெங்கும் அம்பலம் செய்யப்பட்டபோதும் தமிழர் இனப் படுகொலையை ஏற்றுக்கொள்வதில் உலகப் பொதுமன்றங்கள் பின் நிற்கின்றன.\nமானுட வரலாற்றில் மனித இனம் வெட்கித் தலைகுனியும் மிகப் பெரும் இனப்படுகொலையாக ஈழத் தமிழர் இனப்படுகொலைகருதப்படுகிறது. ஆனால் உலகில் இனப்படுகொலைகள் நிகழ்கின்றபோது உலகின் பிராந்திய நலன்கள், மற்றும் அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே அவை இனப்படுகொலையா இல்லையா என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த விடயத்தில் இதைப் போன்ற மானுட அவலங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஐ.நா போன்ற பொது அவைகளும் இந்த இனப்படுகொலைகளுக்குத் துணைபோகின்றன.\nஇலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் தமிழ் மக்களை இன ஒதுக்கல் செய்கின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. இலங்கை சிங்களவர்களின் நாடு என்ற இனவாத சிந்தனையின் அடிப்படையில் இத் தீவின் பூர்வீக மக்களான ஈழத் தமிழ் மக்களை வெளியேற்றியும் கொன்றும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. 1983இல் கறுப்பு ஜூலைப் படுகொலை மூலம் இனப்படுகொலை நிகழத்தப்பட்டது. 1958, 1977 முதலிய வருடங்களிலும் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்\nஈழத்தில் தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றதை தொடர்ந்து போர் மூலமும் அதன் பின்னர் வான் வழியாக விமானங்கள் மூலமும் எறிகணைகளின் மூலமும் பெருமளவான மக்கள் அழிக்கப்பட்டனர். போர் வலயங்களில் அழிக்கப்படுபவர்கள் யாரால் அழிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டு பிடிக்க இயலாது என்றும் அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரிலும் அப்பாவி மக்கள் வகையாக அழிக்கப்பட்டார்கள். இதேவேளை வதைமுகாங்கள் மற்றும் சிறைச்சாலைகளின் ஊடாகவும் தமிழ் மக்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பல லட்சம் மக்கள் அழிக்கப்பட்டதாக பன்னாட்டு தகவல்களும் கூறுகின்றன.\nஇதன் ஒரு உச்ச கட்டமாகவே முள்ளிவாய்காலில் தமிழ் மக்கள் கொன்று அழிக்கப்பட்டார்கள். இனப்படுகொலைக்கான நோக்கங்களாக தமிழர்களுக்கான சுய உரிமையை மறுக்கும் செயலே காணப்பட்டது. தமிழ் மக்களுக்கான உரிமைகளை மறுக்கவும் அவர்களை இல்லாமல் செய்யவும் அவர்களின் சொத்துக்கள், அரசியல் உரிமை, தாயகம் முதலியவற்றை அபகரிக்கவும் இன அழிப்பு நடைபெற்றது. தமிழர்களின் பிரதேசத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு தமிழ் மக்களை தமது தாய்நிலத்திலிருந்து ஒழிக்கும் செயலும் இதன் பாற்பட்டதே.\nபோர் வழி மாத்திரமின்றி வேறு பல வழிகளிலும் ஈழ மக்கள் அழிக்கப்படுகிறார்கள். மகிந்த ராஜபக்ச காலத்தில் வன்னியில் கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. இதேவேளை இறுதி யுத்தத்தின் பின்னர், அரசின் உயர்மட்டக் க்ட்டளைகளின் பிரகாரம், வவுனியா போன்ற மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்படைந்த தமிழ் தாய்மார்களிடம் சிங்களப் படிவங்களில் கையொப்பம் பெறப்பட்டு அவர்களின் கருக்கலை கலைக்கும் செயற்பாடுகள் நடந்துள்ளன. இது திட்டமிட்ட இன அழிப்பாகவும் ஈழத்தின் சந்ததியை கருவிலேயே அழிக்கும் செயல் என்றும் நிரூபிக்கப்பட்டது.\nஇலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அது முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் நடைபெற்றுள்ளதாகவும் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெப்ருவரி 10, 2015 அன்று நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை மூலமாக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானம், சட்டம் மற்றும் அரசியல் துறை சார் வல்லுனர்களின் பங்களிப்புடன் உரிய ஆதாரங்கள், தரவுகள் திரட்டப்பட்டு இயற்றப்பட்டதாக வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது இனப்படுகொலை தீர்மான உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nஇலங்கை அரசாங்ககம், வட மாகாண சபை நிறைவேற்றிய இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாததெனக்கூறியது. அத்துடன் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்றும் உள்நாட்டு யுத்தம் ஒன்றே நடைபெற்றதாகவும் குறிப்பிட்டது. உலக அனுபவங்களின் படி ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் தமது முன்னைய அரசால் செய்யப்பட்ட நடவடிக்கை என்பதன் காரணமாகவும் கடந்த கால இனப்படுகொலையுடன் தொடர்புடைய அரசு என்பதாலும் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு தயங்கலாம்.\nமாறி மாறி ஆட்சியமைக்கும் தேசிய கட்சியை சார்ந்தவர்கள் என்ற வகையிலும் கடந்த கால ஆட்சியில் பங்கு பற்றியவர்கள் என்ற வகையிலும் தென்னிலங்கை சமூகம் என்ற வகையிலும் ஈழத் தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலைகுறித்த கூட்டுப் பொறுப்பை இலங்கை அரசு, மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியாது. ஒரு மாபெரும் இனப்படுகொலையை, உலகறியப்பட்ட மாபெரும் அநீதியை மூடி மறைப்பதும் அவ்வளவு எளிதல்ல. ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலையால் சந்தித்த காயத்தை ஆற்றுவது என்பது ஒரு இனப்படுகொலையாக அதை ஏற்றுக்கொள்வதுடன் மீண்டுமொரு இனப்படுகொலை நிகழாத வகையில் உறுதியும் நியாயமும் நிரந்தரமும் கொண்ட அரசியல் தீர்வொன்றை ஏற்படு்துவதிலேயே தங்கியுள்ளது.\nஅரசியல் உரிமைக்காக, ஒடுக்குமுறையை எதிர்த்து தனி நாட்டிற்காக போராடிய ஒரு இனத்தை மிக கடுமையாக அழித்துவிட்டு ஒரே நாடு ஒரே மக்கள் என்பது இனப்படுகொலையின் காயங்களை மேலும் பெரிதாக்கும் செயல்களே. ஈழத்தில், எதற்காக ஆயுதம் ஏந்தப்பட்டது ஆயுதம் ஏந்திய போராட்டம் எவ்வாறு அழிக்கப்பட்டது ஆயுதம் ஏந்திய போராட்டம் எவ்வாறு அழிக்கப்பட்டது அழிக்கப்பட்டவர்களின் நெஞ்சில் என்ன கனவு இருந்தது அழிக்கப்பட்டவர்களின் நெஞ்சில் என்ன கனவு இருந்தது எஞ்சியிருப்பவர்களின் நெஞ்சில் என்ன கனவு இருக்கிறது எஞ்சியிருப்பவர்களின் நெஞ்சில் என்ன கனவு இருக்கிறது அரசியல் உரிமைக்காக போராடிய ஒரு இனத்தை மாபெரும் இனப்படுகொலை மூலம் அழித்து அடக்கி ஒடுக்குவது எத்தகைய அணுகுமுறை அரசியல் உரிமைக்காக போராடிய ஒரு இனத்தை மாபெரும் இனப்படுகொலை மூலம் அழித்து அடக்கி ஒடுக்குவது எத்தகைய அணுகுமுறை ஒடுக்குமுறைக்காக போராடிய இனத்தை இன மேலாதிக்கத்தால் அழித்தொழிப்பது என்பது எத்தகைய இன அழிப்பு\n« மீண்டும் யுத்தத்தை நினைவுபடுத்தும் பளை பிரதேசம்\nஅடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடினால்த்தான் வாழ்வு\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://icssoftwares.com/panchangam1.html", "date_download": "2018-08-18T01:02:21Z", "digest": "sha1:FIQ2YG4GZPD6KGQSZIVAHSPIGACDMXYQ", "length": 1478, "nlines": 26, "source_domain": "icssoftwares.com", "title": " ICS Softwares - Panchagam Page", "raw_content": "\nஜெய வருஷத்திய பஞ்சாங்கம் (2014 - 2015)\nசித்திரை சித்திரை சித்திரை சித்திரை\nவைகாசி வைகாசி வைகாசி வைகாசி\nஆனி ஆனி ஆனி ஆனி\nஆடி ஆடி ஆடி ஆடி\nஆவணி ஆவணி ஆவணி ஆவணி\nபுரட்டாசி புரட்டாசி புரட்டாசி புரட்டாசி\nஐப்பசி ஐப்பசி ஐப்பசி ஐப்பசி\nகார்த்திகை கார்த்திகை கார்த்திகை கார்த்திகை\nமார்கழி மார்கழி மார்கழி மார்கழி\nதை தை தை தை\nமாசி மாசி மாசி மாசி\nபங்குனி பங்குனி பங்குனி பங்குனி\n365 நாட்களுக்கான தினசரி பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=15056", "date_download": "2018-08-18T00:46:52Z", "digest": "sha1:6XJ7AXSUN6RCTGF4BWHFBAIJ4PQCQYOB", "length": 9799, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» 17 நாட்களுக்கு பின் செல்போன், இன்டர்நெட் சேவை தொடக்கம்…", "raw_content": "\n1000 பாடசாலைகளுக்கு மூடு விழா\nஉலகின் பசியை போக்க புதிய வரைபடம்\nமுதல் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் கருத்தரிப்பு\nஇறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் – நெகிழ்ச்சி சம்பவம்\n28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது பூசாரி\n← Previous Story முடிவுக்கு வரும் யாகூ சகாப்தம்\nNext Story → ஐஸ்வர்யாராயை முற்றுகையிட்ட ரசிகர்கள் – மகளுக்கு அடி\n17 நாட்களுக்கு பின் செல்போன், இன்டர்நெட் சேவை தொடக்கம்…\nகாஷ்மீர் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறையும், கலவரமும் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்த கலவரங்களில் பாதுகாப்பு படையினர் உள்பட 50 பேர் உயிரிழந்தனர். இருதரப்பிலும் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மாநிலத்தின் பிறபகுதிகளுக்கும் கலவரமும் வதந்திகளும் பரவாமல் இருக்க ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கடந்த 17 நாட்களாக செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்து அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். தற்போது ஜம்மு பகுதியில் மீண்டும் இயல்புநிலை திரும்பிவரும் நிலையில் அங்கு 17 நாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nசினி செய்திகள்\tAugust 3, 2018\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2013/07/blog-post_10.html", "date_download": "2018-08-18T01:04:37Z", "digest": "sha1:2FXPF6GZQICTADQKKRNDPMXS6DR37RUL", "length": 8715, "nlines": 216, "source_domain": "www.kummacchionline.com", "title": "நரேந்திர மோடி-பயோடேட்டா | கும்மாச்சி கும்மாச்சி: நரேந்திர மோடி-பயோடேட்டா", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஉத்ரகண்டிலிருந்து 10,000 பேரை அலேக்காக தூக்கியது\n\"கோத்ரா\" அட்டை , அத்வானி\nதிண்ணை காலியாக காத்திருக்கும் சுஷ்மா, ஜெய்ட்லி வகையறாக்கள்\nLabels: அரசியல், சமூகம், மொக்கை\n// உத்ரகண்டிலிருந்து 10,000 பேரை அலேக்காக தூக்கியது // 10,000 அல்ல 15,000 குஜராத்திகளை மட்டும்.\nமோடி பயோடேட்ட படி பிரதமராக மாட்டார்...\nமோடி எப்படி இருந்தாலும் அவர் குஜராத்தில் ஒரு நல்ல முதல்வர் என்பதால் நான் அவரை மதிக்கிறேன்.. இந்த விசயத்தில் மட்டும் Online Learning Solutions\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகலக்கல் காக்டெயில் - 118 (600 வது பதிவு)\n26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் கா...\nதமிழனின் ஒரு \"குவார்ட்டர்' வாங்கும்திறன்\nசென்னின் (அமர்த்தியா) எண்ணங்களும் மலிவான அரசியலும்...\nமுல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்\nதமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி......\nவெட்கம் கெட்ட அரசும் விலையில்லா அரிசியும், விலையுள...\nதள்ளுவண்டி தாத்தா, கோணவாயன், விஸ்கிகாந்த்............\nகாங்கிரஸ் மண்டையை போடும் முன்..........\nகாதல், அரசியல் மற்றும் கொலை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/11091", "date_download": "2018-08-18T00:21:43Z", "digest": "sha1:PTBCLYECOA6OVJUQCJUHYPO4ZMWF4JG6", "length": 11350, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா? | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nதூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா\nதூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா\nமலேசியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். அத்துடன் தூதுவருக்கு எமது கவலையை தெரிவிப்பதோடு இந்த தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.\nஅதிகாரத்தை பகிந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nமஹிந்த ராஜபக்ஷ் தான் சிங்கள மக்களின் தலைவர் என்றும் தான் செல்லும் நாடுகளில் தமிழ் மக்கள் தனக்கு பிரச்சினை ஏற்படுத்துவதாகவும் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களுக்கு காண்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.\nதூதுவருக்கு தாக்குதல் நடத்தியதில் இலங்கையர் எவரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள். அத்துடன் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த கே.பி.யை மலேசியாவில் இருந்து தான் கொண்டுவந்தார்கள். அதேபோன்று மஹிந்த செல்லும் இடமெல்லாம் உதயங்க வீரதுங்க செல்கின்றார். அப்படியிருக்கும்போது இந்த சம்பவம் இவர்களுக்கு தெரிவித்து செய்யப்பட்ட தாக்குதலாகவே தெரிகின்றது. அத்தடன் மலேசியாவில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதும் அவரின் சுவரொட்டிகள் மீது தாக்குதல் நடத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.\nமலேசியா இலங்கை தூதுவர் சதித்திட்டம் அரசாங்கம் அஸாத் சாலி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nகிளிநொச்சியில் இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் இனறு வடமாகாண மகளீர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்\n2018-08-17 23:54:36 இராணுவத்தினரின் ட்றக் வாகனம் அனந்தி சசிதரன் உயிரிழந்தவரின் குடும்பம்\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nமகப்பேற்று வைத்தியர்கள் இன்மையால் கற்பிணி பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மாற்றீடாக பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் என அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2018-08-17 23:02:48 கிளிநொச்சி வைத்தியசாலை. மகப்பேற்று வைத்தியர்கள் அனந்தி சசிதரன்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் தற்போது இன்மையால் கர்ப்பவதிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\n2018-08-17 22:22:02 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மகப்பேற்றியல் வைத்தியர்\nஇது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை- சிஐடி விசாரணை குறித்து மகிந்த கருத்து\nஅரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக பல விடயங்களை செய்கின்றது\nமஸ்கெலியா பகுதியில் 18 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் இடம்பெயர்வு\nமஸ்கெலியா, பிரவுன்வீக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவில், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலமரமொன்று, முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், மேற்படி குடியிருப்பில் வசித்து வரும் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் வெளியேற்றப்பட்டுள்னர்.\n2018-08-17 22:00:20 மஸ்கெலியா பிரவுன்வீக் தோட்டம் கெஸ்கீபன்\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30126", "date_download": "2018-08-18T00:21:44Z", "digest": "sha1:KYAOFEFB6R53F5MSDUMFZPA7IRVW57BG", "length": 9197, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய மொடலிங் சகோதரிகள்!!! | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nநிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய மொடலிங் சகோதரிகள்\nநிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய மொடலிங் சகோதரிகள்\nஅமெரிக்காவை சேர்ந்த மொடல் சகோதரிகள் ஜிஜி ஹடிட் மற்றும் c, உலகில் உள்ள ஐம்பது டொப் பேஷன் அழகிகளின் பட்டியலில் உள்ளவர்கள்.\nகடந்த 2013ஆம் ஆண்டு முதல் பேஷன் ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வரும் இந்த சகோதரிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.\nஇந் நிலையில் மொடல் சகோதரிகள் ஜிஜி ஹடிட் மற்றும் பெல்லா ஹடிட் ஆகிய இருவரும் பிரிட்டனி முன்னணி பத்திரிகைக்காக கூட்டாக நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர்.\nமேலும் இருவரும் தனித்தனியாகவும் அதே இதழுக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்களாம்.\nஅந்த பத்திரிகையில் எதிர் வரும் மார்ச் மாத இதழில் இந்த நிர்வாண புகைப்படங்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.\nஆனால் அதற்கு முன்னர் இந்த சகோதரிகளே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅமெரிக்கா மொடல் சகோதரிகள் ஜிஜி ஹடிட் நிர்வாண புகைப்படங்கள்\n12 வருடத்திற்கு முன் தொலைந்த மோதிரம் கிடைத்த அதிசயம் \nகணவரொருவர் தனது மனைவிக்கு 40 ஆவது பிறந்ததினத்தை சிறப்பிக்ககும் முகமாக தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்.\n2018-08-17 17:44:45 மோதிரம் தங்கம் கரட்\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nசீனாவில் காதலர் தினம் \"கிஷி\" என்ற பெயரில், 2000 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழா இன்று தென் மற்றும் கிழக்கு சீன மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.\n2018-08-17 16:47:28 சீனா காதலர் தினம் கிஷி\n9 வயதில் மூக்­கி­னூ­டாக உள்ளே சென்ற பேனா மூடி: 40 ஆண்டுகளாக நுரை­யீ­ரலில் தங்கியிருந்த கொடூரம்\nகடும் வயிற்று வலிக்­குள்­ளான நிலையில் வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணொ­ரு­வரின் நுரை­யீ­ரலில் பேனா மூடி­யொன்று இருப்­பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்­சி­ய­டைந்துள்ளனர்.\n2018-08-17 16:34:17 நுரை­யீ­ரல் 40 ஆண்டுள் பேனா மூடி­\nஉலகில் மிகப்பெரிய ஸ்ரோபெரி பீட்ஸா ; நுவரெலியாவில் தயாரிப்பு\nஉலகில் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸாவை தயாரிக்கும் முயற்சி, நுவரெலியாவில் கடந்த 17.08.2018 அன்று முன்னெடுக்கப்பட்டது.\n2018-08-17 16:31:15 ஸ்ரோபெரி பீட்ஸா நுவரெலியா\nதீவிர உணவு பிரியர் வாஜ்பாய்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் என பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர்.\n2018-08-17 16:09:22 பிரதமர் வாஜ்பாய் பத்திரிகை\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%C2%AD%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-08-18T00:21:46Z", "digest": "sha1:U3EIOWE3VFRUUY3TLGCRJ6UZUGFSEVQ2", "length": 3829, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கெனிச்சி சுக­னுமா | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஇலங்­கைக்கு அனைத்து வகை­யிலும் ஒத்­து­ழைப்பு வழங்­குவோம்\nஇலங்­கையின் வட பகு­தியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கண்­ணி­வெ­டி­களை அகற்றும் பணி­க­ளுக்­காக ஜப்பான் மேலும் 91 மில்­லி...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/5-years-law-college-rank-list-cut-marks-released-002357.html", "date_download": "2018-08-18T00:37:48Z", "digest": "sha1:Y3LUKBG35HCH3GO3SKKEOI4EFUJBD42C", "length": 9593, "nlines": 102, "source_domain": "tamil.careerindia.com", "title": "5 வருட சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.. ! | 5 years law college rank list and cut marks released - Tamil Careerindia", "raw_content": "\n» 5 வருட சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.. \n5 வருட சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.. \nசென்னை : 5 வருட ஆனர்ஸ் சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்ற இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஜூலை 5ந் தேதி நடைபெறும். கட் ஆப் மதிப்பெண்கள் சாதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.\nசென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக வளாகத்தில் சீர்மிகு சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2 ஆயிரத்து 923 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.\nஇவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் அவர்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண் ஆகியவை www.tndalu.ac.in என்ற இணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) அசோக்குமார் தெரிவித்துள்ளார்.\nநேற்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த தரவரிசைப் பட்டியல் பிற்பகல் 3.30 மணிக்கு நேற்று வெளியிடப்பட்டது. ஜூலை 5ந் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் கட்ஆப் மதிப்பெண்கள் (சாதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது)\nஇதர பிரிவினர் (ஓ.சி) - 99\nபிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 97.750\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் - 93.5\nஇதர பிரிவினர் (ஓ.சி) - 97.875\nபிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 90.489\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் - 92.250\nஇதர பிரிவினர் (ஓ.சி) - 92.250\nபிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 81.625\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் - 77.875\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/bel-recruitment-03-managerial-posts-000969.html", "date_download": "2018-08-18T00:36:31Z", "digest": "sha1:UAXLL76LH3GMBW53GWNYB5UOQI4Y32PZ", "length": 7977, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "காஜியாபாத் பெல் நிறுவனத்தில் காத்தி்ருக்கும் பணியிடங்கள்!! | BEL Recruitment for 03 Managerial Posts - Tamil Careerindia", "raw_content": "\n» காஜியாபாத் பெல் நிறுவனத்தில் காத்தி்ருக்கும் பணியிடங்கள்\nகாஜியாபாத் பெல் நிறுவனத்தில் காத்தி்ருக்கும் பணியிடங்கள்\nசென்னை: காஜியாபாதிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்(பெல்) பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமூத்த துணைப் பொது மேலாளர் பிரிவில் பணியிடங்கள் 3 காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயதுச் சலுகை உள்ளிட்ட விவரங்களை பெல் நிறுவனத்தின் இணையதளமான http://www.bel-india.com-ல் காணலாம்.\nவிண்ணப்பங்களை பெல் நிறுவன இணையதளத்தைத் தொடர்புகொண்டு அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து the Deputy Manager (HR&A), Central Research Laboratory, Bharat Electronics Limited, Bharat Nagar Post, Ghaziabad U.P. 201010 என்ற முகவரிக்கு ஜனவரி 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.\nபெல் நிறுவனமானது கர்நாடக மாநிலம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொணண்டு இயங்கி வருகிறது. பாதுகாப்புத்துறைக்கான சாதனங்களைத் தயாரித்து தருகிறது. நாடு முழுவதும் 9 தொழிற்சாலைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்தைப் பெற்றது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/i-am-the-reason-behind-simbhu-spirituality-santhanam-178935.html", "date_download": "2018-08-18T01:01:31Z", "digest": "sha1:QZLG5RSVBJV2TYCR6PRHXV6QNUXMO2MU", "length": 13658, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவின் ஆன்மீகப் பயணத்தின் பின்னணியில் சந்தானத்தின் ‘அட்வைஸ்’ | I am the reason behind Simbhu spirituality – Santhanam - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்புவின் ஆன்மீகப் பயணத்தின் பின்னணியில் சந்தானத்தின் ‘அட்வைஸ்’\nசிம்புவின் ஆன்மீகப் பயணத்தின் பின்னணியில் சந்தானத்தின் ‘அட்வைஸ்’\nசென்னை: காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்திற்கும், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கும் இடையில் அப்படி ஒரு நட்பு கொடி கட்டிப் பறக்கிறது. சந்தானத்தை திரை உலகத்திற்கு அறிமுகப் படுத்தியதே சிம்பு தான்.\nஅது முதற்கொண்டு இருவரும் இணைந்த கைகளாகவே இருக்கிறார்கள். கால்சீட் பிரச்சினைகளால் இருவரும் சில படங்களில் சேர்ந்து நடிக்க முடியாத சூழல் உருவான போதிலும் கேமராவுக்குப் பின்னால் அவர்களின் நட்புத் தொடரவே செய்கிறதி.\nஇந்நிலையில் சமீபத்தில் சிம்பு மேற்கொண்ட ஆன்மீக சுற்றுப் பயணத்திற்கு பின்னால் தான் தான் காரணகர்த்தா என தெரிவித்துள்ளார் சந்தானம்.\nசென்ற மாதத்தில் திடீரென காவி வேட்டி கட்டி ரஜினி ஸ்டைலில் இமய மலைப் பயணம் புறப்பட்டு ரசிகர்களை குழப்பத்தில் தள்ளினார் சிம்பு. பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் மீண்டும் பத்திரமாகத் திரும்பி வந்து மீண்டும் தன் பட வேலைகளில் பிசியாகி விட்டார் சிம்பு.\nஇந்நிலையில், ‘நான் சொல்லித் தான் சிம்பு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்' எனக் கூறி ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் சந்தானம்.\nமேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ‘சிறு வயது முதலே எனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இது குறித்து சிம்புவிடம் பேசுவேன்.\nநீ வேணும்னா ஆன்மீகப் பயணம் போயேன்...\nசமீபத்தில் ஒருநாள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, நான் தான் சிம்புவை ஆன்மீகப் பயணம் மேற்கொண்டால மனதுக்கு நல்லது என கூறினேன்.\nஉடனே, என்னையும் உடன் வருமாறு அழைத்த போதும், தொடர்ந்து பட வேலைகள் இருப்பதால் என்னால் உடன் செல்ல இயலவில்லை.\nசரி, இதில் நான் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. சிம்பு ஆன்மீகப் பயணம் முடித்துத் தானே, திரும்பி வந்திருக்கிறார். நான்கைந்து கொலைகள் செய்து, ஜெயிலுக்கு சென்று விடுதலையாகவில்லையே' என சிரிக்கிறார் சந்தானம்.\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nபர்ஸ்ட்டு அரவிந்த்சாமி.. அடுத்து அருண் விஜய்.. அப்போ இன்னைக்கு சிம்புவா\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஇப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு... சிம்புவுக்கு ஏன் ‘இந்த’ வேண்டாத வம்பு\nஅப்பாடா.. நான் அவரோட லிஸ்ட்டுல இல்லை.. சிம்புவின் மகிழ்ச்சியைப் பாருங்க\nதுருவங்கள் பதினாறு இயக்குனருடன் கைகோர்க்க தயாராகும் சிம்பு…\nசூப்பர் லவ் ஸ்டோரி ரெடி.. மீண்டும் கை கோர்க்கும் சிம்பு - கௌதம் வெற்றிக் கூட்டணி\nஇந்த வம்பு தும்புக்கெல்லாம் என் தலைவன் தான் சரி: சிம்புவை மாட்டிவிட்ட விஜய் சேதுபதி\n'என் முதல் காதல்'... விழா மேடையில் சீக்ரெட் உடைத்த சிம்பு\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/record-breaking-kohli-rahane-end-indias-durban-jinx/", "date_download": "2018-08-18T01:20:10Z", "digest": "sha1:W2GUWTB7UA4X3SDXV6FRNILEJVBISBEF", "length": 12133, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோலி செம ஹாப்பி... முதல் போட்டியே வெற்றியில் முடிந்தது. - Record-breaking Kohli, Rahane end India's Durban jinx", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nகோலி செம ஹாப்பி… முதல் போட்டியே வெற்றி\nகோலி செம ஹாப்பி... முதல் போட்டியே வெற்றி\nவிராத், முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது மிகுந்த மிகழ்ச்சியை அளிக்கிறது என்றார். தங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் பாராட்டினார்.\nதென்னாப்பிரிக்கா இடையிலான முதல் நாள் கிரிக்கெட் போட்டியில், கோலி மற்றும் ரஹானேவின் அசத்தலான ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.\nதென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் வரும் இந்திய அணி, அங்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. டர்பன் நகரில் நேற்று நடைப்பெற்ற முதல் நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅந்த அணியின் கேப்டன் டூப்ளஸிஸ் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்பு ஆடிய கிறிஸ் மோரிஸ் (37), டி காக் (34) ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பின்பு, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் சொற்ப ரன்களின் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில், அந்த அணி விக்கெட்களை இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.\nஅதன் பின்பு களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, தவான் ஆகியோர் முதலில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். பின்பு, பேட்டிங்கில் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 33 ஆவது சதத்தை நேற்று நிறைவு செய்தார்.\nஅவருடன், கைக்கோர்த்த ரஹானே, 79 ரன்களை குவித்தார். பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் கலக்கிய இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வென்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய விராத், முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது மிகுந்த மிகழ்ச்சியை அளிக்கிறது என்றார். தங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் பாராட்டினார்.\nபுதிய வரலாறு படைத்த இந்திய அணி: தென்னாப்பிரிக்கா மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது\nபுவனேஷ்குமாரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்\nவாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை\nஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nகமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்\nகமல்ஹாசன் அரசியல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2015/07/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-10/", "date_download": "2018-08-18T00:56:53Z", "digest": "sha1:QLX7MK4TO276FQNS6TNIG3BSDGRQWXSC", "length": 19133, "nlines": 195, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 10 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி – 10\nபோன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. பிண்ணணியில் நான் போட்டிருந்த யக்க்ஷி படத்தை சிலர் ரசிச்சிருந்திங்க. பாடலுடன் கேட்கும்போது நன்றாக இருப்பதாய் சொல்லிருந்திங்க. எல்லாவற்றிக்கும் நன்றி.\nஇன்றைய பதிவில் மஹாமேரு பத்தி என் அறிவுக்கு எட்டின வரை சுருக்கமா சொல்ல முயற்சி செய்திருக்கேன். சிலர் ஸ்ரீ சக்கரம் மற்றும் மகாமேரு இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை கேட்டிருந்திங்க. ஸ்ரீ சக்கரம் யந்திரம் 2 dimension. ஸ்ரீ மேரு 3 dimension.\nசிலர் மேரு என்றால் மேருமலையான்னு கேட்டிருந்திங்க. மேரு என்றால் மேரு மலை அல்லது மேரு பர்வதம். சின்ன வயதில் பாற்கடலில் அமுதம் கடைய மேரு மலையை மத்தாய் பயன்படுத்தினாங்கன்னு கேள்விப்பட்டிருப்போமே. அதே மேரு தான். அந்த மேரு மலை தான் அம்பாள் வாசம் செய்யும் இடம். இமயமலை தொடரில் இருக்குன்னு சொல்றாங்க.\nமேரு மலைக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு பத்தி கமெண்ட்ஸ்ல யாரு முதலில் எழுதுறாங்கன்னு பார்க்கலாம்.\nஇப்ப பத்தாவது பகுதியின் லிங்க்\nநிலவு ஒரு பெண்ணாகி – 10\nஇன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. அஷாட நவராத்திரியின் முதல் நாள். இந்தப் பகுதி 108வது போஸ்ட். இந்த ஒற்றுமை இயல்பாக நடந்தது.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 9\nநிலவு ஒரு பெண்ணாகி – 11\nநன்றி ஷாரதா. மஹாமேரு புத்த மதத்திலும் நம்புறாங்க. அங்கேயும் யட்சிணி உண்டு.\nஆதிசேஷனின் ஒரு தலை நாமம் போன்ற படத்தில் இருக்கும் ஒரு சிறு கல்தான் பூமி. அப்ப நாமம் முழுதும் எத்தனை கற்கள் இருக்கும். ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலை வேற. அப்ப எவ்வளவு பிரமாண்டமா இருக்கும். கற்பனை கூட செய்ய முடியல.\nநன்றி சிந்து. பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள இந்தக் கதை எனக்கு வாய்ப்பளித்தது என்பதே நிஜம். நமக்குத் தெரிந்த விஷயங்களே பல இடங்களில் பல மாதிரி சொல்லும்போது வியப்பாக இருக்கு. சில விஷயங்களை கதையில் எழுதிருக்கேன். நேரம் கிடைக்கும்போது உங்களுக்கும் கேட்க விருப்பமிருந்தால் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.\nநன்றி சுகன்யா. ஆதிரன் பத்தி முதலில். அப்பறம் ரேயனைப் பற்றித் தொடரலாம்.\nநஞ்சுண்ட ஸ்வாமி சொன்னதில் எது நடக்குமோ\nஇரு சக்கரங்களை பற்றி சொன்னதற்கு நன்றி.மேரு சக்கரம் பத்தி கேள்விப்பட்டதில்லை.\nஆன்மீக விசயங்களை பத்தி சொல்லுகையில் இயல்பாக வந்த ஒற்றுமை மகிழ்விக்கிறது.\nமேரு மலைக்கும்,இலங்கைக்கும் உள்ள தொடர்பு : என் நினைவுக்கு வந்ததிது.தவறா சரியான்னு தெரியல.தம் தாய் தினமும் சிரமமில்லாமல் வழிப்பட வேண்டி இலங்கேசுவரனான இராவணேஸ்வரன் சிவபெருமான் தம்பதியரை தம்மோடு வைத்திருக்கும்பொருட்டு மேருமலையின் ஒரு பகுதியை கொண்டு வந்தாராம்.அந்த பகுதி திருக்கோணமலையிலிருப்பதாக ஐதீகம்.மேலும் அதனால் அவ்வூர் தட்சண கைலாயம் எனவும் அழைக்கப்படும்.இந்த நிகழ்வோடு தொடர்புடைய இன்னுமொரு நிகழ்வு நினைவிற்கு வரவில்லை.\nநன்றி தேவி இது எனக்கு புது செய்தி. இப்படி ஒரு கேள்வி கேட்டதால் தானே இந்தத் தகவல் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இதைப் போல் மேலும் தகவல்களை தோழிகள் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇந்த மேரு மலைக்கும் இலங்கைக்கும் உள்ள பொருத்தத்தை முதன்முதலில் எனக்கு தெரியப்படுத்திய தம்பி சுதர்ஷனுக்கு என் நன்றிகள்.(ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால்,3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு நகரின் பெயரை ,நாம் அறியாமல் பிழையாக ,திரிகோணமலை என்று சொல்கிறோமே என்ற வருத்தம் வந்ததை மறக்கவே முடியாது)\nஇந்த தொடரின் மூலமாக,நாங்கள் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக இருக்குமென்று நினைக்கிறேன்.\nநன்றி கீதா. ஆதிரனைப் பற்றி இன்றைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.\nஹாய் மதுரா பதிவு அருமை ஸ்ரீ சக்கரம் பற்றி குறிப்பிட்டு இருப்பது நன்றாக இருந்தது . நன்றி .\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2018-08-18T00:20:52Z", "digest": "sha1:F3EKT4HEE72VVVRTM2ZG5ZY7L3HS6Y3A", "length": 11637, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "தமிழர் மரபு திங்கள்- தை மாதம் – கனடா | CTR24 தமிழர் மரபு திங்கள்- தை மாதம் – கனடா – CTR24", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்வில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன\nஜெனீவாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு கடும் சவாலாக செயற்படவுள்ளதாக சிங்கள அமைப்பு ஒன்று சூளுரைத்துள்ளது\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nதமிழர் மரபு திங்கள்- தை மாதம் – கனடா\nசீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை\nமனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.\nPrevious Postதமிழர்கள் தற்போது உள்ள பதவிகளையும் துறந்துவிட்டால் இலங்கை அரசாங்கம் தான் நினைத்ததைத் செய்துவிடும் Next Postபொங்கல் ஸ்பெஷல்: கருப்பட்டி பொங்கல்\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்...\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE-15.156513/", "date_download": "2018-08-18T00:32:48Z", "digest": "sha1:YQ5S4KHZRSPA5EZWO4OXRVR4OMWSSCD5", "length": 20159, "nlines": 377, "source_domain": "indusladies.com", "title": "நான் என்பதே நீயல்லவா - 15 | Indusladies", "raw_content": "\nநான் என்பதே நீயல்லவா - 15\nசாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நேரம் மல்லிகார்ஜுன் உத்ராவை அழைத்தார்.\n\"உத்தி கீர்த்தி என்ன பண்ணறா\n\"நல்லா தூங்கிட்டு இருக்கா பா\"\n\"ம்........ வேற எதும் சொன்னாளா\n\"ரொம்ப பயந்துட்டா பா, ஆனா இப்ப o.k\"\n\"சரி..... உன் கிட்ட ஒன்னு சொல்லனும் டா\"\n\"என்ன விஷயமா பா அதுவும் இந்த நேரத்துக்கு.....\"\n\"சாயந்திரமே பேசினாரு மா....... அவரோட அண்ணன் பையன்........ சரணுக்கு உன்ன கேட்டாங்க டா....... பையனும் நல்லவன் தான் ....... நல்ல குடும்பம்........ தெரிஞ்ச குடும்பமும் கூட....... நீ என்ன டா சொல்லுற....\" அவளுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை சரணுக்கா\" அவளுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை சரணுக்கா அதிர்ச்சி... குழப்பம் என மாறி மாறி கேள்விகள் தான் தோன்றின.அதில் முக்கியமாக தோன்றியது விஜி பற்றியது. அதை மட்டும் தன் தந்தையிடம் கேட்டாள்.\n\"நான் நாளைக்கு சொல்லட்டுமா பா\n\"எப்ப வேணா நல்லா யோசிச்சே சொல்லு.......\"\n\"அப்பா சரணுக்கு பார்க்கறங்க னா விஜிக்கும் பார்ப்பாங்க இல்ல....\"\n\"ஆமா..... \"சிறிது யோசனைக்கு பின் \"விஜியும் ரிஷியும் சந்திச்சுகிட்டாங்களா...\n\"இல்ல பா....... ரிஷி பெங்களுர் போய்ருக்கான்.....\"அதற்கான அவசியத்தையும் சொன்னாள்\n\"ஒ....... சரி விடு சீக்கரம் கிளம்பி வர சொல்லு பாத்துகலாம்.....\"\n\"எதையும் யோசிகாம தூங்கு,காலைல யோசிச்சுகலாம்.... good night .....\"\n\"சரி பா.... good night மா\" தூங்க சென்றாள். தூக்கம் தான் வரவில்லை மனதில் இத்தனை கேள்விகள் இருக்கும் போது எப்படி தூக்கம் வரும்...\n ஒருவேளை அவன் தன்னிடம் விளையாடி இருப்பானோ போனதடவை கூட ஏதோ சொன்னானே போனதடவை கூட ஏதோ சொன்னானே அன்று ஏன் அப்படி நடந்து கொண்டான் அன்று ஏன் அப்படி நடந்து கொண்டான் விஜிக்கு தெரியுமா இப்படி கோர்வையேயின்றி கேள்விகள் தோன்ற முதலில் எழுந்தமர்ந்து ஒரு ஸ்லோகத்தை மனதை ஒருநிலைபடுத்தி சொல்லிமுடித்தாள். கேள்விகள் மறையவில்லை தான் ஆனால் ஒரு தெளிவு கிடைத்தது.முதலில் எங்கிருந்து யோசிப்பதென்ற தெளிவு.முதலில் சரண் தன்னிடம் பழகிய நேரங்களை மனதில் ஒட்டி பார்த்தாள்.\nமுதல்முதலில் அவனை பார்த்தபோது தோன்றிய அனுபவத்தையும் ஆராய்ந்தாள்.அன்று அவனுடைய குறும்பும், கண்ணியமான பார்வையும், கல கல பேச்சும் உள்ளம் கவர்ந்தது என்னவோ உண்மைதான்.கோபத்தில் அதையெல்லாம் அவள் அன்று கண்டுகொள்ளவில்லை.ஆனால் இன்று அவளுக்கு இனித்தது அவனது செய்கை.அன்றய பொழுதில் இனிமையானவனாக தெரிந்தவன் முந்தினம் தன்னிடம் ஏன் அப்படி கேட்டான் என்று விளங்கவில்லை அவளுக்கு.ஏதெனும் கோபமாக இருக்கும் என்று சமாதானமடைந்தாள்.அவனை தனக்கு பிடித்திருக்கிறது என்று கண்டு கொண்டாள். விஜிற்கு அண்ணியாய் மனதிற்கு பிடித்தவனின் மனைவியாய் செல்வதில் அவளுக்கு ஏக சந்தோஷம் தான். ஆனால், அவனது மனநிலையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்துகொண்டாள்.\nஅடுத்த பிரச்சையான விஜி விஷயத்திற்கு வந்தாள். என்ன செய்வதென்று யோசித்தாள்.ஏற்கனவே முடிவு செய்ததைபோலவே செய்யலாம்,ஆனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கரம் முடிக்கவேண்டும் இது குறித்து ரிஷியிடம் பேசவேண்டும் என்று மனதில் குறித்துகொண்டாள். சரண் தன்னிடம் பேசியது அவனது செய்கை என்று அவனை பற்றி யோசித்தபடியே உறங்கி போனாள்.அவனும் இவளைப்பற்றி தான் யோசித்துகொண்டிருந்தான்.\nஉத்ராவை அவன் முதலில் பார்த்தது விஜியின் வீட்டில் இல்லை அதற்குமுன்பே அவளை பார்திருக்கிறான்.ஒரு முறை விஜி வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போது சிக்னலில் தங்கள் பஸ்சிற்கு பக்கதில் சிரிப்பு சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தான்.அங்கு ஒருவரோடு பேசியபடி உத்ரா தான் சிரித்து கொண்டிருந்தாள். லாவண்டர் நிறத்தில் அழகிய பூவேலைபாடோடு கூடிய சுடிதாரில் கண்களில் குறும்போடு குழந்தைதனமாய் கேள்விகள் கேட்டபடி அமர்ந்திருந்தவளின் அழகு அவனை ஈர்த்தது.அவர்களின் பேச்சிலிருந்து அவர் அவளின் தந்தையை என்றும் இருவருமாய் கோவிலிற்கு வந்திருப்பதும் தெரிந்துகொண்டான்.சிக்னலில் பச்சை விளக்கேறிய அவளை தவறவிட்டான்.அதிலிருந்து எப்போது திருப்பூர் வந்தாலும் அவளை தேடிவதை நிறுத்தவில்லை.விஜியின் வீட்டில் அவளை பார்த்தது ஆச்சரியம் தான் ஆனால் உடனே தன் மீட்டேடுத்துகொண்டான்.அவளின் உணர்வுகளை கண்டு ரசித்தான், அவளை சீண்டி ரசித்தான்.இன்று கண்ணன் பேச்சுவாக்கில் உத்ராவிற்கும் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று சொல்ல அவரிடமே தன் விருப்பத்தை முதலில் தெரிவித்தான்.அவனது வீட்டில் அனைவருக்கும் இது சந்தோஷமான முடிவாகதான் இருந்தது.அதனாலயே உடனே மல்லிகார்ஜுனிடம் பேசிவிட்டார் கண்ணன்.\nஆனால் இந்த செய்தி ஒருவருக்கும் மட்டும் மகிழ்ச்சியை தரவில்லை.........................\nநான் என்பதே நீயல்லவா - 25\nநான் என்பதே நீயல்லவா - 24\nஉங்ககிட்ட ஒரு சின்ன விண்ணப்பம்........\nநம்மெல்லாம் இப்போ பொங்கல் கொண்டாட போறோம் ல அதுனால எங்களுக்கு ஒரு நாலே நாள் பெரியமனசு பண்ணி லீவ் கொடுத்திருக்காங்க பா எங்க ஆபிஸ்ல........ அதே பெரிய மனசோட நீங்களும் எனக்கு ஒரு நாலு நாள் லீவ் கொடுங்க பா... ப்ளிஸ்...... பொங்கல் பரிசா நான் இப்ப ஒரு பகுதிய அப்டேட் பண்ணிடேன்(அது பரிசு இல்ல ........ தண்டனைனு சொல்லறது கேக்குது...... ஏதோ என்னால முடிஞ்சது........ :rotflஹா...ஹா...ஹா)\nவரும் புதனன்று உங்களுக்கு மறுபடியும் உங்களயெல்லாம் கொடுமைபடுத்த வந்துடுவேன் பா..........\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள் தேன் \nகதையை சுவாரஸ்யமாய் எடுத்து செல்கிறாய் தேன்..\nஎழுத்து நடையும் நன்றாக இருக்கிறது..வாழ்த்துக்கள் ..\nநாலு நாள் கழிச்சு பொறுமையா வந்து அடுத்த பகுதி போடு..பொழச்சுப் போ..\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள் தேன் \nநன்றி அகி பா........ உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள் பா........\nகதையை சுவாரஸ்யமாய் எடுத்து செல்கிறாய் தேன்..\nஎழுத்து நடையும் நன்றாக இருக்கிறது..வாழ்த்துக்கள் ..\nநாலு நாள் கழிச்சு பொறுமையா வந்து அடுத்த பகுதி போடு..பொழச்சுப் போ..\nநன்றி ப்ரனா பா........ உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள் பா\nரொம்ப நன்றி பா.... அனுமதிக்கு\nசொல்லறேன் பா...... உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்கள் பா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://mahaperiyavapuranam.org/sankara-jayanthi-sri-mahaperiyava-sri-pudhu-periyava-sri-bala-periyava/", "date_download": "2018-08-18T00:46:56Z", "digest": "sha1:R3EDRFCXZPKKDNX472GSLUM72YNY6ZJ3", "length": 7031, "nlines": 98, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : Sankara Jayanthi - Kanchi Kamakoti Sankaracharya Matam Moolamnaya Sarvajna Peetam", "raw_content": "\nஸ்ருதி ஸ்முருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்\nநமாமி பகவத்பாத ஷங்கரம்லோக சங்கரம் லோக ஷங்கரம்.\nதெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி: எல்லா ஜனங்களும் இந்த விசேஷத்தைப் புரிந்து கொண்டு ஆசார்ய ஜயந்தியை மஹோத்ஸவமாகக் கொண்டாடவேண்டுமென்று எனக்கு ஆசை. அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு பிழைப்பதனாலோ என்னவோ, அத்தனை ஜயந்திகளைவிடவும் விசேஷமாக, அவை எல்லாவற்றையும் தக்கி நிற்கச் செய்த இந்த ஜயந்தியைக் கொண்டாட வேண்டுமென்று எனக்கு இருக்கிறது ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது ராமாயணம் இருந்திருக்குமா\nஎனக்குப் பேராசை — அது நிறைவேறுமோ, இல்லையோ சொல்லிவைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிடவேண்டுமென்று பேராசை சொல்லிவைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிடவேண்டுமென்று பேராசை இதை நான் சொல்லிக்கொண்டே போனால் என்றைக்காவது நிறைவேறாதா\nஎதற்காக் கொண்டாடணுமென்றால், கொண்டாட்டத்தால் அவருக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. நமக்கேதான் ச்ரேயஸ்.\nSuryam Nivarthi on Daily Nectar : உள்ள இருக்கிறத எடுத்துட்டியா\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=22656b1e21921bb0472a6be28ff89985", "date_download": "2018-08-18T00:41:45Z", "digest": "sha1:XB6YSHHL2MP6JFBNB6NH4PAGBQKJT2AH", "length": 32244, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2013/02/trb-and-tet-education-tet-paper-i-and_3013.html", "date_download": "2018-08-18T01:34:40Z", "digest": "sha1:UIQRN7EUV6U33N5YRZGGDFS5T2PHTG3O", "length": 33423, "nlines": 254, "source_domain": "www.kalvisolai.org", "title": "TRB AND TET EDUCATION | TET PAPER I AND II - குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் | Child Development and Pedagogy 601-800 - QUESTIONS.", "raw_content": "\n601 உயர்வான தன் மதிப்பீட்டை குழந்கைளிடம் வளர்க்க ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் அதிகமான பாராட்டுதலை வழங்க வேண்டும்,நன்றாக ஊக்குவிக்க வேண்டும்,எதிர்மறையான கருத்துக்களை தவிர்த்தல் வேண்டும்\n602 உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.\n603 உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.\n604 உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்\n605 உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவது பரிசுப் பொருட்கள்\n606 உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்\n607 உடலால் செய்யும் செயல்கள் நடத்தல், நீந்துதல்\n608 உடலால் செய்யப்படும் செயல்கள் எது\n609 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது\n610 உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.\n611 உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி\n612 உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. Aha experience\n613 உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்\n614 உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் கோஹலர்\n615 உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் கோலர்\n616 உட்காட்சி மூலம் கற்றலுக்கு கோஹ்லர் பயன்படுத்திய பிராணி மனித குரங்கு\n617 உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854\n618 இன்றைய காலக் கட்டத்தில் நீ எத்தகைய கல்வியை மாணவருக்கு அளிக்க விரும்புவாய் சூழ்நிலை மற்றும் நன்னெறிக் கல்வி\n619 இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறு ஸ்கின்னர் கற்றல் விதி\n620 இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்\n621 இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர்\n622 இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913\n623 இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும் டீர்னிக் வெட்\n624 இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை\n625 இரண்டாம் நிலை மனவெழுச்சிகள் கூச்சம்,தற்பெருமை,குழப்பம்\n626 இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ\n627 இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ\n628 இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம் ரூஸோவின் தத்துவம்\n629 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்\n630 இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் கற்றல்\n631 இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு\n632 ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - இரண்டும்.\n633 ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்\n634 ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள்\n635 ஆளுமையை அளவிடும் மைத்தட சோதனையை உருவாக்கியவர் ரோசாக்\n636 ஆளுமையை அளவிடும் பொருள் இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் ( Thematic Apperception Test – TAT) முர்ரே\n637 ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை\n638 ஆளுமையை அளவிட உதவும் ஒரு புறவய முறை எது\n639 ஆளுமையின் வகைகள் - இரண்டு\n640 ஆளுமையின் உளப் பகுப்பாய்வு கொள்கையை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்ட்\n641 ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - ஐஸென்க்\n642 ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள்\n643 ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல்.\n644 ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - கில்போர்டு\n645 ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்\n646 ஆல்பிரட் பாண்டுரா எந்த கருத்தை வலியுறுத்துகின்றார் முன்மாதிரி (Role model)\n647 ஆரம்பக் கல்வி வயதினர் பின் குழந்தைப் பருவம்\n648 ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்\n649 ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் தாய்மொழி\n650 ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு\n651 ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில் மாணாக்கரிடம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும்\n652 ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ்\n653 ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் அன்பை வெளிப்படுத்தும் செயல்களை கற்றுத் தர வேண்டும்\n654 ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும் எனக் கருதுகிறீர்கள் சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல்\n655 ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக் கருதுகிறீர்கள் கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல்\n656 ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்\n657 ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி\n658 ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்\n659 ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்\n660 ஆக்சானைக் சுற்றிலும் மையலின் ஷீத் என்ன செய்கிறது நரம்புத் துடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கிறது ,குறைக்கிறது\n661 ஆக்கநிலையிறுத்தக் கோட்பாட்டின் முன்னோடி பாவ்லோவ்\n662 ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை 10\n663 ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை\n664 ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல்.\n665 ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் நான்கு\n666 ஆக்கச் சிந்தனைக்கு ______ சிந்தனை அடிப்படையானது விரி\n667 ஆக்கச் சிந்தனை வளர்த்தலில் ஒப்படைப்பு வினாக்கள் எதனை தூண்டக்கூடியவையாக இருக்க வேண்டும்\n668 ஆக்க நிலையுறுத்தம் பற்றிய சோதனையுடன் தொடர்புடையவர் ஸ்கின்னர்\n669 ஆக்க நிலையுறுத்தத்திற்கு பாவ்லோ பயன்படுத்திய பிராணி நாய்\n670 ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது பால்லாவ்\n671 அனைவருக்கும் தொடக்க கல்வி UPE\n672 அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA\n673 அனைத்துக் குழந்தைகளும் ____________எதிர்பார்கின்றனர் நிபந்தனையற்ற அரவணைப்பினை\n674 அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்\n675 அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.\n676 அனிச்சைச் செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என பியாஜே இப்பருவத்தை குறிப்பிடுகிறார் தொட்டு உணரும் பருவம்\n677 அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.\n678 அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990\n679 அறிவுரை பகர்தலின் மையமாக செயல்படும் பகுதி நேர்காணல்\n680 அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்\n681 அறிவுப்புல வரைப்படம் எனும் கருத்தைக் கூறியவர்- டோல்மன்\n682 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது மனப்பாடம் செய்வித்தல்\n683 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்\n684 அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர் பியாஜே\n685 அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை\n686 அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்\n687 அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்\n688 அறிவாண்மை ஈவு சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் - டெர்மன்\n689 அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை\n691 அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே\n692 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ (Dembo)\n693 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ\n694 அதிக பாதுகாப்புணர்வைப் பெற இயலாத குழந்தைகள் ____________ விரும்புகின்றன. தனிமையை\n695 அதிக குழந்தைகள் உள்ள குடும்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த உணர்வு அதிகம்\n696 அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.\n697 அடைவூக்கம் டேவிட் மெக்லிலெண்ட்\n698 அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்\n699 அடிப்படை மனவெழுச்சி சினம்\n700 அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் எல். தர்ஸ்டன்.\n701 அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்\n702 அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்\n703 அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு\n704 அச்சத்தை நீக்க என்ன செய்யவேண்டும் திறமையை வளர்க்க வேண்டும்,தன்னம்பிக்கையை வளர்க்க ,வேண்டும்,காப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும்\n705 அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் யுங்\n706 அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்\n707 அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம்.\n708 அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.\n709 அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.\n711 VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நினைவு சூத்திரங்கள்\n717 The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - ஸ்கின்னர்\n718 The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி\n722 SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்\n724 SS யுனிவர்ஸ் கப்பலில் அமெரிக்க நாட்டின் எத்தனை மாணவர்கள் சென்னை வந்தனர் - 461\n725 Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ\n730 RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்\n743 Operation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம்\n752 NAPE என்பது என்ன தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978\n762 L.O.E என்பது - வாழ்க்கை மையக் கல்வி\n775 IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985\n781 Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-18T01:21:34Z", "digest": "sha1:YSVASFSOPIFJM4HJQCB6TUKKZYOJQDOJ", "length": 25564, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "சாதி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள், தத்துவம், வேதம்\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4\n இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை. \"தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும்\" என்ற கேள்வி எழுகிறது. நமது வெளியுலக உணர்வுப்படி நோக்கினால் -- ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்\" என்ற கேள்வி எழுகிறது. நமது வெளியுலக உணர்வுப்படி நோக்கினால் -- ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள் அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா முடியாதே அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது. அது எப்பொழுதும் இருக்கிறது. இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும்... [மேலும்..»]\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\n“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்\" என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்... [மேலும்..»]\nசமூகம், தேசிய பிரச்சினைகள், பொது, வீடியோ\nஇந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nஇந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன - இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், தேசிய பிரச்சினைகள்\nசாதி அரசியல் செய்கிறாரா மோதி\n\"மோதியை எப்படி வேண்டுமானாலும் எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது சாதியை வைத்து, கீழ் சாதிகளில் பிறக்க நேர்ந்து விட்ட மக்களை (நீசீ ஜாதி மே பைதா ஹுயே லோக்) அவமதிக்காதீர்கள்\" என்று மோதி பதிலடி கொடுத்தார்.. பிரியங்கா நேரடியாக சாதியைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது, மோதி வலிந்து இதில் சாதியை நுழைக்கிறார் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. \"நீச்\" என்ற சொல் உடனடியாக ஹிந்தி பேசும் பாமர ஜனங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு எப்படிப் பட்டது என்பதை மேல்தட்டுகளிலேயே புழங்கிய பிரியங்கா அறிந்திருக்க வாய்ப்பில்லை.... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், பொது, விவாதம்\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2\nசாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா.... இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்... இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர்... [மேலும்..»]\nசமூகம், புத்தகம், பொது, விவாதம்\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\n75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய \"சாதி ஒழிப்பு\" (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்... இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது.... சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர்... [மேலும்..»]\nஇலக்கியம், சமூகம், வரலாறு, விவாதம்\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2\nகிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்.... தலித்துகளிடையே அயோத்தி தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால்... [மேலும்..»]\nஇலக்கியம், சமூகம், வரலாறு, விவாதம்\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1\nஇலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது... பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது... சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு... [மேலும்..»]\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nநமது முன்னோடிகளான பல தேசத் தலைவர்களின் பிம்பம் ஜாதீயத் தலைவர்களாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. நம்மைப் பிணைக்கும் அன்பான தளைகளையே நம்மைப் பிரிக்கும் வேலிகள் ஆக்கி விட்டோம்.... உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச் சுவரை அகற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் பல மாதங்கள் அதே ஊரில் தங்கி நடத்திய அமைதியான பணிகள் யாருக்குத் தெரியும் இயல்பாகத் தீர வேண்டிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிய மார்க்சிஸ்ட்கள் தான் ஊடக செய்திகளில் இடம் பெற்றார்கள்.... வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இருந்தால், தலித் மக்கள் மீது ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துவோர் திருந்தி விடுவார்களா என்ன இயல்பாகத் தீர வேண்டிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கிய மார்க்சிஸ்ட்கள் தான் ஊடக செய்திகளில் இடம் பெற்றார்கள்.... வன்கொடுமை தடுப்பு சட்டம் இந்த அளவுக்கு கடுமையாக இல்லாமல் இருந்தால், தலித் மக்கள் மீது ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்துவோர் திருந்தி விடுவார்களா என்ன\nவெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன\n..உற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக் கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ வைத்தார்கள்...எரிந்தது எரிந்தது அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது 44 மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது.. நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். .. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்\nதி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு\nஅக்பர் எனும் கயவன் – 5\nதுயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]\nமதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nகதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்\nமுகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்\nநம்பிக்கை – 11: தியானம்\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3\nதேவிக்குகந்த நவராத்திரி – 3\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/bollywood-actor-vinod-khanna-passes-away/", "date_download": "2018-08-18T01:21:19Z", "digest": "sha1:SW7E5MUUO7SECOCTHLSUUFVLGCJWKFWQ", "length": 16202, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பழம்பெரும் நடிகர் வினோத் கண்ணா காலமானார் - bollywood actor vinod khanna passes away", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nவினோத் கண்ணா என்னும் நட்சத்திரம் மறைந்தது\nவினோத் கண்ணா என்னும் நட்சத்திரம் மறைந்தது\nபாலிவுட்டின் முன்னாள் கதாநாயகன் வினோத் கண்ணா இன்று காலை காலமானார்\nபாலிவுட்டில் 1970, 80-களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நடிகர் வினோத் கண்ணா, இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70. கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த வினோத் கண்ணா இன்று மரணித்திருப்பது அவரது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.\nபாலிவுட்டில் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ள வினோத் கண்ணா, சிறந்த அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர். பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகீதாஞ்சலில் என்பவரை முதலில் மணந்த ராஜேஷ் கண்ணா, பின்னர் விவாகரத்து செய்துவிட்டு, கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ராகுல், அக்ஷய், சாக்ஷி என்று மூன்று மகன்களும், ஷ்ரதா என்ற மகளும் உள்ளனர்.\nதனது சினிமாப் பயணத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சிறிய ரோல்களிலும், நெகட்டிவ் ரோல்களிலும் மட்டுமே நடித்து வந்தார். 1968-ல் இவர் நடித்த மன் கா மீட் எனும் படம் தான் இவரது முதல் படமாகும். அதற்கு பின், மேரே அப்னே, மேரே கோன் , மேரே தேஷ், இம்திஹான், இன்கார், அமர் அக்பர் ஆண்டனி, குர்பானி, தயவான் போன்ற படங்களில் ஹீரோவாகவும், முக்கிய படங்களில் நடித்தும் புகழ்பெற்றார்.\nவினோத் கண்ணாவின் மறைவையொட்டி திரைபிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nரஜினியுடன் கைக்கோர்த்த வினோத் கண்ணா:\n1991-ஆம் ஆண்டு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்துடன் இணைந்து ‘கூன் கா கர்ஸ்’ எனும் படத்தில் நடித்தார். இதில், கரண் எனும் கதாபாத்திரத்தில் வினோத்கண்ணாவும், கிஷன் எனும் பாத்திரத்தில் ரஜினியும் நடித்திருந்தனர். இவர்களுடன் சஞ்சய் தத்தும் நடித்திருந்தார்.\n‘ஹாத் கி சஃபாய்’ எனும் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், 1999-ல் வாழ்நாள் சாதனையாளர் ஃபிலிம்பேர் விருது அளித்து கவுரவிக்கப்பட்டார். அதன்பின்,இன்றைய தலைமுறை நடிகர்களுடன் தபாங், தபாங் 2, தில்வாலே ஆகிய படங்களில் நடித்தார்.\n2016-ன் இறுதிக் காலக்கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், தனது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் தவிக்கவிட்டு இன்று காலை மண்ணுலகை விட்டு மறைந்து, விண்ணுலகை அடைந்தார்.\nஇது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, வினோத் கண்ணா சிறந்த நடிகர் என்பதோடு அர்ப்பணிப்போடு செயல்பட்ட தலைவர் மற்றும் அற்புதமான மனிதர். அவரின் நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.\nவினோத் கண்ணா மறைவு குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “என் உயிர் தோழன் வினோத் கண்ணா…உன்னை இழந்துவிட்டேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nஇதேபோல திரைபிரபலங்கள் பலரும் வினோத் கண்ணா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், வினோத் கண்ணாவின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தலைசிறந்த நடிகர் ஒருவரை இழந்து விட்டோம். இந்த நாள் மிக மிக சோகம் நிறைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.\nநடிகை ஹன்சிகா மோத்வானி பதிவிட்டுள்ளதாவது, வினோத் கண்ணாவின் மறைவு சகாப்தத்தின் முடிவு. ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் சல்மான் கான், அலி அப்பாஸ் ஜாஃபர் கூட்டணி\nபிரபல நடிகருடைய மகனின் திருமணம் திடீர் நிறுத்தம்\nபாலிவுட்டில் நிகழும் பாலியல் குற்றங்கள் பற்றி மனம் திறக்கிறார் ராதிகா ஆப்டே மற்றும் உஷா ஜாதவ்\nபெருமைமிகு ஆஸ்கர் விருது விழாவில் இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி, சசிகபூருக்கு அஞ்சலி\nஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்ற ஹ்ரித்திக் ரோஷன்\nஅஜய் தேவ்கன், இலியானா நடிப்பில் ‘ரெய்டு’ படத்தின் டிரெய்லர்\nஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தின் டிரெய்லர்\n‘பத்மாவத்’ : ரன்வீர் சிங்கைப் பாராட்டிய அமிதாப் பச்சன்\n‘பத்மாவத்’ படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nதிரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் டீசர்\nலோக்பால் சட்டம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nInternet of Things தொழில் நுட்பம் ஆட்டோமேட்டிக் இல்லங்கள் அமைப்பது உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nபுதிய தலைமை செயலக முறைகேடு குறித்த விசாரணை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2016/09/13/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15/", "date_download": "2018-08-18T00:56:55Z", "digest": "sha1:4V2ZPJGUCEJ73EWZULW26C36SPNMGAZK", "length": 16093, "nlines": 186, "source_domain": "tamilmadhura.com", "title": "ஒகே என் கள்வனின் மடியில் – 15 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஒகே என் கள்வனின் மடியில் – 15\nபோன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு\nஓகே என் கள்வனின் மடியில் – 15\nவம்சி ஃபேன்ஸ் இந்தப் பதிவில் இந்த வம்சி என்னதான் சொல்றான். செர்ரி உன் நிலைமையைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கு. ஒருவேளை அடுத்த பதிவில் விளங்க வாய்ப்பிருக்கா\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஒகே என் கள்வனின் மடியில் – 13,14\nஓகே என் கள்வனின் மனதில் – 16\nபக்கத்திற்கு பக்கம் பரபரப்பு வாங்கிவிட்டீர்களானு விவேக் சொல்லுவாரே அந்த மாதிரி இருக்கு ஒவ்வொரு பதிவும்.. முந்தைய பதிவுகளை விட இது ரொம்பவே நினைத்து பார்க்காத திருப்பம்.. ஆனால், என்ன தான் நடந்ததுனு தெரியலையே.. ஒன்னும் guess பண்ண முடியல..\nகேட் நீ ரொம்ப மோசம்.. இருக்கு ஆனால் இல்லைனு s.j.சூர்யா மாதிரி குழப்பி எங்களை இப்படி tension பண்றியேமா.. இப்படியா கனவு காணுவ.. வம்சி நீ சொல்றது உண்மைதானா\nEnglish novel படிக்குற மாதிரி ஒரு ஃபீல் கொண்டு வந்தீங்க Madhu ka.. ஆனால், நல்ல வேளை கேட் பாப்பா கனவுனு சொல்லுது பார்ப்போம்..\nபதிவேற்றத்திற்கு நன்றி Madhu ka..\nகேட் வம்சி… என்னடா நடந்துச்சு நாங்க வந்துட்டோம்டா..\nநேற்று இரவு பார்ட்டியில் வெள்ளை நிற உடையில் பாரதிராஜா பட ஹீரோயின் போல தோற்றமளித்து அமர் மற்றும் வம்சியின் மனதில் புயலுடன் கூடிய இடியை தோற்றுவித்த கேட், உண்மையில் மிகவும் துயர மன நிலையில் இருந்திருக்கிறாள் என்பது இப்போது விளங்குகிறது. ஏன் என்ற காரண காரியங்களுக்கு விரிவான செய்திகளை பார்க்கவும்\nஅமருடன் நேர்ந்த மன உளைச்சல் மற்றும் கேட் பில்லியனில் அமர்ந்திருந்த மயக்கம் எல்லாமாக சேர்ந்த காரணத்தால் பைக்கை கொண்டு குட்டிச் சுவரில் முட்டி கேட்’ஐ கீழே தள்ளி விட பதிலுக்கு அவள் வம்சியை இரவு முழுதும் வீட்டை விட்டு வெளியே நிறுத்தி விட்டாள்.\nஇது இவ்வாறு இருக்க, சென்ற அத்தியாயத்தில் வெட்கத்தோடு ஓகே சொன்ன “டேஷ் டேஷ்” மேட்டர் நிஜமா கனவா என்ற குழப்பத்தில் கேட் இருக்க, அதெல்லாம் கனவு என்றால் இப்போது நடப்பதும் கனவு என்று சொல்லிடுவாங்களோ என்ற பயத்தில் வாசக பெருமக்கள் எல்லோரும் இருக்கிறார்கள்\nஅடுத்து வரும் அத்தியாயங்களில் கேட் மனம் மாறி வம்சி பக்கம் சாய்வாள் என்று நம்பப் படுகிறது.\nஆனால், இந்த அத்தியாயத்தின் இறுதியில் வம்சியை சற்றே மண்டை காய வைத்தமைக்காக பல்லுக்கு பல் என்ற ரீதியில் கேட்டை பழிவாங்க எதிர்வரும் அத்தியாயங்களில் வம்சி நூறு சோனாக்களை தவணை முறையில் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.\nவிரைவில் விரிவான செய்திகளுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது\n அந்த பச்சபிள்ளைய இதுக்கு மேல நோகடிக்காதே.\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-jan-31/general-knowledge/114707-my-school.html", "date_download": "2018-08-18T00:27:12Z", "digest": "sha1:L6L6WJE2ONTB767HU2HYOHTXUQJUGCGB", "length": 23540, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "எங்கள் பள்ளி! | My School - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nசுட்டி விகடன் - 31 Jan, 2016\nக்யூட் ஸ்டோரி - 1\nக்யூட் ஸ்டோரி - 2\nபலூனை ஊதினால் வண்டி நகரும்\nஉங்க டூத் பேஸ்ட்டில் சிரிப்பு இருக்கா\nஅட்டைகளை இணைத்தால், கிடைக்கும் திருக்குறள்\nவகுப்பறைக்கு வந்த ஊராட்சி மன்றம்\nமனப்பாடப் பகுதி காலண்டர் தயாரிப்போம்\nஜோரா வெச்சோம் ஜாலி பொங்கல்\nதன்னம்பிக்கை தந்த கடல் பூதம்\nகற்றுக்கொண்டே இருங்கள்... வார்த்தைகள் வசப்படும்\nமூக்கால் பார்க்கலாம்... காதுகளால் படிக்கலாம்\nவகுப்புக்கு வரும் மிக்கி மவுஸ்\nகார்ட்டூன் பார்த்தேன்... வில்லை எடுத்தேன்\nமாற்றம் கொடுத்த சூப்பர் ஹீரோக்கள்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 5\nதேசத் தலைவர்கள் முதல் சோட்டா பீம் வரை\n‘‘நன்றாகப் படிக்கும் மாணவர்களாகத் தேர்ந்தெடுத்து பள்ளியில் சேர்த்து, அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களாக மாற்றுவது அல்ல எங்கள் நோக்கம். எங்கள் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவரையும் கல்வி, விளையாட்டு, கலைகள் என அனைத்திலும் சிறந்தவர்களாக மாற்றுவதே குறிக்கோள்’’ என்கிறார், எங்கள் பள்ளியின் முதல்வர் சியாமளா வெங்கடசுப்பு.\nசென்னை, மேல் அயனம்பாக்கத்தில் இருக்கிறது எங்கள் ‘வேலம்மாள் வித்யாலயா’ பள்ளி. 2008-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பள்ளியில், எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 5,062 மாணவர்கள் படிக்கிறோம். 226 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தின் சேர்மன், எம்.வி.முத்துராமலிங்கம் அவர்களின் ஊக்குவிப்பால், நிறைய கலைகளில் சிறந்து விளங்கி, பல பரிசுகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருப்பது, வேலம்மாள் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதன்மை முதல்வர் ஜெயந்தி ராஜகோபாலன்.\n‘‘வேலம்மாள் வித்யாலயாவின் சிறப்பே, படிப்புடன் கூடுதல் கல்விசார் பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிப்பதுதான். தமிழ், ஆங்கிலம், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை வகுப்பில் நடத்துவதுபோலவே, இந்த வகுப்புகளிலும் நடத்துவார்கள். Extra Curricular Activities Year Long Programme (ECAYLP) என்கிற திட்டத்தின் மூலம், வருடம் முழுக்க நடைபெறும் இந்தக் கூடுதல் கல்விசார் பயிற்சிகளால் ஒவ்வொரு மாணவரின் தனித் திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வருகிறோம்’’ என்கிறார், பள்ளியின் துணை முதல்வர் தசரத ராஜன்.\nஇசை, நடனம், விளையாட்டுக்கு தனித்தனியே வெவ்வேறு இடங்களைத் தேடிச் செல்லும்போது, மாணவர்களுக்குச் சோர்வு ஏற்படும். பெற்றோருக்கும் சிரமம். ஆனால், எங்கள் பள்ளியிலேயே எல்லா வகுப்புகளும் நடத்துவதால், எங்கள் நண்பர்களுடன் சேர்ந்தே ஆர்வமாகக் கற்கிறோம்.\nஎங்கள் பள்ளியிலேயே கிரிக்கெட் அகாடமி அமைத்து, பயிற்சி அளிக்கிறார்கள். யோகா, சதுரங்கத்தில் எங்கள் மாணவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். படிப்பிலும் அதிக கவனம் செலுத்த, ஸ்மார்ட் போர்ட் வகுப்புகள் அமைத்து சுலபமாகப் புரிந்துகொள்ளும்படி பாடங்கள் நடத்தப்படுகின்றன.\n‘‘போட்டிகள் மிகுந்த உலகத்தை எதிர்கொள்ள, நம்மை நிமிடத்துக்கு நிமிடம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பல கலைகளைக் கற்று, மிகப் பெரிய உயரங்களை அடைய வேண்டும். அதோடு, நேர்மை மற்றும் மனிதநேயம் மிக்கவர்களாகவும் எங்கள் மாணவர்கள் இருக்க வேண்டும். நிச்சயம் இருப்பார்கள்’’ என்கிறார், முதல்வர் சியாமளா வெங்கடசுப்பு.\nஅவரது நம்பிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம்\nக்யூட் ஸ்டோரி - 2\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/feb/14/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863340.html", "date_download": "2018-08-18T00:29:31Z", "digest": "sha1:PP4IXDAEF2QKB4W424S56KSV3IR7O3P6", "length": 8892, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கட்டட வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் மற்றும் உதவியாளர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகட்டட வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் மற்றும் உதவியாளர் கைது\nவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீடு கட்டுவதற்கான வரைபட ஒப்புதலுக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nராஜபாளையம் முகவூரைச் சேர்ந்தவர் இளங்கோ, மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முகவூரில் வசிக்கும் இவரது தந்தையின் இடத்தில் கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்து, இவர் செட்டியார்பட்டி ஊராட்சி அலுவலகத்தை நாடியுள்ளார். கட்டடம் கட்டுவதற்கு வரைபட ஒப்புதல் பெற அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை 7,240 ரூபாயை 3 தவணைகளாக வங்கி மூலம் செலுத்தியுள்ளார். இருப்பினும், இளங்கோவுக்கு வரைபட ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து செட்டியார்பட்டி பேரூராட்சி வரி வசூலிப்பாளர் காமராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒப்புதல் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்து இளங்கோ, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், டி.எஸ்.பி. சீனிவாசன், ஆய்வாளர்கள் விஜய காண்டீபன், பூமிநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர், பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.\nஅங்கு, தண்ணீர் திறந்துவிடும் தனது உதவியாளர் சதீஷ் என்பவரிடம் பணத்தை கொடுக்குமாறு இளங்கோவிடம் வரி வசூலிப்பாளர் காமராஜ் தெரிவித்துள்ளார். அதையடுத்து, இளங்கோ லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை சதீஷிடம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சதீஷ் மற்றும் காமராஜை கையும் களவுமாகப் பிடித்தனர். லஞ்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/feb/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863800.html", "date_download": "2018-08-18T00:29:33Z", "digest": "sha1:3QVU455T36QBEBYNCWE5RPEMNZSCPNON", "length": 8080, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகுடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்\nகுடிநீர் வழங்கக் கோரி, நெய்வேலி பாரதி நகர் பொதுமக்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தலைமை அலுவலகம் செல்லும் வழியில் காலிக் குடங்களுடன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெய்வேலி பி பிளாக், பாரதி நகர் சிலோன் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் காலை - மாலை என இருவேளையும் குடிநீர் விநியோகம் செய்து வந்தது. கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் தடை பட்டதால் அந்தப் பகுதி மக்கள் அவதி அடைந்தனர். நெய்வேலியில் விமான நிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளவர்கள், குடிநீர் வழங்கும் குழாயில் இருந்து தண்ணீர் எடுத்ததால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பாரதி நகர் பொதுமக்கள் பலமுறை என்.எல்.சி. இந்தியா நிறுவன அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.\nஇதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 120-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன், என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தலைமை அலுவலகம் செல்லும் சாலையில் முற்றுகையிட்டனர்.\nதகவல் அறிந்து அங்கு வந்த நெய்வேலி நகரிய போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். என்.எல்.சி. இந்தியா நிறுவன குடிநீர் வழங்கும் அதிகாரி குப்புசாமி பொதுமக்களிடம் குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாரதி நகர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_02_23_archive.html", "date_download": "2018-08-18T00:22:16Z", "digest": "sha1:A3PBGNMF3LTTOMGNHLYHNGNZTUMFOTZT", "length": 54933, "nlines": 695, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/02/23", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/08/2018 - 19/08/ 2018 தமிழ் 09 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமீண்டு வருகிறோம் - தமிழ்முரசு ஆசிரியர் குழு\nசென்ற மூன்று வாரங்கள் தமிழ்முரசு சரியாக இயங்க முடியாது இருந்தது. சிற்சில காரணங்களால் இந்த நிகழ்வு . இந்த வேளையில் பல வாசகர்கள் ஆதரவாளர்கள் தொலை பேசி மூலமும் e -mail மூலமும் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள் . அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். இம்முறை எம்மால் இயன்றவரை முன்கொண்டு வந்துள்ளோம் . உங்கள் ஆதரவோடு தொடர்வோம் .\nதூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே\nமெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே\nவசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி\nஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை\nவழியில் பார்த்தவன், வெளிறிய தன் முகத்தை\nஅவன் சென்ற வழி எதுவென்று…\nவெங்கடேஸ்வரர் ஆலய மகோத்சவம் நாலாம் நாள் 22.02.2014Photos\nசிட்னியில் திருக்குறள் போட்டிகள் 2014 - 02.03.2014\nஇப் போட்டிகள் மார்ச் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.\nபோட்டிகளில் (20 மாணவர்களுக்கு குறையாமல் பங்குபற்றியிருந்தால்) முதல் இடங்களைப் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் பரிசாக 23 - 03 - 2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழர் மண்டபத்தில் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்தும் திருக்குறள் மாநாட்டில் அளிக்கப்படும்.\nபாலர் ஆரம்ப பிரிவு (02.03.2009 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்)\nபாலர் பிரிவு (02.03.2007 க்கும் 01.03.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்) கீழ்ப்பிரிவு (02.03.2005 க்கும் 01.03.2007 க்கும் இடையில் பிறந்தவர்கள்) மத்தியபிரிவு (02.03.2002 க்கும் 01.03.2005 க்கும் இடையில் பிறந்தவர்கள்)\nமேற்பிரிவு (02.03.1999 க்கும் 01.03.2002 க்கும் இடையில் பிறந்தவர்கள்)\nஅதிமேற்பிரிவு (01.03.1999 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்)\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய அலங்கார திருவிழாவின் ஒரு காட்சி\nவெங்கடேஸ்வரர் ஆலய மகோத்சவம் 19/02- 28/02/2014\nமூத்த எழுத்தாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான பிரேம்ஜி கனடாவில் காலமானார்.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் 08.02.2014 கனடாவில் காலமானார்.\nஅச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக்கல்லூரியிலும் கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார்.\nதமிழகம்சென்று மூத்த அறிஞர்கள் நாமக்கல் கவிஞர் -வி.க. வா.ரா- சுவாமிநாத சர்மா - குயிலன், - பேராசிரியர் ராமகிருஷ்ணன் - தமிழ் ஒளி முதலானோரின் தொடர்பினால் இடதுசாரிக்கருத்துக்களை உள்வாங்கி இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் இயங்கிய ஞானசுந்தரன் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி இதழிலிலும் பணியாற்றினார். தயாகம் திரும்பிய பின்னார் கே.கணேஷ் மற்றும் கே. ராமநாதன் ஆகியோரின் தொடர்புகளினால் இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின் தேசாபிமானி - மற்றும் சுதந்திரன் முதலான இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.\nதேசாபிமானியில் அவர் அக்காலப்பகுதியில் எழுதிய தேசபக்தன் கண்ணோட்டம் என்ற பத்தி எழுத்து வாசகர்களை பெரிதும் ஈர்த்தது. 1954 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சிக்கு அள்ளும்பகலும் தொண்டாற்றினார்.\nவெங்கடேஸ்வரர் ஆலயத்தில் தேன் அமிர்த மழை 02.03.2014\nஇலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா\n'பாலு... உன்னுடைய நுண்ணுணர்வுகளுக்கும் இந்த மீடியத்தின் மீது நீ கொண்டிருக்கும் காதலுக்கும் உன்னுள் இருக்கும் படைப்புத்தாகத்திற்கும் நீ ஒரு இயக்குநராக மாறுவதுதான் இயல்பானது --- விரைவில் நீ ஒரு படத்தை இயக்குவாய்--- Mark My Words - என்று பல வருடங்களுக்கு முன்னர் கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு - தன்னைப்பார்க்கவந்த பாலுமகேந்திராவை வாழ்த்தியவர் சர்வதேச புகழ் பெற்ற இயக்குநர் சத்தியஜித் ரே.\nபுனா திரைப்படக்கல்லூரியில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவுக்கலையை பயின்ற காலத்தில் வருகைதரு விருந்தினராக விரிவுரையாற்ற வந்த சத்தியஜித்ரேயை பாலு மகேந்திரா இலங்கையில் மட்டக்களப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே மிகவும் நேசித்தவர்.\nரேயின் ஆளுமையை உள்வாங்கிக்கொண்ட திரையுலக கலைஞர்களின் வரிசையில் பாலுமகேந்திரா மிகவும் முக்கியமானவர்.\nரே மறைந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு மேதையின் ஆளுமை என்ற தொகுப்பு நூலில் பாலுமகேந்திரா எழுதியிருக்கும் கட்டுரைகள் திரைப்படத்துறையில் பயிலவிருப்பவர்களுக்கு சிறந்த பாட நூல்.\nசிட்னி முருகன் ஆலய மாசி மகம்\nஅஞ்சலி: பாலு மகேந்திரா -\n1974ல் நெல்லு என்ற மலையாள சினிமா வெளிவந்தது. ராமுகாரியட் இயக்கி பிரேம்நசீர் நடித்தபடம். அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. ஒரு மாமா வீட்டுக்குச் சென்றிருந்தபோது திருவனந்தபுரத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு சினிமா என்ற அழகனுபவம் அங்கேதான் தொடங்குகிறது. நான் செம்மீனையும் வேறுபல முக்கியமான மலையாளப்படங்களையும் அதற்குப்பின்னர்தான் பார்த்தேன். அதுவரை நான் பார்த்திருந்த படங்கள் கறுப்புவெள்ளை மலையாளக் குடும்பப்படங்கள். எம்.ஜி.ஆர்,சிவாஜிகணேசன் நடித்த வண்ணப்பிழம்புகளான தமிழ்ப்படங்கள். நெல்லு எனக்கு ஒரு சினிமாவாகவே தெரியவில்லை. அது ஒரு கனவு. எனக்கும் இயற்கைக்குமான உறவை தீர்மானித்த அனுபவங்களில் அதுவும் ஒன்று என்று மிகப்பிந்தித்தான் உணர்ந்தேன்\nநெல்லு படத்தை நான் பதினைந்து வருடம் கழித்து மீண்டும் பார்த்தேன். மிகமிகச் சாதாரணமான படம். வத்சலாவின் நாவலை முடிந்தவரை சிதைத்து உதிரிக்காட்சிகளாக ஆக்கியிருந்தார் ராமுகாரியட். அபத்தமான பொய்மயிருடன் நசீர் கோமாளி மாதிரி இருந்தார். கொழுத்து உருண்ட ஜெயபாரதியையும் சிவந்த நவநாகரீக முகத்துடன் மோகனையும் ஆதிவாசிகளாகவே எண்ண முடியவில்லை. ஆனால் உயிருடன் இருந்தவை இசையும் ஒளிப்பதிவும். சொல்லப்போனால் அடுத்த பதினைந்தாண்டுகளில் அவை பேருருவம் பூண்டு மலையாளச் சினிமாவுன் உச்சகட்ட சாதனைகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இசை சலீல் சௌதுரி. ஒளிப்பதிவு பாலு மகேந்திரா\nபுலம் பெயர் வாழ்க்கை -வெங்கட் சாமிநாதன்\nஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா இல்லையா என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம் எப்படி வாழப் போகிறோம் என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின் நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன் சமாதானம் கொள்ள. அயல் மண்ணில் முதலில் வாடி வதங்கிப் பின் வேர் கொண்டு முளை துளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.\nஒரு தலைமுறைக்காலம் சிலருக்கு பிறந்த மண்ணுடன் உறவுகளை அவ்வப் போது தொடர வாய்ப்புக்கள் தந்துள்ளது. சிலருக்கு அவ்வுறவுகள் மட்டுமல்ல மண்ணும் இல்லையெனவும் ஆக்கியுள்ளது. மிகவும் சிக்கலான வரலாற்றை ஈழ மண்ணில் பிறந்துள்ளோருக்கு தந்துள்ளது அந்த வரலாறு. ஈழத் தமிழரை உலகெங்கும் வீசியெறிந்துள்ளது இரண்டு தலைமுறை வரலாறு\nவிகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்\nவிகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்\n'' 'நாட்டியப் பேரொளி’ பத்மினி பற்றி எழுதும்போது மட்டும் உங்கள் எழுத்துகளில் காதல் ததும்புகிறதே... என்ன சங்கதி\n''அவர் என் கனவுக்கன்னி ஆயிற்றே... காதல் ததும்பாமல் இருக்குமா\nரொறொன்ரோவில் என் வீட்டில் சில நாட்கள் பத்மினி தங்கியிருந்தபோது, வாலிபப் பருவத்தில் அவரைப் பார்ப்பதற்காக கொழும்பில் திரை அரங்கத்தின் முன்னே பல மணி நேரம் காத்திருந் ததைச் சொன்னேன். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சிரித்ததுபோல கலகலவெனச் சிரித்தார்.\nஅவர் வந்து இரண்டு நிமிடங்களிலேயே அவரும் என் மனைவியும் உற்ற சிநேகிதிகள் ஆகிவிட்டனர். அன்றைய விழாவுக்கு அணியவேண்டிய சேலைகளையும் நகைகளையும் எடுத்து வெளியே வைத்தார். பதக்கம் சங்கிலியா, முத்துமாலையா, மணியாரமா அல்லது நீலக்கல் அட்டிகையா என்று நீண்ட விவாதம் நடந்தது. பொற்சரிகை வைத்த நீலப் பட்டாடையா அல்லது சிவப்பா அல்லது ஊதா கலரா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.\nP.S.பாலமுருகனின் நாதஸ்வர இசைக் கச்சேரி\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் என்னும்\nதலைப்பே கட்டுரையின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. இன்றைய சினிமாவின் போக்கால் சமூகம் பாதிப்புக்காளாகிறது என்பது எவரும் மறுக்கவியலாத உண்மை. தலைப்பில் சினிமா என்று பொதுவாக இருப்பதால் அது குறிப்பது தமிழ்த் திரைப்படங்களையா இந்தியத் திரைப்படங்களையா என்று ஆரம்பம் முதலே ஒரு தடுமாற்றம் இருந்தது. ஒரு தமிழ் இணையதளத்தில் நடத்தப்படும் ஒரு போட்டி என்பதாலும் உலக சினிமா பற்றிய அலசலை முன்வைக்கும் தகுதி எனக்கில்லை என்பதாலும் தமிழ்த் திரைப்படங்களைக் குறிப்பதாகவே எண்ணிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டேன்.\nதிரைப்படம் என்பதே சமூகத்தின் பிரதிபலிப்புதானே என்று ஒருசிலர் வாதிடலாம். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முற்றிலும் உண்மையாகிவிடாது. சமூகத்தைப் பிரதிபலிக்கும் எத்தனையோ நல்ல சிறப்பான அம்சங்கள் இருக்க, சமூகத்தைப் பாதிக்கும் அம்சங்கள் மட்டுமே பிரதானப்படுத்தப்படுவது வருத்தத்துக்குரிய விஷயம். எங்கோ நம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கும் சமுதாயச் சீர்கேடு ஒன்றைக் காட்டுகிறேன் என்று துவங்கி, இறுதியில் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெட்டது என்ற தீர்ப்பை வழங்குதல் நியாயமன்று. எல்லாத் திரைப்படங்களும் அப்படித்தானா என்றால் இல்லை, ஆனால் நூற்றுக்கு தொண்ணூறு படங்கள் அப்படித்தான் உள்ளன. அவற்றைப் பற்றிய என் பார்வையே இது.\nமதுராந்தகம் சூரை மன்னாதிஸ்வரர் ஸ்ரீ பச்சையம்மன் ஆலய கும்பாபிசேகம் 02.02.2014\nதமிழ் சினிமா - பண்ணையாரும் பத்மினியும் -\nபழைய பத்மினி காரும் அதன் மேல் பண்ணையாரும் அவருடன் இருப்பவர்களும் காரின் மீது வைத்திருக்கும் காதல் தான் ‘பண்ணையாரும் பத்மினியும்’.\nஒரு கிராமத்தில் பண்ணையாராக இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். நவீன பொருட்கள் எது வந்தாலும் அதை அந்த ஊருக்கு கொண்டு வந்து மக்களுக்கு அறிமுகம் செய்துவைப்பவர் இவர்தான்.\nஇந்நிலையில் பண்ணையார், உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு பத்மினி காரை பார்க்கிறார். பார்த்தவுடன் காரின் மீது ஆசைப்படுகிறார். உறவினரிடம் பண்ணையார் காரைப்பற்றியே பேசுகிறார்.\nஇதை கவனிக்கும் உறவினர், தன் மகள் வீட்டுக்கு செல்லும்போது காரை பண்ணையாரிடம் கொடுத்துவிட்டு தான் திரும்பி வரும்வரை காரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு செல்கிறார்.\nமகிழ்ச்சியடைந்த பண்ணையார், காரை ஓட்டுவதற்கு விஜய் சேதுபதியை நியமிக்கிறார். இதிலிருந்து ஊரில் எந்தவொரு நல்லது, கெட்டதுக்கும் பத்மினி காரை பயன்படுத்துகிறார்கள்.\nஒருநாள் துக்கவீட்டில் நாயகி ஐஸ்வர்யாவை சந்திக்கிறார் விஜய் சேதுபதி. பார்த்தவுடன் அவர் மீது காதல் வயப்படுகிறார். பின்பு அவரையே சுற்றி சுற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா, காதலை ஏற்றுக்கொள்கிறார்.\nபண்ணையாரும், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பத்மினி காரை மிகவும் நேசிக்கிறார்கள். கார் இல்லாத வாழ்க்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு செல்கிறார்கள்.\nஇந்நிலையில் பத்மினி காரின் உரிமையாளர் மகளான சினேகா பண்ணையார் வீட்டுக்கு வருகிறார். அங்கு பண்ணையாரிடம் தன் தந்தை இறந்து விட்டதாகவும், அவர் விட்டுச்சென்ற சொத்துக்களை தரும்படி கேட்கிறார். பண்ணையார் சொத்துக்களை கொடுத்துவிட்டு காரை மட்டும் கொடுக்காமல் விட்டுவிடுகிறார். பின்பு தன் மனைவியின் அறிவுறுத்தலின்படி காரை சினேகாவிடம் கொடுக்கிறார். அதற்கு சினேகா வாங்க மறுப்பு தெரிவித்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.\nஇதனால் பெரும் மகிழ்ச்சியடைகிறார் பண்ணையார். இந்நிலையில் தனது திருமணநாள் நெருங்குவதால் அதற்குள் பத்மினி காரை ஓட்டக்கத்துக்கொண்டு தன் மனைவியை உட்காரவைத்து ஓட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.\nஇவர் மனைவிக்கும் இதே ஆசை உள்ளது. இதற்கு விஜய் சேதுபதியை கார் ஓட்ட கற்றுத்தரும்படி கூறுகிறார். பண்ணையாருக்கும் ஓட்ட கற்றுக்கொடுத்தால் தன்னால் இக்காரை விட்டு பிரியவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் ஓட்ட கற்றுத்தராமல் ஏமாற்றி வருகிறார்.\nஇதற்கிடையில் வீட்டில் உள்ள ஒவ்வொன்றாக எடுத்துச்செல்லும் பண்ணையாரின் மகளான நீலிமா, பத்மினி காரையும் எடுத்துச் செல்கிறார்.\nஇறுதியில் பத்மினி காரை மகளிடம் இருந்து மீட்டாரா தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா\nபண்ணையாராக வரும் ஜெயப்பிரகாஷ் தன் இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். கார் மீது பாசம் காட்டுவது, மகளிடம் மென்மையாக பேசுவது, கார் ஓட்ட துடிப்பது என பல்வேறு கோணங்களில் நடிப்பு திறனால் மிளிர்கிறார்.\nபண்ணையார் மனைவியாக வரும் துளசி, தன் அழகிய நடிப்பால் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவருடைய மர்மப்புன்னகை பார்ப்பதற்கு ரசிக்கும் படியாக உள்ளது.\nஒட்டுனரான விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் குறைவு. இருந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக பண்ணையார் கார் ஓட்ட கற்றுக்கொண்டால் தன்னைக்கழட்டி விட்டுவிடுவாரோ என்ற பதட்டம் அவருடைய சிறந்த நடிப்புக்கு உதாரணம்.\nநாயகியாக ஐஸ்வர்யா, இவருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. கிராமத்து வேடத்துக்கு அழகாக பொருந்துகிறார்.\nகுறும்படத்தை முழுநீளப்படமாக எடுத்த இயக்குனர் அருண்குமாரை பாராட்டலாம். காரை மையமாக வைத்து அதில் காதல், பாசம் என அனைத்திலும் வெற்றி கண்டிருக்கிறார்.\nஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் 1980ம் ஆண்டை நம் கண்முன் அற்புதமாக காட்சி தந்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘பத்மினி’ காரில் ஒரு ரவுண்டு போகலாம்.\nஓளிப்பதிவு : கோகுல் பினாய்\nமீண்டு வருகிறோம் - தமிழ்முரசு ஆசிரியர் குழு\nவெங்கடேஸ்வரர் ஆலய மகோத்சவம் நாலாம் நாள் 22.02.2014...\nசிட்னியில் திருக்குறள் போட்டிகள் 2014 - 02.03.20...\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய அலங்கார திருவிழாவின் ஒ...\nவெங்கடேஸ்வரர் ஆலய மகோத்சவம் 19/02- 28/02/2014\nமூத்த எழுத்தாளரும் முற்போக்கு எழுத்தாளர் ...\nவெங்கடேஸ்வரர் ஆலயத்தில் தேன் அமிர்த மழை 02.03.201...\nஇலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்...\nசிட்னி முருகன் ஆலய மாசி மகம்\nஅஞ்சலி: பாலு மகேந்திரா -\nபுலம் பெயர் வாழ்க்கை -வெங்கட் சாமிநாதன்\nவிகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்\nP.S.பாலமுருகனின் நாதஸ்வர இசைக் கச்சேரி\nஇன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்\nமதுராந்தகம் சூரை மன்னாதிஸ்வரர் ஸ்ரீ பச்சையம்மன் ஆல...\nதமிழ் சினிமா - பண்ணையாரும் பத்மினியும் -\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41056.html", "date_download": "2018-08-18T00:50:37Z", "digest": "sha1:56KBDZMWCYOS5AKFWVVC7CELT6EKK4UE", "length": 20864, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜாலியான இயக்குனர் சுந்தர்.சி : ஹன்சிகா! | தீயா வேலை செய்யணும் குமாரு, ஹன்சிகா, சித்தார்த், சுந்தர்.சி", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nஜாலியான இயக்குனர் சுந்தர்.சி : ஹன்சிகா\nயாரோ ஹன்சிகாவைப் பார்த்து \"நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கு’’ என்று சொல்லியிருக்கவேண்டும். இரண்டு வார்த்தைகளுக்கு ஒருமுறை ‘களுக்‘ என்று ஒரு சிரிப்பு சிரித்துவைக்கிறார். அதுவும் அழகாகத்தான் இருப்பதால் ரசித்துக்கொண்டே பேசினேன்.\n‘‘ஒரே நேரத்துல 7 படங்களா\n‘‘ஆமா, ஐ அம் வெரி லக்கி. எல்லாமே யங் டீம்ஸ். யங்கா இருந்தாலும் செம்ம ஹார்ட் வொர்க் பண்றாங்க. ஹெவி வொர்க்கும் வாங்கிடறாங்க...’’\n‘‘அதெப்படி எல்லா ஹீரோக்களுமே ஹன்சிகா தான் வேணும்னு அடம் பிடிக்கிறாங்க\n(சிரிக்கிறார்)‘‘நான் கொடுக்குற வேலைய கரெக்டா பண்றேன். அதுக்கு மேல ஒண்ணும் பண்றது கிடையாது. உங்களுக்கு ஏன் என்னை பிடிக்குது அதே காரணம் தான் அவங்களுக்கு என்னை பிடிக்க காரணமா இருக்கலாம்.’’\n‘‘‘தீயா வேலை செய்யணும் குமாரு’ எக்ஸ்பீரியன்ஸ் பத்தி சொல்லுங்க\n‘‘சுந்தர்.சி மாதிரி ஒரு ஜாலியான டைரக்டர் கூட நான் வொர்க் பண்ணதே இல்லை. படம் எப்படி ஜாலியா இருக்கோ அதை விட 10 மடங்கு ஜாலியா இருந்துச்சு பட ஷுட்டிங்கும். இந்த படம் மட்டும் எனக்கு ஷுட்டிங் ஆரம்பிச்சதும் தெரியலை. முடிஞ்சதும் தெரியலை..அவ்ளோ கலகலப்பா போனிச்சு.’’\n‘‘இத்தனை ஹீரோக்கள் கூட வொர்க் பண்ணாலும் அது என்னமோ தெரியலை. எனக்கு சித்தார்த் கூட நடிச்சது தான் ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணேன். எனக்கு செம மேட்சிங்கா இருப்பார்.’’\n‘‘ஓகேஓகே பண்ணும்போதே சந்தானம் எனக்கு ஃப்ரெண்ட் ஆயிட்டாரு. கிட்டதட்ட இப்ப நான் நடிக்கற எல்லா படத்துலயும் அவரும் கூடவே இருக்காரு. ஸோ ஃப்ரெண்ட்லி. சந்தானத்தோட காமெடி மட்டும் தான் நமக்கு தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர். அது அவர் கூட நெருங்கி பழகுறவங்களுக்கு மட்டும் தான் தெரியும்...’’\n‘‘எல்லாம் சரி... ஆனா சினிமா நிகழ்ச்சிகள்ல மட்டும் ஓவர் கிளாமரா டான்ஸ் ஆடுறீங்க சினிமால மட்டும் கவர்ச்சிக்கு தடாவா சினிமால மட்டும் கவர்ச்சிக்கு தடாவா\n‘‘நான் எப்பங்க கவர்ச்சி காட்டமாட்டேன்னு சொன்னேன் டைரக்டர் சொல்றபடி தான் நடிச்சுட்டு இருக்கேன். எவ்வளவு கிளாமராவும் நடிக்க ரெடி. வேலாயுதத்துல கூடத்தான் கிளாமர் ரோல் பண்ணேன். கிளாமர் ரோலுக்கு தகுந்த ஸ்க்ரிப்ட் அமையணும்ல. தீயா வேலை செய்யணும் குமாருல ஒரு கிளாமர் ஸாங் இருக்கு. ஹன்சிகாவா இதுனு கேப்பீங்க...’’\n‘‘ட்ரீம்பாய் எப்படி இருக்கணும்னு சொன்னா தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராவாங்க...’’\n‘‘அப்படி ஒருத்தரை நினைச்சே பார்த்தது கிடையாதுங்க... யோசிக்கிறேன். மைண்டுல ஏதும் தோணுச்சுனா கண்டிப்பா எஸ் எம் எஸ் பண்றேன்’’.\nதீயா வேலை செய்யணும் குமாரு\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nஜாலியான இயக்குனர் சுந்தர்.சி : ஹன்சிகா\nசினேகாவுடன் இணையும் விஜய் சேதுபதி\n'சிக்ஸ் பேக்' வரிசையில் ஜூனியர் என்.டி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-18T01:09:07Z", "digest": "sha1:XVERTMVAPAA2E2OEZD4Y7H77CLSO6XUY", "length": 3976, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிரசித்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிரசித்தி யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு பெயரும் புகழும்; பிரபலம்.\n‘இந்த வட்டாரத்திலேயே பிரசித்தி பெற்ற கரகாட்டக் குழு இது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023113", "date_download": "2018-08-18T00:24:35Z", "digest": "sha1:5L6WEBMB2J7PKSPYRFTFMUBRP5OKK46W", "length": 15372, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "எடியூரப்பா மட்டும் பதவியேற்றார்| Dinamalar", "raw_content": "\nபெங்களூரு : பல்வேறு குழப்பங்கள், எதிர்ப்புக்களை மீறி கர்நாடக முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தவிர அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.\nRelated Tags Karnataka Election 2018 Yeddyurappa BJP எடியூரப்பா கர்நாடக முதல்வர் எடியூரப்பா பாஜக கர்நாடக கவர்னர் விஜூபாய் ... கவர்னர் மாளிகை கர்நாடக தேர்தல் 2018 கர்நாடகா தேர்தல்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசோ அவர்களின் முகமது பின் துக்ளக்கில் \"ஒன் பிரைம் மினிஸ்டர், போர் கண்ரெட் அண்ட் பிப்டி (450) டெபுடி பிரைம் மினிஸ்டர்\" என்று வருமே அது போல், கர்நாடகத்திலும் செய்து விடலாம் - அணி மாறுவதை தடுக்க.\nஒரு பானை சோற்றுக்கு பதம் ஒரு சோறு என்பார்களே அது இதுவோ..\nபட்டப்பகலில் கொள்ளை என்பதன் உதாரணமும் .. அதற்க்கு நீதிமன்றம் துணை போனதற்கும் புதிய வார்த்தை ஒன்றை கண்டுபிடித்து கிரிமினல் குற்றத்தில் சேர்க்கவேண்டும் .. அதெல்லாம் போகட்டும் நிரந்தரமற்ற மனித வாழ்வில் இதை செய்வது மனிதகுலத்தின் மாண்பின் இழுக்களல்லவா மனிதர்களாக இருந்தால் மட்டுமே சிந்திக்கமுடியும் .. மனிதஉருவில் மிருகங்களுக்கு விதிவிலக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/2018/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-18T01:19:46Z", "digest": "sha1:FM7S4YZPNRDOTS356JTFJOVWCCXXUKSB", "length": 39759, "nlines": 184, "source_domain": "www.tamilhindu.com", "title": "காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nகிடைத்ததடா சாக்கு என்று அனைத்து ஹிந்துவிரோதிகளும் , தேச விரோதிகளும் காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் பாஜகவையும் , பிரதமர் மோடி அவர்களையும் பாய்ந்து குதறுவது புரிந்துகொள்ள‌க்கூடியதுதான்… ஆனால் சில ஹிந்துத்வர்களூம் , தேசியவாதிகளும் கூட என்ன இருந்தாலும் பாஜக இப்படி செய்திருக்கக்கூடாது , காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கவேண்டும்… தேசியம் பேசும் பாஜகவிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் எழுதுவதைப்பார்க்கும்போது ஆற்றாமையாக இருக்கிறது… இவர்களுக்கே விளங்கவில்லையே , தீராவிட விஷத்தில் மூழ்கிக்கிடக்கும் சராசரி தமிழனுக்கு எப்படிப்புரிய வைப்பது என்று மலைப்பாக இருக்கிறது….\nமுதலாவதாக , ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு…. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம்… உச்சநீதிமன்றம் ஆறுவாரகாலத்தில் ஒரு செயல்திட்டத்தை [ ஸ்கீம் ] உருவாக்கச்சொன்னது.அவ்வளவுதான்…. இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு … எல்லா விஷயத்திலும் சொதப்பும் தமிழக பாஜக இதில் மட்டும் தெளிவாக செயல்படவேண்டும் என்று எதிர்பாரப்பதில் எந்த நியாயமும் இல்லை…அவர்கள் வைத்து்க்கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்…\nசெயல்திட்டம் எதற்காகவென்றால் , மேற்படி வாரியம் அமைப்பதில் உள்ள அரசியல்சட்ட முரண்களை , குழப்பங்களை தெளிவு படுத்தி முழுமையான ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான்….காரணம் , அரசியல்சட்ட ரீதியாகவே மாநிலங்களில் உள்ள அணைகளின் கட்டுப்பாடு அந்தந்த மாநில அரசுகளிடம்தான் உள்ளது… மாநில அரசிடமும் இல்லாமல் , மத்திய அரசிடமும் இல்லாமல் ஒரு தனி அமைப்பிடம் அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் ஒப்படைக்கப்படவேண்டுமென்றால் , அது ஒற்றை அரசு ஆணையில் அல்லது நீதிமன்றத்தீர்ப்பில் சாத்தியமே இல்லை…\nஇது அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து , அதன்பின் செய்யப்படவேண்டிய விஷயம்….. அதற்கு பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்… இதெல்லாம் ஆறுவார கால அவகாசத்தில் சாத்தியமா அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும் …\nஅணைகளின் கட்டுப்பாட்டை ஆணையத்திடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் தயாராக இல்லை…கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் போன்ற மாநிலங்களை விடுங்கள்… தமிழகமே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை…காரணம் , அணைகள் வாரியத்திடம் சென்றால் அணைகளில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கு மட்டுமே விநியோகிக்கப்படும்… இருக்கும் ஏரி , குளங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு ,குடிநீர் தேவைக்காக பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு குழாய் மூலம் நீர் எடுத்துச்செல்லும் வேலையெல்லாம் நடக்காது…மேலும் அணையை திறந்துவிட மாண்புமிகு முதலமைச்சர் தாயுள்ளத்துடன் உத்தரவிட்டார் என்று செய்தி வெளியிட்டு புளகாங்கிதப்பட்டுக்கொள்ளவும் முடியாது…\nஇன்னொரு முக்கியமான விஷயம் , அணைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு…இந்த இரு விஷயங்களும் இன்றுவரை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே உள்ளன… வாரியம் அமைந்தால் , இத்தனை மாநிலங்களிலும் உள்ள அணைகளையும் பராமரித்து , பாதுகாப்பது யார் ஆணையமா எனில் அதற்கான ஆள் பலம் ஆணையத்திடம் உள்ளதா சரி …பராமரிப்பையும் பாதுகாப்பையும் நீங்களே பார்த்துக்க்கொள்ளுங்கள் என்று மாநிலங்களிடம் விட்டுவிட்டால் , பராமரிக்க நாங்கள் …. தண்ணீரைத்திறந்துவிட மட்டும் ஆணையமா என்ற கேள்வி எழாதா சரி …பராமரிப்பையும் பாதுகாப்பையும் நீங்களே பார்த்துக்க்கொள்ளுங்கள் என்று மாநிலங்களிடம் விட்டுவிட்டால் , பராமரிக்க நாங்கள் …. தண்ணீரைத்திறந்துவிட மட்டும் ஆணையமா என்ற கேள்வி எழாதா பற்றாக்குறைக்காலத்தில் நீரை எந்த அடிப்படையில் பகிர்ந்துகொள்வது பற்றாக்குறைக்காலத்தில் நீரை எந்த அடிப்படையில் பகிர்ந்துகொள்வது [ உ.ச்சநீதிமன்றத்தீர்ப்பில் இதற்கு எந்த விளக்கமும் இல்லை..]\nஇத்தனை கேள்விகள் , குழப்பங்கள் உள்ளன…இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் , யூனியன் பிரதேசமும் [ புதுச்சேரி ] உட்கார்ந்து , பேசி தீர்வு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்..அதற்காகத்தான் மத்திய அரசு சம்பந்தப்பட மாநிலங்களின் கூட்டத்தைக்கூட்டி அவரவருக்கான பிரதிநிதிகளை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டது… தமிழகம் இந்த நிமிடம் வரை தன் பிரதிநிதி யார் என்று தெரிவிக்கவில்லை… சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம்தான் தெளிவுபடுத்தவேண்டும் ..அதற்காகத்தான் நாளை மத்திய அரசு மணுதாக்கல் செய்யவுள்ளது…\nகடைசியாக , இந்த விஷயத்தில் பாஜக அரசியலே செய்யவில்லையா என்று கேட்கலாம்… நிச்சயமாக அரசியல்தான் செய்கிறது…..யார்தான் அரசியல் செய்யவில்லை ஏன் உச்சநீதிமன்றம் அரசியல் செய்யவில்லையா ஏன் உச்சநீதிமன்றம் அரசியல் செய்யவில்லையா ராமர்ஜென்மபூமி வழக்கு பல பத்தாண்டுகளாக இழுத்தடித்துக்கொண்டு கிடக்கிறது…ஜெயலலிதா , லாலு போன்றோர் மீதான ஊழல் வழக்குகள் இருபது வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டன.. ஆனால் , காவிரி வழக்கில் மட்டும் உச்சநீதிம‌ன்றம்கர்நாடகாவில் தேர்தல் வர ஓரிரு மாதங்கள் இருக்கும் நிலையில் தீர்ப்பளிக்கிறது…அதுவும் எப்படி ராமர்ஜென்மபூமி வழக்கு பல பத்தாண்டுகளாக இழுத்தடித்துக்கொண்டு கிடக்கிறது…ஜெயலலிதா , லாலு போன்றோர் மீதான ஊழல் வழக்குகள் இருபது வருடங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டன.. ஆனால் , காவிரி வழக்கில் மட்டும் உச்சநீதிம‌ன்றம்கர்நாடகாவில் தேர்தல் வர ஓரிரு மாதங்கள் இருக்கும் நிலையில் தீர்ப்பளிக்கிறது…அதுவும் எப்படி ஆறே வாரங்களில் தீர்வு காண வேண்டுமாம்… அறுபதாண்டுகால தாவாவை , ஆறே வாரத்தில் பாஜக அரசு தீர்த்து வைக்கவேண்டும் ..இல்லாவிட்டால் மோடி குற்றவாளி … நல்லா இருக்கு சார் நியாயம்…கொலீஜியம் என்ற அநீதியான நடைமுறையை மாற்றி , நீதிபதிகள் நியமன மசோதா கொண்டுவந்த பாஜக அரசை , கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் தர்மசங்கடத்தில் தள்ளத்தான் நீதிமன்றங்கள் முயற்சிக்கின்றன…\nஎத்தனை அணை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு ஆட்சேபனையில்லை..என்று சட்டமன்றத்திலேயே பேசி டெல்டா விவசாயத்தை படுகுழியில் தள்ளிய கருணாநிதி மீது தவறில்லை…. சரி நீதிமன்றத்துக்காவது சென்று தடுப்போம் என்று முயற்சி செய்து வழக்குத்தொடர்ந்த விவசாயிகளின் வழக்கை கர்நாடகத்தின் நலத்துக்காக தமிழக அரசை மிரட்டி வாபஸ்பெற வைத்த இந்திரா மீது குற்றமில்லை…தன் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக மேற்படி வழக்கை வாபஸ் பெற்ற கருணாநிதி மீது எந்தக்குற்றமும் இல்லை..இதோ , இந்த நிமிடம் வரை காவிரி நதிநீர்ஆணையத்தை அமைக்க விடமாட்டோம் என்று கொக்கரிக்கும் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை… அதை கண்டும் காணாமல் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கும் ராகுல் – சோனியா மீது குற்றம் இல்லை…மோடி மட்டும்தான் தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார் என்று எவனாவது கிறுக்கன் பிரச்சாரம் செய்தால் அதை நம்பும் அளவுக்கு நாம் மடையர்களா\n இரண்டு தினங்களுக்கு முன் , ஒரு டி.வி விவாதத்தில் காவிரிப்பிரச்சினைக்காக நாற்பது வருடங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடிவரும் காவிரி விவசாயிகள் பாதுக்காப்புச்சங்கத்தின் திரு. ரங்கநாதன் அவர்கள் தெளிவாகச்சொன்னார்… காவிரிப்பிரச்சினை நல்லை தீர்வை நெருங்கிக்கொண்டிருக்கிறது… மிக விரைவில் நதிநீர் வாரியம் அமையும்… தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும்…ஆனால் , ஆறு வார காலத்திற்குள்ளாக ஆணையம் அமைத்தே தீரவேண்டும் என்று மத்திய அரசை நிர்பந்திப்பது நியாயமே இல்லை…அது சாத்தியமும் இல்லை என்றார்… அவரைவிட இந்த சோ கால்ட் போராளிகள் சொல்வதுதான் உங்களுக்கு நியாயமாக தெரிகிறதா\nகாவிரி நதிநீர் ஆணையம் மட்டுமல்ல… கோதாவரி நதிநீரை தென்பெண்ணையாறு வழியாக தமிழகத்துக்கு திருப்புதல் , தேசிய நதிநீர் இணைப்பு போன்ற மாபெரும் திட்டங்கள் மூலமாக தமிழகத்தின் நதிநீர்ப்பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும் திறமையும் , தகுதியும் தேசிய உணர்வுகொண்ட பாஜகவுக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு மட்டுமே உண்டு நான் இன்னும் நம்புகிறேன்….\nஉங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் தமிழகத்தில் ஸ்டாலினுக்கும் , மத்தியில் காங்கிரசுக்கும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுங்கள்…கர்நாடகத்தில் சித்தராமையா மீண்டும் ஆட்சிக்கும் வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்…அப்புறம் பாருங்கள் தமிழகத்தில் காவிரி கரைபுரண்டு ஓடிவந்து , கடலில் கலக்கும்…\n(சி.சரவணக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nகுறிச்சொற்கள்: கர்நாடக அரசு, கர்நாடகம், காங்கிரஸ் கட்சி, காவிரி, காவிரி நதிநீர் ஆணையம், காவிரி பிரசினை, காவேரி, தமிழக அரசியல், தமிழக அரசு, தமிழக பாஜக, தமிழ்நாடு, திராவிடக் கட்சிகள், நதிநீர்ப் பங்கீடு, பிரதமர் மோதி, பிரிவினைவாதம், மத்திய அரசு, மத்திய மாநில உறவுகள், மாநில அரசு, மாநில முன்னேற்றம், மாநில வளர்ச்சி, மோதி அரசு\n5 மறுமொழிகள் காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும் – Tamil News on April 1, 2018 at 8:17 am\nஇந்த உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலும் இத்தனை சுளிவுகளா அதன் பின்னரும் இத்தனை குழப்பங்களா அதன் பின்னரும் இத்தனை குழப்பங்களா இங்குதான் முழு விளக்கமும் கிடைக்கிறது. நன்றி.\nஆனால் ஒரு விஷயம். தமிழக பா.ஜ கவை விடுங்கள். மத்திய அரசாவது உண்மை நிலையை விளக்கி இதுவரை ஏதாவது சொல்லியிருக்கிறதா ஏதாவது அறிக்கை வெளியிட்டிருக்கிறதா மந்திரி/அதிகாரி எவராவது எங்காவது விளக்கம் அளித்திருக்கிறார்களா சாப்பிட்டுத் தூங்கத்தான் சம்பளம் வாங்குகிறார்களா\n60 ஆண்டு பிரச்சினையை 6 வாரத்தில் தீர்க்கமுடியாது என்பது சரியே. ஆனால் இதைப் புரிந்துகொள்ள மோடி அரசுக்கு 6 வார காலம் போதவில்லையா அதை 6 வாரத்திற்குள் மக்களுக்கு விளக்கிச் சொல்லக்கூட இயலவில்லையா அதை 6 வாரத்திற்குள் மக்களுக்கு விளக்கிச் சொல்லக்கூட இயலவில்லையா தமிழ் மீடியாவில் தவறான புரிதலுடன் செய்திகள் வந்தால் அதை மறுத்து உண்மையைச் சொல்ல மத்திய அரசிற்கு வக்கில்லையா தமிழ் மீடியாவில் தவறான புரிதலுடன் செய்திகள் வந்தால் அதை மறுத்து உண்மையைச் சொல்ல மத்திய அரசிற்கு வக்கில்லையா சொரணைகூட இல்லையா இது மமதையா அல்லது மடத்தனமா\nஇந்தக் கட்டுரையைப் படித்தபிறகு ஒரு விஷயம் நன்கு விளங்குகிறது.6 வாரம் என்ன, இன்னும் 3 மாதம் என்ன, இன்னும் 6 வருஷமே தான் ஆனாலும் என்ன, இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை அரசியல் வாதிகளுடன் நீதித்துறையும் சேர்ந்து குழப்புகிறது அரசியல் வாதிகளுடன் நீதித்துறையும் சேர்ந்து குழப்புகிறது\nஇன்று தினமணியில் 2.4.2018 வெளியான கட்டுரையை படித்திருப்பீா்கள் என்று நினைக்கின்றேன்.தங்கள் கருத்துக்கள் அதனோடு சற்று முரண்படுவதாக உள்ளது. டிாிபுனல் ஆணையம் போன்ற அமைப்பிற்கு என்ன வேறுபாடு என்பது எனக்கு விளங்கவில்லை. அதன் அடிப்படையில் கூடுதலக தகவல்கள் வாசகா்களுக்கு சொல்ல விரும்பினால் தொிவிக்கலாம். நன்றி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nகிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nகாஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்\n – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..\nஅப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nபோரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்\nதுயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30129", "date_download": "2018-08-18T00:21:35Z", "digest": "sha1:UJ23DKJGR5DXZTAOGCOG2HXVBZW4QEG3", "length": 9086, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம்!!! | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஅமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம்\nஅமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம்\nஅமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தனது ஊழியர்கள் பணியாற்ற புதிய அலுவலகத்தை சிறிய ‘அமேசான் காடு’ போன்ற அமைப்பில் உருவாக்கியுள்ளது.\nஅமேசான் நிறுவனம் நிறுவனம் தனது அலுவலகத்தில் சிறிய அமேசான் காட்டை உருவாக்கியுள்ளது. உள்ளே நிறைய மரங்களை நட்டு இருக்கிறது.\nஇந்த அலுவலகத்தில் 3 குருவிக்கூடு போன்ற கூடு இருக்கும். ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் 800 பேர் வரை தங்க முடியும். இதற்குள் பெரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆங்காங்கே சிறு சிறு அருவிகளும் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் காட்டுக்குள் இருக்கும் உணர்வு ஏற்படும்.\nஇந்த பணிக்காக மொத்தம் 600 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்து முக்கிய படங்களின் ஆர்ட் டைரக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 வருடங்களாக அலுவலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வடிவமைத்துள்ளனர்.\nஅமெரிக்கா அமேசான் நிறுவனம் அலுவலகம்\n12 வருடத்திற்கு முன் தொலைந்த மோதிரம் கிடைத்த அதிசயம் \nகணவரொருவர் தனது மனைவிக்கு 40 ஆவது பிறந்ததினத்தை சிறப்பிக்ககும் முகமாக தங்க மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார்.\n2018-08-17 17:44:45 மோதிரம் தங்கம் கரட்\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nசீனாவில் காதலர் தினம் \"கிஷி\" என்ற பெயரில், 2000 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழா இன்று தென் மற்றும் கிழக்கு சீன மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.\n2018-08-17 16:47:28 சீனா காதலர் தினம் கிஷி\n9 வயதில் மூக்­கி­னூ­டாக உள்ளே சென்ற பேனா மூடி: 40 ஆண்டுகளாக நுரை­யீ­ரலில் தங்கியிருந்த கொடூரம்\nகடும் வயிற்று வலிக்­குள்­ளான நிலையில் வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணொ­ரு­வரின் நுரை­யீ­ரலில் பேனா மூடி­யொன்று இருப்­பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்­சி­ய­டைந்துள்ளனர்.\n2018-08-17 16:34:17 நுரை­யீ­ரல் 40 ஆண்டுள் பேனா மூடி­\nஉலகில் மிகப்பெரிய ஸ்ரோபெரி பீட்ஸா ; நுவரெலியாவில் தயாரிப்பு\nஉலகில் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸாவை தயாரிக்கும் முயற்சி, நுவரெலியாவில் கடந்த 17.08.2018 அன்று முன்னெடுக்கப்பட்டது.\n2018-08-17 16:31:15 ஸ்ரோபெரி பீட்ஸா நுவரெலியா\nதீவிர உணவு பிரியர் வாஜ்பாய்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் என பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர்.\n2018-08-17 16:09:22 பிரதமர் வாஜ்பாய் பத்திரிகை\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/shocking-story-about-women-witches-021148.html", "date_download": "2018-08-18T00:37:15Z", "digest": "sha1:RAOIR7PSL5KCA56NLVXSF3I4RUMGPB27", "length": 24764, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "நடு ரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! | Shocking Story About a Women Witches - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நடு ரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nநடு ரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nபெண்களை இன்னும் எப்படியெல்லாம் இழிவுபடுத்தலாம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்களோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும், இந்த நூற்றாண்டிலும் பெண்கள் இந்த பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.\nதவறு செய்து தண்டனை வாங்குவதை விட நீங்கள் தவறே செய்யாமல் பிறர் நீங்கள் தவறு செய்திருக்கக்கூடும் என்று உத்தேசித்து தண்டனை நிறைவேற்றினால் அந்த தண்டனையினால் ஏரளமான உயிர்கள் பறிபோனால் என்ன நடக்கும்....\nகிராமங்களில் சில இனத்தைச் சேர்ந்த அல்லது குறிப்பிட்ட பெண்கள் இவள் சூனியக்காரி என்று பட்டம் கட்டி பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நாற்பது வயது பெண்ணான பஹுரா பாய் மார்க்கெட்டில் தன் மைத்துனரை சந்திக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் கையை பிடித்துக் கொண்டு நலம் விசாரிக்கிறார். வீட்டிற்கு வர வேண்டும் என்று அன்பு கட்டளையிடுகிறார்.\nஇந்த சம்பவம் நிகழ்ந்த அன்றைய இரவே அந்த மைத்துனருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அண்ணி என்னைத் தொட்டதால் தான் இப்படி ஆகிவிட்டது, அவள் சூனியக்காரி என்று கிளப்பிவிட ஊரெங்கும் பரவியது.\nஅவ்வூரின் தலைவரும் 40 வயதுடைய பஹூரா பாய் சூனியக்காரி அவரிடம் மக்கள் இனி யாரும் பழக வேண்டாம், அவரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் சற்று ஜாக்கிறதையாக இருக்கவும் என்று கட்டளையிட்டார். அன்றிலிருந்து இந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்திற்கு எண்ணற்ற தொந்தரவுகளை கொடுத்திருக்கிறார்கள் மக்கள்.\nஅவர்கள் நான் சூனியக்காரி என்று சொல்கிறார்கள் உண்மையில் நான் அப்படியா என்று தினமும் நான் வணங்கும் தேவியிடம் கேட்டுக் கொள்வேன். அவர்கள் என்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்கிறார் அந்தப் பெண்.\nஇவரைப் போலவே ஐம்பத்தைந்து வயதுடைய பெண்மணி அதே சட்டீஸ்கர் மாநிலம் பீமெடாரா மாவட்டத்தில் மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். காரணம், அவர் மாந்திரீக பூஜைகளை செய்தார் என்பது. வீட்டிலிருந்தவரை அடித்து,தலையைப் பிடித்து இழுத்து உடைகளை எல்லாம் கிழித்தெரிந்து நிர்வாணமாக அவரை சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள்.\n2000 ஆம் ஆண்டும முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சூனியக்காரி என்று சந்தேகப்பட்டு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை கொன்றிருக்கிறார்கள். ஊருக்கு பயந்து கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் புகார் கொடுக்காமல் தவிர்த்ததும் ஏராளம்.\nஅந்த மாதம் விளைச்சல் சரியாக இல்லை, மழை பொழியவில்லை வீட்டில் யாருக்கேனும் உடல் நலம் சரியில்லை இப்படி எந்த சம்பவங்கள் நிகழ்ந்தாலும் பெண்ணை பழித்து உன்னால் தான் இப்படி நீ சூனியம் வைத்துவிட்டாய் என்று பட்டம் கட்டி விடுகிறார்கள்.\nகுறிப்பாக கணவனை இழந்த பெண்கள், திருமணமாகியும் நீண்ட காலமாக குழந்தை இல்லாத பெண்கள்,வயதான பெண்கள் தான் இதில் அதிகமாக சிக்குகிறார்கள்.\nயார் சூனியக்காரி என்று கண்டுபிடிக்க இவர்கள் ஒரு முறையை பின்பற்றுகிறார்கள். சிறிய பைகளில் தானியங்களை கட்டி அவ்வூரில் அதிகம் இருக்கிற வெள்ளை நிற எறும்புகள் வருகிற பக்கம் வைக்கிறார்கள்.\nகட்டி வைக்கப்பட்ட ஒவ்வொரு பையிலும் அவர்கள் சூனியக்காரி என்று நம்பும் பெண்ணின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.\nகுறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த பையை திறந்து பார்த்தால் எதில் அதிக தானியம் குறைந்திருக்கிறதோ அந்த பையில் எழுதப்பட்டிருக்கும் பெண் தான் சூனிய்க்காரி என்று தீர்மானிக்கிறார்கள்.\nஇந்த சூனியம், மாந்திரீகம் ஆகியவை செய்வதாக தாக்கப்படுவது எல்லாமே பெண்கள் தான். இவ்வூர்களில் குழந்தை பிறப்பிலிருந்தே ஆண் பெண் பேதங்கள் அதிகமாக பார்க்கப்படுகிறது. அதோடு முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் இதற்கு காரணம் என்றும் தீவிரமாக நம்புகிறார்கள்.\nஇவர்களாக கட்டுக்கதைகளை நம்பி சூனியக்காரி என்றால் மனித மாமிசம் சாப்பிடுவாள், நம் ரத்தத்தை எல்லாம் உறிந்து கொள்வாள் என்று அச்சப்படுகிறார்கள். இயற்கையாக நிகழக்கூடிய நிகழ்வுகளை கூட சூனியக்காரி கைவைத்ததால் தான் ஆனது என்று நினைக்கிறார்கள்.\nஇப்படி சூனியக்காரி என்று பாதிக்கப்பட்ட தீரத் சாஹூ என்ற பெண் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ஒரு நாள் திடீரென்று என் வீட்டிற்குள் சிலர் நுழைந்தார்கள். உள்ளறையில் இருந்த என்னை இழுத்துக் கொண்டு சென்றார்கள் என்ன நடக்கிறது எதற்காக என்னை கொண்டு செல்கிறார்கள் என்று எதுவும் எனக்குத் தெரியாது.\nஅங்கே போனால் ஊரே கூடி நிற்கிறது. என்னோடு சேர்த்து இன்னும் இரண்டு பெண்களும் அங்கே தனியாக நிற்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர் பிஷைன் பாய் மற்றும் ஷியாமா பாய்.\nஎதற்காக இந்த கூட்டம் என்று நாங்கள் உணர்வதற்குள்ளேயே இவர்கள் மூன்று பேரும் சூனியக்காரிகள் என்று தீர்பளித்துவிட்டார் எங்கள் ஊர் தலைவர். அவ்வளவு தான் மக்கள் பிரம்பை எடுத்துக் கொண்டு எங்களை அடிக்கப் பாய்ந்தார்கள். அடித்து முடியை வெட்டி, சேலையைக் கிழித்து நிர்வாணமாக தெருத்தெருவாக ஓடவிட்டார்கள் அவர்களின் சிறுநீரை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். இதை விட கொடுமையாக எங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது.\nசூனியக்காரிகள் கரண்ட் ஷாக் அடித்தாலும் பிழைத்துக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பியதால் நாங்கள் சூனியக்காரிகள் தான் என்பதை மக்களுக்கு நீருபிக்க எங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் நடக்கும் போது ஊரிலிருக்கும் மற்ற பெண்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். நாங்கள் மயங்கி விழும் வரை எங்களை அடித்தார்கள். அதோடு எங்கள் மானம் கௌரவம் எல்லாம் போய்விட்டது. இந்த சம்பவம் இன்று வரையில் விவாதிகக்ப்படுகிறது 20 பேர் வரை இதில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டார்கள்.\nஉண்மை எனக்குள்ளே உறங்கிக் கிடக்கிறது. பெண்கள் சூனியக்காரிகள் இல்லை என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொண்டால் ஏன் அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை\nஇது இன்னொரு பெண்ணின் கதை. நான் நடந்து சென்று கொண்டிருந்த போது புதிதாக சைக்கிள் ஓட்டப் பழகிய சிறுமி தடுமாறி விழப் போனால் அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நான் சட்டென்று பிடித்துக் கொண்டேன். பின்னர் அவளை இறங்கச் சொல்லி சைக்கிளை திருப்பி பத்திரமாக வீட்டிற்கு போ என்று அனுப்பி வைத்தேன்.\nஅவளுக்கு என்ன ஆனதோ, வீட்டிற்கு செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்திருக்கிறாள். அவ்வளவு தான் இந்த பெண்மணி என் மகளுக்கு சூனியம் வைத்துவிட்டாள் என்று கத்தி கூச்சலிட்டார்கள் அந்த சிறுமியின் உறவினர்கள்\nஇந்தப் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கும் போதே என் மாமியாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது மீண்டும் உன்னால் தான் இப்படி ஆகிறது என்று சொல்லி என் குடும்பமே என்னை வெறுத்து ஒதுக்கியது. என் குடும்பத்திலும் சரி ஊரிலும் சரி தீண்டத்தாகதவளாகவே நடத்தப்படுகிறேன். இது கூட பராவாயில்லை என் அண்டை வீட்டில் வசித்த ஒரு பெண்ணும் சூனியக்காரி என்று குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்கிறவர் அந்த கதையையும் பகிர்ந்து கொண்டார்.\nஒரு இரவில் திடீரென்று ஒரு பெண் கத்தும் சத்தம் கேட்டது எழுந்து வெளியே போனால் என் பக்கத்து வீட்டிலிருந்து தான் அந்த சத்தம் வருவது கேட்டது உள்ளே சென்று என்னாயிற்று என்று பார்க்கப் போனேன்.... நான் சென்ற சிறிது நேரத்தில் ஏற்கனவே மயங்கி கிடந்த அந்த நபருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. அவ்வளவு தான் உன்னால் தான் இது நீ சூனியக்காரி என்று பட்டம் கட்டிவிட்டார்கள். இப்படி ஏராளமான பெண்கள் இன்னும் மோசமான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nராவணனுக்கு 10 தலைகள் எப்படி வந்தது அவற்றிற்கு என்னென்ன சக்திகள் உள்ளன\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஆஞ்சநேயருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த போட்டி\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/category/history/page/46/", "date_download": "2018-08-18T00:36:29Z", "digest": "sha1:YUOXFYYPGIRQAOKOFS3JOZUGPFTRXPGR", "length": 6871, "nlines": 78, "source_domain": "nakkeran.com", "title": "வரலாறு – Page 46 – Nakkeran", "raw_content": "\nமண்டையைப் பற்றிப் பேச சுரேஸ் பிறேமச்சந்திரனால் மட்டுமே முடியும்\nமண்டையைப் பற்றிப் பேச சுரேஸ் பிறேமச்சந்திரனால் மட்டுமே முடியும் நக்கீரன் 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சுரேஸ் பிறேமச்சந்திரன் படு தோல்வி அடைந்தார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி […]\nநெடுந்தீவு பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nPeriyathampanai Micheal நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. […]\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\nகேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23 லட்சம் பேர், பிரதமர் விரைந்தார் August 17, 2018\nகாவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை August 17, 2018\nபாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு August 17, 2018\nகோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி) August 17, 2018\nவாஜ்பேயி: இந்திய அணு ஆயுத திறனுக்கு வலு சேர்த்தவர் August 17, 2018\nகேரள வெள்ளம்: 'மக்களை காப்பாற்ற முடியவில்லையே' - கதறி அழுத ஊராட்சித் தலைவி August 17, 2018\nயமுனை நதிக்கரையில் வாஜ்பேயி உடல் தகனம் August 17, 2018\nகேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள் August 17, 2018\nசினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா August 17, 2018\nவாஜ்பேயி: அமெரிக்க எதிர்ப்பை மீறி மாறனை ஆதரித்தார் - நினைவுகூரும் பழனிமாணிக்கம் August 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/index.php?sid=58f22a6a4ad658dbde24990a734beff5", "date_download": "2018-08-18T00:41:19Z", "digest": "sha1:PZTHTT2CNJMKTAWY56AXR5ZY5PBT5QLY", "length": 43981, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilgod.org/facts-about", "date_download": "2018-08-18T01:12:25Z", "digest": "sha1:6PAXSC3VCYYTEJSKEVU64PSMDV46DFGV", "length": 9582, "nlines": 146, "source_domain": "tamilgod.org", "title": " Facts about |tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nநீர் போலவே செயல்படும் பொருள் / உலோகம்\nபிளாஸ்டிக் நச்சுப்பொருட்களை தவிர்ப்பது எப்படி \nநீர் போலவே செயல்படும் பொருள் / உலோகம்\nஆதாரம் அறிவியல் செய்தி வெளியீடு உலகையே மாற்றப்போகும் கிராஃபீன் (Graphene ). ஒரு தசாப்தம் (10 வருடம்) முன்பு...\nபிளாஸ்டிக் நச்சுப்பொருட்களை தவிர்ப்பது எப்படி \nகோழிகள், பூனைகள், ஆந்தைகள் மற்றும் சில விலங்குகள் அதன் உடலினை தாறுமாறாய் சுழற்றிக்கொண்டாலும் அதன் தலையினை...\nசொகுசு நகரம் துபாய் பற்றி நாம் தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ உண்மைகள் 01 துபாய் வெகுவிரைவில் மாற்றம் கண்டுகொள்ளும்...\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும்...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌...\nஜியோ போன் 2 (JioPhone2) நாளை விற்பனைக்கு வருகிறது : விலை, விபரம்\nரிலையன்ஸ் ஜியோ : தனது புதிய ஜியோ ஃபோன் 2 (JioPhone2 ) கைபேசியானது நாளை முதல்...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core...\nஅண்ட்ராய்டு பி (Android 9 Pie) ஆதரிக்கும் அண்ட்ராய்டு கைபேசிகள்\nகூகுள் நிறுவனம் கைபேசிக்காக‌ வடிவமைத்த‌ அண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது வெர்சன் பெயரினை...\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vaamukomu.blogspot.com/2015/06/kavithaikal-two.html", "date_download": "2018-08-18T00:22:00Z", "digest": "sha1:6C36UHELVGXGB4LOGVE6P6YGQASI6RBQ", "length": 10454, "nlines": 185, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: KAVITHAI ஒன்று", "raw_content": "\nகோழி வளர்ப்பவர்கள் இரவில் அதைத் தேடி\nபாம்பு வருவது பற்றி அலட்டிக் கொள்வதில்லை\nஆடு வளர்ப்பவர்கள் ஒருசேர சோகை நோயில்\nகூட்டமாய் இறப்பது பற்றி அலட்டிக் கொள்வதில்லை\nநாய் வளர்ப்பவர்கள் சாலையில் வாகனமொன்றில்\nஅடிபட்டு இறந்து விடுவது பற்றி அலட்டிக் கொள்வதில்லை\nபூனை வளர்ப்பவர்கள் உயிரோடு பாம்பை கவ்விக்\nகொண்டு வீடு வருவது பற்றி அலட்டிக் கொள்வதில்லை\nகோழியை அடுத்த வீட்டு வளர்ப்பு நாய் கவ்விச்\nசெல்வதைக் கண்டால் நாயை வளர்ப்பவரிடம்\nஅதை கட்டி வைத்து வளர்த்தச் சொல்லி விட்டு\nசண்டையை ஒன்றுமில்லாமல் ஆக்கிச் செல்கிறார்கள்\nஇப்படியான ஊரில் முதலாக ஒரு சிறுத்தையை\nகொண்டு வந்து வளர்த்தது ஒரு குடும்பம்\nஎல்லோரும் தங்கள் வளர்ப்புப் பிராணிகளில் ஒன்றை\nசிறுத்தையின் தீனிக்கு கொண்டு சென்று கொடுத்தார்கள்.\nபின்பாக வேறொரு குடும்பம் ஒரு யானையைக்\nகொண்டு வந்து வீட்டின் முன் கட்டி வளர்த்திற்று\nஎல்லோரும் யானை பார்க்க அவர் வீட்டின் முன்\nகுவிந்து அதை பிளிறச் சொன்னார்கள்\nவிருப்பத்திற்காக சிறுத்தையை குறைந்த விலைக்கு\nகொடுத்த குடும்பம் ஆஸ்திரேலியா சென்று கங்காரு\nஒன்றை குட்டியோடு கொண்டு வந்தது வீட்டுக்கு\nகுட்டி அதன் பையில் அமர்ந்து ஊராரை வேடிக்கை பார்த்தது\nதன் வளர்ப்பு மிருகமான யானையை பக்கத்து வீட்டாருக்கு\nகுறைந்த விலைக்கு கொடுத்த குடும்பம் ஒரு நாள்\nஒட்டகச் சிவிங்கியை கொண்டு வந்து வீட்டின் முன் நிறுத்திற்று\nசிறுத்தை பசி பொறுக்காமல் ஒரு நாள் ஆட்டுப்பட்டி\nஒன்றில் நுழைந்து ஆடுகளை கவ்வி ருசித்தது\nசிறுத்தையை கட்டி வைத்து வளர்க்கும் படி அன்பாக\nகங்காருவை அடித்துச் சாப்பிட்டதும் தான் பெரிய\nகம்லெய்ண்டை அவர் ஊராட்சித் தலைவரிடம்\nகொண்டு சென்றார். –ஊர்த்தலைவர் ஊருக்குள் இனி\nயாரும் வளர்ப்பு மிருகங்களை வளர்த்தல் கூடாது\nஎன்று உத்திரவிட்டார். யாரேனும் வளர்த்துவது\nதெரிந்தால் மேலிடத்துக்கு தகவல் அனுப்புவேன், என்றார்\nஊரார் அவர் பேச்சுக்கு மதிப்பளித்து விவசாயத்தில்\nஇறங்கி பயிர்களை வளர்த்த கண்ணும் கருத்துமாக இறங்கினார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (45) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nஒரே ஒரு கவிதை கவிதையாக\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/12209-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-18T01:13:47Z", "digest": "sha1:3444KQIQ3CC5AKDJRHBALG7UAOSAYGJP", "length": 19230, "nlines": 317, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம்", "raw_content": "\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம்\nThread: ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம்\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம்\nஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத்\nமனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே\nநெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது\nபோலும் என்று தீர்மானித்த பெரியவா,\n“என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.\nஅந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம்\nநெடு நாட்களாகவே இருந்து வந்தது.\nஇது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார்.\nஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை.\nஅவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா\nஎன்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் ,\nஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.\n“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.\n“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.\n“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.\nஎல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள்.\nஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”\nபெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:\n“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த\nவடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும்\nவட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்.\nபதிலுக்காக மஹாபெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார்\nவட நாட்டில் இருந்து வந்த அன்பர்.\nதன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது\nதகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.\nகேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல…\nபெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த\nஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.\n“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால்,\nவீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து,\n‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி\nஉணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.\nஅழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள்\nஅடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும்.\nசம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.\nஉங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.\nசாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால்,\nராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.\n பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை\nஅடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று\nதீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.\nஅனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது\nவானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று\nதோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.\nமனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை,\nசாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.\n அடுத்த கணமே அது தன் கையில் வந்து\nவிட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.\nபிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே\nவிழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.\nவாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.\nஅதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை\nஉண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.\nஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை.\nசூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான்\nஇந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார்\nராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால்\nஉணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ ,\nஅவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும்,\nதன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும்\nராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.\nஇந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான்\nஅனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்)\nவளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.\nஅதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு\nஆக, ராகுதோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால்\nஆன வடை மாலைகளைஅனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால்,\nராகுதோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.\nஇப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.\nஇரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.\nதென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை\nசாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து\nபலவெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது.\nஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து\nபாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி\nவழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம்உண்டு.\nவட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக\nஇருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி,\nதவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களைஅதிகம் விரும்பிச்\nசாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே\n— அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும்\nரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள்.\nஎனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை\nஎது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான்கேட்டுக் கொண்டபடி\nஉளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.\nஅது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாகஇருந்தால் என்ன..\nமாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்துபோனால் சரி”\nஎன்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.\nபெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக்கேட்ட வட நாட்டு அன்பர்\nமுகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம்\nசெய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும்\n« MORAL STORY - நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டும் | நாஸ்திகர்களின் விதண்டாவாதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/Thzluwum%20Paruvam/Thazluwumparuvam12.asp", "date_download": "2018-08-18T01:17:16Z", "digest": "sha1:Z2R4OUKZ7GYMH4NQYVB46E6IFM3EO2EU", "length": 17984, "nlines": 61, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "தவழும் பருவம் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n“அதான் சொன்னேனே...இன்னைக்கு எனக்கு மூட் இல்லை\nவிஜயகுமார் சொல்லிவிட்டு முகம் கழுவிக் கொண்டு தன் அறைக்கு போனான்.\nஅவன் அப்போது என்றில்லை. எப்போதுமே அப்படித்தான் நடந்து கொண்டான். லதிகாவை வெளியே அழைத்துப் போவதை எந்த விதத்திலாவது தகர்த்துக் கொண்டே வந்தான். அது அவளுக்குள் ரணத்தை ஏற்படுத்திற்று. ஆனாலும் கூட பொறுத்துக் கொண்டாள்.\nநாட்கள் ஓடின. மாதங்களாய் நகர்ந்தன.\nலதிகாவிற்கு சாம்பவியை ரொம்பவும் பிடித்திருந்தது. அவளடைய குணம் அவளை சாந்தப்படுத்தி கட்டிப் போட்டிருந்தது. மாலை வேளைகளில் அவள் சாம்பவியை வீல்சேரில் அமர்த்தி, மடியில் குழந்தையை அமர வைத்து தோட்டத்தில் சுற்றி வருவாள். குந்தையுடன் பந்து விளையாடுவாள். அவளுக்காக பேப்பரும், வார இதழ்களும் படித்து காட்டுவாள்.\nஅலுவலகத்திற்கு போன் பண்ணி, சாம்பவியை கணவனுடன் பேசச் சொல்லி ரசிப்பாள். மொத்தத்தில் லதிகா தன்னால் அந்த வீட்டில் எந்த பிரசினையும் வந்து விடக்கூடாது என்று பொறுமையாய் இருந்தாள். அங்கு அவளுக்கென்று எதுவுமே செய்வதில்லை. சமையலிலிருந்து காய்கறிகள் வரை எல்லாமே சாம்பவியின் முடிவுதான்.\nசாம்பவிகூட சமயத்தில், “என்னையே எதற்கு கேட்கிறாய். உன்விருப்பப்படி செய்யேன்\n“இங்கே என் விருப்பம்னு எதுவுமே இல்லைக்கா. உங்க விருப்பம்தான் எங்கள் விருப்பம்” என்று சொல்லி சிரிப்பாள்.\nஅவள் அனுசரித்துப் போக, போக விஜயகுமார் அவளை ரொம்பவே நோகடித்துக் கொண்டிருந்தான். லதிகாவின் அண்ணனும், அண்ணியும் அவளை தீபாவளிக்கு ஊருக்கு அழைக்க வேண்டி வந்திருந்தனர்.\nஅனால் அவனோ, “எனக்கு இந்த தீபாவளி, பொங்கல் எல்லாம் பெரிசில்லை. சாம்பவி இப்படி ஆன பின்பு நான் பண்டிகையே கொண்டாடுவதில்லை” என்று முகத்திலடித்த மாதிரி சொல்லி விட்டான்.\n“ஆனாலும் இது தலை தீபாவளியாயிற்றே. நீங்கள் அவசியம் வர வேண்டும். அதுதானே முறை...\n“முறையை பார்த்தால் முடியுமா. நான் அங்கே வந்து விட்டால் சாம்பியை யார் பார்த்துக் கொள்வார்கள்... நாங்கள் வந்து அங்கே அனுபவிக்க வேண்டும். பட்டாசு விட வேண்டும். சாம்பி இங்கே அனாதையாய் கிடக்க வேண்டுமா நாங்கள் வந்து அங்கே அனுபவிக்க வேண்டும். பட்டாசு விட வேண்டும். சாம்பி இங்கே அனாதையாய் கிடக்க வேண்டுமா ஸாரி, நாங்கள் வருவதாயில்லை” என்று அவர்களை அனுப்பி விட்டான்\n“அக்காவை விட்டுட்டு நாம ஊருக்கு போறது சரியில்லைதாங்க. ஆனா இங்கேயே தீபாவளி கொண்டாடலாமில்லே... இங்கேயே பட்டாசு கொளுத்துவோம்\n” என்று அவன் கத்தினான். “உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அது சாம்பவியும் பங்கு கொள்கிற மாதிரி தான் இருக்க வேண்டும். அவள் பங்கு பெறாத எந்த பண்டிகையுமே வேண்டாம். இது பற்றி அவளிடம் மூச்சு விட்டாய் என்றால் தெரியும் சேதி” என்று அவளை மிரட்டி வைத்தான்.\nசாம்பவி பட்டாசு வாங்கி வரச் சொன்னபோது “தீபாவளி கொண்டாடலேன்னா என்ன சாம்பி...\n“ஊரல்லாம் கொண்டாடும்போது நாம் சும்மா இருக்க வேண்டுமா போங்கள், போய் வாங்கி வாருங்கள் போங்கள், போய் வாங்கி வாருங்கள்” என்று அவள் விரட்ட, அவன் அப்படியே பிளேட்டை மாற்றி, “வேண்டாம் சாம்பி” என்று அவள் விரட்ட, அவன் அப்படியே பிளேட்டை மாற்றி, “வேண்டாம் சாம்பி லதிகாவிற்கு பட்டாசு என்றால் அலர்ஜியாம். பயப்படுவாளாம். அதனால்தான் சொல்கிறேன் லதிகாவிற்கு பட்டாசு என்றால் அலர்ஜியாம். பயப்படுவாளாம். அதனால்தான் சொல்கிறேன்\n அப்படியா... உனக்கு பட்டாசு என்றால் பயமா...\n” என்று அவளும் பொய்யாய் தலையாட்டி விட்டு படுக்கையில் போய் விழுந்து விம்ம ஆரம்பித்தாள்.\nஅவர்களுடைய திருமணநாள் வந்தது. லதிகா திருமண நாள் என்று பெரிதாய் எதுவும் கனவு காணவில்லை. நாம் பாட்டிற்கு கனவு கண்டு. எதிர்பார்போடு எல்லா ஏற்பாடுகளும் செய்து, கடைசியில் அவர் கலைத்து விட்டார் என்றால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று அவள் பேசாமலிருந்தாள்.\n“லதிகா உன் வெட்டிங்டேக்கு என்ன பிரசண்டேஷன் வேணும் சொல்லு\n“பிரசண்டேசனா, வெட்டிங்டேயே கொண்டாடுவதா இல்லை”\n“ஏன் ஏன் அப்படிச் சொல்கிறாய் ஒரு பெண்ணுக்கு கல்யாண நாள் தான் வாழ்க்கைல திருப்பம் தருது. அதை எளிதாய் மறந்திர முடியுமா ஒரு பெண்ணுக்கு கல்யாண நாள் தான் வாழ்க்கைல திருப்பம் தருது. அதை எளிதாய் மறந்திர முடியுமா காலம் பூரா நினைச்சு நினைச்சு சந்தோஷப்படற நாளாச்சே அது. உனக்கு என்ன வேணுமானாலும் சொல்லு. வாங்கித் தாரேன்”\nலதிகா எதுவும் சொல்லவில்லை. “எனக்கு எதுவும் வேண்டாம்க்கா அவரை சந்தோஷமா பேசச் சொல்லுங்க. அதுவே போதும்” என்று சொல்ல நினைத்தாள்.\n அவர் உங்கிட்ட பிசினஸ் பத்தி பேசுகிறாரா கணக்கு வழக்கு பத்தியெல்லாம் பேசுவாரா கணக்கு வழக்கு பத்தியெல்லாம் பேசுவாரா\n எங்கிட்ட வந்து எல்லாம் ஒப்பிப்பாரே. இப்போதும் ஒப்பிக்கிறாரே\nசாம்பவி சொன்னதும் லதிகாவின் முகம் சோம்பிப் போயிற்று. “நீங்கள் அவருக்கு வேண்டும். நீங்கள்தான் அவருக்கு முக்கியம். நான்தான் வேண்டாதவளாயிற்றே. இந்த வீட்டில் எனக்கென்ன அந்தஸ்து நான் வேலைக்காரிதானே\n நீ வீட்டு பொறுப்புகளை மடடும் கவனிச்சாப் போதாது. அவரோட பிசினஸ் பத்தியும் தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டணும். சமயத்துல அவர் வெளியூர் போக வேண்டியிருக்கும். அந்த நேரத்துல நீதான் போய் பார்த்துக்க வேண்டியிருக்கும் என்ன\n“சரிக்கா” என்று நழுவினாள். பிசினஸ் பற்றி தெரிஞ்சுக்க நானா ஆர்வமில்லாமலிருக்கிறேன். அவர் வாயைத் திறந்தால்தானே\nவிஜயகுமார் வந்ததும் சாம்பவி, “நாளைக்கு உங்களோட வெட்டிங்டே\n“அதற்கென்ன இப்போ” என்றான் அலட்சியமாய்.\n அதை சிறப்பா கொண்டாட வேணாமா\n நம்மோட வெட்டிங்டேயும்தான் போன மாதம் வந்தது. அதை யாரும் இங்கே கொண்டாட வில்லையே. கொண்டாட தோன்றவில்லையே\n“அது வந்து... நம்மோட வெட்டிங்டே இனி எதற்கு. லதிகா வந்த பின்னால் அது தேவையில்லாத ஒண்ணு இனிமே இதைத்தான் கொண்டாடணும்.”\n“நோ. யார் வந்தும் யாரும் அடிபட்டுப் போகக்கூடாது. நீ என்றைக்கும் நீதான். எனக்கு என்றுமே நீதான்.”\n“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க. அவ காதுல விழுந்தா எத்தனை வருத்தப்படுவா.”\n“வருத்தப்பட்டா படட்டும். அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என் மனசை மாத்திக்க முடியலை. என்னால இயல்பா இருக்க முடியலை. மனசுல உன்னை வச்சுக்கிட்டு வெளியே வேஷம் போடுவது என்னால முடியாத காரியம்”\nஅவர்கள் பேசிக் கொண்டிருந்தது லதிகாவின் காதிலும் விழவே செய்தது. இங்கே நான் வேண்டாம் என்றால் எதற்காக என்னை கட்டிக் கொள்ள வேண்டும் கட்டிக் கொண்டு விரோதி போல நடத்த வேண்டும். என்னிடம் என்ன குறை கட்டிக் கொண்டு விரோதி போல நடத்த வேண்டும். என்னிடம் என்ன குறை ஏழை என்பது ஒரு பலவீனம். பணம் இல்லை டவுரி கொண்டு வரவில்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்\nஅவள் உடைந்து போனாள். நானும் பெண்தானே எனக்கு மட்டும் ஆசாபாசங்கள் இல்லையா இருக்கக் கூடாதா அக்காவுடன் அவர் பேசக் கூடாது என்றா சொல்கிறேன். எனக்கும் கொஞ்சநேரம் ஒதுக்குங்கள் என்று தானே கேட்கிறேன். இது தவறா அக்காவுடன் அவர் பேசக் கூடாது என்றா சொல்கிறேன். எனக்கும் கொஞ்சநேரம் ஒதுக்குங்கள் என்று தானே கேட்கிறேன். இது தவறா என்று ஒரு பக்கம் அவள் நினைத்து வருந்தினாலும் இன்னொரு பக்கம் அவன் சாம்பவியின் மேல் வைத்திருக்கிற பாசத்தை நினைத்து மனம் பிரமித்து வியந்தது.\nஎத்தனையோ பேர் பெண்டாட்டி நல்ல நிலையிலே இருக்கும்போதே அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கிறார்கள். பெண்டாட்டி தளர்ந்த போதும் கூட அவளையே நினைத்து அவளுக்காகவே உருகுகிறாரென்றால் இவர் நிச்சயம் சாதாரண மனிதர் இல்லை. கோவிலில் வைத்து பூஜிக்க வேண்டியவர். அப்படிப்பட்டவர் நம்மையும் நிச்சயம் கைவிட மாட்டார். நமக்கும் ஒரு காலம் வரும். நம் மீதும் அன்பு செலுத்துவார். அதுவரை பொறுமையாக இருப்போம் என்று லதிகா தன் மனதை தேற்றிக் கொண்டாள்.\nமறுநாள் சாம்பவி, விஜயகுமாரை கட்டாயப்படுத்தி லதிகாவையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போய் வரும்படி அனுப்பினாள். வழியில் எக்ஸிபிஷன் ஒன்று நடக்க, அதற்கும் போய் வாருங்கள் என்றிருந்தாள்.\nஅவன் கோவிலுக்கே வேண்டா வெறுப்பாகத்தான் போனான். எக்ஸிபிஷன் போகும் வழியிலெல்லாம் அவளை கடுப்படித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-for-27-may-2018-020987.html", "date_download": "2018-08-18T00:38:20Z", "digest": "sha1:KHQ2GT4QRGBZDFD7NAJMSA2VZJ223UST", "length": 27569, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு இந்த ராசிக்காரர் வீட்டைவிட்டு வெளியில போய்டாதீங்க... | horoscope for 27 May 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு இந்த ராசிக்காரர் வீட்டைவிட்டு வெளியில போய்டாதீங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர் வீட்டைவிட்டு வெளியில போய்டாதீங்க...\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.\nஎது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது என்று இப்போது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் விருத்திக்காக நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்துக் காத்திருந்த இடங்களில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nஉடன்பிறந்த இளைய சகோதரர்களினால் போதிய ஆதாயங்கள் உண்டாகும். புதிய பல முயற்சிகளின் மூலமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்க கால தாமதமாகும் ஏற்படும். வீட்டில் பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் அக்கறை செலுத்துவது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் நிதானத்துடன் கையாள வேண்டியது அவசியம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கிறது.\nநினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வெளியாட்களின் நட்பு கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனுகூலமான சூழல் உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட அறிவு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் திசையாக மேற்கு திசையும் இருக்கப்போகிறது.\nவீட்டில் பெற்றோர்களின் ஆதரவால் கவலைகள் தீரும். உங்களுடைய எண்ணப்போக்கில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். வாகனங்களால் உங்களுககு சில விரயச் செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு நட்பு உண்டாகும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nபோட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி அடைவீர்கள். இளைய சகோதரர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் வெற்றியடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. அதிர்ஷ்ட திசை தென்மேற்கு, அதிர்ஷ்ட எண் 3.\nஇன்று புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ள வேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் பேச்சில் பொறுமையும் நிதானமும் தேவை. திடீர் செலவுகளால் கடன் வாங்க நுரிடலாமத். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகுமு். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மறைமுகத் தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். இன்று அதிர்ஷ்ட நிறம் நீலம். அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட திசை வடமேற்கு.\nஇன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 1, அதிர்ஷ்ட திசை வடகிழக்கு, அதிர்ஷ்ட நிறம் காவிநிறம்.\nகுறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று, ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கிறது.\nஎதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் - அது கடினமாகவும் - ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார். இன்று உங்களடைய அதிர்ஷ்ட திசையாக மேற்க திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமாகவும் இருக்கும்.\nஉணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முடிவுகள் இறுதி செய்யப்படும். புதிய முயற்சிகளுக்கான திட்டங்கள் முடிவடையும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.\nஇது உங்களுடைய அதிர்ஷ்டமான நாட்களில் ஒன்றல்ல. எனவே இன்று வார்த்தைகளில் கவனம் தேவை. சிறிய உரையாடலும்கூட நாள் முழுக்க இழுத்து வாக்குவாதங்களாகி, மன அழுத்தத்தை அதிகமாக்கலாம். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் - முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள். வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று நீங்கள் இருவரும் மீண்டும் காதலில் விழுவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் எண் 5, அதிர்ஷ்ட திசை 5,அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த பச்சை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவழியா ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தாச்சு... என்ன சொல்லுது உங்க ராசின்னு பார்ப்போமா\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஆடி வெள்ளிக்கிழமையான இன்று எந்த ராசிக்கு நன்மை\n12 ராசிகளும் இன்றைக்கு செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன\nஇன்றைக்கு 12 ராசிகளுக்கும் இதுதான் நடக்கப் போகிறது\nஇந்த வாரம் சுக்கிர திசை எந்த ராசிக்கு கோடி கோடியாக கொட்டித் தரப்போகிறது\n... யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்\nஇந்த மூன்று ராசிக்காரர்கள் இன்னைக்கு கொஞ்சம் கவனமா இருக்கலாமே\nசனிபகவானுக்கு உகந்த நாளான இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇந்த ஆடிப்பெருக்கில் உங்களுடைய ராசிக்கு என்னென்ன விஷயங்கள் பெருகப்போகுது\nஉங்க ராசிய சொல்லுங்க... இன்னைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் எந்த திசையிலருந்து வருதுனு சொல்றோம்...\nMay 27, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023115", "date_download": "2018-08-18T00:26:16Z", "digest": "sha1:QYCX2KG65EZN7ICDNT7GERVDLOTLG372", "length": 14836, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., போராட்டம்: அமைச்சர் கிண்டல்| Dinamalar", "raw_content": "\nகாங்., போராட்டம்: அமைச்சர் கிண்டல்\nபெங்களூரு : சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்., எம்எல்ஏ.,க்கள் விடுதியில் இருந்து புறப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனந்த் குமார், காங்கிரஸ் போராட்டம் நடத்த விரும்பினால் ராகுல், சோனியா, சித்தராமைய்யாவை எதிர்த்து தான் போராட வேண்டும். ஏனெனில் அவர்கள் 3 பேரும் தான் காங்கிரசை நாசமாக்கியவர்கள் என்றார்.\nRelated Tags காங்கிரஸ் போராட்டம் அனந்த் குமார்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்கிரஸ் பத்தி ரொம்ப கவலைபடுராப்புல தலைவர்\nஉண்மையில் சோனியா , ராகுல் காங்கிரஸ்க்கு உண்டான மரியாதையை சீர் அழித்துவிட்டார்கள் . பிஜேபி அழிக்க குமார சாமீ கால் பிடித்தது தவறு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/45230-tnau-admission-schedule-announced-counselling-to-go-online-from-this-year.html", "date_download": "2018-08-18T00:20:05Z", "digest": "sha1:ZYP5PWQQRHZG5IQ7YTH77UP2DDE7ZKJ3", "length": 9519, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு | TNAU admission schedule announced, counselling to go online from this year", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nவேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு\nவேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 18ம் தேதி இணையதளம் மூலமாக தொடங்குவதாக தெரிவித்தார். www.tnau.ac.in என்ற இணையதள முகவரியை தெரிவித்த அவர் ஜூன் 17ம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள் எனவும் குறிப்பிட்டார். தரவரிசை பட்டியல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்படுகிறது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது.\nஇணையதள வழியில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி தொடங்குகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் துவங்குகின்றன.\nஇந்தோனேஷிய போலீஸ் தலைமையகத்தில் தற்கொலை தாக்குதல்: பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்\nடாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\n“வாய்ப்பில்லையே” - மறுத்த தேர்தல் ஆணையம்\nதலைவராக உள்ள செயல்தலைவரே - துரைமுருகன்\nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தோனேஷிய போலீஸ் தலைமையகத்தில் தற்கொலை தாக்குதல்: பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்\nடாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49445-bjp-mp-harinarayan-rajbhar-demand-of-purush-aayog-for-men-because-of-uffering-at-wifes.html", "date_download": "2018-08-18T00:20:09Z", "digest": "sha1:I6FHYXCGS6VP4KSJRGXJ4A3BRWQ6ISKK", "length": 7800, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா ? பாஜக எம்.பியின் புது ஐடியா | BJP MP Harinarayan Rajbhar Demand of 'Purush Aayog' For Men because of uffering at Wifes", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\n பாஜக எம்.பியின் புது ஐடியா\nமனைவியால் பாதிக்கப்படுவோரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா எம்பி ஹரிநாராயண் ராஜ்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு அமைப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆனால் ஆண்களின் நலனுக்காக எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் ஹரிநாராயண் பேசினார். மனைவிகளால் கணவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும் பொய் புகார்கள் காரணமாக ஏராளமான கணவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக எம்பி தெரிவித்தார்.\nஎனவே திருமணமான ஆண்கள் நலனுக்கென புருஷ் ஆயோக் என்ற பெயரில் ஒரு அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். ஹரிநாராயண் இந்த கோரிக்கையை முன்வைத்த போது அவையில் சிரிப்பலை எழுந்தது அப்போது அவையில் இருந்த 5 பெண் எம்பிக்களும் புன்னகைத்தனர்.\nஅரசு அலுவலகங்களோட மின் கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா \nநடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 18 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களவை எம்பி சன்வர்லால் காலமானார்\nRelated Tags : Harinarayan Rajbhar , பாரதிய ஜனதா எம்பி , எம்பி ஹரிநாராயண் , ஹரிநாராயண் ராஜ்பர் , Purush Aayog , எம்பி ஹரிநாராயண் ராஜ்பர்\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு அலுவலகங்களோட மின் கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா \nநடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 18 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil-kama-kathaikal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-21/", "date_download": "2018-08-18T01:32:12Z", "digest": "sha1:LPRJYYMZLNADOOUF43PRYAN4S5AIJ2UG", "length": 23717, "nlines": 137, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "சித்தியின் வாசம் – 21 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nசித்தியின் வாசம் – 21\nTamil Kamakathaikal – வளமை போல் உங்கள் ஆதரவினை தரவும் மற்றும் ஈமெயில் மூலம் உங்கள் கமெண்ட்டினை தெரிவிக்கவும் . கதையினை தொடர்ந்து படித்தது மகிழவும் மற்றும் ஆதரவு தரவும்… நன்றியுடன் ரமேஷ்\nஅடுத்த நாள் நான் காலேஜ் லீவு போட்டேன், சூரியை ஸ்கூல் அனுப்பிவிட்டு ஹாலில் இருந்து டிவி பார்த்து கொண்டு இருந்தேன். சித்தி தனது வேலையே முடித்துவிட்டு வந்தால். நான் சூரியின் முழுமையான நிலைப்பாட்டை அவளிடம் மறைத்து பொதுவாக அவன் படிப்பை பத்தி பேசிக்கொண்டிருந்தேன். காரணம் அவளிடம் பேச போய், சித்தியின் கோவத்தையும் அதிகரிக்க விருப்பம் இல்லை. ஆனால் பேசாமலும் இருக்க முடியாது, என்ன செய்வது என்று யோசித்தது கொண்டிருந்தேன்.\nமுதலில் சித்தியின் நிலைப்பாட்டை மாத்தணும் அதுக்கப்புறம் தான், அவளிடம் சூரி பத்தி சரியாக போச முடியும் என்று தீர்மானித்தேன்.\nபின் சித்திக்கு சூரியின் படிப்பு மிக முக்கியம், அவனால் வயல் கட்டு வேலை எல்லாம் செய்ய முடியாது என்று புரிய வைத்தேன். இவனை எப்பிடியாவது படிக்க வைக்கணும் சித்தி. இல்லாவிட்டால் சூரியால் எதிர்காலத்தில் ஏதும் செய்ய முடியாது சித்தி. அத்துடன் நீ இவ்வளவு கஷ்ட பட்டிருக்கவும் தேவையில்லை சித்தி. நீ உன்னோட சந்தோஷத்தையும் தொலைத்தது இவ்வளவு கஷ்டப்பட்டது எந்த உபயோகமும் இல்லாமல் போய்விடும் சித்தி என்று புரிய வைத்தேன்.\nஅவளும் பொறுமையாக அனைத்தயும் கேட்டுக்கொண்டாள். நான் அதுக்கு மேல் எதையும் அவளிடம் போசி குழப்ப விரும்பவில்லை. நானும் வெளிய போய்ட்டு வருகிறேன் என்று கிளம்பினேன்.\nஅன்று இரவு சூரிக்கு படிக்க நான் உதவி செய்துகொண்டு அவன் அருகில் இருந்தேன். அவன் என்னிடம் எப்ப அண்ணா அம்மாக்கு மாத்திரை கொடுக்க போற என்று கேட்டான். நான் அவனிடம் உனது கவனம் படிப்பில் மாத்திரம் தான் இருக்கணும். நா உன்னிடம் ஒரு வாரம் டைம் கேட்டிருக்கேன். அதுக்குள் ஏற்பாடு செய்து விட்டு உனக்கு சொல்வேன். அனால் நீ செய்த சத்தியம் உனக்கு நினைவில் இருக்கட்டும், நீ இப்ப படிப்பை மாத்திரம் கவனி என்று கூறி அவன் கவனம் முழுவதையும் படிப்பில் திருப்ப முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.\nஅடுத்த நாள் நான் காலேஜில் இருந்து வரும் பொது மலை நேரம் 5.30 இருக்கும். சூரி மாலை நேர கிளாஸ்சுக்கு போய் இருந்தான்.\nநானும் வந்தவுடன் குளித்துவிட்டு வந்தேன். அப்போது சித்தி டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் வந்து ஆவலுடன் டிவி பார்த்தேன். பின் சூரி எதாவது சொன்னானா என்று கேட்டேன். இல்லை வருவதற்கு இரவு 10 மணியாகும் என்று இரவு கடாயில் சாப்பிடுவதாக பணம் வாங்கி சென்றான் என்றால். நானும் சரி என்று கூறி ஆவலுடன் சேர்ந்து தொடர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தேன். பின் அவளிடம் இப்ப சூரி ஓரளவுக்கு மாறி இருப்பதாகவும் அவனை முழுமையா உன்னால் மாத்திரம் தான் மாத்த முடியம் என்று கூறினேன்.\nசித்திக்கு புரிந்தும் புரியாதது மாதிரி, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால்.\nநான் – அம்மா சித்தி, அவனோட இந்த நிலைமைக்கு நீயும் நானும் கூட ஒரு கரணம் தான் சித்தி.\nசித்தி – என்ன நான் காரணமா நான் என்னடா அவனுக்கு செய்யவில்லை.\nநான் – சித்தி , நீ நல்ல தான் அவனை கவனிக்கிறாய். அவனுக்கு எல்லாத்தையும் பார்த்தது பார்த்து செய்கிறாய். அதுமட்டும் இப்ப அவன் தேவையில்லை சித்தி.\nசித்தி – வேற என்ன அவனுக்கு தேவையிருக்கு\nநான் – நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்கு தெரியும், நீ தெரியாதது போல் நடிக்காதே சித்தி. பிறகு நான் ஒப்பான சொன்ன என் மேலும் கோவப்படுவ.\nசித்தி – அதுக்கு, இப்ப நான் என்ன அவனோட படுக்கணும் என்று சொல்லுறியாடா நீ\nநான் – இதுதான் சித்தி நான் இத பத்தி உன்கிட்ட போச விரும்பல. நீ என்மேலேயும் கோவப்படுற.\nசித்தி – வேற, நான் கோவப்படாம என்ன செய்ய முடியும். அவன் என் புள்ள. என்னால கற்பனை கூட பண்ண முடியாது, நீயம் வந்து இப்படி என்கூட பேசுற.\nநான் – அப்பிடின்னா, நானும் தான் சித்தி உனக்கு புள்ள……….\nசித்தி – வேணாம் ரமேஷ், நாம இதப்பத்தி போச வேண்டாம்…. நீ தயவு செய்து இங்கிருந்து போ ….\nநானும் வேறு எது போசாமல்.. எனது ரூமுக்கு போனேன்.\nஎனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது சித்திய எப்பிடியாவது சம்மதிக்க வைத்தி விடலாம் என்று. முடிந்தவரை முயற்சித்து பார்ப்போம் இல்லாவிட்டால் சூரியின் வழி தான் சரியான தீர்வு என்று நினைத்துக்கொண்டேன். அடுத்தனாலும் நான் நேரத்துடன் வீட்டுக்கு வந்தேன், எனக்கு மறுபடியும் சித்தியுடன் பேச ஒரு நீண்ட வாய்ப்பு கிடைத்தது. சித்தி சோபவில் சாய்ந்தபடி டிவி பார்த்து கொண்டு இருந்தால். அனால் அவள் பார்வை மாத்திரம் தான் டிவி யில் இருந்தது கற்பனை வேறு எங்கோ இருந்தது.\nநான் – என்ன சித்தி, டிவி பார்க்காம பலமா யோசித்து கொண்டு இருக்காய்\nசித்தி – ஒன்னும் இல்லை\nநான் – உன்ன பார்த்தால் தெரியல சித்தி.\nசித்தி – ம்ம், இது உங்களுக்கு சொல்லி புரியிற விஷயம் இல்லை. உன்னக்கு டீ ஏதும் போட்டு தரவா \nநான் – இப்ப வேணாம் சித்தி.\nசித்தி – சரி, நீ போய் படி.\nநான் – இப்பேதைக்கு ஒன்னும் இல்ல, சித்தி ப்ராஜெக்ட் வேலை கூட முடிஞ்சுது. நான் உன்கிட்ட வேற ஒன்னு பேசணும். நீ இப்ப நல்ல மூட்ல இருந்தா மட்டும் தான் உன்கிட்ட பேசமுடியும்.\nசித்தி – அப்பிடி என்ன பெரிய விஷயம் பேசப்போற\nநான் – இல்லை சித்தி, சூரிய பத்திதான்.\nசித்தி – நானும் அவனை பத்திதான் நினைச்சுகிட்டு இருந்தான். அவன் என்ன செய்ய போறான் பியூச்சர்ல, எனக்கு ஏதும் புரியல. அவனுக்கு படிப்பும் சரிவராது. என்ன செய்து அவனை காப்பதாக போறான் எண்டு கூட தெரியல.\nநான் – அவன் நல்லா படிப்பான் சித்தி, பிரிசிப்பல் கூட சொன்னாரு தானே, அவனோட பழைய ரெகார்ட் எல்லாம் நல்ல இருக்கு என்று. இப்போதைக்கு அவன் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி இருக்கான். ஆதிக்கு தீர்வு கிடைச்ச போதும் அவனை சரி பண்ணிடலாம சித்தி.\nசித்தி – அப்பிடி என்னதான் அவனுக்கு பிரச்சின, ஏதும் சொன்னதன் தெரியும்.\nநான் – நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னது தான், நீதான் கொக்கிற நிலையில இல்லை. அவனோட பிரச்சினை நீ தன சித்தி.\nசித்தி – நான் என்னடா பிரச்சசினை அவனுக்கு தேவையான எல்லாத்தையும் செய்து கொடுத்திருக்கேன். இதைவிட என்னால ஏதும் பண்ண முடியாது.\nநான் – அவனுக்கு நீ செய்துகொடுத்த வசதி தேவையில்லை சித்தி, வனுக்கு நீதான் வேணும்.\nசித்தி – சீ வாய மூடு. இது என் கனவுல கூட நடக்காது.\nநான் – நீ கோவப்பட்டாலும் இதுதான் சித்தி உண்மை. இப்ப அவனோட லைஃ உன் கையில் தான் இருக்கு.\nசித்தி – நோ… என்னால ஒருபோது அவனோட இந்த ஆசையா பூர்த்தி பண்ண முடியாது. நீயம் இத பத்தடி என்கிட்டே பேச வேண்டாம்.\nநான் – இது தான் சித்தி உன்னோட பிரச்சினை. நா சொல்ல வர்றத முதல்ல புரிச்சிக்கோ.\nசித்தி – நான் எதையும் புரிஞ்சிக்க விரும்பல, நாம இதப்பத்தி பேச வேண்டாம். நீ படிக்கிற வேல இருந்த போய் பார். இல்லாவிட்டால் நான் தேவையில்லாம உன்கிட்டயும் கோவப்படணும்.\nநான் – சரி, சித்தி நீயே யோசிச்சு ஒரு முடிவு எடு, நான் போகிறேன்.\nசித்தி – நான் யோசிக்க ஒன்னும் இல்ல நீ போ.\nநானும் மேலும் போசாமல் ரூமுக்குள் போய் தூங்கினேன். பின் 6.30 மணி இருக்கும் எழும்பி வெளியே வந்தேன். சித்தி வெளியே தலை துவட்டி கொண்டு இருந்தால். அவளிடம் சூரி எங்கே என்று வினவினேன் கிளாசுக்கு போகிறான் இரவு ஆகுமாம் வாரத்துக்கு. பின் நானும் வெளியே போவதற்கு மோல் கழுவ பாத் ரூம் போனேன். இன்னைக்கு அவள் தனது அழுக்கு துணிகளை எடுக்க மறந்து விட்டால். சித்தியின் மனம் நல்லா குழம்பி இருக்கு அதுதான் இவள் இதை மறந்துவிட்டால்.\nசரி எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்பினேன். சூரிய பத்தடி பேச போய் எனக்கு அவளை தொடுத்த சந்தர்ப்பமும் இல்லாமல் போய்விட்டது. அதனால் தானாக கிடைத்த வாய்ப்பை தவற விட முடியாது என்று முடிவு செய்தேன்.\nநான் அவளின் சட்டையை எடுத்தது அவளின் அக்குள் வியர்வையை மோப்பம் பிடித்தேன். உண்மையில் சித்தியின் உடம்பு வாசம் என்னை கிறங்க வைத்தது. நான் என்னை மறந்து எனது சாமானை நீவி விட்டேன். பின் அவளது சட்டை, ப்ரா மற்றும் பாவாடையை எடுத்து என் தோளில் போட்டுகொண்டு. அவளின் யட்டியை எடுத்தது, சித்தியின் குதி படும் இடத்தை எனது மூக்கில் அழுத்தி மோப்பம் பிடித்தேன். அதன் வாசத்தினை, மறுபடியும் என்னால் வார்த்தைகளினால் புரிய வைக்க முடியாது.\nஅனுபவித்தாள் மாத்திரம் புரியும் வாசம். நான் அவளது பழைய நினைவுகளை மீட்டிக்கொண்டு சித்தியின் யட்டியை முத்தத்தில் போட்டு மோப்பம் பிடித்து கொண்டு கை அடித்தேன். பின் எனது சாமானை சுத்தம் செய்து கொண்டு, சித்தியின் அழுக்கு துணிகளை கையில் எடுத்து கொண்டு சித்தி இருக்கும் இடத்துக்கு வந்தேன். அதனை அவளிடம் காட்டி, சித்தி இப்ப நீ பழையபடி மாறிவிட்டாய். துணிகளை பாத் ரூமில் வைக்கிறாய் என்றேன்.\nசித்தி, ரமேஷ்.. என்ன நீ செய்யுறா அத குடுடா நாயே. என்று என்னிடம் பறிக்க வந்தால்.\nநான் அவளின் கைகளை தட்டி விட்டு, சித்தி ரொம்ப நாள் ஆச்சு சித்தி உன்னோடத மோந்து பாத்து. இன்னைக்கு மட்டும் தா என்று.. அவளுக்கு எட்டாத வாறு உயர்த்தி பிடித்தேன். அவள் முயன்று பார்த்தும் எண்னிடம் இருந்து பறிக்க முடியவில்லை.\nசித்தி, இது தான் நான் செய்த முதல் தவறு. தயவு செய்து நீ இதை தொடாதே. ப்ளீஸ் ரமேஷ் என்னிடம் கொடுத்டுவிடு.. என்று எச்சரித்தாள்.\nநான் முடியாது சித்தி எனக்கு இது வேணும் என்று அவளின் யட்டியை எடுத்து அவள் முன்னாலேயே மோப்பம் பிடித்தேன்.\nபின் சித்தி… என்னை பேசிக்கொண்டே ரூமுக்குள் ஓடி, கட்டிலில் குப்பற விழுந்து அழ தொடங்கினாள்.\nதங்கையின் தாகம் – 2\nபாங்காக் பிரதாபங்கள் – 1\nதமிழ் காம கதைகள் (1,818)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/thaana-serntha-koottam-antagonist-suresh-menon-upset-of-his-dubbed-voice-in-movie/", "date_download": "2018-08-18T01:18:40Z", "digest": "sha1:EKKTOIDVYWYWF4BZ4AJ52G3PCESYEZXY", "length": 10611, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "என் குரலை ஏன் மாற்றினார்கள் என தெரியவில்லை: 'தானா சேர்ந்த கூட்டம்' வில்லன்! - Thaana serntha koottam antagonist Suresh Menon upset of his dubbed voice in movie", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nஎன் குரலை ஏன் மாற்றினார்கள் என தெரியவில்லை: ‘தானா சேர்ந்த கூட்டம்’ வில்லன்\nஎன் குரலை ஏன் மாற்றினார்கள் என தெரியவில்லை: 'தானா சேர்ந்த கூட்டம்' வில்லன்\nநான் மொத்த படத்துக்கும் டப்பிங் பேசியிருந்தேன். ஆனால், படத்தில் வேறு ஒரு குரலை பயன்படுத்தியுள்ளனர்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சிபிஐ அதிகாரியாக நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த சுரேஷ் மேனன், படத்தில் தனக்கு பயன்படுத்தப்பட்ட டப்பிங் குரல் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்தியில் பேசுகிறார். 44 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அவரது குரல் கம்பீரமாக ஒலிக்கிறது.\nஅந்த வீடியோவின் கீழ், “தானா சேர்ந்த கூட்டத்தில் எனது குரல் ஏன் இடம்பெறவில்லை எனக் கேட்கும் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் மொத்த படத்துக்கும் டப்பிங் பேசியிருந்தேன். ஆனால், படத்தில் வேறு ஒரு குரலை பயன்படுத்தியுள்ளனர். என்னுடைய குரல் மாதிரியை இந்த வீடியோ மூலம் கேளுங்கள். எனது சொந்தக் குரலே எனது கதாபாத்திரத்துக்கு சிறப்பாகப் பொருந்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். படத்தைப் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘சொடக்கு மேல’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்\nசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலின் லிரிக் வீடியோ\nவைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ‘பர்த்டே’ பார்ட்டி படங்கள்\nநீட் பற்றி ஆக்டருக்கு தெரியுமா, டாக்டருக்கு தெரியுமா நடிகர் சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி\nசூர்யாவின் “நானே தானா வீணா போனா” பாடல்: ட்விட்டரில் ட்ரெண்டிங்\n”குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வின் கோட்பாடு தவறானது”: மத்திய அமைச்சர்\nஆபாசமாக பேசிய இளம்பெண்: நித்தியானந்தா ஆசிரமம் மீது பியூஷ் மானுஷ் புகார்\nஎன்.ஜி.கே தொகுதியில் எம்.எல். ஏ -வாகும் நடிகர் சூர்யா\nஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாணவர் தலைவராக நடித்திருந்தார்.\nதிட்டம் போட தெரியல என்று கதறிய அனிருத்… கோவத்தில் பொருள்களை உடைத்த வீடியோ\nkolamaavu kokila : கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்றுள்ள “திட்டம் போட தெரியல” பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/high-court-order-minister-rajendra-balaji-not-to-talk-against-private-milk-companies/", "date_download": "2018-08-18T01:18:37Z", "digest": "sha1:U52M4TIDPD6VFTT5MKP64HY676KAFA5V", "length": 18934, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பூட்டு; உயர்நீதிமன்றம் உத்தரவு! - High court order Minister Rajendra balaji not to talk against Private milk companies", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பூட்டு : உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பூட்டு : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த மே மாதம் 24-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அறிவித்து மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் ஆவின் பால் தவிர, அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியின் போதும், இறந்துபோனவர்களின் உடலைப் பதப்படுத்தும் ரசாயனம் கலக்கப்படுகிறது. இதனைக் குடித்தால் கேன்சர் வரும். காலையில் எழுந்தவுடன் குழந்தைகள் முதலில் கேட்பது பால் தான். ஆனால், அந்த பாலில் இதுபோன்ற ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது. இதனால் தான், இப்போதெல்லாம் நிறைய குழந்தைகளுக்கு கேன்சர் வருகிறது.\nநான் நிறைய இடத்தில் விசாரித்துவிட்டேன். ரசாயனம் கலப்பது உறுதி தான். உண்மையான பால் என்றால், 5 மணி நேரத்தில் கெட்டுப் போக வேண்டும். ஆனால், நாள்கணக்கில் கெடாமல் இருப்பதற்கு பெயர் பாலா இதிலிருந்தே அது ரசாயனம் கலக்கப்பட்ட பால் என்று தெளிவாக தெரிகிறது.\nஇதுகுறித்த ஆதாரங்களை நான் திரட்டி வருகிறேன். அதன்பின், நிச்சயம் அந்த தனியார் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.\nதமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சரே, இப்படி வெளிப்படையாக ஆவின் பால் தவிர அனைத்து தனியார் நிறுவன பால் உற்பத்தியிலும் ரசாயனம் கலக்கப்படுகிறது என்று கூறியிருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் “நெஸ்லே, எவ்ரிடே பால் பவுடர் ஆகியவை உலகத் தரம் வாய்ந்தது என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நிறுவனங்களின் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது.\nரிலையன்ஸ் பால் கம்பெனி இந்தியாவில் பிரபலமானது. இந்த பாலிலும் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் தான் இந்த பால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nகெட்டுப்போன பாலில் அமிலத் தன்மையை குறைப்பதற்காக காஸ்டிக் சோடாவை சேர்க்கின்றனர். பின்னர் அமிலத் தன்மை குறைந்தவுடன் அவற்றை பாலாக மாற்றாமல், பால் பவுடராக மாற்றிவிடுகிறன்றனர்.\nஇந்த பால் பவுடரை வாங்கிச் செல்லும் மக்கள் திரும்ப அதை பாலாக்கி, சுடவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.\nதற்போது நான் வைத்திருக்கும் இந்த பொருட்களில் காஸ்டிக் சோடா என்பது உள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆவின் பால், ஆவின் தயிர், ஆவின் பால் பவுடர் இவற்றையெல்லாம் தனியார் கம்பெனிகள் சோதனை செய்கின்றனர். அவற்றில் ஆவின் பொருட்கள் அனைத்தும் தரமானது என ஆய்வறிக்கையும் கொடுத்துள்ளன.\nஉலகத்தரம் வாய்ந்த கம்பெனிகளின் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.\nஇந்த பொருட்களை வாங்கக் கூடாது என்று சொல்லக் கூடிய அதிகாரம் என்னிடம் இருந்தால், இப்பொழுதே அதன் மீது தடை விதித்துவிடுவேன். ரசாயனம் கலந்த கம்பெனியின் பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.\nதற்போதைய நிலவரப்படி, எந்த நிறுவனத்திற்கும் நாங்கள் நற்சான்றிதழ் கொடுக்க விரும்பவில்லை. பின்நாட்களில் அந்த நிறுவனங்கள் ஏதேனும் தவறு செய்தால், நீங்கள் தானே நற்சான்றிதழ் கொடுத்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்பும் வாய்ப்பு உள்ளது.\nமுன்னதாக மாதவரம் ஆய்வுமையத்தில் வைத்து பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை ஆய்வு செய்தபோது 4 நிறுவனங்கள் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஆய்வறிக்கையை தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.\nஇந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டு வருவதாக ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. மேலும், அமைச்சரின் இந்த பேச்சுக்கு நஷ்ட ஈடாக மூன்று நிறுவனங்களுக்கும் தலா 1 கோடி வீதம் ரூ.3 கோடி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தன.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இன்றி, தனியார் பால் நிறுவன கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக, 4 வாரத்தில் அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.\nஅரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யக்கூடாது\nபோலீஸ் முன்பு ஆஜராக அமலா பாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nகணவர் மீது கோபம் என்றால் மாமனார் வீட்டுக்கு பூட்டு போடுவதா\nநீட் விவகாரத்தில் அமைச்சர்கள் வாய் திறக்க கூடாது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு\nகீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணிக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு\nநீதிபதிகள் குறித்து விமர்சனம்: அக்.,4-க்குள் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகீழடியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு: கண்காணிப்பாளரை மாற்ற புகார்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று போர் களமிறங்கும் டெல்லி வழக்கறிஞர் பட்டாளம்\nமுன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு\nஆசிய தடகள போட்டி: முதலிடம் பிடித்து இந்தியா வரலாற்றுச் சாதனை\nஅரசு பள்ளியில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்… சட்டமன்ற உறுப்பினரும் தனது மகனை சேர்த்தார்\nஎன்.ஜி.கே தொகுதியில் எம்.எல். ஏ -வாகும் நடிகர் சூர்யா\nஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாணவர் தலைவராக நடித்திருந்தார்.\nதிட்டம் போட தெரியல என்று கதறிய அனிருத்… கோவத்தில் பொருள்களை உடைத்த வீடியோ\nkolamaavu kokila : கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்றுள்ள “திட்டம் போட தெரியல” பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=23010", "date_download": "2018-08-18T00:21:33Z", "digest": "sha1:CZTWCHS5QCMRAK66WKTLOG5H5PMMMZGO", "length": 42326, "nlines": 280, "source_domain": "rightmantra.com", "title": "ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)\nதானத்தில் சிறந்ததும் உயர்ந்ததுமான அன்னதானத்தின் அவசியம் பற்றியும், மகத்துவம் பற்றியும் நாம் நம் தளத்தின் பல்வேறு பதிவுகளில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும் அன்னதானத்தின் மகத்துவத்தை ஒரு சில பதிவுகளில் அடக்கிவிடமுடியுமா என்ன\nஅன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு தான் செய்ய வேண்டும். ஆனால், அன்னதானம் ஒன்று தான் பெறுவோர் தகுதி பார்க்காமல் செய்யக்கூடிய தானம்.\nஅதிதி பூஜை மற்றும் அன்னதானம் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதிதி பூஜை என்னும் அன்னதானத்தை பொருத்தவரை மனமிருந்தால் மார்க்கமும் நிச்சயம் இருக்கும்.\nFor Episode 1 of this series : மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nரைட்மந்த்ராவில் வெளியாகும் தொடர்கள் சில : திருமால் திருவிளையாடல், ரிஷிகள் தரிசனம், காலடி பயணம், வள்ளிமலை அற்புதங்கள், யாமிருக்க பயமேன் (வேல்மாறலின் அற்புதங்கள் பற்றிய தொடர்) …. தவிர வேறு பல ஆன்மீக தொடர்களும், சுயமுன்னேற்ற தொடர்களும் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன.\nமழை பொழியும் காரிருள் சூழ்ந்த இரவில், தனக்கு உணவு இல்லை என்றாலும் விதைநெல்லை பொறுக்கி கொண்டு வந்து, கொல்லைப் புறத்தில் விளைந்த கீரைகளை பறித்து வந்து அதிதியாக வந்த சிவபெருமானுக்கு படைத்த இளையான்குடி மாறநாயனாரின் சரிதமும், தங்கள் குடும்பத்திற்கே உணவு இல்லாத சூழ்நிலையிலும் விருந்தினருக்கு அன்னமிட்டு தாங்கள் பட்டினியால் மடிந்த மகாபாரதத்தில் வரும் உஞ்சவிருத்தி அந்தணரின் கதையும்…. அவ்வளவு ஏன், பிக்ஷை கேட்டு வந்த ஆதி சங்கரருக்கு பிக்ஷையிட எதுவுமில்லாத காரணத்தால் வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் பிக்ஷையளித்ததால் ஆதி சங்கரர் ‘கனகதாரா சுலோகம்’ பாடி தங்கநெல்லி மழை பொழிய வைத்த சம்பவமும் உணர்த்துவது இதைத் தான். மேற்கூறிய அனைத்து சம்பவங்களிலும் மனம் தான் பிரதானமாமேயன்றி அவர்களின் வசதி வாய்ப்புக்கள் அல்ல என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே அதிதிபூஜை செய்வதற்கு வசதி, வாய்ப்புக்கள் வேண்டும், பொருள் மற்றும் இட வசதி வேண்டும் என்கிற எண்ணமே தவறானது.\nமேலும் அதிதி பூஜை செய்தால், உங்களுக்கான தேவைகள் இறைவனருளால் தாமே நிறைவேறும் என்பது உறுதி. தேவைகள் என்றால் அதை பொருளாதார தேவைகளோடு மட்டுமே முடிச்சு போட்டு பார்க்கக்கூடாது. நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நல்ல வாழ்க்கைத் துணையும், ஒழுக்கமுடைய பிள்ளைகளும் தான் ஒருவரின் அத்தியாவசியத் தேவைகள். இதற்கு பிறகு தான் ஏனைய செல்வங்கள்.\nஅதிதி பூஜையின் சிறப்பை விளக்கும் நிகழ்வு ஒன்றை பார்ப்போம். தொடரின் முதல் அத்தியாயத்துக்கு இதைவிட சிறப்பான ஒரு பதிவை அளிக்க முடியாது. நமது தளத்தின் ஓவியர் ரமீஸ் அவர்கள் இந்த தொடருக்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியம் இது.\nசுந்தரரின் அதிதி பூஜை செய்த அற்புதம் – நெற்குவியலில் மூழ்கிய திருவாரூர்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணம்புரிந்து இனிய இல்லறம் நடத்திவந்த காலகட்டங்களில், அதிதி பூஜை செய்து, அடியார்க்கு தினசரி அமுது படைத்து வந்தார். இதன் மூலம் சுந்தரரின் புகழ் திக்கெட்டும் பரவியது.\nதிருவாரூருக்கு அருகில் திருக்குவளை என்னும் பதியை ஒட்டியுள்ள குண்டையூர் என்னும் சிற்றூரில் குண்டையூர் கிழார் என்னும் நிலச்சுவான்தார் ஒருவர் வசித்து வந்தார். சுந்தரர்பால் பேரன்பும் மரியாதையும் கொண்டிருந்த அவர் சுந்தரர் பரவையாருடன் சேர்ந்து தினமும் தனது இல்லத்தில் அடியார்க்கு அமுது செய்துவருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் – சுந்தரர்க்கு தான் ஏதேனும் செய்ய விரும்பி – சுந்தரரும் அமுது செய்ய வரும் அடியவர்களும் பயன்பெறும் விதமாக நெல், பருப்பு, வெல்லம், கரும்பு மற்றும் இதர மளிகை பொருட்களை சுந்தரரின் இல்லத்திற்கு அவ்வப்போது மாட்டு வண்டிகளில் அனுப்பி வந்தார்.\nஒரு சமயம் மழை பொய்த்ததால் குண்டையூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டு விளைநிலங்கள் வறண்டன. இதனால் சுந்தரருக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் பெரிதும் வருந்தினார். அடியாருக்கு அமுது செய்யும் அடியாரான சுந்தரருக்கு தான் நெல் அனுப்பமுடியவில்லையே என்கிற ஏக்கத்துடன் சிவபெருமானிடம் இது பற்றி முறையிட்டபடி தானும் உணவு உட்கொள்ளாது உறங்கச் சென்றார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சிவபெருமான், “அன்பனே வருந்தற்க… நம்பியாரூரனுக்கு நெல் அளிக்க உமக்கு படியளக்கிறோம்” என்று கூறிவிட்டு மறைந்தார்.\nதொடர்ந்து குபேரனை அழைத்த சிவபெருமான், “குண்டையூரில் நெல்லை மலையென குவித்திடுக” என்று ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து குபேரன், ஒரே இரவில் குண்டையூர் முழுக்க மலையென நெல்லை குவித்துவிட்டான். இதனால் குண்டையூருக்கு உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியும் அடைபட்டுவிட்டது.\nமறுநாள் காலை நெல் மலையை கண்டு பரவசமடைந்த குண்டையூர் கிழார், திருவாரூருக்கு ஓடோடிச் சென்று சுந்தரரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்.\nசுந்தரரும் ஆர்வம் மேலிட உடனே குண்டையூருக்கு விரைந்து வந்து, இறைவன் ஆணையால் குபேரன் குவித்த நெல் மலைகளை கண்டு நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார். ஆனால், அவருக்கு வேறு கவலை தோன்றியது. இத்தனை நெற்குவியல்களை திருவாரூருக்கு கொண்டு செல்வது எப்படி என்று சிந்திக்கலானார். ஏனெனில், அதற்குரிய ஆள்பலம் குண்டையூர் கிழாரிடம் இல்லை தன்னிடமும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.\nஉடனே சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளையில் எழுந்தருளியிருக்கும் கோளிலிநாதரை சென்று தரிசித்து, திருவாரூருக்கு நெல்லை கொண்டு செல்ல பூதகணங்களை அனுப்புமாறு வேண்டி ஒரு பதிகத்தை பாடினார். கோளிலி இறைவனும் அசரீரி மார்க்கமாய் “இன்று இரவு பூத கணங்களைக் கொண்டு நெல்மலைகளை திருவாரூரில் சேர்ப்பிப்போம்” என்று அறிவித்து அருளினார்.\nஇறைவனின் பெருங்கருணையை எண்ணி மீண்டும் வியந்த சுந்தரர் மகிழ்ச்சியோடு ஆரூர் திரும்பினார்.\nஇறைவனின் ஆணைப்படி அன்றிரவு, குண்டையூரில் இருந்த நெற்குன்றுகள் முழுவதையும் பூதகணங்கள், திருவாரூரில் கொண்டு வந்து குவித்தன. இதனால் திருவாரூர் வீதிகள் அனைத்தும் நெல் மணிகளால் நிரம்பி வழிந்தன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட இயலாத நிலையில் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் முன்பாக நெல்மணிகள் குன்றென காணப்பட்டன.\nAlso check : திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்\nஏற்கனவே சுந்தரர் மூலம் நடந்த அனைத்தையும் அறிந்திருந்த பரவையார், “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” (குறள் 215) என்ற வள்ளுவரின் வாக்கிற்க்கிணங்க, அவரவர் வீடுகளுக்கு முன்னே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை அவரவர் எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு மூலம் திருவாரூர் வீதிகளில் அறிவிக்கச் செய்தார். இதையடுத்து அவரவர் வீட்டு முன்பாக இருந்த நெல்மணிகளை அவரவர் எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டு நெற்குதிருக்குள் நிரப்பினர். அப்படியும் நெல்மணிகள் மிகுதியிருன்தன. அடுத்த பல தலைமுறைகளுக்கு உணவிற்கு பஞ்சமில்லை என்கிற இந்த அரிய நிகழ்வால் திருவாரூர் வாழ் மக்கள் பரவையாரையும் சுந்தரரையும் வாழ்த்தி வணங்கினர்.\nஆக… சுந்தரர் ஒருவர் செய்த அதிதி பூஜையால் திருவாரூர் வாழ் மக்கள் அனைவரும் பயன்பெற்றனர். அதிதிபூஜைக்கு உதவிய காரணத்தால் சிவதரிசனம் கிடைக்கப்பெற்றார் குண்டையூர் கிழார். (இது அது அனைத்தையும் விட பெரிய பாக்கியமல்லவா\nகுண்டையூர் கிழார் வாழ்ந்த குண்டையூர் இன்றும் உள்ளது. திருக்குவளையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் திருக்குவளை-சாட்டியக்குடி சாலையில் உள்ளது. அங்குள்ள இறைவனின் பெயர் சுந்தரேஸ்வரர். அம்பாள் பெயர் மீனாக்ஷி. இது தேவார வைப்பு தலங்களில் ஒன்று. சுந்தரர் நெல் பெற்ற விழா மாசி மக நாளில் இன்றும் இந்த கோவிலில் நடைபெறுகிறது. குண்டையூர் கிழாரின் திருவுருவச் சிலைகள் இக்கோவிலில் உள்ளன.\nபிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லும் அதே நேரம் இதே போன்று சரித்திர சிறப்பு மிக்க தலங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சென்று வரவேண்டும்.\nசுந்தரர் கோளிலி நாதரிடம் முறையிட்டு பூதகணங்களை கொண்டு ஆரூருக்கு நெல்லை உதவிய பதிகம் கீழே அளிக்கப்பட்டுள்ளது. இதை தினசரி ஓதிவந்தால், உணவுக்கே என்றும் பஞ்சம் வராது. நல்ல வேலையாட்களும் அமைவார்கள். (வேலையாட்கள் அமைகிறார்கள் என்றால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகத் தானே அர்த்தம்). எனவே இகபர சுகங்களை தரவல்ல பதிகம் இது.\nகடைசி பாடலில் சுந்தரர் பிரயோகப்படுத்தியுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்\n//நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,\nஅல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே //\nமுழுப் பதிகம் இறுதியில் தரப்பட்டுள்ளது.\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nதீபாவளி சிறப்பு வழிபாடு & அபிஷேகம் \nதீபாவளியன்று காலை சுமார் 9.00 மணியளவில் நம் தளம் சார்பாக சென்னை குன்றத்தூர் முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவில் எதிரே உள்ள “திருமுறை விநாயகர்” கோவிலில், சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறவுள்ளது.\nஇந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டிற்கு வாசகர்கள் அவசியம் வந்திருந்து, விநாயகப் பெருமானின் அருளை பெறவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.\nவரவிரும்பும் அன்பர்கள் அபிஷேகத்திற்குரிய பொருட்களை (தேங்காய், பூ, பழம், தேன், அபிஷேகப் பொடி, மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, வெற்றிலை, மாலை இத்யாதி… இத்யாதி) தாங்களே வாங்கி வரலாம்.\nசிறப்பு வழிபாடு நாள் மற்றும் நேரம் : தீபாவளி (செவ்வாய்) 10.11.2015 | நேரம் : காலை 9.00 am – 11.00 am | இடம் : திருமுறை விநாயகர், குன்றத்தூர் அடிவாரம் (கந்தழீஸ்வரர் கோவில் எதிரே).\nஇந்த திருமுறை விநாயகர் மிகவும் விசேஷமானவர். அச்சில் ஏறிய முதல் திருமுறை இந்த பிள்ளையாரிடம்தான் உள்ளது\nஇது போன்ற விநாயகர் வழிபாடு + அபிஷேகம் இனி நம் தளம் சார்பாக அடிக்கடி நடைபெறும். உங்கள் பகுதியில் பூஜை காணாத, சரிவர பராமரிக்கப்படாத பிள்ளையார் கோவில்கள் இருப்பின் நமக்கு தகவல் தெரிவிக்கவும். நமது உழவாரப்பணி குழு நண்பர்களுடன் வந்து அபிஷேக, ஆராதனை செய்வித்து, நிவேதனம் செய்து விளக்கேற்றி வைப்போம். இது அனைவருக்கும் நன்மை தரக்கூடிய ஒன்று. (பூஜை செய்ய அர்ச்சகர் இல்லாத கோவில் என்றால் நாமே குருக்களை ஏற்பாடு செய்து அழைத்து வருவோம்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nநீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்\nநீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்;\nவாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,\nஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே\nவண்டுஅமரும்குழலாள் உமைநங்கை ஓர்பங்கு உடையாய்\nவிண்டடவர்தம் புரம்மூன்று எரிசெய்த எம் வேதியனே\nதெண்திரை நீர் வயல் சூழ் திருக் கோளிலி எம்பெருமான்\nஅண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே\nபாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;\nமாதர்நல்லார் வருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே\nகோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;\nஆதியே, அற்புதனே, அவை அட்டிதரப் பணியே\nசொல்லுவது என், உனை நான்\nபுல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ\nகொல்லை வளம் புறவில் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;\nஅல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே\nமுல்லைமுறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே\nபல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா\nகொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி எம்பெருமான்\nஅல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே\nகுரவு அமரும் குழலாள் உமைநங்கை ஒர்பங்கு உடையாய்\nபரவை பசிவருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே\nகுரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;\nஅரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே\n நுனையே நினைத்து ஏத்துவன், எப்பொழுதும்;\nவம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே\nசெம்பொனின் மாளிகை சூழ் திருக் கோளிலி எம்பெருமான்\nஅன்புஅது(வ்)ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே\nஅரக்கன் முடிகரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்\nபரக்கும் அரவுஅல்குலாள் பரவைஅவள் வாடுகின்றாள்;\nகுரக்குஇனங்கள் குதிகொள் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;\nஇரக்கம்அதுஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே\nபண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்\nகண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிதுஆய பிரான்\nதெண்திரைநீர் வயல் சூழ் திருக் கோளிலி என்பெருமான்\nஅண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே\nகொல்லை வளம் புறவில்-திருக் கோளிலி மேயவனை\nநல்லவர்தாம் பரவும் திரு நாவலஊரன்அவன்\nநெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,\nஅல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே.\n– ஏழாம் திருமுறை | சுந்தரர் | திருக்கோளிலி – கோளிலிநாதர்\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\n“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nஇறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது \nசிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nசிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்\nநண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து\nசிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன\nமானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\nகழுதைக்கு மரியாதை – இது குருவின் லீலை\nஎல்லாம் அறிந்த கடவுளை தினமும் வணங்க வேண்டுமா\nஅலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு\n4 thoughts on “ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)”\nஈசனின் தோழரான சுந்தரரைப் பற்றி படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்கள் தளம் சார்பாக தீபாவளி சிறப்பு வழிபாடு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஓவியர் ரமீசின் ஓவியம் அருமை. இறைவன் இறைவியின் கைலாச காட்சியை நம் கண் உள்ளே கொண்டு வந்து விட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஅருமை. அருமை. அருமை. கேள்விப்படாத சம்பவம். அதை பிரத்யேக ஓவியத்துடன் வெளியிட்டு எங்களை அந்த சூழலுக்கே அழைத்தச் சென்றமைக்கு மிக்க நன்றி.\nஅன்னதானத்தின் மகத்துவம் குறித்து நீங்கள் கொடுத்திருக்கும் முன்னோட்டம் சிம்ப்ளி சூப்பர்ப்.\nஅதிதிகளுக்கு பூஜை செய்து அவர்களுக்கு அமுது செய்து வந்தால் இறைவன் நமக்கு மட்டுமல்ல நாம் இருக்கும் ஊருக்கே படியளப்பான் என்கிற அருமையான் தத்துவத்தை கூறும் சம்பவம் இது.\nஅனைவரும் பயன்பெறும் விதமாக் பதிகத்தையும் அளித்தமைக்கு நன்றி.\nஅதிதி தேவோ பவ தொடர் மிக விறுவிறுப்பாக செல்கிறது. ஏனைய தொடர்களையும் விரைவில் அளிக்கவும்.\nஎல்லாரும் எல்லா வளமும் பெறவேண்டும். இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.\n– பிரேமலதா மணிகண்டன் ,\nஇவ்வளவு சிறப்பு பெற்ற அதே சுந்தரர் வசித்த திருவாரூரில் தான் அடியேனும் என் மனைவியும், என் மகளும் , மருமகனும் பிறந்தார்கள். தங்கள் குறிபிட்ட அந்த திருக்குவளையில் எனது உறவினர்களும் உள்ளார்கள் மிகவும் புண்ணியம் நிறைத்த திருவாரூரில் பிறந்தவர்களுக்கு முக்தி கிட்டும் என்பார்கள். சுந்தரர் புகழ் என்றும் சிறக்க வாழ்த்துக்கள்.\nசென்ற வராம் தான் குடமுழுக்கு நடைபெற்றது. முடிந்த வரை அங்கே சென்று வழிபாடு செய்து வாருங்கள்.\nநல்ல செய்திக்கு மிக மிக நன்றி சார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.punnagai.com/india/no-coalition-with-congress-party-in-lok-sabha-polls---a", "date_download": "2018-08-18T00:42:53Z", "digest": "sha1:VLF4QM2PUB4MWHOVY6CCNXIGD43TTPPH", "length": 5294, "nlines": 50, "source_domain": "www.punnagai.com", "title": "மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை - ஆம் ஆத்மி ஆணித்தரம்..! - Punnagai.com", "raw_content": "\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் அணியுடன் கூட்டணி இல்லை - ஆம் ஆத்மி ஆணித்தரம்..\nஆம் ஆத்மி கட்சி, அடுத்து வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இணையப்போவதில்லை என்றும், தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது.\nமுன்னதாக, காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஆம் ஆத்மி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஆனால், அரவிந்த் கேஜ்ரிவாலை தொலைபேசியில் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு ஆதரவு கேட்கும் பட்சத்திலேயே அது பற்றி யோசிக்க இயலும், என ஆம் ஆத்மி கட்சி நிபந்தனை விதித்தது. இதை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலிலும் ஆம் ஆத்மி நடுநிலை வகித்தது. குறிப்பிடத்தக்கது.\nதற்போது மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\n‘‘டெல்லியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு முடக்குகிறது. ஹரியாணா பாஜக அரசை விட டெல்லி அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும். எதிர்கட்சிகளின் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை. நாட்டின் வளர்ச்சியில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு எந்த பங்கும் இல்லை. எனவே தான் அந்த கூட்டணியில் இணையும் திட்டம் இல்லை’’ எனக் கூறினார்.\nஸ்டெர்லைட் விவகாரம் – தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்- கண்கலங்கிய மோடி\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் இல்லை - ஹர்பஜன் சிங் காட்டம்\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்வு ..\nஅழகியுடன் சுற்றிய மந்திரி - பதவியை இழந்த சோகம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T01:06:09Z", "digest": "sha1:OQOKYQ6BUJFC4Q4RGHFWCK7AF7TK2LCG", "length": 3497, "nlines": 54, "source_domain": "www.velichamtv.org", "title": "மாவட்ட செய்திகள் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nபணத்துக்காக லாரி உரிமையாளரை அடித்துக் கொன்ற ஓட்டுநர், 18 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்டான்\nதிருச்சி விமான நிலையத்தில் தொடரும் தங்க கடத்தல்: சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு\n“நான் தூக்கிட்டு கொள்வதற்கு ஆசிரியரே காரணம்” தொடர்ந்து திட்டியதால் ஏற்பட்ட விணை \nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலையில் திடீர் பள்ளங்கள்\nமருதமலை கோயில் படிக்கட்டுகளை கடந்த காட்டுயானைகள் – பக்தர்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை\nகள்ளக்காதலை தட்டிக்கேட்டதற்காக கூலிப்படையோடு சேர்ந்த படுகொலை செய்ய திட்டமிட்ட நபர் கைது\nவீராணம் ஏரியில் காவிரி நீர்…\nசொத்துக்காக தந்தையை அடித்துக்கொன்றவர் கைது..\nவால்பாறை குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் நடமாடிய சிறுத்தை\nநீலகிரி மாவட்டத்தில் துரியன் பழ சீசன் தொடக்கம்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamakathaikalpdf.com/2016/06/", "date_download": "2018-08-18T00:19:04Z", "digest": "sha1:XNZTMAOOEPHRW6UAIZY7T3QVSMOCCE65", "length": 3441, "nlines": 78, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "June 2016 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nTamil Kama Kathaikal – அவள் வாய் கொள்ளாத அழவுக்கு அவன் தண்ணி \nTamil Kama Kathaikal – என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது அங்கிள்\nTamil Kama Kathaikal – என் மார்பகங்களை வெறித்து பார்க்க\nTamil Kama Kathaikal – மாமிக்கு தேங்க்ஸ்\nTamil Kama Kathaikal – ஆஹாஆஆஆ விஷ்ணு எனக்கு வரது\nTamil Kama Kathaikal – சித்தியும் அக்காவும்\nTamil Kama Kathaikal – கொழுக் மொழுக் ஆன்ட்டி\nTamil Kama Kathaikal – ஒரு வெறி ஆஹா என்னே சுகம்\nTamil Kama Kathaikal – அக்காவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு\nTamil Kama Kathaikal – நானும் என் தங்கையும்\nTamil Kama Kathaikal – புடவையை தூக்க சொன்ன சேட்\nTamil Kama Kathaikal – நான் பேச பேச சித்திக்கு அடியில் ஆச்சு\nTamil Kama Kathaikal – பள பள புண்டையில் இரவு பாலாபிசேகம் பன்னினேன்\nTamil Kama Kathaikal – அவள் காமக் கோட்டையின் கதவுகளைப் பிளந்து நுழைத்தான்\nதங்கையின் தாகம் – 2\nபாங்காக் பிரதாபங்கள் – 1\nதமிழ் காம கதைகள் (1,818)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=12984", "date_download": "2018-08-18T00:44:28Z", "digest": "sha1:NOQPZY523PNLPMFTLKTDZ25ZZVYSZQ52", "length": 12581, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» சார்லி சாப்ளினுக்கு அருங்காட்சியகம்….", "raw_content": "\n14,000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ரொட்டி கண்டுபிடிப்பு\n600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்\nஉலகின் மிக அழகற்ற நாய் பட்டத்தை வென்ற புல்டாக்\nஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கரட் தங்க கோழிக்கறி\n← Previous Story யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை\nNext Story → ஓட்டல் டாய்லெட் ரோல் பேப்பரில் ஒபாமாவின் புகைப்படங்கள்\nசர் சார்லஸ் சாப்ளின் என்ற சார்லி சாப்ளினை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோமாளித்தனமாக நகைச்சுவை வேடத்தில் நடித்து உலகப்புகழ் பெற்ற சாப்ளின், ஊமைக் காலத்தில் தனது கற்பனை வளத்தால் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மேதை. அவர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த பின்பு, 1918-ம் ஆண்டு 2000 அமெரிக்க டாலருக்கு ´மிக்கிமவுஸ்´ போன்ற காதுகளை உடைய ´BELL and Howell 2709´ மாடல் கேமராவை வாங்கி, ஹாலிவுட்டில் சாப்ளின் ஸ்டூடியோவை நிறுவினார்.\nகார்களில் எப்படி ´ரோல்ஸ் ராய்ஸ்´ பிரசித்தமோ, அப்படி கேமராக்களில் இது பிரசித்தம். இதன் மூலம் சாப்ளின் The Great Dictator, Modern Times, The Kid, The Gold Bush போன்ற படங்களை தயாரித்து பெரும் புகழும், பணமும் ஈட்டினார். இந்த கேமரா பலரின் கைமாறி, கடைசியாக அமெரிக்க கேமரா சேகரிப்பாளரிடம் வந்து சேர்ந்தது. நல்ல நிலையில் இயங்கிய இந்த கேமராவை லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனம் 1,80,000 அமெரிக்க டாலருக்கு 2011-ம் ஆண்டு விற்பனை செய்தது.\nதனது அபூர்வ கேமரா மூலம், தனக்கு பிடித்தமான தலைவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் சார்லி சாப்ளின், இந்திய தலைவர்களை மிகவும் நேசித்தவர்.\n74 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ மிகவும் புகழ்பெற்றது. அந்த போட்டோவில் மகாத்மா, சார்லி சாப்ளின், கவிக்குயில் சரோஜினி நாயுடு, அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர் உள்ளனர். 1931-ல் லண்டன் கேனிங்டவுன் பகுதியில் உள்ள ´டாக்டர் கைட்டியால்´ என்பவர் வீட்டில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோருடன் சார்லி சாப்ளின் போட்டோ எடுத்துக்கொண்டார். அதுவும் அபூர்வ போட்டோவாகும்.-\nபிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் ஒன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், ஜெனிவா ஏரியின் கரைப்பகுதியில் அவர் கடைசி 25 வருடங்கள் வாழ்ந்த பரந்துவிரிந்த மெனோர் டெ பான் தோட்டத்தில் அமைந்துள்ளது.\nதனது தனித்துவமான நடிப்பினால் உலகப் புகழ்பெற்ற சாப்ளின், அந்தப் பெருந்தோட்டத்தில் தனது மனைவி ஊனா மற்றும் எட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார். இந்த அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய தொப்பி மற்றும் பிரம்புத்தடி உட்பட அவரது படைப்புகளுடன் தொடர்புடைய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஅஜித் இடத்துக்கு வந்த பாபி சிம்ஹா\nசினி செய்திகள்\tFebruary 14, 2016\nஅதுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா காஜல் அகர்வால்\nசினி செய்திகள்\tJuly 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thannambikkai.org/2017/10/06/22413/", "date_download": "2018-08-18T01:24:56Z", "digest": "sha1:POVHXCSO7Z3FPUWEB4YU65CLHSGGXKOV", "length": 8065, "nlines": 71, "source_domain": "thannambikkai.org", "title": " அவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » அவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள்\nஅவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள்\nநோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உடனடி அவசர\nமருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அறிகுறிகள் –\nவெளித்தோற்றம் : சரியாக விழித்துப் பார்க்காமல் இருத்தல். பேசாமல் இருத்தல். சமாதானமடையாமல் தொடர்ந்து அழுதல்.\nசுவாசம் : சுவாசிப்பதில் சிரமம் (நெஞ்சு உள்ளிழுத்தல், மூக்கு விரிதல்), குறைந்த அளவு மூச்சு விடுதல். மூச்சு விடும்பொழுது முக்குதல், இழுத்தல், மூச்சடைப்பு ஆகியவற்றுக்கான சத்தம் கேட்டல்.\nஇரத்த ஓட்டம் : வித்தியாசமான தோல் நிறம் (வெளுத்துக் காணப்படுதல், நீலமாகக் காணப்படுதல்), இரத்தம் வடிதல்.\nஒவ்வாமை என்பது உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு மிகவும் ஆபத்தானது. முக்கியமாக இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மூச்சு திணறலை ஏற்படுத்தும். அலர்ஜி தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளால் ஒவ்வாமை பாதிப்பு அடைய வாய்ப்பு அதிகம். ஒருசில நபர்களுக்கு மிகவும் மெதுவாகவும் ஏற்படலாம்.\nதோலில் அரிப்பு மற்றும் தோல் வெளுத்துக் காணப்படும்.\nமுகம், கண், உதட்டில் வீக்கம் ஏற்படும்.\nமூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும்.\nதலைசுற்றல், தலைவலி, மயக்கம் ஏற்படுதல்\nஉணவுப் பொருள்கள் முதலியன. கடலைபருப்பு, கொட்டை வகைகள், சிலவகை மீன்கள்\nகுளவி, எரிப்பூச்சி மற்றும் சில பூச்சி வகைகள் ஒவ்வாமையின் அறிகுறிகள் இருக்கும் பொழுது செய்ய வேண்டியவை\nஉடனடியாக மருத்துவரை அணுகவும் அல்லது அவசர உதவியைக் கூப்பிடவும்.\nஏதாவது மருந்து ஊசியினை ஆபத்து நேரத்தில் எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்களா என்று கேட்க வேண்டும்.\nஅவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருப்பின் மருந்தினை ஊசி மூலம் உடனடியாக கொடுப்பதற்கு உதவ வேண்டும்.\nபாதிக்கப்பட்ட குழந்தையை நேராகப் படுக்கச் செய்ய வேண்டும்.\nஇறுக்கமான உடை அணிந்திருந்தால் தளர்த்தி விடவேண்டும். துணியால் மூட வேண்டும். அருந்த எதுவும் கொடுக்க கூடாது.\nஏதாவது வாந்தி அல்லது இரத்தக் கசிதல் வாயில் இருந்தால் குழந்தையை ஒருபக்கமாக திருப்பி மூச்சுத்திணறல் இல்லாமலும் தடுக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்டவரிடம் மூச்சுவிடுதலோ, அசைவோ இல்லாமல் இருந்தால் அவசர உதவி கொடுக்க வேண்டும் (இடத). அறிகுறி அதிகமாக இருந்தால் அவசர உதவியை உடனடியாக அணுக வேண்டும்.\nஅவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள்\nமதுரை வேளாண் கல்லூரியின் திட்ட இயக்குனருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் விஞ்ஞானி விருது\nஅக்டோபர் மாத உலக தினங்கள்\nசோதனையை சிந்தித்து சாதனையை வெற்றிடு\nவாழ நினைத்தால் வாழலாம் – 9\nவெற்றி உங்கள் கையில் – 46\nஉண்மை என்னும் வற்றாப் புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vjpremalatha.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-08-18T00:18:27Z", "digest": "sha1:H7TAG5A4NHXSLKKMINCFINXCNXR43JHW", "length": 60935, "nlines": 226, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: மானுடர்க்கென்று...", "raw_content": "\nகறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருக்க, அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் பெரியாழ்வார். கூடத்துத் திண்ணையில் தோழியரோடு மாலை கட்டியபடி அனுமன் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த கோதை தலைநிமிர்ந்தாள். ஆண்டாளின் கதை நின்றதை அறிந்த தோழியர் பெரியாழ்வாரின் முகத்தைப் பார்த்தளவில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வாய்ப் பொத்தி அவரவர் வீட்டிற்குப் பறந்து போயினர்.\nதந்தையின் வருகை அகத்தில் மகிழ்ச்சியைத்தர, துள்ளிக்குதித்தபடி அன்றலர்ந்த மலர் ஓடி வருவதைப்போல வந்த மகளிடம் சோகத்தை மறைக்க, புன்சிரிப்பை வலிய வரவழைக்க முயன்றார். ஏனோ அது வரவில்லை. கோதையின் முகம் சிறுத்தது. தன்னால் தான் தந்தை சிரிப்பையே தொலைத்துவிட்டார் என்ற எண்ணம் அவளை நிலைகுலைய வைத்தது.\nஅன்றொரு நாள் சிறுமியாயிருந்த போது கண்ணனுக்காகக் கட்டிய மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு ‘ நானே கண்ணன்` எனத் தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டும் கூட கோபத்திலும் அவர் முகத்தில் புன்னகை மாறாமலிருந்ததே. கண்டிப்பிலும்கூட அவரையும் மீறி சொற்களில் அன்பு கனிந்திருந்ததே. இப்போது அவை எங்குப் போய் ஒளிந்து கொண்டன வலிய புன்னகைக்க முயன்று ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறார் வலிய புன்னகைக்க முயன்று ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறார் எனினும் முன்னை விட அவர் கண்களில் மிகுதியாய் அவளைப் பார்க்குந் தோறும் கனிவு பெருகிக்கொண்டிருக்கிறதே\nகோதை தாயைப் பார்க்க உள்ளறைக்குச் சென்றாள். அவளின் தாய் தள்ளாத வயதிலும் உடல் சோர்வைப் பொருட்படுத்தாது அடுப்படியில் சுறுசுறுப்பாக இயங்கிகிக்கொண்டிருந்தாள். கோதையின் வரவறிந்து சொம்பு நீரை எடுத்து நீட்டினாள். தந்தையின் வருகையைத் தெரிவிக்குமுன்னரே எப்படி அவர் வருகையை அறிந்தாள் நெருப்பின் சிவப்போடு போட்டிப் போடும் அவள் மேனியிலிருந்து பெருகி வழியும் வியர்வை தனலின் ஒளி பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது.கண்கள் உள்ளடங்கிச் சிறுத்திருந்தன. அவளுடைய மை தீட்டிய பெரிய கண்கள் இந்த இரண்டு வருடங்களுக்குள் யாரைக் காண விரும்பாமல் இப்படிச் சிறுத்தன நெருப்பின் சிவப்போடு போட்டிப் போடும் அவள் மேனியிலிருந்து பெருகி வழியும் வியர்வை தனலின் ஒளி பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது.கண்கள் உள்ளடங்கிச் சிறுத்திருந்தன. அவளுடைய மை தீட்டிய பெரிய கண்கள் இந்த இரண்டு வருடங்களுக்குள் யாரைக் காண விரும்பாமல் இப்படிச் சிறுத்தன யாருமறியாமல் அழுது அழுது தன் குடும்பத்தைத் தவிர இனி எவரையும் பார்ப்பதில்லை என வைராக்கியம் கொண்டதனால் இப்படிச் சிறுத்து விட்டனவோ யாருமறியாமல் அழுது அழுது தன் குடும்பத்தைத் தவிர இனி எவரையும் பார்ப்பதில்லை என வைராக்கியம் கொண்டதனால் இப்படிச் சிறுத்து விட்டனவோ எல்லாம் தனக்காக.. தன் மீது கொண்ட பாசத்திற்காக...கோதை மறுகினாள்.\nதந்தையும் தாயும் மாறி மாறி எதையும் சொல்லாமல், பேசிக் கொள்ளாமல் கோதைக்குத் தெரியாமல் பாதுகாத்தாலும்,அவர்கள் மனதில் மூண்டு எழுந்து உக்கிரமாகி கொண்டிருக்கும் அக்னியின் தகிப்பு அவளையும் சூழ்ந்து கொண்டுதான் இருந்தது. இதற்கு முன் தந்தை வெளியில் சென்று திரும்பும் பொழுது வீடு இப்படியா இருக்கும் தந்தை உள்ளே நுழைவதை எங்கிருந்தாலும், எந்த வேலையிலிருந்தாலும் உண்ர்ந்து கொண்டு ஓடிவராத குறையாக நடந்து வந்து, நீராகாரம் கொடுத்து அவருடன் சிறிது நேரம் மலர்ந்த முகத்துடன் பேசி, கோதையின் அன்றைய குறும்புகளையோ, அவள் கற்றுக் கொண்ட புதிய பாடத்தையோ பற்றிப் பேசி, அவரைச் சிரிக்க வைத்த பின்னர் தானே விட்டு வந்த வேலையை நினைத்து ஓடுவாள்.இப்போதெல்லாம் தந்தை வந்ததை அறிந்த பின்னரும்,இல்லாத வேலையை இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டு அவள் வெளியே வர மறுக்கும் காரணம் கோதைக்குப் புரியாமலா இருக்கிறது தந்தை உள்ளே நுழைவதை எங்கிருந்தாலும், எந்த வேலையிலிருந்தாலும் உண்ர்ந்து கொண்டு ஓடிவராத குறையாக நடந்து வந்து, நீராகாரம் கொடுத்து அவருடன் சிறிது நேரம் மலர்ந்த முகத்துடன் பேசி, கோதையின் அன்றைய குறும்புகளையோ, அவள் கற்றுக் கொண்ட புதிய பாடத்தையோ பற்றிப் பேசி, அவரைச் சிரிக்க வைத்த பின்னர் தானே விட்டு வந்த வேலையை நினைத்து ஓடுவாள்.இப்போதெல்லாம் தந்தை வந்ததை அறிந்த பின்னரும்,இல்லாத வேலையை இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டு அவள் வெளியே வர மறுக்கும் காரணம் கோதைக்குப் புரியாமலா இருக்கிறது தந்தை சென்ற வேலையின் பலனை அவர் சொல்லாமலே அவர் முகத்தைப் பார்க்காமலே தெரிந்து கொண்டு விட்டதைத் போலத்தானே அவளுடைய இச்செயல் காட்டுகிறது\nதந்தையிடமிருந்து மட்டுமா, தன்னிடமிருந்தும்தான் தள்ளி நிற்கிறாள். இதைச்செய், இப்படிச்செய், புக்ககம் சென்றால் எல்லாரும் பாராட்டும்படி செய்யவேண்டும். அப்புறம் என்னைத்தான் தூற்றுவார்கள் என்று நொடிக்கொருதரம் கோதைக்கு வேலைகளைத் திருத்தமாகச் செய்யக் கற்றுக் கொடுக்கும் தாய் இப்போது ஏன் எதையும் கண்டு கொள்வதில்லை கோதையின் தாய்க்கு தெரியாதது எதுவுமில்லை. எத்தனை விதமான கோலங்கள் கோதையின் தாய்க்கு தெரியாதது எதுவுமில்லை. எத்தனை விதமான கோலங்கள் சமையல்கள் கண்ணனுக்கு அவள் கட்டித்தரும் மாலைகள் தான் எத்தனை விதங்கள் கண்ணன் நின்ற கோலத்திலிருக்கும் பொழுது அவன் கழுத்திலிருந்து கால் பெருவிரலைத் தொடும்வரை அணிவிக்கப்படும் நீண்ட மாலையைக் கட்டிஅதன் பெயர் தெரியல் என்பாள். கண்ணனின் தோளில் தொடங்கி இடுப்புவரை மட்டும் வரும் வகையில் பூக்களைக் கோர்த்து இரு பக்கத்தையும் சேர்த்துக் கட்டி அதன் பெயர் மாலை என்பாள். அதன் கீழ்ப்பகுதியில் பந்து போலப் பூவை கட்டி தொங்க விட்டால் அதன் பெயர் தொங்கல் என்பாள்..கொண்டையில் சூட சிறிய அளவில் சிறு வளையம் போல வட்டமாகக் கட்டினால் அதன் பெயர் கோதை என்பாள்.\nதலைஅலங்காரத்தில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் மகளுக்குப் போட்டுப் பார்த்து ஆனந்தம் அடைவாள். மகளின் அடர்ந்த கூந்தலைப் பாதியாக்கி தலை உச்சியின் இடதுபுறம் கொண்டை போட்டு அதைச்சுற்றி கோதை எனப்படும் சிறு வளையம் போன்ற மாலையைச் சூட்டி அழகு பார்ப்பாள்.அதுதான் மகளுக்கு அழகாக இருக்கிறது என்று அடிக்கடி போட்டு அழகு பார்த்ததால் தானே தோழியர் தன்னைக் கோதை என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். தனக்கும் அதுவே பெயராகிப் போனது. மழலை மாறா சிறிய வயதில் அவளைப் படுத்திய பாட்டையெல்லாம் வளர்நத நிலையில் சொல்லி பூரித்துப் போவாளே. ஓயாமல் பேசுபவளே பேசுவதை மறந்ததைப் போல மௌனமாகிப் போனதென்ன\nபதினைந்து வருடத்திற்கு முன் தோட்டத்தில் துளசி செடி அருகே தான் கண்டெடுக்கப்பட்டதாகத் தந்தை எப்போதோ கூறியது இப்போது ஏன் அடிக்கடி நினைவிற்கு வருகிறது.பிறந்த அன்றே தன்னைத் துளசிச் செடியருகில் போட்டது யாரோ‘கண்ணனே துளசிச்செடியருகில் தனக்காகக் குழந்தையாக மாறிக் கிடந்ததாக நினைத்து மனமகிழ்ந்து வாரியணைத்துக் கொண்டதாகத் தந்தை கூறும் பொழுது அவர்தான் எப்படிக் கிறங்கி்ப் போவார்‘கண்ணனே துளசிச்செடியருகில் தனக்காகக் குழந்தையாக மாறிக் கிடந்ததாக நினைத்து மனமகிழ்ந்து வாரியணைத்துக் கொண்டதாகத் தந்தை கூறும் பொழுது அவர்தான் எப்படிக் கிறங்கி்ப் போவார் குழந்தையற்ற தம்பதிகளுக்குக் கண்ணனையே குழந்தையாகப் பாவித்துப் பாவனையில் கொஞ்சி மகிழ்ந்தவர்களுக்கு, மோகினி வடிவம் எடுத்து சிவனையே மயக்கிய கண்ணன் அவ்வடிவெடுத்தே குழந்தையாகக் கிடைத்திருக்கிறான்.\nதூணிலும் துரும்பிலும் இக்குழந்தையிலும் அவன்.சிரிக்கும் பூப்பந்து. அவர்கள் வீட்டில் துள்ளி விளையாட ஒரு சின்னக்குழந்தை.சிலைவடிவ கண்ணனுக்குச் செய்ததெல்லாம் நிஜத்தில் செய்திட வாய்ப்பு தந்திட்ட குட்டிப் பொக்கிசம் என்று பூரித்தவர்கள் அல்லவோ அவர்கள்\nகோதை வளர வளர அவள் கேள்விகளும் அதிகமாயின. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் தம் உறவுகள் அளித்த பரிசுகளைப் பற்றிக் கூறும் பொழுது தன் உறவுகள் பற்றிக் கேள்விகளால் பெரியாழ்வாரைக் குடைவாள்.\nபெரியாழ்வார் குறும்புச் சிரிப்புடன் கோதையை மடியிலமர்த்தி, அவள் பிறந்தபொழுது தேவர்களின் தலைவனான இந்திரன் வைரம் மற்றும் மாணிக்கம் பதித்த தங்கத் தொட்டிலைப் பரிசளித்தாகவும், சிவன் தங்க மாதுளம்பூ தொங்கவிடப்பட்ட இடைஞாணும்,பிரமன் பொன் சலங்கையும் பரிசளித்ததாகவும், தேவாதிதேவரெல்லாம் வந்திருந்து விலைமதிப்பில்லா பல பரிசுகளை அளித்ததோடு பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்திச் சென்றதையும் மிகப் பெருமையுடன் கூறியது இன்றும் கோதையின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.\nபெரியாழ்வார் சொல்லச் சொல்ல விழிகள் விரிய அக்காட்சியை நினைத்துப் பார்த்துப் பூரித்துப் போவாள் கோதை.இப்போது ஏன் வருவதில்லை என்று அவள் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு ‘உன் திருமணத்திற்கு வருவார்கள்‘ எனக் கூறி அவள் வாயை அடைத்து விடுவார் பெரியாழ்வார்.தோழியரிடம் சென்று தந்தை சொல்லியதைச் சொல்லி திக்கு முக்காட வைப்பாள்.\nஅவளுடைய அழகும், அறிவும், பணிவும் அனைத்திற்கும் மேலாக அவள் கற்பனை கலந்து கூறும் கண்ணனின் கதைகளும், தோழியர் அனைவரையும் கட்டிப் போட்டிருந்தன. அவளோடு சேர்ந்திருக்க ஆசை கொள்ளாத பெண்களில்லை.தாயிடம் பூமாலையும் தந்தையிடம் பாமாலையும் கற்றதினால், எளிதில் உடன் ஒத்த தோழியரை வழி நடத்தும் தலைமை பெற்றாள்.\nமார்கழி வந்து விட்டால் போதும். விடியற்காலமே தோழியரை எழுப்பிக் கையில் விளக்குடன் கண்ணனின் திருக்கோயிலுக்குச் செல்வதை ஒரு திருவிழா போலவே மாற்றிக் கொண்டிருந்தாள். முப்பது நாளும் சலிக்காமல் கோதையைத் தவிர யார் இப்படி வழி நடத்தியிருக்க முடியும் கண்ணனின் கோயிலை கோயிலாகவா காட்டினாள்\nவாயிற்காப்போன், நந்தகோபன், பலதேவன், யசோதை, நப்பின்னை அனைவரும் குடியிருக்கும் கண்ணனின் வீடாக அல்லவா காட்டினாள். அதுமட்டுமாநெய் பால் உண்ணக்கூடாது. கண்ணில் மை எழுதக்கூடாது. எளிய ஆடையில்தான் கோயிலுக்கு வரவேண்டும்.கோதையின் சொல்லுக்கு மாற்று உண்டோநெய் பால் உண்ணக்கூடாது. கண்ணில் மை எழுதக்கூடாது. எளிய ஆடையில்தான் கோயிலுக்கு வரவேண்டும்.கோதையின் சொல்லுக்கு மாற்று உண்டோஅதிகாலையில் எழாமல் அடம்பிடிப்பவர்கள் கூடக் கோதைக்காக, நோன்பு முடியம் நாளில் அவள் தரும் இனிப்பு பாற்சோற்றின் சுவைக்காக நோன்பிருந்தனர்.\nஇளம்பெண்களையெல்லாம் திரட்டி கண்ணனுக்காக நோன்பிருக்க வைத்து பெரும் புரட்சி செய்து கொண்டிருந்த கோதையை நினைத்து நெஞ்சு கொள்ளாத பெருமிதத்தில் பூரித்துப் போயிருந்தார் பெரியாழ்வார்.அதனால்தான் திருமாலுக்கு அணிய வைத்திருந்த மாலையைக் கோதை எடுத்து அணிந்து கொண்டபோது பெரியாழ்வாரால் வன்மையாகக் கண்டிக்கமுடியவில்லை.\nஅவர் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றதை அறிந்த கோதை அவர் வீடு திரும்பியதும், வாசலிலேயே எதிர்கொண்டு ‘தூணிலும் துரும்பிலும் அவன் என்பது உண்மையானால் என்னில் அவன் இல்லையா ஏன் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றீர்கள் ஏன் வேறு மாலை கட்டி எடுத்துச் சென்றீர்கள் எனக் கேட்டு திகைக்க வைத்தாளே எனக் கேட்டு திகைக்க வைத்தாளேஅவளுடைய துடுக்குத்தனம் இப்போதெல்லாம் எங்கு போய் ஒளிந்து கொண்டது\nஇப்போதெல்லாம் தன் வேலையைச் செய்துவிட்டுத் தோட்டத்திற்குச் சென்று விடுகிறாள்.ஒவ்வொரு செடியாகப் பார்த்துக் கொண்டு வந்தவள், வெள்ளிய ஒளிப் புள்ளிகளைக் கொண்டு அவளையே பார்ப்பது போலத் தோற்றமளித்த துளசி்ச்செடியருகே தன்னையறியாமல் நின்றுவிட்டாள்.இதுவரை இல்லாத ஏக்கம் அவளுள் சூழ்ந்தது. மற்ற செடிகளுடன் வளர்ந்திருந்த துளசிச்செடிக்கு மட்டும் மண்ணால் ஒரு மாடம் கட்டினாள்.\nசெடிகளுக்குக் கூடக் கிளை பரப்ப வழியிருக்க மானிட சாதியான தனக்கு அது ஏன் மறுக்கப்பட்டது தன் சாதி .....அதுதானே தாய் தந்தையரின் பெருந்துயருக்குக் காரணம். தன்னோடொத்த தோழியரெல்லாம் மணமுடித்துச் சென்று விடத் தான் மட்டும் இன்னும்.....அழகும், அறிவும், பணிவும், ஆளுமையும் புறந்தள்ளப் பட்டு சாதியே முன் நிற்கிறது. கோதையின் திறமையின் பெருமையில் பூரித்து நின்றவர்களைச் சாதி சுழற்காற்றாய் மாறி சூறையாடிக் கொண்டிருக்கிறது..பெரியாழ்வார் இன்னும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. இப்போதுகூட அயலூரிலிருக்கும் பால்யகால நண்பனை கோதையின் திருமணம் தொடர்பாகச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார். சிங்கமெனப் பறப்பட்டுப் போனவர் சிறுபுல்லென மிதிபட்டு வந்திருக்கிறார்.\n‘சாதிக்கச் சாதி தேவையில்லை.சாத்திரத்திற்குச் சாதி தேவை.எண்பது வயது கிழவனும் சாதியற்ற பெண்ணைக் கை பிடிக்கமாட்டான்‘ என அவர் நாடியைப் பொடித்து அனுப்பியிருக்கிறார் அவர் நண்பர்..இவர்கள் வணங்கும் கண்ணனே இடைசாதி.கீழ்சாதி.இவர்கள் மட்டும் மேல் சாதியா என்ன முரண்பாடு சாதியைக் கடந்த தாய் தந்தையரிடம் யார் சொல்வது அதன் விசுவரூபத்தை ‘தாய்க்குப் புரிந்து விட்டது.அதனால்தான் உள்ளொடுங்கிப் போய்த் தன்னிடம் முன்பை விட உயிராயிருக்கிறாள்.நான் தூங்கும்பொழுது என் முகம் பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு உடல் சுருங்கிப் போய்விட்டாள்.நானறியாமல் எனக்காக அழும் இவளல்லவோ உண்மைத்தாய்‘.\nபெரியாழ்வார் மனைவியின் உள்ளிருப்பை வேறுவிதமாகப் புரிந்து கொண்டார்.தன் சோகமுகத்தை அது தரும் துயரச் செய்தியை கேட்கப் பிடிக்காமல் உள்ளிருப்பதாகப் புரிந்து கொண்டார்.ஆனால் கணவனிடம் பேசுவதைக் கண்டு வளர்ந்த பெண்ணாகிய கோதையின் மனம் ஏக்கம் கொண்டு விடக் கூடாதென்றே பெரியாழ்வாரிடம் பேசுவதை அவள் தவிர்க்கிறாள் என்ற உண்மையை கோதை புரிந்து கொண்டாள்.\n“கண்ணா உன்னை வளர்த்த யசோதை போலத்தானே என் தாயும் பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா நீயும் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தாய். நானும் அப்படியே. உன்னை வதைத்த கம்சன் போல் என்னை வதைக்கச் சாதி என்னும் அரக்கன். கண்ணனுக்காகக் கம்சனை வெறுத்தவர்கள் சாதி எனும் கம்சர்களாக மாறி எங்களை வதைப்பது வேடிக்கைதான். தன் மகளாக என்னைக் கொண்டாடும் இவர்களுக்கு ஒரு மகளாக நான் செய்ய வேண்டியது என்ன நீயும் ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தாய். நானும் அப்படியே. உன்னை வதைத்த கம்சன் போல் என்னை வதைக்கச் சாதி என்னும் அரக்கன். கண்ணனுக்காகக் கம்சனை வெறுத்தவர்கள் சாதி எனும் கம்சர்களாக மாறி எங்களை வதைப்பது வேடிக்கைதான். தன் மகளாக என்னைக் கொண்டாடும் இவர்களுக்கு ஒரு மகளாக நான் செய்ய வேண்டியது என்ன சாதியறியாத எனக்கு ஆதியறியாத நீயே கதி.. நீயே என் மணவாளன்.‘ கோதை அன்றுமுதல் கண்ணனின் காதலியானாள்.அவனிடம் மனதிற்குள் பேசத்தொடங்கி விட்டாள்.“ நீயே கதி எனக் கிடக்கும் என்னை வதைப்பதுதான் உனக்கு அழகா சாதியறியாத எனக்கு ஆதியறியாத நீயே கதி.. நீயே என் மணவாளன்.‘ கோதை அன்றுமுதல் கண்ணனின் காதலியானாள்.அவனிடம் மனதிற்குள் பேசத்தொடங்கி விட்டாள்.“ நீயே கதி எனக் கிடக்கும் என்னை வதைப்பதுதான் உனக்கு அழகா உன் ஆடையை என் வீட்டில் ஒளித்து வைத்தாலென்ன உன் ஆடையை என் வீட்டில் ஒளித்து வைத்தாலென்ன அப்போதாவது என்னைத் தேடி வருவாயல்லவா அப்போதாவது என்னைத் தேடி வருவாயல்லவா இதோ கண்ணன் வந்து விட்டான்.சுருண்டகுழலும் அந்தக் கண்ணும்... செம்பவள வாயும்...அவனேதான். கோதைக்குள் மின்னல் ஓடியது.என் உறவு..என் வாழ்வு எல்லாம் அவன் அவனே. இன்றைக்கும் எழேழ்பிறவிக்கும்.....\nகோதை...கோதை...தாயார் அழைப்பதைக் கேட்டதும் பதறியெழுந்தாள். கண்ணனை எங்கு ஒளித்து வைப்பது நல்லவேளை கண்ணனே மாயமாகி விட்டான்.தாய்பூசைக்கு மலர் பறித்து வரச்சொன்னாள். சிட்டெனப் பறந்தாள்.பூக்களைப் பறிக்கும்பொழுது பச்சைக் கற்பூர வாசனை. கண்ணன் வந்துவிட்டான்.\n.அவள் குடலையிலிருந்து மலர்கள் கீழே சிதறின. அதைப் பொறுக்கக் குனிந்தாள். அம்மலர்களின் உள்ளே கோவிந்தனாகக் கண்ணன். அம்மலர்களை வைத்தே அவன் பெயரெழுதினாள். தாய் எட்டிப் பார்த்து எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள். கண்ணன் மறைந்து விட்டான். மீண்டும் கண்ணன் ஏன் வரவில்லை இப்போது கோவிந்தா கோவிந்தா என அவன் பெயரைத் தோட்டத்து மணலிலெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டாள். இதோ தையும் நெருங்கி வருகிறது. அவளுள் அச்சம் கண்ணனோடு தான் கொண்ட காதல் நிறைவேறுமா.....சிறுவயதில் தோழிகளோடு விளையாடிய கூடல் விளையாட்டு நினைவிற்கு வந்தது. கடைசி தோழிக்கும் திருமணம் முடிந்து விட்டது.தனித்தே அதை விளையாடத் தொடங்கினாள்.\nகண்ணை மூடிக் கொண்டு மணலில் ஆட்காட்டி விரலால் வட்டம் அதைத் தொடர்ந்து விரலை எடுக்காமலே மற்றொரு வட்டம். இப்படி வட்டங்களின் தொடர் அணிவகுப்பு மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வட்டத்தை முடிக்க வேண்டும்.‘கண்ணன் எனக்குக் கிடைப்பானாகி்ல் கூடலே நீ கூடிடு‘. வட்டம் தொடங்கிய இடத்தில் முடியவில்லை.‘கண்ணன் கை என்னோடு பற்றுமாகில் கூடலே நீ கூடிடு.‘ வட்டமாக முடியாமல் எங்கோ முடிந்திருந்தது. ‘சாதியென்னும் காளியன் தலைமேல் நடனமாடிய கூத்தனை நான் சேர்ந்திடுமாகில் கூடலே நீ கூடிடு‘.கோணப்புளியங்காபோல் சேராமல் விரிந்திருந்தது.‘என்னைக் கொண்டு போக அக்கோபாலன் வருவானாகில் கூடலே நீ கூடிடு‘.அவள் எண்ணங்களின் தொடர்ச்சியும் முடிவும் அவனே.கூடலிழைத்தல் விளையாட்டை ஒரு தவம் போலத் தோட்டத்து மணல் முழுதும் விளையாடினாள்.\nதனிமைத்துயர் அவளைத் தீண்டவேயில்லை. எனினும் இன்னும் கூடல் கூடவில்லை. ‘கோதை தோட்டத்தில் விளையாடியது போதும் வா....‘ தாயின் குரல். .அவள் தன்னை நிழல் போல் தொடர்வதை நினைத்து உள்ளுக்குள் வேதனையோடு சிரித்தாள் கோதை...தாய் அளித்த உணவை உண்டபின் படிக்க அமர்ந்தாள். நாளை மார்கழி முடியப்போகிறது. தாய் வீட்டை தூய்மை செய்யத் தொடங்கிவிட்டாள்.தந்தை பூசைக்குரிய ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.\nவருகிற தை மாதத்திற்குள் கோதையின் திருமணத்தை முடித்துவிடவேண்டுமென்ற எண்ணம் அவரைச் சுறுசுறுப்பாக்கியிருந்தது.நாளை விடியலில் அயலூருக்கு கோதையின் வரன் தொடர்பாக அவர் புறப்படவேண்டும்.கோதை தாய் தந்தையர் இருவரையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இதயம் கசிந்தது. அன்றிரவு தலையணை நனைந்தது.\nகாலையில் கோதை எழாததைக் கண்ட தாய் பதறிப்போனாள். கோதையின் உடல் அனலாய் சுட்டது.‘நாளெல்லாம் தோட்டத்து வெயிலில் விளையாடிக் கொண்டிருந்தால் இப்படித்தான்...‘ புலம்பியபடி மருந்தரைத்துத் தந்தாள். பெரியாழ்வார் கோதைக்கு மாப்பிள்ளைத் தேட அதிகாலையிலேயே கிளம்பிவிட்டிருந்தார். கோதை தாய் தந்த மருந்தை உட்கொண்டாள். அவள் மனம் சிந்தனையிலாழ்ந்தது.\nபிருந்தாவனத்தில் கண்டெடுக்கப்படட இந்த விட்டுணு சித்தனின் மகளுக்குக் கண்ணனின் திருநாமமே மருந்து என்பதைத் தாய் அறியாதவளா சிலருக்கு மருந்தில் உயிர் இருக்கிறது. எனக்கு அவன் தான் மருந்து. தாயிடம் எதுவும் சொல்லாமல் அவள் கொடுத்த மருந்தை உண்டு வந்தாள்.அப்படியே உறங்கிப்போனாள்.\nகண்விழித்த போது தாய் அவளுடைய காலருகே பாதிச் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சிறிதுநேரம் தோட்டத்தில் உலவிட விரும்பினாள். தாயறியாமல் மெல்ல நடந்தாள். அங்குக் கண்ணில் பட்ட குயிலிடம் கண்ணனிடம் தூது சென்று வருமாறு மனதிற்குள் கெஞ்சினாள்.நடை தளர ஒரு மரத்தினடியில் அமர்ந்தாள்.அவள் விரல் அவளறியாமலே கூடலிழைத்தது.\nகூடலே நீ கூடிடு. கூடலே நீ கூடிடு. . கூடலே நீ கூடிடு. இதோ கூடிவிட்டது.அதோ அங்கு வருவது யார் கண்ணன்தான். யானை மீதமர்ந்து ஒரு சிங்கம் போலல்லவா வருகிறான். அவனோடு தேவர்களும் அல்லவா வருகிறார்கள். ஐயோ எனக்குப் படபடப்பாக வருகிறதே. அதோ தந்தை யானையின் ஓசை கேட்டு வீட்டிலிருந்து வெளியே வருகிறாரே. எப்போது ஊரிலிருந்து அவர் வந்தார் கண்ணன்தான். யானை மீதமர்ந்து ஒரு சிங்கம் போலல்லவா வருகிறான். அவனோடு தேவர்களும் அல்லவா வருகிறார்கள். ஐயோ எனக்குப் படபடப்பாக வருகிறதே. அதோ தந்தை யானையின் ஓசை கேட்டு வீட்டிலிருந்து வெளியே வருகிறாரே. எப்போது ஊரிலிருந்து அவர் வந்தார் கண்ணன் யானையிலிருந்து இறங்கிச் சென்று தந்தையிடம் என்ன சொல்கிறான்\n‘கோவிந்தனாகிய எனக்கும் கோதையாகிய என்னை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டாளுக்கும் நாளை வதுவை என்று சொல்வது என் காதில் விழுகிறதே.... ‘ என்னை ஆள்பவள் ...என்னை ஆள்பவள்..அந்தச் சொல் என் நெஞ்சத்தில் பூ பூக்க வைக்கிறதே. நானா அவரை ஆண்டேன். நான் ஆண்டாளா இது கனவா இந்திரன் உள்ளிட்ட தேவரெல்லாம் பாளை கமுகை போன்ற மரங்களை என் வாசலில் நடத் தொடங்கி விட்டனரே.இது உண்மைதான்.\n‘அம்மா அம்மா...‘கோதை தாயை அழைத்தாள். ‘எங்கே போனாள். அம்மா நீ எதிர்பார்த்த நன்னாளும் வந்து விட்டதம்மா‘.குரல் கேட்டதும் அதோ சின்னப்பிள்ளை போல ஓடி வந்து வந்தவர்களை உபசரிக்கத் தொடங்கிவிட்டாள். இனி அவளுக்கு ஓய்வேது என்னை யார் அலங்கரிப்பது என் நிலையறிந்து எனக்கு நாத்தனாராகப் போகும் துர்க்கை கூறைப் புடவையை எனக்கு அணிய உதவிசெய்து மாலையைக் கழுத்தில் சூட்டுகிறாளே.மங்கல மகளிர் என் கையையையும் கண்ணன் கையையும் சேர்த்துக் காப்பு நாண் கட்டுவதை நிமிர்ந்து பார்க்க விடாமல் நாண் என்னைத் தடுக்கிறதே. ஊர்வலம் தொடங்கி, மத்தள மேகம் முழங்க, வரிசங்கம் நின்றூத, மந்திரம் ஒதுவதில் வல்லவர்கள் வேதம் ஓதுகின்றனரே. இதோ கண்ணன் உரிமையுடன் என் கையைப் பற்றுகிறானே.எவ்வளவு துரிதமாக செயல்கள் நடக்கின்றன.\nஅக்னியை வலம் வருவதற்குள் படபடப்பில் என் உடலிலிருந்த நீரெல்லாம் வியர்வையாகிப் போனதே. என் கால்விரல்களைப் பிடித்து அம்மி மீது வைத்து, எரிமுகம் காட்டி, அதில் பொரியைப் போட செய்து,ஊஞ்சலில் அமரவைத்து, ஓமநெருப்பின் சூடு தணிய சந்தனத்தைப் பூசிக, குளிப்பாட்டி, அலங்கரித்து யானை மீதமர்த்திக் கண்ணனின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் வரையில் தான் எத்தனை சடங்குகள்.எத்தனை சடங்குகள் அப்பப்பா.....அப்பா அப்பா எங்கே அதோ தூரத்தில் நெஞ்சு கொள்ளாத பூரிப்புடன் தன் சொந்தங்களிடம் கண்களிலே பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.\nதாய் எங்கே.. இதோ அழைக்கிறாளே...கோதை...கோதை... ஐயோ தாயின் குரலில் ஏனிந்த பதற்றம். திகில் என்னவாயிற்று .கண் இமைகள் ஏன் இப்படிக் கனக்கின்றன என்னவாயிற்று .கண் இமைகள் ஏன் இப்படிக் கனக்கின்றன தாய் தன்னைத் தூக்க முயற்சித்து நிற்க வைத்து நடத்திச் செல்கிறாளே. திருமணக் களைப்பில் யானையின் மீதிருந்து விழுந்து விட்டேனா...கண்ணனின் உறவுகளெல்லாம் என்ன நினைத்திருக்கும்....அந்த நினைப்பே அவளின் பதட்டத்தை மிகுதிப்படுத்தி அவளை மீண்டும் மயங்கச் செய்துவிட்டது.\nகண் விழித்துப் பார்த்த போது தாயும் தந்தையும் அவளருகே கவலையோடு அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர்கள்தான் எப்படி மெலிந்து போய் விட்டார்கள். கண்ணன் எங்கே ..எப்படி தாயிடம் கேட்பது எல்லாம் கனவா...கண்ணனுக்காக நோன்பு நோற்றதும் கண்ணனே\n தந்தை வைத்தியரை அழைத்து வரச் சென்றுவிட்டார். தாய் தானறிந்த மருந்தை தயாரித்துக் கொண்டிருந்தாள்.எத்தனை நாட்கள் கழிந்தன இது என்ன மாதம் மெல்ல எழுந்து மாடத்திலிருந்த பெரியாழ்வாரின் ஓலைச் சுவடிகளை எடுத்தாள். தாய் எட்டிப் பார்த்து எதுவும் சொல்லாமல் சென்று விட ஆண்டாளுக்கு உற்சாகம் பிறந்தது.\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்......தன் உயிரையே உருக்கி உருக்கி கண்ணனையே நினைந்து நினைந்து பாவனையில் நனைந்து நனைந்து அவள் எழுதி வைத்த ஓலைச் சுவடிகள்.. கண்ணனையே நான் மணமுடித்துக் கொண்டேன் என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பதுஅவள் உடல் தேறியதாகக் கருதிய பெரியாழ்வார் மீண்டும் வரன் தேடத் தொடங்கியிருந்தார்.\nதனக்காகப் பெரியாழ்வாரையும் உத்தமியான தாயையும் புறக்கணித்த இம் மானுடக் கூட்டத்திடமா இவர்கள் மன்றாடுவது தன் இருப்பே இவர்களுக்குப் பெருந்துயரம் என்பதை உணர்ந்தளவில் சிறகு விரித்த உயிர்ப்பறவை ஆண்டாள் அவனன்றி எதுவும் வேண்டாள் என்பதை எழுத்தில் வெளிப்படுத்திப் பறந்து போனது.\nகோதை மறைந்த எட்டாம் நாள்.பெரியாழ்வார் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தோட்டத்தையே சுற்றி வந்து கொண்டிருந்தார்.துளசிச் செடிக்கென்று தனிமாடம் கட்டி வைத்திருக்கிறாளே. அவள் மனம் எதையெல்லாம் நினைத்து ஏங்கியதோ. எங்கும் கோதை நடந்து வந்து செடிகளை வருடிக் கொடுத்தபடி நிற்பது போலவே இருக்கிறது. ‘போதும்மா கோதை உச்சி வெயிலில் நிற்காதே உள்ளே வா..‘என்று குரல் கொடுத்தார்.\nகோதையின் தாய், ‘யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க உள்ள வாங்க உங்க தலைதான் வெயிலில் பொளக்கப்போறது‘ என்றாள். எப்போதும் போல அவள் வேலைகளில் மூழ்கி விட்டிருந்தாள். கோதை இறந்ததை உணராததுபோலவே அவளின் செய்கைகள் இருந்தன. தன்னைப் போல அவளும் எங்கும் கோதையே நிறைந்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறாளோ\nஆனால் இப்போது யாரிடம் பேகசிக்கிட்டிருக்கீங்க என்றாளே. அப்படியானால் தான் காட்டிய பாசம் அவளிடம் இல்லையோ அதனால்தான் கோதைக்காக வரன் தேடியலைந்த போது உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாளா அதனால்தான் கோதைக்காக வரன் தேடியலைந்த போது உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினாளா கோதையின்பால் உண்மையான அன்பில்லாமல் எனக்காகத்தான் வளர்த்தாளா கோதையின்பால் உண்மையான அன்பில்லாமல் எனக்காகத்தான் வளர்த்தாளா அந்தக் குழந்தை அதைப் புரிந்துதான் உயிரை விட்டதோ அந்தக் குழந்தை அதைப் புரிந்துதான் உயிரை விட்டதோ ஆத்திரம் அவர் அறிவை மறைத்தது. நேரே சமையல் கட்டிற்குச் சென்றார். அவள் மோர் கடைந்து கொண்டிருந்தாள். கோதைக்கு மோர் கடையும் ஓசை பிடிக்குமே. அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதை விட்டு வி்ட்டு இந்த மத்தின் ஓசைகேட்க ஓடிவிடுவாளே ஆத்திரம் அவர் அறிவை மறைத்தது. நேரே சமையல் கட்டிற்குச் சென்றார். அவள் மோர் கடைந்து கொண்டிருந்தாள். கோதைக்கு மோர் கடையும் ஓசை பிடிக்குமே. அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதை விட்டு வி்ட்டு இந்த மத்தின் ஓசைகேட்க ஓடிவிடுவாளே கண்ணில் நீர் வழிய அப்படியே நிலைப்படியில் நின்றுவிட்டார். ஏதோ உணர்வில் திரும்பியவள் ‘இதோ ஆச்சு உட்காருங்கோ வந்திடறேன்‘ என்றாள்.\nகூடத்துத் திண்ணையில் கோதை வழக்கமாகப் பூ கட்டும் இடத்தில் சென்று அமர்ந்து விட்டார். அங்கிருந்த மாடத்தில்தான் கோதையின் சுவடிகளை அவள் தாய் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.அதைப் பற்றி அவரிடம் சொல்ல மறந்து விட்டாள். அவரின் கண்ணில் அது தற்செயலாய்ப் படச் சுவடிகளைப் படிக்கத் தொடங்கினார். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்.....‘ அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.முப்பது முத்துகள். திருமொழியைப் படிக்கும்போது ஒருவித நடுக்கத்தை அவர் உணர்ந்தார். படிக்கப் படிக்க நா உலர்ந்தது.\nதிருப்பாவையில் சிறுமியாய் இருந்த கோதை திருமொழியில் வேறு பரிணாமம் எடுத்திருந்தாள். அதில் அவள் குழந்தையல்ல. பருவப் பெண். பருவக் கனவுகள். இளமைத்தாகங்கள்...பெரியாழ்வார் விதிர்த்துப் போனார். கோதையை நினைத்து நினைத்து அவர் மனம் உருகியது. தன் செல்ல மகளின் அவலநிலை அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. அவளின் நிலையறிந்ததால்தான் அவள் தாய் அவளின் மறைவை இயல்பாய் ஏற்றுக்கொண்டாளோ\n‘மானுடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்‘. சாட்டையாய் மனித குலத்தின் மீது விழுந்த அவ்வரிகள்...கோதை எப்பேர்பட்ட பெண்.அந்த வைராக்கியம். துணிச்சல். தன் கூரிய அறிவினால் மனித குலத்தை மிகுந்த உயரத்திலிருந்து பார்த்திருக்கிறாள்.ஹஇவளுடைய சிந்தனைக்கு நிகரான ஒருவரை மனித குலத்தில் தேடமுடியமா இவளைப் போய்க் கேவலம் மனிதகுலத்திற்கு மணமுடிக்கப் பார்த்தேனே.அவர் நெஞ்சு குற்ற உணர்வினால் தவித்தது.\nகோதையின் தாய் சாப்பிட அழைத்தாள். ‘உன்னால் எப்படி முடிகிறது தெரிந்துதான் இதைப் பத்திரப்படுத்தினாயா நம் கோதை மகா கவி. .அவளின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லையே. உன்னால் எப்படி முடிகிறது. உனக்குப் பாசமே இல்லையா கோதை அழைப்பது போலவே இருக்கிறதே கோதை அழைப்பது போலவே இருக்கிறதே இந்த சின்ன வயதில் எத்தனை துயரங்கள் இந்த சின்ன வயதில் எத்தனை துயரங்கள் எத்தனை புரிதல்கள் அதை அறியாத பாவியாகிப் போனேனே\n‘நாம எதுக்கு அழணும். நம் மகள் கண்ணனை விரும்பினாள்.அவனோடு வாழச் சென்றிருக்கிறாள்.அவள் விரும்பிய வாழ்வு அவளுக்குக் கிடைத்திருக்கிறது.நல்ல இடத்தில் மகளை வாழ அனுப்பியபின் நாம் வாடுவது அழகா கண்ணன் அவளை நம் மகளாக வளர அனுப்பி வைத்தான். நம் மீது அவன் வைத்த நம்பிக்கை, அவன் நம் மகளைச் சிறப்பாகப் பார்த்துக் கொள்வான் என்று நமக்கும் இருக்க வேண்டுமல்லவா கண்ணன் அவளை நம் மகளாக வளர அனுப்பி வைத்தான். நம் மீது அவன் வைத்த நம்பிக்கை, அவன் நம் மகளைச் சிறப்பாகப் பார்த்துக் கொள்வான் என்று நமக்கும் இருக்க வேண்டுமல்லவா‘ அத் தாய் நிதானமாகக் கேட்டாள். பெரியாழ்வார் திகைத்துப் போய்விட்டார்.\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nதமிழ் அற இலக்கியங்களின் வழி மானுட விழுமியங்கள்\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nகண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபுலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvarul.medialinkconcepts.net/thiruvarulkalvi/blog/date/2017/8/", "date_download": "2018-08-18T01:04:51Z", "digest": "sha1:6SHHS3B4WZSJG7SOC3H3HOQVBWRQGQAM", "length": 3211, "nlines": 54, "source_domain": "www.thiruvarul.medialinkconcepts.net", "title": "August 2017 thiruvarulfoundation", "raw_content": "\nதிருவருள் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு...\nமார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி\nதிருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு...\n மனிதருக்குள்ள எல்லாவகைத் துன்ப நீக்கத்திற்கும் அவர்கள் அடைய விரும்பும் நல்வாழ்விற்கும் திருமுறைகளின் வாயிலாக வழி வகைகள் கூறப்பட்டுள்ளன. நால்வர் பெருமக்கள் உலகு உய்ய அருளிச் செய்துள்ள பொருத்தமுடைய திருப்பதிகங்கள் தொகுத்து இந்த CDயை திருவருள் பவுண்டேஷன் வெளியீட்டுள்ளது. தொகுத்தவர் மெய்ஞ்ஞான வள்ளல் கு.வைத்தியநாத ஈசான தேசிகர் பாடியவர் திருவிடை மருதூர் S.சம்பந்த தேசிகர் Free Download\nமனித சமுதாயத்திற்கு வேண்டிய வாழ்வியல் நெறிகள், நற்பண்புகள் மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகள் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்துவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://arunn.me/2016/08/01/isai-aridhalin-pizayana-munmathirigal/", "date_download": "2018-08-18T00:16:42Z", "digest": "sha1:5KFRRGDRLL42U54ZVW4NEQIEWUUMYBAJ", "length": 59882, "nlines": 119, "source_domain": "arunn.me", "title": "இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nஇசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்\nஜெயமோகன் தளத்தில் அருண் என்று ஒருவர் இன்று கேள்வி கேட்டிருக்கிறாரே, நீ தானா\nநான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும் வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி என்ன விஷயம் என்கிறேன். பேஸ்புக்கே பற்றி எரிகிறதே… என்னனு தெரியாதா என்றார் அன்பர். இல்லையே, நீங்க பேஸ்புக்ல தலைய வுட்டுனுக்குறீங்க, நான் ஸென்ஹெய்ஸர் ஹெட்போனில் வுட்டுகினு எம்பாட்டுக்கு பாட்டு கேட்னுகிரேன் என்கிறேன்.\nஅன்பர் விளக்கிய பின்னர் விஷயம் புரியத் தொடங்கியது. டி.எம்.கிருஷ்ணாவிற்கு மகஸஸே விருது வழங்கப்பட்டிருப்பதைப் பற்றி ஜெயமோகனின் விமர்சனம் தொடர்பாக ஜடாயு என்பவர் எழுதியிருப்பதைச் சுட்டி ஜெயமோகனிடம் ‘இதைக் கவனித்தீரா இதுக்கு இப்ப நீங்க என்ன சொல்றீங்க இதுக்கு இப்ப நீங்க என்ன சொல்றீங்க’ வகையில் கேட்கப்பட்ட கேள்வி.\nஇல்லை அன்பரே, அந்தக் கேள்வியைக் கேட்ட அருண் நானில்லை. எனக்கு அவ்வகை அறிவு வாய்க்கவில்லை. முயன்று மொக்கையாவதற்கும் நேரமில்லை.\nதொடர்ந்து ஜெயமோகன் அப்படி என்னதான் விமர்சித்துவிட்டார் என்று அவர் கட்டுரைகள் நான்கைப் படித்தேன். இசை மேல் இன்றளவும் ஓரளவு நாட்டமுள்ளவன் எனும் சுயதகுதியால் தான் அவ்வாறு செய்தேன் (இந்த விளக்கம் ‘உனக்குதான் ஜெ வலைதள எழுத்தே ஒவ்வாதே, எதுக்குப் போய்ப் படிச்ச’ என்று கேட்கக் காத்திருக்கும் இரண்டு நண்பர்களுக்காக). அடிக்குறிப்பில் சுட்டிகளை அளித்துள்ளேன். அக்கட்டுரைகளை முழுவதுமாய் வாசிக்காமலும் கீழுள்ளதை வாசிக்கலாம். களம் முழுவதுமாய் விளங்காது.\nஅருண் கேள்விக்குப் பதிலாய் ஜெயமோகன் இசை அறிதலைப் பற்றி எழுதியுள்ளார். இதை பிறகு கவனிக்கிறேன். முதலில் டி.எம்.கி.க்கு விருது கிடைத்ததை விமர்சித்த கட்டுரை.\nபெரும்பாலும் சரியாகவே அடித்திருக்கிறார். வழக்கம் போல ஓங்கி அடித்திருக்கிறார். அடி மற்றவர்கள் மேல் விழுகையில் இணைய இருட்டில் பாப்கார்ன் சாப்பிட்டவர்கள், இந்தக் கட்டுரையில் மற்றவர்களுக்கு பாப்கார்ன் சாப்பிடத் தருணம் அமைந்துவிட, இணைய வெளிச்சத்தில் கடுப்பாகிறார்கள்.\nடி. எம். கிருஷ்ணாவிற்கு அவரது சமூகப் பணிகளுக்காக என மகஸஸே விருது வழங்கப்பட்டிருப்பது அபத்தம். இதனைச் சரியாகவே சாடியுள்ளார் ஜெயமோகன்.\nஎதற்காக இந்த விருது என்று விருதின் பட்டயம் விவரித்திருக்கும் கூற்றுகள் கர்நாடக இசைக் கலைஞர்கள் அனைவரையுமே அவமதித்துள்ளது. வேதனையே. WTF என்று மட்டுமே பத்து பதினைந்து முறை எழுதிக் கட்டுரையாக்கி எதிர்வினையற்றத் தோன்றுகிறது. அவரது இந்து கட்டுரைகளின் அபத்த ஆக்ரோஷங்களைக் கேள்விப்படுகையில் (ஒன்றையும் நான் வாசித்ததில்லை. நான் அவரது இசை ரசிகன் மட்டுமே), இரண்டு வருடங்கள் முன்னதாகவே போகிற போக்கை கவனித்தால் டி.எம்.கிருஷ்ணா விரைவில் ராஜ்ய சபை உறுப்பினர் ஆகிவிடுவார் என்று கருதியிருந்தேன். ஜெயமோகன் இனி ஞானபீடமே வாங்கிவிடுவார் என்கிறார். வாங்கக் கூடியதுதானோ அதுவும்.\nஆனால் போகிற போக்கில் தனக்குத் தெரியாத விஷயத்திலும் ஜெயமோகன் ஓங்கி அடிக்கிறார். பொதுவாக இணையவெளி எழுத்தைத் தீவிரமாய் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்றாலும் தன் கருத்து புத்தகத்தில் வந்துவிடும் என்கிறார். காலத்தால் அழியாத கருத்துகளுடன் மட்டுமே வேறுபட முயல்கிறேன்.\nடி.எம்.கிருஷ்ணா மிக மிக நல்ல கர்நாடக இசைக் கலைஞரே. ஒரே போடாய் ஜெயமோகன் போடுவதைப் போல ‘சஞ்சய் அமர்ந்த இடத்தில் அமர்வதற்கே தகுதி இல்லை’ என்பதைவிட, அமர்வதற்குத் தேவையற்ற அளவிற்கு டி. எம். கிருஷ்ணா மரபிசை அறிவும் மேடையில் படைப்பூக்கமும் உடையவரே. அதிநுட்பங்கள் பலவற்றையும் அறிந்திருந்தாலும் உணர்வுப்பூர்வமாய்ப் பாடுவதில் அதிசூரர் எனப் பெயரெடுத்தவரே. வயது வித்தியாசமின்றிப் பல மரபிசை ரசிகர்களையும் உணர்ச்சிவயப்படுத்தியவரே. மரபிசைத் தேர்ச்சியே இல்லாதவரையுங்கூட தன் இசையினால் பைத்தியவெளிக்கு இட்டுச் சென்றவரே.\nடி. எம். கிருஷ்ணா இசை மேடைகளில் வளர்ந்த காலங்களில் — சுமார் பதினைந்து இருபது வருடங்கள் முன்பிருந்து சுமார் ஐந்து வருடங்கள் முன்னர் வரை — மரபிசையில் அபாரமாய்ப் பாடியுள்ளார். களையான உற்சாகமான அதிரடியான கச்சேரிகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். மனது வைத்தால், இன்றும் இனியும் இவ்வகையில் பாடுவார். ஏனோ இவ்வகை ரகளையான கச்சேரிகளில் அவருக்கு இன்று நாட்டமில்லை. சமீப காலங்களில் ஏதோ மனக் குழப்பங்கள். இசையுடன் தொடர்பற்ற எதையெதையோ குறுகிய காலத்திற்குள் இசைமேடையில் சாதிக்கத் துடிக்கிறார். மரபிசை என்று மட்டும் பார்த்தால், குழப்பங்கள் என்பதை விட அறிவெளியில் தட்டுப்படாத ஏதோ அரூவத்தைப் பிடித்துவிட உந்தும் ஒரு தொடர் நமைச்சலில் மேடைகளில் உள்ளார் எனலாம். பிரமாதமாய்த் தொடங்கும் கச்சேரி அடுத்த கால் மணி நேரத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் சக வித்வான்களுக்கே புரியாத கோணங்களில் பிரவாகித்து, கேட்பவர்கள் விக்கித்து ஒருவரையொருவர் சங்கடமாய்ப் புன்னகைத்துப் புருவ நெளியல்களில் ‘அவ்ளோதான் இன்னிக்கு ஊத்தாக்ஸா’ என விசாரித்து வீட்டிற்கு வந்ததும் மவனே இவங் கச்சேரிக்கு இனிமே போறேனா பார் என்று வாசலில் செருப்பை உதறி… கடந்த சில வருடங்களில் பல முறை இது நடந்துவிட்டது. மீண்டும் செல்பவனே கலையின் ரசிகன். ஜெயமோகனின் அடுத்த நூலையும் வாசிப்பவந்தானே இலக்கிய ரசிகன்.\nஒருவிதத்தில் கலைஞர்களுக்கு இவ்வகை மனநிலைகள் இயல்பே. எதையாவது சிந்தித்துப் புதுப்பித்துக்கொள்ள முயல்வதே அவர்களை உந்தும் சக்தி. ஆனால் என்ன, இன்றைய வடிவிலான கர்நாடக இசை மேடைக் கச்சேரியை வீம்பிற்கென்றே மங்களத்தில் தொடங்கி வர்ணத்தில் முடித்தவர்கள் இங்கு ஏற்கெனவே உண்டு. இதைப்பற்றி ‘லலிதா’ ராமுடன் எழுதியிருக்கிறேன் (சொல்வனத்தில் என்று நினைக்கிறேன்). இவ்வகைத் தடாலடிகளிலும் தான் ‘வித்தியாசம்’ எனக் கருதி அவர் செய்யும் பலவற்றிலும் டி.எம்.கிருஷ்ணா முன்னோடி இல்லை. ராஜரத்தினம், மஹாலிங்கம், பாலமுரளி, தஞ்சாவூர் கல்யாணராமன், டி.ஆர்.சுப்ரமணியன் என்று மிக நீண்ட பட்டியலே உள்ளது, அதுவரையிலான கச்சேரி மரபுகளைத் தகர்த்தெறிந்தவர்களுக்கு.\nகர்நாடக இசையில் டி.எம்.கிருஷ்ணா வல்லவரே. அதன் மையத்திற்காக மட்டுமே தொடர்ந்து தன் உழைப்பை வழங்கிவந்திருந்தால் மரபிசை ரசிகர்களின் மானசீக முருகக் கடவுளாகியிருப்பார் (அழகான இளமையான தெய்வம்).\nவிருதுகளும் புகழ் தேட்டங்களும் அதற்கான தேவையற்ற செயல்பாடுகளும் எக்கேடோ போகட்டும். அய்யர் அய்யங்கார் சபா லாபிக்கள், இடது வலது சாரிக்கள் எவரும் எவையும் கலையன்று. கலை அநாதி. அதன் போக்கை மனிதனால் முழுவதுமாய் நிர்ணயித்துவிட முடியாது. டி. எம். கிருஷ்ணா எனும் நல்ல கர்நாடக இசைக் கலைஞன் மீண்டும் மேடையில் மட்டும் இசையால் முழங்குவான் என்றே காத்திருக்கிறேன். கோயில்களுக்கு அடுத்து குப்பை மேடுகள் செழிக்கும் நம் நாட்டில் அந்த மேடை எங்கு எவரால் எவருக்காக இடப்படுகிறது என்பது எளிய இசை ரசிகனான எனக்கு முக்கியமில்லை. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு…\nஇப்போது அருண் என்பவரின் கேள்விக்குப் பதிலாய் இசை அறிதல் என்று ஜெயமோகன் எழுதியுள்ளதைப் பற்றி.\nமுதல் பத்தியே பயமுறுத்தினாலும், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முழுவதும் வாசித்தேன். இசை அறிதலை விளக்க விளக்க, அதை வாசிக்க வாசிக்க, அடிப்படையாக எத்தனை விளக்க வேண்டியுள்ளது என்பது நமக்கு விளங்கிக்கொண்டே வந்து மலைப்பு ஏற ஏற, நல்லவேளை சிறிய கட்டுரைதான். முடிந்துவிட்டது.\nஇசையைக் காட்சியாக்கிக்கொள்வது சிலருக்கு இயல்பே. அருமையாகவே சொல்லியிருக்கிறார். சிலருக்கு மனத்தில் இசை நிறங்களாய்க் குழையும். எனக்குக் கண்களை மூடினால் பல இசைக் கணங்கள் நிறங்களின் கூட்டாய்ச் சிதறும். இயற்கைக் காட்சிகளும் கனவுலகு போல உருவாகும். சுவரங்கள் அனைத்திற்கும் ஒத்த நிறங்கள் உண்டு என்கிறது ப்ரதர்ஷனி. எஸ். ராஜம் ஓவியங்களாய்த் தீட்டியுள்ளார். ஷட்ஜம் சரி ஷட்ஜமம் தவறு எனும் பதிவில் என்றோ குறிப்பிட்டிருந்தேன். லலிதா ராம் எஸ். ராஜம் பற்றி எடுத்திருந்த கானொளியில் விரிவாக ஓர் காட்சி விலக்கம் உள்ளது. (டிவிடி காப்பி கடைகளில் இருக்காது; ஓசியில் பார்த்துக்கொள்ளவும்). ஒலி வண்ணம் இவற்றை அறியும்/உணரும் இடங்கள் மூளையில் அருகருகே உள்ளன என்று நியூராலஜிஸ்டுகள் கருதலாம். வி. எஸ். ராமச்சந்திரன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் ராகங்களைக் கண்டுபிடிப்பதும் விரல்விட்டுச் சுவரங்களை எண்ணிப்பார்ப்பதுமே ரசனை என்று சொல்லப்படுகிறது என்கிறார். எங்கு விரல் விட்டு எங்கு சுவரங்களை எண்ணுகின்றனர் விரல் விட்டு எங்கு சுவரங்களை எண்ணுகின்றனர் கூடவே தாளம் போடுவதைச் சொல்கிறாரா கூடவே தாளம் போடுவதைச் சொல்கிறாரா சுவரக் கோர்வை ஒன்றை ஒரு தாளத்தில் ஒரு வேகத்தில் (பிரமாணத்தில்) பொருத்திப் பாடுவதைச் சொல்கிறாரா சுவரக் கோர்வை ஒன்றை ஒரு தாளத்தில் ஒரு வேகத்தில் (பிரமாணத்தில்) பொருத்திப் பாடுவதைச் சொல்கிறாரா ரசனை இதுவல்ல என்கிறாரா அல்லது இதைச் செய்யவேக்கூடாது என்கிறாரா ரசனை இதுவல்ல என்கிறாரா அல்லது இதைச் செய்யவேக்கூடாது என்கிறாரா ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆரோஹணம் அவரோஹணங்களுக்குப் புது விளக்கம் கொடுத்தார். அப்போது செய்ததையே இன்றும் செய்வோம். ‘போர்து வுடுமா’ என விட்டுக் கடந்து செல்.\nஇருந்தாலும் அடுத்ததாய்… ராகங்களைக் கண்டுபிடிப்பது ரசனை. இப்படி யார் சொன்னது ஓயாமல் இதைச் சொல்லிவருகின்றனர். சொல்கிறார். உண்மையில், ராகங்களைக் கண்டுபிடிப்பதை முயன்று தோல்வியுற்று அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையிலேயே இந்தக் ‘கண்டுபிடித்தலை’ச் சிறப்பாக ‘அஸால்டாய்’ச் செய்வோரது ‘ரசனை’யைச் சாடுகின்றனர் எனத் தோன்றுகிறது. தனக்கு வராததை இவன் மட்டும் செய்வதா, இவன் செய்வதே வீண் என்று ஆக்கிவிட்டால்… இசையைப் பயிலவே ராகங்களை ஒருவாறு தெரிந்து அறிந்து பெயர் வைத்து பொட்டு வைத்து பூ வைத்து அணுகவேண்டும். இசையைக் கேட்டு ரசிப்பதில் யார் ஐயா உங்களை ராகங்களைக் கண்டுபிடிக்கச் சொன்னது ஓயாமல் இதைச் சொல்லிவருகின்றனர். சொல்கிறார். உண்மையில், ராகங்களைக் கண்டுபிடிப்பதை முயன்று தோல்வியுற்று அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையிலேயே இந்தக் ‘கண்டுபிடித்தலை’ச் சிறப்பாக ‘அஸால்டாய்’ச் செய்வோரது ‘ரசனை’யைச் சாடுகின்றனர் எனத் தோன்றுகிறது. தனக்கு வராததை இவன் மட்டும் செய்வதா, இவன் செய்வதே வீண் என்று ஆக்கிவிட்டால்… இசையைப் பயிலவே ராகங்களை ஒருவாறு தெரிந்து அறிந்து பெயர் வைத்து பொட்டு வைத்து பூ வைத்து அணுகவேண்டும். இசையைக் கேட்டு ரசிப்பதில் யார் ஐயா உங்களை ராகங்களைக் கண்டுபிடிக்கச் சொன்னது என்று தொலைந்தது அவை நீங்கள் கேட்கும் இசையில் இன்று மீண்டும் கண்டுபிடிக்க என்று தொலைந்தது அவை நீங்கள் கேட்கும் இசையில் இன்று மீண்டும் கண்டுபிடிக்க கல்யாணி ராகத்தில் பாடுவதைக் காம்போதி என்று நினைத்துக் கேட்டாலும் இசைதானே. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், ஜெயமோகன் ராகம் என்று நினைத்துக் கேட்டாலும் இசைதான்.\nஆனால், ராகங்களின் உருவங்களே பிடிகளிலும் (ஒருவகை பிரத்யேகச் சுவரக் கோர்வை), கமக அசைவுகளிலும் தான் உள்ளது என்பதே கர்நாடக இசையின் சிறப்பாகிவிட்டிருக்கையில் அவற்றை வைத்தே ரசனை விவாதங்களும் உருவாவதில் தவறென்ன கவனிக்கவும், விவாதங்கள் தரம் பிரிப்பது போன்றவை வருகையில்தான் இந்த அளவுகோல்கள் பெரும்பாலும் தேவைப்படுகிறது. இவ்வாறு ரசனையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் ராகங்களைக் ‘கண்டுபிடிக்க’ முனையலாம். இது ரசனையின் ஒரு நிலையே. ஆனால் புறவயமான நிலை என்று அருதியிடமுடியும். பழக்கமான ரசனை நிலையில் தேவையில்லை. செய்யவும் கூடாது. இவ்வகை நுணுக்கங்களை ஒதுக்கிவிட்டும் அதே மரபிசையை விவாதிக்க முடியும்தான். குரல் வளம், பாவம், பித்துநிலையாக்குதல், கவித்துவம், போன்ற பல அளவுகோல்கள் உள்ளனவே. அத்தளங்களில் அகவயமான கருத்துகளே மேலோங்கும் என்பதால் சச்சரவுகளில் முடிந்துவிடும். தரம் பிரியாது. விவாதங்கள் எம்முடிவுவை நோக்கியும் செல்லாமல் கேட்டு ரசிப்பதை விட்டு, ஓயாமல் இசையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவே வழிவகுக்கும். ஜெயமோகன் தன் எழுத்தினால் புத்தியைத் தொடுவாரா மனத்தைத் தொடுவாரா போன்ற விவாதங்களில் பங்குபெறுவோர் விவாத முடிவில் பெறுவதையே மேற்படி இசை விவாதங்களில் பெறமுடியும். இடையில் இசை அறிதல் பேஸ்தடித்து எங்காவது ஒளிந்திருக்கும்.\nடி.எம்.கிருஷ்ணா கணக்குகளில் சிறந்தவர் (அதனால் ஜடாயுவிற்குப் பிடிக்கும்) என்கிறார் ஜெயமோகன். வீட்டுக் கணக்கா டி.எம்.கி. படிப்பையே இசைக்காகப் பாதியில் விட்டவராயிற்றே… மாறாக டி.எம்.கி. அரசியல் கணக்குகளில் சிறந்தவர் எனக் கருதியுள்ளார் என்றால், அவருக்குத் தெரியாததா…\nஇரண்டுமில்லை, இசைக் கணக்குகளைத்தான் குறிப்பிடுகிறார் என்போம். அடிப்படை கால இடைவெளி ஒன்று (ஒரு தாளம்) பலமுறை தொடர் சங்கிலிகளாக நீளும் காலத்திற்குச் சரியாகப் பொருந்தி வருமாறு சுவரக் கோர்வைகளை அமைத்துப் பாடுவதை இசையில் கணக்குகள் என்று குறிப்பிடுவர்.\nஇந்த வகை இசைக் ‘கணக்குகளை’ சிறப்பாகச் செய்வதற்கு மனத்திலும் தொடையில் போடும் கையிலும் தாளம் வலுவாய் நிற்கவேண்டும். அப்படியென்றால், கவனம் பிசகாமல் கால இடைவெளிகளைக் குறித்துத் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனெனில், தொடர்ந்து பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த கால இடைவெளித் தொடரின் மீதே இசைச் சுவரங்களை, மெலடியை, ‘கணக்கு’ என்று மனத்தில் உருவாக்கிப் பாடிப் போகமுடியும். தாளம் தப்பினால், ‘கணக்கு’ தவறிவிடும்.\nராமேஸ்வரம் கோயிலில் உள்ளது போல வரிசையாகத் தூண்களை கால இடைவெளிகளைக் குறிப்பிடும் ஒரு வகைத் தாளம் எனக் கொள்வோம். பிரகாரத்தின் ஒரு கோடியில் தொடங்கி இத்தூண்களைக் கடப்பதற்கு ஒரு வேகத்தில் நடந்து செல்லலாம், ஓடலாம், நொண்டியடிக்கலாம் அல்லது நாட்டியமாடியபடியே செல்லலாம். நடந்து செல்வது கால்களிருக்கும் நம் அனைவராலும் முடிவது. தாளத்திற்கு மேலாக சாதாரணமான சுவரக்கோவை ஒன்றை அமைத்துப் பாடுவது எளிய மரபிசைப் பயிற்சி உடைய அனைவராலும் செய்ய முடிவது. நொண்டி அடிப்பதற்கு ஒற்றைக் காலில் பலம் வேண்டும். ஒரு ராகத்தில் நிறைய பயிற்சி இருந்தாலேயே அதன் உருவம் கெடாமல் தாளத்திற்கு மேலாகச் சற்று கடினமான சுவரம் கோர்வைகளை அமைத்துப் பாடமுடியும். பல மணிநேரம் வீட்டில் நொண்டியடிதுப் பயிற்சி செய்யவில்லை என்றால் கோயில் பிரகாரம் கால்தூரம் தாண்டுவதற்குள் கால் தடுக்கி விழுந்து விடுவோம். அல்லது கால் மாற்றிக் கொள்ளட்டுமா எனக் கெஞ்சுவோம். ஒரு ராகத்தில் அபாரப் பயிற்சி இல்லாது போனால், கணக்குகள் வரவில்லை கற்பனை ஓய்ந்துவிட்டது சார்ந்த மற்றொரு ராகத்திற்கு கால் மாற்றிக்கொள்ளட்டுமா என்று மேடையிலேயே கெஞ்சி விடுவோம்.\nஇப்போது நாட்டியமாடியபடியே பிரகாரத் தூண்கள் அனைத்தையும் கடப்பவரை யோசித்துப்பாருங்கள். பார்ப்பதற்கு எத்தனை பிரமிப்பாகவும் நளினமாகவும் இருக்கும். அந்த நளினத்தை எட்டுவதற்கு மறைவில் எத்தனை பயிற்சி செய்திருப்பார். ஒரு தாளத்தில் ஒரு ராகத்திலேயே சுவரக் கோர்வைகளாக பல மெலடிகளை அணிவரிசையாக இட்டு நிரப்பியவாறே (நேரம்)காலத் தூண்களை வேகம் கெடாமல் இசை மேடையில் கடந்து செல்வது கேட்பதற்கு எத்தனை நன்றாக இருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு எத்தனை பயிற்சி வேண்டும்.\nநாட்டியமாடிச் செல்பவரைக் காண்கையிலேயே அதன் அபிநய லாகவங்கள் பலவற்றையும் மனத்தோடு ரசிப்பதற்கு பித்துநிலைக்கு அந்த நடை என்னைத் தள்ளுகிறதா என்று சரிபார்ப்பது எத்தனை எளிய அளவுகோலோ அத்தனை எளிய அளவுகோலே அதே போல ஒருவர் இசை மேடையில் செய்யும் கணக்குகள் எனப்படும் சுவரக் கோர்வைகளின் ஜாலங்கள் என்னைப் பித்துநிலைக்கு இட்டுச் சென்றதா எனச் சரிபார்ப்பதும்.\nஇன்னொன்று, இந்த சுவரக் கணக்குகளை ஜெயமோகன் இப்போதெல்லாம் கேட்பதாகச் சொல்லும் இந்துஸ்தானி இசையிலும் அபாரமாக நிறையவே செய்வர். (தமிழ் எழுத்தாளர்கள் இந்துஸ்தானி இசை கேட்பதாவது என்ன புது டிரெண்டா, என் முன்னிலையில் சென்ற வருடத்திலேயே நான்கு எழுத்தாளர்கள் கூறிவிட்டனர்.)\nபித்துநிலைக்கு இட்டுச் செல்வதென்பது ஒரு அளவுகோல்தான். மிகவும் அகவயமான அளவுகோல். எனக்கு என் பித்துநிலை உங்களுக்கு உங்கள் பித்துநிலை. நான் ஒரு கலையின் மேன்மை பற்றி அறவே அறியாதவன் என்கிற பொறுப்பற்ற மேட்டிமையில் மட்டுமே இவ்வாறான அளவுகோல்கள் கொண்டு ரசிப்பேன். ஆனால் அது என் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. அதனால்தான் நாட்டியக் கலை பற்றி என்னுடைய எந்தக் கருத்தையும் வெளியே சொல்வதில்லை. என் உறவினர்கள் பலரும் நாட்டியமாடுபவர்கள் என்றாலும் கூட. தெரியாது தெரியாது எனச் சொல்லிக்கொண்டே தொடர்ந்து இருபது வருடங்கள் அதைப்பற்றி எழுதிவைக்க எனக்கு வேறு விஷயங்களா இல்லை.\nசரி, மீண்டும் கணக்குகளுக்கு வருவோம். மேலே அறிமுக நிலையிலேயே சட்டென்று தோன்றிய உதாரணம் வைத்து எளிதாகத்தான் விளக்கியுள்ளேன். ஒரே கட்டுரையில் செய்துவிடும் அளவிற்கு நம் பாரம்பர்யக் கலைகள் அத்தனை நுட்பமானவை சிக்கலானவை இல்லை என்றாலுமே. ராகம் தானம் பல்லவி கட்டுரைத் தொடரில் மற்றொரு அறிமுகம் உள்ளது.\nஇந்த இசைக் கணக்குகளில் இன்றைக்கு டி.என்.எஸ்.கிருஷ்ணா என்பவரே சூரர். சேஷகோபாலனின் மகன். டி.எம்.கிருஷ்ணா இக்கணக்குகளில் சூரர் இல்லை. சாதாரணர். உணர்ச்சியாகப் பாடுவதில்தான் சமர்த்தர். அதாவது நம்மைப் பித்துநிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய உணர்வுப்பூர்வமான பாட்டிலேயே டி.எம்.கிருஷ்ணா வல்லவர். ராகங்களை அதன் முடிவிலிவரை நீட்டிப் பாடக்கூடியவர். ஒரே ராகத்தில் நான்கு மணிநேரங்கள் தொடர்ந்து பாடப்படும் கச்சேரிகளை இன்றளவும் கொடுப்பவர். ஜெயமோகனும் நாமும் கடைகளில் வாங்கிக் கேட்கும் இருபது ஆல்பங்களில் இவை இடம்பெறாது. முந்நூறு பக்கள் கொண்ட புத்தகத்தையே பதிப்பிக்க மறுக்கும் கலைவர்த்தகர்கள் மூவாயிரம் பக்கங்கள் கொண்டதை அத்தனை எளிதாகப் போட்டுவிடுவரா அதை லட்சக்கணக்காய் நாம்தான் வாங்கியும்விடுவோமா நான் இசை ரசிகனைச் சொல்கிறேன்.\nஏன் இந்த இசை கணக்குகளில் டி.எம்.கி. சிறந்தவர் இல்லை என்கிறேன் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளது. ஒன்றை மட்டும் எளிதாக உங்களிடம் கடத்த முடியும். முன்னர் குறிப்பிட்ட உதாரணத்தில் தூண்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. அவை இருப்பதை ஏற்று நாட்டியத்தை கவனித்துக்கொண்டு சென்றால் போதும். ஆடுபவரும் சரி, பார்ப்பவரும் சரி. இசையில் அத்தூண்களை தாளம் என்றேன். அதை யாராவது சரியாக அவதானிக்க வேண்டும் (தொடையில் போடவேண்டும்) இல்லையா. அதாவது கால இடைவெளிகளை கோட்டைவிட்டால் தூண்களைச் சட்டென்று இடைவெளிகளில் கூட்டியோ குறைத்தோ இடம் மாற்றிப் பொருத்துவது போல ஆகிவிடும். தூண்களிடையே சாதரணமாய் நடப்பவர் சமாளித்துக் கொள்வார், சட்டென்று வேகமாக நடப்பார் அல்லது மெதுவாக. செய்து இரு தூண்களின் இடைவெளியை அதே எண்ணிக்கையான தப்படிகளில் கடந்துவிட்டதாகக் ‘கணக்கு’ சரியாக வருவதாய்க் காட்டி விடுவார். ஆனால் நாட்டியமாடுபவர் பாடு பெரும்பாடு. அடுத்த தூண் இங்குதான் என்கிற அனுமானத்தில் காலெடுத்து ஆடியவாறு முன்செல்பவர் சடாரென்று அடுத்த தூண் முன்னாலோ பின்னாலோ போய்விட, அதற்கு அடுத்த தூணும் இதுபோல இடம் மாறுமா மாறாதா என்று குழப்பம் வர, ஈடுகட்ட ஆடிவரும் நாட்டியத்தை மாற்ற, சற்றேனும் நளினத்தையாவது இழப்பார். அல்லது அபிநயக் கற்பனை தடைபட்டு நாட்டியத்திற்கு பதிலாக நம்மைப் போல தூண்களிடையே வெறுமனே தீய்த்து தீய்த்து நடந்து விடுவார். பார்ப்பவர்களுக்கு ரசனை ஊறு பெரும் ஊறு. புடவை தடுக்கிய நாட்டியத்தின் நிலை.\nஇசையில் பாடுபவரே தாளங்களைப் போட்டுக்கொள்ளவேண்டும். இது பின்னணியில் நடைபெற மனத்தில் முன் கற்பனைவெளியில் இசை நாட்டிய சுவரம் கோர்வைக் கணக்குகளை அவர் விரிக்கவேண்டும். தாள ஓட்டம் சரியாக அமையாது முன்வெளியின் கற்பனை பலசமயம் கவிழ்த்துவிடும். அதனால் சில வேளைகளில் சுதாரித்து முன்கற்பனைக்கு ஏற்று பொருந்துகிறார்போல போகிற போக்கில் தூண்களின் இடைவெளிகளை தொடையில் வேகமாகவோ மெதுவாகவோ தாள இடைவெளிகளைத் தட்டி சரிகட்டிவிடுவர். ஆப்பரேஷன் சக்ஸஸ் பேஷண்ட்…\nடி.எம்.கிருஷ்ணாவிற்கு இவ்வாறு சிலமுறையாவது நடந்துவிடும். பத்து கச்சேரிகள் கேட்டால் நான்கைந்திலாவது. அவர் கணக்குகளை அறிந்தவராய் இருக்கலாம். மேடையில் அதில் சூரர் இல்லை. அவருக்கும் இது தெரிவதால் தேவையான அளவிற்குச் செய்துவிட்டு வேறு பலங்களை முன்வைப்பதில் கவனம் கொள்வார்.\nசொல்லப்போனால் இதன்படி பார்த்தால், ஜெயமோகன் தன்னை பித்துநிலைக்கு இட்டுச் சொல்லும் இசையை வழங்குவதாகக் குறிப்பிடும் சஞ்சய்க்கு தான் தாளம் நன்றாய் நிற்கும். இசை ஊரறிந்த விஷயம் இது. டி.என்.எஸ்.கிருஷ்ணாவிற்கு அடுத்து அவர்தான் இன்றைய முன்னனி பாடகர்களில் ‘கணக்கு’களில் சிறந்தவர் என்றும் விவாதிக்கலாம் (போன தலைமுறையில் சேஷகோபாலன் போன்ற வேறு கில்லாடிக் கணக்கு கலைஞர்கள் உள்ளனர்; அதற்கும் முந்தைய தலைமுறையில் ஆலத்தூர் சகோதரர்கள் என்று பட்டியல் நீளும்). ஆனால் நிச்சயம் இந்தக் கணக்கு அளவுகோலில் டி.எம்.கி. ஒரு மாத்து கீழ்தான். ஆனால் கணக்கு தாளம் என்று தப்பினாலும் என்றுமே உணர்வாய்ப் பாடிக்கொண்டிருப்பார் (உடனே இசைக் கலைஞரே இல்லை என்று தூக்கியடிக்க முடியாது என்பதால் கூடவே இதையும் சொல்கிறேன்). அவரவருக்குப் பலவித பலங்கள் பலவீனங்கள். அனைத்து சிறந்த கலைஞர்களும் இவ்வாறே.\nஇவை புரிவதற்கு நான்கு கச்சேரிகள் கேட்டால் போதாது. மேலும், இவ்வகை அளவுகோலை அறிந்துகொள்ளும் பயிற்சியும் அவசியம். இசையைக் கேட்டதுமே நாம் அடைந்துவிடும் பித்துநிலை அளவுகோல் இதற்கு உதவாது. அவ்வாறுதான் நான் கேட்பேன் அது என் உரிமை என்று நாம் உறுதிசெய்துகொண்டாலும். அவரவர் ரசனை மட்டத்திற்கு ஏற்றவகையிலேயே அணுகும் கலை விரியும். அல்லது சுருங்கும்.\nநுண்கலைகள் பலவற்றிலும் இவ்வகை நுட்பங்களை அறிவதென்பதும் ரசனையின் அங்கமாய் ஆகிவிட்டிருக்கும். அக்கலையின் தொன்மையின் அளவுகோல் அது. அதையே தங்கள் வசதிக்கேற்பக் குறையாகக் காண்பது அக்கலையில் பயிற்சியற்றவர்கள் செய்வது. சற்று இளகிச் சொன்னால் இலக்கியம் வழியே என்பதுபோல இலக்கணம் வழியே மொழியை அணுகுவதும் கற்கும் முறைதானே பழுத்த கலைகளை என்னைப் போன்ற பாமரர்கள் காலப்போக்கில் அதற்கான முன்பயிற்சி இன்றி அனுகமுடியாது போய்விடும்தான். ஜெயமோகன் புதினங்களைப் படிக்க ஒரு வாசகநிலைத் தகுதியை முயன்று வரவழைத்துக்கொள்ள வேண்டும் இல்லையா\nநான் வெறும் எளிய கலா ரசிகன். இலக்கிய ரசனையை உயர்த்திக்கொள்ள இலக்கியத்தை எவ்வாறு ரசிக்க வேண்டும் என்று மூத்தவர்கள் எழுதியவற்றை என்னால் முடிந்த அளவு சிரத்தையாக வாசிக்கிறேன். பல விஷயங்கள் இன்னமும் புரியவில்லை. இனியும் புரியாது என்றும் ஆகலாம். ஆனால் கருத்து சொல்லவேண்டும் என்பது என் எழுத்தின் நமைச்சல். அரைகுறையாகப் புரிவதை அவ்வாறுதான் என் புரிதல் என்றே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டால் போதும் எனத் தோன்றுகிறது. பிறகு இலக்கியதைப் பற்றி எது வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம், தொடர்ந்து செய்துவந்தால் அதையே சாதனை போலவும் சொல்லிக்கொள்லலாம் எனத் தோன்றுகிறது. உதாரணமாய், வாசித்ததுமே என்னை பித்துநிலைக்கு எடுத்துச் செல்லும் எழுத்தே என்னை ஈர்ப்பவை. எனக்கு வாசிக்கையில் எழுத்து இசையாய் ஒலிக்கவேண்டும் அதுவே என் ரசனை. புத்தியைத் தூண்டும் பின்ன மாத்திரை மரபெழுத்தோ கவியோ என்னை ஈர்ப்பவை இல்லை. எத்தனை மரபும் வளர்ச்சி நிலைகளும் படிமங்களும் நுண்மைகளும் அவற்றில் இருந்தாலும். அவற்றை தேவையான நுண்மையான அளவுகோல்கள் கொண்டு வாசிப்பது எழுத்து ரசனையா என்றே சந்தேகமாய் உள்ளது. எனக்குப் புரியவில்லை என்பதாலும் இருக்கலாம். எனக்கு வராதது கலையா என்றே கடுப்பாகிறது. இவ்வாறெல்லாம் இலக்கியத்தைப் பற்றி எழுதலாம் எனத் தோன்றுகிறது.\nதினமும் செய்வதற்கு இவ்வகை அரைகுறைச் சிந்தனைகள் நிறைய இருந்தாலும் நல்லவேளையாக எனக்கு அவகாசமில்லை. திராணியுமில்லை. அதனால் புரியாத பல கலைகள் பற்றி அநாயாசமான மனோதிடத்துடன் நான் எழுதிச்செல்வதை நீங்கள் பெறுவதற்கில்லை. ஆனாலும் கலைகள் அநாதி. எப்படியோ பிழைத்துக்கொள்ளட்டும். இல்லை தன்மானங்காக்க மாய்த்துக்கொள்ளட்டும்.\nஜெயமோகன் இசை வரலாற்றைப் பற்றி, இசையின் வளர்ச்சி நிலை, உதவிய சமுதாயங்கள் என்று இசையைச் சுற்றி எழுதியவர். எழுதுகிறவர். நல்ல பணி. நடக்கட்டும் நன்றாகவே. அவர் தளத்தில் இசை வரலாறு வளர்ச்சி பற்றி பல நல்ல கட்டுரைகள் உள்ளன. ஆனால் அவர் இசையை எழுதவில்லை. அவ்வாறு முயன்றபோதெல்லாம் அவ்வெழுத்தில் பிழைகள் மலிந்திருக்கும். ஏனெனில் அவர் கூறுவது போலவே அவருக்கு இசை தெரியாது. எப்படி நம் சங்க இலக்கிய மரபுக் கவிதைகளை அணுகுவதற்கு சுஜாதாவின் எழுத்து ஒரு பிழையான முன்மாதிரியோ அதுபோலத்தான் மரபிசையை அணுகுவதற்கு ஜெயமோகன் இசையைப் பற்றி எழுதுவதும்.\nஅவரது ‘இசை அறிதல்’ கட்டுரையின் ஒற்றை வரியின் பிழையை மறுப்பதற்கே இத்தனையாவது எழுதவேண்டியுள்ளது. இருபது வருடங்களாக இசை தெரியாது என்றவாறே இசை பற்றி எழுதிவைப்பதையெல்லாம் வாசித்துச் சரிபார்த்து…\nஎன் பணியல்ல அது. ஜெயமோகன் எனும் தமிழின் சிறந்த புனைவெழுத்தாளன் மீது என்றுமிருக்கும் அபிமானத்தினால்தான் இத்தனையாவது பொதுவெளியில் எழுதிடத் துணிந்தேன்.\nசாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா http://www.jeyamohan.in/89353\nPosted in கட்டுரை, கதம்பம், கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், கலை\n‹ Previousகாதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்\nNext ›நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 7 – நேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்\nஅலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை\nஅச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/surya-karthi-donates-rs-1-cr-film-chamber-theater-173654.html", "date_download": "2018-08-18T01:00:26Z", "digest": "sha1:75PRM7UVCRMQSW3GL3SXCO2LLUG7IGUX", "length": 11197, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிலிம்சேம்பர் திரையரங்கம் கட்ட சூர்யா- கார்த்தி ரூ.1 கோடி நன்கொடை! | Surya - Karthi donates Rs 1 cr for Film Chamber Theater | பிலிம்சேம்பர் திரையரங்கம் கட்ட சூர்யா- கார்த்தி ரூ.1 கோடி நன்கொடை! - Tamil Filmibeat", "raw_content": "\n» பிலிம்சேம்பர் திரையரங்கம் கட்ட சூர்யா- கார்த்தி ரூ.1 கோடி நன்கொடை\nபிலிம்சேம்பர் திரையரங்கம் கட்ட சூர்யா- கார்த்தி ரூ.1 கோடி நன்கொடை\nசென்னை: பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் கட்டிட வளாகத்தில் புதிய திரையரங்குகள் அமைக்க ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளனர் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.\nசமீப காலமாக எங்கும் எதிலும் சூர்யாவின் பெயர்தான் நிறைந்து நிற்கிறது. மாணவர்களுக்கு கல்வி உதவி, ரசிகர்களுடன் சந்திப்பு, சமூக நலப்பணிகள், அடுத்தடுத்த புதிய படங்கள் என பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.\nஇப்போது பிலிம்சேம்பர் வளாகத்தில் புதிய திரையரங்கம் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார், தன் தம்பி கார்த்தியுடன் இணைந்து.\nஅண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் ஏற்கெனவே ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.\nஇப்போது அடுத்த பகுதியை இடித்துவிட்டுக் கட்டப் போகிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு தியேட்டர் மற்றும் அதன் மாடியில் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை இடித்துவிட்டு, மூன்று புதிய திரையரங்குகளை கட்டப் போகிறார்கள்.\nஇதற்காகத்தான் சூர்யா - கார்த்தி அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துள்ளனர்.\nஇந்த திரையரங்குக்கு சூர்யா மற்றும் கார்த்தியின் பெயரையே சூட்டிவிடலாம் என பிலிம்சேம்பர் நிர்வாகிகள் முடிவு செய்தபோது, எங்கள் பெயரை விட எங்கள் தாய் - தந்தை பெயரைச் சூட்டுங்கள் என்று கூறிவிட்டார்களாம் சூர்யாவும் கார்த்தியும்.\nஎனவே புதிதாகக் கட்டப்படும் 3ல் ஒரு திரையரங்குக்கு சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை சிவகுமார், தாயார் லட்சுமி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு.. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிவாரண உதவி\nசூர்யாவுக்காக பாடிய \"மச்சான்\" புகழ் செந்தில் கணேஷ்\n‘சாதித்த விவசாயிகளுக்கு ரூ. 10 லட்சம், விவசாயிகள் நலத்திட்டத்திற்காக ரூ. 1 கோடி’.. சபாஷ் சூர்யா\nதமிழ் சினிமாவின் பேரழகன், கர்ஜிக்கும் சிங்கத்துக்கு 43 வயது ஆகிவிட்டது\nசூர்யா படத்திலிருந்து பிரபல நடிகர் விலக காரணம் என்ன\nசூர்யா, கார்த்தியை வைத்து படம் எடுக்கும் பாண்டிராஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-apr-30/series/118083-childrens-diary-11.html", "date_download": "2018-08-18T00:26:09Z", "digest": "sha1:4DKN244XNPNUDKPAZU5GEB5KZY45G3EV", "length": 18136, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "குறும்புக்காரன் டைரி - 11 | Childrens Diary - 11 - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nசுட்டி விகடன் - 30 Apr, 2016\nவெயிலுக்கு டாட்டா வீட்டுக்குள்ளே கலாட்டா\nஊர் சந்தையில் உற்சாக உலா\nபொம்மைகளோடு விளையாட என்னிடம் வாங்க\nசோனு முயலும் குட்டி மீனும்\nகுறும்புக்காரன் டைரி - 11\nடாப் 10 ஆப்ஸ் 10\nகுறும்புக்காரன் டைரி - 11\nகுறும்புக்காரன் டைரிகுறும்புக்காரன் டைரி - 2குறும்புக்காரன் டைரி - 3குறும்புக்காரன் டைரி - 4குறும்புக்காரன் டைரி - 5குறும்புக்காரன் டைரி - 6குறும்புக்காரன் டைரி - 7குறும்புக்காரன் டைரி - 8குறும்புக்காரன் டைரி - 9குறும்புக்காரன் டைரி - 10குறும்புக்காரன் டைரி - 11குறும்புக்காரன் டைரி - 12குறும்புக்காரன் டைரி - 13குறும்புக்காரன் டைரி - 14குறும்புக்காரன் டைரி - 15குறும்புக்காரன் டைரி - 16குறும்புக்காரன் டைரி - 17குறும்புக்காரன் டைரி - 18குறும்புக்காரன் டைரி - 19குறும்புக்காரன் டைரி - 20குறும்புக்காரன் டைரி - 21குறும்புக்காரன் டைரி - 22\nபீதியாகுறதுனா என்னான்னு ஒரு பையனுக்கு இதைவிட தெளிவா புரியவைக்க வேணாம். ஒரு ரூமுக்குள்ள போட்டு கதவைச் சாத்தினாலே அலற ஆரம்பிச்சுருவேன். நேத்து அவ்வளவு பெரிய காட்டுக்குள்ளே, தனியாளா சுத்தினதை நினைக்க நினைக்க டெரர் ஆகுது.\nசோனு முயலும் குட்டி மீனும்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nakkeran.com/index.php/2018/06/page/3/", "date_download": "2018-08-18T00:36:10Z", "digest": "sha1:CIA6EAKZ55ZYS5C2EV5TBCY6W4OAJNLC", "length": 10475, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "June 2018 – Page 3 – Nakkeran", "raw_content": "\nதிருவள்ளுவர் வரலாறு திருவள்ளுவர் காலம் அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., […]\nபோருக்குப் பின்னர் மடையுடைத்துப் பாயும் காட்டாற்று வெள்ளம் போல் தமிழர் தாயகத்தில் பாய்கிறது\nசிங்களக் குடியேற்றங்கள் போருக்குப் பின்னர் மடையுடைத்துப் பாயும் காட்டாற்று வெள்ளம் போல் தமிழர் தாயகத்தில் பாய்கிறது எதிர்வரும் 26 ஆம் நாள் திருமுறிகண்டி கோயில் முன்றலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளைகக் […]\nதிருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்\nதிருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் […]\nமுல்லைத்தீவு பறிபோவதை தடுக்கும் வழிமுறைகளை ஆராய செயலணி உருவாக்கம் -வரவேற்கிறது கூட்டமைப்பின் கனடா கிளை\nமுல்லைத்தீவு பறிபோவதை தடுக்கும் வழிமுறைகளை ஆராய செயலணி உருவாக்கம் -வரவேற்கிறது கூட்டமைப்பின் கனடா கிளை Jaso Tharan — June 8, 2018 in செய்திகள் முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் […]\nவடக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தக் கோரி ஜனாதிபதி, பிரதமரிடம் கோர முடிவு\nவடக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தக் கோரி ஜனாதிபதி, பிரதமரிடம் கோர முடிவு By Nithiyaraj June 6, 2018 வடக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தக் கோரி ஜனாதிபதி, பிரதமர் […]\nபுதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள்\nபுதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள் நக்கீரன் விடுதலைப் போராட்டத்தில் 1974 ஆம் ஆண்டு சயனைட் அருந்தி உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரின் 44 வது […]\nஎமது துயரில் பங்கொண்டு தேறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி\nஎமது துயரில் பங்கொண்டு தேறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி ஒரு உயிரின் பயணம் கருவறையில் தொடங்கி கல்லறையில் முடிகிறது என்கிறார்கள் அறிஞர்கள். எங்கள் மருமகள் துஷ்யந்தியின் பயணம் கருவறையில் இருந்து சுடுகாட்டில் முடிந்துவிட்டது. விம்மல், […]\n“நகுலன் கொளுத்திய வெடி நம் தலைக்கு நாமே வைத்த வெடியே தவிர வேறொன்றில்லை”\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்\neditor on வரலாற்றில் வாழும் கருணாநிதி\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\nகேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23 லட்சம் பேர், பிரதமர் விரைந்தார் August 17, 2018\nகாவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை August 17, 2018\nபாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு August 17, 2018\nகோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி) August 17, 2018\nவாஜ்பேயி: இந்திய அணு ஆயுத திறனுக்கு வலு சேர்த்தவர் August 17, 2018\nகேரள வெள்ளம்: 'மக்களை காப்பாற்ற முடியவில்லையே' - கதறி அழுத ஊராட்சித் தலைவி August 17, 2018\nயமுனை நதிக்கரையில் வாஜ்பேயி உடல் தகனம் August 17, 2018\nகேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள் August 17, 2018\nசினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா August 17, 2018\nவாஜ்பேயி: அமெரிக்க எதிர்ப்பை மீறி மாறனை ஆதரித்தார் - நினைவுகூரும் பழனிமாணிக்கம் August 17, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vencobbchicken.com/?cat=45&lang=ta", "date_download": "2018-08-18T00:35:55Z", "digest": "sha1:JJHFTPS4WE36KHBHG5BXSAETKLLNHMVS", "length": 3751, "nlines": 73, "source_domain": "vencobbchicken.com", "title": "தகவல் மூலம் | Vencobb", "raw_content": "\nமுள்ளங்கி – கால் கிலோ பருப்பு – 100 கிராம் எலும்பு சிக்கன் துண்டு – கால் கிலோ தக்காளி – 100கிராம் வெங்காயம்\nசிக்கன் – 1/4 கிலோ கார்ன் – 1 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ், காரட், பச்சை பட்டாணி – 1 கப்\nபோன்லெஸ் சிக்கன் – 600 கிராம் புதினா – ஒரு கைபிடி பச்சை மிள்காய் – 2 இஞ்சி துருவல் – 1\nசிக்கன் – 1/4 கிலோ, பச்சை மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி, சீரகம் – 1 தேக்கரண்டி, புதினா\nசிக்கன் டிக்கா சோயா மசாலா (இந்திய சீன முறை)\nசிக்கன் – எலும்பு இல்லாதது 1/2கிலோ தயிர் – ஒரு மேசை கரண்டி மிளகாய்பொடி – 2tsp மஞ்சள்பொடி – 1tsp இஞ்சி\nதென் இந்திய உணவு வகைகள்\nஇந்த நிகழ்வு ஆகஸ்ட் 15 அன்று நடத்தி வருகிறது +more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vskdiary.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-08-18T00:32:31Z", "digest": "sha1:RZYFTIULOIGMH6MZQ6SINTAHOTAVD5ZZ", "length": 3599, "nlines": 43, "source_domain": "vskdiary.blogspot.com", "title": "ஒரு வழக்கறிஞரின் குறிப்பேடு....: பொங்கல் திருநாள்… இது உழவர் திருநாள்…", "raw_content": "\nநயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - குறள். (நீதி தவறாமல் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகத்தார் போற்றுவர்).\n'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்\n- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்\nஞாயிறு, 15 ஜனவரி, 2012\nபொங்கல் திருநாள்… இது உழவர் திருநாள்…\n03. ஓர் கபடு வாராத நட்பும்\n12. தடைகள் வாராத கொடையும்\n15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்\n16. துய்யநின் பாதத்தில் அன்பும்\n{அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்\nஅறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி\nதொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ\nசுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)}\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 5:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16401-32-facts-for-contended-life", "date_download": "2018-08-18T01:13:09Z", "digest": "sha1:DFAJV3R4HCDPK4ONW6GANON42PORCN5D", "length": 20654, "nlines": 264, "source_domain": "www.brahminsnet.com", "title": "32 facts for contended life", "raw_content": "\nகுறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை முப்பத்திரெண்டு\n1. உரைக்கவல்லார்க்கும் நினைக்கவல்லார்க்கும் வைகுண்டம் ஆகும் தம்மூரெல்லாம் \n2. விஷ்ணு என்று சொன்னால் அது திருநாமம். \"ௐ விஷ்ணவே நம:\" என்றால் அதுவே மந்த்ரமாகிவிடுகிறது. ஆறு அக்ஷரங்களுடன் கூடிய உயர்ந்த மந்த்ரம் இது. ஒரு புஷ்பத்தை அல்லது துளஸி தளத்தை எடுத்து \"ௐ விஷ்ணவே நம:\" என்று அர்ச்சனை பண்ணிணோமானால் அந்த எம்பெருமான் பரமானந்தத்தை அடைகிறான்.\n3. துளசியை ஜாக்கிரதையாக நகம் படாமல் க்ரஹிக்க வேண்டும். அவ்வாறு க்ரஹிக்கும்போது 'துளசி அமிர்த ஜன்மாஸி சதாத்வம் கேஸவப்ரியே' என்று சொல்லி க்ரஹிக்க வேண்டும்\n4. புஷ்பத்தையோ, துளசியையோ எடுத்து ஹ்ருதயத்துக்கு நேரே வைத்து, இந்த என் ஹ்ருதயம் அமிர்தமயமானது, இந்த ஹ்ருதயத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன், என்னையே உனக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அவன் திருவடியில் அர்ப்பணம் பண்ண வேண்டும்\n5. அவ்வாறு அர்ப்பணம் செய்யும் பொழுது கீழ் வரும் ஸ்லோகத்தின் பொருளை நினைவுகூர்ந்து புஷ்பத்தை சேர்க்க வேண்டும்\nஸர்வ பூத தயா புஷ்பம்\nசாந்தி: புஷ்பம் தப: புஷ்பம்\n6. சத்யம் பகவானுக்கு மிக உகந்த புஷ்பம். மனுஸ்ம்ருதி சொல்கிறது \"சத்யமே பேசு. சத்தியத்தையும் ப்ரியமாக பேசு. உண்மையை புண்படும்படி சொல்லாதே, அதே சமயத்தில் ப்ரியத்தினால் கூடப் பொய்யைச் சொல்லாதே. இதுவே உன் தர்மமாக இருக்கட்டும்\"\n7. 'விஷ்ணவே நம:' என்று சொல்லி அர்ச்சிக்கும்போது மேலே சொன்ன எட்டும் நம்மிடம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணர்ந்து அர்ச்சனை செய்தால் இந்த எட்டு விதமான புஷ்பங்களும் - அதாவது குணங்களும் நமக்கு வந்துவிடும்.\n8. நாம் ஒரு புஷ்பத்தை கொடுக்கிறோம். ஒரு நாமாவை சொல்கிறோம். அவன் எட்டு மடங்காக திருப்பித் தருகிறான். அவ்வளவு காருண்யம் அவனுக்கு. இவ்வாறு பலன் என்னவென்று தெரிந்து கொண்டு அர்ச்சனை செய்கிறோம். பலன் கிடைக்கவில்லை என்றால் நிஷ்டை போறவில்லை என்று அர்த்தம். மீண்டும், மீண்டும் பலன் சித்திக்கும்வரை நிஷ்டையுடன் முயற்சி செய்ய வேண்டும்.\n9. வியாஸ மஹரிஷி கொடியதென்று சொல்லக்கூடிய கலியுகத்தை 'சாது' என்கிறார். ஏனென்றால், சுத்தமான மந்தரோச்சாரணத்தை மனம் லயித்துக் கேட்டால், ஒரு அசுவமேத யஜ்ஞம் செய்தால் பெறக்கூடிய பலனை இந்த கலியுகத்தில் பெற்றுவிடலாம். இவ்வளவு சுலபமான முறையில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது 'மனம் லயித்து' என்பது\n10. மனம் லயிக்க வேண்டுமென்றால் ப்ராணாயாம பலம் இருக்க வேண்டும். ப்ராணாயாமம் என்பது மூச்சை இழுத்து வெளியிடும் பயிற்சி என்று எளிமையாக சொல்லலாம். ஆனால், இழுத்த மூச்சை உள்ளே தேக்கி வைக்கிற காலம் (நேரம்) மிகவும் முக்கியம். அந்த நேரம் அதிகமாகிக்கொண்டே வரவேண்டும். அப்பொழுது மனம் கட்டுப்படும்.\n11. மல்லிக்கொடி மாதிரி ஆடுகிற மனத்தை ப்ராணாயாமத்தில் நிருத்தி, எம்பெருமான் என்கிற அந்த கொம்பில் அதாவது அவன் திருவடியில் கொண்டு சுற்றி விட்டு விட்டால் அது பற்றிக்கொண்டு படரும்.\n12. ஸ்த்ரீகளும் ப்ராணாயாமம் செய்யலாம். மந்திரம் கூறி செய்யாமல், ஸ்லோகம் மூலம் பயிற்சி செய்யலாம். ராம மாதா கௌஸல்யா தேவி ப்ராணாயாமம் செய்திருக்கிறாள். அவள் பெற்ற பலன் உயர்ந்தது.\n13. அவ்வாறு ப்ராணாயாம பலத்துடன் மனம் லயித்து அவனைப் பெற எட்டினால் எல்லாமே கிட்டி நிற்க்கும். எட்டினால் எட்டாததே கிடையாது.\n14. எட்டு என்பது பகவான் நாமாவான \"ௐ நமோ நாராயணாய\" என்பதைக் குறிக்கிறது. எதையெல்லாம் அது தருகிறது என்று கேட்டால்,\nநிலம் தரம் செய்யும் நீள்விசும்பருளும்\nவளம் தரும் மற்றும் தந்திடும்\nநலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்\nநாராயணா என்னும் நாமம் ||\n15. நாராயணா என்னும் நாமம் மோக்ஷத்தையே வாங்கிக்கொடுக்கும்\n16. இந்த சரீரத்தில் நாம் மோகம் வைக்ககூடாது. ஆதிசங்கரர் சொன்னதை நாம் அப்படியே மனதிலே எழுதிக்கொள்ள வேண்டும்.\nஅதாவது \" யார் மோக்ஷத்திற்க்கு அதிகாரி\n\"எவனொருவன் உயிரோடு இருக்கும்பொழுதே தன் சரீரத்தை பிணமாக நினைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்க்கு அதிகாரி\n17. நம் உள்ளுக்குள்ளே பரமாத்மா எழுந்தருளியிருக்கிறான். எங்கும் ப்ரவேசிக்ககூடியவன் நமக்குள்ளேயும் இருக்கிறான், அசேதனங்களுக்குள்ளேயும் இருக்கிறான் என்கிற உயர்ந்த ஸாஸ்த்திரத்தை உணர வேண்டும்\n18. நமக்குள்ளே இருப்பவனை ஆசார்யர்களால் கொடுக்கப்பட்ட மந்திரத்தின் மூலமாக பார்க்கலாம்.\n19. ஒரு மந்திரத்தை நாமாக எடுத்து புத்தகத்தில் படித்து மனப்பாடம் பண்ணக்கூடாது. அதை அவ்வாறு மனப்பாடம் செய்து ஜபம் பண்ணிணால் ஒருநாளும் பலனைக் கொடுக்காது. ஆசார்யனிடத்தில் சென்று அடிபணிந்து அவர் உபதேசம் பண்ணிய பிற்பாடுதான் அந்த மந்த்ரத்தை நாம் அனுஷ்டானத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.\n20. மந்திரத்தினிடத்திலும், மந்திரத்தின் உள்ளீடான தேவதையினடத்திலும், அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனிடத்திலும் சமமான பக்தி நமக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அது சித்தியை கொடுக்கும். அதாவது பூர்ண பலனை கொடுக்கும்.\n21. காயத்ரீ மந்த்ரத்தை யார் நன்றாக கானம் பண்ணுகிறார்களோ, அவர்களை அம்மந்திரம் ரக்ஷிக்கிறது. அஷ்டாக்ஷரம் அவ்வாறே ரக்ஷிக்கும். புருஷர்கள் காயத்ரியை சொன்னபின் அஷ்டாக்ஷரம் சொல்ல வேண்டும்.\n22. ப்ரணவத்தை க்ருஹஸ்தர்கள் தனியாக உச்சரிக்ககூடாது. மந்திரத்துடன் சேர்த்து உச்சரிக்கும்பொழுது மூன்று மாத்திரையிலே உச்சரிக்க வேண்டும். ஸ்த்ரீகள் ப்ரணவத்தை 'அம்' என்று உச்சரிக்க வேண்டும்.\n23. சாஸ்திரத்தை மீறி, தனக்கு தோன்றியபடி ஒருவன் காரியம் செய்வானேயானால் அவனுக்கு சித்தி ஏற்ப்படாது. இது பகவானுடைய வாக்கு.\n24. பகவானுக்கு கோபத்தை வரவழைக்காமல் நாம் சாஸ்த்திர வழியோடு வாழ வேண்டும்.\n25. ஆயிரம் தாய் தந்தையரின் அன்பைக் காட்டிலும் மேலானது சாஸ்த்திரம் நம்மீது காட்டும் அன்பு.\n26. சாஸ்த்திரம் தவறாமல் வாழ்கிறவனை நோக்கி எல்லா நலன்களும் பலன்களும் ஓடி வருகின்றன. அவன் செல்கின்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்ப்படும்.\n27. நமது ஸம்பிரதாயத்தில் ஞானத்தைக் காட்டிலும் ஆசாரத்திற்க்கும் அனுஷ்டானத்திற்க்கும் விசேஷ கௌரவம் தரப்படுகிறது.\n28. ஒருவர் ஆசாரமாக இருந்து அனுஷ்டித்தால்தான் மற்றவர்கள் அனுஷ்டிப்பார்கள். இல்லையென்றால் 'அவரே அனுஷ்டிக்கவில்லை, நான் எதற்க்கு அனுஷ்டிக்கவேண்டும்' என்று கேட்பார்கள்.\n29. அனுஷ்டானத்தில் ஸூரியனை பார்ப்பது மிகவும் முக்கியம். ஸூரியனை யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்கள். ஆகையால், நாம் ஸூரியன் உதிப்பதற்க்கு முன் எழுந்து அவன் வருவதை எதிர் நோக்கி வணங்கவேண்டும்.\n30. பகவான் ராமாவதாரத்திலே ஸூரிய குலத்திலே உதித்தான். க்ருஷ்ணாவதாரத்திலே ஸூரியனை முதலில் பார்க்கும் குலத்திலே வளர்ந்தான்.\n31. அப்படிப்பட்ட ஸூரியனை தனது வலது நேத்ரமாக உடையவன் லக்ஷ்மிந்ருஸிம்ஹன்\n32. ஓம்காரத்தில் முதலாவதாக வரும் அகார ரூபமாய் விளங்குபவன், ஸூரியனை நேத்ரமாக உடையவன், உம் என்கிற அக்ஷரத்திலே உறைபவன், அடிபணிந்தவர்களுக்கு அபய வரதனாய் இருப்பவன் நம் மட்டபல்லி லக்ஷ்மிந்ருஸிம்ஹன். அவனை இந்த ரோஹிணி நன்நாளிலே போற்றி உகப்போம்\n~o~o~o~o~o~o~ சுபமஸ்து. மங்களம் மஹதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2180-OBEDIENCE-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-18T01:13:02Z", "digest": "sha1:ACJRRFDYBPJLX5JEBCYS65UKRSRZEBKW", "length": 8017, "nlines": 222, "source_domain": "www.brahminsnet.com", "title": "OBEDIENCE-- -கீழ்படிதல்", "raw_content": "\nஒபே என்ற வார்த்தையிலிருந்த ஒபீடியன்ஸ் வந்திருப்பதாக எவரும் புரிந்துகொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த அந்த ஒபீடியன்ஸ் என்ற வார்த்தைக்கு கவனமாகக் கேட்டுக்கொள்வது என்றே மூலத்தில் அர்த்தம் என்றும் சொல்கிறார்கள்.\nசுச்ரூஷை என்று ஒன்று நாம் சொல்கிறோம். குரு சுச்ருஷையையே சிஷ்யனுக்குத் தலையான கடமையாகச் சொல்கிறோம். அதற்கும் நேர அர்த்தம் கேட்டுக் கொள்கிறது தான்.\nஆக, கீழ்படிதல் என்பதற்கு இங்கிலீஷ் வார்த்தையான ஒபீடியன்ஸ், பணிவிடை என்பதற்கு நம் தேசத்து வார்த்தையான சுச்ரூஷை ஆகிய இரண்டும் கேட்டுக் கொள்வது என்ற ஒரே அர்த்தத்தின் அடியாகத்தான் இருக்கிறது.\nகீழ்ப்படிவதும் பணிவிடையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கிற விஷயங்கள். இரண்டிற்கும் இரண்டு வேற பாஷைகளில் ஒரே அர்த்தம். ஏன் அப்படி இருக்கணுமென்றால்...\nகேட்டுக் கொள்வது என்றால், என்ன கேட்டுக் கொள்கிறோமோ அந்தப்படியே செய்ய வேண்டும் என்பதுதான் உள்ளர்த்தம்.\n, சொன்னபடி கேக்கறதில்லே என்றெல்லாம் சொல்லும்போது அத தானே அர்த்தம் ஹியருக்கும் அந்த அர்த்தமுண்டு. பெரியவர்கள் சொன்னபடி நடப்பதுதான் நிஜமான சுச்ரூஷையும் ஒபீடியன்ஸும். அதனால்தான் “ப்படி வார்த்தைகள் ஏற்பட்டிருக்கின்ற.\nரொம்பப் பொருத்தமாக ஒன்று தோன்றுகிறது. ஒபீடியன்ஸைக் கீழ்ப்படிதல் என்று சொல்கிறோம். உடம்பு பூராவையும் வாஸ்தவமாகவே கீழே பூமியிலே படியவிட்டுக் கிடப்பதுதான் ஸாஷ்டாங்க நமஸ்காரமாக இருக்கிறது\n« காரணம் - தயிர் கடைவது ஏன் | Why the White does makes the First move in Chess always\nஅர்த்தம், விஷயங்கள், obedience, obedience-- -கீழ்படிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023118", "date_download": "2018-08-18T00:24:43Z", "digest": "sha1:Z5OT76EVVZPYEVWU5LZKU5XKCGKTLD7C", "length": 18147, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "சட்டசபை வளாகத்தில் காங்., மஜத தர்ணா| Dinamalar", "raw_content": "\nசட்டசபை வளாகத்தில் காங்., மஜத தர்ணா\nபெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதவியேற்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டதை தொடர்ந்து, , கர்நாடக முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்று கொண்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, இரு கட்சி எம்.எல்.ஏ.,க்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கேவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சித்தராமையா கூறுகையில், பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. பா.ஜ.,வின் செயலை மக்களிடம் எடுத்து சொல்வோம் என்றார்.\nசட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா\nRelated Tags கர்நாடக தேர்தல் 2018 கர்நாடக சட்டசபை வளாகம் சித்தராமையா காங்கிரஸ் மஜத கர்நாடக சட்டசபை தர்ணா போராட்டம் முன்னாள் முதல்வர் ... பாஜக எடியூரப்பா\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n@sankaseshan - mumbai,: அறிவாளின்னு நினைத்து தனிமனித விமர்சனம் எழுதாதீர்கள். சி.ராமையா என்ன ஆட்டம் போட்டாராம் எ.ரப்பா தான் பிஜேபி யை விட்டு வெளியே போய் வேற கட்சி ஆரம்பித்து ஒரு ஆட்டம், சிறைத்தண்டனை கிடைக்கும் அளவுக்கு ஊழல் ஆட்டம், பின்னர் மீண்டும் பிஜேபி யில் சேர்ந்த ஆட்டம் என்று ஆடு ஆடு என்று ஆடியவர். என்னத்தையானும் கச்சாமுச்சான்னு கிறுக்க வேண்டியது..தானே படித்து சிரிச்சுக்க வேண்டியதா எ.ரப்பா தான் பிஜேபி யை விட்டு வெளியே போய் வேற கட்சி ஆரம்பித்து ஒரு ஆட்டம், சிறைத்தண்டனை கிடைக்கும் அளவுக்கு ஊழல் ஆட்டம், பின்னர் மீண்டும் பிஜேபி யில் சேர்ந்த ஆட்டம் என்று ஆடு ஆடு என்று ஆடியவர். என்னத்தையானும் கச்சாமுச்சான்னு கிறுக்க வேண்டியது..தானே படித்து சிரிச்சுக்க வேண்டியதா\nசரி - கண்ணில் படும்படியாக ஏதாவது செய்தால் தான் - கூப்பிடுவார்கள் - பேரம் பேச முடியும் - என்கிற எண்ணம் இருக்கும்\n17 கோடி பேர் அமர்ந்திருக்கிறார்கள் பாருங்கள் தர்ணாவில் இந்த போட்டோவில் இருப்பது யார் யார் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கே+15 பேர் மற்றவர்கள் அதான் உங்கள் மற்ற எம் எல் ஏக்கள் எங்கே இந்த போட்டோவில் இருப்பது யார் யார் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கே+15 பேர் மற்றவர்கள் அதான் உங்கள் மற்ற எம் எல் ஏக்கள் எங்கே இங்கே இருப்பதே அங்கே இருவர் நின்று உரையாடுதல் வேறு மூவர் எங்கோ பார்த்துக்கொண்டிருத்தல் இங்கே இருப்பதே அங்கே இருவர் நின்று உரையாடுதல் வேறு மூவர் எங்கோ பார்த்துக்கொண்டிருத்தல்காங்கிரஸ்+ ம.ஜ.த சேர்ந்தால் குறைந்தது 116 இருக்கவேண்டுமேகாங்கிரஸ்+ ம.ஜ.த சேர்ந்தால் குறைந்தது 116 இருக்கவேண்டுமே அதில் ஏற்கனவே 16 பேர் மிஸ்ஸிங் அப்படின்னா அட்லீஸ்ட் 100 பேர் அது கூட இல்லாமல் வெறும் 15 பேரா அதில் ஏற்கனவே 16 பேர் மிஸ்ஸிங் அப்படின்னா அட்லீஸ்ட் 100 பேர் அது கூட இல்லாமல் வெறும் 15 பேரா அப்போ என்ன நடக்குது உள்ளுக்குள் பூகம்பமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-08-18T00:23:08Z", "digest": "sha1:K37C5SLSM76HLIHNQV36VYMWVFT5273I", "length": 7492, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா ‘காஞ்சனா 3’ படத்தில் இருந்து ஓவியா விலகலா\n‘காஞ்சனா 3’ படத்தில் இருந்து ஓவியா விலகலா\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் ‘காஞ்சனா 3’ படக்குழுவில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. கடை திறப்பு, விளம்பர நிகழ்ச்சிகள் இவரை தேடி வருகின்றன. புதிய பட வாய்ப்புகளும் வந்துள்ளன.\nஅதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் ‘காஞ்சனா 3’ படத்திலும் நாயகியாக ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓவியா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.\nஇதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ‘காஞ்சனா-3’ படக்குழுவினர்….\n“ ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்சுடன் ஓவியா நடித்து வருகிறார். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக யாரோ புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஓவியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ஏன் இப்படி ஒரு வதந்தியை பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை” என்றனர்.\nPrevious articleதமிழில் ஆர்வம் காட்டும் ஷாலினி பாண்டே\nNext articleவெற்றி-தோல்வி பற்றி கார்த்திக்கு, சூர்யா சொன்ன அறிவுரை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.emagaz.in/catalog/product_info.php?cPath=32_62&products_id=1342", "date_download": "2018-08-18T00:16:55Z", "digest": "sha1:5PLRVRHCC5BH6BRQP5A4UZSVL24EH42A", "length": 3021, "nlines": 59, "source_domain": "www.emagaz.in", "title": "ebooks preview - emagaz.in", "raw_content": "\nபிப்ரவரி 19, 1855: தமிழ் தாத்தா உ. வே. சா பிறந்தநாள்.\nதக்க்ஷிண கலாநிதி, மகாமகோபாத்தியாய, முனைவர் உ.வே.சாமிநாதையர் (உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர்) பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள \"...உத்தமதானபுரம்\" எனும் சிற்றூரில் பிறந்தார்.\nபலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180112217265.html?ref=canadamirror", "date_download": "2018-08-18T00:36:26Z", "digest": "sha1:HY6M3BJWCEMXMQMB4ZRLHLPPPHLXPQWH", "length": 4795, "nlines": 42, "source_domain": "www.kallarai.com", "title": "திரு நவரத்தினம் சுந்தரலிங்கம் - மரண அறிவித்தல்", "raw_content": "\n(சின்னராசா, NSR Industrial உரிமையாளர், புன்னாலைக்கட்டுவன்)\nதோற்றம் : 19 மார்ச் 1948 — மறைவு : 11 சனவரி 2018\nயாழ். ஏழாலை மத்தி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் சுந்தரலிங்கம் அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம்(இராசமணி) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nதீபா(பிரான்ஸ்), காண்டீபன்(கண்ணன்- பிரான்ஸ்), சர்மிளா(மதி- இத்தாலி), லமிரா(லமி- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகந்தசாமி, விமலாதேவி(இலங்கை), தேவதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற மகிந்தன்(பிரான்ஸ்), சத்தியரூபன்(இத்தாலி), றஜிதா(பிரான்ஸ்), றாஜீவ்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகதிரவேலு, காலஞ்சென்ற காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nதங்கவடிவேல், லோகேந்திரம், சறோஜாதேவி, சிறீமகாராணி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜனனி, அபிசா, ஆயிசா(பிரான்ஸ்), அகிசன், லகிசன்(இத்தாலி), ஈசா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதேவதாசன் தேவன் — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/26543", "date_download": "2018-08-18T00:22:16Z", "digest": "sha1:GBEUK2NLRX4EGYGSQDEEVTBRHAYGHMNK", "length": 9489, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கண்ணாடியில் முகம் தெரிய வேண்டுமாயின் சிரிக்க வேண்டும் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nகண்ணாடியில் முகம் தெரிய வேண்டுமாயின் சிரிக்க வேண்டும்\nகண்ணாடியில் முகம் தெரிய வேண்டுமாயின் சிரிக்க வேண்டும்\nபுற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்துடனான சிரித்தால் மட்டுமே முகத்தைக் காட்டும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியுள்ளார்.\n2,000 டொலர்கள் முதல் 3,000 டொலர்கள் வரையான விலையில் இந்தக் கண்ணாடி டெப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.\nமுக உணர்ச்சிகளைக் கண்காணித்து சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது.\nகுறித்த நவீன கண்டு பிடிப்பு தொடர்பாக படைப்பாளி பெர்க் இல்ஹான் கருத்து தெரிவிக்கையில்,\n”எந்த கஷ்டம் வந்தாலும் அதைக்கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். அல்லது மரணமாவது தள்ளிப்போகக்கூடும்.\nநியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும், வைத்தியர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன்” என கூறியுள்ளார்.\nபுற்றுநோயாளி தொழில்நுட்பம் கண்ணாடி முகம்\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் நாசா\nசூரி­யனை இது­வரை இல்­லாத வகையில் நெருக்­க­மாகச் சென்று ஆய்வு செய்­வ­தற்­காக நாசா தயா­ரித்­துள்ள செயற்­கைக்கோள் இன்று விண்ணில் செலுத்­தப்­பட உள்­ளது.\n2018-08-12 15:14:31 சூரியன் செயற்­கைக்கோள் நாசா\nவட்ஸ் அப் இல் காணப்படும் 5 இலகுமுறை (whatsapp trick )\nநாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் சமூகத்தளம் தான் வட்ஸ் அப் ( whatsapp) , நாம் உபயோகிக்கும் இந்த whatsapp இல் இலகுவாக கையாள சிறந்த ஐந்து whatsapp trick ஐ பார்க்க முடியும்.\nசெவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.\n2018-07-31 12:21:08 செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகள் பூமி\nவட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஐபோன்களுக்கான வட்ஸ் எப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளது.\n2018-07-26 17:20:43 ஐபோன் புதிய பதிப்பு தொலைபேசி\nசெவ்வாயில் நீர் : விஞ்ஞானிகள் புதிய தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என முன்பே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n2018-07-25 23:27:34 செவ்வாயில் நீர் .விஞ்ஞானிகள் தகவல்\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vaamukomu.blogspot.com/2014/10/blog-post_47.html", "date_download": "2018-08-18T00:22:44Z", "digest": "sha1:5CJ62HS6V52Y7NJ2DR55SUFRXEQ2KF3R", "length": 24325, "nlines": 175, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஐந்து ஒரு பக்க கதைகள் -வெளிவந்தவை", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 17, 2014\nஐந்து ஒரு பக்க கதைகள் -வெளிவந்தவை\nஅலைபேசியில் தவறான அழைப்பு வழியாக எனக்கொரு காதலி அமைந்தாள் என்று நான் சொன்னால் கொடுத்த வச்ச மகராசன் என்று தான் சொல்வீர்கள். தினமும் என் செல்போனில் சுவேதாவின் குரல் இனிமையை கேட்கவில்லை என்றால் எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.\nஎன் இதயம் எந்த நேரமும் இந்த ஒரு மாத காலமாக சுவேதா சுவேதா என்று தான் துடிக்கிறது. நான் டூவீலர் வொர்க்‌ஷாப்பில் நான்கு வருடங்களாக மெக்கானிக்காக இருக்கிறேன். சுவேதாவிடமும் உண்மையைத் தான் சொன்னேன்.\nசுவேதாவும் இதே நகரில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலையில் இருப்பதாகச் சொன்னாள். நேரில் பார்க்கணும் என்று பல நாட்களாக கேட்டு இன்றுதான் மூன்று மணிக்கு வரச்சொல்லி கடை இருக்கும் வீதியையும் சொல்லி விட்டாள். தூரம் அதிகமில்லை தான். இதோ ட்ரெய்லர் பார்த்து வருகிறேன் என்று சொல்லி யமாஹாவை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.\n என்று மல்லிகை ஐந்து முழத்தை வாங்கிக் கொண்டு சென்றவன் அந்த வீதியில் சென்று ஜெராக்ஸ் கடை முன்பாக இருந்த மளிகைக் கடைமுன் யமாஹாவை நிறுத்தி விட்டு ஸ்டைலாய் சாய்ந்து நின்று சுவேதாவை செல்லத்தை பார்த்தேன். ஹா சும்மா சொல்லக்கூடாது\nகொண்டு வந்திருந்த நண்பனின் செல்போனிலிருந்து சுவேதாவைக் கூப்பிட்டேன். புதிய எண்ணாக உள்ளதே என்று எடுத்தவள் என் குரல் கேட்டதும், மணி மூனு ஆச்சு இன்னும் என்ன பண்றீங்க ஓனர் சாப்பிடப் போனவரு நாலு மணிக்குள்ள வந்துடுவாரு என்னது நண்பன் வந்துட்டானா இல உங்களுக்கு நண்பன் பெருசா சீக்கிரம் வாங்க. எதிர்க்கே மளிகை கடை முன்னாடி பைக்குல சாய்ஞ்சுட்டு ஒரு கொரங்கு என்னை வெறிக்க பார்த்துட்டு இருக்குது. ஐய்யோடா சீக்கிரம் வாங்க. எதிர்க்கே மளிகை கடை முன்னாடி பைக்குல சாய்ஞ்சுட்டு ஒரு கொரங்கு என்னை வெறிக்க பார்த்துட்டு இருக்குது. ஐய்யோடா அது பண்ற பந்தா இருக்கே.. சகிக்கலை அது பண்ற பந்தா இருக்கே.. சகிக்கலை அதும் கையில பூ வேற, அவனும் அவன் மூஞ்சியும் அதும் கையில பூ வேற, அவனும் அவன் மூஞ்சியும் எந்த பேக்குக்கு பூ குடுக்க நிக்கானோ எந்த பேக்குக்கு பூ குடுக்க நிக்கானோ நீங்க சீக்கிரம் வாங்க ரவி\nகாதல் விசயத்தில் குணா, ரவி, சேகர் என்று என் வயதில் எல்லோருமே மாட்டிக் கொண்டவர்கள் தானாம். காதல் யாரையும் தன் வலையில் விழச்செய்யாமல் விடாது என்று தான் நேற்று மூர்த்தியும் சொன்னான்.\nகடந்த ஒரு மாதத்தில் ராம் நகர் இரண்டாவது வீதிக்குள் நான்கைந்து முறை நான் நுழைந்து விட்டேன். யாரும் என்னை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, யார் நீ என்றும், உனக்கு என்ன வேணும் என்றும், உனக்கு என்ன வேணும்\nசின்னு நீ எங்க இந்தப்பக்கம் என்று முகம் தெரிந்தவர்கள் யாராவது பார்த்துக் கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான் ஒவ்வொரு முறையும். இதோ சாந்தியின் எதிர் வீடு எப்போதும் போல் பூட்டிக்கிடக்கவே அதன் திண்ணையில் அமர்ந்து நோட்டமிட்டபடி இருந்தேன். இவள் என்ன எந்த நேரமும் டிவியே கதியாக கிடக்கிறாளா என்று முகம் தெரிந்தவர்கள் யாராவது பார்த்துக் கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான் ஒவ்வொரு முறையும். இதோ சாந்தியின் எதிர் வீடு எப்போதும் போல் பூட்டிக்கிடக்கவே அதன் திண்ணையில் அமர்ந்து நோட்டமிட்டபடி இருந்தேன். இவள் என்ன எந்த நேரமும் டிவியே கதியாக கிடக்கிறாளா\nபால்காரன் டிவிஎஸ்ஸில் வந்தவன் சாந்தி வீட்டின் முன்பாக நின்று பொவ்வாத் அடித்தான். சாந்தி பால் செம்பை தூக்கிக் கொண்டு குதிரை மாதிரி கதவு நீக்கி ஓடி வந்து பால் வாங்கினாள். என்னை ஓரக்கண்ணால் வேறு பார்த்தவள் அவள் விழிகளிலேயே பேசினாள். நான் அவளை நோக்கி சாலையைக் கடந்து சென்றேன்.\nபால்காரன் பக்கத்து வீடு சென்று நின்று பொவ்வாத் அடித்தான். நான் புது செல்போனை சாந்தியிடம் கொடுத்தேன்.\n“குமார் உன்கிட்ட குடுக்கச் சொன்னான். மத்த விசயமெல்லாம் போன்ல சொல்வானாம். எட்டு மணிக்கு டாண்ணு கூப்புடுவான்” இதயம் துடி துடிக்க நான் கிளம்பி விட்டேன்.\nசுந்தருக்கு மனசே சரியில்லாமல் இருந்தது. அறை நண்பன் கார்த்தி கூட, ஏண்டா பொண்டாட்டியை முழுங்கினவன் போல உக்காந்து இருக்கே என்று கேட்டு விட்டான். அவசரப்புத்தியால் தன் காதலை கெடுத்துக் கொண்டேனே, என்று தான் வருத்தம் மேலிட அமர்ந்திருந்தான்.\nகார்த்தி, சாப்பிடப் போலாமா மெஸ்சுக்கு என்று கேட்டதும் பசி இல்லை என்று சொல்ல வாய் வந்தும் கொஞ்சம் நேரம் போகட்டும் என்று சொன்னான்.\nஇன்று மதியக்காட்சிக்கு தேவயானியும் சுந்தரும் செண்ட்ரல் தியேட்டருக்குச் சென்றிருந்தார்கள். தேவயானி அரசாங்கப் பள்ளியில் பனிரெண்டாவதில் அறிவியல் குரூப் படிக்கிறாள். தியேட்டரில் சுந்தர் உரிமையாய் அவள் தோளில் கை போட்டு படம் பார்க்க முயற்சித்தான். கோபத்தில் இவன் கன்னத்தில் ஒன்று கொடுத்து விட்டு கிளம்பியவள் பின்னால் இவனும் வெளியேறி விட்டான்.\n“இரவு உனக்கு போன் போடுவேன். உன்னோட பரிசுப்பொருள் அத்தனையையும் வாங்கிக்கொ திருப்பி போன்லயே இடம் சொல்வேன். மோசமான பையன் நீ” என்று சொல்லிப் போய் விட்டாள். இப்போது சுந்தரின் செல்போன் அலறியது. சுந்தர் அதை வெறுமனே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.\n”உன்னோட ஆள் தான் கூப்பிடுது. எடுத்துப் பேசுடா தினமும் குசுகுசுன்னு மணிக்கணக்கா பேசுவே தினமும் குசுகுசுன்னு மணிக்கணக்கா பேசுவே” என்ற கார்த்திக்கு, இனிமேல் அவளிடம் பேசலை என்றும், படிக்கிற பெண் நன்றாக படிக்கட்டுமென்றும், துன்பம் பண்ணக்கூடதென்றும் பேசினவனை ஆச்சரியமாய் பார்த்தான் கார்த்தி.\nஇவன் போன் எடுக்கவில்லை என்றானதும் குறுஞ்செய்திகள் வரிசையாக வர ஆரம்பித்தது என்ன என்று ஒன்றை நீக்கிப் பார்த்தான். “சாரிடா செல்லம்’’ என்றிருக்க, சாப்பிடப் போலாம்டா என்ன என்று ஒன்றை நீக்கிப் பார்த்தான். “சாரிடா செல்லம்’’ என்றிருக்க, சாப்பிடப் போலாம்டா\nவிஷ்ணுவிற்கு தன் நெற்றியில் இருந்த தலும்பை பார்க்க பார்க்க ஆத்திரமாய் இருந்தது. உதவி இயக்குனர்கள் அனைவரும் இவனது நடிப்பை பாராட்டினார்கள். ஆனால் படத்தின் இயக்குனரோ மற்ற ஐந்து நபர்களிடம் சொன்னது போலவே, தகவல் அனுப்புறேன்பா என்று இவனிடமும் சொல்லி அனுப்பி வைத்து விட்டார். ச்சே என்று இவனிடமும் சொல்லி அனுப்பி வைத்து விட்டார். ச்சே எல்லாம் இந்த தலும்பால் வந்தது. இது மட்டும் இல்லை என்றால் இந்தப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கலாம்.\nநடிப்பு என்பது விஷ்ணுவிற்கு உயிர் போன்றது. இதுவரை ஏறாத படிகளே இல்லை என்று சொல்லலாம். இன்று தான் கூடி வந்தது போல் இருந்தது. எவ்வளவு செலவானாலும் சரி.. ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து விடுவது என்று நகரில் பிரபலமான மருத்துவமனையில் டாக்டர் முன் அமர்ந்திருந்தான் விஷ்ணு. ஒரு லட்சத்திலிருந்து ஒன்னரை லட்சம் வரை செலவாகும் என்றார் டாக்டர். கையிருப்பு அதற்கும் மேலாக இருக்கவே உடனடியாக அட்மிட் ஆகிவிட்டான் விஷ்ணு.\nநகரின் பிரபலமான ஹோட்டல் ஒன்றின் அறையில் டைரக்டர் தண்டம் தன் தயாரிப்பாளருடனும் உதவி இயக்குனர்களுடனும் அமர்ந்திருந்தார். தயாரிப்பாளர் விஷ்ணுவின் நடிப்பாற்றலை வியந்து பாராட்டிப் பேச தயக்கமாய் அமர்ந்திருந்தார். விஷ்ணுவை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்குமென்று மனதில் நினைத்திருந்தார்.\n‘அந்தப்பையன் விஷ்ணுவிடம் நடிப்பாற்றல் ரொம்ப இருக்கு சார். ஆனால் நெற்றியில இருக்கிற தலும்பு தான் அவன் முகத்தை கோரமா காட்டுது’ என்றார் உதவி இயக்குனர் சிவா.\n‘இல்லப்பா, நம்ம கதைக்கு அவன் தான் பொருத்தமா இருப்பான். இது வில்லன் ரோல் கலந்த ஹீரோ வேஷம். அந்த தலும்பு தான் அவனுக்கு ப்ளஸ் பாய்ண்ட். பையனுக்கு காலையில செலக்சனான செய்தியை சொல்லிடுங்க’ என்றார் தண்டம்.\nசுப்புலட்சுமிக்கு கையும் ஓடவில்லை, காலும் தான். எல்லாமே அவள் தானே பார்த்தாகணும் இப்படி மாப்பிள்ளை வீட்டார் திடீரென இன்றே பெண் பார்க்க வருவதாய் தகவல் சொல்லி விடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை தான்.\nவீட்டை பூட்டிக் கொண்டு தன் ஸ்கூட்டியை கிளப்பினாள். மனது படபடப்பாய் இருந்தது. மாப்பிள்ளை பெங்களூரில் சாப்ட்வே இஞ்சினியர். சரியான் ஜோடிப் பொருத்தம் வேறு. நகரின் பிரபலமான பியூட்டி பார்லர் முன் ஸ்கூட்டியை நிறுத்தியவள் அவசரமாய் உள்ளே நுழைந்தாள்.\nஅரைமணி நேரத்தில் முகத்தை பளபளப்பாக்கிக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள். எல்லாமே அவள் தானே பார்த்தாகணும். இன்னும் அரைமணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விடுவார்கள். நீலவர்ணத்தில் காட்டன் சுடிதார் ஒன்றை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள் சுப்புலட்சுமி. மல்லிகை மணம் வீசும் செண்ட்டை துளி அளவு பீய்ச்சிக் கொண்டு கண்ணாடி முன் நின்றாள். உதட்டில் லைட்டாக லிப்ஸ்டிக் பூசியபோது முன்வாசல் காலிங் பெல் அடித்தது.\nசுப்புலட்சுமி புன்னகை முகத்துடன் வந்தவர்களை வரவேற்று ஹாலில் ஷோபாவில் அமர வைத்தாள். கிருஷ்ணா ஸ்வீட்சில் வாங்கி வந்த பலகாரங்களை தட்டில் எடுத்துப் போய் புன்னகை மாறாமல் அவர்கள் முன் வைத்தாள். மாப்பிள்ளையின் அப்பா, ‘பெண்ணை வரச்சொல்லுங்க பார்த்துட்டு நாங்க அவசரமா ஹாஸ்பிடல் வரை போகணும். நண்பர் ஒருவருக்கு சின்ன ஏக்ஸிடெண்ட்டாம்’ என்றார்.\n இப்ப வர்ற நேரம் தான்” என்றாள் சுப்புலட்சுமி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (45) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nசகுந்தலா வந்தாள் -வாசகர்கூடம் ப்ளாக் ஸ்பாட்\nபேச்சு வழக்கில் கவிதை இரண்டு\nரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவலில் ஒரு துளி\nஐந்து ஒரு பக்க கதைகள் -வெளிவந்தவை\nகவிதைகள் என்றே வைத்துக் கொள்ளலாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/114687-terror-villain-to-comedy-characters-in-tamil-cinema.html", "date_download": "2018-08-18T00:49:05Z", "digest": "sha1:O5WDJ76M35HJAHEQ4BDS44XA4OBJCLM2", "length": 26366, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்! | Terror villain to comedy characters in Tamil cinema", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்\nதமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது முரட்டு வில்லன்களாக இருந்த சில நடிகர்கள், காலப்போக்கில் காமெடிப் படங்களுக்கு மார்க்கெட்டும் மவுஸும் கூடிக்கொண்டிருப்பதை அறிந்து அந்த ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி முரட்டு வில்லன் டு காமெடியன்களாக மாறியவர்கள் யார் யார்\nசமீபகாலமாக `இவரிடம் கால்ஷீட் வாங்குவதே அபூர்வமாக உள்ளது' என, பல இயக்குநர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். சினிமா துறையில் இவர் முதலில் ஸ்டன்ட்மேனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு `நான் கடவுள்' படத்தின் மூலம் தாண்டவன் எனும் டெரர் வில்லனாக நடித்தார். தற்போது வெளியாகிவரும் எல்லா கமர்ஷியல் படங்களிலும் காமெடிக் கதாபாத்திரங்களில் கலக்கிவருகிறார். கோலிவுட்டுக்கு என்ட்ரியான புதிதில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். `பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் காமெடி வில்லனாக நடித்த பிறகு ஏராளமான படங்களில் முழு நேர காமெடியனாகவும், வித்தியாசமான பல கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.\nசமீபத்தில் வெளியான `குலேபகாவலி' படத்தில் இவரது ஸ்க்ரீன் பிரசென்ஸ் கொஞ்ச நேரமே என்றாலும், இடம்பெற்ற காமெடி வேற லெவலில் அமைந்து ரசிகர்களிடம் அப்லாஸையும் அள்ளியது. மக்களுக்கும் இதுதான் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து, தொடர்ந்து இதுபோன்ற கதாபாத்திரங்களிலேயே விரும்பி நடித்துவருகிறார்.\nஆனந்தராஜின் அப்பாவுக்கு இவரை காவல் துறையில் சேர்ப்பதே கனவாக இருந்தது. ஆனால், சிறு வயதிலிருந்தே ஆனந்தராஜின் கவனம் முழுக்க சினிமாவின் பக்கம் இருந்தது. தன் சினிமா ஆசைக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்டிய பிறகு, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் தன் படிப்பைத் தொடங்கினார். பல தடங்கல்களைச் சந்தித்த இவருக்கு, `ஒருவர் வாழும் ஆலயம்' எனும் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும் அரசியல்வாதியாகவும் நடித்து, நிரந்தர வில்லனாகவே தமிழ் சினிமாவைக் கலக்கிக்கொண்டிருந்தார். சமீபத்திய ட்ரெண்டை உணர்ந்த இவர், காமெடி ரோல்களையும் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டார். `நானும் ரெளடிதான்', `தில்லுக்கு துட்டு', `மரகத நாணயம்', `குலேபகாவலி' போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இவரின் `நானும் ரெளடிதான்' பட மீம் டெம்ப்ளேட் இன்னமும் ட்ரெண்டில் உள்ளது.\nஆனந்தராஜோடு சேர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் ஒரு தனி ட்ராக்கைப் பிடித்து பயணிக்கத் தொடங்கிவிட்டார். தன் நடிப்புப் பாதையை `சுபயயாத்ரா' எனும் மலையாளப் படத்தின் மூலம் ஆரம்பித்தார். அதன் பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான `கேப்டன் பிரபாகரன்' படம் மூலம் தன்னை சிறந்த வில்லன் கதாபாத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டினார். சில நெகட்டிவ் ரோல்களை கையில் எடுத்த இவர், பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கிவந்தார். அவ்வப்போது சில குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துவந்தார். தற்போது ஆனந்தராஜைப்போல் இவரும் காமெடிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவரின் பேசும் ஸ்லாங்தான் இவரின் ப்ளஸ். அதை வில்லத்தனங்களுக்குப் பயன்படுத்திய இவர், தற்போது காமெடி கவுன்ட்டர்களுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.\n`தளபதி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தினேஷ். ரஜினி நடித்த பல படங்களில் இவரை ஏதாவது ஒரு ரோலில் பார்த்துவிடலாம். `பாட்ஷா' பாயின் பாடிகாட்களுள் இவரும் ஒருவர். பல படங்களில் வில்லனின் கையாளாகவும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவரும் சமீபத்தில் சில காமெடிக் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கிறார். ரஜினிகாந்தில் ஆரம்பித்து சந்தானம், வடிவேலு என எல்லோரோடும் நடித்துவருகிறார் `தளபதி' தினேஷ்.\nஇவர் நடிகர் மட்டுமல்லாது `ஆசை ஆசையாய்', `மிளகா' என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். நடிப்புக்கு வந்த பிறகு `சண்டை', `கோரிப்பாளையம்', `மாயாண்டி குடும்பத்தார்' என சில படங்களில் நெகட்டிவ் ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவந்தார். அதன் பிறகு `தேசிங்குராஜா' படத்தில் வில்லத்தனம் கலந்த இவரது காமெடி ரோல் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதே ட்ராக்கைப் பிடித்து தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். `அன்னிக்கு காலையில ஆறு மணி இருக்கும்...' எனும் எபிக் காமெடி மூலம் இன்னும் ஃபேமஸ் ஆகிவிட்டார் ரவி மரியா. `சரவணன் இருக்க பயமேன்', `துப்பறிவாளன்', `ஹரஹர மகாதேவகி', `இப்படை வெல்லும்' போன்ற படங்களில் குணச்சித்திரம் மற்றும் காமெடிக் கதாப்பாத்திரங்களில் நடித்துவருகிறார்.\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்\n''வாவ் அனுஷ்கா, திகில் பங்களா, திடீர் திகீர் டுவிஸ்ட்..\" - 'பாகமதி' விமர்சனம்\n`இசைஞானியால் விருதுக்குப் பெருமை' குவியும் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/1992", "date_download": "2018-08-18T01:42:02Z", "digest": "sha1:OTU57BXJASJE2WWJIUIAAKTYBI2FJSHO", "length": 10597, "nlines": 379, "source_domain": "ta.wikipedia.org", "title": "1992 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1992 புதன் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும் (லீப் ஆண்டு)\nஏப்ரல் 2 - பிரான்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் எதித் க்ரசான் (Édith Cresson) தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nமார்ச் 23 - Friedrich Hayek, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)\nஏப்ரல் 8 - Daniel Bovet, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)\nசெப்ரெம்பர் 2 - Barbara McClintock, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1902)\nபொருளியல் (சுவீடன் வங்கி) - Gary Becker\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2015/07/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-9/", "date_download": "2018-08-18T00:56:28Z", "digest": "sha1:2IDFR44V63TSVQ6RVRLMEPQ6GFGBHV7H", "length": 12895, "nlines": 195, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 9 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி – 9\nநிலவு ஒரு பெண்ணாகி – 9\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 8\nநிலவு ஒரு பெண்ணாகி – 10\nநன்றி சிந்து. ஒவ்வொரு சம்பவமா பார்க்கலாம்.\nநன்றி ஷாரதா. சந்த்ரிமாவுக்கு பார்சல் வாங்கித் தரும் ஐடியா நல்லாருக்கே.\nநன்றி சுபா. இன்று பதிவு.\nநன்றி கீதா. என்ன நடந்தது என்பது விரைவில்\nநன்றி வாணிப்ரியா. அடுத்த பகுதியிலிருந்து கொஞ்சம் பரிசோதனை செய்திருக்கேன். படிச்சுட்டு சொல்லுங்க.\nவாவ்.பயங்கரமான மந்திரவாதி.தீய சக்தியிடையே சந்திரிமா ஆதி மாட்டிக்கிறாங்களே.தெய்வ சக்தி அவர்களை மீட்டதை விதி இழுத்துட்டு போயிடுதோ\nநன்றி தேவி. சரியா சொன்னிங்க. விதி இவங்களை என்ன செய்ததுன்னு பாக்கலாம்.\nஓ அவர்கள் அந்த பச்சிலை பூசியுருந்ததை கழுவியதால் தான் மாறினார்களா இந்தப் பதிவு மிகவுமே விறுவிறுப்பாக இருந்தது .நன்றி .\nநன்றி ஸ்ரீமதி. அவர்கள் நாகேந்திரனிடமிருந்து தப்பித்தது தற்காலிகமாய்தான்.\nநன்றி சுகன்யா. ஆதியோட பழைய நினைவுகளில் தான் சந்த்ரிமா வருகிறாள். இப்ப நிகழ் காலத்தில் என்ன நடக்குதுன்னு இன்றைய பதிவு சொல்கிறது.\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/08/blog-post_43.html", "date_download": "2018-08-18T00:53:19Z", "digest": "sha1:ENMBPTHQ6K7TFYSNWXDJDRKM6FEVUH45", "length": 68166, "nlines": 431, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: சரித்திரம் படைத்த சரித்திர நாயகனின் வரலாறு !!", "raw_content": "\nசரித்திரம் படைத்த சரித்திர நாயகனின் வரலாறு \n1. பிறப்பு : 1924 ஜுன் 3ஆம் தேதி\n2. தந்தை : முத்துவேல்\n3. தாயார் : அஞ்சுகம்\n4. சகோதரிகள் : சண்முகசுந்தரம், பெரியநாயகி\n5. இடம் : திருக்குவளை கிராமம், திருவாரூரில்இருந்து 15 மைல் தொலைவில்\n6. தந்தையின்முதல்மனைவி : குஞ்சம்மாள்\n7. இரண்டாம்மனைவி : வேதம்மாள்\n8. மூன்றாவதுமனைவி : அஞ்சுகம்\n9. கலைஞரின் முதல்மனைவி :பத்மா (திருமணம் 1944 செப்டம்பர் 13. காலமானது 1948). இவர் இசைச் சக்ரவர்த்தி சி. எஸ். ஜெயராமனின் சகோதரி.\n10. இரண்டாம் மனைவி : தயாளுஅம்மாள் (1948 செப்டம்பர் 15)\n11. மூன்றாம் மனைவி : ராஜாத்திஅம்மாள் (திருமணம் 1966)\n12. பிள்ளைகள் :மு.க. முத்து, முதல்மனைவிக்குப் பிறந்தவர்.\n13. ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு(தயாளு அம்மாவுக்குப் பிறந்தவர்கள்)\n14. கனிமொழி (ராஜாத்தி அம்மாள்)\n15. அவருடைய பெற்றோர் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஓர் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடனக் கலைஞராக இருந்தார்.\n16. கலைஞரின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவம், ஏழ்மையில் இருந்த போதிலும், அவர் தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்தார்.\n17. நீதிக்கட்சியின் தூண்களுள் ஒருவரான பனகல் அரசர் பற்றிய நூல், கலைஞரின் பாடமாக இருந்தது.அந்தப் பள்ளியிலேயே கலைஞர் மட்டுமே அந்த 50 பக்க நூலையும் மனப்பாடம் செய்திருக்கிறார்.கலைஞரின் அரசியல் ஆர்வத்திற்கான விதையை இந்நூலே தூவியது எனச் சொல்லலாம்.\n18. அந்தக் காலக்கட்டத்தில் தான் தந்தை பெரியார் சுயமரியாத இயக்கத்தைத் துவக்குகிறார். அவரது தளபதியாக உருவெடுக்கிறார், பேரறிஞர் அண்ணா. இச்சமயத்தில் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரியார், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிட, முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் உருவானது. பெரியார் தொண்டர்கள் மாநிலம் முழுதும் கிளர்ச்சி செய்தனர்.\n19. ஜூன் 3, 1938. சைதையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் அழகிரிசாமியின் புயலை ஒத்த பேச்சும், மறைமலை அடிகளாரின் செந்தமிழ் உரையும், பேரறிஞர் அண்ணாவின் அறிவு பூர்வமான அழகு தமிழ் உரையும் இந்தி எதிர்ப்புத்தீயை பரவிடச் செய்தன. மாணவன் கலைஞரின் மனதிலே இவையே மாபெரும் மாற்றத்தைச் செய்திட்டன.\n20. அப்போதே குல்லுகப்பட்டர் இராசாசி, தமிழ்த்தாயைக் கத்தியால் குத்துவது போல படம் வரைந்து, ஒரு சைக்கிள் ரிக்ஷா ஊர்வலம் நடத்தினார். இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்ற முழக்கத்துடன் அந்தச் சாலை வழியே வந்த தனது இந்தி ஆசிரியருக்கும் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்து இந்தி ஒழிக என்று கத்தியது அந்த இளஞ் சூரியன்.\n21. பள்ளியில் படிக்கும் போதே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கினார். ஆனால் பேசுவதற்கு முன் குறிப்பெடுப்பது, பேசிப்பேசிப் பழகுவது எனத் தன்னைத்தயார் படுத்திக் கொண்டே போட்டிகளில் ஈடுபடலானார். அந்தப் பழக்கத்தை அவர் கைவிடவே இல்லை.\n22. தனது 15வது வயதில் மாணவ நேசன் எனற பெயரில் ஒரு கையெழுத்துப் பிரதியை உருவாக்கி அதனை ஐம்பது பிரதிகள் எடுத்து, நண்பர்களின் தனிச்சுற்றிற்கு அனுப்பி வைத்தார்.\n23. இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது.\n24. கலைஞரின் தந்தை முத்துவேலர் கவியாற்றல் கொண்டவர். வடமொழி கிரந்தங்களில் தேர்ச்சி உடையவர். இயல்பிலே கவியாற்றல்,எழுத்தாற்றல் கொண்டிருந்த கலைஞருக்கு சமயத்தின் பால் சிந்தனை செல்லவில்லை.\n25. பள்ளிக் காலத்திலேயே தந்தை பெரியாரின் குடியரசு இதழை வாங்கிப்படித்ததால் நாத்திகரானார்.\n26. ஒரு முறை ஒரு மதப்பிரசங்கி சைவ உணவு பற்றித் திருவாரூரில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த கலைஞர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார். சைவர், மரக்கறி உணவின் பெருமையைக் கூறி அசைவ உணவைச் சாடினார். ஒரு கோழியைத்தின்று விட்டால், அவ்வளவுதான் கோழி மறைந்து விடும். மீன் ஆடு..எல்லாம் அப்படித்தான். அழிந்து விடும். ஆனால், கத்திரிக்காய் சாப்பிட்டால், செடி அப்படியே இருக்கும், தேங்காய் சாப்பிட்டால், தென்னை மரம் அப்படியே இருக்கும்…என்று கூற..சிறுவன் கலைஞர் எழுந்தார்: அய்யா, கொத்தமல்லியைச் சாப்பிட்டால், மல்லிச் செடி இறந்து விடுமே, அது அசைவ உணவா என்று கேட்க வாயடைத்துப் போனாராம்…\n27. பள்ளியிறுதித்தேர்வில் மூன்று முறை ஃபெயில் ஆனார். நான்காவது முறை எழுத அனுமதி இன்மையால் படிப்பை நிறுத்தியது அந்த சுயம்புச் சூரியன்.\n28. 1939 பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் “நட்பு” என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதே சமயம் தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி அளித்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசூலித்து அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார்.\n29. 19.4.1940 மாணவர் ஒற்றுமைக்கென \"தமிழ்நாடு மாணவர் மன்றம்\" என்கிற தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார். 1941 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழ் நாட்டில் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.\n30. 1942 பேரறிஞர் அண்ணா நடத்திய “திராவிட நாடு” மூன்றாவது இதழில் “இளமைப் பலி” என்ற இவரது எழுத்தோவியம் வெளிவந்தது. திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகைதந்த அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடநாடு இதழுக்கு எழுதும் இளைஞரைக் கூட்டிவாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒரு சிறுவனை அண்ணாவின் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அந்த எழுத்துக்கு உரியவன் இந்தச் சின்னப்பையனா என அண்ணா ஆச்சரியப்பட்டுப்போனார். படித்து முடித்து விட்டுவா உன்னை சுயமரியாதை இயக்கத்தில் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி கலைஞரை அனுப்பி வைத்தாராம் அண்ணா. ஆனால் அண்ணாவின் இந்த அறிவுரையைக் கலைஞர் கேட்கவில்லை. இது பற்றிப் பல முறை வருந்தியிருக்கிறார், கலைஞர்.\n31. 1942 தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அன்றைய மாணவர்களை அழைத்துப் பேசச் செய்தார். அந்த ஆண்டு விழாவின் போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்பாடல் பிற்காலத்தில் உணர்ச்சிக் கவிதையாக வரலாற்றுப் புகழ் பெற்று அமைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நிதிப் பற்றாக்குறைக்காக தமது கைச்சங்கிலியை அடகு வைத்துச் சமாளித்தார்.\n32. இதே ஆண்டில் தான் “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரால் ஒரு நிறுவனம் தொடங்கி “முரசொலியை” மாத இதழாக 10.08.1942ல் வெளியிட்டார். அதில் “சேரன்” என்ற புனைப் பெயரால் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.\n33. 28.5.1944 திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாகப் ‘பழனியப்பன்’ என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார். திருவாரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் கலைஞரின் முரசொலி ஏடு கண்டு மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசத்தொடங்கினார். திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தியதோடு அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார்.\n34. 11.11.44 அன்று பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் விசயராகவலு தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.\n35. புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது காங்கிரசார் கலைஞைரைக் கடுமையாகத் தாக்கினார்கள். மயங்கி விழுந்து விட்டவரை இறந்துவிட்டார் எனக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிட்டனர். கருணை உள்ளம் கொண்ட தாய் ஒருவரும், இளைஞர் ஒருவரும் அவரைக் காத்தனர். மறுநாள் முகமதியர் போன்று மாறு வேடமணிந்து பெரியாரைச் சந்தித்தார். பெரியார் கலைஞரைக் கட்டித் தழுவிக் காயங்களுக்கு மருந்திட்டார். தன்னுடன் அழைத்துச் சென்று “குடிஅரசு” வார இதழின் துணை ஆசிரியராக்கினார்.\n36. 19.4.1946 திராவிடர் கழகக் கொடிக்கு மாதிரி அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்தைக் குறிக்க, தன் கைவிரலை அறுத்து இரத்தத்தை பதித்தார். முதன் முதலாக தன் குருதியை கொடிக்குக் காணிக்கையாக்கினார்.\n37. 19.4.1946 தம் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது மருத்துவரை அழைக்க கலைஞர் சென்றார். அப்போது அந்த மருத்துவர், சித்த வைத்தியர்கள் மாநாட்டினை தலைமையேற்று நடத்திக் கொண்டு இருந்தார். அங்கு வந்த தலைவர் கலைஞரை கண்டதும் மாநாட்டில் உடனே அவரை உரையாற்றிட அறிவித்து விட்டார். கலைஞர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது நண்பர் தென்னன், தந்தையின் மரணச் செய்தியோடு வந்தார்.\n38. 1947 இந்தியாவுக்குச் சுந்திரம் கிடைத்ததைப் பெரியார் தமிழர்களுக்குத் துக்க நாள் என்றார். அண்ணா “அது திராவிடர்களுக்குத் திருநாள்” என்று குறிப்பிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைய, பெரியாருக்கும், அண்ணாவுக்கும் பாலம் அமைக்க முரசொலியில் ‘கடைசி நாட்கள்’ என்ற கட்டுரையைக் கலைஞர் வடித்தார்.\n39. 1948 துணைவியார் பத்மாவதி அவர்கள் நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் இயக்கத் தோழர்களின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் கலைஞர் புதுக்கோட்டைக் கூட்டத்திற்கு உரையாற்றச் சென்றிருந்தார். கூட்டம் முடிந்து லாரியில் ஊர் திரும்புவதற்குள் கலைஞரின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்.\n40. 1948 தயாளு அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதே நாளில் திருமணத்திற்கு சற்று முன்பு, மணமகன் கோலத்தில் இருந்தபோதும், அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் கலைஞர்.\n41. 17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. கலைஞர் அதன் தோற்றுநர்களுள் ஒருவர் ஆவர்.\n42. தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962\n43. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967\n44. பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969\n45. தமிழக முதலமைச்சர் 1969 – 1971\n46. இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976\n47. தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983\n48. தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986\n49. மூன்றாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991\n50. நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001\n51. ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006-2011\n52. கலைஞருக்கு, கலைஞர் என்கிற அந்தப் பட்டப் பெயரை அளித்தவர் நடிகவேள் ராதா. தூக்கு மேடை நாடகத்தை எழுதியதற்காகப் புளகாங்கிதம் அடைந்து, ராதா இப்பட்டத்தை வழங்கினார்.\n53. கலைஞர்தான் என் திரைக்கதை குரு என அண்மையில் மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார். மாடர்ன் தியேட்டர்ஸில் சீனிவாசன் பணியாற்றிய போது, அங்கே மந்திரிகுமாரி படத்தை எழுதிய கலைஞரிடம் இருந்து திரைக்கதை நுணுக்கங்களைத்தான் அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.கலைஞர் உடல்நலம் குன்றி சென்னை காவேரி மருத்துவமனையில் நுழைகிற போது அருகில் இருந்த மருத்துவரிடம்...\"ஒரு பேட்ஸ்மேன் 90 ரன் அடிச்சுட்டா அவன் செஞ்சுரி அடிச்சே தீரணும்...ஆனா அதுக்கு பிட்சும் ஒத்துழைக்கணும் இல்லையா\" என்றாராம், சிரித்துக் கொண்டே..\n54. ஒரு முறை கவிஞர் வாலியின் உணவுமுறை பற்றிப் பேச்சு வந்தது. அவர் சைவமா அசைவமா என. அவர் அய்யங்கார் என்றாராம் அருகில் இருந்தவர். கலைஞர் சிரித்துக்கொண்டே...\"வாலி..சுறாமீன் சாப்பிடும் பிராமின்..\".என்றாராம்...\n55. தலைமைச் செயலகத்தில் ஒரு முறை புது லிஃப்ட் அமைக்கப்பட்டிருந்தது. கலைஞர் உள்ளே நுழைய கலைஞரோடு வந்தவர்களில் நான்கு பேர் மட்டுமே செல்லலாம் என்றாராம் ஆப்ரேட்டர். ஏன்யா என்றாராம் கலைஞர். சார் இதுல அஞ்சு பேர்தான் சார் போலாம் என்றாராம். உடனே கலைஞர் இதென்னய்யா பாஞ்சாலி மாதிரி..என்று சிரித்துகொண்டே கூறினாராம்.\n56. கலைஞர் இசை வேளாளர் பிரிவில் பிறந்ததால், அவருக்கு இசையில் நாட்டம் அதிகம். ஒரு திருமண விழாவில் அண்ணா பேசிய போது, கருணாநிதிக்கு நாயனம் வாசிக்கத்தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாயனம் வாசிக்கக் கற்றுக் கொண்டு பாதியிலே விட்டிருக்கிறார்.\n57. தமிழ் நாட்டில் தேவதாஸி முறை முற்றிலும் ஒழிந்ததற்குக் கலைஞர் பெருங்காரணமாவார்.\n58. கலைஞர் எங்கும் தனது சாதியைக் குறிப்பிட மாட்டார். ஜெயகாந்தன் ஒரு முறை கலைஞரை பேட்டி எடுக்கையில் உங்கள் அப்பா பேர் என்ன எனக் கேட்க முத்துவேலர் என்றாராம் கலைஞர். முத்துவேல் பிள்ளை என்று சொல்லுங்கள் என ஜே கே சொல்ல, இல்லை வெறும் முத்துவேலர் தான் என்றிருக்கிறார்.\n59. கலைஞரின் உயிர்நண்பர்கள் என்றால் அது பெரும்பாலும் சினிமாக்காரர்களே. எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன், வாலி என. எம்ஜிஆரின் தாய் சத்யா அம்மையார், கலைஞரைச் சொந்தப் பிள்ளை போல நடத்தினாராம். அதே போல் அன்னை அஞ்சுகம் அம்மையாரும் எம்ஜிஆரைச் சொந்தப் பிள்ளை போல் நடத்தியிருக்கிறார்.\n60. கலைஞர் வாழ்விலேயே செய்த மிகப்பெரும் தவறு, எம்ஜிஆரைக் கட்சியை விட்டு நீக்கியதே. திமுகவில் ஒரு கும்பல் கலைஞர் எம்ஜிஆர் நட்பு பிடிக்காமல் இவர்களை எப்படியாவது பிரித்திடலாம் எனச் சூழ்ச்சி செய்து, இருவரிடமும் கோள் மூட்டிப் பிரிவினையை வளர்த்த போது…மு.க. முத்து ஹீரோ ஆன விஷயம் எம்ஜிஆரிடம் தவறாகக் கூறப்பட்டுள்ளது. இத்தனைக்கும் முத்துவின் முதல் படமான பிள்ளையோ பிள்ளையின் துவக்க விழா எம்ஜிஆர் தலைமையில் தான் நடந்தது. படத்தில் எம்ஜிஆரின் போஸ்டர்களும் காட்டப் படும். இப்படத்தில் மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ என்ற பாடலை வாலி எழுதினார். அப்பாடலைக் கேட்டு எம்ஜிஆர் கோபம் அடைந்து வாலியை அழைத்து..ஏய்யா என் பாட்டை எல்லாம் அவனுக்கு எழுதியிருக்கே என்று கடிந்து கொண்டாராம். இந்தச் சூழலில், எம்ஜிஆர், கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேரப் போகிறார் என்கிற தகவல் வரவே, கலைஞர் அவரை சஸ்பெண்ட் செய்ய எண்ணினார். அப்போது எம்ஜிஆரை நீக்காதீர்கள் என அழுது புலம்பியது முரசொலி மாறன் அவர்கள். நீக்கச் சொன்னது நாவலர் உள்பட அனைத்துத் தலைவர்களும். கடைசியாக மாறன் பேச்சைக் கேட்டு, நீக்கும் முடிவை கலைஞர் கைவிட, அதற்குள், நெடுஞ்செழியன் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லி விட்டார்…திமுக வின் சரிவு துவங்கியது.\n61. எம்.ஜி.ஆரும் கலைஞரும் அரசியலில் கீரியும் பாம்பும் போல இருந்தாலும் சட்டசபையிலோ அல்லது வெளியிலோ, ஜெயலலிதாவைப் போல கருணாநிதி என்று சொன்னதில்லை. கலைஞர் என்றே குறிப்பிடுவார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை சட்டசபையில் உரையாற்றிய ஒரு அ.தி.மு.க உறுப்பினர், கருணாநிதி, என்று பெயர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவரை அழைத்த எம்.ஜி.ஆர், நானே அவரை பெயர் சொல்லி அழைப்பதில்லை. இனிமேல் அவரை கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும் என்று கடிந்து கொண்டாராம்.. அதனால் தான் எம்.ஜி.ஆர். மரணமடைந்த தகவல் கிடைத்ததுமே அதிகாலைப் பொழுதிலேயே ராமாவரம் சென்று படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினார்.\n62. இந்திராவால் 356 பிரிவின் கீழ், 170 எம் எல் ஏ வைத்திருந்த கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு, 13 ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞரை, இந்திராவின் பிள்ளை ராஜீவின் தூண்டுதலால், சந்திர சேகர் அதே 356 பிரிவின் கீழ் கலைத்தார். இந்தியாவிலேயே இரண்டு முறை கலைஞர் ஆட்சிதான் கலைக்கப் பட்ட்து.\n63. திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது திண்டு எங்களுக்கு, கல் எம்ஜிஆருக்கு என்று பேசினார். எம்ஜிஆர் அதைக் காப்பி அடித்து, திண்டு எங்களுக்கு, கல் கருணாநிதிக்கு என்றார். அதற்கு அழகாய் பதில் அளித்தார்: ஆம்..தோல்வியால் துவண்டு தூங்க திண்டு உங்களுக்கு, வெற்றியைப் பொறித்திட கல் எங்களுக்கு. (ஆனால் தேர்தலில் தோற்றார் என்பது வேறு விஷயம்)\n64. 1980ல் நாடாளுமன்றத் தேர்தலின் போது: சோதனையின் கொம்புடைத்து சாதனையாக்கிடும் காலம் கனிந்தது என்றார். 38 தொகுதிகளில் கழகம் வென்றது.\n65. ஒரு முறை சத்துணவின் கூட இரண்டு முட்டைகள் வழங்க உத்தரவிட்டார், அப்போது அருகிலிருந்த துரைமுருகன், தலைவரே ரெண்டு முட்டைய வெச்சி ஆம்லெட் போடச்சொல்லலாமே, என்றதற்கு,வேணாய்யா. பாயில்டு முட்டன்னா ரெண்டா ஒன்னான்னு சந்தேகம் வராது.ஆனா ஆம்லெட்னா, ஒரு முட்டைல ஊத்திட்டு ரெண்டுன்னு சொல்லி ஏமாத்த முடியும் இல்ல..அதனால வேக வெச்ச முட்டையே தருவோம் என்றார்.\n66. தான் ஆட்சியில் இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தலைமைச் செயலகம் சென்று பணியாற்றுவார். தலைமைச் செயலக அதிகாரிகள் முணுமுணுத்துக்கொண்டு பணியாற்றுவர். ஏனென்றால், முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருக்கும்போது எப்போது என்ன கேட்பாரோ என அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுவார்கள்.\n67. 1999-ம் ஆண்டு ஓர் அதிகாலைப் பொழுதில், புழல் ஏரி உடையும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக அன்றைய முதல்வர் கலைஞருக்குத் தகவல் தரப்படுகிறது. உடனே உயர் அதிகாரிகளை தலைமைச் செயலகத்துக்கு வரச்சொல்லிவிட்டு தானும் புறப்பட்டுப் போகிறார். அதற்கு முன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளையும் துணை ராணுவப் படையினரையும் செல்லச் சொல்லி உத்தரவிட்டார். அதுபற்றி எழுதிய ஆங்கில நாளேடு ஒன்று, ''அதிகாலையில் கருணாநிதி தலைமைச் செயலகம் சென்றபோது லிஃப்ட் ஆபரேட்டரும் இல்லை. லிப்ஃட்டும் தரைத்தளத்தில் இல்லை. உடனே முதல்வர் படிகள் வழியே தன் அறைக்குச் சென்றார். அவசரத்தில் முதல்வரின் கால்கள் இரண்டு இரண்டு படிகளைத் தாண்டி தாண்டிச் சென்றன'' என்று குறிப்பிட்டது.\n68. கலைஞருடைய ஞாபக சக்தி உலகப் பிரசித்தம். ஆனால் அதை தனது குறைபாடாகத்தான் கருதினார் கலைஞர். பலரும் செய்த துரோகங்கள் நினைவில் இருந்தால் உறுத்திக் கொண்டே இருக்கும். எனவே மறதி ஒரு மாமருந்து என்றார்.\n69. நீண்ட ஆயுள் பற்றிப் பேசுகையில் அதுவும் ஒரு சாபம் என்றார். கூட இருந்தவங்க ஒவ்வொருத்தராப் போய்கிட்டே இருந்தா, நமக்கு அதை விடச் சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.\n70. தமிழின் பல சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை கலைஞரைச் சாரும். கழகம், வாரியம், ஒன்றியம், போக்குவரத்து, கால்நடை போல…\n71. சட்டசபையில் கலைஞரின் நகைச்சுவை பற்றி ஒரு தனி நூலே எழுதலாம். குறிப்புகள் இல்லாமல் எங்கும் பேசவே மாட்டார். அதே போல், சட்ட மன்றத்தில் யார் என்ன பேசினாலும் அதை அவர் மறக்கவே மாட்டார். அதிமுக எம் எல் ஏ ஜி.விசுவநாதன்(வி ஐ டி) ஒரு முறை எம்ஜிஆர் முன்னிலையில் உங்களுக்கு எல்லாம் நல்ல படியாக அமைந்து விட்டது, ஆனால் நல்ல எதிர்க் கட்சித்தலைவர் தான் அமையவில்லை..எனக் கலைஞரைக் கிண்டலடித்துக் கூறியிருக்கிறார். கலைஞர் அவரை முறைக்க, எம்ஜிஆர் அதை ரசித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிவி குடும்பத்தோடு கலைஞர் இல்லம் போக, அவரது பிள்ளைகளிடம் உங்கப்பா அசெம்பிளில என்னப் பத்தி என்ன சொன்னாரு தெரியுமா என்று ஜிவி கூறியதை அப்படியே கூறியுள்ளார்.\n72. சினிமா நிகழ்ச்சிகளில் கலைஞர் விரும்பிக் கலந்து கொள்வார். ஆனால் படத்தைப் பார்த்து விட்டுத்தான் பேசுவார். ”படையப்பா வசூல் ரெகார்டையெல்லாம் உடையப்பா” விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் யெஸ்டர் டே” “ டி.ஆர். என்னில் பாதி”..என்பது போலப் பல பட விழாக்களில் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.\n73. மாறன் சகோதரர்களுக்கும் கலைஞருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கின்போது (2008), 'உளியின் ஓசை' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு வசனம் இது: 'பறக்கத் தெரியும் என்பதற்காக சூரியனுக்குள் பாயக்கூடாது.'\n74. முரசொலிக்கு வரும் கட்டுரைகள் கலைஞரின் ஒப்புதல் பெற்றே பிரசுரமாகும். ஒருமுறை தன் இருக்கையின் நுனியில் உட்கார்ந்துகொண்டு கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார் கலைஞர். அப்போது மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி அவர்கள் கலைஞரிடம், ''சேரில் சாய்ந்துகொண்டு பாருங்களேன்'' என்றார். அதற்கு கருணாநிதி சொன்னார், ''வேணாங்க சாஞ்சிக்கிட்டா சோம்பேறித்தனம் வந்துடும்''. - இப்படிச் சொன்னபோது அவருக்கு வயது எண்பத்து இரண்டு.\n75. இந்திப்படங்களை விரும்பிப் பார்ப்பாராம். மாடர்ன் தியேட்டர்சில் இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி சுந்தரம், ஒரே நாற்காலி போட்டு உட்காரும் பழக்கம் உள்ளவர். அவர் இரண்டே பேருக்கு மட்டுமே தன் எதிரில் அமர அனுமதி வழங்குவாராம். அதில் ஒருவர் கலைஞர். மற்றவர், கண்ணதாசன்.\n76. கலைப்புலி தாணு தி முக விற்காக ஒரு பிரச்சாரப் படம் செய்ய விரும்பிய போது ஒப்புக்கொண்டு தனது பழைய ஃபுட்டெஜெல்லாம் கொடுத்து உதவினார். தாணு அவர்கள் இசையமைத்து அவரே பாடல்களும் எழுதினார். கலைஞர் அடிக்கடி எடிட்டிங்கிற்கு வந்து மாற்றங்கள் சொல்வதுண்டு. அப்போது ஓர் இடத்தில் பிச்சைக்கார மறுவாழ்வைப் பற்றிச் சொல்கையில் அய்யா சாமி தர்மம் பண்ணு. அம்மா தாயே தர்மம் பண்ணு..இட ஒழிச்சவர் நம்ம கலைஞரு..என்று வந்தது. அந்த இடத்தில் நிறுத்தச் சொன்ன கலைஞர், தாணு..அத அய்யா சாமி பிச்ச போடு.. அம்மா தாயே பிச்ச போடுனு மாத்திடு..இல்லன்னா..கருணாநிதி.தர்மம் பண்றத ஒழிச்சாருன்ற மாதிரி ஆயிடும்.. என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.\n77. ஒரு முறை கலைஞரோடு திமுக பிரச்சாரப் படம் எடுப்பது குறித்து ஒரு சந்திப்பு. அப்போது பேசிக்கொண்டிருக்கையில் நான் சொன்னேன் அய்யா நீங்க ஒரு முறை என்னை எல்லோரும் முதல் அமைச்சர் என்கிறார்கள். ஆனால் அண்ணா என்கிற முதலை இழந்த அமைச்சர் நான் சொன்னீங்க என்றேன்..சொன்னேனாயா என்றார்..ஆமாய்யா சொன்னீங்க என்றேன்..அவர் ஆச்சர்யத்தோடு தாணு சாரைப் பார்த்து, சின்ன புள்ள எவ்ளோ ஞாபகம் வெச்சிக்கிட்டிருக்கு என்றார். மு.க ஸ்டாலின் அவர்களும், சண்முகநாதன் அவர்களும் கூட இருந்தனர்.\n78. நெருக்கடியான தருணங்களில் துணிச்சலுடன் முடிவெடுப்பார். கொள்கை அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி: தந்தை பெரியார் தனது 94 வது வயதில் காலமானார் என்ற செய்தி ‘கலைஞருக்குதெரிவிக்கப்பட்டது. தனது ஆட்சியில் அப்பெயரியவருக்கு பிரமாண்டமான இறுதி மரியாதையைச் செய்து விட வேண்டும் என எண்ணினார் கலைஞர். தலைமைச் செயலாளரை அழைத்து சென்னையில் மறுநாள் பூரண அரச மரியாதைகளும் பெரியாரின் பூதவுடல் பெரியார் திடலில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொன்னார். தலைமைச்செயலாளர், பெரியாருக்குப் பூரண அரச மரியாதை அளிப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர் ஒரு மக்கள் தலைவராக இருந்தாலும் அரசு பதவிகள் எதையும் வகிக்காதவர், அரசு பதவி வகிக்காதவருக்கு அரசு மரியாதை தரும் வழக்கம் கிடையாது. அப்படிச் செய்தால் மத்திய அரசுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்றார். அதெல்லாம் எனக்குத் தெரியாது.... பூரண அரச மரியாதைகளுடன் பெரியாரின் நல்லடக்கம் நடைபெறவேண்டும் என்று கலைஞர்சொன்னதும், எப்படி விதிகளை மீறுவது என்று இழுத்தார் தலைமைச்செயலர். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு அரச பதவியாவது வகித்திருக்கிறாரா என்று இழுத்தார் தலைமைச்செயலர். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு அரச பதவியாவது வகித்திருக்கிறாரா அவருக்கு மத்திய அரசாங்கம் பூரண அரச மரியாதைகளுடன்தானே இறுதிக்கிரியைகளைச் செய்தது அவருக்கு மத்திய அரசாங்கம் பூரண அரச மரியாதைகளுடன்தானே இறுதிக்கிரியைகளைச் செய்தது காந்திக்கு ஒருநீதி பெரியாருக்கு ஒருநீதியா காந்திக்கு ஒருநீதி பெரியாருக்கு ஒருநீதியா பெரியாருக்கு பூரண அரச மரியாதைகளுடன் இறுதி மரியாதை நடக்கவேண்டும். இதனால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று சொல்லி அவரை அனுப்பினார் கலைஞர். பூரண அரச மரியாதைகளுடன் நடைபெற்றன பெரியாரின் நல்லடக்கம்.\n79. இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்த போது அவருடன் கூட்டணி வைத்திருந்த கலைஞர் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் நெருக்கடிநிலையை எதிர்த்தார். நெருக்கடி நிலைகாலத்தில் இயற்றப்பட்ட மிசாசட்டத்தின் கீழ்பல தி.மு.க தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.\n80. அவ்வாறு சிறைசென்றவர்களில் ஒருவர் ஸ்டாலின். சிறையில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். தி.மு.க தலைவர்களுள் ஒருவரான சிட்டிபாபு சிறைக் கொடுமைகளுக்கு ஆளாகி உயிரிழந்தார்.\n81. 1983 ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனக்கோரி தன் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.\n82. இந்திய அமைதிப் படை இந்தியா வந்த போது இந்திய வீரர்களை வரவேற்பதற்கு கலைஞர் அங்கே செல்லவில்லை. பின்னர் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, என் சகோதரர்களான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தவர்களை நான் வரவேற்கமாட்டேன் என்று துணிச்சலாக சொன்னார்.\n83. வேலூரில் கண்டி மன்னன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கல்லறை அமைந்திருக்கும் இடம் மிகமிக அசுத்தமாக்க் கேட்பாரற்றுக் கிடந்தபோது, , முத்துமண்டபம் என்ற பெயரில் கட்டிடமொன்றை எழுப்பி கண்டி மன்னர் மற்றும் குடும்பத்தினரின் கல்லறைகளைப் பாதுகாத்தார்.\n84. தமிழகத்தில் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டபோது கொலையாளிகள் தப்பிச் செல்வதற்கு கலைஞர் உடந்தையாக இருந்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனால் ஆட்சியை இழந்தார்.\n85. பின்னர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்ட போது, திமுக பெருத்த அடி வாங்கியது. 1991 தேர்தலில் கலைஞர் மட்டுமே வென்றார்.\n86. கலைஞர் இந்திய வரலாற்றிலேயே தேர்தலில் தோல்வியுறாத ஒரே தலைவர் ஆவார்.\nகலைஞரின் சட்ட மன்ற சாதனைகள்:\nஅண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.\n88. தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.\n89. தமிழ்நாட்டு ஆளுநரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.\n90. தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.\n91. கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்\n92 . திரைக்கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்:\n94.திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்:\n1. ஊருக்குஉழைப்பவண்டி - மந்திரிகுமாரி\n2. இல்வாழ்வினிலேஒளி.. - பராசக்தி\n3. பூமாலைநீயே - பராசக்தி\n4. பேசும்யாழேபெண்மானே - நாம்\n5. மணிப்புறாபுதுமணிப்புறா - ராஜாராணி\n6. பூனைகண்ணைமூடி - ராஜாராணி\n7. ஆயர்பாடிகண்ணாநீ - ரங்கோன்ராதா\n8. பொதுநலம்என்றம் - ரங்கோன்ராதா\n9. அலையிருக்குதுகடலிலே - குறவஞ்சி\n10. வெல்கநாடுவெல்கநாடு - காஞ்சித்தலைவன்\n11. ஒருவனுக்குஒருத்திஎன்ற - பூம்புகார்\n12. கன்னம்கன்னம் - பூமாலை\n13. காகிதஓடம் - மறக்கமுடியுமா\n14. ஒண்ணுகொடுத்தா - மறக்கமுடியுமா\n15. நெஞ்சுக்குநீதியும் - நெஞ்சுக்குநீதி\n95.திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள்:\nபொன்னர்சங்கர் எனும் பெயரில் கலைஞர் எழுதிய நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர்சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n🅱REAKING NEWS LIVEஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை. 17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க...\nஉடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி இதோ...\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\n2017-18 ஆம் ஆண்டிற்கான Cps கணக்கீட்டு தாள் வெளியீடு\nL K G. U .K G ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் \nஅரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வ...\nதமிழ்நாட்டில் பக்ரீத் விடுமுறை 22.08.2018 - புதன்கிழமை.\n வருமான வரி பற்றிய முக்கிய செய்தி\nஉங்களுடைய கிட்னி நீண்டநாட்கள் நோயின்றி செம்மையாக செயல்பட வேண்டுமா தினமும் இதை செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/shriya-goes-tokyo-attend-sivaji-3d-161451.html", "date_download": "2018-08-18T01:03:18Z", "digest": "sha1:DTFCJF7JMAVYKMVNUB5DIGBU3IPBZOEC", "length": 10350, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா | Shriya goes to Tokyo to attend Sivaji(3D) premiere | சிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா\nசிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் 3டி பிரீமியர் ஷோவில் கலந்து கொள்ள ஸ்ரேயா சரண் டோக்கியோ செல்கிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்த படம் சிவாஜி. தற்போது சிவாஜி படம் 3டியில் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரீமியர் ஷோ தமிழகம் தவிர்த்து ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ள ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார்.\nஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு ரிலீஸான சிவாஜி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் அதை 3டியில் வெளியிட முடிவு செய்தது. இந்த 3டி படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசல்மான் ருஷ்டியின் மின்நைட் சில்ட்ரன்ஸ் நாவலைத் தழுவி தீபா மேத்தா எடுத்த மிட்நைட் சில்ர்ட்ரன்ஸ் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். அந்த படத்தின் பிரீமியர் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயா கலந்து கொண்டார்.\nரஜினிகாந்தின் படத்திற்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் தவிர, ஜப்பான் ரசிகர்களும் சிவாஜி 3டி படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர்.\nதீவில் \"குளு குளு\" ஹாலிடே: பிகினி போட்டோவை வெளியிட்ட ஸ்ரேயா\nகணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த ஸ்ரேயா: வைரலான புகைப்படம்\nலீக்கானது ஸ்ரேயாவின் ரகசிய திருமண புகைப்படங்கள்\nஅம்மா கடும்கோபத்தில் இருப்பதால் ஸ்ரேயா இப்படி செய்துவிட்டாரா\nநகை, உடைகள் ஆர்டர் செய்தது உண்மை தான், ஆனால்...: ஸ்ரேயா திருமணம் பற்றி அம்மா பேட்டி\nஎன்ன பெரிய வயசு...: ஸ்ரேயாவின் மெகா திட்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=4219", "date_download": "2018-08-18T00:45:09Z", "digest": "sha1:NK73TVJ2H3UWIFRSY47NQSZE2SUJNK4M", "length": 14465, "nlines": 200, "source_domain": "kisukisu.lk", "title": "» பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்!", "raw_content": "\n14,000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ரொட்டி கண்டுபிடிப்பு\n600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்\nஉலகின் மிக அழகற்ற நாய் பட்டத்தை வென்ற புல்டாக்\nஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கரட் தங்க கோழிக்கறி\n← Previous Story இரவில் நெருப்போடு விளையாடும் பெண்\nNext Story → உலகத்தையே உலுக்கிய புகைப்படம் இது\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nநீங்கள் இணையதளங்களில் அதிக நேரத்தை செலவிடுபவரா, ஓரளவுக்கு ஆங்கில மொழியறிவும், அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்கும் பழக்கமும் கொண்டவரா, ஓரளவுக்கு ஆங்கில மொழியறிவும், அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்கும் பழக்கமும் கொண்டவரா வீட்டில் இருந்தபடியே சில மணி நேரம் மட்டும் வேலை செய்து மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய்வரை சம்பாதிக்கும் அரிய வாய்ப்பை பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ உங்களுக்கு உருவாக்கித் தந்துள்ளது.\nவீட்டில் இருந்தவாறே உங்களது கம்ப்யூட்டர் மூலம் சில இணையதளங்களில் புகுந்து, அதில் காணப்படும் சில செய்தி, கதை, தகவல் ‘லிங்க்’களை பிற இணையங்களுக்கு பரிமாறினால் போதும். இந்த பணியை உங்களுக்கு வசதியான வேலை நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் 5 மணி நேரம் முதல் 50 மணி நேரம் வரை வீட்டில் இருந்தபடியே உழைத்து, நீங்கள் லட்சாதிபதியாகலாம்.\nசுமார் 13 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய ஆலமரமாக படர்ந்து விரிந்திருக்கும் பேஸ்புக் நிறுவனம், உங்களது உழைப்புக்கான ஊதியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகவும், பேபால் மூலமாகவும் வாரந்தோறும் செலுத்திவிடும்.\nகுறிப்பாக இந்தியர்களை குறிவைத்து “Work From Home” என்ற இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ள இந்நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற முதலில் இந்த திட்டத்தில் உங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஒரு சிறிய தொகையை செலுத்தினால், இந்த வேலை தொடர்பான கையேடு மற்றும் செய்முறை விளக்கம் குறித்த விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதில் கண்டுள்ள விபரங்களின்படி நீங்கள் இதுதொடர்பான இணையத்துக்குள் நுழைந்து உங்களது வேலையை தொடங்க வேண்டியதுதான். உங்களது ஊதியத்தை எவ்விதமான பணப்பரிமாற்றம் மூலம் பெற விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு விட்டால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உங்கள் வேலைக்கான சம்பளத்தை ‘பேஸ்புக்’ நிறுவனம் தவறாமல் செலுத்திவிடும்.\nகடந்த ஆண்டு, வேலையை இழந்துவிட்ட மும்பையைச் சேர்ந்த பிரதிப் பாலி என்பவர், பேஸ்புக் வைத்த பேட்டா (beta) தேர்வில் பங்கேற்று இந்த வேலையில் சேர்ந்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலமாக வீட்டில் இருந்தபடியே தனக்கு வசதியான நேரத்தில் வேலை செய்து, மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\n23 Comments on “பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nசினி செய்திகள்\tAugust 3, 2018\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovaisakthi.blogspot.com/2012/11/158.html", "date_download": "2018-08-18T01:18:24Z", "digest": "sha1:AID5AWGK6I2FOB4AYLBPACTTZIJDEYV6", "length": 7891, "nlines": 125, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -158 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -158\nதேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5629.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5651.80 வரை உயர்ந்தது 5613.2 வரை கீழே சென்று 5646.10 முடிவடைந்தது.\nஅர்விந்த் கேஜ்ரிவால் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசியலுக்கும் - பெரும் தொழிலதிபர்களுக்கும் உள்ள அந்தரங்க உடன்பாடுகளையும் ,தொடர்புகளையும் , கடுமையாக சாடியுள்ளார் .\nஅரசியல் கட்சிகள் பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் ,குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் திரு .முகேஷ் அம்பானியை பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.KG D6BASIN - ஒப்பந்தத்தில் மத்திய அரசு திரு .முகேஷ் அம்பானிக்கு சாதகமாக நடந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.\n,தற்போது மத்திய அரசை எரிவாயு விலையை அதிகரிக்க கூறி நிர்பந்திப்பதாகவும் ,தனது எரிவாயு உற்பத்தியை ஏறகுறைய நிறுத்தும் நிலையில் மத்திய அரசுக்கு எரிவாயு விலையை உயர்த்த மறைமுக அழுத்தம் தருவதாகவும் கூறி உள்ளார் .\nமத்திய் மந்திரி சபையில் முன்னால் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த திரு .ஜெயபால் ரெட்டியின் மாற்றத்தின் பின்னணியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்ததாக அனைத்து செய்திகளிலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .\nKG D6 BASIN - ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்து செய்து அரசே எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் எரிவாயுவை தர ஆவன செய்யுமாறு தெரிவித்துள்ளார் .\nஇதன் தாக்கமாக இன்று சந்தையில் எதிரொளிக்கும் என்று எதிபார்க்கலாம் .கவனம் தேவை .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nதிண்டுக்கல் தனபாலன் November 01, 2012 1:33 PM\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nபங்கு வர்த்தகம் மலர் -163\nபங்கு வர்த்தகம் மலர் -162\nபங்கு வர்த்தகம் மலர் -161\n தீபாவளி திரு நாள் கொண்டாடுவோம் \nபங்கு வர்த்தகம் மலர் -160\nகோவையில் பயங்கரம் குழந்தைகள் கொலை -வழக்கு\nபங்கு வர்த்தகம் மலர் -159\nபங்கு வர்த்தகம் மலர் -158\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/2008/06/hindu-service-orgs-list-1/", "date_download": "2018-08-18T01:21:15Z", "digest": "sha1:5LN7CSEFOX5MAJSUYGV2J6SYJLYE3VBH", "length": 40205, "nlines": 415, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்\nஇந்தப் பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் பல ஊர்களில் உள்ளன. நீங்கள் அறிந்திருக்கும், இணைந்து பணியாற்றும் அமைப்புகள் பற்றிய தகவல்களை தமிழ்ஹிந்து தளத்திற்கு அனுப்புங்கள்.\nஅகில இந்திய அளவில் பணியாற்றும் அமைப்புகள்:\nசேவா பாரதி (மையம், தமிழ்நாடு கிளை ) : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்\nஜெய்பூர் கால்கள் :ஊனமுற்றோருக்கு செயற்கைக் கால்கள்\nமாதா அம்ருதானந்தமயி மடம் – சேவைப் பிரிவு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்\nசத்யசாயி சேவை அமைப்பு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்\nஏகல் வித்யாலயா : வனவாசிகளுக்கான பள்ளிகள், மையங்கள்\nவாழும் கலை அமைப்பு (Art of Living) :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்\nஸ்ரீராமகிருஷ்ண மடம் – சென்னை, இந்திய கேந்திரங்கள்\nசின்மயா மிஷன் : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்\nஅக்ஷய பாத்ரா : அகில உலக கிருஷ்ணபக்தி அமைப்பின் மாபெரும் சத்துணவுத் திட்டம்\nஅகில இந்திய சேவை இயக்கம் (AIM for Seva)\nவனவாசி கல்யாண் அமைப்புகள் – 1, 2\nதமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:\nஅரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை\nஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் (Isha Foundation)\nஇயற்கை வள மேம்பாட்டுத் திட்டம் (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)’\nசிவானந்த குருகுலம் & அனாதை இல்லம், காட்டாங்குளத்தூர் (சென்னை அருகில்)\nவேர்கள் அறக்கட்டளை , சென்னை (குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு)\nகிராம கோயில் பூசாரிகள் பேரவை\nஓம் பிரணவ ஆசிரமம், தென்காசி, நெல்லை மாவட்டம் (குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு)\nஇளைய பாரதம் சேவா டிரஸ்ட், சென்னை (ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி)\nஅமர் சேவா சங்கம், ஆய்க்குடி, நெல்லை மாவட்டம் (ஊனமுற்றோர் மறுவாழ்வு)\nரீச் ஃபவுண்டேஷன், சென்னை – கோயில் பராமரிப்பு & சீரமைப்பு, கலை & வரலாற்று விழிப்புணர்வு இயக்கம்\nபாரதத்தின் மற்ற மாநிலங்களில் இயங்கும் அமைப்புகள்:\nவிவேகாநந்தா கேந்திர அருண் ஜ்யோதி – அருணாசலப் பிரதேசம்\nஹிந்து சேவா பிரதிஷ்டானம் – கர்நாடகம்\nஇந்து சேவை அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வாழ்வோர் உதவ:\nஇந்து திருக்கோயில்கள் ஆற்றும் சேவைப் பணிகள்:\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்\nமஞ்சுநாதஸ்வாமி ஆலயம், தர்மஸ்தலா, கர்நாடகம்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், தமிழ்நாடு\n32 மறுமொழிகள் இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்\nஇலங்கையில் உள்ள சில இந்துச்சமூக அமைப்புக்கள்…\nயாழ.தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலய மகளீர் சிறுவர் அநாதைகள் இல்லம்\nயாழ.வல்லிபுரம் பெருமாள் ஆலய பெரியாழ்வார் ஆச்சிரமம்.\nகொழும்பு மற்றும் மட்டக்களப்பு ராமகிருஷ்ணமிஷன்கள்\nயாழ். கொக்குவில் ராமகிருஷ்ண சேவாச்சிரமம்\nயாழ் பருத்தித்துறை சாரதா சேவாச்சிரமம்\nவவுனியா அகிலாண்டேஸ்வரர் கோவில் சிறுவர் இல்லம்\nகொழும்பு கிருஷ்ணர் ஆலய சிறுவர் இல்லம்\nமட்டக்களப்பு செங்கலடி சிவதொண்டர் நிலையம்\nயாழ்.திருநெல்வேலி ஹிந்துபோட் ஸ்தாபனம்- சிறுவர் இல்லம்\nகைதடி இந்துச் சிறுவர் வயோதிபர் இல்லம்\nநயினாதீவு நாகபூஷணியம்பாள் ஆலய இலவச மருத்துவ முகாம்\nஇலங்கையின் பலபாகங்களிலுமிருக்கும் சாயிசேவா சமித்திகள்…\nஇலங்கையிலுள்ள வாழும் கலை அமைப்பின் கிளைகள்.\nநிங்கள் இந்துமதத்திற்கு மேலை நாட்டவரின் பங்குப்பற்றி எழுதமாட்டிர்களா\nஎல்லோரும் ஏமாறுகிறார்கள் படித்தேன். இன்னும் எத்தனை, எத்தனை நிறுவனங்கள் இப்படி இருக்கிறதோ உண்மையை உலகிற்கு காட்டும் உங்கள் பணி தொடரட்டும்.\nஐயா, ஹிந்து சேவை அமைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளீர்கள். உண்மையிலேயே இது மிகவும் பயனுள்ள செய்தியாகும்.ஆனால்.இவற்றின் மின் அஞ்சலையும் தெரிவிற்றிருன்தால் நாங்கள் தொடர்புகொள்ளவும்,நன்கொடைகளை அனுப்பவும் வசதியாக இருக்கும்.ஆகவே மின் அஞ்சல் விவரத்துடன் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஉண்மையிலேயே இது மிகவும் பயனுள்ள செய்தியாகும் …நன்றி\nபாரத தாயின் முழு திருவருள் பெற்ற ஹிந்து இயக்கங்களின் நாடி துடிப்பாக விளங்கிய வீர ஸ்ரீ பாலா சாகிப் பால்தாக்கரே ஜி அவர்களின் மரணம் நம்மை நிலைக்குலைய வைத்திருக்கலாம். நாங்கள் சத்ரபதியாரை பார்த்ததில்லை,சுவாமி விவேகானந்தரை பார்த்ததில்லை,பாலகங்காதர திலகரை பார்த்ததில்லை,மகாகவி பாரதியாரை பார்த்ததில்லை இவர்களின் முழு உருவாய் உம்மை காண்கின்றோமே .உம்மை எரிக்கப்படவில்லை, இந்த பாரத கோவிலிலே ஹிந்துத்துவ ஜோதியாக ஏற்றஈருகிறோம் .என்றும் சமுதாய பணியில் ” ஹிந்துப்ரியன்”காவிபுயல் .கே.சிவாஜி.பி.எ.,\n1300 திருக்கோயில்களை அழித்தபின்பும் இலங்கையில் இத்தனை சேவாலயங்களா வைரவேல் வீரப்பனை என்குநின்றாலும் தோற்கடிப்போம் என்று சபதம் எடுத்து, பின்னர் அவருக்கே ஓட்டு போடச்சொன்ன கொடுமையை இப்போது ராஜபக்சே வந்தபோது ‘சாமி கும்பிட வருபவனை தடுக்காதீர் என்றால் காந்தஹார் தீவிரவாதி, தாவூத், இவர்கள் ஆஜ்மீர் தர்காவுக்கும் தொழுஹைக்கு வரலாமல்லவா எங்கள் ஸ்ரீலஸ்ரீ இராம கோபாலன் அவர்களே\nஉலகில் அதிகமாக தன்னலமில்லா தொண்டில் இருப்பது “இந்து” சேவா அமைப்புக்கள்தான். இந்த அமைப்புக்கள் அல்லாமல் பல்வேறு இந்து ஜாதி அமைப்புக்களும் சேவை செய்து வருகின்றன. “இந்து நாடார்” சமுதாயத்தினர் ஏராளமான கல்வி ஸ்தாபனங்களை சிறந்த முறையில் நடத்தி வருகிறார்கள். தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது.\nகிருத்துவர்கள் எங்கும் சேவா மையங்கள் நடத்துவது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் சொந்த பணத்தைக்கொண்டு கல்வி ஸ்தாபனங்களை கிருத்துவர்கள் நிறுவவில்லை சொந்த பணத்தைக்கொண்டு கல்வி ஸ்தாபனங்களை கிருத்துவர்கள் நிறுவவில்லை வெளிநாட்டு பணத்தைகொண்டுதான் செலவு செய்கிறார்கள். இதில் பெரும்பாலான பணம் கிருத்துவ பாதிரிகளின் சொந்த செலவிர்க்கே போகிறது. இந்த பணம் நமது நாட்டை கொள்ளையடிக்கப் பயன்படுத்துகிறார்கள். மதமாற்றம் செய்து நமது பண்பாடு கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள்.\nஇந்து சேவை அமைப்புகள் பற்றிய விவரம் குறைவாகவே உள்ளது. மாவட்டம் வாரியாக பல சிறு சிறு அமைப்புகள் அந்த நகர் மற்றும் மாவட்டத்தில் பெரும் தாக்கத்தில் வேலை செய்கின்றனர் அவர்களை அடையாளம் கண்டு மாவட்டம் வாரியாக இந்து சேவை அமைப்புகள் பற்றிய விவரம் வரும் பட்சத்தில் நமது சேவை மக்களிடம் எவ்வளவு பெரிய எழுச்சியையும் தாக்கத்தையும் எற்படுத்தியுள்ளது என்பதை ஆதாரமாக தேற்ற முடியும். இந்து சேவை அமைப்புகளால் மட்டுமே இந்த தேசத்தை ஆர்பரிப்பு இன்றி பிறர் நலனில் அர்பனிப்போடு சேவை செய்கிறது. மற்ற மத அமைப்பு சேவை மையங்கள் மதநலன் கொண்டே சேவை செய்கிறது என்பதை நாம் தோலூரித்து காட்ட வேண்டிய கட்டாய நிலை இன்று உள்ளது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nடெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை\nஹலால் கறியா ஜட்கா கறியா\nஅறியும் அறிவே அறிவு – 10\nமனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்\nஇந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nஎழுமின் விழிமின் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1\nமரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]\nஅழைத்து அருள் தரும் தேவி\nஇயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/kajal-agarwal-turns-28-today-177445.html", "date_download": "2018-08-18T00:59:27Z", "digest": "sha1:HHMWSFLA73JYMDELOBDQH4CH6GDGVFFU", "length": 10249, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஜல் அகர்வாலுக்கு இன்று 28வது பிறந்தநாள் | Kajal Agarwal turns 28 today - Tamil Filmibeat", "raw_content": "\n» காஜல் அகர்வாலுக்கு இன்று 28வது பிறந்தநாள்\nகாஜல் அகர்வாலுக்கு இன்று 28வது பிறந்தநாள்\nசென்னை: காஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nபழனி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் காஜல். அவர் மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை வாங்கிக் கொடுத்த படம் துப்பாக்கி தான்.\nதுப்பாக்கியின் வெற்றிக்கு பிறகு காஜலுக்கு தமிழ் திரையுலகில் மவுசு கூடிவிட்டது.\nகாஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nகஜால் விஜய்யுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார்.\nகாஜல் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டுள்ளார்.\nலிங்குசாமி இயக்கத்தில் கமல் இயக்கி, நடிக்கும் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்சனையால் ஏற்க மறுத்துவிட்டார் காஜல்.\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nதனிமூனாக ஹனிமூன் சென்ற காஜல்... 'நாசமா போச்சு'... இது நடந்தது பாரிஸில்\nதங்கச்சி மகனை கொஞ்சும் பெரியம்மா காஜல்: க்யூட் புகைப்படங்கள்\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nவிஜய், சூர்யா, கார்த்தி எல்லாம் கஷ்டப்பட வேண்டும்: காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வாலை கரெக்ட் பண்ண பார்த்த அஜீத்தின் ரீல் தம்பி\nகாஜல் அணிந்திருக்கும் உடையின் பெயரை கேட்டால் உங்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திரும்\n: கொந்தளித்த காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வாலுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த சத்குரு ஜக்கி வாசுதேவ்\nதாமாக முன்வந்து பிரபல இயக்குனரின் மனைவிக்கு உதவிய காஜல் அகர்வால்\nசந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கவலையில் இருக்கும் காஜல் குடும்பத்தார்\nரஜினிக்கு இல்லாத தைரியம் ஜி.வி. பிரகாஷுக்கு இருக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kajal agarwal birthday wishes காஜல் அகர்வால் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-2/", "date_download": "2018-08-18T00:20:11Z", "digest": "sha1:AO37NYWNAANUYKZYRKIEBRGU4NDFU3EQ", "length": 14353, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புது upps வெளியீடு | CTR24 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புது upps வெளியீடு – CTR24", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்வில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன\nஜெனீவாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு கடும் சவாலாக செயற்படவுள்ளதாக சிங்கள அமைப்பு ஒன்று சூளுரைத்துள்ளது\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புது upps வெளியீடு\nஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தமிழர்கள் போராடி வரும் நிலையில் இதற்கென புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் துவங்கிய இப்போராட்டம் இன்று உலகின் சில நாடுகளில் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் அளவுக்கு விரிவடைந்துள்ளது.\nநிரந்தர தீர்வை நோக்கி நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கூகுள் பிளே ஸ்டோரில் புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி வீடூஜல்லிக்கட்டு (WeDoJallikattu) என்ற பெயர் கொண்டுள்ளது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியில் ஜல்லிக்கட்டு வரலாறு, இதற்கு ஆதரவு வழங்க வாக்கு செலுத்தும் முறை மற்றும் ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்து யூட்யூபில் பதிவு செய்யப்படும் கானொளிகளை பார்க்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகம் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த செயலி போராட்டம் மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு வரலாறு குறித்து பலரும் அறிந்து கொள்ள வழி செய்வதாக அமைந்துள்ளது. இதே போன்று பல்வேறு செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.\nPrevious Postகார்ட்டூன் பார்ப்பதால் திசைமாறும் குழந்தைகளின் மனநிலை Next Postவெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா விடைபெறும் காட்சி\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்...\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/spiritual/03/107780?ref=category-feed", "date_download": "2018-08-18T00:50:31Z", "digest": "sha1:GGCS7DN3M5I3Y2GJZWGJL3IOVIAGLWIV", "length": 6563, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "வெகுசிறப்பாக இடம்பெற்ற சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த் திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெகுசிறப்பாக இடம்பெற்ற சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த் திருவிழா\nசுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த் திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nகடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் இவ் ஆலயத் திருவிழா ஆரம்பமானது.\nசிவசுப்பிரமணிய சுவாமியின் தேர் வீதி உலா வரும் காட்சியைக் காண பல ஆயிரம் மக்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/2018/01/20/", "date_download": "2018-08-18T01:28:23Z", "digest": "sha1:THZ2XHOO6RMJTOVV6W7X3SVUY36RIIHH", "length": 5801, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –January 20, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nசேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு\nசுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே சூரப்பள்ளிநைனானூரில் சேலம் வரலாற்று தேடல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வரலாற்று தேடல் ஆர்வலர் சீனிவாசன், ”சேலம் மாவட்டம் நங்கவள்ளி சூரப்பள்ளிநைனானூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் கொடுத்த… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”\nபுலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”\nஇலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க\n295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2013/03/2_5.html", "date_download": "2018-08-18T01:34:29Z", "digest": "sha1:UH47625FR5FF6LTEFMK5CBLMOIATTLB7", "length": 13402, "nlines": 106, "source_domain": "www.kalvisolai.org", "title": "உலக வரலாறு | +2 முக்கிய குறிப்புகள்", "raw_content": "\nஉலக வரலாறு | +2 முக்கிய குறிப்புகள்\n1) ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய ஆண்டு -(1453)\n2) நவின அறிவியலின் தந்தை என்று கருதப்படுபவர் -(பிரான்சிஸ்பேசன்)\n4) இளவரசன் என்ற அரசியல் அறிவியல் நூலை எழுதியவர் -(மாக்கியவல்)\n6) மெடிரா மற்றும் அசோர் தீவுகளை கண்டுபிடித்தவர்- (ஹென்றி)\n7) வாஸ்கோடகாமா இந்தியாவை சென்று அடைந்த ஆண்டு-(1498)\n8)கனடாவை கண்டுபிடித்தவர்- (ஜேக்கஸ் கார்டியர்)\n9) சமயசீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனக் கருதப்படுபவர்-(ஜான்வைக்கிளிப்)\n10)இயேசு சகையை நிறுவியவர்- (இன்னேμயஸ் லயோலா)\n11) ஜெனிவா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்-(ஜான்கால்வின்)\n12) பிரதிநித்துவம் இல்லையேல் வரியில்லை என்ற முழக்கம் எந்த நாட்டு விடுதலைப்போராட்டத்தின் போது எழுப்பப்பட்டது-(அமெரிக்கா)\n13) பொது அறிவு என்னும் நூலின்ஆசிரியர்-(தாமஸ்பெயின்)\n14) 1774-ல் முதல் கண்ட மாநாடு நடைபெற்ற இடம்-(பிலாடல்பியா)\n15) ஏழாண்டுப்போர் நிறைவடைந்த ஆண்டு -(1763)\n16) அமெரிக்க விடுதலைப்போர் - உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது-(பாரிஸ்)\n17) பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சின் மன்னராக இருந்தவர்-(பதினான்காம் லூயி)\n18) சமூக ஒப்பந்தம் என்ற நூலின்ஆசிரியர்-(ரூசோ)\n19) ஸ்டேட்ஸ் ஜெனரன்முதலாவது பிரிவு -பிரதிநிதிகளைக் கொண்டது(உயர்குடி)\n20) பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தியவர் -(டவுன்ஷெண்ட்)\n21) அலெக்சாண்டர் கிரகாம்பெல்-கண்டறிந்தார். (தொலைபேசியை)\n22) மின்சார விளக்கை கண்டறிந்தவர்- (எடிசன்)\n23) குடிபெயர்ந்தோர் குடியேற்ற நாடு என்று அழைக்கப்பட்ட நாடு எது -(அமெரிக்கா)\n24) மூன்று பேரரசர்கள் கழகத்தை அமைத்தவர்-(பிஸ்மார்க்)\n25) பெர்லின்மாநாடு கூட்டப்பட்ட ஆண்டு-(1878)\n26) ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சிக்கு தலைமையேற்றவர்-(லெனின்)\n27) ரஷ்ய சோசலிசஜனநாயக கட்சியை அமைத்தவர் -(ஜார்ஜ் பிளக்னோவ்)\n28) சோவியத் சோஷலிஸ்டு கூட்டரசு அமைக்கப்பட்ட ஆண்டு -(1922)\n29) பன்னாட்டுக் கழகம் உருவாக்க காரணமாக இருந்தவர்-(உட்ரோவில்சன்)\n30) பன்னாட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு-(1920)\n31) முசோலினி வெளியிட்ட பத்திரிக்கை-(அவந்தி)\n32) தேசிய சோஷலிஸ்டு கட்சியை நிறுவியவர்-(ஹிட்லர்)\n33) பாசிசம் என்பது என்பவரது கொள்கையாகும்-(முசோலினியின்)\n34) ரோம் – பெர்லின்– டோக்கியோ அச்சு உருவான ஆண்டு- (1937)\n35) ஜப்பான் பெர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் தொடுத்த ஆண்டு-(1941)\n36) அமெரிக்கா ஹிரோசிமா மீது அணுகுண்டை வீசிய நாள்-(ஆக்ஸ்டு 6, 1945)\n37) பசிபிக் பகுதியின் தலைமைத் தளபதி-(ஜென்ரல் மெக் ஆர்தர்)\n38) ஆசியாவின் நோயாளி என்று கருதப்பட்ட நாடு-(துருக்கி)\n39) முதல் அபினியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை-(நான்கிங்)\n40) கோமின்டாங் கட்சியை நிறுவியவர்-(டாக்டர் சன்யாட்சென்)\n41) சான்பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு -(1951)\n42) ஐ.நா. சபையின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்-(நியூயார்க்)\n43) ஐ.நா. சபை அமைக்கப்பட்ட நாள்-( அக்டோபர், 24, 1945)\n44) ஐ.நா. சபையின் நீதித்துறை-(பன்னாட்டு நீதிமன்றம்)\n45) கெடுபிடிப்போர் எனும் சொல்லை முதல் பயன்படுத்தியவர்-(பெர்னாட் பரோச்)\n46) ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு-(1972)\n47) பன்னாட்டு வாணிப அமைப்பை உருவாக்க காரணமாயிருந்த மாநாடு-(பிரிட்டன்- வுட்ஸ் மாநாடு)\n48) உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட ஆண்டு-(2001)\n49) உலக வர்த்தக மையத்தின் தலைமையிடம்-(ஜெனிவா)\n50) ஐரோப்பிய யூனியன் உருவான ஆண்டு-(1993)\nஉலக வரலாறு | +2 முக்கிய குறிப்புகள்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2014/03/blog-post_31.html", "date_download": "2018-08-18T01:05:01Z", "digest": "sha1:S42WORGSTEGXE765SVGCYUTOCUYFNUGU", "length": 13527, "nlines": 204, "source_domain": "www.kummacchionline.com", "title": "நான் ஒளரல ஓரளலங்கண்ணா...சொல்றாங்க | கும்மாச்சி கும்மாச்சி: நான் ஒளரல ஓரளலங்கண்ணா...சொல்றாங்க", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nராஜபக்சேவிற்கு தைர்யம் இருந்தால் எங்கள் அம்மாமுன்னே வந்து நிற்க சொல்லுங்க...........அதே மாதிரி மோடிக்கும் சொல்றேன், எங்கம்மாதான் பிரதமர் அதுல எதாவது வில்லங்கத்துக்கு வந்தே மந்திரிகளையே எந்திரின்னு சொல்ற எங்கம்மா உன்னையும் கட்சியை விட்டு நீக்கிடுவார்கள் ஜாக்கிரதை...................அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் சிங்கமுத்து.\nஅன்பான மீனவ நண்பர்களே, நீங்க படகுல போய் மீன் பிடிக்கிறதுனாலேதானே சிலோன் ஆர்மிக்காரன் உங்களை அடிக்கிறான் அதுக்கும் எங்கம்மா ஒரு திட்டம் வச்சிருக்காங்க. படகுக்கு பதிலா உங்களுக்கு ஹெலிகாப்டர் தரப்போறாங்க. எங்கள் அம்மா வெற்றி பெற்றால் மீனவர்கள் இனி ஹெலிகாப்டரில் சென்று மீன் பிடிக்கலாம்.....அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை விந்தியா.\nநான் இன்னும் தி.மு.க. காரன்தான்.........இந்த தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்து நான்காவது இடத்திற்கு தள்ள என்னுடைய தொண்டர்கள் எல்லோரும் உழைக்கவேண்டும்.....................மு.க.அழகிரி.\nநன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். அது அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் அல்லது மகனாக இருந்தாலும் கழகம் மன்னிக்காது. எனக்கு கொள்கைதான் முக்கியம் குழந்தை குட்டிகள் அல்ல................சிந்தாதிரிப்பேட்டை கூட்டத்தில் கலைஞர்.\nஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த ஆடு, மாடுகள் குட்டிகள் போடும். அதனால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா ரிப்பேர் தான் ஆகும்...........தேர்தல் பிரச்சாரத்தில் ராமராஜன்\nகாங்கிரஸ் ஆதரவு என்று கருணாநிதி முன்பே சொல்லியிருந்தால் தேர்தல் களம் மாறியிருக்கும்.................ப. சிதம்பரம்.\nஜெயலலிதா அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை பாட வேண்டாம்: ப.சிதம்பரம் #எலக்சன்ல நிற்க பயந்துட்டு போற உங்களப் பத்தி அவங்க பாடலை..பயப்படாதீக.----------ட்விட்டரில் படித்தது.\nஇன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிடும், எங்களுக்கு ஒட்டு போட்டால் இந்தியா ஒளிரும், தமிழகம் மிளிரும் செய்வீர்களா செய்வீர்களா\nதமிழகத்தில் காங்கிரஸ் காலூன்ற ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது..........தமிழககாங்கிரஸ் தல......ஞானதேசிகன்.\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\n// குழந்தை குட்டிகள் அல்ல // என்பது தான் சிறந்த நகைச்சுவை...\n தேர்தல் முடியும் வரை தினம் தினம் காமெடி தான்...\nநம்மைப் பத்தி நாமே பில்டப் குடுக்கலைன்னா வேற யாருதான் குடுப்பாங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதேர்தல் முடியறவரை நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது\nஅவங்கவங்க ஔரியதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் கும்மாச்சி அண்ணா.\nஇன்னும் ஒரு மாசத்துக்கு காமெடிச் சேனல் எதும் பார்க்க வேணாம். நியூஸ் சேனல் பார்த்தாலே போதும் வயிறு குலுங்க சிரிக்கலாம்.\nநான் பிரதமரானல் இந்தியா ஐந்தே வருடங்களில் வல்லரசு நாடாகிவிடும். எனது கட்சியிலும் பாராளுமன்றத்திலும் எல்லோரும் எனது பெயரைச் சொல்லத் தொடங்குவார்கள் -\nராஜி உண்மை செம காமெடிதான்..........\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன் ஓட்டு பத்தாயிரம் ரூபாய்..............\nடீ வித் முனியம்மா---------பார்ட் 3\nஏன் பிறந்தாய் மகனே...............கலைஞரின் சோக கீதம...\nடீ வித் முனியம்மா-----------பார்ட் 2\nடீ வித் முனியம்மா-------பார்ட் 1\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.uktamil.co.uk/", "date_download": "2018-08-18T00:38:24Z", "digest": "sha1:M4AQLACTHVBKIMG7AX5T7N5CULYRMKHK", "length": 27934, "nlines": 133, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nகுடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் கணவர் ஒருவர் மது அருந்தி வீட்டுக்சென்றபோது அவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் கழுத்துப்பகுதியில் கூர்மையான போத்தலால் குத்தியுள்ளார்.\nஇச் சம்பவத்தில் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் வசித்துவந்த 22 வயதுடைய இளம் மனைவியே உயிரிழந்துள்ளார்.\nமனைவியை கொலை செய்த 26 வயதான கணவர் பொலிஸாரினால் கைதுசெயயப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகதிரேசன் வீதியூடாக ரயில் நிலையம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதி இரண்டாம் ஒழுங்கையிலிருந்து கதிரேசன் வீதி நோக்கி 3 இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளே மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவாகன விபத்தில் ஐவர் படுகாயம் இளைஞன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்தனர்.\nஇந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்முனை வீதியில் கோழி ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் சிற்றூர்ந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.\nஅதேவேளை டிப்பர் ரக வாகனத்துடன் மோதிய சிற்றூர்ந்து மின்கம்பத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.\nஇதில் சிற்றுந்துச் சாரதி உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் சிற்றுந்தில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇது தொடர்பான மோலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ணைந்து, விட்­டுக் கொ­டுப்­பு­டன் பணி­களை முன்­னெ­டுக்க வேண்­டும். பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும்.\nஇவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nநடை­பெற்று முடிந்த உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­தல்­க­ளின் பின்­னர், ஏறத்­தாழ அனைத்து சபை­க­ளுக்­கு­மான தவி­சா­ளர்­க­ளும் மேயர்­க­ளும் நகர பிதாக்­க­ளும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nஇந்த தேர்­தல்­கள் சட்­டம் பல்­வேறு புதிய அனு­ப­வங்­களை நாட்டு மக்­க­ளுக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் வழங்­கி­யுள்­ளது. வடக்­கு-­ கி­ழக்­கைப் பொறுத்­த­வரை, எட்டு மாவட்­டங்­க­ளும் தமிழ்த் தேசிய இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தின் கார­ண­மாக நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ மிக­வும் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.\nஎமது உரி­மைப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துச் செல்­லும் அதே­வேளை, எமது பிர­தேச மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தும் எமது தலை­யாய கடமை. நாளாந்த விட­யங்­க­ளில் மட்­டுமே கவ­னம் செலுத்­த­வி­ருக்­கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளைச் சிலர் தமது சுய­ந­லன்­க­ளுக்­காக தேசிய இனப் பிரச்­சி­னை­யு­டன் தொடர்­பு­ப­டுத்­தி­ய­தன் விளைவே நாடு இன்று எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு மூல­கா­ர­ணம்.\nஎது எப்­படி இருப்­பி­னும், நடந்­த­வை­களை மறந்து, தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் எமது பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தைக் கணக்­கி­லெ­டுத்து, அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கிரா­மங்­கள், நக­ரங்­கள் ஆகி­ய­வற்­றின் அபி­வி­ருத்­தி­யில் கவ­னம் செலுத்­த­வேண்­டும்.\nஎமது பிர­தே­சத்­தின் அனைத்­துக் கிரா­மங்­களை சுகா­தா­ரத்­தில் தன்­னி­றைவு பெற்­ற­தா­க­வும் ஆரோக்­கி­ய­மிக்­க­தா­க­வும் மாற்­றி­ய­மைக்க முன்­வ­ர­வேண்­டும்.\nமுன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் பட்­டி­ய­லிட்டு கூடி­ய­வ­ரை­யில் வினைத்­தி­றன் மிக்க செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதே நாம் எம்மை தேர்ந்­தெ­டுத்த மக்­க­ளுக்­குச் செய்­யும் நன்­றிக்­க­ட­னா­கும்.\nஅபி­வி­ருத்­திப் பணி­க­ளில் வட்­டார, கட்சி, இன, மத பேதங்­களை மறந்து சபை­க­ளில் உள்ள நிதி­களை முறை­யா­கக் கையாண்டு நீடித்­தி­ருக்­கும் அபி­வி­ருத்­திப் பணி­களை அனைத்து பிர­தே­சங்­க­ளுக்­கும் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் உறு­தி­பூண வேண்­டும்.\nஒவ்­வொரு உறுப்­பி­ன­ரும் தமக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு தாம் அளித்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்­குக் கட­மைப்­பட்­ட­வர்­கள். அதே நேரம், மிக­வும் பின்­தங்­கிய வட்­டா­ரத்­தின் வாழ்­வா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பும் விதத்­தில் அதன் உட்­கட்­டு­மான வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வது மிக­வும் அவ­சி­யம். அதை உணர்ந்து செயற்­பட முன்­வ­ர­வேண்­டும்.\nகட்­சி ­ரீ­தி­யாக நாம் பிரிந்­தி­ருந்­தா­லும் நாம் தமிழ்த் தேசிய இன மக்­கள் என்­பதை நினை­விற்­கொண்டு, போரால் அழி­வ­டைந்­துள்ள எமது கிரா­மங்­களை பற்­று­று­தி­யு­டன் மீளக் கட்­டி­யெ­ழுப்ப ஒவ்­வொ­ரு­வ­ரும் உறுதி பூணு­வோம்.\nஇருக்­கின்ற நிதி­வ­ளங்­க­ளைக் கொண்டு உங்­கள் பணி­களை மேற்­கொள்­கின்ற அதே­நே­ரம், மேலும் சில அத்­தி­யா­வ­சிய பணி­க­ளுக்கு நிதிப்­பற்­றாக்­குறை நில­வு­கை­யில், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மூலமோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மூலமோ மேல­திக நிதி­க­ளைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு எமது பிர­தே­சத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்ப திட­சங்­கற்­பம் பூணு­வோம். இந்த விட­யத்­தில் ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி தன்­னால் இயன்ற அனைத்­தை­யும் செய்­வ­தற்­குத் தயா­ராய் இருக்­கின்­றது.\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­க­ளில் பலர் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கப் பல கட்­சி­க­ளில் இணைந்து போட்­டி­யிட்­டி­ருக்­கக்­கூ­டும். அவை­களை மீட்­டிப்­பார்த்து பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் அனை­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.\nகோர­மான வறு­மை­யி­லும், போதிய சுகா­தா­ர­மற்ற சூழ­லி­லும் வாழும் எமது மக்­களை அவற்­றி­லி­ருந்து விடு­விப்­பதே எமது தலை­யாய பணி­யாக இருக்க வேண்­டும். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் அதற்­கா­கவே நடத்­தப்­ப­டு­கின்­றன. போட்­டி­யிட்ட ஒவ்­வொ­ரு­வ­ரும் அந்த நோக்­கத்­துக்­கா­கவே போட்­டி­யிட்­டீர்­கள். எமது மக்­கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்ற உறு­தி­பூ­ணு­வோம்- என்­றுள்­ளது.\nஇன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...\nஇலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.\nகட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nமுச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபயணிகளுக்கு கட்டண பட்டியல் வெளியிட கூடிய வகையில் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கமைய இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஇந்தியச் செய்திகள், இலங்கை, திரைச் செய்திகள்\nஇலங்கையின் நுவரெலியாவிற்கு நடிகர் சுபு விஜயம்...\nதமிழகத்திலிருந்து நடிகர் சுபு (பஞ்சு சுபு) சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமது குடும்ப சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர் சுபு நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டதுடன், சீத்தாஎலிய அம்மன் ஆலயம், றம்பொட ஆஞ்சிநேயர் ஆலயம் உட்பட கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு விஜயத்தை மேற்கொண்ட இவர் நேற்று மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை - பத்தனை கிறேக்கிலி தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள தேயிலை தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளையும் பார்வையிட்டுள்ளார்.\nஇவர் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nLabels: இந்தியச் செய்திகள், இலங்கை, திரைச் செய்திகள்\nபொது மக்களின் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டாம் ; என்கிறார் மஹிந்த....\nஇலங்கை பொதுஜன முன்னணியின் தெரிவு செய்யப்பட்ட மேயர் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களின் நிதியை வீணாக செலவழிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசில மாநகர சபைகள், நகர்ப்புர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர் பொதுமக்கள் நிதிகளை பெருமளவில் பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nவருமானம் குறைந்த மக்களிடம் அறவிடப்படும் பணத்தை செலவழிப்பதாகவும் தற்போதைய அரசாங்கமானது நகர சபைகள், மாநாகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் நிதிகளை பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும் இந்த பணத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.\n மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் நாட்டு மாப்பிள்ளை\nயாழ்ப்பாணம் - மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ். மீசாலையைச் சேர்ந...\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ண...\nவிரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்\nவெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.lifenatural.life/2014/01/kodo-millet-vangi-bath-brinjal-rice.html", "date_download": "2018-08-18T00:35:18Z", "digest": "sha1:USTHQIIB4VGQKUZAU6MOQKWDNCS7ZXPO", "length": 7802, "nlines": 158, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Kodo millet Vangi bath (Brinjal rice)", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/2018/03/10/", "date_download": "2018-08-18T01:27:05Z", "digest": "sha1:VI2JRKGSXO344C3YXSEUWNPJFOPBZVTM", "length": 7746, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –March 10, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nதமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு\nதமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் இன்று புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். சிறப்பு பட தொகுப்பை காண….\nஉலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு\nகொரிய நாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரம் வாய்ந்த நூல்களாக வெளியிடும் முதல் முயற்சியாக உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் (Ms. KIM Yang-shik) அவர்களின் கவிதை நூல் இன்று சனிக்கிழமை 10-03-2018 மாலை 5.30… Read more »\nகீழடி அகழாய்வில், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் வலியுறுத்தல்\nதிருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் உள்ள குறியீடுகள் குறித்து பார்வையிடுவதற்காக சங்க கால குறியீட்ட ஆய்வாளர் திருச்சியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் நேற்று வந்தார். ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது: 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை தமிழ்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”\nபுலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”\nஇலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க\n295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/author/knmuthuswamy/", "date_download": "2018-08-18T01:22:23Z", "digest": "sha1:YDN7ZQCGIY35CR6RXTWBA5XNJOWQPS2G", "length": 26406, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள், சைவம், ராமாயணம்\nஇராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஇறைவன் முதலில் மறக்கருணை காட்டி பின்னர் அறக்கருணை நல்கி அரக்கனை வழி நடத்தியது அவன் பக்தன் அல்லமால் வேறு என்ன இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா இராவணன் இறைவனுக்கு பிரியமான சாம கானம் பாடி துதித்தான் என்றால் அவன் சிவபக்தன் இல்லையா... இராமன், இராவணன் இருவருமே சிவபக்தர்கள்தாம். ஆயினும் இருவருக்கும் உளப்பண்பு வேற்றுமையுண்டு. இராவணனை, “மானன நோக்கியை தேவிதன்னை யொரு மாயையால், கானதில் வவ்விய காரரக்கன்” என்றும், பெரியோர் கூறும் “உரையுணராத” அகந்தையுடையவன் என்றும், “காமம் என்னும் உறு வேட்கை“ மிக்கவன் என்றும் சம்பந்தர் கூறினார். ‘ஈனமிலாப் புகழ் அண்ணல்’ என்ற தொடரால் இராமபிரானது நற்குணம் அனைத்தையும் கூறிப் பிள்ளையார்... [மேலும்..»]\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nமலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும். அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்... சிவாபராதத்திலிருந்து... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், சைவம், வழிகாட்டிகள்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசீவனைச் சிவன் விழுங்கிவிடுகின்றான். பின் சீவன் இருந்த இடத்தில் சிவனே இருக்கின்றான். இந்நிலையை ‘ஏகனாகி’ எனச் சிவஞானபோதம் கூறுகின்றது... விடைப்பாகனாகிய உமைபாகமதாயுடைய பெருமான், தம்முடைய உடம்பை என்றும் பிரியாதவனாகித் தம்முடைய வினைகளுக்குக் கேடுசெய்வதால், இனி தாம் எந்நாளும் களித்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன் என்று மகிழ்கின்றார் மாணிக்கவாசகர். பெற்ற இன்பமெல்லாம் சீவபோதத்தால் கிட்டுவன, சீவபோதம் முற்றும்நீங்கிச் சிவபோதமே மேலோங்கிநிற்கும் இந்நிலையில் சிவானந்தம் எத்தகையது என்றும் கூறமுடியவில்லை, இவ்வின்பம் என்னால் தாங்கவியலாப் பேரின்பம் என அப்பேரின்பப் பெருக்கின் மாண்பினைக் கூறுகின்றார்.... [மேலும்..»]\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஅசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியக் கவி மரபு. சங்ககாலத்திலேயே இது தமிழ்மரபுடன் கலந்து விட்டது... புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும். மகளிர் நகைக்க முல்லை மலரும். ஏழிலைம்பாலை என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மகிழமரம் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். மாதவி- குருக்கத்தி. இது மகளிர் பாட மலர்வது, புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. மகளிர் தழுவ மலர்வது குரவம்.... [மேலும்..»]\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஎம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும் தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது. இதன் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப்பெறும் சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்... பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின்வழி நின்றவர்கட்கே குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான், அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் , உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்... அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ,... [மேலும்..»]\nஇருளும் வெளியும் – 2\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபூனையின் கண்போன்ற கண்கள் இருளையே அறியா. எப்பொழுதும் ஒளியையே அறிவன. திருவருளொளியுடன் கூடிய உயிர்கள் ‘பரமே பார்த்திருப்பன; பதார்த்தங்களைப் பாரா’. பூனையின் கண்கள் மலமகன்ற சுத்தநிலையில். உள்ள ஆன்மாக்களின் நிலைக்கு உவமையாகும். கண்ணிருள் நீங்கிக் கதிரோனோளியில் நேர்நிற்கில், அப்பேரிருள் அக்கதிரொளியில் அடங்கி அக்கதிரொளியாய் நிற்கும். அவ்வாறே ஆன்மாவும் ஆணவம்நீங்கிச் சிவனருளில் நேர்நிற்கில் ஆன்மா சிவமாம் தன்மை பெறும். அப்பொழுது அம்மலம் அச்சிவனருளில் அடங்கி அவ்வருளாய் நிற்கும். [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தொடர்\nஇருளும் வெளியும் – 1\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nநாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம். [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், பண்டிகைகள்\nமார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபெரியோர்கள் பிறவாமையை வேண்ட, அப்பர் பெருமான் பிறப்புக்கு அஞ்சாமல், தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறு கிட்டுமாயின் மனித்தப் பிறவியும் வேண்டுவதே என்றார். இடையில் அப்பர் பெருமானுக்கு ஒரு ஐயம் வந்தது. தில்லைத் தரிசனம் பிறவியைக் கொடுக்குமோ தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ தில்லைச் சிற்றம்பலம் இப்பிறவியில் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய அன்னம் (சோறு) முதலிய பொருள்களைக் கொடுக்கும். மறுமையில் பொன்னுலகு (சுவர்க்கம்) முதலிய பதங்களையும் மீட்டும் பிறவி எடுக்காத வீட்டுலகையும் தரும். என்றாலும், இந்தப் பூவுலகில் என் அன்பு மேலும் மேலும் பெருகி இன்புறுவதற்கு ஏதுவாகத் தில்லையம்பலக் கூத்தினைத் தரிசிப்பதற்குப் பிறவியைத் தருமோ\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம், விவாதம், வேதம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nவடமொழியொன்றை மட்டுமே அறிந்தவரைக் காட்டிலும், தமிழ், வடமொழி இருமொழியிலும் வல்லவரே போற்றற்குரியவர். தென்னாட்டுச் சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்குள் அடங்கிக் குறுகிவிடலாகாது. அது, பிற கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதாத்துவிதம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டுமாயின் சைவசித்தாந்திகள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைபெற்றே ஆகவேண்டும். [மேலும்..»]\nஆன்மிகம், இலக்கியம், சைவம், தத்துவம்\nசிவநெறி – சமய அவிரோதம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nஅவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை. சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nதலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…\nஅங்காடித் தெரு – திரைப்பார்வை\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஇந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா\nஞானமெனும் அடர்காட்டில்: பிரகதாரண்யக உபநிஷதம் – 1\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nகோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nஉள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்\nஅக்பர் என்னும் கயவன் – 15\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kovaikkavi.wordpress.com/2013/06/", "date_download": "2018-08-18T01:17:35Z", "digest": "sha1:ADZ5FK3FV4736WWLRP5XFP3BAXRA6IVS", "length": 19330, "nlines": 326, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "ஜூன் | 2013 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n27 ஜூன் 2013 16 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in ஆன்மிகம்.\n(ஒரு தடவை யெர்மன் ” பூவரசு”..இதழ் தந்த தலைப்பிற்கு எழுதிய கவிதை – 2004ல்)\nதங்கித் துலங்கிடும் தங்க மயிலோனே முருகா\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n(விரவும்- கல, பொருந்து. சுயம்பு – தானாக உண்டானது.\nவியனுறு-சிறப்பு, வியப்புடை. திண்மை- வலிமை, உறுதி.)\n25 ஜூன் 2013 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nமஞ்சுக்குள் ளேகும் மார்பி னுணர்கை\nபிஞ்சு இளமைப் பஞ்சணை மென்மை.\nஅஞ்சு முணர்வுக் கைபிடியில் மார்பை\nவிஞ்சும் நிழற் குடைச் சிறகெனலாம்.\nகாதற் தேரோட்ட மைதானம், பொது\nகூதலுணர்வுக் கிதமான இட மிது.\nஆதரவுக் கனவுச் சாய்விட மென்பது\nஆழ்ந்த பெருமூச்சு வாரியிறக்கும் மார்பது.\nபடம் வரையு மாசைப் பலகையிது.\nமடம், மலர் பஞ்சணைக்கு நிகரிது.\nஉடலுமுயிரு மிணைந்து படரு மரங்கிது.\nதிடமான காதலிதயத் தடுப்புச் சுவரிது.\nஇடந்தரத் தழுவு மின்ப அணுக்கமது\nபடர்த்தும் நேச மேடை யிது\nமையல் மார்பின் ஆழ மென்பது\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\n23 ஜூன் 2013 20 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபொங்கல், புது வருடம், தீபாவளித் திருநாளில்\nபொங்கிய பால் சோறு, பட்சணப் பொதிகளுடன்\nஎங்கள் புத்தாடையை உறவினரிற்குக் காட்டுமார்வம்\nஎங்கள் சிறு வயதுக் கொண்டாட்டம்.\nமுற்றத்து மாமரப் பெருங்கொற்றக் குடை நிழலில்\nமுற்றிப் புடைத்த வேர் சிம்மாசனத்தில்\nசுற்றிச் சொரியும் மாம்பூத் தூறலில்\nநெற்றி மயிர் கோதும் தென்றலாற் கொண்டாட்டம்.\nஎழுத்துருக்கள் நூலுருவின் பரிணாமம் கொண்டாட்டம்.\nஇழுத்து வரும் பரபரப்பு இதயத்துள் வண்டாட்டம்.\nஅழுத்தும் நூல்விநியோக நிலைமை திண்டாட்டம்.\nகொழுத்திடலாம் வாசிப்புச் சுடர் குன்றாட்டம்.\nகானல் நீர் கண்டோடும் கன்றாட்டம்\nகாணாத உறவுத் தொடர்பு கொண்டாட்டம்\nகாரியம் நிறைவேறு மங்கீகாரம் கொண்டாட்டம்\nநேரிய வாழ்முறையில் நித்தம் பல கொண்டாட்டம்.\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\nஉங்கள் கவிதை படித்தால் எங்கள் மனங்களில் கொண்டாட்டம்\n15. நடிப்பற்ற கண்ணதாசன் வரிகள்.\n20 ஜூன் 2013 26 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிரபலங்கள்.\n(கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி.)\nயாரும் இறங்கமாட்டார் என்றும் தமிழில்.\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n18 ஜூன் 2013 29 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n(ஈண்டு – இவ்விடம். பாண்டல் – பூஞ்சணம் பிடித்து நாறல்)\n15 ஜூன் 2013 25 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in ஆன்மிகம்.\nகறையான நீலகண்டம் அமைந்தவன். (பிறை)\nஅலையா தமைதி தரும் அமலன்\nவிலையாகப் பக்தி மட்டும் விரும்புவான். (பிறை)\nநமையாளப் பற்றுவோம் தூயவன் பாதம். (பிறை)\n(இலண்டன் தமிழ் வானொலியில் சகோதரர் சர்மா இசையமைத்துப் பாடியது.)\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n09 ஜூன் 2013 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in ஆன்மிகம்.\nஅல்லாவிற் கிணை யாரு மில்லையே\nஅன்புடை மனிதருக்காய் பூமியை விரித்தீர்\nஅகண்ட வானத்தை ஒரு முகடாக்கினீர்\nஅனைத்தையும் எமக்காய் அன்புடன் படைத்தீர்\nஅழகு வானத்தால் மழையைத் தந்தீர்\nஅதனால் பயிர்கள் கனிகள் எழுந்தன.\nஅரிய உணவாக அவைகளை யாக்கினீர்\nஅல்லாவே உமது கொடையை மறவோம்.\nஅரிய நேர்வழியில் பின் தொடர்வோம்.\nஅற்புத உண்மைகளைப் பொய்யுடன் இணைக்கோம்.\nஆத்ம சாந்திக்காய் உம்மைத் தொழுவொம்….(அல்லாவே)\nபா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=936ae6e6428dead689b300a784836891", "date_download": "2018-08-18T00:32:23Z", "digest": "sha1:6TAKN7GJ2SG6GUIKJYMW7WJHQVE5BIQA", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tn.loksatta.org/2013/12/sec377pr_eng/", "date_download": "2018-08-18T00:49:18Z", "digest": "sha1:DRUBQNWMOGEBVJCIMSDQVIZEFB4X76ZE", "length": 6845, "nlines": 139, "source_domain": "tn.loksatta.org", "title": "இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது", "raw_content": "\nஇ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது\nஇ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இது சம்பந்தமாக பாராளுமன்றம் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.\nமனித உரிமைகளை ஆக்கிரமிக்கும் சட்டங்களிடமிருந்து குடிமக்களை காக்கும் அரிய கடமையை உச்ச நீதிமன்றத்திடம் இந்திய அரசியலமைப்பு ஒப்படைத்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியில் இருந்த, தனிமனித அந்தரங்கம், சுதந்திரம், கௌரவம் ஆகியவற்றை மதிக்காத சட்டத்தை சீர்திருத்த நீதிமன்றம் தவறிவிட்டது. “வயது வந்த இரண்டு இசைவளிக்கும் நபர்களுள் ஒரு தனியறையில் நடைபெறும் எதுவும் அவர்கள் தனிப்பட்ட விவகாரம்; அதை சட்டவிரோதமாக்குவது தவறு” என்று கருத்து தெரிவித்துள்ளார் லோக் சத்தா கட்சி நிறுவனர் திரு.ஜெயப்ரகாஷ் நாராயண்.\n“ஓரினசேர்க்கையாளர்களின் எண்ணிக்கை மிக சிறிய அளவிலேயே உள்ளது” என்ற நீதிமன்றத்தின் கூற்று கவலையளிப்பதாக உள்ளது என லோக் சத்தா கட்சி கருதுகிறது. ஒரு குடிமகனை பாதித்தாலும் அது தீய சட்டம் தான்; அதை முறைபடுத்த முனைவது நம் கடமை ஆகும்.\nஇ.பி.கோ 377 சட்டத்தை மறுபரிசீலனை செய்ய பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 1300-கும் மேற்பட்ட காலனியாதிக்க சட்டங்கள் சுதந்திர இந்தியாவிற்கு தகுதியற்றன என்று முந்தைய சட்ட குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன. சில சட்டங்கள் 1839-இல் இயற்றப்பட்ட அளவு பழமையானதாகவும் அடிப்படை உரிமைகளை கேள்விகுறியாக்குவதாகவும் அமைந்துள்ளன.\nஇந்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போதய சட்ட குழு, காலனியாதிக்க சட்டங்களை சீரிய முறையில் மறுஆய்வு செய்யவும், பாராளுமன்றம் நவீன காலத்திற்கேற்ப சட்ட மறுபரிசீலனை செய்யவும் சட்டதிருத்தங்கள் செய்யவும் லோக் சத்தா கட்சி வலியுறுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/2018/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-18T01:22:09Z", "digest": "sha1:CIWHVIFK5KCNPI34U5APWCIABFMWDZ7N", "length": 29032, "nlines": 172, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » கோயில்கள், சைவம்\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nகோபாலக்ருஷ்ண பாரதியின் வாக்கில் “நந்தன் சரித்திரம் ஆனந்தம்…”\nஆம், திருநாளைப்போவார் தன் திருச்சரித்திரம் அள்ள அள்ளக் குறையா பக்திச்சுவை வாரியிறைக்கும். பெரியபுராண ஆசிரியர் கண்ட வரலாற்று அடிப்படையிலான நந்தனாரினும் கோபாலக்ருஷ்ணபாரதியாரின் நந்தனார் சற்றே மாறுபடுகிறார். புது கதை மாந்தர்கள். வரலாற்றிலிருந்து சற்றே வளைந்து செல்கிறது அவர் கதைக்களம். அதெப்படியானாலும் நந்தனாரின் இறுதிக்காலம் என்பதில் இருவரும் ஒரே கருத்தை கொண்டிருக்கின்றனர். ஆதனூரிலிருந்து கொள்ளிடம் தாண்டி, தில்லைப் பெரும்பதியை வந்தடைந்த நந்தன், 3 நாட்கள் ஊருக்குள்ளே போகாமல் ஊரின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் தோப்பிலேயே தங்கினார் என்பதுதான் அது. அதன் பின் சபாநாயகர், தில்லைவாழ் அந்தணர் தம் கனவில் தோன்றி நந்தனாரை சித்ஸபா ப்ரவேசத்திற்கு சம்மதிக்கவைக்குமாறு பணிதததும், அதனைத் தொடர்ந்து நந்தனார் சபா ப்ரவேசம் செய்தருளியதும் நாம் அறிந்ததே.\nவரலாற்றுக் காலம் தொடங்கி தென்னிந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் பலவற்றிற்கு கதைக்களமான தில்லைப் பெருநகரம் தன்னுள் பல வரலாற்று எச்சங்களை தாங்கியுள்ளது நாம் அறிந்ததே. அப்படியிருக்க, நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று ஏதேனும் உள்ளதா என்ற ஆவலில் தேடினோம். ஊருக்கு வெளியே சீர்காழி செல்லும் சாலையில் “ஓமக்குளம்” என்ற ஒரு பகுதியும், அங்கே சிவலோகநாத ஸ்வாமி என்ற பெயரில் ஒரு ஆலயமும் உள்ளதை அறிந்து சென்று பார்வையிட்டோம். பெருத்த ஏமாற்றம் மிஞ்சியது. அது சில பத்தாண்டுகளுக்கு முன் ஜாதி காழ்ப்பை வைத்து அரசியல் லாபம் பார்த்த யாரோ ஒருவர்(அவர் சன்யாஸி என்று சொல்லப்படுகிறது) ஏற்படுத்திய நூதனமான கோயில். அந்தோ பரிதாபம், பொது மக்களின் விழிப்புணர்வு இன்மையால் எப்படி வரலாறு சிதைகிறது. இப்படி போட்டிக்கும் பொறாமைக்குமாக உருவான இடங்களை அடியார் பெருமக்கள் தவிர்ப்பது தான் நல்லது.\nஇதைத்தவிற வேறு தொன்மையான தடங்கள் இல்லையா என்று தேடிய போது ஊரின் தெற்குப் பகுதியில் பல ஆக்ரமிப்புகளுக்கு நடுவே நந்தனார் மடம் என்ற பெயரில் ஒரு திருக்கோயில் இருப்பது ஶ்ரீ த்யாகராஜப் பெருமான் அருளால் தெரியவந்தது. சற்றேறக்குறைய 30 ஆண்டுகளாக முறையான வழிபாடுகள் ஏதுமின்றி, பாம்பு, தேள் இன்னபிற விஷஜந்துக்களுக்கு அடைக்கலம் தந்த படியுள்ளது. சுற்றிலும் ஆக்ரமிப்புகள், உள்ளே செல்ல வழியையும் அடைத்துவிட்டிருந்தனர்.\nஒரு வாரியாக பாதையை உருவாக்கிக்கொண்டு நடந்தால், கோயில் 3 அடி உயர மேடையின் மேல் உள்ளது. அதன் மேல் ஏற படியில்லை. குதித்து ஏறினாலும் நிற்க இடமில்லாதபடி தகர மடிப்புகளும், மூங்கில் கழிகளும் போட்டு வைத்திருந்தனர் . அருகில் இருந்த சில நண்பர்கள் உதவியுடன், துரு ஏறிப்போன சங்கிலிப்பூட்டை பெரும் ப்ரயத்தனத்திற்குப் பின் திறந்தோம். கோயில் சிறியது தான்.\nஅதிகபட்சம் போனால் 1000 சதுர அடி. காரையும், செங்கல் கட்டுமானமும் இன்னும் நேர்த்தியாகவே உள்ளன. முன்னால் சிறு 4 கால் மேடை. அதிலேறினால், அர்த்தமண்டபமும், அதையடுத்து கர்ப க்ருஹமும். சாவி வைத்திருந்த பெண்மணி, சத்தம் எழுப்பியபடியே, இருட்டினில் கைப்பேசியின் வெளிச்சத்தில் உள்ளே போனாள்.\nஅர்த்த மண்டபத்தில் வாயிலுக்கிருபுறமும் ஆனைமுகனும், அவன் இளவலும். வணங்கி நேரே திரும்பி கர்பக்ருஹத்தை அடைந்தது தான் தாமதம்.\nஎன்ன ஒரு காட்சியது. 5 அடி உயரத்தில் பக்தியின் இலக்கணமாக நம்முன் நந்தமாமுனிவர். ஜடாமுடியும், நெற்றியில் இலங்கு திருநீரும், மார்பிலும் கழுத்திலும் ருத்ராக்‌ஷ மணிகளும், சிவப்பழமாய், தீயின் மூழ்கி யாகோற்பவமான நந்தனார் நம்முன் நின்றார். 30 வருட அலட்சியத்தால் அணிந்த ஆடை கந்தலாகியிருந்தாலும், கண்ணில் காந்தி குறையவில்லை. பொன்னம்பலவாணரை முதல்முன்னம் பார்த்த அதே பரவசத்தோடு நின்றார். கூப்பிய கைகள் மார்பின் மேல், அடக்கத்துடன் வளைந்து குனிந்த முதுகும், குவிந்த இடையும், பத்ம பீடத்தில் அழுத்திய நிலையில் விரிந்த திருவடிகளுடன் நின்றார். யாரோ அங்கு இருந்த ஒரு அம்மையார் தினமும் விளக்கேற்றி வந்தாளாம். அதுவும் 4 வருடம் முன், அவள் இறக்கும் வரையில்.\nமனம் தாங்காமல், “இரக்கம் வராமல் போனதென்ன காரணம்” என்று பாடி வேண்டிக் கேட்டுக்கொண்டேன். நந்தனார் அருகில் பெரிய ஜடாமுடியுடன், ஒரு சைவ ஆச்சார்யர். ஆதீன பீடாதிபதி போலிருந்தது. கோயிலில் தளம் வேய்ந்த ஒரே ப்ரகாரம். அதுவும் பெரும்பாலும் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் சுற்றி வர வழியின்றி ஓட்டை உடைசல் பொருட்களை போட்டு நிறப்பியுள்ளனர் அக்கம் பக்கத்தார். ஆக்ரமிப்புகளைக் கூட இப்போதைக்கு விட்டுவிடலாம். ஆனால் இப்படி ஒரு திருக்கோயிலுக்குள் தேவையற்ற பொருட்களை போட்டு யாரும் வரமுடியாதபடி செய்வது சிவத்ரோஹம்.\n 20 சிவனடியார்கள், உழவாரப்படையினர் முயன்றால் இரண்டொரு நாளில் இந்நிலையை மாற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் குப்பையை வெளியேற்றி, இரண்டு வேளை தீபம் எரிய ஏற்பாடு செய்தாலும் போதும். இக்கோயில் தில்லைக்காளி கோயிலில் இருக்கும் அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் இருப்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nவாழ்நாளெல்லாம் சித்ஸபாபதியின் தாண்டவத்தை காணவேண்டும் என்று காத்திருந்து, அதைக் கண்டமாத்திரத்தில் முக்தியடைந்த திருநாளைப்போவார் அடியார்களிலெல்லாம் வெகு ஸ்ரேஷ்டமானவர். தூய அன்பு மட்டுமே சிவத்தை தருவிக்கும் என்று விளக்கியவர். அவருக்கு, தில்லை பெருமன்றின் திசை நோக்கியபடி இருக்கும் இந்த திருக்கோயில் நிச்சயம் சைவ அன்பர்கள் ஒவ்வொருவரும் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம். சிவக்ருபையினால் ஆகாததொன்றுமில்லை. அவனருளால் அடியார் பெருமக்கள் இணைவோம். நந்தனாரின் புகழ் ஊரறியச்செய்வோம். தில்லைக்கு ப்ரயாணமாகும் சிவச்சொந்தங்கள் அவசியம் சென்று கோயிலையும், நந்தமாமுனிவரையும் தரிசித்து வரத்தொடங்குவோம். முடிந்தவர்கள் உதவ முன்வரவும்.\nநந்தன் சரித்திரன் வெகு அந்தம்,\nதொலையும் பவபந்தம் – கேட்ட பேர்க்கு,\nகட்டுரையாசிரியர் மதுசூதனன் கலைச்செல்வன் கட்டிடக் கலை நிபுணர். கோயில் கலைகள், சிற்பவியல், சமயம், வரலாறு ஆகியவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவற்றைக் குறித்து தொடர்ந்து உரையாற்றியும், எழுதியும் வருகிறார். இவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே.\nகுறிச்சொற்கள்: அறநிலையத் துறை, கோபாலகிருஷ்ண பாரதி, கோயில் ஆக்கிரமிப்பு, கோயில் சீரழிவு, கோயில் பாதுகாப்பு, சிதம்பரம், சிதிலமான கோயில்கள், சேக்கிழார், திருநாளைப் போவார், தில்லை, நந்தனார், நந்தனார் மடம், நந்தன், நந்தன் சரித்திரம், நாயன்மார், நாயன்மார்கள், பெரிய புராணம்\n4 மறுமொழிகள் சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nமிகவும் சீரிய நடையில் அமைந்த நல்ல கட்டுரை. கட்டுரையாசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்..\nஇதைப்படித்து வியப்படைந்தனர். அறநிலயத்தின் கட்டுக்கோப்பிலிருந்தும் இப்படிப்பட்ட நிலையா என்றுஎன் தாயார் வாய்வோயாமல் நந்தனார் சரிதப்பாடல்களை பாடிக்கொண்டே இருப்பார்.வயதின் காரனமாக என்னால் உழவாரப்பணியில் பங்கு கொள்ளமுடியாமைக்கு வருந்துகிறேன்.வேறு வகையில் தங்களின் நற்பணியில் பங்கேற்பேன். சிறக்க உங்கள் பணி.\nஓம் நமசிவய ஐயா தங்கள் வலை பதிவை இப்போது தான் பார்க்க நேர்ந்தது நந்தனார் மட திருபணிகள் முடிந்துவிட்டதா அல்லது சேவைக்கு அடியேனுக்கும் வாய்ப்பு உள்ளதா\nமடங்களின் எண்ணிக்கை போதிய அளவில் உள்ளது.சிதம்பரத்தில் இன்னும் கூடுதலாக ஒரு மடம் தேவையில்லை.சமயகல்வி வகுப்புகள் யோகா போன்றவற்றை கற்றுக் கொடுக்கும் ஒரு விவேகானந்தா கேந்திராவின் கிளை ஒன்று சிதம்பரத்திற்கு தேவை.அதற்கு பயன்படுத்தினால் இந்துக்கள் நலன் பெறுவார்கள். சிதம்பரத்தில் வாகாபிகளின் நடவடிக்கை உள்ளது.இந்துக்களே உஷாா்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\n[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03\nதிண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nபுதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nதி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17\nதேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T00:23:59Z", "digest": "sha1:AQAOJVOIQEGQSAJWMQCJD4NO6J25SS4E", "length": 5241, "nlines": 72, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "அழகு குறிப்புகள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nஇதை பயன்படுத்தாவிட்டால் நரைமுடி வருவது உறுதி\nஎலுமிச்சையுடன் பால் என்ன நடக்கும் தெரியுமா\nவாரம் 1 நாள் தேங்காய் பாலை பயன்படுத்துங்கள்: அப்பறம் தெரியும் அதிசயம்\nகண்களுக்கு ஐ லைனர் போடுவது எப்படி\nஇரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nதொடையில் அசிங்கமான கொழுப்பு கட்டியா\nமுகத்தில் தோன்றிடும் கரும்புள்ளிகளை நீக்கும் வெள்ளரிக்காய்\nஅக்குள் கருமை நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ\nபொடுகை தொல்லையில் இருந்து விடுபட எளிய வழிகள்\nஏழே நாட்களில் ஒளிரும் வெண்மை பெற இது ஒன்றே போதுமானது\nஒரே மாதத்தில் முகம் இப்படி மாறணுமா\nஉங்கள் கை கால் முட்டிகள் கருப்பாகிறதா இதை டிரை பண்ணி பாருங்க\nகழுத்தின் கறுமையை 20 நிமிடத்தில் போக்க சூப்பர் வழிகள்\nமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா இந்த ஆயிலை பயன்படுத்தி பாருங்க மேஜிக் தெரியும்\nஒரு ஸ்பூன் தயிருடன் இதை கலந்தால் போதும் என்றென்றும் இளமையுடன்\nஎந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு\nசரும நிறத்தை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nபொடுகு தொல்லையினால் அவதியா இதை ட்ரை பண்ணுங்கள்\nமுட்டையின் ஓட்டை வைத்து முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nஅக்குளில் தொடர் அரிப்பா இதை செய்திடுங்கள்\nஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் இருந்தால் போதும் இது எல்லாம் கண்டிப்பாக சாத்தியமாகும்\nதலைமுடி கொட்டுதலை தடுப்பதற்கான அற்புத வழிகள்\nசரும அழகை பராமரிக்க உப்பு எப்பிடின்னு தெரியுனுமா\nமுகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்\nகன்னத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2015/11/36.html", "date_download": "2018-08-18T00:44:15Z", "digest": "sha1:NSTFI2K6ZGC7NUE6D7ZU4X57ORC4PG25", "length": 12306, "nlines": 157, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: முகம் காணும் ஆசையுடன் --36", "raw_content": "\nமுகம் காணும் ஆசையுடன் --36\nநம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றும்மில்லை இந்த உண்மையைக் கண்டவன் துறவி, ஞானி , தர்மதுரை படப்பாடல் போல இந்த நாட்டு அரசியலில் உண்மையில் இங்கு இனவாதம் இல்லை என்று இன்றுவரை பொதுவில் இத்தனை அப்பாவிகள் போராட்டம் என்று பத்திரிக்கை செய்தி பொதுவில் இத்தனை அப்பாவிகள் போராட்டம் என்று பத்திரிக்கை செய்தி இவர்கள் அப்பாவிகள் என்ற அமைச்சர் கூற்று, ஆணைக்குழு அறிக்கை எல்லாம் கேட்டும் இன்னும் மூடுமந்திரம் போல பொதுமன்னிப்பு கொடுக்க கூட இந்த நாட்டு முதல்குடிமகனுக்கு நெஞ்சலுத்தம் அல்லது அரசியல் தைரியம் இல்லை .\nஆனால் அடுத்த தேர்தல் வாக்கு அரசியலும் அதனை ஏய்க்கும் வழியும் தெரியும். என்ன செய்ய இங்கு பணத்தை வீசி எறிந்தால் பிரபல்ய நடிகையின் வருகை போல \nஆனால் அதுக்கும் வழிவகை தெரிய வேண்டும் . நல்ல துறவி மறைந்த செய்தி போல இதை பொதுவில் சொல்ல நான் வெட்கி தலைகுனிய மாட்டேன்\nஇங்கு எங்கும் இனவாத முன்னெடுப்பு எப்போதும் இருந்தே வந்ததும், வருவதும் ஒன்றும் புதிதல்லஅதுவும் இப்ப புதிய பாதை என்ற போர்வையில் பெரியண்ணாவும் ,சின்னமாமியும் போடும் அரசியல் வியாபாரம் எல்லாம் துணிந்து எழுத இங்கு ஒரு ஊடகமும் இதயசுத்தியுடன் சுதந்திரமாக இல்லை .\nஎல்லாம் தம் வியாபார நோக்கில் தான் வீறாப்பு இனவாத அலையில்இன்னும் நாட்டில் ஏற்பட்ட இழப்பு ஊடகத்தில் பார்த்தும் ,\nதப்பி வந்த பாதுகாப்பு படையின் உத்தமர்களின் ஊமைக்குரல் கேட்டும் இன்னும் திருந்தவில்லை இந்தநாட்டு உத்தமர்கள்.இன்னும் .\nஇல்லை இதை பேசி இந்த நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் என்று போலி விசாரணை அழைப்பு என்ற பெயரில் கைதும், அதன் பின்னே இருக்கும் அரசியல் சித்து விளையாட்டும் சொல்லி உன்னை கலங்கட்டிக்க எனக்கும் ஆசையில்லை.\nஉன் காதலியைவிடுவிக்க என்னால் ஆன உதவியை என் நட்பு மூலம் தனிப்பட்ட முயற்ச்சி ஊடாக விசாரனைக்கைதி மட்டுமே\nஇவர் மீது இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யவில்லை இதுவரை .ஆனால் பிணை வழங்க யாரும்முன்வரவில்லை அரசியல் விளம்பரபோல தனிப்பட்ட சட்டதரணிகள் கூட கறுப்புவெள்ளை படம் போல அல்லது பிரியங்கா படம் போல வழக்கு ஏற்று நடத்த இலங்கையில் இல்லை பணக்கார அரசியல்வாதிகள் போல அதிரடிப்படை அம்மவாசை போல அரசியல்வாதிகளின் வெளிநாட்டு ஆயுத வியாபாரம் போல கோடியில் கிடைக்கும் வருமானம் போல இல்லை சிறைக்கைதிகள் விடுவிப்பு\nஆனால் அதிலும் கோடி கோடியாக சம்பாதித்து அவர்களை அப்பாவியாக புலம் பெய வைத்த கதை நான் அறிவேன் என்றாலும்\nபூஜாமீது இலங்கை சட்டரீதியாக எந்த குற்றமும் இல்லை என்று இதோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அறிக்கை\nஇதன் மூலம் இனி உன் காதலியுடன் ஒன்று சேரலாம் அசுரன்\nஆனால் ஒரு செய்தி சொல்ல வேண்டும்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 11/08/2015 03:24:00 pm\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே\nசெய்தி அறிய மேலும் காத்திருக்கிறேன் தோழர்...\nஎல்லா தேர்தல்களிலும் பணம்தான் விளையாடுகின்றது...கயவர்களின் சதிராட்டம்...தொடர்கின்றோம் அறிய..\n`முகம் காணும் ஆசையுடன் ---சுபம்\nமுகம் காணும் ஆசையுடன் --36\nமுகம் காணும் ஆசையுடன் --35\nமுகம் காணும் ஆசையுடன் --34\nமுகம் காணும் ஆசையுடன் -33\nமுகம் காணும் ஆசையுடன் -32\nமுகம் காணும் ஆசையுடன் -31\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/29816", "date_download": "2018-08-18T00:22:51Z", "digest": "sha1:3QV4KIIUDDWCJRGETJV3XAHYD77S6V66", "length": 16231, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "மாலபே நிவாஸி வீடமைப்புத் திட்டம் மார்சில் பூர்த்தி | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nமாலபே நிவாஸி வீடமைப்புத் திட்டம் மார்சில் பூர்த்தி\nமாலபே நிவாஸி வீடமைப்புத் திட்டம் மார்சில் பூர்த்தி\nஓர்கிட் செயற்திட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான கட்டம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மாலபே பகுதியில் அமைந்துள்ள மாபெரும் இல்லங்கள் மற்றும் தொடர்மனைகளை கொண்ட தொடராக அமைந்துள்ளது.\nஇறுதிக்கட்டத்தில் 160 அலகு 12 அடுக்கு தொடர்மனைகள் அடங்கியுள்ளன. இது மாதத்தின் சிறந்த செயற்திட்டமாக LankaPropertyWeb.com இனால் இனங்காணப்பட்டிருந்தது.\nமுழுச்செயற்திட்டமும் முன்னணி வீடமைப்பு நிறுவனமான நிவாஸி டிவலபர்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான புகழ்பெற்ற ஒப்பந்தக்காரரான இன்டர்நஷனல் கொன்ஸ்ட்ரக்ஷன் கொன்சோர்டியம் பிரைவட் லிமிட்டெட் (ICC) மூலமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததுடன் மொத்தமாக 170 இல்லங்கள் மற்றும் இரு தொடர்மனை குடியிருப்புத்தொகுதிகளையும் கொண்டுள்ளது.\nஇதில் 94 மற்றும் 160 அலகுகள் மொத்தமாக காணப்படுகின்றன. இதில் மூன்று பாரிய தனித்தனியான நீச்சல் தடாகங்கள், இரு நடை பகுதிகள், இரு பாரிய குளங்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதி மற்றும் பசுமையான நெல் வயல் பகுதிகள் போன்றன அடங்கியுள்ளன.\nவைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் மத்தியில் பெருமளவு விற்பனையை பதிவு செய்துள்ளதுடன் மாலபே பகுதியை அண்மித்து பல வைத்தியசாலைகள் மற்றும் இதர சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் காணப்படுகின்றமை இதில் பங்களிப்பு வழங்கியிருந்தது. குறிப்பாக வைத்தியர் நெவில் பெர்னான்டோ போதனா வைத்தியசாலை, Millennium IT, Horizon Campus, SAITM, CINEC Campus, SLIIT போன்ற பல நிறுவனங்கள் காணப்படுகின்றன. நகரின் நெரிசல் நிறைந்த பகுதியிலிருந்து அமைதியான சூழலில் குடியேறுவதற்கு இந்த குடியிருப்புத்தொகுதி மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன் நகரை அண்மித்ததாகவும் அமைந்துள்ளது.\nமட்டுப்படுத்தப்பட்டளவு தொடர்மனைகள் காணப்படுவதுடன் இவற்றில் முதலீடுகளை இலகுவாக மேற்கொள்வதற்காக முன்னணி வங்கிகள் மற்றும் நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான கொடுப்பனவு திட்டங்களை வழங்குகின்றன.\nஇந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பிரேரிக்கப்பட்டுள்ள வரி போன்றவற்றின் காரணமாக இந்த சொத்துக்களின் பெறுமதி மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மாலபே, பெருமளவு பசுமையான சூழலையும் பசுமையான காற்று, குறைந்த ஒலி இரைச்சல் மற்றும் ஓய்வான சூழலை கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களில் இந்நகரம் பல வணிக மற்றும் குடியிருப்பு உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை எதிர்கொண்டிருந்தது. வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலைக்கு இலகுவாக பயணிக்கக்கூடிய வாய்ப்புகளை கொண்டுள்ளது.\nஉயரமான கட்டிடங்களின் மூலமாக உரிமையாளர்களுக்கு சுற்றுப்புறசூழலை பார்வையிட சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. தொடர்மனைகள் அனைத்தும் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யும் வசதிகளை கொண்டுள்ளன. இதில் காஸ், தொலைபேசி மற்றும் கேபிள் தொலைக்காட்சி இணைப்புகள், சமையலறை பான்ட்ரி, புகை மற்றும் வெப்ப உணரிகள், LED விளக்குகள், வாயு குளிரூட்டிகளை பொருத்துவதற்கான வசதி மற்றும் இலவச தரிப்பிட வசதி போன்றவற்றுடன் இதர பல உள்ளம்சங்களும் காணப்படுகின்றன. இதில் கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிகட்டல் வசதிகள் மற்றும் தோட்டச்செய்கை போன்றனவும் அடங்கியுள்ளன.\nஓர்கிட் திட்டம் நிசாஸி டிவலபர்ஸ் மாலபே பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாண்மையின் கீழ் காணப்படுவதுடன் கண்கவர் 22 ஏக்கர் பகுதியில் அமைந்துள்ளது.\nஇதை முன்னணி சொத்துக்கள் விற்பனை இணையத்தளமான Lamudi, ‘The Modern Village in Malabe’ என பட்டியலிட்டுள்ளது.\nநிவாஸி மற்றும் ICC ஆகியன இணைந்து வெவ்வேறு செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளன. இதனூடாக நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தித்துறையில் மைல்கல் சாதனைகளை படைத்துள்ளது. 35 வருட கால சிறந்த பரந்தளவு அனுபவத்தினூடாக, நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக ICC புகழ்பெற்றுள்ளது.\nநிவாஸி வீடமைப்புத் திட்டம் செயற்திட்டம் அபிவிருத்தி\nஅறிமுகமாகி ஒரு மணி நேரத்தினுள் விற்பனையில் சாதனைபடைத்த nova3 series\nஉலகில் சமீபத்தில் அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ள மொபைல் தொலைபேசிச் சாதனமான Huawei nova3 series கடந்த வாரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று தனது முதலாவது விற்பனை தினத்தை நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தது.\n2018-08-17 15:47:35 மொபைல் தொலைபேசி விற்பனை வர்த்தகநாமம்\nஸ்ரீலங்கா டெலிகொம்மின் இலாபம் 13 வீதத்தால் அதிகரிப்பு\nஸ்ரீலங்கா டெலிகொம் PLC 2018 ஜுன் 30 ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாதத்திற்கான தனது குழும நிதி செயல்திறன் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.\n2018-08-17 14:10:40 டெலிகொம் பில்லியன் ஸ்ரீலங்கா\nமொபிடெல் கேஷ் பொனன்ஸா 2018 : காலியைச் சேர்ந்தவருக்கு 2 ஆவது Mercedes Benz\nஅனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜுலை மாத மொபிடெல் கேஷ் பொனான்ஸா அண்மையில் மாத்தறை நகரில் நடைபெற்றது.\n2018-08-17 10:41:06 வாடிக்கையாளர் பணப்பரிசு கொடுப்பனவு\nசுற்­று­லாத்­து­றையை மேம்­­ப­டுத்த டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம்\nபிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடு­களில் சுற்­றுலா பய­ ணிகள் மத்­தியில் இலங்­கையை கவரக் கூடிய கிரா­ம­மாக மேம்­ப­டுத்­து­வ­தற்­காக டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.\n2018-08-16 08:16:04 சுற்றுலா ஜேர்மன் டிஜிட்டல்\nவீடுகள் மீளக்கட்டமைப்பு புத்தகம் ஐரோப்பிய ஒன்றியம், இணைந்து வெளியீடு\n'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் ளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN- bitat இணைந்துளியிட்டுள்ளன.\n2018-08-14 17:27:49 வீடுகள் உரிமையாளர் ஐரோப்பிய ஒன்றியம்\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/8941", "date_download": "2018-08-18T00:22:53Z", "digest": "sha1:UYZNUJ3WUTMYI53VQSX5XKILHNHLQBO3", "length": 8153, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கபாலி : இந்திய மதிப்பில் 110 கோடி | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nகபாலி : இந்திய மதிப்பில் 110 கோடி\nகபாலி : இந்திய மதிப்பில் 110 கோடி\nஎதிர்வரும் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் 5000 படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி.\nஇப்படத்தின் பட்ஜட் எவ்வளவு என்பது இது வரை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. அண்மையில் தயாரிப்பாளர் தாணுவின் நெருக்கமான சிலர், கபாலி படத்தின் பட்ஜட் இந்திய மதிப்பில் 110 கோடி என்றும், இதில் ரஜினியின் உடை வடிவமைப்பிற்காகவே ஏறத்தாழ ஒன்றரை கோடி ரூபாய் செலவானது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இப்படம் தற்போதைய வியாபார கணிப்பின் படி 200 கோடி முதல் 300 கோடி ரூபாய் வசூலிக்கும் என்கிறார்கள் திரையுலக வணிகர்கள்.\nகபாலி படத்தின் பட்ஜட்டில் சுப்பர் ஸ்டாரின் ஊதியம் மட்டும் சரி பாதி என்றும் கிசுகிசுக்கிறார்கள்.\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி ஊதியம்\nவித்தக கவிஞர் பா.விஜய் நடித்து, தயாரித்து இயக்கிய ஆருத்ரா படத்தின் ஒடியோ வெளியீடு இன்று நடைபெற்றது.\n2018-08-17 13:54:06 பா.விஜய் ஆருத்ரா வித்தகர்\n‘குணா ’வாக மாறிய சமுத்திரகனி\nபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து.வெற்றிமாறனும், தனுசும் ‘வடசென்னை’யில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் குணாவாக சமுத்திரகனியும் தோள் கொடுத்திருக்கிறார்.\n2018-08-16 13:39:00 பொல்லாதவன் ஆடுகளம் தனுஷ்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் ஆரம்பமாகியுள்ளது. குறித்த படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர்.\n2018-08-16 11:02:59 கழுகு - 2 பிந்து மாதவி செந்நாய் வேட்டை\nபெண்களின் முன்னேற்றத்திற்காக நடிகை ஜோதிகா பத்து கட்டளைகளை தான் நடித்து வரும் காற்றின் மொழி என்ற படத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.\n2018-08-15 12:35:17 ஜோதிகா காற்றின் மொழி 10 கட்டளகள்\n24 ஆம் திகதியன்று வெளியாகிறது பா விஜயின் ஆருத்ரா\nபாடலாசிரியர் வித்தக கவிஞர் பா விஜய் நடித்து தயாரித்து இயக்கியிருக்கும் ஆருத்ரா என்ற படம் ஒகஸ்ட் 24 ஆம் திகதியன்று வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-08-14 16:36:13 வித்தக க விஞர் பா விஜய் ஆருத்ரா\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/9832", "date_download": "2018-08-18T00:20:32Z", "digest": "sha1:R6QJUEVE44NJLUJKF3YNLZF2MV7WT4J7", "length": 10563, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் : மாணவர்கள் பிரச்சாரம் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nபாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் : மாணவர்கள் பிரச்சாரம்\nபாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் : மாணவர்கள் பிரச்சாரம்\nபாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்று தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nதேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் அமித் சவுகான் பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்று இவர் முதலாமாண்டு படிக்கும் போதில் இருந்து கூறிவருகிறார்.\nஅதே கல்லூரியைச் சேர்ந்த மேலும் 6 பேர் இவருடன் இணைந்து “நாத் உதரை” என்ற பெயரில் பாலியல் தொழில் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொழிலாளர்களை வைத்து குறும்படமும் எடுத்துள்ளனர்.\nமேலும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்கை, போராட்டங்கள், கனவுகள், எதிர்கால நம்பிக்கைகள், பாலியல் தொழில் ஆகியவைகளின் இவர்களது கருத்துகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர்.\n2014ஆம் ஆண்டில் பாலியல் தொழிலை சட்டமாக்க தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறியிருந்ததை அமித் சவுகான் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபாலியல் தொழில் சட்டமாக்கப்படும்போது சட்டத்திற்கு விரோதமான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் தொழில் சட்டமாக்கப்படுவதால், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களது வேலை நேரம் குறையும், ஆரோக்கியம், உடல்நிலை பாரமரிப்பு, ஊதியம் போன்றவை சிறப்பாய் அமையும்.\nபாலியல் தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பாலியல் தொழில் நேரம் குறையும் ஆரோக்கியம் உடல்நிலை பாரமரிப்பு ஊதியம்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது\n2018-08-18 01:06:16 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nஅமெரிக்க அரசாங்கம் மியன்மாரில் இடம்பெற்றது இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிடாததும் முக்கியமானது.\n22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது\nபாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார்.\n2018-08-17 18:56:36 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nசுவீடனில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னை நேர்முகப் பரீட்சை செய்த நபரிடம் கை குலுக்காமல் பேசிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\n2018-08-17 15:12:03 சுவீடன் இஸ்லாமியப் பெண் நேர்முகப் பரீட்சை\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது - கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டில்லியிலுள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது.\n2018-08-17 14:58:31 பிரதமர் வாஜ்பாய் டில்லி\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/23754", "date_download": "2018-08-18T00:21:53Z", "digest": "sha1:EYXFETR4AFK2VBNG7XCQOZ7N7AHBWQLH", "length": 10936, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "இனப்பிரச்சினைக்கு நாட்டுப் பற்றுடன் தீர்வு காண வேண்டும்: கிழக்கு மாகாண முதலமைச்சர் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் இனப்பிரச்சினைக்கு நாட்டுப் பற்றுடன் தீர்வு காண வேண்டும்: கிழக்கு மாகாண முதலமைச்சர்\nஇனப்பிரச்சினைக்கு நாட்டுப் பற்றுடன் தீர்வு காண வேண்டும்: கிழக்கு மாகாண முதலமைச்சர்\nபுற்றுநோய் போல் இழுபட்டுச் செல்லும் இந்த இனப்பிரச்சினைக்கு நாட்டுப் பற்றுடன் தீர்வு காண வேண்டும்” என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nஅரசியல் யாப்புத் சீர்திருத்தம் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இன்று (01) செவ்வாய்க்கிழமை இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,\nகடந்த ஆட்சியாளர்கள் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக தங்களுடைய ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான முனைப்புகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஆனால், இந்த சுயநல அரசியல் போக்கிலிருந்து விலகி எதிர்வருகின்ற அரசியல் யாப்புத் திருத்தம் உண்மையான இதய சுத்தியுடன் நாட்டின் நீண்டகாலமாக புற்றுநோய்போல் இழுபட்டுச் செல்கின்ற இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாக அமைவதற்கு ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் மற்றும் தற்போது தலைமை தாங்குகின்ற சகல அரசியல் தலைமைகளும் தங்களாலான அனைத்துப் பிரயத்தனங்களையும் மேற்கொள்ள வேண்டும்.\nஅத்தகைய ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுவதின் விளைவாக ஜனாதிபதிக்கான நேசக்கரங்களை சில அரசியல் தலைமைகள் விலக்கிக் கொள்வார்களாக இருந்தாலும் கூட அந்த முயற்சியிலிருந்து ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் பின்வாங்கக் கூடாது.\nமுன்னாள் ஜனாதிபதி சிங்களக் கிராமங்களுக்குச் சென்று இனத்துவேசத்தைக் கக்கி இனவெறி உணர்வை உசுப்பேற்றி வருவதை அவதானிக்கின்றோம். இவ்வாறு இதய சுத்தியில்லாத பல தலைமைகளின் கீழ் இந்த இலங்கைத் தேசம் ஆளப்பட்டு வந்திருக்கின்றது. அதன் விளைவாகவே இந்த நாட்டில் கடந்த 3 தசாப்தங்களாக இரத்த ஆறும் ஓடியது.\nஆகவே எல்லோருக்கும் பொறுப்புக் கூறல் இருக்க வேண்டும். கண்ணியமிக்க தலைவர்களாக வரலாற்றில் புகழப்பட வேண்டியவர்கள் இனவெறியர்களாக சரித்திரத்தில் தடம் பதிக்கக் கூடாது.\nநாடு பாதிக்கப்படுமாக இருந்தால் அது இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களைத்தான் அதிகமாகப் பாதிக்கும் என்பதை முன்னாள் ஜனாதிபதியும் இனவாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாட்டைக் குழப்புவதை விட அமைதி காப்பதற்கு பணி செய்வதே அரசியல் தலைவர்களின் கடனாக இருக்க வேண்டும்.\nஇந்த அரசியல் யாப்புச் சீர்திருத்தமும் இழுத்தடிக்கப்பட்டு விடக் கூடாது. மாகாண சபைகளுக்கு 13 வது அரசியல் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.\nநிதி ஒதுக்கீடு இல்லாமல் பிச்சைப் பெட்டியாக இந்த மாகாண சபைகளை இயங்க வைத்துக் கொண்டு வெறுமனே அதிகாரப் பகிர்வை வழங்கி விட்டோம் என்று ஓலமிடுவது பொருந்தாது. அடுத்த கணப்பொழுது கூட இந்த அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்தத் தடைகளும் இருக்கப் போவதில்லை என்றார்.\nPrevious articleஆசிய கிண்ணம் : வங்காளதேச வீரர் முஸ்தாபிகர் விலகல்\nNext articleசிறுபான்மை மக்களுடைய பாதுகாப்பு புதிய யாப்பில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்: ஷிப்லி பாறூக்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velichamtv.org/velicham/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-18T01:06:12Z", "digest": "sha1:CIGMBQHWRUFQYYFLTNKHLKIXDABZYFZ6", "length": 3163, "nlines": 54, "source_domain": "www.velichamtv.org", "title": "இந்தியா | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nமாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது…\nஉ.பி.யில் தொடர்மழையால் தேங்கிய வெள்ளம்: மக்கள் அவதி\nஆதார் தகவல்களை திருடவே முடியாது”: ஆதார் ஆணையம் திட்டவட்டம்\nபிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அந்தஸ்து\nஃபேஷன் ஷோவில் கலக்கிய மீன் விற்று படிக்கும் ’அரசின் மகள்’\nகிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\nஐந்து வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட வைத்தவர் மீது பாய்ந்த நடவடிக்கை \nஅரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் 7 ஆண்டு சிறை… அமலுக்கு வந்தது புதிய சட்டம்….\n2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: பிரதமர் மோடி உறுதி\nஆதார் எண்ணை பயன்படுத்தி தகவல்களை திருட முடியுமா டிராய் தலைவரின் சவால் சில மணி நேரங்களில் முறியடிப்பு\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2018-08-18T00:21:53Z", "digest": "sha1:GXFWNOYW5ZQAOJZ6DFSMRBUGRT5C7XBR", "length": 12550, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "கனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. | CTR24 கனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. – CTR24", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்வில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன\nஜெனீவாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு கடும் சவாலாக செயற்படவுள்ளதாக சிங்கள அமைப்பு ஒன்று சூளுரைத்துள்ளது\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.\nகனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.\nடொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக மின் விநியோகம் வாடிக்கையாளர்களுக்கு தடைபட்ட நிலையில் கனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்களும் நேற்று நள்ளிரவிலிருந்து தடைப்பட்டிருந்தது.\nமீண்டும் மின் விநியோகம் கிடைத்த நிலையில் கனடிய தமிழ் வானொலியின் ஒலிபரப்புக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.\nஒலிபரப்பில் ஏற்பட்ட தடங்கலுக்கு கனடிய தமிழ் வானொலியின் நிர்வாகம் மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nPrevious Postகனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம் Next Postடொரோண்டோவின் மோசமான வானிலை காரணமாக கனடிய தமிழ் வானொலியின் அமைவிடப் பகுதி, மற்றும் ஏனைய பல பாகங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்...\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/tn-farmers-killed-by-state-policies/", "date_download": "2018-08-18T01:33:33Z", "digest": "sha1:OCUFC3IKWZ3MZVW7UIV257GP6YL6PWRS", "length": 17761, "nlines": 114, "source_domain": "new-democrats.com", "title": "தமிழக விவசாயிகள் மரணங்கள் – அரசே முதல் குற்றவாளி! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nசட்டத்தை மீறும் திருட்டு இன்டெக்ரா, உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள்\nஉச்சநீதி மன்றத்தின் நீதியை “சட்ட ரீதியாக” முறியடித்த மேற்கு வங்க சாராய வியாபாரிகள்\nதமிழக விவசாயிகள் மரணங்கள் – அரசே முதல் குற்றவாளி\nFiled under அரசியல், இந்தியா, செய்தி, தகவல், பொருளாதாரம்\nதமிழகத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கடந்த 06-01-2017 வரையிலும் 106 விவசாயிகளின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் வெளியே தெரியாது வெளிச்சத்துக்கு வராத பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு எல்லாம் காரணமாக ஆளும் வர்க்கத்தால் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் கருத்து, பருவமழை தவறியது என்பதுதான்.\nபிரச்சனை பருவமழை தவறியது மட்டும்தானா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த முடியாதென்றும் இந்த விஷயத்தில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்றும் சொன்னது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. காவிரி பிரச்சினையில் கன்னட இனவெறியைத் தூண்டி தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றிலடித்தது பார்ப்பன-பா.ஜ.க கும்பல்.\nதொடர்ந்து கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தியது மோடி அரசு. விளைபொருட்கள் வாங்க, உரம் வாங்க, கூலி கொடுக்க என்று தாங்கள் கடன் வாங்கி வைத்திருந்த பணத்தையும் அவர்களின் சிறுசேமிப்பையும் ஒரே நாள் இரவில் செல்லாக்காசு ஆக்கியதன் மூலம் அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. மோடியின் இந்த “கருப்புப் பண ஒழிப்பு” நடவடிக்கையால், நாடு முழுவதும் ஏராளமான சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், விவசாயக் கூலிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தனியார் மய, தாராள மய, உலக மய கொள்கைகளை மேலும் தீவிரமாகவும், மூர்க்கமாகவும் அமல்படுத்தி விவசாயிகளுக்கெதிராக மானிய வெட்டு, உர விலை உயர்வு, விளைபொருட்களுக்கான போதிய விலையின்மை போன்றவற்றை அரங்கேற்றி வருகிறது. ஒட்டு மொத்த விவசாயத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாகவும், நிதிச் சந்தை சூதாட்டத்தில் பகடையாகவும் மாற்றுவதை செய்து வருகிறது.\nதமிழ்நாட்டிலோ, விவசாய நெருக்கடி கடுமையாக பீடித்திருந்த நிலையில் ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்து விட்டு மருத்துவமனையின் முன்பு தவமிருந்தது ஆளும் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க கொள்ளைக் கூட்டம். அம்மாவின் இறப்புக்குப் பின்னர், விவசாயிகள் வாழ்வை இழந்து, பலர் உயிரையும் பறி கொடுத்துக் கொண்டிருந்த அவலச் சூழலுக்கு மத்தியில் அடிமைகள்.தி.மு.க.வினர் சின்னம்மாவுக்கு பதவியேற்பு வைபவம் நடத்தி அழகு பார்ப்பதில் மும்முரமாயினர். அதன் பின்னர் விவசாயிகளின் மரணங்களை கொச்சைப் படுத்தி பேசி விட்டு, நிவாரணம் பெறுவதற்கான ஆய்வு செய்வதாக கிளம்பி, ஒரு வழியாக இழப்பீட்டுக்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர். ஒவ்வொரு இழப்பையும் தாம் பொறுக்கித் தின்பதற்கான வாய்ப்பாக பார்க்கும் இந்த கொள்ளைக் கும்பல் வறட்சி நிவாரணப் பணிக்கு என்று மத்திய, மாநில அரசு நிதிகளை ஒதுக்கி தமக்கு என்ன ஒதுக்கிக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும்.\nமக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளன. இந்த அரசும் ஆட்சியாளர்களும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரானவர்கள் என்பது முகத்திலறையும் உண்மை. காரணம் தெரிந்தபின் காரியம் மட்டுமே பாக்கி. வீதியில் இறங்குவோம் இவர்களை அடித்து விரட்ட.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nதீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து அல்ல, இந்த அரசுதான்\n“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5\nதமிழக விவசாயிகளை பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்\nபுதிய தொழிலாளி – டிசம்பர் 2016 பி.டி.எஃப்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nஉழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nCategories Select Category அமைப்பு (225) போராட்டம் (221) பு.ஜ.தொ.மு (20) பு.ஜ.தொ.மு-ஐ.டி (119) இடம் (468) இந்தியா (260) உலகம் (82) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (493) அரசியல் (196) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (113) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (311) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (487) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (75) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (87) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (50) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்\nமோடி நம்மை இழுத்துச் செல்ல விரும்பும் மின்னணுப் பொருளாதாரத்தின் எதிர்காலம் இதுதான். இத்தகைய விளைவுகளை எதிர்கொள்ளவும், எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படி...\nமாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் – “ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்”\n\"என்னடா சொல்ற நான் அவங்க ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன் அப்படிதானடா சினிமால, நியூஸ்ல, அரசாங்கத்துல, போலீஸ்ல எல்லாம் சொல்றாங்க அப்படிதானடா சினிமால, நியூஸ்ல, அரசாங்கத்துல, போலீஸ்ல எல்லாம் சொல்றாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nansivam.blogspot.com/2009/11/blog-post.html?showComment=1274509454708", "date_download": "2018-08-18T00:22:22Z", "digest": "sha1:RB3KVSKLPCHUYV4OQNSE62LKERTYEDKH", "length": 2366, "nlines": 37, "source_domain": "nansivam.blogspot.com", "title": "நாத்திகம் பேசும் ஆத்திகன் நான் -நான்சிவம்....: கோழை தனம்...", "raw_content": "\nநாத்திகம் பேசும் ஆத்திகன் நான் -நான்சிவம்....\nநாத்திகம் பேசும் ஆத்திகன் நான்-நான்சிவம்... அறிவின் முதிர்ச்சிதான், தூய தெளிந்த உண்மையான பகுத்தறிவின் கொள்கைதான் நாத்திகம்.\nதன் நம்பிக்கை, மனத்தெளிவு இவை மட்டும்\nஇருந்தால் போதும் 'பக்தி'[ஆத்திகம்] என்பது\nகோழை தனத்தின் ஒருவித வெளிபாடு ஆகும்.\nபேராசையும், கோழைதமும் உள்ள மனிதன் தான்\nவெளியே கடவுளை தேடி அழிவான்.\nஎங்கு மதம்[ஆத்திகம்] முடிகிறதோ, அங்குதான்\nமனித நேயம் ஆரம்பம் ஆகிறது.\nநாத்திகம் பேசும் ஆத்திகன் நான்....\nஅறிவின் முதிர்ச்சிதான், தூய தெளிந்த உண்மையான பகுத்தறிவின் கொள்கைதான் நாத்திகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2863866.html", "date_download": "2018-08-18T00:31:47Z", "digest": "sha1:CUKWNOGL7TBQP7DSSZ23E3HYKZUXAZHE", "length": 8557, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தவக்காலம் தொடக்கம்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதவக்காலம் தொடக்கம்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி முதல் நாளான சாம்பல் புதன்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு 40 நாள்களுக்கு முன்பு தனது சீடர்களுடன் காட்டுக்குள் சென்று உணவு அருந்தாமல் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். அந்த முதல் நாளை சாம்பல் புதன்கிழமை என உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.\nஇந்த ஆண்டு சாம்பல் புதன்கிழமையான பிப்.14-ஆம் தேதி புதுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nபுதுச்சேரி ஜென்மராக்கினி பேராலயம், புனித இருதய ஆண்டவர் தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை தேவாலயம், முத்தியால்பேட்டை மாதா தேவாலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா அன்னை தேவாலயம், வில்லியனூர் புனித லூர்து அன்னை தேவாலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை தேவாலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியார் தேவாலயம், உப்பளம் புனித சவேரியார் தேவாலயம், புதுச்சேரி புனித யோவான் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்டவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு பங்குதந்தை சாம்பலை பூசி, மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறினார்.\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் பாடுகளை உணர்த்தும் சிலுவைப்பாதை நிகழ்வுகள் தேவாலயங்களில் நடைபெற உள்ளன.\nவில்லியனூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு சிலுவைப்பாதையும், திருப்பலியும் நடைபெற உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thiruvarul.medialinkconcepts.net/thiruvarulkalvi/blog/5-maark-i-maat-ci-ppu-nik-cci.html", "date_download": "2018-08-18T01:05:03Z", "digest": "sha1:JYWBQVFWQJMP3F64RG3CB745ORDICDNN", "length": 5682, "nlines": 69, "source_domain": "www.thiruvarul.medialinkconcepts.net", "title": "மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி thiruvarulfoundation", "raw_content": "\nமார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி\nதிருவருள் தொலைக்காட்சிக்கு தொடர்ந்து ஆதரவு...\nமார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி\nதிருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு...\nமார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி\nதிருவருள் ரேடியோ- வில், மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎங்கும், எதிலும், எப்பொழுதும் நமக்கு கிடைக்கும் தகவல்களில் இருந்தும் அல்லது நம்மை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளில் இருந்தும், என்றும் மாறாத நிலையான மெய்ப்பொருளை கண்டறிந்து அவ்வழியில் நடந்தால் நம் அறியாமை விலகி, அறிவு தெளிவுபெற்று நம் வாழ்வில் உயர்த்தநிலையை அடையலாம் என்று வள்ளுவம் நமக்கு வழிகாட்டுகிறது.\nவள்ளுவம் காட்டும் நெறிப்பாட்டில் இயங்கும் திருவருள் பவுண்டேஷன், தமிழகத்தில் நடைபெறும் பல நிகழ்வுகளில் (சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், திருமுறை இசை நிகழ்ச்சிகள்) நம் வாழ்நிலையை உயர்த்தும், சிறப்பான நிகழ்வுகளை ஆவணப்படுத்தி மின்னணு (டிஜிட்டல்) முறையில் பாதுகாப்பதை ஒரு சேவையாக செய்துவருகிறது.\nகடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரட்டிய உன்னதமான, உயர்ந்த, சிறப்பான தகவல்களை வருங்கால தலைமுறை எளிதில்பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.\nஅருமையான இந்த இணையதள சேவையை நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கணினி, மடிகணினியில் மற் றும் உள்ளங்கையில் (கைபேசியில்), படிக்கலாம், பார்க்கலாம், கேட்கலாம் மற்றவர்களுக்கும் பகிரலாம்.\nமார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக\n\" மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் \" முழுவதும்\nஒலி வடிவில் கேட்டு பயன்பெறவும்.\nமனித சமுதாயத்திற்கு வேண்டிய வாழ்வியல் நெறிகள், நற்பண்புகள் மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகள் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்துவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/death-thamilini.html", "date_download": "2018-08-18T00:25:48Z", "digest": "sha1:3WWDEA4QTOHGEHBIBFPUDDDGKHVIN7LM", "length": 12750, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்ததமிழினி மரணம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்ததமிழினி மரணம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி மரணம் அடைந்துள்ளார்.\nகிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே 2013 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டர்.\nவிடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழினி கிளிநொச்சி பரந்தனில் இன்று (18.10.2015) காலைகாலமானார்.\nகடந்த சில நாட்களாக நோயினால் அவதிப்பட்டு வந்த தமிழினி, கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nபுனர்வாழ்வு நடவடிக்கையின் போது பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி சுகயினமுற்று இருந்தார். கடந்த நாட்களாக நோயினால் ஆவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார். இவரின் மரணம் புலனர்வாழ்வு பெற்ற போராளிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/child-labor-system-from-the-country-trisha/", "date_download": "2018-08-18T01:20:34Z", "digest": "sha1:2AUY6SB4IBMHKA2WZW4WNAAOJIH7JFND", "length": 9967, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியில் நடிகை த்ரிஷா! - child labor system from the country trisha", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nகுழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியில் நடிகை த்ரிஷா\nகுழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியில் நடிகை த்ரிஷா\nஅண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nகுழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, சென்னை அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nஇதில் யுனிசெப் (UNICEF) தூதுவர் நடிகை திரிஷா கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார்\nமறைந்த கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் திரிஷா\nநாளை முதல் மோகினி ஆட்டம்… உலகமெங்கும்\nஇதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை போட்டுடைத்த த்ரிஷா\nநடிகை திரிஷாவுக்கு வந்த புதிய ஆசை\nநயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா சினிமாவில் நிலைத்திருப்பது எப்படி\nசம்பளத்தை செட்டில் செய்யாததால் டப்பிங் பேசாத அரவிந்த் சாமி\nநிவின் பாலி, த்ரிஷா நடிப்பில் ‘ஹே ஜூடு’ மலையாளப் படத்தின் ஸ்டில்ஸ்\nநட்சத்திரக் கலைவிழா : விஜய், அஜித், நயன்தாரா, த்ரிஷா ஆப்சென்ட்\nகார்த்தி வெளியிட்ட த்ரிஷாவின் ‘மோகினி’ டிரெய்லர்\nட்ரெய்லரிலேயே சர்ச்சையை கிளப்பியிருக்கும் விஸ்வரூபம் 2\nமாணவர்களின் தற்கொலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்\nகமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்\nகமல்ஹாசன் அரசியல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8", "date_download": "2018-08-18T01:20:18Z", "digest": "sha1:5U4LJZP4AW5PVWR7NIW6GM3OH45RFGU6", "length": 4787, "nlines": 78, "source_domain": "tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n310 |a மாதம் இருமுறை\n850 _ _ |8 கன்னிமாரா பொது நூலகம்\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilgod.org/e-commerce/myntra-sells-tanishq-jewels-online-2016", "date_download": "2018-08-18T01:14:42Z", "digest": "sha1:P4IU2VJ57YOTMR6CSMZTHASNFBPWPMNY", "length": 10331, "nlines": 137, "source_domain": "tamilgod.org", "title": " Myntra has tied up with Titan to sell titan-owned Tanishq's jewel online | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> E-Commerce >> மிந்திராவில் தனிஷ்க் நகைகள் விற்பனைக்கு\nமிந்திராவில் தனிஷ்க் நகைகள் விற்பனைக்கு\nஃபேஷன் ஆடைஆபரண‌ங்களை ஆன்லைனில் விற்கும் மிந்திரா (Myntra) டைட்டனுடன் (Titan) சேர்ந்து தனிஷ்க் ( Tanishq Jewels ) நகைகளை ஆன்லைனில் விற்க உள்ளது. மிந்திரா தனது நகை பிரிவில் வரும் மூன்று ஆண்டுகளில் ரூ .500 கோடி வருவாய் வரை ஏற்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடைட்டனுடனான‌ உடன்படிக்கையின் படி மிந்திரா (Myntra) ரூ .3,000 முதல் ரூ 50,000 வரை விலையுள்ள‌ தனிஷ்க் மியா கலெக்சன் நகைகளை ( Tanishq’s Mia collection) வேலைசெய்யும் பெண்களை இலக்காக வைத்து விற்பனை செய்யவுள்ளது.\n2013 ஆம் ஆண்டில், தனிஷ்க் தனது இணையவழி விற்பனை தள‌த்தினை (e-commerce website) டைட்டனுடன் இணைத்துக்கொண்டு, சொந்த இணைய‌தளமான‌ \" Titan.co.in\" ல் சேவைகளைத் துவங்கியது. இந்த‌ இணையதளம் சன்கிளாசஸ், பேக்பேக் பை (back pack), வாலட்கள் (Wallets - பணப்பைகள்), பைகள் மற்றும் பெல்ட்கள், கைக்கடிகாரங்கள் (wristwatches), என‌ அதன் சொந்த‌ பிராண்ட் பொருட்களை (own brand) தயாரிப்புக்களை தனது இதர‌ தயாரிப்புக்களுடன் விற்பனை செய்து வருகின்றது.\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nமுதல் 1Gbps பிராட்பேண்ட் சேவையை இந்தியா பெறுகிறது\nபிஎஸ்என்எல் 5ஜி சேவை திட்டம் : நோக்கியாவுடன் ஒப்பந்தம்\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.madathuveli.com/2017/06/blog-post.html", "date_download": "2018-08-18T01:16:10Z", "digest": "sha1:5TTNIVVP6RV2HOJYZXNC5DU2YBZYWTRD", "length": 10904, "nlines": 203, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nசனி, 3 ஜூன், 2017\nவிரைவில் தொடங்கவுள்ள மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய புனரமைப்புப் பணிகள்\nபுங்குடுதீவு மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் பல வருடங்களாக எவ்வித புனரமைப்பு வேலைகளும் செய்யப்படாத நிலையில் பொலிவிழந்து அழிவடையும் நிலையில் காணப்படுகின்றது. ஆலயத்தின் கூரை மரங்கள் பழுதுடைந்து கூரை உள்ளிறங்கி எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக 1990 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம் பெயர்ந்ததிலிருந்து, மீண்டும் 1995 இல் சிறிய தொகை மக்கள் மட்டுமே எம்மண்ணில் மீள குடியமர்ந்து இன்று வருடங்கள் இருபத்தேழு கடந்த நிலையிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது உள்ளமை எமது துர்பாக்கியமே. எனவே பல நாறு வருடங்களாக எம்மூதாதையர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயத்தை அழியவிடாது புனரமைத்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குறிப்பாக புலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற மடத்துவெளி, ஊரதீவு மக்களினது கைகளில் தான் தங்கியுள்ளது. இது இப்பிதேச மக்களினது தார்மீகக் கடமையுமாகின்றது.\nஎனவே இவ்வாலயத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவாக தொடங்கவுள்ள நிலையில் இவ்வறிவித்தலை புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். ”சிறுதுளி பெரு வெள்ளம்” எனும் முதுமொழிக்கு இணங்க மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையாரின் அடியார்களாகிய நாம் அனைவரும் இணைந்து எங்கள் ஆலயத்தின் திருப்பணியை செய்து முடிப்போம். புலம்பெயர் நாடுகளான சுவிற்சர்லாந்து, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா , ஜேர்மனி போன்ற நாடுகளில் வாழும் எம்மக்களிட மிருந்து நிதியுதவியை எதிர்பார்த்து நிற்கின்றோம்.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 3:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசுவிஸ் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியால...\n100 வயதில் காலடிபதிக்கும் என் தாய்க்கு நீன்ட ஆயுளை...\nவிரைவில் தொடங்கவுள்ள மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36193-padmavati-row-sanjay-bhansali-censor-board-chief-summoned-by-mps-panel-today.html", "date_download": "2018-08-18T00:19:24Z", "digest": "sha1:6B5UXUPA5BO2NJT6SR7WB2HFEQPH6NUQ", "length": 10641, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாடாளுமன்றக் குழுவில் விளக்கம் அளிக்கிறார் பத்மாவதி இயக்குநர் | Padmavati Row Sanjay Bhansali Censor Board Chief Summoned By MPs Panel Today", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nநாடாளுமன்றக் குழுவில் விளக்கம் அளிக்கிறார் பத்மாவதி இயக்குநர்\nபத்மாவதி திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றக் குழு முன்பு இன்று இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தெரிவிக்கவுள்ளார்.\nசஞ்சய் லீலா பன்சாலிக்கு நாடாளுமன்றக் குழு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. பத்மாவதி படம் தொடர்பாக நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று மாலை 3:00 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் இயக்குநர் பன்சாலி உடன் மத்திய திரைப்பட தணிக்கைக்குழு தலைவர் பிரசூன் ஜோஷியும் கலந்து கொள்வார் என்று நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்றக் குழுவில் பாலிவுட் நடிகராக இருந்து பாஜக எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்ட பரேஷ் ராவல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாப்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nதீபிகா படுகோனே நடித்து வெளியாகவுள்ள பத்மாவதி திரைப்படத்தில் ராஜபுத்திர வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, இந்தத் திரைப்படத்திற்கு வெளியிட கர்னசேனா உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் இந்த திரைப்படத்தை வெளியிட ஆட்சேபனை தெரிவித்து வந்தனர். டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம், கடும் எதிர்ப்பால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவயதான தம்பதி தூக்கிட்டு‌ தற்கொலை: மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என கடிதம்\nஉருவானது ‘ஒகி’ புயல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ராணி பத்மாவதி’ யார் என அப்போது தெரியாது: தீபிகா படுகோன் பேட்டி\nபாராட்டு மழையில் பத்மாவத்: ரூ.100 கோடி வசூலை தாண்டியது\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபற்றி எரியும் வடமாநிலங்கள்: வேடிக்கை பார்க்கும் பாஜக அரசுகள்\nதடைகளை தகர்த்தெறிந்து நாளை திரைக்கு வருகிறது ‘பத்மாவத்’\nபத்மாவத் படத்திற்கு ஹரியானாவில் எதிர்ப்பு: டிக்கெட் கவுன்ட்டரை அடித்து நொறுக்கிய கும்பல்\nபாஜக அரசுகள் தடை: உச்சநீதிமன்றத்தில் பத்மாவத் தயாரிப்பாளர் மனு\nசர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படம் ஜன.,25ல் வெளியாகிறது..\nஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ரிலீஸ் உறுதி\nRelated Tags : நாடாளுமன்றக் குழு , பத்மாவதி , சஞ்சய் லீலா பன்சாலி , பிரசூன் ஜோஷி , அனுராக் தாக்கூர் , Padmavati , Sanjay Bhansali , CBFC chief , Parliamentary panel\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவயதான தம்பதி தூக்கிட்டு‌ தற்கொலை: மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என கடிதம்\nஉருவானது ‘ஒகி’ புயல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2011/10/6.html", "date_download": "2018-08-18T00:42:17Z", "digest": "sha1:DJQZ2LXLNZA3QLH2E7UEGUBBRVMQRDN3", "length": 22055, "nlines": 280, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: நொந்து போகும் ஒர் இதயம்-6", "raw_content": "\nநொந்து போகும் ஒர் இதயம்-6\nஇத் தொடரில் யாரையாவது மனம் நோகும் வகையில் எழுதியிருந்தால்..................\nசாத்தியம் இல்லை.\" நீ வேறுமதம் அவள் வேறு மதம் \"\n\"உனக்கு இன்னும் உலகம் புரியலடா .நீ போகவேண்டிய தூரம் இன்னும் தொடங்கவில்லை.\nஉயர்தரம் இப்போது தான் தொடங்கியிருக்கின்றாய். கல்வி என்ற பெருங்கடலில் இது இரண்டாம் பாகம் நீ இருப்பது.\nஇப்போது உன் சிந்தனை உயர்தரம் முடித்து பல்கலைக்கழகம் போவதாக இருக்கனும்.\nஅதைவிடுத்து அடுத்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கும் யுத்த நிலைப்பகுதியில் நின்று கொண்டு காதல் செய்யப்போறியா\nஅதுவும் ஒரு இஸ்லாமிய மங்கையை எப்போதும் நம் கனவுகள் நம் கைகளுக்கு இருக்கனும். கைகள் நீண்டு அடுத்தவன் மூக்கில் குத்துவது சமூகப் பிரச்சனையாக மாறிவிடும்.\nஏற்கனவே நாம் இங்கு பிரித்தாலும் ஆட்சிக் குழுக்கலால் முட்டிமோதுகின்றோம்.\nஇந்த நிலையில் இது உனக்கு தேவையில்லாத ஒரு வலியான விடயம்.\nநான் முத்தவன் உனக்கு.\" என் சொல் கேள் காதல் கருமம் என்று உன் கல்வி என்ற வாழ்க்கைத் தீபத்தை அணைத்து விடாதே\"\nமீண்டும் ஏற்ற அதிககாலம் பிடிக்கும்.\n2 வருடம் மிகவும் ஒரு துறவி போல் எதிலும் பற்று வைக்காமல் கல்வியை நேசி .\nஉன் குடும்பத்திற்கு வழிகாட்ட வேண்டிய\nநீயே வழிமாறிப் போய் விட்டில் பூச்சி ஆகதே.\n\"இன்னொரு பெண்மனசில் வீணாக காதல் தீயை வார்த்து . அவர்களின் கல்வி முன்னோற்றத்திற்கு தடை போடாதே. \"\n அதுவரை அமைதியாக இருந்த ரவி என்னிடம்.\nஇதப்பாரு தனிமரம் உனக்கு உள்ளுக்குள் இருக்கும் இஸ்லாமியர் மீதான தப்பான அபிப்பிராயத்தை\nநீங்கள் எல்லாம் சேர்ந்து அவங்கட நிலத்தைப் பறித்துக் கொண்டு வெளியேற்றி விட்டு நல்லவர்கள் போல் நடிக்காத..\nஎனக்கு இப்ப உதவி செய்ய முன்வராட்டியும் பறுவாயில்ல.\nநான் ஒன்றும் உன்னைப் போல சீதனத்துக்கு பார்த்துக் கொண்டு இருக்கும் ஆம்பிள்ளை இல்ல.\nமனசுக்குப் பிடித்த விடயத்தை செயலில் செய்ய நண்பனாக உதவாட்டியும் பறுவாயில்லை .\n\"மூலச் சலவை செய்து என் காதலை முளையில் கிள்ளியெறியும் காரியத்தில் கோடாரி போல் முன்வராத\" அது நம் நட்புக்கு கேடாக அமையும்.\nநான் போறன் என்று என் மீது இருந்த கோபத்தை சைக்கிள் பெடல் மீது காட்டி எட்டி மித்துதுப் போய்க்கொண்டே இருந்தான். .\nஎதிரே இந்திரா திரையில் முஸ்த்தப்பா விளம்பரத்தில் நெப்போலியன் என்னைப் பார்த்து கண்கலங்குவது போல் இருந்தது.\nஇவனிடம் இப்படி ஒரு வார்த்தை வரும் என்ற கோணத்தில் நான் ஜோசிக்கவில்லை.\nஒரு காதல் ஆரம்பமே மனதில் மறக்க நினைக்கும் வலிகளை மீளவும் தட்டி எழுப்பும் .எண்ணங்கள் ஊடாக இவன் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா\nநான் என்ன செய்ய முடியும் இத்தனை இஸ்லாமிய உறவுகளுடன் தொழில் நிமித்தம் பழகும் எனக்கு அவர்கள் மீது உள்மனதில் வெறுப்பு என்ற கருநாகத்தையும் அல்லவா விதைத்துவிட்டுடான் .\nகுழப்பத்தில் நான். பிரதான பாதையில் நிற்கும் போது .\nஐயே கோமத. மொக்கட்ட மெத்தனம் இன்னே\n(அண்ணா நலமா,என்னத்திற்கு இங்கே நிற்கின்றீர்கள்) என்றவாரே என் அருகில் தன் கரங்களை நீட்டினாள் சாலிக்கா.\n. ஒரு நண்பன் வருவான் மதவாச்சி போகனும் என்றேன் நிஜம் என்பதைப் போல் பாவனையில். அப்படியா நானும் அங்காலதானே போறன் நீங்களும் வாங்கோ என்றாள் .நண்பனுக்கு கைபேசியில் அழைத்துப்பாருங்கள்.\n\" எங்கே இருக்கான் என்று கேளுங்க\" என்றவாரே கேட்டவள் என் பின் புறப்பக்கத்தின் பொக்கட் மீது கைவைத்தாள்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 10/16/2011 04:45:00 am\n\"மூலச் சலவை செய்து என் காதலை முளையில் கிள்ளியெறியும் காரியத்தில் கோடாரி போல் முன்வராத\" அது நம் நட்புக்கு கேடாக அமையும்.\nஇப்படித்தாங்க நாம அவங்க நல்லதுக்கு சொல்றது முதல்ல அவங்களுக்கு புரியாது,ஆனா சீக்கிரத்தில் புரிஞ்சுக்குவாங்க\nபின் பாக்கட்டில் கை வைத்த போதே சஸ்பென்ஸ் தொடங்குகிறது...\nகூடா நட்பு கேடாகும் எனும் வாக்கிற்கு மாற்றாக இங்கே நண்பனை நல் வழிப்படுத்தி இன மோதலை உருவாக்கும் காதலில் இருந்து பிரிக்க நினைக்கும் தனி மரத்தின் நல்ல செயலைத் தாங்கியவாறு பதிவு நகர்கிறது.\nஅட்வைஸ் பண்ணினால் கேட்கும் மனநிலையுள்ளோருக்கே பண்ணலாம்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅருமையாய் நகர்ந்து போகிறது கதை வாழ்த்துக்கள்\nவணக்கம் பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி\n\" எங்கே இருக்கான் என்று கேளுங்க\" என்றவாரே கேட்டவள் என் பின் புறப்பக்கத்தின் பொக்கட் மீது கைவைத்தாள்/////\nகதை அருமை இப்படி சஸ்பென்ஸ்வைத்து முடித்திருக்கீங்க...அடுத்த பகுதி எப்பவரும்..\n//எப்போதும் நம் கனவுகள் நம் கைகளுக்கு இருக்கனும்.//\nநீங்கள் கூறியுள்ள அறிவுரைகள் வாலிபர் அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டியவை...செய்வார்களா\nசுவாரஸ்யமாகப் போகிறது...பின் புறப்பக்கத்தின் பொக்கட்டில் நிறுத்தி....\nநீண்ட நாட்களின்பின் உங்கள் தொடரை வாசிக்கத்தொடங்குகிறேன்.உங்கள் எழுத்தாற்றல் வளர்ச்சியடைந்திருக்கிறது.\nஉண்மைதான் கோகுல் நாம் நல்லது சொன்னால் கேட்கவா போறார்கள்\nநன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி இராஜேஸ்வரி அம்மா உங்கள் வதுகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி யோகா ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி இராஜேஸ்வரி அம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி மகேந்திரன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி நண்டு@நொரண்டு உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி கவி அழகன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி ராச் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி சென்னைப்பித்தன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்\nநன்றி செங்கோவி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் அப்புறம் தொடரும் தொடர். கருத்துரைகளை வாலிபர்கள் யார் உள்வாங்குகின்றார்கள் .\nநன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்\nவிடுமுறை கொண்டாடி பதிவுலகம் வரும் தோழி ஹேமா அவர்களே வருக வருக\nஎன்னையும் ஒரு பதிவாளன் ஆக்கியதில் பெரும் பங்கு உங்களுடையதும் தோழி நீங்கள் தரும் ஊக்கம் கருத்துரைகள் தான் இந்த முன்னோற்றம் அந்தவகையில் உங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சியளிக்கின்றது.\nநன்றி விடுமுறையின் பின் பதிவில் இனைவதில் \nநொந்து போகும் ஓர் இதயம்-13\nநொந்து போகும் ஓர் இதயம் -12\nநொந்து போகும் ஓர் இதயம்-11\nநொந்து போகும் ஓர் இதயம் -10\nநொந்து போகும் ஓர் இதயம் -9\nநொந்து போகும் ஒர் இதயம்-8\nநொந்து போகும் ஓர் இதயம்-7\nநொந்து போகும் ஒர் இதயம்-6\nநொந்து போகும் ஒர் இதயம் -5\nவிண்ணைத் தாண்டிய என் காதல் -3\nநொந்து போகும் ஒர் இதயம்-4\nவிண்ணைத் தாண்டிய என் காதல் -2\nபிடித்த படத்தின் பின் நானும்//\nநொந்து போகும் ஒர் இதயம்-3\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.uktamil.co.uk/2018/04/blog-post_22.html", "date_download": "2018-08-18T00:38:51Z", "digest": "sha1:Z2H4KVREM3GIVCUW6VATG6VW6P2N4E3Q", "length": 6389, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "மோட்டார் சைக்கில் விபத்து - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » மோட்டார் சைக்கில் விபத்து\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகதிரேசன் வீதியூடாக ரயில் நிலையம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதி இரண்டாம் ஒழுங்கையிலிருந்து கதிரேசன் வீதி நோக்கி 3 இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளே மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் நாட்டு மாப்பிள்ளை\nயாழ்ப்பாணம் - மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ். மீசாலையைச் சேர்ந...\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ண...\nவிரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்\nவெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://newceylon.com/news/1166", "date_download": "2018-08-18T00:19:04Z", "digest": "sha1:VVSHSNPIOHCKLQARLP6LCF65QRHZPKUL", "length": 10516, "nlines": 75, "source_domain": "newceylon.com", "title": "மக்களை பாதிக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாகாது ; பிதமர் கருத்து", "raw_content": "\nமக்களை பாதிக்கும் வகையில் அரசியல் அமைப்பு உருவாகாது ; பிதமர் கருத்து\nநாட்டை பிளவுப்படுத்தல் அல்லது மக்களின் மொழி உரிமை மத உரிமை ஏனையவை பாதிக்கும் அளவில் அரசியலமைப்பு உருவாக்கப்படக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்களின் ஆணைக்கமைவாகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2864 காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கும்நிகழ்வு நேற்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.\n2015ம் ஆண்டு முதல் இரண்டு பிரதான கட்சிகள் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கு தகுந்த ஜனாதிபதி ஒருவரை நியமித்ததன் ஊடாக நாம் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றோம்.\nநல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பொது மக்கள் வழங்கிய வரத்தினை கொண்டு மக்களின் உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காத நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது அவசியமான தேவையாகவும், நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், திஸ்ஸ வித்தான போன்றோர் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலப்பகுதியில் 13 ஆம் திருத்த சட்டத்திற்கு அப்பால் அரசியலமைப்பை சீர் செய்ய முயற்சி செய்த போதிலும் அது முடியாதிருந்தது.\nஅன்று மொழி பிரச்சினை இருந்ததால் தனிநாடு பிரச்சினை உருவாகியது. இதனால் 30 வருட யுத்தத்திற்கும் நாம் முகம்கொடுத்தோம். பல துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து தற்பொழுது மீண்டுள்ளோம்.\nபுதிய அரசியல் யாப்பு ஊடாக இந்த நாட்டில் ஒருமித்த மக்களாக மட்டுமன்றி உரிமை பெற்ற மக்களாக அணைவரையும் வழிநடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.\nநாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் முதல் முதலாக ஒன்றிணைந்து அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.\nஅடி மட்டத்திலிருந்து ஆராய்ந்து ஒருமித்த கட்டமைப்பை உருவாக்கி மக்களின் சமாதான வாழ்க்கைக்கு வித்திடுவதை இலக்காக கொண்டு அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படும் செயலை நாம் முன்னிறுத்தி வருகின்றோம் என அவர் குறிப்பிட்டார்\nபுதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம் திகதி வர்த்தமானியில்\nஅலோசியஸ் மற்றும் கசுன் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்\nகஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருளுடன் 27 பேர் கைது\nகாங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்\nயாழ். ஊர்காவற்துறையில் மதகுரு ஒருவர் கைது \nதமிழீழம் வேண்டும்.. யாழில் சிங்கள மாணவர்கள் கோஷம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு\nதெற்காசியாவையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 13 ஆவது நினைவு தினம்\nஇராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க\nஎகிப்த் பூர்வகுடிகள் வரலாற்றில் தமிழர்கள் : 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விதைக்கப்பட்ட தமிழனின் பெருமை\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவேண்டாம்... இனி உலகமே பேசப்போகிறது: தமிழினத்தின் முடிவுகளை உலகமே ஏற்கும் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/united-bank-india-is-hiring-2016-vacancy-7-cs-officer-posts-001325.html", "date_download": "2018-08-18T00:36:21Z", "digest": "sha1:SY3GFCXY7OK6LNIXMSYLSD3W3YCJB5BW", "length": 7916, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காத்திருக்கும் பணியிடங்கள்!! | United Bank of India is Hiring 2016: Vacancy for 7 CS & Officer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காத்திருக்கும் பணியிடங்கள்\nயுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காத்திருக்கும் பணியிடங்கள்\nடெல்லி: யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (யுபிஐ) கம்பெனி செக்கரட்டரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். கம்பெனி செக்கரட்டரி பணியிடங்கள் 2-ம், அதிகாரி (செக்யூரிட்டி) பணியிடங்கள் 5-ம் காலியாகவுள்ளன.\nகம்பெனி செக்கரட்டரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் எல்எல்எம், எல்எல்பி படித்திருக்கவேண்டும். வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். சம்பளம் ரூ.23,700-42,020 என்ற அடிப்படையில் கம்பெனி செக்கரட்டரி பணியிடங்களுக்கு வழங்கப்படும். மேலும் அதிகாரி பணியிடங்களுக்கு ரூ. 31705-45950/- என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.\nவிருப்பமுள்ளவர்கள், விண்ணப்பங்களுடன் தகுந்த ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமும் அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 28-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு http://www.unitedbankofindia.com/english/home.aspx என்ற இணையதள முகவரியை அணுகலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/elon-musk-confirms-that-teslas-autopilot-will-get-a-full-self-driving-feature-in-august/", "date_download": "2018-08-18T01:20:27Z", "digest": "sha1:7YGECLTPKQO6SJZUG4RAPVZQSNUP732E", "length": 11967, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆகஸ்ட்டில் வருகின்றது டெஸ்லாவின் ஆட்டோபைலட் அப்டேட் - Elon Musk confirms that Tesla's Autopilot will get a 'full self-driving feature' in August", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nஆகஸ்ட்டில் வருகின்றது டெஸ்லாவின் ஆட்டோபைலட் அப்டேட்\nஆகஸ்ட்டில் வருகின்றது டெஸ்லாவின் ஆட்டோபைலட் அப்டேட்\nடெஸ்லா என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது அதன் ஆட்டோபைலட் எனப்படும் ஓட்டுநர் உதவி மென்பொருள் தான். ஓட்டுநரின் உதவியின்றி தானாக தனித்து வாகனங்கள் இயங்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் ஆட்டோபைலட் மென்பொருள்.\nமுகப்பு மற்றும் பின்பக்க கேமரா, அல்ட்ராசோனிக், ரேடார் கருவிகள் பொருத்தப்பட்ட இந்த டெஸ்லா கார்களை ஓட்டுநர் பெரிய சிரத்தை ஏதுமின்றி ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிட்டு நிம்மதியாக பயணிக்கலாம். இந்த கார்களில் மொத்தம் எட்டு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 360 டிகிரியிலும் செயல்பாடுகளை கண்காணித்து வாகனம் ஓடத்தொடங்கும். இது நாள் வரை செமி-ஆட்டோவாக இயங்கிய டெஸ்லா தற்போது முழுவதும் ஆட்டோபைலட் மோடில் இயங்கப் போகின்றது.\nபுதிதாக வரும் இந்த அப்டேட் பற்றி டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலோன் மாஸ்க் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் தெரிவித்திருக்கின்றார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஆட்டோபைலட் தொடர்பாக டெஸ்லா பயனாளி கேட்ட கேள்விக்கு விளக்கமளித்திருக்கின்றார். அதில் முழுமையான ஆட்டோபைலட் மோடில் டெஸ்லாவினை இயங்க வைக்கும் மென்பொருள் V9 அப்டேட் ஆகஸ்ட் மாதம் வர இருக்கின்றது. அதில் நீங்கள் கூறும் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்று கூறியிருக்கின்றார்.\nஇந்த செய்தி வெளிவந்த நேரத்தில் இருந்து, டெஸ்லாவின் வர்த்தக மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே டெஸ்லாவின் ஆட்டோபைலட் மோடினால் ஏகப்பட்ட விபத்துகள் நடந்திருக்கின்றது. ஆட்டோபைலட் மென்பொருளினால் எதிரில் வரும் கனரக வாகனங்களை அடையாளங்காண இயலவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பினால் தானியங்கி வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகின்றது.\nவிண்ணில் பாய்ந்தது உலகின் மிகப் பெரிய ராக்கெட்\nரயில் பயணத்தில் நீங்கள் அருந்தும் உணவு விலையை அறிய புதிய IRCTC செயலி\n‘சபாநாயகர் தனபால் இழிவாக பேசி என்னை வெளியேற்றினார்’ – விஜயதாரணி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nகமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்\nகமல்ஹாசன் அரசியல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA2MzYwMDA3Ng==.htm", "date_download": "2018-08-18T01:34:55Z", "digest": "sha1:EOG5SW6TMYYMS3XVZSSIECQGC42ZQULI", "length": 13365, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "உருளைக்கிழங்கு புட்டு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nசகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தர்ப்படும்.\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nஉருளைக்கிழங்கு அதிக அளவு கால்சியத்தை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி சுவையான உருளைக்கிழங்கு புட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.\nஉருளைக்கிழங்கு புட்டு செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு - கால் கிலோ\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - அரை மூடி\nகடுகு - 1 ஸ்பூன்\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nசின்ன வெங்காயம் - 10\nநல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு\nமுதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.\nசின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nதோலுரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.\nவாணலியில் தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.\nஅடுத்து அதில் உருளைக்கிழங்கினைச் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறவும்.\nஇரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.\nசுவையான உருளைக்கிழங்கு புட்டு தயார்.\nஇதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nசிவப்பு அரிசி வெண் பொங்கல்\nசிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இ\nதோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என\nபலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்\nரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அ\n« முன்னய பக்கம்123456789...105106அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA2OTgyMTk1Ng==.htm", "date_download": "2018-08-18T01:34:48Z", "digest": "sha1:YBN4XIIMQUAANKSKZDY7FYKSNNTQ56D2", "length": 13783, "nlines": 155, "source_domain": "www.paristamil.com", "title": "சத்து நிறைந்த கோதுமை ரவா அடை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nசகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தர்ப்படும்.\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nசத்து நிறைந்த கோதுமை ரவா அடை\nசத்து நிறைந்த கோதுமை ரவையை வைத்து ஏராளமான சத்தான உணவுகளை தயாரிக்கலாம். அன்று கோதுமை ரவையை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த கோதுமை ரவா அடை\nகோதுமை ரவா - 1 கப்\nதுவரம்பருப்பு - 1/2 கப்\nகடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nபயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 4\nபெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nவெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.\nகோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.\nபருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.\nபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவில் சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணெய் தடவி ஒரு பெரிய குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசிவப்பு அரிசி வெண் பொங்கல்\nசிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இ\nதோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என\nபலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்\nரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். அ\n« முன்னய பக்கம்123456789...105106அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/products/100-linen-zen-harem-pants", "date_download": "2018-08-18T00:26:36Z", "digest": "sha1:DA6XDGPYYCPQII3MJNIOEMWLBYGAJV56", "length": 25501, "nlines": 483, "source_domain": "ta.buddhatrends.com", "title": "ஜேன் ஜென் ஜென் ஹரேம் பேன்ட்ஸ் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nஜேன் ஜென் ஜென் ஹரேம் பேன்ட்ஸ்\n$ 87.92 $ 125.60 நீங்கள் சேமித்து வைக்கும் 30% ($ 37.68)\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nகடற்படை ப்ளூ / எம் கடற்படை ப்ளூ / எல் சிவப்பு / எம் சிவப்பு / எல்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nநீண்ட ஹிப்பி ஆடைகள் $ 44.50 $ 89.00\nவிண்டேஜ் ஜிப்சி மேக்ஸி பிடித்த\nவிண்டேஜ் ஜிப்சி மேக்ஸி பிடித்த $ 44.50 $ 89.00\nசமச்சீர் இரட்டை அடுக்கு ஐரீன் பிடித்த\nசமச்சீர் இரட்டை அடுக்கு ஐரீன் பிடித்த $ 54.00 $ 77.00\nபைகள் கொண்ட லூஸ் மாக்ஸி பிடித்த\nபைகள் கொண்ட லூஸ் மாக்ஸி பிடித்த $ 44.50 $ 89.00\nமேல்நோக்கிய குறுகிய ஸ்லீவ்ஸ் மாக்ஸி பிடித்த\nமேல்நோக்கிய குறுகிய ஸ்லீவ்ஸ் மாக்ஸி பிடித்த $ 44.50 $ 89.00\nவெளிப்புற அடுக்கு போஹேமியன் பிடித்த\nவெளிப்புற அடுக்கு போஹேமியன் பிடித்த $ 33.50 $ 67.00\nபிளஸ் அளவு அதிகப்படியான சர்ட் பிடித்த\nபிளஸ் அளவு அதிகப்படியான சர்ட் பிடித்த $ 42.00 $ 60.00\nதளர்வான ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த\nதளர்வான ஸ்லீவ்லேஸ் மாக்ஸி பிடித்த $ 44.50 $ 89.00\nமொத்தம் பச்சைக் கார்டூரர் $ 44.50 $ 89.00\nலூஸ் Turtleneck ஸ்வெட்டர் பிடித்த\nலூஸ் Turtleneck ஸ்வெட்டர் பிடித்த $ 50.40 $ 72.00\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_30.html", "date_download": "2018-08-18T00:38:52Z", "digest": "sha1:CBGOPV3ICSRRV67FBO7ZO6VIZIQLVGBV", "length": 5637, "nlines": 51, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » இருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.\nஇருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதன்பிரகாரம், முகநூல், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய குறித்த சமூக வலைதளங்கள் உள்ளடங்குவதாகவும், இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் நாட்டு மாப்பிள்ளை\nயாழ்ப்பாணம் - மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ். மீசாலையைச் சேர்ந...\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ண...\nவிரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்\nவெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/11014005/Scotland-teamEngland-The-shock-failed.vpf", "date_download": "2018-08-18T00:50:45Z", "digest": "sha1:ITZSUDJB3L2BOWE6TPZ4ZXDI3S5HMJWV", "length": 9472, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Scotland team England The shock failed || ஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி + \"||\" + Scotland team England The shock failed\nஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி\nஇங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடந்தது.\nஇங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த குட்டி அணியான ஸ்காட்லாந்து அணி வியப்புக்குரிய வகையில் ஆடியது. ரன் மழை பொழிந்த அந்த அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தனர். ஒரு நாள் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மெக்லியோட் 140 ரன்கள் விளாசி (94 பந்து, 16 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. அந்த அணி இங்கிலாந்தை சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 105 ரன்கள் (59 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். பேர்ஸ்டோ, ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக நொறுக்கிய 3-வது சதம் இதுவாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் இவர் தான்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ‘மனஉறுதியுடன் போராடுங்கள்’ - இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்\n2. கிரிக்கெட் சூதாட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 வருட தடை\n3. இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர வடேகர் முக்கிய பங்காற்றினார் - சச்சின் தெண்டுல்கர் புகழாரம்\n4. அஜித் வடேகர் மறைவு சச்சின் தெண்டுல்கர் இரங்கல்\n5. இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: சரிவில் இருந்து மீளுமா இந்திய அணி 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=49&t=722&sid=6ba421ff7e9dcda11f98a90f093c12b2&start=140", "date_download": "2018-08-18T00:33:02Z", "digest": "sha1:QFWQSDJDKIN44BPYTU7UOX6SLICFZT27", "length": 37365, "nlines": 471, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு - Page 15 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 23rd, 2014, 11:11 pm\nபணியின் காரணமாக இணைய முடியவில்லை....\nஒரு மகிழ்வான செய்தி என்னவென்றால் ... தற்போது பயிற்சியில் நன்றாக பணியாற்றியதால்... நேற்றிலிருந்து நான் அறிவிப்பிற்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளேன்.....\nஅதுமட்டுமல்லாது இரண்டாவது வாயிப்பிலேயே... அன்றைய பண்பலையின் நிகழ்ச்சியினை தொடங்கிவைக்கும் வாயிப்பும் அளிக்கப்பட்டுள்ளது...\nவரும் 30.04.14 அன்று காலை 4.55 மணிக்கு நிகழ்ச்சியை தொடங்கி .. அறிவிப்பு செய்ய போகிறேன்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகொஞ்சம் தனிப்பட்ட வெளிவேலைகள் இருந்ததால் ...இந்தபக்கம் வர முடியவில்லை.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 10:35 am\nபூச்சரத்தில் இணைந்துள்ள உறுப்பினர் நண்பர்களுக்கும் விருந்தினராக பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கத்தை சமர்பிக்கிறேன்....\nஒரு வணக்கம் சொல்ல எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: பூச்சரத்தில் இணைந்துள்ள உறுப்பினர் நண்பர்களுக்கும் விருந்தினராக பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கத்தை சமர்பிக்கிறேன்....\nஒரு வணக்கம் சொல்ல எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:02 am\nஇனிய காலை வணக்கம் பாலா...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: இனிய காலை வணக்கம் பாலா...\nவணக்கம் கவி எங்கே உங்க கவியை காணோம் ரொம்ப நாள் ஆச்சு உங்க காதல் கவியும் காணோம் ,நீங்கள் இல்லாமல் பூவன் வேற கவி எழுதல\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:15 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: என்னது கவிதையை காணாமா....\nஆமாம் கவி விதைத்த சொற்கள் காணோம் அதான் கவிதை காணோம்\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/2018/01/18/", "date_download": "2018-08-18T01:28:25Z", "digest": "sha1:J7EMAYF7O7A63Y7VWOWABUZCPLQ3NSII", "length": 5816, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –January 18, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nகாலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நடத்திய 2018-ம் ஆண்டுக்கான காலண்டர் போட்டியில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் வரைந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும் மொத்தம் 193 நாடுகளில்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”\nபுலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”\nஇலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க\n295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAzNjgzNjExNg==.htm", "date_download": "2018-08-18T01:34:15Z", "digest": "sha1:SSCD4IHQBUNXZHMEJ534JOFBKSLEI3XL", "length": 27091, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "விவாகரத்தை பெண்கள் விரும்புகிறார்களா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nசகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தர்ப்படும்.\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர் தலையிடுவது, இருவருக்கும் இடையே சந்தேகம் எழுவது, அதையொட்டிய அதீத கற்பனைகள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் வெகுநாட்கள் சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, தேவையற்ற விவாதம், ஈகோ, ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியம் செய்வது, மற்றவர்களிடம் குறைக் கூறுவது.. இப்படி விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.\n‘தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகுவதும், ஒருவரையொருவர் ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளாததும் கணவன்-மனைவி உறவு முறிவுக்கு வழிவகுத்துவிடுகிறது’ என்கிறார் மனநல நிபுணர் ராம் பிரதாப் பேனிவாலா.\nகம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் முறையான தகவல் தொடர்பின்மையே 65 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருவர் நிலையை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதுதான் இருவருக்குமிடையே விரிசல் உண்டாவதற்கு மூலகாரணம். தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் திடீரென்று அதை பேசி சரிசெய்ய தம்பதிகளால் முடியாமல் போய்விடுகிறது. இதனால் பல கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பம் எது என்பதே தெரியாமல் உறவை முடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம்.\nகணவன், மனைவி இருவருமே நல்லவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டு பிரிவது இருவருக்குமே பாதிப்பைத் தரும். ‘நான் இல்லையானால் நீ அவ்வளவு தான்’ என்ற எண்ணம் தம்பதிகளுக்குள் தோன்றும் போது பிரிவு வலுவடைகிறது. பிரிந்துபோக விரும்புகிறவர்களுக்கு அவர்களது அழகான குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் நினைவுக்கு வருவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான்.\nஏதேனும் ஒரு பிரச்சினையைப் பற்றி திரும்பத் திரும்ப தம்பதியர் இருவரும் பேசுவது, அடுத்தவர் குறையை மிகைப்படுத்திப் பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இன்முகத்துடன் தொடங்கும் உரையாடல் பல தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதமாக மாறிவிட இது தான் காரணம்.\nஅமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜான்காட்மேன், தம்பதிகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பற்றி பட்டியலிடுகிறார். ‘அன்பாக, அனுசரனையாக பேச பெரும்பாலான தம்பதிகளுக்கு தெரிவதில்லை. ஒருவரை ஒருவர் குறை சொல்வது கூட பெரிய விஷயமல்ல. மற்றவர் முன் குறை சொல்வதுதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை உறவைப் பலப்படுத்தவும் செய்யும், பாழ்படுத்தவும் செய்யும். மோசமான பேச்சு வார்த்தைகள் இல்லாமல் இருப்பதே நல்லது. ஒருவரை ஒருவர் உடல் குறைபாடுகளைப் பற்றி இழிவாகப் பேசுவது, மற்றவர்கள் முன் அவமதிப்பது, பாதுகாப்பை பறிப்பது, சந்தேகப்படுவது போன்ற பேச்சுவார்த்தைகள் வாக்குவாதத்தில் முடியும்.\nசண்டை போட்டு முடிந்த பின்பு சிந்திப்பதும், சமாதானம் செய்வதும் அதிகப் பலனை தராது. ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது முக்கியமல்ல. அந்த பேச்சுவார்த்தை எதில் போய் முடிகிறது என்பது தான் முக்கியம். குடும்ப விஷயங்களை பேசும்போது பிரச்சினைக்குரிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. இருவருக்கும் இடையே அறிமுகமாகும் வேற்றுநபரால் பிரச்சினை ஏற்படக்கூடும். அந்த வேற்றுநபர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அம்மாவாகக் கூட இருக்கலாம். அவர்கள் நன்மை செய்பவராகவே இருக்கலாம். ஆனால் தன்னை விட வேறுநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது உறவுகளுக்கு இடையில் பிரச்சினை தோன்றுகிறது’ என்கிறார், ஜான் காட்மேன்.\nதொலைக்காட்சி நடிகை சுபாங்கி ஆத்ரே சொல்கிறார்:\n‘‘சினிமா, தொலைக்காட்சி நடிகைகளை பொறுத்தவரை திருமண வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமுமில்லை. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். பெண்களில் நிறைய பேர் சந்தேகத்திற்குள்ளாகிறார்கள். தேவையில்லாமல் துணை ஏற்படுத்தும் சந்தேகத்தால் திருமண முறிவுகள் அதிகரிக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும்தான் திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிட்டவர்கள் விவாகரத்தில் இருந்து ஓரளவு தப்பித்துவிடலாம். என்னோடு வேலை செய்யும் பலருடைய பிரச்சினை இது தான். கணவன் - மனைவி இடையே நம்பிக்கை இன்மையால் வாழ்க்கை துயரத்தில் முடிந்து விடுகிறது. இந்த விஷயத்தில் என் கணவர் அப்படி அல்ல. அவர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிரச்சினைக்குரிய விஷயங்களை ஓரங்கட்டிவிடுகிறது’’ என்கிறார்.\nமனநல மருத்துவர் பூஜா ஆனந்த் சர்மாவின் கருத்து பெண்களும் விவாகரத்துக்கு ஒருவகையில் முக்கிய காரணமாகிவிடுகிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது.\n‘‘முன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.\nமுற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது’’ என்கிறார், பூஜா.\nஅவசரகதியில் தம்பதியர் எடுக்கும் முடிவு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக செய்துவிடும் என்கிறார் தொலைக்காட்சி நடிகை வந்தனா பதாக். அவர் சொல்கிறார்: ‘‘இப்போது எல்லோரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறோம். இதுவும் கணவன் - மனைவி பிரிவுக்கு காரணம். அவர்கள் குடும்பத்திற்கென்று நேரத்தை ஒதுக்கினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nதன் காலில் தானே நிற்கும் பலம் இருக்கும் தைரியத்தில் இன்று திருமண வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டால் நாளை தனிமை என்னும் பயங்கரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவாகரத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். மனதாலும் சரி உடலாலும் சரி அந்தப் பாதிப்புகள் உடனே வெளியே தெரியாது. அது குழந்தைகளின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும். படித்தவர்கள் கூட இதுபற்றி யோசிப்பதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது.\nநம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்’’ என்கிறார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபெண்கள் வயதான ஆண்களை விரும்புவது ஏன்\nபெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு த\nபெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை\nஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந\nதிருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே\nதிருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக் கூடும். (love relationship tips) இதில் ஆண்\nடீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக் கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு கார\nதிருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவ\n« முன்னய பக்கம்123456789...6970அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/93851", "date_download": "2018-08-18T00:24:23Z", "digest": "sha1:5EFJ6F2GRRQGHUUGJRA37VXPQJV44EMR", "length": 23264, "nlines": 122, "source_domain": "www.zajilnews.lk", "title": "புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது? பகுதி - 4 - Zajil News", "raw_content": "\nHome Articles புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\n(வை எல் எஸ் ஹமீட்)\nநாம் பாகம்-3 இல் புதிய மாகாணசபைத் தேர்தல்முறை கிழக்கிற்கு வெளியே எவ்வாறு முஸ்லிம்களைப் பாதிக்கும் என்று பார்த்தோம்.\n60:40 ஐ 50:50 ஆக மாற்றியது முஸ்லிம்களுக்கு நன்மையா\nமுஸ்லிம் கட்சிகள் மேற்படி தேர்தல்திருத்தத்தை ஆதரித்துவிட்டு பெருமையாகப் பேசிய இருவிடயங்கள் 60:40 என்பதை 50:50 ஆக ஆக்கிவிட்டோம். அத்தோடு எல்லை நிர்ணய அறிக்கையை அமுல்படுத்துவதற்கு 2/3 பெரும்பான்மை தேவை என்ற சரத்தையும் கொண்டுவந்திருக்கின்றோம்; என்பதாகும்.\nஇதுவரை இந்த 50:50 எந்த வகையில் முஸ்லிம்களுக்கு நன்மையானது; என்று எந்தவொரு கட்சியும் மக்களுக்கு கூறவில்லை. மீண்டும் மீண்டும் முஸ்லிம்களுக்கு நன்மையானது; என்று கூறுகின்றார்களேதவிர எந்தவகையில் நன்மையானது; என்று தெளிவுபடுத்துகின்றார்கள்; இல்லை.\n50:50 என்றாலும் 60:40 என்றாலும் அங்கத்தவர் தீர்மானிக்கப்படுவது வாக்குகளின் விகிதாசாரக் கணிப்பீட்டின்படி. கிழக்கிற்குவெளியேயுள்ள பிரச்சினை முஸ்லிம்களுக்காக உருவாக்கப்படுகின்ற தொகுதிகளுக்குள் எத்தனை வீதமான முஸ்லிம்கள் உள்வாங்கப்படப் போகின்றார்கள். எத்தனை வீதமானவர் வெளியில் விடப்படப் போகின்றார்கள்; என்பதாகும்.\nமுஸ்லிம்களுக்கு அண்ணளவாக உரித்துடைய 44 ஆசனங்களுள் கிழக்கில் பெறக்கூடிய அதிகூடிய ஆசனங்கள் 13 ஆகும். சிலவேளை ஒன்றால் வித்தியாசப்படலாம். அதேநேரம் சாத்தியமான தொகுதிகள் ஏழு ஆகும். எனவே கிழக்கிற்கு வெளியே நாம் பெறவேண்டிய ஆசனங்கள் 31 ஆகும். இவற்றில் 6 தொகுதிகளாயின் 25 ஆசனங்கள் பட்டியலில் இருந்து பெறவேண்டும். தேசியக்கட்சிகள் புண்ணியத்தில் ஒன்றிரண்டை நியமித்தாலேயொழிய முஸ்லிம்கட்சிகளினூடாக கிழக்கிற்குவெளியே பட்டியலில் ஆசனம் பெறுவது அரிதாகும்.சிலவேளை தொகுதிகள் ஒன்றிரண்டு அதிகரித்தால் அந்த அதிகரிப்பும் கிடைக்கும்.\n தொகுதி 60% ஆகின்றபோது தொகுதிகளின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும். அப்பொழுது நமக்கும் இரண்டொரு தொகுதிகள் கிழக்கிற்குவெளியே அதிகரிக்கலாம். அல்லது அதிகரிக்காமலும் போகலாம். அதிகரித்தால் நன்மை. அதிகரிக்காவிட்டால் நம்மைப்பொறுத்தவரை சமன்பாட்டில் மாற்றமில்லை.\nசிலர் நினைக்கின்றார்கள் 60:40 ஆகின்றபோது 40% பட்டியலில் இருந்துதானே பட்டியல் அங்கத்தவர் பெறவேண்டும். அது 50% ஆகும்போது பட்டியல் அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிக்குமே அது நமக்கு சாதகம்தானே; என்று.\nஇவ்வாறுதான் இந்தக்கட்சித் தலைவர்களும் நினைத்து இதனை 50:50 ஆக ஆக்கிவிட்டு பெருமையடித்தார்கள்.\nபட்டியல் அங்கத்தவர்கள் 50% இல் இருந்து அல்லது 40% இல் இருந்து பங்கிடப்படுகின்றார்கள்; என்பதே இத்தேர்தல் முறைக்கு முரணான ஒரு கருதுகோளாகும்.\nஒரு மாவட்டத்திற்குரிய அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் 50% தொகுதி என்பது சரி. எனவே அந்த 50% தொகுதி வேட்பாளர்களையும் எஞ்சிய 50 விகிதத்திற்குரிய வேட்பாளர்களை பட்டியலிலும் நியமனம் செய்து இரு நியமனப்பத்திரம் தாக்கல் செய்கின்றோம்; என்பதும் சரி. மாவட்டத்தில் 50% விகிதமான அங்கத்தவர் பட்டியலிலிருந்து நியமிக்கப்படுகின்றார்கள்; என்பதும் சரி.\nஎது பிழையென்றால் ஒவ்வொரு கட்சிக்குமுரிய பட்டியல் அங்கத்தவர்கள் அந்த 50:50 இல் 50% இலிருந்து அல்லது 60:40இல் அந்த 40% இலிந்து பங்கிடப்படப்படுகின்றார்கள்; என்பதுதான் பிழை. இன்னும் சுருக்கமாக சொல்வதானால் “பட்டியலிலிருந்து பங்கிடப்படுகின்றார்கள்” என்பதுதான் முழுக்க முழுக்க பிழையான கூற்றாகும். பட்டியலிலிருந்து நியமிக்கப்படுகின்றார்கள்; என்பதும் பட்டியலிலிருந்து பங்கிடப்படுகின்றார்கள்; என்பதும் வெவ்வேறாகும்.\nபங்கிடப்படுவது பெறுகின்ற வாக்குகளுக்கேற்ப மொத்த அங்கத்தவர்களை 100% ஆக எடுத்து விகிதாசாரப்படியாகும். அதில் ஒவ்வொரு கட்சிக்கும் உரித்தான ஆசனங்களில் தொகுதியில் வெற்றிபெற்றவர்கள்போக எஞ்சியோர் பட்டியலில் இருந்து (சிலவேளை தோற்றவர்கள்) நியமிக்கப்படுகின்றார்கள்.\nஎனவே, பட்டியல் 50% என்றால் என்ன 40% என்றால் என்ன ஒரு கட்சிக்கு உரித்தான ஆசனங்களில் தொகுதியில் வென்ற ஆசனங்கள்போக மிகுதி ஆசனங்கள் கிடைத்தே ஆகும். சிலவேளைகளில் overhang வரலாம். ஆனாலும் நமக்கு உரித்தான ஆசனம் கிடைக்கும். எனவே நமக்கு உரித்தான ஆசனத்தைப் பெறுவதில் இந்த 50:50 அல்லது 60:40 மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை.\nநமக்கிருக்கின்ற கேள்வி நம்மால் இந்தத் தொகுதிகளில் எத்தனை வீதமான வாக்குகளைப் பெறமுடியும்; என்பதாகும். தொகுதி கூடும்போது கூடுதலான வாக்குகளைப் பெறமுடியுமா அல்லது குறைகின்றபோது பெறமுடியுமா எனவே 60% இலிருந்து 50% விகிதமாக தொகுதிகளைக்குறைத்ததன் மூலம் நமக்கு மேலதிகமாக கிடைக்கக் கூடிய ஒன்றிரண்டு தொகுதிகளை இழந்து விட்டோம்; என்று கூறலாம்; அல்லது 50% ஆயினும்அல்லது 60% ஆயினும் இவ்வாளவுதான் முஸ்லீம்களுக்கு ஆக்கக்கூடிய தொகுதிகள் என்றால் சமன்பாட்டில் மாற்றமில்லை.\nஎனவே, நமது பிரச்சினைக்கும் இந்த 60:40 அல்லது 50:50 இற்கும் பெரிய தொடர்பேதும் இல்லை.\n50:50 பெரிய கட்சிகளுக்கு பாதிப்பா\n50:50 பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு என்று சில முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; இன்னும் நம்புகிறார்கள். விகிதாசாரமுறையில் கணிப்பிடுவதால் எவ்வாறு பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு வரமுடியும் மேற்கூறிய விளக்கத்தை சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறு பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு என்று சொல்கின்றவர்களால் மொட்டையாக ‘ பாதிப்பு’ என்று சொல்லாமல் எவ்வாறு என்று சொல்வார்களா\nபெரியகட்சிகளுக்கு 50:50 ஓ அல்லது 60:40 ஓ பாதிப்பு எதுவுமில்லை. ஒரேயொரு விடயம் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க overhang அதிகரிக்கும். இடைவெளிகுறைய overhang குறையும். அவ்வளவுதான். அதற்கு overhang ஐ சமப்படுத்துகின்ற சமன்பாட்டைச் செய்யலாம். அது வேறாகப் பார்க்கப்பட வேண்டும்.\nஆனால் 50:50 பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு என்று இவர்கள் சொல்வதும் சரி.\nபெரிய கட்சிகளுக்கு எந்தளவு பாதிப்பு என்றால் ஒருபோதும் அவை தனித்து ஆட்சியமைக்கவே முடியாது. அந்தளவு பாதிப்பு. பெரிய கட்சிகள் அவ்வாறான ஒன்றுக்கு சம்மதமளித்து விட்டார்களே என்று இவர்கள் புளகாங்கிதம் அடைந்ததும் சரி. எங்கு பிழையென்றால் ,”\nஅதாவது 2012ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அதேமுறைதான் இது என்று நம்பியதுதான் பிழை. உள்ளூராட்சித் தேர்தலின் புதிய திருத்தமும் அதேமுறை; என நம்பித்தான் 70:30 ஐ 60:40 ஆக்கினார்கள். அதுதான் இது என்று நம்பித்தான் மாகாணசபைத் தேர்தல் திருத்தத்தை அவர்கள் 60:40 ஆக கொண்டுவந்தபோது அதனை 50:50 ஆக்கி சாதித்து விட்டதாக நினைத்தார்கள். அந்த நினைவில் வந்துதான் “ அதிர்வு” நிகழ்ச்சியில் ‘ வெற்றிபெற்ற கட்சிக்கு பட்டியலில் இடம் இல்லை’ என்றார்கள்.\nஅதுவேறு தேர்தல்முறை, இதுவேறு தேர்தல்முறை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பெரிய கட்சிகள் இந்த 50:50 இற்கு உடன்பட்டபோதாவது இவர்கள் புரிந்திருக்க வேண்டும், “ அது இது இல்லை; அது இதுவானால் பெரியகட்சிகள் ஒருபோதும் உடன்பட்டிருக்க மாட்டார்கள்;” என்று.\nஅது எதுவென்றால், உதாரணமாக 50% தொகுதி, 50% பட்டியல் என்றால் தொகுதியில் வெற்றிபெற்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைக் கழித்துவிட்டு எஞ்சிய வாக்குகளைக் கூட்டி தொகுதிகளில் வெற்றிபெறாத கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப எஞ்சிய 50% மும் பங்கிடப்படும்.\nஇங்கு 60:40 எனும்போது பட்டியலில் 40% ஆசனமே பங்கிடப்படும். அது 50% விட குறைவு என்பதால் எங்களுக்குப் பாதிப்பாகும். 70:30 என்றால் பங்குடப்படும் ஆசனம் 30% ஆகும். அது எங்களுக்கு இன்னும் பாதிப்பாகும். 50;50 எனும்போது பங்கிடப்படும் ஆசனம் 50% ஆகும். அதாவது ஆசனம் அதிகரிக்கும். அது எங்களுக்கு இலாபமாகும். புதிய முறையும் இதுதான் என்று நினைத்துவிட்டார்கள். அதுதான் பிழையாகிவிட்டது.\nஇந்த முறையில் 50% விகிதமே பங்குடப்படுகின்றது; என்பது சரி. ஆனால் தற்போதைய முறையில் அது பிழை. பங்கீடு நூறு வீதம் விகிதாசாரம். தொகுதிபோக எஞ்சியது பட்டியல் ( அல்லது தோற்றவர்கள்) நியமனம்.\nஇந்த முறையில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. ஏனெனில் ஒரு கட்சி பெறக்கூடிய அதிகூடிய ஆசனம் 50% மாத்திரமே. அது எப்போதும் சாத்தியமுமில்லை. 50% இருந்தாலும் இன்னுமொன்று தேவை. இந்த முறையை பெரியகட்சிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.\nஎல்லைநிர்ணய அறிக்கையை நிறைவேற்ற மூன்றில் இரண்டு வேண்டுமென்ற நிபந்தனை ஒரு சாதனையா என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.\nPrevious articleதிருகோணமலை-மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு\nNext articleயாழ் கோட்டைப்பகுதியில் 2700 ஆண்டுக்கு முற்பட்ட ஆதி இரும்புகால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிப்பு\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=fb56a819dc25d3d47051dde09d62c71f", "date_download": "2018-08-18T00:27:48Z", "digest": "sha1:63Q3AGM5JG4VYKNZ2ZH7PABIWXHGP6XI", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamilforum.com/2018/03/08/", "date_download": "2018-08-18T01:27:17Z", "digest": "sha1:C2A73QKDXY6ICFVSM7QIOFXXMWELYMBH", "length": 6592, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –March 8, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nஇலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஇலங்கையில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கண்டி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வாட்ஸ் அப் முடக்கம், இணையதள சேவை துண்டிப்பு. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more »\nஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன\nகல்வராயன் மலையில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு, கூலி வேலைக்கு சென்ற, 2,010 பேர், மூன்று மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதில், 700 பேர் ஆந்திராவுக்கு சென்று, மாயமானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில், சேலம் மற்றும் கருமந்துறை இடைத்தரகர்கள்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”\nபுலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”\nஇலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க\n295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.biblecourses.com/(X(1)S(dhfvjj55o2l3wabweia0bci5))/Tamil/prominent_people1.aspx", "date_download": "2018-08-18T00:36:36Z", "digest": "sha1:V3ISHRCMXY3HGIKC2VWTBR33CWG7WMAJ", "length": 3810, "nlines": 55, "source_domain": "www.biblecourses.com", "title": "Biblecourses.com | Tamil - Prominent People 1", "raw_content": "\nஇஸ்ரவேலின் வரலாற்றில் பிரபலமான மனிதர்கள் - 1\nபக்தியுள்ள ஒரு தந்தை (1:1-2:21)\nதாய்க்குலத்தின் ஒரு நினைவுச்சின்னம் (1:1-2:21)\nசாத்தானின் பிள்ளைகளைக் கொண்டிருந்த தேவமனிதர் (2:12-4:22)\nபடுபாதாள முடிவுக்கான மகிழ்பொங்கும் ஆரம்பம்\nதேவபக்தியுள்ள இருதயத்திற்குள் ஒரு சிறு கண்ணோட்டம்\nபக்தியின்மையின் கேடுபாடான தன்மை (17:1-54)\nநேசம் கசப்பாக மாறும் பொழுது\nதுரோகச் செயல்களுக்கு (தக்க)வெகுமதியளிக்கப்பட்டது (21:1-22:22)\nநல்லறிவுடைய ஒரு பெண் (25:14-42)\nபலனில் அளிக்கப்பட்ட ஒரு சிறு சேவை(30:21-25)\nபோதனை மற்றும் பிரசங்கம் ஆகியவற்றில் உதவிகள\nஇராட்சதர்களுடன் போரிடுதல் பற்றிய நினைவில்வைக்க\nவேண்டிய ஏழு சத்தியங்கள் (1 சாமுவேல் 17)\nயோனத்தான்: தேவையில் உதவிய ஒரு நண்பர்\n(1 சாமுவேல் 17-23; 2 சாமுவேல் 1)\nமோசமான காலங்களில் உயிர்பிழைத்திருப்பது எப்படி\n(1 சாமுவேல் 18 - 23)\n(1 சாமுவேல் 24-26; 2 சாமுவேல் 1)\nபோதனை மற்றும் பிரசங்கம் ஆகியவற்றில் உதவிகள்\nஉரிமைதாரர் © 2005, இன்றைக்கான சத்தியம்\nஎல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/feb/14/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863169.html", "date_download": "2018-08-18T00:31:43Z", "digest": "sha1:PTNRQ2TSHTGUPKVZIHELMABVYJBKJI5X", "length": 8706, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "வீடு புகுந்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பு: இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nவீடு புகுந்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பு: இளைஞர் கைது\nதிருப்பூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் கத்தி முனையில் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nதிருப்பூர், மத்திய காவல் எல்லைக்கு உள்பட்ட ஏ.பி.டி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணி (71). இவரது மகன், மகள் இருவரும் திருமணமாகி, வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.\nசெவ்வாய்க்கிழமை காலை அருக்காணி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, அருக்காணி அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துள்ளார்.\nபிறகு, வீட்டிலிருந்த இருக்கையில் அருக்காணியை அமர வைத்து, அவரது சேலையின் ஒரு பகுதியால் கட்டிப் போட்டுள்ளார். அதற்குப் பிறகு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பணம், நகைகள் இருக்கிறதா என்று தேடியுள்ளார்.\nஅதற்குள் லாவகமாக கட்டை அவிழ்த்த அருக்காணி, வீட்டின் பின்வாசல் வழியாகத் தப்பினார். அதைக் கவனித்த அந்த நபரும் முன்வாசல் வழியாகத் தப்பியோடினார்.\nசிறிது நேரத்தில் அருக்காணி கூறிய தகவலை அடுத்து, சம்பவ இடத்தில் மக்கள் கூடினர். இதுகுறித்து மத்திய காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.\nசம்பவம் நடந்த வீட்டின் அருகில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் சாலை நோக்கி வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில், அருக்காணியின் வீட்டிற்குள் புகுந்த நபரின் படம் தெளிவாகக் கிடைத்தது.\nஅதைக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், செவ்வாய்க்கிழமை மாலை அந்த இளைஞரைப் பிடித்தனர். விசாரணையில், அவர் விருதுநகரைச் சேர்ந்த நந்தகுமார் (27) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/29795", "date_download": "2018-08-18T00:21:01Z", "digest": "sha1:CWER5VTCGJ5E3KBGRIHBUY6P5DTFRGZU", "length": 11486, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.இ.மனோகரன் காலமானார் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nபொப்பிசை சக்கரவர்த்தி ஏ.இ.மனோகரன் காலமானார்\nபொப்பிசை சக்கரவர்த்தி ஏ.இ.மனோகரன் காலமானார்\nபிரபல பொப்பிசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் தனது 73 ஆவது வயதில் சென்னையில் நேற்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.\nஏ.இ.மனோகரன் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு இலங்கையில் மட்டுமன்றி உலகமுழுவதிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.\nஇவர் பாடிய “சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிட மாலுகெனாவா...” என்ற பைலா பாடல் நம் நாட்டு சிங்கள மற்றும் தமிழ் இரசிகர்கள் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம், பேரர்த்துக்கீஸ் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.\nநீண்டகாலமாக சென்னையில் வாழ்ந்து வந்த ஏ.இ.மனோகரன், இந்தியக் கலைஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.\nயுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் மேடைகளில் பொப்பிசைப் பாடல்களை பாடி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.\nஇவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார்.\nகுறிப்பாக, மனோகரன் பாடிய பொப்பிசைப் பாடல்களில் “சின்ன மாமியே உன்ன சின்ன மகள் எங்கே” என்ற பாடல் 1970 களில் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாக பாடப்பட்டு வந்தது.\n1970, 1980 களில் இலங்கை வானொலியிலும் அவரது பாடல்கள் தினமும் ஒலிபரப்பட்டு வந்தன. மனோகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.\nதமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\n'வாடைக்காற்று' 'பாசநிலா' ' புதிய காற்று' ஆகிய பல ஈழத்து தமிழ் திரைப் படங்களிலும், 'ஜே ஜே' போன்ற தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் மனோகரன் நடித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் பாடி நடித்துள்ளார்.\nஇவரின் புகழுடல் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறையினரின் அஞ்சலிக்குப் பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏ.இ.மனோகரன் பொப் இசை சக்கரவர்த்தி பாடகர் நடிகர்\nவித்தக கவிஞர் பா.விஜய் நடித்து, தயாரித்து இயக்கிய ஆருத்ரா படத்தின் ஒடியோ வெளியீடு இன்று நடைபெற்றது.\n2018-08-17 13:54:06 பா.விஜய் ஆருத்ரா வித்தகர்\n‘குணா ’வாக மாறிய சமுத்திரகனி\nபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து.வெற்றிமாறனும், தனுசும் ‘வடசென்னை’யில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் குணாவாக சமுத்திரகனியும் தோள் கொடுத்திருக்கிறார்.\n2018-08-16 13:39:00 பொல்லாதவன் ஆடுகளம் தனுஷ்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் ஆரம்பமாகியுள்ளது. குறித்த படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர்.\n2018-08-16 11:02:59 கழுகு - 2 பிந்து மாதவி செந்நாய் வேட்டை\nபெண்களின் முன்னேற்றத்திற்காக நடிகை ஜோதிகா பத்து கட்டளைகளை தான் நடித்து வரும் காற்றின் மொழி என்ற படத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.\n2018-08-15 12:35:17 ஜோதிகா காற்றின் மொழி 10 கட்டளகள்\n24 ஆம் திகதியன்று வெளியாகிறது பா விஜயின் ஆருத்ரா\nபாடலாசிரியர் வித்தக கவிஞர் பா விஜய் நடித்து தயாரித்து இயக்கியிருக்கும் ஆருத்ரா என்ற படம் ஒகஸ்ட் 24 ஆம் திகதியன்று வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-08-14 16:36:13 வித்தக க விஞர் பா விஜய் ஆருத்ரா\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/09/tgte-enforce-disappearance-conference.html", "date_download": "2018-08-18T00:25:18Z", "digest": "sha1:AH27AKRVWQ4BFGO3CVA3HID5F3BDVAX7", "length": 13896, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானிய பாராளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாநாடு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானிய பாராளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாநாடு\nby விவசாயி செய்திகள் 13:42:00 - 0\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் பிரித்தானிய பாராளுமன்றில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மாநாடு ஒன்று நேற்று நடாத்தப்பட்டது.\nஶ்ரீலங்காவில் தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள படைகளால் நடந்தப்பட்ட இனவழிப்பு போரில் வலுக்கட்டாயமாக கடத்தி காணமல் ஆக்கப்பட்ட பல தமிழர்கள் போர் ஓய்வு பெற்று பல வருடங்களாகியும் இன்று அதற்காக நீதி கிடைக்காமல் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் தமது உறவுகளை தேடி வருகிறார்கள் .\nஈழம் கடந்து புலம்பெயர் தேசத்திலும் தொடரும் நீதி போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது இதில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உலக பேச்சாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-18T01:40:57Z", "digest": "sha1:34FP4VQOFEJZJ4KF3HQ2ACCR3YJKTU4V", "length": 9357, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "புருவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுருவம் (Eyebrow) என்பது கண்களுக்கு மேற்புறத்தில் செறிவான, மெல்லிய முடிகளையுள்ள பகுதியைக் குறிக்கும். வியர்வை, நீர், பிற மாசுகள் கண்குழிகளுக்குள் விழாதவண்ணம் காப்பதே, புருவங்களின் முக்கியப் பணியாகும். என்றாலும், முக பாவங்களைக் காட்டுவதற்கும், மனிதர்களிடையே கருத்துக்களை (அல்லது) சமிக்ஞைகளை பரிமாறிக் கொள்வதிலும் புருவங்களின் பணி இன்றியமையாததாக உள்ளது[1]. பொதுவாக பெண்கள் ஒப்பனைப் பொருட்களைக் கொண்டு ஒப்பனை செய்தோ, முடிகளைக் கூட்டுதல், குறைத்தல், பச்சைக் குத்திக் கொள்ளுதல், துளையிட்டு வளையங்கள் அணிதல் போன்ற செயல்களின் மூலமாகவோ தங்கள் புருவங்களை அழகுப்படுத்திக் கொள்கிறார்கள்.\nதலை, கழுத்து உடற்கூறியல் – கண்ணின் துணை உறுப்புகள் (TA 15.2.7, TH H3.11.08.6, GA 10.1021)\nஇமைத்தசை [Tarsus (eyelids)] · மருத்துவ இமைச்சிரைப் பிணையம் (Medial palpebral ligament) · (கண் இமையின்) உட்புற மடிப்பு (Epicanthic fold) · மீபோமியச் சுரப்பி (Meibomian gland) · விழி வெண்படலச் சுரப்பி (Ciliary gland) · கண் இமை ·\nசெய்சு சுரப்பி (Gland of Zeis) ·\nகண்ணீர்த் தேக்கம் (Lacrimal lake) · கண்ணீர்ச் சுரப்பி கண்ணீர்ச் சிறுகுழாய் (Lacrimal canaliculi) · கண்ணீர்த் துளை (Lacrimal punctum) · கண்ணீர்ச் சிம்பு (Lacrimal papilla) · நாசி-கண்ணீர் நாளம் (Nasolacrimal duct) · கண்ணீர்ப் பை · கண்ணீர் அதள் (Lacrimal caruncle) · கிராசு சுரப்பி (Krause's gland) ·\nகண்குழியைச் சுற்றிலும் உள்ளவை (Periorbital) · கட்குழி பிரிசுவர் (Orbital septum) · டெனோன் உறை (Tenon's capsule) · விழிகோளத் தாங்குநாண் (Suspensory ligament of eyeball) ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2017/08/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-27/", "date_download": "2018-08-18T00:56:18Z", "digest": "sha1:IQCWLSDV3KRAAJBJWMTKW33WDW4YYMTI", "length": 11273, "nlines": 172, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 27 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஉள்ளம் குழையுதடி கிளியே – 27\nசென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பகுதி\nஉள்ளம் குழையுதடி கிளியே – 27\nபடித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால் மகிழ்வேன்.\nஉள்ளம் குழையுதடி கிளியே, தொடர்கள்\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 26\nஉள்ளம் குழையுதடி கிளியே – 28\nகோயம்புத்தூர் வந்து கொண்டிருக்கும் சரத்,\nவிஷயம் தெரிந்து என்ன செய்யப்போறான்,\nஐயோ, என்னாப்பா தமிழ், இப்படி ஹிமாவையும்,\nகுழந்தை துருவ்வையும் வீட்டை விட்டு வெளியேற\nஎனக்கு அழுகை, அழுகையாய் வருதுப்பா,\nஹிமா ரொம்பவே பாவம் பா\nஇந்த படுபாவி சின்னசாமி மிரட்டினால், பயந்து கொண்டு,\nசரத் வருவதற்குள் இவள் ஏன் வீட்டை விட்டுப் போகணும்\nசரத் தானே இவளை இங்கு அழைத்து வந்தான்\nஇனி யார் ஹிமாவுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க\nசாரதா அம்மா ஏதாவது ஹெல்ப் பண்ணுவாங்களா,\nஇந்த ராஜி @ நக்ஷத்ரா நல்லாவே இருக்க மாட்டாள்\nகெட்ட எண்ணம் பிடித்த படுபாவி\nசீக்கிரமா வந்து அடுத்த UD கொடுங்க, தமிழ் மதுரா டியர்\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/18004935/Small-theaters-should-be-set-up-RK-Selvamani.vpf", "date_download": "2018-08-18T00:51:43Z", "digest": "sha1:6MSFMDFX6TYKFTTKZNZW4DUFGCUBTZUD", "length": 10758, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Small theaters should be set up - RK Selvamani || கிராமப்புறங்களில் “150 பேர் பார்க்கும் சிறிய தியேட்டர்கள் அமைக்க வேண்டும்” ஆர்.கே.செல்வமணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிராமப்புறங்களில் “150 பேர் பார்க்கும் சிறிய தியேட்டர்கள் அமைக்க வேண்டும்” ஆர்.கே.செல்வமணி + \"||\" + Small theaters should be set up - RK Selvamani\nகிராமப்புறங்களில் “150 பேர் பார்க்கும் சிறிய தியேட்டர்கள் அமைக்க வேண்டும்” ஆர்.கே.செல்வமணி\nகிராமப்புறங்களில் 150 பேர் பார்க்க கூடிய சிறிய திரையரங்குகளை அமைக்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறினார்.\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\n“சினிமா தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் பணி செய்கின்றனர். திரை துறையினர் வேலை நிறுத்தங்களால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் அரசு தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட சினிமா துறை பிரமுகர்களை இடம்பெற செய்ய வேண்டும்.\nஅதிக தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள். படங்கள் லாபம் ஈட்டினாலும் அவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பது இல்லை. இவற்றை சீர்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 2,500 தியேட்டர்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை குறைந்து உள்ளது. ரூ.1,000 இருந்தால்தான் சினிமா பார்க்க முடியும் என்ற நிலைமை உள்ளது.\nமேல்தட்டு மக்களால் மட்டுமே தியேட்டர்களுக்கு சென்று படங்களை பார்க்க முடிகிறது. அதிக கட்டணத்தால் ஏழை மக்கள் படம் பார்ப்பது இல்லை. பாகுபலி போன்று மேல் தட்டு மக்களுக்கான படங்களையே தயாரிக்கவும் செய்கிறார்கள். இதனால் நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களை எடுக்க யாரும் முன்வருவது இல்லை. இந்த குறைகளை போக்க வேண்டும்.\n5 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமப்புறங்களில் 150 பேர் பார்க்க கூடிய சிறிய திரையரங்குகளை அமைக்க அரசு முன்வர வேண்டும். அங்கு ரூ.25, ரூ.35, ரூ.50 என்று கட்டணம் நிர்ணயிக்கலாம். இதன் மூலம் கிராம மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும்.”\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஜெயலலிதா நடிக்க விரும்பிய நடிகை யார் \n2. ரஜினிகாந்த் ஜோடியாக திரிஷா\n3. இயக்குநர் வினோத் இயக்கத்தில் அமிதாபச்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் அஜித்\n4. விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படமாகிறது\n5. தமிழில் தயாராகும் ‘பிங்க்’ இந்தி படம் அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித்குமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-18T01:23:41Z", "digest": "sha1:6MFF3UPKX2VQR22PP3S2TXBLMPFSWNFS", "length": 7668, "nlines": 221, "source_domain": "discoverybookpalace.com", "title": "வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்,நொபொரு கராஷிமா,வரலாறு,பாரதி புத்தகாலயம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nவரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்\nவரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்\nவரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்\nஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள், அதாவது 9 ஆம் நூற்றாண்டு வரை, தென்னகச் சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையான வளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின் நூல்வடிவம் இது. இந்த முதல் தொகுதி சோழர் காலத்தையும் தொடர்ந்து வரவிருக்கும் 2 ஆம் தொகுதி விஜய நகர காலத்தையும் மையமாக கொண்டுள்ளன.\nசமூகம் வலைத்தளம் பெண் Rs.180.00\nபாலஸ்தீன இஸ்ரேல் போர் ஒரு வரலாற்றுப் பார்வை Rs.230.00\nசூலகம்:பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம் Rs.75.00\nபெண்கள் சமூகம் மதிப்பீடுகள் Rs.120.00\nவரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் Rs.250.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://justbefilmy.com/srireddy-leaks/", "date_download": "2018-08-18T00:44:40Z", "digest": "sha1:NVI24JIE4R62YAPFR3NJYPM6SL5N2W4T", "length": 5657, "nlines": 34, "source_domain": "justbefilmy.com", "title": "ஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் - ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்", "raw_content": "\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் – ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் – ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க\nதன்னை ஆண்கள் படுக்கைக்கு பயன்படுத்திய போது ஆணுறை பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீதேவி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்\nதெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.\nஇயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். அந்த வரிசையில் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் சிக்கியுள்ளார்.\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் – ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\nஇந்நிலையில், உங்களுக்கு இன்னும் எய்ட்ஸ் நோய் தாக்க வில்லையா இத்தனை பேரிடம் படுக்கையை பகிர்ந்து விட்டு இப்போது குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். நடிகையாக வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்வதை ஒரு பகுதி நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா இத்தனை பேரிடம் படுக்கையை பகிர்ந்து விட்டு இப்போது குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். நடிகையாக வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்வதை ஒரு பகுதி நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா என அவரின் முகநூல் பக்கத்தில் ஒருவர் தரக்குறைவாக கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீரெட்டி “உங்களின் அக்கறைக்கு நன்றி. ஆணுறை பற்றி உங்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். உடலுறவில் எனக்கு நல்ல அறிவு இருக்கிறது. என்னை எப்படி பாதுகாப்பது என எனக்கு தெரியும். 4 மாதங்களுக்கு ஒருமுறை என் உடலை மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறேன். என்னுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் யோகா மூலம் உறுதியை பெறுகிறேன். இது போல கருத்து தெரிவித்து பாவத்தை பெறாதீர்கள். உங்களின் விமர்சனத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மரணம் அடைய எய்ஸ்ட் தேவையில்லை, காய்ச்சலால் கூட நீங்கள் மரணமடையலாம் என அவர் பதிலளித்துள்ளார்.\nபிக்பாஸ்-2 நடு இரவில் எல்லை மீறிய மஹத்-யாசிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithrapapa.blogspot.com/2012/07/i-am-back.html", "date_download": "2018-08-18T00:51:49Z", "digest": "sha1:F6PQMUJJV24M7QWVDIVVOPNBPXKEEGVM", "length": 5166, "nlines": 110, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : I Am Back", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nமிக நீண்ட இடைவேளைக்கு பிறகு பதிவின் பக்கம் வருகிறேன் , எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் , நேரம் இன்மை , சோம்பல் காரணமாக நாளைக்கு நாளைக்குன்னு தள்ளி போட்டுட்டே போயாச்சு ...\nகிட்டத்தட்ட 4 மாசம் ,\nமித்ராக்கு 3 வயசு ஆச்சு\n.பரதநாட்டியம் வகுப்பு சேர்த்தாச்சு .\nகர்நாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சாச்சு.\nஎன்னை விட ரொம்ப நல்லா கன்னடம் பேசுறா.\nரெண்டு பேர் பேசிகிட்டு இருக்கும் பொது இடையில பேச கூடாதுன்னு கத்துகிட்டாச்சு .\nகட்டிட்டு இருக்கிற வீடு வேலை 90 % முடிஞ்சுது\nஒரு வழியா வீடு கிரஹப்ரவேசத்துக்கு நாள் பாத்தாச்சு ( அக்டோபர் 28 )\nநான் தையல் வகுப்பு சேர்ந்தாச்சு ..\nMA சைகாலோஜி படிக்க ஆசைப்பட்டு , IGNOU வில் விண்ணப்பமும் போட்டாச்சு\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/events/03/108287?ref=category-feed", "date_download": "2018-08-18T00:50:50Z", "digest": "sha1:ZU5SBX6UDMZKEQKVCXG3VNNVALAJFU52", "length": 8788, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது.\nஇந்த விழா எதிர்வரும் 09, 10, 11 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.\nமேற்படி பெருவிழாவிற்கான அனுமதி இலவசம், விழாவில் 60 வீத இலங்கையர்களும், 40 வீதமான சுவிஸ் பிரஜைகளும் என 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் துணைத் தூதுவர் விதர்சன முனசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nசுவிஸ் வாழ் இலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபெரு விழாவில் இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இலங்கையின் வங்கிகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ஆயுர்வேத நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள், அழகு சாதன, அழகு கலை நிறுவனங்கள், தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட சுவிட்சர்லாந்தின் பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளன.\nஇலங்கையின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சிறப்பாக வெளிக்கொணரும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி முடிக்க அனைவரது ஆதரவை வேண்டி நிற்பதாக விதர்சன முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த படைப்புக்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குகிறது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.\nநிகழ்வுக்கான அரங்குகள் பயன்பாட்டுக்கு உள்ளன. தேவைப்படும் வர்த்தகர்கள் இந்த 004177 9289422 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ungalrasigan.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-08-18T00:40:03Z", "digest": "sha1:27QWVLXNHSE674U7W7BHOJCHPYB2754V", "length": 36400, "nlines": 249, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: ‘நானும் ஒரு பால குமாரன்தான்!’", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\n‘நானும் ஒரு பால குமாரன்தான்\nஎழுத்தாளர் பாலகுமாரனை சமீபத்தில் அவரது வீட்டில் சந்தித்தேன். சக்தி விகடனில் அவரை எழுத வைக்க எண்ணம்.\nநேரில் சந்திப்பதற்கு முன்பாக அவரோடு தொலைபேசியில் உரையாடி, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏற்கெனவே ‘சாவி’யில் பணியாற்றிய காலத்தில் அவரது அறிமுகம் எனக்கு உண்டு என்பதையும் தெரிவித்து, சக்தி விகடனில் தொடர் எழுதுவது பற்றிக் கேட்டேன். “நேரில் வாருங்கள், பேசுவோம்” என்றார்.\n இப்போ தெரியுது. போனில் சொல்லும்போது எனக்குச் சட்டுனு உங்களை ஞாபகத்துக்கு வரலை” என்றார்.\nபாலகுமாரன் என்னை நினைவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரோடு எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு என்று சொல்ல முடியாது. தவிர, அவரோடு தொடர்பு விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. நான் விகடனில் சேர்ந்த பிறகு, ‘அப்பம் வடை தயிர்சாதம்’ என்றொரு தொடர்கதை எழுதினார். அப்போது அவருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மகள் திருமணம் விஜயா மஹாலில் (பெயர் சரியா என்று தெரியவில்லை. பழைய நாகேஷ் தியேட்டர் என்றுதான் என் மனதில் பதிந்திருக்கிறது.) நடந்தபோது, பாலகுமாரனும் வந்திருந்தார். அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்றாலும், அது அவர் நினைவில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.\n‘சாவி’ காலத்தில், பாலகுமாரன் பலமுறை சாவி இல்லத்துக்கு வந்திருக்கிறார். நட்புரிமையோடு எங்களுடன் பேசுவார்; பழகுவார். அப்போது அவர் அடிக்கடி சஃபாரி டிரெஸ் அணிந்துதான் நான் பார்த்திருக்கிறேன். நாற்பது வயதுக்குரிய இளமையோடும் சுறுசுறுப்போடும் இருப்பார். மாலன், சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் இவர்களெல்லாம் பணியாற்றிய காலம் சாவியின் பொற்காலம்.\nசாவி பத்திரிகையில் பாலகுமாரன் எழுதிய ‘மெர்க்குரிப் பூக்கள்’, இன்றளவும் பேசப்படும் அற்புதமான ஒரு தொடர்கதை. எழுத்தாளர் சுஜாதாவிடம் வாசகர்களுக்கு உள்ள அபரிமிதமான ஈர்ப்பைப் போன்று ஒரு வசீகர ஈர்ப்பை பாலகுமாரனுக்கும் கொண்டு சேர்த்த கதை அது. அதைப் படித்துவிட்டு லட்சக்கணக்கான வாசகர்கள் பாலகுமாரனின் அபிமானிகள் ஆனார்கள்.\nகடலூரில் நடந்த என் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள நான் சென்றிருந்தபோது, நானும் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருப்பவன் என்று அறிந்து, என்னிடம் வந்து அரட்டை அடித்த டீன் ஏஜ் பெண்கள் பலரும் கேட்ட ஒரு கேள்வி... இன்றைக்கும் நன்றாக ஞாபகம் இருக்கிறது - ‘நீங்கள் பாலகுமாரனைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா’ “பேசியிருக்கிறேன்; அவரோடு கைகுலுக்கியும் இருக்கிறேன்” என்று ஒருவேளை அப்போது நான் சொல்லியிருந்தால், என் வலது கையை எடுத்து அவர்கள் முத்தமிட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். அவர்களின் கண்களில் அப்படி ஒரு ஆர்வ மின்னல் தெறித்ததை நான் பார்த்தேன்.\nஆனால், நான் அப்போது சென்னைப் பக்கமே வந்திருக்கவில்லை. ஆகவே, “ஏன் கேட்கிறீர்கள்” என்று கேட்டு வைத்தேன். “நாங்கள் அத்தனை பேருமே பாலகுமாரன் ரசிகைகள். ஹைய்ய்யோ” என்று கேட்டு வைத்தேன். “நாங்கள் அத்தனை பேருமே பாலகுமாரன் ரசிகைகள். ஹைய்ய்யோ என்னமா எழுதறாரு” என்று சிலாகித்தார்கள். “நானும் ஒரு பால குமாரன்தான்” என்றேன். அப்போது என் வயது 22, 23-தான் இருக்கும். என் நகைச்சுவை() அவர்கள் காதில் ஏறவேயில்லை. பாலகுமாரன் எழுத்து பற்றி ரொம்ப நேரம் மாய்ந்து மாய்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.\nபின்னர் பல ஆண்டுகள் கழித்து ‘சாவி’ பத்திரிகையில் பணியில் சேர்ந்த பிறகுதான் எனக்கு பாலகுமாரனின் அறிமுகம் கிடைத்தது. சாவி இதழ் பொறுப்பு முழுக்க என் கைக்கு வந்த பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாலகுமாரனை நான் ஒரு தொடர்கதை எழுதும்படி கேட்டுக்கொண்டேன். ‘பந்தயப் புறா’ என்னும் தலைப்பில் எழுதினார். வாராவாரம் டாணென்று திங்கள் கிழமையன்று அந்த வாரத்துக்கான அத்தியாயம் வந்துவிடும்.\nஅந்நாளைய இளமை பாலகுமாரனுக்குப் பிறகு அவரை நான் ஆனந்த விகடனில் பார்த்தது முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தில். கவிஞர் வாலி போன்று நீண்ட வெண் தாடியும், நீள் தலைமுடியுமாக, ஒரு சாமியார் தோற்றத்தில் பாலகுமாரனைக் கண்டபோது, காதல் ரசம் சொட்டச் சொட்ட, கணவன் மனைவியின் அந்தரங்க அன்பைப் பிழியப் பிழிய எழுதிய அந்த மெஸ்மரிஸ எழுத்தாளரா இவர் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். ‘அப்பம் வடை தயிர்சாதம்’ எழுதும் பாலகுமாரனாகப் பக்குவப்பட்டிருந்தார்.\nசரி, விஷயத்துக்கு வருகிறேன். பாலகுமாரனின் அழைப்பின்பேரில் சென்று, அவர் வீட்டினுள் நுழைந்தபோது, தவறிப்போய் ஏதாவது கோயிலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று ஒரு கணம் திகைப்பு உண்டாயிற்று. ஹாலே ஒரு மினி கோயிலாக மாறியிருந்தது. சுவரில் பிரமாண்ட ராம்சுரத்குமார் படம்; பின்னணியில் திருவண்ணாமலை; பக்க அலமாரிகளில் சுவாமி படங்கள், விக்கிரகங்கள்; மேலே மாவிலை போன்று வண்ணமயமான தோரணம்; தேருக்கு நான்கு புறங்களிலும் தொங்கவிடுவது போன்ற வண்ண வண்ணத் தொம்பைகள்; சற்று முன்னால் ஒரு பீடத்தில், பித்தளையால் ஆன அம்பாள் விக்கிரகம் ஒன்று; எதிரே ஓர் அலங்காரத் தொட்டியில் தண்ணீர்; அதில் மிதக்கும் புஷ்பங்கள்; கமகமக்கும் சாம்பிராணி வாசனை, விபூதியும் குங்குமமும் கலந்த வாசனை என அந்தக் கூடமே தெய்வீகம் ததும்பி வழிந்தது.\nஆளை விழுங்கும் சோபாக்கள் ஒன்றில் அமர்ந்து, புதைந்தேன். எதிரே பாலகுமாரன். ஒரு யோகி போன்று கண்களை மூடி, ஒவ்வொரு வார்த்தைக்கும் போதிய இடைவெளி கொடுத்து, நிறுத்தி நிதானமாக, சில சமயம் கொஞ்சம் கூடுதலாகவே கால இடைவெளி தந்து பேசிய பாணி, யாரோ ஒரு முனிவரிடம் பேசிக்கொண்டு இருப்பதான உணர்வையே எனக்குத் தந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் பழகிய அந்த பாலகுமாரன் யாரோ\nசக்தி விகடனில், ரமண மகரிஷியின் சரித்திரத்தை ஆதியோடந்தமாக எழுதுவதாகச் சொன்னார் பாலகுமாரன். ரமணர் பற்றி நூற்றுக்கணக்கில் புத்தகங்களைக் கரைத்துக் குடித்து, ஒரு பெரிய ஆராய்ச்சியே சமீப காலங்களில் செய்து வந்திருக்கிறார் அவர். சக்தி விகடனுக்காக நான் சென்று கேட்டதும், மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.\nநான் சென்றிருந்த நேரத்தில், அங்கே ஒரு திரையுலகப் பிரபலமும் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். வந்தவர் சோபாவில் அமராமல், நேரே சென்று அந்த அம்பாள் சிலையின் முன் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரின் மனைவி பாலகுமாரனின் மனைவியோடு பேசிக்கொண்டு இருக்க, அவரின் பதின் வயதுகளில் இருந்த பையனும் பெண்ணும் சோபாவில் அமர்ந்தார்கள்.\nநான் பாலகுமாரனிடம் விடைபெற்றுக் கிளம்பவிருந்த சமயத்தில் அந்தத் திரையுலகப் பிரபலம் தியானம் கலைந்து எழுந்தார். எழுந்தவர் நேரே பாலகுமாரனிடம் வந்தார். பாலகுமாரன் சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் கால்களில் அந்தத் திரையுலகப் புள்ளி சாஷ்டாங்மாக விழுந்து நமஸ்கரித்தார். உடனே எழுந்திருக்கவில்லை. அப்படியே கிடந்தார். “ம்... போறும் போறும்” என்று பாலகுமாரன் பலமுறை சொன்ன பிறகுதான் மெதுவாக எழுந்தார்.\nஅவரிடம் பாலகுமாரன் என்னை அறிமுகம் செய்வித்து, “சக்திவிகடனுக்காகத் தொடர் கட்டுரை கேட்டு வந்திருக்கார்” என்றதும், அந்தத் திரையுலகப் பிரபலம் எனக்கு வணக்கம் சொன்னார். பதிலுக்குக் கைகூப்பி அவரை வணங்கி, விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.\nஅந்தத் திரையுலகப் பிரபலம்... சொன்னால் நம்பமாட்டீர்கள் - அவர், ராஜ்கிரண்\nLabels: அனுபவம் , வி.ஐ.பி\nபாலகுமாரன் பற்றிய தகவல்களும், கடைசியாய் ராஜ்கிரண் விஷயமும் நெகிழ்ச்சியாய் இருந்தது. நல்லதோர் பகிர்வு சார்...\nசக்தி விகடனில் பாலகுமார(ரி)ன் கட்டுரையை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nநல்ல பகிர்வு சார். நன்றி. அவர் எழுதப்போகும் தொடர் எப்போது தொடங்குகிறது சார்\n// “நானும் ஒரு பால குமாரன்தான்” என்றேன். அப்போது என் வயது 22, 23-தான் இருக்கும். என் நகைச்சுவை() அவர்கள் காதில் ஏறவேயில்லை. //\nபாலகுமாரன் ஐயா அவர்களின் 'உடையார்' நாவலை, பல வருடங்களுக்கு முன்னர், சில பாகங்கள் படித்தது. கடைசி சில பாகங்கள் வெளிவராத சமயம் அது. பின்னர் வேலை, வெளிமாநிலம் என்று வந்தவுடன், அந்த நாவலின் தொடர்ச்சி விட்டுப் போய்விட்டது. இந்தமுறை சென்னை வரும்போது, முழுமையும் படித்துவிட வேண்டும் என்ற அதீத ஆர்வத்தை விதைத்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி\nபாலகுமாரின் இந்த பழுத்த பழம் தோற்றம் குறித்து மிகவும் வியந்திருக்கிறேன்.\nஎப்போது அவரது தொடர் சக்தி விகடனில் வெளி வரப் போகிறது \nஅந்த காலத்திலிருந்தே பாலகுமாரனின் தீவிர ரசிகன் நான். ஒவ்வொரு மாதமும் இலக்கிய சிந்தனை கூட்ட முடிவில் அரங்குக்கு வெளியே கும்பல் கும்பலாக கூடி நின்று இலக்கிய அலசல்கள் நடைபெறும். அந்த சமயங்களில் பாலகுமாரன்,சுப்ரமன்யராஜூ,மாலன்,வஸந்த் (இன்றைய சினிமா டைரக்டர்) பாமா கோபாலன், வேதா கோபாலன், நிவேதா,சுகந்தி,போன்றவர்களுடன் அவர் பேசிக்கொண்டிருப்பதை பக்கத்தில் நின்று ஆர்வமாக கேட்டிருக்கிறேன் பல முறை. அவருடைய பல புத்தகங்களை படித்து \"ஹா\" வென்று (அவருடைய பாணியில்) வியந்திருக்கிறேன். ஒரு நல்ல பக்குவப்பட்ட எழுத்தாளரைப் பற்றிய தங்களின் கட்டுரையை ஒரே மூச்சில் படித்து முடித்த கையோடு இதோ பின்னூட்டமும் போட்டுவிட்டேன் . மிக சுவாரசியமான பதிவு.\nகாலம் தான் எப்படி மாற்றுகிறது எல்லோரையும்\nசக்தி விகடன் வாங்கி படிக்கணும் போல... இறையன்பு, பாலகுமாரன், அடுத்தது யாரோ...\nநானும் திரு.பாலகுமாரன் அவர்களின் தீவிர இரசிகன் தான். ஆனால் நான் எழுத்துக்களை மட்டும்தான் நேசிப்பது வழக்கம். எழுதுவரை அல்ல.\nநெகிழ்ச்சியான கட்டுரை சார். பகிர்வுக்கு நன்றி.\nபாலகுமாரனின் ‘பச்சை வயல் மனது’, ‘ஆசை எனும் வேதம்’ ஆகிய இரண்டு நாவல்களை மட்டுமே நான் படித்திருக்கிறேன். இரண்டுமே - நீங்கள் சொல்லியிருப்பதுபோல் - மெஸ்மரிஸ எழுத்துக்களால் ஆனவை.\n//பாலகுமாரன் சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் கால்களில் அந்தத் திரையுலகப் புள்ளி சாஷ்டாங்மாக விழுந்து நமஸ்கரித்தார். உடனே எழுந்திருக்கவில்லை. அப்படியே கிடந்தார். “ம்... போறும் போறும்” என்று பாலகுமாரன் பலமுறை சொன்ன பிறகுதான் மெதுவாக எழுந்தார்.//\nஒரு ஆச்சர்யம். உங்கள் இந்த பதிவை பார்க்கும் நேரம் பாலகுமாரனின் புத்தகங்களான ,''திருவடி '' எழில்.. இரண்டையும் மாறி, மாறி படித்து கொண்டிருக்கிருக்கிறேன் .. எங்கும் நிறைந்த ''சக்தியை'' அவர் சொல்லி கேட்கவேண்டும் எனும் பெரும்பாலானவர்களின் ஆவலை ''சக்தி விகடன் '' பூர்த்தி செய்யப்போகிறது என்பது மகிழ்ச்சி செய்தி ... எங்களுக்கு தகுந்தாற்ப்போல் இறையன்பு .... பாலகுமாரன்\nஅழகான கட்டுரை. இப்போதும் பாலகுமாரன் கை கொடுத்தாரென்றால் கையை முத்தமிடும் பெண்கள் உண்டு. ;)\nபாலகுமாரனினின் “திருமணமான என் தோழிக்கு”எல்லோரும் படிக்க வேண்டிய இன்னோரு புத்தகம் . மிக அருமையான புத்தகம் அது.\nகெட்டாலும் மேன்மக்கள் என்ற அவரது கதையைக் குமுதத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.\nபாராட்டுக்களுக்கு நன்றி இராமசாமி கண்ணன் பாலகுமாரன் எழுதும் தொடர் அடுத்து வெளிவர இருக்கும் சக்தி விகடன் ஏழாம் ஆண்டுச் சிறப்பிதழில் தொடங்குகிறது.\n என்ன, திடீரென்று ஆங்கிலத்துக்கு மாறிவிட்டீர்கள்\n பாலகுமாரனின் உடையார் ஒரு மெகா ப்ராஜெக்ட் ஆயிற்றே\n வருகிற ஏழாம் ஆண்டுச் சிறப்பிதழில் தொடங்குகிறது.\n இறையன்பு, பாலகுமாரனைத் தொடர்ந்து பாக்கியம் ராமசாமியும் எழுதுகிறார்.\n நீங்கள் படித்துள்ள பாலகுமாரனின் நாவல்கள் இரண்டுமே அருமையானவை. ஆனந்தவிகடனில் வெளியான அவரது தாயுமானவன் மற்றும் அப்பம் வடை தயிர்சாதம் ஆகியவற்றை நீங்கள் படித்ததில்லையா\n மனப்பூர்வமான தங்கள் பாராட்டுக்கு என் இதயங்கனிந்த நன்றி\n ஆமாம். அதுவும் மிகவும் அருமையான புத்தகம்தான் அது சரி, பாலகுமாரன் எழுத்து எப்போது சோடை போனது அது சரி, பாலகுமாரன் எழுத்து எப்போது சோடை போனது\n தாங்கள் குறிப்பிடும் தலைப்பு பரிச்சயமானதாக இருக்கிறது. ஆனால், அந்தக் கதையை நான் படித்திருக்கிறேனே இல்லையா என்று ஞாபகம் வரவில்லை.\n இதெல்லாம் ரொம்ப ஓவர். அவசரத்தில் பின்னூட்டங்கள் அனைத்தையும் பதிவிட ஓ.கே. கொடுத்துவிட்டேன். தற்போது படித்து திடுக்கிட்டு டெலிட் செய்துவிட்டேன். ஸாரி\nராஜ்கிரண் பிறப்பால் இஸ்லாமியர் என அறிகிறேன்\n ஆமாம், அவர் இஸ்லாமியர்தான். அதனால்தான் அந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது\n லதானந்த்தின் ஒரு கமெண்ட்டை நீக்கியதற்குக் காரணம், திரு.பாலகுமாரனின் எழுத்துத் திறனுக்குச் சமமாக என்னையும் எழுதியிருந்தார். தவிர, சில விஷயங்களில் மேலானவன் என்றும் குறிப்பிட்டிருந்தார். என் மீதுள்ள அன்பில் அப்படி எழுதியுள்ளாரே தவிர, அதெல்லாம் ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும். எனவேதான் நீக்கினேன். இனி, பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துதான் பப்ளிஷ் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன்.\nநான் இவர் வாழும் சமகாலத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பதை எண்ணி பூரிக்கும் சிலரில் பாலகுமாரன் அவர்களும் ஒருவர்.\nநல்ல பகிர்வு, இதைப் படித்த நானும் உங்களுடன் வந்த அந்த சோஃபாவில் அமர்ந்துக்கொண்டதுபோல் ஒரு உணர்வு.\nசக்தி விகடனில் தொடங்கவிருக்கும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.\nபாலகுமாரன், பால குமாரன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.\n இந்த முறையும் பாலகுமாரனின் 'உடையார்' நாவலை முழுமையாக படித்து முடிக்க இயலவில்லை\nசென்ற முறை மூன்று பாகம் வாசித்தது.\nஇந்த முறை மீண்டும் வாசிக்க ஆரம்பித்து முதல் இரண்டு பாகம்தான் வாசிக்க முடிந்தது ஒரு வாரத்திற்குள்ளாகவே இரண்டு பாகம் வாசித்து முடித்தாலும், மேலும் தொடர இயலாமல் போய் விட்டது சார்\nகண்டிப்பாக, ஒரு நாள் இல்லை ஒரு நாள் அதை வாசித்தேத் தீரவேண்டும் என்ற ஆவல் மட்டும் இன்னும் குறையவில்லை. பார்க்கலாம் \nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\n‘நானும் ஒரு பால குமாரன்தான்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18806&cat=3", "date_download": "2018-08-18T01:32:14Z", "digest": "sha1:4BUVXDJ62HFESM3ECDZXWMIACEE2WERV", "length": 7888, "nlines": 114, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிக பயணமிது...ஆனந்த பயணமிது! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nநாடி, நரம்பு அடங்கும் முன்\nமங்கலம் தரும் மலையப்ப சாமி\n‘நாமாலு சுவாமிக்கு தோமால சேவா’ என\nசுந்தர தெலுங்கில் பக்தர் கோஷம் கேட்கிறது\nமனம் பூக்கிறது, உள்ளத்தில் ஒளி நிறைகிறது\nஇறைவன், பக்தன் அன்புறவுப் பயணமிது\nகுலம் வாழ வழிவழியாய் தொடரும் பயணமிது\nஆராய்ச்சி நோக்கி விண்வெளிப் பயணம்\nஆத்மஞானம் திறக்கும் ஆன்மிக பயணம்\nநள்ளாறு நற்துணையாகும் நம்பிக்கை பயணம்\nஉள்ளாறு பாய்ந்து சரணடையும் பயணம்\nஆன்மிக அனல் சுட்ட மனதில்\nவேர்க்கடலை தோலாய் பற்றுகள் பிரியும்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅம்பிகை அருளால் அகிலம் வசப்படும்\nஎல்லையம்மன் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா\nகூகூர் மூங்கிலடியான் கோயில் திருவிழா\nநாகம்மன் கோயில் செடல் விழா\nஅம்பை சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : திரளானோர் பங்கேற்பு\nஅம்பை கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-08-18T01:41:09Z", "digest": "sha1:G3WBAUXF4GA2BAYWZF6STB4YC7WJPKH6", "length": 7178, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "வழங்கிப்பண்ணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவழங்கிப்பண்ணை (Server Farm) என்பது, பெரும் நிறுவனங்களினுடைய வழங்கித் தேவைகள் தனியொரு வழங்கி கணினியின் இயலுகைகளை தாண்டிப்போகும் போது, அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக உருவாக்கப்படும் வழங்கிக் கணினிகளின் தொகுதி ஆகும்.\nபொதுவாக வழங்கிப்பண்ணைகளில் ஒரே நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முதன்மை வழங்கியும் அதற்குக் காப்பாக காப்பு வழங்கியும் காணப்படும். முதன்மை வழங்கி செயலிழக்கும் சந்தர்ப்பத்தில் காப்பு வழங்கி இடையீடின்றி பணியை செய்வதோடு, தடையற்ற சேவையை உறுதிப்படுத்தும்.\nதற்போது பெரு நிறுவனங்களில் Mainframe கணினிகளின் பயன்பாட்டுக்கு மாற்றாக, அல்லது அதனோடு ஒத்தியங்கும் வண்ணம் வழங்கிப்பண்ணைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழங்கிப்பண்ணைகள் Mainframe கணினிகளுக்கு நிகரான மாற்றாக முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.\nகூகிள் போன்ற இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்கிப்பண்ணைகளைப் பயன்படுத்துகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2017, 02:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://worldtamiltube.com/category.php?cat=puthiya-thalaimurai&page=2&order=DESC", "date_download": "2018-08-18T01:29:45Z", "digest": "sha1:BJVOESQWIDO3QP6T6ZDDSKVUCPCY5IWR", "length": 7005, "nlines": 224, "source_domain": "worldtamiltube.com", "title": " Puthiya Thalaimurai Videos - Page 2", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nஇந்தியா பயனர் இதை பின்பற்றவும். https://www.worldtamiltube.com\nதலைவரானார் ராகுல்: தொண்டர்கள் கொண்டாட்டம் | CongressPresidentRahulGandhi\nநியாயவிலைக் கடைகளில் மண்ணென்ணை அளவு குறைப்பு: முத்தரசன் கண்டனம் | Ration\nநேரு குடும்பத் தலைவர்கள் | Nehru's family leaders\nஆர்கே நகர் தேர்தல்: துணை ராணுவப் படையினர் வருகை | RK Nagar election\nநூற்றாண்டு பழமையான கட்டடம்: இடிக்க நடவடிக்கை | Trichy\nதொண்டர்கள் மிரட்டப்படுகிறார்கள்: டிடிவி குற்றச்சாட்டு | RK nagar election\nஏமாற்றப்பட்ட பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை | Thanjavur\nமருத்துவ மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வைகோ வலியுறுத்தல்\nபாஜக-விசிக மோதல் | BJP | VCK\nதலைவரானார் ராகுல் காந்தி: புதுச்சேரி காங்கிரசார் கொண்டாட்டம்\nநம்பர் சூதாட்டம்: காவல்துறை அலட்சியம் | gambling\nகாலத்தால் அழியாத பாரதியின் படைப்புகள்\nவிவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு | Ockhi cyclone | Farmers\nமெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு | Chennai metro\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://www.kalvinews.com/2018/05/income-tax.html", "date_download": "2018-08-18T00:59:16Z", "digest": "sha1:FN7GKZI7WHHFJO2H747EKRJFDS32JTAZ", "length": 24351, "nlines": 249, "source_domain": "www.kalvinews.com", "title": "INCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க - Kalvinews - கல்விநியூஸ்", "raw_content": "\nINCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க\nதாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஅரசு உதவிபெறும் தொடக்க பள்ளி(AEEO)\nஉயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு.(DEO)\n1. தங்கள் (அரசு உதவிபெறும்) உயர்நிலைப்பள்ளி DDO'S தங்களுக்கு ORIGINAL FORM 16 கொடுத்தால் மட்டுமே ITR செய்ய வேண்டும்.\n2. AEEO OR DEO தவரும் நிலையி தாங்கள் ITR பதிவு செய்ய வேண்டாம் அப்படி செய்யும்போது உடனடியாக INCOME TAX DEPARTMENT NOTICE பெறுவீர் மற்றும் மனவுலைச்சல் .\n3. AEEO/DEO கொடுக்க தவரும் நிலைக்கு நாள் ஒன்றுக்கு ரூ 200 விதம் ரூ.10000 வரை அபராதம். செலுத்த வேண்டும். மற்றும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலம்.\n4. AEO/DEO TDS பதிவு செய்த பின் form 16 தரமுடியாத நிலையில் தாங்கள் 26AS பார்த்து தாங்கள் கட்டிய income tax Amount வரவு வைக்கப்பட்டு இருந்தால் தாங்கள் கண்டிப்பாக ITR பதிவு செய்ய வேண்டும்.\n5. தாங்கள் பணம் தங்கள் PAN எண்ணில் வரவு வைக்கப்பட்டு தாங்கள் ITR பதிவு செய்யாத போது ரூபாய் 1000 (below 500000) ரூபாய் 5000(above 500000) தன்டம் விதிக்கபடும்.\nFlash news : தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை தமிழக அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என...\n2017-18 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH ( * Dat...\n2017-2018 ஆண்டுக்கான CPS கணக்குத்தாள்களை 17.08.2018 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.\nதமிழ்நாடு அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2017-18 வருடத்திற்கான பங்களிப்பு ஓய...\nஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிரடி\nஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு மற்றும் போட்டித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதா...\nFlash news : தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை தமிழக அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என...\nஉபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு\nஉபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு உபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்...\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளி திறக்கும் நாளன்று SMART PHONE கொண்டு வர வேண்டும்- திருவண்ணாமலை CEO PROCEEDINGS Dt.22.05.2018\nஅனைத்து ஆசிரியர்களும் ஜீன் 1 ம் தேதி SMART PHONE கொண்டு வர வேண்டும்- திருவண்ணாமலை CEO PROCEEDINGS Dt.22.05.2018\nRTI -தகவல் அறியும் உரிமை சட்டம் 2005. முழு விவரப் புத்தகம்\n2017-18 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH ( * Dat...\nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ புதிய ம...\nஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவைகள் - மாவட்ட ஆட்சியர...\nதுப்புரவாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு, ஊதியம்: ...\nபிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி CBSE.,...\n02.06.2018 சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு வேலை நாள்...\nG.O 108 பள்ளிக்கல்வித்துறை,நாள் 28.05.2018 திருத்...\nவீடு வீடாக சென்றது வீணா - அரசின் அறிவிப்பால் தொடக...\nதமிழக அரசில் வேலை வேண்டுமா..\nபள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்...\nMBBS,BDS படிப்புக்கான NEET தேர்வு முடிவுகள் ஜூன் 5...\nகோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட...\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி\nபள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு ...\nபுதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்...\nஇவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள...\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெற...\nEDN-அரசு/அரசு உதவி பெறும் அனைத்து வகை பள்ளிகளில் ஆ...\nபள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறி...\nதருமபுரி மாவட்டத்தில் 6-9 வகுப்பு மாணவர்களின் அடைவ...\nதொடக்க நிலை வகுப்புகளுக்கு சீருடை மாற்றம் : கரும்ப...\n10, 12ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கு 2 தாள்களாக இல்...\nகிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ்; தமிழ் பாட...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் ...\nஅரசு பள்ளிகளில் விரைவில் LKG-UKG வகுப்புகள்: அமைச்...\n+1 தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தப்பள்ளிகளின் தேர்ச்ச...\nஅரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வக...\nஇனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் ...\n+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்\n+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்\n#BIGNEWS பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள...\nBREAKING பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவ, மாணவி...\n9 ஆம் வகுப்பு பாடம் மேனிலைக் கல்விக்கு அடித்தளம்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கண்பார்வை இழந்த பெண் கே...\nகோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்ப...\nமுதுநிலை மருத்துவம்: நிர்வாக இடங்களுக்கு இன்று கலந...\nஅரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்ப...\nதிருவண்ணாமலையில் 18 பள்ளிகள் மூடல்\nபுத்தம் புதிய மாற்றத்துடன் முதல் வகுப்பு குழந்தைகள...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் நடத்தக்கூடாது.இணை...\nDSE - பள்ளிக் கல்வி நிர்வாக சீரமைப்பு புதிய மாவட்ட...\nமருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் பட்டயப் படிப்பு ...\nCBSE 10ம் வகுப்பு தேர்வில் நாடு முழுவதும் 86.7% பே...\nபிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு சிறப்பு கவுன...\nபுதிய பாடம்… புதிய பாதை: உற்சாகம் ஊட்டும் முதல் வ...\nபுதிய பாடநூலில் QR code செயல்பட தொடங்கியது\nமெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்க...\nவரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முட...\nபள்ளி வாகனங்களுக்கு 2 நாள், 'கெடு' : தகுதி சான்றை ...\n4முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்கு முடக்கப...\nபிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை\n10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு வரும் 31 முதல் வி...\n52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன\nதமிழகத்தில் முதல்முறையாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர...\nசட்டம் படிக்க வயது தடையில்லை\nமத்தியரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி திட...\nCBSE - 10ம் வகுப்பு தேர்வு இன்று மாலை வெளியாகிறது\nSSLC-சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்...\n+2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன்/ஜூலை-2018 விண்ணப்பித்...\nBREAKING | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்க...\nBREAKING | +2 சிறப்பு தேர்வுகளுக்கான தேதிகளை அறிவி...\n2018 RH list- வரையறுக்கப்பட்ட விடுப்புகள்\nDr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை, SEEKERS திருச்ச...\nஆசிரியர் காலிப்பணியிட விவரத்தில் குளறுபடி தொடக்கக்...\n10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு இன்று முதல் தற்க...\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு அரசே ம...\nஅரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் வழக்கு\n25 சதவீத இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் இன்று கு...\n1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை...\nபிளஸ் 1 பொதுத்தேர்வு 43,241 பாடங்களில் 11,268 மாணவ...\nபுதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு ...\nஅரசு பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை. செப்டம...\nசட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள்: த...\nஜூன் 1 முதல் மாணவர்கள் புதிய நிற சீருடையில் பள்ளிக...\nTNTET - சமூகஅறிவியலில் 60/60 மார்க் எடுப்பது எப்பட...\nTNTET - ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி\nTNTET சைக்காலஜியில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா.\nசட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள்: து...\nஇனி ஸ்மார்ட்போன் இல்லைனா நடவடிக்கை..பள்ளி கல்வித்த...\nஊதிய முரண்பாடு தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களிடம் ந...\nபொறியியல் படிப்பிற்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பிப்...\nநிரந்தர பணிக்கு பட்டதாரி ஆசிரியர் தேவை\nCBSE - 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: காஸியாபாத் மாண...\nநீட் தேர்வு கீஆன்சர் வெளியீடு மாற்றம் இருந்தால் 27...\nபட்டபடிப்பு படித்தவர்களுக்கு SBI - வங்கியில் பணி\nCBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேர்ச்சி விகி...\nFlash news : தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை தமிழக அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என...\n2017-18 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH ( * Dat...\n2017-2018 ஆண்டுக்கான CPS கணக்குத்தாள்களை 17.08.2018 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.\nதமிழ்நாடு அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2017-18 வருடத்திற்கான பங்களிப்பு ஓய...\nஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை. 17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும...\n#BREAKING முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார் உடல்நலக் குறைவால் வாஜ்பாய் காலமானர்; அவருக்கு வயது 93\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு-அழைப்பிதழ் மாதிரி\nதமிழ்த்தாய் வாழ்த்து mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nClick to download தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்\n வருமான வரி பற்றிய முக்கிய செய்தி\nநிதி ஆண்டிற்கு Quarter 1,2,3&4 என வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் அதை தாங்கள் தான் தாக்கல் செய்ய வேண்டும் என அலுவலர் (Drawing Officer)...\nJana gana mana [தேசிய கீதம்] mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nதமிழ்நாட்டில் பக்ரீத் 22.08.2018 - புதன்கிழமை கொண்டாடப்படும் - தலைமை காஜி\nதமிழ்நாட்டில் பக்ரீத் 22.08.2018 - புதன்கிழமை கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuveli.com/2013/11/www.html", "date_download": "2018-08-18T01:17:11Z", "digest": "sha1:SSCVXIBBOTUZDMY4U5NYQ6DZNP3YFTII", "length": 19466, "nlines": 333, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவியாழன், 14 நவம்பர், 2013\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் திருப்பணிக்காக சேர்ந்த நிதி விபரம் /செலவு விபரம் திருப்பணிகள் முற்றாக நிறைவுற்றதும் வெளியாகும் /சுவிஸ்,கனடா ஜெர்மனி\nதிரு.இராசமாணிக்கம் ரவீந்திரன் Swiss 1001 CHF\nதிரு.சுப்பிரமணியம் சண்முகநாதன் Swiss 1001 CHF\nதிரு.துரைராசா சுரேந்திரராசா Swiss 200 CHF\nதிரு.தம்பியையா ஜெயகுமார் Swiss 100 CHF\nதிரு.தர்மலிங்கம் சிவகுமார் Swiss 100 CHF\nதிரு.கந்தையா கணேசராசா Swiss 250 CHF\nதிரு.அருணாசலம் கைலாசநாதன் Swiss 250 CHF\nதிரு.கந்தையா தவச்செல்வம் Swiss 250SFR\nCHF திரு.துரையப்பா துரைரத்தினம் SWISS 100\nதிரு.கந்தையா கணேசராசா Swiss 500 CHF\nதிரு,கனகசபை ஈசன் Swiss 250 CHF\nதிரு.சிவசாமி ஏகம்பரநாதன் Swiss 100 CHF\nதிரு.கணேஷ் பேரின்பநாதன் Swiss 500 CHF\nதிரு.சண்முகம் சண்முகதாஸ் Swiss 500 CHF\nதிரு.நாகலிங்கம் திருஞானமூர்த்தி SWISS 500\nதிரு.துரையப்பா துரைராசா Swiss 200 CHF\nதிரு.காராளபிள்ளை நாகரத்தினம் Swiss 100 CHF\nதிருமதி,செல்லையா கலைச்செல்வி Swiss 150 CHF\nதிரு.குமாரவேலு கணேசலிங்கம் Swiss 200 CHF\nதிரு.ஏகாம்பரம் விக்னேஸ்வரன் Swiss 100 CHF\nதிரு.கனகசபாபதி சுரேந்திரன் Swiss 100 CHF\nதிரு.அருணாசலம் பொன்னம்பலம் Swiss 100 CHF\nதிரு.தம்பியையா பிரேமானந்தன் Swiss 500 CHF\nதிரு.நாகராசா ஸ்ரீதரராசா Swiss 100 CHF\nதிரு.வில்வரத்தினம் பாஸ்கரன் (ரவி) Swiss 200 CHF\nதிரு.சோமலிங்கம் புகனன் Germany 50 Euro\nதிரு.வில்வரத்தினம் விஜயசுரேஷ் Germany 100 CHF\nதிரு.தம்பியையா தேவராசா Germany 100 CHF\nதிரு.தில்லையீசன் சண்முகநாதன் Germany 50 Euro\nபெயர் குறிப்பிட விரும்பாதவர் Germany 20 Euro\nதிருமதி,செல்லத்துரை சரோஜா Swiss 250 CHF\nதிரு.கணேசு திருநாவுக்கரசு Swiss 200 CHF\nதிரு.செல்லத்துரை தற்பரானந்தன் (கிளி ) Swiss 100 CHF\nதிரு.கோபாலபிள்ளை ஸ்ரீபவன் Swiss 200 CHF\nதிரு.கனகசுந்தரம் குணரத்தினம் Swiss 250 CHF\nதிரு.மதியாபரணம் மயூரன் (ரூபன் ) Swiss 200 CHF\nதிரு.பரராசசிங்கம் கங்கைவேந்தன் Swiss 100 CHF\nதிரு.சுப்பிரமணியம் சந்திரகுமார் Swiss 100 CHF\nதிருமதி ,தமிழ்வாணன் தனலட்சுமி Swiss 100 CHF\nதிரு.சண்முகநாதன் ஆனந்தன் Swiss 100 CHF\nதிரு.அரியபுத்திரன் நிமலன் Swiss 500 CHF\nதிரு.சிவசம்பு சந்திரபாலன் Swiss 500 CHF\nதிரு.அருணாசலம் கைலாசநாதன் Swiss 1000 CHF\nதிரு.மார்க்கண்டு சச்சிதானந்தம் Swiss 200 CHF\nதிரு.பொன்னுத்துரை லோகராசா Swiss 100 CHF\nதிரு.புலேந்திரன் வசீகரன் Swiss 100 CHF\nதிரு.கணேசரத்தினம் ஆரணி Swiss 500 CHF\nதிரு.நாகேசு அரவிந்தகோஷ் Swiss 100 CHF\nதிரு.குலசேகரம்பிள்ளை விஜயானந்தா Swiss 500 CHF\nதிரு.விசுவலிங்கம் பத்மநாதன் Swiss 100 CHF\nதிரு.சண்முகம் குகதாஸ் Swiss 100 CHF\nதிரு.குலசேகரம்பிள்ளை சற்குணானந்தன் Swiss 200 CHF\nதிரு.கந்தையா தவச்செல்வம் Swiss 1000 CHF\nதிரு.அம்பலவாணர் ராசகுலசிங்கம் Swiss 750 CHF\nதிரு.தியாகராசா செல்வேந்திரராசா Swiss 100 CHF\nதிரு.சின்னத்தம்பி கனகராசா Swiss 200 CHF\nதிரு.மார்க்கண்டு சதானந்தன் Swiss 200 CHF\nதிரு.பரநிருபசிங்கம் உலகநாதன் Swiss 300 CHF\nதிரு.சோமசுந்தரம் தயாளன் (தேர் திருத்தல்பணி கணக்கில் ) Swiss 0 CHF\nதிரு.நடராசா ஜெயக்குமார் Swiss 500 CHF\nதிரு.பரநிருபசிங்கம் ராஜகோபால் Swiss 500 CHF\nதிரு.ராஜதுரை ஞானசேகரம் Swiss 300 CHF\nதிரு.சோமசுந்தரம் கைலைவாசன் Swiss 1000 CHF\nதிரு.சிவகுரு தயாளன் Swiss 200 CHF\nதிரு.அருணாசலம் திகிலழகன் Swiss 250 CHF\nதிரு.சண்முகம் மோகனதாஸ் Swiss 250 CHF\nதிரு.சின்னதுரை விஸ்வலிங்கம் Swiss 100 CHF\nதிரு.செல்லையா ராசலிங்கம் Swiss 200 CHF\nதிரு.வேலாயுதபிள்ளை கனகராசா Swiss 2000 CHF\nதிரு.பாலசுப்பிரமணியம் சிவசூரியதாஸ் Swiss 200 CHF\nதிரு.ஆறுமுகம் கைலாயநாதன் Swiss 300 CHF\nதிரு.கந்தையா மணியழகன் Swiss 200 CHF\nதிரு.செல்லத்துரை சத்தியமூர்த்தி Swiss 250 CHF\nதிரு.ஐயாத்துரை ரூபன் Swiss 200 CHF\nதிரு.கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் Swiss 500 CHF\nதிரு.ராஜேந்திரம் இந்திரசீலன் Swiss 500 CHF\nதிருமதி ,கிருபாகரன் கார்த்திகா Swiss 250 CHF\nதிரு.பொன்னுசாமி அருள்ராஜா Swiss 100 CHF\nதிரு.சுப்பிரமணியம் பிள்ளை Swiss 250 CHF\nதிரு.நாகலிங்கம் மங்களேஸ்வரி Swiss 100 CHF\nதிரு.நாகரத்தினம் கோமளாம்பிகை Swiss 200 CHF\nதிரு.உதயகுமார் சுகந்தினி Swiss 100 CHF\nதிரு.ஜெயபாலன் விக்கினேஸ்வரி Swiss 100 CHF\nதிரு.பேரம்பலம் குகதாஸ் Swiss 200 CHF\nதிரு.அருணாசலம் பஞ்சலிங்கம் Swiss 1000 CHF\nதிரு.நாகநாதி தர்மலிங்கம் Swiss 100 CHF\nதிரு.தர்மலிங்கம் ரவிகுமரன் Swiss 200 CHF\nதிரு.வரோபதிராசா முத்துக்குமார் Swiss 100 CHF\nதிரு.கோபாலபிள்ளை லவகுமார் Swiss 200 CHF\nதிரு.சர்வானந்தம் ரமேஷ் Swiss 500 CHF\nதிரு.குமாரசாமி சுரேஷ்குமார் Swiss 500 CHF\nதிரு.வேலாயுதபிள்ளை யோகராஜா Swiss 500 CHF\nதிரு.பிரபாகரன் பிரியா Swiss 500 CHF\nதிரு.கந்தையா கணேசராசா Swiss 250 CHF\nதிரு.வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் Swiss 120 CHF\nதிரு.கந்தையா தவச்செல்வம் Swiss 250 CHF\nதிரு.நடராசா யோகேஸ்வரன் Swiss 200 CHF\nதிரு.திருநாவுக்கரசு கருணாகரன் Canada 2000 CAD\nதிரு.அருணாசலம் சதாசிவம் Canada 1500 CAD\nதிருமதி.இலட்சுமணன் நிர்மலாதேவி Canada 1500 CAD\nதிருமதி.கோமளா தாமோதரம்பிள்ளை Canada 1500 CAD\nதிருமதி.சிவபாக்கியம் (குடும்பம்) மார்க்கண்டு Canada 1500 CAD\nதிருமதி.இராஜேஸ்வரி (குடும்பம்) குணரெத்தினம் Canada 1000 CAD\nதிரு.சுப்பிரமணியம் சந்திரபாலன் Canada 1000 CAD\nதிருமதி.சத்தியவதி கருணாமூா்த்தி Canada 1000 CAD\nதிரு.நல்லையா தா்மபாலன் Canada 1000 CAD\nதிருமதி.பத்தினிப்பிள்ளை அருணாசலம் Canada 500 CAD\nதிரு.பொன்னம்பலம் அமிர்தலிங்கம் Canada 500 CAD\nதிரு.பரநிருபசிங்கம் அமிர்தலிங்கம் Canada 500 CAD\nதிரு.அம்பலவாணா் தியாகலிங்கம் Canada 500 CAD\nதிரு.கந்தையா அம்பலவாணர் Canada 500 CAD\nதிருமதி.கலாவதனி விக்னேஸ்வரன் Canada 500 CAD\nதிரு.தா்மரெத்தினம் தருமராசா Canada 500 CAD\nதிருமதி.ரஜனி இலங்கைநேசன் Canada 100 CAD\nதிருமதி.சுபாஷினி பாஸ்கரன் Canada 100 CAD\nதிரு.விசுவலிங்கம் உதயகரன் Canada 200 CAD\nதிரு.கந்தையா மதியழகன் Canada 100 CAD\nதிருமதி.புனிதவதி நாகலிங்கம் Canada 150 CAD\nதிரு.அம்பலவாணர் திருவருட்செல்வன் Canada 600 CAD\nதிரு.கதிரவேலு சிவராமலிங்கம் Canada 100 CAD\nதிருமதி.சித்திரா ஸ்ரீஸ்கந்தராசா Canada 100 CAD\nதிருமதி.கண்ணம்மா தம்பையா Canada 250 CAD\nதிரு.நல்லதம்பி திலகநாதன் Canada 200 CAD\nதிரு.கனகசுந்தரம் சீவரெட்னம் Canada 300 CAD\nதிருமதி.நல்லதங்கம் தம்பியையா Canada 100 CAD\nதிரு.நாகரெத்தினம் விஜயரெத்தினம் Canada 1000 CAD\nதிரு.சுப்பிரமணியம் விவேகானந்தன்(புரோமா Canada 250 CAD\nதிரு.சோமசுந்தரம் பசுபதிப்பிள்ளை(விசுவர்) Canada 200 CAD\nதிரு.குணரெத்தினம் சசிகரன் Canada 200 CAD\nதிரு.அருணாசலம் சண்முகநாதன் Canada 2000 CAD\nதிரு.வில்வரெத்தினம் சுதர்சன் Canada 500 CAD\nசெல்வி.சந்திரவதனி இராசேந்திரம் Canada 450 CAD\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 2:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/2010/01/racism-and-genocides-4/", "date_download": "2018-08-18T01:23:03Z", "digest": "sha1:JHV357VRF4LVUA56WFPYMG2MHVA2EHAB", "length": 90948, "nlines": 321, "source_domain": "www.tamilhindu.com", "title": "இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், பயங்கரவாதம்\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3\nஇந்தியாவில் இந்த மனித உரிமையாளர்கள் அடிக்கும் கொட்டங்களை எழுதி மாளாது. அதனால் அதை விட்டுவிட்டு இந்த நூற்றாண்டில் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலையும் அதைத் தொடர்ந்து இவர்கள் அடித்த கூத்துகளையும் நோக்கலாம். செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா இத்தாக்குதலில் தொடர்பு உடையவர்களையும் மற்றும் பல இஸ்லாமியத் தீவிரவாதிகளையும் “க்வொண்டனமா பே” என்னும் இடத்தில் சிறை வைத்தது. இத்தாக்குதலுக்கு சூத்ரதானியான “கலீத் ஷேய்க் முகமது” என்பவரும் இதில் அடக்கம். ஜார்ஷ் புஷ்ஷை அரக்கனாகவும், ஒபாமாவை அமைதிக் காவலனாகவும் உருவகப்படுத்தியும் மனித உரிமையாளர்களின் வெறி அடங்கவில்லை. கம்யூனிஸத்தை அனுசரிக்க மனிதர்கள் இருக்கும்வரை உலகில் கிறுக்கர்களும், வெறி பிடித்தவர்களும் இருந்தே தீருவார்கள். ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்னும் பெயரில் தீவிரவாத்திற்கு நெய் ஊற்றுவதுதானே கம்யூனிஸ்டுகளின் வேலை. இந்த வேலையை மனித உரிமையாளர்களும் செவ்வனே செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் கலீத் ஷேய்க் முகமது, இந்தியாவில் அப்சல் குரு போன்றோருக்கு ஆதரவாக செயல்படுவதுதானே இவர்கள் வேலை. செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்த 3000 அப்பாவிகளும் மனிதர்களே அல்ல. அப்பாவிகளைக் கொன்ற “கலீத் ஷேய்க் முகமது” மற்றும் அவருடைய கூட்டாளிகளும்தானே மனிதர்கள். அந்த மனித உரிமையாளர்களின் கூற்றுப்படி இந்த மனிதர்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டுமாம். அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாதாம்.\n[இங்கு ஒரு இடைச்செருகல் செய்தி. துக்ளக் ஆசிரியர் சோ ஒருமுறை எழுதியது. நம் வீட்டில் கொள்ளை நடக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். சில நாட்களுக்குப் பிறகு போலீஸ் அந்தக் கொள்ளைக்காரனை பிடித்து விடுகிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நாம் போலீஸிடம் சென்று அந்த கொள்ளைக்காரனை நல்ல முறையில் நடத்துங்கள் என்றா கூறுவோம். அக்கொள்ளையனை என்ன வேண்டுமானாலும் செய்து என்னிடமிருந்து திருடிய பொருட்களை வாங்கிக் கொடுங்கள் என்றுதானே கூறுவோம். ஒரு திருடனையே நாம் இப்படி நடத்தும்பொழுது 3000 அப்பாவிகளைக் கொன்ற கலீத் ஷேய்க் முகமது போன்ற மிருகங்களை துன்புறுத்தி அவர்களின் அடுத்த கட்ட தாக்குதலைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க உணவா கொடுப்பது\nஇதுபோன்ற மனித உரிமையாளர்களின் பிடியில் சிக்கிய ஒபாமா, தான் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த “க்வொண்டனமா பே” சிறையை மூடி விடுவதாக வாக்குறுதி அளித்தார்.\nஒபாமாவிற்கு பதவி ஏற்றபிறகுதான் புரிந்தது, அச்சிறையை மூடுவது எளிதல்ல என்பது. அங்கு கிட்டத்தட்ட 200 முஸ்லீம் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையை மூடியபிறகு அத்தீவிரவாதிகளை என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை அறியாமல் உணர்ச்சிவசத்தில் உளறியதால் ஏற்பட்ட விளைவு இது.\nஉலகில் என்றுமே புனிதத்திற்கும், உண்மைக்கும், நியாயத்திற்கும் தனி இடம் இருந்தே தீரும். உத்தம மனிதர்கள் உலகில் உள்ளார்கள் என்று அறைகூவ “நோபல் அமைதிப் பரிசு” என்றொரு விருது வழங்கப்பட்டு வந்தது. நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பவர்களுக்கும், தன்னுடைய அல்லது மற்றொரு நாட்டின் சேனையின் அளவை குறைப்பவர்களுக்கும், உலக அமைதிக்காக மாநாடுகள் போன்றவைகளை நடத்துபவர்களுக்கும் இந்த “நோபல் அமைதிப் பரிசு” வழங்கப்பட வேண்டும் என்பது இவ்விருதை உருவாக்கிய “ஆல்பிரட் நோபல்” என்பவரின் அவா. நோபல் தன் முழு சொத்துகளையும் இந்த விருதுகள் உருவாக்கப்பட வழங்கினார். அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்தவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டாலும் “நோபல் அமைதி விருது” மிகவும் கௌரவமாக கருதப்பட்டு வந்தது.\nஇந்த ஆண்டு இவ்விருதை வழங்க முடிவெடுக்கும் மனிதர்களுக்கும் மற்றவர்களைப் போன்றே இனவாதம், சிறுபான்மைப் பேய் போன்றவை பிடித்துக்கொண்டது. பதவியேற்று 9 மாதமே ஆகியுள்ளவரும் உலகில் நடந்துவரும் எந்தப் பெரிய மோதலையும் தீர்க்காதவரும் மட்டுமல்ல அவற்றைத் தீர்க்க எந்த கொள்கை மாற்றத்தையும் ஏற்படுத்தாதவருமான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇன ஒற்றுமைக்கான ஒரே வழி: [பெண் கொடுத்து பெண் எடுப்பது]\nஇக்காலத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் கூறும் வகையில் இன ஒற்றுமை உலகில் ஏற்பட ஒரே ஒரு வழிதான் உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு கவுண்டர் தன் பெண்ணை காரைக்குடியில் உள்ள ஒரு செட்டியாரின் பையனுக்கு மனமுவந்து திருமணம் செய்விக்கத் தயாராக வேண்டும். (அது என்ன, பிராமணர்களை மட்டும்தான் உதாரணம் காட்ட வேண்டுமா) காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் செய்யப்படும் திருமணத்தைப் பற்றி இங்கு பேசவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதியைச் சேர்ந்த பெற்றோரும் மனமுவந்து தங்கள் மகனையோ, மகளையோ வேற்று ஜாதியைச் சேர்ந்தவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டும். ஐரோப்பாவில் என்றால் தன் வெள்ளை மகனுக்கு ஆசியப் பெண்ணைத் திருமணம் செய்விக்க வேண்டும். இது இன்னும் பல தலைமுறைகளுக்கு கற்பனையாகவே இருக்கப்போவதால் நாம் அடுத்த விஷயத்திற்குச் செல்வோம்.\nஇன ஒற்றுமைக்கான நாம் கூறும் விளக்கம்\nஎல்லா இனத்தாரும் தங்கள் தங்கள் பிரதேசங்களில் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப தங்களின் மூதாதையர்களின் பாரம்பரிய முறையிலும் தங்களின் கலாசாரக் குறியீடுகளைப் பேணி பாதுகாத்துக்கொண்டும் வாழ்வதே நடைமுறைக்கு சாத்தியமானதும் மனித சமுதாயம் அமைதியாக வாழ்வதற்குண்டானதுமான வழி.\nஇது வரையில் மேற்கத்திய நாடுகளின் சமுதாயத்தின் பல மட்டங்களில் குடியேறிகளால் ஏற்படும் அபத்தங்களைக் கண்டோம். “இன ஒற்றுமை” ஆதரவாளர்களால் கூறப்படும் “Cosmopolitan Culture” பெரும்பான்மை சமுதாயங்களிடையே வெறுப்பையே ஏற்படுத்தி உள்ளது. மேற்கத்திய சமுதாயங்கள் இன வேற்றுமை என்ற நிலையிலிருந்து “இன துவேஷம்” என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. நடைமுறை யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு வரும்காலங்களில் இரத்தக் களரியைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nஇது நாமே உருவாக்கிக்கொண்ட புற்றுநோய். சாதாரண மருந்து மற்றும் ஊசிகளால் புற்றுநோயை குணப்படுத்த முடியாது. Chemotherapy எனப்படும் மிக வீரியமான மருந்துகளைக் கொடுக்க வேண்டியிருக்கும். Immigration Freeze– இதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டே தீரும். உயிரைக் காப்பாற்ற இந்த வலியைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். சில நேரங்களில் Surgery ,அறுவை சிகிச்சையும் செய்ய நேரிடும்– விருப்பப்பட்டவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டி வரும்.\nமேற்கத்திய நாடுகளின் குடியேறிகளால் கடந்த 20, 30 வருடங்களில் அந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் வெள்ளையர்களால் ஜீரணிக்க முடியாத அளவு மாறியிருக்கிறது. இவை உள்காயங்களைப் போல் அவர்களுக்கு தொடர்ந்து வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதலைப் போன்ற இன்னொரு தாக்குதல் ஏற்படும்போதோ அல்லது வேறுவகையில் ஏற்படும்போதோ வெள்ளையர்களின் கோபம் வன்முறையாக மாறலாம். முதலுதவியைப் போன்று அவர்களுக்கு இன்று சில மருந்துகள் தேவைப்படுகின்றன.\n(1) முதலாவதாக மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு (வெள்ளையர்கள் மற்றும் யூதர்கள் தவிர) புதியதாக குடியுரிமை கொடுக்கப்படக்கூடாது. மற்ற நாட்டின் வெள்ளையர்கள் மற்றும் யூதர்களும் இதற்கு விதிவிலக்காகவே இருப்பார்கள். உதாரணமாக ஐரோப்பிய நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கோ, ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பாவிற்கோ குடியேறும் வழி அவர்களுக்கு இருக்கும். அவர்களுக்குள் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இரண்டு முக்கிய ஒற்றுமைகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒன்று. அதைவிட முக்கியமானது மதம் என்னும் ஒற்றுமை. இரண்டாவதாக யூதர்கள். இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள அவர்களின் பைபிளின் கடைசி புத்தகமான “Revelation”க்கு செல்ல வேண்டும். அப்புத்தகத்தின்படி இயேசு கிறிஸ்து மறுபடியும் இவ்வுலகில் உயிர்த்தெழ யூதர்களுக்கு கடவுளாலேயே வழங்கப்பட்ட பூமி இருந்தாக வேண்டும். 1948ல் பிரிட்டனின் காலனியாக இருந்த இஸ்ரேலில் வெறும் 25 சதவிகித யூதர்களே வாழ்ந்து வந்தார்கள். மற்றவர்கள் பாலஸ்தினீய முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும். இந்தப் புத்தகத்தின் அடிப்படையிலேயே சிறுபான்மையாக இருந்த யூதர்களுக்கு தனி நாட்டை பிரிட்டன் வழங்கியது என்று கூறுவார்கள். இவ்விஷயங்கள் பலருக்கு கோபத்தையே ஏற்படுத்தும். ஆனால் வெள்ளையர்களோடு யூதர்கள் சில சமாதானங்களை செய்துகொண்டு சேர்ந்து வாழமுடியும். இந்துக்களாலும், முஸ்லீம்களாலும், ஆப்பிரிக்கக் கருப்பர்களாலும் வெள்ளையர்களோடு சேர்ந்து வாழ முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை. இந்த இன ஒற்றுமை, வரும் காலங்களில் ஏற்படுமா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். இன்றுள்ள யதார்த்தத்தை நோக்கும்போது இவ்வினங்கள், ஒரே பிரதேசத்தில் ஒன்றாக வசிக்கும்போது, வரும் காலங்களில் தோன்றக்கூடும் என்கிற இன ஒற்றுமையைவிட இன்னும் சில காலத்தில் ஏற்படப்போகும் இரத்தக் களரியே நம்மை அச்சுறுத்துகிறது.\n(2) இங்கே இன்னொரு யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளில் அவர்களின் தொழிற்துறை வேலைகளுக்கு ஆட்களின் தட்டுப்பாடு ஏற்படுவதால் அதை நிரப்ப அந்நியர்கள் அங்கு செல்லத்தான் வேண்டி வரும். “Work Permit” (வேலைக்கான அனுமதி) எவருக்கும் எக்காலத்திலும் “Citizenship” குடியுரிமையாக மாறக்கூடாது. அந்நியர்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது பணம் சம்பாதிக்க மட்டுமே என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உதாரணமாக ஆப்பிரிக்க சோமாலியாவில் ஒரு நாளைக்கு அரை டாலருக்கும் கீழே சம்பாதிப்பவருக்கு அமெரிக்காவில் கூலி வேலைக்கும் ஒரு நாளைக்கு 50 டாலர் கிடைக்கிறது. இதில் ஈடுபடும் இருவருக்குமே லாபம்தான். அமெரிக்காவிற்கும் ஆட்கள் கிடைக்கிறார்கள். சோமாலியராலும் தன் குடும்பத்தை வறுமையின் கொடுமையிலிருந்து மீட்க முடிகிறது. இந்த வியாபாரத்தில் குடியுரிமையை நாம் ஏன் இழுக்க வேண்டும்\n(3) மூன்றாவதாக ஒரு நாட்டின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க ஒரு இனத்து அல்லது குழுவின் மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று பிறகு குடியுரிமை பெறுகிறார்கள். இவர்களுக்கு தற்காலிகக் குடியுரிமை கொடுக்கப்படலாம். இதுவும் அவர்கள் உண்மையான அகதிகள் என்பது உறுதி செய்யப்பட்ட பின்புதான் அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க பல மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். வரும்காலங்களில் இது போன்ற சமயங்களில் தற்காலிகக் குடியுரிமை கொடுக்கப்படலாம். அவர்களின் சொந்த நாட்டில் நிலைமை சீரடையும் பட்சத்தில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.\nஇது போன்ற நிலை வரும்காலங்களில் ஏற்பட்டாலும் பல்வேறு இன மக்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ வேண்டி வரலாம். அந்நியர்கள் மேற்கத்திய நாடுகளில் சென்று வாழும்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளைப் பற்றி துக்ளக்கில் சோ எழுதியதைப் பார்க்கலாம். “ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் எந்த நாட்டிற்குச் சென்றாலும் இந்திய மாணவர்கள் அடக்கத்தோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். சங்கம் அமைத்து கோஷங்கள் போடுவது, தெருவில் இறங்கிப் போராட்டம் செய்வது போன்றவற்றால் அந்நாட்டுப் பெரும்பான்மை சமூக மக்களின் வெறுப்புக்குத்தான் ஆளாக வேண்டும்.”\nஇந்த அறிவுரை இந்திய மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து அந்நியர்களுக்கும் பொருந்தும். உலக அளவில் வலது சாரி சக்திகள் ஒன்றிணைவது ஒன்றே வழி\nகுடியேறிகளின் பிரச்சினை ஒருபுறம் இருக்க அதைப் போலவே இன ரீதியில் மிக முக்கியமான இன்னொரு பிரச்சினையையும் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம்.\nஇந்து, கிறிஸ்தவ மற்றும் யூத இனங்களை வேரறுக்க ஒரு அரக்கன் உருவாகியிருக்கிறான். அந்த அரக்கனின் பெயர்தான் தாலிபான். (இக்கட்டுரையின் வசதிக்காக இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரையும் தாலிபான் என்றே கூறுகிறேன்.ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா என்றும் இந்தியாவில் லஷ்கர்-எ-தொய்பா, ஜெய்ஷ்-எ-முகமது என்றும் இஸ்ரேலில் ஹமாஸ், ஹிஸ்பொல்லா என்றும் இவர்கள் அழைக்கப்பட்டாலும் இவர்களின் நோக்கம் ஒன்றுதான்.) யூதர்களால் தாலிபான்களை கட்டுக்குள் வைக்க முடிகிறதே தவிர அழிக்க முடியவில்லை. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கோ ஆப்கானிஸ்தானில் மண்ணைக் கவ்வ வேண்டிய நிலை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோற்றால் உடனடியாக நடுங்க வேண்டிய நாடு அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டாளிகளோ அல்ல, இந்தியாதான். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து நம் குல வைரி நாடான பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து விடுவர். மேற்கூறிய தகவல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது இதுதான்– தாலிபான்’களை நம் மூன்று இனங்களாலும் தனித்தனியாக அழிக்க முடியாது என்பதுதான். காலத்தின் கட்டாயத்திற்காகவாவது இந்த மூன்று இனங்களும் சேர வேண்டியதுதான்.சரி, ஆனால் நம் மூவருக்குள்ளும் உள்ள பிணக்குகளை மறந்து நம்மால் இணைய முடியுமா\nமுன்னரே கூறிய படி அவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் வேற்றுமையும் உள்ளது, ஒற்றுமையும் உள்ளது. யூதர்களே இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள் என்பது கிறிஸ்தவர்களின் வாதம். அதே சமயத்தில் யூதர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கூறுவதும் பைபிள்தான் என்பதால் அவர்களுக்குள்ள வேற்றுமையை விட ஒற்றுமை அதிகம்தான்.1948லிருந்து இஸ்ரேலின் சரித்திரத்தைப் பாருங்கள்; யூதர்களுக்காக மேற்கத்திய நாடுகள் பட்ட சிரமங்கள் அவர்களுக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத ஒற்றுமையை விளக்கும். நேபாளத்தை நாம் கைகழுவி விட்டதால் சீனக் கூலிப்படையான மாவோயிஸ்டுகள் வசம் அந்நாடு போனதையும் பாருங்கள். மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலைக் கைகழுவி விடும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.\nநம்மிரு இனங்களுக்கும் வரலாற்று ரீதியாகக் கூட எந்த ஒரு சுணக்கமும் இருந்ததில்லை. யூதர்களில் ஒரு சிலர் பல தலைமுறைகளாக இந்தியாவின் கேரளாவில் வாழ்ந்து வருவதையும் இங்கு நோக்கலாம். இஸ்ரேலுடன் நாம் இராஜ்ஜீயத் தொடர்புகளை ஆரம்பித்தவுடன் அந்நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தார். அவர் நம்முடைய ஜனாதிபதியைச் சந்தித்தவுடன் சமஸ்கிருதத்திலேயே முதல் வார்த்தையைக் கூறினார். நம் இரு நாட்டு மக்களும் பண்டைய கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். ஆகவே நம்முடைய கலாசாரத்தின் ஆணிவேரான சமஸ்கிருத்தில் பேசுவது மிகவும் முக்கியம் என்று கருதினார். மேலும் காஷ்மீர் பிரச்சினை தீர தம் நாடு, இந்திய-பாகிஸ்தான் எல்லை முழுவதும் “Computerised Sensors”ஐ அமைத்துத் தருவதாக உறுதி அளித்தார். நாம் யூதர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்கள் நம்மை நோக்கி பல அடிகள் முன்னோக்கி வருவர். அவர்கள் நம்மையும் நம் மதத்தையும் மதிப்பவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.\nஇங்கு ஒன்றை கூறித்தான் ஆக வேண்டும். நமக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள பிணக்குகள் சில வருடங்களில் கூட தீரும் என்று கூற முடியாது. 200 வருடங்களாக நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் புரிந்த கொடுமைகளின் வடுவே இன்னும் மறையவில்லை. சமஸ்கிருதத்தை பார்ப்பனர்களின் மொழி என்றும் பார்ப்பனர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிய ஆரியர்கள் என்றும் புரளி மூட்டையை அவிழ்த்து விட்டார்கள். இதனுடைய தாக்கத்திலிருந்தே நம்மால் இன்னும் வெளிவர முடியவில்லை. ஆனால் இன்றுள்ள யதார்த்த நிலையில் நம்மால் கடந்த காலத்தை மறக்கவோ மன்னிக்கவோ இயலவில்லையென்றாலும் இனி வரும்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த காலத்தையாவது நாம் வாதத்திலிருந்து நீக்கினாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சினையாக இருப்பது மதமாற்றமே. உணர்ச்சி வசப்படாமல் யோசித்து பார்த்தால் இந்த மதமாற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது பணம்தான் என்பது புரியும். அதாவது மேற்கத்திய நாடுகளிலிருந்து நம் நாட்டின் மிஷனரிகளுக்கு அனுப்பப்படும் பணமே இந்த மதமாற்றம் என்னும் பேய்க்கு உயிராக இருக்கிறது. எப்படியேனும் இந்தப் பணப் பட்டுவாடாவை நாம் தடுத்து விட்டால் இங்கிருக்கும் மதமாற்றப் பேய் சில வருடங்கள் துடித்து பின்னர் அடங்கிவிடும். இதை நடைமுறைப்படுத்த நாம் மேற்கத்திய நாடுகளுடன் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பை நாடவேண்டியதுதான் வழி. அதற்கு நாம் சில விலைகளை கொடுத்துத்தான் தீர வேண்டும். உதாரணமாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியத் துருப்புகளை அனுப்புவது, இரான் நாட்டு விஷயத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலையை எடுப்பது, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது போன்றவற்றைச் செய்ய நேரிடலாம்.\nநம் மூன்று இனங்களுக்குள்ளும் பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமைக்கான காரணிகளும் உள்ளன. கருக் கலைப்பு, ஓரினச் சேர்க்கை, “Embryonic Stem cells” என்ற மூல உயிரணுவை பிரிப்பதற்காக ஒரு சிசுவை உருவாக்கி அழிப்பது போன்ற விஷயங்களை எதிர்ப்பதில் நம் மூன்று இன வலதுசாரிகளும் ஒன்றுபடுகின்றன.\nசரி, மேற்கூறிய விஷயங்கள் இன்றைய நிலையில் சாத்தியமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இதற்கு முக்கியத் தடையாக இருப்பது ஜனநாயகக் கட்சிகள்தான். (ஜனநாயகம் இல்லை). இந்தியாவில் காங்கிரஸ், அமெரிக்காவில் பதவியில் இருக்கும் ஜனநாயக கட்சி, பிரிட்டனில் பதவியில் உள்ள தொழிலாளர் கட்சி போன்றவை எப்பொழுதும் “புனித சிறுபான்மை ஸ்நானம்” செய்வதால் மதமாற்றத்தைப் பற்றியோ, குடியேறிகளால் தோன்றும் பிரச்சினைகளைப் பற்றியோ இவர்களுக்கு அக்கறையில்லை. இவர்களிடம் உள்ள இன்னொரு பிரச்சினை, தங்களை எப்பொழுதும் மதச் சார்பற்றவர்களாகக் காட்டிக்கொள்வது. உலகில் மக்களின் அடையாளமாக இருப்பது மதமே. பெரும்பான்மையினருடைய மதத்துடன் தொடர்பு இல்லாமலும் சிறுபான்மையினர்களின் மதங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதே மதச்சார்பற்ற நிலை என்பது இவர்களின் புரிதல். இதற்கு எதிரிடையாக மதமே மக்களை ஒன்றிணைக்கும் சக்தி என்றும், மதங்களாலேயே மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்றும் மூதாதையர்களின் வாழ்க்கை நம் போன்றோருக்கு பாடம் என்றும் நினைப்பது வலதுசாரிகளின் கொள்கை.\nகுடியுரிமை பிரச்சினையும் தாலிபான்’களும் நம்மை இருபுறம் அழுத்த மூன்றாவது முனையில் கம்யூனிசத்தைச் சேராத நாத்திகர்களும், நாத்திகத்தையே கொள்கையாகக்கொண்ட கம்யூனிஸ்டுகளும் நம்மை நெருக்குகிறார்கள். இதை விளக்க ஒரே ஒரு மிக முக்கியமான உதாரணத்தைக் காண்போம்.\nவடக்கு இத்தாலியில் ஒரு பள்ளிக்கூடம். இந்தப் பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகளின் தாயார் அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் சிலுவையின் படம் இருப்பதால் தன் குழந்தைக்கு மதச்சார்பற்ற கல்வி கிடைப்பதில்லை என்றும் அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் வாதாடினார். இத்தாலியின் நீதிமன்றத்தில் இவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவுடன் அவர் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்நீதிமன்றத்தில் இவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு பள்ளிகளில் சிலுவையை வைக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர். சரி, இதோடு நீதிபதிகள் நிற்கவில்லை. தன்னுடைய குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கல்வியை வழங்குவது என்பதில் பெற்றோர்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் கடவுளை நம்புவதா வேண்டாமா என்பதில் குழந்தைகளுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. (கத்தோலிக்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் நாட்டில் தங்கள் மத அடையாளங்கள் உள்ள பள்ளிகளில் கல்வி அளிக்க உரிமை கிடையாதா\nஇத்தோடும் நீதிபதிகள் நிற்கவில்லை. இது போன்ற மத அடையாளங்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டால் மற்ற மதங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு (அதாவது சிறுபான்மை மக்களின் குழந்தைகளுக்கு) தொந்தரவாக இருக்குமாம்.\nஇத்தோடு இந்த விஷயம் முடியும் என்று நினைக்காதீர்கள். இத்தீர்ப்பை ஆராய்ந்த வல்லுநர்கள் இனி அரசுக் கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்து அரசுச் சார்புடைய இடங்களிலும் சிலுவையை வைக்கமுடியாது என்ற நிலை தோன்றப் போகிறது என்றார்கள். மேலும் இது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பானபடியால் இத்தீர்ப்பு எல்லா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் கட்டுப்படுத்தும். கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக வெள்ளையர்கள் பரிபாலித்து வரும் கலாசாரச் சின்னங்களை குடியேறிகளும், நாத்திகர்களும் சிறிது சிறிதாக அழிப்பதை இதை விடத் தெளிவாக நாம் புரிந்துகொள்ள முடியாது.\nநம்மூரில் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்று திராவிடக் கட்சிகள் கூறி வருவதையும் நாம் இங்கு நோக்கலாம்.\nசமஸ்கிருதத்தில் ஒரு விஷயத்தை பாகுபடுத்திப் பார்க்க “உத்தம, மத்யம மற்றும் அதம” என்ற சொற்களை உபயோகிப்பார்கள். உதாரணமாக மனிதனை பொருளாதார அளவில் “பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை” என்று பிரிக்கலாம். உலகம் தோன்றிய நாள் முதல் இந்தப் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருந்தே வந்திருக்கிறது. கடந்த 150 வருடங்களாக இந்த ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க முனைந்த பொதுவுடைமைக் கொள்கைகளான கம்யூனிசம் மற்றும் சோஷலிஸம் போன்றவை ஒழிந்திருக்கிறதே தவிர பொருளாதார ஏற்ற தாழ்வுகள் ஒழிந்தபாடில்லை. இதைப் போலவே மனிதனை புத்திகூர்மை அடிப்படையில், “புத்திசாலி, சுமாரான அறிவாளி மற்றும் முட்டாள்” என்று பிரிக்கிறார்கள். இதுபோன்ற இயற்கையான பாகுபாடுகள் சில நேரங்களில் தவறாகத் தென்பட்டாலும் இந்த ஏற்ற தாழ்வுகள் உலகம் உள்ள வரையில் இருக்கத்தான் போகிறது. (இல்லாவிட்டால் மனித குலத்தின் இயக்கம் இவ்வளவு வேகத்தோடும் சுவாரசியங்களோடும் இல்லாமலும் போகலாம்.)\nஇதைப் போன்றே நாகரிகம் முதிர்ந்த நிலையிலும் மனிதன் தனக்குள்ளே பல பிரிவுகளை அமைத்துக் கொண்டிருக்கிறான். இதில் மத ரீதியான பிரிவு மிகவும் முக்கியமானது. இது சரியா, தவறா அல்லது இந்தப் பிரிவுகள் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இருக்குமா, இருக்காதா என்பதையெல்லாம் காலம்தான் முடிவெடுக்கும்.\nஇன்றுள்ள மனிதனின் நாகரிக முதிர்ச்சியைக் கணக்கில் கொண்டு, இனப் படுகொலைகளை ஏற்பட விடாமல் செய்வது நமக்குள்ள பெரிய சவால். நான் முன்மொழிந்த வழிகள் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்னும் சில வருடங்களுக்குள்ளாகவாவது வெள்ளையர்களின் மனதில் தோன்றியிருக்கும் இனத் துவேஷத்தை இன வேற்றுமையாகக் குறைத்தாக வேண்டும்.\nமேலே குறிப்பிட்ட மும்முனை தாக்குதலும் இந்தியாவிலும் உள்ளது. பங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால்.\nபல லட்சம் மக்கள் தொகை உள்ள நகரத்தில் சில ஆயிரம் வேற்றின மக்கள் குடியேறுவதை பெரும்பான்மை சமூக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பல லட்சம் மக்கள் தொகை உள்ள நகரில் சில லட்சம் வேற்றின மக்கள் குடியேறுவதை எந்த இனத்து மக்களும் ஏற்றுக்கொள்வதில்லை.\nமனிதனின் இயற்கையான இந்த மனநிலையைப் புரிந்துகொள்வோம். நலம் பெறுவோம்.\nஎன்னப்பன் ருத்ரனான சிவன் தீயோரை அழித்து நல்லோரைக் காப்பாற்ற அவன் காலடியில் வணங்கி நிற்போம்.\nகுறிச்சொற்கள்: cosmopolitan culture, Guantanamo Bay, Immigration Freeze, work permit, இத்தாலி, இந்தியா, இன துவேஷம், இஸ்ரேல், உலகம், கம்யூனிஸ்டுகள், கலப்புத் திருமணம், கலாசாரம், கிறிஸ்தவ மிஷனரிகள், கிறிஸ்தவம், குடியுரிமை, தாலிபான், தீவிரவாதம், துக்ளக் சோ, தொடர், நாத்திகர்கள், நோபல் அமைதிப் பரிசு, பராக் ஒபாமா, மதப்பிரசாரம், மதமாற்றம், மனித உரிமையாளர்கள், வலதுசாரிகள், வழிபாடு\n8 மறுமொழிகள் இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4\nஎல்லா பாகங்களும் முடிந்தபின்பு, கடைசியாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு கருத்துச் சொல்லலாம் என்று இருந்தேன்.\nஉலக அளவிலான இன் அழிப்பு நிகழ்வுகளைக் கோர்வையாக சொல்லிய, தகவல் செறிவு நிறைந்த, அருமையான கட்டுரை. பாராட்டுக்கள். இலங்கை இனவாத மோதலை இன்னும் விரிவாக அலசியிருக்கலாம்.\nவலதுசாரிகள் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஒரு அரசியல் தரப்பைக் குறிப்பிடப் பயன்படுத்தப் படும் வார்த்தை தான் என்றாலும், ஒவ்வொரு நாட்டில் அந்த நாட்டில் “வலது சாரிகள்” என்று அறியப் படுபவர்கள் ஒரே மாதிரியான அல்லது ஒத்த கொள்கைகளைக் கொண்டிருப்பதில்லை..\nஉதாரணமாக, அமெரிக்க வலதுசாரி அரசியல் அப்பட்டமான வெள்ளை இன மேன்மை, கிறிஸ்தவ அடிப்படைவாதம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. அதன் சக்தி மையம் Bible belt என்று அறியப் படும் தென் மானிலங்கள்.. பரிணாமக் கொள்கையை பள்ளிகளில் கற்பிப்பது, அபார்ஷனை சட்டபூர்வமாகத் தடை செய்வது போன்ற விஷயங்களில் அப்பட்டமான கிறிஸ்தவ அடிப்படைவாதக் கொள்கை கொண்டது அது..\nஆனால் இந்தியாவின் வலது சாரி என்று அழைக்கப் படும் இந்துத்துவ இயக்கங்களையும், பாஜகவையும் இப்படிப் பட்டவையா என்றால் அல்ல என்றே கூறவேண்டும்.. இவை இந்து மதத்தின் reformist, renaissance தரப்பையே பிரதிநிதித்துவம் செய்கின்றன – சாதிய ஒழிப்பு, பெண்ணுரிமை, சுதந்திரம், ஆகியவற்றில் முழு முற்போக்கான கொள்கைகளையே இவை கொண்டுள்ளன.. இவற்றை அடிப்படைவாத சக்திகள் என்று கூறவே முடியாது (ஆனால் செக்யுலர்வாதிகள் அப்படித் தான் சொல்லி வருகிறார்கள்). சொல்லப் போனால் இந்த இயக்கங்களின் பல கொள்கைகள் மேற்கத்திய நாடுகளின் liberal, democratic கட்சிகளுடன் தான் இயைந்து போகுமே தவிர, conservatice, republican கட்சிகளுடன் அல்ல.\nஆனால், “இந்து வலதுசாரி” என்ற அடைமொழியை உலக அளவில் ஊடகங்களில் பயன்படுத்தும்போது, அது மேற்கத்திய சட்டகம் வழியாகவே புரிந்து கொள்ளப் படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. இந்தப் புரிதலை சரிசெய்ய இந்து அரசியல் தரப்பு தெளிவான, சித்தாந்தபூர்வமான சொல்லாடல்களையும், அவற்றைப் பேசும் அறிவுஜீவுகளையும் உருவாக்க வேண்டும்.\n// மதமே மக்களை ஒன்றிணைக்கும் சக்தி என்றும், மதங்களாலேயே மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்றும் மூதாதையர்களின் வாழ்க்கை நம் போன்றோருக்கு பாடம் என்றும் நினைப்பது வலதுசாரிகளின் கொள்கை //\nஇங்கும், இந்து தர்மத்தின் விஷயத்தில் “மதம்” என்பதற்கான பொருள் ஆபிரகாமிய மதங்களில் இருந்து வேறுபடுகிறது.. ஆபிரகாமிய மதங்கள் சிறூபான்மை சமய, கலாசார மரபுகளை அழித்து ஒழித்து பெரும்பான்மையாகி பூதாகாரமாகி நிற்பவை. ஆனால், இந்து மதம் பற்பல சிறுபான்மை சமய, கலாசார மரபுகளை ஒன்றிணைத்து, அவற்றைத் தத்துவ ரீதியாகக் கோர்த்து அவை அழியாமல் காப்பாற்றி வருகிறது – இவ்வகையில் இந்துமதம் இந்தியாவின் ”பெரும்பான்மை” மதமாக இருந்தாலும், பல சிறுபான்மை மரபுகளைப் பாதுகாப்பதாக இருக்கிறது. பெரும்பான்மை வாதம் (majoritarian) என்பதற்கு மேற்கத்தியர்கள் கொள்ளும் பொருள், இந்தியாவில் இந்துமதத்திற்குப் பொருந்தாது.\nதமிழ்ஹிந்து வெளியிட்டுள்ள “பண்பாட்டைப் பேசுதல்” நூலில் “இடதுசாரி இந்துத்துவம்” என்று ஒரு சுவாரஸ்யமான கட்டுரை உள்ளது.. படித்துப் பாருங்கள்.\n// இன ஒற்றுமைக்கான ஒரே வழி: [பெண் கொடுத்து பெண் எடுப்பது] //\nஉலக அளவிலான இன ஒற்றுமை பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.. ஆனால், இந்த விஷயம் இந்து ஒற்றுமைக்கு மிகப் பெரிய வலு சேர்க்கும்.. சமூகத்தில் இந்து உணர்வு அதிகமாக வளர வளர, இந்து சாதிகளுக்குள் கலப்புத் திருமணங்கள் அதிகரிக்கும். அது மிக்க நல்ல விஷயம்.\nவீர சாவர்க்கர் தனது புகழ்பெற்ற “இந்துத்துவம்” என்ற நூலில் எழுதியிருக்கும் இந்த வரிகளைப் பாருங்கள் –\nஇதற்கு இந்து இதிகாச, புராண, வரலாற்று சம்பவங்களையும் தனது நூலில் உதாரணம் காட்டுகிறார்.\nஇப்பேர்ப்பட்ட மனிதநேய, சுதந்திர சிந்தனாவாதியான சாவர்க்கர் தான் மதவெறியராகவும், பாசிஸ்டாகவும் செக்யுலர்வாதிகளாலும், இந்து விரோதிகளாலும் இன்னும் சித்தரிக்கப் பட்டு வருகிறார். கொடுமை\nகட்டுரையை படித்து பாராட்டுதலை தெரிவித்ததற்கு நன்றிகள்.\n(1) வலதுசாரிகள் என்று இந்திய மற்றும் மேற்கத்திய கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒன்றுபடுத்தி பார்கக முடியாது என்று கூறியுள்ளீர்கள்.\nமிக மிக சரி. என்னுடைய புரிதலும் அவ்வாறே உள்ளது. என்னுடைய\nதொனி எங்கேனும் இவை ஒன்று என்று சுட்டியிருந்தால் நான் திருத்தி\nஆனால் நான் இக்கட்டுரையில் நான் கூற வந்த விஷயம் வலதுசாரிகளின்\nசிந்தனை ஒன்றுபட வேண்டும் என்பதல்ல. இந்து, கிறிஸ்தவ மற்றும் யூத\nஇனங்களின் Survivalக்காகவாவது சில சமாதானங்களை செய்ய தயாராக\nமேற்கத்திய நாடுகளில் குடியேறிகளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை\nஇன்று கவனிக்காவிட்டால் பெரிய அளவில் இனப்படுகொலைகள் நேர\nவாய்ப்பிருப்பதாகவே நான் நம்புகிறேன். அமேரிக்க பொருளாதார\nவீழ்ச்சியினால் வீழ்ந்து போன கம்யூனிஸ்டுகள் புதிய தெம்புடன் எழ\nமுயற்சி செய்வதும், தாலிபான்களின் அட்டகாசங்களை நம் மூவராலும்\nதனித்தனியாக அடக்க முடியவில்லை என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டும்\nநாம் செயல்பட வேண்டும் என்பதே என் புரிதல்.\n(2) இன ஒற்றுமைக்கான வழியைப்பற்றி:\nஇரண்டு உதாரணங்களை கூற விரும்புகிறேன்.\n(a)துஷ்யந்தன் சகுந்தலையை காட்டில் கண்டவுடன், அவன் கூறுவது.\n“நான் க்ஷத்திரிய இராஜாவாக இருந்த போதிலும் பிராமண ஆஸ்ரமத்தில்\nவாழ்ந்து வரும் உன்னை நான் காதலுடன் கண்டிருக்கிறேன். ஒழுங்கு முறை\nதவறாதவன் நான். க்ஷத்திரிய பெண்ணை மட்டுமே என் கண்கள் காதலுடன்\nஆனால் பிராமண ஆஸ்ரமத்தில் வளர்ந்தாலும் அவள் க்ஷத்திரிய வர்ணத்தை\nசேர்ந்தவளே என்பது அவனுக்கு அந்நேரத்தில் தெரிந்திருக்க வில்லை.\n(b) பகவத் கீதையின் அத்தியாயம் ஒன்றில் 40 மற்றும் 41ம் ஸ்லோகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு,\nஇவை அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறுபவை. குருக்ஷேத்திர யுத்தத்திற்கு\nபிறகு பெரிய அளவில் விதவைகள் நாட்டில் உருவாவார்கள் என்னும்\nபயத்தில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்கும் கேள்விகள் இவை.\nஇன்றுள்ள நிலையில் நாம் இவ்வாறு புரிந்து கொள்ளலாம். க்ஷத்திரிய\nஆண்களில் பெருமளவு மரணம் அடைந்தபிறகு க்ஷத்திரிய பெண்கள்\nவேறு வர்ணத்தின் ஆண்களையே திருமணம் செய்ய நேரிடும்.\nபகவத் கீதையின் தத்துவார்த்த சிந்தனைகளைப்பற்றி கூற எனக்கு\nநான் மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து தெரிந்து கொள்வது\nமுற்காலங்களில் அவரவர் வர்ணங்களின் அடிப்படையிலேயே\nபெருமளவிற்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இன்றும் கூட\nஜாதிகளின் அடிப்படையிலேயே 95 சதவிகித திருமணங்கள் நடைபெறுகின்றன.\nவிதிவிலக்கான திருமணங்கள் எக்காலத்திலும் நடந்துள்ளன. ஆனால்\nஇதுபோன்ற விதிவிலக்குகளை நம் சமூகம் எவ்வாறு அணுகியுள்ளது\nஎன்பதையே வீர சாவர்க்கர் போன்ற பெரியவர்கள் ஆதாரங்களுடன்\n[மகாபாரதத்தில் இருக்கும் கலப்பு திருமணங்களை நான் இவ்வாறே\nமுடிந்தால் உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவும்.\n இஸ்ரேலுடனும் கிறிஸ்தவ மதம் சார்ந்த நாடுகளுடனும் உறவு பலப்பட வேண்டும், எனச் சொல்லி உள்ளீர்கள் நம்மில் ஒற்றுமைக் குறைவு உள்ளது நம்மில் ஒற்றுமைக் குறைவு உள்ளது முதலில் அதை தீர்க்க வேண்டும் அல்லவா முதலில் அதை தீர்க்க வேண்டும் அல்லவா மத மாற்றம் என்பதே தடை செய்யப் பட வேண்டிய ஒன்று தான்\nமற்றும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது\nதற்போது உள்ள அரசியல் வியாதிகள் உள்ள வரை இவை எல்லாம் கானல் நீராகத் தான் இருக்கும்\nஇனிமேலும் இந்தியா விழித்துக் கொண்டு செயல் படா விட்டால் என்ன ஆகுமோ\nஇத்தனை கால தாமதமாக இந்த கட்டுரைகளை படிக்க முடிந்தது, என் கவனக் குறைவு தான் இது போலத் தான் நாம் எல்லோரும் விழிப்புணர்வு\n இதை சரி செய்ய வில்லை என்றால் வரும் காலம் நம்மை மன்னிக்காது\n(1)”மத மாற்றம் என்பதே தடை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்” என்று\nகூறியுள்ளீர்கள். கட்டாய மதமாற்றத்தை பற்றித்தான் நீங்கள் கூறுகிறீர்கள்\nஎன்று ஊகிக்கிறேன். ஒருவன் தன்னுடை கேள்விகளுக்கான பதில்கள்\nதன் சொந்த மதத்தில் கிடைக்காத பட்சத்தில் இன்னொரு மதத்தை படித்து\nபுரிந்து கொண்டு அதை அனுசரிப்பதில் தவறில்லை என்றே நான்\n(2)”அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க கூடாது” என்று என் கருத்தை\nவழி மொழிந்துள்ளீர்கள். நன்றி. வேலைக்காக அடுத்த நாட்டிற்கு செல்லும்\nவேற்றின மக்களுக்கு எந்த நாட்டிலும் குடியுரிமை கொடுக்க கூடாது\nஎன்பதே என் கருத்து. சில வாரங்களுக்கு முன் நியூயார்க் நகரில் டைம்ஸ்\nசதுக்கத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு முயற்சியில் கைது செய்ய\nபட்ட “ஃபைஸல் ஷஹஸாத்” என்பனை அவதானியுங்கள்.\nஅவன் அமேரிக்க குடியுரிமைக்காக 51 பேருடன் வரிசையில் நின்று,\nஅமேரிக்க அரசியல் சட்டத்தை மதிப்பேன் என்று உறுதி மொழி கூறி (\nபின் அவன் செய்யும் நாசகார செயலை கவனித்தீர்களா\n(3)நான் மேற்கத்திய நாடுகளின் அரசியல், சமூக மாற்றங்களை உன்னிப்பாக\nஅவதானித்து வருபவன். இந்து, முஸ்லீம்களுக்கு இடையே இனரீதியான\nமோதல்கள் மரண அடியில் முடியும். ஆனால் வெள்ளையனை எதிர்த்தால்\n“தலைமுறை அடியை” கொடுப்பான். உதாரணம் ஆப்கானிஸ்தான்,ஈராக்.\nஅந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வறுமைக்கும் கீழ் நிலையில்தான்\nபல தலைமுறைகளுக்கு இருக்க போகிறார்கள்.\n(4)வெள்ளையர்களின் மேல் அன்பு கொண்டு உறவாட வேண்டும் என்று\nநான் கூற வில்லை. நமக்கு வேறு வழி இல்லை என்பதை புரிந்து கொள்ள\nவேண்டும் என்பதே என் கருத்து.\nஇரட்டை கோபுர தகர்ப்பு என்பது பாலஸ்தீனத்தில் அமேரிக்கா நடத்திக்கொண்டிருந்த அட்டூழியத்திற்கு பதிலடிதான், இது மைநேம்இஸ்கான் படத்தில் அழகாக சொல்லப்பட்டுள்ளது.\nநீங்கள் சொல்வதைப்பார்த்தால் முஸ்லிம்கள் தான் முதலில் வம்பிழுத்து கோபுரத்தை தகர்த்து தவறிழைத்ததாக கூறுகிறீர்கள்.\nநீங்களெல்லாம் திருந்துவீர்கள் என யாருக்கும் நம்பிக்கை இல்லை.\n2010ம் வருடம், நான் இக்கட்டுரையை எழுதுகையில், அமேரிக்க அதிபர்\nதிரு.ஒபாமாவிற்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது வெட்கக்கேடானது\nஎன்று எழுதியிருந்தேன். மேலும், அவர் கருப்பர் என்ற காரணத்திற்காகவே\nவழங்கப்பட்டுள்ளது என்பதையும் பட்டவர்த்தனமாக எழுதியிருந்தேன். இவ்வாறு\nஎழுதவில்லையெனினும், போர் அறைகூவலை அவர் முதலில் லிபியாவிலும்,\nதற்பொழுது சிரியாவிலும் மேற்கொள்கிறார் என்று கூறி, அவருக்கு அமைதிக்கான\nநோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\n• சங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\n• கார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\n• கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\n• விஸ்வரூபம் 2: திரைப்பார்வை\n• அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)\n• பாகிஸ்தானின் மத அரசியல்\n• கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது\n• முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\n• வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nபாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்\nஇந்திய இறையாண்மைக்கு சவால் விடும் தமிழக எம்.பி\nஇந்து மாணவர்களுக்கும் வேண்டும் கல்வி உதவித்தொகை – ஏன்\nசூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nமுற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்\nதவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30\nசேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2\n[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nகானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்\nகாங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/88184", "date_download": "2018-08-18T00:24:08Z", "digest": "sha1:AGE5MOQW3QBIHGLCDZZX3PZSHNSBWDV4", "length": 8185, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு - Zajil News", "raw_content": "\nHome Events மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவோம் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nகிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுத்து தொழில் ரீதியாக செய்யக் கூடிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்து அதன் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.\nகுடும்பிமலை பிரதேசத்தில் போதுமான காணி வளம், நீர் வளம் இருக்கின்றது. இதனை சரியான முறையில் பயன்படுத்தி உற்பத்திகளை தரமான முறையில் செய்து அதனை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை எங்களால் பெற்றுத் தர முடியும்.\nஎல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயற்படுவீர்கள் என்று சொன்னால் நாங்கள் உங்களுக்கு இவ்வாறான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் என்றார்.\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் செங்கல் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பத்தொரு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nNext articleவெளியுறவு செயலரை நீக்கினார் டிரம்ப்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு: பைசல் காசீம் வழங்கி வைத்தார்\nமு.கா உறுப்பினர்களின் முயற்சி வெற்றியளித்துள்ளது: பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இம்தியாஸ்\nகிழக்கு பல்கலை கழக திருகோணமலை வளாகத்தின் “சர்வதேச ஆராய்ச்சி மாநாடு”\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/09/7.html", "date_download": "2018-08-18T00:26:08Z", "digest": "sha1:VVY4KOWDY5BOZGSZBDVX6D3YWH2GXYI3", "length": 17395, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "7 வது நாளாக தொடரும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் லக்சம்புர்க் நாட்டை வந்தடைந்தது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n7 வது நாளாக தொடரும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் லக்சம்புர்க் நாட்டை வந்தடைந்தது\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் லக்சம்புர்க் நாட்டை வந்தடைந்தது . மலைப்பிரதேசமாக அமைந்த பாதைகளின் ஊடாக தமிழீழ மக்களின் விடுதலையை நெஞ்சில் சுமந்து ஈருருளிப் பயணத்தை இன்றைய நாளில் பெல்ஜியம் தமிழ் இளையோர்கள் முன்னெடுத்திருந்தனர் .ஈருருளிப் பயணம் செல்லும் வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களும் இளையோர்களால் வழங்கப்பட்டது .\nதமிழின அழிப்புக்கு உலகளாவிய ரீதியில் தமிழர்கள் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி நிற்கும் வேளையில் நடைபெறவிருக்கும் ஐநா மனிதவுரிமை அமர்வை கருத்தில் கொண்டு இவ் நீதிக்கான பயணம் அமைகின்றது .\nநடைபெறும் ஈருருளிப் பயணம் பின்வரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஐநா நோக்கி செல்கின்றது. இப் பயணம் எதிர்வரும் 21.09 அன்று ஐநாவில் நடைபெறும் மாபெரும் பேரணில் சங்கமித்து தமிழீழ மக்களின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது .\nநாளைய தினம் ஈருருளிப் பயணத்தை பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லக்சம்புர்க் நாட்டின் நகர மத்தியில், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் கையளிக்க இருகின்றனர் .\n1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.\n2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.\n3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.\n4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.\n5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/09180107/1182765/Sri-Reddy-compliants-about-telugu-Actor.vpf", "date_download": "2018-08-18T01:03:34Z", "digest": "sha1:HEUVLUU6ZZ6WRK5PD7O6TCIZQEB5YDM4", "length": 13859, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "10-ம் நம்பர் வீட்டில் நடந்த லீலைகள் தெரியாதா? தெலுங்கு நடிகரை விளாசிய ஸ்ரீ ரெட்டி || Sri Reddy compliants about telugu Actor", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n10-ம் நம்பர் வீட்டில் நடந்த லீலைகள் தெரியாதா தெலுங்கு நடிகரை விளாசிய ஸ்ரீ ரெட்டி\nபட அதிபர்கள், நடிகர்கள் மீது புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கு நடிகர் ஒருவரை பற்றி மிகவும் கெட்ட வார்த்தைகளால் விளாசியுள்ளார். #SriReddy #SriLeaks\nபட அதிபர்கள், நடிகர்கள் மீது புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கு நடிகர் ஒருவரை பற்றி மிகவும் கெட்ட வார்த்தைகளால் விளாசியுள்ளார். #SriReddy #SriLeaks\nநடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.\nசமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.\nஇந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது புகார் தெரிவித்துள்ளார்.\nபிருத்வி பற்றி அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது “காமெடி பிருத்வி... ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்க கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் ஒரு கேடா” என்று கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.\nஇது ஆந்திர அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nSri Reddy | Sri Leaks | ஸ்ரீ ரெட்டி | ஸ்ரீ லீக்ஸ்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரள கனமழை - நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஇமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட்\nகனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nசூப்பர் டூப்பரான படத்தில் துருவா, இந்துஜா\nநடிகைகளை அனுபவிக்கத்தான் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் - ஸ்ரீ ரெட்டி\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்தர்\nஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸை பட்டியலில் சேர்த்த ஸ்ரீரெட்டி\nநடிகர் சங்க உறுப்பினர் அட்டை கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டம்\nஸ்ரீ லீக்ஸில் சிக்கும் பிரபல ஹீரோ\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Cinema/Gossip/2018/07/30221704/1180458/Actress-Cinema-Gossip.vpf", "date_download": "2018-08-18T01:03:32Z", "digest": "sha1:QQYZRP6LG2GUDXSB7OA3VZGF2MU4LGOK", "length": 11364, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட வாய்ப்புக்காக அரை நிர்வாணமாக போட்டோ ஷூட் எடுத்த நடிகை || Actress Cinema Gossip", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட வாய்ப்புக்காக அரை நிர்வாணமாக போட்டோ ஷூட் எடுத்த நடிகை\nபிரபல பாலிவுட் நடிகை ஒருவர், தமிழில் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தில் அவருக்கு காதலியாக நடித்தாராம்.\nபிரபல பாலிவுட் நடிகை ஒருவர், தமிழில் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தில் அவருக்கு காதலியாக நடித்தாராம்.\nபிரபல பாலிவுட் நடிகை ஒருவர், தமிழில் உச்ச நட்சத்திரம் நடித்த படத்தில் அவருக்கு காதலியாக நடித்தாராம். இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றாலும், பாலிவுட்டில் நடிகைக்கு வாய்ப்பு குறைந்து வருகிறதாம். இதனால் போட்டோ ஷூட் எடுத்து அனைவருக்க அனுப்ப முடிவு செய்திருக்கிறாராம்.\nஆனால், இந்த போட்டோ ஷூட் வழக்கமாக இல்லாமல், அரை நிர்வாணமாக போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறாராம். இந்தப் போட்டோ வெளியில் லீக் ஆகியிருக்கிறதாம். பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வார்கள் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் பணம் கேட்கும் நடிகை\nஇரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் பணம் கேட்கும் நடிகை\nகதை கேட்டு கேட்டு வெறுத்துபோன நடிகை\nபார்ட்டி வைத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை\nநடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த நடிகை\nவாய்ப்பு வாங்கி கொடுத்தால் கமிஷன் - நடிகையின் திட்டம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/category?authorid=1%200794", "date_download": "2018-08-18T00:59:47Z", "digest": "sha1:EWEMGHIVC4D3SMKCMKMFYUJMGDICJUPL", "length": 5220, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "சா.தேவதாஸ்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் நேர்காணல்கள் கணிப்பொறி இல்லற இன்பம் சிறுகதைகள் ஆன்மீகம் குறுந்தகடுகள் வணிகம் தமிழ்த் தேசியம் சிறுவர் நூல்கள் அரசியல் பொது நூல்கள் நாட்டுப்புறவியல் மாத இதழ்கள் உடல்நலம், மருத்துவம் நவீன இலக்கியம் மேலும்...\nசண்முகம் பதிப்பகம்Permanent Blackயுரேகா கல்வி இயக்கம்போர் செய்யும் பேனாக்கள்கலாம் பதிப்பகம்தமிழருவி பதிப்பகம்ரவிச்சந்திரன் பப்பிளிகேஷன்விஜயபாரதம் பதிப்பகம்அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்தங்கம் பதிப்பகம்புதுகைத் தென்றல் வெளியீடுடாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்முதற்சங்கு பதிப்பகம்வர்த்தமானன் பதிப்பகம்செங்குயில் பதிப்பகம் மேலும்...\nஇரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள், இருபத்தெட்டு இரவுகள்\nசாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nமரண தண்டனையின் இறுதித் தருணங்கள்\nகருத்து - பட்டறை வெளியீடு\nஆல்பெர் காம்யு நூற்றாண்டு நாயகன்\nகருத்து - பட்டறை வெளியீடு\nகுற்றப் பரம்பரை அரசியல்(பெருங்காமநல்லூரை முன்வைத்து)\nஎனது எழுத்து எனது சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180109217234.html?ref=ls_d_obituary", "date_download": "2018-08-18T00:34:58Z", "digest": "sha1:ECGIGHFRDW2FLQOE7RQELACYOK6JIJZB", "length": 4819, "nlines": 32, "source_domain": "www.kallarai.com", "title": "திரு கந்தப்பு சிவனேசன் - மரண அறிவித்தல்", "raw_content": "\n(இளைப்பாறிய உத்தியோகத்தர்- லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனம்)\nபிறப்பு : 25 ஒக்ரோபர் 1951 — இறப்பு : 7 சனவரி 2018\nயாழ். காரைநகர் மாம்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பத்தர்கேணியடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு சிவனேசன் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, புவனேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற M.A கந்தையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகமலாம்பிகை(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- பொருளாதார அபிவிருத்தி அமைச்சு) அவர்களின் அன்புக் கணவரும்,\nவிமலராணி, ஜெயராணி, சிறீராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nஇராமநாதன், தர்மபாலன், மகிந்த அத்துக்கொறள, தெய்வநாயகி, Dr. தேவகுஞ்சரி, புவனேஸ்வரி, அன்னலக்‌ஷ்மி, பங்கயற்செல்வி, செந்தில்நாதன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், தியாகராஜநாதன் மற்றும் வீரசிங்கம், உருத்திரன், கிருஷ்ணகுமாரி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,\nசுதர்சினி, சுபாஷினி, சுகந்தன், யுவராஜ், லக்‌ஷ்மண், ரவீந்திரா, குகன், காயத்திரி, ஹரி ஆகியோரின் அன்பு மாமாவும்,\nசேந்தன், மயூரன், அம்பிகை, அமலன், லக்‌ஷ்மி, கிருஷ்ணா, ஐங்கரன், கேசவன், கலைமகள், செந்தூரன், அபிராமி, தேவகி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் காரைநகர் பத்தர் கேணியடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2018-08-18T01:02:24Z", "digest": "sha1:VCOEXRS7HISNPJNGOLMS3ERX2MMDVGMG", "length": 5760, "nlines": 51, "source_domain": "www.velichamtv.org", "title": "காவிரியில் கூடுதல் உபரிநீர் திறப்பு – கரையோர மக்களுக்கு கர்நாடக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை!! | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nகாவிரியில் கூடுதல் உபரிநீர் திறப்பு – கரையோர மக்களுக்கு கர்நாடக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை\nIn: அண்மைச் செய்திகள், தமிழகம்\nகாவிரியில் கூடுதல் உபரிநீர் திறப்பு – கரையோர மக்களுக்கு கர்நாடக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் நிரம்பியுள்ளன. இந்த இரு அணைகளில் இருந்தும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால், கர்நாடகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்றிரவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிநீர் வந்த நிலையில், தற்போது நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.\nஇன்று மாலைக்குள் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல் அருவியிலும் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post: சென்னை அழைத்துவரப்பட்டார் திருமுருகன் காந்தி..\nNext Post: வித்தக கவிஞர் பா விஜய், பாடல் எழுதுவதை விட்டுவிடக்கூடாது – இயக்குநர் கே பாக்யராஜ் வேண்டுகோள்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/cover-of-pm-narendra-modis-book-for-students-on-dealing-with-exam-stress-released/", "date_download": "2018-08-18T01:18:08Z", "digest": "sha1:D5OVV4D4ZOSWFGCQ7DEODIF5ZQE2QY4U", "length": 11672, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தேர்வு கால பதற்றத்தைக் குறைக்க உதவும் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்-Cover of PM Narendra Modi’s book for students on dealing with exam stress released", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nதேர்வு கால பதற்றத்தைக் குறைக்க உதவும் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்\nதேர்வு கால பதற்றத்தைக் குறைக்க உதவும் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்\nமன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்கும் வழிமுறைகள் அடங்கிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலை நாளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.\nபள்ளி மாணவர்கள் தேர்வு காலங்களில் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்கும் வழிமுறைகள் அடங்கிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலை நாளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.\n’எக்ஸாம் வாரியர்ஸ்’ நூலை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ள நிலையில், இந்நூலின் அட்டைப்படம் வெளியாகியுள்ளது. இந்நூல் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மானவர்களிடம் உரையாடியதன் சில பகுதிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தின் மூலம், மாணவர்களின் நண்பனாக மோடி விரும்புவதாக பதிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் கடினமான மனநிலையை மாற்றும் வகையில் இந்த புத்தகங்களில் சில பாகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பித்துள்ளது. இந்த புத்தகம் குறித்து பதிப்பகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “மாணவர்கள் எவ்வாறு மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது, தேர்வு நேரங்களில் அமைதியை கடைபிடிப்பது எப்படி, தேர்வுக்கு பின் எஞ்சிய நேரத்தையும் ஆற்றலையும் எவ்வாறு செலவிடுவது என்பது உள்ளிட்ட பாகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை உரையாடல் வடிவிலேயே பெரும்பாலும் உள்ளன. நாட்டின் எதிர்காலத்தை நாம் ஏன் நமது கடமையாக கொண்டிருக்க வேண்டும் என்பதும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.”,என குறிப்பிடப்பட்டிருந்தது.\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nகார்கில் நாயகன் வாஜ்பாய் முதுகில் குத்தப்பட்ட நாள் வரலாற்றில் மறையாது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nவாஜ்பாய் மறைவு : சோகத்தில் மோடி; தலைவர்கள் இரங்கல்\nஅடல் பிகாரி வாஜ்பாய் உடல் தகனம்: கட்சி பேதங்களைக் கடந்து தலைவர்கள் மரியாதை\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nநிசப்தமான வாஜ்பாய் இல்லம், சோகமான எய்ம்ஸ் …\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் – கருணாநிதி\nவர்தா புயல் நிவாரணம் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\n‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஎன்.ஜி.கே தொகுதியில் எம்.எல். ஏ -வாகும் நடிகர் சூர்யா\nஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாணவர் தலைவராக நடித்திருந்தார்.\nதிட்டம் போட தெரியல என்று கதறிய அனிருத்… கோவத்தில் பொருள்களை உடைத்த வீடியோ\nkolamaavu kokila : கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்றுள்ள “திட்டம் போட தெரியல” பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/h-raja-blame-kamlhaasan-for-his-twitter-posts-regarding-politics/", "date_download": "2018-08-18T01:18:11Z", "digest": "sha1:3W7KAWIPWLMFW7U5WGDTOML5RQ67FN7T", "length": 14742, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதுகெலும்பு இல்லாத கோழை இந்த கமல்ஹாசன்: ஹெச்.ராஜா - H Raja blame Kamlhaasan for his twitter posts regarding politics", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமுதுகெலும்பு இல்லாத கோழை இந்த கமல்ஹாசன்: ஹெச்.ராஜா\nமுதுகெலும்பு இல்லாத கோழை இந்த கமல்ஹாசன்: ஹெச்.ராஜா\nமுதல்வர் கனவு காண கமல்ஹாசனுக்கும் உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால்....\nநடிகர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டரில் சில கருத்துகளை பதிவிட்டார். அவற்றினை தனது ஆஸ்தான ஸ்டைலான கவிதை வடிவில் எழுதியிருந்தார். பலருக்கும் அவரது ட்வீட் புரியவில்லை. ரசிகர்களும் “ஒன்னும் புரியலையே தலைவா” என்று சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போடத் துவங்கிவிட்டனர். அவரது ட்வீட்டை சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில், “நான் முடிவு செய்துவிட்டால் முதல்வர் ஆகிவிடுவேன். தோற்றால் போராளியாவேன்” என்பது தான். ஆனால், அரசியல் பார்வையோடு தான் இதை பதிவிட்டிருக்கிறாரா என்பதை கமல் தான் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும், தனது பதிவு புரியாதவர்கள் நாளை (இன்று) ஆங்கில பத்திரிகைகளில் வெளியாகவுள்ள செய்தியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஅப்படி என்னதான் அறிவிப்பு வரும் என்று பார்த்தால், வரும் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள புரோ கபடி லீக்கில், ‘தமிழ் தலைவாஸ்’ அணிக்கு பிராண்ட் அம்பாசிடராக கமல் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு தான் வெளியானது.\nஇதனால், கமல் அரசியலுக்கு வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கூறிய நடிகை கஸ்தூரி, புரோ கபடி லீக் அறிவிப்பு வந்தவுடன், “கடைசியில் கபடிக்கு தான் இத்தனை தலையபிச்சிக்க வெச்சாராமா” என்று கலாய்த்துள்ளார். முன்னதாக, கமலின் இந்த கவிதை அறிக்கையை, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து கஸ்தூரி வெளியிட்டிருந்தார்.\nகடைசில கபடிக்குதான் இத்தனை தலையபிச்சிக்க வெச்சாராமா \nஇருப்பினும், இந்த ட்வீட்டினால் கமலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “ஏற்கெனவே நான் சொல்லியிருப்பது போல், நாட்டில் இருக்கிற மக்கள்தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. இதனால், முதல்வர் கனவு காண கமல்ஹாசனுக்கும் உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும்.\nவிஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ஒரேடியாக அழுது, புலம்பி இந்த நாட்டை விட்டே ஓடிப்போகப்போகிறேன் என்று சொன்ன கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் நாளை முதலமைச்சரானால் தமிழ்நாட்டோட கதி என்னவாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அவர் ட்வீட்டில் முடிவெடுத்தால் முதல்வர் என்கிறார். அவர் முடிவு எடுத்தாலும் ஒருக்காலும் தமிழக முதல்வராக வர முடியாது. காரணம் அவர் முதுகெலும்பற்ற ஒரு கோழை. அதனால், மக்கள் அவரை எல்லாம் ஏற்கவே மாட்டார்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nமீண்டும் சூடு பிடிக்கும் ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: வருமான வரித்துறையினரின் அதிரடி முடிவுகள்\nசின்னப்பிள்ளை … இவர் காலில் விழுந்து வாஜ்பாய் ஆசி பெற்ற காரணம் இது தான்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் : உடல்நலம் பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்கத் தேவையில்லை – முதல்வர் பழனிசாமி கடிதம்\nசவுதியில் குட்டைப்பாவாடை அணிந்து வீடியோ: பெண் கைது\nஎம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை : நாளை ஐகோர்ட்டில் விசாரணை\nஎன்.ஜி.கே தொகுதியில் எம்.எல். ஏ -வாகும் நடிகர் சூர்யா\nஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாணவர் தலைவராக நடித்திருந்தார்.\nதிட்டம் போட தெரியல என்று கதறிய அனிருத்… கோவத்தில் பொருள்களை உடைத்த வீடியோ\nkolamaavu kokila : கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்றுள்ள “திட்டம் போட தெரியல” பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/actress-never-changed-her-decision/", "date_download": "2018-08-18T01:09:00Z", "digest": "sha1:I4DLKCVW3VE4W3BZOKC2QCVVIAN6VXHS", "length": 6858, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai கொள்கை மாற்றாத டீச்சர் நடிகை - Cinema Parvai", "raw_content": "\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nகொள்கை மாற்றாத டீச்சர் நடிகை\nதென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த டீச்சர் நடிகை மீது புகார் பட்டியலை வாசிக்கிறார்களாம் அவருடன் நடித்த ஹீரோக்கள். நடிகை அறிமுகமான படத்தை பார்த்த பல நடிகர்கள் அவரை கமிட் பண்ண எவ்வளவோ முயற்சித்தார்களாம். படிப்புதான் முக்கியம் என்று போனவர் இப்போதுதான் வந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி இருக்கிறாராம்.\nநடிகை நடிப்பைத் தவிர வேறு எந்த கெமிஸ்ட்ரிக்கும் இடம் கொடுக்க மாட்றாராம். இதனால் தான் நடிகர்களுடன் பிரச்சனை ஏற்படுகிறதாம். இதனால் பெரிய ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போடும் வாய்ப்பு மிஸ் ஆகும் என்று பலரும் கூறுகிறார்களாம். ஆனால் நடிகை பரவாயில்லை என்கிறாராம்.\nPrevious Postசினிமாவை விட்டே வெளியேறுகிறாரா ஏமி ஜாக்சன் Next Postரத யாத்திரைக்கு எதிர்ப்பு - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர்\nகதை தேர்வு செய்ய குழம்பும் நடிகை\nமூன்றெழுத்து நடிகருக்கு மீண்டும் காதல்\nதேவதாஸ் ஆன இரண்டெழுத்து நடிகர்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/category?authorid=1%202874", "date_download": "2018-08-18T00:57:26Z", "digest": "sha1:MD7ZFQGZJAKWXLMBYL6EHT2WB27ZAZHH", "length": 2931, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "பா.ச.அரிபாபு", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சிறுகதைகள் சரித்திரநாவல்கள் தத்துவம் மனோதத்துவம் English சினிமா, இசை வரலாறு குறுந்தகடுகள் அறிவியல் ஓவியங்கள் பொது அறிவு உடல்நலம், மருத்துவம் கதைகள் இஸ்லாம் நகைச்சுவை மேலும்...\nமனிதன் பதிப்பகம்மெரினா புக்ஸ்செல்வம் பதிப்பகம்செங்குயில் பதிப்பகம்வேங்கை பதிப்பகம்பெரிகாம் பதிப்பகம்தர்ம ஆய்வு மையம்நெல்லை செல்வம் வெளியீடுசமன் வெளியீடுஜெய்கோஅபயம் பப்ளிஷர்ஸ்தமிழ்வெளிஅடவி பதிப்பகம்Madras Naturalists's Societyபூங்கொடி பதிப்பகம் மேலும்...\nகருத்து - பட்டறை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/07/bigg-boss-bigg-boss.html", "date_download": "2018-08-18T00:24:29Z", "digest": "sha1:AW4JZPIWQD24E3BDFCJMSCIJO4XXYK4W", "length": 22669, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "BIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.
| TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nBIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.\nby விவசாயி செய்திகள் 06:39:00 - 0\nBIGG BOSS ஓவியா வெற்றிபெறுவது உறுதி.
BIGG BOSS மனித நிஜ உணர்வுகளின் பிம்பம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▪பல போலி முகங்களின் உண்மையான முகங்களை தெளிவாகக் காட்டுகிறது..\n▪நம்பமுடியாத சில மனிதர்களின் உண்மையான உணர்வுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது...\n▪நாம் மற்றவர்களின் கதை கேட்டு அவமதித்து, கண்டுகொள்ளாமல் துரத்தி/தூர வீசியவர்களின் நியாய தர்மங்களையும் காட்டுகிறது.\n▪நாம், நம்பித் தொலைக்கின்ற/தொடருகின்ற திரை நட்சத்திரங்களின் போலிப் பிம்பங்களையும் தோலுரித்து தொங்க விடுகிறது\n▪திரைப் பிரபலங்கள் அனைவரும், உண்மையில் நடிகர்களே என்பதை தெளிவாக உணர வைத்திருக்கிறது.\n▪திரைப் பிரபலங்கள் அனைவரும் நம்மைப் போன்றவர்களே (கமல், ரஜினி, விஜய் மற்றும் அஜித் உட்பட) என்பதை மிக மிகத் தெளிவாக உணர வைத்திருக்கிறது.\n▪பணம், பெயர் மற்றும் புகழ் உள்ள மனிதர்களை (இலட்சியவாதிகள், கொள்கைவாதிகள், பொதுநலவாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தேச நலன் விரும்பிகள் போன்றோர்களைத் தவிர) இது போன்ற BIGG BOSS வீட்டில் 30 நாட்கள் மட்டுமே தங்கவிட்டால் போதும்...\nஅவர்களின் உண்மையான சுயரூபம் அனைவருக்கும் தெரிந்து விடும்.\n▪நாம், ஒவ்வொருவரின் வெளிக் காட்டும் உணர்வுகளையும், பேச்சுக்களையும், செயற்பாடுகளையும் மற்றும் நடைமுறைகளையும் வைத்துக் கொண்டே... நாம், நம்பித் தொலைக்கிறோம்.
ஆனால், அவர்கள் மட்டுமே (ஒரு சிலரைத் தவிர) நமக்கு எதிரானவர்களாக மாறுவார்கள் என்பதை... நாம் ஒரு கணம்கூட நினைத்துப் பார்ப்பதில்லை\n▪ நமது அனைத்துச் செயற்பாடுகளையும் யாரோ ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை... நாம், எப்போதுமே மறந்து விடுகிறோம்.
அதனாலேயே,
நமது நிஜ உணர்வுகளின் போலிப் பிம்பங்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பி நடிக்கத் தொடங்கி விடுகிறோம். (பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல்)
BIGG BOSS தேவையற்ற ஒன்றே என்று கருதினால்...
தற்போதைய சூழலில், BIGG BOSS தேவையான ஒன்றே..
தற்போது....
சரியான தலைமை இல்லாத தமிழர்களிடையே (தற்போது ஈழம் மற்றும் தமிழகத்தின் இளைஞர்கள், திரைப்பட நாயகர்களே, தமது மாயைத் தலைவர்கள் என பைத்தியக்காரத்தனமாக நம்பி தாய்நாட்டையும் மற்றும் தாய் தந்தையரையும் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருப்பதால்) BIGG BOSS மூலம் அரசியல்வாதிகளும், திரைநாயகர்களும் போலியானவர்களே என்பதை நம்ப வைக்கும்.
இந்த BIGG BOSS ஐ விமர்சனங்களின் ஊடாக பார்ப்பவர்களே நமது நாட்டில் அதிகம்.
தற்போது....
சரியான தலைமை இல்லாத தமிழர்களிடையே (தற்போது ஈழம் மற்றும் தமிழகத்தின் இளைஞர்கள், திரைப்பட நாயகர்களே, தமது மாயைத் தலைவர்கள் என பைத்தியக்காரத்தனமாக நம்பி தாய்நாட்டையும் மற்றும் தாய் தந்தையரையும் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருப்பதால்) BIGG BOSS மூலம் அரசியல்வாதிகளும், திரைநாயகர்களும் போலியானவர்களே என்பதை நம்ப வைக்கும்.
இந்த BIGG BOSS ஐ விமர்சனங்களின் ஊடாக பார்ப்பவர்களே நமது நாட்டில் அதிகம்.
ஆனால், கதிராமங்கலம், நெடுவாசல் தற்போது ஈழத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோருக்காக வீதிவரை இறங்கி நின்று போராடும் பெற்றோர், உறவினர்களுக்காக.... இன்றுவரை ஆதரவாகத் துடிப்பவர்களும்/ ஊடக ஆதரவும் மிகமிகக் குறைவே..\nதற்போது நம் தமிழர்களிடையே இனம், மொழி மற்றும் தேசம் சார்ந்த விடுதலைப் போராட்ட எழுச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு...
BIGG BOSS போன்ற திரைக் கவர்ச்சி நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.\nபல கோடிப் பார்வையாளர்கள் தினமும் ஒரே நேரத்தில் பார்வையிடுகிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழரும் உட்பட...
BIGG BOSS ஆரம்பித்த முதல் வாரங்களில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றதோ அந்தளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களுக்கும் உள்ளானது.\nதற்போது கடந்த வாரங்கள் வரையும் திரைப்படங்களை விடவும் மிகுந்த உச்சக்கட்டம் அடைந்துள்ளதோடு சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. ஒரு தேசத்திற்குத் தேவையான முக்கிய செய்திகளை இருட்டடிப்பு செய்து கொண்டு திரை நாயகர்களின் கூத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தற்போதைய ஊடகங்கள் (ஒரு சில ஊடகங்களைத் தவிர) மிகவும் சிறப்பாகவே செய்து வருகின்றன.
ஆனால், இதுவரையும் அரிதாரம் பூசிய நடிகர்களின் வெளி நடிப்பை திரைகளில் கண்டு அவர்களை தலைவர்களாகவும், கடவுளாகவும் மற்றும் தேவதைகளாகவும் பார்த்து மனதிற்குள் வணங்கி வந்த பல மூடர்களின் மூளைகளில் ஓங்கி ஆணி அறைந்தது போல் BIGG BOSS வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.\nஅத்தோடு ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் BIGG BOSS வீட்டிற்குள் இருப்பவர்களில் ஓவியாவைத் தவிர மற்ற அனைவரையும் அதிலும் குறிப்பாக காயத்ரி ரகுராம், கவிஞர் சினேகன் மற்றும் ஜூலி போன்றோரை கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆஹா... இப்போதுதான் சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் திரைநாயகர்களின் உண்மை முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.\nஇவ்வாறாக மக்கள் நம்பித் தொலைக்கின்ற ஒவ்வொரு திரைப்பிரபலங்களையும் வரிசையாக இந்த BIGG BOSS வீட்டினில் தங்க வைத்து அவர்களின் போலி முகமூடிகளை அகற்றி உண்மை முகங்களை காண்பிக்க வேண்டும். அதேபோல் போலி முகமூடி அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றித் திரிகின்ற அரசியல்வாதிகளையும் இந்த BIGG BOSS வீட்டினில் ஒரு மாதமாவது தங்க வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால்....\nஇன்று ஓவியாவைப் போன்ற சகிப்புத்தன்மை நிறைந்த பல நல்ல உள்ளங்களை அடையாளம் கண்டறிந்தது போல் காயத்ரி, ஜூலி மற்றும் சினேகன் போன்றோரைப் போல் உண்மை முகங்களையும் அறிந்து கொள்ள முடியும்.\nஅத்தோடு போலி அரசியல்வாதிகளையும் திரைப்பட நாயகர்களையும் சிறந்த தலைவர்களாக நம்பி பின்தொடர்ந்த ரசிகர்கள் அந்த மாயையில் இருந்து விடுபட்டு தற்போதைய நாட்டின் முக்கிய தேவைகள் எவை என்பதை உணர்ந்து இனம், மொழி, தேசமே... நாம் கௌரவத்தோடும், மானத்தோடும் சுதந்திரத்தோடும் மற்றும் நிம்மதியோடும் வாழ உகந்தது என்பதை உணர்ந்து புதியதொரு பாதையில் பயணிப்பார்கள்.
- வல்வை அகலினியன்\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/238372", "date_download": "2018-08-18T00:47:17Z", "digest": "sha1:DP3W2YW4JMIFVTRLOWNPAJBCCWZWG6S5", "length": 20209, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "கொட்டும் மழையில் மலர்ந்த காதல்... வங்கதேசத்தை அதிரவைத்த புகைப்படம் - Kathiravan.com", "raw_content": "\nகேரள வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகரின் அம்மா… அதிரடியாக மீட்கப்பட்ட சம்பவம் (படம் இணைப்பு)\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nவெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் கேரள மக்கள்… வைரலாகும் வீடியோ\nபிரபல நடிகை திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கியது திரையுலகம்\nகொட்டும் மழையில் மலர்ந்த காதல்… வங்கதேசத்தை அதிரவைத்த புகைப்படம்\nபிறப்பு : - இறப்பு :\nகொட்டும் மழையில் மலர்ந்த காதல்… வங்கதேசத்தை அதிரவைத்த புகைப்படம்\nவங்கதேசத்தில் கொட்டும் மழையில் முத்தமிட்டுக் கொண்டிருந்த காதலர்களை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிறகு அவருக்கு தர்ம அடியும் கொடுக்கப்பட்டது. வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள பல்கலைகழகம் சர்ச்சைகளுக்கு பெயர் போனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சில மாதங்களாக போராட்டங்களும், வன்முறை சம்பங்களும் அதிகளவில் நடைபெற்றுள்ளன. கைகளை கோர்த்து நின்ற மாணவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.\nவங்கதேசத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றில் ஜிபான் அஹமது புகைப்பட பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வாரம் தாக்கா பல்லைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது திடீரென மழை வெளுத்து வாங்கியது. மழையின கோர தாண்டவத்தின் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.\nபல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஒரு காதல் ஜோடி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் முத்தமிட்டுக் கொண்டனர். இந்த காட்சியை தற்செயலாக படம் பிடித்த ஜிப்பான் அஹமத் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த புகைப்படத்தை பதிவேற்றியதற்காக அவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.\nநீக்கத்திற்கான காரணம் குறித்து கேட்ட போது பதில் கூறவில்லை என ஜிப்பான் அஹமத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இஸ்லாமிய நாடாட வங்கதேசத்தில் பெண்கள் வெளியே வருவதற்கு கூட கட்டுப்பாடுகள் உண்டு, ஆனால் புகைப்படத்தினை வெளியிட அனுமதித்தது அந்நாட்டு இளைஞர்களிடன் வரவேற்பினை பெற்றுள்ளது.\nPrevious: விஜயகலாவின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம்\nNext: இதுவரை பலரும் அறிந்திராத கலைஞர் கருணாநிதியின் முதல் காதல் கதை\nபதவி ஏற்கும் திகதியை அறிவித்தார் இம்ரான்கான்\nகலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு தூக்குத்தண்டனை\nஎயிட்ஸ் நோய்க்கு பயந்து இளைஞர் செய்த மோசமான காரியம்\nசமஸ்டி அடிப்படையிலான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற கொள்ளையிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகவில்லை என வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு அட்டன் பொலிஸார் தெரிவித்துளளனர். அட்டன் குடாகம பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக சிறிய அளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒரு சில வீடுகளில் கூரைகளின் நடுவில் மழை நீர் கசிவதனை தொடர்ந்து பார்வையிட்ட பொலிஸார் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் உள்ள 10 வீடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள விகாரையில் குடியேறுமாறு அறிவித்துள்ளதோடு இந்த மண்சரிவு தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த வீடுகளில் வாழும் பலரது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தற்போது இந்த வீடுகளில் வாழ …\nபாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nதெஹிவளையில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றின் பிரதம பராமரிப்பாளராகவும், பாலியல் தொழிலாளியாகவும் கடமையாற்றி வரும் பெண் ஒருவருக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் பார்லர் ஒன்றில் இரகசியமாக நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றை அண்மையில் பொலிஸார் சுற்றி வளைத்திருந்தனர். இதன்போது குறித்த மையத்தின் முகாமையாளரும், பிரதம பராமரிப்பாளர் உள்ளிட்ட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பெண்களில் ஒரு பெண்ணுக்கே இவ்வாறு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 6ஆம் திகதி இந்தப் பெண்களை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதன்போது அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விடுதலை செய்யுமாறு நீதவான் லோசன அபேவிக்ரம உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை அண்மையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் குறித்த பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் காணப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நீதிமன்றில் முன்னிலையாகும் போது கௌரவமான ஆடைகளை அணிந்து வர வேண்டியது அவசியமானது என நீதவான் குறித்த …\nபொலன்னறுவையில் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்\nபொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரை அவரின் கணவரே கொலை செயது வீசியதாக குறித்த ஆசிரியையின் கணவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குறித்த ஆசிரியையை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணவில்லை என குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் கணவர் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே தனது மனைவியை தாமே கொலை செய்ததாக காவல் நிலையத்தில் சாட்சியமளித்துள்ளார். தனது மனைவியுடன் வாய் தர்க்கம் அதிகரித்ததாகவும், அதனை தொடர்ந்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், பின்னர் மனைவியின் சடலத்தினை மொறகஹகந்த நீர்தேக்கத்திற்கு அருகில் வீசியதாகவும் சாட்சியமளித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமஹிந்த ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்று சென்றனர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சற்றுமுன்னர் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 11.15 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர். சுமார் 03 மணித்தியாலங்களின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/it-professionals-are-not-disposable-commodities-1/", "date_download": "2018-08-18T01:34:21Z", "digest": "sha1:WFBTYO4EHUOGW5DZQXF5XIEHGYK2SIAD", "length": 29275, "nlines": 123, "source_domain": "new-democrats.com", "title": "ஐ.டி ஊழியர்கள் என்ன கிள்ளுக்கீரையா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nநெடுவாசல், விவசாயம், ஐ.டி பிரச்சனைகள் – ஐ.டி சங்கக் கூட்ட விவாதங்கள்\nஐ.டி ஊழியர்கள் என்ன கிள்ளுக்கீரையா\nFiled under அறிவியல், இந்தியா, உலகம், பணியிட உரிமைகள், பத்திரிகை, முதலாளிகள்\nபுதிய தொழிலாளி, மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை\nநவீன தொழில்நுட்பம் : வளர்ச்சியா, வதையா\nதொழில்நுட்ப மாற்றங்கள் நடக்காத துறைகள் இல்லை. சாதாரண சாலைப் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால் கூட 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வோல்வோ குளிரூட்டப்பட்ட பேருந்து, சொகுசு பேருந்து என்று புதிய வகை பேருந்துகள் வந்திருக்கின்றன. வங்கிகளில் ‘பாஸ்புக் நான்கு வங்கி ஊழியர்கள் கைமாறி கடைசியில் காசாளரிடமிருந்து பணத்தை பெற வேண்டும்’ என்ற நிலைமை மாறி, தானியங்கி எந்திரங்களில் மனிதத் தலையீடு இல்லாமல் 24 மணி நேரமும் பணம் எடுத்துக் கொள்ள முடிகிறது.\nஇதே போல மருத்துவத் துறையிலும் தொழில்நுட்ப மாற்றங்கள் பெரும் பாய்ச்சல்களை கண்டுள்ளன. சட்டத் துறையை எடுத்துக் கொண்டால் புதிய சட்டங்கள், சட்ட திருத்தங்கள், தினம் தோறும் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் வெளியாகும் தீர்ப்புகள் என பயன்படுத்தப்படும் ஆதாரங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. அனைத்துத் துறைகளுக்கும் மாணவர்களை பயிற்றுவிக்கும், ஆய்வுகளை செய்யும் கல்வித் துறையை எடுத்துக் கொண்டால் இந்த மாற்றங்கள் அனைத்தும் பாடத் திட்டங்களிலும் ஆய்வுத் திட்டங்களிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளபட வேண்டியிருக்கிறது.\nஇது போலவே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையிலும் பல தொழில்நுட்ப மாற்றங்கள் நடந்திருக்கின்றன. நேரப் பகிர்வு முறையில் பலர் பணியாற்றிய மெயின்ஃப்ரேம் தொழில்நுட்பம், அதைத் தொடர்ந்த தனிகணினிகளை இணைத்த நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம், அதை விரிவுபடுத்தி கணினி வலைப்பின்னல்களின் வலைப்பின்னலாக இணையம் என மாறி வந்திருக்கிறது. கணினிகளின் பயன்பாடு வெறும் உரைகளும், எண்களும் என்ற வடிவிலான தகவல் பரிமாற்றம், பின்னர் படங்கள், வீடியோக்கள் என்று செறிவடைந்திருக்கிறது. மொத்தையான மேசைக் கணினியில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் இப்போது கையடக்க ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்துப்படும்படியாக மாறியிருக்கின்றன. இன்னும் கணினி நிரல் மொழிகள், மென்பொருள் உருவாக்க முறை, தரவுத்தள (டேட்டா பேஸ்) நுட்பங்கள் என ஒவ்வொன்றிலும் வேகமான மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.\nஒரு துறையில் நிகழும் இது போன்ற மாற்றங்களை அதில் பணிபுரியும் தனிநபர்களும், குழுக்களும், நிறுவனங்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள்\nபோக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை, சட்டத் துறை, கல்வித் துறை என்ற ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்களை உள்வாங்கும் போது ஏற்கனவே அந்தத் துறையில் பட்டம் பெற்று, பயிற்சி பெற்று, பல ஆண்டுகளாக பணி புரியும் ஊழியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு வருவதில்லை. மருத்துவர்கள் தொடர்ந்து புதிய மாற்றங்களை கற்றுக் கொண்டு தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்கிறார்கள். புதிய ரக பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஓட்டுனர்கள் தனிச்சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு அதில் அமர்த்தப்படுகிறார்கள். ஆசிரியர்கள் பாடத் திட்டத்தில் ஏற்படும் புதுப்பித்தல்களை கற்றுக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தமது தகுதியை நிலைநாட்டிக் கொள்ள வழி செய்யப்படுகிறது.\nசுருக்கமாகச் சொன்னால், இந்தத் துறைகளில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மாற்றங்களை அமல்படுத்துவது பற்றி திட்டமிடும் போது ஊழியர்களை இணைத்தே திட்டமிடுகின்றன. புதிய தொழில் நுட்பத்தை காரணம் காட்டி பல ஆண்டுகள் வேலை செய்த அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து விட்டு குறைந்த சம்பளத்தில் புதிய, குறைந்த வயது இளைஞர்களை எடுத்து அவர்களை பயிற்றுவித்து பயன்படுத்துகின்ற உத்தியை வேறுவிதமாக நடைமுறைப்படுத்துகின்றனர். அனுபவசாலிகள் கணிசமானோரை தக்க வைத்துக் கொண்டு, குறைந்த சம்பளத்தில் அதிக எண்ணிக்கை இளம் தொழிலாளர்களை வைத்துக் கொள்வதுதான் அந்த உத்தி.\nஆனால், ஐ.டி துறையில் இந்த நடைமுறை கணிசமாக மாறுபடுகிறது. ஐ.டி துறையிலும் நிறுவனங்கள் பெருத்த பொருள் செலவில் பயிற்றுவிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக, இன்ஃபோசிஸ் ஒரே நேரத்தில் 14,000 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான பயிற்சி மையத்தை மைசூரில் அமைத்துள்ளது. இப்போது, டி.சி.எஸ் அதை விட பெரிய அளவில் உலகிலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் பயிற்சி மையம் என்று சொல்லப்படும்படியாக 15,000 ஊழியர்களை ஒரே நேரத்தில் பயிற்றுவிக்கும் படியான வசதியை திருவனந்தபுரத்தில் உருவாக்கி வருகிறது. இது போக, எல்லா ஐ.டி நிறுவனங்களும் ஊழியர்கள் தமது தொழில்நுட்ப திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சித் திட்டங்களையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.\nஇவ்வளவு இருந்தும், ஒவ்வொரு முறை மாற்றங்கள் நிகழும் போதும் ஐ.டி துறை முதலாளிகள் வட்டங்களிலும் வணிக பத்திரிகைகளிலும் ‘எத்தனை ஊழியர்களை வேலை இழப்பார்கள், எந்த நிறுவனம் எத்தனை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறது’ என்பதை மையமாக வைத்தே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இப்போது கடந்த 2 ஆண்டுகளாக ‘ஆட்டமேஷன், கிளவுட் தொழில்நுட்பம், பிக் டேட்டா, டேட்டா மைனிங், டேட்டா சைன்ஸ் என்று புதிய தொழில்நுட்பங்கள் வருவதால் இந்தியாவின் 37 லட்சம் ஐ.டி ஊழியர்களில் பலர் வேலையிழக்க நேரிடும்’ என்று தகவல்கள் கசிய விடப்படுகின்றன. குறிப்பாக, பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் படைத்த ஊழியர்களின் வேலைக்கு அச்சுறுத்தல் என்று பேசப்படுகிறது. “இந்திய ஐ.டி ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராக இல்லை” என்று காரணம் சொல்லப்படுகிறது.\nஉதாரணமாக, “65% இந்திய ஐ.டி ஊழியர்களை புதிய தொழில்நுட்பங்களில் பயிற்றுவிக்க முடியாது.” என்றும் 39 லட்சம் ஐ.டி “ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் தர பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பது அதற்குக் காரணம்” என்றும் கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் சீனிவாஸ் கந்தூலா கூறியிருக்கிறார். சில பொறியியல் பட்டதாரிகளில் 80% பேர் ஐ.டி துறையில் வேலை செய்வதற்கு லாயக்கற்றவர்கள் என்று ஒரு ஆய்வு வெளியிடப்படுகிறது.\nவேறு எந்தத் துறை பற்றியும் இது போன்ற விவாதங்கள் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் போய் விட்டதால் 40 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் அனைவரும் பணிஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவத் துறையில் பேசப்படுவதில்லை. வயதான, நீண்ட அனுபவம் படைத்த மருத்துவர்கள் மதித்து போற்றப்படுகின்றனர். வங்கித் துறையில் முறையான கல்வித் தகுதி குறைவான ஊழியர்கள் கூட புதிய கணினி தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு தம்மை மாற்றிக் கொண்டு ஓய்வு பெறும் வயது வரை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இது போலவே ஆசிரியர்களும், ஆராய்ச்சி துறையினரும், கணக்கியல் நிபுணர்களும் தொடர்ந்து தம்மை புதுப்பித்துக் கொண்டு செயல்பாட்டில் இருக்கின்றனர்.\nஐ.டி துறையில் மட்டும் ஏன் இந்த வேறுபாடு ஐ.டி துறையில் மட்டும் பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை, நிறுவனத்தை விட்டு வெளியேறிய/வெளியேற்றப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்று அறிவித்துக் கொண்டிருப்பது ஏன் ஐ.டி துறையில் மட்டும் பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை, நிறுவனத்தை விட்டு வெளியேறிய/வெளியேற்றப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்று அறிவித்துக் கொண்டிருப்பது ஏன் ஏதோ பெருநகரங்களில் காற்று மாசுபடுதலை அளக்கும் நுண்துகள்களின் வீதத்தை அளந்து தினமும் தகவல் வெளியிடுவது போல இந்த புள்ளிவிபரங்களில் வணிக பத்திரிகைகள் கவனம் செலுத்துவது ஏன்\nஉதாரணமாக, 2016-ம் ஆண்டில் 9,000 ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பியதாகவும் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 5,700 ஊழியர்களை மட்டும் (கடந்த ஆண்டு எண்ணிக்கை 17,000-ல் 3-ல் ஒரு பங்கு) வேலைக்கு எடுத்திருப்பதாகவும் இன்ஃபோசிஸ் பதிவு செய்திருக்கிறது.\nஇதற்குக் காரணம் இந்திய ஐ.டி சேவை வழங்கும் நிறுவனங்களின் அடிப்படை அணுகுமுறையிலேயே உள்ளது. பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்தே அவை செயல்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் அந்நிறுவனங்கள் தத்தமது நாடுகளிலிருந்து சேவை வழங்குவதற்கான செலவை குறைக்கும் முகமாக இந்தியாவுக்கு அனுப்பி செய்து வாங்குவது என்ற அடிப்படையில் இந்திய ஐ.டி துறை வளர்ந்திருக்கிறது. அத்தகைய மரபணுவோடு பிறந்த இந்திய ஐ.டி துறை அதன் விளைவுகளை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇதெல்லாம் தொழில்துறையில் சகஜம்தானே என்கிற கேள்வி எழலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் ஏனைய துறைகளில் காணப்படும் உறவுகளிலிருந்து மாறுபட்டது சேவைத் துறை உறவு. இந்த உறவு குறித்தும், அதன் விபரீதம் குறித்தும் அடுத்த இதழில் பார்க்கலாம்.\nபுதிய தொழிலாளி, மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை\nகட்டுரையின் 2-வது பகுதி (ஏப்ரல் 2017 புதிய தொழிலாளி இதழில் வெளியானது) – ஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nIoT : உலகை அடிமைப்படுத்தும் வலைப்பின்னல்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nஉழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nCategories Select Category அமைப்பு (225) போராட்டம் (221) பு.ஜ.தொ.மு (20) பு.ஜ.தொ.மு-ஐ.டி (119) இடம் (468) இந்தியா (260) உலகம் (82) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (493) அரசியல் (196) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (113) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (311) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (487) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (75) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (87) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (50) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nகருத்தரங்கம் : 28.1.2018 காலை 9.30 மணி கேரளா சமாஜம், நேரு பூங்கா அருகில், பெரியார் நெடுஞ்சாலை, சென்னை பொதுக்கூட்டம் : 28.1.2018 மாலை 6 மணி...\nவாகன ஓட்டுநர்கள்: நகர மறுக்கும் வாழ்க்கை…\nவாகனம் ஓட்டும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையில்லை; போதிய வருமானமுமில்லை மருத்துவ வசதியில்லை; பணிப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாக்கும் சட்டங்களும் இல்லை, எனவே, எதிர்கால வாழ்க்கைக்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7480-Rava-semia-Idly", "date_download": "2018-08-18T01:14:26Z", "digest": "sha1:H37HX4VBPMCPSH5KLC56OJU6T63Z64VD", "length": 6933, "nlines": 215, "source_domain": "www.brahminsnet.com", "title": "Rava semia Idly.", "raw_content": "\nரவை – 1 கப்\nசேமியா – 1/4 கப்\nசற்று புளித்த தயிர் – 1 கப்\nநெய் – 2 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்\nமிளகு தூள் – 1/2 டீஸ்பூன்\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\n• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியா மற்றும் ரவையை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.\n• பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n• பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு , கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும்.\n• பிறகு அதோடு தயிர், கொத்தமல்லி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.\n• இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி\n« உருளைக்கிழங்கு பொடிமாஸ் | Potato chips »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-08-18T00:23:17Z", "digest": "sha1:EV53DUHVLELJ7OEPOWFWJKRSXWVKWGU5", "length": 7468, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கூட்டமைப்பில் இருந்து நீங்குமா புளொட் அமைப்பு\nகூட்டமைப்பில் இருந்து நீங்குமா புளொட் அமைப்பு\nதமிழரசுக் கட்சியுடன் அதிருப்தியடைந்துள்ள புளொட் அமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நீடிப்பது குறித்து, மத்திய குழுவைக் கூட்டியே ஆராய்ந்த பின்னரே முடிவை அறிவிக்கும் என, அந்த அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றன.\nஇதேபோன்று புளொட் அமைப்பும் தமிழரசுக் கட்சியில் அதிருப்தியுற்றிருக்கின்ற நிலையில், அக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து புளொட் அமைப்பின் மத்திய குழுவை கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், புளொட் அமைப்பு தனித்து நின்று உள்ளுராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள போவதில்லை என கூறியுள்ள சித்தார்த்தன், தங்கள் முடிவும் விரைவில் தெரிவிக்கப்படுமென்றார்.\nPrevious articleதமிழ் பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு – வி.இராதாகிருஷ்ணன்\nNext articleகுற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் – முதலமைச்சர்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/feb/15/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2863828.html", "date_download": "2018-08-18T00:30:49Z", "digest": "sha1:YU4IQQFPVTXX2ESP435TDGRBMYYLX67W", "length": 9755, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் கூட்டம் நடத்த வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் கூட்டம் நடத்த வலியுறுத்தல்\nதமிழக அரசு அறிவுரைப்படி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுக்குழுக் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு\nவருவாய் அலுவலர் சங்கம் வலியுறுத்தியது.\nதமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க வட்டப் பேரவை மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆதிசக்திசிவகுமரிமன்னன் தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் எஸ்.கணேஷ், மாவட்டப் பொருளாளர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில், புதிய வட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டத் தலைவராக தணிகாசலம், செயலர் முருகன், பொருளாளர் வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், பிரசாந்த் ஆகியோர் தேர்வாகினர்.\nவிழாவில், தமிழ்மாநில வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சங்கரலிங்கம் தலைமையிலும், நேரடி நியமன உதவியாளர் சங்கத்தினர், சுந்தர், செல்வக்குமார், விமல், சிலம்பரசன் ஆகியோர் தலைமையிலும் 100 உறுப்பினர்கள், தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தில் இணைந்தனர்.\nதீர்மானங்கள்: பல்வேறு துறைகள், அமைப்புகளிலிருந்து தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தில் இணைத்துக்கொண்ட உறுப்பினர்களை சங்கம் வரவேற்கிறது, வருவாய்த் துறையில் பணியாற்றும் பல்வேறு அமைப்பினர்களை பிரித்துப் பார்க்காமல், ஒரே துறை அலுவலர்களாக நினைத்து அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர ஒருங்கிணைந்து செயல்படுவது, வட்டப் பேரவையில், விழுப்புரம் வட்டக் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பேரவை அங்கீகரிக்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத் துறை நிலைகளிலும் உள்ளோர் பணி மூப்பு பட்டியலை உரிய நாள்களில் வெளியிட வேண்டும், மார்ச் 15-இல் உதவியாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும், தமிழக அரசு அறிவுரைப்படி கோட்ட, மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2012/06/blog-post_30.html", "date_download": "2018-08-18T00:43:09Z", "digest": "sha1:24SKGGTSCLRAOD2HDH5YKJRCB754SHPA", "length": 45372, "nlines": 478, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!", "raw_content": "\nதனிமரம் வலையில் சிலருக்கு அண்ணியும் சிலருக்கு நாத்தனாரும். இன்னும் சிலருக்கு அக்காளும் ஆனா என் மதிப்புக்குரியு கலாப்பாட்டி இன்று 30/06/2012 சிங்கையில் மிக சிறப்பாகக்கொண்டாடிய பிறந்த நாள் விழாவுக்கு தனிமரம் வசந்த கால வேலையில் போகமுடியாத நிலையில் கடல் கடந்து நானும் என் வலை உறவுகள் உப்புமடச்சந்தியில் வாழ்த்துக்கின்றோம்\nபலரில் நானும் ஒரு தனிமரம் நேசன் குழு கடல் கடந்து வாழ்த்துகின்றோம்வாழ்க நூறாண்டு கலாப்பாட்டி தனிமரம் தரும் வாழ்த்துப்பாடல் இது\nஜீவன் குடும்பம் என்ற காவடியில் மூத்தவனாகவோ /மூத்தவளாகவோ இருந்தால் ஓவ்வொரு அடியும் பார்த்து எடுத்து தூக்கி ஆடணும் .ஏன்னா முதுகில் குத்தி இருக்கும் அலகு வலி அதிகம் புரிஞ்சுக்க\nகுடும்பம் என்ற கோயிலுக்காக நீ காலம் எல்லாம் விளக்காக இருந்தால் நானும் ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் ஏன்னா எனக்கும் குடும்பம் முக்கியம் முடிவு உன் கையில் வாரன் ரயிலுக்கு நேரம் ஆச்சு வாரன் ரயிலுக்கு நேரம் ஆச்சு வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 6/30/2012 02:00:00 pm\nநல்லிரவு வணக்கம் நேசன் .\nகலா அவர்களுக்கு இங்கேயும் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்\nகாலையில் உங்க தங்கச்சி வீட்டில் வாழ்த்திட்டேன் .\nஆனா இன்னமும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கைக்கு வரவில்லை :)))\nஎனக்கு தான் இங்கே காபி .\nயோகா அண்ணா வந்தாரென்றால் மிட்டாயை வாங்கி பத்திரமா வைங்க ,நாளைக்கு கலெக்ட் செய்யறேன்\nவாங்க அஞ்சலின் நலம் தானேம்ம் உங்கள் வாழ்த்து அவரைச் சேர்ந்தாள்ம்ம் உங்கள் வாழ்த்து அவரைச் சேர்ந்தாள் போதும் வாங்கோ ஒரு பால்க்கோ]ப்பி குடியுங்கோ\nயோகா அண்ணா வந்தாரென்றால் மிட்டாயை வாங்கி பத்திரமா வைங்க ,நாளைக்கு கலெக்ட் செய்யறேன்//ம்ம் நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்\nகலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.\nவாழ்த்துக்கள்... உங்கள் அண்ணிக்கு.. அண்ணா...\nஇந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா\nஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்\nகலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\\\\\\\\\\\\\\\nஐய்யய்யோ...இது பொய் வேணும்,வேணும்வரைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கூறலாமாஒன்று,இரண்டு பேரல்ல...30பேர்இருக்குமென நினைக்கிறேன் நேற்றிரவுசேர்ந்தே சாப்பிட்டோம் இதை நம்புங்கையா\nகடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.\\\\\\\\\nஹேமா இது ரொம்ப வயித்தெரிச்சல் தெரியுமா\nநேற்று என் பக்கத்தில வந்து கை கொடுத்தாரா{ஆசையில பிடிச்சுப்பாக்கதான்} நான் கொடுக்கவில்லை அந்த ஏமாற்றம் இங்க ...இப்படி வெளியாவுது...\nசொல்லு ஹேமா நான் செய்தது சரிதானே\nஇந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா\n இருக்கிறேன் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என் அழகைப் பார்த்து..\nஐய்யோஓஓ யாரவது காதலிக்கப் போறாக....அப்புறம் என் நாத்தனாரு\nமிக்க,மிக்க நன்றி என்னைப் இவ்வளவு பொறுப்பெடுத்து வாழ்த்தியமைக்கு.\nஇனி,என் மச்சினிச்சிக்கு ----வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க\nமூக்கு முட்டத் தின்னுப்புட்டு ஒண்ணுமே குடுக்கலைன்னு புலம்புற சத்திரியனை வன்மையா\nஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறவங்க கிட்ட(சத்திரியன்) ஜாக்கிரதையா இருங்க மச்சினி\nயோகா அண்ணா வந்தாரென்றால் மிட்டாயை வாங்கி பத்திரமா வைங்க ,நாளைக்கு கலெக்ட் செய்யறேன்////அந்தப் பெட்டை(ஹேமா) ஒண்ணுமே குடுக்கலை,அஞ்சலின்\nஇந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா கலாவின்ற பாட்டியினுடையதா\nகலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.////அய்,மாட்டிக்கினாருஇத்தன வருஷமா(40)வாங்கிச் சாப்புட்டிட்டு,இந்த வருஷம் ஒண்ணுமே கொடுக்கலைன்னா யாராச்சும் நம்புவாங்களாஇத்தன வருஷமா(40)வாங்கிச் சாப்புட்டிட்டு,இந்த வருஷம் ஒண்ணுமே கொடுக்கலைன்னா யாராச்சும் நம்புவாங்களாஹ\nநல்லிரவு வணக்கம் நேசன் .\nகலா அவர்களுக்கு இங்கேயும் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்\nகாலையில் உங்க தங்கச்சி வீட்டில் வாழ்த்திட்டேன் .\nஆனா இன்னமும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கைக்கு வரவில்லை :)))\nஎனக்கு தான் இங்கே காபி ./////\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .\nமேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு.\nகுடும்பம் என்ற கோயிலுக்காக நீ காலம் எல்லாம் விளக்காக இருந்தால் நானும் ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் ஏன்னா எனக்கும் குடும்பம் முக்கியம் முடிவு உன் கையில் வாரன் ரயிலுக்கு நேரம் ஆச்சு வாரன் ரயிலுக்கு நேரம் ஆச்சு வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட\nஹா..ஹா.... வெளிநாட்டுக் காதலைவிட வேலை முக்கியம்... சூப்பர்.\nஅதாரது நிசா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ ஐராங்கனி\nசீஈசீச எம்புட்டுப் பாசம் என்மேல அவருக்கு\nஎன்மேல..ஒரு தூசி விழுந்தாக்கூடத் தாங்கமாட்டாக...\nமேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு.\\\\\\\\\nஇந்த நேசன் இப்படி எனைய போட்டுப் புலம்பவுட்டுட்டாங்களே................\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .\nமேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கமாக இருக்கு அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கமாக இருக்கு////என்ன ஒரு ரெண்டு,மூண்டு(உங்களுக்கு)வயது வித்தியாசம் இருக்கும்////என்ன ஒரு ரெண்டு,மூண்டு(உங்களுக்கு)வயது வித்தியாசம் இருக்கும்ஹ\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .\nமேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு////\nஏன் என் அதிரா அக்கா படத்தில் இருப்பவரை விட வயது அதிகமானவரா\nஉங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் பாஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .\nமேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு////\nஏன் என் அதிரா அக்கா படத்தில் இருப்பவரை விட வயது அதிகமானவரா////தெரியாது,ராஜ்எல்லோருமே முகம் தெரியா உறவுகள் தான்.அதிலும் ஒரு சுகம்/நன்மை இருக்கிறது தான்\nகலாவுக்கு இந்தப் பிறந்த நாளை நிச்சயமா மறக்கவே முடியாது.நேசனும் அசத்திட்டார்.நான் நினைச்சே இருக்கேல்ல.கலா இன்னும் இன்னும் இளமையா இருக்கிற அளவுக்குச் சந்தோஷம் ஏறிப்போச்சு.நேசனோடு நானும் வாழ்த்துறேன் \nஅதிரா....நீங்கள் கலா எண்டே சொல்லுங்கோ.என்னைவிட,உங்களைவிட,யோகா அப்பாவைவிட,கலையைவிடச் சின்னவதான் கலா.மனசாலும் உடம்பாலயும் சின்னவதான்.நேசன் கலான்ர பாட்டியின்ர படத்தை மாத்திப் போட்டிட்டார்போல \nசத்ரியா....நான் என்னால முடிஞ்ச மட்டும் சமாளிக்கிறன்.அங்க இங்க வந்து குட்டையைக் குழப்பக்கூடாது சொல்லிப்போட்டன் \nmmmm// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்\nEnthu valthukkalum// வாழ்த்துக்கு நன்றி கவி அழகன் .\nகலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.///ஹீ வாங்க சத்ரியன் அண்ணா முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி \nவாழ்த்துக்கள்... உங்கள் அண்ணிக்கு.. அண்ணா..// நன்றி வாழ்த்துக்கு எஸ்தர்-சபி\nஇந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா கலாவின்ற பாட்டியினுடையதா//ஹீ அது எங்க பாட்டியின் சாயல் வாசந்தி எழுத்தாளர் படம்\nஎனது வாழ்த்துக்களும் நேசண்ணே...// நன்றி சுதா வாழ்த்துக்கும் வருகைக்கும்\nகலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\\\\\\\\\\\\\\\nஐய்யய்யோ...இது பொய் வேணும்,வேணும்வரைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கூறலாமாஒன்று,இரண்டு பேரல்ல...30பேர்இருக்குமென நினைக்கிறேன் நேற்றிரவுசேர்ந்தே சாப்பிட்டோம் இதை நம்புங்கையா\n//ம்ம் நான் நம்பி விட்டேன் கலாப்பாட்டி\nஇந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா\n இருக்கிறேன் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என் அழகைப் பார்த்து..\nஐய்யோஓஓ யாரவது காதலிக்கப் போறாக....அப்புறம் என் நாத்தனாரு\n30 June 2012 22:20 // மனசு தானே அழகு கலாப்பாட்டி அது தங்களிடம் நாம் பார்க்கின்றோம் உறவாக\nமிக்க,மிக்க நன்றி என்னைப் இவ்வளவு பொறுப்பெடுத்து வாழ்த்தியமைக்கு.\n30 June 2012 22:25 // எங்களோடு எப்போதும் கலாப்பாட்டி சேர்ந்து இருக்கும் போது நல்ல நாட்களில் வாழ்த்தக்கிடைப்பது எனக்கும் சந்தோசமே\nஇனி,என் மச்சினிச்சிக்கு ----வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க\n30 June 2012 22:27 //மாலை வணக்கம் யோகா ஐயா வாழ்த்துக்கு நன்றி\nமூக்கு முட்டத் தின்னுப்புட்டு ஒண்ணுமே குடுக்கலைன்னு புலம்புற சத்திரியனை வன்மையா\n30 June 2012 22:29 // ஓம் இப்படி சொல்லக்கூடாது இல்ல\nஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறவங்க கிட்ட(சத்திரியன்) ஜாக்கிரதையா இருங்க மச்சினி// தேவைப்பாட்டாள் கறுப்புப்பட்டியையும் பாவிக்கலாம்// தேவைப்பாட்டாள் கறுப்புப்பட்டியையும் பாவிக்கலாம்\nயோகா அண்ணா வந்தாரென்றால் மிட்டாயை வாங்கி பத்திரமா வைங்க ,நாளைக்கு கலெக்ட் செய்யறேன்////அந்தப் பெட்டை(ஹேமா) ஒண்ணுமே குடுக்கலை,அஞ்சலின்\n30 June 2012 22:34 //கைபேசியில் அவசரம் போல அவருக்கு\nஇந்த பதிவில மொதல்ல இருக்கிற போட்டோ கலாவினுடையதா கலாவின்ற பாட்டியினுடையதா\nகலா பாட்டி சிங்கப்பூர்ல பிறந்தநாள் பார்ட்டி எதுவும் நிகழ்த்தவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகடந்த 40 ஆண்டு காலமாக தனது பதினாறாவது பிறந்த நாளையே கொண்டாடி மகிழ்ந்து வரும் ‘இளமை’ப்புயல் கலா ரசிகர்கள்.////அய்,மாட்டிக்கினாருஇத்தன வருஷமா(40)வாங்கிச் சாப்புட்டிட்டு,இந்த வருஷம் ஒண்ணுமே கொடுக்கலைன்னா யாராச்சும் நம்புவாங்களாஇத்தன வருஷமா(40)வாங்கிச் சாப்புட்டிட்டு,இந்த வருஷம் ஒண்ணுமே கொடுக்கலைன்னா யாராச்சும் நம்புவாங்களாஹ\n30 June 2012 22:39 // அதுதானே பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் சத்ரியன் அண்ணா\nநல்லிரவு வணக்கம் நேசன் .\nகலா அவர்களுக்கு இங்கேயும் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்\nகாலையில் உங்க தங்கச்சி வீட்டில் வாழ்த்திட்டேன் .\nஆனா இன்னமும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கைக்கு வரவில்லை :)))\nஎனக்கு தான் இங்கே காபி ./////\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .\nமேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு.\n30 June 2012 22:47 // அவாவைப்போல ஆனால் இல்லை கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nகுடும்பம் என்ற கோயிலுக்காக நீ காலம் எல்லாம் விளக்காக இருந்தால் நானும் ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் ஏன்னா எனக்கும் குடும்பம் முக்கியம் முடிவு உன் கையில் வாரன் ரயிலுக்கு நேரம் ஆச்சு வாரன் ரயிலுக்கு நேரம் ஆச்சு வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட வேலை முக்கியம் வெளிநாட்டி காதலைவிட\nஹா..ஹா.... வெளிநாட்டுக் காதலைவிட வேலை முக்கியம்... சூப்பர்.\n// நன்றி அதிரா விரைவில் வரும் தொடர்\nஅதாரது நிசா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ ஐராங்கனி:)// ஐராங்கனி நாட்டில் இது நிசா பாரிஸ்குயில்:)// ஐராங்கனி நாட்டில் இது நிசா பாரிஸ்குயில் நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் அதிரா\nஇந்த நேசன் இப்படி எனைய போட்டுப் புலம்பவுட்டுட்டாங்களே................\n30 June 2012 23:20 // நான் இல்லை எல்லாம் யோகா ஐயா உபயம்\n//ஹீ கருக்குமட்டையும் கறுப்புப்பட்டியும் வரும் ஐயா\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .\nமேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கமாக இருக்கு அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கமாக இருக்கு////என்ன ஒரு ரெண்டு,மூண்டு(உங்களுக்கு)வயது வித்தியாசம் இருக்கும்////என்ன ஒரு ரெண்டு,மூண்டு(உங்களுக்கு)வயது வித்தியாசம் இருக்கும்ஹ\n30 June 2012 23:53 // சத்தியமா நான் ஏதுவும் அறியேன்\nஉங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் பாஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n30 June 2012 23:57 // வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ராச்.\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்.... கலாக்காவுக்கு .\nமேலே போட்டிருக்கும் படம் அவவுடையதுதானா அதனாலதான் எப்பூடி அழைப்பதெனத் தயக்கம்மாக இருக்கு////\nஏன் என் அதிரா அக்கா படத்தில் இருப்பவரை விட வயது அதிகமானவரா////தெரியாது,ராஜ்எல்லோருமே முகம் தெரியா உறவுகள் தான்.அதிலும் ஒரு சுகம்/நன்மை இருக்கிறது தான்\n1 July 2012 01:09 // உண்மைதான் யோகா ஐயா\nகலாவுக்கு இந்தப் பிறந்த நாளை நிச்சயமா மறக்கவே முடியாது.நேசனும் அசத்திட்டார்.நான் நினைச்சே இருக்கேல்ல.கலா இன்னும் இன்னும் இளமையா இருக்கிற அளவுக்குச் சந்தோஷம் ஏறிப்போச்சு.நேசனோடு நானும் வாழ்த்துறேன் \n// வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஹேமா கலா ஏதோ உங்கள் வலைத்தளம் மூலம் எனக்கும் அண்ணியாக அறிமுகம் \nஅதிரா....நீங்கள் கலா எண்டே சொல்லுங்கோ.என்னைவிட,உங்களைவிட,யோகா அப்பாவைவிட,கலையைவிடச் சின்னவதான் கலா.மனசாலும் உடம்பாலயும் சின்னவதான்.நேசன் கலான்ர பாட்டியின்ர படத்தை மாத்திப் போட்டிட்டார்போல \n1 July 2012 04:59 //ம்ம் படமா முக்கியம் வாழ்துச் சொல்லுவதே முக்கியம் ஹேமா\nசத்ரியா....நான் என்னால முடிஞ்ச மட்டும் சமாளிக்கிறன்.அங்க இங்க வந்து குட்டையைக் குழப்பக்கூடாது சொல்லிப்போட்டன் \n1 July 2012 05:01 /ம்ம் அதுவும் சரிதான் ஹேமா\n//ம்ம் வாழ்த்துக்கு நன்றி அதிசயா\nகலா அக்காவுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பதிவு செய்து கொள்கிறேன்..\nகலா அக்காவுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பதிவு செய்து கொள்கிறேன்..\n1 July 2012 23:47// நன்றி பாரத்-பாரதி வருகைக்கும் வாழ்த்துக்கும்\nஉப்புமடச் சந்தியிலேயே எங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விட்டாலும் இங்கும் கலா மேடத்துக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்க வளமுடன்.\nஎன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்....ரொம்ப பிஸியா இருக்கிறேன் அப்புறமா வந்துக்கிறேன்\nஉங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் ... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nமலையகத்தில் முகம் தொலைந்தவன்...-சிறப்பு நன்றிகள்\nமலையகத்தில் முகம் தொலைந்தவன்...- பின்னே சில முகங்...\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் -- -எழுபத்தைந்து\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் --74\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ..73\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ...70\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் ---66\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/650", "date_download": "2018-08-18T00:21:23Z", "digest": "sha1:KYZT56IWRWXJA7ELPEYVBLY37ZEUKBEH", "length": 8600, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு : 14 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nகலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு : 14 பேர் பலி\nகலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு : 14 பேர் பலி\nஅமெரிக்கா, கலிபோர்னியாவின் சன்பெனடீனோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கலிபோர்னிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்று புதன்கிழமை விடுமுறை களியாட்ட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாகவும் இது இரத்தக்களரியை ஏற்படுத்தும் ஒரு பயங்கரவாத செயற்பாடாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்கா கலிபோர்னியா சன்பெனடீனோ துப்பாக்கிச் சூடு பலி சர்வதேச செய்தி\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது\n2018-08-18 01:06:16 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nஅமெரிக்க அரசாங்கம் மியன்மாரில் இடம்பெற்றது இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிடாததும் முக்கியமானது.\n22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது\nபாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார்.\n2018-08-17 18:56:36 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nசுவீடனில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னை நேர்முகப் பரீட்சை செய்த நபரிடம் கை குலுக்காமல் பேசிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\n2018-08-17 15:12:03 சுவீடன் இஸ்லாமியப் பெண் நேர்முகப் பரீட்சை\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது - கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டில்லியிலுள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது.\n2018-08-17 14:58:31 பிரதமர் வாஜ்பாய் டில்லி\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-18T00:21:03Z", "digest": "sha1:5QG56JELN3N5V4QNIXQIL3TMVO3XT4CS", "length": 3884, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சி.என். என் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nதன்னைப்பற்றி சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு விருது வழங்கிய ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அவரை பற்றிய பல சர்ச்சைக்குரிய செய்திகள் அமெரிக்க ஊடங்கள் மற்றும் பத்திரிக...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/life-story-of-devadasi-india-019091.html", "date_download": "2018-08-18T00:36:30Z", "digest": "sha1:UGEXLN2IGGX5P3HIQJLQILPYJPTZTV7M", "length": 30606, "nlines": 202, "source_domain": "tamil.boldsky.com", "title": "வைரமுத்து பேசியது தவறு என்றால் இது மட்டும் சரியா? | Life Story Of Devadasi in India - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வைரமுத்து பேசியது தவறு என்றால் இது மட்டும் சரியா\nவைரமுத்து பேசியது தவறு என்றால் இது மட்டும் சரியா\nசில நாட்களுக்கு முன்பு வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசிய பேச்சுக்களும் அதற்கு பலரது எதிர்ப்புகளும் கிளம்பி அது பெரும் விவாதப்பொருளாக மாறி வந்து கொண்டிருக்கிறது.\nஇப்போது நாம் ஆண்டாள் குறித்தோ வைரமுத்து பேசியது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் எல்லாம் செல்ல வேண்டாம், தேவதாசி என்ற முறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆம், வருகிறது தான். இன்றளவும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில இடங்களில் தேவதாசி முறை அமலில் இருக்கிறது.\nசுதந்திரத்திற்கு முன்பே தேவதாசி முறையை ஒழிக்க சட்டங்கள் வந்து விட்டது, அதெல்லாம் ஒழித்தாகி விட்டது என்று சொல்பவர்கள் தொடர்ந்து இந்த கட்டுரையை அவசியம் படியுங்கள். கடவுளின் பெயரைச் சொல்லி பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவது குறித்தோ, தேவதாசி முறையை ஒழிக்க அரசாங்கம் இயற்றியிருக்கும் சட்டம் மட்டும் போதாது என்பதை பொட்டில் அடித்தார் போல சொல்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅம்மா..... அப்பறம் நான் இங்க வரமாட்டேனா உங்கள எல்லாம் பாக்ககூடாதா என்று கேட்கிறாள்.\nஅழக்கூடாது பாப்பா.... கொஞ்ச நாள் கழிச்சு உன்னை இங்க கூட்டிட்டு வந்திடுவோம். நீ போகலன்னா சாமிக் குத்தம் ஆகிடும்.அப்பறம் நோவு வரும் என்று பயமுறுத்தி பட்டுப்பாவடைய உடுத்திக் கொள்ள செய்து,நேர்த்தியான அலங்காரங்களை செய்து விட்டாள் அம்மா.\nஇதுவரையில் ஒரு வேளை உணவுக்கே திண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில் திடிரென்று இத்தனை உணவுப்பண்டங்கள், புதுத் துணி,நகைகள் என ஒரே நாளில் நடந்த மாற்றங்கள் குறித்து அந்த சிறுமிக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nவிதவிதமான உணவுகள் அவளுக்கு முன்பாக பறிமாறப்பட்டது. முழு அலங்காரத்தில் தன் முன்பாக விரிக்கப்பட்டிருந்த வாழையிலையில் இருந்த பதார்த்தங்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.\n என்று கேள்விகள் அவளால் நம்பவே முடியவில்லை. இனிப்பை அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.\nரொம்ப பிடிச்சிருக்குமா.... தினமும் இப்டியே சாப்டலாம்மா என்றாள் வெள்ளந்தியாக.\nஐந்து நாட்கள் சடங்குகள், சம்பிரதாயங்கள் முடிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டிய நாள் அது.\nஅம்மா வேணாம்மா.... நம் வீட்லயே இருக்கேன் இந்த நகையெல்லாம் கூட எனக்கு வேணாம், தினமும் இனிப்பு கேக்கமாட்டேன். பள்ளிக்கூடத்துக்கு போகணும்னு அடம்பிடிக்க மாட்டேன் என்று கெஞ்சியழ சமாதானம் செய்து, மிரட்டி ,கெஞ்சி கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.\nஅங்கே மூன்று வருடங்கள், பாட்டு நடனம் கற்றாள், கோவிலை சுத்தம் செய்தாள், வீட்டில் இருந்த நாட்கள், நண்பர்களுடன் விளையாடிய பொழுதுகளெல்லாம் நினைவில் வந்து போனது.\nவிடியற்காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை அவளுக்கு அங்கே வேலைகள் கொடுக்கப்பட்டது. கடவுளுக்கு செய்ற பணி இத நீ செஞ்சே ஆகணும் என்று சொல்லி சொல்லியே அவளது உழைப்பு சுரண்டப்பட்டது.\nமூன்று வருடங்கள் முடிந்து ஒரு நாளில் அவளை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தாள். மகளுக்கோ ஏக சந்தோஷம். மீண்டும் வீட்டிற்கு செல்கிறோம் இனி இந்த நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற சந்தோஷம் அவளை துள்ளியெழுந்து கிளம்ப வைத்தது.\nவீட்டிற்கு வந்தாள். அன்றைக்கும் தடாபுடல் விருந்து.\nஇத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் அம்மாவின் அருகில் படுத்திருக்கிறேனா என்று நினைப்பில் அவளுக்கு தூக்கமே வரவில்லை.... அன்னக்கி என்னாச்சு தெரியுமா என்று கோவிலில் விடப்பட்ட நாட்களின் கதையை அளக்க ஆரம்பித்தாள்.\nகாலைல பேசிக்கலாம் பேசாம தூங்கு. இரண்டு பேர் நீட்டி படுத்தால் நிறைந்து போகும் அறை அது. அம்மாவும் மகளும் நீட்டி படுத்துக் கொள்ள அவர்களுக்கு இடையில் கடைக்குட்டியான தம்பியொருவன் புகுந்து கொண்டான். அம்மா பக்கத்துல நான் தான் படுப்பேன் இவ்ளோ நீ தானடா படுத்த என்று தம்பியை எழுப்பினாள். இரண்டு குழந்தைகளுக்கு நடுவில் அம்மா படுத்துக் கொண்டாள்.\nஇவர்களின் தலைமாட்டிற்கு மேலே அப்பாவும் இன்னொரு தம்பியும் படுத்துக் கொண்டார்கள். இப்போது ஒருவர் எழுந்தாள் கூட அடுத்த அடி எடுத்து வைக்க படுத்திருப்பவர்கள் சற்று நகல வேண்டும். முழு வீடும் நிறைந்தது.\nநடு இரவில், இரண்டு மகன்களையும் தூக்கி வெளித்திண்ணையில் படுக்க வைத்து போர்த்தி விட்டாள். இப்போது மகள் மட்டும் உள்ளே படுத்திருக்கிறாள். அந்த ஊரின் பெரும் செல்வந்தர் என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த நபர் வர, இவர்களிடம் ஒரு கட்டு பணத்தை கொடுத்து விட்டு உள்ளே செல்கிறான்.\nஇரண்டாவது நொடி மகளின் அலறல் சத்தம் கேட்டது.\nஉன்னை வெறுக்கிறேன் அம்மா :\nஅம்மா.... திருடன் அப்பா..... காப்பாதுப்பா அம்மா..... தம்பி என்று தன் குடும்பத்து உறுப்பினர்களை கத்தி கதறி அழைத்தாள். காதை இறுக்க மூடிக் கொண்டார்கள்.\nஅம்மா உள்ள அக்கா அழுவுதும்மா என்று பேச்செடுத்த தம்பியின் வாயை அழுத்தப் பொத்தினாள். அது சாமி கண்ண மூடிட்டு தூங்கு என்று பயமுறுத்த இறுக்க கண்களை மூடிக் கொண்டான்.\nஉள்ளேயிருந்து பயந்து கொண்டு கதவாக நினைத்து தடுத்து நிறுத்தப்பட்டிருந்த தட்டியை தள்ளிவிட்டு அம்மாவிடம் ஓடிவந்தாள் மகள். அம்மா அங்க பாரு யாரோ வீட்டுக்குள்ள வந்துட்டாங்க என்று அழுது கொண்டே சொல்ல.... அழமா போ பாப்பா எல்லம்மா சாமிக்கு பணிவிடை செய்ற மாதிரி நினச்சுக்கோ இப்டி எல்லாம் அழக்கூடாது உள்ள போ என்று உள்ளே தள்ளிவிடப்பட்டாள்.\nதேவதாசி என்று அழைக்கப்படும் பெண்கள் கடவுளின் சேவகர்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையையே கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது.\nஇவர்கள் பல்வேறு கலைகளை கற்றுத் தேர்ந்து, தங்கள் கலையை செல்வந்தர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பொருள் ஈட்டுவார்கள்.\nதேவதாசியை பொறுத்தவரையில் அவர்கள் கடவுளையே திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் சக மனிதர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது, அதோடு உதவிகளையும் பெறக்கூடாது.\nஆனால் தேவதாசிகள் ஆண்களிடத்தில் உறவு வைத்துக் கொள்ள அனுமதியுண்டு. அது திருமணமான அல்லது திருமணாகாத ஆண்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த உறவு குறுகிய காலமோ அல்லது நெடுங்காலமோ தொடரலாம்.\nஏழாம் நூற்றாண்டில் அறிமுகமாகி வேகமாக பரவிய இந்த தேவதாசி முறையில் துவகக்த்தில் தேவதாசிகள் சமுதாயத்தில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர், மதிப்புடன் நடத்தப்பட்டனர். ஆனால் இன்றைக்கு அவர்கள் பாலியல் தொழிலாளர்களாக மட்டுமே பார்க்கபப்டுகின்றனர்.\nஇதில் கொடுமை என்னவென்றால் சொந்த குடும்பத்தினராலேயே நான்கு அல்லது ஐந்து வயது குழந்தைகள் எல்லாம் தேவதாசியாக கோவிலில் விடப்படுகிறார்கள் பிஞ்சுக் குழந்தைகள்.\nதேவதாசியாக அடையாளப்படுத்தப்படும் குழந்தைகள் யாவரும் மிகவும் பின் தங்கிய சமுதாயத்திலிருந்து , தீண்டத்தகாத சாதி என்று அடையாளப்படுத்தப்பட்ட சில சாதிகளிலிருந்தே வருகிறார்கள்.\nஇவர்கள் பெரும்பாலும் ஊருக்குள் நுழையவோ, படிக்கவோ, வேலை பார்க்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தங்களது வருமானத்திற்காக தங்கள் குழந்தையை இப்படி தேவதாசி முறைக்குள் வலுக்கட்டாயமாக சேர்க்கின்றனர்.\nசில நேரங்களில் பெற்றோர்களே குழந்தைகளை பாலியல் தொழில்புரியவைக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nபுனிதம் என்று அவர்கள் நினைக்கிற ஒரு நாளில் தங்களுடைய பெண் குழந்தைகளை அலங்கரித்து எல்லம்மா பெண் தெய்வத்தின் கோவிலுக்கு அழைத்து வந்து அர்பணிக்கிறார்கள். அங்கே இருக்கக்கூடிய மூத்த தேவதாசிகள் சடங்குகள் செய்து,பெற்றோர்களின் அர்பணிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.\nசில இடங்களில் தங்கள் குழந்தை பருவத்தை எட்டியவுடன் ஊருக்கு தகவல் சொல்கிறார்கள். பெரும் வசதி படைத்த செல்வந்தர்கள் இந்த குழந்தைகளை தங்களின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு அதற்காக அந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு அன்றாடச் செலவுகளுக்கான பணத்தை வழங்குகிறார்கள்.\nவெளிவர முடியாத நிலை :\nபன்னிரெண்டு வயதுகளில் பருமெய்தும் பெண் குழந்தைகள் பதினைந்து வயதிற்குள்ளாகவே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பாலியல் நோய்கள்,எயிட்ஸ்,இளவயதில் குழந்தை பெற்றுக் கொள்வதால் ஏற்படுகிற உடல் உபாதைகள் போன்றவற்றை சமாளிக்க மருத்துவ செலவு,அன்றாட உணவுக்கும், தங்களின் குழந்தைகளுக்காகவும் தேவதாசி முறையிலிருந்து வெளி வர முடியாத சூழல் உருவாகிறது.\nசிறுவயது முதலே உன் உடம்பைக் காட்டி தான் பிழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட குழந்தை வளர்ந்ததும் வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம். அதுவும் இங்கே கன்னிப்பெண்கள்,இளவயது பெண்களுக்கு மட்டும் தான் மவுசு.முப்பது வயதை நெருங்கிவிட்டாளே முதிர்ந்தவள் என்று வெளியேற்றப்படுகிறார்கள்.\nஅதோடு சாதிய பேர்களைச் சொல்லி அவர்களை ஊருக்குள்ளேயே வரக்கூடாது என்று மறுக்கும் போது அவளுக்கு வேறு வழி இல்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். இந்திய நெடுஞ்சாலைப் பக்கம் சென்றால் பெண்கள் கைதட்டி அழைப்பார்கள் என்று கேவலமான ஒரு பார்வையுடன் சிரிக்கிறோமே.... அவர்கள் கைதட்டி அழைப்பது உடல் சுகத்திற்காக அல்ல, தங்கள் குழந்தையின் பசியாற்றுவதற்காக.\nஎன்ன சொல்கிறது சட்டம் :\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்த தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டது, சுதந்திரத்திற்கு பின்பும் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த தேவதாசி முறை முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஆனால் இன்றளவும் சில இடங்களில் தேவதாசி முறை கடைபிடிக்கப்படுவதாகவும், தேவதாசியாக குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தேசிய மனித உரிமைகள் ஆய்வுகள் கூறுகிறது.\nசமூகத்தில் நடக்கிற அவலநிலையை ஒழிக்க கடுமையான சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. தேவதாசியாக நாம் இருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கூட தெரியாது அறியாமையில் சிக்கியிருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும். கல்வியும் வேலை வாய்ப்பும் உடனடியாக வழங்க வேண்டும். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nராவணனுக்கு 10 தலைகள் எப்படி வந்தது அவற்றிற்கு என்னென்ன சக்திகள் உள்ளன\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nJan 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுட் பாய்சன் ஏற்பட்ட தாய் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/category/tamil-cinema-gallery/movie-actresses-gallery/page/2/", "date_download": "2018-08-18T01:14:48Z", "digest": "sha1:2DQDZ2EZO6XC4ICTLQJKUGZ2IYU2HJCO", "length": 5249, "nlines": 147, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Actresses Archives - Page 2 of 16 - Cinema Parvai", "raw_content": "\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://geniustv.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/4/", "date_download": "2018-08-18T01:24:02Z", "digest": "sha1:SEAPUBU7GKKWRC57NVGTONGLL6GV6AFI", "length": 17333, "nlines": 171, "source_domain": "geniustv.in", "title": "சினிமா – Page 4 – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nநடிகர் சங்கத்திலிருந்து நீக்கினால் கவலையில்லை: விஷால்\nslider, சினிமா, செய்திகள் 0\nநடிகர் சங்கத்தை விட்டு நீக்கினால் எனக்கு கவலையில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். நடிகர் சங்கத்துக்கு எதிரான அவதூறு பேச்சுகளை நிறுத்தாவிட்டால் நடிகர் விஷால் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என திருச்சியில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் விஷால் புதன்கிழமை அனுப்பிய செய்தியில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவேன் என்ற செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தச் செய்தி எனது சினிமா வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் …\nசினிமா, டிரைலர், முக்கியசெய்திகள் 0\nலிங்கா ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்தது\nகோச்சடையான்’ படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் ‘லிங்கா’. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோயடியாக அனுஷ்கா, சோனக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தப் படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் ‘லிங்கா’ படத்தின் வெளியிடும் உரிமையை ஈராஸ் நிறுவனம் …\nநடிகர் விஜய் வழங்கிய ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை\nகல்வி, சினிமா, செய்திகள், செய்திகள் 0\nசென்னை சைதாப்பேட்டையில் டீ கடையில் வேலைபார்க்கும் எம்.ஷாகுல்ஹமீதுவின் மகள் பாத்திமா பிளஸ்-2 தேர்வில் 1,109 மதிப்பெண்கள் பெற்று, வறுமையின் காரணமாக என்ஜினீயரிங் படிப்பில் சேரமுடியாமல் கஷ்டப்பட்டார். இதுபற்றி கேள்விப்பட்ட நடிகர் விஜய், பாத்திமா என்ஜினீயரிங் படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார். இதற்கான கல்வி கட்டணத்தை மாணவியை நேரில் அழைத்து விஜய் வழங்கினார்\nவிஸ்வரூபம் 2 தாமதம் ஏன் – கமல் விளக்கம்\n‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாவதில் தாமதம் ஏன் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ‘விஸ்வரூபம்’ வெளியான உடனே, ‘விஸ்வரூபம் 2’ படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதனைத் தொடர்ந்து ‘விஸ்வரூபம் 2’ எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தெரிந்தது. அப்படம் வெளியாவதற்குள் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’, ஜூது ஜோசப் …\n“ஐ” திரைப்படம்: தயாரிப்பு பிண்ணனி – வீடியோ இணைப்பு\n“ஐ” திரைப்படம் தயாரிப்பு பிண்ணனி\nஅஜித் படத்தலைப்பு “என்னை அறிந்தால்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி கொண்டிருக்கும் பெயரிடப்படாத திரைப்படம் கிட்டதட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையிலும் படத்தின் தலைப்பு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் தான் படத்தின் தலைப்பு 30 அக்டோபர் அன்று வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. அதன்படி அஜித் படைத்தலைப்பு அதிகாரப்பூர்வமாக …\nதாய்க்கு கோயில் கட்டும் நடிகர் ராகவா லாரன்ஸ்\nநடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். தற்போது ‘முனி 3 – கங்கா’ படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் தனது தாய்க்கு கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். லாரன்ஸின் பிறந்த நாளான இன்று …\nகத்தி படம் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கடம்: டி.எஸ்.ஆர். சுபாஷ்\nPPFA, சினிமா, செய்திகள், செய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் 0\nசமீபத்தில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரமணா‘ படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார். அதன்பின் வந்த ‘கஜினி‘ …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=293111", "date_download": "2018-08-18T01:32:10Z", "digest": "sha1:2YGMAAOG63IIFDLZ5QQIDWQB6TOLVRDM", "length": 9229, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மனஅழுத்தத்தை கையாளலாம்: ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் தற்கொலையை தடுக்க முடியும் | dealing with Stress : in every case to prevent suicide - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nமனஅழுத்தத்தை கையாளலாம்: ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் தற்கொலையை தடுக்க முடியும்\nபுதுடெல்லி: டெல்லியில் உள்ள ஹியூமன் பிஹேவியர் மற்றும் அலைய்டு சயின்சஸ் (IHBAS) நிறுவனத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் 3 நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தார் மனநல மருத்துவர். இவர்களில் ரஜானி என்ற ஒரு பெண்ணும் உள்ளார். 33 வயதுடைய அவர், 18 வருடங்களுக்கு முன்பு மரணமடைந்த அவரது அம்மாவின் தற்கொலைக்கு பின் 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரின் தந்தையான ஹரி ஓம் திவாரி, எனது மகள் அவளின் அம்மா நினைவு வரும்போதெல்லாம் தாங்கமாட்டாமல் அழுதுவிடுவார். மற்றும் எனக்கு விஷம் வாங்கிக் கொடுங்கள் நான் என் அம்மா, பாட்டியிடம் செல்ல வேண்டும் என்றும் கூறுவார்.\nஅதேபோல் சமூக ஆர்வலரான கம்லா பாசின், எனது மகள் மீடோ, PhD படித்துக்கொண்டிருக்கும் போதே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் அவள், 27 வயதில் தற்கொலை செய்து கொண்டார். அவள் ஆலோசகரை பார்க்க தயாராகத் தான் இருந்தால், ஆனால் மருந்துகளை ஏற்க எதிர்ப்புகள் நிலவி இருந்தது. மீடோவை போல மனஅழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பதால் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nதேசிய குற்றப் பதிவுகள் கழகத்தின் கணக்கீடுகளின் படி, 2015 ஆம் ஆண்டில் 1,33,623 பேர் தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிட்டுள்ளது. காசநோய், மலேரியா மற்றும் டெங்கை விட தற்கொலையால் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர். நோயாளிகள் மன அழுத்தம் அறிகுறிகளை முதலில் தெரிந்த உடனே குறைந்தது 10 ஆண்டுகளாவது தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிகிச்சை எடுக்க தவறினால், அது இயலாமை மற்றும் தற்கொலையில் கொண்டு போய் நிறுத்திவிடும்.\nஉளவியலாளர்கள், ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் தற்கொலையை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர். ஆனால் 98 முதல் 99 சதவீதம் தற்கொலைகளை நடைமுறை பழக்கத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.\nமனஅழுத்தத்தை கையாளலாம் சர்ந்தர்ப்பத்திலும் தற்கொலையை தடுக்க\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_487.html", "date_download": "2018-08-18T01:14:57Z", "digest": "sha1:NYHXEZQLEHTHWDS5UJEBEYC7UKHVYTRS", "length": 35739, "nlines": 267, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... பெங்களூரிலிருந்து வரும் ஹவ்காத்தி எக்ஸ்பிரஸ் ரயில்... ஒன்பதாவது நடைமேடையிலிருந்து சற்றுநேரத்தில் புறப் படத்தயாராக இருக்கிறது'’’என்ற அறிவிப்புக் குரலையே மிஞ்சியது அந்த குண்டுவெடிப்புச் சத்தமும் அதனை\nத் தொடர்ந்து பயணிகளின் அலறல் சப்தமும்.\nஉயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை நோக்கிப்பறக்க...எஸ்-4 மற்றும் எஸ்-5 ரயில் பெட்டி உள்ளே வெடித் துச் சிதறியதில்... ரத்தவெள்ளத்தில் மிதந்தார் எஸ்-4ல் பயணித்த 24 வயதே ஆன பிரச்சூரி ஸ்வாதி என்ற இளம்பெண். பத்துக்கு மேற்பட் டோர் படுகாயங்கள் அடைய... காவல்துறை யினரும் மருத்துவத்துறையினரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு எதிரிலுள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத் துவமனைக்கு கொண்டுசென்றனர். சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பாம் வெடித்துவிட்டது என்ற செய்தி ஊடகங்களின் வாயிலாக லைவ் டெலி காஸ்ட் ஆக \"திக் திக்' தமிழகமானது.\nஎஸ்-7 கோச்சில் பயணித்தபோது நடந்த ரயில் விபத்தை நடுக்கத்துடன் விவரிக்கிறார் பயணி நளினி \"\"இப்போ நினைச்சாலும் மனசு பக்குனு இருக்குங்க. 3 மணிக்கு ட்ரெயின் ஏறினோம். கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண், ஹார்ட்பேஷண்டுன்னு மொத்தம் 13 பேர் நாங்க. ஜோலார் பேட்டையிலிருந்து கொல்கத்தாவிலுள்ள அண்ணன் வீட்டுக்கு சுற்றிப்பார்க்க கிளம்பினோம். நல்ல தூக்கம். சென்னை சென்ட்ரல் வந்தபோது அரைத் தூக் த்துல இருந்தோம். ப்ளாட்ஃபார்முக்கு வந்த ட்ரெயின் பதினஞ்சு இருபது நிமிஷம்கூட ஆகலைங்க. திடீர்னு ஒரு காதைபிளக்குற சத்தம். எங்க ஈரக்கொலை எல்லாம் நடுங்கிடுச்சு.\nஒரே புகையா வர ஆரம்பிச்சிடுச்சி. நாங்க எல்லோருமே லேடிஸா இருந்ததால என்ன ஏதுன்னு தெரியாம அலற ஆரம்பிச்சுட்டோம். அப்புறம்தான் தெரிஞ்சது பக்கத்து கோச்ல பாம் வெடிச்ச விஷயம். பதறியடிச்சுக்கிட்டு வெளியில ஓடிவந்துட்டோம்'' என்று உயிர் அச்சம் விலகாமல் பேசிய நளினி, \"\"நாங்களாவது உயிர் தப்பிச்சோம். ஆனா, பாவம்ங்க அந்த ஸ்வாதிங்குற பொண்ணு... இன்னும் பலர் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்காங்க. இவங்கள்லாம் என்ன தப்புங்க பண்ணினாங்க படுபாவிங்க. அநியாயமா பாம் வெச்சு அந்த பிள்ளையோட உசுரை பறிச்சுட் டானுங்களே. என்னென்ன கனவுகளோடு அந்த பிள்ளை பயணம் செஞ்சிருக்கும் படுபாவிங்க. அநியாயமா பாம் வெச்சு அந்த பிள்ளையோட உசுரை பறிச்சுட் டானுங்களே. என்னென்ன கனவுகளோடு அந்த பிள்ளை பயணம் செஞ்சிருக்கும்'' என்று உச் கொட்டுகிறார்கள் நளினியும் அவர்களுடன் வந்த பயணி களும்.\nகுண்டு வெடிப்புக்குள்ளான எஸ்-4 பெட்டியில் பயணித்து உயிர்தப்பிய சுதன் தேவ்நாத்திடம் சிகிச்சையில் இருக்கும்போது பேசினோம், ஹிந்தியில் பேசினார், \"\"பெங்களூரிலிருந்து ஹவுகாத்திப் போய்க்கிட்டிருந்தேன். திடீர்னு சீட்டுக்கு அடியிலிருந்து சத்தம். காலில் அடிபட்டு பயங்கர வலி...ரத்தம் பீறிட்டு வர ஆரம்பிச்சுடுச்சி. ஒரே புகை. கொஞ்சநேரத்துலேயே நான் மயக்கமாகிட்டேன். கண்ணைத்திறந்து பார்த்தா ஹாஸ்பிட்டலில் இருக்கேன். உயிர்பிழைப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கல'' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வலியால் அங்குமிங்கும் துடித்தார்.\nஇதேபோல் எஸ்-4 கோச்சில் உயிர்தப்பிய இன்னொரு பயணி கிருஷ்ணாபர்மா... \"\"பேரதிர்ச்சியா இருக்குங்க. திடீர்னு என்னோட காலில் தீப்பற்றி எரிஞ்சதோடு என்னோட கழுத்துலயும் ஆணி குத்திடுச்சி. இப்போ, ஆபரேஷன் பண்ணியிருக்காங்க. கழுத்துல இருக்குற ஆணியை இப்பவே எடுத்தா உசுருக்கு ஆபத்து. அடுத்ததா பண்ற ஆபரேஷன்ல தான் எடுக்கமுடியும்னு சொல்லிட்டாங்க. நாங்கள் லாம் கூலிவேலை செய்யுறவங்க. சாலைவேலைக்குப் போக பயணிச்சுக்கிட்டிருந்தேன். என்னோட சம்பாத்தியத்துலதான் என்னோட குடும்பம். என்கூட வந்த என் தம்பி எங்க இருக்கான்னே தெரியல. என்னோட செல்ஃபோன் பேக்லாம் எங்கப் போச்சின்னே தெரியல. அது போகட்டும், \"நான் உயிர் பிழைப்பேனா’’ என் தம்பி கிடைப்பானா’’ என் தம்பி கிடைப்பானா'' என்று ஏக்கத்தோடு கேட்கும் அவருக்கு, \"உங்களுக்கு ஒண்ணும் ஆகாது கவலைப்படாதீங்க'’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு... இன்னொரு பெட்டில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருந்த 14 வயது சிறுவன் பிஜேன்குமார் அருகில் சென்றோம். அவரது தோழி மற்றும் நண்பர்கள் அவருக்கு இட்லியை ஊட்டிக்கொண்டிருந்தனர். அவனது நண்பர் டி.ஹெச்.மீனாகுமார் நம்மிடம், \"\"நாங்க 20 பேர் கராத்தே ஈவண்ட்டுக்காக போயிட்டு... மணிப்பூர் போறதுக்காக இந்த ட்ரெயின்ல எஸ்-5 கோச்சில் ஏறினோம். பிஜேன் குமாருக்கும் கராத்தேன்னா வெறி. இப்போ, இந்தக் கோர விபத்தால இவன் காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுச்சி. கராத்தேவுக்கு முக்கியமா காலில் பவர் இருக்கணும். அந்தப் பவரை இழந்து இப்போ ரொம்பவே மன உளைச்சலில் இருக்கான்'' என்கிறார் அவரது நண்பர்.\nபரிதாபமாக உயிரிழந்த பிரச்சூரி ஸ்வாதி. ஆந்திர மாநிலம் குண்டூர் அருகிலுள்ள ஜெக்லாந் தர் கிராமத்தை சேர்ந்தவர். விவசாயக்குடும்பம். ஆனாலும், கஷ்டப்பட்டு ஹைதராபாத்தில் எம்டெக் படிக்கவைத்தனர் ஸ்வாதியின் குடும்பத் தினர். தம்பி மும்பை ஐ.ஐ.டியில் படிக்கிறார். ஜனவரி மாசம்தான் பெங்களூரிலுள்ள டாடா கன்சல் டன்சியில் வேலைக்கு சேர்ந்தார் ஸ்வாதி. மே-1 ங் குறதால பெங்களூரில் இரண்டு நாட்கள் விடு முறை. அதோடு சனி ஞாயிறும் வருவதால் 4 நாட் கள் லீவு கிடைக்குதுன்னு அம்மா-அப்பாவைப் பார்க்க ஆசையோடு கிளம்பியிருக்கிறார் ஸ்வாதி.\n\"\"ரிசர்வேஷன்ல டிக்கெட் கிடைக்காததால தக்கலில்தான் டிக்கெட் எடுத்துக்கிட்டு பெங்களூரு கன்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷன்ல ஏறி யிருக்காங்க. எஸ்-4 கோச்சில் பய ணிக்கும்போதுதான் இப்படியொரு கோரவிபத்து ஏற் பட்டிருக்கு. விஜய வாடாவுல அப்பா பிரச்சூரி ராம கிருஷ்ணா தன்னோட மகளின் வருகைக்காக காத்துக்கிட்டிருந்திருக் காரு. ட்ரெயின் ஒரு மணிநேரத்துக்குமேல தாமதமா வரும் தகவல் அவருக்கு கிடைச்சதால கேஷுவலா இருந்திருக் காரு. ஆனா, அதற்குள் திடீர்னு மீடியாக்கள் வீட்டை நோக்கிவந்து \"உங்க பொண்ணு பாம் ப்ளாஸ்டுல இறந்துட்டாங்க'ன்னு சொன்னப்பதான் அம்மா காமாட்சி கதறி துடிச்சிருக்காங்க''’’- சென்னை பொது மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட உடலைவாங்க வந்த ஸ்வாதியின் உறவினர் கண்ணீரோடு விவரித்தார்.\n\"\"பாம் ப்ளாஸ்ட் இன்ஃபர்மேஷன் கிடைச்ச துமே டாக்டர்கள் நர்ஸ்கள் உள்ளிட்டவர்களுக்கு அலர்ட் கொடுத்துவிட்டோம். பிரச்சூரி ஸ்வாதி என்ற இளம்பெண் ஸ்பாட்டிலேயே உயிரிழந்துவிட 14 ஆண்கள், 1 பெண் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதில், ஐந்துபேருக்கு தீவிர அறுவை செய்யப்பட்டுள் ளது'' என்கிறார்கள் மருத்துவமனையின் டீன் விமலா, ஆர்.எம்.ஓ.க்கள் ஆனந்த் பிரதாப் மற்றும் சுப்புலட்சுமி உள்ளிட்ட மருத்துவ டீம்.\nசென்னை கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பயணிகள் பாதுகாப்புச்சங்கத் தலைவர் தனுஷ் கோடி, \"\"ஏற்கனவே ஐ.எஸ்.ஐ உளவாளி ஒருவன் சிக்கி யிருக்கும்போது... சென்னை சென்ட்ரலில் இப்படி யொரு சம்பவம் நடந்திருப்பது மத்திய-மாநில உளவுத் துறையின் பலகீனத்தையே காட்டுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையும் மத்திய அரசின் பாதுகாப்புப் படை யார் எதை கவனித்துக்கொள்வது என்ற போட்டா போட்டியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன. தமிழக அரசின் ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையிலேயே 250 வேக்கண்ட் இருக்கிறது. இருப்பவர்களும் வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்குப் போய்விடுகிறார்கள்.\nஉதாரணத்துக்குச் சொல்லவேண்டுமென்றால் சென்னையிலிருந்து சூலூர்ப்பேட்டை வரை 62 கிலோ மீட்டர் தூரம். ஆனால், இதற்கு கொருக்குப்பேட்டை யில் ஒரேயொரு ரயில்வே காவல்நிலையம்தான் உள்ளது. அப்போ இந்த ஜுரிஸ்டிக்ஷனில் ஒரு கோர சம்பவம் ஏற்பட்டால் போலீஸ் போய்ச்சேரவே இரண்டு மணிநேரமாகிவிடும். ஏதாவது, முக்கியமான நாட்களில்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் பயணிகளை பரிசோதனை செய்கிறார்கள். தென்னக ரயில்வேயின் தலைமையகத்திலேயே இப்படியிருந்தால் மற்ற இடங்களில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று நீங்களே சிந்தித்துப்பாருங்கள்'' என்கிறார் அவர்.\nதிக் திக்கிலிருந்து விலகாமல் இருக்கிறது சென்னை\nமோடியை மிரட்ட பாட்னா ஸ்டைல்\nபிரதம வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் நாடு முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். கடந்த 2013 அக்டோபர் 27-ந்தேதி பீகார் மாநிலத் தலைநகரமான பாட்னாவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 10 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது நாடுமுழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு வெடித்தது டைம் பாம் என்றும் அது அம்மோனியம் நைட்ரேட் கலக்கப்பட்ட குறைந்த சக்திகொண்ட பாம் என்றும் புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் வெடித்த குண்டும் பாட்னா மாடலை சேர்ந்தது என்று தமிழக புலனாய்வுத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. ஆந்திராவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி (மே-1) இன்று கூடூர், நெல்லூர், விசாகப்பட்டினம், மகனபள்ளி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய வந்தார்.\n\"\"குண்டுவெடித்த பெங்களூர்- ஹவுகாத்தி எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் பயணித் திருந்தால் குண்டுவெடித்த நேரத்தில் கூடூர் -நெல்லூர் இடையே சென்றுகொண்டிருந் திருக்கும். அப்போது இந்த குண்டுவெடிப்புச்சம்பவம் நடந்திருந்தால் மிகப்பெரிய விபத்தையும் உயிர்பலியையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், சம்பவம் நடந்த எக்ஸ்பிரஸ் பெங்களூரில் 45 நிமிடமும் ஜோலார்பேட்டையில் 45 நிமிடமும் என 1 1/2 மணிநேரம் காலதாமதமாக சென்னை வந்தடைந்தது. ரயிலில் இருந்தது ‘டைம் பாம் ‘ வகை என்பதால் தீவிரவாதிகளால் நேரத்தை மாற்ற முடியாததால் சென்னையில் நிற்கும்போதே வெடித்துவிட்டது'' என்று சொல்கிற தமிழக புலனாய்வுத்துறையினர், \"\"மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்பது எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்கிறார்கள்.\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 4:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/65544-independence-day-resurgence-movie-review.html", "date_download": "2018-08-18T00:48:56Z", "digest": "sha1:GDBVWTUDKE2LGFGKZ6EC62HEHPL5X2QI", "length": 23651, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "நீங்க உலகத்தை அழிச்சது போதும் பாஸ்! “இண்டிபெண்டென்ஸ் டே” படம் எப்படி? | independence day resurgence Movie Review", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nநீங்க உலகத்தை அழிச்சது போதும் பாஸ் “இண்டிபெண்டென்ஸ் டே” படம் எப்படி\n1996-ல் வெளிவந்த இண்டிபெண்டென்ஸ் டே திரைப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. இருபது ஆண்டுகளுக்குப்பின் அதன் இரண்டாம் பாகம் \"இண்டிபெண்டென்ஸ் டே: ரிசர்ஜென்ஸ்\" என்ற பெயரில் (‘Independence Day: Resurgence’)வெளிவந்திருக்கிறது.\nமுதல் பாகத்தின் இறுதியில் ஏலியன்களை வென்ற திருப்தியோடு, 20 ஆண்டுகளாக ஏலியனின் அடுத்த தாக்குதலுக்கு தயாரிக்கிகொண்டு இருக்கிறது உலகம். விண்வெளியின் பல இடங்களில், ஆய்வு நிலையங்கள் அமைத்து ஏலியன்களைக் கண்காணித்து வருகிறார்கள். விண்வெளி ஆய்வாளர்கள் வானத்திற்கும், நிலவிற்கும் அசால்டாக பறக்கிறார்கள். முதல் பாகத்தைவிட பெரிய சைஸ் ஸ்பேஸ்-ஷிப், ஏலியன்கள் என இருந்தாலும், கதை மட்டும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லையென்பதே குறை.\nஉருண்டையா ஒரு ஸ்பேஸ்-ஷிப் நிலாவில் வந்து தரையிறங்க, அவசரப்படும் ஆய்வாளர்கள், அதை சுட்டுவிட ஒருவழியாக ஆரம்பமாகிறது திரைப்படம். \"ஏலியன், உங்கள அட்டாக் பண்ண வருதுன்னு சொல்ல வந்த என்னையே சுட்டுட்டீங்களேடா, அடேய் அப்பரசென்ட்டிகளா\" என கதறுகிறது வேற்றுகிரக ஸ்பேஸ்-ஷிப்.\nபிறகென்ன, பெரிய சைஸ் ஏலியன் ஸ்பேஸ் ஷிப் ஒன்று உலகை அழிக்க ஆரம்பிக்கிறது. ஸ்பேஸ்-ஷிப் செல்லும் இடமெல்லாம், பொருட்கள் மேலெழும்பி சுக்கு நூறாக உடைகிறது. சீனா, அமெரிக்கா என பல நாடுகள் அழித்து ஸ்பேஸ்-ஷிப் வானளாவி நிற்கிறது. படத்தில் இருக்கும் ஹீரோக்கள் எப்படி ஏலியன்களை அழித்தார்கள் என முடிகிறது கதை.\nலியம் ஹெம்ஸ்வொர்த், ஜெஸ்ஸி உஷர் , ட்ரேவிஸ் டோப், ஏஞ்சலா பேபி, ஜெஃப் கோல்ட்பிளம், பில் புல்மேன் என அரை டஜன் ஹீரோக்கள் இருந்தும், யாரும் பெரிய அளவில் ஈர்க்க மறுக்கிறார்கள். முதல் பாகத்தில் வரும் பில் புல்மேனும், ஜெஃப் கோல்ட்ப்ளமும், நடித்த அளவிற்குக்கூட மற்ற கதாப்பாத்திரங்கள் நடிக்கவில்லை. அதிரடி நாயகனாக முதல் பாகத்தில் கலக்கிய வில் ஸ்மித்தின் மகனாக வரும் ஜெஸ்ஸி உஷர், \" நானும் ஆக்ஷன் ஹீரோ தான்ப்பா\" என்ற ரீதியில் எதேதோ செய்கிறார். ம்ஹூம்.\nதற்போதைய ஹாலிவுட் மார்க்கெட், சீனாவையும் சார்ந்து இருப்பதால், சீனாவைச் சேர்ந்த நடிகை ஏஞ்சலா பேபியை ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து இருக்கிறார்கள்.\nஒவ்வொரு ஆண்டும், ஹாலிவுட் பணக்கார தயாரிப்பு நிறுவனங்கள் உலகை அழிக்க கிளம்புவதால், அடப்போங்க பாஸ் என படத்தை ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் இப்போதெல்லாம். \"இப்ப ஒரு லேடிய, ஏலியன் போட்டுத் தள்ளுச்சே, அதான் அமெரிக்க அதிபராம். ஓ, அப்படியா \" என கேட்டுக்கொண்டே பாப்கார்ன் சாப்பிடும் அளவிற்கு ரசிகர்கள் படத்தை ஜாலியாக பார்க்கிறார்கள்.\n“இண்டிபெண்டென்ஸ் டே”,“தி டே ஆஃப்டர் டுமாரோ”,“2012”,“இண்டிபெண்டென்ஸ் டே: ரிசர்ஜென்ஸ்” என்று இவர் இயக்கிய இந்த நான்கு படங்களுமே உலகத்தை பலமுறை அழித்துவிட்டது. (ஏன் பாஸ் இவ்வளவு வன்முறை\nபடத்திற்கு ரிடர்ன்ஸ், ரிடாலியேஷன், ரைசஸ், ரெக்வின் என பல பெயர்களை யோசித்துப் பின் ரிசர்ஜென்ஸ் என பெயர் வைத்தார்களாம். தலைப்பிற்கு இவ்வளவு யோசித்தவர்கள், கதையை சற்றேனும் யோசித்து இருக்கலாம். படத்தின் விளம்பரங்களில், \" நாங்கள் தயாராகிக்கொள்ள 20 ஆண்டுகள் இருந்தது. ஏலியன்களுக்கும் \" என அதிரடியாய் இருந்தது. ஆனால் படத்தின் இயக்குநருக்கு 20 மாதங்கள் கூட கிடைக்கவில்லை போல. 3டி படம், நல்ல விசுவல் எஃபெக்ட்ஸ் பார்க்க வேண்டும் என்பவர்கள் தாராளமாய் இந்தப்படத்தை தேர்வு செய்யலாம். கதையெல்லாம் எதிர்ப்பார்த்தீர்கள் என்றால், கடந்த வாரம் வெளியாகி இன்னும் ஹிட் அடித்துக்கொண்டு இருக்கும் ஃபைண்டிங் டோரி பக்கம் ஒதுங்கவும்.\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n``வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது” – தேனி மாவட்ட வ\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநீங்க உலகத்தை அழிச்சது போதும் பாஸ் “இண்டிபெண்டென்ஸ் டே” படம் எப்படி\n இப்போ மத்திய அரசுக்கே வேண்டுகோள்\n சந்திரமுகிக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவும் பி.வாசுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/single-counselling-iit-nit-000038.html", "date_download": "2018-08-18T00:36:53Z", "digest": "sha1:F2DLJ3BOE5YIDLNVHRDX5JKUWJLELBIK", "length": 9993, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கைக்கு ஒரே கவுன்சலிங் - மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவிப்பு | Single counselling for IIT, NIT - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கைக்கு ஒரே கவுன்சலிங் - மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவிப்பு\nஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கைக்கு ஒரே கவுன்சலிங் - மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவிப்பு\nசென்னை: நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடிகள் இணைந்து பொதுவான கவுன்சலிங் மூலம் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை நேற்று வெளியிட்டது.\nஇந்திய தொழில் நுட்ப மையங்கள் (IIT) பொருத்தவரை ஹைதராபாத், புவனேஷ்வர், மும்பை, மாண்டி, டெல்லி, இந்தூர், காந்திநகர், ஜோத்பூர், சென்னை, காரக்பூர், பாட்னா, ரோபார், ரூக்கே, வாரணாசி ஆகிய இடங்களில் ஐஐடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டு ஒன்றுக்கு 10000 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவற்றில் பி.டெக், எம்.டெக், பி.எச்டி படிப்புகள் உள்ளிட்ட இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இவற்றில் மாணவர்களை சேர்க்க ஆண்டுதோறும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது(JEE).\nஅதேபோல நாட்டில் அனைத்து மாநிலத்துக்கும் தலா ஒரு தேசிய தொழில் நுட்ப மையங்கள்(NIT) இயங்கி வருகின்றன. தமிழகத்தில் திருச்சியில் என்ஐடி இயங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள என்ஐடிகளில் மொத்தம் 14555 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். திருச்சி என்ஐடியில் 814 இடங்கள் உள்ளன. இது தவிர புதியதாக தொடங்கப்பட்டுள்ள என்ஐடிகளில் 930 இடங்கள் உள்ளன.\nமேற்கண்ட ஐஐடி, என்ஐடிகளில் மாணவர் சேர்க்கைக்காக தனித் தனி தேர்வுக் குழுக்கள் உள்ளன. அவற்றின் மூலம் கவுன்சலிங் நடத்தி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்களை சேர்க்கின்றனர். இதனால் மாணவர்கள் வேறு படிப்புகளில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தனித்தனியாக தேர்வு எழுதுவதும் சிரமமாக உள்ளது. இதையடுத்து ஐஐடியும், என்ஐடியும் இணைந்து ஒரே கவுன்சலிங் மூலம் மாணவர்கள் தேர்வு செய்வது என்று தீர்மானித்துள்ளன. இந்த திட்டத்தின்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தனித் தனி கவுன்சலிங் கிடையாது. ஒரே கவுன்சலிங் மூலம் மாணவர்களை சேர்ப்பதற்கான பணிகளை இரண்டு நிறுவனங்களும் இணைந்து செய்கின்றன. இவற்றுடன் சிஎப்டிஐயை சேர்க்கவும் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று வெளியிட்டார்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/actress-adah-sharma-stills/", "date_download": "2018-08-18T01:09:39Z", "digest": "sha1:II4TYPBYRPCATREPVZNEBMJDVIAMHYO7", "length": 4967, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Actress Adah Sharma Stills - Cinema Parvai", "raw_content": "\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nPrevious Postதடைகளை உடைத்தெறிந்த மெர்சலுக்கு மேலும் ஒரு மகுடம் Next Postஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30132", "date_download": "2018-08-18T00:21:38Z", "digest": "sha1:FZXZRUJP5O2E2K4XJCK2TFL3E6P63F3F", "length": 9110, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "எரிமலை குழம்பை கக்கிவரும் மயோன் எரிமலை!!! | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஎரிமலை குழம்பை கக்கிவரும் மயோன் எரிமலை\nஎரிமலை குழம்பை கக்கிவரும் மயோன் எரிமலை\nபிலிப்பைன்சின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ள மயோன் எரிமலை சீற்றமடைந்து இன்று அதிலிருந்து எரிமலை குழம்பு மற்றும் கடுமையான புகை வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த இரு வாரங்களாக சீற்றமடைந்து காணப்படும் மயோன் எரிமலையில், எதிர்வரும் ஓரிரு தினங்களில் பாரிய வெடிப்பு ஏற்படலாம் என பிலிப்பைன்சின் எரிமலையியல் மற்றும் புவி அறிவியல் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nமயோன் எரிமலையை அண்மித்த குறித்த பகுதியானது அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஏற்கனவே சுமார் 75,000 பேர்வரை பாதுகாப்பு முகாம்களுக்கு வெளியேறியுள்ளனர்.\nஆனால், பல விவசாயிகளும், கற்சுரங்கத் தொழிலாளர்களும், பண்ணையாளர்களும் கட்டளையை மீறி வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிலிப்பைன்ஸ் அல்பே மாகாணம் மயோன் எரிமலை சீற்றம் எரிமலை குழம்பு புவி அறிவியல் நிறுவனம்\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது\n2018-08-18 01:06:16 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nஅமெரிக்க அரசாங்கம் மியன்மாரில் இடம்பெற்றது இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிடாததும் முக்கியமானது.\n22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது\nபாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார்.\n2018-08-17 18:56:36 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nசுவீடனில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னை நேர்முகப் பரீட்சை செய்த நபரிடம் கை குலுக்காமல் பேசிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\n2018-08-17 15:12:03 சுவீடன் இஸ்லாமியப் பெண் நேர்முகப் பரீட்சை\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது - கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டில்லியிலுள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது.\n2018-08-17 14:58:31 பிரதமர் வாஜ்பாய் டில்லி\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/3020", "date_download": "2018-08-18T00:21:40Z", "digest": "sha1:E33TWMUB4JXVVN4RZXLEBO22BUY23KFA", "length": 9558, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பூமியின் மீது அரை மைல் அக­ல­மான விண்கல் மோது­வதால் குறு­கிய பனி­யுகம் தோன்றும் அபாயம் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nபூமியின் மீது அரை மைல் அக­ல­மான விண்கல் மோது­வதால் குறு­கிய பனி­யுகம் தோன்றும் அபாயம்\nபூமியின் மீது அரை மைல் அக­ல­மான விண்கல் மோது­வதால் குறு­கிய பனி­யுகம் தோன்றும் அபாயம்\nஅரை மைல் அக­ல­மான விண்­கல்­லொன்று பூமி மீது மோதும் பட்­சத்தில் அதன் விளை­வாக சிறிய பனி­யு­க­மொன்று தோன்றும் அபா­ய­முள்­ள­தாக புதிய ஆய்­வொன்று தெரி­விக்­கி­றது.\n0.6 மைல் அக­ல­மு­டைய விண்கல் பூமியின் மீது மோதும் பட்­சத்தில் அதனால் பூமியின் வெப்­ப­நிலை 8 பாகை செல்­சியஸ் வரை வீழ்ச்­சி­ய­டையும் என அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள நாசா நியோ ஆய்­வுகள் நிலை­யத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.\nஅவ்­வாறு விண்கல் மோதும் பட்­சத்தில் மேலெழும் பெரும் தூசுப் படலம் கார­ண­மாக பூமியை வந்­த­டையும் சூரிய ஒளி 20 சத­வீ­தத்தால் குறையும் என அவர்கள் கூறு­கின்­றனர். அதே­ச­மயம் பூமி­க்கு மேலா­க­வுள்ள ஓசோன் பட­லத்தின் அளவு 55 சத­வீ­தத்தால் குறை­வ­டையும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிண்கல் மோதுவதால் எழும் தூசுப் படலம் தணிய குறைந்­தது 6 வரு­டங்கள் செல்­லலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஎனினும் எதிர்­வரும் ஆண்டு செப்­டெம்பர் மாதம் சிறிய விண்­கல்­லொன்று பூமி மீது மோதி இந்த விளைவை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு 250மில்லியனில் ஒரு வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறு­கின்­றனர்.\nவிண்­கல்­ பனி­யு­கம் பூமி தூசுப் படலம் வீழ்ச்­சி­\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் நாசா\nசூரி­யனை இது­வரை இல்­லாத வகையில் நெருக்­க­மாகச் சென்று ஆய்வு செய்­வ­தற்­காக நாசா தயா­ரித்­துள்ள செயற்­கைக்கோள் இன்று விண்ணில் செலுத்­தப்­பட உள்­ளது.\n2018-08-12 15:14:31 சூரியன் செயற்­கைக்கோள் நாசா\nவட்ஸ் அப் இல் காணப்படும் 5 இலகுமுறை (whatsapp trick )\nநாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் சமூகத்தளம் தான் வட்ஸ் அப் ( whatsapp) , நாம் உபயோகிக்கும் இந்த whatsapp இல் இலகுவாக கையாள சிறந்த ஐந்து whatsapp trick ஐ பார்க்க முடியும்.\nசெவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.\n2018-07-31 12:21:08 செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகள் பூமி\nவட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஐபோன்களுக்கான வட்ஸ் எப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளது.\n2018-07-26 17:20:43 ஐபோன் புதிய பதிப்பு தொலைபேசி\nசெவ்வாயில் நீர் : விஞ்ஞானிகள் புதிய தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என முன்பே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n2018-07-25 23:27:34 செவ்வாயில் நீர் .விஞ்ஞானிகள் தகவல்\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-18T01:42:46Z", "digest": "sha1:4LAIPKKSQQMKANZZJGL3Z7VROTCEQSJL", "length": 17452, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியான் சான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகான் டெங்ரி (7,010 மீ) மையத்தில் தெரியும்,. சீனா மற்றும் கிர்கிசுத்தான் இடையேயான எல்லையில் தியான் சான் வரம்பு.\nதியான் சான் அல்லது தியன் ஷான் (ஆங்கிலம்: Tian Shan; சீனம்: 天山; பின்யின்: டியான்ஷன்; வேட்-கில்ஸ்: T'ien1shan1; Xiao'erjing: تياشا;டங்கன் மொழி: Тянсан; Tjansan; பழைய துர்க்கி: 𐰴𐰣 𐱅𐰭𐰼𐰃, டெங்ரி டேக்; துர்க்கி: Tanrı Dağı; மங்கோலியன்: Тэнгэр уул , கடல் உல்; உய்குர்: تەڭرىتاغ, Тәңри тағ, டெங்ரி tagh; கிர்கிஸசு: Теңир-Тоо / Ала-Тоо, Teñir-டூ / ஆலா-டூ, تەڭىر-توو / الا-توو; காசாக்கு: Тәңіртау, Täñirtaw, تأڭئرتاۋ; உசுபேகி: Tyan-ஷான், Тян-Шан, تيەن-شەن), மற்றும், பொதுவாக ஹெவன் மலை (Mountain of Heaven, Tian;) அல்லது பரலோக மலை ( Heavenly Mountain) எனும் பெயர்களில் உள்ளூர்வாசிகள் அழைக்கப்படும் இது, நடு ஆசியாவில் அமைந்துள்ள மலைத்தொடர்களில், 7.439 மீட்டர் (24,406 அடி) உயரத்தில் உள்ள \"ஜெங்கிஷ் சோக்குசு\" (Jengish Chokusu,)[1] என்னும் ஒரு பெரிய மலை அமைப்பில் உருவாகியுள்ள இந்த தியான் சான் மலை, மிகவும் உயரமான சிகரம் ஆகும்.[2]\nயுரேசியாவின் பெருநிலப்பரப்பில் ஒரு பெரிய மலைத் தொடராக உள்ள தியான் சான் மலை, கடலில் இருந்து அதிக தூரத்தில் அமைந்த பரவலான வறட்சி பகுதியாக காணப்படுகிறது. மேலும், உலகின் ஏழு மலை அமைப்புகளில் ஒன்றாக உள்ள தியன் சான் மலைகள், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிய சீனா, கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், உசுபெக்கிசுத்தான் ஊடாக சுமார் 2,500 கிலோமீட்டர் (1,553 மைல்) தொலைவிற்கு நீண்டுள்ளது.[3] கசக்கஸ்தான் பகுதியில் வியாபித்திருக்கும் இந்த மலைத்தொடரில், சுமார் 3000 ஆண்டுகளாக பனிப்பாறைகள் உருகி வழியும் நீரால் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும், மற்றும் அப்பகுதியில் உள்ள வன உயிரிகளுக்கும் நீராதாரமாக விளங்குவதோடு, அப்பிராந்தியம் முழுவதும் பசுமையான புல்வெளிகள் நிறைந்த வசீகரிக்கும் காட்சிகளால் வெகுவான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளது.[4]\nதியான் சான் மலைத்தொடர், தக்கிலமாக்கான் பாலைவனத்தின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதியிலும், மற்றும் நேரடியான வடக்கில் கசக்கஸ்தான் பிராந்திய எல்லையில் தாரிம் நீர்த்தேக்கமும் (Tarim Basin), மேலும், வடமேற்கில் கிர்கிசுத்தான், மற்றும் சீனாவும் உள்ளது. தெற்கில் பாமிர் மலைகள் வரை இணைப்புகள் கொண்ட தியான் சான் மலைத்தொடர், வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி சென்று மங்கோலியாவில் உள்ள அல்த்தாய் மலைத்தொடரை சந்திக்கிறது.[5] இமாலய மலை பிறப்பு திணைமண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மலைத்தொடர், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய \"புது உயிர் ஊழி\" (cenozoic era) என்னும் காலக்கட்டத்தில், இந்திய மற்றும் யுரேசிய புவித் தகடுகளின் மோதல் மூலம் உருவாக்கப்பட்டது. நடு ஆசியாவின் மிக நீளமான மலைத்தொடர்களில் ஒன்றான இது, உசுபெக்கிசுத்தான் தலைநகரமும் தாஷ்கந்து மாகாணத்தின் தலைநகரமுமான தாஷ்கந்து வரையில் சுமார் 2,800 கிலோமீட்டர்கள் (1,700 மைல்) கிழக்கு நோக்கி நீண்டுள்ளது.[6]\n2,000 மீட்டர் (6,600 அடி) உயரத்தில் ஆசிய ஊசி இலை மரம் (Picea schrenkiana, Schrenk's spruce, or Asian spruce) போன்ற மர வகைகள் முக்கியமான காடுகளாக செழித்து வளரும் இந்த தியான் சான் மலைத்தொடரில், தாழ்வான மலைச் சரிவுகளில் காட்டு அக்கரோட்டு தாவர வகை மரங்களும், மற்றும் ஆப்பிள் மரங்களும் தனித்தன்மை வாய்ந்த இயற்கை காடுகளாக காணப்படுகிறது.[7]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தியான் சான் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nசீனாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/google-chrome-now-lets-you-permanently-mute-autoplay-in-websites/", "date_download": "2018-08-18T01:19:58Z", "digest": "sha1:2PS4KSXKD54QZ2SR5LZ7GNNC5GCHYI7D", "length": 12122, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கூகுள் க்ரோமின் புதிய அப்டேட்டை கவனித்தீர்களா? - Google Chrome now lets you permanently mute autoplay in websites", "raw_content": "\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nகூகுள் க்ரோமின் புதிய அப்டேட்டை கவனித்தீர்களா\nகூகுள் க்ரோமின் புதிய அப்டேட்டை கவனித்தீர்களா\nகுகூள் குரோம் 64 வெர்ஷனில், தானாகவே ப்ளேயாகும் ஆட்டோ ப்ளே வீடியோக்களை நிரந்தரமாக மியூட் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் தலைச்சிறந்த தேடல் நிறுவனமான கூகுள் க்ரோமில், ஆட்டோ ப்ளே வீடியோக்களை நிரந்தரமாக மியூட் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகூகுள் என்றாலே புதுமை. அதைத்தொடர்ந்து நிரூப்பிக்க நாளுக்கு நாள் வித்யாசமான முயற்சிகள், ஆய்வுகள். இப்படி கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களிடம் இருந்து பெற்ற பாராட்டுக்கள் ஏராளம். இந்த பாராட்டுக்களை தக்கவைத்துக் கொள்ள, கூகுள் நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை நிகழ்த்தியுள்ளது. இதன்படி, கூகுள் க்ரோமின் 64 வெர்ஷனில் புதிய அப்டேட் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வெர்ஷனில், தானாகவே ப்ளேயாகும் ஆட்டோ ப்ளே வீடியோக்களை நிரந்தரமாக மியூட் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் படி, பயனாளர்கள் ’வீ சைட் இன்ஃபர்மேஷன்’ குறியீடினுள் சென்று, ஆட்டோ ப்ளே வீடியோக்களை நிரந்தரமாக மியூட் செய்து விடலாம்.\nஇந்த அப்டேட் வெர்ஷன் மேக், விண்டோஸ், லின்னகஸில் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த வெர்ஷனில் ப்ளேயாகும் வீடியோக்களை தற்காலிகமாக மட்டுமே மியூட் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிரந்தரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nகூகுள் பிக்சல் போன் 3 XL -ன் சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇனி கூகுள் க்ரோம் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை\nபுதிய நிறுவனத்தை ஆரம்பித்தார் யாகூ நிறுவனத்தின் முன்னாள் சி.இ ஓ மரிசா மேயர்\nகூகுள் நிறுவனத்தின் ’புரோ கல்சர்’ பாலியல் துன்புறுத்தலுக்கு வழி வகுக்குகிறது: முன்னாள் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டு\nகூகிள் மொழிபெயர்ப்பு செயலியை பல்வேறு ஆண்ட்ராய்டு செயலியிலும் பயன்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ பெறவிருக்கும் மோட்டோரோலா டிவைசஸ்\nஆசிரியர் தினத்தை அட்டகாசமான கிராஃபிக்ஸ் டூடுளுடன் கொண்டாடும் கூகுள் நிறுவனம்\nயூடியூப் லோகோ மாற்றம்… கூடுதல் வசதிகளும் அறிமுகம்\nடெஸ்க்டாப்-ல் இனி “கூகிள் அல்லோ ஆப்” பயன்டுத்தலாம்\nஜீயராக என்ன தகுதி வேண்டும் என்பது இன்றுதான் தெரிந்தது : கனிமொழி எம்.பி. பேச்சு\nஐபிஎல் ஏலம் 2018: இது சென்னை அணியா..\nகமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்\nகமல்ஹாசன் அரசியல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும்.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவினை பயன் கற்போம் : தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் Internet of Things (IoT) தொழில் நுட்பம்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/9267-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-08-18T01:15:23Z", "digest": "sha1:PRMAWSJ4LBAYQOWQTOCTW7LKOPY6BJFM", "length": 7260, "nlines": 210, "source_domain": "www.brahminsnet.com", "title": "நவராத்திரி தோன்றிய கதை", "raw_content": "\nThread: நவராத்திரி தோன்றிய கதை\nஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.\nதுர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.\n« அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் \u0002 | நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்த&# »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=305263", "date_download": "2018-08-18T01:32:06Z", "digest": "sha1:3C7NMLD7OPMHIQ6ZWRYGKW4HRSZOSOSB", "length": 7934, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சூரிய குடும்பத்தில் உள்ள பெயரிடப்படாத கோளின் சந்திரன் கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு | The unnamed planet in the solar system, the discovery of the moon, NASA scientists announced - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nசூரிய குடும்பத்தில் உள்ள பெயரிடப்படாத கோளின் சந்திரன் கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு\nவாஷிங்டன்: சூரிய குடும்பத்தில் உள்ள பெயரிடப்படாத ஒரு கிரகத்தின் அருகில் சந்திரன் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பை நாசா விஞ்ஞானி மார்டோ அறிவித்துள்ளார். இந்த சந்திரன் ஏரத்தாழ 400 கி.மீ பரப்பளவில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அருகேயுள்ள குயிர்பெர் மண்டலத்தில் பெயரிடப்படாத கிரகம் ஒன்று உள்ளது. விஞ்ஞானிகளால் 2007 ஒ.ஆர்.10(2007 O.R.10) என்று அழைக்கப்படும் இந்த கிரகம் சூரிய குடும்பத்தின் 3-வது சிறிய கிரகமாகும்.\nஇந்த சின்ன கிரகத்தில் சந்திரன் மூண்டிருப்பதை நாசாவின் ஹப்பில் தொலைநோக்கி மூலம் இந்த நிலாவை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே ஹப்பில் தொலைநோக்கியின் மூலம் தான், சிறிய கிரகமான ப்ளூட்டோவின் 5-வது சந்திரனை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009-ம் ஆண்டில் ஹப்பில் தொலைநோக்கி உதவியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இந்த சந்திரனை முதன்முறையாக அடையாளம் கண்டுள்ளனர் விஞ்ஞானிகள். பின்பு 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தின் மூலம் இந்த சந்திரனானது சிறிய கிரகத்தை சுற்றி வருவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nசூரிய குடும்பம் பெயரிடப்படாத கோள் சந்திரன் நாசா விஞ்ஞானிகள்\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=401518", "date_download": "2018-08-18T01:34:42Z", "digest": "sha1:HPF2KQEYM2IFGCZUEVTI5PKD7VS4OMTB", "length": 20226, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கோடைக்கு உகந்த உணவுகள்... | Summer Foods - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nகோடையில் பலரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, `டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல் வறட்சி. நம்மில் பலர், இதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இதை தடுக்க சில டிப்ஸ்... குழந்தைகள் மற்றும் முதியோரை இது அதிகம் பாதிக்கும். கோடையில் தளர்வான பருத்தி உடைகளை அணிவது நல்லது. அதிலும் வெள்ளை, மங்கலான நிறம் கொண்ட உடைகளை உடுத்துவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கோடையில் அணிவதற்கென பிரத்யேகமான உடைகள் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை அணியலாம். வெள்ளைநிற பருத்தி உடை கோடை காலத்துக்கு ஏற்றது.\nகோடையில் சூரிய ஒளி நம் உடலில் அதிகம் படுவதால், சோடியம், பொட்டாசியம் போன்றவை அடங்கிய எலெக்ட்ரோலைட்டுகள் நமக்கு தேவைப்படும். எலெக்ட்ரோலைட்டுகள் அதிகம் கொண்டது இளநீர். இதை அருந்துவதன் மூலம் அதை ஈடுகட்டலாம். வெயிலில் விளையாட செல்லும் குழந்தைகளுக்கு எலெக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இளநீரை குடிக்க கொடுப்பது நல்லது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக இளநீர்தான் மிகவும் சுத்தமானது. இளநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தாமல், 10 மணிக்கு மேல் அருந்துவது சிறந்தது. இது, டீஹைட்ரேஷனிலிருந்து நம் உடலை காக்க உதவும்.\nகோடையில் குழந்தைகளும், வயதானவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். கோடையில் அம்மை, வியர்க்குரு, மெட்ராஸ்-ஐ எனப்படும் கண் நோய் போன்றவற்றோடு பேன் தொல்லையும் ஏற்படலாம். உடல்சூடு அதிகரித்தால், பேன்கள் பல்கி, பெருகும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கடைகளில் விற்கப்படும் பேக்கரி பண்டங்கள், ஜங்க் புட் ஆகியவை குழந்தைகளை சுண்டி இழுக்கும். இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக தர்பூசணி பழம் சாப்பிடலாம். தர்பூசணியில் 92 சதவீத நீர்ச்சத்து உள்ளது. இது, `டீஹைட்ரேஷன்’’ ஏற்படாமல் பாதுகாக்கும். வெள்ளரி, திராட்சை போன்றவற்றின் விதைகளிலும் பல ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.\nஅவற்றையும் சாப்பிடலாம். தர்பூசணி விதைகளை ஊறளவைத்து சாப்பிடலாம். இந்த விதைகள், சிறுநீரக கோளாறுகளை நீக்கும். தர்பூசணி சாப்பிடும்போது அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. சுகாதாரமான சூழலில் விற்கப்படும் இதர பழங்களையும் வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. தக்காளி, சூட்டை தணிக்கும். எனவே, கோடையில் தக்காளி ஜூஸ் அருந்தலாம். இது நேச்சுரல் சன்ஸ்கிரீன் ஆக செயல்பட்டு சருமத்தையும் பாதுகாக்கும். வெயில் காலத்தில் லெமன் ஜூஸ் அருந்துவதும் நல்லது. இது, சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தரும். சர்பத், நன்னாரி சர்பத், நுங்கு, பழக்கலவை போன்றவை உடல்சூட்டை தணிப்பவை. இவை, எலெக்ட்ரோலைட்டுகளை சமமாக வைத்துக்கொள்ள உதவும்.\nபிஞ்சு வெள்ளரிக்காய் மிகவும் நல்லது. இதில், 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழச்சாறுகளும் நல்லது. சீரகம், வெந்தயம் போன்றவை உடல்சூடு தணிக்கும். மோர் சூட்டை தணிக்கும். தயிராக சாப்பிடாமல் அதை கடைந்து வெண்ணெயை எடுத்துவிட்டு, மோர் சாப்பிடலாம். மஞ்சளில் உள்ள `குர்குமின்’ ஆன்டி இன்பெக்‌ஷனாக செயல்படக்கூடியது. புதினா, மல்லித்தழை ஜூஸ் போன்றவையும் `டீஹைட்ரேஷன்’’ ஏற்படாமல் பாதுகாக்கும். இவை கோடையில் ஏற்படும் செரிமான கோளாறையும் சரிசெய்யும்.\nகோடை துவங்கிவிட்டால், வியர்க்குரு, சருமப்பிரச்னை, வயிற்றுப்பிரச்னை, உடல்சூடு என கோடைகால உபாதைகள் வரிசைகட்டுகின்றன. வழியெங்கும் தண்ணீர், நீர், மோர் பந்தல், இளநீர், ஜூஸ், லஸ்ஸி, லெமன் சோடா விற்கும் தள்ளுவண்டி கடைகள், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் என திடீர் கடைகள் முளைக்கின்றன. இவற்றில் கோடைக்கு ஏற்றது எது அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் சீசனில் எந்த உணவுகள் சிறந்தவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தாமலும், உடல் உபாதைகளுக்கு தீர்வாகவும் இருப்பவை எது என்ற கேள்வி எழுகிறது. கோடை காலத்துக்கு ஏற்றது, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி. கொழுப்பு சத்தே இல்லாதது. வைட்டமின் ‘’ஏ’’ மற்றும் ‘’இ’’ நிறைந்த தர்பூசணியின் பலன்கள் ஏராளம். இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை இது தடுக்கிறது. தர்பூசணியில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது. சிறுநீரக பிரச்னை அல்லது டையூரெட்டிக் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இதை தினமும் சாப்பிட்டால், அந்த பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.\nதர்பூசணியில் இருக்கும் லைகோபீன், சிட்ருல்லின் சத்துகள், மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டுகளாக செயல்படுகின்றன. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்த இவை உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தஅழுத்த பாதிப்புகளை குறைக்கவும் உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் கர்ப்பகாலத்தில் ஏற்படும் தசைபிடிப்பு பிரச்னையை தடுக்கிறது. லைகோபீன், புற்றுநோய் வருவதை தடுக்கிறது. தர்பூசணியை சாப்பிட்டால் வியர்வை வெளியேறுவது அதிகரிக்கும். இதனால், உடலின் அதிகப்படியான சூடு குறைந்து, குளிர்ச்சி ஏற்படும். வெயில் காலத்தில் அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது சரும பிரச்னை. தர்பூசணியில் இருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. இவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் உள்ள குளூட்டாதியோன் சரும பராமரிப்புக்கும், நன்றாக முடி வளர்வதற்கும் உதவும்.\nதர்பூசணியில் உள்ள வைட்டமின் சி, அன்றாடம் நாம் உட்கொள்ளவேண்டிய ஊட்டச்சத்தில், 25 சதவீத சத்துகளை கொடுக்கிறது. இது, சருமத்தில் வெடிப்பு, சரும வறட்சி, சருமத்தில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் வராமலும் தடுக்கிறது. அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு தோலில் எரிச்சல், சருமம் கறுத்துப்போகுதல், உடலில் ஆங்காங்கே தடிப்புகள் ஆகியவை ஏற்படக்கூடும். தர்பூசணியில் இருக்கும் பொட்டாசியம், இந்த பிரச்னைகளை தீர்க்கும். சருமத்தின் பொலிவை தீர்மானிப்பது மெலனின். இது, தர்பூசணியின் குளூட்டாதியோன் ஆன்டிஆக்ஸிடன்ட், மெலனின் உற்பத்தியை அதிகரித்து, சருமத்துக்கு பொலிவை கொடுக்கிறது. கடினமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியை முடித்தவுடன் ஹைட்ரேஷனுக்காக எலெக்ட்ரோலைட் சாப்பிடுவார்கள். அதற்கு பதிலாக தர்பூசணி சாப்பிடலாம். பொதுவாக எந்த பழத்தையும், ஜூஸாக அருந்தாமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. காரணம், ஜூஸாக்கும்போது பழத்திலுள்ள நார்ச்சத்து குறைந்துவிடும்.\nசர்க்கரை நோயாளிகள், தர்பூசணி சாப்பிடலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், அது தவறு. GI எனப்படும் Glycemic index சத்து ஒவ்வொரு பழத்துக்கும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். தர்பூசணியில் அது அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, டி., லைகோபீன், சிட்ருல்லின், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள லைக்கோபீன், பீட்டா கரோட்டின் சத்துகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கொழுப்புச்சத்தே இல்லாத தர்பூசணியில், கலோரியும் மிக குறைவு. எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. இதில் 11 சதவீதம் வைட்டமின் ஏ, 13 சதவீதம் வைட்டமின் சி இருக்கிறது. இந்த வைட்டமின் சத்துகள் மாரடைப்பை தடுக்க உதவுகிறது.\nகோடை கொண்டாட்டம் உடல் வறட்சி குழந்தைகள் பிஞ்சு வெள்ளரிக்காய் Summer Foods\nநாளை சுதந்திர தினவிழா : தேசிய கொடிகள் விற்பனைக்கு குவிப்பு\nஆஷ் துரையை கொல்ல ஆயத்தமான மாவீரர் தர்மபுரி தியாகி தீர்த்தகிரியார்\nசமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட டாக்டர் சுப்பராயன்\nகாந்தியின் காலடி பதிந்த சேலம்\nதேசிய சுதந்திர செந்தில் விநாயகர் கோவில்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_05_08_archive.html", "date_download": "2018-08-18T00:22:28Z", "digest": "sha1:O2O66UVI2JGQ7G5VMNIPST4CLAEBT5VJ", "length": 57150, "nlines": 745, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/05/08", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை13/08/2018 - 19/08/ 2018 தமிழ் 09 முரசு 18 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதேர்தல் - சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்\nகாலை பிடிச்சி , கையை பிடிச்சி ,\nபல்லைக் காட்டி , பணிவைக் காட்டி ,\nஒட்டு வாங்க , துட்டு குடுத்து\nதோடு குடுத்து , குடத்தைக் குடுத்து ,\nசேலை குடுத்து ,வேட்டி குடுத்து ,\nஓட்டு கேட்க வாராங்க , உஷாரய்யா உஷாரு .\nதேடி நீங்க போயி நின்னா\nசிட்னி துர்க்கை அம்மன் கோவில் கட்டிட நிதிக்காக இராப்போசன விருந்து 14/05/2016\nதிரும்பிப்பார்க்கின்றேன் முதல் பிரதியை சைவஹோட்டல் வாயிலில் வெளியிட்ட விஞ்ஞான ஆசிரியர் நாவலப்பிட்டியில் படிப்பகம் அமைத்து இலக்கியப்பயிர் வளர்த்த சீர்மியத்தொண்டர் இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய மூத்த படைப்பாளி முருகபூபதி\nநூல் வெளியீடுகள் எங்கும் நடக்கின்றன. முதல் பிரதி, சிறப்புப்பிரதி வழங்கும் சடங்குகளுக்கும் குறைவில்லை. அவற்றை அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள் படிக்கிறார்களா என்பது வேறு விடயம். இவ்வாறு நூல்களின் அரங்கேற்றங்கள் கோலம்கொண்டிருக்கையில், ஒரு எழுத்தாளரின் நூலை முகத்திற்காக விலைகொடுத்து வாங்காமல், எதிர்பாராத தருணத்தில் ஒரு சைவஹோட்டல் வாயிலில் அந்த எழுத்தாளரின் கைப்பையிலிருக்கும் நூலைக் கண்டுவிட்டு பணம் கொடுத்து வாங்கிய முகம் மறந்துபோன ஒரு வாசக அன்பர் இன்றும் அழியாதகோலமாக அந்த எழுத்தாளரிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.\nஅந்த எழுத்தாளர் தமது முதலாவது நூலை 1974 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கொழும்பில் ஒரு அச்சகத்தில் அச்சடித்துவிட்டு, அவற்றில் 25 பிரதிகளை எடுத்துக்கொண்டு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள பிரபல சைவஹோட்டலுக்குச்செல்கிறார்.\nஅங்கு தமது புதிய நூலின் பிரதிகளை விற்பனைக்கு வைக்கமுடியுமா எனக்கேட்கிறார். இத்தகைய விற்பனைக்காக அந்த ஹோட்டலுக்கு அவர் கமிஷனும் கொடுக்கத்தயார்.\nஆனால், அங்கு மறுத்துவிடுகிறார்கள். சொல்லப்பட்ட பதில் \"இலங்கை நூல்கள் விற்பனை செய்வதில்லை.\"\nஅங்கிருந்த கண்ணாடி அலுமாரியில் தமிழகத்தின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேசையில் தமிழக வணிக இதழ்கள் வண்ணம் வண்ணமாக விற்பனைக்கு இருந்தன.\nஅந்த எழுத்தாளர் ஏமாற்றத்துடன் படி இறங்கியபோது, அந்த ஹோட்டலில் உணவருந்திவிட்டு கையை காகிதத்தால் துடைத்துக்கொண்டு வந்த ஒரு தமிழ் அன்பர், அந்த எழுத்தாளரை நிறுத்தி \" உங்கள் புத்தகத்தின் விலை என்ன \n\" மூன்று ரூபா தொன்னூறு சதம்.\"\nஅந்த அன்பர் நான்கு ரூபாவை நீட்டி நூலைப்பெற்றுக்கொள்கிறார்.\nஅகத்தில் வைத்துப் பூசிப்போம் - ( எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )\nபெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து\nநற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து\nசுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து\nவெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார் \nதான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு\nதனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்\nஊணுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்\nதான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் \nபள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது\nகள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்\nபள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்\nதுள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக \nஉச்சிமுகந்திடுவாள் ஊரார் கண்படா வண்ணம்\nகுட்டியாப் பொட்டுவைப்பாள் குளிவிழும் அக்கன்னமதில்\nகட்டியணைத் தணைத்து கற்கண்டே எனவிழித்து\nதொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் \nஏங்கித் தவிக்கும்தாய் இதையெல்லாம் எண்ணுகின்றாள்\nஎதையுமே மனங்கொள்ளா இருக்கின்றான் அவர்பிள்ளை\nதூங்காமல் கண்விழித்த தூயவளைப் பாராமல்\nதுரையாக வாழ்ந்துகொண்டு தூரவைத்தான் தாயவளை \nதாயவளோ காப்பகத்தில் தனையனையே நினைக்கின்றாள்\nதாய்மைநிறை அவளுள்ளம் தவியாகத் தவிக்கிறது\nதவிப்பறியா மனத்துடனே தனயனுமே இருக்கின்றான்\nதாய்மனதை நோகடித்து தாம்வாழ்தல் முறையன்றோ \nகாப்பகத்தில் தாயைவிட்டுக் களியாட்டம் நடத்துகின்ற\nகருணையில்லா உள்ளங்களே கடவுளுமை மன்னிக்கார்\nகர்ப்பத்தில் சுமந்தவளை கண்போலக் காத்தவளை\nகவலையிலே மூழ்கவிட்டு வாழ்வதுதான் முறையாமோ \nபேசிடும் எந்தன் படைப்பைப் பார்\nபெருமையை முடிந்தால் மிஞ்சப் பார்'\nஜே.கே.யின் அசோகவனத்தில் கண்ணகி ஆண்கள் இயற்றிய காவியங்களில் பெண்களுக்கு ஏன் இந்த நிலை அங்கதச்சுவையில் காவிய மாந்தர்களை சித்திரித்த நாடகம் ரஸஞானி - மெல்பன்\n\" வேத்தியல் பொதுவியலாக இருந்த நாடகம், கோயில்களில் தஞ்சமடைந்து பின் தெருக்கூத்தாக இருந்து பார்சி நாடக வருகையால் மறு எழுச்சி பெற்றுப் புராணம், வரலாறு, சமூகம் என்ற வகைகளைப் பெற்று மேடையில் வளர்ந்தது, அதன்பின் நாடகம் படிப்பதற்கும் கேட்பதற்கும் உரியதாயிற்று. பதிவு செய்யப்பட்டுத் திரைப்படம் போலத் தொலைகாட்சியில் ஒளிபரப்பப் படுவதாகவும் அது ஆயிற்று.\"\nஇவ்வாறு எழுதப்பட்ட குறிப்பொன்றை இக்கால நாடகவகைகள் என்ற ஒரு கட்டுரையில் அண்மையில் படித்தேன்.\nஇன்று தொலைக்காட்சி நாடகங்களின் தீவிரத்தால், மேடை நாடக அரங்காற்றுகைகள் நலிவடைந்து வருகின்றன.\nஅத்துடன் குறும்படங்களும் அவ்விடத்தை ஆக்கிரமித்துவிட்டன.\nஎனினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கூத்து முயற்சிகளையும் மேடை நாடகங்களையும் அவதானித்து வருகின்றோம்.\nஇந்தப்பின்னணியில் நீண்ட நாட்களுக்குப்பின்னர் அவுஸ்திரேலியாவில் மெல்பனில் அரங்கேறிய இளம் படைப்பாளி ஜே.கே.ஜெயக்குமாரனின் அசோகவனத்தில் கண்ணகி என்ற நாடகம் பற்றிய எனது ரஸனைக்குறிப்பை இங்கு பதிவுசெய்கின்றேன்.\nமொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்\nஈழத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் நேற்று காலமாகியுள்ளார். இந்தியாவில் பிறந்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தவர். தமிழின் முக்கியமான எழுத்துக்களை மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் ஈழத்து மற்றும் புலம் பெயர் படைப்புக்களையும் மொழிபெயர்த்துள்ளார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் இளமானிப் பட்டம் பெற்ற இவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.\nதமிழின் முன்னோடி எழுத்தாளர்களான மௌனி, புதுமைப் பித்தன் ஆகியோரின் படைப்புக்களை மொழியாக்கம் செய்ததுடன் அசோகமித்திரன், சுந்தரராமசாமி, அம்பை, இமயம் ஆகியோரின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.\nஈழத்து மற்றும் புலம்பெயர் இலக்கியங்களை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம்,\nஅண்மையில் வெளியிட்ட Lost Evenings, Lost Lives ஆங்கில மொழியாக்கம், ஈழத்தின் மூத்த தலைமுறை முதல் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைஉள்ளடக்கியுள்ளது.\nலக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானர் - மௌனகுரு\nதமிழ் இலக்கியம் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையிலும், புலம் பெயர்ந்தும் நீட்சி பெற்றுள்ளது என எடுத்துகாட்டிய லக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானர்\nபிரித்தானிய எழுத்தாளருமான லக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானார்.\nஇவர் சமகாலத் தமிழ் எழுத்தாளர்களான\nமெல்பன் நினைவரங்கில் கலந்துகொள்ளும் மூன்று இலங்கை இலக்கியவாதிகள்\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் ஒழுங்குசெய்துள்ள நினைவரங்கிலும் இலக்கியச்சந்திப்பிலும் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மூன்று இலக்கியவாதிகள் உரைநிகழ்த்துகிறார்கள்.\nஅண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மறைந்தவர்களான படைப்பாளி செங்கை ஆழியான், நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கே. விஜயன் ஆகியோரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும்\nஎதிர்வரும் மே மாதம் 14 ஆம் (14-05-2015 ) திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (1, Karobran Drive - Vermont South, Vic - 3133) மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nதமிழகத் தேர்தல் -- வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்யன்\nஅண்ணாவின் அன்புத் தம்பியின் அரசியல் சாகசம்\nஅம்மாவின் “விலையில்லா”அரசியல் முன் எடுபடுமா\nதமிழகத்தில் 15வது சட்டசபைக்கான ஆயத்தங்கள் விறுவிறுப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில் பரபரப்பான கட்சிக் கூட்டணிஇ மற்றும் கட்சி முறிவுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.\nதமிழகம் தேர்தல் களை கட்டத் தொடங்கி விட்டது. கட்சிகள் சேர்வதும்இ கலைவதுமாக் இருக்கின்றன. உச்ச பட்ச இறுக்கத்தில் திமுகவும்இ சகல அலட்சியமாக அதிமுகவும் இருக்கின்றன. தேர்தல் களத்தில் விஜயகாந்தின் தே தி மு க யார் பக்கம் என்று பரபரப்பான எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கும் வேளையில்இ நாம் தனித்தே நிற்போம் என்று விஜய்காந்த் குரல் கொடுக்க ஆடி போனது திமுக .\nதொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது\nகட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன\nவரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்\nஇன்று தாயகம் திரும்புகின்றனர் தமிழகத்திலுள்ள அகதிகள்\nவெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்' மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி\nதொடரும் முன்னாள் போராளிகளின் கைது: பிரபாவும் கைது\nகென்­யாவில் 70,000 சட்­ட­வி­ரோத யானைத் தந்­தங்கள் தீக்­கிரை\n16 ஆண்டுகளுக்கு பின் இமயமலை ஏறும் போது உயிரிழந்தவர்களின் சடலம் மீட்பு (வீடியோ இணைப்பு)\nஉதயநிதி தன்னை ஒரு நடிகனாக நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன் வெளிவந்த அனைத்து படங்களும் சந்தானத்தின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை நம்பி மட்டுமே படம் வெளிவந்தது.\nகொஞ்ச1ம் வித்தியாசமாக கெத்து படத்தில் சந்தானம் இல்லாமல் ஒரு ஆக்‌ஷன் படத்தில் களம் இறங்கினார். அந்த படம் பெரிதும் அவருக்கு கை கொடுக்கவில்லை, அதனால், முதலில் தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க வேண்டும் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற ஜாலி llb படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து நடித்துள்ளார். ஒரு நடிகனாக உதயநிதி வெற்றி பெற்றாரா\nஊரில் வக்கீலுக்கு படித்துவிட்டு எந்த கேஸும் கிடைக்காமல், போராடிக்கொண்டு இருக்கிறார் உதயநிதி, சுற்றி இருப்பவர்கள் தன்னை கிண்டல் செய்வது கூட தெரியாத அப்பாவி, ஒரு வழக்கில் வெற்றி பெற்றால் தான், தன் மாமாவிடம் பொண்ணு (ஹன்சிகா) கேட்க முடியும் என கோபமாக சென்னை கிளம்பி செல்கிறார்.\nசென்னையில் இதற்கு மேல் கஷ்டப்படுகிறார், விவேக்கை நம்பி உதயநிதி சென்னை வந்தால் அவரே அங்கு ஊறுகாய் கடை போட்டு பிழைத்து வருகின்றார். இந்த நேரத்தில் தான் நாடே தீர்ப்பு எதிர்ப்பார்க்கும் ஒரு வழக்கில் வாண்ட்டாக ஆஜர் ஆகிறார் உதயநிதி.\nநடைப்பாதையில் படுத்திருந்தவர்களை கார் ஏற்றி கொன்ற ஒரு பெரிய இடத்து பையன் வழக்கை, கையில் எடுக்கிறார். ஆனால், அந்த பையனுக்கு ஆதரவாக இந்தியாவில் நம்பர் 1 வக்கீலான பிரகாஷ்ராஜ்வாதாடுகிறார்.\nஊரே தன்னை ஒரு மொக்கை லாயர் என்று சொல்கின்றது, நாம் சாதிக்க இது தான் சரியான தருணம் என பிரகாஷ்ராஜுக்கு எதிராக உதயநிதி களமிறங்க, இறுதியில் வெற்றி யாருக்கு என்பதே மீதிக்கதை.\nஇதுவரை நடித்த 5 படங்களில் இது தான் உதயநிதியின் பெஸ்ட் என்று சொல்லிவிடலாம், எந்த ஒரு இடத்திலும் அலட்டிக்கொள்ளாத நடிப்பு, ஹீரோ திட்டு வாங்குகிறார், ஒரு சில இடங்களில் எல்லாம் ஜுனியர் ஆர்டிஸ்டே கலாய்க்கிறார்கள், அடி வாங்குகிறார், திணறி திணறி வாதடுகிறார். இதுபோன்று தன் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து முதன் முறையாக ஒரு ஹீரோவாக நம் மனதை உதயநிதி வென்றுவிட்டார். ஹன்சிகா உதயநிதிக்கு சப்போர்ட் தரும் கதாபாத்திரம் தான் என்றாலும் முதன்முறையாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான அழகான நடிப்பால் கவர்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் ஆகியோர் கதைக்கு தேவையான நடிப்பை தந்துள்ளனர்.\nபடத்தின் மற்றொரு ஹீரோ கண்டிப்பாக பிரகாஷ்ராஜும், ராதாரவியும். படத்தில் இவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்றால், இவர்கள் பெயரை தான் முதலில் போடுகிறார்கள், பிறகு தான் உதயநிதி பெயரே வருகின்றது. பிரகாஷ்ராஜ் ஒரு சீனியர் லாயராக மிரட்டுகிறார், ஏதோ பள்ளி சிறுவனை ஆசிரியர் மிரட்டுவது போல் உதயநிதியை அதட்டி உட்கார வைக்கும் இடத்தில் கம்பீரம். ஆனால், ஒன்றே ஒன்று சொல்லியே ஆகனும், ராதா ரவி சார் நடிகர் சங்க தேர்தலில் தோற்றதால் மிகவும் சந்தோஷப்படுவது பல இயக்குனர்கள் தான்.\nஏனெனில் இப்படி ஒரு நடிகனை தான் நாம் இத்தனை நாட்கள் தொலைத்து விட்டோம், அவர் பேசினாலே திரையரங்கம் கைத்தட்ட ஆரம்பித்து விடுகின்றது, அதிலும் படத்தின் பாதி வரை அமைதியாகவும் நிதானமாகவும் இருந்து, ஒரு கட்டத்தில் கோபத்தில் கையை உயர்த்தி பேசும் இடத்தில் சார் சூப்பர் சார்.\nபடத்தின் பல காட்சியமைப்புகள் மிகவும் யதார்த்தமாக உள்ளது, உதயநிதி ஒரு சாதாரண மனுஷனாக கேஸை வாபஸ் வாங்க பணம் வாங்கி, அவர் திருந்தும் இடத்திற்கு வைத்த காட்சிகள் கிளாஸ், அதைவிட கிளைமேஸில் நடைப்பாதையில் படுத்திருந்து தன் குடும்பத்தை இழந்தவர் கோர்ட்டில் பேசும் இடம் சூப்பர் அஹமத்.\nபடத்தின் மிகப்பெரும் பலமே ஒளிப்பதிவு, இசையும் தான், மதியின் கேமராவில் நீதிமன்றத்தை நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளார், சந்தோஷ் நாரயணின் இசையின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் , அதை விட பின்னணி இசையில் கலக்கியுள்ளார், அதிலும் குறிப்பாக ‘அதோ’ BGM படத்தின் கதையை தாங்கி செல்கின்றது.\nபடத்தின் கதைக்கு பொருந்திய கதாபாத்திரங்கள், அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.\nபிரகாஷ்ராஜ்+ராதாரவி போன்ற சீனியர் நடிகர்களின் பங்களிப்பு, படத்தின் இரண்டாம் பாதி வேகம் எடுக்கின்றது.\nகிளைமேக்ஸில் உதயநிதியும், பிரகாஷ்ராஜும் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. படத்தின் வசனம் ‘உங்களுக்கு தெரியாத விஷயத்தில் அறிவை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள்’ போன்றவை யோசிக்க வைத்து ரசிக்க வைக்கின்றது.\nஇவை அனைத்தையும் விட, ரீமேக் படம் என்றாலும், நம் சமூகத்தில் பணக்காரர்களால் நடக்கும் பெரிய விபத்துக்களை எப்படி மூடி மறைக்கிறார்கள் என காட்டிய களம்.\nபடத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கின்றது, எந்த இடத்திலும் சோர்வு இல்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கின்றது. சில யதார்த்த மீறல், காட்சிகளில் மட்டும்.\nமொத்தத்தில் இந்த மனிதனில் எடுத்த வழக்கை உதயநிதி வெற்றிகரமாக முடித்தது மட்டுமில்லாமல், ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.\nதேர்தல் - சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்\nசிட்னி துர்க்கை அம்மன் கோவில் கட்டிட நிதிக்காக ...\nதிரும்பிப்பார்க்கின்றேன் முதல் பிரதியை சைவஹோட்டல...\nஅகத்தில் வைத்துப் பூசிப்போம் - ( எம் . ஜெயராமசர்...\nஜே.கே.யின் அசோகவனத்தில் கண்ணகி ஆண்கள் இயற்றிய ...\nமொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்\nலக்சுமி ஹோல்ம்ஸ்டோம் காலமானர் - மௌனகுரு\nமெல்பன் நினைவரங்கில் கலந்துகொள்ளும் மூன்று இலங்கை ...\nதமிழகத் தேர்தல் -- வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/08/20.html", "date_download": "2018-08-18T00:24:35Z", "digest": "sha1:46VOAAUKN3RYFCSIETNR25XJBUIZKW7G", "length": 23742, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 15:35:00 - 0\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே.சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.\nபோராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.\nவிடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.\nஇப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.\nஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.\n“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”\nசிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.\nகண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.\nதமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்\nஅக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்ததுசிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.\n01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.\n“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.\nதமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் || உயிர்ப்பூ || படத்தில் இவர் பாடிய ” சின்னச் சின்னக் கண்ணில்” என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.\nஅப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.\nசிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.\nஇதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை. அதேபோல் குட்டிக்கண்ணனும் வீரத்தின் சுவடாகி தமிழினத்தின் காவலராகி ஒளிரவிட்டு வீசுகின்றனர்.\nஉடுத்துறை மண்ணில் பிறந்த சிட்டு அழியாத வரலாறு.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1930", "date_download": "2018-08-18T01:41:24Z", "digest": "sha1:5L62P5F5RPT4HOGXC6FWKSJXEU4QGHYJ", "length": 7253, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1930 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1930 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1930 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1930 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1930இல் அரசியல்‎ (1 பகு)\n► 1930 இறப்புகள்‎ (32 பக்.)\n► 1930 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1930 நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1930 பிறப்புகள்‎ (139 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/237809", "date_download": "2018-08-18T00:44:51Z", "digest": "sha1:ATKUO7UA5E2ZYAECTZQVBJOZRC5QFAHY", "length": 32496, "nlines": 112, "source_domain": "kathiravan.com", "title": "தனித்தன்மை மிக்க மீனம்... நினைத்ததை முடிக்கும் மேஷம்... மற்றைய ராசிகள் எப்படி? - Kathiravan.com", "raw_content": "\nகேரள வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகரின் அம்மா… அதிரடியாக மீட்கப்பட்ட சம்பவம் (படம் இணைப்பு)\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nவெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் கேரள மக்கள்… வைரலாகும் வீடியோ\nபிரபல நடிகை திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கியது திரையுலகம்\nதனித்தன்மை மிக்க மீனம்… நினைத்ததை முடிக்கும் மேஷம்… மற்றைய ராசிகள் எப்படி\nபிறப்பு : - இறப்பு :\nதனித்தன்மை மிக்க மீனம்… நினைத்ததை முடிக்கும் மேஷம்… மற்றைய ராசிகள் எப்படி\nஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. இந்த 12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்கட்டங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் அவர்களுக்கு சொந்த வீடு இல்லை. ராசிகள் நீர், நெருப்பு, நிலம், காற்று என நான்கு வகையாக உள்ளன. சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி எனவும் ராசியினை பிரித்து வைத்துள்ளன. ராசிகளின் தன்மைக்கு ஏற்ப குண நலன்களும் மாறுபடுகின்றன. 12 ராசிகளுக்கு 27 நட்சத்திரங்கள் உள்ளன. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.\nசெவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கவர்கள். மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் நீங்கதாங்க. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பவர்கள். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பவர்கள்.\nகாதல் கிரகம் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் அமைதியானவர்கள். அழகான தோற்றத்தைக் கொண்டவர்கள். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள். வாகன யோகம் அதிகம் பெற்றவர்கள். ஆடை அணிகலன் அணிவதில் அதிகம் பிரியம் உள்ளவர்கள். இவர்களின் நட்பு விட்டம் பெரியதாக இருக்கும். இவர்கள் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.\nஅறிவின் நாயகன் புதனை அதிபதியாகக் கொண்டவர்களே… இந்த ராசிக்காரர்கள் அதிக அளவு மூளை பலம் உள்ளவர்கள். இவர்கள் மூளை மின்னல் வேகத்தில் செயல்படும். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லும் இவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திப்பதில்லை. அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாகம் தன்மையும் உடையவர்கள். உடல் பலத்தை காட்டிலும் இவர்களுக்கு மூளை பலமே உறுதுணை புரியும். ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள்.\nமனோகாரகன் சந்திரனை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்களே… எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதற்காக எள்ளளவும் கலங்காதவர்கள் நீங்கள். பேச்சையே ஆயுதமாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். வைராக்கிய மனம் பெற்ற நீங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். பணபலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களைச் சுற்றி ஒரு படை பலம் எப்பொழுதும் இருக்கும். வாழ்வில் மிக வேகமாக முன்னேற்ற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவீர்கள்.\nசூரியனை ஆட்சிநாயகனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே… அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட அன்பை உபயோகித்தால் அதிகம் சாதித்து காட்டுவீர்கள். நிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள். கொடுத்து உதவும் தன்மை கொண்ட நீங்கள் கோபப்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வீட்டிற்குள் உங்களுக்கு போராட்டம் தான்.\nபுதனை ராசி நாயகனாகக் கொண்ட நீங்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பேசுவதில் ஆற்றல் பெற்றவர்கள். உங்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் உங்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். திருமணம் முடிக்கும் போது கவனமாகப் இருப்பது அவசியம்.\nநியாயவான்கள், சுக்கிரனை ஆட்சிநாயகனாகக் கொண்ட நீங்கள், மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் உங்களைப் போல நல்லவர்கள் யாரும் இல்லை. கைராசிக்காரர்கள் நீங்கள் என்பதால் உங்களை எல்லாவற்றிர்கும் கூப்பிடுவார்கள்.\nதுணிச்சல்காரன் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு காரியத்தில் வெற்றிகளைக் குவிக்கும் கூர்மையான புத்தியும், குணத்தில் இமயமாக விளங்குவார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்களாகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். எந்த செயலையும் ஆர்வத்தோடு கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறமை கொண்டவர்கள் நீங்கள். தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள்.\nகுருபகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் தெய்வ பக்தியோடு தேச பக்தியும் கொண்டவர்கள். கவரிமான் பரம்பரை என்று தான் உங்களைச் சொல்ல வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டவர்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். திருமணம் செய்யும் போது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசனிபகவனை ராசி நாதனாகக் கொண்ட நீங்க புன்னகை சிந்தும் முகத்தோடும் போற்றும் இனிமைக் குணத்தோடும் காட்சியளிக்கும் நீங்கள் வைராக்கிய மனம் கொண்டவர்கள். மந்தனுக்குரிய மகர ராசிக்காரர்களாகிய இவர்களுக்கு குடும்பத்திற்குள்ளேயே பகை குடி கொண்டிருக்கும். வெளிவட்டார நட்பு வியக்கும் விதம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும். பொறுமைசாலிகளாக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை பெற முடியும். தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான் சாதகம் பெறமுடியும்.\nசனியின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் சமுதாயத்தில் ஒரு தனி முத்திரை பதிப்பீர்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தையும் பெற்று வாழ்வீர்கள். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்கமாட்டீர்கள். தாராள மனப்பான்மை கொண்ட இவர்களுக்கு ஒரு பகை நட்பாகும் பொழுது மற்றொரு நட்பு பகையாகிவிடும். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். படிப்பை விட அனுபவத்தால் உயர்நிலை அடைந்தவர்கள். பெற்றோர்கள் தங்களைவிட சகோதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.\nகுருபகவானை ராசி நாதனாக் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பீர்கள். தவறு செய்தாலும் அதை ஒப்புக் கொள்வார்கள். எவ்வளவு பெரிய பதவி என்றாலும் தானே தேடிவரும் அதுதான் உங்களின் தனித்தன்மை. வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். தானம் செய்வதில் ஆர்வம் கொண்ட நீங்கள், நிதானம் பெற்றிருந்தால் பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். மனதிற்கு எது சரியொன்று தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. மீனைப் போன்று துள்ளித் திரியும் குணமும், பயந்த சுபாவமும் பெற்றிருப்பார்கள். எந்த நிலையிலும் எல்லோரையும் மதிப்பார்கள்.\nNext: நாளை முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பு\nசிம்ம வீட்டில் பலம் பெறும் சூரியன்… ஆவணி தமிழ் மாத பலன்கள் உங்களுக்கு எப்படி\nகாதலித்தவரையே கல்யாணம் பண்ண வேண்டுமா\n2018 குருப்பெயர்ச்சிக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன… குருபலன் யோகம் அடிக்கும் ராசிகள் இவைதான்\nசமஸ்டி அடிப்படையிலான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற கொள்ளையிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகவில்லை என வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு அட்டன் பொலிஸார் தெரிவித்துளளனர். அட்டன் குடாகம பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக சிறிய அளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒரு சில வீடுகளில் கூரைகளின் நடுவில் மழை நீர் கசிவதனை தொடர்ந்து பார்வையிட்ட பொலிஸார் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் உள்ள 10 வீடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள விகாரையில் குடியேறுமாறு அறிவித்துள்ளதோடு இந்த மண்சரிவு தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த வீடுகளில் வாழும் பலரது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தற்போது இந்த வீடுகளில் வாழ …\nபாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nதெஹிவளையில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றின் பிரதம பராமரிப்பாளராகவும், பாலியல் தொழிலாளியாகவும் கடமையாற்றி வரும் பெண் ஒருவருக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் பார்லர் ஒன்றில் இரகசியமாக நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றை அண்மையில் பொலிஸார் சுற்றி வளைத்திருந்தனர். இதன்போது குறித்த மையத்தின் முகாமையாளரும், பிரதம பராமரிப்பாளர் உள்ளிட்ட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பெண்களில் ஒரு பெண்ணுக்கே இவ்வாறு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 6ஆம் திகதி இந்தப் பெண்களை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதன்போது அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விடுதலை செய்யுமாறு நீதவான் லோசன அபேவிக்ரம உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை அண்மையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் குறித்த பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் காணப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நீதிமன்றில் முன்னிலையாகும் போது கௌரவமான ஆடைகளை அணிந்து வர வேண்டியது அவசியமானது என நீதவான் குறித்த …\nபொலன்னறுவையில் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்\nபொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரை அவரின் கணவரே கொலை செயது வீசியதாக குறித்த ஆசிரியையின் கணவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குறித்த ஆசிரியையை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணவில்லை என குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் கணவர் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே தனது மனைவியை தாமே கொலை செய்ததாக காவல் நிலையத்தில் சாட்சியமளித்துள்ளார். தனது மனைவியுடன் வாய் தர்க்கம் அதிகரித்ததாகவும், அதனை தொடர்ந்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், பின்னர் மனைவியின் சடலத்தினை மொறகஹகந்த நீர்தேக்கத்திற்கு அருகில் வீசியதாகவும் சாட்சியமளித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமஹிந்த ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்று சென்றனர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சற்றுமுன்னர் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 11.15 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர். சுமார் 03 மணித்தியாலங்களின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kathiravan.com/238079", "date_download": "2018-08-18T00:47:11Z", "digest": "sha1:4WJPNSOAMHQWBQS3IN5EFFEHMCMTSJQZ", "length": 19577, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "ஒரு நாள் கிரிக்கட்டில் இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த பாகிஸ்தான் வீரர் - Kathiravan.com", "raw_content": "\nகேரள வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகரின் அம்மா… அதிரடியாக மீட்கப்பட்ட சம்பவம் (படம் இணைப்பு)\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nவெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் கேரள மக்கள்… வைரலாகும் வீடியோ\nபிரபல நடிகை திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கியது திரையுலகம்\nஒரு நாள் கிரிக்கட்டில் இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த பாகிஸ்தான் வீரர்\nபிறப்பு : - இறப்பு :\nஒரு நாள் கிரிக்கட்டில் இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்த பாகிஸ்தான் வீரர்\nஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஃபஹார் ஜமான் இரட்டை சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.\nபாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் ஃபஹார் ஜமான் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்கள் குவித்துள்ளார். 156 பந்துகளை சந்தித்த ஜமான், 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் இந்த Score-ஐ எடுத்துள்ளார்.\nஇதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை ஜமான் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் 5 வீரர்கள் 7 முறை இரட்டை சதம் அடித்துள்ளனர்.\nஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை இரட்டை சதம் விளாசியவர்கள்\nசச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 200* (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2010)\nவிரேந்தர் சேவாக் (இந்தியா) – 219 (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, 2011)\nரோஹித் ஷர்மா (இந்தியா) – 209 (அவுஸ்திரேலியாவுக்கு எதிராக, 2013), 264 (இலங்கைக்கு எதிராக, 2014), 208* (இலங்கைக்கு எதிராக, 2017)\nகிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) – 215 (ஜிம்பாப்வே, 2015)\nமார்டின் கப்தில் (நியூசிலாந்து) – 237* (மேற்கிந்திய தீவுகள், 2015)\nஃபஹார் ஜமான் (பாகிஸ்தான்) – 210* (ஜிம்பாப்வே, 2018)\nPrevious: முல்லைத்தீவில் இராணுவ வீரருக்கு ஏற்பட்ட கொடிய அனுபவம்\nNext: முல்லைத்தீவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு\nதென்னாபிரிக்காவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இலங்கை\nநடுவரிடமிருந்து டோனி பந்தை வாங்கியதன் காரணம் என்ன\nடோனியின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ள ரசிகர்கள்\nசமஸ்டி அடிப்படையிலான தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற கொள்ளையிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி விலகவில்லை என வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.\nமண்சரிவு அபாய எச்சரிக்கை… புவிச்சரிதவியல் திணைக்களம் தகவல்\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடாகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு அட்டன் பொலிஸார் தெரிவித்துளளனர். அட்டன் குடாகம பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக சிறிய அளவு மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஒரு சில வீடுகளில் கூரைகளின் நடுவில் மழை நீர் கசிவதனை தொடர்ந்து பார்வையிட்ட பொலிஸார் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியில் உள்ள 10 வீடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள விகாரையில் குடியேறுமாறு அறிவித்துள்ளதோடு இந்த மண்சரிவு தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த வீடுகளில் வாழும் பலரது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தற்போது இந்த வீடுகளில் வாழ …\nபாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nதெஹிவளையில் நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றின் பிரதம பராமரிப்பாளராகவும், பாலியல் தொழிலாளியாகவும் கடமையாற்றி வரும் பெண் ஒருவருக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் பார்லர் ஒன்றில் இரகசியமாக நடத்திச் செல்லப்பட்ட பாலியல் தொழில் மையமொன்றை அண்மையில் பொலிஸார் சுற்றி வளைத்திருந்தனர். இதன்போது குறித்த மையத்தின் முகாமையாளரும், பிரதம பராமரிப்பாளர் உள்ளிட்ட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தப் பெண்களில் ஒரு பெண்ணுக்கே இவ்வாறு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 6ஆம் திகதி இந்தப் பெண்களை கல்கிஸ்ஸ பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதன்போது அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விடுதலை செய்யுமாறு நீதவான் லோசன அபேவிக்ரம உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை அண்மையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் குறித்த பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் காணப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நீதிமன்றில் முன்னிலையாகும் போது கௌரவமான ஆடைகளை அணிந்து வர வேண்டியது அவசியமானது என நீதவான் குறித்த …\nபொலன்னறுவையில் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்\nபொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரை அவரின் கணவரே கொலை செயது வீசியதாக குறித்த ஆசிரியையின் கணவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குறித்த ஆசிரியையை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணவில்லை என குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் கணவர் மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே தனது மனைவியை தாமே கொலை செய்ததாக காவல் நிலையத்தில் சாட்சியமளித்துள்ளார். தனது மனைவியுடன் வாய் தர்க்கம் அதிகரித்ததாகவும், அதனை தொடர்ந்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், பின்னர் மனைவியின் சடலத்தினை மொறகஹகந்த நீர்தேக்கத்திற்கு அருகில் வீசியதாகவும் சாட்சியமளித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமஹிந்த ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்று சென்றனர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சற்றுமுன்னர் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 11.15 மணியளவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர். சுமார் 03 மணித்தியாலங்களின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/category?pubid=0749", "date_download": "2018-08-18T01:00:29Z", "digest": "sha1:AUKXZWHI2PQCFAUHIX7QQGH2U2MZFM6H", "length": 3199, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீமொழி பப்ளிகேஷன்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சுற்றுச்சூழல் கல்வி பெண்ணியம் அரசியல் யோகாசனம் அறிவியல் நாட்டுப்புறவியல் சமையல் கட்டுரைகள் சட்டம் தத்துவம் கணிப்பொறி பொது நூல்கள் சிறுவர் நூல்கள் நாவல்கள் மேலும்...\nபட்டாம்பூச்சி பதிப்பகம்ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி யோகாலயம் டிரஸ்ட்கௌரா பதிப்பக குழுமம்சிந்தன் புக்ஸ்புல்லாங்குழல் வெளியீடுஎம்பஸி புக்ஸ்ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்சூர்யா பதிப்பகம் அகநி வெளியீடுமுருகம்மை இல்லம்சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவிசா பப்ளிகேசன்ஸ்தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தக்கர் பாபா அகாடெமிஸ்ரீ நந்தினி பதிப்பகம் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403274", "date_download": "2018-08-18T01:33:45Z", "digest": "sha1:NJOM3H5BDLLKUTDUUHDXQ56WNMLTZJCA", "length": 11227, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி ஆசிரியர்கள் : மாணவர் சேர்க்கை குறையும் வாய்ப்பு | Rameshwaram Island area is an unruly government school teacher: the chance of student admission - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி ஆசிரியர்கள் : மாணவர் சேர்க்கை குறையும் வாய்ப்பு\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளி நிர்வாகத்தினர் மெத்தனம் காட்டி வருவதால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகளவில் குறையும் நிலை உள்ளது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் அரசு துவக்கப் பள்ளிகள் 18, நடுநிலைப் பள்ளிகள் 6, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி 6, நடுநிலைப்பள்ளி 1, தனியார் நடுநிலைப் பள்ளிகள் 5 உட்பட 24 துவக்கப்பள்ளிகளும், 12 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளது. இதில் தனியார் பள்ளிகள் ஆண்டுத்தேர்வு விடுமுறை துவங்கிய நாள் முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை சேர்த்து வருகிறது.\nதனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகத்தினர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதியில் தெருத்தெருவாக சென்று அதிகளவில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். ஆனால் விடுமுறை துவங்கியதற்கு பின் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையில் எவ்வித ஆர்வமும் காட்டாமல் இருப்பதால் வரும் ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தனியார் பள்ளிகளை விட மிகவும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் பல தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் உள்ளதால் 3 வயது நிறைவடைந்த குழந்தைகளை இதில் அதிகளவில் சேர்த்து வருகின்றனர்.\nவீடு தேடி வரும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பெற்றோர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு பள்ளிகளில் இலவச சீருடை, புத்தகங்கள் என பல சலுகைகள் வழங்கப்பட்டாலும், குறைந்த வருவாய் ஈட்டும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர். மேலும் பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு சில பள்ளிகளை தவிர அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து வருவதாலேயே தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். தேர்வு முடிந்து பூட்டப்பட்ட பல அரசு பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. இதில் பணியாற்றும் ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கையில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பல பள்ளிகள் நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nராமேஸ்வரம் தீவுப்பகுதி அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை வாய்ப்பு\nகொள்ளிடம் கரையோர பகுதிகளில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது: லால்குடி விவசாயிகள் கவலை\nகூரியர் நிறுவனங்கள் தயக்கத்தால் வெளிநாடுகளில் சீன தயாரிப்பு இந்திய தேசியக்கொடி விற்பனை\n7 மணி நேரமாக கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்பு\nதாராபுரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு டைல்ஸ்கள் வெடித்து சிதறியதால் நோயாளிகள் ஓட்டம்\nகண்டக்டர்கள் இல்லாமல் பஸ்சை இயக்க எதிர்ப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்: 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது\nதிருமங்கலத்தில் பரபரப்பு பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை விற்பனை: தத்தெடுத்த தம்பதியிடம் விசாரணை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/feb/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863316.html", "date_download": "2018-08-18T00:32:40Z", "digest": "sha1:FUQEPRVBDU25CBXJY7P757SQLI5OQYSU", "length": 6941, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nவெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மணிமாலாவின் மரணத்துக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க நிர்வாகி சங்கர் தலைமை வகித்தார். இதில், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் இளங்கோவன், பாண்டியராஜன், அருள்டேனியல், சத்தியநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றிய மணிமாலா கடந்த சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நியாயம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஇதில், தமிழ்நாடு அரசு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2013/08/119.html", "date_download": "2018-08-18T01:05:22Z", "digest": "sha1:3723BXF5SYXAUWDR6W6LJ53H3FIL43IV", "length": 13608, "nlines": 214, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்- 119 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்- 119", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமாண்புமிகு அம்மா, புரட்சித்தலைவியை ரொம்ப பிடிக்கும்\nஎதிர்கால எம்.ஜி.ஆரு தன் படம் வெளியே வராததால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பது நன்றாகவே தெரிகிறது.\nமுதலில் இந்தப் படத்தை வெளியிடுவதில் யாரிடமிருந்து சிக்கல் என்பதே தெளிவாக தெரியவில்லை. விஸ்வரூபம் கொடுத்த பாடத்தில் கொள்ளையடிக்கலாம் என்ற மனநிலையில் டுபாகூர் விளம்பரம் செய்யப்போய் திருப்பி அடிக்கப்பாட்டதா இல்லை உண்மையாகவே அரசியல் சூழ்ச்சியா என்பது இன்னும் நமக்கு புரியாத விஷயம். இந்த பிரச்சினையை கொளுத்தியவர்களுக்கே வெளிச்சம்.\nஇந்த நிலையில் தான் அணிலிடமிருந்து உதிர்ந்திருக்கும் முத்துக்கள் இவை. கொடநாடு போயி நுழைவாயிலேலே திருப்பி அனுப்பப்பட்ட மானஸ்தர் ரொம்ப நல்லவருப்பா, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு.\nகூடவே ஒருத்தர் இவருக்கு சொம்படிச்ச மானஸ்தர் \"உண்மை அரசர்\" தகடு தகடு எங்கே என்று தெரியவில்லை.\nசூனா சாமி தன் கட்சியை கலைத்து விட்டு \"கலப்பையை\" எடுத்துக்கொண்டு பா.ஜ.க வில் ஐக்கியம் ஆகிவிட்டாராம்.\nசனியனை எடுத்து பனியனில் விட்டுக்கொண்டு கதைதான் இனி மோடிக்கு. மோடி வந்தால் ஈழப்ப்ரச்சினைக்கு விடிவுகாலம் என்று பேசியவர்கள், இனி அந்தப் பிரச்சினைக்கு மங்களம் பாட வேண்டியதுதான்.\nமானாட மயிலாட பார்த்து பொழுதைக் கழித்தவர்தான் இந்த கருணாநிதி என்று கொடநாட்டிலிருந்து அம்மா அறிக்கை விட \"ஐயா\" தன் பங்கிற்கு \"நானே கேள்வி நானே பதில்\" அறிக்கையில் அம்மா செய்த தொழிலைத்தானே அம்மையாரும் செய்தார் என்று நக்கலடித்திருக்கிறார்.\nமேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்படும். \"பரப்பன அக்ராஹார\" முடிவை வைத்து அர்ரெஸ்ட் நாடகமும் அரங்கேற வாய்ப்புள்ளது.\nஅம்மா கொடநாட்டிலிருந்து இன்று தனி விமானத்தில் வருகிறாராம். ரத்தத்தின் ரத்தங்கள் விமான நிலையத்தில் தவம்.\nமணல் கொள்ளையில் தூத்துக்குடி ஆட்சியர் இடமாற்றம், மணல் கொள்ளை மறைப்பு போன்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப சினிமா படரிலீஸ் விவகாராம் நன்றாகவே உதவி செய்திருக்கிறது.\nஅவன் சத்தமில்லாமல் தான் முத்தம் கொடுத்தான், நான் அடித்த அடியில் தான் மற்றவர்கள் விழித்துக்கொண்டார்கள் #கொசுக்கடியேதான்---------நந்து talks\nதேசிய கீதத்திற்கு நெளிந்து கொண்டிருக்கும் மக்கள், தெருவில் நடக்கும் சண்டைகளில் கொஞ்சமும் அசையாமல் நின்று வேடிக்கை பார்ப்பது ஆச்சர்யம்.-------------------டாக்டர் அண்ணாமலை\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஹா ஹா கலக்கல் பாஸ்\nவேடந்தாங்கல் - கருண் said...\nஎன் ராஜபாட்டை : ராஜா said...\nதலைவாக்கு சினிமா உலகில் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லையே ஏன்\nகருண், ராஜா வருகைக்கு நன்றி.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபிரபல எழுத்தாளர் மணி மணி said...\nடாப் டூ பாட்டம் எல்லாமே கலக்கல் நான் உங்கள் பதிவைச் சொன்னேன் பாஸ்\nகுழந்தைககள் கவிதையும் செம கலக்கல்\nபிரபல எழுத்தாளர் மணி மணி வருகைக்கு நன்றி.\nரசித்த கவிதையும், கீச்சும் செம.\nகன்னியின் முத்தம் பெற என்ன வழின்னுஆழ்ந்து யோசித்து சொல்லுங்க கும்மாச்சி வேணுங்கிற காணிக்கையோ ,சாக்லேட்டோ கொடுத்து விடுகிறேன் \nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசிறு சிறு கதைகள்- படித்ததில் ரசித்தது\nபன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்\nநாட்(டி)டு நாய் கற்பழிச்சிடிச்சு சார்\n\"தலைவா\" வும் சில ஏன்\nட்விட்டரில் கும்மியடிக்கும் தலைவா பிரச்சினை\nகுச்சிமிட்டாய், கோன் ஐஸ் தின்ன ஆசையா\nமணல் கொள்ளைகளும், மக்கிப்போன அரசியலும்\nஎன்னது பூனம் பாண்டே சேலையா\nமுகாமுக்கு அனுப்பிச்சாலும் யானை முட்டதான் செய்யும்...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuveli.com/2013/05/blog-post_9428.html", "date_download": "2018-08-18T01:15:51Z", "digest": "sha1:Y3RAA7TK6GNMIAFIAGF2RM3EURI3EHX6", "length": 9802, "nlines": 202, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nசெவ்வாய், 21 மே, 2013\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் கோவில் ராஜ கோபுரப் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன .படங்கள் கீழே உள்ளன\nயுத்த கால சூழ் நிலையில் பெரும் சேதத்துக்குள்ளான மேற்படி ஆலயத்தின் மீள் புனருத்தாரண பணிகளை புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்\nகனடாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ள சமூக சேவகர் அருணாசலம் சண்முகநாதன் (கண்ணாடி) நேரடியாக அங்கேயே இருந்து கவனித்து செய்து முடிக்கும் நிலையில் உள்ளது .இந்த ஆலயத்தினை நீண்ட காலமாக அறம்காவலராக இருந்து காத்து வந்த வர்த்தகர் இராமநாதன் ராஜகோபுர பணிகளை தொடக்கி வைத்திருந்த வேளையில் காலமானதை அடுத்து இந்த ராஜகோபுர பணிகளும் தற்போது நிறைவு ற்றுள்ளன ஆலயத்தின் முழுவதுமான கட்டுமான பணிகள் கிட்டதட்ட புதிதாகவே செய்யபட்டு வெகு விரைவில் கும்பாபிசேகம் நிகழ வுள்ளது\nஇந்த ஆலயத்தின் பகுதியைச் சேர்ந்த சுவிஸ் வாழ் மக்களின் பெரும் நிதிப் பங்களிப்பு இந்த ஆலய பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது .இந்த சுவிஸ் வாழ் மக்கள் முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட நிதிசேகரிப்பினை மேற்கொண்டு இருந்தனர் இருந்தாலும் சில இடங்களுக்கு மக்களை இன்னும் நாடி செல்ல முடியாத நிலை இருப்பதால் இன்னமும் தங்கள் பங்களிப்பை செய்ய விரும்புவோர் குழந்தை எனப்படும் அருணாசலம் கைலசநாதனுடன் தொடர்பு கொள்ளவும்\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 2:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்ரமணியர் கோவில் ராஜ ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.punnagai.com/tamilnadu/vishwaroopam-does-not-released-in-7-districts", "date_download": "2018-08-18T00:42:04Z", "digest": "sha1:IHNP2AVNWISQOXI2Q4W2O23FFRAVAVRI", "length": 3578, "nlines": 49, "source_domain": "www.punnagai.com", "title": "7 மாவட்டங்களில் வெளியாகத விஸ்வரூபம் - 2 திரைப்படம்.. - Punnagai.com", "raw_content": "\n7 மாவட்டங்களில் வெளியாகத விஸ்வரூபம் - 2 திரைப்படம்..\nகமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் 7 மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் வெளியாகவில்லை.\nபடத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கம் இடையேன பிரச்சினை தான் காரணம் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகவில்லை.\nஇந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 60 தியேட்டர்களில் படம் வெளியாகாததால் 4 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை இழப்பு எனக் கூறப்படுகிறது. படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச் சந்திரனுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் இடையிலான பிரச்சினையே இந்த மாவட்டங்களில் படம் வெளியாகாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nஸ்டெர்லைட் விவகாரம் – தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nமுழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்- கண்கலங்கிய மோடி\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் இல்லை - ஹர்பஜன் சிங் காட்டம்\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்வு ..\nஅழகியுடன் சுற்றிய மந்திரி - பதவியை இழந்த சோகம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/obituary-20180110217248.html?ref=ls_d_obituary", "date_download": "2018-08-18T00:34:51Z", "digest": "sha1:WRJVOZXTKFGFKRDUKAJGAN2SYSDH7EDR", "length": 4884, "nlines": 44, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி ஐயாத்துரை காமாட்சிப்பிள்ளை - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 18 பெப்ரவரி 1926 — இறப்பு : 10 சனவரி 2018\nயாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், யாழ். புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை காமாட்சிப்பிள்ளை அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னர் சீனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,\nகமலாசினி, தயாநிதி(முன்னாள் இலங்கை வங்கி ஊழியர்- ஊர்காவற்துறை), ஜெகதீசன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(லண்டன்), நளினி(லண்டன்), பவானி(ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ஆறுமுகம் மற்றும் செல்லமுத்து, செல்லம்மா, சிவமணி(கிளி), திருக்கேசுவரி, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nநாகராணி(பிரான்ஸ்), யோகராசா(லண்டன்), அருந்தவம்(லண்டன்), சுகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nநிஷா, ஜெனனி, கோகுலன், யாகவன், பிரணவன், பிரணவி, சிவசுதன், ரிஷி, சிபி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-18T01:21:07Z", "digest": "sha1:MWASINPVBE2SYC6JKVZ62YEDLA7G3FRL", "length": 14167, "nlines": 137, "source_domain": "www.tamilhindu.com", "title": "சங்கத் தமிழ்மக்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சங்கத் தமிழ்மக்கள் ’\nஇந்து மத விளக்கங்கள், இலக்கியம், சைவம்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nபதிற்றுப்பத்து நூலின் கடவுள் வாழ்த்தில், சிவபிரானின் செம்மேனி வண்ணமும், அளவில்லா ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடு கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், அவன் அருளின் செவ்வியும்,பிறவும் கூறி வியந்து போற்றுகிறார் புலவர். \"கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்\" என்கிறது புறநானூறு. \"நச்சுக்கறை அழகுசெய்ய விளங்கும் திருக்கழுத்தை உடைய பெருமானான அவரின் திருநுதலில் விளங்கும் சிறப்புமிக்க நெற்றிக்கண் போலத் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் மாறனே\" என்று பாண்டியன் நன்மாறனைப் போற்றுகிறது ஓர் பாடல். சோழர் தம்... [மேலும்..»]\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\nதமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.. பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது... கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள்... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், இலக்கியம்\n- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபொய்க் குற்றம் சாட்டிப் பரதனைக் கொல்வித்தவன் இப்பிறப்பில கோவலனாகப் பிறந்தான். பரதன் மனைவி அந்நிய நாட்டில் பட்ட துயரத்தைத்தான் அவள் சாபப்படி கோவலன் மனைவியாகிய நீ அனுபவித்தாய்'.... ... கழிந்த பிறப்பில் செவ்விய மனம் இல்லாதோருக்கு, அக்காலத்துச் செய்த தீவினை வந்து பலிக்கும் காலத்தில் இப்பிறப்பில் செய்த நல்வினை வந்து உதவாது. இந்தத் தீவினை பலிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நல்வினை அதற்குரிய நற்பலனைத் தருமே அன்றி முன்செய்த தீவினையை இப்பொழுது செய்த நல்வினை அழிக்காது. புண்ணியபலனையும் பாவத்தின் பலனையும் தனித்தனியே அனுபவித்துக் கழிக்க வேண்டுமேயன்றி அவை ஒன்றையொன்று ஒழியா என்பது மதுராபுரித் தெய்வம் கூறியதன் கருத்து. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nஇந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nவேதாளம் சொன்ன பேரறிஞர் கதை\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nலோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா\nகுருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8\nவிலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2\nஇந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/collections/plus-size-overalls", "date_download": "2018-08-18T00:28:08Z", "digest": "sha1:BT4JPOZGMCF7ABGOOKILU7XUPIKCPYKV", "length": 28758, "nlines": 555, "source_domain": "ta.buddhatrends.com", "title": "பிளஸ் சைஸ் ஓவர்லல்ஸ் & லூஸ் ஓவர் கோல்ஸ் | buddhatrends.com - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nமுகப்பு / பிளஸ் சைஸ் ஓவர்ல்ஸ்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி: AZ அகரவரிசையில்: ZA விலை: குறைந்த முதல் உயர் விலை: அதிக உயரம் தேதி: பழையது பழையது தேதி: புதியது பழைய\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை(273)\nபெண்கள் ஐந்து ஓவர் ஓவர்\nபெண்கள் ஐந்து ஓவர் ஓவர் $ 27.00 $ 54.00\nலூஸ் பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த\nலூஸ் பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த $ 49.00 $ 98.00\nதளர்வான பிளஸ் அளவு ஒட்டுமொத்த உடை\nதளர்வான பிளஸ் அளவு ஒட்டுமொத்த உடை $ 29.00 $ 58.00\nபிளஸ் அளவு பரந்த லெக் பிளவு மொத்தம்\nபிளஸ் அளவு பரந்த லெக் பிளவு மொத்தம் $ 43.20 $ 72.00\nபிட்ச் பிளஸ் சைஸ் லூஸ் டெனிம் ஓவர்ல்ஸ்\nபிட்ச் பிளஸ் சைஸ் லூஸ் டெனிம் ஓவர்ல்ஸ் $ 49.00 $ 98.00\nபிளஸ் சைஸ் பெல் பாட்டம் லூஸ் ஒட்டுமொத்த\nபிளஸ் சைஸ் பெல் பாட்டம் லூஸ் ஒட்டுமொத்த $ 42.00 $ 60.00\nபிளஸ் சைஸ் பிளாக் ஃப்ளோவீ ஒட்டுமொத்த\nபிளஸ் சைஸ் பிளாக் ஃப்ளோவீ ஒட்டுமொத்த $ 30.00 $ 60.00\nபிளஸ் சைஸ் ஃப்ளோயி ஹரேம் ஓவர்ல்ஸ்\nபிளஸ் சைஸ் ஃப்ளோயி ஹரேம் ஓவர்ல்ஸ் $ 30.00 $ 60.00\nபிளஸ் அளவு உலகளாவிய லெக் லூஸ் மொத்தம்\nபிளஸ் அளவு உலகளாவிய லெக் லூஸ் மொத்தம் $ 54.60 $ 78.00\nபிளஸ் சைட் விண்டேஜ் பிளாக் ஒட்டுமொத்த உடை\nபிளஸ் சைட் விண்டேஜ் பிளாக் ஒட்டுமொத்த உடை $ 42.00 $ 70.00\nமலர் விண்டேஜ் மொத்தம் மொத்தம்\nமலர் விண்டேஜ் மொத்தம் மொத்தம் $ 62.30 $ 89.00\nபிளஸ் சைட் 90s பெண்களுக்கு விலாசங்கள்\nபிளஸ் சைட் 90s பெண்களுக்கு விலாசங்கள் $ 46.90 $ 67.00\nகிரன்ஞ் உடை தளர்வான ஒட்டுமொத்த உடை\nகிரன்ஞ் உடை தளர்வான ஒட்டுமொத்த உடை $ 46.90 $ 67.00\nசாதாரண பருத்தி லினன் ஒட்டுமொத்த உடை\nசாதாரண பருத்தி லினன் ஒட்டுமொத்த உடை $ 46.20 $ 77.00\nதளர்வான பிளஸ் அளவு கிரன்ஜ் ஓவர்ல்ஸ்\nதளர்வான பிளஸ் அளவு கிரன்ஜ் ஓவர்ல்ஸ் விற்பனை அவுட்\nபிளஸ் சைஸ் லூஸ் சாம்பல் ஸ்ட்ரைப்பட் மொத்தம் பிடித்தது\nபிளஸ் சைஸ் லூஸ் சாம்பல் ஸ்ட்ரைப்பட் மொத்தம் பிடித்தது $ 51.80 $ 74.00\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த\nகருப்பு & ப்ளூ டெனிம் ஒட்டுமொத்த பிடித்த $ 44.50 $ 89.00\nபிளஸ் சைட் பிளாக் அண்ட் வைட் செக் செக்யூட்டல் மொத்தம்\nபிளஸ் சைட் பிளாக் அண்ட் வைட் செக் செக்யூட்டல் மொத்தம் $ 42.00 $ 60.00\nபெண்களுக்கு ஒட்டுமொத்தமாக லூஸ் ஹிப்ஸ்டர்\nபெண்களுக்கு ஒட்டுமொத்தமாக லூஸ் ஹிப்ஸ்டர் $ 43.40 $ 62.00\nதளர்வான பிளஸ் அளவு பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த\nதளர்வான பிளஸ் அளவு பூக்கள் டெனிம் ஒட்டுமொத்த $ 58.10 $ 83.00\nவிண்டேஜ் பேட்டர்ன் லூஸ் ஒட்டுமொத்த\nவிண்டேஜ் பேட்டர்ன் லூஸ் ஒட்டுமொத்த $ 60.90 $ 87.00\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://traynews.com/ta/tag/trading/", "date_download": "2018-08-18T00:24:59Z", "digest": "sha1:GUL3UPED2YCRZF2UTLYUCMU37EZHW4FF", "length": 22840, "nlines": 209, "source_domain": "traynews.com", "title": "trading Archive - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஆகஸ்ட் 16, 2018 நிர்வாகம்\nஆகஸ்ட் 14, 2018 நிர்வாகம்\nஆகஸ்ட் 6, 2018 நிர்வாகம்\nமஹிந்திரா கார்ப்பரேஷன் இந்திய மாநில பங்காளிகள். கட்ட “Blockchain மாவட்டத்தில்” State government in India is working with a multinational IT\nஜூலை 30, 2018 நிர்வாகம்\nஜூலை 26, 2018 நிர்வாகம்\nஜூலை 21, 2018 நிர்வாகம்\nசிஎம்இயிலான விக்கிப்பீடியா எதிர்கால அறிக்கை வர்த்தக அளவுகளிலும் வரை காட்டுகிறது 93% , Q2 உள்ள 2018 உலகின் மிகப்பெரிய பங்குகள் சந்தையில், the Chicago Mercantile\nஜூலை 19, 2018 நிர்வாகம்\nஜூலை 15, 2018 நிர்வாகம்\nஜூலை 13, 2018 நிர்வாகம்\nஜூலை 5, 2018 நிர்வாகம்\nஜூலை 2, 2018 நிர்வாகம்\nஜூன் 26, 2018 நிர்வாகம்\nஜூன் 22, 2018 நிர்வாகம்\nநீதிமன்றம் மவுண்ட் ஏற்கும்போது. Gox repayment plan Mt. Gox கடன் ஒரு படி நெருக்கமாக பெறுவார்கள் $450 ஒன்றுக்கு விக்கிப்பீடியா இழந்தது. தி\nஜூன் 20, 2018 நிர்வாகம்\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மர்மமான ஆசிரியர் சடோஷி Nakamoto உள்ள மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு 2008 marked the\nஜூன் 12, 2018 நிர்வாகம்\nஜூன் 10, 2018 நிர்வாகம்\nஜூன் 5, 2018 நிர்வாகம்\nஜூன் 1, 2018 நிர்வாகம்\nமே 30, 2018 நிர்வாகம்\nஐந்து கிரேக்கன் டெய்லி சந்தை அறிக்கை 30.05.2018 கிரேக்கன் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் $ 180M அனைத்து சந்தைகளிலும் இன்று கிரிப்டோ முழுவதும் வர்த்தகம், யூரோ, அமெரிக்க டாலர், ஜேபிவொய், கேட், ஜிபிபியில் முதற் $7,335 ↓ 1.87% $ 69.3M இடிஹெச் $551.4 ↓ 2.32% $ 62.8M EOS இதில் $11.82\nமே 25, 2018 நிர்வாகம்\nமைக் Novogratz: ஒரு விக்கிப்பீடியா அமெரிக்க அரசாங்க விசாரணை ஒரு நல்ல விஷயம் கோடீஸ்வரர் முதலீட்டாளர் மைக் Novogratz அவர் வியப்படையமாட்டார்கள் கூறினார் உள்ளது\nமே 21, 2018 நிர்வாகம்\nபிலிப்பைன்ஸ் எஸ்இசி ஆணையர் க்ரிப்டோ பங்குதாரர்களின் கேட்கும்’ இருந்தும் தங்களின் கருத்துகளை பிலிப்பைன்ஸ் 'சந்தை சீராக்கி விதிகள், பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன், முற்படுகிறது\nமே 17, 2018 நிர்வாகம்\nநியூயார்க் பரிமாற்றம் ஆதியாகமம் BitLicense ஆதியாகமம் குளோபல் டிரேடிங் நிதி சேவைகள் நியூயார்க் மாநிலத்தின் துறையின் ஒரு BitLicense பெற்று எதிர்ப்பைப் பெற்றால்\nமே 16, 2018 நிர்வாகம்\nமே 15, 2018 நிர்வாகம்\nCoinbase நிறுவன பொருட்கள் தொகுப்பு அறிவிக்கிறார் பரிமாற்றம் cryptocurrency Coinbase அது முறையாக Coinbase பாதுகாப்பு தொடங்குவதில் உள்ளது அறிவித்தது, இலக்காகக் கொண்ட தயாரிப்பு\nமே 10, 2018 நிர்வாகம்\nமே 8, 2018 நிர்வாகம்\nநியூயார்க் பங்குச் சந்தை விக்கிப்பீடியா வர்த்தக மேடையில் நடத்த கூடும் நியூ யார்க் பங்குச் சந்தையின் தாய் நிறுவனமான வருகிறது\nமே 3, 2018 நிர்வாகம்\nCoinbase சிகாகோ புதிய அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளது\nஏப்ரல் 22, 2018 நிர்வாகம்\nகிரிப்டோ வர்த்தக பயன்பாட்டை Robinhood கொலராடோ தொடங்குகிறது\nCryptocurrency மாற்றகங்களுக்கான போட்டி இயற்கை அமெரிக்காவில் முன்னேறி வருகிறது. Startup exchange Robinhood just announced on Twitter its\nஏப்ரல் 13, 2018 நிர்வாகம்\nஜேர்மனியின் இல்லை. 2 கிரிப்டோ வர்த்தக பயன்பாட்டின் அறிமுகம் பங்குச் சந்தை திட்டங்களை\nஜேர்மனியின் இரண்டாவது பெரிய பங்குச் சந்தையின் fintech கை பின்னர் இந்த ஆண்டு ஒரு Cryptocurrency வர்த்தக பயன்பாட்டை தொடங்க அமைக்கப்படுகிறது.\nஏப்ரல் 3, 2018 நிர்வாகம்\nபோர்ட்ஃபோலியோ விரிவாக்கம் மற்றும் குலைக்காமல்\nமார்ச் 28, 2018 நிர்வாகம்\nபெலாரஸ் அதிகாரப்பூர்வமாக அனைத்து க்ரிப்டோ தொடர்பான வணிக மற்றும் வர்த்தக சட்டபூர்வமாக்கும்\nஇன்று பெலாரஸ் அதிகாரப்பூர்வமாக அதன் க்ரிப்டோ வரி மற்றும் கணக்குப்பதிவியல் சட்டங்கள் பிறப்பிக்கவும். Under the presidential decree all crypto-related business and trading will\nமார்ச் 28, 2018 நிர்வாகம்\nCryptotrading – நுழைவு மற்றும் வெளியேறு புள்ளிகள்\nசெல்லும் போது, அது நல்ல ஒரு Cryptocurrency வாங்க எப்போது-விற்க இந்த கேள்விகள் சும்மா இருந்து இதுவரை இல்லை. நீங்கள் மறைக்க என்பதை\nமார்ச் 17, 2018 நிர்வாகம்\nபில்லியன் டாலர்கள் வால் ஸ்ட்ரீட் நிறுவனம் கடந்த ஆண்டு விக்கிப்பீடியா கொண்டு வர்த்தகம் துவங்கியது\nஜேன் தெரு, க்கும் மேற்பட்ட வர்த்தகம் எந்த ஒரு இரகசிய வால் ஸ்ட்ரீட் நிறுவனமாக $5 டிரில்லியன் உள்ள 2017, விக்கிப்பீடியா வர்த்தகம் தொடங்கியது, தி\nமார்ச் 11, 2018 நிர்வாகம்\nகிரிப்டோ முதலீட்டாளர்கள் பிழைகள். பிழை 5\nவிளிம்பு வர்த்தக விளிம்பு வர்த்தகத்தில் ஈடுபடும் மிகவும் இலாபகரமான ஒன்றாகும், but at the same time the most risky\nபிப்ரவரி 28, 2018 நிர்வாகம்\nஎப்படி நாளிலான cryptotrading மீது சம்பாதிக்க\nஇந்த தந்திரமானது நாளிலான Cryptotrading “Сoward” – அது குறைவாக சம்பாதிக்க நல்லது, ஆனால் நிலையான. 70% அனைத்து வேலை நாளிலான உள்ளது\nபிப்ரவரி 24, 2018 நிர்வாகம்\nஆஸ்திரியா தங்கம் மற்றும் பங்குகள் போன்ற விக்கிப்பீடியா கட்டுப்படுத்தும் திட்டமிட்டுள்ளது\nஆஸ்திரியா நிதி அமைச்சகத்தில் தங்கம் வர்த்தக விதிகள் பார்த்து மற்றும் தொடர்பான விதிமுறைகளைக் வரை வரைதல் உத்வேகத்தை ஏற்படுத்தியதாகக் பங்குகள் உள்ளது\nபிப்ரவரி 23, 2018 நிர்வாகம்\nமின்னல் ஆய்வகங்கள் உருவாக்குகிறது ஒரு “கோபுரத்தையும்” மின்னல் மோசடி ஊக்கங்கெடுக்க.\nதிட்டத்தின் யோசனை மின்னல் ஆய்வகங்கள் இணை நிறுவனர் சொந்தமானது, Laolu Osuntokun. நேரத்தில், அடிப்படை அமைப்பு\nபிப்ரவரி 21, 2018 நிர்வாகம்\nசந்தை பகுப்பாய்வு அறிக்கை 21.02.2018\nஜனவரி 27, 2018 நிர்வாகம்\nநான் எப்படி கிட்டத்தட்ட லாஸ்ட் 200 கடந்த மாதம் வர்த்தக விக்கிப்பீடியா\nAn instructive story by Reddit, யார் அநாமதேய இருக்க விரும்பினார். அதனால், நீண்ட கதை குறுகிய, நான் ஒரு வருடம் முன்பு வர்த்தகம் தொடங்கியது,\nஜனவரி 24, 2018 நிர்வாகம்\nRobotrading அல்லது கைமுறை வர்த்தக\nRobotrading பங்குகளை வாங்க அல்லது விற்க ஏலம் வைப்பது வழிமுறைகளை அமைப்பைப் பயன்படுத்தி செயல்முறை ஆகும், பணம், அல்லது\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://binarysage.net/index.php?/category/37&lang=ta_IN", "date_download": "2018-08-18T00:32:12Z", "digest": "sha1:PZ77KVSAI3U2TQMTSP5U4BWAVFWYPP5O", "length": 4912, "nlines": 115, "source_domain": "binarysage.net", "title": "Events / Odiham | Braehead Manse Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/oru-kuppai-kathai-to-err-is-human/", "date_download": "2018-08-18T01:13:33Z", "digest": "sha1:ARBSPCKIW2HLVZ646OMPRV3EO5GASU3U", "length": 5076, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Oru Kuppai Kathai | To Err is Human - Cinema Parvai", "raw_content": "\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://eelamalar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2018-08-18T00:18:29Z", "digest": "sha1:OLSMOQBQJQDDXLKRGM34GOANCGP3ABQP", "length": 14812, "nlines": 206, "source_domain": "eelamalar.com", "title": "விதி மாற்றி எழுவான் பிரபாகரன் நாளை...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » விதி மாற்றி எழுவான் பிரபாகரன் நாளை…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nவிதி மாற்றி எழுவான் பிரபாகரன் நாளை…\nவிதி மாற்றி எழுவான் பிரபாகரன் நாளை…\n« தமிழீழம் எங்கள் உயிர் அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nநிச்சயம் தலைவன் மீண்டும் வருவான். »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://new-democrats.com/ta/campus-interview-loot-by-corporate-college-nexus/", "date_download": "2018-08-18T01:33:07Z", "digest": "sha1:J6F5PIJ52D2PYJQMITEKEWRVK3KAIFTJ", "length": 28485, "nlines": 116, "source_domain": "new-democrats.com", "title": "வளாக வேலைவாய்ப்பு : கார்ப்பரேட் – கல்லூரிகள் கூட்டுக்கொள்ளை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமக்களுக்கு வாயால் சுட்ட வடை முதலாளிகளுக்கு விருந்து – மோடி வழங்கும் பட்ஜெட்\nமகாராஷ்டிரா: நெசவுத்துறையின் முதுகெலும்பை உடைத்த மோடியின் பணமதிப்பு நீக்கம்\nவளாக வேலைவாய்ப்பு : கார்ப்பரேட் – கல்லூரிகள் கூட்டுக்கொள்ளை\nFiled under அம்பலப்படுத்தல்கள், தகவல், பு.ஜ.தொ.மு-ஐ.டி, மோசடிகள், வேலைவாய்ப்பு\nவளாக வேலைவாய்ப்பு (Campus Interview) : கார்ப்பரேட் நிறுவனங்கள் – தனியார் கல்லூரிகள் நடத்தும் கூட்டுக்கொள்ளை\nஐ.டி துறை, இன்றைய சூழலில் பணம் கொழிக்கும் துறையாகவும், குறைந்த காலத்தில் செட்டில் ஆவதற்கான வாய்ப்பு கொண்டதாக பலராலும் நம்பப்படுகிறது. இதனடிப்படையில் பெற்றோர்களும் பிள்ளைகளை இந்தத் துறையில் சேர்ப்பதற்கு பல பிரயத்தனங்களை செய்கின்றனர். பன்னிரண்டாவது முடித்த்தும் குறிப்பிட்ட சில தனியார் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான கூட்டமும் அலை மோதுகின்றது. கல்லூரிகளும் தங்களது கல்லூரிகளில் 100% campus வேலைவாய்ப்பு என்றே விளம்பரப்படுத்துகின்றன.வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது நல்ல வாய்ப்பாகவும், இந்தக் கல்லூரியில் படித்த அனைவருக்கும் வேலை கிடைத்திருப்பதாவும் தோற்றத்தைத் தரும். ஆனால் நமது பிள்ளைகள் இந்த கல்லூரிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை.\nமுதலில் 100% வேலைவாய்ப்பு என்பதே போலியான விளம்பரம். எந்தக் கல்லூரியிலும் அப்படி நடப்பதில்லை. Campus interview களுக்கு கல்லூரிகளால் நடத்தப்படும் மாதிரி தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் சலித்து எடுக்கப்பட்ட மாணவர்களே அனுப்பப்படுகின்றனர் ஒரு லட்சத்திற்கும் மேலான படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இந்தக் கல்லூரிகளின் யோக்கியதையை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த 100% வேலை வாய்ப்பு என்பது மாணவர்களிடம் இன்னும் அதிக பணம் கறக்கும் சாதனமாகவே கல்லூரிகளாலும் கம்பெனிகளாலும் பார்க்கப்படுகிறது. இவர்கள் campus எனும் வார்த்தைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பல கோடி ரூபாய் கூட்டுக்கொள்ளையை நடத்துகின்றனர். உதாரணமாக HCL நிறுவனம் CDC (Career Development Centre) என்ற பெயரில் campus வேலை வாய்ப்பு திறன் வளர்த்தல் பயிற்சி என்னும் பெயரில் கல்லூரிகளில் வகுப்புகளை எடுத்து வருகிறது. இதற்காக இந்த நிறுவனம் ஒவ்வொரு கல்லூரி மாணவரிடத்திலும் ரூபாய் 5,000 முதல் 10,000 வரை பணம் வசூலிக்கிறது. மாணவர்களும் இந்த நிறுவனங்கள் கொடுக்கும் பயிற்சியில் இணைந்தால் அந்த நிறுவனத்திலேயே, பணி கிடைக்கும் என்று நம்பிச் சேருகின்றனர். அங்கு பயிற்சி கொடுக்கும் நிறுவன ஊழியர்களிடம் விசாரிக்கும் போது, ‘பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நாங்கள் வேலை வழங்குவதில்லை, சான்றிதழ் மட்டுமே கொடுப்போம், அவர்கள் வேறு நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்கு செல்லும்பொழுது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்கின்றனர். ஆனால் பயிற்சியின் விளம்பரங்களில் ‘கட்டாயமாக வேலை கொடுக்கப்படும்’ என்று சொல்லியே சேர்க்கின்றனர்.\nஇதில் கல்லூரிகளுக்கும் வருமானம், மேலும் மாணவர்கள் சேர்க்கை காலங்களில் இதனை விளம்பரமாகப் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தை புறத்தள்ளி, அவர்களை ஏமாற்றி, அவர்களின் எதிர்காலத்தை படுபாதளத்திற்குத் தள்ளும் இந்த வேலையை கார்ப்பரேட் கம்பனிகளோடு சேர்ந்தே செய்கின்றன.\nஇந்த நிலையில் இன்னொரு போக்கும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. ஆட்கள் தேவை இல்லாத பட்சத்தில் நிறுவனங்கள் கல்லூரிகளில் campus மூலம் மாணவர்களை தேர்வு செய்து காத்திருப்பு நிலையில் வைத்து, பிறகு அவர்களுக்கு வேலையில்லை என்று சொல்லிவிடுவது. இதன் மூலம் கல்லூரிகளின் 100% வேலைவாய்ப்பு என்ற விளம்பரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. நிறுவனங்களுக்கும் அந்நிறுவனத்தில் வேலை செய்பவர்களை, வெளியில் நின்று தொண்டிருக்கும் இக்கூட்டத்தைக் காட்டி அவர்களை மேலும் சுரண்டும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nஃபிளிப்கார்ட் நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள ஐ.ஐ.எம் கல்லூரிகளில் மாணவர்களை Campus முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு பணி ஆணை தராமல் காலம் தாழ்த்தி வந்தது. மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு பணியாணை வழங்க சம்மதித்தது. இந்நிலையில் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 1500 மாணவர்களை தேர்வு செய்து காத்திருப்பில் வைத்திருந்துவிட்டு, தற்பொழுது இரண்டு வருடம் கடந்துள்ள நிலையில் அவர்களுக்கு வேலையில்லை என்று தெரிவித்துள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘நாங்கள் இரண்டு வருடம் கழித்து வைத்த மறு மதிப்பீட்டுத் தேர்வில் இவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு வருடத்தில் அவர்கள் எல்லோரும் திறமையற்றவர்களாக மாறியுள்ளனர்’ என்று சொல்வதன் மூலம் தங்களது திருட்டுத்தனத்தை மாணவர்களின் திறமையின்மை என்பதற்குள் எல்&டி மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுவனங்கள் மறைக்க முயற்சி செய்கின்றன. அப்படியே இவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் திறமையற்ற மாணவர்களை இரண்டு வருடம் முன்பு எப்படி இந்நிறுவனம் தேர்வு செய்தது. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை வேறு நிறுவனத் தேர்வுகளுக்குச் செல்லக்கூடாது என்று சொல்லி அவர்களின் மற்ற வாய்ப்புகளையும் கேள்விக்குள்ளாகியது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தானே இந்த இரண்டு வருடத்தில் அவர்களை நிறுவனமும், இதனைக் கண்டுகொள்ளாது இருந்த கல்லூரிகளும் தான் இதற்குக் கூட்டுப் பொறுப்பாளிகள்.\nமாணவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை பொதுவெளிக்கு KPF (Knowledge peoples Forum) என்ற அமைப்பு கொண்டு வந்தது. பு.ஜ.தொ.மு. வின் ஐ.டி ஊழியர்கள் பிரிவு போஸ்டர் ஒட்டித் தனது ஆதரவை தெரிவித்தது. மே 30 அன்று மாணவர்கள் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தது. இதனை கண்ட சி.ஐ.டி.யு. சென்னைமாவட்டப் பொறுப்பாளர் அங்கு வந்த நமது தோழர்களிடம், “இது அநாகரீகமாக உள்ளது நாங்கள் நடத்தும் போராட்டத்தில் துண்டுப் பிரசுரம் கொடுப்பது உங்களுக்கு கேவலமாக இல்லையா நாங்கள் நடத்தும் போராட்டத்தில் துண்டுப் பிரசுரம் கொடுப்பது உங்களுக்கு கேவலமாக இல்லையா” என்று கூறியுள்ளனர். முத்தாய்ப்பாக அங்கு இருந்த காவலர்களிடம், “இங்க பாருங்க சார், நக்சலைட் எல்லாம் வந்து துண்டு பிரசுரம் கொடுக்கிறான்” என்று போலிகளின் வழக்கமான காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்தனர். மேலும் நமது தோழர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக ஒட்டிய போஸ்டர்களையும் கிழித்து எறிந்துள்ளனர். அதில் அரிவாள்சுத்தியல் சின்னத்தை தோழர்களின் கண் முன்னே வேண்டுமென்றே கிழித்தெறிந்துள்ளனர்.\nபோலிகளுக்கு அரிவாள் சுத்தியால் சின்னத்தின் மேல் உள்ள மதிப்பு அவ்வளவுதான் போலிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் மாணவர்களின் கோரிக்கைக்கான போராட்டமாக இல்லாது எல்&டி நிறுவனத்திடம் அவர்களை சமரத்திற்கு வரச் சொல்லி கெஞ்சுவதாக சுருங்கிப்போனது. அதில் பேசிய டி.கே.ரங்கராஜன் எம்.பி., “நமது போராட்டம் எல் அன் டி நிறுவனத்தை சமரசத்திற்கு வரவழைப்பது மட்டுமே, அவர்களை எதிர்ப்பது நமது நோக்கமில்லை” என்றது தான் முத்தாய்ப்பு. அவர் காரில் அமர்ந்து கொண்டே, “யாரு எல் & டி சேர்மன் நான் அவர்ட்ட பேசுறேன்” என்று ஜமீன்தார் பாணியில் நடந்துகொண்டார்.\nஆக நடந்து முடிந்த போராட்டம் வெறுமே மாணவர்களை கூட்டி வழக்கமாக சி.பி.எம் செய்யும் அடையாளப் போராட்டமாகவே நடந்து முடிந்தது. இதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களை அழைத்து வந்து அவர்களை காயடித்து விடும் வேலையை வழக்கம் போலவே செய்துள்ளனர். இந்தப் போராட்டம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு எதிரானதாகவும், இவற்றை அனுமதித்து வருகின்ற அரசுக்கு எதிரானதாகவும் இருக்கு வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பதற்காகவே சிபிஎம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.\nஇந்த ஒரு பிரச்சனை மட்டுமே இன்று பொதுவெளிக்கு வந்திருக்கிறது, கார்ப்பரேட் நிறுவன எச்.ஆர்.களிடம் பேசும்பொழுது, இதனை ஒரு சாதாரண நிகழ்வு எனவும், இது வழக்கமான நிறுவனங்களில் நடக்கும் மிகவும் சாதாரண விசயமாக அவர்கள் தெரிவித்தது நமக்கு அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. ஆக பல வருடங்களாக மாணவர்களின் பணத்தை மட்டுமல்லாது அவர்களின் எதிர்காலத்தையே கொள்ளை அடித்து வந்திருக்கிறது, இந்த தனியார் கல்லூரி மற்றும் கார்பரேட் நிறுவன கூட்டு. இதனை எதிர்கொள்வதற்கு உண்ணாவிரத போராட்டங்களால் மட்டுமே தீர்வை கொண்டு வந்து விட முடியாது. கார்ப்பரேட் கம்பெனிகள் தனியார் கல்லூரிகள், தவறான கொள்கைகளை வைத்திருக்கும் அரசு ஆகிய அனைத்தையும் எதிர்த்து போராடுவதன் மூலமே இதற்கான தீர்வை பெற முடியும்.\nபுதிய தொழிலாளி, ஜூன் 2016 இதழிலிருந்து\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nடி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்\nஅப்ரைசல் முறை பற்றி ஐ.டி ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nசி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nகடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nஉழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nCategories Select Category அமைப்பு (225) போராட்டம் (221) பு.ஜ.தொ.மு (20) பு.ஜ.தொ.மு-ஐ.டி (119) இடம் (468) இந்தியா (260) உலகம் (82) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (493) அரசியல் (196) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (113) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (4) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (311) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (487) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (75) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (87) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (50) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமக்களுக்கு வாயால் சுட்ட வடை முதலாளிகளுக்கு விருந்து – மோடி வழங்கும் பட்ஜெட்\n\"அரசாங்கம் என்பது ஒரு பிசினஸ்தான்\" என்கிறார் பத்ரி. \"ஆமா, தனியாருக்கு பிசினஸ் ஏற்படுத்திக் கொடுக்கத்தான் இந்த அரசாங்கம்\" என்கிறார் ஜெயரஞ்சன். \"கார்ப்பரேட்டுக்கு வரிச் சலுகை கொடுக்கா விட்டால்,...\nகாவிரி உரிமை – ஏப்ரல் 28ல் தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\n“போர்க்காலத்தில் கூட, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு செல்லும் ஆற்று நீரைத் தடுக்கக்கூடாது” என்பது சர்வதேச நியதி. போரின்போது ஒரு பகை நாட்டு மக்களுக்கே இழைக்க முடியாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403276", "date_download": "2018-08-18T01:32:51Z", "digest": "sha1:54GVRDEC6BPI4AIYSO7T5JDCILYLOVWK", "length": 6713, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் | Protest against Sathiyamangalam Sewage Sector Project - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசத்தியமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஈரோடு : சத்தியமங்கலத்தில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே 100க்கு மேற்பட்டோர் பவானி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nசாக்கடை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமணப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோயில் பால்குட ஊர்வலம்\nகேரளாவுக்கு டெல்லி அரசு ரூ.10 கோடி, தெலங்கானா ரூ.25 கோடி நிதியுதவி\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவுக்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கேரளா செல்லக்கூடிய பயணிகள் முற்றுகை போராட்டம்\nகேரளா வெள்ளத்தில் சிக்கி மீட்டகப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை\nகாவிரியில் வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி நீர் திறப்பு\nஉரிய ஆவணங்களின்றி வந்த செனகல் நாட்டை சேர்ந்தவர் தப்பியோட்டம்\nகொச்சிக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர்\nநாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி\nகேரளாவுக்கு ரூ.10 கோடி பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிப்பு\nகேரளாவில் கனமழை, வெள்ளத்தால் 324 பேர் உயிரிழப்பு : முதல்வர் பிரனாயி விஜயன் தகவல்\nமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரயில் மூலம் குடிநீர் அனுப்புகிறது தெற்கு ரயில்வே\nமதுரை காமராஜர் பல்கலை.,க்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேடல்குழு : தமிழக அரசு அரசாணை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023120", "date_download": "2018-08-18T00:24:47Z", "digest": "sha1:YUX5XE22HFWMBEHIQPARV76JPJ2IE2TW", "length": 18721, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "பழசை மறக்காதீங்க ராகுல்: அமித்ஷா| Dinamalar", "raw_content": "\nபழசை மறக்காதீங்க ராகுல்: அமித்ஷா\nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி 270\n'கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன ... 52\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி 270\nஅழகிரி வியூகம்; தி.மு.க., திக்... திக்... 168\nபுதுடில்லி: அரசியல் லாபத்திற்காக மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்., ஆதரவு அளித்துள்ளதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:\nகாங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல் மறந்துவிடக்கூடாது.எமர்ஜென்சி, அரசியல் சாசன பிரிவு 356 ஐ தவறாக பயன்படுத்துதல், கோர்ட் , மீடியா மற்றும் சிவில் அமைப்புகளை காங்கிரஸ் முடக்கி வைத்தது.\nகர்நாடக மக்கள் யாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். 104 தொகுதிகளை பெற்ற பா.ஜ.,விற்கா அல்லது அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முதல்வரின் 78 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கா.மஜத 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பெரும்பாலான தொகுதிகளில் டிபாசிட் இழந்துள்ளது. மக்கள் புத்திசாலிகள். உண்மையை தெரிந்து கொள்வார்கள்.\nமதசார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த போது ஜனநாயகம் கொல்லப்பட்டது. ஆதரவு, கர்நாடக நலனுக்காக அளிக்கப்படவில்லை. வெற்று அரசியல் லாபத்திற்காக அளிக்கப்பட்டது. வெட்கக்கேடானது.\nஇவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்\nRelated Tags கர்நாடக தேர்தல் 2018 அமித்ஷா காங்கிரஸ் தலைவர் ராகுல் மதசார்பற்ற ஜனதா தளம் பாஜக தலைவர் அமித்ஷா மஜத காங்கிரஸ் ஆதரவு கர்நாடக மக்கள் ஆதரவு எடியூரப்பா சித்தராமையா\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுன்பு ஆட்சி புரிந்த காங்கிரஸை குறை கூறுவதையே தங்கள் கடமையாய் கொண்டுள்ள இவர்கள் என்னத்துக்கு பதவிக்கு வர வேண்டும். (ஜி, ஜெ ஷா வுடைய சொத்து மதிப்பு எத்தனை லட்சம் கோடி. (ஜி, ஜெ ஷா வுடைய சொத்து மதிப்பு எத்தனை லட்சம் கோடி\nஇந்தியாவுக்கு இப்போது உண்மையிலேயே ஓர் புதிய சாணக்கியர் தேவை அனைத்தும் சுயநலத்தோடு கூடிய ஊழல் கூட்டம்\nஇப்படித்தான் அம்மையார் அவசரம் அவசரமாக பதவி ஏற்றார் பின்னர் டான்சி தீர்ப்பில் அசிங்க பட்டு பதவி விலகினார் அவன் செய்தான் இவன் செய்தான் என்று கூறி எல்லாரும் தவறு செய்ய ஆரம்பித்தால் இந்த நாட்டில் திரு வோடு கூட மிஞ்சாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-08-18T00:22:48Z", "digest": "sha1:424N7BDOOESBQYSCIFFQ2VZMGRDUTA76", "length": 7442, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சம்பந்தனின் பதவிக்கு ஆபத்தா\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் டெலோ ஆகியன வெளியேறியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் புளோட் அமைப்பு ஆகியனவே கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு கூட்டமைப்பை விட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.\nமேலும், இலங்கை தமிழரசுக் கட்சியிலுள்ள சிலர் கட்சித் தாவும் பட்சத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக் குறியாகிவிடும் . இதன்படி, மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிரணி ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான வாய்ப்பு காணப்படும் . அவ்வாறு இல்லையெனில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட ஆலோசகரை நியமிக்கிறது அமெரிக்கா\nNext articleடி.டி.வி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/105/", "date_download": "2018-08-18T00:26:55Z", "digest": "sha1:2IGARE37JK2FEAOUSZ5XYBDOSH3ABNEW", "length": 11725, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nஅதை கற்றுக் கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் – நிவேதா பெத்துராஜ்\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nஇலங்கை பெண்ணை திருமணம் செய்த நடிகர்\nசினிமா செய்திகள் November 19, 2015\nடைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவருக்கும், இலங்கையை...\nகமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் பூங்கொத்து கொடுத்து பாராட்டு\nசினிமா செய்திகள் November 18, 2015\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தமவில்லன்' திரைப்படத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த...\nசரத்குமார், ராதாரவி மீது விஷால் புகார்\nசினிமா செய்திகள் November 18, 2015\nநடிகர்கள் சரத்குமார், ராதாரவியின் தலைமையிலான பழைய நிர்வாகம், நடிகர் சங்க அறக்கட்டளையின், மூன்று ஆண்டு கணக்கு; நடிகர் சங்கத்தின், இரண்டு ஆண்டு கணக்கைசமர்ப்பிக்கவில்லை. எனவே, நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியவில்லை...\nவாடிகன், போப் ஆசீர்வாதம், கொண்டாட்டம்.. கலக்குற நயன்தாரா\nசினிமா செய்திகள் November 18, 2015\nஇன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள். தனது நடிப்பால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்களைக் கடந்து விட்ட போதிலும் நிலைத்து நிற்கிறார். தொடர்ந்து மூன்று வெற்றியைத் தந்துவிட்டதால் அவரைச் சார்ந்தவர்கள் நயனை லேடி...\nமிஸ்டர் பீனின் திருமண வாழ்க்கை முறிந்தது\nசினிமா செய்திகள் November 17, 2015\nMr. Bean கதாபாத்திரம் மூலம் உலக புகழ் பெற்ற இங்கிலாந்தின் பிரபல ஹொலிவூட் நகைச்சுவை நடிகரான ரோவன் அட்கின்சன் (60வயது), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை விவாகரத்து செய்துள்ளார். இதன்மூலம் இவர்களது 24...\nபிரபல பக்தி இசைப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்\nசினிமா செய்திகள் November 17, 2015\nதமிழகத்தைச் சேர்ந்த பிரபல பக்தி இசைப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் சென்னையில், செவ்வாய்கிழமை காலமானார். அவருக்கு வயது 95. தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பிறந்த அவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். அவர் சிறுவயதில் முறையாக இசை பயின்றார்....\nநடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வார்\nசினிமா செய்திகள் November 17, 2015\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 18-ந் திகதி தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும், 24 பேர் செயற்குழு...\nஅறுவை சிகிச்சை முடிந்தவுடன் அஜித்திடம் கூறியது என்ன\nசினிமா செய்திகள் November 17, 2015\nதிரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நடிகர் அஜித்திற்கு நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்கள் ஓடியாடி விளையாடிய போதல்ல. பைக் மற்றும் கார் பந்தையங்களில் கலந்துக் கொண்ட போது ஏற்பட்ட விபத்துக்களினால் ஆன காயங்கள். பல விபத்துக்கள்...\nஇஞ்சி இடுப்பழகி படத்தில் இத்தனை பிரபலங்களா\nசினிமா செய்திகள் November 16, 2015\nஅனுஷ்கா மற்றும் ஆர்யா நடிப்பில் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரிலும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரிலும் வெளிவரவுள்ள படத்தில் கோலிவுட் மற்றும் டோலிவுட்டைச் சேர்ந்த ஒன்பது பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில்...\nமுதல்வருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nசினிமா செய்திகள் November 16, 2015\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று காலை தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேசினர். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தமிழக முதல் ஜெ.ஜெயலலிதாவை...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-18T00:21:54Z", "digest": "sha1:NCE3RBSTEYEBUCZJGGYW7F5T2SUSM2DY", "length": 7119, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செவ்வாய் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nசெவ்வாயில் வளரும் உருளை கிழங்கு : ஆய்வாளர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு..\nபெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான...\nசெவ்வாய் கிரகத்தில் வீடுகள்: நாசா அறிவிப்பு..\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அங்கு நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையி...\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கரண்டி ; அறிவியல் வளர்ச்சி மிக்க மனிதர்களின் நடமாட்டத்திற்கான அறிகுறியா\nசெவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை காட்டும் படங்களை ஆராய்ந்தப்போது அதில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்பாட்டுக் கரண்டி ஒ...\nமறைமுகமான அச்சுறுத்தலால் பீதியடைந்துள்ள மக்கள்.\nசெவ்வாய்க்கு சென்றும் நிலத்தை கூறுபோட்டு விட்டோம். மனிதனின் தேவையை மட்டுப்படுத்த நிலத்தால் மட்டுமே முடியும்.\nசெவ்வாய் கிரகத்துக்கு 30 நிமிடங்களில் விண்கல பயணம்\nஅதி சக்தி வாய்ந்த லேசர் கதிர் முறைமையின் மூலம் மூலம் சிறிய விண்கலமொன்றை 30 நிமிட நேரத்தில் செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடைய...\nசெவ்வாயில் ஆய்வுக்கலத்தை கூட்டாக தரையிறக்கும் இந்தியா - பிரான்ஸ் கைச்சாத்தானது ஒப்பந்தம்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலத்தை இறக்கும் அடுத்த திட்டத்தில் பிரான்ஸும் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் பிரதமர் நரே...\nசெவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப 17,000 டொலர்\nசெவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் 5 வயதான ஆலிவர் கிட்டிங்ஸின் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilthowheed.com/2012/07/31/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-18T00:50:52Z", "digest": "sha1:3YLV2QFKC7A4GRR6DXU3TYFTUFZO5ZLP", "length": 64784, "nlines": 293, "source_domain": "tamilthowheed.com", "title": "முன்மாதிரி முஸ்லிம் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nநயவஞ்சகம் கொள்ளமாட்டார்உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ”நீங்கள் எங்களது தலைவர்.” உடனே நபி (ஸல்) அவர்கள் ”தலைவன் அல்லாஹ் மட்டுமே” என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ”நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்” என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)\nநபி (ஸல்) அவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர், அவர்களில் சிறப்பானவர் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இருந்தாலும் புகழ்வதை அனுமதித்தால் மக்கள் வரம்பு மீறிச் சென்று புகழுக்குத் தகுதியற்றவர்களை மேன்மைக்குரியவர், தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து விடுவார்கள் என்பதால்தான், தன்னைப் புகழ்ந்தவர்களை தடுத்தார்கள். மேலும், இம்மாதிரியான புகழ்ச்சிக்கு இடமளித்தால் அது மக்களை நயவஞ்சகத்தனம் என்ற அழிவின்பால் சேர்த்துவிடும். இவ்வாறு புகழ்வது பரிசுத்தமான இஸ்லாமின் அடிப்படைக்கு முரண்பட்டதாகும்.\nபுகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.\nஅபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ”நீர் நாசமடைவீராக உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்” என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ”எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nகண்டிப்பாக புகழவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தப் புகழ், புகழப்படுபவனுக்கு உண்மையில் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். வரம்பு மீறாமல் கூடுதல் குறைவின்றி நடுநிலையுடன் அமைய வேண்டும். அதன்மூலமே சமூகத்தை பொய், நயவஞ்சகம், ஏமாற்றுதல், முகஸ்துதி போன்ற இழி குணங்களிலிருந்து தூய்மைப்படுத்த முடியும்.\nரஜா (ரஹ்) அவர்கள் மிஹஜன் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களும் மிஹஜனும் மஸ்ஜிதில் இருந்தபோது தொழுது ருகூவு, ஸுஜூது செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர் குறித்து இவர் யார் என வினவினார்கள். மிஹஜன் (ரழி) அவரை அதிகம் புகழ ஆரம்பித்து ”இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ”போதும். நிறுத்திக்கொள் என வினவினார்கள். மிஹஜன் (ரழி) அவரை அதிகம் புகழ ஆரம்பித்து ”இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ”போதும். நிறுத்திக்கொள் அவர் கேட்கும்படி கூறாதே. அவரை அழித்து விடுவாய்” என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)\nமுஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது: ”அல்லாஹ்வின் தூதரே இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்” என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ”அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்” என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்.” என்றும் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்’ என்று கூறினார்கள். ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.\nபுகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.\nநயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.\nஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ”அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களி லிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.\nநாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை ”மனிதர்களில் மிகச் சிறந்தவரே அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவரின் மகனே அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவரின் மகனே” என்று அழைத்தார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதரின் மகனுமல்ல. அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக” என்று அழைத்தார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதரின் மகனுமல்ல. அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு மனிதனை அழிக்காதவரை நீங்கள் ஓயமாட்டீர்கள்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)\nஇது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் அவர்களது வழிமுறையை முழுமையாக பின்பற்றிய பிரபல நபித்தோழரின் விவேகமான பதிலாகும். நயவஞ்சகத் தன்மையை வெற்றி கொள்வதற்கென நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் இது விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக மனத்தூய்மையுடன் செய்யப்படும் அமல்களுக்கும், நயவஞ்சகத்தனத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மிடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.\nஇப்னு உமர் (ரழி) அவர்களிடம் சிலர்: ”அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்லும்போது அவர்களிடமிருந்து வெளியேறிய பின் எதைக் கூறுவோமோ அதற்கு மாற்றமாக அவர்களிடம் பேசுகிறோம்” என்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் ”நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதை நயவஞ்சகத்தனம் எனக் கருதினோம்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nமுகஸ்துதியிலிருந்து விலகியிருப்பார் உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.\nஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)\nஎந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.\n(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)\nதங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.\n நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)\nஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்றுவிடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.\n”மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.” முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்…\nஅவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர் களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)\nஅவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.\nஅபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ”நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nதூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும் இழிவையும் வேதனையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறினார்கள்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். ”மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். ”அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்” என்று கூறுவான். அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டது” என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.\nமற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் ”அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்” என்று கேட்பான். அவன் ”நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், காரி என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.\nஇன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் ”அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்” என்று கேட்கப்படும். அவன் ”எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்” என்று கூறுவான். ”அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம் போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது. தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில் அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ அந்த அனைத்து நன்மைகளும் உரியப்பட்டு மாபெரும் இழிவும், கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா\nமார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர் பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான். எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை பகிரங்கப்படுத்துவான்.” (ஸஹீஹுல் புகாரி)\nஉறுதிமிக்கவர் உண்மை முஸ்லிம் நேர்வழி பெற்றவராக, தெளிவான சிந்தனை உடையவராக இருப்பார். சத்தியத்தைவிட்டும் முகம் திருப்புவதை, சத்தியத்தை மறைப்பதை, பொய் கூறி மக்களை ஏமாற்றுவதை அவர் விரும்பமாட்டார். சத்தியத்தின் மீது நிலைத்திருப்பதில் ஏற்படும் சிரமங்கள், துன்பங்களின் காரணமாக சங்கடமோ, சஞ்சலமோ, தடுமாற்றமோ இல்லாமல் சமூக வாழ்வில் அதை எளிதாக எதிர்கொள்வார்.\nசத்தியத்தில் நிலைத்திருப்பது, அவரது வாழ்வில் விரும்பினால் கைக்கொள்வது, விரும்பாவிட்டால் விட்டுவிடுவது என்பது போன்ற சடங்கல்ல. மாறாக, ஈமானுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற, அல்லாஹ் இன்னும் அவனது தூதரால் கட்டளையிடப்பட்ட மிக அவசியமான பண்பாகும்.\nஎனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) ”நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்” என்றும்,\n”நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்” என்றும் ”பாவங்களை மன்னித்து கிருபை செய்வோனின் விருந்தாளியாக அதில் (தங்கி) இருங்கள்” என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,31,32)\nஉறுதியுடன் நிலைத்திருக்கும் இறை விசுவாசிகளுக்குத்தான் எவ்வளவு மகத்தான நற்கூலி மறுமை நாளில் அவர்களின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது மறுமை நாளில் அவர்களின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது அவர்களுக்கு மலக்குகள் அளிக்கும் வரவேற்பும் நற்செய்தியும் எவ்வளவு அழகானது என்பதைப் பாருங்கள்\nஏனெனில் உறுதியாக நிலைத்திருப்பது கடினமான காரியமாகும். இது அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்ட இறையச்சமுள்ள உண்மை முஃமின்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அவர்கள் தீமைகளுக்கு அடிபணியமாட்டார்கள். இவ்வுலகில் மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இன்பங்கள், ஆட்சி அதிகாரங்கள், பட்டம் பதவி, செல்வங்களுக்கும் அடிபணிய மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் மகத்தான நன்மைகளை அடைந்து கொள்வார்கள்.\n”நிலையாக இருப்பது” என்பதன் பொருளை நபி (ஸல்) அவர்கள் மிக ஆழ்ந்து அறிந்ததன் காரணமாகத்தான் அது அவர்களை மிகவும் பாதித்தது. இதுவே நிலையாக இருப்பதென்பது சிரமமானது என்பதற்கு ஆதாரமாகும்.\n) உமக்கு ஏவப்பட்ட பிரகாரம் நீரும், உம்முடன் இருக்கும் இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகியவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள்… (அல்குர்ஆன் 11:112)\nஇந்த திருவசனத்தின் விரிவுரையில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ”திருகுர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இந்த வசனத்தைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த கடினத்தையும், சிரமத்தையும் அளித்த வேறெந்த வசனமும் கிடையாது” என்று குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் தலைமுடி விரைவாக நரைத்துவிட்டதன் காரணத்தை விசாரித்தபோது நபி (ஸல்) அவர்கள், ”என்னை ஹுது (என்ற சூராவு)ம் அது போன்ற கருத்துடைய சூராக்களும் எனக்கு நரையை ஏற்படுத்திவிட்டது” என்று கூறி மேற்கண்ட வசனத்தை சுட்டிக்காட்டினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஎனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ… (அல்குர்ஆன் 41:30)\nஅல்லாஹ்வின் இந்த சொல்லுக்கு ஒப்பாகவே ரசூலுல்லாஹ்ி (ஸல்) அவர்கள் ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்களுக்கு உபதேசித்தார்கள். ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) ”அல்லாஹ்வின் தூதரே இனிமேல் இஸ்லாமைப் பற்றி யாரிடமும் கேட்கத் தேவைப்படாத வகையில் எனக்கு ஓர் உபதேசத்தைக் கூறுங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ”ஆமன்த்து பில்லாஹ் (அல்லாஹ்வை விசுவாசித்தேன்) என்று சொல்லி அதில் உறுதியாக இரு” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nஇமாம் முஸ்லிம் (ரழி) அவர்கள் தனது தொகுப்பில் ‘உறுதியாக இருப்பது’ என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக ‘இஸ்லாமியப் பண்புகளை ஒருங்கிணைக்கும் தன்மை’ எனத் தலைப்பிட்டு, அதன் கீழ் இந்நபி மொழியைக் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் ‘உறுதியாக இருப்பது’ என்பதில்தான் பல்வேறு மாண்புகளும், நற்குணங்களும் ஒன்றிணைந்துள்ளன.\n‘இஸ்திகாமத்’ உறுதியாயிருப்பதில் முதன்மையான பண்பாகிறது முஸ்லிம் ஒரே முகத்துடன் மனிதர்களை சந்திப்பவராக இருக்க வேண்டும். வஞ்சகர்கள், மோசடிக்காரர்களைப் போன்று நிறம் மாறக்கூடாது என்பதாகும்.\nநபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”மனிதர்களிலேயே மிகக் கெட்டவன் இரட்டை முகமுடையவன். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nFiled under இஸ்லாம், குடும்பம், சமூகம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nஅரஃபா நோன்பு ஓர் ஆய்வு...\nநபி வழியில் நம் ஹஜ்\nபெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.buddhatrends.com/collections/linen-shirts", "date_download": "2018-08-18T00:27:24Z", "digest": "sha1:PVAIDWIIKIZDR4TT2HRGI2AHTSTEEQ3E", "length": 28572, "nlines": 559, "source_domain": "ta.buddhatrends.com", "title": "லினன் சட்டைகள் | Buddhatrends", "raw_content": "அனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி அனுபவிக்க, குறைந்தபட்சம் தேவை இல்லை\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nமலர் விற்பன்னர்கள் & அச்சிட்டு ஆடைகள்\nகருப்பு & வெள்ளை ஆடைகள்\nப்ளூ & வெள்ளை ஆடைகள்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nவிளக்கம், படங்கள், மெனுக்கள் மற்றும் உங்கள் மெகா மெனு இணைப்புகளை சேர்க்கவும்\nஎந்த அமைப்புகளுடனும் ஒரு பத்தியில் ஸ்பேசர் பயன்படுத்தப்படலாம்\nஉங்கள் சேகரிப்புகள், விற்பனை மற்றும் புற இணைப்புகள் ஆகியவற்றை இணைக்கவும்\nஐந்து பத்திகள் வரை சேர்க்கலாம்\nமுகப்பு / இளஞ்சிவப்பு சட்டைகள்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி: AZ அகரவரிசையில்: ZA விலை: குறைந்த முதல் உயர் விலை: அதிக உயரம் தேதி: பழையது பழையது தேதி: புதியது பழைய\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nஅனைத்து பிளஸ் அளவு ஆடை\n3 / XX ஸ்லீவ்\nதுணிக்குள் வரிசையாக அடுக்கப்பட்ட வட்டமான புள்ளிகள்\nபருத்தி லினன் சாலிட் பெரிதாக்கப்பட்ட சட்டை\nபருத்தி லினன் சாலிட் பெரிதாக்கப்பட்ட சட்டை விற்பனை அவுட்\nஇளஞ்சிவப்பு சட்டை வரை பட்டை பட்டை\nஇளஞ்சிவப்பு சட்டை வரை பட்டை பட்டை $ 55.30 $ 79.00\nபிளட் சைட் பருத்தி லினன் சட்டைகளுக்கு Petite\nபிளட் சைட் பருத்தி லினன் சட்டைகளுக்கு Petite $ 42.00 $ 60.00\nஜென் லோட்டஸ் லினென் ஷர்ட்\nஜென் லோட்டஸ் லினென் ஷர்ட் $ 43.40 $ 62.00\nதளர்வான Batwing ஸ்லீவ் லினன் சட்டை\nதளர்வான Batwing ஸ்லீவ் லினன் சட்டை $ 49.70 $ 71.00\nஅசைவூட்டப்பட்ட பருத்தி மற்றும் லினன் ஷர்ட்\nஅசைவூட்டப்பட்ட பருத்தி மற்றும் லினன் ஷர்ட் $ 42.00 $ 60.00\nபருத்தி லினென் லூஸ் ஸ்பிரிங் வெஸ்ட்\nபருத்தி லினென் லூஸ் ஸ்பிரிங் வெஸ்ட் $ 53.58 $ 66.97\nவிண்டேஜ் சாம்பல் பருத்தி மற்றும் லினென் டை டை சியா டாப்\nவிண்டேஜ் சாம்பல் பருத்தி மற்றும் லினென் டை டை சியா டாப் $ 61.60 $ 88.00\nபருத்தி மற்றும் லினன் சாதாரண கயிறு\nபருத்தி மற்றும் லினன் சாதாரண கயிறு $ 42.00 $ 60.00\nமிதமான சாதாரண Linen சட்டை\nமிதமான சாதாரண Linen சட்டை $ 86.80 $ 124.00\nசில்க் மற்றும் லினென் சீன டூனிக்\nசில்க் மற்றும் லினென் சீன டூனிக் $ 61.60 $ 88.00\nஇரண்டு துண்டு சாதாரண சில்க் மற்றும் லினென் சூட்\nஇரண்டு துண்டு சாதாரண சில்க் மற்றும் லினென் சூட் விற்பனை அவுட்\nசாதாரண பருத்தி லினன் சட்டை\nசாதாரண பருத்தி லினன் சட்டை $ 51.80 $ 74.00\nசமச்சீரற்ற லினன் சட்டை $ 46.90 $ 67.00\nதூய பழுப்பு லினன் சட்டை\nதூய பழுப்பு லினன் சட்டை $ 50.47 $ 72.10\nஅடுக்கு டை சாய லினென் சர்ட்\nஅடுக்கு டை சாய லினென் சர்ட் $ 62.90 $ 74.00\nமேல்நோக்கி பிளாட் லென்னை சட்டை\nமேல்நோக்கி பிளாட் லென்னை சட்டை $ 49.70 $ 71.00\nசட்டை பையில் கீழே பருத்தி லினன் பட்டன்\nசட்டை பையில் கீழே பருத்தி லினன் பட்டன் $ 52.50 $ 75.00\nமோரி லாங் ஸ்லீவ் லினென் ப்ளூஸ்\nமோரி லாங் ஸ்லீவ் லினென் ப்ளூஸ் $ 51.10 $ 73.00\nவிண்டேஜ் பேட் ஸ்லீவ் லினன் பட்டன் ஷர்ட் | தாமரை\nவிண்டேஜ் பேட் ஸ்லீவ் லினன் பட்டன் ஷர்ட் | தாமரை $ 48.30 $ 69.00\nதள்ளுபடிகள், புதிய வெளியீடுகள் மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா\nஎங்கள் செய்திமடலுக்கு இப்போது பதிவு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9/", "date_download": "2018-08-18T00:19:28Z", "digest": "sha1:NR6Y3JAELUWPU2WSDGCNI62DTYSEUMQV", "length": 13152, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "திருமணம் முடிந்ததும் மூன்று நாளில் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளேன்-சமந்தா | CTR24 திருமணம் முடிந்ததும் மூன்று நாளில் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளேன்-சமந்தா – CTR24", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்வில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன\nஜெனீவாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு கடும் சவாலாக செயற்படவுள்ளதாக சிங்கள அமைப்பு ஒன்று சூளுரைத்துள்ளது\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nதிருமணம் முடிந்ததும் மூன்று நாளில் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளேன்-சமந்தா\nதிருமணம் முடிந்து மூன்று நாட்களில் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளதால், தேன்நிலவுக்கெல்லாம் நேரமில்லை என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.\nசமந்தா மற்றும் நாகசைதன்யாஆகியோருக்கு இடையில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் நட்பு உருவாகி, அது காலப்போக்கில் காதலாக மாறியது.\nஇந்த நிலையில் இருவரும் ஒக்ரோபர் 6ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். எனவே இது குறித்து ஆங்கில பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே சமந்தா மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.\nமேலும் தற்பொழுது தான் அதிக படங்களில் ஒப்பந்தமாகியுள்ளமையினாலும், இன்னும் படப்பிடிப்புக்கள் முடிவடையாத நிலையிலும், தான் திருமணத்தின் பின்னர் மூன்றாவது நாளே படப்பிடிப்புக்கு செல்லவுள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார்.\nPrevious Postகனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் யூலை 23.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல். Next Postஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் ’விக்ரம் வேதா’\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்...\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-08-18T00:19:43Z", "digest": "sha1:NH72AO5ZYFBIP652IRVZMJJSKU3COZJJ", "length": 16905, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "மருத்துவம் | CTR24 | Page 2 மருத்துவம் – Page 2 – CTR24", "raw_content": "\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஇலங்கையில் புதிய அரசமைப்பினை உருவாக்குவது இலகுவான விடயமல்ல என்று ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்\nபிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ காரணமாக கல்கரி புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மாத அமர்வில் இலங்கை தொடர்பான இரண்டு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளன\nஜெனீவாவில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு கடும் சவாலாக செயற்படவுள்ளதாக சிங்கள அமைப்பு ஒன்று சூளுரைத்துள்ளது\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கான பதில் நடவடிககைகளை மேற்கொள்ள தாமும் தயாராகி வருவதாக கனடா தெரிவித்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nதமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு நசுக்குவதாக குற்றஞசாட்டப்பட்டுள்ளது\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டமை கோத்தபாயவுக்கு எதிரான விசாரணைகளுக்கு வலுச்சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nHome மருத்துவம் (Page 2)\nபாகற்காய் எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாக உள்ளது தெரியுமா…\nபாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத்...\nசரும அழகை அதிகரிக்க ரோஸ் வாட்டர்\nசரும பிரச்சனைகளான எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய்,...\nநுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்…\nநுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு...\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் ‘சி’ மிகவும் முக்கியமானது....\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nகுழந்தை பருவம் மற்றும் இளமை பருவத்திற்கு இடைப்பட்ட வளர் இளம்...\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\nதென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கைத்...\nதண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nதண்ணீர் அருந்துவது உடலுக்கு எவ்வளவு நல்லது என்று நம்...\nநண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன\nஉண்மையிலேயே உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அந்தத் தோழியுடன்...\nகுழந்தைகளின் ஆற்றலையும், கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும் கதைகள்\nகதை சொல்லி குழந்தைகளை தூங்க வைக்கும் பாட்டிகள் குறைந்து...\nகாபி குடிப்பது நீண்ட காலம் வாழ உதவக்கூடும்: ஆய்வில் தகவல்\nநாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம்...\nஉடல் பலம் அளிக்கும் பயிறு வகைகள்\nமனித உடலுக்கு பயிறு வகைகள், அதிக பலம் அளிக்கின்றன. பயறு...\nமருத்துவம் மனம் சார்ந்ததும் தான்\nமன உளைச்சலுடன் வாழும் நாம், என்ன நல்ல உணவும், சத்து...\nநீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்\nநீரிழிவு நோய்க்கு அதிகமான தீர்வு தரக்கூடியதாகதான்...\nஇதயத்தை பாதுகாக்க அற்புதமான வழிமுறைகள்…\nநமக்குள் ஓயாது துடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான உறுப்பு,...\nவாந்தி, வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும் கிராம்பு\nகிராம்பு மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து...\nதூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் மகராசனம்\nஅதிக ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன இறுக்கம் போன்ற பல...\nநீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த எளிய கால் பயிற்சிகள்diabetics-patient-simple-leg-exercise\nகெண்டைக்கால் சதையை நீட்டுதல்: முழங்கை மடங்காமல் கைகளை நீட்டி,...\nஉடல் எடையை குறைக்கும் பச்சை மிளகாய்\nநாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்...\nகேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nசமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று இந்தியாவின் 72ஆவது சுதந்திர நாள் உரையில் மக்களிடம் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=18334", "date_download": "2018-08-18T00:45:35Z", "digest": "sha1:EDDR6J5VKHGVAYDTL7WX5NKFGIDL6VHO", "length": 8863, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» ஒரு மில்லியன் ரூபாவை வெல்லும் வாய்ப்பு!", "raw_content": "\nRun for Little Hearts – நீங்களும் ஒரு பங்காளராகுங்கள்\nஜூன் மாதம் சுழற்றி அடிக்கப்போகும் ராசி மாற்றம்..\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\n← Previous Story பெண், ஆண் மீது அதிக ஈர்ப்பு கொள்ள தூண்டும் 7 விஷயங்கள்\nNext Story → தனுஷின் அப்பா திடீர் ஆவேசம்\nஒரு மில்லியன் ரூபாவை வெல்லும் வாய்ப்பு\nசினிமா, பொது அறிவு மற்றும் நடப்பு விவகாரம் பற்றி நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் உங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.\nஇதற்கு மேலதிகமாக கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் பல ஆறுதல் பரிசுகளையும் வெல்லலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் டயலொக் கையடக்க தொலைபேசியில் TAM என டைப் செய்து 3535 க்கு அனுப்பவும்.\nஇதனைத் தொடர்ந்து உங்களுக்கான கேள்விகள் உங்கள் டயலொக் கையடக்க தொலைபேசிக்கு நான்கு பதில்களுடன் வரும். சரியான பதிலை தெரிவு செய்து ஒரு மில்லியன் பணப்பரிசை வெல்லுங்கள்.\nநீங்கள் தவறான பதிலை தெரிவுசெய்தால் சரியான பதிலை தெரிவு செய்வதற்காக மற்றுமொரு சந்தர்ப்பமும் வழங்கப்படும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://n-raveendran.blogspot.com/2012/04/14-04-2012.html", "date_download": "2018-08-18T00:50:27Z", "digest": "sha1:ETYR736GESJZSKX4KKEGWMWID7CMQMGV", "length": 20127, "nlines": 113, "source_domain": "n-raveendran.blogspot.com", "title": "சத்தியமனை - தேடலும், தேவையும் ..: ஒரு, நல செய்தி 14-04-2012", "raw_content": "\"சத்தியமனை\" - இன்றைய சமூகத்திற்கான தேவையும், தேடலும் பற்றிய ஓர் துடிப்பு \nஒரு, நல செய்தி 14-04-2012\nஅனைத்து நண்பர்களுக்கும், மற்றுமொரு புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்களுக்குத்தான் எத்தனை புத்தாண்டுகள்; என்ன, ஒருவர் சொல்லும் புத்தாண்டு\nதினத்தை மற்றொருவர் ஏற்க மறுக்கும் சமூக முரண் எங்களிடம் ஆழமாகவே உண்டு. இதிகாச - புராண பண்பாட்டுக் கட்டமைப்பாலான, ஒன்றில்\nதேவர்கள் அல்லது அசுரர்கள் என்ற இரு அந்தலைகளிலேயே அனைத்தையும் முரண்படுத்தி, வைத்தால் கூந்தல் - அடித்தால் மொட்டை என்று\nபார்க்கப் பழக்கப்படுத்தப்பட்ட தமிழ் மனங்களுக்கு இந்தச் சமூகச் சிக்கலில் யாரை எங்கே வைப்பது (தேவராகவா அசுரராகவா) என்பதில்தான்\nஆயினும் புத்தாண்டு விடயத்தில் மக்கள் அதிகம் குழம்புவதாய்த் தெரியவில்லை; ஜனவரி 1, தை 1(பொங்கல் திரு நாள்), சித்திரை 1(இலங்கைச்\nசொல்லாடலின் பிரகாரம் தமிழ்-சிங்களப் புத்தாண்டு) என எந்த ஒரு ''விடுமுறைக் கொண்டாட்ட நாளையும்'' ஒரு கை பார்த்து விடுவதில் பின்\nவாங்குவதில்லை. கோட்பாட்டாளர்களுக்குத் தான் பிரச்சனை. சில கோட்பாடுகளில் முரண்படுகிறவர்களும் குறித்த பிரச்சனை ஒன்றில் தமக்கு\nஉடன்பாடான விடயத்தை முன்வைக்கிறபோது அந்த ஒரு விடயத்திலாவது ஒன்றுபட்டுப் போவோமே என்று இழுபட்டுப் போவதுண்டு.\nஇதற்கு நல்ல உதாரணமாய் அமைவது தமிழ்-சிங்களப் புத்தாண்டு. தமிழகத்தில் சிறிய அளவிலாவது எது தமிழ்ப் புத்தாண்டு என்ற சலனமுண்டு.\nஇலங்கையில் தைப்பொங்கல் தெளிவாக உழவர் திருநாள் மட்டுமே. புத்தாண்டாக சித்திரை முதல் நாளை விவாதத்துக்கு இடமின்றி ஈழத்தமிழ்\nமனங்கள் அங்கீகரிக்கின்றன. சிங்கள மக்களின் நல்லபண்புகளைப் பார்க்க வாய்ப்பற்று, பேரினவாத முகத்தை மட்டுமே பார்த்து வெறுப்புடனுள்ள\nதமிழர்களும்கூட, இந்த ஒரு விடயத்திலாவது ஒரே நாட்டில் வாழ்கிற நாம் ஒன்றுபட்டிருபோமே என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.\nமோசமான இரு தரப்பு இனவாத ஆதிக்க மோகங்கொண்டோரை மோதி வீழ்த்திவிட்டால் இந்நாட்டில் அற்புதமான இன ஐக்கிய முன்னுதாரணத்தைக்\nகட்டியெழுப்புவது சுலபம் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டில்லையா நான் பெரிதாக இந்தப் புதிய நாட்களைக் கொண்டாடுவதில்லை;\nஅதற்காக நாளை மற்றுமொரு நாளே என விரக்தி கொண்டதுமில்லை. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற தெம்புடன் உலகை மாற்றிப் புனைந்து\nபுத்துலகம் படைக்கும் மக்கள் சக்தியைச் சுயமுணர ஆற்றுப்படுத்த இயலும் என்ற நம்பிக்கையுடன், அதற்காக இயங்கியவாறு இருப்பவன். இன்று\nபுலர் பொழுதில் மூன்று நாலு கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள சிங்களக் குடும்பம் ஒட்டுமொத்தமாய் எல்லோரும் புதுவருட 'சிங்களப் பலகாரங்களுடன்'\nவீட்டுக்கு வந்திருந்தார்கள்; இந்த இனிய நாளில் மகிழ்ச்சி பொங்காதிருக்குமா\nஇன்னுமொரு மகிழ்வான சங்கதி. காணாமற் போய், முற்றாகத் தொலைத்துத்தான் விட்டேனோ என்று பயத்துடன் மூன்று மாதங்களாய்த் தேடிய என்\nபெரும் செல்வம் மீளக் கிடைத்திருக்கிறது. அதைக் களவாடிய நோய்க் கூறுடன் நான் நடத்திய போராட்டத்தில் வெற்றியீட்டியுள்ளேன். நீங்கள் வெல்வீர்கள்,\nஅதற்கெனப் பிரார்த்திக்கிறோம் என நண்பர்கள் பலரும் என் போராட்டத்துக்கு தெம்பூட்டியிருந்தீர்கள். வெற்றி சாத்தியம் தானா என்ற கடும் சந்தேகத்துடனும், வீழ்ந்திட மாட் டேன் என்ற நம்பிக்கையுடனும் எனது போராட்டம் இருந்தது மெய். \"மெய்வருத்தக் கூலியுண்டு, முயற்சி திருவினையாக்கும்\" என்பதற்கமைய, நான் எனது அந்தக் ''கம்பீரமான'' பலத்தை மீட்டெடுத்தேன். (நன்றி: Lenin Mathivanamலெனின்,கே.எஸ்.சிவகுமாரன் Ks Sivakumaran ,எம்.கே.முருகானந்தம் Dr.Muttiah Kathiravetpillai Muruganandan, அ.மார்க்ஸ் Marx Anthonisamy ,பெ.சு மணி ,சிவசேகரம், செல்வா Selva Sfi மற்றும் என் அன்பு தோழர்கள் - இவ்வாறான அடைமொழி தந்தமைக்கும்).\nஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி\nசூழ்ந்திடும் இருளும் அகல்வது உறுதி\nநன்றிகளோடு, அன்பு தோழன் -இரவி.\nஇடுகையிட்டது ந. இரவீந்திரன் நேரம் 7:10 PM\nநேரடியான சமூக செயற்பாடுகள் தவிர்க்கவியலாவகையில் குறைவடைகின்ற நிலையில் இந்த புதிய ஊடகத்தை பயன்படுத்த முன்வந்துள்ளேன் ;எனது அவதானிப்பும் வந்தடையும் முடிவுகளும் சரியானவைதானா என்பதனை அறிவதுடன் சமூக மாற்றத்துக்கான பயணத்தில் புதிய தடங்களை கண்டறியவும் இந்த தொடர்பாடல் உதவ முடியும் என்று நம்புகின்றேன்.பயணிப்போம்.நன்றி.\n]சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக இயங்கும் வரலாறு பற்றி:-- கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் 1848 இல் எழுதிய \"கம்யூ...\nபிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை -ந.இரவீந்திரன்\nபிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை -ந.இரவீந்திரன் மூன்று தசாப்தங்களின் ம...\nசாதியம் - நாத்திகம் - நவ பிராமணியம்.\nசாதியம் நாத்திகம் நவ-பிராமணியம் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்கிய களத்தில் எவரெல்லாம் வீழ்த்தப்ப...\nபாரதியின் ஆன்மீக நாத்திகம் ந. இரவீந்திரன் ஐந்து வருடங்களின் முன்னர் 'குமுதம்' வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதி...\nமே தினம்: முதலாளி வர்க்கத்தின் மூடு திரையல்ல இன்று மே தினம்; ஊர் சுற்றி ஓடி தோழர்களை அணி திரட்டியவாறு யாழ் நகரின் மாபெரும் ...\nமனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் \" மிருச்சகடிகம்\" நாடகத்தை முன்னிறுத்திய ஒரு தேடல் -\nமனித உறவுகளின் உன்னதங்களைக் கிளர்ந்தெழத்தூண்டும் \" மிருச்சகடிகம்\" நாடகத்தை முன்னிறுத்திய ஒரு தேடல் - ந.இரவீந்திரன்...\n சமகாலம் -கடைசிப் பக்கம் ஐப்பசி -1 -2012 ...\nதமிழ் ஆய்வில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் பிரச்சனைகள்\nதமிழ் ஆய்வில் மார்க்சியத் திறனாய்வு எதிர்நோக்கும் பிரச்சனைகள் ...\nதமிழ்ப் பண்பாட்டு வரலாறு: சில மீள் பார்வை\nசில மீள் பார்வைக் குறிப்புகள் \"இரட்டைத்தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும்\" தொடரின் விவாதத...\nA Gun and A Ring ( ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்) -(கனடா ) October 19, 2013 at 12:18pm எ கன் அன்ட் எ ரிங் (ஒரு துப்பாக்கியும் மோத...\nஎனது புத்தகங்களும், அது கிடைக்கும் இடங்களும்...புகைப்படத்தில் அழுத்தவும்\n•\tபாரதியின் மெய்ஞ்ஞானம் (இரம்டாம் பதிப்பு) சவுத் ஏசியன் புக்ஸ் மார்ச் 1993. முதலாம் பதிப்பு டிசம்பர் 1986 /-----------/ •\tபின்நவீனத்துவமும் அழகியலும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் 1997 பின் நவீனதுதுவமும் ......(இரண்டாம் பதிப்பு ) தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் சவுத்விஷன் பெப்ரவரி 2001 /-----------/•\tஇலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் (வெகுஜனன் இராவணா ) சி-க-செந்திவேலுடன் இணை ஆசிரியர். சவுத்விஷன் ௨௦௦௭ மார்ச் /-----------/ •\tதிருக்குறளின் கல்விச் சிந்தனை (சமுக நோக்கில் ஒரு மறுவாசிப்பு. ) வின்சுவுடன் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ௨௦௦௯. /-----------/ •\tஉலகமயம் பண்பாடு சமூகமாற்றம் தொகுப்பு நுலில் \"சாதியமும் சமுக மாற்றமும் \" என்றகட்டுரை. சவுத் விஷன் ஜூலை ௨௦௦௧. /-----------/ •\tபன்முக ஆய்வில் கைலாசபதி (௧௩ ஆய்வுக் கட்டுரைகள்.) தொகுப்பு நுலில் \"தேசிய இலக்கியக் கோட்பாடும் கைலாசபதியும் \" என்ற கட்டுரை. தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் சவுத் ஏசியன் புக்ஸ் டிசம்பர் ௧௯௯௨. /-----------/ •\tஇந்துத்துவமும் இந்து விடுதலையும் சவுத் விஷன் டிசம்பர் ௨௦௦௧. •\tகலாச்சாரம் ,எதிர்க்கலாச்சாரம்,புதியகலாச்சாரம் தேசியகலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஷன் ஏப்ரில் 1998 /-----------/ •\tமுற்போக்கு இலக்கிய எழுச்சி பூபாலசிங்கம் பதிப்பகம் 2011. •\tஏன் - என். எஸ். வாகீசன் எனும் புனை பெயரில் தேசிய கலை இலக்கிய பேரவை ஆதரவுடன் சவுத் ஏசியன் புக்ஸ் - நவம்பர் 1991 •\tகல்விச் சிந்தனையாளர்கள்- பாரதியார் தொகுப்பாசிரியர் - இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து Books for children - தேசெம் 2007 •\tஇந்துத் துவ காலச் சூழலிந மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞானம் சவுத் விசன் யூலை 2003 •\tஇந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள் சவுத் விசன் யூலை 2003 •\tமதமும் மார்க்சியமும் (தமிழ் பண்பாட்டுப் பார்வை ) சவுத் விசன் 2006 •\tஇலங்கையில் - தேசிய கலை இலக்கிய பேரவை , பூபாலசிங்கம் புத்தகநிலையம் . இந்தியாவில் - சவுத் விசன் , பாரதி புத்தகாலயம் , புக் லான்ட்\nஇரட்டைத் தேசியம் - வர்க்க - அரசியலுக்கு மாற்று : ...\nசாதித் தேசங்களாய்ப் பிளவுபட்ட தேசியம்- ந இரவீந்திர...\nஒரு, நல செய்தி 14-04-2012\nஇரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும் -மாற்றமு...\nஇரட்டைத் தேசியம்: அறிதலும் அவசியமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023121", "date_download": "2018-08-18T00:24:52Z", "digest": "sha1:WQIN4I3IJARVRLMXIEJRZ4UXEUQBFPAC", "length": 15795, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்களின் தேவையை அறிய பயணம்: கமல்| Dinamalar", "raw_content": "\nமக்களின் தேவையை அறிய பயணம்: கமல்\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பனகுடியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், 50 ஆண்டுகளாக என்னை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இனி உங்களை பார்க்க நான் வந்துள்ளேன், மக்களின் முதல் தரிசனத்துக்கு வந்துள்ளேன் .மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள பயணம் மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags கமல் மக்கள் நீதி மய்யம் கமல் அரசியல் பயணம் நெல்லை மாவட்டம் பனகுடி நடிகர் கமல்ஹாசன் மக்களின் தேவையை அறிய பயணம் கமல் அரசியல் Kamal makkal neethi maiam Nellai District Panagudi\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபயணம் போய்தான் மக்களின் தேவை என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை கமல் சார். உங்களை சந்திக்க வந்திருப்பதால் நோக்கம், உங்களோடு இணைத்துக்கொண்டு,உங்களையும் அழைத்துக்கொண்டு நமக்கும் நம்சந்ததிக்கும் ஒரு வளமான தமிழகத்தை உருவாக்கலாம் என்று உங்களில் ஒருவனாக இணைய வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள். ரெஸ்பான்ஸ் எப்படி என்று பாருங்கள்.\nபொதுவாழ்க்கைக்கு வரும் முன் தனது வாழ்வியலை வாழ்க்கையின் உயர்வை வாழ்ந்த பெருந்தன்மையின் விளைவுகள் என்று தனது சொந்த நெறிமுறை வாழ்வை மேற்கோள் காட்ட வேண்டும் .. தவிர சொந்தவாழ்வையே சூனியமாக்கி மற்றவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவேன் என்று சொல்வது மனித மாண்புக்கே அப்பாற்பட்டது ... திருந்துவது நல்லது மக்களால் திருத்தப்படுமுன் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-08-02-2018/", "date_download": "2018-08-18T00:26:49Z", "digest": "sha1:CYMNTORMWB2UR5HDEID427ZQ3YORMN7O", "length": 10179, "nlines": 130, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 08.02.2018\nபெப்ரவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 39 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.\n1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.\n1622 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.\n1761 – லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.\n1849 – புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.\n1900 – போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.\n1904 – சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.\n1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1942 – ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.\n1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.\n1963 – கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.\n1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.\n1974 – 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.\n1974 – அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\n1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.\n1641 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720)\n1834 – திமீத்ரி மெண்டெலீவ், இரசிய வேதியியலாளர் (இ. 1907)\n1897 – ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969)\n1804 – ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கிலேய வேதியியல் அறிஞர் (பி. 1733)\n1889 – சொலமன் ஜோன்பிள்ளை, எழுத்தாளர், சிலோன் பேட்ரியட் பத்திரிகையின் ஆசிரியர்\n1975 – ரொபர்ட் ரொபின்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1886)\n1993 – நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1920)\n2005 – அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர்.\nபரிநிர்வாண நாள் – பௌத்த வழிபாட்டு நாள்\nPrevious articleநான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு\nNext articleதேசியத்திற்கு வாக்களிப்போம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?page=1", "date_download": "2018-08-18T00:22:12Z", "digest": "sha1:UVXP4DP7D7OMFWP3G2FBHESGOWD7SZPF", "length": 8819, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்கா | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம் ; வவுனியாவில்\nவவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்த...\nசீன, ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் புதிய தடை\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விதித்த பொருளாதார தடைகளை மீறியமைக்காக சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளா...\nகர்ப்பிணியாகவிருந்த பிரபல நடிகை அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி கடந்த செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலையில் அரை நிர...\nஅழகியின் சிதைந்த முகத்தின் கதை\nஅமெரிக்காவில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்து முகச் சிதைவுக்குள்ளான இளம் பெண்ணிற்கு அறுவை சிகிச்சையின் மூலம்...\nஅந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்...\nவெளியானது சிறுவர் துஸ்பிரயோகம் குறித்த அமெரிக்காவின் அதிர்ச்சி அறிக்கை\nமுக்கிய பொறுப்பிலிருந்தவர்கள் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக இவற்றை மறைத்தனர் அல்லது அலட்சியம் செய்தனர் எனவும் விசாரணை அறி...\nகோபத்தில் நபரொருவர் செய்த அநாகரீகச் செயல்: உயர் அதிகாரியின் பானத்தில் இதை கலக்கலாமா\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் அபூர்வமான விடயம் ஒன்று நடந்தேறியுள்ளது.\nசீனா செல்வாக்கை அதிகரிக்க முயற்சி- அமெரிக்கா இலங்கைக்கு இராணுவநிதியுதவி\nசீனா தனது புதியபட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் துறைமுகங்களிலும் ஏனைய உட்கட்டமைப்பு திட்டங்களிலும் முதலீட...\nஅமெரிக்க சமாதானப்படைக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து\nஅமெரிக்க சமாதானப்படையின் தன்னார்வத் தொண்டர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதன் மூலம் ஆங்கிலக் கல்விக்கான ஒத்துழைப்பை...\nஇந்திய-பசுபிக் நிதியுதவியின் நோக்கம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளோம் - ஹெதர் நௌர்ட்\nஇந்திய-பசுபிக் நிதியுதவியானது எமது வங்காள விரிகுடா முன்னெடுப்புக்கும் இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த பதில்வி...\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2015/11/30/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-23/", "date_download": "2018-08-18T00:54:30Z", "digest": "sha1:QNLCJZEJI4YG4DXYSKY2TSISW4BA2B3C", "length": 9625, "nlines": 133, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி 23 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி 23\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஹாய் மதுரா இன்று தான் மூன்று பதிவுகளையும் படிக்க முடிந்தது …………..மூன்றுமே அருமை ஜெயபாவிடம் தப்பித்த சந்த்ரிமா எப்படி அந்த ஆதி வாசி கும்பலிடம் சிக்கினாள்………………அவள் அம்மா எப்படி தப்பிப்பாள் …………..ஜெயப்பா தான் இப்பொழுது அவளை அடைத்து வைத்து இருப்பதா ………நன்றி பதிவிற்கு\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2016/10/05/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19/", "date_download": "2018-08-18T00:54:28Z", "digest": "sha1:NRQX667K6XS2C2MNKYCNABPI3PU6PUEM", "length": 15763, "nlines": 244, "source_domain": "tamilmadhura.com", "title": "ஒகே என் கள்வனின் மடியில் – 19 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஒகே என் கள்வனின் மடியில் – 19\nஅனைவருக்கும் என் உளமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்கள். முகநூலில் தோழிகளின் கைவண்ணத்தில் உருவான கொலுவைப் பார்த்தேன். சூப்பர்ப்…. இந்த உலகம் எத்தனை சாபு சிரிலை மிஸ் பண்ணிருக்கு.\nசென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. வம்சி, விபிஆர் மாதிரியே நானும் அடித்து அடித்து திருத்தி இந்தப் பதிவை எழுதிருக்கேன். படிச்சுட்டு நீங்க மார்க் போடுவிங்களாம்.\nஒகே என் கள்வனின் மடியில் – 19\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஒகே என் கள்வனின் மடியில் – 18\nஒகே என் கள்வனின் மடியில் – 20\nவம்சி: பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லு\nகாதம்பரி: பிடிச்சதை பிடிச்சிருக்குன்னு சொல்லும்போது பிடிக்காததையும் பிடிச்சிருக்குன்னு சொல்லணும்னா பிடிச்சதுக்கும் பிடிக்காததுக்கும் சொல்லற வித்தியாசம் தெரியாம பிடிக்காததை பிடிக்காம பிடிச்சிருக்குன்னு சொல்ல போய் எனக்கு பைத்தியம் பிடிக்காமலேயே பிடிச்சிருக்குன்னு யாராவது நினைச்சிட்டா என்ன செய்ய\nகாதம்பரி: அடுத்த முறை நீ வர்றதுக்குள்ள என்னோட பிளாட் வாசல் சாவியை மாற்றினா என்ன செய்வ\nகாதம்பரி: லாவெண்டர் மிஸ்ட் ரூம் ஸ்பிரேயா எனக்கு சிங்கம் மார்க் ஊதுபத்தி தான் புடிக்கும்…. டிக்கும்…. க்கும்…. ம்ம்ம்….\nவம்சி: இது வேலைக்கு ஆவாது பூனாவுக்கு போன அந்த சோனாவ கூப்புடுடா பூனாவுக்கு போன அந்த சோனாவ கூப்புடுடா உம்முன்னு சொன்னா கானா பாட்டோட மானா துள்ளிக்கிட்டு தானா வந்து தேனா அள்ளித்தருவா….\nஏய் இவன் பக்கா திருடன் .பிடிசிருக்குன்னா பிடிசிருக்குன்னு சொல்லு பிடிக்கலைன்னா பிடிசிருக்குனு சொல்லு செம ,வேதாளம் தான்……செரி முடிவெடுக்க உன்னை துண்ட போவது யார் \nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=1%208205&name=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-08-18T00:57:06Z", "digest": "sha1:LBQ7ZH3ZIOXHRQFT3UWXEDH2IIRQ6742", "length": 5057, "nlines": 119, "source_domain": "marinabooks.com", "title": "திருக்குறள் எளிய உரை Thirukkural Eliya Urai", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கல்வி பயணக்கட்டுரைகள் மனோதத்துவம் மாத இதழ்கள் சுயமுன்னேற்றம் வாஸ்து உரைநடை நாடகம் விளையாட்டு சுற்றுச்சூழல் ஜோதிடம் நகைச்சுவை தமிழ்த் தேசியம் இலக்கியம் பெண்ணியம் வரலாறு மேலும்...\nஏகம் பதிப்பகம்இராஜா பப்ளிகேஷன்விதை வெளியீடுநாவலர் நெடுஞ்செழியன் அறகட்டளைமணிமேகலைப் பிரசுரம்வி எம் பப்ளிகேஷன்ஸ்Merlin Publicationsநிழல்லெமூரியன் புக்ஸ்வனிதா பதிப்பகம்திராவிடமணி பதிப்பகம்காவ்யா பதிப்பகம்கண்ணம்மா பதிப்பகம்வளவன் பதிப்பகம்சாகித்திய அகாதெமி மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sathirir.blogspot.com/2016/02/4.html", "date_download": "2018-08-18T00:49:59Z", "digest": "sha1:4GURIQIDHFQ6BRXZL7PLEM7WJZALMI4G", "length": 23630, "nlines": 169, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4\nபுதிய தலைமுறை வார இதழுக்காக ..\nஇந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் நடத்திக்கொண்டிருந்தார்.ஏனென்றால் அவரது திட்டப்படி யாரும் எதிர்பார்க்காது வடக்கிலும் கிழக்கிலும் கடத்கரையோரமாக உள்ள இராணுவ கடற்படை முகாம்களை முதலில் கடல்புலிகளை கொண்டு கடல்வழியாக தாக்குவதோடு இறுதிப் போரை தொடக்குவது இதுதான் திட்டம்.பேச்சு வார்த்தை தொடங்கியபோதே கடற்புலிகளை பலப் படுத்த அதற்கென தனியாக வெளி நாடுகளில் நிதி சேகரித்து நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளில் தங்களால் அனுப்பி கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை படித்தவர்களைக் கொண்டு முல்லைத்தீவு கடற்பகுதியில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கியவர்கள் சிறிய அதிவேக தாக்குதல் படகுகள்.வெடிமருந்துகளை நிரப்பி இலகுவாக தாக்குதல் நடத்தும் கரும்புலித்தாக்குதல் படகுகள் மற்றும் நீர்முழ்கி கப்பல்கள் என கட்டியதோடு கடல்புலிகளுக்கும் கடினமான பயிற்ச்சிகள் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது .\nஅதேநேரம் இந்த தாக்குதலுக்காகவே வெளிநாடொன்றில் வாங்கப்பட்ட விசேடமான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு அவர்கது இரண்டு கப்பலும் முல்லைத்தீவுக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது .\nகப்பல் ஆயதங்கள் வந்திறங்கியதும் சண்டை தொடங்கிவிடும் எனவே ஆயுதக் கப்பல்களின் வருகைக்காக கடற்புலிகள் காத்திருந்தார்கள் அந்தக் கப்பலோடு தொலைதொடர்பில் இருந்த நபருக்கு திடிரென தொடர்புகள் விட்டுப் போனது.ஆயுதக் கப்பல்களிட்கு என்ன நடந்தது ..\nசர்வதேசக் கடலில் திடிரென தோன்றிய இரண்டு யுத்த விமானங்கள் ஆயுதங்களை ஏற்றியபடி முல்லைத்தீவுக் கடலில் நுழைந்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீதும் குண்டுகளைப் பொழிந்தன ஒரு கப்பல் உடனே வெடித்துச் சிதறிவிட இரண்டாவது கப்பல் தாக்குதலில் இருந்து தப்பி மீண்டும் சர்வதேசக் கடலுக்குள் சென்று மறைந்து விட்டது\n..கப்பலில் ஆயுதங்கள் வந்த விடயம் எப்படி இலங்கை அரசுக்கு தெரிய வந்தது யார் தகவல் கொடுத்தது..தாக்குதலை நடத்தியது இலங்கை விமானப்படையா ...இந்தியாவா ...இப்படி பல கேள்விகளோடு புலிகளின் தலைமை தலையை சொறிந்து யோசித்துக்கொண்டிருக்கும் போதே பேச்சு வார்த்தைக்கு தலைமை தங்கிக் கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அழைத்தவர் ஒரு அமெரிக்க அதிகாரி போனை காதில் வைத்த அன்டன் பலசிங்கத்திடம் \" சமாதன காலத்தில் எதற்காக ஆயுதம் வாங்குகிறீர்கள் ..உங்கள் போக்கு எங்களுக்கு நம்ம்பிக்கை கொடுக்கவில்லை.சமாதானத்தில் உண்மையோடும் நேர்மையோடும் இருங்கள்.அதை குழப்பி சண்டையை தொடங்கினால் அதுக்கான விளைவுகள் மோசமானதாக இருப்பதோடு அதன் முழுப் பொறுப்பளிகளும் நீங்களே\" ..என்று கடுமையான குரலில் சொல்லி விட்டு பதில் எதையும் எதிர் பாராமல் போனை வைத்து விட்டார் .\nதாய் லாந்தில் தங்கியிருந்த அன்டன் பலசிங்கத்திற்கு எதுவுமே புரியவில்லை பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்திய போதுதான் விபரங்கள் புரிந்தது.எந்த தாக்குதலையும் இப்போ செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார் .\nஆயுதங்கள் வராமல் போனதாலும் அமெரிக்காவின் அழுத்தத் தாலும் அப்போதைக்கு தாக்குதல் எதுவும் நடத்தாமல் பிற்போடப்பட்டது .ஆனால் ஆயுதக் கப்பல் வருகிற தகவல் யார் கொடுத்தது எப்படி பெற்றார்கள் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்கிற விபரங்களை பின்னர் பார்ப்போம் .அதற்கிடையில் மெல்லப் புகைந்து கொண்டிருந்த கருணா விவகாரம் பெரிதாக வெடித்து விட்டிருந்தது.கொஞ்சம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்த கருணாவை சாந்தப் படுத்துவதற்காக பேச்சு வார்த்தை குழுவில் கருணாவையும் பிரபாகரன் அனுப்பி வைத்திருந்தார்.அப்போ தாய்லாந்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது சர்வதேச நாடுகள் புலிகளின் பிரதிநிதிகளிடம் தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு கோரிக்கையையும் நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்று சொன்னதும் அன்டன் பாலசிங்கம் அவர்கள் சிறிது யோசித்து விட்டு நாங்கள் சமஸ்டி முறையிலான தீர்வுக்கு உடன்படுகிறோம் ஆனால் அதுக்கான சம்மதத்தினை தலைமையிடம் ஆலோசித்து சொல்வதாக சொன்னதும் உடனே குறிக்கிட்ட கருணா .நாங்கள் பேச்சுவார்த்தை மேசையில் முடிவெடுக்கும் அதிகாரத்தோடுதான் இங்கு வந்திருக்கிறோம்.\nதலைமை அதுக்கான அதிகாரத்தை தந்திருக்கிறது சமஸ்டி முறையிலான தீர்வை பரிசீலிக்கிறோம் என்று கையெழுத்துப் போடுங்கள் என்று அன்டன் பாலசிங்கத்தை ஊக்குவித்து கையெழுத்து போட வைத்துவிட்டார் .\nதான் என்ன செய்தாலும் சொன்னாலும் பிரபாகரன் மறு பேச்சு பேசாமல் ஒத்துக் கொள்வார் என்கிற அதீத நம்பிக்கையில் கருணா அப்படி செய்து விட்டார் .ஆனால் அந்த சுற்று பேச்சு வார்த்தை முடிந்ததுமே வன்னிக்கு சென்ற கருணாவிற்கும் அன்டன் பாலசிங்கத்திற்கும் யாரைக்கேட்டு தமிழீழக் கோரிக்கையை கை விட்டு விட்டு சமஸ்டிக்கு கையெழுத்துப் போட்டீர்கள் என்று பிரபாகரன் கோபமாக திட்டித் தீர்த்தது மட்டுமல்லாது பேச்சு வரத்தைக் குழுவிலிருந்து அன்டன் பாலசிங்கமும் கருணாவும் அடுத்தடுத்த பேச்சு வார்த்தை நிகழ்வுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.பேச்சு வார்த்தை குழுவுக்கு தமிழ்ச்செல்வன் பொறுப்பாக போடப்பட்டார் . அதுவரை பிரபாகரனின் வலது கரமாக எல்லைகளற்ற அதிகாரத்தோடு வலம் வந்த கருணா மீது பெறாமை கொண்டிருந்த புலிகளின் உயர்மட்ட தளபதிகள் பலர் கருணாவே சதிசெய்து கையெழுத்து போட வைத்து விட்டதாகவும் அதனால் தலைமைக்கு துரோகம் செய்துவிட்டதாக பகிரங்கமாக குற்ற சாட்டுகளை வைத்ததும் கருணாவை வெறுப்பேத்தி விட்டிருந்தது .\n.அன்டன் பாலசிங்கம் வேதனையோடு லண்டன் சென்றுவிட பெரும் சீற்றத்தோடு கருணா மட்டக்கிளபிற்கு திரும்பியிருந்தான்.பல தளபதிகள் முன்னிலையில் பிரபாகரன் திட்டியது பெரும் அவமானமாக கருதியவன் அடுத்தது என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டிருக்கும் போதே அடுத்து நடக்கப் போகும் விபரீதக் காட்சிகளையும் இரத்தக் களரிகளையும் அரங்கேற்றப் போகும் சகுனி கருணாவை சந்திக்கிறான் ..\nயார் அந்த சகுனி ...கருணாவின் பிளவையும் புலிகளின் அழிவையும் யார் எழுதினாலும் அதில் தராகி சிவராம் என்கிற பெயரை தவிர்த்து விட்டு எழுத முடியாது.இங்கு நான் அவரை சகுனி என்கிற அடைமொழியோடு அழைத்தாலும் .சிறந்த பத்திரிகையாளர் .இராணுவ ஆய்வாளர் .பத்தி எழுத்தாளர் .புத்திஜீவி .மேற்குலக இந்திய மற்றும் இலங்கை அரச மட்டத்திலும் உளவமைப் புகளோடும் தொடர்புகளை கொண்டவர் .இறுதியாய் கொல்லப் பட்ட பின்னர் மாமனிதர் .இப்படி பல முகங்கள் அவருக்குண்டு அதே நேரம் ஈழத்தில் தோன்றிய முக்கிய ஆயுதப் போராட்ட குழுக்களான P.L.O.T தமிழீழ மக்கள் விடுதலை கழகம் .L.T.T.E.விடுதலைப் புலிகள் இரண்டையுமே அதன் போராட்டப் பாதையிலிருந்தும் விலகவைத்து அழித்தொழித்து முடித்ததில் தராகி சிவராமின் பங்கு முக்கியமானது.\nஎனவே சிவராம் என்கிற மனிதரைப் பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு அடுத்து நகரலாம்.கிழக்கு மாகாணத்தின் மட்டக்கிளப்பு நகரில் பெரும் வசதி படைத்த குடும்பப் பின்னணியை கொண்டவர். தர்மரத்தினம் சிவராம் என்பதுதான் இவரது பெயர் .பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர் 83 ம் ஆண்டு இலங்கையில் நடந்த யூலை கலவரத்தின் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு P.L.O.T அமைப்பில் இணைத்து கொண்டார்.அவரது புத்திசாலித் தனம் ஆங்கிலப் புலமை என்பன P.L.O.T தலைவர் உமா மகேஸ்வரனை கவர்ந்து கொள்ளவே தலைமையோடு நெருக்கமானார் .பின்னர் அந்த அமைப்பிற்குள் ஏற்பட்ட குழப்பங்கள் அதனால் நடந்த உட்படுகொலைகள் அனைத்திற்கும் தலைமைக்கு உறுதுணையாய் நின்றதோடு பல படுகொலைகளை அவரே செய்தார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது .புலிகளின் பல தாக்குதல்களில் உயிர் தப்பியவர் பின்னர் புலிகள் அமைப்பிற்கு சார்பு நிலையெடுத்து வேலைகள் செய்யத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலிகளுக்கு சார்பான அரசியல் இராணுவக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியதோடு புலிகளின் தலைமையோடும் தொடர்புகளை கொண்ட ஒரவராகராகவும் .அதே நேரம் இயல்பாகவே கிழக்கு மாகாணத்தின் மேல் அவர் கொண்ட பற்றால் கிழக்கு பிரதேச வாதி யாகவும் மாறியிருந்ததோடு மட்டுமல்லாமல் அதனை அவர் பகிரங்கமாக எழுதவும் பேசவும் தயங்கியதில்லை .\nபேச்சுவார்த்தை மேசையிலிருந்து அன்டன் பாலசிங்கம் புலிகளால் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடம் தங்களுக்கு கிடைக்குமென நம்பிக்கையோடு இருந்த ஒரு சிலரில் சிவராமும் ஒருவர்.அந்த இடம் தமிழ்செல்வனுக்கு போய் விடவே தமிழ்ச்செல்வன் வகித்த அரசியல் பொறுப்பாவது கிடைக்குமென எதிர்பார்த்தார் அதுவும் கிடைக்கவில்லை.சிவராம் விடயத்தில் புலிகளின் தலைமை தங்கள் தேவைகளுக்கு பாவிப்பதற்காக நம்ப நடந்ததே தவிர நம்பி நடக்கவில்லை .இதனால் லேசான வருத்தத்தில் இருந்தவருக்கு கருணாவின் விவகாரம் காதில் தேனாய் வந்து பாயவே உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த கிழக்கு பிரதேச வாதம் உறுமத் தொடங்க வன்னியோடு கருணாவை பிரித்தெடுத்து .மீன்பாடும் தேன்நாடு என பெயரெடுத்த மட்டக்கிளப்பை தனிநாடக்கி. கருணாவை தலைவனாக்கி தானே அதற்கு அரசியல் ஆலோசகர் என்கிற திட்டங்களோடு கருணாவை சந்தித்தான் ..\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ...பாகங்கள் .7..8..9..1...\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 6\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 5\nஅன்று சிந்திய ரத்தம் ..தொடர் 4..\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023122", "date_download": "2018-08-18T00:26:33Z", "digest": "sha1:74CBADECAJFD7KQBCJYI72BQB77OK4AM", "length": 15085, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.இ., ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு தடையில்லை| Dinamalar", "raw_content": "\nபி.இ., ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு தடையில்லை\nசென்னை: ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் என்ற முடிவுக்கு தடை விதிக்க, உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கும், கவுன்சிலிங்கிற்கும் தடை விதிக்க முடியாது. கவுன்சிலிங் வெளிப்படையாக இருக்க வேண்டும். நேரடி விண்ணப்ப நடைமுறையை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.\nஆன்லைன் விண்ணப்ப நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை 'டிடி'யாக செலுத்தலாம் என்ற உத்தரவை விளம்பரப்படுத்த வேண்டும். ஆன்லைன் கவுன்சிலிங் முறையில் மாணவர்களுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.\nRelated Tags ஆன்லைன் கவுன்சிலிங் பிஇ கவுன்சிலிங் உயர்நீதிமன்றம் மறுப்பு கவுன்சிலிங் மாணவர்கள் பொறியியல் ஆன்லைன் ... இன்ஜினீரிங் கவுன்சிலிங் இன்ஜினீரிங் மாணவர்கள் Online Counseling BE Counseling High Courts\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅய்யா அப்படியே இந்த வழக்கை வெட்டியா போட்டவங்களையும் கொஞ்சம் நல்ல உள்ள வச்சு செஞ்சு அனுப்புங்க... அப்பதான் புத்தி வரும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.uktamil.co.uk/2018/04/blog-post_87.html", "date_download": "2018-08-18T00:38:38Z", "digest": "sha1:AJGT6FZZT2K7YIAT3ZD6MGSB5NMQN5ON", "length": 14990, "nlines": 63, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்.. - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » அரசியல் , இலங்கை » ஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ணைந்து, விட்­டுக் கொ­டுப்­பு­டன் பணி­களை முன்­னெ­டுக்க வேண்­டும். பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும்.\nஇவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nநடை­பெற்று முடிந்த உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­தல்­க­ளின் பின்­னர், ஏறத்­தாழ அனைத்து சபை­க­ளுக்­கு­மான தவி­சா­ளர்­க­ளும் மேயர்­க­ளும் நகர பிதாக்­க­ளும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nஇந்த தேர்­தல்­கள் சட்­டம் பல்­வேறு புதிய அனு­ப­வங்­களை நாட்டு மக்­க­ளுக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் வழங்­கி­யுள்­ளது. வடக்­கு-­ கி­ழக்­கைப் பொறுத்­த­வரை, எட்டு மாவட்­டங்­க­ளும் தமிழ்த் தேசிய இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தின் கார­ண­மாக நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ மிக­வும் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.\nஎமது உரி­மைப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துச் செல்­லும் அதே­வேளை, எமது பிர­தேச மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தும் எமது தலை­யாய கடமை. நாளாந்த விட­யங்­க­ளில் மட்­டுமே கவ­னம் செலுத்­த­வி­ருக்­கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளைச் சிலர் தமது சுய­ந­லன்­க­ளுக்­காக தேசிய இனப் பிரச்­சி­னை­யு­டன் தொடர்­பு­ப­டுத்­தி­ய­தன் விளைவே நாடு இன்று எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு மூல­கா­ர­ணம்.\nஎது எப்­படி இருப்­பி­னும், நடந்­த­வை­களை மறந்து, தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் எமது பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தைக் கணக்­கி­லெ­டுத்து, அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கிரா­மங்­கள், நக­ரங்­கள் ஆகி­ய­வற்­றின் அபி­வி­ருத்­தி­யில் கவ­னம் செலுத்­த­வேண்­டும்.\nஎமது பிர­தே­சத்­தின் அனைத்­துக் கிரா­மங்­களை சுகா­தா­ரத்­தில் தன்­னி­றைவு பெற்­ற­தா­க­வும் ஆரோக்­கி­ய­மிக்­க­தா­க­வும் மாற்­றி­ய­மைக்க முன்­வ­ர­வேண்­டும்.\nமுன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் பட்­டி­ய­லிட்டு கூடி­ய­வ­ரை­யில் வினைத்­தி­றன் மிக்க செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதே நாம் எம்மை தேர்ந்­தெ­டுத்த மக்­க­ளுக்­குச் செய்­யும் நன்­றிக்­க­ட­னா­கும்.\nஅபி­வி­ருத்­திப் பணி­க­ளில் வட்­டார, கட்சி, இன, மத பேதங்­களை மறந்து சபை­க­ளில் உள்ள நிதி­களை முறை­யா­கக் கையாண்டு நீடித்­தி­ருக்­கும் அபி­வி­ருத்­திப் பணி­களை அனைத்து பிர­தே­சங்­க­ளுக்­கும் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் உறு­தி­பூண வேண்­டும்.\nஒவ்­வொரு உறுப்­பி­ன­ரும் தமக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு தாம் அளித்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்­குக் கட­மைப்­பட்­ட­வர்­கள். அதே நேரம், மிக­வும் பின்­தங்­கிய வட்­டா­ரத்­தின் வாழ்­வா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பும் விதத்­தில் அதன் உட்­கட்­டு­மான வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வது மிக­வும் அவ­சி­யம். அதை உணர்ந்து செயற்­பட முன்­வ­ர­வேண்­டும்.\nகட்­சி ­ரீ­தி­யாக நாம் பிரிந்­தி­ருந்­தா­லும் நாம் தமிழ்த் தேசிய இன மக்­கள் என்­பதை நினை­விற்­கொண்டு, போரால் அழி­வ­டைந்­துள்ள எமது கிரா­மங்­களை பற்­று­று­தி­யு­டன் மீளக் கட்­டி­யெ­ழுப்ப ஒவ்­வொ­ரு­வ­ரும் உறுதி பூணு­வோம்.\nஇருக்­கின்ற நிதி­வ­ளங்­க­ளைக் கொண்டு உங்­கள் பணி­களை மேற்­கொள்­கின்ற அதே­நே­ரம், மேலும் சில அத்­தி­யா­வ­சிய பணி­க­ளுக்கு நிதிப்­பற்­றாக்­குறை நில­வு­கை­யில், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மூலமோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மூலமோ மேல­திக நிதி­க­ளைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு எமது பிர­தே­சத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்ப திட­சங்­கற்­பம் பூணு­வோம். இந்த விட­யத்­தில் ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி தன்­னால் இயன்ற அனைத்­தை­யும் செய்­வ­தற்­குத் தயா­ராய் இருக்­கின்­றது.\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­க­ளில் பலர் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கப் பல கட்­சி­க­ளில் இணைந்து போட்­டி­யிட்­டி­ருக்­கக்­கூ­டும். அவை­களை மீட்­டிப்­பார்த்து பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் அனை­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.\nகோர­மான வறு­மை­யி­லும், போதிய சுகா­தா­ர­மற்ற சூழ­லி­லும் வாழும் எமது மக்­களை அவற்­றி­லி­ருந்து விடு­விப்­பதே எமது தலை­யாய பணி­யாக இருக்க வேண்­டும். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் அதற்­கா­கவே நடத்­தப்­ப­டு­கின்­றன. போட்­டி­யிட்ட ஒவ்­வொ­ரு­வ­ரும் அந்த நோக்­கத்­துக்­கா­கவே போட்­டி­யிட்­டீர்­கள். எமது மக்­கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்ற உறு­தி­பூ­ணு­வோம்- என்­றுள்­ளது.\n மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் நாட்டு மாப்பிள்ளை\nயாழ்ப்பாணம் - மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ். மீசாலையைச் சேர்ந...\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ண...\nவிரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்\nவெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2017/granny-remedy-to-heal-cracked-heels-in-just-a-few-days-018502.html", "date_download": "2018-08-18T00:39:01Z", "digest": "sha1:TDCQIDZQTZVB3OC5DMKXUK7YYRCPGK5D", "length": 13236, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? அப்படின்னா இத செய்யுங்க... | Granny Remedy To Heal Cracked Heels In Just A Few Days- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா\nஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை சந்திக்க வைக்கும். அதிலும் தற்போது பனி பொழிவு அதிகம் இருப்பதால், குதிகால் வெடிப்பு இன்னும் பயங்கரமாக இருக்கும்.\nஇந்த பிரச்சனைக்கு அற்புதமான வைத்தியம் ஒன்று உள்ளது. இந்த வைத்தியத்தை நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் செய்யலாம். அதோடு இந்த வைத்தியம் மேற்கொள்ள 20 நிமிடம் போதும். அதோடு இந்த வைத்தியத்தால், நம் பாத சருமத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகளின்றியும் அழகாக இருக்கும்.\nசரி, இப்போது குதிகால் வெடிப்பைப் போக்க உதவும் அந்த வைத்தியத்தை எப்படி மேற்கொள்வதென்று காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுதிகால் வெடிப்பைப் போக்கும் இந்த வைத்தியத்தில் முதலாவதாக வெதுவெதுப்பான நீர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை மேற்கொள்ள தேவையான பொருட்களாவன,\n* 2 ஸ்பூன் பேக்கிங் சோடா\n* 2 ஸ்பூன் உப்பு\n* ஒரு அகன்ற வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அதனுள் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\n* பின் மெருகேற்றும் கல்லான பியூமிக் கல்லை கொண்டு குதிகால்களைத் தேய்க்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த தோல்கள் நீங்கிவிடும்.\nஅடுத்ததாக இந்த வைத்தியத்தில் ஸ்கரப் செய்ய வேண்டும். இந்த ஸ்கரப் செய்ய தேவையான பொருட்களாவன,\n* 2 ஸ்பூன் எண்ணெய்\n* 1 ஸ்பூன் சர்க்கரை\nஒரு பௌலில் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும்.\n* இறுதியாக மெழுகு மற்றும் எண்ணெயைப் பயன்படுத்தி, சுத்தம் செய்யப்பட்ட பாதங்களுக்கு ஈரப்பசையூட்ட வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதனுள் ஒரு துண்டு மெழுகு மற்றும் எண்ணெய் இருக்கும் பௌலை வைத்து, மெழுகை உருக்க வேண்டும்.\n* பின் அந்த கலவையை பாதங்களில் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த வைத்தியத்தை இரவு படுக்கும் முன் மேற்கொள்வது நல்லது. இதனால் பாதங்களுக்கு கொடுக்கப்பட்ட பராமரிப்பு நன்கு வேலை செய்து, ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க பாதம் ரொம்ப கப்பு அடிக்குதா அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...\nஅடிக்கடி இந்த இடம் வலிக்குதா... இத மட்டும் செய்ங்க… உடனே சரியாகிடும்…\nஉள்ளங்கால் அரிச்சா ஊருக்கு போக போறீங்க-ன்னு சொல்றது உண்மையா\n அப்ப இப்படி செய்யுங்க சரியாயிடும்...\nவசீகரிக்கும் அழகைப் பெற வாசலினை இந்த 5 முறைகளில் பயன்படுத்தலாம்\nகருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய முறை\nவாரம் 2 முறை பேக்கிங் சோடாவை பாதங்களில் தேய்ப்பதால் என்ன நடக்கும் தெரியுமா\nவீட்டிலேயே எளிய முறையில் பாதங்களுக்கு பெடிக்யூர் செய்வது எப்படி\nஇரவில் படுக்கும் முன் சாக்ஸில் எலுமிச்சை தோலை வைப்பதால் ஏற்படும் அதிசயம்\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nஉங்கள் கால்களில் துர்நாற்றம் வீசுகிறதா அதைத் தடுக்க இதோ சில வழிகள்\nவீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி\nRead more about: foot care body care beauty tips பாத பராமரிப்பு உடல் பராமரிப்பு அழகு குறிப்புகள்\nDec 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுட் பாய்சன் ஏற்பட்ட தாய் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/milk-and-honey-face-pack-for-glowing-skin-020976.html", "date_download": "2018-08-18T00:38:16Z", "digest": "sha1:EL35BI4HXWQVU6RENZQ7RLKOZA5Z4PUU", "length": 21111, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "தேனை முகத்தில் தடவலாமா?... தடவினா எனன ஆகும்? | Milk And Honey Face Pack For Glowing Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேனை முகத்தில் தடவலாமா... தடவினா எனன ஆகும்\n... தடவினா எனன ஆகும்\nஅழகை ஆராதிக்காதவர்கள் யாராவது இந்த உலகத்தில் இருக்கிறார்களா இல்லை. எல்லோருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. தோற்றத்தில் அழகாக இருப்பவர்களை கண் இமைக்காமல் பார்ப்பவர்கள் பலர் உண்டு.\nஅழகு என்பது ஒரு விதத்தில் நமக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு கருவியாக உள்ளது. இத்தகைய அழகு சற்று குறைந்து, நாம் சோர்வாக இருக்கும் நாட்களில் நம்மை கண்ணாடியில் பார்க்க நமக்கே பிடிப்பதில்லை. அழகு நிலையம் சென்று அழகு படுத்திக் கொள்ள நேரம் இல்லாதவர்கள் கூட வீட்டிலேயே எளிய முறையில் தேவதை போன்ற அழகைப் பெற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கையான முறையில் உங்கள் அழகை அதிகமாக்க, சருமத்தை பளபளக்க வைக்க இதோ இந்த குறிப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் வாழ்வியல் முறை, சுற்றுசூழல் மாசு, தவறான உணவு பழக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை மீண்டும் புத்துணர்ச்சி அடையச் செய்து பருக்கள், கட்டிகள் போன்றவற்றைப் போக்க உதவும் ஒரு பேஸ் பேக்கை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.\nஉங்கள் சரும பிரச்சனைகளுக்கான ஒரு சிறந்த தீர்வு. பால் மற்றும் தேன் பேஸ்பேக். தேன் என்பது சரும பிரச்சனைகளுக்கு மிகவும் பழமையான ஆனால் மிகவும் சிறந்த ஒரு தீர்வாகும். கட்டிகள், பருக்கள் போன்றவற்றைப் போக்க தேன் மிகவும் உதவுகிறது. வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை போக்க உதவுவது தேனில் இருக்கும் மருத்துவ தன்மை. இது ஒரு ஈரப்பதத்தை தரும் பொருள் ஆகும். தேனுடன் பால் சேர்க்கும்போது இது ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு சருமத்தை சுத்தம் செய்கிறது.\nபால் ஒரு இயற்கையான க்ளென்சர் ஆகும். மேலும் பால் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. சரும பிரச்சனைகளை உண்டாக்கும் கூறுகளை எதிர்த்துப் போராடி, சருமத்திற்கு மென்மை மற்றும் மிருதுவான உணர்வைத் தருகிறது.\nபால் மற்றும் தேனின் நன்மைகளை அறிந்து கொண்டோம். இப்போது இந்த பேஸ் பேக் செய்யும் முறையை அறிந்து கொள்வோம்.\n1/2 அல்லது 1/3 கப் பால்\n3-4 ஸ்பூன் ஆர்கானிக் தேன்\nஒரு கிண்ணத்தில் பாலை சேர்த்துக் கொள்ளவும். அந்த பாலில் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இவை இரண்டும் சேர்ந்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் ஆகும்வரை நன்றாக கலக்கவும்.\nஒரு பிரஷ் அல்லது உங்கள் விரல் பயன்படுத்தி, இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். கன்னங்கள் மற்றும் பருக்கள் உள்ள இடத்தில் கவனமாக இந்த பேஸ்டை தடவவும். கழுத்து முன் பகுதி மற்றும் பின் பகுதியிலும் இந்த பேஸ்டை ஒரே சீராக தடவவும்.\nமுழுவதும் இந்த பேஸ்டை தடவியவுடன் 10-15 நிமிடங்கள் அப்படியே காய விடவும்.\nஇந்த பேக் முழுவதும் காய்ந்தவுடன் ஒரு ஈரமான ஸ்பாஞ் கொண்டு முகத்தில் உள்ள பேக்கை துடைத்து எடுக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். காய்ந்த காட்டன் துண்டால் முகத்தை ஒத்தி அடுக்கவும்.\nதேவைப்பட்டால், இந்த கலவையில் சிறிதளவு பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் ஒரு பிரெஷ் உணர்வு கிடைக்கும். முகத்தை துடைத்தவுடன் மாயஷ்ச்சரைசெர் பயன்படுத்த வேண்டாம். பால் ஒரு இயற்கையான மாய்ச்சரைசெர் ஆகும். அதுவே உங்கள் சருமத்தில் ஊடுருவ சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். அடுத்த சில மணி நேரங்களுக்கு முகத்தை கழுவ சோப் பயன்படுத்த வேண்டாம். நாம் பயன்படுத்திய இயற்கை மூலப்பொருட்கள் முகத்தில் வேலை செய்யட்டும்.\nஇதே பேஸ் பேக்கை உங்கள் உடலில் ஈரப்பதத்தை இழந்த மற்ற இடங்களில் குறிப்பாக, கை மூட்டு பகுதி, பாதம், கால் முட்டி, முதுகு போன்றவற்றிலும் பயன்படுத்தலாம். முகம் கழுவிய பின்னர், பஞ்சில் சிறிதளவு பன்னீர் ஊற்றி நனைத்து உங்கள் முகத்தில் ஒத்தி எடுக்கலாம். இதனால் உங்கள் முகம் புத்துணர்ச்சி அடைகிறது. வேறு எந்த ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். பன்னீர் மட்டுமே போதுமானது.\nஇந்த பால் மற்றும் தேன் பேஸ் பேக் ஒரு இயற்கை மாயச்ச்சரைசெராக செயல்படுகிறது. இந்த பேஸ் பேக்கை பயன்படுத்திய ஓரிரு நாட்களில் நல்ல வித்தியாசத்தை உணர முடியும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால், உங்கள் சருமம் பளபளப்பாக மாறுகிறது.\nஉதடு மற்றும் சரும வெடிப்பு\nகால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பு, உதடுகளில் உண்டாகும் வெடிப்பு போன்றவற்றைப் போக்க இந்த மாஸ்க் உதவுகிறது. குளிர்காலங்களில் மற்றும் மழைக்காலங்களில் சருமம் வறண்டு, பாத வெடிப்பு, மற்றும் உதடு வெடிப்பு உண்டாகிறது . இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் எளிய முறையில் அந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.\nபால் மற்றும் தேன் மாஸ்க் முகத்தில் உள்ள தழும்புகளை போக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுவதால், சரும நிறமிழப்பை கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் உண்டாகும் கட்டிகளைச் சிறந்த முறையில் போக்க உதவுகிறது. பருக்கள், வெட்டுகள் மற்றும் தழும்புகள் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. தட்டம்மை, சின்னம்மை போன்றவற்றால் உண்டாகும் தழும்புகள் கூட இந்த மாஸ்க் மூலம் மறைந்து போகும்.\nவயது முதிர்வை தடுப்பது இதன் மறைமுக நன்மை ஆகும். தொடர்ச்சியாக இந்த மாஸ்கை பயன்படுத்துவதால், இளம் வயதிலேயே முகத்தில் உண்டாகும் கோடுகள், சுருக்கங்கள் போன்றவை தடுக்கப்படுகிறது. சருமத்தை இறுக்கமாக வைத்து இத்தகைய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.\nமுகத்தில் அடிக்கடி கட்டிகள் தோன்றி அதனைப் போக்க வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். தேன் மட்டுமே கட்டிகளைப் போக்க வல்லது . இதனுடன் பால் சேர்த்தால் இதன் பலன் இரட்டிப்பாகும் .\nஅதிக பணம் செலவு செய்து அழகு நிலையத்திற்கு சென்று தற்காலிக அழகைப் பெறுவதற்கு மாற்றாக வீட்டிலேயே இயற்கை முறையில் நிரந்தர அழகைப் பெற இந்த பால் தேன் மாஸ்க் உதவுகிறது. இதனைப் பயன்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல மாற்றத்தை உணருங்கள். உங்கள் மாற்றத்தைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இளமைக்கான இரகசியம் இதுதான்..\nஉதட்டில் ஏன் பரு வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆண்களே... உங்கள் வெள்ளை முடியை கருகருவென மாற்ற இந்த பூக்களே போதும்..\nஇந்த 7 அழகியல் டிப்ஸ் போதும், ஆண்களின் முகத்தை பட்டுப்போல மாற்ற..\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநம்ம வீ்ட்டு குழந்தைக்கு இப்படி முடி இருந்தா எப்படி இருக்கும்... அதுக்கு என்னலாம் பண்ணணும்\nஆண்கள் மார்பு முடியை ஷேவ் செய்யலாமா எங்கு செய்யலாம்\nஇப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்\nபுட் பாய்சன் ஏற்பட்ட தாய் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nதொப்பையைக் குறைக்க சின்ன சின்ன யோகாசனங்கள்... செய்முறைகள் உள்ளே...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/news/the-10th-public-examination-results-will-be-published-002023.html", "date_download": "2018-08-18T00:38:19Z", "digest": "sha1:4GZ3HTPNE6KSCGGXD23DK6XRLCYCHSRT", "length": 11570, "nlines": 94, "source_domain": "tamil.careerindia.com", "title": "10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது.. இந்த இணையதளத்தில போய் ரிசல்ட் பாருங்க...! | The 10th public examination results will be published tomorrow - Tamil Careerindia", "raw_content": "\n» 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது.. இந்த இணையதளத்தில போய் ரிசல்ட் பாருங்க...\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியாகிறது.. இந்த இணையதளத்தில போய் ரிசல்ட் பாருங்க...\nசென்னை : 10லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தபடி வெளியாகிறது. மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட உள்ளது.\nமார்ச் 8ந் தேதி முதல் 30ந் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் முதல் பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதன் படி மாணவர்களின் ரேங்க் பட்டியல் மற்றும் மாவட்ட வாரியான மதிப்பெண் பட்டியல் ஆகியவைகள் வெளியிடப்படுவதில்லை. மாணவ மாணவியர்களுக்கு கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு முடிவு வெளியாகிய உடனே மாணவ மாணவியர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அவர்களின் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் ஏற்கனவே மாணவ மாணவியர்களிடம் இருந்து செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த நம்பருக்கு தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.\nநாளை காலை வெளியாகும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி வருடம் மற்றும் மாதத்தினை பதிவு செய்து மதிப்பெண்களை கீழே உள்ள இணையதள முகவரியில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 25.05.2017ந் தேதிமுதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n19.05.2017ந் தேதி முதல் 22.05.2017ந் தேதி மாலை 5.45 வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு மையம் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு வருகை புரிய இயலாதவர்களுக்கும் ஜூன் மாத இறுதியில் சிறப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/smoking-poster-mohanlal-too-lands-in-trouble-166703.html", "date_download": "2018-08-18T01:00:48Z", "digest": "sha1:YUGEJFPJ6JBIJCPLSS2CWX2L5W3EXFEX", "length": 11693, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தம் அடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன்லால் மீது அரசு வழக்கு! | 'Smoking' poster: Mohanlal too lands in trouble | தம் அடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன்லால் மீது அரசு வழக்கு! - Tamil Filmibeat", "raw_content": "\n» தம் அடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன்லால் மீது அரசு வழக்கு\nதம் அடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன்லால் மீது அரசு வழக்கு\nதிருவனந்தபுரம்: புகைப் பிடிக்கும் காட்சியில் தோன்றியதற்காக நடிகர் மோகன் லால் மீது கேரள அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.\nதிரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், திரைப்படங்களை விளம்பரப்படுத்த ஒட்டப்படும் போஸ்டர்களில், அதுபோன்ற காட்சிகள் இடம் பெறக்கூடாது' என, கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவின் அடிப்படையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், 'பாதுகாப்பான திருவனந்தபுரம்' என்ற பெயரில், மாநில அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் மலையாள நடிகை மைதிலி நடித்த திரைப்படத்தில், அவர் புகைப்பிடிப்பது போன்ற சில காட்சிகள் போஸ்டர்களாக தயாரிக்கப்பட்டு, நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.\nஇந்தப் போஸ்டர்களை அகற்றிய, சுகாதாரத் துறை அதிகாரிகள், நடிகை மீது வழக்கு பதிய உத்தரவிட்ட்டனர்.\nஆனாலும், அடுத்ததாக பிரபல நடிகர் மோகன்லால் நடித்து நேற்று வெளியான, 'கர்மயோதா' என்ற மலையாள திரைப்படத்திற்கான போஸ்டர்களிலும், அவர் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.\nஇதை பார்த்த, மாநில சுகாதார துறை அதிகாரிகள், அந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததோடு, நடிகர் மோகன்லால், படத்தின் இயக்குனர், மேஜர் ரவி, தயாரிப்பாளர் மற்றும் திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்களின் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.\nஅதன்படி, வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டாண்டு சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.\nஇப்படியொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதுவும் விவிஐபிக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.\nநடிகைகள் எதிர்ப்பை மீறி அந்த நடிகரை விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கும் கேரள அரசு.. பரபரப்பு\nஇவங்க ரெண்டு பேரும் அப்பா மகனா அண்ணன் தம்பியா\nமோகன் லால் - விஷாலின் வில்லன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் எப்படி\nகபாலி... கேரளா உரிமையைக் கைப்பற்றிய மோகன்லால்\nவிஜய்யைத் தொடர்ந்து மோகன் லாலுடன் இணைகிறார் அஜீத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/sc-bans-dam-999-screening-tn-168547.html", "date_download": "2018-08-18T01:00:54Z", "digest": "sha1:2MQ5ZN32WJRJOZGALUXDJWKSNS7CAQLE", "length": 11702, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம் | SC bans Dam 999 screening in TN | டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம் - Tamil Filmibeat", "raw_content": "\n» டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nடேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nடெல்லி: 'டேம் 999' திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தவிட்டுள்ளது.\nதமிழக அரசு 'டேம்999' என்ற திரைப்படத்தை வெளியிட தடை செய்தது. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி இந்த படம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அணை உடைந்து வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவது போல இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஒரு நாள் முன்னதாக 24-ந் தேதியே இந்த படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்தது. இந்த படம் தமிழ்நாடு-கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை திரையிட்டால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு கூறியது.\nஇந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக நவம்பர் மாதம் 30-ந் தேதி முதல் 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த திரைப்படம் தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் திரையிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு மாநிலத்தின் அச்ச உணர்வுகளை தவிர்த்துவிட்டு தனி நபரின் உரிமைகளை கோர்ட்டு கருத்தில் கொள்ள முடியாது. மாநிலத்தின் அதிருப்தியை பார்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. இந்த வழக்கு முற்றிலும் சட்டம் சார்ந்தது. மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\nதமிழகத்திலிருந்து விரட்டப்பட்ட டேம் 999-க்கு ஜகார்த்தா விழாவில் 3 டம்மி விருதுகள்\nவிஸ்வரூபம் தடையை நீக்கிய ஜெ. அரசு என் படத்தை ஏன் கண்டுக்கல: டேம் 999 இயக்குனர்\nடேம் 999 தடை குறித்த ஆளுநர் உரைக்கு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு\n'ஆஸ்கர் நிலநடுக்கத்தில்' உடைந்தது 'டேம் 999'\nமுல்லைப் பெரியாறு விவகாரம்: வினய்யுடன் நடிக்க அஞ்சலி மறுப்பு\nதமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்- ஏ.ஆர்.ரஹ்மான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nஅந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/always-perfect-neelima-rani-160458.html", "date_download": "2018-08-18T01:00:57Z", "digest": "sha1:OUMXLQOGW47M3DTM6EKPELHOBQLAIQJX", "length": 9751, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டைம்ல பெர்ஃபெக்டா இருப்பேன் – நீலிமா ராணி | I am Always perfect in punctuality says Neelima Rani | டைம்ல பெர்ஃபெக்டா இருப்பேன் – நீலிமா ராணி - Tamil Filmibeat", "raw_content": "\n» டைம்ல பெர்ஃபெக்டா இருப்பேன் – நீலிமா ராணி\nடைம்ல பெர்ஃபெக்டா இருப்பேன் – நீலிமா ராணி\nநீலிமா ராணிக்கு சூட்டிங்கிற்கு லேட்டா போனால் பிடிக்காதாம். சிறுவயதில் இருந்தே இதை கடைபிடித்து வருகிறார். 5 மணிக்கு அலராம் வைத்தால் நான்கு மணிக்கே அலார்ட்டாக எழுந்து உட்கார்ந்து வீட்டு வேலை பார்க்க ஆரம்பித்து விடுவாராம்.சமையல் விஷயத்துலயும் நேரத்தை கரெக்டாக மெயின்டெய்ன் செய்வாராம்.\nசூட்டிங் லேட் ஆகக் கூடாது என்பதற்காக காரில் போகும் போதே மேக்கப் போட்டுக் கொள்வேன் என்று கூறும் நீலிமா, சில நேரங்களில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அமர்ந்திருப்பாராம். ஏனெனில் தன்னால் சூட்டிங் லேட் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முன்னேற்பாடு. ஆனால் அங்கே அப்பொழுதுதான் டெக்னீசியன்கள் வந்து வேலையை தொடங்கியிருப்பார்கள் என்கிறார். இதுவரை யாருக்காகவும் தன்னுடைய இந்த பாலிசியை நீலிமா மாற்றிக்கொண்டது இல்லையாம்.\nஅதனால்தான் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்களில் தொடர்ந்து நடிக்க முடிகிறதா நீலிமா\nகர்ப்பமாக இருந்த நடிகை தெருவோரம் அரை நிர்வாணமாக பிணமாக கண்டுபிடிப்பு\nமமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்ட சினேகன்\nமுதலில் நிர்வாண போட்டோ, இப்போ பிகினி, வெட்கமா இல்ல: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nவீட்டை விட்டு வெளியேறினாலும் ‘ரகசியம் ரகசியம் தான்’.. பெரிய முதலாளி கட்டுப்பாட்டில் போட்டியாளர்கள்\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-08-18T01:03:01Z", "digest": "sha1:RZMJ7XB6K3EZFDXC5CMHZZSTOBD5RCIC", "length": 6319, "nlines": 37, "source_domain": "tamil.lankaviews.com", "title": "எதிர்ப்பாளர்களை தாக்க போலீஸ் இரும்பு கம்பிகளுடன்….. ! « Lanka Views", "raw_content": "\nஎதிர்ப்பாளர்களை தாக்க போலீஸ் இரும்பு கம்பிகளுடன்….. \nஇன்றையத்தினம் சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கத்தின் எதிர்ப்பு செயற்பாட்டுக்கு தாக்குதல் நடாத்தவந்த போலீஸ் சிப்பாய்கள் குண்டாந்தடிக்கு சமனான இரும்பு கம்பிகள் வைத்திருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக ஊடகவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு மிலேச்சத்தனமாக எதிர்ப்பை அடக்க போலீசாரை பயன்படுத்தியது தொடர்பாக 1977 ல் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தேனா அரசாங்கமும் , 1994 ல் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அரசாங்கமும் அதன் பிறகு 2005 ல் ராஜபக்ச அரசாங்கமும் பிரபல்யமாக இருந்தது.\nசந்திரிகா ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாக்குதல் நடாத்தமுன் ஊடகவியாளர்களர்களை தாக்கி அவர்களின் புகைப்பட கருவிகளை அழித்தனர். ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தாக்குகள் மட்டுமல்ல கடத்திச்சென்று காணாமல் ஆக்கள் வரை அடக்கல் நீடித்ததால் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். தற்போதைய அரசாங்கம் ஜே.ஆர் .ஜெயவர்த்தேனா தொடக்கம் ராஜபக்ச வரை அனுபவங்களை பின்பற்றி போலீசைக்கொண்டு அமைதியான எதிர்ப்புகளை அடக்குவதற்கு இரும்புக்கம்பிகளையும் பயன்படுத்துகிறது.\nதற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு ஒருமுறை எதிர்க்கட்சி எதிர்ப்பை அடக்குவதற்கு பயன்படுத்திய கறுவா தடி படை தொடர்பாக குற்றச்சாட்டு இருந்தது. நீதிமன்ற கட்டளையை கொண்டுவந்து எதிர்ப்பை தடை செய்ய நடவடிக்கை எடுத்த ராஜபக்ச அரசாங்கம் நீதிமன்றை உதாசீனப்படுத்தியது போல் தற்போதைய அரசாங்கமும் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇராணுவம் இன்னும் எமது காணிகளை விடுவிக்கவில்லை – கேப்பாப்புலவு , புதுக்குடியிருப்பு மக்�\nவடக்கு – கிழக்கு முகாம்களை கைவிட முடியாது – இராணுவத் தளபதி​\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் – எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nதண்டப் பணம் அறவிட வேண்டாமென்பது ஊழியர்களே, உரிமையாளர்களல்ல – அமைச்சர் நிமல் சிறிபால\nமுன்னால் இந்தியப் பிரதமர் அதல் பிகாரி வாஜ்பாய் காலமானார்\nநேவி சம்பத்’ எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில்\nகாபூலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் 48 பேர் மரணம்\n ‘இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கம்’ உதயம்\nட்ரம்பின் பாதுகாப்பு வரவு செலவு திட்ட நிதி கிடைப்பதால் சீன – அமெரிக்க யுத்தத்திற்கு இலங\nமன்னார் பழைய CWE கட்டிடத்தில் 60வது எலும்பு கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilhindu.com/category/philosophy/", "date_download": "2018-08-18T01:18:46Z", "digest": "sha1:UVPF7FEKVQEIGLMNJMLXATIWVNGS5IQM", "length": 27596, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "தத்துவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்\nஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம்: ஓர் அறிமுகம்\nகண்களால் காணும்போது ஆகாயம் நீலமாக நம் தலைக்குமேல் இருப்பதாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு பகுத்து அறியும் திறனற்றோர் (அவிவேகிகள்) நீலநிறம், கவிந்திருப்பது போன்ற தன்மை (concavity) ஆகியவை ஆகாயத்தைச் சார்ந்தது என்கின்றனர். ஆனால் பஞ்சபூதங்களைப் பற்றிய ஞானமுடையவர்கள் ஆகாயம் நிறமும் வடிவமுமற்றது, காட்சிப் பிழையால் (அத்யஸ்தம்) அவ்வாறு தோன்றுகிறது என்று அறிகின்றனர். அதுபோல, ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அனாத்மாவின் (உடல், புலன்கள், உலக வியவகாரங்கள்) ஸ்வரூபத்தையும் பிரித்தறியும் திறன் கொண்ட விவேகிகள், உடல் புலன்கள் ஆகியவற்றின் செய்கைகள் ஆத்மாவைச் சேர்ந்தது என்று எண்ண மாட்டார்கள்.. ஸ்ரீ சங்கரரின் ஆத்மபோதம் என்ற இந்த நூல் (68 சுலோகங்கள்) அழகிய பற்பல... [மேலும்..»]\nஅனுபவம், ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\n“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா”... “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும்... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், தத்துவம், வேதம், வைணவம்\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\nசுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன் - வேற்றுமையற்றவன் - பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன் - சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன் -அறியவொண்ணாதவன் - சத்தியப்பொருளென அறியப்படுபவன்... அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான். பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம்.... [மேலும்..»]\nஆன்மிகம், தத்துவம், மகளிர், வழிகாட்டிகள்\nவேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்\n- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nமதுரையில் வைத்தியராக ப.ச. இராமலிங்க ரெட்டியாருக்கும், ஆவுடையம்மை என்பாருக்கும் மூன்றாவது மகவாய் வாய்த்தவர் நித்தியானந்தம்மையார் (13 -3- 1909). எதிர்பாராதவிதமாக வாழ்க்கை ஸ்தம்பிக்கும் தருணத்தில் தாம் மிகவும் விரும்பியும் தமக்கு அதுகால் கிடையாமல் போன கல்வியைத் தொடக்கமுதல் நன்கு பெறவேண்டும் என்ற ஊக்கம் எழுந்தது. சகோதரரின் உதவியால் அரிச்சுவடி தொடங்கிப் பயிலத் தொடங்கினார். ஆர்வமும், இறையருளும் அபாரமாய் சித்திக்கவே வெகுவிரைவில் முன்னேறி நூல்களைக் கற்றார்.. பின்பு கல்வியில் சிறந்து, வேதாந்தம் தொடங்கி நன்கு பயின்று அதில் தியானத்தில் ஆழ்ந்து, பின் பல ஆசிரியர்களிடம் நூல்களை முறைப்படப் பயின்று தாம் அதில் நன்கு திடம் பெற்று மிக எளிய... [மேலும்..»]\nஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், தத்துவம்\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\n- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபுற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது. வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது... கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும்... எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு... [மேலும்..»]\nஅறிவியல், ஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், சைவம், தத்துவம், வழிகாட்டிகள்\nமாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்\nபள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை ’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும். பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார். [மேலும்..»]\n‘சும்மா இரு சொல் அற’\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nசும்மா இருத்தல் என்பது உலகியல் நோக்கில் புரிந்துகொள்ளப்படுமாயின் சும்மா வேலை செய்யாமல் இருப்பவரின் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுழலுவதைக் காணலாம். அதனால்தான் வேலை செய்யாமலும், பேசாமலும் இருக்கும் உலகியற் சும்மா இருத்தலை குறிப்பிடவில்லை. யோகநிலைச் சும்மா இருத்தலையே குறிப்பிடுகின்றேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அருணகிரியார் ‘சும்மா இரு, சொல் அற,’ என்று குறிப்பிடுகின்றார்... இலங்கையில் யாழ்ப்பாணத்தில்- அறுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிவாத்வைத யோக புருஷரான யோகர் சுவாமியின் சீடரான வெள்ளைக்கார சுவாமியார் ஒருவர் தமது கையில் தமிழில் ‘சும்மா இரு’ என்று பச்சை குத்தி வைத்திருந்தாராம்.... [மேலும்..»]\nஇந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்\nஅறிவனும் தாபதரும் தமிழ் யோக மரபும்\nதொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது... பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல்... [மேலும்..»]\nஆன்மிகம், இலக்கியம், தத்துவம், வேதம்\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\nதீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள். [மேலும்..»]\nதத்துவம், தேசிய விழாக்கள், பண்டிகைகள்\nபொங்கல் திருநாளன்று, புத்தரிசியுடன் புதுவெல்லத்தையும் பாலையும்கூட்டி, புதுப்பானையில் மஞ்சள்கிழங்கை இலையுடன் சேர்த்துக்கட்டி, “பொங்கலோ பொங்கல் பால்பொங்கல்” என்று மகிழ்ந்து குரவையிட்டு, நல்ல அறுவடைக்கு கதிரவனுக்கு நன்றிசெலுத்துவர் நம்தமிழ்ப் பெருமக்கள் “பூவுலகம், விண்ணுலகம், பாதாளவுலகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான, ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அப்பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்” [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (241)\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01\n[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nபிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்\nபுரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை\nகாங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\nஇந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2\nமோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்\nமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்\nஇந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா\n“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nநம்பிக்கை – 11: தியானம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\nபொன்.முத்துக்குமார்: // இவர்கள் தங்கள் இயற்பெயர்களைக் காட்டிவிட்டால் உங்களுக்கு எ…\nvedamgopal: கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் உலகம் தழுவிய காரபரேட் கம்பெனிகள…\nசோமசுந்தரம்: மிக சிறந்த கட்டுரை. இதுபோன்ற பல கட்டுரைகள் வரவேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2016/02/07/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-28/", "date_download": "2018-08-18T00:54:31Z", "digest": "sha1:ALV3ETCQDPETXGP2ZFPCOVKXEHCXB2US", "length": 9298, "nlines": 131, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 28 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி – 28\nநிலவு ஒரு பெண்ணாகி – 28 அத்யாயம் உங்கள் பார்வைக்கு\nநிலவு ஒரு பெண்ணாகி – 28\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nகாதல் வரம் யாசித்தேன் – 3\nகாதல் வரம் யாசித்தேன் – 4\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://kovaisakthi.blogspot.com/2012/11/161.html", "date_download": "2018-08-18T01:18:20Z", "digest": "sha1:CN5SKOSSLOZKYYXBI2UWHPGMKE7NWKT6", "length": 8740, "nlines": 159, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -161 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -161\nதேசிய NIFTY (FUTURE) வெள்ளியன்று சரிந்து முடிவடைந்தது .நேற்று 5648.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5664.00 வரை உயர்ந்தது 5568.00 வரை கீழே சென்று 5580.55 -ல் முடிவடைந்தது.\nபொருளாதார நிலை மோசமாக இருப்பது குறித்த பல்வேறு புள்ளிவிவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது இதன் பின் தொடர்ச்சியாகவும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காதது போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் சரிவு தொடர்கிறது\nகடந்த இரு மாதங்களாக தற்போது உள்ள நிபிட்டி நிலையே தாழ்வு ஆகும் .\nகடந்த வாரம் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.984 கோடி நம் சந்தையில் முதலீடு செய்துள்ளனர் .\nசமாஜ்வாதி கட்சி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமை திடீரென வெளியிட்டது. தேசிய அரசியல் சூழலில் குழப்பமான நிலை நிலவுவதையே இது குறிப்பதாகக் கருதப்படுகிறது .\n2ஜி அலைக்கற்றைக்கு நடத்தப்பட்ட புதிய ஏலம் எதிர்பார்த்த அளவுக்கு மத்திய அரசுக்கு வருவாயை ஈட்டித் தரவில்லை. இதுவும் பங்குச் சந்தையின் சரிவிற்கு ஒரு காரணமாயிற்று.\nவரும் பாராளுமன்ற குளிர் கால கூட்ட தொடரில் பிரதமர் திரு .மன்மோகன் சிங் தலைமயிலான ஐக்கிய\nமுற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார் .\nஇந்த சம்பவங்கள் பங்கு வர்த்தகத்தில் ஒரு ஸ்த்திர தன்மை இல்லாத போக்கையும் ,சரிவிற்கும் காரணமாக அமையும் .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nதிண்டுக்கல் தனபாலன் November 18, 2012 6:22 PM\nவருகைக்கு நன்றிங்க தனபாலன் சார்\nவருகைக்கும் ,வாழ்த்துக்கும் ,மிக்க நன்றிங்க ரமணி சார்\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nபங்கு வர்த்தகம் மலர் -163\nபங்கு வர்த்தகம் மலர் -162\nபங்கு வர்த்தகம் மலர் -161\n தீபாவளி திரு நாள் கொண்டாடுவோம் \nபங்கு வர்த்தகம் மலர் -160\nகோவையில் பயங்கரம் குழந்தைகள் கொலை -வழக்கு\nபங்கு வர்த்தகம் மலர் -159\nபங்கு வர்த்தகம் மலர் -158\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithrapapa.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-08-18T00:51:41Z", "digest": "sha1:TPH3VKNEXZE2GT3RIWQ6BO25ZMU4WVAG", "length": 6496, "nlines": 108, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : மிக சிறந்த திருமண நாள் பரிசு", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nமிக சிறந்த திருமண நாள் பரிசு\nஇன்னைக்கு எங்க கல்யாண நாள். நேத்து டிரஸ் எடுக்க கடைக்கு போனப்போ , மித்து கிட்ட , பப்பு நாளைக்கு அம்மாக்கும் , அப்பாக்கும் கல்யாண நாள் டா, நீ ஹாப்பி வெட்டிங் டே சொல்லுவியா ன்னு கேட்டேன் , ( அவளுக்கு ஏற்கனவே , பர்த்டே , ஹாப்பி பர்த்டே எல்லாம் தெரியுமே )\nஅப்போ மித்ராக்கு வெட்டிங் டே என்னக்கு வெட்டிங் டே இல்லையான்னு கேட்டா...\nபாப்பா வளைந்து பெரிய பொண்ணு ஆனா வுடனே பாப்பாக்கு கூட கல்யாணம் நடக்குமா , அப்புறம் வெட்டிங் டே வரும் ன்னு சொன்னேன் . அவளுக்கு இப்போ கல்யாணம் , செத்து போய்ட்டாங்க , பாப்பா பொறந்துடுச்சு எல்லாம் புரியுது .... அதனால் மழுப்ப விரும்பாமல் அப்படியே உள்ளதை சொன்னேன் ...\nஹாய் அப்போ பாப்பாக்கு அப்புறம் வரும் , நாளைக்கு அம்மாக்கு, அப்பாக்கு வெட்டிங் டே ன்னு சந்தோசம் ஆய்ட்டா.\nமுக்கியமான விஷயம் இன்னைக்கு காலையில தான் .. எழுபினப்போ நான் நேத்து வாங்கின டிரஸ் போட்டு இருந்தேன் , உடனே அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு... ஹாய் , இன்னைக்கு அம்மாக்கு ஹாப்பி வெட்டிங் டே அப்டின்னு கத்துனா..\nஒரு அம்மாக்கு வேற என்ன சந்தோசம் இருக்கு முடியும் \nமிக சிறந்த திருமண நாள் பரிசு .. :-)\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nசந்தியாக்கு மாமி , எனக்கு அம்மா\nவாரத்திற்கு இனி இரண்டு பதிவுகளாவது எழுத வேண்டும் ...\nமிக சிறந்த திருமண நாள் பரிசு\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/2017-08-04", "date_download": "2018-08-18T00:51:22Z", "digest": "sha1:R3DTQJARWCTDFVERZT7FNAQWBEAWNJCW", "length": 17337, "nlines": 249, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிகரிக்கும் வெப்பம்: அழியும் அபாயத்தில் வட இந்தியா\nநெய்மரின் சம்பளம்: அதிர்ச்சியில் உறைந்த கால்பந்து உலகம்\nபிறந்த சில நொடிகளிலேயே பிஞ்சு குழந்தை செய்த செயல்: வைரலாகும் வீடியோ\nபிறந்த குழந்தையை விற்பனை செய்த பெற்றோர்: அதிர வைக்கும் காரணம்\nகற்றாழையில் இவ்ளோ நன்மைகள் இருக்கா\nஓவியா தற்கொலை முயற்சி: தற்கொலைக்கு தூண்டுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி\nபொழுதுபோக்கு August 04, 2017\nகாதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய காதலி: இரண்டரை ஆண்டுகள் சிறை\nடக் அவுட் ஆன தரங்கா... நடனமாடி கொண்டாடிய கோஹ்லி, ராகுல்: வைரலாகும் வீடியோ\nஉலகை கதிகலக்கிய வைரசை முறியடித்த பிரித்தானியா ஹீரோ..அமெரிக்காவில் கைது\nமாதவிலக்கு கோளாறு குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா\nஇலங்கை அணியிலிருந்து நட்சத்திர வீரர் வெளியேற்றம்..நெருக்கடியில் இலங்கை\n 9 வயது சிறுவன் அனுப்பிய விண்ணப்பம்\nநீதிபதிகளை சிறையில் தள்ளுவேன்: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சவால்\nஆரவ் கொடுத்த ரகசிய வாக்குறுதி\nபொழுதுபோக்கு August 04, 2017\nஊழியரை அடித்தே கொன்ற கரடிக்கு நேர்ந்த நிலை\nவிளையாட்டு வினையானது: தீயில் கருகி பலியான சிறுவன்\nகுழந்தைகளை மட்டும் தாக்கும் கொடிய நோய்கள்: காப்பாற்றவே முடியாது\nரயிலில் சிக்கி போராடிய நபர்... ரயிலையே தூக்கி உயிரை காப்பாற்றிய மக்கள்: வைரலாகும் வீடியோ\nஇலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு: சர்வதேசத்தில் கிடைத்த பரிசு\nஏனைய தொழிநுட்பம் August 04, 2017\nசுவிஸ் மலையில் மோதி வெடித்து சிதறிய சிறிய ரக விமானம்\nசுவிற்சர்லாந்து August 04, 2017\nபெற்ற குழந்தையை கொன்ற தாயாருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபிரித்தானியாவில் இளம் கால்பந்து வீரர் ஓட ஓட குத்திக்கொலை.. மர்ம கும்பலுக்கு வலை வீச்சு\nபிரித்தானியா August 04, 2017\nகயிறு மூலம் மலையேறியபோது விபரீதம்: பெண் உள்பட 4 பேர் பலி\nசுவிற்சர்லாந்து August 04, 2017\nகற்பழிப்பு குற்றத்திற்கு கடுமையான தண்டனை வழங்கும் 10 நாடுகள்\nகரணம் தப்பினால் மரணம்.. தினமும் உயிரை பணயம் வைக்கும் பிஞ்சுகள்: திகில் வீடியோ\nகமலை டுவிட்டரில் சீண்டிய ஓவியா ஆர்மி\nபொழுதுபோக்கு August 04, 2017\nகழற்றி வீசப்பட்ட இந்தி பெயர் பலகை… கர்நாடகத்தில் வெடிக்க இருக்கும் போராட்டம்\nமாணவிகளுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் எடுத்த ஆசிரியர்\nமனைவியுடன் உறவுகொண்ட கணவனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை\nபிரித்தானியா August 04, 2017\nதழும்புகளை போக்கும் எண்ணெய்: எப்படி பயன்படுத்த வேண்டும்\nஇமாலய இலக்கை விரட்டும் இலங்கை அணி\nஇறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு\n4 கால்கள், 2 பிறப்புறுப்புகளுடன் பிறந்த குழந்தை\nஇலங்கை தொடர்: இந்திய வீரர் அஸ்வின் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை\nதீவிரவாதிகள் கடத்திய நபரை 3 மில்லியன் பவுண்ட் கொடுத்து மீட்ட பிரித்தானியா\nபிரித்தானியா August 04, 2017\nமுடிவுக்கு வந்தது அவுஸ்திரேலியா வீரர்களின் சம்பள பிரச்சினை\n70 வயதிலும் அழகு பதுமை: ரகசியம் இதோ\n60 லட்சம் மக்களை கொன்று குவித்த ஹிட்லர்: ஜேர்மனிக்கு நெருக்கடி அதிகரிப்பு\nஇளைஞர்களுக்கு டிஎன்பிஎல் கிரிக்கெட் வரப்பிரசாதம்: மனம் திறந்த பிரெட் லீ\nநடிகர்கள் கமல்ஹாசன், சக்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்\nபொழுதுபோக்கு August 04, 2017\nஅதிமுக பொதுச் செயலாளர் யார்\nபீட்ரூட் இலையின் அற்புதம்: எப்படி சாப்பிட வேண்டும்\nபூமிக்கு வெளியே மிக சூடான புதிய கிரகம் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nமின்னல் தாக்கி உடல் கருகி பலியான பெண்\nசுவிற்சர்லாந்து August 04, 2017\nதனது உதவியாளரை அறைந்த பிரபல நடிகர்: அதிர்ச்சி வீடியோ\nஐஸ்வர்யங்கள் தரும் வரலட்சுமி விரதம்\nகையெழுத்து உங்களின் ரகசியத்தை காட்டி கொடுத்துவிடும்: எப்படி தெரியுமா\nவாழ்க்கை முறை August 04, 2017\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் கொல்லப்பட்டாரா டயானா\nபிரித்தானியா August 04, 2017\nஒல்லியான உடலை பெற.. இதை மட்டும் சாப்பிடுங்கள்\nமகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட்ட அமைச்சர்: கைது செய்யப்படுவாரா\nவட கொரியாவின் ஏவுகணை சோதனை: 10 நிமிட இடைவெளியில் தப்பிய ஏர் பிரான்ஸ் விமானம்\nஇலங்கையிலிருந்து சொந்த நாட்டுக்கு திரும்பினார் பிரபல இந்திய வீரர்\nநிலக்கடலையின் பக்கவிளைவுகள்: மாரடைப்பு ஏற்படுமாம்\nவீரர்களை மயக்க கவர்ச்சியான பெண்களை பயன்படுத்தும் பாகிஸ்தான்: எச்சரிக்கை தகவல்\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்\nபிரித்தானியா August 04, 2017\nசச்சின் டெண்டுல்கரின் மோசமான வருகை\nவாட்ஸ்ஆப் மூலம் வரும் சிக்கலைத் தவிர்ப்பது எப்படி\nதுண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசப்பட்ட ஆண்: நடந்தது என்ன\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு\nபள்ளி மாணவியை இரண்டாவது திருமணம் செய்தது எப்படி\nஇந்தியாவை வீழ்த்த கஷ்டத்துடன் களமிறங்கிய இலங்கை அணி தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=462&view=unread&sid=9fd8fd44a04e572ef77fe1c74d240fef", "date_download": "2018-08-18T00:36:01Z", "digest": "sha1:4AIH4CDWMGSBZQS5EKJBOWF5GMGERXXY", "length": 30288, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 9th, 2014, 5:39 pm\nஇந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...\nஅளவு குறைவாக (ஷார்ட்) வீசப்படும் பவுன்சர்களுக்கு இந்தியா எப்போதுமே வீக்....\n190/2 ஆனால் இலக்கை தொட முடியவில்லை... 366/10\nஅடுத்த ஆட்டத்தை டிரா செய்தால் மட்டுமே, தர வரிசையில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும்...\nஆசிய கோப்பை வரும் மார்ச் 25 ல் தொடங்குகிறது....\nஇணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm\nRe: இந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...\nby பிரபாகரன் » பிப்ரவரி 9th, 2014, 6:14 pm\nமுதலில் கோலகீப்பரை மாத்தனும் .....சொன்னா யார் கேக்குறா ....(வேனாமுன்னா விடுங்க ...கல்லை எதுக்கு எடுக்குறீங்க)\nநம்மாட்களுக்கு பந்து கொஞ்சம் ஏறுனா போதும் ...அப்படியே கீழே குந்திக்குவாங்க. கேட்டா நுணுக்கம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sathirir.blogspot.com/2009/03/blog-post_6254.html", "date_download": "2018-08-18T00:51:17Z", "digest": "sha1:TVWPJYL6U26MSPCU4ZYR5HDFXTECGIO3", "length": 15662, "nlines": 202, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்\nஈழத்தில் புலிகள் மீதான யுத்தத்தினை இந்தியப் படைகள் தொடங்கிய பின்னர் அன்றை இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்திக்கு புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் இரண்டு கடிதங்களை எழுதி அவை இரண்டிற்கும் புதுடெல்லியின் பிரதமர் அலுவலகத்திலிருந்து எவ்வித பதிலும் கிடைக்காததினால் மூன்றாவதாகவும் இறுதியாகவும் ஒரு கடிதத்தினை எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தினை இங்கு இணைக்கிறேன்.\nகனம் பிரதம மந்திரி அவர்களே.\nதமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் சமாதானம் சீர்குலைந்து வன்முறை தாண்டவமாடுவதனாலும் எமது மக்கள் தாங்கொணாத் துன்பத்திற்கு இலக்காகி இன்னல்படுவதனாலும் இராணுவ நடவடிக்கையை . சமாதானமும் இயல்பு நிலையும் திரும்பும் வகையில் சமரச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நான் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.\nபோர்நிறுத்தம் செய்து கொள்ளப்பட்டு யுத்தம் ஆரம்பமாதற்கு முந்திய நிலைகளிற்கு இந்திய சமாதானப்படையினர் திரும்புவதே சமாதானத்திற்கும் இயல்பு நிலைக்கும் வழிகோலுமென நாம் கருதுகிறோம்.தமிழீழ மக்களும் இந்தக் கருத்தையே கொண்டிருக்கின்றனர்.சமாதான முயற்சியின் ஆரம்ப நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கும்படி இலங்கை அரசை கேட்டுக்கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.அத்துடன் இந்திய சமாதானப்படையினரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டிருக்கும் எமது இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nவிடுதலைப்புலிகளிற்கும் இந்திய அரசிற்கும் மத்தியில் புதுடில்லியில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்டஉடன்பாட்டின் பிரகாரம்.விடுதலைப்புலிகளை பெரும்பான்மையாகக்கொண்ட இடைக்கால நிர்வாக அரசு அமையப்பெற்றதும்\nநாம் எமது ஆயுதங்களை ஒப்படைப்போமென உறுதி தருகின்றோம்.நான் உங்களிற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூறியது போல தமிழ் மக்களின் உயிரிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு தமிழ் மக்களின் நலன் பேணப்படுமாயின் இந்திய --இலங்கை ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்கு எமது இயக்கம் ஒத்துழைக்கத்தயாராக உள்ளதுஎன்பதனையும் உங்களிற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.\nஇந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கும் மாகாணசபைத்திட்டமானது தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.ஆகவே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரம் கொண்டதான தமிழ்பிரதேச மானில ஆட்சியமைப்பை உருவாக்கும் எதிர்காலப்பேச்சுக்களில் விடுதலைப்புலிகளிற்கு முக்கிய பங்களிக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.எமது யோசனைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து சீரிய முறையில் பரிசீலனை செய்து தமிழீழத்தில் சமாதானம் நிலவவும் எமது மக்களின் துயரை துடைக்கவும் போர் நிறுத்தம் செய்து பேச்சுக்களை தொடங்க உடன் நடவடிக்கை எடுப்பீர்களென நான் மனதார நம்புகிறேன்.\nமேலேயுள்ள மூன்றாவது கடிதத்திற்கும் ராஜீவ் காத்தியிடமிருந்து எவ்வித பதிலும் புலிகளிற்கு அனுப்பப்படவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவிடம் ஒவ்வொருதடைவையும் தங்கள் நேசக்கரத்தினை நீட்டியபொழுதெல்லாம் புலிகள் பலமிழந்து பயத்திலேயே தங்களை நோக்கி நேச்சக்கரத்தினை நீட்டுவதாக இந்தியா தப்புக்கணக்கு போடிருந்தது. அதுதான் இன்றுவரை தொடர்கின்றது.அதே நேரம் இந்தியப் படை தளபதியான ஜெனரல் திபேந்தர் சிங் என்பவர் தான் எழுதிய புத்தகத்தில்.. ராஜீவ் காந்தியிடம்.. புலிகள் பலமிழந்து பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுக்கவில்லையெனவும். எனவே அவர்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தான் அனுப்பிய செய்தி ஊதாசீனப்படுத்தப் பட்டதாகவும்.அதே நேரம்.இலங்கையிலிருந்த இந்திய இராணுவத் தரப்பு தளகர்த்தா சுத்தர்ஜீ ஈழத்தின் கள நிலைமைகள் பற்றியும் புலிகள் பலம் பற்றியும் ராஜீவிற்கு எடுத்து சொன்னவைகள்கூட பலனற்று போய்விட்டது என்று எழுதியுள்ளார்.\nராஜீவ்காந்திக்கு பிரபாகரன் எழுதிய முதலாவது கடிதம்\nராஜீவ்காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்\nவெத்து வேட்டு @ 6:12 PM\nசாத்திரி @ 11:48 PM\nசுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் வெத்து வேட்டு நான் தட்டச்சு செய்யும் பொழுது 88 க்கு மாறி 98 என்று அடித்து விட்டேன் திருத்தியுள்ளேன்\nமனசாட்சி உள்ளவர்களிடம் கடிதம் கொடுக்கலாம் ......இவர்களிடம் கொடுத்து என்ன பயன் நண்பர்களே......\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nதமிழர் நிகழ்வை தடுக்க முயற்சித்த சிறீலங்கா\nஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம்\nஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா\nஏப்றல் 14 ற்கு முன்னர் புலிகள் அழிக்கப்படவேண்டும...\nசீனாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்\nவன்னி தேராவில் ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிக...\nஈழத்தமிழருக்கு உதவிட இங்கிலாந்திலிருந்து கப்பல்\nயேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த ச...\nகாங்கிரசு கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்..பிரச்சார சி...\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம...\nஇலங்கை கிறிக்கெற் அணியின் புதிய பயிற்சியாளர்.\nஆனந்த விகடன் விற்பனையாளர் கைது\nசகோதர யுத்தம் பாகம் இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=401498", "date_download": "2018-08-18T01:33:31Z", "digest": "sha1:6U4MF5TM7FQ2XG7LWPLCOFJ2OZOQ4IDE", "length": 8691, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் - ஏத்தர் எஸ்340 | India's first electric smart scooter - Ather S 340 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் - ஏத்தர் எஸ்340\nகர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏத்தர் எனர்ஜி என்ற நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த எலெட்ரிக் ஸ்கூட்டருக்கு எஸ் 340 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்ஸ்தான் இதன் முக்கிய அம்சம். இதில், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பார்க்கிங் அசிஸ்ட், நேவிகேஷன் அசிஸ்ட், வாகனத்தை சார்ஜ் செய்யும் இடங்களை தேடுவது ஆகிய வசதிகள் உள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் சிபிஎஸ், எல்.இ.டி. லைட்டிங், சீட்டிற்கு அடியில் லைட் என பல கவனிக்கத்தக்க அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் குறைந்த எடை கொண்ட அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் உள்ள ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மூலம் பைக்கில் எவ்வளவு சார்ஜ் உள்ளது, பைக் தற்போது எந்த இடத்தில் உள்ளது, சார்ஜ் ஏறும் சமயங்களில் எவ்வளவு சார்ஜ் ஏறியுள்ளது, இதை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என பல்வேறு தகவல்களை நமது ஸ்மார்ட் போனிலேயே பெற முடியும். இதில், லித்தியம் ஐயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழு சார்ஜ் செய்தால் சுமார் 60 கி.மீ.,வரை பயணம் செய்ய முடியும். இந்த பைக் அதிகபட்சமாக 72 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது. இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி மூலம் 50 நிமிடத்தில் 80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த பேட்டரி சுமார் 50,000 கி.மீ. வரை உறுதியுடன் இருக்கும்.\nதற்போது டுவென்டி டூ மோடார் பிளோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.74,740-க்கும் ஒக்கிநவா பிரைஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.59,899-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏத்தர் எஸ்340 விலை, இந்த இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஸ்மார்ட் ஸ்கூட்டராக இருப்பதால் இதன் விலை மற்ற சாதாரண எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஎலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஏத்தர் எஸ்340\nநாளை சுதந்திர தினவிழா : தேசிய கொடிகள் விற்பனைக்கு குவிப்பு\nஆஷ் துரையை கொல்ல ஆயத்தமான மாவீரர் தர்மபுரி தியாகி தீர்த்தகிரியார்\nசமுதாய சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட டாக்டர் சுப்பராயன்\nகாந்தியின் காலடி பதிந்த சேலம்\nதேசிய சுதந்திர செந்தில் விநாயகர் கோவில்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahaperiyavaa.blog/2018/03/04/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-08-18T01:15:55Z", "digest": "sha1:VROLXYRHXE7L72ILTGYJVUAMXLADI5NJ", "length": 9067, "nlines": 106, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "டேய்.. வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.! – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › டேய்.. வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.\nடேய்.. வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.\n“தாத்தா நீ யாரிடம் மந்திரிக்கக் கத்துண்டே” என்று என் தாத்தாவிடம் ஒரு நாள் கேள்வியைப் போட்டேன்…\nதாத்தாவுக்கு நல்ல மந்த்ர ஸித்தி உண்டு..\nதேள்கடி, பாம்புகடி, இன்னதென்று தெரியாத விஷக்கடி, சுளுக்கு, மஞ்சட்காமாலை, ஜ்வரம், பயந்த கோளாறு என்று யாராவது நாலு பேர் தினமும் காலையிலிருந்தே அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பார்கள்..\nஅப்படி வருபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும்…\nதாத்தா யாரிடமும் மந்திரிப்பதற்குக் காசு பணம் வாங்க மாட்டார்.. மஞ்சட்காமாலைக்கு மந்திரித்துக் கொள்பவர்கள் மட்டும் திருவாரூர் காகிதக்காரத் தெரு மகமாயி கோவில் திருப்பணிக்காக இருக்கும் உண்டியலில் ஒரு ரூபாய் காசு போட்டுவிட்டுப் போகச் சொல்லுவார்..\nஇந்த மாதிரி அரிய வித்தைகள் மறையாமல் பாதுகாக்கப்படவேண்டும். இதற்கு அதிக ஆசார, அனுஷ்டானங்கள் தேவையில்லை. இரண்டே நிபந்தனைகள் தான் : யார் எப்போது வந்தாலும் மந்திரிக்க வேண்டும்; காசு வாங்கக் கூடாது.\nதிருப்பராய்த்துறையில் பாம்புக்கடிக்கு மந்திரிக்கும் ஒருவர் இருந்தார். இந்தியாவில் எங்கிருந்தும் அவருக்கு தந்தி அடிக்கலாம். இருந்த இடத்திலிருந்தே மந்திரிப்பார். Poison King என்ற அவர் தந்தி விலாசத்திற்கு தந்தி அனுப்ப அன்றைய தந்தி டிபார்ட்மென்ட் கட்டணம் வசூலிக்க வில்லை. தந்தியையும் உடனடியாக அனுப்பிவிடுவார்கள். இது அந்த நாட்களில் மிகப்பெரிய சேவை.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-aug-31/special/109230.html", "date_download": "2018-08-18T00:25:12Z", "digest": "sha1:V3WDMOJTYW443OQ3VDPBYSQH52XH6A4Q", "length": 16248, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "டைம் டேபிள்! | Time table - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nசுட்டி விகடன் - 31 Aug, 2015\nசெம ஸ்டைல் சின்ன பைக்\nகணக்கு தரும் செல்போன் எண்கள்\nஎன்னது... சைக்கிள் தமிழ் இல்லையா\nஇனி இல்லை மயங்கொலிப் பிழை\nஇது நம்ம ஊரு மண்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eelamalar.com/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2018-08-18T00:15:45Z", "digest": "sha1:JHA6K24IPYLHNT6WX5G74BAIQU37E5BD", "length": 19222, "nlines": 183, "source_domain": "eelamalar.com", "title": "இன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » இன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்\nஇன வீரம், இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளம் எங்கள் தலைவர்\nஇன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை, நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே…\nஇனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற வீரமிக்க இனமொன்று இந்த உலகில் உள்ளது, அந்த இனம் ஒருபோதும் பகைவன் காலில் வீழ்ந்து மண்டியிட்டு வாழாது என்ற வரலாற்றை உலகிற்கு உணர்த்திய அந்த தலைவனை தமிழ் இனத்தின் வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.\nமேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன பக்கம் ஈக்கவில்லை அந்த தலைவன்.\nவருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகத்தப்படும் மக்களுக்கான உரை, ஆனால் அந்த 35 நிமிட உரையில் அடுத்த ஒரு வருடத்தில் அந்த மண்ணில் நிகழப்போகும் அரசியல், பொருளாதார, இராணுவ மாற்றங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எடைபோட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமே அந்த தலைவனின் தனி சிறப்பு .\nதன்னைப்பற்றி எப்போதும் ஊடகங்கள் பேசவேண்டும் என்றோ, மக்கள் தனது புகழை போற்ற வேண்டுமென்றோ அந்த தலைவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அந்த தலைவனை பேட்டி காண விரும்பிய போது அந்த தலைவன் கூறிய பதில் அற்புதமானது. ” நான் பேச்சுக்கு வழங்குவது குறைந்த அளவு முக்கியமே, நாம் செயலால் வளர்ந்த பின்னே நாம் பேச ஆரம்பிக்க வேண்டும்.\nவாய்ப்புகள் பல இருந்தும், அந்த தலைவன் தனது நாட்களை பலஅடுக்கு வீடுகளிலோ, ac அறைகளிலோ கழித்ததில்லை,. இருள் சூழ்ந்த அடர்ந்த காடுகளில் கடினமான வாழ்க்கையினையே அந்த தலைவன் இறுதி வரைக்கும் வாழ்ந்திருக்கின்றார் .\nமுதலமைச்சர் பதவி வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி வாயில் எச்சில் ஊற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களுக்கு மத்தியில் தேடி வந்த முதலமைச்சர் பதவியையும், கோடிக்கணக்கான பணங்களையும் துச்சமென தூக்கி எறிந்து தமிழர்களின் விடிவுக்காகவே தனது வாழ்நாளை கழித்தவர் அந்த தலைவர்.\nவலிமை மிக்க ஒரு முப்படைகளை கொண்ட மரபு ரீதியான இரானுவத்தினையே தன் பின்னால் வைத்திருந்து, உலக வல்லரசுகள் பலவற்றிற்கு சிம்மசொப்பனமாகவும், சுதந்திரம் வேண்டி போராடும் போராட்ட இனங்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கும் அந்த தலைவன் வேறு யாருமல்ல தமிழன் என்ற தனிப்பெரும் இனத்தின் வீரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் உலகமெங்கும் முழங்கச் செய்த தேசிய தலைவர் மேதகு வே. பிராபகரன் அவர்கள் தான் அந்த தலைவர்.\nஇன வீரம்,இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளமாக இன்று வரைக்கும் வாழும் நம் பிரபாகரன் அவர்களை நம் தலைவராக பெற்றதே இந்த ஜென்மத்தில் நாம் பெற்ற அதி உச்ச சிறப்பாகும்.\n« கட்டுநாயக்கா விமான நிலையம் மீதான கரும்புலிகளின் ஊழித்தாண்டவம்.\nஇந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும்… »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20972&cat=3", "date_download": "2018-08-18T01:34:12Z", "digest": "sha1:BIEZN6AVYWJD2DHQEUW2WHHKASRW2QAY", "length": 13374, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்புகழ் பரவ வித்தாக அமைந்த பாடல்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nதிருப்புகழ் பரவ வித்தாக அமைந்த பாடல்\nநாகப்பட்டினத்தை ஒட்டியுள்ள சிவத்தலம், திருச்செங்காட்டங்குடி. திருப்புகலூர், திருமருகல், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி ஆகிய நான்கு தலங்களும் ஒன்றுக்கொன்று அருகருகே அமைந்துள்ளன. நான்கும் தேவாரப் பாடல்கள் பெற்றவை.\nவங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய\nகொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள\nவண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் மலர்போல\nமஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்\nகொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற\nவந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய லிடுமாதர்\nசங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்\nசிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்\nசண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ னுழலாமற்\nசங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்\nவெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது\nதண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் புரிவாயே\nசிங்கார ரூபமயில் வாகனந மோநமென\nகந்தாகு மாரசிவ தேசிகந மோநமென\nசிந்தூர பார்வதிசு தாகரந மோநமென விருதோதை\nசிந்தான சோதிகதிர் வேலவந மோநமென\nகங்காள வேணிகுரு வானவந மோநமென\nதிண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு\nஇங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு\nபெண்காத லோடுவன மேவிவளி நாயகியை\nயின்பான தேனிரச மார்முலைவி டாதகர மணிமார்பா\nஎண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு\nசெங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ\nடென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்\n- என்னும் அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்தான், இன்று தமிழகத்தில் திருப்புகழ் பரவ, வித்தாக அமைந்தது என்று சொன்னால், வியப்பு மேலிடத்தான் செய்யும். ஆனால், அதுதான் உண்மை. திருப்புகழ்ப் பாடல்களை இந்த நூற்றாண்டில் பரப்பிய வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், முதன்முதலாக, இந்தத் திருப்புகழ்ப் பாடலைத்தான் பழநி திருக்கோயிலில் ருத்ர கணிகை ஒருத்தி (தேவரடியாள்) பாடி, ஆடக் கேட்டு, அது திருப்புகழ் என அறிந்தார். “இனி, திருப்புகழைப் பரப்புவதே எனது பிறவிப் பணி’’ எனக்கொண்டார். இவ்வாறு, இந்தத் திருப்புகழ்ப் பாடல், இன்று தமிழகமெங்கும் இசை பரப்ப, முதல் ஒலியாக விளங்கியது. இத்தகைய சிறப்புடைய திருப்புகழ், திருச்செங்காட்டங்குடி தலத்திற்குரியது என்பதை நினைக்கும்போது, திருவருளின் மாண்பினை நாம் மேலும் வியக்க வேண்டியதாகிறது. திருச்செங்காட்டங்குடி என்றவுடன் நமக்கு சிறுத்தொண்ட நாயனார் வரலாறு நினைவுக்கு வரும். தன் மகன் சீராளனைக் கறி சமைத்து, உத்திராபதியாக வந்த சிவபிரானுக்குப் படைத்த பெருமைமிக்க சிறுதொண்டர் கதை, சிவபக்தர்கள் அனைவரும் அறிந்த கதை. பின்னர் அந்தப் பிள்ளை பரமன் அருளால் உயிர் மீண்டு ஓடி வந்தான்.\nசத்தியாஷாட முனிவரது தவத்தை ரத்தநாமுகி, ரக்தபீஜன் என்னும் அசுரர்கள் அழிக்க முயன்றபோது, சிவபெருமான் அவர்களை வதம் செய்து அருள் புரிந்தார். அவர்களது ரத்தம் சிந்திய இடமே ரத்தக் காடாகி, செங்காடு என்றாயிற்றாம். இது தலபுராணம் கூறும் செய்தி. மற்றொரு புராணக் கதையின்படி, கயமுகனை இத்தலத்தில் அழித்தபோது அவன் ரத்தம் பெருகி செங்காடு என்ற பெயர் வந்ததாம். அசுரனைக் கொன்ற பாவம் நீங்க, விநாயகர் இத்தலத்தில் சிவபிரானை வழிபட்டதால் கணபதீச்சுரம் என்ற பெயரும் ஏற்பட்டது. இங்குள்ள சிவனுக்கும் கணபதீச்சுரர், உத்திராபதீசுவரர் என்று பெயர்கள். இறைவி: சூளிகாம்பாள். சூளி என்றால் கூந்தல். அதனால் இவருக்கு ‘திருக்குழல் நாயகியம்மை’ என்று தமிழில் பெயர்.\nஉத்திராபதியார் திருவுருவம் இங்கே தனிச்சிறப்புடையது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இப்பதிக்கு வந்து இறைவனை வணங்கி, பதிகம் பாடியுள்ளனர். தல விருட்சம் - ஆத்தி. இத்தலத்திற்கு சம்பந்தர் வந்தபோது சிறுத்தொண்ட நாயனார் அவரை வரவேற்று உபசரித்ததாகப் பெரிய புராணம் தெரிவிக்கிறது. இத்தலத்தில், அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமான், இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம், பல்லாயிரம் பக்தர்கள் திரள, இங்கு நடைபெறும் அமுது படையல் திருவிழா, வெகு கோலாகலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோதண்டராமரை தரிசித்தால் நல்ல மணவாழ்வு அமையும்\nசௌபாக்ய வாழ்வருளும் காமாக்யா தேவி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது\nஐந்தாம்படை வீடாம் திருத்தணியின் சிறப்புகள்\nசித்தத்தை சீராக்கும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2017/05/2017-tnusrb-police-constable-exam.html", "date_download": "2018-08-18T01:34:24Z", "digest": "sha1:5ZMA5EO5D7GUZXB36ULXJMWLOVOZBABV", "length": 6291, "nlines": 51, "source_domain": "www.kalvisolai.org", "title": "2017 TNUSRB POLICE CONSTABLE EXAM ANSWER KEY DOWNLOAD", "raw_content": "\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA2ODQ5NDMxNg==.htm", "date_download": "2018-08-18T01:32:04Z", "digest": "sha1:3ZZFVPOG2UHKA7XUPSBHHIZUQSJGDMNV", "length": 13507, "nlines": 135, "source_domain": "www.paristamil.com", "title": "வீதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலம்! - 31 வருடங்களின் பின்னர் மர்மம் விலகியது!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nசகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தர்ப்படும்.\n2 படுக்கை அறைகளுடன் கூடிய 3 pièces வீடு, 93 வது மாவட்டத்தில் ( Département ) வாடகைக்குத் தேவை. எழுதித் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபரிஸ் 14 & Asnières இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு வேலைக்கு ஆள் தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nபிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான ஆலோசனைகள், படிவம் நிரப்புதல், ஆவணங்கள் தயார் செய்தல், Rendez-vous எடுத்தல், நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள் அனைத்துக்கும் தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு வேலைக்கு ஆள் தேவை\nவீட்டு வேலைகள் செய்ய மற்றும் பிள்ளைகளைப் பராமரிக்க பெண் தேவை.\nவாரத்தில் 5 நாட்கள் வேலை.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nவீதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலம் - 31 வருடங்களின் பின்னர் மர்மம் விலகியது\nசிறுமி ஒருத்தியின் உடல் நெடுஞ்சாலை வீதியின் ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், 31 வருடங்களுக்கு பின் இந்த வழக்குக்கான மர்மம் விலகியுள்ளது.\nBlois நகரை ஊடறுக்கும் A10 நெடுஞ்சாலையில், 1987 ஆம் ஆண்டு 4 வயது சிறுமி ஒருத்தியின் உடல், முகம் வீக்கமடைந்த நிலையில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. குறித்த சிறுமி குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். DNA மரபணு ஆதாரங்களை கொண்டு காவல்துறையினர் குறித்த சிறுமியின் பெற்றோர்களை தேடி வந்த நிலையில், 31 வருடங்களுக்கு பின்னர் தற்போது இந்த வழக்கின் திருப்புமுனையாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅறுபது வயதுகளை தொடும் குறித்த பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டு, கடந்த வியாழக்கிழமை Loir-et-Cher நகர உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. குறித்த சிறுமியை அவர்களது பெற்றோர்கள் (கைது செய்யப்பட்ட..) தான் கொலை செய்துள்ளார்கள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nவெள்ளம், புயல், நிலச்சரிவு - இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட 865 இடங்கள்\nமே மற்றும் ஜூலை மாதங்களில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை அரசு பட்டியலி\nபிரெஞ்சு அணியின் புதிய உடை - இன்று முதல் விற்பனைக்கு - இன்று முதல் விற்பனைக்கு - பரிசில் குவிந்த ரசிகர்கள்\nஉதைப்பந்தாட்ட உலக்கிண்ண கோப்பையை இரண்டாவது தடவையாக பிரெஞ்சு அணி கைப்பற்றியதோடு, அதன் நீல நிற உடையில் ஒ\nArnouville - வெடிக்கும் நிலையில் உள்ள பொருட்கள் நிரப்பப்பட்ட மகிழுந்து மீட்பு\nவணிக வளாகம் ஒன்றின் தரிப்பிடத்தில் மகிழுந்து பாரிய அளவில் வெடித்துச்\nவாதுமை விதைக்குள் கொக்கைன் போதைப்பொருள்\n22 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு, Versailles குற்றவியல் நீதிமன்றத்தினால்\n - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை\nFresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி\n« முன்னய பக்கம்123456789...12721273அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yantramantratantra.com/2017/07/blog-post_26.html", "date_download": "2018-08-18T01:30:55Z", "digest": "sha1:KL7S2ZGA24274D3AQ34I57GEEUZSYTOK", "length": 22405, "nlines": 345, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : வசீகரத்திற்கு வழிமுறைகள்", "raw_content": "\nவசீகரம் என்பது ஏதோ மற்றவர்களை மோசம் செய்வது, அழிப்பது, மாந்த்ரீகம் செய்து சீரழிப்பது போன்று பலர் மனதில் ஒரு மாயயையான தோற்றத்தை இக்காலத்தில் பலர் உருவாக்கி விட்டனர்-அவர்களின் பிழைப்புக்காக.\nஇது முற்றிலும் தவறாகும். நம் சித்தர்களும் முனிகளும் இதை பற்றி பல விடயங்களை கொடுத்திருப்பினும், இதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் கூறியுள்ளனர். எம்மை பொறுத்தவரை, தம்மை வசீகர சக்தி உள்ள நபராக மாற்றி கொண்டு, நமக்கான நியாயமான தேவைகளை நிறைவேற்றி கொள்வதே வசீகரம் என்பேன். இதை பற்றிய பயிற்சியிலும் இதையே கூறிவந்துள்ளேன். உதாரணத்திற்கு, ஜோதிட விதிகளின் படி பார்த்தோமானால், மிதுனத்திற்கு கன்னியும், தனுசிற்கு மீனமும், விருச்சிகத்திற்கு கடகமும் எளிதில் வசமாவர்-நட்புடன் இருப்பார்.இது போன்று மற்ற ராசிகளுக்கும் உண்டு. இது பொது விதியே. அன்றாடம் நாம் வேப்பிலை கொழுந்தினை உண்டு வந்தாலே, வசீகர சக்தியை பெறலாம்-ஏனெனில், ராகுவாகவும் , கேதுவாகவும் உருவெடுப்பதற்கு முன்னால், அசுரனின் வாயிலிருந்து விழுந்த அமிர்தமே வேப்பமரம் என்பது கூற்று. அதே சமயம் இந்த கொழுந்தினை ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்து உண்ண வேண்டாம். இடைவெளி விட்டு உண்ணலாம். அளவிற்கு அதிகமான அமிர்தமும் விஷமாகும்.\nஇது போன்று மேலதிகாரிகளையோ, குழந்தைகளையோ, உறவுகளுக்குள்ளோ வசீகர நட்பு பெற வேண்டுமெனில், அவர்களது புருவ மத்தியினை உற்று நோக்கி, நம் வலது நாசியில் மூச்சு வரும் படி இருக்க 'நசி மசி வசி வசி' என்ற மந்திரத்தை மனதினுள் கூறிவரின், அவர்கள் நம் அன்பிற்கு வசமாவர். இதை தவறாக பயன்படுத்த கூடும் என்ற காரணத்தினால் தான், புருவ மத்தி எப்பொழுதும் வெறுமையாக இருத்தல் ஆகாது என்பர். பெண்களாயின், அவர்கள் இடும் ஸ்டிக்கர் பொட்டுக்களுக்கு வசியத்தை தடுக்கும் சக்தி இல்லை. ஆகவே, அதை தவிர்த்தல் நலம். பல் வேறு மூலிகைகளை கொண்டு அஞ்சனம் முறைப்படி தயார் செய்து, அதை புருவ மத்தியில் இட்டு வர, நம் வசீகர சக்தி கூடுவதோடு மட்டுமில்லாமல், காரியங்களும் எளிதில் கைகூடும். பல்வேறு வாழ்வியல் தொல்லைகளை நினைத்து வருந்தாமல், அவற்றை எப்படி நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்வது என்பதே இந்த திலக தந்திரத்தின் கோட்பாடு.\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nஅபிசார (செய்வினை / ஏவல் ) என்பது என்ன\nதனதா யக்ஷினி தீப எண்ணெய்\nசூட்சும ஒலிகளின் மூலம் உன்னத வாழ்க்கை\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.kasangadu.com/2012/07/blog-post_03.html", "date_download": "2018-08-18T00:54:44Z", "digest": "sha1:AUM5B4HVCLW46KEQF4EE35VHJQVQU4RG", "length": 9611, "nlines": 175, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: பிலாவடிகொல்லை அம்மிவீடு சொக்கலிங்கம் சந்திரா இல்ல திருமணம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், ஜூலை 03, 2012\nபிலாவடிகொல்லை அம்மிவீடு சொக்கலிங்கம் சந்திரா இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: சூலை 7, 2012 வியாழகிழமை 10:30 முதல் 12:00 மணி வரை\nதிருமணம் நடக்கும் இடம்: மணமகன் இல்லம், பிலாவடிகொல்லை, காசாங்காடு\nமணமகன் பெயர்: செல்வன். பிரவீன் ராஜ்\nமணமகன் வீட்டின் பெயர்: அம்மிவீடு, பிலாவடிகொல்லை, காசாங்காடு\nமணமகன் பெற்றோர் பெயர்: திரு. சொக்கலிங்கம் & திருமதி. சந்திரா\nமணமகள் பெயர்: செல்வி. கற்பகம்\nமணமகள் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு. வீராசாமி & திருமதி. முல்லைகன்னு\nமணமகள் தொழில் விபரம்: B.E MBA\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 7/03/2012 09:03:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nமுனியன் கோவில் விழா - வரி வசூல் ஆரம்பமாகிறது\nவெண்டாகோட்டை கிராமம் - இணையதளம் துவக்கம்\nமேலவீடு நடுத்தெரு திருஞானம் வேலம்பாள் இல்ல திருமணம...\nஅய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு\nநடுத்தெரு தாண்டாம்வீடு ரெங்கசாமி முத்துலெட்சுமி இல...\nபிலாவடிகொல்லை அம்மிவீடு சொக்கலிங்கம் சந்திரா இல்ல ...\nஅருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பிரமநாத அய...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/home-garden/03/168054?ref=category-feed", "date_download": "2018-08-18T00:51:37Z", "digest": "sha1:WGNNE2O53UVUYHZO5MHVWG55C7JCQQRF", "length": 8936, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? இதில் ஒன்றை பாலோ பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nவீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா இதில் ஒன்றை பாலோ பண்ணுங்க\nநம் வீட்டில் உள்ள பணக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் கொட்ட வேண்டும் என்றால் அதற்கு தினமும் ஒருசிலவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.\nஅப்படி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.\nசெல்வம் பெருக என்ன செய்யலாம்\nவீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடுகள் நீங்கும்.\nவீட்டின் சமையல் அறையில் பல வித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதனால் பணம் அதிகரிக்கும்.\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது.\nகாலையில் பூஜைகள் செய்யாமல், பிதுர்க்களை மட்டும் வழிபட பண வரவு அதிகமாகும்.\nபசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளித்து, அதை வீட்டில் தெளிக்க வேண்டும்.\nமுழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்து பின் அதனை மறுநாள் பறவை மற்றும் பசுவிற்கு தொடர்ந்து அளிக்க வேண்டும்.\nபாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விட பணப்பிரச்சனை தீரும்.\nதினசரி குளிக்கும் முன் பசுவின் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.\nகுடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லெட்சுமி கடாட்சம் ஏற்படும்.\nவெள்ளிக் கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.\nமஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.\nஆந்தை, ஒரு ஜோடி கழுதை, ஓடும் வெள்ளை குதிரை ஆகியவற்றின் படத்தை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகரிக்கும்.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamakathaikalpdf.com/2016/07/", "date_download": "2018-08-18T00:20:07Z", "digest": "sha1:R33YZTUZKUMCCXZ42NWKVFHULO4TFZCT", "length": 3109, "nlines": 78, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "July 2016 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nTamil Kamakathaikal – டேய் இன்னும் பாஸ்டா\nTamil Kamakathaikal – கள்ளத்தனமாய் ஒத்தன்\nTamil Kamakathaikal – அப்பாவின் அடங்காத ஆசை\nTamil Kamakathaikal – கிராமத்தில் ஒரு ஒல்கதை\nTamil Kamakathaikal – உமாவை அம்மாவக்கிய கதை\nTamil Kamakathaikal – நண்பனுக்கு செய்த துரோகம்\nTamil Kamakathaikal – உன் மனைவி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குடா\nTamil Kamakathaikal – கிராமத்தில் பசுமை பாசாங்கு\nதங்கையின் தாகம் – 2\nபாங்காக் பிரதாபங்கள் – 1\nதமிழ் காம கதைகள் (1,818)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://eelamalar.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-18T00:23:52Z", "digest": "sha1:3Z6JADW55CRYFDCC3U7HNG7T75RBG6MM", "length": 27095, "nlines": 187, "source_domain": "eelamalar.com", "title": "“நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்” - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » “நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்”\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n“நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்”\n“நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள்” – நடேசனின் மனைவி\nவெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசந்திரகாந்தன் கடந்த 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் தனக்கு பாதுகாப்பு இல்லை என அரசாங்கத்தின் பிரதானிகள் சிலரிடம் எடுத்துக் கூறிய போதிலும் அரசாங்கத்தின் பிரதானிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு கூறியுள்ளார்.\nமேலும் தனது பாதுகாப்புக்காக தன்னிடம் இருந்த துப்பாக்கியின் அனுமதிப்பத்திரத்தை நீடிக்கவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி முக்கிய அமைச்சர்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்களும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் எனக் கூறப்படுகிறது எனவும் அவருக்கு எதிரான அரசியல் சக்திகளால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.\nரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தந்தையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திராநேரு, விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்டங்களுக்கான முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் என்ற இளையதம்பி நாகேந்திரன் லிங்கராஜா என்பவரும், கிளிநொச்சியில் நடைபெற்ற சுனாமி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பின்னர் கருணா ஆரம்பித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்த இனியபாரதி என்ற கே. புஷ்பகுமார் என்பவரே சந்திராநேருவின் கொலையுடன் தொடர்புள்ளவர்கள் சந்தேகிக்கப்படுகிறது. இனியபாரதி அப்போது இராணுவத்துடன் இணைந்டது செயற்பட்ட கருணா தரப்பின் அம்பாறை மாவட்டக்கான கட்டளையிடும் பொறுப்பில் இருந்தார்.\nகருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் பிற்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்ட பின்னர், இனியபாரதி அந்த கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இணைப்பதிகாரியாக செயற்பட்ட இனியபாரதிக்கு தேசமாமன்ய என்ற கௌரவ விருது வழங்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.\nஅதேவேளை சிரியாவின் ஹோமிஸ் நகரில் இருந்த தற்காலிக ஊடக மத்திய நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மாரி கொல்வின், இலங்கையில் அன்று நடைபெற்ற போர் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை உலகத்திற்கு வழங்கியவர். இவர் வழங்கிய செய்திகள் மூலம் வெள்ளைக் கொடி விவகாரம் முழு உலகத்திற்கும் தெரியவந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ஊடகவியலாளர் எழுதிய கட்டுரை ஒன்றில் வெள்ளை கொடி விவகாரத்தில் ரொஹின் சந்திரகாந்தன் சந்திராநேருவின் தலையீடு பற்றி குறிப்பிட்டிருந்தார்.\nஊடகவியலாளர் மாரி கொல்வின் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “ நான் இலங்கை நாடாளுமன்றத்தின் அங்கம் வகிக்கும் இளம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ரொஹன் சந்திராநேருவை தொலைபேசியில் தொடர்புக்கொண்டேன். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நிலைமை மோசமான நேரத்தில் நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்டு பேசினேன். நடேசன் மாத்திரமல்ல அவரது குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த, உயிருடன் இருக்கும் புலிகளின் உறுப்பினர்கள் பாதுகாப்புக்கு தான் உத்தரவாதம் தருவதாக மகிந்த ராஜபக்ச கூறினார்.\nநான் அங்கு சென்று சரணடைந்தவர்களை அழைத்து வருகிறேன் என்று நான் கூறினேன். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ”இல்லை தேவையில்லை. எமது இராணுவம் மிகவும் நட்புறவான மற்றும் ஒழுக்கமுள்ளது. இதனால், நீங்கள் கலவரப்பட வேண்டாம் எனக் கூறியதுடன் மிகவும் ஆபத்தான பிரதேசத்திற்கு சென்று உயிர் ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் குறிப்பிட்டார்.\nஜனாதிபதியை தொடர்புக்கொண்ட பின்னர் ரொஹன் சந்திராநேரு அமைச்சர் பசில் ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார். பசில் ராஜபக்ச ஜனாதிபதியின் சகோதரர். வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுமாறு நடேசன் உள்ளிட்டோரிடம் கூறுமாறு பசில், சந்திராநேருவிடம் கூறியுள்ளார். இந்த சகல செய்திகளுடன் சந்திராநேரு, இலங்கையின் நேரப்படி அதிகாலை 6.20 அளவில் நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளார். அப்போது துப்பாக்கிச் சத்தம் முழு வன்னியிலும் எதிரெலித்துக்கொண்டிருந்தது. வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய செல்ல நாங்கள் தயார் என நடேசன் துப்பாக்கிகளின் சத்தங்களுக்கு மத்தியில் என்னிடம் தெரிவித்தார். முடிந்தளவு கொடியை உயர்த்தி பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.அவர்கள் வெள்ளைக் கொடியை காண வேண்டும் என நான் நடேசனிடம் கூறினேன் என சந்திராநேரு குறப்பிட்டார்”\nஇதற்கு அமைய நடேசன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்துள்ளனர். அப்படியானால் அவர்கள் எப்படி இறந்தனர். அந்த குழுவில் இருந்த ஒருவரே எனக்கு தகவல் வழங்கினார். அன்று நடேசன், புலித்தேவன் உட்பட பெரும்பாலானோர் வெள்ளைக் கொடியை ஏந்திவாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைய வந்தனர். எனினும் நீண்ட தூரம் அவர்களுக்கு வர முடியவில்லை. இலங்கை இராணுவத்தின் இயந்திர துப்பாக்கிகளின் தோட்டாக்கள் நடேசன் உள்ளிட்டோரின் உடலை துளைத்துச் சென்றன.\nநடேசனின் மனைவி சிங்கள பெண். இடைவிடாது பொழியப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுக்கு மத்தியில் நடேசனின் மனைவி சத்தமிட்டார். “ நாங்கள் சரணடைய வந்தோம். ஏன் எங்களை சுடுகின்றீர்கள் என சத்தமிட்டார்“. எனினும் அதற்கு மேல் அவருக்கும் ஏதுவும் பேச முடியாது அவரது குரலும் அடங்கி போனது. அவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சரிந்தார் என மாரி கொல்வின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\n« ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்…….. லெப்.கேணல் டேவிட்\nலெப்கேணல்_மகேந்தி, லெப்-கலைமாறன், லெப்.இளங்கோ, லெப்.குட்டிமணி ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்- -10.06.2018 »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kisukisu.lk/?p=24577", "date_download": "2018-08-18T00:46:32Z", "digest": "sha1:UXBNQIEQBFFKPLQ7KWGI7TBZZRSJMXE2", "length": 10288, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» மிகப்பெரிய சர்ச்சை – பிரபல கவர்ச்சி நடிகையின் மகன் கைது!", "raw_content": "\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல நடிகை\nகணய புற்றுநோயால் உயிரிழந்த பிரபல பாடகி\nஒரு வருடத்தில் நடிகையின் வருமானம் 77 கோடி\nநயன்தாரா சம்பளம் 4 கோடி\n← Previous Story நடிகையும் ரேடியோ ஜாக்கியும் திருமணம்\nNext Story → கார் விபத்தில் உயிர் தப்பிய அமிதாப்பச்சன்…\nமிகப்பெரிய சர்ச்சை – பிரபல கவர்ச்சி நடிகையின் மகன் கைது\nதமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியவர் நடிகை புவனேஸ்வரி.\nவிபச்சார வழக்கில் கைதாகியிருந்த இவர் மூத்த தமிழ் நடிகைகளை பற்றி சொன்ன விஷயம் அப்போது மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியது.\nதற்போது இவரின் மகன் சீனிவாசன் இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக போலிசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை மருத்துவகல்லூரியில் படித்துவரும் அனுகிரஹா என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழகிய சீனிவாசன் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார்.\nஅந்த பெண் மறுத்ததையடுத்து ஆத்திரமடைந்த சீனிவாசன் அவரின் வீட்டின் அருகே பெட்ரோலை ஊற்றி எரித்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து வீட்டில் பொருத்தியிருந்த கேமராவை அடித்து நொறுக்கியுள்ளார்.\nஅதன் பின் பொலிசார் சீனிவாசன் மீது கொலை மிரட்டல், ஆபத்தான பொருட்களை பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய வழக்குகளின் கீழ் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nமேலும் போலீசார் கூறுகையில், காதல் விவகாரம் தொடர்பாக பெண்கள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்றும், சீனிவாசன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/festival/01/155317?ref=category-feed", "date_download": "2018-08-18T00:50:54Z", "digest": "sha1:TPVLR65Y7AWGLILYGCRL6TREU2RAHWJ6", "length": 8075, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "யாழில் பிரம்மிக்க வைக்கும் அலங்காரத்துடன் நல்லூரானின் கார்த்திகை உற்சவ காட்சிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழில் பிரம்மிக்க வைக்கும் அலங்காரத்துடன் நல்லூரானின் கார்த்திகை உற்சவ காட்சிகள்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 19ஆம் நாளான இன்று காலை சூர்யோற்சவம் நடைபெற்றதைத் தொடர்ந்து மாலை கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது.\nகுறித்த நிகழ்வில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் வெளிவீதியுலா வலம் வந்து மக்களுக்கு காட்சி கொடுத்தார்.\nகாண்போரின் கண்ணை கவரும் வகையில் சிறந்த அலங்காரங்களுடன் இன்று வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி கொடுக்கின்றான்.\nஇன்றைய தினத்தில் கார்த்திகை உற்சவ சிறப்பு பூசைகளும் நடைபெறுகின்றன.\nநல்லூர் கந்தனின் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.\nமேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஉலகக் கிண்ண கால்பந்தில் முதல் சுற்றுடன் வெளியேறிய சாம்பியன் அணிகள் எவை தெரியுமா\nபிரபல நடிகரின் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடித்து தீவிபத்து\nவிவசாயிகளுக்காக குளம் தோண்டிய நடிகர் அக்‌ஷய்குமார்: நெகிழ்ச்சியடைந்த மக்கள்\nபகவத் கீதையை படிக்கும் ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரம்\nஉலகக்கோப்பைக் கால்பந்துக்கு இத்தாலி தகுதி பெறுவதில் நெருக்கடி\nநல்லூர் கந்தனின் தண்டாயுதபாணி உற்சவம்-2017\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=397046", "date_download": "2018-08-18T01:32:44Z", "digest": "sha1:WJFSK77GI25FAEQWQHKL6MK4RENMVBVW", "length": 10740, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "குமரியில் அரசு பஸ்களில் மீண்டும் கட்டண உயர்வு : பயணிகள் கடும் அதிர்ச்சி | Government hikes back fares in Kumari: Passengers are shocked - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுமரியில் அரசு பஸ்களில் மீண்டும் கட்டண உயர்வு : பயணிகள் கடும் அதிர்ச்சி\nநாகர்கோவில்: பார்வதிபுரம் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து, அரசு பஸ்களில் மீண்டும் கட்டணம் உயர்ந்துள்ளது.நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த பால பணியால் நாகர்கோவில் திருவனந்தபுரம் மற்றும் திருவனந்தபுரம் நாகர்கோவில் செல்லும் வாகன போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய பஸ்கள் அனைத்தும் டெரிக் சந்திப்பு, ஆசாரிபள்ளம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல் திருவனந்தபுரம், களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை மார்க்கங்களில் இருந்து நாகர்கோவில் வர வேண்டிய பஸ்கள், கனரக வாகனங்கள் சுஷ்ருஷா மருத்துவமனை சந்திப்பில் இருந்து களியங்காடு சாலை, இறச்சக்குளம், புத்தேரி வழியாக நாகர்கோவிலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் இறச்சக்குளம் சந்திப்பில் இருந்து நேராக செண்பகராமன்புதூர் வழியாக ஆரல்வாய்மொழிக்கு செல்கின்றன. திருவனந்தபுரம் மற்றும் குமரி மேற்கு மாவட்டத்தில் நாகர்கோவிலுக்குள் வர வேண்டிய கார், இரு சக்கர வாகனங்கள் இறச்சக்குளத்தில் இருந்து ஆலம்பாறை வழியாக கட்டையன்விளை இ.பி. ஆபீஸ் ரோடு வந்து நாகர்கோவிலுக்குள் வருகின்றன. இந்த போக்குவரத்து மாற்றத்தால் ஆலம்பாறை சானல் கரை ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் செல்ல வேண்டிய தனியார் பஸ்கள், லாரிகள் கூட ஆலம்பாறை சந்திப்பு வந்து விடுவதால் நெருக்கடி அதிகரிக்கிறது.\nஎனவே போக்குவரத்து போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்று, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய தனியார் பஸ்கள் மற்றும் லாரிகளை டெரிக் சந்திப்பு, ஆசாரிபள்ளம் வழியாக திருப்பி விட வேண்டும். அவ்வாறு திருப்பி விடும் பட்சத்தில், ஆலம்பாறை சானல் கரை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது.\nஇதற்கிடையே திருவனந்தபுரம் நாகர்கோவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, புறநகர் பஸ்களில் 3 முதல் 5 ரூபாய் வரையிலும், டவுன் பஸ்களில் 2 ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு போக்குவரத்து கழகம் மீண்டும் கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 6 கி.மீ. தூரம் அதிகம் சுற்ற வேண்டி உள்ளதால், கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறினர்.\nகுமரி அரசு பஸ் கட்டண உயர்வு பயணிகள் கடும் அதிர்ச்சி\nகொள்ளிடம் கரையோர பகுதிகளில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியது: லால்குடி விவசாயிகள் கவலை\nகூரியர் நிறுவனங்கள் தயக்கத்தால் வெளிநாடுகளில் சீன தயாரிப்பு இந்திய தேசியக்கொடி விற்பனை\n7 மணி நேரமாக கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்பு\nதாராபுரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு டைல்ஸ்கள் வெடித்து சிதறியதால் நோயாளிகள் ஓட்டம்\nகண்டக்டர்கள் இல்லாமல் பஸ்சை இயக்க எதிர்ப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்: 2 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது\nதிருமங்கலத்தில் பரபரப்பு பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை விற்பனை: தத்தெடுத்த தம்பதியிடம் விசாரணை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnetwork.info/2010/01/bavana-in-song.html", "date_download": "2018-08-18T00:20:10Z", "digest": "sha1:R4CZ2WXNXZ3LPO3KTK2MHYRLRBHFGQ7K", "length": 10691, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாடலை ஆவலுட‌ன் கே‌ட்கு‌ம் பாவனா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > பாடலை ஆவலுட‌ன் கே‌ட்கு‌ம் பாவனா\n> பாடலை ஆவலுட‌ன் கே‌ட்கு‌ம் பாவனா\nஆர‌ம்ப‌த்‌தி‌ல் அச‌ல் பட‌த்‌தி‌ன் நாய‌கி பாவனா எ‌ன்றுதா‌ன் சொ‌ல்ல‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் பட‌த்‌தி‌ல் கூடுதலாக கொ‌ஞ்ச‌ம் ‌கிளாமரு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக ச‌மீரா ர‌ெ‌ட்டியை கூ‌ப்‌பி‌ட்டு நடி‌க்க வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.\nமுத‌லி‌ல் ஆடைகுறை‌ப்பு ‌கிளாம‌‌ர் கா‌ட்ட மா‌‌ட்டே‌ன் எ‌ன்றெ‌ல்லா‌ம் க‌ண்டிஷ‌ன் போ‌ட்ட பாவனா, ச‌மீரா ரெ‌ட்டி‌க்கு அ‌திக மு‌க்‌கிய‌த்துவ‌ம் கொடு‌க்க‌ப்படுவதா‌ல் கல‌ங்‌கி‌ப் போயு‌ள்ளா‌ர். ‌பிடிவாத‌ம் ‌பிடி‌த்து க‌ண்டிஷ‌ன் போ‌ட்டதெ‌ல்லா‌ம் தவறோ எ‌ன்றெ‌ல்லா‌ம் ‌பீ‌ல் ப‌ண்ண ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டா‌ர்.\nஇ‌ப்படியே போனா‌ல் பட‌‌த்‌தி‌ல் தா‌ன் காணாம‌ல் போ‌ய்‌விடுவோ‌ம் எ‌ன்பதா‌ல் தலையை ச‌ந்‌தி‌த்து அவரோடு ஒரு பாட‌ல் கா‌ட்‌சி‌யி‌ல் டூய‌ட் பாட வே‌ண்டு‌ம் என கே‌ட்டு‌க் கொ‌ள்ள, இய‌க்குந‌ர் காது‌க்கு போன இ‌வ்வ‌ிஷய‌ம் த‌ற்போது ப‌ரி‌சீலனை‌யி‌ல் உ‌ள்ளது. ஆடுவாரா எ‌ன்பது போக‌ப் போக‌த்தா‌ன் தெ‌ரியு‌ம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறைகள் இருதய நோயாளிகளுக்கு.\nஉணவே மருந்து' என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இதை நாம் மறந்தோம். ஆரோக்கியத்தை இழந்தோம். பலவிதமான நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2021049", "date_download": "2018-08-18T00:25:56Z", "digest": "sha1:HY42QFJFV3CIPAJJXCON3ZR3NQVL3GCT", "length": 18008, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா\nசென்னை: கர்நாடக சட்டசபைக்குத் தேர்தல் முடிந்திருக்கிறது. அடுத்ததாக, தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க, பா.ஜ., தேசியத் தலைவர் அமித்ஷா களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலரிடம் அமித் ஷா பேசத் துவங்கி இருக்கிறார்.\nதமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர் கூறியதாவது:\nதமிழகத்தில், பா.ஜ.,வை வேகமாக வளர்க்க வேண்டும் என்ற முயற்சியில், அகில இந்திய பா.ஜ., வேகமாக களம் இறங்கும் என, ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல, கர்நாடக தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, கட்சி தேசியத் தலைவர் அமித்ஷா களம் இறங்கி விட்டார். விரைவில் தமிழகம் வந்து, கட்சி தலைவர்கள் பலரையும் சந்தித்து, கட்சி வளர்ப்புப் பணிக்காக அசைன்மெண்ட் கொடுக்கத் தயாராகி இருக்கும் அமித்ஷா, முன்னோட்டமாக தமிழக பா.ஜ., தலைவர்களிடம் பேசியிருக்கிறார்.\nதமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க இதுவரை ஒவ்வொரு தலைவரும் திரட்டி வைத்திருக்கும் தகவல்களை, நேரடியாக அனுப்பி வைக்குமாறு கோரியிருக்கிறார். அப்படி வரும் தகவல்களை வைத்து, கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்தத் தலைவர்கள் கூறினர்.\nRelated Tags தமிழக பாஜக அமித்ஷா கர்நாடக சட்டசபைக்குத் ... பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கர்நாடக தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ... பாஜக Tamilnadu BJP Amit Shah BJP\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாநிலத்தில் சுய ஆட்சி + மத்தியில் கூட்டாட்சி - இந்த தத்துவத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள் தமிழர்கள். இந்த கூற்றை யார் ஒப்புக்கொள்கிறார்களோ அவர்களுக்கு தமிழர்களின் வாக்கு நிச்சயம். தற்சமயம் இந்த வழியை கடை பிடிப்பவர்கள் தி.மு. க. மற்றும் அதன் தலைவர் திரு . ஸ்டாலின் மட்டுமே. எனவே திமுக விற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.\nஅமித்ஷா பிஜேபியின் சாணக்கியன் என்று சொன்னால் மிகையாகாது. கர்நாடகாவில் எப்படி 104 சீட் பிடிக்க என்ன உத்தியை கையாண்டாரோ அதே உத்தியை நூதன முறையில் கையாண்டு தமிழகத்தில் உள்ள ஜாம்பவான்கள் கட்சிகளின் பலவீனத்தை ஆராய்ந்து, அந்தக்கட்சிகளை தனது அதி புத்திசாலியால் , பலவீனம் படுத்தி பிஜேபி கால் ஊன புதிய அரசியல் வியூகத்தை கையாளுவார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023128", "date_download": "2018-08-18T00:27:11Z", "digest": "sha1:AVXAEMYWXBMLUTOE2KQO2AO7DJVTE525", "length": 14212, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏடன் வளைகுடாவில் புயல்: தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை| Dinamalar", "raw_content": "\nஏடன் வளைகுடாவில் புயல்: தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை\nசென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியள்ளது.\nசாகர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஏமன் கிழக்கே 400 கி.மீ., துாரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு திசையில், ஏமன் நோக்கி நகர்ந்து சொல்லக்கூடும்.இதனால் மீனவர்கள், தென்மேற்கு அரபிக் கடலில் ஏமன் ஓட்டிய பகுதிகளுக்கு அடுத்த 2 நாள் செல்ல வேண்டாம். இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.\nகடந்த 24 மணி நேரத்தில் , வெப்பசலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி ஒரிரு இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags ஏடன் வளைகுடா புயல் வானிலை சென்னை வானிலை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=267505&name=thangaraja", "date_download": "2018-08-18T00:26:29Z", "digest": "sha1:XYNO5K5IZVVEA4X5CNMCD4YG5O5TUUAH", "length": 12726, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: thangaraja", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் thangaraja அவரது கருத்துக்கள்\nஉலகம் ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் 14வயது இந்திய மாணவர் அச்சத்தல்\nபொது முத்ரா திட்டத்தினால் 12 கோடி பேர் பயன் மோடி\nமுத்ரா கடன் வாங்கியவர்கள் பெயரையும் ,அவர்களின் தொழில் பற்றியும் வங்கிகளில் விளம்பரம் வைக்கவேண்டும் ,ஏனென்றால் முத்ரா கடன் வாங்கியவர்கள் அந்தந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களே , 29-மே-2018 17:52:11 IST\nஅரசியல் டுவிட்டரில் காங் - பா.ஜ., கிண்டல்\nஇந்தியாவில் தகுதியான மருத்துவமனை இல்லையா ...இதுதான் உங்கள் 60 ஆண்டு சாதனையா 28-மே-2018 14:13:54 IST\nபொது காவிரி திட்ட அறிக்கை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது என்ன\nமேலாண்மை அலுவலகத்தை வேறு மாநிலத்தில் அமைத்தால்தான் நல்லது 14-மே-2018 14:21:31 IST\nசம்பவம் திருமாவளவனை புறக்கணித்த கிராம மக்கள்\nதண்ணீர் தராத காங்கிரஸ் கட்சியுடன் கபடநாடகம் ஆடும் இவரை மக்கள் புறக்கணித்தது சரியான முடிவு 12-மே-2018 15:11:07 IST\nசம்பவம் கோவையில் விடிய விடிய சோதனை குட்கா பறிமுதல்\nஅய்யா அதிகாரிகளே எங்கள் தென்காசியில் குட்கா அணைத்து கடைகளிலும் தாராளமாக விற்கப்படுகிறது ,,ஒரு சோதனை கிடையாதா ,விசாரணை கிடையாதா 28-ஏப்-2018 16:00:14 IST\nஇந்த அளவுக்கு ஒரு படத்தை கேவலமாக விமர்சனம் செய்யமுடியாது ,,இதற்காகவே ஒரு விருது கிடைக்கும் 28-ஏப்-2018 15:51:30 IST\nபொது ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவு தமிழக அளவில் கீர்த்திவாசன் முதலிடம்\nதிரு கீர்த்திவாசன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ......திரு சகாயம் ஐயாபோல் தாங்களும் வளரவேண்டுகிறேன் 28-ஏப்-2018 10:03:43 IST\nகோர்ட் முதல்வருடன் டிஜிபி திடீர் சந்திப்பு\nஇந்த குட்கா இப்போதுகூட எங்கள் தென்காசியில் அனைத்துக்கடைகளிலும் தாராளமாக விற்கப்படுகிறது ,எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை ,குறிப்பாக குட்காவை மாணவர்கள் அதிக அளவில் வாங்குகிறார்கள் ,அதிகவிலைக்கு விற்று வியாபாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள் ,,இதனை தங்கள் தினமலர் நாளிதழ் விசாரித்து செய்திவெளியிட்டு மாணவர்கள் நலன் காக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 26-ஏப்-2018 15:03:23 IST\nபொது வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்\nஏன் காவல்துறையை நம்பமுடியலையா ,காசுகொடுப்போரின் காலைப்பிடிக்கும் காவல்துறையை சீரமைக்கவேண்டும் ,அய்யா பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளை உயர்பதவிக்கு கொண்டுவரவேண்டும் 26-ஏப்-2018 13:28:59 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/feb/14/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2863357.html", "date_download": "2018-08-18T00:30:33Z", "digest": "sha1:OKGZMPHERXUZBPMFFS6GUK4MMBGE3O3P", "length": 6594, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "என்.ஐ. கல்லூரியில் புகைப்படம், ஓவியக் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஎன்.ஐ. கல்லூரியில் புகைப்படம், ஓவியக் கண்காட்சி\nகுமாரக்கோவில் என்.ஐ. கலை - அறிவியல் கல்லூரியில் புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nகல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். பெருமாள் தலைமை வகித்தார். துறைத் தலைவர் சிபி.எஸ். குமார் வரவேற்றார். அருவி திரைப்பட நடிகர் பிரதீப் ஆன்றனி மாணவர்களுக்கு ஊடகங்கள் மக்கள் மத்தியில் தகவல்களை எவ்வாறெல்லாம் கொண்டு சேர்க்கிறது என்பது குறித்து விளக்கினார். தொடர்ந்து, அவர் பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற புகைபடம் மற்றும் சிறந்த ஓவியத்திற்கான பரிசுகளை வழங்கினார். பேராசிரியர் பா. புஷ்பலதா நன்றி கூறினார்.\nஇதில், பேராசிரியர்கள் அருண் சிதம்பரம், சைனி, சுபனேஷ், காட்சி தொடர்பியல் துறை மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thanimaram.com/2017/09/blog-post.html", "date_download": "2018-08-18T00:43:30Z", "digest": "sha1:6SMCAOUXRMGK3FDOPGIFP3NT4WPPFAU2", "length": 19949, "nlines": 169, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: பள்ளிக்கூட டீச்சர் பாடும் தடாகம் சினேஹா போல)))", "raw_content": "\nபள்ளிக்கூட டீச்சர் பாடும் தடாகம் சினேஹா போல)))\nசினிமா என்பது சமூகத்தில் நிலவும் சொல்லப்படாத விடயங்களை, பொதுத்தளத்துக்கு ஊடுகடத்தும் ஒரு ஊடகம் போல எனலாம்.\nஆனால் வர்த்தக உலகில் இன்று கோடி கோடியாக செலவழித்து எடுக்கும் திரைப்படங்களில் எல்லாம் கதை என்பதோ சமூக உணர்வு என்பதோ பூதக்கண்ணாடி கொண்டு தேடும் நிலையில் தான் இன்றைய சினிமாக்கள் பல விவேகமாக, தெறிக்கின்றது சாமானிய சினிமா ரசிகர்களிடம்.\nஇருந்தாலும் நல்லவிடயத்தை நிச்சயம் பொதுத்தளத்தில் காட்சிப்படுத்தும் திறமையும் , பொறுப்பும், உணர்ந்த பலர் இன்றும் புதிய இயக்குனர் பட்டியலில் வளர்ந்து வருவதையும் பாராட்ட வேண்டும்\nஅந்த வகையில் இணையத்தில் காதல், இணையத்தில் திருட்டு ,முகநூலில் நேரலையில் தற்கொலை, பனாமா பத்திரிக்கையில் பணம் பதுக்கியோர் பட்டியல் என்று எல்லாம் நாளந்தம் ஊடகம் சொல்லும் கதைகள் தான் இங்கே பிக்பாஸ் போல மெச்சப்டும் நிலையில்\nஇணைய வசதி வராத எத்தனையோ கிராமங்கள் இன்னும் நம்தேசத்தில் இருக்கு என்றால் நம்ப மறுப்போர் பலர்.\nகுடிதண்ணீர் கேட்டு போராடிய மக்கள் மீது குழாய்க்குண்டு வீசிய செய்தி எல்லாம் ஒரு நிலைத் தகவலாகத்தான் சிலரின் முகநூலில் முக்கிய கண்டணமாக இருக்கின்றது .\nஇலங்கை ஆட்சியில் யுத்தம் என்ற போர்வையில் நடந்த ஊழல்கள் எதுவும் அறியாத எத்தனையோ சாமானியர்கள் கிராமத்தில் வாழ்கின்றார்கள் என்றால் ஆதாரம் தாருங்கள் என்று பல்லிளிக்கும் ஆய்வுக்கட்டுரை எழுதுவோர் எல்லோருக்கும் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வாழ்வாதார பிரச்சனைகளான அடிப்படை ,வீட்டுப்பிரச்சனை, சுகாதாரப் பிரச்சனைகள், ஆடையைக்கூட வாங்கமுடியாத ஏழ்மை நிலை, மின்சாரம், தொழில்வாய்ப்பின்மை, கல்வித்தேடல் என்பன மட்டுமா \nகிரிக்கட் மட்டுமே உலகம் என எண்ணும் என்னற்றவர்களுக்கு நேரடி ஒலி/ஒளிபரப்பைக் கூட மகிழ்ச்சியாய் பார்க்ககூட ஒரு தொலைக்காட்சி பொதுவில் இல்லாத பல வீடுகளும் ,பல கிராமங்களும் இன்றும் நல்லாட்சியில் இருக்கு என்பதை நாம் எத்தனை பேர் அறிவோம் \nஇணையத்தில் தற்கொலை விளையாட்டுக்கு விபரமான குறிப்புக்கள் கொடுக்கும் அறிவிப்பாளர்கள் பலருக்கும் கூட குளவி குத்தி மரணித்துக்கொண்டு இருக்கும் மலையக கிராமத்தவர்களின் அவலத்தை எழுதவோ காட்டு யாணைகளின் வருகையால் அவதியுறும் சாமானிய மக்களின் இருப்பிட பிரசனை பற்றி குறிப்பாக செய்தி பகிரக்கூட மனசு இருப்பதில்லை காட்டு யாணைகளின் வருகையால் அவதியுறும் சாமானிய மக்களின் இருப்பிட பிரசனை பற்றி குறிப்பாக செய்தி பகிரக்கூட மனசு இருப்பதில்லை ஆனால் மெர்ச்சல்படப் பாடல் பற்றி முழுநேரப்போராளியாக வேஷம் கட்டும் முகநூல் எழுத்தாளர்கள் சிலரையும் தினமும் சிரித்த முகத்துடன் பஸ்சில் கடந்து போகும் நம் தேச நிலை பற்றிய கவலை எனக்கு எப்போதும் உண்டு\nயுத்தம் தின்றது நம் தேசத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல ,பலரின் வாழ்வாதரக் கனவுகளையும் தான்\nகடல்க்கரைக் கிராமத்தில் பிறந்த பலருக்கு மலைப்பிரதேசம் எப்படி இருக்கும் என்ற தேடல்க்கனவு இருக்கும் நேரில் பார்க்கும் ஒரு வாய்ப்புகிடைக்காதா என்ற ஆவல் ,அது போல குக்கிராமத்தில் பிறந்த வறிய சிறுவர்களுக்கு கடல்க்கரை எப்படி இருக்கும் நேரில் பார்க்கும் ஒரு வாய்ப்புகிடைக்காதா என்ற ஆவல் ,அது போல குக்கிராமத்தில் பிறந்த வறிய சிறுவர்களுக்கு கடல்க்கரை எப்படி இருக்கும் கடலின் இசை எப்படி இருக்கும்கடலின் இசை எப்படி இருக்கும் கடல் அலையில் கால் நணைக்கும் சுகம் பார்வையற்ற மனநிலை உணர்வில் ஊடே புரிந்து கொள்வது எப்படி கடல் அலையில் கால் நணைக்கும் சுகம் பார்வையற்ற மனநிலை உணர்வில் ஊடே புரிந்து கொள்வது எப்படிஹீரோவுக்கு என்றும் வயது இளமை ஊஞ்சல் ஆடவில்லை))) இங்கே ஹீரோவுக்கு எந்த முகப்பூச்சு எதிர்கால முதல்வர்கனவும் இல்லை சாமானிய பஸ் ஓட்டுனர்))) ஹீரோயினி கவர்ச்சியில் அறிமுகம் ஆகவேண்டும் தலுக்கி குலுக்கி))) என்ற கட்டாய திணிப்பு ஏதும் இல்லை அதுதான் சிங்கள சினிமா கூட பல வெளிநாட்டு விருதுகள் பெறுகின்றது)))\nஇலங்கையின் காலிமுகத்திடல் கடற்கரை இயற்கையின் அழகு ,சுற்றுலாவிற்கு பிரபல்யம் என்றும். அரசியலும் இந்த மண் கறைபடிந்த வரலாற்றுச்சோகம்\n( கோல்பேசின் கரைகளில் பார்க்கும் காதல்ஜோடிகள் போல பலர் புலம்பெயந்து பறந்தகதை இன்னொரு உலகம். )\nஇலங்கையில் இயல்பில் கடல் இருப்பதையும் ,கடலைப்பார்க்க ஆசைப்படும் சிறுவர்களின் மனநிலையை எப்படி காட்சிப்படுத்துவது \nபள்ளிக்கூடங்களில் சுற்றுலாப் பயணங்கள் முன்னெடுத்தாலும் இலங்கையில் அரசியல்ச்சூழ்நிலையில் சில தலைமுறைக்கு சீரான கல்விச்சுற்றுலா அமையவில்லை. 1970-/முதல் 2010 வரை\nஇப்போதும் கல்விச்சுற்றுலா தொடரும் துன்பியல்பு என்றாலும், அமைதியான யுத்தம் அற்ற பூமியில் சுற்றுலாவிற்கு கொஞ்சம் கதவுகள் திறப்படுகின்றது .\nஆனாலும் இலங்கையில் கல்வியத்துறையில் நிகழும் தோல்வியுற்ற நிர்வாகச்சீர்கேடும் ,அசமந்தப்போக்கும் ,கல்வியின் வியாபார போக்கும், அரசியல் தலையீடுகளும் ,போதிய வளங்கள் சிறப்பான இடங்களுக்கு பகிரப்பாடாத மத்திய ஆட்சியின் செயல்த்திட்டங்கள் எல்லாம் மாணவ சமூகத்திற்கு ஏமாற்றம் அளிக்கின்றது \nநம்பிக்கை ஊட்டக்கூட்டிய பள்ளிக்கூடம் பட சினேஹா போல ஒரு ஆசிரியை கிராமம் நோக்கி வரமாட்டாவா\nவந்தாலும் சினிமா கவர்ச்சி போல வெளியுலக கலாச்சாரத்தை நேசிக்காமல், பூர்வீக பூமியின் காலாச்சாரத்துடன் பழமையும், புதுமையும் விரும்பிய ஒரு வழிகாட்டும் குரு கிடைத்தால் கடலும் கைகளில் அள்ளும் குளிந்த நிலவு போலத்தான்\nசினிமா என்பதைத்தாண்டி சிறப்புடன் சொல்ல வந்த விடயத்தை மிக நேர்த்தியாக சமூகத்துக்கு சொன்னா இயக்குனருக்கு இந்திக பெர்ணாண்டோவின் இயக்கத்திற்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூக்கள்\nமொழி புரியாதவர்களுக்கு ஆங்கில காட்சி ஓட்டம் உதவி புரியும் . சிறந்த சர்வதேச விருதுகள் பெற்று இலங்கையில் வெள்ளித்திரையில் 150 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய சிறந்த படம் இந்திய இறக்குமதி எதுவும் இவ்வளவு நாட்கள் இலங்கையில் ஆனந்தம் பட பாடல் (சினேஹா )போல பல்லங்குழியில் விட்டம் பார்தேன் வெற்றி என்று எங்கும் சொல்வேன் இந்த சிங்களப்படத்தினை இந்திய இறக்குமதி எதுவும் இவ்வளவு நாட்கள் இலங்கையில் ஆனந்தம் பட பாடல் (சினேஹா )போல பல்லங்குழியில் விட்டம் பார்தேன் வெற்றி என்று எங்கும் சொல்வேன் இந்த சிங்களப்படத்தினை நீங்களும் விரும்பினால் பார்க்க இங்கே - நீங்களும் விரும்பினால் பார்க்க இங்கே - \nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 9/05/2017 05:30:00 pm\nஆஹா சினேகன் மறந்துபோய் இருந்தாலும் நான் விடமாட்டேன்ன்.. சினேகாவை கொண்டுவர வைத்திடுவேனே... பின்ன விரும்பிப்போட்டுக், கை விட்டால்ல்ல் ஸ்னேகாவின் கதி\nகிரி ஹாவா மட்டும் இப்ப பார்த்தன். ரசிக்கிற மாதிரி இருக்கு. நாளைக்கு முழுப் படமும் பார்க்கப் போறன்.\nசின்னப் பிள்ளைகள் போல கார் படம், பனை மரம் எல்லாம் குத்தித்தான் கொமண்ட் போட வேண்டி இருக்குது. :-)\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-17\nகாற்றில் வந்த கவிதை- 24\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-16\nவிழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-15\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்றும் காகம்\nவிழிகளில். வந்திடு கண்ணே விம்மலுடன்-14\nபள்ளிக்கூட டீச்சர் பாடும் தடாகம் சினேஹா போல)))\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nதொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.\nதொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர் தொடர்ந்தேன் இணையத்தில் நானோ தொழில்க்கல்வி படிக்காதவன். தொலைவில் இருந்து வந்தாள் தொடர்கதைபோல நா...\nகையில் ஒரு இதயம் உன்னைப்போல அதில் ரோஜா வாடுது நீ விரும்பாத என் காதல் போல நானும் கீழ் வானமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-18T01:39:20Z", "digest": "sha1:3FRSFNCAWP3CHRW6K5OYO4H25KUX33AQ", "length": 23531, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "மயிலாப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, சென்னை , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி .அன்புச்செல்வன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nமயிலை என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூர், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள ஒரு இடமாகும். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும்.\nஇங்கு கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஆதி கேசவப் பெருமாள் கோயில், மாதவப் பெருமாள் கோயில், மற்றும் கடலோரம் அமைந்துள்ள சாந்தோம் சர்ச் ஆகிய பெற்ற கோயில்கள் உள்ளன.\nதிருவள்ளுவர் இங்கு வாழ்ந்தார் என்று ஒரு கருத்து உள்ளது. இவருக்கும் இங்கு ஒரு கோயில் உண்டு.\nசென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. தொலமியின் நூலில் இது மைலார்பொன் (Mylarphon) எனக் குறிப்பிடப்பட்டு, இது வளம் மிக்கதும் முக்கியத்துவம் கொண்டதுமானதுமான ஒரு இடம் எனக் கூறப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.\nதமிழ் நாட்டில் ஒரு காலத்தில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது, மைலாப்பூரிலும் இச்சமயம் செழிப்புற்றிருந்தது. இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கே நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மயிலையிலிருந்த இந்த நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்னும் நூலை அவிரோதியாழ்வார் என்பவர் இயற்றியுள்ளார். இது தவிர திருக்கலம்பகம், மயிலாப்பூர் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்பனவும் இப் பள்ளி தொடர்பில் எழுந்தவை ஆகும். இச் சமணக் கோயில் தொடர்பான தொல் பொருட்கள் பலவும் சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.[4]\nஆதிநாதர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் மயிலையிலிருந்த 'சினகரம்' என்னும் கோயிலைக் குறிப்பிடுகிறது. இந்தக் கோயில் 1600-ஆம் ஆண்டு கடலால் கொள்ளப்பட்டது.[5]\nஇப்பகுதியில் நீண்டகாலமாகவே இந்து சமயத்தின் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மைலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, இன்றைய கபாலீஸ்வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போத்துக்கீசர் இக்கோயிலை அழித்துவிட்டனர். இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளை அண்டிக் கட்டப்பட்டதாகும்.\nதிருமயிலாப்பூர் - கபாலீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். வாயிலார் நாயனார் அவதரித்த தலமாகும். சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது மற்றும் அம்பாள் மயில் வடிவங் கொண்டு வழிபட்டது ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\nமயிலாப்பூரில் சப்த சிவாலயங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்கிறார்கள். இந்தத் தலங்கள் ஒன்றுக்கொன்று அருகாமயில் அமைந்துள்ளன. இத்தலங்களை கீழ்கண்ட வரிசைப்படி தரிக்க வேண்டும் என்கிறார்கள். [6]\nஇந்த சப்த சிவாலயங்களை சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர். [7]\nஇயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான செயின்ட் தோமஸ் கி.பி 52 இல் கேரளாவுக்கு வந்து அங்கே சமயப் பணி செய்தபின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றும், கி.பி 72 ஆம் ஆண்டில் சென்னை அருகில் உள்ள சின்ன மலை (Little Mount) அருகே கொல்லப்பட்டார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இவரது உடல் மயிலாப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. இவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.[8] தற்போது அந்த இடத்தில் சாந்தோம் பேராலயம் உள்ளது.\nஇராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தர் துவக்கிய ராமகிருஷ்ண மடம் நாடெங்கும் பல கிளைகளைக் கொண்டுள்ளது. மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஒன்று அமைந்துள்ளது. வங்காளத்தைத் தவிர மற்ற இடங்களில் ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் கிளை மடம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. [9] நகருக்குள் பச்சை பசேலென வியாபித்திருக்கும் அமைதி நிறைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வெங்கடசாமி மயிலை. சீனி.\n↑ ஆதிநாதர் பிள்ளைத்தமிழ், ஆதிநாதர் பதிப்பகம், 1956\n↑ தீபம் இதழ் - சப்த சிவ தலங்கள் - மே 20 2016 -பக்கம் 32\n↑ தீபம் இதழ் மே 20 2016 -பக்கம் 42\n↑ சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு,ஸ்ரீராமகிருஷ்ண மடம்,சென்னை,பக்கம் 116\nபர்ச்மன்ஸ், இந்தியாவில் கிறீஸ்தவம், 1998, அணுக்கம் 20th ஜனவரி 2007 (ஆங்கிலத்தில்)\nவெங்கடசாமி மயிலை. சீனி., சமணமும் தமிழும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (ஆங்கிலத்தில்)\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005\nஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்\nஆழ்வார் பேட்டை வங்காள விரிகுடா\nமந்தைவெளி ராஜா அண்ணாமலைபுரம் சாந்தோம்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/do-almonds-help-you-lose-weight-020970.html", "date_download": "2018-08-18T00:38:18Z", "digest": "sha1:A5CY2OW5M42SVYMEG3ENDLWGMIQ6KY2T", "length": 19101, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "பேலியோ டயட்டில் ஏன் பாதாம் முக்கியம் இடம்பெறுகிறது? உண்மையாவே எடை குறையுமா? | Do Almonds Help You Lose Weight? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேலியோ டயட்டில் ஏன் பாதாம் முக்கியம் இடம்பெறுகிறது\nபேலியோ டயட்டில் ஏன் பாதாம் முக்கியம் இடம்பெறுகிறது\nபாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா\nபாதாம் பருப்பில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் 1 அவுன்ஸ் பாதாம் பருப்பில் 1/8 பங்கு பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீன் சத்து அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், எடை குறைப்பு ஆகியவற்றை செய்ய விரும்பும் பலரும் பேலியோ டயட் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அந்த டயட்டின் அடிப்படையே புரோட்டீனும் நல்ல கொழுப்பு உணவுகளும் தான். அதில் பாதாமுக்கு தான் அவர்கள் முதன்மையான இடத்தைத் தருகிறார்கள். அது ஏன் அதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்\nஇந்த பாதாம் பருப்பை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். பச்சையாக அல்லது வறுத்தோ அல்லது சிப்ஸ் வடிவத்திலயோ, மாவு வடிவிலோ, எண்ணெய் வடிவிலோ அல்லது பாதாம் மில்க் வடிவிலோ கிடைக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாதாம் மரங்கள் மிகவும் பழமையானது. இவை கி. மு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜோர்டானில் இருந்துள்ளது என்று சான்றுகள் கூறப்படுகின்றன. அதிலுள்ள பயன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.\nஇந்த நவீன காலத்தில் உடல் பருமனை குறைக்க நாம் தினசரி உடற்பயிற்சி, கடுமையான டயட் முறைகள் என பின்பற்றி வருகிறோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா பாதாம் பருப்பை நமது தினசரி உணவில் சேர்த்து கொண்டாலே போதும் உடல் எடையை குறைக்க இயலும். இதற்கு காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் தான்.\nஇதில் கொழுப்பு அமிலங்களான ஒமேகா 6, ஒமேகா 3மற்றும் ஒமேகா 9 போன்றவை உள்ளன. இந்த நல்ல கொழுப்பு அமிலங்கள் நமது உடலுக்கு மிகவும் சிறந்தது. ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்இல் உள்ள சேச்சுரேட்டேடு கொழுப்பு அமிலங்கள் இதய நோய்கள், பக்க வாதம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். ஆனால் பாதாம் பருப்பை நீங்கள் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆக கூட எடுத்துக் கொள்ளலாம்.\nபாதாம் பருப்பில் உள்ள அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு அமிலங்கள் இதய நோய்கள் மற்றும் இரத்த சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. பாதாம் பருப்பின் மேல் உள்ள தோலில் நிறைய நார்ச்சத்துகள் இருப்பதால் சீரண சக்திக்கும், மலச்சிக்கல் பிரச்சினை இல்லாமல் இருக்கவும் உதவுகிறது.\nஉணவு சரிவர சீரணிக்காத சமயத்தில் அவை கொழுப்பாக தங்கி உடல் பருமனை அதிகரித்து விடும். இந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் பாதாம் பருப்பை தோலுடன் ஸ்நாக்ஸ் மாதிரி சாப்பிட்டாலே போதும் சீரண சக்தி மேம்பட்டு உடல் எடையும் குறையும்.\nஇதை நீங்கள் பச்சையாகவோ அல்லது முழுதாக வறுத்தோ உப்பு சேர்க்காமல் பதப்படுத்தாமல் சாப்பிடலாம். இதன் மூலம் சோடியம் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதை தடுக்கலாம்.\nபாதாம் பருப்பில் அதிக அளவு புரோட்டீன் சத்து இருப்பதால் வலுவான தசைகளின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. உடல் நிறை குறியீட்டு எண்ணை கட்டுப்பாட்டில் வைக்க இதிலுள்ள மோனோசேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் உதவுகின்றன. இதன் மூலம் தொப்பையை குறைக்க இயலும்.\nஇதில் மக்னீசியம், விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை உள்ளன. மக்னீசியம் உடம்பிற்கு ஆற்றலை தரக்கூடிய ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும். மேலும் இது உடற்பயிற்சியின் போது தசைகளை வலுவாக்க உதவுகிறது. விட்டமின் ஈ ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகள் இறுக்கமடைய உதவுகிறது.\nநன்றாக வறுத்த பாதாம் பருப்பை உங்களுக்கு பசி ஏற்படும் போதெல்லாம் சாப்பிடலாம். அவுன்ஸ் கணக்கில் எடுத்துக் கொண்டு வந்தாலே போதும் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.\nபாதாம் பருப்பை உங்கள் காலை உணவில் சேர்க்கும் போது நீண்ட நேரம் பசி உணர்வை கொடுக்காது. வயிறு நிரம்பி இருப்பது போன்று தோன்றும். இதனால் உங்கள் மதிய உணவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வீர்கள். ஓட்ஸ் மற்றும் செரல் உணவுகளில் அப்படியே நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து சாப்பிடலாம்.\nமதிய வேளைகளில் பாதாம் ரைத்தா தயாரிக்கலாம். நறுக்கிய பாதாம் பருப்பை யோகார்ட் உடன் சேர்த்து அதில் அப்படியே உங்களுக்கு பிடித்தமான கார மசாலாக்களை சேர்த்து தயாரிக்கலாம். இதில் நிறைய புரோட்டீன் மற்றும் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல் எடையை எளிதாக குறைக்க இயலும்.\nநறுக்கிய பாதாம் பருப்பை பாஸ்தா அல்லது சாலட் உடன் சேர்க்கலாம். இது கொஞ்சம் கடினமான உணவு என்பதால் கொஞ்சமாக உங்கள் வயிறு நிரம்பும் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.\nஇப்படி தினசரி உங்கள் உணவில் பாதாம் பருப்பை சேர்த்து வருவதோடு போதுமான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் உடல் எடையை குறைக்கும் உங்கள் கனவு நிறைவேறும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n90 வயதுவரை ஆரோக்கியமாக வாழ கருணாநிதி பின்பற்றியவை\nதல தோனி செய்யும் இந்த விஷயங்கள்தான் அவரை இந்த வயசிலும் சுறுசுறுப்பாக வைக்க செய்கிறது...\nசர்க்கரை நோயாளிகள் கட்டாயம் என்ன செய்யணும்... என்ன செய்யவே கூடாது\nநடுத்தர வயசு தொப்பையை எப்படிதாங்க குறைக்கிறது\n ஒரே மாதத்தில் குண்டான உடலை ஒல்லியாக்க இட்லி ஒன்றே போதுமே..\nஉங்க உடம்புக்கேற்ற சரியான டயட்டை தேர்வு செய்வது எப்படி... இது தெரிஞ்சா ஈஸியா வெயிட் குறையும்...\nகுடிச்சா மட்டுந்தான் கல்லீரல் வீங்குமா... இதெல்லாம் சாப்பிடலனாலும் வீங்கும்... ஒழுங்கா இத சாப்பிடுங\nஇனி வீட்ல டீ போடும்போது அதுல ஒரு துண்டு ஆப்பிள் போட்டு கொதிக்க வைங்க... ஏன்னு தெரியுமா\n நீங்கள் எப்போதும் சைஸ்-0 ஆக இருக்கனுமா...\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\n இந்த கருஞ் சீரக விதைகள் உன்னை ஒல்லியாக மாற்றும்டா ..\nMay 24, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபுட் பாய்சன் ஏற்பட்ட தாய் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/celebrities-secretly-dated-each-other-021192.html", "date_download": "2018-08-18T00:40:11Z", "digest": "sha1:A7FV5CTEMJ544HK5DGM3LAQIQTNNKLEB", "length": 18262, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "மீடியா கண்ணில் மண்ணை தூவி ரகசியமாக டேட் செய்து வந்த இந்திய நட்சத்திரங்கள்! | Did You Know These Celebrities Secretly Dated Each Other? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீடியா கண்ணில் மண்ணை தூவி ரகசியமாக டேட் செய்து வந்த இந்திய நட்சத்திரங்கள்\nமீடியா கண்ணில் மண்ணை தூவி ரகசியமாக டேட் செய்து வந்த இந்திய நட்சத்திரங்கள்\nடேட்டிங் என்பது இப்போது சர்வசாதாரணம். தற்போதைய நூற்றாண்டில் a அனைவருக்கும் அனைத்திலும் வேண்டியது சூப்பர் ஃபாஸ்ட் ரிசல்ட். எதையும் காத்திருந்து பெற இயலாது. மொபைலை மாற்றுவதை போல தான் காதலையும் மாற்றுகிறார்கள். புதிய அப்டேட் இல்லை என்றால்... இதெல்லாம் அசால்ட்டு.\nமுன்பெல்லாம் செய்திகளில் ஏதேனும் ஹீரோ, ஹீரோயின் காதலிக்கிறார்கள், ஒன்றாக உலா வருகிறார்கள் என்ற செய்தி வருடத்திற்கு ஒன்று இரண்டு தான் வரும். ஆனால், இப்போது நடிகர், நடிகைகள் உலா வருவதும், ஒன்றாக பார்ட்டி செய்வதும் தான் செய்தியே. சிலர் இதை அவர்கள் நடிக்கும் படத்திற்கு பிரமொஷனாகவும் செய்துக் கொள்கிறார்கள்.\nஎத்தனை மறைத்தாலும் மீடியா கண்களில் டேட்டிங் செய்யும் நட்சத்திரங்கள் மாட்டிக் கொள்வார்கள். ஆனால், எல்லாருடைய கண்களிலும் மண்ணை தூவிவிட்டு இரகசியமாக டேட் செய்த பிரபலங்களும் இருக்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅர்ஜுன் கபூர் - அர்பிதா கான்\nபோனி கபூர் மற்றும் அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன் அர்ஜுன் கபூரும், சல்மான் கானின் சகோதரி அர்பிதா கானும் 18 வயதில் இருந்தே டேட் செய்தி வந்தனர். இவர்களது டேட்டிங் இரண்டாண்டுகள் வரை நீடித்தது.\nஅர்ஜுன் கபூர் ஒருமுறை, தானும் அர்பிதாவும் சீரியஸான காதல் உறவில் இணைந்திருந்தோம் என்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தார். இப்போது அர்பிதா ஆயுஷ் ஷர்மா என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.\nஇப்போதும் அர்ஜுன் கபூரும், அர்பிதாவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.\nஜாக்குலின் பெர்னாண்டஸ் - சஜித் கான்\nஹவுஸ்புல் மூன்றாம் பாகத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சஜித் கான் சேர்ந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் மூன்று வருட காலம் டேட் செய்து வந்தனர். இரசிகர்கள், ஊடகங்கள் அறியும் முன்னரே இந்த ஜோடி பிரிந்துவிட்டது.\nவெளிப்படையாக தாங்கள் டேட் செய்து வந்ததை இவர்கள் இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் பல நிகழ்சிகள் மற்றும் பார்ட்டிகளில் ஒன்றாக சேர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருந்தனர்.\nரன்பீர் கபூர் - அவந்திகா மாலிக்\nமிக சிலருக்கு மட்டுமே தெரியும் ரன்பீர் கபூர் இம்ரான் கானின் மனைவியான அவந்திகா மாலிக்கை டேட் செய்தார் என்று. இவர்கள் இருவரும் ஐந்தாண்டுகள் டேட் செய்து வந்ததாக அறியப்படுகிறது.\nஇப்போது இவர்கள் இருவரும் நட்புடனே இருக்கிறார்கள். இம்ரான் கான் மற்றும் அவந்திகா இருவரும் ஒரு தேவதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீபிகா படுகோனே - யுவராஜ் சிங்\nரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும் டேட் செய்தனர். அவர்கள் பிரிந்த பிறகு தீபிகாவும் ரன்வீர் சிங்கும் காதலிக்க துவங்கினார்கள் என்று திரை உலகிற்கே தெரியும். ஆனால், இதற்கு எல்லாம் முன்னர் தீபிகாவும் யுவராஜ் சிங்கும் டேட் செய்து வந்திருக்கிறார்கள்.\nயுவராஜ் சிங்கின் ஆட்டத்தை பார்க்கவே சிலமுறை மைதானத்திற்கு வருகை புரிந்தாராம். ஆனால், இவர்கள் இருவர் மத்தியிலான டேட்டிங் உறவு சிறப்பாக அமையவில்லை. பிறகு இருவரும் அவரவர் காதலர்களுடன் சந்தோசமாக வாழ துவங்கிவிட்டனர்.\nரன்வீர் சிங் - அஹானா தியோல்\nதீபிகாவும், ரன்வீரும் ஈருயிர் ஓருடல் என்று அனைவரும் அறிவார்கள். ஆனால், ரன்வீரின் உயிர் கொஞ்ச காலம் வேறொரு நபரிடம் இருந்தது. ஆம் அஹானா தியோல், இவர் ஹேமா மாலினியின் இளைய மகள். இவர்கள் இருவரும் கொஞ்ச காலம் டேட்டிங் உறவில் இருந்தனர்.\nஅப்போது அஹானா தியோல் கல்லூரி பயின்று வந்தார் என்று அறியப்படுகிறது. சிறிது காலமே நீடித்து இந்த உறவு பிரிந்துவிட்டது. அஹானா இப்போது திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.\nஆதித்யா ராய் கபூர் - அஹானா தியோல்.\nரன்வீரை பிரிந்த பிறகு, வைபவ் வோஹ்ராவை திருமணம் செய்து கொள்வதற்கு முன் அஹானா தியோல் ஆதித்யா ராய் கபூரை டேட் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நான்காண்டுகள் டேட் செய்து வந்துள்ளனர். அப்போது ஆதித்யா ராய் கபூர் இந்தி சினிமாவில் அறிமுகமாகவில்லை.\nஷாஹித் கபூர் - வித்யா பாலன்\nஷாஹித் கபூர் மற்றும் வித்யா பாலன் இருவரும் கிஸ்மத் கனக்ஷன் என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் நடுவே ஈர்ப்பு ஏற்பட்டது என்றும். சிறிது காலம் இவர்கள் டேட் செய்து வந்தனர் என்றும் அரசல்புரசலாக பேசப்பட்டது.\nஇன்னுமே கூட சில சமயம் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் பொது நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்ளும் போது சரியாக முகம் கொடுத்து பேசிக் கொள்வதில்லை என்று அறியப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்\nகள்ளதொடர்பில் இருந்த கணவனை மனைவிகள் வசமாக கண்டுபிடித்த வழிகள்\n எக்காரணம் கொண்டும் உறவில் இந்த 7 விஷயத்தில் போலியாக நடிக்க வேண்டாம்\nநானும், என் கணவரும் உறவுக் கொண்டு 10 ஆண்டுகள் ஆகிறது - இரகசிய டைரி #009\nசெக்ஸ் குறித்த உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது\nகணவரை மிகவும் நேசிக்கிறேன், ஆனால் அவரது நண்பர் மீதும் ஈர்ப்புக் கொண்டுள்ளேன் - இரகசிய டைரி #008\n'இந்த ஹோட்டலில் தங்கள் செக்ஸ் அனுபவம்...' குறித்து பகிரும் ஜோடிக்கு ஃப்ரீ ஹனிமூன்\nஎன் மனைவி மீதான ஈர்ப்பும், கவர்ச்சியும் இழந்துவிட்டேன் - இரகசிய டைரி #001\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா ரீதியான பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nபலரும் அறியாத ஸ்ரீதேவி மற்றும் அவரது முதல் கணவர் மிதுன் இடையேயான காதல் கதை\nஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்கிய மனைவியின் முகத்தை சிதைத்த கொடூர கணவன்\nநீங்க அட்லீஸ்ட் ஒருதடவையாவது அனுபவிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்\nJun 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஆண்களே... உங்கள் செல்போன் உங்களுக்கு ஆண்மை குறைவையும், மலட்டு தன்மையையும் ஏற்படுத்துமாம்...\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-18T01:23:12Z", "digest": "sha1:7YXRNDSAKYB4CGIADSB3AKZNBRKHZBQN", "length": 7888, "nlines": 224, "source_domain": "discoverybookpalace.com", "title": "எம்.ஜி.ஆர் அகம் புறம், மாவலி, நக்கீரன் வெளியீடு, 65", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nகடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு நக்கீரன் இதழின் மாவலி பதில்களில் வெளியான அகம்- புறம் ஒவ்வொன்றும் ஒருவிதம் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை அரசியல் வாழ்க்கை, ஜெயல்லித்தாவுடனான அவரது உறவு. கட்சி தொண்டர்களை அவர் அணுகிய விதம், ஆட்சியில் இருந்தபோது அவர் அடித்த பல்டிகள் மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களிடம் அவரின் அனுசரணையான போக்கு, சரணாகதிப் ப்டலங்கள் என எம்.ஜி.ஆர் பற்றிய எல்லா ரசபாவனைகளையும் அருமையாக பதிவு செய்திருந்தார் தம்பி லெனின். குறிப்பாக வெளிப்பார்வையில் எம்.ஜி.ஆருக்கு இருந்த வள்ளல் இமேஜையும் தாண்டி இருந்த புற இமேஜை மிகநுட்பமாக சொல்லியிருந்தார்.\nஅகம், புறம், அந்தப்புரம் Rs.1,111.00\nஅகம் புறம் மரம் Rs.70.00\nஎம்.ஜி.ஆர் அகம் புறம் Rs.65.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=38&t=723&p=7290&sid=252155d706cb2e0d517f7fd0adf20645", "date_download": "2018-08-18T00:42:49Z", "digest": "sha1:ECZDUKTK3KPGH74WYDIEQRQVSKCHBTLD", "length": 29897, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம் - Page 2 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ ஐயங்கள் (Doubts)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி.\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nபிரபாகரன் wrote: நல்ல தகவல் சரண்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 17th, 2015, 9:04 pm\nஇன்று பலருக்கு இது பயன்படும் என நினைக்கிறேன்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vaamukomu.blogspot.com/2016/11/blog-post_25.html", "date_download": "2018-08-18T00:21:54Z", "digest": "sha1:PGU6CY6OXQSSOKVT5THEIYGWPZC6ABJZ", "length": 14582, "nlines": 148, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஊதா நிற செம்பருத்தி, பொறுப்புமிக்க மனிதர்கள்-பார்வை", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 25, 2016\nஊதா நிற செம்பருத்தி, பொறுப்புமிக்க மனிதர்கள்-பார்வை\nஊதாநிறச் செம்பருத்தி - சிமாமந்தா எங்கோசி அடிச்சி\nஆசிரியரின் மிக நீண்ட சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் ஆங்காங்கு வாசித்த அனுபவம், மற்றும் பிரேம் (ரமேஷுடன் இணைந்து சுரேஷ் பாலா போல, எழுதிய சில புத்தகங்கள்) செய்த மொழிபெயர்ப்பு என்னை இந்த புத்தகத்தை வாங்கத் தூண்டியதாக கொள்ளலாம். யார் வெளியிட்டார்கள் என்பதை கவனிக்கும் பொறுமை கூட எனக்கில்லை.\nநாவலை வாசிக்கத்துவங்கி கிட்டத்தட்ட 80 பக்கம் வரை வந்த பிறகுதான் எனக்குள் ஒரு சலிப்பும், வேதனையும் நைஜீரியாவிலிருந்து காற்று வழி வந்து ஒட்டிக் கொண்டது இவ்வளவு சலிப்பான ஒரு மொழிபெயர்ப்பு நாவலை நான் என் வாழ்நாளில் வாசித்ததே இல்லை இவ்வளவு சலிப்பான ஒரு மொழிபெயர்ப்பு நாவலை நான் என் வாழ்நாளில் வாசித்ததே இல்லை ஒருவேளை நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனாக இருந்திருந்தால் இந்த நாவலைத்தான் சிறப்பு என்றும் கூட கூறிவிடலாம்.\nஎந்த நேரமும் தேவாலய மணி ஒலித்துக் கொண்டிருக்கும் நாவல் இது. சாப்பாட்டுக்கும் முன்பாக ,பின்பாக, வாசிக்கப் போவற்கும் முன்பாக, என்று எந்த நேரமும் கடவுள் சிந்தனை சிமாமந்தா பெண்ணியத்தின் ஒரு முக்கிய பகுதியான சிமாமந்தா பெண்ணியத்தின் ஒரு முக்கிய பகுதியான கருப்பின பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பவர் என்று முன்பாக குறிப்புகள் வாயிலாக அறிந்தது தான்.\nபடிமம், ஆண் தன்மை, அமைப்பின் ஒரு பகுதி, சிதைவாக்கம்,பெண்ணிய இயங்கியல், மரபு, தொன்மம், தொல் படிமம், நீண்ட காலமாயிற்று இவைகளிடமிருந்து தப்பித்து வந்து கடைசிச் செய்தி- கருப்பினப் பெண்ணியத்தின் செய்தியாக பதிவுறும் சொற்கள்\nகாம்பிளி என்கிற படிக்கப்போகும் பெண்வழியாக அவள் சொல்வது போன்று செல்லும் இந்த நாவலில் தன் அம்மா, அப்பாவிற்கு டீயில் விஷம் தந்து கொன்றதை ஏற்றுக் கொள்கிறாள். வீட்டினுள் அதிகாரம் செலுத்தும் தொன்மம் சார்ந்த கணவர்களை கொன்று விடலாம் என்கிற பாடத்தை அம்மா வாயிலாக காம்பிளி அறிந்து கொள்ளும் குடும்பக்கதை அழகு தான். காம்பிளியும் நாளை அல்லது அவள் போன்ற பெண்கள் இதை தொடர வேண்டுமென்பதே ஆசை என்பதே இந்த மொழிபெயர்ப்புக்கு வகை செய்திருக்கும். யாரும் யாரையும் திருந்திக்கொள்ள அவசியமே இல்லை கொன்றே வாழலாம், சிறை செல்லலாம்\nஒரு நாவலை தமிழில் வாசிப்பவர்கள் அனைவரும் பல பல வழிகளை திறந்து வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருக்கிறார்களா என்று இப்போது பயம் கவ்வுகிறது என்று இப்போது பயம் கவ்வுகிறது கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்காக இன்னமும் மொழிபெயர்ப்பு நாவல்களை (ஆங்கில வாசிப்பில்லாதோர்.. எமைப்போன்று) வாசிப்போர் வரிசையில் தான் நான். கலாச்சாரங்கள் நமக்கு நன்மை பயக்கட்டும்\nபொறுப்பு மிக்க மனிதர்கள் (நாவல்)\nகடற்கரையில் தங்கள் அம்மாக்களைப் போன்ற தோற்றம் வந்து விடக்கூடாதே என்று பயந்து ஓடும் நல்ல ஷூக்கள் அணிந்திருந்த தனித்த இளம்பெண்கள் விரைவாக நடந்து சென்றார்கள் கதையின் தலித்திய நாயகன் அய்யன் மணியின் கற்பனைகளிலிருந்து நாவல் துவங்குகிறது. எந்த நேரமும் மகன் ஆதியின் கையேட்டில் புகார்களை எழுதித்தரும் கிறிஸ்துவப்பள்ளியாசிரியர்கள் கதையின் தலித்திய நாயகன் அய்யன் மணியின் கற்பனைகளிலிருந்து நாவல் துவங்குகிறது. எந்த நேரமும் மகன் ஆதியின் கையேட்டில் புகார்களை எழுதித்தரும் கிறிஸ்துவப்பள்ளியாசிரியர்கள் அவனைப்பற்றிய கவலையில் இருக்கும் அய்யன் மணியின் மனைவி ஓஜா என்று நாவல் ஒரு குடும்ப அமைப்பிற்குள் உடனடியாக வந்து விடுகிறது.\nஆரம்பத்தில் ஆதியை அப்பா அம்மா விளையாடக் கூப்பிடும் சிறுமியை கீழே படுக்க வைத்து மேலே.. பலர் வந்து அவனைப் பிரித்தெடுக்கிறார்கள். இரவில் அய்யன் மணியும், ஓஜாவும் மகன் உறங்கி விட்டானென அப்பா அம்மா விளையாட்டைத் துவங்கும் சமயத்தில் ஆதி இருளில் எழுந்தமர்ந்து, “நேத்து நான் இதை விளையாடிய போது அவங்க விடலை” என்கிறான்.\nஆதியின் பள்ளியில் சகோதரி சேஸ்டிடி அய்யன் மணியை, ஏன் நீங்கள் இயேசுநாதரை ஏற்றுக் கொள்ளக் கூடாது, என்றும், ஆதியின் மேல் கல்விச் செலவுகளை சலுகைகள் காப்பாற்றுமென்கிறாள். அய்யன் மணி சகோதரியை ஜமாளித்து வெளியேறும் காட்சியில் புரிந்து விடுகிறது அவனின் தனிப்பட்ட சில சாமார்த்தியங்கள். அது நாவலின் முடிவு வரை தொடர்கிறது. மகனிடம் இல்லாத சாமார்த்தியங்கள் இருப்பதாக உலகை நம்ப வைக்க அவன் நாவலின் முடிவு வரை திட்டங்களை வகுத்துக் கொண்டேயிருக்கிறான். பிராமணர்கள் மீதான தன் கோபத்தை ஒரு தலித்தின் கோபமாக நாவல் முழுக்க பதிவு செய்தபடி வந்து கொண்டே இருக்கிறார் ஆசிரியர்.\nதமிழில் க. பூரணச்சந்திரன் மிக லகுவாக மொழிபெயர்த்திருக்கிறார்.\nஎதிர் வெளியீடு : விலை 250. பேச : 04259-226012.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (45) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nஜி.கார்ல் மார்க்ஸின் கதைகள்- ஒரு பார்வை\nஊதா நிற செம்பருத்தி, பொறுப்புமிக்க மனிதர்கள்-பார்வ...\nசெல்லமுத்து குப்புசாமி பார்வையில் தானாவதி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kallarai.com/ta/index-544.html", "date_download": "2018-08-18T00:36:47Z", "digest": "sha1:7MQ6WADI6J4XZLOFYYXZ5VK7A42DOD5O", "length": 15295, "nlines": 234, "source_domain": "www.kallarai.com", "title": "முகப்பு - Lankasri Notice", "raw_content": "\nபிறந்த இடம்: புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மாசார் பளை\nவாழ்ந்த இடம்: யாழ். மாசார் பளை\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: நோர்வே Stavanger\nவாழ்ந்த இடம்: நோர்வே Trondheim\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு\nவாழ்ந்த இடம்: வவு/ பெரியதம்பனை, சுவிஸ் Laufen\nபிரசுரித்த திகதி: 8 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மானிப்பாய்\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை\nவாழ்ந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை, கொழும்பு\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபெயர்: டெய்சி கருணாதேவி தேவதாசன்\nபிறந்த இடம்: யாழ். சுண்டுக்குழி\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். பருத்தித்துறை\nவாழ்ந்த இடம்: யாழ். செம்பியன்பற்று தெற்கு\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: மன்னார் நாகதாழ்வு\nவாழ்ந்த இடம்: மன்னார் குழந்தை யேசுபுரம்\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். காரைநகர் வலந்தலை\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வசாவிளான்\nவாழ்ந்த இடம்: யாழ். இளவாலை\nபிரசுரித்த திகதி: 17 ஓகஸ்ட் 2018\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சரசாலை\nவாழ்ந்த இடம்: கிளி/ வட்டக்கச்சி\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். கரணவாய் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சுதுமலை\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 16 ஓகஸ்ட் 2018\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி\nவாழ்ந்த இடம்: யாழ். மீசாலை கிழக்கு\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: வவு/ கனகராயன்குளம்\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வசாவிளான்\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். திருநெல்வேலி\nவாழ்ந்த இடம்: யாழ். சாவகச்சேரி, நல்லூர்\nபிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை\nவாழ்ந்த இடம்: யாழ். மல்லாகம்\nபிரசுரித்த திகதி: 14 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு\nபிரசுரித்த திகதி: 14 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நீராவியடி\nபிரசுரித்த திகதி: 13 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மாவிட்டபுரம்\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி\nவாழ்ந்த இடம்: லண்டன் Wembley\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபிரசுரித்த திகதி: 20 நவம்பர் 2010\nபிறந்த இடம்: சாவகச்சேரி மடத்தடி\nவாழ்ந்த இடம்: சாவகச்சேரி மடத்தடி\nபிரசுரித்த திகதி: 18 நவம்பர் 2010\nபிறந்த இடம்: சீனாப்புலம் வதிரி கரவெட்டி\nபிரசுரித்த திகதி: 18 நவம்பர் 2010\nபிறந்த இடம்: சுழிபுரம் தொல்புரம்\nபிரசுரித்த திகதி: 18 நவம்பர் 2010\nபிறந்த இடம்: நவாலி வடக்கு\nவாழ்ந்த இடம்: நவாலி வடக்கு\nபிரசுரித்த திகதி: 17 நவம்பர் 2010\nபிரசுரித்த திகதி: 16 நவம்பர் 2010\nபிரசுரித்த திகதி: 16 நவம்பர் 2010\nபிரசுரித்த திகதி: 15 நவம்பர் 2010\nபிறந்த இடம்: குடத்தனை மேற்கு\nபிரசுரித்த திகதி: 15 நவம்பர் 2010\nபிறந்த இடம்: தெல்லிப்பழை கொல்லங்கலட்டி\nபிரசுரித்த திகதி: 14 நவம்பர் 2010\nபிறந்த இடம்: அச்சுவேலி தோப்பு\nபிரசுரித்த திகதி: 13 நவம்பர் 2010\nபிறந்த இடம்: மட்டக்களப்பு வந்தாறுமூலை\nபிரசுரித்த திகதி: 13 நவம்பர் 2010\nபிரசுரித்த திகதி: 12 நவம்பர் 2010\nபிறந்த இடம்: புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 12 நவம்பர் 2010\nபிரசுரித்த திகதி: 11 நவம்பர் 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lifenatural.life/2017/12/food-log-week-32.html", "date_download": "2018-08-18T00:35:27Z", "digest": "sha1:PP5FRV6OU2ISPLLFH4CUKBOOFNU335DU", "length": 6728, "nlines": 153, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Food Log - Week 32", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/17644", "date_download": "2018-08-18T00:22:17Z", "digest": "sha1:R2G4M2YOBE5R3RIMINL2XULICBIVUTMS", "length": 12963, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nகத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள் : புதிய சட்டம் அமுல்\nகத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள் : புதிய சட்டம் அமுல்\nதனி ஒரு நபரையோ, குழுவையோ அல்லது விபத்து சம்பவங்களையோ தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் இரு வருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டில் புதிய சட்டம் ஒன்று கடந்த 8ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகையடக்கத் தொலைபேசி மூலம் பொதுவில் புகைப்படம், வீடியோ எடுப்பது தொடர்பான புதிய சட்டம் கத்தாரில் கடந்த 8 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகத்தாரின் குற்றவியல் சட்டக்கோவையின் 333 சரத்தின் படி இன்படி, தனி ஒரு நபரையோ அல்லது குழுவையோ அவர்கள் அறியாத வேளையில் அவர்களின் கடிதத்தை திறந்து பார்த்தல், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டல், தனிப்பிட்ட கலந்துரையாடல்களை ஒலிப்பதிவாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்தல் போன்ற சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்.\nஇதேபோன்று வீதி விபத்துக்களையும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் புகைப்படங்களையும் அவர்களின் அனுமதியின்றி கையடக்கதொலைபேசியில் புகைப்படமாகவோ வீடியோவாகவோ எடுத்து சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றினால் இருவருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும்.\nகடந்த இரு வருடங்களாக மேற்படி சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு கத்தாரில் இடம்பெற்ற இரு விபத்து சம்பவங்களையடுத்தே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை புகைப்படமாக பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஇதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோஹாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்குவதை வீடியோவாக பதிவு செய்து பதிவேற்றிய இரு நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.\nஇந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்துரையாடல்கள் மற்றும் சட்ட சீர்திருத்தங்களையடுத்தே இந்த புதிய சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nவீதி விபத்து வீடியோ புகைப்படம் கத்தார் புதிய சட்டம் கையடக்கத் தொலைபேசி\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇந்தியாவின் டெல்லியில் அமைந்துள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது\n2018-08-18 01:06:16 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nஅமெரிக்க அரசாங்கம் மியன்மாரில் இடம்பெற்றது இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிடாததும் முக்கியமானது.\n22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது\nபாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார்.\n2018-08-17 18:56:36 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nசுவீடனில் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன்னை நேர்முகப் பரீட்சை செய்த நபரிடம் கை குலுக்காமல் பேசிய காரணத்தினால் குறித்த பெண்ணுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\n2018-08-17 15:12:03 சுவீடன் இஸ்லாமியப் பெண் நேர்முகப் பரீட்சை\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது - கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டில்லியிலுள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது.\n2018-08-17 14:58:31 பிரதமர் வாஜ்பாய் டில்லி\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/makeup-tips-for-beauties-with-dark-skin-to-enhance-beauty-020951.html", "date_download": "2018-08-18T00:37:43Z", "digest": "sha1:5P5KTUOSSVYPFNHX6JHIZWDSPSBDDIMZ", "length": 17028, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "கருப்பா இருந்தாலும் சும்மா கலையா இருக்கணுமா?... இத மட்டும் செய்ங்க போதும்... | Makeup tips for beauties with dark skin, to enhance beauty - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருப்பா இருந்தாலும் சும்மா கலையா இருக்கணுமா... இத மட்டும் செய்ங்க போதும்...\nகருப்பா இருந்தாலும் சும்மா கலையா இருக்கணுமா... இத மட்டும் செய்ங்க போதும்...\nபெண்களை இன்றைய நாட்களில் இன்னும் அழகாக காட்ட உதவுவது மேக்கப். இந்த மேக்கப்பை தேர்வு செய்வதற்கு சருமத்தின் நிறம் மிகவும் முக்கியம். சரும நிறத்திற்கு ஏற்ற மேக்கப் பயன்படுத்துவதால் நீங்கள் மேலும் அழகாக தோன்றலாம். கருப்பான நிறத்தில் இருப்பவர்கள் அதிகமாக மேக்கப் பயன்படுத்தினால் நன்றாக இருக்காது என்று இன்றும் பல பெண்கள் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல.\nகருப்பாக இருப்பவர்கள் மேக்கப் மூலம் இன்னும் அழகாக தோன்றலாம் என்பதற்கு பல நடிகைகள் உதாரணம். கருமை நிறத்தில் உள்ளவர்களுக்கான 10 மேக்கப் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினசரி உங்கள் சருமத்தை தூய்மை படுத்துவதால் சரியான மேக்கப் குறிப்புகள் நல்ல பலனைக் கொடுக்கும். ஆகவே கருமை நிறம் கொண்டவர்கள் தொடர்ந்து க்ளென்சிங் முறையால் சருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். க்ளென்சிங் அல்லது மாய்ச்சரைசிங் செய்வதை புறக்கணிக்கும்போது உங்கள் சருமத்தில் திட்டுகள் தோன்றும். இதனால் சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்வது முக்கியமாகிறது. ஒரு மென்மையான மேக்கப்பிற்கு சீரான சரும நிறம் தேவை என்பதை கருப்பு நிறத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகருமை நிறத்தில் உள்ளவர்கள் முடிந்த வரையில் அவர்கள் நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனை தேர்வு செய்ய வேண்டும். க்ரீம் அல்லது திரவம் எந்த நிலையிலும் பவுண்டேஷன் இருக்கலாம். அடர்ந்த நிறங்கள் கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் நிறத்திற்கு எடுப்பாக இருக்காது. பவுண்டேஷன் கனமாக போடுவதை தவிர்க்கவும். லைட் ஷேடு பவுண்டேஷன் உங்கள் நிறத்திற்கு பொருந்தாது.\nக்ரீம் சார்ந்த லைனரை பயன்படுத்தலாம். இவை உங்கள் சருமத்தொடு ஒன்றி இருக்கும் . இதனால் ஒரு இயற்கையான தோற்றம் பெறலாம். ஐ ஷடோவிற்கு அடர்ந்த நிறங்களான ப்ரூன், பர்கண்டி, காப்பர் போன்றவற்றை பயன்படுத்தலாம். மெட்டாலிக் ஷேடு மூலம் உங்கள் கண்களை இன்னும் கவர்ச்சியாக மாற்றலாம்.\nடார்க் பீச், வெண்கலம், டீப் ஆரஞ்சு, கோரல், ஒயின், ரோஸ் மற்றும் கோல்ட் போன்ற எந்த வகை அடர் ஷேடிலும் ப்ளஷ் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்திற்கு மிகவும் ஏற்றது.\nபளபளப்பு இல்லாத மற்றும் பளபளப்பான லிப் கலர், கருப்பு நிறத்திற்கு எடுப்பாக இருக்கும். விறைப்பான ஷேடுகளை தேர்வு செய்யலாம். பெர்ரி, ப்ளம்ஸ், பர்கண்டி, போன்ற அடர் ஷேடுகளை தேர்வு செய்யலாம். ஆனால் லிப் கலர் பயன்படுத்தாத வெற்று உதடுகள் இன்னும் அழகாக இருக்கும். உங்கள் உதடுகள் கருமையாக இருப்பதாக உணர்ந்தால் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய அளவு பவுண்டேஷன் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் நிறம் பளிச்சென்று இருக்கும். பழுப்பு, மரூன், மகோகனி, போன்ற நிறங்களை தவிர்க்கலாம். இந்த நிறங்களை பயன்படுத்துவதால் உங்கள் முகம் மேலும் கருமையாக தோன்றலாம்.\nஉங்கள் சரும நிறம் சீராக தோன்றுவதற்கு கன்சீளர் பயன்படுத்தலாம். கருமை நிற சருமம் உள்ளவர்கள் பளிச் நிறங்களான சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களை தேர்வு செய்யலாம். லூஸ் பவுடர் பயன்படுத்தி இதனை லைட்டாக மாற்றிக் கொள்ளலாம்.\nகருமையான சருமம் உள்ளவர்களும் சூரிய ஒளியின் புற ஊதா கதிர் தாக்குதலால் சேதமடையலாம். உங்கள் சரும வகைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீன் பயனடுத்துவது நல்லது. இதனை கருமை நிறம் உள்ளவர்களும் கண்டிப்பாக பயன்படுத்தலாம்.\nகருமை நிற சருமம் உள்ளவர்கள் பவுடர் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் சருமம் உள்ளவர்கள், பெரிய பவுடர் பிரஷ் பயன்படுத்தி ட்ரான்ஸ் லுசென்ட் பவுடர் பயன்படுத்தலாம்.\nகருமை நிறம் உள்ளவர்கள் மேக்கப் ஷேடுகள் போல், அடர்ந்த நிறத்தில் நகத்திற்கு பாலிஷ் போட வேண்டாம். ஷைனி பிரான்ஸ், கூல் க்ரீன், பர்பிள் போன்ற நிறங்களை பயன்படுத்தலாம்.\nஹேர் கலரிங் செய்யும்போது அடர் நிறங்களை தேர்வு செய்வது நல்லது. செர்ரி, கார்நெட், பர்கண்டி போன்ற நிறங்கள் ஏற்புடையதாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இளமைக்கான இரகசியம் இதுதான்..\nஉதட்டில் ஏன் பரு வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆண்களே... உங்கள் வெள்ளை முடியை கருகருவென மாற்ற இந்த பூக்களே போதும்..\nஇந்த 7 அழகியல் டிப்ஸ் போதும், ஆண்களின் முகத்தை பட்டுப்போல மாற்ற..\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநம்ம வீ்ட்டு குழந்தைக்கு இப்படி முடி இருந்தா எப்படி இருக்கும்... அதுக்கு என்னலாம் பண்ணணும்\nஆண்கள் மார்பு முடியை ஷேவ் செய்யலாமா எங்கு செய்யலாம்\nஇப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்\nMay 23, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilmadhura.com/2017/03/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-12/", "date_download": "2018-08-18T00:55:48Z", "digest": "sha1:T3JNQT6IOJAV5ERF6M7BCZTYSGRN3ECD", "length": 11382, "nlines": 167, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 12 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nசென்ற கதைக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முன்பே சொன்னது போல வேலையில் சற்று பிஸி. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். சற்று ப்ரீ ஆனதும் பெரிய பதிவாகத் தர முயல்கிறேன். இனி இன்றைய பதிவு.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஉள்ளம் குழையுதடி கிளியே – 13\nஅருமையான பதிவு. ஹிமாவின் பொறுமை அழகு, துருவ் ரொம்ப சமத்து. அழகாக, ஆழமாக சரத்தின் தாயார் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.\nபசக் ன்னு உயர்ந்த பரிசு கொடுத்து ….\nபாட்டியை கவிழ்த்துட்டான் போல …\nசாவியின் ஆப்பிள் பசி – 12\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 28\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (515) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (479) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (4) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (12) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (88)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-jul-31/fa-pages/121292-fa-pages.html", "date_download": "2018-08-18T00:26:43Z", "digest": "sha1:CAORGTVO2MDLDA6FT7JBNCYFG56LIWAN", "length": 18713, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "சோப்புகளை வாங்கி விற்போமா? | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nகேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்\nகேரளா வெள்ளம் - கையில் கட்டுடன் களத்தில் அமலா பால்\nவைக்கம் விஜயலட்சுமியின் பயோபிக் உருவாகிறது \nராதா மோகனின் `60 வயது மாநிறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\n`தைவானை நாடு என்று ஏன் அழைக்கக் கூடாது’ - சீன இளைஞரை சிறைக்குத் தள்ளிய கேள்வி\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் - தொல்லியல் துறையினர் அதிர்ச்சி\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\nசுட்டி விகடன் - 31 Jul, 2016\nஅப்பாவும் அம்மாவும் வீட்டு நண்பர்கள்\nகூலாக சில ஸ்கூல் ஆப்ஸ்\nஐஸ் ஏஜ் ஐஸ் மெசேஜ்\nசுழற்றி விடு... இட மதிப்பைக் கண்டுபிடி\n\"நடிப்பு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி\"\nஉற்சாகம் தந்த ஓவியத் திருவிழா\nஅதிரடி ரோபோக்கள் அசத்தும் வசீகரன்கள்\nகுறும்புக்காரன் டைரி - 15\nசுட்டி விகடன் சந்தா படிவம்\nமாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கவும். பேனா, பென்சில், சாக்லேட், சோப்பு, எண்ணெய்... போன்ற பல பொருட்களைக் கொடுக்கவும். அவற்றின் விலைகளைக் குறிப்பேடுகளில் எழுதச்செய்து, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைச் செய்முறையாகச் செய்யவைக்கலாம்.\nகூட்டல்: 2 சோப்பு, 1 பாக்கெட் எண்ணெய், ஒரு பேனா இவற்றின் மொத்த விலை எவ்வளவு\nகழித்தல்: உன்னிடம் தரும் 100 ரூபாய்க்கு 2 பென்சில்கள், ஒரு பாட்டில் ஷாம்பு வாங்கினால், மீதம் எவ்வளவு ரூபாய் இருக்கும்\nபெருக்கல்: 10 சாக்லேட்டுகளின் விலை 5 ரூபாய் எனில், 50 சாக்லேட்டுகள் வாங்க எவ்வளவு பணம் தேவை\nவகுத்தல்: ஒரு பேப்பர் கப்பில் 50 கிராம் பருப்பை நிரப்பலாம் எனில், 200 கிராம் பருப்பை எத்தனை கப்புகளில் நிரப்பலாம்\nஎண்களை எழுதி கணக்குகளைச் செய்வதற்குப் பதிலாக, செயல்பாடாகச் செய்யும்போது, மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்வர்.\nசுழற்றி விடு... இட மதிப்பைக் கண்டுபிடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahaperiyavapuranam.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-18T00:48:58Z", "digest": "sha1:KG2RAYAE2EVX4BGNWRG55OCCAEHFSZYG", "length": 13675, "nlines": 143, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : ஸ்ரீ மகாபெரியவா ஸ்துதி", "raw_content": "\nHomePeriyava LibraryMusicஸ்ரீ மகாபெரியவா ஸ்துதி\nஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது பதினைந்தாவது வயதில் (1983 ம் வருடம் மே மாதம் 29ம் தேதி) பட்டம் ஏற்றவுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு பெரியவா பற்றி எழுதிய தசகம் (பத்து ஸ்லோகம் அடங்கியது).\n1.ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும் பக்தாநாம் ஹிதவக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே\nவேதங்கள் ஸ்மிருதிகளில் கூறப்பட்ட அனைத்து தர்மங்களையும் அனுஷ்டித்துக்காட்டி ஈடுபடுபவரும்,உலகின் குருவாக விளங்குபவரும் பக்தர்களுக்கு நன்மையைப் புகட்டுபவருமான குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.\n2.அத்வைதானந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம் ஸர்வ சாஸ்திரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே\nஅத்வைத நிலையின் பேரானந்தத்தினால் திளைத்துள்ளவரும் நல்லோர்களுக்கு விருப்பத்தை நிறைவேற்றுபவரும் எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவரும் அமைதியே வடிவானவரும் ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.\n3.கர்ம பக்தி ஞானமார்க ப்ரசாரே பத்தகங்கணம் அனுக்ரஹப்ரதாதாரம் நமஸ்யே சித்தசுத்தயே\nகர்மா பக்தி ஞானம் என்ற மூன்று வழிகளையும், (நடந்து காட்டி), மற்றவர்க்குப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளவரும், எப்போதும் யாவர்க்கும் அனுக்ரஹம் பண்ணுபவரும்(பார்வை,புன்முறுவல்,பேச்சுகளால்) ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.\n4.பகவத்பாதபாதாப்ஜவிநிவேசிதசேதஸ ஸ்ரீ சந்த்ரசேகரகுரோ ப்ரஸாதோ மயி ஜாயதாம்\nஆதிசங்கரரின் பாதகமலங்களில் ஈடுபட்ட மனதை உடையவரான ஸ்ரீ சந்த்ரசேகர குருவின் கருணை கடாட்சம் என்னிடம் உண்டாகட்டும்\n5.சேத்ர தீர்த்தகதாபிக்ஞ ஸச்சிதானந்தவிக்ரஹ சந்திரசேகரவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி\nஒவ்வொரு புனிதஸ்தலம்,தீர்த்தம் முதலியவற்றின் உண்மைக் கதைகளை அறிந்தவரும், ஸச்சிதானந்தவடிவமானவரும் ஆன ஸ்ரீ சந்திரசேகரரான சிறந்த குரு எப்பொழுதும் என் மனதில் வசிக்கட்டும்\n6.போஷணே வேத சாஸ்த்ராணாம் தத்தசித்தமஹர்நிசம் சேத்ரயாத்ராரதம் வந்தே ஸத்குரும் சந்திரசேகரம்\nவேதசாஸ்திரங்களை நன்கு வளரச்செய்யும் கார்யத்தில் அல்லும் பகலும் மனதைச் செலுத்தி ஆலோசிப்பவரும் ( பல திட்டங்களை உருவாக்கியவரும் ) பற்பல புண்ணிய சேத்திரங்களுக்கு பாத யாத்திரை செய்வதில் ஈடுபட்டவரும் (உண்மையில் சேத்ரங்களுக்கே பெருமை ஏற்படுமாறு விஜயயாத்திரை அமைகிறது ) ஆன ஸத்குரு ஸ்ரீ சந்திர சேகரரை வணங்குகிறேன்\n7.வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம் குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம்\nதகுதியுள்ளவர்களை வேதம் கற்றவர்களாயும் வேதம் கற்றவர்களை வேதப்பொருளை அறிந்தவர்களாகவும் ஆக்கும் பணியில் முயற்சியுடையவரும் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதியை குருவாக உடையவரும் ஆன சந்திரசேகரரை வணங்குகிறேன்\n8.மணிவாசக கோதாதி பக்தி வாகம்ருதைர்ப்ருசம் பாலானாம் பகவத்பக்திம் வர்த்தயந்தம் குரும் பஜே\nமாணிக்கவாசகர் ஆண்டாள் முதலியோரின் பக்தி ததும்பும் பாட்டுகளைப் பரப்புவதன் மூலம், குழந்தைகளுக்கு கடவுள் பக்தியை வளர்பவரான குருவை ஸேவிக்கிறேன்\nசிவம் ஸ்மிதமுகம் சாந்தம் ப்ரணதோஸ்மி ஜகத்குரும்\nஎளிய யாவர்க்கும் மனதில் பதியுமாறு தெளிவான தன் தெய்வீகக் குரலின் ( பேச்சுகளால் ) உபதேசங்களால் நாஸ்திக்ய எண்ணங்களை அடியோடு அகற்றும் விஷயத்தில் நிகரற்றவரும் புன்னகை பூத்த முகத்தினால் மங்களங்களை அளிப்பவரும் சாந்திவடிவெடுத்தவருமான ஜகத்குருவை வணங்குகிறேன்\n10.விநயேந ப்ரார்த்தயேஸ்ஹம் வித்யாம் போதய மே குரோ\nமார்கமன்யம் த ஜானேஸ்ஹம் பவந்தம் சரணம் கத\nஒ குருவே நான் எனக்குக் கல்வியை ( ஆத்ம ஞானத்தை ) போதிக்க வேண்டும் என்று வணக்கத்துடன் வேண்டுகிறேன் எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை உம்மையே சரணம் அடைந்துள்ளேன்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nSuryam Nivarthi on Daily Nectar : உள்ள இருக்கிறத எடுத்துட்டியா\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-18T00:23:14Z", "digest": "sha1:6W3CNKNUVLAZU5E7ZLBQUJ72MQ7F5242", "length": 7455, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா ‘பஞ்சுமிட்டாய்’ 4 எழுத்தாளர்கள் சேர்ந்து திரைக்கதை அமைத்த படம்\n‘பஞ்சுமிட்டாய்’ 4 எழுத்தாளர்கள் சேர்ந்து திரைக்கதை அமைத்த படம்\nடைரக்டர் அமீரிடம் உதவி டைரக்டராக இருந்த எஸ்.பி.மோகன், ‘பஞ்சு மிட்டாய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் கதையை எஸ்.பி.மோகன் எழுத, ஜே.பி.சாணக்யா, எழில் வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார் ஆகிய 4 எழுத்தாளர்களும் சேர்ந்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். சரவணன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் எஸ்.பி.மோகன் கூறியதாவது:-\n“2 சிறுகதைகளை இணைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் திருமணமான ஒரு மாதத்தில் நடக்கும் சம்பவங்களை கதையாக கொண்ட படம், இது. 2 நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைவதால் ஏற்படும் நிகழ்வுகளே திரைக்கதை.\nமா.கா.ப.ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில், மா.கா.ப.ஆனந்த் பரோட்டா கடை மாஸ்டராகவும், அவருடைய மனைவியாக நிகிலா விமலும், சென்ராயன் டீ மாஸ்டராகவும் வருகிறார்கள்.\nஎஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை, புவனகிரி சுற்றுவட்டாரங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”\nPrevious articleவெற்றி-தோல்வி பற்றி கார்த்திக்கு, சூர்யா சொன்ன அறிவுரை\nNext articleவிவேக் ஜோடியாக தேவயானி நடிக்கும் ‘எழுமின்’\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madathuveli.com/2014/03/blog-post_24.html", "date_download": "2018-08-18T01:16:05Z", "digest": "sha1:SPRDDSNWTLKSXNUZJJ7JDEXXL7JREV6L", "length": 21982, "nlines": 226, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU: பெரியவாணர்,சின்னவாணர்", "raw_content": "\nதிங்கள், 24 மார்ச், 2014\nகடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சி உள்ள பகுதிகளாக கூறப்படும் தீவுக் கூட்டங்களின் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு கிராமங்கள் சங்க கால நெய்தல் வாழ்க்கை முறையைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.இந்த பெருமை பெற்ற மடத்துவெளி மண்ணிலே வந்துத்தித்த\nபெருமனி தர்கள் தான் சின்ன வாணரும் பெரிய வாணருமாகும். சின்ன வாணர் என செல்லமாக அழைக்கப்படும் ச.அம்பலவாணர் மடத்துவெளி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்று உயர்கல்வியை கோப்பாய் கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் தமிழ் ஆங்கில மொழி ஊடகத்தில் கற்று தேறினார். பெரிய வாணரும் இவருமாய் இணைந்து புங்குடுதீவின் துயர் போக்க எண்ணினார்.முதலில் அந்த கால வழமையான பாணியில் பொருள்தேடும் பொருட்டு மலேசியாவுக்கு சென்று தம் பொருளாதரா அத்திவாரத்தை பலம் ஆக்கினர் .பொருள் தேட சென்ற இடது பொருளாதார வசதிகள் வாய்ப்புகளை கண்டு யோசித்தனர் .அங்கெ கண்ட வீதிகள் பாலங்கள் கட்டிடங்கள் கடல் தடுப்பு அணைகள் மின்வசதிகள் என பன்முக அபிவிரித்திகளை கண்டு தம்மை மாற்றி கொண்டனர்.சிந்தைகளை சுழற விட்டனர். மலேசியாவில் ஏராளமான புங்குடுதீவு மக்கள் தொழில் நிமித்தம் அந்த காலத்திலேயே வசித்து வந்தனர் அனைவரையும் அன்போடு அழைத்து புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர் .இந்த சங்கத்தின் பெரும் பணியாக யாழ் பண்ணை .புங்குடுதீவு பாலங்களை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தினை முன் வைத்தனர் .\nமலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார்.\n1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார்.\n1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள்.\nபத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார்.\n1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள்.\nபாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட தந்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார்.\nபுங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர்.\nஇவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர்.\nஇவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு.\nஅல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.\nபெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும்.\nபல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது.\nபெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.\nகாலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது.\nஎந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.----\nஇடுகையிட்டது kan Saravana நேரம் பிற்பகல் 1:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு ஒளியமைப்புக...\nமடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா இரவு\nமடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் கொடியேற்ற...\nபுங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியா...\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் திருவிழா -2. 23.03...\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் திருவிழா 23.03.201...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/26555", "date_download": "2018-08-18T00:21:21Z", "digest": "sha1:5NA6Q5LKQDPPFNMZDNXOU3CYWTNZJ7P5", "length": 15001, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "வருட இறுதி விற்பனைக்காக The Outlet Store தயார் | Virakesari.lk", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nமியன்மார் படையினர் நால்வருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடி\nஇராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்தவரின் குடும்பதினரை சந்தித்த அனந்தி\nபெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் ; அனந்தி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nசப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nவருட இறுதி விற்பனைக்காக The Outlet Store தயார்\nவருட இறுதி விற்பனைக்காக The Outlet Store தயார்\nமுழுக் குடும்பத்துக்குமான பிரத்தியேகமான சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், இலங்கையின் முன்னணி நவநாகரீக ஆடைகள் விற்பனையாக திகழும் நோக்குடன் இயங்கி வரும் The Outlet Store வருட இறுதி சொப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.\nஇதன் பிரகாரம் மொத்த கட்டணப்பட்டியல் பெறுமதியில் 50 சதவீதம் வரை விலைக்கழிவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.\nஇந்த ஆண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்ட The Outlet Store, சகல சொப்பிங் பிரிவுகளிலும் அதிகரித்த ஈடுபாடு மற்றும் தன்னிறைவையும் எய்தியுள்ளது. கொழும்பில் காணப்படும் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த ஆடைகள் விற்பனையகமாக அமைந்துள்ளது.\nதனது தெரிவுகளில் புதிய உள்ளடக்கங்களை அறிமுகம் செய்துள்ளதுடன், வாடிக்கையாளர்கள் எப்போதும் ஏதேனும் புதிய பொருளை கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nவியப்பூட்டும் 15000 சதுர அடி சொப்பிங் இடவசதியை கொண்டுள்ளதுடன், ஒரு ஆடை விற்பனையகம் என்பதை விட, ஆடை விற்பனைத்தொகுதி என அழைக்கப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது.\nஇதில் உயர் தரம் வாய்ந்தரூபவ் நீடித்து உழைக்கும் மற்றும் சகாயமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நவநாகரீக ஆடைகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக காணப்படுகின்றன. மேலும், இதில் இல்லங்களுக்கு வழங்கக்கூடிய அன்பளிப்புகள், அணிகலன்கள், ஃபேர்ஃபியும் வகைகள், அழகுசாதனப்பொருட்கள், கைக்கடிகாரங்கள்,விளையாட்டுப்பொருட்கள், பாதணிகள், ஆபரணங்கள் போன்றனவும் உள்ளடங்கியுள்ளன.\nThe Outlet Store குளோதிங் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஷர்ஹான் மன்சூர் கருத்துத் தெரிவிக்கையில்,\n“எமது வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு விலைக்கழிவுகளை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மொத்தக்கட்டணப்பட்டியல் பெறுமதியில் 50 சதவீதம் வரை கழிவை பெறலாம். இந்த தடவை நாம் பெருமளவு தெரிவுகளை சகல பிரிவுகளிலும் அறிமுகம் செய்துள்ளோம். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் சொப்பிங் செய்வதை காண்பதையிட்டு நாம் திருப்தியடைகிறோம்” என்றார்.\nThe Outlet Store போதியளவு வாகன தரிப்பிட வசதிகள் காணப்படுவதுடன், ஒரே நேரத்தில் சுமார் 30 வாகனங்களை தரித்துவைத்திருக்கக்கூடிய இடவசதியை கொண்டுள்ளது. கண்கவர் உள்ளக வடிவமைப்பு மற்றும் சர்வதேச சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் The Outlet Store பிரத்தியேகமான மற்றும் உயர்தர தெரிவுகளை முழுக்குடும்பத்துக்கும் வழங்குகிறது.\nஅண்மையில் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்வூட்டும் வகையிலமைந்த தனது சிற்றுண்டி பகுதியான ‘Brew Bar’ ஐ அறிமுகம் செய்திருந்தது. தமக்கு பிடித்த ஆடைகளையும் இதர அழகுசாதனப்பொருட்களை தெரிவு செய்யும் போது தமக்கு புத்துணர்ச்சியை சேர்த்துக்கொள்ளும் வகையில் இந்த சிற்றுண்டி பகுதி அமைந்திருக்கும். இதில் குளிர் பான வகைத்தெரிவுகள், brownies, cupcakes, deserts, items in jars, snacks போன்ற பல வகைகள் அடங்கியிருக்கும்.\nபுதிய தெரிவுகள் மற்றும் நவநாகரீக அலங்காரங்களை கொண்டுள்ளதன் காரணமாக, அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த சொப்பிங் பகுதியாக The Outlet Store புகழ்பெற்ற வண்ணமுள்ளது. இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல புதிய காட்சியறைகளை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் திறப்பதற்கு The Outlet Store திட்டமிட்டுள்ளது. www.facebook.com/TheOutletStore.lk ஊடாக புதிய தயாரிப்புகள், செய்திகள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.\nஅறிமுகமாகி ஒரு மணி நேரத்தினுள் விற்பனையில் சாதனைபடைத்த nova3 series\nஉலகில் சமீபத்தில் அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ள மொபைல் தொலைபேசிச் சாதனமான Huawei nova3 series கடந்த வாரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று தனது முதலாவது விற்பனை தினத்தை நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தது.\n2018-08-17 15:47:35 மொபைல் தொலைபேசி விற்பனை வர்த்தகநாமம்\nஸ்ரீலங்கா டெலிகொம்மின் இலாபம் 13 வீதத்தால் அதிகரிப்பு\nஸ்ரீலங்கா டெலிகொம் PLC 2018 ஜுன் 30 ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாதத்திற்கான தனது குழும நிதி செயல்திறன் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.\n2018-08-17 14:10:40 டெலிகொம் பில்லியன் ஸ்ரீலங்கா\nமொபிடெல் கேஷ் பொனன்ஸா 2018 : காலியைச் சேர்ந்தவருக்கு 2 ஆவது Mercedes Benz\nஅனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜுலை மாத மொபிடெல் கேஷ் பொனான்ஸா அண்மையில் மாத்தறை நகரில் நடைபெற்றது.\n2018-08-17 10:41:06 வாடிக்கையாளர் பணப்பரிசு கொடுப்பனவு\nசுற்­று­லாத்­து­றையை மேம்­­ப­டுத்த டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம்\nபிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடு­களில் சுற்­றுலா பய­ ணிகள் மத்­தியில் இலங்­கையை கவரக் கூடிய கிரா­ம­மாக மேம்­ப­டுத்­து­வ­தற்­காக டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.\n2018-08-16 08:16:04 சுற்றுலா ஜேர்மன் டிஜிட்டல்\nவீடுகள் மீளக்கட்டமைப்பு புத்தகம் ஐரோப்பிய ஒன்றியம், இணைந்து வெளியீடு\n'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் ளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN- bitat இணைந்துளியிட்டுள்ளன.\n2018-08-14 17:27:49 வீடுகள் உரிமையாளர் ஐரோப்பிய ஒன்றியம்\nமஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை : சீறும் பீரிஸ்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு\n\"செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்\"\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\n\"நீதிமன்றங்களின் ஊடாக ஜனாதிபதிக்கும் எனக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/23463", "date_download": "2018-08-18T00:22:24Z", "digest": "sha1:XJNSA5UKOMS3HQGI44CFCQICNU2ZQ3KC", "length": 6644, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "வங்காளதேசத்துடன் இலங்கை இன்று மோதல்: - Zajil News", "raw_content": "\nHome Sports வங்காளதேசத்துடன் இலங்கை இன்று மோதல்:\nவங்காளதேசத்துடன் இலங்கை இன்று மோதல்:\nஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.\nஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.\nநேற்றுடன் 4 லீக் ஆட்டம் முடிந்து விட்டன. இந்தியா 4 புள்ளியுடன் முதல் இடத்திலும், இலங்கை, வங்காளதேசம் தலா 2 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. பாகிஸ்தான்– வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.\n5–வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் இலங்கை– வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இலங்கை அணி வங்காள தேசத்தை வீழ்த்தி 2–வது வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை 14 ரன்னில் வென்று இருந்தது.\nஇதேபோல வங்காளதேச அணியும் 2–வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணியும் தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை 54 ரன்னில் வீழ்த்தி இருந்தது.\nஇரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 4 முறை மோதியுள்ளன. இதில் 4 ஆட்டத்திலும் இலங்கையே வெற்றி பெற்றது.\nPrevious articleமீண்டும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் புத்துணர்ச்சியுடன் செயற்பட அடித்தளம்\nNext articleதட்டைப்பாதங்கள் தரும் வேதனை\nமூன்றாவது ஒருநாள் போட்டியையும் வென்றது தென் ஆப்பிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது தென்னாபிரிக்கா\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\n2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8 இல் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/magizhvan-got-award/", "date_download": "2018-08-18T01:10:19Z", "digest": "sha1:D3JZB7NSOJ24AE74JCWQZQMGMO6KWQGS", "length": 9701, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai விருது பெற்ற மகிழ்வன் - Cinema Parvai", "raw_content": "\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nஎன் மகன் மகிழ்வன் (My Son is Gay) – ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம்.\nசென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் பிரபலநடிகர்களான அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nஇந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறது.\nமெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்தேறிய பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு,வெகுவாக மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வரிசையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது. துருக்கி, இஸ்தான்புல், அமெரிக்கா போன்ற பல நாடுகளை சேர்ந்த முக்கிய திரை பிரமுகர்களை நடுவர்களாக கொண்ட இந்த திரைப்படவிழாவில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் விருதுகளுக்கு போட்டியிட்ட நிலையில், லோகேஷ் இயக்கிய ‘என் மகன் மகிழ்வன்’ (My Son is Gay), சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.\nஇயக்குனர் லோகேஷ் கூறுகையில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான, ரஜினிஷ் கனுஜாவிற்கு நன்றி கூறினார். இது தங்களுடைய முழு திரைப்பட குழுவிற்கும் கிடைத்த வெற்றி எனவும், இந்த படத்தை இணைந்து தயாரித்து ஆரம்பத்திலிருந்தே தங்களுக்கு பக்கபலமாக இருந்து வரும் அணில் சக்சேனா மற்றும் சிரில் டி’சௌசா போன்றோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது என்றும் குறிப்பிட்டார்.\nஇந்த விருது, படக்குழுவினருக்கு மேலான நம்பிக்கையையும், மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nAnupama Kumar Jayaprakash Kishore Lokesh Kumar My Son is Gay Sriranjani அனுபமா குமார் என் மகன் மகிழ்வன் கிஷோர் ஜெயபிரகாஷ் ரஜினிஷ் கனுஜா லோகேஷ் குமார் விருது பெற்ற மகிழ்வன் ஸ்ரீரஞ்சனி\nபடவாய்ப்பை பெற்றுக் கொடுத்த கல்கி\nகல்லூரி மாணவர்களின் கலகலப்பை கமர்ஷியலாக சொல்லும் ‘சரமாரி’\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-18T00:26:23Z", "digest": "sha1:3HHTDLNAWR6XRKIZ7AHHDYGDBPVYZZLY", "length": 7379, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் “தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “\n“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nநாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர். அவ்விருவரினதும் கட்சிகள் எப்போதுமில்லாதவாறு சரிவைச் சந்தித்துள்ளன.\nஅவ்விரு தலைவர்களாலும் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்து வந்தார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்ல நெலும்மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_925.html", "date_download": "2018-08-18T00:38:22Z", "digest": "sha1:PDOSMDQGUNSLELWOC5DPYWHVRS4WUTQW", "length": 7165, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பிக் பாஸ் வீட்டில் கமெராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » பிக் பாஸ் வீட்டில் கமெராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர்\nபிக் பாஸ் வீட்டில் கமெராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர்\nதற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகர் சம்பூர்ணேஷ் பாபு வெளியேற்றப்பட்டுள்ளார்.\nதெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே தெலுங்கு நிகழ்ச்சியும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.\nபர்னிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் தெலுங்கு காமெடி நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவால் ஒரே வீட்டிற்குள் இருக்க பிடிக்கவில்லை. இதனால் அவர் புலம்பி வந்தார்.\nஎனக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை, உடல்நலம் சரியில்லை, என்னை வெளியே விடாவிட்டால் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று கேமராவுக்கு முன்பு நின்று மிரட்டினார்.\nசம்பூர்ணேஷுக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பெரும் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் சிசிடிவி கேமராவையும் அடித்து உடைத்துவிட்டார்.\nசம்பூர்ணேஷின் நடவடிக்கைகளை பார்த்த சக போட்டியாளர்கள் அவரை உடனே வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\n மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் நாட்டு மாப்பிள்ளை\nயாழ்ப்பாணம் - மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ். மீசாலையைச் சேர்ந...\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ண...\nவிரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்\nவெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/bsf-notification-for-aspirants-002682.html", "date_download": "2018-08-18T00:36:07Z", "digest": "sha1:QRGPCVZSLAGGUH2Y4ZNVEDILSHJI54XF", "length": 8586, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் !! | BSF notification for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» பிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் \nபிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் \nபார்டர் செக்கியூரிட்டி ஃபோர்ஸில் பணியாற்ற வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . பார்டர் செக்கியூரிட்டி ஃபோர்ஸில் பணியாற்ற 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . பிஎஸ்எஃப் வெப்சைட்களில் உள்ள விதிகளை அதிகாரபூர்வ தளத்தில் அறியலாம் .\nபார்டர் செக்கியூரிட்டி ஃபோர்ஸில் பணியாற்றி தாய்நாட்டை காக்க விருப்பமுள்ள அனைவருக்கும் இது ஒரு நல்லவாய்ப்பாகும் . பிஎஸ்எஃபில் பணியாற்ற 18 முதல் 23 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு தாழ்த்தப்பட்டோரக்கு 5 வருடம் ஆகும் . பிற்ப்படுத்தப்பட்டோர்க்கு 3 வருடம் வயதுவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது .\nபணியின் பெயர் கான்ஸ்டபிள் பணியாகும். டிரேடு துறைக்கு வெண்டர் சீவிப்பர் , வெய்டர் பெய்ண்டர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம் . பிஎஸ்எஃப் பணிக்கு மொத்தம் 1074 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன .\nபிஎஸ்எஃப் பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 5,200 முதல் 20,200 வரை பெறலாம் . அத்துடன் அரசு கிரேடு பே தொகையும் பெறலாம் . இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரப் பூரவ இணையதளத்தில் விண்ணப்பங்களிய பெற்று விண்ணப்பித்து புகைப்படத்துடன் தலைமையக முகவரி அனுப்ப வேண்டும் . தலைமையகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்பும் போது தேவையான கோப்புகளை முறையாக இணைத்து அனுப்ப வேண்டும் . பிஎஸ்எஃப் பணிக்கு தேர்வு செய்யுமுறையானது எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇந்திய விமான போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு \nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \nசெபியில் ஆஃபிஸர் கிரேடு பணி வாய்ப்பு அறிவிப்பு \nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/divya-sathyaraj/", "date_download": "2018-08-18T01:09:58Z", "digest": "sha1:VX56Q3ROCYYHJSVEBWAV2TCAHG2SSERU", "length": 6847, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai சத்யராஜ் மகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி !! - Cinema Parvai", "raw_content": "\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nசத்யராஜ் மகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி \nநடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார்.\n” இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். திரை துறை மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. நான் nutrition Dietics துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன். நான் நடிக்க போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்பத்து நண்பர். தவிர அவர் அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை, அதில் நடிக்கவும் இல்லை” என திட்டவட்டமாக அறிவித்தார்.\nPrevious PostCSK போட்டிகளைக் காண்பதற்கான டிக்கெட் விலை விவரம்.. Next Postதடைகளை உடைத்தெறிந்த மெர்சலுக்கு மேலும் ஒரு மகுடம்\nசத்யராஜுக்கு பெருமை சேர்த்த கட்டப்பா\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nநிறைவேறப் போகிறது திரிஷாவின் நெடுநாள் கனவு\n“வையம் மீடியாஸ்” நிறுவனத்தின் PRODUCTION NO : 3\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kummacchionline.com/2011/06/blog-post.html", "date_download": "2018-08-18T01:06:34Z", "digest": "sha1:3EDKHHXSAZZQ6AV6MQ3OMTDO3SJWXY53", "length": 9467, "nlines": 142, "source_domain": "www.kummacchionline.com", "title": "சென்னை போடா வெண்ணை | கும்மாச்சி கும்மாச்சி: சென்னை போடா வெண்ணை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த முறை சென்னை விஜயம் வழக்கம்போல் இல்லாமல் விமானம் சற்றே தாமதமாக தரை இறங்கியது. இமிக்ரேஷன் வரிசையில் ஒராயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர். இரண்டு ஆபீசர் உட்காரும் இடங்களில் எல்லாம் ஒரு ஆபீசர் தான் இருந்தனர். சரிதான் எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.\nவரிசை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வரிசையில் நிற்கும் பொழுது குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு, கையில் கைப்பையும் சுமந்து கொண்டு தாய், தந்தையர்களை பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருக்கும். ஆனால் இவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தாலும் சரி அண்டார்டிகாவில் இருந்து வந்தாலும் சரி வரிசையை முந்த சலுகைகள் எதிர் பார்ப்பதில்லை. அதே சமயத்தில் ஒற்றையாய் வரும் “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் நுங்கு மார்பு நங்கைகள்” வரிசையில் முந்திக் கொண்டு நைச்சியமாக பேசி ஒரு ஜொள்ளு பேர்வழியின் முன் முந்திக் கொண்டு சென்று விடுவார்கள்.\nநிற்க நான் சொல்ல வந்தது இவர்களைப் பற்றி அல்ல. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்த என்னுடைய முறை வந்த பொழுது வேறொரு விமானம் தரை இறங்கி ஒரு கூட்டம் இப்பொழுது வரிசையில் சேர்ந்து கொண்டனர்.\nஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாக சொல்லி எங்கள் எல்லோரிடமும் கெஞ்சி என் முன்னால் வந்து நின்று கொண்டார். பின்னர் அதிகாரி அவர் கடவுச்சீட்டை வாங்கி கணினியில் விவரங்களை பதிவு செய்யும் முன் அவருடைய விண்ணப்பத்தை நிரப்ப சொன்னார்.\nஅதற்கு அந்த அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாகவும் தான் அவசரமாக போக வேண்டும என்று குரலை உயர்த்தினார். அதற்கு அந்த அதிகாரி சரியம்மா நீங்கள் வேறு யாரையாவது நிரப்ப சொல்லி கையொப்பம் இடுங்கள், என்று சொல்லி அடுத்தவரை அழைத்தார்.\nஅந்த அம்மையார் தன் நிலை இழந்து “யோவ் நீயெல்லாம் மனிதரா, என் அம்மா இறந்து விட்டதாக சொல்லுகிறேன் என்னை நிற்க வைக்கிறாயே, உனக்கெல்லாம் உன் அம்மா இறந்தால் தான் தெரியும்” என்று சொல்லி மற்றும் வரிசையில் உள்ளவர்களையும் பார்த்து இதே வார்த்தைகளை பிரயோகித்து சாபம் விட்டார். .\nஎனக்கு இதில் உள்ள நியாய அநியாயங்கள் இன்னும் புலப்படவில்லை.\nஎனக்கு இதில் உள்ள நியாய அநியாயங்கள் இன்னும் புலப்படவில்லை.புரியவில்லை.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213247.0/wet/CC-MAIN-20180818001437-20180818021437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}